தி இந்து தி இந்து (The Hindu) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் பிரசுரிக்கப்படும் செய்தித்தாள் ஆகும். 1878 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட செய்தித்தாள் நாள்தோறும் சுமார் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது. இச்செய்தித்தாளை பதிப்பிக்கும் இந்து குழுமம், கஸ்தூரி அன் சன்ஸ் என்ற நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் விற்பனையில் இரண்டாவது இடத்தையும், படிப்பவர் எண்ணிக்கையில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்து செய்தித்தாள் முதன் முதலாக செப்டம்பர் 20, 1878 இல் வெளியானது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு முதன் முதலில் இந்தியர் ஒருவர் நியமிக்கப் பட்டதைக் கண்டித்து பிரிட்டிஷ் ஆதரவு ஆங்கிலப் பத்திரிக்கைகள் செய்திகள் வெளியிட்டன. இதனால் கோபமடைந்த திருவல்லிக்கேணி இலக்கிய வட்டத்தை (Triplicane Literary Society - TLS) சேர்ந்த ஆறு இளைஞர்கள், இந்தியர்கள் கருத்தை வெளியிட ஒரு பத்திரிக்கை வேண்டுமென முடிவு செய்தனர். ஜி. சுப்ரமணிய ஐயரை ஆசிரியராகக் கொண்டு "தி இந்து" என்ற செய்தித்தாளைத் தொடங்கினர். ஆரம்பத்தில் வாரந்தோறும் புதன் கிழமைகளில் ஒரு வார இதழாகவே இந்து வெளிவந்தது. ஆங்கிலப் பத்திரிக்கைகளை கண்டித்து எழுதினாலும், ஆங்கில அரசை வெளிப்படையாக எதிர்க்காமல் பாராட்டி செய்தி வெளியிட்டது. 1883 முதல் வாரம் மும்முறை வெளியாகத் தொடங்கியது. 1887 இல் சென்னையில் இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்தர மாநாடு நடந்தது. அதிலிருந்து இந்துவில் தேசிய அரசியல் பற்றி செய்திகள் வெளியாகத் தொடங்கின. 1898 இல் சுப்ரமணிய ஐயர், இந்துவிலிருந்து விலகி வீரராகவாச்சாரியார் உரிமையாளரானார். 1900 களில் இந்துவின் விற்பனை குறைந்து நிதி நெருக்கடி உண்டானது. 1905 ஆம் ஆண்டு வீர்ராகவாச்சாரியார் இந்துவை கஸ்தூரிரங்க அய்யங்காரிடம் விற்று விட்டார். அன்று முதல் இன்று வரை கஸ்தூரிரங்க அய்யங்காரின் குடும்பத்தினரே இந்துவை நிர்வகித்து வருகிறார்கள். தி இந்து இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் நாள்தோறும் வெளியாகத் தொடங்கியது. 1910 களில் அன்னி பெசன்ட் அம்மையாரின் சுயாட்சி போராட்டத்திற்கு இந்து ஆதரவளித்தது. நீதிக்கட்சியின் தலைவர்கள் டி. எம் . நாயர், தியாகராய செட்டி ஆகியோர், சட்டமன்றத்தில் வகுப்பு வாரி இட ஒதுக்கீடு கோரிய போது இந்து அதை கடுமையாக எதிர்த்தது. இந்திய சுதந்திர போராட்டத்திற்கு ஆதரவாகவும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டது. 1948 இல் முதல் பக்கத்தில் முழு விளம்பரம் பிரசுரிக்கும் வழக்கம் நிறுத்தப்பட்டு மறுவடிவம் செய்யப்பட்டது. 1987 இல் போஃபோர்ஸ் பீரங்கி ஊழலை அம்பலப்படுத்தியது. 1995 முதல் இணையத்திலும் வெளிவரத் துவங்கியது. 1965 முதல் 1993 வரை ஜி. கஸ்தூரியும், 1993 – 2001 இல் என். ரவியும் இந்து குழுமத்தின் நிர்வாக இயக்குனராக இருந்தனர். 2003 முதல் என். ராம் இந்துவின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை ஆசிரியராகவும் இருக்கின்றார். இந்தியன் ரீடர்ஷிப் சர்வே 2008 இன் படி, இந்து தினம் பதினான்கரை லட்சம் பிரதிகள் விற்கின்றது. விற்பனை அளவில் இந்தியாவின் ஆங்கில செய்தித்தாள்களுள் இரண்டாவது இடத்தில் உள்ளது (முதலிடம் டைம்ஸ் ஆஃப் இந்தியா). படிப்பவர்கள் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தில் உள்ளது. இந்து சென்னை, கோவை, பெங்களூரு, ஹைதராபாத், மதுரை, நோய்டா, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம், கொச்சி, விஜயவாடா, மங்களூர், திருச்சி, கொல்கத்தா, ஹூப்ளி, மொகாலி, அலகாபாத், மலப்புரம், லக்னோ, அனந்தபூர், நெல்லூர் ஆகிய நகரங்களில் இருந்து இருபது பதிப்புகளை வெளியிடுகிறது. இந்து குழுமத்திற்கு தற்போது பன்னிரெண்டு நிர்வாக இயக்குனர்கள் உள்ளனர். கஸ்தூரி ரங்க அய்யங்காரின் வாரிசுகளான அவர்கள் – என். ராம், என். ரவி, என். முரளி, மாலினி பார்த்தசாரதி, நிர்மலா லட்சுமணன், நளினி கிருஷ்ணன், ரமேஷ் ரங்கராஜன், விஜயா அருண், அகிலா அய்யங்கார், கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ஷ்மி ஸ்ரீநாத் ஆகியோராவர். இந்துவில் பத்திகள் மதவாதத்திற்கு எதிராகவும், மதச்சார்பின்மையை ஆதரித்தும் எழுதப் படுகின்றன. பொதுவாக உள்நாட்டு அரசியலில் பாரதீய ஜனதா கட்சியின் கொள்கைகளை ஆதரித்தும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்தும், வெளிநாட்டு விஷயங்களில், தமிழீழ விடுதலையை எதிர்த்தும், சீன-இலங்கை நாடுகளை ஆதரித்தும் பத்திகள் எழுதப்பட்டதாக இதன் ஆசிரியர் ஒருவரான நரசிம்மன் ராம் மீது குற்றம் சாட்டப்படுகிறது. தி இந்து குழுமம் வெளியிடும் மற்ற இதழ்கள் த இந்து ந. ராம் தனது சகோதரரான ந. ரவியை முதன்மை ஆசிரியராக வருவதைத் தடுத்தார். ரவி கம்பனி ஊழியர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்து நோக்கி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அதில் இந்து பத்திரிகை, விளம்பரதாரர்களின் 'காசுச் செய்துப்' பத்திரிகையாக இருப்பதாக குற்றஞ்சாட்டினார். மேலும் பல்வேறு செய்திகளும், ஊழல்களும் இவ்வாறு மழுங்கடிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. கருவணு கருவணு அல்லது நுகம் (Zygote) என்பது பாலின இனப்பெருக்கம் மூலம் ஆண் பாலணுவும், பெண் பாலணுவும் இணைந்து உருவாகும் முதலாவது உயிரணு ஆகும். பல்கல உயிரினங்களில் இந்த உயிரணுவே முளைய விருத்தியின் தொடக்க நிலையாகும். ஒருமடிய நிலையில் உள்ள இரு பாலணுக்கள் இணைவதனால், கருவணுவானது இருமடியமாக இருக்கும். அத்துடன் இரு பெற்றோரில் இருந்தும் மரபியல் தகவல்களைப் பெற்றிருக்கும். மனிதரில் பெண்ணின் கருப்பைக்குள் குழந்தை உருவாகுவதற்கான ஆரம்ப நிலைத் தோற்றப்பாடே “கருவணு” எனப்படுகின்றது. பெண்ணின் பாலணுவான சூல்முட்டையும், ஆணின் பாலணுவான விந்தும் இணைவதனால் உருவாகும் கருவணு பின்னர் குழந்தையாக விருத்தியடையும். ஒரு பெண்ணின் வயிற்றில் உள்ள ஒரு பை போன்ற உறுப்பிலேயே கருவணு வளர்வதனால் அந்த உறுப்பு கருப்பை என்று அழைக்கப்படுகின்றது. கருவணுவானது உருவாகும்போது, பெண்ணில் கருத்தரிப்பு நிகழ்கின்றது. நீலாவதி இராம. சுப்பிரமணியம் நீலவதி இராம. சுப்பிரமணியம் (1913 - 1961; திருச்சி, தமிழ்நாடு) பத்திரிகையாளர், தமிழறிஞர், சமூக சீர்திருத்தவாதி. பகுத்தறிவு வழி நின்று சாதி எதிர்ப்பு (தானே கலப்புத் திருமணம் செய்தது), தீண்டாமை ஒழிப்பு, புரோகிதர் மறுப்பு, பெண் விடுதலை என பல முனைகளில் செயற்பட்டவர். இவர் 1941 ம் ஆண்டு தேவகோட்டையில் தமிழிசை மாநாட்டை நடத்தினார். இவருக்கு 10-9-1931ஆம் நாள் ஒரு பெண்குழந்தை பிறந்தது. தி. நீலாம்பிகை திருவரங்க நீலாம்பிகை அம்மையார் (1903-1945) சிறந்த தமிழறிஞர்களில் ஒருவர். வடமொழியும் ஆங்கிலமும் அறிந்தவர். மறைமலை அடிகளாரின் மகளாகிய இவர், அவரைப் போன்றே மொழியறிவு நிரம்பியவர். தமிழ் மொழி தனது தனித்துவத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என்று விரும்பிய இவர், மிகுந்து கலந்து இருந்த பிறமொழிச் சொற்களைத் தவிர்த்த தனித்தமிழ் நடையைப் பரப்பினார். இதற்கு உதவியாக வடசொற்றமிழ் அகரவரிசை என்ற நூலையும் வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம் என்ற நூலையும் வெளியிட்டார். இவர் ஆராய்ந்தெடுத்த அறுநூறு பழமொழிகளும் அவற்றிற்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் என்ற தலைப்பில் 601 தமிழ்ப் பழமொழிகளுக்கான ஆங்கிலப் பழமொழிகளைத் தொகுத்து வெளியிட்டார். தி. நீலாம்பிகை அம்மையாரின் தலைமையில் சென்னையில் 1938- நவம்பர் 13 இல் நிகழ்ந்த தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் மாநாட்டில்தான் ஈ. வெ. இராமசாமிக்கு பெரியார் என்னும் பட்டம் வழங்கப்பட்டது. பிரெஞ்சு இலக்கணம் பிரெஞ்சு இலக்கணம் என்பது பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தை குறிக்கும். அதாவது, அம்மொழியை பிழையின்றி பயில உதவும் நெறிகள் அல்லது விதிகள் என கூறலாம். இது, பிற உரோமானிய மொழிகளின் இலக்கணத்தை போன்றே இருக்கிறது. பிரெஞ்சு தன் சொற்களின் இறுதிகளை ஓரளவு மாற்றியமைக்கின்ற ஒரு மொழி (அதாவது, பிரெஞ்சு சொற்கள் ஓரளவிற்கு உருபுகள் கொள்கின்றன). பெயர்ச்சொல் ஒருமை, பன்மையிலும்; பெயர் உரிச்சொல் தன் பெயர்ச்சொல்லின் எண், பால் (ஆண்பால் அல்லது பெண்பால்); இடப் பெயர்ச்சொல் இடம், எண்(Number), பால், வேற்றுமையிலும்; வினைச்சொல் காலம், எண்ணம்(Mood), இடம்(Person), எண் ஆகியவைகளிலும் அவைகளுக்கு ஏற்றவாறு உருபுகளைக் கொள்கின்றன. வேற்றுமை(Case), சொல் வரிசை(Word order) மற்றும் முன்விபக்திகளைக்(Prepositions) கொண்டு குறிக்கப்பெறுகிறது. பிரெஞ்சு மொழியிலும், பிற ஐரோப்பிய மொழிகளைப் போன்று, சொற்களின் வகை ("Les parties du discours") 8 ஆகும். ௧. பெயர்ச்சொல் ("Le nom") ௨. இடப் பெயர்ச்சொல் ("Le pronom") ௩. வினைச்சொல் ("Le verbe") ௪. பெயர் உரிச்சொல் ("L'adjectif") ௫. வினை உரிச்சொல் ("L'adverbe") ௬. முன்விபக்தி ("La preposition") ௭. இடைபடுஞ்சொல் ("La conjunction") ௮. வியப்பிடைச்சொல் ("L'interjection") "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு பெயர்ச்சொல்" பிரெஞ்சு மொழியில் ஒருமை("Singulier"), பன்மை("Pluriel") என இரு எண்கள் உள்ளன. பிரெஞ்சில் இரண்டு பால்கள்("Genre") மட்டுமே உள்ளன. அவை, ஆண்பால்("Masculin") மற்றும் பெண்பால்("Féminin"). பிரெஞ்சில் வேற்றுமைகளுக்கு உருபுகள் கிடையாது. (அதாவது, பிரெஞ்சு வேற்றுமைகள் உருபுகள் கொள்வதில்லை.) அவைகள் முன்விபதி மற்றும் சொல் வரிசை அல்லது வாக்கிய அமைப்பை கொண்டே வெளிப்படுகின்றன. "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு பெயர்ச்சொற்குறி" பிரெஞ்சு மொழியில் மூன்று வகையான பெயர்ச்சொற்குறிகள்("Les articles") உள்ளன. அவை, ௧. நிச்சய பெயர்ச்சொற்குறி ("L'article défini") ௨. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி ("L'article indéfini") ௩. பலனுள்-ஒன்று பெயர்ச்சொற்குறி ("L'article partitif") ஆகும். "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு இடப் பெயர்ச்சொல்" "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு வினைச்சொல்" "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு பெயர் உரிச்சொல்" பிரெஞ்சு பெயர் உரிச்சொல், அதனுடன் வரும் பெயர்ச்சொல்லுடனே ஒன்றி வரும். "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு வினை உரிச்சொல்" பிரெஞ்சு வினை உரிச்சொற்கள் ஒரு பெயர் உரிச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, வாக்கியப்பகுதியையோ அல்லது மற்றொரு வினை உரிச்சொல்லையோ மாற்றவே பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் உருபு ஏதும் கொள்வதில்லை; அதாவது, அவைகள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில்லை. (எ-டு) ௧. "Le professeur parle lentement." (ஆசிரியர் மெதுவாகப் பேசுகிறார்.) ௨. "Le professeur parle bien lentement." (ஆசிரியர் மிகவும் மெதுவாகப் பேசுகிறார்.) ௩. "Le professeur est très gentil." (ஆசிரியர் மிகவும் நல்லவர்.) (ஒரு பெயர் உரிச்சொல்லை மாற்றியமைத்துள்ளது) "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு முன்விபக்தி" "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு இடைபடுஞ்சொல்" "முதன்மைக் கட்டுரை": "பிரெஞ்சு வியப்பிடைச்சொல்" இலக்கண உறவு எட்டு வகைப்படும். அவை, ௧. வேற்றுமை ௨. பால் ௩. எண் ௪. காலம் ௫. இடம் ௬. எண்ணம் ௭. வினை வாக்கியம் ௮. ஒப்பீடு/ஒப்பீட்டு வாக்கியம் ஆகும். வாக்கியப்பகுதியின்(Clause) சொற்கள் இந்த வரிசையையே தொடர்ந்து வரும். ஆனால், எல்லா நேரங்களிலும் அனைத்து வகை சொற்களும் அதில் வருவதில்லை. ௧. வினை உரிச்சொல் ௨. எழுவாய் ௩. "ne" (பொதுவாக இது ஒரு எதிர்மறைக்குறியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதற்க்கு பிற பயன்பாடுகளும் உண்டு.) ௪. தன்னிலை மற்றும் முன்னிலையின் செய்யப்படுபொருள் இடப் பெயர்ச்சொல்("Pronom d'objet"), அல்லது படர்க்கையின் இடஞ்சுட்டு இடப் பெயர்ச்சொல்("Pronom réfléchi") (me, te, nous, vous, se ஆகியவைகளுள் ஒன்று) ௫. படர்க்கையின் இரண்டாம் வேற்றுமை செய்யப்படுபொருளின் இடப் பெயர்ச்சொல் (le, la, les ஆகியவைகளுள் ஒன்று) ௬. படர்க்கையின் நான்காம் வேற்றுமை செய்யப்படுபொருளின் இடப் பெயர்ச்சொல் (lui அல்லது leur) ௭. "y" என்னும் இடப் பெயர்ச்சொல் ௮. "en" என்னும் இடப் பெயர்ச்சொல் ௯. வினைமுற்று (உதவி வினைச்சொல்லாகவும் இருக்கலாம்) ௧0. வினை உரிச்சொல் ௧௧. "rien" என்னும் இடப் பெயர்ச்சொல் ௧௨. முக்கிய வினைச்சொல் (வினைமுற்று உதவி வினைச்சொல்லாக இருக்கும் பட்சத்தில்) ௧௩. வினை உரிச்சொல் மற்றும் செய்யப்படுபொருள் மரியானா அகழி மரியானா அகழி (இலங்கை வழக்கு: மரியானா ஆழி, ஆங்கிலம்:Mariana Trench) என்பது, உலகின் கடற்பகுதிகளில் உள்ள மிகவும் ஆழமான இடம் ஆகும். புவிமேலோட்டில் உள்ள மிகத் தாழ்வான பகுதியும் இதுவே. இப்பகுதி மிகக்கூடிய அளவாக 10,924 மீட்டர்கள் (35,840 அடிகள்; 6.78 மைல்கள்) ஆழம் கொண்ட இப்பகுதி, வடக்குப் பசிபிக் பெருங்கடலில் மரியானா தீவுகளுக்குத் தெற்கிலும், கிழக்கிலும் குவாமுக்கு அருகில் அமைந்துள்ளது. இசு-போனின்.மரியானா வளைவின் ஒரு பகுதியான இந்த அகழி, பசிபிக் புவிப்பொறைத் தட்டும், சிறிய மரியானா புவிப்பொறைத் தட்டும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த அகழியின் அடிப் பகுதியில், அதற்கு மேலுள்ள நீரினால் ஏற்படும் அழுத்தம் (அமுக்கம்) 108.6 மெகாபாசுக்கல் ஆகும். இது கடல் மட்டத்தில் உள்ள பொது வளிமண்டல அமுக்கத்திலும் 1000 மடங்குக்கும் மேலானது. இந்த ஆழத்தில் வாழக்கூடிய உயிரினங்கள் மிகக் குறைவே. சில வகை ஆழ்கடல் மீன்கள் இப்பகுதியில் இருப்பது தெரிய வந்துள்ளது. மரியானா அகழி முதன் முதலாக, 1872 டிசம்பர் முதல் 1876 மே வரையான சலஞ்சர் ஆய்வுப் பயணத்தின் போது அளக்கப்பட்டது. இதன் படி இவ்வகழியின் ஆழம் 31,614 அடிகளாகப் (9,636 மீட்டர்கள்) பதிவு செய்யப்பட்டது. பின்னர் சலஞ்சர் 2 ஆய்வுப் பயணத்தின்போது , திருத்தமான எதிரொலிமானியைப் பயன்படுத்தி மீண்டும் அளக்கப்பட்டது. அப்போது இதன் அதிகூடிய ஆழம் 5,950 பாதங்கள் (10,900 மீட்டர்கள், 35,760 அடிகள்) எனப் பதிவு செய்யப்பட்டது. ஆள்கூற்றால் குறிக்கப்படும் இவ்விடம் சலஞ்சர் ஆழம் எனப்படுகின்றது. 1957 ஆம் ஆண்டில் வித்தியாசு (Vityaz) எனப்படும் சோவியத் கடற்கலம் இதன் ஆழம் 11,034 மீட்டர்கள் (36,200 அடிகள்) என அளவிட்டது. 1962 ஆம் ஆண்டில் கடற்பரப்புக் கப்பலான எம். வி. இசுப்பென்சர் எப். பயார்ட், திருத்தமான அளவுமானிகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,915 மீட்டர்கள் (35,840 அடிகள்) எனக் கணக்கிட்டது. 1984 ஆம் ஆண்டில், இதற்கென உயர் சிறப்பாக்கம் பெற்ற "தக்குயோ" என்னும் அளவைக் கலம் ஒன்றை அனுப்பிய சப்பானியர், ஒருங்கிய பல்கதிர் எதிரொலிமானியைப் பயன்படுத்திச் சேகரித்த தரவுகளைப் பயன்படுத்தி இதன் ஆழத்தை 10,924 எனக் கணக்கிட்டதுடன் இதன் துல்லிய எல்லைகள் 10,920 ± 10 மீட்டர்கள் எனவும் அறிவித்தனர். இதுவரை எடுக்கப்பட்டவற்றுள் மிகத் திருத்தமானது எனக் கொள்ளத்தக்க அளவீடு 1995 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்டது. சப்பானின் இந்த ஆய்வுத்திட்டத்தில் கைக்கோ என்னும் ஆளில்லாக் கலம் 1995, மார்ச் 24 ஆம் தேதி அகழியின் அடித்தளத்தில் இறங்கியது. இது அகழியின் ஆழத்தை 10,911 மீட்டர்கள் (35,798 அடிகள்) என அளவிட்டது. சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்டு இத்தாலியில் நிர்மாணிக்கப்பட்ட ஐக்கிய அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான டிரைஸ்டி என்ற கப்பலில் 1960, சனவரி 23 ஆம் நாள் பிற்பகல் 1:06 மணிக்கு அமெரிக்கக் கடற்படை வீர்ர டொன் வால்ஷ் என்பவரும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெருங்கடல் குறிப்பு வல்லுநர் சாக் பிக்கார்ட் என்பவரும் மரியானா அகழியின் அடிப்பகுதிக்குச் சென்றனர்.. இவர்களுக்குப் பின்னர் 2012 ஆம் ஆண்டில் தனியொரு ஆளாக கனேடிய திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரன் அகழியின் அடிப்பகுதிக்குச் சென்று திரும்பினார். இவர் 2012 மார்ச்சு 26 ஆம் நாள்ஆத்திரேலியாவில் தயாரிக்கப்பட்ட டீப்சீ சாலஞ்சர் என்ற நீர்மூழ்கியில் உள்ளூர் நேரம் 07:52 மணிக்கு அகழியின் ஆழத்தை அடைந்தார். கீழமிழ்தல் (நிலவியல்) நிலவியலில் கீழமிழ்தல் (Subduction) என்பது, புவிப்பொறைத் தட்டுக்களின் ஒருங்கெல்லையில் நடைபெறும் ஒரு நிகழ்முறையைக் குறிக்கும். இதில், புவிப்பொறைத் தட்டுக்கள் ஒன்றுடன் ஒன்று நெருங்கி மோதும்போது ஒரு தட்டு இன்னொன்றுக்குக் கீழ் நகர்ந்து புவி மூடகத்தினுள் அமிழும். "கீழமிழ் வலயம்" என்பது இரண்டு புவிப்பொறைத் தட்டுக்கள் ஒன்றை நோக்கி ஒன்று நகரும்போது "கீழமிழ்தல்" நிகழும் பகுதியைக் குறிக்கும். கீழமிழ்தல் வீதம் பொதுவாக ஓராண்டுக்கு எவ்வளவு சதம மீட்டர் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்த ஒருங்கும் வீதம் ஆண்டொன்றுக்கு அண்ணளவாக 2 தொடக்கம் 8 சதம மீட்டர் வரை இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இது ஏறத்தாள மனித விரல் நகங்களின் வளர்ச்சி வீதத்துக்குச் சமமானது. கீழமிழ்தல் வலயங்களில் ஒரு பெருங்கடல் தட்டு, ஒரு கண்டத் தட்டுக்குக் கீழ் அல்லது இன்னொரு பெருங்கடல் தட்டுக்குக் கீழ் நகரும். கீழமிழ் வலயங்களில் எரிமலைக் குமுறல், புவியதிர்ச்சி, மலையுருவாக்கம் என்பன கூடிய வீதத்தில் நிகழ்கின்றன. திருச்சி சிவா திருச்சி சிவா (Tiruchi Siva) (பிறப்பு: 6 சூன், 1954) இந்தியாவின் நாடாளுமன்ற மாநிலங்களவை (மேலவை) உறுப்பினரும், திமுக வின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான திருச்சி நடேசன் சிவா (அ) திருச்சி என். சிவா, தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் பிறந்தவராவார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான இவர் சிறந்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமாவார். ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகவும், தற்போது நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி வருகிறார். இலங்கைவாழ்த் தமிழர்களுக்காக நாடாளுமன்றத்தில் அதிகமாகக் குரல் கொடுத்தவர்களில் இவரும் ஒருவர். நூல்கள் பலவற்றையும், அவரின் கட்சிப் பத்திரிகையான முரசொலியில் பல சமுதாய, விழிப்புணர்வு மற்றும் அரசியல் தொடர் கட்டுரைகளையும் எழுதியவர். அவர் எழுதிய நூல்களில் "தலைநகரில் தமிழன் குரல்" என்ற நூல் புகழ்பெற்ற நூலாகும்," மேலும் குற்றவாளிக் கூண்டில் சாக்ரடீஸ்" என்ற நூலையும் எழுதியுள்ளார். மாணவப் பருவத்திலேயே திமுக மாணவரணியில் சேர்ந்து கட்சித் தொண்டாற்றியவர். 1976 நெருக்கடி நிலையின் போது மிசாக் கைதியாகச் சிறை சென்றவர். கைக்கோ கைக்கோ (Kaikō) என்பது, ஆழ்கடலில் இயங்கக்கூடிய தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலம் ஆகும். இது ஜாம்ஸ்டெக் (JAMSTEC) என்னும் சப்பானிய நிறுவனம் ஒன்றால் அமைக்கப்பட்டது. இது உலகின் மிக ஆழமான கடற்பகுதியான மரியானா அகழியிலுள்ள சலஞ்சர் ஆழம் என்பதன் தளத்தில் இறங்கி அங்கிருந்து பக்டீரியா மாதிரிகளையும் எடுத்து வந்தது. 1996 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் நாள் 10,897 மீட்டர் ஆழத்தை எட்டிய இக் கலமே மிகக்கூடிய ஆழத்துக்கு நீர்மூழ்கிய ஆளில்லாக் கலம் என்ற பெருமையைப் பெற்றது. 2003 மே மாதத்தில் சான்-ஒம் சூறாவளியின்போது இதனை மேற்பரப்புடன் இணைத்த கம்பிவடம் அறுந்ததனால் கடலுள் அமிழ்ந்து காணாமற் போய்விட்டது. சலஞ்சர் ஆழம் சலஞ்சர் ஆழம் (Challenger Deep) என்பது கடலில் அளவீடு செய்யப்பட்ட மிக ஆழமான புள்ளியைக் குறிக்கிறது. இது, ஏறத்தாழ 11,000 மீட்டர் (36,000 அடிகள்) ஆழத்தில் உள்ளது. அளவீட்டில் ஏற்படக்கூடிய பிழை 100 மீட்டர்களுக்கும் குறைவே. இவ்விடம் மரியானா தீவுகள் இருக்கும் பகுதியில் மரியானா அகழியின் தென் முனையில் அமைந்துள்ளது. இதற்கு அண்மையிலுள்ள நிலப்பகுதிகளாக தென்மேற்கே 289 கிமீ தொலைவில் ஃபைசு தீவும், வடகிழக்கே 306 கிமீ தொலைவில் குவாமும் உள்ளன. 1872-76 ஆண்டுக் காலப்பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய அரச கடற்படை அளவைக் கப்பலான எச்.எம்.எஸ் சலஞ்சர் என்பதன் பெயரைத் தழுவியே இவ்விடத்துக்குப் பெயர் இடப்பட்டது. இதுவரை நான்கு கலங்களே இப்பகுதியில் இறங்கியுள்ளன. முதலில் 1960 ஆம் ஆண்டில் டிரியெஸ்ட் (Trieste) என்னும் ஆளேற்றிய கலம் இறங்கியது. பின்னர் 1995 ஆம் ஆண்டில் சப்பானிய கைக்கோ என்னும் ஆளில்லாத் தொலை இயக்கு நீர்க்கீழ்க் கலமும், 2009 இல் நேரெயசு என்னும் கலமும் 2012 ஆம் ஆண்டில் டீப்சீ சலஞ்சர் என்னும் ஆழ்கடல் நீர்மூழ்கிக்கலனும் இப்பகுதியில் இறங்கியுள்ளன. ஃபைசு தீவு ஃபைசு தீவு ("Fais Island") மைக்குரோனீசியக் கூட்டு நாடுகளின் ஒரு பகுதியாகிய யாப் மாநிலத்தின் வெளிப்புறத் தீவுகளில் ஒன்று. இது உலகின் மிக ஆழமான கடற் பகுதியாகிய சலஞ்சர் ஆழம் என்னும் இடத்திற்கு ஆகக் கிட்டிய தொலைவில் உள்ள நிலப்பகுதியாகும். பிரெஞ்சுக் கடற்படைத் தலைவரான லூயி டிரொமெலின் (Louis Tromelin) என்பவரே இத்தீவைக் கண்டு பிடித்ததாகச் சொல்லப்படுகிறது. 1828-29 காலப்பகுதியில் பசிபிக் பெருங்கடல் ஊடாகப் பயணம் செய்தபோது இதை அவர் கண்டுபிடித்தார். எனினும், 16 ஆம் நூற்றாண்டிலேயே பிரான்சிசு டி காசுட்ரோ என்பவர் பிலிப்பைன்சு நாட்டுக்குச் செல்லும்போது கடுங் காற்றினால் இப்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு டிரியெஸ்ட் ஆழ்கடல் படகு (Bathyscaphe Trieste) என்பது சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்ட ஆழ நீர்மூழ்கும் ஆய்வுப்படகு ஆகும். இது இருவரை ஏற்றிச் செல்லக்கூடியது. 1960 ஆம் ஆண்டில் 10,900 மீட்டர்கள் ஆழம் கொண்ட உலகின் மிகவும் ஆழமான கடல் பகுதியான சலஞ்சர் ஆழம் என்னும் பகுதிக்குச் சென்று இது சாதனை படைத்தது. டிரியெஸ்ட், சுவிஸ் அறிவியலாளரான அகஸ்ட்டே பிக்கார்ட் என்பவரால் வடிவமைக்கப்பட்டு இத்தாலியில் கட்டப்பட்டது. இதன் அமுக்கக்கலம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இதன் மேற்பகுதி இத்தாலி, யூகோஸ்லாவியா ஆகிய நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்த, சுதந்திர நகரான டிரியெஸ்டில் செய்யப்பட்டதால் இதற்கு டிரியெஸ்ட் என்னும் பெயர் இடப்பட்டது. 1953 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி நடுநிலக் கடல் பகுதியில் அமைந்த காப்ரித் தீவுக்கு அண்மையில் வெள்ளோட்டம் விடப்பட்டது. பல ஆண்டுகள் நடுநிலக் கடல் பகுதியில் இயங்கியபின்னர் 1958 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கடற்படையினால் $250,000 விலை கொடுத்து வாங்கப்பட்டது. ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம் ஐக்கிய அமெரிக்கக் கடற்படைத் தேசிய அருங்காட்சியகம் என்ற முழுப்பெயர் கொண்ட ஐக்கிய அமெரிக்கக் கடற்படை அருங்காட்சியகம் ("U.S. Navy Museum") ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் முதன்மை அருங்காட்சியகம் ஆகும். இது, அமெரிக்காவின் வாசிங்டன் டி. சி. யிலுள்ள வாசிங்டன் கடற்படை தளப் பகுதியில் உள்ள பழைய கடற்படைச் சுடுகலன் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் அமைந்துள்ளது. அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றுத் திட்டமான கடற்படை வரலாற்று மையத்தின் ஒரு பகுதியான இந்த அருங்காட்சியகம், இக் கடற்படையின் 12 அருங்காட்சியகங்களில் ஒன்று. இந்த அருங்காட்சியகத்தில், கப்பல் மாதிரிகள், சீருடைகள் உட்பட்ட பலவகையான கடற்படையோடு தொடர்புள்ள பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது விடய அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையம் முன்னர் கடற்படை வரலாற்று மையம் என அழைக்கப்பட்ட கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையம் ("Naval History & Heritage Command") என்பது ஐக்கிய அமெரிக்கக் கடற்படையின் வரலாற்றுத் திட்டம் ஆகும். வாசிங்டன் கடற்படைத் தளப்பகுதியில் அமைந்துள்ள இது பல பெறுமதி வாய்ந்த தகவல்களைக் கொண்ட இணையத்தளம் ஒன்றையும் பேணி வருகிறது. இந்த ஆணையத்தைச் சேர்ந்த வரலாற்றாளர்கள் கடற்படையின் வரலாற்றை ஆய்வு செய்து அது தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் நூல்களை வெளியிட்டு வருகின்றனர். கடற்படை வரலாற்றுக்கும் மரபுக்குமான ஆணையத்தின் தோற்றத்துக்கான வித்து 1800 ஆண்டில் தொடங்கியது எனலாம். ஆவ்வாண்டில் சனாதிபதி ஜான் ஆடம்சு (John Adams) கடற்படைச் செயலாளராக இருந்த பெஞ்சமின் இசுட்டோடேர்ட் என்பவரை, செயலாளரின் அலுவலகப் பயன்பாட்டுக்காக தொழில்சார் நூல்களின் பட்டியலொன்றைத் தயாரிக்குமாறு பணித்தார். 1814 ஆம் ஆண்டில் பிரித்தானியர் வாசிங்டனைக் கைப்பற்றியபோது இவ்வாறு சேகரிக்கப்பட்ட நூல்களை பாதுகாப்புக்காக வாசிங்டனுக்கு வெளியே கொண்டு சென்றனர். இச் சேகரிப்பில், அமெரிக்காவையும், பிற நாடுகளையும் சேர்ந்த சிறந்த கடற்படை வரலாற்று நூல்கள் இருந்தன. பின்னர், இந் நூல்கள் வெள்ளை மாளிகைக்கு அண்மையில் இருந்த நூலகம் அடங்கலாகப் பல்வேறு இடங்களில் அமைந்த நூலகங்களில் வைக்கப்பட்டிருந்தன. 1882 ஆம் ஆண்டில் நூலகம் கடற்போக்குவரத்து அமைப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட போது அதன் தலைவராக இருந்த பேராசிரியர் ஜேம்சு ஆர். சோலி என்பார் பல்வேறு கடற்படை அலுவலகங்களிலும் சிதறிக் கிடந்த அரிய நூல்கள், கடற்படை தொடர்பான நிழற்படங்கள் என்பவற்றைச் சேகரித்ததுடன் இது தொடர்பான தொழில்முறை வெளியீடுகளையும் ஒழுங்காகப் பெற்றுக்கொள்ள ஆவன செய்தார். பல்வேறு கடற்படைப் பதிவுகளை, சிறப்பாக அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடர்பான பதிவுகளைச் சேகரித்துப் பேணவும் இவர் நடவடிக்கை எடுத்தார். இவரது செயற்பாடுகளை ஏற்றுக்கொண்ட அமெரிக்கக் காங்கிரசு, அலுவலர்களுக்கும், நூலகத்தையும் பதிவுப் பிரிவையும் ஒன்றிணைத்து நூலகத்துக்கும், கடற்போர் பதிவுகளுக்குமான அலுவலகம் ஒன்றை உருவாக்கவும் நிதி ஒதுக்கீடு செய்தது. கல்லோயா படுகொலைகள் கல்லோயா கலவரம் அல்லது கல்லோயா படுகொலைகள் என்பது விடுதலை பெற்றபின்னர் இலங்கையில் இடம்பெற்ற சிறுபான்மை இலங்கைத் தமிழர் மீதான முதலாவது பெரும் இனவெறித்தாக்குதல் ஆகும். கலவரம் 1956 ஆம் ஆண்டில் ஜூன் 11 ஆம் நாள் ஆரம்பித்து தொடர்ந்து ஐந்து நாட்கள் இடம்பெற்றது. உள்ளூர் பெரும்பான்மையின சிங்களக் குடியேற்றவாதிகள், மற்றும் கல்லோயாக் குடியேற்றத்திட்ட அவையின் ஊழியர்களும் இணைந்து அரச வண்டிகளில் வந்து நூற்றுக்கணக்கான தமிழரைக் கொன்றனர். 150 க்கும் கூடுதலான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில் பாராமுகமாக இருந்த காவல்துறையினரும் இராணுவத்தினரும், பின்னர் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பிரித்தானியக் குடியேற்றக் காலப் பகுதியில் இலங்கையில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டு அரச சேவையாளர்கள் சிறுபான்மையினரான தமிழர்களாக இருந்தனர். தமிழர் பெரும்பான்மையாக வாழும் யாழ்ப்பாண மாவட்டத்தில் மேலைத்தேய முறையிலான கல்வி அமெரிக்க இலங்கை மடத்தினராலும், ஏனைய மதப் பரப்புரையாளர்களாலும் வழங்கப்பட்டதே இதன் முக்கிய காரணமாகும். சிங்களத் தேசியவாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை சுதந்திரக் கட்சி 1956 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் ஆட்சியைக் கைப்பற்றி சிங்கள மொழியை ஆட்சி மொழியாக்க உறுதி பூண்டது. சிங்களம் மட்டும் என்ற ஆட்சியாளரின் கொள்கையை எதிர்த்து இலங்கை தமிழரசுக் கட்சியினர் 1956, ஜூன் 5 ஆம் நாள் கொழும்பில் இலங்கை நாடாளுமன்றத்தின் முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் அறவழிப் போராட்டத்தைத் தொடங்கினர். இந்நிகழ்வில் கிட்டத்தட்ட 200 தமிழ் அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் பங்கு பற்றினர். எனினும், அரசு அமைச்சர் ஒருவரின் தலைமையில் சிங்களக் காடையர்கள் இவர்களைத் தாக்கினர். பல தலைவர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் பின்னர் தமிழர்களின் வணிகத்தலங்களைத் தாக்கத்தொடங்கினர். தமிழருக்குச் சொந்தமான 150 க்கும் மேற்பட்ட கடைகள் தாக்கப்பட்டு பலர் காயமடைந்தனர். ஆனால் இத்தாக்குதல்கள் காவல் துறையினரால் உடனடியாகவே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. கல்லோயா குடியேற்ற திட்டம் என்பது நிலங்களற்ற உழவர்களை முன்னர் காடுகளாக இருந்த சில இடங்களில் குடியேற்றுவதற்காக 1949 ஆம் ஆண்டு தொடங்கிய திட்டம். இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் ஓடிய கல்லோயா ஆறு அணைக்கட்டு ஆக்கப்பட்டு, 40,000 ஏக்கர் நிலம் கமத்தொழிலுக்காக மாற்றப்பட்டது. 1956 ஆம் ஆண்டுக்குள் இக்குடியேற்றத் திட்டத்தில் 50 புதிய ஊர்கள் நிறுவப்பட்டிருந்தன. இவற்றில் தமிழர்கள், சிங்களவர்கள், இசுலாமியர்கள், மற்றும் சில வேடர்களும் குடியேற்றப்பட்டனர். இவர்களில் 50% சிங்களவர்களாக இருந்தனர். முன்னர் தமிழ்ப் பகுதிகளாக இருந்த இடங்களில் பெரும்பான்மையான சிங்களவர்கள் குடியேற்றப்பட்டதனால் இரு பகுதிகளுக்கும் இடையில் அங்கு ஆங்காங்கே சிறு சிறு கலவரங்கள் தொடங்கி இருந்தன. நாடாளுமன்றத்திலும், கொழும்பின் சுற்றுவட்டத்திலும் தமிழருக்கு எதிரான கலவரங்கள் இடம்பெற்றமை கல்லோயாப் பகுதியை எட்டியதை அடுத்து, 1956 ஜூன் 11 ஆம் நாள் மாலை அங்கும் கலவரங்கள் வெடித்தன. சிங்களக் காடையர் தமிழர்களைத் தேடி கல்லோயா பள்ளத்தாக்கின் வீதிகளில் அலைந்தார்கள். இந்தியத் தமிழர் உட்படத் தமிழருக்குச் சொந்தமான பல சொத்துக்கள் சேதமாக்கப்பட்டு எரிக்கப்பட்டன. சிங்களப் பெண் ஒருத்தி தமிழர்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், ஆயுதம் தாங்கிய 6,000 தமிழர்கள் சிங்களக் குடியேற்றத் திட்டத்தை நோக்கி வருவதாகவும் பொய் வதந்திகளை சிங்களவர் பரப்பினர். இதனை அடுத்து உள்ளூர் சிங்களவர்கள் அரச வண்டிகளில் ஏறி தமிழர் குடியேற்றங்களை நோக்கிக் கிளம்பினர்."இங்கினியாகல" என்ற குடியேற்றத்திட்ட ஊரிலும் அதனைச் சுற்றியுள்ள கரும்புத் தோட்டங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்களக் காடையர்களினால் படுகொலை செய்யப்பட்டனர். உள்ளூர் காவல் துறையினர் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்காமல் இருந்தனர். பின்னர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மாசிலாமணி மாசிலாமணி 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் நகுலன், சுனேனா ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வினியோகம் செய்யப்பட்டது. பிரெஞ்சு வினை உரிச்சொல் பிரெஞ்சு வினை உரிச்சொற்கள் ஒரு பெயர் உரிச்சொல்லையோ, வினைச்சொல்லையோ, வாக்கியப்பகுதியையோ அல்லது மற்றொரு வினை உரிச்சொல்லையோ மாற்றவே பயன்படுத்தப்படுகின்றன. அவைகள் உருபு ஏதும் கொள்வதில்லை; அதாவது, அவைகள் தங்கள் தோற்றத்தை மாற்றிக்கொள்வதில்லை. (எ-டு) ௧. "Le professeur parle lentement." (ஆசிரியர் மெதுவாகப் பேசுகிறார்.) ௨. "Le professeur parle bien lentement." (ஆசிரியர் மிகவும் மெதுவாகப் பேசுகிறார்.) ௩. "Le professeur est très gentil." (ஆசிரியர் மிகவும் நல்லவர்.) (ஒரு பெயர் உரிச்சொல்லை மாற்றியமைத்துள்ளது) ௧. முறையை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de manière): bien, mal, ensemble, constamment, convenablement, aisément ௨. காலத்தை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de temps): aujourd'hui, tôt, longtemps, quelquefois, souvent, toujours ௩. இடத்தை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de lieu): devant, derrière, où, près, loin, dehors, ici, là ௪. அளவை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de quantité): beaucoup, trop, aussi, assez, tout, très, moins ௫. ஒப்புதலை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes d'affirmation et de doute): oui, si, naturellement, probablement, peut-être ௬. எதிர்மறையை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes de négation): non, ne...pas, ne...aucunement, ne...pas du tout, ne...jamais ௭. வினாவை குறிக்கும் வினை உரிச்சொல் (Adverbes d'interrogation): combien, comment, où, pourquoi, quand ௮. வினை உரிச்சொல் வாக்கியங்கள் (Locutions adverbiales): en attendant, petit à petit, de temps en temps, à la longue, à peu près, à propos, en même temps, quelque part, par hasard, bien sûr, tout de suite, sans doute, à moitié ௧. பொதுவிதி ௨. சிறப்புவிதி இந்திரன் (கவிஞர்) இந்திரன் () (இராசேந்திரன்) தமிழகத்தின் மிக முக்கிய கலை விமர்சகர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். ஓவியர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதும் இவர் தற்போது இந்தியாவில் சென்னையில் வாழ்கிறார். 2000 ம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர். இந்திரன் 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருதினை “பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்” என்கிற மனோரமா பிஸ்வால் மஹபத்ராவின் ஒரிய மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புக்காகப் பெற்றார். பிரெஞ்சு எழுத்துகள் பிரெஞ்சு எழுத்துகள் இலத்தீன் எழுத்துகளையே மையமாகக் கொண்டுள்ளன. இது, பொதுவாகப் பயன்படுத்தப்படும் 26 எழுத்துகளையே பயன்படுத்துகிறது. சில வேளைகளில் பேசும்பொழுது இதன் எழுத்தின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. asdfgghj எச்.எம்.எசு சலஞ்சர் (1858) எச். எம். எசு சலஞ்சர் (1858) ("HMS Challenger (1858)") என்னும் நீராவியின் உதவியால் இயங்கிய பிரித்தானியக் கடற்படைக் கப்பல் ஐந்தாவது எச்.எம்.எசு சலஞ்சர் ஆகும். வேராகுரூசு (Veracruz) துறைமுக நகர ஆக்கிரமிப்பையும் உள்ளடக்கி 1862 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மெக்சிக்கோவுக்கு எதிரான தாக்குதலில் இக் கப்பல் பங்கெடுத்தது. கிறித்தவ மதகுரு ஒருவரையும் அவருடன் இருந்த சிலரையும் கொலை செய்ததற்குப் பழிவாங்கும் முகமாக 1866 இல் இடம்பெற்ற, சில பிஜி நாட்டவர் மீதான நடவடிக்கையிலும் இக் கப்பல் பங்கெடுத்துக்கொண்டது. சலஞ்சர் ஆய்வுப்பயணம் எனப்படும் உலகின் முதலாவது கடல்சார் ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டதன் மூலம் இக் கப்பல் புகழ் பெற்றது. எல்லைகளற்ற மருத்துவர்கள் எல்லைகளற்ற மருத்துவர்கள் (Doctors Without Borders) (பிரெஞ்சு மொழி: Médecins Sans Frontières) என்பது சமய சார்பற்ற, அரச சார்பற்ற, இலாப நோக்கமற்ற, மனித நேய உதவிகளை வழங்கும் ஓரு நிறுவனம். இது போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், கொடு நோய்களால் பாதிக்கப்பட்ட வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலும் பல பணிகளைச் செய்கிறது. 1999 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இவ்வமைப்பிற்கு வழங்கப்பட்டது. இலங்கையில் வடகிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிறுவனம் அடிப்படை மருந்து, உணவு வசதிகளை வழங்குவதில் ஈடுபடுகிறது. புகலிடத் தமிழ் மக்களிடம் இருந்து சேகரிக்கப்படும் நிதி, இந்தச் செயற்பாட்டுக்கு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. இத்தாலிய-மேற்கத்திய மொழிகள் இத்தாலிய-மேற்கத்திய மொழிகள் எனப்படுவது, சில உரோமானிய மொழிகளின் வகைப்படுத்துதல்களில், உள்ள மிகப்பெரிய உட்பிரிவு. இது, மேலும் இரண்டு உட்பிரிவுகைக் கொண்டது. அவை, இத்தாலிய-தால்மாத்திய மொழிகள் மற்றும் மேற்கத்திய உரோமானிய மொழிகள் ஆகும். தென்மேற்கு ஆசியா ஆசிய கண்டத்தின் தென்மேற்குப் பகுதி தென்மேற்கு ஆசியா அல்லது தென்மேற்காசியா என அழைக்கப்படுகிறது. மேற்கு ஆசியா என அழைக்கப்படும் பகுதியும் இதை கிட்டத்தட்ட ஒத்ததாகும். வடக்கு ஆப்பிரிக்காவின் சில நாடுகளையும் உள்ளடக்கும் மத்திய கிழக்கின் வரைவிலக்கணத்தைப் போலால்லாது தென்மேற்கு ஆசியா புவியியலை மட்டுமே சார்ந்த ஒரு வரைவிலக்கணமாகும். செயிண்ட் மேரீஸ் சாலை செயிண்ட் மேரீஸ் சாலை சென்னை, மயிலாப்பூரில் உள்ள ஒரு முக்கிய சாலையாகும். இந்தச் சாலை "பார்க் ஷெரட்டன்" உணவகத்திலிருந்து துவங்கி, மந்தைவெளியிலுள்ள தேவநாதன் சாலை வரை செல்கின்றது. இந்தச் சாலையில் குடியிருக்கும் சில பிரபலங்கள் முன்னாள் தலைமத் தேர்தல் ஆணையர் சேசன், பொள்ளாச்சி சக்தி மகாலிங்கம், காலஞ்சென்ற நகைச்சுவை நடிகர் நாகேஷ் போன்றோர் அடங்குகிறார்கள். செயிண்ட் மேரீஸ் சாலையில் இருக்கும் மாநகராட்சி விளையாட்டு மைதானம் புகழ் பெற்றது. சென்னை-600028 என்ற தமிழ்த் திரைப்படம் இந்த மைதானத்தில் நடைபெற்ற காட்சிகளை நினவுகூறி எடுக்கப்பட்டது. டோஸ்ட்மாஸ்டர் பன்னாட்டுச் சங்கம் டோஸ்ட்மாஸ்டர் கிளப் ("Toastmasters") என்ற உலகளாவிய இயக்கம் பேச்சுக் கலை மற்றும் தலமைப் பண்புகளை வளர்ப்பதெற்கென உள்ள இயக்கமாகும். இந்த் இயக்கம் ரால்ஃப் ஸ்மெட்லி என்பவரால் அமெரிக்காவில் 1924 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. உலகெங்கிலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 13,000 கிளப்களில் 270,000 உறுப்பினர்கள் உள்ளனர். பேச்சுக் கலை (ஆங்கிலத்தில் மட்டுமே) மற்றும் தலைமைப் பண்புகளை வளர்க்க உதவி செய்யும் டோஸ்டமாஸ்டர்ஸ் மன்றம் வருடம் இரு முறை போட்டிகளையும் நடத்துகிறது. இவை முறையே க்ளப், ஏரியா, டிஸ்ட்ரிக்ட், டிவிஷன் என்ற பல நிலைகளில் நடத்தப்பட்டு, இறுதிப் போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும். இந்தப் போட்டிகளில் கலந்து கொள்வதற்கான போட்டியாளரின் செலவுகளை அந்தந்த க்ளப், ஏரியா, டிஸ்ட்ரிக்ட், டிவிஷன் ஏற்றுக் கொள்ளும். அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் பெரிதும் பிரபலமடைந்த டோஸ்ட்மாஸ்டர்ஸ் க்ளப், கடந்த ஒரிரு வருடங்களாக, இந்தியாவிலும், குறிப்பாக மெட்ரோ நகரங்களில் பேராதரவுடன் இயங்கி வருகின்றன. இந்தக் கிளப்கள் தவிர, கீழ்க்கண்ட கார்ப்பொரேட் நிறுவனங்களிலும் டோஸ்ட்மாஸ்டர் கிளப்கள் உள்ளன. இந்த கிளப்களின் கூட்டங்களில் பணி புரியும் பங்காளிகள் (roleplayers) பின்வருமாறு:. 1)ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் (Sergeant at Arms) எனப்படும் ஆயத்த நடை முறையாளர். ஒரு படைக்கு ஆயுதங்கள் தயார் நிலையில் இருக்கிறதா என்று எப்பொதும் பார்த்து வைத்திருக்கும் 'ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ்' போல டோஸ்ட் மாஸ்டர்ஸ் கூட்டத்திற்குத் தேவையான பொருட்களும், இடமும் தயார் நிலையில் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டியதும், நிகழ்ச்சி நிரலில் இருக்கும் எல்லோரும் குறித்த நேரத்தில் வந்து விட்டார்களா என்ற் பார்ப்பதும் இவர் கடமை. குறித்த நேரத்தில் கூட்டத்தைத் துவக்குபவரும் இவரே. உலகின் எந்த மூலையில் கூட்டம் நடந்தாலும், மூன்று முக்கிய விதிகளை பார்வையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றை ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் கூட்டத்தின் துவக்கத்தில் சொல்ல வேண்டும். முதல் விதி: உறுப்பினர்கள மற்றும் விருந்தினர்களின் ஆடை (Dress Code) குறித்தது. கூட்டத்திற்ககு வரும் அனைவரும் சம்பிரதாய உடையில் (Formal Dress) வரவேண்டும். இரண்டாம் விதி: கூட்டத்தின் அமைதி (Code of Silence) குறித்தது. கூட்டத்தில் கலந்து கொள்வோர் அனைவரும் தங்கள் மொபைல் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்டும். அல்லது சைலண்ட் மோடில் வைக்க வேண்டும். யார் மேடையில் பேசிக் கொண்டிருந்தாலும் இடையிலே எழுந்து செல்லக் கூடாது. ஒருவருக்கொருவர் தகவல் பறிமாற்றம் செய்ய வேண்டி இருந்தால், துண்டுத் தாளில் எழுதி, அடுத்து உட்கார்ந்து இருப்பவரிடம் கொடுத்தனுப்ப வேண்டும். மூன்றாம் விதி: தவிர்க்க வேண்டிய தலைப்புகள்க (Taboo Topics) குறித்தது. பாலியல் (Sex), மதம் (Religion), அரசியல் (Politcs) போன்ற பிரச்னை தரும் 3 தலைப்புகளில் யாரும் பேசக் கூடாது. மேற்கண்ட மூன்று விதிகளையும் கூட்டத்தினருக்கு விளக்கிய பின், ஸார்ஜண்ட் அட் ஆர்ம்ஸ் கூட்டத்திற்கு தலைமை தாங்கும் நபரை அறிமுகப்படுத்துவார். 2) தலைவர்: க்ளப்பின் தலைவரே கூட்டதிற்குப் பெரும்பாலும் தலைமை தாங்குவார். இல்லையென்றால் க்ளப்பின் உப தலைவர் தலைமை தாங்குவார். இவர் க்ளப்பின் தோற்றம், வளர்ச்சி குறித்து ஒரு பொதுவான உரை நிகழ்த்திவிட்டு, க்ளப்பின் புதிய அங்கத்தினர்களை அறிமுகப்படுத்துவார். பின்னர் புதிய விருந்தினர்கள் எவரேனும் வந்திருந்தால் அவர்கள் தங்களைப் பற்றிய அறிமுகல் செய்து கொள்ளச் செய்யச் சொல்லுவார். புதியவர்கள் அறிமுகம் முடிந்தவுடன், தலைவர் ஒரு முக்கியமான நபரை அறிமுகப்படுத்துவார். அவர்தான் 'டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே' எனப்படும் கூட்டத்தின் தொகுப்பாளர். (Master of Ceremony). 3) டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே (TMOD) எனப்படும் கூட்டத்தின் தொகுப்பாளர். TMOD தான் கூட்டத்தின் வெற்றிக்கு முக்கியப் பங்கு வகிப்பவர். பல சுவையான கதைகளும், துணுக்குகளும் சொல்லி கூட்டத்தின் சுவாரசியம் கெடாமல் பாதுகாப்பவர். இவரும் க்ளப் உறுப்பினர்களில் ஒருவர்தான். ஒவ்வொரு கூட்டத்திலும் அடுத்த கூட்டத்தின் தொகுப்பளர் யார் என்று முடிவு செய்யப்பட்டு விட்டு அவர் தயார்நிலையில் வருவார். இவர் சற்றே பகட்டான உடை அணிந்து வந்து அனவரது கவனத்தையும் கவருபரும் கூட. ஒவ்வொரு கூட்டமும், ஒரு 'பொது மதிப்பீட்டாளரால்' (General Evaluator) மதிப்பீடு செய்யப்படும். பொது மதிப்பீட்டாளரை TMOD அறிமுகப்படுத்துவார். ஒவ்வொரு கூட்டத்திலும் ஒரு "கூட்டத்திற்குண்டான கருத்தும்" (Theme of the Day) "கூட்டதிற்குண்டான வார்த்தையையும்" (Word of the Day) அறிமுகம் செய்வது இவரே. இவற்றை பேச்சாளர்கள் ஒவ்வொரு முறையும் பயன்படுத்தும் போதும், பார்வையாளர்கள் கை தட்டி உற்சாகப்படுத்த வேண்டும். 4) பொது மதிப்பீட்டாளர் (General Evaluator). இவரும் உறுப்பினர்களில் ஒருவரே. கூட்டத்திற்குக் கூட்டம் ஒரு உறுப்பினர் இந்த வேலையைச் செய்வார். கூட்டம் துவங்கியது முதம் இறுதி வரை கூட்டம் எப்படி நடந்தது என்று கூட்டத்தின் முடிவில் நிறை-குறைகளை அழகுறப் பட்டியலிட்டுச் சொல்லுவார். இவர் குறிப்பிட்டுள்ள குறைகள் அடுத்த கூட்டத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வது அனைவரின் கடமையுமாகும். இவருக்கு உதவி செய்வதற்கென்று மூவர் அடங்கிய குழு ஒன்று உண்டு. அவர்களது பணி வருமாறு:- 5). நேரக் குறிப்பாளர் (Timer): உலகின் எந்த மூலையில் கூட்டம் நடந்தாலும், அதன் நீளம் 2 மணி நேரம் மட்டுமே. ஒவ்வொரு பேச்சாளருக்கும் அவர் பேச வேண்டிய மணித்துளிகள் ஏற்கனெவே முடிவு செய்யப்பட்டிருக்கும். இந்த நேர வரையறை பேச்சாளர்களுக்கு மட்டுமல்ல. மதிப்பீட்டளர்களுக்குமுண்டு. பேச்சாளர்களும், மதிப்பீட்டாளர்களும் குறைந்த பட்ச நேரம் பேசாமலிருந்தாலோ, அதிக பட்ச நேரத்தை மீறிப் பேசினாலோ தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். நேரக் குறிப்பாளரிடம் நேரம் காட்டும் விளக்குகள் அடங்கிய கருவி (Timer Device) ஒன்றும் உண்டு. இதன் துணை கொண்ம்டு பச்சை, மஞ்சள், சிவப்பு விளக்குகளை முறையே ஒளிர வைத்து பேசுபவருக்கு நேரத்தைக் குறிப்பால் உணர்த்துவார். கூட்டத்தின் முடிவில் யார், யார் எவ்வளவு நேரம் பேசினார்கள் என்றும், பார்வையாளர்களின் வாக்குகளுக்கு யார், யார் தகுதி பெற்றார்கள் என்றும் தனது அறிக்கையில் தெரிவிப்பார். 6) இலக்கணவாணர் (Grammarian): ஒவ்வொரு பேச்சாளரும், Theme of the Day ஐயும், Word of the Day ஐயையும் எவ்வளவு முறை பயன்படுத்தினார்கள் என்று தனது அறிக்கையில் தெரிவிப்பார். மேலும் பேச்சின்போது, பயன் படுத்தப்பட்ட அழகிய சொல்லாடல்களையும், (good usage of English), இலக்கணப் பிழைகளையும் சுட்டிக் காட்டுவார். இதன் மூலம் பேச்சாளர் மட்டுமின்றி, அனைவரும், தவறுகளை திருத்திக் கொள்வதும், நல்ல வார்த்தைகளைப் பேச்சின் போது பயன்படுத்தும் எண்ணமும் ஏற்படுகின்றது. 7) அ-உ-எண்ணி (Ah-Counter): ஒவ்வொரு பேச்சாளரும், சரியான ஒத்திகை செய்து வரவில்லையென்றாலோ, வார்த்தைகளில் தடுமாற்றம் ஏற்படுவது சகஜம். இதனை மறைப்பதற்காக சில நிரப்பு வார்த்தைகள் (Filler Words) கொண்டு சமாளிப்பதுவும் வழக்கம். தமிழிம் சிலர் பேசும் போது "வந்து, வந்து", "கேட்டியா? கேட்டியா?" போன்ற வார்த்தைகளை ஒவ்வொரு வாக்கியத்திலும் காரணமின்றிப் பலமுறை பயன்படுத்துவார்கள். கல்லூரி விரிவுரையாளர்கள் இந்த மாதிரி நிரப்பு வார்த்தைகளைப் பயன்படுத்தும் போது, மாணவர்கள் கூர்ந்து கவனித்து எத்தனை முறை "வந்து" என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார் என்று குறிப்பெடுப்பது அனவரும் அறிந்ததே. 50 முறையோ அல்லது 100 முறையோ தாண்டும்போது கடைசிப் பெஞ்சு ஓவென்று ஆர்ப்பரிக்கும். அ-உ எண்ணியின் வேலையும் இதுதான். பேச்சாளர் எத்தன முறை நிரப்பு வார்த்தைகளப் பயன்படுத்தினார் என்றும், எத்தனை முறை பேசாமல் மவுனம் சாதித்தார் என்றும் தனது அறிக்கையில் கூறுவார். ஒவ்வொரு கூட்டமும் மூன்று முக்கியமான அங்கங்கள் கொண்டவை. 1) தயாரிக்கப்பட்ட பேச்சுக்கள் (Prepared Speeches): இந்த நிகழ்வில், 3 அல்லது 4 உறுப்பினர்கள், தங்களது தயாரிக்கப்பட்ட பேச்சுக்களை நிகழ்த்துவார்கள். ஒவ்வொரு பேச்சும் 5-7 நிமிடங்கள் இருக்கும். புதிதாகச் சேர்ந்த உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படும் Competent Communicator Manualல் குறிப்பிட்டபடி 10 ப்ராஜெக்டுக்கள் செய்ய வேண்டும். இவற்றை முடிக்க 6 மாதங்கள் ஆகலாம். ஒவ்வொரு ப்ராஜெக்ட்டுக்கும் தனித்தனியான் நோக்கங்கள் உண்டு. உதாரணமாக் ஒரு ப்ராஜெக்ட்டில் உடல் மொழிக்கு (Body Language) முக்கியத்துவம் கொடுக்கப்படும். மற்றொன்றில், ஒலி மொழி வேறுபாட்டிற்கு (Vocal Variety) முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஒவ்வொரு ப்ராஜெக்ட்டின் நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும், உறுப்பினர்கள் நோக்கம் மாறாமலிருக்கும் பட்சத்தில், அவருக்குப் பிடித்த தலப்பில் பேசலாம். தவிர்க்கப்பட வேண்டிய தலைப்புகளையும் நினவில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு பேச்சையும் மூத்த டோஸ்ட்மாஸ்டர் ஒருவர் கூர்ந்து கவனித்து, அந்தப் பேச்சும எவ்வாறு இருந்தது? அதன் நிறை-குறைகள் என்னென்ன? என்று தனது மதிப்புரையில் குறிப்பிடுவார். 2). உடனடிப் பேச்சுக்கள் (Impromptu Speeches or Table Topics): கூட்டத்தின் இரண்டாவது அங்கம், "உடனடிப் பேச்சுக்கள்" எனப்படும் ஒரு சுவையான நிகழ்வாகும். இந்த நிகழ்ச்சியினை நடத்த Table Topic Master (TT Master) என்ற ஒரு பாத்திரத்தினை முன்பே முடிவு செய்யப்பட்ட ஒரு உறுப்பினர் ஏற்று நடத்துவார். அவர் பல தலைப்புகளை எடுத்து வந்திருப்பர். பார்வையாளர்களிலிருந்து உறுப்பினரையோ அல்லது ஒரு விருந்தினரையோ அழைத்து அவருக்கு ஒரு தலைப்புக் கொடுப்பார். தலைப்பைப் பெற்ற நபர் 30 வினாடிகள் மட்டுமே யோசித்துப் பேச்சைத் துவக்க வேண்டும். பேச வேண்டிய நேரம் 1-30-2.30 நிமிடங்களுக்கு மட்டுமே. 1.30 நிமிடங்களுக்குக் குறைவாகவோ அல்லது 2.30 நிமிடங்களுக்கு அதிகமாகவோ பேசுபவர்கள் தகுதியிழப்புச் செய்யப்படுவார்கள். கேட்பதற்கு எளிதாகத் தோன்றும் இந்த நிகழ்வு, உண்மையிலேயே அவ்வளவு எளிதல்ல. ஆனால், பழகப் பழக இதுவும் எளிதில் கைகூடும். இந்த இரண்டு நிகழ்வுகளும் முடிந்த பிறகு, நேரக் குறிப்பாளர் தகுதியிழந்த பேச்சாளர்கள் எவரேனும் இருந்தால் அவர்கள் பெயர்களைப் பார்வையாளர்களுக்குத் தெரிவிப்பார். பார்வையாளர்கள் தகுதி பெற்ற பேச்சாளர்களில் தங்களைக் கவர்ந்த தயாரிக்கப்பட்ட பேச்சாளர் (Best Prepared Speech) மற்றும் உடனடிப் பேச்சாளர் (Best Table Topic Speech) யார் என்றும் வாக்களிப்பாரகள். 3)மதிப்புரை (Evaluations): கூட்டத்தின் பிரதான அம்சமே மதிப்புரைகளாகும். பொது மதிப்பீட்டாளர் ஒவ்வொரு பேச்சையும் கூர்ந்து கவனித்த மூத்த டோஸ்ட்மாஸ்டரை குறிப்பிட்ட பேச்சாளரின் பேச்சுக்கு (கவனிக்கவும். பேச்சாளருக்கு அல்ல; அவரது அன்றைய பேச்சுக்கு மட்டுமே) மதிப்புரை வழங்கச் சொல்வார். பேச்சாளருக்கு இந்த மதிப்புரை பெரிதும் நன்மை பயக்கக்கூடியதாகும். பார்வையாளர்கள் இந்த மதிப்பீட்டாளர்களில் தங்களைக் கவர்ந்தவர்கள் (Best Evaluator) யார் என்றம் மீண்டும் ஒரு முறை வாக்களிப்பார்கள். நேரக் குறிப்பாளர், இலக்கணவாணர், அ-உ எண்ணி ஆகியோரும் தத்தம் அறிக்கைகளை வாசிப்பார்கள். இறுதியாக பொது மதிப்பீட்டாளர் கூட்டட்த்தின் பொதுவான நிறை-குறைகளைப் பட்டியலிடுவார். இதில் கூட்டம் சரியான நேரத்திற்குத் துவங்கப்பட்டதா? வந்திருந்த விருந்தினர்கள சரியாக வரவேற்கப்பட்டார்களா? கூட்டம் நடந்த இடம் தயார்நிலையில் இருந்ததா? போன்ற நுணுக்கமான விவரங்களும் தெரிவிக்கப்படும். மூன்று அங்கங்களும் முடிந்த நிலையில், டோஸ்ட்மாஸ்டர் ஆஃப் த டே, வாய்ப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறி, தலைவரிடம் மேடையை ஒப்படைப்பார். தலைவர், விருந்தினர்கள கூட்டத்தினால் பயனடைந்திருந்தால், அவர்களது கருத்தைச் சொல்லுமாறு கேட்பார். பின்னர் அன்றைய கூட்டத்தின் சிறந்த தயாரிக்கப்பட்ட பேச்சாளர், சிறந்த உடனடிப் பேச்சாளர், சிறந்த மதிப்பீட்டாளர் ஆகியோர் பெயர்களை அறிவித்து அவர்களைக் கவுரவிப்பார். வேறு ஏதும் நடவடிக்கைகள் இல்லாதபட்சத்தில் கூட்டத்தினை அடுத்த வாரம் வரை ஒத்தி வைப்பார். உரோமாஞ்சு மொழி உரோமாஞ்சு மொழி ("Romansh language") சுவிட்சர்லாந்தில் உள்ள நான்கு ஆட்சி மொழிகளுள் ஒன்றாகும். சியார்சிய மொழி சியார்சிய மொழி (ქართული, "கார்த்துலி") சியார்சியர்களின் தாய்மொழியும் அந்நாட்டின் ஆட்சி மொழியும் ஆகும். இம்மொழியை முதன்மை மொழியாக சியார்சியாவில் நான்கு மில்லியன் மக்கள் பயன்படுத்துகிறார்கள். மேலும், வெளிநாடுகளில் வாழும் ஐந்து இலட்சம் மக்கள் இம்மொழியைப் பேசுகிறார்கள். மொத்தத்தில் 1998-ஆம் ஆண்டு கணக்கின்படி 6-7 மில்லியன் மக்களால் இம்மொழி பேசப்படுகிறது. காலுதைச்சண்டை காலுதைச்சண்டை (ஆங்கிலம்: "Kickboxing"; இடாய்ச்சு: "Kickboxen") குத்துச்சண்டையை போன்ற ஒரு சண்டை விளையாட்டு ஆகும். இதை உடல் நலக் காரணங்களுக்காகவும் தற்காப்பிற்காகவும் கற்போரும் உண்டு. இடாய்ச்சு இலக்கணம் இடாய்ச்சு இலக்கணம் எனப்படுவது இடாய்ச்சு மொழியின் இலக்கணம் ஆகும். இடாய்ச்சு இலக்கணம் சற்றுச் சிக்கலானது. இடாய்ச்சு இலக்கணத்தில் பெயர்ச்சொற்கள், ஆண்பால் Maskulinum (der), பெண்பால் Femininum (die), ஒன்றன்பால், (அஃறிணை) Neutrum (das) என மூன்று பால்களாகப் பிரிக்கப்படுகின்றன. இந்தப் பால் வேற்றுமைகள் முறையே der, die, das என்ற சுட்டிச்சொற்களால் இனம் காணப்படுகின்றன. ஆனாலும் தமிழ்இலக்கணத்தில் உள்ளது போல ஒரு விதிமுறைக்கு உட்பட்டு, இந்த der, die, das என்பன பெயர்ச் சொற்களுடன் இணைவதில்லை. தமிழ் இலக்கணத்தில் குறிக்கப் படுவது போலவே ஆண் ஆண்பாலாகாவும். பெண் பெண்பாலாகவும், குழந்தை அஃறிணையாகவும் குறிக்கப்பெற்றிருந்தாலும், மேசை, அலுமாரி போன்றவை கூட ஆண்பாலுக்குள் அடங்குகின்றன. யன்னல், கட்டில் போன்றவை அஃறிணைக்குள் அடங்குகின்றன. உதாரணமாக வாய் ஆண்பாலாகவும், மூக்கு பெண்பாலாகவும், கண் அஃறிணையாகவும் என்று ஒரு ஒழுங்கற்ற முறையிலேயே வகுக்கப் பட்டிருக்கிறது. வேற்றுமைகள் எழுவாய் (Nominativ), இரண்டாம் வேற்றுமை (Akkusativ), நான்காம் வேற்றுமை (Dativ), ஆறாம் வேற்றுமை (Genitiv) என நான்கு வேற்றுமைகளாகப் பிரிக்கப் படுகின்றன. தமிழ் இலக்கணத்தில் எட்டு வேற்றுமைகளுக்குள் வருகின்ற விடயங்கள் அத்தனையும் இதில் நான்கு வேற்றுமைக்குள் அடக்கப்பட்டு விடுகின்றன. சில எடுத்துக்காட்டுகள் Maskulinum (der) (ஆண்பால் – ஒருமை) Femininum (die) (பெண்பால் – ஒருமை) Neutrum (das) – (ஒன்றன்பால் - ஒருமை) பன்மை இடாய்ச்சு மொழியில் நான்கு வேற்றுமைகள் உள்ளன. அவையாவன முதலாம் வேற்றுமை (எழுவாய் Nominativ), இரண்டாம் வேற்றுமை (Akkusativ), நான்காம் வேற்றுமை Dativ, ஆறாம் வேற்றுமை (Genitiv). முதன்மைக் கட்டுரை: இடாய்ச்சு எழுத்ததிகாரம் பார்க்கவும்: இடாய்ச்சு எழுத்துகள், இடாய்ச்சு மொழியொலியியல் இடாய்ச்சு மொழியில் சொற்களின் வகை("Wortart") எட்டு ஆகும். அவை, ௧. பெயர்ச்சொல் ("Nomen") ௨. இடப் பெயர்ச்சொல் ("Pronomen")malandros ௩. வினைச்சொல் ("Verben") ௪. பெயர் உரிச்சொல் ("Adjektive") ௫. வினை உரிச்சொல் ("Adverb") ௬. பெயர்ச்சொற்குறி ("Artikel") ௭. முன்விபக்தி ("Präposition") ௮. இடைபடுஞ்சொல் ("Konjunktion") வெள்ளை வெள்ளை ஒரு நிறமாகும் இவ்வுணர்வு மனிதக் கண்ணில் காணப்படும் நிறத்தை அறியக்கூடிய மூன்று வகை கூம்புக் களங்களை கிட்டத்தட்ட நிகரான அளவின் தூண்டுவதும் சுற்றுப்புறச் சூழலைவிட கூடிய ஓளிர்மையைக் கொண்டதுமான ஒளியால் ஏற்படுத்தப்படுகிறது. வெள்ளை உணர்வு சாயல் (hue), சாம்பல் நிறம் (grayness) அற்றதாக காணப்படும். வெள்ளொளியை பலவாறாக உண்டாக்க முடியும். சூரியன் அவ்வாறனதொரு மூலமாகும். மின்சார வெண்சுடர் இன்னொரு மூலமாகும். தற்கால ஒளிமூலங்களான உடனொளிர்விளக்கு, ஒளிகாவும் இருமுனையம் போன்றவையும் வெள்ளொளி மூலங்களாகும். தனது மேற்பரப்பில் பட்டுத்தெறிக்கும் ஒளியை மாற்றதாக எப்பொருளும் வெள்ளை நிறமாகத் தோன்றும். பூக்கள், முகில்கள், தூவிப்பனி போன்றவை வெள்ளை நிறமாக தோன்றுவதால் மானிட காலாச்சரத்தில் வெள்ளை நிறம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. பொதுவாக வெள்ளை நிறம் தூய்மை, சுத்தம் என்பவற்றைக் குறிக்கப் பயன்படுகிறது. வெள்ளை, கருப்பு நிறங்களிடையே காணப்படும் பாரிய வேறுபாட்டால் இவை வேற்றுமையைக் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன. சீன கலாச்சாரத்தில் வெள்ளை நிறம் சாவைக் குறிக்கிறது. வேராகுரூசு (நகரம்) வேராகுரூசு (Veracruz) என்பது, மெக்சிக்கோ நாட்டின் ஒரு மாநிலமான வேராகுரூசில் மெக்சிக்கோ குடாவில் அமைந்துள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரமான அலாப்பாவில் (Xalapa) இருந்து கூட்டமைப்பு நெடுஞ்சாலை 140 வழியாக 105 கிலோமீட்டர் (65 மைல்) தொலைவில் உள்ளது. 2005 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி நகரத்தின் மக்கள் தொகை 444,438 உம், மாநகரசபைப் பகுதியின் மக்கள்தொகை 512,310 உம் ஆகும். 241 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மாநகரசபைப் பகுதியில் நகருக்கு வெளியாயுள்ள வலன்டே டயசு, லாசு அமாப்போலாசு ஆகிய பகுதிகளும் அடங்குகின்றன. போக்கா டெல் ரியோ (Boca del Río), ஆல்வாராடோ (Alvarado) ஆகிய மாநகரசபைப் பகுதிகளையும் உட்படுத்தியுள்ள இதன் பெருநகரப் பகுதி 702,394 மக்கள் தொகையைக் கொண்டது. அலாப்பா அலப்பா-என்ரிக்கசு என்னும் முழுப்பெயர் கொண்ட அலாப்பா (Xalapa) என்பது மெக்சிக்கோ நாட்டின் மாநிலங்களுள் ஒன்றான வேராகுரூசின் தலைநகரம் ஆகும். 2005 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, இந்த நகரத்தின் மக்கள் தொகை 387,879. 413,136 மக்கள் தொகையைக் கொண்ட மாநகரப் பகுதி, 118.45 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. வேராகுரூசு மாநிலத்தின் புவியியல் மையத்துக்கு அண்மையில் அமைந்துள்ள சலாப்பா, வேராகுரூசு நகரத்துக்கு அடுத்தபடியாக இம் மாநிலத்தில் உள்ள நகரங்களில் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். அலாப்பா-என்ரிக்கசு என்னும் பெயர் 19 ஆம் நூற்றாண்டின் ஆளுநராக இருந்த சுவான் டி லா லசு என்ரிக்கசு (Juan de la Luz Enríquez) என்பாரைக் கௌரவிப்பதற்காக அவரது பெயரைத் தழுவி இடப்பட்டது. சட்னி சட்னி என்பது மற்றப் உணவுகளுடன் தொட்டு சாப்பிடுவதற்கு தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளுடன், உப்பு, தக்காளி, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, போன்ற நறுமணப் பொருட்களுடன் அரைத்து, பின்னர் எண்ணெய்யில் தாளித்து, பலவிதவிதமான சட்னி வகைகள் தயாரிக்கப்படுகிறது. இதனை தோசை, இட்டலி அல்லது இட்லி , சப்பாத்தி, பூரி எனப்பல விதமான உணவுகளுடன் கலந்து சாப்பிடுவார்கள். பலவிதமான் சட்னிகள் உண்டு. அவற்றில் சில: ஒவ்வொரு சட்னியின் செயல்முறை அதன் மூலப்பொருளை கொண்டுள்ளது. (எ.கா.) தேங்காய் சட்னி என்பது தேங்காய் வைத்து செய்ய வேண்டும். தேவையான பொருட்கள்: தேங்காய், தண்ணீர், தேவையான அளவுக்கு உப்பு, கடுகு, மிளகாய், கறிவேப்பிலை. தேங்காயை உடைத்து துருவி, பின்பு மிளகாய் சேர்த்து ஆட்டுக்கல்லில்(மிக்சியில்) போட்டு நன்றாக அரைக்க வேண்டும். தேவையான் தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். சிறிது நேரத்திற்கு பிறகு தேங்காய் சட்னி உருவாகிவிடும். இதன் பின்னர், கடுகு மற்றும் கறிவேப்பிலையைச் சிறிது எண்ணெய் விட்டுத் தாளித்து சட்னியுடன் கலக்க வேண்டும். இதனை மொரு மொருவான தோசையுடன் சாப்பிட்டால் ருசியாக இருக்கும். பரோட்டா பரோட்டா (Parotta or Paratha) என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது பாக்கிசுத்தான், வங்காளதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா போன்ற நாடுகளில் கிடைக்கிறது. இதனை இலங்கையில் "பராட்டா" என்றும், இந்தோனேசியாவில் "ப்ராத்தா" என்றும் அழைக்கப்படுகிறது. "பராத்தா" என்கிற வார்த்தை சமஸ்கிருதச் சொல்லாகும். இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது. செய்முறை : மைதா மாவைச் சுத்திகரிக்க "பென்சாயில் பெராக்ஸைடு" (Benzoyl Peroxide) எனும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது உடலுக்குத் தீங்கான ஒன்றாகும். இவற்றை சில ஐரோப்பிய நாடுகளும், சீனாவும், இங்கிலாந்தும் தடை செய்திருக்கின்றன. பரோட்டாவின் மூலப்பொருட்கள் சில விதங்களில் உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கக் கூடியது என சில கருத்துக்களும் முன்வைக்கப்படுகின்றன. அலியா இசுரேலியர்களுக்கு தங்கள் இறைவன் வாக்களித்தாக நம்பும் இசுரேலிய நிலத்துக்கு யூதர்கள் மீண்டும் வந்து குடியேறல் அலியா(எபிரேயம்: עלייה பலுக்கள்: அலியா பொருள்:ஏற்றம்) எனப்படுகிறது. அலியா சியோனிய கொள்கையின் முக்கிய அம்சமாகும். மாற்றாக யூதர் இசுரவேலின் நிலங்களை விட்டு வெளியேறல் யெரிதா என்றழைக்கப்படுகிறது. இசுரேலிய புனித பூமிக்கு திரும்புவதே பாபிலோனிய நாடு கடத்தலுக்குப் பின் யூதர்களின் பேரவாவாக இருந்தது. 1882-க்குப் பின்னர் பாலஸ்தீனத்திற்கும், பிறகு தற்போதைய இசுரேலுக்கும் மிகுதியான அளவில் யூதர்களின் உள் குடியேற்றம் அமைந்தது. அலியா என்ற சொல் எபிரேய மொழிச்சொல்லாகும். இது "முன்னகர்வு" அல்லது "மேல் நகர்வு" என்ற பொருளைக் குறிக்கும். யூத பண்பாட்டின்படி, இசுரேல் நிலத்திற்கு போவதென்பது புவி ரீதியான பயணம் மட்டுமல்லாமல் தம் உடல், பொருள், ஆவியுமே பயணிக்கிறது என்று கொண்டனர். எகிப்து, பாபிலோனியா, நடுத்தரைக்கடலை ஒட்டிய நாடுகளில் செறிந்து வாழ்ந்த யூதர்கள், ரப்பிக்களின் காலக்கட்டத்தில் பாலஸ்தீனத்திற்கு போகவேண்டும் என்றால் உயர்ந்த மலை முகட்டில் பயணித்தே செல்ல வேண்டுமாய் இருந்தது. கடல் மட்டத்திலிருந்து சற்றொப்ப 2700 அடிக்கு மேலே அமைந்த ஜெருசலேமுக்கு செல்லவேண்டியது மேல் நகர்வு என்றே சொல்லும்படி இருந்தது. 1919 தொடக்க்கம் 2006 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இசுரவேலுக்கு வந்த குடியேற்றவாதிகள் பற்றிய புள்ளிவிபரம் கீழேதரப்பட்டுள்ளது. பீடபூமி நிலவியலில் பீடபூமி ("Plateau") என்பது ஒரு வகையான மேட்டு நிலப்பரப்பைக் குறிக்கும். பொதுவாக கடல் மட்டத்தை விட நன்கு உயரமான சம நிலப்பரப்பு பீடபூமி எனப்படுகிறது. உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள திபெத் பீடபூமி "உலகின் கூரை" என கருதப்படுகிறது. இது 25,00,00 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், கடல் மட்டத்திலிருந்து 5000 மீ உயரத்திலும் அமைந்துள்ளது. காலநிலை மாற்றங்கள் பீடபூமியினால் ஏற்படும். உதாரணமாக இந்தியாவின் பருவமழை காலங்களில் வரும் பருவக்காற்றை திசை திருப்பும் அளவிற்கு திபெத் பீடபூமி உயரமானது. வட அமெரிக்காவின் கொலெராடோ பீடபூமியும் (337,000 ச.கி.மீ ) குறிப்பிடத்தகுந்த பீடபூமியாகும். யுவகிருஷ்ணா யுவகிருஷ்ணா என்ற பெயரில் எழுதும் கிருஷ்ணகுமார் ஒரு தமிழ் எழுத்தாளர். தொடக்கத்தில் இணைய விவாத தளங்களிலும், வலைப்பதிவுகளிலும் எழுதத் தொடங்கிய இவர் விளம்பரத்துறை குறித்த "சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்" என்ற புத்தகம் ஒன்றினை எழுதியிருக்கிறார். குங்குமம், பெண்ணேநீ, ஆனந்த விகடன், குமுதம் ரிப்போர்ட்டர், பில்டர்ஸ் வேர்ல்டு உள்ளிட்ட பத்திரிகைகளிலும்.. திண்ணை, தமிழோவியம் உள்ளிட்ட இணைய இதழ்களிலும் எழுத்துப் பங்களிப்பு அளித்திருக்கிறார். குமுதம் இதழ் கடந்த 2008ஆம் ஆண்டு தொகுத்த முதல் பத்து சிறந்த வலைப்பதிவுகளில் இவரது வலைப்பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் புதிய தலைமுறை எனும் வார இதழில் நிருபராகப் பணியாற்றி வருகிறார். உயிர்மையும் சுஜாதா அறக்கட்டளையும் இணைந்து பல்வேறு பிரிவுகளில் வழங்கும் சுஜாதா விருதினை 2011ஆம் ஆண்டு இவர் இணையப் பிரிவில் பெற்றுள்ளார். தோப்பூர் (திருகோணமலை) தோப்பூர், இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் ஊர். இவ்வூர் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்டது. மூதூர் நகரிலிருந்து 16 கிமீ தொலைவிலுள்ள தோப்பூர் பிரதேசம் ஏழு கிராம அதிகாரி பிரிவுகளைக் கொண்டு 39.9 எக்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இவ்வூரில் தென்னை அதிகமாக காணப்பட்டதால் தோப்பு எனவும் பின்னர் இப்பெயர் திரிபடைந்து தோப்பூர் எனவும் அழைக்கப்பட்டது. தோப்பூர் நிறைய வயல்களையும் சிறிய குளமான நாவற்கேணியையும் கொண்டுள்ள அழகிய ஊராக விளங்குகிறது. இடாய்ச்சு மொழியொலி இக்கட்டுரை இடாய்ச்சு மொழியின் ஒலியியல் அல்லது மொலியொலியியலைப் பற்றியது. சலஞ்சர் ஆய்வுப் பயணம் சலஞ்சர் ஆய்வுப் பயணம் என்பது பொதுவாக 1872 - 76 ஆண்டுக் காலப் பகுதியில் இடம்பெற்ற ஒரு அறிவியல் ஆய்வுக்கான கடல் பயணத்தைக் குறிக்கும். இவ்வாய்வுகளின் போதான பல கண்டுபிடிப்புக்கள் கடலியல் துறையின் தொடக்கத்துக்கான அடிப்படையாக அமைந்தது. எடின்பரோ பல்கலைக்கழகம், மேர்ச்சிசுட்டன் காசில் பள்ளி ஆகியவற்றைச் சேர்ந்த இசுக்காட்லாந்தியரான சார்லசு வைவில் தாம்சன் (Charles Wyville Thomson) என்பவரின் ஆலோசனைப்படி இலண்டன் அரச கழகம், 1872 ஆம் ஆண்டில் அரச கடற்படையிடம் இருந்து எச்.எம்.எசு சலஞ்சர் என்னும் ஒரு கப்பலைத் தனது அறிவியல் ஆய்வுப் பயன்பாட்டுக்காகப் பெற்றது. அதில் இயற்கை வரலாறு, வேதியியல் ஆகியவற்றுக்கான ஆய்வுகூடங்களையும் அமைத்துக்கொண்டது. இக்கப்பல் 1872 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள போர்ட்சுமவுத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது. தாம்சனின் அறிவியல் தொடர்பான மேற்பார்வையின் கீழ் இக் கப்பல் ஏறத்தாழ 70,000 கடல் மைல் தூரம் பயணம் செய்து அளவீடுகளை எடுத்ததுடன் ஆய்வுகளையும் நடத்தியது. இதன் ஆய்வு முடிவுகள், "1873-76 ஆம் ஆண்டில் எச்.எம்.எசு சலஞ்சரின் ஆய்வுப் பயணத்தின் போது, கிடைத்த அறிவியல் முடிவுகள் தொடர்பான அறிக்கை" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. பிற பல கண்டுபிடிப்புக்களோடு, இது 4,000 முன்னர் அறியப்படாத உயிரினங்களைப் வகைப்படுத்தியது. இவ்வெளியீட்டை மேற்பார்வை செய்தவரான ஜான் முரே என்பார், இவ்வறிக்கையை, பதினைந்து, பதினாறாம் நூற்றாண்டுகளில் இடம்பெற்ற பெரும் கண்டுபிடிப்புக்களுக்குப் பின்னர் ஏற்பட்ட மிகப் பெரிய அறிவு தொடர்பான முன்னேற்றம் என விளக்கினார். 1876 மே மாதம் 24 ஆம் நாள் ஹம்ப்சயரில் உள்ள இசுப்பிட்டெட் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்த இக்கப்பல், மொத்தமாக 68,890 கடல் மைல்கள் (127,580 கிலோ மீட்டர்) தூரம் பயணம் செய்திருந்தது. இது இதன் பயணக் காலமான 1606 நாட்களில், 713 நாட்களைக் கடலில் செலவிட்டது. இது 492 ஆழ்கடல் அளவீடுகள் உட்படப் பல நூற்றுக்கணக்கான ஆய்வுகளில் ஈடுபட்டது. ஒரகடம் ஒரகடம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருக்கழுகுன்றத்தை அடுத்துள்ள ஒரு வளர்ந்து வரும் பொருளாதார மண்டலம் ஆகும். திருப்பெரும்புதூருடன் இணைந்து தொடங்கப்பட்ட தொழிற்சாலைகள் ஏறக்குறைய 7000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், செங்கற்பட்டு- திருக்கழுகுன்றம் சாலையில் அமைந்துள்ளது ஒரகடம். ஒரகடம் பகுதி பண்டைய காலத்தில் தொண்டை நாட்டைச் சேர்ந்த பகுதி. ஒரகடத்தின் பண்டைய பெயர் பராங்குசபுரம் என்பது. ஸ்ரீகோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் எனும் 1200 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீராமர் திருக்கோயில் இங்கமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் ஸ்ரீரகுநந்தன் மூலவர் தாயாருடன் ஒரே சந்நிதியில் காட்சியளிப்பது அரிதான அமைப்பாகும். இத்திருக்கோயிலில் திருப்பணிகள் தற்போது (2014 ஆம் ஆண்டு) நடந்து வருகின்றன.இத்திருக்கோயிலைச் சுற்றி அக்ரஹாரம் கருடனின் இறக்கைகள் போன்ற அமைப்பில் அமைவதற்கு வேண்டிய நிலத்தை ஸ்ரீஅஹோபில மடத்தின் ஸ்ரீஷஷ்ட்ட பராங்குஸ யதீந்தர மஹாதேசிகன் தாமே அளந்து அளித்ததால் ’பராங்குசபுரம்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஒரகடத்தில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் நோக்கியா-சீமன்சு நெட்வொர்க் தொழிற்சாலை நிறுவப்பட்டு 99 வருட குத்தகைக்கு மிகவும் குறைக்கப்பட்ட தொகைக்கு நிலமும் பெற்று பெருந்தொகையை வரி ஏய்ப்பும் செய்தது ($413 மில்லியன்) நோக்கியா நிறுவனம். மண் மலைப்பாம்பு அயகரம் ("Gongylophis conicus") என்பது ஒரு நச்சுத் தன்மையற்ற பாம்பு. இது தன் இரையை நெரித்துக்கொன்று பின்னர் உட்கொள்ளும் என்பதால் இது ஒரு மலைப்பாம்பு வகையாகும். இதை மண் மலைப்பாம்பு என்றும், சிறிய மலைப்பாம்பு என்றும், மணியன் என்றும் அழைப்பர். தொந்தரவு தரப்பட்டால், உடலை உப்பச்செய்து விரியன் பாம்புகளைப் போல் இவை கொத்தும். ஆனால் இவற்றிற்கு நஞ்சு இல்லாததால் மாந்தருக்கும் பிற பெரிய விலங்குகளுக்கும் உயிரிழக்கும் வாய்ப்பு இல்லை. Snakes of India - The Field Guide -- இரோமுலசு விட்டேக்கர் மற்றும் அசோக் கேப்டன் உரொட்டி உரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். அது மாவு (பொதுவாக கோதுமை மா), தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை சூடான மேற்பரப்பில் இட்டு வேகவைப்பதன் மூலம் உரொட்டி தயாரிக்கப்படுகிறது. பீட்சாவின் அடிப்புறம் ரொட்டியினால் ஆனது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் கோதுமை உரொட்டி முக்கிய உணவுகளில் ஒன்றாகும். சிலர் ரொட்டி செய்யும் மாவில் மரக்கறி போன்றவற்றைக் கலந்து சமைப்பர். மலைப்பாம்பு இவை நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும். இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன. ஆபிரிக்கக் கண்டத்தில் வெப்ப மண்டலங்களில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியில் காணப்படுகின்றது. எனினும் ஆபிரிக்காவின் தெற்குப்பகுதியில் இவை காணப்படுவதில்லை. அதேவேளை ஆசியாவிலே வங்கதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, நிக்கோபார் தீவுகள் போன்றவற்றிலும் மியான்மார், தென் சீனா, ஆங்கொங், ஹைனன் போன்றவற்றிலும் மலேசியப் பகுதிகளான இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சு போன்றவற்றிலும் காணப்படுகின்றது. தமிழ் நாட்டில்/இந்தியாவில் உள்ள முக்கிய மலைப்பாம்புகள்: சைலன்ஸ் பிகம்ஸ் யூ சைலன்ஸ் பிகம்ஸ் யூ 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஒரு திகில் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் அலிசியா சில்வசுடோன், சியென்னா கிலரி, ஜோ ஆன்டர்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தனிமையான ஒரு வீட்டில் வாழ்வதுடன் வெளியுலகத் தொடர்பின்றி இருக்கும் வயலட் (அலிசியா சில்வசுடோன்), கிரேசு (சியென்னா கிலரி) ஆகிய இரு சகோதரிகளின் கதையைச் சொல்லுகின்றது. சகோதரிகள் இருவரும் தம் வீட்டுக்கு வரும் லூக் (ஜோ ஆன்டர்சன்) எனும் பையனை மயக்க இவர்கள் முயல்கின்றனர். வயலட் , லூக் இருவரும் காதலில் விழுவதுடன் அந்த வீட்டை விட்டு வெளியேற முயலுகின்றனர், அப்போது அவர்கள் அங்கே அடைக்கப்பட்டுள்ளதை உணர்கின்றனர்.இந்த திரைப்படம் இந்த இரு சகோதரிகளின் வித்தியாசமான நடத்தையை குறிப்பாக அவர்களின் தந்தையுடன் இருக்கும் முறைகேடான நடத்தையையும் காட்டுகின்றது. வயலட், லூக் காதலால் பொறாமைக் கொள்ளும் கிரேசு லூக்கை கவர்சியால் மயக்க முயல்கிறார். இதனிடையே வயலட் கர்ப்டைந்தாலும் கர்பம் இடையிலேயே கலைந்து விடுகிறது. படத்தின் கடைசியில் ஏற்படும் தீ விபத்தில் லூக் இறக்கிறான் அட்டோமியம் அட்டோமியம் (Atomium) என்பது எக்சுப்போ 58 எனப்படும், 1958 ஆம் ஆண்டின் பிரசெல்சு உலக விழாவுக்காகக் கட்டப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும். ஆன்ட்ரே வாட்டர்கெயின் (André Waterkeyn) என்பவரால் வடிவமைக்கப்பட்ட இதன் உயரம் 102 மீட்டர்கள் (335 அடிகள்). இரும்புப் படிகத்தின் அணு அமைப்பை ஒத்ததாக, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட ஒன்பது உருக்குக் கோளங்களினால் ஆன இது ஒரு படிக மூல அமைப்பின் 165 பில்லியன் மடங்கு அளவு கொண்டது. ஒவ்வொன்றும் 18 மீட்டர் விட்டம் கொண்ட ஒன்பது கோளங்களில் எட்டுக் கோளங்கள், ஒரு கனக் குற்றி வடிவச் சட்டக வடிவின் எட்டு உச்சிகளிலும் அமைந்துள்ளன. ஒன்பதாவது மூலைவிட்டங்களால் இணைக்கப்பட்டுக் கன வடிவத்தின் மையத்தில் உள்ளது. இக் கன வடிவ அமைப்பின் விளிம்புகள் வழியே அமைந்து கோளங்களை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் குளாய்கள் நகர்படிகளைக் கொண்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தி ஒரு கோளத்தில் இருந்து இன்னொரு கோளத்துக்குச் செல்ல முடியும். இக் கோளங்களுக்குள் காட்சிக் கூடங்களும், பிற பொதுப் பயன்பாட்டு இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உச்சியில் உள்ள கோளத்தில் இருந்து பிரசல்சு நகரின் விரிந்த பார்வையைப் பெற முடியும். நடுவில் நிலைக்குத்தாக அமைந்த குளாய் ஒரு உயர்த்தியைக் கொண்டுள்ளது. இது ஒரு செக்கனுக்கு 5 மைல்கள் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த நினைவுச் சின்னத்தை தொடக்கத்தில் ஈபெல் கோபுரம் தலைகீழாக அமைந்தது போன்ற ஒரு வடிவத்தில் அமைக்க ஆலோசிக்கப்பட்டது. ஆனால், வாட்டர்கெயின் ஒரு அணு அமைப்பைப் போன்ற வடிவம் குறித்த காலப்பகுதிக்கு ஒரு குறியீடாக அமையும் எனக் கருதினார். முதலில் இக்கட்டிடம் ஆறு மாதத்துக்கு மட்டுமே வைத்திருப்பது என முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், விரைவிலேயே இது பிரசில்சு உலாக விழாவுக்கான நினைவுச்சின்னமாக மட்டுமன்றி, தற்காலக் கட்டிடக்கலைக்கான குறியீடாகவும் இருக்கும் என உணரப்பட்டதால் அது அகற்றப்படாமல் 50 ஆண்டு காலம் வரை அப்படியே இருந்தது. மார்ச் 2004 ஆம் ஆண்டில் திருத்தவேலைகள் தொடங்கப்பட்டன. இதனால் இது 2006 பெப்ரவரி 18 ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு மூடப்பட்டு இருந்தது. கலைக்கமல் கலைக்கமல் இலங்கையில் புகழ்பெற்ற ஒரு மெல்லிசைப்பாடகராவார். 1977 ஆம் ஆண்டு முதல் பாட ஆரம்பித்த கலைக்கமல் 2009 ஆம் ஆண்டு வரையும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேடை, வானொலி, தொலைக்காட்சி பாடகராகி இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் பாடியிருக்கிறார். எழுத்தாளராக விளங்கும் இவர் புதுக்கவிதை, சிறுகதை, மரபுக்கவிதை, இசைச் சித்திரம், நாடகம், பாடல் போன்றவற்றை எழுதி இலக்கியத்துறையிலும் பிரசித்தி பெற்றதுடன் 1980 ஆம் ஆண்டு புதுக்கவிதையில் முதன் முதலில் "ஓடக்குழல்' என்னும் காதல் தொடர் கவி கதையை தினகரன் தேசிய பத்திரிகையில் 4 மாதங்கள் தொடராக எழுதி பாராட்டைப் பெற்றவர். அயாஸ் பயாஸின் "சுப்பர் சன்ஸ்' கே.சி. பாலேந்திராவின் "ரெயின்போ' இசைக் குழுக்களில் முதன்மை பாடகராக திகழ்ந்த கலைக்கமல் இலங்கையில் உள்ள பல்வேறு இசைக்குழுக்களுடன் பாடுயுள்ளார். "வசந்த கீதங்கள்' என்ற தனது பாடல் ஒலி நாடாவை வெளியிட்டதுடன் நடிகமணி அபுநானா கே. ஏ. ஜவாகர் குழுவினரின் ஐந்து நகைச்சுவை ஒலிநாடாக்களையும் வெளியிட்டுள்ளார். கலைக்கமல் 1992 ஆம் ஆண்டு ஒரு மாத காலம் சுவிட்சர்லாந்தில் பல பாகங்களிலும் பாடி புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கவர்ந்தவர். இதுவரை மூன்று முறை சுவிஸ் நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.இவரது தனிமனித இசை நிகழ்ச்சிகள் பல அண்மையில் அரங்கேறியிருக்கின்றன. டி. எம். சௌந்தரராஜனுடனும், இசைமுரசு ஈ. எம். ஹனீபாவுடனும் ஒரே மேடையில் பாடிய நிகழ்வை மறக்க முடியாது என்கிறார் கமல். மாணிக்கம் மாணிக்கம் ("Ruby") என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ள படிகக்கல்லாகும், இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும். இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது. தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிசுத்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைத்தாலும் நீலமே அதிகளவில் கிடைக்கிறது. இயற்கை மாணிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது, நிறத்தில் தூய்மை குறைந்து இருக்கலாம், அதனுள் நூல் போன்ற இழை காணப்படலாம். இதை கொண்டே இயற்கை மாணிக்கத்தையும் செயற்கை மாணிக்கத்தையும் வேறுபடுத்துவார்கள். உரோமுலசு விட்டேக்கர் உரோமுலசு விட்டேக்கர் (Romulus Whitaker), இந்தியாவின் தலைசிறந்த ஊர்வனவியல் ஆய்வாளர். இவர்சென்னை பாம்புப் பண்ணை அறக்கட்டளை, அந்தமான் மற்றும் நிக்கோபர் சுற்றுச்சூழல் அறக்கட்டளை, சென்னை முதலைக் காப்பகம் அறக்கட்டளை போன்ற உயிர்கள் காப்பு அமைப்புகளை நிறுவியவர். விட்ஜெட் விட்ஜெட்(விரித்துபெற) என்பது ஒரு விதமான சிறிய மென்பொருளாகும். இதில் குறுகிய தகவல்கள் மட்டுமே கொடுப்படுகின்றன. எ.கா. தட்ப வெப்ப நிலை விரித்துபெற. வலை விட்ஜெட்டுகளை பல தரப்பட்ட சேவைகள் அளிக்கின்றன. யாகூ, ஆப்பிள் போன்ற பெரிய நிருவனங்கள் தங்களது பயனர்களை தங்கள் வசம்வைத்துக்கொள்ள பல தரப்பட்ட தகவல்களை பல விரித்துபெறுவில் அளிக்கின்றனர். மேசைமேல் விட்ஜெட் என்பது கணினியில் உள்ள மேசையின் மேல் இருக்கும் விட்ஜெட்டுகள். இவை அவ்வப்பொழுது தனது வழங்கியை தொடர்புக்கொண்டு புதிய தகவல்களை புதிப்பிக்கும் கிழக்கு உரோமானிய மொழிகள் கிழக்கு உரோமானிய மொழிகள் என்பன குறுகிய பொருளில் உரோமானிய மொழிக் கூட்டத்தில் அடங்கிய "விலாச் மொழிகள்" என அறியப்பட்ட மொழிகளைக் குறிக்கும். இவை தென்கிழக்கு ஐரோப்பாவில் கொடும் இலத்தீனின் (Vulgar Latin) ஒரு உள்ளூர் வழக்கிலிருந்து உருவாயின. கிழக்கு உரோமானிய மொழிகளில் இலத்தீன் உயிரெழுத்தான /i/, /ē/யுடனும், /e/யுடனும் இணைகிறது. ஆனால், /u/, /ū/வுடன் இணைகிறது. இது இம்மொழிக் கூட்டத்தை /u/, /ō/வுடனும், /o/வுடனும் இணையும் மேற்கு உரோமானிய மொழிகளில் இருந்து வேறுபடுத்துகிறது. தற்காலத்தில் இது மேற்கு பசிலிக்காட்டா மொழியான காசுட்டெல்மெசானோ கிளைமொழி போன்ற சில மொழிகளில் மட்டுமே காணப்பட்டாலும், ஒரு காலத்தில் இது தெற்கு இத்தாலி முழுவதும் பரந்து காணப்பட்டமைக்கான சான்றுகள் உள்ளன. இப்பகுதியில் உரோமப் பேரரசின் ஆதிக்கம் இல்லாது போய்ப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னர், கொடும் இலத்தீனின் உள்ளூர் வழக்கு, தற்கால உரோமானிய மொழியின் பல அம்சங்களை உள்ளடக்கிய முதல்நிலை உரோமானியமாக வளர்ச்சியடைந்தது. வெளியார் ஊடுருவல்களினாற் போலும் முதல்நிலை உரோமானியம் நான்கு தனித்தனி மொழிகளாகப் பிளவுபட்டது. முதல்நிலை உரோமானியம் தோன்றிய இடம் இன்னும் விவாதத்துக்கு உரியதாகவே உள்ளது. பல வரலாற்றாளர்கள் இது சிரேசெக் கோட்டுக்குச் சற்று வடக்கே நிகழ்ந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். மரகதம் மரகதம் பெரில் (BeAl(SiO),) வகையைச் சேரந்த ஒரு கனிமம் ஆகும். மரகதம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இதில் மிகச்சிறிய அளவில் காணப்படும் குரோமியம், சிலவேளைகளில் மட்டும் அடங்கும் வனேடியம் மூலகங்களால் பச்சை நிறத்தைப் பெறுகிறது. பெரில் ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையில் 10 வரை அளவீட்டைக் கொண்ட மோவின் உறுதி எண் முறையில் உறுதி எண் 7.5 தொடக்கம் 8 வரையான உறுதியெண்ணைக் காட்டுகின்றது. கூடுதலான பச்சைக்கற்கள் உள்ளீட்டுப் பொருட்களைக் கொண்டிருக்கும். எனவே அவற்றின் நொறுங்குமை கூடுதலாக காணப்படுகிறது. இக்கல்லைக் குறிக்கும் எமரல்ட் (emerald) என்ற ஆங்கிலப் பெயர் பச்சை நிறம் என்ற பொருள்படும் மரகதம் என்ற வடமொழி சொல்லில் இருந்து மருவியதாகும். ஐந்தரை அடி உயரம் - முழுவதும் விலை மதிப்பிட முடியாத மரகதத் திருமேனி. நடராசர் சிலை திருஉத்தரகோசமங்கையில் உள்ளது. இந்திரன் இந்திரன் () என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: மால்கம் ரஞ்சித் ஆல்பர்ட் மால்கம் ரஞ்சித் பட்டபெந்திகே தொன் ("Albert Malcolm Ranjith Patabendige Don") அல்லது சுருக்கமாக மால்கம் ரஞ்சித் (பிறப்பு: நவம்பர் 15, 1947), இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு உயர்மறைமாவட்ட பேராயரும் கர்தினாலும் ஆவார். இவர் இலங்கையிலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டாம் கர்தினால் ஆவார். இவருக்கு முன் இலங்கையின் முதல் கர்தினாலாக இருந்தவர் தோமாஸ் கூரே (கர்தினால்: 1965-1988). மால்கம் ரஞ்சித் இலங்கையில் பொல்காவலை பகுதியில் குருநாகலையில் 1947ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் நாள் டொன் வில்லியம் என்பவருக்கும் மேரி வினிஃப்ரீடா என்பவருக்கும் ஒரே மகனாகப் பிறந்தார். கொழும்பு முகத்துவாரத்தில் (Mutwal) தெலசால் கல்லூரியில் பயின்றபின் 1965இல் பொறளை புனித அலோசியுஸ் குருமடம் புகுந்தார். 1966-1970 ஆண்டுகளில் கண்டி தேசிய குருமடத்தில் மெய்யியலும் இறையியலும் பயின்றார். அப்போது கொழும்பு பேராயராக இருந்த தோமாஸ் கூரே மால்கம் ரஞ்சித்தை மேல்படிப்புக்காக உரோமை நகருக்கு அனுப்பினார். உரோமை திருத்தந்தை அர்பன் பல்கலைக்கழகத்தில் ரஞ்சித் இறையியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1975ஆம் ஆண்டு திருத்தந்தை ஆறாம் பவுல் அவருக்குக் குருப்பட்டம் அளித்தார். அந்நிகழ்ச்சி உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்தது. விவிலியப் படிப்பில் தேர்ச்சிபெறுவதற்காக மால்கம் ரஞ்சித் உரோமை திருத்தந்தை விவிலியப் பல்கலைக்கழகத்தில் பயின்று 1978இல் மேல்நிலைப் பட்டம் பெற்றார். உரோமையில் படிப்பை முடித்தபின் இலங்கை திரும்பிய மால்கம் ரஞ்சித் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பங்குகளில் மறைப்பணி ஆற்றினார். 1983இல் மறைபரப்பு நிறுவனங்களின் தேசிய இயக்குநராக நியமிக்கப்பட்டார். 1991, சூன் மாதம் 17ஆம் நாள் கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் துணை ஆயராக நியமனம் பெற்று, அதே ஆண்டு ஆகத்து 31ஆம் நாள் திருப்பொழிவு பெற்றார். திருப்பொழிவு நிகழ்த்தியவர் அப்போது கொழும்பு பேராயராக இருந்த நிக்கோலாஸ் மாற்கஸ் பெர்னாண்டோ ஆவார். அவருக்குத் துணையாக நின்று ஆயர் தோமாஸ் சவுந்தரநாயகமும் ஒசுவல்ட் கோமிசும் திருப்பொழிவு நிகழ்த்தினார்கள். புதிதாக ஏற்படுத்தப்பட்ட இரத்தினபுரி மறைமாவட்டத்தின் முதல் ஆயராக மால்கம் ரஞ்சித் 1995 நவம்பர் 2ஆம் நாள் பொறுப்பேற்றார். 1995-2001 காலக்கட்டத்தில் இரத்தினபுரி ஆயராகப் பணிபுரிந்தபின், 2001 அக்டோபர் முதல் நாள் உரோமை மறைபரப்பு பேராயத்தில் துணைச்செயலராக நியமனம் பெற்றார். 2004 ஏப்பிரல் 29இலிருந்து டிசம்பர் 2005 வரை இந்தோனேசியா, கிழக்கு தீமோர் நாடுகளில் திருத்தந்தையின் தூதுவராகப் பணிபுரிந்தார். அப்போது அவர் பேராயர் பதவிக்கு உயர்த்தப்பட்டார். மால்கம் ரஞ்சித் உரோமை திருவழிபாடு மற்றும் அருளடையாளங்கள் நெறிமுறைக்கான பேராயத்தின் செயலராக 2005 டிசம்பர் 10ஆம் நாள் நியமனம் பெற்றார். அங்கு அவருடைய நான்கு ஆண்டுப் பணிக்காலத்தின்போது, மால்கம் ரஞ்சித் கத்தோலிக்க வழிபாடு பண்டைக்கால மரபுக்கு ஏற்ப அமைய வேண்டும் என்றும், புதிய அணுகுமுறைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2009ஆம் ஆண்டு சூன் மாதம் 16ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் மால்கம் ரஞ்சித்தை கொழும்பு உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் செய்தார். அதே ஆண்டு சூன் 29ஆம் நாள் புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் கைகளிலிருந்து பேராயருக்குரிய சிறப்புச் சின்னமாகிய "கம்பளித் தோள்பட்டை" ("Pallium") பெற்றார். கொழும்பு உயர்மறைமாவட்டப் பொறுப்பை 2009, ஆகத்து 5ஆம் நாள் ஏற்றுக்கொண்டார். பேராயர் மால்கம் ரஞ்சித் 2010 ஏப்ரல் மாதம் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2010, அக்டோபர் 20ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் 24 புதிய கர்தினால்களை நியமிக்கப்போவதாக அறிவித்தார். அவர்களுள் ஒருவர் பேராயர் மால்கம் ரஞ்சித். அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் புதிய கர்தினால்களை உரோமை புனித பேதுரு பெருங்கோவிலில் நிகழ்ந்த கர்தினால் குழுக் கூட்டத்தின்போது நியமித்து, வழக்கம்போல அவர்களுக்குப் பதவிச் சின்னங்களாகிய சிவப்புநிற மண்டையொட்டுத் தொப்பியும் ("skull cap"), நான்முகத் தொப்பியும் ("biretta") அளித்தார். அதுவரை இலங்கையிலிருந்து ஒரே கர்தினால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். இலங்கையின் முதல் கர்தினால் தோமாஸ் கூரே கொழும்பு பேராயராக இருந்தபோது 1965இல் கர்தினால் பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவர் 1988 அக்டோபர் 29ஆம் நாள் இறந்தார். அதன் பிறகு, 22 ஆண்டுகள் தாண்டிய பின்னரே இலங்கையிலிருந்து இரண்டாம் கர்தினாலாக மால்கம் ரஞ்சித் பதவி உயர்வு பெற்றார். கைலா தேவி கைலா தேவி கோயில் ஓர் இந்து கோயிலாகும். இது இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தல் உள்ள கரவ்லி எனும் பிரதேசத்தில் இருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ளது. கலிசில் ஆற்றுப் படுகையில் இந்த கோயில் அமைந்துள்ளதுடன், கைலா கிராமத்தில் இருந்து வட மேற்காக 2 கி.மி தூரத்தில் உள்ளது. கைலா தேவி சந்தை என்று அழைக்கப்படும் சந்தை இங்கு ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடைபெறுவதுடன் இந்த சந்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும். ஜாடன் ராஜபுத்திரர்கள் இந்த தேவியை "குல் தேவி" என்று வழிபடுகின்றனர். தாங் கோட் ஹீ மெட் லிஸ்சி "தாங் கோட் ஹீ மெட் லிஸ்சி" என்பது 1997 இல் வெளிவந்த ஒரு அவுஸ்திரேலிய காதல் நகைச்சுவைத் திரைப்படம். இதில் Cate Blanchett மற்றும் Richard Roxburgh ஆகியோரும் நடித்திருந்தனர். It was the directorial debut of Cherie Nowlan. அமெரிக்காவில் , இந்த திரைப்படம் "The Wedding Party." என்ற பெயரில் வெளிவந்தது. இந்த திரைக்கதை இரண்டு கதைகளைச் சுற்றிச்சுழல்கின்றது, முதலாம் கதை தற்போது நடைபெற இருக்கும் Lizzie (Cate) மற்றும் Guy (Richard) ஆகியோரின் திருமணம் பற்றியது அத்துடன் இரண்டாவது கதை Guyன் முந்தய Jenny (Frances O'Connor) உடனான உறவு பற்றியது. இந்த திரைப்படத்தில் தோண்றிய மற்றொரு அவுஸ்திரேலிய நடிகர் Jonathan Biggins ஆவார். சுப்பிரமணியம் சீனிவாசன் சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் (சனவரி 4, 1904 - ஆகத்து 26, 1969) என்று அறியப்படும் திரைப்படத் தயாரிப்பாளர். 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட 'ஆனந்த விகடன் ' என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியவர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். 1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியவரும் இவரே. அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது. நீலக்கல் நீலம் அல்லது நீலக்கல் ("sapphire") நவரத்தினங்களுள் ஒன்று. நீலக்கல் என்பது குருந்ததால் ஆன இரத்தினக் கல்லைக் குறிக்கும். இக்கல்லில் சிறிய அளவில் காணப்படும் இரும்பு, டைட்டேனியம், குரோமியம் போன்ற மூலகங்கள் இக்கல்லிற்கு நீலம், மஞ்சள், இளஞ்சிவப்பு, செம்மஞ்சள், பச்சை நிறங்களைக் கொடுக்கும். இக்கல் நகைகளில் இட்டுப் பயன்படுத்தப்படுகிறது. நீலக்கல் இயற்கையாக மண்படிவுகளில் கிடைக்கப்பெறுகின்றது. செயற்கையாக செய்யப்பட்ட நீலக்கற்களும் சந்தையில் விற்பனைக்குள்ளன. உயர் வண்மையைக் கொண்டுள்ளபபடியால் இலத்திரனியல் கருவிகளில் அகச்சிவப்பு ஒளியில் கூறுகளிலும் நீண்ட நாள் பயன்படும் சாளரங்கள், கடிகாரப் பளிங்குகள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகிறது. நீலக்கல் பெரும்பாலும் நீல நிறத்தில் இருக்கும். நீலம் இலங்கை, மடகாசுகர், பர்மா, கென்யா, அமெரிக்கா, தாய்லாந்து, சீனா, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிசுத்தான் போன்ற பல நாடுகளில் கிடைக்கிறது. 1987 வரை ஆஸ்திரேலியாவிலும் தற்போது மடகாசுகரிலும் அதிக அளவில் நீலம் கிடைக்கிறது. நீலத்தின் மதிப்பு அதன் நிறம், தூய்மை, அளவு, பட்டை மற்றும் அது தோண்டப்பட்ட இடத்தின் மூலத்தைப் பொறுத்து மாறுபடும். இசுகீம் திட்டம் என்பது ஒரு நிரல் மொழி. இது பல நிரலாக்க வழிமுறைகளுக்கு ஆதரவு தருகின்றது எனறாலும், பணிமுறை நிரலாக்க வழிமுறைக்காக இது பெரும்பாலும் அறியப்படுகிறது. இம் மொழி மிகவும் அடிப்படையான கட்டமைப்புகளைத் தருகிறது. கருத்தோட்டம் கருத்தோட்டம் என்பது ஒரு துறையை அல்லது ஒருங்கியத்தை ஒரு காலகட்டத்தில் நெறிப்படுத்தும் கருத்துக்கள், செயற்பாடுகள், வழிமுறைகள் சேர்ந்த ஒரு கட்டமைப்பைக் குறிக்கிறது. இச் சொல் ஆங்கில சொல்லான Paradigm (பாரடிகம்) இணையக தமிழ்ல் பயன்படுகிறது. உரு மாதிரி, முன் எடுத்துக்காட்டு போன்ற பொருட்களும் அகராதியில் கிடைக்கிறது. பணிமுறை நிரல் மொழி பணிமுறை நிரலாக்கம் அல்லது செயலி முறை நிரலாக்கம்(Functional programming) என்பது ஒரு இன்றியமையாத நிரலாக்கக் கருத்தோட்டம். இது கணித்தலை கணித சார்புகளின் மதிப்பீடாக நிறைவேற்றுகிறது. இது நிலைகளையும் மாறும் தரவுகளையும் தவிர்க்கிறது. பணிமுறை நிரல் மொழிகள் சார்புகளை அல்லது செயலிகளை முதன்மையாகப் பயன்படுத்துகின்றன. கட்டளை மொழிகளைப் போல் அல்லாமல், பக்க விளைவுகளை பணிமுறை நிரல் மொழி தவிர்கிறது. அதாவது ஒரு செயலியின் விடை அதன் உள்ளீடுகளில் மட்டுமே தங்கி இருக்கிறது. நிரல் எந்த நிலையில் நிறைவேற்றப்படுகின்றது என்பதில் தங்கி இருப்பதில்லை. பூங்குழலி (கதைமாந்தர்) பூங்குழலி கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் சேந்தன் அமுதன் காதலியாக வரும் கதாபாத்திரத்தின் பெயர். பூங்குழலி என்றால் பூவைப் போன்ற குழல் (கூந்தல்) உடையவள் என்று பொருள். காண்போர் மயங்கும் அழகிய பெண்ணாகவும், பெரும் புயலிலும் தனித்து ஆழ்கடலில் படகோட்டிப் பயணிக்கும் திறனுடையவளாகவும், தேவாரப் பாடல்களையும், சுயமாக பாடல் புனைந்தும் பாடும் வல்லமையுடையவளாகவும் பூங்குழலியின் கதைப்பாத்திரத்தினைக் கல்கி அமைத்துள்ளார். தியாகவிடங்கரின் புதல்வியாகவும், படகோட்டி முருகய்யனின் தங்கையாகவும் பூங்குழலி அறிமுகம் செய்யப்படுகிறாள். பூங்குழலி கோடிக்கரை குழகர் கோவிலினுள் தரிசனத்திற்காகச் செல்கிறாள். இரவு நேரம் நெருங்குவதால் பட்டரும் நடையைச் சாத்திவிட்டு அவளுடன் வருவதாகக் கூறுகிறார். பட்டருக்காகக் கோவிலின் வெளியே காத்திருக்கும் போது குதிரையில் வைத்தியர் மகனும், வந்தியத்தேவனும் வருகிறார்கள். வந்தியத்தேவனை உற்று நோக்கும் பூங்குழலியை அவனும் பார்த்துக் கொண்டே குதிரையில் அருகே வருகிறான். தேங்காய் கீற்றினைக் கடித்தபடியே ஒரு ஆடவனைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணர்ந்து வெட்கம் கொண்டு ஓடுகிறாள் பூங்கொடி. வந்தியத்தேவன் ஓடிச் சென்று அவளைப் பிடிக்க முயலுகிறான். ஆனால் எதிர்பாராவிதமாய் புதைமணலில் சிக்கிக் கொள்கிறான். பிறகு பூங்குழலி அவனை காப்பாற்றுகிறாள். இருவரும் இணைந்து தியாகவிடங்கர் வீட்டிற்கு செல்கின்றார்கள். சோழ இளவரசி குந்தவை இலங்கையில் பெரும் படையுடன் போரிட்டுக் கொண்டிருக்கும் தன் தம்பி அருள்மொழி வர்மனுக்குக் கொடுத்தனுப்பிய ஓலையை வாங்கிக்கொண்டு வந்தியத்தேவன் கோடியக்கரையை வந்து அடைகிறான். அங்கே அழகான பூங்குழலியை சந்திக்கிறான். பூங்குழலி படகு ஓட்டுவதில் திறமைசாலி. அவளின் படகில் இருவரும் இலங்கைக்குப் போகிறார்கள். பூங்குழலியின் அத்தை ஒரு வாய்பேச இயலாத பெண். அவளது மகன் சேந்தன் அமுதன் என்பவன். பூங்குழலி மேல் காதல் கொண்டவன். இவன் வந்தியத்தேவனுக்கு பெரிதும் உதவியவன். படகுக்காரியான பூங்குழலி இளவரசர் அருள்மொழிவர்மனிடம் காதல் கொள்கிறாள், அதே சமயம் இளவரசரும் பூங்குழலியிடம் காதல் கொள்கிறார். ஆனால் இதனை இருவரும் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. என்ற பாடல் வரிகள் பூங்குழலி பாடுவதாய் பொன்னியின் செல்வன் நாவலில் அமைந்துள்ளன. குருந்தம் குருந்தம் அலுமினியம் ஒக்சைட்டின் (α-) படிக அமைப்புகளில் ஒன்றாகும். கற்களை ஆக்கும் கனிமங்களில் ஒன்றான குருந்தம் இயற்கையில் காணப்படும் ஒளிபுகவிடக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். குருந்தத்தில் காணப்படும் மாசுக்களைப் பொறுத்து குருந்தத்தின் நிறம் மாறும். ஒளிபுகவிடக்கூடிய குருந்தக்கற்கள் இரத்தினக்கல்லாக கருதப்படுகின்றன. இவை சிவப்பாக இருந்தால் சிவப்புக்கல் எனவும் ஏனைய நிறக் கற்கள் நீலக்கல் எனவும் அழைக்கப்படுகின்றன. குருந்தம் என்பது சிவப்புக்கல் எனப்பொருள்படும் வடமொழி சொல்லான "குருவிந்தா" என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம்.. இளஞ்சிவப்பு -செம்மஞ்சள் கற்கள் பத்பராட்ச்சம் எனவும் இளஞ்சிவப்பு- மெல்லிய சிவப்பு கற்கள் பதமராகம் எனவும் அழைக்கப்படுகின்றன. போர்களின் பட்டியல் ஓவர்லார்டு ஆபரேஷன் பல்ஜ் போர் பிரித்தன் போர் பிரான்சு போர் மாஸ்த்ரிக்ட் போர் த ஹேக் போர் கிரெப்பபெர்கு போர் எபெல்-எமெல் போர் ஹனுட் போர் த அபுசுலூடிக் போர் நெதெர்லாந்து போர் சேலாந்து போர் டங்கர்க் போர் ஆகென் போர் சான் நசைர் ஊடுறுவல் டியப் ஊடுறுவல் நார்மண்டி படையெடுப்பு ட்ரகூன் ஆபரேஷன் பாரிசிலிரிந்து ரைன் வரை நேச முன்னேற்றம் மார்கெட் கார்டென் ஆபரேஷன் ஓவர்லூன் போர் ஹுர்ட்கென் காடு போர் ஆர்க்டிக் நரி ஆபரேஷன் பக்ராசியான் ஆபரேஷன் பௌட்சன் போர் விபுரி போர் பியாலிஸ்டாக்-மின்ஸ்க் போர் பர்பரொசா ஆபரேஷன் பெலொஸ்டாக் முன்னடிப்பு பொப்பிரிஸ்க் முன்னடிப்பு பெர்லின் போர் போரோடினோ ஃபீல்டு போர் பிரவுன்ஷ்வைக் ஆபரேஷன் பிரெஸ்ட் கோட்டை பாதுகாப்பு பிரெஸ்லௌ முற்றுகை பிராடி போர் பிரியாஸ்க் போர் பூடாபெஸ்ட் முன்னடிப்பு பூடாபெஸ்ட் முற்றுகை புஃபல் ஆபரேஷன் கேஸ் புளூ காகசஸ் போர் கான்சர்ட் ஆபரேஷன் தொடர் போர் கூர்லாந்து பாகெட் ஆபரேஷன் கிரைமியா போர் (1941) கிரைமியா போர் (1942) டெபெரெசென் போர் டெமியான்ஸ்க் போர் டோப்பல்காப் போர் டினீபர் போர் டிராவா போர் துக்லா பாஸ் போர் கிழக்கு பொமரேனியா முன்னடிப்பு ஏடல்வைஸ் ஆபரேஷன் பிரூலிங்கசர்வாகன் ஆபரேஷன் கும்பினென் ஆபரேஷன் ஹால்ப் போர் ஹெல் போர் ஹைலிகன்பைல் பாகெட் போர் இசுகுரா ஆபரேஷன் ஜசி-கிஷினேவ் ஆபரேஷன் கேமெனெட்ஸ்-பொடோல்ஸ்கி ஆபரேஷன் கௌனஸ் ஆபரேஷன் கெர்ச் தீபகற்பம் போர் கெர்ச்-எல்டிங்கன் போர் கர்காவ் முதல் போர் கர்காவ் இர்ண்டாம் போர் கர்காவ் மூன்றாம் போர் கர்காவ் நான்காம் போர் கீவ் போர் (1941) கீவ் போர் (1943) கோல்பர்க் போர் கோன்ராட் ஆபரேஷன் கோர்சந்செர்காசி போர் கிராஸ்னி போர் போர் கிரெம்லின் ஆபரேஷன் குர்ஸ்க் போர் குடுசாவ் ஆபரேஷன் லெனின்கிராட் போர் லெனினோ போர் கீழ் சைலீசிய முன்னடிப்பு லூபிலில்-பிரெஸ்டு முன்னடிப்பு லுவாவ்-சாண்டோமிரிஸ் முன்னடிப்பு லோட்சன் தீர்ப்பு மார்கரீதா ஆபரேஷன் மெமெல் போர் மின்ஸ்க் முன்னடிப்பு மோகிலேச் முன்னடிப்பு மூன்சண்ட் தரையிறக்க ஆபரேஷன் மாஸ்கோ போர் மலாய-செல்மியா போர் மார்ஸ் ஆபரேஷன் நர்வா போர் நர்வா ப்ரிட்ஜ்ஹெட் போர் டானன்பெர்க் கோடு போர் நெவ்ஸ்கி பியாடசோக் நிகோலயேவா போர் நோர்ட்லிகிட் போர் ஓடர்-நீசு போர் ஒடெசா முற்றுகை ஒசோவெட்ஸ் முன்னடிப்பு ஒஸ்துரோகோசு-ரோசோ ஆபரேஷன் பான்சர்ஃபஸ்ட் ஆபரேஷன் பிளாடினம் ஃபாக்ஸ் ஆபரேஷன் போலோட்ஸ்கு முன்னடிப்பு பாலிஅமாயா-சுவெஸ்தா ஆபரேஷன் பொர்கூனி போர் பொசுநாரி போர் பிராக் முன்னடிப்பு பிரிப்யாத் சதுப்பு போர் பிரகரோவுகா போர் ராட்சிமின் போர் ரசினி போர் ரெண்டியர் போர் ரீகா முன்னடிப்பு ரோஸ்டாவ் போர் ரசேவ் போர்கள் சாதம் போர் ஷுவெத் போர் அசாவ் கடற்கரை முன்னேற்றம் சீலோ உயரம் போர் செவஸ்தாபோல் முற்றுகை ஷுல்யா முன்னடிப்பு சைலீசிய முன்னடிப்பு வெள்ளிநரி ஆபரேஷன் ஸ்மாலெஸ்ன்க் போர் (1941) ஸ்மாலென்ஸ்க் போர் (1942) சோலிஸ்டிசு ஆபரேஷன் சொமெரி ஆபரேஷன் ஸ்டாலின்கிராட் போர் ஸ்தட்சியன்கி போர் தாலின் குண்டடிப்பு தாலின் முன்னடிப்பு தர்குல் பிருமோ போர் டட்சின்ஸ்காயா போர் டோரோபெட்ஸ்-கோலம் ஆபரேஷன் உமான் போர் மேல் சைலீசியா முன்னடிப்பு யுரேனஸ் ஆபரேஷன் வெலிகீயே லூகி போர் வியன்னா முன்னடிப்பு வில்னியுஸ் முன்னடிப்பு விஸ்தூலா-ஓடர் முன்னடிப்பு விடெப்ஸ்கு-ஓர்ஷா முன்னடிப்பு வோரோநேசு போர் 1942 வோரோநெசு போர் 1943 வார்சா எழுச்சி வெஸ்டர்பிளாட் போர் விண்டர்கெவிட்டர் ஆபரேஷன் நிசுனா போர் வோடன் ஆபரேஷன் யெலினியா முன்னடிப்பு செம்லாந்து போர் வால்கைரி போர் கோரல் கடல் போர் ரபௌல் போர் புது கினீ ஆபரேஷன்கள் ஆஸ்திரேலியா படான் போர் கொரிகிடோர் போர் குவாம் போர் ஹாங்-காங் போர் இவோ-ஜிமா போர் லெய்தே வளைகுடா போர் மலாயா போர் மிட்வே போர் மொரோடாய் போர் நோம்பூர் போர் ஓகிநாவா போர் பேர்ல் ஹார்பர் போர் ஃபிலிபீன்ஸ் போர் சைபான் போர் சாண்டா-குரூஸ் தீவுகள் போர் சாவோ தீவு போர் சிங்கப்பூர் போர் வேக் தீவு போர் போர்நியோ போர்கள் டூலிடில் ஊடுறுவல் குவாடன்கனால் போர் மரியானா பலாவு தீவுகள் போர் பர்மா-இந்தியா போர்கள் முகடன் போர் செப்டெம்பர் 1931 மஞ்சூரியா படையெடுப்பு ஷாங்காய் போர் மன்சுகுவோ அமைதிபடுத்தல் பெரும் சுவறு போர் உள் மங்கோலியா போர் மார்கோ போலோ பாலம் சம்பவம் பைபிங்க்-ஹன்கூ முகடன் செப்டெம்பர் 1931 மஞ்சூரியா படையெடுப்பு ஷாங்காய் மன்சுகுவோ அமைதிபடுத்தல் பெரும் சுவறு போர் உள் மங்கோலியா போர் மார்கோ போலோ பாலம் சம்பவம் பைபிங்க்-ஹன்கூ ஆகஸ்த் 1937 டியான்ஜின் - பூகௌ ஜூலை 1937 டையுவான் செப்டெம்பர் 1937 பின்சிங்குவான் போர் செப்டெம்பர் 1937 நான்கிங்க் போர் சூசௌ போர் டையர்சுவாங்க் போர் வடக்கு, கிழக்கு ஹோனான் 1938 சியாமன் 1938 வூஹான் போர் குவாங்டாங்க் போர் 1938 ஹைனான் தீவு போர் 1939 நன்சாங்க் போர் 1939 சிகுவாங்க்-சாவுயாங்க் போர் 1939 ஷாண்டூ போர் ஜூன் 1939 சங்ஷா போர் செப்டெம்பர் 1939 தெற்கு குவாங்சி போர் நவம்பர் 1939 1939-40 பனிகால முன்னடிப்பு சாயங்க்-யிசாங்க் போர் நூறு ரெஜிமெண்டுகள் முன்னடிப்பு வியத்நாம் படையெடுப்பு மத்திய ஹூப்பை போர் தெற்கு ஹேனான் போர் மேற்கு ஹோப்பை போர் ஷங்காவ் போர் தெற்கு ஷான்சி போர் சங்ஷா போர் செப்டம்பர் 1941 சங்ஷா போர் ஜனவரி 1942 யூனான் - பர்மா சாலை போர் சேஜியாங்-ஜியாங்சி போர் மேற்கு ஹூபை போர் மே 1943 வடக்கு பர்மா, மேற்கு யூனான் போர் அக்டோபர் 1943 சங்க்டே போர் நவம்பர் 1943 இசி-கோ ஆபரேஷன் 1944 மேற்கு ஹூனான் போர் ஏப்ரல்-ஜூன் 1945 இரண்டாவது குவாங்சி போர் ஏப்ரல்-ஜூலை 1945 மஞ்சூரிய யுத்தி முன்னடிப்பு ஆபரேஷன் ஆகஸ்த் 1937 டியான்ஜின் - பூகௌ முகடன் செப்டெம்பர் 1931 மஞ்சூரியா படையெடுப்பு ஷாங்காய் மன்சுகுவோ அமைதிபடுத்தல் பெரும் சுவறு போர் உள் மங்கோலியா போர் மார்கோ போலோ பாலம் சம்பவம் பைபிங்க்-ஹன்கூ ஆகஸ்த் 1937 டியான்ஜின் - பூகௌ ஜூலை 1937 டையுவான் செப்டெம்பர் 1937 பின்சிங்குவான் போர் செப்டெம்பர் 1937 நான்ஜிங்க் போர் சூசௌ போர் டையர்சுவாங்க் போர் வடக்கு, கிழக்கு ஹோனான் 1938 சியாமன் 1938 வூஹான் போர் குவாங்டாங்க் போர் 1938 ஹைனான் தீவு போர் 1939 நன்சாங்க் போர் 1939 சிகுவாங்க்-சாவுயாங்க் போர் 1939 ஷாண்டூ போர் ஜூன் 1939 சங்ஷா போர் செப்டெம்பர் 1939 தெற்கு குவாங்சி போர் நவம்பர் 1939 1939-40 பனிகால முன்னடிப்பு சாயங்க்-யிசாங்க் போர் நூறு ரெஜிமெண்டுகள் முன்னடிப்பு வியத்நாம் படையெடுப்பு மத்திய ஹூப்பை போர் தெற்கு ஹேனான் போர் மேற்கு ஹோப்பை போர் ஷங்காவ் போர் தெற்கு ஷான்சி போர் சங்ஷா போர் செப்டம்பர் 1941 சங்ஷா போர் ஜனவரி 1942 யூனான் - பர்மா சாலை போர் சேஜியாங்-ஜியாங்சி போர் மேற்கு ஹூபை போர் மே 1943 வடக்கு பர்மா, மேற்கு யூனான் போர் அக்டோபர் 1943 சங்க்டே போர் நவம்பர் 1943 இசி-கோ ஆபரேஷன் 1944 மேற்கு ஹூனான் போர் ஏப்ரல்-ஜூன் 1945 இரண்டாவது குவாங்சி போர் ஏப்ரல்-ஜூலை 1945 மஞ்சூரிய யுத்தி முன்னடிப்பு ஆபரேஷன் ஜூலை 1937 டையுவான் போர் செப்டெம்பர் 1937 பின்சிங்குவான் போர் செப்டெம்பர் 1937 நான்ஜிங்க் போர் சூசௌ போர் டையர்சுவாங்க் போர் வடக்கு, கிழக்கு ஹோனான் போர் 1938 சியாமன் போர்1938 வூஹான் போர் குவாங்டாங்க் போர் 1938 ஹைனான் தீவு போர் 1939 நன்சாங்க் போர் 1939 சிகுவாங்க்-சாவுயாங்க் போர் 1939 ஷாண்டூ போர் ஜூன் 1939 சங்ஷா போர் செப்டெம்பர் 1939 தெற்கு குவாங்சி போர் நவம்பர் 1939 1939-40 பனிகால முன்னடிப்பு சாயங்க்-யிசாங்க் போர் நூறு ரெஜிமெண்டுகள் முன்னடிப்பு வியத்நாம் படையெடுப்பு மத்திய ஹூப்பை போர் தெற்கு ஹேனான் போர் மேற்கு ஹோப்பை போர் ஷங்காவ் போர் தெற்கு ஷான்சி போர் சங்ஷா போர் செப்டம்பர் 1941 சங்ஷா போர் ஜனவரி 1942 யூனான் - பர்மா சாலை போர் சேஜியாங்-ஜியாங்சி போர் மேற்கு ஹூபை போர் மே 1943 வடக்கு பர்மா, மேற்கு யூனான் போர் அக்டோபர் 1943 சங்க்டே போர் நவம்பர் 1943 இசி-கோ ஆபரேஷன் 1944 மேற்கு ஹூனான் போர் ஏப்ரல்-ஜூன் 1945 இரண்டாவது குவாங்சி போர் ஏப்ரல்-ஜூலை 1945 மஞ்சூரிய யுத்தி முன்னடிப்பு ஆபரேஷன் ரிவர் பிளேட் போர் எஸ். சி. ஜமீர் சனயங்க்பா சுபதோஷி ஜமீர் (பிறப்பு: அக்டோபர் 17, 1931) இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜூலை 2008 இல் இருந்து மகாராட்டிரா மாநில ஆளுனராகப் பணியாற்றுகிறார். இதற்கு முன்னர் கோவா மாநில ஆளுனராகவும் நாகாலாந்து மாநில முதலமைச்சராகவும் பணிபுரிந்துள்ளார். ஜாமீர் நாகாலாந்து மாநிலத்தவர். நாகாலாந்து இந்தியாவின் ஒரு மாநிலமாக அமைக்கப்பட 1960 இல் அப்போதைய பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்த சென்ற குழுவில் அங்கம் வகித்தவர். பின்னர் அவர் நாகாலாந்தில் நான்கு முறை 1980, 1982-1986, 1989-90 மற்றும் 1993-2003 ஆகிய காலப்பகுதிகளில் முதலமைச்சராக இருந்திருக்கிறார். தனது முதல் இரு பதவிக்காலங்களில் "முன்னேற்ற ஐக்கிய சனநாயக முன்னணி" என்ற கட்சியின் சார்பில் பணியாற்றினார். 1989 இல் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஜூலை 2004 முதல் ஜூலை 2008 வரை கோவா ஆளுனராக பணியாற்றினார். மகாராட்டிர ஆளுனர் எஸ். எம். கிருஷ்ணா பதவி விலகியதை அடுத்து, மார்ச் 6, 2008 இல் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல் ஜமீருக்கு மகாராட்டிரத்தை கூடுதல் பொறுப்பாக அளித்தார். 2008 ஜூலையில் மகாராட்டிர ஆளுனராக முறையாக அரசாணையிடப்பட்டு 2008, ஜூலை பத்தொன்பதாம் நாளில் பதவியேற்றுக் கொண்டார். எசுப்பானிய கிழமைகள் எசுப்பானிய கிழமைகள்: நாள் - "un día" வாரம் - "una semana" ௧. ஞாயிறு - "domingo" ௨. திங்கள் - "lunes" ௩. செவ்வாய் - "martes" ௪. புதன் - "miércoles" ௫. வியாழன் - "juevenes" ௬. வெள்ளி - "viernes" ௭. சனி - "sábado" நேற்று - "ayer" இன்று - "hoy" நாளை - "mañana" எசுப்பானிய மாதங்கள் எசுப்பானிய மாதங்கள்என்னும் இக்கட்டுரை கிரெகொரியின் நாட்காட்டி முறையிலான எசுப்பானிய மொழி மாதங்கள் பற்றியது. எசுப்பானிய மொழி இந்திய-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. இதனால், ஆங்கிலம் உள்ளிட்ட பெரும்பாலான இந்திய-ஐரோப்பிய மொழிகளில் காணும் மாதப் பெயர்கள் எசுப்பானிய மாதப் பெயர்களுடன் ஒரே அடியைக் கொண்டனவாக உள்ளன. எசுப்பானிய மொழி மாதப் பெயர்கள் இலத்தீன் மொழி மூலங்களில் இருந்து பெறப்பட்டவை. கிரெகொரியின் நாட்காட்டியின் தமிழ் மாதப் பெயர்களும் அவற்றுக்கு இணையான எசுப்பானிய மாதப் பெயர்களும் அவற்றுக்கான தமிழ் ஒலிபெயர்ப்புக்களும் பின்வருமாறு: எசுப்பானிய மொழி ஆண்பால், பெண்பால் என இரண்டு பால்களைக் கொண்டது. எல்லாப் பெயர்ச் சொற்களும் இவ்விரண்டு பால்களுள் ஒன்றன் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இதன்படி எசுப்பானிய மாதப் பெயர்கள் எல்லாம் ஆண்பாற் பெயர்கள் ஆகும். ஆங்கிலம் போன்ற சில ஐரோப்பிய மொழிகளில் மாதப் பெயர்கள் சொற்றொடர்களில் வரும்போது முதல் எழுத்து பெரிய எழுத்துக்களில் வருவது போல் எசுப்பானிய மாதப் பெயர்களின் முதல் எழுத்துக்களை பெரிய எழுத்துக்களில் எழுதுவதில்லை. எசுப்பானிய மொழியில் அமைந்துள்ள மாதங்கள் ஒவ்வொன்றும் இலத்தீன் மொழி மாத வழக்கத்தை மூலமாகக் கொண்டுள்ளன. எனவே இலத்தீன் மாதப் பெயர்களையும் எசுப்பானிய மாதப் பெயர்களையும் அருகருகே வைத்துப் பார்த்து ஒப்பிட்டுக் காண்டல் பயன்தரும்: பிரெஞ்சு கிழமைகள் பிரெஞ்சு கிழமைகள்: நாள் - "un jour" வாரம் - "une semaine" ௧. திங்கள் - "lundi" ௨. செவ்வாய் - "mardi" ௩. புதன் - "mercredi" ௪. வியாழன் - "jeudi" ௫. வெள்ளி - "vendredi" ௬. சனி - "samedi" ௭. ஞாயிறு - "dimanche" நேற்று - "hier" இன்று - "aujourd'hui" நாளை - "demain" பிரெஞ்சு மாதங்கள் பிரெஞ்சு மாதங்கள்: மாதம் - "un mois" வருடம் - "un an" ௧. சனவரி - "janvier" ௨. பிப்ரவரி - "fevrier" ௩. மார்ச்சு - "mars" ௪. ஏப்ரல் - "avril" ௫. மே - "mai" ௬. சூன் - "juin" ௭. சூலை - "julliet" ௮. ஆகஸ்ட்டு - "août" ௯. செப்டெம்பர் - "septembre" ௧0. அக்டோபர் - "octobre" ௧௧. நவம்பர் - "novembre" ௧௨. திசம்பர் - "decembre" 1.l'automne-இலை உதிர் காலம் 2.l'hiver-குளிர் காலம் 3.l'été-கோடை காலம் 4.le printemps -இலைதளிர் காலம்/வசந்தகாலம் இத்தாலிய கிழமைகள் இத்தாலிய கிழமைகள்: பிளமேன்கோ கிதார் கலைஞர்கள் பிளமேன்கோ கிதார் கலைஞர்கள்: ௧. விசெந்த்தே அமீகோ ௨. இலேன்னி பிரெயௌ ௩. சாரோ ௪. மொராயீத்தோ சீக்கோ ௫. ஜீ.பீ. ஹால் ௬. ஆஸ்கர் எரேரோ ௭. பாக்கோ தே இலுசீயா ௮. இலூயிஸ் மாராவீயா ௯. உவான் மார்தீன் ௧0. கார்லோஸ் மொந்தோயா ௧௧. இரமோன் மொந்தோயா ௧௨. கேரார்தோ நுஞெஸ் ௧௩. இரபாயெல் ௧௪. பாக்கோ பேன்யா ௧௫. பாத்தா நேக்ரா ௧௬. மனீதாஸ் தே பிலாத்தா ௧௭. நீன்யோ இரிகார்தோ ௧௮. சபீக்காஸ் ௧௯. மனோலோ சான்லூகார் ௨0. தொமாத்தே ௨௧. தொமாதீத்தோ ௨௨. அந்த்ரை கிரிலோவ் பிளமேன்கோ கிதார் பிளமேன்கோ கிதார் ("Flamenco guitar") எனப்படுவது, பிளமேன்கோ இசை வாசிப்பதற்காக பயன்படுத்தப்படும் ஒரு வகையான செம்மிசை கிதார். இதனை வாசிக்கும் முறை பிற செம்மிசை கிதார்களை வாசிப்பதிலிருந்து மாறுபடுகிறது. எசுப்பானியாவில் விளையும் மரங்களால் செய்யப்படுகிறது. ௧. கோந்தே எர்மானோ ௨. தோமீங்கோ எஸ்தெஸொ ௩. ஹெருந்தீனோ பெர்நாந்தேஸ் ௪. யோசே ரமீறேஸ் ௫. இரிகார்தோ சான்சிஸ் கார்பியோ ௬. மனுவேல் இரெயெஸ் ௭. மனுவேல் ரோத்ரிகேஸ் ௮. மார்செலோ பார்பெரோ ௯. இரபாயெல் மொரேனோ ரோத்ரிகேஸ் ௧0. சாந்தோஸ் எர்நாந்தேஸ் பிளமேன்கோ நடனங்கள் பிளமேன்கோ நடனங்கள்: ௧. தொனா பாலோஸ் ௨. சொலேயாவின் தாளத்திலிருந்து ௩. பந்தாங்கோவிலிருந்து ௪. சிகுவீரீயாவிலிருந்து ௫. தாங்கோவிலிருந்து ௬. ஈதா இ வுவேல்த்தாவிலிருந்து ௭. மற்றவை பிளமேன்கோ இசை வகைகள் பிளமேன்கோ இசை வகைகள்: ௧. தொனா பாலோஸ் ௨. சொலேயாவின் தாளத்திலிருந்து ௩. பந்தாங்கோவிலிருந்து ௪. சிகுவீரீயாவிலிருந்து ௫. தாங்கோவிலிருந்து ௬. ஈதா இ வுவேல்த்தாவிலிருந்து ௭. மற்றவை பிளமேன்கோ பிளமேன்கோ: பிரேசில் கொட்டை பிரேசில் கொட்டை என்பது தென் அமெரிக்காவில் பெரிதும் கிடைக்கும் மனிதர் உண்ணும் கொட்டை ஆகும். அமொசான் காடுகளில் உள்ள பெரிய மரங்களில் இருந்து இவை பெரிதும் பெறப்படுகின்றன. இந்த மரத்தின் அறிவியல் பெயர் Bertholletia excelsa ஆகும். இந்த கொட்டைகளை ஒரு நாள் நீரில் நனைத்து வைத்திருந்து, பின்னர் அவித்து உண்ணலாம். கசுகொட்டை கசுகொட்டை என்பது ஒரு சுவைமிகு கொட்டைகளைத் தரும் மர இனத்தையும், அவற்றின் கொட்டைகளையும் ஒருங்கே குறிக்கிறது. இது சத்து மிக்க உணவாகும். பொதுவாக இதை தணலில் வேக வைத்து உண்பர். பசுங்கொட்டை பசுங்கொட்டை அல்லது இன்பசுங்கொட்டை என்பது விரும்பி உண்ணப்படும் கொட்டையையும், அது பெறப்படும் மரத்தையும் குறிக்கிறது. மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், துருக்கி, ஆப்கானிசுத்தான், துருக்மேனியா ஆகிய நாடுகளில் பெரிதும் பயிரிடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்க, அசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும் இது தற்போது பயிரப்படுகிறது. இது பாரசீக மொழியிலும் ஆங்கிலத்திலும் Pistachio எனப்படுகிறது. அசோக் சவான் அசோக் சங்கர்ராவ் சவான் () (பிறப்பு ) தற்சமய மகாராட்டிர முதலமைச்சராவார். மும்பை தீவிரவாத நிகழ்வின் பின்னணியில் விலாசராவ் தேசுமுக்கின் பதவிவிலகலை அடுத்து கடந்த 8 திசம்பர் 2008 அன்று சவான் பதவியேற்றார். கலாசாரம், தொழிற்துறை, சுரங்கங்கள் மற்றும் நெறிமுறை அமைச்சுகளை தன்னகத்தே கொண்டுள்ளார். முன்னாள் மகாராட்டிர முதலமைச்சரான சங்கர்ராவ் சவான் எஸ். பி.சவானின் மகனாவார். அக்டோபர் 2009ஆம் ஆண்டு நடந்த மாநிலப் பொதுத்தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் காங்கிரசு-தேசிய காங்கிரசின் கூட்டணி ஆட்சிக்குத் தலைமையேற்று 7 நவம்பர் 2009 அன்று மகாராட்டிர முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். மும்பையில் ஆதர்சு குடியிருப்புச் சங்க ஊழல் புகார்களை அடுத்து தமது முதலமைச்சர் பதவியிலிருந்து நவம்பர் 09, 2010 அன்று விலகினார். இவரையடுத்து பிரித்திவிராசு சவான் மகாராட்டிர முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார். விஞ்ஞானத்தில் பட்டப்படிப்பினைத் தொடர்ந்து வணிக மேலாண்மையில் பட்டமேற்படிப்பு படித்துள்ளார்.. தனது அரசியல் வாழ்வை மகாராட்டிர பிரதேச காங்கிரசின் பொது செயலாளராகத் தொடங்கினார். 87-88 ஆண்டுகளில் நாந்தேடு மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992இல் மகாராட்டிர மேலவைக்கு சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார்.1993இல் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை,மற்றும் உள்துறை அமைச்சுகளில் துணை அமைச்சராகப் பணியாற்றினார். 2003இல், அவர் போக்குவரத்து, துறைமுகங்கள், கலாசார விவகாரங்கள் மற்றும் நெறிமுறை அமைச்சரானார். 1995 - 1999 காலகட்டத்தில் மகாராட்டிர மாநில காங்கிரசு பொது செயலாளராக பணியாற்றினார். ஆத்திரேலியா (கண்டம்) புவியியல் ரீதியாக ஆஸ்திரேலியா ("Australia") என்பது உலகின் மிகச்சிறிய கண்டம் ஆகும். இது பொதுவாக ஆஸ்திரேலியப் பெருநிலத்தையே குறிக்கிறது. இதன் அயலில் உள்ள தீவுகளான டாஸ்மானியா, நியூ கினி போன்றவை இக்கண்டத்தினுள் அடங்காது. ஆனால் நிலவியல் ரீதியாக, "கண்டம்" என்பது பெருநிலப்பரப்போடு சேர்ந்த தீவுகளையும் உள்ளடக்கும் என்பதால், டாஸ்மானியா, நியூ கினி போன்றவையும் ஆரு தீவுகள் போன்ற அயலில் உள்ள தீவுகளையும் இக்கண்டத்தினுள் அடக்கலாம். இத்தீவுகள் கண்டத் திட்டுகளின் மேல் பரவியுள்ள கடல்களினால் பிரிக்கப்பட்டவை. ஆஸ்திரேலியா, நியூ கினி ஆகியவை அரபூரா கடல், மற்றும் டொரெஸ் நீரிணையாலும், தாஸ்மானியா பாஸ் நீரிணையாலும் பிரிக்கப்பட்டுள்ளன. கிமு 18,000 ஆண்டுகளளவில், கடல் மட்டம் குறைந்திருந்த வேளையில், நிலத்திட்டுகள் அனைத்தும் ஒரே நிலமாக இருந்தது. கடந்த பத்தாயிரம் ஆண்டுகளாக, கடல் மட்டம் உயர்வின் காரணமாக தாழ்நிலப்பரப்புகள் கடலினுள் அமிழ்ந்து இன்றைய பெருநிலப்பரப்பையும், நியூ கினி மற்றும் டாஸ்மானியா என்ற இரண்டு மலைத்திட்டுக்கள் அடங்கிய தீவுகளையும் பிரித்தன. நியூசிலாந்து நாடு ஒரே கண்டத் திட்டில் இல்லாததால், இது ஆஸ்திரேலியா கண்டத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதில்லை. மாற்றாக, இது மூழ்கிய கண்டமான சிலாந்தியாவினுள் அடங்கும். சிலாந்தியாவும், ஆஸ்திரேலியாவும் இணைந்து ஓசியானியா அல்லது ஆஸ்திரலேசியாவின் பகுதிகளாகும். இந்த கண்டத்தின் மக்கள் தொகையில் 82% பேர் கடலோர பிராந்தியங்களிலேயே வசிக்கிறார்கள். இந்த கண்டத்தின் மையம் முதல் பெரும்பாலான பகுதிகள் வாழ தகுதியற்ற பாலைவன நிலப்பகுதியாக இருப்பதே இதற்க்கு காரணம் ஆகும். 1625 1625 (MDCXXV) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். எப்-15 ஈகிள் எப்-15 ஈகிள் ("F-15 Eagle") தாக்குதல் வானூர்தி மக்டொனல்‍-டக்லஸ் (பின்பு போயிங்) என்னும் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. எதிரி வானூர்திகளால் வீழ்த்த முடியாத தாக்குதல் வானூர்தி என்று பெயர் பெற்றது. இது ஐக்கிய அமெரிக்க விமானப்படையினால் முக்கியமாகவும் இஸ்ரவேல், சவூதி அரேபியா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஏவுகணைகளைக் கொண்டு செல்லக் கூடியதாகவும், எதிரி விமானங்களைத் தாக்கக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டிருப்பினும் 1981-ஆம் ஆண்டு இது "எப்-15இ ஸ்ரைக் ஈகிள்" ஆக தரைத்தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வகையில் நவீனமயப்படுத்தப்பட்டது. எசுப்பானிய எழுத்திலக்கணம் எசுப்பானிய எழுத்துகள்: இத்தாலிய எழுத்துகள் இத்தாலிய எழுத்து என்பது இலத்தீன் எழுத்திலிருந்து பிறந்தது. இத்தாலிய மொழி, 21 எழுத்துக்களை பயன்படுத்துகின்றது. அவையாவன: ஆனீஸ் ஆனீஸ் காசோயீ (Anis Kachohi) என்பவர் ஒரு பிரெஞ்சு நாட்டிசை பாடகர். இவர் 1977ஆம் ஆண்டு போந்துவாசில் பிறந்தார். இவரது தாயார் உருசிய நாட்டை சேர்ந்தவர். இவரது தந்தை மொரோக்கோ நாட்டை சேர்ந்தவர். இவர் இவரது 8ஆம் வயது வரை பாரிசின் புறநகரங்களில் வளர்ந்தார். அரபு இசை அரபு இசை என்பது, அரபு நாட்டிலுள்ள அரபு பாப் இசை முதல் அரபு செம்மிசை வரை தன்னுள் அடக்கிய ஒரு இசை வகை. நவீன அரபு இசை உலகில் நீண்ட காலமாக கெய்ரோ, எகிப்து இல் இருந்து வெளியிடப்படும் இசையின் போக்குகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது. முன்-இசுலாமிய அரபு இசை பண்டைய மத்திய கிழக்கு இசையை போலவே இருந்தது. அய்கிடோ அய்கிடோ என்பது ஒரு சப்பானிய தற்காப்புக்கலை ஆகும். இது மோரேகி யுவேசிபா என்பவரால் உருவாக்கப்பட்டது. கி என்பது "உயிர் ஆற்றல்" [ஆன்ம ஆற்றல்] என்ற பொருளில் அமையும் ; அய் என்றால் "ஒன்றுடன் ஒன்றிணைவது" அல்லது "ஒத்திசைவது"; டோ என்றால் "வழி"; அதாவது, ஒவ்வொரு உயிரினுள்ளும் இருப்பதாக கருதப்படும் "உயிர் ஆற்றலுடன் ஒன்றிணைவதற்கான வழியே அய்கிடோ" ஆகும். அமெரிக்காக்கள் அமெரிக்காக்கள் ("Americas)" அல்லது அமெரிக்கா எனப்படுபவை மேற்கு அரைப்பகுதி அல்லது புதிய உலகம் ஆகியவற்றில் உள்ள நிலப்பகுதிகள் ஆகும். இவற்றில் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களும் மற்றும் அவற்றைச் சூழவுள்ள தீவுகள் மற்றும் நிலப்பகுதிகள் உள்ளடங்கியுள்ளன. "அமெரிக்கா" என்ற சொல் ஒரு பொதுவான சொல்லாக இருந்தாலும், ஐக்கிய அமெரிக்காவையே பொதுவாகக் குறிப்பிடுவர். உலகின் மொத்த பரப்பளவில் 8.3% (28.4% நிலப்பரப்பையும்) அமெரிக்காக்கள் கொண்டுள்ளன. உலக மக்கள் தொகையில் இங்கு ஏறத்தாழ 13.5% மக்கள் இங்கு வசிக்கின்றனர். கோண்டுவானா என்ற பெருங்கண்டத்தின் மேற்குப் பகுதியில் இருந்து தென்னமெரிக்கா ஏறத்தாழ 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து தனியே ஒரு கண்டமானது. 15 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கரிபியன் தட்டு, பசிபிக் தட்டு ஆகியவற்றின் மோதலினால் பல எரிமலைகள் எல்லைகளிலே வெளிக்கிளம்பி பல தீவுகளை உருவாக்கின. நடு அமெரிக்காவின் தீவுக்கூட்டங்களின் இடைப்பட்ட பகுதிகள் தொடர் எரிமலை வெடிப்புகளினால் கிளம்பிய பொருட்களால் நிரம்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கின. 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வரை வட அமெரிக்கா, மற்றும் தென்னமெரிக்கா கண்டங்கள் பனாமா பூசந்தியினால் (Isthmus of Panama) இணைக்கப்பட்டு, அதன்மூலம் அமெரிக்காக்கள் என்ற தனி நிலப்பகுதி உருவானது. இந்திய பொது சேவை மையங்கள் தேசிய மின்வழி அரசாங்க திட்டத்திற்கு உயிர் கொடுக்க இந்திய அரசு 2006 ஆம் ஆண்டு மே மாதம் அனைத்து மாநிலங்களிலும் பொதுச்சேவை மையங்களை (Common Service Centers) அறிமுகப்படுத்துவதற்கு ஒப்புதல் அளித்தது. பொதுச்சேவை மையம் என்பது தேசிய மின்வழி அரசாங்க திட்டத்தில் உள்ள 23 திட்ட பணிகளுள் ஒன்றாகும். இந்த சேவையை சிறந்த முறையில் நிறுவி நடத்திச் செல்ல, இந்திய அரசு தனியார் நிறுவனங்களுடன் கூட்டாக ஈடுபட்டு வருகிறது. குடிமக்களுக்கு அரசு சார்ந்த சேவைகளை எளிதில் கொண்டு சேர்க்க உதவும் வாயிலாக இருப்பது உறுதி. இந்த திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 5440 பொது சேவை மையங்கள் (கிராம பகுதிகளில்) உருவாகிக் கொண்டிருக்கின்றன. மு. க. முத்து மு.க.முத்து தி. மு. க தலைவர் மு.கருணாநிதியின் மூத்த மகன். மு.கருணாநிதியின் மூத்த மனைவியும் சிதம்பரம் ஜெயராமன் சகோதரியுமான பத்மாவதி இவரின் தாயார் ஆவார். தந்தையின் கலையுலக வாரிசாக திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். இந்த முடிவு தமிழக அரசியலில் ஒரு திருப்பத்தை உண்டாக்கியது. தனது திரை வாழ்விற்கு வந்த எதிர்ப்புபணியாக இதைக் கருதிய எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகமெனத் தனிக்கட்சி துவங்க வித்திட்டது இந்நிகழ்வு "பூக்காரி" படத்தில் தொடங்கி "பிள்ளையோ பிள்ளை", "சமையல்காரன்", "அணையாவிளக்கு" என்று தொடர்ந்து பல படங்களில் நடித்தார் மு.க.முத்து. நடிப்பு மட்டும் இல்லாமல் படங்களில் பாடியும் உள்ளார். இவரின் "நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா", "சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க.." பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. தனிப்பட்ட வாழ்க்கையில் இவருக்கு எற்பட்ட பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு - சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு - மீண்டும் திரைப்பட உலகுக்கு வந்தார். பவித்ரன் இயக்கத்தில் வெளியான "மாட்டு தாவணி" என்ற திரைப்படத்துக்காக தேவா இசையமைப்பில் நாட்டுப்புறப் பாடல் ஒன்றைப் பாடினார். பேரி பேரி எனப்படுவது ஒரு தாவரப் பேரினத்தையும் அத்தாவரத்தின் உண்ணத்தக்க பழத்தையும் குறிக்கும். சீனா, இத்தாலி, ஐக்கிய அமெரிக்கா போன்ற நாடுகளில் இது பெரிதும் பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டின் சில இடங்களிலும் இலங்கையின் மலைநாட்டுப் பகுதிகளிலும் இந்தோனேசியா உட்பட தென்கிழக்காசிய நாடுகளிலும் இது பயிரிடப்படுகிறது. இந்தப் பழம் ஒவ்வாமைத்தன்மை மிகக் குறைந்த, விட்டமின், நார்ப் பொருள் மிக்க உணவாகும். குளிரான மிதவெப்பத் தட்பவெப்பம் கொண்ட பகுதிகளில் பேரி மரம் மிகப் பழைய காலம் தொட்டே பயிரிடப்பட்டு வருகின்றது. இதன் பழம் உணவாகப் பயன்பட்டதற்கான சான்றுகளும் வரலாற்றுக்கு முந்திய காலம் முதலிருந்தே கிடைக்கின்றன. சுவிசு ஏரிக் குடியிருப்புக்களில் இதன் தடயங்கள் கிடைத்துள்ளன. இதைக் குறிக்கும் "பியர்" என்னும் சொல் அல்லது அதையொத்த சொற்கள் எல்லா செல்டிய மொழிகளிலும் காணப்படுகின்றன. திபெத்திய இசை திபெத்திய இசை ஆனது, திபெத்திலும் மற்றும் திபெத்தியர்கள் வாழும் இடங்களிலும் (இந்தியா, பூட்டான், நேபாளம் போன்ற இடங்களிலும்) உள்ள திபெத்தியர்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. திபெத்திய இசை, திபெத்திய பௌத்த சமயத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த ஒரு சமய இசை. பூட்டானிய இசை பூட்டானிய இசை என்பது, பூட்டான் நாட்டிலுள்ள ஒரு இசை வகை ஆகும். பூட்டானிய இசையில் சுங்த்ரா மற்றும் போயெத்ரா போன்ற செம்மிசை இசை வகைகளும் இரிக்சார் போன்ற நவீன இசை வகைகளும் உண்டு. புதிய பிளமேன்கோ புதிய பிளமேன்கோ என்பது, பிளமேன்கோவிலிருந்து சற்றே மாறுபட்ட, நவீனபடுத்தப்பட்ட ஒரு இசை வகை. 1975 ஆம் ஆண்டிலிருந்து இது ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இந்த இசை வகையில் தாளம்("compás"), நடனம்("baile") மற்றும் பாடல்("cante") ஆகியவையே முக்கியமாக, மையமாக கருதப்படுகின்றன. ஜி.இ குளோபல் ஆய்வு ஜி.இ குளோபல் ஆய்வு என்பது உலகின் மிகப் பெரிய ஆய்வு நிறுவனங்களில் ஒன்று ஆகும். இது ஜி.இ வணிக நிறுவனத்தின் ஒர் அங்கம் ஆகும். உலகில் தொடங்கப்பட்ட முதல் ஆய்வு நிறுவனம் ஆகும். புகழ்பெற்ற புத்தாக்கர் தோமசு எடிசனின் தலைமையில் 1900 இல் இது தொடங்கியது. இன்று இதில் 15000 வரையான அறிவியலாளர்கள், பொறியியலாளர்கள், நுட்பவியலாளர்கள் பணிபுரிகிறார்கள். 2.6 பில்லியன் நிதி ஆண்டுதோறும் ஆய்வுக்கு முதலீடு செய்யப்படுகிறது. 1000 வரையான patents ஆண்டுதோறும் பதிவுசெய்யப்படுகின்றன. ஐபிஎம் ஆய்வு ஐபிஎம் ஆய்வு என்பது ஐ.பி.எம் நிறுவனத்தின் ஆராய்ச்சி விருத்திப் பிரிவு ஆகும். 1945 இல் இருந்து இயங்கி வரும் இந்த அமைப்பு, பல தொழில்நுட்ப புத்தாக்கங்களை செய்துள்ளது. இன்று பல நூறு திட்டங்களை இது முன்னெடுக்கிறது. பராக் பராக் அல்லது பலோ அல்டோ ஆராய்ச்சி மையம் என்பது ஒரு ஆராய்ச்சியும் விருத்தியும் செய்யும் ஒரு முதன்மை நிறுவனம் ஆகும். வரைகலை பயனர் இடைமுகம், லேசர் அச்சுப்பொறி, எத்தர்நெட், பொருள் நோக்கு நிரலாக்கம் உட்பட பல முக்கிய தகவல் தொழில்நுட்பத்தின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இந்த நிறுவனத்தால் செய்யப்பட்டவை. இது Xerox நிறுவனத்தில் ஓர் அங்கமாக செயற்பட்டு வருகிறது. டுபோண்ட் மைய ஆய்வு டுபோண்ட் மைய ஆய்வு என்பது டுபோண் நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் செய்யும் அங்கம் ஆகும். வேதியியல் துறையில் ஆய்வு செய்யும் முதன்மை நிறுவனங்களில் இதுவும் ஒன்று. ஐக்கிய அமெரிக்காவில் முதன்மைத் வளாகத்தையும், உலகின் பல பாகங்களில் துணைத் தளாகங்களையும் இது கொண்டுள்ளது. பல முக்கிய கண்டுபிடிப்புகளை இது செய்துள்ளது. சீமன்சு ஆய்வும் விருத்தியும் சீமன்சு ஆய்வும் விருத்தியும் என்பது சீமன்சு நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் அங்கமாகும். இது 30 நாடுகளில் 32,500 ஆய்வாளர்களையும் விருத்தியாளர்களையும் கொண்டுள்ளது. ஐரோப்பாவின் முகப் பெரிய ஆய்வு நிறுவனம் இதுவாகும். காஸ்த்தா காஸ்த்தா என்பது பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டில் பயன்படுத்தப்பட்ட ஒரு போர்த்துகீசிய மற்றும் எசுப்பானிய சொல். தமிழில், இதற்கு இணையான சொல் ஜாதி எனலாம். காஸ்த்தா என்னும் சொல், எசுப்பானிய அமெரிக்காவிலிருந்த கலப்பு இனத்தவரை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பெல் ஆய்வுக்கூடங்கள் பெல் ஆய்வுகூடங்கள் ("Bell labs") என்பது அல்காட்டெல்-லூசெண்ட் நிறுவனத்தின் ஆய்வும் விருத்தியும் பிரிவு ஆகும். இதன் தலைமையகம் நியுயேர்சி ஐக்கிய அமெரிக்காவில் உள்ளது. 20 ம் நூற்றாண்டின் பல முக்கிய கண்டுபிடிப்புகள் இங்கேயே மேற்கொள்ளப்பட்டன. பாக்கோ செபேரோ பாக்கோ செபேரோ என்பவர், மார்ச்சு திங்கள் 6ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் காதீசில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார். இவர், பிற பாடகர்களுக்கு ஒத்திசை வாசிப்பது மட்டுமின்றி, தனியிசையில் இவர் கோராசொன் ஈ போர்தோன்("Corazón y Bordón") மற்றும் தே பூரா சேப்பா("De Pura Cepa") போன்ற இசைக்கோவைகளையும் வெளியிட்டுள்ளார். http://www.youtube.com/watch?v=tg5o5zpbqt4 ("பாக்கோ செபேரோவின் ரும்பா") http://www.youtube.com/watch?v=kdoXBJzjBUg http://www.youtube.com/watch?v=RZup7LjohP4 சிங்கியுலாரிட்டி பல்கலைக்கழகம் சிங்கியுலாரிட்டி பல்கலைக்கழகம் என்பது சிலின்கான் வாலியில் அமைந்துள்ள ஒரு கல்வி நிறுவனம் ஆகும். சிங்கியுலாரிட்டி என்ற ஆங்கிலச் சொல்லை தமிழில் நுட்பியல் ஒற்றைப்புள்ளி என்பர். ஆகையால் இதை ஒற்றைப்புள்ளி பல்கலைக்கழகம் என்றும் கூறலாம். இது பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டாலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் இல்லை. இது கூகிள், நாசா நிறுவனங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது. மடக்கை வேகத்தில் வளர்ச்சி பெறும் நுட்பங்களை புரிந்து, விரித்தி செய்து, பயன்படுத்துவதற்கு தகுந்த பணியாளர்களையும் தலைவர்களையும் உருவாக்கும் நோக்குடன் இக் கல்வி நிலையம் 2009 இல் தொடங்கப்பட்டது. நிலைமின்னியல் நிலை மின்னியல் (Electrostatics) என்பது நிலையான மின்னூட்டங்கள் அல்லது ஓய்வு நிலையில் மின்னூட்டங்களினால் ஏற்படும் நிகழ்வுகள் மற்றும் அதன் பண்புகளைப் பற்றி விவரிக்கும் ஒரு இயற்பியல் துறையாகும். பொருட்களில் ஏற்படும் இலத்திரன் இழப்போ அல்லது ஏற்போ அதனை மின்னூட்டம் அடையச்செய்கிறது. அம்பர் போன்ற சில பொருட்கள் தூசு, மரத்துகள் ஆகியவற்றை ஈர்க்கும் ஆற்றல் உள்ளவை என்பது பழங்காலந்தொட்டே அறியப்பட்ட ஒன்றாகும். எலக்ட்ரான் என்ற சொல் அம்பரின் கிரேக்க-மூலச்சொல்லான elektron என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். ஈர்ப்புப் புலத்தில் உள்ள நிறைகளைப் போன்றதே மின்புலத்திலுள்ள மின்னூட்டங்களும் ஆகும். மின்னூட்டங்கள் தங்களுக்கிடையே செயல்படும் விசைகளை பெற்றிருப்பதால் நிலையான ஆற்றலைப் பெற்றுள்ளன. இக்கருத்துக்கள் மின்னோட்டங்களின் பல பிரிவுகளிலும், அணு பற்றிய பல கொள்கையிலும் பெரிதும் பயன்படுத்துகின்றன. கி.பி 600 இல், கிரேக்க அறிஞரான தாலஸ் என்பவர் அம்பர் போன்ற பொருளை கம்பளியில் தேய்த்தப் பொழுது, அது காகிதம் போன்ற பொருளினை கவரும் பண்பைப் பெறுவதாகக் கண்டுபிடித்தார். பிறகு கி.பி 17ஆம் நூற்றாண்டில் வில்லியம் கில் பெர்ட் என்பவர், கண்ணாடி, எபோனைட் போன்றவைகளை தகுந்த பொருட்களோடு தேய்க்கும் பொழுது, அதேப் பண்பினை பெறுகிறது என்பதை கண்டறிந்தார். இவ்வாறு கவரக்கூடியப் பண்புகளை பெறுவதறிந்து அதனை மேலும் ஆராய்ந்த போது அதற்குக் காரணம், அதிலுள்ள எதிர்மின்னிகள் தான் மின்சாரமூட்டமடைகிறது என்பதை உணர்ந்தனர். அவ்வாறு தேய்க்கப்படும் பொழுது, மின்சாரமூட்டமடைகிற பொருட்களை electrified (மின்னூட்டம்) அடைந்தவை என்று கூறலாம். கிரேக்க மொழியில் அம்பர் என்று பொருள்படும் electron (எதிர்மின்னி) என்றச் சொல்லிருந்தே electrified (மின்னூட்டம்) என்றச் சொல் பெறப்பட்டவையாகும். இதுவே பிற்காலத்தில் electricity (மின்சாரம்) என்ற சொல்லாக திரிந்ததாகும். ஆக, உராய்வினால் உருவாகும் மின்னோட்டம் உராய்வு மின்னோட்டம் என அழைக்கப்படும். ஒரு பொருளில் உள்ள மின்னூட்டங்கள் நகரவில்லை எனில், அவ்வுராய்வு மின்னோட்டத்தை "நிலை மின்னோட்டம்" என்றும் கூறலாம். இரண்டு புள்ளி மின்னூட்டங்களுக்கு இடையே நடைபெறும் விசையின் பண்புகளைப் பற்றி விளக்கும் இந்த கூலும் விதி தான் நிலைமின்னியலின் அடிப்படையான விதி ஆகும். கூலும் விதியின்படி, "இரு புள்ளி மின்மங்களுக்கு இடையேயான கவர்ச்சி விசை அல்லது விரட்டு விசையானது , மின்மங்களின் பெருக்குத்தொகைக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கு இடையே உள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் அமையும். மின்மங்களை இணைக்கும் கோட்டின் வழியே விசையின் திசை அமையும்". இதில், ε என்பது ஒரு விவரித்த மதிப்பான பரி வெளியின் ஒப்புமை (permittivity of free charge) அல்லது வெறும ஒப்புமை (vaccum permittivity) என்னும் ஒரு நிலைப்பெண். ஒரு மின்மத்தின் மின்புலம் என்பது, அம்மின்மத்தைச் சுற்றியுள்ள வெளியில் , ஒரு சோதனை மின்மத்தால் உணரப்படும் விசை ஆகும். மின்புலத்திற்குக் காரணமான மின்னூட்டத்திற்கு அருகில் சோதனை மின்னூட்டம் வைக்கப்படுமானால் , அதன் மீது நிலைமின்னியல் விசை செயல்படுகிறது. ஒரு மின்மத்தின் மின்புலம் , மின்புலச்செறிவின் மூலம் அளவிடப்படுகிறது. மின்புலத்தில் உள்ள ஒரு புள்ளியில் வைக்கப்பட்டுள்ள ஓரலகு நேர்மின்மம் உணரும் விசை , அப்புள்ளியின் மின்புலச்செறிவு(electric field intensity) என்றழைக்கப்படுகிறது. மின்புலச்செறிவின் அலகு N C ஆகும். மின்புலம் மின்மத்தின் மீது தோற்றுவிக்கும் விசை F=qE ஆகும். "Q" எனும் ஒரு சோதனை மின்மத்தால் உண்டாக்கப்படும் மின்புலச்செறிவின் அளவு , கூலும் விதியின் மூலம் தரப்படுகிறது. formula_5 எனும் கன மின்ம அடர்த்தி கொண்ட பரவலான மின்மங்களலால் உருவாக்கப்படும் மின்புலச்செறிவு, எந்த ஒரு மூடிய பரப்பின் வழியே செல்லும் மின்புலப் பாயத்தையும் அப்பரப்பினிலுள்ள மொத்த மின்னூட்டத்தையும் காஸ் விதி அல்லது தேற்றம் தொடர்புப்படுத்துகிறது. காஸ் தேற்றத்தின்படி, "ஒரு மூடப்பட்ட கற்பனைப் பரப்பின்(Gaussian surface) வழியே செல்லும் மின்புலப் பாயம் பரப்பினுள் உள்ள மொத்த மின்மங்களின் மதிப்பை மட்டுமே சார்ந்தது ஆகும்". அம்மின்மங்கள் அமைந்துள்ள இடத்தைச் சார்ந்ததல்ல. பரப்புக்கு வெளியே உள்ள மின்மங்கள் மின்புலப் பாயத்திற்குக் காரணமாவதில்லை. கணிதவியல் முறையில் காஸ் விதி ஒரு தொகையீட்டுச் சமன்பாடாகக் குறிப்பிடப்படுகிறது. நுண்ணெண் முறையில் கீழ்க்காணும் விதத்தில் எழுதப்படுகிறது. இங்கே formula_9 என்பது விரிகை செய்கருவி(divergence operator) ஆகும். காஸ் விதியின் நுண்ணெண் முறையில் நிலைமின்னழுத்ததின் விளக்கத்தைச் சேர்த்தால் நிலைமின்னழுத்தம் Φ ற்கும் மின்ம அழுத்தம் ρ விற்கும் இடையேயான தொடர்பு தெரியவருகிறது. இச்சமன்பாடே பாய்சான் சமன்பாடாகும். பண்பிரட்டையாகா மின்மங்கள் இல்லாதபோது மேற்கண்ட பாய்சான் சமன்பாடு கீழுள்ளது போல் மாறுகிறது. இதுவே லாப்லேஸ் சமன்பாடு எனப்படுகிறது. formula_12 எனும் கன அளவினால் சூழப்பட்ட மின்புலத்தின் நிலையாற்றலானது, ஆற்றலடர்த்தியின் மீது தொகையீட்டல் செய்தால் கிட்டுகிறது. இங்கே என்பது Φ மின்னழுத்தமும், என்பது ρ மின்னூட்ட அடர்த்தியும் ஆகும். இது புற மின்புலத்திலிருந்து வெளியின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனிமைப்படுத்தும் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு கடத்தியின் உட்புறம் மின்புலம் சுழியாகும் என்கிற கருத்தின் அடிப்படையில் அமைகிறது. ஒரு மின்மத்தின் தொடுதல் இன்றியே வேறொரு மின்மத்தைப் பெற முடியும். இவ்வகை மின்மங்கள் தூண்டப்பட்ட மின்மங்களாகும். இவ்வாறு தூண்டப்பட்ட மின்மங்களைத் தோற்றுவிக்கும் நிகழ்வு நிலை மின் தூண்டல் என்று அழைக்கப்படுகிறது. தனித்த கடத்தி ஒன்றிற்கு q என்கிற மின்மம் அளிக்கப்படும்போது , அம்மின்மம் மாற்றமடைகிறது. அம்மின்னழுத்த மாற்றம் கடத்தியின் வடிவத்தையும் பரிமாணத்தையும் பொருத்து அமைகிறது. கடத்திக்கு அளிக்கப்பட்ட மின்மத்தால் கடத்தியின் மின்னழுத்தம் V அளவிற்கு மாற்றமடைகிறதெனில், அதாவது, இங்கு C என்பதே கடத்தியின் மின் தேக்குத்திறனாகும். மின்னல் கடத்திகள்(Lightning conductors), வான்- டீ-க்ராப் மின்னியற்றிகள்(Van-de-graff generators) ஆகியவை நிலைமின்னியலின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே செயல்படுகின்றன. மின்மம் பெற்ற பொருட்களுக்கிடையே தோன்றும் , கவரும் மற்றும் விரட்டும் பண்புகள் , நிலை மின்னியல் முறையில் வண்ணம் தெளித்தல் , துகள் பூச்சு , புகைக் கூண்டுகளில் பறக்கும் சாம்பலை சேகரித்தல் , மைப்பீச்சு அச்சுப்பொறி , அச்சுப் பகர்ப்பு நகல் பொறி போன்ற பல்வேறு பயன்பாடுகளைக் கொண்டுள்ளன. எஸ்த்றேயா மொறேந்தே எஸ்த்றேயா மொறேந்தே (Estrella Morente) ஒரு எசுப்பானிய பிளமேன்கோ பாடகர். இவர் ஆகஸ்ட்டு திங்கள் 14ஆம் தேதி 1980ஆம் ஆண்டில் கிரனாதாவிலுள்ள காபியாஸ் என்னும் இடத்தில் பிறந்தார். இவரது தந்தை என்ரீக்கே மொறேந்தேயும் ("Enrique Morente") ஒரு பிளமேன்கோ பாடகர். இவரது தாயார் பிளமேன்கோ நாட்டியக் கலைஞர் ஔரோரா கார்போநேல்("Aurora Carbonell") ஆவார். http://www.songtranslator.net/lyrics/_media/estrella_morente.jpg (எஸ்த்றேயா மொறேந்தே) http://www.youtube.com/watch?v=rUAv-AF732A (எஸ்த்றேயா மொறேந்தேவின் சாம்ப்ரா) http://www.esflamenco.com/bio/en10774.html மைக்ரோசாப்ட் ஆய்வு மைக்ரோசாப்ட் ஆய்வு என்பது கணினி அறிவியல் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் மைக்ரோசாப்ட்டின் ஒரு பிரிவு ஆகும். இது 1991 ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பல முன்னணி ஆய்வாளர்களை இது கொண்டுள்ளது. பி.எ.எசு.எப் பி.எ.எசு.எப் (BASF) என்பது ஒரு செர்மனிய பன்னாட்டு வணிக நிறுவனம். வேதித் தொழிற்துறையில் இதுவே உலகின் மிகப் பெரும் நிறுவனம் ஆகும். வேதியியல், உயிரித் தொழில்நுட்பம் ஆகியவற்றில் பல முக்கிய கண்டுபிடிப்புகளை இது செய்துள்ளது. டொவ் கெமிக்கல் கம்பனி டொவ் கெமிக்கல் கம்பனி ("Dow Chemical Company") என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு வணிக நிறுவனம். 2007 வருவாய் அடிப்படையில் உலகின் இரண்டாவது பெரும் வேதித் தொழில் துறை நிறுவனம் ஆகும். உலகில் மிகுதியாக ஆய்வுக்கும் விருத்திக்கும் முதலீடு செய்யும் நிறுவனங்களிலும் இது ஒன்றாகும். இந்நிறுவனம் ஆண்டுதோறும் ஏறக்குறைய $1 பில்லியன் ஆய்வுக்கு செலவு செய்கிறது. பைசர் பைசர் உலகின் விற்பனை அடிப்படையில் உலகின் மிகப் பெரும் மருந்தியல் நிறுவனம் ஆகும். பல முக்கிய மருந்துகளை இது மட்டுமே உற்பத்தி செய்கிறது. இது ஒரு பல்நாட்டு நிறுவனம். இதன் தலைமையகம் நியு யோர்க்கில் அமைந்துள்ளது. ஐயர் ஐயர் (அல்லது அய்யர், சாஸ்திரி, சர்மா, பட்டர்) என்றழைக்கப்படுவோர் தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும், பெரும்பாலும் ஆதிசங்கரரின் அத்வைதத் தத்துவத்தைக் கடைப்பிடிப்பவர்களுமான பிராமணர்கள் ஆவர். தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டுள்ள இவர்கள், பெரும்பாலும் தமிழகத்தில் வசிக்கின்றனர். குறிப்பிடத்தக்க அளவு கர்நாடகம், ஆந்திரம், கேரளத்திலும் காணப்படுகின்றனர். தமிழகத்தில் வாழும் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஸ்மார்த்தப் பிராமணர்களும் ஐயர் பட்டம் தரிக்கின்றனர். ஐயர் என்ற பெயர் இடைக்காலத்தில் தமிழகத்தில் உள்ள வெவ்வேறு பிராமண சமூகங்கள் ஒன்றுபட்ட சமுதாயமாகிய பொழுது உருவாகியது. அவர்களில் இருந்து விலகிய வைஷ்ணவத்தின் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்போரை ஐயங்கார் என்று அழைக்கிறோம். ஐயர்கள் தங்களின் பணிகளுக்கு ஏற்ப வெவ்வேறு உபகுழுக்களாக பிரிந்துள்ளனர். அவர்கள் கோத்திரம், வேதம் என்பதின் வகையிலும் பகுக்கப்பட்டுள்ளனர். ஐயர் சமுகத்தில் பல பிரிவுகள் உள்ளன. பெரில் பெரில் ("Beryl") அல்லது காமதகம் என்றழைக்கப்படுவது பெரிலியம் அலுமீனியம் சைக்குளோசிலிகேட்டு ஆகும். இதன் வேதிச்சமன்பாடு BeAl(SiO). பெரிலின் அறுகோணப் படிகம் மிகச்சிறியது தொடக்கம் சில மீட்டர் வரை பெரியனவாக காணப்படுகின்றன. தூய பெரில் படிகம் நிறமற்றது, எனினும் படிகத்தில் கூடுதலான நேரங்களில் மாசு மூலகங்கள் காரணமாக படிகம் நிறத்தைப் பெறுகின்றது. பச்சை, நீலம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை நிற பெரில் படிகங்கள் காணப்படுகின்றது. பெரில் என்பது கடலின் நிலப்பச்சை நிறமான கல்லைக் குறித்த பெரிலோசு (beryllos) என்பதிலிருந்து பெறப்பட்டதாகும். 2009 ஐசிசி உலக இருபது20 2009 ஐசிசி உலக இருபது20 சூன் 2009 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு இருபது20 துடுப்பாட்ட போட்டித் தொடராகும். . இது 2007 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் நடைப்பெற்ற முதல் ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரை அடுத்து இரண்டாம் முறையாக நடைப்பெறுகின்றத இப்போட்டித்தொடரில் தேர்வுத் துடுப்பாட்ட அணிகளும் ஐசிசி நுழைவுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 3 அணிகளுமாக மொத்தம் 12 அணிகள் பங்குபற்றின. இப்போட்டிகள் இலண்டனின் லோட்ஸ் துடுப்பாட்ட மைதானத்திலும் கெனிங்டன் துடுப்பாட்ட மைத்தனத்திலும் நொடிங்கமின் டிரெண்ட்பிரிஜ் துடுப்பாட்ட மைதனாத்திலும் நடைபெற்றன. இத்துடுப்பாட்ட போட்டித்தொடர் 2009 ஐசிசி உலக இருபது20 மகளிர் துடுப்பாட்டத் தொடருடன் சமாந்தரமாக நடாததப்பட்டது. சூன் 21 ஆம் நாள் இலங்கை பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியி பங்கேற்றன. மெரில்போன், சரே துடுப்பட்ட கழகங்கள் 2010 ஆண்டின் ஐசிசி உலக இருபது20 போட்டிகளை லோட்ஸ், ஓவல் துடுப்பாட்ட மைதானங்களில் இணைந்து விலை கேள் ஒன்றை மேற்கொண்டதாக இங்கிலாந்தின் "த டெய்லி டெலிகிராப்" 2006 ஆண்டின் சூன் மாதத்தில் செய்தி வெளியிட்டது. 2007 டிசம்பர் மாதம் பெண்கள் ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரையும் 2009 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடருடன் நடத்த அனுமதி அளித்தது. 2008 சனவரி மாதமளவில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு இங்கிலாந்து வரவிதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து போட்டித்தொடர் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படலாம் என கருத்துக்கள் நிலவின. ஆனால் பின்னர் போட்டித்தொடர் இங்கிலாந்தில் கட்டாயம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. 2008 ஏப்ரல் மாதம் துடுப்பாட்டப் போட்டி நடைபெறும் மைதாங்களான லோட்ஸ் துடுப்பாட்ட மைதானம், கெனிங்டன் துடுப்பாட்ட மைத்தனம் டிரெண்ட்பிரிஜ் துடுப்பாட்ட மைதானம் என்பன உறுதிப்படுத்தப்பட்டன. முன்னதாக இப்போட்டித்தொடர் 8 அணிகளுடன் 9 நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டப் போதும் பின்னர் 12 அணிகள் கொண்ட போட்டித்தொடர் அற்விக்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் அணிகளும் இரண்டு இணையான உறுப்பினர் நாடுகளும் போட்டியிடுவதாக இருந்தாலும் இங்கிலாந்து, தென்னாபிரிக்காவின் அழுத்தம் காரணமாக சிம்ப்பாப்வே அணி போடியிலிருந்து விழகிக்கொண்டது. இதில் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்னொரு இணையான உறுப்பு நாட்டைக் கொண்டு நிரப்புவதாக முடிவெடுக்கப்பட்டது. இணையான உறுப்பு நாடுகளிடையே (, , , , , ) ஐசிசி நடாத்திய தகுதிகான் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற இரண்டு நாடுகளும் மூன்றாம் நிலையைப் பெற்ற அணியும் போட்டித்தொடரில் இணைய தகுதிபெற்றன. அயர்லாந்து , நெதர்லாந்து அணிகள் ஐசிசி தகுதிகான் போட்டிகளின் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றதன் மூலமும் அரயிறுதிப்போட்டிகளில் தோல்விகண்ட இரண்டு அணிகளிடயே நடைபெற்ற போடியில் வென்றதன் மூலம் சுகொட்லாந்தும் 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றன. குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகளுக்கான புள்ளி வழங்கள் சீர்த்தரம் பின்வருமாறு: இரண்டு அணிகளும் தமக்கான பந்துப் பரிமாற்றங்கள் முடிவடைந்த நிலை சம ஓட்டங்களைப் பெறுவார்களாயின் போல் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.. குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகள் பின்வரும் சீர்தரங்களைக் கொண்டு தரப்படுத்தப்படும்: 2007 அக்டோபர் 31 ஆம் நாள் 2007 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரில் பெற்ற இடங்களைப் கருத்தில் கொண்டு குழுக்கள் அறிவிக்கப்பட்டன. சூப்பர்8 குழு E, குழு F என்ற இரண்டுகுழுக்களைக் கொண்டிருக்கும்.குழு E இல் A1, B2, C1, D2 அணிகளும், குழு F இல் A2, B1, C2, D1 அணிகளும் காணப்படும். A1என்பது A குழுவில் முதல் அணியைக் குறிக்கும், அதேபோல B2 என்பது B குழுவின் 2வது அணியைக் குறிக்கும். Coverage of the 2009 ICC World Twenty20 in the following countries will be: ஔரங்காபாத் மண்டலம் ஔரங்காபாத் மண்டலம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஒரு மண்டலம். இப்பகுதியை மராத்வாடா (மராட்டி: मराठवाडा) எனவும் அழைக்கப்படுகிறது. மராத்வாடா இந்தியாவில் மகாராட்டிர மாநிலத்தில் ஔரங்காபாத் மண்டலத்தின் நிலப்பரப்பின் வரலாற்றுப் பெயர் ஆகும். இம்மண்டலத்தின் நிர்வாகத் தலைநகராக வடமேற்கில் உள்ள ஔரங்காபாத் நகரம் விளங்குகிறது. நவம்பர் 1,1956 வரை முந்தைய ஐதராபாத் இராச்சியத்தின் ஒரு பகுதியான மராத்வாடா அந்நாளில் பிரிக்கப்படாத பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆகஸ்ட் 15,1947இல் விடுதலை பெற்றாலும் மராத்வாடா செப்டம்பர் 17,1948 அன்றே இந்தியாவுடன் இணைந்தது. அந்நாளில் போலோ நடவடிக்கை எனப்படும் இராணுவ நடவடிக்கையால் இந்திய இராணுவம் நிசாமின் ஆட்சியிலிருந்து ஹைதராபாத்தை விடுவித்தது. இக்காரணத்தால் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம், 17-ஆம் நாளன்று மராத்வாடா விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள சமய சிறப்பு பெற்ற இடங்கள்: அசந்தா,எல்லோரா சக்தி பீடங்கள்:மகூர்,அம்பாஜோகை ஜோதிர்லிங்க கோவில்கள்:கிருஷ்னேஷ்வர் (வெருல்),நாக்நாத் (ஔந்தா),வைஜ்யநாத் (பர்லி) பத்தாவது சீக்கிய குரு குருகோபிந்தசிங் அவர்களின் சமாதி:சச்காண்ட் (நாந்தெட்) தவிர துறவிகள் தியானேஷ்வர், நிவ்ருத்திநாத், சோபன்தேவ், முக்தாபாய், ஏக்நாத், சமர்த்த ராம்தாஸ் மற்றும் நாம்தேவ் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள். இப்பகுதி மாநிலத்தின் மிகப் பின்தங்கிய வலயமாக விளங்குகிறது.ஆயினும் இங்கு தொழிற்துறை வளர்ச்சி பெற்று வருகிறது.ஔரங்காபாத்தில் சிற்றுந்து தொழிற்சாலைகள் ஸ்கோடா,ஆடி அமைந்துள்ளன. இந்தால்கோ,பார்லே,சீமன்ஸ் மற்றும் ராடிகோ நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை ஆரம்பித்துள்ளன.வீடியோகான் தனது தொலைக்காட்சிப் பெட்டிகள்,குளிர்பதனப் பெட்டிகள்,துவைக்கும் கருவிகள் முதலியவற்றையும் ஸ்டெர்லைட் நிறுவனம் ஒளியிழை கேபிள்களையும் தயாரித்து வருகின்றன. அலி அக்பர் கான் அலி அக்பர் கான் ("Ali Akbar Khan", வங்காளம்: আলী আকবর খাঁ, ஏப்ரல் 14, 1922 – ஜூன் 18, 2009), இந்துஸ்தானி இசைக் கலைஞரும் சரோத் வாத்தியக் கலைஞரும் ஆவார். இவர் "கான்சாகிப்" அல்லது "உஸ்தாத்" (மாஸ்டர்) என்றழக்கப்படுகிறார். மேற்குலகில் சித்தார் மேதை ரவி சங்கருடன் இணைந்து இந்திய இசையை பன்முகப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. 1956 ஆம் ஆண்டில் இவர் கல்கத்தாவில் ஒரு இசைக் கல்லூரியையும், 1967 இல் அலி அக்பர் இசைக்கல்லூரி என்ற பெயரில் ஒரு இசைக்கல்லூரியையும் ஆரம்பித்தார். இக்கல்லூரி தற்போது கலிபோர்னியாவில் "சான் ரபாயெல்" என்ற இடத்தில் இயங்குகிறது. இதன் கிளை நிறுவனம் சுவிடசர்லாந்தில் இயங்குகிறது. கான் பல இந்துஸ்தானி இராகங்களையும் அமைத்துள்ளார். இவரது தந்தை அலாவுதீன் கான் இடம் முறையாக இசைப்பயிற்சி பெற்ற அலி அக்பர் கான், 1955 ஆம் ஆண்டில் வயலின் இசைக்கலைஞர் யெகுடி மெகினின் அழைப்பின் பேரில் முதல் தடவையாக அமெரிக்கா வந்தார். பின்னர் அங்கேயே (கலிபோர்னியாவில்) குடியேறினார். கான் இந்தியாவின் பத்ம விபூசன் விருதை 1989 ஆம் ஆண்டில் பெற்றார். அத்துடன் ஐந்து முறை கிராமி விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டவர். அமராவதி மண்டலம் இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்று அமராவதி மண்டலம். முந்தைய விதர்பா வலயம் அமராவதி மற்றும் நாக்பூர் மண்டலங்களை உள்ளடக்கி இருந்தது. இம்மண்டலத்தின் வடக்கே மத்தியப்பிரதேச மாநிலம்,கிழக்கே நாக்பூர் மண்டலம், தென்கிழக்கே ஆந்திரப்பிரதேசமாநிலம்,தெற்கிலும் தென்மேற்கிலும் ஔரங்காபாத் மண்டலம்(மராத்வாடா) மற்றும் மேற்கில் நாசிக் மண்டலம் அமைந்துள்ளன. அமராவதி மண்டல நிலப்பரப்பு முற்கால பேரார் குறுநாட்டை பெரும்பாலும் ஒத்துள்ளது. இக்குறுநாடு நாக்பூர் மராத்தா மகாராசாக்களால் ஹைதராபாத் நிசாமிற்கு 1803இல் இழக்கப்பட்டது. 1853இல் பிரித்தானியர் நிசாம் மக்களை கொடுமைப்படுத்துவதாகக் கூறி ஆட்சியை கைப்பற்றினர். 1903இல் பிரித்தானிய நடுவண் மாநிலங்களுடன் இணைக்கப் பட்டு நடுவண் மற்றும் பேரார் மாநிலம் என அழைக்கப்பட்டது. இதுவே விடுதலைக்குப் பிறகு மத்தியப் பிரதேசமாக உருவானது. 1956இல் மொழிவாரி மாநில சீரமைப்பின்போது பம்பாய் மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. 1960இல் உருவான மகாராட்டிர மாநிலத்தில் பின்னர் இணைந்தது. விதர்பா மகாராட்டிர மாநிலத்தின் மிக ஏழ்மையான பகுதிகளில் ஒன்று.விவசாயிகள் தற்கொலைகள் மிகுந்த இப்பகுதியில் தனி மாநில கோரிக்கை வலுத்து வருகிறது. வரிசைப்படுத்தல் (கணினியியல்) வரிசைப்படுத்தல் ஒரு அடிப்படைக் கணிமைச் செயற்பாடு. ஒரு பட்டியலில் உள்ள உறுப்புகளை ஒரு குறிப்பிட்ட ஒழுங்கில் வரிசைப்படுத்தப்படும். எ.கா சொற்களை அகரவரிசைப்படுத்தல், எண்களை ஏறுமுகமாக வரிசைப்படுத்தல் போன்றவை. பி.எச்.பி இல் உள்ள ஒரு செயற்கூற்றைக் (sort) கொண்டு தமிழ் சொற்களைக் கொண்ட ஒர் அணியை பின்வருமாறு அகரவரிசைப்படுத்தலாம். நாக்பூர் மண்டலம் இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்று நாக்பூர் மண்டலம் ஆகும். இது நாக்பூர் நகரை தலைநகராகக் கொண்ட மாநிலத்தின் கிழக்கு கோடியில் அமைந்துள்ள மண்டலம்.அமராவதி மற்றும் நாக்பூர் மண்டலங்கள் முந்தைய விதர்பா வலயமாக இருந்தன. நாக்பூர் மண்டலம் 1861இல் பிரித்தானியர்களால் உருவாக்கப்பட்டது. நாக்பூர் நாட்டையும் சௌகார் மற்றும் நெர்புத்தா பகுதிகளையும் சேர்த்து நடுவண் மாநிலங்கள் உருவாக்கினர்.விடுதலையான பிறகு மொழி வாரி சீரமைப்பின்போது 1956இல் பம்பாய் மாநிலத்தில் இணைக்கப்பட்டது.1960இல் பம்பாயின் மராத்தி பேசும் பகுதிகள் பிரிக்கப்பட்டு தற்போதைய மகாராட்டிரம் உருவானது. வசீலி சுகோம்லின்சுக்கி வசீலி அலெக்சாந்திரொவிச் சுகோம்லின்சுக்கி ("Vasily Alexandrovich Sukhomlinsky", உக்ரைன் மொழி: "Василь Олександрович Сухомлинський", உருசிய மொழி: "Васи́лий Алекса́ндрович Сухомли́нский", வசீலி அலெக்சாந்த்ரவிச் சுஹோம்லின்ஸ்க்கி, செப்டம்பர் 28, 1918 – செப்டம்பர் 2, 1970) உக்ரைனில் வாழ்ந்த ஒரு கல்வியாளர். இவர் உக்ரைன் நாட்டிலுள்ள சுமார் 3000 மக்கள் வசித்து வந்த பாவ்லிச்சு என்ற சிற்றூரிலுள்ள பள்ளியின் தலைமையாசிரியராக இருபது ஆண்டுகள் இருந்தார். இன்றும் கூட அவர் தொடங்கிய கல்விச் சீர்திருத்தங்களைக் காண பாவ்லிச்சு பள்ளிக்கு பல இடங்களிலிருந்தும் ஆசிரியர்களும் மாணவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இன்னமும் அச்சீர்திருத்தங்கள் முழு அளவில் செயல்படும் வகையில் தொடரப்பட்டு வருகின்றன. முழுமையான கல்விக்கு உள்ளகமாக அறக்கல்வி இருக்க வேண்டும் என்றார் அவர். அறக்கல்வி என்று அவர் வரையறுத்தது "—" இயற்கையின் அழகைத் துய்க்கும் அளவிற்கு மாணவர்களை நுட்பமானவர்களாக்குதல், கலை மற்றும் மனித உறவுகள் குறித்த நுட்பங்களை அறியச்செய்தல் ஆகியவையே. ஒரு மாணவருக்கு உடல்-சார், அறிவு-சார் வளர்ச்சியோடு தொழில்-சார் அறிவும் தேவை என்று திட்டமாக நம்பினார். குழந்தைகள் பால் அவர் கொண்டிருந்த ஆழமான அன்பும் அவரது இலட்சியவாதமும் ஒரு முழுமையான கல்விமுறையை உருவாக்க உதவின. அவரது கல்விமுறையில் மாணவர்களின் உடல் நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. வசீலியின் கல்விமுறையில் கல்வியின் ஒவ்வொரு அங்கத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது; அவை ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து உள்ளது என்ற கருத்தை அவர் கொண்டிருந்தார். "மாணவர் ஒருவரை மாணவர் போல நடத்தக்கூடாது — பண்பாளராக வார்க்கப்பட வேண்டிய ஒரு தனிமனிதரைப் போல நடத்த வேண்டும்" என்று கூறுவார் வசீலி. சிறந்த பண்பாளராக ஒரு மாணவரை உருவாக்குவதில் தன் வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார் வாசிலி. மிகவும் மதிப்புமிக்கது என்று அவர் தன் குழந்தைகளுக்குக் கூறியது மனித வாழ்வையே; ஏனையோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதைக் காட்டிலும் பெருமைமிகு செயல் வேறெதுவுமில்லை என்று அறிவூட்டினார். அவ்விதம் மகிழ்விக்க வேண்டுமெனில் முதலில் நாம் நம்மிடத்திலும் நம் சுற்றுச்சூழலிலும் அழகுணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தன் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் மாணவர் மனம் விரிவடைய வேண்டுமெனில் பிற மொழிகளையும் வானியலையும் கற்றல் அவசியம் என்று கருதினார். "இதைக் கூறுவதில் எனக்கு எவ்வித அச்சமுமில்லை: கல்வி புகட்டுபவரின் மிக முக்கியமான வேலை மாணவர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுதல்" என்று முழங்கினார் வசீலி. பாவ்லிச்சு பள்ளிக்கு ஒரு குழந்தை வருவதற்கு இரண்டு ஆண்டுகள் முன்னரே அதன் உடல்நலம் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு, ஏதேனும் குறைகள் இருந்தால் குறித்துக்கொண்டு அதனை சரிசெய்யவும் வழிவகை செய்யப்பட்டது. 30 நூல்களை எழுதிய வசீலி 500 கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பள்ளி வேலைகளற்ற பொழுதான காலை 4 மணியிலிருந்து 8 மணி வரையே அவர் எழுதப் பயன்படுத்திய காலம். மற்றபடி மருத்துவமனைகளில் இருந்த நாட்களையும், விடுமுறை நாட்களையும் எழுதுவதற்கு அவர் துரிதகதியில் பயன்படுத்திக் கொண்டார். அவரது வாழ்நாளின் கடைசி மூன்று ஆண்டுகளின் தான் அவரது மிக முக்கியமான படைப்புகள் எழுதப்பட்டன. அவர் எழுதிய நூல்கள் புதினங்களோ கதைகளோ குழந்தை-வளர்ப்பு பற்றிய கையேடுகளோ அல்ல — மாறாக அவை கல்வி பற்றிய நேரடியான ஆய்வுகள். இருப்பினும் அவர் எழுதிய பல்வேறு நூல்கள் பலதரப்பு மக்களால் படிக்கப்பட்டு இலட்சக்கணக்கில் விற்றன. சுகோம்லின்சுகியின் நோட்டுப்புத்தங்களும் அவர் எழுதிய பல புத்தகங்களும் பாவ்லிச்சு அரசின் கல்விக்கான நினைவு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. முத்து முத்தான கையெழுத்தில் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும் நோட்டுப்புத்தகங்களில், வாசிலி தன் அன்றாடைய வகுப்பு மேற்பார்வையைப் பற்றிய அனுபவங்களையும் தான் அன்று செய்யவேண்டிய அலுவல்கள் பற்றியும் எழுதியிருப்பதைக் காணும் ஒருவருக்கு அவரது ஒழுங்குடன் அமைந்த இயல்பும் துல்லியமான திட்டமிடுத்ல் குறித்தும் புலப்படும். பாவ்லிச்சு பள்ளியில் பாடத் திட்டம் சாராச் செயல்களுக்காக மட்டுமே அதிக எண்ணிக்கையில் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்களின் சிறப்பம்சம் என்னவெனில், குழந்தைகளும் பெரிய மாணவர்களும் ஒன்று கூடி செயல்பட்டது தான். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனி வேலையிடம், ஒரு தனி விருப்பவேலை மற்றும் உதவி புரிய ஒரு பெரிய மாணவரும் உண்டு. பெரும்பாலான மாணவர்கள் ஏதேனும் ஒரு தொழில்-வேலையைக் கற்றுக்கொள்வதோடு நில்லாமல் அதை சக மாணவர்களிடம் பகிர்ந்தும் வருவர். இவ்வகைப் பகிர்வில் தான் உண்மையான கல்வி ஏற்படுகின்றது என்று கூறுவார் வசீலி. நூல்களுக்கான பெட்டி ஒன்று, ஒரு மேசை, நாற்காலி ஒன்று பழைய தட்டச்சுக்கருவி ஒன்று -- இவ்வளவு தான் பாவ்லிச்சு பள்ளியின் தலைமையாசிரியர், இயக்குனர் சுகோம்லின்சுக்கியின் அறையில் காணப்பட்டவை. இங்கிருந்து தான் காலை 4 மணியிலிருந்து 8 மணி வரை வசீலி கல்வியுலகையே மாற்றவல்ல கருத்துகளை எழுதினார். பாக்கோ பேன்யா பாக்கோ பேன்யா சூன் திங்கள் 1ஆம் தேதி 1942ஆம் வருடத்தில் எசுப்பானியாவிலுள்ள கோர்தோபா என்னும் இடத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் பிரான்ஸிஸ்க்கோ பேன்யா பெரேஸ். இவர், அவரது ஆறாம் வயதிலேயே கிதார் கற்க ஆரம்பித்து, பன்னிரெண்டாம் வயதிலேயே மேடையில் வாசிக்க ஆரம்பித்து விட்டார். இவர், செம்மிசை கிதார் கலைஞர் சான் வில்லியம்ஸின் நல்ல நண்பர் ஆவார். http://www.youtube.com/watch?v=63a4R8m0_Dg ("பாக்கோ பேன்யாவின் கிரனயீனாஸ்") சான் வில்லியம்ஸ் (கிதார் கலைஞர்) சான் வில்லியம்ஸ் அல்லது ஜோன் வில்லியம்ஸ் ("John Williams", பிறப்பு: ஏப்ரல் 24, 1941) ஆஸ்திரேலியாவில் பிறந்த ஒரு பிருத்தானிய செம்மிசை கிதார் கலைஞர். இவர், இவரது தலைமுறையிலேயே ஒரு மிகச்சிறந்த கிதார் கலைஞராக கருதப்படுகிறார். குர்துபா குர்துபா என்பது தென் எசுப்பானியாவிலுள்ள அந்தலூசியாவிலுள்ள ஒரு நகரமும், குர்துபா மாகணத்தின் தலைநகரமும் ஆகும். இந்நகரம், கிலௌடியஸ் மார்செல்லஸால் தோற்றுவிக்கப்பட்டது. 2011 இல் இதன் சனத்தொகை 330,000 ஆகக் காணப்பட்டது. 10 ஆம் நூற்றாண்டில் குர்துபா நகரமானது உலகிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற நகரங்களில் ஒன்றாக விளங்கியது. இதன் பழைய நகரமானது யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக பிரகடனம் செய்துவைக்கப்பட்டது. இந்நகரத்தின் காலநிலையானது, கோடை காலங்களில் மிகவும் வெப்பமாகக் காணப்படுகிறது (சராசரியாக சூலையில் ). சாம்ப்ரா சாம்ப்ரா/சாம்ப்ரா மோரா என்பது, கிரனாதாவிலுள்ள உரோமா மக்களால் ஆடப்படும் ஒரு நடனம். இது, மூரிய நடனங்களிலிருந்து பிறந்தது என நம்பப்படுகிறது. இது கித்தானோ திருமணங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக சாக்ரோமோன்தே குகைகளிலும் குன்றுகளிலும் முக்கியமாக ஆடப்படுகிறது. கிரனாதா "இதே பெயரில் உள்ள நாடு பற்றி அறிய கிரெனடா கட்டுரையைப் பார்க்க." கிரனாதா ("Granada") என்பது, எசுப்பானியாவிலுள்ள ஆந்தலூசியாவிலுள்ள கிரனாதா ப்ராவின்சின் தலைநாகம் ஆகும். 2005 இல் இதன் மக்கள்தொகை 236,982 ஆக இருந்தது. இங்கு விளையும் மாதுளம்பழம் (எசுப்பானீயம்: கிரனாதா/"Granada") இதற்கு சிறப்பூட்டும் வகையில் உள்ளன. ராமராஜன் ராமராஜன் ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர், அதிமுக-வின் தலைமை கழக பேச்சாளராக பொறுப்பு வகித்தார். இவர் 1998ல் திருச்செந்தூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். எண்பதுகளின் இறுதியில் உச்சத்தில் இருந்தவர். முதலில் உதவி இயக்குனராகவும் மற்றும் இயக்குனராகவும் இருந்து பிறகு முழுநேர நடிகரானார். இவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் மதுரையில் ஒரு திரையரங்கில் ஒரு வருடம் ஓடி சாதனைப் படைத்தது. கங்கை அமரன், ரங்கராஜன் ஆகியோர் இவரது இயக்குனர்களாக இருந்தனர். இவர் நடித்த புகழ்பெற்ற ஏனைய திரைப்படங்கள் - எங்க ஊரு பாட்டுக்காரன், தங்கமான ராசா, ஊருவிட்டு ஊருவந்து, வில்லுபாட்டுக்காரன், நம்ம ஊரு நல்ல ஊரு, ரயிலுக்கு நேரமாச்சு போன்ற பல திரைப்படங்கள் ஆகும். இவர் திரைப்பட நடிகை நளினியை 1987ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அருண், அருணா என இரண்டு பிள்ளைகள் உள்ளன. பின்பு 2000 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்துப் பெற்றுக்கொண்டனர். திசம்பர் 12, 2010 அன்று அதிமுக பரப்புரைக்காகத் திருநெல்வேலி செல்லும் போது மதுரை அருகே நல்லம்ம நாயக்கன் பட்டியில் சாலை ஓரப் பேருந்து நிறுத்தத்தில் மோதி இவர் சென்ற மகிழுந்து விபத்துக்குள்ளானதில் இவருக்குத் தலையிலும் காலிலும் கடுமையான காயம் ஏற்பட்டது. மகிழுந்து ஓட்டுநர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்தார். நாசிக் மண்டலம் இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். வரலாறு சிறப்புமிக்க காந்தேஷ் பகுதி இம்மண்டலத்தின் வடக்குப் பகுதியில் தபதி நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும் குசராத்மாநிலமும், வடக்கே மத்தியப் பிரதேசமாநிலமும், கிழக்கே அமராவதி மண்டலம் மற்றும் ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே புணே மண்டலமும் அமைந்துள்ளன. இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்: புணே மண்டலம் இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும், வடக்கே நாசிக் மண்டலமும், கிழக்கே ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன. 2013 ஆண்டில் மாநில சராசரியை விட கூடுதலாக பள்ளி இறுதித் தேர்வில் 81.91 விழுக்காடு மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்: கொங்கண் மண்டலம் கொங்கண் (மராத்தி: कोकण), அல்லது கொங்கண் கரையோரம் அல்லது கரவாலி, இந்தியாவின் மேற்கு கடலோரம் மகாராட்டிர ராய்கரிலிருந்து கர்நாடக மாநிலத்தின் மங்களூர் வரை பரந்திருக்கும் கடலோர நிலப்பரப்பு ஆகும். கொங்கண் பொதுவாக மகாராட்டிரத்தின் ராய்கர், தாணே, மும்பை, இரத்னகிரி, சிந்துதுர்க் மாவட்டங்களையும் கோவா மாநிலம், கர்நாடகத்தின் உத்தர கன்னடம், உடுப்பி, தட்சிண கன்னடம் மாவட்டங்களையும் குறிக்கும். இந்த மக்களின் உணவுப் பழக்கங்கள் (அரிசி & மீன்), பயிர்கள் (நெல், மாம்பழம், முந்திரி,பலா) மற்றும் உடல்வாகு (உயரம் மற்றும் கட்டு) இவற்றில் ஒற்றுமை காணலாம். கொங்கண் வாழ் மக்கள் "கொங்கணிகள்"என அழைக்கப்படுகின்றனர்.அவர்களது மொழி கொங்கணியாகும். இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் அரபிக்கடலும், வடக்கே குசராத்மாநிலமும், கிழக்கே நாசிக் மண்டலம் மற்றும் புணே மண்டலமும் , தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன. இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்: கொங்கண், பர்கினோ பாசோ கொங்கண் பர்கினோ பாசோவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கோமோ பிராவின்ஸ் சிடரடோகுவைச் சேர்ந்த ஒரு கிராமம். கிராமத்தின் மக்கட்தொகை 223. இஸ்லாமும் சூழலும் அல்லாஹ் மனிதனை உயர்ந்த சிருக்ஷ்டியாகப் படைத்து பகுத்தறிவை அவனுக்கு வழங்கி அவன் வழிதவறிச் சென்று விடக் கூடாது என்பதற்காக சிறந்ததொரு வாழ்க்கை நெறியையும் அவனுக்கு வகுத்துக் கொடுத்துள்ளான். அவன் இந்த வாழ்க்கை நெறியைப் பின்பற்றி வாழ்கின்ற போது மனிதனின் சமுக.பௌதீக வாழ்விலோ பிரபஞ்சத்திலோ எத்தகு பிரச்சினைகளும் குழப்பங்களும் தோன்றாது.மாறாக அமைதியும் நிம்மதியும் நிறைந்த ஒரு வாழ்வே நிலைபெறும். இயற்கையின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு உயிரியும் பரஸ்பரம் ஒன்றோடொன்று இனணந்து செயற்படுகின்றது.மனிதனும் அவனது வாழ்வும் இந்த இயற்கையோடு பின்னிப் பினைக்கப்பட்டே காணப்படுகின்றது.அவனால் ஒரு கணப்பொழுதும் இத​னை விட்டு விலகி வாழ முடியாது. சூழல் பல இயற்கைச் சமநிலைகளால் இயங்குகிறது. ஒட்சிசன் வட்டம், காபன் வட்டம், நைதரசன் வட்டம் போன்றன இவற்றுள் சிலவாகும். உணவுச் சங்கிலி ஒழுங்கு, சக்தி வட்டம் என்பனவும் இயற்கையின் அற்புதங்களாகும் .இந்த சமநிவர வட்டங்களில் ஏற்படும் சிறியதொரு மாற்றமும் பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தி விடும். இவ்வாறு நன்கு திட்டமிடப்பட்ட மிக நுனுக்கமான அடிப்படையில் ஒழுங்குபடுத்தப் பட்டிருக்கும். சூழலின் பிரிக்க முடியாத மிக முக்கிய அங்கமாக மனிதன் இருக்கிறான். 18ம்நூற்றாண்டு வரை மனிதனால் சூழலுக்கு பாதிப்புக்கள் வரும் என்ற உண்மை உணரப்பட்டிருக்கவில்லை.எனினும் ஆரம்ப காலங்களில் (இகொலஜிஸ்ட்) சூழலியலாளர்களால் மாத்திரம் உணரப்பட்டு வந்த இந்த சுற்றாடற் பிரச்சிரனகள் இன்று சாதாரண பொது மக்களாலும் பேசப்பட்டு வரும் முக்கிய தனலப்பாக மாறியிறுக்கிறது. மனிதன் எப்படி இவ்வுலகொடு தொடர்பு கொள்ள வேண்டும் என்ற உண்மைளை உணர்ந்து கொள்ளாததனாலேயே சூழற் பிரச்சினைகள் தனி மனித வாழ்விலும் பாதிப்பைச் செலுத்த ஆரம்பித்து விட்டன, சூழற் பிரச்சினைகள் இன்று மிக இராட்சத அளவில் பல்கிப் பெருக மனிதன் தான் காரணமாக உள்ளான்.பொறுப்பு மிக்க சூழற் தலைவன் எனும் யதார்த்தத்தை மறந்து சுய நல நோக்கில் தனது அறிவியல் முன்னேற்றத்தையும் தொழினுட்ப விருத்தியையும் மாத்திரம் கருத்தல் கொண்டு வாழ்வதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். இஸ்லாம் சூழலை மனிதனது எதிரியாக நோக்கவில்லை. அது மானிட வாழ்விற்கு உயிர் நாடிகளான நீர்.காற்று உட்பட கோடிக்கணக்கான மரங்கள். செடிகள். கொடிகள். மலைத்தொடர்கள் மேட்டு நிலங்கள். சமவெளிகள் பள்ளத்தாக்குகள். பசுமையான புல் நிலங்கள். கண்கவர் நீர் வீழ்ச்சிகள். வண்ண வண்ண பூச்சி இனங்கள். பறவையினங்கள். விலங்கினங்கைகள் அனைத்தையும் ஒரே குடும்பமாகவே நோக்குகின்றதது. இக் கருத்தை பின்வரும் ஹதீஸ் வலியுறுத்துகின்றது "படைப்புக்கள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பம்.அவனது குடும்பத்தின் மீது அன்பு காட்டுபவனே அவனது படைப்பில் அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரியவன்." (புஹாரி)." இரு முறை தாகித்த நாய் ஒன்றுக்கு தண்ணீர் புகட்டிய பெண் ஒருத்திக்கு சுவர்க்கம் க்டைக்கும் எனவும் ஒரு பூனையை அறையில் போட்டு பூட்டி அதற்கு உணவொ நீரோ புகட்டாமல் சித்திரவதை செய்தமையால் மற்றுமொரு பெண்ணுக்கு நரகம் கிடைக்கும் எனவும் நபியவர்கள் கூறினார்கள்.இச் சம்பவத்தின் மூலம் இஸ்லாம் ஜீவகாருண்யத்துக்கு எந்தளவு முக்கியத்துவம் அளித்துள்ளதுஎள்பதையும்மனிதன் மன்தர்களுக்கு மட்டுமன்றி ஏனைய உயிரிணங்களுக்கும் பணிவிடை செய்யக் கடமைப்பட்டுள்ளான் என்ற உண்மையையும் தெளிவுபடுத்துகிறது. இயற்கையின் கட்டுக்கோப்பும் ஒருமைப்பாடும் அதனைப் பேண வேண்டியதன் அவசியமும் திருக்குர்ஆனிலே வலியுறுத்தப்பட்டுள்ளது என்பதைப் பின்வரும் வசனங்கள் எடுத்துக்காட்டுகின்றன. இவ் வசனங்கள் இயற்கை வெறும் சடமல்ல: அது அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வருவதுடன் அல்லாஹ்வின் ஆற்றல்களையும் .அத்தாட்சிகளையும் காட்டவல்லது.என்பதையும் விளக்குவதாக உள்ளன. நாந்தேடு கோட்டம் இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் புணே மண்டலமும், தென்கிழக்கே ஆந்திரப் பிரதேசமும் வடக்கேஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன. லத்தூர் மண்டலமும் ஔரங்காபாத் மண்டலமும் முந்தைய மராத்வாடா பகுதியாக அறியப்பட்டது. நவம்பர் 1,1956 வரை முந்தைய ஹைதராபாத் நாட்டை சேர்ந்திருந்த மராத்வாடா அந்நாளில் பிரிக்கப்படாத பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.இந்தியாவின் மற்ற பகுதிகள் ஆகஸ்ட் 15,1947இல் விடுதலை பெற்றாலும் மராத்வாடா செப்டம்பர் 17,1948 அன்றே இந்தியாவுடன் இணைந்தது.அந்நாளில் ஆபரேசன் போலோ எனப்படும் இராணுவ நடவடிக்கையால் இந்திய இராணுவம் நிசாமின் ஆட்சியிலிருந்து ஹைதராபாத்தை விடுவித்தது.இக்காரணத்தால் 17 செப்."மராத்வாடா முக்தி தின்" என கொண்டாடப் படுகிறது. உலோலீத்தா புலோறேஸ் உலோலீத்தா புலோறேஸ் (ஆங்கிலம்: "Lolita Flores", எசுப்பானியம்: "Lolita Flores") மே திங்கள் 6ஆம் தேதி 1958ஆம் ஆண்டில் எசுப்பானியாவின் தலைநகரமான மாத்ரீதில் பிறந்தார். இவரது இயற்பெயர் தோலோறேஸ் கொன்சாலெஸ் புலோறேஸ் ("Dolores González Flores") ஆகும். இவரது தந்தை அந்தோனியோ கொன்சாலெஸ் ("Antonio González"); இவரது தாயார் உலோலா புலோறேஸ் ("Lola Flores"). இவர் ஒரு எசுப்பானிய நடிகரும் பாடகரும் ஆவார். இவர், 1970களில் பாடத்துவங்கி, 1975ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலும் இலத்தீன் அமெரிக்காவிலும் அமோர், அமோர் ("Amor, amor") என்னும் இவரது இசைக்கோவை மூலம் பெரும் வெற்றி கண்டார். இது மட்டுமின்றி, இவர் திறேக்தீச்மோ ("Directísimo") மற்றும் ஒஸ்தால் ரொயால் மன்சானாறேஸ் ("Hostal Royal Manzanares") போன்ற தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் பங்களித்துள்ளார். உலோலா புலோறேஸ் உலோலா புலோறேஸ் (ஆங்கிலம்: Lola Flores, எசுப்பானியம்: Lola Flores) சனவரி திங்கள் 21ஆம் தேதி 1923ஆம் ஆண்டில் பிறந்தார். இவர், உரோமா மக்களின் வம்சாவழியில் வந்த எசுப்பானிய பாடகர், நடிகர் மற்றும் நாட்டியக் கலைஞர் ஆவார். இவரது இயற்பெயர் மாறீயா தே லோஸ் தோலோறேஸ் பிலோறேஸ் றுவிஸ் ("María de los Dolores Flores Ruiz") ஆகும். இவர், மே திங்கள் 16ஆம் தேதி 1995ஆம் ஆண்டில் உயிர் நீத்தார். தாலீயா தாலீயா என்பவர் ஒரு மெக்சிக்க பாப் பாடகரும், நடிகரும் ஆவார். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 26ஆம் தேதி 1971ஆம் ஆண்டில் மெக்சிக்கோ நகரத்தில் பிறந்தார். இவரது இயற்பெயர் அறியாத்னா தலீயா சோதி மிராந்தா ("Ariadna Thalia Sodi Miranda") ஆகும். இவர், இவரது 9ஆம் வயதிலேயே மேடையில் பாடத்துவங்கிவிட்டார். இவரது மிகவும் அதிகமாக விற்கப்படும் இசைக்கோவை அமோர் ஆ லா மெக்சிகானா ("Amor a la mexicana") என கருதப்படுகிறது. அமோர் ஆ லா மெக்சிகானா அமோர் ஆ லா மெக்சிகானா தாலீயாவின் ஆறாவது இசைக்கோவை ஆகும். இதுவரை 6.5மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளன. இது 20 பிளாட்டின தட்டுகளையும் 33 தங்கத்தட்டுகளையும் பெற்றுள்ளது. தோமாதீத்தோ தோமாதீத்தோ 1958ஆம் ஆண்டில் அல்மேரீயாவில் பிறந்தார். இவர் ஒரு எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவரது தந்தை தொமாத்தேயும் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ கிதார் கலைஞர் ஆவார். அல்மேரீயா அல்மேரீயா என்பது எசுப்பானியாவிலுள்ள அல்மேரியா ப்ராவின்சின் தலைநகரம் ஆகும். இது, தென்-கிழக்கு எசுப்பானியாவில் நடுநிலக் கடல் அருகே உள்ளது. இதன் பெயர் ஆந்தலூசிய அரபு மொழியிலிருந்து வருகிற "Al-Mariyya" (கண்ணாடி) என்னும் சொல்லிலிருந்து வருகிறது. மானோலோ சான்லூக்கார் மானோலோ சான்லூக்கார் ஒரு பிளமேன்கோ இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர், 1945ஆம் ஆண்டில் காதீசிலுள்ள சான்லூக்கார் தே பாறாமேதாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் மானுவேல் மூன்யோஸ் ஆல்க்கோன் ("Manuel Muñoz Alcón") ஆகும். இன்றைய காலக்கட்டத்தில் இவர் ஒரு மிக முக்கியமான இசை அமைப்பளாராகக் கருதப்படுகிறார். ஹுவான் மார்த்தீன் ஹுவான் கிரிஸ்தோபால் மார்த்தீன் ("Juan Cristóbal Martín", பிறப்பு: 1948) எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவர் எசுப்பானியாவின் மாலகா நகரில் பிறந்தவர். இவர், கிதார் பயிற்சி நூல்களின் நூலாசிரியரும் ஆவார். பாக்கோ தே லூசீயா பாக்கோ தே லூசீயா ("Paco de Lucía", 21 டிசம்பர் 1947 – 25 பெப்ரவரி 2014), ஒரு புகழ்பெற்ற எசுப்பானிய இசை அமைப்பாளரும் கிதார் கலைஞரும் ஆவார். இவர் எசுப்பானியாவில் அல்கேசீராசில் பிறந்தார். இவர் இவரது இயற்பெயர் "பிரான்சிஸ்கோ சான்ச்செஸ் கோமெஸ்" ஆகும். http://www.youtube.com/watch?v=b3p48EezhOU (பாக்கோ தே லூசியாவின் ரும்பா) குச்சம் குச்சம் ("stump") எனப்படுவது துடுப்பாட்டத்தின் போது பயன்படுத்தப்படும் இலக்கில் காணப்படும் நிலைக்குத்துத் தடிகள் . துடுப்பாட்டத்தில் பயன்படுத்தப்படும் இலக்கில் தரையில் நிலைக்குத்தாக ஊன்றப்பட்ட மூன்று குச்சங்களும் அவற்றின் மேல் வைக்கப்பட்ட இரண்டு சிறிய குறுக்குத்தடிகளும் காணப்படுகின்றன. குச்சங்கள் பொதுவாக மரத்தினாலானவை. பட்டிகையின் இரண்டு முடிவுகளில் நடப்பட்ட மும்மூன்று குச்சங்கள் இலக்குகளை ஆக்குகின்றன. இலக்கின் மொத்த அகலம் 9 அங்குலம் (22.9 செமீ)ஆகும். ஒவ்வொரு குச்சமும் 28 அங்குலம் (71.1 செமீ) உயரமும் கூடிய விட்டமாக 1 அங்குலத்தையும் (3.81 செமீ) குறைந்த விட்டமாக 1 (3.49 செமீ) அங்குலத்தையும் கொண்டிருக்கும். குச்சத்தின் ஒரு முனை தரையில் நடப்பட வசதியாக கூறாக கானப்படுவதோடு மற்றைய முனையில் குறுக்குத்தடிகளை தாங்கும் வகையில் அரைவட்டவடிவத் தவாளிப்பு காணப்படும். மாகி ஆறு மாகி ஆறு மேற்குஇந்தியாவில் கிழக்கிலிருந்து மேற்கே பாயும் நதிகளில் ஒன்றாகும். மத்தியப் பிரதேசத்தில் தோன்றி இராசத்தான் மாநில வாகாட் பகுதியில் ஓடியபின் குசராத்தில் நுழைந்து காம்பத் வளைகுடாவில் பரந்த கயவாயில் அரபிக்கடலுடன் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 500 கிமீ. மற்றும் பாசன பரப்பு 40,000 சதுர கிமீ. என்ரீக்கே மொறேந்தே என்ரீக்கே மொறேந்தே கொதேலோ ("Enrique Morente", திசம்பர் 25, 1942 - திசம்பர் 13, 2010), கிரனாதாவில் பிறந்த ஒரு பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர் ஒரு முக்கிய நவீன பிளமேன்கோ பாடகர் என கருதப்படுகிறார். இவருடைய பாடல்கள் காமரோன் தே லா ஈஸ்லா, மாயீத்தே மார்த்தீன், கார்மென் லினாரேஸ், மிகுவேல் போவேதா, செகூந்தோ பால்க்கோன் மற்றும் ஆர்கான்ஹெல் போன்ற பாடகர்களால் பாடப்பட்டுள்ளது. "Cante Flamenco" (1967) "Cantes Antiguos del Flamenco" (1969) "Homenaje Flamenco a Miguel Hernández" (1971) "Morente en Vivo", Díscolo, (1981), illegal recording live "Se Hace Camino al Andar" (1975) "Homenaje a Don Antonio Chacón" (1977) "Despegando" (1977) "Sacromonte" (1982) "Cruz y Luna" (1983) "Enrique Morente en la Casa Museo de Federico García Lorca de Fuentevaqueros" (1990); Republished (2001) "Esencias Flamencas" (1988) "Morente - Sabicas" (1990) "Misa Flamenca" (1991) "Negra, si Tú Supieras" (1992) "Allegro Soleá y Fan-tasía del Cante Jondo" (1995) "Omega" (1996) "Morente – Lorca" (1998) "El Pequeño Reloj" (2003) "Morente Sueña la Alhambra" (2005) காமரோன் தே லா ஈஸ்லா எல் காமரோன் தே லா ஈஸ்லா ("El Camarón de la Isla") என்பது ஹோசே மோன்ஹே குரூசின் ("José Monje Cruz" - "ஹோசே மோன்ஹே குரூசு") மேடைப்பெயர் ஆகும் (மேடையில் பாடும்பொழுது இப்பெயராலேயே அழைக்கப்படுகிறார்). இவர், திசம்பர் திங்கள் 5ஆம் தேதி 1950ஆம் ஆண்டில் காதீசில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பிளமேன்கோ பாடகர் ஆவார். இவர், சூலை திங்கள் 2ஆம் தேதி 1992ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பாதாலோனாவில் உயிர் நீத்தார். மாயீத்தே மார்த்தீன் மாயீத்தே மார்த்தீன் ஏப்ரல் திங்கள் 19ஆம் தேதி 1965ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள பார்செலோனாவில் பிறந்தார். இவர் ஒரு முக்கிய பெண் பிளமேன்கோ பாடகராக கருதப்படுகிறார். இவர் ஒரு பிளமேன்கோ மற்றும் போலேரோ பாடகரும் இசை அமைப்பாளரும் ஆவார். மேலீசா மேலீசா ஒரு பிரெஞ்சு ரிதம் அண்ட் புளூஸ் பாடகர் ஆவர். இவர், ஆகஸ்ட்டு திங்கள் 21ஆம் தேதி 1985ஆம் ஆண்டு மார்சேயில் பிறந்தார். 2007ஆம் ஆண்டில், இவர், "Avec tout mon amor" என்னும் இவரது முதல் இசைக்கோவையையும் "Elle" மற்றும் "Cette Fois" என்னும் இரண்டு தனிப்பாடல்களையும் வெளியிட்டுள்ளார். சிமேனா ஆபார்க்கா சிமேனா ஆபார்க்கா செப்தம்பர் திங்கள் 24ஆம் தேதி 1981ஆம் ஆண்டில் சிலியின் தலைநகரமான சாந்தியாகோவில் பிறந்தார். இவர் ஒரு பாப் பாடகரும் நடிகரும் ஆவார். இவரது முதல் இசைக்கோவை பூன்த்தோ தே பார்த்தீதா ("Punto de Partida") என்ற தலைப்பில் 2003இல் வெளியிடப்பட்டது. அனைத்துலக மருத்துவ நல அமைப்பு அனைத்துலக மருத்துவ நல அமைப்பு என்பது ஒரு ஐக்கிய அமெரிக்காவில் பதியப்பெற்ற இலாப நோக்கமற்ற அரசியல் சார்பற்ற மனித நேய உதவிகள் வழங்கும் அமைப்பு ஆகும். அதிக தேவைகள் உள்ள இடங்களுக்கு சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டது. குறிப்பாக இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குச் சேவைகளை இது வழங்குகிறது. இலங்கையில் ஆண்டுக்கு 1 மில்லியன் செலவில் இச் சேவைகள் நடைபெறுகின்றன.. இவ் அமைப்பின் நிர்வாகிகளாகப் பெரும்பாலும் மருத்துவத்துறை சார் தமிழர்களே உள்ளனர். 2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் 2009 யாழ்ப்பாண மாநகரசபை தேர்தல் 2009 ஆகஸ்ட் 8 ஆம் நாள் நடத்தப்பட்டது. யாழ்ப்பாண மாநகரசபைக்கு 23 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இதுவாகும். அத்துடன் வட மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலும் இதுவாகும். மொத்தம் 23 இடங்களில் அரசு சார்பு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 இடங்களைப் பெற்று மாநகராட்சியைப் பெற்றது.. இத்தேர்தலில் மொத்தம் 22% வாக்காளர்களே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ் மாநகரசபைக்கு கடைசியாக ஜனவரி 29, 1998 இல் தேர்தல்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 18 தொடக்கம் ஜூன் 25 ஆம் நாள் பகல் 12.00 மணி வரை வேட்பு மணுக்கள் ஏற்கப்பட்டன. இக்கால எல்லையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, இலங்கை தமிழரசுக் கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மூன்று சுயேட்சைக்குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன். ஆனால் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஒரு சுயேட்ச்சைக்குழு என்பன தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. மதுரைக் கல்லூரி மதுரைக் கல்லூரி (தன்னாட்சி பெற்றது) மதுரை, இந்தியாவில் உள்ள ஒரு பழமையான கல்லூரியாகும் .இது 1889-ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. இக்கல்லூரியில் கலை மற்றும் அறிவியல் பிரிவுகளில் 7 இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் 9 முதுகலை பட்டப்படிப்பு பாடங்கள் நடத்தப்படுகின்றன. இக்கல்லூரி முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை நடத்திட இக்கல்லூரியின் நிர்வாகத்தில் மதுரைக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியும் சேதுபதி மேல்நிலைப் பள்ளியும் இயங்கி வருகின்றன. இக்கல்லூரி 43-ஏக்கர் நிலத்தில் தற்போதைய இருப்பிடத்திற்கு 1919இல் அரசு உதவியுடன் அமைந்தது. இவ்விடத்திற்கு வடக்கே சுமார் 5 ஏக்கர் நிலத்தை இராபர்ட் பிஷர் என்பவர் விளையாட்டுத்திடல் அமைக்க நன்கொடையாக வழங்கினார். 1947இல் டிவிஎஸ் நிறுவனம் அளித்த நன்கொடையில் மாணவர்விடுதி கட்டப்பட்டது.1949இல் மதுரா மில் நிறுவனம் வழங்கிய கொடையில் ஆர்வி நூலகம் அமைந்தது.1978இல் தன்னாட்சி தகுதி வழங்கப்பட்டது. இஸ்லாத்தில் பெண்ணுரிமை இஸ்லாத்தில் பெண்ணுரிமை என்பது இசுலாம் சமயத்தில் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் நடைமுறை படுத்துவதாகும். இசுலாம் சமயம் பெண்ணை கண்ணியப்படுத்தி அவர்களுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கியதோடு அடிமைத் தலையிலிருந்து பெண்ணை விடுவித்து சுதந்திரத்தையும் வழங்கியுள்ளது . மனிதனை மனிதனாக வாழவைப்பது கல்வியே. இஸ்லாம் ஆணுக்கும் பெண்ணுக்குமுரிய கடமைகளில் ஒன்றாக கல்வி கற்பதை ஆக்கியிருக்கின்றது. பெண்களின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துவதற்காக மேலேயுள்ள நபி மொழி அமைந்து காணப்படுகின்றது.இன்னும் பெண்ணுக்கு மணமுடிக்கும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது. பெண்ணின் சம்மதம் பெற்றே அவளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட வேண்டும் எனவும் கூறுகின்றது. திருமணத்தின் போது ஒரு பெண் தனது கணவனிடம் "மஹர்" கேட்கும் உரிமையைப் பெற்றுள்ளாள். தன் கணவனுடன் இயைந்து வாழ முடியாத சூழல் உருவாகும் போது ஒரு பெண்தன் கணவனிடமிருந்து மணமுறிவு பெறும் உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.தான் விரும்பாத தனக்கு இயைவு இல்லாத கணவனுடன் காலமெல்லாம் வாழ வேண்டும் என்ற நியதியை இஸ்லாம் விதிக்கவில்லை. பெண்ணுக்குரிய சொத்துரிமை பற்றி இஸ்லாம் குறிப்பிடுகையில் (இறந்து போன) பெற்றோரோ- நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருள்களில் அவை அதிகமாகவோ, கொஞ்சமாகவோ இருந்த போதிலும்ஆண்களுக்கும் பாகமுண்டு, அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு.-(அல்குர்ஆன் 4:7) என அல்குர்ஆன் கூறுகின்றது. எனவே ஒரு பெண் தனது பெற்றோரிடம்,கணவனிடம்,சகோதரர்களிடம் மற்றும் நெருங்கிய உறவினர்களிடமிருந்து வாரிசாக சொத்துக்களைப் பெறத் தகுதியுடையவர்களாகின்றாள். மேலும் சொத்துக்களைத் திரட்டவும், பாதுகாக்கவும், வியாபார முயற்சிகளில் ஈடுபடவும் இஸ்லாம் பெண்ணுக்கு உரிமை வழங்கியிருக்கின்றது. ஆண்களிலும், பெண்களிலும் இறை நம்பிக்கை கொண்ட நிலையில் நற்செயல்களை யார் செய்கின்றார்களோ, அவர்கள் அனைவருமே சொர்க்கத்தில் நுழைவார்கள். அவர்கள் எள்ளளவும் வஞ்சிக்கப்பட மாட்டார்கள். - "(திருக்குர்ஆன் 4:124)" வறுமைக்கு பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்துவிடாதீர்கள். உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொன்று விடுவது படுபயங்கரமான பாவமாகும்.- "(திருக்குர்ஆன்–17:31)" அப்பாவி பெண்கள் மீது அவதூறு சுமத்திவிட்டு, அதற்கு ஆதாரமாக நான்கு சாட்சிகளை கொண்டு வர முடியாதவர் களுக்கு எண்பது கசையடிகளைக் கொடுங்கள். அதன்பின்பு எக்காலத்திலும் அவர்களுடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். - "(திருக்குர்ஆன் 24:4)" ஆர்க்கிமிடீசு தத்துவம் ஆர்க்கிமிடீசு தத்துவம் எனப்படுவது ஓர் இயற்பியல் விதி. இவ்விதி ஒரு பாய்மத்தினுள் (திரவம் அல்லது வாயு) அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளின் மீது அப்பாய்மம் செலுத்தும் மிதப்பு-விசை அப்பொருளினால் இடம்பெயர்க்கப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம் எனக் கூறுகிறது. இன்னொரு வகையில் கூறுவோமானால் ஒரு பொருள் ஒரு நீர்மத்தினுள் மூழ்கியிருக்கும் போது அது இழந்ததாகத் தோன்றும் எடை அதனால் வெளியேற்றப்பட்ட நீர்மத்தின் எடைக்குச் சமம். இத்தத்துவம் முழுமையாக அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும்; ஒரு-பகுதி அமிழ்த்தப்பட்ட பொருளுக்கும் பொருந்தும். ஆனால், பொருள்களின் எடையின்மை நிலையில் ஆர்க்கிமிடீசு தத்துவம் உண்மையாயிராது. இதனைக் கண்டுபிடித்தவர் ஆர்க்கிமிடீஸ். கி மு 250 ஆம் ஆண்டு ஆர்க்கிமிடிசு எழுதிய மிதக்கும் பொருட்களின் மேலே (On Floating Bodies) என்ற புத்தகத்தில் கொடுக்கபட்டுள்ள வாசகம்: நடைமுறையில், ஆர்க்கிமிடிசு தத்துவம் ஒரு பாய்மத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அமிழ்த்தப்பட்ட பொருளின் மிதப்பு விசை கணக்கிடப்பயன்படுகிறது. பொருளின் கீழ் நோக்கிய விசை என்பது அதன் எடைக்குச் சமம். பொருளின் மீது செயல்படும் மேல் நோக்கிய விசை என்பது அதன் மிதப்பு விசை என்பது ஆர்க்கிமிடிசு தத்துவத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. பொருளின் தொகு பயன் விசை என்பது அதன் எடைக்கும் மிதப்பு விசைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும். இந்த வேறுபாடு நேர்மறையாக இருந்தால், பொருள் மிதக்கும். இந்த வேறுபாடு எதிர்மறையாக இருந்தால், பொருள் அமிழும். இந்த வேறுபாடு சுழியாக இருந்தால், பொருளின் மிதக்கும் தன்மை நடுநிலையை அடைகிறது. இந்நிலையில் பொருள் மிதப்பதுமில்லை அமிழ்வதுமில்லை. இதன் படி ஆர்க்கிமிடிசு தத்துவம் என்பது "ஒரு பொருளை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ பாய்மத்தில் அமிழ்த்தும் போது, அது இழக்கும் எடையானது, அதனால் வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடைக்குச் சமம்" புவியீர்ப்பு விசைக்கு இணையாக ஒரு கனசதுரத்தின் பக்கங்கள் இருக்கும் படி பாய்மத்தில் அமிழ்த்தும் போது, அதன் அனைத்துப் பக்கங்களிலும், பாய்மத்தினால் ஒரு செங்குத்து விசை செயல்படுகிறது. அதன் மேல் மற்றும் அடிப்பகுதியில் மிதப்பு விசை செயல்படுகிறது. அதன் மேல் மற்றும் அடிப்பகுதியிலுள்ள அழுத்த வேறுபாடு, அது பாய்மத்தில் அமிழ்ந்துள்ள ஆழத்திற்கு நேர் விதிதத்தில் இருக்கும். பக்கங்களிலுள்ள அழுத்தத்தை அதன் பக்க பரப்பால் பெருக்கினால் கிடைப்பது அதன் மீது செயல்படும் தொகு பயன் விசை ஆகும். இந்த விசை, மிதப்பு விசை அல்லது வெளியேற்றப்பட்ட திரவத்தின் எடை அளவுக்குச் சமம். இதையே ஒழுங்கற்ற வடிவம் கொண்ட பொருட்களைக் கொண்டு செய்யும் போது, அதிலும் மிதப்பு விசையின் அளவு வெளியேற்றப்பட்ட திரவத்தின் அளவுக்குச் சமமாக இருப்பதைக் காணலாம். வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் எடை என்பது வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் கன அளவுக்குச் சமமாக இருக்கும். பாய்மத்தில் அமிழ்த்தும் போது பொருளின் எடை குறைகிறது. இதற்குக் காரணம் அதன் மீது செயல்படும் மேல் நோக்கிய விசையாகும். பொருளின் அடர்த்தியை வெளியேற்றப்பட்ட பாய்மத்தின் கன அளவையும் புவியீர்ப்பு முடுக்கத்தையும் பெருக்குவதால் கிடைப்பது பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசைக்குச் சமம். ஒரே அளவிலான நிறை கொண்ட பொருட்களை திரவத்தினுள் அமிழ்த்தும் போது, அதிக கன அளவு கொண்ட பொருள் அதிக மிதப்பு விசையைப் பெற்றிருக்கும். 20 நியூட்டன் எடை கொண்ட ஒரு கல்லை கயிற்றில் கட்டி வெற்றிடத்தில் தொங்கவிடும் போது, அதன் மீது ஈர்ப்பு விசை மட்டும் செயல்படுகிறது. அதனை நீரில் அமிழச் செய்தால் 6 நியூட்டன் எடையுள்ள நீரை வெளியேற்றுமாயின், கயிற்றின் மீது தற்போது செயல்படும் விசையானது, 20 நியூட்டன் பொருளின் எடை, 6 நியூட்டன் வெளியேற்றப்பட்ட நீரின் எடை ஆகியவற்றைக் கழிக்கக் கிடைக்கிறது. பொருளின் மிதப்புதன்மை அதன் உத்தேச எடையைக் குறைக்கிறது. இதனால் நீரில் அமிழ்ந்துள்ள ஒரு பொருளை மேலே உயர்த்துவது எளிதாக உள்ளது. ஆர்க்கிமிடிசு தத்துவத்தின் படி, முழுதாக அமிழ்த்தப்பட்ட ஒரு பொருளுக்கான சமன்பாடு: இரு புறமும் கன அளவால் வகுக்கக் கிடைப்பது, மரக்கட்டையை நீரில் ஏறியும் போது, மிதப்புத்தன்மை அதனை மிதக்கச் செய்கிறது. ஆர்க்கிமிடிசு தத்துவம் மேற்பரப்பு இழுவிசையைக் கணக்கில் கொள்வதில்லை. ஆர்க்கிமிடிசு தத்துவம் பல திரவங்களின் கலவைகளில் நிரூபிக்கப்படுவதில்லை. வண்ணாத்திக்குருவி வண்ணாத்திக்குருவி கருப்பு வெள்ளைக்குருவி அல்லது குண்டுக்கரிச்சான் ("Oriental magpie-robin", "Copsychus saularis"), இது வீட்டுத்தோட்டங்களிலும் காடுகளிலும் எளிதில் காணக்கூடிய ஒரு பாடுங்குருவி ஆகும். தன் வாலைத் தூக்கியபடி நிற்கும் இயல்புடைய இக்குருவி 19 செ.மீ நீளமுடையது. இலை, தழைகளுக்கிடையிலும் வீட்டுத்தோட்டங்களில் உள்ள சாக்கடைகளிலும் இருக்கும் பூச்சி, புழுக்கள் இவற்றின் முக்கிய உணவாகும். முள்ளிலவு, கலியாண முருக்கை ஆகிய மரங்களின் தேனையும் இவை உண்ணும். வண்ணாத்திக் குருவி மாந்தர் வாழும் இடங்களில் காணப்படும் ஒரு பறவை. பிப்ரவரி முதல் ஆகஸ்ட் வரை இதைப் பெரும்பாலும் காண இயலும். மற்ற மாதங்களில் இது பாடாது என்பதால், இதன் இருப்பை அறிந்து கொள்வது கடினம். பிப்ரவரி மாதம் அடர் கருப்பு-வெள்ளை நிறச் சிறகுத் தொகுதியுடன் ஆண் பறவை திடீரெனத் தோன்றி இலை உதிர்ந்த மரங்களின் உச்சாணிக்கிளைகளிலோ அல்லது மின் கம்பங்களிலோ அமர்ந்து பாட ஆரம்பிக்கும். முதலில் சுருதி சுத்தமற்று நாராசமாகக் கிளம்பும் சுரங்கள் போகப்போக காதுக்கினிய கீதங்களாக மாறும். சுருதி சுத்தமான கீதம் கிளம்பிய சில நாட்களுக்குள் இசையில் மயங்கிய பெண் குருவி தோன்றும். அவை ஒன்றையொன்று துரத்திப் பிடித்து விளையாடி பின்னர் கலவியில் ஈடுபடும். இரு ஆண் குருவிகள் சண்டையிடுவதும் அடிக்கடி நடக்கக்கூடிய ஒன்றே. வண்ணாத்திக் குருவி மரப் பொந்துகளிலோ அல்லது வீட்டுச் சுவற்றில் உள்ள பொந்துகளிலோ தன் கூட்டினை அமைக்கும். கூடு காய்ந்த வேர்கள், புல் மற்றும் மயிர்களால் ஆன ஒரு தட்டை மேடை ஆகும். செம்புள்ளிகள் கொண்ட வெளிர் நீல நிறத்திலான மூன்று முதல் ஆறு வரையிலான முட்டைகளை இப்பறவை இடும். குஞ்சுகள் வெளிவந்தபின் தாய் தந்தை இரு பறவைகளுமே புழு பூச்சிகளைக் கொண்டுவந்து அவற்றுக்கு அளிக்கும். கம்பாத் வளைகுடா கம்பாத் வளைகுடா (முன்னாளில் கம்பே வளைகுடாஎன அறியப்பட்ட) இந்தியாவின் மேற்கு கடலோரம் குசராத்மாநிலத்தில் கம்பாத் நகரை ஒட்டிய (பெயர் காரணம்)அரபிக் கடலின் ஒரு உள்முகமாகும்.Gulf of Cambay: Cradle of Ancient Civilization சுமார் 130 கிமீ (80 மைல்)நீளமுள்ள இந்த வளைகுடாவின் மேற்கே சௌராட்டிர தீபகற்பமும், கிழக்கே குசராத்தின் தெற்கு பகுதியும் உளளன.தபதி ஆறும் நர்மதா ஆறும் இந்த வளைகுடாவில் கலக்கின்றன. வளைகுடா ஆழமில்லாதிருப்பதால் மணற்திட்டுகள் அதிகமாய் காணப்படுகின்றன.ஆற்று முகவாய்களில் அமைந்துள்ளமால் திட்டு மற்றும் அரபிக்கடல் வாயிலில் உள்ளமலாக்கா திட்டுகள் குறிப்பிடத் தக்கன. இந்த வளைகுடாவின் அலை ஏற்றத்தாழ்வுகள் அவற்றின் உயர வேறுபாடுகளுக்காகவும் நடைபெறும் வேகத்திற்காகவும் மிகவும் அறியப்பட்டவை. கடல் தாழ்ந்திருக்கும்போது காம்பத் நகரை ஒட்டி நீண்டதூரம் தரை காணப்படும். இந்த கடல் மட்ட ஏற்றத்தாழ்வுகளை கணக்கில் கொண்டே ஆலாங்க் கப்பல் உடைக்கும் ஆலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.பெரும் கப்பல்கள் மாதமிருமுறை ஏற்படும் உயர அலைகள் போது கடற்கரையருகே கொண்டுவரப்படுகின்றன.அலைகள் பின்வாங்கும்போது அவை உடைக்கப் படுகின்றன. இந்தப் பகுதி பழங்காலம் முதலே முக்கிய வணிகத் தலமாக இருந்துவருகிறது. இங்குள்ள துறைமுகங்கள் மத்திய இந்தியாவை இந்தியப்பெருங்கடல் வழி வணிகத்தலங்களுடன் இணைக்கிறது. பரூச், சூரத், காம்பத், பாவ்நகர், மற்றும் டாமன் வரலாற்று சிறப்புமிக்க துறைமுகங்களாகும். காம்பத் துறைமுகம் மணல்தட்டி தனது சிறப்பினை இழந்தபிறகு முகலாயர் பேரரசின் தலையாய துறைமுகமாக சூரத் எழுச்சி பெற்றது. கமீய் இலெமானியேர் அன்தோயின் லூயீஸ் கமீய் இலெமானியேர் ("Camille Lemonnier") மார்ச்சு திங்கள் 24ஆம் தேதி 1844ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு பெல்சிய எழுத்தாளரும், கவிதையாளரும், நிருபரும் (செய்தியாளரும்) ஆவார். இவரது முதல் படைப்பு 1863ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட சலாங் த ப்ர்யுக்செல் ("Salon de Bruxelles") ஆகும். இவரது புகழ்பெற்ற படைப்பு 1881ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட அங் மால் ("Un Mâle") ஆகும். இவர், சூன் திங்கள் 13ஆம் தேதி 1913ஆம் ஆண்டில் உயிர் நீத்தார். ஜோ சத்ரியானி ஜோசப் "ஜோ" சத்ரியானி () சூலை 15, 1956 ஆம் ஆண்டு நியூ யார்க்கில் பிறந்தவர். இவர் பலமுறை கிராமி விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஒரு ராக் இசை கிதார் கலைஞர். ரோலிங் ஸ்டோன்சு, டீப் பபுள் போன்ற ராக் இசைக்குழுக்களின் முன்னணி கிதார் கலைஞராக இருந்தார். தற்போது சிக்கன்ஃபூட் என்ற குழுவில் உள்ளார். இவரிடம் கிதார் பயின்ற மாணவர்கள் பலர் தற்போது மிகச்சிறந்த கிதார் கலைஞர்களாக உள்ளனர். குளோரியா எஸ்தேபான் குளோரியா எஸ்தேபான் செப்தம்பர் திங்கள் 1ஆம் தேதி 1957ஆம் ஆண்டில் கூபா நாட்டிலுள்ள அவானாவில் பிறந்தார். இவர் ஒரு புகழ்பெற்ற பாடகரும் பாடலாசிரியரும் ஆவார். இவரது பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் குளோரியா மாரீயா பகார்தோ கார்சீயா ஆகும். இருனியா இருனியா ("Iruña") அல்லது பாம்பிலோனா ("Pamplona") என்பது எசுப்பானியாவிலுள்ள நாவாரேயின் தலைநகரமும் முன்னாள் நாவாரா இராச்சியத்தின் தலைநகரமும் ஆகும். பி.எச்.பி நீட்சிகள் செயலிகள் களஞ்சியம் (பியர்) பி.எச்.பி நீட்சிகள் செயலிகள் களஞ்சியம் (PHP Extension and Application Repository) அல்லது பியர் (PEAR) என்பது பி.எச்.பி மொழியில் எழுதப்பட்ட நிரல்ககளை ஒர் ஒழுங்கான முறையில் மீள் பயன்பாட்டுக்காக பகிரும் ஒரு திட்டம் ஆகும். இணையம் மூலம் இதை நிறுவ முடியும். அதன் பின்னர் இது பி.எச்.பி இல் எழுதப்பட்ட பல்வேறு நூலங்களை அல்லது நிரல் பொதுதிகளை இணையம் மூலம் எளிமையாகத் தேடி, நிறுவி, நிர்வாகிக்க இது உதவுகிறது. இத் திட்டம் 1999 இல் தொடங்ப்பட்டது. தரைப்பாலம் தரைப்பாலம் ("Causeway") நீர் நிலை அல்லது சதுப்புநிலத்தை கட்டகும் வகையில் உயர்த்திக் கட்டப்பட்ட சாலை அல்லது தொடருந்துச் சாலை என்பவற்றைக் குறிக்கும். தரைப்பாலங்கள் பொதுவாக உயர்த்தப்பட்ட மணற்திட்டின் மேல் அமைக்கப்பட்டிருக்கும். மணற்றிட்டின் மீதல்லாது சிறிய வளைவுகள் மீது அமைக்கப்பட்டிருக்கும் சாலை ஏதண்டம் என அழைக்கப்படுகிறது. ஏதண்டத்தின் வளைவுகள் பெரிதாகும் போது அது பாலம் எனப்படுகிறது. ஏதண்டம் ஏதண்டம் (viaduct) சிறிய பாவுநீளங்கள் சிலவற்றைக் கொண்டுள்ள ஒரு பாலம் ஆகும். ரோம தொட்டிப் பாலங்களைப் போலவே பண்டைய ஏதண்டங்களும் வளைவுகளைக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தன. ஏதண்டங்கள் தரை, நீர் அல்லது இவையிரண்டையுமே பாவும் வகையில் அமைக்கப்படலாம். தொடருந்து மையங்களாக விளங்கும் நகரங்களில் ஏதண்டங்கள் கூடுதலாக பயன்படுத்தப்படுகின்றன. தொடருந்து பாதைக்கும், நெடுஞ்சாலைகளும் சந்திக்கும் இடங்களில் வாகன நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு ஏதண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சில ஏதண்டங்கள் தொடருந்துப்பாதைகளை பள்ளத்தாக்குகளுக்கு குறுக்க்காக பாவுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. விரைவு நெடுஞ்சாலைகளில் வெள்ளப்பெருக்கு அபாயமுள்ள சதுப்புநிலப் பகுதிகளைக் கடப்பதற்கும் ஏதண்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொட்டிப் பாலம் தொட்டிப்பாலம், இரண்டு உயரமான இடங்களுக்கிடையே காணப்படும் பள்ளத்தாக்கை பாவும் வகையில் அமைக்கப்பட்ட வாய்க்கால் ஆகும். கட்டாயமாக நீரைக் கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட பாலம் அல்லது ஏதண்டம் மட்டுமே தொட்டிப்பாலம் எனப்படும். கப்பல் போக்குவரத்துக்காகவும் சிலவேளைகளில் தொட்டிப் பாலம் அமைக்கப்படுகின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் மாத்தூர் என்னும் மலைப்பகுதியில் 1971ஆம் ஆண்டு கட்டப்பட்ட தொட்டிப் பாலம் ஆசியாவிலேயே மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது மாத்தூர் தொட்டிப் பாலம். ராசேந்திர குமார் பச்சோரி ராசேந்திர குமார் பச்சோரி ("Rajendra Kumar Pachauri", பிறப்பு: ஆகஸ்ட் 20, 1940) ஆற்றல் மற்றும் வள மூலங்களுக்கான நிறுவனத்தின் (TERI) தலைமை-நிர்வாகியாகவும், பருவநிலை மாறுதல்களுக்கான பன்னாட்டுக் குழுவின் ("IPCC") தலைவராகவும் உள்ளார். மேலும் ஆற்றல் மற்றும் வளமூலங்களுக்கான நிறுவன டெரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார். 2007 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, பச்சோரி தலைமை வகிக்கும் IPCC மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் துணைத்தலைவரான அல் கோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. சனவரி 2008ஆம் ஆண்டு பதும விபூசண் விருது பெற்றார். பேரூராட்சி பேரூராட்சி, இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் மட்டும் நகராட்சிகளுக்கும், கிராம ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் பேரூராட்சி அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த பேரூராட்சிமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பேரூராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பேரூராட்சிகள், ஊராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு இடைப்பட்டதாக இருக்கின்றன. பேரூராட்சிகளில் மக்கள்தொகை 5000க்கு அதிகமாகவும் 30,000 வரையிலும் உள்ளனர். பெரும்பான்மையான பேரூராட்சிகள் தாலுக்கா தலைமையிடமாகவும், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,பதிவுத்துறை அலுவலகம், வரலாற்றுச் சிறப்புமிக்க நகரங்கள்,வழிபாட்டு தலங்களாகவும் தொழிலகங்கள் நிறைந்ததாகவும் விளங்குவதால் நகரங்களுக்கான வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வருகின்றன. தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்படி பேரூராட்சிகளின் நிர்வாகம் செயல்படுகிறது. பேரூராட்சிகள் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர்/உதவி இயக்குநர் மற்றும் மாநில அளவில் பேரூராட்சிகளின் இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.பேரூராட்சிகள் இயக்ககம், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கும்துறையின் கீழ் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் பேரூராட்சிகள் நான்கு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. நீலான் நீலான் "(Boselaphus tragocamelus)" நடு மற்றும் வட இந்தியா, தெற்கு நேபாளம், கிழக்கு பாக்கிசுத்தான் பகுதிகளில் மிகப்பெரும் அளவில் காணப்படும் மான் இனம். ஆசியாவில் காணப்படும் மான் இனங்களிலேயே நீலான் உருவ அளவில் மிகப் பெரியது. நன்கு வளர்ந்த ஆண் நீலான் குதிரையின் உருவத்தை ஒத்திருக்கும். இதன் உடல் நீலம் கலந்த நிறத்தில் இருப்பதால், இது "நீலான், நீலமான், நிலகைமான்" போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது.. நீலானின் உடல், எடை பற்றிய தரவுகள் நடு இந்தியாவின் இயற்கை உயிர்த்தொகை மற்றும் அமெரிக்காவின், டெக்சாசு மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்த்தொகையில் இருந்து கணக்கிடப்பட்டுள்ளது. வளர்ந்த ஆண் நீலான் சுமார் 130 முதல் 150 செ.மீ உயரமும் பெண் நீலான் 100 முதல் 130 செ.மீ உயரமும் இருக்கும். ஆண் நீலானுக்கு மட்டும் 15 முதல் 20 செ.மீ நீளமான கொம்பு உண்டு. இதன் கொம்புகள் பருத்து, கூம்பு வடிவில் உறுதியற்று இருக்கின்றன. பெண் நீலான்களும் இளங்கன்றுகளும் வெளிறிய பழுப்பு நிற உடல்மயிர் போர்வையைக் கொண்டிருக்கின்றன. ஆண் நீலான்கள் பிறந்து பத்து மாதங்களுக்குப் பிறகு உடலின் நிறம் பழுப்பு நிறத்திலிருந்து நீல நிறத்துக்கும், கால்கள் கறுப்பு நிறத்துக்கும் மாறும். நான்கு ஆண்டுகளில் ஆணின் உடல் முழுவதும் நீலம் கலந்த சாம்பல் நிறத்துக்கு மாறிவிடும். ஆண், பெண் நீலான்களுக்கு முகம், காதுகள், காற்குழைச்சு (முழங்கால் மூட்டு) வால் ஆகிய இடங்களில் கறுப்பு, வெள்ளை நிறக் குறிகளும், முகத்தில் வெள்ளை நிற முரட்டு மயிரும் இருக்கும். பெண் நீலானைக்காட்டிலும் ஆண் நீலானுக்கு கழுத்தின் பின் பகுதியில் அதிகமான கறுப்பு நிற மயிர்கள் கற்றையாகக் காணப்படும். நீலான் இந்தியாவின் உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். முகலாய மன்னர்களின் ஆட்சியின் போது நீலான்கள் பெருமளவில் வேட்டையாடப்பட்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. அதிலும் சகாங்கீர் மட்டும் 900 நீலான்களை வேட்டையாடிக் கொன்றுள்ளார். வட, தென்னிந்தியாவின் திறந்தவெளிக் காடுகள் அனைத்திலும் நீலான் காணப்பட்டு வந்தது. முன்னர் நீலானின் தென்கோடிப் பரவல் நிலம் தமிழ் நாட்டின் மேட்டுப்பாளையம் வரை இருந்ததாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. நீலான் தற்போது இமய மலை அடிவாரத்தில் இருந்து, ஆந்திர மாநிலத்தின் வட மாவட்டங்கள் வரை காணப்படுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தென் மாநிலங்கள் தவிர்த்து ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீசுகர், குசராத், அரியானா, இமாச்சல் பிரதேசம், சம்மு காசுமீர், மத்தியப் பிரதேசம், மகாராட்டிரம், ஒரிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், உத்தராஞ்சல், சார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் முதலிய 16 மாநிலங்களில் உள்ள 114 பாதுகாக்கப்பட்ட இடங்களில் நீலான், காணப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே பாகிசுத்தானில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளிலும் நேபாளத்திலும் காணப்படுகிறது. இந்தியத் துணை கண்டத்தைத் தவிர அறிமுகப்படுத்தப்பட்ட உயிர்த்தொகை ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றது. பாதுகாக்கப்பட்ட இடங்களுக்கு வெளியே நீலான் பெரும்பாலும் விளை நிலங்கள் நிறைந்த பகுதிகளிலேயே வாழ்கின்றது. இவை சமமான தரை முதல் மலைகள் வரை பல வகையான நிலங்களில் வாழ்கின்றன. அடர்ந்த காடுகள் மற்றும் மலை முடிகளை தவிர்த்தே வாழும் தன்மையுடையவை. பாலை நிலங்களில் நீலான் வாழ்வதே இல்லை. இந்தியாவில் மிகக் கூடுதலாக காணப்படும் மானினம் ஆயினும் நீலானின் தற்போதைய உயிர்த்தொகை முன்பைக் காட்டிலும் மிகவும் குறைந்துள்ளது. நீலானின் உயிர்த்தொகை 1970களில் இருந்து குறையத் துவங்கியுள்ளது. இப்போதைக்கு இதன் உயிர்த்தொகை குறித்து சரியாக கணக்கீடுகள் ஏதுமில்லை. இந்தியாவில் மட்டும் சுமார் 100,000 முதல் 150,000 வரையிலான நீலான்கள் இருக்கலாம் எனத் தோராயக் கணக்கு ஒன்று கூறுகிறது. மேலும் இதில் 60 விழுக்காடு அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசத்தில் வாழலாம் என்றும் இக்கணக்கு கூறுகின்றது. நீலான்கள் இரண்டு முதல் பத்து உறுப்பினர்கள் கொண்ட குழுக்களாக அறியப்பட்டுள்ளன. பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்து உறுப்பினர்களை கொண்ட குழுக்களே மிகுதியாகக் காணப்படுகின்றன. குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை இடத்துக்கு இடம் மற்றும் காலநிலைக்கு ஏற்ப மாறுகிறது. நீலான்கள் பெரும்பாலும் மூன்று வகையான குழுக்களாக அறியப்பட்டுள்ளன. அவை: டெக்சாசு உயிர்த்தொகையில் பால் அடிப்படையிலான குழுக்களைக் காணலாம். இனப்பெருக்கம் இல்லாத காலத்தில் குறிப்பாக ஜூலை முதல் அக்டோபர் உள்ளடக்கிய பருவமழைக் காலத்தில் பத்துக்கும் குறைவான ஆண் நீலான்களை உறுப்பினர்களாகக் கொண்ட குழுக்களைக் காணலாம். டிசம்பர் முதல் மார்ச்சு வரையிலான இனப்பெருக்கக் காலத்தில் ஆண், பெண் நீலான்களைச் சேர்ந்து காணலாம். நீலான்கள் திறந்த வெளிக் காடுகளையே பெரிதும் விரும்புகின்றன. அடர்ந்த காடுகளைத் தவிர்த்து புதர்க்காடுகள் போன்றவை நீலான்களின் வாழிடங்கள் ஆகும். சரிசுகாவில் வானலை கழுத்துப் பட்டை அணிவிக்கப்பட்ட பெண் நீலானின் வாழிடம் சராசரியாக 3.6 சதுர கி.மீ என்றும், ஆகக்கூடுதலாக 7.3 சதுர கி.மீ என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. டெக்சாசு உயிர்த்தொகையில் பெண் நீலானின் வாழிடம் சராசரியாக 0.6 சதுர கி.மீ என்றும், ஆண் நீலானின் வாழிடம் 4.7 சதுர கி.மீ என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. இவை பகற்பொழுதில் (07:00 முதல் 18:00 மணி வரை) மட்டும் பெரும்பாலான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இரவைக் காட்டிலும் மிகவும் உற்சாகமாக இருக்கின்றன. நீலான்கள் பெரும்பாலும் அமைதியானவை. ஆண், பெண் மற்றும் ஐந்து மாதம் கடந்த கன்று அனைத்தும் தொண்டையில் இருந்து ஒலி எழுப்பும். இவ்வொலி சுமார் 500 மீட்டர் தூரம் வரை கேட்கும். இவை அச்சுறுத்தல்களை குழுவின் மற்ற உறுப்பினர்களுக்கு உணர்த்தவே ஒலி எழுப்புகின்றன. சில வேளைகளில் ஆண்–ஆண் சண்டையின் பொழுது மிகக் காட்டமான ஒலியும், தாய்க்கும் கன்றுக்கும் இடையே மென்மையான ஒலிப் பரிமாற்றங்களும் நிகழும். நீலான்கள், கொன்றுண்ணிகளால் துரத்தப்படும் போது மணிக்கு 48 கி.மீ வேகத்தில் ஓடும் திறன் கொண்டது. நீலான்கள் இலைகள், மலரின் மொக்குகள், புற்கள், பழங்களை உணவாகக் கொள்ளும். நீலான்கள் காடுகளில் சிங்கம், புலி, சிறுத்தை, செந்நாய், ஓநாய் முதலியவற்றுக்கு இரையாக கொன்றுண்ணப்படுகின்றன. நீலானில் குறிப்பிட்ட இனப்பெருக்கக் காலம் ஏதுமில்லை. நீலான் ஆண்டு முழுவதும் இனப்பெருக்கம் செய்யும் விலங்காகும். நடு இந்தியப் பகுதிகளில் அனைத்து பருவ காலங்களிலும் இளங்கன்றுகளின் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பரத்பூர் வன உய்விடத்தில் பெரும்பாலான கன்றுகள் மழைக் காலத்தில் (சூன் முதல் அக்டோபர் வரை) ஈன்றெடுக்கப்பட்டுள்ளதும் மிகுதியான இனப்பெருக்க செயல்பாடுகள் நவம்பர் மற்றும் திசம்பர் மாதங்களில் நடைப்பெறுவதும் அறியப்பட்டுள்ளது. விலங்கியல் பூங்காக்களில் வளர்க்கப்படும் விலங்குகளில் இனப்பெருக்க காலம் இடத்திற்கு தகுந்தாற்போல் வேறுபடுகிறது. இவ்விலங்கின் சூல்கொள்ளல் காலம் சுமார் எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகும். இவை பெருப்பாலும் இரண்டு கன்றுகளை ஈன்றெடுக்ககும், சில வேளைகளில் ஒன்று அல்லது மூன்று கன்றுகள் ஈன்றெடுப்பதும் உண்டு. கன்றுகள் 10 மாதத்தில் பாலூட்டலை மறந்துவிடுகின்றன. பிறந்த 18 மாதங்களில் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் தகுதியை பெறுகின்றன. இதன் வாழ்காலம் சுமார் 21 ஆண்டுகள் இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. நீலான்கள் குறைந்த தீவாய்ப்பு உள்ள விலங்காகக் கருதப்பட்டாலும் இவை வேட்டையாடப்படுதல், விளைநிலங்களுக்கு வருவதால் மனிதரால் விரட்டப்படுதல், விளைநில மின்சார வேலிகளில் சிக்கி கொல்லப்படுதல், பிளவுபட்ட குறைந்த உயிர்த்தொகையால் ஏற்படும் உள்ளினப்பெருக்கம் போன்ற அச்சுறுத்தல்களைக் கொண்டுள்ளன. நகராட்சி நகராட்சி ("Municipality") ஒரு தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பகுதி மற்றும் அங்கு வாழும் மக்களின் நிர்வாக அமைப்பாகும். இது பொதுவாக ஒரு நகரம், ஊர் அல்லது கிராமத்தை நிர்வகிக்கும் அவையைக் குறிக்கும். நகராட்சியின் தலைவர் நகரத்தந்தை அல்லது மேயர் என அழைக்கப்படுகிறார். அவருக்கு நகராட்சி அவை அல்லது முனிசிபல் கவுன்சில் உதவி புரிகிறது. நகராட்சி ஒரு ஊராட்சி நிர்வாகத்தைக் குறித்தாலும் அதுமட்டுமே அல்ல. பெரும்பாலான நாடுகளில் நகராட்சி, மக்களாட்சி நடைபெறும் மிகச்சிறிய நிர்வாக அமைப்பாகும். சிலநாடுகளில் இவை "கம்யூன்கள்" என (பிரெஞ்சு: "commune", இத்தாலியம்: "comune", ரோமானியம்: "comună", சுவீடியம்: "kommun" மற்றும் நார்வீஜியன்/டானிஷ்: "kommune") அழைக்கப்படுகின்றன. இன்னும் சில நாடுகளில், முக்கியமாக மத்தியகிழக்கு நாடுகளில், நகராட்சி என்பது மற்ற நாடுகளில் நகரமண்டபம் (டவுண் ஹால்/சிடி ஹால்) என்றழைக்கப்படும் நகராட்சியின் நிர்வாக கட்டிடத்தையும் குறிக்கிறது. கனடா, கிரீன்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் பிரேசில் நாடுகளில் மிகப்பெரிய நகராட்சிகளைக் காணலாம். = கீழ்நிலை ஆட்சி அமைப்புகளாக நகராட்சிகள் = நகராட்சி என்பது ஒரு நகரின் ("பாஷ்கி") அல்லது ஒரு மாநிலத்தின்(komunë) நிர்வாக அமைப்பு. நகராட்சி ("கொம்யூன்") டாராவின் பகுதியை உள்ளடைக்கிய விலயா; இங்கு 1,541 கொம்யூன்கள் உள்ளன. நகராட்சி (முனிசிபலிடாட்) என்பது ஒரு நகரம், ஊர் அல்லது ஒரு நகர்ப்பகுதியை குறிக்கும். அவை அமைந்திருக்கும் மாநிலங்கள் தங்கள் கீழ் உள்ள நகராட்சிகளை அவற்றின் ஆட்சியைப் பொறுத்து சீரமைத்துக் கொளகின்றன. ஆஸ்திரேலியாவில் மாநிலங்கள் மற்றும் ஆட்சிப்பகுதிகளின் உப-பிரிவுகள் நகராட்சிகளாகும். (பார்க்க ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகள்). நகராட்சி ("Gemeinde") ஒரு மாவட்டத்தின் ("Bezirk") பங்காகும். மாவட்டம் ஒரு மாநிலத்தின் ("Bundesland") பங்காகும். நகராட்சி ("Paurashava") ஒரு உபசில்லா அல்லது துணைமாவட்டத்தின் பாகமாகும், துணைமாவட்டம் மாவட்டம் ஒன்றின் பங்காகும். நகராட்சி ("gemeente/commune") ஒரு "provincie/province"இன் பங்காகும் அல்லது பிரசெல்சு இன் பங்காகும். நகராட்சி ("municipio") ஒரு மாநிலத்தின் பங்காகும், மாநிலம் நாட்டின் ஒரு துணை கோட்டமாகும் departamento. இங்கு நகராட்சி ("ஒப்சினா - općina" or "opština") கன்ட்டனின் ஒரு பகுதி ("kanton") மற்றும் ஒரு துணைமண்டலம் (grouped in regions) மாநிலங்கள் ("estado") நகராட்சி("município")களாக பிரிக்கப்படுகின்றன.இங்கு கௌன்டிக்கு இணையான நிலை எதுவும் இல்லை.நகராட்சிகளே மிகச்சிறிய அரசியல்,நிர்வாக பிரிவாகும்."cidade"/நகர் பிரேசில் சட்டத்தில் நகராட்சியின் ஆட்சிபீடமாக கருதப்படுகிறது.இங்கு நகரத்திற்கும் ஊர்களுக்கும் வேறுபாடு இல்லை. நகராட்சி இயங்கும் இடமெல்லாம் 'நகரமாக'வே, அவை எத்தனை சிறியதாக இருந்தபோதிலும், கருதப்படுகின்றன. மற்ற குடியிருப்புகளுக்கு உள்ளாட்சி அமையாமல் நகராட்சிகளின் கீழ் செயல்படுகின்றன. சில நகராட்சி அரசுகள் தங்கள் நிர்வாக அலுவலகத்தை அங்கு ஏற்படுத்துகின்றன. தேசிய தலைநகர் பகுதி பிரேசிலியா) சிறப்பு நிலையில் கூட்டமைப்பு மாவட்டமாக நகராட்சிகளாக பிரிக்கப்படுவதில்லை. இல்லையெனில் பிரேசிலின் எந்தவொரு சிறு நிலப்பரப்பும் ஏதாவதொரு நகராட்சியின் கீழ் நிர்வகிக்கப்படும்.இதனால் அங்கு அனைத்துமே 'நகராட்சி'களின் கட்டுப்பாட்டில்தான். சில பிரேசில் நகராட்சிகள், அமேசான் பகுதி போல, பல சிறு நாடுகளைவிட பெரிதாக இருக்கின்றன. நகராட்சி (Bulgarian: община) நாட்டின் மிகச் சிறிய ஆட்சிப்பகுதியாகும் மற்றும் மாநிலத்தின் ஒரு பாகமாகும். பல்கேரியாவின் 28 மாநிலங்களில் 264 நகராட்சிகள் உள்ளன. கனடாவில் நகராட்சி ஒரு நகரம்,ஊர், கிராமம், குடியிருப்பு அல்லது பரோவைக் குறிக்கும் ஒரு மண்டலம் (அல்லது மண்டல நகராட்சி) என்பது மாவட்டம், கௌன்டி அல்லது மாநகரம். தவிர குயூபெக், நோவாஸ்கோஷியா மற்றும் ஒன்டோரியோ மாநிலங்களில் சில குறிப்பிட்ட நகராட்சிகளுக்கு தனி பெயர் உண்டு. ஒன்டோரியோ, சாஸ்கட்சேவான் மற்றும் மனிடோபாவின் சில பகுதிகள் கிராம நகராட்சிகள் என அழைக்கப்படுகின்றன, அதே நேரம் அல்பெர்டாவின் பகுதிகள் நகராட்சி மாவட்டம்எனவும் பிரித்தானிய கொலம்பியா பகுதிகள் மாவட்ட நகராட்சிகள் எனவும் அழைக்கப்படுகின்றன.. நகராட்சி ("municipalidad") நாட்டின் மூன்றாம்நிலை சட்ட அமைப்பாகும்; அவை ஒன்றோ பலவோ கொம்யூன்களை ("comuna") நிர்வகிக்கின்றன. முதல்நிலையில் சிலி மண்டலங்களாகவும் (மண்டலங்கள்) இரண்டாம் நிலையில் மாநிலங்களாகவும் (மாநிலங்கள் -"provincia") பிரிக்கப்பட்டுள்ளன.இந்த மாநிலங்கள் "comunas"ஆக பிரிக்கப்பட்டு நகராட்சிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் நகராட்சியும் கொம்யூனும் ஒரே பெயரில் அமைந்திருந்தாலும் அரசியலமைப்பு ஒரு நகராட்சி ஒன்றிற்கு மேற்பட்ட கொம்யூன்களுக்கு பொறுப்பேற்க அனுமதிக்கிறது. நகராட்சி("municipio") ஒரு டிபார்ட்மென்டின் ("departamento") பாகமாகும். மேலும் இவை காரிஜிமென்டோக்கள் மற்றும் வெரெடாக்கள் என பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு நகராட்சி("ஒப்சினா-općina") கௌன்டி ("Counties of Croatia|županija") எனப்படும் நிலப்பிரிவின் பகுதியாகும். நகராட்சி ("obec") ஒரு kraj ("க்ராஜ்")இன் பாகமாகும். கொம்யூன் எனப்படும் நகராட்சி("kommune") ஒரு மண்டலத்தின் மண்டலம் பாகமாகும் . சனவரி 1, 2007 இலிருந்து டென்மார்க்கில் கௌன்டிகள் விடப்பட்டன. நகராட்சி ("municipio") ஒரு மாநிலத்தின் பாகமாகும். நகராட்சி("omavalitsus]]") ஒரு மிகச்சிறிய நிலப்பிரிவாகும். நகராட்சி ("kunta / kommun - கொம்யூன்") தனது அருகாமையிலுள்ள நகராட்சிகளுடன் ஒரு துணைமண்டலத்தில்("seutukunta / region") மற்றும் மண்டலத்தில் (region – "maakunta / landskap") ஒத்திசைந்துள்ளன; மண்டலங்கள் நாட்டின் மாநிலத்துடன் ("lääni / län") இணைக்கப்பட்டுள்ளன. நகராட்சிகள் தங்களை "நகரம்" ("kaupunki / stad") என அழைத்துக்கொள்ளலாம். மண்டலங்கள் (région) மாநிலங்களாகவும் ("département"), மாநிலங்கள் நகராட்சி("commune")களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. நகராட்சி ("Gemeinde") ஒரு மாவட்டத்தின் ("Kreis") பாகமாகும். பெரும் நகராட்சிகள்"Stadt"என அழைக்கப்படுகின்றன. மக்கட்தொகை குறைந்த இடங்களில் நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு நகராட்சிஒன்றியம் ("Verbandsgemeinde") என அழைக்கப்படுகின்றன. நகராட்சி ஒரு பிரிபெக்ட்சரின் (prefecture) பாகமாகும். அவை டிமொய் அல்லது (மக்கட்தொகை குறைந்திருந்தால்) கொய்நோட்டே என அழைக்கப்படுகின்றன. இவை சேர்ந்து நோமோஸ் ("nomos") எனவும் நோமோஸ்கள் இணைந்து பெருமண்டலமாக(periphery)வும் அழைக்கப்படுகின்றன. நகராட்சிகள் மூன்றாம்நிலை நிர்வாக அமைப்புகள். டமொய் மேயர் மற்றும் கொய்நோட்டே தலைவர் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நகராட்சி("commune") ஒரு டிபார்ட்மென்ட்டில் ("département") உள்ளடங்கிய அர்ரொன்டிஸ்மென்ட்டின் (arrondissement)) பாகமாகும். நகராட்சி ("települési önkormányzat") ஒரு கௌன்ட்டி("megye")யின் பாகமாகும். நகராட்சி ஒரு நகர சட்டமன்றம். அது 300 to 18000 மக்கள் கொண்ட கிராமமாகவும் இருக்கலாம். (பார்க்க ஐஸ்லாந்து நகராட்சிகள்) நகராட்சி பொதுவாக ஒரு நகரையே குறிக்கும். அது கிராமமுமில்லாத பெருநகராகவும் இல்லாத ஊராகும். மக்கள் தொகை 1,00,000க்கு மிகுந்திருக்கும். மக்கள் தொகை 1,00,000 ஐ மிகுந்திருந்தால் அது மாநகராட்சி (கார்பரேஷன்) என அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆண்டு வருமானம் சராசரி ரூ.10 கோடியை தாண்டினால் அவை சிறப்பு நிலை நகராட்சியாகவும், ரூ.6 கோடிக்கு மேல், ரூ.10 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை தேர்வு நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடிக்கு மேல், ரூ.6 கோடிக்கு மிகாமல் வருமானம் இருந்தால் அவை முதல் நிலை நகராட்சியாகவும், ரூ.4 கோடி வரை, அதை மிகாமல் வருமானம் பெறுபவை 2-ம் நிலை நகராட்சியாகவும் அதற்கு கீ்ழ் உள்ளவை மூன்றாம் நிலை நகராட்சியாகவும் வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு மண்டலத்தின் (regione) பாகமாக மாநிலமும் (provincia) மாநிலத்தின் பாகமாக கொம்யூனும் (comune)விளங்குகின்றன. நகராட்சி பெரிய கொம்யூன்களின் துணைபிரிவுகளாக உள்ளன. (எ-டு: உரோமை நகரம் கொம்யூன்). நகராட்சி நாட்டின் உபபிரிவுகளான பிரிபெக்ட்சரின் (prefecture) ஆட்சியைக் குறிப்பதாகும். நான்கு வகையான உள்ளூராட்சிகளில் நகராட்சி ஒன்றாகும். சுமார் 50 முக்கிய நகரங்களுக்கு நகராட்சி நிலை அளிக்கப்பட்டுள்ளது. நகராட்சி ("sing.:novads", "plur.:novadi") ஒரு மாவட்டத்தின் ("sing.:rajons", "plur.:rajoni") பகுதியாகும். நகராட்சி ஒரு மாவட்டத்தின் district பகுதியாகும். மாவட்டம் ஒரு மாநிலம் அல்லது மண்டலத்தின் (Region or Province, அரபு மொழி: "Mouhafazah") பகுதியாகும். நகராட்சி("savivaldybė")ஒரு மாவட்ட("apskritis")த்தின் பங்காகும். இது மேலும் எல்டெரேட்கள் (elderates "seniūnija") என பிரிக்கப்படுகின்றன. கொம்யூன்கள் communes கடைநிலை பிரிவுகளாகும். ஒரு நகராட்சி ("municipio") மாநிலத்தின் பிரிவாகும் (estado) மற்றும் ஒரு பரோ ("delegación") மாவட்டத்தின் Federal District பிரிவாகும். (பார்க்க மெக்சிகோ நகராட்சிகள் மற்றும் மெக்சிகோ மாவட்ட ஒன்றிய பரோக்கள்). நகராட்சி ("gemeente") மாநிலத்தின்("provincie") பகுதியாகும். Every part of mainland நியூசிலாந்து is part of either a "city" (mostly urban) or a "district" (mostly rural). The term "municipality" has become rare in New Zealand since about 1979 and has no legal status. A municipality ("municipio") is subdivision of a department ("departamento") or of one of the two Autonomous Regions, Región Autónoma del Atlántico Norte and Región Autónoma del Atlántico Sur. நகராட்சி ("kommune") ஒரு கௌன்ட்டி ("fylke")யின் பகுதியாகும். நார்வேயில் 431 நகராட்சிகள் உள்ளன (2006). நகராட்சிகள் 4,000 மக்கட்தொகையை கொண்டவையும் 13-15 அவை உறுப்பினர்களைக் கொண்டவையுமாகும். பாலத்தீன தேசிய ஆணையத்தில் 105 நகராட்சிகள் உள்ளன. இங்கு நகராட்சி ("முனிசிபாலிடாட்") நாட்டின் உட்பிரிவான டிபார்ட்மென்டின் பகுதியாகும் ("departamento"). A municipality ("municipio") is another term for district ("distrito") and is the lower-level administrative subdivision. It is part of a province ("provincia"), which is part of a department ("departamento"). As of 2002 a department is now called a region (región). A municipality ("bayan") is a town with a popularly elected administration including a mayor, and is part of a province ("lalawigan")—except for the independent municipality of Pateros, Metro Manila in the National Capital Region—and is composed of barangays. நகராட்சி ("gmina") ஒரு கௌன்ட்டி ("powiat")யின் பகுதியாகும். A municipality ("município") is a directly elected local area authority generally consisting of a main city and surrounding villages, with wide-ranging local administration powers. It is also a subdivision of a district for central government purposes("distritos"). நகராட்சி ("municipio") இங்கு ஒரு ஊர் அல்லது நகரை, மேயர் உள்ளிட்ட தேர்தெடுக்கப்பட்ட நிர்வாகத்துடன், குறிக்கிறது. நகராட்சி ("municipiu") சட்டத்தினால் வரிசையிடப்பட்ட ஊர் அல்லது நகரமாகும். ஒரு யூடெட்டின் மிகச்சிறிய துணைக்கோட்டம் கொம்யூன் எனப்படுகின்றன. பலவகையான நகராட்சி அமைப்புகள் உள்ளன.பார்க்க உருசிய துணைக்கோட்டங்கள்#நகராட்சி பிரிவுகள் எட்டு சிறு நகராட்சிகள், காஸ்டெல்லி(castelli) உள்ளன. நகராட்சி ("opština") ஒரு கௌன்ட்டியின்("okrug") பகுதியாகும். நகராட்சி ("obec") ஒரு மாவட்டத்தின் ("okres") பகுதியாகும் . நாட்டில் 2 891 நகராட்சிகள் உள்ளன. District municipalities and metropolitan municipalities are subdivisions of the provinces, and local municipalities are subdivisions of district municipalities. நகராட்சி ("kommun") ஒரு கௌன்ட்டியின்("län")பகுதியாகும். நகராட்சி ("commune/Gemeinde/comune") ஒரு கன்டனின் ("canton/Kanton/cantone")பகுதி மற்றும் கன்டனின் சட்டங்களுக்கு உட்பட்டது. நகராட்சி அமீரகத்தின் பங்காகும். ஒவ்வொரு அமீரகமும் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன. இங்கு நகராட்சி என்ற சொல் பொதுவாக பயன்படுத்துவதில்லை, மற்ற நாடுகளில் நகராட்சி எனக் குறிப்பிடும் ஆட்சியமைப்பிற்கு இணையாக,(சரிசமமாக இல்லை) இடத்திற்கேற்றவாறு குடிகள் பாரிஷ், ஊர், நகரம், பரோ, மாவட்டம், மற்றும் யூனிடரி ஆணையம் குறிக்கும். முனிசிபல் என்ற சொல் ஊர் அல்லது நகரத்தின் ஆட்சியைக் குறிக்கும். The entities that have status as a municipality vary from state to state. Cities, towns, boroughs, or villages are common terms for municipalities. Townships, counties, and parishes are not generally considered to be municipalities, although there are exceptions. In some states, towns have a non-municipal status similar to townships. Likewise, some townships have full municipal status. நகராட்சி ("municipio") மாநிலத்தின் பாகமாகும், மற்றும் தலைநகரின் Capital District உபபிரிவாகும். = முதல்நிலை அமைப்புகள் மற்றும் பிற நகராட்சி வகைகள் = A direct-controlled municipality (直辖市 in பின்யின்: zhíxiáshì) is a மாநகரம் with equal status to a province: Beijing, Tianjin, Shanghai, and Chongqing (see Municipality of China) A municipality (直轄市 in Wade-Giles: chi-hsia-shih) is a city with equal status to a province: தாய்பெய் and Kaohsiung. (see Municipality of China) A municipality refers to the honorary officials elected to run each of the 12 Parishes into which it is subdivided. This is the highest level of regional government in this jurisdiction. 84 municipalities ("opštini"; singular: "opština") were established in 2004, reduced from 123 created in 1996. A municipality ("município"/"concelho") is the primary local administrative unit. Although it is a part of a district ("distrito") for certain national administrative purposes, the municipality is not subordinate to the district and decentralization is doing away with the districts. A municipality contains one or more "freguesias". இங்கு முதல்நிலைக் கோட்டங்கள் இல்லை. நகராட்சிகள் இரண்டாம்நிலையில் இருந்தாலும் முதல்நிலை நிர்வாக கோட்டங்களாக இருக்கின்றன. நகராட்சி ("opština") மிகப்பெரிய மண்டலப் பிரிவாகும். சில மிகப் பெரியன. நகராட்சி ("občina") ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். மொத்தம் உள்ள 210 இல் 11 தனி "ஊரக" நிலையும் தன்னாட்சியும் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி ("municipio") ஒரு ஆரம்பநிலை உள்ளாட்சி அமைப்பாகும். நாட்டின் நிர்வாக நோக்கங்களுக்கு இவை மாநிலத்தின்("provincia") பாகமாகும். கலிசியா மண்டலத்தில் இவை கன்செல்லோ (concello) எனவும், (Principality of Asturias) மண்டலத்தில் கன்சேயூ(conceyu) எனவும் அழைக்கப்படுகின்றன. உரோமான்சா உரோமான்சா என்னும் சொல், பல நூற்றாண்டு பழமைப்பெற்றது. இது, எசுப்பானியாவில் பாடப்பட்ட சில பாடலகை குறிக்க பயன்படுத்தப்பட்டது. பின்பு, இது வெறும் பாடல்களை மட்டுமின்றி, இசைக் கருவிகளையும் குறிக்க பயன்படுத்தப்பட்டது. 2009 வவுனியா நகரசபை தேர்தல் 2009 வவுனியா நகரசபை தேர்தல் 2009 ஆகஸ்டு 8 ஆம் நாள் நடத்தப்பட்டது. வவுனியா நகரசபைக்கு 11 பேரைத் தெரிவுச் செய்யும் வகையில் இத்தேர்தல் அமைந்தது. 2009 மே 18 ஆம் நாள் ஈழப்போர் முடிவடைந்ததாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இதுவாகும். அத்துடன் வட மாகாணத்தில் 11 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலும் இதுவாகும். மொத்தமுள்ள 11 இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து வந்த மிதவாதக் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது. 52 விழுக்காடு வாக்காளர்கள் இத்தேர்தலில் வாக்களித்தார்கள். வவுனியா நகரசபைக்கு கடைசியாக 1994, மார்ச் 1 ஆம் நாள் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 18 தொடக்கம் ஜூன் 25 ஆம் நாள் பகல் 12.00 மணி வரை வேட்பு மணுக்கள் ஏற்கப்பட்டன. இக்கால எல்லையில் ஆகிய குழுக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தன். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி தாக்கல் செய்தல் வேட்பு மனுக்கள் தேர்தல் தெரிவு அதிகாரியால் செல்லுபடியற்றதாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 135 பேர் 11 இடங்களுக்காகப் போட்டியிட்டனர். இலங்கைத் தமிழரசுக் கட்சி 5 இடங்களைக் கைப்பற்றி முதலாவது இடத்தில் இடம்பெற்றது. திராவிடக் கட்சிகள் திராவிடக் கட்சிகள் தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் அரசியல் குடும்பமாக கருதப்படுகின்றது. இக்கட்சிகள் பெரும்பாலும் பெரியாரின் திராவிட சுயமரியாதை இயக்கத்தின் வழியில் பிறந்தவை. சாதி வேற்றுமையை கலைப்பதற்காக அமைக்கப்பட்ட இக்கழகங்களும் கட்சிகளும் பின்னர் ஆரிய ஆதிக்கத்தை எதிர்த்து போராடும் கட்சிகளாக வளர்ந்தன. திராவிட கட்சிகளின் தேர்தல் கொடிகள் கருப்பு மற்றும் சிவப்பு என்ற இரு நிறங்களை அதிகமாக கொண்டுள்ளது. தீபிகா படுகோண் தீபிகா படுகோண் (கன்னடம்: ದೀಪಿಕಾ ಪಡುಕೋಣೆ ) (பி. ஜனவரி 5, 1986) ஒரு இந்திய திரைப்பட ந‌டிகை மற்றும் விளம்பர அழகி. கன்னடம் மற்றும் இந்தி திரைப்படங்களில் ந‌டித்திருக்கிறார். டென்மார்க்கின் தலைநகர‌மான‌ கோப்பென்ஹாகெனில் உஜ்ஜ‌லா மற்றும் பிர‌காஷ் படுகோணெவுக்கு பிறந்தார். அ‌வ‌ரின் த‌ந்தையான‌ பிர‌காஷ் படுகோணெ ஒரு புகழ்பெற்ற பூப்பந்தாட்ட ஆட்டக்கார‌ர். பெங்களூரில் வளர்ந்த தீபிகா, க‌ல்லூரியில் ப‌டிக்கும் பொழுது ஒப்பனையழகித் தொழில் துறையில் சேர்ந்தார். 2006 ஆம் ஆண்டில் முத‌ன் முறையாக "ஐஸ்வர்யா" என்ற‌ ‌கன்னட திரைப்படத்தில் ந‌டித்தார். 2007 இல் ஃபாரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" இந்தி ப‌ட‌த்தோடு இந்தியா முழுவ‌தும் அறிமுகம் பெற்றார். படுக்கோன் உஜாலா மற்றும் பிரகாஷ் படுக்கோன் ஆகியோருக்கு ஜனவரி 5, 1986 ல் டென்மார்க்கில் உள்ள கொப்பென்ஹகனில் பிறந்தார். இவர் வெறும் பதினொரு மாத வயதாக இருக்கும் போது இவர் குடும்பம் இந்தியாவில் பெங்களூருக்கு நகர்ந்தது. இவரது பெற்றோர் இந்தியாவில், கர்நாடகாவில், உடுப்பி மாவட்டத்தில் குண்டபுரா தாலுக்கில் உள்ள படுக்கோன் என்ற கிராமத்திலிருந்து வந்தனர். இவரது தந்தை பிரகாஷ் படுக்கோன் சர்வதேச அளவில் மதிப்புள்ள பூப்பந்தாட்ட வீரர் மற்றும் தாய் ஒரு பயண முகவர். படுக்கோனுக்கு 1991 இல் பிறந்த அனிஷா என்ற இளைய தங்கையும் 1993 ல் பிறந்த ஒரு சகோதரனும் உள்ளனர். படுக்கோன் பெங்களூரில் உள்ள சோபியா உயர்நிலை பள்ளிக்கு சென்றார். பெங்களூரில் உள்ள மவுண்ட் கார்மெல் கல்லூரியில் தனது பல்கலைகழக முன்பாடக்கோப்பு படிப்புகளை முடித்தார். இவர் உயர்நிலைப் பள்ளியில் இருக்கும்பொழுதே தன் தந்தையை போல மாநில அளவில் பூபந்தாட்டம் விளையாடினார் மற்றும் இவர் தந்தையின் பூபந்தாட்ட சங்கத்தில் உறுப்பினராக இருந்தார். இருந்தாலும், இவர் பூப்பந்தாட்டத்தில் சாதிப்பதில் ஆர்வம் காட்டவில்லை எனவே இதை விட்டுவிட்டு தன் ஐசிஎஸ்சி பரீட்சைகளில் கவனம் செலுத்தினார். கல்லூரியில் படிக்கும் பொழுதே, படுக்கோன் விளம்பரத் துறையை தன் பணிதுறை ஆக்கிக்கொண்டார். பல ஆண்டுகளாக, இவர் விளம்பரம் செய்த இந்திய வர்த்தக குறிகளின் பெயர்கள் லிரில், டாபர் லால் பவுடர், குளோஸ் அப் டூத் பேஸ்ட் (close up tooth paste) மற்றும் லிம்கா, மற்றும் இந்திய நகைகளின் சில்லறை வர்த்தக நகைக்கான ஷோவின் "வியாபார தூதர்" ஆவார். ஒப்பனை பொருள் ஸ்தாபனமான மேபலின் இவரைத் தன் சர்வதேச பிரதிநிதியாக்கியது. கிங்க்ஃபிஷரின் ஐந்தாவது ஆண்டு பாஷன் விருதுகளில் "இந்த ஆண்டு மாடல்" என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பிறகு, இவர் கிங்க்ஃபிஷரின் ஒரு மாடலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நீச்சலுடை 2006 இன் நாள்காட்டி மற்றும் ஐடியா ஜீ பாஷன் விருதுகளில் இரண்டு பரிசு கோப்பைகள் வென்றார்: "இவ்வாண்டின் விளம்பர அழகி - (வர்த்தக வேலைகள்)" மற்றும் "ஆண்டின் புதிய முகம்". படுக்கோன் கிங்க்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மற்றும் லெவி ஸ்ட்ராஸ் மற்றும் டிசொட் எஸ்எ இன் வியாபார தூதராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். விளம்பரத்துறையில் வெற்றிக்கண்ட படுகோன் பிறகு நடிப்பு திரைக்கு சென்றார். இவர் ஹிமேஷ் ரேஷம்மியா அவர்களால் "ஆப் கா சரூர்" என்ற தனிப்பட்ட பாப் ஆல்பத்தில் "நாம் ஹாய் தேரா" என்ற வீடியோ இசையில் நடிக்க ஆரம்பித்தார். 2006 இல், படுக்கோன் தன் சினிமா அரங்கேற்றத்தை "ஐஸ்வர்யா" என்ற கன்னடப் படத்தில் நடிகர் உபெந்திராவுக்கு சோடியாக நடித்தார். இதன் பிறகு இவர் பாலிவுட்டில் 2007 இல் சர்வதேச அளவில் வெற்றிபெற்ற ஃபரா கானின் "ஓம் ஷாந்தி ஓம்" படத்தில் ஷாருக் காக்கு எதிராக நடித்தார். இந்த படம் இவரை முதலில் 1970 இன் நட்சத்திரம் ஷாந்தி பிரியாவாகவும் பின்னர் சந்தியா, ஷாந்தி பிரியாவை போல நிகரான தோற்றமுடைய ஒரு இளம் பெண்ணாகவும் காட்டியது. இவருடைய இந்த செயல்பாடு இவருக்கு நல்ல வரவேற்பை தந்து பிலிம் பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை பெற்று தந்தது. இதனுடன் இவருக்கு முதல் பிலிம் பேரின் சிறந்த நடிகைக்கான விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். "Indiafm.com" இருந்து தரன் ஆதர்ஷ் கூறியது, "தீபிகாவிடம் நட்சத்திரமாகும் அனைத்து திறனும் உள்ளது - தோற்றம், மனோபாவம் மற்றும் அவர் மிக திறமை பெற்றவர். எஸ்ஆர்கே(SRK) போல ஒரே சட்டத்தில் நின்றுக்கொண்டு சரியாக பெறுவது என்பது சாதாரண சாதனை அல்ல. இவர் காற்றில் இருந்து திடீரென வருகிறார்!." படுக்கோன் அடுத்து தோன்றியது சித்தார்த் ஆனந்தின் "பச்ன ஏ ஹசினோ" (2008), ரன்பீர் கபூருடன், அதன் பிறகு வார்னர் பிரதர்ஸ் - பாலிவுட் கூட்டில் ஜனவரி 16, 2009 இல் வெளிவந்த "சாந்தினி சௌவ்க் டு சைனா". ஜனவரி 2009 முதல் இவர் இம்தியாஸ் அலியின் "லவ் ஆஜ் கல்" திரைப்படத்தில் பணிபுரிகிறார். வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர் இவர் நடித்த பத்மாவதி படமானது சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த படத்தில் "திரௌபதி அம்மனை" இழிவுப்படுத்தியதாக கருதி, சில அமைப்பினர் இந்தப் படத்திற்கும் மற்றும் இவருக்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர் மற்றும் "தீபிகா படுகோண்" தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி தரப்படும் எனக்கூறி சர்ச்சைகளை ஏற்படுத்தினர். ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகள் உள்ளூராட்சிப் பகுதிகள் ("Local Government Area", "LGA") எனப்படுவது ஆஸ்திரேலியாவின் தனிப்பட்ட உள்ளூராட்சிகளின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளைக் குறிக்கும். மாநிலத்துக்கு மாநிலம் உள்ளூராட்சிகளின் பெயர்கள் மாறுபடுகின்றன. தன்னாட்சி நகரம் ("Borough"), நகரம் ("city"), மாவட்டம், நகராட்சி ("municipality"), வட்டாரம் ("Region"), கிராமிய நகரம் ("Rural City"), ஷயர் ("Shire"), மற்றும் சிறுநகரம் ("Town") ஆகியவை ஆகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பெரும்பாலான உள்ளூராட்சிகள், மற்றும் தெற்கு ஆஸ்திரேலியாவின் சில உள்ளூராட்சிகள் உள்ள்ளூராட்சிப் பகுதிகள் ("areas") என அழைக்கப்படுகின்றன. இவற்றின் அமைப்புகள் மன்றம் ("council") என அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் தற்போது கிட்டத்தட்ட 700 உள்ளூராட்சிகள் உள்ளன. இவ்வுள்ளூராட்சிகளை நிறுவுவதும், அவற்றின் எல்லைகளை மீளமைப்பதும் அந்தந்த மாநிலங்களினதும் ஆட்சிப்பகுதிகளினதும் பொறுப்பாகும். நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் 152 உள்ளூராட்சிகள் உள்ளன. இவற்றை விட தூர மேற்கு வட்டாரம் ("Far West Region"), மற்றும் லோர்ட் ஹவ் தீவு ஆகிய இணைக்கப்படாத ("unincorporated") உள்ளூராட்சிகளும் உள்ளன. இம்மாநிலத்தின் அனைத்து உள்ளூராட்சிகளும், சட்டப்படி நகரங்கள் (ந) அல்லது பகுதிகள் (ப) என வகுக்கப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்து மாநிலத்தில் மொத்தம் 73 உள்ளூராட்சிகள் உள்ளன. இவற்றில் ஜனவரி 2007 இல் உள்ளூராட்சிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடிகளின் சபைகளும் அடங்கும். இங்குள்ள உள்ளூராட்சிகள் நகரங்கள் (C), ஷயர்கள் (S), சிறுநகரங்கள் (T) மற்றும் தீவுச் சபைகள் (IC) எனப் பிரிக்கப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலியாவில் மொத்தம் 69 உள்ளூராட்சிகள் உள்ளன. இவை நகரங்கள் (C), கிராமிய நகரங்கள் (RC), நகராட்சிகள் (M), மாவட்ட சபைகள் (DC), பிரதேச சபைகள் (RegC), மற்றும் பழங்குடிகளின் சபைகள் (AC) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. தெற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் அரைப்பகுதிக்கு மேல் உள்ள "Outback Areas Community Development Trust" என்ற பகுதி எந்தவொரு உள்ளூராட்சிக்குள்ளும் அமையவில்லை. தாஸ்மானியாவில் மொத்தம் 29 உள்ளூராட்சிகள் உள்ளன. இவை நகரங்கள் (C) மற்றும் நகராட்சிகள் (M) என வகுக்கப்பட்டுள்ளன. விக்டோரியா மாநிலத்தில் 79 உள்ளூராட்சிகள் உள்ளன. இவை நகரங்கள் (C), கிராமிய நகரங்கள் (RC), தன்னாட்சி நகரங்கள் (B), மற்றும் ஷயர்கள் (S) என வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவிலேயே ஒரேயொரு தன்னாட்சி நகரமான குயீன்ஸ்கிளிஃப் தன்னாட்சி நகரம் இங்கு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கு ஆஸ்திரேலியாவில் மொத்தம் 143 உள்ளூராட்சிகள் அமைந்துள்ளன. இவை நகரங்கள் (C), சிறுநகரங்கள் (T), மற்றும் ஷயர்கள் (S) ஆகும். கிறிஸ்துமஸ் தீவு, கொக்கோஸ் தீவுகள் ஆகியனவும் மேற்கு ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிகளில் அடங்கியுள்ளன. வடமண்டலத்தில் 17 உள்ளூராட்சிகள் உள்ளன. அத்துடன், டார்வின், மற்றும் நடு ஆஸ்திரேலியா பகுதிகளில் இணைக்கப்படாத உள்ளூராட்சிகள் இயங்குகின்றன. இங்குள்ள உள்ளூராட்சிகள் நகரங்கள் (ந), சிறுநகரங்கள் (T), ஷயர்கள் (ச) என அழைக்கப்படுகின்றன. ஆஸ்திரேலிய தலைநகரப் பிரதேசம், ஜேர்விஸ் குடா பிரதேசம், மற்றும் வெளிவாரி ஆட்சிப்பகுதிகள் ஆகியனவற்றில் உள்ளூராட்சி அமைப்புகள் இல்லை. லோர்ட் ஹாவ் தீவு லோர்ட் ஹாவ் தீவு ("Lord Howe Island", () என்பது ஆஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்பில் இருந்து 600 கிமீ (370 மைல்) கிழக்கே பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சிறிய தீவு. லோர்ட் ஹாவ் தீவுகளின் கூட்டத்தில் 20 கிமீ தென்கிழக்கே உள்ள போல் பிரமிட் உம் அடங்கும். இத்தீவுக் கூட்டம் லோர்ட் ஹாவ் தீவுச் சபையினால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வமைப்பானது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் 175 உள்ளக அமைப்புகளில் ஒன்றாகும். இது ஆஸ்திரேலியாவின் உள்ளூராட்சிப் பகுதிகளுள் அடங்காது. எனவே இது "இணைக்கப்படாத பகுதி" ("unincorporated area") என அழைக்கப்படுகிறது. இத்தீவுச் சபையினால் தன்னாட்சி முறையில் ஆளப்படுகிறது. லோர்ட் ஹாவ் தீவு அதன் தனித்தன்மையான அழகிற்காகவும், இங்குள்ள பல்லின உயிரினங்களுக்காவும், இத்தீவு உலகப் பாரம்பரியக் களமாக 1982 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இத்தீவின் பொதுவான நேர வலயம் UTC+10:30. கோடை நேர பகலொளி சேமிப்புக் காலத்தில் அரை மணி நேரம் முன் தாள்ளப்படும் (ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்+11). லோர்ட் ஹாவ் தீவு 1788, பெப்ரவரி 17 ஆம் நாள் லெப். ஹென்றி லிட்ஜ்பேர்ட் போல் என்பவர் தலைமையிலான "எச்எம்எஸ் சப்ளை" என்ற கப்பல் மாலுமிகளினால் கண்டுபிடிக்கப்பட்டது. இவர் அந்நேரம் பொட்டனி விரிகுடாவில் இருந்து நோர்போக் தீவுக்கு குற்றவாளிகளை ஏற்றிக் கொண்டு அங்கு குடியேற்றத் திட்டத்தை ஆரம்பிக்கச் செல்லும் வழியில் இத்தீவைக் கண்டுபிடித்தார். திரும்பி வரும் வழியில் 1788 மார்ச் 13 ஆம் நாளில் தனது சிறு குழுவொன்றை அத்தீவுக்கு அனுப்பினார். மனிதவாழ்வற்ற தீவாக அது அப்போது இருந்தது. அத்துடன் தெற்கு பசிபிக்கின் பொலினீசிய மக்கள் எவரினதும் காலடி பட்டிருக்கவில்லை. இப்பகுதியில் உள்ள லிட்ஜ்பேர்ட் மலை, போல் பிரமிட் ஆகியன இவரது நினைவுப் பெயர்களாகும். இத்தீவின் பெயர் முடியரசின் முதலாவது பிரதிநிதி (1st Earl) ரிச்சார்ட் ஹாவ் என்பாரின் நினைவாகச் சூட்டப்பட்டது. இடைக்கட்டு இடைக்கட்டு, தமிழ்நாட்டில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இந்த ஊரைச் செயங்கொண்டம் பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் கோகுல், விநாயகா என்னும் சிற்றுந்தில் ஏறி அடையலாம். அல்லது திருச்சிராப்பள்ளி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் உள்ள குருகாவலப்பர்கோயில் என்னும் ஊரின் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இரண்டு கல் தொலைவு நடந்து அடையலாம். கங்கைகொண்ட சோழபுரத்திற்குத் தென்மேற்கில் இந்த ஊர் உள்ளது. நூறு குடும்பங்கள் இந்த ஊரில் இருக்கும்.தொடக்கப்பள்ளி,பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கம் உண்டு.தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியும் உண்டு.காளியம்மன்கோயில்,திரௌபதை அம்மன் கோயில், ஐயனார்கோயில், பிடாரியம்மன் கோயில்,வீரனார்கோயில் உள்ளன. வன்னியர்,பிள்ளைமார்,தாழ்த்தப்பட்ட இன மக்கள் வாழ்கின்றனர்.பொன்னேரியால் வேளாண்மை நடைபெறுகிறது.இந்த ஊரில் பிறந்தவர்கள் பலர் நல்ல கல்வியறிவு பெற்று அரசுப் பணிகளில் உள்ளனர். பலர் வெளிநாடு சென்று பணியில் உள்ளனர். அமைதியான ஊர் என்பதால் வெளியூர் மக்கள் பலர் வந்து தங்கி இந்த ஊரின் அமைப்பை மாற்றியுள்ளனர். இந்த ஊரில் உள்ள திரௌபதை அம்மன் கோயிலில் பாரதக்கதை சிறப்பாக பாடப்படுவது உண்டு.தீமிதி,நாடகம் என மக்களின் பொழுதுபோக்கு இருந்தது. காமன் கோயில் திருவிழாவும் நடைபெறும். பர்பரோசா நடவடிக்கை பர்பரோசா நடவடிக்கை ("Operation Barbarossa", இடாய்ட்சு மொழியில்: Unternehmen Barbarossa) என்பது இரண்டாம் உலகப் போரின் கிழக்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது நாசி செருமனி சோவியத் ஒன்றியத்தின் மீது நடத்திய படையெடுப்பின் ஆரம்பகட்ட நடவடிக்கைக்கு இடப்பட்டிருந்த குறிச்சொல். நடவடிக்கையின் துவக்கத்தில் ஜெர்மானியப் படைகள் சோவியத் படைகளை வேகமாக முறியடித்து முன்னேறினாலும், திட்டமிட்டபடி இலக்குகளை அவற்றால் அடையமுடியவில்லை. பர்பரோசா நடவடிக்கையின் தோல்வியால் கிழக்குப் போர்முனையில் மேலும் நான்கு ஆண்டுகள் கடும் போர் நீடித்தது. இருமுனைப் போர் புரியும் நிலைக்கு ஆளான ஜெர்மனி நான்காண்டுகளில் நேச நாட்டுப் படைகளால் தோற்கடிக்கப்பட்டது. பர்பரோசா நடவடிக்கையின் இலக்கு சோவியத் ஒன்றியத்தின் ஐரோப்பிய பகுதிகளை வேகமாக வென்றெடுத்து, "ஆர்க்கன்கெல்சுக்கு, ஆசுத்ராகான்" (Arkhangelsk and Astrakhan) நகரங்களை இணைக்கும் கோடு வரை (இதனை A-A Line என்பர்), 1941 ஆம் ஆண்டு முடியும் முன்னர் கைப்பற்றுவது. ஆனால் 1941 டிசம்பர் முடிவில் செஞ்சேனை வேர்மாக்டின் (Wehrmacht) மிக வலுவான தாக்குதலை எதிர்த்துத் துரத்தியது. சூழ்ச்சிநுணுக்க நோக்கில் செருமானியர்கள் பெரும் படை வெற்றிகளை பெற்றனர், உக்ரைன் உட்படப் பல சோவியத் ஒன்றியத்தின் முதன்மையான பொருளாதாரப் பகுதிகளைக் கைப்பற்றினர். இருப்பினும், உருசியர்கள் செருமனியர்களை மாசுக்கோவில் இருந்து வெளியேற்றினர்; இதன் பிறகு பின்னெப்பொழுதும் செருமனியரால் ஒரே நேரத்தில் அன்று தனிமுதன்மை பெற்றதாகக் கருதப்பட்ட சோவியத்-செருமன் எல்லை முகப்பில் வலிந்து படையெடுத்து முன்னேற முடியவில்லை. பர்பரோசா நடவடிக்கையின் தோல்வி, இட்லரை இன்னும் பல படை முன்னெடுப்புகளையும், போர்களையும் சோவியத் ஒன்றியத்துக்குள் செய்யத் தூண்டியது; லெனின்கிராட் முற்றுகை, சுடாலின்கிராட் முற்றுகை, நார்ட்லிக்ட் நடவடிக்கை அடங்கிய இப்படிப்பட்ட போர்கள் கைப்பற்றப்பட்ட சோவியத் ஒன்றியத்துக்குள் இடம்பெற்றிருந்தாலும், அவை தோல்வியிலேயே முடிந்தன>. பார்பரோசா படைத்தள நடவடிக்கை, அது நடைபெற்ற நிலப்பரப்பு, பங்குகொண்ட மொத்த வீரர்கள், மாண்டவர் அல்லது படுகாயம் அடைந்தவர் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய போர்நடவடிக்கை எனக் கணிக்கப்படுகின்றது. இத் தோல்வி நாட்சி செருமனியின் (நாட்சி இடாய்ட்சுலாந்தின்) அதுவரை இருந்த நல்வாய்ப்புகளின் திருப்பு முனையாகும். முக்கியமாக பர்பரோசா நடவடிக்கை கிழக்குக் களத்தைத் திறந்து, உலக வரலாற்றிலேயே மிகப் பெரிய போர்க்களமாகி, நட்பு நாடுகளின் வெற்றிக்கு அடிகோலியது. பர்பரோசா நடவடிக்கையும், அது நடைபெற்ற பகுதிகளும் மிகப் பெரிய போர்க் களங்களையும், மிகப் பெரிய அட்டூழியங்களையும், மிகப் பெரிய மனித இழப்புகளையும், ஏற்படுத்தி, செருமானியரையும், சோவியத்தினரையும் மிகக் கொடுமையான நிலைகளுக்குத் தள்ளி இரண்டாவது உலகப்போரின் விளைவையும் 20ம் நூற்றாண்டின் வரலாற்றையும் வெகுவாக மாற்றின. 1925 இலேயே, இட்லர் மைன் கம்ப் ("என் போர்") எனும் தன்னுடைய தன்வரலாற்றில், சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுக்கும் குறிக்கோளை, செருமானியர்கள் "வாழும் இடம்" (இடாய்ட்சு மொழியில்: Lebensraum) அதிகரிப்பதற்கு கிழக்கு ஐரோப்பா, உருசியாவைக் கைப்பற்ற வேண்டும் என்று எழுதினார். நாசி இனக் கருத்துகள் படி, சோவியத் ஒன்றியம் "கீழ்மக்களாகிய" சிலாவியர்கள் "யூதக் கம்யூனிஸ்டுகளால்" ஆளப் படுகிறார்கள்; அதை ஜெர்மானியர் பிடித்து தாம் `வாழும் இடத்தை` கைப்பற்ற முயல வேண்டும். செருமனி 600 ஆண்டுகளுக்கு முன் படையெடுத்தது போல, மறுபடியும் உருசியா மீது படையெடுத்து யூதர்கள் ஆளும் சோவியத் ஒன்றியத்தை ஒழிக்க வேண்டும். இட்லர் அகண்ட-சிலாவியர் என்ற இலட்சியத்தை ஒழித்துக் கட்டியவுடன் “உலகத்தின் உரிமையாளர் ஆகிவிடுவர்” என நினைத்தார். அதனால், நாசிக்களின் பகிரங்க கொள்கை உருசியர்களையும், மற்ற சிலாவியர்களையும் அடிமையாக்க வேண்டும் அல்லது நாடு கடத்த வேண்டும், அப்படி செய்து அவ்விடங்களில் செருமானிய இனத்தவரை குடியேற்ற வேண்டும். 1939ல் போலந்தின் மீதான ஆக்கிரமிப்புக்கு சற்று முன் மோலோடாவ்-ரிப்பண்ட்ராப் ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டது . அது ஆக்கிரமிப்பின்மை உடன்பாடு என அழைக்கப் பட்டாலும், அதன் மறைமுக உட்கூறுகள் செருமனியும் சோவியத் உருசியாவும் கிழக்கு ஐரோப்பவை தங்களுக்குள் பங்கு போட்டுக் கொள்ளலாம் என்பது. அவ்வொப்பந்தம் உலகை அதிர்ச்சி அடைய செய்தது, ஏனெனில் இரு நாடுகளுக்கும் இடையே ஒன்றுக்கொன்று மிகுந்த காழ்ப்பு உணர்வு கொண்டிருந்தது. மேலும் அந்த ஒப்பந்தத்தின் படி சோவியத் ஒன்றியம் செருமனிக்கு எண்ணெய் முதலிய தொழிலக துவக்கப் பொருள்களை தரும், அதற்கு ஈடாக செருமனி தொழில் உற்பத்திசெய்த பொருள்களையும், (படைத்) தளவடங்களையும் தரும் இப்படி ஒப்பந்தம் இருந்தாலும், இரு நாடுகளும் ஒன்றையொன்று ஐயத்துடனேயே அணுகின. இரு நாடுகளுக்கும் இடையே உரசல் அதிகமாயிற்று. அதை கட்டுப்படுத்த இரு நாடுகளும் ஜனவரி 1941ல், எல்லை, வணிக உடன்பாட்டை ஏற்படுத்திக்கொண்டன. பரவலாக அறியப்பட்டிருந்த ஸ்டாலினின்கொடுங்கோலாட்சி, நாசிக்கள் படையெடுப்பதற்கு ஒரு பொருத்தமான காரணமாக அமைந்தது; அதே சமயம் அச்சூழல் அவர்களின் வெற்றிக்கு ஒரு நம்பிக்கையையும் கொடுத்தது. 1930 களில் ஸ்டாலின் மில்லியன்கணகான மக்களை கொன்றான் அல்லது சிறையில் அடைத்தான்; அதில் பல திறமை வாய்ந்த செஞ்சேனை தளபதிகளும் இருந்ததால், செஞ்சேனை தக்க தலைமை இல்லாமல் வலுவிழந்து நின்றது. மற்ற கிழக்கு ஐரோப்பிய்ர்களிடம் (இசுலாவியர்களிடம்) செருமனி சோவியத் ஆட்சியின் கொடுமைகளை முன்னிறுத்தி பரப்புரை செய்தது. செஞ்சேனை தாக்குதல் நடத்த இருக்கின்றது என்றும், அதனை முன்கூட்டியே தடுக்க தாங்கள் படையெடுக்க வேண்டியுள்ளது என்றும் நாசி செருமனி பரப்புரை செய்தது. 1940 செருமனியில் துவக்கப் (கச்சாப்) பொருள் நெருக்கடியும் கிழக்கு ஐரோப்பிய உரசல்களும் ஏற்பட்டபோது, இட்லருக்கு சோவியத் மீது படையெடுப்பது சரியான வழி எனத் தோன்றியது. இன்னும் அறுதியான திட்டம் தீட்டாவிட்டாலும், இட்லர் ஒரு செருமானிய படைத்தலைவருக்கு (செனரலுக்கு)ச் சொன்னார்: அந்த சூலை மாதத்தில் மேற்கு ஐரோப்பாவில் வெற்றிகள் தன் வாழ்க்கையின் மைய இலக்கை அடைய முடியும் : அதாவது கம்யூனிசத்தை அழிப்பது என்று. இட்லரின் படைத்துறை தளபதிகள் உருசியாவைக் கைப்பற்றுவது செருமனிக்கு பெரிய பொருளாதார பாரங்களைக் கொடுக்குமே ஒழிய, நன்மை பயக்காது என்றனர். இட்லர், இந்த ஆக்கிரமிப்பு செருமனிக்கு பின்வரும் பயன்களைத் தருமென நம்பினார்: டிசம்பர் 5ம் தேதி, இட்லருக்கு சோவியத் ஒன்றியத்தின் மேல் படையெடுக்க திட்டம் கிடைத்தது, அவர் திட்டத்தை ஏற்றபின் மே 1941-ல் படையெடுப்பது என முடிவெடுக்கப்பட்டது.. டிசம்பர் 18, 1940 அன்று இட்லர், செருமானிய உயர் படைத்துறை மேலிடத்துக்கு விடுத்த போர் ஆணை நம்பர் 21 ல், இப்போது “பர்பரோசா நடவடிக்கை” என்றழைக்கப் பட்ட படைத்துறை நடவடிக்கைகளில் “செருமானிய படைத்துறை விரைவாக சோவியத் ஒன்ற்யத்தினை நசுக்கத் தயார் செய்ய வேண்டும்” என ஆணையிட்டார். அது ஃபிரெடரிக் பர்பரோசா என்ற 12ம் நூற்றாண்டு புனித உரோமப் பேரரசின், பேரரசர் பெயரைப் பயன்படுத்தியது. படையெடுப்பின் நாள் மே 15 , 1941 என நிச்சயம் செய்யப் பட்டது. 1940 இல், சில செருமானிய உயர் அதிகாரிகள் அதற்கு சோவியத் ஒன்றியத்தின் மீதான படையெடுப்பு செருமனி மீது பெரும் பொருளாதார பாரத்தை தரக்கூடும் என மறுப்பு தெரிவித்தனர். மற்றொரு செருமனிய அதிகாரி “சோவியத் நாடு, பெரும் ஆட்சிநடத்தும் குளறுபடிகளில் சிக்கிக் கொண்டு இருப்பதால், அதால் ஒன்றும் செய்ய முடியாது, ஆக்கிரமிப்பு செருமனிக்கு ஒரு வரவையும் கொடுக்காது, ஏன் உருசியாவை அதன் பயன்படாத கம்யூனிசத்தில் சிக்க வைக்கக் கூடாது” என வாதிட்டார். இட்லர் `பொருளாதார தடுப்புவாதிகளை இனிமேல் கேட்கப்போவதில்லை, அப்படிப்பட்ட பொருளாதார வாதங்களுக்கு தன் காதை மூடிக்கொண்டு, மன நிம்மதியை அடைவேன்` என்றார். அது, படையெடுப்பின் பொருளாதார விளைவுகளை ஆய்ந்து கொண்டிருந்த அதிகாரியிடம் சொல்லப் பட்டது, அந்த அதிகாரியின் வாதம் சோவியத் ஒன்றியத்தினை ஒரு சேதமின்றி கைப்பற்றினால் ஒழிய, செருமனிக்கு பெரிய பொருளாதார இழப்பே என இருந்தது. நாசிக்களில் சோவியத் ஒன்றியத்தினை மொத்தமாக அழிக்கும் கொள்கை அவர்கள் கருத்தான `வாழ்விடத்தை` `ஆரிய` செருமானியரின் நலனுக்காக கைப்பற்றுவதற்கு ஒத்து இருந்தது. பர்பரோசா நடவடிக்கை, லெனிகிராட் மேல் வடக்கு திசையில் ஒரு அடியையும், மாசுக்கோவை கைப்பற்றுவதையும், பொருளாதாரக் கொள்கையான யுக்ரெயின் மற்றும் காகசஸ் எண்ணை வளங்களை கைப்பற்றுவதையும் ஒன்று சேர்த்தது. இட்லர், தன் தளபதிகளுடன் எதைக் கைப்பற்றுவதில் முதன்மை கொடுக்க வேண்டும் என விவாதித்தார். இட்லர் மறுபடியும், மறுபடியும் `லெனின்கிராட் முதலில், பின்பு டோனெட்ஸ்க் பள்ளத்தாக்கு, மாஸ்கோ மூன்றாவது` என அறுதியிட்டு வந்தார். இட்லர் சோவியத் ஒன்றிய படையெடுப்பிற்கு பொறுமையை இழந்து கொண்டிருந்தார். முதலில் சோவியத் ஒன்றியத்தினை நசுக்கினால், பிரித்தன் அமைதிக்கு பிச்சை கேட்கும் என நம்பினார். இட்லர், மேற்கு ஐரோப்பாவில் செய்த அதி வேகமான வெற்றிகளினாலும், சோவியத் ஒன்றியத்தின் ஃபின்லாந்து எதிரான போரில் மோசமாக போரிட்டதாலும், தன் திட்டத்தின் மீது அலவுக்கு மீறிய நம்பிக்கை வைகத் தொடங்கினார். சில மாதங்களில் போர் வெற்றியில் முடிந்து விடும் என நம்பி, பனிக்கால போருக்கு முன்யோசனையுடன் திட்டம் தீட்டவில்லை. அதனால் ஜெர்மனியின் படைகள் பனிக்கால போருக்கு வேண்டிய ஏற்பாடுகளை சரியாக செய்யவில்லை இந்த படையெடுப்பின் ஆயத்தமாக, ஹிட்லர் 3.5 மில்லியன் ஜெர்மன் துருப்புகளையும், 1 மில்லியன் இதற அச்சு ராணுவங்களையும் சோவியத் எல்லையில் குவித்து, சோவியத் நிலப்பரப்பின் மீது பல ஆகாய கண்காணிப்புகளை நடத்தி, கிழக்கில் ஆயுதங்களை குவித்தார். படையெடுப்பின் போது, ஸ்டாலினின் நம்பிக்கையான, ஹிட்லர் மோலோடாவ்-ரிப்பண்டிராப் ஒப்பந்தத்தின் 2 வருடங்கள் வரை சோவியத் யூனியனை தாக்கமாட்டான், என்பதால் சோவியத்துகள் மிகவும் வியப்பும், பீதியும் அடைந்தனர். மேலும், ஸ்டாலின் ஹிட்லர் முதலில் பிரித்தனுடன் போரை முடித்து விட்டு தான் சோவியத் பக்கம் திரும்புவான் எனவும் நம்பினார்.. ஹிட்லரின் ஆயத்தங்களை பற்றி எச்சரித்த பல உளவு அறிக்கைகளை, அது பிரித்தனின் , சோவியத்-ரஷ்ய யுத்தத்தை தூண்டிவிடும் சூழ்ச்சி என நம்பவில்லை. சோவியத்தின் உயர் ஒற்றனான் டாக்டர்.ரிசர்ட் சோர்க ஸ்டாலினுக்கு படையெடுப்பின் சரியான தேதியை கொடுத்தார்; பிரித்தானிய ராணுவ உளவு ULTRA எனும் உளவுமுறையால் அறிந்து , ஸ்டாலினுக்கு ஹிட்லர் படையெடுப்பை பல மாதங்கள் முன்பே எச்சரித்து இருந்தனர். ஜெர்மானியர்களும் ஏப்ரல் 1941 முதல் , தங்கள் உண்மையான ஆக்கிரமிப்பு நோக்கங்களை ஒளிக்க , தங்கள் ஆக்கிரமிப்பின் இலக்கு இங்கிலாந்துதான் என ஸ்டாலினை ஏமாற்ற,பல நடவடிக்கைகளை செய்தனர். இவற்றின் பெயர்கள் ஆபரேஷன் ஹைபிஷ், ஆபரேஷன் ஹார்பூன்.. இங்கிலாந்து மேல் படை எடுக்க எத்தனங்கள் போல் பல ராணுவ பயிற்சிகள் நடத்தப் பட்டன; அதற்கேற்றால் போல் போர்கப்பல், விமான ஓட்டங்கள் செய்யப்பட்டு ,சில பொய் ”தகவல்கள்”, சோவியத் உளவு கையில் சிக்க வைத்தன. ஜெர்மானிய ரானுவ தளபதிகள் நெப்போலியனின் தோல்வியில் முடிந்த 1812 ரஷ்ய படையெடுப்பையும் தீவிரமாக ஆராய்ந்தார்கள். ஹிட்லரும், ஜெனரல்களும் மூன்று தனி ராணுவ கூட்டங்கள் (Army Groups) குறிப்பிட்ட பகுதிகளை கைப்பற்றுவதற்கு ஒதுக்கும் யுக்தியை ஒப்புக்கொண்டார்கள். ஜெர்மனியின் முன்னேற்றங்கள் வரலாற்று பிரசித்தி பெற்ற ரஷ்யாவின் மீது தாக்குதலின் வழிகளில் இருந்தன. வடக்கு ராணுவ கூட்டம் (Army Group North )பால்டிய பகுதி வழியாக சென்று லெனின்கிரார்டையும், வடக்கு ரஷ்யாவையும் கைப்பற்றவும், மத்திய ராணுவ கூட்டம்(Army Group Center) ரஷ்ய நகரமான ஸ்மாலென்ஸ்க்கை கைப்பற்றி மாஸ்கோவிற்கு சென்று அதையும், பெலாருசையும் மத்திய-மேற்கு ரஷ்யாவை கைப்பற்றவும், தெற்கு ராணுவ கூட்டம் ( Army Group South) விவசாய பகுதியான உக்ரெயின் வழியாக படையெடுத்து, புல்வெளி தேசங்களான தெற்கு ரஷ்ய வழியாக வோல்காவையும் , எண்ணை வளம் மிகுந்த காகசஸ் பகுதிகளை கைப்பற்றவும் ஒதுக்கப் பட்டன. ஹிட்லரும், ராணுவ தளபதிகளும் எது முக்கியமான இலக்கு என்பதில் வேறுகருத்து கொண்டிருந்தனர். அதிபதிகள் மாஸ்கோவின் மீது நேராக ராணுவம் செல்ல வேண்டும் என்றனர்; ஹிட்லரோ, முதலில் வளங்கள் மிகுந்த உக்ரெயினையும், பால்டிய நாடுகளையும் மாஸ்கோவின் முனால் கைப்பற்றுவது என வைத்தார். படையெடுப்பின் ஆரம்ப நாள் மே நடுவில் இருந்து ஜூன் முடிவிற்கு தள்ளி போடப் பட்டது ஹிட்லர் சோவியத் யூனியனை நோஞ்சான் என நினைத்தாலும், சோவியத்துகள் 1930ல், தொழில் உற்பத்தியில் அதிகமாக முன்னேறி இருந்தனர். மெதுவாக தொழில்கள் ஆயுத உற்பத்தியை அதிகரித்தன. 1930 களில் நவீன ராணுவ சித்தாந்தத்தை வளர்த்து, 1936ல் போரட்கள செயல்விதிகளாக அமுலாக்கப் பட்டன. ஆனால் சோவியத் ராணுவத்திற்கு பல குறைபாடுகள் இருந்தன. ஒரு வாசிப்பு படி, மேற்கு சோவியத் யூனியனில் 2.5 சோவியத் துருப்புகள், அச்சு துருப்புகளான 4 மில்லியனோட ஒப்பிடுகலையில் குறைவு. சோவியத் படை அளவு 5 மில்லியன் ஆக இருந்தாலும், 2.6 மேற்கிலும், 1.8 ஜப்பானுக்கு எதிராக கிழக்கிலும், மற்றவரக்ள் மற்ற இடங்களிலும் , பயிற்யிலும் இருந்தனர். போர் நடக்கத் தொடங்கியவுடன், சோவியத்துகளின் துருப்பு ஒருங்குசேர்ப்பு அதிகரித்தது. 1941 படையெடுப்பின் தொடக்கத்தில், ஜெர்மனி சோவியத் படையை விட துருப்பு அளவில் சிறிது அதிகமாகவே இருந்தது.. சில முக்கிய தளவாடங்களில் சோவியத்தின் எண்ணிக்கை பலம் ஜெர்மனியை விட அதிகமாக இருந்தது. செஞ்சேனை 23, 106 டாங்கிகளை வைத்து, ஜெர்மனியை விட அதிக வலு கொண்டிருந்தது. ஆனால் இவ்வாயுதங்களின் தயார் நிலைமையும், பராமரிப்பும் மோசமாக இருந்தன; ரவைகளும், ரேடியோக்களும் தட்டுப்பாடில் இருந்தன. பல ராணுவ யூனிட்டுக்ள் போதுமான அளவு டிரக்குகளும் , பார வண்டிகளும் வைத்திருக்க வில்லை. 1938 பிறகு, சோவியத்துகள் டாங்குகளை தரைப் படைக்கு ஆதரவாக பரப்பி வைத்திருந்தனர்; 1940ல் இருந்துதான் டாங்கிகளை ஒன்று சேர்த்து, டாங்கி டிவிஷன்களாக ஆக்கினர், 1941ல் அவ்வேலை முடிபடவில்லை. ஜெர்மானிய படை 5200 டாங்கிகளை வைத்திருந்தது, அதில் 3350 டாங்கிகள் படையெடுப்பிற்கு தயாரக இருந்தன. சோவியத் யூனியனின் மிக நவீனமான டாங்கிகள் T-34 மிக உயர்ந்த ரகமானாலும், போர் முதலில் பெரிய அளவு உற்பத்தி செய்யப் படவில்லை. அதே சமயம், டாங்கி தரம் உயர்ந்ததாக இருந்தும், ரேடியோ தொடர்பு ஆயுதங்களும், அப்படிப்பட்ட ஆயுதங்களை செம்மையாக பயன்படுத்துவதற்கு வேண்டிய பயிற்சியும் அவ்வளவு இல்லை. சோவியத்துகளின் எண்ணிக்கை பலம், ஜெர்மானியரின் உயர்தர தயார்நிலையினாலும், பயிற்சிகளாலும் எதிர்க்கப்பட்டு, அதன் வீரியம் குறைந்தது. சோவியத் ராணுவ அதிகாரம் ஒவ்வொரு படியிலும் ஸ்டாலினின் பெரும் கழிப்பு (1936-1938) செயல்களால் மெலிக்கப் பட்டது. 90 ஜெனரல்கள் கைது செய்யப்பட்டதில், 6 பேர் தான் உயிர்தப்பினர், 180 டிவிஷனல் கமாண்டர்கள் கைது செய்யப் பட்டதில் 36 பேர்தான் உயிர் தப்பினர்; 57 ராணுவ கமாண்டர்களில் 7 பேர் தான் உயிர்தப்பினர். மொத்தமக 30,000 ராணுவ அதிகாரிகள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அது பெரும்பாலும் அனுபவம் இல்லாத இளய ஆபீசர்களுக்கு பதவி உயர்வு கொடுத்தது. 1941ல், 75% ராணுவ அதிகாரிகள் தங்கள் பதவியில் 1 வருடத்திற்கு குறைவாக இருந்தனர். சராசையாக சோவியத் கமாண்டர் ஜெர்மானிய கமாண்டரை விட 12 வயது குறைந்தவராக இருந்தார். அதனால், அவர் அரசியல் நிலைகளுக்கு அஞ்சி, பயிற்சி இலாதவராய், சுய முனைப்பு இல்லாதவராக இருந்தார். படையெடுப்பு முதலில் சோவியத் விமானப் படை நவீன விமானங்கள் இல்லாமல் தத்தளித்தது. சோவியத் சண்டை விமானப் படை I-15, I-16 போன்ற காலம் கடந்த விமானங்களை வைத்திருந்தது. புதிய ரக விமானங்களான, MIG-3,LaGG-3, Yak-1 போன்றவை, 1941 கடைசியில் தான் தயாரிக்கப் பட்டன. அவை ஜெர்மனியின் மெசர்ஷ்மிட் B-109 போன்ற விமானங்களை விட கீழ் தரத்தில், திறமையிலும் இருந்தன. படையெடுப்பு தொடங்கிய நாள் ஜூன் 22, 1941 அன்று 200 புது ரக விமானங்கள் இருந்தும், அவற்றிற்கு 4 பயிற்சி பெற்ற ஓட்டுனர்தான் இருந்தனர் . செஞ்சேனை பெரும் விஸ்தீரணங்களில் பரப்பப் பட்டு, சரியான வாகன வசதி இல்லாமல் போருக்கு வேண்டிய குவிப்பு நிலைக்கு எளிதாக போக முடியவில்லை. அதனால் படையெடுப்பு தொடங்கிய நாள், எண்ணிக்கை அளவில் சோவியத் ராணுவம், ஜெர்மனியைவிட வலுப் பெற்றது போல தோன்றினாலும், தரத்தில் மோசமாக இருந்தனர். ராணுவ யூனிட்டுகள் எண்ணை மாற்றீடு, தளவாடங்கள் மற்றும் ஆட்கள் மாற்றீடு இவற்றின் வசதி குறைவினால், ஒரு போர் பின்பே, மறுபடியும் சண்டை போட முடியாமல் தோற்றனர். 1938 வரை, சோவியத் ராணுவ சித்தாந்தம் கோடிட்ட பாதுகாப்பு (linear defence) - அதாவது பாதுகாபுப் படைகள் எதிரியை ஒரு கோட்டில் சண்டையிட்டு தடுப்பர் - என்பதை அனுசரித்தது. பிரான்சின் தோல்விக்கு பிறகு, அதை கைவிட்டு, தரைப்படை பெரும் அமைப்புகளில் குவிக்கப் பட்டனர். Source: Mikhail Meltyukhov “Stalin's Missed Chance” table 47. ஹால்டர், ஜெர்மானிய போர் உயர் அதிகாரத்தின் பொதுத்தலைவர், தரை, விமானப் படைகளை இவ்வாறு படையெடுப்புக்கு தொகுத்தார்: வடக்கு ராணுவ கூட்டம் - கிழக்கு பிரஷ்யாவிலிருந்து தொடக்கம் (26 டிவிஷன்கள்) - தளபதி விலெல்ம் ரிட்டர் வான் லீப் மத்திய ராணுவ கூட்டம் - கிழக்கு போலந்தில் இருந்து தொடக்கம் (49 டிவிஷன்கள்). தெற்கு ராணுவ கூட்டம் - தெற்கு போலந்து, ருமேனியாவில் இருந்து தொடக்கம் - (41 டிவின்கள்). ஜெர்மானிய பிடியில் இருந்த பல ஐரொப்பிய நாடுகளில் இருந்த பல துருப்புகள் சோவியத் படையெடுப்பில் கலந்து கொண்டனர். படையெடுப்பின் ஆரம்பத்தில், செஞ்சேனையின் பொறுப்பில் இருந்த மேற்கு சோவியத் பகுதிகள் 4 முன்னணிகளாக பிரிக்கப் பட்டிருந்தன.. இன்னும் சில முன்னணிகள் ஆக்கப் பட்டு , அவை 3 யுக்தியுள்ள கண்காணிப்பின் கீழே கொண்டு வரப்பட்டன. அவை பொதுவாக ஜெர்மனியரின் 3 ராணுவ கூட்டத்திற்கு எதிர்ப்பாக இருந்தன. படையெடுப்பு தொடங்கியவுடன், வடக்கு, வடமேற்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு முனன்ணிகள் ஜூன் 1941ல் ஆக்கப் பட்டன. 10ம் ஜூலை, 1941 ஆணைப்படி, வோரோஷிலாவ் வடமேற்கு யுக்தி கண்காணிப்பிற்கும், டிமோஷென்கோ மேற்கு யுக்தி கண்காணிப்பிற்கும், பிடியோனி தென்மேற்கு யுக்தி கண்காணிப்பிற்கும் கமாண்டர்களாக நியமிக்கப் பட்டனர் வடமேற்கு யுக்தி கண்காணிப்பின் தொகுப்பு: மேற்கு யுக்தி கண்காணிப்பின் தொகுப்பு: தென்மேற்கு யுக்தி கண்காணிப்பின் தொகுப்பு: இதையும் தவிர , இன்னும் 6 ராணுவங்கள் மேற்கு சோவியத்தில் இருந்தன - 16 வது, 19 வது, 20 வது, 21 வது, 22 வது , 24 வது ராணுவஙக்ள் ஸ்டாவ்கா என்ற சோவியத் ராணுவ மிக உயர்ந்த அதிகாரத்தின் நேர் கண்காணிப்பில் இருந்து, பிறகு கையிருப்பு முன்னணி ( Reserve Front) என அழைக்கப் பட்டு ஸ்டாலினின் நேர் ஆணைகள் கீழ் வந்தன. ஜுன் 22, 1941 அதிகாலை 3.15 பொழுது, அச்சு துருப்புகள் சோவியத் எல்லை நெடுகிலும் குண்டுமழை பெய்து, தாக்கத் தொடங்கின. 22 ஜூன் அன்று 3 மில்லியன் ஜெர்மானிய த்ருப்புகள் ஆக்கிரமிப்பில் கலந்து கொண்டனர் என்பது கணிப்பு.; அவைற்றை எதிர்து சிறிய அளவு சோவியத் துருப்புகள் தான் இருந்தன. சோவியத்துகள் முழுதுமாக ஆச்சரிய பட்டனர். ஸ்டாவ்கா, எல்லை சோவியத் துருப்புகளை எச்சரிப்பு மேல் ஒரு ஆணையும் கொடுக்க வில்லை. ஜெர்மானிய துருப்புகளை தவிர, 500,000 ருமானிய, ஹங்கெரிய, ஸ்லோவாகிய, குரோவேஷிய, இத்தாலிய துருப்புகள் , ஜெர்மானியர்களுடன் சேர்ந்து படை எடுத்தனர்.. ”லூஃப்ட்வாஃப” ஜெர்மனியின் விமானப் படை சோவியத் துருப்பு குவிப்பு இடங்கள், விமான தளங்கள், ஆயுத கிடங்குகள் இவற்றை அவசரமாக படத்தில் போட்டு, அவற்றை அழைக்க தய்யர் செய்தனர். லூஃப்ட்வாஃபயின் பணி சோவியத் விமான அணியை முடக்கி, செயலறச் செய்வதாகும் . லூஃப்ட்வாஃப முதல் நாளிலேயே 1489 சோவியத் போர் விமானங்களை தரையிலே அழித்ததாக பீற்றிக் கொண்டது. ஆனால் உண்மையில் 2000 மேல் விமானங்கள் அழிக்கப் பட்டன.. லூஃப்ட்வாஃப முதல் நாள் போரில் 35 விமானங்களை இழந்ததாக அறிவித்தது. ரஷ்ய சரித்திர ஆய்வாளர் விக்டர் குகிகாவ் படி, முதல் 3 நாட்களில் 3922 சோவியத் விமானங்கள் அழிக்கப் பட்டன- பெரும்பாலும் தரையிலேயே.. லூஃப்ட்வாஃப 3 போர் பகுதிகளிலும் ஆகாய மேன்மையை வருடம் பூராகவும் நிலைநாட்டியது. இதற்கெதிராக இரு சோவியத் ராணுவங்கள் இருந்தன. முதல் நாளிலேயே நெமன் நதியை கடந்தன. ரசநியாய் நகர் அருகே 300 சோவியத் டாங்கிகளால் தடுக்கப் பட்டு, கடும் போர் மூண்டது. 4 நாள் தீவிர பிறகு சோவியத் துருப்புகள் அழிக்கப் பட்டன . ஜெர்மானிய பான்சர் அணிகள் துவின நதியை கடந்து லெனின்கிராடின் தாக்குதல் தூரத்தில் வந்தன. அப்பொது, ஹிட்லர் அவர்களை நின்று, மேலும் தரை துருப்புகளின் வலுவூட்டல் பின்பு லெனின்கிராட் மீது செல்லமாறு ஆணையிட்டார்.. இந்த நில் ஆணைகள் சோவியத்துகளுக்கு லெனின்கிராடின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கு அவகாசம் கொடுத்தன. அதே சமயம் , லிதுவேனியாவில், சோவியத்துகள் எதிராக கிளர்சி ஏற்பட்டு, 60,000 லிதுவேனிய துருப்புகள் சோவியத் எதிராக போர் புரிந்தனர். இது எஸ்டோனியாவிலும் ஏற்பட்டு, ஜெர்மானியர் 7ம் ஆகஸ்து எஸ்தோனியாவை அடைந்தனர். இதற்கெதிராக, 4 சோவியத் ராணுவங்கள் இருந்தன, 3வது, 4வது, 10 வது, 11 வது. சோவியத் துருப்புகள் மூக்குப்பகுதியில் இருந்தன. ஜெர்மானியர் யுக்தி, இரண்டு பான்சர் ராணுவங்கள் இவற்றை சுற்றி சென்று , பெல்லொரசியாவின் தலைநகரமும், பெரிய ரயில் தொடர்பு நகரமுமான மின்ஸ்கில் சந்திப்பது. அப்படி செய்து , தங்கள் வசத்தில் மாட்டிக் கொண்டிருக்கும் எல்லா சோவியத் ராணுவங்கலையும் அழைப்பது. அந்த திட்டம் படி, 3 வது பான்சர் கூட்டம் மூக்குப்பகுதிக்கு வடக்கும், 2 வது பான்சர் ராணுவம் மூக்குப்பகுதிக்கு தெற்கேயும் பெரும் சக்தியோடு செல்லத் தொடங்கின. மாஸ்கோவில் ஸ்டாவ்காவிற்கு இந்த ஜெர்மன் அசைவுகளின் நோக்கம் புரியவில்லை; அதனால் , சோவியத் ராணுவம் செய்ய முடியாதவற்றை , அதாவது ஒரே பாய்ச்சலில் எல்ல ஜெர்மானிய ராணுவத்தினரஒ அழிப்பது - ஆணை இட்டது. 27 வது ஜூன் , 2 வது, 3 வது பான்சர் ராணுவங்கள் மின்ஸ்கில் இணைந்து, சோவியத் நாட்டிற்க்குள் 200 மைல் உள்ளே சென்று விட்டன. இதன் எதிரில் 5வது, 6 வது, 26 வது சோவியத் ராணுவ கூட்டங்கள் இருந்து, கடுமையாக சண்டையிட்டு தடுப்பு கொடுத்தன. மற்ற பகுதிகள் போல் அல்லாமல், இங்கு சோவியத்துகள் பெரும் தடுப்பை கொடுத்தனர். 1 வது பான்சர் ராணுவம் 600 டாங்கிகளுடன் சோவியத் 6 வது ரணுவத்தை நசுக்கி பிராட் நகரை கைப்பற்றியது. 26 ஜூன் அன்று 1000 சோவியத் டாங்கிகள், அதன் பீது எதிர் அடி கொடுததன. 4 நாள் தீவிர போர் ,பின்பு ,அதிக சேதத்துடன் ,ஜெர்மானியர் வென்றனர், முதல் வாரப் போரிலேயே, ஜெர்மானியர் பெரும் வெற்றிகளை கண்டனர்; பெரும் பகுதிகளை கைப்பற்றியனர்; ஆனால் இந்த வெற்றிகளால், கைப்பிடித்த பகுதிகளை நிர்வாகிப்பதில், மாஸ்கோ மேல் முன்னேறுவது ஓரளவு தடை செய்யப்பட்டது. 3ம் ஜூலை நாள், ஹிட்லர் தன் ராணுவங்களுக்கு மறுபடியும் கிழக்கு நோக்கி முன்னேற்றத்தை தொடங்குமாறு ஆணை இட்டான். உள்ளே போகப் போக, சோவியத்துகளில் எருமை தீவிரம் அதிகரித்தது. மத்திய ராணுவ கூட்டத்தின் அடுத்த இலக்கு ஸ்மாலென்ஸ்க் நகரத்தை கைப்பற்றுவதாகும். ஜெர்மானியர்களுக்கு எதிராக 6 சோவியத் ராணுவங்கள் இருந்தனர். 6 வது ஜூலையில், சோவியத்துகள் 700 டாங்கிகளுடன் 3 வது பான்சர் ராணுவத்தை தாக்கினர். ஜெர்மானியர் இத்தாக்குதலை விமான குண்டுகளால் தாக்கி, முறியடித்தனர். 2 வது பான்சர் ராணுவம் டினீபர் நதியை கடந்து, தெற்கு வழியாக ஸ்மாலென்ஸ்க் நோக்கி படையெடுத்தது. அதே சமயம், 3 வது பான்சர் ராணுவம், ஸ்மாலென்ஸ்கை வடக்கு வழியாக அடைந்தது. ஜூலை 26ம் நாள், இரு பான்சர் ராணுவங்களும் ஸ்மாலென்ஸ்கில் இணைந்து, 180,000 சோவியத் துருப்புகளை கைதியாக பிடித்தன. ஆனால் 100000 சோவியத் துருப்புகள் ஜெர்மானிய பிடியை தப்பித்து ஓடினர். 4 வாரம் கழித்து, ஜெர்மானியர் சோவியத்துகளில் பலத்தை குறைவாக கணிப்பித்தலின் தவரை உணர்ந்தனர். மேலும் தங்கள் ஆயுத, உணவு கிடங்குகளில் இருந்து அதிக தூரத்தில் வருவதின் அபாயத்தை உணர்ந்தனர்; அதே சமயம் தாங்கள் தன்னிச்சையாக கைப்பற்றிய சோவியத் புகுதிகளில் அசைவதின் அபாயத்தை உணர்ந்தனர். அதனால் கோபமடைந்த ஹிட்லர், சோவியத் நாடு மீது பெரும் பொருளாதார சேதத்தை செய்ய , தொழில் பகுதிகலான கர்காவ், டோனெட்ஸ் பள்ளம் பகுதி, காகசஸ் எண்ணை தொழில்கள் இவற்றை கைப்பற்ற ஆணையிட்டான். ஹிட்லரின் தளபதிகள் ஜெர்மன் ராணுவம் மாஸ்கோவிற்கு எவ்வளவு விரைவாக செல்ல முடியுமோ, அவவ்ளவு விரைவாக எல்லா ராணுவங்களுடன் படை எடுக்க வேண்டும் என ஹிட்லருடன் வாதிட்டனர். எதிரியின் தலை நகரததின் வீழ்ச்சியினால் ஏற்படும் மனச் சோர்வு தவிற, மாஸ்கோ தளவாட உற்பத்திக்கும், ரயில் போக்குவரத்து, தொடர்புற்க்கும் மையம் ஆகும்; மேலும் மாஸ்கோவின் பாதுகாப்பிற்காக செஞ்சேனை செமியோன் பியூடனி கீழ் பெருமளவில் குவிக்கப் பட்டுள்ளது. இதயெல்லம் கருதி, மாஸ்கோவைப் பிடிப்பது தளபதிகளின் ஆசை. ஆனால் ஹிட்லர் தன் கருத்துகளில் விடாப் பிடியாக இருந்து, மத்திய ராணுவ கூட்டத்தின் டாங்கிகளை வடக்கும், தெற்கும் அனுப்ப ஆணை இட்டார். ஜூலை நடுவில், ஜெர்மானியர் கீவ் நகரத்தில் அருகில் வந்தனர். 1 வது பான்சர் ராணுவம் தெற்கேயும், 17 வது பான்சர் ராணுவம் கிழக்கேயும் பெரும் அடிகளை கொடுத்து , 3 பெரிய சோவியத் ராணுவங்களை உமான் அருகெ சுற்றி வளைத்துக் கொண்டது.. அந்த சோவியத் துருப்புகளை தோற்கடித்து, ஜெர்மன் டாங்கிகள் வடக்கே திரும்பி முன்னேறி, டினீபர் நதியை கடந்தன. இதற்கிடையில், 2 வது பான்சர் ராணுவம் , மத்திய ராணுவ கூட்டத்துடன் பிரிக்கப்பட்டு , டெஸ்னா நதியை கடந்து, தெற்கே முன்னேறியது. . இந்த இரு ராணுவங்களும் 4 சோவியத் ராணுவங்களை சுற்றி வளைத்துக் கொண்டன. லெனின்கிராட் மீதான தாக்குதலுக்கு , 4 வது பான்சர் ராணூவம் , டாங்கிகளால் அதிகரிக்கப் பட்டது. ஆகஸ்து 4ம் தேதி, லெனின்கிராடுக்கு 30 மைல்களுக்கு உள்ளாக முன்னேறியன. அப்பொழுது, ஹிட்லர் லெனின்கிராடின் மொத்த அழிப்பிற்கு ஆணை இட்டார். ஆகஸ்த் 8 அன்று வடக்கு ராணுவ கூட்டம் லெனின்கிராடின் மீதான கடைசி தள்ளுதலை ஆரம்பித்தனர். 10 நாட்களுல், லெனின்கிராடின் 10 கிமீ தொலைவில் இருந்தனர். அப்போது, ஹிட்லர் லெனின்கிராட் பெருமளவு தாக்கப்பட்டு கைப்பற்றபடாமல், பசி பஞ்சத்தால் சரணடைய செய்ய வேண்டும் என ஆணை இட்டார். அப்போது லெனின்கிராட் முற்றுகை தொடங்கியது. மாஸ்கோ மீது ஆக்கிரமிப்பு முனால், கீவை கைப்பற்ற வேண்டும் என ஹிட்லர் ஆணையிட்டார். அதனால் மத்திய ராணுவ கூட்டத்தில் பாதி தெற்கே சென்றது, தெற்கு ராணுவ கூட்டம் வடக்கெ முன்னேறியது. செப்டம்பர் 16 நாள், ஜெர்மானியா ராணுவம் சோவியத் ராணுவங்களை கீவ் அருகே சுற்றி வளைத்துக் கொண்டது. 10 நாள் கொடும் சண்டைகளுக்கு பிரகு, 600000 சோவியத் போர் கைதிகள் பிடிக்கப் பட்டனர்; 453720 சோவியத் துருப்புகள் இறந்தனர் மாஸ்கோ யுததம். கீவின் தோல்விக்கு பிறகு, செஞ்சேனையின் எண்ணிக்கை ஜெர்மானிய துருப்புகளை விட குறைந்தது. அதனால் மாஸ்கோவை, காப்பாற்ற ஸ்டாலின் 83 டிவிஷன்களில் 800,000 துருப்புகளை வைத்திருந்தாலும், 25 டிவிஷன்கள் தான் செயலில் இடமுடியும். டைபூன் ஆபரேஷன், மஸ்கோவின் மீதான படையெடுப்பு, அக்டோபர் 2ம் நாள் துவங்கியது.. மாஸ்கோவை காப்பதற்கு சில பாதுகாப்பு வளையங்களை, ,வியாசுமாவிலும், மொசாக்கிலும் மையமாக , சோவியத்துகள் செய்திருந்தனர் ஓரெல் நகரை கைப்பற்றி ஜெர்மானியர்களின் கொடுத்த முதல் அடி சோவியத்துகளை பெரும் அதிசயத்துக்குள் ஆக்கியது, ஏனெனில் அது சோவியத்துகளில் பாதுகாப்பு வளையத்திற்கு 75 கிமி அருகில் இருந்தது. 3 நாட்கள் கழித்து, ஜெர்மானியர் பிரியாண்ஸ்கை பைபற்றினர். அதனால் 3 சோவியத் ராணுவங்கள் சுற்றி வளைக்கப் பட்டன. வடக்கில் 3 வது, 4 வது பான்சர் ராணுவங்கள் வியாஸ்மாவை கைப்பற்றி, இன்னும் 5 சோவியத் ராணுவங்களை சுற்றி வளைத்தன. மாஸ்கோவின் முதல் பாதுகாப்பு வளையம் உடைந்தது. அதனால் 663,000 போர் கைதிகள் பிடிக்கப் பட்டு, சோவியத் கைதிகள் எண்ணிக்கை 3 மில்லியன் ஆயிற்று. சோவியத்துகள் கையில் மாஸ்கோவின் பாதுகாப்பிற்கு 90000 துருப்புகள், 150 டங்கிகள்தான் இருந்தனர். அக்டோபர் 13ம் தேதி, 3 வது பான்சர் ராணுவம் மாஸ்கோவின் 90 மைல்களுக்கு உள் வந்துவிட்டது.. ஆபரேஷன் டைபூன் முதலில் இருந்தே, வாநிலை மோசமாகிக் கொண்டு இருந்தது. குளிர் உறையும் அளவு வந்தது. ஜெர்மானிய துருப்புகளுக்கு புதிய சரக்குகள் எளிதில் கிடைக்க வில்லை. முதல் தரைப் பனி நீராக கரைந்தவுடன், பூகி என்கும் சேறாகி விட்டது. அதனால் டாங்கிகளோ, பார வண்டிகளோ, பீரங்கிகளோ முன் செலவது மிக கடினமாக போயிற்று. வண்டிகளின் சக்கரங்கள் சேற்றில் புதந்து, வண்டி, டாங்கி, பீரங்கிகளால் முன் நகருவது மிகக் கடினமாக இருந்தது. அச்சமயத்தில், ஜெர்மானிய ராணுவம் ஒவ்வொரு நாளைக்கு சராசரி 2 கிமீ தான் நகர முடிந்தது. அக்டோபர் 31 அன்று, முன்னேற்றைத்தை நிருத்தி, ஆயுத, மற்ற சரக்ககுகளை அதிகரித்து முன் செல்லுமாறு ஆணை பிறப்பிக்கப் பட்டது. இந்த நிறுத்தம் சோவியத்துகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்க அவகாசம் கொடுத்தது. அந்த மாதத்தில் ஸ்டாலின், 11 புதிய ராணுவங்களையும், 30 பனிப் போரில் சிறந்த சைபீரிய டிவிஷஙளையும் உண்டாக்கினார், சோவியத் ராணுவ உளவு, ஜப்பானியர்கள் சோவியத்துகளை தாக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு வந்து ஜப்பானை எதிர் நோக்கியிரிருந்த 30 சைபீரிய டிவிஷன்களை மாஸ்கோ பாதுகாப்பிற்கு அனுப்பப் பட்டார்கள். நவம்பர் 15ம் நாள், தரை கெட்டியானவுடன், ஜெர்மானிய ராணுவம் மாஸ்கோவை நோக்கி தன் முன்னேற்றத்தை , மறுதுவக்கம் செய்தது. ஆனல் அவர்கள் ஆயுத, இதர சரக்குகள் முடைப்பாகத்தான் இருந்தன. மாஸ்கோவிற்கு தெற்கே, 2 வது பான்சர் ராணுவம் தடுக்கப் பட்டது. நவம்பர் 22 ல் சைபீரிய துருப்புகள் 2 வது பான்சர் ராணுவத்தை தாக்கி, அவர்களை தோற்கடித்தன. ஆனால் 4 வது பான்சர் ராணுவம் முன்னேறி, மாஸ்கோவை சுற்றத் தொடங்கியது. டிசம்பர் 2ம் நாள், 4 வது பான்சர் ரணுவம், மாஸ்கோவின் 15 மைல் தொலைவில் இருந்தன, ஆனால் அந்நேரத்தில், முதல் பனிப்புயல்கள் தொடங்கியன. ஜெர்மன் ராணுவம் பனிக்கால போருக்கு தன்னை தயார் செய்து கொள்ளவில்லை. பனிக்கடியும், நோய்களும் எதிர்களை விட அதிகமாகவே ஜெர்மானியரை கொன்றன. சில டிவிஷன்கள் எண்ணிக்கை 50% ஆக குறைந்தது. பயங்கர பனி, -40 டிகிரி பனி, பீரங்களுக்கும், துப்பாக்கிகளுக்கும் பெரும் சேதத்தை கொடுத்தன. லூஃப்வாஃப அவரக்ளுக்கு வாநிலை காரணமாக ஆகாயத்தில் இருந்து சப்ளை செய்ய முடியவில்லை. புதிய சோவியத் ராணுவங்களின் எண்ணிக்கை இப்போது 500000 ஆக உயர்ந்தது. டிசம்பர் 5ம் நாள், சோவியத்துகள் மாபெரும் பதிலடியை கொடுக்கத் தொடங்கினர். அந்த பதிலடி ஜெர்மானியர்களை 300 கிமி பின்னுக்கு தள்ளியது. அதுவரை , ஜெர்மானியரின் படையெடுப்பு 250,000 இறப்புகளையும், 500000 காயம் அடைந்தவர்களையும் அவர்களுக்கு கொடுத்தது. அதில் பெரும்பான்மை அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஏற்பட்டது பர்பரோசா ஆபரேஷனின் உச்சகட்டம் மத்திய ராணுவ கூட்டம், ஏற்கெனவே ஆயுத, இதற சப்ளைகளில் முடங்கி இருந்தபோதும், மாஸ்கோ மீது படையெடுக்க ஆணை வாங்கியது ஆகும்; அதன் முன்னணி துருப்புகள் டிசம்பர் முதலில் கிரெம்லின் பார்வைக்கு வந்தனர். சைபீரிய துருப்புகளால், வலுவாக்கப்பட்ட சோவியத் ராணுவம், மாஸ்கோவை பாதுகாத்து, ஜெர்மானியர்களை விரட்டி அடித்தது.. கூரை , தேவையான பனிக்கால உடைகள், உணவு இவற்றின் பற்றாக்குரை, வேறெங்கும் செல்ல முடியாத நிலை இவைகளால், ஜெர்மானிய துருப்புகள் பனிகாலம் முழுவதும், இருந்த இடத்தில் மாட்டிக் கொண்டனர். சோவியத் எதிரடிகளால் ஏற்படக்கூடிய மொத்த அழிப்பை, ஆக்ரோஷமான பாதுகாப்பினால் தவிர்த்தாலும், போர்களாலும், பனிப் பருவத்தாலும் பெரும் சேதத்திற்கு உட்பட்டனர். அச்சமயம், மாஸ்கோவை கைப்பற்றுதல் ஜெர்மனியின் மைய இலக்காக இருந்தது. பர்பரோசா அதில் தோற்றது.டிசம்பர் 1941ல், அமெரிக்கா மேல் போர் அறிவிப்பதில் ஜெர்மனி, ஜப்பானுடன் சேர்ந்தது. பர்பரோசா ஆரம்பித்து ஆறு மாதங்களில் உலக ராணுவ யுக்தி நிலை மாபெரும் மாற்றங்களை கண்டது, ஜெர்மனி மிக இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது, ஏனெனில் ஜெர்மனிய தொழில் துறை வெகு நீண்ட போருக்கு ஆயத்தமாக இல்லை. பர்பரோசா ஆபரேஷனின் விளைவு சோவியத்துகளுக்கும் பெரும் ஆபத்தில் முடிந்தது. ஜெர்மானியர் மாஸ்கோவை கைப்பற்ற முடியவில்லை ஆனாலும், பெரும் சோவியத் பகுதிகளை தன் வசம் வைத்தனர். 1941 முடிவில் ஜெர்மனியர், 1,300,000 சதுர கிமீ பரப்பையும், 75 மில்லியன் மக்களையும் தங்கள் ஆதிக்கம் கீழ் கொண்டு வந்தனர் . வேர்மாக்ட் முதலிலிருந்தே, ஹிட்லர் கொடுத்த ஆணைகளால், மிகவும் குரூரமாக நடந்து கொண்டது; ஹிட்லரின் கருது ருசிய ஸ்லாவிய இனத்தவர் கீழ்மக்கள் (ஜெர்மன் மொழி untermenschen). ஜெர்மானியர் கைப்பற்றிய சில இடங்களில், உள்ளூர் மக்கள் , ஜெர்மன் ராணுவத்தை ஸ்டாலினின் கொடுங்கோலில் இருந்து விடுதலை செய்ய வந்தவர் என நினைத்து, வரவேற்றனர்; அப்படி இருந்தும், ஜெர்மானியரின் குரூரமான இனக் காழ்ப்பு கொள்கைகளால், ஜெர்மன் அதிகாரத்தில் வந்த மக்கள் கோபமுற்றனர். சோவியத் ராணுவங்கள் தோற்றபின், தப்பித்த துருப்புகள் ஜெர்மனிக்கு எதிரான எருமை சக்திகள் ஆக மாறினர். இந்த சக்திகளின் தாக்குதல்களை ஜெர்மானியர் மூர்க்கமான முறையில் அடக்கியது, இரு பக்கங்களிலும் பெரும் இழப்பை உண்டு பண்ணிற்று. ஒரு சமீபத்திய ஜெர்மானிய கணிப்பு படி 4.3 மில்லியன் ஜெர்மானிய துருப்புகளும், இதர 900000 அச்சு துருப்புகளும், சோவியத் யூனியனில் போர்களிலோ, சிறையிலோ மடிந்தனர். சோவியத் யூனியன் போர் கைதிகளை மனிதாப முறையில் நடத்தும் நியதிகளை வரையருத்து ஜினீவா வழக்காறுகளை கையெழுத்திடவில்லை. அதனால் ஹிட்லரின் ஆணைப்படி சோவியத் போர் கைதிகளையும், மக்களையும் மனிதாப முறையில் நடத்த வில்லை இது நெப்போலியனின் ரஷ்யாமீது படையெடுப்பிற்கு பல ஒப்புமைகளை கொடுக்கிரது. ஜெர்மனியின் போர் திட்டமிடுபவர்கள் செஞ்சேனையின் ஆள் அதிகரிப்பு சக்தியை குறைவாக மதிப்பிட்டு விட்டர்கள். எவ்வளவு சோவியத் துருப்புகள் களத்தில் இறங்கினார்களோ, அதில் பதியைத் தான் ஜெர்மானியர் எதிர்பார்த்தனர். ஆகஸ்த் ஆரம்பத்தில், அழைக்கப் பட்ட ராணூவங்களின் இடத்தை புதிய ராணுவங்கள் கொண்டன.. சராசரி மாதத்திற்கு அரை மில்லியன் புது துருப்புகள் ஏற்றப் பட்டனர். சோவியத் யூனியனின் பரந்த பல இனங்களிலிருந்தும், தேசங்களிலிருந்தும் இந்த புது ராணுவம் ஆக்குதல்கள்தான் , சோவியத் முதல் ஆறு மதத்தில் குலையாமல் இருப்பதற்கு காரணமாக இருந்தது. ஜெர்மன் ராணுவம் முன்னேற, பல தொழிற்சாலைகளை முழுவதுமாக அக்கு அக்காக கழற்றி, ஜெர்மானியருக்கு கைக்கெட்டாத தொலை கிழக்குக்கு எடுத்துச் சென்று, அங்கு மறுபடியும் தொழிற்சாலைகள் போடப் பட்டன. சோவியத் ஆயுத உற்பத்தி, அதிகமாயிற்று. சோவியத் அரசு நிலை குலைந்து விழும்படியாக எந்த சந்தர்பத்திலும் இல்லை, அது வலுவாக நின்று , நாட்டை தலைமை தாங்கி சென்றது. ஜெர்மானியரின் இன காழ்ப்பு கொள்கையினால், சோவியத் மக்கள் என்ன செய்தாலும், ஜெர்மனிக்கு சரணடைய மாட்டோம் என மன திடத்துடன் நின்று, சோவியத் அரசு கோரித்த எந்த தியாகத்தையும் செய்ய முன் வந்தனர். ஜெர்மானியர் சோவியத் மக்களை மட்டமாக கருதி, உடனே புறங்காட்டி ஓடுவர் என நினைத்தனர்; ஆனால் சோவியத் துருப்புகளில் வீரத்தையும், கட்டுபாடையும், சாகசத்தையும், தியாக மனப் பான்மையை கண்டு பயந்து விட்டனர். சோவியத் மக்கள் , அளவற்ற இன்னல்கள் இருந்தாலும், சோவியத் ராணுவத்திற்கு ஆதரவு தருவதில் திண்ணமாக இருந்தனர். பருவ நிலை மோசமாக மாறியதும், செஞ்சேனை சுதாரிக்க ஆரம்பித்தது, அப்போது ஜெர்மானிய முன்னேற்றம் தட்டுபட்டது. ஜெர்மனி நெடிய யுத்தத்திற்கு தயாராக இல்லை. டாங்கிகளுக்கும், வண்டிகளுக்கும் அதன் இலக்குகளை சேரும் அளவு கூட மண்ணெண்னை இல்லை. அது ஜெர்மன் ராணுவ தளவாட வழங்கும் அமைப்புகளால் புரிந்து கொள்ளப் பட்டது; ஆனால் அவர்கள் எச்ச்ரிக்கைகளை உயர் ராணுவ அதிகாரம் புறக்கணித்தது.. ஜெர்மானியர் கைப்பற்றிய சோவியத் நெடும்சாலைகளும், ரயில் போக்குவரத்தும் நல்ல நிலையில் இருக்கும், அதனால் சுலபமாக சரக்குகளை நகர்தி விடலாம் என நினைத்தனர். ஆனால் உண்மையில், சோவியத் நெடும்சாலைகளும் ரயில் போக்குவரத்தும் மோசமான நிலையில் இருந்ததால், அவற்றை பயன் படுத்த முடியவில்லை 1981ல் நடத்தப் பட்ட ஒரு அமெரிக்க அரசாங்க ஆய்வு படி ஹிட்லரின் திட்டங்கள் கொடும்பனி காலம் வரும் முன்னரே, பிறழ்ந்து போயின. ஹிட்லர் விரைவான வெற்றியில் மிகுந்த நம்பிக்கை வைத்து, பனிக் கால போருக்க ஆயத்தம் செய்யவில்லை . சோவியத் நாட்டு தரை, இளவேனிர்காலத்தில் சேறாகவும், பனிக்காலத்தில் கெட்டியான தரைப் பனியாகவும் மாறிவிடுகிறது. அப்படிப்பட்ட தரை நிலையில் ஜெர்மானிய டாங்குகள் அசைவதெ கடினமாக போயிற்று. மாறாக, புது சோவியத் டாங்கி ரகங்களான T-34, KV போன்றவை அகலமான சக்கரத்தை கொண்டு, சோவியத் தரையில் எளிதாக செயலாற்றின. ஜெர்மானியர் மேற்கு ஐரோப்பாவிலிருந்து 600,000 குதிரைகளை போருக்காக இறக்குமதி செய்து, படையுடன் அனுப்பினர், ஆனால் சோவியத் கொடூர பனிகளில் அவை சரியாக வேலை செய்ய மறுத்தன. ஜெர்மானியரின் உடைகள் கொடும் பனிக்கு ஏற்றதாக இல்லை, சரியான காலணிகளும் இல்லை, சில துருப்புகள் , செய்தி தாள்களை தங்கள் ஜேக்கடுகளுக்குள் சொருக வேண்டியிருந்தது. உஷ்ணம் -30 இறங்கும் போது, குளிர்காய ஆயுதங்களுக்கு வேண்டிய எண்ணையை எரித்தனர், அது வாகனங்கள், டாங்கிகள் செலுத்துவதை பாதித்தது. ஸ்டாலின் ஜெர்மானிய போர் கைதிகளை பணி முகாம்களுக்கு அனுப்பினார். ஸ்டாலின் ஆணையில் பல இனங்கள் மொத்தமாக நாடு கடத்தப் பட்டர்கள். செப்டெம்பர் 1941ல், 439000 வோல்கா ஜெர்மானியர் கசக்ஸ்தானுக்கு கடத்தப்பட்டனர். பிறகு, கிரைமிய தார்தாரிகள் கிரைமியாவிலிருந்து உஸ்பெகிஸ்தானுக்கும், எல்லா செச்னியர்களும், இங்குஷ்களும் கசக்ஸ்தானுக்கும் அனுப்பப் பட்டனர் = வெளி இணைப்புகள் = = மேற்கோள்கள் = களுதாவளை பிள்ளையார் கோயில் கிழக்கிலங்கையின் களுதாவளைப் பகுதியில் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றும் ஒருங்கே, இயற்கையாக அமையப் பெற்ற திருத்தலம் களுதாவளைப் பிள்ளையார் கோயில் ("kaluthavalai pillaiyar kovil") ஆகும். களுதாவளை பிள்ளையார் கோயில் மட்டக்களப்பு மாவட்டத்தில் களுதாவளை என்ற ஊரில் அமைந்துள்ளது. கிழக்கே வங்காள விரிகுடாக் கடலும், மேற்கே மட்டுநகர் வாவியும், தெற்கே களுவாஞ்சிக்குடியும், வடக்கே தேத்தாந்தீவு குடியிருப்பும் எல்லைகளாக உள்ளன. தொன்மைவாய்ந்த இக்கிராமத்தில் வெற்றிலைச் சடங்கு செய்வதற்காக வேடுவ குலத் தலைவன் 'களுவன்' களுதாவளையின் வடமேற்கு மூலையில் ஆறும் சுனையும் அழகிய வயலும் சூழ்ந்த மணல் மேட்டில் பற்றைக் காடுகளை வெட்டி அகற்றினான். 'களுவன்' வணங்கிய இடத்தை 'களுதேவாலயம்' என்று அழைத்தார்கள். கதிர்காம யாத்திரிகர் இருவர் இவ்விடத்தில் தங்கி ஆவரை மரத்தண்டையில் நாகம்மை இருப்பதைக் கண்டு சுனையில் நீராடி திரிலிங்க பூசை செய்தனர். அப்போது நிலமட்டத்தில் சுயம்புலிங்கம் ஒன்றைக் கண்டு அதனை தம்முடன் எடுத்துச் செல்ல எத்தனித்த போது சிவலிங்கம் சலம் வரையில் நீண்டு சென்றது. சுயம்புலிங்கம் அடியார்களுக்கு அற்புதங் காட்டியது. ஊரவர்களை ஒன்று திரட்டி இலங்கையிலே சிவாலயங்கள் பல இருக்கின்றபடியால், சுயம்புலிங்கத்தை மூலசத்தி விநாயகராக வழிபடும்படி கூறினார் என்பதை "இலங்கை தன்னில் ஈசன் ஆலயங்கள் உண்டுபாரும் மூலசக்தி விநாயகர் ஆலயந்தான் இத்தேசம் இல்லாததாலே பிள்ளையார் கோவிலது அதுவாக சிவபிரானைப் பணியும் என்று இயம்புனார் வன்னமையும் இயம்பினாரே" என்ற களுவைநகர் களுதேவாலயக் கல்வெட்டு உறுதிப்படுத்துகிறது. கலி பிறந்து இரண்டு எட்டு ஐந்து ஆண்டு சென்று இடப மாதம் இரண்டாந் திகதிதனில் முகூர்த்தமிட்டு ஆலயமாக வணங்கலானார். ஆரம்பத்தில் நாகதம்பிரான், வைரவர் பரிவார மூர்த்திகளாய் இருந்தனர். வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பகற் பூசை நடைபெற்று வந்தது. நாகதம்பிரான் ஆலயத்துள் பெரிய குரைச்சி ஒன்றினுள் பால், பழம் கரைத்து வைக்க நாகங்கள் குடித்து வந்தன. நாகங்களே கோவிலுக்கு காவலாகவும் இருந்தன. கோவிலின் உள்ளும் சூழவிருந்த மருத மரப் பொந்துகளிலும் அவை வாழ்ந்தன. நாகத்தின் கண்ணீரில் இருந்து பிறந்த கண்ணகை அம்மனை வைகாசித் திங்களில் குளிர்த்தியாட்ட செட்டிப்பாளையம் கண்ணகையம்மன் ஆலயத்திற்கு குளிர்த்திக் குரைச்சியாக இதைக் கொண்டு செல்வது சம்பிரதாயம். களுதாவளையில் கண்ணகை அம்மனை முன்னிறுத்தி கொம்புச் சந்தி என்ற இடத்தில் கொழும்புமுறி விளையாட்டு வெகு விமர்சையாக நடைபெற்ற போது சாய்ந்தமருது, நாகமுனை, சேனைக்குடி, எருவில், மகிழூர், போரேகு நிகர், நாதனை என்னும் இடங்களிலிருந்து வந்தவர்களில் பலர் இவ்வூரில் குடிபதிந்தனர். 'எல்லை நாள் இவர் வந்த காலம் தொள்ளாயிரத்து நாலாம் ஆண்டு ஆனி மாதம் பத்தொன்பதாம் திகதி புதன்கிழமை' என்ற குறிப்பு கல் வெட்டிலுண்டு. ஆண்டுகள் உருண்டு ஓடிடவே அடியார் கூட்டம் பெருகிடவே ஆலயம் வளர்ச்சியுற்றது. தூபி, கொடிமரம் இல்லாத மடாலய அமைப்புடையது. நவக்கிரக கோவிலும், முருகன் கோவிலும் கட்டப்பட்டுள்ளன. நாள் தோறும் உச்சிக்காலப் பூசை நடைபெறுகின்றது. இவ்வூரில் வாழ்கின்ற ஆறு குடும்பங்களின் உறுப்பினர்களைக் கொண்ட அறங்காவலர் சபை யாப்பு விதிகளுக்கமைய ஆலயத்தை நிருவாகம் செய்கிறது. ஆனி உத்தரத்தன்று தீர்த்தம் நிகழும் வகையில் 10 நாள் முன்னதாக வருடாந்த அலங்கார உற்சவத் திருவிழா ஆரம்பமாகும். திருவிழாவானது பெருவிழாவாகக் கொண்டாட ஊர் ஒன்று கூடும். சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளி (எஸ்.ஆர்.எம்.மேனிலைப்பள்ளி) சென்னையை அடுத்துள்ள அம்பத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். இது ஆற்காடு சர் ராமசுவாமி முதலியாரின் நினைவை நிலைநிறுத்தும் வண்ணம் 1958இல் அ.மு.மு. அறக்கட்டளையினால் தொடங்கப்பட்ட பள்ளி ஆகும். 13-ஏக்கர் நிலத்தில் 60 லட்ச ரூபாய் (அன்றைய) மதிப்பில் இப்பள்ளி நிறுவப்பட்டது. 1978-இல் இருபாலர் மேல்நிலைப்பள்ளியாக மேம்படுத்தப்பட்டது. தற்போது ஏறத்தாழ 2500 மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். அம்பத்தூர்-வெங்கடாபுரத்தில் நடேச அய்யரால் தொடங்கப்பட்ட திண்ணைப்பள்ளியே இன்றைய எஸ்.ஆர்.எம்.மேனிலைப்பள்ளியின் வித்தாகும். 1927 ஆம் ஆண்டில் அம்பத்தூர் கல்விக்கழகத்தால் தத்தெடுக்கப்பட்ட இப்பள்ளி ஸ்ரீ மகா கணேசா வித்யாலயா என்ற பெயரில் இயங்கி வந்தது. 1950-களில் நிகழ்ந்த தொழில் விரிவு அம்பத்தூரை மையங்கொண்டிருந்தது; அவ்விரிவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய தொழிலதிபர்கள் அ.மு.மு.முருகப்ப செட்டியார், அ.மு.மு.அருணாச்சலம் ஆகியோர். வேகமாக வளர்ந்து வந்த அம்பத்தூருக்கு ஒரு உயர்நிலைப்பள்ளியின் தேவையை உணர்ந்த அம்பத்தூர் கல்விக்கழகத்தார் இவ்விரு தொழிலதிபர்களையும் சந்தித்துப் பேசினர். அ.க.கழகம் மனமுவந்து அளித்த ஸ்ரீ மகா கணேசா வித்யாலயாவை அ.மு.மு.அறக்கட்டளை 12-09-1957 அன்று முறைப்படி ஏற்றுக்கொண்டது. பல புதிய திட்டங்களோடு பள்ளியின் வளர்ச்சியை மேம்படச் செய்தது அ.மு.மு.அறக்கட்டளை. பள்ளியின் முதல் தாளாளர் எம்.எம். முத்தைய்யா மற்றும் முதல் தலைமையாசிரியர் சி.ஆர்.இராமனாதன் ஆகியோரின் முயற்சியால் பள்ளி மென்மேலும் வளர்ந்தது. 1958இல் பொதுக்கல்வித் துறையின் ஒப்புதல் பெற்று முறையே பள்ளியில் நான்காவது, ஐந்தாவது மற்றும் ஆறாவது படிவம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. பள்ளியும் தற்போதுள்ள இடமான சென்னை-திருவள்ளூர் நெடுஞ்சாலைக்கு இடம் மாற்றப்பட்டது. நிரந்தரமான உட்கட்டமைப்பு வசதிகளை கோரமாண்டல் பொறியியல் நிறுவனம் மிகக்குறுகிய காலகட்டத்தில் செய்து தந்தனர். 22-6-1960 இல் அன்றைய தமிழக முதலமைச்சர் காமராசர் முன்னிலையில் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் சர் ராமசுவாமி முதலியாரின் உருவப்படத்தைத் திறந்து வைத்ததன் மூலம் பள்ளி புதிய சகாப்தத்தை நோக்கி அடியெடுத்து வைத்தது. பிறகு 4-07-1960 அன்று பள்ளியைக் காண வருகை புரிந்தனர் அ.மு.மு.முருகப்ப செட்டியார் மற்றும் அ.மு.மு.அருணாச்சலம் - அவர்களுடன் வந்தார் சர் ராமசுவாமி முதலியார். அன்று தொடங்கியது தான் சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப்பள்ளி. சுனிதா வில்லியம்ஸ் சுனிதா வில்லியம்ஸ் (பிறப்பு: செப்டம்பர் 19, 1965) ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார். இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் பிறந்த வில்லியம்ஸ் யூக்ளிட், ஒஹைய்யோவில் பிறந்தார், மசாச்சூசெட்ஸ் இல் நீடாம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1983 இல் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க கப்பற்படை அகாதமியில் இருந்து அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டத்தை 1987 இல் பெற்றார், 1995 ஆம் ஆண்டு புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருந்து பொறியியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். அமெரிக்க கப்பல்படையில் இளநிலை அதிகாரியாக பணி புரியும் வாய்ப்பை அமெரிக்க கப்பல்படை அகாதமியிடம் இருந்து மே 1987 இல் வில்லியம்ஸ் பெற்றார். 1989 இல் கப்பல்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், கப்பல்படையின் சோதனை பைலட் பள்ளியில் 1993 இல் பட்டம் பெற்றார். நாசாவால் ஜூன் 1998 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட வில்லியம்ஸ் தனது பயிற்சியை ஆகஸ்டு 1998 இல் துவக்கினார். அவரது விண்வெளி வீரருக்கான பயிற்சியில், பழக்கமடைதல் விவரங்கள் மற்றும் விளக்கங்கள், ஏராளமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விளக்கங்கள், விண்வெளிக் கலம் மற்றும் விண்வெளி நிலைய அமைப்புகளில் செறிவான விளக்கங்கள், டி-38 விமான பயிற்சிக்கு தயாரிப்பு செய்யும் வகையிலான உடல்ரீதியான பயிற்சி மற்றும் தரை கல்வி, அத்துடன் நீர் மற்றும் இனம்புரியாத இடங்களில் உயிர்தப்பிக்கும் நுட்பங்களை கற்பது ஆகியவை அடக்கம்.மூன்று முறை நடந்து விண்வெளியில் அதிகமுறை நடந்திருக்கும் பெண் என்னும் சாதனையை காத்ரின் தார்ன்டன் செய்திருந்தார், அதனை இவர் முறியடித்தார். அதன்பின் அவரது சாதனையை முறியடித்து பெகி விட்சன் அதிக விண்வெளி நடை சாதனை பெண்ணாக ஆனார். பயிற்சி மற்றும் மதிப்பீடு காலத்தைத் தொடர்ந்து, வில்லியம்ஸ் மாஸ்கோவில் ரஷ்ய விண்வெளி அமைப்புடன் இணைந்து அவிநிக்கு ரஷ்யா பங்களிக்கும் பணியிலும், அவிநி க்கு அனுப்பப்பட்ட முதல் விண்வெளிப் பயண குழுவிலும் செயலாற்றினார். விண்வெளி பயணம் 1 முடிந்து திரும்பியதும், வில்லியம்ஸ் ISS ரோபாடிக் உறுப்பில் ரோபாடிக் கிளையிலும் அது தொடர்பான "சிறப்பு நோக்க லாவக மெனிபுலேட்டர்" (Special Purpose Dexterous Manipulator) இலும் பணிபுரிந்தார். நீமோ 2 திட்டத்தில் ஒரு குழு உறுப்பினரான அவர், மே 2002 இல் ஒன்பது நாட்களுக்கு நீர் வாழ்விடத்தில் நீருக்கடியில் வசித்தார். வில்லியம்ஸ் நாசாவின் விண்வெளி வீரர் அலுவலகத்தின் துணைத் தலைவராக (2008 இன் படி) பணியாற்றுகிறார். பல விண்வெளி வீரர்களைப் போல, வில்லியம்சும் ஒரு உரிமம் பெற்ற அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர் ஆவார், 2001 இல் டெக்னிசியன் பிரிவு உரிமம் தேர்வில் தேர்ச்சி பெற்றார், பெடரல் தொடர்பு வாரியம் இவருக்கு அழைப்பு குறியீடு KD5PLB ஐ ஆகஸ்டு 13இல் வழங்கியது. ISS இல் இருந்த இரண்டு அமெச்சூர் வானொலி நிலையங்களில் ஒன்றைப் பயன்படுத்தி அவர் பள்ளிக் குழந்தைகளுடன் பேசினார். STS-116 உடனான சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி பயணம் 14 உறுப்பினர்களுடன் இணைந்து கொள்வதற்காக டிசம்பர் 9, 2006 இல் டிஸ்கவரி விண்வெளிக் கலத்தில் வில்லியம்ஸ் அனுப்பப்பட்டார். ஏப்ரல் 2007 இல், ரஷ்ய உறுப்பினர்கள் சுழற்சி செய்யப்பட்டனர். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வில்லியம்ஸ் தன்னுடன் எடுத்துச் சென்ற சொந்த பொருட்களில், ஒரு பகவத் கீதை புத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் இருந்தன. டிஸ்கவரியில் சென்ற பின், வில்லியம்ஸ் தனது குதிரைவால் தலைமுடியை "லாக்ஸ் ஆஃப் லவ்" அமைப்புக்கு அளிக்க ஏற்பாடு செய்தார். சக விண்வெளி வீரரான ஜோன் ஹிக்கின்பாதம் முடிவெட்டியதானது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு உள்ளாக நிகழ்ந்தது. அத்துடன் இந்த குதிரைவால் முடியானது பூமிக்கு கொண்டுவரப்பட்டது. வில்லியம்ஸ் தனது முதல் "கூடுதல்வாகன செயல்பாட்டை" (extra-vehicular activity) STS-116 இன் எட்டாவது நாளில் மேற்கொண்டார். 2007 ஜனவரி 31, பெப்ரவரி 4, மற்றும் பெப்ரவரி 9, 2007 ஆகிய நாட்களில் அவர் "மைக்கேல் லோபஸ்" (அல்ஜீரியா) உடன் இணைந்து ISS இல் இருந்து மூன்று விண்வெளி நடைகளை நிறைவு செய்தார். இந்த நடைகளில் ஒன்றின்போது ஒரு புகைப்படக்கருவி அவிழ்ந்து, அநேகமாக இணைப்பு சாதனம் செயலிழந்து இருக்கலாம், வில்லியம்ஸ் செயல்படும் முன்பே வான்வெளியில் மிதந்தது. மூன்றாவது விண்வெளி நடையின் போது நிலையத்திற்கு வெளியே மொத்தம் 6 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்த வில்லியம்ஸ் ஒன்பது நாட்களில் மூன்று விண்வெளி நடைகள் மேற்கொண்டார். நான்கு விண்வெளி நடைகளில் அவர் 29 மணிகள் மற்றும் 17 நிமிடங்களைப் பதிவு செய்தார், ஒரு பெண் மேற்கொண்ட அதிக விண்வெளி நடை நேரத்திற்கான காத்ரின் சி. தார்ன்டன் செய்திருந்த சாதனையை அவர் விஞ்சினார். டிசம்பர் 18, 2007 இல், விண்வெளி பயணம் 16 இன் நான்காவது விண்வெளிநடையின் போது, பெகி விட்சன் வில்லியம்சை விஞ்சினார், அதுவரையான மொத்த EVA நேரம் 32 மணி, 36 நிமிடங்கள் உடன். மார்ச் 2007 ஆரம்பங்களில் கொஞ்சம் கூடுதல் காரமான உணவு வேண்டும் என்று அவர் கோரியதை அடுத்து ஒரு புரோகிரஸ் விண்கல பயணத்தில் ஒரு டியூப் வசாபியை அவர் பெற்றார். டியூபைத் திறந்து ஒரு வளிமண்டல அழுத்தத்தில் அடைக்கப்பட்டிருந்த ஜெல் போன்ற பசை ISS இன் குறைவான அழுத்தத்தில் பிதுக்கி எடுக்கப்பட்டது. சாதாரணமாக பறக்கும் சுற்றுப்புறத்தில், காரமான சுடுபீச்சினை அடக்கி வைப்பது கடினம். ஏப்ரல் 16, 2007 இல், சுற்றிலிருக்கும் ஒரு விண்வெளி வீரர் கலந்து கொள்ளும் முதல் மராத்தானில் ஓடினார். 2007 பாஸ்டன் மராத்தானை வில்லியம்ஸ் நான்கு மணி நேரம் 24 நிமிடங்களில் பூர்த்தி செய்தார். பிற குழு உறுப்பினர்கள் அவருக்கு உற்சாகமூட்டினர், ஓட்ட இடைவெளிகளில் ஆரஞ்சுகள் கொடுத்தனர் எனக் கூறப்படுகிறது. வில்லியம்சின் சகோதரியான தினா பாந்த்யா, மற்றும் சக விண்வெளி வீரரான கரேன் எல். நைபெர்க் ஆகியோர் பூமியில் இந்த மராத்தானில் கலந்து கொண்டனர், வில்லியம்ஸ் அவர்களின் ஓட்ட விவரங்களை திட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து பெற்றார். 2008 இல், வில்லியம்ஸ் மீண்டும் பாஸ்டன் மராத்தானில் கலந்து கொண்டார், இந்த முறை பூமியில் இருந்து. அதே வருடத்தில், டுயல் விளையாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. பதில்கள் இவ்வாறு இருந்தன: லண்டன், நியூயார்க், சர்வதேச விண்வெளி நிலையம், பாரிஸ். மிகச் சரியான விடை ISS என்பதாகும். வில்லியம்ச்சை STS-117 பயணத்திட்டத்தில் அட்லாண்டிஸ் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப அழைப்பது என்று ஏப்ரல் 26, 2007 இல் முடிவு மேற்கொள்ளப்பட்டதால், அவரால் அமெரிக்காவின் தனிநபர் விண்வெளிவிமான சாதனையை முறியடிக்க முடியவில்லை, அந்த சாதனை சமீபத்தில் முந்தைய குழு உறுப்பினரான கமாண்டர் "மைக்கேல் லோபஸ்" (அல்ஜீரியா) மூலம் முறியடிக்கப்பட்டது. ஆயினும் அவர் அதிக காலம் ஒற்றை விண்வெளிவிமானப் பயணம் செய்த பெண்ணுக்கான சாதனையை செய்திருக்கிறார். வில்லியம்ஸ் STS-117 இல் திட்ட நிபுணராகப் பணியாற்றி, பூமிக்கு STS-117 பயணத் திட்ட முடிவில் ஜூன் 22 2007 அன்று பூமி திரும்பினார். விண்வெளிக் கலமான "அட்லாண்டிஸ்" கலிபோர்னியாவின் எட்வர்ட்ஸ் விமானப் படை விமானத்தளத்தை EDT நேரப்படி காலை 3:49 க்கு தொட்டது, சாதனை அளவாக 195 நாளை விண்ணில் கழித்த வில்லியம்ஸ் தாயகம் திரும்பினார். பயணத்திட்ட மேலாளர்கள் அட்லாண்டிஸை மொஜாவே பாலைவனத்தின் எட்வர்ட்ஸ் பகுதிக்கு திருப்ப நேர்ந்தது, ஏனென்றால் மோசமான காலநிலை காரணமாக கேப் கனவிரலில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் தரையிறக்க முடியாமல் முந்தைய 24 மணி நேரத்தில் மூன்று தரையிறங்கும் முயற்சிகளை அவர்கள் தவிர்க்கும் நிர்ப்பந்தம் நேர்ந்தது."மீண்டும் நல்வரவு, ஒரு பெரும் பயணத்திட்டத்தை மேற்கொண்டமைக்கு வாழ்த்துக்கள்" விண்கலம் தரையிறங்கியதும் நாசா திட்ட கட்டுப்பாட்டு குழுவினர் வில்லியம்ஸ் மற்றும் மற்ற ஆறு குழு உறுப்பினர்களுக்கும் இவ்வாறு வாழ்த்து கூறினர். தரையிறங்கிய பிறகு, 41 வயது சுனிதா ஏபிசி தொலைக்காட்சி நிறுவனத்தினால் "அந்த வாரத்தின் சிறந்த மனிதராக" தேர்ந்தெடுக்கப்பட்டார். நோயுடன் போராடி தங்கள் தலைமுடியை இழந்திருப்போருக்கு உதவும் வகையில் டிசம்பரில் தனது நீண்ட முடியை அவர் தியாகம் செய்ததை அந்த தொலைக்காட்சி நினைவுகூர்ந்தது. செப்டம்பர் 2007, சுனிதா வில்லியம்ஸ் இந்தியாவுக்கு பயணம் வந்தார். 1915 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியால் அமைக்கப்பட்ட ஆசிரமமான சபர்மதி ஆசிரமத்திற்கும், குஜராத்தில் தனது முன்னோர்கள் வாழ்ந்த கிராமமான ஜுலாசானுக்கும் அவர் சென்று பார்வையிட்டார். அவருக்கு உலக குஜராத்தி சமூகம் வழங்கிய "சர்தார் வல்லபாய் படேல் விஸ்வ பிரதீபா விருது" கிடைத்தது, இந்த விருதைப் பெறும் முதல் இந்திய குடியுரிமை இல்லாத வெளிநாடு வாழ் இந்தியர்" இவராவார். தனது சகோதரி மகன் பிறந்தநாளை ஒட்டி தனது உறவினர் வீட்டுக்கும் அவர் சென்றிருந்தார். அக்டோபர் 4 2007இல் அமெரிக்க தூதரக பள்ளியில் பேசிய வில்லியம்ஸ், பின் இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டிலை ராஷ்டிரபதி பவனில் சந்தித்தார். வில்லியம்ஸ் மைக்கேல் வில்லியம்சை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இந்த இருவருக்கும் திருமணமாகி 16 வருடங்களுக்கும் அதிகமாக ஆகிறது, இருவருக்கும் குழந்தைகள் இல்லை என்றாலும், இவர்கள் கோர்பி என்ற பெயரில் நாய் ஒன்றினை வளர்க்கிறார்கள். அவரது பொழுதுபோக்கு ஆர்வங்களில் ஓடுவது, நீந்துவது, பைக் ஓட்டுவது, டிரையத்லான் விளையாட்டு, காற்றோட விளையாட்டு, பனிச்சறுக்கு மற்றும் வில் வேட்டை விளையாட்டு ஆகியவை அடக்கம். அவர் பாஸ்டன் ரெட் சாக்ஸ் இன் பரம ரசிகர். அவரது பெற்றோரான தீபிகா பாந்த்யா மற்றும் போனி பாந்த்யா, மசாசூசெட்ஸ் பால்மவுத்தில் வசிக்கிறார்கள். தீபக் பாந்த்யா ஒரு புகழ்பெற்ற நியூரோஅனாடமிஸ்ட். வில்லியம்சீன் தந்தை வழி உறவுகள் குஜராத்தில் இருக்கின்றனர். அவர் தனது தாய் வழியான சுலோவீனிய வம்சாவளியாவார். சட்ஜம் சட்ஜம் அல்லது ஷட்ஜம் எனப்படுவதுஇந்திய இசைப்பிரிவுகளில் ஒன்றான கருநாடக இசையில் உள்ள ஏழு சுவரங்களான 'ச-ரி-க-ம-ப-த-நி'யில் முதலாவது ஆகும். சட்ஜம் அல்லது ஷட்ஜம். இது அடிப்படை (ஆதார) சுவரம் எனப்படும். சட்ஜ என்பதற்கு மற்ற ஆறு சுவரங்களுக்கு தாயானவள் பொருள் கொள்ளலாம். ஏழு சுவரங்களின் பெயர்கள்: ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜம் மற்றும் பஞ்சமம் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும். குறுங்கடன் குறுங்கடன் ("Microcredit") என்பது சிறிய தொகையை கடனாக வழங்குவதிலிருந்து உருவாகி வந்த ஒரு பொருளாதாரத் தத்துவம். முறையாக வேலையில்லாத, ஆண்டில் ஒரு சில காலங்களுக்கு மட்டும் வேலை உள்ள ஏழை மக்களை சுயதொழில் முனைவோராக உருவாக்குவது இதன் நோக்கம். இத்தகையோருக்கு வழமையான நிதி அமைப்புகளான தனியார் மற்றும் அரசு வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெறுவதற்கு போதுமான கல்வி அறிவோ அடமானமாக வைக்க அசையும்/அசையா சொத்துக்களோ இருக்காது. அத்தகைய மக்களுக்கும் நிதிச்சேவையை கொண்டு சேர்க்கும் குறுங்கடன், குறுநிதிமேலாண்மையின் ("Microfinance") ஓர் அங்கம் ஆகும். நிதித்துறையில் தோன்றிய ஒரு முக்கிய கண்டுபிடிப்பான குறுங்கடன் வங்கதேசத்தின் கிராமின் வங்கி வங்கியின் மூலமே முதன்முதலில் வெளிக்கொணரப்பட்டதாக கருதப்படுகிறது. வங்கதேசத்தில் கிரமீன் வங்கியானது குறுங்கடன் வழங்குவதில் சிறப்பான வெற்றியைப் பெற்று அந்நாட்டில் ஏழைகளை சுயதொழிலில் ஈடுபடச் செய்து வருமானத்திற்கு வழி செய்தது மட்டுமல்லாமல் வறுமையை ஒழித்து செல்வத்தை பெருக்கியும் உள்ளது. குறுங்கடன் துறையின் இந்த வெற்றி காரணமாக தொன்றுதொட்ட முறையில் இயங்கிவரும் வங்கிகளும் கூட ஏழை மக்களை தக்க முறையில் பகுப்பு செய்து அவர்களை கடன்கொடுப்பதற்கு உரியவர்களாக அடையாளம் காணத் தொடங்கியிருக்கின்றன. துவக்கத்தில் குறுங்கடன் துறையின் மீது பாராமுகமாக இருந்த மிகப்பெரிய நிதி நிறுவனங்கள் கூட தங்கள் நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஒரு முக்கிய துறையாக அடையாளம் கண்டுவருகின்றன. ஐநா 2005-ஆம் ஆண்டை சர்வதேச குறுங்கடன் ஆண்டு-ஆக அறிவித்திருந்தது. குறுங்கடனை இந்தியச் சூழலில் புரிந்துகொள்ள முயல்வோம். காய்கறிக் கடை, பெட்டிக் கடை, பால் வியாபாரம், தின்பண்டங்கள் விற்றல், கூடைமுடைவோர் போன்ற சிறு வணிகர்கள் தங்களுக்கு வேண்டிய மூலதனத்தை அமைப்பு சாரா தனி நபர்களிடமே கடனாகப் பெறுகின்றனர். அப்படிப் பெறப்படும் கடன் தொகைக்கு வட்டி மிக அதிகமாக வருடத்திற்கு 200% என்ற அளவில் கூட இருக்கும். இத்தகைய வட்டித் திட்டங்கள் மக்களிடையே கந்து வட்டி, ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி என்ற பெயர்களில் புழங்குகின்றன. இவ்வாறு அதிக வட்டியை செலுத்த வேண்டியிருப்பதால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடிவதில்லை. அத்தகையோர்க்கு அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் குறைந்த வட்டியில் கொடுக்கும் குறுங்கடன்கள் வரப்பிரசாதம் ஆகும். சமீபத்திய வரலாற்றைப் பார்க்கும் போது குறுங்கடன் வெவ்வேறு தருணங்கலில் புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம். ஜொனாதன் ஸ்விப்ட் (Jonathan Swift) என்பவர் 18-ஆம் நூற்றாண்டின் மத்தியில் 18,19-ஆம் நூற்றாண்டுகளில் நிலவிவந்த ஐரியக் கடன் திட்டங்களினால் தாக்கமடைந்திருந்தார். தனிமனித சுதந்திரவாதியான லிசாண்டர் ஸ்பூனர் (Lysander Spooner) ஏழ்மையை விரட்ட ஏழைகளுக்கு தொழில் தொடங்குவதற்காக வழங்கப்படும் சிறுசிறு கடன்கள் எவ்வாறு பயனளிக்கின்றன என எழுதினார். இரண்டாம் உலகப் போரின் முடிவில் கொண்டுவரப்பட்ட மார்ஷல் திட்டத்தில் குறுங்கடன் திட்டமும் சேர்க்கப்பட்டது. எனினும் மிகச்சமீபமாக கிராமின் வங்கி மற்றும் சில வங்கதேச நிதி நிறுவனங்கள் மூலமாக எழுபதுகளில் துவங்கிய இதன் அவதாரமானது ஒரு முக்கிய துவக்கப் புள்ளி எனலாம். அதன் பின்னரே குறுங்கடனானது உலகளாவிய பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் கவனம் பெற்றது. குறுங்கடன் பொதுவான நிதி-கடன் கொள்கைகளிலிருந்து மாறுபட்டு தனிப்பட்ட கொள்கை/தத்துவங்களின் அடிப்படையில் செயல்படுவதாகும். குறுந்தொழில் செய்பவரின் தொழில் விரிவாக்கம், வேலைவாய்ப்பை ஏற்படுத்துதல், நம்பிக்கை ஏற்படுத்துதல் மேலும் குறுந்தொழில் தொடங்க ஆரம்ப மூலதனம் வழங்கல், பிரச்சனைகளின் போது உதவுதல் ஆகியவற்றுக்கு குறுங்கடன் முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு கருவியாக செயல்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் சேமிப்பு சார்ந்த குறுநிதிமேலாண்மையானது ஏழைக் குடும்பங்களுக்கு குறைந்த செலவில் நிதிச்சேவைகளை வழங்கும் திட்டமாக அடையாளம் பெற்றுள்ளது. உதாரணமாக, இந்தியாவில், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியான NABARD, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் 500-க்கும் மேற்பட்ட வங்கிகளுக்கு கடன் வழங்குகிறது. ஒவ்வொரு சுய உதவிக்குழுவும் 20 அல்லது அதற்கும் குறைவான உறுப்பினர்களைக் கொண்ட சிறிய குழுவாகும். அவற்றில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடி இனப் பெண்களே ஆவர். இவர்கள் ஒருசில ரூபாய்கள் என்ற சொற்ப அளவில் கூடத் தொடங்கி, சேமித்து ஒரு பொது நிதியை பராமரிக்கின்றனர். உறுப்பினர்கள் குடும்பத்தின் அவசரத்தேவைகள் முதற்கொண்டு பள்ளிக்கூட கட்டணம் வரையிலான தேவைகளுக்கு குழுவிடம் கடன் பெறலாம். தங்களால் குழு நிதியை நிர்வகிக்க முடிவதை நிரூபித்தால் அண்மையிலுள்ள வங்கியில் சிறுதொழில் தொடங்கவோ விவசாய வேலைகளுக்கோ குழுவின் பெயரில் கடன் பெற முடியும். குழுவால் நிர்வக்கிக்கப்படும் நிதியைப் போல நான்கு மடங்கு தொகையை வங்கிகள் கடனாக வழங்குகின்றன. குழுக்கள் வருடத்திற்கு 12% முதல் 24% வரையிலான சமச்சீர் வட்டிவிகிதத்தில் திருப்பிச் செலுத்துகின்றன. தற்போது உலக அளவில் 1.4 மில்லியன் சுய உதவிக்குழுக்களைச் சார்ந்த சுமார் 20 மில்லியன் பெண்கள் குறுநிதிமேலாண்மை நிறுவனங்களில் இருந்து கடன் பெற்று வருகின்றனர். இவ்வகையில் இந்தியாவில் உள்ள இந்த சுய உதவிக்குழுக்கள்-வங்கிகள் இணைந்த அமைப்பானது உலகிலேயே பெரிய குறுநிதித் திட்டமாக விளங்குகிறது. இத்தகைய திட்டங்கள் ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் பின்வரும் அமைப்புகளினால் துவக்கப்பட்டு வருகின்றன: Opportunity International, Catholic Relief Services, CARE, APMAS மற்றும் Oxfam. குறுநிதிமேலாண்மை தினசரி வருமானத்தை நம்பி இருக்கும் மக்களுக்கு நிலையான வருமானத்திற்கு வழிவகுப்பதால் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. மக்களின் வாங்கும் திறன் அதிகரிப்பதால் இந்த பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது எனலாம். கோல்டன் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த ஜேசன் கான்ஸ் (Jason Cons) மற்றும் காசியா பாப்ரோகி (Kasia Paprocki) குறுங்கடனின் எதிர்பாராத பக்கவிளைவுகளைக் குறித்து குறைகூறினாலும் அது ”ஏழ்மையைப் போக்க செயல்படும் ஓர் மிகப்பெரும் கருவி” எனபதை ஒப்புக்கொள்கின்றனர். வாருங்கள் சமுதாயத்தில் முதலீடு செய்வோம் - சாணக்கியன் இணைக்கப்படாத தூர மேற்கு வட்டாரம் இணைக்கப்படாத தூர மேற்கு வட்டாரம் ("Unincorporated Far West Region") என்பது ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி ஆஸ்திரேலியாவின் எந்த ஒரு உள்ளூராட்சிப் பகுதியிலும் இது அடங்காது. இதனால் இது இணைக்கப்படாத வட்டாரம் என அழைக்கப்படுகிறது. இவ்வ்வட்டாரம் தூர மேற்கில் அமைந்துள்ளது. இங்கு டிபூபுரா போன்ற சிறு நகரங்கள் அமைந்துள்ளன. இவ்வட்டாரம் புரோக்கன் ஹில் என்ற பெரு நகரைச் சுற்றி இருந்தாலும், புரோக்கன் ஹில் இவ்வட்டார ஆட்சியினுள் வரவில்லை. தூர மேற்கு வட்டாரத்தின் மொத்தப் பரப்பளவு 93,299.2கிமீ² , இது கிட்டத்தட்ட ஹங்கேரியின் பரப்பளவிற்கு ஒப்பானதாகும். 2001 மக்ககள்தொகைக் கணக்கெடுப்பின்படி, இங்கு 2,896 பேர் வாழ்கிறார்கள். இங்குள்ள ஒவ்வொரு 100 பெண்களுக்கும் 134.6 ஆண்கள் வாழ்கின்றனர். பிரான்சீஸ் காப்ரே பிரான்சீஸ் காப்ரே நவம்பர் திங்கள் 23ஆம் தேதி 1953ஆம் ஆண்டில் பிரான்சில் உள்ள ஆகேனில் பிறந்தார். இவர் ஒரு பிரெஞ்சு பாடகரும், பாடலாசிரியரும், கிதார் கலைஞரும் ஆவார். இவரது பெரும்பாலான பாடல்கள் செழுமிசை பாடல்கள் ("Folk songs") ஆகும்; சில பாடல்கள் மட்டுமே புளூஸ் ("Blues") அல்லது நாட்டிசை ("Country music") வகை பாடல்களாகும். http://www.youtube.com/watch?v=Kz-kIrkc-WA ("பிரான்சீஸ் காப்ரேவின் Je t'aimais, je t'aime et je t'aimerai") இசுக்கிரம் இசுக்கிரம் (ஆங்கிலத்தில்: Scrum, உச்சரிப்பு: ஸ்க்ரம்) என்பது ஏசைல் (Agile) மென்பொருள் உருவாக்க முறையியல் வகைகளில் ஒன்றாகும். இது படிப்படியாய் சுழற்சி முறையில் சிக்கலான மென்பொருள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், மென்பொருள் தயாரிப்பிற்கும் மற்றும் மென்பொருள் பயன்பாடுகளை மேம்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு வழிமுறையாகும். இசுக்கிர முறையியல் கென் சுவாபர் (Ken Schwaber) மற்றும் ஜெஃப் சதர்லேண்டு (Jeff Sutherland) ஆகியோரால் 1993 ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்டது. இசுக்கிரம் முதலில் மென்பொருள் மேம்பாட்டு திட்டங்களுக்காகவே முறைப்படுத்தப்பட்டாலும், இன்று பல்வேறு துறைகளில், சிக்கலான திட்டங்களையும் மற்றும் புதுமையான வேலைகளையும் நிறைவேற்றி முடிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு, சாத்தியப்பட்டு வருகிறது. இசுக்கிர கட்டமைப்பு மற்றும் அதன் சொல்லியல் ஆகியவை கருத்தளவில் எளிதாக இருந்தாலும், இதனை செயல்படுத்துவது சிறிது கடினமே. இசுக்கிர அணியின் வெற்றியானது, அது எந்த அளவிற்கு இசுக்கிர கோட்பாடுகளை பின்பற்றி நடக்கிறது என்பதை பொறுத்தது. இசுக்கிரம் முறையியல் பின்வரும் ஏசைல் கொள்கைகளுக்கு (Agile Manifesto) முக்கியத்துவம் அளிக்கிறது. வலதுபுறம் உள்ளவை தேவையில்லை என்பதில்லை, அவற்றைவிட இடதுபுறம் உள்ளவை மேலானது, முக்கியமானது என்பதைத்தான் ஏசைல் வலியுறுத்துகிறது. "இசுக்கிர கட்டமைப்பு" மிகவும் எளிதான ஒரு கட்டமைப்பு ஆகும். ஒவ்வொரு நாளும் இசுக்கிர அணியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினரும் பின்வரும் மூன்று கேள்விகளுக்கு விடையளிப்பர்: இது போன்ற தினசரி சந்திப்புகளால் அணி உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற முடியும். தினசரி இசுக்கிர சந்திப்புகளில் மேலெழும் பிரச்சினைகளை தீர்க்க, இசுக்கிர முதன்மையாளர் அணிக்கு உதவி புரிவார். ஒவ்வொரு விரைவோட்டத்தின் முதல்நாளன்று "விரைவோட்ட திட்ட கூட்டம்" நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தயாரிப்பு உரிமையாளர், இசுக்கிர முதன்மையாளர் மற்றும் அணியினர் ஆகியோர் பங்கேற்பர். அவசியமிருந்தால் பங்குடையோரும் பங்கேற்கலாம். இந்தக்கூட்டம் ஒன்றிலிருந்து இரண்டு மணிநேரம் வரை நீடிக்கும். விரைவோட்டத்தின் கால அளவைப் பொறுத்து அது மாறுபடும். உதாரணமாக, ஒரு நான்கு வார விரைவோட்டத்தின் திட்டமிடல் கூட்டம், சில சமயங்களில் நான்கிலிருந்து எட்டு மணிநேரம் வரை கூட நீடிக்கும். இந்த சந்திப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும். இந்த சந்திப்பு இரண்டு கட்டங்களில் நடைபெறும். இசுக்கிரம் முறையில் ஒரு திட்டம் செயற்கூறுகளாகப் பிரிக்கப்படுகிறது. அந்தச் செயற்கூறுகள் முக்கியத்துவம் அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன. பொதுவாக ஒன்றிலிருந்து நான்கு கிழமைகளில் நிறைவேற்றப்படக்கூடிய செயற்கூறுகள் ஒரு தொகுதியாக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொகுதியும் நிறைவேற்றப்படவேண்டிய பணிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு தொகுதி இறுதியிலும் மெய்த்தேர்வு செய்யப்பட்ட (பரிசோதிக்கப்பட்ட) 'செயல்புரியும் மென்பொருள்' உருவாக்கப்படும். இவ்வாறு ஒன்றிலிருந்து நான்கு கிழமைகளில் ஒரு தொகுதியை நிறைவேற்றி, செயல்புரியக்கூடிய, விற்பனைக்கு தகுதிவாய்ந்த மென்பொருளை உருவாக்கலை விரைவோட்டம் (Sprint) என்பர். தொடர்புசார் மாதிரி தொடர்புசார் மாதிரி என்பது தரவுத்தள வடிவமைப்பு, பயன்பாடு, மேலாண்மைய நெறிப்படுத்தும் ஒரு தரவுத்தள மாதிரி. இது First-order logic அடிப்படையிலானது. இந்த மாதிரியை ஐ.பி.எம் நிறுவனத்தைச் சார்த Edgar F. Codd என்பவர் "A Relational Model of Data for Large Shared Data Banks" என்ற ஆய்வுக்கட்டுரையில் 1970 ம் ஆண்டு வெளியிட்டார். இன்று பயன்பாட்டில் இருக்கும் பெரும்பான்மை தரவுத்தளங்கள் இந்த மாதிரியைப் பின்பற்றுகின்றன. இது கணித்துறையில் ஒரு புரட்சியைக் கொண்டுவந்தது எனலாம். வரிசைப் பட்டியல் வரிசைப் பட்டியல் என்பது தரவுகளை ஒழுங்கமைத்து காட்சிப்படுத்த உதவும் ஒரு தகவல் வெளிப்படுத்தல் முறையாகும். வரிசைப் பட்டியல்கள் தொடர்பாடல், ஆய்வு, தரவு பகுப்பாய்வு துறைகளில் பரந்த பயன்பாட்டில் இருக்கின்றன. ஒரு வரிசைப் பட்டியல் வரிசைகளையும், நிரல்களையும் கொண்டிருக்கிறது. செயல்வழிப் படம் செயல்வழிப் படம் என்பது ஒரு செயலாக்கத்தை அல்லது படிமுறைத்தீர்வை விபரித்து வெளிப்படுத்த பயன்படும் ஒரு வரைபடம் ஆகும். இப்படம் ஒவ்வொரு படிநிலைகளையும் தொடக்கம் முதல் முடிவு வரை, அவற்றின் செயல்வழிகளை விபரித்து வரையப்படுகிறது. இப் படங்கள் பகுப்பாய்வில், வடிவமைப்பில், ஆவணப்படுத்தலிலில், பராமரிப்பில் மிக்கப் பயன்படுகின்றன. குறியாக்கவியல் மறையீட்டியல், குறியாக்கவியல், மறைப்பியல் அல்லது கமுக்கவியல் ("cryptography") என்பது எவ்வாறு தகவலை மறைத்து பரிமாறி, மீட்டெப்பது என்பது பற்றியதன் இயல் ஆகும். இவ்வியல் கணிதம், கணினியியல், பொறியியல் துறைகளின் ஒரு கூட்டுத் துறையாக இருக்கிறது. கணினி கடவுச்சொல், இணைய வணிகம், கணினி பாதுகாப்பு, தன்னியக்க வங்கி இயந்திரம் போன்றவை மறையிட்டியலின் பயன்பாடுகளில் அடங்கும். மறையீட்டியல் என்பது ஒரு செய்தியை மறைத்து சங்கேத வார்த்தையாக்கி பிறகு மீண்டும் பழயபடி செய்தியை கொண்டுவரும் முறையாகும். இதனை ஆங்கிலத்தில் encryption மற்றும் decryption என்று அழைப்பர். தகவல் மறைத்த சங்கேத குறியீடுகள் cipher எனப்படும் அவை படிக்கமுடியாதவையாக இருக்கும். இதனை உடைக்கும் முறைக்கு மறையீட்டியல் பகுப்பு அதாவது Cryptanalysis ஆகும். பண்டையக் காலங்களில்யிருந்தே சங்கேத குறியீடு பகிர்வு மூலமாக மறையீட்டியல் பயன்பட்டு வருகிறது. இவை போர்க்களங்களில் செய்திகளை தனது படைகளுடன் பரிமாறிக்கொள்ள உதவின. இம்முறையை கிரேக்கர்கள் பயன்படுத்தியற்கான சான்றுகள் உள்ளன. சீசர் ரகசிய எழுத்துகள் முறை (Ceaser cipher) மிகவும் எளிதான மறையீட்டியல் முறையாகும். ஆங்கில எழுத்துகளின் வரிசைகளை களைத்து இவை எழுதப்பட்டன. இதன் மூலம் 25 வகையான சொல் வரிசையை அமைக்கமுடியும். உதாரணமாக, Plaintext(p): the quick brown fox jumps over the lazy dog Ciphertext(C): WKH TXLFN EURZQ IRA MXPSV RYHU WKH ODCB GRJ இங்கு சீசர் படிமுறைத்தீர்வு C = p + 3 என்ற முறைப்படி மாற்றப்பட்டுள்ளது. கணினி கண்டுபிடிப்புக்கு பிறகு இவற்றின் பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இன்று பாதுகாப்பான பண பரிமாற்றம், கணினி தகவல் பரிமாற்றம் மற்றும் இன்னும் பல இவற்றின் முக்கிய பங்களிப்பு. இதனால் மறையீட்டு பொறியியல், கணினி பாதுகாப்பு பொறியியல் என புதிய கல்வி முறைகள் உருவாகியுள்ளன நவீன மறையீட்டியலில் கணினியின் பங்கு மிகப்பெரியது. இன்று எழுத்துகளுக்கு பதிலாக பைனரி கோடுகளை (0,1) பயன்படுத்தபடுகிறது. அது அவற்றின் நீளத்தை பொறுத்து 32 பிட், 56 பிட், 128 பிட் மற்றும் 168 பிட்டுகளாக கமுக்கம் செய்யப்படுகிறது. அவற்றை பகுப்பது சிரமம் என்றாலும் கணினி ஹக்கெர்கள் சில மென்பொருட்களை பயன்படுத்தி பொது மறையீட்டியல் படிமுறைத் தீர்வு மூலம் உடைத்து பிரித்துவிடுகின்றனர். உயிரியளவியல் உயிரியளவியல் ("biometrics") என்பது மனிதர்களின் ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட உடல் அல்லது நடத்தை ரீதியான உள்ளார்ந்த தனிப்பட்ட அம்சத்தை தனித்துவமான முறையில் அடையாளம் காண்பதற்கான முறையாகும். தகவல் தொழில்நுட்பத்தில், அடையாள அணுகல் மேலாண்மையாகவும் அணுகல் கட்டுப்படுத்தலாகவும் உயிரியளவுகள் பயன்படுத்தப்படுகிறது. கண்காணிப்புக்கு உட்பட்டிருக்கும் நபர்கள் குழுவாக இருக்கும் போது அவர்களை அடையாளம் கண்டுபிடிப்பதற்காகவும் இது பயன்படுகிறது. உயிரியளவுகளின் சிறப்பியல்புகளை இரு முக்கிய பிரிவுகளாக பிரிக்கலாம்: குரலும் உடலியக்கவியலின் தனிக்கூறாகும். ஏனெனில் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமான குரல் தடம் உள்ளது. ஆனால் குரலை அடையாளம் காணும் முறை என்பது ஒரு மனிதன் பேசும் விதத்தை ஆய்வு செய்வதாகும். இது பொதுவாக நடத்தை சார்ந்த பிரிவில் வகைப்படுத்தப்படுகிறது. பின்வரும் அளவுருக்களைக் கொண்டு உயிரியளவுகளுக்காக ஒரு மனித சிறப்பியல்புகளைப் பயன்படுத்த முடியுமா என்பதைப் புரிந்துக்கொள்ள முடியும்: பின்வரும் இரண்டு முறைகளில் உயிரியளவுகள் கருவி இயக்கப்படுகின்றது: முதல் முறையாக ஒருவர் உயிரியளவுகள் கருவியைப் பயன்படுத்தும் நிகழ்வு "சேர்க்கை" என்று அழைக்கப்படும். சேர்க்கையின் போது ஒரு நபரின் உயிரியளவுகள் தகவல்கள் சேமித்து வைக்கப்படும். பின்னர் ஒவ்வொரு முறையும் சேர்க்கையின் போது சேமித்து வைக்கப்பட்ட தகவல்களோடு உயிரியளவுகள் தகவல் ஒப்பிடப்பட்டு அடையாளம் கண்டுபிடிக்கப்படும். உயிரியளவுகள் முறைமை மிகவும் அதிக செயல்திறன் மிக்கதும் சிறப்பானதுமாக இருக்க வேண்டுமானால் அந்த முறைமைகளின் சேமிப்பு மற்றும் மீட்பு செயலாக்கங்கள் மிகவும் அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். கருவிக்கும் உண்மையான உலகத்திற்கும் இடையே உள்ள இடைமுகம் முதல் பகுதி (sensor) ஆகும். அடையாளம் காணலுக்கு தேவையான எல்லா தரவையும் அது பெறவேண்டும். பெரும்பாலான நேரங்களில் இது படத்தைப் பெறும் கருவியாகவே உள்ளது. ஆனால் தேவையான சிறப்பியல்புகளுக்கு ஏற்றார் போல் அது மாறலாம். இரண்டாவது பகுதி செயலாக்கத்திற்கு முன்பு தேவைப்படும் பின்வரும் எல்லா செயல்களையும் செய்கிறது: சென்சாரிலிருந்து தேவையற்றதை அகற்றுதல், உள்ளீட்டை மேம்படுத்துதல் (எ.கா. பின்னணி கலப்புகளை நீக்குதல்), சில வகையான இயல்பாக்குதலை பயன்படுத்துதல் போன்ற மற்றும் பல செயல்கள். மூன்றாவது பகுதியில் தேவையான அம்சங்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. இந்தச் செயல்படி மிகவும் முக்கியமானதாகும். இந்தச் செயல்படியில், உகந்த முறையில் சரியான உருவங்களைப் பிரித்தெடுக்கவேண்டும். எண்களின் வெக்டார் அல்லது குறிப்பிட்ட இயல்புகளுடன் உள்ள படம், "வார்ப்புருவை" உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படும். ஆதாரத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருத்தமான சிறப்பியல்புகளின் தொகுப்பே வார்ப்புருவாகும். ஒப்புமை வழிமுறைகளில் பயன்படுத்தப்படாத உயிரியளவுகள் அளவீடு மூலப்பொருட்கள் வார்ப்புருவிலிருந்து நீக்கப்படும். கோப்பின் அளவைக் குறைப்பதற்காகவும் சேர்க்கையில் பங்குக்கொள்பவரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது. சேர்க்கை நடந்துகொண்டிருக்கும் போது வார்ப்புருக்கள் வேறொரு இடத்தில் சேமித்து வைக்கப்படும் (அட்டையிலோ, தரவுத்தளத்திற்குள்ளோ அல்லது இரண்டு முறைகளின் மூலமாகவோ). ஒப்பிடும் கட்டம் செயல்படுத்தப்படும் போது, பெறப்பட்ட வார்ப்புருக்கள் ஒப்பிடுதலுக்கு அனுப்பப்பட்டு முன்பே சேமித்து வைக்கப்பட்ட வார்ப்புருக்களோடு அவை ஒப்பிடப்படும். இந்த முறையின் ஏதேனும் வழிமுறைகளைப் (எ.கா. ஹாமிங் தூரம்) பயன்படுத்தி அவற்றுக்கு இடையே உள்ள தூரம் கணக்கிடப்படும். உள்ளீட்டையும் வார்ப்புருவையும் இந்த ஒப்பிடும் நிரல் பகுப்பாய்வு செய்கிறது. பிறகு இது ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு அல்லது நோக்கத்திற்கு வெளியீடாக இருக்கும் (எ.கா. தடுக்கப்பட்ட பகுதியில் நுழைதலுக்கான அணுகல்). பின்வருவன உயிரியளவுகள் கருவிகளுக்கு செயல்திறன் அளவீடுகளாகப் பயன்படுகின்றன: உயிரியளவுகள் கருவியின் உணர்திறன் அதிகரிக்கும் போது FAR மதிப்பு குறையும் ஆனால் FRR மதிப்பு அதிகரிக்கும். உயிரியளவுகள் முறைகள் மூலம் எடுக்கப்படும் மக்களின் தனிப்பட்ட தகவல்களை எவரேனும் தவறாக பயன்படுத்திவிடக்கூடும் என்ற கவலைகளும் உள்ளன. எ.கா. உலகளவிலான மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கங்கள் மனிதர்களின் தேவையற்ற தனிக்கூறுகளை தீர்மானித்தல். மேலும், உயிரியளவுகள் மூலம் பெறப்படும் தரவுகள், மக்களின் ஒப்புதல் இன்றி பிற வழிகளிலும் பயன்படுத்தப்படலாம். பாதுகாக்கப்பட்ட பொருட்களை திருடர்கள் எடுத்துக்கொள்ள முடியாத போது, அவர்கள்பொருட்களின் உரிமையாளர்களை தாக்கி அந்தப் பொருட்களை எடுத்துக்கொள்ள முயற்சிக்க வாய்ப்புள்ளது. பொருட்கள் உயிரியளவுகள் கருவிகள் மூலம் பாதுக்காப்பாக இருந்தால், அந்தப் பொருட்களின் உரிமையாளர்களுக்கு சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த சேதத்தின் மதிப்பு பாதுகாக்கப்பட்ட பொருட்களை விட அதிகமாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, 2005 ஆம் ஆண்டில் மலேசியாவில் உள்ள கார் திருடர்கள், காரைத் திருடுவதற்கு முயற்சி செய்யும் போது மெசிடெஸ்-பென்ஸ் S-பிரிவு கார் உரிமையாளரின் விரலை துண்டித்துவிட்டனர். உயிரியளவுகள் கடவுச்சொல்லை மீண்டும் பெற முடியும் என்பது இதிலுள்ள ஒரு நன்மையாகும். அடையாளச் சின்னம் அல்லது கடவுச்சொல் காணாமல் போய்விட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ, அதை ரத்து செய்துவிட்டு அதற்கு பதிலாக புதிய ஒன்றைப் பெற்றுக்கொள்ளலாம். இது உயிரியளவுகளில் இயல்பாகக் கிடைக்காது. ஒருவருடைய முகம் தரவுத்தளத்தில் உள்ளதுடன் ஒத்துப்போகாமல் குறை இருந்தால், அதை அவர்களால் ரத்து செய்யவோ மறுபடியும் வேறொன்றை வழங்கவோ முடியாது. ரத்து செய்யக்கூடிய உயிரியளவுகள் என்பது உயிரியளவுகளில் பாதுகாப்பை ஒருங்கிணைக்கவும் உருவங்களை (சிறப்பியல்புகளை) மாற்றீடு செய்வதற்கும் உள்ள ஒரு வழியாகும். ரத்தா போன்றோர் இதை முதன் முதலாக முன்மொழிந்தனர். ரத்து செய்யக்கூடிய உயிரியளவுகளை உண்டாக்குவதற்கு பலவகையான முறைகள் முன்மொழியப்பட்டுள்ளன. முக்கியமாக, ரத்து செய்யக்கூடிய உயிரியளவுகள், ஒப்பிடுதலுக்கு முன்னதாக உயிரியளவுகள் படங்கள் அல்லது உருவங்களை உருமாற்றம் செய்துவிடும். உருமாற்ற அளவுருக்களில் உள்ள மாறுதன்மையே திட்டத்திற்கு ரத்து செய்யக்கூடிய இயல்பைக் கொடுக்கிறது. டோ, சவிடஸ் மற்றும் அது போன்று முன்மொழியப்பட்ட பல உத்திகள் அதனுடைய சொந்த அடையாளம் காணும் இயந்திரம் மூலமாகவே செயல்படுகின்றன. டாபா போன்ற பிற முறைகள் அதனுடைய அடையாளம் காணும் பகுதியைச் செயல்படுத்துவதற்கு நன்கு மேம்பட்ட உயிரியளவுகள் ஆராய்ச்சியின் முன்னேற்றங்களை பயன்படுத்திக்கொள்கின்றன. இது பாதுகாக்கப்பட்ட கருவிகளில் உள்ள கட்டுப்பாட்டை அதிகரித்தாலும், தற்போது கிடைக்கக்கூடிய உயிரியளவுகள் தொழில்நுட்பங்களில் இந்த ரத்து செய்யக்கூடிய வார்ப்புருக்களை மிகவும் அதிகமாக அணுகக்கூடிய வசதியை வழங்குகிறது. 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி தாக்குதலுக்குப் பிறகு தீவிரவாதத்தின் அச்சம் அதிகமானதன் காரணத்தினால் அமெரிக்க அரசாங்கம் உயிரியளவுகளுக்கு அதிகமான ஆதரவளித்து வருகிறது. FBI புதிய உயிரியளவுகள் தரவுத்தளத்தை உருவாக்குவதற்காக தற்போது ஒருபில்லியன் டாலர் பணத்தைச் செலவிடுகிறது. இந்தத் தரவுத்தளத்தில் DNA, கைரேகைகள் மற்றும் பிற உயிரியளவுகள் தரவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம். தரவுத்தளத்தை இயக்கும் கணினிகள், கால்பந்துத்திடலின் அளவில் நிலத்திற்கு கீழே அமைக்கப்படும். ஹோம்லேண்ட் செக்யூரிட்டி மற்றும் DARPA ஆகிய இரண்டு துறைகளுமே, முகம் அடையாளம் காணும் கருவியின் ஆராய்ச்சிகளுக்கு அதிக நிதியுதவி அளித்து வருகின்றன. தகவல்களைச் செயல்படுத்தும் தொழில்நுட்ப அலுவலகம், தூரத்திலிருந்தே மனிதர்களை அடையாளம் காணும் ஒரு திட்டத்தை நடத்தியது. அந்தத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்கள், 500 அடி தூரத்தில் வரும் நபரை, அவருடைய முகத் தோற்றத்தை வைத்து அடையாளம் கண்டுபிடிக்கும் திறனைக் கொண்டவை. 2008 ஆம் ஆண்டில், அமெரிக்க ஒன்றிய ஃபெடரல் அரசாங்கத்தின் செயற்குழு கிளையின் துறைகள் மற்றும் முகமைகளுக்கிடையே புஷ் ஓர் அதிபர் ஆணையை (NSPD 59, HSPD 24) வெளியிட்டார், அது "தனிநபர்களின் உயிரியளவுகள் மற்றும் வாழ்க்கை வரலாறும் சூழ்நிலையும் சார்ந்த தகவல்களின் சேகரித்தல், சேமித்து வைத்தல், பயன்பாடு, பகுப்பாய்வு மற்றும் பகிர்தல்" ஆகியவற்றைப் பகிர்ந்துக்கொள்ளுதலிலும் பரிமாற்று செயல்பாட்டிலும் அதிகமான திறன் கொண்டவையாக மாற்ற வேண்டும் என்று அந்த ஆணையில் கோரப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் தொடங்கி, முகம் சார்ந்த (படத்தை அடிப்படையாகக் கொண்டு) உயிரியளவுகள் தரவு கொண்ட US கடவுச்சீட்டுகள் வழங்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டினால் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரகசியம் ஆகியவற்றுக்கு தீங்கு நேரிடலாம் அது மட்டுமின்றி ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்கள் அவருக்கு தெரியாமலேயே திருடப்படும் ஆபத்தும் இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் இருக்கிறது. இது போன்ற காரணங்களுக்காக பல நாடுகளில் உள்ள கொள்கையாளர்கள் இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை விமர்சித்தனர். உயிரியளவுகள் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களை குற்ற நோக்கத்துடன் ஆராய்ச்சி செய்து கடத்தல் போன்ற செயல்களுக்கு பயன்படுத்தப்படக்கூடும் என்ற அச்சம் தற்போது அமெரிக்காவில் (மற்றும் ஐரோப்பிய யூனியனில்) நிலவி வருகிறது. அமெரிக்க பாதுகாப்புத் துறை (DoD) காமன் ஆக்சஸ் கார்டு என்பது ஓர் ID (அடையாள) அட்டையாகும். அமெரிக்க இராணுவ தளத்தில் உள்ள அமெரிக்க இராணுவ பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் ஆகியோருக்கு இந்த அட்டை வழங்கப்படுகிறது. இந்த அட்டையில் உயிரியளவுகள் தரவும் டிஜிட்டலாக்கம் செய்யப்பட்ட புகைப்படங்களும் இருக்கும். பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அந்த அட்டையில் லேசர் மூலம் பொறிக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் ஹாலோகிராம்களும் இருக்கும். இதன் மூலம் அடையாள அட்டையை தவறாக பயன்படுத்தும் ஆபத்தைக் குறைக்கலாம். இது போன்று சுமார் 10 மில்லியன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. சான் ஜோஸ் ஸ்டேட் யூனிவர்சிட்டியில் (San Jose State University) உள்ள தேசிய உயிரியளவுகள் பரிசோதனை மையத்தின் இயக்குநரான ஜிம் வேமன் (Jim Wayman) என்பவர் கூறியதாவது: வால்ட் டிஸ்னி வேர்ல்டு மட்டுமே உயிரியளவுகளை வணிக ரீதியாகப் பயன்படுத்தும், தேசத்தின் மிகப்பெரிய ஒரே வணிக நிறுவனமாகும். எனினும், US-VISIT திட்டம், வால்ட் டிஸ்னி வேர்ல்டின் உயிரியளவுகள் பயன்பாட்டின் சாதனையை விரைவில் முறியடிக்கும். ஜெர்மனியில் உள்ள உயிரியளவுகள் சந்தைகள் 2009 ஆம் ஆண்டு வரை மிகவும் அதிகமாக வளர்ச்சியடைய வாய்ப்புள்ளது. "சந்தையின் அளவு தோராயமாக 12 மில்லியனிலிருந்து € (2004) 377 மில்லியன் € (2009) வரை அதிகரிக்கும்”. “ஃபெடரல் அரசாங்கம் இந்த முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கை வகிக்கிறது". முக்கியமாக, உயிரியளவுகள் செயல்முறைகளில் உள்ள கைரேகை மற்றும் முகத்தை அடையாளம் காணும் முறை அரசாங்கப் பணிகளுக்குப் பயனளிக்கக்கூடும். 2005 ஆம் ஆண்டு மே மாதத்தில் e-பாஸை செயல்படுத்துவதற்கு ஜெர்மன் பாராளுமன்றத்தின் மேலவை அங்கிகரித்தது. இ-பாஸ் என்பது ஜெர்மன் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கப்படும் உயிரியளவுகள் தொழில்நுட்பத்தைக் கொண்ட கடவுச்சீட்டாகும். நவம்பர் 2005 ஆம் ஆண்டிலிருந்து இந்த இ-பாஸ் பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த இ-பாஸில் ஒரு சில்லு (சிப்) உள்ளது. அந்த சிப்பில் டிஜிட்டல் புகைப்படமும் ஒவ்வொரு கையிலிருந்தும் ஒரு கை ரேகை எடுக்கப்படும், பொதுவாக பெருவிரல்களின் ரேகை பயன்படுத்தப்படும். ஒருவேளை ஒருவர் அவருடைய பெருவிரல்களை இழந்திருந்தால் அல்லது அது மிகவும் சிதைந்திருந்தால் மற்ற விரல்களின் ரேகைகள் பயன்படுத்தப்படும். “மூன்றாவது உயிரியளவுகள் அடையாளம் கண்டுபிடிக்கும் அம்சமான – கருவிழித்திரை ஸ்கேன்கள் ஆகும் – அவை பிற்காலத்தில் பயன்படுத்தப்படலாம்”. உயிரியளவுகள் தொழில்நுட்பம் ஜெர்மனியில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மன் எல்லைப்பகுதிக்கு உட்பட்ட குடிமக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக மட்டுமின்றி வீசா-வழங்கும் நாடுகளில் உயிரியளவுகள் கடவுச்சீட்டுகள் அறிமுகப்படுத்துவதற்கு US கொடுத்த கெடுவும் இதற்கு முக்கிய காரணமாக உள்ளது. ஜெர்மனி, ஜெர்மன் குடிமக்களுக்கு உயிரியளவுகள் கடவுச்சீட்டுகளை உண்டாக்கியிருக்கிறது. அது மட்டுமில்லாமல் அந்நாட்டிற்குள் இருக்கும் வருகையாளர்கள் வீசாக்களுக்கு விண்ணப்பம் செய்வதற்கு புதிய நிபந்தனைகளை ஜெர்மன் அரசாங்கம் உருவாக்கியுள்ளது. "மூன்று மாதங்களுக்கும் மேலாக தங்குவதற்கு வீசா எடுத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த திட்டமிடப்பட்ட உயிரியளவுகள் பதிவு திட்டத்தின் மூலம் பாதிக்கப்படுவார்கள். புதிதாகக் கொடுக்கப்படும் வீசாக்களில் கைரேகை அச்சு, விழித்திரை ஸ்கேன் மற்றும் டிஜிட்ட்டல் புகைப்படங்கள் ஆகியவை இருக்கும்”. ஜெர்மன் ஒலிம்பிக் விளையாட்டுகளில் விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காக உயிரியளவுகள் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு செய்த நாடுகளில் முதல் நாடு ஜெர்மனி ஆகும். “ஒலிம்பிக் விளையாட்டுகள் எப்போதுமே பதட்டமான நிகழ்வுடன் தொடர்புடையது மற்றும் முந்தைய தீவிரவாதத் தாக்குதல் நிகழ்வுகளும் நடந்துள்ளன, குறிப்பாக ஜெர்மனி 1972 ஆம் ஆண்டில் நடத்திய விளையாட்டுக்களில் 11 இஸ்ரேலிய தடகள வீரர்கள் கொல்லப்பட்டனர்”. உயிரியளவுகள் தொழில்நுட்பம் 2004 ஆம் ஆண்டில் கீரீஸின் ஏதென்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் கோடைகால விளையாட்டுகளில் முதன்முறையாக பயன்படுத்தப்பட்டது. “இந்தத் திட்டத்தில் பதிவு செய்யும் போது, அதிகாரம் பெற்ற பார்வையாளர்கள் தங்கள் கைரேகை உயிரியளவுகள் தகவல் இடம்பெற்ற அடையாள அட்டைகளைப் பெறுவர், அவற்றை இயங்கச்செய்வதன் மூலம் மட்டுமே 'ஜெர்மன் ஹவுஸுக்குள்' அவர்களால் செல்ல முடியும். விளையாட்டு வீரர்கள், பயிற்சிப் பணியாளர்கள், அணி மேலாளர்கள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் போன்றவர்கள் அதிகாரம் பெற்ற பார்வையாளர்கள் பட்டியலில் அடங்குவர்”. உயிரியளவுகள் தகவல் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, செல்வாக்கு மிக்க ஹேக்கர் குழுவான கேயாஸ் கம்ப்யூட்டர் கிளப் ஜெர்மன் உள்துறை அமைச்சர் உல்ஃப்கேங் ஸ்கூவபில்லின் கைரேகையை தனது பத்திரிகையான "டேடன்செலூடரின்" மார்ச் 2008 பதிப்பில் வெளியிட்டது. அந்த பத்திரிகையில் வெளியிடப்பட்டிருந்த கைரேகைப் படத்தை வாசகர்கள் கைரேகை ரீடரில் பயன்படுத்தி ஏமாற்ற முடியும். 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரேசில் குடிமக்கள் பயனர் அடையாள அட்டை வைத்திருக்கின்றனர். ஃபெடரேட்டிவ் குடியரசின் அப்போதைய தலைநகரமாக இருந்த ரியோ டி ஜெனிரோவில் டாக்டர் ஃபெலிக்ஸ் பேச்சிக்கோ தலைமையில் பிரேசில் அரசாங்கம் கைரேகை சார்ந்த உயிரியளவுகளைப் பின்பற்ற முடிவெடுத்தது. டாக்டர் பேச்சிக்கோ இதற்கு முன்பு முழுமையான டென்பிரிண்ட் வகைப்பாட்டு முறைகளைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான டாக்டர் ஹுவான் ஊஸ்டிச்சின் நண்பராவார். ஊஸ்டிச் முறை பிரேசிலில் மட்டுமல்லாமல் பெரும்பாலான மற்ற தென் அமெரிக்க நாடுகளிலும் பின்பற்றப்படுகிறது. 1999 ஆம் ஆண்டில் பிரேசிலின் பழமையான மற்றும் பாரம்பரியமான ID நிறுவனம் (Instituto de Identificação Félix Pacheco) குடியியல் மற்றும் குற்றம் தொடர்புடைய AFIS முறையுடன் DETRAN ஐ (DMV துறைக்கு சமமான பிரேசிலியத்துறை) ஒருங்கிணைத்தது. பிரேசிலின் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்கள் விருப்பத்திற்கேற்ப அடையாள அட்டையை அச்சிட அனுமதிக்கப்பட்டது, ஆனால் அதன் அமைப்பு மற்றும் தகவல் அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். ரியோ டெ ஜனெய்ரோவில் அச்சிடப்பட்ட அடையாள அட்டைகள் 2D பார் கோட் பயன்படுத்தி முழுமையாக டிஜிட்டலாக்கம் செய்யப்பட்டிருந்தது, இதன் மூலம் அதன் உரிமையாளர் இணைப்பில் இல்லாத நிலையிலும் பொருத்திப்பார்க்க முடிந்தது. அந்த 2D பார் கோடில் வண்ணப் புகைப்படம், கையெழுத்து, இரண்டு கைரேகைகள் மற்றும் மற்ற குடிமக்கள் தகவல் போன்றவை குறியீடாக்கம் செய்யப்பட்டிருக்கும். இந்தத் தொழில்நுட்பம் 2000 ஆம் ஆண்டில் பிரேசில் அடையாள அட்டைகளின் பாதுகாப்பு மேம்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டின் இறுதியில், பிரேசில் அரசாங்கம் தனது புதிய கடவுச்சீட்டை உருவாக்கத் தொடங்கியது. 2007 இன் ஆரம்பத்தில் பிரேசிலியாவில் புதிய ஆவணங்கள் வெளியிடுவது தொடங்கப்பட்டது. லேசர் துளையமைப்பு, UV மறைப்புக் குறியீடுகள், மாறுபட்ட தகவலின் மீது பாதுகாப்பு அடுக்கு மற்றும் பல போன்ற பல்வேறு பாதுகாப்பு சிறப்பியல்புகள் அந்த புதிய கடவுச்சீட்டில் இடம்பெற்றிருந்தது. கடவுச்சீட்டு விண்ணப்பத்தின் போது பிரேசில் குடிமக்களிடமிருந்து அவர்களின் கையெழுத்து, புகைப்படம் மற்றும் 10 சுருட்டப்பட்ட கைரேகைகள் போன்றவை சேகரிக்கப்படுகிறது. அனைத்து தகவல்களும் ICAO E-கடவுச்சீட்டு தரத்தில் சேமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு உள்ளடக்கத்தின் தொடர்பில்லாத மின்னணுவியல் வாசிப்புக்கு அனுமதிக்கிறது, மேலும் குடிமக்களின் அடையாள சரிபார்ப்பில் கைரேகை வார்ப்புருக்கள் மற்றும் டோக்கன் முகம் சார்ந்த படங்கள் போன்ற தகவல்கள் தானியங்கு அங்கீகரித்தலுக்குக் கிடைக்கும். உயிரியளவுகள் ஈராக்கில் விரிவாக பயன்படுத்தப்படுகிறது, பல ஈராக்கியர்களுக்கு ஏமாற்றப்படுவதிலிருந்து அவர்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சரிபார்க்கத்தக்க அடையாளம் காட்டும் அட்டை வழங்குவதற்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த கணக்கு உருவாக்கத்தின் போது, திரட்டப்பட்ட உயிரியளவுகள் தகவல் மையத் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட பின்னரே பயனரின் சுயவிவரம் உருவாக்கப்படும். ஈராக்கியர் ஒருவர் தனது அடையாள அட்டையைத் தொலைத்துவிட்டால் கூட அவரது தனித்த உயிரியளவுகள் தகவலுடன் சரிபார்க்கப்பட்டு அவரை எளிதில் அடையாளம் காண முடியும். தனிப்பட்ட சொந்த வரலாறு போன்ற கூடுதல் தகவல்களும் ஒவ்வொரு கணக்கிலும் பதிவு செய்து வைத்திருக்க இயலும். இது ஒருவர் முற்காலத்தில் பிரச்சினைக்குரிய விசயத்தில் தொடர்புடையவராக இருக்கிறாரா என்று அமெரிக்கப் படைகள் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும். BISA என்ற ஒரு முறையே ஈராக்கில் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில் ஸ்மார்ட் கார்டு மற்றும் பயனரின் ஒரு உயிரியளவுகள் தகவல் (கைரேகைகள், கருவிழித்திரை மற்றும் முகப் புகைப்படம்) போன்றவை பயன்படுத்தப்பட்டு அவர் குறிப்பிட்ட தளம் அல்லது இடத்தைப் பயன்படுத்துவதற்கு அங்கீகரிக்கப்பட்டவரா என்று உறுதி செய்துகொள்ளலாம். பிற முறை BAT என்று அழைக்கப்படுகிறது, இது பயோமெட்ரிக் ஆட்டோமேட்டட் டூல்செட் என்பதன் குறுக்கம் ஆகும். ஜப்பானில் உள்ள பல்வேறு வங்கிகள் தங்களது ATMகளில் [[உள்ளங்கை]] நரம்பு அங்கீகரிப்பையோ அல்லது விரல் நரம்பு அங்கீகரிப்பு தொழில்நுட்பத்தையோ பின்பற்றுகின்றன. உள்ளங்கை நரம்பு அங்கீகரிப்புத் தொழில்நுட்பம் ஃபூஜிட்சு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, பிற நிறுனங்களுடன் ஒப்பிடுகையில் இதன் தவறான ஏற்றுக் கொள்ளல் வீதம் 0.01177% ஆகவும் தவறான மறுப்பு வீதம் 4.23% ஆகவும் இருக்கிறது. விரல் நரம்பு அங்கீகரிப்பு தொழில்நுட்பம் ஹிட்டாச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது, இதன் தவறான ஏற்றுக் கொள்ளல் வீதம் 0.0100% ஆகவும் தவறான மறுப்பு வீதம் 1.26% ஆகவும் இருக்கிறது. விரல் நரம்பு அங்கீகரிப்புத் தொழில் நுட்பம் சுமிடோமோ மிட்ஸ்யூ நிதி சார்ந்த குழு, மிசுஹூ நிதி சார்ந்த குழு மற்றும் ஜப்பான் அஞ்சல் வங்கி போன்ற வங்கிகளால் நெடுங்காலமாக பின்பற்றப்படுகிறது. உள்ளங்கை நரம்பு அங்கீகரிப்புத் தொழில்நுட்பம் டோக்கியோ-மிட்சுமிஷி UFJ வங்கி போன்ற வங்கிகளால் பின்பற்றப்படுகிறது. கைரேகை ஸ்கேனர்கள் சில பள்ளிகளில் பெற்றோர்களால், உணவுக்கு கொடுக்கப்பட்ட பணத்தின் கணக்கிலிருந்து பணத்தின் மதிப்பைக் கழிக்கும் வசதியை வழங்கப் பயன்படுத்தப்படுகிறது. குழந்தைகள் எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை மதிப்பிடுவதற்காக பெற்றோருக்கு ஊட்டச்சத்து அறிக்கைகள் அளித்தல் போன்றவற்றுக்கும் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற செயல்கள் இளம் சமூகத்தின் சுதந்திரத்தை அவர்களிடமிருந்து பறிக்கும் செயல் என சுதந்திரக் குழுக்கள் கேள்வி எழுப்பிவருகின்றன. மற்றொரு பிரச்சினையாக பள்ளிக்கு உணவு வழங்குவோரிடமிருந்து NHS மற்றும் காப்புறுதிக் குழுக்கள் போன்ற உடல்நிலை தொடர்பான சேவைகள் வழங்கும் தன்னார்வக் குழுக்களுக்கு தகவல் வெளியாகும் சாத்தியமுள்ளதால், அது தனியாளர்கள் சமத்துவமான சேவைகளைப் பயன்படுத்தும் ஆற்றலில் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும். ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு, தங்கள் விசா மற்றும் பாஸ்போட்டுகளுடன் அவர்களை இணைக்கும் ஸ்மார்ட்கேட் முறையில் ஒரு பகுதியாக விரைவில் உயிரியளவுகள் அங்கீகரிப்பும் சேர்த்து சமர்ப்பிக்கச் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உயிரியளவுகள் தகவல் ஏற்கனவே குடி நுழைவு (இமிக்ரேஷன்) துறையால் சில வீசா விண்ணப்பித்தவர்களிடம் பெறப்பட்டிருக்கிறது. உயிரியளவுகள் தனியுரிமைக் குறியீடு முறையை அறிமுகப்படுத்திய முதல் நாடு ஆஸ்திரேலியா ஆகும், இது உயிரியளவுகள் நிறுவனத்தால் நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. உயிரியளவுகள் இரகசியக் குறியீடு உயிரியளவுகள் நிறுவனம் ஆஸ்திரேலிய தனியுரிமை சட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது. இந்த தனியுரிமை நெறிகளில் தனியுரிமைச் சட்டத்தில் குறைந்தபட்சம் ஆஸ்திரேலிய தேசிய தனியுரிமைக் கொள்கைகளுக்கு (NPPகள்) நிகரானதனியுரிமைப் பாதுகாப்புத் தரநிலைகளையும் அது போன்ற சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுடன் தொடர்புடைய உயர் தரநிலைகளையும் கொண்டுள்ளது. உயிரியளவுகள் நிறுவனத்தில் உறுப்பினர்கள் மட்டுமே இந்தக் குறியீட்டிற்கு சந்தாதாரராக தகுதியுடையவர்கள் ஆவர். உயிரியளவுகள் நிறுவன உறுப்பினர் தகுதி மற்றும் அதன் இந்தக் குறியீட்டிற்கான சந்தாதாரராதல் போன்றவை தனிப்பட்ட விருப்பத்திற்கு உட்பட்டவையாகும். கனடா எல்லைப் பாதுகாப்பு மற்றும் குடி நுழைவு போன்ற துறைகளில் உயிரியளவுகள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான ஆய்வுகளைத் தொடங்கியுள்ளது. கனடாவின் குடியுரிமை மற்றும் குடி நுழைவு மற்றும் கனடா எல்லைப்பகுதி சேவைகள் முகமை ஆகியவையே கனடாவில் முழுவதுமாக இத்தொழில்நுட்பத்தைச் செயல்படுத்திய முதல் அரசு நிறுவனங்கள் எனலாம். இஸ்ரேலிய அரசாங்கம் அனைத்து குடிமக்களின் தரவுத்தளத்தை உருவாக்குவதற்கான மசோதாவை தாக்கல் செய்துள்ளது. குடிமகக்கள் அனைவரும் அதற்கு இணங்கி தங்கள் கைரேகைகள், முகத்தோற்றங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த மசோதாவுக்கு 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் வாக்களிப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய இஸ்ரேலிய அறிவியலறிஞர்கள் மற்றும் பாதுகாப்பு நிபுணர்கள் உள்ளிட்டோர் முன்மொழியப்பட்ட இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள், இது போன்ற தரவுத்தளங்கள் உருவாக்கப்பட்டால் மக்களின் சுதந்திரம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு இரண்டுமே பாதிப்படையலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர், ஏனெனில் இந்தத் தகவல்கள் குற்றவாளிகள் அல்லது பகையுணர்வுள்ள தனிநபர்களுக்கு கிடைத்தால் அவர்கள் அதனைக் குடிமக்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம். ஒளியணுவியல் ஒளியணுவியல் என்பது ஒளியை உற்பத்தி செய்தல், உமிழ்தல், பரப்புதல், பண்பேற்றல், குறைகை முறைவழியாக்கல், ஆளிதிருப்பல், பெருக்குதல், உணர்தல் உட்பட பல செயற்பாடுகளை ஆயும் இயல் ஆகும். ஒளித் தொடர்பாடல் (Optical communication), கதிரொளி மின்கலம் (Solar cell), ஒளிகாலும் இருமுனையம் என பல முக்கிய பயன்பாடுகள் இத்துறைக்கு உண்டு. குறிப்பாக இக்காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நுண் ஒளியணுவியல் கருவிகள் (micro photonics equipment), பல இடங்களில் இலத்திரனியல் கருவிகளை மேலும் திறைமையாக ஈடு செய்து வருகின்றன. இருபது20 இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டையாட வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்க்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான பொடியை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது. முதலாவது உலக இருபது20 போட்டிகள் தென்னாபிரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இதன்போது இந்திய துடுப்பாட்ட அணி வெற்றியப் பெற்றது 2016 ஆம் ஆண்டு இந்தியாவில் 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்றன. 2009 நடைப்பெற்ற இறுதிப்போட்டியில் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி வெற்றியைப் பெற்றது. இப்போட்டிகள் சர்வதேச கிரிக்கட் சங்கத்தினால் நடாத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டியில் 12 அணிகள் போட்டியிடுகின்றன.இப் போட்டிகள் இரண்டு வருடங்ளுக்கு ஒருமுறை நடாத்தப்படுகின்றது. இது 2007ஆம் ஆண்டு முதல் நடாத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு நாடும் பன்னாட்டுப் போட்டியொன்றில் முதலில் பங்கெடுத்த நாள் அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளது. பதுஅ உலக இருபது20 போட்டிகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 30 பெப்ரவரி 30 சில நாள்காட்டிகளில் குறிக்கப்படுகிறது. எனினும், கிரெகொரியின் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு 28 அல்லது 29 நாட்களே உள்ளன. சுவீடன் பேரரசு (அந்நாளில் பின்லாந்து உள்ளடக்கியிருந்தது) 1700 ஆம் ஆண்டில் ஜூலியன் நாட்காட்டியிலிருந்து கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாற அதனைக் கடைபிடிக்க அடுத்த 40 ஆண்டுகளுக்கு நெட்டாண்டு நாளை விடுவிக்க திட்டமிட்டிருந்தனர். அதன்படி 1700 பெப்ரவரியில் விடுவித்திருந்தாலும் பெரும் வடக்குப் போரின் கவனத் திருப்பலால் 1704 மற்றும் 1708 ஆண்டுகளில் அவ்வாறு செய்ய மறந்து நெட்டாண்டு நாட்களாகவே வைத்திருந்தனர். குழப்பங்களையும் மேலும் எழும் தவறுகளைத் தவிர்க்கவும், அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஒரு நாள் கூட்டப்பட்டு பெப்ரவரி 30 உருவானது. ஜூலியன் நாட்காட்டியில் அது பெப்ரவரி 29 இற்கும் கிரெகொரியின் நாட்காட்டியில் அது மார்ச் 11 இற்கும் இணையானதாகும். பின்னர் 1753-இல் பெப்ரவரியின் கடைசி பதினோரு நாட்களை விடுவித்து இறுதியாக சுவீடன் கிரெகொரியின் நாட்காட்டிக்கு மாறியது. மிகுதியான செய்திகள் சோவியத் கூட்டாட்சியில் 1929 - 1940 கால கட்டத்தில் 30 நாட்கள் கொண்ட மாதங்கள் வழமையிலிருந்ததாகக் கூறினாலும், மற்ற செய்திகளிலிருந்தும் கிடைத்த அந்த கால நாட்காட்டி தாள்களையும் கொண்டும் பார்க்கையில் அங்கு கிரெகோரியின் நாட்காட்டியே வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது. அதனால் சோவியத் நாட்காட்டியில் பெப்ரவரி 30 இருந்ததில்லை. கிமு 45 மற்றும் கிமு 8 இடைப்பட்ட காலகட்டங்களில் 13ம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்றுப்படி ஜூலியன் நாட்காட்டியில் பெப்ரவரிக்கு நெட்டாண்டுகளில் 30 நாட்கள் இருந்தன; பின்னரே தனது வளர்ப்பு தந்தை ஜூலியஸ் சீசர் நினைவாக பெயர் கொண்ட சூலை மாதம் 31 நாட்களைக் கொண்டிருந்ததைப் போல தன் பெயர் கொண்ட ஆகஸ்ட் மாதமும் 31 நாட்களைக் கொண்டிருத்தல் வேண்டும் என அகஸ்ட்டஸ் சீசர் பெப்ரவரியின் நீளத்தைக் குறைத்தான் என்பது 13ஆம் நூற்றாண்டு அறிஞர் சாக்ரோபோஸ்கோவின் கூற்று. இருப்பினும் வரலாற்று ஆதாரங்கள் இக்கூற்றை, அலெக்சாண்டரின் நாட்காட்டியுடன் ஒரு நாளுக்கு இரு தேதிகள் செய்தி உள்ளிட, மறுக்கின்றன. ஜூலியன் நாட்காட்டியில் இது தொடர்புள்ள செய்தியையும் பார்க்கவும். சில செயற்கையான நாட்காட்டிகள் கூட பெப்ரவரிக்கு 30 நாட்கள் கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, வானிலை பற்றிய முன்மாதிரியில் புள்ளிவிவரங்களை எளிதாக்க 30 நாட்கள் கொண்ட 12 மாதங்கள் எடுத்துக்கொள்ளப்படலாம். இது ஒரு எடுத்துக்காட்டு: பொது சுழற்சி முன்மாதிரி பஞ்சமம் இந்திய இசைப்பிரிவுகளில் ஒன்றான கருநாடக இசையில் உள்ள ஏழு சுவரங்களான 'ச-ரி-க-ம-ப-த-நி'யில் ஐந்தாவது பஞ்சமம். ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து) "பண்சமம்" பஞ்சமம் ஆனதென்றும் கொள்ளலாம். ஏழு சுவரங்களின் பெயர்கள்: ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜமும் பஞ்சமமும் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும். சமுத்திரக்கனி சமுத்திரக்கனி () தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும், தொலைக்காட்சி நாடக இயக்குநரும் ஆவார். 2010 ஐசிசி உலக இருபது20 2010 ஐசிசி உலக இருபது20 2010 ஏப்ரல் 23 தொடக்கம் மே 9 ஆம் நாள் வரை மேற்கிந்தியத்தீவுகளில் நடைபெற்றது. ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடர் 2007 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு அதுமுதல் இராண்டாண்டுக்கொருமுறை நடைப்பெற்றாலும் இம்முறை 2009 ஐசிசி உலக இருபது போட்டிகள் நடந்து பத்தே மாதங்களில் 2010 ஆண்டு நடைபெற உள்ளது. 2008 ஆம் ஆண்டு பாக்கிஸ்தானில் நடைபெறவிருந்து பாதுகாப்பு குறைப்பாடுகள் காரணமாக பிற்போடப்பட்ட ஐசிசி வாகையர் கோப்பை இன்னும் நடைபெறாததன் காரணமாக 2010 மேற்கிந்தியத்தீவுகளில் நடைப்பெற இருந்த ஐசிசி வாகையர் கோப்பை ஐசிசி உலக இருபது20 மாற்றப்பட்டது. குலக்கல்வித் திட்டம் 1953 இல் சென்னை மாநில முதல்வர் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி) தொடக்கக் கல்வி முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வர முயன்றார். மாறுபட்ட தொடக்கக் கல்வித் திட்டம் என்று அதிகாரப் பூர்வமாகப் பெயரிடப்பட்ட அத்திட்டத்தின் கீழ் ஆரம்பப்பள்ளி மாணவர்களின் பள்ளிக்காலம் நாளொன்றுக்கு மூன்று மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. மீதமுள்ள நேரத்தில் அவர்கள் தங்களது பெற்றொரின் தொழிலைக் கற்றுக்கொள்ள வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. இக்கல்விமுறை ஜாதி அமைப்பை பலப்படுத்தும் குலக் கல்வித் திட்டமென திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் எதிர்த்தன. ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பு உருவானதால் அவர் பதவி விலகினார்; திட்டமும் கைவிடப்பட்டது. 1951 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சென்னை மாநிலத்தில் 21 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றிருந்தனர். 1950-51 நிதியாண்டில் சென்னை மாநில அரசு தொடக்கக் கல்விக்காக 6.87 கோடி ரூபாய்கள் செலவு செய்தது. இது அரசின் மொத்த வருவாயில் 11.5 விழுக்காடு. பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகளிடையே பள்ளியில் சேர்த்தல் விகிதம் 47.8 ஆக இருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுக் கோட்பாடுகள் (Directive principles) இந்திய அரசை அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கல்வியளிக்கும்படி பணிக்கின்றன. இதற்கிணங்க சென்னை மாநில அரசின் கல்வித் துறை பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் அனைவருக்கும் கல்வி வழங்க 1950 இல் ஒரு பத்தாண்டுத் திட்டத்தைத் தீட்டியது. இத்திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக ஐந்து லட்சம் மாணவர்களை பள்ளிகளில் சேர்க்க வேண்டும்; அதற்காக ஆண்டொன்றுக்கு ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்க வேண்டும். ஆனால் 1950-51 நிதியாண்டில் இதற்காக ஐந்து லட்சம் ரூபாய்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டது. ஒரு மாணவருக்கு கல்வியளிக்க ஆண்டொன்றும் ரூ. 22.80 செலவானது. இதில் அரசு ரூ.16.30 ஐ மட்டுமே அளித்து வந்தது. இவ்வாறான பற்றாக்குறை செயல்பாடுகளால் பள்ளியில் விலகும் மாணவர் விகிதம் கூடுதலாக இருந்தது. 1946-47 கல்வியாண்டில் பள்ளியில் முதலாம் வகுப்பில் சேர்ந்த 12,22,775 மாணவர்களில் 4,61,686 (37%) பேர் மட்டுமே 1950-51 கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பில் இருந்தனர். இத்தகைய கல்விச்சூழல் நிலவிய போது தான் ராஜாஜியின் காங்கிரசு அரசு சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பேற்றது (ஏப்ரல் 10, 1952). 1939ல் ராஜாஜி சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த போது இது போன்ற ஒரு சீருதிருத்த முயற்சியினை மேற்கொண்டார். அதன்படி மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரைப் பயிலும் மாணவிகளும் பட்டியல் சாதிகளைச் சேர்ந்த மாணவர்களும் நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் பள்ளி வந்தால் போதும், மற்ற பொழுதுகளை பெற்றோருக்கு ஒத்தாசையாகக் கழிக்கலாம். 1949-50 காலகட்டத்தில் பி. எஸ். குமாரசாமி ராஜா முதல்வராக இருந்த போது பத்து வட்டங்களில் சோதனை அடிப்படையில் பள்ளிகளில் நேர சுழற்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பின்பு பிற பகுதிகளிலும் விருப்பமிருந்தால் தேர்ந்தெடுக்கலாம் என்ற அடிப்படையில் விரிவாக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்திய பள்ளிகள் இரு நேரசுழற்சிகளாக செயல்பட்டன. இரு வேளையும் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மாதம் 10 ரூபாய் கூடுதல் ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை பரவலாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. 1951ல் மாநிலத்தில் இருந்த 38,687 தொடக்கப்பள்ளிகளில் 155 மட்டுமே இம்முறையை செயல்படுத்தி வந்தன. 1952 இல் சென்னை மாநிலத்தில் படிப்பறிவு கொண்டவர் 21 சதவிகிதம் மட்டுமே. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கூறியுள்ளபடி அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வி அளிப்பது மத்திய, மாநில அரசின் கடமையாகும். சென்னை மாநிலத்தில் மட்டும் இதற்காக வருடம் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு தேவைப்பட்டது. ஆனால் அரசால் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கல்விக்காக ஒதுக்க முடியவில்லை. எனவே ராஜகோபாலாச்சாரியின் காங்கிரசு அரசாங்கம், செலவில்லாமல், அதிக குழந்தைகளுக்கு பள்ளிக் கல்வி அளிக்க ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்தது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள்: இத்திட்டம் முதலில் 1953-54 கல்வியாண்டில் கிராமப்புற பள்ளிகளில் மட்டும் அறிமுகப் படுத்தப்பட்டது. அதை படிப்படியாக மாநிலம் முழுவதும் 35000 பள்ளிகளில் அமல்படுத்த அரசு திட்டமிட்டது. இத்திட்டத்தினால் ஆசிரியர்களுக்கு வேலை நேரம் கூடினாலும், அதற்கான ஊதியம் வழங்கப்படவில்லை. திட்டத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியான நாள் முதல் மாநிலமெங்கும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. திராவிட கழகம், திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் இதனை எதிர்த்தன. திராவிட இயக்கத்தினர் இத்திட்டம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் பிராமணர்களின் ஆதிக்கத்தை நிரந்தரமாக்கக் கொண்டு வரப்பட்ட திட்டமெனக் குற்றஞ்சாட்டினர். திட்டத்தின் எதிர்ப்பாளர்கள் அதன் மேல் வைத்த குற்றச்சாட்டுகள்: 1953 ஏப்ரல் மாதத்தில் இத்திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டது. அடுத்த இரு மாதங்களில் அதற்கு எதிராக பெரியாரின் தி.க வும் அண்ணாத்துரையின் திமுகவும் பல போராட்டங்களை நடத்தின. ராஜகோபாலாச்சாரி திட்டத்திற்கு ஆதரவாக வானொலியிலும், நாளிதழ்களிலும் பிரச்சாரம் செய்தார். ஜூலை மாதம் சட்டமன்றம் கூடிய போது போராட்டங்கள் தீவிரமடைந்தன. சென்னையில் திட்டத்திற்கெதிராக கண்டன ஊர்வலம் நடத்திய திமுகவினர் பலர் கைது செய்யப்பட்டனர். சட்ட மன்றத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்திற்கு எதிராகக் கொண்டு வந்த தீர்மானம் 139-138 என்ற வாக்கு வித்தியாசத்தில் (பேரவைத் தலைவரின் வாக்குடன்) தோற்கடிக்கப்பட்டது. அடுத்து கம்யூனிஸ்ட் கட்சியினர் திட்டத்தை கிடப்பில் போட்டு ஆய்வு செய்வதற்காக கொண்டு வந்த தீர்மானம் 138-137 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பருலேக்கர் என்ற கல்வியாளர் தலைமையில் அதனை ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆகஸ்ட் 1953 இல் பருலேக்கர் குழு இத்திட்டம் முறையானதுதான் என்று அறிக்கை வெளியிட்டது. ஆனால் அதற்குள் பொதுமக்களுள் பெரும்பாலானோர் திட்டத்திற்கு எதிராகத் திரும்பியிருந்தனர். ஆளும் காங்கிரசு உறுப்பினர்களுக்குள்ளும் அதற்கு பலத்த எதிர்ப்பு உருவானது. ஆனால் ராஜகோபாலாச்சாரி திட்டத்தை கைவிடப் போவதில்லை என உறுதியாக இருந்தார். இதனால், அவரை பதவியிலிருந்து இறக்க கட்சிக்காரர்கள் தயாராகினர். இதனை அறிந்த ராஜகோபாலாச்சாரி, மார்ச் 1954 இல் தன் பதவியை ராஜினாமா செய்தார். அவருக்குப் பின் முதல்வராகிய காமராஜர் குலக்கல்வித் திட்டத்தின் எதிர்ப்பாளர். மே 18 1954 இல் கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியம், பொது மக்களின் எதிர்ப்பால் திட்டம் கைவிடப்படுவதாக சட்டமன்றத்தில் அறிவித்தார். காமராஜின் ஆட்சி காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து கூடுதல் நிதி ஒதுக்கியதால், மாணவர்கள் பள்ளியில் சேரும் எண்ணிக்கை பத்தாண்டுகளுக்குள் இரட்டிப்பானது. சங்கர் கணேஷ் சங்கர் கணேஷ் என அறியப்படும் இரட்டையர்கள் இந்திய திரையிசை உலகில் தமிழ்,தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களுக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருபவர்கள். அவர்கள் தங்கள் இசைப் பயணத்தை தமிழ் திரையுலகின் மற்றொரு இசையமைப்பாளர் இரட்டையர் விசுவநாதன்- இராமமூர்த்தி மேற்பார்வையில் ஆரம்பித்தனர். அவர்களது முதல் படம் 1967ஆம் ஆண்டில் மகராசி மற்றும் திருப்புமுனையாக அமைந்த படம் ஆட்டுக்கார அலமேலு.. அவர்கள் இசை அமைத்த சில திரைப்படங்கள்: கணக்கெடுப்பில் உள்ள ஊர் கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்பது இந்தியாவில் கீழ்வரும் தரவுகளை கொண்டதாகும்: கணக்கெடுப்பில் உள்ள ஊர் என்பது அயர்லாந்து நாட்டில் பண்ணாகம் பண்ணாகம் கிராமசேவையாளர் பிரிவு (J/175) வலிகாமம் மேற்கு பிரதேசசபைக்குட்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே, வடலியடைப்பு, பனிபுலம், பல்லசுட்டி, கிழக்கே, சித்தங்கேணி, தெற்கே, யாழ்ப்பாணம்-காரைநகர் பெருந்தெரு, தொல்புரம், மேற்கே சுழிபுரம் கிழக்கு ஆகியன அமைந்துள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே தொழிலாகக் கொண்டவர்கள். ஆனால் தற்கால சூழ்நிலையால் வேறு தொழில்கள் செய்வோர் அதிகம் உள்ளனர். பண்ணாகம் அண்ணாகலை மன்ற சிறுவர் பாடசாலை பண்ணாகத்தில் உள்ள சில சங்கங்களும், மன்றங்களும் 1. சிறீமுருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம் 2. பண்ணாகம் தெற்கு ஐக்கிய நாணய சங்கம் 3. பண்ணாகம் மக்கள் சிக்கனக் கடனுதவிக் கூட்டுறவுக் சங்கம் 4. பண்ணாகம் அண்ணாகலை மன்றம் 5. பண்ணாகம் அம்பாள்கலை மன்றம் 6. பண்ணாகம் கிராம அபிவித்திச் சங்கம் 7. பண்ணாகம் மாதர் அபிவிருத்தி சங்கம் 8. பண்ணாகம் இந்து சமய விருத்திச் சங்கம் 9. பண்ணாகம் இளம் விவசாயிகள் கழகம் பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் ("Paikiasothy Saravanamuttu Stadium") கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு பன்பயன்பாட்டு விளையாட்டரங்கமாகும். இது தற்போது கூடுதலாக துடுப்பாட்ட அரங்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வரங்கில் 15,000 பேர் வரை அமரும் வசதிகள் காணப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றிய முதலாவது தேர்வுத்துடுப்பட்டப் போட்டி இங்கேயே நடைப்பெற்றது. இலங்கையின் முன்னாள் அரச அதிகாரியும், தமிழ் யூனியன் கழகத்தின் தலைவராகவும் இருந்த பாக்கியசோதி சரவணமுத்துவின் பெயரால் இம்மைதானம் அழைக்கப்படுகிறது. பி. கக்கன் கக்கன் ("Kakkan", சூன் 18, 1908– டிசம்பர் 23, 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் ஒரு வழக்கறிஞர் ஆவர். கக்கன் சூன் 18, 1907 ஆம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு பறையர் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை "பூசாரி கக்கன்", கிராமக் கோயில் அர்ச்சகராக (பூசாரியாக)ப் பணிபுரிந்தவர். தொடக்கக் கல்வியை மேலூரில் பயின்ற அவர் திருமங்கலம் அரசு மாணவர் விடுதியில் தங்கி பி. கே. என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிப்பை படித்தார். கக்கன் தனது பள்ளி மாணவப்பருவத்திலேயே காங்கிரசு இயக்கத்தில் தன்னை இணைத்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபடலானார். அன்றைய காலகட்டத்தில் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைவது தடை செய்யப்பட்டிருந்தது. இராஜாஜி அரசு கோயில் உள்நுழைவு அதிகாரம் மற்றும் உரிமைச் சட்டம், 1939 என்ற சட்டத்தினைக் கொண்டு வந்ததின் விளைவாகத் பறையர்கள் மற்றும் சாணார்கள் கோயில்களில் நுழைய தடைசெய்யப்பட்டிருந்ததை இச்சட்டம் நீக்கியது. மதுரையில் கக்கன் பறையர்கள் மற்றும் சாணர்களைத் தலைமை தாங்கி மதுரை கோயிலினுள் நுழைந்தார். ஆங்கிலேயனே வெளியேறு இயக்கத்திலும் கக்கன் பங்கேற்று அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். 1946 இல் நடந்த தொகுதிப் பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று 1946 முதல் 1950 வரை உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். கக்கன் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக 1952 முதல் 1957 வரை பொறுப்பு வகித்தார்.காமராசர் தமிழகத்தின் முதல்வர் பொறுப்பை ஏற்கும் பொருட்டு தான் வகித்து வந்த தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டி) தலைவர் பதவியை விட்டு விலகியபொழுது கக்கன் அந்தப் பதவியை ஏற்றார். 1957 இல் இந்திய தேசிய காங்கிரஸ் மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று மதராஸ் மகாணத்தின் ஆட்சி பொறுப்பை ஏற்றது. கக்கன் பொதுப்பணித்துறை, ஆதிதிராவிடர் நல்வாழ்வு, பழங்குடியினர் நலத்துறை ஆகியத் துறைகளின் அமைச்சராக ஏப்ரல் 13, 1957 இல் பொறுப்பேற்று கொண்டார். மார்ச் 13, 1962 முதல் அக்டோபர் 3, 1963 வரை விவசாயத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார். ஏப்ரல் 24, 1962, முதல் வணிக ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அக்டோபர் 3, 1963 அன்று மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்று 1967 வரை அப்பொறுப்பிலிருந்தார். இவர் உள்துறை அமைச்சராக இருந்த போது இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது, அதில் சுமார் 70 மாணவர்கள் துப்பாக்கிச்சூட்டால் இறந்தனர். கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்திற்காக அரிசன சேவா சங்கம் உருவாக்கப்பட்டது. அவர் விவசாய அமைச்சராகப் பொறுப்பில் இருந்த காலத்தில் இரண்டு விவசாயப் பல்கலைக் கழகங்கள் மதராசு மகாணத்தில் துவக்கப்பட்டன. இவர் நாட்டுக்காற்றியப் பணிகளைப் பாராட்டி இந்திய அரசு இவரின் உருவப்படம் பொறித்த சிறப்பு அஞ்சல் தலையை 1999 ஆண்டு வெளியிட்டுக் கௌரவப்படுத்தியது. மேலூர் (தெற்கு) தொகுதியில் 1967 சட்டமன்றத் தேர்தலில் கக்கன் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஒ.பி. ராமனிடம் தோற்றார். இத்தேர்தல் தோல்விக்குப்பின் 1969 முதல் 1972 வரை தமிழ்நாடு காங்கிஸ் குழுத் (கமிட்டித்) தலைவர் பொறுப்பு வகித்தார். 1973 இல் அரசியலில் இருந்து ஒய்வு பெற்றார். கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். மகாத்மா கந்தியின் வழியை பின்பற்றி நடப்பவர். பெரியார் தனது சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான இராமனின் உருவப்படம் எரிப்பு போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார் 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நலக் குறைவால் சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சில நாளில் நினைவிழந்த கக்கன், நினைவு திரும்பாமலேயே 1981 திசம்பர் 23 ஆம் நாள் இறந்தார். 1981ம் ஆண்டு திசம்பர் மாதம் 24 ஆம் நாளில் கண்ணம்மா பேட்டையில் உள்ள இடுகாட்டில் எரியூட்டப்பட்டார். கூட்டமைவு (காண்கலைகள்) காண்கலைகளில், சிறப்பாக ஓவியம், வரைகலை வடிவமைப்பு, நிழற்படவியல், சிற்பம் ஆகியவை தொடர்பில், கூட்டமைவு என்பது ஒரு கலை ஆக்கத்தில் காட்சிக் கூறுகளைக் குறிப்பிட்ட இடங்களில் அமைப்பதைக் குறிக்கும். இதை, கலைக் கொள்கைகளின் அடிப்படையில் குறிப்பிட்ட ஆக்கத்தின் கலைக் கூறுகளை ஒழுங்கமைப்பது எனவும் கூறலாம். கூட்டமைவு என்பது பொதுவாக "ஒன்றாக அமைதல்" என்னும் பொருள் தருகிறது. இசை, எழுத்து போன்ற கலைகளிலும் ஆக்கங்களை உருவாக்குதல் அவற்றின் கூறுகளை ஒன்றாக அமைத்தல் என்பதால் கூட்டமைவு என்னும் கருத்துரு அவ்வாறான கலைகளுக்கும் பொருந்தும். போத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல் போத்துக்கீசரின் முதல் யாழ்ப்பாணத் தாக்குதல் என்பது 1561 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கடல் வழியாகப் படைகளுடன் வந்து, யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமான நல்லூரைத் தாக்கியதைக் குறிக்கிறது. இத்தாக்குதல் போத்துக்கீசர் எதிர்பார்த்தபடி முழுமையான வெற்றியாக அமையாவிட்டாலும், யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார்த் தீவை அவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். 16 ஆம் நூற்றாண்டின் முன்னரைப் பகுதியிலேயே இலங்கையின் கோட்டே இராச்சியத்தில் அரசியலிலும், மதம் தொடர்பிலும் போத்துக்கீசர் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியிருந்தனர். இந்தியாவிலும் அவர்கள் கோவாவைக் கைப்பற்றியிருந்தனர். எனினும் யாழ்ப்பாண இராச்சியத்தின் மீது தொடக்கத்தில் அவர்கள் அதிகம் அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை. 1540 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தின் துறைமுகப் பகுதிகளில் போத்துக்கீசரின் வணிகக் கப்பல்களின் நடமாட்டம் காணப்பட்டது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட சங்கிலி மன்னன் நாட்டின் கடற்பகுதிகளில் போத்துக்கீசர் வருவதினால் ஏற்படக்கூடிய தீய விளைவுகளைப் பற்றி உணர்ந்திருந்தான். இதனால், அவர்களுடைய இந்த நடவடிக்கைகளைத் தடுக்கக் கருதி யாழ்ப்பாணப் பகுதிக்கு வந்த இரண்டு போத்துக்கீச வணிகக் கப்பல்களைத் தாக்கி அவற்றிலிருந்த பொருள்களை எடுத்துக் கொண்டு கப்பல்களை எரித்தும் விட்டான். இது அப்பகுதிகளில் தமது ஆதிக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்த போத்துக்கீசருக்குப் பெரும் சினத்தை ஊட்டியிருக்கவேண்டும். 1543 ஆம் ஆண்டில் மார்ட்டின் அல்போன்சோ த சூசா என்பவனால் 20 கப்பல்களில் அனுப்பப்பட்ட போத்துக்கீசப் படைகள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சங்கிலி மன்னனை மிரட்டின. போத்துக்கீசரின் தலையீட்டை எதிர்பார்த்து ஓரளவுக்குத் தனது படைபலத்தை அதிகரித்திருந்தாலும், நவீன ஆயுதங்களைக் கொண்டிருந்த போத்துக்கீசருடன் போரிடுவது உசிதமானதல்ல என்பதை உணர்ந்த சங்கிலி அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இணங்கச் சம்மதித்தான். இதன்படி கப்பல்கள் அழிக்கப்பட்டதனால் போத்துக்கீசருக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்கு இழப்பீடு வழங்கவும், ஆண்டு தோறும் அவர்களுக்குத் திறை வழங்கவும் ஒத்துக்கொண்டான். இதன்மூலம் நாட்டுக்கு உடனடியாக வரவிருந்த ஆபத்துத் தடுக்கப்பட்டது எனலாம். எனினும் போத்துக்கீசரரினால் யாழ்ப்பாணத்துக்கு ஏற்படக்கூடிய ஆபத்து முற்றாக நீங்கிவிடவில்லை. அந்த ஆண்டிலேயே இன்னொரு உருவில் போத்துக்கீசத் தலையீடு யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டது. தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் மீனவர் ஊர்களில் போத்துக்கீசக் கிறித்தவ மத குருக்கள் தமது மதத்தைப் பரப்புவதில் தீவிரமாக இருந்தனர். அங்கிருந்து அனுப்பப்பட்ட பிரான்சிஸ் சவேரியார் என்னும் ஒரு மதகுரு 1543 ஆம் ஆண்டு பிற்பகுதியில் மன்னாருக்கு வந்து சேர்ந்தார். அவர் அப்பகுதியில் 600க்கு மேற்பட்ட இந்துக்களைக் கிறித்தவராக மதம் மாற்றினார். இதனை அறிந்த யாழ்ப்பாண அரசன் சங்கிலி மிகவும் கோபம் கொண்டான். ஒரு படையை அனுப்பி மதம் மாறிய பலரைக் கொன்றுவிட்டான். மேற்படி இரண்டு நிகழ்வுகளையும் அவற்றின் கால ஒழுங்கை மாற்றி குவைரோஸ் பாதிரியார் குறிப்பிட்டுள்ளார். போத்துக்கீசக் கப்பல்கள் அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட மிரட்டல் படையெடுப்பு, சங்கிலியிடம் திறை பெற்றது ஆகியவற்றைக் குறித்த குவைரோசின் விளக்கங்கள் பின்வருமாறு: இது போத்துக்கீச மதகுருக்களைக் கோபமூட்டியதுடன் சங்கிலி மன்னனைப் பழிவாங்கவேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்களிடையே ஏற்படுத்தியது. பிரான்சிசு சேவியர் 1544 ஆம் ஆண்டு கோவாவுக்குச் சென்று அப்பகுதிக்குத் தலைமை மதகுருவாக இருந்த மிகுவேல் வாஸ் என்பவரைச் சந்தித்து நடந்தவற்றை விளக்கி சங்கிலியைத் தண்டிப்பதற்கு அவரது உதவியை நாடினார். இது குறித்து கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுநருடன் பேசும்படியும், போத்துக்கலின் அரசரிடமிருந்து அநுமதி பெறுவதற்குத் தான் நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மிகுவேல் வாஸ், பிரான்சிசு சேவியருக்கு உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து பிரான்சிசு சேவியர் கோவாவில் இருந்த போத்துக்கீச ஆளுனனைச் சந்திப்பதற்கு முயன்றார். ஆளுனனின் வேலைப்பழு காரணமாக அவரைச் சந்திப்பது இலகுவாக இருக்கவில்லை. ஆனால் பிரான்சிசு சேவியர் யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்க வேண்டுமென்ற தீவிர எண்ணம் கொண்டவராக இருந்ததால் சளைக்காமல் முயன்று இறுதியில் அவரைச் சந்தித்தார். சங்கிலையைத் தண்டிக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த தனது கருத்தை ஆளுனருக்கு எடுத்துக்கூறிய பாதிரியார், பணியின் முக்கியத்துவம் கருதி அவனே யாழ்ப்பாணத்துக்குப் படை நடத்திச் செலவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். இந்தக் கோரிக்கையை வேறு வேலைகள் இருப்பதைக் காரணமாகக் காட்டி ஆளுனன் தட்டிக் கழித்து விட்டான். எனினும், நாகபட்டினத்தில் இருந்த போத்துக்கீசப் படைத் தலைவருக்குத் தகவல் அனுப்பி அங்கிருந்து சங்கிலியைத் தண்டிக்கப் படைகள் அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்தான். இப் படைதிரட்டல் நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக பிரான்சிசு சேவியர் நாகபட்டினத்துக்குச் சென்றார். நவம்பர் 1542 க்கும், ஏப்ரல் 1543 க்கும் இடையில் படைநடவடிக்கைகளுக்கான கப்பல்களை ஒன்று திரட்டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கப்பல்கள் பல்வேறு இடங்களில் இருந்ததனாலும் ஆளுனரின் உத்தரவு வந்து சேராததனாலும் சேவியர் விரும்பியதுபோல் நடவடிக்கைகள் விரைவாக இடம்பெறவில்லை. இறுதியில் மீனவக் கரைப்பகுதிகளிலிருந்து வந்த மூன்று கப்பல்களுடன் சேர்த்து மொத்தமாக ஒன்பது கப்பல்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் போத்துக்கீசரைக் கொண்ட 500 வீரர்கள் செல்வதாக இருந்தது. நீண்ட காலம் எடுத்துக்கொண்ட இந்த முயற்சியும் இறுதி நேரத்தில் தடைப்பட்டுப் போனதாக குவைரோஸ் பாதிரியார் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். பெருஞ் செல்வத்துடன் சென்ற போத்துக்கீசக் கப்பலொன்று யாழ்ப்பாண இராச்சியத்தின் கடலோரத்தில் தரை தட்டியபோது, அதிலிருந்த பெறுமதி வாய்ந்த பொருட்கள் யாழ்ப்பாண அரசன் எடுத்துக்கொண்டதாகவும் அதனைத் திரும்பப்பெறும் ஆசையில் அவனுடன் சமாதானம் செய்துகொள்ளும் நோக்கில் படையெடுப்பு கைவிடப்பட்டதாகவும் குவைரோஸ் பாதிரியார் குறித்துள்ளார். குவைரோசின் நூலின்படி நாகபட்டினத்திலிருந்து படையனுப்பும் முயற்சி தோல்வியுற்றதை அறிந்த ஆளுனன் மார்ட்டின் அல்போன்சோ டி சூசா தானே நேரடியாகச் சென்று யாழ்ப்பாண அரசனைத் தண்டிக்க முற்பட்டான். 1943 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி கோவாவிலிருந்து பல்வேறு வகைகளையும் சேர்ந்த 36 கடற்கலங்களில் போத்துக்கீசப் படை புறப்பட்டது. எனினும் இடையில் ஏற்பட்ட இரண்டு புயல்களினால் பல கப்பல்கள் சேதத்துக்கு உள்ளாயின. ஆளுனனின் கப்பல் ஆபத்திலிருந்து ஒருவாறு தப்பி நெடுந்தீவுக்குச் சென்றது. இறுதியாக மொத்தம் 12 கலங்களே எஞ்சியதாகத் தெரிகிறது. போத்துக்கீசப் படைகள் நெடுந்தீவுக்கு வந்திருப்பதை உளவாளிகள் மூலம் அறிந்த சங்கிலி மன்னன் தாக்குதலைத் தவிர்க்க வேண்டிப் போத்துக்கீசருடன் சமாதானமாகப் போக எண்ணினான். தானே நெடுந்தீவுக்குச் சென்று இது பற்றிப் போத்துக்கீச ஆளுனனுடன் பேசினான். சமாதானத்துக்கு விலையாக திறை செலுத்தவும் ஒப்புக்கொண்டான். இந்த ஏற்பாட்டில் திருப்தியடைந்த டி சூசா இரண்டு ஆண்டுகளுக்கு உரிய திறையை முற்பணமாகப் பெற்றுக்கொண்டு திரும்பிவிட்டான். குவைரோஸ் இந்த நிகழ்வை படுகொலைகளில் முடிந்த மதமாற்ற நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் நடந்ததாகக் குறிப்பிட்டிருந்தாலும் பிற மூலச் சான்றுகளின்படி இது பிழை என்று குவைரோசின் நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எஸ். ஜி. பெரேரா குறிப்பிட்டுள்ளார். இவருடைய கூற்றுப்படி மதம் மாறியோரின் படுகொலைச் சம்பவம் இந் நிகழ்வுக்குப் பின்னரே இடம்பெற்றுள்ளது. டுரூப்பல் டுரூப்பல் (Drupal (pronounced /ˈdruːpəl/) என்பது ஒரு கட்டற்ற திறந்த உள்ளடக்க மேலாண்மை மென்பொருள். இது பி.எச்.பி இல் எழுதப்பட்டுள்ளது. சிறியதில் இருந்து பெரிய சிக்கலான வலைத்தளங்கள் வரை டூரூப்பல் கொண்டு ஆக்கப்பட்டு பராமரிக்கப்படலாம். ஜூம்லாவை விட அதிக செயற்கூறுகளை ட்ரூபால் கொண்டிருக்கிறது. ட்ரூபாலை உருவாக்கியவர் Dries Buytaert என்பவராவார். தற்போது ட்ரூபால் கூட்டமைப்பு உதவியுடன் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொகுதிகள், எண்ணூற்றுக்கும் மேற்பட்ட வார்ப்புருக்கள் மற்றும் உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான தன்னார்வ மென்பொருள் நிரலாக்கவியலாளர்கள் மூலம் ட்ரூபால் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. டுரூப்பலை கருவகம் (core), தொகுதிகள் (modules), வடிவ வார்ப்புருக்கள் (themes) ஆகிய பகுதிகளாகப் பிரிக்கலாம். கருவகம் வலைத்தளம் அமைக்கத் தேவையான அடிப்படைக் கூறுகளைக் கொண்டிக்கிறது. தொகுதிகள் (modules) குறிப்பிட்ட தேவைக்கேற்ப பயன்படுத்த வல்ல மேலதிக நிரல் கூறுகளைக் கொண்டிருக்கிறது. வடிவ வாப்புருக்கள் ஒரு தளத்தின் தோற்றத்தை கட்டமைக்கத் தேவையான காட்சிப்படுத்தல் கூறுகளைக் கொண்டிருக்கிறது. டுரூப்பல் தன்மொழியாக்கம் செய்ய பல வசதிகளைக் கொண்டிருக்கிறது. பன்மொழி வலைத்தளங்கை உருவாக்கவும் டுரூப்பல் உதவுகிறது. இந்த வசதி வெளியீடு 7 இன் மூலம் மேலும் விருத்தி செய்யப்பட்டும், அதன் கருவக கூறுகளின் ஒன்றாக அமையவுள்ளது. வெளியீடு 6 இல் i18n என்ற தொகுதி அவசியமாகும். அத்தோடு பன்மொழி வலைத்தளங்களை மேலாண்மை செய்ய மொழிபெயர்ப்பு மேலாண்மை என்ற தொகுதியும் தேவையாகும். இந்த தொகுதிகளை நிறுவி, ஏதுவாக்க வேண்டும். பின்னர் மொழி தொடர்பான site settings மாற்ற வேண்டும். In each content types, enable "Multilingual support", and set the Multilanguage options. ஃபயர்பக் ஃபயர்பக் என்பது ஒரு மென்பொருள் வழு நீக்கல், கண்காணிப்பு, தொகுத்தல் கருவியாகும். இது வலைத்தளங்களை அமைக்கப் பயன்படுத்தப்படும் மீயுரைக் குறியீட்டு மொழி, சி.எசு.எசு, ஆவணப் பொருளாக்க மாதிரி, யாவா வரிவடிவம் ஆகியவற்றை கையாள உதவுகிறது. இது ஃபயர் ஃபாக்சு உலாவியில் ஒரு நீட்சியாக இயங்குகிறது. கட்டற்ற மற்றும் திறந்த மூல நிரலியான இது பிஎசுடி என்னும் பெர்க்லி மென்பொருள் பரவல் உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள மென்பொருளாகும். 2009 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2009 பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணியின் இலங்கை சுற்றுப்பயணம் 2009 ஜூன் 29 தொடக்கம் ஆகஸ்டு 12 வரை நடைப்பெறவுள்ளது. இச்சுற்றுப் பயணத்தின் போது 3பன்னாட்டு தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளும் 5 பன்னாட்டு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளும் ஒரு பன்னாட்டு இருபது20 துடுப்பாட்டப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்க்கு மேலதிகமாக பாக்கிஸ்தான் அணி முன்னோட்டப் போட்டிகளாக ஒரு மூன்று நாள் துடுப்பாட்டப் போட்டியிலும் ஒரு ஒருநாள் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குபற்றும். பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் பாக்கிஸ்தான் தேர்வுத்துடுப்பாட்ட அணி தேர்வுத்துடுப்பாட்ட அணியை தெரிவுச் செய்யும் 15 பேர் குழுவை அறிவித்தது. ஐசிஎல் போட்டிகளில் விளையாடிமைக்காக நீக்கப்பட்டிருந்த முகமது யூசுப் ஐசிஎல் போட்டிகளில் விளையாட தான் செய்துக்கொண்ட ஒப்பந்தத்தை இரத்துச் செய்ததைத் தொடர்ந்து மீண்டும் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். இலங்கை துடுப்பாட்ட வாரியம் தேர்வுத்துடுப்பாட்டப் போட்டிகளுக்கான பதினைவர் குழுவை அறிவித்தது. இதன்படி இல்ஙகையின் வேகப்பந்துவீச்சாளர் சமிந்த வாசுக்கு பதிலாக 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் திறமையாக விளையாடிய அஞ்சலோ மெத்திஸ் தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். குச்சக்காப்பளராக கௌசால் சில்வாவும் இன்னொரு வேகப்பந்துவீச்சளராக சுரங்க லக்மாலும் இம்முறை புதிதாக இலங்கையின் தேர்வுத்துடுப்பாட்ட அணியை தெரிவுச் செய்யும் பதினைவர் குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். தேசிய தலைநகர் வலயம் (இந்தியா) தேசிய தலைநகர் வலயம்,இந்தியா- தேசிய தலைநகர் பகுதி, தில்லியை முழுமையாகவும், அதன் அருகாமையில் சூழ்ந்துள்ள அரியானா, உத்திரப் பிரதேசம் மற்றும் இராசத்தான் மாநிலங்களின் ஊரகப் பகுதிகளையும் உள்ளடக்கிய மாநகரப் பகுதி அல்லது நகர்தொகுதியாகும். மொத்த பரப்பளவு 33578 ச.கி.மீ கொண்ட இது உலகின் பெரும் ஊரக நகர்ப்பகுதிகளில் ஒன்றாகும். தேசிய தலைநகர் வலயம் அமைப்பதற்கான எழுவாயாக 1962 ஆம் ஆண்டிற்கான தில்லிக்கான பெருந்திட்டத்தில் இடம் பெற்ற பரிந்துரைகள் அமைந்தன. தில்லியின் மக்கட்தொகை பெருக்கத்தினால் எழும் நெருக்கத்தினை குறைக்குமுகமாக தில்லி ஆட்சிப்பகுதியும் அதன் சுற்றுப்புற நகர்களும் இணைந்த ஊரகப்பகுதியினை மேம்படுத்த வேண்டியதன் தேவை அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தில்லியை தனித்து திட்டமிடாது சுற்றுப்புற நகர்பகுதிகளுடன் இணந்து திட்டமிட வசதியாக ஏற்படவேண்டிய தேசிய தலைநகர் வலயத்தின் கட்டமைப்பு, அதிகாரமுள்ள திட்டக்குழு மற்றும் ஆற்றவேண்டிய திட்டம் என்பனவற்றை பரிந்துரைகள் உள்ளடக்கியிருந்தன. இத்தகைய தேவை நாளொரு வண்ணம் அதிகரிக்க இந்திய நாடாளுமன்றம் 1985ஆம் ஆண்டில் தொடர்புடைய அரியானா,இராசத்தான் மற்றும் உத்திரப்பிரதேச மாநிலங்களின் ஒப்புமையுடன் திட்டக்குழு சட்டம் இயற்றியது. அதன் அட்டவணைகள் எந்தெந்த பகுதிகள் தேசிய தலைநகர் வலயத்தில் உள்ளடங்கும் என வரையறுத்தது. தேசிய தலைநகர் வலயம், இந்தியாவில் பங்கேற்கும் நான்கு மாநிலங்கள் - தேசிய தலைநகர் பகுதி, தில்லி தேசிய தலைநகர் வலயத்தின் மையமாகும். இது தில்லி மற்றும் இந்தியாவின் நடுவண் அரசின் அலுவலகங்கள் அமைந்திருக்கும் புது தில்லியை உள்ளடக்கியது. இங்குதான் மக்கள் அடர்த்தி மிகுந்துள்ளது. 2001 ஆண்டு கணக்கெடுப்பின்படி 13,782,976 ஆக இருந்த மக்கட்தொகை 2007 ஆண்டில் 17 மில்லியனாக உயர்ந்தது. தில்லியின் மேற்கு,வடக்கு மற்றும் தெற்கில் சூழ்ந்திருக்கும் அரியானா தேசிய தலைநகர் வலயத்திற்கு மேற்கு மற்றும் வடக்கு எல்லைகளாக இருந்து 13413ச.கி.மீ பரப்பினை பங்களிக்கிறது. வலயத்தில் உள்ளடங்கிய மாவட்டங்கள்:- இராசத்தான் தில்லியின் தென்மேற்கே அமைந்துள்ளது. தில்லியுடன் எந்த எல்லையையும் பகிராவிடினும் தேசிய தலைநகர் வலயத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பங்கேற்கும் மாவட்டம்: உத்திரப்பிரதேசம் (உ.பி) தே.த.வலயத்திற்கு பெரும் பரப்பைக் கொடுக்கிறது. தில்லியின் கிழக்கு எல்லையாக விளங்கும் இம்மாநிலம் தே.த.வலயத்தின் கிழக்குப் பகுதியாகவும் விளங்குகிறது. இமாநிலத்தின் பங்கேற்கும் மாவட்டங்கள் :- தில்லியின் மாநகர மற்றும் மண்டல பொருளாதார வளர்ச்சியை உள்வாங்கி சரிசமமான வளர்ச்சியை சீராக அனைத்துப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுதல், போக்குவரத்து பிணையத்தை சீரமைத்தல், கட்டுமானப் பணிகளின் வளர்ச்சி, நிலப் பயன்பாட்டை சீர்படுத்தல், சுற்றுச்சூழல், வாழ்க்கைத்தரம் மேம்படுத்தல் என்பவை இத்திட்டகுழுவின் நோக்கங்களும் இலக்குகளுமாகும். மக்கள் இடம்பெயர்வதை தடுக்கும் விதமாக எதிர்கவர்ச்சி பகுதிகளாக அரியானாவில் ஹிஸ்ஸார், பஞ்சாபில் பாட்டியாலா, இராசத்தானில் கோடா, உத்திரப்பிரதேசத்தில் பரைய்லி மற்றும் மத்தியப்பிரதேசத்தில் குவாலியர் இவற்றின் வளர்ச்சியை மேம்படுத்தல். பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியம் (Pakistan Cricket Board, PCB) தேர்வுத் துடுப்பாட்டம் உட்பட்டதாக பாக்கிஸ்தானில் நடைப்பெறும் அனைத்து முக்கிய துடுப்பாட்ட போட்டிகளுக்கும் பொறுப்பான வாரியமாகும். பாக்கிஸ்தான் துடுப்பாட்ட அணி மேற்கொள்ளும் அனைத்து சுற்றுப்பயணங்களையும் போட்டிகளையும் ள் அனைத்தையும் ஒழுங்குபடுத்த்துவதற்கும் அவற்றைக் கட்டுப்படுத்துவதுவும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் கடமையாகும். இலங்கை துடுப்பாட்ட வாரியம் இலங்கை துடுப்பாட்டம் அல்லது இலங்கை துடுப்பாட்ட வாரியம் (அதிகாரபட்சமாக Sri Lanka Cricket) இலங்கையில் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வாரியமாகும். இலங்கை துடுப்பாட்ட அணிக்கும், முதல் தர துடுப்பாட்டப் போட்டிகளுக்கும் இவ்வாரியமே பொறுப்பாகும். முன்னர் இது இலங்கை துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியம் (Board for Cricket Control in Sri Lanka) என அழைக்கப்பட்டாலும் பின்னர் இலங்கை துடுப்பாட்டம் என பெயர் மாற்றப்பட்டது. இலங்கை துடுப்பாட்ட வாரியம் பிரிமியர் ஒருநாள் மற்றும் இருபது20 துடுப்பாட்டப் போட்டிகள், சரா போட்டிகள், டெனொவன் போட்டிகள், மாகாணங்களிடைப் போட்டிகள் போன்ற உள்நாட்டு போட்டித்தொடர்களை நடத்துகின்றன. தலைநகர் ஆட்பகுதியும் மாவட்டங்களும் ஒரு தலைநகர் ஆட்பகுதி அல்லது தலைநகர் மாவட்டம் என்பது நாட்டின் அரசு கோலோச்சும் சிறப்பு நிர்வாகக் கோட்டம் ஆகும். ஒரு கூட்டாட்சி அமைப்பில் எந்தவொரு மாநிலமும் தன்னகத்தே நாட்டின் தலைநகரம் இருப்பதால் சிறப்புற இயலாது. தலைநகர் ஆட்பகுதி ஒரு சிறப்பு கூட்டாட்சி மாவட்டமாக இருக்கலாம். இங்கு நாட்டின் தலைநகரை நிர்வகிக்கும், ஆனால் தனி சிறப்புநிலை வழங்கப்படாத கோட்டங்களை இனம் காண வேண்டும்.(எடுத்துக்காட்டாக இல்-டெ-பிரான்ஸ் பகுதிக்கும் மற்ற பிரான்ஸின்) பகுதிகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை). சில கூட்டாட்சி நாடுகளில் (பெல்ஜியம் போல்), தங்கள் தலைநகருக்கு மற்ற மாநிலங்களுக்கு இணையாக முழு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. சில கூட்டாட்சி நாடுகளில் தலைநகரை சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு எந்த தனி சிறப்பும் வழங்கப்படுவதில்லை.வேறு சில நாடுகளில் தேசிய தலைநகரம் மாநில தலைநகரத்துடன் ஒன்றிணைந்துள்ளது: பொஸ்னியாவும்,ஹெர்ஸகொவினாவுமிற்கான தலைநகர்சரயேவோ, பொஸ்னியாவும், ஹெர்ஸகொவினாவுற்குமான கூட்டாட்சியின் தலைநகருமாகும்; மற்றும் சுவிற்சர்லாந்து நாட்டுத்தலைநகர் பெர்ன், பெர்ன் கன்டோன் தலைநகரமுமாகும். இரண்டு தேசிய தலைநகரங்கள் தனி கூட்டாட்சி மாவட்டங்களுமல்லாது,கூட்டாட்சி மாநில தலைநகரங்களுமல்லாது உள்ளன: கனடாவின் தலைநகர் ஒட்டாவா,மற்றும் மைக்ரோனேசியா கூட்டாட்சியின் தலைநகர் பாலிகிர். கனடா அரசு ஒட்டாவா பகுதியை தேசிய தலைநகர் வலயமாக அறிவித்திருந்தாலும் இது ஒரு நிர்வாக அமைப்பல்ல; கூட்டாட்சி அமைப்பில் இப்பகுதியில் உள்ள நிலங்களையும் கட்டிடங்களையும் நிர்வகிக்கும் அரசு நிறுவனத்தின் எல்லைப்பகுதியேயாகும். தங்கள் தேசிய தலைநகரப் பகுதிகளுக்கு சிறப்பு நிர்வாக மாவட்ட அல்லது ஆட்பகுதி கொண்டவை கீழே உள்ளன: தேசிய தலைநகர் பகுதி (NCT) இந்தியாவின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதியாகும். இந்த ஆட்பகுதி மூன்று நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது: புது தில்லி, தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட். இது தவிர கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் 59 மற்றும் 165 கிராமங்களையும் உள்ளடக்கியது. நவம்பர் 11,1956 ஆம் ஆண்டில் தில்லி தலைநகரப் பகுதி தனி ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு முதலமைச்சர் தலமையேற்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. இங்கு ஆட்சியமைப்பு தனித்த இயல்புடையது; மக்களால் தேர்ந்த அரசு மாநகர பொறுப்புகளை கையாள நடுவண் அரசு காவல் மற்றும் பொது நிர்வாகத்தை மேற்கொள்கிறது. தேசிய தலைநகர் பகுதி, தில்லி தேசிய தலைநகர் பகுதி,தில்லி (NCT) இந்தியாவின் ஒரு சிறப்பு ஆட்சிப்பகுதியாகும். இந்த ஆட்பகுதி மூன்று நகரங்களை தன்னகத்தே கொண்டுள்ளது: புது தில்லி, தில்லி மற்றும் தில்லி கண்டோன்மென்ட். இது தவிர கிழக்கு தில்லி மாவட்டம், சதாரா மாவட்டம், தென்மேற்கு தில்லி மாவட்டம், தெற்கு தில்லி மாவட்டம், புது தில்லி மாவட்டம், மத்திய தில்லி மாவட்டம், மேற்கு தில்லி மாவட்டம், வடகிழக்கு தில்லி மாவட்டம் வடக்கு தில்லி மாவட்டம், வடமேற்கு தில்லி மாவட்டம், தென்கிழக்கு தில்லி மாவட்டம் என 11 மாவட்டங்களும்; 33 வருவாய் வட்டங்களும்; கணக்கெடுப்பில் உள்ள ஊர்கள் 59 மற்றும் 165 கிராமங்களையும் உள்ளடக்கியது. மூன்று மூன்று மாநகராட்சிகளையும் கொண்டது. நவம்பர் 11,1956 ஆம் ஆண்டில் தில்லி தலைநகரப் பகுதி தனி ஒன்றிய ஆட்சிப்பகுதியாக அமைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்பு (அறுபத்தொன்பதாவது திருத்தம்) சட்டம், 1991, தில்லி ஒன்றிய ஆட்சிப்பகுதியை (Union Territory of Delhi), தில்லி தேசிய தலைநகரப் பகுதியாக முறைப்படி அறிவித்தது. இச் சட்டத்தின்படி, இப் பகுதிக்கு முதலமைச்சர் தலமையேற்கும் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கூடிய சட்டசபை ஒன்றும் அமைக்கப்பட்டது. முதல்வராக சீலா தீக்சித் அவர்கள் பணியாற்றுகிறார்கள். இங்கு ஆட்சியமைப்பு தனித்த இயல்புடையது; மக்களால் தேர்ந்த அரசு மாநகர பொறுப்புகளை கையாள நடுவண் அரசு காவல் மற்றும் பொது நிர்வாகத்தை மேற்கொள்கிறது. இது தேசிய தலைநகர் வலயம் (இந்தியா)வின் அங்கமாகும். 2013 டிசம்பரில் முடிவுற்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதில் இரண்டாவது பெரிய கட்சியாக வந்த ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரசு தாமாக முன்வந்து ஆதரவளித்ததால் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. ஆம் ஆத்மி கட்சியானது காங்கிரசு உட்பட யாருடைய ஆதரவையும் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புது தில்லி தொகுதியில் வென்ற அரவிந்த் கெஜ்ரிவால் டிசம்பர் 28, 2013 அன்று முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார் . ஜன லோக்பால் என்ற சட்டத்தை நிறைவேற்ற சட்டமன்றத்தில் போதிய ஆதரவு இல்லாததால் அறிவித்த படி இக்கட்சியின் முதல்வர் கெஜ்ரிவாலும் அவரது அமைச்சர்களும் பதவி விலகினார் அவர்கள் சட்டமன்றத்தை கலைத்து தேர்தல் நடத்தும்படி கூறினர் ஆனால் லெப்டிண்ட் ஆளுநர் நஜூப் ஜங் சட்டமன்றத்தை கலைக்காமல் தற்காலிக இடைநீக்கம் செய்து குடியரசு தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைத்தார். வ. ஐ. சுப்பிரமணியம் முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம் (வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம், பெப்ரவரி 18, 1926 - ஜூன் 29, 2009) மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும் ஆவார். சுப்பிரமணியன் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்றவர் நெல்லை இந்துக்கல்லூரியில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்றார். ஐக்கிய அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மொழியியலில் பெற்றார். இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர். புதுச்சேரியில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர். ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது இணைவேந்தராகவும் விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்தப் பக்க பலமாக இருந்தவர். "புறநானூற்றுச் சொல்லடைவுகள்" என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் இவரது "வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்" 2 தொகுதிகளாக வந்துள்ளன. முறையே மொழியும் பண்பாடும், இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர். ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர். இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. மொழியியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக இவருக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம் ஆகியன முனைவர் பட்டத்தை வழங்கிக் கௌரவித்தன. இவர் எழுதிய "“வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் தொகுதி ஒன்று - மொழியும் பண்பாடும் இரண்டு - இலக்கணமும் ஆளுமைகளும் (இரண்டு தொகுதிகள்)”" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. சுப்பிரமணியம் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவம் பயனளிக்காமல் சூன் 29 2009 அன்று காலை எட்டு மணிக்கு திருவனந்தபுரத்தில் உயிரிழந்தார். சுப. வீரபாண்டியன் சுபவீ என்று சுருக்கமாய் அழைக்கப்படும் சுப. வீரபாண்டியன் சிறு வயது தொடங்கி, திராவிட இயக்கக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். சாதி ஒழிப்பு, ஆதிக்க எதிர்ப்பு, தாய்மொழிப் பற்று, பெண் விடுதலை, பகுத்தறிவு முதலான கருத்துகளைத் தமிழகமெங்கும் பரப்பி வருபவர். பெரியார், அம்பேத்கர் பற்றாளர். இறைமறுப்பாளர். ஈழ விடுதலை ஆதரவாளர். கடந்த கால் நூற்றாண்டிற்கும் கூடுதலாகப் பொதுவாழ்வினர். சென்னைக் கல்லூரியொன்றில் 21 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிவிட்டுத் தன் 45ஆம் வயதில் விருப்ப ஓய்வு பெற்றவர். ஆரியத்தால் வீழ்ந்தோம், திராவிடத்தால் எழுந்தோம், தமிழியத்தால் வெல்வோம் என்னும் மூல முழக்கத்தை முன்வைத்து, 2007ஆம் ஆண்டு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் இயக்கத்தை நிறுவியவர். இன்றுவரை அவ்வமைப்பின் பொதுச்செயலாளர். ' கருஞ்சட்டைத் தமிழர் ' என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியர். இலக்கிய ஆர்வலர். அரசியல், வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் 18 நூல்களை எழுதியுள்ளார். கடந்த 40 ஆண்டுகளாகத் தமிழகத்தின் தலைநகரில் வாழ்ந்து வருகின்றார். சுப. வீரபாண்டியன் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி ஊரில் இராம. சுப்பையா - விசாலாட்சி ஆகியோரின் இளைய மகனாக, 1952ஆம் ஆண்டு பிறந்தவர். புகழ்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரான சுப. முத்துராமன் இவர்தம் அண்ணன் ஆவார். சுப.வீரபாண்டியன் தொடக்கக்கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் காரைக்குடியில் பெற்றார். பின்னர் காரைக்குடியில் உள்ள அழகப்பர் அரசு கலைக் கல்லூரியில் பயின்று இயற்பியலில் அறிவியல் இளவர் பட்டம் பெற்றார். தமிழிலக்கியம் பயின்று கலை முதுவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். மாணவப் பருவத்தில் திரைத்துறையில் பணியாற்ற விரும்பிய சுப. வீரபாண்டியன், தனது கல்லூரிக் கல்வியை முடித்ததும் சென்னையில் இருந்த வணிக நிறுவனம் ஒன்றில் ஓராண்டு தட்டச்சராகப் பணியாற்றினார். பின்னர் உயர்கல்வி பெற்று சென்னையில் உள்ள தென்னிந்திய வாணியர் கல்வி அறக்கட்டளைக் கல்லூரியில் (South Indian Vaniyar Educational Trust College – SIVET College) 1976ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு வரை தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி விருப்ப ஓய்வுபெற்றார். சுப. வீரபாண்டியன் காரைக்குடியில் வசந்தா என்பவரை மணந்தார். இவர்கள் திருமணத்தை தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் க. இராசாராம் தலைமையேற்று நடத்தி வைத்தார். இவ்விணையர்களுக்கு ஆண்மக்கள் இருவர் உண்டு. அவர்களுள் மூத்தவரின் பெயர் லெனின். சுப. வீரபாண்டியனின் தந்தையும் தாயும் 1937 ஆம் ஆண்டு முதலே சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என அரை நூற்றாண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து அரசியலில் இயங்கி வந்தனர். இதனால் இளமையிலேயே சுப. வீரபாண்டியனுக்கு அரசியல் ஆர்வம் ஏற்பட்டது. கல்லூரியில் படிக்கும் பொழுதே திராவிட இயக்க ஆதரவாளராக வளர்ந்தார். 1970 ஆம் ஆண்டுகளில் செல்வாக்குப் பெறத் தொடங்கிய தமிழ் தேசியக் கருத்துகளால் ஈர்க்கப்பட்டார். கல்லூரியில் பணியாற்றும் பொழுதே தமிழர் இயக்கம் என்னும் அமைப்பை உருவாக்கிச் செயல்பட்டார்.தமிழ்த்தேசியத்தந்தை பெருஞ்சித்திரனாரின் கருத்துக்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு அவரது தென்மொழி இதழைக் கேடயமாகப் பயன்படுத்தி வந்தார். பின்னர் தியாகு நடத்திய திலீபன் மன்றத்தோடு தனது தமிழர் மன்றத்தை இணைத்து தமிழ் – தமிழ்த்தேசிய இயக்கத்தைத் தொடங்கி அதன் பொதுச்செயலாளராக இருந்தார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அதிலிருந்து பிரிந்து சான்றோர் பேரவை என்னும் அமைப்பில் இயங்கினார். அங்கிருந்து கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து, ஆரியத்தால் வீழ்ந்தோம்! திராவிடத்தால் எழுந்தோம்!! தமிழியத்தால் வெல்வோம்!!! என்னும் முழக்கத்தோடு திராவிட இயக்கத் தமிழர் பேரவை என்னும் அமைப்பை 2007 ஆம் ஆண்டில் உருவாக்கி அதன் பொதுச்செயலாளராகத் தற்பொழுது இயங்கி வருகிறார். பெரியாரைப் போற்றி, பெருஞ்சித்திரனார் வழி தமிழ்த்தேசியவாதியாகவே திகழ்கிறார். சுப. வீரபாண்டியன் தமிழீழ ஆதரவு நடவடிக்கைகளின் காரணமாக பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவர் குற்றமற்றவர் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் விடுதலை அடைந்தார். கல்லூரிப் பேராசிரியராக இருந்தபொழுதே சுட்டி, விடுதலை, உண்மை, தென்மொழி உள்ளிட்ட பல இதழ்களில் கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினார். பின்னர் இனி, நந்தன் வழி, தாயகம் ஆகிய இதழ்களின் சிறப்பாசிரியராகப் பொறுப்பு வகித்தார். தற்பொழுது கருஞ்சட்டைத் தமிழர் என்னும் மாதமிருமுறை இதழின் ஆசிரியராகப் பொறுப்பு வகிக்கிறார். சுப. வீரபாண்டியன் தன் தந்தை இராம. சுப்பையாவிடம் உரையாடி, அவரது திராவிட இயக்க அனுபவங்களை “எனது வாழ்க்கையும் திராவிட இயக்க அனுபவங்களும்” என்னும் நூலாகத் தொகுத்து வெளியிட்டார். சுப. வீரபாண்டியனின் எழுத்துகளும் சொற்பொழிவுகளும் பின்வரும் நூல்களாக வெளிவந்துள்ளன. மனுவேல் செலாயா ஒசே மனுவேல் செலாயா ரொசாலெஸ் ("José Manuel" "Mel" "Zelaya Rosales", பிறப்பு: செப்டம்பர் 20, 1952) ஹொண்டுராசின் அரசியல்வாதியும், 2006 ஆம் ஆண்டில் அதன் அரசுத் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டவரும் ஆவார். தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த செலாயா இதற்காக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமையால் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாட்டின் இராணுவத் தலைமையால் இவர் 2009, ஜூன் 28 இல் பதவியில் இருந்து அகற்றப்பட்டு கொஸ்டா ரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். ஆனாலும் சர்வதேச சமூகம் இவரையே இன்னமும் நாட்டின் அதிகாரபூர்வ அரசுத் தலைவராக அங்கீகரித்துள்ளது. 2005, நவம்பர் 27 இல் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் செலாயா வெற்றி பெற்று 2006, ஜனவரி 27 இல் ஹொண்டுராசின் அரசுத் தலைவராகப் பதவியேற்றார். இவர் லிபரல் கட்சியில் இருந்து தெரிவான 5வது ஜனாதிபதி ஆவார். மயன், அசுர கட்டிடக் கலைஞர் மயாசுரன் அல்லது மயன் என்பவன் இந்து தொன்மவியலில் புவியில் அசுர, தைத்ய மற்றும் இராக்கத இனங்களின் மாபெரும் அரசனாவான்.பாதாள உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன். மயாசுரன் தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார். ஆயினும் திரிபுரமெரித்த சிவனே ஐங்கரனை நினைக்காதமையால் அவரது தேரச்சு முறிந்தது. அவ்விடமே அச்சிறுப்பாக்கம் என வழங்கப்படலாயிற்று. "மாயா ராஷ்ட்ரா" என்ற தனது தலைநகரைக் கட்டினான். இராவணனின் அழகிய மனைவி மண்டோதரியின் தந்தையாவான். காண்டவ வனம் பற்றியெரிந்த போது தன்னைக் கிருஷ்ணரும் அருச்சுனனும் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கு முகமாக பாண்டவர்கள் ஆட்சியில் தர்ம மகாராசனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் சிறப்புமிக்க அரண்மனை ஒன்று கட்டிக் கொடுக்கிறான். மாயாசபை என பலராலும் புகழப்படும் இந்த அரண்மனையிலேயே நிலத்தை நீரென்றும் நீரை நிலமென்றும் தடுமாறும் துரியோதனனை கண்டு திரௌபதி சிரித்த நிகழ்ச்சி நடந்தது. திராவிட நாடு திராவிட நாடு அல்லது திராவிடர் நாடு தெற்காசியாவில் திராவிட மொழி பேசுபவர்களால் தனிநாடு கோரி முன்மொழியப்பட்ட பெயராகும். ஆரம்பகாலத்தில் இது தமிழர் வாழும் பகுதிகளுக்கு மட்டும் இக்கோரிக்கை எழுந்தது பின்னாளில் திராவிட மொழிகள் பேசும் பிற மாநிலத்தவர்களை (ஆந்திரப் பிரதேசம், கேரளா, மற்றும் கர்நாடகா) ஒருங்கிணைத்து கோரப்பட்டது. இக் கோரிக்கை இலங்கை, ஒரிசா, மகாராஷ்டிரா .ஆகியவற்றுக்கும் சேர்த்து கோரப்பட்டது. சிலாவிக் மக்கள் இசுலாவியர் (Slavic people) அல்லது சிலாவிக் என்னும் மக்கள் கிழக்கு ஐரோப்பாவில் வாழும் இந்திய-ஐரோப்பிய குடும்ப மொழிகள் சிலவற்றைப் பேசும் இனத்தினர். கிபி 6 ஆம் நூற்றாண்டில் இருந்து தங்கள் தாயகமாகிய கிழக்கு ஐரோப்பாவில் இருந்து கிழக்கு, நடு ஐரோப்பாவிலும் பால்க்கன் பகுதிகளுக்குப் பரவத் தொடங்கினர். பின்னர் பலரும் சைபீரியாவிலும் நடு ஆசியாவிலும் குடியேறினர். இசுலாவியர் வாழிடத்தைப் பொருத்து கீழ்க்காணுமாறு பகுப்பர்: இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இரங்கிரி தம்புள்ளை பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இலங்கையின் வட மத்தியமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். இவ்வரங்கம் தம்புள்ளைக்கு அருகில் இரங்கிரி தம்புள்ளை கோயிலுக்கு சொந்தமான 60 ஏக்கர் (240,000 m2) நிலத்தில் தம்புள்ளை குளத்தையும் தம்புள்ளை பாறையையும் பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. இவரங்கில் அண்ணளவாக 16,800 பேருக்கு இருக்கை வசதிகள் உள்ளது. 2000 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் இவ்வரங்கின் முதலாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கும் இடையில் நடைப்பெற்றது. 2003 ஆம் ஆண்டில் பகல் - இரவு ஆட்டங்களுக்காக இவ்வரங்கில் ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன. ஆண்டு முழுவதும் ஒருநாள் பன்னாட்டுப் போட்டிகளை மழைத் தடங்கள் இல்லாமல் நடத்தக்கூடிய வகையில் இலங்கையின் உலர் வலயத்தில் ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் இலங்கை துடுப்பாட்டத்துக்கு தேவைப்பட்டது. இலங்கை துடுப்பாட்ட கட்டுப்பாட்டு வாரியத்தின் அந்நாள் தலைவர் திலங்க சுமதிபால அவர்களது தலைமையில் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதி ஒதுக்கீட்டில் நடைப்பெற்றது. 167 நாட்களில் இவ்வரங்கம் கட்டிமுடிக்கப்பட்டது. காட்டுமானப் பணிகளின் முடுவில் பன்னாட்டுப் போட்டிகள் நடைப்பெற்றாலும் பின்னர் நிலத்தின் குத்தகையில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக 2003 ஆண்டுவரை போட்டிகள் நடைபெறவில்லை. இவ்வரங்கின் பட்டிகை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானதாகும். இங்கு காணப்படும் ஆழமற்ற நிலத்தடி நீர்மட்டத்தாலும் அதன் மூலம் பட்டிகையில் ஏற்படும் நீர் கசிவாலும் காலை வேளையில் வேகப் பந்துவீச்சாளர்கள் நன்மையடைவதோடு மாலையில் பட்டிகை நொறுங்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் சுழல்பந்துவீச்சாளர்களும் நன்மையடைகின்றனர். உலுப்பி உலுப்பி அல்லது உலூப்பி, இந்து தொன்மவியல் பெரும்காப்பியமான "மகாபாரதத்தில்" அருச்சுனனின் பல மனைவிகளில் ஒருத்தியாவாள். நாக குலத்தில் பிறந்த உலுப்பி, இடுப்பிற்கு மேல் மனித உடலும்; இடுப்பிற்கு கீழ் பாம்பு உடலும் கொண்ட நாககன்னி ஆவாள். இவள் தந்தை நாகர்களின் மன்னருடன் கங்கை ஆற்றில் வாழ்ந்து வந்தார். உலுப்பி போர்க்கலையில் தேர்ந்தவர் அருச்சுனன் 12 ஆண்டு தீர்த்த யாத்திரையின் போது, கங்கை ஆற்றில் குளிக்கும் போது, நாக கன்னிகை உலுப்பி, அருச்சுனன் மீது மோகம் கொண்டு மயங்குகிறாள். அருச்சுனனுக்கு மயக்கமருந்து கொடுத்து தனது பாதாள உலகிற்கு கொணரச் செய்கிறாள். அங்கு இணங்காத அருச்சுனனை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்கிறாள்.. அவர்களுக்குஅரவான் என்ற மகன் பிறக்கிறான். பின்னர் கணவனின் பிரிவால் வாடும் சித்திராங்கதாவுடன் அருச்சுனனை சேர்த்து வைக்கிறாள். அருச்சுனன் சித்திராங்கதையின் மகன் பாப்புருவாகனனின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றுகிறாள். போர் களத்தில் அருச்சுனன் பாப்புருவாகனனால் கொல்லப்படும்போது அவனை உயிர்ப்பிக்கிறாள். பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்திலிருந்து அருச்சுனனை காப்பாற்றுகிறாள். பாப்புருவாகனன் பாப்புருவாகனன் அல்லது பப்ருவாகனன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் அருச்சுனனிற்கும் மணிப்பூர் இளவரசி சித்திராங்கதைக்கும் பிறந்த மகனாவான். அருச்சுனன்தனது வனவாசத்தின் போது இந்தியாவின் பலபகுதிகளில் சுற்றித் திரிந்தான். அப்போது அவன் இமயமலைக்கு கிழக்கே உள்ள மணிப்பூர் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவன் மணிப்பூர் மன்னனின் மகளான சித்திராங்கதையைச் சந்தித்தான். அருச்சுனன் அவளை மணம் செய்து கொள்ள விரும்பி மன்னரை வேண்டினான். அதற்கு அவர் அவ்வூர் வழக்கப்படி சித்ராங்கதையின் குழந்தைகள் மணிப்பூர் அரசின் வாரிசுகள் என்றும் அவர்களை அருச்சுனனோடு அனுப்ப முடியாது என்றும் கூறிவிட்டார். அர்ஜுனன் சித்திராங்கதையையும் அவள் குழந்தைகளையும் கூட்டிச்செல்வதில்லை என்று உறுதிகொடுத்து மணமுடித்துக் கொண்டார். அவர்களுக்குப் பிறந்த பாப்புருவாகனனை மன்னர் தனது வளர்ப்பு மகனாக வரித்துக் கொண்டு முடி சூட்டினார்.பல வளங்களுடனும் அதிகாரத்துடனும் கூடிய அழகிய அரண்மனையில் சிறப்பாக ஆண்டு வந்தான். பின்னாளில் அருச்சினன் அசுவமேத வேள்வி நடத்த குதிரையுடன் மணிப்பூர் வரும்போது தனது மகன் பாப்புருவாகனனாலேயே அம்பெய்து கொல்லப்படுகிறான். இது பீஷ்மர் குருச்சேத்திரப் போரில் அருச்சுனனால் கொல்லப்பட்டதால் அவரது சகோதரர்களான வசுக்கள் இட்ட சாபத்தினால் நிகழ்கிறது. தனது தந்தையை தானே கொன்றதை எண்ணி வருந்தி தற்கொலை செய்யவிருக்கையில் பாப்புருவாகனனுக்கு அருச்சுனனின் மற்றொரு மனைவி நாக அரசி உலுப்பி மாணிக்கம் ஒன்றை வழங்க, அதனைக் கொண்டு அருச்சுனனை உயிர்ப்பிக்கிறான் பாப்புருவாகனன். பின்னர் தனது தந்தையுடன் அஸ்தினாபுரம் திரும்புகிறான். பர்பரிகன் பர்பரிகன் இந்து தொன்மவியலில் மகாபாரதத்தில் பீமனின் மகன் கடோற்கஜனுக்கும் யாதவ அரசன் மூருவின் மகள் மௌர்விக்கும் பிறந்தவனாவான். யட்சனான பர்பரிகன் மனிதனாக மறுபிறவி எடுத்தவன். பாண்டவர்கள் பக்கம் போராட விரும்பினாலும் "தோற்கும் கட்சிக்கே ஆதரவு" என்ற தனது கொள்கையால் கௌரவர்களுடன் சேர்ந்து கொள்கிறான். இராசத்தானில் பர்பரிகன் குருச்சேத்திரப் போரில் தனது தாத்தாக்களான பாண்டவர்கள் வெற்றி காண பலி கொடுக்கப்பட்டான் என நம்பப்படுகிறது. இந்தச் செய்கையால் கிருஷ்ணர் அவனைத் தெய்வமாக்குகிறார். அங்கு பர்பரிகன் கதுஷ்யாம்ஜி என வழிபடப்படுகிறார். மலிந்த வர்ணபுர பஸ்நாயக்கசாலித் மலிந்த வர்ணபுர, (பிறப்பு 26 மே 1979 கொழும்பு, இலங்கை)ஒரு இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் இடது கை மட்டையாளராகவும், வலது கை வேகசச் சுழல் பந்து வீச்சளாரகவும் அணியில் இடம் பிடித்துள்ளார். 1998/99 பருவத்தில் தனது முதல் தரத் துடுப்பாட்ட வாழ்வை தொடங்கினாலும் 2007 ஆம் ஆண்டு வரை இலங்கை துடுப்பாட்ட அணிக்கு விளையாடவில்லை. ஆனால் அதற்கு முன்னர் 1998 பொதுநலவாயப் போட்டிகளின் போது அங்கு சென்ற இலங்கை துடுப்பாட்ட அணியில் இடம்பிடித்திருதார். இலங்கை A அணிக்கு விளையாடி வங்காளதேசத்தின் A அணிக்கு எதிராக பெறப்பட்ட 242 ஓட்டங்கள், இவர் பெற்ற கூடிய ஓட்டங்களாகும். பெர்தினாந்தோ காருலியின் படைப்புகள் அவுன்சு அவுன்சு, அவுன்ஸ் அல்லது ஔன்சு (ஆங்கிலம் ounce, சுருக்கம் oz. தமிழில் "அவு".) என்பது மெட்ரிக் முறையைச் சேராத ஒரு சிறிய எடை அலகு. ஒரு பவுண்டு நிறை (mass) எடையில் பதினாறில் ஒரு பங்கு. ஒரு அவுன்சு = 1/16 பவுண்டு. இவ் அலகு முன்னிருந்த பிரித்தானிய பேரரசிய (இம்ப்பீரியல்) முறையைச் சேர்ந்த ஓர் அலகு. தற்காலத்தில் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் இன்னும் பயன்பாட்டில் உள்ளது. எடையைக் குறிக்கும் அவுன்சு என்னும் இதே பெயர் சிறு சிறு எடை வேறுபாடுகளுடன் பயன்பாட்டில் உள்ளது. பொதுவாக அவுன்சு என்று குறிக்க்ப்படுவது "அனைத்துலக அவெடிபாய்சு" (avoirdupois) "அவுன்சு" என்பதாகும். இது ஏறத்தாழ 28.35 கிராம் எடை உடையது. இது தவிர வேறு பல அவுன்சுகளில் "டிராய் அவுன்சு" (Troy ounce) என்பது 31.1 கிராம் எடை உள்ளது. டிராய் அவுன்சு என்பதை "டி அவு" என்னும் சுருக்கெழுத்துகளால் குறிக்கப்பெறும். டுவிட்டர் டுவிட்டர் அல்லது ட்விட்டர் () என்பது டுவீட் (ட்வீட்) என்று அழைக்கப்படும் 140 வரியுருக்களாலான குறுகிய செய்திகளை அனுப்பும், வாசிக்கும் வசதிகளைப் பயனர்களுக்கு வழங்குகின்ற ஒரு தொடர் குழு வலையமைப்புச் சேவை ஆகும். டுவிட்டரில் பதிவுசெய்த பயனர்கள் டுவீட்டுகளை வாசிக்கலாம், பதியலாம். ஆனால், பதிவுசெய்யாதவர்கள் டுவீட்டுகளை வாசிக்க மட்டுமே முடியும். வலைத்தள இடைமுகத்தினூடாகவோ குறுஞ்செய்தி மூலமோ நகர்பேசிச் செயலி மூலமோ பயனர்கள் டுவிட்டரை அணுகமுடியும். டுவிட்டரின் தலைமை அலுவலகம் சான் பிரான்சிற்கோவில் அமைந்துள்ளது. 35இற்கும் மேற்பட்ட துவிட்டர் அலுவலகங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளன. துவிட்டரானது இணையத்தின் குறுஞ்செய்திச்சேவை எனவும் அழைக்கப்படுகின்றது. துவிட்டரானது யாக்கு உடோர்சி, இவான் வில்லியமிசு, பிசு தோன், நோவா கிளாசு ஆகியோரால் 2006 மார்ச்சில் உருவாக்கப்பட்டு, 2006 சூலையில் வெளியிடப்பட்டது. 2012 அளவில் 140 மில்லியனுக்கு மேற்பட்ட பயனார்கள் ஒரு நாளுக்கு 340 மில்லியன் துவிட்டுகளைப் பதியத்தொடங்கியதுடன், இச்சேவையானது உலக அளவில் பரவலாகத் தொடங்கியது. அத்துடன், ஒரு நாளுக்கு 1.6 பில்லியன் தேடல் வினவல்களும் கிடைக்கப்பெற்றன. 2013இல், கூடுதலாகப் பார்க்கப்படும் முதல் பத்து வலைத்தளங்களுள் ஒன்றாகத் துவிட்டர் இடம்பிடித்தது. 2016 மார்ச்சு நிலவரப்படி, மாதந்தோறும் இயங்குநிலையிலுள்ள 310 மில்லியன் பயனர்கள் துவிட்டரில் உள்ளனர். வலையொலிபரப்பு நிறுவனமான ஓடியோவின் அவை உறுப்பினர்களால் ஒரு நாள் முழுவதும் நடத்தப்பட்ட குழுச்சிந்திப்பு அமர்வில் துவிட்டரைத் தொடங்குவதற்கான எண்ணக்கரு உதித்தது. அப்போது நியூ உயோர்க்குப் பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவராக இருந்த யாக்கு உடோர்சி, தனியாள் ஒருவர், ஒரு சிறுகுழுவுடன் தொடர்புகொள்வதற்காக ஒரு குறுஞ்செய்திச்சேவையைப் பயன்படுத்தலாம் என ஓர் எண்ணக்கருவைப் பரிந்துரைத்தார். இதற்கான திட்டக் குறிப்பெயராக twttr என்பது பயன்படுத்தப்பட்டது. பிளிக்கரின் தாக்கத்தாலும் அமெரிக்கக் குறுஞ்செய்திச்சேவைக் குறுங்குறியீடுகள் ஐந்து வரியுருக்களில் அமைந்திருந்ததாலும் இப்பெயர் பயன்படுத்தப்பட்டது. பின்னர், இப்பெயரானது நோவா கிளாசால் பரிந்துரைக்கப்பட்டது என வில்லியமிசு அறிவித்தார். twitter.com என்ற ஆள்களப்பெயர் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்ததாலும் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது. Twttr என்ற பெயரில் தளம் தொடங்கப்பட்டு ஆறு மாதங்களின் பின்பே, twitter.com என்ற ஆள்களப்பெயர் வாங்கப்பட்டு, துவிட்டர் ("Twitter") எனப் பெயர் மாற்றப்பட்டது. துவிட்டரின் உருவாக்குநர்கள் 10958 என்பதையே குறுங்குறியீடாகப் பயன்படுத்த எண்ணியிருந்தனர். ஆயினும், இலகுவில் நினைவிலிருத்திக்கொள்வதற்காகவும் பயன்பாட்டுக்கு இலகுவாக இருப்பதற்காகவும் குறுங்குறியீடாக 40404 என்பதை மாற்றியமைத்தனர். மார்ச்சு 21, 2006 அன்று, ஒருங்கிணைந்த அனைத்துலக நேரப்படி பிற்பகல் 8:50இற்கு "just setting up my twttr" என்ற முதல் துவிட்டர்ச் செய்தியை உடோர்சி வெளியிட்டதிலிருந்து துவிட்டர்த் திட்டத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டன. துவிட்டர் என்ற பெயரின் மூலம் பற்றி உடோர்சி பின்வருமாறு விளக்குகின்றார். ...we came across the word 'twitter', and it was just perfect. The definition was 'a short burst of inconsequential information,' and 'chirps from birds'. And that's exactly what the product was. ...நாம் துவிட்டர் என்ற சொல்லுக்கு வந்தோம், அது சரியாகப் பொருந்தியது. 'தொடர்ச்சியற்ற தகவலின் ஒரு குறுகிய வெளிப்பாடு' என்றும் 'பறவைகளின் கீச்சிடல்கள்' என்றும் பொருள் கூறப்பட்டிருந்தது. விளைபொருளும் சரியாக அப்படியே அமைந்துள்ளது. முதல் ட்விட்டர் மூலப்படிமம் ஓடியோ பணியாளர்களின் அகச் சேவையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது, பின்னர் ஜூலை 2006 ஆம் ஆண்டில் பொதுமக்களுக்கான முழு பதிப்பு தொடங்கப்பட்டது. அக்டோபர் 2006 ஆம் ஆண்டில், பிஸ் ஸ்டோன், இவான் வில்லியம்ஸ், டோர்சே மற்றும் பிற ஓடியோ உறுப்பினர்கள் கொண்ட வெளிப்படையான நிறுவனம் உருவாக்கப்பட்டது, மேலும் Odeo.com மற்றும் Twitter.com உள்ளிட்ட ஓடியோவின் அனைத்து சொத்துக்களையும், முதலீட்டாளர்கள் மற்றும் மற்ற பங்குதாரர்களிடமிருந்து அந்நிறுவனம் பெற்றது. பின்னர் ஏப்ரல் 2007 ஆம் ஆண்டில் ட்விட்டர் தனி நிறுவனமாக விரிவுபடுத்தப்பட்டது. 2007 சவுத் பை சவுத்வெஸ்ட் (SXSW) விழா ட்விட்டரின் பிரபலத்திற்கு மாற்றத்தை ஏற்படுத்தும் புள்ளியாக அமைந்தது. அந்த நிகழ்வின் போது ட்விட்டரின் பயன்பாடு ஒரு நாளைக்கு 20,000 ட்வீட்ஸிலிருந்து 60,000 ஆக உயர்ந்தது. "ட்விட்டரைச் சேர்ந்தவர்கள் சாதுரியமாக இரண்டு 60 அங்குல பிளாஸ்மா திரைகளை ட்விட்டர் செய்திகளை வெளிப்படுத்துவதற்காக மாநாட்டுப்பாதையில் வைத்திருந்தனர்" என்று "நியூஸ் வீக்கின் ஸ்டீவன் லெவி குறிப்பிட்டார்." "நூற்றுக்கும் மேற்பட்ட மாநாட்டுக்கு சென்றவர்கள் மாறாத ட்விட்டர்ஸ் மூலம் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். " குழுவைச்சேர்ந்தவர்கள் மற்றும் பேச்சாளர்கள் அச்சேவையை, வாடிக்கையாளர்களைப் பிடிப்பதற்கான பிளாக்கரின் வருகையாகக் குறிப்பிட்டார்கள். " விரைவிலேயே ஒவ்வொருவரும் உடனடி குறுஞ்செய்தி அனுப்பவும், வலைப்பதிவிடவும் மற்றும் தந்திகள் அனுப்பவும் கூடப் பயன்படும் இந்தப் புதிய அம்சத்தைப் பற்றி சலசலத்தனர்." " அந்த விழாவின் விளைவுகள் திணறடிக்கிற அளவில் நேர்மறையாக அமைந்தது. " லாஃபிங் ஸ்குவிட் பிளாக்கர் ஸ்காட் பீல், ட்விட்டர் SXSW ஐ "முழுமையாக ஆட்கொண்டது" என்றார். சமூக மென்பொருள் ஆய்வாளர் டனா பாய்ட், ட்விட்டர் இவ்விழாவை "வென்றது" என்றார். " அந்த திருவிழாவில் வழங்கப்பட்ட வெப் விருதை ஏற்றுக்கொண்ட ட்விட்டரின் பணியாளர், "நாங்கள் 140 எழுத்தாலர்கள் அல்லது அதற்கும் குறைவான எழுத்தாலர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறோம். " "மேலும் நாங்கள் சாதித்திருக்கிறோம்!" என்று குறிப்பிட்டார். " மொத்தத்தில், ட்விட்டர் துணிகர முதலீடுகளில் இருந்து 57 மில்லியன் US$க்கு மேல் உயர்ந்தது. நிதியின் சரியான விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. ட்விட்டரின் வெளிப்படுத்தப்படாத முதல் சுற்று நிதி $1 மில்லியனுக்கும் மற்றும் $5 மில்லியனுக்கும் இடைப்பட்டதாக இருந்ததாக வதந்தி வெளியானது. இண்டிட்யூசனல் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் பெஞ்ச்மார்க் கேபிட்டலில் இருந்து மற்றும் அதனுடன் சேர்ந்து யூனியன் ஸ்கொயர் வெஞ்ச்சர்ஸ், ஸ்பார்க் கேபிட்டல் மற்றும் இன்சைட் வெஞ்ச்சர் பார்ட்னர்ஸ் உள்ளிட்ட மற்ற முதலீட்டாளர்களிடமிருந்து வெளியிடப்படாத பணத்தையும் சேர்த்து 2008 இல் அதன் B சுற்றினுடைய நிதி $22 மில்லியனாகவும், 2009 ஆம் ஆண்டில் அதன் C சுற்று நிதி $35 மில்லியனாகவும் இருந்தது. யூனியன் ஸ்கொயர் வெஞ்ச்சர்ஸ், டிஜிட்டல் கேரேஜ், ஸ்பார்க் கேபிட்டல் மற்றும் பெசோஸ் எக்ஸ்படிசன்ஸ் ஆகிய நிறுவனங்களால் ட்விட்டர் ஆதரிக்கப்படுகிறது. "த இண்டஸ்ட்ரி ஸ்டேண்டார்ட்", ட்விட்டரின் நெடுநாள் நிலைக்குந்தன்மையானது பற்றாக்குறை வருமானத்தால் வரையறுக்கப்படுகிறது என குறிப்பிட்டிருக்கிறது. ட்விட்டர் குழு உறுப்பினர் டோட் சாஃப்பி, ஏற்கனவே பயனர்கள் பொருட்களின் பரிந்துரையைப் பெற்றபோதும் மற்றும் பல நிறுவனங்கள் பொருட்களை மின்வணிகம் மூலம் விற்கின்றபோதும், பெரும்பாலான பயனர்கள் ட்விட்டரின் மூலம் நேரடியாகப் பொருட்களை வாங்க விரும்புகின்றனர், எனவே ட்விட்டர் மின்வணிகம் செய்வதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என முன்மொழிந்துள்ளார். வருமானம் மற்றும் பயனாளி அதிகரிப்பு அடங்கிய சில ட்விட்டரின் ஆவணங்கள் டெக் க்ரஞ்ச்சில் வெளியிடப்பட்டது, பின்னர் அவை ஹேக்கரால் மீட்கப்பட்டன. அதில் ட்விட்டரின் 2009 ஆம் ஆண்டின் அகத் திட்டமிடல்களான மூன்றாவது காலாண்டில் (Q3) $400,000 வருமானமும் நான்காவது காலாண்டில் (Q4) $4 மில்லியன் வருமானமும், அத்துடன் வருட முடிவில் 25 மில்லியன் பயனர்களைப் பெற்றிருந்தது போன்ற விவரங்கள் இடம்பெற்றிருந்தது. 2013 ஆம் ஆண்டின் இறுதிக்கான திட்டமிடல்கள், வருமானத்தில் $1.54 பில்லியனும், மொத்த வருமானத்தில் $111 மில்லியனும், மற்றும் 1 பில்லியன் பயனர்களும் இருக்கும் என்று கணக்கிடப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கையை அடைய ட்விட்டர் என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது என்ற விவரங்கள் அதில் வெளியிடப்படவில்லை. விவரங்களை வெளியிடுவதற்காகச் சட்டபூர்வ நடவடிக்கை எடுத்தலே சாத்தியமான ஒன்று என பிக் ஸ்டோனின் வலைப்பதிவு இடுகை ஒன்றில் கருத்து தெரிவிக்கப்பட்டிருந்தது. இணையம் சார்ந்த இண்டர்நெட் ரிலே சாட் (IRC) கிளையண்டின் பண்புகளை ஒத்ததாக ட்விட்டர் இருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. ட்விட்டர் இணைய இடைமுகப்பானது ரூபி ஆன் ரெயில்ஸ் கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது. 2007 ஆம் ஆண்டின் வசந்த காலத்திலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஸ்டார்லிங் என அழைக்கப்படும் ரூபி நிலையான வரிசை சேவையகத்தால் இயல்பான செய்திகள் கையாளப்பட்டு வந்தது, 2009 ஆம் ஆண்டிலிருந்து இது கொஞ்சம் கொஞ்சமாக ஸ்காலாவில் எழுதப்பட்ட மென்பொருளுக்கு மாற்றப்பட்டது. இந்தச் சேவைகளின் API மற்ற வலைத்தள சேவைகள் மற்றும் பயன்பாடுகளை ட்விட்டருடன் இணைய அனுமதிக்கிறது. "ஹாஷ் குறிச்சொற்களைப்" பயன்படுத்தி கணினியில் தேடல் அமையும்படி உருவாக்கப்பட்டிருந்தது, அதாவது வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் codice_1 என்ற முன்னொட்டுடன் இருக்கும். "beer" என்ற வார்த்தையைத் தேடுவதாகக் கொண்டால் அது அனைத்து செய்திகளிலும் codice_2 என்றே தோன்றும். அதே போன்று, codice_3 குறியீடு பயனாளிபெயருக்கு முன்பு இடம்பெற்றிருப்பது பயனர்கள் தங்களுக்குள் நேரடியாகச் செய்திகளை அனுப்புவதற்கு அனுமதியளிக்கிறது. codice_4 என்ற குறிப்புடன் இருக்கும் ஒரு செய்தி, "example" என்ற பயனருக்கு அனுப்பப்பட்டதைக் குறிக்கும், எனினும் அதனை யார் வேண்டுமானாலும் படிக்க முடியும். SMS வழியாக, ஐந்து கேட்வே எண்கள் எனப்படும் அமெரிக்கா, கனடா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஐஸ்ல் ஆஃப் மேன் சார்ந்த சர்வதேச பயன்பாட்டுக்கான எண்ணின் சிறிய குறியீடுகள் வழியாக பயனர்கள் ட்விட்டருடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும் யுனைடட் கிங்டமிற்கான சிறிய குறியீடு வோடபோன் மற்றும் O2 நெட்வொர்க்குகளை மட்டுமே அணுகக்கூடியதாக இருக்கின்றது. தொழில்நுட்ப எழுத்தாளர் ஸ்டீவன் ஜான்சன் ட்விட்டரின் அடிப்படை இயக்கம் "குறிப்பிடத்தக்க எளிமையானது" என்றார் மேலும் அவர் குறிப்பிட்டது பின்வருமாறு: 2009 ஏப்ரல் 30 இல், பக்கப்பட்டியில் "அதிகம் புழக்கத்தில் உள்ள தலைப்புகளில்" மிகவும் பொதுவான சொற்றொடர்கள் மற்றும் தேடல் பட்டி போன்றவை செய்திகளில் இடம்பெறும்படி ட்விட்டர் தனது இணைய இடைமுகத்தை மாற்றியது. "உலகில் 24/7 நேரத்தில் எந்தவொரு பகுதியிலிருந்தும் ட்விட்டருக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு பொதுப் புதுப்பிப்பும் எங்களது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிகழ்நேர தேடல் மூலமாக உடனடியாக வரிசைப்படுத்தப்படும், மேலும் அது உடனடியாகக் கண்டறியும் விதத்தில் இருக்கும்", என பிஸ் ஸ்டோன் விவரித்திருந்தார். மேலும் கூறுகையில் "புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அம்சத்தினால், தற்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் தேடல் பொறியில், எதிர்பார்க்க முடியாதளவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக ட்விட்டர் மாறும்" என்றார். சேன் ஆண்டொனியோவைச் சேர்ந்த விற்பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் பியர் பகுப்பாய்வில் ட்விட்டரில் இரண்டு வார காலங்களுக்கு காலை 11:00 மணியிலிருந்து மாலை 5:00 வரை (CST) அனுப்பப்பட்ட 2,000 ட்வீட்ஸ் (அமெரிக்காவிலிருந்தும் ஆங்கிலத்திலும் அனுப்பப்பட்டவை) ஆய்வு செய்யப்பட்டு, அவற்றை ஆறு பிரிவுகளாக பிரித்தனர் அவை பின்வருமாறு: பெரும்பாலான ட்விட்டரின் உள்ளடக்கமாக "அர்த்தமில்லாத எழுத்துக்கள்" இருந்ததாக அந்நிறுவனம் கண்டறிந்தது, அதாவது மொத்தமாக கணக்கெடுக்கப்பட்ட செய்திகளில் 811 ட்வீட்ஸ்கள் அல்லது 40.55 சதவீத ட்வீட்ஸ் அர்த்தமில்லாத எழுத்துக்கள் கொண்டவையாக இருந்தன. ட்விட்டரின் 751 செய்திகள் அல்லது 37.55 சதவீத செய்திகள் உரையாடல் சார்ந்த செய்திகளாகவும், ட்வீட்ஸில் 174 செய்திகள் அல்லது 8.70 சதவீத செய்திகள் "முக்கிய விசயங்களைப் பரிமாறல்" அதாவது மீண்டும் மீண்டும் அனுப்பப்படும் ட்வீட்ஸாக இருந்தன, 117 ட்வீட்ஸ் அல்லது 5.85 சதவீத ட்வீட்ஸ் நிறுவனங்களின் சுயவெளிப்பாடாக இருந்தன, 75 ட்வீட்ஸ் அல்லது 3.75 சதவீதம் ஸ்பாமாகவும் மற்றும் 72 ட்வீட்ஸ் அல்லது 3.60 சதவீத ட்வீட்ஸ் முக்கிய ஊடக வெளியீடுகளிலிருந்து வெளிவந்த செய்திகளைக் கொண்டவையாக இருந்தன. சமூக வலையமைப்பு ஆய்வாளர் டனா பாய்ட் பியர் பகுப்பாய்வு மதிப்பீட்டைப் பற்றி கருத்து தெரிவிக்கையில், பியர் ஆய்வாளர்கள் "அர்த்தமற்ற எழுத்துக்கள்" என்ற தலைப்பில் என்ன குறிப்பிட்டுள்ளார்கள், அதற்கு பதிலாக "புற விழிப்புணர்வு" அல்லது "சமூக வெளிப்பாடு" என்று குறிப்பிட்டிருந்தால் சரியாக இருந்திருக்கும் என வாதிட்டார். டவிட்டரை பயன்படுத்தியதற்கு முன்பு மற்ற சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்தியிராத வயது முதிர்ந்தவர்களே பெரும்பாலும் ட்விட்டரைப் பயன்படுத்த்துகிறார்கள் என்று சமூக ஊடகத்தை ஆய்வு செய்யும் தொழில் ஆய்வாளர் ஜெரெமியா ஓவ்யாங் குறிப்பிட்டார். "வயது வந்தோர் சில ஆண்டுகளாக பதின்வயதினர் எதைச் செய்கிறார்களோ அதையே செய்கிறார்கள்," என்று அவர் கூறினார். காம்ஸ்கோரின் ஆய்வின் படி, ட்விட்டரின் பயனர்களில் 11 சதவீதத்தினர் மட்டுமே 12 முதல் 17 வயதுடையவர்களாக இருக்கிறார்கள். பழைய சரிந்த முதனிலை பின்பற்றுவோர் சுயவிவரத்தின் விளைவாக, தொழில் அமைப்புகள் மற்றும் செய்திகள் வெளியிடுதல் போன்றவற்றில் முதன்முதலாக ஒரு சமூக வலையமைப்பு பிரபலமானதாக இருக்கிறது, இதை ட்விட்டரின் "முதனிலை பின்பற்றுவோர் காலம்" என காம்ஸ்கோர் கருதுகிறது. இருப்பினும், காம்ஸ்கோர் பின்னர், "ஷேக், பிரிட்னி ஸ்பியர்ஸ் மற்றும் ஆஷ்டன் குட்ச்சர் போன்ற பிரபலமானவர்கள் ட்விட்டரேட்டி தரவரிசையில் இணைந்ததுடன் சேர்த்து, எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்துக்களையே அதிகம் உடையதாக இருப்பதற்கு" தொடக்கமாக ட்விட்டர் இருக்கிறது என குறிப்பிட்டிருந்தது. ட்விட்டர் தக்கவைத்திருக்கும் ஆற்றலின் விகிதம் 40% ஆக இருப்பதாக நீல்சன் ஆன்லைன் மதிப்பிட்டிருக்கிறது. ட்விட்டரின் செயலிழப்புக்காலத்தின் போது, பயனர்களுக்கு இயியிங் லூவால் உருவாக்கப்பட்ட, "டூ மெனி ட்வீட்ஸ்! பிளீஸ் வெயிட் எ மொமெண்ட் அண்ட் ட்ரை அகையின்" என்ற எழுத்துக்களுடன் கூடிய, சில சிவப்பு நிறப்பறவைகள் வலைகளைப் பயன்படுத்தி கடலிலிருந்து திமிங்கலத்தைத் தூக்குவதைப் போன்ற "ஃபெயில் வேல்" பிழைச் செய்தி உருவப்படம் தெரியும். 2007 ஆம் ஆண்டில் ட்விட்டர் 98 சதவீத இயக்கநேரத்தைக் கொண்டிருந்தது, அல்லது ஆறு முழுநாட்கள் செயல்படாத நேரத்தைக் கொண்டிருந்தது. ட்விட்டரின் செயல்படாத நேரம், குறிப்பாக 2008 மேக்வோர்ல்ட் கான்ஃபரன்ஸ் & எக்ஸ்போ சிறப்புக்குறிப்பு நிகழ்ச்சி போன்ற தொழில்நுட்பத்துறையில் நடைபெறும் பிரபலமான நிகழ்வுகளின்போது குறிப்பிடும்படியாக அதிகமாக இருந்தது. மே 2008 சமயத்தில் ட்விட்டரின் புதிய பொறியியல் குழு, வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கட்டமைப்பில் மாற்றங்களைச் செய்தது. செயல்படா நேரத்தின் விளைவினால் நிலைப்புத் தன்மை பிரச்சினைகள் அல்லது தற்காலிக அம்சத்தை நீக்குதல் போன்றவை அதில் அடங்கும். ஆகஸ்ட் 2008 இல், யுனைட்டட் கிங்டமை சேர்ந்த பயனர்களுக்கு வழங்கி வந்த இலவச SMS சேவைகள் வசதியைத் திரும்பப் பெற்றது, மேலும் தோராயமாக ஐந்து மாதங்கள் XMPP போட் வழியாக வழங்கப்பட்டு வந்த உடனடிச் செய்தியனுப்புதல் ஆதரவு "தற்காலிகமாக கிடைக்கவில்லை" என்றும் பட்டியலிடப்பட்டிருந்தது. 2008 அக்டோபர் 10 இல், ட்விட்டரின் நிகழ்நிலை வலைப்பதிவில் உடனடிச் செய்தியனுப்புதல் (IM) சேவை நெடுநாளைக்கு தற்காலிகச் செயலிழப்பில் இருக்காது, விரைவில் அது சீரமைக்கப்படும் என்று வெளியிடப்பட்டிருந்தது. ட்விட்டர் அதன் IM சேவையைத் திரும்பச் செயல்படுத்த நினைக்கிறது, ஆனால் அது சற்று பெரிய பணியாக இருக்கிறது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 2009 ஜூன் 12 இல், ஆற்றல் மிக்க "ட்விட்போகாலிப்ஸ்" என அழைக்கப்படும் தனித்துவ அடையாளங்காட்டி, ஒவ்வொரு ட்வீட்டுடன் இணைந்து அதன் எல்லை 32-பிட் குறியீடு இடப்பட்ட முழு எண்களுக்கு அதிகரித்தது. இதனால் ட்விட்டரில் எந்த பாதிப்பும் இல்லை எனினும், சில மூன்றாம் தரப்பு கிளையண்டுகளால் சமீபத்திய ட்வீட்ஸை நீண்ட நேரம் அணுக முடியவில்லை. அதற்கான தொகுப்புகள் விரைவில் வெளியிடப்பட்டன, எனினும் சில ஐஃபோன் பயன்பாடுகளில் ஆப்பிள் ஸ்டோரின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. செப்டம்பர் 22 இல், அடையாளங்காட்டியின் எல்லை 32-பிட் "குறியிடப்படாத" முழு எண்களுக்கு மாறியது, இதனால் மீண்டும் சில மூன்றாம் தரப்பு கிளையண்டுகள் பாதிக்கப்பட்டனர். 2009 ஆகஸ்ட் 6 இல், ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் இரண்டும் சேவை மறுப்புத் தாக்குதலினால் பாதிக்கப்பட்டன, இதன் காரணமாக ட்விட்டர் வலைத்தளம் பலமணிநேரங்கள் செயல்படாமல் இருந்தது. பின்னர் ஜியார்ஜியாவைச் சேர்ந்த பயனர் ஒருவர் 2008 தெற்கு ஒஸ்ஸெட்டியா போரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு, இதனைத் தாக்கியது உறுதி செய்யப்பட்டது. ட்விட்டர் தனிப்பட்ட முறையில் அடையாளங்காணக்கூடிய தகவல்களைத் தனது பயனர்களிடமிருந்து பெற்று மூன்றாம் தரப்பினரிடம் பகிர்ந்துகொள்கிறது. இந்த சேவையில் தகவல் ஒரு சொத்தாக மதிப்பிடப்படுகிறது, மேலும் அவை ஒரு வேலை நிறுவனத்தை வேறொருவருக்கு விற்க நேர்ந்தால் அதை விற்பதற்கான உரிமைக்காகவும் சேர்த்து வைக்கப்படுகிறது. ட்விட்டரில் எந்த விளம்பரமும் காட்சிப்படுத்தப் படாத போதும், பயனர்கள் தங்களது ட்வீட்ஸின் வரலாறு சார்ந்து இலக்குக்குட்பட்ட பயனர்களுக்கு விளம்பரங்கள் அனுப்பமுடியும், மேலும் சிலநேரங்களில் ட்வீட்ஸில் மேற்கோள் காட்டியும் விளம்பரப்படுத்தப்படுகிறது. 2007 ஏப்ரல் 7 இல் நிதேஸ் தஞ்சானி மற்றும் ரூஜித் ஆகியோரால் பாதுகாப்புக்கு ஏற்படும் பாதிப்பு விவரிக்கப்பட்டது. ட்விட்டர் SMS செய்தி அனுப்புபவருடைய தொலைபேசி எண்ணை உறுதிப்பாட்டுக்காக பயன்படுத்திய போதும், தீயநோக்குடைய சில பயனர்களால் மற்றவர்களுடைய நிலைமைப் பக்கத்தை SMS ஸ்பூஃபிங் முறையைப் பயன்படுத்தி மாற்ற முடிந்தது. பாதிக்கப்பட்ட பயனரின் தொலைபேசி எண் ஸ்பூஃபருக்குத் தெரிந்தால் மட்டுமே இந்த வகை தாக்குதல் செய்யமுடியும். சில வாரங்களில் ட்விட்டர் இதற்கு மாற்றை கண்டறிந்து அறிமுகப்படுத்தியது, அதன்படி ஒவ்வொரு பயனரும் விருப்பமிருந்தால் SMS சார்ந்த செய்திகள் மூலம் தனிநபர் அடையாள எண்ணை (PIN) உறுதிப்படுத்திய பின்னரே அதனைப் பயன்படுத்த முடியும். 2009 ஜனவரி 5 இல், ட்விட்டர் அட்மினிஸ்ட்ரேட்டரின் கடவுச்சொல் அகராதித் தாக்குதல் மூலமாக அனுமானமாகக் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து 33 ஹை-புரொஃபைல் ட்விட்டர் கணக்குப் பயனர்கள் பாதிப்படைந்தனர். பாலுணர்வை வெளிப்படுத்தக்கூடிய மற்றும் போதை தொடர்பான செய்திகள் பொய்யாக அந்தக் கணக்குகளிருந்து அனுப்பப்பட்டது. ட்விட்டர் அதன் சரிபார்க்கப்பட்ட கணக்குகளின் சேவையின் பீட்டா பதிப்பை 2009 ஜூன் 11 இல் அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் பிரபலமானவர்கள் அல்லது குறிப்பிடத்தகுந்த பயனர்கள் எந்த ட்விட்டர் கணக்கு அவர்களுக்கு உரியதாக இருக்கிறது என்பதை தெளிவுபடுத்திக் கொள்ள முடியும். சரிபார்க்கப்பட்ட கணக்குகளின் முதன்மைப் பக்கத்தில் அதன் சிறப்பு நிலை முத்திரையிடப்பட்டு காட்டப்பட்டிருக்கும். ட்விட்டரின் வேகமான வளர்ச்சியினால் 2007 ஆம் ஆண்டில் இணையத்தில் போக்குவரத்துச் சுமை ஏற்பட்டு செயலிழப்பு நிகழ்ந்தது. "த வால் ஸ்ட்ரீட் ஜெர்னல்" எழுதியது ட்விட்டர் போன்ற சமூக வலையமைப்பு சேவைகள் "இது தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளக்கூடியவர்களின் தங்கள் முதனிலை பின்பற்றுவோருடன் கலவையான உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு பயன்படுகிறது. தங்கள் பரபரப்பு அதிகமுள்ள நண்பர்களுடன் தொடர்பில் இருப்பதற்கு இது ஒரு நல்ல வழியாக இருக்கிறது என்று இதன் விசிறிகள் சொல்கிறார்கள். ஆனால் சில பயனர்கள் தங்கள் தனிப்பட்ட நேரத்தில் நெடுநேரம் இதனைப் பயன்படுத்திய பின்னர், அதிகப்படியான கைப்பேசி கட்டணங்கள் மற்றும் அவர்களது நெருங்கிய நண்பர்கள் தங்கள் உண்ட இரவு உணவு என்ன என்பதையெல்லாம் இதில் தொடர்ந்து அனுப்புவதை நிறுத்த வேண்டும் என்று நினைக்கத்தொடங்கிய பின்னர் இது "கூடுதலாக" இணைப்பதாக நினைக்கத் தொடங்கியுள்ளனர்" என எழுதப்பட்டிருந்தது. "இலக்கியத் தொடர்புகளுக்காக ட்விட்டரைப் பயன்படுத்துவது என்பது CB வானொலியைக் கேட்பது போன்றது மற்றும் ஒருவன் 'த இலியட்'டை மனப்பாடம் செய்து கூறுவதை கேட்பது போன்றது" என்று தொழில்நுட்ப எழுத்தாளர் ப்ரூஸ் ஸ்டெர்லிங் கூறினார். "பெரும்பாலான மக்கள் தங்கள் தொடர் நடவடிக்கைகளை ஒன்று விடாமல் விவரிப்பது மிகவும் அபத்தமான ஒன்று" என்று மேலாய்வு எழுத்தாளர் கிளைவ் தாம்ப்சன் கூறினார். "உங்களது நாளின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஏன் உங்களது நண்பர்களிடம் விவரிக்கிறீர்கள்? மேலும் அதே நேரத்தில், அவர்கள் அனுப்பிய முதன்மையில்லாத நிகழ்வுகள் உங்களுக்கு எவ்வளவு அபத்தமாகத் தோன்றியுள்ளது? சுற்றுபுற நெருக்கத்தின் வளர்ச்சியால், நவீன தன்னை விரும்புதல் புதிய வளர்சிதை மாற்றத்தின் உச்சத்தை அடைந்ததாகக் கருதலாம், பிரபலங்களால் குழப்பமடைந்த இளம் தலைமுறை இளைஞர்களின் இறுதியான உணர்வு, தங்கள் ஒவ்வொரு நிகழ்வையும் உலகுக்குச் சொல்லுதல் மிகவும் ஈர்க்கப்படவேண்டிய விசயம் என்பதாக உள்ளது." அதே நேரத்தில் ட்விட்டரில் சிக்கனமான எழுத்துக்களைக் கொண்ட செய்திகளை வெளியிடுவதற்கு முயற்சிப்பது மிகவும் சவாலான ஒன்று என்று ஸ்டீவ் டோடோ கருத்து தெரிவித்தார். "ட்விட்டரின் வெறுமைநிலை மற்றும் அரைகுறை நிலை போன்ற குணங்கள் அதனை மிகவும் ஆற்றல் வாய்ந்த ஒன்றாக உருவாக்கியுள்ளது" என ஹார்வர்ட் சட்டப் பள்ளியின் இணையச் சட்டப் பேராசிரியர் ஜொனாதன் ஜிட்ரயின் கூறினார். ட்விட்டர் பயனாளித் தக்கவைத்திருக்கும் ஆற்றலின் விகிதம் 40% ஆக இருப்பதாக நீல்சன் ஆன்லைன் மதிப்பிட்டிருக்கிறது. பெரும்பாலான மக்கள் ஒரு மாதங்களுக்குப் பிறகு இதனைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடுகிறார்கள், இதனால் அனைத்து இணையப் பயனர்களில் 10% பயனாளிகள் மட்டுமே ட்விட்டரைப் பயன்படுத்துகின்றனர். 2009 இல், ட்விட்டர் "பிரேக்கவுட் ஆப் த இயர்" வெப்பி விருதை வென்றது. பிப்ரவரி 2009 இல் தேசிய பொது வானொலியின் "வார இறுதிப் பதிப்பு" விவாதத்தின் போது, ட்விட்டர் நிகழ்வுகள் கடுமையாக உண்மையைச் சோதனையிடல் மற்றும் மற்ற இதழாசிரியர்க்குரிய மேம்பாடுகள் போன்றவற்றில் பற்றாக்குறையுடன் இருப்பதாக டேனியல் ஸ்கோர் குறிப்பிட்டார். அதற்கு பதிலளித்த ஆண்டி கார்வின் ட்விட்டரில் வெளிவந்த இரண்டு முக்கிய செய்தி கதைகளை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டார், மேலும் பயனர்கள் தன்னிலைக் கதைகள் மற்றும் சில நேரங்களில் பாசாங்கு அகற்றும் கதைகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும் கூறினார். 2009 பிப்ரவரி 26 இல் "த டெய்லி ஷோ" வின் ஒரு எபிசோடில் சிறப்பு விருந்தினராக பங்கு கொண்ட பிரையன் வில்லியம்ஸ், ட்விட்டரில் இடம்பெற்றிருக்கும் எந்த நிகழ்வின் கருத்துக்களுமே அதனை எழுதியவரின் கருத்து மட்டும்தான என்று குறிப்பிட்டார். மேலும் வில்லியம்ஸ் ட்விட்டரை இதுவரை பயன்படுத்தியதில்லை எனவும், ட்விட்டர் வடிவத்தில் ஆர்வத்துடன் அனுப்புவதற்கு போதுமான விசயங்கள் எதும் அவருக்குத் தோன்றவில்லை என்றும் குறிப்பிட்டார். ஆனால் இதற்கு எதிர்மறையாக, 2009 மார்ச் 2 இல் "த டெய்லி ஷோ" வின் மற்றொரு எபிசோடில்ஜான் ஸ்டீவர்ட், அதிபர் ஓபாமாவின் உரையின் போது (2009 பிப்ரவரி 24 இல்) "ட்விட்டர்" பயன்படுத்தும் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஒபாமா பேசியதை கவனிப்பதைவிட ட்விட்டரிலேயே கவனமாக இருந்தார்கள் எனக் குறிப்பிட்டார். "இளவயதினர் இதை விரும்புவதில் எந்த ஆச்சரியமும் இல்லை, ஆனால் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் இளவயதினர் நடுத்தர வயதினரே" என்று நிகழ்ச்சியின் சமந்தா பீ நிகழ்ச்சியில் நையாண்டி செய்திருந்தார். 2009 மார்ச்சில், டூனெஸ்பரி நகைச்சுவைப் படக்கதை ட்விட்டரை நையாண்டி செய்யத் தொடங்கியது. பெரும்பாலான பாத்திரங்கள் ட்விட்டரை அற்பமாக வெளிப்படுத்துவதாக அமைக்கப்பட்டிருந்தது, எனினும் ஒரு ஆதரிக்கும் பாத்திரம் மூலம் அதன் நிலையான புதுப்பிக்கப்படும் போக்கையும் வெளிப்படுத்தியிருந்தனர். சூப்பர்நியூஸ்! நிகழ்ச்சியிலும் இதேபோல் ட்விட்டர் "நிலையான சுய-விருப்பத்துக்கு" அடிமைப்படுத்துகிறது என கிண்டலடித்திருந்தது, மேலும் ட்வீட்ஸ் அனுப்புவது "யாரேனும் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் என்ற நினைப்பில் இருட்டில் கத்துவதற்கு சமமானது" என்றும் கூறியிருந்தது. 2008 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்கள் ட்விட்டரையும் பயன்படுத்தினர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா தனது விளம்பரத்திற்கு இதனைப் பயன்படுத்திக் கொண்டார். நாடர்–கோன்சலஸ் அணியும் தங்கள் வாக்குச்சீட்டு வாய்ப்பு அணிகளை ட்விட்டர் மற்றும் கூகுள் வரைபடங்கள் ஆகியவற்றில் புதுப்பித்து வந்தது. அமெரிக்க 2008 தேர்தல் நாளில் ட்விட்டரின் பயன்பாடு 43 சதவீதம் அதிகரித்திருந்தது. 2008 அக்டோபர் 14 இல் கனடியன் ஃபெடரல் தேர்தல் தொடர்பான CBC நியூஸ் தொலைக்காட்சிப் பதிவின் போது, எலிசபெத் மே மற்றும் ஸ்டீபன் டையன் தொடர்பாக ட்விட்டரில் வெளிவந்திருந்த தகவல்கள் டையனை தேர்தலில் தோற்கடித்ததன் மூலம் பதவி விலக வைத்ததற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக அமைந்தது என்று CBC குறிப்பிட்டிருந்தது. பிரிட்டனில், தொழில், கண்டுபிடிப்பு மற்றும் செயல்திறன்கள் துறை, மற்ற துறைகளில் ட்விட்டரைப் பயன்படுத்துவதற்கான உத்திகளை வெளியிட்டிருந்தது. அந்த செயல் தந்திர அறிக்கை துறைகளுக்கு, அரசியலில் ட்விட்டர் ஏன் பயன்படுத்தப்படுகிறது மற்றும் எப்படி அவர்கள் தங்கள் செயல்களை திறம்பட ட்வீட் செய்கிறார்கள் என்றும் விளக்கிக் கூறியிருந்தது. அந்த ஆவணம் தனியார் துறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் அல்லது அது ட்விட்டருக்கு பொதுவான அறிமுகம் என ICAEW கருத்து தெரிவித்திருந்தது. 2008 அக்டோபரில், அமெரிக்க ராணுவம் இண்டிலிஜன்ஸ் அறிக்கையில் ட்விட்டர் ஒரு "ஆற்றலுள்ள தீவிரவாத கருவி" எனக் கண்டறிந்து கூறப்பட்டிருந்தது. "இதில் ஏற்கனவே தீவிரவாதத்தை ஆதரிக்கும் வகையிலும் மற்றும் அவர்களது கண்ணோட்டத்திலும் சில உறுப்பினர்களால் கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தது" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. காசாவில் ஹாமாசுக்கு எதிரான போர் பற்றி பொதுமக்களிடமிருந்து ட்விட்டர் வழியாக கேள்விகள் பெறப்பட்டு உலகளாவிய பத்திரிக்கையாளர் கூட்டத்தை இஸ்ரேல் அரசு நடத்தியது, 2008 டிசம்பர் 30 இல் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் டேவிட் சாரங்கா இவ்வாறு செய்த முதல் அரசு இஸ்ரேல் அரசாகத்தான் இருக்கும் எனக் கருத்து தெரிவித்தார். 2008 ஏப்ரல் 10 இல், பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழக இதழியல் பட்டதாரி மாணவர் ஜேம்ஸ் பக் மற்றும் அவரது மொழிபெயர்ப்பாளர் முகமது மேரீ ஆகியோர் அரசாங்கத்திற்கு எதிரான கண்டனத்தை படம்பிடித்ததற்காக எகிப்தில் கைது செய்யப்பட்டனர். காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கும் வழியிலேயே பக் தனது 48 ட்விட்டர் "பின்பற்றாளர்களுக்கு" செல்பேசியின் மூலம் "கைது" என்ற செய்தியை அனுப்பினார். அந்த பின்பற்றாளர்கள் அவரது சார்பாக கெய்ரோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் U.C. பெர்கல்லியைத் தொடர்பு கொண்டனர், மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பத்திரிகை நிறுவனங்களையும் தொடர்பு கொண்டனர். பக் காவலில் வைக்கப்பட்டிருந்த போதும் தனது நிலையை தனது "பின்பற்றாளர்களுக்கு" உடனுக்குடன் அனுப்பி வந்தார். அடுத்த நாள் கல்லூரி அவருக்கு வழக்கறிஞரை நியமித்த பிறகு அவர் மஹல்லா சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2009 ஏப்ரல் 7 இல், ஆயிரக்கணக்கான இளம் பொதுவுடைமைக்கு எதிரான கண்டனக்காரர்கள் மாநிலங்களவை மற்றும் மால்டோவா Chişinăuவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடம் போன்றவற்றைத் தாக்கினார்கள், அரசாங்கத்தின் தேர்தல் முறைகேடுகளின் காரணமாக இது நடத்தப்பட்டது. இந்த நிகழ்வு தொடர்பான தகவல்கள் ஹேஸ்டேக் #pman பயன்படுத்தி ட்விட்டரில் பரவவிடப்பட்டது. இந்த ஹேஸ்டேக் Chişinău வின் மத்திய சதுக்கத்தின் பெயரான "P" "iaţa M arii A dunări N aţionale" இலிருந்து வந்தது. கண்டனங்களை ஒன்றுதிரட்ட ட்விட்டரும் பயன்படுத்தப் பட்டது. 2009 ஜூனில், ஈரானிய அதிபர் தேர்தலில் முறைகேடுகள் ஏற்பட்டது தொடர்பாக, அரசாங்கத்தால் வெளியுலகுக்கு தகவல் அனுப்பப் பயன்படும் பல்வேறு மற்ற தொடர்பு முறைகள் தடை செய்யப்பட்டிருந்த போதும், எதிர்ப்பாளர்கள் ட்விட்டரை ஓரணியில் சேர்வதற்கும் வெளியுலகுக்குத் தகவல் அனுப்பவும் பயன்படுத்திக் கொண்டனர். ஜூன் 15 இல் ட்விட்டர் 90 நிமிட பராமரிப்பு செயலிழப்பை ஏற்படுத்தத் திட்டமிட்டிருந்தது, ஆனால் ஈரானில் உள்ள எதிர்பாளர்களிடமிருந்து தகவல் அனுப்புவதற்கு முதன்மையான சேவையாக ட்விட்டர் மட்டுமே இருந்ததால், குறிப்பிட்ட எண்ணிக்கையில் ட்விட்டர் பயனர்களும் அமெரிக்க வெளியுறவுத்துறையும் செயலிழப்பைத் தள்ளிவைக்குமாறு ட்விட்டர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டனர், எனவே திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. CNN இன் அந்தச் சண்டையின் பதிவு ட்வீட்ஸில் ஹேஸ்டேக் #CNNfail என விமர்சிக்கப்பட்டது. ஈரானிய அரசாங்க வலைத்தளத்திற்கு எதிரான DDoS தாக்குதல் அமைப்பதற்கும் ட்விட்டரே பயன்படுத்தப் பட்டது. 2009 ஆகஸ்ட்டில், ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அமெரிக்காவில் உடல் நலப் பாதுகாப்பு சீரமைப்பின் அமெரிக்க எதிர்ப்பாளர்கள் பிரிட்டிஷ் தேசிய உடல்நல சேவையைத் தாக்கிய போது, ஆயிரக்கணக்கான NHS பயனர்கள் ட்விட்டர் பிரச்சாரத்தில் NHS க்கான தங்கள் ஆதரவை #welovetheNHS என்ற ஹேஸ்டேகைப் பயன்படுத்தித் தெரிவித்தனர். "அமெரிக்க வலதுசாரிகளின் பொய்களுக்கு எதிராக ஈடுகட்டும் வகையில்" ட்விட்டர் பிரச்சாரத்தைப் பயப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்து, அயர்லாந்தின் நகைச்சுவை எழுத்தாளர் கிரஹாம் லைஹான் இந்த ஹேஸ்டேகைத் தொடங்கினார். இந்த பிரச்சாரத்திற்கு பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரௌன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளின் ஆதரவும் கிடைத்தது. 2008 மே மாதத்தில் வெளிவந்த "நியூ சைண்டிஸ்ட்" இதழின் ஆய்வறிக்கையில் பிளாக்ஸ், வரைபடங்கள், புகைப்பட வலைத்தளங்கள் மற்றும் ட்விட்டர் போன்ற உடனடி செய்தியனுப்பும் முறைகள் அவசர காலங்களின் தகவல்களை அனுப்புவதில் பாரம்பரிய செய்தி ஊடகம் அல்லது அரசாங்க அவசரகால சேவைகளை விட சிறப்பாக செயல்படுகின்றன என்று கண்டுபிடித்திருந்தது. மேலும் அக்டோபர் 2007 இல் நடைபெற்ற கலிபோர்னியா தீயின் போது மக்கள் தங்கள் ட்விட்டர் பின்பற்றாளர்களுக்கு (நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டினர்) தங்கள் இருப்பிடத்தைத் தகவலாக தெரியப்படுத்தினர் மேலும் நிமிடத்திற்கு நிமிடம் எங்கெக்கு தீப்பிடித்தது என்ற தகவலை அனுப்பி வந்ததாக அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. தொண்டு நிறுவனங்களும் தங்கள் நிவாரண விளைவுகளுக்கு ட்விட்டரைப் பயன்படுத்திக் கொண்டன. அமெரிக்க செஞ்சிலுவை, உள்ளூர் பேரழிவுகளில் புள்ளியியல் மற்றும் திசைகள் உள்ளிட்ட தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் பரிமாறிக்கொள்ள ட்விட்டரைப் பயன்படுத்தத் தொடங்கியது. 2008 மும்பை தாக்குதலின் போது நேரில் பார்த்தவர்கள் ஒவ்வொரு 5 நொடிக்கும் 80 ட்வீட்ஸ் வீதம் தகவல் அனுப்பியதாகக் கணக்கிடப்பட்டது. மரணமடைந்தவர்கள் மற்றும் காயமுற்றோர் பட்டியலைத் தயாரிப்பதற்கு ட்விட்டர் பயனர்களும் உதவினர். கூடுதலாக, பயனர்கள் அவசர கால தொலைபேசி எண்கள் மற்றும் இரத்த தானங்கள் தேவைப்படுவோருக்கு மருத்துவமனைகள் உள்ள இடங்கள் போன்ற இன்றியமையாத தகவல்களை அனுப்பினர். பல்வேறு குழுக்கள் குறிப்பிடத்தக்க அளவில் ட்விட்டரைப் பயன்படுத்தி செய்திகளைச் சேர்த்து மற்றும் பதில்களை ஒருங்கினைத்த போதும் இதை "சமூக ஊடகம் தனது முதிர்ச்சியை வெளிப்படுத்திய தினம்" என CNN அழைத்தது. 2009 ஜனவரியில், US ஏர்வேஸ் விமானம் 1549பன்மடங்கு பறவைத தாக்குதல்களுக்கு உட்பட்டு ஹட்சன் நதியில் மூழ்கியது. மற்ற ஊடகங்களுக்கு அது பற்றிய விவரம் தெரிவதற்கு முன்னரே ஜேனிஸ் க்ரூம்ஸ் என்ற பயணி, பயணிகள் வெளியேறி வந்தது மற்றும் அதன் மற்ற புகைப்படங்களை எடுத்து ட்விட்பிக்கில் தொடர்ந்து அனுப்பி வந்தார். பிப்ரவரி 2009 விக்டோரியன் புஷ்ஃபயர்ஸ் தொடர்பாக ஆஸ்திரேலியன் கண்ட்ரி ஃபயர் அதாரிட்டி ட்விட்டரைப் பயன்படுத்தி வழக்கமான எச்சரிக்கைகள் அனுப்புதல் மற்றும் புதிய விசயங்கள் போன்றவற்றை அனுப்பி வந்தார். அந்த நேரத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருத் கூட தீ தொடர்பான தகவலை அனுப்ப, எப்படி பண உதவி மற்றும் இரத்த தானம் செய்வது மற்றும் அவசர கால உதவியை எங்கு பெறுவது போன்றவற்றிற்கு ட்விட்டரைப் பயன்படுத்தினார். ஏப்ரலில், பொது உடல்நலத் துறைகள் ட்விட்டரைப் பயன்படுத்தி H1N1 தொடர்பான விவரங்களை அளித்தது. ஏப்ரல் 2009 இல் ட்விட்டர் போஸ்ட் முதல் முறையாக குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் கொள்கைகளுக்கு எதிராக நடைபெற்ற டீ பார்ட்டி எதிர்ப்புகளை ஆதரித்த டேனியல் நைட் ஹேடன் FBI ஏஜண்டுகளால் கைது செய்யப்பட்டார். ஓக்லஹோமா நகரம், ஓக்லஹோமாவில் ஹேடன் அந்த எதிர்ப்பில் பங்கு கொள்ளும் நோக்கில், அவர் சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் வன்முறையான மிரட்டலுடன் ட்வீட்ஸ் அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார். 2009 ஜூலையில், ரியல் எஸ்டேல் மேலாண்மை நிறுவனமான ஹாரிசன் ரியாலிட்டி குழு, முன்னால் குடியிருந்தவரான அமந்தா போனன் மீது, நிறுவனத்தின் மதிப்பைக் கெடுக்கும் வகையில் ட்விட்டரில் அவர் அவரது நண்பர்களுக்கு செய்தி அனுப்பியதாக வழக்கு தொடுத்தது. போனன், ஹாரிசனுக்கு அவதூரு விளைவிக்கும் வகையில் அவரது நண்பர்களுக்கு பின்வரும் ட்வீடை அனுப்பியிருந்தார் என்று அந்நிறுவனம் வாதாடியிருந்தது, அது பின்வருமாறு, "யூ சுட் ஜஸ்ட் கம் எனிவே. வு செட் ஸ்லீப்பிங் இன் எ மோல்டி அபார்ட்மெண்ட் வாஸ் பேட் ஃபார் யு? ஹாரிசன் ரியால்டி திங்க்ஸ் இட்'ஸ் ஒகே." ஹாரிசன் நஷ்ட ஈடாக குறைந்த பட்சம் $50,000 கேட்டிருந்தது. இதழியலாளர்கள், பிளாக்கர்கள் மற்றும் சட்டவல்லுநர்கள் போன்றோர் இந்த வழக்கு குறித்து பரவலாகத் தங்கள் கருத்தை வெளிப்படுத்தினர். தமிழகத்தில் ட்விட்டரின் மூலம் பிரபல பாடகி சின்மயி மீது ஆபாச தாக்குதல் நிகழ்த்தியதாக இருவர் கைது செய்யப்பட்டனர். 2008 இல் பெயரிடப்படாத மார்ஸ் பீனிக்ஸ் தரையிறக்கி பயணத்தின் நிகழ்நேர விவரங்களை உடனுக்குடன் அனுப்பியதற்காக, 2009 பிப்ரவரியில் NASA ஷார்ட்டி விருது வென்றது. 2009 மே மாதத்தில், விண்வெளி வீரர் மைக் மாஸ்ஸிமினொ ட்விட்டரைப் பயன்படுத்தி ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி சரிசெய்யும் செயல்பாட்டு விவரங்களை அனுப்பினார், இதன் மூலம் முதன் முறையாக விண்வெளியில் ட்விட்டர் பயன்படுத்தப்பட்டது. 2009 அக்டோபர் 21 இல், நிக்கோல் ஸ்டோட் மற்றும் அவரது எக்ஸ்பெடிசன் 21 சகவிண்வெளிவீரர் ஜெஃப் வில்லியம்ஸ் ஆகியோர் சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து வாஷிங்டன், D.Cயில் உள்ள NASA தலைமையகத்தின் முன் கூடியிருந்த பொதுமக்களில் சில உறுப்பினர்களுடன் நேரடியாக ட்வீட் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, இதுவே விண்வெளிவீரர்களுடன் முதல் "நேரடி" ட்விட்டர் தொடர்பு ஆகும். இதற்கு முன்பு விண்வெளி ஓடத்திலிருந்து அல்லது ISS இலிருந்து விண்வெளி வீரர்கள் டிவிட்களை அவர்கள் [[ஜான்சன் விண்வெளி மையம்|மிசன் கண்ட்ரோலுக்கு]] அனுப்பி அவர்கள் மூலம் [[இணையம்]] வழியாக டிவிடரில் போட விரும்பினர்.[118] NASA கூட வழியாக அனைத்து NASA விண்வெளிவீரர்களிடமிருந்து தொகுக்கப்பட்ட தகவல்களை அனுப்புகிறது. ஒரே நேரத்தில் பலருக்கு எழுத்துச் செய்தி அனுப்பும் வசதி கொண்டது உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வகையில் ட்விட்டர் மாதிரியான மற்ற சேவைகளும் உள்ளன. சில சேவைகள் ட்விட்டரைப் போன்றே பயன்படுகின்றன ஆனால் அவை குறிப்பிட்ட நாடு தொடர்புடைய சேவையாகவோ அல்லது கோப்பைப் பகிர்ந்து கொள்ளுதல் போன்ற மற்ற சேவைகள், மைக்ரோ பிளாக்கிங் வசதியுடன் இணைந்த சேவைகள் அடங்கியவையாகவோ உள்ளன. மற்ற சேவைகள் இதே போன்ற நடைமுறைகளைத் தருகின்றன, ஆனால் அவை கார்ப்பரேசன்கள், இலாபநோக்கில்லாத அமைப்புகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள் போன்ற நெருக்கமாக நெட்வொர்க்குகளுகுள் செயல்படுபவையாக உள்ளன. பேக்கான் பேக்கான் ("'Pecan"), அறிவியற் பெயர் "கார்யா இல்லினாய்னென்சிசு" (Carya illinoinensis), என்பது வட அமெரிக்காவில் தென்-நடுவான பகுதிகளிலும், மெக்சிக்கோவில் கோஅவிலா (Coahuila), அதன் தெற்கே ஃகாலிசுக்கோ (Jalisco) முதல் வேராகுரூசு (Veracruz) வரை இயற்கைச் சூழலில் காணப்படும் பெரிய மரம். அமெரிக்கக் கூட்டு நாடுகளில் அயோவா மாநிலத்தின் தெற்கும், இல்லினாய்சு, இந்தியானா மாநிலத்தில் கிழக்கு முதல் கென்ட்டக்கி மாநிலத்தின் மேற்கு வரையும், வட கரோலினா, தென் கரோலினா, டென்னிசியின் மேற்கு, சியார்ச்சியா மாநிலம், அலபாமா, மிசிசிப்பி,லூசியானா, டெக்ஃசாசு, ஓக்லகோமா, ஆர்கன்சா ஆகிய இடங்களில் காணலாம். பேக்கான் என்னும் சொல் வட அமெரிக்க முதற்குடிகளில் ஒன்றான அல்காக்கியன் மொழியில் இருந்து பெற்றது. அல்காக்கியன் மொழியில் பேக்கான் என்றால் "கொட்டையை உடைக்கக் கல் தேவைப்படும் வகை" என்று பொருள். (தமிழில் பேச்சு மொழியில் எளிதில் "பேக்க" முடியாத கொட்டை என்று புரிந்து கொள்ளலாம்) பேக்கான் மரம் பொதுவாக 20-40 மீ (65-130 அடி) உயரமும், எப்பொழுதாவது 44 மீ (145 அடி) உயரமும், வளரும் இலையுதிர் வகையான பெரிய மரம்.; பொதுவாக இம்மரம் 12-23 மீ] (40-75 அடி) அகலமும், அடிமரத்தின் விட்டம் 2 மீ வரையும் கொண்டிருக்கும். ஒரு 10 ஆண்டு வளர்ந்த மரம் ஏறத்தாழ 5 மீட்டர் உயரம் நிற்கும். இதன் இலைகள் மாற்றடுக்கு முறையில் அமைந்துள்ளன. இலைகள் 40-70 செமீ நீளமுடன் இறகிலை (pinnately) அமைப்பில் 9-17 சிற்றிலைகளுடன், ஒவ்வொரு சிற்றிலையும் 5-12 செமீ நீளத்துடனும் 2-6 செமீ அகலத்துடனும் காணப்படும். பூக்கள் காற்று வீசலால் மகரந்த சேர்க்கை அடைகின்றன. பூக்கள் ஊசல் சரமாக காட்சியளிக்கும் ஊசற்பூங்கொத்து (காட்கின், catkin) வகையானது. இவ் ஊசல்சரப் பூங்கொத்து 18 செமீ நீளம் இருக்கும். பேக்கான் மரம், ஆண்பூக்களும் பெண்பூக்களும் தனித்தனியே இருக்கும் ஓரில்லப்பூ (monoecious) இனப்பெருக்க வகையைச் சேர்ந்த மரம். பெண் ஊசற்சரப் பூங்கொத்து சிறியதாகவும் 3-6 பூத்திரள் கொண்டதாகவும் இருக்கும். இதன் கனி (பழம்), ஒருபுறம் கூம்பிய நீளுருண்டை வடிவில் 2-6 செமீ நீளமும் 1.5-3 செமீ அகலமும் கொண்ட கொட்டை ஆகும். கொட்டைக்குள் இருக்கும் பருப்பு கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும் (படத்தைப் பார்க்கவும்), அதன் உறையான தோல்பகுதி சொரசொரப்பாக 3-4 மிமீ தடிப்புடன் முதலில் பச்சையாகவும், முதிர்ந்த பின்னர், பழுப்பு நிறமாகவும் மாறும் தன்மை உடையது. முதிரும் பொழுது நான்கு பகுதியாக பிளவுற்று உள்ளே இருக்கும் மெல்லிய ஓடுடைய கொட்டையை வெளியே காட்டும. பேக்கான்கள் அது உள்ள இக்கரி (hickory) குடும்பத் தாவரங்களின் பிறவற்றைப்போலவே உண்மையான கொட்டை/பருப்பு அல்ல ஆனால் அவை ஒட்டுக்கனிகள் (டிரூப், drupe). கனியின் மேலுறை பூவின் புறவுறைத் (எக்ஃசோக்கார்ப், exocarp) திசுக்களாலும், பழக்கொட்டை அகவுறையாலும் (எண்டோக்கார்ப், endocarp) உருவானவை. பேக்கான் மரத்தைப் பற்றி ஐரோப்பியர்கள் 16 ஆவது நூற்றாண்டில் அறிந்தார்கள் (எசுப்பானிய புதுப்புலம் காண்பர் கபேசா டி வாசா (Cabeza de Vaca) என்பவர் முதன்முதலாக குறிப்பிட்டார் என்பர்). எசுப்பானியர்கள் பேக்கான் மரத்தை ஐரோப்பாவிலும் ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் 16 நூற்றாண்டில் அறிமுகப்படுத்தி வளர்க்க வழி வகுத்தனர். 1792 இல் வில்லியம் பார்ட்ராம் (William Bartram) தன்னுடைய நிலைத்திணையியல் (தாவர) குறிப்புகள் அடங்கிய பயணம் (Travels) என்னும் நூலில் யுகுலான்சு எக்ஃசலாட்டா (Juglans exalata) என்னும் மரம் பற்றி எழுதியிருந்தார். இதுவே அமெரிக்க பேக்கான் மரம் என்று இன்று சிலர் கருதுகின்றார்கள் ஆனால் வேறு சிலர் அது இக்கரி வகையைச் சேர்ந்த கார்யா ஒவாட்டா ( "Carya ovata") என்று கருதுகின்றனர் . பேக்கான் மரம் அமெரிக்காவைப் பிறப்பைடமாகக் கொண்டது. ஐக்கிய அமெரிக்க நாடுகளின் தோற்றுனர்களில் ஒருவரான தாமசு செவ்வர்சன் "கார்யா இல்லினாய்னென்சிசு" (இல்லினாய்சு கொட்டை) என்னும் பேக்கான் மரங்களை வர்ச்சீனியாவில் உள்ள தன் மான்ட்டிசெல்லோ (Montecello) வீட்டை ஒட்டிய தோட்டத்தில் நட்டார். சியார்ச் வாசிங்டன் தன்னுடைய குறிப்பேட்டில் தாமசு செவ்வர்சன் தனக்கு இல்லினாய்சு கொட்டை தந்தார் என்றும் எழுதியுள்ளார். பேக்கான் கொட்டையின் பருப்பை உண்ணலாம். இது பலவகையான ஊட்டசத்துகள் கொண்டவை. உண்டபின் உட்கொள்ளும் இனிப்புவகைகளில் பேக்கான் பருப்புகள் பயன்படுகின்றன. பேக்கான் மரம் நாற்காலிகள், மேசைகள், இருக்கைகள், மரப்பலகைகளால் பதித்த தரைகள் போன்ற மரப் பொருட்கள் செய்யவும் பயன்படுகின்றது. இறைச்சியைப் புகைமூட்டி சமைக்கும் பொழுதும் மணத்திற்காக பேக்கான் மரங்கள் பயன்படுகின்றன. பேக்கான்கள் மிக அண்மையில் வளர்ப்பு மரமாக வேளாண்மை செய்யும் பெருமர இனம். முன்னரே இயற்கையில் வளரும் பேக்கான் மரங்களைப் பற்றி அறிந்திருந்த போதும், 1880 வரை பேக்கான்கள் வணிக நோக்கில் வேளாண்மைக்காக வளர்க்கப்படவில்லை இன்று அமெரிக்கக் கூட்டு நாடுகள் 80% முதல் 95% வரையிலான உலக மொத்த பேக்கான் உற்பத்தியைச் செய்கின்றது. ஆண்டுதோறும் 150-200 ஆயிரம் டன்கள் உற்பத்தி செய்கின்றன. பேக்கான் கொட்டைகளை அக்டோபர் மாத நடுவில் அறுவடை செய்கின்றனர். வரலாற்று நோக்கில் சியார்ச்சியா மாநிலமும் அதனை அடுத்து டெக்சாசு மாநிலமும், நியூ மெக்சிக்கோவும் ஓகலகாமாவும் முன்னணி விளைச்சல் நிலங்கள். அரிசோனாவிலும், அவாயிலும் கூட விளைவிக்கிறார்கள். அமெரிக்கக் கூட்டுநாடுகளுக்கு வெளியே, ஆத்திரேலியா, பிரேசில், சீனா, இசுரேல், மெக்சிகோ, பெரு, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் விளைவிக்கிறார்கள். அமெரிக்க வேளாண்மைத் துறை வரையறை செய்யும் வலுவான நிலம் என்னும் அளவுகோலில் 5 முதல் 9 வரையான நில வகைகளில், ஆனால் கோடையில் வெப்பமுடன் ஊரப்பதம் நிறைந்த இடங்களில், பேக்கான் மரங்கள் வளரும். பேக்கான் மரங்கள் உண்ணக்கூடிய பருப்புடைய பழக்கொட்டைகளை 300 ஆண்டுகளுக்கு மேலாகவும் கொடுக்கவல்லவை. பேக்கான்களில் புரதப் பொருட்களும் நிறைவுபெறா கொழுப்பியங்களும் நிறைய உள்ளன. 100 கிராம் பேக்கான் பருப்பில் அதிக நிறைவுபெறா ஒற்றைகொழுப்பியம் 41 கிராமும் நிறைவுபெறா பல்கொழுப்பியம் 22 கிராமும் உள்ளன. உண்ணும் கொழுப்புச் சத்துகள் நிறைவுபெறா கொழுப்பிய வகையாக இருப்பது நல்லது. பேக்கான் அதிகம் உள்ள உணவு உட்கொண்டால், பித்தக்கற்கள் உருவாகும் தீவாய்ப்புகள் பெண்களில் குறையும் என்று கண்டுள்ளனர். பேக்கான் பருப்புகளில் அதிகமான அளவு ஆக்சிசனாக்குத் தடுப்பிகள் இருப்பதாலும் தாவர இசுட்டெரால் ([phytosterol) இருப்பதாலும் "கெட்ட" கொலசுட்ரால் எனப்படும் குறைந்த அடர்த்தி கொழுப்பியப்புரததை (குறைந்த அடர்த்தி லிப்போபுரோட்டினை)க் குறைக்க உதவும் பிணிதீர் மருத்துவ முறை ஆய்வுகளின் படி நியூட்ரிசன் ஆய்விதழில் (செப்டம்பர் 2001) வெளியான ஆய்வு முடிவின் படி நாள்தோறும் கையளவு பேக்கான் பருப்புகளை உண்டுவந்தால் "கெட்ட" கொலசுட்ரால் அளவு மருந்துண்டு குறையும் அளவுக்குக் குறையக்கூடும் Research conducted at the University of Georgia has also confirmed that pecans contain plant sterols, which are known for their cholesterol-lowering ability. அமெரிக்கக் கூட்டு நாடுகளின் உணவும் மருந்தும் கட்டுப்படுத்து நிறுவனம் (FDA) கீழ்க்காணும் வாசகத்தை ஆய்வடிப்படையில் ஏற்றுக் கொண்டுள்ளது, "அறிவியல் உண்மைசுட்டிகளின் படி, ஆனால் நிறுவப்படாத கருத்தின் படி, குறைந்த அளவு நிறைகொழுப்புகளும் குறைந்த அளவு கொலசுட்ராலும் உள்ள திட்ட சத்துணவுகளில் ஒரு பகுதியாக ஒவ்வொரு நாளும் 1.5 அவுன்சு பேக்கான் போன்ற பெரும்பாலான கொட்டைப்பருப்புகளை உண்டு வந்தால் இதயநோய் ஏற்படும் தீவாய்ப்புகள் குறையும்" ("Scientific evidence suggests, but does not prove, that eating 1.5 ounces per day of most nuts, such as pecans, as part of a diet low in saturated fat and cholesterol, may reduce the risk of heart disease." சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம் சிங்களவர் விளையாட்டுக் கழக அரங்கம்இலங்கையில் காணப்படும் துடுப்பாட்ட அரங்கங்களில் ஒன்றாகும். இலங்கையில் துடுப்பாட்டத்தைக் கட்டுப்படுத்தும் இலங்கை துடுப்பாட்ட வாரியத்தின் தலைமையகமும் இதுவாகும். இலங்கையில் நடைப்பெறும் முக்கிய பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளையும், உள்நாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் இறுதிப் போட்டிகளையும் இங்கு நடத்துவதால் இவ்வரங்கம் இலங்கையின் லோட்ஸ் அரங்கம் எனப்படுகிறது.1984 ஆம் ஆண்டு இலங்க்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்குமிடையில் நடைப்பெற்ற தேர்வுத்துடுப்பாட்டப் போட்டி இங்கு நடைப்பெற்ற முதல் தேர்வுத் துடுப்பாட்ட போட்டியாகும். இவ்வரங்கின் முதலாவது ஒருநாள் பான்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி 1982 ஆம் ஆண்டு இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கும் இலங்கை துடுப்பாட்ட அணிக்கும் மிடையில் நடைப்பெற்றது. 1899 ஆம் ஆண்டு வேத்தியர் கல்லூரி, புனித தோமையார் கல்லூரி, வெசுலிக் கல்லூரின் ஆகியவற்றின் சிங்கள் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய அணி கோல்ட் துடுப்பாட்டக் கழகத்தை ஒரு ஓட்டத்தால் வென்றதை அடுத்து சிங்களவர் மட்டும் கொண்ட ஒரு துடுப்பாட்டக் கழகம் ஒன்றை அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் படி சிங்களவர் துடுப்பாட்டக் கழகம் அமைக்கப்பட்டது. கழகம் விகாரமாதேவி பூங்காவில் காணியை குத்தகைக்கு எடுத்தது. இது இலங்கை தொல்பெருள் காப்பகத்துக்கு அண்மையில் அமைந்திருந்தது. 1952 ஆம் ஆண்டு 20 ஏக்கர் காணி குத்தகைக்கு எடுக்கப்பட்டு தற்போதைய மைட்லாண்ட் இடத்துக்கு மாறியது. இரண்டாம் உலகப் போர் நடைப்பெற்றக் காலத்தில் இவ்வரங்கம் நேச நாடுகளின் வானூர்தித் தளமாக காணப்பட்டது. இவ்வரங்கின் காட்சி அரங்கு 1956 ஆம் ஆண்டு டொனொவந் அந்திரே என்பவரின் அனுசரனையால் முதல் முறை அமைக்கப்பட்டது. 1970 களில் பாரிய ஓட்டப் பலகை அமைக்கப்பட்டாலும் பின்னர் அதற்கு பதிலாக தற்போதைய ஓட்டப்பலகை அமைக்கப்பட்டது. மல்லி மல்லி என்னும் பெயரிலுள்ள கட்டுரைகள் வெந்தயம் வெந்தயம் (தாவர வகைப்பாடு :"Trigonella foenum-graecum"; ஆங்கிலம்: Fenugreek; இந்தி: மேதி) என்பது Fabaceae குடும்ப மூலிகை. இது உணவுப்பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இதன் செடி கீரையாகவும் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றிற்கான மூலப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. ஈரமான மண்ணுள்ள சூழலில், இது எளிதாக வளரும். காலி பன்னாட்டு அரங்கம் காலி பன்னாட்டு அரங்கம் தென் இலங்கையின் காலி மாநகரில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். இதன் ஒரு பக்கத்தில் காலி கோட்டையும் மற்ற இரு புறமும் இந்தியப் பெருங்கடலும் அமைந்துள்ளது. இது உலகிலுள்ள அழகான துடுப்பாட்ட அரங்கங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காலி துடுப்பாட்டக் கழகத்தின் இல்ல அரங்கமாக இவ்வரங்கம் காணப்படுகிறது. இந்த மைதானமானது, 1876 ஆம் ஆண்டு, குதிரைப் பந்தயத்திடலாக நிர்மாணிக்கப்பட்டது. 1872 ஆம் வரையிலும் எந்தவகையான நிரந்தரமான பார்வை அரங்குகளும் இங்கு காணப்படவில்லை. காலி நகராட்சி மன்றத்தின் செயலாளராயிருந்த திருவாளர், பீ.ஏ. டெம்லரின் ஆலோசனையின் பேரில், "கிரான்ட் ஸ்டான்ட்" என்ற பார்வையாளர் அரங்கு நிர்மாணம் செய்யப்பட்டது. இருந்த போதிலும், இந்த மைதானத்தில் குதிரைப் பந்தய ஓட்டங்கள் நடைபெறுவது இடைநிறுத்தப்பட்டதோடு, மாறாக கிரிக்கெட் விளையாடுதல் இடம்பெற்றது. 1927 ஆம் உத்தியோகபூர்வமாக இது கிரிக்கெட் அரங்கமாக அறிவிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 29 ஆம் நாள் இந்த மைதானத்தில் முதற்தர கிரிக்கெட் ஆட்டங்கள் இடம்பெற்றன. காலி கிரிக்கெட் மைதானத்தின் அந்தநாள் செயலாளராயிருந்த திருவாளர். தனபால லோரண்சு அவர்களின் வழிகாட்டலின் பேரில், அரங்கத்தில் பசும் புற்தரை ஆடுகளம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதற்காக கொழும்பு கிரிக்கெட் கழகத்தின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்பட்டன. பின்னர் இம்மைதானமானது, சர்வதேச கிரிக்கெட் அமைவுகளுக்கேற்ப தரமுயற்றப்பட்டு, கிரிக்கெட் தேர்வு போட்டிகளை இடம்பெறக்கூடிய இலங்கையின் ஏழாவது கிரிக்கெட் அரங்கமாக உருவானது. முதல் தேர்வு ஆட்டமானது, 1998 ஆம் ஆண்டு, யூன் மாதம் முதலாவது தேர்வுப் போட்டி இடம்பெற்றது. இது நியூஸிலாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றது. இதில், இலங்கை அணி ஒரு இனிங்சினாலும், 16 ஓட்டங்களாலும் வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் சர்வதேச போட்டியானது, 1998 ஆம் ஆண்டு, யூன் மாதம் 25 ஆம் திகதி, இந்திய அணிக்கும் இலங்கை அணிக்குமிடையில் நடைபெற ஒழுங்காகி இருந்தபோதும், அடை மழையின் காரணமாக அரங்கத்தின் ஆடுகளத்தில் நீர்தேங்கி நின்றதன் காரணத்தால் அப்போட்டி கைவிடப்பட்டது. ஆர். பிரேமதாச அரங்கம் ஆர். பிரேமதாச அரங்கம் மேற்கு இலங்கையின் கொழும்பு மாநகரின் மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஒரு துடுப்பாட்ட அரங்கமாகும். 1994 ஆம் ஆண்டுக்கு முன்னதாக இவ்வரங்கம் கெத்தாராம துடுப்பாட்ட அரங்கம் என அழைக்கப்பட்டது. இன்று இவ்வரங்கம் இலங்கை துடுப்பாட்ட அணி விளையாடும் முக்கிய அரங்களில் ஒன்றாக காணப்படுகிறது. 35,000 பேருக்கு இருக்கை வதைகளைக் கொண்ட இவ்வரங்கம் இலங்கையின் முன்னாள் அதிபர் ரணசிங்க பிரேமதாசவின் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாகும். அரங்கம் அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதியில் பாரிய சதுப்புநிலம் காணப்பட்டதோடு அருகே இருக்கும் கெத்தாராம கோவிலுக்கு பிக்குகள் படகு மூலமே சென்று வந்தனர். 1986 பெப்ரவரி 2 ஆம் நாள் இவ்வரங்கம் திறந்துவைக்கப்பட்டது. முதல் போட்டியில் இலங்கை 'B' அணியும் இங்கிலாந்து 'B' அணியும் விளையாடின. கள்ளிகுளம் அதிசய பனிமாதா கள்ளிகுளம் அதிசய பனிமாதா தேவாலயம், திருநெல்வேலி மாவட்டம், கள்ளிகுளம் கிராமத்தில் அமைந்துள்ளது. இயேசுவின் தாய், புனித கன்னி மரியாவின் நினைவாக ஒப்புக் கொடுக்கப்பட்ட இந்த தேவலயம், இந்திய கிறிஸ்தவத் திருயாத்திரை தலங்களுள் ஒன்றாகும். சமீப காலங்களில், இத்திருத்தலம் அன்னை மரியாளின் திருக்காட்சியினாலும், அற்புதங்களாலும் புகழ் பெற்று விழங்குகிறது. தேவலயம் கட்ட இடம் தேர்வு செய்ய இயலாமல் கிராம மக்கள் குழம்பியிருந்தபோது, கடுமையான கோடை காலத்தில் பனியை பொழிவித்து ஆலயம் கட்ட எல்லையை அன்னை மரியாள் அறிவுறுத்தினார். எனவே இங்கு அன்னை மரியாள் பனிமாதா என்று போற்றப் படுகிறார். கள்ளிகுளம் பனிமாதா தேவாலயம் இந்தியாவின் முன்னணி அன்னை மரியின் தேவாலங்களில் ஒன்றாக உள்ளது. இது தென் இந்திய மாநிலமான திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் நிகழ்ந்த அன்னையின் அற்புதங்களால் தேவாலயத்தின் புகழ் எட்டுதிக்கும் பரவி நிற்கின்றது. சில வலுவான எழுதப்படாத நிகழ்வுகள் அன்னைக்கும் கள்ளிகுளம் ஊருக்குமான உறவை பரைசாற்றுகின்றன. 1884 - ம் வருடம் கிராமமக்கள் அன்னை மரியின் புகழ் பாட ஒரு ஆலயம் அமைப்பதென முடிவெடுத்தனர். அவர்களால் ஆலய அளவு மற்றும் இடம் தொடர்பனா ஒரு முடிவிற்கு வர முடியவில்லை. அவர்கள் அன்னையை வேண்டினர். அது ஒரு கோடை காலம். ஒரு நாள் காலை நேரம் ஊர் மக்கள் ஆச்ச்ர்யபடத்தக்க ஒர் நிகழ்வை கண்டனர். அந்த கோடை காலத்திலும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் பனியலான போர்வை போர்த்தியிருந்தது. அன்று தான் மக்கள் அன்னையின் ஆசீரை கண்டுணர்ந்தனர். 1885 - ம் ஆண்டு விண்ணெட்டும் உயர ஆலயத்தை அவ்விடத்தில் கட்டி அன்னையின் திருவுருவச்சிலையை நிறுவினர். தூத்துக்குடியை அலங்கரிக்கும் புனித பனிமய அன்னை பேராலயத்திற்கு அடுத்தபடியாக தென்னகத்தில் பனிமயத்தாயின் பெயரால் புகழ் பெற்று விளங்கும் திருத்தலம், திருநெல்வேலி, தெற்கு கள்ளிகுளத்தில் வானளாவ உயர்ந்து நிற்கும் அதிசய பனிமாதா ஆலயமாகும். இந்த ஆலயத்தின் அருகேயுள்ள காட்சி மலையின் உச்சியிலுள்ள மாதா கெபி, ஆண்டு முழுவதும் பக்தர்களை ஈர்த்துக்கொண்டேயிருக்கின்றது. ஒரு காலத்தில் கள்ளிச்செடிகளும் முட்புதர்களும் இங்கே மண்டிக் கிடந்தன. இங்கு முதன் முதலில் குடியேறியவர்கள் காயாமொழியிலிருந்து வந்த இந்த நாடார் குலமக்கள் என்பர். அவர்கள் குடியேறிய ஆண்டு ஏறத்தாழ 1700. கள்ளிகுளம் விசுவாச ஒளி பெறுவதற்கு மூலகாரணமாக இருந்தவர்கள் சவரிமுத்து நாடார். அவரது மகன் சூசை நாடார் என்னும் சான்றோர்கள். சவரிமுத்து நாடார் பணகுடியைச் சேர்ந்தவர். இவர் 1768ம் ஆண்டில் திருமறையைத் தழுவி, வடக்கன்குளத்தில் அருட்திரு.தொம்மாசினி அடிகளாரால் திருநீராட்டுப் பெற்றார். அதன் பின்னர் இவர் காவல் கிணறு என்ற ஊரில் குடியேறினார். இவரது ஆறு பிள்ளைகளில் கடைசி மகனான சூசை நாடார், தனது திருமணத்திற்குப் பின்னர் குடும்பத்தோடு கள்ளிகுளத்தில் குடியேறினார். அங்கு 1798ம் ஆண்டு ஓலைக்குடிசைக் கோயில் ஒன்றைக் கட்டி தனது குடும்பத்தினரோடு வழிபாடு செய்து வந்தார். இப்புதிய சிற்றாலயத்திற்கு முன்னால் ஒரு கொடி மரத்தையும் நட்டு வைத்தார். 1838ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மார்டின், மோசேட் என்ற இரு இயேசு சபை குருக்கள் கள்ளிகுளத்திற்கு வந்தனர். அவர்களின் கண்காணிப்பில் பழைய சிற்றாலயம் சீரமைக்கப்பட்டு பெரிதாகக் கட்டப்பட்டது. கள்ளிகுளம் நீண்ட காலமாகத் தேரைக்குளம் என்றே அழைக்கப்பட்டது. ஆலயம் அமைந்திருந்த இடம் தேரைக் குளமேயாகும். இது அணைக்கரையின் இணையூராக இருந்தது. காலப்போக்கில் கள்ளிகுளத்தில் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை பெருகியது. அதனால் புதியதோர் பெரிய ஆலயம் தேவை என்பதை மக்கள் உணர்ந்தனர். அதே நேரத்தில் கள்ளிகுளம் வட்டாரத்தைக் கண்காணித்து வந்த இயேசு சபை அதிபர் அருட்திரு.கிரகோரி அடிகளார் அவ்வூரைப் பல வழிகளில் முன்னேற்றத் திட்டங்கள் தீட்டினார். அதன்படி நிர்வாகத் திறன் பெற்றிருந்த அருட்திரு. விக்டர் டெல்பெக் அடிகளாரை கள்ளிகுளத்திற்கு அனுப்பி வைத்தார். இவர் ஏற்கனவே கள்ளிகுளம் மக்களுக்கு ஓரளவு அறிமுகமானவர். அணைக்கரையிலிருந்து வடக்கன்குளத்திற்கு குதிரையில் போகும்போதெல்லாம் இம்மக்களோடு உரையாடுவார். 1865ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் நள்ளிரவில் ஆலயத்தை அடுத்த காட்சி மலையின் உச்சியில் ஒரு பெரிய சிலுவையை நிர்மாணித்தார். 1866ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி அவர் நாகப்பட்டனத்திற்கு மாற்றலாகிப் போய்விட்டார். உடல்நலக் குறைவால் அவர் அங்கிருந்து ஐரோப்பாவுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார். 1875ம் ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி அவர் மீண்டும் கள்ளிகுளத்திற்குப் பணி செய்ய அனுப்பப்பட்டார். 3 ஆண்டுகளாக வடக்கன் குளத்தில் தங்கி கள்ளிகுளத்தைப் பராமரித்து வந்தார். கள்ளிகுளத்தின் இதயமாக சிறப்புற்று விளங்குவது அங்கு வெண்பனிமயமாக வானளாவ உயர்ந்து நிற்கும் அதிசய பனிமாதா ஆலயம். அதன் வண்ணக் கோபுரம், தொலை தூரத்தில் நடமாடும் மக்களையும் அன்னையின் ஆசி பெற அழைப்பது போன்ற தோற்றம், கண்கொள்ளாக் காட்சியாகத் திகழ்கிறது. இந்த ஆலயத்தின் சிற்பி, அருட்திரு.விக்டர் டெல்பெக் அடிகளார். சிலுவை வடிவத்தில் இவ்வாலயத்தை அமைக்க அவர் திட்டமிட்டார். 1884ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி ஆலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. புதிய ஆலயம் அமைய வேண்டிய இடத்தையும் அதன் அளவையும் அன்னை மரியாளே பனி வடிவில் அற்புதமாகக் குறித்துக் காட்டினாள் என்று சொல்வார்கள். தங்களின் சொந்த உழைப்பினால் மக்கள் இவ்வாலயத்தை கட்டியெழுப்பினர். 1885ம் ஆண்டில் ஆலயக்கட்டுமான பணி ஆரம்பமானது. அருட்திரு.விக்டர் டெல்பெக் நினைவாக மக்கள் இவ்வாலயத்தை ஜெயநாதர் ஆலயம் என அழைப்பார்கள். காரணம், அவரை மக்கள் எப்போதும் ஜெயநாதர் சுவாமி என்றுதான் அழைத்து வந்தனர். ஜெயநாதர் என்றால் விக்டர் (க்ஷிவீநீtஷீக்ஷீ) என்றுதான் பொருள். பழைய ஆலயத்தைப் போல் இப்புதிய ஆலயமும் பனிமய அன்னைக்கே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் 190 அடி உயரம் கொண்டது. பெரிய கோபுரம் மட்டும் 150 அடி உயரம். 1938ம் ஆண்டு மார்ச் திங்கள் 23ம் நாள் கள்ளிகுளம் வரலாற்றில் பொன்னான நாள். பாறைக்கிணறு குருசடி அருகே மாலை 6.30 மணிக்கு விளையாடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்களுக்கு மலையில் மாதா காட்சியளித்தாள். காட்சியின்போது அன்னையின் பொற்பாதம் பதிந்த இடத்தில் அழகியதோர் கெபி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி முதல் ஆயர், மேதகு பிரான்சிஸ் திபுர்சியுஸ் ரோச் ஆண்டகை 1940ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் நாள் அர்ச்சித்துத் திறந்து வைத்தார். அப்போது அவர் கள்ளிகுளத்தைத் ‘தென்பாண்டி நாட்டின் லூர்துபதி’ என அழகு பெயர் சூட்டி அழைத்து மகிழ்ந்தார். அன்னையின் அற்புதக் காட்சியினால் கள்ளிகுளத்தின் சிறப்பு தென்னகமெங்கும் பரவியது. மரியாளின் திருத்தலமாக மாறியது. அன்னை காட்சி தந்த மலையானது பற்பல காலங்களில் பங்குத் தந்தையர்களால் அழகுபடுத்தப்பட்டது. மாதா கெபி வரை, முறையான படிகள் வெட்டப்பட்டன. இன்று மலையேறும் படிக்கட்டைத் தழுவிய வண்ணம் அழகிய தேவ ரகசிய தலங்களையும் சிலுவைப் பாதைத் தலங்களையும் காணலாம். இன்றும் மக்கள் கூட்டம் மலை மாதாவை தரிசித்து பல வரங்களைப் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் முதல் சனிக் கிழமையில் மாதாவின் பக்தர்கள் கூட்டம் பனி மலையில் அலை மோதுகிறது. கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலயமும், அன்னையின் காட்சி மலையும் வாழ்க்கையில் ஒரு முறையாவது தரிசிக்க வேண்டிய அதிசயத் திருத்தலமாகும். இத்திருத்தலத்தின் திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் திங்கள் 5ம் நாள் சிறப்புறக் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் வாழ்க்கையில் மலைபோல் வருகின்ற துன்பங்களெல்லாம் அன்னையின் அருளால் பனிபோல் மறையும் என்பதை, பனிமாதாவை அணுகுவோர் அனைவரும் உணர்வர். பாந்திரா-வொர்லி கடற்பாலம் வாந்திரா-வொர்லி கடற்பாலம் ("Bandra-Worli Sea Link", ) மும்பையின் புறநகர் பாந்திராவை வொர்லியுடனும் பின்னர் நாரிமன்முனையுடனும் இணைக்கும் மேற்கு தீவு நெடுஞ்சாலை திட்டத்தின் முதற்கட்டமாகும். இது எட்டு வழிகள் கொண்டதாய் முன்தகைவு திண்காறை பாதைப்பாலங்களைக் கொண்டு நடுவில் தொங்கு பாலத்துடன் அமைந்துள்ளது. மகாராட்டிர மாநில சாலை மேம்பாட்டு கழகம் (MSRDC)யின் ரூ 1600 கோடிகள் செலவான இந்த திட்டத்தை இந்துஸ்தான் கன்ஸ்ட்ரகுஷன் கம்பெனி (HCC) நிறைவேற்றியுள்ளது. வடிவமைத்து திட்டமேற்பார்வை யிட்டது டிஏஆர் கன்சல்ட்டன்ட்ஸ். 30 சூன் 2009 அன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்கள் இதனை திறந்துவைத்தார்.இந்த கடற்பாலம், தற்போது 45-60 நிமிடங்கள் எடுக்கும் பாந்திரா (மராட்டி:வாந்திரா)-வொர்லி பயண நேரத்தை 07-08 நிமிடங்களாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் 1999இல் சிவசேனா தலைவர் பாலாசாகேப் தாக்கரேயால் அடிக்கல் நாட்டப்பட்டு துவக்கப்பட்டது. பொதுநல வழக்குகள், வடிவமைப்பு மாற்றங்கள், செலவேற்றங்கள் என தடங்கல்களை எதிர்கொண்டது. இந்த பாலம் மாகிம் அருகே மேற்கு விரைவு நெடுஞ்சாலையும் சுவாமி விவேகானந்த் சாலையும் சந்திக்கும் லவ்க்ரோவ் சாலைசந்திப்பிலிருந்து வொர்லி கடற்முகத்தை இணைக்கிறது. பாந்திரா கம்பிப்பாலப்பகுதி 600 மீ நீளம் கொண்டது. இரு கம்பங்களும் 126 மீ உயரம் கொண்டவை. 2250 கிமீ அதிக தகைவுள்ள கால்வனைஸ் செய்யப்பட்ட இரும்பு கம்பிகள் 20,000 டன் எடையுள்ள பாலப்பகுதியை தாங்குகின்றன. நாட்டின் உயரிய கட்டிடக்கலை தொழிற்நுட்பத்திற்கு ஒரு சான்றாக விளங்குகிறது. பாந்திரா-வொர்லி கடற்பாலம் மும்பை மேற்கு கடற்கரையின் வெகு சிறிய பகுதிக்கே பயனுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திட்டமிட்டதில் ஒரு பகுதிக்கே இத்தனை ஆண்டுகள் எடுத்திருக்கின்றன. வொர்லியில் போக்குவரத்து பிரிவதை சீர் செய்யவில்லை.இதனால் முழுப்பயன் கிட்டாது.. என்ட்ரிக் லொரன்சு என்ட்ரிக் லொரன்சு ("Hendrik Antoon Lorentz", 18 சூலை, 1853 – 4 பெப்ரவரி 1928) ஒரு டச்சு இயற்பியலாளர். கதிர்வீச்சில் மின்காந்தத அலைகளின் தாக்கங்கள் பற்றிய இவருடைய ஆய்விற்காக இவருக்கும் இவருடன் துணை புரிந்து உதவிய இவருடைய முன்னாள் மாணவர் பைடர் சீமன்(Pyder zeeman) என்பவருக்கும் இணைந்து 1902-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது. வெளி மற்றும் காலத்தை விளக்குவதற்காக ஐன்ஸ்டைன் பயன்படுத்திய லொரன்சு சமன்பாட்டுரு மாற்றம் லொரன்சால் தருவிக்கப்பட்டது. மேலும் லொரன்சு விதி, லொரன்சு விசை, லொரன்சின் பகிர்ந்தளிப்பு ஆகியவை இவருடைய ஆய்வின் வெளிப்பாடுகளாகும். என்ட்ரிக் லொரன்சு ஆலந்திலுள்ள ஆருனெம் என்ற இடத்தில் ஓரளவு வசதியான லொரன்சு குடும்பத்தில் 18 சூலை 1853 இல் பிறந்தார். இவருடைய தந்தை ஜெரிட் பிரெடரிக் லாரன்ட்ஸ், தாயார் கிரீட் ருய்டா லான் ஜிங்கல் ஆவர். இவருக்கு 4 வயதாகும் போது இவருடைய தாயார் மறைந்தார். இவருடைய தந்தையார் மறுமணம் புரிந்துகொண்டார். லொரன்சு தனது ஒன்பதாவது வயதிலேயே அறிவியல், கணித அட்டவணையை எப்படிப் பயன்படுத்துவது என அறிந்திருந்தார். 1866-69 இல் ஆருனெமில் அப்போது புதிதாக துவக்கப்பட்டிருந்த உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். அறிவியல், வரலாறு, மொழிப்பாடங்களில் சிறந்து விளங்கினார். 1870 ஆம் ஆண்டு லைடன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இயற்பியல் மற்றும் கணிதவியல் கற்றார். இங்கு சேர்ந்த அடுத்த ஆண்டு இறுதியில் முனைவர் பட்டத்தைப் பெறுவதற்குரிய ஆய்வு மாணவராகத் தேர்ச்சி பெற்றார். அங்கு வானியல் பேராசிரியராகவிருந்த பிரெடரிக் கெய்சரின் கற்பித்தல் முறையால் பெரிதும் கவரப்பட்டார். அவரது தூண்டுதலினாலேயே இயற்பியலாளராகவும் ஆனார். இவ்விரு ஆண்டுகளிலும் ஆருனெம் என்ற இடத்தில் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இயற்பியல், கணிதம் பயிற்றுவித்தார். 1875-இல் ஒளி எதிரொளித்தல் மற்றும் ஒளி விலகல் நிகழ்வுகளுக்கான கோட்பாடுகள்’ குறித்து அவர் செய்த ஆய்வின் அடிப்படையில் லொரன்சுக்கு லைடன் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டத்தை அளித்தது. முனைவர் பட்டம் பெறும்போது லொரன்சுக்கு வயது 22 ஆகும். இவருடைய விளக்க ஆய்வுக்கட்டுரைகள், அன்றைய காலத்தில் வியப்பிற்குரியதாகக் கருதப்பட்ட மாக்ஸ்வெல்லின் மின்காந்தக் கொள்கையை மேலும் சிறப்பாக விளக்கும் வகையில் அமைந்திருந்தன. 1877இல் டச்சுப் பல்கலைக்கழகக் கல்விமுறை விரிவாக்கப்படுத்தப்பட்டது லெய்டன் பல்கலைக் கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறை ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் முதல் தலைவராக 24 வயதே நிரம்பிய லொரன்சு நியமிக்கப்பட்டார். 1881 இல் லாரன்சு அலெட்டா கர்தரினா கெய்சர் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு பெண்களும் ஒரு மகனும் பிறந்தனர். அதற்குப் பிறகு 20 ஆண்டுகள் இவருடைய வாழ்க்கை அமைதியான தனிப்பட்ட படிப்பு சார்ந்தே அமைந்திருந்தது. உலகம் முழுவதுமிருந்த அறிவியல் அறிஞர்களுடன் தொடர்பு கொள்வதிலும் இயற்பியல் கோட்பாடுகள் பற்றி அவ்வப்போது வெளியாகும் புத்தகங்களைப் படித்து ஆய்வு செய்வதிலும் இவருடைய காலம் கழிந்தது. 1878 ஜனவரி 25 இல் இவருடைய முதல் சொற்பொழிவு மூலக்கூறு இயற்பியல் பற்றியது. ஓர் ஊடகத்தில் ஒளியின் திசை வேகத்திற்கும் அதன் அடர்த்திக்கும் உள்ள தொடர்பு பற்றிய விளக்கக் கட்டுரையை வெளியிட்டார். அதுமட்டுமன்றி, இயங்கு பொருள்கள் பற்றிய அடிப்படைக் கருத்துகள் பலவற்றை வெளியிட்டார். 1897-இல் டஸ்ஸல் டார்ப் என்ற இடத்தில் ஜெர்மன நாட்டு இயற்பியலறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் பல நாடுகளில் இருந்தும் அறிவியலறிஞர்கள் கலந்து கொண்டனர். ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்சு, ஆகிய மொழிகளில் இவர் ஆற்றிய பொருள் பொதிந்த பேச்சுகளினாலும், இவருடைய ஆளுமைத்திறனினாலும் லொரன்சு இம்மாநாட்டில் முன்னணி அறிஞராக விளங்கினார். அடிப்படைக் கோட்பாடுகளை உருவாக்குவதில் லொரன்சு சிறப்புப் பெற்றிருந்தாலும் செய்முறைச் செயல்பாடுகளிலும் ஆர்வம் காட்டினார். 1918 இல் டச்சு அரசு கேட்டுக் கொண்டபடி திட்டமிட்டு அமைக்கப்பட்ட அணைக்கட்டு மற்றும் கடல் தொடர்பான வேலைகள் (நெதர்லாந்து) ஆகியவற்றின் விளைவுகளைக் கண்காணித்த குழுவின் தலைவராக இருந்து செயல்பட்டார். 20 ஆண்டுகள் மின்காந்தக் கொள்கை பற்றிய ஆய்வு, மின்சாரம், காந்தம், ஒளி ஆகியவற்றுக்கிடையே உள்ள தொடர்புகள் பற்றி இவருடைய ஆய்வுகள் அமைந்திருந்தன. எந்திரவியல், வெப்பவியல், வெப்ப இயக்கவியல், நீர்ம இயக்கவியல், இயக்கக் கோட்பாடுகள், தின்மநிலை இயற்பியல் ஒளி பரவும் வகை என்று இத்துறைகள் அனைத்திலும் இவருடைய ஆய்வுகள் அமைந்திருந்தன. லொரன்சு மின்காந்தவியல், எலக்ட்ரான் கோட்பாடு மற்றும் ஒப்புமை இயல் இவற்றில் அதிக அளவு ஆர்வம் செலுத்தினார். ஒப்புமை இயக்கங்களின் குறிப்பாயங்களுக்கிடையேயான ஒப்புமையை விளக்கக் காலநீட்டிப்பு பற்றிய கருத்தை வெளியிட்டார். அணுக்கள் மின்னூட்டத் துகள்களைக் கோண்டவை. ஒளியின் மூலங்களைப் பொருத்து இவற்றின் அலைவுகள் அமைகின்றன. இக்கொள்கையை 1896 இல் ஆய்வுகளின் அடிப்படையில் மெய்ப்பித்துக் காட்டியவர் பைடர் சீமன் என்பவர். இவர் லொரன்சின் முன்னாள் மாணவர். சீமன் அப்போது இவருக்கு உதவியாளராக அமைந்தார். லொரன்சு விதி, லொரன்சு விசை, லொரன்சின் பகிந்தளிப்பு லொரன்சு மாற்றம் ஆகிய்வை இவருடைய ஆய்வின் வெளிப்பாடுகள். நீளக் குறுக்கம், கால நீட்டிப்பு, நிறை அதிகரிப்பு போன்ற கணித விளக்கங்கள் ஒப்புமைக் கோட்பாட்டினை நன்கு விளக்குவதற்குப் பயன்பட்டன. ஈதர் என்ற ஊடகத்தின் வழியே மின்காந்த அலைகளின் இயக்கம்பற்றிய 'ஆல்பெர்ட் மைக்கல்சன்' மற்றும் 'எட்வின் மாலி' ஆகியவர்களின் ஆய்வுகளில் எழுப்பப்பட்ட பல ஐயங்களுக்கு விளக்கமளிக்கின்ற வகையில் லொரன்சு வகுத்த முறைகளினால் லொரன்சின் புகழ் மேலும் பரவியது. இதற்கான வழிமுறைகளைத் தனியாக 'ஜார்ஜ் பிட் ஜெரால்டு' என்பவர் வகுத்தார். இவை இரண்டும் சேர்ந்து பிற்காலத்தில் "லொரன்சு பிட்ஜெரால்டு சுருக்கம்" என்று அழைக்கப்பட்டது. 1920 இல் கதிர்வீச்சில் காந்தத்தின் தாக்கங்கள் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக இவருக்கும், இவருடன் துணை புரிந்து உதவிய இவருடைய முன்னாள் மாணவர் பைடர் சீமென் என்பவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. நோபல் பரிசு பெற்றதற்குப் பின்னால், இவருக்குப் பல்வேறு சிறப்புகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன. ராயல் கழகத்தின் உறுப்பினராக 1905இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1908இல் அக்கழகத்தின் சிறப்புப் பரிசான ராம்போர்டு பதக்கமும், 1918 இல் காப்ளே பதக்கமும் இவருக்கு வழங்கப்பட்டன. கொலம்பிய பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரான்கள் கொள்கை பற்றி இவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவுகளைத் தொகுத்து 1909 இல் நூலாக வெளியிட்டார். 1912 இல் பிரஸ்ஸல்சில் நடைபெற்ற முதல் கால்வே மாநாட்டிற்கு லொரன்சு தலைவராக நியமிக்கப்பட்டார். அந்த மாநாட்டிற்குப் பிறகு பாயின்கேர் என்பவர் குவைய இயற்பியல் பற்றி எழுதிய கட்டுரையில் லொரன்சின் நிலை பற்றிய விளக்கங்கள் வெளியாயின. 1912 இல் லாரன்சு தன்னுடைய பணியிலிருந்து ஓய்வு பெற்றார். 1912 இல் லொரன்சு ஆர்லெம்மில் உள்ள டெய்லர்சு அருங்காட்சியகத்தின் ஆய்வு இயக்குநராக நியமிக்கப்பட்டார். லெய்டன் பல்கலைக் கழகத்தில் வாரா வாரம் விரிவுரையாற்றும் பேராசிரியராகப் பணியாற்றினார். அப்பல்கலைக் கழகத்தில் லொரன்சுக்குப் பின்னால் அவருடைய பணியலமர்ந்த பால் எரென்பெஸ்டு என்பவர் கோட்பாட்டு இயற்பியலுக்கான கல்வி அமைப்பை 'லொரன்சு கல்வி நிறுவனம்' என்று இவருடைய பெயரால் மாற்றியமைத்தார். லொரன்சு தன்னுடைய வாழ்நாளில் அதிக அளவைக் கற்பதிலும், மருத்துவம், அறிவியல் ஆகியவற்றைக் கற்பிப்பதிலும் கழித்து வந்தார். தன்னுடைய இறுதிக் காலங்களில் அனைத்துலக அறிவியல் மாநாடுகளில் அதிகம் கலந்துகொண்டு அறிவியல் தருக்கங்களில் ஈடுபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவரைச் சிறப்பிக்கும் வகையில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டன. இறுதிக் காலத்தில் சில காலம் நோய்வாய்ப்பட்டு, ஆர்லெம் என்ற இடத்தில் 1928 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் இவ்வுலகை விட்டு மறைந்தார்.ஆருலெம் எனுமிடத்தில் பிப்ரவரி 10 ஆம்நாள் நடைபெற்ற இவருடைய இறுதிச் சடங்கில் உலகத் தலைவர்கள் பலரும், புகழ்பெற்ற இயற்பியலாளர்களும் கலந்துகொண்டனர். ராயல் கழகத்தின் சார்பாக அதன் தலைவராக இருந்த எர்னஸ்ட் ரூதர்போர்டு கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார். ஆலந்து நாடு அன்றுமதியம் 12 மணி அடித்தபோது இப்புகழ்பெற்ற அறிவியலறிஞருக்கு மரியாதை செலுத்தும் விதமாக 3 நிமிடங்கள் தந்தி மற்றும் தொலைபேசிச் சேவையை நிறுத்தி வைத்தது. யூ டியூபில் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அமேசான் படுகை அமேசான் படுகை என்பது தென்னமெரிக்காவில் அமேசான் ஆறும் அதன் துணையாறுகளும் பாயும் பகுதிகளைக் குறிக்கும். இதன் பெரும்பகுதி (40%) பிரேசில் நாட்டிலும், மற்றும் பெரு முதலிய நாடுகளிலும் பரந்துள்ளது. தென்னமெரிக்காவில் உள்ள அமேசான் மழைக்காடுகள் உலகிலேயே மிகப்பரந்த மழைக்காடுகள் ஆகும். இது 8,235,430 ச.கி.மீ அடர்ந்த காடுகளைக் கொண்டது. பல நூற்றாண்டுகளாக இது இப்பகுதியையும் அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து வந்துள்ளது. அமேசான் படுகையில் 12000 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 16-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகையின் போது பலநூறு இன மக்கள் இருந்தனர். எனினும் 90 சதவீதப் பழங்குடிகள் ஐரோப்பியத் தொற்றுநோய்களின் காரணமாக ஐரோப்பிய வருகையின் முதல் நூறு ஆண்டுகளுக்குள் அழிந்து விட்டனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதி தொடங்கி, மக்கட்தொகைப் பெருக்கம், நெடுஞ்சாலைத் திட்டம் போன்றவற்றால் காடுகள் அழிக்கப்படுகின்றன. அமேசான் படுகையில் உள்ள காடுகள் மிகவும் அடர்ந்து காணப்படுகின்றன. எனவே இங்கு பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன. இவை மனிதர்கள் செல்ல முடியாத அளவுக்கு அடர்த்தியாக இருப்பதால் இங்குள்ள உயிரினங்களின் எண்ணிக்கை இன்றளவும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை. இரெசுவரட்ரால் இரெசுவெரட்ரால் (Resveratrol) ("டிரான்சு"- இரெசுவெரட்ரால்) என்னும் வேதிப்பொருள், இயற்கையில் செடிகொடிகளில் நோய்த்தடுப்புப் பொருளாக (செடிநோயெதிர்ப்பியாக (phytoalexin)) இருக்கும் ஒரு பொருள். இசுவெரட்ரால் 14 கரிம அணுக்கள் கொண்ட ஒரு வேதிப்பொருள். இதில் மூன்று -OH குழுக்கள் இரண்டு பென்சீன் போன்ற அறுகோண வளையத்துடன் இணைந்துள்ளன. இச் சேர்மத்தின் மூலக்கூறு எடை 228.243. பாக்டீரியா போன்ற நுண்ணியிரிகளும் பூஞ்சைக் காளான்கள் போன்றவையும் செடிகொடிகளைத் தாக்கி நோயுண்டாக்கும் பொழுது "இரெசுவெரட்ரால்" என்னும் பொருள் செடிகொடிகளில் எதிர்விளைவாக உருவாகின்றது. இரெசுவெரட்ராலை செயற்கையாக வேதியியல் முறையிலும் உருவாக்கலாம் .; இதனை நிப்பான் நாட்டில் உள்ள "பாலிகோனம் கசுப்பிடாட்டம்" (Polygonum cuspidatum )என்னும் மூங்கில் போன்ற செடியில் இருந்து பிரித்தெடுத்து விற்கிறார்கள். இரெசுவெரட்ராலின் பயன்பாட்டால் புற்றுநோய்தடுப்புப் பண்புகளும், நல் இதய, குருதியோட்ட இயக்கப் பண்புகளும் வளமுறுகின்றன என்று சுண்டெலிகளில் செய்த ஆய்வுகளின் வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இம்முடிவுகள் மனிதர்களுக்கும் பொருந்தும் என்பது இன்னும் முடிவாகவில்லை. மனிதர்களில் செய்த ஓராய்வின், படி மிகக்கூடுதலான அளவு (3–5 g) இரெசுவெரட்ரால் தந்ததின் விளைவாக "குருதி இனியம்" (குருதிச் சக்கரை) குறைந்ததாக கண்டுபிடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.. இரெசுவெரட்ரால் திராட்சையில் தோலில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது திராட்சைச் செங்கள்ளில் (சிவப்பு ஒயின்) உள்ள ஒரு பொருள் என்றாலும் பிரான்சிய முரண்புதிர் (French paradox) என்பதை விளக்கும் அளவுக்குக் கூடுதலான அளவில் இல்லை. இரெசுவெரட்ரால் உட்கொண்டால் வாழ்நாள் நீளுவதாக வீட்டு ஈ, "நெமட்டோடு" (Nematode) என்னும் புழு, குறுகிய காலமே வாழும் ஒருவகை மீன் ஆகியவற்றில் செய்முறை ஆய்வுகளின்வழி நிறுவியுள்ளனர், ஆனால் சுண்டெலிகளில் வாழ்நாள் நீட்டத்தை நிறுவவில்லை. "ஓரோவிட்ஃசு" (Howitz), "சின்க்ளேர்" (Sinclair) ஆகியோர்களின் குழுக்கள் 2003 இல் நேச்சர் (Nature) என்னும் ஆய்விதழில் அறிவித்தவாறு இரெசுவெரட்ராலின் பயன்பபட்டால் "சாக்கரோமைசசு செரெவிசியீ" (Saccharomyces cerevisiae) என்னும் இயீசுட்டின் (yeast) வாழ்காலம் கூடுகின்றது என்று நிறுவினர். பின்னர் சின்க்ளேர் செய்த ஆய்வின் படி இரெசுவெரட்ரால் பயன்பாட்டால் "கேனோராபுடிட்டிசு எலெகான்சு" (Caenorhabditis elegans) என்னும் புழுவின் வாழ்காலமும், வீட்டு ஈயாகிய "டிரொசோவிலியா மெலனோகாசிட்டரின்" (Drosophila melanogaster) வாழ்காலமும் நீண்டதாக நிறுவினார். 2007 இல் வேறு ஒரு குழுவும் சின்க்ளேரின் புழுவின் (கேனோராபுடிட்டிசு எலெகான்சு (Caenorhabditis elegans)) வாழ்கால ஆய்வுமுடிவுகளை மீண்டும் செய்து காட்டி உறுதிப்படுத்தினர் ஆனால் மூன்றாவது ஒரு குழு செய்த ஆய்வின் படி வீட்டு ஈயாகிய டி. மெலனோகாசிட்டரின் ("D. melanogaster") வாழ்கால நீட்டத்தையோ, கே. எலெகான்சு ("C. elegans") என்னும் புழுவின் வாழ்காலத்தின் நீட்டதையோ உறுதி செய்ய இயலவில்லை. 2006 இல் இத்தாலிய அறிவியலர் முதன்முதலாக இரெசுவெரட்ரால் ஊட்டத்தால் முதுகெலும்பி உயிரி ஒன்றில் வாழகால நீட்டத்தை நிறுவினர். பொதுவாக குறைந்த காலமே உயிர்வாழும் மீனினமாகிய "நோத்தோபிரான்க்கியசு ஃவுர்சேரி" (Nothobranchius furzeri) என்னும் மீனின் இடைநிலை (median) வாழ்காலமாகிய 9 கிழமைகள் (வாரங்கள்) என்பது உயரெல்லையான இரெசுவெரட்ரால் ஊட்டத்தால், 56% கூடியது என்று காட்டினர். அதுமட்டுமல்லாமல் இரெசுவெரட்ரால் ஊட்டம் பெற்ற மீன்கள் கூடுதலான நீச்சல் நடவடிக்கை கொண்டதாகவும், துன்பம் தரும் சூழல்களை கூடிய திறனுடன் கற்றுக்கொளும் தன்மை உடையதாகவும் இருந்ததாகக் கண்டனர். அவ்வாண்டின் பிற்பகுதியில் சின்க்ளேர் அறிவித்தபடி அதிக கொழுப்புச் சத்துணவு உட்கொள்ளும் எலிகளில் இருக்கவேண்டிய கெடுதியான விளைவுகள் இரெசுவெரட்ரால் ஊட்டத்தால் குறைந்திருந்தது. இத்தனைக்கும் வழக்கமான திட்ட சத்துணவு உட்கொள்ளும் எலிகளை ஒப்பிடும் பொழுது அதிக கொழுப்புச் சத்துணவு உட்கொள்ளும் எலிகளின் உணவில் ஐதரசனேற்றம் பெற்ற தேங்காய் எண்ணெய் சேர்ந்திருந்தது, இதனால் அவ்வெலிகள் பெற்ற ஆற்றலில் 60% கொழுப்பில் இருந்து பெற்றன, 30% கூடுதலான காலரிகளும் பெற்றன. இவ்விரண்டு குழுவான எலிகளுக்கும் 22 mg/kg என்னும் அளவில் இரெசுவெரட்ரால் தரப்பட்டது. இதனால் 30% குறைவான இறப்பு வாய்ப்புகள் இருந்தன. இரெசுவெரட்ரால் தரப்பட்டதால் பொதுவாக அதிக கொழுப்புடைய உணவு உட்கொள்வதால் மரபணுவழி நிகழக்கூடிய 155 உயிர்வேதியியல் மாற்றங்களில் 144 மாற்றங்கள் தடுக்கப்பட்டன என்று கண்டனர். இரெசுவெரட்ராலோடு அதிக கொழுப்புணவு உட்கொள்ளும் எலிகளில் இன்சுலின், குளுக்கோசு மட்டங்கள் (அளவுகள்), வழக்கமான உணவு உட்கொள்ளும் எலிகளின் மட்டங்களுக்கு நெருக்கமானதாக இருந்தன. ஆனால் இரெசுவெரட்ரால் சேர்க்கப்பட்டதால் கொலசிட்ரால் அளவும் வினையுறு கொழுப்பிய காடிகளின் (free fatty acids) அளவும் மாறவில்லை (அதிக கொழுப்புணவு உட்கொள்ளும் எலிகளில் இவை வழக்கமான உணவு உட்கொள்ளும் எலிகளில் இருந்ததை விட அதிகமாகவே இருந்தன). 1997 இல் "காய் யாங்" என்பவர் புற்றுநோய் ஊட்டிகள் தந்திருந்த சுண்டெலிகளுக்கு இரெசுவெரட்ரால் கொடுத்து வந்தபொழுது அவற்றுக்கு தோல் புற்றுநோய் வராமல் தடுத்தது என்று காட்டினர் இரெசுவெரட்ராலின் புற்றுநோய்த்தடுப்புப் பண்பும் இயக்கமும் விலங்குகளை மாதிரியாகக் கொண்ட பல ஆய்வுகளால் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் மனிதர்களிடையே இவ்வகையான மருத்துவ முறை ஆய்வு முடிவுகள் ஆதும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மெலானோமா என்னும் தோல் புற்று நோய்க்கும் பெருங்குடல் புற்றுநோய்க்கும் இரெசுவெரட்ராலால் விளையும் பயனைப் பற்றி மருத்துவ ஆய்வு செய்ய நோயாளிகள் தேர்வுசெய்யப்படுகிறார்கள் (2008 இல்). உடலுக்கு வெளியே செய்து பார்த்த ஆய்வுகளின் படி இரெசுவெரட்ராலாலின் இயக்கம், தோல், முலை, பெருங்குடல், மூச்சுக்குழல், விந்துப்பை (prostate), இரைப்பை, கணையம் ஆகியவற்றில் தோன்றும் புற்றுநோய் உயிரணுக்களில் (கண்ணறைகளில்) குணப்படுத்து முகமான விளைவுகள் காணப்பட்டன. இதே போல லூக்கேமியா என்னும் குருதிப் புற்றுநோய் வகையிலும் முன்னேற்றம் இருந்தது. ஆனால், மனிதர்களில் செய்த ஆய்வின் படி புற்றுநோய் தடுப்புக்குத் தேவையான அலவு இரெசுவெரட்ரால் சென்றடையவில்லை என்ற முடிவுக்கு வந்தனர். இம்முடிவுகள் உயிருள்ள விலங்குகளை மாதிரிகளாகக் கொண்டு நடத்திய ஆய்வு முடிவுகளுடன் ஒத்திணக்கம் உடையதாக உள்ளன. இரெசுவெரட்ராலின் பயன்திறன் அது உடலியக்கத்தில் தேவைப்படும் இடத்தில் கிடைக்கும் (bioavailability) குறைந்த விகிதத்தால் கட்டுப்படுத்தப்படுகின்றது.. சுண்டெலிகளின் உடலின் புறப்பகுதியின் வழியே செலுத்திய (topical application) இரெசுவெரட்ரால், அவ்வெலிகள் புறவூதாக் கதிர்கள் (B வகை புறவூதாக் கதிர்கள்: UVB 320-280 நானோமீட்டர்) பெறுவதற்கு முன்னும் பின்னும் தோலில் ஏற்படும் அழிவைத் தடுத்தது. அதே போல தோல புற்றுநோய் தோன்றுவதையும் தடுத்தது. ஆனால் வாய்வழியாக உட்செலுத்திய இரெசுவெரட்ராலால் "மெலானோமா" (தோல் புற்றுநோய்) ஊட்டிய சுண்டெலிகளுக்கு எதிர்பார்த்த நற்பயன் ஏதும் தரவில்லை. இதே போல வாய்வழியாகத் தந்த இரெசுவெரட்ராலால், சுண்டெலிகளில் நுரையீரல் புற்றுநோய், குருதி புற்றுநோய் (லூக்கேமியா) ஆகியவற்றிலும் நற்பயன் ஏதும் விளையவில்லை. சென்னையை சேர்ந்த ஆய்வாளர்கள் "பால்சாமியும் சுப்பிரமணியனும்", சக்கரைநோய் உள்ள எலிகளில் செய்த ஆய்வுகளின் பயனாய் இரெசுவெசுட்ராலுக்கு உயர் சக்கரைநிலையைத் தடுக்கும் பண்பு இருப்பதாக அறியமுடிகின்றது. அவர்கள் ஆய்வில் இசுட்ரெப்டோசின்-நிக்கொட்டினமைடு ஊட்டப்பட்ட (streptozotocin-nicotinamide-induced ) செய்முறை சோதனைக்கான சக்கரைநோய் எலிகளுக்கு அவற்றின் உடல் எடையில் ஒரு கிலோகிராமுக்கு 5 மில்லிகிராம் என்னும் விகிதத்தில் வாய்வழியாக இரெசுவெசுட்ராலை 30 நாட்களுக்குத் தந்தபின் அவ்வெலிகளின் குருதி குளூக்கோசு இனியம் (குருதிச் சக்கரை), பிளாசுமா இன்சுலின், கிளைக்கோசைலேட்டடு ஈமோகுளோபின், AST, ALP, ALT ஆகியவை சீரடைந்தன இரெசுவெசுட்ரால், சக்கரைநோயுள்ள எலிகளின் கல்லீரலிலும், சிறுநீரக திசுக்களிலும் நிகழும் மாவுச்சத்துப் பொருள்களை வளர்சிதை மாற்றம் செய்யும் நொதியத்தை கட்டுப்படுத்துகின்றது என்றும் அறிந்தனர். சோதனை எலிகளில், செய்த இவ்வாய்வுகளின் பயனால் இரெசுவெசுட்ராலுக்கு சக்கரைநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக அறிய முடிகின்றது. பிரான்சு நாட்டைச் சேர்ந்த "இழ்சோஆன் ஓவெர்க்" (Johan Auwerx) (பிரான்சில் உள்ள இல்க்கிரிழ்ச் நகரில் இருக்கும் மரபணு, மூலக்கூறு உயிரணு உயிரியல் கல்லூரி) என்பாரும் பிற ஆய்வாளர்களுடன் சேர்ந்து நவம்பர் 2006 இல் செல் என்னும் ஆய்விதழில் அறிவித்த கண்டுபிடிப்பின்படி 15 கிழமைகளுக்கு (வாரங்களுக்கு) இரெசுவெரட்ரால் ஊட்டப்பட்ட சுண்டெலிகள் நடைதள எந்திரத்தில் (treadmill) ஓடும் திறனில் கூடுதலான தாங்குதிறன் கொண்டிருந்தது. சின்க்ளேர் முன்னர் அறிவித்தவாறு சிர்ட்டூயின்-1 (Sirtuin 1) என்னும் மரபணுத் தொடர் (gene) தூண்டப்பட்டதே காரணம் என்னும் கருத்துக்கு இவ்வாய்வின் முடிவு வலு சேர்க்கின்றது. நிக்கோலசு வேடு (Nicholas Wade) என்பவர் இழ்சோஆன் ஓவெர்க்கை நேர்காணல் கண்ட பொழுது கூறியவாறு, சுண்டெலிகளுக்கு அதன் உடலெடையில் 400  மில்லிகிராம்/கிகி (mg/kg) என்னும் அளவில் தந்த இரெசுவெரட்ரால் சின்க்ளேர் தந்த 22  மில்லிகிராம்/கிகி என்னும் அளவைக்காட்டிலும் மிகக் கூடுதலானது. இதற்கு ஈடான மருந்தூட்ட அளவை மனிதர்களுக்குக் கொடுத்தால் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் தீமைகளையும் அளவிடப்படவில்லை. SIRT1 என்னும் மரபணுத் தொடரில் (SIRT1 gene) குறிப்பிட்ட வேறுபாடுகள் கொண்ட 123 முழுவளர்ச்சியடைந்த பின்லாந்திய தனியாட்களில் செய்த ஆய்வின்படியும் கூடுதலான வளர்சிதை மாற்றங்கள் அடைந்து, கூடுதலான திறனுடன் உணவு ஆற்றல் பயனுற்றதாக கண்டுபிடித்தார்கள்-ஆய்வகத்தில் சுண்டெலிகளில் கண்ட விளைவை மனிதர்களிடமும் காண்பதற்கான ஒரு முன்குறிப்பு இது என்று நினைக்கலாம்-. நவம்பர் 2008 இல் கார்ணெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த "வைல் மருத்துவக் கல்லூரி"யைச் (Weill Medical College of Cornell University ) சேர்ந்த ஆய்வாளர்கள் உணவுடன் இரெசுவரட்ரால் சேர்ப்பதால் சில விலங்குகளின் மூளையில் கெடுதிதரும் படிவுகள் (plaque formation ) நிகழ்வதைக் குறிப்பிடும் அளவுக்குக் குறைவதாகக் கண்டுபிடித்தனர். இவ்வகைப் படிவுகள் நரம்புமண்டல இயக்கத்தில் சிதைவுதரும் அல்சீமர் நோய் முதலியவற்றை உண்டாக்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. சுண்டெலிகளில் வாய்வழியாக ஊட்டப்பட்ட இரெசுவரட்ராலால், மூளையில் ஏற்படும் படிவுகள் பெருமளவும் குறைவதாகக் கண்டுபிடித்தனர். ஐப்போத்தாலமசில் (hypothalamus) -90% ம், இசுட்ரையாட்டத்தில் (striatum)-89% உம், மீடியல் கார்ட்டெக்ஃசில் (medial cortex) -48% உம் குறைந்ததாகக் கண்டனர். மனிதர்களிலும் வாய்வழி இரெசுவரட்ரால் தந்தால் மூளையில் ஏற்படும் படிவுகள் குறையலாம் என்றும் அதனால் சில நோய்கள் குறையலாம் என்றும் நிறுவப்படாத கருத்துகள் உள்ளன. இரெசுவெரட்ராலை முதன்முதலாக 1940 இல் "தாக்கவோக்கா" (Takaoka ) என்பவர் வெள்ளை இந்திய போக் (white hellebore) என்னும் செடியில் இருந்து பிரித்தெடுத்தார். பின்னர் 1963 இல் நிப்பானிய முடிச்சுக்களைச்செடி என்னும் பொருள் படும் "சப்பானீசு நாட்வீடு" (Japanese knotweed ) என்னும் செடியில் இருந்து பிரித்தெடுத்தனர். ஆனால் 1992 இல் திராட்சைக் கள்ளில் (வைனில்) இருப்பது கண்டுபிடித்தபின், அதன் இதயநோயுக்கு தடுப்பாக அமையும் பண்புகளைப் பற்றி அறிந்தபின் பரவலான ஈர்ப்பைப் பெற்றது.. திராட்சைகளில் முதன்மையாக அதன் தோலில் இரெசுவெரட்ரால் இருப்பதாகக் கண்டுபிடித்தனர், மேலும் "முசுக்காடைன்" (muscadine ) திராட்சையில் அதன் விதையிலும் இருப்பத்காகக் கண்டுபிடித்தனர். திராட்சைத் தோலில் காணபடும் இரெசுவெரட்ராலின் அளவு திராட்சைப் கொடிவகையை பொருத்தும், வளரும் மண், இடம் பொருத்தும், பூஞ்சைக் காளானால் தாக்கப்பட்ட நிலையும், எவ்வளவு காலம் கள் நொதிப்பில் இருந்ததும், எவ்வளவு காலம் திராட்சைத் தோலுடன் சேர்ந்திருந்தது என்பதைப் பொருத்தும் இருக்கும். உணவுப்பொருளில் காணப்படும் இரெசுவெரட்ராலின் அளவு பெரிதும் மாறுபடுகின்றது. திராட்சை செங்கள்ளில் (சிவப்பு வைனில்) திராட்சைக் கொடியின் வகையைப் பொருத்து 0.2 முதல் 5.8 மில்லிகிராம்/லீட்டர் (mg/L) இருக்கும் , ஆனால் வெண்கள்ளில் (வெள்ளை வைனில்) மிகவும் குறைவாகவே உள்ளது. முக்கியகாரணம், செங்கள் தோலுடன் நொதிக்கப்படுகின்றது ஆனால் வெண்கள் தோலை நீக்கியபின் நொதிக்கப்படுகின்றது. பல ஆய்வறிப்புகளின் படி முசுக்கடைன் வகை திராட்சையைக் கொண்டு செய்யப்படும் சிவப்பு வெள்ளை வகையான கள் இனங்களில் கூடிய அளவில் இரெசுவெரட்ரால் இருக்கலாம் எனவும், 40 மிகி/லீ அளவு வரை கூட இருக்கலாம் எனவும் தெரிவித்தன. ஆனால் பின்னர் செய்த ஆய்வின்படி வெவ்வேறு வகையான முசுக்கடைன் திராட்சைகளில் இரெசுவெரட்ரால் இல்லை என்று கண்டுபிடித்தார்கள் மல்பெரிப் பழம் (குறிப்பாக அதன் தோல்) இசுவெரட்ரால் தரும் ஒரு உணவுப்பொருளாக விற்கப்படுகின்றது ஓர் அவுன்சுக்கு ஓர் அவுன்சு, வேர்க்கடலையில் ஏறத்தாழ திராட்சை செங்கள்ளில் பாதி அளவு இரெசுவெரட்ரால் உள்ளது. சராசரியாக சந்தையில் கிடைக்கும் ஓர் அவுன்சு வேர்க்கடலையில் (15 முழு கடலைகள்) உள்ள இரெசுவரட்ராலில் அளவு 79.4 மைக்ரோகிராம்/அவுன்சு (µg/ounce.) ஒப்பீட்டு அளவில், செங்கள்ளில் ஏறத்தாழ 160 மைக்ரோகிராம்/அவுன்சு நீலக்குறுங்கனிகளில் (Blueberries) உள்ள இரெசுவரட்ரால் ஏறத்தாழ "பில்குறுங்கனிகளில்" (bilberries) இருப்பதைப் போல இருமடங்காகும். ஆனால் இடத்தைப் பொருத்து மிகுந்த வேறுபாடு உள்ளது. இக் கனிகளில் உள்ள இரெசுவரட்ரால், திராட்சையில் உள்ளதில் 10% உக்கும் குறைவானதே. சமைத்தாலோ, சூடு செய்தாலோ, இந்த குறுங்கனிகளில் உள்ள இரெசுவரட்ரால் அதிலும் பாதியாக குறைந்துவிடும். டி. வி. இராமசுப்பையர் டி.வி.இராமசுப்பையர் (அக்டோபர் 2, 1908 – ஜூலை 21, 1984) தினமலர் நாளிதழின் நிறுவனர். பொதுவாக டி.வி.ஆர் என அறியப்படும் இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர். =வாழ்க்கை குறிப்பு= கோ. சாரங்கபாணி கோ. சாரங்கபாணி (ஏப்ரல் 19, 1903 - 1974) சிங்கப்பூரில் தமிழ்த் தொண்டாற்றியவர். பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1935 இல் தமிழ் முரசு பத்திரிகையை வார இதழாகத் தொடங்கியவர். தமிழ் முரசு வழியாகவே எழுத்தாளர் பேரவை, மாணவர் மணிமன்ற மலர், தமிழ் இளைஞர் மணிமன்றம் ஆகிய அமைப்புகளை உருவாக்கினார். 1903-ல் தமிழகத்தில் பிறந்த கோ. சாரங்கபாணி திருவாரூரில் உயர்நிலைப்பள்ளியில் மெட்ரிக்குலேஷன் பரீட்சையில் தேறினார். 1924- ல் தமது இருபதாவது வயதில் சிங்கப்பூர் வந்தார். சிங்கப்பூரில் "முன்னேற்றம்" என்னும் பத்திரிகையில் துணையாசிரியராக தமது எழுத்துப் பணியைத் துவங்கினார். 1930 ம் ஆண்டில் அதன் ஆசிரியரானார். முன்னேற்றம் பத்திரிகையில் பல சீர்திருத்தக் கருத்துக்களையும் பகுத்தறிவுக் கட்டுரைகளையும் எழுதினார். 1934-இல் "தமிழ் முரசு" செய்தி இதழை வாரந்தோறும் வெளியிட்டார். இப்பத்திரிகை மக்களிடம் அதிக செல்வாக்குப் பெறவே அது 1935-ல் தினசரியாக விரிவடைந்தது. தமிழ் முரசு பெரியாரின் கொள்கைகளையும் தமிழ் சீர்திருத்த சங்கத்தின் முற்போக்கான இலட்சியங்களையும் சாதி ஒழிப்பையும் பிராமண எதிர்ப்பையும் சனாதனக் கொள்கைகளையும் எழுதியது. கோ.சா அவர்கள் 'சீர்திருத்தம்' என்ற மாத இதழையும் 'ரிபார்ம்' ("Reform") என்னும் ஆங்கில மாத இதழையும், 'இந்தியன் டெய்லி மெயில்' ("Indian Daily Mail") என்ற ஆங்கிலத் தினசரி செய்தி இதழையும் நடத்தினார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் 1955-ல் கோலாலம்பூர் வந்திருந்தபோது கோ.சா அவர்களுக்குத் "தமிழவேள்" எனும் சிறப்புப் பட்டமளித்துப் பாராட்டினார். ஆண்டுதோறும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும் தமிழவேள் விருது சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியத்துறையின் ஒரு முக்கியவிருதாகக் கருதப்படுகிறது. இவ்விருது கோ. சாரங்கபாணி அவர்களின் பெயரால் வழங்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் முத்தமிழ் விழாவின் போது தமிழ்த் தொண்டாற்றும் ஒரு சிங்கப்பூரர் தேர்ந்தெடுக்கப்பட்டு இவ்விருதின் மூலம் கௌரவிக்கப்படுகிறார். 1988ஆம் ஆண்டு முதல் இவ்விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கொம்மந்தறை கொம்மந்தறை யாழ்ப்பாணத்தின் வடக்கே வல்வெட்டித்துறைக்குத் தெற்காக அமைந்த ஒரு சிறிய விவசாயக் கிராமம். புகையிலை, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றின் விளைச்சலுக்கு பெயர் போன கிராமம். அக்கிராமத்தைச் சுற்றிலும் விறாட்சி நெற்கொழு ஆகிய நீர்த் தேங்கு குளங்கள் இக்கிராமத்தின் நீர்வளத்தைக் குன்றாமல் பாதுகாத்து வருகி்ன்றன. 1968ம் ஆண்டளவில் ஊருக்கு சனசமூக நிலையம் ஒன்று தேவை என்பதை நன்குணர்ந்த அக்கால இளையோரும் மூத்தோரும் ஒன்றினைந்து அயராது முயற்சியில் இரண்டு மாடிகளைக் கொண்ட சனசமூக கட்டடம் அமைக்கப்பட்டது. நீதிமன்றம் நீதிமன்றம் ("court of law") சட்ட சச்சரவுகளுக்குத் தீர்வு காணவும் உரிமையியல், குற்றவியல் அல்லது நிர்வாக வழக்குகளில் சட்டவிதிகளுக்குட்பட்டு நீதி வழங்கவும் அதிகாரம் கொண்ட, பெரும்பாலும், ஒரு அரசு சார்ந்த அமைப்பாகும். மரபுச்சட்டம் மற்றும் உரிமையியல் சட்டங்களில் நீதிமன்றங்கள் தகராறுகளை தீர்ப்பதில் முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்துக் குடிமக்களும் தமது உரிமைகளுக்காக நீதிமன்றத்தை அணுக இயலும் எனப் பொதுவாக அறியப்படுகிறது. குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் தங்களது எதிர்வாதத்தை எடுத்துரைக்க உரிமை கொண்டவர்கள். நீதிமன்றங்கள் கிராமங்களில் சிறுவீடுகளிலிருந்து (ஆலமரத்தடி பஞ்சாயத்திலிருந்து) மாநகரங்களில் பல நீதிமன்ற அறைகளுடன் பெரும் கட்டிடங்கள் வரை அமைந்துள்ளன. நீதிமன்றம் தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் மனுக்களுக்கும் தனது சிறப்பு அதிகாரங்களுக்குட்பட்டு (ஆள்வரை 'jus dicere' என வழங்கப்படும்) தீர்வு காணும் ஒரு வழக்காடு மன்றம். ஒவ்வொரு நீதிமன்றத்திலும் மூன்று தரப்புகள் இன்றியமையாத பங்கு வகிக்கும் - வாதி, பிரதிவாதி, நீதிபதி (actor, reus, and judex), எனினும் பெரும்பாலான நீதிமன்றங்களில் வக்கீல்கள், அமீனாக்கள், செய்தியாளர்கள் மற்றும், சில மன்றங்களில்,சான்றாயர்களும்(jury) இருப்பர். "நீதிமன்றம்" என்ற சொல் பெரும்பாலும் மன்றத்தலைவரான நீதியரசரையும் அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட நீதியரசர்களைக் கொண்ட ஆயத்தையும் குறிக்கும். எடுத்துக்காட்டாக ஐக்கிய அமெரிக்காவில் 'கோர்ட்' என்பது சட்டப்படி நீதிபதியையே குறிக்கும். 'ஆள்வரை' (Jurisdiction), ஒரு நீதிமன்றத்திற்கு ஒரு நபர் அல்லது உரிமை மீதான அதிகாரம். நீதிமன்றங்களுக்கு தனிப்பட்ட அதிகாரவரம்பும் துறைசார்ந்த அதிகாரவரம்பும் இருக்கவேண்டும். ஒவ்வொரு நாடும் அந்நாட்டிற்குரிய நீதி பரிபாலன அமைப்பை தீர்மானிக்கிறது. சில நாடுகளில் (எ-டு ஐக்கிய அமெரிக்கா) அந்நாட்டு மாநிலங்கள் தீர்மானிக்கின்றன. உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், நிலைமுறை (hierarchy) ஆகியன வரையறுக்கப்பட்டு அதற்கான சட்டப்படியான இயற்றுச்சட்டங்களும் அரசியலைப்பில் உரிய வழிவகைகளும் நிறைவேற்றப்படுகின்றன. நீதிமன்றங்கள் விசாரணை நீதிமன்றங்கள்,(அல்லது முதற்கட்ட நீதிமன்றங்கள் அல்லது மூல ஆள்வரம்பு) மற்றும் மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் என வகைபடுத்தப்படுகின்றன. இந்திய நீதித்துறை அமைப்பில், நிலைமுறைப்படி: இயற்றப்பட்ட சட்டமொன்றை அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என தள்ளுபடி செய்ய நீதித்துறைக்கு உள்ள அதிகாரம் நீதி மறு ஆய்வு என்றழைக்கப்படுகிறது. இம்முறை அமெரிக்கா,கனடா,ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கிலாந்து நாட்டில் இம்முறை பின்பற்றப்படவில்லை. இந்தியாவில் மாநில உயர்நீதிமன்றங்களுக்கும் உச்ச நீதிமன்றத்திற்கும் இவ்வதிகாரம் கீழ்கண்ட இனங்களில் வழங்கப்பட்டுள்ளது: