பிக்கோ தொழினுட்பம் பிக்கோத்தொழினுட்பம் (Picotechnology) ஒரு மீட்டரில் ஒரு லட்சம் கோடியின் ஒரு மடங்கு அளவில் அணுவிடை மற்றும் அணுவுட்பகுதிகளையும் கட்டுப்படுத்துவதை மையமாகக் கொண்ட எதிர்காலத்தைய தொழினுட்பமாகும். நானோ தொழினுட்பம் போன்று இணைச்சொல்லாக அறிமுகம் செய்யப்பட்ட சொல்தான் என்றாலும் நானோ தொழினுட்பம் முழுமையாக செயல்வடிவம் பெற பிக்கோதொழில்நுட்பம் அவசியமாகிறது.நானோ தொழினுட்பம் முழு செயல் வடிவம் பெற அதாவது அணு ஆதிக்கம் செய்ய அணுவிலும் சிறிய பிக்கோ மீட்டர் அளவே உடைய மின்கூடுகளான ஆர்பிட்டால்களையும் அதன் அமைப்புகளில் ஏற்படும் அலை மற்றும் ஆற்றல் மாற்றஙளையும் பற்றிய அறிவு தேவை. நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை (நெப்டியூன் ஸ்பியர் நடவடிக்கை, "Operation Neptune Spear") என்பது 2011 மே 1 இல் பாக்கித்தான் அப்பாட்டாபாத்த்தின் நகர்ப்பகுதியில் மறைந்திருந்த அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடனை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட நடவடிக்கை ஆகும். கண்காணிப்புக்குப் புலப்படாத அதிநவீன உலங்கு வானூர்திகள் மூலம் பில் லாடன் தங்கியிருந்த வீட்டைத் தாக்கிய அமெரிக்க ”நேவி சீல்” அதிரடிப்படையினர், பில் லாடனை சுட்டுக் கொன்றனர். அவரது உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கடலில் அடக்கம் செய்யப்பட்டது. செப்டெம்பர் 11, 2001 இல் அமெரிக்கவின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின் அதன் சூத்திரதாரியாகக் கருதப்பட்ட பின் லாடனையும் அல் கொய்தா இயக்கத்தையும் அழிப்பதற்கு அமெரிக்கா முனைப்பெடுத்தது. ஆப்கானித்தானின் டோரா போரா மலைத்தொகுதியில் பின் லாடன் மறைந்திருப்பதாகக் கருதி பாரிய புலனாய்வு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது. 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான காலித் சேக் முகம்மத் கைது செய்யப்பட்ட பின் பின் லாடனின் முக்கியத்தர்கள் பற்றிய தகவல்கள் கசிந்தன. அல்கொய்தா அமைப்பின் முக்கியமான பின் லாடனின் நம்பிக்கைக்குரிய நபராக அல்-குவைதா பற்றி புலனாய்வுத் துறை அறிந்தது. அல்-குவைதியின் நடமாட்டம் அப்பாட்டாபாத்துக்கு அருகில் அவதானிக்கப்பட்டது. இதுவே பாக்கித்தான் மீது அமெரிக்க புலனாய்வுத் துறையின் கண்காணிப்பைத் திசை திருப்பியது. அமெரிக்க சீல் படையினர் இரண்டு உலங்கு வானூர்திகளில் பின் லாடன் வசித்த கட்டிடத்தினுள் தரையிறங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்லேடனின் இருப்பிடம் பற்றிய தகவலை ஷாகில் அஃப்ரிதி என்பவர் கொடுத்ததாக சி.ஐ.ஏ தெரிவித்தது. தற்ப்போது இவரின் வழக்கறிஞர் சமயுல்லா அஃப்ரிதி என்பவரை தாலிபான்கள் 2015ஆம் ஆண்டு 17ம் தேதி மார்ச் மாதம் பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் சுட்டுக்கொன்றனர். வல்ட்டூர்னோ கோடு வல்ட்டூர்னோ கோடு ("Volturno Line") அல்லது விக்டர் கோடு ("Viktor Line") என்பது இரண்டாம் உலகப் போரில் இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. இதனால் இத்தாலி சரணடைந்தது. ஆனால் நாசி ஜெர்மனியின் படைகள் அந்நாட்டை ஆக்கிரமித்து நேச நாட்டுப் படைகளுடன் போரிட்டன. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் தெற்கில் முதலாவதாக இருந்தது வல்ட்டூர்னோ கோடு. கிழக்கு-மேற்காக அமைந்திருந்த இந்த அரண்கோடு, கிழக்கே தெர்மோலி நகரில் தொடங்கி பைஃபெர்னோ மற்றும் வல்ட்டூர்னோ ஆறுகளில் கரையோரமாக நீண்டு இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் முடிவடைந்தது. தெற்கிலிருந்து முன்னேறி வந்த நேச நாட்டுப் படைகள் அக்டோபர் முதல் வாரத்தில் இக்கோட்டினை அடைந்து தாக்குதலைத் தொடங்கின. அக்டோபர் 3ம் தேதி அதிகாலையில் பிரித்தானிய 8வது ஆர்மியின் படைப்பிரிவுகள் பைஃபெர்னோ ஆற்றைக் கடந்தன. பிரித்தானியக் கமாண்டோக்கள் கடல்வழியாக தெர்மோலியில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றினர். இத்தாக்குதலை எதிர்கொள்ள இத்தாலிய முனைக்கான ஜெர்மானிய தலைமைத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் 16வது பான்சர் (கவச) டிவிசனை இப்பகுதிக்கு அனுப்பினார். மூன்று நாட்கள் கடுமையான சண்டைக்குப் பின்னர் பிரித்தானியர்கள் முறியடிக்கப்பட்டு பின்வாங்க வேண்டிய நிலை உருவானது. ஆனால் அதற்குள் புதிய துணைப்படைப்பிரிவுகள் பிரித்தானியர்களின் துணைக்கு அனுப்பப்பட்டன. அவற்றின் துணையுடன் ஜெர்மானியத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. அக்டோபர் 12ம் தேதி வல்ட்டூர்னோ கோட்டின் கிழக்குப் பகுதியில் அமெரிக்க 5வது ஆர்மி தன் தாக்குதலைத் தொடங்கியது. இரு முனைத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல் ஜெர்மானியர்கள் அடுத்த அரண்நிலையான பார்பரா கோட்டுக்குப் பின்வாங்கினர். எகிப்திய இசுலாமியப் போராட்டம் எகிப்திய இசுலாம் போராட்டம் அல்லது எகிப்திய இசுலாமிய ஜிகாத் (Egyptian Islamic Jihad, ) (EIJ), துவக்கத்தில் எளிமையாக இசுலாமிய ஜிகாத் (الجهاد الإسلامي மற்றும் "புனிதத்தலங்களுக்கான விடுதலைப் படை" (Liberation Army for Holy Sites)) என்றெல்லாம் குறிப்பிடப்படுகின்ற இந்த இயக்கம் எகிப்த்தின் இசுலாமிய அடிப்படைவாதிகளால் 1970களிலிருந்து இயங்கி வருகிறது. இவர்களை "அல்-ஜிகாத்," "ஜிகாத் குழு", அல்லது "ஜிகாத் அமைப்பு", என்றும் ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.இக்குழு அல் கைடாவின் கூட்டாளி என்று ஐ.நாவால் உலகளவில் தடை செய்யப்பட்டுள்ளது. தவிர பல நாட்டு அரசுகளும் தனிப்பட்ட நிலையில் இந்த இயக்கத்தை தடை செய்துள்ளன. 1991ஆம் ஆண்டு முதல் இந்த இயக்கத்திற்கு தலைவராக அய்மன் அல் ஸவாஹிரி இருந்து வருகிறார். இந்த இயக்கத்தின் முதன்மை நோக்கமாக எகிப்திய அரசை வெளியேற்றி இசுலாமிய சட்டங்களுட்பட்ட அரசை நிறுவுவதாக இருந்தது. பின்னர் இது எகிப்து மற்றும் பிற நாடுகளில் உள்ள ஐக்கிய அமெரிக்கா மற்றும் இசுரேல் அமைப்புகளை தாக்குமாறு விரிவாக்கப்பட்டது. இந்த இயக்கத்தின் போராளிகள் உலகளவில் பல்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டதால் முடங்கியுள்ளது. சூன் 2001 அன்று பல ஆண்டுகளாகவே ஒருங்கிணைந்து செயலாற்றிய அல் காயிதாவுடன் இணைந்து "காயிதா அல் ஜிகாத்" என அழைக்கப்பட்டது. அபுத் அல் ஜுமர் அபுத் அல் ஜுமர் (Abbud al-Zumar) () (பிறப்பு 1947) ஓர் எகிப்திய இசுலாமிய அடிப்படை வாதி ஆவார். முன்னாள் எகிப்துப்படைத்துறையில் ஒற்றுப்படை கர்னலாக விளங்கிய ஜுமர் இசுலாமிய சட்டங்களின்படி அமைந்த அரசை விரும்பினார். மதசார்பற்ற அன்வர் சதாத் அரசுக்கு எதிராக எகிப்திய இசுலாமிய ஜிகாத்தை நிறுவி அதன் முதல் தலைவராக (அமீர்) விளங்கினார். காசா குறுநிலத்தில் செல்வச்செழிப்பான மற்றும் செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தவர் ஜுமர். அக்டோபர் 6, 1981ஆம் ஆண்டு அப்போதைய எகிப்தின் குடியரசுத் தலைவர் அன்வர் சதாத்தை கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்தமைக்காக கெய்ரோவில் கைது செய்யப்பட்டு வாழ்நாள் சிறைத்தண்டனை பெற்றார். இதற்கு முன்னர் பலமுறை தாமே கொலை செய்ய முயன்று தோல்வியுற்று தன்சிம் அல் ஜிகாத் என்பவருக்கு ஆயுதங்கள் ஏற்பாடு செய்துகொடுத்துக் கொலையை நிகழ்த்தினார். இவரது திட்டப்படி " நாட்டின் தலைவர்களைக் கொன்று படைத்துறை தலைமையகம் மற்றும் பாதுகாவல் பிரிவுகளை கையகப்படுத்தி தொலைதொடர்பு மற்றும் ஒலி/ஒளி ஊடகங்களை கட்டுக்குள் கொண்டுவந்து நாடு தழுவிய எழுச்சியின் மூலம் புதிய இசுலாமிய சமுதாயத்தைப் படைப்பதாகும்" செய்தி பரப்புரை நிறுவனம் ராய்ட்டர் இவரும் இவரது மச்சினர் தரக் அல் ஜுமரும் எகிப்தின் மிக முக்கியமான அரசியல் கைதிகள் என்று கூறுகிறது. 2011 எகிப்திய புரட்சிக்குப் பின்னர் அல் ஜுமர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.. மார்ச்சு 23, 2011 அன்று வெளியான தொலைக்காட்சி நேர்முகத்தில் சதாத்தின் கொலை 30 ஆண்டுகள் அவரைவிட கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஓசுனி முபாரக் ஆட்சிக்குவர காரணமாக அமைந்ததால், சதாத்தைக் கொன்றதற்கு எகிப்திய மக்களிடம் மன்னிப்புக் கோரினார். ஜுமர் தாம் நிறுவிய இயக்கம் முந்தையக் காலத்தில் வன்முறையில் இறங்கியது எனினும் தற்போதைய சூழலில் அமைதியாகவே மாற்றங்களைக் கொணர முடியும் எனக் கூறினார். மேலும் வன்முறை வன்முறையையே வளர்க்கிறது" என்றும் "நாங்கள் எகிப்தை நேசித்தோம், அதனாலேயே நல்லது நடக்க விரும்பினோம். இன்றும் எகிப்தை விரும்புகிறோம், நல்லதே நடக்க விரும்புகிறோம் " என்றும் கூறினார். ஜுமரின் இப்போதைய நிலை சிறுபான்மை கிறித்தவர்கள் உட்பட அனைவருக்கும் உரிமைகள் கிடைக்க வேண்டும் என்பதே. நாட்டின் அடக்குமுறையாலேயே போராட்டங்கள் நிகழ்ந்தன என்பதாகும். ஜுமர் சிறையில் இருக்கும்போது தரக் அல் ஜுமருடன் இணைந்து "அல்-பாதில் அல்-தலித் பாய்ன அல்-இஸ்திப்டாட் வா-அல்-இஸ்திஸ்லாம்" (கொடுங்கோலுக்கும் சரணாகதிக்கும் இடைப்பட்ட மூன்றாம் மாற்று) என்ற ஆவணத்தை எழுதியுள்ளார்; இது எகிப்திய நாளிதழ் "அல்-சுருக்" 2009ஆம் ஆண்டில் ஆகத்து/செப்டம்பர் மாதங்களில் வெளியிட்டது. தூதரகங்களின் பட்டியல், புரூணை இது புரூணை நாட்டுத் தூதரகங்களின் பட்டியல். எண்ணெய் வளம்மிக்க சிறிய நாடான புரூணை சில நாடுகளில் மட்டுமே தூதரகங்களைக் கொண்டுள்ளது. சில தூதரகங்கள் போர்னியோ நீள்வீடு(Borneo Longhouse) என்றழைக்கப்படும் ஒப்பீட்டளவில் ஒடுங்கிய கட்டடக்கலை அமைப்பைக் கொண்டுள்ளன. வல்ட்டூர்னோ ஆறு வல்ட்டூர்னோ ("Volturno") ஆறு தென் மத்திய இத்தாலியில் பாயும் ஒரு ஆறு. அப்பென்னைன் மலைத் தொடரில் உற்பத்தில் ஆகும் இவ்வாறு 175 கிமீ தூரம் ஓடி நாபொலி நகரருகே திரேனிய கடலில் கலக்கின்றது. ரோம் நகருக்கு தெற்கே அமைந்துள்ள இயற்கை அரண்களுள் ஒன்றாக உள்ளதால் இவ்வாறு வரலாற்றில் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது. எங்கேயும் காதல் எங்கேயும் காதல் 2011ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். பிரபுதேவா இப்படத்தை இயக்கியுள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இதற்கு இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் மே 6, 2011ல் வெளியிடப்பட்டது. நந்தி மலை நந்தி மலை இந்தியா, கர்நாடகத்தின் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலை. தென் பெண்ணை , பாலாறு , ஆர்க்காவதி ஆறு போன்ற ஆறுகள் இந்த மலையிலிருந்து உற்பத்தியாகின்றன. சிக்கபள்ளாபூர் நகரத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இம்மலை, பெங்களூரிலிருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. நந்தி மலை என்னும் பெயர் ஏற்பட்டதற்கான காரணம் குறித்துப் பல கதைகள் உள்ளன. சோழர் காலத்தில் இம்மலை ஆனந்தகிரி என அழைக்கப்பட்டது. யோக நந்தீசுவரர் இங்கே தவம் செய்த காரணத்தால் இம்மலைக்கு நந்தி மலை எனப் பெயர் வந்தது என்று கூறுவதுண்டு. இம்மலை உச்சியில் சோழர்கள் கட்டிய போக நந்தீசுவரர் கோவில் உள்ளது. இம்மலை துயில்கொள்ளும் நந்தியின் உருவத்தில் இருப்பதால் இம்மலைக்கு நந்திமலை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. 2005 யூ55 2011 நவம்பர் 8, 23:28 பநே மணிக்கு இச்சிறுகோள் பூமிக்குக் கிட்டவாக ஏறத்தாழ 201,700 மைல்கள் தூரத்தில் செல்லவிருக்கிறது. இது 0.85 நிலவுத் தூரத்துக்குச் சமனானது. 2011 நவம்பர் 9 07:13 மணிக்கு, இது சந்திரனில் இருந்து 0.00160 AU (239,000 கிமீ; 149,000 மைல்) தூரத்தில் செல்லவிருக்கிறது. 2029 சனவரி 19 இல் வெள்ளிக் கோளுக்கு 180,000 கிமீ அருகே செல்லும். அலன் ஹில் அலன் ஹில் ("Allen Hill", பிறப்பு: நவம்பர் 14 1843, இறப்பு: ஆகத்து 28 1910) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 193 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஆர்தர் ஹில் ஆர்தர் ஹில் ("Arthur Hill", பிறப்பு: சூலை 26 1871, இறப்பு: செப்டம்பர் 6 1950) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 221 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மால்கம் ஹில்டன் மால்கம் ஹில்டன் ("Malcolm Hilton", பிறப்பு: ஆகத்து 2 1928, இறப்பு: சூலை 8 1990) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 270 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 - 1952 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜார்ஜ் ஹர்ஸ்ட் ஜார்ஜ் ஹர்ஸ்ட் ("George Hirst", பிறப்பு: செப்டம்பர் 7 1871, இறப்பு: மே 10 1954) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 24 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 826 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1897 - 1909 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். பில் ஹிட்ச் பில் ஹிட்ச் ("Bill Hitch", பிறப்பு: மே 7 1886, இறப்பு: சூலை 7 1965) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 350 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1933 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ரொபின் ஹோப்ஸ் ரொபின் ஹொப்ஸ் ("Robin Hobbs", பிறப்பு: மே 8 1942, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 440 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1967 - 1971 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். மேத்தியூ ஹோகார்ட் மேத்தியூ ஹோகார்ட் ("Matthew Hoggard", பிறப்பு: திசம்பர் 31 1976 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 67 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 188 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 129 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2000 - 2008 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எரிக் ஹோலிஸ் ஆடம் ஹொலியோக் ஆடம் ஹொலியோக் ("Adam Hollioake", பிறப்பு: செப்டம்பர் 5 1971) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 173 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 284 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 1998 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பின் ஹொலியோக் பின் ஹொலியோக் ("Ben Hollioake", பிறப்பு: நவம்பர் 11 1977, இறப்பு: மார்ச்சு 23 2002), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 136 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 1998 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (International Covenant on Civil and Political Rights) என்பது, 1966 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பல தரப்பு ஒப்பந்தம் ஆகும். இது 1976 மார்ச் 23 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் இதன் பங்காளர்கள் தனியாட்களுடைய குடிசார் உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் மதிப்பதாக உறுதியளிக்கிறது. வாழும் உரிமை, மத சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், கூடுவதற்கான சுதந்திரம், தேர்தல் உரிமை, தக்க சட்டமுறைகளுக்கும், நேர்மையான விசாரணைக்குமான உரிமை என்பன மேற்படி குடிசார், அரசியல் உரிமைகளுக்குள் அடங்குகின்றன. 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இவ்வொப்பந்தத்துக்கு 167 பங்காளர்கள் இருப்பதுடன் 72 நாடுகள் கைச்சாத்தும் இட்டுள்ளன. அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை, மனித உரிமைகளுக்கான பன்னாட்டுச் சட்டமூலத்தின் ஒரு பகுதியாகும். பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகளுக்கான பன்னாட்டு ஒப்பந்தம், அனைத்துலக மனித உரிமைகள் சாற்றுரை என்பன இச் சட்டமூலத்தில் மற்றப் பகுதிகள். இந்த ஒப்பந்தம் மனித உரிமைகள் குழுவினால் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வொப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள உரிமைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பது குறித்த உறுப்பு நாடுகளின் அறிக்கைகளை இந்தக் குழு ஆய்வு செய்கிறது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் அதன் பின்னர் ஒரு ஆண்டு காலத்தில் ஒரு அறிக்கையை அளிக்க வேண்டும் பின்னர் குழு கேட்கும்போது இந்நாடுகள் அறிக்கைகளை அளிக்க வேண்டும். பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இது நிகழும். அடவு (பரதநாட்டியம்) பரதநாட்டியத்தில் அடவு என்பது ஆடலின் ஆதாரப்பகுதியைக் குறிக்கும். நாட்டியம் பயிலத் தொடங்கும் ஒருவருக்கு பயிற்சி போன்று இவ் அடவு விளங்குகின்றது. தமிழில் ஆடல் என்ற அடிப்படைச் சொல்லைக் கொண்டது அடவு. அடவு என்பதனை தெலுங்கில் அடுகு என்று அழைப்பர். அடுகு என்றால் பாதத்தின் ஓர் அடி என்பது இதன் பொருளாகும்.அடவு என்னும் சொல் முன்னர் சமஸ்கிருதத்தில் கரணம் எனக் கூறப்பட்டது. இவ் இரண்டு சொற்களின் பொருள் ஒன்று தான். ஆனால் இன்று பாவனையில் உள்ள அடவுகள் வேறு கரணம் என்ற சொல்லில் வழங்கும் 108 கரணங்கள் வேறு. அடவு என்னும் சொல் தமிழ்நாட்டில் மட்டும் அன்றி ஆந்திரா, கர்நாடகம், கேரளம் போன்ற தேசங்களிலும் இன்று வரை உபயோகிக்கப்படுகின்றது. ஒரு மொழியில் வாக்கியங்கள் எவ்வாறு முக்கியமானதாக விளங்குகின்றதோ அது போல நடனத்திற்கு அடவுகள் விளங்குகின்றன. அடவு என்பது நிலை (ஸ்தானம்), பாதபேதங்கள் (சாரி), முத்திரைகள் (ஹஸ்தங்கள்) என்ற மூன்று அம்சங்களையும் உள்ளடக்கியதாகும். பரதநாட்டியத்தில் பல பாணிகள் உள்ளமையால் ஒவ்வொரு பாணிகளிலும் வித்தியாசமான அடவுகள் உள்ளன. பல அடவுகள் ஒரே மாதியாக இருந்தாலும் அவை வேறு வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகின்றன.அத்துடன் எண்ணிக்கையிலும் மாறுபாடுடையவையாகவும் காணப்படுகின்றன. பரதநாட்டியத்தில் பல அடவுகள் உள்ளன. அகத்திணையில் உரையாடுவோர் தொல்காப்பியத்தில் அகத்திணையியல், களவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களில் அகத்திணைச் செய்திகள் சொல்லப்படுகின்றன. அவற்றில் யார் யார், எப்போது, என்ன பேசுவர் என்னும் செய்திகள் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூலிலுள்ள பாடல்களை அணுகுதல் வேண்டும். ஆகியவை அந்தப் பெருமக்களின் உரையாடல்கள். அகத்திணை வாயில்கள் தலைவன்-தலைவி மாட்டு நல்லுறவு அமையத் தூது செல்வோரை அகத்திணை வாயில்கள் என்பர். அகவொழுக்கம் உள்ளத்தில் பதிந்து கிடக்கும் ஒழுக்கம். பிறருக்குப் புலப்படுத்த முடியாத உடலுறவு பற்றியது. இது தலைவன்-தலைவி உறவாக அமையின் போற்றப்படும், அதுவும் திருமணத்துக்கு முன் அமையின் தூற்றப்படும். தூற்றுதலை அலர் என்பர். தலைவன்-பரத்தை உறவு பழிக்கப்படும். இந்த வாயில்கள் யார் யார் எனத் தொல்காப்பியர் பட்டியலிட்டுக் காட்டுகிறார். என்னும் 12 பேர் வாயில்கள். இவர்களை வீட்டுக்குள் நுழைய இடம் தரும் வாயிலோடு ஒப்பிடலாம். வேப்பம்பட்டு சென்னை - அரக்கோணம் இருப்புப்பாதையில் உள்ள வேப்பம்பட்டு சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது சென்னையிலுள்ள வளர்ந்து வரும் இடங்களில் ஒன்று. இது திருவள்ளூர் மாவட்ட ஆட்சி எல்லைக்குள் வருகிறது. இது சென்னை புறநகர் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பல புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இவ்வூரானது சிறந்த ஊராட்சிக்கான விருதும் பெற்றுள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் 61 மின்சார இரயில்கள் இந்நிருத்தம் வழியாக திருவள்ளுர் - அரக்கோணம் - திருத்தணி வரை செல்கின்றன. அதே போல் இங்கு இருந்து 61 இரயில்கள் தினமும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்கின்றன. 11 மின்சார இரயில்கள் வேளச்சேரி வரை செல்கின்றன. பட்டாபிராம் பட்டாபிராம் சென்னை நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் ஒன்று. ஆவடி நகராட்சி எல்லையின் கீழ் வருகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து 25 கீ.மீ தூரத்தில் உள்ளது. பார்பரா கோடு பார்பரா கோடு ("Barbara Line") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் தெற்கிலிருந்து இரண்டாவதாக இருந்தது பார்பரா கோடு. இது வல்ட்டூர்னோ கோட்டிலிருந்து வடக்கே 10-20 மைல் தூரத்திலும், குசுத்தாவ் கோட்டுக்குத் தெற்கே கிட்டத்தட்ட அதே தூரத்திலும் அமைந்திருந்தது. கிழக்கு-மேற்காக அமைந்திருந்த இது கிழக்கு ஓரத்தில் டிரிக்னோ ஆற்றை ஒட்டி அமைந்திருந்தது. இதில் பெருவாரியாக அரணாக்கப்பட்ட குன்றுஉச்சி படைநிலைகள் இடம் பெற்றிருந்தன. வல்ட்டூர்னோ கோட்டிலிருந்து பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் அக்டோபர் 12 ம் தேதி பார்பரா கோட்டினை அடைந்தன. அவற்றைப் பின் தொடர்ந்து வந்த அமெரிக்க 5வது ஆர்மியும் பிரித்தானிய 8வது ஆர்மியும் மூன்று வாரங்கள் கழித்து பார்பரா கோட்டை அடைந்தன. இத்தாலியப் படையெடுப்பு தொடங்கியதிலிருந்து அவை வேகமாக முன்னேறி வந்ததால், அவற்றின் தளவாட வழங்கலை சீரமைக்கும் கட்டாயம் ஏற்பட்டிருந்தது. இதற்கும் சிதறியிருந்த படைப்பிரிவுகளை ஒருங்கிணைக்கவும் இக்கால அவகாசம் தேவைப்பட்டது. நவம்பர் முதல் வாரத்தில் 5வது ஆர்மி மேற்கிலும் 8வது ஆர்மி கிழக்கிலும் பார்பரா கோட்டைத் தாக்கின. திட்டமிட்டபடி ஜெர்மானியப் படைகள் மேற்கில் பெர்னார்ட் கோட்டிற்கும் கிழக்கில் குசுத்தாவ் கோட்டிற்கும் பின் வாங்கின. ஆன்மீக இன்பம் (சிற்றிதழ்) ஆன்மீக இன்பம் 1976ம் ஆண்டில் பொன்னேரி எனுமிடத்திலிருந்து மாதந்தோறும் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதே இதழை இதே ஆசிரியர் பின்பு 1982 இல் கும்மிடிப் பூண்டியிலிருந்து வெளியிட்டார். சர்வ சமய ஆன்மீக மாத இதழ். இவ்விதழ் இஸ்லாத்துக்கு கூடிய இடத்தினை வழங்கியிருந்தது. இசுலாமிய அடிப்படையில் அமைந்த கருத்துகளுக்கு விளக்கம் தரத்தக்க வகையில் இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன. இந்தியாவில் பிரபல்யம் பெற்றிருந்த இசுலாமிய சமய எழுத்தாளர்களும், தலைவர்களும் தமது ஆக்கங்களை வழங்கியிருந்தனர். ஆஸாத் (சிற்றிதழ்) ஆஸாத் இந்தியா, கும்பகோணம் எனுமிடத்திலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த கருத்துகளுக்கு விளக்கம் தரத்தக்க வகையில் இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன. இந்தியாவில் பிரபல்யம் பெற்றிருந்த இசுலாமிய சமய எழுத்தாளர்களும், தலைவர்களும் தமது ஆக்கங்களை வழங்கியிருந்தனர். மேலும், இவ்விதழில் இசுலாமியச் செய்திகளுக்கும், இசுலாமிய உலக செய்திகளுக்கும் இடம் வழங்கப்பட்டிருந்தது. இக்ரஃ (சிற்றிதழ்) இக்ரஃ இது கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும். இக்ரஃ என்றால் "ஓதுவீராக" என்று பொருள். இசுலாமியர்களின் புனித வேதநூலான அல்குர்ஆனின் இறைவனால் இறக்கப்பட்ட ஆரம்ப வேத வாக்கு இதுவாகும். ஓர் இசுலாமிய இதழ் என்ற அடிப்படையில் இசுலாமிய ஆக்கங்களுக்கும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களுக்கும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. மாணவர்களின் கல்வித்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு கல்விசார் ஆக்கங்களையும் இது உள்வாங்கியிருந்தது. இதயக்குரல் (சிற்றிதழ்) இதயக்குரல் இந்தியா, பழனி எனுமிடத்திலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழ். "இஸ்லாமிய இலட்சிய மாத இதழ்" ஒரு இசுலாமிய இதழ் என்ற அடிப்படையில் இசுலாமிய ஆக்கங்களுக்கும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களுக்கும் இவ்விதழ் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. கவிதைகள், கட்டுரைகள், துணுக்குகள், குர்ஆன் வசன விளக்கங்கள் ஆகியன இவ்விதழில் இடம்பெற்றிருந்தன. இதய வாசல் (சிற்றிதழ்) இதய வாசல் இந்தியா, அய்யம்பேட்டையிலிருந்து 1992ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழில் இளைஞர்களைக் கவரக்கூடிய வகையில் பல்வேறு இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், துணுக்குகள், வாசகர் பக்கம், பொது அறிவு விடயங்கள், மொழிபெயர்ப்பாக்கங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை இவ்விதழ் உள்வாங்கியிருந்தது. ஜித்தா ஜித்தா () என்பது சவூதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள ஓர் நகரமாகும். மேற்கு சவூதி அரேபியாவின் முக்கியமான வணிக மையமும் ஆகும். மக்கா மாவட்டத்தின் மிகப் பெரும் நகரமாகவும், செங்கடல் துறைமுகங்களில் மிகப் பெரியத் துறைமுக நகரமாகவும், சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தை அடுத்து இரண்டாவது மிகப் பெரும் நகரமாகவும் விளங்குகிறது. ஜித்தாவின் தற்போதைய மக்கள்தொகை 3.2 மில்லியனாக உள்ளது. இசுலாமியர்களின் மிகுந்த புனிதத் தலமான மக்காவிற்குச் செல்லும் வாயிலாக ஜித்தா விளங்குகிறது. அடுத்து புனிதமிக்க மதீனா செல்லவும் இதுவே வழியாகும். இந்திய ஒளி (சிற்றிதழ்) இந்திய ஒளி இந்தியா, திருச்சியிலிருந்து 1936ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இது இந்திய தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்ட இதழாகும். இவ்விதழில் செய்திகள், இசுலாமிய உலக செய்திகள் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தது. இவ்விதழில் இடம்பெற்ற செய்தி விமர்சனங்கள் வாசகர்களிடையே பெரிதும் வரவேற்றுபுப் பெற்றிருந்ததை இவ்விதழில் இடம்பெற்றுள்ள வாசகர் கடிதங்களிலிருந்து காணமுடிகின்றது. பல்வேறு இலக்கிய ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், துணுக்குகள், வாசகர் பக்கம், பொது அறிவு விடயங்கள், மொழிபெயர்ப்பாக்கங்கள் போன்ற பல்வேறு அம்சங்களை இவ்விதழ் உள்வாங்கியிருந்தது. இந்தியன் மைனாரிட்டீஸ் (சிற்றிதழ்) இந்தியன் மைனாரிட்டீஸ் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் தலைப்பு ஆங்கிலமொழியில் அமைந்திருந்தாலும் இது தமிழ் ஆங்கில மொழியில் வெளிவந்த இதழாகும். கூடிய ஆக்கங்கள் தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்ததினால் ஒரு தமிழ் இதழாகக் கொள்ளலாம். மைனாரிட்டீஸ் என்பது சிறுபான்மையினரைக் குறிக்கும் ஆங்கிலப் பதமாகும். தமிழ், ஆங்கிலம் இருமொழிகளிலும் வெளிவந்தமை இந்தியாவில் வாழும் சிறுபான்மை சமூகத்தினரின் பிரச்சினைகள், செய்திகள், கருத்துகள் போன்றவற்றை வெளிக்கொணரும் ஆக்கங்களைக் கொண்ட இதழாக இது அமைந்திருந்தது. இலங்கை சோனகர் (இதழ்) இலங்கை சோனகர் இலங்கை, கொழும்பிலிருந்து 1935ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். சோனகர் எனப்படுவோர் இலங்கையில் வாழும் இசுலாமியர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகும். எனவே, இலங்கை இசுலாமியர்கள் சார்பாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் இலங்கை இசுலாமியர்கள் தொடர்பான பல்வேறு செய்திகளும் இசுலாமியர்களை உணர்வூட்டக்கூடிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. கட்டுரைகள். ஆய்வுக் கட்டுரைகள், செய்திகள், செய்தி விமர்சனங்கள், செய்தி ஆய்வுகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கங்களையும், இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது. இதில் இடம்பெறும் வாசகர் கருத்துகளை நோக்குமிடத்து செய்திகள் நடுநிலைமைப் போக்குமிக்கவையாக இருப்பதாக காணமுடிகின்றது. இளம் பிறை (1945 சிற்றிதழ்) இளம்பிறை () இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இளம்பிறை எனும் பெயரில் அவ்வப்போது இலங்கை, இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் சில இதழ்கள் வெளிவந்துள்ளன. இளம்பிறை எனும் தமிழ் பதத்தின் அராபிய கருத்து அல் ஹிலால் என்பதாகும். அல் ஹிலால் எனும் பெயரிலும் பல இதழ்கள் வெளிவந்துள்ளன. இவ்விதழில் இசுலாமிய சமய ஆக்கங்களும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இளம் பிறை (1965 சிற்றிதழ்) இளம்பிறை () இலங்கை, கொழும்பிலிருந்து 1965ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழ் இலங்கை இசுலாமிய தமிழ் இலக்கிய வரலாற்றை ஒரு குறிப்பிடத்தக்க இடத்தினை வகித்துள்ளது. இலங்கையில் பல இசுலாமிய எழுத்தாளர்களை உருவாக்குவதில் இது கூடிய பங்களிப்பினை வழங்கியுள்ளது. 'எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியர் திண்ணியர் ஆகப் பெறின்' என்ற திருக்குறளை முழக்கமாகக் கொண்டு வெளிவந்தது. இதன் 1969ஆம் ஆண்டு மீலாத் மலரில் ஈழத்து இஸ்லாமிய இதழ்களைப் பற்றிய கட்டுரை ஒன்று வெளிவந்தது. கவிதைகள், சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டரைகள், நூலாய்வுகள், கேள்வி பதில், வாசகர் கருத்து போன்ற பல்சுவை அம்சங்களை இது தன்னகத்தே கொண்டிருந்தது. இளைஞன் (சிற்றிதழ்) இளைஞன் () என்பது இந்தியாவின், ஈரோடுவிலிருந்து 1947ம் ஆண்டில் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். இதன் ஆசிரிய அப்துல் ரஷீத். இவர் இஸ்லாமிய சிறுகதை இலக்கிய வளர்ச்சியை விமர்சிக்கக் கூடிய இலக்கியவாதி. கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இளைஞர் தொடர்பான விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது. இளைஞன் குரல் (சிற்றிதழ்) இளைஞன்குரல் சிங்கப்பூரிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழ். கதை, கவிதை, கட்டுரை, வரலாற்று துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இஸ்லாமிய பெண்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும், விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது. இளைய சமுதாயம் (1968) இளைய சமுதாயம் இந்தியா, செங்கள் எனுமிடத்திலிருந்து 1968ம் ஆண்டில் வாரந்தோறும் வெளிவந்த ஒரு இதழ். "போராடும் இனm ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. தமிழகம் தமிழகம் (Tamilakam) என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் பண்டைய காலத்தில் தமிழர் வாழ்ந்த நிலப்பகுதியைக் குறிக்கிறது. இக்கால கேரளம் மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக இருந்தது. ஆட்சியால் வெவ்வேறு அரசுகளாக தமிழகம் பிரிந்திருந்தாலும், பண்பாட்டால் ஒன்றுபட்ட ஒரு தமிழ் ஒன்றியமாகக் கருதப்பட்டது. சமசுகிருத மற்றும் பிரக்கிருத இலக்கியங்களில் தமிழகத்தை 'திராவிடா' என குறிப்பிடப்பட்டுள்ளது. பாரம்பரியமாக இந்தப் பகுதி ஒற்றைப் பண்பாட்டுப் பகுதியாகவும், தமிழ் மொழியே இயல்பு மொழியாகவும் இருந்துள்ளது. மேலும் அனைத்து மக்களின் பண்பாடும் தமிழர் பண்பாடாகவே இருந்துள்ளது. வரலாற்றிற்கு முந்தைய கேரள மற்றும் தமிழ் நாட்டில் கிடைக்கப்பெற்ற அகழாய்வு தரவுகளை பார்க்கும் பொழுது தமிழகம் தனி ஒரு பண்பாட்டுப் பகுதியாக இருந்ததை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. சங்ககாலப் பகுதியில் தமிழ் பண்பாடு தமிழகத்தை சுற்றியுள்ள பகுதியிலும் பரவியது. பூங்குன்னம் பூங்குன்னம் (தமிழ்: பூங்குன்றம்) கேரளத்தில் திருச்சூர் நகரின் ஒரு பகுதி. பூங்குன்னம் சிவன் கோவில் இப்பகுதியின் மிகப்பழமை வாய்ந்த கோவில் ஆகும். பூன்குன்னம் சீதாராமஸ்வாமி கோவில் மற்றும் குட்டன் குலங்கரா கிருஷ்ணன் கோவில் போன்ற கோவில்களும் இவ்விடத்தில் உள்ளன. பெருவிழுங்கி பெருவிழுங்கிகள் (Macrophages) எனப்படுபவை வெண்குருதியணுக்களில் ஒரு வகையான ஒற்றை உயிரணுக்களில் ஏற்படும் இழைய வேறுபாட்டின் மூலம் உருவாகும் இன்னொருவகை வெண்குருதியணுவாகும். இவை சிதைந்த உயிரணுக்கள், தொற்றுநோய்களை உருவாக்கும், நோய்க்காரணிகள் போன்றவற்றை முழுமையாக விழுங்கி அழிக்கும் தன்மை கொண்டவை. மனிதரில் காணப்படும் பெருவிழுங்கிகள் கிட்டத்தட்ட 21 மைக்ரோமீற்றர் விட்டம் உடையவை. ஒற்றை உயிரணுக்களும், பெருவிழுங்கிகளும் ஆபத்து விளைவிக்கக்கூடிய துணிக்கைகளை விழுங்கி, அவற்றை சமிபாடு அடையச் செய்வதன் மூலம் தொழிற்பாடு அற்றதாக்கிவிடும். வெளி துணிக்கைகள் நகராதனவாக இருந்தாலும், அல்லது நகருகின்றனவாக இருந்தாலும் பெருவிழுங்கிகள் அவற்றுக்கு எதிராகத் தொழிற்படும் ஆற்றல் கொண்டவை. பெருவிழுங்கிகள் பொதுவாக எல்லா வெளிப்பொருட்களையும் அழிக்கவல்ல நோயெதிர்ப்பு முறையிலும் (innate immune system), குறிப்பிட்ட நோய்க்காரணிக்கு எதிரான நோயெதிர்ப்பு முறையிலும் (adaptive immune system) தொழிற்பட வல்லது. குறிப்பிட்ட ஒரு நோய்க்காரணிக்கு எதிராகத் தொழிற்படும்போது, அதனை நினைவில் கொண்டு மீண்டும் இலகுவாகவும், தொடர்ந்தும் தொழிற்படும் இயல்பைக் கொண்டிருக்கும். அத்துடன் இப்பெருவிழுங்கிகள் நிணநீர்க் கலங்கள், வேறும் நோயெதிர்ப்பு கலங்களையும் நோய்க்காரணிகளுக்கு எதிராகத் தூண்டி, அவற்றைத் தொழிற்படச் செய்யும். இவை போலிக் கால்களை அசைப்பதன் மூலம் அமீபாக்கள் போன்று அசையும் திறனுடையவை. இவற்றை பாய்ம உயிரணுவிய அளவியம் (Flow cytometry), நோயெதிர்ப்பிழையவேதி சாயமூட்டல் (immunohistochemical staining) மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் அடையாளம் காணலாம். அப்புரதங்களில் சில CD14, CD11b, F4/80 (எலி)/EMR1 (மனிதன்), Lysozyme M, MAC-1/MAC-3, CD68 ஆகும். தின்குழியமை என்பது விழுங்கி அழிக்கும் செயல்முறையைக் குறிக்கும். பெருவிழுங்கியின் முக்கியமான தொழில்களில் ஒன்று நுரையீரலில் முதிர்ச்சியடையாமலே புறக்காரணிகளால் இறந்து போகும் கலங்களை (necrotic cells) 'விழுங்கி அழித்தல்' மூலம் அகற்றுதல் ஆகும். நீடித்த அழற்சி நிலைகளில், இவ்வாறு இறந்த கலங்கள் அகற்றப்படுவது அவசியமாகும். பழுதுபட்ட கலங்கள், சிதைந்த கலங்களை, இப்படியான விழுங்கும் செயல்முறை மூலம், அகற்றும் தொழிலைச் செய்கின்றன. இவ்வாறான இறந்த கலங்கள் அகற்றும் தொழிலைச் செய்யும் பெருவிழுங்கிகள் பொதுவாக நிலையானவையாகும். அதாவது நுரையீரல், கல்லீரல், நரம்பிழையம், எலும்பு, மண்ணீரல், வேறு இணைப்பிழையம் போன்ற உறுப்புக்களில் நிலையாக இருந்து நோய்க்காரணி போன்ற வெளிப் பொருட்களை அழிப்பதுடன், தேவையேற்படின் புதிய பெருவிழுங்கிகளையும் உருவாக்கும். பெருவிழுங்கியானது நோய்க்காரணிகளை உள்ளெடுக்கும்போது தின்குழியம் (phagosome) உருவாகும். பின்னர் இது பிரியுடலுடன் (இலைசோசோம் = Lysosome) இணைந்து "தின்குழியப்பிரியுடல்" ("phagolysosome") உருவாகும். இந்த தின்குழியப்பிரியுடலில் சுரக்கப்படும் நொதியங்கள், வேறு நச்சுப்பொருட்கள் போன்றவற்றால், நோய்க்காரணி சமிபாட்டுக்கு உட்படுத்தப்பட்டு அழிக்கப்படும். ஆனாலும் காசநோயை உருவாக்கும் "Mycobacterium tuberculosis" போன்ற சில பாக்டீரியாக்கள் இவ்வகையான அழிக்கும் முறைக்கு எதிர்ப்பாற்றலைப் (resistant) பெற்றுள்ளன. ஒரு பெருவிழுங்கியானது தன் வாழ்க்கைக் காலத்தில் கிட்டத்தட்ட 100 பாக்டீரியாக்களை இவ்வாறு விழுங்கி அழிக்கக் கூடியது. தொழிற்பாடு ஓய்ந்ததும், தனது சொந்த நொதியங்களின் தாக்கத்தாலேயே பெருவிழுங்கி இறந்து அழியும். பெருவிழுங்கிகள் ஒற்றை உயிரணுக்களுடன் இணைந்து நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை ஒழுங்குபடுத்துவதில் மிக முக்கிய பங்காற்றும். இதன்போது அழற்சியும் உருவாகும். பல நொதியங்கள், குறைநிரப்பு புரதங்கள் (complementary proteins), ஒழுங்குபடுத்தும் காரணிகள் (regulatory factors) போன்றவற்றை உருவாக்கும். கிளையி உயிரணுக்கள் போலவே, நோயெதிர்ப்பு செயல்முறையை தொடங்கி வைப்பதற்காக, பிறபொருளெதிரியாக்கியை முன்வைக்கும் அல்லது அறிமுகப்படுத்தும் தொழிலைச் செய்யும். ஒரு நோய்க்காரணியை விழுங்கி அழித்த பின்னர், நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் அடையாளம் காணப்படக் கூடிய, நோய்க்காரணியின் மேற்பரப்பில் இருக்கும் ஒரு புரதத்தை, தனது கலமென்சவ்வில் இணைத்து T உதவி உயிரணுக்களுக்கு அறிமுகப்படுத்தும். இதனால் குறிப்பிட்ட பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான, பிறபொருளெதிரி உருவாக்கப்படும். நிணநீர்க்கணுவில் உள்ள B உயிரணுக்களும் இதில் உதவும். பூஞ்சைகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றின் தொற்றுக்கு உட்படும் கலங்கள், கட்டிகளிலும் நோயெதிர்ப்பைக் காட்டும். ஒரு T கலமானது தனக்குரிய பிறபொருளெதிரியாக்கியை பெருவிழுங்கியில் கண்டு கொண்டதும், செயல்திறன் உடையதாக்கப்பட்டு, பெருவிழுங்கியை தூண்டி, தீவிரமானதாக்கும். இவ்வாறு தூண்டப்பட்ட பெருவிழுங்கிகள் விழுங்கும் தொழிலை உடனடியாக்ச் செய்யும்.. குறிப்பிட்ட ஒரு பிறபொருளெதிரியாக்கிக்கு எதிரான தொழிற்பாடு பெருவிழுங்கிகளில் காணப்படுவதில்லை. ஆனால் தான் செயல்திறனைப் பெற்ற இடத்திலுள்ள கலங்களை அழிக்கும்.. பெருவிழுங்கிகளால் வெளியேற்றப்படும் கரையக்கூடிய சில பதார்த்தங்கள், தசையின் இழையப் பெருக்கத்திற்கும், வேறுபாட்டிற்கும், வளர்ச்சிக்கும், திருத்தங்களுக்கும், இவற்றின் மூலம் புத்துயிர்ப்புக்கும் உதவும். ஆனால் இந்த புத்துயிர்ப்பை அளிக்கும் பதார்த்தம் எதுவென அறியப்படவில்லை.. தசை திருத்தங்களை மேற்கொள்ளும் பெருவிழுங்கிகள், அத்தகைய தொழிலுக்காக பிரத்தியாகமானவை அல்ல. காயங்கள் ஏற்படும்போது, இந்த பெருவிழுங்கிகள் பல வகையான இழையங்களிலும் காணப்படும். நுண்ணுயிர் கிருமிகள் தாக்குவதற்கும், திரட்டப்படுவதற்கும் சாத்தியம் அதிகமுள்ள இடங்களில் இந்த பெருவிழுங்கிகள் காணப்படும். பெருவிழுங்கிகள் இருக்கும் இடத்தைப் பொறுத்து, அவற்றின் பெயர்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தீர்மானம் (United Nations Security Council Resolution) என்பது "பன்னாட்டு அமைதியையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகின்ற" ஐக்கிய நாடுகளின் அமைப்பான பாதுகாப்பு அவையின் பதினைந்து உறுப்பினர்கள் நிறைவேற்றும் தீர்மானமாகும். ஐநா பட்டயத்தின் 27வது அதிகாரம் எவ்வாறு வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரையறுத்துள்ளது. இதன்படி "நடைமுறை வரம்புமீறிய தீர்மானங்கள்" நிறைவேற பதினைந்து உறுப்பினர்களில் ஒன்பதுக்கு மேற்பட்ட உறுப்பினர்களின் வாக்கினைப் பெறுவதுடன் வெட்டுரிமை பெற்ற ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் எவராலும் வெட்டுரிமையைப் பயன்படுத்தப்படாது இருக்க வேண்டும். "நடைமுறை தீர்மானங்களுக்கு" எந்தவொரு ஒன்பது உறுப்பினர் நேர்மறை வாக்கும் போதுமானது. ஐந்து நிரந்தர உறுப்பினர்களாக சீன மக்கள் குடியரசு (1971இல் "சீனக் குடியரசிற்கு" மாற்றாக), பிரான்சு, உருசியக் கூட்டமைப்பு (1991இல் சோவியத் ஒன்றியத்திற்கு மாற்றாக), ஐக்கிய இராச்சியம், மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ளன. இலங்கா ஜோதி (சிற்றிதழ்) இலங்கா ஜோதி இலங்கை கொழும்பிலிருந்து மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். செய்திகள், செய்திஆய்வுகள், கட்டுரைகள், கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம். இளைய நிலா (1983 சிற்றிதழ்) இளைய நிலா கிளியனூர் எனும் ஊரிலிருந்து 1983ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழ். "இளைய சமுதாயத்தின் போர்வாள்!" கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. இளைய நிலா (1992 சிற்றிதழ்) இளைய நிலா திண்டிவனம் எனும் ஊரிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழ். இவ்விதழ் திருவள்ளுவர் ஆண்டையும் பயன்படுத்தியது. "பழைய 'இளைய நிலா' புத்துயிர் பெற்றது. 'ஒன்பதாண்டு இடைவெளி ஏகனின் துணையோடு எண்ணிறந்த அனுபவங்களைக் கற்க உதவியது'. மாத இதழாய் அதுவும் மார்க்க மணம் பரப்பும் இதழாய் மலர்கிறது இளைய நிலா" என்று முதல் இதழ் ஆசிரியர் தலையங்கம் கூறுகிறது. கதை, கவிதை, கட்டுரை, வரலாறு துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மேலும் இளைஞர்கள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளையும், விளக்கக் கட்டுரைகளையும், விவரணங்களையும், கேள்வி பதில் போன்ற பகுதிகளையும் கொண்டிருந்தது. இறை அமுதம் (சிற்றிதழ்) இறை அமுதம் இந்தியா, புதுவையிலிருந்து 1986ம் ஆண்டு முதல் மாதந்தோறும் வெளிவந்த ஒரு இதழாகும். "இஸ்லாமிய இலக்கிய மாத இதழ்|" ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. இறை ஞானப் பூங்கா (சிற்றிதழ்) இறை ஞானப் பூங்கா இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த கருத்துகளுக்கு விளக்கம் தரத்தக்க வகையில் இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன. இந்தியாவில் பிரபல்யம் பெற்றிருந்த இசுலாமிய சமய எழுத்தாளர்களும், தலைவர்களும் தமது ஆக்கங்களை வழங்கியிருந்தனர். இனிப்பு (சிற்றிதழ்) இனிப்பு இந்தியா. திருச்சியிலிருந்து மாதமிரு வெளிவந்த ஒரு இதழாகும். ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதைää கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. அடைவுப் பண்பு கணிதத்தில், ஒரு கணத்தின் ஏதாவது இரு உறுப்புகளின் மீது ஒரு செயலைச் செய்யும்போது கிடைக்கும் முடிவு அக்கணத்திலேயே உள்ள ஒரு தனித்த உறுப்பாக இருக்குமானால் அக்கணம் அந்தச் செயலியைப் பொறுத்து அடைவு பெற்றது எனப்படும். எடுத்துக்காட்டாக, மெய்யெண்களின் கணம் கழித்தலைப் பொறுத்து அடைவு பெற்றுள்ளது. இரு மெய்யெண்களை, ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கழித்தால் ஒரேயொரு முடிவு கிடைக்கும். அதுவும் ஒரு மெய்யெண்ணாகவே இருக்கும். ஆனால் இயல் எண்களின் கணம் கழித்தலுக்கு அடைவு பெறவில்லை. ஏனெனில் இரு இயல் எண்களை ஒன்றிலிருந்து ஒன்றைக் கழிக்கும்போது ஒரேயொரு முடிவு கிடைத்தாலும் எப்பொழுதும் அது இயல் எண்ணாக இருக்காது. அதாவது சில சமயங்களில் இயல் எண்களாகவும் சில சமயங்களில் எதிர் முழு எண்களாகவும் அமையும். (எ.கா) 8 - 3 = 5 ; 2 – 6 = - 4. இங்கு 5 ஒரு இயல் எண். - 4 ஒரு எதிர் முழு எண். இரு இயல் எண்களைக் கூட்டினால் வரும் முடிவு எப்பொழுதும் தனித்ததொரு இயல் எண்ணாகத்தான் அமையும். எனவே இயல் எண்கள் கூட்டல் செயலின் கீழ் அடைவு பெற்றுள்ளது. இதேபோல் மெய்யெண்களின் கணம் கூட்டலைப் பொறுத்து அடைவு பெற்றுள்ளது. ஒரு கணம் பல செயலிகளைக் கொண்ட ஒரு தொகுதியைப் பொறுத்து அடைவு பெற்றிருக்க வேண்டுமெனில் அச்செயலிகளின் தொகுதியில் உள்ள ஒவ்வொரு செயலைப் பொறுத்தும் அக்கணம் அடைவு பெற்றிருக்க வேண்டும். ஒரு கணம் ஒரு செயலியைப் பொறுத்தோ அல்லது செயலிகளின் தொகுதியைப் பொறுத்தோ அடைவு பெற்றிருந்தால் அக்கணம் அடைவுப் பண்பு ("closure property") உடையது எனப்படும். அடைவுப் பண்பு பல இடங்களில் அடிக்கோளாக அறிமுகப்படுத்தப்பட்டு அடைவு அடிக்கோள் என அழைக்கப்படுகிறது. ஆனால் நவீன கணக் கோட்பாட்டு வரையறைகளில் செயலிகள் கணங்களுக்கு இடையேயான கோப்புகளாக வரையறுக்கப்படுவதால் ஒரு அமைப்பில் அடைவுறுதலை அடிக்கோளாகக் கொள்வதை தேவைக்கு மீறியதாக கருதலாம். மார்க் அல்லெய்ன் மார்க் அல்லெய்ன் ("Mark Alleyne", பிறப்பு: மே 23 1968), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 - 2001 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஐக்கிய நாடுகள் பட்டயம் இந்தப் பட்டயம் ஓர் அரசியலமைப்பு ஆவணமாகும்; அனைத்து ஒப்பமிட்ட உறுப்பினர்களும் இதன்படி நடக்கக் கடமை பெற்றவர்கள். மேலும் ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்குரிய கடமைகள் வேறெந்த உடன்பாட்டின்படி எழுந்த கடமைகளுக்கும் மேலானதாக பட்டயம் வரையறுக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் இந்தப் பட்டயத்திற்கு பின்னேற்பு வழங்கியநிலையில் முக்கியமான விலக்காக திருப்பீடம் (the Holy See) விளங்குகிறது; தான் நிரந்தர நோக்காளராகவே இருக்க தேர்ந்தெடுத்துள்ளது. இயன் ஆஸ்ட்டின் இயன் ஆஸ்ட்டின் ("Ian Austin", பிறப்பு: மே 30 1966) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1999 - 2000 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அலி பிரவுண் அலி பிரவுண் ("Ali Brown", பிறப்பு: பெப்ரவரி 11, 1970 ) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 247 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 51 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 - 2001 ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டகி பிரவுண் டகி பிரவுண் ("Dougie Brown ", பிறப்பு: அக்டோபர் 29 1969), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 209 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2009-2011ஆண்டுகளில், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டகி பிரவுண் - கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 14 2011. கிளேன் செப்பல் கிளேன் செப்பல் ("Glen Chapple", பிறப்பு: சனவரி 23 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 252 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 269 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 50 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். ஜேமி டாரிலிம்ப்பிள் ஜேமி டாரிலிம்ப்பிள் ("Jamie Dalrymple", பிறப்பு: சனவரி 21 1981), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 27 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 102 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 151 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஸ்டீவன் டேவிஸ் ஸ்டீவன் டேவிஸ் ("Steven Davies", பிறப்பு: சூன் 17 1986), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 109 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 - 2011 ஆண்டுகளில் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். உச்சிட்ட கணபதி உச்சிட்ட கணபதி (, ) விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 8வது திருவுருவம் ஆகும். காணாபத்தியத்தின் ஆறு முக்கிய பிரிவுகளுள் ஒன்றான உச்சிட்ட காணாபத்தியம் என்னும் காணாபத்தியப் பிரிவின் முதன்மைக் கடவுள் இவராகும். இந்தத் திருவுருவத்தின் நிறம் குறித்து நூல்களில் வெவ்வேறு தகவல்கள் காணப்படுகின்றன. "மந்திர மகார்ணவம்" என்னும் நூலில் உச்சிட்ட கணபதியின் நிறம் சிவப்பு எனக் காணப்பட, உத்தர காமிகாகமம் கருமை என்கிறது. வேறு சில நூல்கள் இத்திருவுருவத்தின் நிறம் நீலம் என்கின்றன. உச்சிட்ட கணபதி வடிவத்தில் கணபதிக்கு இடப்புறத்தில் தேவியின் உருவம் காணப்படும். பல எடுத்துக்காட்டுகளில் தேவியின் உருவம் கணபதியின் இடது தொடைமீது இருக்கும் நிலையில் காட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் தேவியின் உருவம் ஆடைகள் அற்ற நிலையிலேயே இருக்கும். மிக அரிதாக ஆடை அணிந்தபடி இருப்பதும் உண்டு. இவ்வடிவத்தில் கணபதிக்கு ஆறு கைகள் உள்ளன. இவற்றுள் ஐந்து கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை என்பவற்றை ஏந்தியிருப்பார். ஆறாவது கை தேவியைத் தழுவியிருக்கும். ஜோ டேன்லி ஜோ டேன்லி ("Joe Denly", பிறப்பு: மார்ச்சு 16, 1986), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 77 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 60 இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 - ல் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். விக்ன கணபதி விக்ன கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 9வது திருவுருவம் ஆகும். பொன்நிற மேனியராக சங்கு, கரும்புவில், புஷ்பபாணம், கோடரி, பாசம், சக்கரம், கொம்பு, மாலை, பூங்கொத்து, பாணம் முதலியவற்றை திருக்கரங்களில் கொண்டு விளங்குகிறார். விக்ன விநாயகருக்கு(கணபதி) உகந்த திதி நவமி ஆகும். அன்று விக்ன விநாயகருக்கு அபிசேகம், தீபம் காட்டி வழிபட்டால் பொன் வியாபாரி, வட்டி கடை நடத்துபவர்களுக்கு தொழில் மேன்மை அடையும். நவமி திதி அன்று விக்ன கணபதியின் பெயரை 21 முறையோ, 108 முறையோ கூறி பக்தியுடன் வழிபட்டால் சிக்கல்கள், தொல்லைகள் யாவும் விலகி சகல வளங்களும் கைகூடும் என்பது நம்பிக்கை. இக்சிப்ர கணபதி இக்சிப்ர கணபதி ("Kshirpra Prasāda Gaṇapati", க்ஷிப்ர கணபதி) விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 10 ஆவது திருவுருவம் ஆகும். செவ்வரத்தம் பூப்போன்ற அழகிய செந்நிற மேனியோடு, தந்தம், கற்பகக்கொடி, பாசம், ரத்னகும்பம், அங்குசம் இவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் விளங்குகிறார். மேத்தியூ பிளேமிங் மேத்தியூ பிளேமிங் ("Matthew Fleming", பிறப்பு: திசம்பர் 12, 1964 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அத்துடன் 219 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 314 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும்,கலந்து கொண்டுள்ளார். இவர் 1997 - 1998 ஆண்டுகளில் இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஏரம்ப கணபதி ஏரம்ப கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 11வது திருவுருவம் ஆகும். இது இந்துக் கடவுளான விநாயகரின் ஐந்து முகங்களைக் கொண்ட வடிவம். நேபாளத்தில் இவ்வடிவம் மிகவும் புகழ் பெற்றது. விநாயகக் கடவுளுக்கான தாந்திரிய வழிபாட்டு முறையில் இவ்வடிவம் முக்கியமானது. விநாயகரின் 32 வடிவங்களுள் மிகவும் புகழ் பெற்றவற்றுள் இதுவும் ஒன்று. பிரம்ம வைவர்த்த புராணம், ஏரம்ப (ஹேரம்ப) என்னும் சமசுக்கிருதச் சொல்லின் பொருளை விளக்குகிறது. இதன்படி "ஹே" என்பது "உதவியற்றதன்மை" அல்லது "இயலாமை" என்பதைக் குறிக்கும். "ரம்ப" என்பது "பாதுகாத்தல்" என்னும் பொருள் உடையது. இதனால் "ஹேரம்ப" என்பது "இயலாதவர்களைப் பாதுகாப்பவர்" அல்லது "உதவியற்றவர்களைப் பாதுகாப்பவர்" என்று பொருள்படும். "ஹேரம்ப" என்பது தமிழ் மரபுக்கு ஏற்ப "ஏரம்ப" ஆகிறது. ஏரம்ப கணபதி (ஹேரம்ப கணபதி) என்னும் பெயர் பல்வேறு புராணங்களில் காணப்படுகின்றது. 'முத்கல புராணத்தில்' விநாயகரின் 32 வடிவங்களுள் ஒன்றாக இப்பெயர் வருகிறது. வாராணாசிப் பகுதியில் உள்ள 56 விநாயகர்களில் ஒன்றாக இப்பெயரைக் கந்த புராணம் குறிப்பிடுகிறது. பிரம்ம வைவர்த்த புராணம், பத்ம புராணம், சிந்தியாகமம் ஆகியவற்றில் உள்ள விநாயகரின் பெயர்களுள் ஒன்றாக இப்பெயரும் உள்ளது. கணேச புராணத்திலும் விநாயகருக்கான அடைமொழிகளுள் ஒன்றாக இதுவும் காணப்படுகிறது. பசுமை கலந்த கருமை நிறமும் ஐந்து முகங்களும் உடையவர். அபயம், வரதம் ஆகிய கைகளையும், ஏனைய கரங்களில் பாசம், தந்தம், அட்சமாலை, மாலை, பரசு, சம்மட்டி, மோதகம், பழம் இவற்றைத் தாங்கி சிங்கவாகனத்தில் அமர்ந்து இருக்கிறார். சாகர் தீவு சாகர் தீவு வங்காள விரிகுடா வில் அமைந்துள்ளது. இது ”கங்காசாகர்” என்றும் அழைக்கப்படுகின்றது. கொல்கத்தாவிலிருந்து சுமார் 150 கீ.மீ. தூரத்திலிருக்கும் இத்தீவு இந்தியாவிற்கு சொந்தமானது. சுமார் 300 ச.கிமீ பரப்பளவு கொண்ட இத்தீவில் 1,60,000 பேர் வசிக்கின்றனர். குவிப்பில் தீவு குவிப்பில் தீவு தமிழ்நாட்டில் அடையாறு ஆற்றின் முடிவில் அமைந்துள்ளது. மயிலாப்பூருக்கும் அடையாறுக்கும் அருகிலுள்ளது. சிறுபான்மையினர் கல்லூரி (இந்தியா) இந்தியாவில் செயல்பட்டு வரும் சுயநிதிக் கல்லூரிகளில் மொழி அல்லது சமயம் போன்றவற்றில் சிறுபான்மையினராக இருப்பவர்களால் நடத்தப் பெறும் கல்லூரிகள், தங்கள் கல்லூரிகளுக்கு சிறுபான்மையினர் கல்லூரி எனும் நிலையைப் பெற்றுச் செயல்படுகின்றன. இதன் மூலம் அரசின் சில கட்டுப்பாடுகளிலிருந்து விலக்குகள் பெறுவதுடன் தாங்கள் சார்ந்துள்ள மொழி அல்லது சமயம் சார்ந்த மாணவர்களுக்கு சில சலுகைகளை அளிக்க முடிகிறது. முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் (தமிழ்நாடு) பல்கலைக்கழகம் வழங்கும் ஏதாவது ஒரு பாடத்தில் முதுகலை அல்லது முதுநிலை அறிவியலில் பட்டம் பெற்று அதன் பின்பு கல்வியியல் கல்வியில் இளம்நிலை அல்லது முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் அவர்கள் பயிற்சி பெற்ற பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற பாடங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர். சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் புனித பவுல் பேராலயம் அல்லது சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம் என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க பேராலயங்களுள் ஒன்றாகும். இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Paul Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Pauli extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Paolo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பண்டைய நான்கு உயர் பேராலயங்களுள் இதுவும் ஒன்றாகும். பிற உயர் பேராலயங்கள்: புனித பேதுரு, புனித இலாத்தரன் யோவான், புனித மரியா ஆகிய பெருங்கோவில்கள் ஆகும். உரோமைப் பேரரசன் நீரோ என்பவரின் ஆட்சியில் கி.பி. 65-67 அளவில் கொல்லப்பட்ட திருத்தூதர் பவுலின் கல்லறைமேல் கிறித்தவர்கள் ஒரு "நினைவு மண்டபம்" கட்டி அவருக்கு வணக்கம் செலுத்திவந்தார்கள். அம்மண்டபம் உரோமை நகரின் அவுரேலியன் சுவர்களிலிருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலையில் ஓஸ்தியா நெடுஞ்சாலையில் அமைந்திருந்தது. கி.பி. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கிறித்தவர்களுக்கு எதிரான கொடுமைகள் ஓரளவு நின்ற காலத்தில் உரோமைப் பேரரசன் காண்ஸ்டண்டைன் கிறித்தவ மதத்தைக் கடைப்பிடிக்க விதிக்கப்பட்ட தடையை அகற்றினார். அவரே புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நினைவு மண்டபத்தின் கீழ் அகழ்வு நிகழ்த்தப் பணித்தார். புனித பவுலின் கல்லறைமீது ஒரு கோவில் கட்டி எழுப்பினார். அக்கோவில் கி.பி. 324ஆம் ஆண்டு, நவம்பர் 18ஆம் நாள் திருத்தந்தை சில்வெஸ்டர் என்பவரால் நேர்ந்தளிக்கப்பட்டது. உரோமைப் பேரரசர்களாகிய தியோடோசியஸ், இரண்டாம் வாலண்டீனியன், அர்க்கேடியஸ் ஆகியோரின் ஆட்சியில் புனித பவுல் கோவில் விரிவாக்கப்பட்டு, எழிலுற அமைக்கப்பட்டது. கி.பி. 384-395 காலக்கட்டத்தில் நடந்த விரிவாக்கத்தின்படி, கோவிலுக்கு ஐந்து உள் நீள்வாக்குப் பகுதிகள் அமைக்கப்பட்டன; அவை நான்கு பிரிவுடைய ஒரு முற்றத்தைச் சென்றடையும் விதத்தில் இருந்தன. கோவில் முற்றத்தில் நான்கு வரிசையாகத் தூண்கள் எழுப்பப்பட்டன. பல திருத்தந்தையர் ஆட்சிக் காலத்தில் புனித பவுல் கோவில் இன்னும் அதிகமாக அழகுபடுத்தப்பட்டது. எடுத்துக்காட்டாக, கோவிலைச் சுற்றுயுள்ள அகன்ற காப்புச் சுவர்கள் 9ஆம் நூற்றாண்டில் எழுப்பப்பட்டன. வெளியிலிருந்து எதிரிகள் தாக்காமல் இச்சுவர்கள் கட்டப்பட்டன. உயர்ந்தெழுகின்ற மணிக்கூண்டும் பிசான்சியக் கலையில் அமைந்த எழில்மிகு பெருங்கதவும் 11ஆம் நூற்றாண்டில் சேர்க்கப்பட்டன. பிற விரிவாக்கங்களுள் குறிப்பிடத்தக்கவை: கோவில் முகப்பில் ஓவியர் பியேத்ரோ கவால்லீனி என்பவரால் அமைக்கப்பட்ட பதிகைக் கல் ஓவியங்கள்; வாஸ்ஸலேத்தோ குடும்பத்தினர் உருவாக்கிய முற்றத் தோட்டம்; கோதிக் பாணியில் அமைந்த விரிமேடை; பாஸ்கா மெழுகுதிரியைத் தாங்க 13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கலையழகு மிக்க உயர்ந்த விளக்குத் தண்டு. இவ்வாறு பல விதங்களில் அணிசெய்யப்பட்ட புனித பவுல் பேராலயம், 1626இல் புனித பேதுரு பேராலயம் புதிதாகக் கட்டப்பட்டு நேர்ந்தளிக்கப்படும் ஆண்டுவரையிலும் உரோமை நகரிலேயே புகழ்மிக்க மாபெரும் பேராலயமாகத் திகழ்ந்தது. 1823ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் நாள் இரவில் திடீரெனப் பற்றிய தீயில் புனித பவுல் பெருங்கோவில் பெரும் சேதமுற்றது. பண்டைய கிறித்தவக் கலைக்கும், பிசான்சியக் கலைக்கும், மறுமலர்ச்சிக் கலைக்கும், பரோக்கு கலைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய கோவில் சேதமடைந்ததால் கிறித்தவ உலகமே துயருற்றது. தீ விபத்து நிகழ்ந்த குறுகிய காலத்திலேயே கோவிலை மீண்டும் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தீக்குத் தப்பிய கட்டடப் பகுதிகளும் கலைப் பொருள்களும் புதிய கட்டடத்திற்குப் பயன்படுத்தப்பட்டன. தீ விபத்து ஏற்படுவதற்கு முன்னர் கோவில் எவ்வடிவத்தில் இருந்ததோ அதே வடிவத்தில் அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, சீரமைக்கப்பட்டது. 1840இல் திருத்தந்தை பதினாறாம் கிரகோரி கோவிலின் பீடத்தை அர்ச்சித்தார். கோவில் சீரமைக்கப்பட்ட பிறகு வேறு கலைவேலைகளும் சேர்க்கப்பட்டன. 146 பெரும் தூண்களைக் கொண்ட முன்வாயிற் பகுதி 1928இல் இணைக்கப்பட்டது. அண்மைக் காலத்தில் கோவிலின் கீழ் நடத்தப்பட்ட அகழ்வாய்வின் பயனாக புனித பவுல் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. 5ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை பெரிய லியோ என்பவரின் ஆட்சிக்காலத்தில் புனித பவுல் பெருங்கோவிலின் உள்ளே நடு நீள்வாக்குப் பகுதியின் இரு புறங்களிலும் தூண்களின் மேற்பகுதியில் திருத்தந்தையர்களின் முகச் சாயல்கள் தனித்தனியாகவும் இயல்பான தோற்றத்திலும் வரிசையாக வரையப்பட்டன. அந்த வரிசை தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகிறது. பண்டைய உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியே இவ்வாலயம் அமைந்திருந்ததால் இதற்கு "சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்" என்னும் பெயர் வந்தது. இப்போது இக்கோவில் உரோமை நகரின் எல்லைக்குள்தான் இருக்கின்றது. ஆயினும் இது வத்திக்கான் நகர்-நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது. புனித பவுல் பேராலயத்தை ஒட்டி, மிகப் பழைய துறவியர் இல்லம் உள்ளது. இது புனித பெனடிக்ட் துறவியர் இல்லம் ஆகும். இந்தத் துறவியர் இல்லம் க்ளூனி ஓடோன் என்பவரால் 936இல் சீரமைக்கப்பட்டது. இன்றுவரை அது துறவியர் இல்லமாகவே செயல்பட்டுவருகிறது. எட்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை இரண்டாம் கிரகோரியின் ஆட்சியில் உருவான இத்துறவியர் இல்லம் புனித பவுலின் கல்லறை அருகே அமைந்துள்ளது. அங்கு வதிகின்ற துறவியர் புனித பவுல் ஆலயத்தில் பாவ மன்னிப்பு வழிபாடுகள் நடத்தவும், கிறித்தவ ஒன்றிப்புக் கூட்டங்கள் நிகழ்த்தவும் பொறுப்புக் கொண்டுள்ளனர். புனித பவுல் மனமாற்றம் அடைந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25ஆம் நாள் இந்த ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் "கிறித்தவ ஒன்றிப்பு வாரம்" தொடங்கும். அதைத் தொடங்கிவைக்க திருத்தந்தை புனித பவுல் கோவிலுக்குச் செல்வார். 2007, சூன் மாதம் 28ஆம் நாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிட்க் புனித பவுல் பேராலயத்துக்குச் சென்று, 2008ஆம் ஆண்டு "புனித பவுல் ஆண்டு" எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். புனித பவுல் பிறந்த 2000 ஆண்டு நினைவாக அக்கொண்டாட்டம் 2008 சூன் 28இலிருந்து 2009 சூன் 29 வரை (புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா) நிகழ்ந்தது. இஸ்லாமிய தாரகை (சிற்றிதழ்) இஸ்லாமிய தாரகை 1946ம் ஆண்டில் இலங்கை கொழும்பிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழாகும். இஸ்லாமிய தாரகை இலங்கையிலும், இந்தியாவிலும் பல வாசகர்களை கொண்டிருந்ததுடன், பல முக்கிய எழுத்தாளர்களின் பங்களிப்பு இவ்விதழுக்குக் கிடைத்துவந்தது. சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், கட்டுரைகள், நூலாய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள் போன்ற பல அம்சங்களை இது தாங்கியிருந்தது. பைஃபெர்னோ ஆறு பைஃபெர்னோ (Biferno) தெற்கு இத்தாலியின் மொலீசு மண்டலத்தில் பாயும் ஆறு. பொஜானோ கொம்யூனில் உற்பத்தியாகும் இவ்வாறு மாட்டீசு மலையிலிருந்து பாயும் ஓடைகளால் நீர்வரத்து பெறுகின்றது. 84 கி.மீ நீளம் ஓடி ஏட்ரியாட்டிக் கடலில் கலக்கின்றது. இஸ்லாமிய பிரசார நேசன் (சிற்றிதழ்) இஸ்லாமிய பிரசார நேசன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1936ம் ஆண்டில் வெளிவந்த மாத இதழாக அறியமுடிகின்றது. இவ்விதழ் இசுலாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கான விளக்கம், தொழுகை, சகாத் எனும் ஏழை வரி, நோன்பு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து தெளிவான விளக்கங்களை வழங்கியிருந்தது. அத்துடன், பொதுப்படையாக இசுலாமிய செய்திகள், செய்தி விமர்சனங்களை இது கொண்டிருந்தது. இஸ்லாமிய மித்திரன் (இதழ்) இஸ்லாமிய மித்திரன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்ததாக அறியமுடிகின்றது. இசுலாமிய செய்திகள், செய்தி விமர்சனங்கள், ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இது கொண்டிருந்தது. இஸ்லாமிய முரசு (இதழ்) இஸ்லாமிய முரசு இந்தியா இலுப்பூரிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். முகமத் அலி இசுலாமிய செய்திகள், செய்தி விமர்சனங்கள், ஆய்வுகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை இது கொண்டிருந்தது. மேலும், இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. நாடுகளின் அரண்மனை பலைஸ் தெ நேசியோன்சு (பிரெஞ்சு: "Palais des Nations", , தமிழ்:நாடுகளின் அரண்மனை) உலக நாடுகள் சங்கத்தின் தலைமையகமாக 1929ஆம் ஆண்டுக்கும் 1936ஆம் ஆண்டுக்கும் இடையில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் கட்டப்பட்டது. 1946ஆம் ஆண்டு இதற்கான ஒப்பந்தத்தை ஐ.நா பொதுச்செயலர் சுவிட்சர்லாந்து அரசுடன் கையொப்பமிட்டபின் ஐக்கிய நாடுகளின் அலுவலகமாக செயற்பட்டு வருகிறது. இங்கு ஐ.நாவின் அலுவலகம் இயங்கினாலும் சுவிட்சர்லாந்து 2002ஆம் ஆண்டிலேயே ஐ.நாவின் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது. 1920களில் இந்தக் கட்டிட வளாகத்தை வடிவமைக்க ஓர் போட்டி நடத்தப்பட்டது. 377 போட்டி ஆக்கங்களிலிருந்து இறுதி வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க கட்டிட வடிவமைப்பாளர்கள் அடங்கிய நடுவர் குழுவொன்று அமைக்கப்பட்டது. இருப்பினும் இவர்களால் வெற்றியாளரை தீர்மானிக்க இயலவில்லை; முடிவில் சிறந்த வடிவமைப்புகளை வழங்கிய ஐந்து வடிவமைப்பாளர்களைத் (கார்லோ பிரோக்கி, யூலியன் பிளெகென்ஹைமர், கமில் லெஃபெவ்ர், ஆன்ரீ பால் நெநோட், யோசஃப் வேகோ) தேர்ந்தெடுத்து அவர்கள் ஒன்றிணைந்து இறுதி வடிவமைப்பை வடிக்குமாறு தீர்வு வழங்கினர். ஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டில் வந்தபிறகு இரு விரிவாக்கங்கள் நடந்துள்ளன. 1950களில் "K" கட்டடத்திற்கு மூன்று தளங்கள் சேர்க்கப்பட்டன மற்றும் உலக சுகாதார அமைப்பிற்கு தற்காலிகமாக இடமளிக்க "D" கட்டடம் கட்டப்பட்டது. "E" கட்டடம் அல்லது "புதுக்" கட்டடம் 1973ஆம் ஆண்டில் கலந்தாய்வு அரங்கங்களுடன் முடிக்கப்பட்டது. இவற்றுடன் கட்டட வளாகம் 2800 அலுவலகங்களுடன் 34 மாநாட்டரங்குகளுடன் 600 மீ நீளத்துடன் உள்ளது. இந்த அரண்மனை ஆரியானா பூங்காவில் அமைந்துள்ளது. இந்தப் பூங்காவினை ஜெனீவா நகருக்கு 1890இல் கொடையளித்த குஸ்தவ் டெ ரெவில்லியோடு டெ ரீவ் மூன்று நிபந்தனைகளை விதித்திருந்தார்: பூங்கா எப்போதும் பொதுமக்களுக்கு அணுக்கமாக இருக்க வேண்டும்; தான் இந்தப் பூங்காவிலேயே அடக்கம் செய்யப்பட்ட வேண்டும்; பூங்காவெளியில் மயில்கள் எந்நேரமும் சுதந்தரமாக உலாவ வேண்டும். இவை இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பூங்காவில் 1668ஆம் ஆண்டு சுவிசு கட்டிடம் (chalet) உள்ளது. உலக நாடுகள் சங்கக் கட்டடத்தின் அடித்தளத்தில் உலக நாடுகள் சங்க உறுப்பினர் நாடுகளின் பட்டியல் அடங்கிய ஆவணம், சங்க அரசியலமைப்பு ஆவணம், பத்தாவது அவையில் பங்கேற்ற நாடுகளின் நாணயங்களின் மாதிரிகள் அடங்கிய காலப்பேழை புதைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர் இதயக்குரல் (சிற்றிதழ்) இஸ்லாமியர் இதயக்குரல் 1985ம் ஆண்டில் தென்காசியிலிருந்து மாதமிரு முறை வெளிவந்த ஓர் இதழாகும். தமிழ்நாடு இஸ்லாமியர் பேரவையின் அரசியல் சார்பற்ற கொள்கை விளக்க ஏடு இது இசுலாமிய பேரவையின் கொள்கை விளக்க இதழ் என்றடிப்படையில் பேரவைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. அத்துடன், இசுலாமிய அடிப்படையில் அமைந்த கட்டுரைகள், செய்திகள், இசுலாமிய உலக செய்தி விமர்சனங்கள் என்பனவும் இதில் உள்வாங்கப்பட்டிருந்தன. இஸ்லாம் (1923 சிற்றிதழ்) இஸ்லாம் 1923ம் ஆண்டில் இந்தியா, லால்பேட்டையிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும். இஸ்லாம் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் அவ்வப்போது வெளிவந்துள்ளன. இவ்விதழில் இசுலாமிய கோட்பாட்டு விளக்கங்கள் தொடர்பான ஆக்கங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்தன. இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன், நபிகளாரின் சொல், செயல், அங்கீகாரமான ஹதீஸ்கள் போன்றவற்றிற்கான விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இஸ்லாம் மித்திரன் (இதழ்) இஸ்லாம் மித்திரன் இலங்கை கொழும்பிலிருந்து 1893ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இதழாகும். 19ம் நூற்றாண்டின் இறுதியில் இவ்விதழ் வெளிவந்தது. உதுமான் 19ம் நூற்றாண்டு தமிழ் இசுலாமிய இதழ்களை நோக்குமிடத்து அவதானிக்கக்கூடிய பிரதமான பண்பு அரபு தமிழ் ஆக்கங்களைக் கொண்டிருந்தமையாகும். இவ்விதழ் இயலுமான வரை இதனை தவிர்த்து தமிழிலே வெளிவர முயற்சி செய்துள்ளது. 19ம் நூற்றாண்டு இஸ்லாமியர்கள் இஸ்லாம் பற்றிய விளக்கங்களைப் பெற்றுக் கொள்ள பெரிதும் சிரமப்பட்டனர். மறுபுறமாக இவர்களிடத்தே இது பற்றிய உணர்வுகளும் அதிகமாகக் காணப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் இசுலாமிய அடிப்படைகளை விளக்கக் கூடிய கட்டுரைகளே இது தன்னகத்தே கொண்டிருந்தது. மேலும், இலங்கை முஸ்லிகளின் நிலை பற்றிய செய்திகளும், கட்டுரைகளும் இடைக்கிடையே உள்வாங்கப்பட்டிருந்தன. ஆ. ச. தம்பையா ஆர்தர் சரவணமுத்து தம்பையா (1924 - மே 11 ,2011) என்பவர் மிகவும் அறியப்பட்ட தோல் மருத்துவர். சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் 32 ஆண்டுகள் சேவையாற்றியவர். 1961 முதல் 1982 வரை 21 ஆண்டுகள் தோல் மருத்துவத் துறைத் தலைவராகப் பதவி வகித்துள்ளார். 60 ஆண்டுகள் தோல் மருத்துவத்திற்கு சேவை செய்துள்ளார். தம்பையாவின் பெற்றோர்கள் இருவரும் மருத்துவர்கள். அவர்களைப் பின்பற்றி மதராசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பட்டம் பெற்றார்.. தோல் மருத்துவத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து இலண்டன், கேம்பிரிட்ஜ் மற்றும் எடின்பரோவில் பயிற்சி பெற்றார். மீண்டும் தமது மருத்துவக் கல்லூரிக்கே வந்து தோல் மருத்துவப் பிரிவில் பணியாற்றினார். 1961ஆம் ஆண்டு இந்தத்துறையில் முதல் தொழில்முறைப் பதவி ஏற்படுத்தப்பட்டபோது தம்பையா அதன் முதல் பேராசிரியராக விளங்கினார். மருத்துவச் சேவைக்கு இடையூறாக இருக்கும் என்பதற்காகத் திருமணம் செய்யவில்லை. டாக்டர் கமலம் என்னும் மற்றொரு தோல் மருத்துவ நிபுணருடன் சேர்ந்து 160 சர்வதேசத் தோல் மருத்துவ ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இருவரும் சேர்ந்து கண்டுபிடித்த மூன்று பூஞ்சைக் காளான் நோய்க் கிருமிகள் அமெரிக்க அட்லாண்டாவில் உள்ள நோய்க் கிருமி வளர்ப்பு மையத்தில் இடம்பெற்றுள்ளன. இவர் டாக்டர் பி.சி.ராய் விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். பவுல் கிரேசன் போல் கிரேசன் ("Paul Grayson )", பிறப்பு: மார்ச்சு 31, 1971 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். போல் பிரேங்ஸ் போல் பிரேங்ஸ் ("Paul Franks", பிறப்பு: பிப்ரவரி 3, 1979 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். எரோல் ஹோம்ஸ் எரோல் ஹோம்ஸ் ("Errol Holmes", பிறப்பு: ஆகத்து 21, 1905, இறப்பு: ஆகத்து 21, 1960) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 301 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம் ஐக்கிய நாடுகள் ஜெனீவா அலுவலகம் (United Nations Office at Geneva, "UNOG") ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் நான்கு பெரும் அலுவலக வளாகங்களில் (ஐ.நா. தலைமையகத்தை அடுத்து) இரண்டாவது மிகப்பெரும் வளாகமாகும். இது உலக நாடுகற் சங்கத்திற்காக 1929க்கும் 1938க்கும் இடையில் கட்டப்பட்ட நாடுகளின் அரண்மனை கட்டிட வளாகத்தில் இயங்குகிறது. ஐக்கிய நாடுகள் நிர்வாக அலுவலகங்களைத் தவிர ஐ.நாவின் பல திட்டப்பணிகள் மற்றும் நிதியங்களுக்கான அலுவலகங்களும் இங்கு இடம் பெற்றுள்ளன. மேலும் சில திட்டப்பணிகள், நிதியங்களுக்கான அலுவலகங்கள் சுவிட்சர்லாந்து அரசு கொடுத்துள்ள பிற அலுவலகவெளிகளிலும் இடம் பெற்றுள்ளன. ஜெனீவாவைத் தலைமையகமாகக் கொண்டவை: ஜெனீவாவிலும் உள்ளவை: பெர்சி ஹோம்ஸ் பெர்சி ஹோம்ஸ் ("Percy Holmes", பிறப்பு: நவம்பர் 25, 1886, இறப்பு: செப்டம்பர் 3, 1971) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 555 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1932 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். லட்சுமி கணபதி லட்சுமி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 12 ஆவது திருவுருவம் ஆகும். எட்டுக் கைகளிலும் கிளி, மாதுளம்பழம், கலசம், அங்குசம், பாசம், கற்பகக்கொடி, கட்கம், வரதம், இவற்றையுடையவரும் வெண்மை நிறத்தோடு நீலத் தாமரைப் பூவை ஏந்திய இரு தேவிமார்களோடு விளங்குவர். மகா கணபதி மகா கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 13வது திருவுருவம் ஆகும். செங்கதிர் போன்ற நிறத்தோடு திருக்கரங்களில் மாதுளம்பழம், கதை, கரும்பி, வில், சக்கரம், தாமரை, பாசம், நீலோத்பலம், நெற்கதிர், தந்தம், ரத்னகலசம், இவற்றைத் தரித்தவரும், முக்கணனை உடையவரும், பிறையை சூடியவருமாக மடிமீது எழுந்தருளியிருக்கிற தாமரையை ஏந்திய தேவியோடு விளங்குவர். விஜய கணபதி விஜய கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 14வது திருவுருவம் ஆகும். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம், இவற்றைத் தரித்தவரும் பெருச்சாளி வாகனத்தில் வீற்றிருப்பவரும் செந்நிறமானவராகவும் விளங்குவர். நிருத்த கணபதி நிருத்த கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 15வது திருவுருவம் ஆகும். பொன்போன்ற நிறத்தோடு மோதிரங்களணிந்த விரல்களையுடைய கைகளால் பாசம், அங்குசம், அபூபம், கோடரி, தந்தம் இவற்றைத் தரித்தவருராகவும் விளங்குவர். லேலண்ட் ஹோன் லேலண்ட் ஹோன் ("Leland Hone", பிறப்பு: சனவரி 30, 1853, இறப்பு: டிசம்பர் 31, 1896) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், எட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். லென் ஹொப்வூட் லென் ஹொப்வூட் ("Len Hopwood", பிறப்பு: அக்டோபர் 30, 1903, இறப்பு: சூன் 15, 1985) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 400 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1934 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஊர்த்துவ கணபதி ஊர்த்துவ கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 16வது திருவுருவம் ஆகும். நீலப் பூ, நெற்பயிர், தாமரை, கரும்பு வில், பாணம், தந்தம் இவற்றையுடையவர். பொன் வண்ணமானவர். பச்சைநிற மேனியோடு விளங்குகின்ற தேவியைத் தழுவியிருப்பவர். ஏ. என். ஹோன்பீ ஏகாட்சர கணபதி ஏகாட்சர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 17வது திருவுருவம் ஆகும். செந்நிற மேனியோடு செம்பட்டாடையுடன் செம்மலர் மாலை அணிந்து முக்கண்ணுடன் பிறையை சூடியிருப்பார். மாதுளம் பழம், பாசம், அங்குசம், வரதம், இவைகளை தாங்கிய கரங்களையுடையவர். யானை முகம் உடையவர். பத்மாசனத்தில் வீற்றிருப்பவர். வர கணபதி வர கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 18வது திருவுருவம் ஆகும். செவ்வண்ணமானவர், யானைமுகம் உடையவர், முக்கண் உடையவர், பாசம் அங்குசம் என்பவற்றோடு விளங்குவர். திரயாட்சர கணபதி திரயாட்சர கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 19வது திருவுருவம் ஆகும். திரயாக்‌ஷர கணபதி பொன்னிற மேனியுடன் அசைகின்ற காதுகளில் சாமரையணிந்து நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஆகியவற்றைத் தாங்கிய வண்ணம் துதிக்கையில் மோகத்துடனும் விளங்குவார். மார்ட்டின் ஹோட்டன் க்ஷிப்ரபிரசாத கணபதி க்ஷிப்ரபிரசாத கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 20வது திருவுருவம் ஆகும். பாசம், அங்குசம், கல்பலதை, மாதுளம்பழம், தாமரை, தருப்பை, விஷ்டரம் இவற்றைத் தரித்தவர். திருவாபரணங்களை அணிந்தவர். பேழை வயிற்றையுடையவர். அரித்திரா கணபதி அரித்திரா கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 21வது திருவுருவம் ஆகும். மஞ்சள் நிறமானவர். நான்கு கரங்களையுடையவர். அவற்றில் பாசம், அங்குசம், தந்தம், மோதகம் இவற்றைத் தரித்தவர். ஏகதந்த கணபதி ஏகதந்த கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 22வது திருவுருவம் ஆகும். பேழை வயிற்றுடன், நீலமேனியர், கோடரி, அட்சமாலை, இலட்டு, தந்தம் இவற்றையுடையவர். சிருஷ்டி கணபதி சிருஷ்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 23வது திருவுருவம் ஆகும். பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் இவற்றைக் கரங்களில் ஏந்தியவர், பெருச்சாளி வாகனத்தை உடையவர். சிவந்த திருமேனியர். உத்தண்ட கணபதி உத்தண்ட கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 24வது திருவுருவம் ஆகும். நீலம், தாமரை, மாதுளம் பழம், கதை, தந்தம், கரும்புவில், இரத்தினகலசம், பாசம், நெற்கதிர், மாலை இவற்றை ஏந்திய பத்துக்கைகளை உடையவர். அழகிய தாமரைப் பூவை ஏந்திய பச்சை மேனியளாகிய தேவியால் தழுவப்பெற்றவர். ரணமோசன கணபதி ரணமோசன கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 25வது திருவுருவம் ஆகும். பாசம், அங்குசம், தந்தம், நாவற்பழம் இவற்றைத் தரித்தவர். வெண்பளிங்கு போன்ற மேனியர். செந்நிறப் பட்டாடை உடது்தியவர். துண்டி கணபதி துண்டி கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 26வது திருவுருவம் ஆகும். அட்சமாலை, கோடரி, இரத்தினகலசம், தந்தம் இவற்றை ஏந்தியவர். துவிமுக கணபதி துவிமுக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 27வது திருவுருவம் ஆகும். தந்தம், பாசம், அங்குசம், இரத்தினபாத்திரம் இவற்றைக் கையில் ஏந்தியவர். பசுநீலமேனியர். செம்பட்டாடையும். இரத்தின கிரீடமும் அணிந்தவர். இருமுகம் உடையவர். மும்முக கணபதி மும்முக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 28வது திருவுருவம் ஆகும். வலது கைகளில் கூரிய அங்குசம், அட்சமாலை, வரதம் இவற்றை உடையவர். இடது கைகளில் பாசம், அமுதகலசம், அபயம் இவற்றை உடையவர். பொற்றாமரையாசனத்தின் நடுப் பொகுட்டில் மூன்ற முகங்களோடு எழுந்தருளியிருப்பவர். புரசம், பூப் போன்ற சிவந்த நிறம் உடையவர். சிங்க கணபதி சிங்க கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 29வது திருவுருவம் ஆகும். வீணை, கற்பக்கொடி, சிங்கம், வரதம் இவற்றை வலது கைகளில் தாங்கியவர். தாமரை, இரத்தின கலசம், பூங்கொத்து, அபயம் இவையமைந்த இடதுகைகளை உடையவர். வெண்ணிறமான மேனியர். யானைமுகவர். சிங்க வாகனத்தில் எழுந்தருளியிருப்பவர். ரவூப் ஹக்கீம் அப்துல் ரவூப் ஹக்கீம் ("Abdul Rauff Hakeem", பிறப்பு: ஏப்ரல் 13, 1960), இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், முசுலிம் அரசியல்வாதியும், சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், வழக்கறிஞரும் ஆவார். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் கண்டி மாவட்டத்தில் இருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் ஆவார். இவர் 1994, 2000, 2001, 2004 தேர்தல்களிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நிறுவனத் தலைவர் எம். எச். எம். அஷ்ரப் உலங்குவானூர்தி விபத்தில் இறந்ததை அடுத்து இவர் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார். 2010 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சி செய்து கொண்ட உடன்படிக்கைக்கமைய ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின்பு ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியில் இணைந்து அமைச்சரானார். 2014 டிசம்பர் 28 அன்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அரசில் இருந்து விலகி அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் கூட்டு எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு தமது ஆதரவைத் தெரிவித்தது. ரவூப் ஹக்கீம் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். சுனில் ஹந்துன்நெத்தி சுனில் ஹந்துன்நெத்தி (Sunil Handunnetti, பிறப்பு: அக்டோபர் 19, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஜனநாயக தேசிய முன்னணிசார்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இல, 43/20, நுககஹ பிளேஸ், பிளியன்தல வீதி, மஹரகமையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், திணிவுக் காப்பு விதி மூடிய தொகுதி ஒன்றில் நடைபெறும் வேதியியல் தாக்கங்களில் பங்குகொள்ளும் தாக்கிகளின் மொத்த திணிவானது தாக்கத்தின் போது கிடைக்கும் விளைவுகளின் மொத்த திணிவுக்கு சமனாகக் காணப்படும் என்பது திணிவு மாறா விதி அல்லது திணிவுக்காப்பு விதி எனப்படும். இதன் படி தாக்கிகளின் மொத்தத் திணிவு விளைவுகளின் மொத்தத் திணிவுக்குச் சமனாகக் காணப்படும். திணிவுக் காப்பு விதியைப் பிரான்சு நாட்டு அறிவியலாளரான அன்ரனி லாவோசியர் முன்மொழிந்தார். இவ்விதி மூலம் கூறப்படுவது: ஒரு இரசாயனத் தாக்கத்தின் போது புதிதாக அணுக்கள் உருவாகுவதோ அல்லது அழிவடைவதோ இடம்பெறாது. அணுக்கள் மீள் ஒழுங்கு செய்யப்படுதலே இடம்பெறுகிறது. இதன் காரணமாக திணிவில் எந்தவொரு மாற்றமும் இடம்பெறாது. திணிவுக் காப்பு விதியை முதன்முதலில் ஒரு கோட்பாடாக வெளியிட்டவர் அன்டணி லவோசியர்(1743–1794). ஆயினும் இது பற்றி 1748இல் மைக்கேயில் லொமோனோசோவ் (1711–1765) இதற்குச் சமமான கருத்தை வெளியிட்டதாகவும் அதைப் பரிசோதனை ரீதியில் உறுதிப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அம்பாசமுத்திரம் வட்டம் இந்த வட்டத்தின் கீழ் கடையம், ஆழ்வார்குறிச்சி, சிங்கம்பட்டி, அம்பாசமுத்திரம் என 4 குறுவட்ட ங்களும், 54 வருவாய் கிராமங்களும் உள்ளன. பி. அரிசன் பி. ஹரிஸன் ("P. Harrison", பிறப்பு: சூலை 24 1964), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 10வது நாடாளுமன்றம் (1994), சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். பிரதான வீதி, மரதன்கடவலயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், யோக கணபதி இந்து சமயத்தில், யோக கணபதி, விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 30வது திருவுருவம் ஆகும். பன்னிரு ராசிகள் ஐக்கியமாகி "ஒன்றாய் அமர்ந்திட்ட உருவம்" யோக கணபதி எனப்படுகிறது. யோக நிலையில் யோகபட்டம் தரித்துக்கொண்டு, இளஞ்சூரியன் போன்ற நிறத்தோடு, இந்திரநீலம் போன்ற ஆடையை உடுத்திக்கொண்டு, பாசம், அட்சமாலை, யோகதண்டம், கரும்பு இவற்றை ஏந்தி இருப்பவர். இந்தத் தெய்வத்தை வழிபட்டால் பன்னிரு ராசிகளின் பலன்களும் கிட்டும் என்று இந்து சமயத்தினர் நம்புகின்றார்கள். துர்க்கா கணபதி துர்க்கா கணபதி விநாயகரின் முப்பத்து இரண்டு திருவுருவங்களில் 31வது திருவுருவம் ஆகும். சுட்ட பசும்பொன்னிறம், எட்டுக் கை, பெரியமேனி, அங்குசம், பாணம், அட்சமாலை, தந்தம் இவற்றை வலது கைகளில் ஏந்தியவர். பாசம், வில், கொடி, நாவற்பழம் இவற்றை இடது கைகளில் உடையவர். செந்நிற ஆடையுடன் விளங்குபவர். ஜயரத்ன ஹேரத் ஜயரத்ன ஹேரத் (Jayarathna Herath), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் குருநாகலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறைப் பிரதி அமைச்சர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இல, 165, வன்துராகலை, குருநாகலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், தெய்வச் சேக்கிழார் (சிற்றிதழ்) தமிழகத்திலிருந்து வெளிவரும் பல சிற்றிதழ்களில் தெய்வச் சேக்கிழார் மாத இதழும் ஒன்று. பெரிய காஞ்சிபுரம் நகரில் இருந்து வெளியாகும் இந்த இதழின் வெளியீட்டாளராக ச. மீனாட்சி என்பவர் இருந்து வருகிறார். இருபது ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கும் இந்த இதழில் சைவ சமயக் கருத்துக்களைக் கொண்ட பல தகவல்கள் இடம் பெற்று வருகின்றன. எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா (M.L.A.M. Hizbullah, பிறப்பு: பெப்ரவரி 2 1963), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மட்டக்களப்புமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். முன்னாள் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார பிரதி அமைச்சர். இல, 10/18, லேக் ரைவ், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர், கபீர் ஹாசிம் கபீர் ஹாசிம் (Kabir Hashim, பிறப்பு: மே 19, 1959), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் கேகாலை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004), ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இல, 22, அவுஸ்டேன் பிளேஸ், கொழும்பு 08 இல் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர், மடொல் தூவ மடொல் தூவ எனப்படுவது 1947 இல் மார்ட்டின் விக்கிரமசிங்கவினால் எழுதப்பட்ட ஒரு சிறுவர் சிங்கள புதினமாகும். புதினத்தின் கதை குறும்புமிக்க உபாலி கினிவெல்ல மற்றும் அவன் நண்பர்களைச்சுற்றி இலங்கையின் தெற்குக் கரையோரத்தில் 1890இல் நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது. பின்பு உபாலியும் அவன் நண்பன் ஜின்னாவும் ஒரு மக்கள்அரவம் அற்ற தீவிற்கு செல்வது போன்ற அமைகின்றது.1976 இல் இந்தப் புதினம் ஒரு திரைப்படமாகவும் வெளியிடப்பட்டது. இந்தப் புதினத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், சீனம், ருசிய மொழி, ஜப்பானிய மொழி, ரோமேனியா, பல்கேரியா ஆகிய மொழிகளிற்கு மொழிபெயர்க்கப்பட்டது. எச். எம். எம். ஹரீஸ் எச். எம். எம். ஹரீஸ் (H. M. M. Harees, பிறப்பு: செப்டம்பர் 6, 1971), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் திகாமடுல்லை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்ற (2001),த்திலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இல, 35, தம்மானந்தா வீதி, மவுன்ட் லெவினியாவில் வசிக்கும் இவர் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர், ஒரு சட்டத்தரணியும் கூட தொழிற்கல்வி ஆசிரியர் (தமிழ்நாடு) தமிழ்நாட்டிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வகுப்புகள் வரை தையல், ஓவியம், விவசாயம், தச்சு, நெசவு போன்ற கைத்தொழில்களைக் கற்றுத் தரும் ஆசிரியர்கள் தொழிற்கல்வி ஆசிரியர் என்று அழைக்கப்படுகின்றனர். சில நடுநிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட கைத்தொழிலில் தொழிற்கல்வி ஆசிரியர் சான்றிதழ் பயிற்சி பெற்றவர்கள் இந்தப் பணிக்கு நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நிலையில் உள்ளனர். இதயவியல் இதயவியல் (cardiology) என்பது மருத்துவத்தின் ஒரு பிரிவாகும். இதய பிறவிக்கோளாறு, முடியுருநாடி நோய்கள், இதயச்செயலிழப்பு, இதய அடைப்பிதழ் நோய்கள், இதய மின்உடலியங்கியல் போன்ற இதயம் தொடர்பான கல்வியறிவும் பயிற்சியும் இப்பிரிவின் கீழ் வழங்கப்படுகின்றது. இப்பிரிவில் சிறப்புப் பயிற்சிபெற்ற மருத்துவர் இதயவியலாளர் (cardiologist) என அழைக்கப்படுகின்றார். இதயவியலாளர் அல்லது இதய நோய் நிபுணர் இதயம் தொடர்பான நோய்களுக்கு அறுவை இன்றிய சிகிச்சை அளிப்பவர் ஆவார். மார்பெலும்பை வெட்டி இதயத்தில் அறுவைச்சிகிச்சை மேற்கொள்வோர் இதய அறுவைச்சிகிச்சை நிபுணர் எனப்படுவர். இதயவியலில் இயல்பான இதயத்தின் நிலைப்பாடும் இயல்புநிலையில் இருந்து வேறுபடும் சந்தர்ப்பங்களும் கருதப்படுகின்றன. இதயத்தின் சுருங்கி விரியும் தொழிற்பாடு மூலம் உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் தமனிகள் மூலம் குருதி விநியோகம் செய்யப்படுகின்றது, இந்நிலையில் இதயத்துக்கும் குருதியை வழங்க ஒரு தமனி உள்ளது, அது முடியுருநாடி எனப்படும், இதயத்தின் தசைகளுக்கு ஊட்டச்சத்துக்களையும் ஒட்சிசனையும் வழங்குவதன் மூலம் இதயத்தின் தொழிற்பாட்டைப் பேணிக்காக்கின்றது. இந்த முடியுருநாடியில் அடைப்புகள் ஏற்படும் போது நோய்கள் உண்டாகின்றன. கடிய முடியுருக் கூட்டறிகுறிக்குள் (Acute coronary syndrome) திடீரெனத் தோன்றும் சிலவகை மாரடைப்பு நோய்கள் அடங்கும், இவை மின்னிதய வரைபின் மூலம் வேறுபடுத்தி அறியப்படுகின்றன. கூழ்மைத் தடிப்பு (Atherosclerosis) தமனிகளின் உட்புறப்படையில் படியும் கொழுப்பால் ஏற்படும் நோய். இதனால் தமனிகளின் உட்புறம் தடிப்பு அடைகின்றது. சில சந்தர்ப்பங்களில் இப்பகுதிகள் வெடித்து குருதி உறைதல் ஏற்படுவதால் மேலும் தீயதாகின்றது. இச்செயல்கள் முடியுரு நாடியில் நடைபெறும் போது மார்பக நெறிப்பு (Angina pectoris ) தொடக்கம் மாரடைப்பு வரையிலான கோளாறுகள் உண்டாகின்றன. இதயம் ஒழுங்கீனமாகத் துடிப்பதில் இருந்து முற்றிலும் நின்று விடுவது வரை உள்ள சந்தர்ப்பங்கள் வெவ்வேறு காரணிகளால் உண்டாகின்றன. உதாரணமாக மாரடைப்பு ஏற்பட்ட ஒருவருக்கு இதயத் தசை இறப்பினால் அது துடிக்கும் தன்மையில் மாற்றம் ஏற்படுகின்றது. இச்சந்தர்ப்பங்கள் இலயமின்மை (arrhythmia) என்று அழைக்கப்படும். தொல்காப்பியம் மொழிமரபுச் செய்திகள் தொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டது. முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ள இயல் மொழிமரபு. பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது.எனவே இங்கு மொழி என்பது மொழியப்படும் சொல்லைக் குறிக்கும். மரபு என்பது இங்கு முன்னோரைப் பின்பற்றும் வழக்கத்தைக் குறிக்கும். முதலாவது இயலில் முதலெழுத்துக்கள் விளக்கப்பட்டன. இந்த இரண்டாது இயலில் சார்பெழுத்துக்கள், மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள் விளக்கப்படுகின்றன. 'ஐ' என்பதை 'அய்' என்று எழுதுவர். இப்படி எழுதுவது எழுத்துப்போலி. 'ஔ' என்பதை 'அவ்' என்று எழுதுவர். இப்படி எழுதுவது எழுத்துப்போலி. 1.உகின், 2.செகின், 3.விழன், 4.பயின், 5.அழன், 6.புழன், 7.குயின், 8.கடான், 9.வயான் ஆகியவை அந்த 9 சொற்கள் என்று இளம்பூரணர் எடுத்துக்காட்டுகிறார். இவற்றில் உகின் என்னும் சொல்லை விட்டுவிட்டு *எகின் என்னும் சொல்லைச் சேர்த்து நச்சினார்க்கினியர் குறிப்பிடுகிறார். ஜெப் ஹம்பேஜ் ஜெப் ஹம்பேஜ் ("Geoff Humpage", பிறப்பு: ஏப்ரல் 24, 1954 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். இவர் 1981 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நைஜல் ஹொவார்ட் நைஜல் ஹொவார்ட் ("Nigel Howard", பிறப்பு: மே 18 1925, இறப்பு: மே 31 1979) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 4தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1952 ஆண்டுகளில்இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஹாரி ஹொவெல் ஹரி ஹொவெல் ("Harry Howell ) ", பிறப்பு: நவம்பர் 29 1890, இறப்பு: சூலை 9 1932) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 227 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1920 - 1924 ஆண்டுகளில்இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டிக் ஹோவொர்த் டிக் ஹோவொர்த் ("Dick Howorth", பிறப்பு: ஏப்ரல் 26 1909, இறப்பு: ஏப்ரல் 2 1980 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 372 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1947 - 1948 ஆண்டுகளில்இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். குளுவாங் குளுவாங் ("Kluang", சீனம்: 居銮) என்பது மேற்கு மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைப் பட்டணம் குளுவாங். இது ஜொகூர் பாரு மாநகரத்தில் இருந்து 110 கி.மீ வடக்கே இருக்கிறது. ஜொகூர் மாநிலத்தின் மையத்தில் குளுவாங் நகரம் அமைந்துள்ளது. நகரத்தைச் சுற்றிலும் நூற்றுக் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவில் செம்பனையும் இரப்பரும் பயிர் செய்யப்பட்டுள்ளன. வேளாண்மைத் தொழிலே இப்பகுதியின் முக்கிய தொழில். மலேசியாவில் சீனர்கள் அதிகமாகக் காணப்படும் நகரங்களில் குளுவாங் நகரமும் ஒன்று. இங்கே தமிழர்களை அதிகமாகப் பார்க்கலாம். பெரும்பாலும் செம்பனைத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்கின்றனர். குளுவாங் மாவட்டத்தின் மக்கள் தொகை 250,000. குளுவாங் நகரத்தின் மக்கள் தொகை 140,000. குளுவாங் எனும் பெயர் “கெளுவாங்” எனும் மலாய்ச் சொல்லில் இருந்து வந்தது. கெளுவாங் என்றால் நரி வௌவால். இந்த நரி வவ்வால்கள் பழங்களைத் தான் விரும்பிச் சாப்பிடும். சில பத்தாண்டுகளுக்கு முன்பு குளுவாங் பகுதியில் ஆயிரக் கணக்கான நரி வௌவால்கள் காணப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டதாலும் உணவுக்காக வேட்டை ஆடப்பட்டதாலும் நரி வௌவால் இனம் முற்றாக அழிக்கப் பட்டு விட்டது. குளுவாங் நகரம் 1915 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இரண்டாவது உலகப் போரின் போது ஆங்கிலேயக் கூட்டுப் படைகள் குளுவாங்கில் இருந்து தப்பிச் சிங்கப்பூருக்கு ஓடி விட்டன. குளுவாங்கிற்கு வந்த சப்பானியப் படைத் தளபதி யாமாசித்தா 1942 ஆம் ஆண்டு சனவரி 27 ஆம் தேதி குளுவாங்கைத் தன் படைத் தலைமையகமாக மாற்றிக் கொண்டான். இந்த குளுவாங் பட்டணத்தில் இருந்து தான் சப்பானிய விமானப் படைகள் சிங்கப்பூரையும் சுமாத்திராவையும் தாக்கின. அதன் பின்னர் சப்பானியர்கள் வெளியேறிய பிறகு குளுவாங் விமான ஓடும் பாதையை 1963 ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அங்கிருந்த குர்கா படையினர் 1970ஆம் ஆண்டுகளில் வெளியேறினர். 1910 ஆம் ஆண்டுகளில் இரப்பர் பயிர் செய்வதற்காகவே குளுவாங் உருவாக்கப்பட்டது. கத்திரி ரோபல் குழு, ஆசியாடிக் ரப்பர் நிறுவனம், ஹாரிசான் குரோஸ்பீல்ட் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் பல தோட்டங்களைத் திறந்தன. குளுவாங் நகரில் ஆங்கிலேயக் காலனித்துவ மதுபானக் கடைகள் பல திறக்கப்பட்டன. அப்போது அங்கே ஆங்கிலேயர்களைத் தான் அதிகமாகப் பார்க்க முடியும். குளுவாங்கில் முக்கியமான ரப்பர்/செம்பனைத் தோட்டங்கள்: இந்தத் தோட்டங்களில் வேலை செய்ய ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கொத்தடிமைகளாக வாழ்க்கை நடத்திய நிகழ்ச்சிகளும் உள்ளன. ஒரு காலக் கட்டத்தில் இருபது ஆயிரம் தமிழர்கள் வேலை செய்தும் உள்ளனர். ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் சில தோட்டங்கள் மட்டும் தான் உள்ளன. தமிழர்களை அதிகமாகப் பார்க்க முடியவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களின் பிள்ளைகள் வேலைகள் தேடி இடம் பெயர்ந்து விட்டனர். ரப்பர் தோட்டங்கள் இருந்த இடங்களில் இப்போது செம்பனைத் தோட்டங்கள் இருக்கின்றன. அன்னாசி, கொக்கோ, தேயிலை தோட்டங்களும் உள்ளன. இந்தத் தோட்டங்களில் வெளி நாட்டுத் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். பெரும்பாலும் இந்தோனேசிய, வங்காள தேசத் தொழிலாளர்கள், இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் இன்னும் இந்தத் தோட்டங்களில் இருக்கின்றனர். அவர்களில் பலர் வயதானவர்கள். பிள்ளைகளுடன் நகர்ப் புறங்களுக்குப் போகாமல் தங்களின் எஞ்சிய காலத்கை இங்கேயே கழிக்கின்றனர். 1969 ஆம் ஆண்டு மலேசியாவில் ஓர் இனக் கலவரம் நடைபெற்றது. அதன் பின் விளைவுகளின் காரணமாகப் பல ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் தங்களின் தாயகமான தமிழ் நாட்டிற்குத் திரும்பி விட்டனர். மூன்றாம் தலைமுறையினர் பெரும்பாலும் படித்தவர்கள். கல்லூரிகளில் பலகலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள். பல தமிழர்கள் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். முதன்முதலில் வந்த தமிழர்கள் பல கோயில்களைக் கட்டினர். ஆண்டு தோறும் சிறப்பான முறையில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. கல்வித் துறையில் நாட்டம் இல்லாதத் தமிழர்கள் பலர் தேயிலைத் தோட்டங்களை நம்பி வாழ்கின்றனர். இளம் வயதினரும் கடினமான உடல் உழைப்புகளில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் பலருக்கு நாட்டின் குடியுரிமை பத்திரங்கள் இல்லை. சில பெற்றோரின் அலட்சியப் போக்கினால் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்புப் பத்திரம் எடுப்பது இல்லை. அதனால் அந்தக் குழந்தைகள் பள்ளிக்கூடங்களுக்குப் போக முடியாத நிலைமை. கல்வி அறிவு இல்லாததால் அந்தக் குழந்தைகளில் பலர் பால்ய வயதிலேயே உடல் உழைப்புத் துறைக்கு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் விரிவாக்கம் தற்போது 192 ஐக்கிய நாடுகள் (ஐநா) உறுப்பினர் நாடுகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அங்கம் பெற்றுள்ளன. கீழ்வரும் பட்டியலில் சுருக்கமாக ஐநா உறுப்பினர் தொகை வளர்ச்சியைக் காணலாம்: புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம் என்பது உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக் கோவிலும், உலகளாவிய கத்தோலிக்க திருச்சபையின் முதன்மைக் கோவிலும் ஆகும். உரோமை மறைமாவட்டத்தின் ஆயராகவும் அனைத்துலகத் திருச்சபைக்கும் தலைவராகவும் உள்ள திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் அமைந்த கோவில் இது. இக்கோவில் ஆங்கிலத்தில் "Archbasilica of St. John Lateran" என்றும் இத்தாலிய மொழியில் "Arcibasilica Papale di San Giovanni in Laterano" என்றும் வழங்கப்படுகிறது. ஆயினும் இக்கோவிலின் அதிகாரப்பூர்வமான முழுப்பெயர் இலத்தீனில் "Archibasilica Sanctissimi Salvatoris et Sanctorum Iohannes Baptista et Evangelista in Laterano" என்றும், இத்தாலிய மொழியில் "Arcibasilica del Santissimo Salvatore e Santi Giovanni Battista ed Evangelista in Laterano" என்றும், ஆங்கிலத்தில் "Archbasilica of the Most Holy Saviour and Sts. John the Baptist and the Evangelist at the Lateran" என்றும் வழக்கத்தில் உள்ளது. இப்பெருங்கோவில் நேர்ந்தளிக்கப்பட்ட விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 9ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பெருங்கோவில் கத்தோலிக்க திருச்சபையின் பெருங்கோவில்களிலெல்லாம் மிகப் பழமையானதும் முதன்மையானதும் ஆகும். உரோமை நகரில் சேலியோ குன்றின் அருகில் அமைந்துள்ள இக்கோவில் உலகமனைத்திற்கும் "தாய்க் கோவிலாகவும்" "தலைமைக் கோவிலாகவும்" கருதப்படுகிறது. இக்கோவிலுக்குத் தலைமைக் குருவாக கர்தினால் அகுஸ்தீனோ வல்லீனி என்பவர் உள்ளார். இவர் திருத்தந்தையின் பதில் குருவாக இங்கு பணிபுரிகிறார். இப்பெருங்கோவிலின் முகப்பில் "Christo Salvatori" என்னும் சொற்கள் பதிக்கப்பட்டு்ள்ளன. இதற்கு "மீட்பர் கிறித்துவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது" என்பது பொருள். இக்கோவில் உரோமை நகரில் அமைந்திருந்தாலும் வத்திக்கான் நகர்-நாட்டின் ஆளுகைக்கு உட்பட்டது. கோவில் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டுகளுக்கு முன் "இலாத்தரானி" என்னும் குடும்பத்திற்கு உரிய அரண்மனையாக இருந்தது. எனவே "இலாத்தரன்" என்னும் சொல் இக்கோவில் பெயரோடு இணைக்கப்பட்டது. தாசிட்டஸ் (Tacitus) என்னும் பண்டைய உரோமை வரலாற்றாசிரியரின் "வரலாற்றுக் குறிப்புகள்" (ஆண்டு: கி.பி. 65) கூற்றுப்படி, இலாத்தரானி குடும்பத்தினரான ப்ளாவுசியஸ் என்பவர் ஆட்சியாளராகப் பொறுப்பேற்று, நீரோ மன்னனுக்கு எதிராக நிகழ்ந்த சதியில் பங்கேற்றார் என்றும் அதனால் அவருடைய நிலத்தையும் சொத்தையும் மன்னன் அரசுடைமை ஆக்கினார் என்றும் தெரிகிறது. ப்ளாவுசியசுக்குக் கொலைத் தண்டனை விதிக்கப்பட்டது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் செக்ஸ்தியோ இலாத்தரானோ என்பவர் அவ்விடத்தில் சீரும் சிறப்பும் மிக்க ஒரு அரண்மனை கட்டினார். அதன் புகழ் எவ்வளவு ஓங்கியது என்றால் அக்கட்டடம் இருந்த இடம் உரோமை நகரின் ஒரு முக்கிய அடையாளத் தளமாக மாறியது. நடுக்காலத்திலும் நவீன காலத்திலும் இன்றும் "இலாத்தரன்" என்னும் அடைமொழி நிலைத்துவிட்டது. ஃப்ளாவியஸ் வலேரியஸ் காண்ஸ்டண்டைன் என்னும் பெயர் கொண்ட முதலாம் காண்ஸ்டண்டைன் மன்னன் கி.பி. 313இல் கிறித்தவர்களுக்கு மதச் சுதந்திரம் அளித்தார். அவரே இலாத்தரன் குடும்ப நிலத்தில் ஒரு பெருங்கோவில் எழுப்ப வழிசெய்தார். முதலாம் சில்வெஸ்தர் என்னும் திருத்தந்தை அக்கோவிலை கி.பி. 324இல் (அல்லது 318இல்) "தூய்மைமிகு மீட்பராம் கிறித்துவுக்கு" நேர்ந்தளித்தார். ஒன்பதாம் நூற்றாண்டில் மூன்றாம் செர்ஜியுஸ் என்னும் திருத்தந்தை இக்கோவிலைத் திருமுழுக்கு யோவானுக்கும் அர்ப்பணித்தார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருத்தந்தை இரண்டாம் லூசியஸ் என்பவர் அதே கோவிலைப் புனித நற்செய்தியாளர் யோவானுக்கும் அர்ப்பணித்தார். கி.பி. நான்காம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டுவரை திருத்தந்தையர்களின் ஆட்சி மையம் இலாத்தரானில்தான் இருந்தது. இலாத்தரன் கோவில்தான் உரோமை ஆயரும் திருச்சபைத் தலைவருமான திருத்தந்தையின் ஆட்சிப் பீடம் இருந்த கோவிலாகவும் விளங்கியது. இலாத்தரானில் தான் திருச்சபையின் ஐந்து பொதுச்சங்கங்கள் நிகழ்ந்தன. இலாத்தரானில் அமைந்த பழைய கோவிலின் வடிவமைப்பு இன்றைய கோவிலின் வடிவமைப்பைப் பெரிதும் ஒத்திருந்தது. கோவில் ஐந்து நீள்வாக்குப் பிரிவுகளையும் பிரிவுச் சுவர்களையும் கொண்டிருந்தது. சதுர வடிவில் அமைந்த பெருங்கோவில் ஐந்து நீள்வாக்குப் பிரிவுகளாக அமைக்கப்பட்டது. கொரிந்து கலைப்பாணியில் அமைந்த பளிங்குத் தூண்கள் அப்பிரிவுகளைப் பகுத்தன. நடு நீள்வாக்குப் பகுதியின் இரு பக்கங்களிலும் பக்கத்துக்கு 15 தூண்கள், வலது மற்றும் இடது நீள்வாக்குப் பக்கங்களில் வளைவுகளைத் தாங்குவதற்கு 21 தூண்கள் என்று அமைக்கப்பட்டன. நடு நீள்வாக்குப் பகுதியின் இறுதியில் ஒரு பெரும் உள்கூரை அமைக்கப்பட்டது. நடுக்காலத்தில் இக்கோவில் கலையழகு மிக்க ஒரு வழிபாட்டிடமாக விளங்கியது. நான்காம் நூற்றாண்டிலிருந்து இக்கோவில் வளர்ச்சியையும் கண்டது, வீழ்ச்சியையும் கண்டது. 410ஆம் ஆண்டு அலாரிக் என்பவரின் தலைமையில் விசிகோத்து இனத்தவர் கோவிலின் உயர்மேடையை எடுத்துச் சென்றுவிட்டனர். ஜென்செரிக் என்பவரின் தலைமையில் வாண்டல் இனத்தவர் கோவிலின் செல்வங்களை 455இல் கொள்ளையடித்தனர். திருத்தந்தை ஹிலாரியுஸ் (461-468) என்பவர் கோவிலின் உள் அமைந்த திருமுழுக்கு அளிப்பிடத்தின் அருகே மூன்று சிறு வழிபாட்டிடங்களை வடிவமைத்தார். அவை: புனித திருமுழுக்கு யோவான், புனித நற்செய்தி யோவான், திருச்சிலுவை என்பனவாகும். கோவிலுக்கு பரோக்கு கலைப் பாணி அளிப்பதற்காக திருச்சிலுவை வழிபாட்டிடம் ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்னும் திருத்தந்தையால் அகற்றப்பட்டது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருத்தந்தை மூன்றாம் லியோ என்பவர் கோவிலின் உள்கூரையைச் செம்மைப்படுத்தி, பீட உள்கூரையின் சாளரங்களைப் பன்னிறக் கண்ணாடிகளால் அணிசெய்தார். பத்தாம் நூற்றாண்டில் கோவிலின் முன் மண்டபத்தின் ஒரு பகுதியில் புனித தோமா வழிபாட்டிடம் கட்டப்பட்டது. அங்குதான் முற்காலங்களில் திருத்தந்தையர் வழிபாட்டு ஆடைகளை அணிவது வழக்கம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் திருமுழுக்கு அளிப்பிடத்தின் முன் மண்டபத்தில் மேலும் இரண்டு வழிபாட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அதற்கேற்றவாறு கோவிலின் கூரை சீரமைக்கப்பட்டது. கோவில் முகப்பில் கற்பதிகை ஓவியங்கள் சேர்க்கப்பட்டன. கி.பி. 1300ஆம் ஆண்டு "ஜூபிலி ஆண்டு" என்று கொண்டாடப்பட்டது. புனித இலாத்தரன் பெருங்கோவிலில் அந்த ஜூபிலி அறிவிப்பைத் திருத்தந்தை எட்டாம் போனிபாஸ் வெளியிட்டார். இதையொட்டி கோவில் சீரமைப்பு வேலைகள் நடந்தன. பதினான்காம் நூற்றாண்டில் திருத்தந்தை உரோமையில் இலாத்தரன் தலைமையிடத்தை விட்டுவிட்டு, பிரான்சு நாட்டில் "அவிஞ்ஞோன்" என்னும் நகருக்கு மாற்றினார். கோவிலும் கைநெகிழப்பட்டது. 1378இல் திருத்தந்தை ஒன்பதாம் கிரகோரி என்பவர் பொறுப்பேற்றதும் "அவிஞ்ஞோன்" நகரை விட்டு உரோமை வந்தார். ஆனால், இலாத்தரன் கோவிலும் தலைமையிடமும் சீரழிந்த நிலையில் இருந்ததால் திருத்தந்தை வத்திக்கானுக்குச் சென்றார். அதன் பிறகு கோவிலும் அதனுள் அமைந்த திருமுழுக்கு அளிப்பிடமும் சீர்ப்படுத்தப்பட்டன. திருத்தந்தையின் தலைமை இடமாக விளங்கிய இலாத்தரன் அரண்மனையில் சீரமைப்பு வேலைகள் நடைபெறவில்லை. பதினாறாம் நூற்றாண்டில், உரோமை நகர் சூறையாடப்பட்ட பிறகு திருத்தந்தை மூன்றாம் பவுல் திருத்தந்தை அரண்மனைக் கட்டடத்தின் பொருள்களைக் கொண்டு கோவிலின் சீரமைப்பைத் தொடர்ந்தார். திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவர் அரண்மனைக் கட்டடத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு புதியதொரு கட்டடத்தை எழுப்பினார். அதுவே இன்று உரோமை மறைமாவட்டத்தின் அலுவலக மையமாக உள்ளது. 1600ஆம் ஆண்டில் திருத்தந்தை எட்டாம் கிளமெண்ட் ஜூபிலி ஆண்டு கொண்டாடப் பணித்தார். 1650ஆம் ஆண்டு புனித இலாத்தரன் யோவான் கோவில் அழகுற சீரமைக்கப்பட்ட ஆண்டு ஆகும். பிரான்செஸ்கோ பொர்ரோமீனி என்னும் கட்டடக் கலைஞரின் மேற்பார்வையில் திருத்தந்தை பத்தாம் இன்னசெண்ட் ஆட்சியில் கோவிலின் நடு நீள்வாக்குப் பகுதியும் இரு பக்க நீள்வாக்குப் பகுதிகளும் சீரமைக்கப்பட்டன. தூதரகங்களின் பட்டியல், கம்போடியா இது கம்போடியா நாட்டின் தூதரகங்களின் பட்டியல். ஜோ ஹம்ஃபிரீஸ் ஜோ ஹம்ஃபிரீஸ் ("Joe Humphries", பிறப்பு: ஆகத்து 3 1855, இறப்பு: சனவரி 4 1891) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 5தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 162 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1884 - 1885 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். நாசர் ஹுசைன் நாசர் ஹுசைன் ("Nasser Hussain", பிறப்பு: மார்ச்சு 28 1968, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 96 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 88 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 334 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 365 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 2004 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இங்கிலாந்து தேசிய அணியின் தலைவராக 1999 - 2003 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார். டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும் டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும் ("The Durban Declaration and Programme of Action") என்பது, 2001 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடைபெற்ற இனவாதத்துக்கு எதிரான உலக மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஆவணம் ஆகும். இது, இனவாதம், இனப்பாகுபாடு, அந்நியர் வெறுப்பு, மற்றும் இவை போன்ற சகிப்புத்தன்மை இன்மை ஆகியவற்றுக்கெதிராகப் போராடுவதற்கான வழிமுறைகளை முன்வைக்கும் செயல் நோக்கம் கொண்டது. முழுதளாவிய நோக்கங்களைக் கொண்ட இந்த ஆவணம், பலவகையான விடயங்களைக் கவனத்துக்கு எடுத்ததுடன் பரவலாகப் பயன்தரக்கூடிய பரிந்துரைகளையும், செயல் திட்டங்களையும் முன்வைத்தது. இந்தச் சாற்றுரை, இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றை ஒழிப்பதில் அனைத்துலக சமூகத்தின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது. உலகின் பல நாடுகளிலும் காணப்படும் இப் பிரச்சினைகளைக் கையாளுவதை ஒரு அனைத்துலகப் பிரச்சினையாக அணுகும் இந்தச் சாற்றுரைக்குச் சட்டவலு எதுவும் இல்லை. எனினும், இனவாதம், இனப்பாகுபாடு என்பவற்றுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளுக்கு இது தார்மீக ஆதரவை வழங்குவதாக உள்ளது. டர்பன் சாற்றுரையும் செயல் திட்டங்களும். முழுமையான ஆவணம் கென்னத் ஹச்சிங்ஸ் கென்னத் ஹச்சிங்ஸ் ("Kenneth Hutchings", பிறப்பு: திசம்பர் 7 1882, இறப்பு: செப்டம்பர் 3 1916) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 207 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1907 - 1909 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். தூதரகங்களின் பட்டியல், சைப்ரஸ் இது சைப்ரஸ் நாட்டின் தூதரகங்களின் பட்டியல். முதலெழுத்துப் புதிர் முதலெழுத்துப் புதிர் ("Acrostic") என்பது ஒரு உரை, வாசகம், பத்தி, சொற்றொடர் போன்ற ஏதாவது ஒரு எழுத்து வடிவத்தை, அல்லது சொற்களின் தொகுப்பை, அவற்றிலுள்ள முதலெழுத்துக்கள் அல்லது முதலில் வரும் அசைவுகள் (syllable) அல்லது முதல் சொற்கள் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு ஆக்கப்படும் ஒரு கவிதை, செய்யுள், வாக்கியம் போன்ற ஒரு எழுத்து வடிவமாகும். இதனைக் குறிக்கும் Acrostic என்ற ஆங்கிலச் சொல்லுக்கு கிரேக்க மொழியில், 'akros' என்பதற்கு 'முதல்' என்றும், 'stíchos' என்பதற்கு 'பாடல் வரி' அல்லது 'கவிதை வரி' என்றும் பொருள் வழங்கப்படுகின்றது. எனவே இந்த முதலெழுத்துப் புதிரை, முதல்வரிப் புதிர், முதலெழுத்து செய்யுள், முதல்வரி செய்யுள் என்றும் அழைக்கலாம். இவ்வாறான கவிதை அல்லது செய்யுளை ஆக்குவது, நினைவில் வைத்துக் கொள்ள சிரமமாக இருக்கும் எழுத்து வடிவங்களை இலகுவில் நினைவில் நிறுத்திக்கொள்ள உதவும். நினைவு கொள்ளவேண்டிய சொற்களின் தொகுப்பையோ, அல்லது ஒரு உரையையோ, அவற்றின் முதல் எழுத்து, அல்லது வரிகளைக் கொண்டு, இயல்பாக இலகுவில் நினைவில் கொள்ளக்கூடிய ஒரு கவிதையாகவோ, அல்லது வாக்கியமாகவோ, அல்லது சாதாரண உரைநடை வடிவிலோ அமைத்துக் கொள்வதன் மூலம், குறிப்பிட்ட விடயத்தில் நினைவாற்றலைக் கூட்டிக் கொள்ளலாம். இதனால் இது முதலெழுத்து நினைவி எனவும் அழைக்கப்படலாம். ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தனிமங்களை ஒழுங்கு வரிசையில் நினைவில் கொள்வதற்காக அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்: வானவில்லில் உள்ள நிறங்களை, அல்லது கட்புலனாகும் நிறமாலையின் நிறங்களை நினைவில்கொள்ள அமைக்கப்பட்ட முதலெழுத்துப் புதிர்: ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு என்பது 18 வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகும். குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் பன்னாட்டு ஒப்பந்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அவையின் 162 உறுப்பு நாடுகளிடமிருந்து பெறப்படும் அறிக்கைகளை ஆராய்வதும், விருப்பு நடபடிகளுக்கு அடங்கிய 112 நாடுகள் தொடர்பான முறையீடுகளை ஆய்வு செய்வதும் இக் குழுவின் பணி. இக் குழு ஆண்டுக்கு மூன்று முறை கூடுகிறது. வசந்த காலத்தில் நியூ யார்க்கில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அவையின் தலைமை அலுவலகத்திலும், கோடையிலும், இலையுதிர் காலத்திலும் செனீவாவில் உள்ள அலுவலகத்திலும் கூட்டங்கள் நடைபெறுவது வழக்கம். இக் குழு ஐக்கிய நாடுகள் அவையுடன் தொடர்புடையனவும், வெவ்வேறு மனித உரிமைகள் ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட 9 மனித உரிமைகள் ஒப்பந்த அமைப்புக்களில் ஒன்று. மனித உரிமைகள் குழு, பட்டய அடிப்படையிலான உயர்மட்ட அமைப்பான மனித உரிமைகள் ஆணையம் அல்லது அதன் மாற்றீடாக உருவான மனித உரிமைகள் மன்றத்திலிருந்தும் வேறானது. மனித உரிமைகள் குழுவின் உறுப்பினர்கள் நல்லொழுக்கம் உடையவர்களாகவும், மனித உரிமைகள் துறை தொடர்பில் தகுதி வாய்ந்தவர்களாகவும் இருக்க வேண்டும். இவர்களை உறுப்பு நாடுகளே தெரிவு செய்கின்றனவெனினும், இவர்கள் நாடுகளின் சார்பாளர்களாக அல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே தெரிவு செய்யப்படுகின்றனர். இதன் முதலாவது விருப்பு நடபடிகளை 112 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன்படி மேற்படி நாடுகளின் ஆளுகைக்கு உட்பட்டவர்கள், அந்தந்த நாடுகளில் குறித்த மனித உரிமை ஒப்பந்தங்கள் மீறப்பட்டுள்ளனவா என்பதை தீர்மானிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழுவிடம் முறையிடலாம். இந்நாடுகளைப் பொறுத்தவரை மனித உரிமைகள் குழு, மனித உரிமைகள் மீறலுக்கான ஒரு குறை தீர்க்கும் பொறிமுறையாகச் செயல்படுகிறது. முதலாவது மனித உரிமைகள் நடபடி 1976 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன் இரண்டாவது விருப்பு நடபடி மரணதண்டனை ஒழிப்புத் தொடர்பானது. இது 1991 ஆம் ஆண்டு சூலை 11 ஆம் தேதியில் இருந்து நடைமுறையில் உள்ளது. இந்த நடபடியை 71 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. மலேசியத் தீபகற்பம் மலேசியத் தீபகற்பம் அல்லது மலேசிய மூவலந்தீவு ("Peninsular Malaysia", மலாய்: "Semenanjung Malaysia"), அல்லது மேற்கு மலேசியா (முன்னர் மலாயா), என்பது மலாய் தீபகற்பத்தில் (மலேசிய மூவலந்தீவில்) அமைந்திருக்கிறது. இது மலேசியாவின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 131,598 சதுர கிமீ (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே தாய்லாந்து நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே சிங்கப்பூர் உள்ளது. மேற்கே மலாக்கா நீரிணைக்கு மறுகரையில் சுமாத்திரா தீவு அமைந்துள்ளது. கிழக்கே தெற்கு சீனக் கடலுக்கு மறுகரையில் கிழக்கு மலேசியா (போர்னியோ தீவில்) உள்ளது. ஏறத்தாழ 21 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது இத்தீபகற்பம் (இம் மூவலந்தீவு). மலேசிய மூவலந்தீவில் மட்டும் 11 மாநிலங்களும், இரண்டு நடுவண் பிரதேசங்களும் அமைந்துள்ளன: ஐக்கிய நாடுகள் சபையின் கொடி (சின்னம்) வெளிர்நீல பின்னணியில் வெள்ளை நிற ஐக்கிய நாடுகள் சின்னம் கொண்ட ஐக்கிய நாடுகள் கொடி அக்டோபர் 20, 1947 முதல் பின்பற்றப்படுகிறது. சின்னத்தின் வடிவமைப்பு இவ்வாறு உள்ளது: 1945ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவில் ஐக்கிய நாடுகள் மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பாளர்களை அடையாளம் காணுமாறு சின்னம் கொண்ட ஓர் குத்தூசியை வடிவமைக்க விரும்பினர். இந்த தற்காலிக ஏற்பாடு பின்னர் நிரந்தரமான சின்னமாக மாறக்கூடிய வாய்ப்பை உணர்ந்த அமெரிக்க தூதுக்குழுத் தலைவரும் அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலருமான எட்வர்ட் ஸ்டெட்டினஸ் ஓலிவர் லுன்ட்குயிஸ்ட் தலைமையில் ஓர் தேர்வுக் குழுவை நிறுவி நிரந்தர வடிவமைப்பைத் தர வேண்டினார். இக்குழு டோனால்ட் மக்லாலின் வடிவமைத்த உலக வரைபடத்தை சைதூண் கிளைகள் தழுவிய நிலையிலான சின்னத்தை தேர்ந்தெடுத்தது. கொடியின் பின்னணி வண்ணமாக நீலம் போரைக் குறிக்கும் சிவப்பு வண்ணத்திற்கு எதிராக தேர்ந்தெடுக்கப்பட்டது. 1945ஆம் ஆண்டில் பயன்படுத்திய இளங்கருமை நீலத்திலிருந்து தற்போதைய நீலம் மாறுபட்டுள்ளது. அப்போதைய உலக வரைபடமும் மாநாட்டை நடத்தும் அமெரிகக் கண்டத்தை மையமாகக் கொண்டிருந்தது. பின்னர் கொடியில் எந்த நாடும் முன்னுரிமை பெறாதவண்ணம் வரைபடம் மாற்றப்பட்டது. புதிய சின்னத்தில் உலக உருண்டையை மையத்தில் 0° நிலநிரைக்கோட்டையும் மற்றும் பன்னாட்டு நாள் கோட்டையும் கொண்டு இரண்டாக பிளக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது. சைதூண் கிளைகள் அமைதியையும் உலக வரைபடம் உலக மக்கள் அனைவரையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. வெள்ளையும் நீலமும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் அலுவல்சார் வண்ணங்களாக அறியப்படுகின்றன. இசாஅத்துல் இஸ்லாம் (சிற்றிதழ்) இசாஅத்துல் இஸ்லாம் இந்தியா ஆத்தூர் சேலத்தில் இருந்து 1949ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். இவர் ஏற்கனவே சமாதானம் (1946), மார்க்க வினாவிடை (1947) ஆகிய இதழ்களை நடத்தியுள்ளார். "இசாஅத்துல் இஸ்லாம்" என்ற அரபுப் பதத்தின் பொருள் "இஸ்லாமிய பிரசாரம்" என்பதாகும் இவ்விதழில் இசுலாமிய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றன. கட்டுரைகள், குர்ஆன், ஹதீஸ்கள் என்பனவும் காணப்பட்டன. இசாஅத்துல் இஸ்லாம் (இலங்கை சிற்றிதழ்) இசாஅத்துல் இஸ்லாம் இலங்கை பேருவளையிலிருந்து 1975ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும். இசாஅத்துல் இஸ்லாம் என்ற அரபுப் பதத்தின் பொருள் இஸ்லாமிய பிரசாரம் என்பதாகும் இவ்விதழில் இசுலாமிய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றன. கட்டுரைகள், குர்ஆன், ஹதீஸ்கள் என்பனவும் காணப்பட்டன. குத்பா உரைகள் மற்றும் இசுலாமிய அடிப்படைக் கருத்துகள் தொடர்பான கட்டுரைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன. ரிச்சர்ட் ஹட்டன் ரிச்சர்ட் ஹட்டன் ("Richard Hutton", பிறப்பு: செப்டம்பர் 6 1942, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 281 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1971 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜாக் இடோன் ஜாக் இடோன் ("Jack Iddon", பிறப்பு: சனவரி 8 1902, இறப்பு: ஏப்ரல் 17 1946) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 504 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1935 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஆலன் இக்லிஸ்டன் அலன் இக்லிஸ்டன் ("Alan Igglesden", பிறப்பு: அக்டோபர் 8 1964) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். ஜாக் ஐகின் ஜாக் ஐகின் ("Jack Ikin", பிறப்பு: மார்ச்சு 7 1918, இறப்பு: செப்டம்பர் 15 1984) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 365 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1946 - 1955 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ரே இல்லிங்வர்த் ரே இலிங்வர்த் ("Ray Illingworth", பிறப்பு: சூன் 8 1932, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். ரிச்சர்ட் இல்லிங்வர்த் ரிச்சர்ட் இலிங்வர்த் ("Richard Illingworth", பிறப்பு: ஆகத்து 23 1963 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 9தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 326 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 381 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1991 - 1995 ஆண்டுகளில் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். இசாஅத் (சிற்றிதழ்) இசாத் இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1910ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். 'இசாஅத்' என்றால் 'பிரசாரம்' என்று பொருள்படும் இவ்விதழில் இசுலாமிய மார்க்கப் பிரசாரத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் ஆக்கங்கள் இடம்பெற்றன. கட்டுரைகள், குர்ஆன், ஹதீஸ்கள் என்பனவும் காணப்பட்டன. இசுலாமிய அடிப்படைப் பிரச்சினைகள் மற்றும் 20ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் வாழ்ந்த தமிழ் பேசும் முஸ்லிம்களிடத்தே இசுலாத்தைப் பற்றி எளிய முறையில் விளக்குவதற்கு இவ்விதழ் பாடுபட்டுள்ளது. ஈத் மலர் (ஆண்டு மலர்) ஈத் மலர் ஆண்டுதோறும் ஈத்பெருநாளில் இந்தியா, நெல்லையிலிருந்து வெளிவந்த இதழாகும். இதன் முதல் இதழ் 1960ம் ஆண்டில் வெளிவந்தது. ஈத் என்பது இசுலாமியர்களின் பெருநாளைக் குறிக்கும். இசுலாமியர்கள் நோன்புப் பெருநாளையும் ஹஜ்ஜுப் பெருநாளையும் முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவார்கள். இந்தப் பெருநாளைக் கொண்டாடப்படக் காரணம் பெருநாள்களின் முக்கியத்துவம் பெருநாள் தினங்களின்போது இசுலாமியர்கள் நடந்து கொள்ளக்கூடிய வழிமுறைகள் போன்ற பல்வேறு அம்சங்கள் கட்டுரைகளாக இடம்பெற்றிருந்தன. மற்றும் இலக்கிய ரீதியாக சிறுகதைகள், கவிதைகளையும் கொண்டிருந்தது. உங்கள் தூதுவன் (சிற்றிதழ்) உங்கள் தூதுவன் நாகர்கோவிலிலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் இசுலாமிய சமய சம்பந்தப்பட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. உண்மை குரல் (சிற்றிதழ்) உண்மை குரல் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதுவொரு இசுலாமிய இதழ் என்றடிப்படையில் இசுலாமிய அடிப்படைக் கருத்துகளையும், தொழுகை, நோன்பு, சகாத் போன்ற இசுலாமிய கடமைகளை விளக்கும் ஆக்கங்களைக் கொண்ட கட்டுரைகளையும் கொண்டிருந்தன. மேலும், சன்மார்க்க வினாவிடை, இசுலாமிய பிரச்சினைகளுக்கான விளக்கங்கள் என்பனவும் காணப்பட்டன. உதய சூரியன் (1936 சிற்றிதழ்) உதய சூரியன் பர்மாவிலிருந்து 1936ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். உதய சூரியன் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில இதழ்கள் வெளிவந்துள்ளன. 1936ம் ஆண்டு காலகட்டங்களில் பர்மிய சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், பர்மிய சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. உதய சூரியன் (1943 சிற்றிதழ்) உதய சூரியன் சிங்கப்பூரிலிருந்து 1943ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். உதய சூரியன் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில இதழ்கள் வெளிவந்துள்ளன. 1943ம் ஆண்டு காலகட்டங்களில் சிங்கப்பூர் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு இசுலாமிய கருத்துக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், சிங்கப்பூர் சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. அத்துடன், கேள்வி பதில், வாசகர் பகுதி போன்றனவும் இடம்பெற்றன. உதய சூரியன் (1959 சிற்றிதழ்) உதய சூரியன் சிங்கப்பூரிலிருந்து 1959ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். உதய சூரியன் எனும் பெயரில் இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில இதழ்கள் வெளிவந்துள்ளன. இவ்விதழில் கதை, கவிதை, கட்டுரைகள் சிங்கப்பூர் சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருந்தன. குறிப்பாக இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களுக்கான விளக்கக் கட்டுரைகளையும், சிங்கப்பூர் சமூகப் பிரச்சினை தொடர்பான கட்டுரைகளையும் இது கொண்டிருந்தது. அத்துடன், கேள்வி பதில், வாசகர் பகுதி போன்றனவும் இடம்பெற்றன. உதய தாரகை (சிற்றிதழ்) உதய தாரகை இலங்கை கொழும்பிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும். இலங்கை இதழியல் வரலாற்றில் உதய தாரகை ஒரு முக்கியமான இதழாகக் கொள்ளப்படுகின்றது. உதய தாரகை எழுத்தாளர்கள் பிற்காலத்தில் இலங்கை இசுலாமிய இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை வழங்கியுள்ளனர். கதைகள், கட்டுரைகள், கவிதைகள், திறனாய்வுகள், விமர்சனங்கள், விகடத் துணுக்குகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. உதயம் (1953 சிற்றிதழ்) உதயம் இந்தியா, மயிலாடுதுறையிலிருந்து 1953ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். உதயம் எனும் பெயரிலும் பல இசுலாமிய சிற்றிதழ்கள் அவ்வப்போது வெளிவந்துள்ளன. இவ்விதழில் செய்திகள், செய்திக் கட்டுரைகள், கதை, கவிதை, துணுக்குகள் என்பன இடம்பெற்றிருந்தன. மார்க் இலொட் மார்க் இலொட் ("Mark Ilott", பிறப்பு: ஆகத்து 27 1970, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 192 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 - 1995 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டக் இன்சோல் டக் இன்சோல் ("Doug Insole", பிறப்பு: ஏப்ரல் 18 1926, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 450 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 - 1957 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ரோன்னி இரானி ரோன்னி இரானி ("Ronnie Irani", பிறப்பு: அக்டோபர் 26 1971), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 232 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 315 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 1996 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். ரொபின் ஜாக்மன் ரொபின் ஜக்மன் ("Robin Jackman", பிறப்பு: ஆகத்து 13 1945), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 15 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1983 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜெகன் மோகன் ரெட்டி எடுங்குரி சன்டிந்தி ஜெகன் மோகன் ரெட்டி (தெலுங்கு: యెడుగూరి సందిటి జగన్మోహన రెడ్డి)(பிறப்பு திசம்பர் 21, 1972), அல்லது ஜெகன் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய அரசியல்வாதியும் கடப்பா தொகுதி மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். இவர் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் ராஜசேகர ரெட்டியின் மகனாவார். தனது தந்தையின் மறைவுக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் என்னும் கட்சியை 2010ல் தொடங்கினார். பின்னர் 2011 இடைத்தேர்தலில் கடப்பா மக்களவைத் தொகுதியில் 5,45,671 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தெலுங்கு தேச வேட்பாளர்களைத் தோற்கடித்தார். தற்போது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். லெஸ் ஜாக்சன் லெஸ் ஜக்சன் ("Les Jackson", பிறப்பு: ஏப்ரல் 5 1921, இறப்பு: ஏப்ரல் 25 2007) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 418 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1949 - 1961 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை பார்வையாளர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை பார்வையாளர்கள் தற்போதைய ஐக்கிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ள 192 நாடுகளைத் தவிர்த்து வரவேற்கப்படும் பன்னாட்டு அமைப்புகளும் உறுப்பினரல்லா நாடுகளும் ஆவர். பார்வையாளர் தகுதியை ஐ.நா பொதுச்சபை தனது தீர்மானம் மூலமாக வழங்கும். நிரந்தர பார்வையாளருக்கான தகுதி குறித்து ஐ.நா பட்டயத்தில் குறிப்பிடப்படாவிடினும் வழமையை ஒட்டியே கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டங்களில் பேசவும் செய்முறை தொடர்பான வாக்கெடுப்புகளில் கலந்துகொள்ளவும் தீர்மானங்களை கொணரவும் கையொப்பமிடவும் உரிமை கொண்டவர்கள்; ஆயினும் தனது தீர்மானங்களில் மற்றும் நிலையான கருத்துகளிலும் வாக்களிக்க இயலாது. மேலும் சில உரிமைகள் (காட்டாக, விவாதங்களில் பங்கேற்பு, வரைவுகளையும் திருத்தங்களையும் கொணர்தல், பதிலளித்தல், ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்புதல், ஆவணங்களை சுற்றுக்கு விடல் போன்றவை) சில தேர்ந்த உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகின்றன. இதுவரை, ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமே இத்தகைய கூடுதல் உரிமைகளைக் கொண்டுள்ளது. நாட்டுப் பார்வையாளர்களுக்கும் நாடில்லா பார்வையாளர்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன. உறுப்பினரல்லா நாடுகள் ஒன்று அதற்கு மேற்பட்ட ஐ.நா சிறப்பு முகமைகளில் பங்கு பெற்றிருந்தால் நிரந்தர பார்வையாளராவதற்கு விண்ணப்பிக்க இயலும். நாடில்லா பார்வையாளர்கள் பன்னாட்டு அமைப்புகளும் இன்ன பிறவுமாகும். உறுப்பினரல்லா பார்வையாளர்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அரங்கத்தில் உறுப்பினர் நாடுகளுக்கு அடுத்தும் பிற பார்வையாளர்களுக்கு முன்பும் அமர்த்தப்படுவர். ஐ.நா. அவையின் ஒழுங்குகளின்படி, உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகள் ("Non-member observer states") இறையாண்மை கொண்ட நாடுகளாக ஏற்கப்படுகின்றன. அவை, தமது சொந்த முடிவுக்கு ஏற்ப, உரிய காலத்தில் ஐ.நா. உறுப்பினர் நிலை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் உரிமை பெறுகின்றன. எடுத்துக்காட்டாக, சுவிட்சர்லாந்து நாடு 1948இலிருந்து 2002 வரை "பார்வையாளர்" நிலை கொண்டிருந்தது. 2002, செப்டம்பர் 10ஆம் நாள் முழுநிலை உறுப்பினராக ஏற்கப்பட்டது. தற்சமயம் உறுப்பினர் நிலை இல்லா, பார்வையாளர் நாடுகளாக இரு நாடுகளே உள்ளன. அவை வத்திக்கான் நகர் மற்றும் பாலத்தீன நாடு ஆகும். வத்திக்கான் நாடு, "உறுப்பினர் நிலை இல்லா பார்வையாளர் நாடாக உள்ளது. ஐ.நா. பொது அவையின் அமர்வுகளிலும் செயல்பாடுகளிலும் பார்வையாளராகக் கலந்துகொள்ள நிலையான அழைப்புப் பெற்றுள்ளது. ஐ.நா. தலைமையகத்தில் நிலையான பார்வையாளர் தூதரகம் நிறுவிச் செயல்பட உரிமை கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) ஐக்கிய நாடுகள் முறைமையின் ஆறு முதன்மை உறுப்புகளில் ஒன்றாகும். ஐநாவின் 14 சிறப்பு முகமைகள், செயலாக்க ஆணயங்கள் மற்றும் அதன் ஐந்து மண்டல அணையங்களின் பொருளாதார சமூக மற்றும் தொடர்பான விதயங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்புடைய அமைப்பாகும். இந்த சபையில் 54 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை. சூலையில், நான்கு வாரங்கள் கூடுகிறது. உலக பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளை விவாதித்து உறுப்பு நாடுகளுக்கும் ஐநா அமைப்பிலுள்ள முகமைகளுக்கும் ஓர் செயலாக்கத் திட்டத்தை வகுப்பது இதன் நோக்கமாகும். 1998 முதல் ஏப்ரல் மாதத்தில் உலக வங்கி மற்றும் ஐஎம்எஃப் .முக்கியக் குழுக்களின் தலைமையேற்கும் நிதி அமைச்சர்கள் இங்கு கூடுகிறார்கள். பாரி வான் தாக்குதல் பாரி வான் தாக்குதல் ("Air Raid on Bari") என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு பெரும் வான்படைத் தாக்குதல். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் ஜெர்மானிய வான்படை லுஃப்ட்வாஃபே நேச நாட்டுக் கட்டுப்பாட்டிலிருந்த இத்தாலி நாட்டு பாரி துறைமுகத்தைத் தாக்கி பெரும் சேதம் விளைவித்தன. செப்டம்பர் 1943ல் அச்சு நாடுகளில் ஒன்றான் இத்தாலி மீது நேச நாடுகள் படையெடுத்தன. அடுத்த சில மாதங்களில் தெற்கு மற்றும் மத்திய இத்தாலியின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றின. இத்தாலியில் போரிட்டு வந்த நேச நாட்டுப் படைகளுக்குத் தேவையான தளவாட இறக்குமதி கடல்வழியாக நடைபெற்று வந்தது. அதற்கு பயன்பட்ட துறைமுகங்களுள் பாரியும் ஒன்று. இத்தாலி போர்முனைக்கான ஜெர்மானியத் தலைமைத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் பாரி துறைமுகத்தைத் தாக்க தன் வான்படைகளுக்கு உத்தரவிட்டார். தளவாட வழங்கலுக்குத் தடை ஏற்படுத்துவதன் மூலம் நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தத் திட்டமிட்டார். டிசம்பர் 3, 1943 அன்று இரவு 7.25 மணியளவில் லுஃப்ட்வாஃபேயின் 105 யங்கர்சு யு-88 ரக குண்டுவீசிகள் பாரி துறைமுகத்தைத் தாக்கின. லுஃப்ட்வாஃபே பெரும்பாலும் அழிக்கப்பட்டுவிட்டது என்ற நம்பிக்கையில் நேச நாட்டு வான்படைகள் பாரி துறைமுகத்தில் பலமான வான்பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யத் தவறிவிட்டன. இது ஜெர்மானியர்களுக்கு சாதகமாக அமைந்தது. குண்டுவீச்சால் துறைமுகத்தில் நின்றிருந்த 17 சரக்குக் கப்பல்கள் அடியோடு நாசமாகின. எரிபொருள் கிடங்குகளும், துப்பாக்கி, பீரங்கி குண்டுகளை ஏற்றி வந்த சரக்குக் கப்பல்களும் வெடித்து சிதறியதால், பாரி துறைமுகத்துக்கு பெரும் சேதம் ஏற்பட்டது. துறைமுகத்தில் எரிபொருள் பரவி பெருந்தீ உருவானது. மேலும் அமெரிக்க சரக்குக் கப்பல் "ஜான் ஹார்வே"யில் வைக்கப்பட்டிருந்த கடுகுப் புகை கசியத் தொடங்கியது. இந்த நச்சுப் புகைத் தாக்குதலால் பல நேச நாட்டு வீரர்களும் மாலுமிகளும் உயிரிழந்தனர். மொத்தம் 1000 படைவீரர்களும் 1,000 பாரி நகர மக்களும் இத்தாக்குதலில் கொல்லபப்ட்டனர். ஜெர்மானியத் தரப்பில் ஒரே ஒரு வானூர்தி மட்டும் அழிந்தது. இத்தாக்குதலால் பாரி துறைமுகம் சில மாதங்களுக்கு செயலற்றுப் போனது. செப்பனிடுதலுக்குப் பின் பெப்ரவரி 1944ல் மீண்டும் சரக்குப் போக்குவரத்து துவங்கியது. தங்கள் கப்பல்களில் நச்சுப் புகை வைக்கப்பட்டிருருந்தது வெளியுலகுக்குக் தெரியக் கூடாது என்று முடிவு செய்த நேச நாட்டுத் தலைவர்கள் அச்செய்தியை முழுமையாக மறைத்து விட்டனர். இரண்டாம் உலகப் போர் முடிந்து பல ஆண்டுகளுக்குப் பின்னரே பிரித்தானிய அரசு நச்சுப் புகை இருந்ததை ஒப்புக் கொண்டது. போரில் நாசி வதை முகாம்களைத் தவிர்த்து நச்சுப் புகையால் மரணங்கள் ஏற்பட்ட நிகழ்வு பாரி வான் தாக்குதல் மட்டுமே. ஈரெழுத்தொருமொழி தமிழில் உள்ள தனிச்சொல்லை மொழி என்னும் சொல்லால் குறிப்பிடுவது தொல்காப்பியர் காலம் முதல் இருந்துவரும் வழக்கமாகும். இந்த மொழி ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டு மாத்திரை ஓசையைக் கடந்த ஒலி கொண்ட 'பொதுமொழி' என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது. தமிழில் உள்ள சொற்களைத் தொல்காப்பியம் ஐந்து கோணங்களில் பார்க்கிறது. ஒலிப்புக்கோணப் பாகுபாடு புணர்ச்சியில் பெரிதும் பயன்படுகிறது. ஓரெழுத்தொருமொழி ஈரெழுத்தொருமொழி இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி இப்படிப் புணர்ச்சியில் நிலைமொழியின் மாத்திரை நோக்கிய பாகுபாடும் பங்கு வகிக்கிறது. எனவே தமிழுக்கு இந்தப் பாகுபாடு இன்றியமையாதது. இவரது இந்தப் பாகுபாடுகள் செய்யுள் அசை நோக்கியவை. மொழிமரபு நோக்கியவை அல்ல. அறுகம் குடா அறுகம் குடா ("Arugam Bay") இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவிலில் அமைந்துள்ள ஒரு கடற்கரைப் பிரதேசம். இங்கு அதிக வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். அறுகம் குடாவில் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு தேவையான சூழ்நிலை காணப்படுவதனால் அதிக சுற்றுலாப் பயணிகளின் மிக விருப்பத்திற்குரிய இடமாக காணப்படுகின்றது. அறுகம் குடா கொழும்பிலிருந்து 317 கிமீ தொலைவில் உள்ளது. அறுகம் குடாக் கடற்கரையை ஆசியாவின் சிறந்த 10 சுற்றுலா தலங்களில் ஒன்றாக பயண வழிகாட்டி நூலான "த லோன்லி பிளானட்" அறிவித்துள்ளது. அலைச்சறுக்கு விளையாட்டுச் சாகசங்கள் நிகழ்த்துவதற்குச் சாதகமான அலைகள் அறுகம் குடாக் கடலில் எழுகின்றன. அறுகம் குடா மற்றும் அதனைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அலைச்சறுக்கு விளையாடுவதற்கு 10 இடங்கள் உள்ளன. ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் இங்கு அலைச்சறுக்கு விளையாட்டு செய்ய ஏற்றதாக உள்ளது அறுகம் குடா கடலில் ஆண்டுதோறும் பன்னாட்டு அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் நடக்கிறது. அலைச்சறுக்கிற்கு தேவையான படகுகளை வாடகைக்குக் கொடுப்பது இங்குள்ள உள்ளூர் மக்களின் ஒரு தொழிலாகவே உள்ளது. சி.என்.என் தொலைக்காட்சி 2013இல் வெளியிட்ட அலைச்சறுக்கு விளையாட்டிற்கு உலகின் சிறந்த 50 இடங்களில் ஒன்றாக அறுகம் குடா இடம் பெற்றிருந்தது. ஐக்கிய நாடுகள் செயலகம் திருமங்கலம் சூத்திரம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலின் போது பணப்பட்டுவாடா மூலம் திமுக வெற்றியடைந்ததாகக் கூறப்படும் நிகழ்வின் தொடர்ச்சியாகத் தேர்தலில் பணம் வழங்கி வெற்றி பெறும் முறைக்குத் திருமங்கலம் ஃபார்முலா (திருமங்கலம் சூத்திரம்) என்ற பெயர் உருவானது. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீர இளவரசன் (ம.தி.மு.க) இறந்ததையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கமும் திமுகவின் சார்பில் லதா அதியமானும் (காலஞ்சென்ற மு. சி. சோ. அதியமானின் மனைவி) போட்டியிட்டனர். இந்த தேர்தலில் அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதியின் மகன் மு. க. அழகிரி தலைமையில் கட்சி தொண்டர்கள் பணியாற்றி லதா அதியமானை வெற்றி அடையச் செய்தனர். இந்த இடைத் தேர்தலின் போது திருமங்கலம் தொகுதியில் பணம் மற்றும் பரிசு பொருட்களை வாக்காளர்களுக்கு கொடுத்து வெற்றிபெற்றதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. இருப்பினும் தகுந்த சான்றுகள் இல்லாமையால் எந்த குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை; தேர்தல் ஆணையமும் இத்தேர்தலை ரத்து செய்யவில்லை. அதன் பின் வந்த இடைதேர்தல்களிலும் 2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் இதே போன்று பணபட்டுவாடா நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. காலபோக்கில் இவ்வாறாக வாக்களர்களுக்கு பணம் வழங்கி வாக்கு பெறும் முறைக்கு திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் உருவானது. ஆயிரம் ரூபாயில் இருந்து ஐந்தாயிரம் ரூபாய் வரை வழங்கப்பட்டது என்று அப்போதைய ஆளும் கட்சியான திமுகவின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் (Universal Postal Union) என்பது ஒரு பன்னாட்டு அமைப்பு. இது உறுப்பு நாடுகளிடையே அஞ்சல் கொள்கைகளையும், உலகளாவிய அஞ்சல் முறைமைகளையும் ஒருங்கிணைப்பதில் ஈடுபடுகின்றது. அனைத்துலக அஞ்சல் ஒன்றியம், பேரவை, நிர்வாக அவை, அஞ்சல் செயற்பாட்டு அவை, பன்னாட்டுப் பணியகம் என்னும் நான்கு அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. இதன் உறுப்பு நாடுகள் ஒவ்வொன்றும் பன்னாட்டு அஞ்சல் பணிகளை ஒரே வரையறைகளுக்கு உட்பட்டுச் செய்வதற்கு ஒத்துக்கொண்டு உள்ளன. அனைத்துலக அஞ்சல் ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் சுவிட்சர்லாந்தின் பேர்ண் நகரில் அமைந்துள்ளது. இந்த ஒன்றியத்தின் பணியக மொழி பிரெஞ்சு ஆகும். 1994 ஆம் ஆண்டில் ஆங்கிலமும் வேலைகளைச் செய்வதற்கான ஒரு மொழியாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் தொடங்குவதற்கு முன்னர், ஒவ்வொரு நாடும், அது அஞ்சல் சேவைகளை நடத்த விரும்பும் ஒவ்வொரு பிற நாட்டுடனும் தனித்தனியான அஞ்சல் ஒப்பந்தங்களைச் செய்துகொள்ள வேண்டியிருந்தது. இதனை எளிமையாக்கும் நோக்கில் 1863 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்கா ஒரு பன்னாட்டு அஞ்சல் மாநாட்டைக் கூட்டியது. இதைத் தொடர்ந்து, 1874 ஆம் ஆண்டில், முன்னர் பிரசியாவினதும், பின்னர் செருமனியினதும் அஞ்சல் அமைச்சராக இருந்த ஈன்றிக் வொன் இசுட்டீபன் (Heinrich von Stephan) என்பவர் பொது அஞ்சல் ஒன்றியம் என்னும் பெயரில் ஒரு அமைப்பை நிறுவினார். இது 1874 அக்டோபர் 9 ஆம் தேதி கைச்சாத்தான பேர்ண் ஒப்பந்தத்தின் விளைவாக உருவானது. ரைனில் கப்பலோட்டுவதற்கான மைய ஆணையம், பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் என்பவற்றுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பழைமையான பன்னாட்டு அமைப்பு இதுவே. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஒன்றியத்தின் பெயர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் என மாற்றப்பட்டது. முன்னர் அஞ்சல்கள் ஒவ்வொரு நாடுகளினூடாகவும் செல்லும்போது அந்த நாடுகளின் அஞ்சல்தலைகள் ஒட்டப்படவேண்டும். அனைத்துலக அஞ்சல் ஒன்றிய ஒப்பந்தம் ஏற்பட்ட பின்னர் உறுப்பு நாடொன்றின் அஞ்சல் தலை ஏனைய உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனால் அஞ்சல்கள் பயணம் செய்யும் முழுத் தூரமும், அது அஞ்சலில் இடப்பட்ட நாட்டு அஞ்சல்தலையுடன் எடுத்துச்செல்ல வழியேற்பட்டது. இது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான விளைவுகளில் ஒன்றாகும். 1945 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவை அமைக்கப்பட்ட பின்னர் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் அதன் சிறப்பு முகமை நிறுவனமாக ஆனது. 1969 ஆம் ஆண்டில் அனைத்துலக அஞ்சல் ஒன்றியம் புதிய கட்டண முறை ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதன்படி, இரண்டு நாடுகளுக்கு இடையிலான அஞ்சல் போக்குவரத்தின் மொத்த நிறைகளுக்கு இடையிலான வேறுபாட்டுக்கு அமையக் கட்டணம் செலுத்த வேண்டும். அஞ்சல் போக்குவரத்து ஒரு திசையில் மறு திசையைவிட அதிகமாக இருக்கும் நிலையில் இம்முறை நியாயமானதாக அமைந்தது. இந்த முறையினால், சஞ்சிகைகள் போன்றவற்றை அனுப்புவதற்கான கட்டணம் அதிகரித்தது. இந்த நிலையைச் சீர் செய்யும் முகமாக 1991 ஆம் ஆண்டில் புதிய முறை ஒன்று அறிமுகமானது. இதன்படி, ஆண்டொன்றுக்கு 150 தொன்களுக்கு மேற்பட்ட அஞ்சல்களைப் பெறும் நாடுகளுக்கு கடிதங்களுக்கும், சஞ்சிகைகளுக்கும் தனித்தனியான கட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன. ஏ. கே. கருணாகரன் ஏ. கே. கருணாகரன் (பிறப்பு: 1945) இலங்கையின் பிரபலமான ஒரு கருநாடக இசைக் கலைஞர். யாழ்ப்பாண மாவட்டம் வடமராட்சியில் கரவெட்டியில் பிறந்த கருணாகரன் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்றபொழுதே 6 ஆம் வகுப்பில் கருநாடக இசையில் பயிற்சி பெற ஆரம்பித்தார். 1961 இல் யாழ்ப்பாணம் இராமநாதன் இசைக்கல்லூரி சேர்ந்து பயிற்சி பெற்று சங்கீதரத்தினம் எனும் பட்டம் பெற்றார். அப்பொழுது, பிரபல இசை மேதை மகாராஜபுரம் சந்தானம் அக்கல்லூரியின் அதிபராகக் கடமை புரிந்தார். கருணாகரன், அதன் பின்னர் சென்னை அரசு இசைக் கல்லூரியில் மூன்று ஆண்டுகள் கற்று, சங்கீத வித்துவான், மற்றும் இசை கற்பிப்பதில் டிப்புளோமா பட்டமும் பெற்றார். சென்னையிலும் மகாராஜபுரம் சந்தானத்துடன் கச்சேரிகளில் பாடுவதற்கும் அவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. 1969 இல் இலங்கை வானொலியில் இசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணியாற்றினார். சிறிது காலத்தின் பின் அவர் அங்கு தமிழ் சேவையின் வாத்தியக் குழுவின் தலைவராகப் பணி உயர்வு பெற்றார். இராமநாதன் இசைக்கல்லூரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டபோது, 1979ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் போதனாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1989ஆம் ஆண்டில் சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகத்தில் இசை ஆசிரியராகப் பதவி பெற்றார். அங்கு கருணாகரன் 11 ஆண்டுகள் வரை பணியாற்றி, பல இசை அரங்கேற்றங்களை நடாத்தி கச்சேரி செய்யக்கூடிய பல மாணவர்களை உருவாக்கியபின் 2002ஆம் ஆண்டு இலங்கை திரும்பினார். பின்னர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரியில் இசை விரிவுரையாளராக நான்கு ஆண்டுகள் பணி புரிந்தார். தற்பொழுது மீண்டும் யாழ். பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் 2011 முதல் இசை விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகின்றார். கருணாகரன் கர்நாடக இசையையும் பல இளம் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகவும் ஆலாபனா எனும் சங்கீத சபாவை கடந்த 10 ஆண்டு காலமாக கொழும்பில் நடாத்தி வருகின்றார். இவர் எழுதிய "சங்கீதானுபவம்" என்ற நூல் 2011 சூன் மாதத்தில் கொழும்பில் வெளியிடப்பட்டது. ஸ்டான்லி ஜாக்சன் ஸ்டான்லி ஜாக்சன் ("Stanley Jackson", பிறப்பு: நவம்பர் 21 1870, இறப்பு: மார்ச்சு 9 1947) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 20 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 309 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1905 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஸ்டீவ் ஜேம்ஸ் ஸ்டீவ் ஜேம்ஸ் ("Steve James )", பிறப்பு: செப்டம்பர் 7 1967, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 365 முதல்தர துடுப்பாட்டப்போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1998 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். ஜான் ஜேம்சன் ஜான் ஜேம்சன் ("John Jameson", ஜோன் ஜேம்சன் பிறப்பு: சூன் 30 1941, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1970 - 1975 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். டக்ளஸ் ஜார்டீன் டக்ளஸ் ஜார்டீன் ("Douglas Jardine"), பிறப்பு: அக்டோபர் 23 1900, இறப்பு: சூன் 18 1958) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 262 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 - 1934 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார். இங்கிலாந்து தேசிய அணியின் தலைவராக 1931 - 1933/34 ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார். ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் ஐக்கிய நாடுகள் சபையின் முதன்மை அங்கங்களில் ஒன்றான ஐநா செயலகத்தை தலைமையேற்று நடத்துபவராகும். ஐக்கிய நாடுகளின் நடைமுறைத் தலைவராகவும் வெளித்தொடர்பாளராகவும் விளங்குகிறார். தற்போதைய பொதுச் செயலாளராக தென் கொரியாவின் பான் கி மூன் சனவரி 1, 2007 முதல் இருந்து வருகிறார். இவரது முதல் பதவிக்காலம் திசம்பர் 31, 2011 அன்று முடிகிறது. அடுத்த பதவிக் காலத்திற்கும் தொடர இவருக்கு தகுதியுள்ளது. ஐக்கிய அமெரிக்க குடியரசுத் தலைவர் பிராங்கிளின் ரோசவெல்ட் ஐநா பொதுச்செயலாளரைக் குறித்துக் கொண்டிருந்த கருத்தில் அவர் ஒரு "உலக நெறியாளராக" இருக்க வேண்டும் என விரும்பினார்; இருப்பினும் ஐக்கிய நாடுகள் பட்டயம் பொதுச் செயலாளரை நிறுவனத்தின் "முதன்மை நிர்வாக அதிகாரியாகவே" ( பிரிவு 97) வரையறுத்துள்ளது. எனினும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட வரையறை இப்பதவி வகித்தவர்களுக்கு உலகப் பிரச்சினைகளில் தங்கள் கருத்துக்களை வெளியிடவோ தீர்வுகளில் முதன்மையான பங்காற்றவோ தடையாக இருக்கவில்லை. ஐநா பொதுச்செயலாளருக்கு ஐக்கிய அமெரிக்காவில் நியூ யார்க் நகரின் மன்ஹாட்டன் பகுதியில் உள்ள சட்டனில் ஐந்து தள வீடு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நகர வீட்டை 1921ஆம் ஆண்டு ஆன் மோர்கனுக்காக கட்டப்பட்டது; 1972ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளுக்காக நன்கொடையாக அளிக்கப் பட்டது. 1953ஆம் ஆண்டிலிருந்து 1961ஆம் ஆண்டில் அவரது மறைவு வரை டாக் ஹமாஷெல்ட் மிகவும் துடிப்பான ஐநா பொதுச் செயலாளராக விளங்கினார். சூயஸ் கால்வாய் பிரச்சினையின்போதும் 1960 ஆண்டில் சோவியத் ஒன்றியத்தால் அமெரிக்க ஒற்றுப்படை விமானம் பிடிக்கப்பட்ட நிகழ்வின்போதும் நெறியாளராகப் பங்காற்றினார். கனடிய வெளியுறவு அமைச்சர் லெஸ்டர் பி. பியர்சன் முன்மொழிந்தபடி முதல் ஐநா அமைதிகாப்புப் படையினையும் நிறுவினார். பொதுச் செயலாளர்களுக்கு பதவிக்காலம் ஐந்தாண்டு காலமாக இருப்பினும் இது காலவரையின்றி நீடிக்கப்படலாம். இருப்பினும் எந்தவொரு பொதுச்செயலரும் இருமுறைக்கு மேலாக பதவியில் நீடித்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் பட்டயம் பொதுச் செயலாளரைபொதுச் சபையால் பாதுகாப்பு அவையின் பரிந்துரைப்படி நியமிக்கப்பட வேண்டும் என வரையறுத்துள்ளது. இதனால் இத்தேர்வு பாதுகாப்பு அவையின் எந்தவொரு ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வெட்டுரிமைக்கு உட்பட்டது. ஐநா பட்டயத்தின் சுருக்கமான இந்தத் தேர்வுமுறை நடைமுறையில் பிற செய்முறை விதிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழக்கங்களாலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் பொதுச்செயலாளர் பாதுகாப்பு அவையின் நிரந்தர உறுப்பினர் நாட்டினராக இருக்க முடியாது; ஏற்றுக்கொள்ளப்பட்ட வழமையாக அடுத்தடுத்த செயலர்கள் தேர்வுக்கு மண்டல ( கண்டவாரியான) சுழல்முறை கடைபிடிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பேசும் திறமையும் அலுவல்முறைசாரா தகுதியாக கருதப்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் கூடுதல் எண்ணிக்கையாலும் ஒருநாட்டிற்கு ஒரு வாக்கு என்ற முறைமையாலும் பொதுச்செயலாளர்களாக மேற்கு நாடுகளுக்கு சாதகமானவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதனால் 1960களில் சோவியத் அதிபர் நிக்கிட்டா குருசேவ் இந்தப் பதவியை அழித்திட முயன்றார். இதற்கு மாற்றாக மூவர் அடங்கிய தலைமை அவையை பரிந்துரைத்தார்;ஒருவர் மேற்கு நாடுகளிலிருந்தும் ஒருவர் இடதுசாரி கிழக்கு நாடுகளிலிருந்தும் ஏனையவர் கூட்டு சேரா நாடுகளிலிருந்தும் தேர்வு செய்யப்படலாம். சோவியத்துகளின் இந்த தீர்மானத்தை நடுநிலை நாடுகள் ஆதரிக்க தவறியதால் இது நிறைவேற்றப்படவில்லை. உத்தம மித்திரன் (இதழ்) உத்தம மித்திரன் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1949ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். இவ்விதழில் இசுலாமிய செய்திகளுக்கும், இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வளர்க்கக்கூடிய செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன. மேலும், கதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன. உமர் கய்யாம் (சிற்றிதழ்) உமர் கய்யாம் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும். இதுவொரு திரைப்பட இதழாகக் காணப்பட்டாலும்கூட, இசுலாமியச் செய்திகளையும் இவ்விதழ் உள்வாங்கியிருந்தது. உம்மத் (இலங்கை சிற்றிதழ்) உம்மத் இலங்கை, கொழும்பிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். உம்மத் என்ற பெயரில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இடைக்கிடையே சில சிற்றிதழ்கள் வெளிவந்துள்ளன. 'உம்மத்' என்ற அரபுப் பதம் 'சமுதாயம்' என்ற பொருளைக் கொண்டது. இவ்விதழில் இசுலாமிய சமுதாயம் பற்றியதும், இசுலாமியர்களின் வாழ்க்கை முறைகள் பற்றியும் பல்வேறு ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. உம்மத் (இந்திய சிற்றிதழ்) உம்மத் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும். இவர் சென்னை ஜமாலிய்யா அரபுக் கல்லூரிப் பேராசிரியராவார். இஸ்லாமிய இலக்கிய மாத இதழ் கட்டுரைகள், கவிதைகள், கதைகள் ஆகியன இடம்பெற்றிருந்தன இசுலாமிய அடிப்படையில் அமைந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கும், கொள்கை விளக்க கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. உரிமைக் குரல் (இதழ்) உரிமைக் குரல் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1961ம் ஆண்டில் ஓர் வார இதழாகவும் இடைக்கிடையே மாதமிரு முறை இதழாகவும் வெளிவந்துள்ளது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் அதிகாரப் பூர்வ ஏடு இது ஒரு அமைப்பின் உத்தியோகபூர்வ இதழாகக் காணப்பட்டமையினால் இயக்க செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய அரசியல் பற்றி முஸ்லிம்களின் அரசியல் பற்றியும் பல்வேறு கட்டுரைகளை கொண்டிருந்தது. மேலும், முஸ்லிமகள் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளும் இடம்பெற்றிருந்தன. உலக நேசன் (இதழ்) உலக நேசன் மலேசியா, பினாங்குவிலிருந்து 1883ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். 'பிஸ்மில்லாஹி' என்ற வாழ்த்துடன் கூடிய வசனத்துடன் ஆரம்பிக்கின்றது. இசுலாமியர்கள் ஒரு விடயத்தை ஆரம்பிக்கும்போது 'பிஸ்மில்லாஹி' என்றே ஆரம்பிப்பர். இதன் கருத்து 'இறைவன் பெயரால் துவங்குகின்றேன்' என்பதாம். மலேசியா, இந்தியா செய்திகளுக்கும் உலக செய்திகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. மேலும், கட்டுரைகள், கவிதைகள், கதைகள் என்பனவும் இடம்பெற்றிருந்தன. உண்மை ஒளி (சிற்றிதழ்) உண்மை ஒளி இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஓர் மாத இதழாகும். இசுலாமிய கொள்கை பற்றிய விளக்க ஏடாகவும் இது காணப்பட்டது. இசுலாமிய அடிப்படைகளான நம்பிக்கை, தொழுகை, சகாத் எனும் ஏழை வரி, நோன்பு எனும் விரதம், ஹஜ் ஆகிய கடமைகள் பற்றி தெளிவான விளக்கத்தினை இது வழங்கத்தக்க வகையில் அமைந்திருந்தது. டொயோட்டா உற்பத்தி முறைமை டொயோடா உற்பத்தி முறைமை ("Toyota Production System") என்பது டொயோடா மோட்டார் கூட்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட முறைமையாகும். இம்முறைமை நிறுவனர் சகிச்ஹி டொயோடா, அவரது புதல்வர் கிசிரோ டொயொடா மற்றும் அந்நிறுவனத்தின் பொறியாளர் டாயிசி ஒஹ்னோ என்பவர்களால் கூட்டாக உருவக்கபட்டதாகும். இம்முறைமை இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் உருவாக்கப்பட்டாலும், 1973ல் ஏற்பட்ட எரிபொருள் தட்டுபாடின்போதுதான் இதனுடைய முக்கியத்துவம் உணரப்பட்டது. இது டொயோடா நிறுவனத்தின் மேலாண்மை தத்துவம் மற்றும் செயல்முறையினை உள்ளடக்கியதாகும். இதனுடைய முந்தய பெயர் தகுந்த நேர (Just-in-Time) முறைமை என்று அழைக்கப்பட்டது. இம்முறைமையின் முக்கிய நோக்கம் விரயங்களை நீக்குதல், முரண்களை தவிர்த்தல், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்குதல் என்ற மூன்று நோக்கங்களாகும். இத்ததுவம் பின் வரும் 7 வகையான விரயங்களை தெளிவாக விளக்கியுள்ளது. 1. அதிகபடியான உற்பத்தி 2. நகர்வு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய) 3. காத்திருப்பு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குநருடைய) 4. ஊர்வு (செயல்களுக்கு இடையில் பொருள்களின் தேவையற்ற ஊர்வு) 5. அதிகபடியான செயல் முறை 6. இருப்பு (உற்பத்திக்கான மூலப்பொருள் அல்லது உற்பத்தியில் முழுமையடைந்த பொருள்) 7. திருத்தம் (மறு சீர் செய்தல்) எழுச்சிக்குரல் (இலங்கை இதழ்) எழுச்சிக்குரல் இலங்கை கொழும்பிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் இலட்சியக் குரல் எழுச்சிக்குரல் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் பற்றிய பிரச்சினைகளை அலசும் ஓர் இதழாக காணப்பட்டது. இவ்விதழ் வெளிவந்த பின்பு இலங்கை முஸ்லிம் அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். நடுநிலைமையான அரசியல் ஆக்கங்களையும் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் இது கொண்டிருந்தது. எழுச்சிக்குரல் (இந்திய இதழ்) எழுச்சிக்குரல் இந்தியா, மதுரையிலிருந்து 1988ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். எழுச்சிக்குரல் எனும் பெயரில் இந்தியாவிலும், இலங்கையிலும் சில இதழ்கள் அவ்வப்போது வெளிவந்துள்ளதாக அறியமுடிகின்றது. இசுலாமியர்களின் சமூக. சமய அரசியல் நிலை தொடர்பான ஆக்கங்களை கொண்டிருந்தது. எழுத்தாணி (இதழ்) எழுத்தாணி மலேசியாவிலிருந்து 1945ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். 20ம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் மலேசியாவிலிருந்து வெளிவந்த ஒரு இதழான 'எழுத்தாணி'யில் கட்டுரைகள், கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நூலாய்வுகள், கேள்வி பதில் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. எம். ஐ. எம். செய்தி மடல் எம். ஐ. எம். செய்தி மடல் இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இது மாணவர்களுக்கான ஒரு செய்தி மடலாக காணப்பட்டது. இந்திய தமிழ் நாட்டில் மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை இது தாங்கி வெளிவந்தது. ஒளிச்சுடர் (சிற்றிதழ்) ஒளிச்சுடர் இந்தியா, திண்டுக்கல்லிலிருந்து 1963ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். கட்டுரைகள், கவிதைகள், கதைகள், விமர்சனங்கள், ஆய்வுக் கட்டுரைகள், நூலாய்வுகள், கேள்வி பதில், வாசகர் அரங்கம், துணுக்குகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. ஒளிமயம் (சிற்றிதழ்) ஒளிமயம் இந்தியா, மதுரையிலிருந்து 1991ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இந்திய இளைஞர்களைக் கருத்திற் கொண்டு வெளிவந்த ஒரு இதழாகும். இளைஞர்களை நோக்கிய கட்டுரைகள், கவிதைகள், கதைகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. ஒளி விளக்கு (சிற்றிதழ்) ஒளி விளக்கு இந்தியா, திண்டுக்கல்லிலிருந்து 1962ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் ஆசிரிடர் "மௌலவி மக்தூம் சாஹ் பாகவி" ஆவார். இவ்விதழ் இசுலாமிய எழுச்சிக்காக வேண்டி ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதை, கவிதை போன்ற அம்சங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன. கடல் (சிற்றிதழ்) கடல் இலங்கையிலிருந்து 1975ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் ஓர் இலக்கிய இதழாகும். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், விகடத் துணுக்குகள் கேள்வி பதில், வாசகர் வட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. கடலோசை (சிற்றிதழ்) கடலோசை இந்தியா, தமிழ் நாடு, சென்னையிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஓர் வார இதழாகும். இவ்விதழ் இந்திய தமிழ் முஸ்லிம் ஒருவரால் நடத்தப்பட்டதாக அறியமுடிகின்றது. இதில் அரசியல் சார்ந்த ஆக்கங்களும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. கண்மலர் (சிற்றிதழ்) கண்மலர் இந்தியா, திருச்சியிலிருந்து 1970ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இளைஞர்களை கவரக்கூடிய வகையில் பல்வேறுபட்ட ஜனரஞ்சக ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றிருந்தன. கத்தரிக்கோல் (சிற்றிதழ்) கத்தரிக்கோல் இந்தியா, திருச்சியிலிருந்து 1978ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இவ்விதழ் முற்போக்கு சிந்தனைகளை ஏற்படுத்தக்கூடிய ஆக்கங்களையும், விழிப்புணர்வை ஏற்படுத்தக்கூடிய கட்டுரைகளையும் கொண்டிருந்தது. கந்தூரி (சிற்றிதழ்) கந்தூரி இந்தியா, மேட்டுப்பாளையம் எனுமிடத்திலிருந்து 1988ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் இசுலாமிய சமயம் சார்ந்த ஒரு இதழாகக் காணப்பட்டது. இசுலாமிய மரபுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஆக்கங்களை இது கொண்டிருந்தது. கர்ஜனை (சிற்றிதழ்) கர்ஜனை இந்தியா, மதுரையிலிருந்து 1952ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய சமய ஆக்கங்களையும் இசுலாமிய சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கொண்ட ஆக்கங்களையும் இது தன்னகத்தே தாங்கியிருந்தது. கருவூலம் (சிற்றிதழ்) கருவூலம் இந்தியா, திருச்சியிலிருந்து 1989ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழில் இஸ்லாமிய செய்திகள் இடம்பெற்றாலும் இதுவொரு துணுக்கு இதழாகக் காணப்பட்டது. இவ்விதழ் டைஜட்ஸ் வகை சார்ந்த அடிப்படையில் பல்வேறு துணுக்குகளை கொண்டிருந்தது. அறிவியல் ஆய்வுகள், கல்வி, விளையாட்டு, கலாசாரம் போன்ற விடயங்களும் இடம்பெற்றிருந்தன. கலாச்சாரம் (சிற்றிதழ்) கலாச்சாரம் நாகர்கோவிலிருந்து 1966ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இஸ்லாமிய கலாசாரக் கழக வெளியீடு இசுலாமிய கலாசாரங்கள் தொடர்பாகவும், இந்தியா கலாசாரம் தொடர்பாகவும் பல்வேறுபட்ட ஆக்கங்கள் இதில் எடுத்தாளப்பட்டிருந்தன. புனித மரியா பேராலயம் புனித மரியா பேராலயம் ("Basilica di Santa Maria Maggiore") என்பது உரோமையில் அமைந்துள்ள கோவில்களுள் புனித மரியாவுக்கு நேர்ந்தளிக்கப்பட்ட பழமையான ஒரு கோவில் ஆகும். இதன் முழுப்பெயர் இத்தாலிய மொழியில் Basilica Papale di Santa Maria Maggiore எனவும், இலத்தீன் மொழியில் Basilica Sanctae Mariae Majoris ad Nives எனவும் உள்ளது. இலத்தீன் பெயரில் உள்ளதுபோல, தமிழில் "பனிமய அன்னையின் கோவில்" என்று அழைக்கும் வழக்கமும் உண்டு. திருத்தந்தை மேலைத் திருச்சபையின் "முதுபெரும் தந்தை" (Patriarch) என்றும் அழைக்கப்பட்டதாலும், அப்பெயரோடு தொடர்புபடுத்தி மற்றும் நான்கு கோவில்கள் உரோமையில் "முதுபெரும் தந்தைக் கோவில்கள்" என்று அழைக்கப்பட்டன. அவை: புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம், புனித இலாரன்சு கோவில் என்பனவாகும். இவற்றுள் முதல் மூன்றும் "உயர் பேராலயங்கள்" (Major Basilicas) என்னும் பெயர் கொண்டுள்ளன. புனித மரியா பேராலயத்துக்கும் இச்சிறப்புப் பெயர் உண்டு. புனித மரியா கோவிலின் இன்னொரு பெயர் "லிபேரிய கோவில்" என்பதாகும். தொடக்க காலத்தில் திருத்தந்தை லிபேரியசு என்பவர் இதன் புரவலராக இருந்தார் என்னும் மரபின் அடிப்படையில் இப்பெயர் எழுந்தது. முதல் கோவில் கட்டடத்தோடு பிற்காலச் சேர்க்கைகள் நிகழ்ந்தன. 1348இல் நில நடுக்கத்தால் சேதம் ஏற்பட்டது. இருப்பினும் முதல் கோவிலின் கட்டட வரைவு மாற்றமுறாமல் இன்றுவரை உள்ளது சிறப்பாகும். இது உரோமையில் உள்ள பிற பெருங்கோவில்களுக்கு இல்லாத ஒரு கூறு ஆகும். இக்கோவில் உரோமை நகரில் "எசுக்குயிலின்" என்னும் ஒரு குன்றின்மீது கட்டப்பட்டது. தற்போது உள்ள கட்டடம் கி.பி. 432-440 ஆண்டுக் காலத்தில் திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு என்பவரால் எழுப்பப்பட்டு, புனித மரியாவின் வணக்கத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. அதற்கு முன்னரே ஒரு கோவில் இருந்ததாகக் கிறித்தவ மரபு கூறுகிறது. அதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அது வருமாறு: உரோமையில் வாழ்ந்த பெருங்குடியைச் சார்ந்த யோவான் என்பவருக்கும் அவரது மனைவிக்கும் குழந்தைகள் இல்லை. தங்களது பெரும் செல்வத்தை யாருக்கு விட்டுச் செல்வது என்று அன்னை மரியா தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அத்தம்பதியர் வேண்டிக்கொண்டனர். அவர்களது வேண்டுதலுக்கு இணங்க, அன்னை மரியா அவர்களுக்கு 358ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 4ஆம் நாள் இரவில் கனவில் தோன்றி, தமக்கென்று ஒரு கோவில் கட்டுமாறு கேட்டுக்கொண்டார். அக்கோவில் அமையவேண்டிய இடம் "எசுக்குயிலின்" குன்றம் என்றும், அக்குன்றில் எங்கு உறைபனி பெய்துள்ளதோ அதுவே கோவில் எழுப்பப்பட வேண்டிய இடம் என்றும் அன்னை மரியா கனவின்வழி தெரிவித்தார். ஆனால், ஆகத்து மாதம் கோடைகாலத்தின் உச்சக்கட்டம் என்பதாலும், உறைபனி பெய்வதற்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்பதாலும் யோவானும் அவர்தம் மனைவியும் தங்கள் கனவின் பொருள் குறித்து வியந்துகொண்டிருந்தார்கள். எப்படியும் அன்னை மரியா கூறியது நடக்கும் என்னும் நம்பிக்கையில் எசுக்குயிலின் குன்றம் சென்று பார்த்தபோது அங்கே உண்மையாகவே உறைபனி பெய்திருப்பதையும் கோவில் கட்டடத்தின் எல்லை பனியில் வரையப்பட்டிருப்பதையும் கண்டு வியந்தார்கள். அதே இரவு, திருத்தந்தை லிபேரியசு என்பவருக்கும் அன்னை மரியா கனவில் தோன்றி, உறைபனி அடையாளம் கொடுக்கப்படுவதாகக் கூறினார். அவரும் பிற கிறித்தவர்களும் எசுக்குயிலின் குன்றுக்குச் சென்று, அன்னை மரியா கூறியதுபோலவே உறைபனி விழுந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார்கள். ஆகத்து கோடை வெயிலில் உறைபனி பெய்ததைக் கண்ட அனைவரும் கோவிலின் எல்லை பனியில் வரையப்பட்டதைக் கண்டனர். திருத்தந்தை லிபேரியசு அன்னை மரியாவுக்கு அங்கே ஒரு கோவில் கட்டி எழுப்பினார். 358இல் தொடங்கிய கட்டட வேலை 360இல் நிறைவுற்றது. சில வரலாற்றாசிரியர்கள் இக்கதையை ஒரு புனைவாகவே கருதுகின்றனர். திருத்தந்தை லிபேரியுசு அக்கோவிலை அன்னை மரியாவுக்கு நேர்ந்தளித்தார் என்னும் மரபுப் பின்னணியில் அதற்கு "லிபேரியக் கோவில்" என்றொரு பெயரும் உண்டு. பின்னர் சிறிது காலம் அக்கோவில் பழுதடைந்த நிலையில் இருந்தது. கி.பி. 431ஆம் ஆண்டு நிகழ்ந்த எபேசு பொதுச் சங்கத்தில் அன்னை மரியா கடவுளும் மனிதருமாகிய இயேசுவை இவ்வுலகிற்கு ஈன்றளித்ததால் உண்மையாகவே "கடவுளின் தாய்" என்னும் வணக்கத்துக்கு உரியவர் (Theotokos = God-Bearer) என்னும் கிறித்தவக் கொள்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு (432-440) என்பவர் புனித மரியா கோவிலைப் புதுப்பித்து, விரிவாக்கி, அழகுபடுத்தினார். கோவிலில் உள்ள "வெற்றி வளைவு" என்னும் பகுதி அத்திருத்தந்தை காலத்தைச் சார்ந்ததே. அதில் "ஆயர் சிக்ஸ்துசு கடவுளின் மக்களுக்குக் கொடையாக அளித்தார்" என்னும் பதிவு உள்ளது. மேலும் ஐந்தாம் நூற்றாண்டு கலை அம்சங்களில் முக்கியமான ஒன்று கோவிலின் நடு நீள்பகுதியை அணிசெய்கின்ற பதிகைக்கல் ஓவியங்கள் ஆகும். 440-461 ஆண்டுகளில் திருத்தந்தையாக ஆட்சிசெய்த திருத்தந்தை முதலாம் லியோ என்பவரும் கோவில் பணிகளைத் தொடர்ந்தார். புனித மரியா பேராலயம் செவ்விய காலக் கலைப் பாணியோடு உரோமைக் கலைப் பாணியையும் இணைத்து எழுந்தது. அதே சமயத்தில் கிறித்தவக் கலை உருவாக்கமும் அங்கே நிகழ்ந்தது. குறிப்பாக, அன்னை மரியாவுக்கு வணக்கம் செலுத்தும் விதத்தில் அதுவரை கிறித்தவ உலகே கண்டிராத அளவுக்குச் சிறப்பான கோவிலை உருவாக்க வேண்டும் என்னும் நோக்கமும் இக்கோவில் சிறப்புற அமைந்ததற்குத் தூண்டுதலாயிற்று. இரண்டாம் நூற்றாண்டின் அரச அரண்மனை வடிவில் இக்கோவில் அமைந்தது. மிக உயர்ந்த, விரிந்த நடு நீள்பகுதி; இரு பக்கங்களிலும் துணை நீள்பகுதிகள்; நடு நீள்பகுதி முடியும் இடத்தில் அதன் இருபக்கங்களையும் இணைக்கின்ற வளைவு ("வெற்றி வளைவு = Triumphal Arch); அரைவட்ட வடிவில் அமைந்த குவிமாடக் கூரைப்பகுதி - இதுவே கட்டடத்தின் அடிப்படை வரைவு. கோவிலின் நடு நீள்பகுதியிலும், "வெற்றி வளைவு" என்னும் இணைப்புப் பகுதியிலும் அமைந்த 5ஆம் நூற்றாண்டு கற்பதிகை ஓவியங்கள் மிகப் புகழ்பெற்றவை ஆகும். வெற்றி வளைவுக்குப் பின் அமைந்துள்ள குவிமாடக் கூரைப்பகுதியிலும் அழகிய கற்பதிகை ஓவியங்கள் உள்ளன. ஆனால் அவை காலத்தால் பிற்பட்டவை (13ஆம் நூற்றாண்டு). நடு நீள்பகுதியைத் தாங்குகின்ற "ஏத்தன்சு பாணி" பளிங்குத் தூண்கள் மிகப் பழமையானவை. அவை பழைய மரியா கோவிலிலிருந்தோ மற்றொரு உரோமை கட்டடத்திலிருந்தோ பெறப்பட்டிருக்க வேண்டும். முப்பத்தாறு பளிங்குத் தூண்களும் நான்கு கருங்கல் தூண்களும் ஆங்குள்ளன. 14ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மணிக்கூண்டு 240 அடி (75 மீட்டர்) உயரம் கொண்டதாக, உரோமை நகரிலேயே மிக உயரமானதாகத் திகழ்கின்றது. 16ஆம் நூற்றாண்டில் சீரமைக்கப்பட்ட உயர்ந்த உள்கூரை குழிப்பதிகை முறையில் அணிசெய்யப்பட்டு, தங்க முலாம் பூசப்பட்டு எழிலோடு விளங்குகிறது. அதை வடிவமைத்தவர் சூலியானோ சான்ங்கால்லோ என்னும் கலைஞர் ஆவார். கோவிலின் முகப்பு 12ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அத்தோடு ஒரு மேல்மாடம் 1743இல் திருத்தந்தை பதினான்காம் பெனடிக்ட் என்பவரால் சேர்க்கப்பட்டது. கோவில் முற்றத்தில் அமைந்துள்ள தூண் 1614 -இல் எழுப்பப்பட்டது. இத்தூண் காண்சுட்டண்டைன் பேரரசரின் அரண்மனையிலிருந்து பெறப்பட்டதாகும். தூணின் அடிமட்டத்தில் கார்லோ மதேர்னோ வடிவமைத்த நீரூற்று உள்ளது. பல நூற்றாண்டுகளில் புனித மரியா கோவிலின் சீரமைப்புப் பணிகள் பல திருத்தந்தையர் ஆட்சிக்காலத்தில் நடந்தன. அந்த ஆட்சிக்காலங்கள்: புனித மரியா கோவிலில் கலையழகும் சமய முதன்மையும் பொருந்திய பல பொருள்கள் உள்ளன. அவற்றுள் சில கீழே குறிப்பிடப்படுகின்றன: வெற்றி வளைவில் நான்கு படிமத் தொகுப்புகள் உள்ளன. மேலே இடதுபுறத்தில் மரியாவுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்படுகிறது. மரியா உரோமை இளவரசி போல உடையணிந்துள்ளார். அவர்தம் கைகளில் ஊதா நிறத் திரையை நெய்துகொண்டிருக்கிறார். அவர் ஊழியம் செய்துவந்த எருசலேம் கோவிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்க அத்திரையை அவர் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். படிமத் தொகுப்பின் இடதுபுறத்தில் வானதூதர் மரியாவின் கணவர் யோசேப்புக்கு இயேசு பிறப்பை அறிவிக்கிறார். அடுத்த படிமத் தொகுப்பில் குழந்தை இயேசுவைக் கீழ்த்திசை ஞானியர் வணங்குகின்றனர். மாசில்லாக் குழந்தைகளை ஏரோது மன்னன் கொலைசெய்கிறான். நீல நிற மேலாடை அணிந்த பெண் எலிசபெத்து; அவர்தம் கைகளில் உள்ள குழந்தை திருமுழுக்கு யோவான். எலிசபெத்து தம் குழந்தையை எடுத்துக்கொண்டு ஓடிச்செல்ல அணியமாயுள்ளார். வெற்றி வளைவின் மேல்பகுதியில் வலது புறத்தில் உள்ள படிமத் தொகுப்புகள்: இயேசு எருசலேம் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்படுகிறார். திருக்குடும்பம் எகிப்துக்குத் தப்பியோடும் காட்சியில் விவிலியப் புறநூல் செய்தியொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது அப்ரோதியசிசு என்னும் எகிப்து அரசன் திருக்குடும்பத்தைச் சந்தித்ததும் தன் தவற்றினை உணர்ந்து, பழைய சமயத்தைக் கைவிட்டு, இயேசுவை உலக மீட்பராக ஏற்று வணங்கினார். கடைசி படிமத்தில் கீழ்த்திசை ஞானியர் ஏரோது அரசனின் முன்னிலையில் வருகின்றனர். வெற்றி வளைவின் கீழ்ப்பகுதியில் ஒரு புறம் பெத்லகேம், மறுபுறம் எருசலேம் என்னும் நகர்கள் உள்ளன. இயேசு பெத்லகேமில் பிறந்தார்; எருசலேமில் உயிர்துறந்தார். இயேசு மீண்டும் வருவார் என்னும் பொருளில் வெற்றி வளைவின் மேல் நடுப்பகுதிப் படிமத் தொகுப்பு உள்ளது. நடுப்பகுதியில் ஓர் அரியணை உள்ளது. அதில் யாரும் அமரவில்லை. அதுவே கடவுளின் அரியணை. அதன்மேல் மணிமகுடமும் அதைச் சூழ்ந்து ஒரு போர்வையும் உள்ளன. அரியணையின் கால் பகுதியில் திருவெளிப்பாடு நூலும், இயேசு அறிவித்த புதிய சட்டத் தொகுப்பும் உள்ளன. அரியணையின் இருபுறமும் புனித பேதுருவும் புனித பவுலும் நிற்கின்றனர். பேதுரு யூதர் நடுவிலும் பவுல் பிற இனத்தார் நடுவிலும் இயேசுவின் நற்செய்தியை அறிவித்த திருத்தூதர்கள் ஆவர். அவர்களது தலைக்கு மேற்பகுதியி்ல் நான்கு நற்செய்தியாளர்களின் அடையாளங்களாகிய எருது, வானதூதர், சிங்கம், கழுகு ஆகியவை உள்ளன. இயேசு அறிவித்த நற்செய்தியை ஏற்று அதன்படி வாழ்வோர் கடவுளின் அரியணையை அணுகிச் சென்று, அவர்தம் வாழ்வில் எந்நாளும் பங்கேற்பர் என்பது இப்படிமத் தொகுப்புகளின் பொருள் ஆகும். இறைவாழ்வைத் தேடுவோர் ஆடுகள் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இறையியல் செறிவோடும் கலையழகோடும் வடிவமைக்கப்பட்ட இக்கற்பதிகை ஓவியங்கள் உலகப் புகழ் பெற்றவை. அரியணையின் கீழ் மரியாவுக்கு அழகிய கோவிலை உருவாக்கிய திருத்தந்தை மூன்றாம் சிக்ஸ்துசு என்பவர் குறித்த சொற்றொடர் உள்ளது: "ஆயர் சிக்ஸ்துசு கடவுளின் மக்களுக்குக் கொடையாக அளித்தார்" (Xystus Episcopus Plebi Dei). வலது புறத்தில் திருமுழுக்கு யோவானும், நற்செய்தியாளர் யோவானும், புனித அந்தோனியும், நன்கொடையாளர் கர்தினால் கொலோன்னாவும் நிற்கின்றனர். இப்படிமத் தொகுதியின் கீழ் நடுப்புறத்தில் "மரியா துயில்கொள்ளுதல்" (Dormitio Mariae) என்னும் காட்சி உள்ளது. மரியாவின் இறப்பு இவ்வாறு குறிக்கப்படுகிறது. இடது பகுதியில் மரியா இயேசுவைப் பெற்றெடுத்த காட்சியும், வலது பகுதியில் மரியா இயேசுவைக் கீழ்த்திசை ஞானியருக்குக் காட்டுகின்ற காட்சியும் உள்ளன. இவ்வாறு மரியாவின் பெருமை இப்பெருங்கோவிலில் பறைசாற்றப்படுகிறது. தொடர்மொழி தொல்காப்பியர் மொழியை அதாவது சொல்லை புணர்நிலைக் கோணத்தில் மூன்று வகையாக 'மொழிமரபு' இயலில் பாகுபடுத்திக் காட்டுகிறார். அவை: 1.ஓரெழுத்தொருமொழி, 2.ஈரெழுத்தொருமொழி, 3. இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன. ஓரெழுத்தொருமொழியும், ஈரெழுத்தொருமொழியும் இரண்டு மாத்திரை அளவில் மிகாதவை. இரண்டு மாத்திரையைக் காட்டிலும் மிகுந்த ஒலி கொண்டவை தொடர்மொழி. அதாவது இரண்டு-மாத்திரையை இறந்து இசைப்பவை. இந்த ஆட்சிகள் உயிரெழுத்து ஒன்றும்போது 'ன்' என்றும், மெய்யோடு அதாவது உயிர்மெய்யோடு ஒன்றும்போது 'ம்' என்றும் மயங்கும் என்னும் தமிழ்மரபினை உணர்த்துகின்றன. ஏனைய மொழிகளுக்கும் இந்த விதி பொருந்துவதைச் சங்கநூல் ஆட்சிகளில் உணர்த்துகொள்ளலாம். போல் ஜார்விஸ் போல் ஜாவிஸ் ("Paul Jarvis", பிறப்பு: சூன் 29 1965, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1988 - 1993 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ரொலி ஜென்கின்ஸ் ரொலி ஜென்கின்ஸ் ("Roly Jenkins", பிறப்பு: நவம்பர் 24 1918, இறப்பு: சூலை 22 1995) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 386 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1948 - 1952 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கில்பர்ட் ஜெசொப் கில்பர்ட் ஜெசொப் ("Gilbert Jessop", பிறப்பு: மே 19 1874, இறப்பு: மே 11 1955) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 493 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 - 1912 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரிச்சர்ட் ஜான்சன் ரிச்சர்ட் ஜான்சன் ("Richard Johnson )", பிறப்பு: திசம்பர் 29 1974), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 166 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 194 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இவர் 2003 ல் இங்கிலாந்து அணியில் உறுப்பினராக பங்குகொண்டார். சோனியா செயசீலன் சோனியா செயசீலன் (பிறப்பு ஏப்ரல் 24, 1976, New Westminster, British Columbia) தமிழ்ப் பின்புலத்தைக் கொண்ட ஒரு கனேடிய டெனிசு வீராங்கனை ஆவார். இவர் ஆகக் கூடியதாக உலகத் தரத்தில் 48 ஆக விளங்கினார். இரட்டையர் ஆட்டத்தில் 40 ஆகவும் இருந்தார். விஜித ஹேரத் விஜித ஹேரத் (Vijitha Herath, பிறப்பு: மே 1, 1968), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் கம்பஹா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004),ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இல, 49/53, சல்மல் உயன, கிரிந்திவெல வீதி, யக்கலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், மலாயா 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப் பட்டது. ஏற்கனவே இருந்த மலாயாவுடன் சிங்கப்பூர், சரவாக், சபா மாநிலங்கள் இணைந்து மலேசியா எனும் ஓர் அமைப்பை உருவாக்கின. அந்த மலேசிய அமைப்பில் இருந்து 1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் விலகிக் கொண்டது. மலாயா என்பது வேறு. மலாயா கூட்டமைப்பு என்பது வேறு. 1948 ஆம் ஆண்டில் இருந்து 1963 ஆம் ஆண்டு வரை மலாயாவை மலாயா கூட்டமைப்பு (Federated Malays States) என்று அழைத்தனர். அந்தக் காலக் கட்டத்திற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப் பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. மலாக்காவைக் கண்டுபிடித்த பரமேசுவரா காலத்தில் தீபகற்ப மலாயாவை மலாயா என்றே அழைத்தனர். ராஜா ராஜ சோழன் கடாரத்தின் மீது படை எடுத்த போது மலைநாடு மலாயா என்றே அழைக்கப் பட்டது. கம்போடியப் பேரரசை உருவாக்கிய ஜெயவர்மன் - ராஜவர்மன் காலத்திலும் மலாயாத் தீபகற்பம் மலாயா என்று தான் அழைக்கப் பட்டு வந்தது.கவினாஷ் மலாயாவின் வரலாறு 200,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தொடங்குகிறது. மலேசியாவின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊர் இருக்கிறது. 1938 ஆம் ஆண்டில் அங்கே ஒரு மனித எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்தனர். அதற்கு பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைத்தனர். பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது எனக் கணக்கிடப் பட்டுள்ளது. 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் அதே இடத்தில் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை. பேராக் மாநிலத்தில் தம்பூன் எனும் மற்றோர் ஊர் இருக்கிறது. இந்த ஊர் ஈப்போ மாநகருக்கு மிக அருகாமையில் இருக்கிறது. இங்கே ஒரு பழமை வாய்ந்த குகை உள்ளது. இந்தக் குகையில் 4000 ஆண்டுகளுக்கு முன்னால் வரையப் பட்ட பழமையான ஓவியங்களையும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இந்தோனேசியா, மேலனேசியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்குப் புலம் பெயர்ந்த மனித இனம், மலாயாவை தங்கிச் செல்லும் ஓர் உறைவிடமாகப் பயன் படுத்தி உள்ளனர். தொல்பொருள் ஆய்வுகளில் இருந்து அந்த உண்மை தெரிய வருகின்றது. மலாயாவில் முதன்முதலில் குடியேறியவர்களுக்கும் பாப்புவா நியூகினி பூர்வீகக் குடிமக்களுக்கும் பல உடல் ஒற்றுமைகள் உள்ளதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அந்த முதல் ஆதிவாசிகள் குகைகளில் வாழ்ந்தனர். கற்களால் ஆயுதங்களைச் செய்தனர். இவர்கள் கி.மு. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் தென் மேற்குச் சீனாவில் இருந்து வந்து மலாயாவில் குடியேறியவர்கள். இந்தக் காலக் கட்டத்தைக் கற்காலம் என்று வரலாறு சொல்கின்றது. இவர்கள் பெரும்பாலும் விவசாயிகள். வளர்ப்பு பிராணிகளும் இவர்களிடம் இருந்துள்ளன. இவர்கள் மண்பாண்டங்கள் தயாரிப்பதிலும் ஆடை ஆபரணங்கள் தயாரிப்பதிலும் சிறந்து விளங்கி இருக்கின்றனர். குகைகளில் ஓவியங்கள் வரைவதிலும் தங்கள் திறமைகளைக் காட்டியுள்ளனர். கி.மு. 200 ஆம் ஆண்டிற்குப் பிந்தியவை வெண்கலக் காலம். இந்த வெண்கலக் காலக் கலாசாரங்கள் மலாயாவிலும் காணப் படுகின்றன. இந்தக் கலாசாரத்தை டோங் சோன் கலாசாரம் என்றும் அழைக்கின்றனர். இஃது இந்தோனேசியாவின் சுமத்திராவில் இருந்தும் இந்தோசீனாவின் வியட்நாமில் இருந்தும் வந்தது. ஆனால், இந்த டோங் சோன் கலாசாரம் வியட்நாமில் 3000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே தோன்றியது. ஆனால், அது எப்படி இந்தோனேசியாவில் இருந்து மலாயாவிற்கு வந்தது என்பது தான் வரலாற்று அறிஞர்களுக்கு இன்றும் ஒரு புதிராகவே இருக்கிறது. டோங் சோன் கலாசாரம் என்றால் என்ன? கி.பி. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளில் வந்தது இந்த இருப்புக் காலம். இரும்பு காலம் என்பதைத் தான் இருப்புக் காலம் என்கிறோம். ஜொகூர் மாநிலத்தில் உள்ள கோத்தா திங்கி எனும் இடத்தில் ரோமாபுரி யில் இருந்து கொண்டு வரப் பட்ட பாசி மணிகள் கண்டு எடுக்கப் பட்டன. அந்தக் காலக் கட்டங்களில் ரோமாபுரியில் இருந்து வணிகர்கள் மலாயாவுக்கு வாணிகம் செய்ய வந்துள்ளனர். பலர் அங்கேயே குடியேறியும் இருக்கிறார்கள். கோத்தா திங்கியில் இன்றும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ரோமாபுரி வணிகர்கள் விட்டுச் சென்ற வரலாற்றுச் சான்றுகளும் சேகரிக்கப் பட்டு வருகின்றன. கெடா எனப் படும் கடாரத்தில் 4 - 12 ஆம் நூற்றாண்டுகளில் இந்தியர்கள் குடியேறினர். பேராக் மாநிலத்தில் கோலா செலின்சிங் எனும் இடத்தில் இந்தியர்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், தங்க ஆபரணங்கள், கண்ணாடி மணிகள், சிப்பி ஆபரணங்கள் போன்றவை கண்டு எடுக்கப் பட்டுள்ளன. மலாக்கா நீரிணைக்கு அப்பால் இருக்கும் சுமத்திராவில் இருந்து வந்த மலாய் ஆட்சியாளர்களின் ஆளுமை மலாயாவில் வேர் ஊன்றியுள்ளது. பலேம்பாங்கில் மிகவும் சக்தி வாய்ந்த மலாய் அரசு இருந்து இருக்கிறது. கி,பி.600 ஆம் ஆண்டு சீன வரலாற்று ஆவணங்களில் அதற்கான சான்றுகள் உள்ளன. இந்தியர்களின் ஆதிக்கம் படைத்த புத்த மத அரசாங்கம் அங்கே காணப் படுகிறது. அதற்கு ஸ்ரீவிஜயா அரசு என்று பெயரும் உள்ளது. ஸ்ரீவிஜயா அரசு மலாயாவின் லங்காசுகா, கெடா, கிளந்தான், திரங்கானு, பகாங் போன்ற இடங்களை ஆட்சி செய்தும் உள்ளது. 1200 ஆண்டுகளில் மினாங்கபாவ் எனும் சுமத்திரா மலாய் அரசு மலாயாவில் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஆட்சி செய்து உள்ளது. இவர்கள் மலாயாவினுள் இஸ்லாம் சமயத்தைக் கொண்டு வந்தனர். பலேம்பாங்கைச் சார்ந்த ஓர் அரசப் பரம்பரையினர் கி,பி.1200 -1300 ஆம் ஆண்டுகளில் சிங்கப்பூரில் ஒரு தனி அரசாங்கத்தை உருவாக்கி அதற்கு துமாசிக் என்றும் பெயர் சூட்டினர். ஏறக்குறைய நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அந்த அரசாங்கத்தை 1360ல் மஜாபாகித் எனும் இந்து அரசு தாக்கி ஆட்சியாளர்களைப் பூண்ட்டொடு அழித்தது. மலாயாத் தீபகற்பத்தை ஆள வேண்டும் எனும் எண்ணம் மஜாபாகித் மன்னருக்கு ஏற்படவில்லை. துமாசிக்கை நாசம் செய்து விட்டு அப்ப்டியே போய் விட்டனர். ஆனால், மஜாபாகித் ஆளுமையின் தாக்கத்தை இன்றும் மலாயாவின் கிளந்தான், தாய்லாந்தின் பட்டாணி மாநிலங்களில் காண முடிகிறது. துமாசிக் என்று முன்பு அழைக்கப் பட்ட சிங்கப்பூர், மஜாபாகித் அரசாங்கத்தால் நாசம் செய்யப் பட்டதும் அதற்கு ஈடாக மலாக்கா நகரம் தோற்றுவிக்கப் பட்டது. மலாக்காவைத் தோற்றுவித்தவர் பரமேசுவரா. மஜாபாகித்தின் அடுத்து வரும் தாக்குதலில் இருந்து பரமேசுவரா தப்பிக்க நினைத்தார். அங்கேயே இருந்தால் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என்பதையும் உணர்ந்தார். அதனால் சிங்கப்பூரில் இருந்து உடனடியாக வெளியேறினார். பரமேசுவரா தன்னுடன் சில நம்பிக்கையான விசுவாசிகளையும் அழைத்துக் கொண்டு மலாயாவின் பெருநிலக காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார். மலாயாவின் வடக்குப் பக்கமாக முன்னேறி வரும் போது தான் மூவார் எனும் இடத்தை அடைந்தார். மூவார் பகுதியில் பியாவாக் பூசோக் எனும் ஓர் இடம் இருக்கிறது. அதற்கு அருகாமையில் கோத்தா பூரோக் எனும் மற்றோர் இடமும் இருக்கிறது. இந்த இரு இடங்களில் ஏதாவது ஓர் இடத்தில் தன்னுடைய புதிய அரசை உருவாக்கலாம் என்று பரமேசுவரா தீர்மானித்தார். நன்கு ஆராய்ந்து பார்த்ததில் அந்த இடங்கள் இரண்டுமே பரமேசுவராவுக்குப் பிடிக்கவில்லை. ஒரு புதிய அரசு அமைக்க பொருத்தமாக அமையவில்லை. ஆகவே அவர் தொடர்ந்து வட திசையை நோக்கிப் பயணத்தை மேற்கொண்டார். அப்படி போய்க் கொண்டிருக்கும் போது செனிங் ஊஜோங் எனும் இடத்தை அடைந்தார். இந்த செனிங் ஊஜோங் இப்போது சுங்கை ஊஜோங் என்று அழைக்கப் படுகிறது. இந்த இடத்தில் இருந்து சற்று தள்ளி ஒரு மீன்பிடி கிராமம் தென்பட்டது. அந்தக் கிராமம் பெர்த்தாம் ஆற்றின் துறைமுகத்தில் இருந்தது. பெர்த்தாம் ஆறு இப்போது மலாக்கா ஆறு என்று அழைக்கப் படுகின்றது. அந்த மீன்பிடி கிராமம்தான் இப்போதைய மலாக்கா மாநகரம் உருவான இடம். இந்த இடத்தில் தான் ஒரு சருகுமான் ஒரு நாயை எட்டி உதைத்து ஆற்றில் தள்ளியது. நாய் மல்லாக்காக விழுததாலும் பரமேஸ்வரா சாய்ந்து ஓய்வு எடுத்த மரத்தின் பெயர் மலாக்கா எனும் பெயர் கொண்டதாலும் அந்த இடத்திற்கு மலாக்கா என்று பெயர் வந்தது. தொடக்கக் காலத்தில் அவருக்கு சியாம் நாட்டில் இருந்து அதிகமான எதிர்ப்புகள் வந்தன. அதற்கும் காரணம் உண்டு. சியாம் நாட்டின் பாதுகாப்பில் இருந்த துமாசிக்கைப் பரமேசுவரா அடித்துப் பிடித்து கைப்பற்றியதனால் அவர் சியாம் நாட்டின் எதிர்ப்புகளைச் சமபாதித்துக் கொண்டார். சியாம் நாட்டில் அச்சுறுத்தலுக்குப் பயந்து அவர் உதவிகளைத் தேடி சீனா விற்குச் சென்றார். சீன அரசாங்கத்தின் பாதுகாப்பு கிடைத்தது. அதன் வழியாகப் பரமேசுவரா மலாக்காவின் அரசராகப் பதவி உயர்வு பெற்றார். அதுவே சியாம் நாட்டின் படையெடுப்புகளைத் தவிர்க்கவும் வைத்தது. 15 ஆம் நூற்றாண்டுகளில் மலாக்கா மிகச் சிறப்பான வணிகத் தளமாக விளங்கியது. பரமேசுவரா இஸ்லாமியச் சமயத்தைத் தழுவியதால் அரபு வணிகர்கள் மலாக்காவிற்கு வந்தனர். வியாபாரமும் பெருகியது. சீனர்களின் வியாபாரமும் மலாக்காவின் வளப்பத்திற்குக் கை கொடுத்தது. 1511ல் அல்பான்சோ டி அல்புகர்க் எனும் போர்த்துகீசியக் கடலோடி மலாக்காப் பேரரசைக் கைப்பற்றினார். அப்போது மலாக்காவை சுல்தான் முகமது ஷா என்பவர் ஆட்சி செய்து வந்தார். அவர் ஜொகூரில் உள்ள ரியாவ் தீவுகளுக்குத் தப்பித்துச் சென்றார். அங்கே அவர் ஒரு புதிய அரசைத் தோற்றுவித்தார். அதன் பின்னர் போர்த்துகீசியர்கள் மலாக்காவை ஒரு நூற்றாண்டு காலம் ஆட்சி செய்தனர். மலாக்கா வாழ் மக்களைக் கிறிஸ்துவச் சமயத்திற்கு கொண்டு வர போர்த்துகீசியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துக் கொண்டனர். ஆனால், அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. இஸ்லாமியச் சமயத்தில் இருந்து அவர்களைத் திசை திருப்ப முடியவில்லை. இஸ்லாமியச் சமயம் மலாக்காவில் நன்றாக வேரூன்றி இருந்தது. அதனால் போர்த்துகீசியர்கள் தங்கள் கவனத்தை முழுமூச்சாக வியாபாரத்தில் செலுத்தினர். மலாக்கா மக்களின் உள் விவகாரங்களிலும் போர்த்துகீசியர்கள் அதிகமாகத் தலையிடவும் இல்லை. 1641ல் போர்த்துகீசியர்கள் டச்சுக்காரர்களிடம் தோல்வி அடைந்தனர். டச்சுக்காரர்களின் முக்கிய நோக்கம் வியாபாரம் செய்வது. பொருள் சேர்த்து வீடு பக்கம் போய்ச் சேர்வது. 1795 வரையில் டச்சுக்காரர்கள் மலாக்காவை ஆட்சி செய்தனர். ஐரோப்பாவில் பிரெஞ்சு புரட்சி நடைபெற்றது. அதனால் சில ஆண்டுகள் மலாக்கா ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்தது. பின்னர் 1818 ஆம் ஆண்டு மலாக்கா டச்சுக்காரர்களிடமே மீண்டும் ஒப்படைக்கப் பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1824 ஆம் ஆண்டு டச்சு-ஆங்கிலோ உடன்படிக்கை ஐரோப்பாவில் கையெழுத்தானது. அதன்படி மலாக்கா ஆங்கிலேயரின் வசம் வந்தது. சுமத்திராவில் ஆங்கிலேயர்களின் கைவசம் இருந்த பென்கூலன் டச்சுக்காரர்களிடம் ஒப்படைக்கப் பட்டது. போர்த்துகீசியர்களிடம் இருந்து தப்பி ஓடிய சுல்தான் முகமது ஷா 1699 ஆம் ஆண்டு ரியாவ் தீவில் கொல்லப் பட்டார். அத்துடன் பரமேசுவராவின் பாரம்பரியம் ஒரு முடிவுக்கு வந்தது. சுலாவசி தீவில் இருந்த பூகிஸ்காரர்கள் ரியாவ் அரசின் மீது அடிக்கடி படை எடுத்து அந்த அரசை மேலும் மேலும் பலகீனப் படுத்தி வந்தனர். சில ஆண்டுகளுக்குப் பிறகு பூகிஸ்காரர்கள் மலாயா பக்கம் தங்கள் கவனத்தைத் திசை திருப்பினர். காலப் போக்கில் சிலாங்கூர் மாநிலத்தில் காலூன்றி தங்களின் ஆளுமையை மேம்படுத்திக் கொண்டனர். இப்போது சிலாங்கூரில் பூகிஸ்காரர்கள் தான் அதிகமாக வாழ்கின்றனர். 1786ல் சர் பிரான்சிஸ் லைட் என்பவர் பினாங்குத் தீவைக் கிழக்கு இந்தியக் கம்பெனியின் கீழ் கொண்டு வந்தார். அதுவரை பினாங்குத் தீவு கெடா மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. அப்போதைய கெடா சுல்தானுக்குப் பூகிஸ்காரர்களின் அச்சுறுத்தல் தொல்லைகள் இருந்து வந்தன. அத்துடன் சியாம் அரசின் ஆதிக்க வெறியும் தலை விரித்தாடியது. எதிரிகளிடம் இருந்து கெடாவைக் காப்பாற்ற கெடா சுல்தான் வேறு வழி இல்லாமல் பினாங்குத் தீவை ஆங்கிலேயர்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார். இருப்பினும் 1821 ஆம் ஆண்டு சியாமியர்கள் தாக்குதல் நடத்தி கெடாவைக் கைப்பற்றிக் கொண்டனர். 1842 வரை கெடா சியாமியர்களின் பிடியில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தலையிடவில்லை. 1909 ஆம் ஆண்டு ஆங்கிலோ-சியாமிய உடன்படிக்கை கையெழுத்தானது. அதன் பின்னர் சியாமியர்களின் அச்சுறுத்தல்களும் மலாயாவின் வட பகுதிகளில் ஒரு முடிவிற்கு வந்தன.(வளரும்)--ksmuthukrishnan 08:14, 19 மே 2011 (UTC) 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப் பட்டது. ஏற்கனவே இருந்த மலாயாவுடன் சிங்கப்பூர், சரவாக், சபா மாநிலங்கள் இணைந்து மலேசியா எனும் ஓர் அமைப்பை உருவாக்கின. அந்த மலேசிய அமைப்பில் இருந்து 1965 ஆம் ஆண்டு சிங்கப்பூர் விலகிக் கொண்டது. மலாயா என்பது வேறு. மலாயா கூட்டமைப்பு என்பது வேறு. 1948 ஆம் ஆண்டில் இருந்து 1963 ஆம் ஆண்டு வரை மலாயாவை மலாயா கூட்டமைப்பு (Federated Malays States) என்று அழைத்தனர். அந்தக் காலக் கட்டத்திற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப் பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப் பட்டு வந்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் ஐக்கிய நாடுகள் முறைமையின் ஐந்து அங்கங்களில் ஒன்றானஐக்கிய நாடுகள் பொறுப்பாட்சி மன்றம் (United Nations Trusteeship Council) ஐக்கிய நாடுகளின் பொறுப்பில் விடப்பட்ட நாடு/பகுதிகளை பன்னாட்டு அமைதி மற்றும் பாதுக்காப்பினையும் அப்பகுதி மக்களின் நலனையும் கருத்தில் கொண்டும் நிர்வகிக்க ஏற்படுத்தப்பட்டது. பொறுப்பாட்சிப் பகுதிகள் பெரும்பாலன முன்னாள் உலக நாடுகள் சங்கப் பொறுப்பில் இருந்தவை அல்லது இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தோற்கடிக்கப்பட்ட நாடுகளாகும். இவற்றில் சில தற்போது விடுதலை பெற்றன அல்லது தன்னாட்சி அடைந்து விட்டன; சில அடுத்துள்ள நாடுகளுடன் இணைந்து கொண்டன. கடைசியாக பசிபிக் பெருங்கடல் பகுதியில் ஐநா பொறுப்பாட்சியில் இருந்த பலாவு தன்னாட்சி பெற்று 1994ஆம் ஆண்டு ஐநாவின் உறுப்பினர் நாடாக இணைந்தது. பெர்னார்ட் கோடு பெர்னார்ட் கோடு ("Bernhardt Line") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் தெற்கிலிருந்து மூன்றாவதாக இருந்தது பெர்னார்ட் கோடு. பிற அரண்கோடுகளைப் போல இத்தாலியின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை நீண்டிருக்கவில்லை; மேற்கு பகுதியில் ஒரு குறிப்பிட்ட தூரம் மட்டுமே அமைந்திருந்தது. குசுத்தாவ் கோட்டின் மேற்கு பகுதியில் அதன் முன்னால் ஒரு வீக்கப் பகுதி போல அமைந்திருந்தது. நேச நாட்டுப் படைகள் குசுத்தாவ் கோட்டை அடைவதை சில நாட்கள் தாமதப்படுத்துவதற்காக மட்டும் இவ்வரண்கோடு அமைக்கப்பட்டதால், இதனை ஜெர்மானியர்கள் அவ்வளவாக பலப்படுத்தவில்லை. நவம்பர் 1943ல் அமெரிக்க 5வது ஆர்மி பெர்னார்ட் அரண்நிலைகளை அடைந்தது. டிசம்பர் 1, 1943ல் பெர்னார்ட் கோடு மீதான அமெரிக்கத் தாக்குதல் தொடங்கியது. ஒன்றரை மாதகால கடும் சண்டைக்குப்பின், பெர்னார்டு கோட்டின் அரண்நிலைகள் முறியடிக்கப்பட்டு அமெரிக்கப் படைகள் ஜனவரி 15, 1944ல் குசுத்தாவ் நிலைகளை அடைந்தன. ஐக்கிய நாடுகள் நாள் 1947ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஐநா பட்டய ஆவணத்தின் ஆண்டுவிழாவான அக்டோபர் 24ஆம் நாளை ஐக்கிய நாடுகள் நாளாக "உலக மக்கள் அனைவரும் ஐக்கிய நாடுகளின் நோக்கம், சாதனைகள் குறித்து அறியும் வண்ணமாகவும் அவர்களது ஆதரவைப் பெறும் வண்ணமாகவும் கொண்டாட" தீர்மானித்தது. 1971ஆம் ஆண்டில் பொதுச்சபை மீண்டும் தனது தீர்மானம் 2782இன்படி இந்நாள் பன்னாட்டு விடுமுறை நாளாக அறிவித்து ஐநாவின் உறுப்பினர் நாடுகளும் இதனை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப் பரிந்துரைத்தது. ஐக்கிய நாடுகள் நாளன்று உலக மக்களிடையே ஐநாவின் நோக்கங்களையும் சாதனைகளையும் குறித்த விப்புணர்வை ஏற்படுத்த பல சந்திப்புகள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அக்டோபர் 20 முதல் 26 வரை "ஐக்கிய நாடுகள் வாரமாகவும்" கொண்டாடப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் ஐநா நாளன்று குடியரசுத் தலைவர் அரசு அறிவிப்பினை வெளியிடுகின்றார்;அண்மையில் பராக் ஒபாமா இத்தகைய அறிவிப்பொன்றை வெளியிட்டார். 1972ஆம் ஆண்டு முதல் ஐநாவின் உலக மேம்பாட்டுத் தகவல் நாளும் அக்டோபர் 24 அன்று கொண்டாடப்படுகிறது. ஐஓ (சந்திரன்) ஐஓ ("Io", கிரேக்கம்: Ἰώ) என்பது வியாழன் கோளின் நான்கு கலிலிய சந்திரன்களில் மிக உட்புறமாக அமைந்துள்ள சந்திரன் ஆகும். இதன் விட்டம் 3,642 கிமீ. இது சூரியக் குடும்பத்தில் உள்ள சந்திரன்களில் நான்காவது பெரியதாகும்.மேலும் இது 8.9319 × 10 கிலோ நிறையை உடையது.இது வடிவில் நீள்வட்ட உரவம் கொண்டதாகவும் வியாழனை சுற்றி நீண்டசுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது.இது கலிலியோ செயற்கைக் கோள்கள் மத்தியில் எடை மற்றும் அளவை பொறுத்து கேனிமெட்டுடன் மற்றும் காலிஸ்டோக்கு அடுத்தும் யூரோப்பாவிற்கு முன்னதாகவும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. கிரேக்கத் தொல்கதைகளில் கடவுள்களின் அரசனான சியுசு என்பவனின் மனைவியான ஈராவின் தொன்மவியல் பாத்திரமான ஐஓ (நெருப்பு,எரிமலைகளுக்கான கடவுள்) என்பதை ஒட்டி இப்பெயர் சந்திரனுக்கு சூட்டப்பட்டது.மேலும் இது வியாழனின் முதலாவது சந்திரன் என பொருட்படும் வகையில் அதன் ரோமன் எண்ணுருவுடன் சேர்த்து "வியாழன் I" எனவும் அழைக்கப்படுகிறது. இந்நிலவில் 100 க்கும் மேற்பட்ட மலைகள் உள்ளன. இந்த சிகரங்களில் சில எவரெஸ்டைசிகரத்தை விட உயரமாக இருக்கின்றன.சூரியக்குடும்பத்தின் மற்ற நிலவுகளை போல் நீர் அல்லது பனியால் இது சூழப்படாமல் இயோ உருகிய இரும்பு அல்லது இரும்பு சல்பைட் உட்புறத்தை சுற்றி சிலிகேட் பாறைகளை' கொண்டுள்ளது.மேலும் இதன் மேற்பரப்பில் அதிக அளவில் சல்பர் மற்றும் சல்பர் டை ஆக்சைடு பனி படர்ந்த சமவெளி பகுதிகளை கொண்டுள்ளது. இயோ 17 மற்றும் 18 ம் நூற்றாண்டுகளில் வானியல் வளர்ச்சியில் ஒரு முக்கியமான பங்கை கொண்டிருந்தது.இது மற்ற கலீலிய சந்திரங்களுடன் 1610 இல் கலிலியோ கலிலியால் கண்டுபிடிக்கப்பட்டது.இந்த கண்டுபிடிப்பு சூரிய இயக்க கெப்லர் விதிகளின் வளர்ச்சி மற்றும் ஒளியின் வேகத்தை அளவிடுதல் போன்றவற்றிற்கு தொடக்கமாய் இருந்தது. 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் இறுதி வரையில் பூமியில் இருந்து பார்க்கும் போது ஒரு ஒளிப்புள்ளியாகவே இது தெரிந்தது.அதன் பின்னர் நவீன தொலைநோக்கிகள் மூலம் இதன் நிலப்பரப்பானது அடர் சிவப்பு துருவ மற்றும் பிரகாசமான நில பகுதிகளினை கொண்டது என அறியப்பட்டது.1979 இல், இரண்டு வாயேஜர் விண்கலங்களும் அனுப்பிய புகைப்படங்களில் இருந்து இங்கு செயல்பட்டுகொண்டிருக்கும் பல எரிமலைகள் , பெரிய மலைகள் மற்றும் வெளிப்படையான பெரும் பள்ளங்கள் கொண்டது என அறியப்பட்டது. 1990 மற்றும் 2000 ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் கலிலியோ விண்கலம் இதை நெருக்கமாக ஆராய்ந்த போது அதன் உள்ளமைப்பு மற்றும் மேற்பரப்பு அமைப்பு பற்றிய தகவல்கள் பெறப்பட்டன.மேலும் இந்த விண்கலம் இயோ மற்றும் வியாழனின் காந்தபுலன்களுக்கிடையே இருக்கும் தொடர்பை அறிவித்தது.மேலும் இயோவின் சுற்றுப்பாதையில் ஒரு கதிர்வீச்சு வளையத்தின் மையம் உள்ளதை கண்டறிந்தது.இதன் அடிப்படையில் இயோ நாள் ஒன்றுக்கு சுமார் 3,600 REM கதிர்வீச்சு (36 SV) பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் 2000 ல் காசினி-ஹைகென்ஸ் மற்றும் 2007 ல் "நியு ஹரிசான்" விண்கலங்கள் மூலமும்,புவியில் அமைந்துள்ள மற்றும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி மூலம் புதிய தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன. நானூறுக்கும் அதிகமான எரிமலைகளைக் கொண்டுள்ள இச்சந்திரன் சூரியக் குடும்பத்தில் நிலவியல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பான பொருள் ஆகும். ஐஓ (Io) சந்திரன் எமது சூரியக் குடும்பத்தில் பெருமளவு எரிமலைகளைக் கொண்டுள்ளது. கலிலியோ அனுப்பிய ஐஓ சந்திரனின் மேற்பரப்புப் படம் வியாழனின் இந்த சந்திரன் பூமியை விட 100 இற்கும் அதிக மடங்கு லாவாக்களை அதன் மேற்பரப்புக்கு வெளிவிடுகிறது. நாசாவின் கலிலியோ விண்கலம் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் ஐஓ என்ற இச்சந்திரனின் ஓட்டில் உள்ள பெரும் கற்குழம்பு (மக்மா) கடலில் இருந்தே இந்த லாவாக்கள் வெளியேறுகின்றன எனக் கண்டுபிடித்திருக்கிறார்கள். இந்த எரிமலைகளில் இருந்து வெளியேறும் லாவா அதன் மேற்ப்பரப்பிலிருந்து சுமார் 5௦௦ கி.மீ உயரம்வரை பீய்ச்சி அடிக்கப்படுகிறது.அதோடு மட்டுமல்லாது இந்த லாவா கடல் வியாழனின் மற்ற நிலவுகளால் ஈர்க்கப்படும் போது ஈர்ப்பு உராய்வால் மேலும் அதிகமாக வெப்பமடைகிறது. இந்தக் கொப்புளிக்கும் வெப்பக் கிடங்கு கிட்டத்தட்ட 50 கிமீ தடிப்புள்ளதாக அறிவியலாளர்கள் சயன்ஸ் இதழில் தெரிவித்துள்ளனர். ஐக்கிய நாடுகள் கடவுச் சீட்டு ஐக்கிய நாடுகள் கடவுச் சீட்டு அல்லது ஐக்கிய நாடுகள் லைசே பாசே (United Nations Laissez-Passer, UNLP அல்லது LP) ஐக்கிய நாடுகள் தனது உரிமைகள் மற்றும் ஏமங்கள் மரபொழுங்கின் ஏழாவது பிரிவின்படி வழங்கும் பயண ஆவணமாகும். இது நியூ யார்க், ஜெனீவா நகரங்களில் உள்ள அலுவலகங்களிலும் பன்னாட்டு தொழில் அமைப்பாலும் (ILO) வழங்கப்படுகிறது. இந்தக் கடவுச் சீட்டு ஐநா மற்றும் பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பு அலுவலர்களுக்கு மட்டுமன்றி பிற பன்னாட்டு அமைப்புகளான உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், உலக வங்கி போன்றவற்றின் அலுவலர்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஆவணம் ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் எழுதப்படுகிறது. ஐநா கடவுச்சீட்டு செல்லத்தக்க ஓர் பயண ஆவணமாகும். ஐநா திட்டங்களுக்கானப் பணியில் செல்வோர் இதனை தங்கள் தேசியக் கடவுச்சீட்டினைப் போலவே பயன்படுத்தலாம். தேசியக் கடவுச்சீட்டுக்களைப் போலவே சில நாடுகள்/மண்டலங்கள் (காட்டாக, கென்யா, ஐக்கிய இராச்சியம், செஞ்சென் பகுதி, லெபனான் போன்றன) இந்தக் கடவுச் சீட்டு வைத்திருப்போருக்கு நுழைவிசைவு (விசா) தேவையை விலக்கியுள்ளன. பெரும்பாலான நாடுகளில் நுழைவிசைவைப் பெற வேண்டும். இந்தத் தேவை கடவுச்சீட்டு வைத்துள்ளவர் எந்த நாட்டினராக இருப்பினும் வலியுறுத்தப்படுகிறது. பெரும்பாலான ஐநா கடவுச்சீட்டுக்கள் நீல வண்ணத்தில் உள்ளன. இவை சேவை கடவுச்சீட்டுகளாகும். இவற்றில் தூதுப்பணி நுழைவிசைவு இடப்பட்டாலே தூதக ஏமங்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகளுக்கு சிவப்பு நிற கடவுச்சீட்டு வழங்கப்படுகின்றன. இவை தூதக கடவுச்சீட்டுகளுக்கு இணையானவை. இவர்களுக்கு முழு தூதக உரிமைகள் வழங்கப்படுகின்றன. கனக ஹேரத் கனக ஹேரத் ("Kanaka Herath", பிறப்பு: ஏப்ரல் 29, 1976), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் கேகாலைமாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இல, 76, ரத்னகிரி, மொலமூர் மாவத்தை, கேகாலையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் சென்னையில் மரினா கடற்கரையோரம் அமைந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக வளாகங்களில் முதன்மையானதாகும். இராபர்ட் ்பெல்லோஸ் சிஷோம் என்ற 19ஆம் நூற்றாண்டு கட்டிட வடிவமைப்பாளரால் இந்தோ-சார்சனிக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த வளாகம் முன்னதாக செனட் மாளிகை என அறியப்பட்டு வந்தது. இங்கு தரைத்தளத்தில் அமைந்துள்ள மைய மண்டபம் 130 அடி நீளமும் 58 அடி அகலமும் 54 அடி உயரமும் உடையது. மண்டபத்தின் புறத்தே உள்ள தாழ்வாரங்கள் ஆறு வலிய கற்தூண்களால் இருபுறமும் தாங்கப்பட்டுள்ளன. தூண்களுக்கு இடையே உள்ள கல் வளைவுகளும் கட்டிடத்தின் நான்கு புறமும் எழுந்துள்ள கோபுரங்களும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ள குவிமுக மாடங்களும் இக்கட்டிடத்திற்கு தனி மதிப்பை ஊட்டுவனவாக உள்ளன. வீ. கே. இந்திக்க வீ. கே. இந்திக்க ("V. K. INDIKA", பிறப்பு: சூலை 31, 1966), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் அம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். இசுர ருகுனு ரிதியகம அம்பாந்தோட்டையில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஜயலத் ஜயவர்தன ஜயலத் ஜயவர்தன ("Jayalath Jayawardena", ஆகத்து 16 1953 - மே 29, 2013), இலங்கை அரசியல்வாதியும், மருத்துவரும் ஆவார். இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் குறித்து குரல் கொடுத்து வந்தவர். இவர் 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கம்பகா மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். 2000, 2001, 2004 தேர்தல்களிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றிருந்தார். கந்தானை டி மெசெனாட் கல்லூரியின் பழைய மாணவரான ஜயவர்தன கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்று மருத்துவரானார். ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் அமைப்பில் இணைந்து அரசியலில் இறங்கினார். 1994 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் முதற்தடவையாக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார். 2002 - 2004 காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசில் மீள்குடியேற்ற அமைச்சராகவும், இறக்கும் வரை நீர்கொழும்பு தமது கட்சியின் அமைப்பாளராகவும் பணியாற்றினார். 1998 ஆம் ஆண்டில் சிறுவர்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்தமைக்காக கிரீன் விருது இவருக்கு வழங்கப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் பன்னாட்டு நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராகப் பணியாற்றினார். நீண்டகாலமாக சுகவீனமுற்றிருந்த ஜயலத் ஜயவர்தன சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்த சமயம் அங்கு 2013 மே 29 இல் காலமானார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். சந்திராணி பண்டார ஜயசிங்க சந்திராணி பண்டார ஜயசிங்க ("Chandrani Bandara Jayasinghe", பிறப்பு: சூலை 24 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் அநுராதபுர மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று பெண்கள் மற்றும் சிறார் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இல, 138/2, ஹெவலோக் வீதி, கொழும்பு 05 வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர், ஆர்தர் ஜோன்ஸ் ஆர்தர் ஜோன்ஸ் ("Arthur Jones )", பிறப்பு: ஆகத்து 16 1872, இறப்பு: திசம்பர் 21 1914) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 472 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1899 - 1909 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பாம்பாட்டம் பாம்பு ஆட்டம் என்பது ஒரு தமிழர் ஆடற்கலை. பாம்பு போன்ற வேடம் அணிந்து, பாம்பின் அசைவுகளை போன்றும் இந்த ஆட்டம் அமைகிறது. பரதநாட்டியத்தில் இடம்பெறும் பாம்பாட்டமும், இந்த நாட்டுப்புறக் கலையை அடிப்படையாகக் கொண்டதே ஆகும். ஜெரேன்ட் ஜோன்ஸ் ஜெரேன்ட் ஜோன்ஸ் ("Geraint Jones", சூலை 14 1976 , இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 34 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 49 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 126 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 149 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 - 2006 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சற்றம் இல்ல விதி கருத்தரங்கம் ஒன்று அல்லது அந் நிகழ்வின் ஒரு பகுதி சற்றம் இல்ல விதி ("Chatham House Rule") முறையில் நடைபெறுகின்றது என்று அறிவிக்கப்படின், அக் கருத்தரங்கில் பங்குகொள்ளும் ஒருவர் மேற்படி கருத்தரங்கில் கருத்துரை வழங்கும் பேச்சாளரினதோ அல்லது அக் கருத்தரங்கில் பங்குகொள்ளும் ஏனையவர்களினதோ பெயர், அவர் சார்ந்த அமைப்பு போன்ற தனிநபர் தகவல்கள் எவற்றையும் குறிப்பிடாமல் அக் கருத்தரங்கில் தாம் பெறும் கருத்துரைகளைச் சுதந்திரமாகப் பயன் படுத்தலாம். கருத்தரங்கொன்றில் பரிமாறப்படும் கருத்துக்கள் பற்றிய செய்தி அறிவிப்பில் சற்றம் இல்ல விதிமுறை கடைப்பிடிக்கப்படுவது மிகச் சாதாரணமானது. கருத்தரங்கொன்றில் வெளிப்படுத்தப்படுகின்ற செய்திகள், கருத்துக்கள், குறிப்புக்கள் போன்றவை ஊடகங்கள் மூலம் பரம்பலடையும்போது புகழ்பெற்ற இவ் விதி இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஒருவர் தனது கருத்தை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்வதை சற்றம் இல்ல விதிமுறை நோக்கமாகக் கொண்டதுடன் அவ்வாறான கருத்துப் பரிமாற்றத்தினை துணிச்சலாக முன்வைப்பதையும் சற்றம் இல்ல விதிமுறை ஊக்குவிக்கின்றது. இவ் விதி சுதந்திரமான, பகிரங்கமான கருத்துப் பரிமாற்றத்திற்கும் பேச்சாளரின் அடையாளங் காட்டமைக்கும் வழிசமைக்கின்றது. மனிதர்கள் தமது கருத்துக்களை வெளிப்படையாகக் கூறமுடிகிறது. தமது கருத்து வெளியுலகில் பகிரங்கமாகச் சொல்லப்படும் என்று பயங்கொண்டு அதைவிடச் சொல்லாதிருப்பதே மேல் என்று நினைப்பவர்கள் தாம் கருதுவதை வெளிப்படையாகப் பேசுவதற்கும் சற்றம் இல்ல விதிமுறை துணை செய்கின்றது. அன்றியும் அங்கீகாரத்திற்கோ அல்லது உறுதிப்படுத்தலுக்கோ அவசியமின்றி, பகிரப்பட்ட ஆலோசனைகள், கருத்துக்கள், பரிந்துரைகள் போன்றவை விரும்பியவர்களால் உடனடியாகவே எடுத்துக் கொள்ளப்படலாம்: மேலும் பரிசீலிக்கப்படலாம். ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம் ஐக்கிய நாடுகள் நைரோபி அலுவலகம் (United Nations Office at Nairobi, UNON) ஐநாவின் நான்கு முதன்மை அலுவலக வளாகங்களில் ஒன்றாகும். கென்யாவின் நைரோபியில் அமைந்துள்ள இவ்வளாகத்தில் பல்வேறு ஐநா அமைப்புகளும் முகமைகளும் அலுவலகங்களைக் கொண்டுள்ளன. இங்கு ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம், UN-HABITAT திட்டங்களின் தலைமையகம் அமைந்துள்ளன. இந்த வளாகம் கரூரா வனத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் நிழற்சாலையில் நைரோபியின் அமெரிக்க தூதரகத்திற்கு எதிராக அமைந்துள்ளது. 2004ஆம் ஆண்டின் நவம்பரில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை தெற்கு மற்றும் மேற்கு சூடான் குறித்து விவாதிக்க மிக அரிதாக தனது அமர்வை இங்கு நடத்தியது. இந்த அமர்வு அப்போதைய அமெரிக்கத் தூதர் ஜான் டான்போர்த்தின் வற்புறுத்தலால் நடந்தது நைரோபியை தலைமையகமாகக் கொண்டவை: நைரோபியில் உள்ளவை: ஜெஃப் ஜோன்ஸ் ஜெஃப் ஜோன்ஸ் ("Jeff Jones )", பிறப்பு: திசம்பர் 10 1941), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 198 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1964 - 1968 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சைமன் ஜோன்ஸ் சைமன் ஜோன்ஸ் ("Simon Jones )", பிறப்பு: திசம்பர் 25 1978), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 89 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 35 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹாரி ஜுப் ஹாரி ஜுப் ("Harry Jupp", பிறப்பு: நவம்பர் 19 1841, இறப்பு: ஏப்ரல் 8 1889) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 378 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வேலன்ஸ் ஜுப் வெலன்ஸ் ஜுப் ("Vallance Jupp", பிறப்பு: மார்ச்சு 27 1891, இறப்பு: சூலை 9 1960) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 529 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 - 1928 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பேராக் மனிதன் பேராக் மனிதன் ("Perak man") என்பது மலேசியா வின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் எனும் ஊரில் 1938 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மனித எலும்புக் கூட்டுக்கு உரிய மனிதனின் பெயராகும். அந்த எலும்புக் கூடு உட்கார்ந்த நிலையில் இருந்தது. அதன் வயது 40 லிருந்து 45 க்குள் இருக்கும் என்று கணக்கிட்டு உள்ளார்கள். அதன் எலும்பு உறுப்புகள் சிதைவுகள் இல்லாமல் நல்ல நிலையில் இருந்தன. பேராக் மனிதனின் எலும்புக் கூடு 11,000 ஆண்டுகள் பழமையானது. அதற்கு அருகாமையில் 2004 ஆம் ஆண்டில் 8,000 ஆண்டுகள் பழமையான ஒரு பெண்ணின் எலும்புக் கூடும் கண்டுபிடிக்கப் பட்டது. மலாயாவில் கண்டுபிடிக்கப் பட்ட மனித எலும்புக்கூடுகளில் இவை இரண்டும் தான் மிக மிகப் பழமையானவை. இந்த எலும்புக் கூடுகள் ஆஸ்திரேலிய பூர்வீக மக்களினமான ஆஸ்திரேலோ மெலனெசோயிடு (Australo-Melanesoid) இனத்துக்குரியது என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். இந்த இனத்தைச் சார்ந்த மனிதர்கள் பசிபிக் மாக்கடல் தீவுகளில் வாழ்கின்றனர். லெங்கோங் மலேசியா வின் பேராக் மாநிலத்தில் லெங்கோங் ("Lenggong") பட்டணம் இருக்கிறது. இது ஒரு சிறிய கிராமப் புறப் பட்டணம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 100 கி.மீ. வடக்கே உள்ளது. கோலகங்சார் பட்டணத்தில் இருந்து கிரிக் பட்டணத்திற்குப் போகும் வழியில் இந்தப் பட்டணம் அமைந்து இருக்கிறது. தீபகற்ப மலேசியாவில் அகழ்வாராய்ச்சிக்கு மிகவும் புகழ் பெற்ற இடம். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இங்கே வாழ்ந்து இருக்கிறார்கள். அந்த மனிதர்களின் எலும்பு கூடுகளில் சில கிடைத்து உள்ளன. ஓர் எலும்புக் கூட்டிற்குப் பேராக் மனிதன் எலும்புக் கூடு என்று பெயர் வைக்கப் பட்டு உள்ளது. அது 11,000 ஆண்டுகள் பழமையானது. இந்தப் பட்டணத்தைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்பு குன்றுகளும் மலைகளும் உள்ளன. ரப்பர் செம்பனைத் தோட்டங்களும் உள்ளன. இங்குள்ள காடுகள் 90 இலட்சம் ஆண்டுகள் பழமையானவை. இங்கே சீனர்கள் அதிகமாக வாழ்கிறார்கள். லெங்கோங் நகரை ஒரு திறந்த வெளி கண்காட்சியகம் என்று அழைப்பதும் உண்டு. பழங்காலத்தில் பயன் படுத்தப் பட்ட மண் பாண்டங்கள், ஆயுதங்கள், கல் ஆயுதங்கள் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப் பட்டு உள்ளன. கனடியப் பழங்குடி மக்கள் கனடாவின் பழங்குடி மக்கள் என்பது ஐரோப்பியர்கள் கனடாவிற்கு குடியேற வர முன்பு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக இங்கு வாழ்ந்த மக்கள் ஆவர். இவர்கள் பல நாடுகளைக் சார்ந்தவர்களாக, பல மொழிகளை, பண்பாடுகளை, தொழில்நுட்பங்களை, சமூகப் பொருளாதார முறைமைகளைக் கொண்டவர்களாக இருந்தார்கள். இன்று இவர்கள் முதற் குடிமக்கள், இனுவிட், மேட்டிசு மூன்று வகையா அடையாளம் படுத்தப்படுகிறார்கள். 2006 புள்ளிவிபரங்களின் படி, கனடாவின் மொத்த சனத்தொகையில் 1,172,790 அல்லது 3.8% விழுக்காட்டு மக்கள் பழங்குடிகள் ஆவர். இதில் 600 தனித்துவமான முதற்குடி அரசுகள், அவர்களின் தனித்துவமான பண்பாடு, மொழி, கலைகளோடு இருக்கிறார்கள். முதலில் வந்த ஐரோப்பியர்கள் இந்தக் குளிர் தேசத்தில் எவ்வாறு தப்பிப் பிழைத்தல் என்பதை பழங்குடி மக்களிடம் இருந்தே கற்றுக் கொண்டார்கள். எனினும் தொடர்ந்த ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஆதிக்கமும் இவர்களின் மக்கள் தொகையையும் வாழ்வியலையும் சிதைத்தது. ஐரோப்பியர் வந்தபோது தனிச் சொத்துரிமை என்ற கருத்துருவையே கொண்டிக்கா இந்த மக்களிடம் இருந்து பெரும் நிலப் பகுதிகளை மிகக் சொற்ப கைமாற்றுக்குப் பெற்றுக் கொண்டார்கள். ஐரோப்பியர்களை இவர்கள் எதிர்த்தார்கள் என்றாலும், தொழில்நுட்பத்திலும் ஒழுங்கமைப்பிலும் மேம்பட்டு இருந்த ஐரோப்பியர்கள் இவர்களை வெற்றி கொண்டார்கள். பண்பாட்டு assimilation கொள்கையை வலியுறுத்திய ஐரோப்பிய கனேடிய அரசுகளால் இவர்களில் கணிசமான பகுதியினர் கட்டாயமாக கிறித்தவ சமயத்துக்கு சமயம் மாற்றப்பட்டார்கள், கிறித்தவ கல்லூரிகளில் கட்டாயப் கல்வி பெற்றார்கள். இவர்களின் வாழ்வியல் பொருளாதார மூலங்கள் சிதைக்கப்பட்டதால் இவர்கள் கனேடிய அரசைத் தங்கி வாழும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளார்கள். டிக்கம்சா டிக்கம்சா ("Tecumseh", மார்ச் 1768 - ஒக்டோபர் 5, 1813) அமெரிக்கப் பழங்குடி மக்களின் தலை சிறந்த தலைவர்களில் ஒருவர். ஐரோப்பியர்கள் கிழக்கு அமெரிக்காவை ஆக்கிரம்பிப்பதற்கு எதிராக மிகப் பலமான பழங்குடி மக்களின் கூட்டு எதிர்ப்பை இவர் ஒருங்கிணைத்தார். இவர் தாம் இந்த நிலத்தை பொதுவில் வைத்திருப்பதாகவும், ஒரு நபரோ அல்லது குலமோ இந்த நிலத்தை பிறரின் இணக்கம் இல்லாமல் விட்டுக்கொடுக்க முடியாது என்றும் வாதிட்டார். இறுதியில் இவர் தோற்றார் எனினும் இவரதும் எதிர்ப்பும், இவரது கருத்துக்களும் இன்றும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. தொடர்மொழி - மகரம் மயங்காதவை தொல்காப்பியர் சொற்களை மொழிநிலையில் மூன்றாகப் பகுத்துக்காட்டுகிறார். ஓரெழுத்தொருமொழி, ஈரெழுத்தொருமொழி, இரண்டிறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன அந்த 3 பாகுபாடுகள். தொடர்மொழி என்பது இரண்டு மாத்திரைகளுக்கு மேல் ஒலிக்கும் சொல். தொல்காப்பியர் னகரத்தில் முடியும் அஃறிணைப் பெயர்ச்சொற்களை இந்த நூற்பாவில் வரையறை செய்கிறார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். பொதுவாக ம் எழுத்தில் முடியும் சொல் ன் என்னும் எழுத்தாக உயிரெழுத்தோடு இணையும்போது மாறும். இப்படி ம், ன் மயங்காத அஃறிணைப்பெயர் ஒன்பது எனத் தொல்காப்பியர் வரையறை செய்கிறார். இந்த நூற்பாவுக்கு உரையாசிரியர்கள் எடுத்துக்காட்டு தருகின்றனர். தொடர்மொழியைத் தொல்காப்பியர் 'இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி' என்று விளக்கத்தோடு குறிப்பிடுகிறார். இரண்டு மாத்திரையின் மிக்கு ஒலிப்பது என்பது இதன் வெளிப்படையான பொருள். தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் தரும் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் ஓரசைச் சொற்கள். வட்டம் என்னும் சொல் வட்டன் என்று வராது என்று எடுத்துக்காட்டு தரும் உரை இங்கு வேண்டாத ஒன்று. டோரா போரா டோரா போரா என்பது கிழக்கு ஆப்கானித்தானில் நங்ககார் மாநிலத்தில் பாச்சிர் வா அகம் மாவட்டத்தில் பாக்கித்தான் வடக்கு எல்லையில் இருந்து 10 கி.மீ தூரத்திலுள்ள குகை ஆகும். இது வெள்ளை மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த மலைக்குகையிலேயே பின் லாடன் மறைந்து வாழ்ந்ததாகக் கருதப்பட்டது. டொமினிக் ஸ்ட்ராஸ்-கான் டொமினிக் காஸ்டோன் ஆண்ட்ரெ ஸ்ட்ராஸ் கான் (Dominique Gaston André Strauss-Kahn, ; பிறப்பு 25 ஏப்ரல் 1949, பரப்பு ஊடகங்களில் பெரும்பாலும் DSKஎனக் குறிப்பிடப்படுபவர்), ஓர் பிரெஞ்சு பொருளியலாளர், வழக்கறிஞர், மற்றும் பிரான்சின் சோசலிசக் கட்சியைச் சார்ந்த அரசியல்வாதி. செப்டம்பர் 28, 2007ஆம் ஆண்டு பன்னாட்டு நாணய நிதியம் பிரச்சினைகளில் தடுமாறியபோது பிரான்சின் அதிபர் நிக்கொலா சார்கோசியின் ஆதரவுடன் அதன் மேலாண் இயக்குனராக பதவியேற்றார். பாரிசிலுள்ள பாரிசு அரசறிவியல் கல்விக் கழகத்தில் (Institut d'Études Politiques de Paris) பொருளியல் பேராசிரியராக உள்ளார். 1997 முதல் 1999 வரை லியோனல் யோசுபின்னின் இடதுசாரி ஆட்சியில் நிதி மற்றும் பொருளாதார அமைச்சராக இருந்தார். பிரெஞ்சு அரசியலில் "நடு-இடது" கட்சியான சோசலிசக் கட்சி(PS)யில் வலது நோக்குடையவராக இருந்தார். 2007ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தெரிந்தெடுக்கும் கட்சித் தேர்தலில் நவம்பர் 2006இல் செகோலீன் ராயலிடம் தோற்றார். மே 15, 2011 அன்று நியூயார்க் தங்குவிடுதியில் விடுதிப்பணிப்பெண்ணை பாலியல் வன்முறை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். உம்மன் சாண்டி உம்மன் சாண்டி (Oommen Chandy, ) (பிறப்பு 31 அக்டோபர் 1943 கேரளாவில் புதுப்பள்ளி) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராவார். 2004 முதல் 2006 வரை கேரளாவின் முதலமைச்சராகப் பணியாற்றி உள்ளார். 2006 முதல் 2011 வரை கேரளச் சட்டப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துள்ளார். 2011 ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில், காங்கிரசு தலைமையேற்ற "ஐக்கிய சனநாயக முன்னணிக்கு" அறுதிப் பெரும்பான்மை கிட்டியதை அடுத்து இரண்டாம் முறையாக கேரள முதலமைச்சராகப் பொறுப்பேற்று உள்ளார் கலைச்சுடர் (சிற்றிதழ்) கலைச்சுடர் இலங்கை வெலிகமையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழில் ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், அறிவியல் கருத்துகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. கவிஞன் (சிற்றிதழ்) கவிஞன் இலங்கை, கிழக்கு மாகாணம், கல்முனையிலிருந்து 1969ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் கவிதைகளை பிரதானமாகக் கொண்டிருந்தது. கிழக்கிலங்கையைச் சேர்ந்த பல ஆரம்ப நிலைக் கவிஞர்கள் இதில் தமது கவிதைகளை படைத்திருந்தனர். கலைமுரசு (சிற்றிதழ்) கலைமுரசு கிழக்கு இலங்கை சம்மாந்துறையிலிருந்து 1961ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழில் ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், அறிவியல் கருத்துகள், வினாவிடை பகுதிகள், குறுக்கெழுத்துப் போட்டி, வாசகர் கருத்துகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. கவிதை (சிற்றிதழ்) கவிதை இலங்கை கொழும்பிலிருந்து 1973ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழ் கவிதைகளை பிரதானமாகக் கொண்டிருந்தது. மூத்த கவிஞர்களும் அறிமுகக் கவிஞர்களும் இதில் பங்களிப்பு வழங்கியிருந்தனர். களஞ்சியம் (இதழ்) களஞ்சியம் மலேசியாவிலிருந்து 1950ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும். இவர் கூத்த நல்லூரைச் சேர்ந்தவர். இதுவொரு நாளிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இடைக்கிடையே சிறுகதைகள், கவிதைகள் இடம்பெற்றன. விரிவான ஆய்வுக் கட்டுரைகளும், புதினங்களும் இடம்பெற்றிருந்தன. நெவில் நொக்ஸ் நெவில் நொக்ஸ் ("Neville Knox", பிறப்பு: அக்டோபர் 10 1884, இறப்பு: மார்ச்சு 3 1935) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 2தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 88 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1907 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அலன் நொட் அலன் நொட் ("Alan Knott", பிறப்பு: ஏப்ரல் 9 1946) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 95 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 511 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 317 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1967 - 1981 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். நிக் நைட் நிக் நைட் ("Nick Knight", பிறப்பு: நவம்பர் 28 1969, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 100ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1996 - 1997 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அலன் லேம்ப் அலன் லேம்ப் ("Allan Lamb", பிறப்பு: சூன் 20 1954) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 79 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 122 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 467 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 484 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1982 - 1992 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேம்ஸ் லென்கிறிட்ஜ் ஜேம்ஸ் லென்கிறிட்ஜ் ("James Langridge", பிறப்பு: சூலை 10 1906, இறப்பு: செப்டம்பர் 10 1966) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எட்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 695 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1933 - 1946 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொனால்ட் நைட் டொனால்ட் நைட் ("Donald Knight", பிறப்பு: மே 12 1894, இறப்பு: சனவரி 5 1960) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 139 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1921 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வெய்ன் லார்க்கின்ஸ் வெய்ன் லார்க்கின்ஸ் ("Wayne Larkins", பிறப்பு: நவம்பர் 22 1953, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 482 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 485 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். அல்பிரட் நைட் அல்பிரட் நைட் ("Albert Knight", பிறப்பு: அக்டோபர் 8 1872, இறப்பு: ஏப்ரல் 25 1946) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 3தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 391 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1904 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பெரி நைட் பேரி நைட் ("Barry Knight", பிறப்பு: பிப்ரவரி 18 1938), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 29 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 379 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1961 - 1969 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் லார்ட்டர் டேவிட் லார்ட்டர் ("David Larter", பிறப்பு: ஏப்ரல் 24 1940, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 182 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1962 - 1965 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேம்ஸ் கர்ட்லி ஜேம்ஸ் கர்ட்லி ("James Kirtley", பிறப்பு: சனவரி 10 1975, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 11 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 170 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 253 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2003 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். செப் கின்னியர் செப் கின்னியர் ("Sep Kinneir", பிறப்பு: மே 13 1871, இறப்பு: அக்டோபர் 16 1928) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 1தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 312 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1911 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோன் கிங் ஜோன் கிங் ("John King )", பிறப்பு: ஏப்ரல் 16 1871, இறப்பு: நவம்பர் 18 1946) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 1தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 552 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1909 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹரால்ட் லார்வூட் ஹரால்ட் லார்வூட் ("Harold Larwood", பிறப்பு: நவம்பர் 14 1904, இறப்பு: சூலை 22 1995) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 361 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1926 - 1933 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ராய் கில்னர் ராய் கில்னர் ("Roy Kilner", பிறப்பு: மே 9 1907, இறப்பு: மே 18 1953) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொம் கிள்ளிக் டொம் கிள்ளிக் ("Tom Killick", பிறப்பு: மே 9 1907, இறப்பு: மே 18 1953) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 92 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1929 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அம்ஜாத் கான் அம்ஜாத் கான் ("Amjad Khan )", பிறப்பு: அக்டோபர் 14 1980 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 75 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 56 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2009 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ரொபர்ட் கீ ரொபர்ட் கீ ("Robert Key )", பிறப்பு: மே 12 1979, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 15 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 224 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 194 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2002 - 2005 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டொன் கென்யொன் டொன் கென்யொன் ("Don Kenyon", பிறப்பு: மே 15 1924, இறப்பு: நவம்பர் 12 1996) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 8தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 643 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1955 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அலெக் கென்னடி அலெக் கென்னடி ("Alec Kennedy", பிறப்பு: சனவரி 24 1891, இறப்பு: நவம்பர் 15 1959) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 677 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1922 - 1923 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வால்டர் கீட்டன் வால்டர் கீட்டன் ("Walter Keeton", பிறப்பு: ஏப்ரல் 30 1905, இறப்பு: அக்டோபர் 10 1980) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 397 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1934 - 1939 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மார்க் லாத்வெல் மார்க் லாத்வெல் ("Mark Lathwell", பிறப்பு: திசம்பர் 26 1971), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 156 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1993 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் லோரன்ஸ் டேவிட் லோரன்ஸ் ("David Lawrence ", பிறப்பு: சனவரி 28 1964 ), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1988-1992 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எட்டி லெட்பீட்டர் எட்டி லெட்பீட்டர் ("Eddie Leadbeater", பிறப்பு: ஆகத்து 15 1927, இறப்பு: ஏப்ரல் 17 2011.) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்,118 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கனியமுதம் (சிற்றிதழ்) கனியமுதம் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். தீன் சுடர் இசுலாமிய அடிப்படையைக் கொண்டு பல்வேறுபட்ட இலக்கிய ஆக்கங்களும், கோட்பாட்டு ரீதியான விளக்க ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. கஸ்புர்ரான் அன் கல்பில் ஜான் (சிற்றிதழ்) கஸ்புர்ரான் அன் கல்பில் ஜான் இலங்கை கொழும்பிலிருந்து 1889ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இவர் காயல்பட்டணத்தை சேர்ந்தவர். கஸ்புர்ரான் அன் கல்பில் ஜான் என்றால் சந்தேகநிவர்த்தி என பொருள்படும். இவ்விதழ் ஓர் அரபுத் தமிழ் இதழாக வெளிவந்துள்ளது. கையெழுத்தில் எழுதி, கல்லச்சில் பதிக்கப்பட்டுள்ளது. 19ம் நூற்றாண்டு சூழ்நிலைக்கமைய இதன் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக கஸீதாக்கள் எனப்படும் பாக்கள், இசுலாமிய அறிஞர்கள் பற்றி புகழ்பாடும் பாக்கள் இசுலாமிய கொள்கை விளக்க ஆக்கங்கள் ஆகியன இடம்பெற்றுள்ளன. காம்ரோடு (சிற்றிதழ்) காம்ரோடு இந்தியா திருச்சியிலிருந்து 1940ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும். இதுவொரு இலக்கிய இதழ் என்றடிப்படையில் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டிருந்தன. காயிதே மில்லத் (சிற்றிதழ்) காயிதே மில்லத் இந்தியாவிலிருந்து இரண்டு மாதங்களுக்கொரு முறை வெளிவந்த இதழாகும். இளைய தலைமுறைக்கான எழுச்சிக் கீதம் 'காயிதே மில்லத்' என்றால் 'சமுதாய வழிகாட்டி' என பொருள்படும் காயிதே மில்லத் நற்பணி மன்றம் இசுலாமிய அடிப்படையிலான கட்டுரைகள், இலக்கிய கட்டுரைகள், இளைஞர்களை விழித்து எழுதப்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகள், கதைகள். ஆகியன இடம்பெற்றிருந்தன. குர்ஆனின் குரல் (சிற்றிதழ்) குர்ஆனின் குரல் இந்தியா. மதுரையிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இஸ்லாமியக் கலை ஞானத் திங்கள் இதழ் இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களான ஈமான் எனும் இறைவிசுவாசம், தொழுகை. நோன்பு, சகாத் எனும் ஏழை வரி, ஹஜ் போன்ற கடமைகள் பற்றிய விளக்கக் கட்டுரைகளும் இசுலாமியர்களின் வேத நூலான அல்குர்ஆன் பற்றிய விளக்கங்களையும் இது கொண்டிருந்தது. கூவ்வத் (சிற்றிதழ்) கூவ்வத் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1972ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழில் தரமான அறிவியல் ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன். கவிதைகளும், சிறுகதைகளும், விவரணங்களும், நூல் ஆய்வுகளும் இடைக்கிடையே வெளிவந்துள்ளன. சத்திய ஜோதி (சிற்றிதழ்) சத்திய ஜோதி இந்தியா, காரைக்காலிலிருந்து 1977ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும். https://www.facebook.com/sathyajothimagazine இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்கும், இசுலாமிய இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சம்சுல் அக்பர் (சிற்றிதழ்) சம்சுல் அக்பர் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து வெளிவந்த ஒரு மாத இதழாகும். 'சம்சுல் அக்பர்' என்றால் 'பெரிய சூரியன்' என்று பொருள்படும் இசுலாமிய அடிப்படையில் அமைந்த கட்டுரைகளுக்கும், இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சம்சுல் ஈமான் (சிற்றிதழ்) சம்சுல் ஈமான் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1888ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். முகம்மது யூசப் சம்சுல் ஈமான் என்ற அரபுப் பதம் நம்பிக்கை சூரியன் என்ற பொருளைத்தரும். இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சம்சுல் ஹுதா (சிற்றிதழ்) சம்சுல் ஹுதா மன்னார்குடியிலிருந்து 1931ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இதன் ஆசிரியர் "முஹம்மது யூசுப் பாவலர்" என்பவராவார். சம்சுல் ஹுதா என்றால் நேர்வழிச் சூரியன் என்று பொருள்படும். இவ்விதழ் இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்கும், இசுலாமிய இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சமரசம் ( 1937 சிற்றிதழ்) சமரசம் இந்தியா, திருச்சியிலிருந்து 1937ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இசுலாமிய அடிப்படைக் கருத்துகளுக்கும், இசுலாமிய இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. வசந்தம் (சிங்கப்பூர் தொலைக்காட்சி) வசந்தம் (MediaCorp TV12 Vasantham) என்பது சிங்கப்பூரில் தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் கட்டணமில்லா தொலைக்காட்சிச் சேவை ஆகும். இது 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான மீடியாகார்ப் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படுகிறது. லேய்டின் கொள்கலன் லேய்டின் கொள்கலன் (Leiden jar), என்பது நிலை மின்னை சேமித்துவைக்கும் ஒரு உபகரணமாகும். இதன் உட்புறமும் வெளிப்புறமும் காணப்படும் இரு மின்வாயிகளுக்கிடையில் மின் சேமிக்கப்படுகிறது. இந்த உபகரணம் தனித்தனியே சேர்மன் அறிவியலாளரான ஈவாட் ஜோர்ச் வொன் கிளேஸ்டினால் ஒக்டோபர் 1744 இலும் டச்சு அறிவியலாளரான லேடினைச் சேர்ந்த பீட்டர் வான் மஸன்புரோக் என்பவரால் 1745–1746 காலப்பகுதியிலும் கண்டறியப்பட்டது. இதன் வகைமாதிரியான கட்டமைப்பு கண்ணாடிக் கொள்கலன் ஒன்றையும் அதனோடு இணைந்து உள், வெளி மேற்பரப்புகளைத் தொடும் உலோக இழைகளையும் கொண்டது. உலோக இழைகள் மின்னேற்றமடைவதைத் தடுப்பதற்காக கொள்கலனின் வாய்க்குக் கீழாக அது மட்டுப்படுத்தப்படும். அதிலிருந்து கொள்கலனின் வாய்க்கு வெளியே நீட்டியதாக ஒரு மின்வாயி பொருத்தப்படும். மின்வாயி சங்கிலி மூலம் உட்புற உலோக இழைக்கு பொருத்தப்பட்டு மின்பிறப்பாக்கி உடன் இணைக்கப்பட்டு மின்னேற்றமடைய விடப்படும். இதன்போது வெளிப்புற உலோக இழை புவித்தொடுப்பு செய்யப்படும். இதன் மூலம் உள்,வெளி இழைகளில் சம அளவிலான ஆனால் ஒன்றுக்கொன்று எதிரான ஏற்றங்கள் தேக்கமடையும். வங்கவராசி வங்கவராசி (அ) பம்பாய் வாத்துமீன் ("Bombay Duck") அல்லது பம்மலு என்னும் மீன் இந்தியக்கடல் பகுதியான அரபிக்கடலில் மிக அதிக அளவில் கிடைக்கிறது. இதன் அறிவியல் பெயர் "எர்படோன் நெகரியசு" என்பதாகும். இது ஒரு பொருளாதார முக்கியத்துவமுள்ள மீனாகும். இதை வங்காளத்தில் பம்மலோ அல்லது லோட்டா, குசராத்தியில் பம்மலா மற்றும் மராத்தியில் பாம்பில் எனவும் அழைக்கப்படுகிறது. இது இந்தியக் கடற்பரப்பில் வடபகுதியிலேயே அதிகமாகக் கிடைக்கிறது. இது சீனக்கடற் பரப்பில் அதிகமாக பிடிக்கப்படுகிறது. இதைப் பெரும்பாலும் கருவாடாகவேப் பயன்படுத்துகின்றனர். இதை சீனமொழியில் லாங் டௌ யூ என அழைக்கிறார்கள். இதைப்பிடிக்க தூரிவலை (மடிவலை)களையே (வலைக்கண்ணளவு - 20 மி.மி., நீளம் - 35 - 60 மீ) அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். இதை 45 கி.மீ. உட்பட்ட 18 முதல் 40 மீ ஆழ்முள்ள கடற்பகுதிகளிலேயே அதிகமாகப் பிடிக்கின்றனர். கார்த்திகை - மார்கழி (நவம்பர் - டிசம்பர்) மாதங்களே அதன் உச்சபருவக் காலமாகும். இது ஏற்றுமதியில் மதிப்புள்ள மீனாகும். இதை கருவாடாக மாற்றி காற்றுப்புகா கொள்கலன்களில் அடைத்து ஏற்றுமதி செய்கின்றனர். இது இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் மத்தி மற்றும் கானாங்கெளுத்தி மீனிற்கு அடித்தப்படியாக வணிக முக்கியத்துவமுள்ள மீனாகும். இதன் ஆரோக்கியம் குறித்து எழுந்த ஐயத்தின் காரணமாக ஐரோப்பியப் பகுதிகளில் சிலக்காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது. பின்பு அதன் குறைகள் ஓரளவிற்கு சரிசெய்யப்பட்டு ஏற்றுமதி தொடர்ந்த வன்னம் உள்ளது. இது ஒரு வகையான பல்லிமீனாகும். இது "சினோடாண்டிடே" என்னும் மீன் குடும்பத்தைச் சார்ந்தவை. இது இந்திய - மேற்குபசிபிக் கடற்பகுதிகளைத் பிறப்பிடமாகவும் இந்தியாவை ஒட்டியுள்ள அரேபிய வளைகுடாககளிலும் தென்கிழக்குக் கடற்பகுதிகளான தெற்குசீனா மற்றும் அதனை ஒட்டியுள்ள கடற்பகுதிகளை நிலையான வாழ்விடமாகக் கொண்டுள்ளது. இது பெரும்பான்மையான ஆழ்கடல் மீன்களுக்கு ஒத்த உருவப்பண்புகளைப் பெற்றிருக்கிறது. இதன் வாய் அகண்டும் உடலில் அதிகப்படியான ஊன்பசை நிறைந்து குழகுழப்பாகவும் சுண்ணாம்புக் குறைவாக உள்ள எலும்புகளால் ஆன மீனாகும். இதற்கு நின்றொளிர்வு (Phosphorescence) தன்மையும் காணப்படுகிறது. இது முதலில் ஆழ்கடல் மீனாகவும் பிற்காலத்தில் படிப்படியாக நகர்ந்து ஆழமற்ற கடல்பகுதிகளிலும் கழிமுகங்களிலும் வாழும் தன்மையுடையதாக மாற்றம் பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் தமிழ் பெயர்த்தோற்றம் குறித்து உண்மைக்கருத்துக்கள் அறியப்படவில்லை. இது வங்காளத்தை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் மட்டும் அதிகம் கிடைக்கப் பெறுவதால் இது வங்கவராசி எனப் பெயர்ப் பெற்றிருக்கலாம் என அறியப்படுகிறது. ஆங்கிலத்தில் இதன் பெயர்த்தோற்றத்திற்கு இதன் மணம் ஒரு முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இம்மீன்களை ஆங்கிலேயர் காலத்தில் பொதுவாக தொடர்வண்டிகளில் தான் எடுத்துச் சென்று விற்பனை செய்வது வழக்கம். அவ்வாறு எடுத்துச் செல்லும் மீனின் நாற்றமானது அது இருக்கும் பெட்டி முழுதும் மணம் வீசும். ஆங்கிலத்தில் பம்பாய் தொடர்வண்டியில் காணப்படும் பெட்டிகளை பம்பாய் டாக் (Bombay Dak) என அழைக்கபடுவதே பிற்காலத்தில் மருவி பம்பாய் டக்/பம்பாய் வாத்துமீன் என அழைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. தாழ்வாய் மேல்வாயைவிட பெரிதாகவும், முதுகுத்துடுப்பைத் தொடர்ந்து தெளிவான கொழுமியத் துடுப்பு காணப்படும். அடித்துடுப்பு/இடுப்புத்துடுப்பு பெரிதாகவும் குதத்துடுப்பு வரை நீண்டும் காணப்படுகிறது. பக்கவாட்டுக்கோடு நீண்டு வால்துடுப்பிற்கு இடையில் குத்திய இடைமடலாக காட்சியளிக்கிறது. பொதுவாக 10-30 செ.மீ. நீளமும் அதிகப்படியாக 40 செ.மீ நீளமும் உடையது. இது வெளிறிய வெள்ளை நிறத்திலேயே பொதுவாகக் காணப்படும். இது மும்பய் பகுதிகளுக்கும் கட்ச வளைகுடா பகுதிகளுக்கும் இடையில் உள்ள அரபிக்கடல் பகுதியில் பரவலாகவும் வங்கக் கடல் பகுதியில் குறைந்தளவே காணப்படுகிறது. அதுவும் வங்காளக் கடல்பகுதியிலியே இது காணப்படுகிறது. இது தமிழ் நாட்டிலும் அதன் ஒட்டிய கடல்பகுதிகளில் அரிதாகவே காணப்படுகிறது. உலகம் - ஆப்பிரிக்க கிழக்கு கடற்கரை, சான்சிபர் (Zanzibar) வடக்குப்பகுதிகளிலும், செங்கடல், கட்சவளைகுடா மற்றும் கிழக்கு மற்றும் மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதிகளிலும் பரவிக் காணப்படுகிறது. இம்மீன் குழம்புச் செய்யப் பொருந்தா மீனாகும். இவை ஊன்பசைப் புரதம் நிறைந்த உறுதியான எலும்புகளில்லா மீன் என்பதால் குழம்பில் பயன்படுத்தும் போது உடைந்து ஒரு கூழ்போல் ஆகிவிடும். இதைப் பெரும்பாலும் நன்கு வறுத்தே உண்கின்றனர். இட்லர் கோடு இட்லர் கோடு ("Hitler Line") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ஒன்று இட்லர் அரண்கோடு. இது குசுத்தாவ் கோட்டுக்குப் பின்புறம் அமைந்திருந்தது. குசுத்தாவ் கோட்டினை நேச நாட்டுப் படைகள் ஊடுருவினால், ஜெர்மானியப் படைகள் பின்வாங்க வசதியாக இது அமைக்கப்பட்டிருந்தது. மே 1944ல் இதற்கு “செங்கர் கோடு” என்று பெயர்மாற்றப்பட்டது. தனத் பெயர் இடப்பட்ட ஒரு நிலை வீழ்ந்தால் அது நேச நாட்டுத் தரப்புக்கு பெரும் பரப்புரை வெற்றியாகும் என்று எண்ணிய இட்லர், இதன் பெயரை மாற்ற உத்தரவிட்டார். அப்பகுதியின் ஜெர்மானியத் தளபதி ஜெனரல் வோன் செங்கர் என்பவரின் பெயர் இதற்கு இடப்பட்டது. மே 24, 1944 அன்று பிரித்தானிய 8வது ஆர்மியைச் சேர்ந்த கனடிய மற்றும் போலியப் படைப்பிரிவுகள் இட்லர் அரண்கோட்டினை ஊடுருவின. இதற்கு அடுத்து அமைந்திருந்த அரண் கோடு சீசர் கோடு என்றழைக்கப்பட்டது. குளிர்காலக் கோடு குளிர்காலக் கோடு ("Winter Line") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இது குசுத்தாவ் கோடு ("Gustav line") என்றும் அழைக்கப்பட்டது. செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் மிகவும் பலமானது “குளிர்காலக் கோடு”. இதன் முன்னால் (தெற்கில்) கூடுதல் பாதுகாவலுக்காக பெர்னார்ட் கோடும் பின்னால் (வடக்கில்) பின்வாங்கும் படைகளின் பாதுகாப்புக்காக இட்லர் கோடும் அமைக்கப்பட்டிருந்தன. குளிர்காலக் கோட்டின் முதன்மை அரண்நிலைகள் இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் கரிகிலியானோ ஆறு திரேனியக் கடலில் சேரும் இடத்திலிருந்து கிழக்குக் கடற்கரையில் சாங்க்ரோ ஆறு ஏட்ரியாட்டிக் கடலில் இணையும் இடம் வரை நீண்டிருந்தது. இக்கோட்டின் மையப் பகுதி, வட-தெற்காக ரோம் நகருக்குச் செல்லும் 6வது நெடுஞ்சாலையை ஒட்டி கசீனோ நகரைச் சுற்றியிருந்த குன்றுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. கசீனோ நகர் அமைந்திருந்த லிரி பள்ளத்தாக்கு வழியாகவே ரோம் நகருக்கு செல்ல இயலுமென்பதால், இவ்விடத்தில் குளிர்காலக் கோட்டின் அரண்நிலைகள் வெகுவாக பலப்படுத்தப்பட்டிருந்தன. துப்பாக்கி குழிகள், கான்கிரீட் பதுங்கு நிலைகள், எந்திரத் துப்பாக்கி நிலைகள், கொத்தளங்கள் போன்றவை இக்கோட்டில் மிகுதியாக அமைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியின் புவியியல் அமைப்பும் பாதுகாவல் படையினருக்கு சாதகாக அமைந்திருந்தது. குளிர்காலக் கோட்டினை ஊடுருவ நேச நாட்டுப் படைகள் நவம்பர் 1943 முதல் மே 1944 இறுதி வரை கடுமையாகப் போராட வேண்டியிருந்தது. லா டிஃபென்சா குன்று சண்டை, மோரோ ஆறு போர்த்தொடர், சான் பியேத்ரோ இன்ஃபைன் சண்டை, ஒர்ட்டோனா சண்டை, அன்சியோ சண்டை, சிசுட்டேர்னா சண்டை, மோண்டே கசீனோ சண்டை ஆகிய மோதல்கள் இக்காலகட்டத்தில் குளிர்காலக் கோட்டினை உடைக்க நிகழ்ந்தன. மே 1944 இறுதியில் ஜெர்மானியப் படைகள் முறியடிக்கபப்ட்டு பின்வாங்கின. ஹெரி லீ ஹெரி லீ ("Harry Lee", பிறப்பு: அக்டோபர் 26 1890, இறப்பு: ஏப்ரல் 21 1981) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 1தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 437 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1931 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம் ஐக்கிய நாடுகள் வியன்னா அலுவலகம் (United Nations Office in Vienna, UNOV) ஐக்கிய நாடுகள் அமைப்பின் பல்வேறு முகமைகள் ஒருங்கே அமைவிடம் கொண்டுள்ள நான்கு கட்டிட வளாகங்களில் ஒன்றாகும். இது ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் வியன்னா பன்னாட்டு மையத்தில் அமைந்துள்ளது. சனவரி 1, 1980ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த அலுவலக வளாகம் ஐநாவின் இத்தகைய அலுவலகங்களில் மூன்றாவது ஆகும். வியன்னாவைத் தலைநகராகக் கொண்டவை: வியன்னாவில் கிளைகளைக் கொண்டவை: பாச்சலூர் பாச்சலூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சிற்றுந்து மூலம் செல்ல வேண்டும். திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய இடங்களில் இருந்து பாச்சலூர்க்கு அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். இப்பகுதியில் வனவிலங்குகள் சிறுத்தை, செந்நாய், கரடி, புள்ளிமான், கடமான், வரையாடு, மலை அணில், யானை, காட்டுமாடு, நீலகிரி கருங்குரங்கு, சாம்பல் நிறக் குரங்கு, தேவாங்கு, காட்டுப்பன்றி, முள்ளம் பன்றி, சருகுமான், கேளையாடு, முயல், கீரி, புனுகு பூனை, காட்டு எலி, கட்டுவிரியன், கண்ணாடிவிரியன், தவளை, தேரை, ஆமை, மீன் வகைகள். வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் ஏறத்தாழ 215 விதமான பறவை இனங்கள் காணப்படுகின்றன. மொழிமுதல் எழுத்துக்கள் மொழியின் முதலில் வரும் எழுத்துகள் மொழிமுதல் எழுத்துகள் ஆகும். முதலெழுத்து என்பது உயிரும் மெய்யும். இதில் உள்ள முதல் என்னும் சொல் "முதலை வைத்துப் பொருளீட்டு" என்னும் சொற்றொடரில் உள்ள முதல் போன்றது. ஆதி பகவன் முதற்றே உலகு என்பதில் உள்ள முதல் என்பதும் இதே பொருளைக் கொண்டது. இது கால முதன்மை கொண்ட மூலதனம். மொழிமுதல் எழுத்து என்பதில் உள்ள முதல் இட முதன்மையைக் காட்டும். முதலில் நிற்கிறான். அகர முதல எழுத்தெல்லாம் என்பனவற்றிலுள்ள முதல் போன்றது. இது இட முதன்மை. தொல்காப்பியம் எழுத்ததிகாரம் மொழிமரபு என்னும் இரண்டாவது இயலில் கூறப்படும் செய்திகளில் மொழிமுதல் எழுத்துகள் பற்றிய செய்தியும் ஒன்று. பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது. தமிழ் சொற்களில் முதலில் வரும் எழுத்துகள் மொழி முதல் எழுத்துகள் எனப்படுகின்றன. அவை என்பது இங்குக் கூறப்படுகிறது. இவற்றின் மூலம் புணர்ச்சியில் எந்த எழுத்து வரும்போது என்ன நிகழும் என்று காணமுடியும். தமிழ் எழுத்துகள் 33. மொழிமுதல் எழுத்துகள் 22, மொழியிறுதி எழுத்துகள் 24 பழந்தமிழ்ச் சொற்கள் தெரியவரும் என்பதால் எடுத்துக்காட்டுகள் இளம்பூரணரைத் தழுவித் தரப்படுகின்றன: தொல்காப்பியத்துக்கு முந்தைய தமிழ்நூல்களின்படிமொழிமுதல் எழுத்துகள் நன்னூல் காலத்தில் சில மாற்றங்கள் தோன்றின. தொல்காப்பியம் விலக்கிய எழுத்துகள் சேர்த்துக்கொள்ளப்பட்டன. ஆக 10 எழுத்துகள் கூடின. மயிலைநாதர் தரும் சொற்களைத் தேவநேயப் பாவாணர் வழிமொழிந்து தொல்காப்பிய நூற்பாவுக்கே வேறு வகையில் பாடம் கொள்கிறார். தற்கால பிறமொழிகளின் தாக்கம், வாணிபத் தொடர்புகள் என்பவற்றால் பிறமொழிச் சொற்கள் தமிழில் எழுதப்படும்போது அச்சொற்களின் முன்னே மொழிமுதல் எழுத்துகள் சேர்ப்பது இலக்கணம் வழக்கம். அல்லது தவிர்த்து எழுதப்படுகின்றன. கீழே சில எடுத்துக்காட்டுகள்: கீழே உள்ளவை தமிழிலக்கணப்படி பிழையானவை. ஊடகங்களும் சிலரும் இப்படி எழுதுவதை இங்கே காட்டப்பட்டுள்ளன. என்றெல்லாம் எழுதும் முறைமை வழக்கத்துக்கு வந்துவிட்டது. திவாகர் (எழுத்தாளர்) திவாகர் (பிறப்பு: 1956) தமிழக எழுத்தாளரும், பத்திரிகையாளரும் ஆவார். வரலாற்றுப் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். திவாகர் 1956 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை காலஞ்சென்ற வெங்கடராமன், சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். நாகை மாவட்டம், திருவாலி திருநகரியைச் சேர்ந்தவர். சென்னையில் கல்வி கற்ற திவாகர் 1977 இல் ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவுக்குப் பணி நிமித்தம் இடம் பெயர்ந்தார். 1985 இல் சசிகலா என்பவரைத் திருமணம் புரிந்து, 1989 முதல் விசாகப்பட்டினத்தில் வசித்து வருகிறார். ஷிப்பிங் டைம்ஸ் எனும் தினசரிக்கு துணை ஆசிரியராக பணியாற்றுகிறார். விஜயவாடாவில் உள்ள தமிழ் இளைஞர்களை ஒன்றுபடுத்தி ‘நண்பர்கள் மன்றம்’ ஒன்றை உருவாக்கி, முதன் முறையாக தமிழ் நாடகங்கள் எழுதினார். 1978 இல் இவரது முதல் நாடகம் 'சாமியாருக்குக் கல்யாணம்' மேடையேற்றப்பட்டது, பின் மூன்று நாடங்கங்கள் கவிஞர் தேவாவுடன் இணைந்து எழுதி மேடையேற்றினார். விசாகப்பட்டினத்தில் சிங்கப்பூர் சிங்காரி, காதல் கடிதம், மாப்பிள்ளையே உன் விலை என்ன?, அச்சமில்லை அச்சமில்லை, மலேசியா மாப்பிள்ளை, டாக்டர் டாக்டர் போன்ற பல நாடகங்கள் இவரால் எழுதப்பட்டு மேடையேற்றப்பட்டன. விசாகப்பட்டினம் தமிழ்ச்சங்கத்தை இந்துப் பத்திரிகை-விசாகப்பட்டின ஆசிரியர் சம்பத்துடன் இணைந்து விரிவுபடுத்தினார். 16 ஆண்டுகள் தொடர்ந்து செயலராக இருந்து தமிழ்மன்றத்தை நடத்திச் சென்றார். 2010 கோவை செம்மொழி மாநாட்டில் "தமிழ்ச்சங்கங்களும் தமிழும்" எனும் தலைப்பில் பிற மாநிலங்களில் தமிழ்வளர்ச்சி பற்றி கட்டுரை வாசித்தார். ஜெஃப்ரி லெக் ஜெஃப்ரி லெக் ("Geoffrey Legge", பிறப்பு: சனவரி 26 1903, இறப்பு: நவம்பர் 21 1940) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 147 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1927 - 1930 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வோல்ட்டர் லீஸ் வோல்ட்டர் லீஸ் ("Walter Lees ", பிறப்பு: டிசம்பர் 25 1875, இறப்பு: செப்டம்பர் 10 1924) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 364 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1906 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். சால்ஸ் லெஸ்லி சால்ஸ் லெஸ்லி ("Charles Leslie ", பிறப்பு: டிசம்பர் 8 1861, இறப்பு: பிப்ரவரி 12 1921) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 48 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1882 - 1883 ஆண்டுகளில்இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜோன் லீவர் ஜோன் லீவர் ("John Lever", பிறப்பு: பெப்ரவரி 24 1949, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 22 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1976 - 1986 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். பீட்டர் லீவர் பீட்டர் லீவர் ("Peter Lever", பிறப்பு: செப்டம்பர் 17 1940, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1970 - 1975 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். எச். டீ. ஜீ. லீவசன் கோவர் எச். டீ. ஜீ. லீவசன் கோவர் ("H. D. G. Leveson Gower", பிறப்பு: மே 8 1873, இறப்பு: பெப்ரவரி 1 1954) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 277 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1910 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஹொப்பர் லெவட் ஹொப்பர் லெவட் ("Hopper Levett", பிறப்பு: சனவரி 25 1908, இறப்பு: திசம்பர் 1 1995) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 1தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 277 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1934 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். கிறிஸ் லூயிஸ் கிறிஸ் லூயிஸ் ("Chris Lewis", பிறப்பு: பெப்ரவரி 14 1968, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 32 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 53 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 189 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 266 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1990 - 1996 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜொன் லெவிஸ் ஜொன் லெவிஸ் ("Jon Lewis", பிறப்பு: ஆகத்து 26 1975, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 189 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 195 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 2006 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரெட்டன் வுட்சு முறைமை பிரெட்டன் வுட்சு முறைமை ("Bretton Woods system") இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி காலத்தில் உலகின் பெரும் முன்னேற்றமடைந்த நாடுகளில் வணிக மற்றும் பொருளியல் தொடர்புகளுக்காக ஏற்படுத்தப்பட்ட விதிகளை நிலைநிறுத்தும் நிதி மேலாண்மை முறைமையாகும்.தன்னாட்சி பெற்ற நாடுகளிடையே முற்றிலும் கலந்துரையாடி ஏற்படுத்தப்பட்ட நிதி மேலாண்மை அமைப்பிற்கு பிரெட்டன் வுட்சு முறைமை ஓர் முதல் எடுத்துக்காட்டாகும். இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருக்கும்போதே பன்னாட்டு பொருளாதார அமைப்புகளை வலுப்படுத்தி மீளமைக்க 44 நேச நாடுகளைச் சேர்ந்த 730 பேராளர்கள் அமெரிக்காவின் நியூ ஹாம்சயரில் பிரெட்டன் வுட்சு நகரிலுள்ள மவுண்ட் வாஷிங்டன் தங்குவிடுதியில் ஐக்கிய நாடுகள் செலாவணி மற்றும் நிதி மாநாட்டில் பங்கேற்று உரையாடினர். 1944ஆம் ஆண்டு சூலை மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் இவர்களின் கலந்துரையாடலின் பயனாக கையெழுத்தானதே பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள். பன்னாட்டுச் செலாவணி அமைப்பை கட்டுப்படுத்த வேண்டிய விதிகள், அமைப்புகள் மற்றும் செயல்முறைகளை நிறுவிட பிரெட்டன் வுட்சு திட்டவியலாளர்கள், தற்போது உலக வங்கிக் குழுமத்தின் அங்கங்களாக உள்ள, பன்னாட்டு நாணய நிதியம் (IMF) மற்றும் பன்னாட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு வங்கி (IBRD) ஆகியவறை உருவாக்கினர். இவை தேவையான அளவில் நாடுகள் ஏற்புறுதி வழங்கிபின் 1945ஆம் ஆண்டிலிருந்து செயலாற்றத் தொடங்கின. பிரெட்டன் வுட்சு முறைமையின் முதன்மை சிறப்புக்கூறுகளாக ஒவ்வொரு உடன்பட்ட நாடும் தங்கள் நாணயக் கொள்கையை டாலருடன் இணைத்த நாணய மாற்று வீதம் இருக்குமாறு அமைத்துக் கொள்வதை கட்டாயமாக்குவதும் பன்னாட்டு நாணய நிதியம் தற்காலிக கையிருப்புத் துண்டை சரிசெய்ய கடன் தருவதுமாகும். ஆகத்து 15, 1971 அன்று ஐக்கிய அமெரிக்கா யாரையும் கலக்காது தன்னிச்சையாக தனது டாலரை தங்கத்திற்கு மாற்றக்கூடிய தன்மையை விலக்கிக் கொண்டது. இதனால் "பிரெட்டன் வுட்சு முறைமை முடிவிற்கு வந்தது;டாலர் அமெரிக்க அரசு வழங்கும் உறுதிமொழியை மட்டும் கொண்ட தாள் நாணயமாக மாறியது". நிக்சன் அதிர்ச்சி என அறியப்பட்ட இந்த நிகழ்வு பல நாடுகளையும் டாலரை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய நிலையை உருவாக்கியது. டோனி லெவிஸ் டோனி லெவிஸ் ("Tony Lewis", பிறப்பு: சூலை 6 1938, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 409 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் 195 கலந்து கொண்டுள்ளார். இவர் 1972 - 1973 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். மோரிஸ் லேலண்ட் மொரிஸ் லேலண்ட் ("Maurice Leyland", பிறப்பு: சூலை 20 1900, இறப்பு: சனவரி 1 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 41 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 686 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1928 - 1938 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். செவ்வலை செவ்வலை அல்லது சிவப்பு அலை (Red tide) எனப்படுவது ஒருவகை பாசித்திரள் நிகழ்வாகும், இதன் போது குறிப்பிட சில பாசியினங்கள் கடல் நீரின் மேற்பரப்பை முற்றாகச் சூழ்ந்து காணப்படுவதால் கடலின் நிறம் மாறுபட்டு செந்நிறமாகத் தோற்றமளிக்கின்றது. இந்நிகழ்வு பொதுவாக கடற்கரைப்பகுதிகளில் நடைபெறுகின்றது. மிதவைவாழிகள் பிரிவில் அடங்கும் அலைதாவரங்கள் எனப்படும் பாசிகளின் பிரிவே இதற்குக்காரணம். ஈர்கசைவாழி (Dinoflagelate) போன்ற சில அலைதாவர இனங்கள் ஒளித்தொகுப்பு நிறமிகளைக் கொண்டுள்ளன, இவற்றின் நிறம் பச்சை, பழுப்பு, சிவப்பு என மாறுபடுகின்றது. மிகை அடர்த்தியாக பாசிகள் இருக்கும்போது நீரின் நிறம் அற்றுப்போய் இருளார்ந்ததாகவோ அல்லது ஊதா நிறம் தொடக்கம் இளஞ்சிவப்பு வரையிலான நிறவீச்சு எல்லையைக் கொண்டதாகவோ காணப்படுகின்றது, எனினும் சிவப்பு அல்லது பச்சை நிறமே இயல்பாகக் காணப்படுகின்றது. கடல் அலையின் மாற்றத்தால் இச்செயல் நிகழ்வதில்லை என்பதால் இவற்றைப் பொதுவாகப் பாசித்திரள் என்று அழைத்தலே தகும். ஆனால், பாசித்திரள் நிகழ்வுகள் அனைத்தும் நிறத்தை மாற்றக்கூடியன அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அனைத்துப் பாசித்திரள் நிகழ்வும் சிவப்பு நிறத்தைத் தருவன அல்ல. சில செவ்வலைகள் பாசிகளால் உற்பத்தி செய்யப்பட்ட இயற்கை நச்சுப்பொருட்களையும் சேர்த்துக்கொண்டே தோன்றுகின்றது, இது கேடுமிக்க பாசித்திரள் எனப்படும். கடற்கரைச் சூழலில் மற்றும் கடலில் வசிக்கும் மீன், பறவைகள், கடற் பாலூட்டிகள் மற்றும் வேறு உயிரினங்களின் இறப்பிற்குச் செவ்வலைகளின் வெளிப்படையான விளைவேக் காரணமாகும். புளோரிடாவில் ஏற்பட்ட செவ்வலைகளால் இதுப்போன்ற பேரிழப்புகள் ஏற்பட்டன. இதற்குக் காரணமான பிரெவிடாக்சின் (brevetoxin) எனும் நரம்புமண்டலத்தைத் தாக்கும் நச்சுப்பொருளை "கரெனியா பிரெவிசு" (Karenia brevis) என்னும் ஈர்கசைவாழி உற்பத்திச் செய்கின்றது. "கரெனியா பிரெவிசு" அலைதாவரங்கள் மிகையான அடர்த்தியில் தோன்றும் போது செவ்வலைகள் உண்டாகின்றன. இவ்வாறு தோன்றும்போது இவ்வலைதாவரங்களில் இருந்து வெளிப்படும் நச்சுப்பொருளானது மீன் மற்றும் இதர விலங்குகளின் மைய நரம்பு மண்டலத்தை செயலிழக்கச் செய்வதால் சுவாசிக்கமுடியாமல் விலங்குகள் இறந்துவிடுகின்றன. கரையோரப்பகுதியில் வசிக்கும் விலங்குகள் கூட இவற்றால் பாதிப்படைகின்றன. மாந்தரில் இவற்றின் நுகர்வு நடைபெற்றால் சுவாசம் தொடர்பான கோளாறுகள் ஏற்படலாம். செவ்வலை நச்சுப்பொருட்களால் மாசுற்ற கடல் உணவுகளை உண்ணுதல் மூலம் இத்தகைய தீயவிளைவுகள் உண்டாகும். மெக்சிக்கோ வளைகுடாவில் இவ்வாறான நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்கின்றன. செவ்வலைகள் நிகழ்வு ஒரு பொருளாதார நோக்கில் கேடுவிளைவிக்கும் சம்பவம் என்பதால் இவை உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றன. புளோரிடாவில் மற்றும் டெக்சாசில் இவற்றுக்கான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படுகின்றது. அனைத்து செவ்வலைகளும் தீயவை அல்ல. சமரசம் (1980 சிற்றிதழ்) சமரசம் இந்தியா, தமிழ்நாடு சென்னையிலிருந்து 1980ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழில் இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும், இசுலாமிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. சமாதானம் (1947 சிற்றிதழ்) சமாதானம் இந்தியாவில் தமிழ்நாட்டின், சேலத்திற்கு அருகிலுள்ள ஆத்தூர் எனுமிடத்திலிருந்து 1946ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழ் வெளிவந்த காலகட்டம் இந்தியாவில் விடுதலைப் போராட்டம் உச்சநிலையில் இருந்த காலகட்டமாகும். இந்தியாவில் விடுதலையை வலியுறுத்தி பல்வேறுபட்ட ஆக்கங்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் இசுலாமிய ஆக்கங்களும் இசுலாமிய இலக்கிய ஆக்கங்களும் உள்வாங்கப்பட்டிருந்தன. சமாதான வழி (சிற்றிதழ்) சமாதான வழி இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1971ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய ஆக்கங்கள், இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள் பாசித்திரள் பாசித்திரள் அல்லது பாசிப்படர்ச்சி ("algal bloom") என அறியப்படும் நிகழ்வானது பாசிகளால் (அ) அலைதாவரங்களால் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய திடீர் சூழ்நிலை மாற்றமாகும். இது நீர்நிலைகளில் காணப்படும் பாசிகள் அல்லது தாவரங்கள் தனக்கு ஒத்தச் சூழ்நிலை வரும்போது இனப்பெருக்கம் திடீரென மிகுதியாகி நீர்நிலையின் மேற்பரப்பில் படர்ந்து (மொத்த நீர்நிலையே மூடிய வன்னம்) பாசிகளின் சேர்க்கையாக காட்சியளிக்கும். இதையே நாம் பாசிப்படர்ச்சி/பாசித்திரள் என விளிக்கின்றோம். பாசித்திரள் நன்னீரிலோ கடல் நீரிலோ தனக்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாகும் வேளைகளில் தோன்றுகின்றன. பொதுவாக சில குறிப்பிட்ட இன அலைதாவரங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட பாசியே இதற்குக் காரணமாகின்றது. சில பாசித்திரள்கள் எளிதில் அடையாளம் காணக்கூடியவாறு நீரின் மேற்பரப்பு நிறம் மாறிக் காணப்படும், இதற்கு பாசிகளில் உள்ள நிறமிகள் தான் காரணம். வழமையாக பாசித்திரள் பச்சை நிறத்தில் காணப்பட்டாலும் மஞ்சள், பழுப்பு, சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படலாம், இது பாசி இனத்தைப் பொறுத்து வேறுபடுகின்றது. வெண்பச்சை பாசித்திரள் நீலப்பச்சைப்பாசியால் ஏற்படுகின்றது. நீலப்பச்சைப் பாசிகளில் குறிப்பிடத்தக்கவனவாக "அனபென்னா", "ஆசிலடோரியா", "நாசுடாக்கு" மற்றும் "மைக்ரோசிச்டிச்" என்னும் பேரினங்கள் பாசிப்படர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன . பாசித்திரளில் முக்கியமாகக் கருதவேண்டியது கெடுதியான/நச்சுமிகுந்த பாசித்திரள் ஆகும். இந்நிகழ்வில் பாசிகள் நச்சுப்பொருட்களை வெளிவிடுகின்றன. "அலெக்சந்திரியம்" (Alexandrium) மற்றும் "கரெனியா" என்னும் ஈர்கசைவாழி (Dinoflagellate) போன்ற அலைதாவர இனங்கள் இதற்கு எடுத்துக் காட்டாகும். இத்தகைய பாசித்திரள்கள் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் கடற்கரைப்பகுதிகளில் தோன்றுவது செவ்வலைகள் (Red Tide) என்று அழைக்கப்படுகின்றது. நீலப்பச்சைப்பாசிகளில் குறிப்பிடத் தக்கவனவாக "மைக்ரோசிச்டிச்" மற்றும் "நாடுலேரியா" என்னும் பேரினங்கள் முறையே மைக்ரோசிச்டின் மற்றும் நாடுலாரின் என்னும் நச்சுக்களை வெளிவிடுகிறது. சமுதாயக் குரல் (சிற்றிதழ்) சமுதாயக் குரல் இந்தியா, இருமேனி எனுமிடத்திலிருந்து 1979ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய ஆக்கங்கள் இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள் சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள் இடம்பெற்றன. சமுதாய முழக்கம் (சிற்றிதழ்) சமுதாய முழக்கம் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1985ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய ஆய்வுக் கட்டுரைகள் இசுலாமிய கோட்பாட்டுக் கட்டுரைகள், சமூக எழுச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றுடன் சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள் என்பனவும் இடம்பெற்றிருந்தன. சரந்தீப் (சிற்றிதழ்) சரந்தீப் இலங்கை, கொழும்பிலிருந்து 1958ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும் இலங்கை இசுலாமிய சமூக பிரச்சினைகளைக் கொண்ட ஆக்கங்களை இது பிரதானமாக உள்ளடக்கியிருந்தது. சன்மார்க்கச் சங்கு (1955 சிற்றிதழ்) சன்மார்க்கச் சங்கு இந்தியா, திருச்சியிலிருந்து 1955ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இசுலாமிய ஆக்கங்கள், இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள் சர விளக்கு (சிற்றிதழ்) சர விளக்கு இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1972ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும். இ.யூ.முஸ்லிம் லீக் கொள்கைப் பிரச்சார ஏடு இதுவொரு இயக்கத்தின் கொள்கைப் பிரச்சார ஏடாக அமைந்திருந்ததினால் இயக்கச் செய்திகளுக்கும் செயற்றிட்டங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சலாமத் (சிற்றிதழ்) சலாமத் இந்தியா, திருச்சியிலிருந்து 1963ம்ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய ஆக்கங்கள், இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள் இடம்பெற்றிருந்தன. சவ்துல் ஹக் (சிற்றிதழ்) சவ்துல்ஹக் இலங்கை கொழும்பிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். கொழும்பிலுள்ள ஈராக் தூதரகம் 'சவ்துல் ஹக்' என்றால் 'உண்மைக் குரல்' என்று பொருள்படும். இவ்விதழில் ஈராக் நாட்டு செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. ஈராக் அரசியலமைப்பு, ஈராக் அதிபர், மற்றும் ஈராக் பொருளாதாரம், கலை, கலாசாரம், கட்டடக்கலை, சமயம் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. சன்மார்க்கச் சங்கு (1946 சிற்றிதழ்) சன்மார்க்கச் சங்கு இந்தியா, காரைக்காலிலிருந்து 1946ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும். எம். எம். அலி இசுலாமிய ஆக்கங்கள் இசுலாமிய கொள்கை விளக்க கட்டுரைகள் சிறுகதைகள், கவிதைகள், புதினங்கள், வாசகர் அரங்கம், வினாவிடை போன்ற பகுதிகள் இடம் பெற்றிருந்தன. பணி வெளியமர்த்துதல் பணி வெளியமர்த்துதல் எனப்படுவது ஒருவர் ஒரு நிறுவனத்தில் பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அவரை வேறு ஒரு நிறுவனத்தில் பணியமர்த்தும் வரை உதவி புரிதலாகும். பணி நீக்கம் செய்யப்பட்டவரிறுகு சுயவிபரக் கோவை தயாரித்தல் முகப்புக் கடிதம் தயாரித்தல், புதிய நேர்முகத் தேர்விற்கு பயிற்றுவித்தல் போன்ற உதவிகளை இந்த செயற்பாடு மூலம் செய்யப்படுகின்றது. டிக் லிலீ டிக் லிலீ ("Dick Lilley", பிறப்பு: நவம்பர் 28 1866, இறப்பு: நவம்பர் 17 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 35 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 416 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1896 - 1909 ஆண்டுகளில் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஜேம்ஸ் லிலீவைட் ஜேம்ஸ் லிலீவைட் ("James Lillywhite", பிறப்பு: பெப்ரவரி 23 1842, இறப்பு: அக்டோபர் 25 1929), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 256 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1877 ல் இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அமீபா அமீபா என்பது மூத்தவிலங்கி களிலுள்ள ஒரு பேரினம் ஆகும். அமீபா ஓரணுவுயிர்களின் தொகுதியில் வேக்காலிகள் (Rhizopoda) வகுப்பைச் சேர்ந்ததாகும். உதிர்ந்த மட்கும் இலைகள், குளங்கள் குட்டைகளின் அடித்தளத்தை ஒட்டிய நீர்ப்படிவுகள் போன்ற இடங்களில் அமீபா உயிர்ப்பிக்கிறது. அமீபாவின் கலமானது கருவைக் கொண்டிருக்கும் ஒரு மெய்க்கருவுயிரி ஆகும். இதனை அதிநுண்ணுயிரிகளின் கூட்டத்துள் சேர்க்கலாம். மார்ச்சு 1, 2016 அன்று நேச்சர் கம்மியூனிக்கேசன்சு அறிக்கையில், அமீபாவிற்கு மனித இனத்தைப் போன்றே நோயெதிர்ப்பு சத்து உள்ளது என எடுத்துரைக்கிறது. மனிதர்கள் மற்ற உயர் விலங்குகளில் உள்ள தின்குழியங்களைப் (phagocytes) போன்றே இந்த அமீபாக்களின் உடலில் புறவுயிர்மி வலைகள் (extracellular nets) பாக்டீரியா (bacteria) அழிக்கின்றது என அந்த செனீவாப் பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது. August Johann Rösel von Rosenhof என்பவரால் 1757 இல் முதன் முதலாக இந்த அமீபா கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்ப காலங்களில் இயற்கையியல் அறிஞர்கள் இந்த அமீபாவை "Proteus animalcule" என அழைத்தனர். புரோட்டியசு (Proteus) என்ற பெயர் தனது உருவத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை கொண்ட கிரேக்க கடவுளின் பெயரைக் கொண்டு உருவானது. அதன் பின்னர் அமீபே (Amibe) என்ற பெயர் பின்னர் Bory de Saint-Vincent என்பவரால் வழங்கப்பட்டது. கிரேக்க மொழியில் amoibè என்பது 'மாற்றம்' என்பதைக் குறிக்கின்றது. "Dientamoeba fragili" என்ற அமீபா 1918 இல் விபரிக்கப்பட்டு, மனிதருக்கு தீங்கு விளைவிப்பதாக அறியப்பட்டது. அமீபாவானது பொதுவாக ஒரு கலம் கொண்ட உயிரினம் ஆகும். மற்ற ஓரணுவுயிர்களைப் போலவே அமீபாவின் உடலும் குழியமுதலுரு (Protoplasm) என்னும் உயிர்ப்பொருளால் ஆனது. குழியமுதலுருவில் ஓர் உட்கருவும், அதைச் சுற்றி உயிரணு ஊனீரும் (cytoplasm) காணப்படும். அமீபாவின் உடலில் உயிரணு ஊனீர் மேற்பரப்பில் மெல்லிய சவ்வுப் படலமாக இறுகியிருக்கிறது. எனினும் இது அமீபாவின் உடல் வடிவம் மாறிக் கொண்டிருப்பதைத் தடை செய்வதில்லை. உயிரணு ஊனீரில் அதை உருவாக்கும் பொருள்கள் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். இதன் கலத்தில் சில நுண் உறுப்புக்களும், குழியமுதலுருவும் கலமென்சவ்வினால் சூழப்பட்டிருப்பதுடன், தனது உணவை தின்குழியமை (phagocytosis) செயல்முறை மூலம் பெற்றுக் கொள்ளும். இவ்வாறான தின்குழியமை செயல்முறைக்கு ஏதுவாக அமீபாவில் பல போலிக் கால்கள் காணப்படும். இவை தமது உருவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியன. அமீபாக்கள் பொதுவாக வெறும் கண்களால் பார்க்க முடியாதவையாகவும், நுணுக்குக்காட்டியின் உதவியுடன் பார்க்கப்படக் கூடியவையாகவுமே இருக்கும். அமீபாக்களில் மிகவும் அறியப்பட்டிருக்கும் இனமான "Amoeba proteus", அசையும்போது 220-740 μm நீளமுடையதாக இருக்கும். இதுவே பொதுவாக பெரிய அமீபாவாக அறியப்படுகின்றது. ஆனாலும் சில அமீபாக்கள் மில்லிமீட்டர் நீளம் கொண்டவையாகவும் வெறும் கண்ணால் பார்க்கக் கூடியவையாகவும் இருக்கும். உயிரணு ஊனீர் பெருகி , உடலின் மேற்பரப்பில் ஏதேனும் ஒரு புள்ளியை நோக்கிப் பாயும்போது, அந்த இடம் பிதுங்கும். பிதுக்கத்தால் அமீபாவின் உடலில் நீட்சிகள் ஏற்படும். இந்த நீட்சிகள் போலிக் கால்கள் எனப்படும். போலிக் காலில் உயிரணு ஊனீர்ப்பெருக்கு அதிகரிக்க அதிகரிக்க நீண்டு அகலமாகிக் கொண்டே போகும். அமீபாவின் உடலும் அதற்குள் பெருக்கமடைவது போல் தோன்றும் இந்த முறையில் தான் அமீபா ஓரிடத்தை விட்டு இன்னோரிடத்திற்கு பெயர்ச்சி அடைகிறது. சில அமீபாக்களுக்கு போலிக்கால்கள் தாவரங்களுக்கு இருப்பது போலத் தோன்றும். இதன் காரணமாக அமீபா இனத்தைச் சேர்ந்த ஓரணுவுயிர்கள் வேர்க்காலிகள் வகுப்பு என அழைக்கப்படுகின்றன. வேர்களை ஒத்த இந்த போலிக்கால்கள் அமீபாவின் எந்தப் பகுதியிலும் தோன்றும். பின் இருந்த சுவடு தெரியாமல் மறைந்து போகும். அமீபா தனது இரையைப் பிடிக்கும் முறை அலாதியானது. ஓரணு பச்சைநீர்ப்பூண்டு ஏதேனும் எதிர்ப்பட்டால் அமீபாவின் உடலில் இன்னொரு போலிக்கால் உண்டாகும் சில நேரங்களில் நான்கைந்து கால்கள் கூட உருவாகும். போலிக் கால்கள் படிப்படியாக நீர்ப்பூண்டைச் சூழ்ந்து முற்றுகையிடும். பின் அதை நெருக்கிப்பிடித்து, உயிரணு ஊனீருக்குள் இழுத்துச் செல்லும். உயிரணு ஊனீரில் வெளிப்படும் செரிப்புநீர் நீர்ப்பூண்டைச் சூழ்ந்து கொள்ளும் போது சீரணக் குழி ஒன்று உருவாகும். இந்தக் குமிழியில் இரையானது (நீர்ப்பூண்டு) செரிப்பு நீரின் கரை தன்மையால் வினை புரியப்பட்டு நீர்மப் பொருளாக மாற்றப்படுகிறது. பின் செரிக்கப்படுகிறது. செரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் அமீபாவின் உடற்பொருளை உருவாக்குகின்றன. அமீபா வாழ , வளர உதவுகின்றன. செரிக்கப்படாத உணவுப்பகுதி, அமீபாவின், உடலில் எந்தப் பகுதி வழியேயும் அல்லது ஊனீர்ப்பிளவின் வழியே வெளியேற்றப்பட்டு விடும். அதன் பின் இரையை உண்ண உருவாக்கப்பட்ட செரிமானக் குமிழி மறைந்துவிடும். அமீபாக்கள் ஓரிரு உயிரணுக் கருவையும், சவ்வூடு பரவல் சமநிலையைப் பேணுவதற்காக எளிமையான புன் வெற்றிடத்தையும், கொண்டிருக்கும். உள்ளெடுக்கப்படும் உணவானது புன் வெற்றிடங்களில் சேமித்து சமிபாடு அடையச் செய்யப்படும். அமீபாவும் சுவாசிக்கிறது. ஆனால் அமீபாவிற்கு சுவாச உறுப்புகள் என ஏதும் தனியே இல்லை. அமீபா உடலின் மேற்பரப்பு முழுவதும் சுவாசித்தலில் பங்கு பெறுகிறது. நீர்ல் கரைந்துள்ள ஆக்சிசனை உள்ளிழுத்து கரியமில வாயுவை வெளியிடுகிறது. அமீபாவின் உயிரணு ஊனீரில் ஒளிபுகும் திரவத்துளியைக் கொண்ட வெண்குப்பி ஒன்று இருக்கும். இது கழிவு வெளியேற்றக் குமிழி (Excretory Vacuole) எனப்படும். இது அடிக்கடி மறைந்து மறைந்து மீண்டும் தோற்றமளிக்கக் கூடியது. அவ்வப்போது கழிவு வெளியேற்றம் நிகழும்போது, மிகையான நீரும், கழிவுப் பொருள்களும் கொண்ட நீர்மம் குமிழியில் நிறைந்து காணப்படும். அப்போது குமிழி தோன்றும். கழிவு வெளியேறியதும் குமிழி மறைந்துவிடுகிறது. குமிழியில் உள்ள திரவம் ஒளிக்கதிர்களில் பளிச்சிட்டவாறு வெளியேற்றப்படுகிறது. அமீபாவானது, ஏனைய ஒருகல மெய்க்கருவுயிரிகள் போலவே கலவியில்லாத (asexually) முறையிலான இனப்பெருக்க முறையை மேற்கொள்ளும். இங்கு இழையுருப்பிரிவு என்றழைக்கப்படும் கலப்பிரிவு மூலம் கலங்கள் இரட்டிக்கப்பட்டு இனப்பெருக்கம் நடைபெறும். ஏதாவது காரணத்தல் பலவந்தமாக ஒரு அமீபாவானது இரண்டாகப் பிரிக்கப்படுமாயின், கருவைக் கொண்ட பகுதி, புதிய குழியவுருவைக் கொண்டு புதிய கலமாக விருத்தியடைய, கருவற்ற பகுதி இறந்துவிடும். அமீபாக் கலங்கள் திடவட்டமான உருவம் அற்றவை.. அமீபாக்களில் சாதாரண அமீபா, சீதபேதி அமீபா(எண்டமீபா) என வகைகள் உள்ளன. சீத பேதி அமீபாவால் மனிதர்களுக்கு மிகக் கடுமையான நோயான சீதபேதி உண்டாகிறது சுற்றுப்புறம் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருந்தால் நீத பேதி அமீபாக்களை ஒழிக்க முடியும். இவை நீரின் கொதிநிலையில் மடிந்து விடக் கூடியவை. எனவே, நன்கு கொதிக்கவைத்த நீரையும், வேக வைத்த அல்லது பொரித்த உணவு வகைகளையும் உண்பதன் மூலம் நாம் சீதபேதி அமீபாவின் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். அமீபா ஒரு நுண்ணுயிரியாக இருந்த போதிலும், பெரிய மரபகராதியைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க ஒரு இயல்பாகும். "Amoeba proteus" ஆனது 290 பில்லியன் இணைதாங்கிகளையும் (base pairs), "Amoeba dubia" என முன்னர் அழைக்கப்பட்ட "Polychaos dubium", 670 பில்லியன் இணைதாங்கிகளையும் கொண்டவையாகும். மனித மரபகராதித் திட்டம் மூலம், மனித மரபகராதியில் கிட்டத்தட்ட 3 பில்லியனுக்கு மேற்பட்ட இணைதாங்கிகள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ளது. ஆணைவாரி ஆனந்தன். 'பல்துறை அறிவியல்' மணியம் பதிப்பகம் வெளியீடு. 1989. அஸ்ட்ரோ வானவில் அஸ்ட்ரோ வானவில் என்பது மலேசியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் 24 மணி நேரம் தமிழ்த் தொலைக்காட்சி சேவை ஆகும். இது 1 ஜூன் 1996 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது மலேசியாவின் தொழிலதிபரும் செல்வந்தருமான த. ஆனந்தகிருட்ணன் அவர்களுக்கு உரிமையானதாகும். தமிழ்த் திரைப்படங்களும் நாடகங்களும் ஒளிபரப்பப்படுகின்றன. டோனி லாக் டோனி லாக் ("Tony Lock", பிறப்பு: சூலை 5 1929, இறப்பு: மார்ச்சு 30 1995, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 49 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 654 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1952 - 1968 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். வில்லியம் லொக்வூட் வில்லியம் லொக்வூட் ("William Lockwood", பிறப்பு: மார்ச்சு 5 1868, இறப்பு: ஏப்ரல் 30 1932, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 12 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 363 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1893 - 1902 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பீட்டர் லோடர் பீட்டர் லோடர் ("Peter Loader", பிறப்பு: அக்டோபர் 25 1929, இறப்பு: மார்ச்சு 15 2011., இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 13 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 371 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 - 1958 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். டேவிட் லொயிட் டேவிட் லொயிட் ("David Lloyd )", பிறப்பு: மார்ச்சு 18 1947, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒன்பது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், எட்டு [ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும், 407 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 288 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1974 - 1975 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஆண்டி லொயிட் ஆண்டி லொயிட் ("Andy Lloyd", பிறப்பு: நவம்பர் 5 1956 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1984 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார். ஜோர்ஜ் லோமான் ஜோர்ஜ் லோமான் ("George Lohmann", பிறப்பு: சூன் 2 1865, இறப்பு: திசம்பர் 1 1901, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 18 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 293 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1886 - 1996 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். ஃபிரேங் லாசன் ஃபிரேங் லாசன் ("Frank Lowson", பிறப்பு: சூலை 1 1925, இறப்பு: செப்டம்பர் 8 1984 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 277 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1955 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். இரண்டாம் எலிசபெத்தின் அயர்லாந்து பயணம் இரண்டாம் எலிசெபத்தின் அயர்லாந்து குடியரசுப் பயணம் மே 17, 2011 அன்று இடம் பெற்றது. இந்த பயணத்தின் போது எலிசபெத்துடன் அவரது கணவர் இளவரசர் பிலிப்பும் கலந்து கொண்டார். இரண்டாம் எலிசெபெத் அயர்லாந்து குடியரசின் அதிபர் மெரி மக்கல்சியின் அழைப்பின் பேரிலேயே இந்த விஜயத்தை மேற்கொள்கின்றார். அயர்லாந்து குடியரசு சுதந்திரம் அடைந்த பின்னர் அங்கு பயணம் செய்யும் முதலாவது ஐக்கிய இராச்சிய அரச குடும்பத்தைச் சேர்ந்த தலைவர் எலிசபெத் ஆவார். இதற்கு எதிராக அயர்லாந்தில் ஆர்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதுடன், அரசி பயணிக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு வெடி குண்டையும் அயர்லாந்து இராணுவத்தினர் செயல் இழக்கச்செய்தனர். மோரோ ஆறு போர்த்தொடர் மோரோ ஆறு போர்த்தொடர் ("Moro River Campaign") என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு சண்டைத் தொடர். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களின் குளிர்காலக் கோட்டினை ஊடுருவி ரோம் நகரைக் கைப்பற்ற முயன்றனர். செப்டம்பர் 1943ல் நேச நாட்டுப் படைகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியை எளிதாகக் கைப்பற்றி வடக்கு நோக்கி முன்னேறின. அவற்றின் முன்னேற்றத்தைத் தடுக்க இத்தாலியின் தலைநகர் ரோமுக்குத் தெற்கே ஜெர்மானியப் படைகள் பல அரண்கோடுகளை அமைத்திருந்தன. அவற்றுள் மிக பலமானது குளிர்காலக் கோடு. இக்கோட்டினை ஊடுருவ பிரித்தானியத் தளபதி ஹரால்ட் அலெக்சாந்தர் டிசம்பர் 1943ல் ஒரு பெரும் தாக்குதலைத் தொடங்கினார். குளிர்காலக் கோட்டினை உடைத்து, பெஸ்காரா நகரத்தைக் கைப்பற்றி அங்கிருந்து ரோம் நகரைத் தாக்குவது அவரது திட்டம். இத்தாக்குதல் மோரோ ஆறு அருகே டிசம்பர் 4ம் தேதி தொடங்கியது. பிரித்தானிய 8வது ஆர்மியின் இரண்டு கோர்கள் (5வது மற்றும் 13வது) இத்தாக்குதலை மேற்கொண்டன. இவற்றில் மொத்தம் நான்கு டிவிசன்களும் இரண்டு கவச பிரிகேடுகளும் இடம் பெற்றிருந்தன. ஜெர்மானியத் தரப்பில் 10வது ஜெர்மானிய ஆர்மியின் 76வது கவச கோர் குளிர்காலக் கோட்டினை பாதுகாத்து வந்தது. நேச நாட்டுப் படைகளின் முதல்கட்ட தாக்குதல்களுக்கு வெற்றி கிட்டியது. ஜெர்மானியப் பாதுகாவல் நிலைகளில் பல பாலமுகப்புகள் நேசப் படைகளால் கைப்பற்றப்பட்டன. ஆனால் டிசம்பர் 8ம் தேதி முதல் ஒரு வாரத்துக்கு மிகக் கடுமையான சண்டைகள் நிகழ்ந்தாலும், இரு தரப்புக்கும் வெற்றி கிட்டவில்லை. இரு தரப்பு படைகளும் முன்னேற முடியாமல் ஒர்சோக்னா நகர் அருகே தேக்க நிலை உருவானது. பத்து நாட்கள் இடைவிடாத மோதல்களுக்குப் பின்னர் நேச நாட்டுப் படைகள் ஒர்சோக்னாவை பக்கவாட்டிலிருந்து தாக்கி ஜெர்மானியப் படைகளைப் பின்வாங்கச் செய்தன. அடுத்த ஜெர்மானியப் பாதுகாவல் நிலையான ஒர்ட்டோனா-ஒர்சோக்னா கோடு டிசம்பர் 20ம் தேதி தாக்கப்பட்டது. மேலும் ஆறு நாட்கள் கடும் சண்டைக்குப் பின்னர் ஒர்ட்டோனா நகர் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டது. ஆனால் இருபது நாட்கள் தொடர் சண்டையால் சோர்வடைந்திருந்த நேச நாட்டுப் படைகளால் அதற்கு மேல் முன்னேற இயலவில்லை. மேலும் கடும் குளிர்காலம் தொடங்கியதால், தட்ப வெட்பநிலையும் அவர்களுக்குப் பாதகமாக மாறியது. அதற்கு மேல் தாக்குதலைத் தொடர்வதில் பலனில்லை என்பதை உணர்ந்த அலெக்சாந்தர் தன் திட்டத்தைக் கைவிட்டார். ஏ. பி. லூக்கஸ் ஏ. பி. லூக்கஸ் ("A. P. Lucas", பிறப்பு: பிப்ரவரி 20 1857, இறப்பு: அக்டோபர் 12 1923, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 5தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 256 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1879 - 1884 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். பிரயன்ட் லுக்ஹார்ட் பிரயன்ட் லுக்ஹார்ட் ("Brian Luckhurst", பிறப்பு: பிப்ரவரி 5 1939, இறப்பு: மார்ச்சு 1 2005, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 389 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 153 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். கலந்து கொண்டுள்ளார். இவர் 1970 - 1974 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். அல்பிரட் லைடெல்டன் அல்பிரட் லைடெல்டன் ("Alfred Lyttelton", பிறப்பு: பிப்ரவரி 7 1857, இறப்பு: சூலை 5 1913 என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 101 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார். எம்-கோட்பாடு எம்-கோட்பாடு ("M-theory") என்பது இயற்பியலில் சரக் கோட்பாட்டின் தொடர்ச்சியாகக் கொள்ளப்படக்கூடிய பிரபஞ்சம் பற்றிய அடையாளம் காணப்பட்ட பதினொரு பரிமாணங்கள் பற்றி விளக்கும் கோட்பாடாகும். இவற்றில் 7 உயர் பரிமாணங்கள் ஆகவும் 4 பொதுப் பரிமணங்களாகவும் அடையாளங் காணப்பட்டுள்ளன. இக்கோட்பாட்டை ஆதரிப்பவர்கள், 11 பரிமாணக் கோட்பாடு ஐந்து 10 பரிமாணக் கோட்பாடுகளையும் ஒன்றிணைப்பதுடன், அவற்றுக்கு மாற்றீடாக அமையும் என்றும் நம்புகிறார்கள். இக்கோட்பாட்டின் முழுமையான விளக்கம் தெரியாவிட்டாலும், இந்தத் தாழ்சிதற இயங்கியல்கள் (low-entropy dynamics) 2 மற்றும் 5 பரிமாண "மெம்பிரேன்"களுடன் (membrane) இடைவினை ஆற்றும் மீவீர்ப்புத்திறன் என்று அறியப்படுகிறது. அசோக்கே சென், கிறிசு கல், பால் டவுன்சென்ட், மைக்கேல் டஃப், யோன் இசுக்வார்சு போன்ற சரக் கோட்பாட்டாளர்களின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, உயர் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த எட்வார்ட் விட்டன் என்பவர் இக்கோட்பாடு குறித்து யோசனைகளை முன்வைத்தார். 1995 ஆம் ஆண்டில் தென் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் இதை முன்வைத்த விட்டன், எம்-கோட்பாட்டைப் பயன்படுத்தி பல முன்னரே கவனிக்கப்பட்ட இருமைகளை விளக்கினார். இது சரக் கோட்பாடு தொடர்பான பல ஆய்வுகளுக்கு வித்திட்டது. சாந்தி (சிற்றிதழ்) சாந்தி இந்தியா, திருச்சியிலிருந்து 1935ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவர் பின்பு ஆத்தூரில் (சேலம்) குடியேறி, அங்கு பல இதழ்கள் நடத்தியதாக அறியமுடிகின்றது இவ்விதழில் இசுலாமிய அடிப்படைக் கருத்துக்களும், கட்டுரைகளும், குறிப்பாக இசுலாமிய செய்திகள், இசுலாமிய உலக செய்திகள் போன்றவை தொடர்பான ஆய்வுகளும் இடம்பெற்றிருந்தன. மேலும், சிறுகதைகள், கவிதைகள், இலக்கிய கட்டுரைகள் போன்றனவும் உள்வாங்கப்பட்டிருந்தன. பிரடோரியன் காவலர்கள் பிரடோரியன் காவலர்கள் () எனப்படுவோர் உரோமப் பேரரசரின் மெய்ப்பாதுகாவலர்களாகச் செயற்பட்ட படைவீரர்கள். உரோமக் குடியரசுக் காலத்திலேயே இந்த பெயர் பட்டி பயன்பட்டுள்ளது. நான்காம் நூற்றாண்டில் முதலாம் கொன்ஸ்டன்டைன் பேரரசனால் இந்த காவலர்கள் முறைமை இல்லாது செய்யப்பட்டது. பிரடோரயன் எனும் பெயர் உரோம போர் கட்டளை அதிகாரியின் தற்காலிக கொட்டகையைக் குறிக்கும் சொல்லான பிரடோரியம் என்பதில் இருந்து திரிபடைந்துள்ளது. இவர்கள் மிகச் சிறப்பான உரோமப் படையணியாகக் கருதப்படுகின்றனர். இந்தப் படையணிக்கு உரோமா புரியைச் சேர்ந்தவர்களும் சாராதவர்களும் சேர்க்கப்படுகின்றனர். சாந்தி உலகம் (சிற்றிதழ்) சாந்தி உலகம் இந்தியா கூத்தாநல்லூரிலிருந்து 1936ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. சாந்திச்சுடர் (சிற்றிதழ்) சாந்திச்சுடர் சிங்கப்பூரிலிருந்து 1967ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். தமிழ் முஸ்லிம் யூனியன் இவ்விதழ் ஒரு செய்தி ஏடாக காணப்பட்டது. செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதேநேரத்தில் சில இலக்கிய ஆக்கங்களையும், கட்டுரைகளையும் கொண்டிருந்தது. சிங்கை வர்த்தமானி (சிற்றிதழ்) சிங்கை வர்த்தமானி சிங்கப்பூரிலிருந்து 1875ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இவ்விதழ் 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதியில் வெளிவந்தது. இவ்விதழில் அக்கால சூழ்நிலைக்கமைய எழுத்து நடை அமைந்திருந்தது. இசுலாமிய கட்டுரைகளும், செய்திகளும் இடம்பெற்றிருந்தன. சிராஜ் (சிற்றிதழ்) சிராஜ் இந்தியா கடைய நல்லூரிலிருந்து 1973ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். 'சிராஜ்' என்ற அரபுப் பதம் 'ஒளி' என்ற கருத்தைத் தரும் இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துகள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. சிராஜுல் மில்லத் (சிற்றிதழ்) சிராஜுல் மில்லத் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1982ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். "சிராஜுல் மில்லத்" என்றால் "சமுதாய விளக்கு" என்று பொருள்படும். இசுலாமிய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன் சிலாங்கூர் வித்தியா பாஸ்கரன் சிலாங்கூரிலிருந்து 1907ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும். வெளியிட்டவர் இவ்விதழை வெளியிட்டவர் ஓர் இந்துவாக இருந்தாலும்கூட. இவ்விதழ் ஒரு இசுலாமிய இதழாகவே காணப்பட்டது. கற்றலும் கேட்டலும் ஞானங்கருதுற நிற்கிற் பரம் அவைவீடு அறிவியல் கட்டுரைகள், இசுலாமிய கோட்பாடுகள் சம்பந்தமான விளக்கக் கட்டுரைகள், செய்திகள், செய்தி விமர்சனங்கள் ஆகியன இடம்பெற்றிருந்தன. சிறு தொண்டன் (இதழ்) சிறு தொண்டன் இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1971ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும். இதுவொரு நாளிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த அதேநேரத்தில் இலக்கிய ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சுஊனுல் இஸ்லாம் (சிற்றிதழ்) சுஊனுல் இஸ்லாம் இலங்கை கொழும்பிலிருந்து 1984ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இலங்கை முஸ்லிம் சமயப் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் "சுஊனுல் இஸ்லாம்" என்றால் "இஸ்லாமியச் செய்திகள்" என்று பொருள்படும் இது இலங்கையில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட ஒரு இதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இலங்கை முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை இது அதிகளவில் வெளிப்படுத்த முயற்சி செய்திருந்தது. சுதந்திர இந்தியா (சிற்றிதழ்) சுதந்திர இந்தியா பர்மாவிலிருந்து 1947ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. இவ்விதழ் வெளிவந்த காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உச்சநிலையில் இருந்த காலகட்டமாகும்;. இந்தியாவின் சுதந்திரத்தை வலியுறுத்தக்கூடிய பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. சுதந்திர நாடு (இதழ்) சுதந்திர நாடு இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1946ம் ஆண்டில் வெளிவந்த ஒரு நாளிதழாகும். ஒரு நாளிதழ் என்றடிப்படையில் செய்திகளுக்கும், செய்தி அறிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தது. இவ்விதழ் வெளிவந்த காலகட்டம் இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் உச்சநிலையில் இருந்த காலகட்டமாகும்;. இந்தியாவின் சுதந்திரத்தை வலியுறுத்தக்கூடிய பல்வேறு கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. சுதேச நண்பன் (சிற்றிதழ்) சுதேச நண்பன் பர்மா இரங்கூனிலிருந்து 1927ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. செம்பிறை (1950 சிற்றிதழ்) செம்பிறை இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1950ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும். இவ்விதழில் இறையியல், வாழ்வியல், அறவியல், இலக்கியம் போன்ற பல்சுவை அம்சங்கள் காணப்பட்டன. செம்பிறை (1960 சிற்றிதழ்) செம்பிறை சிங்கப்பூரிலிருந்து 1960ம் ஆண்டில் மாதமிரு முறை வெளிவந்த ஒரு இதழாகும். இஸ்லாமிய முற்போக்கு இதழ் இவ்விதழில் இறையியல், வாழ்வியல், அறவியல், இலக்கியம் போன்ற பல்சுவை அம்சங்கள் காணப்பட்டன. மஞ்சள் முள்ளங்கி மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது. மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. ஆதிமந்தி ஆதிமந்தி சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவள் சோழன் கரிகாலனின் (கரிகால் பெருவளத்தான்) மகள் என்பர். அவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கத்தொகைப் பாடல்களில் இடம்பெற்றுள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 31 ஆக அமைந்துள்ளது. ஆட்டக்காரி என்று நாம் கூறும் ஆடுகளமகள் ஒருத்தியின் காதல் கதை இது. உறவுக்கார நொதுமலர் அவளை மணக்கப் பெண் கேட்டனர். அவளோ தன் காதலனாகிய அவனை மணக்க எண்ணிக்கொண்டிருக்கிறாள். தன் எண்ணத்தைத் தோழியிடம் சொல்லி வெளிப்படுத்துகிறாள். அவனை(என்காதலனை) மள்ளர் விழாக் கொண்டாடும் இடங்களிலும், மள்ளர் மகளிர் துணங்கை ஆடும் இடங்களிலும் அவனைத் தேடினேன். எங்கும் அவனைக் காணமுடியவில்லை. அவன் மாண்புள்ளவன். என்னை மணக்கும் தகுதி உள்ளவன். நான் ஓர் ஆடுகள மகள். அவனும் ஓர் ஆடுகள மகன். அவன் பெருமை மிக்கவன். ஆடுகளக் கூட்டத்துக்குக் குரிசில்(தலைவன்). அவனை நினைத்து என் கைவளையல் நழுவுகிறது. அது மட்டும் அல்ல " "-- உரைசான்ற மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சிக் கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான் புனலின் பின்சென்று ‘கல்நவில் தோளாயோ,’ என்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட, அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள்" என்று இளங்கோவடிகள் ஆதிமந்தியின் காதல் வலிமையை சிலப்பதிகாரத்தில் எடுத்துச் சொல்கிறார். நீச்சல்-நடன விளையாட்டுவீரன் ஆட்டன் ஆத்தி என்பவனை ஆதிமந்தி காதலித்தாள். காவிரியாற்றில் கழார் என்னும் ஊரிலிருந்த நீர்த்துறையில் ஆட்டனத்தி என்பவன் நீச்சல் நடனம் ஆடினான். இந்த நீச்சல் நடனம் கரிகாலன் முன்னிலையில் நடந்தது. காவிரி என்பவள் 'தாழிருங் கதுப்பு' கொண்டவள். ஆற்றுவெள்ளம் காவிரியை ஈர்த்தபோது அவள் ஆட்டனத்தியைப் பிடித்துக்கொண்டாள். வெள்ளம் இருவரையும் அடித்துச் சென்றுவிட்டது. காவிரி ஆற்றுவெற்றத்தில் மாண்டுபோனாள். நீச்சல் நடனம் நடந்த வெள்ளப்பெருக்கு விழாவை இக்கால விழா ஆடிப்பெருக்கு எனக் கொள்ளுதல் பொருத்தமானது. ஆட்டன் அத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.மருதி என்பவள் அவனைக் காப்பாற்றினாள். ஆதிமந்தி தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். இந்த துக்கம் இவள் பாடல்களில் தெரிகிறது. ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட கற்பரசி மருதி தனக்கு வேறு பற்றுக்கோடு இன்மையால் கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள், (அகநானூறு 45, 76, 135, 222, 236, 376 ஆகிய பாடல்களின் தொகுப்புச் செய்தி இது). ஆட்டனத்தி ஆடிப்பெருக்கு வரவுச்செலவு சமநிலை ஒரு நாட்டின் வரவுச்செலவு சமநிலை (balance of payments, BOP) அந்த நாடு பிற உலக நாடுகளுடன் நடத்திய அனைத்து நிதி பரிமாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஓர் அறிக்கை ஆகும். இந்தப் பரிவர்த்தனைகளில் அந்த நாட்டின் பொருள்கள், சேவைகள், முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றங்களில் ஏற்றுமதி, இறக்குமதிக்கான பணமதிப்பு அடங்கியிருக்கும். வரவுச்செலவு சமநிலை அறிக்கை இந்தப் பன்னாட்டுப் பரிவர்த்தனைகளை தொகுத்து ஓர் குறிப்பிட்ட காலவரையில், வழமையாக ஓர் ஆண்டில், ஒரே நாணயத்தில், பொதுவாக உள்நாட்டு நாணயத்தில், வழங்குகிறது. நாட்டின் நிதி வருவாய்கள்,ஏற்றுமதிகள், கடன் மற்றும் வரவுகள் போன்றவை, நேர்மறையாக அல்லது உபரிகளாக காண்பிக்கப்படுகின்றன. நிதிப் பயன்பாடு, இறக்குமதிகள், வெளிநாட்டு முதலீடு போன்றவை எதிர்மறையாக அல்லது பற்றாக்குறையாகக் காண்பிக்கப்படுகின்றன. ஓரு நாட்டின் வரவுச்செலவு சமநிலையின் அனைத்து அங்கங்களையும் தொகுக்கும்போது, உபரியோ பற்றாக்குறையோ இன்றி, அதன் மொத்தம் சூன்யமாக இருத்தல் வேண்டும். காட்டாக ஒரு நாடு தனது ஏற்றுமதியை விட கூடுதலாக இறக்குமதி செய்தால் அதன் வணிகச் சமநிலை பற்றாக்குறையில் இருக்கும்; இதனை தனது வெளிநாட்டு முதலீடுகளிலிருந்து வருமானம், தனது இருப்பு நிதியிலிருந்து பெறுதல் அல்லது வெளிநாடுகளிலிருந்து கடன் பெறுதல் ஆகியன மூலம் சமநிலைப்படுத்த வேண்டியிருக்கும். வரவுச்செலவு சமநிலை மொத்தத்தில் சமநிலை அடைந்திருக்கும் எனினும் சில தனி அங்கங்களில், காட்டாக நடப்புக் கணக்கில், பற்றாக்குறை இருக்கலாம். இது உபரியாக உள்ள நாடுகள் செல்வச்செழிப்புடன் இருக்க பற்றாக்குறை நாடுகள் கடன் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். வரலாற்றில் இந்த சமனற்றநிலையை எதிர்கொள்வது குறித்த பல்வேறு வழிகள் காணப்பட்டுள்ளன; இவை குறித்து அரசுகள் கவலைப்பட வேண்டுமா என்ற விவாதங்களும் எழுந்துள்ளன. 2007-2010 நிதி நெருக்கடிக்கு மிகப்பெரும் பற்றாக்குறைகளே காரணமாக கருதப்படுவதால் 2009 ஆண்டு முதல் உலக திட்டவியலாளர்களின் நிரலில் இதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. செய்திச்சுடர் (இதழ்) செய்திச்சுடர் சிங்கப்பூரிலிருந்து 1991ம் ஆண்டில் ஆண்டுக்கு இருமுறை வெளிவந்த ஓர் இதழாகும். சிங்கப்பூர், மலேசியா, இந்தியா செய்திச் சுருக்கங்களை இது கொண்டிருந்தது. அத்துடன், செய்தி ஆய்வுகள், அறிக்கைகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன. செய்தி மலர் (இதழ்) செய்திமலர் இந்தியா, ஈரோட்டிலிருந்து 1986 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இந்தியா செய்திச் சுருக்கங்களை இது கொண்டிருந்தது. அத்துடன், செய்தி ஆய்வுகள், அறிக்கைகள் ஆகியனவும் இடம்பெற்றிருந்தன. சேரன் முரசு (சிற்றிதழ்) சேரன் முரசு வண்டிப் பெரியாறு எனுமிடத்திலிருந்து 1954ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன், ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. சைபுல் இஸ்லாம் (சிற்றிதழ்) சைபுல் இஸ்லாம் பர்மாவிலிருந்து 1907ம் ஆண்டில் வெளிவந்த மாத இதழாகும். 'சைபுல் இஸ்லாம்' என்றால் 'இஸ்லாமிய போர்வாள்' என்று பொருள்படும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. சௌத்துல் உலமா (சிற்றிதழ்) சௌத்துல் உலமா இலங்கை கொழும்பிலிருந்து 1992ம் ஆண்டில் வெளிவந்த ஒரு காலாண்டு இதழாகும். 'சௌத்துல் உலமா' என்றால் 'அறிஞர் குரல்' என்று பொருள்படும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. ஞானக் கடல் (சிற்றிதழ்) ஞானக் கடல் இலங்கை, கொழும்பிலிருந்து 1939ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. ஞானக் கடல் (1948 சிற்றிதழ்) ஞானக் கடல் இலங்கை, மட்டக்களப்பிலிருந்து 1948ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய கதைகள், கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள், இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. காக்கை பாடினியம் காக்கை பாடினியம் செய்யுள் இலக்கணம் கூறும் ஓர் தமிழ் இலக்கண நூல். இந்த நூல் முழுமையான அளவில் தற்காலத்தில் கிடைக்கவில்லை. இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் இந்த நூலின் நூற்பாக்களை தம் கருத்துக்கு வலிமை சேர்க்கும் வகையில் மேற்கோள்களாகக் காட்டியுள்ளனர். இந்த நூற்பாக்களையெல்லாம் தொகுத்து இதனை ஒரு தனி நூலாக அண்மையில் உருவாக்கியுள்ளனர். 89 நூற்பாக்கள் இதில் உள்ளன. காக்கைபாடினியார் இயற்றிய நூல் காக்கைபாடினியம் எனப்பட்டது. இந்த நூல் தோன்றிய காலம் கி.பி. ஆறாம் நூற்றாண்டு என அறிஞர்கள் கருதுகின்றனர். அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி இந்த நூற்பாக்களைத் தொகுத்த முதல் நூலாசிரியர். இந்த நூலிலுள்ள நூற்பாக்களைத் தம் இலக்கண அறிவைக்கொண்டு வகைப்படுத்தி, நிரலாக்கி அறிஞர் இரா. இளங்குமரன் தற்போதுள்ள இதன் பதிப்பை வழங்கியுள்ளார். இந்த நூலைத் திரட்டுவதற்கு உதவிய மூலநூல்கள்: காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்பவர் சங்ககாலப் புலவர். காக்கை பாடினியம் பாடிய காக்கை பாடினியார் இந்த நச்செள்ளையார் அல்லர். காலத்தால் பிற்பட்டவர். தொல்காப்பியர் செய்யுளில் வரும் அசைக்கூறுகளை நேர், நிரை, நேர்பு, நிரைபு என நான்காகப் பகுத்துக் காட்டினார். தொல்காப்பிய வழிவந்த இந்த நூல் நேர்பு, நிரைபு அசைகளை விலக்கிவிடுகிறது. இதன் வழிவந்த யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை ஆகிய நூல்கள் நேர், நிரை என்னும் இரண்டு அசைகளையே குறிப்பிடுகின்றன. மேலும் நாலசைச்சீர் பற்றிய குறிப்பும் காக்கைபாடினியத்தில் வருகிறது. தொல்காப்பியப் புலவர் தோன்ற விரித்து உரைத்தார் பல்காப்பியனார் பகுத்துப் பண்ணினார் - நல் யாப்புக் கற்றார் மதிக்கும் கலைக் காக்கைபாடினியார் சொற்றார் தம் நூலுள் தொகுத்து. ஞானச் சுரங்கம் (சிற்றிதழ்) ஞானச் சுரங்கம் இலங்கை, காத்தான்குடியிலிருந்து 1981ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இசுலாமிய கட்டுரைகள், கவிதைகள், ஆய்வுக் கட்டுரைகள் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது. மாப்பொருள் மாப்பொருள் ("starch") என்பது அதிக எண்ணிக்கையில் குளுக்கோசு மூலக்கூறுகள் இணைந்து உருவாகும் ஒருவகை காபோவைதரேட்டு ஆகும். இந்த கூட்டுச்சர்க்கரை எல்லா பச்சைத் தாவரங்களாலும் ஒளியின் முன்னிலையில் காபனீரொக்சைட்டு நீர் இணைந்து உருவாக்கப்பட்டு ஆற்றல் தேவைக்காக சேமிக்கப்படும். இதுவே மனிதரின் உணவில் உள்ள பொதுவான காபோவைதரேட்டு வகையாகும். வெவ்வேறு நாட்டு மனிதர்கள் வெவ்வேறு உணவை தமது முக்கிய உணவாகப் பயன்படுத்துவர். கோதுமை, அரிசி, உருளைக்கிழங்கு, சோளம், மரவள்ளி என்பன முக்கிய உணவு வகைகளில் அடங்கும். இவை யாவும் மாப்போருளை தமது முக்கிய கூறாகக் கொண்டனவாகும். தூய்மையான மாப்பொருள் வெண்ணிறமான, சுவையற்ற, மணமற்ற பொடியாக இருக்கும். அத்துடன் குளிர் நீரிலோ, அல்ககோலிலோ கரையாது. இது இரு வகையான மூலக்கூறுகளைக் கொண்டது. முதலாவது நேரோட்ட சுருளி வடிவான (linear and helical) அமைலோசு, இரண்டாவது கிளை அமைப்புடைய (branched) அமைலோபெக்ரின். தாவரங்களில் பொதுவாக 20 - 25% அமைலோசும், 75 - 80% அமைலோபெக்ரினும் காண்ப்படும். விலங்குகளில் சேமிக்கப்படும் குளுக்கோசின் ஒரு தோற்றமான கிளைக்கோசன் இவ்வகை அமைலோபெக்ரினின் மெலதிகமான கிளையுடைய அமைப்பாகும். பதனிடப்பட்ட மாப்பொருள் உணவில் பல விதமான சக்கரைப் பதார்த்தங்கள் இருக்கும். சுடுநீர் சேர்க்கப்படும்போது மாப்பொருள் தடிப்படைந்து, இறுக்கமடைந்து ஒட்டும் தன்மையுள்ள பதார்த்தமாக மாறும். ஞான சூரியன் (சிற்றிதழ்) ஞான சூரியன் மலேசியா, பினாங்குவிலிருந்து வெளிவந்த ஒரு வார இதழாகும். இசுலாமிய அடிப்படையில் அமைந்த பல்வேறுபட்ட ஆக்கங்களை இது உள்ளடக்கியிருந்தது. இசுலாமிய அடிப்படைக் கருத்துக்கள், இசுலாமிய விளக்கங்கள், குர்ஆன் ஹதீஸ் விளக்கங்கள் போன்ற பல்வேறுபட்ட அம்சங்களை இது உள்வாங்கியிருந்தது. பொதுப் பங்கு நிறுவனம் பொது நிறுவனம் (public company) அல்லது பொதுப் பங்கு நிறுவனம் (publicly traded company)பொதுவில் வணிக ஈடு நிறுவனம், பொதுவில் வாங்கப்பட்ட நிறுவனம் (publicly held company), பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனம் (ஐக்கிய இராச்சியத்தில்) என்றெல்லாம் குறிப்பிடப்படுபவை ஓர் கடப்பாடு வரையறுக்கப்பட்ட நிறுவனம் (வணிகம்) ஆகும். இவை தங்கள் பத்திரங்களையும் (மூலதனப் பங்குகள்/ஈடுகள், பிணைப் பத்திரங்கள்/கடன்கள் போன்றவை) நிதி திரட்டல் ஆவணங்களையும் வழக்கமாக ஓர் பங்குச் சந்தை மூலமாகவோ அல்லது நேரடி வணிகச் சந்தைகளில் சந்தை நிதி நிறுவனங்களின் சேவை முகப்புகள் மூலமாகவோ பொதுமக்கள் வாங்குமாறு வெளியிடும் நிறுவனமாகும். பொதுவில் வரையறுக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளிட்டு, பொது நிறுவனங்கள் தங்கள் வணிக அளவையும் உள்நாட்டு சட்டங்களைப் பொறுத்தும் பங்குச் சந்தையொன்றில் பட்டியலிடப்பட்டிருக்கலாம் அல்லது இடப்படாதும் இருக்கலாம். பொது நிறுவனங்களும் பொதுத்துறை நிறுவனங்களும் வெவ்வேறானவை. பொதுத்துறை நிறுவனங்கள் முழுமையாகவோ பகுதியோகவோ அரசுடமையாக்கப்பட்டவை ஆகும். பொது வழக்கில் இவை பொது நிறுவனங்கள் எனக் குறிப்பிடப்படலாம். பொதுவாக, பொதுப்பங்கு நிறுவனத்தின் பங்குகள் பரவலான முதலீட்டாளர்களுக்கு சொந்தமாக உள்ளன; தனிப்பங்கு நிறுவனமொன்றில் நிறுவனப் பங்குகள் ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த முதலீட்டாளர்களுக்கே சொந்தமாக இருக்கும். பெருமளவில் பங்குதாரர்கள் இருப்பதாலேயே ஒரு நிறுவனம் பொதுப்பங்கு நிறுவனமாகி விடாது. ஐக்கிய அமெரிக்காவில் 1934 பங்குச் சந்தை சட்டத்தின் கீழுள்ள நிறுவனங்கள் பொதுப்பங்கு நிறுவனங்களாகும். முதல் பொதுப்பங்கு நிறுவனமாக 1601ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட டச்சு கிழக்கிந்திய கம்பனி கருதப்படுகிறது. பறம்பு மலை பறம்பு மலை 10°14'38.44"N சங்க காலத்தில் முல்லைக்குத் தேரீந்த வள்ளல் பாரி வாழ்ந்த மலையாகும். இம்மலை கபிலர் முதலான புலவர்களால் பாடப்பெற்ற புகழுடையதாகும். சங்க காலத்தில் பறம்பு மலை எனவும், பின்னர் திருநெலக்குன்றம் எனவும் சமய இலக்கியங்களில் திருக்கொடுங்குன்றம் எனவும், பெயர் பெற்ற இம்மலை தற்போது பிரான்மலை எனவும் வழங்கப்படுகிறது. "ஈண்டுநின் றோர்க்கும் தோன்றும் சிறுவரை சென்று நின்றோர்க்கும் தோன்றும்" என்று கபிலர் பாடல் குறிப்பிடுவது போலவே 2450 அடி உயரத்துடன் நெடுந்தூரத்திலிருந்து பார்க்கவும் தெரிவதாக இம்மலை அமைந்துள்ளது. பறம்பு மலை சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரிக்கு அருகில் உள்ளது. காரைக்குடியிலிருந்து மேற்கே 42 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து வடக்கே 63 கி.மீ. தொலைவிலும், புதுக்கோட்டையிலிருந்து தென்மேற்கே 45 கி.மீ. தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரியிலிருந்து கிருங்காக்கோட்டை வழியாக 7 கி.மீ தொலைவில் உள்ளது. மதுரை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பொன்னமராவதி ஆகிய நகரங்களிலிருந்து பேருந்தில் செல்ல முடியும். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டது பறம்பு நாடு. இது பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. இந்நாடு பறம்புநாடு, பாரிநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். இது சங்க காலத்திலிருந்து புகழ் பெற்றிருந்தது. இந்த நாட்டை வேள்பாரி. கி.பி 2ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆண்டான். வேளிர் குலத் தலைவனாக விளங்கிய இவன் ஈரத்திலும் வீரத்திலும் சிறந்து விளங்கியவன் பாரி மன்னன். அதனுடைய எல்லைகளாக, எனக் கொள்வர். பிற்காலத்தில் இப்பறம்பு நாடு பாண்டி மண்டலத்தின் ஒரு பகுதியாக மாறியது. சங்க காலத்து நல்லிசைப் புலவர்களான கபிலர், ஔவையார், மிளைக்கந்தனார், நக்கீரர், புறத்திணை நன்னாகனார், பெருஞ்சித்திரனார், நல்லூர் நத்தத்தனார் முதலியோர் வள்ளல் பாரியையும் பறம்பு மலையையும் பாடியுள்ளனர். பக்தி இலக்கியக் காலத்து திருஞான சம்பந்தரும், அருணகிரி நாதரும் பாடியுள்ளனா். இப்பறம்பு மலை தற்காலத்தில் பிரான்மலை என்று வழங்கப் பெறுகிறது. இங்குள்ள விசுவநாதர் கோயில் கருவறை வடக்குப்புற அடிப்படைச் சுவரில், என்று குறிக்கப் பெற்றுள்ளது. அதே கோயில் பின்புறம் முகப்பு அடிப்படை முகப்புப் பட்டைத் தொடரில், என்றும் இரு கல்வெட்டுகள் இருக்கின்றன. இத்தலத்தைப் பற்றியனவாக இருபத்தொரு கல்வெட்டுக்கள் அரசியலாரால் கி.பி. 1903 ஆம் ஆண்டில் படியெடுக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் எட்டுக் கல்வெட்டுகள் ஆராய்ந்து முடிவுகட்டப்பெற்றன. ஏனையவை அறியப் பெறாதன. நான்கு கல்வெட்டுக்கள் குலசேகர பாண்டியனுடைய ஆட்சி 10, 13 ஆம் ஆண்டுகளில் நிகழ்ந்தவை. இவற்றை இங்ஙனம் வரையறுத்து எழுதியவர் ஸெவல் பாதிரியார். இத்தலத்தில் சுந்தரபாண்டியன் மண்டபம் (இது கருப்பக் கிருகவாயிலில் உள்ளது) ஆறுகால் மண்டபம் (-144 of 1903), லக்ஷ்மி மண்டபம்(-142 of 1903), முதலிய மண்டபங்களும் , விசுவநாதர் கோயில்(-146 of 1903), சுப்பிரமணிய சுவாமி கோயில் (-152 of 1903) முதலியனவும் கோயிலுக்குள் இருக்கின்றன. பிரான்மலைக் கிராமத்தில் ஷ்ரீ சொக்கநாதர் கோயில் உள்ளது(-154 of 1903). இறைவன் மங்கைநாதர்(-138 of 1903) எனவும், கொடுங்குன்றமுடைய நாயனார்(-140 of1903) எனவும், நல்லமங்கைபாகர் எனவும், (-154 of 1903) குன்றாண்ட நாயனார் எனவும்,( -202 of 1924) குறிப்பிடப்பெறுகின்றார். பாண்டிய மன்னர்களில் சுந்தரபாண்டியன் I,சுந்தரபாண்டி யன்II, பராக்ரம பாண்டியன், குலசேகர பாண்டியன், வீரபாண்டியன் இவர்கள் விளக்குக்காகப் பசுக்களும், பொன்னும், சேவார்த்திகட்கு உணவிற்கும், விளக்குத் தண்டு செய்தற்குமாகப் பொன்னும் நிலமும் அளித்த செய்திகளை அறிவிக்கின்றன; பல கல்வெட்டுக்கள். கி.பி. 1251 – 1264க்குள் ஆண்ட கோனேரின்மைகண்டான் காலத்தில் துவராபதி வேளார், பிரபாவபுரந்தரன் ஆகிய இருவரும் நிலம் அளித்தனர். இம்மடி நரசிங்கராயர் காலத்தில் பிரான்மலைச்சீமை என்றும், திருமலை நாட்டுப்பகுதியான பிரான்மலை என்றும் குறிக்கப் பெறுகின்றது. திப்பரசரையன் நன்மைக்காகக் கேரளசிங்க வளநாட்டு இப்புலி நாயகர் நிலம் அளித்தார். இங்கு ஒரு வியாபாரிகள் சங்கம் இருந்ததாகவும் கல்வெட்டுக் கூறுகிறது(-154 of 1903). 1924 ஆம் ஆண்டில் படியெடுக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் 16. அவற்றுள் ஐந்து, பாண்டியர்கள் காலத்தன. ஏனையவை விசயநகர அரசர்கள் காலத்தன. சடாவர்மன் வீரபாண்டியன் ஆட்சி 9ஆம் ஆண்டில், திருஞானம் பெற்ற பிள்ளையார் படிமத்தை எழுந்தருள் வித்துக் கேரளசிங்க வளநாட்டுக் குலசேகரன் பட்டினத்து அருவியூ ரானான கொடுங்குன்றமுடையான் ஒருவன் பூசைக்கு நிபந்தமும் அளித்தான்(-208 of 1934). குலசேகர பாண்டியன் காலத்தில் கீழ்வேம்புநாட்டு இராசவல்லி புரத்துக் கொன்றைசேர் முடியானும், திருநெல்வேலி யுடையானும் விளக்குக்கு ஆடுகள் அளித்தனர் (-194 of 1924) . கண்ணமங்கலமான திருவெங்கா உடைய நல்லூர்; அமோகமங்கலமான முதலி நாயக நல்லூர் உடையான் இருவரும் அர்த்தயாம பூசைக்கு நிலம் அளித் தனர். அந்தப் பூசைக்குத் தாழ்வுசெய்யாதான் சந்தியென்று பெயர் (-202 of 1924). காரைக்குடியான் ஒருவன் மங்கைநாயகர் வசந்த உற்சவத்திற்காக வாணராய நல்லூரை இறையிலி செய்து அளித்தான் (-203 of 1924). விஜயநகர அரசர்கள் வேதபாராயணத்திற்காகவும்(-207 of 1924), உற்சவத்திற்காகவும் (-196 of 1924), கானூர் முதலிய இடங்களை அளித்தனர் பாரிவேட்டை என்ற பெயரில் ஒரு வேட்டை இப்போதும் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இம்மலையிலிருந்து 15 கி.மீ. எல்லைக்குட்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் இந்த வேட்டையை மரபாக நடத்தி வருகின்றனா். இம்மலைக்குத் தெற்கே கூத்துப் பாரிப் பொட்டல் என்று ஓர் இடம் இருக்கிறது. இப்பெயர் கூத்தையும் பாரியையும் தொடர்புபடுத்தி உணர்த்துவதாய் உள்ளது. பாரிவேட்டைக்குச் சென்று திரும்பும் போதில் இங்கு கூத்து நடக்கும். முல்லைக் கொடிக்குத் தேர் கொடுத்ததை நினைவுபடுத்தி இன்றும் இப்பகுதிகளில் கொடி தளும்பினால் குடி தளும்பும் என்னும் சொலவடை வழக்கில் இருந்து வருகிறது. இப்பகுதியில் குழந்தைகளுக்கு பாரி, கபிலன், முல்லைக்கொடி, நல்லமங்கை, அங்கவை, சங்கவை என்னும் பெயர்கள் வைக்கப்படுகின்றன. கவிஞர் மரு. பரமகுரு எழுதிய பறம்புமலை திருக்கொடுங்குன்றம் வரலாறு என்னும் நூலிலிருந்து தரவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஸ்தேவான் (புனிதர்) புனித ஸ்தேவான் (கிரேக்கம்: Στέφανος, "ஸ்தேபனோஸ்"), கிறித்தவத்தின் முதல் இரத்தசாட்சி ஆவார். கிரேக்க மொழியில் இவரது பெயரின் பொருள் மகுடம் (கிரீடம்) என்பதாகும். இவர் தன் உயிர்தியாகத்திற்காக கடவுளால் மகுடம் சூட்டப்பட்டதாக நம்பப்படுகின்றது. இவர் கலையில் பொதுவாக மூன்று கற்களை ஏந்தியவராகவும், திருத்தொண்டர்களுக்கான உடையிலும் சித்தரிக்கப்படுகிறார். திருத்தூதர் பணிகளின் படி தலைமைச் சங்கத்தின் முன் ஸ்தேவானை நிறுத்தி, மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகப் பழிச்சொற்கள் சொன்னதாக குற்றம் சாட்டினர். (தி.ப ) விசாரணையின் போது, ஸ்தேவான் பின்வருமாறு கூறினார்.: திருத்தூதர் பணிகள் 6 மற்றும் 7-ஆம் அதிகாரங்கள் இந்த விசாரணையை விவரிக்கின்றன. இவர் குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்டு, நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டு போய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் தர்சு நகரைச்சேர்ந்த சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். ஸ்தேவானை துன்புறுத்திய போது யூதர்கள் எப்போது நேர்மையாளர்களை கொலை செய்வதாக அவர் சாடினார்: பின்பு முழந்தாள்படியிட்டு உரத்த குரலில், ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள் மேல் சுமத்தாதேயும் என்று சொல்லி உயிர்விட்டார். கிபி 415-க்கு முன்னர் பல கோயில்கள் இவர் பெயரால் கட்டப்பட்டிருந்தன. ஆனால் இவரின் கல்லறையின் இடத்தை அறிந்தார் எவரும் இல்லை. எருசலேமிற்கு திருப்பயணம் செய்தபோது, லூசியன் என்னும் குருவுக்கு கிடைக்கப்பெற்ற காட்சியின் படி இவரது கல்லறை எருசலேமிற்கு வடக்கு பக்கத்திலுள்ள "காபார் கமாலா" என்னும் ஊரில் இருப்பதாக நம்பப்படுகின்றது. புந்தோங் புந்தோங் (ஆங்கிலம், மலாய் மொழி: Buntong) என்பது மலேசியா, பேராக், கிந்தா மாவட்டம், ஈப்போ மாநகருக்கு அருகாமையில் அமைந்து இருக்கும் ஒரு புறநகர்ப் பகுதியாகும். மலேசியாவில் அதிகமாகத் இந்தியர்கள் வாழும் பகுதிகளில் புந்தோங் முதலிடம் வகிக்கின்றது. 2013 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் 49 விழுக்காட்டினர் இந்தியர்கள். புந்தோங் புறநகர்ப் பகுதி, தமிழ்நாட்டு நகர்ப்புறச் சுற்றுச் சூழலை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது. அங்கு உள்ள சுங்கைபாரி சாலையில், பெரும்பாலும் இந்தியர்களின் கடைகளாக உள்ளன. புந்தோங்கின் பழைய பெயர் குந்தோங் ("Guntong"). 2009 ஆம் ஆண்டில் அதன் மக்கள் தொகை 102,000. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் ஈயச் சுரங்கத் தொழிலுக்கு புந்தோங் புகழ் பெற்று விளங்கியது. சீனாவில் இருந்து ஆயிரக் கணக்கான சீனர்கள் ஈப்போவின் சுற்று வட்டாரப் பகுதிகளில் குடியேறினார்கள். தமிழ்நாட்டில் இருந்து வந்த தமிழர்கள் ஈப்போவில் சிறு வணிகத் துறை, துணிமணிகள், ஆடை ஆபரணங்கள் விற்பனைத் துறைகளில் ஈடுபட்டனர். குஜாராத் மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் கம்பளங்களைக் கொண்டு வந்து வியாபாரம் செய்தனர். 1892-இல் ஈப்போவின் மக்கள் தொகை 1901-இல் ஈப்போவின் மக்கள் தொகை 2012-ஆம் ஆண்டு, ஈப்போவின் மக்கள் தொகை 673,318 என புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஈப்போவில் விலைவாசியின் தாக்கங்கள் குறைவு என்பதால், பெரும்பாலோர் இங்கு இருந்து கோலாலம்பூருக்கு வேலைக்குச் செல்வதை விரும்புகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சுங்கை பாரி, சிலிபின், குந்தோங் பகுதிகளில் குடியேறினர். முதன்முதலாகச் சுங்கை பாரியில் தான் தமிழர்கள் குடி பெயர்ந்தனர். பெரும்பாலும் இரயில்வே சாலைக்கு அருகில் வீடுகளைக் கட்டிக் கொண்டனர். 1903 ஆம் ஆண்டு ஓர் அரசாங்கத் தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டப் பட்டது. அதன் பெயர் சங்கீத சபா கலாசாலை. இப்போது அதைச் சங்கீத சபா தமிழ்ப்பள்ளி என்று அழைக்கிறார்கள். 1906 ஆம் ஆண்டு தமிழர்களுக்காக மேடான் கிட் எனும் இடத்தில் ஒரு குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. அப்பகுதி இப்போதைய பேராக் போலீஸ் தலைமையகத்திற்கு அருகில் இருக்கிறது. 150 குடும்பங்கள் அங்கு குடியேற்றம் செய்யப் பட்டன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் 40 X 50 அடி பரப்புள்ள நிலம் வழங்கப் பட்டது. பத்து ஆண்டுகளில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அதனால் ஒரு மாற்று இடம் தேவைப் பட்டது. ஆகவே, தமிழர்களுக்கு என புந்தோங் குடியேற்றப் பகுதி புதிதாகத் தோற்றுவிக்கப் பட்டது. இப்பகுதி சுங்கை பாரியின் கிழக்குப் பகுதியில் இருந்தது. இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் அங்கே குடியேறினர். இந்துக்களின் நலனை ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா கவனித்துக் கொண்டது. அந்தக் காலக் கட்டத்தில், கோலாலம்பூரில் ஆண்டுதோறும் தைப்பூசம் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. அதைப் போல ஈப்போவிலும் கொண்டாட விருப்பப் பட்டார்கள். புந்தோங் சுங்கை பாரி சாலையில் ஏற்கனவே மாரியம்மன் ஆலயம் இருந்தது. ஆகவே, அங்கு இருந்து குனோங் சிரோ பகுதியில் இருக்கும் கல்லுமலைக் கோயிலுக்குத் தைப்பூச ரத ஊர்வலம் சென்று அடைவது என முடிவு செய்யப் பட்டது. 1912 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை அந்த ரத ஊர்வலம் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்று வருகிறது. அப்பகுதி வாழ் இந்தியர்களுக்காக ஓர் உல்லாச மையம் தேவைப் பட்டது. தங்களுடைய பொழுதை நல்ல முறையில் கழித்திட அந்த மையம் உதவும் என்று எதிர்பார்த்தனர். அந்த வகையில் 1915 ஆம் ஆண்டு ‘இந்திய பொழுது போக்கு மன்றம்’ உருவானது. அதனை "Indian Recreation Club" என்று இப்போது அழைக்கின்றனர். நகரத்தார்கள் எனப்படும் செட்டியார்கள் ஈப்போ வாணிபத்தில் மிகுந்த ஈடுபாடு காட்டினர். அவர்கள் இரும்பு சாமான் வியாபாரத்திலும் ஈடுபட்டனர். பேராக் மாநிலத்தை ஆட்சி செய்த ஆங்கிலேயர்களே நகரத்தார்களிடம் கடன் வாங்கி இருக்கிறார்கள் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. கிந்தா மாவட்டத்தில், குறிப்பாக ஈப்போவில் வாழ்ந்த செட்டியார்கள் தங்களின் வட்டித் தொழிலை விரிவு படுத்தினர். அவர்களிடம் சீனச் சுரங்க முதலாளிகளும் கடன் வாங்கி உள்ளனர். மலாய்க்காரர்கள் தங்கள் நிலங்களை அடைமானம் வைத்துக் கடன் வாங்கினர். வட்டி கட்டத் தவறிய நிலங்கள் பறிமுதல் செய்யப் பட்டன. அந்த நிலங்கள் பின்னர், நகரத்தாரின் உடைமைகளாயின.. இந்திய முஸ்லீம் வர்த்தகர்கள் மளிகைக் கடைகள், சாப்பாட்டுக் கடைகள், புத்தகக் கடைகள் போன்றவறை நடத்தினர். சுருட்டு, பீடி, புகையிலை வியாபாரத்திலும் ஈடுபட்டனர். அவர்களில் ஏ.எம்.ஏ நைனா முகமது, கே,என். முகமது நிறுவனங்கள் குறிப்பிடத் தக்கவை. இவர்களின் தலைமையகங்கள் அப்போது பினாங்கு, தைப்பிங்கில் இருந்தன. புட்டியில் அடைக்கப் பட்ட பான வகைகளை விநியோகம் செய்வதிலும் இந்திய முஸ்லீம் வர்த்தகர்கள் தீவிரம் காட்டினர். 1887 ஆம் ஆண்டு தைப்பிங்கைச் சேர்ந்த சையது புர்ஹான் என்பவர் பேராக்-பினாங்கு குளிர்பான நிறுவனத்தைத் தோற்றுவித்தார். அதே காலக் கட்டத்தில் தைப்பிங்-கம்பார்-ஈப்போ குளிர்பான நிறுவனத்தை ஷேக் அடாம் என்பவர் உருவாக்கினார். 1910ல் சிங்கப்பூரின் பிரசர் நீவ் நிறுவனம் தன்னுடைய கிளைத் தொழில்சாலையை ஈப்போவில் திறந்தது. அதனால், மூன்று நிறுவனங்களுக்குள் கடும் போட்டி தோன்றியது. 1905ல் கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனம் சுங்கை பாரி சாலையில் குளிர்படுத்தப் பட்ட இறைச்சி வகைகள், பழங்கள், வெண்ணெய் பொருள்களை விற்கும் நிறுவனத்தைத் திறந்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஷேக் அடாம் ஓர் ஐஸ்கட்டி நிறுவனத்தை உருவாக்கினார். ஒவ்வொரு நாளும் பல டன்கள் ஐஸ் கட்டிகள் தயாரிக்கப் பட்டன. ஷேக் அடாம் விரைவில் செல்வந்தர் ஆனார். 1908 ஆம் ஆண்டு ஈப்போ இந்தியர் பள்ளிவாசலைக் கட்ட 500,000 டாலர்கள் அன்பளிப்பு செய்தார். ஷேக் அடாம் 1895ல் மதராஸிலிருந்து மலாயா வந்தவர். ஒரு கட்டத்தில் கிந்தா பள்ளத்தாக்கின் பணச் சுழற்சியே செட்டியார்களின் பிடியில் தான் இருந்தது. இவர்கள் கட்டிய தமிழ்ப்பள்ளியின் பெயர் செட்டியார் தமிழ்ப்பள்ளி. அப்பள்ளி லகாட் சாலையில் இருக்கிறது. அதே சாலையில் தண்டாயுதபாணி கோயிலையும் கட்டினார்கள். அக்கோயிலைச் செட்டியார் கோயில் என்று இந்துக்கள் இன்றும் அழைக்கின்றனர். இப்போது ‘லிட்டில் இந்தியா’ என்று அழைக்கப் படும் லகாட் சாலை, ’போத்தல் கடைத் தெரு’ என்று அழைக்கப் படும் ஜாலான் பெண்டாஹாரா போன்றவை நகரத்தார்களின் ஆதிக்கத்தில் இருந்தவை. செட்டித் தெரு என்று ஒரு தனிச் சாலையே ஈப்போவில் இருக்கிறது. புந்தோங் புறநகர்ப் பகுதியில் நகரத்தார் மளிகைக் கடைகளைத் திறந்தனர். 1940 ஆம் ஆண்டுகளில் ஈப்போவில் எம்.எஸ்.எம்.எம் எனும் பெயரில் ஒரு வங்கி செயல் பட்டு வந்தது. அதன் கிளை புந்தோங் சேற்றுக் கம்பத்திலும் இருந்தது. அதை எம்.எஸ்.மெய்யப்பச் செட்டியார்கள் என்று அண்ணன் தம்பிகள் இருவர் நடத்தி வந்தனர். அந்த வங்கியின் தலைமையகம் அப்போது காரைக்குடியில் இருந்தது. 1950 களில் சீனர்களின் ஆதிக்கம் ஈப்போவில் வலுப் பெறத் தொடங்கியது. பொருளாதாரத்தை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டனர். அதனால் அதுவரை அங்கு வாழ்ந்த தமிழர்கள் பலர் தாயகம் திரும்பினர். வேறு சிலர் அருகில் இருந்த மற்ற ஊர்களுக்கும் புலம் பெயர்ந்தனர். வேறு வழியின்றி ஆங்கிலேயர்கள் தமிழர்களை மறுக் குடியேற்றம் செய்த முடிவு செய்தனர். 1950ல் ’பிரிக்ஸ்’ திட்டத்தின் கீழ் புந்தோங் புதுக் கிராமம் உருவானது. ஈப்போவில் இருந்து இரண்டு கி.மீ தொலைவில் அந்தப் புதிய குடியிருப்புப் பகுதி உருவாக்கப் பட்டது. ’பிரிக்ஸ்’ திட்டத்தின் கீழ் மலாயா முழுமையும் 450 புதுக்கிராமங்கள் உருவாக்கப் பட்டன. மலாயாக் கம்யூனிஸ்டுகளைத் தோற்கடிக்கப் பிரிட்டிஷ் ஜெனரல் சர் ஹரோல்டு பிரிக்ஸ் என்பவரால் உருவாக்கப் பட்டதே ’பிரிக்ஸ்’ திட்டம். புறநகர்களிலும் கிராமங்களிலும் வாழும் பொது மக்கள் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி செய்து வந்தனர். அந்த வகையில் சிதறிக் கிடக்கும் பொதுமக்களை ஒரு புது குடியிருப்பில் குடியேற்றம் செய்தால் கம்யூனிஸ்டுகளுக்கு உதவி கிடைக்காது. அதன் மூலம் கம்யூனிஸ்டுகளின் இலட்சியம் தோற்கடிக்கப் படும் என்று பிரிட்டிஷார் கருதினர். புந்தோங் புறப் பகுதியில் தமிழர்கள் குடியேற்றப் படுவதற்கு முன், 50 ஆண்டுகளுக்கு மேலாக அந்த இடத்தில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்டு வந்தது. நூற்றுக்கணக்கான ஈய வயல்கள் அங்கே இருந்தன. தூர்ந்து போன ஈய வயல்களை ஈய லம்பங்கள் என்று அழைக்கின்றனர். "Lambung" எனும் மலாய்ச் சொல்லில் இருந்து லம்பம் எனும் உள்ளூர்த் தமிழ்ச் சொல் உருவானது. ஈய லம்பங்களில் மண்ணும் மணலும் கொட்டப் பட்டுச் சம தரைகளாக ஆக்கப் பட்டன. அங்கே தமிழர்களுக்கு ஒரு பகுதி; சீனர்களுக்கு ஒரு பகுதி என வீடு கட்டிக் கொள்ள நிலம் ஒதுக்கித் தரப் பட்டது. பத்து ஆண்டுகள் அவர்களுக்கு பிரித்தானியரின் பாதுகாப்பு இருந்தது. மலாயாவில் இருந்து கம்யூனீஸ்டுகள் துடைத்து ஒழிக்கப் பட்டதும் புந்தோங் வாழ் மக்களை ஆங்கிலேயர்கள் பொருட் படுத்தவில்லை. தொடக்கத்தில் குடியேறியத் தமிழர்கள் பழைய ஈயக் குளங்களைச் சீர் செய்தனர். அவற்றை மீன் குளங்களாக மாற்றினர். குளங்களைச் சுற்றி சின்ன சின்ன குடிசைகளைக் கட்டினர். சிலர் ஆடு மாடுகளை வளர்த்தனர். சின்னச் சின்னப் பால் பண்ணைகளை உருவாகினர். ஈப்போ நகருக்குப் பால் விநியோகம் செய்யதனர். 1950களில் ஈப்போவைச் சுற்றி பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. அங்கு வாழ்ந்து வந்த தமிழர்களும் தோட்டங்களை விட்டு புற நகர்களில் குடியேறினர். சொந்தத் தொழில்களில் ஈடுபட்டனர். புந்தோங்கில் அதிகமாகத் தமிழர்கள் நிலங்களை வாங்கி வீடுகளைக் கட்டிக் கொண்டனர். புந்தோங்கின் பழைய பெயர் குந்தோங். இப்போது தாமான் ரிஷா, புந்தோங் ஜெயா என்று அழைக்கப் படும் இடங்களில் இருந்து கிளேடாங் மலை அடிவாரம் வரை பரந்து விரிந்து கிடக்கும் நிலப் பகுதியைத் தான் புந்தோங் என்று இப்போது அழைக்கின்றனர். புந்தோங் புதுக் கிராமம் உருவாக்கப் படுவதற்கு முன் கிளேடாங் மலை அடிவாரத்தில் நூற்றுக் கணக்கான சீனர்களும் இந்தியர்களும் சொந்தமாக வீடுகளைக் கட்டி வாழ்ந்து வந்தனர். அவர்கள் சொந்தமாகக் காய்கறித் தோட்டங்களை வைத்து இருந்தனர். சிலர் பன்றி வளர்ப்புத் துறையில் ஈடுபட்டனர். சிலர் ஈயச் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது முறையான குடிநீர் வசதிகள் இல்லை. சுகாதாரமான மனிதக் கழிவு முறைகளும் இல்லை. மனிதக் கழிவுகளைத் தொட்டியில் தூக்கிச் செல்லும் முறை இருந்தது. 1900 களில் புந்தோங் வட்டாரத்தில் 60 சீக்கிய குடும்பங்கள் மட்டுமே இருந்தன. பெரும்பாலும் அவர்கள் அருகாமையில் உள்ள ஈய லம்பங்களில் வேலை செய்தனர். சிலர் பால் மாடுகளை வளர்த்தனர். சிலர் மாட்டு வண்டிகளைக் கொண்டு வருமானம் தேடினர். 1908 ஆம் ஆண்டு தெலுக் குரினில் ஒரு சீக்கிய ஆலயம் கட்டப் பட்டது. அத்தாப்பு கூரைகள், சாதாரண பலகைகளைக் கொண்டு கட்டப் பட்டது. 1934 ஆம் ஆண்டு அந்தக் கோயில் இரண்டு மாடிகளைக் கொண்ட கட்டடமாக மாறம் பெற்றது. 1951 ஆம் ஆண்டு புந்தோங் புதுக் கிராமம் தோற்றுவிக்கப் பட்டதும் ஜாலான் பம்பாயில் புதிய ஆலயம் உருவானது. அதிகாரப் பூர்வமாக 14 மே மாதம் 1952ல் திறக்கப் பட்டது. அதன் முகவரி: No. 1058 Jalan Bombay, Buntong, 30100 Ipoh, Perak. "Kacang Putih" என்பது மலாய்ச் சொல். 'வேர்க் கடலைக் கிராமம்’ என்று பொருள். ஒரு வேர்க் கடலைக்கே புந்தோங்கில் ஒரு கிராமம் இருக்கிறது. இந்தக் கிராமம் மலேசியாவிலேயே மிகவும் புகழ் பெற்றது. இக் கிராமம் தோன்றுவதற்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறே இருக்கின்றது. ஈப்போ கல்லு மலைக் கோயிலுக்கு அருகில் குனோங் சிரோ எனும் சுண்ணாம்புக் குன்றுகள் உள்ளன. அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சிலர் அந்த குனோங் சிரோ மலை அடிவாரத்தில் தங்கி கச்சான் வியாபாரத் தொழிலில் ஈடுபட்டனர். வீட்டில் இருக்கும் பெண்கள் வேர்க்கடலைகளைப் பொரித்துக் கொடுத்தனர். அவற்றை ஆண்கள் எடுத்துச் சென்று ஈப்போ நகரில் விற்று வந்தனர். கச்சான்களைப் பொரிப்பதற்கு விறகு அடுப்புகள் பயன்படுத்தப் படுகின்றன. அதனால் அவற்றுக்கு சுவை மிகுதி. இரண்டு தலைமுறைகளாக கச்சான் வியாபாரம் அங்கு நடைபெற்று வந்தது. ஆரம்ப காலங்களில் தலையில் கச்சான் தட்டுகளைச் சுமந்தவாறு ‘கச்சான் பூத்தே, கச்சான் பூத்தே, ஒரு காசுக்கு ஒன்று’ எனக் கூவிக் கூவி விற்றனர். அந்தக் காலக் கட்டத்தில் குனோங் சிரோ கச்சான்கள் புகழ் பெற்று விளங்கின. 1960களில் பொது மக்கள் குனோங் சிரோவைத் தேடிச் சென்று கச்சான்களை வாங்கினர். குனோங் சிரோ கச்சான்கள் மிக மிகச் சுவையானவை. அதனால் பேராக் மாநிலத்தில் மட்டும் அல்ல; மலேசியாவிலேயே புகழ் பெற்று விளங்கின. திருவிழாக் காலங்களில் குனோங் சிரோ கச்சான்களுக்கு நல்ல கிராக்கியும் இருந்தது. 1973 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் திகதி, தீபாவளிக்கு ஒரு வாரத்திற்கு முன் குனோங் சிரோவில் திடீரென ஒரு மலைச் சரிவு ஏற்பட்டது. அதில் பல வீடுகள் சிதைந்து போயின. 42 பேர் புதையுண்டு போயினர். அந்தப் புதை இடர்பாட்டில் இருந்து 12 உடல்கள் மட்டுமே மீட்கப் பட்டன. குனோங் சிரோ கச்சான் பூத்தே கிராமம் ஒரே நாளில் காணாமல் போய் விட்டது. அடுத்து, குனோங் சிரோவைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மக்கள் போகக் கூடாது என்று பேராக் மாநில அரசாங்கம் தடை விதித்தது. அப்போது பேராக் மாநில முதல்வராக டத்தோ கமாருடின் ஈசா இருந்தார். பாதிக்கப் பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் கொடுக்கப் படும் என்று மாநில அரசாங்கம் உறுதி அளித்தது. அந்த மாற்று இடம் தான் இப்போது புந்தோங்கில் இருக்கும் கம்போங் கச்சான் பூத்தே. 1974 ஆம் ஆண்டில் குனோங் சிரோவில் எஞ்சியிருந்த 30 குடும்பங்களும் கம்போங் கச்சான் பூத்தே கிராமத்திற்குப் புதுக் குடியேற்றம் செய்யப் பட்டன. அவர்கள் அங்கிருந்து மறுபடியும் கச்சான் வியாபாரத்தைத் தொடர்ந்தனர். முன்பு போல் கச்சான் தட்டுகளைத் தலையில் சுமக்கவில்லை. அதற்குப் பதிலாக சைக்கிள், மோட்டார் சைக்கிள்களைப் பயன் படுத்தினர். இவர்களில் சிலர் இப்போது ஈப்போ பேரங்காடிகளில் கச்சான் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். சிலர் பேருந்து நிலையங்கள், அரசாங்க அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள் போன்றவற்றில் வியாபாரம் செய்கின்றனர். சிலர் மொத்த வியாபாரத்திலும் இறங்கி விட்டனர். இவர்கள் கச்சான் கடலைகளை மட்டும் விற்கவில்லை. முறுக்கு, அதரசம், மரவெள்ளிக் கிழங்குச் சீவுகள், ஓமப் பொடி, உருளைக் கிழங்குச் சீவுகள் போன்றவற்றையும் விற்கின்றனர். ஒரு சில கச்சான் வியாபாரிகள் தங்கள் தயாரிப்புகளை அரபு நாடுகள், தாய்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு 5000 கிலோ வியாபாரம் செய்யும் வணிகர்களும் இந்தக் கச்சான் பூத்தே கிராமத்தில் இருக்கின்றனர்.இவர்களுடைய பிள்ளைகளில் பலர் மேல்படிப்பு படித்து விமானிகளாக, மருத்துவர்களாக, மேல்நிலை அதிகாரிகளாக மலேசியாவில் பவனி வருகின்றனர். புந்தோங்கில் 2009 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 102,000 பேர் வாழ்கின்றனர். அவர்களுக்கு ஒரு நவீன மருத்துவமனை 27 மில்லியன் ரிங்கிட் செலவில் 2009ல் கட்டப் பட்டது. இந்த மருத்துவமனை மூன்று மாடிகளைக் கொண்டது. மலேசியாவின் மிக நவீனமான மருத்துவமனைகளில் இதுவும் ஒன்று. இதில் 50 மருத்துவ ஊழியர்களும் 10 மருத்துவர்களும் பணி புரிகின்றனர். இந்த மருத்துவமனை தாமான் புந்தோங் ரியாவிற்கு அருகில் உள்ளது. 1940 ஆம் ஆண்டுகளில் புந்தோங் வாழ் தமிழர்களுக்கு ஒரு படமேடை கட்டப் பட்டது. அதன் பெயர் குளோரி. இப்போது அந்தக் குளோரி படமேடை இல்லை. மலேசியாவில் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் வந்த பின்னர் பல திரைப்பட அரங்குகள் மூடு விழா கண்டன. அவற்றில் குளோரி படமேடையும் ஒன்று. 1980களில் இந்தப் படமேடை மூடப்பட்டது. அந்த இடத்தில் இப்போது புந்தோங் மக்கள் மண்டபம் கட்டப் பட்டு உள்ளது. புந்தோங் தமிழர்களின் திருமண நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறுகின்றன. மலேசிய அரசியலில் புந்தோங் சரித்திரம் படைத்த ஊர். புந்தோங்கில் உள்ள தமிழர்கள் ஏற்படுத்தும் மாற்றங்கள் ஒட்டு மொத்த மலேசியாவின் தமிழர்களின் கவனத்தையும் ஈர்க்கின்றன. 2007 ஆம் ஆண்டு மலேசியத் தமிழர்களில் இரண்டு இலட்சம் பேர் கோலாலம்பூரில் ஒன்று கூடினர். மலேசியத் தமிழர்களுக்குச் சம உரிமைகள் வழங்கப் பட வேண்டும் என்று இண்ட்ராப் இயக்கம் பேரணி நடத்தினர். மலேசியத் தமிழர்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப் படக் கூடாது. புலம் பெயர்ந்த மக்கள் உரிமை பெற்று வாழ வேண்டும். அதுவே அந்தப் பேரணியின் தலையாய நோக்கம். அந்தப் பேரணியில் பல ஆயிரம் பேர் கைது செய்யப் பட்டனர். பலர் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு தைப்பிங் சிறைக்கு அனுப்பப் பட்டனர். பி. உதயகுமார், எஸ். கணபதிராவ், எம். மனோகரன், கே. கெங்காதரன் போன்றவர்கள் அந்த உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்கள். மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தவர்கள். அவ்வியக்கத்தின் தலைவரான வேதமூர்த்தி 2007-ஆம் ஆண்டு நாடு கடந்து லண்டனில் ஐக்கிய நாட்டவையின் கடப்பிதழுடன் வாழ்ந்து வந்தார். புந்தோங் சட்டமன்ற உறுப்பினராக சிவ சுப்பிரமணியம் ஆதி நாராயணன் இருந்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளில் வெற்றி பெற்றார். சாயமேற்றல் (உயிரியல்) சாயமேற்றல் (Staining) என்பது ஒரு மாதிரியை அல்லது உயிரணுக்களை அல்லது இழையங்களை ஆய்வு செய்வதற்காக நுணுக்குக்காட்டி ஊடாக அவதானிக்கும்போது, அங்கே உயிரணுக்கள் அல்லது இழையங்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி அவற்றை இலகுவாக அடையாளப்படுத்துவதற்காக, நுண்ணோக்கியியலில் பயன்படுத்தப்படும் ஒரு துணை தொழில்நுட்பம் ஆகும். உயிரியலிலும், மருத்துவத்திலும் பலவகையான நுணுக்குக்காட்டிகள் மூலம் பார்த்து, வெவ்வேறு உயிரியல் இழையங்களை, வேறுபடுத்தி சிறப்பித்துக் கண்டு கொள்வதற்காக நிறமூட்டிகள் / சாயங்கள் பயன்படுத்தப்படும். ஒரு மாதிரியில் ஒரு பகுதி இழையமோ (எடுத்துக்காட்டாக தசை நார்கள், இணைப்பிழையம் போன்றவற்றைக் அடையாளம் காண) அல்லது ஒரு உயிரணுத் தொகுதியோ எடுத்துக்காட்டாக: (குருதியில் வேறுபட்ட உயிரணுக்களை அடையாளப்படுத்த) அல்லது தனிக்கலங்களோ (நுண் உறுப்புக்களை அடையாளப்படுத்த) சாயமேற்றப்படலாம். உயிர்வேதியியலில் ஒரு பொருளில் உள்ள டி.என்.ஏ, புரதம், காபோவைதரேட்டு, லிப்பிட்டு போன்ற மூலக்கூறுகளை தரமறியவும், அளவிடவும் அக்குறிப்பிட்ட மூலக் கூறுகளுக்கான விசேடமான சாயங்கள் பயன்படுத்தி சாயமேற்றப்படலாம். சாயமேற்றலானது ஓட்ட குழியநுண் அளவியலில் (Flow cytometry) கலங்களை அடையாளப்படுத்தவும் உதவும். கூழ்ம மின்புல புரைநகர்ச்சியில் (gel electrophoresis), புரதங்கள், நியூக்கிளிக் அமிலங்களை கோடிட்டுக் காட்டவும் இந்த சாயமேற்றல் உதவும். நோய்த்தடுப்பு இழைய வேதி சாயமூட்டல் (immunohistochemical staining) மூலம் குறிப்பிட்ட சில புரதங்களின் அடிப்படையில் நோய்நிலைகளை அடையாளம் காண உதவும். சாயமேற்றலானது உயிரியலில் மட்டுமன்றி, வேறு துறைகளிலும் பொருட்களில் வேறுப்பாட்டை ஏற்படுத்திச் சிறப்பித்துக் காட்டப் பயன்படும். சிறுகாக்கை பாடினியம் சிறுகாக்கை பாடினியம் மறைந்துபோன தமிழ்நூல்களில் ஒன்று. காக்கை பாடினியம் என்னும் நூலைப்போலவே இதுவும் ஒரு திரட்டுநூல். இது யாப்பிலக்கணம் கூறும் நூல். நூற்பாக்களை இயற்றியவர் சிறுகாக்கை பாடினியார். இவரது பெயரால் நூலுக்குப் பெயர் அமைந்தது. இவர் காக்கை பாடினியாரின் தங்கை என்று பேராசிரியர் கருதுகிறார். குமரியாற்றைக் கடல்கொண்ட காலத்தில் வாழ்ந்தவர் என்னும் பேராசிரியர் கருத்து ஏற்புடைத்தாக இல்லை. சிறுகாக்கை பாடியனார் கி.பி. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். உரைநூல்களிலிருந்து இந்நூலின் பாக்களைத் திரட்டியவர் அறிஞர் மயிலை சீனி வேங்கடசாமி. இவரது திரட்டில் 31 நூற்பாக்கள் உள்ளன. உணவுக் கூம்பகம் உணவு வழிகாட்டல் கூம்பகம் ("Food guide pyramid") என்பது வெவ்வேறு உணவுக் குழுக்களுக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட நாளாந்த உணவின் அளவை அவற்றின் தேவை ஒழுங்குக்கு ஏற்ப படவரைபாக ஒழுங்கு படுத்திய கூம்பக அமைப்பாகும். 1992 இல் முதன்முதலில் அமெரிக்க ஐக்கிய நாட்டின் வேளாண்மை துறை இதை வடிவமைத்தது. தொடர்ந்து பல நாடுகளும் அமைப்புகளும் இத்தகைய உணவுக் கூம்பகங்களை வெளியிட்டது. பிண மலர் உலகளாவிய ரீதியில் இரு மலர்கள் பிண மலர்கள் ("corpse flowers") என அழைக்கப்படுகின்றன. சிவா இராமநாதன் சிவா இராமநாதன் (சிவயோகநாயகி, பிறப்பு: 1937) பிரான்சு நாட்டின் அதியுயர் விருதான செவாலியர் விருது பெற்ற முதல் யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண் ஆவார். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றியுள்ளதுடன், இலங்கையில் பிரெஞ்சு மொழி வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார். இவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், பருத்தித்துறை, பொலிகண்டி, திக்கம் என்ற ஊரைச் சேர்ந்தவர். பொலிகண்டி கந்தவன ஆலயத்தை பரம்பரையாக பரிபாளித்துவரும் ஆதீன கர்த்தாக்களின் குடும்பத்து சைவப்பெரியார் திக்கம் செல்லையாப்பிள்ளை, இராயமுத்து அம்மையார் தம்பதிகளின் கடைசிமகள். இவர் தனது ஆரம்பக் கல்வியை அமெரிக்க மிஷன் கல்லூரியிலும், பின்னர் பருத்தித்துறை மெதடிஸ்த மிஷன் கல்லூரியிலும் கற்றார். அதன் பின் கோயம்புத்தூர் அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் சேர்ந்து மனையியலில் சிறப்புப் பட்டம் (B .Sc) பெற்று 1963 இல் மேலும் ஒரு பட்டத்தைப் பெற்றார். 1965 இல் சுன்னாகம் இராமநாதன் கல்லூரியில் தற்காலிக ஆசிரியராகக் கடமை புரிந்து 1970 இல் பகுதி நேர விரிவுரையாளராக கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியிலும் 1972 இல் நிரந்தர நியமனம் பெற்று அளுத்கம ஆசிரிய பயிற்சிக்கல்லூரியிலும் பின் 1973 இல் பதவி உயர்வுடன் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரயளராகவும் கடமையாற்றினார். 1975 இல் பிரெஞ்சு அரசின் மேற்படிப்பு புலமைப் பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டார். பிரான்சில் விஷி என்ற ஊரில் கவிலம் என்ற பள்ளிக்கூடத்தில் பிரெஞ்சு மொழியை 9 மாத காலம் கற்றுத் தேர்ச்சி பெற்றார். அதன் பின் பாரிசில் தன்துறை சார்ந்த மேற்படிப்பை மேற்கொண்டு அதில் ஆசிரியர்களுக்குக் கொடுக்கக் கூடிய பயிற்சிகளைப் பெற்றுக் கொண்டார். இவரது இந்தப்படிப்பு சொபோரோ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டதான எம்.எஸ்.சி. பட்டப்படிப்புக்குச் சமமானதாகும். 1977 இல் மீண்டும் பலாலிக்குத் திரும்பி ஆசிரிய பயிற்சிக் கல்லூரியிலும் பின்னர் கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றினார். பிரெஞ்சுத் தூதரகத்தின் பணிப்பின் பேரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பிரெஞ்சு மொழியை 1979 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கற்பித்தார். அதேவேளை யாழ் கல்வி வலயம் 2 இல் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தார். இவர் பிரெஞ்சு மொழியை யாழ்ப்பாணம் Alliance Francaise நிறுவனத்திலும் கற்பித்து வந்தார். இவர் பிரெஞ்சு மொழியை 25 வருடங்களாக கற்பித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர் ஒக்டோபர் 2009 இல் கல்விக்காக செவாலியர் விருதினைப் பெற்றார். பிரெஞ்சு மொழியினை இலங்கையில் கற்பித்து, அம் மொழியினையும், பிரான்ஸ் நாட்டு கலாசார பங்களிப்பினையும் இலங்கையில் பல ஆண்டுகளாக பரப்பியதோடு, இவர் கல்வித் துறைக்கு ஆற்றிய சேவையை கௌரவிக்குமுகமாக பிரான்ஸ் நாட்டுக் கல்வி அமைச்சினால் (2009) இலங்கையில் உள்ள பிரெஞ்சு தூதுவரின் இல்லத்தில் வைத்து, தூதரால் இந்த விருது இவருக்கு வழங்கப்பெற்றது. செவாலியர் விருது பெற்ற ஈழத்தின் பெண்மணி வெள்ளி கடற்கரை வெள்ளி கடற்கரை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை ஆகும். கடலூரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த கடற்கரையில் நூற்றாண்டு வயதான கலங்கரை விளக்கம் உள்ளது. அடர்ந்த அலையாத்திக் காடுகள் அமைந்துள்ளன. வெள்ளி கடற்கரை பகுதியில் பிரித்தானியர்கள் உருவாக்கிய முக்கிய புனித டேவிட் கோட்டை உள்ளது. பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இந்த கடற்கரை அருகே அமைந்துள்ளது பசைக்கலப்படலம் பசைக்கலப்படலம் ("Mesohyl") என்பது பஞ்சுடலிகளில் காணப்படும் வழவழப்புள்ள ஊன்பசைகளால் நிறைந்த ஒரு பகுதியாகும். இது கலங்கள் நிறைந்த ஒரு சாறு/கரைசல் போலக் காட்சியளிப்பதால் பசைக்கலப்படலம் என அழைக்கலாம். இப்படலமானது பஞ்சுடலிகளில் அகப்படைக்கும் (Choaenoderm) புறப்படைக்கும் (Pinacoderm) இடையில் நிறைந்துக் காணப்படும் கலக்கூட்டுகள் நிறைந்த கரைசலாகும். பசைக்கலப்படலம் ஒரு வகையான இணைப்புத்திசுக்களை (Connective tissue) ஒத்துக் காணப்படுகிறது. இதில் பல கலங்களும் குறிப்பாக ரத்த வெள்ளையணுக்களை ஒத்த அமீபாகலங்கள், கலக்கட்டமைப்புகளுக்குத் தேவையான இழைகள் மற்றும் கட்டமைப்புப் பொருட்கள் நிறைந்துக் காணப்படுகின்றன. பசைக்கலப்படலம் தசைநார்ப் புரதங்களும், இழைப்புரதங்களை ஒத்த மூலங்களும், கேலக்டின் மற்றும் டெர்மடோபாண்டின் எனும் மூலக்கூறும் நிறைந்த ஒரு கூட்டாகக் காணப்படுகிறது. இதில் காணப்படும் பலப்புரதச்சட்டகங்கள் / பலபுரதக்கூறுகள் (Polypeptides) இதற்கு நல்ல அடித்தளமாக அமையப்பெற்று இதில் காணப்படும் கலங்கள் பற்றுதலுக்கும் அதில் நடக்கும் குறிகள் இடைக்கடத்தலுக்கும் (Signal transduction) கலவளர்ச்சிக்கும் (Cellular growth) துணை நிற்கிறது. பத்மாஸ்ரீ வாரியர் பத்மாஸ்ரீ வாரியர் சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் முதன்மை தொழில்நுட்ப அதிகாரி, ஆந்திரப்பிரதேசம், விஜயவாடாவில் பிறந்த இவர் இந்திய தொழில்நுட்பக் கழகம் தில்லியில் பி டெக் பட்டம் பெற்றார். மோண்ட்டி கசீனோ சண்டை மோண்டி கசீனோ சண்டை ("Battle of Monte Cassino") என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு சண்டைத் தொடர். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களின் குளிர்காலக் கோட்டினை ஊடுருவி ரோம் நகரைக் கைப்பற்ற முயன்றனர். செப்டம்பர் 1943ல் இத்தாலி மீது படையெடுத்த நேச நாட்டுப் படைகள் விரைவில் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றி வடக்கு நோக்கி முன்னேறின. மத்திய இத்தாலியில் அமைந்திருந்த ரோம் நகரைப் பாதுகாக்க ஜெர்மானியர்கள் அதற்கு தெற்கே பல அரண்கோடுகளை அமைத்திருந்தனர். அவற்றுள் மிகப் பலமானது குளிர்காலக் கோடு. பிற அரண்கோடுகளை ஊடுருவிய நேச நாட்டுப் படைகள் டிசம்பர் 1943ல் குளிர்காலக் கோட்டினை அடைந்து தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஆனால் பிற அரண்கோடுகளைப் போல இதை எளிதில் ஊடுருவ அவர்களால் இயலவில்லை. தொடர்ச்சியாக பல மாதங்கள் இதற்கான சண்டைகள் நடைபெற்றன. குளிர்காலக் கோட்டின் கிழக்குப் பகுதியில் கரடுமுரடனான நிலவியல் அமைப்பாலும், கடும் குளிர்காலத் தட்பவெட்ப நிலையாலும் நேச நாட்டுத் தாக்குதலில் தேக்க நிலை ஏற்பட்டது. எனவே மேற்குப் பகுதியில் குளிர்காலக் கோட்டினை ஊடுருவும் கட்டாயம் நேச நாட்டுப் படைகளுக்கு உருவானது. மேற்குப் பகுதியில் ரேப்பிடோ, லிரி, கரிகிலியானோ பள்ளத்தாக்குகளும் பல குன்றுகளும் மலை முகடுகளும் இடம்பெற்றிருந்தன. இவற்றுள் கசீனோ குன்று (மோண்டி கசீனோ) முக்கியமானது. ரோம் நகருக்குச் செல்லும் 6வது நெடுஞ்சாலை லிரி பள்ளத்தாக்கின் வழியாகச் சென்றது. அப்பள்ளத்தாக்கின் வாயிலில் அதனைப் பாதுக்காக்க வசதியாக கசீனோ குன்று அமைந்திருந்தது. ஜெர்மானியர்கள் அக்குன்றைச் சுற்றி பலமான அரண்நிலைகளை உருவாக்கியிருந்தனர். ரோம் நகரை நோக்கி விரைவாக முன்னேற அது ஒன்றே வழியென்ற நிலை உருவானதால், கசீனோ குன்றைத் தாக்கி அவ்விடத்தில் குளிர்காலக் கோட்டினை ஊடுருவ நேச நாட்டுத் தளபதிகள் முடிவு செய்தனர். ஜனவரி 17, 1944 அன்று கசீனோ குன்று மீதான தாக்குதல் ஆரம்பமானது. ஜெனரல் மார்க் கிளார்க் தலைமையிலான அமெரிக்க 5வது ஆர்மி இத்தாக்குதலில் ஈடுபட்டது. இதில் அமெரிக்கப் படைப்பிரிவுகளைத் தவிர பிரித்தானிய, விடுதலை பிரெஞ்சு, கனடிய போலிய, இந்திய, நியூசிலாந்திய மற்றும் இத்தாலிய நேச நாட்டு ஆதரவுப் படைப்பிரிவுகளும் இடம் பெற்றிருந்தன. ஜனவரி 17-மே 18 காலகட்டத்தில் கசீனோவைக் கைப்பற்ற நான்கு பெரும் சண்டைகள் நடைபெற்றன. முதல் சண்டை ஜனவரி 17ல் தொடங்கி பெப்ரவரி 11 வரை நடைபெற்றது. பாதுகாவல் படைகளுக்கு சாதகமான புவியியல் அமைப்பு, பலமான ஜெர்மானிய அரண்நிலைகள் ஆகிய காரணங்களால் பெரும் இழப்புகளுடன் நேச நாட்டுத் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. பெப்ரவரி 12-18 தேதிகளில் நேச நாட்டுப் படைகள் நிகழ்த்திய இரண்டாவது தாக்குதலும் தோல்வியடைந்தது. இத்தாக்குதலின் போது கசீனோ குன்றின் உச்சியில் அமைக்கப்பட்டிருந்த கத்தோலிக்க மடம் நேச நாட்டு குண்டுவீசி வானூர்திகளால் தகர்க்கப்பட்டது. மூன்றாவது தாக்குதல் மார்ச் 15ம் தேதி தொடங்கியது. கடுமையான மழைபொழிவாலும், பலப்படுத்தப்பட்ட ஜெர்மானியப் பாதுகாவல் நிலைகளாலும் இத்தாக்குதலும் மார்ச் 23ம் தேதி கைவிடப்பட்டது. அடுத்த ஒன்றரை மாத காலம் கசீனோ போர் முனையில் மந்த நிலை நிலவியது. இத்தாலியப் போர்முனைக்கான நேச நாட்டுத் தலைமை தளபதி ஹரால்ட் அலெக்சாந்தர் அடுத்த தாக்குதலே இறுதித் தாக்குதலாக இருக்க வேண்டுமென திட்டமிட்டார். இதற்காக 20 டிவிசன்கள் கொண்ட பெரும்படையினை ஒன்று திரட்டி 20 மைல் அகலமுள்ள போர்முனையில் ஒரே நேரத்தில் தாக்கினார். மே 11ம் தேதி தொடங்கிய நாலாவது தாக்குதலை ஜெர்மானியர்களால் சமாளிக்க முடியவில்லை. நேச நாட்டுப் படைபலத்தை எதிர்கொள்ள முடியாமல் பின்வாங்கினர். மே 18ம் தேதி கசீனோ குன்றும் மடமும் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டன. ஐந்து மாத சண்டைக்குப் பின் நேச நாட்டுப் படைகள் வெற்றி பெற்றாலும், அதனால் பெரிய பயன் எதுவும் விளையவில்லை. தொடர் சண்டைகளால் அவற்றுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டதுடன் ஜெர்மானியப் படைகளை அழிக்கவும் தவறிவிட்டன. பெரும்பான்மையான ஜெர்மானியப் படைப்பிரிவுகள் வெற்றிகரமாகப் பின்வாங்கி அடுத்த அரண்கோடான டிராசிமீன் கோட்டினை அடைந்து விட்டன. மோண்டி கசீனோவில் நேச நாட்டு வெற்றி பிர்ரிய வெற்றியாகவே அமைந்தது. வெட்சி வெட்சி ("இட்டிலிப் பூ") என்பது ரூபியேசியேக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். என்றும் பசுமையான மலர்ச்செடிகளான ரூபியேசியே குடும்பத்தில் 529 சிற்றினங்கள் காணப்படுகின்றன. உலகெங்கிலுமுள்ள அயன மண்டலம், உப அயன மண்டல நாடுகளில் தோன்றினாலும் அயன மண்டல் ஆசியா, குறிப்பாக இந்தியா இதன் பல்வகைமை செறிந்து காணப்படும் நாடாகும். இப்போது ஐக்கிய அமெரிக்கா நாடுகளிலும் வெட்சி வளர்க்கப்படுகிறது. இத்தாவரம் 3-6 அங்குலம் நீளமுள்ள தோல் போன்ற இலையையும் சிறு பூக்களின் கொத்துக்களால் ஆனது. அமில மண்ணுக்கு பொருத்தமான இத்தாவரம் பொன்சாய் செய்கைக்கு ஏற்றது. வெட்சி என்பது ஒருவகைக் காட்டுப்பூ. இக்காலத்தில் அழகுக்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகிறது. இது ஊசி போல் அரும்பு விடும். வெண்ணிற வெட்சி அதியமானின் குடிப்பூ. செந்நிற வெட்சி போருக்குச் செல்வோர் சூடும் பூ. முருகனை வழிபடுவோரும் அவன் நிறமான செந்நிற வெட்சிப்பூவை அணிந்துகொள்வர். இருபாலுயிரி இருபாலுயிரி "(hermaphrodite)" அல்லது இருபால் உடலி என உயிரியலில் விவரிக்கப்படுவது இருபால் உறுப்புகள் ஒருங்கே/ஒரே உடலில் அமையப் பெற்ற ஓர் உயிரினம். அதாவது ஆண் பால் உறுப்பும், பெண் பால் உறுப்பும் ஒரே உடலில் இடம் பெற்றிருத்தலையே நாம் அழிதூஉ/இருபாலுடலி என விளிக்கிறோம். இது பெரும்பான்மையான முதுகெலும்பற்ற உயிரினங்களிலும், விதைமூடியிலித் தாவரங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றன. இதற்கு வழக்கில் அலி அல்லது பேடு என்றப் பிற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. நாம் பரவலாக அறிந்திருக்கூடிய மண்புழுக்களில் இப்பண்பு இடம் பெற்றுள்ளது. இவற்றிற்கென்று தனியாகப் பாலமைப்புக் காணப்படுவதில்லை. இவை இனப்பெருக்கத்தின் போது ஒரு பகுதி விந்துவைப் படைக்கும் ஆணாகவும் மற்றொன்று முட்டைகளைப் படைக்கும் பெண்ணாகவும் செயலாற்றும். எல்லா மண்புழுக்களும் முட்டையிடும் பண்பை அல்லது திறத்தைப் பெற்றவை. மனிதர்களிலும் இந்நிலை காணப்படலாம். ஆனால் அது போலி இருபால் நிலை (pseudo hermaphroditism) ஆகும். உண்மையான இருபால் நிலை மாந்தருள் மிக மிக அரிதாகவே காணப்படும். இதேப்போல் பூக்களில் (பெண்)சூல்களும் (ஆண்) கேசரங்களும் ஒன்றில் காணப்படுவதும் உண்டு. "ஐலொசிரியசு உண்டாட்சு", ஒரு இருபாலுடலித் தாவரமாகும். இதன் பூவில் சூலும் கேசரமும் ஒருசேரக் காணப்படுகிறது. ஹெர்மாஃபுராடைட் எனும் ஆங்கிலச் சொல் ஹெர்மிஸ் மற்றும் அஃப்ராடைட் எனும் கிரேக்கக் கடவுளரின் பெயரில் இருந்து வந்தது. இவர்களுக்குப் பிறந்த மகன் தேவதையுடன் இணைக்கப்பட்டு இரு பால் பண்புகளையும் பெற்றவனாக ஆக்கப்பட்டான் அலைகயலுருக்கள் அலைகயலுருக்கள் (அலைக்கயலுரு - ஒருமை) (Ichthyoplankton) என்பது கடல்நீர் மட்டத்திற்கு ஒட்டிய அல்லது நீர்பரப்பின் மேலிருந்து 200 மீ. களுக்குள் இடம்பெற்றுள்ள கயல்களின் உருக்களான மீன்முட்டை மற்றும் மீன்குஞ்சுகளின் பற்றியதாகும். இவைகள் அலை/நீரின் ஓட்டத்தினால் இடப்பெயர்ச்சியை மேற்கொள்கின்றன. இவை அலைவிலங்குகளுக்குள் அடங்கும். ஆனால் இவைகள் அலைவிலங்களுக்குள் குறைந்த அளவேக் காணப்பட்டாலும் அதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவைகளில் பெரும்பாலானவை பகுமிதவைவாழிகளாகத் திகழ்கின்றன. அலை - நீரோட்டம்/நீரலை என்பதையும் கயலுருக்கள் - மீனின் உருக்களாகிய மீன்குஞ்சுகள் மற்றும் மீன்முட்டைகளைக் குறிக்கும். மேலும் இவைகளை மீனின் உருப்படிகள் எனவும் பொருள் கொள்ளலாம். அலைகயலுருக்கள் என்பது நீரோட்டத்தால்/நீரின் விசைக்கு ஆட்பட்டு மிதவைவாழிகளைப் போல் இடம் பெயர்கின்றன. மிதவைவாழிகளில் ஒருச் சிறுத்தொகுதியான அலைக்கயலுருக்கள் என்பது மீனின் உருக்களான முட்டை மற்றும் குஞ்சுகளைச் சார்ந்ததேயாகும். இதில் முட்டைகள் நீந்தும் தன்மையற்று இருப்பதால் இவை அலைகள்/நீரின் வேகத்தால் எழுப்பப்பட்டு ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இழுத்துச் செல்லப்படுகின்றன. இவைப் பெரும்பாலும் கடற்பகுதிகளிலேயேக் காணப்படுகின்றன. ஏனெனில் நீரோட்டம் மிகுந்துக் காணப்படுவதால் இந்நிலை ஏற்படுகிறது. குஞ்சுகள் ஆரம்பக் காலத்தில் நீந்தும் தன்மைக் குறைவாகப் பெற்றும் நீந்தும் தன்மையற்றும் காணப்படுகின்றன. இவ்வாறு காணப்படும் குஞ்சுகள் நீரோட்டத்தால் இழுத்துச் செல்லப்படுவதும் இடம் பெயர்வதும் நிகழ்வதுண்டு. ஆனால் காலப்போக்கில் அவை நல்ல நீந்தும் தன்மையுடையதாய் மாறிவிடுகிறது. அப்போது நீரோட்டத்தின் எதிர்விசையில் பயணிக்க நல்ல வலிமையுடையதாய்த் திகழ்கிறது. இவைகளில் குஞ்சுகள் அலைத்தாவரங்களை உண்கின்றன. இவையே சில சமயங்களில் பெருவிலங்குகளுக்கு உணவாகவும் செயல் படுகின்றன. கயலுருக்களை அலப்பதின் மூலம் நாம் பொருள் விரையத்தையும் காலவிரையத்தையும் தவிர்க்கலாம். பெரிய மீன்களை மாதிரிக்கொண்டு ஆய்வதைவிட இச்சிரு குஞ்சுகளையும் முட்டைகளையும் ஆய்வதில் எளிமையாக வேலையைக் கையால முடியும். இதைக் கொண்டு நாம் பெருமீன்களின் கணக்கையும் எளிதாக உணரமுடியும். உலக வங்கிக் குழுமம் உலக வங்கிக் குழுமம் (World Bank Group, WBG) ஐந்து பன்னாட்டு அமைப்புகளை உள்ளடக்கிய ஓர் குழுமமாகும். இது உலகளவில் பெரிய நிதி நிறுவனம். இதன் முதன்மை நோக்கம் வறுமையான நாடுகளுக்கு கடன்கள் அமைத்துக் கொடுப்பதாகும். இது முறையாக பிரெட்டன் வுட்சு உடன்பாடுகள் ஏற்புறுதி வழங்கப்பட்டபின் திசம்பர் 27, 1945ஆம் ஆண்டு செயலுக்கு வந்தது. 1951ஆம் ஆண்டில் உலக மேம்பாடு அறிக்கையை தயாரிக்க அமைக்கப்பட்ட ஓசியண்டர் குழுவிற்கு அடித்தளமாக இருந்தது. சூன் 25,1946இல் செயல்படத் தொடங்கி முதல் கடனை பிரான்சிற்கு மே 9, 1947 இல் வழங்கியது. டாலர் 250 மில்லியன் மதிப்புள்ள இந்தக் கடன் போர் பிந்தைய புனரமைப்பிற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே இன்றளவில் (உண்மையான மதிப்பில்) உலக வங்கி வழங்கிய மிகப்பெரும் கடன்தொகையாக உள்ளது. "உலக வங்கி" என்பது பொதுவாக முதல் இரு நிறுவனங்களின் தொகுதியையேக் குறிக்கும். உலக வங்கிக் குழுமம் என்பது அனைத்து நிறுவனங்களையும் உள்ளடக்கிய தொகுதியைக் குறிக்கும். உலக வங்கி (ஐபிஆர்டி & ஐடிஏ) மனிதவள மேம்பாடு (கல்வி, சுகாதாரம்), வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி (பாசனங்கள், சிற்றூர் சேவைகள்), சுற்றுச்சூழல் பாதுகாப்பு (மாசுக் கட்டுப்பாடு அமைப்புகளை நிறுவுதல்), கட்டமைப்பு (சாலைகள், நகர்ப்புற புத்துயிராக்கல், மின்துறை), அரசாண்மை (ஊழல் எதிர்ப்பு, சட்டபூர்வ அமைப்புகள் மேம்படுத்தல்) போன்றவற்றில் வளரும் நாடுகளுக்கு உதவி புரியுமாறு குவிந்த செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. இவற்றிற்காக இரு அமைப்புகளும் உறுப்பினர் நாடுகளுக்கு முன்னுரிமை வட்டியில் கடன் வழங்குகின்றன; மிக வறிய நாடுகளுக்கு உதவி மானியங்கள் வழங்குகின்றன. இந்தக் கடன்களும் உதவி மானியங்களும் பெரும்பாலும் அந்தத் துறை அல்லது பொருளாதாரத்தில் உள்ள பரந்தளவு கொள்கை மாற்றங்களுக்கு உட்பட்டவை. காட்டாக, கடலோரச் சூழல் மேலாண்மை மேம்பாடு திட்டத்திற்கான கடன் புதிய தேசிய மற்றும் பிராந்திய சுற்றுச்சூழல் நிறுவனங்களை அமைப்பதையும் இனி சூழல் மாசுபடுவதைத் தடுக்கும் சட்டங்கள்/கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதையும் கட்டாயப் படுத்தும். பன்னாட்டு நிதிக் கழகம் தனியார்த் துறை முதலீடுகளுக்கு கடன் ஏற்பாடு செய்யவும் பலதரப்பு முதலீடு பொறுப்புறுதி முகமை தனியார் முதலீடுகளுக்கு காப்புறுதிகள் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. ஐ.நா சபையின் 187 உறுப்பினர்களும், கொசோவோவும் இதன் உறுப்பினர்கள் ஆவர். இவை நிதி தொடர்பான பிற அமைப்புகளிலும் பங்கு கொண்டுள்ளன. அமைப்புகளில் உறுப்பினராக உள்ள விவரம் கீழே தரப்பட்டுள்ளது. இதன் தலைமையகம் வாசிங்டன் நகரில் உள்ளது. சர்வதேச அமைப்பான இது, உறுப்பினர் நாட்டு அரசுகளின் சொத்தாகும். உலக வங்கியும் ஐக்கிய நாடுகள் சபைக்கு உட்பட்டதே. உறுப்பினர் நாடுகளுக்கு வாக்குரிமை உண்டு. நிதி பங்களிப்பைப் பொருத்து, சில நாடுகளுக்கு அதிக வாக்குகள் வழங்கப்படலாம். உலக வங்கியின் தலைவரை, அமெரிக்க அதிபர் நியமிப்பார், வங்கியின் ஆளுனர்கள் அவரை தேர்ந்தெடுப்பர். அண்மைய வங்கியின் சட்டப்படி, ஒரு திட்டம் செயல்பட 85 % வாக்குகள் தேவை. அமெரிக்கா 16.4% வாக்குகளையும், ஜப்பான் 7.9 % வாக்குகளையும், ஜெர்மனி 4.5 % வாக்குகளையும், இங்கிலாந்து 4.3 % வாக்குகளையும், பிரான்சு 4.3 % வாக்குகளையும் கொண்டுள்ளன. அமெரிக்காவுக்கு 17.4 % வாக்குகள் உள்ளபடியால், வங்கியின் பெரியளவிலான எந்த செயல்பாட்டையும் நிறுத்த உரிமை பெற்றுள்ளது. இதுவரையிலும், அமெரிக்க குடியுரிமை பெற்றவரே வங்கியின் தலைவராக இருந்துள்ளார். நிதியில் பெரும்பங்கை கொண்டுள்ளபடியால், அமெரிக்காவே தேர்ந்தெடுத்து நியமிக்கும். தலைவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். தற்போதைய தலைவராக ஜிம் யோங் கிம் நீடிக்கிறார். இவரை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நியமித்தார். இதுவரை பன்னிரெண்டு பேர் தலைவர் பதவி வகித்துள்ளனர். யூகின் மேயர் என்பவர் முதல் தலைவராக, 1946 மேயில் இருந்து ஆறு மாதங்களுக்குப் பணியாற்றினார். முன்பைவிட அதிக தகவல்களை பொதுமக்கள் பெறும்படி சட்டங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளன. தயாரிக்கப்படவுள்ள திட்டங்கள், செயல்பாட்டில் உள்ள திட்டங்கள், கூட்டங்கள், செயல்பாடுகள் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறலாம். சில சந்தர்ப்பங்களில், நிதி தொடர்பான தகவல்கள் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்படலாம். விலக்கப்பட்ட சிலவற்றைத் தவிர பிற அனைத்து தகவல்களையும் அறிந்துகொள்ளலாம். சென்னைப் பள்ளிகள் சென்னைப் பள்ளிகள், சென்னை மாநகராட்சி, கல்வித் துறையின் கீழ் இயங்கிவரும் பள்ளிகள். சென்னை மாநகராட்சி பள்ளிகள் என்றழைக்கப்பட்டவை தற்போது சென்னைப் பள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன.ஏழை எளிய, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மாணவர்களும் தரமான, சிறந்த கல்வி பெறுவதையே தனது லட்சியமாக கொண்டு சென்னைப் பள்ளிகள் செயலாற்றி வருகின்றன. இப்பள்ளிகளில் சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையும் மாணவர் தேர்ச்சி விகிதமும் அதிகரித்து வருகின்றன. 1912ம் ஆண்டு அன்றைய சென்னை நகராண்மைக் கழகம், சென்னை நகரம் முழுவதும் 40 ஆரம்பப் பள்ளிகளுடன் தனது கல்வித் துறையை தொடங்கியது. இன்று 32 மேல்நிலைப் பள்ளிகள், 35 உயர்நிலைப் பள்ளிகள், 97 நடுநிலைப் பள்ளிகள், 120 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 30 மழலையர் பள்ளிகள் என வளர்ச்சியடைந்துள்ளது. அனைத்துப் பள்ளிகளிலும், தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் பாடங்கள் போதிக்கப்பட்டுவருகின்றன. மேலும், வடசென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் முற்றிலும் உருது வழி உயர்நிலைப் பள்ளி ஒன்றும், இராயபுரம்-ஆஞ்சநேய நகர் பகுதியில் முற்றிலும் தெலுங்கு வழி உயர்நிலைப் பள்ளி ஒன்றும் செயல்பட்டுவருகின்றது. மேலும், 3 தெலுங்கு தொடக்கப்பள்ளிகள், 12 உருது தொடக்கப் பள்ளிகள், 7 உருது நடுநிலைப் பள்ளிகளும் உள்ளது. சில மேல்நிலைப் பள்ளிகளில் தெலுங்குவழிப் பாடப்பிரிவுகளும் செயல்பட்டுவருகின்றது. சென்னைப் பள்ளிகள், சென்னை மாநகராட்சியின் கல்வித் துறையின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. கல்வித் துறையின் உயர் நிர்வாக அலுவலர்- இணை ஆணையர் (கல்வி). தற்போதைய இணை ஆணையர் (கல்வி) லலிதா ராஜேந்திரன், இ.ஆ.ப வின் கீழ் 1 கல்வி அலுவலர், 10 உதவிக்கல்வி அலுவலர்கள், கல்வித் துறையை நிர்வகித்து வருகின்றனர். சென்னைப் பள்ளிகள் அனைத்திலும், திறமையான, அனுபவமும், கல்வித் தகுதியும் உடைய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 4325 ஆசிரியர் பணியிடங்களில் 2009-2010ம் கல்வி ஆண்டில் 3403 பணியிடங்களில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். 2010-2011ம் கல்வியாண்டில் மேலும் சில சிறப்பாசிரியர் (இசை, உடற்கல்வி ஆசிரியர்) பணியிடங்கள் நிரப்பபட்டது. தலைமையாசிரியர் பணியிடங்கள், மூத்த ஆசிரியர்களின் பதவி உயர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு அதன் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. மற்ற ஆசிரியர் பணியிடங்கள் 50% பதவி உயர்வு மூலமும், 50% பணியிடங்கள் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நிரப்பப்படுகின்றது. தமிழக அரசின் கல்விக் கொள்கையின் படி 1:40 அதாவது 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு, நிரப்பப்பட்டு வருகின்றது. ஆசிரியர் பணியிட விவரம் சென்னைப் பள்ளிகளின் 80% மேற்பட்ட மாணவர்கள், ஏழை எளிய குடும்பங்களை சார்ந்தவர்களே. இவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.10,000 முதல் 36,000 வரை மட்டுமே. குறிப்பாக 10ம் வகுப்பு வரை பயிலும் பெரும்பான்மையான மாணவர்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். 10% மாணவர்கள், சாலை ஓரங்களில் வசிப்பவர்களின் பிள்ளைகள். சுமார் 18% மாணவர்களே நடுத்தர குடும்பங்களை சார்ந்தவர்கள், 2% மாணவர்கள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சுயதொழில் செய்பவர்களின் பிள்ளைகள். மேல்நிலைப் பள்ளிகளில், குறிப்பாக சென்னைப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், மாதவரம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை ஆகியவற்றில் மட்டுமே இந்த 2% மாணவர்கள் உள்ளனர். பல விதமான சமூக, பொருளாதார சூழ்நிலைகளில் மாணவர்கள் சென்னைப் பள்ளிகளில் பயின்றாலும், அனைத்து மாணவர்களும் சமமாகவே நடத்தப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து விதமான சென்னைப் பள்ளிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். சென்னைப் பள்ளிகளில் மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கையே அதிகம். நகோயா நகோயா (Nagoya) சப்பானின் நான்காவது மக்கட்தொகை மிகுந்த நகர்ப்பகுதி. இதுவே அய்ச்சி மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இது ஓன்சு தீவின் நடுப்பகுதியில் பசுபிக் கரையில் அமைந்துள்ளது. இது சப்பானின் பெரிய துறைமுகங்களான டோக்கியோ, கோபே ஆகியவற்றுள் ஒன்று. வெற்றிமாறன் வெற்றிமாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்பு நிலைக்கு மிக அண்மையாகப் படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இவர் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஆங்கில முதுகலைப் பட்டம் முடிக்கும் தருவாயில்,தனது பதினைந்து வயதிலேயே சினிமா மீதான ஆர்வம் இவருக்கு வந்துவிட்டது. ஆனால் அதை வெளிப்படுத்துகிற துணிச்சல் மட்டும் இல்லாமல் இருந்தது. பள்ளிப்படிப்பை முடித்து சென்னை லயோலா கல்லூரியில் சேரும்போதுதான், அதற்கான தருணம் வாய்த்தது. அந்த தைரியத்தை பேராசிரியர் ச. ராஜநாயகம் கொடுத்திருக்கிறார். . 'சினிமாதான் உன் எதிர்காலம் என்று நினைத்தால் அதில் ஈடுபடு' என்று உற்சாகமாகப் பேசியிருக்கிறார். இவரது இந்தப் பயணத்திற்கு தொடக்கமாக ச.ராஜநாயகம் இருந்துள்ளார். அவரே வெற்றிமாறனை இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராகவும் சேர்த்துவிட்டார். பாலுமகேந்திராவிடம், கதை நேரம் தொலைக்காட்சித் தொடரில் பணியாற்ற கல்லூரி படிப்பை நிறுத்தினார். இவர் திரைப்படக்கலையைப் பாலுமகேந்திராவிடம் முதன்மையாகக் கற்றார். வெற்றி மாறனின் மனைவி பெயர் ஆர்த்தி. கல்லூரி காலத்து காதல். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற மகள் உண்டு. நாகிஓசு நாகிஓசு (Nagios) என்பது பரவலாகப் பயன்படுத்தப்படும் கட்டற்ற பிணையக் கண்காணிப்புச் செயலி ஆகும். இது புரவலர்களையும், சேவைகளையும் கண்காணித்து பிரச்சினைகள் வரும் போது எச்சரிக்கை செய்யும். இது லினக்சு/யுனிக்சு இயங்கு தளங்களில் இயங்கும். தொல்காப்பியம் பிறப்பியல் செய்திகள் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்று மூன்று அதிகாரங்கள் கொண்டது. அவற்றில் முதலாவது எழுத்ததிகாரத்தில் மூன்றாவது இயல் 'பிறப்பியல்' தொல்காப்பியர் கணக்கில் தமிழ் எழுத்துக்கள் 33. அவை எவ்வாறு பிறந்து ஒலிக்கும் என்று இங்குக் கூறப்படுகிறது. வளி என்பது உலகைச் சூழ்ந்துள்ள காற்று. நாம் பேசும்போது வளி உந்தியிலிருந்து தோன்றும். உந்தியில் தோன்றும் வளி தலையிலும், மிடற்றிலும், நிலைகொள்ளும். அங்கிருந்து பாய்ந்து பல், இதழ், நாக்கு, மூக்கு, அண்ணம் ஆகியவற்றில் ஒலியைத் தோற்றுவிக்கும். ஆக நிலைகொண்டு பாயும் ஒலியுறுப்புகள் 8. இந்த எழுத்துச்செல்வத்தைத் திறப்படக் காணின் அவற்றின் வெவ்வேறு தன்மை புலப்படும். வாய் அங்காப்போடு ..., இவை ஆறும் ஒருவகைப் பிறப்பு. மொல்லின எழுத்து ஆறும் மூக்கில் இசைக்கும். குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம் ஆகிய மூன்றும் சார்பெழுத்துக்கள். இவற்றிற்க்கு என்று தனி ஒலி இல்லை. எந்த எழுத்தோடு சார்ந்து வருகிறதோ அந்த எழுத்தின் ஒலியைப் பெறும். எழுத்து பிறக்கும் பள்ளிகள் தலை, மிடறு, நெஞ்சு என்று கூறிய தொல்காப்பியர் எந்தெந்த எழுத்துக்கள் அவற்றில் பிறக்கும் என்று காட்டவில்லை. வல்லின எழுத்துக்கள் நெஞ்சிலும், ஆய்த எழுத்து தலையிலும், ஏனையவை மிடற்றிலும் பிறப்பதை அறிஞர்கள் உணர்ந்து கூறியுள்ளனர். தொல்காப்பியம் பிறப்பியல் நூற்பாக்கள் சரண்யா பொன்வண்ணன் சரண்யா பொன்வண்ணன் ("Saranya Ponvannan", பிறப்பு: ஏப்ரல் 26, 1970) பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஓர் இந்திய திரைப்பட நடிகை ஆவார். சரண்யா, மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 1980களில் சில திரைப்படங்களில் நடித்திருந்த சரண்யா எட்டு ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். பின்னர் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில், பெரும்பாலும் நாயகர்களின் அன்னை வேடத்தில், நடிக்கத் தொடங்கினார். ராம்,(2005), தவமாய் தவமிருந்து (2005), எம்டன் மகன் 2006 மற்றும் களவாணி (2010) போன்ற படங்களில் அவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது; சிறந்த குணச்சித்திர நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் வழங்கும் இரு விருதுகளும் கிட்டின. 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைபட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை தென்மேற்குப் பருவக்காற்று என்ற திரைப்படத்திற்காகப் பெற்றுள்ளார். சரண்யா சக நடிகரான பொன் வண்ணனைத் 1995 ஆம் ஆண்டு திருமணம் புரிந்துள்ளார். தேசியத் திரைப்பட விருதுகள் பிலிம்பேர் விருதுகள் கிரிப்சின் தூதுக்குழு கிரிப்சின் தூதுக்குழு ("Cripps' mission") என்பது 1942ல் பிரித்தானிய இந்தியாவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் அரசு அனுப்பிய ஒரு தூதுக்குழு. இரண்டாம் உலகப் போர் 1939ல் தொடங்கிய போது இந்தியாவின் வைசுராய் லின்லித்கோ பிரபு இந்திய மாகாண அரசுகளையும் அரசியல் கட்சிகளையும் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக பிரித்தானிய இந்தியாவின் நாசி ஜெர்மனி மீதான போர் சாற்றலை அறிவித்தார். இதனால் 1937 முதல் மாநில சுயாட்சி முறையின் கீழ் பெருவாரியான இந்திய மாகாணங்களில் ஆட்சி புரிந்து வந்த இந்திய தேசிய காங்கிரசு அரசுகள் பதவி விலகின. மாகாணங்களில் ஆளுனர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1942ல் சப்பானியப் படைகள் கிழக்காசியாவில் பெரும் பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தன. ஐரோப்பிய களத்திலும் பிரிட்டனின் நிலை கடும் நெருக்கடிக்காளாகியிருந்தது. போரில் வெற்றி பெற பெருமளவில் இந்தியப் படைகளும் இந்தியர்களின் ஒத்துழைப்பும் தேவை என பல பிரித்தானியத் தலைவர்கள் கருதினர். எனவே இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற ஒரு தூதுக் குழுவை இந்தியாவுக்கு அனுப்பினர். இதற்கு பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலின் போர்க்கால அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சர் ஸ்டாஃபோர்ட் கிரிப்ஸ் தலைமை தாங்கினார். இக்குழு அவரது பெயரால் “கிரிப்சின் தூதுக்குழு” என்றழைக்கப்பட்டது. இந்திய தேசிய காங்கிரசில் கிரிப்சுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இருவேறு கருத்துகள் நிலவின. வைசுராயின் தன்னிச்சையான முடிவினால் கோபம் கொண்டிருந்த ஒரு பிரிவினர், காலனிய அரசுக்கு எதிராக ஒரு பெரும் எழுச்சியைத் தொடங்க வேண்டுமென்று விரும்பினர். சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரி போன்றோர் போரில் அரசுடன் ஒத்துழைக்க வேண்டுமெனக் கருதினர். காந்தி இந்தியா போரில் ஈடுபடுவதை விரும்பவில்லை, மேலும் பிரித்தானிய அரசின் நல்லெண்ணத்தின் மீது அவருக்கு நம்பிக்கையில்லை. எனினும் ராஜகோபாலாச்சாரி, ஜவகர்லால் நேரு, வல்லபாய் படேல் போன்ற காங்கிரசு தலைவர்கள் கிரிப்சை சந்தித்து அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். போர் முயற்சிக்கு ஒத்துழைப்புக்கு பதிலாக உடனடியாக இந்தியாவுக்கு விடுதலை வேண்டுமென்று கோரினர். தனிப்பட்ட முறையில் கிரிப்சு இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம் வழங்கி முழு தன்னாட்சிக்கு வழிவகுப்பதாக உறுதியளித்தார், மேலும் காலப்போக்கில் அதுவே முழு சுதந்திரமாக மாற வாய்ப்புண்டு என்றும் உறுதியளித்தார். ஆனால் வெளிப்படையாக எந்த உறுதியினையும் அளிக்க வில்லை. வைசுராயின் நிர்வாகக் குழுவில் இந்தியர்களுக்கு இடமளிக்கப்படும் என்பது போன்ற சிறு சீர்திருத்தங்களை மட்டும் முன்வைத்தார். உடனடி தன்னாட்சி வேண்டுமென்று கோரிய காங்கிரசு தலைவர்கள் இதனால் கடும் அதிருப்தி அடைந்தனர். இரு தரப்பினரும் மற்றவர் மீது கொண்டிருந்த நம்பிக்கையின்மையால் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. கிரிப்சு தூதுக்குழு முயற்சி தோல்வியடைந்த பின்னர் காங்கிரசு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் தொடங்கியது. இவ்வியக்கத்தை காலனிய ஆட்சியாளர்க்ள் இரும்புக்கரம் கொண்டு அடக்கினர். எனினும், இந்தியாவுக்கு மேலாட்சி அங்கீகாரம், முழுத் தன்னாட்சி போன்றவை வழங்கலாம் என்ற கிரிப்சின் நிலைப்பாடு போர் முடிந்தபின்னர் ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடாக மாறி இந்தியாவின் விடுதலைக்கு வழிவகுத்தது. பொன்வண்ணன் பொன்வண்ணன் (பிறப்பு: மே 06, 1963) முழு பெயர் "பொன்வண்ணன் தேவர்". இவர் மதுரை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர். இவர் ஈரோடு மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தார். பல தமிழ்த் திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ள இந்தியத் திரைப்பட நடிகராவார். இவர் சக நடிகையான சரண்யாவைத் திருமணம் செய்துக்கொண்டார். பலராலும் பாராட்டப்பட்டு விருது பெற்ற ஜமீலா என்ற திரைப்படத்தை இயக்கியவர் ஆவார். சத்ய ஞான சபை சத்ய ஞான சபை தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் வடலூர் அருகே அமைந்துள்ள சமரச சன்மார்க்கச் சங்கம், திருவருட்பா அருளிய வள்ளலார் இந்த சமரச சன்மார்க்கச் சங்கத்தை தோற்றுவித்தார் பொய்மை வாழ்க்கை கண்டு அஞ்சிய வள்ளலார் சில வருடங்களில் சென்னையை விட்டு நீங்கி மருதூர், கடலூர், வடலூர் போன்ற இடங்களுக்குச் சென்று தங்க ஆரம்பித்தார். இறைவனின் மீது திருவருட்பா என்னும் தெய்வீகப் பாமாலைகளைப் புனைந்தார். வடலூரில் சத்திய ஞான சபை ஒன்றினை 1872 சனவரி 25 இல் நிறுவினார். இந்த சத்ய ஞான சபை எல்லா சமயத்தவரும் வந்து வணங்ககூடிய ஒரு பொதுவான ஆலயம் ஆகும். ஆயினும் கொலை, புலை (மாமிசம்) தவிர்த்தவர் மட்டுமே சபைக்கு உள்ளே புக அனுமதி உண்டு. இந்த சத்ய ஞான சபை எண்கோண வடிவில் தெற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. சத்ய ஞான சபையின் முன்மண்டபத்தில் கீழ்ப்புறம் பொற்சபையும், மேற்புறம் சிற்சபையும், மையத்தில் ஞானசபையும் அமைந்துள்ளது. மண்டபத்தின் மையத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், ஜோதி வடிவில் விளங்குகிறார். சத்ய ஞான சபை என்பது மனித உடம்பில் தலைப் பகுதியைக் குறிக்கும். சிற்சபை என்பது நமது புருவமத்தியாகும். சிற்சபை = சிற்+சபை சிற் என்றால் அறிவு என்றும், சபை என்றால் விளங்கும் இடம் என்றும் பொருள் படும். ஆக சிற்சபை என்பது அறிவு விளங்கும் இடம் ஆகும். இதைப் புறத்தில் எடுத்துக் காட்டவே வள்ளலார் சத்திய ஞான சபையினுள் மேற்புறத்தில் பளபளக்கும் வெள்ளி ஒளியொடு விளங்கும் சிற்சபை ஒன்றை அமைத்துள்ளார். பொற்சபையில் இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்துக்காட்டவே சத்திய ஞான சபையினுள் கீழ்ப்புறத்தில் பொன்னிற வண்ணத்தில் பொற்சபை ஒன்றை அமைத்துள்ளார். பொற்சபை என்பது அண்டத்தில் சூரியனைக் குறிக்கும். ஒரு பொருளினது உண்மையை அறிவது பொற்சபை அனுபவம் ஆகும். ஞானசபை என்பது தலையின் உச்சிப் பகுதியைக் குறிக்கும். இறைவன் இருக்கும் நிலையை புறத்தில் எடுத்து காட்டவே சத்திய ஞான சபையின் மையத்தில் ஞானசபை ஒன்றை அமைத்துள்ளார். ஞானசபை என்பது அண்டத்தில் அக்கினியை குறிக்கும். கடவுள் நிலையை அறிதல் ஞானசபை அனுபவம் ஆகும். தெற்கு நோக்கிய சபையின் முன்புறத்தில் மூன்று திறந்த வாயில்கள் உள்ளன. இருபுற சிறுவாயில்கள் நமது இரு கண்களையும் மத்தியில் உள்ள பெருவாயில் நமது புருவமத்தியுமாகும். அதனுள் முன்புற மண்டபத்தில் மேற்புறத்தில் சிற்சபையும், கீழ்ப்புறத்தில் பொற்சபையும் எதிரெதிரே அமைக்கப்பட்டுள்ளது. எண்கோணவடிவிலான சத்திய ஞான சபைக் கட்டிடத்தை பெருமானார் அவர்களே வடிவமைத்துக் கொடுத்துள்ளார். இது நமது தேகத்தின் தத்துவ விசார விளக்கமே. அதை புறத்தில் காட்டவே சத்திய ஞான சபையை அமைத்துள்ளார். முதல் பிரகாரத்தில் எண்கோண இருப்பு கம்பிச்சுற்றாலையும், அடுத்து எண்கோண கைப்பிடிச் சுவரும், அடுத்து ஞான சபைத் தாய்ச் சுவரும் உள்ளன. இவை ஒன்றுக்கொன்று இடைவெளி எட்டடிகளாம். சத்திய ஞான சபையின் உட்புறத்தில் ஆன்ம ஜோதியை உணர முடியாமல் தடுக்கும் இருபத்திநான்கு தத்துவப்பொருட்களை குறிக்கும்பொருட்டு ஞான சபை தாய்ச் சுவரின்கண் எட்டு வாயிலும், பதினாறு ஜன்னல்களும் அமைக்கப்பட்டுள்ளது. உயிரனுபவம் பூரணமாய் பெற்று அருளனுபவ நிலையில் நிற்கும்போதுதான் இந்த இருபத்திநான்கு வாயில்களும் திறக்கப்படும்போதுதான் ஒளிவடிவிலான அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தரிசனத்தைப் பெறலாம். சத்திய ஞானசபை தெற்கு நோக்கி அமைந்துள்ளது. ஏனெனில் தெற்குத் திசை என்பது சாகாக்கலையும் நித்தியதேகத்தையும் பெறுவதற்கு ஏற்ற திசை ஆகும். தெற்கு பாகம் அக்கினிப்பிரகாசம் உடையது. அதனால் ஞானசித்தியை கொடுக்கும் திசையாகும். இதை குறிக்கும் பொருட்டே சத்திய ஞானசபையை தெற்கு நோக்கி அமைத்துள்ளார். இந்த உடம்பிலிருக்கின்ற ஆன்மா சிற்றணு வடிவுடையது. நமது சிற்சபையான புருவமத்தியில் தான் ஆன்மாவை உணர முடியும். இந்த ஆன்மாவானது அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடையது. இது கால் பங்கு பொன்மை நிறமும், முக்கால் பங்கு வெண்மை நிறமும் உடையது. இந்த அனந்த கோடி சூரியப்பிரகாசம் உடைய ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியாதபடி மாயா சக்திகளாகிய ஏழுதிரைகள் மறைத்துக் கொண்டு இருக்கிறது. அவை: இந்த ஏழு மாய திரைகள் நமது புருவமத்தியில் உள்ள ஆன்மப்பிரகாசத்தை மறைத்துக் கொண்டிருக்கிறது. ஏழு மாய திரைகளை அகற்றினால்தான் நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர முடியும். இந்த உண்மை தத்துவத்தினை குறிக்கும்பொருட்டே சத்ய ஞான சபையில் ஏழுதிரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. 1872 சூலை 18 அன்று நிலையங்களின் பெயர்களை வள்ளலார் மாற்றி அமைத்தார். அதன்படி சத்திய ஞானசபை சமரசசுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என பெயர் மாற்றம் பெற்றது. அதன் வழிபாட்டு முறைகளும் வகுக்கப்பெற்றன. சத்திய ஞான சபையில் 1872 சனவரி 25 (தை 13) வியாழக்கிழமை தைப்பூசத்தன்று அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தொடங்கியது. ஆண்டுதோறும் தைப்பூச நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. பௌர்ணமி முழுநிலவும் பூச நட்சத்திரமும் ஒன்று சேரும் நாள்தான் தைப்பூச விழாவாகும். அன்று ஏழுதிரைகள் திறந்து தீப ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. சத்திய ஞானசபையைச் சுற்றி இரும்புச்சங்கிலி வளையமாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்பு நமது மூக்குத்துவாரத்தை ஒத்திருக்கிறது. அது நமது ஒரு நாளைய சுவாசம் 21600-ஜ உணர்த்துகிறது. 140 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியும் இந்த இரும்புச் சங்கிலி துருப்பிடிக்காமல் உள்ளது. தென்மேற்கு பருவக்காற்று (திரைப்படம்) தென்மேற்குப் பருவக்காற்று 2010ஆம் ஆண்டு சிபு ஐசக் தயாரிப்பில், சீனு இராமசாமி எழுதி இயக்கி வெளியான ஓர் தமிழ்த் திரைப்படமாகும். இதில் முன்னணி வேடங்களில் விசய் சேதுபதி, வசுந்தரா சியேர்ட்ரா மற்றும் சரண்யா பொன்வண்ணன் நடித்துள்ளனர். திசம்பர் 24, 2010 அன்று வெளியான இத்திரைப்படத்திற்கு சிறந்த நடிப்பிற்காக சரண்யா பொன்வண்ணனுக்கும் சிறந்த பாடலுக்காக கவிஞர் வைரமுத்துவிற்கும் தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. இந்தத் திரைப்படம் வீராயி (சரண்யா) என்ற கைம்பெண்ணின் கதையை சொல்கிறது. தனது மகன் முருகனை (விசய் சேதுபதி) தன்னந்தனியே ஆடு மேய்ப்பவனாக வளர்த்து பெரியவனாக்குகிறாள். கதை மாந்தரை சிறப்பாக காட்டுவதில் திரைக்கதை வெற்றி கண்டுள்ளது. அன்னையின் மதிப்பினை அனைவரும் உணரும் வண்ணம் திரைப்படம் அமைந்துள்ளது. . திரைப்பட பின்னணி இசையை என்.ஆர் ரகுநாதன் அமைத்துள்ளார். பாடல்வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார். இந்தத் திரைப்படப் பாடலுக்காக 2011ஆம் ஆண்டுக்கான சிறந்தப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார். தொல்காப்பியம் புணரியல் செய்திகள் தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் அதிகாரமும் 9 இயல்களாக உள்ளது. முதலாவது எழுத்ததிகாரத்தில் நான்காவது இயலாக அமைந்துள்ளது, புணரியல். எழுத்துக்கள் 33. அவற்றில் மொழியின் முதலெழுத்தாக நிற்கும் எழுத்துக்கள் 22. மொழியின் இறுதியில் நிற்கும் எழுத்துக்கள் 24. 24 ஈற்றோடு 22 முதல் சேரும்போது என்ன ஆகும் என்பதைக் கூறுவது புணரியல் எழுத்து நோக்கு மொழி நோக்கு திணை நோக்கு பொருள் நோக்கு இயல்பு திரிபு அக்கு, அம், அற்று, அன், ஆன், இக்கு, இன், ஒன், வற்று, பிற ஒழுத்துக்கள் இவ்வாறு சாரியை பெற்று வரும். பெருமாள் ஏரி பெருமாள் ஏரி தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும்.குறிஞ்சிப்பாடிக்கு 10 கிலோ மீட்டர் தொலைவில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. கடலூரில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் பெருமாள் ஏரி அமைந்துள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் இரண்டாம் பராந்தக சோழன் என்ற மன்னனால் உருவாக்கப்பட்டது. இதன் நீளம் 16 கிலோமீட்டர். அகலம் 1 கிலோமீட்டர். ஏற்கனவே நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் கழிவுகளால் 8 கிலோமீட்டர் தூரம் ஏரி தூர்ந்து விட்டது. தமிழக அரசு கடலூர் சிப்காட்டில் புதிதாக அமைந்து வரும் 3000 கோடி ரூபாய் திட்டமான நாகார்ஜுனா ரிபைனரீஸ் என்ற ஆந்திரா நிறுவனத்திற்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பெருமாள் ஏரியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. மேலும் அந்த ஏரியில் ராட்சச ஆழ் குழாய் மூலமும் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மசனோபு ஃபுக்குவோக்கா மசனோபு ஃபுக்குவோக்கா ("Masanobu Fukuoka", சப்பானிய மொழி: 福岡正信|福岡 正信, பெப்ரவரி 2, 1913 – ஆகத்து 16, 2008) ஒரு சப்பானிய வேளாண் அறிஞரும் மெய்யியலாளரும் ஆவார். இவரது தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் புகழ் பெற்றது. உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை இவர் வலியுறுத்தினார். இவரது முறையை 'இயல்முறை வேளாண்மை' என்றும் 'எதுவும் செய்யாத வேளாண்மை' என்றும் அழைக்கின்றனர். இவர் சப்பானிய மொழியில் பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொலைக்காட்சியிலும் பல நேர்காணல்களைத் தந்துள்ளார். பயிர் செய்யும் முறையையும் தாண்டி இயற்கையான உணவுமுறையையும் வாழ்முறையையும் கடைப்பிடிப்பதை இவர் ஊக்குவித்தார். ஃப்யூகூவோகா 2 பிப்ரவரி 1913 அன்று பிறந்தார். ஃப்யூகூவோகா ஒரு படித்த மற்றும் பணக்கார நில உரிமையாளர் மற்றும் உள்ளூர் தலைவர் இரண்டாவது மகன். அவர் தாவர நோயியல் ஆய்வு பற்றி படித்தார். யோக்கோகாமாவில் ஒரு சுங்க பரிசோதகர் வேலையில் 1934ல் சேர்ந்து பல ஆண்டுகளாக இருந்தார். இவர் ஷிகோகு என்ற ஜப்பானிய தீவை சேரந்தவர். நுண்ணுயிரியலில் தேர்ச்சி பெற்ற இவர், தாவர நோயியல் ஆய்வாளராக முதலில் பணிபுரிந்தார். தனது 25-ஆம் அகவையில் இக்கால வேளாண் முறைகளின் மேல் ஏற்பட்ட ஐயப்பாட்டின் விளைவாக, தான் வகித்த அறிவியல் ஆராய்ச்சியாளர் பணியினை விட்டுவிட்டு, தெற்கு யப்பானின் சிகோகு தீவிலுள்ள தனது சொந்த நிலத்தில் இயல்முறை விவசாயம் செய்ய முற்பட்டார். முறையான வேளாண் பணிகளான களையெடுத்தல், பூச்சிக்கொல்லி மருந்திடல், உரமிடல் மற்றும் நிலத்தை உழவு செய்தல் ஆகிய பணிகள் இல்லாத இயற்கை வேளாண்மை முறைகளைக் கண்டறிந்து அவ்வழியே நெல், எலுமிச்சை போன்றவற்றை விளைவிப்பதில் முழுமையாக ஈடுபட்டார். மேற்கத்திய வேளாண் அறிவியலிலிருந்து, புக்குவோக்காவின் மாற்றம், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட இயற்கை வேளாண் முறைகளுக்கு இணையானது. புக்குவோக்கா தனது முறை மேற்கத்திய வேளாண் முறைகளிலிருந்து மேம்பட்டு மண்வளம் குன்றாமல், தேவைக்கு மிகுதியான உடலுழைப்பு இல்லாமல் நல்ல விளைச்சலைத் தரக்கூடியது என்று காட்ட முயன்றார். புக்குவோக்கா தான் பயிலும் உழவு முறையை 'இயற்கை உழவு முறை' என்று அழைக்களானார். அவரது செயல்பாடுகள் பெரும்பாலும் யப்பான் நாட்டிற்கு பொருந்துவதாக இருப்பினும், அச்செயல்பாடுகளின் உள்ளார்ந்த கொள்கைகள், உலக நாடுகள் பலவற்றில் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. புக்குவோக்காவின் முறைகளில் இயற்கைச் சூழல் கூடுமான வரை பேணப்படுகின்றது. சரியான சூழல் அமைத்துக்கொடுக்கப்படும்போது விதைகள் உழவு செய்யாமல் முளைக்க வைக்கப்படுகின்றது. தானியங்களின் கீழே வெள்ளை கிராம்புச்செடி விளைவிக்கப்படுகின்றது. இந்த வெள்ளை கிராம்புச்செடிகள், தானிய செடிகளுக்கு தேவையான தழைச்சத்தினை தருகின்றது. களைகளைப் பிடுங்காமல் வளரவிட்டு, பின் வெட்டப்பட்டு கதிருக்கு அடியிலேயே இடப்படுகின்றது. இவ்வாறு இடும்போது, அக்களைகளிலுள்ள அத்தனை ஊட்டமும் நேரடியாக மண்ணுக்குச்சென்று கதிர்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றது. கதிர் விளைந்த வயலில் வாத்துக்கள் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன. மேலும் சில நன்மை செய்யும் பூச்சிகளும் வயலுக்கள் விடப்படுகின்றன. இம்முறையில் நிலம் எப்போதும் பசுமை போர்த்தியபடி இருக்குமாறு பார்த்துக்கொள்ளப்படுகின்றது. முதல் பட்டத்தில் விதைக்கப்பட்டு, கதிரறுக்கப்பட்ட தாவரங்களின் மிச்சங்கள் மூடாக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இம்முறையில் கதிரறுக்கப்படுவதற்கு முன்னரே அடுத்த பட்டத்திற்கான பயிர் நடவு செய்யப்படுகின்றது. பண்டைக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விதை நேர்த்தி முறையான 'விதையுருண்டை' முறையினை செயல்பாட்டிற்கு கொண்டுவந்தார். இம்முறையில், களிமண், மக்கிய உரம் இவற்றை கலந்து சிறிய உருண்டையாய் பிடித்து, அதனுள் ஒவ்வொரு விதை மணியையும் செருகி, நேர்த்த செய்யப்பட்டு பின் நடவு செய்யப்படுகின்றன. இவ்வாறு விளைவிக்கப்பட்ட கதிர்கள், செழிப்பாகவும், அடர்த்தியாகவும், விளைச்சல் மிகுதியாகக் கொடுக்கும் வகையிலும் அமைந்துள்ளது. செலவு பிடிக்கும் செயற்கை உரங்கள் இல்லாமல், உழவு இயந்திரத்தின் தேவை இல்லாமல் விளங்கும் புக்குவோக்காவின் முறைகளும், கொள்கைகளும் சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் குறுவிவசாயிகளுக்கு கை கொடுக்கவல்லது. தர்மன் சண்முகரத்தினம் தர்மன் சண்முகரத்தினம் ("Tharman Shanmugaratnam", பிறப்பு: 1957)) சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2007 ஆம் ஆண்டில் இருந்து சிங்கப்பூரின் நிதி அமைச்சராகப் பொறுப்பில் உள்ளார். 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து இவர் நாட்டின் துணைப் பிரதமராகவும் நிதி அமைச்சு பொறுப்புடன் கூடுதலாக மனிதவள அமைச்சராகவும் உள்ளார். 2003 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் இவர் கல்வி அமைச்சராகவும் இருந்தார். 1957 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் பிறந்தவர் தர்மன். இவரது பாட்டனார் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், ஊரெழு என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தர்மனின் தந்தை கே. சண்முகரத்தினம் மருத்துவப் பேராசிரியராவார். ஆங்கிலோ-சீனக் கல்லூரியில் கல்வி கற்ற இவர் லண்டன் பொருளியக் கல்லூரியில் பொருளியலில் பட்டம் பெற்றார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் முதுமாணிப் பட்டமும், ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொதுப்பணித் துறையில் முதுமாணிப் பட்டமும் பெற்றார். தர்மன் சப்பானிய-சீன வழக்கறிஞரான ஜேன் யுமிக்கோ இட்டோகி என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு மூன்று ஆண்களும் ஒரு பெண்ணுமாக நான்கு பிள்ளைகள் உள்ளனர். தர்மன் சண்முகரத்தினம் பன்னாட்டு நாணய நிதியம், பன்னாட்டு நாணய மற்றும் நிதிக்குழு என்பவற்றின் பணிப்பாளராகவும் இருந்து வருகின்றார். 2001 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசியலில் நுழைந்த தர்மன் முதலில் வணிகத்துறை அமைச்சில் மூத்த மாநில அமைச்சராக நியமனம் பெற்றார். பின்னர் 2003 முதல் 2008 வரை கல்வி அமைச்சராக இருந்த இவர், 2006 மே முதல் கூடுதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் . டிசம்பர் 2007 இல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட இவர் கல்வி அமைச்சராகவும் மார்ச் 2008 வரையில் இருந்தார். 2002 ஆம் ஆண்டில் இவர் மக்கள் செயல் கட்சியின் மத்திய செய்ற்குழு உறுப்பினராகத் தெரிவானார். தர்மன் ஜுரொங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டங்களின் பட்டியல் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டங்கள் நடைபெற்ற விவரங்களின் பட்டியல். தமிழ்நாடு சட்டமன்றம் கழைக்கூத்து கழைக்கூத்து (Acrobatics) என்பது மூங்கில் கம்புகளிடையே கட்டப்பட்ட கயிறில் நடந்து வித்தை காட்டும் கூத்து. கழை என்பது மூங்கில்களிகளைக் குறிக்கும் வார்த்தை. அதனால்தான் இக்கூத்துக்கு கழைக்கூத்து என்ற பெயர் வந்தது... இக்கலை வடநாட்டில் இருந்து வந்த கலை என்பதால் இதை ஆரியக்கூத்து என்றும், ஆரியக்கழைக்கூத்து என்றும் அழைக்கிறார்கள். இக்கலையை நடத்திக் காண்பவர்களை கழைக்கூத்தாடிகள் என்பர். "ஆரியக்கூத்து" என்பது வடநாட்டிலிருந்து வந்ததால் அல்ல என்றும், "ஆர் எக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண்ணாயிரு" என்ற பழமொழியில் 'ஆர் எக்கூத்து' என்ற சொற்றொடர் காலப்போக்கில் ஆரியக்கூத்து என மருவியதாகவும் சொல்வர். இக்கலையில் இசை கூட்டம் சேர்க்கும் நோக்கத்தில் பயன்படுத்தப்படுகிறது. இசைக்கு தவில் அல்லது தட்டு மற்றும் சிறு ஊதுகுழல் பயன்படுத்துவார்கள். குழந்தைகளுக்கு 2 வது மாதத்திலேயே கூத்துப்பயிற்சியை தொடங்கி விடுகிறார்கள். தலையே நிமிராத இரண்டு மாதக் குழந்தையை ஒரு கையால் தூக்கி, மேலே நிறுத்துவது தான் முதல்கட்டப் பயிற்சி. கீழே கிடத்தி வயிற்றில் ஏறி மிதிப்பது, குழந்தையின் வயிற்றில் கயிற்றைக் கட்டி, ஊஞ்சல் போல ஆட்டுவது என பயிற்சிகள் நீள்கின்றன. இந்தக் கூத்தை பெரும்பாலும் மணற்பாங்கான இடத்தில் தான் நடத்துகிறார்கள். இக்கூத்து நிகழ்த்த 9 மீட்டர் உயரத்தில் இருந்து 18 மீட்டர் வரை உயரம் உள்ள 4 வலிமையான மூங்கில்கள் தேவை. முந்தைய காலங்களில் இதைவிட அதிக உயரமுள்ள குச்சிகளைப் பயன்படுத்தி உள்ளார்கள். இரண்டு கம்புகளை பெருக்கல் குறிபோல இருபுறமும் நட்டு வைத்து, கயிற்றால் இணைப்பார்கள். கம்புகள் அசையாமல் இருக்க மாட்டுத்தோலால் செய்யப்பட்ட கயிறைக்கொண்டு கட்டி, பூமியில் இரும்புக் கம்பியை நட்டுக் கட்டி விடுவார்கள். நடப்பதற்கு வசதியாக மேலே உள்ள கயிறு இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். கூத்துத் தொடங்குவதைக் குறிக்கும் விதத்தில் தட்டு அல்லது தவில் இசைப்பார்கள். தொடக்கத்தில் சில வித்தைகாட்டும் விளையாட்டுக்கள் செய்வார்கள். தரையில் கிடக்கும் ஊசியை கண்களால் எடுப்பது, கண்ணைக் கட்டிக்கொண்டு பெண்கள் மேல் கத்தியை வீசுவது, கர்ணம் அடிப்பது, கயிற்றில் நடப்பது என இக்கலை நீளும். கயிற்றில் நடப்பது பெரும்பாலும் பெண்கள் தான். இப்போது இக்கலை அவ்வளவாக நடைமுறையில் இல்லை. கழைக்கூத்துக் கலைஞர்கள் கழைக்கூத்தாடிகள் என அழைக்கப்படுவர். இவர்கள் தங்களை தொம்பன் என தமிழ்நாட்டில் அழைத்துக் கொள்கின்றனர். இவர்களின் பூர்வீகம் குஜராத். குஜராத்தின் பூர்வகுடிகளான தோம்பரா மக்களின் பாரம்பரிய கலைதான் கழைக்கூத்து. தோம்பராக்கள் காட்டுநாயக்கர்களின் ஒரு பிரிவு என்ற கருத்து உண்டு. இவர்கள் தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள். இவர்களை ரெட்டி, டொம்பரர்கள் என்றும் அழைப்பார்கள். குஜராத், இயற்கைச் சீற்றங்களால் அடிக்கடி பாதிக்கப்பட்டதால், சீவனம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவர்கள் ஆந்திரம் வழியாக தமிழகம் வந்து அடைக்கலமானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் சிதறி வாழ்கின்றனர். தமிழகத்தில் மொத்தம் 500 கூத்தாடிக் குடும்பங்கள் இருக்கலாம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு. இவர்கள் முழுக்க, முழுக்க இந்தக் கலையை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். இவர்களில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே இக்கலையை அறிந்து வைத்திருப்பார்கள். அதனால் இதை குடும்பக்கலை என்றும் அழைப்பதுண்டு. எமிலி டிக்கின்சன் எமிலி டிக்கின்சன் ("Emily Dickinson", டிசம்பர் 10, 1830 – மே 15, 1886) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞர் ஆவார். ஆங்கிலக் கவிதையுலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர். ஐக்கிய அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாநிலத்தைச் சேர்ந்த இவர், தனிமையைப் பெரிதும் விரும்பியவர். வெள்ளை நிற ஆடைகளை மட்டும் அணிதல், விருந்தினருடன் பேசுவதில் தயக்கம் காட்டுதல், அறையை விட்டு வெளியே வராதிருத்தல் போன்ற பழக்க வழக்கங்களால் விந்தையான பெண்ணாக அறியப்பட்டார். டிக்கின்சன் ஆயிரத்து எண்ணூறு கவிதைகளை எழுதினாலும் அவரது வாழ்நாளில் அவற்றுள் வெகு சிலவே அச்சில் வெளியாகின. அவ்வாறு வெளியானவையும் பதிப்பாளர்களால் அக்காலகட்ட கவிதை மரபுகளுக்கேற்ப மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. டிக்கின்சனின் கவிதைகள் அவரது காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறிப் புதிய வடிவங்களைக் கொண்டிருந்தன. மரணம் மற்றும் மரணமின்மை ஆகியவற்றைக் கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சன் தன் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களும் இவ்விசயங்களையே கருப்பொருள்களாகக் கொண்டிருந்தன. டிக்கின்சனின் நண்பர்களுக்கு அவர் கவிதை எழுதுவது தெரிந்திருந்தாலும் அவரது மரணத்துக்குப் பின்னரே அவர் பெரும் எண்ணிக்கையில் கவிதை எழுதியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது முதல் கவிதைத் தொகுப்பு அவர் மரணமடைந்து நான்காண்டுகளுக்குப் பிறகு வெளியானது. 1955 முதல் டிக்கின்சனின் கவிதைகள் அனைத்தும் அவற்றின் மூல வடிவில் முதன்முறையாக வெளியேறின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் அவரது கவிதைகள் விமர்சகர்களின் வரவேற்பைப் பெறவில்லை. ஆனால் காலப்போக்கில் இலக்கிய உலகின் நிலைப்பாடு மாற்றமடைந்து தற்போது டிக்கின்சன் குறிப்பிடத்தக்க அமெரிக்கக் கவிஞர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். எமிலி டிக்கின்சன் 1830 ஆம் ஆண்டு, டிசம்பர்த் திங்கள் 10ஆம் தேதி மாசசூசெட்ஸ், அமெர்ஸ்ட்டிலிருந்த குடும்பத்தின் பண்ணை வீட்டில் பிறந்தார். அவரது குடும்பம் மிக வசதியான குடும்பமாக இல்லாவிட்டாலும் முக்கியமான குடும்பமாகத் திகழ்ந்தது. இருநுாறு ஆண்டுகளுக்கு முன்பு, எமிலியின் தந்தை வழி முன்னோர்கள் புதிய உலகம் என்றழைக்கப்பட்ட - ப்யுரிட்டான், சமயவாதிகள் பெரிய புலம்பெயர்வின் போது புது உலகத்திற்கு வந்திருந்தார்கள். புலம்பெயர்ந்த இடத்தில் அவர்கள் செழிப்படைந்தார்கள். எமிலி டிக்கின்சனின் தாய் வழிப் பாட்டனார், சாமுவெல் டிக்கின்சன் தனிமனிதனாக ஆமெர்ஸ்ட் கல்லூரியைத் துவக்கினார். 1813-ல், நகரத்தின் முக்கிய வீதியில் மிகப் பெரிய மாளிகையைக் கட்டினார். அந்த நுாற்றாண்டின் பெரும்பகுதியில் அந்த மாளிகை டிக்கின்சனின் குடும்ப வாழ்க்கையில் பெரும்பங்காற்றியது. சாமுவெல் டிக்கின்சனின் மூத்த மகன், எட்வர்ட், கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலம் ஆமெர்ஸ்ட் கல்லுாரியின் பொருளாளராக இருந்தார். யுனைட்டட் ஸ்டேட்ஸ் காங்கிரசின் ஹாம்ஃப்ஷயர் மாகாணத்திலிருந்து பலமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டசபை உறுப்பினராக இருந்தார். 1828, மே 6-ல் அவர் மான்சன் நகரத்தைச் சேர்ந்த எமிலி நார்க்ராஸ் என்ற பெண்ணை மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள்: எல்லா வகையிலும், எமிலி நல்ல பழக்கவழக்கமுள்ள சிறுமியாகத் திகழ்ந்தாள். மான்சன்னிற்குச் சென்றிருந்தபோது, எமிலியின் அத்தை லவினியா இரண்டு வயதுச் சிறுமி எமிலியைப்பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: "போதுமென்ற குணத்துடன் மிக நல்ல குழந்தை-சேட்டை செய்வதேயில்லை." எமிலியின் அத்தை எமிலியிடமிருந்த இசை ஆர்வத்தையும் குறிப்பாக பியானோ வாசிப்பதில் அவளுக்கிருந்த திறமையையும் கண்டறிந்தார். டிக்கின்ஸன் பிளசன்ட் தெருவிலிருந்த இரண்டு மாடிக் கட்டிடத்தில் இயங்கிக்கொண்டிருந்த ஒரு ஆரம்பப்பள்ளியில் கல்வி கற்றார். அவருடைய கல்வி விக்டோரியா காலத்துப்பெண்ணிற்கு மிகவும் பழமை வாய்ந்ததாக இருந்தது. அவளுடைய அப்பா தனது குழந்தைகள் நன்கு கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்க வேண்டும் என்று விரும்பினார். ஆகையால், வியாபார விசயமாக வெளியூர் சென்றிருந்தாலும் அவர்கள் வளர்ச்சியைக் கவனித்துவந்தார். எமிலி ஏழு வயதுச் சிறுமியாக இருந்தபொழுது, அவர் தன் குழந்தைகளுக்கு எழுதிய கடிதத்தில், "பள்ளிக்கு ஒழுங்காகச்சென்று, படிக்க வேண்டும். நான் வீட்டிற்கு வரும்பொழுது, நீங்கள் என்னவெல்லாம் புதிதாகக் கற்றீர்கள் என்பதை எனக்குச் சொல்லவேண்டும்."- என்று எழுதியிருந்தார். தன் தந்தையைப்பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம் எமிலி அவரை அன்பானவராகச் சித்தரித்துள்ள அதே சமயத்தில் அவரது தாய் கண்டிப்பானவராகவும் தனிமை விரும்பியாகவும் இருந்துள்ளார் என்பது எமிலியின் கடிதங்கள் மூலம் அறிகிறோம். தனது நம்பிக்கைக்குரியவருக்கு எமிலி எழுதிய கடிதத்தில்,"எனக்குத் துன்பம் நேருகிறபொழுதெல்லாம் நான் ஒரு குழந்தையாக என் வீட்டிற்குள் என் சகோதரன் ஆஸ்டினைத் தேடி ஓடி வருவேன். அவன் எனக்கு அச்சந்தருகிற ஒரு தாயாகத் திகழ்ந்தான். ஆனாலும், வேறு யாரையும்விட எனக்கு அவனைப்பிடிக்கும்." என்று எழுதியிருந்தார். 1840, செப்டம்பர் 7ஆம் தேதி, எமிலியும் அவளது சகோதரி லவினியாவும் ஆமெஸ்ட் அகாடமியில் கல்வி கற்க ஆரம்பித்தனர். அது ஒரு முன்னால் ஆண்கள் பள்ளி. எமிலி சேருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்தான் அங்கு மாணவிகளுக்காகவும் பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட அதே சமயத்தில்தான், அவளது தந்தை வடக்கு பிளஸன்ட் தெருவில் ஒரு வீட்டை வாங்கியிருந்தார். எமிலியின் சகோதரன் ஆஸ்டின் பிற்காலத்தில் இந்த மிகப்பெரிய வீட்டை மாளிகை என்று வர்ணித்தான். அவர்களது பெற்றோர் இல்லாத சமயங்களில் எமிலியும் , ஆஸ்டினும் தங்களை அம்மாளிகையின் முதலாளிகளாகப் பாவித்துக்கொண்டனராம். ஆமெஸட்டின் இடுகாட்டை நோக்கியிருந்த அந்த வீட்டை "மரங்களில்லாத தனித்துவமான வீடு" என்று ஒரு உள்நாட்டு அமைச்சர் வர்ணிக்கிறார். டிக்கின்சன் அகாடமியில் ஏழு வருடங்கள் இருந்தார். அவர், ஆங்கிலம் மற்றும் செம்மொழி இலக்கியம், லத்தீன், தாவரவியல், மண்ணியல், வரலாறு, "உளவியல் தத்துவம்," மற்றும் எண் கணிதம் ஆகியவற்றில் பாடம் பயின்றார். அப்பள்ளியின் அப்போதைய முதல்வர், டேனியல் டகார்ட் ஃபிஸ்கே ,"டிக்கின்சன் அறிவுக்கூர்மையானவள்; மிக அருமையான மாணவி; உயர்வான ஒழுக்கமுள்ளவள்; பள்ளியின் எல்லாக் கடமைகளிலும் உண்மையானவள்," என்று எமிலியைப்பற்றிப் பிற்காலத்தில் நினைவுகூர்ந்தார். உடல் நலக்குறைபாட்டினால் அவள் சில காலம் பள்ளிக்கு வராமலிருந்தாலும் -(1845-1846-ல் பதினோரு வாரங்கள் மட்டுமே பள்ளிக்குச் சென்றாள்)—அவள் விடாமுயற்சியுடன் கல்வியை விரும்பிக் கற்றாள். தன் தோழிக்கு எழுதிய கடிதத்தில் " மிக நல்ல பள்ளி" என்று அகாடமியைப்பற்றி எழுதியிருந்தாள். டிக்கின்சன் இளம் பிராயத்திலிருந்தே சாவின் ஆழமான அச்சுறுத்தலுக்கு ஆளானாள்- அதிலும் குறிப்பாக, அவளுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் இறந்தபோது. 1844, ஏப்ரல் மாதத்தில் அவளுக்கு மிக நெருக்கமான தோழியாகத் திகழ்ந்த அத்தை மகள் சோஃபியா ஹாலன்ட் டைஃபஸ்நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தபோது, எமிலி மனமுடைந்து போனாள். இரண்டாண்டுகள் கழித்து இதைப்பற்றி நினைவு கூர்கையில், "அவள் இறந்து போவதைச் சும்மா பார்த்துக்கொண்டிருந்ததற்குப் பதிலாக நானும் இறந்திருக்கலாம் என்று தோன்றியது." என்று கூறினாள். அவள் மிகவும் துக்ககரமாகக் காணப்பட்டதால் அவளுடைய பெற்றோர் அவளை பாஸ்டன்-லிருந்த குடும்பத்துடன் தங்கியிருக்க அனுப்பி வைத்தனர். அவள் பழைய நிலைமைக்குத் திரும்பியவுடனே ஆமெஸ்ட் அகாடமிக்குத் தன் கல்வியைத் தொடரத் திரும்பி வந்தாள். இச்சமயத்தில்தான், அவள் தன் வாழ்நாள் முழுவதும் வரப்போகிற நண்பர்களை முதன் முதலாகச் சந்தித்தாள்.அவர்கள் அபியா ரூட், அபி வுட், ஜேன் ஹம்ஃப்ரி, மற்றும் சுசன் ஹன்டிங்டன் கில்பர்ட்(சுசன் ஹன்டிங்டன் பின்னாளில் எமிலியின் அண்ணன் ஆஸ்டினை மணந்தவள்) ஆவார். 1845-ல், ஆமெஸ்டில், ஒரு சமயப் புத்தெழுச்சி நடைபெற்றது. அது டிக்கின்சனின் தோழர்களுக்கிடையே 46 உண்மைக்கான பாவமன்னிப்பு-க்கு வழிவகுத்தது. அடுத்த வருடம் டிக்கின்சன் தன் தோழிக்கு இவ்வாறு எழுதினாள்: " இவ்வளவு குறுகிய காலத்தில் நான் எனது இரட்சகனைக் கண்டுணர்ந்ததால் ஏற்பட்ட அமைதியையும் பேரானந்தத்தையும் இதற்கு முன் நான் அனுபவித்ததில்லை." மேலும் அவள் கூறுகையில்,"கடவுளிடம் தனிமையில் தொடர்பு கொண்டு அவர் எனது பிரார்த்தனைகளைக் கவனிக்கிறார் என்பதை உணர்வது மிகப் பெரிய ஆனந்தமாகும்." இந்த அனுபவம் நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை: டிக்கின்சன் ஒரு பொழுதும் நேரடியாகப் பாவமன்னிப்புக் கோரியதில்லை. சில வருடங்கள் மட்டும் அவள் இடைவிடாமல் இறைக் கூட்டங்களில் பங்கேற்றாள். ஏறத்தாழ 1852-ல், சர்ச்சுக்குச் செல்லும் வழக்கம் முடிவுக்கு வந்தபின், அவள் ஒரு பாடலை இவ்வாறு துவக்கினாள்: "சிலர் தங்கள் ஓய்வு நாளில் சர்ச்சுக்குச் செல்கிறார்கள் - / நான் வீட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்." அகாடமியின் இறுதியாண்டு வாழ்க்கையின்போது, எமிலி அகாடமியின் புதிய இளமையான புகழ்பெற்ற முதல்வர் லியோனார்ட் ஹம்ஃப்ரியின் நட்பிற்குப் பாத்திரமானாள். 1847, ஆகஸ்ட் 10-ல் அகாடமியின் இறுதிப்பருவத்தை முடித்தவுடன் டிக்கின்சன் மேரி லயான்-னின் மவுண்ட் ஹோல்யோக் பெண்கள் இறைநுால் பயிலகத்தில் (பின்னாளில் மவுண்ட் ஹோல்யோக் கல்லுாரியாக உருவெடுத்தது) சேர்ந்து பயின்றாள். அது ஆமெஸ்ட்டிலிருந்து பத்து மைல் (16 கிலோமீட்டர்) துாரத்தில் தெற்கு ஹாட்லி-யில் இருந்தது. அவள் அந்த இறைநுால் பயிலகத்தில் பத்து மாதங்கள் மட்டுமே பயின்றாள். ஹோல்யோக்கிலிருந்த பெண்களை அவளுக்குப்பிடித்திருந்த போதிலும் நீண்ட தொடர்புடைய நட்பு அங்கு அவளுக்குக் கிட்டவில்லை. ஹோல்யோக்கில் எமிலி குறுகிய காலம் மட்டும் தங்கியிருந்ததற்குச் சில காரணங்கள் உள்ளன: அவள் மோசமான உடல்நிலையுடன் இருந்தாள்; அவள் தந்தை அவள் வீட்டிலிருப்பதை விரும்பினார்; பள்ளியிலிருந்த மதப்பிரச்சாரப்போக்கை எதிர்த்தாள்; மிகவும் கட்டுப்பாட்டு மனப்பாங்குடன் இருந்த ஆசிரியர்களை வெறுத்தாள்; அத்துடன் அவளுக்கு வீட்டு நினைப்பு வாட்டியெடுத்தது. என்ன காரணமாக இருந்தபோதிலும் அவளுடைய அண்ணன் ஆஸ்ட்டின் 1848, மார்ச் 25-ஆம் தேதி "எல்லா நிகழ்ச்சியிலும் அவள் வீட்டில் இருக்கவேண்டும்" என்பதற்காக அவளை வீட்டிற்கு அழைத்துச்செல்ல வந்தான். ஆமெஸ்ட்டிற்கு வந்தபின், டிக்கின்சன் வீட்டுவேலைகளில் தன் பொழுதைக் கழித்தாள். அவள் தன் குடும்பத்தினருக்காகச் சமைத்தாள். முளைவிட்டு வளரத்துவங்கியிருந்த அந்தக் கல்லுாரி நகரத்தின் நிகழ்ச்சிகளிலும் செயல்பாடுகளிலும் பங்கேற்று மகிழ்ந்தாள். எமிலிக்கு எட்டு வயதாக இருக்கும்பொழுது, பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் நியுட்டன் என்ற வழக்குரைஞர் டிக்கின்சன் குடும்பத்தினருக்கு நண்பரானார். நியுட்டன் இறந்தபிறகு டிக்கின்சன் எழுதிய கடிதத்தின்படி, "வோர்செஸ்டருக்குச் செல்லும் முன் அவர் எனது தந்தையுடன் இரண்டு ஆண்டு காலம் இருந்தார் – எங்கள் குடும்பத்தில் முக்கியமானவராக இருந்து தன் கல்வியைத் தொடர்ந்தார்." அவர்களுக்கிடையே மிகைப்பட்ட உறவு எதுவுமில்லாவிட்டாலும், ஹம்ஃப்ரிக்குப் பிறகு வயதான ஆண்களில் இரண்டாவதாக எமிலியை ஆரம்பகாலத்தில் பாதித்த ஒரு மனிதர் நியுட்டன். அவர் ஒரு ஆசிரியராகவும், நல் ஆசானாகவும் திகழ்ந்தார். நியுட்டன் அவளுக்கு வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்-தின் எழுத்துக்களை அறிமுகப்படுத்தினார்.அவர் அவளுக்கு பரிசாகத் தந்த ரால்ஃப் வால்டோ எமர்ஸன்-னின் தொகுக்கப்பட்ட பாடல்களின் முதல் பகுதி மிகச்சிறந்த விளைவை ஏற்படுத்தியது. அவள் பின்னாளில் இவ்வாறு எழுதினாள்: " என் தந்தையின் சட்ட மாணவன் எனக்குக் கற்றுத்தந்த அவருடைய பெயர் (எமர்ஸன்) ரகசிய ஊற்றைத் தொட்டுவிட்டது." நியுட்டன் அவளிடம் மிகுந்த மதிப்புக்கொண்டிருந்தார். அவள் மேல் நம்பிக்கை கொண்டு அவளுள் இருந்த கவிஞரை அடையாளம் கண்டார். அவர் காச நோயால் செத்துக்கொண்டிருந்தபொழுது, அவர் எதிர்பார்த்த மேன்மையை அவள் அடையும் வரை அவர் வாழ விரும்புவதாக அவளுக்கு அவர் எழுதியிருந்தார். "நான் சிறுமியாக இருந்தபோது, தானே மரணத்தருவாயிலிருந்தபோதும் - மரணமில்லாமையை எனக்குக் கற்றுத்தந்த ஒரு நண்பர் - அவர் மீளவேயில்லை," -என்று 1862-ல் டிக்கின்சன் கூறியிருப்பது நியுட்டனைத்தான் என்று வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் கருதுகிறார்கள். 1850-ல் டிக்கின்சன்,"இந்தக் குளிர்காலத்தில் ஆமெஸ்ட் கேளிக்கை நிறைந்ததாக புத்துணர்ச்சியுடன் உள்ளது. ... ஓ! இது ஒரு மிகச்சிறந்த நகரமாகும்!" என்று ஆமெஸ்ட் பற்றி எழுதினாள். ஆனால் ஆமெஸ்ட் அகாடமியின் முதல்வர் லியோனார்ட் ஹம்ஃப்ரி "மூளையில் ஏற்பட்ட ரத்தத்தேக்கத்தால்" தனது 25-வது வயதில் இறந்தபோது எமிலியின் கரைபுரண்ட உற்சாகமெல்லாம் வடிந்து மிகுந்த சோகத்திற்குள்ளானாள். அவர் இறந்து இரண்டாண்டுகள் கழித்து, தன் தோழியான அபியா ரூட்டிடம் தன் துக்கத்தை வெளிப்படுத்தினாள்: "... என் நண்பர்கள் சிலர் சென்றுவிட்டனர். சிலர் துாங்கிக்கொண்டிருக்கின்றனர்.-மயானத்தில் துாங்கிக்கொண்டிருக்கின்றனர்- மாலைப்பொழுது மிகவும் துக்ககரமாக உள்ளது- அது முன்பெல்லாம் நான் படிக்கும் நேரமாக இருந்தது- என் ஆசிரியர் ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார், திறந்த புத்தகமும் மாணவியும் பள்ளியில் கண்ணீரை வரவழைத்துக்கொண்டு "தனியாக" உள்ளனர்; என்னால் கண்ணீரைத் துடைக்க முடியவில்லை; என்னால் முடிந்தாலும் நான் கண்ணீரைத் துடைக்கமாட்டேன், ஏனென்றால் அது என்னைவிட்டுப்பிரிந்த ஹம்ஃப்ரிக்கு நான் செய்யும் கண்ணீர் அஞ்சலியாகும்." 1850களில், எமிலி, சுசன் கில்பர்ட்டுடன் மிகவும் ஆழமான பாசமான உறவுகொண்டிருந்தார். எமிலி சுசனுக்கு முந்நுாறுக்கும் அதிகமான கடிதங்களை தங்கள் நட்புக்காலத்தில் அனுப்பியிருந்தார்- அவர் வேறு எவருக்கும் இவ்வாறு கடிதம் எழுதியதில்லை என்பது உண்மை. சுசன் இந்தக் கவிதாயினிக்கு மிகவும் பக்கபலமாக இருந்தாள். "சுசன் மிகவும் அன்புக்குரிய தோழியாகவும், பாதிப்பவராகவும், ஆலோசகராகவும் இருந்தாள். டிக்கின்சன் பலமுறை அவள் கூறிய மாற்றங்களைத் தன் பாடல்களில் செய்திருக்கிறாள். எமிலியின் ஆக்கப்புர்வமான செய்முறைகளில் சுசன் முக்கியப்பங்காற்றினாள்." நான்கு வருடக் காதலுக்குப்பின் சுசன் ஆஸ்டினை 1856 -ல் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அவர்கள் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையவில்லை. எட்வர்ட் டிக்கின்சன் தனக்காகவும் சுசனுக்காகவும் தி எவர்கிரீன்ஸ் என்ற வீட்டைக்கட்டினார். அது பண்ணையின் மேற்குப்புறத்தில் அமைந்திருந்தது. சுசனுக்கும் எமிலிக்குமான நட்பைப்பற்றிக் கருத்துவேறுபாடு உள்ளது. ஆஸ்டினின் நீண்டகாலத் துணைவியாக இருந்த மேபல்லுாமிஸ் டோட் முதன்முதலாக கணித்ததுபோல், எமிலியின் மடல்கள் சுசனின் பாசத்தையும் ஈடுஇணையற்ற பாராட்டுதல்களையும் கோருவதாக மட்டுமே உள்ளன. இதற்குக் காரணம் சுசனிடம் அவளுக்கிருந்த சீற்றமிகு நட்பே காரணம்; சுசன் தனிமையிலும் கவலையிலும் ஆழ்ந்துகிடந்தபோது எமிலி தொடர்ந்து மனம் வருந்தினாள் என்று டோட் நம்புகிறார். எப்படியிருந்தாலும், சுசனின் காதல் வாழ்க்கையின் எதிரி கூறுவதுபோல் "கருணையற்ற சுசன்" என்ற கருத்தைப்பற்றி, எமிலி மிகவும் நெருக்கமாக இருந்த சுசன்- ஆஸ்டின் தம்பதியரின் குழந்தைகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 1855 வரை, டிக்கின்சன் ஆமெஸ்ட்டை விட்டு நீண்ட துாரம் சென்றதில்லை. அந்த வசந்த காலத்தில், தன் தாய் மற்றும் தன் சகோதரியின் துணையுடன் அவள் வீட்டைவிட்டு மிகவும் நீண்ட துாரம் பயணப்பட்டாள். முதலில், அவர்கள் மூன்று வாரங்கள் வாசிங்டனில் தங்கியிருந்தனர். அங்கு அவளது தந்தை காங்கிரஸில் மாசாசுசட்ஸின் பிரதிநிதியாகத் திகழ்ந்தார். பிறகு அவர்கள் குடும்பத்தினருடன் ஃபிலடெல்ஃபியா-வில் இரண்டு வாரங்கள் தங்கியிருந்தனர். அங்கு, அவள் ஆர்ச் ஸ்ட்ரீட் பிரிசிபிடேரியன் சர்ச்சின் புகழ்பெற்ற பாதிரியாரான சார்லஸ் வாட்ஸ்வொர்த்தைச் சந்தித்தாள்.1882-ல் அவர் இறக்கும் வரை அவர்களுக்கிடையே ஆழமான நட்பிருந்தது. 1855 க்குப்பிறகு அவரை அவள் இரண்டு முறைமட்டுமே பார்த்திருந்தாலும், (1862-ல் அவர் சான் ஃபிரான்சிஸ்கோ விற்குச் சென்றுவிட்டார்.), அவள் "என்னுடைய ஃபிலடெல்ஃபியா", "எனது பாதிரியார்", "உலகில் உள்ள எனது அன்புக்குரிய நண்பர்" மற்றும் "என்னுடைய சிறுமிப்பிராயத்திலிருந்து என்னை மேய்ப்பவர்" என்றெல்லாம் அவரைப் பற்றி விதவிதமாகக் குறிப்பிடுகிறாள். . 1850 -ன் மத்தியில், எமிலியின் தாயார் பலவிதமான நாட்பட்ட கடுமையான நோய்களால் பீடிக்கப்பட்டு படுத்தபடுக்கையானார். அவர் 1882-ல் காலமானார். 1858, கோடைகாலத்தின்போது எமிலி தன் தோழி ஒருத்திக்கு எழுதிய கடிதத்தில்,"அம்மாவையும் வீட்டையும் விட்டுவிட்டு வரமுடிந்தால் உன்னைச் சந்திக்க வந்திருப்பேன். நான் வெளியிலேயே செல்வதில்லை. அப்பா வந்தால் என்னைத் தேடுவார். ஏதாவது சிறிய வேலையை நான் மறந்துவிட்டால்கூட நான்தான் ஓடி வரவேண்டும். அம்மா எப்பொழுதும்போலவே உள்ளார். அம்மாவைப்பற்றி என்ன நம்பிக்கை வைப்பது என்று தெரியவில்லை", என்று குறிப்பிட்டுள்ளாள். அவளது அம்மாவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், டிக்கின்சனின் வீட்டுப்பொறுப்புகள் அவள் தலையிலேயே விழுந்தது. அதனால் பண்ணைவீட்டிலேயே முடங்கிக்கிடக்கும்படி ஆனது. தங்கள் அம்மா படுத்த படுக்கையாக இருந்ததால், இரண்டு மகள்களில் யாராவது ஒருவர் அவரருகில் எப்பொழுதும் இருக்கவேண்டியிருந்ததாக நாற்பது வருடங்களுக்குப்பிறகு, லவினியா தெரிவித்தாள். எமிலி இந்த வேலையைத் தானாக விரும்பி ஏற்றுக்கொண்டாள். "தன் மனதுக்கு ஏதுவாக வாழ்க்கையைத் தன் புத்தகங்களிலும் இயற்கையிலும் தேடி அறிந்து தொடர்ந்து அப்படியே வாழ்ந்தாள்." வெளி உலகத்திலிருந்து ஒதுங்கிக்கொண்ட எமிலி 1858 -ன் கோடைகாலத்தில் எழுத ஆரம்பித்தாள். அது அவளது நீடித்து நின்ற மரபுரிமைச்செல்வமாக அமைந்தது. ஏற்கனவே தான் எழுதிய பாடல்களை சரிபார்த்த அவள், அவற்றை குறையில்லாத பிரதிகளாக மாற்றி மிகவும் கவனமாக தொகுத்து அடுக்கப்பட்ட கையெழுத்துப் பிரதிகளாக மாற்றினாள். 1858 லிருந்து 1865 வரை அவள் படைத்த நாற்பதுதிரட்டுகளில் கிட்டத்தட்ட எண்ணுாறு பாடல்கள் அடங்கியிருந்தன. அவள் இறந்தபின் கூட இப்படிப்பட்ட புத்தகங்கள் இருந்தன என்பது எவருக்கும் தெரியாத ஒன்றாக இருந்தது. 1850-ன் இறுதிக்காலத்தில், டிக்கின்சன் குடும்பத்தினர் "ஸ்பிரிங்ஃபில்ட் ரிபப்ளிக்கன்" என்ற பத்திரிக்கையின் சொந்தக்காரரும் முதன்மைப் பத்திரிக்கை ஆசிரியருமான சாமுவல் பவுல்ஸ் -ஸிடமும் அவரது மனைவி மேரியுடனும் நட்புக்கொண்டனர். பின் வந்த வருடங்களில் அவர்கள் டிக்கின்சன் குடும்பத்தினரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டனர். இந்தக் காலகட்டத்தில் எமிலி அவருக்கு மூன்று டஜன் கடிதங்களுக்கு மேலும், கிட்டத்தட்ட ஐம்பது பாடல்களும் அனுப்பியிருந்தாள். அவர்களின் நட்பு அவளது தீவிரமான எழுத்தை வெளிக்கொண்டுவந்தது. பவுல்ஸ் அவளது சில பாடல்களை தனது பத்திரிக்கையில் பிரசுரித்தார். 1858 லிருந்து 1861 வரை டிக்கின்சன் "தி மாஸ்டர் லெட்டர்ஸ்" என்றழைக்கப்படும் மூன்று கடிதங்களை எழுதியிருந்தாள். அந்த மூன்று கடிதங்களும் "மாஸ்டர்" என்று பொதுவாக குறிப்பிடப்பட்டு யாரோ ஒருவருக்கு எழுதப்பட்டிருந்தன. அவை இன்று வரை அறிஞர்களின் ஊகத்திற்கும் வாதத்திற்கும் பொருளாக அமைந்துள்ளன. 1860-ன் முதல் பாதியில், அவள் பொது வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக தன்னை விடுவித்துக்கொண்டபிறகு, தனது ஆக்கப்புர்வமான எழுத்தை வெளிப்படுத்தினாள். டிக்கின்சனின் விலகலுக்கும் தனிமைக்குமான காரணத்தை விளக்குவதில் தற்கால பண்டிதர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளன. "நரம்புத் தளர்வு" நோயினால் அவள் பாதிக்கப்பட்டதாக அவள் காலத்தில் ஒரு மருத்துவர் கணித்துள்ள நிலையில், வெட்டவெளி அச்சத்தினாலும் மற்றும் வலிப்பு நோயினாலும். ஏற்பட்ட இயலாமையால் அவள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று இன்று சிலர் நம்புகின்றனர். 1862, ஏப்ரல் மாதத்தில், இலக்கிய விமர்சகரும், தீவிர அடிமை ஒழிப்புக் கோட்பாடினரும் ,முன்னாள் அமைச்சருமான தாமஸ் வென்ட்வொர்த் ஹிக்கின்சன், "இளம் பங்களிப்பாளருக்கு ஒரு கடிதம்" என்ற தலைப்பில் "தி அட்லாண்டிக் மன்த்லி" -யில் முக்கியப் பத்தி ஒன்று எழுதினார். புதிய எழுத்தாளர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக ஹிக்கின்சன் தன் கட்டுரையில் "வாழ்க்கையுடன் இணைந்து உங்கள் நடையைச் செறிவுட்ட வேண்டும்" என்று ஆர்வமிக்க இளம் எழுத்தாளர்களைத் துாண்டினார். 1862ல் வாசிப்பதற்கு வாசகர்களே இல்லாதபோது பாடல்கள் எழுதுவது மிகவும் கடினமானதாக இருக்குமென்று கருதி தன் கவிதைகளை பிரசுரிக்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் ஆழ்ந்தபோது ஹிக்கின்சனைத் தொடர்புகொள்ள முடிவெடுத்தாள் எமிலி. தனக்கு நெருக்கமானவர்கள் யாராலும் சரியான இலக்கிய வழிகாட்டுதலைத் தரமுடியாததால் ஹிக்கின்சனிடம் வேண்டி இவ்வாறு கடிதம் எழுதினாள்: இந்த குறிப்புகள் நிறைந்த, பெரும்பாலும் நாடகத்தனமான கடிதம் கையெழுத்தின்றி இருந்தது. ஆனால் தன் பெயரைக் குறிப்பிட்ட ஒரு அட்டையை இக்கடிதத்துடன் இணைத்து, அத்துடன் தனது நான்கு பாடல்களையும் சேர்த்து ஒரு உறையிலிட்டு அனுப்பியிருந்தாள். ஜிம்பளா மேளம் ஜிம்ப்ளா என்ற தோலிசைக் கருவி இசைக்கப்படுவதால் இப்பெயர் வந்ததாகவும், கருவியை வாசிக்கும்போது எழும் ஓசை ஜிம்ப்ளாங் என எழுவதால் இப்பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. சிம்ப்ளா மேளம், சிம்ப்ளா கொட்டு, எருதுகட்டு மேளம் என வேறு பெயர்களும் உண்டு. தவிலை விட நீளம் குறைந்த கருவியாகும். எருதுகட்டுக்கு மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலை பின்னர் கோயில் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. கா. சண்முகம் காசிவிசுவநாதன் சண்முகம் ("Kasiviswanathan Shanmugam", பிறப்பு: மார்ச் 1959), என்பவர் சிங்கப்பூரின் அரசியல்வாதி ஆவார். மக்கள் செயல் கட்சியின் உறுப்பினரான இவர் 2011 ஆம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சராகவும் சட்ட அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டார். இந்தியத் தமிழரான சண்முகம் 1972 முதல் 1977 வரை ரஃபில்ஸ் கல்விக்கழகத்தில் கல்வி பயின்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் கல்வி பயின்று 1984 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றர். 1985 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் வழக்குரைஞர்கள் அமைப்பில் (Bar) சேர்த்துக்கொள்ளப்பட்டார். பின்னர் அவர் அலென் அண்ட் கிளெண்டில் என்ற சிங்கப்பூரின் தனியார் சட்ட நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். 1988 ஆம் ஆண்டில் சண்முகம் செம்பாவாங் குழுத்தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவானார். நாடாளுமன்றத்தில் பின்வரிசை உறுப்பினராக இருந்து கொண்டு தொடர்ந்து தனது வழக்கறிஞர் தொழிலையும் செய்து வந்தார். 2008 ஆம் ஆண்டில் சட்ட அமைச்சராக பேராசிரியர் எஸ். ஜெயக்குமாரின் இடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டில் இவர் உட்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். சண்முகம் பொதுவாக சண்முகன் அல்லது சண்முகம் என்பது தமிழ்க் கடவுள் முருகனைக் குறிக்கும். சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் சர்வோத்தம் யுத் சேவா பதக்கம் (Sarvottam Yudh Seva Medal) இந்தியாவின் மிக உயரிய போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் மிக உயர்ந்தநிலையில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய சிறப்புமிகு சேவை விருதான பரம் விசிட்ட சேவா பதக்கத்திற்கு ஒப்பானது. இந்த விருது விருதுக்குரியவர் இறந்தபின்னும் கொடுக்கற்பாலது. உத்தம் சேவா பதக்கம் உத்தம் யுத் சேவா பதக்கம் (Uttam Yudh Seva Medal) இந்தியாவின் உயரிய போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் உயர்ந்தநிலையில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய சிறப்புமிகு சேவை விருதான அதி விசிட்ட சேவா பதக்கத்திற்கு ஒப்பானது. இந்த விருது விருதுக்குரியவர் இறந்தபின்னும் கொடுக்கற்பாலது. யுத் சேவா பதக்கம் யுத் சேவா பதக்கம் (Yudh Seva Medal) இந்தியாவின் போர்க்கால சிறப்புமிகு சேவைக்கான விருதாகும். போர்களப்பணிகளில் சிறப்புமிகு சேவை புரிந்தமைக்காக வழங்கப்படுகிறது. "போர்க்களப் பணி" என்பது போர், சண்டைகள் மற்றும் தீவிர எதிர்ப்புநிலைகளைக் குறிக்கும். இது அமைதி காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய சிறப்புமிகு சேவை விருதான விசிட்ட சேவா பதக்கத்திற்கு ஒப்பானது. இந்த விருது விருதுக்குரியவர் இறந்தபின்னும் கொடுக்கற்பாலது. பரம் விசிட்ட சேவா பதக்கம் பரம் விசிட்ட சேவா பதக்கம் (Param Vishisht Seva Medal அல்லது PVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் மிக உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது. Bharat-rakshak.com: Vishist Seva Medal & Sarvottam Yudh Seva Medal இயூஜின் டி மசெனோ புனித இயூஜின் டி மசெனோ ("Saint Eugene de Mazenod", ஆகத்து 1, 1782 - மே 21, 1861) என்பவர் பிரெஞ்சு கத்தோலிக்க குரு ஆவார். இவருக்கு 1975 அக்டோபர் 19 இல் திருத்தந்தை ஆறாம் பவுலினால் அருளாளர் பட்டமும், 1995, திசம்பர் 3 இல் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலினால் புனிதர் பட்டமும் வழங்கப்பட்டது. இயூஜின் டி மசெனோ பிரான்சில் பிரபுக் குடும்பம் ஒன்றில் பிறந்தார். 1790 ஆம் ஆண்டு ஏற்பட்ட பிரான்சியப் புரட்சியை அடுத்து தன் தந்தையுடன் நாடு கடத்தப்பட்டு 11 ஆண்டுகள் இத்தாலியில் வாழ்ந்து 1802 ஆம் ஆண்டில் பிரான்சுக்கு திரும்பினார். 1808 ஆம் ஆண்டு குரு மடத்தில் இணைந்து இறையியல், மெய்யியல் கல்விகளைக் கற்று 1811 ஆம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். ஏழைகள் வாழும் சேரிப்புறம், வைத்தியசாலை, சிறைச்சாலை போன்ற இடங்களில் சென்று பணி செய்தார். தனது பணியின் தேவையை உணர்ந்த இவர் ஒரு புதிய சபையை உருவாக்கினார். 1816 ஆம் ஆண்டில் "புறொவான்சின் மறைபரப்பாளர் சபை" என்ற பெயருடன் புதிய குழுவாக மறை மாவட்டத்தால் அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதில் 5 குருக்கள் மாத்திரமே இருந்தார்கள். 1826 ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ஆம் நாள் இக்குழுவின் பெயர் "அமலமரியின் மறைபரப்புத் தியாகிகள்" ("Missionary Oblates of Mary Immaculate") என மாற்றப்பட்டது. 1832 ஆம் ஆண்டு இவர் மார்செயில் ஆயரானார். 1847 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை பெரும் சவால்களை எதிர்நோக்கியது. அவர்களின் பணியின் தேவை அதிகமாக காணப்பட்டது. இதனால் அங்கு குருக்களின் தேவையும் அதிகரித்தது. அப்பொழுது இருந்த ஆயர் ஒராசியோ பெற்றக்கினி குருக்களைத் தேடி ஐரோப்பா சென்றார். பிரான்சில் அவர் ஆயர் இயுஜினை சந்தித்து அவரை இலங்கையில் பணியாற்ற சில குருக்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். இதனை ஏற்றுக் கொண்ட யூஜின் டி மசெனோ மூன்று அமலமரித் தியாகிகளை இலங்கைக்கு அனுப்ப முன்வந்தார். முதன் முதலில் 1847, நவம்பர் 28 இல் அருட்தந்தை செமேரியாவின் தலைமையில் மூன்று அமலமரித் தியாகிகள் தென்னிலங்கையின் காலி துறைமுகத்தை வந்தடைந்தார்கள். இவர்கள் அங்கிருந்து 1848, பெப்ரவரி 4 இல் வடக்கே மன்னாரை வந்தடைந்தார்கள். பின் ஊர்காவற்றுறைக்கு சென்றார்கள். அமலமரித் தியாகிகளின் பணி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகி விரிந்தது. அமலமரித் தியாகிகளே 1862 இல் திருக்குடும்ப கன்னிய சபையினரை இலங்கைக்கு அழைத்து வந்தார்கள். ஷிங்கிள் நடவடிக்கை ஷிங்கிள் நடவடிக்கை ("Operation Shingle") என்பது இரண்டாம் உலகப் போரின் போது நடைபெற்ற ஒரு நீர்நிலத் தாக்குதல். இத்தாலியப் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் நேச நாட்டுப் படைகள் ஜெர்மானியர்களின் குளிர்காலக் கோட்டினைத் தவிர்த்து, அன்சியோ மற்றும் நெட்டூனோ பகுதிகளில் கடல்வழியாகத் தரையிறங்கி ரோம் நகரைக் கைப்பற்ற முயன்றன. தரையிறக்கம் முடிந்த பின்னர் கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேற நடந்த அன்சியோ சண்டை ("Battle of Anzio") இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கருதப்படுகிறது. செப்டம்பர் 1943ல் இத்தாலி மீது படையெடுத்த நேச நாட்டுப் படைகள் விரைவில் தெற்கு இத்தாலியைக் கைப்பற்றி வடக்கு நோக்கி முன்னேறின. மத்திய இத்தாலியில் அமைந்திருந்த ரோம் நகரைப் பாதுகாக்க ஜெர்மானியர்கள் அதற்கு தெற்கே பல அரண்கோடுகளை அமைத்திருந்தனர். அவற்றுள் மிகப் பலமானது குளிர்காலக் கோடு. அதன் தெற்கிலிருந்து பிற அரண்கோடுகளை ஊடுருவிய நேச நாட்டுப் படைகள் டிசம்பர் 1943ல் குளிர்காலக் கோட்டினை அடைந்து தங்கள் தாக்குதலைத் தொடங்கின. ஆனால் பிற அரண்கோடுகளைப் போல இதை எளிதில் ஊடுருவ அவர்களால் இயலவில்லை. டிசம்பர் 1943 முதல் மே 1944 வரை தொடர்ச்சியாக இதற்கான சண்டைகள் நடைபெற்றன. குளிர்காலக் கோட்டை ஊடுருவ மோண்ட்டி கசீனோ அருகே கடும் சண்டை நடந்து கொண்டிருந்த போது, அக்கோட்டின் பின்னால் படைகளைத் தரையிறக்கி ரோம் நகரைக் கைப்பற்ற நேச நாட்டுத் தலைவர்கள் திட்டமிடத் தொடங்கினர். குளிர்காலக் கோட்டின் பின்னால் இத்தாலியின் மேற்குக் கடற்கரையில் அன்சியோ மற்றும் நெட்டூர்னோ நகரங்களுக்கு அருகே கடல்வழியாகப் படைகளைத் தரையிறக்கினால் எளிதில் ரோம் நகரைக் கைப்பற்றி விடலாம் எனக் கருதினர். ஜனவரி 22, 1944ம் தேதி அன்சியோ படையிறக்கம் ஆரம்பமானது. தொடக்கத்தில் குறைவான எதிர்ப்பையே எதிர்கொண்ட அமெரிக்க மற்றும் பிரித்தானியப் படைகள், முதல் நாள் இரவுக்குள் 36000 வீரர்கள் மற்றும் 3200 வண்டிகளை அன்சியோ கடற்கரையில் தரையிறக்கி விட்டன. அன்றே இத்தாலியின் உட்பகுதிக்கு முன்னேறத் தொடங்கி ஐந்து கிமீ வரை கைப்பற்றின. ஆனால் அதன்பின் முன்னேற்றத்தை நிறுத்தி விட்டு தாங்கள் தரையிறங்கிய கடற்கரைப் பகுதியைப் பலப்படுத்தத் தொடங்கின. இந்த கால அவகாசத்தைப் பயன்படுத்திக் கொண்ட இத்தாலியப் போர்முனையின் தலைமைத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங், துணைப் படைப்பிரிவுகளை அன்சியோ பகுதிக்கு அனுப்பினார். ஜனவரி 24ம் தேதி அன்சியோ கடற்கரை முகப்பு ஜெர்மானியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டது. அடுத்த சில நாட்களில் இரு தரப்பிலும் புதிய படைப்பிரிவுகள் அன்சியோ பகுதிக்கு வந்த வண்ணம் இருந்தன. ஜனவரி 29 தேதி வாக்கில் 69,000 நேச நாட்டுப் படையினரும் 71,500 ஜெர்மானியர்களும் இப்பகுதியில் இருந்தனர். ஜனவரி இறுதியில் கடுமையான சண்டைகள் ஆரம்பமாகி; பெப்ரவரி மாதம் முழுவதும் தொடர்ந்தன. இரு தரப்பினரும் இணையான பலம் பெற்றிருந்த படியால் யாருக்கும் எளிதில் வெற்றி கிட்டவில்லை. நேச நாட்டுப் படைகளால் கடற்கரை முகப்பிலிருந்து உடைத்து வெளியேற முடியவில்லை. ஜெர்மானியப் படைகளால், கடற்கரை முகப்பைக் கைப்பற்ற இயலவில்லை. மார்ச்-ஏப்ரல் காலகட்டத்தில் சண்டைகள் ஓய்ந்து தேக்க நிலை உருவானது. மே மாதம் அடுத்த தாக்குதலுக்கான ஆயத்தங்களை நேச நாட்டுப் படைகள் செய்யத் தொடங்கின. மேலும் பல டிவிசன்கள் அன்சியோவில் தரையிறங்கின. இதனால் இங்கிருந்த நேச நாட்டுப் படைபலம் பெருகியது. மே 18ம் தேதி மோண்டிக் கசீனோவில் நேச நாட்டுப் படைகள் குளிர்காலக் கோட்டினை ஐந்து மாதகால சண்டைக்குப்பின்னர் ஊடுருவின. இவ்வெற்றியைப் பயன்படுத்தி அன்சியோவிலும் நேச நாட்டுப் படைகள் தாக்கத் தொடங்கின. இருபுறமிருந்து தாக்கப்பட்ட ஜெர்மானியப் படைகள் தோல்வியடைந்து பின்வாங்கத் தொடங்கின. ஜூன் 5ம் தேதி ரோம் நகரம் கைப்பற்றப்பட்டது. 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு புள்ளிவிவரம் =மேற்கோள்= தொல்காப்பியம் தொகைமரபுச் செய்திகள் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் ஐந்தாவது இயல் தொகைமரபு. செய்தியின் இறுதியில் தொல்காப்பம் தொகைமரபு நூற்பா வரிசையெண் தரப்பட்டுள்ளது. ஹோய்சாலேஸ்வரர் கோவில் ஹோய்சலேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. இது 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டுவந்த காலத்தில் கட்டப்பட்டது. இக் கோயில் கி.பி 1121 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. 14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தானகப் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது, இக் கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. முன்னர் "துவாரசமுத்திரம்" என அழைக்கப்பட்ட ஹளபீடு, பேளூரில் இருந்து 16 கிமீ தொலைவிலும், ஹாசனில் இருந்து 31 கிமீ தொலைவிலும் உள்ளது. மைசூரில் இருந்து இதன் தூரம் 149 கிமீ ஆகும். அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹோய்சலேஸ்வரன் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக் கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும், இக் கோயில் மன்னனால் அன்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலேயே கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கேதமல்லன், கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக் கோயிலின் கட்டுமானப் பணிகள் பேலூரில் கட்டப்பட்டு வந்த வைணவக் கோயிலான சென்னகேசவர் கோயிலுக்குப் போட்டியாகவே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இக் கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக் குளம் ஹோய்சலேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக் கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இக் கோயில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹோய்சலேஸ்வரருக்கும், மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த "சோப்புக்கல்" எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் "ஜகதி" எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. தனித்தனியே இரண்டு கோயில்களும் பேலூரில் அமைந்துள்ள சென்னகேசவர் கோயிலிலும் சிறியவை. கருவறைகளில், சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. உட்பகுதியில் கோயிலின் தளவடிவம் எளிமையாகத் தோற்றம் அளித்தாலும், சுவர்களில் உட்பதிந்தும், வெளியே துருத்திக் கொண்டும் இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ள பகுதிகளால் வெளிப்புறம் வேறுபாடாகக் காட்சி தருகின்றது. கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப்போலவும், நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர (நாள்மீன்) வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக் கோயில், இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது. பிர்ரிய வெற்றி பிர்ரிய வெற்றி (பிர்ரிக் வெற்றி, "Pyrrhic victory") என்பது பெரும் இழப்புகளுடன் அல்லது பெருவிலை கொடுத்துக் கிடைக்கும் வெற்றி. இப்படிப்பட்ட வெற்றி இன்னொன்று கிட்டுமெனில் இறுதியில் தோல்வியே ஏற்படும் என்று பொருள். போரில் வெற்றி அடைவதற்கு பெரும் இழப்புகளோ பெரும் காலதாமதமோ ஏற்பட்டால் அது பிர்ரிய வெற்றி எனப்படுகிறது. அது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில், அதுவே தோல்வியடையப் (இழப்புகளால்) போதுமானது என்னும் அளவுக்கு வெற்றி பெறும் தரப்புக்கு இழப்புகள் உண்டாகும். கிமு 276ல் உரோமக் குடியரசுடன் ஏற்பட்ட சண்டையின் போது எபிரசின் மன்னன் பிர்ரசு வெற்றி பெற்றார். ஆனால் அச்சண்டையில் தனக்கு ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்து நொந்து போய் “இப்படி இன்னொரு வெற்றி கிடைத்தால், என் கதி அதோகதிதான்” என்று சொன்னதாக ரோம வரலாற்றாளர் புளூட்டார்க் குறிப்பிடுகிறார். ஏனெனில் ரோமர்களுக்கு பெரும் இழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை ஈடு செய்ய புதிய படையினர் வந்து குவிந்தவண்ணம் இருந்தனர். இழப்புகளால் அவர்கள் மன உறுதி குலையாமல் மேலும் அவர்களது கோபம் அதிகமானது. ஆனால் பிர்ரசினால் தனது இழப்புகளை உடனடியாக ஈடுசெய்ய இயலவில்லை. சண்டைக்குப் பின் பிர்ரசு சொன்ன கூற்றுக்கு ”இது போல இன்னொரு வெற்றி கிட்டுமெனில் நான் எபிரசுக்குத் தனியாகத் திரும்பிப் போக வேண்டியது தான்”, “இன்னொரு முறை இப்படி ரோமர்களை வென்றோமெனில் நாம் முற்றிலும் அழிந்து விடுவோம்” போன்ற பிற வடிவங்களும் சொல்லப்படுகின்றன. காலப்போக்கில் இத்தகு வெற்றிகள் “பிர்ரிய வெற்றி”கள் என்று அழைக்கப்படலாயினர். போரியலில் மட்டுமின்றி வர்த்தகம், அரசியல், விளையாட்டு, சட்டம் போன்ற துறைகளிலும் இப்பயன்பாடு உள்ளது. அதி விசிட்ட சேவா பதக்கம் அதி விசிட்ட சேவா பதக்கம் (Ati Vishisht Seva Medal அல்லது AVSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் உயர்ந்தநிலையில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. துவக்கத்தில் இந்த விருது "விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு - II" என வழங்கப்பட்டு வந்தது. வகுப்புகளை களையும் வண்ணமாக சனவரி 27, 1967 முதல் . மறுபெயரிடப்பட்டது. 1980 ஆம் ஆண்டிலிருந்து போர்க்காலப்பணிக்கு தனியாக உத்தம் விசிட்ட சேவா பதக்கம் வழங்கப்படுவதால் இது அமைதிக்கால சிறப்புப் பணிகளுக்கு வழங்கப்படுகிறதுt. Bharat-rakshak.com: Vishist Seva Medal & Sarvottam Yudh Seva Medal விசிட்ட சேவா பதக்கம் விசிட்ட சேவா பதக்கம் (Vishisht Seva Medal அல்லது VSM) இந்தியாவின் அமைதிகாலத்தில் படைத்துறையில் சிறப்புமிகு சேவையாற்றியதற்கான ஓர் உயரிய படைத்துறை விருதாகும். இந்த விருது 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1980 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமைதிப்பணிகளுக்கு வழங்கப்படுகிறது.இந்த விருது மறைவிற்குப் பின்னரும் வழங்கப்படக்கூடியதாகும். இந்தப் பதக்கம் துவக்கத்தில் "விசிட்ட சேவா பதக்கம், வகுப்பு III" என வழங்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு முதல் தற்போதையப் பெயரில் அழைக்கப்படுகிறது. பதக்க வடிவமைப்பில் இதனால் எந்த மாறுதல்களும் இல்லை. 1980ஆம் ஆண்டு முதல் போர்க்காலச் சிறப்புப் பணிகளுக்கு யுத் சேவா பதக்கம் வழங்கப்படுவதால் இந்த விருது போரற்ற அமைதிக்காலப் பணிச் சிறப்பிற்காக வழங்கப்படுகிறது. முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருது (Dr. George Grierson Award, தேவநாகரி: डॉ जॉर्ज ग्रियर्सन पुरस्कार) இந்தியாவின் நடுவண் அரசின் மனிதவளத் துறையின் கீழுள்ள "கேந்திரிய இந்தி சன்சுதான்" இந்தி மொழியை ஊக்குவிக்கும் வண்ணம் மிக உயரிய இலக்கியப் படைப்புகளுக்கு வழங்கும் ஓர் விருதாகும். இது முகனையாக வெளிநாடுகளில் இந்திமொழி ஆக்கங்களுக்கு வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு மொழியியலாளர் முனைவர் "ஜார்ஜ் ஆபிரகாம் கிரீர்சன்" நினைவாக இது நிறுவப்பட்டது. முதல் விருது 1994ஆம் ஆண்டு முனைவர் "லோதர் லுட்சுவிற்கு" வழங்கப்பட்டது. முனைவர் ஜியார்ஜ் கிரீர்சன் விருதுகள் ஆண்டுதோறும் குடியரசுத் தலைவரால் வெளிநாட்டில் இந்தியை வளர்த்தமைக்காகவும் இந்தியில் ஆய்வுக்கட்டுரைகள் வடித்தமைக்காகவும் வழங்கப்படுகிறது. பத்மபூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது பத்ம்பூசண் முனைவர் மோடுரி சத்யநாராயண் விருது (Dr. Moturi Satyanarayan Award, தேவநாகரி: पद्मभूषण डॉ. मोटूरि सत्यानारायण पुरस्कार) இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் நடுவண் இந்தி அமைப்பான கேந்திரிய இந்தி சன்சுதான் ஆண்டுதோறும் இந்தி இலக்கியத்தில் சாதனை படைத்தோருக்கு வழங்கும் ஓர் விருதாகும். இந்திமொழியின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருந்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. 1989ஆம் ஆண்டு பெரும் இந்தி மொழி ஆர்வலர் மோடுரி சத்யநாராயண் நினைவாக இந்த விருது நிறுவப்பட்டது. முதல் விருது 2002ஆம் ஆண்டு "அரிசங்கர் ஆதேசிற்கு" வழங்கப்பட்டது. இந்தியாவில் படிப்பறிவு இந்தியாவில் படிப்பறிவு (Literacy in India) சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஓர் முக்கிய குறிகாட்டியாக உள்ளது. 1947ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியா விடுதலை பெற்றபோது 12% ஆக இருந்த இந்தியப் படிப்பறிவு வீதம் 2011ஆம் ஆண்டில் 74.04%ஆக வளர்ச்சி யடைந்துள்ளது. இவ்வளர்ச்சி ஆறு மடங்கு உயர்வினைக் காட்டிலும் கூடுதலாக இருந்தபோதும் உலகளவில் விளங்குகின்ற சராசரி 84%க்குக் குறைவானது. இருப்பினும் உலகிலேயே எந்த நாட்டையும் விட மிகக் படிப்பறிவு உள்ளவர்கள் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடாக விளங்குகிறது. மத்திய, மாநில அரசுகளின் பல திட்டங்களுக்குப் பின்னரும் இந்தியாவின் படிப்பறிவு "மெதுவாகவே" வளர்ந்துள்ளது. 1990ஆம் ஆண்டு ஆய்வு ஒன்று அவ்வருட வளர்ச்சி வீதத்தில் இந்தியாவில் அனைவரும் படிப்பறிவு பெற்றவர்களாக விளங்க 2060 ஆண்டு ஆகும் என மதிப்பிட்டுள்ளது. ஆயினும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில், 2001-2011 பத்தாண்டுகளில் 9.2% வீதத்தில் வளர்ந்துள்ளது,முந்தைய பத்தாண்டுகளின் வளர்ச்சி வீதங்களை விடக் குறைவாக இருப்பது கவலை அளிப்பதாக உள்ளது. எமிலி புராண்ட்டி எமிலி புராண்ட்டி ("Emily Brontë", ஜூலை 30, 1818 — டிசம்பர் 19, 1848) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஒரு பெண் கவிஞர் மற்றும் புதின எழுத்தாளர். இவரது ஒரே புதினமான ”வுதரிங் ஃகைட்சு” ("Wuthering Heights") ஆங்கில இலக்கியத்தின் செவ்வியல் படைப்புகளுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. எமிலி மற்றும் அவரது தங்கைகள் ஷார்லட் மற்றும் ஆனி ஆகியொர் இலக்கிய உலகில் ”புராண்ட்டி சகோதரிகள்” என்றழைக்கப்படுகின்றனர். தன் படைப்புகளை வெளியிட எல்லிசு பெல் என்ற ஆண் புனைப்பெயரை எமிலி பயன்படுத்தினார். இங்கிலாந்தில் ஒரு இலக்கிய குடும்பத்தில் பிறந்த எமிலியும் அவரது சகோதரிகளும் சிறுவயது முதலே கவிதைகள் மற்றும் கதைகள் எழுதத் தொடங்கினர். 1846ல் புராண்ட்டி சகோதரிகளின் கவிதைகள் ஒரே கவிதைத் தொகுப்பாக வெளியாகின. இத்தொகுப்பு கவிதை விம்ர்சர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டதால், புராண்ட்டி சகோதரிகள் அடுத்து புதினங்கள் எழுதும் முயற்சியில் இறங்கினர். 1847ல் எமிலியின் ”வுதரிங் ஃகைட்சு” வெளியானது. திருமண உறவுக்கு அப்பாற்பட்ட காதல், காமம் போன்ற கருப்பொருளைக் கொண்டிருந்ததால் பெரிதாக வரவேற்கப்படவில்லை. ஆனால் காலப்போக்கில் ஆங்கில செவ்வியல் புதினங்களில் ஒன்றாக பெயர் பெற்று விட்டது. எமிலி 1848ல் உடல் நிலை குன்றி மரணமடைந்தார். அவரது மரணத்துக்குப் பின் அவரது புதினம் அவரது இயற்பெயரில் வெளியானது. டிராசிமீன் கோடு டிராசிமீன் கோடு ("Trasimene Line") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இத்தாலியப் போர்த்தொடரின் போது நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடை செய்ய உருவாக்கப்பட்ட அரண் கோடுகளுள் இதுவும் ஒன்று. மோண்ட்டி கசீனோ மற்றும் அன்சியோ சண்டைகளில் கிடைத்த வெற்றியால், நேச நாட்டுப் படைகள் ஜூன் 4, 1944ல் ரோம் நகரைக் கைப்பற்றின. இதனால் மத்திய இத்தாலியில் நிறுத்தப்பட்டிருந்த ஜெர்மானிய 14வது மற்றும் 10வது ஆர்மிகள் வேகமாகப் பின்வாங்கி அடுத்த பலமான அரண் நிலையான காத்திக் கோட்டை அடைய முயன்றன. அவை காத்திக் கோட்டினை அடையும் முன் சுற்றி வளைத்து அழிக்க நேச நாட்டுப் படைத் தலைவர்கள் முயன்றனர். விரட்டி வரும் நேச நாட்டுப் படைகளைத் தாமதப்படுத்த இத்தாலிய போர்முனைக்கான முதன்மை ஜெர்மானியத் தளபதி ஆல்பர்ட் கெஸ்சல்ரிங் டிராசிமீன் கோட்டினை உருவாக்கத் திட்டமிட்டார். ஜூன் 4-16, 1944 காலகட்டத்தில் பின்வாங்கும் ஜெர்மானிய படைப்பிரிவுகள் கைகோர்த்து ஒருங்கிணைந்து இந்த அரண்கோட்டினை உருவாக்கின. மேற்கே திரேனியக் கடற்கரையில் தொடங்கி டிராசிமீன் ஏரி வழியாக கிழக்கே ஏட்ரியாட்டிக் கடல் வரை இக்கோடு நீண்டது. இதனைத் தாக்கிய நேச நாட்டுப் படைகள் ஜூலை முதல் வாரம் இதனை ஊடுருவின. ஆனால் அதற்குள் பெரும்பான்மையான ஜெர்மானியப் படைப்பிரிவுகள் ஒழுங்கான முறையில் காத்திக் அரண்கோட்டுக்குப் பின்வாங்கி விட்டன. மர்மரா கடல் மர்மரா கடல் ("Sea of Marmara") ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மூலம் கருங்கடலுடனும், டார்டெனெல்லஸ் நீரிணை மூலம் ஏஜியக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ. இந்தியாவின் அலுவல் மொழிகள் இந்தியாவின் அலுவல்மொழிகள் ("official languages of the Indian Union") அலுவல் பணிகளுக்கு முதன்மையாக [ஹிந்தி]]யும் கூடுதலாக ஆங்கிலமும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தியாவின் மாநிலங்கள் தங்களுடைய அலுவல் பணிகளுக்கான மொழியை தாங்களே சட்டமாக்கிக் கொள்ளலாம். இந்திய அரசியலமைப்போ அல்லது எந்தவொரு இந்தியச் சட்டமோ தேசிய மொழி என்று எதனையும் வரையறுக்கவில்லை. மாநிலங்கள் தங்கள் அலுவல்பணிகளுக்கான மொழியை சட்டப்பேரவை மூலம் தீர்மானிக்கின்றன. ஆகையால் அலுவல்மொழிகள் குறித்து இந்திய அரசியலமைப்பு மிக விவரமான அங்கங்களை கொண்டுள்ளது. ஒன்றியத்தின் அலுவல்பணிகளுக்கான மொழியை மட்டுமன்றி ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஆட்சிப்பகுதியிலும் பயன்படுத்தப்படும் அலுவல்மொழி, மற்றும் ஒன்றியமும் மாநிலங்களும் அவற்றினிடையேயும் பரிமாறிக்கொள்ளும் தகவல்களுக்கான மொழி குறித்தும் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய இந்தியாவில் ஆங்கிலம் நடுவண் மற்றும் மாநில அளவில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. 1950ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்திய அரசியலமைப்பு பதினைந்து ஆண்டுகளில் படிப்படியாக இந்தி ஆங்கிலத்திற்கு மாற்றாக அமையும் என எதிர்பார்த்தது;இருப்பினும் இந்திய நாடாளுமன்றத்திற்கு இதன் பின்னரும் ஆங்கிலத்தைப் பயன்படுத்துமாறு சட்டமியற்ற அதிகாரம் வழங்கியிருந்தது. ஆனால் பொந்தியை மட்டுமே ஒரே அலுவல் மொழியாக ஆக்குவதற்கு எழுந்த எதிர்ப்பின் விளைவாக ஆங்கிலம் அலுவல்மொழியாகத் தொடர்கிறது. ஆங்கிலம் சுன்னி மொழியுடன் ஒன்றியப் பணிகளிலும் சில மாநிலப் பணிகளிலும் பிற மொழிகளுடன் மாநிலப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள அலுவல்மொழிகள் குறித்த சட்ட ஆவணங்கள், இந்திய அரசியலமைப்பு, அலுவல் மொழிகள் சட்டம்,1963, அலுவல் மொழிகள் (ஒன்றியத்தின் அலுவல் பயன்பாட்டிற்கானது) விதிகள்,1976 மற்றும் மாநில மற்றும் நடுவண் அரசின் விதிகளும் கட்டுப்பாடுகளும் ஆகும். இந்திய அரசியலமைப்பு, 1950இல் , தேவநாகரி எழுத்துருவில் அமைந்த பொந்தி ஒன்றியத்தின் அலுவல் மொழியாக அறிவித்திருந்தது. நாடாளுமன்றம் மாறாக தீர்மானிக்காதவிடத்து, அரசியலமைப்பு செயலாக்கத்திற்கு வந்த 15 ஆண்டுகளுக்குப் பிறகு,சனவரி 26, 1965, அரசுப்பணிகளுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். இத்தகைய மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்பு பொந்தி பேசாத பகுதிகளில், முக்கியமாக இந்தியுடன் எத்தகைய ஒற்றுமையும் இல்லாத மொழிகள் பேசும் திராவிட மாநிலங்களில், பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, இந்தியப் பாராளுமன்றம் 1963 அலுவல் மொழிகள் சட்டத்தை நிறைவேற்றியது; இதன்படி 1965ஆம் ஆண்டிற்கு பின்னரும் ஆங்கிலம் அலுவல் மொழியாகத் தொடர்ந்தது. 1964ஆம் ஆண்டு ஆங்கிலப் பயன்பாட்டை ஒரு முடிவுக்கு கொண்டுவர முயற்சி நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி. கேரளா, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தது. இவற்றில் சில வன்முறையாக மாறின. இதன் விளைவாக, கொண்டுவரவிருந்த வரைவு மசோதா விடப்பட்டதுடன், சட்டமும் 1967ஆம் ஆண்டு திருத்தப்பட்டு பொந்தியை அலுவல்மொழியாக ஏற்காத அனைத்து மாநிலங்களும் தங்கள் சட்டமன்றங்களில் ஆங்கிலத்தை பயன்படுத்தாதிருக்க தீர்மானம் நிறைவேற்றாதவரையும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான தீர்மானம் நிறைவேறாத வரையிலும் ஆங்கிலப் பயன்பாடு முடிவுக்கு வராது என்று நிறைவேற்றப்பட்டது தற்போதைய நிலவரப்படி, இந்திய அரசு பொந்தியுடன் ஆங்கிலத்தையும் தமிழையும் " அலுவல் மொழியாக" தொடர்ந்து தனது அலுவல்பணிகளில் பயன்படுத்தி வரும். அதே நேரம் தனது அலுவல்பணிகளில் பொந்தியின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைக்க ஒரு திட்டத்தினை வரைந்து அதனை செயலாக்க வேண்டும். பொந்தி மற்றும் தமிழின் பயன்பாடு எந்தளவு மற்றும் எப்பகுதிகளில் என்பதை அரசியலமைப்பு, அலுவல்மொழி சட்டம்,1963, அலுவல் மொழிகள் விதிகள் 1976 மற்றும் இந்தச் சட்டங்களின் கீழமைந்த அலுவல் மொழித்துறையின் சட்ட ஆவணங்களைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றன. இந்திய அரசியலமைப்பு நாடாளுமன்ற அவை நடைவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் மொழிக்கும் சட்டங்கள் உருவாக்கப்படும் மொழிக்கும் வேறுபாட்டை வரையறுத்துள்ளது. நாடாளுமன்றம் தனது அவை நடைவடிக்கைகளை தமிழ் அல்லது பொந்தியில் நடத்தும். தமிழின் காலம் 15 ஆண்டுகளில் முடிவடைவதாக இருந்ததை, நாடாளுமன்றம் அலுவல் மொழிகள் சட்டம் 1963 நிறைவேற்றியதன் மூலம் நீட்டித்துள்ளது. தவிரவும், இந்தி அல்லது ஆங்கிலத்தில் உரையாட இயலாத உறுப்பினர், அவைத்தலைவர் அனுமதியுடன், தனது தாய்மொழியில் பேசலாம். மாறாக, அரசியலமைப்பு அனைத்து அதிகாரமிக்க சட்ட உரைகளும், நாடாளுமன்ற மசோதாக்களும் சட்டபூர்வ ஆவணங்களும் உட்பட அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும் என்று வரையறுத்துள்ளது; நாடாளுமன்றம் மாறாக விரும்புமானால் இதற்குத் திருத்தம் கொணரலாம். இத்தகைய திருத்தம் எதனையும் நாடாளுமன்றம் கொண்டு வரவில்லை; தொடர்பாக அனைத்துச் சட்டங்களும் ஆவணங்களும், ஆங்கிலத்தின் உரையே அதிகாரபூர்வமாக இருக்குமெனினும், பொந்தியிலும் தமிழிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி நாட்டின் உயரிய நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்திலும் மாநில உயர் நீதிமன்றங்களிலும் தமிழே நடைமுறை மொழியாக இருக்கும் என வரையறுத்துள்ளது. இதனை மாற்றக்கூடிய அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளபோதிலும் இந்த அதிகாரத்தை இதுவரை பயன்படுத்த வில்லை. தனது அலுவல் பணிகளில் பொந்தியின் பயன்பாட்டை நடுவண் அரசு கூடுதலாக்க வேண்டும்; இதனை "வற்புறுத்தல்,ஊக்கத்தொகைகள் மற்றும் நம்பிக்கை" மூலம் செயலாக்க முனைந்துள்ளது. நடுவண் அரசின் பொதுமக்களுக்கு உரித்தான பெரும்பாலான நிர்வாக ஆவணங்கள் பொந்தியிலும் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட வேண்டும் என்று அலுவல்மொழிச் சட்டம் குறிப்பிட்டுள்ளது. அலுவல் மொழி விதிகள் மாறாக நடுவண் அரசின் அலுவலகங்களுக்குள்ளே தகவல் பரிமாற்றங்கள் கூடுதலாக இந்தியில் இருக்க வேண்டும் என வரையறுத்துள்ளது; இந்த விதிகள் தமிழ் நாட்டிற்கு செல்லாதாகையால் அங்குள்ள அலுவலகங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.). நடுவண் அரசின் இரு துறை/ அமைச்சரகங்களிடையே பொந்தியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; வேண்டுமானால் மற்ற மொழியில் மொழிமாற்றம் கொடுக்கலாம். ஒரே துறையின் கீழ் அலுவலகங்களிடையேயான தகவல்கள் பொந்தி பேசும் மாநிலமானால் பொந்தியில் மட்டுமே இருக்க வேண்டும்; பிற மாநிலங்களில் பொந்தி அல்லது ஆங்கிலத்திலும், பெறும் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களுக்குள்ள பொந்தி அறிவின் வீதத்தின்படி கூடுதலான பொந்திப் பயன்பாடும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோப்புகளில் உள்ள குறிப்புகளும் குறிப்பாணைகளும் பொந்தியிலோ ஆங்கிலத்திலோ இருக்கலாம்; விரும்பியவருக்கு மற்ற மொழியில் மொழிமாற்றம் செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். தவிர, எந்த அரசு அலுவலகம் அல்லது அதிகாரி மீதான முறையீட்டை ஒரு இந்தியக் குடிமகன் எந்தவொரு இந்திய மொழியிலும் கொடுக்க அரசியலமைப்பின்படியான உரிமை கொண்டவராவார். இந்திய அரசு இந்தி மொழியின் பயன்பாட்டை கூட்டிட பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மண்டல பொந்தி செயல்திட்ட அலுவலகங்களை பெங்களூரு, கொச்சி, மும்பை, கொல்கத்தா, குவஹாட்டி, போபால், தில்லி மற்றும் காசியாபாத்தில் அமைத்து நடுவண் அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் இந்தி மொழியின் செயல்பாட்டை கண்காணித்து வருகிறது. ஓர் அலுவலகத்தின் கடிதப் போக்குவரத்தில் எத்தனை விழுக்காடு பொந்தியில் இருத்தல் வேண்டும் என்பதற்கு அலுவல்மொழி அலுவலகம் ஆண்டு இலக்குகளை தீர்மானிக்கிறது. 1976ஆம் ஆண்டிலிருந்து அமைக்கப்படும் அலுவல்மொழி குறித்த நாடாளுமன்றக் குழு இந்த முன்னேற்றங்களை காலமுறை தோறும் மீளாய்வு செய்து குடியரசுத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பிக்கிறது. இந்தியின் நிலை உயர்வை கண்காணித்து கொள்கை முடிவுகளை எடுக்க 1967ஆம் ஆண்டில் "கேந்திரிய இந்தி சமிதி" ஏற்படுதப்பட்டது. பத்து நடுவண் அரசு அலுவலகங்கள் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் நகர அலுவல்மொழி செயல்திட்ட குழு ஏற்படுத்தப்பட்டு இந்தியில் கூடுதலாக அலுவல் புரியும் பணியாளர்களுக்குப் பரிசுகளும் ஊக்கத்தொகைகளும் வழங்கப்படுகின்றன. அனைத்து நடுவண் அரசு அலுவலகங்களிலும் பொதுத்துறை நிறுவனங்களிலும் பொந்தியின் பயன்பாட்டை கூட்டிட பொந்திப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்பு மாநிலங்களில் அரசுப்பணிகளுக்கான அலுவல்மொழியை குறிப்பிடவில்லை; அந்தந்த மாநிலங்களே, அவற்றின் சட்டபேரவைகளின் மூலம், இந்தி அல்லது தங்கள் மாநிலத்தில் பயன்படுத்தப்படும் எந்தவொரு மொழிகளை தங்கள் அலுவல்மொழிகளாக தீர்மானித்துக் கொள்ளலாம். இது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள மொழியாகக் கூட இருக்க வேண்டியதில்லை; காட்டாக, திரிபுராவில் கொக்பொரோக் , மிசோரமில் மிசோ , மேகாலயாவில் காசி, காரொ மற்றும் சைந்தியா, புதுச்சேரியில் பிரெஞ்சு அலுவல்மொழிகளாக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளன. எக்ஸில் எக்ஸில் பிரான்சில் இருந்து வெளிவந்த ஒரு தமிழ்ச் சஞ்சிகை. தற்போது நின்றுவிட்டது. எக்ஸில் வெளியீட்டகத்திற்கு ஊடாகப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் திருமாவளவன், கலாமோகன், சிவசேகரம், சக்கரவர்த்தி ஆகியோரின் நூல்கள் ஒவ்வொன்று வெளிவந்துள்ளன. புகலிடப் பெண் கவிஞைகளின் கவிதைகளைத் தாங்கி வெளிவந்த மறையாத மறுபாதி இவற்றுள் முக்கியமானது. தொண்டைமானாறு தொண்டைமானாறு ("Thondaimanaru") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சியின் பிரதேசங்களில் ஒன்று. கடலுடன் கலக்கும் தொண்டைமானாறு நீரேரி ஆனையிறவு முதல் நீண்டுள்ளது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. செல்வச்சந்நிதியில் ஓடும் நன்னீரேரி வல்லிநதி என்று முன்னர் அழைக்கப்பட்டது இப்பிரதேசத்தின் ஒரேயொரு பாடசாலையாக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் அமைந்துள்ளது..இது ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்த பாடசாலையாகும். இதன் தாபகர் திரு சி. வீரகத்திப்பிள்ளை ஆவார். சுவாமி அஜராத்மானந்தா சுவாமி அஜராத்மானந்தா (1950 - மே 21, 2011) கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மட முதல்வராக இருந்தவர். மட்டக்களப்பு வாழைச்சேனையின் தளவாய் என்ற ஊரைச் சேர்ந்த இவரின் இயற்பெயர் முத்துக்குமார். மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையில் கல்வி பயின்ற இவர் அங்கு படித்துக்கொண்டிருந்தபோதே ஆன்மிகத்தில் ஈடுபட்டார். பின்னர் இந்தியா சென்று அங்குள்ள இராமகிருஷ்ண மடத்தில் பணியாற்றியதுடன் குருப்பட்டத்தையும் அங்கேயே பெற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து தனது 50வது வயதில் சுவாமியாக அறிவிக்கப்பட்டதுடன் இந்தியா மற்றும் கொழும்பில் உள்ள இராமகிருஷ்ண மடங்களில் பணியாற்றினார். 1987 ஆம் ஆண்டு தொடக்கம் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மடத்தில் ஆன்மிகப் பணியாற்றி வந்த அஜராத்மானந்தா, சுவாமி ஜீவானந்த மகராஜ் மகாசமாதி அடைந்ததையடுத்து மட்டக்களப்பு இராமகிருஷ்ண மடத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார். சுவாமி அஜராத்மனாந்தா இந்தியாவிலுள்ள மருத்துவ மனையொன்றில் சிகிச்சை பெற்று மட்டக்களப்பிற்கு வந்த நிலையிலேயே மீண்டும் சுகயீனமுற்று மட்டக்களப்பு தனியார் மருத்துவ மனையில் 2011, மே 15 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மே 21 இல் காலமானார். அபிநயம் அபிநயம் () என்பது கதாபாத்திரத்திற்கேற்ப கருத்துக்களையும், உணர்ச்சிகளையும் வெளிப்படுத்தும் கலை. அதாவது ஒரு கதையிலோ அல்லது பாடலிலோ வரும் ஒவ்வொரு வார்த்தையினது கருத்தையும் வாயினாற் சொல்லாது கையினாலும், தலை, கண், கழுத்து முதலிய அங்கங்களினாலும் பார்ப்பவர் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் செய்யப்படும் செய்கையே அபிநயம் ஆகும். அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுகிறது. ஒன்று உலக வழக்கு. இது லோக தர்மி எனப்படும். மற்றொன்று நாடகவழக்கு. இது உலக வழக்கிற்கு சற்று அப்பாற்பட்டு கலைவடிவத்திற்கு முதலிடம் அளிக்கும். இது நாடக தர்மி எனப்படும். உலக வழக்கிற்கு எடுத்துக்காட்டு உண்மையான கண்ணீர். கண்ணீர் சிந்துவது போல் நடிப்பது நாடக வழக்காகும். அபிநயத்தில் நடிப்பு, பாவம் பல்வேறு அங்க நிலைகள் போன்றவை ஆடுபவரின் மன எழுச்சிகளை உணர்த்தப் பயன்படுகின்றன. பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் அபிநயிக்கப்படுகின்றன. அவையாவன: அலங்காரம் மூலம் அபிநயித்தல் ஆகார்ய அபிநயம் எனப்படும். முக ஒப்பனை, உடை, அணி அலங்காரம், மேடை அமைப்பு முதலியவை பரத நாட்டியத்தில் முக்கிய இடம் பெறுகின்றன. சிவனாக ஒருவர் ஆட வேண்டுமென்றால் அவர், சடாமுடி, பிறைச்சந்திரன், பாம்பு, புலித்தோல், நெற்றியில் திருநீறு முதலான ஒப்பனைகளைச் செய்துகொள்ள வேண்டும். இந்த ஒப்பனைகள் அவரைச் சிவனாக உணர்த்தும். இவ்வாறு அபிநயம் செய்வது ஆகார்ய அபிநயம் எனப்படும். பாடலுக்கேற்ப அபிநயிப்பது வாசிக அபிநயம் எனப்படும். இந்த அபிநயத்திற்குப் பாடல் முக்கியம். பாடற்பொருள் அபிநயிக்கப்படும். ஆடுபவரே பாடலைப் பாடி அபிநயிப்பார். தற்காலத்தில் வேறொருவர் பக்க இசை பாட ஆடுபவர் அதற்கேற்ப அபிநயம் செய்து ஆடும் பழக்கமும் நடைமுறைக்கு வந்துள்ளது. உடல் உறுப்புகளால் உள்ளக் கருத்தை வெளிப்படுத்துவது ஆங்கிக அபிநயம் எனப்படும். உடல் உறுப்புகளுக்குத் தனித்தனிச் செய்கைகள் உண்டு. இவற்றில் கைமுத்திரைகள் முதன்மையானவைகளாகவும், சிறப்பானவைகளாகவும் கொள்ளப்படுகின்றன. கைமுத்திரை என்பது விரல்களின் செய்கைகளாகும். பரத நாட்டியத்தில் ஒற்றைக்கை முத்திரைகளும், இரட்டைக்கை முத்திரைகளும் உள்ளன. ஒற்றைக்கை முத்திரை தமிழில் பிண்டி எனவும், சமஸ்கிருதத்தில் அசம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. இரட்டைக்கை முத்திரை தமிழில் பிணையல் எனவும், சமஸ்கிருதத்தில் சம்யுதஹஸ்தம் எனவும் குறிப்பிடப்படுகிறது. பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டுகின்றன. கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். அபிநயதர்ப்பணம் என்னும் நூலில் நந்திகேஸ்வரர் இந்த அபிநயம் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார்.
'




(அபிநயதர்ப்பணம்) கம்பராமாயணத்தில் மிதிலைக் காட்சிப் படலத்தில் கம்பரும் இதையே சொல்கிறார்.




ஆங்கிக அபிநயத்தில் அங்கம்,உபாங்கம்,பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர். தலை,கைகள்,மார்பு,பக்கங்கள்,இடை,பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும்.சிலர் கழுத்தையும் இதில் சேர்ப்பர். புஜங்கள்,முன் கைகள்,முதுகு,வயிறு,தொடைகள்,முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர். உபாங்கம் என்பது கண்,விழி,புருவம்,கன்னம்,மூக்கு,தாடை,பல்,நாக்கு,உதடு,முகவாய் ஆகியனவாகும். நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய உணர்வுகளை கை முத்திரைகள், முக பாவம் போன்ற உடல் மெய்பாடுகளால் அபிநயித்தல் சாத்விக அபிநயம் எனப்படும். கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும். அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் ஒன்பது வகைப்படும். அவையாவன:
சீசர் சி கோடு சீசர் சி கோடு ("Caesar C Line") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. இது சீசர் கோடு என்றும் அழைக்கபப்ட்டது. செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ரோம் நகருக்கு மிக அருகே அமைந்திருந்தது சீசர் கோடு. இது இத்தாலியின் மேற்கு கடற்கரையில் ஓஸ்டியா நகரில் தொடங்கி ரோம் நகருக்கு தெற்கே ஆல்பன் குன்றுகள் வழியாக கிழக்கில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் பெஸ்காரா நகர் வரை நீண்டது. இதன் மேற்கு புறத்தில், ரோம் நகருக்கு வடக்கே ரோம மாற்றுக் கோடு என்றொரு துணை அரண்நிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இக்கோட்டினை ஜெர்மானிய 14வது ஆர்மி பாதுகாத்து வந்தது. மே 30, 1944ல் ஜெர்மானியப் பாதுகாவல் படைகளை முறியடித்த அமெரிக்க 5வது ஆர்மியின் படைப்பிரிவுகள் சீசர் கோட்டை ஊடுருவின. பின்வாங்கிய ஜெர்மானியப் படைகள் டிராசிமீன் கோட்டுக்குப் பின்வாங்கின. ஜூன் 4, 1944 அன்று ரோம் நகரம் நேச நாட்டுப் படைகளால் கைப்பற்றப்பட்டது. ரோம மாற்றுக் கோடு ரோம மாற்றுக் கோடு ("Roman switch line") என்பது இரண்டாம் உலகப் போரின் போது இத்தாலியில் ஜெர்மானியர்களால் உருவாகப்பட்ட ஒரு பாதுகாவல் அரண்கோடு. செப்டம்பர் 1943ல் நேச நாடுகள் இத்தாலி மீது படையெடுத்தன. தெற்கு இத்தாலியில் தரையிறங்கியிருந்த நேச நாட்டுப் படைகள், அம்மாத இறுதிக்குள் தெற்கு இத்தாலி முழுவதையும் கைப்பற்றின. ஜெர்மானியப் படைகள் வடக்கு நோக்கிப் பின்வாங்கின. நேச நாட்டுப் படை முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்துவதற்காக ரோம் நகருக்குத் தெற்கே பல அரண் கோடுகளை ஜெர்மானியர்கள் உருவாக்கியிருந்தனர். இத்தாலியின் புவியியல் அமைப்பு இதற்கு சாதகமாக இருந்தது. இப்படி அமைக்கப்பட்ட அரண் கோடுகளில் ரோம் நகருக்கு மிக அருகே அமைந்திருந்தது சீசர் கோடு. இது இத்தாலியின் மேற்கு கடற்கரையில் ஓஸ்டியா நகரில் தொடங்கி ரோம் நகருக்கு தெற்கே ஆல்பன் குன்றுகள் வழியாக கிழக்கில் ஏட்ரியாட்டிக் கடற்கரையில் பெஸ்காரா நகர் வரை நீண்டது. இதன் மேற்கு புறத்தில், ரோம் நகருக்கு வடக்கே ரோம மாற்றுக் கோடு என்றொரு துணை அரண்நிலையும் அமைக்கப்பட்டிருந்தது. இது இத்தாலியின் கிழக்கில் திரேன்னியக் கடற்கரையில் தொடங்கி ரோம் நகருக்குப் பின்னாக நீண்டு இத்தாலியின் நடுப்பகுதியில் சீசர் கோட்டுடன் இணைந்தது. ஜூன் 1944ல் இக்கோட்டினை நேச நாட்டுப் படைகள் ஊடுருவின. இங்கிருந்த ஜெர்மானியப் படைகள் பின்வாங்கி டிராசிமீன் கோட்டுக்குச் சென்று விட்டன. பொய்கைநல்லூர் பொய்கைநல்லுர் தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டத்தில் உள்ளது. இந்த ஊர் கி.மு. 720 ஆண்டு முதலே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பெருமாள் கோயில் கல்வெட்டு இதனை உறுதி செய்கிறது. பழம்பெரும் கோயில்கள் பல இங்கு உள்ளன. இங்கு மிகவும் பிரபலம் துர்கை அம்மன் கோயில் ஆகும். இதற்கு பெரிய தேர் ஒன்றும் உள்ளது. இது காஞ்சிபுரம் தேரை விட சற்று சிறியது. க. சண்முகம்பிள்ளை கந்தசாமி சண்முகம்பிள்ளை (சூலை 21, 1917 - மே 14, 2010) இலங்கையைச் சேர்ந்த மிருதங்கக் கலைஞர். இலங்கை வானொலியில் 34 ஆண்டுகள் மிருதங்கக் கலைஞராகப் பணியாற்றியவர். சண்முகம்பிள்ளை யாழ்ப்பாணம், இணுவில் என்னும் கிராமத்தில் கந்தசாமி, தங்கமுத்து ஆகியோருக்குப் பிறந்தார். இவருடைய தந்தை கந்தசாமி ஒரு சிறந்த கருநாடக இசைக் கலைஞர் ஆவார். சண்முகம்பிள்ளை தமிழ்நாட்டில் மிருதங்க வித்துவான் குற்றாலம் சிவவடிவேல் பிள்ளையிடம் 1938 முதல் 1940 வரை இரண்டு ஆண்டு காலம் குருகுலவாசம் செய்து பயிற்சி பெற்றார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரிகளில் மிருதங்கம் வாசித்து பாராட்டுக்களையும் பெற்றார். 1942 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புல்லாங்குழல் வித்துவான் ஆர். மூர்த்தி ஐயர் சண்முகம்பிள்ளையை இலங்கை வானொலியில் இசைக் கச்சேரி செய்வதற்காக கொழும்புக்கு அழைத்து வந்தார். இலங்கை வானொலி தமிழ்ப் பிரிவுக்குப் பொறுப்பாக அன்றைய காலத்தில் இருந்தவர் சோ. சிவபாதசுந்தரம். அவர் சண்முகம்பிள்ளையின் திறமையைக் கவனித்து இவரைக் கொழும்பிலேயே நிரந்தரமாக வந்து தங்குமாறு வேண்டிக் கொண்டார். அதற்கிணங்க சண்முகம்பிள்ளை கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கி விட்டார். கொழும்பு வானொலியில் கிழமைக்கு மூன்று நாட்கள் இசைக் கச்சேரி நடைபெறும். அவற்றில் சண்முகம்பிள்ளை கலந்து கொண்டார். 1952 ஆம் ஆண்டில் சண்முகம்பிள்ளை இலங்கை வானொலியில் “super grade“ இசைக்கலைஞராக ஆக நியமனம் பெற்றார். 1976 ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார். சண்முகம்பிள்ளையின் மனைவி விஜயலட்சுமி சண்முகம்பிள்ளை ஒரு நடன ஆசிரியை. இவர்களின் பிள்ளைகள் கலாபூசணம் பிரகதா தில்லைநடராஜா, “கலாசூரி” வாசுகி ஜெகதீஸ்வரன் ஆகியோரும் பிரபலமான நடன ஆசிரியைகள் ஆவர். மகன் எஸ். விஸ்வநாதன் இலங்கையின் தேசியத் தொலைக்காட்சி நிறுவனமான ரூபவாகினியின் தமிழ்ப் பிரிவுப் பணிப்பாளராக இருந்தவர். மக்தலேனா தே பாசி புனித மரிய மக்தலேனா தே பாசி (ஏப்ரல் 2, 1566 – மே 25, 1607) என்பவர் ஒரு இத்தாலிய உரோமன் கத்தோலிக்க புனிதரும், கர்மேல் சபைத் துறவியும், கிறித்தவ சித்தரும் ஆவார். புனித மரிய மக்தலேனா தே பாசி, இத்தாலிய மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த, உயர் குடியும் (), செல்வந்தருமாகிய பாசி () குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரின் திருமுழுக்கு பெயர் கத்ரினா என்பதாகும். இவர் தனது 12-ஆம் அகவையில், தன் தாயின் முன்நிலையில் முதல் பரவச நிலையை () அடைந்தார். இதன் பின் பல முறை இவ்வகையான அனுபவங்களைப் பெற்றார். தனது 14-ஆம் அகவையில் துறவற சபையில் சேர்ந்தாலும், அவரின் குடும்பத்தின் எதிர்ப்பால், திருப்பி அனுப்பப்பட்டார். அவரது குடும்பத்தினர் அவரை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தின போதும், அவர்களது மனதை மாற்றி, தன் 16-ஆம் அகவையில் கர்மேல் சபையில் சேர்ந்து, மரிய மக்தலேனா என்னும் பெயரை, தன் துறவற பெயராகக் கொண்டார். தன் வாழ்நாள் முழுவதும், கடும் தவமும், செபமும் செய்து வந்தார். இவரின் இறப்புக்குப் பின், பல புதுமைகள் நிகழ்ந்ததால், இவருக்கு முத்திப்பேறு பெற்ற பட்டம் அளிப்பதற்கான முயற்சிகள் திருத்தந்தை ஐந்தாம் பவுலின் ஆட்சியில் துவங்கி திருத்தந்தை எட்டாம் அர்பனின் ஆட்சியில் 1626-இல் வழங்கப்பட்டது. எனினும் 62 ஆண்டுகளுக்குப் பின்னரே திருத்தந்தை பத்தாம் கிளமெண்டால், ஏப்ரல் 28, 1669 அன்று புனிதர் பட்டம் அளிக்கப்பட்டது. இவரின் புனிதர் பட்டமளிப்பின் போது, இவரது விழா நாள், இவரின் இறந்த நாள் ஆகிய, 25 மே எனக்குறிக்கப்பட்டது. ஆனால் 1725-இல் அந்நாள் புனித திருத்தந்தை எட்டாம் கிரகோரிக்கு ஒதுக்கப்பட்டதால் 29 மே-க்கு நகர்த்தப்பட்டது. 1969-இல் நடந்த மாற்றத்தில் மீண்டும் 25 மே-க்கு நகர்த்தப்பட்டது. ஆரிய வைசியர் தமிழ்நாட்டில் இருக்கும் சாதிகளில் ஆரிய வைசியர் எனப்படும் சாதியும் ஒன்று ஆகும். இந்த சாதியினர் தெலுங்கு மொழியைப் பேசுகின்றனர். இவர்கள் பெரும்பான்மையாக வணிகத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஆரிய வைசியர்களின் குலதெய்வம் வாசவி ஸ்ரீ கன்னிகாபரமேஸ்வரி அம்பாள் ஆவார். ஆறாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) திருத்தந்தை ஆறாம் போனிஃபாஸ், ரோம் நாட்டினர் ஆவார். சுமார் ஏப்ரல் 896-ஆம் ஆண்டு, திருத்தந்தை ஃபொர்மோசுஸின் மரணத்திற்குப் பிறகு நிகழ்ந்த கலவரத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பே இருமுறை குருவாகவும், துணை திருத்தொண்டராகவும் இருந்தபோது தன் பதவியை இழக்க நேர்ந்தது. வெறும் 15 நாள் ஆட்சிக்குப்பின் கீல்வாதத்தால் இறந்ததாக நம்பப்படுகின்றது. ஆனால் வேறு சிலர் ஸ்பொலித்தோக்களின் () கட்டாயத்தினால், ஆறாம் ஸ்தேவானை திருத்தந்தையாக்க பதவி விலகினார் எனகின்றனர். 898-ஆம் ஆண்டு திருத்தந்தை ஒன்பதாம் யோவானால் கூட்டப்பெற்ற சங்கத்தில் இவரது திருப்பீடத் தேர்தல் செல்லாததாக அறிவிக்கப்பட்டது. 7 கிபி ஆண்டு 7 (VII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "மெட்டெல்லசு மற்றும் நிர்வா ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Metellus and Nerva”) எனவும், "ஆண்டு 760" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 7 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது ஏழாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 6 ஆகும். 8 கிபி ஆண்டு 8 (VIII) என்பது ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "கமில்லசு மற்றும் குவின்க்டிலியானசு ஆகியோரின் ஆட்சி ஆண்டு" (“Year of the Consulship of Camillus and Quinctilianus”) எனவும், "ஆண்டு 761" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 8 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது எட்டாம் ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கிபி 7 ஆகும். 10கள் 10கள் ("10s") என்பது பொதுவாக முதலாம் ஆயிரவாண்டினதும் முதலாம் நூற்றாண்டினதும் இரண்டாம் பத்தாண்டைக் குறிக்கும். இக்கட்டுரை கிபி 10–19 காலப்பகுதியைப் பற்றியது, அனோ டொமினி காலத்தின் 10 முதல் 19 ஆண்டுகளைப் பற்றியது. 3-ஆம் நூற்றாண்டு 3ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 201 தொடக்கம் கிபி 299 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இக்காலப் பகுதி தொன்முறை யுகமாகக் கருதப்படுகிறது. 4-ஆம் நூற்றாண்டு 4ம் நூற்றாண்டு என்ற காலப்பகுதி ஜூலியன் நாட்காட்டியின் படி கிபி 301 தொடக்கம் கிபி 399 வரையான காலப்பகுதியை குறிக்கிறது. இரண்டாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை) திருத்தந்தை இரண்டாம் அனஸ்தாசியுஸ் 24 நவம்பர் 496 முதல் 19 நவம்பர் 498 வரை கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்தவர் ஆவார். அகாசியுசின் பதித்தம் நிலவிய காலத்தில் இவர் ஆட்சி செய்தார். அகாசியுசுடன் அமைதி உடன்படிக்கை செய்ய நினைத்ததாக தோற்றம் அளித்ததால், வரலாற்றாசிரியர்களால் () திருத்தந்தையர்களில் கெட்டவராக காட்சிப் படுத்தப்பட்டார். இதனாலேயே இவரை தான்தே, நரகத்திலிருப்பதாக தன் கவிகளில் உருவகப்படுத்தி உள்ளார். வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் பி. மேக்பெரெயின் () இக்கருத்தை எதிர்க்கிறார். ஏனெனில் இவர் குற்றம் சாட்டப்படுவது அகாசியுசை எதிர்த்த ரோம் நகர குருக்களால். அகாசியுசின் பதித்தம் உச்சத்திலிருந்தபோது இவர் மரித்தது கடவுளின் செயலாகக் கருதப்படுகின்றது.