மருந்தாக்கியல் கண்காணிப்பு மருந்தாக்கியல் கண்காணிப்பு ("Pharmacovigilance") என்பது மருந்துகளின் எதிர்மறையான விளைவுகளை, குறிப்பாக அவற்றின் நீண்டகால மற்றும் குறுகியகால பக்கவிளைவுகளைக் கண்டுபிடித்தல், மதிப்பிடுதல், புரிந்துகொள்ளுதல் மற்றும் தடுத்தல் ஆகியவற்றோடு தொடர்புடைய அறிவியலாகும். பொதுவாக, மருந்தாக்கியல் கண்காணிப்பு சுகாதாரப் பொருட்களை வழங்குபவர்கள் மற்றும் நோயாளிகளிடமிருந்து மருந்துகள், உயிரியல் தயாரிப்புகள், ஆயுர்வேதவியல் மற்றும் பாரம்பரிய மருந்துகள் குறித்த பின்வரும் கண்ணோட்டங்களின் எதிர்மறையான விளைவுகள் குறித்து பெறப்படும் தகவல்களை சேகரித்து ஆராய்ச்சி, கண்காணிப்பு, மதிப்பீடு போன்ற நோக்கங்களுக்காக அவற்றைச் செயற்படுத்தும் அறிவியலாகும். இதனுடைய சொல் இலக்கண வேர்கள்: "பார்மாகான்" (கிரேக்கம்), “மருந்து;” மற்றும் "விஜிலேர்" (லத்தீன்), “விழிப்புடனோ அல்லது எச்சரிக்கையுடனோ வைத்திருத்தல், கண்காணித்தல்.” மருந்தாக்கியல் கண்காணிப்பு என்பது குறிப்பாக எதிர்மறையான மருந்து விளைவுகள் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகள் ஆகியவற்றை அவை நிகழ்ந்தவுடனேயே பரிசீலிப்பதாகும். இவை பொதுவாக, "தடுப்பு மருந்துகள், நோய்க்கான அறுதியிடல் அல்லது சிகிச்சையளித்தலுக்கோ, அல்லது உடலியல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கான மேம்படுத்தலுக்கோ மருந்தளவு இயல்பாக பயன்படுத்தப்படும்போது தீங்கு விளைவிக்கக்கூடிய மற்றும் அதன் உள்நோக்கமல்லாத மருந்திற்கான எதிர்விளைவு" என அறியப்படுகின்றன. மருந்துகளைத் தடைசெய்வது குறித்த பல்வேறு கட்டுரைகள் பொது ஊடகங்களில் வெளியாவதால் மருந்தாக்கியல் கண்காணிப்பு மருத்துவர்கள் மற்றும் அறிவியலாளர்களிடத்தில் முக்கியத்துவம் பெற்றுவருகிறது. மருத்துவப் பரிசோதனைகள் ஏறத்தாழ சில ஆயிரக்கணக்கான நோயாளிகளோடு தொடர்புற்று இருப்பதால் குறைந்த பட்சமாகப் பொதுவான பக்க விளைவுகள் மற்றும் எதிர்மறையான மருந்து எதிர்விளைவுகள் ஆகியவற்றைக் கொண்ட மருந்து சந்தைப்படுத்தப்படுகையில் தொடர்ந்து கண்காணிக்கப்படாது இருக்கின்றன. கல்லீரல் சேதமடைதல் போன்ற மிகத் தீவிரமான எதிர்மறை மருந்து விளைவுகளுக்கும்கூட ஆய்வு தொகுப்பாக்கங்கள் குறைந்த அளவிலேயே இருப்பதால் இவை கண்டு பிடிக்க இயலாதவையாகவே உள்ளன. சந்தைப்படுத்துதலுக்குப் பின்னரான மருந்தாக்கியல் கண்காணிப்பு முறைமையானது, மருந்துகளுக்கும் எதிர்மறை மருந்து விளைவுகளுக்கும் இடையிலுள்ள தொடர்புகளைக் கண்டுபிடிக்க தரவுத் தொகுப்பாக்கம் மற்றும் நோய்க்குறி விபரங்களை விசாரித்தல் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றன. பொதுவாகப் புதிய மருந்துகளைச் சந்தைப்படுத்துவதற்கு முன்னராக அவற்றை விலங்குகள் மற்றும் மக்களின் மீதான ஆய்வுகளில் பயன்படுத்துவது அனைத்து நாடுகளிலும் சட்டமாக இயற்றப்பட்டுள்ளது. மருந்து தயாரிப்பில் ஈடுபடும் நிறுவனங்கள் அல்லது அவர்களின் முகவர்கள் ஆகியோர் அந்த மருந்து எந்தவொரு நோயின் சிகிச்சைக்காக உருவாக்கப்படுகிறதோ அந்த நோய் கொண்டுள்ளவர்களில் சில ஆயிரம் பேர்களைக குழுக்களாக அமைத்து அவர்களின் மீது புதிய மருந்தின் பாதுகாப்பு மற்றும் திறன் ஆகியவற்றை ஆய்வு செய்கின்றனர். இவ்வாறான ஆய்வில் மருந்தல்லாத, ஆயினும் மருந்தைப் போலவே தோற்றமளிக்கும் பிளசிபோ என்னும் போலி மருந்து மற்றும்/அல்லது அந்த நோய்க்கென ஏற்கனவே சந்தையில் கிடைக்கப் பெறும் பிற மருந்துகளைப் பயன்படுத்துவர். இத்தகைய மருத்துவப் பரிசோதனைகளின் நோக்கம் பின்வருவனவற்றைக் கண்டுபிடிப்பதாகும்: பொதுவாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வதானது ஒரு மருந்தின் செயற்பாட்டுத் திறனையும் மற்றும் அதனால் சாத்தியமாக விளையக் கூடிய காயங்களையும் நமக்கு உரைப்பதாக அமையும். பெரும் ஆய்வுத் தொகுப்பாக்கங்களில், வயது, பாலினம், ஆரோக்கிய நிலை, இனம், மற்றும் பல வேறுபட்ட இயல்புகளைக் கொண்ட பரிசோதனைக் குழுக்கள் தேவையான நம்பகத்தன்மை கொண்ட தகவல்களை வழங்கலாம். மருத்துவப் பரிசோதனையில் விளையும் மாறுபாடுகள் அறுதியாகக் குறிப்பிடப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. மேலும், முடிவுகள் பரிசோதனைக் குழு பிரதிநிதித்துவ மாதிரியாக இருக்க்கூடிய தொகுப்பாக்கத்திற்கு மட்டுமே தொடர்புள்ளவையாக இருக்கின்றன. ஒரு மருத்துவப் பரிசோதனை எல்லாச் சூழ்நிலைகளிலும் மருந்தின் விளைவுகள் என்னவாக இருக்க கூடும் என்பன பற்றிய முழு விவரங்களையும் உரைப்பதில்லை. உண்மையில், அவை முழு விவரம் என்று அறிவிப்பதுமில்லை. ஆயினும், ஒரு மருத்துவப் பரிசோதனை போதுமான அளவு விபரங்களைத் தெரிவிக்கிறது. இங்கு "போதுமானது" என்னும் சொல்லின் பொருள், பலன் மற்றும் காயத்தின் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமநிலையின் அடிப்படையில் சட்ட அமைப்பாலும் நிகழ்கால தீர்ப்புக்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. தொடர்ச்சியான தகவல் அளிப்பு என்பது சர்வதேச மருந்தாக்கியல் கண்காணிப்பின் மைய தரவு-உருவாக்க அமைப்பாகும். சில நாடுகளில் மருத்துவர்களாலேயே தொடர்ச்சியான தகவல் அளிப்பு சட்டப்பூர்வமாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. பெரும்பாலான நாடுகளில், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் மருந்துகளின் மீதான தகவல்களை அவற்றை ஆய்வு செய்யும் மருத்துவர்களிடமிருந்து பெற்று, அதிகாரபூர்வமான தேசிய அமைப்பிற்குச் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சில நாடுகள், புதிய மருந்துகள் அல்லது பிரச்சினைக்குரிய மருந்துகள் அல்லது மருத்துவர்கள் குழுவின் பரிந்துரைப்பு நடவடிக்கைகள் அல்லது அறிக்கையளிப்பதில் தொடர்புடைய மருந்தாக்கியலாளர்கள் மீது தீவிரமான, கவனக்குவிப்பு திட்டங்களைக் கொண்டுள்ளன. இவை அனைத்தும் பயன்மிக்க தகவலை உருவாக்கி அளிப்பதற்கான வாய்ப்பு கொண்டுள்ளன. இருப்பினும்,இதுபோன்ற தீவிரமான திட்டங்கள் சில நேரங்களில் விதிவிலக்குகளையும் கொண்டுள்ளன. மருந்தாக்கியல் கண்காணிப்புத் துறையில் உலகளாவிய அளவில் பல நாடுகள் இணைந்து செயலாற்றும் கொள்கையானது [http://www.who-umc.org/DynPage.aspx?id=13140&mn=1514|உலக சுகாதார அமைப்பின் உலகார்ந்த மருந்து கண்காணிப்பு திட்டத்திற்கான அடிப்படைக் கொள்கையாகும். இது மருந்துகள் நோயாளிகளிடத்தில் ஏற்படுத்தும் எதிர்மறையான விளைவுகளைப் பதிவு செய்யவும், அவற்றை வெளிப்படுத்தவும் மருத்துவத் துறைப் பணியாளர்களைக் ஊக்குவிக்கும் அமைப்புகளை தங்களிடத்தில் கொண்டிருக்கும் சுமார் 90 உறுப்பினர் நாடுகளின் வழி செயல்படுகிறது. இந்த அறிக்கைகள் உள்ளூரில் மதிப்பிடப்பட்டு ஒரு நாட்டிற்கு உட்பட்ட நடவடிக்கைக்கு வழியமைக்கலாம். உலக சுகாதார அமைப்பின் திட்டத்தின் உறுப்பினராக இருப்பதன் மூலம் இதேபோன்ற தகவல்கள் எல்லா இடங்களிலும் தெரிவிக்கப்பட்டுள்ளனவா என்பதை ஒரு நாடு அறிந்து கொள்ள முடியும். (ஐரோப்பிய ஒன்றியமும் தனக்குரிய திட்டம் கொண்டுள்ளது.) இந்த அமைப்பின் உறுப்பினராக உள்ள நாடுகள் தங்களுடைய அறிக்கைகளை மையக் கண்காணிப்பு மையத்திற்கு அனுப்புகின்றன. அங்கு அவற்றை வகைப்படுத்தி, மதிப்பீடு செய்கின்றனர். பின்னர் அவை உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய தரவுத்தளத்தில் மேலேற்றப்படும். ஒரு குறிப்பிட்ட மருந்து எதிர் விளைவுகள் கொண்டதாக இருப்பதாக சில அறிக்கைகள் குறிப்பிடுமாயின், இந்த செயல் முறையானது அறிகுறிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வழியமைக்கிறது. மருந்துகளின் சாத்தியமான அபாயம் பற்றி பற்றி இது உறுப்பு நாடுகளுக்குத் தெரிவிக்கிறது. ஒரு விரிவான மதிப்பீடு மற்றும் வல்லுனர்களின் மறு ஆய்விற்குப் பிறகே இது நிகழும். ஐரோப்பாவிலான மருந்தாக்கியல் முயற்சிகளை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (European Medical Agency) ஒருங்கிணைக்கிறது. அவை, சட்ட மற்றும் அதிகாரபூர்வமான தேசிய மையங்களால் நடத்தப்படுகிறது. ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் முக்கியமான பொறுப்பு ஐரோப்பியச் சமூகங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளுக்கான சந்தேகத்திற்குரிய தீவிர மற்றும் எதிர்மறை விளைவுகளை உள்ளிட்ட மருந்தாக்கியல் கண்காணிப்புத் தரவுத்தளத்தை பராமரித்து உருவாக்குவதே ஆகும். இந்த அமைப்பு ஒத்ததான, ஆயினும் தனித்தனியானதாக, மனித மற்றும் கால்நடைகள் தொடர்பான எதிர்விளைவுகளின் தரவுத்தளங்களையும் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில், தனிப்பட்ட சந்தையிடுதல் அதிகார அமைப்புக்கள் (மருந்து நிறுவனங்கள்) மின்னணு வடிவத்தில் பெறப்படும் அனைத்து எதிர்மறையான விளைவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன. பல்வேறு பங்குதாரர்கள் தெரிவித்த கோருதல்கள் சமூக சட்டவமைப்பில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் கீழ்வருவன குறிப்பாக உள்ளடங்கும்: தகவல் தெரிவிக்கும் செயற்பாட்டினை, இந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட வர்த்தக மென்பொருள் கொண்டோ அல்லது இதற்கான வலைத்தளத்தின் முகப்புப் பக்கத்தின் வழியாக அணுகப்படக்கூடிய இவிடபிள்யுஇபி (EVWEB) எனப்படும் வலைத்தளப் பயன்பாட்டின் வழியிலோ மேற்கொள்ளலாம். இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்த அதில் புகுபதிகை செய்வது அவசியம். 2002ஆம் ஆண்டில் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் தலைமையாளர்கள் ஐரோப்பியக் கண்டத்தில் அபாய நிர்வாக உத்தியை நிறுவும்படியான கடப்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளன. வல்லுனர்களின் உதவி பெறுதல், மற்றும் கூட்டு உழைப்பை ஊக்கப்படுத்துதல் போன்றவற்றை மேம்படுத்துவதற்கான ஐரோப்பிய மருந்தாக்கியல் கண்காணிப்பு ஆகியவை இதற்கெனவே நிறுவப்பட்டுள்ள பணிக்குழுவின் செயற்பாடுகளாகும். அமெரிக்காவில் உள்ள மருந்தாக்கியல் கண்காணிப்பின் முதன்மைக் கிளைகள் உணவு மற்றும் மருந்து முகமை (FAD), மருந்தாக்கியல் தயாரிப்பாளர்கள் மற்றும் கல்வித்துறை/இலாப நோக்கற்ற அமைப்புக்கள் ஆகியவற்றை உள்ளிடும் உயிர்ச்சத்து ஏ உயிர்ச்சத்து ஏ ("வைட்டமின் A, உயிர்ச்சத்து A, vitamin A") என்பது ஒளி-உறிஞ்சும் மூலக்கூறான இரெட்டினல் () எனப்படும் ஒரு குறிப்பிட்ட வளர்சிதை வினைமாற்ற பொருள் வடிவத்தில் விழித்திரைக்குத் தேவைப்படும் உயிர்ச்சத்து ஆகும். இதன் பயன்பாடு இருட்டுப்பார்வை மற்றும் நிறப்பார்வை இரண்டுக்கும் மிகவும் அத்தியாவசியமானது ஆகும். இரெட்டினோயிக் அமிலம் என்று அழைக்கப்படும் மீண்டும் மாற்றத்துக்கு உள்ளாக்கப்பட முடியாத இரெட்டினோலின் () வடிவமாகவும் உயிர்ச்சத்து ஏ மிகவும் மாறுபட்ட பங்கிலும் செயல்படுகிறது, இது தோல் மேலணிக்கலம் மற்றும் ஏனைய கலங்களுக்குத் தேவையான முக்கிய வளரூக்கி போன்ற வளர்ச்சிக்காரணி ஆகும். விலங்கு உணவு வகைகளில் உயிர்ச்சத்து ஏயின் முக்கிய வடிவம் இரெட்டினைல் பால்மிடேட் போன்ற எசுத்தராக இருக்கின்றது, இது சிறுகுடலில் மதுசாரமாக (இரெட்டினோல்) மாற்றப்படுகிறது. இரெட்டினோல் வடிவமானது உயிர்ச்சத்துக்களின் சேமிப்பு வடிவமாக செயல்படுகிறது, மேலும் இது அலிடிகைட்டு வடிவ இரெட்டினலுக்கு மாற்றப்படலாம், இரெட்டினலில் இருந்து மீண்டும் இரெட்டினோலுக்கு மாற்றப்படலாம். இரெட்டினோலின் வளர்சிதை வினைமாற்ற பொருளான இரெட்டினோயிக் அமிலம் மீண்டும் இரெட்டினோலாக மீளும் தன்மையற்றது, மேலும் அது பகுதியளவு உயிர்ச்சத்து A தொழிற்பாட்டை மட்டுமே கொண்டதாக இருக்கிறது, மேலும் அது விழித்திரையில் பார்வைச் சுழற்சிச் செயன்பாட்டில் பங்குகொள்வதில்லை. உயிர்ச்சத்து ஏயின் அனைத்து வடிவங்களும் ஐசோப்ரெனாய்டு சங்கிலி இணைக்கப்பட்டுள்ள பீட்டா-அயனோன் வளையத்தைக் கொண்டிருக்கிறது, இது "ரெட்டினைல் குழு" என அழைக்கப்படுகிறது. இந்த இரு கட்டமைப்புகளும் உயிர்ச்சத்தின் தொழிற்பாட்டிற்குத் தேவையான ஒன்றாக இருக்கிறது. கேரட்டுகளின் ஆரஞ்சு நிறப்பொருளான பீட்டா-கரோட்டீனானது இரு இணைந்த இரெட்டினைல் குழுக்களாகத் தோற்றமளிக்கின்றன, இவை உடலுக்கு உயிர்ச்சத்து Aயை வழங்குகின்றன. ஆல்பா-கரோட்டின் மற்றும் காமா-கரோட்டின் ஆகியவை ஒற்றை ரெட்டினைல் குழுவைக் கொண்டிருப்பதுடன் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைச் சிறிதளவில் கொண்டிருக்கிறது. ஏனைய வேறு எந்த கரோட்டின்களும் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருப்பதில்லை. கரோட்டினாய்ட்டான பீட்டா-கிரிப்டாக்சாந்தினானது அயனோன் குழுவைக் கொண்டுள்ளது, இது மனிதர்களில் உயிர்ச்சத்துச் செயற்பாட்டைக் கொண்டிருக்கிறது. உயிர்ச்சத்து ஏயை உணவுகளில் இரண்டு அடிப்படை வடிவங்களில் காணலாம், அவை: உயிர்ச்சத்து ஏயின் கண்டுபிடிப்பு 1906க்கு முந்தைய தேதியில் நடைபெற்ற ஆராய்சியிலிருந்து தொடங்கியிருக்கலாம், அந்த ஆராய்ச்சியில் கால்நடைகள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு மாச்சத்து, புரதங்கள் மற்றும் கொழுப்புகள் ஆகியவை தவிர வேறு காரணிகளும் காரணமாக இருக்கின்றன என்பது தெரியவந்தது. 1917 இல், இந்தப் பொருட்களில் ஒன்று, விசுகான்சின்–மேடிசன் பல்கலைக்கழகத்தின் எல்மர் மெக்கொல்லும் மற்றும் இயேல் பல்கலைக்கழகத்தின் இலாஃபாயெட்டு மெண்டல் மற்றும் தாமஸ் பர் ஓசுபோர்ன் ஆகியோரால் கண்டறியப்பட்டது. "நீரில்-கரையக்கூடிய காரணி பி" (உயிர்ச்சத்து பி) சமீபத்தில் கண்டறியப்பட்டிருந்ததால், ஆய்வாளர்கள் "கொழுப்பில்-கரையக்கூடிய காரணி ஏ" (உயிர்ச்சத்து ஏ) என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தனர். உயிர்ச்சத்து ஏ முதன் முதலில் 1947 இல் இரண்டு இடாய்ச்சு வேதியியலாளர்களான டேவிட் அட்ரியான் வான் டோர்ப் மற்றும் ஜோசப் ஃபெர்டினண்ட் அரென்சு ஆகியோரால் தொகுக்கப்பட்டது. சில கரொட்டினாய்ட்டுகள் உயிர்ச்சத்து Aயாக மாற்றம் பெறும் என்கின்ற நோக்கினை வைத்து குறிப்பிட்ட அளவு இரெட்டினோலுக்குச் சமமாக உணவுப்பொருளில் எவ்வளவு கரொட்டினாய்ட்டுகள் இருக்கின்றன என்பதைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பல ஆண்டுகளாக சமானங்களின் முறையில் ஒரு சர்வதேச அலகானது (IU) 0.3 μg அளவு ரெட்டினோலுக்குச் சமமாகவும், 0.6 μg β-கரோட்டின் அல்லது 1.2 μg வேறு முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகள் ஆகியவற்றுக்குச் சமமாகவும் இருக்கும்படி பயன்படுத்தப்பட்டது. பின்னர், இரெட்டினோல் சமானம் (RE) என்று அழைக்கப்படும் அலகு அறிமுகப்படுத்தப்பட்டது. 1 RE என்பது 1 μg இரெட்டினோல், எண்ணெயில் கரைந்துள்ள 2 μg β-கரோட்டின், சாதாரண உணவில் உள்ள 6 μg β-கரோட்டின் மற்றும் 12 μg அளவில் உள்ள α-கரோட்டின், γ-கரோட்டின், β-கிரிப்டாக்சாந்தின் ஆகியவற்றிற்குச் சமனாகும். புதிய ஆய்வுகளில், முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகளின் அகத்துறிஞ்சல் முன்பு எதிர்கூறப்பட்டதைவிடப் பாதியளவு மட்டுமே இருப்பது கண்டறியப்பட்டது, அதனால் 2001 இல் ஐக்கிய அமெரிக்க மருந்து நிறுவனத்தால் இரெட்டினோல் செயற்பாட்டுச் சமானம் (RAE) என்னும் புதிய அலகு பரிந்துரைக்கப்பட்டது. 1 μg RAE என்பது 1 μg இரெட்டினோல், எண்ணெயில் 2 μg β-கரோட்டின், 12 μg உட்கொள்ளும் பீட்டா-கரோட்டின் அல்லது 24 μg ஏனைய மூன்று முன்னுயிர்ச்சத்து-A கரோட்டினாய்டுகள் ஆகியவற்றுக்கு ஒத்திருக்கிறது. மனித உடலில் ஏற்கனவே உள்ள இரெட்டினோலின் அளவே மேலதிகமாகப் பயன்படுத்தப்படும் முன்னுயிர்ச்சத்துக்களில் இருந்து உற்பத்தியாகும் இரெட்டினோலின் அளவைத் தீர்மானிக்கின்றது என்பதால் உயிர்ச்சத்து A குறைந்திருக்கும் மனிதர்களில் மட்டுமே முன்னுயிர்ச்சத்து (அல்லது ஏனைய உயிர்ச்சத்து ஏ மாற்றீடுகள்) பயன்படுத்தப்படுதல் அவசியமாகும். முன்னுயிர்ச்சத்துக்களின் உறிஞ்சுதல், முன்னுயிர்ச்சத்துக்களுடன் கொழுப்புப் பொருட்கள் உட்கொள்ளுவதன் அளவையும் பெருமளவு சார்ந்திருக்கிறது; கொழுப்புப்பொருட்கள், முன்னுயிர்ச்சத்துக்களின் அகத்துறிஞ்சல் அளவை அதிகரிக்கின்றன. புதிய ஆய்வுகளில் இருந்து கிடைக்கப்பெற்ற முடிவு, முன்பு நினைத்திருந்ததைப் போல, பழங்கள் மற்றும் காய்கறிகள் உயிர்ச்சத்து ஏயைப் பெறுவதற்குப் பயன் மிக்கவை அல்ல என்பதாக இருந்தது; வேறுவிதமாகக் கூறினால், இந்த உணவுகளில் இருக்கும் சமான அளவுகள், கொழுப்பு-கரைக்கப்பட்ட எண்ணெய்கள் மற்றும் (சில பரிமாணங்களுக்கு) சேர்க்கைகளில் இருக்கும் அதே அளவுள்ள சமான அளவுகளைக் காட்டிலும் மிகவும் குறைவான மதிப்புடையவையாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது. இது சைவ உணவு உண்பவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். (மாலைக்கண் நோய் குறைவான மாமிசம் அல்லது உயிர்ச்சத்து A-செறிவூட்டிய உணவுகள் கிடைக்கக்கூடிய நாடுகளில் பொதுவாக ஏற்படுகிறது.) ஒரு நாட் சைவ உணவு தரக்கூடிய உயிர்ச்சத்து ஏயின் அளவு, உணவு மற்றும் ஊட்டச்சத்து ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருக்கிறது (பக்கம் 120). மற்றொரு வகையில், தேசிய அறிவியல் கழகத்தால் வழங்கப்பட்ட இரெட்டினோல் அல்லது அதன் சமானங்களுக்கான ஆதார மதிப்புகள் குறைந்திருக்கின்றன. 1968 இல் நாளொன்றுக்கான பரிந்துரை அளவு (ஆண்களுக்கு) 5000 IUவாக (1500 μg இரெட்டினோல்) இருந்தது. 1974 இல், நாளொன்றுக்கான பரிந்துரை அளவு 1000 RE (1000 μg இரெட்டினோல்) ஆக மாற்றப்பட்டது, அதேசமயம் தற்போது உணவுத்திட்ட ஆதார உட்கொள்ளல் 900 RAE (900 μg அல்லது 3000 IU இரெட்டினோல்) ஆக இருக்கிறது. இது 1800 μg β-கரோட்டின் சேர்க்கை (3000 IU) அல்லது உணவில் காணப்படும் 10800 μg β-கரோட்டின் (18000 IU) ஆகியவற்றுக்கு ஒத்திருக்கிறது. உயிர்ச்சத்து A நாளாந்த உணவுத் தேவைப் பரிந்துரை: மருந்து நிறுவன தேசிய கழகத்தின் படி, பரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவுகள் ஒரு குழுவில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து (97 இல் இருந்து 98 சதவீதம்) தனிநபர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. ஆரோக்கியமான தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளுக்கான அளவு போதுமான அளவு எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. உயிர்ச்சத்து A இயற்கையாகவே பல உணவுகளில் காணப்படுகிறது, அவை: குறிப்பு: USDA தரவுத்தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள தரவுகள், இரெட்டினோல் செயற்பாட்டுச் சமானம் மற்றும் வயது வந்த ஆண்களில் ஒவ்வொரு 100 கிராமிலும் பரிந்துரைக்கப்பட்ட நாளாந்தத் தேவை அளவின் சதவீதம் ஆகியன ஆகும். கரோட்டினில் இருந்து இரெட்டினோலுக்கு மாற்றமடைதல் நபருக்கு நபர் வேறுபடுவதுடன் உணவைப் பொருத்தும் கரோட்டினின் அளவு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து A உடலில் பல்வெறு செயல்பாடுகளில் பங்குவகிக்கிறது, எ.கா: பார்வைச் சுழற்சியில் உயிர்ச்சத்து ஏயின் பங்கு குறிப்பாக இரெட்டினல் வடிவத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. கண்ணினுள், 11-"பக்க" -ரெட்டினால், பதப்படுத்தப்பட்ட லைசின் எச்சங்களில் ராடாப்சின் (தண்டுகள்) மற்றும் அயோடாப்சினைக் (ஒளிக் கூம்புகள்) கட்டுப்படுத்துகிறது. கண்ணினுள் ஒளி நுழையும் போது, 11-"பக்க" -ரெட்டினால் அனைத்து-"மாறுபக்க" வடிவத்தையும் சமபகுதியாக்குகிறது. அனைத்து-"மாறுபக்க" ரெட்டினால், வெளுத்தல் என அழைக்கப்படும் தொடர் படிகளில் ஆப்சினில் இருந்து பிரிந்துசெல்கிறது. இந்த சமபகுதியாகுதன்மை மூளையின் காட்சி மையத்துக்கு பார்வைநரம்பைச் சுற்றி உணர்வுத்துடிப்புச் சமிக்ஞையைத் தூண்டுகிறது. இந்த சுழற்சி நிறைவடைவதன் மீது, அனைத்து-"மாறுபக்க"-ரெட்டினால் தொடர் என்சைமேடிக் தாக்கங்களின் மூலமாக 11-"பக்க"-ரெட்டினால் வடிவத்துக்கு மீண்டும் மறுசுழற்சியடையலாம் மற்றும் மாற்றமடையலாம். கூடுதலாக, சில அனைத்து-"மாறுபக்க" ரெட்டினால், அனைத்து-"மாறுபக்க" ரெட்டினோல் வடிவத்திற்கு மாற்றமடையலாம், மேலும் பின்னர் உட்புறஒளி உணர்வி ரெட்டினோல்-கட்டமைப்புப் புரதத்தில் (IRBP) இருந்து நிறமி தோல் மேல்புறச் செல்களுக்குப் பரிமாற்றமடைகிறது. அனைத்து-"மாறுபக்க" ரெட்டினைல் ஈஸ்டர்களினுள் தொடர்ந்த எஸ்ட்டராக்குதல், இதை நிறமி தோல் மேல்புறச் செல்களில் தேவைப்படும் போது பயன்படுத்தும் விதத்தில் சேமித்து வைக்க அனுமதிக்கிறது. 11-"பக்க" -ரெட்டினாலின் இறுதி மாற்றம் விழித்திரையில் ரோடாப்சின் மறு உருவாக்கம் அடைவதற்கு ஆப்சினை மறு கட்டமைக்கிறது. ரோடாப்சினானது கருப்பு மற்றும் வெள்ளையைப் பார்ப்பதற்கு அத்துடன் இரவில் பார்ப்பதற்குத் தேவையான ஒன்றாகும். இந்த காரணத்தினால், உயிர்ச்சத்து Aவில் எற்படும் குறைபாடு ரோடாப்சினின் மறு உருவாக்கத்தைத் தடை செய்தால் அது மாலைக்கண்நோய் ஏற்பட வழிவகுக்கும். ரெட்டினோயிக் அமில வடிவத்தில் உயிர்ச்சத்து A, மரபணு படியெடுத்தலில் முக்கிய பங்குவகிக்கிறது. ரெட்டினோல் செல்லின் மூலமாக எடுக்கப்பட்டவுடன், அது ஆக்சிகரணமடைந்து ரெட்டினால் ஆகலாம் (ரெட்டினோல் ஹைட்ரஜன் நீக்கமடைவதன் மூலமாக) மற்றும் பின்னர் ரெட்டினால் ஆக்சிகரணமடைந்து ரெட்டினோயிக் அமிலமாக மாறலாம் (ரெட்டினால் ஆக்சிடேசினால்). ரெட்டினாலில் இருந்து ரெட்டினோயிக் அமிலத்துக்கான மாற்றம் மீளும் தன்மையற்ற படிநிலையாக இருக்கிறது, அதாவது ரெட்டினோயிக் அமிலத்தின் உருவாக்கம், அணுக்கரு ஏற்பிகளுக்கான அணைவியாக அதன் நடவடிக்கையின் காரணமாக நெருக்கமாக சீரமைக்கப்பட்டிருக்கிறது. ரெட்டினோயிக் அமிலம், மரபணு படியெடுத்தலை ஆரம்பிப்பதற்கு (அல்லது தடுத்து நிறுத்துவதற்கு) இரண்டு வேறுபட்ட அணுக்கரு ஏற்பிகளை கட்டமைக்கலாம், அவை: ரெட்டினோயிக் அமில ஏற்பிகள் (RARs) அல்லது ரெட்டினாய்ட் "X" ஏற்பிகள் (RXRs) ஆகும். RAR மற்றும் RXR அவை DNAவைக் கட்டமைப்பதற்கு முன்பு இருபடியாக்கமடைய வேண்டும். RAR, RXR உடன் மறுஇருபடியை உருவாக்குகிறது (RAR-RXR), ஆனால் இது உடனடியாக ஒத்தஇருபடியை உருவாக்காது (RAR-RAR). மற்றொரு வகையில், RXR ஆனது உடனடியாக ஒத்தஇருபடியை உருவாக்குகிறது (RXR-RXR), மேலும் இது தைராய்டு ஹார்மோன் ஏற்பி (RXR-TR), வைட்டமின் D ஏற்பி (RXR-VDR), பெராக்சிசம் இனப்பெருக்கம்-செயல்படுத்து ஏற்பி (RXR-PPAR) மற்றும் கல்லீரல் "X" ஏற்பி (RXR-LXR) உள்ளிட்ட மற்ற பல அணுக்கரு ஏற்பிகளுடன் மறுஇருபடியையும் உருவாக்கும். RAR-RXR மறுஇருபடி DNAவின் மீது ரெட்டினாய்டு அமில பிரதிசெயல் மூலகங்களை (RAREs) அடையாளம் காணுகிறது, அதேசமயம் RXR-RXR ஒத்தஇருபடி DNAவின் மீது ரெட்டினாய்டு "X" பிரதிசெயல் மூலகங்களை (RXREs) அடையாளம் காணுகிறது. மற்ற RXR மறுஇருபடிகள் DNAவின் மீது பல்வேறு மற்ற பிரதிசெயல் மூலகங்களைக் கட்டமைக்கும். ரெட்டினோயிக் அமிலம் ஏற்பிகளைக் கட்டமைத்தவுடன் மற்றும் இருபடியாக்கம் எற்பட்டவுடன், ஏற்பிகள் ஒத்துப்போகக்கூடிய மாற்றத்திற்கு உட்படும், இது ஏற்பிகளில் இருந்து இணை-அடக்கிகள் பிரிந்து செல்வதற்குக் காரணமாகிறது. இணைவினையூக்கிகள் பின்னர் ஏற்பி காம்ப்ளக்சை கட்டமைக்கின்றன, அவை ஹிஸ்டோன்களில் இருந்து குரோமாட்டின் கட்டமைப்பைத் தளர்த்த உதவலாம் அல்லது படியெடுத்தல்சார் இயக்கத்தொகுதியுடன் இடைவினை புரிகிறது. ஏற்பிகள் பின்னர் DNAவின் மீது பிரதிசெயல் மூலகங்களைக் கட்டமைக்கலாம் மற்றும் செல்லுளார் ரெட்டினோல்-கட்டமைப்புப் புரதம் (CRBP) அத்துடன் ஏற்பிகள் அவைகளுக்குள்ளேயே குறியிடுவதற்கான அணுக்கருக்கள் போன்ற இலக்கு அணுக்கருக்களில் வெளிப்பாட்டை மேல்முறைப்படுத்தலாம் (அல்லது கீழ்முறைப்படுத்தலாம்). வழக்கமான சரும ஆரோக்கியத்தைப் பேணிக்காப்பதில் உயிர்ச்சத்து A வின் செயல்பாடு வெளியாகிறது. தோல் மருத்துவ நோய்களின் சிகிச்சையின் ரெட்டினாய்டின் நோய் நீக்க இயல்புடைய முகவர்களுக்குப் பின்னால் இந்த செயலமைவானது ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகிறது. முகப்பரு சிகிச்சைக்கான அதிக திறனுள்ள மருந்தாக 13-பக்க ரெட்டினோயிக் அமிலம் (ஐசோட்ரீட்டினோயின்) உள்ளது. எனினும் அதன் செயல்பாட்டின் இயங்கமைப்பு இன்னும் அறியப்படாததாகவே இருக்கிறது, இது சரும மெழுகுச்சுரப்பிகளின் அளவு மற்றும் சுரத்தலைக் கணிசமாகக் குறைக்கிறது. நாளங்கள் மற்றும் சரும மேற்பரப்பு இரண்டிலும் நுண்ணுயிரிகள் சார்ந்த எண்ணிக்கையை ஐசோட்ரீட்டினோயின் குறைக்கிறது. இது ஒரு நுண்ணியிரிக்கான ஊட்டச்சத்தாய் பயன்படும் மூலமான சரும மெழுகின் குறைதலின் விளைவாக கருதப்படுகிறது. ஒற்றை உயிரணுக்கள் மற்றும் பல முனை வெள்ளையணுக் கருக்களின் இரசாயனத்தூண்டற் பெயர்வுக்குரிய செயலெதிர் விளைவுகளின் தடுப்பாணை வழியாக ஐசோட்ரீட்டினோயின் வீக்கத்தைக் குறைக்கிறது. சரும மெழுகு சுரப்பிகளின் மறுமாதிரியமைத்தலை தொடங்கி வைப்பதற்கு ஐசோட்ரீட்டினோயின் காட்டப்படுகிறது; மரபணு வெளிப்படுத்தும் தன்மையில் மாறுதல்களை தூண்டுகிறது, அது தேர்ந்தெடுக்கப்பெற்ற என்புமுளையைத் தூண்டுகிறது. ஐசோட்ரீட்டினோயின் ஒரு கரு வளர்ச்சிக் குறைப்பி ஆகும், மேலும் மருத்துவ ஆய்வைக் கட்டுபடுத்த இது பயன்படுகிறது. உயிர்ச்சத்து A அகற்றப்பட்ட எலிகளை ரெட்டினோயிக் அமிலத்தின் சேர்மானத்துடன் நல்ல வழக்கமான உடல்நலத்துடன் வைத்திருக்கலாம். இது உயிர்ச்சத்து A குறைபாடின் வளர்ச்சி-குன்றிய விளைவுகளையும் அத்துடன் மாலைக்கண் நோய்க்கு எதிராகவும் செயல்படுகிறது. எனினும், அந்த எலிகள் (ஆண் மற்றும் பெண் இரண்டிலும்) செழிப்பின்மையைக் காட்டுகிறது மற்றும் விழித்திரையின் சீர்கேடைத் தொடர்கிறது, இது இந்த செயல்பாடுகளுக்கு ரெட்டினால் அல்லது ரெட்டினோல் தேவை என்பதைக் காட்டுகிறது, அவற்றை உள்மாற்றம் செய்யலாம், ஆனால் ஆக்ஸிஜனேற்றப்பட்ட ரெட்டினோயிக் அமிலத்தில் இருந்து திரும்பப்பெற முடியாது. உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் உயிர்ச்சத்து A குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. தோராயமாக, வளர்ந்துவரும் நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் 250,000-500,000 குழந்தைகள் உயிர்ச்சத்து A குறைபாடால் பார்வையிழக்கின்றனர், இதில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவின் குழந்தைகள் உச்ச அளவாக பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார அமைப்பைப் (WHO) பொறுத்தவரை, அமெரிக்காவில் உயிர்ச்சத்து A குறைபாடு கட்டுப்பாட்டில் உள்ளது, ஆனால் வளர்ந்துவரும் நாடுகளில் உயிர்ச்சத்து A குறைபாடு மிகவும் முக்கியமான ஒரு கவலையாக உள்ளது. உயிர்ச்சத்து A குறைபாடு உயர் விகிதத்துடன் உள்ள வளர்ந்து வரும் நாடுகளில் உயிர்ச்சத்து A வின் குறைநிரப்புவதற்காக பல்வேறு முயற்சிகளை WHO எடுத்து வருகிறது. இந்த உத்திநோக்குகளில் சில, தாய்ப்பால் உட்கொள்ளல், சரியான உணவு உட்கொள்ளல், உணவு வலுவூட்டல் மற்றும் சேர்க்கையின் மூலமாக உயிர்ச்சத்து A வின் உட்கொள்ளலை உள்ளடக்கியுள்ளது. WHO மற்றும் அதன் கூட்டாளிகளின் முயற்சிகளின் மூலம், 1998 இல் இருந்து 40 நாடுகளில் உயிர்ச்சத்து A குறைபாடு காரணமாக ஏற்படும் 1.25 மில்லியன் இறப்புகள் தடுக்கப்பட்டுள்ளது என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிர்ச்சத்து A குறைபாடானது, முதன்மையான அல்லது முக்கியமில்லாத குறைபாடாக ஏற்படலாம். ஒரு முதன்மையான உயிர்ச்சத்து A குறைபாடானது, மஞ்சள் மற்றும் பச்சைக் காய்கறிகள், பழங்கள் மற்றும் கல்லீரலை போதுமான அளவு உட்கொள்ளாத குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பலருக்கு ஏற்படுகிறது. விரைவாக பால்மறக்கச் செய்தலும் உயிர்ச்சத்து A குறைபாடு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. முக்கியமற்ற உயிர்ச்சத்து A குறைபாடானது, சிகரெட் புகை போன்ற, கொழுப்பு வகைப் பொருட்களின் நாட்பட்ட உள்ளீர்ப்புக்கேடு, பலவீனப்படுத்தப்பட்ட பித்தநீர் தயாரிப்பு மற்றும் வெளியீடு, குறைவான கொழுப்பு உணவுக் கட்டுப்பாடுகள் மற்றும் ஆக்சிஜனேற்றிகளுக்கு நாட்பட்ட வெளிப்பாடுகளுடன் இணைப்புற்றுள்ளது. உயிர்ச்சத்து A என்பது ஒரு கொழுப்பு கரையத்தக்கதான வைட்டமின் மற்றும் சிறுகுடலினுள் பிரிகைக்காக மிஸ்செலர் கரையும் தன்மையைச் சார்ந்துள்ளது, இதில் இருந்து குறைவான-கொழுப்பு உணவுக்கட்டுப்பாடுகளில் இருந்து உயிர்ச்சத்து A வின் மோசமான பயன்பாட்டின் விளைவைத் தருகிறது. துத்தநாகக் குறைபாடானது, உறிஞ்சுதல், போக்குவரத்து மற்றும் உயிர்ச்சத்து Aவின் வளர்சிதை மாற்றம் ஆகியவற்றை சேதப்படுத்துகிறது, ஏனெனில் இது உயிர்ச்சத்து A போக்குவரத்து புரதங்களுடைய தொகுப்புக்கான இன்றியமையாததாக உள்ளது, மேலும் ரெட்டினோல் ஆக்சிஜனிறக்கம் அடைந்து ரெட்டினாலாகிறது. போதாத ஊட்டச்சத்துக்கூடிய மக்களில், வழக்கமான உயிர்ச்சத்து A வின் குறை உட்கொள்ளல் மற்றும் உயிர்ச்சத்து A குறைபாடின் அபாயத்தினால் துத்தநாகம் அதிகரித்தல் மற்றும் பல்வேறு உடல்கூறு சம்பந்தமான விளைவுகளுக்கு வழிவகுக்கிறது. பர்கினா ஃபசோவின் ஒரு ஆய்வில், இளவயது குழந்தைகளின் உயிர்ச்சத்து A மற்றும் துத்தநாக கூட்டு சேர்க்கையுடன் மலேரியா நோயுற்ற விகிதத்தில் பெருமளவான குறைப்பு காட்டப்பட்டது. ரெட்டினைல் அமைப்பின் தனித்துவ செயல்பாடானது, ரெட்டினைலிடேன் புரதத்தின் ஒளி உறிஞ்சுதலாக இருக்கும் வரை, உயிர்ச்சத்து A குறைபாடின் ஆரம்பத்தில் இருந்த ஒன்றான மற்றும் குறிப்பிட்ட வெளிப்படுத்தலானது சேதப்படுத்தப்பட்ட பார்வையாக இருக்கும், குறிப்பாய் மாலைக்கண் நோய் என்ற ஒளி குறைபாடாக இருக்கும். ஒரேநிலைக் குறைபாடானது, தொடர்ச்சியான மாறுதல்களைக் கொடுக்கிறது, இதில் அதிகமான பேரிழப்பு கண்களில் ஏற்படுகிறது. விழியின் வேறுசில மாறுதல்களானது, மாலைக்கண் நோய் என அழைக்கப்படுகிறது. முதலில் வழக்கமான கண்ணீர் சுரப்பிச் சிரையின் விழி வெண்படலத்தில் உலர்தல் (உயிர்ச்சத்து குறைநோய்) இருக்கும், மேலும் கெரட்டினேற்றப்பட்ட புறச்சீதப்படலம் மூலம் சளி சுரப்பி புறச்சீதப்படலம் மாற்றப்படும். சிறிய ஒளிபுகா முளையின் (பிட்டோட்டின் இடங்கள்) கெரட்டின் உணவுச்சிதறலுடைய முன்னிலையின் மூலமாக இது தொடர்ந்து வரும், மேலும் இறுதியில் மென்மையாக்கம் மற்றும் விழிவெண்படலத்தின் அழிவுடன் (கருவிழிநைவு) கடினத்தன்மை கார்னியல் மேற்பரப்பின் உள்ளரிப்பு மற்றும் முழுவதுமாக பார்வையிழப்பு ஏற்படுகிறது. பிற மாறுதல்களாவன, சேதப்படுத்தப்பட்ட தடுப்பாற்றல், முள்தோல் (முடி நுண்குமிழில் வெள்ளை கட்டிகள்), கரட்டுமை பில்லரிஸ் மற்றும் புறச்சீதப்படலத்தின் செதிள் மாற்றுப்பெருக்கப் பூச்சின் மேலுள்ள சுவாச சம்பந்தமான வழிகள் மற்றும் கெரட்டினேற்றமுடைய புறச்சீதப்படலதிற்குரிய சிறுநீருக்குரிய நீர்ப்பை ஆகிய மாற்றங்களாகும். பல்மருத்துவத்துக்கு தொடர்புகளுடன், உயிர்ச்சத்து A வின் குறைபாடானது எனாமெல் குறைவளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. உயிர்ச்சத்து A வின் போதிய அளிப்பானது, குறிப்பாக கர்ப்பிணி மற்றும் தாய்ப்பால் புகட்டும் பெண்ணுக்கு முக்கியமாகத் தேவைப்படுகிறது, இதில் பிறப்புக்குபின் சேர்மானம் மூலம் குறைபாடுகளை ஈடுசெய்ய இயலாது.. உயிர்ச்சத்து A கொழுப்பு-கரையத்தக்கதாக இருப்பதில் இருந்து, நீரில்-கரையத்தக்க வைட்டமின்கள் B மற்றும் C ஐக் காட்டிலும் மிகவும் கடினமானதாக உணவுக்கட்டுப்பாடின் வழியாக எடுக்கப்பட்ட எந்த மிகுதிகளையும் அப்புறப்படுத்துகிறது, இதன் விளைவாய் உயிர்ச்சத்து A நச்சுத்தன்மை பயனாய் ஏற்படலாம். இதனால் குமட்டுதல், மஞ்சள் காமாலை, உறுத்துணர்ச்சி, பசியின்மை (சாப்பிடும் சீர்கேடான பசியற்ற உளநோயுடன் குழப்பிக் கொள்ளவேண்டாம்), வாந்தியெடுத்தல், மங்களானப் பார்வை, தலைவலிகள், முடிஉதிர்தல், தசை மற்றும் வயிற்று வலி மற்றும் பலவீனம், அயர்வு மற்றும் மனம் கலங்கிய நிலை போன்றவற்றிற்கு இது வழிவகுக்கிறது. பொதுவாக உடல் எடையில் 25,000 IU/கிகி அளவையில் கடுமையான நச்சுத்தன்மை ஏற்படுகிறது, இதனுடன் 6–15 மாதங்களுக்கு தினமும் உடல் எடையில் 4,000 IU/கிகி இல் நாட்பட்ட நச்சுத்தன்மை ஏற்படுகிறது. எனினும், மிகவும் குறைந்த அளவாக ஒரு நாளுக்கு 15,000 IU முதல் 1.4 மில்லியன் IU வரையும், இதனுடன் சராசரியாக தினமும் ஒரு நாளுக்கு 120,000 IU நச்சு அளவை இருக்கும் போது கல்லீரல் நச்சுத்தன்மைகள் ஏற்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்புடன் இருக்கும் மக்களுக்கு 4000 IU இருக்கும் போது பெரிய பாதிப்புகளுக்கு காரணமாக அமைகிறது. கூடுதலாக, அதிகமான ஆல்ஹகால் உட்கொள்ளும் போது நச்சுத்தன்மை அதிகமாகலாம். குழந்தைகள் அவர்களது உடல் எடையில் 1,500 IU/கிகி இல் நஞ்சு மட்டங்களை அடைய முடியும். நாட்பட்ட நிகழ்வுகளில், முடி உதிர்தல், உலர்ந்த சருமம், சளிச்சுரப்பி சவ்வுகளின் வரட்சி, காய்ச்சல், தூக்கமின்மை, சோர்வு, எடை இழப்பு, எலும்பு முறிவுகள், இரத்த சோகை மற்றும் வயிற்றுப்போக்கு இவையனைத்தும் குறைவான தீவிரம் கொண்ட நச்சுத்தன்மையுடன் சேர்ந்துவரும் அறிகுறிகளின் உச்ச வெளிப்படையாக இருக்கும். வளர்ச்சிபெற்ற நாடுகளில் 75% மக்கள் வழக்கமான உயிர்ச்சத்து A க்கான RDA வைக் காட்டிலும் அதிகமான உணவை உட்செலுத்தலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீண்டகாலத்திற்கு முன்னமைக்கப்பட்ட உயிர்ச்சத்து Aவின் RDAவை இரண்டுமுறை உட்கொள்ளுதல், எலும்புத்துளை நோய் மற்றும் இடுப்பெலும்பு முறிவுகளுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம். உயிர்ச்சத்து A வின் மிகுதியானது வைட்டமின் K ஐ சார்ந்துள்ள குறிப்பிட்ட புரதங்களின் வெளிப்படும் தன்மையைத் தடுப்பதால் இது ஏற்பட்டிருக்கலாம். இது எலும்புத்துளை நோயைத் தடுக்கும் மெய்பிக்கப்பட்ட பங்கைச் கொண்டிருக்கும் வைட்டமின் D இன் உச்சவினையைக் குறைப்பதாகக் கருதப்படுகிறது, மேலும் சரியான பயன்பாடுக்காக வைட்டமின் K இன் மேல் இது சார்ந்துள்ளது. உயர் உயிர்ச்சத்து A உட்கொள்ளல், விலங்குகளின் தன்னிச்சையான எலும்பு முறிவுகளுடன் சம்பந்தப்படுள்ளது. உயிரணு கலாச்சார படிப்புகளானது, உயர் உயிர்ச்சத்து A உட்கொள்ளல்களுடன் அதிகரிக்கப்பெற்ற எலும்பு திசுஅழிவு மற்றும் குறைக்கப்பெற்ற எலும்பு அமைவு ஆகியவற்றுடன் தொடர்புகொண்டிருக்கிறது. ஒரே ஏற்பிக்காக வைட்டமின்கள் A மற்றும் D போட்டியிடுவதால் இந்த இடைவினை ஏற்படலாம், மேலும் பிறகு கால்சியத்தை ஒழுங்குபடுத்தும் பாராத்தைராய்டு நொதியுடன் இடைவினைபுரிவதாலும் ஏற்படலாம். உண்மையாகவே, போர்ஸ்மோ "மற்றும் பல." மூலமான பயிற்சியில் குறை எலும்புத் தாது அடர்த்தி மற்றும் உயிர்ச்சத்து A வின் மிகவும் உயர் உட்கொள்ளல் இரண்டுக்கும் இடையேயான ஒரு இயைபுபடுத்தலைக் காட்டுகிறது. உயிர்ச்சத்து A வின் நஞ்சு விளைவுகளானது, குறிப்பிடத்தக்க வகையில் இனப்பெருக்கமிக்க சேய்க்கருக்களில் விளைவை ஏற்படுத்துவதற்கு காட்டப்படுகிறது. நோய்தீர்ப்பியல்புடைய அளவைகள், பிளவு கபால நரம்புக்குரிய உயிரணு நடவடிக்கைகளுக்குக் காட்டப்பட்ட முகப்பரு சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது. உறுப்பு மூலம் வளர்ச்சியடையும் காலத்தின் போது சேய்க்கருவானது குறிப்பாக உயிர்ச்சத்து A நச்சுத்தன்மைக்கு எளிதில் தூண்டக்கூடியதாக உள்ளது. இந்த நச்சுத்தன்மைகள், முன்னரே உருவாக்கப்பட்ட (ரெட்டினோய்டு) உயிர்ச்சத்து A (கல்லீரலில் இருப்பது போன்று) உடன் மட்டுமே ஏற்படுகிறது. கரோட்டின் வகையின வடிவங்கள் (கேரட்டுகளில் கண்டறியப்பட்ட பீட்டா-கரோட்டின் போன்று), அதைப் போன்ற எந்த நோய்குறிகளையும் கொடுப்பதில்லை, ஆனால் பீட்டா-கரோட்டின் மிகையான உணவுப்பழக்க உட்கொள்ளலானது மஞ்சல்தோலிற்கு வழிவகுக்கிறது, இது சருமத்தில் ஆரஞ்சு-மஞ்சள் நிறச்சிதைவுக்கு காரணமாகிறது. உயிர்ச்சத்து A வின் நீரில்-கரையத்தக்க அமைவுகளை உருவாக்குவதில் ஆராய்ச்சியாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர், இதன் மூலம் நச்சுத்தன்மையின் ஆற்றலைக் குறைக்கலாம் என அவர்கள் நம்புகின்றனர். எனினும், 2003 இல் ஒரு ஆய்வில் நீரில்-கரையத்தக்க உயிர்ச்சத்து A வானது, கொழுப்பில்-கரையத்தக்க வைட்டமின்களைக் காட்டிலும் 10 முறைகள் அதிகமான நச்சுத்தன்மையைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 2006 இல் ஒரு ஆய்வில், நீரில்-கரையத்தக்க உயிர்ச்சத்து A மற்றும் D கொடுக்கப்பட்ட குழந்தைகளில், அவை பொதுவாக கொழுப்பில்-கரையக்கூடியவையாக இருந்தன, ஆஸ்துமாவால் இரண்டுமுறை பாதிக்கப்பட்டவர்களில் கொழுப்பில்-கரையக்கூடிய வைட்டமின்களுடன் மிகுந்தளவு கட்டுப்பாட்டுக் குழுச் சேர்க்கைகள் இருந்தன. நீண்டகாலமாக, உயிர்ச்சத்து A வின் உயர் அளவைகளானது "போலிக்கட்டி அடிவளரியின்" நோய்க்குறியை ஏற்படுத்துகிறது. தலைவலி, மங்கலான பார்வை மற்றும் குழப்பம் ஆகியவற்றை இந்த இந்த நோய் அறிகுறி உள்ளடக்கியுள்ளது. இது அதிகரிக்கப்பெற்ற செரிபரவக அழுத்ததுடன் சேர்ந்துள்ளது. ரெட்டினைல் பால்மிடேட், சரும கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது, ஆற்றல்மிக்க உயிரியல்சார்ந்த நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் ரெட்டினோயிக் அமிலத்திற்கு உடைந்திருக்கும் இடத்தில், மேலே விளக்கப்பட்டுள்ளது போல் பயன்படுத்தப்படுகிறது. வேதியியல் சார்ந்த சேர்மங்களின் வகுப்பான ரெட்டினோய்டுகள், ரெட்டினோயிக் அமிலத்திற்கு வேதியியல் செயல்முறையில் தொடர்பு கொண்டுள்ளது, இவை இந்த சேர்மத்தின் இடத்தின் ஒழுங்குபடுத்து மரபணு செயல்பாடுகளுக்கு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, ரெட்டினோயிக் அமிலம் போன்று அதுவே, இந்த சேர்மங்கள் முழுமையான உயிர்ச்சத்து A நடவடிக்கையைக் கொண்டிருப்பதில்லை. பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் பாசில்லஸ் துரிஞ்சியென்சிஸ் ("Bacillus thuringiensis") அல்லது சுருக்கமாக "பி.டி." (Bt) என்பது ஒரு மண்வாழ் கிராம்-நேர் நுண்ணுயிர். இது இயற்கையில் பட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி போன்றவற்றின் வயிற்றில் உயிர்வாழ்கின்றது. இது உயிர்க்கொல்லியாகப் பயன்படுத்தப்படுகிறது (வணிகப் பெயர்கள்: டைப்பெல் (Dipel), தூரிசைடு (Thuricide)); இந்த நுண்ணுயிரியை 1901 ஆம் ஆண்டு ஷிகெடானே இழ்சிவாட்டா (Shigetane Ishiwata) என்ற நிப்பானிய உயிரியலாளர் கண்டுபிடித்தார். பின்னர் 1911 -இல் எர்ணசுட்டு பெர்லினர் (Ernst Berliner) என்ற செருமானியர் மாவு விட்டில் புழுவில் ஏற்படும் "இழ்ச்லாவ்சூக்ட்"(Schlaffsucht) என்ற நோயை ஆராயும் போது பி.டி.யைப் பிரித்தெடுத்தார். இந்நுண்ணுயிரிகள் உருவாக்கும் ஒரு வகை படிக அகநச்சுகள் "செதிலிறகிகள்" எனப்படும் "லெப்பிடோப்டீரா" ("அந்துப்பூச்சிகள், வண்ணத்துப்பூச்சிகள்"), "இருசிறகிகள்" எனப்படும் டிப்டீரா ("ஈக்கள், கொசுக்கள்"), "காப்புறை இறகிகள்" என்னும் "கோலியோப்டீரா" ("வண்டுகள்"), "சவ்விறகிகள்" எனப்படும் "ஹைமெனோப்டீரா" ("குளவிகள்), தேனீக்கள், எறும்புகள்") ஆகிய உயிரின வகைகளிலுள்ள குறிப்பிட்ட சிலவற்றுக்கு நச்சாக விளங்குகின்றன. இவ்வகை படிக நச்சுக்களின் இருப்பிடமாக பி.டி. உள்ளதால், இதனைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர்கள் உருவாக்கப்படுகின்றன. பி.டி.யினால் உருவாக்கப்படும் வித்திகளும் உயிரிக்கொல்லி படிகப்புரதங்களும் தீய்பூச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் 1920களிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளன. அது சமயம் அவை நுண்ணுயிர் பொருள்களாகவே இருந்து வந்துள்ளன; பி.டி. நுண்ணுயிர் பொருள்கள் மனிதர்களுக்கு பெரியதொரு விளைவை ஏற்படுத்தாமலே பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வந்துள்ளன. தீய்பூச்சிகள் (குறிப்பிட்ட சில வண்ணத்துப்பூச்சிகள், அந்துப்பூச்சிகள், வண்டுகள் அல்லது கொசுக்களின் இளம்புழுக்கள்) பி.டி. ஏற்றப்பட்ட பயிரை உண்டு பி.டி. அவற்றின் குடலை அடைந்த பின்னர் படிகப்புரதங்களை சுரக்கின்றது; இப்படிக நச்சுகள் தீய்பூச்சியின் செரிமான மண்டலத்தை முடக்குகின்றன. சிலமணி நேரத்தில் புழு உண்பதை நிறுத்தி விடுகின்றது. பட்டினியால் செத்து விழுவதற்கு சில நாள்கள் ஆகலாம். இப்படிகப்புரதத்தை உள்ளடக்கிய பாக்டீரியா இறந்துபோனாலும், அதன் தீய்பூச்சிகளுக்கு எதிரான செயல்பாடு குறைவதில்லை. மிகவும் பொதுவாகப் பயன்பாட்டில் இருக்கும் பி.டி. வருக்கமான குருஸ்டாகி வருக்கம் ("kurstaki" strain) இலை, முள் ஆகியவற்றை உண்ணும் புழுக்களை மட்டும் தாக்கும் குணமுடையது; கடந்த பத்தாண்டில் உருவாக்கப்பட்ட இசுரேலென்சிசு வருக்கம் ("israelensis "strain) கொசுக்கள், கருப்பு ஈக்கள், காளான் ஈக்கள் ஆகியவற்றின் மீது மட்டும் செயல்படும் தன்மை உடையது. இதில் இலை, முள் புழுக்களைத் தாக்கும் குருஸ்டாகி வருக்கம் கொசுக்களைத் தாக்காது; கொசுக்களைத் தாக்கும் இசுரேலென்சிசு வருக்கம் புழுக்களைத் தாக்காது. தீய்பூச்சி, தீம்பூச்சி - pest; அந்துப்பூச்சி - moth; நுண்ணுயிரி - microbe; மாவு விட்டில் புழு - flour moth caterpillar; படிக அகநச்சு - crystal endotoxin; மரபணு மாற்றப்பயிர் - genetically modified plant; வித்தி - spore; செரிமான மண்டலம் - digestive system; கோவிலாச்சேரி இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,464 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1207 ஆண்கள், 1257 பெண்கள் ஆவார்கள். கோவிலாச்சேரி மக்களின் சராசரி கல்வியறிவு 73.03% ஆகும். கோவனூர் ஊராட்சி (தஞ்சாவூர்) கோவனூர் ஊராட்சி ("Kovanur Gram Panchayat"), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2226 ஆகும். இக்கிராமத்தில் மொத்த 549 வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களின் சராசரி எழுத்தறிவு விகிதம் 78.5% மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 37.1% ஆகும். கொத்தங்குடி ஊராட்சி (திருவிடைமருதூர்) கொத்தங்குடி ஊராட்சி ("Kothankudi Gram Panchayat"), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2013 ஆகும். இக்கிராமத்தில் மொத்த 500 வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களின் சராசரி எழுத்தறிவு விகிதம் 64.1% மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 28.5% ஆகும். ஏராகரம் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1930 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 924 ஆண்கள், 1006 பெண்கள் ஆவார்கள். ஏராகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 70.16% ஆகும். இன்னம்பூர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,464 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1207 ஆண்கள், 1257 பெண்கள் ஆவார்கள். இன்னம்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73.03% ஆகும். அம்மன்குடி இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,356 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 685 ஆண்கள், 671 பெண்கள் ஆவார்கள். அம்மன்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 78.64% ஆகும். அம்மாசத்திரம் இங்கமைந்துள்ள காலபைரவர் திருத்தலமான ஞானாம்பிகை சமேத சப்தரிஷீஸ்வரர் திருக்கோயில் சிறப்பான மிகப்பழைமையான திருத்தலம். இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2947 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1499 ஆண்கள், 1448 பெண்கள் ஆவார்கள். அம்மாசத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 88.27% ஆகும். துக்காச்சி ஊராட்சி (தஞ்சாவூர்) 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 2493 ஆகும். இக்கிராமத்தில் மொத்த 609 வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களின் சராசரி எழுத்தறிவு விகிதம் 67.4% மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 32.7% ஆகும். தேவனாஞ்சேரி தேவனாஞ்சேரி தஞ்சாவூரிலிருந்து வடக்கே 42 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 8 கி. மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 282 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.அத்தியூர் (Athiyur)(2 கிமீ), கல்லூர் (3 கிமீ), நீரத்தநல்லூர் (3 கிமீ), திருநல்லூர் (1 கிமி) ஆகியவை அருகில் உள்ள கிராமங்கள்.தேவனாஞ்சேரி கிழக்கு நோக்கி திருவிடைமருதூர் வட்டம், தெற்கு நோக்கி கும்பகோணம் தாலுகா, மற்றும் தெற்கு நோக்கி வலங்கைமான் தாலுக்கா, கிழக்கு நோக்கி திருப்பணந்தாள் தாலுகா சூழப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அத்தியூரில் 1376 ஆண்கள் மற்றும் 1361 பெண்கள் 2737 மொத்த மக்கள் தொகை ஆக இருந்தது.எழுத்தறிவு விகிதம் 68.07 ஆக இருந்தது.இது கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கீழ் வருகிறது. கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது. தேவனாஞ்சேரியில் நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. ஆரம்ப மற்றும் உதவி பெறும் நடுநிலை பள்ளி,மினர்வா ஆரம்ப மற்றும் மேல்நிலை பள்ளி கல்வி வழங்குகிறது. கல்லூரிகள்: அன்னை கலை மற்றும் அறிவியல் அன்னை கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர். எஸ்.கே.எஸ்.எஸ் கலை கல்லூரி முகவரி: திருப்பனந்தாள் கும்பகோணம் தஞ்சாவூர். மாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முகவரி:கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர். அரசு பொறியியல் கல்லூரி முகவரி: கள்ளபுலியூர் கிராமம் கும்பகோணம் தஞ்சாவூர். கும்பகோணம் ரயில் நிலையம் தேவனாஞ்சேரி மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். எனினும் தஞ்சாவூர் ரயில் நிலையம் தேவனாஞ்சேரியின் அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும், 44 கி.மீ. தொலைவில் உள்ளது.கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளது. திருப்புறம்பியம் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,114 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,559 ஆண்கள், 2555 பெண்கள் ஆவார்கள். திருப்புறம்பியம் மக்களின் சராசரி கல்வியறிவு 67.03% ஆகும். திருநரையூர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,698 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,787 ஆண்கள், 2,911 பெண்கள் ஆவார்கள். திருநரையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75.95% ஆகும். திருச்சேரை இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,389 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1,673 ஆண்கள், 1,716 பெண்கள் ஆவார்கள். திருச்சேரை மக்களின் சராசரி கல்வியறிவு 79.35% ஆகும். சீனிவாசநல்லூர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,299 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 665 ஆண்கள், 634 பெண்கள் ஆவார்கள். சீனிவாசநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76.9% ஆகும். குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் குருவாயூர் கோவில், இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். பக்தர்களால், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் (புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் தலம்) அறியப்படும் திருத்தலம். ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம. 108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்றல்ல எனினும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வரும் திருக்கோயில். பரம சிவன் (ருத்ரனாக) இங்கே கடுந்தவம் புரிந்து மற்றும் தற்பொழுது இங்கிருக்கும் கோவிலின் வடக்குப் புறமாக காணப்படும் புனிதமான குளத்தில் இருக்கும் தண்ணீரில் இருந்து கொண்டு, மஹா விஷ்ணுவை பல ஆண்டுகளுக்கு தியானம் செய்து வந்தார், அதன் பயனாக இந்த குளத்தில் காணப்படும் தீர்த்தமானது ருத்ர-தீர்த்தம் என போற்றப்படுகிறது. பழங்காலத்தில், இந்த ருத்ர-தீர்த்தக்குளம் மம்மியூர் மற்றும் தாமரையூர் (சுமார் 3 கிலோமீட்டர் தொலைவு) வரை விரிந்து பரந்து இருந்து வந்தது மேலும் அதில் மலரும் தாமரைப் பூக்களுக்காக பெயர் பெற்றதாக திகழ்ந்தது. பிரசேகதன்மார் (அரசர் ப்ரசீனபர்ஹி மற்றும் சுவர்ணாவின் பத்து பிள்ளைகள்) இங்கு பிரஜாபதித்வம் அடைவதற்காக (ராஜாவுக்கெல்லாம் ராஜாவாக இருப்பதற்கான) இறைவன் மகா விஷ்ணுவை துதித்து கடும் தவத்தை புரிந்தனர். பிரசேகதர்களின் எண்ணத்தை புரிந்து கொண்ட பரமசிவன், ருத்ர தீர்த்தத்தில் இருந்து வெளியே வந்தார் மேலும் அவர்களுக்கு ருத்ரகீதம் என்ற பாடலைப்பற்றிய விளக்கமளித்தார். அந்த மந்திரத்தை தூய மனதுடன் ஜபம் செய்து, விரும்பிய வரங்களை இறைவனிடம் இருந்து பெறலாம் என்று அறிவுரை கூறினார். இளவரசரர்களும் சுமார் 10,000 ஆண்டுகளுக்கு தண்ணீரின் அடியில் இருந்துகொண்டு ருத்திரகீத ஜபத்தை கடுமையாக அனுஷ்டித்து மகாவிஷ்ணுவிடம் இருந்து வரங்களைப் பெற்றனர். குருவாயூர் கோவிலில் காணப்படும் இறைவனின் சிற்பம் தனிப்பட்டதாகும். மிகவும் புனிதமானது என கருதப்படும் பாதாளாஞ்சனா சிலையில் இருந்து இந்த வடிவம் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் திவ்யமாக திகழும் இறைவன் ஸ்ரீ கிருஷ்ணனின் சிலை வடிவம் மனம் கவரும் பாணியில் நான்கு கைகளுடன் காணப்படுகின்றன மேலும் பாஞ்சஜன்யம் என்ற சங்கை ஒரு கையிலும், சுதர்சன சக்கரம் என்ற சக்கரத்தை இன்னொரு கையிலும், மூன்றாவது கையில் கௌமோதகி என்றறியப்படும் கதையையும் மேலும் நான்காவது கரங்களில் தாமரை மலரையும் வைத்துக்கொண்டு புன்சிரிப்புடன் காட்சி தருகிறார். கழுத்தில் புனிதமான துளசி மாலை அலங்கரிக்க, இந்த விக்கிரகம் மகா விஷ்ணுவின் கம்பீரமான அவதாரத்தை குறிப்பதாகும். அவர்களுடைய பக்தியை மெச்சி, மகா விஷ்ணு அவர்கள் முன் தோன்றி அந்த விக்ரஹத்துடன் அவரே அவர்களுடைய மகனாக மீண்டும் மூன்று தனிப்பட்ட நிகழ்வுகளின் மூலம் வெவ்வேறு உருவங்களில் அவர்களுடைய மூன்று மறுபிறப்புகளில் அவர்களுக்கு பிறப்பார் என்று அவர்களுக்கு வரம் அளித்தார்.இப்படியாக அவர்களுக்கு மூன்று மறுபிறப்புகளில் அதே விக்ரஹத்தை வழிபடும் ஓர் நல்ல வாய்ப்பும் கிடைத்தது. இறைவன் கிருஷ்ணரின் சுவர்க்க ஆரோஹணத்திற்கான நேரம் நெருங்க நெருங்க (வைகுண்டத்திற்கு செல்வது), அவரது முதன்மை பக்தரான உத்தவர்அவரை மனதில் நினைத்து உருகி மிகவும் வருத்தம் அடைந்தார். அப்பொழுது இறைவனும் அவரைப்பார்த்து இரங்கி உத்தவரிடம் இந்த விக்ரஹத்தை அளித்ததோடு மட்டும் அல்லாமல், தேவர்களின் குருவாகத் திகழ்ந்த பிரஹச்பதியிடம் இந்த விக்ரஹத்தை ஒரு நல்ல இடத்தில் பிரதிஷ்டை செய்யும் படி உத்தரவிட்டார். உத்தவர் அவருடைய மறைவிற்குப்பிறகு கலி யுகத்தில் உலகத்தில் உள்ள ஜீவராசிகளுக்கு ஏற்படப்போகும் கஷ்ட நஷ்டங்களை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அதற்கு இறைவன் அவரே இந்த விகரஹத்தில் உறையப்போவதாகவும், மேலும் அவரிடம் தஞ்சம் புகும் பக்தர்களுக்கு அவர் ஆசிகள் வழங்கி அனுக்கிரஹிக்கப் போவதாகவும் சொல்லி உத்தவரை சமாதானப்படுத்தினார். துவாரகையைத் தாக்கிய ஒரு பெரிய பிரளயத்தில் தண்ணீரில் மிதந்துகொண்டிருந்த விக்ரஹத்தை குரு அவருடைய முதன்மை சிஷ்யனான வாயுவின் உதவியுடன் மீட்டெடுத்தார். குரு மற்றும் வாயு ஒரு நல்ல இடத்தை தேடி உலகெங்கும் சுற்றி அலைந்தார்கள். இறுதியில் அவர்கள் பாலக்காட் சந்து வழியாக பாலக்காடை அடைந்தார்கள் மேலும் அங்கே அவர்கள் பரசுராமரை சந்தித்தார்கள், பரசுராமர் அவர்கள் கொண்டுவந்த விக்ரஹத்தை தேடிக்கொண்டு த்வாரகாவிற்கு செல்வதாக இருந்தார். பரசுராமர் குரு மற்றும் வாயு தேவர்களை மிகவும் அழகான பச்சைப்பசேல் என்று விளங்கும் இடத்திற்கு அழைத்து சென்றார், அங்கே காணப்பட்ட அழகான தாமரை தடாகத்தில் இறைவன் பரமசிவர் வசிப்பது போன்ற உள்ளுணர்வை அவர்கள் அடைந்தார்கள். அங்கே இறைவனான பரமசிவன் தனது மனைவி பார்வதியுடன் அவர்களுக்கு காட்சி அளித்தார் மேலும் அவர்களை வரவேற்று அந்த விக்ரஹத்தை ஸ்தாபனம் செய்வதற்கு அதுவே உகந்த இடமாகும் என்பதையும் தெரிவித்தார். பரமசிவர் குரு மற்றும் வாயு தேவர்களை அந்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்கான சடங்குகளை தொடங்கி நடத்த அனுமதி வழங்கினார் மேலும் அவர்கள் இருவரும் இணைந்து விக்ரஹத்தை நிறுவியதால் (அதாவது குருவும் வாயுவும் இணைந்து செயல் புரிந்ததால்) அன்றிலிருந்து அவ்விடம் குருவாயூர் என்ற வழங்கப்படும் என்று ஆசீர்வதித்தார். அதற்குப்பிறகு பரமசிவர் மற்றும் பார்வதி இருவரும் எதிர்க்கரையில் இருந்த மம்மியூருக்கு திரும்பி சென்று விட்டனர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறுவதற்காகவே, குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அருகாமையில் உள்ள மம்மியூர் சிவரையும் ஆராதித்தால் மட்டுமே அவர்களுடைய புனித யாத்திரையின் முழுவதுமான புண்ணிய பலன் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். தேவர்களின் வரம் மற்றும் ஆசிகள் பெற்ற விஸ்வகர்மா என போற்றப்படும் கட்டிடக்கலை வினைஞர் இந்த கோவிலை கட்டியவராவார். அவர் இந்த கோவிலை கட்டிய விதம் என்ன என்றால், விஷு அன்று, (அதாவது இளவேனிற் சமஇரவு நாள் அன்று, அந்நாளின் முதல் சூரிய கிரணங்கள் நேராக இறைவனின் பாதங்களை அடையும் விதத்தில் அமைக்கப்பெற்று இருந்தது. இந்த விக்ரஹம் கும்ப மாதத்தில் (பெப்ரவரி - மார்ச்) நிறுவப்பட்டது மேலும் இந்த சடங்குகள் சார்ந்த நிகழ்ச்சிகள் பூசம் நட்ச்சத்திரம் கொண்ட நாளில் துவங்கியது மற்றும் அனுசம் நட்சத்திர தினத்தில் முடிவடைந்தது. ஸ்ரீ நாரத புராணம் ஜனமேஜய என்ற பெயர் கொண்ட மற்றும் தொழு நோயால் பீடிக்கப்பட்ட நோயாளி ஒருவன் எப்படி குருவாயூரப்பன் பாதங்களில் சரண் அடைந்ததால் நோய் நீங்கி குணமடைந்தான் என்பதை சித்தரிக்கும் ஒரு அம்சம் கொண்டதாகும். பாண்டவர்களான ஐவரும் ஆட்சிப்பொறுப்பை தமது பேரனான பரிக்ஷித்திடம் ஒப்படைத்துவிட்டு, அவர்களுடைய கடைசி காலத்தை கானகங்களில் கழிக்க முடிவுசெய்கின்றனர். பரிக்ஷித் ஒரு முனிவர் அளித்த சாபத்தால் இறந்தார், அவர் தக்ஷகன் என்ற பெயர்பெற்ற, நாகங்களுக்கெல்லாம் அரசராக திகழ்ந்தவர், பரீக்ஷித்தை தீண்டும் பொழுது இறப்பார் என்று சபித்து விட்டார். பரிக்ஷித் இறந்த பிறகு அவரது மகனான ஜனமேஜயன் அரசரானார். ஜனமேஜயன் தக்ஷகன் உட்பட அனைத்து சர்ப்பங்களும் இறந்து போவதற்காக ஒரு யாகத்தை (வேள்வி) மேற்கொண்டார், ஏன் என்றால் அவர் தான் தனது தந்தையின் இறப்பிற்கு காரணமாணவராக இருந்ததேயாகும். நூற்றுக்கணக்கான பாம்புகள் மற்றும் சர்ப்பங்கள் அந்த அக்னி குண்டத்தில் விழுந்து மாண்டன, ஆனால் அந்த யாகத்தை ஆஸ்திகன் என்ற பிராம்மணன் நிறுத்தினான், அதுவும் தக்ஷகன் இறப்பதற்கு முன்னால். இப்படி ஜனமேஜயன் பல கோடி பாம்புகளின் இறப்பிற்கு காரணமானவன் ஆனதால், அவனுக்கு தொழு நோய் ஏற்பட்டது. அவர் குணமடைவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார். ஒரு நாள் ஆத்த்ரேய முனிவர் (அத்திரி முனிவரின் மகன்) ஜனமேஜயனுக்கு முன்னால் வந்து அவரை குருவாயூர் கோவிலில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணனிடம் தஞ்சம் அடையும்படி கேட்டுக்கொண்டார். ஆத்த்ரேய முனிவர் அவரிடம் கூறியது குருவாயூரில் உள்ள கோவிலில் பள்ளி கொண்டிருப்பவர் கருணைக்கடலான சாட்சாத் ஸ்ரீ ஹரியே ஆவார் மேலும் மேலும் நல்லவருக்கு நல்லவர் ஆன விஷ்ணு அவரிடம் தஞ்சம் அடையும் அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதித்து காப்பாற்றி வருவதாகவும் புகழ்ந்துரைத்தார். உடனே அவர் அந்த ஊருக்கு விரைந்து சென்றார் மேலும் குருவாயூரில் உள்ள கண்ணனை பத்து மாதங்களுக்கு துதித்து வழிபடலானார். பத்து மாதங்களுக்குப்பிறகு, அவர் நல்ல உடல் நலத்துடன் தமது நாட்டுக்கு திரும்பி வந்தார் மற்றும் அங்கு தமது ஜோதிடரை தவறாக கணித்ததற்காக கண்டித்தார். ஜோதிடரும் அவரது இடது காலில் பாம்பு கடித்த அடையாளத்தை காணலாம் என்று பதில் உரைத்தார். அவர் சாவிலிருந்து தப்பியதற்கான மூலகாரணம் அவர் அந்த நேரத்தில் ஒரு கோவிலில் இருந்ததனாலும், மேலும் அதே நேரத்தில் அங்கே அனந்தன் (பாம்புகளின் சக்ரவர்த்தி) இருந்ததாலும், மேலும் அனந்தர் குருவாயூர் கோவில் இறைவனான மகாவிஷ்ணுவின் சகோதரர் ஆவர் என்றும் கூறினார், மேலும் அந்த நேரத்தில் அவர் கோவிலில் வழிபட்டதால் சாவில் இருந்து அவர் தப்பினார் என்றும் தெரியவந்தது.[9]. இதை செவியுற்ற மகா ராஜா, குருவாயூரில் ஒரு முழுமையான கோவிலை கட்ட முன்வந்தார். கேரள நாடு பெருமாள் என்ற வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் வந்த பொழுது, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலின் நிலைமை மேலும் மோசமடைந்தது மற்றும் மிகவும் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டது. பெருமாள் வம்சத்தவர் மிக்கவாறும் சைவர்கள் ஆவார் மேலும் அதனால் அவர்கள் வைஷ்ணர்களின் கோவில்களில் அத்தனை அக்கறை காட்டவில்லை. அவர்களுடைய காலத்தில் மம்மியூரில் இருந்த சிவன் கோவிலுக்கு அவர்கள் ஆதரவு அளித்தார்கள் மேலும் அப்படி ராஜ பரம்பரையினர் மரபு மாறி செயல் புரிந்ததால், மக்களும் அவ்வழியையே பின்பற்றி, சிவரை ஆராதித்து சிவன் கோவிலுக்கு செல்லத்தொடங்கினார்கள். இப்படியாக குருவாயூர் கோவில் மிகவும் ஏழ்மை நிலைமைக்கு தள்ளப்பட்டது மேலும் கோவிலில் ஒரு விளக்கைக்கூட எரிய வைக்க முடியாத நிலைமை ஆட்கொண்டது. இப்படி இருக்கையில் ஒரு நாள், ஒரு பெரியவர் மம்மியூர் கோவிலுக்கு சென்று உணவும் இரவில் தங்க இடமும் அளிக்கும் படி கேட்டுக்கொண்டார். அந்நேரம் கோவில் நல்ல நிலைமையில் இருந்தாலும், அந்த கோவிலை பராமரித்தவர்கள் ஒன்றுமே இல்லாதது போல பாவனை செய்தார்கள் மேலும் கோபத்துடன் அவரை அருகாமையில் உள்ள குருவாயூர் கோவிலில் சென்று வசதிகளை பெற்றுக்கொள்ளும் படி இகழ்ந்து அவரை அங்கு அனுப்பினார்கள், அந்தக்கோவிலின் அப்போதைய நிலைமையை நன்றாக உணர்ந்துகொண்டே அவர்கள் அப்படி செய்தார்கள். அந்தப் பெரியவர் குருவாயூர் கோவிலின் வாயிலுக்கு வந்த உடன், ஒரு பிராம்மண சிறுவன் அவரை உடனுக்குடன் ஆதரித்து வரவேற்றான் மேலும் நன்றாகவே உணவு படைத்து அவருடைய விருப்பங்களை நிறைவேற்றினார். அந்தப்பெரியவரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இவ்வாறு ஆசீர்வதித்தார். "நான் இங்கு மம்மியூர் கோவிலில் இருந்து வந்தேன், ஏன் என்றால் அங்கே அவர்கள் ஒன்றுமே இல்லை என்று சொன்னதனால்" என்று அவர் கூறினார்."மேலும் அவர்கள் இங்கே எல்லாமே நிறைய கிடைக்கும் என்றும் சொன்னார்கள். சரி, இன்று முதல் அது இங்கே அப்படியே ஆகக் கடவது!" என்றுரைத்தார். மேலும் அந்த நாள் முதல், மம்மியூர் சிவர் கோவிலின் நிலைமை குறைய தொடங்கியது, மேலும் குருவாயூர் விஷ்ணு கோவிலின் புகழ் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைந்து பரவத்தொடங்கியது[10]. பாரம்பரிய கதைகளின் படி, இக்கோவிலில் வணங்கப்படும் விக்கிரகமானது, 5000 வருடங்களுக்கும் மேல் பழமையானதாகும். ஆனால் இதனை நம்பவைக்கும் படியான வரலாற்று சுவடுகள் இல்லை. 14 ஆம் நூற்றாண்டில், 'கோகசந்தேசம் ' என்ற தமிழ் வரலாற்று படைப்பில், குருவாயூர் என்ற இடத்தைப்பற்றி ஒரு குறிப்புக் காணப்படுகிறது. மேலும் 16 ஆம் நூற்றாண்டில் (நாராயணீயம் என்ற மகா காவியம் படைத்த பிறகான ஐம்பது வருடங்களுக்குப்பிறகு) குருவாயூரைப் பற்றிய நிறைய குறிப்பீடுகளை காணலாம். பழம் பெரும் திராவிட மொழியில், குருவை என்பது கடலைக் குறிப்பதாகும், மேலும் கடற்கரைக்கு அருகாமையில் இருந்ததால் குருவாயூர் என வழங்கப்பெற்றிருக்கலாம்.கோவிலைப் பற்றிய மிகவும் முந்தைய குறிப்புகள் 17 ஆம் நூற்றாண்டையே சார்ந்தவையாகும். கேரளாவில் அமைந்திருக்கும் அனைத்து விஷ்ணுவின் கோவில்களைப் பற்றிய பாடல்களை ஆழ்வார்கள் பாடிய பாடல்களில் காணலாம், ஆனால் அவர்கள் வாழ்ந்து வந்த காலம் குறிப்பாக தெரியவில்லை. அவர்கள் இயற்றிய பணிகளில் குருவாயூர் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை. மேலும் இதே போல 12 ஆம் நூற்றாண்டு வரை கிடைக்கப்பெற்ற தாமிரத்தால் ஆன தட்டுகள் மற்றும் கற்களில் பதிக்கப்பட்ட சொற்களில் கேரளத்தில் காணப்படும் முதன்மையான விஷ்ணுவின் கோவில்கள் பற்றிய குறிப்பீடுகளில் குருவாயூர் பற்றிய எந்த குறிப்பும் காணப்படவில்லை.[12] மாமாங்கம் என்பது பாரதப்புழா ஆற்றின் கரையில் குடிகொண்டுள்ள திருநாவாயா என்ற இடத்தில் கொண்டாடப்படும் ஒரு மிகவும் பெயர் பெற்ற உற்சவமாகும். சமொரின்ஸ் என அழைக்கப்படும் இனத்தவருக்கும் திருனவாயாவின் வள்ளுவநாட்டு ராஜாவுக்கும் இடையே நடந்த போர் ஒரு வகையில் குருவாயூர் கோவிலுக்கு புகழை தேடித்தந்தது. இந்தப்போர் நீண்டுகொண்டே போனதால், நதியின் அக்கரையில் இருந்த மக்கள் குருவாயூர் கோவிலுக்கு செல்வதையே விரும்பினர். சமோரின் தலைவனும் ஒரு பக்தனாக மாற, அவரை சார்ந்த மக்கள் யாவரும் அவரைத்தொடர்ந்து இக்கோவிலை வழிபடத் துவங்கினர். இன்று நாம் காணும் இந்த கோவிலின் மத்திய ஆலயம், 1638 ஆம் ஆண்டில் (கி.பி) புனர் நிர்மாணம் செய்யப்பட்டதாகும். அதற்குப்பிறகு, நலன் விரும்பும் மற்றும் தீயன விரும்பும் ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக விஸ்வபலி என்ற வேள்வியும் நடத்தப்பட்டது. 16 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள், கேரளாவில் மிகவும் புகழ் பெற்ற புனிதப்பயணம் மேற்கொள்ளும் பக்தர்களின் மையமாக குருவாயூர் திகழ்ந்தது. கி.பி. 1716 ஆண்டில், டச்சு நாட்டவர்கள் குருவயூரை தாக்கினார்கள். அவர்கள் கோவிலை கொள்ளை அடித்தார்கள், தங்கம் மற்றும் கொடிக்கம்பத்தை சூறை ஆடினார்கள், மேலும் மேற்கு கோபுரத்திற்கு தீ வைத்தார்கள். கி.பி.1747 ஆண்டில் அது மீண்டும் புனர் நிர்மாணம் செய்யப்பட்டது. கி.பி.1755 ஆண்டில் டட்ச் நாட்டவர் மற்றும் சமோரின் இனத்தவர்களுக்கிடையே நடந்த போரில், திரிக்குணாவாய் கோவில் அழிக்கப்பட்டது மேலும் அங்கிருந்த பிராம்மணர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பிறகு சமோரின் இனத்தவர் குருவாயூர் மற்றும் திருக்குணவாய் கோவில்கள் இரண்டையும் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர் மேலும் அக்கோவில்களின் மேல்கொய்மாவாக திகழ்ந்தனர் (தனியுரிமை கொண்ட காவலர்)[14] கி.பி. 1766 ஆண்டில், மைசூரை சார்ந்த ஹைதர் அலி கோழிக்கோடு (காலிகட்) மற்றும் பிறகு குருவாயூரை கைப்பற்றினார். கோவிலை விடுவிக்க அவர் 10,000 பானம்ஸ் (ஒரு வகையான காசு பணம்) அபராதமாக கேட்டார். இந்த அபராதத்தொகை கட்டப்பட்டது, ஆனால் அப்பொழுது நிலவிய நம்பிக்கை இல்லாத சூழ்நிலை காரணமாக, கோவிலுக்கு பக்தர்கள் வருவது குறைந்தது மேலும் கோவிலுக்கு வழங்கப்பட்ட அரிசியும் நிறுத்தப்பட்டது, மேலும் வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய நிலுவைகளையும் கட்டவில்லை. மலபார் கவர்னராக செயல்புரிந்த ஸ்ரீ நிவாச ராவ் விடுத்த வேண்டுகோளின் படி, ஹைதர் அலி இக்கோவிலை தேவனுக்கு கருணை காட்டியதாகக் கூறி (இலவசப்பரிசு) கோவிலை விடுவித்தார் மேலும் அப்படியாக அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டது. மீண்டும் கி.பி. 1789 ஆண்டில் திப்பு சுல்தான் சமோரின் நாட்டின் மேல் படையெடுத்தான். அழிவிலிருந்து காப்பாற்ற, இந்த விக்ரஹம் பூமியின் அடியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டது, மேலும் கோவிலின் உற்சவர் விக்ரஹம் மல்லிச்சேரி நம்பூதிரி மற்றும் கக்காத் ஒத்திகன் ஆகியோர்களால் அம்பலப்புழை என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது. திப்பு சுல்தான் சிறிய கோவில்களை யாவும் அழித்தான் மேலும் பெரிய கோவிலுக்கும் தீ வைத்தான், ஆனால் சரியான வேளையில் மழை பொழிந்ததால், கோவில் காப்பாற்றப்பட்டது. திப்பு சுல்தான் கி.பி. 1792 ஆம் ஆண்டில் நடந்த ஆங்கிலேயர்கள் மற்றும் சமொரினுக்கு எதிரான போரில் தோல்வி அடைந்தான் மேலும் செப்டம்பர் 17, 1792 அன்று உற்சவ மூர்த்தி திரும்பவும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால் நித்ய பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் பாதை ஏற்பட்டது.[15]. அதனால் உள்ளநாடு பணிக்கர்மார்கள் கோவிலை காப்பாற்றி மேலும் 75 வருடங்களுக்கு கோவிலை பாதுகாத்து வந்தார்கள் (1825 முதல் 1900 வரை). செம்பகேசரி நம்பூதிரி மற்றும் தேஷவர்மன் நம்பூதிரி போலவே, பணிக்கர்மார்களும் தமது அனைத்து உடமைகளையும், சொத்து மற்றும் சேவைகள் புரிவது, அனைத்தையும் கோவிலுக்கே அற்பணித்தார்கள். அப்படியாக அவர்களுடைய உதவியுடன் நித்ய பூஜைகள் மற்றும் வருடாந்தர (ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் நிகழ்ச்சிகள்) உற்சவங்கள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.1859 முதல் 1892 வரை, சிற்றம்பலம், விளக்குமடம், கூத்தம்பலம் மற்றும் சாஸ்தா ஆலயம் போன்றவை புதுப்பிக்கப்பட்டு அதன் கூரைகளை செம்பு தகடுகளால் மாற்றியமைக்கப்பெற்றன. 1900 ஆம் ஆண்டில், ஸ்ரீ கொந்தி மேனன், ஒரு அதிகாரி, கோவிலில் சடங்குகள் மற்றும் வணங்குவதற்கான நியம நிஷ்டைகளை ஏற்பாடு செய்து, அதை நன்கு பாலிக்கவும் மற்றும் கோவிலின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கவும் நடவடிக்கைகளை எடுத்தார். அவர் கோவிலுக்கான பெரிய மணியை கட்ட ஏற்பாடுகள் செய்தார் மேலும் பதயபுர (கூலக் களஞ்சியம்)என அறியப்படும் சேமிப்பு கிடங்கை புதுப்பித்தார். 1928 ஆம் ஆண்டில், குருவாயூர் கோவிலின் நிருவாகம் மீண்டும் சமோரின் குடும்பத்தினரிடம் மாற்றப்பட்டது.[16]. 1931-32 ஆண்டுகளில், மறைந்த கேளப்பன் ("கேரளாவின் காந்தி" என அறியப்பட்டவர்) குருவாயூர் சத்யாக்ராஹா என்ற போராட்டத்திற்கு தலைமை வகித்து, தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கு கோவிலில் நுழைவதற்கு அனுமதி கிடைக்க போராடினார். தாழ்த்தப்பட்ட ஜாதி மக்களுக்கு திய்யரம்பலம் என்ற இடம் வரை மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வந்தது, மேலும் அவ்விடம் கோவிலில் இருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரம் கொண்டதாகும். அவர் கிழக்கு கோபுரத்திற்கு முன்னால் சாகும் வரை பட்டினிப் போராட்டம் மேற்கொள்ள துணிந்தார். மகாத்மா காந்தி நல்கிய அறிவுரையை ஏற்று அவர் போராட்டத்தில் இருந்து விலகினார். அதனால் உடனுக்குடன் எந்த பயனும் கிடைக்கவில்லை என்றாலும், பையப்பைய தலித் மக்களுக்கு கேரளாவில் குடிகொண்டுள்ள பல தரப்பட்ட கோவில்களில் நுழைந்துவழிபடுவதற்கு சந்தர்பம் கிடைத்தது.1947 ஆம் ஆண்டில், குருவாயூர் கோவில் அனைத்து ஹிந்து மதத்தினருக்கும் சேவை செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டது. பின்னர், நமஸ்கார சத்யா (விருந்து), பிராம்மணருக்கு மட்டும் வழங்கப்பட்டது, நிறுத்தி வைக்கப்பட்டது மேலும் ஜாதி பேதமில்லாமல் அனைவரும் பங்குபெறும் நிலைமை உருவாக்கப்பட்டது[17]. நவம்பர் 29 , 1970, ஏகாதசி விளக்கேற்றம் அன்று இரவு கோவில் வளாகம் ஒரு பெரிய தீ விபத்துக்குள்ளாகியது. முதலில் மேற்கு சிற்றம்பலத்தில் (சுற்றிவரும் கோவில் பாதை) துவங்கி அனைத்து இடங்களிலும் பரவி ஐந்து மணிநேரத்திற்கும் மேல் எரிந்தது. அந்நாளில் விளக்கேற்றம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது மேலும் விளக்கு மடத்தில் இருந்த அனைத்து விளக்குகளும் ஏற்றப்பட்டன. இறைவனின் யானைகளுடன் கூடிய (சீவேலி) பிரதிக்ஷிண ஊர்வலத்திற்குப் பிறகு, சடங்குகள் முடிவு பெற்று கோவிலின் கதவுகள் தாளிடப்பட்டன. விடியற்காலை 1.00 மணியளவில், மேற்கு சுற்றம்பலத்தின் அருகாமையில் இருந்த யாரோ ஒருவர் கோவிலுக்குள்ளே தீ எரிவதை காண நேர்ந்தது. அனைத்து தரப்பினரையும் கொண்ட மக்கள், ஜாதி மத வயது வேறுபாடுகளை பார்க்காமல் ஒன்றாக இணைந்து கோவிலை தீயில் இருந்து காப்பாற்ற மணல் மற்றும் தண்ணீருடன் பாடுபட்டனர். மேலும் நாட்டின் ஒற்றுமைக்காக ஒரு நல்ல எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர்.முன்யோசனை கொண்ட யாரோ ஒருவர் மின் விளக்குகளை அணைத்து மின் விபத்தால் ஏற்படக்கூடிய ஆபத்தைத் தவிர்த்தார். பிறகு, தீ அணைக்கும் படையினர் பொன்னானி, திருச்சூர், மற்றும் பாக்ட் நிறுவனத்தில் இருந்து வந்து மேற்குப்புற விளக்குமடத்தில் துடங்கிய தீயை அணைக்க முற்பட்டனர். விடியற்காலை 5.30 மணிகளுக்கு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.கட்டுக்கடங்காத தீ விபத்தை பார்த்து, நிருவாகத்தினர் விலை பிடித்த பண்டங்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தினர். கணபதி சிலை, சாஸ்தாவின் சிலை, இறைவன் குருவாயுரப்பனின் மூல விக்ரஹம் போன்றவை கூத்தம்பலத்திற்கும் பிறகு மேலும் பாதுகாப்பான இடத்திற்கும், இறுதியில் தந்திரியின் வீட்டிற்கும் எடுத்துச்செல்லப்பட்டது. இந்த தீயானது சுற்றம்பலம், மேற்கு பாகத்தில் இருந்த விளக்குமாடத்தின் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு பாகங்களை முழுமையாக ஆட்கொண்டு அழித்தது. சுற்றம்பலம் 3 கஜ தூரத்தில் இருந்தாலும், ஆனால் இந்த வலிமையான தீ அருகாமையில் ஸ்ரீ கோவிலில் இருந்த உலர்ந்த மலர் மாலைகளை, பற்றிக்கொண்டு எரியவைக்கவில்லை. ஸ்ரீகோவில் (கர்ப்பகிருகம்), விக்கிரகம்(மூல விக்கிரகம்), சிறிய கோவில்களான கணபதி, அய்யப்ப, பகவதி விக்கிரகங்கள் மற்றும் கொடிக்கம்பம் போன்றவை சேதமடையவில்லை. கோவிலை புதிப்பிப்பதற்கான பணிகளை நிறைவேற்ற இரண்டு குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஒரு குழுவின் தலைவராக கேரள அரசின் தேவச்வத்தின் மந்திரி நியமிக்கப்பட்டார் மேலும், ஒரு தொழில் நுட்ப குழு புனர் நிர்மாணத்திற்கான ஆலோசனைகள் வழங்க அமைக்கப்பட்டது. அந்தக்குழுவில் பெயர்பெற்ற பொறியாளர்கள், ஜோசியர்கள் மற்றும் கோவில் தந்திரி உறுப்பினர்களாக இருந்தார்கள்.இந்த புனர் நிறமான பணிகளுக்கு காஞ்சி மடத்தின் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அடிக்கல் நாட்டினார். இந்தப் பெரிய தீ விபத்திற்குப்பிறகு, இந்தக் கோவில் மீண்டும் இறைவனின் புகழைப்பாடும் வகையில் புதுப்பிக்கப்பட்டது. கோவிலின் விளக்குமடம், முதல் முறையாக, விஷு உற்சவ நாளான,14 ஏப்ரல், 1973 அன்று, மீண்டும் ஏற்றப்பட்டது. ஒவ்வொரு நாளன்றும் ஆதி சங்கராச்சாரியார் அவர்களால் வரையறுக்கப்பட்ட பூசை முறைகளை மற்றும் தாந்தரிக வடிவில் சென்னாஸ் நாராயணன் நம்பூதிரி (பிறப்பு 1427) அவர்களால் எழுதி குறிக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றியும் இந்த கோவிலில் இறை வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. குருவாயூர் கோவிலில் பரம்பரை பரம்பரையாக சென்னாஸ் நம்பூதிரிமார்களே கோவிலின் தாந்திரிகர்களாக செயல்புரிந்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கோவில் / பூசை விதிமுறைகள் மிகவும் கண்டிப்புடனும், விட்டுக் கொடுக்காமலும் நிறைவேற்றப்படுகின்றன. இதை கவனித்துக் கொள்வதற்காகவே இக்கோவிலின் தந்திரி எந்நேரமும் கோவிலிலேயே காணப்படுவார். கோவிலின் மேல்சாந்தியானவர் (முதன்மை பூசாரி) விடியற்காலை 2:30 மணிக்கே ஸ்ரீ கோவிலில் (கர்ப்பக்கிருகத்தில்) நுழைந்து விடுவார். உச்சி பூஜை முடியும் 12:30 மணி வரை தண்ணீர் கூட அருந்தமாட்டார். வேதகாலத்து பாரம்பரியங்களை இன்றும் தொடர்ந்து கச்சிதமாகவும் நேர்மையாகவும் பேணப்பட்டு வருவதே இந்தக் கோவிலின் மிகவும் சிறந்த அம்சமாகும். ஆண் மக்கள் தமது இடையை சுற்றி முண்டோ வேட்டியோ அணிந்து கொள்ள வேண்டும். மேலும் மார்பிற்கு மேல், எந்த விதமான மேல் சட்டையையும் அணியக்கூடாது. ஆனால் மார்பகத்தை ஒரு சிறிய துண்டு அல்லது வேட்டியால் மறைப்பதை நிருவாகம் தடை செய்யாது. பெண்களும் சிறுமிகளும் கால்சட்டைகள் போன்ற உடைகளை அணியக்கூடாது. பெண்கள் சேலை அணியலாம். சிறுமிகள் நீண்ட பாவாடையையும் இரவிக்கைகளையும் அணியலாம். தற்பொழுது பெண்களுளுக்கு கெடுபிடிகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டு சல்வார் கமீஸ், சூரிதார் போன்ற உடைகளை அணிவதற்கு நிருவாகம் அனுமதி வழங்கியுள்ளது. இருந்தாலும் ஆழமான மத நம்பிக்கை கொண்ட பெண்டிர் இன்றும் சேலையோ, பாரம்பரிய கேரள நாட்டு உடைகளையோ அணிவதையே விரும்புகின்றனர். வடக்கு இந்தியர்களைப் போல் அல்லாமல், கேரளத்திலும் இதர தென் இந்திய மாநிலங்களிலும் ஹிந்து மதத்தை கடைப்பிடிக்கும் பெண்கள் தலையில் துணியை கொண்டு மறைக்கும் பழக்கத்தை கடைப்பிடிப்பதில்லை. இந்தியாவில் இதர கோவில்களில் உள்ளதைப் போல, கோவிலுக்குள் காலணிகளை அணிவது கண்டிப்புடன் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற இந்துக் கோயில்களைப் போலன்றி, மூலவர் கிருஷ்ண விக்கிரகத்தைத் தொட்டு பூஜை செய்யும் தலைமை அர்ச்சகர் (மேல் சாந்தி) இல்லற வாழ்க்கையை விட்டு, கோயில் உள்ளேயே வாழ வேண்டும். வீட்டுக்கு சென்று வருதல் கூடாது. இம்முறைக்கு துணைபுரிவதற்காக மேல் சாந்தி ஆறு மாதத்திற்கு மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகின்றார். ஒருவரே தொடர்ச்சியாக மேல் சாந்தியாக இருக்க நிருவாகம் அனுமதிப்பதில்லை. பல தரப்பட்ட தனியார் பேருந்து நிறுவனங்களும் அரசும் குருவாயூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக கணக்கற்ற பேருந்துகளை இயக்குகின்றன. கோயிலுக்கு அருகிலேயே குருவாயூர் பேருந்து நிலையம் உள்ளது. குருவாயூரப்பன் கோவில் திருச்சூரில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சூர் இரயில் நிலையம் அனைத்து விரைவு இரயில் இணைப்புகளுடன் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. குருவாயூர் கோயிலுக்கு அண்மையில் உள்ள குருவாயூர் இரயில் நிலையத்திற்கு சென்னையில் புறப்பட்டு திருவனந்தபுரம், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி வழியாக வரும் குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவுவண்டி வருகிறது. மேலும், எர்ணாகுளம், திருச்சூர் வழியாக குருவாயூருக்கு வரும் பயணிகளின் இரயிலும் இயக்கப்பட்டு வருகின்றன. மிகவும் அருகில் உள்ள விமான நிலையம் - கொச்சியின் நெடும்பாச்சேரியில் உள்ள கொச்சின் சர்வதேச விமான நிலையம். (75 கிலோமீட்டர்) இது குருவாயூரை கேரளத்திலும் தமிழ் நாட்டிலும் உள்ள அனைத்து பெரிய நகரங்களுடன் இணைக்கிறது. புன்னத்தூர் கோட்டை புன்னத்தூர்கோட்டை [0] [1] புன்னத்தூர்கோட்டை (പുന്നത്തൂര്‍ കോട്ട) என்பது கொட்டபடி என்ற, குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் இருந்து, சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும், ஒரு இடமாகும், இது தென் இந்தியாவில் உள்ள கேரளத்தில் த்ரிஸ்ஸூர் மாவட்டத்தில் உள்ளது மேலும் அந்த இடம் முன்னாள் கோட்டை மற்றும் அரண்மனையை குறிப்பிடுவதாகும். இந்த இடத்திற்கு மிகவும் அருகாமையில் உள்ள இரயில் நிலையம் குருவாயூரில் உள்ளது மேலும் மிகவும் அருகாமையில் உள்ள விமான நிலையம் கொச்சி ஆகும் (80 கிலோமீட்டர்கள்). விளக்கம் ஒரு காலத்தில் புன்னத்தூர்கோட்டை உள்ளூர் ராஜாவின் அரண்மனையாக இருந்தது, ஆனால் தற்பொழுது அரண்மனை வளாகம் குருவாயூர் கோவிலின் யானைகளை குடியமர்த்தி பரிபாலனம் செய்யும் ஒரு யானைகளின் சரணாலயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதனால் இதன் பெயர் ஆனக்கோட்டா (அதாவது யானைக்கொட்டை) என்றும் மறுவியுள்ளது. முதலில் இங்கு 86 யானைகள் பராமரிக்கப்பட்டுவந்தாலும், தற்பொழுது இங்கு சுமார் 66 யானைகளே உள்ளன. பொதுவாக குருவாயூரப்பனின் பக்தர்கள் இறைவன் குருவாயூரப்பனுக்கு பிரார்த்தனை செய்து வழிபாட்டு தானமாக அளிக்கப்பட்டு கிடைக்கப்பெற்ற யானைகளாகும். இந்த சரணாலயம் யானைகளுக்கு ஆண்டு தோறும் குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் மற்றும் இதர ஆலயங்களில் நடைபெறும் உற்சவங்கள் மற்றும் விழாக்களில் பங்கு பெறுவதற்கும், மற்றும் ஊர்வலங்களில் பங்கு பெறுவதற்குமான பயிற்சிகள் வழங்குவதற்கும் பயன் படுத்தப் படுகிறது. இங்கு காணப்படும் யானைகளில் மிகவும் வயதான யானை 82 வயதுடையதாகும் மேலும் அதற்கு 'ராமச்சந்திரன்' என்ற பெயர் சூட்டியுள்ளனர். கஜபூஜை (யானைகளை வழிபடுதல்) மற்றும் அன்னயூட்டு (யானைகளுக்கு அன்னம் ஊடுதல்) போன்ற வழிபாடுகள் மற்றும் சடங்குகள் இங்கே இறைவன் கணேசரின் அருள் கிடைப்பதற்காக நடத்தப்படுகின்றன. பாரம்பரியப் புகழ் வாய்ந்த "குருவாயூர் கேசவன்" என்ற யானையும் இங்கே பரிபாலிக்கப்பட்டு வந்தது. இந்த வளாகத்தில் நாலு கெட்டு எனப்படும், பாரம்பரியமான செவ்வக அமைப்புடன் கூடிய மத்திய முற்றமும் இருந்து வருகிறது, இது புன்னத்தூர் ராஜாவிற்கு சொந்தமானதாகும். இந்த இடம் நன்றாக பராமரிக்கப்படவில்லை மேலும் இங்கு பாபன்மார்கள் என அறியப்படும் யானைப்பாகர்களுக்கான பயிற்சி வழங்கும் இடமாகும். மேலுமிந்த வளாகத்தில் இறைவன் பரமசிவர் மற்றும் இறைவி பகவதியை வழிபடுவதற்கான ஒரு கோவிலும் உண்டு. மலையாளப்படமான "ஒரு வடக்கன் வீரகாத" என்ற படத்தின் (மம்மூட்டி நடித்தது) சில காட்சிகள் இங்கே படம் எடுக்கப்பட்டன. பார்வையாளர்களின் நேரம் காலை 9.30AM முதல் மாலை 5.30 வரை. நுழைவு கட்டணம் ரூபாய் 5 ஒவ்வொரு பார்வையாளருக்கும். வளாகத்திற்குள் காமெராவை வைத்துக் கொண்டு படம் பிடிப்பதற்கு ரூபாய் 25 அதிக கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும் பார்க்க வெளி இணைப்புகள் கேரளாவில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்கள் [5] [6] [7] HIDDEN TEXT This section contains tooltips, titles and other text that are usually hidden in the body of the HTML page. This text should be translated to bring the entire page into your language. HTML ATTRIBUTES புன்னத்தூர் கோட்டை, குருவாயூரில் காணப்படும் யானைகளின் சரணாலயம் பிங்கலி வெங்கையா பிங்கலி வெங்கைய்யா, (தெலுங்கு: పింగళి వెంకయ్య) (ஆகத்து 2, 1876 - சூலை 4, 1963) என்பவர் இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் ஆவார். வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார். மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார். பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், இலாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் சப்பானியம் படிக்கச் சேர்ந்தார். நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார். தென்-ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். காக்கினாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார். மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க வேண்டினார். விசயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசிய கொடியை அறிமுகப் படுத்தினார். முதலில் கொடியின் நடுவில் ஓர் இராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியைப் பருத்தித் துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். தேசிய கொடியை உருவாக்கிய பிங்கலி வெங்கய்யா, அந்த அளவு பிரபலமாகவில்லை. இவர் தன் 86 வயதில் 1963 ஆண்டு மறைந்தார். அவர் மறைந்து 46 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009இல் இவரது உருவம் பொறித்த அஞ்சல்தலை வெளியிடப்பட்டது. மர்லின் மேன்சன் மர்லின் மேன்சன் (பிறப்பு பிரைன் ஹ்யூ வார்னர் ; ஜனவரி 5, 1969) ஒரு அமெரிக்க இசைக் கலைஞரும் நடிகரும் ஆவார். இவர் தன்னுடைய முரண்பாடான மேடை அவதாரத்திற்காகவும் மர்லின் மேன்சன் என்ற பெயரைக்கொண்ட இசைக்குழுவின் முன்னணி பாடகர் என்ற தன்னுடைய பிம்பத்தாலும் பிரபலமானவராக இருக்கிறார். அவருடைய மேடைப் பெயர், நடிகையான மர்லின் மன்றோ மற்றும் தண்டனையளிக்கப்பட்ட கொலைகாரரான சார்லஸ் மேன்சன் ஆகியோரின் பெயர்களிலிருந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் மாதிரியாகக் கொள்ளும் அதிர்ச்சிகரமான பாணிகளுடனான அவருடைய தோற்றத்தோடு குழந்தைகளின் மீது மோசமான தாக்கமேற்படுத்துபவர் என்றும், அவருடைய பாடல் வரிகளை சூழ்ந்திருக்கும் முரண்பாடுகள் ஆகிய அனைத்தும் அவருடைய மிகவும் குறிப்பிடத்தகுந்த பொதுமக்கள் கவர்ச்சியை தூண்டியிருப்பதாக அவரைப் பற்றி ஊடகங்களில் நீண்டகாலமாக சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. மர்லின் மேன்சன் ஒஹியோ நகரத்தின், கேன்டனில் பிரைன் ஹ்யூ வார்னராக பார்ப் வயர் மற்றும் ஹ்யூ ஜாக் வார்னர் ஆகியோருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். அவருடைய "தி லாங் ஹார்ட் ரோட் அவுட் ஆஃப் ஹெல்" என்ற சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளதுபோல் அவருடைய தந்தை வழியில் அவர் ஜெர்மன் மற்றும் போலந்து வம்சாவளியைச் சேர்ந்தவரார். அவருடை தந்தை ஒரு ரோமன் கத்தோலிக், அவருடைய தாயார் எபிஸ்கோபேலியன் என்பதோடு அவர் அவருடைய தாயாரின் மதத்திலேயே வளர்க்கப்பட்டிருக்கிறார். வார்னர் முதல் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்புவரை ஹெரிடேஜ் கிறிஸ்துவப் பள்ளியில் படித்தார். அவர் பின்னாளில் ஃபுளோரிடா, ஃபோர்ட் லாடர்டேல்லில் உள்ள கார்டினல் கிப்பன்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். மேன்சன் 1987ஆம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார் என்பதோடு 1990ஆம் ஆண்டில் புரோவார்ட் கம்யூனிட்டி கல்லூரியில் மாணவரானார். அவர் பத்திரிக்கையாளராவதற்கான பட்டப்படிப்பில் சேர்ந்தார் என்பதோடு தெற்கு ஃபுளோரிடாவிற்கான "25வது பேரலல்" என்ற வாழ்க்கைமுறை பத்திரிக்கைக்கு இசைக் கட்டுரைகளை எழுதி இந்தத் துறைக்கான அனுபவத்தைப் பெற்றுக்கொண்டார். அவர் பின்னாளில் அவருடைய சொந்த இசைக்குழு ஒப்பிடப்படவிருந்த நைன் இன்ச் நெயில்ஸின் மை லைஃப் வித் தி திரில் கில் கல்ட் மற்றும் டிரெண்ட் ரெஸ்னர் உட்பட சில இசைக்கலைஞர்களை விரைவிலேயே சந்திக்க இருந்தார். 1989 ஆம் ஆண்டில் மர்லின் மேன்சன் அண்ட் தி ஸ்பூக்கி கிட்ஸை மேன்சன் ஃபுளோரிடாவில் உருவாக்கினார் (இந்தப் பெயர் மர்லின் மேன்சன் என்று 1992 ஆம் ஆண்டில் சுருக்கப்பட்டது). தி ஸ்பூக்கி கிட்ஸூடன் இருக்கையிலேயே அவர் இரு பக்க திட்டங்களாக ஜெரோடி ஒயிட் (டிவிகி ரெவிரஸ் என்றும் அறியப்படுவது) மற்றும் ஸ்டீபன் கிரிகோரி பயர் ஜூனியர். (மடோனா வெய்ன் கேஸி என்றும் அறியப்படுவது) ஆகியவற்றோடு சம்பந்தப்பட்டிருந்தார்: சாடன் ஆன் ஃபயர், ஒரு ஃபாக்ஸ் கிறிஸ்டியன் மெட்டலி்ல் அவர் பேஸ் கிடார் வாசிப்பவராகவும், ஒயிட் மற்றும் பின்னாளில் அவருடைய காதலியான ஜெஸிக்காவுடனும் (ஜாக் ஆஃப் ஜில்லின் பாடகி) உடனிணைந்து செயல்பட்ட இசைக்குழுவான மிஸஸ்.ஸேகேப்ட்ரியில் அவர் டிரம்ஸ் வாசிப்பவராகவும் இருந்தார். இவை மர்லின் மேன்ஸன் சில கிளப்களில் வாசிப்பதை தடைசெய்யும் முரண்பாட்டு உடன்பாட்டிற்கு வழிவகுத்தது. 1993 ஆம் ஆண்டு கோடைகாலத்தில், இந்த இசைக்குழு டிரெண்ட் ரெஸ்னரின் கவனத்தை ஈர்த்தது. ரென்ஸர் அவர்களுடைய 1994 ஆம் ஆண்டின் அறிமுக ஆல்பமான "போர்ட்ரெய்ட் ஆஃப் அன் அமெரிக்கன் ஃபேமிலி" யை தயாரித்தார் என்பதோடு தன்னுடைய நத்திங் ரெகார்ட்ஸ் முத்திரையின் கீழ் வெளியிட்டார். இந்த இசைக்குழு 1995ஆம் ஆண்டில் உருவான "ஸ்மெல்ஸ் லைக் சில்ட்ரன்" வெளியீட்டுடன் இணைந்து பெரிதாக வளர்ந்த ரசிகர் குழாமை உருவாக்கியது. இந்த இபி 1983 ஆம் ஆண்டின் வெற்றியான யூரோதைமிக்ஸின் அட்டையான ஸ்வீட் டிரீம்ஸ் (ஆர் மேட் ஆஃப் திஸ்) என்ற முதல் எம்டிவி வெற்றிப்படைப்பை வழங்கியது. "ஆண்டிகிறிஸ்ட் சூப்பர்ஸ்டார்" (டிரெண்ட் ரெஸ்னர் இணைதயாரிபபு) கூட பெரிய வெற்றிபெற்றது. அமெரிக்காவில் மட்டும், இசைக்குழுவின் மூன்று ஆல்பங்கள் பிளாட்டினம் மற்றும் மூன்று தங்க சான்றளிப்புகளைப் பெற்றது என்பதுடன் இரண்டு முதல் நிலை ஆல்பங்களுடன் முதல் பத்து பட்டியலில் மூன்று அறிமுக வெளியீடுகளைக் கொண்டிருந்தது. மேன்சன் முதலில் ஜாக் ஆஃப் ஜில் இசைக்குழுவின் தயாரிப்பாளராகவே பணியாற்றினார். அவர் இந்த இசைக்குழு பெயர் பெறுவதற்கும் இசைக்குழுவின் முதலாவது பதிவுகளை தயாரிக்கவும் உதவினார் என்பதோடு "மை கேட்" என்ற பாடலுக்கு கிடார் இசைத்திருக்கிறார், அத்துடன் இந்த இசைக்குழு தன்னுடைய பெரும்பாலான தெற்கு ஃபுளோரிடா நிகழ்ச்சிகளையும் தொடங்கியது. மேன்சன் பின்னாளில் தொடக்ககால ஜாக் ஆஃப் ஜில்லின் பதிவுகளின் தொகுப்பான "ஹூமிட் டீனேஜ் மீடியோகிரிட்டி 1992-1995" என்ற இசைக்குழுவின் ஆல்பத்திற்கு லைனர் குறிப்புகளை எழுதினார். டிஎம்எக்ஸின் ஆல்பமான "ஃபிளெஷ் ஆஃப் மை ஃபிளெஷ், பிளட் ஆஃப் மை பிளட்" மற்றும் காட்ஹெட்டின் "2000 இயர்ஸ் ஆஃப் ஹ்யூமன் எர்ரர்" போன்ற ஆல்பங்களில் சிறப்பு விருந்தினராக மேன்சன் தோன்றியிருக்கிறார் - இதுவே அவருடைய வேனிட்டி முத்திரை போஸ்துமனில் வெளியான முதல் ஆல்பமாகும். "லாஸ்ட் ஹைவே" என்ற டேவிட் லின்ச்சின் திரைப்படத்தில் 1997 ஆம் ஆண்டு மேன்சன் நடிகராக அறிமுகமானார். அதிலிருந்து அவர் பின்வருபவை உள்ளிட்ட பல்வேறுவிதமான சிறிய கதாபாத்திரங்களில் தோன்றினார், "பார்ட்டி மான்ஸ்டர்" , பின்னாளில் தன்னுடைய காதலியான ரோஸ் மெக்காவனின் 1998 ஆம் ஆண்டு திரைப்படமான "ஜா பிரேக்கர்" ;ஆசியா அர்ஜெண்டினோவின் 2004 ஆம் ஆண்டு திரைப்படமான "தி ஹார்ட் இஸ் டிசீட்புல் எபோ ஆல் திங்ஸ்" ; "" "The Hire: Beat The Devil" மற்றும் பிஎம்டபிள்யு திரைப்படங்கள் தொடரின் ஆறாவது அத்தியாயம். மைக்கேல் மூரில் அரசியல் ஆவணப்படமான "பவுலிங் ஃபார் கிளம்பிங்கில்" நேர்காணல் செய்யப்பட்ட அவர் கொலம்பியன் படுகொலை மற்றும் அதற்கு அவருடைய இசை ஏதோ ஒருவகையில் காரணியாக இருந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கான சாத்தியமுள்ள உள்நோக்கங்கள் குறித்து விவாதித்தார். அவர் "குளோன் ஹையில்" உயிர்ச்சி்த்திரமாக்க வடிவத்தில் தோன்றினார் என்பதோடு "செலிபிரிட்டி டெத்மார்ச்" என்ற எம்டிவி தொடரின் சில அத்தியாயங்களில் தோன்றியிருக்கிறார., அவர் பின்னர் இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமற்ற சாம்பியனாகவும் நற்பேறு கொண்டுவருபவராகவும் ஆனார்; அவர் தொடர்ந்து தனது உயிர்ச்சித்திர உருவத்திற்கு குரல் வழங்கி வருகிறார் என்பதுடன் "அஸ்டானிஷிங் பனோரமா ஆஃப் தி எண்ட்டைம்ஸ்" என்ற பாடலுக்கான ஒலிவடிவ இசைத் தொகுப்பிற்கு பங்களிப்பு செய்திருக்கிறார். 2005 ஆம் ஆண்டு ஜுலையில் தன்னுடைய கவனத்தை இசையிலிருந்து திரைப்படத்திற்கு திருப்பப்போவதாக "ரோலிங் ஸ்டோனிடம்" கூறினார் - "இப்போது இசையை அளிப்பதற்கு இந்த உலகம் உடனடித் தகுதிவாய்ந்ததாக இல்லை. மற்றவர்கள் -குறிப்பாக பதிவு நிறுவனங்கள்- கலையை தயாரிப்புப் பொருளாக மாற்ற நினைப்பதை நான் விரும்பவில்லை. நான் கலையை உருவாக்கவே விரும்புகிறேன்." "சார்லி அண்ட் தி சாக்லேட் ஃபேக்டரி" என்ற படத்தில் வில்லி வோன்காவாக தனது நடிப்பிற்கான தாக்கமாக மேன்சனைப் பயன்படுத்திக்கொண்டதாக ஜானி டெப் குறிப்பிட்டிருக்கிறார். மேன்சனும்கூட இந்தத் திரைப்படத்தில் வில்லி வோன்காவாக நடிப்பதற்கான தன்னுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் தற்போது தான் இயக்குநராக அறிமுகமாகும் "Phantasmagoria: The Visions of Lewis Carroll," இல் பணிபுரிந்து வருகிறார், இந்தப் படத்தில் "அலிஸ் அட்வென்ச்சர்ஸ் இன் ஒண்டர்லேண்டின்" ஆசிரியரான லூயி கரோலாக நடிக்கிறார். வலைத்தளத்தில் மட்டுமான வெளியீட்டைக் காட்டிலும் அவர் தன்னுடைய 4.2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பட்ஜெட் படத்தை வழக்கமான சினிமா வெளியீடாகவும் வெளியிட இருக்கிறார், உண்மையில் இது 2007 ஆம் ஆண்டில் மத்தியப் பகுதியில் வெளியிடப்பட இருக்கிறது. இந்தத் திரைப்படம் முன்னதாக வெளியிடப்படாத அசல் இசைத்தொகுதியையும் கொண்டதாக இருக்கும். இந்தத் திரைப்படத்தின் தயாரிப்பு "ஈட் மீ, டிரிங்க் மீ" சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து காலம் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. "ஐ-டி பத்திரிக்கைக்கு" 2004 ஆம் ஆண்டில் அளித்த ஒரு நேர்காணலில் ஒரு நீர்வண்ண (வாட்டர் கலர்) ஓவியராக வாழ்க்கையைத் தொடங்குவதற்கு 1999ஆம் ஆண்டில் ஐந்து நிமிட இசைத்துணுக்கை வாசித்து அதை போதைப்பொருள் விற்பவர்களிடத்தில் விற்றதாக கூறியுள்ளார். 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் 13-14 இல் அவருடைய முதல் நிகழ்ச்சியான தி கோல்டன் ஏஜ் ஆஃப் கிராஸ்டக், லாஸ் ஏஞ்சல்ஸின் காண்டம்பிரரி எக்ஸிபிஷன் மையத்தில் நடைபெற்றது. "ஆர்ட் இன் அமெரிக்காவின் மேக்ஸ் ஹென்றி "உளவியல் நோயாளிகளுக்கான சிகிச்சையாக அவர்களுடைய படைப்புகள் வழங்கப்பட்டதை" விரும்பினார் என்பதோடு அவருடைய படைப்பு நுண்கலை பின்னணியில் தீவிர படைப்பாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும் கூறினார், அதன் மதிப்பு "பிரபலத்திற்கானதே தவிர, படைப்பிற்கானதல்ல" என்று எழுதினார். " "2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 14-15, இல், மேன்சன் தனது இரண்டாவது கண்காட்சியை முதல் இரவிலும் பெர்லினில் இரண்டாவது இரவிலும் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு கண்காட்சியின் மைய விஷயமாகவும் இருந்த 'டிரைமெஜிஸ்டஸ்' என்றும் பெயரிடப்பட்டது - ஒரு பெரிய மூன்று தலையுள்ள கிறிஸ்துவின் உருவம் கையில் எடுத்துச் செல்லக்கூடிய நறுமண மேசையிலிருந்த பழங்கால மரத் திரையில் வரையப்பட்டிருந்தது. " மேன்சன் தான் சுயமாக அறிவித்துக்கொண்ட இசை இயக்கத்திற்கு செலிபிரேட்டேரியன் கார்ப்பரேஷன் என்று பெயரிட்டார். அவர் இந்த இயக்கத்திற்கான வாசகத்தையும் உருவாக்கினார்: "நாங்கள் எங்களுடைய நிழல்களை அதற்குள்ளாக நின்றுகொண்டிருப்பவர்களிடத்தில் விற்பனை செய்வோம்." 2005 ஆம் ஆண்டில் செலிபிரேட்டேரியன் கார்ப்பரேஷன் "ஏழு வருடங்களுக்கு பேணிக்காக்கப்படும்" என்று தெரிவித்தார், இது சரியானதென்றால் செலிபிரேட்டேரியன் கார்ப்பரேஷன் 1998 இல் தொடங்கப்பட்டிருக்கும். செலிபிரேட்டேரியன் கார்ப்பரேஷன், மேன்சன் லாஸ் ஏஞ்சல்ஸில் தனது மூன்றாவது கண்காட்சியை தொடக்க நிகழ்ச்சியாக கொண்டு தொடங்கிவைக்கப்பட வைத்திருந்த செலிபிரேட்டேரியன் கார்ப்பரேஷன் கேலரி ஆஃப் ஃபைன் ஆர்ட் என்ற கலை காட்சியகத்துடன் பெயர்க்குழப்பத்திற்கும் ஆளானது. 2007 ஆம் ஆண்டில் ஏப்ரல் 2-17 இல் இருந்து அவருடைய சமீபத்திய படைப்புகள் யாவும் ஃபுளோரிடாவில் உள்ள ஸ்பேஸ் 39 மாடர்ன் அண்ட் காண்டெம்பரரியில் காட்டப்பட்ட நிகழ்ச்சிகளாக இருந்தன. இந்த நிகழ்ச்சியிலிருந்து 40 துண்டுகள் 2007 ஆம் ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 28 வரை பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படுவதற்காக கோலோனில் உள்ள ஜெர்மனியின் கேலரி பிரிகிட்டேவிற்கு கொண்டுசெல்லப்பட்டன. தொடக்க நாள் விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் இந்த நகரத்தில் இருந்தபோது கோல்னர் டோமில் (கோலோன் தேவாலயம்) கலந்துகொள்ள மறுத்துவிட்டார். மேன்ஸன் தெரிவித்தபடி இதற்கான காரணம் அவருடைய ஒப்பனையே ஆகும். மேன்சன் ஒரு சாம்பல் நிற வேற்றுகிரகவாசி எட்கராக "ஏரியா 51" என்ற வீடியோ கேமில் தோன்றியிருக்கிறார். அவருடைய "குருஸி-ஃபிக்ஷன் இன் ஸ்பேஸ்" என்ற பாடல் "தி டார்க்னஸ்" என்ற வீடியோ விளையாட்டின் வர்த்தக விளம்பரத்தில் இடம்பெற்றது. அவருடைய விருப்பமும் அவர் ஒலிவடிவத்திற்காக பதிவுசெய்த பாடல் (2003) "செலிபிரிட்டி டெத்மார்ச்" என்ற வீடியோ விளையாட்டில் தோன்றியது. "யூஸ் யுவர் ஃபிஸ்ட் அண்ட் நாட் யுவர் மவுத்" என்ற பாடல் "கோல்டு ஃபியர்" என்ற வீடியோ விளையாட்டில் இடம்பெற்றது. "Spawn: Armageddon" மேன்சன் ஸ்விஸ் தயாரிப்பான அப்ஸின்தேயை தனது சொந்த தனது சொந்த தயாரிப்பில் "மேன்சிந்தே"வாக வெளியிட்டார். இது இந்த பானத்தின் வாசனையை கழிவுநீர் என்றும் அதன் சுவையை "சிறுநீரைக் காட்டிலும் மோசமானது" என்று ஒப்பிட்டவர்களிடமிருந்து கலவையான விமர்சகங்களைப் பெற்றது, இது அப்ஸின்தேயின் முதல் ஐந்தில் வெர்ஸிந்தேயிற்கான இரண்டாவதாக வந்தது என்பதுடன் 2008 ஆம் ஆண்டில் நடந்த சான் பிரான்ஸிஸ்கோ உலக மதுவகைகள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது. டிதா வான் டீஸேவுடனான அவருடைய உறவுக்கு முன்னர் அவர் மிஷெல் கிரீன்பெர்க்குடன் உறவுகொண்டிருந்தார். அவர் பிறகு நடிகை ரோஸ் மெக்காவனுடனும் உறவுகொண்டிருந்தார். 2007 ஆம் ஆண்டில் நடிகை இவான் ரேச்சல் உட் உடனான உறவு வெளிப்படையாக தெரிய ஆரம்பித்தபோது மேன்சனின் காதல் வாழ்க்கை மீண்டும் கவனத்திற்கு ஆளானது. மேன்சனும் உட்டும் இப்போது நிச்சயம் செய்யப்பட்டிருக்கின்றனர். தன்னுடைய பிரத்யேகமான கறுப்பு தோல் கால் சட்டைகள் 24/7 ஐ தான் அணிவதாக மேன்சனிடமிருந்து ஊடகச் செய்தி வெளிவந்த பின்னர் விலங்கு உரிமைகள் குழுவான பிஇடிஏ தன்னுடைய '2007 ஆம் ஆண்டின் மிக மோசமாக உடையணிந்த பிரபலங்கள் பட்டியலில்' அவரை சேர்த்துக்கொண்டது. தன்னுடைய இசை வீடியோக்களுள் ஒன்றில் நடனமாடும்படி கேட்டுக்கொண்டபோது மேன்சனும் டிதா வான் டீஸேவும் முதல்முறையாக சந்தித்தனர். அவரால் நடனமாட முடியவில்லை என்றாலும் அவர்கள் இருவரும் தொடர்பிலேயே இருந்தனர். அவருடைய 32வது பிறந்தநாளின்போது அவர்கள் தம்பதியரானார்கள். அவர் 2004 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் அவருடன் நிச்சயம் செய்தார் என்பதோடு அவருக்கு 1930 காலகட்டத்தைச் சேர்ந்த ஐரோப்பிய வட்ட-வெட்டு வைரத்தை நிச்சயதார்த்த மோதிரமாக அளித்தார். 2005 ஆம் ஆண்டு நவம்பர் 28 இல் மேன்சனும் வான் டீஸேவும் தனியாக வீட்டில் நடந்த நிச்சயிக்கப்படாத விழாவில் திருமணம் செய்துகொண்டனர். அயர்லாந்தில் கவுண்டி டிப்பிரேரியில், கில்ஷீலனில் உள்ள அவருடைய நண்பரான காட்பிரைட் ஹெலன்வீனின் வீடான குர்ட்டீன் கோட்டையில் டிசம்பர் 3 ஆம் தேதி பெரிய திருமண விழா நடத்தப்பட்டது. இந்தத் திருமணம் நிஜத்தில் நடவாததை தயாரிக்கும் திரைப்பட இயக்குநரும் சித்திரக்கதை எழுத்தாளருமான அலிஜாண்ட்ரோ ஜோடோரோவ்ஸ்கியால் அதிகாரப்பூர்வமானதாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 30 இல் வான் டீஸே "சரிசெய்ய முடியாத வேறுபாடுகளின்" காரணமாக விவாகரத்தை பதிவுசெய்தார். ET.com மற்றும் "பீப்பிள்" ஆகியவை மேன்சன் அப்போது 19 வயது நடிகையாக இருந்த இவான் ரேச்சல் உட்டுடன் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு கொண்டிருந்தார் என்று கூறின. இவர் அவருடைய திகில் திரைப்படமான "Phantasmagoria: The Visions of Lewis Carroll" இல் அவருடன் நடித்தவர் என்பதோடு அவருடைய 2007 ஆம் ஆண்டு வீடியோவான "ஹார்ட்-ஷேப்டு கிளாஸஸில்" தோன்றியிருக்கிறார். இந்த உறவு "சண்டே டெலிகிராப்புடனான" ஒரு நேர்காணலில் வான் டீஸேயால் உறுதிசெய்யப்பட்டது, "நான் அவருக்கு ஆதரவாக இல்லை என்ற எண்ணத்திற்கு அவர் வந்திருக்கிறார் என்று நினைக்கிறேன், ஆனால் உண்மை என்னவெனில் நான் அவருடைய வாழ்க்கை முறைக்குத்தான் ஆதரவாக இல்லை." மேன்சனின் ஆல்கஹால் பயன்படுத்தும் பழக்கம் மற்றும் ஒதுங்கி நிற்கும் நடத்தை ஆகியவை இந்த பிரிவிற்கு காரணங்களாக பார்க்கப்பட்டன. விவகரத்திற்கான தீர்ப்பு 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 27 இல் லாஸ் ஏஞ்சல்ஸ் உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. பியுஷ் மிஷ்ரா பியுஷ் மிஷ்ரா ("Piyush Mishra"; 13 சனவரி 1963) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகரும், இசையமைப்பாளரும், கவிஞரும், பாடகரும், திரைக்கதை, கதைவசன எழுத்தாளரும் ஆவார். அவர் தன் ஆரம்ப கால வாழ்க்கையை குவாலியரில் கழித்தார். அங்குதான் கல்வியும் பெற்றார். 1986 இல் புது டெல்லியின் தேசிய நாடகப் பள்ளியில் தன் பட்டப்படிப்பை முடித்தபின், இவர் தன் பணியை ஒரு மேடைநாடக நடிகராகத் தொடங்கி, ஆக்ட்-1 குழுவின் (1990–1995) ஒரு அங்கமாக பல நாடகங்களை எழுதி இயக்கத் தொடங்கினார். 1996 இல், அஸ்மிடா தியேட்டர் குழுவில் இணைந்து, தன் பிரபலமான தனி மனித காட்சிகளான பியுஷ் மிஷ்ராவுடன் ஒரு மாலைப் பொழுது நிகழ்ச்சிகளை நடத்தினார். அஸ்மிடாவின் பிரபல நாடகங்களுக்கான கவிதைகளை எழுதினார். ஆபரேஷன் திரி ஸ்டாரில் "ஆக்சிடண்டல் டெத் ஆஃப் அன் அனார்கிஸ்ட்" இல் பியுஷ் ஒரு பைத்தியமாக நடித்தார். ஸ்வதேஷ் தீபக்கின் "கோர்ட் மார்சியலில்" ரஞ்சித் கபூருடன் (1991) முதன்முதலாக சூரத் சிங்காகவும் அர்விந்த் கவுரின் (1996) இயக்கத்தின் கீழ் பின்னர் நடித்ததையும் வைத்தே பியுஷ் அதிகம் அறியப்பட்டார். ஸ்ரீ்ராம் சென்டர் ரெப் நிறுவனத்துக்காக "காமடி ஆஃப் டெரரை" பியுஷ் மிஷ்ரா இயக்கினார். ஸ்டார் டிவிக்காக டிக்மான்ஷு துலியாவின் இயக்கத்தில் வந்த ராஜ்தானி என்ற தொலைக்காட்சி தொடரிலும் மிஷ்ரா நடித்துள்ளார். 1998 இல் வெளிவந்த மணி ரத்னத்தின் படமான தில் சேதான் மிஷ்ராவின் முதல் படமாகும். இருந்தும் தொடர்ந்து நாடக வாய்ப்புக்காக டெல்லியிலே தங்கினார். 2001 ஆம் ஆண்டு படமான ராஜ்குமார் சந்தோஷியின் "த லெஜண்ட் ஆஃப் பகத் சிங்கில்" வசனங்கள் எழுதிய போதுதான் அவர் முதன்முதலாக நாடக ஆசிரியரில் இருந்து திரைக்கதை ஆசிரியராக மாறினார். ஜிம் மோரிசன் ஜேம்ஸ் டக்லஸ் மோரிசன் (டிசம்பர் 8, 1943 – ஜூலை 3, 1971) ஒரு அமெரிக்க பாடகர், பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளராவார். அவர் த டோர்ஸ் குழுவின் முதன்மை பாடகர் என்பது பலர் அறிந்த ஒன்றாகும். ராக் இசை வரலாற்றில் மிகச்சிறந்த கவரக்கூடிய முன் வரிசையாளர்களில் ஒருவராகவும் இவர் கருதப்படுகிறார். இவர் பல கவிதை புத்தகங்களை எழுதிய எழுத்தாளராவார். இவர் ஒரு ஆவணப்படம் மற்றும் ஒரு குரும் படத்தை இயக்கியிருக்கிறார். மோரிசன் அவரது பாட்டுத்திறமைக்கு பெயர் பெற்றவர் என்றாலும், அவரது விசிறிகள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள் அவரது மேடை நடிப்பு, அவரது சுய- பாதிப்பு மற்றும் ஒரு கவிஞராக அவரது வேலையைப் பற்றி ஆலோசித்தனர். "ரோலிங் ஸ்டோனின்" “அனைத்து காலத்திலும் இருந்த 100 மிகச் சிறந்த பாடகர்கள்” வரிசையில் 47வது இடத்தில் இவர் இருந்தார். பிற்காலத்தில் ராணுவத் தளபதியாக இருந்த ஜார்ஜ் ஸ்டீபன் மோரிசன் மற்றும் கிளாரா கிளார்க் மோரிசன் ஆகியோருக்கு மகனாக மெல்போர்ன், ஃபுளோரிடாவில் மோரிசன் பிறந்தார். மோரிசனுக்கு ஆணி ரோபின் என்ற ஒரு தங்கை உண்டு, இவர் 1947ம் ஆண்டு ஆல்புகெர்க், நியூ மெக்சிகோவில் பிறந்தார். இவருக்கு ஆண்ட்ரூ லீ மோரிசன் என்ற தம்பியும் உண்டு. இவர் லாஸ் ஆல்டோஸ், கலிஃபோர்னியாவில் 1948ம் ஆண்டு பிறந்தார். அவர் ஸ்காட்டிஷ் (ஸ்கார்ட்லாந்து நாட்டினர்), ஐரிஷ் (அயர்லாந்து நாட்டினர்) மற்றும் ஆங்கிலேய வழி வந்தவர். அவருக்கு I.Q 149 இருந்ததாகக் கருதபடுகிறது. 1947ம் ஆண்டு, 4 வயதாக இருக்கும் போது மோரிசன், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு குடும்பமே காயம் பட்டு இறந்து போன ஒரு கார் விபத்தை அந்த பாலைவனத்தில் கண்டார். இந்த நிகழ்வைப் பற்றி, "அன் அமெரிக்கன் ப்ரேயர்" என்ற பாடல் தொகுப்பில் உள்ள “டான்ஸ் ஹைவே” என்ற பாடலிலும் “பீஸ் ஃபிராக்” மற்றும் “கோஸ்ட் சாங்” ஆகிய பாடல்களில் பேசும் வார்த்தைகளாக கூறினார். "இந்தியர்கள் டான்ஸ் நெடுஞ்சாலையில் இரத்தம் கசிந்து கொண்டு சிதறிக் கிடந்தனர்." "அந்த இளம் குழந்தையின், உடையக் கூடிய முட்டை ஒடு போன்ற மூளையை, ஆவிகள் சூழ்ந்து கொண்டன" இந்த நிகழ்வு தனது வாழ்வில் தன்னை உருவாக்கிய நிகழ்வாக கருதினார். மேலும், அவரது பாடல்கள், கவிதைகள் மற்றும் நேர்காணல்களில் இதைப் பற்றிய குறிப்புகளை பல முறை கூறியுள்ளார். சுவாரஸ்யமான விஷயம் என்னவெனில், அவர் கூறியதைப் போல இந்த நிகழ்வை அவரது குடும்பத்தினரால் நினைவு கூறமுடியவில்லை. மோரிசனின் வாழ்க்கை சரிதமான "நோ ஒன் ஹியர் கெட்ஸ் ஔட் அலைவ்" என்ற புத்தகத்தில் மோரிசனின் குடும்பம் இந்திய குடியிருப்பு ஒன்றில் ஒரு கார் விபத்தை தாண்டி கார் ஓட்டி சென்றனர் என்றும், அவர் அதற்காக மிக மன வேதனை அடைந்தார் என்றும் குறிக்கப்பட்டுள்ளது. ஆயினும், "த டோர்ஸ்" குழுவின் மற்ற உறுப்பினர்கள் எழுதிய த டோர்ஸ் என்ற புத்தகத்தில் அந்த நிகழ்வைப் பற்றிய மோரிசனின் நினைவு, அதே நிகழ்வைப் பற்றி அவரது தந்தையின் நினைவை விட வித்தியாசமாக இருப்பதை விவரிக்கிறது. இந்த புத்தகத்தில் அவரது தந்தை கூறியுள்ளதாகக் கூறப்படுவது, “நாங்கள் பல இந்தியர்களை கடந்து சென்றோம். அவன் மீது இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத்தான் செய்தது [இளம் ஜேம்ஸ்]. அந்த அழுது கொண்டிருந்த இந்தியனைப் பற்றி அவன் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்." மோரிசன் கூறியதான “இந்தியர்கள் நெடுஞ்சாலையில் இரத்தம் கசிந்து இறக்கும் நிலையில் சிதறிக் கிடந்தனர் என்பதற்கு முரணாக உள்ளது. அதே புத்தகத்தில் அவரது சகோதரி கூறுவதாக இருப்பது, “அந்த கதையைக் கூறுவதை அவர் விரும்பினார் மற்றும் அதை மிகைபடுத்தவும் செய்தார். அவர் சாலையின் ஓரத்தில் இறந்து கிடந்த ஒரு இந்தியனை பார்த்ததாகக் கூறுவார், அது உண்மையா என்பது கூட எனக்குத் தெரியாது". அவரது தந்தை ஐக்கிய அமெரிக்க கடற்படையில் இருந்ததால் அவரது குடும்பம் பல இடங்களுக்கு அடிக்கடி நகர்ந்து கொண்டே இருந்தது. அவர் தனது குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை சான் டியேகோ, காலிஃபோர்னியாவில் கழித்தார். 1958 ஆம் ஆண்டில், மோரிசன் காலிஃபோர்னியாவில் அலமேடாவில் உள்ள அலமேடா உயர்நிலைப் பள்ளியில் படித்தார். எனினும், ஜூன் 1961ம் ஆண்டில் விர்ஜினியாவில், அலெக்சாண்ட்ரியாவில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் (இப்போது ஜார்ஜ் வாஷிங்டன் நடுநிலை பள்ளி) பட்டம் பெற்றார். அவரது தந்தையும் ஃபுளோரிடா, ஜெக்சோன்விலி என்ற இடத்தில் உள்ள மேபோர்ட் கடற்படை தளத்தில் இருந்தார். மோரிசன், க்ளியர்வாட்டர், ஃபுளோரிடாவில் உள்ள தனது தந்தை வழி தாத்தா, பாட்டியோடு தங்கச் சென்றார். அங்கு அவர் செயிண்ட். பீட்டர்ஸ்பெர்க் ஜூனியர் கல்லூரியில் வகுப்புகளுக்கு சென்றார். 1962ல் அவர் டல்லாஹாசியில் உள்ள ஃபுளோரிடா மாநில பல்கலைக் கழகத்துக்கு(FSU) மாறினார். அங்கு அவர் பள்ளி தேர்வு படத்தில் தோன்றினார். FSUவில் இருக்கும் போது, அவர் இடத்தில் நடந்த கால்பந்தாட்ட போட்டியைத் தொடர்ந்து, நடந்த சண்டைக்காக அவர் கைது செய்யப்பட்டார். 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் லாஸ் ஏஞ்சல்ஸ், காலிஃபோர்ணியாவிற்கு சென்றார். அவர் UCLAவின் திரைப்படப் பள்ளியான நுண்கலைக் கல்லூரியின் தியேட்டர் கலைத் துறையில் 1965ம் ஆண்டு இளங்கலை பட்டம் முடித்தார். UCLAவில் படிக்கும் போது அவர் இரண்டு படங்களை எடுத்தார். இந்த படங்களில் முதல் படமான "ஃபர்ஸ்ட் லவ்" , "ஓப்ஸ்க்யூரா" என்ற படத்தைப் பற்றிய ஆவணப்படத்தில் தோன்றிய போது பொதுமக்களுக்காக வெளியிடப்பட்டது. இந்த காலங்களில், வெனிஸ் கடல் பகுதியில் வசிக்கும் போது "லாஸ் ஏஞ்ஜல்ஸ் ஃபிரீ பிரஸின்" எழுத்தாளர்களோடு நண்பரானார். 1971ல் அவர் இறக்கும் வரை த அண்டர்க்ரௌண்ட் செய்தித்தாளை விரும்பினார். 1965ல், UCLAவில் இருந்து பட்டம் பெற்றபின் வெனிஸ் கடற்கரையில் மோரிசன் பொஹீமியன் வாழ்க்கை முறையை மேற்கொண்டார். மோரிசன் மற்றும் அவருடன் UCLAவில் இருந்த மாணவரான ரே மான்சாரக் ஆகியோர் த டோர்ஸ் குழுவின் முதல் இரண்டு உறுப்பினர்களாவர். அதன் பின் விரைவில், டிரம்ஸ் வாசிப்பவரான ஜான் டென்ஸ்மோர் மற்றும் கிடார் கலைஞர் ரோபி க்ரீகர் சேர்ந்து கொண்டனர். டென்ஸ்மோரின் பரிந்துரைப்படி க்ரீகர் திறமையை வெளிக்காட்டி பின்னர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஆல்டோஸ் ஹக்ஸ்லீயின் "த டோர்ஸ் ஆஃப் பெர்சப்ஷன்" (உளக்கோளாறு மருந்துகளை உபயோகித்து எண்ணங்களின் ‘கதவுகளை’ ‘திறப்பது’ என்பதை குறிக்கின்றது) என்பதிலிருந்து த டோர்ஸ் என்ற பெயர் எடுக்கப்பட்டது. ஹக்ஸ்லீ தனது தலைப்பை வில்லியம் பிளேக்கின் "த மேரேஜ் ஆஃப் ஹெவன் அண்ட் ஹெல்" என்பதில் உள்ள மேற்கோளில் இருந்து எடுத்தார். அதில் “எண்ணங்களின் கதவுகள் சுத்தம் செய்யப்பட்டால் அனைத்தும் இருப்பது போலவே எல்லையில்லாததாக மனிதர்களுக்குத் தோன்றும்” என்று பிளேக் எழுதியிருந்தார். குழுவின் பாடலாசிரியராக மோரிசன் அறியப்பட்டாலும், க்ரீகர் கூட பாடல்களுக்கு குறிப்பிடத்தக்க உதவிகளை செய்துள்ளார்.குழுவின் மிகப் பிரபலமான பாடல்களான “லைட் மை ஃபயர்”, “லவ் மீ டூ டைம்ஸ்”, “லவ் ஹர் மேட்லி” மற்றும் “டச் மீ” போன்றவற்றிற்கு பாடல் எழுதி அல்லது எழுதுவதற்கு துணைப்புரிந்துள்ளார். ஜூன் 1996ல், வேன் மோரிசனின் குழுவான தெம்மின் ரெஸிடென்சியின் கடைசி வாரத்தில் விஸ்கி ஏ கோ கோவில் மோரிசன் மற்றும் டோர்ஸ் முதல் நிகழ்ச்சியை நடத்தினர். ஜிம்முடைய மேடைத் திறன் வளர்வதில் வேன் உடைய தாக்கத்தை ஜான் டென்ஸ்மோர் தனது புத்தகமான "ரைடர்ஸ் ஆண் த ஸ்ட்ராம்" என்பதில் கூறியுள்ளார்: "ஜிம் மோரிசன் பெயரளவிற்கு செய்வதற்கு நிகராக செய்து கொண்டிருந்த மேடை நாடகக் கலை, அவரது பொறுப்பற்ற தன்மை, அவரது அடக்கமாகக் காணப்பட்ட அச்சுறுத்தும் தோற்றம், ராக் இசைக்கு ஏற்றவாறு கவிதையை மாற்றும் அவரது திறன், வாத்திய இடைவெளிகளில் பேஸ் டிரம்மிற்கு பின்னால் ஒளிந்து கொள்ளும் அவரது பழக்கம் இருந்து விரைவாக அவர் பாடம் கற்றுக்கொண்டார்." கடைசி இரவில், இரண்டு மோரிசன்களும் மற்றும் இரண்டு குழுக்களும் “குளோரியாவில்" இணைந்தனர். 1967ல் எலக்ட்ரா ரெக்கார்ட்ஸோடு கையெழுத்திட்ட பின் த டோர்ஸ் தேசிய அங்கீகாரம் பெற்றது. “லைட் மை ஃபயர்” என்ற தனிப்பாடல் பில்போர்டு பாப் சிங்கிள்ஸ் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. பின்னர், த பீடில்ஸ் மற்றும் இளம், துறுதுறுப்பான எல்விஸ் பிரஸ்லி ஆகியோரை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஞாயிறு இரவு பல்சுவை நிகழ்ச்சியான "த எட் சுலிவான் நிகழ்ச்சியி" ல் த டோர்ஸ் தோன்றியது. எட் சுலிவான் தனது நிகழ்ச்சியில் த டோர்ஸிடம் இரண்டு பாடல்களை வேண்டினார், “பீபிள் ஆர் ஸ்ட்ரேஞ்ச்”, மற்றும் “லைட் மை ஃபயர்”. தணிக்கைக் குழு “லைட் மை ஃபயரில்” உள்ள வரியான “கேர்ள் வி குடிண்ட் கெட் ஹையர்” என்பதை “கேர்ள் வி குடிண்ட் கெட் பெட்டர்” என்று மாற்ற கூறினர். அசல் வரியில் போதை மருந்தைக் குறிப்பதாக இருந்தது இதற்குக் காரணமானது என்று எண்ணப்பட்டது. சுலிவானிடம் அதை ஒத்துக்கொள்வதாக வாக்களித்த பின், மோரிசன் தொடர்ந்து அந்த பாடலை அசல் வரிகளோடு பாடினார். பின்னர் அவர் மாற்றத்தை செய்ய தான் மறந்துவிட்டதாக மட்டும் கூறினார். இது சுலிவானை மிகவும் ஆத்திரம் அடைய செய்தது, நிகழ்ச்சிக்குப் பின் அவரோடு கை கொடுக்க மறுத்துவிட்டார். அவர்கள் மறுபடியும் அழைக்கப்படவே இல்லை. 1967ல், மோரிசன் மற்றும் த டோர்ஸ் “பிரேக் ஆண் த்ரூ(மற்ற பக்கத்திற்கு)விற்காக" ஒரு விளம்பரப்படத்தை தயாரித்தனர், இதுவே அவர்களின் முதல் ஒற்றை வெளியீடாகும். இதன் படத்தில், குழுவின் நான்கு உறுப்பினர்கள் ஒரு இருட்டாக்கப்பட்ட இடத்தில் பாடல்களை வாசிப்பது போன்றும், வாசிப்பவர்களின் முகத்தை அருகில் காட்டப்பட்டது, மோரிசன் வரிகளுக்கு ஏற்றவாறு வாய் அசைத்தார். “த அண்நோன் சோல்ஜர்”, “மூன்லைட் டிரைவ்” மற்றும் “பீப்பிள் ஆர் ஸ்ட்ரேஞ்ச்” உள்ளிட்ட பல இசை படங்களை தொடர்ந்து மோரிசன் மற்றும் த டோர்ஸ் செய்தனர். தங்களது இரண்டாவது இசைத் தொகுப்பான "ஸ்ட்ரேஞ்ச் டேஸ்" வெளியான பிறகு, த டோர்ஸ் ஐக்கிய அமெரிக்காவின் மிக பிரபலமான ராக் இசைக் குழுவானது. “அலபாமா பாடலின்” மறக்க முடியாத பாடிய விதம், பெர்டோல்ட் ப்ரெட் மற்றும் கர்ட் வீலின் ஒபரேட்டாவில் இருந்து, "ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் த சிடி ஆஃப் மஹகோனி" போன்ற பல அசல் பாடல்கள் மற்றும் வித்தியாசமான வெளிஉரை வடிவங்கள் ஆகியவை சிறிதளவு சைக்கிடெலியா சேர்த்த புளூஸ் மற்றும் ராக் கலவையில் இவர்கள் உருவாக்கியதாகும். “த எண்ட்”, “வெண் த ம்யூசிக்ஸ் ஓவர்”, மற்றும் “செலிப்ரேஷன் ஆஃப் த லிசர்ட்” போன்ற பாடல்கள் உள்ளிட்ட பல விரிவாக்கப்பட்ட பொருள் வேலைகளையும் இந்த இசைக் குழு செய்தது. 1967ல், “இளம் சிங்கம் (த யங் லயன்) என்ற பெயரில் செய்யப்பட்ட புகைப்பட நேரத்தில் புகைப்படக் கலைஞர் ஜோயல் ப்ரோட்ஸ்கி மோரிசனின் பல வகையான கருப்பு வெள்ளை படங்களை எடுத்தார். இந்த புகைப்படங்கள் ஜிம் மோரிசனின் மிக முக்கியமான படங்களாகக் கருதப்படுகிறது மற்றும் இந்த புகைப்படங்கள் த டோர்ஸ் மற்றும் மோரிசனைப் பற்றிய தொகுப்பு வெளியீடுகள், புத்தகங்கள் மற்றும் மற்ற நினைவுச் சின்னங்களில் பல முறை உபயோகப்படுத்தப்படுகிறது. 1968ல், த டோர்ஸ் தங்களது மூன்றாவது படப்பிடிப்பு கூடமான LP, "வைட்டிங் ஃபார் த சன்" வெளியிட்டனர். அவர்களது நான்காவது LP, "த சாஃப்ட் பரேட்" 1969ல் வெளியிடப்பட்டது. பாடல்கள் எழுதிய ஒவ்வொரு குழு உறுபினர்களின் பெயர்களும் உட்புற உரையில் அச்சிடப்பட்ட முதல் இசைத் தொகுப்பு இது தான். இதன் பின்னர், பதிசு நேரங்களுக்கு சரியான மனநிலையில்லாமல் மோரிசன் வரத் தொடங்கினார். நேரடி நிகழ்ச்சிகளுக்கு அவர் தாமதமாக வரத் தொடங்கினார். இதன் விளைவாக, குழு வாத்திய இசையை வாசித்தது அல்லது மான்சரக்கை பாடல் பாடும் வேலை செய்ய வற்புறுத்தியது. 1969ல், ஒல்லியாக இருந்த பாடகர் எடை கூடினார், தாடி வளர்த்தார் மற்றும் மிகவும் சாதாரணமாக உடை அணிந்தார். தோல் காலுறை மற்றும் கான்சோ பட்டிகளுக்கு பதிலாக, அரைக் கை சட்டைகள், ஜீன்ஸ், டி-சட்டைகள் ஆகியவற்றை அணியத் தொடங்கினார். 1969ல் மியாமியில் உள்ள த டின்னர் கீ காட்சியகத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது மோரிசன் பார்வையாளர்கள் இடையே ஒரு போராட்டத்தை உருவாக்க முயன்றார். அவரால் அது முடியவில்லை. ஆனால் தரக்குறைவாக வெளிக்காட்டுதல் என்பதற்காக டேட் மாகாண காவல் துறை அவருக்கு கைது ஆணை பிறப்பித்தது. இதன் தொடர்ச்சியாக, திட்டமிடப்பட்ட பல த டோர்ஸின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இந்த நிகழ்வைத் தொடர்ந்த வருடங்களில், மோரிசன் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார். 2007ல், ஃபுளோரிடாவின் ஆளுநர் சார்லி க்ரிஸ்ட், மோரிசனுக்கு மரணத்துக்குப் பின் மன்னிப்பு வழங்கும் சாத்தியத்தை பரிந்துரைத்தார். "த சாஃப்ட் பரேடைத்" தொடர்ந்து, த டோர்ஸ் "மோரிசன் ஹோட்டல்" LP வெளியிட்டது. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு குழு மறுபடியும் அக்டோபர் 1970ல் இணைந்து மோரிசனுடனான தங்களது கடைசி LPயான "L.A.வுமன்" பதிவு செய்தது. அந்த இசைத் தொகுப்பின் பதிவு தொடங்கிய குறுகிய காலத்தில் அனைத்து பதிவுகளையும் மேற்பார்வை இட்ட தயாரிப்பாளர் பால்.எ.ரோட்கிளிட் திட்டத்தை விட்டு வெளியேறினார் பொறியாளர் புரூஸ் போட்னிக் தயாரிப்பாளராக பொறுப்பேற்றார். வளரிளம் பருவத்தில் மோரிசன் எழுதத் தொடங்கினார். கல்லூரியில் அவர் தொடர்புடைய துறைகளான, மேடை நாடகம், திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றை படித்தார். "த லார்ட்ஸ்/நோட்ஸ் ஆன் விஷன்" மற்றும் "த நியூ கிரீசர்ஸ்" என்ற இரண்டு கவிதை பதிப்புகளை 1969ம் ஆண்டு தானே வெளியிட்டார். "த லார்ட்ஸில்" , முக்கியமாக இடம், மக்கள், நிகழ்வுகள் பற்றிய சிறிய விவரிப்புகள் மற்றும் சினிமாவைப் பற்றிய மோரிசனின் கருத்துகள் ஆகியவை இருந்தன. "த நியூ கிரியேசர்ஸின்" வரிகள் வடிவத்தில், உணர்வில், வெளித் தோற்றத்தில் கவிதைகளைப் போல் இருந்தன. இந்த இரண்டு புத்தகங்களும் பின்னர் ஒன்றாக ஒரே புத்தகமாக இணைக்கப்பட்டு "த லார்ட்ஸ் அண்ட் த நியூ கிரீசர்ஸ்" என்ற பெயரில் வெளியிடப்பட்டது. மோரிசனின் வாழ்நாளில் பிரசுரிக்கப்பட்ட எழுத்துகள் இவை மட்டுமே ஆகும். "நோ ஒன் ஹியர் கெட்ஸ் ஔட் அலைவ்" என்ற டேனி சுகர்மேனின் மோரிசன் பற்றிய வாழ்க்கை சரித புத்தகத்திற்கு முதலெண்ணங்கள் எழுதிய பீட் கவிஞர் மைக்கேல் மெக்ல்யூரோடு மோரிசன் நண்பரானார். மெக்ல்யூர் மற்றும் மோரிசன் பல எடுக்கப்படாத படங்களுக்காக ஒன்று சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மெக்ல்யூரின் பிரபலமான "த பியர்ட்" என்ற நாடகத்தின் திரைப்பட வடிவமும் அடங்கும். இது நடந்திருந்தால் மோரிசன் இதில் பில்லி த கிட் ஆக நடித்திருப்பார். அவர் இறந்த பிறகு, மோரிசனின் கவிதைகள் கொண்ட இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டது. அவரது கவிதைகளின் உரிமையை வைத்திருந்த காதலி பேமிலா கர்சனின் பெற்றோர், புகைப்படக் கலைஞர் ஃப்ரேங்க் லிசியாண்ட்ரோ ஆகியோரால் இந்த புத்தகத்தின் பொருளடக்கம் தேர்வு செய்யப்பட்டு சரியான அடுக்குகளில் வைக்கப்பட்டது. "த லாஸ்ட் ரைட்டிங் ஆஃப் ஜிம் மோரிசன்" முதல் தொகுப்பு, "வைல்டர்னஸ்" என்று பெயரிடப்பட்டது. இது 1988ம் ஆண்டு வெளியிடப்பட்ட உடனேயே "நியூயார்க் டைம்ஸின்" அதிக விற்பனையான புத்தகம் என்ற பெயரை பெற்றது. 1990ல் வெளியிடப்பட்ட "த அமெரிக்கன் நைட்," தொகுப்பு 2 என்பதும் நல்ல வெற்றியைப் பெற்றது. மோரிசன் இரண்டு தனித்தனி நேரங்களில் ஒரு தொழிற்முறை சார்ந்த இசை ஒலிப்பதிவு கூடத்தில் தனது சொந்த கவிதையை பதிவு செய்தார். முதல் முறை மார்ச் 1969ல் லாஸ் ஏஞ்சல்ஸிலும் மற்றும் இரண்டாவது முறை 1970 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி. இரண்டாவது பதிவு நேரத்திற்கு மோரிசனின் பல தனிப்பட்ட நண்பர்கள் வந்திருந்தனர் மற்றும் அதில் பல மாதிரி பாடல்களும் இடம் பெற்றன. இந்த 1969 நேரத்தின் சில பகுதிகள் பூட்லெக் இசைத்தொகுப்பான "த லாஸ்ட் பேரிஸ் டேப்ஸுக்கு" கொடுக்கப்பட்டது. பின்னர் இவை 1978ல் வெளியான த டோர்ஸின் "அன் அமெரிக்கன் ப்ரேயர்" ஆல்பத்திலும் உபயோகிக்கப்பட்டது. இசை பட்டியலில் இந்த இசைத் தொகுப்பு 54வது இடத்தை அடைந்தது. டிசம்பர் 1970லிருந்து பதிவு செய்யப்பட்ட கவிதை இந்த நாள் வரை வெளிவராமல் உள்ளது. இது கோர்சன் குடும்பத்தாரிடம் உள்ளது. மோரிசனின் சிறந்த ஆனால் காணப்படாத திரைப்பட முயற்சி "HWY:அன் அமெரிக்கன் பாஸ்டோரல்" , 1969 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டமாகும். மோரிசன் இந்த திட்டத்துக்கு பண உதவி செய்தார் மற்றும் திட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் வைத்திருக்க சொந்தமாக ஒரு தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். திட்டத்திற்கு உதவியாக பால் ஃபெரேரா, ஃப்ரேங்க் லிசியாண்ட்ரோ மற்றும் பேப் ஹில் ஆகியோர் இருந்தனர். மோரிசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார், கொலைகாரன்/கார் திருடனாக மாறும் இரவுப்பயணியாக நடித்தார். இந்த படத்திற்காக ஒலிப்பதிவுத்தடத்தை தேர்ந்தெடுக்க தனது நண்பரும் இசையமைப்பாளர்/பியானோ கலைஞர் ஃப்ரெட் மிரோவை கேட்டுக்கொண்டார். மோரிசனின் முன்பகுதி வாழ்க்கை ராணுவ குடும்பங்களுக்கேயான நாடோடித் தனமான வாழ்க்கையாக இருந்தது. மோரிசனின் சகோதரர் கூறுவதாக ஜெர்ரி ஹாப்கின்ஸ் பதிவு செய்தது: அவர்களது பெற்றோர்கள் எப்போதும் கடுமையான தண்டனைகளை குழந்தைகளுக்கு அளிக்கக்கூடாது என முடிவு செய்திருந்தனர் என்று கூறினார். இதற்கு மாறாக ஒழுக்கத்தை கற்றுக்கொடுத்தனர் மற்றும் ராணுவ பாரம்பரிய தண்டனையான “டிரஸிங் டவுன்” (கடுமையாக திட்டுதல்) என்பதை அளித்தனர். இது குழந்தைகளிடம் கத்தி அவர்கள் அழுது தங்களது தவறை புரிந்துக்கொள்ளும் வரை கடுமையாக திட்டுவதாகும். மோரிசன் UCLAவில் இருந்து பட்டம் பெற்ற பின் தனது பல குடும்பத் தொடர்புகளை தவிர்த்துக் கொண்டார். 1967ல் மோரிசனின் இசை பட்டியல்களின் முதல் இடத்திற்கு சென்ற போது சுமார் ஒரு வருட காலத்திற்கு அவரது குடும்பத்துடன் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தார் மற்றும் தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இறந்துவிட்டதாகக் கூறினார் (அவர் தான் ஒரே குழந்தை என்று கூறியதாக அதிகப்படியாக தவறான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது). த டோர்ஸின் சொந்த பெயரிலேயே வெளியிடப்பட்ட இசைத் தொகுப்போடு விநியோகிக்கப்பட்ட பொருட்களில் இந்த தவறான தகவலும் பிரசுரிக்கப்பட்டது. ஃபுளோரிடாவின் தகுதி காண் மற்றும் நன்னடத்தை கழகத்தின் மாவட்ட அலுவலகத்திற்கு அக்டோபர் 2, 1970ம் ஆண்டு மோரிசனின் தந்தை எழுதிய கடிதத்தில், மோரிசனின் இசை திறமையை அறிந்துக்கொள்வதில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக குடும்ப தொடர்புகள் முடிந்து போய்விட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். தொடர்பை மறுபடியும் ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்காததற்கு தனது மகனை குறை கூற தன்னால் முடியாது என்றும் எதுவாயினும் தனது மகனை நினைத்து பெருமைப்படுவதாகவும் கூறியுள்ளார். மோரிசன் அவருடைய நீண்டகாலத் துணைவி பமீலா கோர்சனை சந்தித்தார், புகழ் அல்லது நற்பேறு பெறுவதற்கு முன்பே இந்த சந்திப்பு நடந்தது, மேலும் கோர்சன் மோரிசனின் கவிதைகளை வெளிக்கொணர்வதற்கு அவரை ஊக்கப்படுத்தினார். அச்சமயம், அவரது வெளிப்படையான அனுமதி அல்லது மிகவும் குறைவான அக்கறையுடன், கோர்சன் "மோரிசன்" என்ற துணைப்பெயரை பயன்படுத்தினார். 1974 இல் கோர்சன் இறந்த பிறகு, கலிபோர்னியாவின் உயிலை மெய்பிக்கும் நீதிமன்றம், பொதுச்சட்டத் திருமணமாக வரம்புடையது தான் என கோர்சன் மற்றும் மோரிசனைப் பற்றித் தீர்மானித்தது ("நிலவுடைமை சச்சரவின்" கீழ் பார்க்க). கோர்சன் மற்றும் மோரிசனின் உறவுமுறையானது, அடிக்கடி நிகழ்ந்த உரத்த வாதங்கள் மற்றும் பிரிவினையின் காலங்களுடன் பிரச்சினை நிறைந்ததாக இருந்தது. வரலாற்று ஆசிரியர் டேனி சுகர்மன் அனுமானிக்கையில், ஒரு திறந்த உறவுமுறைக்கு அவர்களது ஈடுபாடுகள் மற்றும் அதைப் போன்ற உறவுமுறையில் வாழ்வதில் ஏற்பட்ட விளைவுகளுக்கு இடையே ஆன சண்டையில் இருந்து பிரிவினை ஏற்பட்டதும் அவர்களது கஷ்டங்களின் பகுதியாக இருக்கலாம் என அனுமானிக்கிறார். 1970 இல், ஒரு செலிட்டிக் புறசமயத்தார் திருமண உறுதிப்பாட்டு சடங்கில், ராக் விமர்சகர் மற்றும் அறிவியல் புனையக்கதை/விசித்திரமான கதையாசிரியர் பேட்ரிசியா கென்னலியுடன் மோரிசன் கலந்துகொண்டார். திருட்சபை மூப்பர் ஆட்சிமுறை ஆதரவாளரான மதகுருவும் ஒருவராக சாட்சியங்களுக்கு முன்பு, அந்தத் தம்பதியின் தங்களுக்கு திருமணமானதாக ஆவணங்களில் கையெழுத்திட்டனர்; எனினும், ஒரு சட்டரீதியான திருமணத்திற்கான எந்த நிலையும் காகிதப்படி வேலைகளில் பதிவு செய்யப்படவில்லை. மோரிசனுடன் கென்னெலிக்கு இருந்த அனுபவத்தை தனது சுயசரிதையான "ஸ்ட்ரேன்ஞ் டேஸ்: மை லைப் வித் அண்ட் வித்அவுட் ஜிம் மோரிசன்" இல் அவர் கருத்துரைத்துள்ளார், மேலும் "ராக் வைவ்ஸ்" புத்தகத்தின் நேர்காணலையும் கலந்துரைத்துள்ளார். மோரிசன் அவரது ரசிகர்களுடன் தொடர்பு வைத்திருப்பதை வாடிக்கையாய் கொண்டிருந்தார், மேலும் த வெல்வெட் அண்டர்கிரவுண்டுடன் தொடர்புள்ள பாடகியான நிக்கோ, ஜெப்பர்சன் ஏர்ப்ளேனின் பாடகியான கிரேஸ் ஸ்லிக்குடன் ஒரு இரவு நிலை, "16 மேகஸினின்" தலைமைப் பதிப்பாசிரியரான குளோரியா ஸ்டேவெர்ஸுடன் மீண்டும் மீண்டும் கொண்டிருந்த உறவுமுறை மற்றும் ஜேனிஸ் ஜோப்லின் உடன் ஆல்கஹாகால்-அருந்திவிட்டு சண்டையிட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளிட்ட பிரபலங்களாக இருக்கும் பெண்களுடன் ஏராளமான சுருக்கமான தொடர்புகளும் கொண்டிருந்தார். ஜூடி ஹட்லெஸ்டோன், மோரிசனுடன் தான் கொண்டிருந்த உறவுமுறையை "லிவ்விங் அண்ட் டையிங் வித் ஜிம் மோரிசனில்" நினைவுபடுத்தியுள்ளார். அவர் இறக்கும் தருவாயில், அவர் மேல் 20க்கும் அதிகமான தந்தைமை செயல்பாடுகள் நிலுவையில் இருந்ததாக தகவல் தெரிவிக்கின்றன, எனினும் புகழ்பெற்ற தந்தைமை உரிமைக் கோருபவர்கள் எவர் மூலமும் அவரது நிலவுடைமைக்கு எதிராக எந்த ஒரு உரிமைகளும் வலியுறுத்தப்படவில்லை, மேலும் மோரிசனின் மகன் என பகிங்கரமான உரிமைக் கோரிய ஒரே ஒரு நபர், மோசடியாளர் என அடையாளம் காணப்பட்டார். மார்ச் 1971 இல், மோரிசன் பாரிசுக்கு சென்றார், அங்கு ஒரு வாடகைக் குடியிருப்பை எடுத்துக்கொண்டு, அந்நகரம் முழுவது ஒரு நீண்ட நடைகளை மேற்கொண்டு, அந்நகரத்தின் கட்டடக்கலையை வியந்து பாராட்டினார். அச்சமயத்தில், மோரிசன் தாடி வளர்த்திருந்தார், மேலும் அனைத்து காரணக்கூறுகள் மூலமாகவும் தாழ்த்தப்பட்டிருந்தவர், US திரும்ப வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தார். மோரிசன் அவரது கடைசி பதிவை இரண்டு அமெரிக்கத் தெரு இசைக்கலைஞர்கலுடன் கொண்டிருந்தார், இது பாரிசில் நடந்தது —"குடிபோதையில் பொருளற்று பேசியதால்" அப்பருவம் மனசரெக்கால் நீக்கப்பட்டது. "த லாஸ்ட் பேரிஸ் டேப்ஸ்" ஸின் கருப்புச்சந்தையின் கேட்கப்படும் "ஆரன்ஞ் கண்ட்ரி சூட்" என்ற வளர்ச்சியில் இருக்கும் பாடலின் பதிப்பை அப்பருவம் உள்ளடக்கியிருந்தது. July 3, 1971 இல் மோரிசன் இறந்தார். பாரிஸ் குடியிருப்பு குளிக்கும் தொட்டியில் கோர்சன் மூலமாக அவர் இறந்தது கண்டிபிடிக்கப்பட்டது, அதுவே அவர் இறந்ததற்கான அதிகாரப்பூர்வ தினமாகக் கணக்கிடப்பட்டது. ஃப்ரென்ச் விதிக்கு பின்பற்றுகையில், இவருக்கு பிரேத பரிசோதனை எதுவும் நடத்தப்படவில்லை, ஏனெனில் மருத்துவ ஆய்வாளர் பிழையாட்டத்தின் எந்த அடையாளமும் தென்படவில்லை என அறிக்கையில் கூறியிருந்தார். அதிகாரப்பூர்வமாக பிரேதப் பரிசோதனை நடத்தப்படாதது மோரிசனின் இறப்புக்காணக் காரணம் பற்றி பல கேள்விகளை எழுப்பியது. சுகர்மனின் ஊகத்தைப் பொறுத்து, அவரது எதிர்பாராத இறப்பை கோர்சன் சந்தித்து U.S. திரும்பிய பிறகு, "வொண்டர்லேண்ட் அவென்யூ" வில் டேனி சுகர்மன் கோரிசனிடம் இது பற்றி ஆலோசித்திருக்கிறார், மோரிசனின் இறப்பைப் பற்றி கோர்சன் தெரிவிக்கையில், மோரிசன் கொக்கைன் என நம்பி, அதிகப்படியான ஹெராயின் எடுத்துக்கொண்டதால், நுரையீரல் ஊதல் ஏற்பட்டு இறந்துள்ளார் எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். சுகர்மேன் அவரது இறப்பைப்பற்றிக் கூடுதலாகக் கூறுகையில், மோரிசனின் இறப்பைப் பற்றி கோர்சன் முன்னுக்குப்பின் முரணான பல கருத்துக்களை தெரிவித்துள்ளார், அதே நேரத்தில் மோரிசனை கோர்சன் கொலை செய்திருக்கலாம் அல்லது அவரது இறப்புக்கு இவர் காரணமாக இருந்திருக்கலாம். மோரிசன் தற்செயலாக ஹெராயினை எதிர்பாராதவிதமாக அதிகப்படியாக உடலுக்குள் செலுத்தியதாக கூறப்பட்ட கோர்சனின் கதையானது அலைன் ரோனியின் வாக்குமூலம் மூலமாக ஆதரவளிக்கப்பட்டது, ஆனால் கோர்சனின் ஹெராயினால் மூச்செருமி இரத்தக்கசிவு ஏற்பட்டு மோரிசன் இறந்தார், மேலும் அதை கோர்சனும் பார்த்துக்கொண்டிருந்தார், மருத்துவ உதவிக்காக அழைக்காமல் மோரிசன் இறப்பதற்காக இரத்தக்கசிவு ஏற்படுமாறு விட்டுவிட்டார் என அவர் எழுதியிருந்தார். ரோனி அவரது "பாரிஸ்-மேட்ச்" கட்டுரையின் ஒப்புதல் வாக்குமூலத்தில், மோரிசனின் இறப்பின் சூல்நிலையை முழுவதும் தழுவி நிற்பதற்கு அவர் பிறகு உதவினார். "நோ ஒன் ஹியர் கெட்ஸ் அவுட் அலைவின்" முடிவுரையில், அந்த இறப்பு காட்சியில் காவல்துறைக்கு பதிலளித்த கோர்சன் பொய் கூறிவிட்டதாகவும், அவரது பதிவிநீக்கத்திற்குப் பிறகு மோரிசன் போதைப் பொருள் எடுத்துக் கொண்டிருக்கவில்லை எனக் கூறியிருந்ததாகவும் ரோனி மற்றும் ஏஜ்னெஸ் வர்டா இருவரும் கூறியதாக, ஹோப்கின்ஸ் மற்றும் சுகர்மன் எழுதினர். "நோ ஒன் ஹியர் கெட்ஸ் அவுட் அலைவ்" வின் முடிவுரையில், ஹோப்கின்ஸ் கூறுகையில், மோரிசன் இறந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு ரோனி மற்றும் வர்டா இருவரும் அவர்களது மெளனத்தை உடைத்து அவர்களது கருத்தைக் கூறியுள்ளனர்: மோரிசன் இறந்தவுடன் விரைவிலே அவர்கள் அக்குடியிருப்புக்குச் சென்றதாகவும், பார்களில் இரவு குடித்துவிட்டுப் பிறகு கோர்சனும் மோரிசனும் ஹெராயின் எடுத்துக் கொண்டிருந்தாக அங்கிருந்த கோர்சன் கூறியதாகத் தெரிவித்தனர். மேலும் மோரிசன் மிகவும் மோசமாக இருமியதாகவும், குளிக்கச் சென்று அங்கு இரத்தவாந்தி எடுத்துள்ளார். பின்னர் அவர் குணமடைந்தது போல் தெரிந்ததால், கோர்சன் உறங்கசென்றதாகவும் அவர் கூறியிருக்கிறார். பிறகு சிறிதுநேரத்தில் அவர் எழுந்தபோது, மோரிசன் அசைவற்று இருந்ததால், அவர் மருத்துவ உதவியை நாடியுள்ளார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோர்சனும் அதிகமான ஹெராயினை உட்கொண்டதால் இறந்தார். மோரிசனைப் போன்றே, கோர்சன் இறந்த போது அவருக்கு வயது 27 ஆகும். எனினும், "நோ ஒன் ஹியர் கெட்ஸ் அவுட் அலைவ்" வின் முடிவுரையில், ஹோப்கின்ஸ் மற்றும் சுகர்மன் மேலும் கூறுகையில், மோரிசனுக்கு ஆஸ்துமா இருந்ததாகவும் சுவாசப் பிரச்சனையில் அவதிப்பட்டதாகவும், கடுமையான இருமலினால் அந்த இரவில் இரத்தம் கக்கி இறந்ததாகவும் கூறினர். இக்கோட்பாடு, "த டோர்ஸில்" (இசைக்குழுவின் எஞ்சிய உறுப்பினர்களால் எழுதப்பட்டது) அரைகுறையாக ஆதரவளிக்கப்பட்டது, இதில் அவர்கள் கூறுகையில், பாரிசில் அநேகமாய் இரண்டு மாதங்கள் மோரிசன் இறுமி இரத்தம் சிந்தியதாகத் தெரிவித்தனர். எனினும், த டோர்ஸின் உறுப்பினர்களில் எவருமே, மோரிசன் இறந்த மாதங்களுக்கு முன்பு பாரிசில் அவருடன் இருந்திருக்கவில்லை. "நோ ஒன் ஹியர் கெட்ஸ் அவுட் அலைவ்" வின் முதல் பார்வை, 1980 இல் வெளியிடப்பட்டது, அதில் மோரிசன் இறக்கவே இல்லை என புரளியுடன் சில சான்றுகளையும் சுகர்மன் மற்றும் ஹோப்கின்ஸ் அளித்தனர், அந்த போலி இறப்புக் கோட்பாடை அழைக்கையில், “இதனை கற்பனை இல்லாத வகையில் பார்க்கப்படலாம்”. இக்கோட்பாடு சில ஆண்டுகளுக்குப் பிறகு, மோரிசன் அன்பு செய்தவர்களுக்கு கடுமையான துன்பத்துக்கு வழிவகுத்தது, குறிப்பிடத்தக்க வகையில் ரசிகர்கள் அவர்களைப் பின் தொடர்ந்தபோது, மோரிசன் இறப்புக்காண ஆதாரங்களைத் தேடிக்கொண்டிருந்தனர். 1995 இல், ஒரு புதிய முடிவுரையானது சுமர்மன் மற்றும் ஹோப்கின்ஸின் புத்தகத்தில் சேர்க்கப்பட்டது, அதில் மோரிசனின் இறப்புப் பற்றி புதிய உண்மைகளைக் கொடுத்து போலி இறப்புக் கதையை குறைத்துக் கொண்டிருந்தனர், அதில் கூறும் போது “காலம் கடந்திருக்கையில், ஜிம் மற்றும் பமீலாவின் [கோர்சனின்] சில நண்பர்கள் அவர்களுக்குத் தெரிந்ததைப் பற்றி பேசத் தொடங்கியுள்ளனர், மேலும் ஜிம்மின் மரணத்திற்கு மறுக்க இயலாத வகையில் அனைத்து காரணங்களையும் கூறிவிட்டனர், ஆனால் ஜிம்மின் இறப்புப் பற்றி நம்பாமல் அதை ஏற்க மறுத்தவர்கள் கண்டிப்பாக இன்னும் எஞ்சியுள்ளனர், மேலும் அவர்கள் அமைதியாக ஓய்வெடுக்க அவருக்கு இடமளிக்க மாட்டார்கள்” எனக் கூறியிருந்தனர். ஜூலை 2007 இல் ஒரு பத்திரிகை நேர்காணலில், மோரிசனின் நெருங்கிய நண்பரென தானாகவே கூறிக்கொண்ட பழைய புரளிகள் மீண்டும் உயிர்பெற்று எழும் வகையில், உண்மையில் பாரிசில் உள்ள லெப்ட் பேங்க்கின் மேலுள்ள ராக் 'அன்' ரோல் சர்கஸ் இரவு விடுதியில் மோரிசன் அதிகாமன ஹெராயின் அருந்தி இறந்ததாகத் தெரிவித்தார். பெர்னெட் மேலும் தெரிவிக்கையில், கோர்சனுக்காக ஹெராயின் வாங்க மோர்சன் இரவு விடுதிக்கு வந்ததாகவும், பிறகு அவர்கள் அதைப் புகட்டிக் கொண்டபின் அவர் குளியலறையில் இறந்ததாகத் தெரிவித்தார். பிறகு ரூ பியூட்ரெல்லிஸ் குடியிருப்பிற்கு மோரிசன் நகர்த்தப்பட்டு, மோரிசன் ஹெராயின் வாங்கிய அதே இரண்டு போதைப் பொருள் விற்பனையாளர்களால் குளிக்கும் தொட்டியில் அமுத்தப்பட்டதாகவும் பெர்னெட் குற்றஞ்சாட்டினார். அந்தப் பிரபலாம இறவு விடுதியின், மேல் பழிச்சொல்லைத் தடுப்பதற்காக அங்கு மோரிசனைப் பார்த்தவர்கள் இரகசியத்தை பின்பற்றும் படி ஆணையிடப்பட்டதாகவும், அதில் சில சாட்சியாளர்கள் உடனடியாய் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் பெர்னெட் தெரிவித்தார். எனினும், மோரிசனின் இறப்பைச் சுற்றியுள்ள பழைய புரளிகள் மற்றும் சதித்திட்டக் கோட்பாடுகளின் நீண்ட வரிசை பலவற்றுள் இது புதியதாகும், மேலும் இது ரோனி மற்றும் கோர்சன் கூறியக் கருத்துக்களைக் காட்டிலும் மிகவும் குறைவாகவே சாட்சியாளர்கள் மூலமாக ஆதரிக்கப்பட்டது (மேலே காண்க). கிழக்குப் பாரிசில் உள்ள பெரெ லாசெய்ஸ் கல்லறையில் மோரிசன் புதைக்கப்பட்டார், இது நகரத்தில் சுற்றுலாப்பயணிகள் அதிகமாக பார்க்கும் ஒரு இடமாக உள்ளது. 1973 இல் கல்லறை திருடப்பட்டு, ஃப்ரென்ச் அதிகாரிகள் அதற்கு கவசம் இடும் வரை, அங்கு எந்த அதிகாரப்பூர்வ குறியளவும் இல்லை. 1981 இல், மோரிசனின் 10வது ஆண்டு நினைவு தினத்தில் கல்லறையில் மோரிசன் பெயருடன் புதிய மார்பளவு சிலையானது குரோட்டிய சிற்பியான எம்லேடன் மிக்குலின் என்பவரால் நிறுவப்பட்டது; காலத்தினால் அந்த மார்பளவுச் சிலை சிதைவுற்று இருக்கையில், 1988 இல் கல்லறைத் திருடர்களால் அச்சிலை திருடப்பட்டது. 1990களில், மோரிசனின் தந்தையான ஜார்ஜ் ஸ்டீபன் மோரிசன், அந்தக் கல்லைறையில் சமதளமான கல்லைப் பதித்தார். அந்த கல்லில் ΚΑΤΑ ΤΟΝ ΔΑΙΜΟΝΑ ΕΑΥΤΟΥ என்ற கிரேக்க எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது, இதன் துல்லியமான அர்த்தம் "அவரது சொந்த பரிசுத்த ஆன்மாவைப் பொறுத்து" மற்றும் வழக்கமாக மற்றொரு பொருளாக "அவரது சொந்த ஆன்மாக்கு உண்மையாக" எனப் பொருள் கொள்ளலாம். பிறகு மிக்குலின், மோரிசனை சித்திரிக்கும் இரண்டு வெண்கலத்தை உருவாக்கினார், ஆனால் அந்த புதிய சிற்பத்தை கல்லறையில் பதிப்பதற்கு உரிமத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறார். பிப்ரவரி 12, 1969 இல், லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டியில் தயாரிக்கப்பட்ட மோரிசனின் உயிலில், மோரிசன் (அதில் அவரை ஒரு "திருமணமாகாத நபர்" என விளக்கிக்கொண்டிருந்தார்) எழுதி வைத்திருந் உயிலில் அவரது மொத்த நிலவுடைமையையும் கோரிசனுக்கு எழுதியிருந்தார், மேலும் கோர்சனின் இணை-செயலாளர் மற்றும் மோரிசனின் வழக்கறிஞர் மேக்ஸ் ஃபின்க்கின் பெயரையும் அதில் குறிப்பிட்டிருந்தார்; 1971 இல் மோரிசன் இறந்த பிறகு அவரது அனைத்து சொத்துக்களுக்கும் வாரிசாக கோர்சன் பெற்றார். 1974 இல் கோர்சன் இறந்த பிறகு, மோரிசனின் நிலவுடைமை பெறும் உரிமைப் பற்றி, மோரிசன் மற்றும் கோர்சன் பெற்றோருக்கு இடையே சண்டை உருவானது. மோரிசன் உயில் எழுதி வைத்து சென்ற பின்னர், இந்தக் கேள்வி சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. மோரிசனின் இறப்பினால், அவரது சொத்துக்கள் கோர்சனின் உரிமையானது, மேலும் கோர்சனின் இறப்புக்குப் பிறகு அவரது சொத்துக்கள் சட்டப்படி அடுத்த வாரிசான அவரது பெற்றோருக்கு சென்றது. உயில்படி கோர்சனிடம் இருந்த அவர்களது மகனின் சொத்து, வாரிசாக கோர்சனின் பெற்றொருக்குச் செல்வதை எதிர்த்து மோரிசனின் பெற்றோர்கள் போராடினர். அவர்களது நிலைமையை ஆதரிப்பதற்கு, கோர்சனின் பெற்றோர்கள் கொலொரொடோவில் அவர் வைத்திருந்த சொத்தின் ஆவணங்களை வழங்கினர், அவரும் மோரிசனும் பொதுநல சட்டப்படி வெளிப்படையாக செய்த திருமண ஒப்பந்தத்தையும் அவர்கள் வழங்கினர். 1896 இல் கலிபோர்னியாவில் பொதுநலச் சட்டத் திருமணம் ஒப்பந்தம் செய்துகொள்ளும் திறன் நீக்கப்பட்டிருந்தது, ஆனால் சட்டங்களின் எதிர்மாறான விதிகளின் நிலையில், அயல்நாட்டு சட்ட அதிகாரங்களில் சட்டரீதியாக பொதுநலச் சட்டத் திருமணங்களின் ஒப்பந்தம் அங்கிகாரம் வழங்கப்பட்டிருந்தது — மேலும் பதினோரு U.S. சட்ட அதிகாரங்களில் ஒன்றான கொலொரொடோ, இன்னும் பொதுநலச் சட்ட திருமணத்தை ஆதரித்து வருகிறது. ஒரு கடற்படை சார்ந்த குடும்பமாக இருந்ததால், மோரிசன் அடிக்கடி இடம் மாற வேண்டியிருந்தது. இதன் விளைவாக மோரிசனின் இளவயது படிப்பு, அவர் பள்ளிக்கு பள்ளி மாறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தால் தகர்க்கப்பட்டது. இருந்தபோதிலும், இலக்கியம், கவிதை, சமயம், தத்துவம் மற்றும் உளவியல் மற்றும் பிறத் துறைகளின் கல்வியில் ஒரு திறமைமிக்க மற்றும் தகுதியுள்ள மாணவராக உறுதிபடுத்திக் கொண்டார். வரலாற்று ஆசிரியர்கள், மோரிசனின் சிந்தனை மற்றும் ஒருவேளை, நடத்தையின் ஈர்க்கப்பட்டு ஓவ்வுமையுடன் இருக்கும் பல எழுத்தாளர்கள் மற்றும் தத்துவஞானிகளை குறிப்பிடுகின்றனர். மோரிசன் பதின்வயதினாரக இருந்தபோது, தத்துவஞானி ஃப்ரெட்ரிச் நீசூவின் பணிகளைக் கண்டார். வில்லியம் ப்ளேக், சார்லஸ் பவுடெலியர் மற்றும் ஆர்த்தர் ரிம்பட்டின் கவிதைகளின் மூலம் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார். ஜேக் கெரூஅக் போன்ற வளர்ச்சியடைந்த தலைமுறை எழுத்தாளர்கள், மோரிசனின் வெளிப்பார்வை மற்றும் வெளிப்படுத்தும் ஒழுக்கமுறை போன்ற வலிமையான செல்வாக்கில் ஈர்க்கப்பட்டிருந்தனர்; கெரூஅக்கின் "ஆன் த ரோடில்" தனது வாழ்க்கையின் அனுபவத்தை விளக்குவதற்கு மோரிசன் ஆர்வமாக இருந்தார். ஃப்ரென்ச் எழுத்தாளர் லூயிஸ்-ஃபெர்டினண்டு செலினின் வேலைகளையும் அவர் அதே போல் ஈர்க்கப்பட்டிருந்தார். செலின்ஸ் புத்தகம், "வோயேஜ் அவு பவுட் டெ ல நியூட்" ("இரவின் முடிவுக்கு பயணம்" ) மற்றும் ப்ளேக்கின் "ஆக்ரீஸ் ஆப் இன்னொசன்ஸ்" இரண்டும், மோரிசனின் பழைய பாடல்களில் ஒன்றான "எண்ட் ஆப் த நைட்டில்" எதிரொலியாகும். பிறகு மோரிசன், வெற்றிக் கவிஞர் மைக்கேல் மெக்குளரை சந்தித்தார், இருவரும் நண்பர்கள் ஆயினர். மோரிசனின் பாடல்வரிகளை மெக்குலர் ரசித்தார், ஆனால் அதைவிட அதிகமாக அவரது கவிதைகளில் ஈர்க்கப்பட்டு, மென்மேலும் அவரது திறமையை வளர்த்திக்கொள்வதற்கு ஊக்கமளித்தார். செயல்திறனின் மோரிசனின் பார்வையானது, 20 ஆம் நூற்றாண்டு ஃப்ரென்ச் நாடக ஆசிரியரான அண்டோனின் ஆர்டடு ("தியேட்டர் அண்ட் இட்ஸ் டபிளின்" கதையாசிரியர்) மற்றும் ஜூலியன் பெக்கின் லிவ்விங் தியேட்டர் மூலமாக வர்ணம் தீட்டப்பட்டது. சமயம், உள்ளுணர்வு, பண்டைய தொன்மம் மற்றும் சின்னவாதம் சார்ந்த பிற பணிகளும் இவரது நிலைத்த ஆர்வம் இருந்தது, குறிப்பிடும் வகையில் ஜோசப் கேம்பலின் "த ஹீரோ வித் எ தவுசண்ட் பேசஸ் உள்ளது." "நாட் டு டச் த எர்த்" என்ற பாடலின் வரிகள் மற்றும் தலைப்பில் இருந்து எதிரொலிக்கப்பட்ட உத்வேகத்தின் மூலமாக ஜேம்ஸ் ஃப்ரேசரின் "த கோல்டன் பவ்" மாறியது. மோரிசன், இயற்கையான அமெரிக்க பண்பாடுகளின் தொன்மங்கள் மற்றும் சயங்களில் குறிப்பாக ஈர்க்கப்பட்டிருந்தார். அவர் பள்ளியில் பயின்று கொண்டிருந்த போது, அவரது குடும்பம் நியூ மெக்ஸிகோவிற்கு இடம் பெயர்ந்தது, அங்குதான் தென்மேற்கில் உற்பத்தியான பண்பாடுகளின் முக்கியக் கலைப் பொருள்கள் மற்றும் சில இடங்களை அவரால் காணமுடிந்தது. பல்லிகள், பாம்புகள், பாலைவனங்கள் மற்றும் "பண்டைய ஏரிகள்" போன்ற உயிரினங்கள் மற்றும் இடங்களுக்கு பல மேற்கோள்களின் மூலமாக இந்த ஆர்வங்கள் அமைந்தன, இவை அவரது பாடல்கள் மற்றும் கவிதைகளில் தோன்ற இந்த ஆர்வமே காரணமாக அமைந்தது. இயற்கையான அமெரிக்க "ஷாமென்" பயிற்சிகளின் அவரது பொருள் விளக்கம், மோரிசனின் மேடை வேலைமுறையின் ஒரு பகுதியாக இருந்தது, "கோஸ்ட் டான்ஸில்" அவரது பொருள்விளக்கம் குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது, மேலும் பின்னால் உருவான அவரது கவிதை ஆல்பத்தில் "த கோஸ்ட் சாங்" என்ற பாடல் இருந்தது. த டோர்ஸ் தொகுப்பானது, உயர்தரமான ராக் ரேடியோ நிலையங்களில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றதன் மூலம், ராக் வரலாற்றில் மிகவும் பிரபலமான செல்வாக்குமிக்க பாடகர்கள்/எழுத்தாளர்களின் ஒருவராக மோரிசன் எஞ்சியுள்ளார். இன்றுவரை, மோரிசன் முரட்டுத்தனமான, கவர்ச்சியான, கேலியான மற்றும் விசித்திரமான ஒரு தனித்தன்மை வாய்ந்த ராக் நட்சத்திரமாக பரவலாகக் கருதப்படுகிறார். மேடையில் அவர் பிரியமாக உடுத்தும் தோலினால் ஆன பேண்ட்டுகள், ராக் ஸ்டார் நட்சத்திர உடையாக மாற்றவியலாததாக மாறியது. ஆன் ஆர்பர், மிச்சிகனில் நடந்த டோர்ஸ் நிகழ்ச்சியின் கலந்துகொண்ட பிறகு மோரிசனால் ஈர்க்கப்பட்ட தலைமைப் பாடகர் இக்கி பாப் பிறகு இக்கி மற்றும் ஸ்டூகிஸ் உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பாப்ஸில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றான "த பேசஞ்சர்", மோரிசனின் கவிதைகளில் ஒன்றைச் சார்ந்து உருவாக்கப்பட்டதெனக் கூறப்பட்டது. மோரிசன் இறந்த பிறகு, த டோர்ஸின் முதன்மை பாடகராக மாற்றம்செய்யப்படுவதற்கு பாப் கருதப்பட்டார்; நிகழ்ச்சிகளின் தொடருக்காக பாடகராக பணியமர்த்தப்பட்ட இவர், மோரிசனின் சிலவற்றைப் பின்பற்றி டோர்ஸை வழிநடத்தினார். டக் பல்கலைக்கழகத்தின் ஃப்ரென்ச் இலக்கியத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியரான வேலஸ் பவுலி, ""த ரீபல் அஸ் பொயட் – எ மெமோர்"" எனத் துணைத் தலைப்பிடப்பட்ட "ரிம்பட் அண்ட் ஜிம் மோரிசனை" எழுதினார். இந்தப் புத்தகத்தில், 1968 இல் இருந்த மோரிசனின் ரசிகரிடம் இருந்து எதிர்பாராமல் பெற்ற ஒரு ரசிக கடிதத்தை பவுலி எண்ணிப் பார்க்கிறார், அதில் ஆங்கிலத்தில் அர்தர் ரிம்படின் நவீன மொழிபெயர்ப்புக்கு நன்றி கூறி அக்கடிதத்தில் இருந்தது. அவர் எழுதியிருந்ததில் "ஃப்ரென்ச்சை என்னால் எளிதாகப் படிக்க முடியாது", "...உங்களுடைய புத்தகம் என்னைச் சுற்றிப் பயணிக்கிறது" என்று அவர் எழுதியிருந்தார். மோரிசன் மற்றும் ரிம்பட்டின் வாழ்க்கை, தத்துவங்கள் மற்றும் கவிதைகளை ஒப்பிட்டு பல கல்லூரி மைதானங்களில் பவுலி சென்று சொற்பொழிவாற்றியுள்ளார். ஸ்டோன் டெம்பிள் பிலட்ஸ் மற்றும் வெல்வெட் ரிவால்வர் அதே போல் கிரீட்டின் ஸ்காட் ஸ்டப்பின் பாடகரான ஸ்காட் வெயிலாந்து, அவர்களது மிகப்பெரிய தாக்கம் மற்றும் அகத்தூண்டுதலாக மோரிசன் இருப்பதாக் கூறினார். ஸ்டோன் டெம்பிள் பைலட்ஸ் மற்றும் வெல்வெட் ரிவால்வர் இரண்டும், த டோர்ஸ் மூலமான "ரோடுஹவுஸ் புளூவைக்" கொண்டிருந்தது. த டோர்ஸின் எஞ்சியுள்ளவர்களுடன் "ப்ரேக் ஆன் த்ரூவின்" செயல்படுவதற்கு மோரினுக்காக வெய்லாண்ட் பணித்தார். "VH1 ஸ்டோரிடெல்லர்ஸில்" "லைட் மை பயர்", "ரைடர்ஸ் ஆன் த ஸ்ட்ரோம்" மற்றும் "ரோடுஹவுஸ் புளூஸிற்காக" மோரிசனுக்காக ஸ்டாப் பணித்தார். 1999 உட்ஸ்டோக் விழாவிற்காக ரோபி கிரீகருடன் "ரைடர்ஸ் ஆன் த ஸ்ட்ரோம்"மின் அவர்களது பார்வையை கிரீடு செயல்படுத்தினார். எஞ்சிய டோர்ஸ் உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்ட "த டோர்ஸ்" புத்தகத்தில், மோரிசனின் நெருங்கிய நண்பராக ஃப்ரான்க் லிஸ்சியண்டிரோ மேற்கோளிடுகையில், மோரிசனின் கருத்தை பல மனிதர்கள் எடுத்துக்கொண்டனர், அதாவது அவர் கிளர்ச்சி, ஒழுங்கின்மை மற்றும் பெருங்குழப்பத்தில் ஆர்வமுடன் இருந்ததால் “அரசின்மையர், ஒரு அரசியல் புரட்சியில் ஈடுபடுவர், அல்லது அதை விட மோசமானவர், ஒரு சூனியவாதி என்பதாக அர்த்தம்கொள்ளச் செய்கிறது. ரிம்பர்ட் மற்றும் கற்பனைக் கவிதையாளர்களைப் பற்றித் தொடர்ந்துக் கூறிவந்தது அரிதாகவே கவனிக்கப்பட்டது” எனக் கூறினார். ராய் லட்சுமி (நடிகை) ராய் லட்சுமி (, ; பிறப்பு மே 5, 1989) கர்நாடகா, பெல்காமைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகையாவார். லட்சுமி தென்னிந்தியத் திரைப்படங்களில், பெரும்பாலும் தமிழ் மொழி மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் நுழைவதற்கு முன்பு இவர் மாடலாக இருந்தார். புரு காபி, சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் ஃபேர் அண்ட் லவ்லி போன்ற சில விளம்பரங்களில் மாடலாக இருந்திருக்கிறார். தாம் தூம் திரைப்படத்தில் ஆர்த்தியாக இவருடைய கதாபாத்திரச் சித்தரிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஜார்ஜ் குளூனி ஜார்ஜ் திமோதி குளூனி ("George Clooney", பிறப்பு: மே 6, 1961) என்பவர் ஒரு அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் திரைப்பட எழுத்தாளர். குளூனி வணிக ரீதியாக அபாயகரமான திட்டகளுக்குப் பின்னால், பெரிய செலவிலான வெற்றிப் படங்களில் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநராக வேலை செய்வதுடன், சமூக மற்றும் நடுநிலையான அரசியல் கோட்பாளராகவும் தனது செயல்பாடுகளை சமநிலைப்படுத்திக் கொண்டார். ஜனவரி 31, 2008ல், ஐக்கிய நாடுகள் அவை குளூனியை "அமைதித் தூதுவராக" அறிவித்தது. குளூனி கென்டக்கியில் உள்ள லெக்ஸிங்டனில் பிறந்தார். அவருடைய தாய், நீனா புரூஸ் (முன்னர் வாரென்), முன்னாள் அழகி ஆவார்; அவருடைய தந்தை, நிக், ஒரு பத்திரிகை எழுத்தாளர், மற்றும் நிகழ்ச்சித் தொகுப்பாளர், விளையாட்டுக் கண்காட்சி மற்றும் பழைய அமெரிக்கத் திரைப்பட வர்ணனையாளர் மற்றும், அரசியல் ஆர்வலர் ஆவார். குளூனி அயர்லாந்து வம்சாவளியைச் சேர்ந்தவர், அவரின் தந்தை வழி மரபைச் சார்ந்த மூதாதையர்களான, (கௌன்டி கில்கென்னியின்) நிகோலஸ் குளூனி மற்றும் பிரட்ஜெட் பைரன், போன்றோர்கள் அயர்லாந்திலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு குடி பெயர்ந்தவர்களாவர். அவர் அடெலியா (அடா எனவும் அழைக்கப்படுவார்) என்ற மூத்த சகோதரியையும், தூரத்து உறவினர்களான நடிகர்களும் அவர் அத்தையின் மகன்களுமான மிகுல் மற்றும் ராபெல் பெர்ரர், பாடகர் ரோஸ்மேரி குளூனி, மற்றும் நடிகர் ஜோஸ் பெர்ரர் ஆகியோர்களைக் கொண்டுள்ளார். ஜோஸ் மற்றும் ரோஸ் மேரியின் மகனான கேப்ரியல் பெர்ரர் ஆகியோர்களை மணந்த மற்றொரு பாடகியான டெப்பி பூனேவும் இவருக்கு உறவினராவார். சிறு வயதிலிருந்தே, குளூனி தனது தந்தையின் குழுவில் அலங்கரித்தும், அடிக்கடி நிகழ்ச்சியில் பங்கேற்றும் மக்களின் ஆதரவைப் பெற்றார். குளூனி அவரின் படிப்பை கென்டகியிலுள்ள ஃபோர்ட் மிட்செலில் பிளெஸ்ட் சேக்ரமென்ட் பள்ளியில தொடங்கினார். குழந்தைப் பருவத்தின் ஒரு பகுதியை ஓகியோவில் கழித்ததுடன், கொலம்பஸில் உள்ள செயின்ட் மைக்கேல்ஸ் பள்ளி, ஓகியோவிலுள்ள மேஷனில் செயின்ட் சூசன்னா பள்ளி போன்றவற்றில் படித்தார். நடுநிலைப் பள்ளியில், குளூனிக்கு முகத்தின் ஒரு பகுதி உணர்வற்றுக் காணப்படும் முடக்குவாத நோயான பெல்ஸ் பால்ஸி உருவாகியிருந்த்து. அந்த நோய் ஓராண்டிற்குள் சரியானது. 2003ஆம் ஆண்டில் அவர் "அது என் வாழ்வின் மோசமான தருணங்களாக இருந்தது," என்று "மிரரில்" சொன்னார். "உங்களுக்குத் தெரியுமா கொடூரமான குழந்தைகள் எப்படி உருவாகிறார்கள் என்று, நான் கிண்டல் செய்யப்பட்டதுடன் பழித்துரைக்கப்பட்டேன், ஆனால் அந்த அனுபவம் என்னை வலிமைமிக்கவனாக மாற்றியது" என்பார். குளூனி ஆகஸ்டா நடுநிலைப் பள்ளியில் படித்தபோது, இறுதியாக அவருடைய பெற்றோர்கள் கென்டகியிலுள்ள ஆகஸ்டாவிற்கு இடம் பெயர்ந்தனர். பள்ளியில் அவர் அனைத்து வகுப்புகளிலும் முதல் மதிப்பெண் பெற்றதாகச் சொன்னதோடு, பேஸ்பால் மற்றும் கூடைப்பந்து வீரராக ஆர்வம் காட்டினார். அந்தச் சமயத்தில் அவர் சட்டத்தை தன் வாழ்க்கைத் தொழிலாகக் கருதினார், ஆனால் பின்னர் அது மாற்றியமைக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டில் அவர் சின்சினாட்டி ரெட்ஸ் மூலம் பேஸ்பால் விளையாட முயற்சிகளை மேற்கொண்டார், ஆனால் அதற்கான ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. அவர் வீரர்களுக்கான தேர்வின் முதல் சுற்றில் வெற்றி பெறவில்லை. அவர் 1979 முதல் 1981 வரை நார்தென் கென்டகி பல்கலைக்கழகத்தில் வரலாறு மற்றும் அரசியல் அறிவியல் பாடப்பிரிவிலும், மிகக் குறுகிய கால அளவாக, சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் சேர்ந்தார், ஆனால் எதிலும் பட்டம் பெறவில்லை. அவர் ஆண்களுக்கான ஆடைகளை விற்பது மற்றும் புகையிலை வெட்டுவது போன்ற கடினமான வேலைகளைச் செய்தார். 1984ஆம் ஆண்டில் அவரின் முதல் பெரிய கதாப்பாத்திரம் சிறிது நேரமே வந்துபோகும் நகைச்சுவை நாடகம் "இ/ஆர்" ஆகும், (பத்தாண்டுகளுக்குப் பிறகு குளூனி துணை நடிகராக நடித்த பிரபலமான மருத்துவமனை நாடகமான "இஆர்" உடன் குழப்பிக்கொள்ள வேண்டாம்). அவர் "தி பேக்ட்ஸ் ஆஃப் லைஃப்" என்ற தொடரில் எடுபிடி ஆளாக நடித்தார். அவர் பாபி ஹாப்கின்ஸில் நடித்ததுடன், துப்பறிபவராக "தி கோல்டன் கேர்ள்ஸின்" கிளைக் கதையிலும் நடித்தார். அவரின் முதல் குறிப்படத்தக்க முன்னேற்றம் தொடர்ந்து குறைந்த நேரமே வரும் துணைக் கதாப்பாத்திரமான "ரோஸன்னே" என்ற நகைச்சுவை நாடகத்தில் நடித்ததுடன், ரோஸன்னே பாரின் ஆணவமான முதலாளியான புக்கர் புரூக்ஸாக நடித்திருந்தார், அதைத் தொடர்ந்து "பேபி டாக்கில்" கட்டட வேலை செய்யும் கதாப்பாத்திரத்திலும், பின்னர் "சிஸ்டர்ஸில்" கவர்ச்சியான துப்பறிபவராகவும் நடித்தார். 1988ஆம் ஆண்டில், குளூனி "ரிட்டன் ஆப் தி கில்லர் டொமேடோஸிலும்" ஒரு கதாப்பாத்திரமாக நடித்தார். 1994 முதல் 1999 வரை வெற்றிகரமாக ஓடிய என்பிசி நாடகமான "இஆர்" இல் அந்தோனி எட்வர்ட்ஸ் மற்றும் நோவா வைல்ஸ் போன்ற பாத்திரங்களில் நடித்தவர்களுடன் சேர்ந்து டாக்டர் டௌ ரோஸாக நடிக்க குளூனி தேர்வு செய்யப்பட்டபோது நட்சத்திர நடிகர் அந்தஸ்தைப் பெற்றார் என்பதுடன், அதன் 15வது மற்றும் இறுதிக் கட்ட விழாவில் விருந்தினர் இடத்தையும் பெற்றார். குளூனி மிரேடர் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான டெபோரா லெனாயுடன் இணைந்து கூட்டு வாணிகம் செய்தார். குளூனி "இஆரில்" நடித்துக் கொண்டிருந்தபோது திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார், அவரின் சொல்லும்படியான முதல் ஹாலிவுட் கதாப்பாத்திரம் ராபர்ட் ரோட்ரிகுவஸால் இயக்கப்பட்ட "பிரம் டஸ்க் டில் டான்" என்ற படத்தில் இருந்தது. அதன் வெற்றியைத் தொடர்ந்து அவர் மைக்கேல் பிபையருடன் "ஒன் பைன் டே" மற்றும் நிக்கோல் கிட்மேனுடன் "தி பீஸ்மேக்கர்" , போன்ற டிரீம் ஒர்க்ஸ் எஸ்கேஜி ஸ்டுடியோவின் தொடர் வெளியீடுகளில் நடித்த பிறகு அவரின் வாழ்கை சிறப்பான தொடக்கத்தைப் பெற்றது. பின்னர் குளூனி வணிகரீதியில் மிதமான வெற்றி பெற்ற "பேட்மேன் ராபினில்" புதிய பேட்மேனாக (அடுத்து வருகிற வால் கில்மர், வெற்றி பெற்ற மைக்கேல் கியேட்டனாக மாறுகிறார்) நடித்தார், ஆனால் அது மோசமான தோல்வியைத் தழுவியது (குளூனியே அந்தப் படத்தை " எ வேஸ்ட் ஆப் மணி" என்பார்). 1998ஆம் ஆண்டில், அவர் ஜெனிபர் லோபஸுடன் இணைந்து "அவுட் ஆப் சைட்" என்ற படத்தில் நடித்தார். இது தான் இயக்குநர் ஸ்டீவன் சோடெர்பெர்க் உடன் இணைந்து பணியாற்றிய முதல் படமாகும். அவர் "இஆர்" உடன் கடைசி வார ஒப்பந்தத்தில் இருந்தபோது "திரீ கிங்ஸ்" என்ற படத்திலும் நடித்தார். 1999ஆம் ஆண்டில், குளூனி அவரின் திரைப்பட வாழ்வில் தொடர்ந்து ஈடுபடுவதற்காக "இஆரில்" நடிப்பதைக் கைவிட்டதுடன், இரண்டு சிறப்புக் கதாப்பாத்திரத்தில் நடிக்க இஆரின் 6வது மற்றும் 15வது இறுதிக் கட்டப் படப்பிடிப்பின்போது மீண்டும் வந்தார். "இஆரி" இல் இருந்து வெளிவந்த பிறகு, குளூனி "தி பர்பெக்ட் ஸ்டோர்ம்" மற்றும் "ஓ பிரதர், வேர் ஆர்ட் தௌ?" போன்ற பெருவாரியான ஹாலிவுட் வெற்றிப் படங்களில் நடித்தார். 2001ஆம் ஆண்டில், அவர் 1960ல் வெளிவந்த ரேட் பேக் என்ற திரைப்படத்தின் அதே பெயரிலான மறு பதிப்பான "ஓசென்ஸ் லெவன்" என்ற படத்திற்காக சோடெர்பெர்க் உடன் இணைந்து மீண்டும் பணியாற்றினார். இன்றளவும் இது, குளூனியின் வணிகரீதியான பெரும் வெற்றிப் படமாக இருப்பதுடன், 444 மில்லியன் அமெரிக்க டாலர்களை உலகம் முழுவதிலும் சம்பாதித்தது. இந்தப் படம் பல புதுமையான செய்திகளைக் கொண்டு 2004ஆம் ஆண்டில் "ஓசென்ஸ் டுவெல்" என்றும், மேலும் 2007ஆம் ஆண்டில் "ஓசென்ஸ் தெர்டின்" என்றும் இரண்டு புதிய பாகங்களாக குளூனி நடித்து வெளிவந்தது. 2001ஆம் ஆண்டில், குளூனி ஸ்டீவ் சோடெர்பெர்க் உடன் இணைந்து செக்ஷன் எய்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். 2002ஆம் ஆண்டில் அவர் தொலைக்காட்சித் தயாரிப்பாளரான சக் பேரிஸின் சுய சரிதத் தழுவலைக் கொண்டு, "கன்பெஷன்ஸ் ஆப் எ டேன்ஜரஸ் மைன்ட்" என்ற படத்தில் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் வணிகரீதியாக பெரிய வெற்றியடையாதபோதும், குளூனியின் இயக்கம் இலக்கியவாதிகள் மற்றும் ரசிகர்களால் விரும்பத்தக்க முறையில் பாராட்டப்பட்டது. 2005ஆம் ஆண்டில், குளூனி முன்னாள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரி ராபர்ட் பேர் மத்திய கிழக்கில் பிரதிநிதியாக இருந்தபோது அவரின் வாழ்க்கைக் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு "சிரியனா" என்ற படத்தில் நடித்தார். அதே வருடம் அவர் "குட் நைட், மற்றும் குட் லக்" ஆகிய படங்களைத் தயாரித்து, நடித்து, இயக்கினார். 1950ஆம் ஆண்டில் வெளிவந்த வார் ஆப் வோர்ட்ஸ் வித் செனட்டர் ஜோஸப் மெக்கார்த்தி என்ற படம் தொலைக்காட்சிப் பத்திரிகை எழுத்தாளர் எட்வர்ட் ஆர்.முர்ரோவ்ஸைப் பற்றிய படமாகும். குறைந்த அளவிலான வெளியீட்டினால் இரண்டு படங்களும் நடுநிலையான பாராட்டு மற்றும் போதுமான வருமானத்தைப் பெற்றுத் தந்தது. 2006 அகாடமி விருதுக்காக, சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த நேர்த்தியான திரைக்கதைக்காக "குட் நைட், மற்றும் குட் லக்" ஆகிய இரண்டு படங்களுக்காகவும், அதே போல் சிறந்த துணை நடிகராக "சிரியானா" படத்திற்காகவும் குளூனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. ஆஸ்கர் வரலாற்றில் ஒரு படத்தை இயக்கியதற்காகவும், அதே ஆண்டில் மற்றொரு படத்தில் நடித்ததற்காகவும் பரிந்துரைக்கப்பட்ட முதல் மனிதர் குளூனி ஆவார். முடிவில் அவர் "சிரியானாவில்" நடித்ததற்காக ஆஸ்கர் விருதைப் பெற்றார். குளூனி சோடெர்பெர்க்கின் இயக்கத்தில் "தி குட் ஜெர்மன்" என்ற திரைப்படத்தில் நடித்தார். அந்தப் படம் இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜெர்மனியைப் பற்றிய கதைக் கருவைக் கொண்டது. அக்டோபர் 2006ல் குளூனி அமெரிக்கன் சினிமா தி கியூ என்ற விருதைப் பெற்றதுடன், இந்த விருது "திரைத் துறையில் சலனப் படங்களின் கலைக்காக குறிப்பிடத்தக்க பங்களிப்பை" அளித்த அனைத்துக் கலைஞர்களுக்கும் பெருமை தேடித் தந்தது. ஜனவரி 22, 2008ல் "மைக்கேல் கிளேட்டன்" என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகராக குளூனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது, ஆனால் "தேர் வில் பி பிளட்" படத்திற்காக டேனியல் டே-லெவிஸியிடம் இந்த விருதை இழந்தார். "குட் நைட், மற்றும் குட் லக்" ஆகிய படங்களின் வெற்றிக்குப் பின், குளூனி திரைப்படங்களை இயக்குவதில் தனது அதிகப்படியான ஆற்றலை ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். குளூனி "லெதர்ஹெட்ஸ்" என்ற திரைப்படத்தை இயக்கி நடித்தார். குளூனி பேட்டியில் தன்னைத் தானே குறைத்து மதிப்பிடுவதுடன், ஏப்ரல் 2008ல் எஸ்டிவி இல் "லெதர்ஹெட்ஸ்" அவரின் அற்பமான படங்களில் ஒன்றாவதுடன், "அமைதிக்காக அழும்" படம் என்றும் சொன்னார். அதேப் பேட்டியில், ஜார்ஜ் குளூனி ஒரு நடிகர் அல்லது ஜார்ஜ் குளூனி ஒரு இயக்குனர் இரண்டில் எதை ஒப்புக்கொள்வீர்கள் என்று கேட்டபோது, அவர் " நான் எனும் எண்ணம் அங்கு நிறைய இருக்கிறது... ஆகையால் நான் இதை நடிகர்களிடம் எடுத்துச் செல்கிறேன்" என்றார். அடுத்து குளூனி தனது நண்பரான கிராண்ட் ஹெஸ்லவ் இயக்கத்தில் புகழ் பெற்ற நடிகர்களான இவான் மெக்கிரிகர் மற்றும் கெவின் ஸ்பேசி ஆகியோருடன் இணைந்து நடித்த "தி மென் உ ஸ்டேர் அட் கோட்ஸ்" என்ற படம் நவம்பர் 2009ல் வெளிவந்தது. நவம்பர் 2009ல் அவர் வெஸ் ஆன்டர்சனின் "பென்டாஸ்டிக் மிஸ்டர். ஃபாக்ஸ்" திரைப்படத்தில் மிஸ்டர். ஃபாக்ஸாக நடித்துச் செல்வாக்கு பெற்றார். குளூனி நடித்த மற்றொரு படமான "அப் இன் தி ஏர்" , தொடக்கத்தில் சொற்ப அளவில் வெளியிடப்பட்டதுடன், பின்னர் டிசம்பர் 25, 2009ல் பெருவாரியாக வெளியிடப்பட்டது. இந்தப் படம் "ஜூனோ" ஹெல்மர் ஜேஸன் ரெய்ட்மேனால் இயக்கப்பட்டது. குளூனி இந்தப் படத்தில் நடித்ததற்காக கோல்டன் குளோப் மற்றும் ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டார். குளூனி கிரியேட்டிவ் ஆர்டிஸ்ட்ஸ் ஏஜென்சி (சிஏஏ) இன் துணைத் தலைவரான பிரைன் லௌர்டால் விவரிக்கப்படுகிறார். "சௌத் பார்க்" படைப்பாளர்களான மேட் ஸ்டோன் மற்றும் டிரே பார்க்கர், குளூனியை "பிக் கே ஆல்ஸ் பிக் கே போட் ரைட்" என்ற படத்தில் வரும் ஸ்டோன் மார்ஷின் பகட்டான நாயான ஸ்பார்கின் குரலில் நடிக்க அழைத்தனர் என்பதுடன், அது சாதாரண நாயின் சப்தத்தைத் தவிர வேறு உரையாடலற்ற ஒரு கதாப்பாத்திரமாகும். பிறகு அவர் அந்தத் திரைப்படத்தில் நடித்தார் "South Park: Bigger, Longer & Uncut" . அந்தப் படத்தை உருவாக்கிய பார்க்கர் மற்றும் ஸ்டோன் போன்றோர்களின் வரலாறு, குளூனியை அவரின் கள்ளங்கபடமற்ற அரசியல் பார்வைக்காக பழித்துப் பேசியதாக இருந்தது "Team America: World Police" . இருந்தபோதிலும், குளூனி ஒருவேளை தான் இந்தப் படத்தில் ஏளனஞ் "செய்யப்படவில்லை" என்றால், தான் அவமதிக்கப்பட்டிருக்கலாம் என்று பிறகு சொன்னார். 78வது அகாடமி விருதில் இந்தப் படத்தை "தற்பெருமையுள்ளவரின் எச்சரிக்கை!" என்று குறிப்பிட்டு கேலி செய்த அவரது பேச்சு ஏற்றுக்கொள்ளும்படியாக இருந்தது. ஜூலை 8, 2005ல், குளூனி சின்டி கிராஃபோர்டின் கணவர் ரண்டே கெர்பர் உடன் இணைந்து லாஸ் வேகாஸில் ஒரு புதிய பொது ஆடலரங்க உணவு விடுதியை வடிவமைத்துக் கட்டுவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்தன. அதே ஆண்டு ஆகஸ்ட் 29ல், குளூனி, தான் லாஸ் ரம்ப்லாஸ் ரிஸார்ட் திட்டத்துடன் இணைந்திருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருந்தபோதும், அந்தத் திட்டம் விரும்பியபடி நிறைவேறவில்லை என்பதுடன், அந்த ரிஸார்ட் கட்டப்படுவதற்காக இருந்த சொத்து 2006 இல் விற்கப்பட்டது. அமெரிக்காவுக்கு வெளியில் பியட், நெஸ்பிரஸோ மற்றும் மார்டினி வெர்மௌத் போன்றவற்றின் தயாரிப்புகளுக்கான பிரதிநிதியாக பணியாற்றிய பிறகு, 2005 இன் தொடக்கத்தில் (செப்டம்பர் 2007 வரையிலும் கூட சென்று கொண்டிருந்தது) குளூனி தனது குரலை பட்வெய்சரின் விளம்பரங்களுக்குத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். செப்டம்பர் 2007ல், குளூனி வெனிஸ் திரைப்பட விழாவில் ஒரு படத்தை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தபோது, இத்தாலியப் பத்திரிகை எழுத்தாளர் அலெக்ஸ் மீனஹன், குளூனியிடம் எப்படி நீங்கள் மைக்கேல் கிளேட்டனுடனான திட்டத்திற்காக பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த சம்மதித்தீர்கள் எனக் கேட்டபோது அவர் தான் செய்தது நேர்மையானதுதான் என்று விளக்கினார். ஆகஸ்ட் 2006ல், குளூனி மற்றும் கிராண்ட் ஹெசால்வ் இருவரும் இணைந்து "ஸ்மோக் அவுஸ் பிக்சர்ஸ்" என்ற ஒரு புதிய நிறுவனத்தைத் தொடங்கினார்கள். செக்சன் எய்ட் தயாரிப்புகள், குளூனி மற்றும் இயக்குநர் ஸ்டீவன் சோடெர்பெர்க்கின் தயாரிப்பு நிறுவனம் போன்றவற்றில் ஹெசால்வ் தொலைக்காட்சித் தலைவராக இருந்தார். குளூனி உருவாக்கித் தயாரித்து வரும் தொலைக்காட்சித் தொடர் நிகழ்ச்சி "தி பால் ஆப் பாப்" எனப் பெயரிடப்பட்டுள்ளது. "பீப்பிள் மேகஸீனால்" வழங்கப்படும் "வாழும் கவர்ச்சியான ஆண்" என்ற விருதைப் பெற்ற மூன்று பேரில் ஒருவர் குளூனி என்பதுடன், இரண்டு முறை அதாவது முதலில் 1997ஆம் ஆண்டிலும், பிறகு மீண்டும் 2006ஆம் ஆண்டிலும் இவ்விருதைப் பெற்றார். ஜூலை 2008ல், குளூனியின் பேட்மேன் படம் திரையிடப்பட்டபோது மிகவும் மோசமான படம் என உருவப்படுத்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. "பேட்மேன் நல்ல நடிப்பிற்காக மனதை ஆட்கொண்டார் […] ஆனால் குளூனி அமைதியாகவும், பற்றின்றி இருந்ததுடன் தன்னைப் பற்றிய விழிப்புணர்வுடன் இருந்தார்." இந்த நடிகரிடமிருந்து எந்தக் கருத்தும் வெளிவரவில்லை. இருப்பினும் குளூனி தன் பேட்மேன் உருவப்படத்திற்காக பொதுமக்களால் பலமுறை கேலி செய்யப்பட்டார். குளூனி தாலியா பால்சமை (1989–93) மணந்தார். அவர் ஐந்து ஆண்டுகளாக பிரிட்டிஷ் அழகி லிசா ஸ்னோடனுடன் தெரிந்தும்/தெரியாமலும் உறவு வைத்திருந்தார். பின்னர் சாரா லார்ஸன் அவரின் பெண் நண்பரானார்; அந்தச் சமயத்தில், குளூனி தான் மீண்டும் திருமணம் செய்யப்போவதில்லை என்று கூறினார். 2009க்கு முன்னர், குளூனி பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான ஸல்பிகர் அலி பூட்டோவின் பேத்தியும், படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான பெனாசீர் பூட்டோவின் சகோதரியின் மகளுமான பாத்திமா பூட்டோவுடன் இரகசியமாக உறவு வைத்திருந்தார் என இந்தியச் செய்தித்தாள்கள் ஊகம் தெரிவித்தன. 2009க்குப் பின்னர், குளூனி எலிசாபெட்டா கேனலிஸ் உடன் உறவு வைத்துக் கொள்ளத் தொடங்கினார். இருப்பினும் அவர் திருமணம் தனக்கு ஏற்றதல்ல என்பார். செப்டம்பர் 21, 2007ல், நியூ ஜெர்சியில் உள்ள வீகாவ்கனில் குளூனி மற்றும் அவரின் பெண் நண்பரான சாரா லார்சன் இருவரும் இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்தனர். குளூனியின் இருசக்கர வாகனம் ஒரு காரினால் இடிக்கப்பட்டது. அந்தக் காரின் ஓட்டுநர் இடதுபுறமாகச் சமிக்கை செய்துவிட்டு பிறகு திடீரென வலது புறமாகத் திரும்பியதால் தனது இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டதாக குளூனி தெரிவித்தபோது, அந்தக் காரின் ஓட்டுநர் குளூனி வலது பக்கத்தில் கடக்க முயற்சி செய்ததாகத் தெரிவித்தார். விலா எலும்பு முறிவு, தோல் பகுதிகளில் வெடிப்பு, மூளையில் சேதம் போன்றவற்றுடன் மூளையின் வெளிப்புற அடுக்கில் ஏற்பட்ட சேத்த்தினால் உண்டான துன்பங்களாலும் குளூனி அவதிப்பட்டார். அவர் நியூ ஜெர்சியில், வடக்கு பெர்கனில் உள்ள பாலிசேட்ஸ் மருத்துவ மையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். அக்டோபர் 9, 2007ல், இருபத்தி நான்கிற்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் உள்நாட்டு சட்டத்தின் விதிமுறைகளுக்குப் புறம்பாக குளூனியின் மருத்துவக் குறிப்புகளைப் பார்த்ததற்காக சம்பளம் இல்லாமல் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். குளூனி அவசரமாக மருத்துவப் பதிவேட்டின் விவகாரத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டதுடன், யாரையும் தணடிக்கக் கூடாது என்றும் சொல்லியிருந்தார். "அதைப்பற்றி கேள்விப்படுவது இதுதான் முதன் முறையாகும், மேலும் நான் நோயாளிகளைப் பற்றிய உண்மை இரகசியமானது என்று பெரிதும் நம்புகிறேன், மருத்துவப் பணியாளர்களை நீக்காமல் இந்தப் பிரச்சனை முடிவு பெறும் என்று நான் நினைக்கிறேன்" என்று குளூனி கூறினார். குளூனி வியட்நாமின் கறுப்பு-ரோமங்களாலான 280-பவுண்டு எடையுள்ள தொந்தி வயிறுடன் கூடிய பன்றியை "மேக்ஸ்" எனப் பெயரிட்டு வளர்த்ததுடன், அந்தப் பன்றி அவருடன் பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தது. குளூனி முதலில் அதைத் தன் முன்னாள் பெண் நண்பரான கெல்லி பிரஸ்டனுக்குப் பரிசாகத் தந்தார் ஆனால் அவர் அவர்களின் உறவு முறிந்த பிறகு மேக்ஸைக் குளூனியிடம் ஒப்படைத்துவிட்டார். டிசம்பர் 1, 2006ல் மேக்ஸ் இறந்தது. அபாட் மற்றும் கோஸ்டெலோ போன்ற புகழ் வாய்ந்த நகைச்சுவைக் குழுவுக்குப் பின்னால், பட் மற்றும் லோ என்ற இரண்டுப் பெரிய வகை நாய்களை குளூனி வைத்திருந்தார். ஒரு நாய் நச்சுப் பாம்பின் கடிக்கு உள்ளானதால், இரண்டு நாய்களும் இறந்துபோயின. ஏப்ரல் 4, 2008ல் "லெதர் ஹெட்ஸைச்" சுற்றியுள்ள முரண்பாடுகளால் குளூனி அமெரிக்கச் சங்கத்தின் எழுத்தாளர் பதவியை ராஜினாமா செய்தார் என்ற செய்தி "வெரைட்டி"யில் வெளியிடப்பட்டது. அவர் அந்தப் படத்தில் எழுத்தாளராக முழு பங்காற்றினார் என்பதோடு "இரண்டு காட்சிகள்," தவிர என்பதுடன், 17 ஆண்டுகளாக அந்தத் திட்டத்திற்காக வேலை செய்து வரும் டன்கேன் பிரான்டிலே மற்றும் ரிக் ரெய்லி ஆகியோரை எழுதக் கேட்டுக்கொண்டதாக இயக்குனர், தயாரிப்பாளர், மற்றும் சினிமா நட்சத்திரமான குளூனி சொன்னார். நம்பிக்கை வாக்கெடுப்பில், குளூனி 2-1 என்ற கணக்கில் தோற்றதுடன், இதன் காரணமாக அதிரடியாகச் சங்கத்திலிருந்து வெளியேற முடிவெடுத்தார். குளூனி தற்போது ஒரு "வருவாய் தொடர்பான உள்ளீடற்ற நிலையிலுள்ள" உறுப்பினர் அல்லாதவர், அதன் அர்த்தம் அவர் தனது வாக்களிக்கும் உரிமையை இழக்கிறார் என்பதுடன், டபிள்யூஜிஎ சட்டத்தின்படி அவர் நிறுவனத்தை நடத்த இயலாது அல்லது உறுப்பினர்களுக்கான சந்திப்பில் கலந்து கொள்ள இயலாது. அவர் தனது கடமைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும், ஆனால் அவர் டபிள்யூஜிஎ வின் "முக்கியமல்லாத " செயல்பாடுகளான அரசியல் சார்ந்த மற்றும் சட்டமன்றப் பொதுக்கூட்ட முயற்சிகள் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றலாம். அவரின் முடிவு மாற்ற இயலாதவை. முன்னதாக, "குட் லக் மற்றும் குட் நைட்" ஆகியவற்றின் எழுத்தாளரான குளூனி அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு வாங்கியபோது, அவர் டபிள்யூஜிஎ வின் செயலாற்றும் உறுப்பினராக இருந்தார். அவர் தற்போது கிராண்ட் எஸ்லவுடன் இரண்டு படத்தொகுப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறார். மைக்கேல் சாலமன் தன்னுடைய கட்டுரையில் புகழ் பெற்றவர்களின் உரையாடல்களை எழுதுகிறார்: ஜார்ஜ் குளூனி உடன் நெருக்கமானதை, தனது அலுவலக எழுத்தாளரிடம் (2/3/03) பிரபலப்படுத்துகிறார் "அதே நாளில் நாம் பேசினோம், குளூனி திரைப்பட விருதுகளுக்கான விருந்தில் இருந்ததுடன், தகுதியற்ற சார்டன் ஹெஸ்டனைப் பற்றிப் பொதுமக்கள் குறிப்பிடத்தக்க முறையில் என்ன புரிந்து கொண்டார்கள் என்று அவர் எடுத்துக் காட்டியது தலைப்புச் செய்தியாகக் குறிப்பிடப்பட்டது. சங்கக் குழு எழுத்தாளர் லிஸ் ஸ்மித் முதலில் குறிப்பட்டதுபோல், குளூனி தேசிய வாரிய புனராய்வில் பேசிக் கொண்டிருந்தபோது சொன்னார்: "சார்டன் ஹெஸ்டன் இன்று தான் மீண்டும் அல்சைமரால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்." இதைப்பற்றி விவரிக்கையில், குளூனி சொல்கிறார், அது ஒரு வேடிக்கையானப் பேச்சு... அவர்கள் அதைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். நான் சொன்னது என்ன வென்றால் 'என்ஆர்ஏவின் தலைவர் இன்று அறிவிக்கிறார்...' (படைப்பாளி) மைக்கேல் மூர் அந்த விருதைப் பெற்றுவிட்டார் என்று தெரிவித்த்தாகச் சொன்னார். இருந்த போதிலும், பள்ளி படப்பிடிப்பு முடிந்த பின் சார்டன் ஹெஸ்டன் அவரின் தலைக்குமேல் துப்பாக்கியைக் காட்டியதுடன், ஆவணப்படத்தில், உண்மையில் மனித இனம் சார்ந்த வேற்றுமையில் ஒற்றுமை காரணமாக நாம் வன்முறையுடன் கூடிய பிரச்சனைகளை அமெரிக்காவில் கொண்டுள்ளோம் என்றார். ஏதாவது தட்டினால் கிடைக்கும் என்பதைப் போல குளூனி எதையாவது எடுத்துக் கொள்ளப் போகிறார் என நான் நினைக்கிறேன் என்றார். அது ஒரு வேடிக்கையானது. சில மனிதர்கள் பெரிய வரலாறாக மாற நினைத்தார்கள்." அந்த நடிகர் தன் கருத்துக்கு அப்பால் வெகுதொலைவில் சென்ற பிறகு கேட்கப்பட்டபோது, இவ்வாறு பதிலளித்தார் "நான் கவலைப்படவில்லை. சார்டன் ஹெஸ்டன் தேசிய அளவிலான துப்பாக்கிச் சங்கத்தின் தலைவர்; அவரைப் பற்றி யார் எதைச் சொன்னாலும் அதற்கு அவர் தகுதியானவர்" என்றார். குளூனியின் அத்தையான ரோஸ்மேரி குளூனியைப் பற்றி ஹெஸ்டன் குறிப்பிடும்போது, " சில நேரங்களில் வகுப்பறை ஒரு தலைமுறையைக் கடந்தது என்பதையே இது காட்டுகிறது," என்று தமக்குத் தாமே சொல்லிக் கொள்வார். ஹெஸ்டன் குளூனியைப் பற்றி நகைச்சுவையாகக் குறிப்பிடுகிறார்: "அவரை எனக்குத் தெரியாது-அவரை ஒருபோதும் சந்தித்ததில்லை, அவருடன் ஒருபோதும் பேசியதில்லை, ஆனால் ஜார்ஜ் குளூனிக்காக வருத்தம் தெரிவிக்கிறேன்-ஒரு நாள் அவர் அல்ஸைமர் நோயைப் பெறலாம். இரண்டாம் உலகப்போரில் எனது நாட்டுக்கு நான் சேவை செய்திருக்கிறேன். அதைத் தொடர்ந்து நான் வாழ்ந்தேன்-இந்த மனிதரிடமிருந்து வரும் சில கெட்ட வார்த்தைகளைத் தொடர்ந்தும் என்னால் வாழ முடியும் என நினைக்கிறேன்" என்றார். அதன் பிறகு குளூனி தான் ஹெஸ்டனிடம் கடிதத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்காக ஹெஸ்டனின் மனைவியிடமிருந்து உடன்பாடான பதிலைப் பெற்றதாகவும் சொன்னார். குளூனி ஒரு சுய வரையறையுள்ள அரசியல் சார்ந்த நடுநிலையாளர். ஈராக் போரைப் பற்றி பேசும்போது: "உங்களுடைய எதிரியைப் போரின் மூலம் தோற்கடிக்க இயலாது; பதிலாக ஒரு தலைமுறை மக்கள் முழுவதையும் பழிவாங்கவே உருவாக்குகிறீர்கள். இந்த நாட்களில் யார் பதவியில் இருக்கிறார் என்பதே முக்கியமாகும். இந்தத் தருணத்திலிருந்து அவர்கள் நம்முடையவர்கள்-குறைந்த பட்சம் சிறிது காலத்திற்காவது. நம்முடைய எதிரிகள் தங்களின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கார் குண்டுகள் மற்றும் தற்கொலைப்படைத் தாக்குதலை மேற்கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் வெற்றி பெறுவதற்கு வேறு வழியில்லை... (ரம்ஸ்வெல்ட்) இந்தச் சண்டை வெற்றி பெற மட்டுமே, ஆனால் குறிப்பிட்ட எதற்காகவும் அல்ல எனக் கருதுவார் என நான் நம்புகிறேன். நாம் யாரையும் எங்கேயும் தோற்கடிக்க முடியாது. ஜாக் அப்ரமஃப் ஆதரவு தேடுவதை பொது இடத்தில் குறை கூறியதற்காக குளூனி அடையாளம் காணப்பட்டார். ஜனவரி 16, 2006ல், "சிரியானா" படத்தில் துணைக் கதாப்பாத்திரத்தில் சிறந்த முறையில் நடித்ததற்காக கோல்டன் குளோப் விருதை ஏற்றுக்கொண்ட பேச்சின்போது, குளூனி தன் பேச்சை இடையில் நிறுத்தியதுடன் அப்ரமஃப்பிற்கு ஏளனமாய் நன்றி தெரிவிக்கும் முன் இதைச் சேர்த்துக் கொண்டார், "யார் அவருக்கு கிட் ஜாக் என்ற வார்த்தையுடன் ‘ஆஃப்’ என்று முடியும் கடைசி வார்த்தையில் பெயர் வைத்தது? அதில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை அதனால்தான் அவர் மகிழ்ச்சியற்று காணப்படுகிறார்!" என்றார். 2008ஆம் ஆண்டில் குளூனியை அரசியல் கட்சி அலுவலகம் ஒன்றை அவரது சொந்த மாநிலமான கென்டக்கியில் தொடங்கச் சம்மதிக்க வைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், சிறுபான்மைத் தலைவர் மிட்ச் மெக்கொன்னலுக்கு எதிராக அமெரிக்க சட்டமன்ற மேலவைக்கான குளூனியின் ஆதரவாளரை இணைத்துக் கொண்டு பேச்சு வார்த்தையும் நடத்தப்பட்டது. அதன் பதிலாக, குளூனி சொன்னார்: "அலுவலகம் தொடங்குவதா? இல்லை. நான் பல பெண்களுடன் தூங்குகிறேன், நான் பல்வேறு போதை மருந்துகளை எடுத்துக் கொண்டேன், மேலும் நான் பல விருந்துகளுக்குச் செல்ல வேண்டியுள்ளது" என்றார். 2008 அதிபர் தேர்தலில் ஒபாமாவின் தேர்தல் பிரச்சாரத்தின் போது குளூனி அதிபர் பாரக் ஒபாமாவை ஆதரித்தார். "நட்சத்திர அந்தஸ்தைப் பயன்படுத்தி டார்பரில் நெருக்கடி நிலைக்கு வித்திடும்" உலகின் 100 செல்வாக்குள்ள மனிதர்களில் ஒருவராக இவரது பெயர் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. 2006ஆம் ஆண்டில் டார்பருக்கு இவரின் முதல் பயணத்திற்குப் பிறகு, குளூனி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றைத் தயாரிக்க டார்பருக்கு தனது தந்தை நிக்குடன் ஒரு பயணம் மேற்கொண்டதுடன், அமெரிக்காவில் தனது செயல்களுக்காக வாதாடினார். நூலாசிரியர் இஸ்மாயில் பியா குறிப்பிடும்போது: "குளூனி தனது புகழைப் பயன்படுத்தி யாரெல்லாம் நேர்மையைக் கருதாமலும், அறிவுக்கூர்மையில்லாமலும் மேலும் ஆழ்ந்த பொறுப்பின்றி தன்னலத்துடன் பேசுகிறார்களோ அவர்களிடம் இதயப்பூர்வமாகப் பேசுகிறார் என்கிறார். குளூனி டார்பர் முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையில் துடிப்புடன் வாதாடிக் கொண்டிருக்கிறார். அவரின் முயற்சிகள் ஓப்ராவின் அத்தியாயம் மற்றும் ஏப்ரல் 30, 2006ல் வாஷிங்டன், டி.சி யில் சேவ் டார்பரைப் பற்றி பேசியது ஆகியவற்றை உள்ளடக்கியது. 2006ஆம் ஆண்டில், அவர் அந்தப் பிரச்சனையை அனைவரும் அறியும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றார். ஏப்ரலில், அவர் டார்பரில் தஞ்சம் புகுந்தவர்களின் அவல நிலையை வெளிப்படுத்தும் வகையில் படம் ஒன்றை உருவாக்குவதற்கு தன் தந்தையுடன் பத்து நாட்கள் சாத் மற்றும் சூடானில் செலவழித்தார். செப்டம்பரில், அவர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழு முன்னிலையில் நோபல் பரிசு வென்ற எலை விசைல் உடன் பேசியதோடு, ஐக்கிய நாடுகளை முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுவதோடு டார்பர் மக்களுக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். டிசம்பரில், அவர் டான் சேடில் மற்றும் இரண்டு ஒலிம்பிக் வெற்றியாளர்களுடன் சீனா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு ஒரு பயணம் மேற்கொண்டதோடு, சூடான் அரசுக்கு நெருக்கடி தருமாறு இரண்டு அரசாங்கத்தையும் கேட்டுக் கொண்டார். 2006ஆம் ஆண்டில், குளூனி மற்றும் அவரின் தந்தையும் பத்திரிகையாளருமான நிக் குளூனி இருவரும் டார்பருக்கு பயணப்பட்டதுடன், "எ ஜெர்னி டு டார்பர்" என்ற ஆவணப்படம் ஒன்றை எடுத்து அமெரிக்கா, யுனைட்டட் கிங்டம் மற்றும் பிரான்ஸ் போன்ற நாட்டின் கேபிள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பச் செய்தனர். 2008ஆம் ஆண்டில், இது டிவிடியில் வெளியிடப்பட்டதுடன் அதன் விற்பனையிலிருந்து கிடைக்கும் தொகையை சர்வதேச பாதுகாப்புக் குழுவிற்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. பெரும் அட்டூழியங்களைத் தடுத்து நிறுத்துவதற்கு உலக நாடுகளின் கவனத்தை ஈர்ப்பதுடன், ஆதாரத்தைப் பெற்று பிராட் பிட், மேட் டேமன், டான் செடல், மற்றும் ஜெர்ரி வெயின்டிராப் ஆகியோருடன் இணைந்து செயல்படும் நாட் ஆன் அவர் வாட்ச் என்ற அமைப்பில் குளூனி சேந்தார். குளூனி "சேன்ட் அன்ட் சாரோ" என்ற ஆவணப்படத்தின் கதையை எழுதியதோடு, அதை உடனிருந்து தயாரித்தார். மார்ச் 25, 2007ல், அவர் ஒளிவுமறைவில்லாத கடிதம் ஒன்றை ஜெர்மனியின் முக்கிய அமைச்சரான ஏஞ்சலா மெர்க்கலுக்கு அனுப்பியதுடன், ஐரோப்பிய சங்கத்தை ஐக்கிய நாடுகளின் தீர்மானத்திற்கு பதில் அளிப்பதற்கும், ஒமர் அல்-பஷீரின் தோல்விக்கு எதிராக பிராந்தியத்தில் "முடிவான நடவடிக்கை" எடுப்பதற்கும் அழைத்தார். குளூனி டார்பரில் தொடர்ந்து வரும் நெருக்கடி நிலையை நிறுத்த உதவுமாறு உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களிடமும் "டார்பர் நௌ" என்ற ஆவணப்படத்தில் அதிரடியாகத் தோன்றி அறைகூவல் விடுத்தார். டிசம்பர் 13, 2007ல், ரோமில் குளூனி மற்றும் தனது தோழரும் நடிகருமான டான் செடல் இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கும் அறிஞர்களால் அமைதிக்கான சிகரம் விருது வழங்கப்பட்டது. அவருடைய ஏற்றுக் கொள்ளப்பட்ட பேச்சினால் குளூனி "டான் மற்றும் நானும்... தோல்வியடைந்தபோதிலும் இங்கு உங்கள் முன்னால் நிற்கிறோம். ஒரு எளிய உண்மை என்னவென்றால் டாபரில் அட்டூழியம் நடைபெறும்போது... அந்த மக்கள் வாழ்க்கை மேம்பாட்டிற்காக பல ஆண்டுகளுக்கு முன்னால் அவர்கள் வாழ்ந்த இடங்களைக் காட்டிலும் வெகு தொலைவில் சென்றுவிடுகின்றனர் " என்று சொன்னார். ஜனவரி 18, 2008ல், ஐக்கிய நாடுகள் குளூனியை ஐக்கிய நாடுகளின் அமைதித் தூதுவராக நியமித்ததுடன், ஜனவரி 31லிருந்து செயல்படுத்தப்படுவார் என அறிவித்தது. பிப்ரவரி 2009ல், அவர் நியூயார்க் டைம்ஸின் எழுத்தாளர் நிக்கோலஸ் கிரிஸ்டாஃப் உடன் காஸ் பெய்டா, சேட் ஆகியவற்றைப் பார்வையிட்டார். ஜக்திஷ் டைட்லெர் ஜக்திஷ் டைட்லெர் (ஜனவரி 11, 1944 அன்று ஜக்திஷ் கபூராக பிறந்தார்) சர்ச்சைக்குரிய இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி மற்றும் இந்திய பாராளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனுக்கான மத்திய அமைச்சராக இருந்தார், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது தில்லியில் வசித்த சீக்கிய சமூகத்துக்கு எதிராக கொலைவெறி கும்பலை ஏவியதற்கும் முன்னின்று நடத்தியதற்கும் பொறுப்பாளியாக அவர் பதவியைத் துறந்தார், இந்தக் குற்றச்சாட்டை அவர் மறுக்கிறார், இருந்தாலும் 'நிச்சயமற்ற சாத்தியக்கூற்றை' சுட்டிக்காட்டி அதிகாரப்பூர்வ விசாரணை கமிஷன் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து அவர் பதவியை இராஜினாமா செய்தார். டைட்லெர் பிறந்தது (ஆகஸ்ட் 17, 1944 அன்று ஜக்திஷ் சிங் கபூராக) குஜ்ரன்வாலாவில் (இப்போது பாகிஸ்தானில் இருக்கிறது), அவரை வளர்த்த ஜேம்ஸ் டக்ளஸ் டைட்லெரின் நினைவாக அவர் தன்னுடைய இறுதிப் பெயரை மாற்றி வைத்துக் கொண்டதாகத் தெரிகிறது. அவர் சிறப்புமிக்க கல்வியாளர் ஜேம்ஸ் டக்ளஸ் டைட்லெரால் வளர்க்கப்பட்டார், இவர் தில்லி பொதுப் பள்ளியில் மற்றும் சம்மர் ஃபீல்ட்ஸ் பள்ளி உட்பட பலப் பொதுப் பள்ளிகளை உருவாக்கியுள்ளார். ஜேம்ஸ் டக்ளஸ் டைட்லெர் அவர்களால் மிகவும் தூண்டப்பட்டுள்ளார் அதனால் அவருக்கு தன்னுடைய நன்றியினைத் தெரிவிக்கும் விதமாகவும் கிறித்துவ மதத்திற்கு மாறியதன் காரணமாகவும் அவர் அந்தப் பட்டப்பெயரைப் பெற்றார். அது முதல் ஜக்திஷ் கபூர், ஜக்திஷ் டைட்லெராக அழைக்கப்படுகிறார். காங்கிரஸின் இளைஞர் அமைப்பில் உற்சாகத்துடன் வேலைசெய்துவந்த இவர் சஞ்சய காந்தியின் சீடராவார், அவர் முதன் முறையாக 1980 ஆம் ஆண்டில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் அவர் விமானப் போக்குவரத்துத் துறைக்கும், பின்னர் ஊழியர் துறைக்கும் மத்திய அமைச்சராகப் பணிபுரிந்தார். 1991 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு சாலை போக்குவரத்துகான மத்திய மாநிலங்களுக்கான அமைச்சராக இருந்தார். 2004 ஆம் ஆண்டில் அவர் மீண்டும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை மீதான இந்திய அரசாங்கத்தின் நானாவதி விசாரணைக் குழு அதிகாரப்பூர்வ அறிக்கை, டைட்லெருக்கு எதிராக 'நம்பத்தகுந்த ஆதார'த்தைக் கண்டறிந்து, தாக்குதல்களை ஒருங்கிணைத்ததில் 'அநேகமாக' அவருடைய பங்கிருந்ததாகக் கூறியது. ஆனாலும் திட்டவட்டமான சாட்சியங்கள் இல்லாததால் ஜக்திஷ் டைட்லெரை தண்டிக்க வேண்டாம் என்று இந்திய அரசாங்கம் முடிவுசெய்தது. டைட்லெர் தான் குற்றமற்றவர் என்று கோரினார் மேலும் அது ஒரு தவறான அடையாளப்படுத்தல் என்று தொடர்ந்து கூறி வந்தார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட முந்தைய எட்டு விசாரணைக் குழுக்களிலும் டைட்லெரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆகஸ்ட் 10, 2005 அன்று மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதற்கான அவருடைய இராஜினாமா, இந்தியப் பிரதமர், மன்மோகன் சிங் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட சஜ்ஜன் குமார், ஜக்திஷ் டைட்லெர், ஆர்.கே.ஆனந்த் மற்றும் ஏனையர்களுக்குத் தில்லி மற்றும் அதன் சுற்று வட்டார தொகுதிகளில் இந்திய பாராளுமன்ற தேர்தல்களுக்கான வேட்பாளர்களாக ஏப்ரல் 2004 ஆம் ஆண்டில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் சிவில் லிபர்டீஸ், தி பீப்பிள்ஸ் யூனியன் ஃபார் டெமாகிரெடிக் ரைட்ஸ் மற்றும் சிடிஸன்ஸ் ஜஸ்டிஸ் கமிட்டி உட்பட பல்வேறு தனிப்பட்ட விசாரணைக் குழுக்கள் கலவரத்துக்கு உறுதுணையாக இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் சஜ்ஜன் குமார், ஆர்.கே.ஆனந்த், தர்ஷன் ஷாஸ்த்ரி மற்றும் எச்.கே.எல்.பகத் ஆகியோர் அடங்குவர். இப்போது அந்த கலவரங்களை விசாரித்துக் கொண்டிருக்கும், ஜி.டி.நானாவதி குழு, சஜ்ஜன், ஆனந்த் மற்றும் எச்.கே.எல்.பகத்தின் செயல்பாடுகளின் விவரங்களுடன் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து இப்போதும் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்டிருக்கிறது. அயல்நாடு வாழ் இந்தியர் நலனுக்குக்கான தனி பொறுப்புடைய மாநிலங்களுக்கான மந்திரியாக ஆனார் டைட்லெர், நானாவதி கமிஷனின் அறிக்கையைத் தொடர்ந்து அவர் அந்தப் பதவியை கட்டாயத்தின் பேரில் துறந்தார். ஜக்திஷ் டைட்லெருக்கு எதிரான சாட்சிகள் அவ்வளவாக உறுதிபடைத்ததாக இல்லாததால் அவர் வேறு பிரிவில் இருப்பதாக நீதிபதி ஜி.டி.நானாவதி கூறினார். 2004 ஆம் ஆண்டில் என்டிடிவியில் டைட்லெர் மற்றும் வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்காவின் ஒரு பேட்டியில், பூல்கா தன்னை மிரட்டி வருவதாகவும் தன்னிடமிருந்து பணம் பறிக்க முயற்சிப்பதாகவும் டைட்லெர் குற்றஞ்சாட்டினார். என்டிடிவி செய்தி சானலில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளில் அவதூறான கருத்துகளை வெளியிடுவதாகக் குற்றஞ்சாட்டி டைட்லெருக்கு எதிராக லுதியானா நீதிமன்றத்தில் ஒரு வழக்கை பூல்கா பதிவுசெய்துள்ளார். 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க சட்டப்படியான போராட்டத்தை முன்னின்று நடத்தும் ஒரு மூத்த வழக்கறிஞராக அறியப்பட்டுள்ளார் ஹர்விந்தர் சிங் பூல்கா. பூல்காவால் பதிவு செய்யப்பட்ட அவதூறு வழக்கில் சமீபத்தில் டைட்லெருக்கு பிணை வழங்கப்பட்டது.. ஜக்திஷ் டைட்லெருக்கு எதிரான சாட்சிகள் அவ்வளவாக உறுதியாக இல்லை என்று நீதிபதி ஜி.டி.நானாவதி சிஎன்என்-ஐபின் பேட்டியில் கூறினார்.. அக்டோபர் 31, 1984 அன்று இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை நடத்த திட்டமிட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜக்திஸ் டைட்லெருக்கு எதிரான எல்லா வழக்குகளையும் நவம்பர் 2007 ஆம் ஆண்டில் இந்திய மத்திய புலானாய்வுத் துறை (சிபிஐ) மூடியது. சிபிஐ தில்லி நீதிமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது அதில், 1984 ஆம் ஆண்டுகளின் போது கொலைநோக்கத்துடனான கும்பல்களை வழிநடத்தியதாக டைட்லெருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிபடுத்த எந்த சான்றும் சாட்சியும் காணப்படவில்லை என்று தெரிவித்தது. அப்போதைய இந்திய பாராளுமன்ற உறுப்பினரான ஜக்திஷ் டைட்லெர், தன்னுடைய பாராளுமன்ற தொகுதியான தில்லி சதாரில் மிகக் "குறைந்த" எண்ணிக்கையிலான சீக்கயர்களே கொல்லப்பட்டதாகவும் இது தன்னுடைய அபிப்பிராயப்படி அப்போது ஆட்சியில் இருந்த இந்தியாவின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னுடைய செல்வாக்கு குறைத்து மதிப்பிடப்படுவதாகவும் தன்னுடைய ஆதரவாளர்களிடம் புகார் செய்துகொண்டிருந்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. எனினும் டிசம்பர் 2007 ஆம் ஆண்டில், கலிஃபோர்னியாவில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு சாட்சியாளர், இந்தியாவிலுள்ள பல தனியார் தொலைக்காட்சிகளில் தோன்றி மத்தியப் புலனாய்வுத் துறையினரால் தான் எப்போதுமே தொடர்பு கொள்ளப்படவில்லை என்று கூறினார். இந்தியாவின் பிரதான முக்கிய எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி), இந்திய பாராளுமன்றத்தில் விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு பொறுப்பேற்றிருக்கும் அமைச்சரிடமிருந்து கோரியது. எனினும் சிபிஐ துறைக்கு பொறுப்பேற்றிருக்கும் தனிநபர்களுக்கான மாநில அமைச்சரான சுரேஷ் பசௌரி, பாராளுமன்ற அமர்வில் இருந்தபோதிலும் அறிக்கையை வெளியிட மறுத்துவிட்டார். டிசம்பர் 18, 2007 அன்று தில்லி நீதிமன்றத்தின் "கூடுதல் முதன்மைப் பெருநகர்க் குற்றவியல் நடுவர்" சஞ்சீவ் ஜெயின், தன்னுடைய நீதிமன்றத்தில் சிபிஐ அளித்த ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்திய அறிக்கையைத் தொடர்ந்து இவர் இந்த வழக்கை முன்னர் தள்ளுபடி செய்திருந்தார்; ஜக்திஷ் டைட்லெருக்கு எதிரான 1984 ஆம் ஆண்டு சீக்கியருக்கு எதிரான கலவரங்களுக்குத் தொடர்பான வழக்குகளை மீண்டும் நடத்துமாறு இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டார். டிசம்பர் 2008 ஆம் ஆண்டில் ஜஸ்பிர் சிங் மற்றும் சுரிந்தர் சிங் என்னும் இரு சாட்சியங்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருமாறு இரு உறுப்பினர் சிபிஐ குழு நியூ யார்க்குக்கு அனுப்பப்பட்டது. அந்த இரு சாட்சியங்களும், கலவரங்களின் போது தாங்கள் ஜக்திஷ் டைட்லெர் ஒரு கும்பலுக்குத் தலைமையேற்று இருந்ததைப் பார்த்ததாகத் தெரிவித்தனர் ஆனால் தங்கள் உயிருக்கு ஆபத்து வரும் என பயந்து அவர்கள் இந்தியா வர விரும்பவில்லை. ஜக்திஷ் டைட்லெர் தொடர்புடைய வன்முறைகள் வழக்கின் மீதான விசாரணையின் இறுதி அறிக்கையை மார்ச் 2009 ஆம் ஆண்டில் சிபிஐ வழங்கியது, பிஜேபி செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவெட்கார், "தேர்தலுக்கு முன்னரான இத்தகைய நற்சான்றிதழ்" சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறிப்பாகத் தெரிவிப்பதாக, குற்றஞ்சாட்டினார். நூற்றுக்கணக்கான சீக்கிய கண்டன ஆர்ப்பாட்டக்காரர்கள் கர்கர்டூமா நீதிமன்றங்களுக்கு வெளியில் கூடி டைட்லெர் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இதர மூத்த தலைவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகளுக்காக பதினோரு விசாரணைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன. பொதுமக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் வாக்குமூலங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அனைத்து பதினோரு விசாரணைக் கமிஷன்களிலும் ஜக்திஷ் டைட்லெருக்கு எதிராக யாராலும் எந்த வாக்குமூலமும் அளிக்கப்படவில்லை. நீதிபதி நானாவதி குழு என்றழைக்கப்பட்ட பன்னிரெண்டாவது கமிஷன் ஒன்றும் அமைக்கப்பட்டது. இதில் இரண்டு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. 1. ஒன்று எஸ்.சுரேந்தர் சிங் அவர்களால் வழங்கப்பட்டது, பின்னர் அவர் அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டார், அங்கு அவர் கூறியதாவது, தனக்கு குர்மிகியைத் தவிர வேறு மொழிகள் தெரியாத காரணத்தால், வழக்கறிஞரான புல்கா வஞ்சகமாகத் தன்னுடைய கையெழுத்தைப் பெற்றுக்கொண்டார் என்றும் தான் ஜக்திஷ் டைட்லெரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்றும் கூறினார். 2. மற்றொரு வாக்குமூலம் எஸ்.ஜஸ்பிர் சிங் அவர்களால் வழங்கப்பட்டது, இங்கு அவர் கூறும்போது, நவம்பர் 3, 1984 அன்று, அதாவது கலவரங்கள் நடந்துமுடிந்து மூன்று நாட்களுக்குப் பின்னர், தான் ஜக்திஷ் டைட்லெரை இரவு 11 மணிக்கு, கிங்க்ஸ்வே கேம்பின், டி.பி. மருத்துவமனையின் வாயிலில் பார்த்ததாகவும், அவர் "என்னுடைய தொகுதியில் போதிய அளவு சீக்கியர்கள் கொல்லப்படாததால் தலைவர்களின் பார்வையில் நான் தாழ்ந்திருக்கிறேன் மற்றும் என்னுடைய பதவிநிலைக்கு ஊறு ஏற்பட்டுள்ளது" என்றும் பேசியதைத் தான் கேட்டதாகவும் சொன்னார். மேலும் தான் எஸ்.சுச்சா சிங் வீட்டில் தங்கியிருந்ததாகவும் அவரிடம் எல்லாவற்றையும் சொன்னதாகவும் கூறினார். (ஜஸ்பிர் சிங்கின் வாக்குமூலம் எங்களிடம் இருக்கிறது) 3. இது ஒரு பொய்யான வாக்குமூலம் ஏனெனில் அவர் எஸ்.சுச்சா சிங் வீட்டில் எப்போதுமே தங்கியிருக்கவில்லை, ஏனெனில் எஸ்.சுச்சா சிங்கும் சிபிஐயிடம் ஒரு வாக்குமூலத்தை அளித்துள்ளார், அதில் அவர், ஜஸ்பிர் சிங்கைத் தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். எஸ்.சுச்சா சிங்கின் ஒரு பத்திரிக்கை செய்தியும் இருக்கிறது, அதில் அவர் ஜஸ்பிர் சிங்கைப் பற்றி தான் இதுவரை கேள்விப்படவும் இல்லை அல்லது பார்த்ததும் இல்லை என்று தெளிவாகக் கூறுகிறார். (எஸ்.சுச்சா சிங்கின் வாக்குமூலமும் பத்திரிக்கைச் செய்தியும் எங்களிடம் இருக்கிறது.) 4. நவம்பர் 2 முதலே தில்லி ஊரடங்கு உத்தரவில் இருந்தது. நவம்பர் 3, 1984 அன்று டி.பி.மருத்துவமனையின் வாயிலில் 11 மணி (இரவு) அளவில் கூட்டம் சேருவதோ ஜஸ்பிர் சிங் அல்லது ஜக்திஷ் டைட்லெர் இருந்ததற்கான கேள்வியோ அங்கு எழுவதில்லை. (உள்துறை விவகார அமைச்சகத்திடமிருந்து ஆவணமும் மிட் டே செய்தித்தாளுக்கு சுச்சா சிங்கின் பேட்டியும் எங்களிடம் இருக்கிறது.) 5. ஜஸ்பிர் சிங் டிவி சானல்களில் அடிக்கடி தோன்றி சமீபத்தில் நிறைய விளம்பரங்களைத் தேடிக்கொண்டார், அவற்றில் அவர் கூறியது, தான் மிரட்டப்பட்டதாகவும் ஜக்திஷ் டைட்லெர் மீது பயமாகவும் இருப்பதால் தான் அமெரிக்காவிற்குக் ஓடிவந்துவிட்டதாகக் கூறினார். உண்மை என்னவென்றால் எஸ்.ஜஸ்பிர் சிங் கொலை முயற்சிக்காக ஐபிசி 308, 506/34 யின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டுள்ளார் அவர் பிணையில் வெளியேறிவிட்டார். அவரைக் கைது செய்வதற்கான ஒரு வெளிப்படையான பிடியாணை இருக்கிறது, மேலும் அவர் போலி கடவுச்சீட்டை வைத்திருக்கிறார். ஹான். கோர்ட் ஆஃப் ஹான். ராஜீவ் மெஹ்ரா, கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிபதியிடமிருந்து அவரைக் கைது செய்வதற்கான பிடியாணை இருக்கிறது மேலும் அவர் புதுதில்லி, இந்திராபிரஷ்த் எஸ்டேட் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை எண். 129/97 மீது ஒரு "அறிவிக்கப்பட்ட குற்றவாளி"யாக தெரிவிக்கப்பட்டுள்ளார். (கோர்ட் ஆஃப் ஹான்.ராஜீவ் மெஹ்ரா, கூடுதல் குற்றவியல் அமர்வு நீதிபதி அவர்களால் அளிக்கப்பட்ட ஆணையின் நகலும் எங்களிடம் இருக்கிறது) 6. ஐபிஎன்-சிஎன்என் சேனல் எஸ்.சுரேந்தர் சிங்கின் ஒரு போலியான பேட்டி வெளியிட்டது. 7. எஸ்.சுரேந்தர் சிங், குர்முகியில் ராஜ் தீப் சர்தேசாய்க்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் அவர் வேண்டுமென்றே ஜக்திஷ் டைட்லெரின் பெயரைக் கெடுப்பதாக எச்சரித்தார், மேலும் அவர் சொன்னது, "நான் ஜக்திஷ் டைட்லெரை எங்கும் பார்த்ததில்லை" என்று கூறி அவருடைய சேனலில் வஞ்சகமான பேட்டிகளை ஒளிபரப்புவதை நிறுத்துமாறு சொன்னார். (குர்முகியில் எழுதப்பட்ட கடிதத்தின் நகல் எங்களிடம் இருக்கிறது) 8. எஸ்.சுரேந்தர் சிங் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் ஐபிஎன்-சிஎன்என் சானலின் ராஜ் தீப் சர்தேசாய்க்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் வழங்கினார். (வக்கீல் நோட்டீஸின் நகல் எங்களிடம் இருக்கிறது) 9. எஸ்.சுரேந்தர் சிங்கின் வழக்கறிஞர், ஐபிஎன்-சிஎன்என்னின் ராஜீவ் சார்தேசாய் பற்றியும் சிபிஐ இயக்குநருக்கு எழுதினார், அதில் அவர் எஸ்.சுரேந்தர் சிங் எப்போதும் ஜக்திஷ் டைட்லெரின் பெயரைக் குறிப்பிடவில்லை என்று தெரிவித்தார். (கடிதத்தின் நகல் எங்களிடம் இருக்கிறது) 10. எஸ். சுரேந்தர் சிங் ஒரு பத்திரிக்கை செய்தியையும் கொடுத்தார், அதில் அவர் ஐபின்-சிஎன்என்னால் வஞ்சகமாக செய்யப்பட்ட மற்றும் தீங்கு விளைவிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டதையும் தெளிவுபடுத்தினார். (பத்திரிக்கை வெளியீட்டின் நகல் எங்களிடம் இருக்கிறது) 11. எஸ்.சுரேந்தர் சிங் தன்னுடைய அறிக்கையை ஒரு செய்தியாளரிடம் கொடுத்துள்ளார், அதில் அவர் பத்திரிக்கையாளருடனான தன்னுடைய உரையாடலின் உண்மையைத் தெரிவித்துள்ளார். (பத்திரிக்கை மற்றும் செய்தித்தாள் துண்டறிக்கைகளும் எங்களிடம் இருக்கிறது. வீடியோவில் பதிவுசெய்யப்பட்டதைப் போன்றே பத்திரிக்கையாளருடன் திரு. சுரேந்தர் சிங்கின் உரையாடலையும் வைத்திருக்கிறோம்.) 12. இந்திரா காந்தியின் உயிரற்ற உடலருகே ஜக்திஷ் டைட்லெர் இருப்பதுபோன்ற ஒரு தூர்தர்ஷன் டிஸ்கும் இருக்கிறது. (பதிவு செய்யப்பட்ட நேரமும் எங்களிடம் இருக்கிறது) தொடர்புடைய முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் முகவரிகள் எஸ். சுச்சா சிங், r/o கிட்சன் எண்.1, குத்ராம் லைன்ஸ், கிங்க்ஸ்வேகாம்ப், தில்லி 110009 (தொலைபேசி எண்: 65877370) எஸ். தர்ஷன் கௌர், காலஞ்சென்ற ராம் சிங்கின் மனைவி, (1984 ஆம் ஆண்டில் பலியானவர்), r/o P-67, ரகுபிர் நகர், தில்லி கமலேஷ் கௌர், தர்ஷன் கௌரின் சகோதரி r/o P-67, ரகுபிர் நகர், தில்லி. எஸ். குல்ஜீத் சிங் டுக்கால், செயலாளர், குருத்வாரா புல் பங்காஷ் (1984 ஆம் ஆண்டில் செயல் உறுப்பினர்) கைப்பேசி: 98114 80149) எஸ். குந்தன் சிங், தலைவர், ஸ்ரீ குரு சிங் சபா, (1984 ஆம் ஆண்டில் துணைத் தலைவராக இருந்தார்) கைப்பேசி: 98113 57087) ஜக்திஷ் டைட்லெர் குற்றமற்றவரென கூறப்பட்ட விஷயம் தொடர்பாக, ஏப்ரல் 7, 2009 அன்று இந்தியாவின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தில்லியில் ஒரு பத்திரிக்கையாளர் கூட்டத்தின்போது சீக்கிய பத்திரிக்கையாளரான ஜர்னெய்ல் சிங்கால் காலணி எரிதலுக்கு ஆளானார். இந்தி தினசரியான தைனிக் ஜாக்ரனில் பணிபுரியும் சிங், 1984 ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறைகள் வழக்கில் ஜக்திஷ் டைட்லெருக்கு மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழங்கிய குற்றமற்றவர் என்னும் விஷயத்தின் மீதான ஒரு கேள்விக்கு சிதம்பரத்தின் பதிலால் அதிருப்தி கொண்டார். காலணி எரியப்பட்ட நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ஜக்திஸ் டைட்லெர், காங்கிரஸ் கட்சியின் மேலிடத்து வற்புறுத்தலால் 2009 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களுக்கான தன்னுடைய வேட்புமனுவை விலக்கிக் கொண்டார். ஊடகப் பின்தொடர்தல் மூலமாக தன்னை ஊடகங்கள் பாதிப்படையச் செய்கின்றன என்று ஜக்திஷ் டைட்லெர் குற்றஞ்சாட்டினார். தேர்தலின் போது இத்தகைய சர்ச்சையை உருவாக்கியதற்காக, ஷிரோமணி அகாலி தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் தன்னுடைய விரோதிகள் மீது டைட்லெர் குற்றம் சாட்டினார். இல்லுமினாட்டி இல்லுமினாட்டி (லத்தின் வார்த்தையான "இல்லுமினட்டஸ்" இன் பன்மை, "தெளிவூட்டுதல்" என்று பொருள்) என்பது வரலாறு சார்ந்த உண்மையான மற்றும் கற்பனையான குழுக்களை குறிப்பிடும் பெயர் ஆகும். வரலாற்று ரீதியாக இது, பவரிய இல்லுமினாட்டி குழுவை குறிக்க பயன்படுகிறது. இது மே 1, 1776 அன்று கண்டறியப்பட்ட தெளிவடைந்த கால இரகசிய சமூகம் ஆகும். தற்போது இது வெளிப்படையாகக் கலகம் செய்யக்கூடிய அமைப்பைக் குறிப்பிடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது நிழலான "ஆற்றலாக அதிகாரவர்க்கத்துக்கு பின்னால்" செயல்படக்கூடியது. இது குற்றஞ்சாட்டும் வகையில் உலக விசயங்களை நடப்பு அரசாங்கம் மற்றும் கார்ப்பரேசன்கள் மூலமாக கட்டுப்படுத்துதலைக் குறிப்பிடுகிறது. பொதுவாக பவரிய இல்லுமினாட்டியின் நவீன அவதாரம் அல்லது தொடர்ச்சியாக இது இருக்கிறது. இந்தச் சூழமைவில் "இல்லுமினாட்டி" பொதுவாக புதிய உலக வரிசையைக் (NWO) குறிப்பதில் பயன்படுத்தப்படுகிறது. பல சதித்திட்ட தத்துவ அறிஞர்கள் அது போன்ற புதிய உலக வரிசையை நிறுவுவதற்கு தலைமை வகிக்கும் நிகழ்வுகளின் பின்னணியாக இருக்கும் கூர்ந்த மதியாக இல்லுமினாட்டி இருப்பதாக நம்புகிறார்கள். இந்த இயக்கம் இங்கோல்ஸ்டாட் இல் (மேல் பவரியா) மே 1, 1776 அன்று ஜீசிச-போதகர் ஆடம் வெய்ஷாப்ட் (இ. 1830) மூலமாக நிறுவப்பட்டது. அவர் இங்கோல்ஸ்டாட் பல்கலைக்கழகத்தில் கிறித்துவச் சமயச் சட்டத்தின் முதல் பணித்துறை சாராத பேராசிரியர் ஆவார். இந்த இயக்கம் தெளிவூட்டுதலின் துணை விளைவாக கட்டின்றி யோசிப்பவர்களால் உருவாக்கப்பட்டது. சேத் பேசன் போன்ற அந்த நேரத்திய எழுத்தாளர்கள் இந்த இயக்கம் ஐரோப்பிய மாநிலங்களின் அரசாங்கங்களை ஊடுருவுதல் மற்றும் முந்துதல் ஆகியவற்றுக்கான சதித்திட்டத்துக்கு பிரதிநிதியாக இருந்ததாக நம்பினர். அகஸ்டின் பார்ருவல் மற்றும் ஜான் ரோபிசன் போன்ற சில எழுத்தாளர்கள் பிரஞ்சுப் புரட்சியின் பின்னணியில் இல்லுமினாட்டி இருந்ததாகவும் கூட வலியுறுத்துகின்றனர். 1801 ஆம் ஆண்டில் ஜீன்-ஜோசப் மவுனியர் அவரது "ஆன் த இன்ஃப்லூயன்ஸ் ஆட்ரிப்யூட்டட் டு பிலாசஃபர்ஸ், ஃப்ரீ-மேசன்ஸ், அண்ட் டு த இல்லுமினாட்டி ஆன் த ரெவல்யூசன் ஆஃப் ஃபிரான்ஸ்" என்ற புத்தகத்தில் இதுபற்றி குறிப்பிட்டிருந்தார். இந்தக் குழுவின் ஆதரவாளர்கள் "இல்லுமினாட்டி" என்ற பெயர் கொடுத்திருந்தனர். எனினும் அவர்கள் தங்களை "பெர்ஃபக்டபிலிஸ்டுகள் " என அழைத்தனர். இந்தக் குழு இல்லுமினாட்டி வரிசை மற்றும் பவரிய இல்லுமினாட்டி என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் இந்த இயக்கம் தனக்குள் Illuminism ஆக (பின்னர் illuminism) குறிப்பிடுகிறது. 1777 ஆம் ஆண்டில் கார்ல் தியோடர் பவரியாவை ஆண்டு வந்தார். இவர் தெளிவூட்டு சர்வாதிகார ஆதரவாளராக இருந்தார். மேலும் 1784 ஆம் ஆண்டில் அவரது அரசு இல்லுமினாட்டி உள்ளிட்ட அனைத்து இரகசிய சமூகங்களையும் தடை செய்தது. அந்த காலத்தில் இல்லுமினாட்டி சட்டப்பூர்வமாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்த போது பல செல்வாக்குள்ள அறிஞர்கள் மற்றும் முற்போக்கான அரசியல்வாதிகள் தங்களை அதன் உறுப்பினர்களாக அறிவித்தனர். அதில் ப்ரூன்ஸ்விக் ஃபெர்டினண்ட் மற்றும் தூதுவர் சேவியர் வோன் ஜ்வாக் ஆகியோரும் உண்டு. இதில் சேவியர் அந்த செயல்பாட்டில் இரண்டாம் நிலையில் இருந்தார். மேலும் இவரது இல்லத்தில் சோதனையிடப்பட்ட போது அந்தக் குழுவின் பெரும்பாலான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இல்லுமினாட்டியின் உறுப்பினர்கள் அவர்களின் மேல்நிலையில் உள்ளோர்களுக்கு பற்றுறுதியுடன் பணிந்து நடப்பர். மேலும் அவை மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு பிரிவும் பல்வேறு பட்டத்துடன் கூடியவை. இந்த அமைப்பு ஐரோப்பிய கண்டத்தின் பல நாடுகளில் அதன் கிளைகளைக் கொண்டிருந்தது. இது பத்தாண்டுகளில் ஏறத்தாழ 2,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்ததாக வதந்தி நிலவியது. இந்த அமைப்பு ஹோஹன் வோல்ஃப்கங் வோன் கோதே மற்றும் ஜோஹன் கோட்ஃபிரெய்ட் ஹெர்டர் போன்ற இலக்கியம் சார்ந்த நபர்களிடமும் அதன் ஈர்ப்பைக் கொண்டிருந்தது. மேலும் கோதா மற்றும் வெய்மர் ஆகியவற்றை ஆண்டு வந்த கோமகன்களிடம் கூட ஈர்ப்பை ஏற்படுத்தியிருந்தது. வெய்ஷாப்ட் அவரது குழுவை ஃப்ரீமேசனரியில் சில பரிமாணங்களுக்கு முன்மாதிரியாக்கியிருந்தார். மேலும் பல இல்லுமினாட்டி அதிகாரங்கள் ஏற்கனவே இருந்த மேசனிக் விடுதிகளில் இருந்து உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. உட்புற முறிவு மற்றும் மரபுத் தொடர்ச்சி மீதான பீதி அதன் வீழ்ச்சிக்கு வித்திட்டது. இது 1785 ஆம் ஆண்டில் பவரிய அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற சட்டம் மூலமாக ஏற்பட்டது. மார்க் டைஸ், டேவிட் இக்கி, ரியான் பர்கே, ஜூரி லினா மற்றும் மோர்கன் கிரைகர் போன்ற எழுத்தாளர்கள் தற்போதும் பவரிய இல்லுமினாட்டி நீடித்திருப்பதற்கான வாய்ப்புள்ளதாக வாதிடுகின்றனர். பெரும்பாலான இதன் கோட்பாடுகள், உலக நிகழ்வுகள் இல்லுமினாட்டி என்று தங்களுக்குள் அழைத்துக்கொண்ட இரகசிய சமூகத்தின் மூலமாக கட்டுப்படுத்தப்படுகின்றன மற்றும் கையாளப்படுகின்றன என முன்மொழிந்தன. சதித்திட்டத் தத்துவ அறிஞர்கள், விண்ஸ்டன் சர்ச்சில், புஷ் குடும்பம், பராக் ஒபாமா, ரோத்ஸில்ட் குடும்பம், டேவிட் ரோக்கெஃபெல்லர் மற்றும் பிக்னியூ ப்ரெசின்ஸ்கி உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க மக்கள் இல்லுமினாட்டியின் உறுப்பினர்களாக இருந்தனர் அல்லது இருக்கின்றனர் என வாதிடுகின்றனர். நிழலான மற்றும் இரகசிய அமைப்புக்களுக்குக் கூடுதலாக பல்வேறு நவீன உடன்பிறந்த குழுக்கள் பவரியன் இல்லுமினாட்டியின் "வாரிசுகளாக" உரிமை கோருகின்றன. மேலும் அவர்களாகவே உரிமைகள் எடுத்துக்கொண்டு வெளிப்படையாக "இல்லுமினாட்டி" என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற பல குழுக்கள் "இல்லுமினாட்டி வரிசையில்" சில மாறுபாடுகளுடன் அவர்களுடைய அமைப்பின் பெயரில் நேரடியாகப் பெயரைப் பயன்படுத்தித் தங்களை அழைத்துக் கொள்கின்றனர். அதே சமயம் ஆர்டோ டெம்ப்லி ஓரியண்டிஸ் போன்ற மற்றவர்கள் அவர்களது அமைப்புடன் துவக்கத்தின் தரமாகப் பெயரைப் பயன்படுத்துகின்றனர். இல்லுமினாட்டி பிரபல கலாச்சாரத்தில் அடிக்கடி நிகழ்கிற கருப்பொருளாக இருக்கிறது. சில அமைப்புகளுக்கு ஆதாரமாக இது பல வடிவங்களில் பல புனையப் பணிகளில் தோன்றுகிறது. அச்சுக்களில், திரைப்படங்களில், தொலைக்காட்சியில், வீடியோ விளையாட்டுக்களில், காமிக் புத்தக வரிசைகளில், அத்துடன் வர்த்தக அட்டைகள் மற்றும் பாத்திரம் பங்குபெறும் விளையாட்டுக்கள் ஆகியவற்றில் இது கருப்பொருளாக இருந்திருக்கிறது. டுவெயின் ஜான்சன் டுவெயின் டக்ளஸ் ஜான்சன் (மே 2, 1972 -இல் பிறந்தவர்), என்னும் இவர் அவருடைய முன்னாள் ரிங் பெயரான தி ராக் என்பதால் பிரபலமாக அறியப்படுகிறார். இவர் தற்போது அமெரிக்காவில் நடிகராக உள்ளார். ஓய்வுப் பெற்ற தொழில்முறை மல்யுத்த வீரரும் ஆவார். ஜான்சன் கல்லூரி நிலை கால்பந்து வீரராக இருந்தார். 1991 -ஆம் ஆண்டில், அவர் மியாமி பல்கலைக்கழக தேசிய சாம்பியன்ஷிப் அணியில் பங்கேற்று இருந்தார். பின்னாளில் அவர் கனடிய கால்பந்து லீகில் கேல்கரி ஸ்டாம்ப்டர்ஸ் என்ற அணிக்காக விளையாடினார், ஆனால் அந்த சீசனில் இரண்டு மாதம் விளையாட்டில் சேர்க்கப்படாமல் இருந்தார். இந்த காரணத்தால், தன்னுடைய தாத்தா பீட்டர் மைவியா மற்றும் தனது தந்தை ராக்கி ஜான்சன் ஆகியோரைப் போல தானும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரராக மாறுவது என்ற முடிவுக்கு வந்தார். ஒரு மல்யுத்த வீரராக வொர்ல்ட் ரெஸ்லிங் என்டர்டெயின்மன்ட் (World Wrestling Entertainment - WWE) -இல் மிகவும் பிரபலமானார், இந்த அமைப்பு 1996 முதல் 2004 -ஆம் ஆண்டு வரை வொர்ல்ட் ரெஸ்லிங் ஃபெடரேஷன் (World Wrestling Federation - WWF) என்றழைக்கப்பட்டது. ரெஸ்லிங் வரலாற்றிலேயே முதல் முறையாக மூன்றாம் தலைமுறை மல்யுத்த சூப்பர்ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றார். WWE -இல் ராக்கி மிக வேகமாக வளர்ச்சியடைந்தார், முதலில் "ராக்கி மைவியா" என்றும், அதன் பின்னர் "தி ராக்" என்றும் அறியப்பட்டார், இவர் நேஷன் ஆஃப் டாமினேஷன் என்ற குழுவின் உறுப்பினராக இருந்தார். WWF -இல் இவர் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஜான்சன் WWF சாம்பியன்ஷிப்பை வென்று, அந்த நிறுவனத்தின் மிகப் பிரபலமான வீரர்களில் ஒருவராக மாறினார். மேலும் இவர் பேட்டிகள் மற்றும் முன்னோட்டங்கள் தருவதில் பிரபலமானவர் ஆனார். 2001 -ஆம் ஆண்டில், அவர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினார், சில நேரங்களில் ரிங்கிலும் பங்கேற்றார். டுவெயின் தற்போது நடிப்பிலேயே அதிக கவனம் செலுத்துகிறார். தொழில்முறை மல்யுத்தத்தில், ஜான்சன் மொத்தம் ஒன்பது முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார், அதில் ஏழு முறைகள் WWF/E சாம்பியன்ஷிப்பையும் (அவருடைய கடைசி வெற்றி WWE அங்கீகரிக்கப்படாத சாம்பியன் என்ற நிலையில் உள்ளது), இரண்டு முறை WCW/உலக சாம்பியன்ஷிப்பை வென்றுள்ளார். இந்த சாம்பியன்ஷிப்களுடன், WWF இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறையும் WWF டேக் டீம் சாம்பியன்ஷிப்பை ஐந்து முறைகளும் வென்றுள்ளார். WWF/E ட்ரிபிள் கிரவுன் என்பதன் ஆறாவது சாம்பியனாகவும், 2000 ராயல் ரம்பிளின் வெற்றியாளராகவும் ஜான்சன் திகழ்கிறார். ஜான்சன் ஒரு நடிகரும் ஆவார். அவர் 2001 ஆம் ஆண்டில், "தி ஸ்கார்ப்பியன் கிங்" என்ற திரைப்படத்தில் முதன்முதலாக கதாநாயகனாக நடித்தார். அதற்கு, முதல்முறையாக முதல் பட நடிகர்களின் சம்பளத்தில் அதிகபட்ச தொகையாக, $5.5 மில்லியன் சம்பளமாக பெற்றார். இதன் பின்னர், இவர் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார், அவை "தி ரன்டவுன்" , "பி கூல்" , "வாக்கிங் டால்" , "கிரிடிரன் கேங்" , "தி கேம் பிளான்" , "கெட் ஸ்மார்ட்" , "ரேஸ் டூ விட்ச் மவுன்டைன்" , "பிளானட் 51" மற்றும் "டூம்" ஆகியனவாகும். அடா ஜான்சன் (கன்னிப்பெயர் மைவியா) மற்றும் தொழில்முறை மல்யுத்த வீரர் "சோல்மேன்" ராக்கி ஜான்சன் ஆகியோருக்கு கலிஃபோர்னியாவின், ஹேவர்ட் நகரில் இவர் பிறந்தார். இவருடைய தாய் பாட்டனாரான, "ஹை சீஃப்" பீட்டர் மைவியா என்பவரும் ஒரு தொழில்முறை மல்யுத்த வீரர் ஆவார். அவருடை தாய்வழி பாட்டியான, லியா மைவியா, பாலினேஷியன் பசிஃபிக் ரெஸ்லிங் என்பதை 1982 முதல் 1988 வரை நடத்தி வந்தார், தன்னுடைய கணவரின் மறைவுக்கு பின்னர், ரெஸ்லிங்கின் ஒரு சில பெண் விளம்பரப்படுத்துபவர்களில் ஒருவரானார். அவருடைய தந்தை, ப்ளாக் நோவா ஸ்காட்டியன் (கனடியன்) ஆவார். அவருடைய தாய் சமோவா பாரம்பரியத்தில் வந்தவர். சில ஆண்டுகாலம், ஜான்சன் அவருடைய தாயின் குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் வசித்தார். இந்த காலத்தின்போது, ஜான்சனுக்கு புறநகர் பாலினேசியன் கலாச்சாரத்தை அறியவைப்பதில் அவரின் தாய் அடா மிகவும் முனைப்புடன் இருந்தார். ஜான்சன் அவருடைய பெற்றோருடன், அமெரிக்காவுக்கு திரும்பும் முன், ரிச்மோண்ட் ரோடு பிரைமரி பள்ளியில் பயின்று வந்தார். அவர் பத்தாம் வகுப்பு வரை ஹவாயில் உள்ள பிரசிடெண்ட் வில்லியம் மெக்கின்லி உயர்நிலை பள்ளியில் பயின்றார். அவர் 11 ஆம் வகுப்புக்கு வந்தபோது, ஜான்சனின் தந்தையின் வேலை காரணமாக, அமெரிக்காவின் லீஹை பள்ளதாக்கு பகுதியில் உள்ள பென்சில்வேனியாவில் உள்ள பெத்லஹேம் என்ற இடத்துக்கு இடம்பெயர்ந்தார். பெத்லஹேமில் ஃப்ரீடம் ஹை ஸ்கூலில் அவர் தொடர்ந்து கால்பந்து விளையாடி வந்தார். அங்கு அவர் லீஹை வேலி கான்ஃபரன்ஸ் என்பதில் மிகவும் தீவிரமான போட்டியைச் சந்தித்தார். ஃப்ரீடம் உயர்நிலை பள்ளியில் கால்பந்து விளையாடியதோடு, அந்த பள்ளியின் தடகளம் மற்றும் மல்யுத்த அணிகளிலும் பங்கேற்றார். ttt ஜான்சன் கல்லூரி அளவிலான கால்பந்து ஸ்காலர்ஷிப்களைப் பல பல்கலைக்கழகங்களில் இருந்து பெற்றார், அதில் அவர் மியாமி பல்கலைக்கழகத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால் மியாமி பல்கலைக்கழக கால்பந்து அணியில் ஜான்சன் சேர்க்கப்படவில்லை, சோதனை முயற்சிகளுக்காகவும், வாக்-ஆன் ஆகவும் சேர்க்கப்பட்டார், அதில் தடுப்பு ஆட்டக்காரராக விளையாடினார். 1991 -ஆம் ஆண்டில், அவர், மியாமி ஹரிகேன்ஸ் என்ற தேசிய சாம்பியன்ஷிப் அணியில் பங்கேற்றார். காயமடைந்த காரணத்தால் ஜான்சன் தொடர்ந்து பங்கேற்க முடியாமல் போனது, அப்போது இவருடைய சக ஹரிக்கேன் வீரராக இருந்த வாரன் சாப் என்பவரால் பதிலீடு செய்யப்பட்டார், அந்த நபர் பின்னாளில் தேசிய கால்பந்து லீகில் (NFL) ஒரு ஸ்டாராக அவதாரம் எடுத்தார். அந்த நேரத்தில், மியாமி பல்கலைக்கழகத்தில் கூட படித்த, டேன்ஸி கார்ஷியா என்ற பெண்ணைச் சந்தித்தார், அவரே பிற்காலத்தில் ஜான்சனின் மனைவியானார். கார்ஷியா, 1992 ஆம் ஆண்டில் மியாமி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார், அவர் அதன் அறங்காவலர் குழுவில் உறுப்பினராக இருந்தார், மேலும் மியாமியில் தொடங்கப்பட்ட ஒரு சொத்து நிர்வாக நிறுவனத்தின் நிறுவனராகவும் இருந்தார். கல்லூரி காலத்தில் இருவரும் தொடர்ந்து நெருக்கமாக இருந்து வருகின்றனர். பல்கலைக்கழகத்தின் அலுமினி மையத்தில் ஒரு லிவிங் அறையைக் கட்டுவதற்கு $2-மில்லியன் நன்கொடையாக 2006 -ஆம் ஆண்டில் தந்தனர். 1995 -ஆம் ஆண்டில் மியாமி பல்கலைக்கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். அங்கு அவர் குற்றவியல் மற்றும் உடற்கூறியல் ஆகிய துறைகளில் பட்டம் பெற்றார். நவம்பர் 10, 2007 -இல், அவர் மியாமியில் உள்ள ஆரஞ்சு பவுள் என்பதற்கு திரும்பி, மியாமி பல்கலைக்கழக விழாக்களில் பங்கேற்றார். அங்கு கடைசியாக உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியில் விளையாடினார். 1995 ஆம் ஆண்டில் அவர் தொடர்ந்து கால்பந்தாட்டம் விளையாடி வந்தார், கனடியன் கால்பந்தாட்ட லீகின் கால்கேரி ஸ்டாம்ப்டெர்ஸ் என்ற அணியில் சேர்ந்தார், இதற்கு முன்பு NFL க்கு தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் அந்த சீசனில் இரண்டு மாதங்கள் விளையாட முடியாத நிலையிலிருந்தார். ஜான்சனின் இரண்டு மைத்துனர்கள் கால்பந்தாட்ட வீரர்கள் ஆவர். கலுக்கா மைவியா என்பவர் USC இல் கால்பந்து விளையாடுகிறார், அவர் 2009 ஆம் ஆண்டில் கிளீவ்லேண்ட் ப்ரவுன்ஸ் அணிக்காக விளையாடினார், கலுக்காவின் சகோதரர் கை மைவியா தற்போது UCLA இல் விளையாடி வருகிறார். ஜான்சனின் குடும்பத்தில் அவருடைய தந்தையும், தாத்தா ஆகியோருடன் வேறு பல உறவினர்களும் மல்யுத்த வீரர்களாக இருப்பவர்கள்தான், அவருடைய மாமன்களான வைல்ட் சமோவன்ஸ் என்றழைக்கப்படும் (அஃபா மற்றும் சிக்கா அனோய்) மற்றும் ஒன்று விட்ட சகோதரர்களான, மனு, யோகோஜுனா, ரிக்கிஷி, ரோசி, மற்றும் உமாகா ஆகியோர் மல்யுத்த வீரர்களே. குடும்பத் தொழிலில் தானும் இறங்கப்போவதாக ஜான்சன் அறிவித்தபோது, அவரது தந்தை அதை எதிர்த்தார், பின்னர் அவருக்கு பயிற்சியளிக்க ஒப்புக்கொண்டார், ஆனால் தான் தன் மகனை எளிதாக கையாள மாட்டேன் என்று எச்சரித்தார். பேட் பேட்டர்சன் என்ற சாதனையாளரின் உதவியுடன், WWE 1996 ஆம் ஆண்டில் பல சோதனை முயற்சி போட்டிகளில் பங்கேற்றார். அவற்றில் தி ப்ரூக்ளின் ப்ராவ்லர் என்பவரை தன்னுடைய நிஜப்பெயரான டுவெயின் ஜான்சன் என்பதுடன் மோதி வென்றார், கிறிஸ் காண்டிடோ மற்றும் ஓவன் ஹார்ட் ஆகியோரிடம் தோற்றுப்போனார். அவரிடம் இருந்த திறமையையும், ஈர்ப்பையும் பயன்படுத்தி, அவர் ஜெர்ரி லாவ்லர் இன் யுனைடெட் ஸ்டேட்ஸ் ரெஸ்லிங் அசோசியேஷனில் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அங்கு அவர் "ஃப்ளெக்ஸ் கவானா" என்ற ரிங் பெயருடன் போட்டியிட்டார். அங்கு உள்ளபோது, 1996 ஆம் ஆண்டு கோடையில், பார்ட் சாயர் என்பவருடன் இணைந்து USWA உலக டாக் டீம் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறை வென்றார். ஜான்சன் WWF -இல் முதன்முதலாக களமிறங்கியபோது, ராக்கி மைவியா என்ற பெயருடன் வந்தார். அதில் அவருடைய தந்தையுடைய மற்றும் தாத்தாவினுடைய ரிங் பெயர்கள் இணைந்து இருந்தன; ஜான்சன் ஆரம்பத்தில் இந்த பெயரை விரும்பவில்லை, ஆனால் வின்ஸ் மெக்மோஹன் மற்றும் ஜிம் ரோஸ் ஆகியோரின் வற்புறுத்தலின்பேரில் இந்த பெயரை ஏற்றார். இதனுடன், அவர் "தி ப்ளூ சிப்பர்," என்ற புனைப்பெயரையும் பெற்றார். ஆனால் WWF தொடர்ந்து அவருடைய தந்தை மற்றும் தாத்தாவின் பெயரை இணைத்தே அழைத்து வந்தது, மேலும் நிறுவனத்தின் முதல் மூன்றாம் தலைமுறை மல்யுத்த வீரர் என்றும் கூறியது. ஜான்சன், ஆரம்பத்திலேயே ரசிகர்களின் விருப்பத்துக்குரியவர் என்று சித்தரிக்கப்பட்டார், அவருக்கு ரிங்கில் போதிய அனுபவம் இல்லாவிட்டாலும் இது அவரை தூக்கி விட்டது. 1996 -ஆம் ஆண்டில் சர்வைவர் சீரீஸ் என்பதில் அவர் முதன்முதலாக களமிறங்கி அந்த போட்டியின் ஒரே சர்வைவராக ஜெயித்தார், மேலும், WWF இன்டர்கான்டிடன்டல் சாம்பியன்ஷிப்பையும் ஹன்டர் ஹியர்ஸ் ஹெல்ம்ஸ்லே என்பவரிடமிருந்து "ரா" -இல் பிப்ரவரி 13, 1997 -இல் வென்றார், அப்போது அவர் நிறுவனத்தில் சேர்ந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. ஆனாலும், ரசிகர்கள், ஒற்றைத்தன்மையான நல்ல மனிதர் என்ற நடத்தையை வெறுக்க தொடங்கினர், இதற்கு ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் என்பவரின் பிரபலத்தன்மையும் அடங்கும். இதன் விளைவாக, ஜான்சனின் போட்டிகளின் போது ரசிகர்கள் அடிக்கடி, கோபமாக ""டை ராக்கி டை!"" என்று கத்த ஆரம்பித்தனர். மற்றும் ""ராக்கி சக்ஸ்!"" என்றும் கத்தினார்கள் ஏப்ரல் 28, 1997 -இல் "ரா இஸ் வார்" என்ற போட்டியில், இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்பை ஓவன் ஹார்ட்டிடம் தோற்ற பின்னர், காயத்திலிருந்து ஜான்சன் மீண்டு வந்தார், அப்போது அவர் வில்லனாக மாறினார். அதன் பின்னர் அவர் ஃபாரூக், டி'லோ ப்ரவுன் மற்றும் கமா ஆகியோரிடம் இணைந்து நேஷன் ஆஃப் டாமினேஷில் சேர்ந்தார். அப்போது அவர் "தி ராக்" ராக்கி மைவியா என்ற பெயருடன் சேர்ந்தார், அது விரைவிலேயே "தி ராக்" என்று சுருக்கமாக அழைக்கப்படலாயிற்று. இந்த காலக்கட்டத்தில், தி ராக் அவருடைய ப்ரோமோக்களில் வந்திருந்த ரசிகர்களைத் தாக்கினார் மற்றும் அவமானப்படுத்தினார். மிகவும் நேர்த்தியான மனிதரான ராக்கி மைவியாவை ஒப்பிடும்போது, தி ராக் மிகவும் கவர்ச்சியான தொந்தரவான நபராக இருந்தார், இதனால் மெல்ல மெல்ல அந்த குழுவின் தலைவரான ஃபாருக்கும் மார்ச் 1998 -இல் வெளியேறினார். தி ராக் எப்போதும் தன்னையே மூன்றாம் நபராக படர்க்கை யில் அழைக்கத் தொடங்கினார், இதற்கு அவர் ""தி ராக் சேஸ் (The Rock says...")" என்று ஆரம்பித்து பல சொற்றொடர்களைக் கூறிக் கொண்டார் வெகுவிரைவிலேயே, இந்த தொழில்துறையில் மிகச்சிறந்த ப்ரோமோக்களை வழங்குபவராக ஜான்சன் அறியப்பட்டார். 2000 -இல் இவர் தன்னுடைய சுயசரிதையில், இந்த திறன் மியாமியில் பேச்சுத் திறன் வகுப்புகளின் காரணமாக வந்தது என்றும், அதில் தான் "A" கிரேடுகளைப் பெற்றதையும் குறிப்பிடுகிறார். இன் யுவர் ஹவுஸ்: டி-ஜெனரேஷன் எக்ஸ் என்ற போட்டியில், ஆஸ்டின் தி ராக்கை ஆறு நிமிடங்களுக்கும் குறைவான கால அளவில் வென்று இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்துக் கொண்டார். அதற்கு அடுத்த இரவில், "ரா இஸ் வார்" போட்டியில், மிஸ்டர்.மெக்மோஹன் ஆஸ்டினிடம் இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்பை தி ராக்கிடம் ஒப்படைக்குமாறு கூறினார், ஸ்டோன் கோல்ட் ஸ்டன்னரை நடத்தும் முன்பு அவரும் தி ராக்கிடம் அதை ஒப்படைத்தார். 1997ஆம் ஆண்டின் இறுதிப்பகுதி மற்றும் 1998ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதி ஆகியவற்றை, ஆஸ்டின் மற்றும் கென் ஷாம்ராக் ஆகியோருடன் சண்டையிட்டப்படியே கழித்தார். அதன் பின்னர் தி ராக், ஃபாரூக் உடன் சண்டையிட்டார், ஏனெனில் தி ராக் இவருடைய பதவியைப் பறித்துக் கொண்டார். இந்த இருவருக்கும் இடையே என்ற போட்டி நடைபெற்றது, இதில் தி ராக் இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்துக் கொண்டார். இதன் பின்னர் தி ராக் ட்ரிபிள் எச் மற்றும் டி-ஜெனரேஷன் எக்ஸ் ஆகியோருடன் சண்டையிட்டார். நேஷனின் உறுப்பினர்கள் DX உடனும் தி ராக் ட்ரிபிள் எச்சுடனும் இன்டர்கான்டினன்டல் சாம்பியன்ஷிப்புக்காக மோதினார்கள். அவர்களுக்கு இடையே முதலில் மூன்றில் இருவர் தோல்வியுறும் போட்டி ஒன்றை ஃபுல்லி லோடட் இல் நடத்தினார்கள், அதில் தி ராக் பட்டத்தை மிகவும் பரப்பரப்பான விதத்தில், தி ராக் தக்க வைத்துக் கொண்டார். இதனால் சம்மர்ஸ்லாம் இல் லேட்டர் மாட்ச் ஒன்று நடந்தது, இதில் ராக் பட்டத்தை இழந்தார். இல், தி ராக் கென் ஷாம்ராக் மற்றும் மேன்கைண்ட் ஆகியோரை ட்ரிபிள் த்ரெட் ஸ்டீல் கேஜ் போட்டியில் தோற்கடித்து WWF சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் இடம் பிடித்தார், அதன் பின்னர் நேஷன் அமைப்பின் உறுப்பினர் மார்க் ஹென்றி உடன் சண்டையிட்டு, நேஷனிலிருந்து விலகினார். ஜான்சனின் பிரபலத்தன்மை அவரை WWF சாம்பியன்ஷிப்புக்கு நகர்த்தியது. தி ராக் பல பொழுதுபோக்கு பேட்டிகளை நடத்தினார், இதனால் ரசிகர்களிடம் எளிதாக சென்று சேர்ந்தார். ரசிகர்களின் எதிர்வினையால், அவர் விரைவாகவே ரசிகர்களின் விருப்பமானவராக மாறினார், மேலும் அவர், இதனால் மிஸ்டர்.மெக்மோஹன் உடன் சண்டையிட்டார், ஏனெனில் அவர் ராக்கை ""மக்களிடம் ஒத்துபோக தெரியாதவர்"" என்று விமர்சித்து இருந்தார், மேலும் அவர் "மக்களின் சாம்பியன்" ஆக முயற்சிக்க வேண்டும் என்றும் கூறி வந்தார் (இவ்வாறுதான் தி ராக் அவரையே அழைத்துக் கொள்வார்). சர்வைவர் சீரிஸ் என்பதில், தி ராக் அப்போது வில்லனாக இருந்த "டெட்லி கேம்" டோர்னமென்டில் மேன்கைண்டை வென்றார், இதன் மூலம் வெறுமையாய் இருந்த WWF சாம்பியன்ஷிப்பை வென்றார், WWF வரலாற்றிலேயே முதன்முதலாக ஆஃப்ரிக்கன் அமெரிக்கன் வம்சத்தில் முதல் உலக ஹெவிவெயிட் சாம்பியனாக அவர் மாறினார் மற்றும் அப்போதைய மிக இளவயது WWF சாம்பியனாகவும் இருந்தார். போட்டியின் இறுதியில், தி ராக் ஒரு ஷார்ப்ஷூட்டரை மேன்கைண்டின் மேல் செலுத்தினார். அவர் இவ்வாறு செய்த போது, மெக்மோஹன், ஆட்டத்தை முடித்து விட்டு, தி ராக்கை வெற்றியாளராக அறிவித்தார். இது மான்ட்ரியல் ஸ்க்ரூஜாப் இன் பகடி/0}யாகும், இது ஒரு ஆண்டுக்கு முன்பு சர்வைவர் சீரிஸில் நடந்தது. இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தவுடன், தி ராக் மீண்டும் வில்லனாக மாறினார், பின்னர் வின்ஸ் மற்றும் ஷான் மெக்மோஹன் உடன் சேர்ந்து தி கார்ப்பொரேஷன் ஸ்டேபிள் இன் அணிகலனாக விளங்கினார். இதனால் மேலும் ஒரு குழப்பம் ஏற்பட்டது, ஏனெனில் மேன்கைண்ட் தி கார்ப்பொரேஷனில் இருந்து வெளியேற்றப்பட்டு, ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறத் தொடங்கினார். பின்னர், தி ராக் தானே சொந்தமாக விளையாட ஆரம்பித்தார், ராக் பாட்டம்: இன் யுவர் ஹவுஸ் போட்டியில் அவர் WWF சாம்பியன்ஷிப்புக்காக மேன்கைண்டுடன் மறுபோட்டியில் மோதினார். மேன்கைண்ட், மிஸ்டர். சாக்கோ மற்றும் மாண்டிபிள் கிளா ஆகியோருடன் சேர்ந்து, தி ராக்கைத் தோற்கடித்தார், ஆனால் மிஸ்டர். மெக்மோஹன் தி ராக் வெளியேற்றப்படவில்லை எனவே அவர் தன்னுடைய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தார். தி ராக் மேன்கைண்டுடன் WWF சாம்பியன்ஷிப்புக்காக மீண்டும் ஒரு சண்டையை ஆரம்பித்தார், இந்த போட்டிகளின்போது, பட்டமானது இருவரின் கைகளிலும் மாறி மாறி இருந்து வந்தது, முதலில் "ரா இஸ் வார்" இன் 1999 ஆம் ஆண்டு நிகழ்வில் ஜனவரி 4 இல் மேன்கைண்ட் தி ராக்கை தோற்கடித்தார், இதற்கு அவர் ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் உதவியை நாடினார். தி ராக் அவருடைய இரண்டாவது WWF சாம்பியன்ஷிப்பை 1999 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ராயல் ரம்பிள் இல் "ஐ குவிட்" போட்டியில் வென்றார். அதில் மேன்கைண்ட் ""ஐ குவிட்"" என்று கூறுவது போன்ற ஒரு பேட்டி காட்சி, சவுண்ட் சிஸ்டம்களில் இயக்கப்பட்டது. ஆனாலும், இந்த பட்டம் நீண்டகாலம் கையில் இருக்கவில்லை. சூப்பர் பவுல் ஹாஃப்டைம் ஷோவில், ஜனவரி 31, 1999 இல் மேன்கைண்ட், ஒரு ஃபோர்க்லிஃப்ட் ட்ரக்கை வைத்து தி ராக்கை தாக்கினார். அது ஒரு எம்ப்டி அரீனா போட்டியாகும், அதில் போட்டியாளர்கள், பாப் கார்ன் பைகள் முதல் குப்பைத்தொட்டி வரை கைக்கு கிடைக்கும் எதை கொண்டு வேண்டுமானாலும் எதிராளியைத் தாக்கலாம். இந்த சண்டை "ரா இஸ் வார்" இன் பிப்ரவரி போட்டி வரை தொடர்ந்தது, அதில் தி ராக் அவருடைய மூன்றாவது WWF சாம்பியன்ஷிப்பை வென்றார். இது ஒரு லேடர் போட்டியாகும். இந்த போட்டிகளில், தி பிக் ஷோ மேன்கைண்டை லேடர் போட்டியிலிருந்து வெளியேற்றினார். மேன்கைண்ட் தோற்றுப்போனதும், தி ராக் அவருடைய WWF சாம்பியன்ஷிப்பை ரஸ்ஸில்மேனியா XV இல் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது, ஆனால் அதை அவை ஆஸ்டினிடம் தோற்றுவிட்டார். Backlash: In Your House இல் நடந்த மறுபோட்டியின்போது தி ராக் ஆஸ்டினிடம் தோற்றுப்போனார். தி ராக் ஒரு வில்லனாக இருந்தாலும், அவருடைய நகைச்சுவையான பேட்டிகள், ப்ரொமொக்கள் மற்றும் பகுதிகளால் ரசிகர்கள் அவரை மிகவும் விரும்பத் தொடங்கினார்கள். தி ராக், பிற மல்யுத்த வீரர்களையும், அறிவிப்பாளர்களையும், கேலி செய்து கொண்டிருந்தார். ஷான் மெக்மோஹனால் கைவிடப்பட்டு, தி அண்டர்டேக்கர், ட்ரிபிள் எச் மற்றும் கார்ப்பரேட் மினிஸ்ட்ரி ஆகியோருடன் சண்டையிட்டப்போது ராக் மீண்டும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவர் ஆனார். இந்த சண்டையின்போது, அவர் சில நேரங்களில், ஸ்டீவ் ஆஸ்டினுடன் சேர்ந்து சண்டையிட நேர்ந்தது. ஓவர் தி எட்ஜ் என்ற போட்டியில் தி ராக் ட்ரிபிள் எச்சை தோற்கடித்தார், ஆனால் WWF சாம்பியன் தி அண்டர்டேக்கரிடம் கிங் ஆஃப் தி ரிங்கில் தோற்றுப்போனார். ஃபுல்லி லோடட் போட்டியில் முதலிடத்துக்கு நடந்த சண்டையில் அவர் ட்ரிபிள் எச்சிடம் தோற்றுப் போனார். ட்ரிபிள் எச்சுடன் சண்டையிட்டதுடன் மட்டுமி்ன்றி, அந்த கோடைகாலம் முழுவதும் மிஸ்டர்.ஆஸ் என்ற வீரருடனும் 1999ஆம் ஆண்டின் கோடைகாலத்தில் சண்டையிட்டார். இதில் சம்மர்ஸ்லாம் இல் நடந்த "கிஸ் மை ஆஸ்" என்ற போட்டியும் அடங்கும். அந்த ஆண்டின் இறுதியில், தி ராக் பல தனிநபர் மற்றும் டாக் டீம் சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் போட்டியிட்டார். தி அண்டர்டேக்கர் மற்றும் தி பிக் ஷோ ஆகியோரின் அணிக்கு சவால் விட்ட தி ராக், தன்னுடைய முன்னாள் எதிரியான மேன்கைண்ட் உதவியைப் பெற்றும் அவருடன் குழு சேர்ந்து ராக் அன் சாக் கனெக்ஷனை உருவாக்கினார். அவர்கள் இருவரும் இணைந்து WWF டாக் டீம் சாம்பியன்ஷிப்பை மூன்று முறை வென்றனர். சாம்பியன்ஷிப்களைத் தவிர இந்த அணியானது, வரலாற்றிலேயே மிகவும் சுவாரஸ்யமான ஜோடி என்ற பெயரையும் பெற்றது, மேன்கைண்ட் தி ராக்கை கேலி செய்வதும், தி ராக் அவரைப் புறக்கணிப்பதும் இணைந்து இந்த இரண்டு வீரர்களும் மக்களின் பெரிய அளவிலான ஆதரவைப் பெற்றனர். "ரா இஸ் வார்" இன் ஒரு பகுதியான, ""திஸ் இஸ் யுவர் லைஃப்" என்பதில் மேன்கைண்ட் ராக்கினுடைய கடந்த காலத்திலிருந்து நபர்களை அழைத்து வந்தார், இதில் அவருடைய பள்ளிக்கால தோழி மற்றும் ஜிம் ஆசிரியர் ஆகியோரும் அடங்குவர். இந்த பகுதி 8.4 நீல்சன் ரேட்டிங்கைப் பெற்றது, மேலும் இதுவே இந்நாள் வரை, ரா வின் வரலாற்றில் அதிக நபர்கள் பார்த்த பகுதியாகும். 2000 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தி ராக் ராயல் ரம்பிள் என்ற போட்டியில் கலந்துகொண்டார். அதில் பிக் ஷோவும் இவரும் கடைசியாக களத்தில் நிற்கும் வரை அவர்{ 0}ராயல் ரம்பிள் போட்டியில் நிலைத்து நின்றார். போட்டியின் கடைசி நிமிடத்தில், பிக் ஷோ தி ராக்கை ரன்னிங் பவர்ஸலாம்-போன்ற நிலையில் கயிற்றிலிருந்து வெளியே தூக்கி எறியும் நிலையில் இருந்த போது, தி ராக் அந்த த்ரோவை தலைகீழாக மாற்றி, தி பிக் ஷோவை வெளியே அனுப்பி, இவர் மீண்டும் மேடையில் ஏறினார். ஆனால், ராக்கின் கால்களே முதலில் தரையைத் தொட்டது, ஆனாலும் அந்த நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் அதை கவனிக்கவில்லை. தி பிக் ஷோ, தி ராக்கின் கால்களே முதலில் தரையைத் தொட்டன என்று நிரூபிக்க முயற்சி செய்தார். வீடியோ ஃபூட்டேஜில் தானே உண்மையான வெற்றியாளன் என்று நிரூபித்தார். ஆனாலும், தி ராக் ரம்பிள் மேட்சை வென்றதைத் திருத்தி அமைக்க முடியாது என்று முடிவெடுக்கப்பட்டது, எனவே WWF சாம்பியன்ஷிப்புக்கான முதலிடத்துக்கு நோ வே அவுட் என்ற பெயரில் போட்டி நடத்தப்பட்டது, அதில் தி ராக் அவரது எதிராளியை பீப்பிள்ஸ் எல்போ முறையின்படி அடிக்க முயற்சி செய்த போது, ஷேன் மெக்மோஹன் குறுக்கிட்டு, ராக்கின் தலையில், இரும்பு நாற்காலியால் தாக்கினார், இதனால் தி பிக் ஷோ வெற்றிப் பெற்றார். பின்னர், தி ராக் "ரா இஸ் வார்" இன் மார்ச், 13, 2000 ஆம் ஆண்டு போட்டியில் தி பிக் ஷோவைத் தோற்கடித்தார், இதனால் WWF சாம்பியன் போட்டியில், ட்ரிபிள் எச்சுடன், ரஸ்ஸில்மேனியா 2000 என்ற போட்டியில் ஃபேட்டல் ஃபோர்-வே எலிமினேஷன் மேட்சில் மோதினார். இதில் தி பிக் ஷோவும், மிக் ஃபோலேவும் கூட மோதினார்கள். இதில் ஒவ்வொரு போட்டியாளருக்கும், ஒரு மெக்மோஹன் கூட இருந்தார், ட்ரிபிள் எச்சுக்கு, அவருடைய திரை மனைவியும், திரைக்கு பின்னாலான தோழியுமான ஸ்டெஃபானி மெக்மோஹன்; மிக் ஃபோலேவுக்கு, பெண் தலைவி லிண்டா மெக்மோஹன்; தி ராக்கிற்கு, வின்ஸ் மெக்மோஹன்; மற்றும் பிக் ஷோவுக்கு, ஷேன் மெக்மோஹன் ஆகியோர் பங்கேற்றனர். தி ராக்கை வின்ஸ் காட்டி கொடுத்ததால் ட்ரிபிள் எச் பட்டத்தை வென்றார், இதில் வின்ஸ் தி ராக்கிற்கு, நாற்காலியால் இரண்டு அடிகளையும், ட்ரிபிள் எச் மூன்று எண்ணிக்கை வரை ராக்கை பிடித்திருக்க் உதவியும் செய்தார். அடுத்த இரண்டு மாதங்களில், தி ராக், ட்ரிபிள் எச்சுடன், WWF சாம்பியன்ஷிப்புக்காக மோதினார். ரஸ்ஸில்மேனியா 2000 போட்டிக்கு ஒருமாதம் கழித்து, தி ராக் ட்ரிபிள் எச் உடன் பேக்லாஷ் என்ற போட்டியில் சண்டையிட்டு நான்காவது முறையாக WWF சாம்பியன்ஷிப்பை வென்றார், அப்போது, ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் சிலகாலம் வந்து தி ராக்கின் சார்பாக கலந்து கொண்டார். அதன் பின்னர், ஜட்ஜ்மென்ட் டே என்ற போட்டியில், இவர்கள் இருவருக்கும் இடையில் நடந்த அயர்ன் மேன் ஆப் தி மேட்ச் போட்டியில் ஷான் மைக்கெல்ஸ் சிறப்பு விருந்தினர் நடுவராக கலந்து கொண்டனர், அதில் தி அண்டர்டேக்கரும் திரும்பி வந்தார். தி ராக் அந்த போட்டியில் தகுதியிழந்து பட்டத்தை இழந்தார், இதனால் அண்டர்டேக்கர் ட்ரிபிள் எச்சுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதற்கு அடுத்த இரவில் "ரா இஸ் வார்" இல், தி முழு மெக்மோஹன்-ஹெல்ம்ஸ்லே குடும்பத்தையும் அண்டர்டேக்கரின் உதவியுடன் தோற்கடித்து பழிவாங்கினார். அதன் பின்னர் ஐந்தாவது முறையாக, WWF சாம்பியன்ஷிப்பை கிங் ஆஃப் தி ரிங் போட்டியில் டாக் டீமாக போட்டியிட்டு வென்றார், அதில் அவர் கேன் மற்றும் தி அண்டர்டேக்கருடன் இணைந்து, வின்ஸ் மெக்மோஹன், ஷான் மெக்மோஹன் மற்றும் ட்ரிபிள் எச் ஆகியோருடன் மோதினார். கிறிஸ் பெனொய்ட், கர்ட் ஆங்கிள், ட்ரிபிள் எச், கேன், தி அண்டர்டேக்கர் மற்றும் ஷான் மெக்மோஹன் போன்ற சூப்பர்ஸ்டார்களிடம் மோதிய பின்னரும் அவர் வெற்றிகரமாக சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்துக் கொண்டார். பின்னர், அக்டோபரில் நடந்த நோ மெர்சி போட்டியில் தி ராக் WWF சாம்பியன்ஷிப்பை ஆங்கிளிடம் தோற்றார். இந்த காலக்கட்டத்தில் அவர், ரிக்கிஷி உடன் மோதி, அவரை சர்வைவர் சீரீஸில் தோற்கடித்தார். ஆர்மெகடானில் நடந்த, ஆறுபேர் ஹெல் இன் அ செல் போட்டியிலும் அவர் கலந்து கொண்டார், அதில் கர்ட் ஆங்கிள் WWF சாம்பியன்ஷிப்பைத் தக்க வைத்துக் கொண்டார். இதே காலகட்டத்தில், ராக் WWF டாக் சாம்பியன்ஷிப்பை தி அண்டர்டேக்கருடன் இணைந்து கைப்பற்றினார். அதை அவர்கள் எட்ஜ் மற்றும் கிறிஸ்டியன் ஆகியோரிடமிருந்து கைப்பற்றினர். 2001ஆம் ஆண்டில், WWF சாம்பியன்ஷிப்புக்காக, தி ராக் தொடர்ந்து கர்ட் ஆங்கிளுடன் மோதி வந்தார், பின்னர் நோ வே அவுட்டில் அதை ஒரு வழியாக வென்றார். இரண்டு வீரர்களும் மற்றவர்களின், ஃபினிஷர் நுட்பங்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்தனர், இறுதியில் தி ராக் சற்று மேலோங்கி, WWF சாம்பியன்ஷிப்பை மீண்டும் பெற்றார். இரண்டு வீரர்களும் மற்றவர்களின், ஃபினிஷர் நுட்பங்களைத் தொடர்ந்து தவிர்த்து வந்தனர், இறுதியில் தி ராக் சற்று மேலோங்கி, WWF சாம்பியன்ஷிப்பை மீண்டும் பெற்றார். அதன் பின்னர், ராயல் ரம்பிளின் வெற்றியாளரான, ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டினுடன் மோதினார். தி ராக் ரஸ்ஸல்மேனியா எக்ஸ்-செவன் போட்டியில் WWF சாம்பியனாக கலந்து கொண்டார், ஆனால் அதில் ஆஸ்டின் வில்லனாக மாறி, மிஸ்டர். மெக்மோஹனின் உதவியுடன் பட்டத்தை வென்றார். அடுத்த இரவில் "ரா இஸ் வார்" போட்டியில், WWF சாம்பியன்ஷிப்புக்கான, மறுபோட்டியில் ஆஸ்டினுடன் தி ராக் மோதிக் கொண்டிருந்த போது, ட்ரிபிள் எச் போட்டி நடக்கும் இடத்துக்கு ஒரு இரும்பு சுத்தியலுடன் வந்தார். பலரும் அவர், தி ராக்கிற்கு உதவவே வந்தார் என்று நினைத்தனர், ஏனெனில் ஆஸ்டின் மற்றும் ட்ரிபிள் எச் ஆகியோருக்கு இடையே வெறுப்பு இருந்து வந்தது (மேலும் அந்த இரவில் வின்ஸ் உடன் விவாதிப்பது போன்ற ஒரு காட்சியும் காட்டப்பட்டது), ஆனால் எதிர்பாராதவிதமாக அவர் ஆஸ்டின்/மெக்மோஹன் குழுவுடன் சேர்ந்து தி ராக்கை அடித்தார். ஆஸ்டினும் ட்ரிபிள் எச்சும் ஒரு டாக் டீமாக இணைந்து, அவர்களை அவர்களே "தி டூ மேன் பவர் ட்ரிப்" என்று அழைத்துக் கொண்டனர். தி ராக் பின்னர், ""தி மம்மி ரிட்டன்ஸ்" " படத்தில் நடிக்க சென்றுவிட்டார். ஜூலை 2001 -இல் அவர் திரும்பி வந்தார், WWF அல்லது தி அல்லயன்ஸ் இல் சேர்வதாக முடிவு செய்தார், பின்னர் தி இன்வேஷன் போட்டியில் மெல்ல WWF இல் சேர்ந்தார். சம்மர்ஸ்லாமில், தி ராக் புக்கர் டீ ஐ வென்று WCW சாம்பியன்ஷிப்பை வென்றார். கிறிஸ் ஜெரிக்கோவிடம் அவர் WCW சாம்பியன்ஷிப்பைத் தோற்றார், பின்னர் அவருடன் இணைந்து WWF டாக் டீம் சாம்பியன்ஷிப்பை அதே காலக்கட்டத்தில் நோ மெர்சி இல் வென்றார். "ரா இஸ் வார்" இல் நவம்பர் 5, ஜெரிக்கோவை வென்று இரண்டாவது முறையாக WCW சாம்பியன்ஷிப்பை வென்றார். தி அல்லயன்ஸுக்கு எதிரான சண்டைக்காக, தி ராக் முழுமனதுடன் WWF இல் சேர முடிவு செய்ததால், அதில் அவர் "வின்னர் டேக்ஸ் ஆல்" போட்டியில் சர்வைவர் சீரீஸில் கலந்து கொண்டார், அதில் இறுதியாக அவர் ஸ்டீவ் ஆஸ்டினுடன் தனியாக மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்த போட்டியிலும் தி ராக் ஆஸ்டினை விட நன்றாகவே விளையாடி வந்தார், ஆனால் WWF டீமின் உறுப்பினராக இருந்து, போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன்பு விலக்கப்பட்ட கிறிஸ் ஜெரிக்கோ திடீரென்று வளையத்துக்கு உள்ளே வந்து, தி ராக்கைத் தாக்கினார். ஆஸ்டின் அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, தி ராக்கைத் தோற்கடிக்க முயற்சி செய்தார், ஆனால் ஆஸ்டினின் அணியில் இருக்க வேண்டிய கர்ட் ஆங்கிள், வின்ஸ் மெக்மோஹனின் கையாளாக மாறி, ஆஸ்டினின் தலையில் பெல்ட்டால் தாக்கினார், இதனால் தி ராக் எளிதாக ஆஸ்டினை வீழ்த்தினார் மற்றும், தி அல்லயன்ஸை முற்றிலுமாக அழித்து விட்டார். அந்த ஆண்டின் இறுதியில், WCW சாம்பியன்ஷிப்பை கிறிஸ் ஜெரிக்கோவுக்கு வென்ஜன்ஸ் என்ற போட்டியில் தோற்றார், கிறிஸ் ஜெரிக்கோ முதன்முதலாக சிக்கல் ஏதுமற்ற WWF சாம்பியன் என்ற பெயரைப் பெற்றார். 2002ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், ராக் ஜெரிக்கோவுடன் சண்டையிட்டார், பின்னர் ராயல் ரம்பிள் இல் பொதுவாக ஏற்கப்பட்ட சாம்பியன்ஷிப்பிற்காக சண்டையிட்டார், ஆனால் அந்த போட்டியில் தோற்றார். ஜெரிக்கோவிடம் தோற்றப்பிறகு, தி அண்டர்டேக்கர், ஹாலிவுட் ஹல்க் ஹோகன் ஆகியோருடன் நோ வே அவுட் இல் ரஸ்ஸில்மேனியா X8 இல் மோதினார். ஜூலை 21 இல், தி ராக் சாதனை வெற்றியாக ஏழாவது முறையாக WWE சாம்பியன்ஷிப்பை வென்றார், அது அந்த நேரத்தில் WWE பொதுவாக ஏற்கப்பட்ட சாம்பியன்ஷிப் என்று பெயர் பெற்றிருந்தது. அவர் கர்ட் ஆங்கிள், மற்றும் தி அண்டர்டேக்கர் ஆகியோரை வென்ஜன்ஸில் நடந்த ஒரு போட்டியில் வென்றார், அதில் ஆங்கிளை அவர் ராக் பாட்டம் முறையில் தாக்கினார். "க்ளோபல் வார்னிங்" போட்டிகளில், ட்ரிபிள் எச் மற்றும் ப்ராக் லெஸ்னர் ஆகியோரை வென்று பட்டத்தைத் தி ராக் தக்கவைத்துக் கொண்டார். இதில் ட்ரிபிள் எச்சை பின்னிங் முறையில் வென்றார், பின்னர் தி ராக்கை மறைமுகமாக தாக்க முயன்ற, லெஸ்னரிடமிருந்து ட்ரிபிள் எச் காப்பாற்றினார். இறுதியில் சம்மர்ஸ்லாமில் ஜான்சன் WWE பொதுவாக ஏற்கப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டியை லெஸ்னரிடம் இழந்தார், இத்துடன் அவருடைய இறுதி சாம்பியன்ஷிப் காலம் முடிவடைந்தது, மேலும் லெஸ்னர் வரலாற்றிலேயே மிக இளவயது WWE சாம்பியனாக மாறினார். இந்த சாதனையை முன்னர் தி ராக் தக்கவைத்துக் கொண்டிருந்தார். தி ராக் கடைசியாக "ஸ்மாக்டவுன்!" என்பதில் வில்லத்தனமாக இருந்தார். ஜனவரி 2003 -இல், அவர் வெளிப்படையாக ஹல்க் ஹோகனை விமர்சித்தார். இவர்களுக்கு இடையே நோ வே அவுட்டில் ரஸ்ஸில்மேனியா X8 மறுபோட்டியில் தி ராக் மீண்டும் வெற்றி பெற்றார். இம்முறை அவர் வின்ஸ் மெக்மோஹன் மற்றும் சில்வியன் கிரினியர் ஆகியோரின் உதவியைப் பெற்றார். தி ராக் பின்னர் அவரை அவரே ரா பிராண்ட் என்று அழைத்துக் கொண்டு தி ஹரிக்கேன் மற்றும் பிற ரசிகர்களுக்கு பிடித்த நபர்களுடன் சண்டையிட்டார். அவர் குழந்தைத்தனமான ஜிம்மிக் ஒன்றையும் செய்தார், அதில் அவர், கிட்டாரை வைத்துக்கொண்டு போட்டி நடந்த நகரத்தைக் கிண்டல் செய்து பாட்டு பாடினார், அது பின்னர் "ராக் கான்சர்ட்" ஆக மாறியது. "ரா" இன் 2003 ஆம் ஆண்டு நிகழ்வில் மார்ச் 24 இல் இதுவே மிக முக்கிய நிகழ்ச்சியாக இருந்தது, இதில் ராக் போட்டி நடந்த இடமான கலிஃபோர்னியாவின் சாக்ராமென்டோ நகரத்தைக் கிண்டல் செய்து பாடினார், ஏனெனில் சாக்ராமென்டோ கிங்ஸ்' அணியானது லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் வெல்ல முடியாமலிருந்தது. ஸ்டோன் கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் திரும்ப வந்ததும், அவர்கள் மீண்டும் ஒருமுறை சண்டையிட்டனர், அப்போது தி ராக் ஆஸ்டினை ரஸ்ஸில்மேனியா XIX -இல் தோற்கடித்தார், அதுதான் ஆஸ்டின் ரஸ்லிங்கில் கலந்து கொண்ட கடைசி போட்டியாகும். பின்னர் தி ராக் பில் கோல்ட்பர்க் உடன் சண்டையிட்டார், இவருடன் தான் ராக் பேக்லாஷ் போட்டியில் தோற்றிருந்தார். கிறிஸ் ஜெர்க்கோ மற்றும் கிறிஸ்டியன் ஆகியோர் இடையே ஒரு இரவில் நடந்த சண்டையில் தி ராக் மீண்டும் ரசிகர்களுக்கு பிடித்தவரானார். அவருடைய முந்தைய, வில்லன் காலத்தில், தி ராக் கிறிஸ்டியனை தனக்கு பிடித்த மல்யுத்த வீரர் என்றும், கிறிஸ்டியன் தன்னைத் தானே "நியூ பீப்பிள்ஸ் சாம்பியன்" என்று அழைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அவருடைய ரசிகர்களை "ஹிஸ் பீப்ஸ்" என்று அழைக்க வேண்டும் என்றும் அறிவித்திருந்தார். தி ராக் ரஸ்லிங் போட்டிகளில் 2004 இன் ரஸ்ஸில்மேனியா XX வரை அடிக்கடி தோன்றினார், அதன் ஸ்டோரிலைன், மிக் ஃபோலேவைச் சுற்றி நடந்து வந்தது, அதில் இவர் எவல்யூஷன் (ரிக் ஃப்ளேய்ர், ராண்டி ஓர்டன், ட்ரிபிள் எச் மற்றும் பாடிஸ்டா) ஆகியோருக்கு எதிராக ஆதரிக்க வேண்டியிருந்தது. தி ராக் அவருடைய சொந்த "திஸ் இஸ் யுவர் லைஃப்" போட்டியை ஃபோலேவுக்கு மார்ச் 8, 2004 "ரா" போட்டியில் வழங்குவதாக ஒரு நகைச்சுவையான ரிங் பகுதியும் சேர்க்கப்பட்டது. ராக் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர், ஃபோலேவுடன் இணைந்து, ராக் அன் சாக் கனக்ஷனை மீண்டும் உருவாக்கினார். இந்த ஜோடி, ஆர்டன், ஃப்ளேய்ர் மற்றும் பாடிஸ்டா ஆகியோருடன் ரஸ்ஸில்மேனியா XX இல் ஒரு ஹேண்டிகேப் போட்டியில் தோற்றது, இதில் ஆர்டன் ஃபோலேவை RKO உடன் பின் செய்தார். 2010 வரை, இதுவே ராக்கின் கடைசி போட்டியாக இருந்துவருகிறது. ரஸ்ஸில்மேனியாவைத் தொடர்ந்து WWE -இல் அடிக்கடி தோன்றி வந்தார், அதில் யூகேன் க்கு ஆதரவாக இருந்தது, அவருடைய சொந்த ஊரான மியாமிக்கு வந்திருந்து லா ரெசிஸ்டன்ஸ் என்பவரை ஃபோலே தோற்கடிக்க உதவியது போன்றவற்றை செய்து வந்தார். 2004ஆம் ஆண்டில், அவர் WWE டிவா சர்ச் போட்டியின்போது "பை ஈட்டிங் கான்டஸ்ட்டைத்" தொகுத்து வழங்கினார் பின்னர் ஜோனதான் கோச்மேன் என்பவருக்கு ராக் பாட்டம் மற்றும் பீப்பிள்ஸ் எல்போ ஸ்டைல் அடிகளைக் கொடுத்தார். இந்த தோற்றத்துக்கு பின்னர், பல பேட்டிகளில் ஜான்சன், அவர் இனிமேலும் WWE உடன் ஒப்பந்தத்தில் இல்லை என்று கூறி வந்தார். அவருடைய பெயரான "தி ராக்" என்பதை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்த காரணம், அந்த பெயருக்கு WWE மற்றும் அவர் இருவருமே சொந்தக்காரர்கள் என்று கூறினார். மார்ச் 12, 2007 -இல் தி ராக் WWE -இல் தோன்றினார், இது கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் கழித்து நடந்தது, இதில் முன்பதிவு செய்யப்பட்ட ஒரு பகுதியில் டைட்டன்ட்ரான் என்ற போட்டியில் "ரா" வில் இது ஒளிபரப்பாகியது. பாபி லாஷ்லே உமாகாவை ரஸ்ஸில்மேனியா 23 -இல் டோனல்ட் ட்ரம்ப் என்ற போட்டியிலும், வின்ஸ் மெக்மோஹனின் "பேட்டல் ஆஃப் தி பில்லியனர்ஸ்" போட்டியில் வெல்வார் என்றும் சரியாக "கணித்து" கூறினார். மார்ச் 29, 2008 -இல், தி ராக் அவருடைய தந்தை, ராக்கி ஜான்சனையும், தாத்தா பீட்டர் மைவியாவையும் WWE ஹால் ஆஃப் ஃபேம் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்தார். இந்த நிகழ்ச்சிக்கான பேச்சின்போது, அவர் WWE சூப்பர்ஸ்டார்களான ஜான் சீனா, சான்டினோ மாரெல்லா, கிறிஸ் ஜெரிக்கோ, மிக் ஃபோலே, ஷான் மைக்கேல்ஸ் மற்றும் ஸ்டீவ் ஆஸ்டின் ஆகியோரை வறுத்தெடுத்தார். செப்டம்பர் 2009 -இல், ஜான்சன் வோர்ல்ட் எக்ஸ்ட்ரீம் ரஸ்லிங் ஷோவில் தோன்றி, அவருடைய நீண்டகால நண்பரும், குருவுமான ஜிம்மி ஸ்னூகாவின் மகள்களின் முதல் போட்டியில் அவர்களை ஆதரிக்க வந்திருந்தார். அக்டோபர் 2, 2009 -இல், "ஸ்மேக்டவுன்" நிகழ்ச்சியின் 10வது ஆண்டு விழாவுக்கான நிகழ்ச்சியில் ஒரு முன்பதிவு செய்யப்பட்ட வீடியோவில் சிறப்புத் தோற்றம் தந்து "ஸ்மேக்டவுனின் ஆண்டுவிழாவைப் பற்றி பேசினார். " அதில் விரைவிலேயே " ரா" நிகழ்ச்சியின் "சிறப்பு தொகுப்பாளராக" வருவார் என்பதையும் கோடிட்டு காட்டினார்." ஸ்போர்ட்ஸ் இல்லஸ்ட்ரேடட் "பத்திரிக்கைக்கான ஒரு பேட்டியில் அவர்" " தன்னுடைய புதிய படமான, " டூத் ஃபேரி"யை விளம்பரப்படுத்தினார், பின்னர் அதில் " ரா" நிகழ்ச்சியை ஜனவரி மாதத்தில் தொகுத்து வழங்க வேண்டியிருந்தது, ஆனால், இந்த படத்தை விளம்பரப்படுத்த அவர் மெக்சிகோ செல்ல வேண்டும் என்றும், இந்த கோடை காலத்தில் திரும்பவும் வந்திருந்து நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்றும் கூறினார். " மேலும் அவர், தொகுத்து வழங்குவதற்காக மட்டுமே, WWE நிகழ்ச்சிக்கு வரவிரும்பவில்லை என்றும், பல ஆண்டுகளாக ரசிகர்கள் பார்க்காத வகையில் ரசிகர்களை மகிழ்விக்கவும் விரும்புவதாகவும் அவர் கூறினார்." ஜான்சனின் ரிங் நடத்தையின் வெற்றியானது, அவரை மிக முக்கிய பிரபலமாக மாற உதவியது, அவர் வைக்லெஃப் ஜீன்ஸ் 2000 சிங்கிள் "இட் டஸ்ன்ட் மேட்டர்" என்ற நிகழ்ச்சியிலும் அதனுடன் தொடர்புடைய வீடியோவிலும் தோன்றினார். அதே ஆண்டில், அவர் "சாட்டர்டே நைட் லைவ்" என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சியில், சக மல்யுத்த வீரர்களான ட்ரிபிள் எச், தி பிக் ஷோ, மற்றும் மிக் ஃபோலே ஆகியோரும் தோன்றினர். ஜான்சனின் கருத்துப்படி, நிகழ்ச்சியின் இந்த அத்தியாயத்தின் வெற்றியால்தான் அவர் ஹாலிவுட் ஸ்டுடியோக்களில் இருந்து வாய்ப்புகளைப் பெறத் தொடங்கினார் என்கிறார். "Star Trek: Voyager" மற்றும் "தட் '70s ஷோ" ஆகியவற்றில் ஜான்சன் கவுரவ தோற்றத்தில் தோன்றினார், அதில் அவர் தன்னுடைய தந்தையான, ராக்கி ஜான்சனாக நடித்தார். முதன்முதலாக, "தி மம்மி ரிட்டர்ன்ஸ்" என்ற திரைப்படத்தில், ஸ்கார்ப்பியன் ராஜாவாக படத்தின் தொடக்கத்திலும் இறுதியிலும் ஒரு சில காட்சிகளில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின், பொருளாதார ரீதியான வெற்றி, தொடர்ந்து வந்த படமான, "தி ஸ்கார்ப்பியன் கிங்" கில் முக்கிய கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்தது. அவர் தொடர்ந்து வரவிருக்கிற "ஜானி ப்ராவோ" படத்திலும் நடிப்பதற்கு கேட்கப்பட்டார், ஆனால் அந்த திரைப்படம் தயாரிப்பின்போதே கைவிடப்பட்டது. 2004 ஆம் ஆண்டில், அவருடைய கடைசி WWE போட்டிக்கு பிறகு, ரஸ்லிங்கை விட்டுவிட்டு, நடிப்பில் மட்டுமே முழு கவனம் செலுத்தி வந்தார். டிஸ்னி சேனலின் ஹிட் நிகழ்ச்சியான "கோரி இன் தி ஹவுஸ்" இல், “நெவர் தி டுவெயின் ஷால் மீட்” என்ற அத்தியாயத்தில் நடித்தது உட்பட தொடர்ந்து தொலைக்காட்சிகளிலும் தோன்றி வந்தார் WWE -இல் இதன் பிறகும் ஜான்சன் இணைந்திருக்கவில்லை என்றபோதிலும், அந்நிறுவனம் "தி ராக்" பொருட்களை விற்று வந்தது, மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மான்டேஜிங் காட்சிகளில் ஜான்சன் தொடர்ந்து நன்றாகவே காண்பிக்கப்பட்டு வந்தார். தி ராக் தொடர்ந்து அவருடைய, பல திறன்களையும் நடிப்பையும் பல வகைகளில் காண்பித்து வந்தார். அதில் குறிப்பிடத்தக்கவை, பிரபல கால்பந்தாட்ட வீரராக, "தி கேம் பிளான்" திரைப்படத்திலும், "கெட் ஸ்மார்ட்" திரைப்படத்தில் ஏஜென்ட் 23 ஆக நடித்திருந்ததும் ஆகும். 2007 -ஆம் ஆண்டின் "கின்னஸ் புக் ஆஃப் வோர்ல்ட் ரிக்கார்ட்ஸ்" புத்தகத்தில், முதல் படத்திலேயே மிக அதிக சம்பளம் பெற்ற நடிகர் என்ற பெருமையுடன் இடம்பெற்றார், முதல் படத்தில் அவர் $5.5 மில்லியன் சம்பளமாக பெற்றார். பிப்ரவரி 24, 2008 -இல் 80 வது அகாடமி விருதுகளில் அவர் கலந்து கொண்டார், அதில் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான விருதை வழங்கினார். "தி கேம் பிளான்" படத்தில் நடித்ததற்காக, 2008 -ஆம் ஆண்டின் நிக்லோடியன் கிட்ஸ் சாய்ஸ் விருதுகளுக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் அதை ஜானி டெப்பிடம் தோற்றுவிட்டார், அவர் "Pirates of the Caribbean: At World's End" திரைப்படத்திற்காக இந்த விருதைப் பெற்றார். மார்ச் 20, 2009 -இல் ஜான்சன், ஜே லேனோ என்பவருடன் தி டுனைட் ஷோவில் தோன்றினார். 2009 நிக்லோடியன் கிட்ஸ் சாய்ஸ் விருதுகளை மார்ச் 28 -இல் ஜான்சன் தொகுத்து வழங்கினார். "ஆர்ட் டீச்சர்" நிகழ்ச்சியின் "விசார்ட்ஸ் ஆஃப் வேவர்லி ப்ளேஸ்" அத்தியாயத்திலும் அவர் தோன்றினார். தி வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இருந்த பிணைப்பின் காரணமாக அவர் இதை செய்தார். சாட்டர்டே நைட் லைவ் நிகழ்ச்சியில் பல சிறப்பு தோற்றங்களில் அவர் தோன்றியுள்ளார், நகைச்சுவையாக "தி ராக் ஒபாமா" என்ற நபராகவும் தோன்றினார். அந்த கதாபாத்திரம் மறைமுகமாக தி ஹல்க்கைக் குறிப்பிட்டது. அதாவது, நீங்கள் பாரக் ஒபாமாவை கோபப்படுத்தினால், அவர் "தி ராக் ஒபாமாவாக" மாறி விடுவார். டேனி கார்சியாவை மே 3, 1997 ஆம் ஆண்டில் ஜான்சன் திருமணம் செய்து கொண்டார், இந்த நாள் அவருடைய 25வது பிறந்தநாளுக்கு அடுத்த நாளாகும். அந்த திருமணத்தில் கலந்து கொண்ட சிறந்த நபர், இவருடைய சக ரஸ்லரும், தோழருமான டோங்கா ஃபிஃபிடா என்பவராவார், அவர் ஹகூ என்று அதிகமாக அறியப்படுகிறார். ஜான்சனுக்கும், அவர் மனைவிக்கும், ஆகஸ்ட் 14, 2001 ஆம் ஆண்டில் ஒரு பெண் குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு சிமோன் அலக்ஸாண்ட்ரா என்று பெயரிட்டனர். ஜூன் 1, 2007 -இல் ஜான்சனும் கார்சியாவும், 10 ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு தாங்கள் பிரியப்போவதாக அறிவித்தனர். அவர்களின் பிரிவு நட்பு ரீதியானதே என்றும், மீதமுள்ள வாழ்க்கையை சிறந்த நண்பர்களாக ஒன்றாகவே கழிப்பார்கள் என்றும் அவர்கள் கூறினார்கள். 2006 -ஆம் ஆண்டில், ஜான்சன் "தி டுவெயின் ஜான்சன் ராக் ஃபவுண்டேஷன்" என்ற அமைப்பை உருவாக்கினார், அந்த நிறுவனம் ஆபத்தில் உள்ள மற்றும் உடல்குறைபாடு உள்ள குழந்தைகளுக்காக தொண்டு செய்து வந்தது. அக்டோபர் 2, 2007 -இல் ஜான்சனும் அவருடைய மனைவியும் சேர்ந்து $1 மில்லியன் பணத்தை, மியாமி பல்கலைக்கழகத்துக்கு கொடுத்தனர், அங்கு கால்பந்து வசதிகளை மேம்படுத்த உதவினார்கள்; இதுவே அந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்களால் விளையாட்டுத் துறைக்கு தரப்பட்ட மிகப்பெரிய நன்கொடையாகும். மியாமி பல்கலைக்கழகமானது, ஹரிக்கேன்களின் லாக்கர் அறையை ஜான்சனை கவுரவிக்கும் விதமாக மாற்றியது. 2000 -ஆம் ஆண்டில், ஜான்சன் 2000 ரிபப்ளிகன் கட்சியின் தேசிய மாநாட்டிலும் 2000 டெமோக்ராடிக் கட்சியின் தேசிய மாநாட்டிலும் கலந்து கொண்டார், முதலாவது நிகழ்ச்சியில் உரையாற்றவும் செய்தார். இந்த இரண்டு தோற்றங்களுமே, WWE -இன் பாகுபாடற்ற "ஸ்மேக்டவுன் யுவர் வோட்" என்ற பிரச்சாரத்துக்காகவே, இது எந்தவொரு கட்சியையும் வேட்பாளரையும் சாராத இளைஞர்களையும் வாக்களிக்க தூண்டுவதற்காக நிகழ்ந்த பிரச்சாரமாகும். ஜான்சனின் தாயாரான, அடா ஃபிடிசெமானு மைவியா, சமோவாவின் அரசர் மலேடோவா டனுமாஃபிலி II என்ற மன்னரின் வழிவந்தவர் என்பதால், 2004 -ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தில் சமோவாவுக்கு ஜான்சன் சென்றபோது அவருக்கு புனிதமான "சிய்யுலி" என்ற பட்டம் வழங்கப்பட்டது, இது சமோவாவின் மக்களுக்கு அவர் ஆற்றிவந்த சேவைக்காக வழங்கப்பட்டது. எனவே, அவர், சமோவா வட்டாரங்களில், "சிய்யுலி டுவெயின் ஜான்சன்" என்ற பெயரில் அறியப்படுகிறார். சமோவாவின் தேசிய ரக்பி யூனியன் டீமின் ஆதரவாளார் ஆவார் இவர், இதனாலேயே இந்த அணியின் வலைத்தளத்தில், 2007 ரக்பி உலகக்கோப்பையின் போது, ஒரு தனிப்பட்ட மனு சமோவா ஜெர்சியில் அலங்கரிக்கப்பட்ட எழுத்துக்களில் "தி ராக்" என்று எழுதப்பட்டு அவருடைய புகைப்படம் காண்பிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகளில் சனிக்கிழமை காலை ஒளிபரப்பாகும் சாக்கர் ஏஎம் என்ற நிகழ்ச்சியில் இரண்டு முறை அவர் தோன்றியிருக்கிறார். அவருடைய முதல் தோற்றத்தின்போது, அவர் மக்கிலெஸ்ஃபீல்ட் டவுன் எஃப்சி அணியின் ரசிகராகி, அவர்களை தன்னுடைய தொப்பியிலும் வரைந்து கொண்டார். இதன் காரணமாக, அந்த அணி இவரை, கவுரவ சீசன் டிக்கட் வைத்திருப்பவராக மாற்றியது, மற்றும் மாதிரி சட்டைகளையும் இவருக்கு அனுப்பியது. இரண்டாவது தோற்றத்தின்போது, அவர் அணியின் துண்டை அணிந்து, கிளப் தொடர்பான பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். ஜான்சனின் சிறந்த நண்பர்களில், அர்னால்டு ஸ்வார்செனகர் மற்றும் எக்ஸ்-மென் புகழ், ஹக் ஜேக்மேன் ஆகியோரும் அடங்குவர். மைக்கெல் கிளார்க் டங்கன் மற்றும் ஜான்சன் ஆகியோரும் நெருக்கமான நண்பர்களாகவே இருந்தனர். ஜான்சன் அவருடைய சுயசரிதையை, "தி ராக் சேஸ்...(The Rock Says...)" என்ற பெயரில், 1999 -ஆம் ஆண்டில், ஜோ லேடன் உடன் இணைந்து வெளியிட்டார். ஹாரிஸ் ஜயராஜ் ஹாரிஸ் ஜயராஜ் (பிறப்பு 8 சனவரி 1975, திருநெல்வேலி) தமிழ் திரைப்படத்துறையில் உள்ள ஓர் இசையமைப்பாளர். பல தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணி இசையும் பாடல்களும் அமைத்துள்ளார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவர் சென்னையில் வாழ்ந்து வருகிறார். சென்னையின் கிறித்துவ நாடார் குடும்பத்தில் பிறந்தவர் ஹாரிஸ் ஜயராஜ். அவரது தந்தை எஸ். எம். ஜயராஜ் திரைப்படத்துறையில் கிட்டார் வாசிப்பவராக இருந்து பின்னர் இசையமைப்பாளராக உயர்ந்தவர். மலையாள இசையமைப்பாளர் சியாமிடம் துணைவராகப் பணியாற்றிய அவர், தமது மகனை பெரும் பாடகராகக் காண ஆவல் கொண்டார். ஆனால்,சென்னை கிருஷ்ணசாமி மெட்ரிக் பள்ளியில் பயின்று வந்த ஹாரிசுக்கு இசையமைப்பில் பெரும் ஆர்வம் இருந்தது. தமது குரல் பாடகராக ஒத்துழைக்கவில்லை என்று கூறும் ஹாரிஸ் ஹான்ஸ் சிம்மரின் படைப்புகளில் மனதைப் பறிகொடுத்தார். இவர் ஜாய்ஸ் என்பவரை மணந்தார். இவருக்கு சாமுவேல் நிக்கோலஸ் என்னும் மகனும், கேரன் நிக்கிட்டா என்னும் மகளும் உள்ளனர். இவர் தன்னுடைய 12-ம் வயதியல் (1987)ல் தன்னுடைய இசைப்பயணத்தை ஆரம்பித்தார். கிடார் வாசிப்பாளராக ஆரம்பித்துப் பின்னர் கீ-போர்டு போன்ற இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக்கொண்டார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் 25-க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்களோடு பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்ற பிரபல இசையமப்பாளர்களோடு பணிபுரிந்துள்ளார். இசையமைப்பாளராக 2001 ஆம் ஆண்டு திரைப்படத் துறையில் நுழைந்த ஹாரிஸ் ஜெயராஜ் தன் முதல் படமான 'மின்னலே' மூலமே மிகப் பெரிய தடம் பதித்தார். 2011ம் ஆண்டு ஹாரிஸ் ஆன் தி எட்ஜ் எனும் இசைக் கச்சேரியை நடத்தப்போவதாக அறிவித்தார். அதில் தமிழ் முன்னனிப் பாடகர்களான கார்த்திக், ஹரிசரன், சின்மயி, திப்பு, ஹரிணி, நரேஷ் ஐயர், ஹரீஸ் இராகவேந்திரா, க்ரிஸ், ஆலப்ராஜு, கேகே, பென்னிதயாள், ஆன்ட்ரியா, சுவி சுரேஷ், சுனிதா சாரதி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி, சுவேதா மேனன் ஆகியோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை, இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்கினார். இவர் 2008ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த கோக்கக் கோலா நிறுவனத்தின் விளம்பரப்படம், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை மற்றும் அகரம் தொண்டு நிறுவனம் இணைந்து தயாரித்த ஹுரோவா? ஜீரோவா? எனும் கல்வி உரிமை, குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட விழிப்புணர்ச்சி விளம்பரப்படம் போன்று பல்வேறு விளம்பரப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் நடிகர்கள் ஹுரோவா? ஜீரோவா? எனும் விளம்பரப்படத்தில், தமிழ்த் திரைத்துறையின் முன்னனி நடிகர்களான விஜய், சூர்யா, மாதவன், ஜோதிகா போன்றோர் தோன்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் (7 ஏப்ரல் 1770 – 23 ஏப்ரல் 1850) ஒரு முக்கியமான ஆங்கில இன்பத்துப்பால் கவிஞராவார் இவர் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜுடன், இணைந்து 1798 ஆம் ஆண்டு கூட்டு பதிப்பாக வெளியிடப்பட்ட "வசன கவிதைகள்" கொண்டு ஆங்கில இலக்கியத்தில் அகத்திணைக் காலத்தைத் தொடங்க உதவியிருக்கிறார். தி பிரிலூட் வேர்ட்ஸ்வொர்த்தின் தலைசிறந்த படைப்பாகக் கருதப்படுகிறது, பாதியளவிற்கு சுயசரிதமான அவருடைய தொடக்ககால கவிதையான இதை இந்தக் கவிஞர் பலமுறை திருத்தியும் நீட்டியும் எழுதியிருக்கிறார். இந்தப் படைப்பு இவருடைய மரணத்திற்கு பின்னர் தலைப்பிடப்பட்டு பதிப்பிக்கப்பட்டிருக்கிறது, அதற்கு முன்புவரை இந்தக் கவிதை "கோல்ரிட்ஜிற்கு" என்றே பொதுவாக அறியப்பட்டிருந்தது. வேர்ட்ஸ்வொர்த் 1843 முதல் 1850 இல் அவர் இறக்கும்வரை இங்கிலாந்தின் அரசவைக் கவிஞராக இருந்திருக்கிறார். ஜான் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் ஆன் குக்ஸனுக்கு ஐந்து குழந்தைகளுள் இரண்டாவதாக வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் கும்பர்லேண்ட்— இயற்கை காட்சிகள் நிறைந்த வடமேற்கு இங்கிலாந்தில் உள்ள லேக் மாவட்டத்தின் ஒரு பகுதி - காக்கர்மவுத்தில் உள்ள வேர்ட்ஸ்வொர்த் ஹவுஸில் 1770 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 இல் பிறந்தார். அவருடைய சகோதரி, கவிஞரும் நாட்குறி்ப்பு எழுத்தாளருமான, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் நெருக்கமாக இருந்த டோரதி வேர்ட்ஸ்வொர்த் அதற்கு அடுத்த ஆண்டிலேயே பிறந்தார் என்பதோடு அவர்கள் இருவருக்கும் ஒன்றாகவே ஞானஸ்நானம் செய்விக்கப்பட்டது. அவர்களுக்கு மேலும் மூன்று உடன்பிறந்த சகோதரர்கள் இருந்தனர்: மூத்தவரான ரிச்சர்ட் பின்னாளில் வழக்கறிஞரானார்; டோரதிக்குப் பின்னர் பிறந்த ஜான், கவிஞராகவும் வில்லியம் மற்றும் டோரதியுடன் சேர்ந்து தான் சாகும்வரை இயற்கையை ரசித்தவராகவும் இருந்த இவர் 1809ஆம் ஆண்டில் கேப்டன் மட்டுமே தப்பித்த கப்பல் விபத்தில் உயிரிழந்தார்; கிறிஸ்டோபர், இளையவரான இவர் பின்னாளில் கல்வித்துறையாளரானார். அவருடைய தந்தையார் லான்ஸ்டேல் பிரபு ஜேம்ஸ் லோதரின் சட்டப்பூர்வ பிரதிநிதியாவார், இந்த தொடர்புகளின் மூலமாக சிறிய நகரத்தில் அவர்களால் பெரிய மாளிகையில் வசிக்க முடிந்தது. வேர்ட்ஸ்வொர்த் அவருடைய உடன்பிறப்புக்களுடன் சற்று விலகியே இருந்தார், அவருடைய தந்தையார் 1783ஆம் ஆண்டில் இறக்கும்வரை இந்த தொலைவு நீடித்தது. வேர்ட்ஸ்வொர்த்தின் தந்தையார், அவர் எப்போதாவதுதான் இருப்பார் என்றாலும் அவருக்கு மில்டன், ஷேக்ஸ்பியர் மற்றும் ஸ்பென்சர் உட்பட அவருக்கு கவிதைகளை கற்றுக்கொடுத்தார், தன்னுடைய மகனை தன் சொந்த நூலகத்திற்குள் அனுமதித்ததைக் காட்டிலும், காக்கர்மவுத்தில் படிப்பதற்கு அதிக நேரம் செலவழிக்கச் செய்தார். வேர்ட்ஸ்வொர்த் கும்பர்லேண்ட், பென்ரித்தில் இருந்த அவருடைய தாயாரின் பெற்றோர்களுடைய வீட்டிலும் தங்கினார். பென்ரித்தில், வேர்ட்ஸ்வொர்த் மூர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டார் என்பதோடு இந்த நிலத்தோடு தனக்கிருந்த அனுபவத்தாலும் அவர்களிடத்தில் தாக்கமேற்படுத்தினார், மேலும் அவருடைய உறவினர்களிடமிருந்து பெற்ற மோசமான நடத்தை அனுபவத்தால் அவர் இயற்கையை நோக்கி தன்னுடைய கவனத்தைத் திருப்பினார். குறிப்பாக, வேர்ட்ஸ்வொர்த்தால் தன்னுடைய பாட்டனார்,பாட்டி மற்றும் மாமாவுடன் இருக்கவே இயலவில்லை, அவர்களுடனான அவருடைய தனிமை வாழ்வும் அவரை விரக்தியடையச் செய்து தற்கொலை செய்துகொள்வதை நோக்கி தூண்டியது. அவருடைய தாயாரின் மரணத்திற்குப் பின்னர், 1778 இல் ஜான் வேர்ட்ஸ்வொர்த் வில்லியமை ஹாக்ஸ்ஹெட் இலக்கணப் பள்ளிக்கும் டோரதியை யார்க்சயரில் உள்ள அவருடைய உறவினர்களுடன் வாழ்வதற்கும் அனுப்பினார்; அவரும் வில்லியமும் அடுத்த ஒன்பது ஆண்டுகளுக்கு மீண்டும் சந்தித்துக்கொள்ளவே இல்லை. இருப்பினும் ஹாக்ஸ்ஹெட், கல்வியுடனான முதல் தீவிர அனுபவமாக வேர்ட்ஸ்வொர்த்திற்கு அமைந்தது, அவர் தனது தாயாரால் படிப்பதற்கு பயிற்றுவிக்கப்பட்டார் என்பதோடு காக்கர்மவுத்தில் குறைந்த தரமுள்ள சிறிய பள்ளியில் படித்தார். காக்கர்மவுத் பள்ளிக்குப் பின்னர், அவர் உயர்வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கான பென்ரித்தில் இருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டு ஆன் பிர்கிட்டால் பயிற்றுவிக்கப்பட்டார், இந்தப் பெண்மனி தன்னுடைய மாணவர்களிடத்தில் கல்வித்துறை மற்றும் உள்ளூர் செயல்பாடுகளிலான குறிப்பாக ஈஸ்டர், மே தினம், மற்றும் ஷ்ரோவ் செவ்வாய்க்கிழமை உள்ளிட்ட பண்டிகைகளின்போது பாரம்பரியமான விடயங்களை வலியுறுத்தியவராவார். வேர்ட்ஸ்வொர்த்திற்கு பைபிளும், "ஸ்பெக்டேட்டரும்" பயிற்றுவிக்கப்பட்டன, ஆனால் குறைவாகத்தான். எதிர்காலத்தில் தன்னுடைய மனைவியாகப்போகும் மேரி உள்ளிட்ட ஹட்சின்சன்களை வேர்ட்ஸ்வொர்த் இந்தப் பள்ளியில்தான் சந்தித்தார். வேர்ட்ஸ்வொர்த் தன்னுடைய தனிப்பாசுரத்தை 1787ஆம் ஆண்டில் "தி யூரோப்பியன் மேகஸினில்" பதிப்பித்தபோது முதன்முறையாக எழுத்தாளராக அறிமுகமானார். அதே ஆண்டில் கேம்ப்ரிட்ஜ், செயிண்ட் ஜான் கல்லூரியில் சேர்ந்தார் என்பதோடு 1791ஆம் ஆண்டில் தன்னுடைய பி.ஏ. பட்டத்தைப் பெற்றார். அவர் தன்னுடைய முதல் இரண்டு கோடைகால விடுமுறைகளுக்காக ஹாக்ஸ்ஹெட்டிற்கு திரும்பினார், பிந்தைய விடுமுறை தினங்களை நடை பயணங்கள், அழகிற்காகவும் அவற்றின் நிலவமைப்பிற்காகவும் பெயர்பெற்ற இடங்களை சுற்றிப்பார்ப்பதில் செலவிட்டார். 1790ஆம் ஆண்டில் அவர் ஐரோப்பாவில் நடைபயணத்தை மேற்கொண்டார், அவர் ஆல்ப்ஸ் மலைகளுக்கு விரிவான பயணம் மேற்கொண்ட இந்த காலகட்டத்தில் அருகாமையிலிருக்கும் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி ஆகியவற்றிற்கும் சென்று வந்தார். அவருடைய இளைய சகோதரரான கிறிஸ்டோபர் டிரினிட்டி கல்லூரியின் முதுநிலைப் பட்டதாரியானார். 1791 ஆம் ஆண்டு நவம்பரில் அவர் புரட்சிகரமான பிரான்ஸிற்கு வருகைபுரிந்து குடியரசு இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அவர் ஆனட் வேலன் என்ற பிரான்ஸ் பெண்ணுடன் காதல் வசப்பட்டார், இவர்களுக்கு 1792ஆம் ஆண்டில் முதல் குழந்தை பிறந்தது. பணமின்மையாலும், பிரான்சுடனான பிரித்தானியாவின் பதற்றங்களாலும் அடுத்த வருடமே அவர் தனியாக இங்கிலாந்திற்கு திரும்பினார். அவர் திரும்பிய சூழ்நிலைகளும், அதன் விளைவான அவருடைய நடத்தையும் அவர் ஆனட்டை திருமணம் செய்துகொள்வதாக அறிவித்த அவருடைய விருப்பத்திற்கான சந்தேகங்களை எழுப்பியது, ஆனால் அவருடைய பின்னாளைய வாழ்வில் அந்தப் பெண்மணிக்கும் அவருடைய மகளுக்கும் அவரால் இயன்ற உதவிகள் அனைத்தையும் அவர் செய்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில், அவருடைய புகழ்பெற்ற "அமைதியும், சுதந்திரமும் நிரம்பிய அழகான மாலையை" எழுதினார், அவர் பத்து வருடங்களாக பார்த்தேயிராத தன்னுடைய மகளுடன் கடற்கரையோர நடைபயணத்திற்கு அழைப்பு விடுப்பதாக அது அமைந்திருந்தது. இந்த கவிதையில் உள்ள பொருளின்படி அவர் தன்னுடைய மகளை அதற்கு முன்பு பார்த்ததே இல்லை. இது தோன்றும் வரிகள் மகள் மற்றும் தாய் ஆகிய இருவருக்குமான அவருடைய ஆழமான அன்பை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. தி ரீன் ஆஃப் டெர்ரர் அவரை குடியரசு இயக்கத்திலிருந்து தனிமைப்படுத்தியது, பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையே நடைபெற்ற போர் அவர் ஆனட்டையும் கரோலினையும் மீண்டும் சில வருடங்களுக்குப் பார்ப்பதிலிருந்து தடுத்தன. 1790களில் வேர்ட்ஸ்வொர்த் மன அழுத்தத்திற்கு ஆளாகியும் உணர்ச்சிவகையில் நிம்மதியின்றியும் இருந்தார் என்று வலுவாக பரிந்துரைக்கப்படுகிறது. அவர் பிறகு திருமதி. கேன்னன் என்பவருடன் காதலில் விழுந்தார். பீஸ் ஆஃப் அமியன்ஸ் மீண்டும் பிரான்சிற்கு செல்ல அனுமதித்தது, 1802ஆம் ஆண்டில் வேர்ட்ஸ்வொர்த் மற்றும் அவருடைய சகோதரி டோரதி ஆகியோர் பிரான்ஸில் உள்ள ஆனட் மற்றும் கரோலினை சந்திக்கச் சென்றனர் என்பதோடு வேர்ட்ஸ்வொர்த்தின் வேண்டுகோள்கள் குறித்த பரஸ்பர உடன்பாட்டு தீர்வோடு வந்தனர். ஆங்கில ரொமாண்டிக் விமர்சனத்தின் "பிரகடனம்" என்று அழைக்கப்படும் தன்னுடைய "வசனக் கவிதைக்கான முன்னுரையில்" வேர்ட்ஸ்வொர்த் தன்னுடைய கவிதைகளை "பரிசோதனைப்பூர்வமானது" என்று அழைக்கிறார். 1793 ஆண்டு அன் "ஈவ்னிங் வாக்" மற்றும் "டிஸ்கிரிப்டிவ் ஸ்கெட்சஸ்" ஆகிய தொகுப்புக்களோடு வேர்ட்ஸ்வொர்த்தின் முதல் பதிப்பிக்கப்பட்ட கவிதையைக் கண்டது. 1795ஆம் ஆண்டில் அவர் ரெய்ஸ்லி கால்வெர்ட்டிடமிருந்து 900 பவுண்டுகள் சொத்தைப் பெற்றார், இதனால் அவரால் தொடர்ந்து கவிதை எழுத முடிந்தது. அந்த ஆண்டில் அவர் சாமர்ஸெட்டில் சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜை சந்தித்தார். இந்த இரண்டு கவிஞர்களும் நெருக்கமான நண்பர்களானார்கள். 1797ஆம் ஆண்டில் வேர்ட்ஸ்வொர்த்தும் அவருடை சகோதரி டோரதியும் நெதர் ஸ்டோவியில் கோல்ரிட்ஜின் வீட்டிலிருந்து சில மைல்கள் தொலைவில் இருக்கும் சாமர்ஸெட்டில் உள்ள அல்ஃபாக்ஸ்டன் மாளிகைக்குக் குடிபெயர்ந்தனர். வேர்ட்ஸ்வொர்த்தும் கோல்ரிட்ஜும் ஒன்றாக இணைந்து (டோரதியின் கூர்நோக்கோடு) ஆங்கில ரொமாண்டிக் இயக்கத்தின் முக்கியமான படைப்பாக கருதப்படும் "வசன கவிதைகளை" (1798) படைத்தனர். இந்த தொகுப்பு ஆசிரியர் பெயராக வேர்ட்ஸ்வொர்த்தின் பெயரையோ அல்லது கோல்ரிட்ஜின் பெயரையோ கொண்டிருக்கவில்லை. வேர்ட்ஸ்வொர்த்தின் மிகவும் புகழ்பெற்ற கவிதைகளான "டின்டெர்ன் அபே" கோல்ரிட்ஜின் "தி ரிம் ஆஃப் தி ஏன்சியண்ட் மரைனர்" உடன் சேர்த்து இதில் பதிப்பிக்கப்பட்டிருந்தது. 1800ஆம் ஆண்டில் வெளிவந்த இரண்டாவது பதிப்பு வேர்ட்ஸ்வொர்த்தின் பெயரை மட்டுமே ஆசிரியராக கொண்டிருந்தது என்பதோடு 1802 ஆம் ஆண்டு பதிப்பில் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு விவாதிக்கப்பட்ட முன்னுரையையும் உள்ளிட்டிருந்தது. "வசன கவிதைகளுக்கான" முன்னுரை ரொமாண்டிக் இலக்கியக் கோட்பாட்டின் மையப் படைப்பாக கருதப்படுகிறது. இதில், புதிய வகை கவிதையின் ஆக்கக்கூறுகளாக தான் பார்ப்பனவற்றை வேர்ட்ஸ்வொர்த் விவாதித்திருந்தார், இதில் ஒன்று "மனிதர்களின் உண்மையான மொழியின்" அடிப்படையில் அமைந்திருந்தது என்பதுடன் பதினெட்டாம் நூற்றாண்டு கவிதையின் மிகவும் செல்வாக்கு பெற்றிருந்த சொல்நடையை தவிர்ப்பதாக இது இருந்தது. இங்கே, வேர்ட்ஸ்வொர்த் "வலிமைவாய்ந்த உணர்வுகளின் இடைவிடாத ஓட்டம்: இது தன்னுடைய தோற்றுவாயை அமைதியில் இருக்கும் மறுசேகரிப்பு செய்யப்பட்ட உணர்ச்சியிலிருந்து எடுத்துக்கொள்கிறது" என்று தன்னுடைய புகழ்பெற்ற வரையறையை வழங்கியிருந்தார். "வசனக் கவிதையின்" நான்காவது மற்றும் இறுதிப் பதிப்பு 1805 ஆம் ஆண்டு பதிப்பிக்கப்பட்டது. வேர்ட்ஸ்வொர்த், டோரதி மற்றும் கோல்ரிட்ஜ் ஆகியோர் 1798 ஆம் ஆண்டு இலையுதிர் காலத்தில் ஜெர்மனிக்கு பயணமானார்கள். இந்தப் பயணத்தால் அறிவார்த்தமான முறையில் கோல்ரிட்ஜ் தூண்டப்பட்டிருக்க, வேர்ட்ஸ்வொர்த் மீதான இதன் முக்கியமான விளைவு அவரிடத்தில் வீட்டைப் பிரிந்த துயரத்தை உருவாக்கியிருந்தது. 1798–1799 மோசமான குளிர்காலத்தின்போது வேர்ட்ஸ்வொர்த் டோரதியுடன் கோஸ்லரில் வாழ்ந்தார், ஏறக்குறைய அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் தனிமையால் பின்னாளில் "தி பிரிலூட்" என்று தலைப்பிடப்பட்ட சுயசரிதை படைப்பை அவர் உருவாக்கத் தொடங்கினார். அவர் "தி லூஸி போயம்ஸ்" உள்ளிட்ட தன்னுடைய புகழ்பெற்ற பல கவிதைகளையும் எழுதினார். அவரும் அவருடைய சகோதரியும் இப்போது லேக் மாவட்டத்தில் இருக்கும் கிரேஸ்மேரில் உள்ள டோவ் காட்டேஜிற்கு இந்த நேரத்தில் அருகாமையிலிருந்த சக கவிஞரான ராபர் சதேவுடன்.திரும்பி வந்தனர். வேர்ட்ஸ்வொர்த், கோல்ரிட்ஜ் மற்றும் சதே ஆகிய மூவரும் "லேக் கவிஞர்கள்" என்று அறியப்பட்டனர். இந்த காலகட்டத்தினூடாக அவருடைய பல கவிதைகளும் மரணம், உறுதிப்பாடு, பிரிவு மற்றும் துயரம் ஆகியவற்றை கருவாகக் கொண்டிருந்தன. 1802ஆம் ஆண்டில், ஆனட் மற்றும் கரோலினை சந்திக்க டோரதியுடன் பிரான்சுக்கு சென்றுவந்த சிறு பயணத்திற்குப் பின்னர், லாண்ஸ்டேலின் முதல் பிரபுவான லோதரின் வாரிசு வில்லியம் லோதர், தனது உதவியாளருக்கு லோதர் கொடுக்கத் தவறியதால் ஏற்பட்ட 4,000 பவுண்டுகள் கடனை அவருக்கு திருப்பியளித்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் வேர்ட்ஸ்வொர்த் தன்னுடைய குழந்தைப்பருவ தோழியான மேரி ஹட்சின்சனை திருமணம் செய்துகொண்டார். டோரதி இந்தத் தம்பதியினருடனே தொடர்ந்து வசித்து வந்தார் என்பதோடு மேரியுடன் நெருக்கமான உறவைப் பேணினார். அதற்கடுத்த ஆண்டில், மேரி ஐந்து குழந்தைகளுள் முதலாமவரை பெற்றெடுத்தார், அவர்களில் மூன்று பேர் வில்லியமிற்கும் மேரிக்கும் முன்பாகவே இறந்துபோயினர்: வேர்ட்ஸ்வொர்த்திற்கு மூன்று பாகங்களாக நீண்ட தத்துவார்த்த கவிதை எழுதும் திட்டம் பல வருடங்களாக இருந்துவந்தது, அதை அவர் "தி ரெக்லஸ்" என்று அழைக்க விரும்பினார். அவர் 1798–99 இல் பெயரிப்படாத சுயசரிதைக் கவிதையை எழுதத் தொடங்கினார், ஆனால் அதை "தி ரெக்லசிற்கான" இணைப்பாக "கோல்ரிட்ஜிற்கான கவிதை" என்றழைத்தார். 1804ஆம் ஆண்டில் அவர் இந்த சுயசரிதைப் படைப்பை விரிவுபடுத்தத் தொடங்கினார், அவர் திட்டமிட்ட பெரிய படைப்பிற்கு இணைப்பாக சேர்ப்பதைக் காட்டிலும் அதை ஒரு முன்னுரையாக உருவாக்க விரும்பினார். 1805ஆம் ஆண்டில் அதை அவர் நிறைவுசெய்தார், ஆனால் "தி ரெக்லஸ்" முழுவதையும் நிறைவாக்கும்வரை அதை ஒரு தனிப்பட்ட பதிப்பாக வெளியிட மறுத்துவிட்டார். 1805ஆம் ஆண்டில் அவருடைய சகோதரர் ஜானின் மரணம் அவரை வெகுவாக பாதித்தது. "தி பிரிலூடில்" வேர்ட்ஸ்வொர்த் சேர்த்துக்கொண்டுள்ள தத்துவ பிரமாணம் மற்றும் "லைன்ஸ் கம்போஸ்டு எ ஃப்யு மைல்ஸ் எபோவ் டின்டர்ன் அபே" போன்ற படைப்புகள் அதிகப்படியான விமர்சன விவாதங்களுக்கு மூலாதாரமாக இருந்திருக்கின்றன. வேர்ட்ஸ்வொர்த் தன்னுடைய தத்துவ வழிகாட்டியாக பிரதானமாக கோல்ரிட்ஜையே நம்பியிருந்தார் என்று நீண்டகாலமாக கருதப்பட்டு வந்திருக்கும் வேளையில், மிகச் சமீபத்திய ஆய்வுகள் அவரும் கோல்ரிட்ஜும் நண்பர்களான 1790களின் மத்தியப் பகுதிக்கு பல வருடங்கள் முன்பிருந்தே வேர்ட்ஸ்வொர்த்தின் இந்தக் கருத்தாக்கங்கள் அவரிடம் உருவாகியிருக்கின்றன என்று குறிப்பிடுகின்றன. 1792ஆம் ஆண்டில் புரட்சிகரமான பாரிஸில் இருக்கையில் இருபத்தி இரண்டு வயதான வேர்ட்ஸ்வொர்த் புதிர் நிரம்பிய பயணியான ஜான் "வாக்கிங்" ஸ்டீவர்ட் (1747–1822), என்பவருடன் பழகியிருந்தார், இவர் இந்தியா, மெட்ராஸில் இருந்து பெர்ஸியா மற்றும் அரேபியா வழியாக ஆப்பிரிக்காவைக் கடந்து ஐரோப்பா முழுவதையும் சுற்றிவந்து அமெரிக்காவிற்கு பறந்துசெல்ல இருந்த முப்பது வயதுகள் இறுதியில் இருந்த பயணியாவார். அவர்கள் ஒன்றிணைந்த நேரத்தில், ஸ்டீவர்ட் "தி அப்போகிலிப்ஸ் ஆஃப் நேச்சர்" (லண்டன், 1791) என்ற அசலான பொருள்வாத தத்துவத்தின் லட்சியப் படைப்பை பதிப்பித்திருந்தார், இது வேர்ட்ஸ்வொர்த்தின் பல தத்துவார்த்த உணர்வுகளுக்கு கடன்பட்டதாக இருந்தது. 1807ஆம் ஆண்டில் அவருடைய "இரண்டு தொகுப்புகள் கவிதை" "Ode: Intimations of Immortality from Recollections of Early Childhood" உட்பட பதிப்பிக்கப்பட்டது. இந்த நிலைவரை வேர்ட்ஸ்வொர்த் பொதுமக்களிடத்தில் அவருடைய "வசன கவிதைகளுக்காக" மட்டுமே அறியப்பட்டவராக இருந்தார் என்பதோடு இந்த தொகுப்பு அவருடைய மதிப்பை உயரச்செய்யும் என்றும் நம்பினார். இருப்பினும் இந்த வரவேற்பு சற்றே ஆர்வம் குன்றியதாக இருந்தது. (1810 ஆம் ஆண்டில்) இந்த நேரத்தில் வேர்ட்ஸ்வொர்த்தும் கோல்ரிட்ஜும் பின்னவரின் ஓபியம் அடிமைப்பழக்கத்தால் பிரிந்துபோயினர். அவருடைய தாமஸ் மற்றும் கேதரின் என்ற இரண்டு குழந்தைகள் 1812ஆம் ஆண்டில் இறந்துபோயினர். அதற்கடுத்த ஆண்டிலேயே, அவர் வெஸ்ட்மூர்லேண்டிற்கான முத்திரைகள் விநியோரகிப்பவராக பதவி பெற்றார் என்பதோடு அந்த அஞ்சல்துறையிலிருந்து வருடத்திற்கு 400 பவுண்டுகள் என்ற அளவிற்கு கிடைத்த வருமானம் அவரை நிதிப் பிரச்சினைகளிலிருந்து பாதுகாத்தது. அவருடைய குடும்பம், டோரதி உட்பட, 1813ஆம் ஆண்டில் (கிராஸ்மீருக்கும் ரைடல் வாட்டருக்கும் இடையிலுள்ளது) அம்ப்லிசைட் ரைடல் மவுண்டிற்கு குடிபெயர்ந்தனர், அங்கு அவர் தன்னுடைய மீதமிருந்த வாழ்நாளை செலவிட்டார். 1814ஆம் ஆண்டில் அவர் "தி ரெக்லஸின்" மூன்று பாகங்களுள் இரண்டாவது பாகமான "தி எக்ஸ்கர்ஸனை" பதிப்பித்தார். அவர் முதல் மற்றும் மூன்றாவது பாகங்களை நிறைவுசெய்யவே இல்லை. இருப்பினும் அவர் கவிதையின் கட்டமைப்பு மற்றும் நோக்கத்தை வடிவமைத்த "தி ரெக்லஸிற்கான" கவிதை விவரக்குறிப்பை எழுதினார். இந்த விவரக்குறிப்பு மனித மனம் மற்றும் இயற்கைக்கு இடையில் உள்ள உறவு குறித்த அவருடைய புகழ்பெற்ற வரிகள் சிலவற்றை உள்ளிட்டதாக இருந்தது: சில நவீன விமர்சகர்கள் அவருடைய படைப்பின் வீழ்ச்சி 1810 ஆம் ஆண்டின் மத்தியப் பகுதியிலிருந்து தொடங்குவதாக குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த வீழ்ச்சி அவருடைய வாழ்க்கை முறை மற்றும் நம்பிக்கைகளில் ஏற்பட்ட மாற்றத்தினாலும் இருக்கலாம், அவருடைய ஆரம்பகால கவிதைகள் பண்படுத்திய பெரும்பாலான விஷயங்கள் (இழப்பு, மரணம், உறுதிப்பாடு, பிரிவு, மற்றும் கைவிடப்படுதல்) அவருடைய கவிதைகளிலேயே தீர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், 1820ஆம் ஆண்டில் அவர் தன்னுடைய ஆரம்பகால படைப்புகளின் தற்கால விமர்சன அபிப்பிராயங்களுக்கு மாறாக இருந்தமையால் பெற்ற வெற்றியை அனுபவித்தார். 1823ஆம் ஆண்டில் அவருடைய நண்பரும் ஓவியருமான வில்லியம் கிரீனின் மரணத்தைத் தொடர்ந்து வேர்ட்ஸ்வொர்த் கோல்ரிட்ஜ் உடனான உறவை மீண்டும் பெற்றார். இந்த இருவரும் ஒன்றாக ரைன்லேண்டிற்கு பயணம் செய்து 1828ஆம் ஆண்டில் முற்றிலும் ஒத்திசைந்தனர். டோரதி 1829ஆம் ஆண்டில் கடுமையான உடல்நலமின்மைக்கு ஆளானார், இது அவரது மீதமிருந்த வாழ்க்கையை பயனில்லாமல் செய்தது. 1835ஆம் ஆண்டில் ஆனட்டிற்கும் கரோலினுக்கும் அவர்களுடைய உதவிக்கென்று தேவைப்பட்ட பணத்தை வழங்கினார். வேர்ட்ஸ்வொர்த் டர்ஹாம் பல்கலைக்கழகத்திலிருந்து கௌரவ குடியுரிமை சட்ட பட்டத்தை 1838ஆம் ஆண்டில் பெற்றார், இதே கௌரவம் அவருக்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திடமிருந்து அடுத்த ஆண்டே கிடைத்தது. 1842ஆம் ஆண்டில் அரசாங்கம் அவருக்கு வருடத்திற்கு 300 பவுண்டுகளுக்கான குடியுரிமைப் பட்டியல் ஓய்வூதியம் வழங்கியது. 1843ஆம் ஆண்டில் ராபர்ட் சதே மரணமடைந்ததால் வேர்ட்ஸ்வொர்த் அரசவைக் கவிஞரானார். அவருடைய மகள் டோரா 1847ஆம் ஆண்டில் இறந்துபோனதிலிருந்து அவர் கவிதை எழுதுவது முற்றிலும் நின்றுபோனது. 1850 ஏப்ரல் 23 இல் மீளமுடியாத நுரையீரல் அழற்சி மோசமடைந்ததால் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் மரணமடைந்தார், அவருடைய உடல் கிராஸ்மேரில் உள்ள செயிண்ட் ஆஸ்வல்ட்ஸ் தேவாலயத்தில் புதைக்கப்பட்டது. அவருடைய விதவை மனைவியான மேரி அவர் இறந்த சில மாதங்களுக்குப் பின்னர் அவருடைய நீளமான சுயசரிதைப் படைப்பான "கோல்ரிட்ஜிற்கான கவிதையை" "தி பிரிலூட்" என்று பதிப்பித்தார். இருப்பினும் இது 1850 இல் பெரிய அளவிற்கு கவனம் பெறவில்லை என்றாலும் இப்போதுவரை இது ஒரு தலைசிறந்த படைப்பாகவே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. பொதுத்தகவலும் வாழ்க்கைச்சரித குறிப்புகளும் புத்தகங்கள் வேர்ட்ஸ்வொர்த்தின் படைப்புகள் பர்கான் அக்தார் பர்கான் அக்தார் ("Farhan akhtar", , ; 9 ஜனவரி 1974 அன்று பிறந்தவர்) ஒரு இந்தியத் திரைப்பட உருவாக்குனர், கையெழுத்துப் படிவ எழுத்தாளர், நடிகர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், திரைப்படத்தயாரிப்பாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இயக்குனராக அவரது அறிமுகம் ("தில் சாத்தா ஹை", 2001) பெருமளவு பாராட்டப்பட்டது. மேலும் அவர் இன்றுவரை அவரது கொள்கைமுறைக்காக புகழப்படுகிறார். மேலும் அவர் ஆனந்த் சுராபூரின் திரைப்படமான "த ஃபேக்கிர் ஆப் வெனிஸ்" (2007) மற்றும் "ராக் ஆன்!!" (2008) மூலம் அவர் நடிகராகவும் அறிமுகமானார். ஃபர்ஹான் அக்தர், திரைஎழுத்தாளர்கள் ஜாவித் அக்தர் மற்றும் ஹானி இரானிக்கு மும்பையில் பிறந்தார். இவர் ஒரு இஸ்லாமிய ஈரானி குடும்பத்தில் பிறந்தார். இவர் ஜுஹுவில் உள்ள மேனக்ஜி கூப்பர் பள்ளியில் அவர் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். மேலும் பிறகு எச்.ஆர். கல்லூரியில் வாணிகத்தில் பட்டம் பயின்றார், அதன் இரண்டாம் ஆண்டிலேயே கல்லூரிப் படிப்பை விடுத்தார். அவரது வளர்ப்புத்தாய் நடிகை ஷபானா ஆஸ்மி ஆவார். மேலும் இவர் உருதுக் கவிஞர் ஜான் நிசார் அக்தரின் பேரன் ஆவார், மேலும் பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் நடன வடிவமைப்பாளர் ஃபராஹ் கானின் உறவினர் ஆவார். அவரது சகோதரி ஜோயா அக்தர், அண்மையில் லக் பை சான்ஸ் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதில் ஃபர்ஹான் முக்கியப் பாத்திரத்தில் நடித்தார். ஒரு சிகையலங்கார நிபுணரான அதூனா பாபானி அக்தரை ஃபர்ஹான் திருமணம் செய்தார். அவர் தனது சகோதரருடன் பீபுளூண்ட் சலூனை நடத்தி வந்தார்.அவர்களுக்கு அகீரா மற்றும் ஷாக்யா என இரு மகள்கள் உள்ளனர். சிறுவயதில் இருந்தே ஃபர்ஹானும் ரித்திக் ரோஷனும் நெருங்கிய நண்பர்கள் ஆவர் ஃபர்ஹான் அக்தர் தனது தொழில் வாழ்க்கையை 17வது வயதில் "லம்ஹே" (1991) போன்ற திரைப்படங்களுக்காக ஒரு தொழில் பழகுனராக ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான மன்மோகன் சிங்கிடம் சேர்ந்து தொடங்கினார்; "ஹிமாலயப்புத்ரா" (1997) திரைப்படத்தில் பங்கஜ் பாராஷருக்கு உதவி இயக்குனராக சேர்வதற்கு முன்பு மூன்று ஆண்டுகள் தொலைக்காட்சி தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தார். மேலும் பல்வேறு வேலைகளையும் செய்தார். எக்சல் எண்டெர்டெயிண்மெண்ட் பிரைவேட் லிமிடெட். மூலமாக 2001 ஆம் ஆண்டில் வெற்றியடைந்த இந்தி திரைப்படமான "தில் சாத்தா ஹை" மூலம் எழுத்தாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமானார். இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை 1999 ஆம் ஆண்டில் ரித்தேஷ் சித்வானியுடன் இணைந்து நிலைநாட்டினார். இத்திரைப்படம் மூன்று நண்பர்களின் கதையைக் கூறியது (அமீர் கான், சைஃப் அலிகான் மற்றும் அக்சய் கண்ணா ஆகியோர் நடித்தனர்). அண்மையில் கல்லூரியில் இருந்து பட்டம் பெற்ற அவர்களது காதல் மற்றும் நட்பில் உள்ள பிரச்சினையை இக்கதை எடுத்துரைத்தது. இத்திரைப்படம் விமர்சனரீதியாகவும் வணிகரீதியாகவும் வெற்றியடைந்தது. குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடம் பிரபலமானது. சிறந்த திரைக்கதை, இயக்கம், திரைப்படம் உள்ளிட்ட ஒரு சில பரிந்துரைகளை பல்வேறு விருது விழாக்களில் பெற்றது. அந்த ஆண்டின் இந்தியின் சிறந்த சிறப்பம்ச திரைப்படத்திற்கான தேசியத் திரைப்பட விருதை இத்திரைப்படம் வென்றது. பிறகு ஃபர்ஹான் "லக்ஷ்யா" (2004) என்ற படத்தை எடுத்தார். ஒரு குறிக்கோள் இல்லாத இளைஞர் இறுதியில் அவராகவே தனது இலட்சியத்தை அமைத்துக் கொள்வதை இத்திரைப்படம் விளக்கியது. இதில் ரித்திக் ரோஷன் மற்றும் பிரீத்தி ஜிந்தா ஆகியோர் நடித்தனர். இத்திரைப்படம் வசூலில் சாதிக்கவில்லை என்றாலும் அவருக்கு பல விமர்சன ரீதியான பாராட்டுக்களைப் பெற்றுத்தந்தது. அவரது தந்தையான ஜாவித் அக்தர் மூலம் இத்திரைப்படத்தின் கையெழுத்துப் படிவம் எழுதப்பட்டது. இதற்கிடையில் குரிந்தர் சாதாவின் 2004 ஆம் ஆண்டின் ஹாலிவுட் திரைப்படம் "பிரைட் அண்ட் பிரீஜூடிஸிற்காக" பாடல்களையும் அவர் எழுதினார். பின்பு அவர் 1978 ஆம் ஆண்டின் அமிதாப் பச்சனின் திரைப்படமான "டானை" மறுதயாரிப்பு செய்தார். "டான் - த சேஸ் பிகின்ஸ் அகைன்" எனப் பெயரிடப்பட்ட இத்திரைப்படத்தில் ஷாருக்கான் தலைமைப் பாத்திரத்தில் நடித்தார். 20 அக்டோபர் 2006 அன்று அத்திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பலத்த அடி வாங்கினாலும், வசூலில் மிகப்பெரிய வெற்றி பெற்று 50 கோடிகளுக்கு மேல் வருவாயை ஈட்டித்தந்தது. மேலும் அந்த ஆண்டில் மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படங்களில் ஐந்தாவதாகக் கருதப்பட்டது. 2007 ஆம் ஆண்டில் அவர் தயாரித்த திரைப்படமான "ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட்." பாக்ஸ் ஆபிஸில் நன்றாக வெற்றி பெற்றது. 2007 ஆம் ஆண்டில் HIV சுட்டுக்குறி மற்றும் நோயாளிக்களுக்கு அவர்களது குடும்பத்தின் ஆதரவு தேவைப்படுவதைப் பற்றிய ஒரு 12 நிமிட குறுந்திரைப்படம் "பாஸிட்டிவை" அவர் இயக்கினார். மீரா நாயரின் மீராபாய் பிலிம்ஸின் இணை முனைப்பு மற்றும் அவஹன் மற்றும் பில் & மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் போன்ற தன்னார்வ நிறுவனங்களின் மூலம் மீரா நாயர், சந்தோஷ் சிவன், விஷால் பரத்வாஜ் மற்றும் ஃபர்ஹான் அக்தர் ஆகியோர் இயக்கிய நான்கு குறுந்திரைப்படங்கள், 'AIDS ஜாகோ'வின் ("AIDS விழிப்புணர்வு" ) ஒரு பகுதியான அத்திரைப்படத்திற்காக மும்பையில் படம்பிடிக்கப்பட்டன. போமன் இரானி, ஷபானா ஆஸ்மி மற்றும் ஒரு அறிமுக நடிகரான அர்ஜூன் மேத்தர் ஆகிய திரைப்பட நடிகர்கள் இதில் நடித்தனர். 2008 ஆம் ஆண்டில் ஃபர்ஹான், "ராக் ஆன்!!" படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இது வணிகரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது. அதேப்போல் வசூலிலும் வெற்றியடைந்தது. இத்திரைப்படம் மிகவும் நன்றாக ஓடியது. குறிப்பாக பெருநகரங்களில் பெரும் வெற்றியடைந்தது. மேலும் அவரது சகோதரி ஜோயா இயக்குனராக அறிமுகமாகிய "லக் பை சான்ஸில்" முன்னணி ஆண் பாத்திரத்தில் நடித்தார். மேலும் அவர் வரவிருக்கும் மூன்று திரைப்படங்களான: (அவரது தயாரிப்புகள் அல்லாத அவரது நடிப்பு மட்டும் கொண்ட) "கார்த்திக் காலிங் கார்த்திக்", "தருவ்" மற்றும் "குலெல்" ஆகியற்றிலும் நடிக்கவிருக்கிறார். ஃபர்ஹான், ராக் ஆன்!! திரைப்படத்தில் பெரும்பாலான பாடல்களைப் பாடி பாடகராகவும் அறிமுகமானார். ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்த "புளூ" விற்கான பாடலையும் அவர் பாடுவதாக இருந்தது. எனினும் ஃபர்ஹான் "கார்த்திக் காலிங் கார்த்திக்" கிற்கான படப்பிடிப்பில் இருந்ததாலும் நேரம் கிடைக்காததாலும் அவர் பாட முடியாமல் போனது. "நாச் பாலியே" (2005) நடன-ரியாலிட்டி நிகழ்ச்சியின் முதல் பருவம் மற்றும் (2002 ஆம் ஆண்டின்) அழகு அலங்கார அணிவகுப்பு ஃபெமினா மிஸ் இந்தியா உள்ளிட்ட சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடுவராகப் பங்கேற்றார். மேலும் அவர் டிவி தொகுப்பாளாராக NDTV இமேஜினில் அவரது நிகழ்ச்சி: "ஓயே!" "இட்'ஸ் ப்ரைடே!" வில் பங்கேற்றார். ராபர்ட் பாட்டின்சன் ராபர்ட் பாட்டின்சன் (பிறப்பு 13 மே 1986) இவர் ஒரு இங்கிலாந் நாட்டு திரைப்பட விளம்பர நடிகர், இசைக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார். ராபர்ட் பாட்டின்சன் 13 மே 1986ஆம் ஆண்டு லண்டனில் பிறந்தார். இவரது தாயார் கிளேர் ஒரு மாடலிங் நிறுவனத்தில் பணிபுரிந்தார், தந்தையான ரிச்சர்ட் அமெரிக்காவிலிருந்து வின்டேஜ் கார்களை இறக்குமதி செய்கிறார். பாட்டின்சன் தனக்கு பனிரெண்டு வயதாகும்போது மாடலிங் செய்யத் தொடங்கினார், ஆனால் இது நான்கு வருடங்களுக்குள்ளாகவே குறைந்துபோனது. ஒரு ஆண்மகன் தோற்றமுள்ள மாடலாக தான் பணியாற்றத் தவறிவிட்டதாக அவர் தன்னை குற்றம்சாட்டிக்கொண்டார். 2008 ஆம் ஆண்டில் பாட்டின்சன் இவ்வாறு விளக்கமளித்தார் "நான் முதன்முறையாக தொடங்கியபோது நான் அதிக உயரமாகவும் பெண்ணைப்போன்றும் தோன்றினேன், அதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஆண் போன்றும் பெண் போன்றும் தோன்றுவது சாதாரணமாக இருந்தது. பின்னர்தான் நான் ஒரு ஆணைப் போல் தோன்ற ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன், இதனால் எனக்கு வேலையே கிடைக்கவில்லை. எனக்கு மிக வெற்றிகரமான மாடலிங் வாழ்க்கை அமையவில்லை என்றார். இவர் 2004ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஹாரி பாட்டர் அண்டு த கோப்லட் ஆஃப் ஃபயர், ட்விலைட், , , , உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். "கிளாமர்" நடத்திய வாக்கெடுப்பின் மூலம் அவர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஆண் என்று "பீப்பிள்" பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டது. இவர் நடித்த சில திரைப்படங்கள்: தேனி. மு. சுப்பிரமணி தேனி. மு. சுப்பிரமணி (பிறப்பு: பிப்ரவரி 23, 1968, தூத்துக்குடி) ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் விக்கிப்பீடியர். தேனி அருகிலுள்ள பழனிசெட்டிபட்டி எனும் ஊரில் வசிக்கும் இவர் பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டமும், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்புத் துறையில் ஆய்வியல் நிறைஞர் பட்டமும், இதழியலில் முதுகலைப் பட்டயமும், தொழிலாளர் நலம் மற்றும் நிர்வாகச் சட்டத்தில் பட்டயமும் பெற்றிருக்கிறார். இவர் தமிழ் இலக்கிய ஆர்வத்தால் 1982 ஆம் ஆண்டு முதல் தமிழில் வெளியாகும் பல அச்சு இதழ்களிலும், இணைய இதழ்களிலும் தேனி எம்.சுப்பிரமணி, முத்துக்கமலம், தாமரைச்செல்வி எனும் பெயர்களில் துணுக்குகள் (குறுந்தகவல்கள்) மற்றும் நகைச்சுவைத் துணுக்குகள் போன்றவற்றை எழுதியிருக்கிறார். மேலும் இவருடைய படைப்புகளாக கட்டுரைகள், பேட்டிக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என்று அச்சிலும், இணையத்திலும் வெளியாகி உள்ளன. இவர் எழுதிய தமிழ் விக்கிப்பீடியா என்ற நூலுக்கு தமிழ்நாடு அரசின் 2010 ஆம் ஆண்டுக்கான கணினியியலில் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு கிடைத்தது. மொழியின் தோற்றம் மொழியின் தோற்றம் என்பது, மனிதரின் படிமலர்ச்சியின் ஒரு காலகட்டத்தில், அவர்கள் மொழியைப் பயன்படுத்துவதற்கான வல்லமையைப் பெற்றதைக் குறிக்கிறது. இத் தலைப்பு, ஓமோ சாப்பியன்கள், மொழியைப் பயன்படுத்தும் வல்லமையற்ற, மனிதரல்லாத மூதாதையிலிருந்து தோன்றினர் என்பதை உட்கிடக்கையாகக் கொண்டுள்ளது. மொழியைப் பயன்படுத்தும் வல்லமை, ஓமோ சாப்பியன்களுக்கு மிகப் பயனுள்ளதாக அமைந்துள்ளது. அது, அவர்களின் வளர்ச்சிக்குப் பெருமளவில் உதவியதுடன், பிற உயிரினங்களில் இருந்து அவர்களை வேறுபடுத்தும் முக்கியமான காரணிகளுள் ஒன்றான உயிரியல் இயல்பு ஆகவும் உள்ளது. எழுத்து மொழியைப் போலன்றிப் பேச்சு மொழி அதன் இயல்புகள் குறித்தோ அல்லது அது இருந்ததைக் குறித்தோ எவ்விதமான நேரடி வரலாற்றுத் தடயங்களையும் விட்டுச் செல்லவில்லை. இதனால் மொழியின் தோற்றம் பற்றி அறிந்து கொள்வது கடினமாக இருப்பதால், இதற்காக அறிவியலாளர்கள் மறைமுகமான முறைகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. முக்கியமானதும், ஆய்வு செய்வதற்குக் கடினமானதாகவும் இருப்பதனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மனிதனுடைய தோற்றம்பற்றிச் சார்லஸ் டார்வின் தனது கோட்பாட்டை முன்வைத்த காலத்தில் இருந்தே, இத் தலைப்புப் பெருமளவு கவனத்தை ஈர்த்து வந்திருப்பதுடன், சர்ச்சைகளுக்கும் உள்ளாகி வந்துள்ளது. தற்காலத்தில் தொடக்கநிலை மொழிகள் எதுவும் உலகில் பேசப்படுவது இல்லை என்பதையும், தற்போதைய மொழிகள் எல்லாமே ஒன்றுக்கொன்று ஒப்பிடத்தக்க சிக்கல்தன்மை கொண்டவையே என்றும் அறிவியலாளர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். தற்கால மொழிகளுடைய சொற்றொகுதிகளின் அளவும், அவை குறிக்கும் விடயங்களும் பெருமளவில் வேறுபடுகின்ற போதிலும், அவை அனைத்துமே எண்ணங்களை வெளிப்படுத்துவதற்குத் தேவையான இலக்கணம் முதலியவற்றைக் கொண்டிருப்பதுடன், இதற்குத் தேவையான சொற்களை உருவாக்கவும், மொழிபெயர்க்கவும், தேவையேற்படின் பிற மொழிகளிலிருந்து கடன் பெறவும் கூடிய வல்லமை கொண்டுள்ளன. எல்லாக் குழந்தைகளுமே மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வல்லமையைக் கொண்டுள்ளனர் என்பதுடன் குழந்தைகள் பிறக்கும்போது உயிரியல் அடிப்படையில் எந்த மொழிக்கும் சாதகமான சார்புநிலையைக் கொண்டிருப்பதும் இல்லை. மொழிகளின் படிமலர்ச்சியைப் பற்றி அறிந்து கொள்ள உதவக் கூடிய பல "அரை மொழிகள்" உள்ளன. மொழியின் தோற்றத்துக்கு, வாய்ப்பான உடற்கூற்று அமைப்புக்களும், அதற்கு உதவியாக மூளையில் நரம்பியல் மாற்றங்களும் ஏற்படவேண்டியது அவசியம் ஆகும். ஆனால், பிற உயிரினங்கள் சிலவற்றில் இத்தகைய மாற்றங்கள் சில காணப்படுகின்றனவாயினும், அவற்றுக்கு முழுமையான மொழி வல்லமை கிடையாது. மொழிப் பயன்பாட்டின் தோற்றத்துக்கு, முன் குறிப்பிட்ட வல்லமைகளை முழுமையாகப் பெற்றுக்கொள்வது இன்றியமையாதது. இது குறித்த தெளிவான நிகழ்வுகளைக் காட்டக்கூடிய வகையில் தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை. மொழியின் தோற்றம் குறித்த முக்கியமான விவாதம், தேவையான உடற்கூற்றியல், நரம்பியல் வல்லமைகள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்போதே படிப்படியாக மொழிப் பயன்பாடு ஏற்பட்டதா அல்லது எல்லா வல்லமைமைகளையும் பெற்ற பின்னரே சடுதியாக மொழி தோற்றம் பெற்றதா என்பதாகும். பல அறிவியலாளர்கள், பேச்சுக்கும் மொழிக்கும் இடையில் வேறுபாடு காண்கிறார்கள். எடுத்துக் காட்டாகப், பேசும் பறவைகள் மனிதருடைய பேச்சை அவ்வாறே ஒப்புவிக்கக்கூடியவை. எனினும் இது மொழி வல்லமை ஆகாது. இதுபோலவே, மொழிப் பயன்பாட்டுக்கு ஒலி முக்கியமானதும் அல்ல. உடலியல் சைகைகளைப் பயன்படுத்தும் தற்காலச் சைகை மொழிகள் இதற்குச் சான்றாகும். தகவல் பரிமாற்றத்துக்கும், மொழிக்கும் இடையிலான வேறுபாடும் முக்கியமானது. எடுத்துக் காட்டாக, வெர்வெட் குரங்குகளின் தகவல் பரிமாற்ற முறைகள் பற்றி விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. அவை ஏறத்தாழப் பத்து வகையான குரலொலிகளை எழுப்புவதாக அறியப்பட்டுள்ளது. இவ்வொலிகளுட் பல கொன்றுண்ணிகள் வருவதைக் குறித்துத் தமது குழுவினருக்கு அறிவிப்பதற்குப் பயன்படுகின்றன. இவ்வொலிகளுள் ஒரு " சிறுத்தை அழைப்பு", ஒரு "பாம்பு அழைப்பு", ஒரு கழுகு அழைப்பு" என்பன அடங்குகின்றன. இவை வெவ்வேறு விதமான தற்காப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தூண்டுகின்றன. எனினும் இவ்வகைத் தகவல் பரிமாற்றங்கள் அண்மைச் சூழலின் தூண்டல்கள் காரணமான நேரடி நடவடிக்கையே அன்றி உயர்நிலை மொழி அல்ல. மனிதரின் பிடியில் இருந்த மனிதக் குரங்குகளும், தொடக்கநிலைச் சைகை மொழி, குறியீடுகள் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்தபோது இவ்வாறான தகவல் தொடர்பு வல்லமைகளை வெளிக்காட்டியுள்ளன. கான்சி போன்ற மனிதக் குரங்குகள் நூற்றுக் கணக்கான குறிகளைக் கற்றுக்கொண்டன. இவை எளிமையான தொடரியல் மற்றும் குறிப்பு முறைமைகளைக் கற்றுக்கொண்டாலும், அவற்றின் தகவல் தொடர்பு முழுமையான மொழியொன்றுக்கு உரிய சிக்கல் தன்மையைக் கொண்டிருக்கவில்லை, இறங்கிய குரல்வளை மனித ஒலியுறுப்புக்களுக்கே உரிய தனித்துவமான அமைப்பு என்றும், இது பேச்சு உருவாக்கத்திற்கும், மொழி உருவாக்கத்துக்கும் அவசியமானது என்றும் முன்னர்க் கருதப்பட்டது. எனினும் இது சில நீர்ப் பாலூட்டிகளிலும், பெரிய மான்கள் போன்ற வேறு உயிரினங்களிலும் காணப்பட்டுள்ளது. அத்துடன், நாய்கள், ஆடுகள், முதலைகள் போன்ற விலங்குகளிலும் அவை ஒலியெழுப்பும்போது, குரல்வளை இறங்குவது கவனிக்கப்பட்டுள்ளது. மனிதர்களில் குரல்வளை இறங்கியிருப்பது, குரல் வழியின் நீளத்தை அதிகரித்து அவர்கள் உருவாக்கக்கூடிய ஒலி வேறுபாடுகளின் எண்ணிக்கையைக் கூட்டியுள்ளது. இறங்கிய குரல்வளைக்கு மொழி தொடர்பற்ற செயற்பாடுகளும் உண்டு. இது விலங்கின் தோற்ற அளவைப் பெருப்பித்துக் (எதிர்பார்ப்பதிலும் குறைவாக சுருதியுடன் கூடிய குரலினூடாக) காட்டுவதற்காகவும் இருக்கலாம். இறங்கிய குரல்வளை பேச்சு உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுவதுடன், மனிதர் உருவாக்கக்கூடிய ஒலிகளின் வேறுபாடுகளை அதிகரித்தாலும்கூட, இது இந்த நோக்கத்துக்காகவே படிமலர்ச்சி அடைந்திருக்கக்கூடும் என்று கூறமுடியாது. ஹோசர், சொம்சுக்கி மற்றும் ஃபிச் (2002) குறிப்பிட்டதுபோல், முன்னரே இருந்த இவ்வமைப்பை மொழித் தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கவும் கூடும். காட்டில் பெரிய மனிதக் குரங்குகளின் தகவல் பரிமாற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. அவற்றின் குரல்வளையின் அமைப்பு, மனிதப் பேச்சில் உள்ள பல ஒலிகளை அவை உருவாக்குவதற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால், முன்னர்க் குறிப்பிட்டதுபோல் மனிதரின் பிடியில் இருந்தபோது நூற்றுக்களக்கான குறியீடுகளை அவை கற்றுக்கொண்டன. , உயர்விலங்குகளின் மூளையில் உள்ள புரோக்காவினதும், வேர்ணிக்கினதும் பகுதிகள், முகத் தசைகள், நாக்கு, வாய், குரல்வளை என்பவற்றைக் கட்டுப்படுத்துவதோடு, ஒலிகளை அடையாளம் காண்பதற்கும் பொறுப்பாக உள்ளன. உயர்விலங்குகள் குரல் அழைப்புக்களை எழுப்புவது அறியப்பட்டுள்ளது. இவ்வழைப்புக்கள், மூளைத்தண்டிலும், லிம்பிக் தொகுதியிலும் உள்ள சுற்றுக்களால் உருவாக்கப்படுகின்றன. வேர்வெட் குரங்குகள், ஏறத்தாழப் பத்து விதமான குரல் ஒலிகளை எழுப்புவதாகவும், அவற்றில் பல கொன்றுண்ணிகளின் வரவை அறிவிப்பன என்றும் முன்னர் குறிப்பிடப்பட்டது. ஒவ்வொரு விதமான அழைப்புக்கும், இக் குரங்குகள் வெவ்வேறு விதமான பதில் செயல்பாடுகளைக் கொண்டுள்ளன எனவும் அறியப்பட்டுள்ளதோடு, பதிவு செய்யப்பட்ட ஒலிகளையும், ஒலிபெருக்கிக்களையும் பயன்படுத்திச் செய்த சோதனைகளில் எதிர்பார்த்த வகையான செயற்பாடுகளை அறிவியலாளர்கள் அக் குரங்குகளிடம் கண்டுள்ளனர். ஒரு குட்டிக் குரங்கு அழைப்பின்போது, தாய் குழந்தையை நோக்கித் திரும்ப, பிற குரங்குகள் தாய் என்ன செய்யப் போகிகிறது என்று பார்ப்பதற்காகத் தாயை நோக்கித் திரும்புகின்றன. தொல் ஓமினிடுக்களின் மொழி வல்லமை குறித்துப் பலவிதமான ஊகங்கள் நிலவுகின்றன. உடற்கூற்றியல் அடிப்படையில், சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஹொமினிட்டுக்கள் இரண்டு கால்களில் நடக்கத் தொடங்கியபோது, மண்டையோட்டில் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்றும், அது கூடிய அளவுக்கு "ட" வடிவம் கொண்ட தொண்டைக் குழியை உருவாக்கியிருக்கும் என்றும், சில அறிஞர்கள் நம்புகின்றனர். தொண்டைக்குழியின் வடிவமும், கழுத்துல் குரல்வளை ஒப்பீட்டளவில் கீழே அமைந்திருப்பதும் மனிதர் இன்று ஒலிக்கும் பல ஒலிகளைச், சிறப்பாக உயிரொலிகளை உருவாக்குவதற்கான முன்தேவைகள் ஆகும். வேறு சில அறிஞர்கள், குரல்வளையில் அமைவிடத்தை வைத்து நோக்கும்போது நியண்டர்தால்கள் கூட மனித மொழியின் எல்லா ஒலிகளையும் உருவாக்கத்தக்க உடற்கூற்றமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்கின்றனர் இன்னும் சிலரோ குரல்வளை இறக்கம் பேச்சு உருவாக்கத்துடன் எவ்வித தொடர்பும் அற்றது என்கின்றனர். டெரெக் பிக்கெர்ட்டன் என்னும் மொழியியலாளரின் கருத்துப்படி, ஓர் அடிப்படை முந்து மொழி, திருந்தாத வடிவம் கொண்ட ஒரு தகவல் பரிமாற்றமாக இருந்ததுடன், பின்வரும் அம்சங்களையும் கொண்டிராத ஒன்றாக இருந்தது: இது பெரிய மனிதக் குரங்கு மொழிக்கும், மனித மொழிக்கும் இடைப்பட்ட ஒரு நிலை ஆகும். "ட" வடிவத் தொண்டைக்குழி போன்ற உடற்கூற்றியல் அம்சங்கள் சடுதியாகத் தோன்றாமல் படிப்படியாகவே வளர்ந்து வந்துள்ளன. இதனால், தொல் மனிதர்கள், பிற தொல் உயர் விலங்குகளுக்கும், தற்கால மனிதருக்கும் இடைப்பட்ட தகவல் பரிமாற்ற வடிவங்களைக் கொண்டிருந்திருப்பது சாத்தியமானதே. 2007 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட நியண்டர்தாலின் நாவடி எலும்பு ஒன்று, நியண்டர்தால்கள் தற்கால மனிதர்களுடையதை ஒத்த ஒலிகளை எழுப்புவதற்கான வல்லமையைக் கொண்டிருக்கக்கூடும் என்ற கருத்தை வலுப்படுத்துகிறது. நாவடிக் கால்வாய் ஊடாகச் செல்லும் நாவடி நரம்பு, நாக்கின் அசைவுகளைக் கட்டுப்படுத்துகிறது. அதன் அளவு, பேச்சு வல்லமையை எடுத்துக் காட்டுவதாகக் கூறப்படுகிறது. 300,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாகக் கருதப்படும் ஒமினிட்டுக்களுடைய நாவடிக் கால்வாய் தற்கால மனிதருடையதைக் காட்டிலும், சிம்பன்சிகளுடைய நாவடிக் கால்வாய்களையே கூடிய அளவுக்கு ஒத்திருந்தது. நியண்டர்தால்கள் பேசுவதற்குரிய உடற்கூறுகளைக் கொண்டிருந்திருப்பினும் அவர்கள் ஒரு முழுமையான மொழியைக் கொண்டிருந்திருப்பார்கள் என்பது ஐயத்துக்கு உரியதே என 2004 ஆம் ஆண்டில் ரிச்சார்ட் ஜி. கிளெயின் (Richard G. Klein) என்பார் கூறியுள்ளார். இவரது ஐயம் பெரும்பாலும், தொல் மனிதரின் புதைபடிவப் பதிவுகளையும், அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஓமோ அபிலிசுகள் தோன்றியதிலிருந்தான சுமார் 2 மில்லியன் ஆண்டுகளில் கற்கருவித் தொழில்நுட்பம் மிகவும் குறைந்த அளவிலேயே மாற்றம் கண்டுள்ளது. பண்டைக்காலக் கற்கருவிகள் தொடர்பில் விரிவான ஆய்வுகளைச் செய்த கிளெயின், அக் கருவிகளை அவற்றின் பயன்பாட்டு அடிப்படையில் வகைப்படுத்த முடியாதிருப்பதாகவும், அக் கருவிகளின் இறுதி வடிவம் குறித்து நியண்டர்தால்கள் அக்கறை கொண்டிருந்ததாகத் தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இவற்றின் அடிப்படையில், உடற்கூறுகள் தேவையான அளவுக்கு வளர்ச்சி பெற்றிருந்தால் கூட நியண்டர்தால்களின் மூளை தற்கால மொழிகளையொத்த மொழியொன்றைப் பேசுவதற்கான சிக்கல் தன்மையைக் கொண்டிருந்திருக்க முடியாது எனக் கிளெயின் கருதுகிறார். நியண்டர்தால்களின் பண்பாடு மற்றும் தொழில்நுட்ப சிக்கல்தன்மை குறித்த விடயம் இன்னும் சர்ச்சைகளுக்கு உரியதாகவே உள்ளன. உடற்கூற்றியல் அடிப்படையிலான தற்கால மனிதனின் மிகப் பழைய புதைபடிவப் பதிவுகள் எதியோப்பியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன்படி, அப்பகுதியில் மனிதர்கள் சுமார் 195,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகின்றது. உடற்கூற்றியலின் அடிப்படையில் தற்கால மனிதர்களை ஒத்திருந்தாலும், தொல்லியல் சான்றுகளின்படி அவர்களுடைய நடத்தைகள் முந்திய ஓமினிடுகளிலும் அதிகம் வேறுபட்டிருந்ததாகத் தெரியவில்லை. இவர்கள் முன்னரைப் போன்றே செப்பமற்ற கற்கருவிகளைப் பயன்படுத்தி வந்ததோடு, ஒப்பீட்டளவில் செயல்திறன் குறைந்த முறைகளைப் பயன்படுத்தியே வேட்டையாடி வந்தனர். எனினும், இற்றைக்குச் சுமார் 164,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, மனிதர்களுடைய நடத்தைகள் கூடிய சிக்கல்தன்மை கொண்டவையாக மாறியிருந்தமைக்கான சான்றுகள் தென்னாபிரிக்காவில் கிடைத்துள்ளன. ஏறத்தாழ 50,000 ஆண்டுகளுக்கு முன் தற்கால மனிதனுக்குரிய முழுமையான நடத்தைகள் உருவாகிவிட்டதாகக் கருதப்படுகிறது. இக் காலத்தில், கடற்கரையை அண்டிய வாழ்க்கை முறைகளுக்கும், ஓட்டு மீன்களை உணவாகக் கொள்ளும் வழக்கத்துக்கு ஏற்ற கருவிகளின் சிக்கல்தன்மை வளர்ச்சிக்கும் சான்றுகள் தென்படுகின்றன. இந்த வாழ்க்கைமுறை, பனிக்கட்டிக்கால நிலைமைகளோடு தொடர்புடைய தட்பவெப்ப வாழிடச் சூழல் அழுத்தங்களுக்கான ஒரு எதிர்வினையாக இருக்கக்கூடும். இக்காலத்திய கற்கருவிகள் துல்லியமாக ஒரேமாதிரியான வடிவத்தில் மீண்டும் மீண்டும் செய்யப்பட்டவையாகக் காணப்படுகின்றன. எலும்புகள், விலங்குக் கொம்புகள் போன்றவற்றாலும் கருவிகள் செய்யப்பட்டன. அத்துடன் அக் காலத்துக் கருவிகள், பயன்பாட்டு அடிப்படையில் இலகுவாக வகைப்படுத்தக்கூடிய வகையிலும் உள்ளன. அவற்றை, எறிவதற்கான கூர்முனைகள், செதுக்குக் கருவிகள், கத்தி விளிம்புகள், துளைக் கருவிகள் என இலகுவாக அடையாளம் காண முடிகின்றது. பிள்ளைகளுக்கும், பிற குழு உறுப்பினர்களுக்கும், கருவிகளைச் செய்யக் கற்பிப்பது, மொழியின் துணை இல்லாவிட்டால் கடினமானது. மொழியின் படிமலர்ச்சியில் மிகப் பெரிய முன்னேற்றம், திருத்தமற்ற, பிட்யின் போன்ற தொடர்புப் பரிமாற்ற முறையிலிருந்து, தற்கால மொழிகளையொத்த இலக்கணத்துடனும் தொடரியல் அம்சங்களுடனும் கூடிய கிரியோல் போன்ற மொழியாக மாறியது ஆகும். இத்தகைய ஒரு முன்னேற்றம், சடுதியான மரபணு மாற்றம் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய உயிரியல் மாற்றம் மூளையில் ஏற்பட்டிருந்தாலே சாத்தியம் எனச் சில அறிஞர்கள் கருதுகின்றனர். FOXP2 போன்ற மரபணு ஒன்று சடுதியான மாற்றத்துக்கு உட்பட்டிருக்கக் கூடும் என்றும், இதனால், மனிதருக்கு மொழியாற்றல் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றும் சிலர் கருத்துக்களை முன்வைத்து உள்ளனர். இத்தகைய ஒரு சடுதியான மாற்றம் 100,000 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்கும், 50,000 ஆண்டுகளுக்கு முந்திய காலப் பகுதிக்கும் இடையில் கிழக்கு ஆப்பிரிக்கப் பகுதியில் எங்கோ ஓரிடத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்பதற்கான சான்றுகள் உள்ளன. இது சடுதியாகக் குறிப்பிடத்தக்க பல மாற்றங்களை ஏற்படுத்தியதைப் புதைபடிவப் பதிவுகள் காட்டுகின்றன. எனினும், மொழி படிப்படியாக ஆயிரக்கணக்கான ஆண்டுக் காலப்பகுதியில் வளர்ந்ததா அல்லது சடுதியாக உருவானதா என்பது இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே உள்ளது. புரோக்கா பகுதியும், வேர்னிக் பகுதியும் மனித மூளையிலும் காணப்படுகின்றன. முதல் பகுதி அறிதிறன்சார்ந்த (cognitive) செயற்பாடுகளிலும், நிலையான (perceptual) செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றது. இரண்டாவது மொழித் திறமைக்கு உதவுகிறது. உயர் விலங்கினங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்ட மூளைத்தண்டு, லிம்பிக் தொகுதி என்பன மனிதரிலும், சிரித்தல் அழுதல் போன்ற பேச்சு அல்லாத ஒலிகளைக் கட்டுப்படுத்துகின்றன. இது, மனித மொழியின் மையமாக, எல்லா உயர் விலங்குகளின் மூளையிலும் காணப்படும் நரம்புச் சுற்றுக்களின் மேம்பட்ட ஒரு அமைப்பே என்பதைக் காட்டுகிறது. இந்த மாற்றமும், இதனால் ஏற்பட்ட மொழிசார் தகவல் பரிமாற்றத்துக்கான திறனும் மனிதனுக்கே தனித்துவமான அம்சங்களாகத் தெரிகிறது. இது, மனிதர் உயர் விலங்குக் கால்வழியிலிருந்து பிரிந்த பின்னரே மொழித்திறன் உறுப்புக்கள் அவர்களுக்கு ஏற்பட்டதைக் காட்டுகிறது. மொழியைப் பயன்படுத்துபவர்கள் கொண்டுள்ள முக்கியமான வல்லமை, பேசுபவரால் காணமுடியாத பொருள்களையோ, நிலைகளையோ புலப்படுத்தக்கூடியதாக இருப்பது ஆகும். இந்த ஆற்றல் பொதுவாக மனக் கோட்பாட்டோடு அல்லது, மற்றவர்களும் தன்னைப் போன்று தனிப்பட்ட விருப்புகளோடும் நோக்கங்களோடும் உள்ளவர்களே என்ற உணர்வுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இந்த முறைமையில் ஆறு முக்கியமான அம்சங்கள் உள்ளதாக சொம்சுக்கி, கோசர், பிச் (2002) ஆகியோர் கூறுகின்றனர்: சைமன் பாரன்-கோகன் என்பார், பின்வரும் இயல்புகள் பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, மனக் கோட்பாடு, மொழிப் பயன்பாட்டுக்கு முன்னரே உருவாகியிருக்கும் எனக் கூறுகிறார்: பாரன்-கோகன், சில உயர்விலங்குகள் இந்த எல்லா ஆற்றல்களையும் வெளிக் காட்டாவிட்டாலும், சில ஆற்றல்களையாவது வெளிக்காட்டுகின்றன என்கிறார். கோல், தொமாசெல்லோ ஆகியோர் சிம்பன்சிகளை வைத்து நடத்திய ஆய்வுகள் இக்கூற்றை ஆதரிக்கின்றன. இந்த ஆய்வின்போது மற்றச் சிம்பன்சிகளுக்கு அறிந்துகொள்ளும்தன்மை, அறிவு, விருப்பு என்பவை இருப்பதை ஒவ்வொரு சிம்பன்சியும் புரிந்து கொள்கிறது எனத் தெரியவருகிறது. எனினும் பிழையான நம்பிக்கைகளை அவை புரிந்துகொள்ளவில்லை. பல உயர்விலங்குகள் ஓரளவு மனக் கோட்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரியவரினும், அது மனிதர்களிடம் இருப்பதுபோல் முழுமையான அளவில் இல்லை. மொழிப் பயன்பாட்டுக்கு மனக் கோட்பாடு தேவை என்பது குறித்து இத்துறையில் ஓரளவு கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது. எனவே, முழுமையான மனக் கோட்பாட்டு வளர்ச்சியின் பின்னரே, மனிதர்களிடம் மொழிப்பயன்பாடு தோன்றியது எனலாம். பெரும்பாலும் குழந்தைகளே பிட்யினைக் கிரியோலாக்கம் செய்வதில் ஈடுபடுகிறார்கள் என்பதால், மனிதர்கள் தமது மூளையில் பொதுமை இலக்கணத்தைக் கொண்டபடியே பிறக்கிறார்கள் என டெரெக் பிக்கெர்ட்டனும், நோம் சொம்சுக்கியும் முடிவு செய்கிறார்கள். இப்பொதுமை இலக்கணம், உலக மொழிகள் எல்லாவற்றிலும் காணப்படும் பல்வேறு வகையான இலக்கண மாதிரிகளை உள்ளடக்கியுள்ளது. பொதுமை இலக்கணத்தின் இயல்பான அமைப்பு கிரியோல் மொழிகளில் இருப்பதை ஒத்தவை. குழந்தைகள் மொழி கற்கும்போது, இந்த இயல்பிருப்பான இலக்கணங்கள் கற்கும் மொழிக்குப் பொருந்துமாறு பதிலீடு செய்யப்படுகின்றன. குழந்தைகள் மொழியைக் கற்கும்போது கிரியோலை ஒத்த அம்சங்களை, அதோடு முரண்படுபவற்றைக் காட்டிலும் இலகுவாகக் கற்றுக்கொள்கின்றனர். பொதுமை இலக்கணக் கோட்பாட்டுக்கு ஆதரவாக அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் ஒரு விடயம் நிக்கராகுவா சைகை மொழி உருவாக்கம் ஆகும். 1979 ஆம் ஆண்டில் அப்போது புதிதாகப் பதவியேற்றிருந்த நிக்கராகுவாவின் அரசாங்கம் செவிப்புலனற்ற குழந்தைகளுக்குக் கல்வியளிக்கு பரவலான திட்டம் ஒன்றைத் தொடங்கியது. சிறப்புக் கல்விக்கான மையம் ஒன்று தொடங்கப்பட்டு முதலில் 50 செவிப்புலனற்ற சிறுவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். 1983 ஆம் ஆண்டளவில் மையத்தில் 400 சிறுவர்கள் இருந்தனர். உலகத்தின் பிற பகுதிகளில் பயன்பாட்டில் இருந்த சைகை மொழிகளைக் கற்றுக்கொடுப்பதற்கான வசதிகள் அம்மையத்தில் இருக்கவில்லை. இதனால் அச் சிறுவர்களுக்குச் சைகை மொழி கற்பிக்கப்படவில்லை. ஆனால், மையத்தின் மொழித்திட்டம் எசுப்பானிய மொழி பேசுவதை உதட்டு அசைவுகளைக் கொண்டு அறிந்து கொள்ளக் கற்றுக்கொடுப்பதை முக்கியமான நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்துடன், எழுத்துக்களை விரல்களால் காட்டுவதன் மூலம் எளிமையான எழுத்துக் கூட்டல்களைச் செய்வதற்கும் கற்றுக் கொடுத்தனர். பல மாணவர்கள் எசுப்பானியச் சொற்களின் கருத்தாக்கத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதால் அத் திட்டம் வெற்றிபெற முடியவில்லை. முதலில் வந்த சிறுவர்கள், தமது குடும்பங்களுக்குள் பயன்படுத்திய சில திருத்தமில்லாத சைகைகளையே அறிந்து வைத்திருந்தனர். ஆனால், சிறுவர்கள் பலர் ஒன்றாக விடப்பட்டபோது ஒவ்வொருவருக்கும் தெரிந்த சைகைகளை வைத்துச் சைகை மொழியை வளர்த்தெடுக்கலாயினர். புதிய இளம் சிறார்கள் சேரச்சேர மொழியும் சிக்கல்தன்மை அடையலாயிற்று. மாணவர்களுடன் தொடர்பு கொள்வதில் அதிகம் வெற்றிபெற முடியாமல் இருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைக் கண்டு வியப்பு அடைந்தனர். பின்னர் நிக்கராகுவா அரசாங்கம், வடகிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அமெரிக்கச் சைகை மொழி வல்லுனரான யூடி கெகில் என்பாருடைய உதவியை நாடியது. கெகிலும் பிற ஆய்வாளர்களும் அச் சைகை மொழியை ஆய்வு செய்தனர். வளர்ந்த சிறுவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட பிட்யின் போன்ற மொழியை இளம் சிறுவர்கள் கூடிய சிக்கல்தனமை கொண்ட ஒரு மொழியாக உருவாக்குவதை அவர்கள் கண்டனர். வேளாளர் வேளாளர் எனப்படுவோர் சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும். இவர்களில் பெரும்பான்மையினர் சைவ சமயத்தையே சார்ந்துள்ளனர். சைவ வேளாளர், கொங்கு வேளாளர், போன்றோர்களில் பலர் முறையே பிள்ளை, கவுண்டர், என பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். இவற்றில் விதிவிலக்கும் உண்டு... வேளாண்மையாவது உழுதுண்டு வாழும் வாழ்வாகும். தாளாண்மையாவது இம்முயற்சியால் ஈட்டிய பொருளைத் தக்கார்க்குக் கொடுத்து மகிழ்வதாகும். வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, சேக்கிழார், என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் கார்காத்தார் என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். வேளாளர் இன பட்டங்கள் இவர்கள் தங்கள் சாதிக் குறியீடாக "பிள்ளை" என்பதைக் கொண்டுள்ளனர். இந்த வேளாளர் சாதியினர் முதலில் "சைவ வேளாளர்" அல்லது "சைவப் பிள்ளைமார்" என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் சைவமாக இருந்தாலும், இந்த சாதியிலிருந்து சில குழுவினர் அசைவ வகை உணவுகளை உண்ணும் வழக்கத்திற்கு மாறத் தொடங்கிய பின்பும், கருத்து வேறுபாடுகளின் அடிப்படையில் பிரிந்து செல்லத் தொடங்கிய பின்பும், இச்சாதியிலிருந்து பல உட்பிரிவுகள் தோன்றின. இன்று இந்த உட்பிரிவு சாதியினரில் சிலர் புதிய சாதிப் பெயர்களில் பிள்ளை என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் வேளாளர் என்பதை இணைத்துக் கொண்டுள்ளனர். சிலர் தனிப்பட்ட பெயர்களை வைத்துக் கொண்டுள்ளனர். திறந்த இணையம் முனைப்பு திறந்த இணையம் முனைப்பு (The OpenNet Initiative) என்பது இணையத்தில் தணிக்கையை வடிகட்டலை கண்காணிக்கும், ஆவணப்படுத்தும் ஒர் அமைப்பாகும். பல்வேறு நாடுகளில் இணையம் எந்த அளவு தணிக்கை செய்யப்படுகிறது, தணிக்கைக்கைக்கான சட்ட அரசியல் வடிவங்கள், செயற்படுத்தும் அரச அலகுகள் பற்றி இந்த அமைப்பு அறிக்கைகள் வெளியிடுகிறது. இதில் பல பல்கலைக்கழக ஆய்வு மையங்கள் பங்கெடுக்கின்றன. சமயச் சுதந்திரம் சமயச் சுதந்திரம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் என்பது தனி நபர்கள் அல்லது சமுகங்கள் எந்த ஒரு சமயம் தொடர்பாகவும், பொதுவிலோ தனிப்பட்ட முறையிலோ, நம்பிக்கைகளை வைத்திருப்பதற்கும், வழிபடுவதற்கும், சடங்குகளை நடத்துவதற்குமான சுதந்திரம் ஆகும். இது எந்த ஒரு சமயம் அல்லது இறைவன் தொடர்பான நம்பிக்கையை வைத்திருக்காமல் இருப்பதற்குமான சுதந்திரமும் ஆகும். பல நாடுகளும், மக்களும் சமயச் சுதந்திரம் என்பது அடிப்படை மனித உரிமை என்று கருதுகின்றனர். அரச மதம் ஒன்றைக் கொண்ட நாடுகளில் சமயச் சுதந்திரம் என்பது, அரசு பிற சமயங்களையும் பின்பற்ற அனுமதிக்கும், பிற சமயங்களைக் கைக்கொள்வதற்காக அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்றே பொருள்படும். என். வி. கிருஷ்ணவாரியர் என். வி. கிருஷ்ணவாரியர் ("N. V. Krishna Warrier", 1916-1989) மலையாளக் கவிஞர். இவர் எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். வாரியர் பல இந்திய மொழிகளில் எழுதியவர். வெள்ளையனே வெளியேறு இயக்கக் காலத்தில், "சுதந்திர பாரதம்" என்ற நாளிதழை வெளியிட்டார். மாத்ருபூமி என்ற மலையாள நாளிதழின் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். ஒலிபெருக்கி ஒலிபெருக்கி என்பது ஏதேனும் ஒரு வகையில் ஒலியை மிகைப்படுத்தி அல்லது பெரிதாக்கி வெளிப்படுத்தும் ஒரு கருவி. ஆனால் பொதுவாக ஒலியலைகளை மின்னலைத் துடிப்புகளாக மாற்றி (பண்புமாற்றி அல்லது டிராசிடியூசர் வழி மாற்றி), தக்கமுறைகளால் மிகைப்படுத்தி பின்பு மீண்டும் மின்னலைகளை ஏதேனும் ஒரு வகையில் ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர். இதில் குறிப்பாக மிகைப்படுத்தப்பட்ட மின்னலைகளை "ஒலியலைகளாக மாற்றும் கருவிக்கு ஒலிபெருக்கி என்று பெயர்" என்பதை நிலைவில் கொள்ள வேண்டும். கருத்தளவில் இதுவொரு மின்-ஒலி மாற்றி (ஒரு பண்புமாற்றி). ஆங்கிலத்தில் இதனை எலக்ட்ரோ-அக்கூசிட்டிக் (electroacoustic) பண்புமாற்றி என்பர். பண்புமாற்றியை ஆங்கிலத்தில் டிரான்சிடியூசர்( transducer) என்பர். ஆங்கிலத்தில் வழங்கும் அக்கூசிட்டிக் (accoustic) என்னும் சொல்லின் பொருள் கேட்கும் ஒலியைப் பற்றியது என்பதாகும். ஒலி என்பது ஏதேனும் ஒன்று அதிர்வதால் அதனைச் சூழ்ந்துள்ள காற்றில் உண்டாகும் அழுத்த ஏற்றத்தாழ்வுகளால் உருவாகின்றது. மேலும் கீழுமாக ஒரு பொருள் அதிரும் பொழுது காற்று அமுக்கப்பட்டும், விரிவடைந்தும் அழுத்த வேறுபாடுகள் தோன்றுகின்றன. இந்த அழுத்த வேறுபாடுகள் காற்றின் வழியே நகர்ந்து சென்று நம் காதை அடைகின்றன.இந்த ஒலிபெருக்கிகளிலும் மெல்லிய தட்டு அல்லது தகடு போன்ற ஒரு பகுதி மேலும் கீழுமாக அசையும், அதாவது எழுப்ப வேண்டிய ஒலிக்கு ஏற்றார்போல அதிரும். இப்படி அதிரச்செய்ய ஒரு நிலைக்காந்தத்தின் மீது மின்னோட்டம் செல்லும் கம்பிச்சுருள் கொண்ட மின்காந்தம் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் கம்பிச்சுருளுக்கு மின்சுருள் என்று பெயர். இந்த சுருள்கம்பியில் மின்னோட்டம் பாயும் பொழுது மின்னோட்டத்தின் அளவுக்கும், திசைக்கும் ஏற்றார்போல காந்தப் புலம் வெவ்வேறு அளவிலும் திசையிலும் ஏற்படும். இப்படி ஏற்படும் காந்தப்புலம் நிலைக்காந்தத்தின் காந்தப்புலத்தால் வெவ்வேறு அளவில் ஈர்க்கப்பட்டும் விலக்கப்பட்டும் அசையும். இந்தச் சுருளுடன் இணைக்கப்பட்டிருக்கும் மெல்லிய தட்டு, தகடு அல்லது விரிகூம்பு அசைவாதால் அதிர்வுகள் ஏற்படுகின்றன. இந்த அதிரும் தகட்டால் ஒலி எழும்புகின்றது. பேச்சு, இசை போன்றவற்றில் உள்ள ஒலியலைகளைக் கேள்-ஒலி (கேளொலி) என்கிறோம் அல்லவா, அந்த கேளொலியில் பல்வேறு அலைநீளங்கள் கொண்ட ஒலியலைகள் இருக்கும். பொதுவாக மாந்தர்கள் காதால் கேட்கும் கேளொலிகளின் அதிர்வெண்கள் 20 முதல் 20,000 ஏர்ட்ஃசு (hertz) வரை இருக்கும். அவை எல்லாவற்றையும் மின்னலையாக மாற்றும் பொழுது சில இடர்ப்பாடுகள் ஏற்படும். வெவ்வேறான அதிர்வெண்கள் கொண்ட ஒலியலைகள் சீராக மிகைப்படுத்துவதில்லை. மிகைப்படுத்தி மீண்டும் ஒலியலைகளாக மாற்றும்பொழுது அவ்வொலியலைகளை மாற்றும் கருவிகள் ஒரே சீரான தரத்துடனும் துல்லியத்துடனும் மாற்றுவதில்லை. இக்குறைபாடுகள் ஒலிதரத்தைக் குறைக்கின்றது. இதனை "ஒலிதரத்திரிபு" என்பர். இதனை "ஒலித்தரச் சரிவு" என்றும் கூறலாம். இதனால் கேட்கும் ஒலித்தரத்தை உயர்த்த வெவ்வேறு வகையான ஒலிபெருக்கிகளும் பயன்படுத்துவதுண்டு. குறைந்த அதிர்வெண் கொண்ட (அதிக அலைநீளங்கள் கொண்ட) ஒலியலைகளை திறம்பட மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு "அடிபெருக்கி" அல்லது "முரசம்" (வூஃவர், woofer) என்றுபெயர், அதேபோல அதிக அதிர்வெண் கொண்ட உயர் துடிப்பு கொண்ட (குறைந்த அலைநீளம் கொண்ட) ஒலியலைகளைப் பெருக்கும் கருவிகளுக்கு "துடியன்" (டுவீட்டர், tweeter), மிகுதுடியன் (சூப்பர் டுவீட்டர், supertweeter) என்றும் பெயர். ஒலிபெருக்கி நுட்பியலில் (தொழில்நுட்பத்தில்) கேளொலி அதிர்வெண் பட்டையை (அடுக்கத்தை)ப் பல பகுதிகளாக பிரித்து தக்கவாறு மிகைப்படுத்தும் ஒலிபெருக்கிகளுக்கு பல்வகை ஒலிபெருக்கி (n-way-speakers) என்று பெயர். தாழ் அதிர்வெண் கொண்ட அடிபெருக்கியும் (அல்லது முரசமும்) துடியனும் கொண்ட ஒலிபெருக்கித் தொகுதிகள் பரவலாகக் காணப்படுவது. தொலைபேசி வரலாற்றில் புகழ்பெற்ற யோஃகான் ஃவிலிப் ரைசு (Johann Philipp Reis) என்பார் முதன் முதலில் தொலைபேசிக்கான ஒலிபெருக்கி ஒன்றை 1861 இல் உருவாக்கினார். ஆனால் ஓரளவுக்கு பேச்சொலியை அப்படியே மிகைப்படுத்த வல்லதாக இருந்தது. பின்னர் 1876 இல் அலெக்ஃசாண்டர் கிராம் பெல் தன்னுடைய தொலைபேசிக்கான ஓர் ஒலிபெருக்கியை உருவாக்கி காப்புரிமம் பெற்றார். பின்னர் 1877 இல் எர்ணசுட்டு சீமனும் (Ernst Siemens), அதன் பின்னர் 1881 இல் நிக்கோலா டெசுலாவும் ஒலிபெருக்கிகள் செய்தனர். தாமசு எடிசன் தன்னுடைய உருளை ஃவோனோகிராஃவ் (phonograph) என்னும் கருவிக்காக ஒரு ஒலி மிகைப்புக் கருவியைக் கண்டுபிடித்து பிரித்தானிய காப்புரிமம் வென்றார். 1898 இல் அழுத்தத்தில் உள்ள காற்றின் அடிப்படையில் இயங்கிய ஒரு ஒலி பெருக்கிக் கருவிக்கு ஓரேசு சார்ட் (Horace Short) என்பவர் ஒரு காப்புரிமம் பெற்றார். ஆனால் இவை எல்லாமும் போதிய ஒலிமிகைப்புத் தரமும் திறமும் கொண்டவையாக இல்லை. தற்காலத்தில் பயன்படும் பல வகையான ஒலிபெருக்கிகள் ஆல்வர் லாட்ச் (Oliver Lodge) என்பார் 1898 இல் தொடங்கி நிலைநிறுத்திய நகர்-சுருள் இயக்கி வகையைச் சேர்ந்த ஒலிபெருக்கிகள் ஆகும். இவற்றை செயல்முறையில் முதன்முதல் செய்து பரப்பியவர்கள் கலிபோர்னியாவில் உள்ள நாப்பா என்னும் இடத்தில் இருந்த பீட்டர் எல். சென்சனும் (Peter L. Jensen) எடுவின் பிரிதாமும் ஆவர். தொலைபேசிகளில் பயன்படுத்த சென்சனுக்கு காப்புரிமம் தர மறுத்துவிட்டார்கள், எனவே இவர்கள் 1915 இல் இதனை வேறுவிதமாக மாற்றி, பொதுக்கூட்டத்தில் பயன்படுமாறு உள்ள மாகுனோவாக்ஃசு (Magnovox) என்னும் கருவியை உருவாக்கினர். திருநல்லூர் கருணாகரன் திருநல்லூர் கருணாகரன் (அக்டோபர் 8, 1924 - ஜூலை 5, 2006) ஒரு புகழ் பெற்ற மலையாளக் கவிஞரும், கல்வியாளரும், ஆசிரியரும் இடதுசாரி சிந்தனையாளரும் ஆவார். 1924-ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8-ம் தேதி கேரளாவின் கொல்லம் மாவட்டத்திலுள்ள பெரினாடு கிராமத்தில் பி.கெ.பாட்மனாப்ன்-என்.லக்ஷ்மி தம்பதிக்கு பிறந்தார். 2006 ம் ஆண்டு ஜுலை 5- ஆம் நாள் மறைந்தார். சோழன்மாளிகை இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,970 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,475 ஆண்கள், 2,495 பெண்கள் ஆவார்கள்.சோழன்மாளிகை மக்களின் சராசரி கல்வியறிவு 74.5% ஆகும். கல்லூர் ஊராட்சி (தஞ்சாவூர்) கல்லூர் ஊராட்சி ("Kallur Gram Panchayat"), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, கும்பகோணம் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, இந்த ஊராட்சியில் மொத்தம் 2741 பேர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் மொத்தம் 668 வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களின் சராசரி எழுத்தறிவு விகிதம் 76.2% மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 35.0% ஆகும். குமரன்குடி இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,091 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1,044 ஆண்கள், 1,047 பெண்கள் ஆவார்கள். குமரன்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 54.43% ஆகும். கொரநாட்டுகருப்பூர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8,135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 4,030 ஆண்கள், 4,105 பெண்கள் ஆவார்கள். குமாரமங்கலம் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,315 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 676 ஆண்கள், 636 பெண்கள் ஆவார்கள். குமாரமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 72.69% ஆகும். மல்லபுரம் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 737 ஆண்கள், 732 பெண்கள் ஆவார்கள். மல்லபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.31% ஆகும். மாங்குடி, திருநெல்வேலி மாவட்டம் அருகில் அமைந்த நகரங்கள்: சங்கரன்கோவில், திருநெல்வேலி, இராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும். தமிழ்நாடு தொல்லியல் துறையினர், மாங்குடியில் 2001-2002ல் அகழ்வாராய்ச்சி செய்த போது, கிமு இரண்டாம் நூற்றாண்டின் தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட கருப்பு-சிவப்பு நிற மட்பாண்டங்களின் துண்டுகள் கண்டுபிடித்தனர். இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3957 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1994 ஆண்கள், 1963 பெண்கள் ஆவார்கள். மாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும். மலையப்பநல்லூர் ஊராட்சி மலையப்பநல்லூர் ஊராட்சி ("Malayappanallur Gram Panchayat"), தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி, திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இக்கிராமத்தின் மொத்த மக்கள் தொகை 1712 ஆகும். இக்கிராமத்தில் மொத்த 415 வீடுகள் உள்ளன. இக்கிராம மக்களின் சராசரி எழுத்தறிவு விகிதம் 65.9% மற்றும் பெண்களின் எழுத்தறிவு விகிதம் 29.9% ஆகும். மாத்தூர் இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,376 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 1,191 ஆண்கள், 1,185 பெண்கள் ஆவார்கள். மாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75.12% ஆகும். பனிச்சறுக்கு விரைவோட்டம் பனிச்சறுக்கு விரைவோட்டம் (Speed skating அல்லது speedskating) என்பது பனித்தடத்தில் (உறைபனித் தடகளத்தில்)காலில் பொருத்திய சிறப்புப் பனிக்கட்டைகளை அணிந்துகொண்டு விரைவாக சறுக்கிக்கொண்டே நடப்பது போல விரைந்தோடும் விளையாட்டுப் போட்டி. இது குளிர்கால களியாட்டுகளில் (விளையாட்டுகளில்) ஒன்று. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாக இவ் விரைவுச் சறுக்கோட்டம் 1924 முதல் இருந்து வந்துள்ளது. தடகளத்தில் ஓட்டப்போட்டி நடப்பது போலவே, ஒடுபாதைகள் வகுக்கப்பட்ட பனித்தடகளத்தில் போட்டியாளர்கள் ஒரே நேரத்தில் புறப்பட்டு யார் விரைந்து ஒரு குறிப்பிட்ட தொலைவை முதலில் எட்டுகிறார்கள் என்று காணும் விளையாட்டு. இதில் குறுந்தொலைவு, நெடுந்தொலைவு மாரத்தான் என்று மூன்றுவகையான போட்டிகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக போட்டிக்காக சீர் நிறுவப்பெற்ற தொலைவுகள் 500 மீ, 1500 மீ, 5000 மீ, 10,000 மீ ஆகும். பனிச்சறுக்கு விரைவோட்டத்தில் பனிச்சறுக்கர்கள் மணிக்கு 60 கி.மீ (மணிக்கு 37 மைல்) விரைவிலும் கூட சிறு தொலைவுகள் செல்வார்கள். இவ்விளையாட்டு அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகளாகிய ஆத்திரியா, நோர்வே, சுவீடன்பின்லாந்து, இடாய்ச்சுலாந்து முதலான நாடுகளிலும், உருசியா, சீனா, நிப்பான், கொரியா ஆகிய நாடுகளிலும் குளிர்கால விளையாட்டாகவும் போட்டி விளையாட்டாகவும் ஆர்வத்துடன் மக்கள் கொண்டாடுகிறார்கள். பனிச்சறுக்கு ஊர்தி உறைபனி காடாய்ப் பரந்து கிடக்கும் இடங்களில், பொருளையும் மக்களையும் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு பனியில் நகர்த்திச் செல்ல ஆழிகள் (சக்கரங்கள்) இல்லாத சறுக்குக் கட்டைகள் பொருத்திய "வண்டி"களுக்கு பனிச்சறுக்கு ஊர்தி அல்லது பனியிசுனி என்று பெயர். இது மனிதர்களோ, குதிரைகளோ, நாய்களோ இழுத்துச் செல்லும்படியான ஊர்தியாகும் (வண்டியாகும்). பனிச்சறுக்கு வண்டியை "இசுலெட்" (sled) அல்லது "இசுலை" (sleigh) என்றும் ஆங்கில மொழிவழிக் கூறலாம். தமிழில் "இசு" என்றால் "இழு" என்னும் வினையைக் குறிப்பதில் இருந்தும், "இசும்பு" என்றால் வழுக்குநிலம் என்னும் வழக்கு பற்றியும் தமிழ்வழிப் பொருளாகவும் "இசுலை" என்பதைக் கொள்ளலாம். ஆனால் இசுலை என்பது sleigh என்னும் ஆங்கிலசொல்லைத் தமிழில் எழுதுவதின் வடிவம். Sleigh என்னும் ஆங்கிலச்சொல்லானது டச்சு மொழிச்சொல்லாகிய slee என்பதில் இருந்து எடுத்துக்கொண்டு, 1703 ஆண்டுமுதல் வழங்கி வருகின்றது. பனியில் இசுக்கும் (இழுக்கும்) பொழுது அதிக உராய்வு ஏற்படாமல் இருக்க அகலம் குறைந்த கட்டைகளோ, கம்பிகளோ ஊர்தியின் அடியே இருக்கும் (படத்தைப் பார்க்கவும்). சோ. கிருஷ்ணராஜா பேராசிரியர் சோ. கிருஷ்ணராஜா (பெப்ரவரி 2, 1947 - மே 29, 2009) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் பேராசிரியர். அறிவாராய்ச்சியியல், அளவையியல், ஒழுக்கவியல், மாக்சியம், அழகியல், விஞ்ஞான முறையியல், உளவியல் சைவசித்தாந்தம், கலை, பண்பாடு, சமூகவியல், மொழியியல் ஆகிய துறைகள் தொடர்பாக பல நூல்களையும் உருவாக்கினார். கிருஷ்ணராஜா யாழ்ப்பாண மாவட்டம் உரும்பிராயில் சோமசுந்தரம், நல்லம்மா தம்பதியினருக்கு பிறந்தார். மகாஜனா கல்லூரியில் பள்ளிப்படிப்பையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பையும் முடித்தார். பின்னர் சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகத்தில் (Moscow State University) மெய்யியலில் முனைவர் பட்டம் பெற்று இலங்கை திரும்பி யாழ் பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் விரிவுரையாளராக இணைந்து பின்னர் மெய்யியல் துறையின் தலைவரானார். அவரால் எழுதப்பட்ட அவரின் காலத்தில் நூலுருப் பெறாத பின்வரும் மூன்று நூல்கள் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களால் நூலுருப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை விட ஏராளமான கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்து சமய கலாசார அமைச்சினால் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்துக் கலைக் களஞ்சியத்தின் உருவாக்கத்திற்கு மிகப் பெரிய பங்களிப்பினை வழங்கியிருக்கிறார். ஹிக்கின்பாதம்ஸ் இக்கின்பாதம்ஸ், சென்னையிலுள்ள ஒரு புத்தக நிலையம்; இந்தியாவிலேயே மிகப்பழமையான புத்தக நிலையம் இது. இதன் கிளைக் கடைகள் தமிழகம்,ஆந்திரப்பிரதேசம்,கர்நாடகா மற்றும் கேரளாவில் 22 இடங்களில் உள்ளன. ஏபெல் யோசுவா இக்கின்பாதம்சு என்ற ஆங்கிலேய நூலகரால் 1844 இல் நிறுவப்பட்டது இக்கின்பாதம்ஸ். 1860 -களில் தற்போதுள்ள பெரிய கட்டடத்திற்கு விற்பனையை மாற்றினார் ஏபெல் யோசுவா. 1891 இல் அவரது மறைவுக்குப் பிறகு அவரது மகன் சி.எச். இக்கின்பாதம்சு இந்நிறுவனத்தை நடத்தி வந்தார். 1921 -ஆம் ஆண்டு அசோசியேட்டட் பப்ளிசர்சின் "ஜான் ஓக்‌ஷாட் ராபின்சன்" என்பவரால் வாங்கப்பட்டு பின்னர் அமால்கமேசன்சு குழுமத்தால் அசோசியேட்டட் பப்ளிசர்சு 1945 இல் வாங்கப்பட்டதிலிருந்து இன்று வரை அக்குழுமத்திடமே இருந்து வருகிறது. 1929 -இலேயே 400 ஆட்கள் வேலை செய்து வந்துள்ளனர் இந்நிலையத்தில். 1990கள் வரை இந்தியாவின் மிகப்பெரிய புத்தகக்கடையாக விளங்கியது. அண்ணா சாலையில் உள்ள இதன் முதன்மைக் கட்டிடத்தை விலைக்கு வாங்கி அங்கு பெரும் பல்மாடி வணிக வளாகம் அமைக்க முயன்ற முயற்சி தோல்வியுற்றது. 1989ஆம் ஆண்டு மேற்கொண்ட இந்தக் கட்டிடத்தின் பராமரிப்பு முகப்புத்தோற்றத்தின் முந்தைய வனப்பை மீட்டது. குருவாயூர் கேசவன் கஜராஜன் குருவாயூர் கேசவன் (1904 - டிசம்பர் 2, 1976) தென் இந்தியாவில், குறிப்பாக கேரளாவில், மிகவும் புகழ் பெற்ற மற்றும் மக்களால் போற்றப்பட்ட கேரளத்து குருவாயூர் கிருஷ்ணர் கோயில் யானை. நீலாம்பூர் நாட்டு ராஜவம்ச குடும்பத்தினர் இந்த கேசவன் என்ற பெயருடன் கூடிய யானையை 1916 ஆம் ஆண்டில் ஹிந்துக்களின் குருவாயூர் கோவிலுக்கு நன்கொடையாக அளித்தனர்.[0]இதுபோன்று கேரள நாட்டில் கோவில்களுக்கு யானையை நன்கொடையாக, ஒரு வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக, அளிப்பது பரம்பரையாக காணப்படும் ஒரு வழக்கமாகும். நிலம்பூர் பெரிய ராஜாவால், மலபார் சச்சரவிலிருந்து தனது பொருள்கள் மீண்டும் கிடைத்ததற்கு காணிக்கையாக குருவாயூரப்பனுக்கு கேசவன் தரப்பட்டது. குருவாயூர் கோவிலில் யானைகளுக்கென்றே ஒரு சரணாலயம் உருவக்காப்பட்டு அங்கே யானைகள் நன்கு பராமரிக்கப்பட்டு வருவதோடல்லாமல், அவை நன்கு வளர்க்கப்பட்டும் பயிற்சிகள் அளிக்கப்பட்டும் வருகின்றன, மேலும் புன்னத்தூர்கோட்டையில் அமைந்த இந்த சரணாலயத்தில் தற்பொழுது நூற்றுக்கும் மேலான யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 3.2 மீட்டர் உயரத்துடன் கம்பீரமான தோற்றம் கொண்ட கேசவன், மிகவும் கனிவான, பணிவான யானையாக மட்டும் அல்லாமல், குருவாயூரப்பனிடம் மிகவும் பக்திகொண்டவனாகவும் காணப்பட்டான். பத்மநாபன் யானை புகழின் உச்சியில் இருந்த போதுதான் கேசவன் யானை குருவாயூர் கோவிலுக்கு வந்து சேர்ந்தது. பத்மநாபனின் நற்குணங்களை எல்லாம் கேசவன் பாடமாக்கிக் கொண்டான். அதுபோக பத்மநாபன் யானையையும் மிஞ்சியது கேசவன் யானையின் கெளரவமான பழக்கவழக்கங்கள். அத்துடன் தனக்கே உரிமையான சில உயர் பண்புகளையும் பெற்றிருந்தான். குருவாயூரப்பன் திடம்பை ஏந்தி தன் மேல் அமர வருபவர்களுக்கு மட்டுமே கேசவன் தன் முன்னங்கால்களைத் தாழ்த்தி ஏற உதவுவான். ஆலவட்டம்,குடை,செளரி போன்றவற்றை ஏந்தி நிற்போர், பின்னங்கால் துணை கொண்டே ஏற உதவுவான். தனி மனிதனாக தன் பாகன் கூட தன் மேல் ஏறி அமர அனுமதித்ததில்லை கேசவன். குருவாயூருக்கு வந்த புதிதில் கேசவன் யானை அழகு இல்லாததும், குறும்புத்தனம் கொண்டதும், யானைப்பாகன் ஆணைக்குப் பணியாமல் இருப்பதில் விருப்பமுள்ளதாகவும் இருந்தது. அக்காலத்தில் அதனை பயித்தியம் பிடித்த யானை என்றே வழங்கி வந்தனர். அந்த நாளில், 41 நாட்கள் குருவாயூரப்பன் கையில் வெண்ணெய் வைத்து மந்திரம் சொல்லி மருந்தாக மேல்சாந்தி கொடுத்து, அதோடு பஜனைக்காக மூன்று வேளை சீவேலிக்கும் கேசவனையே பயன்படுத்தினர். கோயில் மருந்தும் சேவையும் கேசவன் ஓர் இணையற்ற சிறந்த யானையாக வளர உதவியது . 1976 டிசம்பர் 2 இல் நவமி அன்று தங்கத்திடம்பு ஏற்றப்பட்ட கேசவன் யானை உடல் நடுக்கம் கண்டது. கால் நடை மருத்துவர்கள் விரைந்து வந்து மருந்து கொடுத்த பின்னரும் எதுவும் உண்ண மறுத்தான் கேசவன். மறுநாள் தசமி அன்றும் நின்றவாறே இருந்தது. தசமி இரவு விளக்கு ஆரம்பித்த மேள சப்தம் கேட்டதும் தண்ணீரைத்தன் துதிக்கையில் ஏந்தி குளித்தது. யானையின் பக்தியை மெச்சும் வகையில், "குருவாயூர் ஏகாசசி" என போற்றப்படும் தலை சிறந்த வழிபாட்டு நாள் அன்று, குருவாயூர் கேசவனின் உயிர், உடலை விட்டு கோவில் வளாகத்தில் பிரிந்தது. பக்தர்கள் ஏகாதசி விரதம் அன்று உண்ணாமல் இருப்பது போலவே, அன்றைய நாள் முழுவதும் கேசவன் உணவு எதுவும் உட்கொள்ளவில்லை, மேலும் மாலை வேளையில் இறக்கும் தருவாயில் கோவிலின் நடையை நோக்கி தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு இறைவனிடம் தனது வணக்கத்தை சமர்பித்துக் கொண்டு, நமஸ்கரிக்கும் பாணியில் தனது உடலை புவியில் அர்ப்பணம் செய்துகொண்டே, கேசவனின் உயிர் பிரிந்தது. இதன் நிமித்தமாக குருவாயூர் கேசவனின் நினைவு நாள் ஆண்டுதோறும் குருவாயூர் ஏகாதசியன்று கொண்டாடப்படுகிறது. நூற்றுக் கணக்கான யானைகளில் ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டு, குருவாயூர் கேசவன் யானையின் சிலைக்கு, தலைமை யானை மலர் மாலை அணிவிக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். குருவாயூர் தேவஸ்வம் குருவாயூர் கேசவனின் சேவைகளை மெச்சியபடி, கேசவனுக்கு "கஜராஜன்" (யானைகளின் ராஜா) என்ற பட்டத்தையும் வழங்கியுள்ளது.1973 இல் கேசவனது 60 ஆவது வயதில் கேசவன் கஜராஜன் என்ற பட்டம் பெற்றது. இங்கே உறையும் இறைவன் குருவாயூரப்பனுக்கான பல வேள்விகளிலும், உறசவங்களிலும் மற்றும் நித்ய பூஜைகளிலும் கலந்து கொண்டு, இன்றி அமையாத சேவைகள் புரிந்தமைக்காக, குருவாயூர் கேசவனின் சிலை ஒன்று போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இன்று கோவில் வளாகத்திலேயே குருவாயூர் தேவஸ்வத்தினரால் நிறுவப்பட்டுள்ளது. குருவாயூர் கேசவனின் நீண்ட அழகான கொம்புகள் மற்றும் கம்பீரமான தோற்றத்துடன் கூடிய படம் ஒன்று, இன்றும் பிரதான கோவிலின் கதவுக்கு மேல் அலங்கரிப்பதை நாம் இன்றும் காணலாம். மேலும் குருவாயூர் கேசவனின் வாழ்கையை பின்பற்றி, "குருவாயூர் கேசவன்" என்ற பெயரில் ஒரு மலையாள திரைப்படமும் எடுக்கப்பட்டது, இப்படம் கேரளத்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதாகும். குருவாயூர் பூலோகவைகுண்டம் (தமிழ்), குருவாயூர் தேவஸ்தான வெளியீடு, முதற் பதிப்பு 2003 பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் என்பது விரிவான மனித உரிமைகளின் ஒரு அங்காமாகக் கருதப்படுகின்றன. இவை ஐக்கிய நாடுகளின் உலக மனித உரிமைகள் சான்றுரையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் விரிவாக International Covenant on Economic, Social and Cultural Rights (ICESCR) எடுத்துரைக்கிறது. குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் என்பவை தனிமனிதர்களை வேண்டப்படாத அரசின் செயற்பாடுகளில் இருந்து பாதுகாக்கவும், ஒருவர் ஒரு நாட்டின் குடிசார் மற்றும் அரசியல் வாழ்வில் பாகுபாடு காட்டாமல், அச்சுறத்தப்படாமல் பங்கு கொள்ளவும் ஏதுவாக்கும் உரிமைகள் ஆகும். இவற்றில் பல அடிப்படை மனித உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மூன்று தலைமுறை மனித உரிமைகள் மூன்று தலைமுறைகள் மனித உரிமைகள் என்பது செக் நீதியாளர் Karel Vasak அவர்களால் 1977 ம் ஆண்டு மனித உரிமைகள் பற்றி முன்வைக்கப்பட்ட ஒரு முக்கிய கருத்துரு ஆகும். இது மேற்குநாடுகளில் வழக்கூன்றி வந்த உரிமைகள் பற்றிய ஒரு பார்வை ஆகும். மனித உரிமைகள் பற்றி உலக மனித உரிமைகள் சான்றுறை இப்பாகுபாட்டை முன் வைக்கவில்லை. இரண்டாம், மூன்றாம் தலைமுறை மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் உள்ளன. எதிர்ம நேர்ம உரிமைகள் எதிர்ம நேர்ம உரிமைகள் என்பது உரிமைகளை விவரிக்க மெய்யியலாளர்களும் அரசியல் அறிவியலாளர்களாலும் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துரு ஆகும். இந்தப் பார்வையின் படி எதிர்ம உரிமைகள் என்பன பிறர் தலையீடு செய்யாமல், செயல் இல்லாமல் நிலைநாட்டப்படுவன. எ.கா ஒருவர் கொல்லப்படாமல் அல்லது தாக்கப்படாமல் இருத்தல் என்பது ஒரு எதிர்ம உரிமை ஆகும். நேர்ம உரிமைகள் என்பன செயல் ஊடாக நிலைநாட்டப்படுவன. இவை நல உரிமைகள் (Welfare Rights) என்றும் அறியப்படுகின்றன. எ.கா அரசிடம் இருந்து கல்வி பெறுவதற்கான உரிமை ஒரு நேர்ம உரிமை ஆகும். மனித உரிமைகள் நோக்கிய விமர்சனங்கள் மனித உரிமைகள் தொடர்பாக பல்வேறு வழிகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. விலை பயன் நோக்கில், வரலாற்று நோக்கில், சமய நோக்கில், உள்ளடக்க நோக்கில் என பல பார்வைகளில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பின்வருவன அவற்றின் சுருக்கங்கள் ஆகும். உலகின் பெரும்பால நாடுகள் மனித உரிமைகளுக்கு சார்பான சான்றுரைகளை, உடன்படிக்கைகளை, கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால் பல நாடுகளில் இவற்றை நிறைவேற்றதக்க நிர்பந்தங்களோ, சூழ்நிலைகளோ இல்லை. இதனால் கருத்திய மனித உரிமைகளுக்கும், நடைமுறையில் மனித உரிமைகளுக்கும் பாரிய வேறுபாடு உள்ளது. அடிப்படை குடிசார் அரசியல் உரிமைகளில் இருந்து இன்று மூன்றாம், நான்காம் தலைமுறை உரிமைகள் என்று பல வகையான கோரிக்கைகள் உரிமைகள் என்ற போர்வையில் முன்வைக்கப்படுகின்றன. தகுந்த காதலருக்கான உரிமை, தகுந்த ஓய்வுக்கான உரிமை, தகுந்த நட்புக்காண உரிமை, வேக கட்டுப்பாட்டை மீற உரிமை போன்று உரிமைகளின் விரிவாக்கம் உரிமைகளை பொருள் இழக்க வைக்கிறது. மனித உரிமைகள் பொதுவாக தனிமனித உரிமைகள் என்ற வடிவமைப்பிலேயே விபரிக்கப்படுகின்றன. எனினும் பல சூழ்நிலைகளில் ஒரு மக்கள் குழுவின் உரிமைகள் பற்றிப் பேசுவது அவசியமாகிறது. குறிப்பாக முதற்குடிமக்கள் உரிமைகள், சிறுபான்மை மக்கள் உரிமைகள் பற்றிப் பேசும் போது மனித உரிமைகள் ஒரு மக்கள் குழுவின் உரிமைகளாகப் பரிணாமிக்கின்றன. ஆனால் தற்போதைய மேற்குலக மனித உரிமைகள் வரையறைகள் இதை போதிய அளவு கருத்தில் கொள்ளவில்லை. மனித உரிமைகளின் வரையறைகள் பெரும்பாலும் மேற்குநாடுகளிலேயே வளர்ச்சி பெற்றன. இதனால் இசுலாமிய நாடுகள், சீனா போன்ற நாடுகள் இவை எல்லாம் தமக்குப் பொருந்தாது என்றும், மனித உரிமைகள் பற்றிய தமது வரையறைகள் தமது பண்பாட்டு அரசியல் சூழலில் இருந்து பெறப்படுதாகவும் வாதிக்கின்றன. குறிப்பாக இசுலாமிய மனித உரிமை அறிக்கைகளில் உறுதி செய்யப்படாத பெண்கள் சமவுரிமை, மற்றும் சீனாவில் உறுதி செய்யப்பட்டாத அரசியல் மற்றும் குடியல் உரிமைகளுக்கு இந்தக் காரணம் தரப்படுகிறது. சித்திரவதை சித்திரவதை, அல்லது கடுநோவு என்பது சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்தின்படி: ...உடலுக்கோ மனதுக்கோ கடும் வலி அல்லது தாக்கம் ஏற்படுத்துகின்ற செயலை, அவரிடமிருந்தோ அல்லாது மூன்றாம் மனிதரிடமிருந்தோ ஏதேனும் தகவலைப் பெறவோ அல்லது ஒப்புமை பெறவோ நடத்தப்படின், அவரோ அல்லாது மூன்றாமவரோ செய்த அல்லது செய்ததாகக் கருதப்படும் செயலுக்குத் தண்டனையாக வழங்கப்படின், அவரை அல்லது மூன்றாமவரை அடிபணிய வைக்க அல்லது அவமதிக்க அல்லது வேறு ஏதேனும் பாகுபாட்டினுற்காக செய்யப்படின், அதற்கு அரசின் அனுமதியோ ஆணையோ அல்லது அரசு அதிகாரியின் நேரடி அல்லது மறைமுக ஈடுபாடோ இருப்பின் (இந்த சாசனத்தில்)சித்திரவதையாகக் கொள்ளப்படும். சட்டப்படி நிறைவேற்றப்படும் செய்கைகளிலாலான வலியோ துன்பமோ கருத்தில் கொள்ளப்படாது. அரசு அனுமதிபெற்ற சித்திரவதை தவிர, தனிநபர்களும் கூட்டங்களும் கூட மேற்கண்ட காரணங்களை ஒத்தவற்றிற்காக சித்திரவதையில் ஈடுபடலாம். தவிர பிறரின் துன்பங்களை கண்டு மகிழும் மனவக்கிரங்களுக்காக ஒருவரை சித்திரவதை செய்வதும் உண்டு. பெரும்பாலான நாடுகளில் பன்னாட்டு சட்டம் மற்றும் உள்நாட்டுச் சட்டங்களால் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. பன்னாட்டு மன்னிப்பு அவையின் கூற்றுப்படி 81 உலகநாடுகளில், சிலவற்றில் நேர்முகமாகவே, சித்திரவதை கடைபிடிக்கப்படுகிறது. வரலாற்றில், அடிபணிய வைக்கவும் மூளைச்சலவை செய்யவும் சித்திரவதை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் ஐ. நா உலக மனித உரிமைகள் சாற்றுரை விதி 5இன் படி மனித உரிமைகளை மீறியதாகக் கருதப்படுகிறது. மூன்றாவது செனீவாச் சாசனம் மற்றும் நான்காவது செனீவாச் சாசனம் ஒப்பிட்ட அனைத்து நாடுகளும் போர்க்கைதிகளை சித்திரவதை செய்வதில்லை என உடன்பட்டுள்ளன. 145 நாடுகள் உடன்பட்டுள்ள சித்திரவதைக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சாசனத்திலும் சித்திரவதை தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான வதைக்கு எதிரான தேசிய, பன்னாட்டு சட்டப்பாதுகாப்பு அவை அறமுறைகளுக்குப் புறம்பானதென்பதாலும் நடைமுறைப்படுத்த வியலாது என்பதாலும் எழுந்தன. இத்துணை பன்னாட்டுச் சட்டங்கள் இருப்பினும் பல நடுநிலை அமைப்புகள் உலகின் பல பகுதிகளில் நடைபெறும் சித்திரவதைகளைக் குறித்து அறிக்கைகள் வெளியிட்ட வண்ணம் உள்ளன. பொதுச் சிறு பொதி அலைச் சேவை General packet radio service (GPRS) என்பது பேக்கெட் (packet) தொழில்நுட்பம் சார்ந்த மொபைல் தரவுபரிமாற்றச் சேவையாகும், 2ஜி செல்லுலர் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப முறையான குளோபல் சிஸ்டம் ஃபார் மொபைல் கம்யூனிகேஷனிலும் (ஜிஎஸ்எம்) மற்றும் 3ஜி தொழில்நுட்ப முறையிலும் இருக்கும் பயனர்கள் இந்த GPRS வசதியைப் பெறமுடியும். 2ஜி சிஸ்டங்களில், GPRS நுட்பமானது 56-114 kbps வேகத்தில் தரவு பரிமாற்றத்தை அளிக்கிறது. GPRS நுட்பத்தில் தரவு பரிமாற்றமானது, பரிமாறப்பட்ட ஒரு மெகாபைட்டின் அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது, ஆனால் பழைய சர்க்யூட் ஸ்விட்சிங் (circuit switching) நுட்பத்தில் தரவு பரிமாற்றமானது, இணைப்பு அளிக்கப்பட்டிருக்கும் நேரத்திற்கு ஏற்ப நிமிடத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, இந்த நுட்பமானது, தரவு பரிமாற்றத்தைப் பயனர் பயன்படுத்துகிறாரா அல்லது அது பயன்படுத்துப்படாமல் இருக்கிறதா என்பதைச் சார்ந்து இருக்காது. GPRS நுட்பமானது, சர்க்யூட் சுவிட்சிங் சேவையோடு ஒப்பிடும் போது ஒரு சிறந்த பேக்கெட் சுவிட்சிங் சேவையாகும், ஆனால் மொபைல் வசதி அல்லாத பயனர் இணைப்பைப் பொறுத்தவரை சர்க்கியூட் சுவிட்சிங் சேவை ஒரு சிறந்த சேவைத்தரத்தை வழங்குகிறது. GPRS வசதியோடு கூடிய 2ஜி செல்லுலர் சிஸ்டங்கள் பொதுவாக "2.5ஜி" என்று அழைக்கப்படுகின்றன, அதாவது மொபைல் தொலைபேசி சேவையில் 2ஜி தொழில்நுட்பத்திற்கும், 3ஜி தொழில்நுட்பத்திற்கும் இடைப்பட்ட ஒரு தொழில்நுட்பம். இது பயன்படுத்தப்படாத டைம் டிவிஷன் மல்டிபிள் அக்சஸ் (time division multiple access - TDMA) சேனல்களில், மிதமான வேகத்தில் தரவு பரிமாற்றத்தை அளிக்கிறது, எடுத்துக்காட்டாக ஜிஎஸ்எம் சிஸ்டங்களில். உண்மையில், பிற தரமுறைகளுக்கு இணையான தரத்தை எட்டுவதற்காக GPRS நுட்பத்தை விரிவாக்குவதற்கான சிந்தனைகளும் இருக்கின்றன, ஆனால் அந்த வலையமைப்புகள் புதிய ஜிஎஸ்எம் தரமுறைகளுக்கு மாற்றப்பட்டாக வேண்டும், பிறகு இதனால் GPRS பயன்படுத்தும் ஒரே வலையமைப்பு ஜிஎஸ்எம் என்பதாக மட்டும் மாறியிருக்கும். ஜிஎஸ்எம் வெளியீடு 97 மற்றும் அதற்கு பிந்தைய புதிய வெளியீடுகளில் GPRS இடம் பெற்றது. இது ஐரோப்பிய தரமுறைகளுக்கான தொலைத்தொடர்பு பயிலகத்தால் (European Telecommunications Standards Institute-ETSI) தரமுறைப்படுத்தப்பட்டது, ஆனால் தற்போது இது மூன்றாம் தலைமுறை பார்ட்னர்ஷிப் புரோஜெட்டினால் (3rd Generation Partnership Project-3GPP) தரமுறைப்படுத்தப்படுகிறது. முந்தைய CDPD மற்றும் i-mode பேக்கெட் சுவிட்ச்டு செல்லுலர் தொழில்நுட்பங்களுக்கு ஜிஎஸ்எம் தொழில்நுட்பத்தின் பதிலீடாக GPRS உருவாக்கப்பட்டது. GPRS நுட்பமானது ஜிஎஸ்எம் சர்க்யூட் சுவிட்ச்டு டேட்டா திறன்களை விரிவாக்கி, பின்வரும் சேவைகளைச் சாத்தியப்படுத்துகிறது: GPRS வழியாக குறுந்தகவல்கள் (SMS) பயன்படுத்தப்பட்டால், குறுந்தகவல் அனுப்பும் வேகம் சுமார் நிமிடத்திற்கு 30 குறுந்தகவல்கள் என்ற அளவை எட்ட முடியும். இது ஜிஎஸ்எம் சிஸ்டத்தில் சாதாரணமாக குறுந்தகவல்கள் அனுப்பும் வேகத்தை விட அதிக வேகமாகும், ஜிஎஸ்எம் சிஸ்டத்தில் குறுந்தகவல்கள் அனுப்பும் வேகம் நிமிடத்திற்கு 6 முதல் 10 வரையில் மட்டுமாகும். GPRS பின்வரும் நெறிமுறைகளுக்குப் பொருந்துகிறது: TCP/IP பயன்படுத்தப்படும் போது, ஒவ்வொரு செல்பேசியிலும் ஒன்றோ அல்லது அதற்குமேலான ஐபி முகவரிகளையும் ஒதுக்கி அளிக்க முடியும். GPRS நுட்பமானது, செல் ஹேண்ட்ஓவர்களின் (ஒரு செல்லில் இருந்து இன்னொரு செல்லிற்கு நகருதல்) போது செல்பேசிக்கு ஐபி பேக்கெட்களை அனுப்பவும், அவற்றை சேமிக்கவும் செய்யும். TCP எவ்வகையான பேக்கெட் இழப்பையும் (எடுத்துக்காட்டாக, ஒரு ரேடியோ அலைவரிசை இரைச்சலால் ஏற்படும் குறுக்கீடு) கையாள்கிறது, இதனால் டிரான்ஸ்மிஷன் வேகத்தில் தற்காலிகமாக ஒரு திணறல் ஏற்படக்கூடும். GPRS நுட்பத்திற்கு பொருத்தமான உபகரணங்கள் முன்று பிரிவுகளில் பிரிக்கப்படுகின்றன: ஒரே சமயத்தில் இரண்டு வெவ்வேறு அலைவரிசைகளில் தரவு பரிமாற்றம் செய்வதற்கு சிறந்த கிளாஸ் எ வகை உபகரணங்கள் தேவைப்படுகின்றன, அதாவது இரண்டு ரேடியோக்கள் தேவைப்படுகின்றன. இந்த விலையுயர்ந்த தேவையைப் பூர்த்தி செய்ய, ஒரு GPRS செல்பேசியில் டுயூல் டிரான்ஸ்பர் மோட் (DTM) வசதி இருக்க வேண்டும். ஒரேசமயத்தில் இரண்டு வெவ்வேறு அலைவரிசைகளில் டிரான்ஸ்மிட் செய்ய வேண்டிய தேவையில்லை என்ற நிலையை உறுதிப்படுத்தும் வலையமைப்புகளுடன், DTM வசதி கொண்ட ஒரு செல்பேசி ஒரேசமயத்தில் அழைப்பு மற்றும் பேக்கெட் தரவு இரண்டையும் கையாளக் கூடும். இதுபோன்ற செல்பேசிகள் சூடோ-கிளாஸ் எ என்று அழைக்கப்படுகின்றன, சில சமயங்களில் இவை "சாதாரண கிளாஸ் எ" என்றும் அழைக்கப்படுகின்றன. சில வலையமைப்புகள் 2007-ல் DTM-க்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. USB GPRS மோடம்கள் ஒரு டெர்மினல் போன்ற இடைமுக USB 2.0 மற்றும் அதற்கு பிந்தைய பதிப்புகளைப் பயன்படுத்தும், இவை டேட்டா பார்மெட்கள் V.42bis, மற்றும் RFC 1144 மற்றும் வெளிப்புற ஆண்டெனாக்களைப் பயன்படுத்துகின்றன. வடிவத்திலும், அளவிலும் ஒரு கம்ப்யூட்டர் மவுஸைப் போல இருக்கும் கார்டுகளாகவோ (மடிக்கணிணிகளில்) அல்லது வெளிப்புற பயன்பாட்டு USB சாதனங்களாகவோ மோடம்கள் பயன்படுத்தப்படும். GPRS நுட்பத்தின் பதிவேற்றும் மற்றும் பதிவிறக்கும் வேகங்கள் பின்வரும் பல்வேறு காரணிகளைச் சார்ந்து இருக்கின்றன: மிகக் குறைந்தபட்ச வெளிப்பாட்டோடு (robust), ஆனால் விரைவான, கோடிங் முறை (CS-4) பேஸ் டிரான்ஸ்சீவர் ஸ்டேஷனுக்கு (BTS) அருகில் இருக்கும். செல்பேசி BTS-ல் இருந்து தூரத்தில் இருக்கும் போது அதிக வெளிப்பாடு (robust) கொண்ட கோடிங் முறையான CS-1 பயன்படுத்தப்படும். CS-4 பயன்படுத்தும் போது, ஒரு பயனருக்கு டைம் ஸ்லாட்டுக்கு 20 kbit/s என்ற வேகம் கிடைக்கும். ஆனால், இந்த முறையைப் பயன்படுத்தும் போது பொதுவாகக் கிடைக்கும் செல் கவரேஜை விட 25% குறைந்துவிடும். CS-1 பயன்படுத்தும் போது, டைம் ஸ்லாட்டுக்கு 8.0 kbit/s மட்டும் தான் ஒரு பயனருக்கு கிடைக்கும், ஆனால் இதில் பொதுவான கவரேஜில் 98% எட்ட முடியும். செல்பேசி இருக்கும் இடத்திற்கு ஏற்ப, வலையமைப்பு சாதனத்தால் ஒருபோதும் தானாகவே பரிமாற்ற வேகத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியாது. GPRS நுட்பம் மட்டுமில்லாமல், தரவு பரிமாற்ற சேவைகள் வழங்கும் மேலும் இரண்டு ஜிஎஸ்எம் தொழில்நுட்பங்களும் உள்ளன: அவையானவை, சர்க்கியூட் சுவிட்ச்டு டேட்டா (CSD) மற்றும் ஹை-ஸ்பீட் சர்க்கியூட்-சுவிட்ச்டு டேட்டா (HSCSD) ஆகியவன. GPRS நுட்பத்தின் பகிர்ந்து கொள்ளும் முறையுடன் ஒப்பிடுகையில், இவை மாறாக ஒரு பிரத்யேக சர்க்கியூட்டை பயன்படுத்துகின்றன (பொதுவாக இவற்றில் நிமிடத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படும்). வீடியோ அழைப்பு போன்ற சில பயன்பாடுகள் தேவையானால் HSCSD தேர்ந்தெடுக்கப்படலாம், குறிப்பாக இரண்டு தரப்பிற்கும் இடையில் தொடர்ந்து தரவு பரிமாற்றம் இருக்குமானால் இந்த நுட்பம் தேர்ந்தெடுக்கப்படும். பின்வரும் அட்டவணை GPRS மற்றும் சர்க்கியூட் சுவிட்ச்டு டேட்டா சேவைகளின் சில சாத்தியமான கான்பிக்ரேஷன்களைத் தொகுத்து வழங்குகிறது. GPRS நுட்பத்தோடு கூடிய ஜிஎஸ்எம் சிஸ்டங்களில் பயன்படுத்தப்படும் மல்டிபிள் அக்சஸ் முறைகள், ப்ரீக்குவன்சி டிவிஷன் டுப்ளக்ஸ் (FDD) மற்றும் TDMA ஆகியவற்றின் அடித்தளத்தில் அமைந்திருக்கும். ஒரு பயனரின் ஓர் அழைப்பின் போது, அப்-லிங்க் மற்றும் டவுன்-லிங்க் அலைவரிசை சேனல்களின் ஒரு ஜோடி ஒதுக்கப்படும். இது டைம் டொமைன் ஸ்டேடிக்கல் மல்டிபிளக்சிங் உடன் இணைக்கப்பட்டிருக்கும்; அதாவது, பேக்கெட் மோட் கம்யூனிகேஷன், இதன்மூலம் ஒரே அலைவரிசை சேனலை பல பயனர்களோடு பகிர்ந்து கொள்ளும் சாத்தியக்கூறு உண்டாகிறது. ஒரு ஜிஎஸ்எம் டைம்ஸ்லாட்டிற்கு ஏற்ப பேக்கெட்கள் நிலையான நீளத்தைக் கொண்டிருக்கின்றன. டவுன்-லோடானது, முதலில் வந்தவர்களுக்கு முதலில் அளிக்கப்படும் பேக்கெட் முறையைப் பயன்படுத்துகிறது, ஆனால் அப்-லிங்கானது ரிசர்வேஷன் ALOHA (R-ALOHA)-வைப் போன்ற ஒரு முறையைப் பயன்படுத்துகிறது. அதாவது, ஒரு கன்டன்சன் பேஸின் போது, ஒதுக்கீட்டு விசாரணைக்காக ஸ்லாட்டட் ALOHA (S-ALOHA) பயன்படுத்தப்படுகின்றது, பிறகு முதலில் வந்தவைகளுக்கு முதலில் சேவை என்ற முறையில் டைனமிக் TDMA-ஐ பயன்படுத்தி தரவு பரிமாற்றம் செய்யப்படுகிறது. ஒரு GPRS இணைப்பானது, அதன் அக்சஸ் பாயிண்ட் பெயரைக் (APN) குறிப்பிட்டு உருவாக்கப்படுகிறது. இந்த APN ஆனது, வயர்லெஸ் அப்ளிகேஷன் நெறிமுறை (WAP) அக்சஸ், குறுந்தகவல் சேவை (SMS), மல்டிமீடியா மெசேஜிங் சேவை (MMS) மற்றும் மின்னஞ்சல் மற்றும் உலகளாவிய வலைத்தளம் போன்றவற்றை அணுகுவதற்கான இணைய தொலைத்தொடர்பு சேவைகளை வரையறுக்கிறது. ஒரு வயர்லெஸ் மோடத்தில் ஒரு GPRS இணைப்பை அமைப்பதற்கு, ஒரு பயனரானவர் சேவை வழங்குனரால் அளிக்கப்படும் APN, பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் (இது கட்டாயமில்லை), மற்றும் எப்போதாவது ஐபி முகவரி ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டும். 2003-ல் அளிக்கப்பட்ட GPRS இணைப்பின் அதிகபட்ச வேகம், ஓர் அனலாக் வயர் தொலைத்தொடர்பு வலையமைப்பில் ஒரு மோடம் இணைப்பில் அளிக்கப்பட்ட வேகத்தில் தான் இருந்தது, அதாவது பயன்படுத்தும் தொலைபேசியைச் சார்ந்து நொடிக்கு 32 முதல் 40 கிலோபிட்களாக இருந்தது. சுழற்சி நேரம் மிகவும் உயர்வாக இருந்தது; ரவுண்ட்-ட்ரிப் டைம் (RTT) சுமார் 600-700 மில்லி நொடிகளாகவும், எப்போதாவது 1 நொடியை எட்டுவதாகவும் இருந்தது. GPRS பொதுவாக அழைப்பிற்கு அடுத்தபடியாக தான் முன்னுரிமை அளிக்கப்படும், அதனால் இணைப்பின் தரம் பெருமளவில் வேறுபடுகிறது. மேம்படுத்தப்பட்ட லேடன்சி/RTT (உதாரணமாக, விரிவாக்கப்பட்ட அப்-லிங்க் TBF மோட் வசதி) வசதி கொண்ட சாதனங்களும் பொதுவாகக் கிடைக்கின்றன. மேலும், சில குறிப்பிட்ட சேவை வழங்குனர்களைப் பொறுத்து, வலையமைப்பு மேம்பாடுகளும் கிடைக்கின்றன. இந்த மேம்பாடுகளால், செயல்பாட்டில் இருக்கும் ரவுண்ட்-ட்ரிப் நேரம் குறைபடும், இதனால் பயன்பாட்டு மட்டத்தில் மொத்த வேகங்களும் கணிசமாக அதிகரிக்கின்றது. மெய்நிகர் குறும்பரப்புப் பிணையம் மெய்நிகர் குறும்பரப்புப் பிணையம் (மெ.கு.பி) (virtual LAN) என்பது தேவைகளுக்கான தொகுப்புடன் கூடிய இடம் வழங்கிகளின் (hosts) ஒரு குழுவாகும், இவை நிலைபெற்றிருக்கும் இடத்திற்கு ஏற்ப, அவை அலைபரப்பு களங்களுடன் இணைக்கப்பட்டு தொடர்பு கொள்கின்றன. ஒரு இயற்பியக் குறும்பரப்புப் பிணையம் (physical LAN) கொண்டிருக்கும் அதே பண்புகளை ஒரு குறும்பரப்புப் பிணையமும் கொண்டிருக்கும், ஆனால் இறுதிநிலை சாதனங்கள் ஒரே வலையமைப்பு மாற்றியில் (Network switch) இல்லை என்றாலும் கூட, இறுதிநிலை சாதனங்களை ஒன்றாக குழுவிற்குள் கொண்டு வர இவை அனுமதிக்கின்றன. சாதனங்களை இடம் மாற்றுவதற்கு பதிலாக, இவற்றில் மென்பொருள் வழியாகவே வலையமைப்பு மறுகட்டமைப்பு செய்ய முடியும். குறும்பரப்பு வலையமைப்பு கட்டமைப்புகளில் வழக்கமாக வழிப்படுத்திகள் அளிக்கும் பகுதியாக்கல் (segmentation) சேவைகளை வழங்கவே மெ.கு.பி-கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மெ.கு.பி-கள் அளவீடு (scalability), பாதுகாப்பு (security) மற்றும் வலையமைப்பு மேலாண்மை (Network Management) போன்ற விடயங்களைக் கவனித்துக் கொள்கின்றன. மெ.கு.பி வடிவமைப்பில் இருக்கும் வழிப்படுத்திகள், அலைபரப்பு வடிப்பு (broadcast filtering), பாதுகாப்பு, முகவரிச் சுருக்கம் (address summarization), மற்றும் போக்குவரத்துப் பாய்வு மேலாண்மை (traffic flow management) ஆகியவற்றை அளிக்கின்றன. வரையறுத்து சொல்வதானால், மெ.கு.பி அலைபரப்பு களனின் ஒருமைப்பாட்டுக்கு (integrity) எதிராக இருக்கக்கூடும் என்பதால், மாற்றிகள் மெ.கு.பி-களுக்கு இடையில் இருக்கும் ஐபி (IP) போக்குவரத்தை இணைப்பதில்லை. ஆனால், ஒரே லேயர் 2 சுவிட்சிலேயே பன்முக லேயர் 3 வலையமைப்புகளை ஒருவர் நிறுவ விரும்பினால் இது மிகவும் உபயோகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு DHCP வழங்கி ஒரு சுவிட்சில் இணைக்கப்பட்டால், அது வழங்கியைப் பயன்படுத்துவதற்கு கட்டமைப்பு செய்யப்பட்ட அந்த சுவிட்ச் எந்த இடம் வழங்கிக்கும் சேவையளிக்கும். மெ.கு.பி-களைப் பயன்படுத்துவதால், சில இடம் வழங்கிகள் அந்த சர்வரைப் பயன்படுத்தாத வகையில் உங்களால் வலையமைப்பை எளிதாக பிரித்து வைக்க முடியும், பிறகு லிங்க்-லோக்கல் முகவரிகளைப் (Link-local address) பெறலாம். லேயர் 3 கட்டமைப்புகளான ஐபி சப்நெட்களோடு (IP Subnets) ஒப்பிடும் போது, மெய்நிகர் குறும்பரப்பு பிணையங்கள் குறிப்பாக லேயர் 2-க்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு மெ.கு.பி-ல் பல்வேறு சப்நெட்கள் வைத்திருப்பதற்கான சாத்தியமும் அல்லது பல மெ.கு.பி-களின் மத்தியில் ஒரு சப்நெட் வைத்திருப்பதற்கான சாத்தியமும் இருந்த போதிலும் கூட, மெ.கு.பி-கள் நிறுவப்பட்டிருக்கும் சூழலில், மெ.கு.பி-களுக்கும், ஐபி சப்நெட்களுக்கும் இடையில் எப்போதும் நேரடியான தொடர்பு இருக்கும். மெய்நிகர் குறும்பரப்பு பிணையங்களும், ஐபி சப்நெட்களும் சுதந்திரமான லேயர் 2 மற்றும் லேயர் 3 கட்டமைப்புகளை வழங்குகிறது, இது ஒன்றையொன்று மேப் (map) செய்கிறது, மேலும் இந்த தொடர்பானது வலையமைப்பு வடிவமைப்பு செயல்முறையின் போதும் பயன்படுகிறது. மெ.கு.பி-களைப் பயன்படுத்துவதன் மூலம், ஒருவரால் டிராபிக் பேட்டர்ன்களை (traffic pattern) கட்டுப்படுத்த முடியும், அதனோடு இடமாற்றங்களுக்கும் விரைவாக செயல்பட முடியும். மெ.கு.பி-களைக் கொண்டு வலையமைப்பு தேவைகளுக்கு ஏற்ற மாற்றங்களை இலகுவாக செய்ய முடிகிறது, மேலும் அவை எளிமையான மேலாண்மையையும் அளிக்கின்றன. ஒரு மரபார்ந்த வலையமைப்பில், பயனர்கள் புவியிட அடிப்படையில் நிறுவப்பட்டிருப்பார்கள், அவர்கள் பிசிக்கல் ட்ரோபோலஜி மற்றும் தூரம் ஆகியவற்றின் அடிப்படையில் வரையறைகளைக் கொண்டிருப்பார்கள். மெ.கு.பி-கள் லாஜிக்கலாக வலையமைப்புகளைக் குழுப்படுத்த முடியும் என்பதால், பயனர்களின் வலையிடம் (network location) அவர்கள் இருக்கும் இடத்தோடு மிகவும் இறுக்கமான வரையறைக்கு உட்பட்டிருக்காது. பின்வரும் தொழில்நுட்பங்களில் மெ.கு.பி-களை நிறுவ முடியும்: இன்று மெய்நிகர் குறும்பரப்பு பிணையங்களைக் கட்டமைப்பு செய்ய மிக பெரும்பாலும் IEEE 802.1Q புரோட்டோக்கால்களே பயன்படுத்தப்படுகின்றன. பல உற்பத்தியாளர்களின் சாதனங்களுக்கு பொருந்தும் வகையில் மெ.கு.பி அமைப்பதைச் சாதகமாக்கும் முயற்சியில் மல்டிபிளக்சிங் மெ.கு.பி-கள் என்ற முறையை IEEE பொதுக்குழு வரையறுத்திருக்கிறது. 802.1Q தரமுறையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னால், சிஸ்கோவின் ISL (Inter-Switch Link, IEEE 802.10-ன் மாற்று வடிவம்) மற்றும் 3Com-ன் VLT (விர்ச்சுவல் VLAN டிரன்க்கிங்) போன்ற பல்வேறு உடைப்படுத்தப்பட்ட புரோட்டோக்கால்கள் இருந்தன. ISL மற்றும் IEEE 802.1Q டேகிங் (tagging) இரண்டுமே "நேரடியான டேகிங்" செய்கின்றன - அதாவது ப்ரேமே (frame) மெ.கு.பி தகவலுடன் டேக் செய்யப்படுவது. ISL நுட்பமானது வெளிப்புற டேகிங் முறையைப் (external tagging process) பயன்படுத்துகிறது, இது உடனிருக்கும் ஈதர்நெட் ப்ரேமை மாற்றுவதில்லை, ஆனால் 802.1Q டேகிங்கைப் பொருத்த வரையில் இது ப்ரேம்-உட்புற பீல்டைப் (frame-internal field) பயன்படுத்துகிறது, அதனால் இது ஈதர்நெட் ப்ரேமை மாற்றிவிடுகிறது. இந்த உட்புற டேகிங் நடைபெறுவதால் தான், IEEE 802.1Q நுட்பத்தால் அக்சஸ் மற்றும் ட்ரன்க் லிங்குகள் (access and trunk links) இரண்டோடும் ஒருங்கிணைந்து செயல்பட முடிகிறது: பிரேம்கள் நிலையான ஈதர்நெட் என்பதால், விற்பனையில் இருக்கும் ஹார்டுவேர்களால் அவற்றைக் கையாள முடியும். IEEE 802.1Q ஹீடரானது, ஒரு 2-பைட் (byte) டேக் புரோட்டோக்கால் ஐடென்டிபியர் (TPID) மற்றும் ஒரு 2-பைட் டேங் கண்ட்ரோல் இன்பார்மேஷன் (TCI) ஆகியவற்றைக் கொண்டிருக்கும் ஒரு 4-பைட் டேக் ஹீடரைக் கொண்டிருக்கிறது. TPID -க்கு 0x8100 என்ற நிலையான மதிப்பு இருக்கும், இது 802.1Q/802.1p டேக் தகவலை ப்ரேம் கொண்டு செல்கிறது என்பதைக் குறிக்கிறது. TCI பின்வரும் விஷயங்களைக் கொண்டிருக்கும்: இந்த 802.1Q தரமுறையால் வலையமைப்பில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடக்கிறது. IEEE 802.3 -ஆல் வரையறுக்கப்பட்டிருக்கும் ஈதர்நெட் ப்ரேமின் அதிகபட்ச அளவான 1518 பைட்டுகளைத் திருப்பி அழைக்கிறது, அதாவது அதிகபட்ச அளவிலான ஈத்நெட் ப்ரேம் டேக் (tag) செய்யப்பட்டால், ப்ரேம் அளவானது 1522 பைட்டுகளாக மாறிவிடுகிறது, இந்த எண்ணிக்கை IEEE 802.3 தரமுறையைச் சிதைக்கிறது. இந்த சிக்கலை நீக்க, 802.3 குழுமமானது ஈதர்நெட்டின் அதிகபட்ச அளவை 1522 பைட்டுகளாக விரிவுபடுத்த 802.3ac என்று அழைக்கப்படும் ஒரு துணைகுழுவை உருவாக்கியது. இந்த எண்ணிக்கை உயர்ந்த ப்ரேம் அளவுக்கு பொருந்தாத வலையமைப்பு சாதனங்களும் கூட ப்ரேமை வெற்றிகரமாக செயல்படுத்தும், ஆனால் இந்த பைட் (byte) மாறுபாட்டை "பேபி ஜெயின்ட்" (baby giant) என்று குறிப்பிட்டு காட்டக்கூடும். சிஸ்கோவின் புரோட்டோக்கால் உடைமையான இன்டர்-ஸ்விட்ச் லிங்க் (ISL) என்பது பல்வேறு சுவிட்ச்களை ஒன்றிணைத்து பயன்படுத்தவும், மெ.கு.பி தகவல்களை ட்ரங்க் லிங்குகளில் (trunk links) இருக்கும் சுவிட்சுகளுக்கு இடையில் நடைபெறும் டிராபிக்காக செயல்படுத்தவும் பயன்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பம் ஓர் உயர்-வேக பின்புலத்தில் பிரிட்ஜ் குழுக்களை மல்டிபிளக்சிங் செய்யவதற்கான ஒரு முறையை அளிக்கிறது. இது IEEE 802.1Q -ல் இருப்பது போல, அதிவேக ஈதர்நெட் மற்றும் கிகாபிட் ஈதர்நெட்டிற்காக வரையறுக்கப்படுகிறது. சிஸ்கோ IOS மென்பொருள் பதிப்பு 11.1 -ல் இருந்து சிஸ்கோ ரௌட்டர்களில் ISL பொருந்தி வருகிறது. ISL உடன், ஓர் ஈதர்நெட் ப்ரேமானது ஒரு ஹீடருடன் சேர்த்துவிடப்படுகிறது, இது சுவிட்சுகளுக்கும், ரௌட்டர்களுக்கும் இடையில் VLAN அடையாளங்களைக் கொண்டு செல்கிறது. ISL தரமுறையானது 10-பிட் VLAN அடையாளத்தைக் கொண்டிருக்கும் ஒரு 26-பைட் ஹீடரை பாக்கெட்டுடன் ஓவர்ஹெட்டில் சேர்க்கிறது. அதற்கும் மேலாக, ஒவ்வொரு ப்ரேமின் முடிவிலும் ஒரு 4-பைட் CRC -ம் சேர்க்கப்படுகிறது. இந்த CRC ஆனது, ஈதர்நெட் ப்ரேம்களில் செய்யப்படும் பொதுவான ப்ரேம் பரிசோதனைகளூடாக கூடுதலாக செய்யப்படுகிறது. ஒரு ட்ரங்க் இணைப்பாக கட்டமைப்பு செய்யப்பட்ட ஒரு போர்ட் பிரேமால் முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டால் மட்டும் தான் மெ.கு.பி அடையாளம் சேர்க்கப்படும். ஓர் அணுகல் இணைப்பாக கட்டமைப்பு செய்யப்பட்ட ஒரு போர்ட் பிரேமால் முன்னோக்கி எடுத்து செல்லப்பட்டால், ISL என்கேப்சுலேஷன் (encapsulation) நீக்கப்படும். ஆரம்பகால வலையமைப்பு வடிவமைப்பாளர்கள், ஒரேயொரு பெரிய ஈதர்நெட் செக்மெண்டில் கொலீஷன் டொமைனின் (collision domain) அளவைக் குறைக்கும் நோக்கத்தோடும், அதன்மூலம் திறனை அதிகரிக்கும் நோக்கத்தோடும் தான் வழக்கமாக VLAN-களைக் கட்டமைப்பு செய்தார்கள். ஈதர்நெட் சுவிட்சுகள் இந்த சிக்கலை (ஏனென்றால் ஒவ்வொரு சுவிட்ச் போர்ட்டும் ஒரு கொலீஷன் டொமைனாக இருந்தது) நீக்கிவிட்ட போது, MAC லேயரில் இருக்கும் பிராட்காஸ்ட் டொமைனின் அளவைக் குறைப்பதில் கவனம் திரும்பியது. வலையமைப்புகளில் இருக்கும் டோபோலஜியைச் சாராமால், வலையமைப்பு ஆதாரங்களை அணுகுவதை தடுப்பதிலும் மெய்நிகர் வலையமைப்புகள் உதவுகின்றன, இதுபோன்ற மெ.கு.பி ஹாப்பிங் பாதுகாப்பு முறைமைகளைத் தவிர்ப்பதற்கான ஒரு பொதுவான வழியாக இருப்பதால், இந்த முறையின் வலிமை விவாதத்திற்கு உட்பட்டிருக்கிறது. மெய்நிகர் குறும்பரப்பு பிணையங்கள் OSI மாடலின் லேயர் 2-ல் (டேட்டா லிங்க் லேயர்) செயல்படுகின்றன. வலையமைப்பின் நிர்வாகிகள் வழக்கமாக ஒரு மெ.கு.பி-ஐ ஓர் ஐபி வலையமைப்புடனோ அல்லது சப்நெட்டுடனோ நேரடியாக மேப் செய்யும் வகையில் கட்டமைப்பு செய்வார்கள், இது லேயர் 3 (நெட்வொர்க் லேயர்) சேர்ந்திருப்பதைப் போன்ற தோற்றத்தைக் கொடுக்கும். மெ.கு.பி-களுக்கு மாறாக, "ட்ரன்க்" என்ற வார்த்தையானது, பல்வேறு மெ.கு.பி-களை எடுத்து செல்லும் ஒரு நெட்வொர்க் லிங்கைக் குறிக்கிறது, இவை அவற்றின் பேக்கெட்களில் சொருகப்பட்டிருக்கும் லேபிள்களால் (அல்லது "டேக்குகளால்") அடையாளம் காணப்பபடுகின்றன. இதுபோன்ற ட்ரன்க்குகள் மெ.கு.பி-ஐ புரிந்து கொள்ளும் சாதனங்களின் "டேக்டு போர்டுகளுக்கு" இடையில் ஓட வேண்டும், ஆகவே அவை லிங்க்குகளுக்கும் ஹோஸ்டுகளுக்கு இடையில் என்றில்லாமல் பெரும்பாலும் சுவிட்சுக்கும்-சுவிட்சுக்கும் இடையில் அல்லது சுவிட்சுக்கும்-ரௌட்டர் லிங்க்குகளுக்கும் இடையில் இருக்கும். (கவனிக்கவும்: 'ட்ரன்க்' என்ற வார்த்தை சிஸ்கோ பயன்படுத்தும் "சேனல்கள்" என்ற வார்த்தைக்கு மாற்றாகவும் பயன்படுத்தப்படுகிறது : லிங்க் தொகுப்பு அல்லது போர்ட் ட்ரன்கிங்). பல்வேறு மெ.கு.பி-களுக்கு மத்தியில் வலையமைப்பு டிராபிக் நடைபெறுவதற்கான பின்புல சாதனமாக ஒரு ரௌட்டர் (லேயர் 3 சாதனம்) இயங்குகிறது. சிஸ்கோ உபகரணங்களில் , மொத்த வலையமைப்பு முழுவதும் மெ.கு.பி காம்பிக்ரேசன் நிலைப்பாட்டை VTP (VLAN Trunking Protocol) கவனித்து கொள்கிறது. VTP சர்வர் மோடில் ஒரு மையப்படுத்தப்பட்ட சுவிட்ச் மூலமாக ஒட்டுமொத்த வலையமைப்பு முழுவதும் உள்ள VLAN-களைச் சேர்ப்பது, நீக்குவது மற்றும் பெயர் மாற்றுவது போன்ற நிர்வாக பணிகளைச் செய்ய VTP லேயர் 2 ட்ரன்க் ப்ரேம்களைப் பயன்படுத்துகிறது. மெ.கு.பி தகவல்களை ஒரு VTP டொமைனுடன் சின்க்ரோனைசேஷன் செய்வதற்கும் VTP -யே பொறுப்பேற்கிறது, மேலும் அது ஒவ்வொரு சுவிட்சிலும் ஒரே மெ.கு.பி தகவலைக் கட்டமைப்பு செய்ய வேண்டிய தேவையையும் குறைத்துவிடுகிறது. மாற்றங்கள் செய்யப்படும் போது ஏற்பட கூடிய பொருந்தாநிலை கட்டமைப்பு குழப்பங்களையும் VTP குறைக்கிறது. இந்த பொருந்தாநிலைப்பாடு பாதுகாப்பு குறைபாட்டில் பிரதிபலிக்க கூடும், ஏனென்றால் நகல் பெயர்கள் (duplicate names) பயன்படுத்தப்பட்டால் மெ.கு.பி-கள் கிராஸ்கனெக்ட் செய்துவிடும். ஒரு குறும்பரப்பு வலையமைப்பில் இருந்து மற்றொன்றுக்கு அவை மேப்பிங் செய்யப்படும் போது, அவை உட்புறமாக துண்டிக்கப்படக் கூடிய வாய்ப்பும் இருக்கிறது, எடுத்துக்காட்டாக, ஈதர்நெட்டுக்கும் ATM LANE ELAN -களுக்கும் அல்லது FDDI 802.10 VLAN-களுக்கு இடையில் இப்படி நடக்கலாம். VTP ஒரு மேப்பிங் திட்டத்தை அளிக்கிறது, அது பல மீடியா தொழில்நுட்பங்களைக் கொண்ட ஒரு வலையமைப்பிற்குள் எண்ணிலடங்கா ட்ரங்கிங்கை ஏற்படுத்தி தருகிறது. VTP பின்வரும் ஆதாயங்களை அளிக்கின்றது: VTP -ல் இருக்கும் பலன்களைப் போலவே, அதில் குறைபாடுகளும் இருக்கின்றன, வலையமைப்பு முழுவதும் பிரிட்ஜிங் லூப் பரவிவிட கூடும் என்பதால், குறைபாடு பொதுவாக ஸ்பேனிங் ட்ரீ புரோட்டோக்கால் (STP) சம்பந்தப்பட்டதாக இருக்கும். ஒவ்வொரு மெ.கு.பி-க்கும் STP -ன் ஒரு முன்மாதிரியை சிஸ்கோ சுவிட்சுகள் செயல்படுத்தும், வளாக மெ.கு.பி முழுவதும் மெ.கு.பி-களை VTP பரப்புவதால், ஒரு பிரிட்ஜிங் லூப் ஏற்படுவதற்கான அதிகபட்ச சாத்தியக்கூறை VTP உருவாக்குகிறது. VTP வழியாக பரவும் மெ.கு.பி-களைச் சுவிட்சுகளில் உருவாக்குவதற்கு முன்னதாக, முதலில் VTP டொமைன் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். ஒரு வலையமைப்பிற்கான VTP டொமைன் என்பது அதே VTP டொமைன் பெயருடன் ஒன்றொடொன்று இணைந்த எல்லா ட்ரன்க் சுவிட்சுகளின் ஒரு தொகுப்பாகும். ஒரே மேலாண்மை டொமைனில் இருக்கும் எல்லா சுவிட்சுகளும் அவற்றின் மெ.கு.பி தகவல்களை ஒன்றோடொன்று பகிர்ந்து கொள்கின்றன, மேலும் ஒரு சுவிட்சானது ஒரேயொரு VTP மேலாண்மை டொமைனில் மட்டுமே பங்களிப்பை ஏற்படுத்தி கொள்ள முடியும். வெவ்வேறு டொமைகளில் இருக்கும் சுவிட்சுகள் VTP தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில்லை. VTP பயன்படுத்துகையில், ஒவ்வொரு கேட்டலிஸ்ட் பேமிலி சுவிட்சும் (Catalyst Family Switch) அதன் ட்ரங்க் போர்டுகளில் பின்வருவற்றை அளிக்கின்றன: பொதுவாக மெ.கு.பி உறுப்பினர் எண்ணிக்கையை உருவாக்க பின்வரும் இரண்டு அணுகுமுறைகள் கையாளப்படுகின்றன: ஸ்டேடிக் மெ.கு.பி-களானது, போர்ட் அடிப்படையிலான மெ.கு.பி-கள் என்றும் குறிப்பிடப்படுகின்றன. மெ.கு.பி-களுக்கு போர்ட்களை ஒதுக்கி அளிப்பதன் மூலம் ஸ்டேடிக் மெ.கு.பி ஒதுக்கீடுகள் உருவாக்கப்படுகின்றன. ஒரு உபகரணம் வலையமைப்பிற்குள் நுழைந்த உடனேயே, தானாகவே அந்த உபகரணம் மெ.கு.பி போர்ட்டை உணர்ந்து கொள்கிறது. பயனர் போர்ட்டை மாற்றிவிட்டு, அதே மெ.கு.பி-ஐ அணுக வேண்டியதிருந்தால், இந்த புதிய இணைப்பிற்காக வலையமைப்பு நிர்வாகியானவர் ஒரு போர்ட்-டூ-மெ.கு.பி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். டைனமிக் மெ.கு.பி-கள் சிஸ்கோவொர்க்ஸ் 2000 போன்ற மென்பொருள் பேக்கேஜ்களைப் பயன்படுத்துவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. மெ.கு.பி மேனேஜ்மெண்ட் பாலிசி சர்வர் (VLAN Management Policy Server-VMPS) மூலமாக ஒரு நிர்வாகியானவர், போர்ட்டுடன் இணைக்கப்பட்டிருக்கும் சாதனத்தின் சோர்ஸ் MAC முகவரி அல்லது அந்த உபகரணத்தில் உள்நுழைய பயன்படுத்தப்பட்ட பயனர் பெயர் போன்ற தகவல்களின் அடிப்படையில் டைனமிக்காக சுவிட்ச் போர்ட்டுகளை ஒதுக்கி அளிக்க முடியும். ஓர் உபகரணம் வலையமைப்பிற்குள் நுழைந்த உடனேயே, மெ.கு.பி உறுப்பினராவதற்காக அந்த உபகரணம் தகவல்களஞ்சியத்திடம் விசாரிக்கிறது. ஒரு VMPS சர்வரைப் பயன்படுத்தும் FreeNAC என்பதையும் பார்க்கவும். போர்ட் அடிப்படையிலான மெ.கு.பி உறுப்பினர் சேர்க்கையில், போர்ட்டோடு இணைக்கப்பட்டிருக்கும் பயனரையோ அல்லது சிஸ்டத்தையோ சாராமல் போர்ட்டானது ஒரு குறிப்பிட்ட மெ.கு.பி உடன் ஒதுக்கப்படுகிறது. அதாவது, அந்த குறிப்பிட்ட போர்ட்டில் இணைக்கப்பட்டிருக்கும் எல்லா பயனர்களும் அதே மெ.கு.பி-னின் உறுப்பினர்களாக இருந்தாக வேண்டும். வலையமைப்பு நிர்வாகி, கட்டாயமாக மெ.கு.பி ஒதுக்கீட்டை செய்கிறார். போர்ட் கட்டமைப்பானது ஸ்டேடிக் நிலையில் இருக்கும், அது நிர்வாகியால் மறுகட்டமைப்பு செய்யப்படாமல் மற்றொரு மெ.கு.பி-க்கு தானாக மாற முடியாது. பிற மெ.கு.பி அணுகுமுறையைப் பொறுத்த வரையில், இந்த முறையைப் பயன்படுத்தி அனுப்பப்பட்ட பேக்கெட்கள் வலையமைப்பிற்குள் பிற மெ.கு.பி டொமைன்களுக்குள் கசியாது. ஒரு மெ.கு.பி-னிற்கு ஒரு போர்ட் ஒதுக்கப்பட்ட பிறகு, ஒரு லேயர் 3 உபகரணத்தின் தலையீடு இல்லாமல், மற்றொரு மெ.கு.பி-ல் இருக்கும் உபகரணங்களிடம் இருந்து தகவல்களைப் பெறவோ, அனுப்பவோ முடியாது. போர்ட்டோடு இணைக்கப்பட்டிருக்கும் உபகரணத்திற்கு ஒரு மெ.கு.பி நிறுவப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் தெரியாது. அந்த உபகரணம், தான் ஏதோவொரு சப்நெட்டின் ஓர் உறுப்பினர் என்பதை மட்டும் தெரிந்து கொண்டிருக்கும், மேலும் அந்த உபகரணம் கேபிள் செக்மெண்டிற்கு (cable segment) வெறுமனே தகவல்களை அனுப்பி, அந்த சப்நெட்டின் உள்ள ஏனைய எல்லா உறுப்பினர்களோடும் தொடர்பு கொள்ள முடியும். இந்த குறிப்பிட்ட மெ.கு.பி-ல் இருந்து வரும் இந்த தகவல்கள் வந்திருக்கிறது என்பதைக் கண்டறிவதும், VLAN ஏனைய எல்லா உறுப்பினர்களும் அந்த தகவலைப் பெறும்படி சரிபார்ப்பதும் சுவிட்சின் பொறுப்பாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், வெவ்வேறு மெ.கு.பி-களில் இருக்கும் போர்ட்டுகள் அந்த தகவல்களைப் பெறாமல் பார்த்து கொள்வதும் சுவிட்சின் பொறுப்பாகும். இந்த அணுகுமுறை மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் இருக்கிறது என்பதுடன் மெ.கு.பி செக்மெண்டேசனுக்காக (segmentation) சிக்கலான லூப்பேக் அட்டவணைகள் தேவைப்படாத வகையில் சுலபமாக நிர்வகிக்கவும் முடிகிறது. ஓர் அப்ளிகேசன்-ஸ்பெசிபிக் இன்டக்ரேடட் சர்க்கியூட்டுடன் (application-specific integrated circuit - ASIC) போர்ட்-டூ-VLAN இணைப்பு செய்யப்படுமானால், செயல்திறன் மிகவும் சிறப்பாக இருக்கும். ஒரு ASIC ஆனது, ஹார்டுவேர் மட்டத்தில் port-to-VLAN மேப்பிங் செய்ய அனுமதிக்கிறது. ஒரு புரோட்டோக்கால் அடிப்படையிலான மெ.கு.பி அமைக்கப்பட்ட சுவிட்சில், புரோட்டோக்கால்கள் அடிப்படையில் போர்ட்டுக்கள் மூலமாக டிராபிக் முன்னெடுத்துச் செல்லப்படும். குறிப்பாக, புரோட்டோல் அடிப்படையிலான மெ.கு.பி-களைப் பயன்படுத்தி ஒரு போர்ட்டில் இருந்து ஒரு குறிப்பிட்ட புரோட்டோக்கால் டிராபிக்கை பயனர் பிரிக்கவோ அல்லது முன்னெடுக்கவோ முயல்கிறார் என்றால், ஏனைய பிற புரோட்டோக்கால்களில் இருந்து டிராபிக் அந்த போர்ட்டில் அனுமதிக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, சுவிட்சின் போர்ட் 10-ல் இருந்து ARP டிராப்பிக்கைத் தள்ளும் ஒரு ஹோஸ்டை நீங்கள் இணைத்திருக்கிறீர்கள், போர்ட் 20ல் IPX டிராப்பிக்கைத் தள்ளும் ஒரு LAN இணைக்கப்பட்டிருக்கிறது, போர்ட் 30-ல் ஐபி டிராப்பிக்கைத் தள்ளும் ஒரு ரௌட்டர் இணைக்கப்பட்டிருக்கிறது என்று வைத்து கொள்வோம். அப்படி என்றால், புரோட்டோக்கால் அடிப்படையிலான மெ.கு.பி-க்கு பொருத்தமான ஐபி-யையும், அந்த மூன்று போர்ட்டுகளான 10,20 மற்றும் 30 ஆகியவற்றையும் உள்ளடக்கி நீங்கள் வரையறுக்கிறீர்கள் என்றால், ஐபி பேக்கெட்டுகள் போர்ட்டுகள் 10 மற்றும் 20-க்கும் கூட அனுப்பப்படும், ஆனால் ARP டிராபிக் போர்ட்டுகள் 20 மற்றும் 30-க்கு அனுப்பப்படாது, அதேபோல IPX டிராபிக் போர்ட்டுகள் 10 மற்றும் 30-க்கு அனுப்பப்படாது. அன்றில் "'அரிவாள் மூக்கன்" " (Plegadis falcinellus)" திரெஸ்கியோர்நித்திடே(Threskiornithidae) என்ற "அரிவாள் மூக்கன்" குடும்பத்தைச் சார்ந்த ஒரு கரைப்பறவை (shore bird or wader) ஆகும். இப்பறவையே ஐபிஸ் இனத்தில் பரவலாகக் காணப்படும் இனமாகும். இது ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவின் அட்லாண்டிக் பெருங்கடல், கரீபியன் பகுதிகளில் ஆங்காங்கு காணப்படுகின்றன. இது பழைய உலகின் பகுதிகளில் தோன்றிப் பின் இயற்கையாக ஆப்பிரிகாவிலிருந்து 19ம் நூற்றாண்டில் தென் அமெரிக்காவிற்குப் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வினமானது புலம் பெயரக்கூடியது; ஐரோப்பிய இனம் குளிர்காலங்களில் ஆப்பிரிக்காவிலும், வட அமெரிக்க இனம் கரோலினாவின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் பெயர்கின்றன. பிற இனங்கள் இனச்சேர்க்கைக் காலங்கள் அல்லாத பிறகாலங்களில் பரவலாகப் பெயர்கின்றன. அன்றில் பறவை மரக்கிளைகளில் பிற கொக்குகளோடு கூட்டமாக முட்டையிடுகின்றன. சதுப்பு நிலங்களில் மந்தையாக இரை தேடக்கூடியவை இவை; மீன், தவளை மற்றும் பிற நீர்வாழ் உயிர்களையும், அவ்வப்போது பூச்சிகளையும் இரையாகக் கொள்கின்றன. இவ்வினம் 55–65 செ.மீ. நீளமும் 88–105 செ.மீ. இறக்கை வீச்சளவும் கொண்டிருக்கும். பருவம்வந்த பறவைகள் செந்நிற உடலும் ஒளிரும் கரும்பச்சை இறக்கைகளையும் கொண்டிருக்கின்றன. பருவம் வராத இளம் பறவைகள் பழுப்பு நிறத்தில் காணப்படுகின்றன. இவ்வினம் மரப்பழுப்பு நிற அலகினையும், கறுத்த மேற்புறமும், நீலப் பழுப்பு நிறத்திலிருந்து நீலம் வரையிலான கீழ்ப்புறமும், சிவந்த பழுப்பு நிறக் கால்களையும் கொண்டு காணப்படுகிறது. கொக்குகளைப் போல் அல்லாமல், அன்றில் பறவைகள் கழுத்தை நீட்டியும், பெரும்பாலும் வரிசைகளிலும் பறக்கின்றன. பொதுவாக அமைதியான அன்றில் பறவை இனப்பெருக்கக் காலங்களில் கரகரப்பான உறுமல் போன்ற "கிர்ர்ர்" என்ற ஒலியினை ஏற்படுத்துகின்றது. அன்றில், "ஆபிரிக்க-யுரேசிய இடம்பெயர் நீர்ப்பறவைகள் பாதுகாப்பு ஒப்பந்தம்" (AEWA) பொருந்தும் இனங்களுள் ஒன்றாகும். தன்னைப்போல் துணையைப் பிரிந்து அகவுகிறதோ என்றும், தான் துணையைப் பிரிந்திருப்பதால் தன்மேல் இரக்கப்பட்டு அகவுகிறாயோ என்றும் இரவில் எழுப்பும் இதன் குரலை அகப்பாடல் தலைவிகள் கற்பனை செய்து பேசுகின்றனர். குருவாயூர் ஏகாதசி குருவாயூர் ஏகாதசி கேரளாவின் குருவாயூர் கோயிலில் கொண்டாடப்படும் விழா நாள். வெளுத்தபட்சத்தில் மலையாள விருச்சிக மாத (தமிழில் கார்த்திகை மாதம்) ஏகாதசி நாள் குருவாயூரைப் பொறுத்தவரை மிகவும் புனிதமான நாளாக குருவாயூர் ஏகாதசியாகக் கொண்டாடப்படுகிறது. ஏகாதசி என்று அழைக்கப்படும் நாளானது, வானத்தில் சந்திரன் பௌர்ணமி (முழு நிலவு) மற்றும் அமாவாசை இரவுகளுக்கு இடையிலே காட்சி தரும் பதினொன்றாம் நாளைக் குறிப்பதாகும். இது பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்து மதத்தை பின்பற்றுவோருக்கு மிகவும் முக்கியமான விரத நாளாகும். வருடத்தில் மொத்தம் 24 ஏகாதசிகள் நிகழ்கின்றன. குருவாயூர் ஏகாதசி நாள் மண்டல விரதமிருக்கும் காலத்தில் நிகழ்கின்றது. அதற்கு முன்வரும் ஒன்பதாவது நாளான நவமி மற்றும் பத்தாம் நாளான தசமியும் முக்கியம் வாய்ந்ததாகும். ஏகாதசி விளக்கு ஏற்றும் வழக்கம் ஏகாதசி விளக்கு கொண்டாடப்படும் நாளுக்கு ஒரு மாதம் முன்னாலேயே தொடங்கி விடுகிறது. மேலும் வெவ்வேறு மனிதர்கள், குடும்பங்கள் மற்றும் நிறுவனங்கள் வழிபாடு செய்யும் வகையில் ஒவ்வொரு நாளும் விளக்குகளை ஏற்றி தமது வேண்டுதல்களை நிறைவேற்ற தொடங்கி விடுகின்றனர். ஒன்பதாவது நாளான நவமி அன்று, மரபார்ந்த வகையில், குடும்பத்தினர் விளக்குகளில் நெய்யை ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கமாகும். பத்தாவது நாளான தசமியன்று, சமோரின் ராஜாவின் வகையாக, தற்பொழுது குருவாயூரப்பன் சங்கீர்த்தன சமாஜம் என்ற அமைப்பு, விளக்கை ஏற்றி வழிபடும் பொறுப்பை ஏற்று நிறைவேற்றி வருகிறது. இந்த நாளன்று விடியற்காலை 3.00 மணிக்கு நிர்மால்ய தரிசனத்திற்காக கதவுகள் திறந்த பிறகு, இரு நாட்கள் கழிந்து பன்னிரண்டாம் நாள் அன்றே அதாவது துவாதசியன்று காலை 9.00 மணிக்கே மீண்டும் கதவுகள் மூடப்படுகின்றன, இப்படியாக தசமி மற்றும் ஏகாதசி நாட்கள் அன்று பக்தர்கள் அனைவரும் தரிசனம் மேற்கொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் துவாதசி நாளன்று துவாதசி (நன்கொடை) பணம் என்ற சடங்கின் படி குடும்பத்தின் நலனுக்காக ஒரு சிறு தொகை நன்கொடையாக கூத்தம்பலத்தில் வழங்கும் பழக்கமும் தொன்று தொட்டு இருந்து வருகிறது. குருவாயூர் ஏகாதசி நாளன்று கஜராஜன் கேசவனின் நினைவு நாளாகவும் மேலும் கர்நாடக இசைமேதையான செம்பை வைத்திய நாத பாகவதரை போற்றும் வண்ணம் செம்பை சங்கீத உற்சவமும் அனைவரும் போற்றும் வண்ணம் நடத்தப்படுகிறது. ஸ்ரீ வத்சம் பயணிகள் தங்குமிடத்திற்கு முன் அமைந்துள்ள கஜராஜன் கேசவனின் சிலைக்கு யானைகளின் கூட்டம் ஊர்வலமாக வந்து, யானைகளின் தலைவன் தனது தும்பிக்கையால் கேசவனின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்க, இதர யானைகள் கேசவனுக்கு மரியாதை செலுத்துவது ஒரு கண்கொள்ளா காட்சியாகும். ஏகாதசி நாளன்று, உதயாஸ்தமன பூஜை எனப்படும் (விடியற்காலை முதல் நள்ளிரவு வரையிலான பூஜைகள்) அனைத்து பூஜைகளும் குருவாயூர் கோவில் நிர்வாகமே (தேவஸ்வம்) மேற்கொண்டு வருகிறது. சீவேலி எனப்படும் யானைகள் பங்கு கொள்ளும் கோவிலை சுற்றிவரும் உற்சவ நிகழ்ச்சிக்குப்பிறகு, அந்நாள் கீதோபதேச நாளாகவும் கொண்டாடப்படுவதால், ஏகாதசியன்று யானைகளின் ஊர்வலம் ஒன்றும் கோவிலில் இருந்து அண்மையிலுள்ள பார்த்த சாரதி கோவில் வரை சென்று வருவதை வழக்கமாக உள்ளது. ஏகாதசி நாளன்று இரவில், இறுதியாக ஏகாதசி விளக்குகள் ஏற்றப்பட்டு, யானைகளுடைய பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்றும் நடைபெறும், அதுவே அன்றைய விழாவின் மகுடமான நிகழ்ச்சி. கல்வயல் வே. குமாரசுவாமி கல்வயல் வே. குமாரசாமி (சனவரி 1, 1944 - திசம்பர் 10, 2016) ஈழத்துக் கவிஞர், கல்வியாளர். சிறுவர் பாடல்கள், கவிதைகள் படைத்துள்ளார். தமிழிலக்கியப் பரப்பில் சிறந்த புலமை கொண்டவர். இவர் இயற்றிய மெல்லிசைப் பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. பாலகுமாரன், நந்தா, வாகடனன் போன்ற புனைப்பெயர்களில் எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளில் பல கட்டுரைகளையும் கவிதைகளையும் எழுதியுள்ளார். இலங்கையின் வட மாகாணத்தில் சாவகச்சேரியில் கல்வயல் என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சங்கத்தானையில் வாழ்ந்து வந்தவர். அஞ்சல் அதிபராகப் பணியாற்றினார். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் வருகைதரு விரிவுரையாளராக சில காலம் தமிழ் போதித்தார். இவர் சிறு வயதில் இருந்தே கவிதை புனையும் ஆற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். மரபு மற்றும் புதுக்கவிதையில் ஆளுமை பெற்றவராகவும் குழந்தைப் பாடல்களை எழுதுவதில் வல்லவராகவும் திகழ்ந்தார். ஜி. ராமகிருஷ்ணன் ஜி. ராமகிருஷ்ணன் (பிறப்பு: சூன் 6, 1949) தமிழக அரசியல்வாதியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மாநிலக்குழு செயலாளரும் ஆவார். இவர் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், மேமானூர் கிராமத்தில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர்.
ஆரம்பப்பள்ளி - மேமாளூர் கிராமம் அரசு ஆரம்பப்பள்ளி மேனிலைக்கல்வி - மேமாளூர் கிராமத்திற்கு 2 கி.மீ. தூரம் அளவில் உள்ள ஜி.அரியூர் (திருக்கோவிலூர் தாலுகா) உயர்கல்வி - பி.யூ.சி., (காஞ்சிபுரம், பச்சையப்பா கல்லூரி), பி.ஏ., (வரலாறு) - அரசு கலைக்கல்லூரி, சென்னை பி.எல். - சென்னை, சட்டக்கல்லூரி 1969-ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் ஆனார். சென்னையில் படிப்பை முடித்த பின் கடலூரில் 8 ஆண்டு காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். மார்க்சிஸ்ட் கட்சியின் இளைஞர்கள் அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அகில இந்திய நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1981-ம் ஆண்டு முதல் கட்சியின் முழு நேர ஊழியராக பணியாற்றி வருகிறார். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான சி.ஐ.டி.யு. வின் தென்னாற்காடு மாவட்டச் செயலாளராகவும், அதன் மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டார். இப்போது நெய்வேலி சி.ஐ.டி.யு. சங்கத்தின் கௌரவத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். 1989-ம் ஆண்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ராமகிருஷ்ணன், 2008-ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய மாநாட்டில் மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2010 ஆம் ஆண்டு முதல் இன்று வரை மாநிலச் செயலாளராக இருந்து வரு‍கிறார்.மணல் கொள்ளை குறித்து அறிக்கை வெளியிட்டதால் அவர் மீது சூலை 25 , 2014 அன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்தார் .
பிட்யின் பிட்யின் என்பது பொது மொழியொன்றைக் கொண்டிராத இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழுக்கள் தம்மிடையே தொடர்பு கொள்வதற்காக உருவாக்கப்படும் எளிமையான ஒரு மொழியைக் குறிக்கும். ஒருவருடைய மொழி இன்னொருவருக்குத் தெரியாத நிலையில் வணிகத் தொடர்பு கொள்ளும்போதோ, இரண்டு வெவ்வேறு மொழி பேசும் குழுக்கள் அவர்களுக்குத் தெரியாத மொழியொன்றைப் பேசும் இன்னொரு நாட்டில் இருக்கும்போதோ இத்தகைய மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பிட்யின் மொழி அடைப்படையில் மொழிசார் தொடர்புகளுக்கான ஒரு எளிமையான முறையாகும். இது தேவையேற்படும் அந்த நேரங்களிலேயே உருவாவதாகவோ, அல்லது குழுக்களிடையேயுள்ள சில வழக்காறுகளின் அடிப்படையில் உருவாவதாகவோ அமையக்கூடும். பிட்யின் மொழிகள் எவருக்கும் தாய்மொழியாக இருப்பதில்லை, ஆனால் இது ஒரு இரண்டாம் மொழியாகப் பயன்படுகின்றது. இம்மொழி, பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாடுகளில் இருந்து பெறப்படும் சொற்கள், ஒலிகள், உடற்சைகைகள் போன்றவற்றால் உருவாக்கப்படுகிறது. பிற மொழிகளோடு ஒப்பிடும்போது, பிட்யின் மொழிக்குக் குறைவான மதிப்பே உள்ளது. பிழையாகப் பேசப்படும் எல்லாமே பிட்ஜின் மொழிகள் ஆவதில்லை. எல்லாப் பிட்யின் மொழிகளுமே அவற்றுக்கெனத் தனியான முறைகளைக் கொண்டுள்ளன. அதனால் அம்மொழிகளையும் சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு அம்முறைகள் பற்றி அறிந்திருத்தல் அவசியம். "பிட்யின்" என்னும் சொல்லின் மூலம் பற்றித் தெளிவாக எதுவும் தெரியவில்லை. 1850 ஆம் ஆண்டில் முதன் முதலாக அச்சில் காணப்படுகின்றது. இது எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பது குறித்துப் பல கருத்துக்கள் உள்ளன. போன்றவை அத்தகைய கருத்துக்களுக்கு சில எடுத்துக்காட்டுகள். "பிட்யின்" மொழி எளிமையானதாகவும், தொடர்புக்கான செயற்றிறன் மிக்கதாகவும் இருக்க விழைவதால், அவற்றின் இலக்கணமும், ஒலியமைப்பும் எளிமையாகவே அமையும். Language Varieties Web Site Pidgin-English-Only Discussion Forum சமத்துவபுரம் தமிழ்நாடு அரசு அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை சமத்துவபுரம் எனும் பெயரில் அனைத்து மாவட்டங்களிலும் உருவாக்கி வருகிறது. இந்தக் குடியிருப்புப் பகுதியில் வணிக மையங்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்கள், பூங்காக்கள், படிப்பகங்கள் என பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சமத்துவபுரம் குடியிருப்புப் பகுதியில் அனைத்து சாதியினருக்கும் இலவசமாய் வீடுகள் ஒதுக்கித் தரப்படுகின்றன. 1998-ம் ஆண்டு, ஆகத்து மாதம் 17ஆம் திகதி தமிழக அரசால் முதல் சமத்துவபுரம், மேலக்கோட்டை என்ற இடத்தில் தொடங்கப்பட்டது. நியாய விலைக் கடை நியாய விலைக் கடை என்பது பொது விநியோக முறையின் கீழ் இந்திய அரசாலும், மாநில அரசாலும் நிர்வகிக்கப்படும் ஒரு நுகர்வு பொருள் விற்பனை மையமாகும். இதுவரை 4.99 லட்சம் நியாய விலைக் கடைகள் நாடு முழுவதும் உள்ளன. கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப நியாய விலைக் கடைகளை அமைந்துள்ளது. பொதுவாக இந்த நியாய விலைக் கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. அரசின் மானியத்தின் மூலமாக குறைந்த விலையில் ஏழை மக்கள் பயனடையும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளதால் இதனை பயன்படுத்த குடும்ப அட்டை அவசியமாகும். பஞ்சகன்னி உவா பஞ்சகன்னி உவா (), சாம்பல் அல்லது வெளிறிய பழுப்பு நிறப்புறத்தோற்றத்தைக் கொண்ட ஒரு நடுத்தர மரமாகும். இதன் இலைகள் நெடுவேல் வடிவில் ஈர்க்குகளுடன் கூடியதாகும். இம்மரத்தின் பூக்கள் மஞ்சள் நிறத்தில் குஞ்சகங்களாக அமையப்பட்டவை. இப்பூக்கள் கோடை காலங்களில் பூப்பவையாகும். இம்மரம் பெரும்பாலும் உதிர்ப்பு காடுகளிலும் அதை ஒட்டிய புல்வெளிகளிலும் காணப்படும். தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இம்மரம் காணப்படுகிறது. சட்டைமுனி சட்டைமுனி என்பவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கணிக்கப்பட்டவர். இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார். சட்டைமுனியின் பெற்றோர் விவசாயக் கூலிகளாகத் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தனர். சட்டைமுனி கோவில்களில் தட்டையேந்தி யாசகம் பெற்று தாய்தந்தையர்க்கு உதவி வந்தார். ஒருநாள் கோவில் வாசலில் வடநாட்டிலிருந்து வந்த சங்கு பூண்ட ஒரு சித்தரைக் கண்டு அவரிடம் ஏதோ ஓர் அபூர்வ சக்தி இருப்பதை உணர்ந்து சட்டைமுனி அவருடனே கிளம்பிவிட்டார். போகருடைய சீடராக வாழ்ந்த காலத்தில் கொங்கணர், கருவூரார் முதலான பல சித்தர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார். இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது அகத்தியர் அகத்தியர் என்பவர் சப்தரிஷிகளில் ஒருவராகவும், சித்தர்களில் முதன்மையானவராகவும் அறியப்பெறுகிறார். சிவபெருமானின் திருமணத்தினை காண அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், இவர் தென்திசைக்கு பயணப்பட்டு அதை சமன்செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவரும் ஆவார். இவரே "அகத்தியம்" எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர். இந்நூல் கிடைக்கப்பெறவில்லை. தொல்காப்பியத்தை எழுதிய தொல்காப்பியனார், அகத்தியம் தன் தொல்காப்பியத்திற்கு முன்பே எழுதப்பட்டதாக கூறுகிறார். இவரது மனைவியின் பெயர் லோபாமுத்திரை ஆகும். அகத்தியர் மித்திர வருணரின் மகனும், வசிட்டரின் சகோதரரும் ஆவார். அகத்தியர் [[இருக்கு வேதம்|ரிக் வேதத்தில் 26 சூக்தங்களை இயற்றியவர். இவரது மனைவியின் பெயர் [[லோபாமுத்திரை]]. இவர் தினை மாவு, பயனளிக்கும் தானியங்கள், விசம் தோய்ந்த அம்புகள், தர்ப்பைப்புல் ஆகியவைகள் பற்றி கூறியுள்ளார் (ரிக்வேதம் 1-189-10; 1-191-30) [[இராமாயணம்|இராமாயணக்]] காப்பியத்தில், [[இராமன்]] வன வாச காலத்தில், அகத்தியர் சந்தித்து மந்திர பல மிக்க ஆயுதங்களை அருளினார். அகத்தியர், இந்துக் கடவுள்களைப் போல் தீயவர்களை அடக்கினார். [[File:தமிழ்த் தாய் திருக்கோயிலில் அகத்தியர் சிலை.JPG|thumb| காரைக்குடி [[தமிழ்த்தாய் கோயில்|தமிழ்த் தாய் திருக்கோயிலில்]] அகத்தியர் சிலை]] தொடர்புள்ள கம்பராமாயண மூலம் அகத்திய முனிவர் தமிழுக்கான முனிவர் என்றும், [[சித்த மருத்துவம்|சித்த மருத்துவமுறைகளை]] வழங்கிய முனிவர் என்றும் குறிப்பிடப்படுகிறார். இவரது பாடல்களில் பயின்றுவந்துள்ள சொற்கள் இவரைப் பதினாறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் என்பதைத் தெரிவிக்கின்றன. சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய "அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம்" வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தவர் ஆவார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக்கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் அழைக்கின்றனர். [[File:WLA lacma 12th century Maharishi Agastya.jpg|thumb|right|அகத்தியர்]] அகத்தியர் தோற்றம் பற்றியும் சிறப்புச் செயல்கள் பற்றியும் பல கதைகள் உள்ளன. இவை போல் அகத்தியரைக் குறித்து புராணங்களில் உள்ள கதைகள் பற்பல. அகத்தியரின் மாணவர்கள் கல்வி  ஆகிய 12 பேரும் அகத்தியரின் மாணவர்கள் ஆவர் இவர்கள் 12 பேரும் சேர்ந்து "பன்னிரு படலம்" என்னும் நூலை எழுதினார்கள் இந்த செய்தியை புறப்பொருள்வெண்பாமாலை குறிப்பிடுகிறது அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோசங்கள் பற்றி கூறியுள்ளார். [[File:Agathiar.jpg|right|thumb|250px|[[கல்லணை]]யில் அகத்தியர் சிலை]] அகத்தியர் எழுதிய நூலகளின் பட்டியல் தனிக்கட்டுரை: [[அகத்திய நூல்கள்]] அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை: போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும் தேகசுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சள் இட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அம்மஞ்சள் பலகையின் மேல் சுவாமிகளின் படத்தை வைத்து, அதற்கு முன்பு மஞ்சள், குங்கும திலகமிட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் இரு முக தீபம் ஏற்றி வைக்க வேண்டும். படத்தின் முன்பாக பித்தளை அல்லது செம்பு அல்லது வெள்ளியினால் செய்யப்பட்ட உருண்டையான செம்பில் சுத்தமான தண்ணீரை நிரப்பி வைக்க வேண்டும். பின் பின்வரும் சித்தரின் தியானச் செய்யுளை கண்மூடி மனதார கூற வேண்டும் பிறகு பின்வரும் பதினாறு போற்றிகளை சொல்லி வில்வம், துளசி, கதிர்பச்சை, விபூதி பச்சை போன்ற பச்சிலைகளைக் கொண்டு அர்ச்சிக்க வேண்டும். இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து, பஞ்சாமிர்தம், பழங்கள், சர்க்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி!” என்று 108 முறை சொல்லி ஆராதனை செய்ய வேண்டும். [[பகுப்பு:சித்தர்கள்]] [[பகுப்பு:சைவச் சித்தர்கள்]] [[பகுப்பு:சப்த ரிசிகள்]] [[பகுப்பு:வர்மக்கலை]] [[பகுப்பு:முனிவர்கள்]] பென்னெலோங் முனை பென்னெலோங் முனை ஆஸ்திரேலியா, சிட்னியில் சிட்னி ஒப்பேரா மாளிகையின் அமைவிடமாகும்.(). இதனை டுபௌகூல் என்று பழங்குடியினர் அழைத்து வந்தனர். இம்முனை ஓர் சிறிய தீவுத்திடலாக பென்னெலோங் தீவு எனப் பாறைகளுடன், மேற்குப் பகுதியில் ஓர் சிறு கடற்கரையுடன் இருந்தது. சிட்னி கோவ் பகுதியின் கிழக்கு முனையில் தரைப் பகுதியிலிருந்து கடலலை எழும்போதெல்லாம் பிரிக்கப்பட்டிருந்தது. 1788ஆம் ஆண்டு சிலகாலம் இதனை கால்நடை முனை என்றும் அழைத்தனர்;கேப் டவுனிலிருந்து கொணரப்பட்ட ஆடுகளும் குதிரைகளும் இங்கு அடைக்கப்பட்டிருந்தன. பலகாலமாகப் பழங்குடிப் பெண்கள் தூக்கியெறிந்த சிப்பி ஓடுகள் இங்கு சிதறிக் கிடந்தன. குற்றத்திற்காக இங்கு நாடுகடத்தப்பட்ட பெண்களால் இவை சேகரிக்கப்பட்டு அவற்றிலிருந்து சுண்ணாம்பு தயாரிக்கப்பட்டது. கிடைத்த சுண்ணாம்பு மூலம் இரண்டு தளமுள்ள அரசுக் கட்டிடம் மட்டுமே கட்ட முடிந்தாலும், அந்தக் காரணத்திற்காக அப்போது சுண்ணாம்பு காளவாய் முனை (Limeburners' Point) என்று அழைக்கப்பட்டது. 1790களில் பிரித்தானியர்களால் சிறைபிடிக்கப்பட்டு பின்னர் அவர்களது பண்பாட்டு அறிவுரையாளராக இருந்த பழங்குடி பென்னெலோங் என்பவருக்கு நியூ சவுத் வேல்ஸ் ஆளுநரால் இங்கு செங்கல் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. அவரது நினைவாகவே இன்று பென்னெலோங் முனை என்றழைக்கப்படுகிறது. 1818 முதல் 1821 ஆண்டுகளில் பென்னெலோங் தீவினைப் பிரித்த கடற்பகுதி அத்தீவிலிருந்து வெட்டப்பட்ட பாறைகளால் நிரப்பப் பட்டது. மாக்குயர் கோட்டை அமைக்க அப்பகுதி முழுவதும் சமநிலை ஆக்கப்பட்டது. கோட்டை கட்டும்போதே சிட்னி கோவிலிருந்து பார்ம் கோவ் வரை சாலை போடப்பட்டது. இது டார்பெயின் வே என்று அழைக்கப்பட்டது. இவ்வாறு கடலலை ஏற்றத்தால் பிரிக்கப்பட்ட தீவாக இருந்ததும் பின்னர் பாறை நிரப்பப்பட்டு இணைக்கப்பட்டதும் முழுவதும் மறக்கப்பட்டிருந்தது;1950களில் சிட்னி ஒப்பேரா மாளிகை கட்டும்போதுதான் அகழ்வுகளின்போது வரலாறு மீண்டும் அறியப்பட்டது. வயாகரா சில்டெனபில் சிட்ரேட் , வயக்ரா , ரிவேஷியோ மற்றும் பல்வேறு பெயர்களில் விற்கப்படுவது விறைப்புத் திறனின்மை மற்றும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தம் (பிஏஹெச்) ஆகியவற்றிற்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்து. இது ஃபைசர் என்ற மருந்தாக்கியல் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு சந்தையிடப்படுகிறது. இது ஆணுறுப்பில் இரத்த ஓட்டத்தை முறைப்படுத்தும் என்சைமான சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 ஐ தடுத்து நிறுத்தவதன் மூலமாக செயல்படுகிறது. 1998ஆம் ஆண்டில் கிடைக்கத் தொடங்கியதிலிருந்து சில்டெனபில் விறைப்புத் தன்மைக்கான முன்னணி சிகிச்சையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது; சந்தையில் இதனுடைய முதன்மை போட்டியாளர்கள் டேடலாஃபில் (சியாலிஸ்) மற்றும் வெர்டெனாஃபில் (லெவிட்ரா) ஆகியனவாகும். சில்டெனஃபில் (உட்பொருள் யுகே-92,480) இங்கிலாந்தில் உள்ள ஃபைசரின் சாண்ட்விச், கென்ட் ஆராய்ச்சிக் கூடத்தில் பணிபுரியும் மருந்தாக்கியல் வேதியியலாளர்கள் குழுவால் ஒன்றிணைக்கப்பட்டது. இது தொடக்கத்தில் ஹைபர்டென்ஷன் (உயர் இரத்த அழுத்தம்) மற்றும் ஆன்ஜினா பெக்டோரிஸ் (இரத்த ஓட்டத்தடை இதய நோய் அறிகுறி) ஆகியவற்றிற்கு பயன்படுத்துவதற்கான ஆய்வாக இருந்தது. ஸ்வன்ஸியாவில் உள்ள மோரிஸ்டன் மருத்துவமனையில் முதல் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இயான் ஓஸ்டர்லோவின் தலைமையிலான கட்டம் I - மருத்துவ சோதனைகள், இந்த மருந்து ஆஞ்சினாவில் சிறிதளவே விளைவை ஏற்படுத்துவதாக உள்ளது, ஆனால் இது ஆண்குறி விறைப்புத் தன்மையில் குறிப்பிடத்தக்க அளவு தூண்டும் சக்தி கொண்டுள்ளது எனப் பரிந்துரைத்தன. ஆகவே ஃபைசர் இதனை ஆன்ஜினாவைவிட விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கான மருந்தாக சந்தையிட தீர்மானித்தது. 1996 இல் காப்புரிமை பெறப்பட்ட இந்த மருந்து மார்ச் 1998ஆம் ஆண்டில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் விறைப்புத் தன்மை குறைபாட்டில் பயன்படுத்துவதற்கென்று அங்கீகரிக்கப்பட்டது, இதுவே அமெரிக்காவில் விறைப்புத்தன்மை குறைபாட்டி்ற்கான சிகிச்சைக்கு பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட முதல் வாய்வழி சிகிச்சையாகும் என்பதோடு அந்த ஆண்டின் பிற்பகுதியில் இது விற்பனைக்கு கிடைத்தது. இது விரைவிலேயே பெரு வெற்றி பெற்றது: வயக்ராவின் வருடாந்திர விற்பனை 1999–2001 காலகட்டத்தில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களையும் தாண்டியது. பிரிட்டிஷ் பத்திரிக்கைத் துறை பீட்டர் டன் மற்றும் ஆல்பரட் உட்டை இதனுடைய உருவாக்குநர்களாக சித்தரித்தது, இது ஃபைசரால் பிரச்சினைக்கு ஆளானது. அவர்களுடைய பெயர்கள் தயாரிப்பு காப்புரிமை பயன்பாட்டு மருந்தில் இருந்தது, ஆனால் ஃபைசர் இது ஒரு சௌகரியத்திற்காக மட்டுமே என்று கூறியது. சில்டெனபில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கிடைக்கும் என்றாலும் இது அமெரிக்க தொலைக்காட்சிகளில் நுகர்வோருக்கு நேரடியாக விளம்பரம் செய்யப்பட்டது (அமெரிக்க செனட்டர் பாப் டோல் மற்றும் கால்பந்தாட்ட வீரர் பீலே ஆகியோர் இதை அங்கீகரித்த பிரபலமானவர்களாவர்.) பல்வேறு வலைத்தளங்கள் எளிய வலைத்தள கேள்விகளான "ஆன்லைன் ஆலோசனைக்குப்" பின்னர் இணையத்தளத்திலேயே வயாக்ராவை விற்பனை செய்தன. பல போலியான பாலுறவு தூண்டிகள் இப்போது தங்களை "மூலிகை வயக்ரா" என்றும் அல்லது ஃபைசர் தயாரிப்பினுடைய வடிவம் மற்றும் வண்ணத்தை போலியாக்கம் செய்து நீல மாத்திரைகளாக வழங்கினாலும் "வயக்ரா" என்ற பெயர் பிரபலமானதாகிவிட்டது. வயக்ரா "விட்டமின் வி" என்றும் "தி புளூ பில்" என்றும், மற்றும் வேறுசில புனைப்பெயர்களாலும் முறைப்படியானதாக அல்லாமல் அறியப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் வயக்ராவின் விற்பனை பரிந்துரைக்கப்பட்ட விறைப்புக் குறைபாட்டு மாத்திரைகளுக்கான உலகளாவிய சந்தையின் 92 சதவிகிதத்தை எடுத்துக்கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டில் வயக்ராவில் உலகளாவிய பங்களிப்பு பின்வரும் காரணிகளால் 50 சதவிகிதமாகக் குறைந்தது, சில போலியாக்கங்களுடன் சேர்ந்து சியாலிஸ் மற்றும் லெவிட்ராவின் வருகை, பிடிஇ5 தடுப்பான்களை எடுத்துக்கொள்வதால் பார்வையிழப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது ஆகியவை. 2007 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இங்கிலாந்து மான்செஸ்டர் கடைகளில் வயாக்ராவை கடைகளின் மூலமாக விற்பனை செய்ய பூட்ஸ் தி கெமிஸ்ட் முயற்சி செய்வதாக அறிவிக்கப்பட்டது. 30 முதல் 65 வயதுடைய ஆண்கள் மருந்து நிபுணருடனான ஆலோசனைக்குப் பின்னர் நான்கு மாத்திரைகளை வாங்க தகுதிபெற்றவராவார். சில்டெனாபில் சிட்ரேட்டின் மீதான ஃபைசரின் உலகளாவிய காப்புரிமைகள் 2011–2013 இல் முடிவுறுகின்றன. விறைப்புத்தன்மை குறைபாட்டு சிகிச்சைக்காக பிடிஇ5 தடுப்பான்களின் பயன்பாட்டின் மீது ஃபைசர் பெற்றிருந்த பிரிட்டன் காப்புரிமை (கீழே பார்க்கவும்) தெளிவுறுத்தல் காரணமாக 2000 ஆம் ஆண்டில் செல்லுபடியாகததாக அறிவிக்கப்பட்டது; இந்த முடிவிற்கு 2002 ஆம் ஆண்டு மேல்முறையீட்டு விசாரணையில் ஆதரவளிக்கப்பட்டது. சில்டெனாபில் சிட்ரேட்டின் செயல்பாட்டு இயக்கம் ஆணுறுப்பின் கார்பஸ் கேவர்நோஸமில் நைட்ரிக் ஆக்ஸைடை (என்ஓ) வெளியிடுவதோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது. என்ஓ கியானிலேட் சைக்லேஸ் என்ற என்சைமின் உள்வாங்கிளோடு கலக்கிறது, இது சுழற்சிமுறை கியோனோஸின் மோனோபாஸ்பேட்டின் (சிஜிஎம்பி) அளவு அதிகரிப்பதற்கு காரணமாகிறது என்பதுடன் இது ஹெலிசின் ஆர்டீரிஸ்களின் இண்டிமல் குஷன்களுடைய மென்மையான தசை தளர்ச்சிக்கு (வஸோடைலேஷன்) வழியமைத்து, இரத்தம் உட்பாய்தல் மற்றும் விறைப்பத்தன்மையின் அதிகரிப்பிற்கு காரணமாக அமைகிறது. என்ஓ செயல்பாட்டு இயக்கத்தின் முக்கிய பாகமான எண்டோதீலியம் பெறப்பட்ட தளர்வடைதல் காரணியின் கண்டுபிடிப்பு மற்றும் பகுப்பாய்விற்காக 1998ஆம் ஆண்டில் ராபர்ட் எஃப், ஃபுர்ச்காட் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார். சில்டெனாபில் என்பது சிஜிஎம்பி உள்ள பாஸ்போடையஸ்ட்ரேஸ் டைப் 5 இன் சாத்தியமுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பான், இது கார்பஸ் கேவர்நோஸமில் சிஜிஎம்பி தரமிழக்கப்படுவதற்கு பொறுப்பேற்பதாக இருக்கிறது. சில்டெனாபிலின் மூலக்கூறு அமைப்பு சிஜிஎம்பி போன்றே இருக்கிறது என்பதுடன் கார்பஸ் கேவர்நோஸமில் பிடிஇ5 இன் போட்டியிடும் கலப்பு உட்பொருளாகவும் செயல்படுகிறது, இது அதிக சிஜிஎம்பிக்கும் சிறந்த விறைப்புத்தன்மைக்கும் காரணமாக அமைகிறது. பாலுறவுத் தூண்டல் இல்லாமலும் அதனால் என்ஓ/சிஜிஎம்பி அமைப்பு செயல்படாமலும் இருந்தால் சில்டெனாபில் விறைப்பிற்கு காரணமாக அமையாது. இதேபோன்ற செயல்பாட்டு இயக்கத்தினால் செயல்படும் மற்ற மருந்துகள் டேடலாஃபில் (சியாலிஸ்) மற்றும் வெர்டெனாஃபில் (லெவிட்ரா) ஆகியனவாகும். சில்டெனாபில் கல்லீரல் என்சைம்களால் வளர்ச்சிதை மாற்றத்திற்கு உள்ளாகி கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகிய இரண்டினாலும் வெளியேற்றப்படுகிறது. உயர் கொழுப்புள்ள உணவோடு எடுத்துக்கொள்ளப்பட்டால் உறிஞ்சும் அளவு குறையும்; அதிகபட்ச பிளாஸ்மா செறிவோடு இணைவதற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம் இதற்குள்ளேயான செறிவும்கூட ஏறத்தாழ மூன்றிற்கு ஒன்று என்ற அளவிற்கு குறைந்துபோகிறது. விறைப்புத்தன்மை குறைபாட்டின் (உடலுறவை நிறைவுசெய்ய திருப்திகரமான அளவிற்கு விறைப்புத்தன்மை நீடிக்கும் திறனின்மை) சிகிச்சைக்கென்றே சில்டெனாபில் பிரதானமாக குறிப்பிடப்படுகிறது. இது நீரிழிவு உள்ளிட்ட எல்லா அமைப்பிலும் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சிகிச்சைக்கு இப்போது பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர் மன அழுத்த சிகிச்சை செய்துகொள்பவர்கள் பாலுறவு செயல்பாடின்மையை எதிர்கொள்ளலாம், இது அவர்களின் நலமின்மையின் காரணமாகவோ அல்லது அவர்களின் சிகி்ச்சையின் விளைவாகவோ ஏற்படலாம். 2003 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இந்தச் சூழ்நிலைகளில் சில்டெனாபில் பாலுறவு செயல்பாடின்மையை மேம்படுத்துவதாக இருக்கிறது. 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த அறிக்கைகளைத் தொடர்ந்து இதே ஆராய்ச்சியாளர்கள் எதிர் மனஅழுத்த சிகிச்சை எடுத்துக்கொள்ளும் பெண் நோயாளிகளிடத்திலும் சில்டெனாபில் பாலுறவு செயல்பாட்டை மேம்படுத்துவதாக இருக்கிறது என்று கண்டுபிடித்திருக்கின்றன. விறைப்புத் தன்மை குறைபாட்டிற்கும் நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்த (பிஏஹெச்) அரிதான நோயில் சில்டெனாபில் சிட்ரேட் பயன்மிக்கதாக இருக்கிறது. இது தமனிச்சுவர்களை தளர்வடையச் செய்கிறது என்பதால் அது குறைவான நுரையீரல் தடுப்பிற்கும் அழுத்தத்திற்கும் காரணமாகிறது. இது இதயத்தின் வலது வெண்ட்ரிக்கிளினுடைய வேலைச்சுமையைக் குறைக்கிறது என்பதுடன் வலது-பக்க இதயச் செயலிழப்பின் அறிகுறிகளையும் மேம்படுத்துகிறது. பிடிஇ-5 என்பது நுரையீரல் மற்றும் ஆணுறுப்பின் தமனிச்சுவர் மென் தசைக்குள்ளகாவே விநியோகிக்கப்படுகிறது என்பதால் சில்டெனாபில் உடலின் மற்ற பாகங்களில் வஸோடைலேஷனைத் தூண்டாமல் இந்த இரண்டு பகுதிகளிலும் தேர்ந்தெடுத்த முறையில் செயல்படுகிறது. ஃபைசர் எஃப்டிஏவிடம் சில்டெனாபிலுக்கான கூடுதல் பதிவுசெய்தலை சமர்ப்பித்தது என்பதோடு சில்டெனாபில் 2005 ஆம் ஆண்டு ஜுனில் இந்த பரிந்துரைக்காக அங்கீகரிக்கப்பட்டது. இந்த தயாரிப்பு முறை வயாக்ராவுடனான குழப்பத்தைத் தவிர்ப்பதற்கு ரிவாஷியோ என்று பெயரிடப்பட்டது என்பதுடன் 20 மில்லிகிராம் மாத்திரைகள் வெள்ளையாகவும் வட்ட வடிவிலும் இருந்தன. சில்டெனாபில் இந்த நிலைக்காக போஸண்டன் மற்றும் புரோட்டோசைக்ளின் அடிப்படையிலான சிகிச்சைகளோடு சேர்ந்துகொண்டது. மலையேறுபவர்களுக்கு பாதிப்பேற்படுத்தும் உயரத்தில் இருப்பதால் ஏற்படும் நோயோடு தொடர்புடைய அதி-உயர நுரையீரல் எடிமாவின் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு சில்டெனாபில் பயன்மிக்கதாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த விளைவு சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது என்ற நிலையில் சில்டெனாபில் முன்பே இந்த நிலைக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சையாக இருந்திருக்கிறது, குறிப்பாக ஏதோ காரணங்களால் விரைவாக குறைப்பதற்கான நிலையான சிகிச்சை தாமதமாக்கப்படும் சூழ்நிலைகளில். தொழில்முறை விளையாட்டு வீரர்கள் வயக்ரா போன்ற மருந்துகளைப் பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது, தங்களுடைய இரத்தக் குழாய்கள் திறக்கப்படுவது தசைகளை வலுப்படுத்துவதாக அவர்கள் நினைக்கின்றனர். அதன் காரணமாக அது தங்களுடைய செயல்திறனை அதிகரிக்கச் செய்யும் என்று நம்புகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் சில்டெனாபிலின் புகழ் இளைஞர்களிடத்தில் அதிகரித்து காணப்படுகிறது. சில்டெனாபினின் வர்த்தகப் பெயரான "வயக்ரா" வெகுஜன கலாச்சாரத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுடன் விறைப்புத்தன்மை குறைபாட்டை சிகிச்சையளிப்பதோடு இந்த மருந்து சம்பந்தப்பட்டிருப்பது இதனுடைய பொழுதுபோக்கு பயன்பாட்டிற்கு வழியமைத்திருக்கிறது. இதுபோன்ற பயன்பாட்டிற்கு பின்னாலுள்ள காரணங்களாக இந்த மருந்து காமவெழுச்சி அதிகரிப்பு, பாலுறவு செயல்பாடு மேம்படுத்தப்படுதல் அல்லது நிரந்தரமாக ஆணுறுப்பின் அளவு அதிகரிப்பது ஆகிய நம்பிக்கைகள் இருக்கின்றன. பொழுதுபோக்குரீதியாக வயக்ரா பயன்படுத்தப்படுவது குறித்த ஆய்வுகள் குறைவானவையாக இருக்கின்றன, ஆனால் விறைப்புத்தன்மை குறைபாட்டினால் பாதிக்கப்படாதவர்களால் இது பயன்படுத்தப்படும்போது இதனுடைய விளைவு குறைவானதாகவே இருக்கும் என்றும் நிலையான உறவுநிலையில் உடலுறவு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கிறது. ஒரு ஆய்வில், 25 மில்லிகிராம் மருந்தளவு விறைப்புத் திறனில் எந்த குறிப்பிட்ட மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் விந்து வெளியேற்றத்திற்குப் பிந்தைய விறைப்புக்குறையாத நேரத்தை இது குறைக்கிறது. இந்த ஆய்வு கட்டுப்பாட்டுக் குழுவிலான குறிப்பிடத்தகுந்த பிளசிபோ விளைவையும் குறிப்பிட்டிருக்கிறது. சில்டெனாபில் மற்றும் பிற பிடிஇ-5 தடுப்பான்களின் பரி்ந்துரைக்கப்படாத பொழுதுபோக்கு பயன்பாடு குறிப்பாக சட்டத்திற்கு புறம்பான மருந்து உபயோகிப்பாளர்களிடையே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில்டெனாபில் சிலநேரங்களில் மற்ற துணைப்பொருட்களின் விளைவுகளுக்கு எதிராக செயல்படுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது, இதுவும் சட்டத்திற்கு புறம்பானதாகும். சில பயனர்கள் இதனை மெத்தைலினிஎடியோக்ஸிமெத்தபெடமைன் (எம்டிஎம்ஏ, எக்ஸ்டஸி), பிற தூண்டிகள், அல்லது விறைப்புத்தன்மை குறைபாட்டின் பொதுவான பக்க விளைவிக்கான இழப்பீட்டிற்கான முயற்சியில் ஓபியேட்கள், "செக்ஸ்டஸி", "ராக்கின் அண்ட் ரோலின்", அல்லது "டிரையல் மிக்ஸ்" எனப்படும் கலவைகள் ஆகியவற்றோடு கலந்து பயன்படுத்துகின்றனர். அமில் நைட்ரைட்டுடன் கலப்பது அபாயகரமானது, இது மரணமேற்படுத்தும் சாத்தியமும் கொண்டது. விமானப்போக்குவரத்திலான 2007 ஆம் ஐஜி நோபல் பரிசு ஹாம்ஸ்டர்களிடத்திலான ஜெட் லாக் நோய்க்கு வயக்ரா உதவியாக இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்தமைக்காக அர்ஜெண்டினாவின் யுனிவர்சிடட் நேஸனல் டி குயில்மஸைச் சேர்ந்த பாட்ரிசியா வி.அகஸ்டினோ, சாண்டியாகோ ஏ.பிளானோ மற்றும் டியாகோ ஏ. கோலோபெக் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. அவர்களின் ஆராய்ச்சி பிரஸீடிங்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடமி ஆஃப் சயின்ஸஸில் பதிப்பிக்கப்பட்டது. ஏஸ்டில்டெனாபில் என்பது சில்டெனாபிலின் கட்டமைப்பு ஒப்புமையைப் பெற்றிருக்கும், கடைகளில் விற்கப்படுகின்ற "மூலிகை" காமவெழுச்சி தயாரிப்புகளில் காணப்படும் பிடிஇ தடுப்பான்களுள் இந்த ஒப்புமை வகைகள் சில்டெனாபில் போன்ற மருந்துகள் தேர்ச்சியுற்ற தீவிரமான சோதனைக்கு உட்படுவதி்ல்லை என்பதோடு இவ்வகையில் அவை அறியப்படாத பக்க-விளைவு விவரங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த மருந்துகளை தடைசெய்வதற்கு சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன, ஆனால் வடிவமைப்பாளர் மருந்துகளை குறிவைக்கும் சட்டங்களைக் கொண்டிருக்கும் நீதித்துறை வரம்பிற்குள்ளாகவும்கூட, மெதுவான முன்னேற்றங்களே இருக்கின்றன, இந்த சட்டங்கள் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் ஒப்புமைகளைக் காட்டிலும் தவறாகப் பயன்படுத்தப்படும் சட்டத்திற்கு புறம்பான ஒப்புமைகளை தடைசெய்யவே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இருப்பினும் குறைந்தது இந்த தயாரிப்பை சந்தையிலிருந்து நீக்குவதற்கான ஒரு வழக்காவது சாத்தியமாகியுள்ளது. வயக்ரா மாத்திரைகள் "Pfizer" என்ற எழுத்துக்கள் ஒரு பக்கத்திலும், "VGR xx" என்பவை மறுபக்கத்திலும் (xx என்பது மில்லிகிராம்களில் மாத்திரையின் அளவான "25", "50" அல்லது "100" என்பதைக் குறிக்கின்றன) பொறிக்கப்பட்டு நீலநிறத்தில் வைர வடிவத்தில் கிடைக்கின்றன. விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கான சில்டெனாபிலின் மருந்தளவான 25 மில்லிகிராம் முதல் 100 வரையிலான அளவு உடலுறவுக்கு முன்பாக 30 நிமிடங்களுக்கும் 4 மணிநேரங்களுக்கும் இடையில் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மிகாமல் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நுரையீரல் தமனி உயர் இரத்த அழுத்தத்திற்கான மருந்தளவு (ரிவாஷியோ) ஒரு நாளைக்கு மூன்று முறைகளுக்கு என்று 20 மில்லிகிராம் மாத்திரையாக இருக்கிறது. ரிவாஷியோ மாத்திரைகள் வெள்ளை நிறத்தில், வட்டவடிவமான, மேல்புற பூச்சிடப்பட்ட மாத்திரைகளாக பக்கவாட்டில் "RVT 20" என்று அச்சிடப்பட்டு கிடைக்கின்றன. முரண் அறிகுறிகள் என்பவை: மருத்துவப் பரிசோதனைகளில் சில்டெனாபில் பயன்படுத்துவதன் மிகப்பொதுவான எதிர்மறை விளைவுகளாக தலைவலி, சிவந்துபோதல், செரிமானமின்மை, மூக்கடைப்பு மற்றும் போட்டோபோபியா மற்றும் மங்கிய பார்வை உட்பட பார்வைக் குறைபாடு உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. சில சில்டெனாபில் பயனர்கள் பார்க்கின்ற அனைத்தும் நீலநிறம் கொண்டு பூசப்பட்டவையாக (சயானோப்ஸியா) தெரிவதாக குற்றம்சாட்டியிருக்கின்றனர். சிலர் மங்கலான பார்வையையும் ஏற்ற இறக்கமான பார்வையையும் தெரிவித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு ஜூலையில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அரிதான நிகழ்வுகளில் சில்டெனாபில் பார்வைக் குறைபாட்டை உருவாக்குகிறது என்பதைக் கண்டுபிடித்திருக்கிறது என்பதோடு சில்டெனாபில் பயன்படுத்துவதை நிறைய ஆய்வுகளும் நானார்டிரிடிக் அண்டீரியர் இஸ்கெமிக் ஆப்டிக் நியுரோபதியுடன் பயன்படுத்தப்படுவதோடும் தொடர்புபடுத்துகின்றனர். சந்தையிடலுக்குப் பிந்தைய கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரிதான ஆனால் தீவிரமான எதிர்மறையான விளைவுகள் தொடர்ச்சியான விறைப்பு, தீவிரமான ஹைபோடென்ஷன், மையோகார்டியல் விறைப்புக்குறைவு (மாரடைப்பபு), வெண்ட்ரிக்குலர் அரித்திமியாக்கள், பக்கவாதம், அதிகரித்த இண்ட்ராகுலர் அழுத்தம் மற்றும் திடீரென்று கேட்கும் திறன் இழத்தல் ஆகியவற்றை உள்ளிட்டதாக இருக்கின்றன. இத்தகைய பின்சந்தையிடல் தகவல்களின் காரணமாக 2007 ஆம் ஆண்டு அக்டோபரில் சில்டெனாபில் உள்ளிட்ட அனைத்து பிடிஇ5 தடுப்பான்களுக்கும் முத்திரையிடுவதற்கு திடீரென்று காதுகேட்கும் திறன் இழக்கப்படுவதற்கான சாத்தியமுள்ளது என்ற எச்சரிக்கை மிக முக்கியமானதாக இருக்க வேண்டும் என்று அறிவித்தது. ஹெச்ஐவி சிகிச்சைக்காக புரோட்டீஸ் தடுப்பான்கள் எடுத்துக்கொள்ளும் நோயாளிகளும் கவனத்துடன் இருக்க வேண்டும். புரோட்டீஸ் தடுப்பான்கள் செல்டெனாபிலின் வளர்ச்சிதைமாற்றத்தைத் தடுத்து, சில்டெனாபிலின் பிளாஸ்மா அளவை விரைவாக அதிகரிக்கச்செய்து பக்கவிளைவுகளின் தீவிரத்தன்மைகள் அதிகரிக்கும் நிகழ்வுகளை அதிகரிக்கச் செய்கிறது. புரோட்டீஸ் தடுப்பான்களைப் பயன்படுத்தும் நோயாளிகள் தாங்கள் சில்டெனாபில் பயன்படுத்தும் அளவை ஒவ்வொரு 48 மணிநேரங்களுக்கும் 25 மில்லிகிராம் மருந்தளவிற்கு அதிகரிக்காமல் வரம்பிற்குட்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகின்றனர். சில்டெனாபில் மற்றும் ஆல்பா பிளாக்கர் உடனான உடனிணைந்த பயன்பாடு குறைந்த இரத்த அழுத்தத்திற்கு வழியமைக்கலாம், ஆனால் இந்த விளைவு இது நான்கு மணிநேரங்களுக்கு அப்பால் எடுத்துக்கொள்ளப்பட்டால் ஏற்படுவதில்லை. சில்டெனாபில் தொகுப்பிற்கான தயாரிப்பு நிலைகள் பின்வருமாறு: சரத் பவார் ஷரத் சந்திர கோவிந்தராவ் பவார் (மராத்தி: शरदचंद्र गोविंदराव पवार) (டிசம்பர் 12, 1940 அன்று பிறந்தார்), ஷரத் பவார் எனப் பிரபலமாக அறியப்படும் இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசியக் காங்கிரஸில் இருந்து பிரிந்த பிறகு 1999 ஆம் ஆண்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் தலைவரானார். இவர் முன்பு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பதவி வகித்தார். இந்திய அரசாங்கத்தின் விவசாய அமைச்சர் மற்றும் நுகர்வோர் பொருட்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சராகப் பதவி வகித்தார். பவார் மகாராஷ்டிராவின் பூனா மாவாட்டத்தில் உள்ள பாராமதி நகரத்தைச் சேர்ந்தவர். மகாராஷ்டிராவில் அவரது மாதாவின் வாக்காளர் தொகுதியின் பிரதிநிதியாய், லோக் சபாவின் NCP பிரதிநிதிக்குழுவை இவர் தலைமை வகிக்கிறார். இந்திய தேசிய அரசியலில் இவருக்கு ஒரு முக்கியமான இடம் உள்ளது. அதே போல் மகாராஷ்டிராவின் பிராந்திய அரசியலிலும் ஒரு முக்கிய இடம் உள்ளது. மேலும் பவார், 2005 முதல் 2008 வரை, இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராகவும் தலைமைப் பதவி வகித்தார். ஷரத் பவார், பாராமதியில் இருந்து 1967 ஆம் ஆண்டில் முதல் தடவையாக, பகுபடாத காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாய் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நுழைந்தார். பவார் 1979 ஆம் ஆண்டில் முதல் முறையாக மகாராஸ்ட்ராவின் முதலமைச்சராவதற்காக எதிர்க்கட்சியான ஜனதா கட்சியுடன் கூட்டணி அரசு அமைப்பதற்காக காங்கிரஸிலிருந்து பிரிந்து வெளியேறினார். அந்த நேரத்தில் இந்திரா காந்தி 1975 ஆம் ஆண்டில் அவரது அவசரநிலைப் பிரகடனத்தின் காரணமாக நம்பமுடியாத அளவிற்கு செல்வாக்கு குறைந்திருந்தார். இந்த முற்போக்கு ஜனநாயக முன்னணி அரசாங்கம், மத்தியில் இந்திரா காந்தியின் ஆட்சி திரும்ப வந்ததைத் தொடர்ந்து, 1980 பிப்ரவரியில் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து வந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. மேலும் ஏ.ஆர். ஆண்டுலே மாநிலத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். பவார் 1981 ஆம் ஆண்டில் காங்கிரஸின் தலைவர் பதவி வகித்தார். 1984 ஆம் ஆண்டில் லோக் சபா தேர்தலில் முதல் முறையாக அவர் பாராமதி பாராளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் 1985 ஆம் ஆண்டில் மார்ச்சில் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பாராமதியில் வெற்றி பெற்றார். மேலும் சிறிது காலத்திற்கு மாநில அரசியலில் தொடர முடிவெடுத்து லோக் சபாவில் இருந்து பதவி விலகினார். அவரது கட்சியான இந்திய காங்கிரஸ் (பொதுவுடைமை) மாநில சட்ட மன்றத்தில் 288 இடங்களுக்கு 54 இடங்களில் வென்றது. பின்னர் அவர் எதிர்கட்சித் தலைவர் ஆனார். அவர் காங்கிரஸுக்குத் திரும்ப வந்தது அந்த நேரத்தில் சிவ சேனா எழுச்சியடைந்ததன் காரணமாகவே எனப் பார்க்கப்பட்டது. 1988 ஆம் ஆண்டு ஜூனில் இந்தியாவின் பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராஜிவ் காந்தி, மகாராஷ்டிர முதலமைச்சர் ஷங்கர்ராவ் சவானை நிதியமைச்சராக ஒன்றிய கேபினட்டினுள் பதவியில் அமர்த்த முடிவு செய்தார். அதனால் சவானுக்குப் பதிலாக ஷரத் பவார் முதலமைச்சராக அமர்த்தப்பட்டார். மாநில அரசியலில் சிவ சேனாவின் எழுச்சியைக் கண்காணிக்கும் பணி ஷரத் பவாருக்கு இருந்தது. அது மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்துக்கு ஆற்றல்மிக்க சவாலாக இருந்தது. 1989 லோக் சபா தேர்தலில், மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கட்சி 48 இடங்களில் 28 இடங்களில் வென்றது. பிப்ரவரி 1990 இல் மாநில சட்டமன்றத் தேர்தலில், சிவ சேனா மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே கூட்டு இருந்ததால், அது காங்கிரஸ் கட்சிக்கு கடுமையான சவாலாக அமைந்தது. காங்கிரஸ் மாநில சட்டமன்றத்தில் 288 இடங்களுக்கு 141 ஐ வென்று தனிப்பெரும்பான்மைக்கு சிறிது குறைவாக இருந்தது. ஷரத் பவார் 12 சுயேட்சை MLAக்களின் ஆதரவுடன் மார்ச் 4, 1990 அன்று மீண்டும் முதலைமைச்சராகப் பதவிப்பிரமாணம் எடுத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் போது, முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த நேரத்தில் பிரதமர் பதவிக்கு பி.வி. நரசிம்ம ராவ் மற்றும் என் டி திவாரி ஆகியோருடன் பவாரின் பெயரும் பரிசீலிக்கப்படுவதாக ஊடகத்தில் வதந்திகள் நிலவின. எனினும், காங்கிரஸ் பாராளுமன்றக் கட்சி பி.வி. நரசிம்ம ராவை அதன் தலைவராகத் தேர்ந்தெடுத்தது. மேலும் ஜூன் 21, 19991 அன்று அவர் பிரதமராகப் பதவிப்பிரமாணம் எடுத்தார். நரசிம்ம ராவ், ஷரத் பவாரை பாதுகாப்பு அமைச்சராகப் பதவியில் அமர்த்த முடிவெடுத்தார். ஜூன் 26, 1991 அன்று ஷரத் பவார் அந்த இலாகாவில் பொறுப்பேற்று 1993 மார்ச் வரைத் தொடர்ந்தார். மகாராஷ்டிராவில் ஷரத் பவாரின் பின்வந்த, சுதாகர்ராவ் நாயக் பதவி விலகிய பிறகு, நரசிம்ம ராவ் மாநிலத்தின் முதலமைச்சராக ஷரத் பவாரை மீண்டும் அனுப்பினார். அவர் மார்ச் 6, 1993 அன்று முதலமைச்சராக நான்காவதாக மற்றும் மிகவும் சர்ச்சைக்குரிய விதத்திலான பதவிப்பிரமாணத்தை எடுத்தார். கிட்டத்தட்ட உடனடியாக, இந்தியாவின் நிதித் தலைநகர் மற்றும் மகாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்மையில் மார்ச் 12, 1993 அன்று தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. ஷரத் பவார் முதல் முறையாக 1978 ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவின் முதலமைச்சராகப் பதவிப்பிரமாணம் எடுத்தார். இந்தக் கட்டுரையில் 'தொழில் வாழ்க்கை 1990 வரை' இல் குறிப்பிடப்பட்டிருப்பது போல 1979 இல் அல்ல. பிரிஹான்மும்பை நகராட்சி கார்ப்பரேசனின் துணை ஆணையாளர், ஜி.ஆர். காயிர்னர், பவாருக்கு எதிராக, மோசடி மற்றும் குற்றவாளிகளைக் காத்தது உள்ளிட்ட தொடர் குற்றச்சாட்டுகளைக் கூறினார். காயிர்னர் அவரது சார்பாக எந்த சாட்சியையும் வழங்கியிருக்கவில்லை என்ற போதும், அது பவாரின் பிரபலத்திற்கு தவிர்க்க இயலாத பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பிடத்தக்க சமூக சேவகர் அன்னா ஹசாரே, மோசடியில் குற்றஞ்சாட்டப்பட்ட, மகாராஷ்டிர அரசாங்கத்தின் வனத்துறையின் 12 அதிகாரிகளை வெளியேற்றக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் தொடங்கினார். எதிர்க்கட்சிகள், பவாரின் அரசு மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளை காப்பதற்கு முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டின. தொடர்ந்து ஜால்கானில் சில இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக பாலியல் அவதூறு உருவானது. அதில் காங்கிரஸ் தொடர்புடைய உள்ளூர் நகராட்சி கார்ப்பரேட்டர்கள் தொடர்புபட்டிருப்பதாகக் கூறப்பட்டது. மகாராஷ்டிர மாநில சட்டமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரின் போது நாக்பூரில் 1994 கோவாரி நெரிசலில் 114 பேர் கொல்லப்பட்டனர். நாக்பூர் காவல்துறை கிட்டத்தட்ட 50000 கோவாரி எதிர்ப்பாளர்களை பிரம்பால் அடித்துக் கலைக்க முயற்சித்தது. ஆனால் அது எதிர்ப்பாளர்களுக்கு இடையில் பீதியை உருவாக்கியது மற்றும் கலவரத்தைத் தூண்டியது. விபத்தில் சிக்கியோரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர், பலர் காவலரிடம் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் நெரிசலில் சிக்கி மிதிபட்டு இறந்தனர். அவர்களில் சிலர் தப்பிப்பதற்காக உயர் வேலியில் மேல் ஏறிய போது கூரிய முனையில் தாக்கப்பட்டு பலியாயினர். பொதுநலத்துறை அமைச்சர் மதுக்கர்ராவ் பிச்சாட் சரியான நேரத்தில் வஞ்சாரா மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்காததன் காரணமாக அந்த அசம்பாவிதம் ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. பிச்சாட் இந்த அசம்பாவிதத்திற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவிவிலக்கப்பட்ட போதும், இந்த நிகழ்வு ஷரத் பவாரின் அரசுக்கு மற்றொரு பின்னடைவாகவே அமைந்தது. விதான் சபாவுக்கான தேர்தல் 1995 ஆம் ஆண்டு நடைபெற்றது. சிவ சேனா மற்றும் BJP கூட்டணி வாக்குகளில் காங்கிரஸை விட முன்னணியில் இருந்தது. மேலும் காங்கிரஸ் கட்சியில் மிகவும் பரவலான கிளர்ச்சி ஏற்பட்டது. மாநில சட்ட மன்றத்தில் சிவ சேனா-BJP கூட்டணி 138 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. அதே சமயம் காங்கிரஸ் கட்சி 80 இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தது. ஷரத் பவார் பதவி விலகினார். மேலும் சிவ சேனா தலைவர் மனோகர் ஜோஷி மார்ச் 14, 1995 அன்று முதலமைச்சரானார். 1996 இன் லோக்சபா தேர்தல் வரை, ஷரத் பவார் மாநில சட்ட மன்றத்தில் எதிர்கட்சித் தலைவராகப் பணியாற்றினார். 1996 பொதுத்தேர்தலில், அவர் பாராமதி தொகுதியை வென்றிருந்த போதும் மாநில சட்ட மன்றத்திற்குத் திரும்பவில்லை. 1997 ஆம் ஆண்டு ஜூனில் அவர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான சவாலில் வெற்றிபெறவில்லை. 1998 ஆம் ஆண்டின் பாராளுமன்ற இடைத் தேர்தலில் ஷரத் பவார் அவரது தொகுதியான பாராமதியில் வென்றதோடு மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் வலுவான வெற்றிபெற வழிவகுத்தார். மாநிலத் தேர்தலுக்காக அவர் இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலெ) மற்றும் சமாஜ்வாடி கட்சி ஆகியவற்றுடன் வலுவான கூட்டு அமைத்து மாநிலத்தில் 48 இல் 37 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் அதன் கூட்டணியும் வெற்றிபெற்றன. ஷரத் பவார் 12 ஆவது லோக் சபாவின் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். 12 ஆவது லோக் சபா கலைக்கப்பட்டு, 13 ஆவது லோக் சபாவிற்கான தேர்தலின் போது ஷரத் பவார், பி.ஏ. சங்க்மா மற்றும் தாரிக் அன்வர் ஆகியோர் காங்கிரஸ் கட்சி சார்பாக இந்தியாவில் பிறந்த ஒருவரே பிரதமர் வேட்பாளராக இருக்க வேண்டும். இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி அல்ல எனக் கட்டாயப்படுத்தினர். அதனால் அவர் அரசியலில் நுழைய இருந்து அதற்கு பதிலாக கேசரி காங்கிரஸ் தலைவரானார். 1999 ஆம் ஆண்டு ஜூனில் பவார் மற்றும் சங்க்மா தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினர். 1999 சட்டமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் எந்தக் கட்சியும் தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெறவில்லை என்பதால், அவரது கட்சி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து கூட்டாட்சி அமைத்தன. எனினும், பவார் மாநில அரசியலுக்குத் திரும்பவில்லை, மேலும் காங்கிரஸின் விலாஸ்ராவ் தேஷ்முக் முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், அவருடன் NCP சார்பாக சாகன் பூஜ்பால் அவரது துணை முதல்வர் ஆனார். அந்தக் கூட்டினால் அந்நாளில் தேசிய மற்றும் மாநில அளவில் அனுசரித்துச் சென்றன. 2004 லோக் சபா தேர்தலுக்குப் பிறகு, அவர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைந்து விவசாய மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். நவம்பர் 29, 2005 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மே 28, 2009 அன்று அவர் விவசாயம் மற்றும் நுகர்வோர் பொருட்கள், உணவு & பொது விநியோகம் ஆகியவற்றின் ஐக்கிய அமைச்சராக நியமிக்கப்பட்டார். பவார் கபடி,கொகோ,மல்யுத்தம் மற்றும் கிரிக்கெட் ஆகியவற்றில் ஆர்வமுடையவராக இருக்கிறார். இவர் பல்வேறு விளையாட்டு அமைப்புக்களில் தலைமையாகப் பணியாற்றியிருக்கிறார், அவை பின்வருமாறு பவார், புனே சர்வதேச மாரத்தான் ட்ரஸ்டின் தலைவராக இருந்தார், அது கடந்த 22 ஆண்டுகளாக புனே சர்வதேச மராத்தானை நடத்தி வருகிறது. 2002-03 இல், அப்போதைய மகாராஷ்டிரா முதலமைச்சர் சுதாகர்ராவ், இந்திய தேசிய காங்கிரஸின் மாநிலத் தலைவர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஷரத் பவார், அவரிடம் நன்கு அறியப்பட்ட குற்றவாளியாக இருந்து தற்போது அரசியல்வாதியாக இருக்கும் "பாப்பு கலானியிடம் மேம்போக்காகச் செல்லும்படி" கூறியதாக அறிக்கை வெளியிட்டார். சிவ சேனா தலைவர், பால் தாக்கரே பின்னர் இந்த குற்றச்சாட்டுடன் இசைந்தார். மேலும் கலானி மற்றும் விராரில் இருந்து வந்த மற்றொரு குற்றவாளியாக இருந்து அரசியல்வாதியான ஹிதேந்திரா தாக்கூர் ஆகியோருக்கு, ஷரத் பவாரின் வேண்டுகோளின் பேரில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத்துக்கான தேர்தலில் போட்டியிட இடமளிக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன எனவும் சுதாகர்ராவ் குற்றம் சாட்டினார், மேலும் மும்பையில் பாபர் மசூதி இடிப்புக்குப் பின்னான கலவரத்தில் அவரது பங்குக்காக ஹிதேந்திரா கைது செய்யப்பட்ட போது நாயகிற்காகவும் வார்த்தை கொடுத்திருக்கிறார் எனவும் கூறினார். 2006 ஆம் ஆண்டு அக்டோபரில் $500 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புடைய முத்திரைத் தாள் மோசடியில் முதல் குற்றச்சாட்டில் இருந்த அப்துல் கரிம் தெல்கி, அதில் ஈடுபட்டிருந்த அரசியல்வாதிகளில் ஒருவராக ஷரத் பவாரையும் ஒருவராகக் கூறினார். இது தெல்கியின் உண்மை-கண்டறியும் சோதனையின் வீடியோ-பதிவுநாடா வெளியானதில் வெளியானது - 2004 ஆம் ஆண்டில் CBI புலன்விசாரணைக்கு முன்பு 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அது தற்போது ஊடக உடைமையாக இருக்கிறது. அந்தப் பதிவு நாடாவில், அவர் ஷரத் பவார் மற்றும் சாக்கான் பூஜ்பால் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் எவ்வாறு அவர்கள் தொடர்பு கொண்டிருந்தனர் என்று கூறவில்லை. BJP கோதுமை இறக்குமதியில் தொடர்புடைய பல-கோடி மோசடியில் பவார் தொடர்பு கொண்டிருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட பிறகு, அவர் பதவி விலக வேண்டும் எனக் கோரியது. மே 2007 இல், இந்திய உணவுக் கார்ப்பரேசனால் வெளியிடப்பட்ட கோதுமையின் கொள்முதலுக்கான ஒரு ஒப்பந்தம், மிகவும் குறைவான ஏலத்தொகையாக 263 USD/டன் கேட்கப்பட்டதால் இரத்து செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசாங்கம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தனியார் வர்த்தகர்களை கோதுமையை வாங்கிக் கொள்ள அனுமதித்தது, அதன் விளைவாக FCI களஞ்சியத்தில் கோதுமை இருப்பு வைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு ஜூலையில் தட்டுப்பாட்டின் காரணமாக FCI, மிகவும் அதிகமான விலையான 320-360 USD/டன் வரை கொடுத்து வாங்க வேண்டியிருந்தது. இதன் பலனை எடுத்துக்கொண்டு, உள்நாட்டில் முன்னதாக 900 INR/டன்னுக்கு வாங்கிய வர்த்தகர்கள், அப்போது அதையே FCI க்கு 1,300 INR/டன்னுக்கு வழங்கினர். அக்டோபர் 27, 2007 அன்று மும்பை உயர் நீதிமன்றம், ஷரத் பவார், அஜித் பவார் மற்றும் சதானந்த் சூல் (ஷரத் பவாரின் மருமகன்) ஆகியோர் தலைமை வகிக்கும் நிறுவனங்களுக்கு அறிக்கைகள் அனுப்பியது, மேலும் அதனுடன் சேர்த்து பவார் மற்றும் அவரது குடும்பத்துக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கிய மகாராஷ்டிரா கிரிஷ்ணா ஆற்றுப்படுகை மேம்பாட்டுக் கார்ப்பரேசனுக்கும் (MKVDC) அறிக்கைகள் அனுப்பியது. இது 2006 ஆம் ஆண்டில் பொது நல வழக்கு எண். 148 ஐ கருத்தில் கொண்டு செய்யப்பட்டது, ஷாம்சுந்தர் போடரேவால் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில், 2002 ஆம் ஆண்டில் புனேவில் ஒதுக்கப்பட்டிருந்த நிலங்கள் சட்டத்திற்கு புறம்பானவை எனக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. அதில் குறிப்பிட்டிருந்த நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள் பின்வருமாறு: இந்த ஒதுக்கீடுகள் அந்த நேரத்தில் MKVDC இன் பொறுப்பில் இருந்த NCP தலைவர் மற்றும் அமைச்சர் ராம்ராஜே நாயக் நிம்பல்கார் முன்னிலையில் ஒதுக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஷரத் பவார் அந்த நேரத்தில் இந்த விசயம் "நீதிமன்ற விசாரணையில்" இருந்த போதும், இந்த வழக்கில் தொடர்புபடுத்தி ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களுக்காக மே 1, 2008 அன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்தார், அது பின்னர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில், எதிர்வாதிகள் விவாதத்தின் கீழ் சொத்தில் மூன்றாம்-தரப்பு ஆர்வங்களை உருவாக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டனர், மேலும் அவர்களின் சொந்தப் பொறுப்பில் எந்த மேம்பாடுகளையும் செய்துகொள்ளலாம் எனக் கூறப்பட்டது. பவார் மதம்சார்ந்த நிறுவனங்கள் சட்டம் 1988 இன் (தவறாகப் பயன்படுத்துவதைத் தடுத்தல்) சட்டத்தை மீறிய குற்றச்சாட்டிற்காக குற்றாவாளிகள் இல்லை வலைத்தளத்திலும் பட்டியலிடப்பட்டிருக்கிறார். ரிச்சர்ட் கியர் ரிச்சர்ட் டிஃப்பனி கெரெ (, ; ஆகஸ்ட் 31, 1949 ஆம் ஆண்டில் பிறந்தவர்) ஒரு அமெரிக்க நடிகராவார். அவர் 1970களில் நடிக்கத் தொடங்கினார். மேலும் 1980 ஆம் ஆண்டில் "அமெரிக்கன் ஜிகோலோ" திரைப்படத்தில் அவரது பாத்திரத்திற்காகப் பிரபலமானார். அந்தத் திரைப்படம் அவரை ஒரு முன்னணி மனிதராகவும் கனவு நட்சத்திரமாகவும் வெளிப்படுத்தியது. "ஆன் ஆபிசர் அண்ட் எ ஜெண்டில்மேன்", "பிரெட்டி உமென்", "பிரைமல் ஃபியர்" சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது மற்றும் சிறந்த நடிகர்களில் ஒரு பகுதிக்காக ஸ்கிரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது ஆகியவை வென்ற "சிகாகோ" உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களின் மூலமாக இவர் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். பென்சில்வேனியா, பிலடெல்பியாவில் பிறந்த ரிச்சர்ட், "மேஃபிளவர்" சமயப்பயணர் பிரான்சிஸ் ஈடன், ஜான் பில்லிங்டன், ஜியார்ஜ் சவுலெ, ரிச்சர்ட் வார்ரன், டெகோரி பிரெய்ஸ்ட், வில்லியம் பிரெவ்ஸ்டர் மற்றும் பிரான்சிஸ் கூகே ஆகியோரின் சந்ததியைச் சேர்ந்தவர். ரிச்சர்டின் தாயார், டோரிஸ் அண்ணா (நீ டிஃப்பன்னி) ஒரு ஹோம்மேக்கர் ஆவார் மற்றும் அவரது தந்தை ஹோமர் ஜியார்க் கெரெ, நேசன்வைடு மியூச்சுவல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் காப்பீட்டு முகவராக இருந்தார். மேலும் உண்மையில் அவர் ஒரு அமைச்சராக வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருந்தார். கெரேவுக்கு மூன்று சகோதரிகளும் ஒரு சகோதரரும் உள்ளனர். 1967 ஆம் ஆண்டில் அவர் நார்த் சைராகூஸ் மத்திய உயர்நிலைப்பள்ளியில் பட்டம் பெற்றார். அங்கு அவர் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் இசை, ட்ரம்பட் இசைத்தல் ஆகியவற்றில் புலமையுடன் இருந்தார். அவர் ஜிம்னாஸ்டிக்ஸ் புலமைக்காக மாஸ்ஸாசூசெட்ஸ் ஆம்ஹர்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பிரிவில் சேர்ந்தார். ஆனால் பட்டம் பெறாமல் இரண்டு ஆண்டுகளில் விட்டு விட்டார். ரிச்சர்ட் முதலில் 1971 ஆம் ஆண்டில் கேப் கோடில் புரொவைன்ஸ் டவுன் பிளே ஹவுஸில் தொழில் ரீதியாக பணியாற்றினார். அங்கு அவர் "ரோசன்கிராண்ட்ஸ் அண்ட் கில்டன்ஸ்டெர்ன் ஆர் டெட்டில் நடித்தார்." ரிச்சர்ட் 1973 ஆம் ஆண்டில் "கிரீசின்" ஒரிஜினல் லண்டன் அரங்கப் பதிப்பில் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அவர் 1970களின் மத்தியில் ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். திகில் திரைப்படமான "லுக்கிங் ஃபார் மிஸ்டர். குட்பாரில்" (1977) இணை-நடிகராகவும், இயக்குநர் டெர்ரன்ஸ் மாலிக்கின் நன்கு-மதிப்பிடப்பட்ட 1978 ஆம் ஆண்டில் வெளிவந்த திரைப்படம் "டேஸ் ஆஃப் ஹெவன்" இல் முக்கிய பாத்திரத்திலும் நடித்தார். 1980 ஆம் ஆண்டில் ரிச்சர்ட் பிராட்வே தயாரிப்பான "பெண்டில்" நடித்தார். அவரது நடிப்புத் தொழில் வாழ்க்கை "அமெரிக்கன் ஜிகோலோ" திரைப்படம் மூலம் ஏற்றமடைய ஆரம்பித்தது. 1982 ஆம் ஆண்டில் அதனைத் தொடர்ந்து வந்த காதல் நகைச்சுவை வகை "ஆன் ஆபிசர் அண்ட் எ ஜெண்டில்மேன்" கிட்டத்தட்ட $130 மில்லியன் வசூலித்தது. எனினும் 1982 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரிச்சர்டின் தொழில் வாழ்க்கை பல தோல்விகளினால் பின்தங்கியிருந்தது. அவரது தொழில் வாழ்க்கை 1990 ஆம் ஆண்டில் "இண்டர்னல் அஃபேர்ஸ்" மற்றும் "பிரெட்டி உமன்" ஆகிய இரண்டின் வெளியீட்டிற்குப் பிறகு ஓரளவிற்கு மறுமலர்ச்சி அடைந்தது. ஒரு முன்னணி மனிதராக ரிச்சர்டின் நிலை மீண்டும் திடமானது. மேலும் அவர் 1990களின் முழுவதும் "சோம்மர்ஸ்பி" (1993), "பிரைமல் ஃபியர்" (1996) மற்றும் அவர் "பிரெட்டி உமன்" இணை-நட்சத்திரம் ஜூலியா ராபர்ட்ஸுடன் இணைந்து நடித்த "ரன்அவே பிரைடு" (1999) உள்ளிட்ட பல வெற்றிகரமான திரைப்படங்களில் நடித்திருந்தார். "பீப்பிள்" பத்திரிகை 1999 ஆம் ஆண்டில் ரிச்சர்டை "வாழும் கவர்ச்சிகரமான மனிதர்" என்று கெளரவித்தது. 2002 ஆம் ஆண்டில் அவர் ஹாரர் திகில் வகை "த மோத்மேன் புரொபிசீஸ்", நாடக வகை "அன்ஃபெய்த்ஃபுல்" மற்றும் அகாடமி விருது-வென்ற திரைப்படப் பதிப்பான "சிகாகோ" ஆகிய மூன்று முக்கிய வெளியீடுகளில் நடித்தார். அதில் சிகாகொவிற்காக அவர் "நகைச்சுவை அல்லது இசைசார்ந்த சிறந்த நடிகருக்கான" கோல்டன் குளோப் விருது வென்றார். ரிச்சர்டின் 2004 ஆம் ஆண்டில் வெளியான பால்ரூம் டேன்சிங் நாடக வகைத் திரைப்படமான "ஷால் வி டேன்சும்" அவரை திடமான நடிகராக வெளிப்படுத்தியது. அது உலகம் முழுதும் $170 மில்லியன் வசூலித்தது. எனினும் அவரது அடுத்த படமான 2005 ஆம் ஆண்டில் வெளியான "பீ சீசன்" வணிக ரீதியாகத் தோல்வியைத் தழுவியது. ரிச்சர்ட், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் 2006 ஆம் ஆண்டுக்கான ஹாஸ்டி புட்டிங் தியேட்ரிகல்ஸ்' "ஆண்டின் சிறந்த மனிதர்" என்ற கெளரவத்தைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டில் அவர் ஜெஸ்ஸெ எய்சன்பர்க் மற்றும் டெர்ரன்ஸ் ஹொவார்ட் ஆகியோருடன் இணை-நடிகராக "த ஹண்டிங் பார்ட்டியில்" நடித்தார். காமிக் திகில் திரைப்படமான இதில் அவர் போஸ்னியாவில் பத்திரிகையாளராக நடித்திருந்தார். மேலும் அதே ஆண்டில் அவர் கிறிஸ்டியன் பாலே, ஹேத் லெட்ஜர் மற்றும் கேட் பிளாஞ்செட் ஆகியோருடன் இணைந்து டோட் ஹேனஸின்' போப் டைலன் பற்றிய அரை-வாழ்க்கைக்குறிப்புத் திரைப்படமான "ஐ'ம் நாட் தேரில்" நடித்தார். சமீபத்தில் ரிச்சர்ட், டையானே லேனுடன் இணைந்து-நடித்த காதல் நாடகவகைத் திரைப்படம் "நைட்ஸ் இன் ரோடாண்தேவில்" 2008 ஆம் ஆண்டில் வெளியானது. அந்தத் திரைப்படம் விமர்சகர்களால் பரவலாக எதிர்மறையாக விமர்சிக்கப்பட்டது (மேலும் "த லண்டன் டைம்ஸ்" 2008 இன் மோசமான திரைப்படங்கள் பட்டியலில் இதற்கு #74 ஆம் இடம் வழங்கியிருந்தது). ஆனால் அந்தப் படம் உலகளவில் $84 மில்லியன் வசூலித்தது. ரிச்சர்ட் 1991 ஆம் ஆண்டில் இருந்து 1995 ஆம் ஆண்டு வரை சூப்பர்மாடல் சிண்டி கிராஃபோர்டை மணந்திருந்தார். 2002 ஆம் ஆண்டில் அவர் மாடல் மற்றும் நடிகை காரே லவ்வலை மணந்தார். அவருக்கு ஒரு மகன் இருக்கிறார் 2000 ஆண்டில் பிறந்த அவருக்கு ரிச்சர்டின் தந்தையின் பெயரான ஹோமர் ஜேம்ஸ் ஜிக்மே கெரெ என்று பெயர் வைத்தனர். ரிச்சர்ட் மெத்தடிச பெற்றோர்களால் வளர்ந்தவர்; 1978 ஆம் ஆண்டில் அவர் பிரேசிலிய ஓவியர் சில்வியா மார்டின்ஸுடன் நேபாளத்துக்குச் சென்ற போது புத்திசத்தில் அவருக்கு ஆர்வம் ஏற்படத் தொடங்கியது. அவர் புத்திசத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார். மேலும் தலாய்லாமாவிற்கு ஆதரவாளராக இருக்கிறார். மேலும் ரிச்சர்ட், திபெத்தில் மனித உரிமைகளுக்கான உறுதியான ஆலோசகராகவும் இருக்கிறார்; அவர் திபெத் ஹவுஸின் இணை-உருவாக்குநர், கெரெ ஃபவுண்டேசன் உருவாக்கியவர் மற்றும் திபெத்துக்கான சர்வதேச பிரச்சாரத்துக்கான வாரிய இயக்குநர்களின் தலைவராக இருக்கிறார். ஏனெனில் இவர் திபெத்தியச் சுதந்திர இயக்கத்தை வலிமையாக ஆதரிக்கிறார். மக்களின் குடியரசுச் சீனாவில் நுழைவதற்கு அவருக்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ரிச்சர்ட் சீன அரசாங்கத்தின் கண்டனத்திற்கு ஆளான பிறகு 1993 ஆம் ஆண்டில் அவர் அகாடமி விருது வழங்குநராக இருப்பதற்குத் தடை விதிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு செப்டம்பரில் ரிச்சர்ட், திபெத் சுதந்திரம் வழங்குவதற்கான சீனாவைக் கட்டாயப்படுத்துவதற்காக 2008 ஆம் ஆண்டின் பீஜிங் ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்தார். அவர் வணிக ரீதியான லான்சியா டெல்டா இடம்பெற்ற அரசியல் சார்ந்த கருப்பொருள் கொண்ட ப்ரோ-திபெத் லான்சியாவில் நடித்தார். ரிச்சர்ட் கெரெ சர்வைவல் இண்டர்நேசனலுக்கு ஆதரவு அளித்து வருகிறார். இது உலகம் முழுவதும் பழங்குடி மக்களின் உரிமைகள் மற்று நிலங்களைப் பாதுக்காப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். அவர் "வி ஆர் ஒன்: எ செலபிரேசன் ஆஃப் ட்ரைபல் பீப்பில்ஸ்" என்ற புத்தகத்திற்காக அவரது எழுத்துக்களை வழங்கி பங்களித்திருக்கிறார். அது 2009 ஆம் ஆண்டு அக்டோபரில் வெளியானது. இந்த புத்தகம் உலகம் முழுவதுமுள்ள மக்களின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தக்கூடியது ஆகும். அதில் வேற்றுமை மற்றும் அது சந்திக்கும் அச்சுறுத்தல்கள் ஆகிய இரண்டும் சித்தரிக்கப்பட்டிருந்தன. மற்ற பங்களிப்பாளர்களுக்கு மத்தியில் லாரன்ஸ் வான் டெர் போஸ்ட், நோம் சோம்ஸ்கி, கிளாடெ லெவி-ஸ்ட்ராஸ் போன்ற பல்வேறு மேற்கத்திய எழுத்தாளர்கள் மற்றும் டாவி கோபனாவா யானொமாமி மற்றும் ராய் செசானா போன்ற உள்நாட்டு மக்களும் இருப்பதைக் காணலாம். ரிச்சர்ட் கெரெ உலகின் பல கண்டங்களிலும் தொடர்ந்து நடைபெறும் இது போன்ற துயர் நிறைந்த கதைகளுக்கு எடுத்துக்காட்டாக ஜும்மாசின் திரிபுணர்ச்சிகள் மற்றும் நிலங்களை இழத்தல் போன்றவை பற்றிக் கூறியிருந்தார். அவர் அவர்களின் அமைதியான கலாச்சாரத்திற்கு எதிரான குற்றங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். மேலும் அவை இயல்பு மற்றும் நீடித்து வாழ்வதற்கான திறன் ஆகியவற்றுடன் எவ்வாறு நமது சொந்த வாழ்க்கையை பாதிக்கிறது என்றும் கூறியிருந்தார். இந்த புத்தகத்தின் விற்பனையில் இருந்து வரும் ஆதாயங்கள் உள்நாட்டுக்குரிய உரிமைகள் நிறுவனமான சர்வைவல் இண்டர்நேசனலுக்குச் செல்லும். ரிச்சர்ட் சூழ்நிலைக் காரணிகள் மற்றும் எயிட்ஸ் விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக பிரச்சாரம் மேற்கொள்கிறார். அவர் தற்போது ஹீலிங் த டிவைடுக்கான வாரிய இயக்குநராகப் பணியாற்றுகிறார். அமைதி, நியாயம் மற்றும் புரிதல் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான உலகளாவிய ஆர்வலர்களை ஆதரிக்கும் அமைப்பு ஆகும். அவர் எயிட்ஸ் கவனிப்பு இல்லம் நிறுவுவதற்கு உதவி இருக்கிறார். இது இந்தியாவில் எயிட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வாழ்வாதார வசதிகளைச் செய்துதரக்கூடிய அமைப்பு ஆகும். மேலும் இந்தியாவில் எயிட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கல்விக்கான ஆதரவுப் பிரச்சாரத்தையும் மேற்கொள்கிறார். 1999 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவில் பல்வேறு மனித நேயச் செயல்திட்டங்களை ஆதரிப்பதற்காக கெரெ ஃபவுண்டேசன் இந்தியாவை உருவாக்கியிருக்கிறார். ஏப்ரல் 15, 2007 அன்று ரிச்சர்ட், இந்தியாவில் உள்ள ஜெய்பூரில் நடைபெற்ற எயிட்ஸ் விழிப்புணர்வுப் பேரணியில் பங்கு பெற்றார். டிரக் ஓட்டுநர்களிடம் ஆணுறை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கான நேரடிச் செய்திக் கலந்தாய்வில் அவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷில்பா ஷெட்டியை விருப்பத்துடன் அணைத்து, அவரைச் சாய்த்து அவரது கன்னத்தில் பலமுறை முத்தம் கொடுத்தார். அந்தச் சைகையின் விளைவாக உள்ளூர் நீதிமன்றம் "பொது இழிவு" சட்ட மீறல் விதிகளின் படி ரிச்சர்ட் மற்றும் ஷில்பா ஷெட்டி இருவரையும் கைது செய்ய உத்தரவிட்டது. உடனடியாக அவரது நாட்டுக்குத் திரும்பிய ரிச்சர்ட் இந்த சர்ச்சை குறித்து "சிறிது கடுமையாக, அரசியல் கட்சியால் இது பெரிதுபடுத்தப்படுகிறது" என்றார். சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு இந்திய தலைமை நீதிபதி கேஜி பாலகிருஷ்ணன் தலைமையிலான இரண்டு-நீதிபதிகள் அடங்கிய குழு, இந்த வழக்கு "அற்பமானது" மற்றும் (பிரபலங்களுக்கு எதிரான) இது போன்ற குற்றச்சாட்டுகள் "மலிவான விளம்பரத்திற்காக" தொடுக்கப்படுகின்றன. மேலும் அவை நாட்டிற்குக் கெட்ட பெயரை விளைவிக்க கூடியவையாக அமையும் என்று நம்புவதாகவும் விவரித்திருந்தனர். அவர்கள் "ரிச்சர்ட் கெரெ சுதந்திரமாக நாட்டிற்குள் நுழையலாம். இந்த விசயம் இத்தோடு முடிந்தது" என்று தீர்ப்பு கூறியிருந்தனர். 2008 ஆம் ஆண்டு ஜூனில் ரிச்சர்ட் ஐரோப்பிய சந்தைகளுக்கான ஃபியட் விளம்பரத்தில் தோன்றினார். அதில் புதிய லான்சியா டெல்டாவை ஹாலிவுட்டிலிருந்து திபெத்துக்கு ஓட்டினார். இந்த விளம்பரம் "நியூ லான்சியா டெல்டா: த பவர் டு பெ டிஃப்ரண்ட்" என்ற டேக்லைனுடன் முடிந்தது. இந்த விளம்பரம் சீன செய்தித் தாள்களில் இடம்பெற்றது. மேலும் ஃபியட் சீனாவிடன் வருத்தம் தெரிவித்தது. ஃபியட் நிறுவனம் அந்த விளம்பரம் சர்ச்சைக்குக் காரணமாக இருக்கும் என முன்னரே உணர்ந்திருக்கும். எனினும் இதனால் ஏற்படும் நன்மையை அடையவே இவ்வாறு செய்திருக்கலாம் என வணிகச்சின்ன வல்லுநர் ஜான் டாண்டில்லொ வாதிடுகிறார். ரசல் பீட்டர்சு ரசல் டோமினிக் பீட்டர்சு (பிறப்பு செப்டம்பர் 29, 1970) ஒரு கனடா நாட்டு ஸ்டாண்ட்-அப் (மேடையில் சமயத்திற்கு தக்கவாறு உடனடியாக நகைச்சுவை சொல்லல்) நகைச்சுவையாளர் மற்றும் நடிகர். ரசல் பீட்டர்சு, ஓன்டாரியோ, டொராண்டோவில், எரிக் மற்றும் மௌரீன் பீட்டர்சுக்குப் பிறந்தார், அவர் பிராம்டனில் வளர்க்கப்பட்டார். அவர்கள் ஆங்கிலோ-இந்திய வம்சத்தினர். அவருடைய தந்தை இந்தியாவின், மும்பையில் பிறந்து ஒரு அரச இறைச்சிக்கடை கண்காணிப்பாளராகப் பணியாற்றினார், அவருடைய தாய் இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தார். அவருக்கு கிளேய்டன் என்னும் பெயருடைய அண்ணன் இருக்கிறார், இவரும் கொல்கத்தாவில் பிறந்தவர். அவர் மழலையர் பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை பிராம்ப்டனில் உள்ள சார்ச்செசு வேனியர் கத்தோலிக்க தொடக்கப் பள்ளியிலும், 9-12 வகுப்புகளுக்கு நார்த் பீல் மேனிலைப் பள்ளிக்கும் சென்றார். பீட்டர்சு 1989 ஆம் ஆண்டில், ஒன்டாரியோவின் டொரான்டோவில் நிகழ்ச்சியைத் நடத்தத் தொடங்கினார். அது முதல் அவர் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆத்திரேலியா, சீனா, ஹாங்காங், சிங்கப்பூர், டென்மார்க், தென் ஆப்பிரிக்கா, தி கரிபியன், வியத்நாம், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், இலங்கை, சுவீடன், இந்தியா, ஐக்கிய அரபிய எமிரைட்ஸ், பஹரெய்ன், ஜோர்டான், லெபனான் மற்றும் ட்ரினிடாட் உள்ளிட்ட நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தினார். அவர் நான்கு ஜெமினி விருதுகளுக்கும், "ஹெல்ப் மேனேஜ்மண்ட் சர்வீசஸ்" கனடா தொலைக்காட்சி விருதுகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டு நகைச்சுவை விருதுகளுக்கான சிறந்த ஆண் நகைச்சுவையாளராகவும் கூட அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மொன்ரியலின் ஜஸ்ட் ஃபார் லாஃப்ஸ் (Juste Pour Rire) காமெடி ஃபெஸ்டிவல், தி வின்னிபெக் காமெடி ஃபெஸ்டிவல் மற்றும் எடின்பர்க் ஃபெஸ்டிவல் போன்ற நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். கனடா தின நகைச்சுவைத் திருவிழா 2006 ஐ அவர் நடத்தினார். அவருடைய நகைச்சுவை சிறப்பு நிகழ்ச்சி"Russell Peters: Outsourced" , ஆகஸ்ட் 16, 2006 அன்று, காமெடி சென்ட்ரலில் ஒளிபரப்பானது. அதன் டிவிடி பதிப்பு அவருடைய தணிக்கை செய்யப்படாத நிகழ்ச்சியைக் கொண்டிருந்தது. அந்த டிவிடி மிகவும் பிரபலமடைந்தது, குறிப்பாக கனடாவில் இது 100,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. "அவுட்சோர்ஸ்ட்" அதன் வெளியீட்டிற்குப் பின்னர் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய டிவிடி பட்டியலில் இருந்து வந்தது. பீட்டர்சின் டிவிடி/சிடி காம்போ"Russell Peters: Red, White, and Brown" , மாடிசன் ஸ்கொயர் கார்டனின் WAMU தியேட்டரில் பிப்ரவரி 2, 2008 அன்று பதிவு செய்யப்பட்டது. பீட்டர்சு மற்றும் அவருடைய சகோதரர், "ரெட், வைட் அண்ட் ப்ரௌன்" -க்கு நிதிஅளித்து சுயமாக தயாரித்தனர். பீட்டர்சு தற்சமயம் சிபிசி ரேடியோ ஒன்னில் "மான்ஸூன் ஹவுஸ்", என்னும் வானொலி சூழ்நிலை நகைச்சுவைத் தொடரைத் தயாரித்து நடிக்கவும் செய்கிறார். ஜூன் 2008 மற்றும் ஜூன் 2009 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், பீட்டர்ஸ் $10 மில்லியன் சம்பாதித்தார், இது அந்த நேரத்திய பன்னிரண்டு மாத காலத்தில் மிக அதிகமாகப் பணம் பெறும் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக அவரை ஆக்கியது. செப்டம்பர் 2007 ஆம் ஆண்டில், கனடாவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு புதிய சிட்காம்-ஐ உருவாக்குவதற்கு ஃபாக்சுடன் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டது உறுதிசெய்யப்பட்டது."ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னுடைய குடும்பம் எங்கிருந்தது என்பதற்கான ஒரு புகைப்படம் இது" என்று பீட்டர்சு சொல்கிறார். மேலும், சிட்காம், "நகைச்சுவையாகவும் நேர்மையான ஒன்றாகவும் இருக்கும்" என்றும் அவர் உறுதியளிக்கிறார். வில்மெர் வால்டெர்ராமா மற்றும் மாய்ரா வெரோனிகா உடன் இணைந்து பீட்டர்சு, நவம்பர் 2007 ஆம் ஆண்டில் ஈராக், ஆப்கானிஸ்தான், ஜெர்மனி, ஆப்பிரிக்கா மற்றும் கிரீன்லாண்ட் நாடுகளின் யூஎஸ்ஓ பயணத்தில் பங்கேற்றார். ஏப்ரல் 6, 2008 அன்று கல்காரியில் நடைபெற்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளின் 2008 ஜூனோ விருதுகளைப் பீட்டர்சு வழங்கினார், இதற்காக அவர் "பல்வேறு நிகழ்ச்சிகள் அல்லது தொடரில் சிறந்த நடிப்பு அல்லது வழங்குநர்"க்காக ஜெமினி விருதினைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டு விருதுகள் ஒளிபரப்பு அந்த நிகழ்ச்சிக்கு என்றுமே கிடைக்காத அளவுக்கு இரண்டாவது மிகஅதிக ரேட்டிங்கைப் பெற்றது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2009 ஜூனோ விருதுகள் நிகழ்ச்சியை வழங்குமாறு பீட்டர்சு கேட்டுக்கொள்ளப்பட்டார். 2009 ஜூனோ விருதுகள் மார்ச் 29, 2009 அன்று வன்குவரில் நடைபெற்றது. பீட்டர்சின் சமீபத்திய டிவிடி/விசிடி "Russell Peters: Red, White, and Brown" என்றழைக்கப்பட்டது. அது கனடாவில் செப்டம்பர் 2008 ஆம் ஆண்டிலும், அமெரிக்காவில் ஜனவரி 27, 2009 அன்றும் வெளியிடப்பட்டது. பீட்டர்சு இந்த டிவிடியை தன்னுடைய சகோதரரும் நிர்வாகியுமான கிளேய்டன் பீட்டர்சுடன் இணைந்து வெளியிட்டார். பீட்டர்சு சில திரைப்படங்களிலும் கூட தோன்றியுள்ளார், மிகச் சமீபத்தில் தோன்றியது "சீனியர் ஸ்கிப் டே", உடன் நடித்திருந்தவர்கள் லாரி மில்லர், தாரா ரீட் மற்றும் காரி லுண்டி. இது தவிர பீட்டர்ஸ் சிறு தோற்றங்களில் கூட நடித்துள்ளார், அவற்றுள் 1994 ஆம் ஆண்டுத் திரைப்படம் "பூஸ்கேன்"-இல் ஸ்நேக்கின் நண்பராக, 1999 ஆம் ஆண்டு திரைப்படம் "டைகர் கிளாஸ் III" துப்பறிவாளர் எலியட்டாக, 1999 ஆம் ஆண்டுத் திரைப்படம் "அனலைஸ் திஸ்", 2004 ஆம் ஆண்டுத் திரைப்படம் "மை பேபிஸ் டாடி" யில் மகப்பேறு மருத்துவராக, 2006 ஆம் ஆண்டுத் திரைப்படத்தில் "குவார்டர் லைஃப் கிரைசிஸ்"-இல் திலிப் குமாராக, 2007 ஆம் ஆண்டுத் திரைப்படம் "தி டேக்" கில் டாக்டர் சர்மாவாக மற்றும் 2008 ஆம் ஆண்டுத் திரைப்படம் "சீனியர் ஸ்கிப் டே" வில் அங்கிள் டாட்டாகத் தோன்றினார். மேலும் வரவிருக்கும் இரு திரைப்படங்களில் தோன்றியிருப்பதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. "நேஷனல் லம்பூன்ஸ் தி லிஜண்ட் ஆஃப் ஏவ்சம்மஸ்ட் மேக்சிமஸ்"-இல் "பெர்வியஸ்" ஆக நடிக்கவிருக்கிறார். பீட்டர்சின் புகழ் பல்வேறு நாடுகளிலும் பரவியிருக்கிறது கனடாவில், டோரோன்டோவின் ஏர் கனடா சென்டர்வில் நுழைவுச்சீட்டுகள் அனைத்தையும் விற்றுமுடித்த முதல் நகைச்சுவையாளராக ஆனார் பீட்டர்ஸ், ஒற்றை நிகழ்ச்சிக்கு இரண்டே நாட்களில் 15,000 க்கும் மேற்பட்ட டிக்கட்டுகளை விற்றார். இரண்டு நாள் விற்பனை காலத்தில் நாடுமுழுவதிலும் 30,000 டிக்கட்டுகளுக்கும் மேல் விற்றார். ஆறு நகரங்களில் ஒட்டுமொத்தமாக 60,000 க்கும் மேற்பட்ட டிக்கட்டுகள் விற்பனை ஆனது. இராமாயணம் (தொலைக்காட்சித் தொடர்) "இராமாயணம்" பெரும் வெற்றியடைந்த இந்தியத் தொலைக்காட்சித் தொடராகும். இத்தொடர் இராமனாந்த சாகரால் எழுதி இயக்கப்பட்டது. ஜனவரி 25, 1987 முதல் ஜூலை 31, 1988 வரை தூர்தர்ஷனில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு ஒளிபரப்பப்பட்டது. இந்து சமயத் தொடர்புள்ள காவியமான இராமாயணத்தின் தொலைக்காட்சித் தழுவலே இத்தொடராகும். வால்மீகியின் "இராமாயணம்" மற்றும் துளசிதாசரின்' "இராம்சரித்மனசை" முதன்மையாகக் கொண்டு இத்தொடர் எடுக்கப்பட்டது. இதில் கம்பரின் "கம்ப ராமாயணத்திலிருத்தும்" சில பகுதிகள் சிறிதளவு சேர்க்கப்பட்டுள்ளன. 1986 ஆம் ஆண்டில் இராமனாத் சாகரின் தொலைக்காட்சித் தொடர் "விக்ரம் ஆர் பீட்டல்" ஒரளவு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இராமனாத் சாகர் தூர்தர்சனின் செயற்குழுவினரைச் சந்தித்து "இராமாயணத்தின்" தொலைக்காட்சித் தொடர் பதிப்பைத் தயாரிக்கும் விருப்பத்தைப் பற்றிக் கூறினார். இத்தொடர் சாகரின் வாழ்நாள் கனவாக இருந்தது. துவக்கத்தில் இந்த யோசனை நிராகரிக்கப்பட்டு பிறகு இதற்கு புத்துயிர் அளிக்கப்பட்டாலும், இது போன்ற தொலைக்காட்சித் தொடர்கள் இன உணர்ச்சியைத் தூண்டலாம் என்ற எண்ணத்தின் காரணமாகத் தாமதிக்கப்பட்டது. இறுதியாக இத்தொடர் 52 எபிசோடுகள் தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டது (இத்தொடருக்கு பேரளவிலான மக்களின் ஆதரவின் விளைவாக இரண்டு முறை இதன் எபிசோடுகள் நீட்டிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் 13 எபிசோடுகள் மூலம் நீட்டிக்கப்பட்டு மொத்தமாக 78 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டன). மேலும் இதற்காகத் தொலைக்காட்சியை மக்கள் குறைவாகப் பார்க்கும் நேரமான ஞாயிற்றுக் கிழமை காலை 9:30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டது ஒவ்வொரு எபிசோடுக்கும் சாகருக்கு இந்திய உரூபாயில் 1,00,000 ஐ தூர்தர்சன் கொடுத்தது. "இராமாயணத்தின்" ஒளிபரப்பு தொடங்கிய போது இத்தொடர் மிகப்பெரிய அளவில் மக்களிடம் பிரபலமடைந்து 10 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைப் பெற்றது. முதலில் குறைவான நபர்களே பார்த்தாலும், இத்தொடருக்கான மக்களின் ஆதரவு ஒரு சமயத்தில் இந்தியா முழுவதும் வளர்ச்சிபெற்றது. இத்தொடருக்கு கிடைத்த மக்கள் ஆதரவு பற்றிக் குறிப்பிடும் போது "இந்தியா டுடே" செய்திப் பத்திரிகையானது ""இராமயணக் காய்ச்சல்"" எனப் பட்டப்பெயர் அளித்தது. (இந்து மற்றும் இந்து அல்லாத) சமய தொடர்புள்ள சேவைகளானது இந்நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு இணங்கிப் போவதற்காக மறு திட்டமிடப்பட்டன; இரயில்கள், பேருந்துகள் மற்றும் உள்ளூர் புகைவண்டிகள் இந்த நிகழ்ச்சி நடக்கும் போது நிறுத்தப்பட்டன; மேலும் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் இந்நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஒரு தொலைக்காட்சிப் பெட்டி இருக்கும் இடத்தில் கூடினர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இத்தொடர் குறித்து குறிப்பிடுகையில், ""இராமாயணம்" தொடரானது இலட்சக்கணக்கான பார்வையாளர்களின் கற்பனைகளைத் தூண்டியுள்ளது" எனக் குறிப்பிட்டார். இந்தியத் திரைப்படங்களில் சமயத்தொடர்புள்ள கருப்பொருள்களைக் கொண்ட திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டிருந்த போதும் "இராமாயணம்" சமயத்தொடர்புள்ள கதைகளைச் சார்ந்து எடுக்கப்பட்ட முதல் இந்திய தொலைக்காட்சித் தொடராக விளங்குகிறது. மேலும் பல பிற சமயத்தொடர்புள்ள தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்படுவதற்கு ஊக்கமூட்டுவதாகவும் அமைந்தது. எடுத்துக்காட்டாக பீ. ஆர். சோப்ராவின் "மகாபாரதம்" மற்றும் "விஷ்வாமித்ரா", "புத்தா" மற்றும் சாகரின் "லவ குசா" மற்றும் "கிருஷ்ணா" போன்ற தொடர்கள் உருவாவதற்கு காரணமாக அமைந்தது. வேகமற்ற இசை, தொடர்பற்ற திரைக்கதை மற்றும் மோசமான தயாரிப்புத் தரத்தோடு இருப்பதால் துவக்கத்தில் இந்தத் தொடரை, நகர்சார்ந்த இந்திய மற்றும் மேற்கத்திய திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்தனர். இத்தொடருக்கு மக்களின் ஆதரவு பெருகியதில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான தொடராக (அந்த நேரத்தில்) இராமாயணம் மாறியது. எனவே பல விமர்சகர்கள் இந்தியப் பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியும் இந்தியத் தொலைக்காட்சிகளில் கலந்துரையாடல்களை நிகழ்த்தியும், மக்களின் ஆர்வத்தை இவ்வளவு தூரம் பெறுவதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தனர். இராமாயணம் ஒளிபரப்பப்பட்ட நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக விரைவிலேயே பெயர்பெற்றது. அதற்குப்பின், மறுஒளிபரப்பு மற்றும் வீடியோ தயாரிப்புகள் வழியாக இராமாயணம் மீண்டும் மக்களின் ஆதரவை பெற்றது. மேலும் 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை உலகில் "அதிகமாகப் பார்க்கப்பட்ட புராணத் தொடராக" லிம்கா புத்தகப் பதிவுகளில் சேர்க்கப்பட்டது." "' இத்தொடர் நிறைவுபெற்ற சிலவாரங்களில் துணைத்தயாரிப்பான "உத்தர் இராமாயணம்" (பின்னர் "லவ குசா" என பெயர் மாற்றம் செய்யப்பட்டது) தூர்தர்சனில் ஒளிபரப்பப்பட்டது. இது இராமரின் முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து வரும் நிகழ்வுகளினுள் கதையாகும்; "இராமாயணத்தின்" தயாரிப்பு குழு மற்றும் "இராமயணத்" தொடரில் நடித்த அதே நடிகர்களுடன் உருவாக்கப்பட்டது. 2008 ஆம் ஆண்டில் சாகர் ஆர்ட்சின் மூலம் தயாரிக்கப்பட்ட "இராமாயணத்தின்" மறுதயாரிப்பானது என்.டி.டி.வி இமேசினில்(NDTV Imagine) ஒளிபரப்பப்பட்டது. மம்தா குல்கர்னி மம்தா முகந்த் குல்கர்னி (மராத்தி: ममता कुलकर्णी), 20 ஏப்ரல் 1972 அன்று பிறந்தார்) மும்பையைச் சேர்ந்த ஒரு முன்னாள் பாலிவுட் நடிகையாவார். இந்தியாவில் உள்ள மும்பை மாநகரில் மம்தா குல்கர்னி பிறந்தார். ஒரு நிழற்படத்திற்காக மேலாடையின்றி (ஆனால் அவரது கைகள் மார்பகங்களின் குறுக்கே இருக்கும்படி) தோன்றிய பிறகு மம்தா புகழ் பெற்றார். 1993 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பிரபலமான இந்திய சினிமா பத்திரிகையான ஸ்டார்டஸ்டின் மேலட்டையில் அந்த நிழற்படம் இடம்பெற்றது. இதனால் இந்தியாவின் ஒழுக்கமீறல் விதிகளின் கீழ் அவர் குற்றஞ்சாட்டப்பட்டார், பழமையை விரும்பும் சமய அமைப்புகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் என இரு பக்கங்களில் இருந்தும் அவர் தாக்குதல்களுக்கு உள்ளானார். அந்த நிறழ்படத்தில் தோன்றியதற்காக கபடதாரிகள் என அழைக்கப்படும் கண்டனக்காரர்களின் தாக்குதலுக்கும் ஆளானார். முடிவாக 2000 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மம்தா குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு ரூ. 15,000 அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனினும் இது மற்றொரு சர்ச்சைக்கு வழிவகுத்தது. அவர் புகைப்படக்காரர்களைத் தவிர்ப்பதற்கு நீதிமன்றத்திற்குப் புர்காவில் வந்திருந்தார். இது உள்ளூர் இஸ்லாமிய சமுதாயத்திடம் இருந்து கண்டனங்களும் மரண அச்சுறுத்தல்களுக்கும் வழிவகுத்தது. அதே நேரத்தில் தொடர்ந்து அவரைப் பல சர்ச்சைகள் பின்தொடர்ந்தன. 1997 ஆம் ஆண்டில் பீகாரில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் மூலம் ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்குபெற்றதற்காக மம்தாவுக்கு ஒரு பெரியத் தொகை அளிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்த சட்டமன்ற உறுப்பினர் கால்நடைத் தீவன முறைகேடு வழக்கினுள் விசாரணைகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மம்தா விசாரணை செய்யப்பட்டார். ஆனால் சட்டமன்ற உறுப்பினரின் முந்தைய நிகழ்ச்சிகளின் எந்த அனுபவத்தையும் அவர் மறுத்துரைத்தார். தமிழ் திரைப்படம் "நண்பர்கள்" வழியாக மம்தா அறிமுகமானார். இத்திரைப்படம் "மேரா தில் தேரே லியே" என்ற பெயரில் இந்தியில் வெளியிடப்பட்டது, "எஸ். ஏ. சந்திரசேகர்" இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். 1992 ஆம் ஆண்டு திரைப்படம் திரங்கா மூலமாக பாலிவுட்டில் மம்தா அறிமுகமானார். 1993 ஆம் ஆண்டில் "ஆஷிக் அவாரா"வில் மம்தா நடித்தார். இதன் மூலம் அவர் ஃபிலிம்பேர் லக்ஸ் அறிமுக நடிகை விருதை வென்றார். "வாக்ட் ஹமாரா ஹை" (1993), "கிரந்திவீர்" (1994), "கரண் அர்ஜூன்" (1995), "சப்சே படா கில்லாடி" (1995) மற்றும் "Ghatak: Lethal" (1995) போன்ற திரைப்படங்களிலும் அவர் நடித்தார். இவையனைத்தும் பாக்ஸ் ஆபீஸில் நன்கு வரவேற்பைப் பெற்றது. எனினும் பெரும்பாலான அவரது பாத்திரங்கள், திரைப்படத்தின் முன்னணி மனிதரின் மேல் காதல் ஆர்வமுடன் ஈடுபட்டுருப்பதைப் போலவே இருந்தது அல்லது கவர்ச்சியான பாடல் மற்றும் நடன காட்சிகளில் தோன்றினார். ராஜ்குமார் சந்தோஷியின் முந்தையப் படமான "கட்டாக்: லெத்தலில்" (1996) மம்தா கேமியோப் பாத்திரத்தில் தோன்றிய போது இந்நிலை மாறியது. "செவன் சாமுராயின்" வரவேற்பைப் பெற்ற மறுதயாரிப்பான 1998 ஆம் ஆண்டு திரைப்படம் "சைனா கேட்"டில் முன்னணி நடிகையாக மம்தா நடித்தார். இதன் மூலம் கவர்ச்சியற்ற பாத்திரமாக இந்தி சினிமாவின் சில மிகச்சிறந்த நடிகர்களின் திரைப்படங்களில் அவரால் பங்கேற்க முடிந்தது. இதன் மூலம் அவரது நடிப்புத் திறமை வெளிக்காட்டுவதற்கு ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றார். ஒருசமயத்தில் சந்தோஷிக்கும் மம்தாவுக்கும் இடையேயான உறவுமுறை பிளவுபட்டது. இதனால் இத்திரைப்படத்தில் இருந்து மம்தா கைவிடப்பட்டார் என்ற புரளிகள் சுழலத் தொடங்கின. கேங்க்ஸ்டர் சோட்டா ராஜன் அவரின் மேல் ஆர்வம் காட்டியபிறகு மட்டுமே நிலைமை பழையபடிக்குத் திரும்பியது. இறுதியாக இத்திரைப்படம் வெளியானபோது, ஒரு பெரிய தோல்வியை இது சந்தித்தது. மம்தா ஐட்டம் நம்பரில் பெயர் பெற்றிருந்த போதும், இத்திரைப்படத்தில் இருந்து ஒரே பாடலான ஐட்டம் நம்பர் "சம்மா சம்மா" , ஊர்மிளா மடோன்கரைக் கொண்டு படமாக்கப்பட்டிருந்தது. இந்த இழிவைக் கூட்டும் வகையில், இப்பாடல் சார்ட்பஸ்டரிலும் பங்கேற்றது. மேலும் பஸ் லஹார்மனின் "மவுலின் ராக்!" கிலும் கூடப் பயன்படுத்தப்பட்டது, இதன் மூலம் ஊர்மிலாவின் புகழ் வெகுவாக வளர்ச்சியடைந்தது. இந்த நிகழ்ச்சிகளின் மூலம் கோபமுற்று, சந்தோஷிக்கு தாக்குதல் நடத்தினார். மம்தா, சந்தோஷியின் முன்பணங்களை ஏற்க மறுத்ததால் மம்தா வரும் காட்சி நேரங்களை சந்தோஷி குறைத்து விட்டதாக அவர் மேல் குற்றம் சாட்டினார். இத்திரைப்படத்தைப் பற்றிய அனைத்து புரளிகளையும் சந்தோஷி மறுத்தார். மேலும் இந்த விஷயம் சத்தமின்றி மூடிமறைக்கப்பட்டது. எனினும், இதன் காரணமாக மம்தாவின் தொழில் வாழ்க்கையில் சரிவு ஏற்பட்டது. பிறகு மம்தா சில திரைப்படங்களில் மட்டுமே தோன்றினார். புதிய வாய்ப்புகளும் குறைந்து விட்டன. 2002 ஆம் ஆண்டு திரைப்படம் "கபி தும் கபி ஹம்"மில் அவர் தோன்றிய பிறகு திரைப்படங்களை விட்டு மம்தா விலகினார். பிறகு அவர் ஒரு NRI ஐத் திருமணம் முடித்த பிறகு நியூயார்க்கிற்கு சென்றுவிட்டார். தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் மம்தா நடித்துள்ளார். மம்தா குல்கர்னி தற்போது நியூயார்க்கில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். உள்ளீட்டுக் கருவி உள்ளீட்டுக் கருவி என்பது தகவல் செயல்பாட்டு அமைப்புக்கு (கணினி போன்றவை) தரவு மற்றும் கட்டுப்பாட்டு சமிக்ஞைகள் வழங்குவதற்கு பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் (கணினி வன்பொருள் உபகரணங்களின் ஒரு பகுதி) ஆகும். ஸ்கேனர் அல்லது 6DOF கட்டுப்படுத்தியாக கணினிக்கு இடையே வன்பொருள் இடைமுகத்தை உள்ளீட்டு மற்றும் வெளியீட்டுக் கருவிகள் உருவாக்குகின்றன. உள்ளீட்டுக் கருவிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: வெளியில் குறியிடத்தைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் உள்ளீட்டுக் கருவிகளான சுட்டுக் கருவிகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: நேரடி உள்ளீடு கிட்டத்தட்ட தவிர்க்க இயலாமல் பூர்த்தியானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மறைமுக உள்ளீடு பூர்த்தியானதாகவோ அல்லது தொடர்புடையதாகவோ இருக்கலாம். எடுத்துக்காட்டாக, டிஜிட்டைஸ் செய்யப்பட்ட கிராபிக்ஸ் டேப்லட்டுகள், மறைமுகமான உள்ளீடு மற்றும் உணர் பூர்த்தியான குறியிடங்கள் தொடர்புடைய பதிக்கப்பட்ட திரையைக் கொண்டிருக்காது. மேலும் அவைப் பொதுவாக பூர்த்தியான உள்ளீட்டு முறையில் இயக்கப்படுகிறது. ஆனால் அவை தொடர்புடைய உள்ளீட்டு முறையிலும் உருவகப்படுத்தலாம். இந்த முறையில் ஸ்டைலஸ் அல்லது பக்கைத் தூக்க வேண்டும் மற்றும் இடம் மாற்ற வேண்டும். 'விசைப்பலகை' என்பது ஒரு மனித இடைமுகக் கருவி ஆகும். இது பொத்தான்களின் அமைவாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒவ்வொரு பொத்தானும் அல்லது விசையும் கணினிக்கு உள்ளீட்டு மொழி சார்ந்த தனிக்குறியீட்டிற்காகவோ அல்லது கணினியின் குறிப்பிட்ட செயல்பாட்டை அழைப்பதற்காகவோ பயன்படுத்தப்படலாம். வழக்கமான விசைப்பலகைகளில் ஸ்பிரிங்-சார்ந்த பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும். எனினும் புதிய மாறுபாடுகள் மெய்நிகர் விசைகள் கொண்டவையாக இருக்கின்றன அல்லது ஒளிவிழும் விசைப்பலகைகளாகவும் கூட இருக்கின்றன. விசைப்பலகைகளின் வகைகளுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு: சுட்டுதல் கருவி என்பது கணினிக்கு உள்ளீட்டு இடம் சார் தரவுக்கு பயனரை அனுமதிக்கும் ஒரு மனித இடைமுகக் கருவியாகும். சுட்டி மற்றும் தொடுதிரைகளில் இது பொதுவாக இயக்கவியல் புறப்பரப்பில் குறுக்கும் நெடுக்குமாக இயக்கங்களைக் கண்டறிவதை செய்கின்றது. 3D சுட்டி, ஜாய் ஸ்டிக்குகள் அல்லது சுட்டுதல் குச்சிகள் போன்ற அனலாக் கருவிகள் அவற்றின் விலக்கலின் கோணத்தைச் சார்ந்து செயல்படுகின்றன. சுட்டுதல் கருவிகள் இயக்கங்கள் கர்சரின் இயக்கங்களின் மூலமாகத் திரையில் பிரதிபலிக்கும். இது கணினியின் GUI இல் வழிநடத்துவதற்கு எளிமையான நேரடி முறையை உருவாக்குகிறது. சில கருவிகள் பல தொடர் கட்டின்மையளவை உள்ளீடாக அனுமதிக்கின்றன. இவைச் சுட்டுதல் கருவிகளாகப் பயன்படுத்தப்படலாம். ஆனால் இவை 3D பயன்பாடுகளில் கேமரா கோணத்தைக் கட்டுப்படுத்துதல் போன்ற வெளியில் இடத்துக்கு குறியிடப்படாததுடன் தொடர்பற்ற வழிகளில் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகை கருவிகள், ரிஜிஸ்ட்டர்கள் 6DOF தேவைப்படும் உள்ளிடப்படும் CAVEகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. பொத்தான்கள் மற்றும் ஜாய்ஸ்டிக்குகள் போன்ற உள்ளிட்டுக் கருவிகள், ஒற்றைப் பொருள் சார்ந்த கருவியுடன் இணைக்கப்பட்டிருக்கலாம், அது தொகுப்புக்கருவி எனப்படுகிறது. பல விளையாட்டுக் கருவிகள் இது போன்ற கட்டுப்படுத்திகளைக் கொண்டிருக்கின்றன. டிராக் இயக்கங்கள் மற்றும் கிளிக் செய்வதற்கான பொத்தான்கள் ஆகிய இரண்டையும் கொண்டிருப்பதால் சுட்டிகள் தொழில்நுட்ப ரீதியாகத் தொகுப்புக் கருவிகள் ஆகும். ஆனால் தொகுப்புக் கருவிகள் பொதுவாக உள்ளீட்டின் இரண்டிற்கு மேற்பட்ட வடிவங்களைக் கொண்டவையாகக் கருதப்படுகின்றன. வீடியோ உள்ளீட்டுக் கருவிகள் கணினியினுள் வெளியில் இருந்து உருவப்படங்களை அல்லது வீடியோவை டிஜிடைஸ் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. தகவலானது பயனரின் தேவையைச் சார்ந்து பல்வேறு வடிவங்களில் சேமிக்கப்படலாம். மருத்துவ உருவப்படங்கள் வீடியோ கருவிகள், ஆடியோகருவிகள் படம் பிடிப்பதற்கோ அல்லது ஒலியை உருவாக்குவதற்கோ பயன்படுத்தப்படுகின்றன. சில நிகழ்வுகளில், ஒரு ஆடியோ வெளியீட்டுக் கருவியானது உருவாக்கப்பட்ட ஒலியை உட்கிரகிப்பதற்காக ஒரு ஆடியோ உள்ளீட்டுக் கருவியாகச் செயல்படுகிறது. சுஷ்மிதா சென் சுஷ்மிதா சென் (ஹிந்தியில்: सुष्मिता सेन ; 19 நவம்பர் 1975 அன்று இந்தியாவின், ஐதராபாத்) நகரில் பிறந்தார். நடிகையான இவர், பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்துள்ளார். முன்னாள் பிரபஞ்ச அழகியான இவர், பிரபஞ்ச அழகி 1994 பட்டம் வென்றவர். பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையையையும் பெற்றவர். சென், பெங்காலி இந்துக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஷுபீர் சென் ஒரு முன்னாள் இந்திய விமானப் படை விங் கமாண்டர். தாயார் சுப்ரா சென் ஒரு ஃபேஷன் கலைஞராகவும் நகை வடிவமைப்பாளராகவும் இருந்துள்ளார். சென்னுக்கு ராஜீவ் சென் என்ற சகோதரரும், நீலம் சென் என்ற சகோதரியும் உள்ளனர். சென், ஐதராபாத்தில் உள்ள புனித தெரசா மருத்துவமனையில் பிறந்து, புதுடில்லியில் வளர்ந்தார். விமானப்படை பொன்விழா கல்வி மையத்தில் கல்வி பயின்றார். புதுடில்லியில் உள்ள மைத்ரேயி கல்லூரியில் பட்டம் பெற்றார். 2000ம் ஆண்டில், ரெனீ என்ற பெண் குழந்தையை தத்தெடுத்தார். அதன் பின் ஜனவரி 13, 2010 அன்று அலிசா என்ற மூன்று மாத பெண் குழந்தையை தத்தெடுத்தார். 1994ம் ஆண்டு, தனது பதினெட்டாவது வயதில், பெமினா மிஸ் இந்தியா பட்டத்தை சுஷ்மிதா வென்றார், இப்போட்டியில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். 1994ம் ஆண்டு நடந்த பிரபஞ்ச அழகி காட்சிப் போட்டி பிலிப்பீன்சின் மணிலா நகரில் நடந்தபோது, அதில் பங்குகொண்டு வெற்றிபெற்றார். பிரபஞ்ச அழகி போட்டியின் போது, தகுதிச் சுற்றுகள் அனைத்திலும் சுஷ்மிதா மூன்றாவது இடத்தைப் பிடித்தார், தகுதிச் சுற்றுகளில் முதலிடத்தை கொலம்பியாவின் கரோலினா கோமெஸ் பிடித்தார், இரண்டாம் இடத்தை மிஸ் கிரீஸ் அழகி ரீ டோடோன்ஸீ பிடித்ததுடன், நீச்சலுடை மற்றும் மாலை நேர உடைப் போட்டிகளில் வென்றார். நீச்சலுடை, நேர்காணல் மற்றும் மாலை நேர உடை அரையிறுதிப் போட்டிக்களில் முறையே இரண்டாவது, ஐந்தாவது மற்றும் மூன்றாவது இடங்களை சுஷ்மிதா பிடித்தார், இப்போட்டிகளில் மிஸ் கொலம்பியா மற்றும் மிஸ் வெனிசுலா அழகி மினோகா மெர்காடோவுக்கு அடுத்த இடத்தில் சுஷ்மிதா இருந்தார். இந்த மூன்று போட்டியாளர்களும் இறுதி மூன்று போட்டியாளர்களாக தேர்வாகினர். முடிவில், நடுவர்கள் தங்கள் வாக்குகளை சுஷ்மிதாவுக்கு அளித்து, இந்தியாவிலிருந்து பிரபஞ்ச அழகி பட்டத்தை வெல்லும் முதல் பெண் என்ற பெருமையை அளித்தனர். பிரபஞ்ச அழகி பட்டம் வென்றதும், சுஷ்மிதா நடிகையாக மாறினார். இவரது முதல் படமான "தஸ்தக்" , 1996ம் ஆண்டு வெளியானது, அப்படத்தில் நன்றாக நடித்திருந்தும், படம் சரியாக ஓடவில்லை. அதே நேரத்தில் இவர் நடித்த தமிழ்ப் படமான "ரட்சகன்" , மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆயினும், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் ரூபாலி என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்த, டேவிட் தவான்இயக்கத்தில் உருவான "பிவி நம்பர் 1" திரைப்படம் நல்ல பெயரைத் தந்ததுடன், ஃபிலிம்பேர் சிறந்த குணச்சித்திர நடிகை விருதை 1999ம் ஆண்டு பெற்றுத் தந்தது. பிவி நம்பர் 1, 1999ம் ஆண்டு அதிக வசூலை அளித்த திரைப்படம். அதே ஆண்டு, "சிர்ஃப் தும்" திரைப்படத்தில் நடித்ததற்காக, அதே விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு, விருதை வென்றார். இவர் நடித்த ஆங்கேன் திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இத்திரைப்படத்தின் மூலம் விமர்சனங்களையும் சந்தித்தார். இதுவரை இவர் நடித்த படங்களில், 2004ம் ஆண்டு வெளியான "மைன் ஹூன் நா" திரைப்படம் தான் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது, இப்படத்தில் நடிகர் ஷாருக் கானுடன் காதல் வயப்படுவது போல நடித்தார். இத்திரைப்படம் ரூ. 34,00,00,000 கோடி வசூல் செய்தது. அந்த ஆண்டின் அதிக வசூல் செய்த இரண்டாவது திரைப்படம் இது. பின்னர், "மைன் ஐசா ஹி ஹூன்" திரைப்படத்தில் வழக்கறிஞராக, நடிகர் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்தார். 2005ம் ஆண்டு, "கேக்டஸ் பிளவர்" திரைப்படத்தின் மறு உருவாக்கமான "மைனே பியார் கியூன் கியா" திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் சல்மான் கான் மற்றும் கேத்ரினா கைஃப் ஆகியோருடன் இணைந்து நடித்தார். சமீபத்தில் கர்மா, கன்ஃபெஷன்ஸ் அண்டு ஹோலி (2006) படத்தில் நவோமி கேம்பல் உடன் இணைந்து நடித்தார், அதன் பின் "ராம்கோபால் வர்மா கி ஆக்" (2007) ஆகிய படங்களில் நடித்தார். இப்போது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட "துல்ஹா மில்கயா" (2010) திரைப்படத்தில் ஷாருக் கானுடன் இணைந்து நடிக்கிறார். மறைந்த பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பெனாசீர் பூட்டோ கதாபாத்திரத்தை ஏற்று ஒரு திரைப்படத்தில் சுஷ்மிதா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திரைப்படத்தை ஜாகித் அஜீஸ் மற்றும் ஜென்னா ராய் ஆகியோர் இணைந்து, முறையே கராச்சி தயாரிப்பு நிறுவனமான வோக்ஸ் விஷன் மற்றும் லீசெஸ்டரைச் சேர்ந்த சன் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக இணைந்து தயாரிக்கின்றனர். உறுதியாக கூறப்படாத வகையில், "பெனாசீர் பூட்டோ: தி மூவி" என்று தலைப்பிடப்பட்ட இந்த திரைப்படம், பூட்டோ மாணவியாகவும், நாடு கடத்தப்பட்ட நிலையில் ஓர் அரசியல் தலைவராகவும் பல ஆண்டுகள் செலவிட்டிருந்த பாகிஸ்தான், பிரிட்டன் மற்றும் துபாயின் பல்வேறு இடங்களில் படமாக்கப்பட இருந்தது. இந்த பெரிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பது குறித்து சுஷ்மிதா சென்னிடம் கேட்கப்பட்ட போது, "ஆம், நான் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்." என்று உற்சாகமாக தெரிவித்தார்.[213] சமீபத்தில் இவர் டூ நாட் டிஸ்டர்ப் என்ற திரைப்படத்தில், பல திரைப்படங்களில் இவருடன் இணைந்த கோவிந்தா உடன் இணைந்து நடித்துள்ளார். இத்திரைப்படம் தோல்வியைத் தழுவியது. ஷிம்மர் என்ற வெற்றிகரமான மாடல் நங்கையாக 'துல்ஹா மில்கயா' திரைப்படத்தில் நடித்தார் 2000: சிறந்த துணை நடிகை வெற்றி/1}, "பிவி நம்பர்.1" (1999) திரைப்படத்துக்காக 2000: சிறந்த துணை நடிகை பரிந்துரை, "சிர்ஃப் தும்" (1999)திரைப்படத்துக்காக 2003: சிறந்த துணை நடிகை பரிந்துரை, "ஃபில்ஹால்" (2002) திரைப்படத்துக்காக 2001 சிறந்த துணை நடிகை வெற்றி ,"பிவி நம்பர்.1" 2004 சிறந்த நடிகை பரிந்துரை "" 2000 ஐஐஎப்ஏ சிறந்த துணை நடிகை விருது வெற்றி , "பிவி நம்பர்.1" 2000: சிறந்த துணை நடிகை வெற்றி , "பிவி நம்பர்.1" (1999) 2003: சிறந்த துணை நடிகை வெற்றி , "ஃபில்ஹால்" (2002) 2005: சிறந்த துணை நடிகை பரிந்துரை, "மைன் ஹூன் நா" (2004) 2006: பாலிவுட்டில் சாதித்ததற்காக ராஜீவ்காந்தி விருது கேட் ஹட்சன் கேட் கேர்ரி ஹட்சன் (பிறப்பு ஏப்ரல் 19, 1979) ஒரு அமெரிக்க நடிகை. "ஆல்மோஸ்ட் ஃபேமஸ்" திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் மூலம் பல விருதுகளையும் நியமனங்களையும் பெற்ற பின்னர் அவர் புகழ் பெறத் தொடங்கினார், அது முதல் அவர் ஹாலிவுட்-இன் முன்னணி நடிகையாக உருவாகி பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார், அவற்றுள் "ஹௌ டு லாஸ் எ கய் இன் 10 டேஸ்" , "தி ஸ்கெலிடன் கீ" , "யூ, மி அண்ட் டுப்ரீ" , "ஃபூல்ஸ் கோல்ட்," "ரெய்சிங் ஹெலன்" மற்றும் "பிரைட் வார்ஸ்" ஆகியவை அடங்கும். ஹட்சன் லாஸ் ஏஞ்சல்சில் பிறந்தார், இவர் அகாடெமி விருது-பெற்ற நடிகை கோல்டி ஹான் மற்றும் நடிகர், நகைச்சுவையாளர் மற்றும் இசைக்கலைஞரான பில் ஹட்சன் ஆகியோரின் மகளாவார். அவர் பிறந்த பதினெட்டு மாதங்களில் அவருடைய பெற்றோர்கள் விவாகரத்து பெற்றனர். அவரும் அவருடைய சகோதரரும் நடிகருமான ஆலிவர் ஹட்சன், இருவரும் கொலோராடோவில் அவருடைய தாய் மற்றும் தாயின் நீண்டகால நண்பருமான நடிகர் கர்ட் ரஸ்ஸெல் அவர்களால் வளர்க்கப்பட்டனர். ஹட்சன் தன்னுடைய உயிரியல் தந்தைக்குத் "தன்னைப்பற்றி எள்ளளவும் தெரியாது" என்று கூறியிருந்தார். மேலும் அவர் ரசெலைத் தான் தன் தந்தையாகக் கருதுவதாகத் தெரிவித்தார். ஹட்சன் தன் தாயை இவ்வாறு விவரித்திருந்தார், "நான் பெரும்பாலான விஷயங்களைக் கற்றுக்கொண்ட பெண்மணி, எதையும் தெரிந்து கொள்ளவேண்டியிருந்தால் நான் எதிர்நோக்குபவரும் அவரே, நான் மதிப்புக்கொடுக்கும் வகையில் தன்னுடைய வாழ்க்கையை வழிநடத்தியவர்". அவருக்கு மூன்று ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகள்: அவர் உயிரியல் தந்தை சிண்டி வில்லியம்ஸ் என்ற நடிகையைப் பின்பு திருமணம் செய்ததன் மூலம் பிறந்த எமிலி மற்றும் ஸசாரி ஹட்சன்; கர்ட் ரஸ்ஸெலுடன் தன் தாயின் உறவு மூலம் பிறந்த வையாட் ஆகியோர். ஹட்சன் ஆங்கில, இத்தாலிய மற்றும் ஹங்கேரிய யூத மரபினைச் சார்ந்தவர், அவர் தாய்வழிப் பாட்டியின் யூத மதப்படி வளர்க்கப்பட்டார்; அவருடைய குடும்பம் புத்தமதத்தையும் பின்பற்றியது. அவர் தன் பட்டப்படிப்பை 1997 ஆம் ஆண்டில் கிராஸ்ரோட்ஸ்ஸில் முடித்தார், இது சாண்டா மோனிகாவில் இருக்கும் ஒரு தனிப்பட்ட கல்லூரி ஆயத்தப் பள்ளியாகும். அவர் நியூ யார்க் பல்கலைக்கழகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தார், ஆனால் இளங்கலை பட்டப்படிப்பிற்குப் பதிலாக நடிப்புத் தொழிலில் ஈடுபட முடிவுசெய்தார்.. ஹட்சனின் பெரும் முன்னேற்றம் அவர் பென்னி லேனாக கேமரூன் க்ரோவ்-இன் "ஆல்மோஸ்ட் ஃபேமஸ்" (2000) திரைப்படத்தில் நடித்தவுடன் கிடைத்தது, இந்தக் கதாபாத்திரத்திற்காக அவர் சிறந்த துணை நடிகைக்கான அகாடெமி விருது நியமனமும் சிறந்த துணை நடிகைக்கான கோல்டன் குளோப் விருது - சலனப் படம், வெற்றியையும் பெற்றார். அதிகம் அறியப்படாத திரைப்படங்களிலும் அவர் முன்னர் தோன்றியுள்ளார். அவை ஒரு பதின்வயது நாடகமான "காசிப்", மற்றும் ஒரு புத்தாண்டு நாள் அடிப்படையில் அமைந்த சிரிப்புப் படமும் மிக அதிகமான நடிகர்கள் நடித்ததுமான "200 சிகரெட்ஸ்". அவருடைய ஆரம்பகால வாழ்க்கைத் தொழில் மற்றும் வெற்றி பற்றி ஹட்சன் கூறும்போது தான் ஒரு "கடின உழைப்பாளி" என்றும் நன்கு அறியப்பட்ட தன் பெற்றோருடன் சம்பந்தப்பட விரும்பவில்லை என்றும் கூறினர், "மற்றவர்கள் முதுகில் சவாரி செய்தார்" என்னும் உணர்வினைத் தவிர்க்க விரும்பினார். 2002 ஆம் ஆண்டில் வரலாற்றுக் காதல்கதையான "தி ஃபோர் ஃபெதர்ஸ்" இன் ரீமேக்கில் அவர் நடித்திருந்தார், அந்தத் திரைப்படம் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அவருடைய அடுத்த காதல் நகைச்சுவைத் திரைப்படமான "ஹௌ டு லாஸ் எ கய் இன் 10 டேஸ்" , அதன் பிப்ரவரி 2003 ஆம் ஆண்டு வெளியீட்டிற்குப் பின்னர், பாக்ஸ் ஆபீசில் மிகப் பெரிய வெற்றிப்படமாக அமைந்து $100 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்தது. ஹட்சன் அதன் பின்னர் பல காதல் நகைச்சுவைகளில் தோன்றினார், அவற்றுள் "அலெக்ஸ் அண்ட் எம்மா" மற்றும் "ரெய்சிங் ஹெலன்" ஆகியவை அடங்கும்; இந்தத் திரைப்படங்கள் பல்வேறு படிநிலையிலான வெற்றிகளைக் கொண்டிருந்தது. 2005 ஆம் ஆண்டில் "தி ஸ்கெலிடன் கீ" என்னும் திரில்லர் மூலம் ஹட்சன் தலைப்புச்செய்தியானார். தயாரிப்பு மதிப்பீடாக $43 மில்லியனைக் கொண்டிருந்த அந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியைக் கொண்டாடியது, உலகம் முழுவதும் $91.9 மில்லியனுக்கும் அதிகமான வசூலைப் பெற்றது (வட அமெரிக்காவில் $47.9 மில்லியன்). அவருடைய பிந்தைய நகைச்சுவைத் திரைப்படமான "யூ, மி அண்ட் டுப்ரீ" , உடன் நடித்திருந்தவர்கள் ஓவென் வில்சன் மற்றும் மாட் டில்லான், ஜூலை 14, 2006 அன்று அதன் தொடக்க வார இறுதியில் $21.5 மில்லியனை வசூலித்தது. 2007 ஆம் ஆண்டில், "கட்லாஸ்" என்னும் குறும்படத்தை ஹட்சன் இயக்கினார், இது வாசகர்களின் தனிப்பட்ட கட்டுரைகளை ஆதாரமாகக் கொண்ட கிளாமர் பத்திரிக்கையின் "ரீல் நொடிகள்". "கட்லாஸ்"ஸில் உடன்-நடித்திருந்தவர்கள் குர்ட் ரசெல், டகோடா ஃபான்னிங், விர்ஜினியா மாட்சன், செவி சேஸ் மற்றும் கிறிஸ்டென் ஸ்டீவர்ட். 2008 ஆம் ஆண்டில் அவர் காதல் நகைச்சுவையான "ஃபூல்ஸ் கோல்ட்" திரைப்படத்தில் தோன்றினார், இது பிப்ரவரி 8 ஆம் தேதி வெளியானது, இது அவர் மேத்தியூ மெக்கோனாகேவுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படம். திரைப்படத்தின் நீருக்குள்ளேயான காட்சிகளுக்காக அவர் கிரேட் பேர்ரியர் ரீஃப்பில் ஸ்கூபா டைவிங்கிற்காகச் சான்றளிக்கப்பட்டுள்ளார். அவருடைய சமீபத்திய திரைப்படமான, இதுவும் ஒரு ரொமாண்டிக் காமெடி, "மை பெஸட் ஃப்ரெண்ட்ஸ் கெர்ல்," செப்டம்பரில் வெளியிடப்பட்டது. அடுத்து ஹட்சன் இசைத் திரைப்படமான "னைன்" -இல் தோன்றினார், உடன் நடித்தவர்கள் டேனியல் டே-லெவிஸ், மரியான் காட்டில்லார்ட், பெனலோப் க்ருஸ், நிகோல் கிட்மான் மற்றும் ஜுடி டென்ச். ராப் மார்ஷல் அவர்களால் இயக்கப்பட்ட அந்தத் திரைப்படம் டிசம்பர் 2009 ஆம் ஆண்டில் வெளியானது. ஹட்சன் அவருடைய அறியப்படாத நடன திறன்களுக்காக மிகவும் போற்றப்பட்டார், இது "சினிமா இடாலியானோ" என்ற அசல் படைப்பால் தூண்டப்பட்ட ஸ்டைலிஷ் 60களில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, இது இந்தத் திரைப்படத்துக்காக மற்றும் ஹட்சனின் கதாபாத்திரத்திற்காக பிரத்தியேகமாக எழுதப்பட்டது. ஜிம் தாம்சனின் "தி கில்லர் இன்சைட் மீ" தழுவல் திரைப்படத்திலும் சமீபத்தில் நடித்திருந்தார். அந்தத் திரைப்படம் ஜனவரி 24, 2010 அன்று சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் முதன் முறையாகத் திரையிடப்பட்டது. டிசம்பர் 31, 2000 அன்று ஆஸ்பென், கொலோராடோவில் தி பிளாக் க்ரோஸ்-சுக்கான பாசாங்குத் தலைவர் கிரிஸ் ராபின்சன்-ஐ ஹட்சன் திருமணம் செய்துகொண்டார். ஒரு நேரத்தில் இயக்குநர் ஜேம்ஸ் வேல் அவர்களின் உடைமையாக இருந்த இல்லத்தில் தம்பதியினர் வாழ்ந்தனர் மேலும் ஹட்சனின் திரைப்படப் படப்பிடிப்புகள் அல்லது ராபின்சனின் இசைப் பயணங்களின் போது இருவரும் ஒன்றாகவே பயணம் செய்தனர். ஜனவரி 7, 2004 அன்று ஹட்சன், மகன் ரைடர் ரசெல் ராபின்சனைப் பெற்றெடுத்தார். ஆகஸ்ட் 14, 2006 அன்று ஹட்சனின் பத்திரிக்கைத் தொடர்பாளர், ஹட்சன் மற்றும் ராபின்சன் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். நவம்பர் 18, 2006 அன்று ராபின்சன் "சமாதானப்படுத்த இயலாத வேறுபாடுகளைக்" காரணங்காட்டி விவாகரத்துப் பத்திரங்களைப் பதிவு செய்தார். அந்த விவாகரத்து அக்டோபர் 22, 2007 அன்று உறுதிப்படுத்தப்பட்டது. மே 2009 ஆம் ஆண்டில் ஹட்சன் நியூ யார்க் யாங்கீஸ் தர்ட் பேஸ் மான் அலெக்ஸ் ராட்ரிகுசுடன் பழக ஆரம்பித்தார். 2009 வர்ல்ட் சீரிஸ்ஸின் போது அவர் கூட்டத்தில் பல முறை காணப்பட்டார். டிசம்பர் 15, 2009 அன்று ஹட்சன் மற்றும் ராட்ரிகுஸ் பிரிந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஹட்சன் தன்னைத்தானே திரையில் பார்க்க விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார், முதல் முறையாக தன்னுடைய நடிப்பைப் பார்க்கும்போது அவருக்கு "குளிர் எடுத்து... நடுக்கம் உண்டாகி... வேர்த்துவிடுவதாக" குறிப்பிட்டார். ஜூலை 2006 ஆம் ஆண்டில், ஹட்சன் "தி நேஷனல் என்கொய்ரர்" -இன் பிரிட்டிஷ் பதிப்பு மீது வழக்கு தொடுத்தார், அவர்கள் அவருக்கு உண்பதில் கோளாறு இருப்பதாகவும் "வருந்தும் வகையில் மெலிந்திருப்பதாக" விவரித்த பின்னர், அவர் இவ்வாறு செய்தார். அந்தச் சுருக்கச் செய்தித்தாளின் நடவடிக்கைகள் "முழுவதும் பொருத்தமற்றவை" மற்றும் "வெளிப்படையான பொய்" என்று ஹட்சன் கூறினார், மேலும் இளம் பெண்கள் மீது அந்தச் செய்தித்தாள் கொண்டிருக்கும் எடை பற்றிய கருத்துகள் மீது தனக்கிருக்கும் கவலையைக் குறிப்பிட்டார். சார்லீசு தெரன் சார்லீஸ் தெரோன் (; ஆகஸ்ட் 7, 1975 இல் பிறந்தார்) ஒரு தென்னாப்பிரிக்க நடிகை, திரைப்படத் தயாரிப்பாளர், மற்றும் முன்னால் பேஷன் மாடல் ஆவார். 2007 இல் இவர் அமெரிக்கக் குடிமகளாக மாறினார். "2 டேஸ் இன் த வேலி" , "மைட்டி ஜோ யங்" , "த டெவில்'ஸ் அட்வோகேட்" மற்றும் "த சைடர் ஹவுஸ் ரூல்ஸ்" போன்ற திரைப்படங்களில் இவரது பாத்திரங்களைத் தொடர்ந்து 1990களின் பிற்பகுதில் சார்லீஸ் புகழ்பெறத் தொடங்கினார். "மோன்ஸ்டெர்" திரைப்படத்தில் ஏயிலென் வோர்னோஸ் என்ற தொடர் கொலைகாரி பாத்திரத்தில் அவர் சித்தரிக்கப்பட்டதற்காக விமர்சனரீதியான பாராட்டுக்களையும் ஒருஅகாடமி விருதையும் வென்றார், இதனால் ஒரு முக்கிய நடிப்புப் பிரிவில் அகாடமி விருது வெல்லும் முதல் ஆப்பிரிக்கர் என்று பெயர் பெற்றார். "நார்த் கண்ட்ரி" யில் அவரது நடிப்பிற்காக மற்றொரு அகாடமி விருது பரிந்துரையையும் சார்லீஸ் பெற்றார். தென்னாப்பிரிக்காவில் உள்ள பெனோனியில் தெரோன் பிறந்தார், இவர் ஜெர்டா ஜேக்கோபா அலெட்டா (நீ மார்டீஸ்) மற்றும் சார்லஸ் ஜோக்கோபஸ் தெரோனின் ஒரே மகளாவார். சார்லீஸின் தாயார் ஜெர்மன் மரபுவழி வந்தவராவார் மற்றும் அவரது தந்தை ஃபெரென்ச் மற்றும் டச் குல மரபில் வந்தவராவார்; முந்தைய ஹக்கோநட் குடியேற்றத்தார்கள், மற்றும் அவரது கொள்ளுத்தாத்தாவின் சகோதரரும் போர் வாள் வீரரருமான டேனியல் தெரோனிடம் இருந்து தெரோன் நேரடியான மரபுவழியில் வந்தவராவார். "தெரோன்" என்பது ஒரு "ட்ரோன்" என ஆப்பிரிக்கர்கலால் (அசலாக தெரோன் என உச்சரிக்கப்படுகிறது) உச்சரிக்கப்படும் ஆக்சிடனின் சிறப்புப் பெயராகும், எனினும் "த்ரூவன்" என உச்சரிக்கப்படுவதையே அவர் விரும்புவதாக கூறியுள்ளார். தெரோனின் தாய்மொழி ஆப்ரிக்கன்ஸாக இருந்தாலும், அவரால் சரளமாக ஆங்கிலமும், ஜுலூ என்ற மொழியும் பேச முடியும். தெரோன், ஜோஹானெஸ்பர்க் (பெனோனி) அருகில் அவரது பெற்றோர்களின் பண்ணையில் வளர்ந்தார். அவர், புட்ரோண்டெய்ன் பிரைமரி பள்ளியில் (லேசர்கூல் புட்போண்டெய்ன்) கல்வி பயின்றார். அவரது 13வது வயதில், உணவகத்துடன் அமைந்த பள்ளியில் சேர்க்கப்பட்டார், மேலும் ஜோஹனெஸ்பர்கின் நேசனல் ஸ்கூல் ஆப் த ஆர்ட்ஸில் அவரது கல்வியைத் தொடங்கினார். அவரது 15வது வயதில், தெரோன் ஒரு வசைமொழிக் குடிகாரரான அவரது தந்தையின் இறப்புக்கு சாட்சியாக இருந்தார்; அவரது தந்தை தாக்கவருகையில் அவரது தாயார் தற்காப்பிற்காக அவரை சுட்டுக்கொன்றார். இதற்காக காவல்துறையினர் அவர்மேல் எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தவில்லை. அவரது 16வது வயதில், ஒரு உள்ளூர் போட்டியில் வென்ற பிறகு, ஒரு ஆண்டு மாடலிங் ஒப்பந்தத்தில், இத்தாலியில் உள்ள மிலனுக்கு தெரோன் பயணித்தார். பவுலினின் மாடல் நிர்வாகத்துடன் அவர் நியூயார்க் சென்றார். அவரது ஒப்பந்தம் முடிவுற்ற போது அங்கேயே இருக்க தெரோன் முடிவெடுத்தார், மேலும் ஒரு பாலெட் நடனக்கலைஞராக பயிற்சி பெறுவதற்காக ஜோஃப்ரி பாலெட் பள்ளியில் சேர்ந்தார். தெரோனுக்கு 19 வயதிருக்கும் போது முட்டியில் ஏற்பட்ட காயத்தினால் இந்தத் தொழில் வாழ்க்கை அவருக்கு முற்று பெற்றது. நடனம் ஆட முடியாமல் போனதால், தெரோன் அவரது தாயார் வாங்கிய ஒரு வழி நுழைவுச்சீட்டு மூலம் லாஸ் ஏஞ்சல்ஸிற்குச் சென்றார். அங்கு இருந்த தொடக்க மாதங்களின் போது, வாடகைக் கொடுப்பதற்கு உதவியாக அவரது தாயார் அனுப்பியிருந்த பணத்தை சோதிப்பதற்காக தெரோன் வங்கிக்கு சென்றார். அங்கு வங்கி எழுத்தர் அந்த பணத்தை நிராகரித்தபோது, அதை இணைசெய்வதற்கு உடனடியாய் தெரோன் சத்தமிடத் தொடங்கினார். அதன்பிறகு, அவருக்குப் பின்னால் வரிசையில் இருந்த ஒரு திறமை முகவர் அவரது தொழில்முறை அட்டையை அவரிடம் கொடுத்து சில நடிப்பு முகவர்களிடம் ஒரு நடிப்புப் பள்ளியிலும் தெரோனை அறிமுகப்படுத்தினார். பிறகு அவரது மேலாளராக பணியாற்றிக் கொண்டிருந்த அந்த முகவரை தெரோன் பணியில் இருந்து நீக்கினார், ஏனெனில் "ஷோகேர்ல்ஸ்" மற்றும் "ஸ்பீசிஸ்" போன்ற ஒத்த நிலையில் உள்ள திரைப்படங்களுக்காக அவரது கையெழுத்துப் படிவங்களை அனுப்பிக்கொண்டிருந்ததால் இவ்வாறு செய்தார். அந்த நகரத்தில் எட்டு மாதங்களுக்குப் பிறகு, அவரது முதல் திரைப்படத்தில் தெரோன் நடித்தார், "சில்ட்ரன் ஆப் த கான் III" (1995) திரைப்படத்தில் நேரடி வீடியோவில் ஒரு பேசாத பாத்திரத்தில் நடித்தார். 1990களின் பிற்பகுதியில், "த டெவில்'ஸ் அட்வொகேட்" (1997), "மைட்டி ஜோ யங்" (1998) மற்றும் "த சைட் ஹவுஸ் ரூல்ஸ்" (1999) போன்ற திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைத் தொடர்ந்து அவரது தொழில் வாழ்க்கை வானுயரப் பறந்தது, அதைத் தொடர்ந்து தெரோனின் பெரிய பாத்திரங்களுடன் ஹாலிவுட் திரைப்படங்கள் பரவலாக வெளியிடப்பட்டன. "ஒயிட் ஹாட் வெனஸ்" என்ற "வேண்டி ஃபேரின்" ஜனவரி 1999 பதிப்பின் மேலட்டையில் தெரோன் இடம் பெற்றார். குறிப்பிடத்தக்க சிலத் திரைப்படங்களில் நடித்த பிறகு, "மோன்ஸ்டெர்" (2003) திரைப்படத்தில் ஏல்லென் வோர்னோஸ் என்ற தொடர் கொலைகாரியாகத் தெரோன் நடித்தார். திரைப்பட விமர்சகர் ரோகர் ஈபெர்ட் விமர்சிக்கையில் "திரைப்பட வரலாற்றில் இது மிகச்சிறந்த நடிப்புகளில் ஒன்றாகும்" என்றார். இந்தப் பாத்திரத்திற்காக, பிப்ரவரி 2004 இல், 76வது அகாடமி விருதுகளில் சிறந்த நடிகைக்கான அகாடமி விருதை தெரோன் வென்றார், அதே போல் SAG விருது மற்றும் கோல்டன் குளோப் விருது ஆகியவற்றையும் வென்றார். சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் விருது பெறும் முதல் ஆப்பிரிக்கர் தெரோன் ஆவார். இந்த ஆஸ்கார் வெற்றியானது, "த ஹாலிவுட் ரிப்போர்ட்டரின்" ஹாலிவுட்டில் அதிக சம்பளம் பெறும் நடிகைகளின் 2006 பட்டியலில் இடம் பெற வழிவகுத்தது; அதைத் தொடர்ந்து வந்த அவரது இரண்டு திரைப்படங்களான "நார்த் கண்ட்ரி" மற்றும் "ஏஇயோன் ஃப்ளக்ஸ்" , $10,000,000 வருவாயை பெற்றது, ஹெல் பெர்ரி, கேமரோன் டியாஸ், டிரிவ் பாரிமோர், ரென்னி ஜெல்வேகர், ரீஸ் வித்தெர்ஸ்பூன் மற்றும் நிக்கோல் கிட்மேனுக்குப் பின்னால் தெரோன் ஏழாவது தரவரிசையைப் பெற்றார். செப்டம்பர் 30, 2005 இல், ஹாலிவுட் வால்க் ஆப் பேமில் தெரோன் அவரது சொந்த நட்சத்திரத்தைப் பெற்றார். அதே ஆண்டில், நிதிரீதியாக வெற்றியடையாத அறிவியல் புனையக்கதை திரில்லர் "ஏஇயோன் ஃப்ளக்ஸில்" தெரோன் நடித்தார். கூடுதலாக, "நார்த் கண்ட்ரி" என்ற நாடகவகைத் திரைப்படத்தில் அவரது தலைமை பாத்திரத்திற்காக சிறந்த நடிகை அகாடமி விருது மற்றும் கோல்டன் குளோப் விருதுப் பரிந்துரைகளை தெரோன் பெற்றார். "மிஸ்." பத்திரிகை அதன் 2005 இன் இலையுதிர் காலத்தின் பதிப்பில் தெரோனின் நடிப்பிற்காக அவரைக் கெளரவப்படுத்தியது. 2005 இல், பாக்ஸின் விமர்சனரீதியாக பாராட்டுகளைப் பெற்ற தொலைக்காட்சித் தொடரான "அரெஸ்டடு டெவலப்மெண்ட்" டின் மூன்றாவது பருவத்தில் மைக்கேல் புளூத்தின் (ஜேசன் பேட்மேன்) காதலி ரீடா என்ற பாத்திரத்தில் தெரோன் சித்தரிக்கப்பட்டார். 2004 HBO திரைப்படம் "த லைஃப் அண்ட் டெத் ஆப் பீட்டர் செல்லர்ஸ்" ஸில் பிரிட் ஏக்லேண்ட் என்ற அவரது பாத்திரத்திற்காக கோல்டன் குளோப் மற்றும் எம்மி பரிந்துரைகளை தெரோன் பெற்றார். 2007 இல், தெரோனை, வாழ்ந்துகொண்டிருக்கும் கவர்ச்சியான பெண் என "எஸ்குவர்" புகழ்ந்தது. 2008 இல், ஆண்டிற்கான பெண் என ஹேஸ்டி புட்டிங் தியேட்ரிகலஸ் மூலம் தெரோன் புகழப்பட்டார். அந்த ஆண்டில் வில் ஸ்மித்துடன் இணைந்து "ஹான்காக்" என்ற திரைப்படத்தில் தெரோன் நடித்தார், இத்திரைப்படம் U.S.A.வில் $227.9M மற்றும் சர்வதேச அளவில் $396.4M வருவாயைப் பெற்றது, மேலும் 2008 இன் பிற்பகுதியில் UN பாதுகாப்பு ஜெனரல் பான் கி-மூன் மூலம் UN அமைதித் தூதராக இருக்குமாறு தெரோன் கேட்கப்பட்டார். நவம்பர் 10, 2008 இல், "TV கைட்" நிக்கோல் கிட்மேனுடன் இணைந்து "த தானிஷ் கேர்லின்" திரைப்படத் தழுவலில் தெரோன் நடிப்பார் எனத் தெரிவித்தது. உலகில் முதன் முதலின் பாலுறுப்பு மாற்ற அறுவைசிகிச்சை செய்துகொள்ளும் ஏய்னர் வேக்னெர்/லில்லி எல்பி (கிட்மேன்) இன் மனைவியாக ஜெர்டா வேக்னெர் பாத்திரத்தில் தெரோன் நடிப்பார். அக்டோபர் 2009 இல், "மேட் மேக்ஸ்" திரைப்படங்களின் தொடர்சியில் தெரோன் நடித்தார், இத்திரைப்படம் "மேட் மேக்ஸ்: ரோடு புயூரி" எனத் தலைப்பிடப்பட்டது, 2010 இன் பிற்பகுதியில் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள புரோக்கன் ஹில்லில் இதன் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. டிசம்பர் 4, 2009 இல், தெரோன் தென்னாப்பிரிக்கா கேப்டவுனில் 2010 FIFA உலகக் கோப்பைக்கான ஆட்டத்தை, தென்னாப்பிரிக்க மூலத்தைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களுடன் சேர்ந்து இணை-வழங்குநராக இருந்தார். ஒத்திகையின் போது அவர் பிரான்சுக்கு பதிலாக அயர்லாந்தை வழங்கிவிட்டார், அது FIFA வில் நகைச்சுவையாகிவிட்டது, பிரான்சு மற்றும் அயர்லாந்துக்கு இடையேயான பிளே ஆஃப் ஆட்டத்தில் தைரி ஹென்றியின் கைப்பந்து சர்ச்சைக்கு ஆதாரமாயிற்று. இந்த சண்டையை FIFA நிறுத்தி, அவர் மீண்டும் ஒரு முறை உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் செயல்படச் செய்தது.{0 தெரொன், 2004 திரைப்படம் "ஹெட் இன் த க்ளவுட்ஸ்" , அதே போல் 2002 திரைப்படம் "ட்ராப்டு" மற்றும் 2005 "ஏஇயோன் ஃப்ளக்ஸ்" ஆகிய திரைப்படங்களில் ஒன்றாக நடித்த அவரது பாய்பிரண்ட் ஸ்டூவர்ட் டவுன்செண்ட்டுடன் லாஸ் ஏஞ்சல்ஸில் குடியிருக்கிறார். மேலும் ஒரே பாலின ஜோடிகளின் திருமணங்கள் அங்கீகாரம் அளிக்கப்படும் வரை திருமணம் செய்துகொள்ளப்போவதில்லை என தெரோன் கூறியிருக்கிறார். அண்மையில் டவுன்செண்ட் கூறுகையில், அவரையும் தெரோனையும் ஒரு கணவன் மனைவியாக பாவிப்பதாகக் கூறினார். "நாங்கள் சடங்கு ஏதும் கொள்ளவில்லை" எனவும் கூறினார். "எனக்கு எந்த சான்றிதலோ அல்லது தேவாலயம் கூறுவதோ தேவையில்லை. திருமண விழாவைப் பற்றி எந்த பெரிய அதிகாரப்பூர்வ கதையும் இல்லை, ஆனால் நாங்கள் திருமணமானவர்கள்... நான் தெரோனை மனைவியாகவும், அவர் என்னைக் கணவராகவும் கருதுகிறோம்". இந்த ஜோடி இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. மே 2007 இல் இருந்து, தெரோன் அமெரிக்காவினால் ஏற்றுக்கொள்ளப் பட்ட குடிமளானார். 2009 இல் வில்லியம் மோரிஸ் எண்டோவருடன் தெரோன் கையெழுத்திட்டார், மேலும் இது CEO அரி இமானுவேல் மூலமாக விவரிக்கப்பட்டது. ஜெர்மனியில் உள்ள பெர்னிலினில் "ஏஇயோன் ஃப்ளக்ஸ்" படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, கழுத்தில் ஒரு ஹெர்னியேட்டடு வட்டு மூலமாக தெரோன் அவதிப்பட்டார், இதன் விளைவாக படப்பிடிப்பின் போது தொடர் பின் ஹேண்ட்ஸ்பிரிங்களால் அவதிப்பட்டடார். இதன் விளைவாக அவர் ஒரு மாதத்திற்கு கழுத்துப் பட்டை அணிய வேண்டியிருந்தது. ஜூலை 2009 இல், ஒரு கடுமையான வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார், வெளிநாடுகளுக்கு சென்ற போது இவ்வாறு பாதிக்கப்பட்டிருக்காலம் என என்னப்பட்டது. இதன் காரணமாக செடார்ஸ்-செனாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிரிஸ்டியன் டியோர் மூலமான "J'ADORE" விளம்பரங்களில் பிரதிநிதியாக எஸ்டோனிய மாடல் டியூ குயிக்கிற்குப் பதிலாக தெரோன் மாற்றப்பட்டார், 2004 இல், ஜான் கல்லியனோவுடன் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். ஒரேசீராய் டியோரின் விளம்பரங்களுக்காக, அவரது மார்பின் முகட்டுச்சிப் பகுதியை தெரோன் வெளிப்படுத்த வேண்டியிருந்தது. பிறகு, டிசம்பர் 18, 2007 இல், இறுதியாக டியோரின் ஜே'அடோர் நறுமணப் பொருளுக்காக தெரோன் அவ்வாறு செய்திருந்தார். கல்லியனோ, தெரோனை நன்னிலைப் படுத்தும் வகையில் ஒரு தேவதை என சான்றாய் குறிப்பிட்டார், மேலும் அகாடமி விருதுகள் மற்றும் கோல்டன் குளோப் விருதுகள் போன்ற சிவப்புக் கம்பள நிகழ்ச்சிகளுக்கு தெரோன் அணிவதற்காக உயர் நவீன ஆடைகளையும் உருவாக்கினார். அக்டோபர் 2005 முதல் டிசம்பர் 2006 வரை, ரேமண் வெய்ல் கைகடிகாரங்களுக்கான உலகளாவிய செய்தி ஊடகப் விளம்பரப் பிரச்சாரங்களில் தெரோனின் புகழைப் பயன்படுத்தியதற்காக அவர் $3,000,000 சம்பாதித்தார். பிப்ரவரி 2006 இல், தேரோன் அவரது லோன்-அவுட் கார்பரேசன் மீது, ஒப்பந்ததைத் மீறியதற்காக வெய்ல் வழக்குத் தொடந்தது. நவம்பர் 4, 2008 இல், அந்த வழக்கு உடன்பாடு செய்யப்பட்டது. தெரோன் பெண்கள் உரிமை அமைப்புகளின் ஈடுபட்டு, கருக்கலைப்பு உரிமைகளுக்காக ஊர்வலம் சென்றிருக்கிறார். தேரோன், விலங்கு உரிமைகளின் ஆதரவாளர் ஆவார், மேலும் PETAவின் தற்போதைய உறுப்பினரும் ஆவார். மேலும் தோலாடைகளுக்கு எதிரான PETAவின் விளம்பரப் பிரச்சாரத்திலும் பங்கேற்றுள்ளார். மேலும் இவர் டெமாக்ரசி நவ்! அண்ட் லிங்க் TV இன் தற்போதைய ஆதரவாளரும் ஆவார். தெரோன் ஒரேபாலின திருமணத்தின் ஆதரவாளர் ஆவார், மேலும் 30 மே 2009 இல், கலிபோர்னியாவின் உள்ள ஃப்ரெஸ்நோவில் இதற்கு ஆதரவாக ஊர்வலத்திலும் பங்கேற்றுள்ளார். ஜூலை 2009 இல், சார்லீஸ் தெரோன்'ஸ் ஆப்ரிக்கா அவுட்ரீச் புராஜெக்ட் (CTAOP), LAFC சோக்கர் கிளப்புடன் கூட்டிணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது, தென்னாப்பிரிக்காவின் புறநகர்ப் பகுதிகளில் சோக்கரின் துறையை அளிப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டது. அமெரிக்காவில் மிகவும் வெற்றியடைந்த மற்றும் புகழ்வாய்ந்த இளைஞர் சோக்கர் கிளப்புகளில் ஒன்றான LAFC செல்சீ, உம்கான்யாகூட் மாவட்டத்தின் பள்ளிகளுக்காக சமுதாய-பரவலான சோக்கர் நிகழ்ச்சிகளை உருவாக்குவதற்கு உதவியாக மூன்று ஆண்டு பொறுப்பை உருவாக்கியது. உள்ளூர் பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான தொழில் சம்பந்தமான பயிற்சிகளுடன், பள்ளிச்சீறுடைகள், தாங்குறுப்புகள், பந்துகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட உதவிகளை செய்தன. இந்த சோக்கர் லீக் பயிற்சியானது CTAOP-நிதியுதவியளித்த மொபைல் உடல்நல நிகழ்ச்சி வழியாக நிர்வகிக்கப்பட்ட வாழ்க்கையைக் காக்கும் உடல்நலக் கல்வியையும் உள்ளடக்கியிருக்கும். முதல் முறையாக ஆப்பிரிக்க மண்ணில் நடக்கவிருக்கும் 2010 FIFA உலகக் கோப்பையுடன், HIV/AIDS விகிதங்கள் ஏற்கமுடியாத அளவில் அதிகமாக இருக்கும் நெடுந்தொலைவுப் பகுதிகளுக்கு உறுதிவாய்ந்த உடல்நலம், கல்வி மற்றும் புதிதாய் உருவாக்கும் வளங்களைப் பற்றிய அறிவை உடனடியாய் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு CTAOP விரும்புகிறது. LAFC செல்சாவின் தலைவர் டான் செப்பர்ட்ஸ் கூறியதாவது: மே 2006 இல், "மேக்ஸிம்" அதன் ஆண்டு "ஹாட் 100" வெளியீடில் தெரோன் #25 இடம் பெற்றார். அக்டோபர் 2007 இல், "எஸ்கொயர்" அதன் ஆண்டு வெளியீட்டில் தேரோனை "வாழ்ந்து கொண்டிருக்கும் கவர்ச்சிகரமான பெண்" ணாக அறிவித்தது. கிறிஸ்டென் ஸ்டீவர்ட் கிறிஸ்டென் ஜேய்மெஸ் ஸ்டீவர்ட் (பிறப்பு ஏப்ரல் 9, 1990) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை ஆவார். இவர் ட்விலைட் என்ற திரைப்பட தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகை ஆனார். கிறிஸ்டென் ஸ்டீவர்ட் ஏப்ரல் 9, 1990ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிறந்தார். இவர் தனது 8வது வயதில் 1999ஆம் ஆண்டு "தி தர்டீந்த் இயர்" என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து , , , உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார். இவர் நடித்த சில திரைப்படங்கள்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தமிழ்நாட்டில் கிராமப்பகுதிகளில் உள்ள விவாசாயிகளுக்கு உதவும் நோக்கத்துடன் அவர்களைக் கொண்டு கூட்டுறவு அமைப்பின் கீழ் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் தொடங்கப்படுகின்றன. இந்த அமைப்பிற்கு தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் செயலாளர் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருப்பவர்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இயக்குனர்களாகவும் அவர்களிலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட தலைவரும் உள்ளனர். இவர்கள் எடுக்கும் முடிவுகளின்படி இந்த வங்கிகள் செயல்படுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ("Member of Parliament") என்பவர் ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு வாக்காளர்களின் பதிலாள் (பிரதிநிதி) ஆவார். பல நாடுகளில் இந்தச் சொல் மக்களவை உறுப்பினர்களை மட்டுமே குறிக்கும். மேலவை உறுப்பினர்கள் "செனட்டர்கள்" என்றோ "பிரபுக்கள்" என்றோ அழைக்கப்படுவர். ஒரே அரசியல் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அக்கட்சியின் நாடாளுமன்றக் கட்சியை அமைப்பார்கள். ஆங்கிலச் சுருக்கமான "எம்.பி" (MP) என்பது ஊடகங்களில் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. இந்தியாவில் "நாடாளுமன்ற உறுப்பினர்" என்பது இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களைக் குறிக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 542 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.மாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் நம்பிக்கைப் பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கும் உரிமையைப் பெறுகிறது. அமைச்சரவை நாடாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது. இலங்கையில் இலங்கை நாடாளுமன்றத்திற்கு மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் கட்சிகளால் அவர்கள் பெற்ற வாக்குகளின் விகிதத்திற்கேற்ப நியமிக்கப்படும் உறுப்பினர்களும் "நாடாளுமன்ற உறுப்பினர்" என அறியப்படுகின்றனர். பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு பெற்ற கட்சி அல்லது கூட்டணி அரசு அமைக்கிறது. இலங்கை "நாடாளுமன்றம்" 6 ஆண்டுகளுக்கு ஒரு தடவை, சர்வசன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்படும் 225 உறுப்பினர்கள் அடங்கிய ஒற்றைச் சபை கொண்ட (unicameral) ஒரு சட்டவாக்க மன்றமாகும். இதில் 196 உறுப்பினர்கள் மாவட்டவாரியாகவும், 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமும் திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவ (proportional representation) முறையில் நடைபெறும் பொதுத்தேர்தலில் தெரிவு செய்யப்படுவர். இந்த திருத்தப்பட்ட விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் விசேட பண்புகளாவன, ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் அதிக வாக்குகள் பெறும் கட்சிக்கு மேலதிகமான உறுப்பினர் வழங்கப்படுவதும், வாக்காளர்கள் வேட்பாளர்களுக்கு மூன்று வரையான விருப்பத்தேர்வு வாக்குகளை அளிக்ககூடியமையும் ஆகும். சிங்கப்பூரில் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தின் மக்களால் நேரடியாகத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், எதிர்கட்சியால் நியமிக்கப்படும் தொகுதியில்லா உறுப்பினர்கள் மற்றும் அரசியல் சார்பில்லா பொதுமக்களிலிருந்து நியமிக்கப்படும் உறுப்பினர்கள் "நாடாளுமன்ற உறுப்பினர்"களாக அறியப்படுவர். பாகிஸ்தானில் "பாகிஸ்தானின் தேசிய அவை"(குவாமி அவை)யின் உறுப்பினர்களைக் குறிக்கிறது.தேசிய அவை இசுலாமாபாத்தில் அமைந்துள்ளது. "நாடாளுமன்ற உறுப்பினர்" என்பதை வெஸ்ட்மினிஸ்டர் நாளுமன்ற முறையைப் பயன்படுத்தாத பிற மக்களாட்சிகளின் பதிலாட்களுக்கு அவர்களின் சொற்களுக்கிணையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம். காட்டாக, பிரான்சில் "டெபுட்"(Deputé ) என்றும் பிரேசில் மற்றும் போர்த்துக்கல்லில் "Diputado", "Deputado" என்றும் செருமனியில் "Mitglied des Bundestages (MdB)" என்றும் அழைக்கப்படுகின்றனர். இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியம், அல்லது பிசிசிஐ,தேர்வுத் துடுப்பாட்டம் உட்பட இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய துடுப்பாட்ட போட்டிகளுக்கும் பொறுப்பான வாரியமாகும். இந்திய துடுப்பாட்ட அணி மேற்கொள்ளும் அனைத்து சுற்றுப்பயணங்களையும் போட்டிகளையும் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 1928ஆம் ஆண்டு திசம்பரில் நிறுவப்பட்டது.இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இது கொல்கத்தா துடுப்பாட்ட மன்றத்திற்கு மாற்றாக நிறுவப்பட்டது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி ஓர் சங்கமாக பதிவு செய்யப்பட்டது.நாட்டின் பல்வேறு அரசு விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தினாலும் இது ஓர் தனியார் விளையாட்டுக் கழகமாகும். பொதுவாக மாநில துடுப்பாட்டச் சங்கத்தில் உறுப்பினராக, சங்க உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையுடன் நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். மாநில சங்கங்கள் அவர்களது செயலாளர்களை தேர்வு செய்கின்றனர். மாநில செயலாளர்கள் பிசிசிஐ அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனியார் சங்கங்களாகையால் அவர்களது வரவுசெலவு கணக்குகள் பொதுவில் வைக்கப்படுவதில்லை. பன்னாட்டுத் துடுப்பாட்ட மன்றத்தில் உறுப்பினராக உள்ள பிசிசிஐ ஒப்புமை இன்றி எந்த துடுப்பாட்டப் போட்டியும் அங்கீகரிக்கப் படுவதில்லை. இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், வீரர்களுடன் மூன்று வகையான ஒப்பந்தங்களை கொன்டுள்ளது. இது எ - ஒப்பந்தம், பி-ஒப்பந்தம், சி-ஒப்பந்தம் எனப்படும். எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 1 கோடியும் [$186,000], பி- ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 50 லட்சம், சி-ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 25 லட்சம் பெறுகின்றனர். 2013 நவம்பர் மாதத்தின்படி, எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் 2013 நவம்பர் மாதத்தின்படி, பி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள். 2013 நவம்பர் மாதத்தின்படி, சி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள். வீரர்களுக்கு கூடுதல் சம்பளமாக 5 நாள் போட்டிக்கு 7 லட்சம், 1 நாள் 4 லட்சம், டி20 போட்டிக்கு 2 லட்சம் வழங்கபடுகிறது. சென்னை மாரத்தான் சென்னை மாரத்தான் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகர் சென்னையில் ஆண்டுதோறும் நடத்தப்படும் நெடுந்தொலைவு சாலை ஓட்டப் போட்டியாகும். 2010 ஆண்டுக்கான போட்டி பெப்ரவரி 21 அன்று நடைபெறும்.இது எட்டாவது நிகழ்வாகும். இந்தப் போட்டியின் மூலம் மக்களிடையே உடல்நலம் பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழக அரசின் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் ஆணையத்தால் தனியார் நிறுவனங்களின் புரவலுடன் நடத்தப்பெறுகிறது. 30000க்கும் கூடுதலானவர்கள் இப்போட்டியில் பங்கேற்கின்றனர். கிரியோல் மொழி கிரியோல் மொழி ("creole language") என்பது ஒருவகை உருவாக்க மொழி. ஒருசார் குழுவினர் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். குறிப்பாக வெவ்வேறு தாய்மொழிகளைக் கொண்ட வணிகர்கள் இதனை உருவாக்கிக்கொள்கின்றனர். தமிழில் குழூஉக்குறி என்னும் சொல்வகை உண்டு. குழூஉக்குறி என்பது ஒரு சொல் மட்டுமே. கிரியோல் மொழி வெறும் சொல் அன்று. இது ஒரு முழுமையான மொழி. தமிழில் உள6ள குழூஉக்குறியை ’கிரியோல் சொல்’ என்று குறிப்பிடலாம். கிரியோல் என்பது, பல மொழிகளின் கலப்பினால் உருவான உறுதியான ஒரு மொழியைக் குறிக்கும். கிரியோல் மொழிகளின் சொற்கள் அவற்றின் மூல மொழிகளிலிருந்தே பெறப்படினும், பெரும்பாலும் அவற்றில், ஒலி மாற்றங்களும், பொருள் மாற்றங்களும் இருப்பதைக் காணமுடியும். இலக்கணம் பெருமளவுக்கு மூல மொழிகளின் இயல்புகளைக் கொண்டு இருப்பினும் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் காணப்படுவதுண்டு. தேவைகளின் பொருட்டு இரண்டாவது மொழியாகப் பயன்படுத்துவதற்காக வளர்ந்தவர்களால் உருவாக்கப்படும் பிட்யின் மொழி அவர்களின் பிள்ளைகளுக்குத் தாய்மொழியும் முதல் மொழியும் ஆவதனால் கிரியோல் உருவாவதாக நம்பப்படுகிறது. இத்தகைய உருவாக்கமுறையைத் தாய்மொழியாக்கம் எனலாம். இளைய ராபர்ட் ஏ. ஆல் என்பார் பிட்யின் - கிரியோல் சுழற்சி பற்றி 1960 களில் ஆய்வு செய்துள்ளார். கிரியோல் மொழிக்கும் அது உருவாவதற்குப் பங்களித்த மூல மொழிகளுக்கும் இடையிலான இலக்கண ஒற்றுமைகளை விட, கிரியோல் மொழிகளுக்கு இடையே கூடிய இலக்கண ஒற்றுமைகள் இருப்பதாகச் சில மொழியியலாளர்கள் கூறுகின்றனர். எனினும், இவ்வாறான ஒற்றுமையை விளக்குவதற்குப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடுகள் எதுவும் கிடையாது. மேலும் கிரியோல்களுக்கே தனித்துவமான இலக்கண அம்சங்களும் எதுவும் இல்லை. இன்று உள்ள பெரும்பாலான கிரியோல் மொழிகள் கடந்த 500 ஆண்டுக் காலப்பகுதியுள் உருவானவை. விரிந்த ஐரோப்பியப் பேரசுகளும், அடிமை வணிகமும் உண்டாவதற்குக் காரணமான கடல் வல்லரசுகளின் உலகளாவிய விரிவாக்கமும், அவர்களது வணிகமும் இதற்குக் காரணமாகும். அதிகாரத் தகுதியற்ற அல்லது சிறுபான்மை மொழிகளைப்போல கிரியோல் மொழிகளும், அவற்றின் மூல மொழிகளின் சிதைவடைந்த வடிவமாக அல்லது அவற்றின் ஒரு வட்டார வழக்காகக் கருதப்பட்டன. இப்பிழையான கருத்தாக்கம் காரணமாக ஐரோப்பியரின் குடியேற்ற நாடுகளில் உருவான பல கிரியோல் மொழிகள் அழிந்து விட்டன. இருப்பினும் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுவரும் அரசியல் மற்றும் அறிவுசார் மாற்றங்களினால் வாழும் மொழிகளாக அவற்றின் நிலை மேம்பட்டிருப்பதோடு, மொழியியல் ஆய்வுகளுக்கான ஒரு விடயமாகவும் இவை ஆகியுள்ளன. இஷாந்த் ஷர்மா இசாந்த் ஷர்மா ("Ishant Sharma"; (; (பிறப்பு: செப்டம்பர் 2 1988) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் விளையாடி வருகிறார். இவர் ஒரு வலதுகை மித விரைவு வீச்சாளர் ஆவார். ஜவகல் ஸ்ரீநாத் திற்கு அடுத்தபடியாக அதிவேகமான பந்தினை வீசியுள்ளார் (ஸ்ரீநாத்தின் சாதனை: 1999 உலகக்கோப்பையின் போது மணிக்கு 154.5 கி.மீ., இசாந்தின் வேகம்: 2008 ஆஸ்திரேலியா அடிலெய்டில் 152.6 km/h). இவர் உயரம் கொண்டவர் ஆவார். 2006–2007 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். அப்போது இவரின் வயது 18. இவரின் உடல்வாகினால் இவர் லம்பு எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.. 2001 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டங்களில் மிக இளம்வயதில் 100 இலக்குகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 2013 ஆம் ஆண்டில் தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 வது இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் விரைவாக 100 இலக்குகளை வீழ்த்திய இந்தியர்களின் வரிசையில் ஐந்தாவது இடம்பிடித்தார். 2011 பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் ரிக்கி பாண்டிங்கிற்கு மணிக்கு 152.2 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். சிறந்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் விரைவு வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். மே, 2007 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். முனாஃவ் பட்டேல் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் இரண்டாவது போட்டியில் மூன்று ஓவர்கள் வீசினார். அதில் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவரை "மெய்டனாக" வீசினார்.இலக்குகளை வீழ்த்தவில்லை. பின் சூலை-ஆகஸ்டு , 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். டிசம்பர் 2007 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் முன்னணிப் பந்துவீச்சாளர்களான ஜாகிர் கான், சிறிசாந்த் மற்றும் ஆர் பி சிங் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது. பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 5 இலக்குகளை வீழ்த்தினார். இந்தத் தொடரின் இவரின் சிறப்பான செயல்பாட்டினால் ஆத்திரேலியச் சுற்றுப் பயணத்தில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். காயம் காரணமாக ஓய்வுபெற்ற ஜாகிர் கான், சிறிசாந்த் மற்றும் ஆர் பி சிங் ஆகியோர் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அணி திரும்பினர். எனவே ஆத்திரேலியச் சுற்றுப் பயணத்தில் விளையாடும் அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. பின் ஜாகிர் கானுக்கு காயம் ஏற்படவே இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். மூன்றாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி ரிக்கி பாண்டிங்கின் இலக்கினை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். பின் அடிலெய்டு நீள்வட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டு இலக்குகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தத் தொடரின் முடிவில் 358 ஓட்டங்கள் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 59.66 ஆகவும் "ஸ்ட்ரைக் ரேட் 101.0 ஆகவும் இருந்தது."