diff --git "a/train/AA_wiki_48.txt" "b/train/AA_wiki_48.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_48.txt" @@ -0,0 +1,6598 @@ + +மதுரை வீரன் + +மதுரை வீரன் தமிழ்நாட்டவர் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இரு பெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதிரராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்த்தே வணங்கப்படுகிறார். + +வீரன் ஒரு உண்மையான கதாபாத்திரத்திரம் +இவர் வீரத்திற்கும் காதலிக்கும் அடையாளமாக இருக்கிறார். + +மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அருவாலுடன் முறுக்கிய மீசையுடன் காட்சியளிக்கின்றார். + +மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். மதுரை வீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது. மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்புடுவதுண்டு. + +மதுரை வீரன் வடக்கில் (கதைபாடல் காசி என்கிறது) உள்ள ஒரு அரசருக்கு மகனாக பிறக்கின்றார் . ஆனால் மகன் வளர்ந்து பெரியவன் ஆனால் நாட்டிற்க்கு நல்லது இல்லை என்று ஜோதிடம் சொல்லிவிட அரசர் அவனை காட்டில் விட்டுவிடுகிறார் .எனகதையில் திரிபு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழன் என பாராமல் கீழ்சாதிகாரனை கையெடுத்து வணங்க வேண்டுமா என்ற வஞ்சகத்தினால் இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது.சக்கிலியர் இனத்தை சேர்ந்த சின்னான்,செல்லி தம்பதி வீரனை பெற்றெடுத்து வளர்கின்றனர் இதுவே உண்மை. திருச்சி பகுதியை ஆட்சி செய்துக் கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் சக்கிலியர் இனத்தவர்கள் காவல் செய்ய வேண்டும் . காவல் பொறுப்பை ஏற்ற மதுரை வீரன் பொம்மியை காதலித்தான். பொம்மியும் இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் ஊரை விட்டு வெளியேறுகின்றனர் . இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோவத்தில் இருந்தார் மற்றும் இச்செய்தியை திருமலை நாயக்கர் மன்னரிடமும் தெரிவிக்கின்றார் . அவனை தொட்டிய நாயக்கர் சமூகத்தினர் தேடி வரும் நிலையில் மதுரை பகுதியில் கள்ளர் சமூகத்தினர் இருந்த நிலையில் அங்கு குடியமர்ந்த மதுரை வீரனும் பொம்மியும் , கள்ளர் சமுதாயத்தின் கொட்டத்தை அடக்கினார் . இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் .அவன் அரசர் மகன் என்பதை அறியாமல் சக்கிலி இனம் என்று எண்ணி , உயர்ந்த சாதியினை சேர்ந்த பெண்களை திருமணம் செய்து கொண்டதற்காக திருமலை நாயக்கர் மன்னர் மதுரை வீரனை பிடித்து மாறுகால் , மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றார் . பின்னாளில் இங்குள்ள அருந்ததி மற்றும் தாழ்த்தபட்டோர் மக்களுக்கு குலதெய்வமாக ஆனார் .ஒரு சிலர் அரசர் மகன் என்பது இடையில் சொருகிய செய்தி என்றும் சக்கிலியர் இனத்தில் பிறந்த ஒருவன் உயர் சாதியினரை திருமணம் செய்துகொள்வதை விரும்பாத ஆதிக்க சாதியினர் தங்களின் சாதி வெறியில் இவ்வாறு வரலாறுகளை மாற்றினர் என்றும் கூறுகிறார்கள் , என்றாலும் 400 வருடங்களுக்கு முன்பே சாதி வெறியின் அடையாளமாக மதுரை வீரன் கதை உள்ளது என்றும் தெரிவிகின்றனர் . + + + + + + + +மலைக்கண்ணன் + +மலைக்கண்ணன் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோ தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். முருகேசன், ஈ. கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாணிக்க வாசகர் (திரைப்படம்) + +மாணிக்க வாசகர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தண்டபாணி தேசிகர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மன்மத விஜயம் + +மன்மத விஜயம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பட்டு ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். சுப்பிரமணியம், அரங்க நாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாத்ரு பூமி + +மாத்ரு ப���மி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மாயா மச்சீந்திரா + +மாயா மச்சீந்திரா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +பாண்டுரங்கன் (திரைப்படம்) + +பாண்டுரங்கன் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. சி. குனே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +போலி சாமியார் + +போலி சாமியார் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பிரகலாதா + +பிரகலாதா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + + +புலிவேட்டை + +புலிவேட்டை 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தசரத ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ராமநாம மகிமை (ராம ஆஞ்சநேய யுத்தம்) + +ராம நாம மகிமை 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. என். கலயாண சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதிரி மங்கலம் நடேச ஐயர், லட்சுமணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ரம்பையின் காதல் (1939 திரைப்படம்) + +ரம்பையின் காதல் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +கே. ஏ. சொக்கலிங்க பாகவதர் நாரதராகத் தோன்றிப் பாடிய "வாசுதே�� சுதா, வேணுகான விலோலா" என்ற பாடல் பிரபலமானது. திரைப்படத்தின் தலைப்பில் இசையமைப்பாளர், பாடலாசிரியர் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் வாத்தியக் குழுவினர் பெயர் இடம் பெற்றது. அதில், பிற்காலத்தில் இசையமைப்பாளராக விளங்கிய எஸ். எம். சுப்பையா நாயுடு ஆர்மோனியம் வாசிப்பவராக காட்டப்பட்டது. + + + + + +சக்திமாயா + +சக்தி மாயா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். மேத்தா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜ கோபால ஐயர், மாஸ்டர் என். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சங்கராச்சாரியார் (திரைப்படம்) + +சங்கராச்சாரியார் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜக்தேஷ் சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், மாஸ்டர் ராஜகோபால் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சாந்த சக்குபாய் + +சாந்த சக்குபாய் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, பி. சி. வெங்கடேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பிரபலமான மராத்திய நாட்டுப்புறக் கதை ஒன்றின் அடிப்படையில் இதன் திரைக்கதை எழுதப்பட்டது. முன்னணி கன்னட நடிகை அசுவத்தாமா இதில் கதாநாயகியாக நடித்தார். பாபநாசம் சிவன் எழுதிய பாடல்களுக்கு துறையூர் ராஜகோபால சர்மா இசையமைத்திருந்தார். + + + + + +சீதா பஹரணம் + +சீதா பஹரணம்1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரஞ்சித் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ராமச்சந்திர பாகவதர், ஆர். ராஜா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சிரிக்காதே + +சிரிக்காதே 1939 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ரஞ்சனி டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இத்திரைப்படம் வெளிவந்தது. + +என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், கொத்தமங்கலம் சுப்பு, வி. எம். ஏழுமலை, டி. எஸ். துரைராஜ், எம். எஸ். முருகேசன், பி. எஸ். ஞானம் எனப் பலர் இதில் நடித்திருந���தனர். இத்திரைப்படம் அடங்காபிடாரி, புலிவேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன் ஆகிய தனித்தனிக் கதைகளின் தொகுப்பாக தயாரிக்கப்பட்டது. எஸ். எஸ். வாசன் இதன் விநியோக உரிமையை பெற்று வெளியிட்டார். + + + + +சௌபாக்யவதி (திரைப்படம்) + +சௌபாக்யவதி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராம் குமார், ஜி. கோவிந்தராயுலு நாயுடு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சுகுணசரசா + +சுகுண சரசா 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஓரியண்டல் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. பி. கைலாசம், குருசாமி ஷர்மா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருநீலகண்டர் (1939 திரைப்படம்) + +திருநீலகண்டர் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, பி. கே. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +தியாக பூமி (திரைப்படம்) + +தியாக பூமி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பட்டம்மாள், வத்சலா ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். இப்படத்தின் கதையானது கல்கி எழுதிய தியாகபூமி புதினத்தை அடிப்படையாக கொண்டது. + +தியாக பூமி திரைப்படத்தில் 17 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. மோதி பாபு குழுவினர் பாடல்களுக்கு இசையமைத்திருந்தனர். + + + + + +வீர கர்ஜனை + +வீர கர்ஜனை1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயா பானு சலி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாஷா, நடராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஜமவதனை + +ஜமவதனை 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜீ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கணேஷ் துரைராஜ், நந்தாரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நன்னீர் + +நன்னீர் என்பது, உப்புக்களும், வேறு திண்மப் பொருட்களும் மிகவும் குறைந்த அளவில் கரைந்துள்ள நீர் ஆகும். இது ஒரு முக்கியமான மீளத்தக்க வளமாகும். உலகின் உயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத இது, குடித்தல், வேளாண்மைக்கான நீர்ப்பாசனம் உட்படப் பல தேவைகளுக்கு மனிதர்களால் பயன்படுத்தப்படுகின்றது. + +ஆயிரத்துக்கு, 0.5 பகுதி கரைந்த உப்புக்களைக் (புளோரைடு) கொண்டுள்ள நீரே நன்னீர் என வரைவிலக்கணம் கூறப்படுகின்றது.. இந்தியாவில் 19 மாநிலங்களில், குடிநீரில் புளோரைடு உப்புகள் 10.5 விழுக்காடு உள்ளதால், அவை குடிக்கத் தகுதியற்ற நன்னீராக உள்ளது. ஏரிகள், ஆறுகள், சில இடங்களிலுள்ள நிலத்தடி நீர் என்பவற்றிலிருந்து நன்னீர் பெறப்படுகின்றது. நன்னீருக்கான மிக முக்கியமான மூலம் மழையாகும். + +கடலுக்கருகில் கிணறு தோண்டினால் உவர்நீரே கிடைக்க வேண்டும் என்று கருத வாய்ப்புண்டு. ஆனால் கடற்கரையிலும் நிலத்தடி நன்னீர் இருக்குமாயின் கடற்கரையிலும் நன்னீரைப் பெற முடியும். இதற்கான காரணம், நன்னீரின் அடர்த்தி உவர் நீரை விடக் குறைவாதலால் அது கடல் நீருக்கு மேலே மிதப்பதாகும். + + + + +பக்த சேதா + +பக்த சேதா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பக்த கோரகும்பர் + +பக்த கோர கும்பர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. டி. ஈ. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. துரைசாமி, எஸ். சுந்தர்ராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஜயக்கொடி + +ஜயக்கொடி 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாக்வன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. நடராஜன், குலத்துமணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +காளமேகம் (திரைப்படம்) + +காளமேகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். ராஜரத்தினம் பிள்ளை, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +காளமேகப் புலவரின் வாழ்க்கையை ஒட்டிய இத்திரைக்கதையில் ராஜரத்தினம் பிள்ளை நாதசுவரம் வாசிக்க அவருக்கு "ஒத்து" ஊதியவர் என். எஸ். கிருஷ்ணன். இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார். + + + + +மும்மணிகள் (திரைப்படம்) + +மும்மணிகள் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சரஸ்வதி பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + +பாலபக்தன் + +பால பக்தன் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வாஹினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + +பால்ய விவாகம் (திரைப்படம்) + +பால்ய விவாகம் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராம்குமார், பி. சுந்தராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சதி மகானந்தா + +சதி மகானந்தா 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபுராவ் சாவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு,பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சியாம் சுந்தர் (திரைப்படம்) + +சியாம் சுந்தர் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. கபூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் ராஜு, டி. எஸ். கிருஷ்ண ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சைலக் + +சைலக் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, டி. எஸ். சந்தானம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தமிழ்த் தாய் (திரைப்படம்) + +தமிழ்த் தாய் (அல்லது மாத்ரு தர்மம்) என்பது 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ ராஜம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளன��். + + + + + +துபான் குயின் + +துபான் குயின் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சாய் லட்சுமி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. கே. ராஜகோபால், எஸ். எஸ். கோக்கோ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உத்தம புத்திரன் (1940 திரைப்படம்) + +உத்தம புத்திரன் 1940 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 5 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. இது ஹாலிவுட் படமான "த மேன் இன் தி அயன் மாஸ்க்" (1939) படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டிருந்து, இதன் கதை "அலெக்சாந்தர் துமா" எழுதிய பிரெஞ்சுக் கதையின் திரைவடிவமே. இதே கதை பின்னர் சிவாஜி கணேசன் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்து உத்தம புத்திரன் என்ற பெயரில் 1958 இல் வெளியானது. + + + + +பரோபகாரம் + +பரோபகாரம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கமல் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரமேஷ் ஷர்மா, சி. எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சண்டிராணி + +சண்டிராணி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. பானுமதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சத்யசோதனை + +சத்ய சோதனை 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "சிம்ஹா எச். எல். என்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திரும்பிப்பார் + +திரும்பிப்பார் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத. டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பெற்ற தாய் + +பெற்ற தாய் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கன்ன தல்லி என்ற பெயரில் தெலுங்கில் வெளியானது. + + + + + +பொன்னி (1953 திரைப்படம்) + +பொன்னி 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +உலகம் (திரைப்படம்) + +உலகம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குமரேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வஞ்சம் + +வஞ்சம் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை. ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காந்தா ராவ், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வாழப்பிறந்தவள் + +வாழப்பிறந்தவள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தின் கதை வங்க எழுத்தாளர் சிம்ஹா எழுதியது. உரையாடலை விந்தன் எழுத, டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +வேலைக்காரி மகள் + +வேலைக்காரி மகள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சி. வி. ரங்கநாத தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கூண்டுக்கிளி + +கூண்டுக்கிளி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விந்தன் எழுத, டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சுகம் எங்கே + +சுகம் எங்கே 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நல்லகாலம் + +நல்ல காலம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். எம். பி. சிவம், புரட்சிதாசன், உடுமலை நாராயண கவி ஆகியோர் பாடல்களை யாத்தனர். என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர் நடித்ததுடன் பாடல்களைப் பாடினார்கள். ஆர். பாலசரஸ்வதி தேவி, ஏ. ஆண்டாள், என். எல். கானசரஸ்வதி, கே. ராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + +என். எஸ். கிருஷ்ணன் பாடிய "சும்மா இருக்காதுங்க" என்ற பாடல் பிரபலமானது. அது போல் ஆர். பாலசரஸ்வதி தேவி பாடிய "வாழ்வு மலர்ந்து மணம் வீசிடுதே" என்ற பாடல் இலங்கை வானொலியில் 1950 களில் பிரபலமாக ஒலித்தது. + + + + +பத்மினி (திரைப்படம்) + +பத்மினி 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அசோகா புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மதியும் மமதையும் + +மதியும் மமதையும் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. எம். பாஹீர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. எம். பாஹீர், ராஜேஸ்வரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாங்கல்யம் (திரைப்படம்) + +மாங்கல்யம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. பி. நாகராஜன், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜி என் கண்மணி + +ராஜி என் கண்மணி1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீராம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்தப்படம் சார்லி சாப்ளின் படமான சிட்டி லைட்சு (1931) படத்தின் தழுவல் ஆகும். + + + + +கல்யாணம் செய்துக்கோ + +கல்யாணம் செய்துக்கோ 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். சுந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், வெங்கட்ராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +திரைப்படத்துக்கு ரமணீகரன் இசையமைத்தார். பாடல்களை கா. மு. செரீப், கல்யாண் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், ஏ. பி. கோமளா, பரமசிவம், வாசு, ஜிக்கி, ஏ. வி. சரஸ்வதி, சூலமங்கலம் ஜெயலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +கதாநாயகி (திரைப்படம்) + +கதாநாயகி () 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +கிரகலட்சுமி + +கிரக லட்சுமி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். பி. பாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ராக்வீர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +குலேபகாவலி (1955 திரைப்படம்) + +குலேபகாவலி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +எம்.ஜி.ஆர் "பூரொப்பு" என்ற நாட்டின் மூன்று அரசகுமாரர்களுள் இளையவர். அவர்களது தந்தையான மன்னருக்குக் கண்பார்வை போய் அவதிப்படுகையில் "நகாவலி" எனும் நாட்டில் இருக்கும் "குலேப்" எனும் மலரைக் கொண்டு வந்து அவரது கண்களில் வைத்தால் கண்பார்வை தெரியும் என்று மருத்துவர் சொல்ல அதன்படி அம்மலரைக் கொண்டு வர எம்ஜியாரும் சகோதரர்களும் தனித்தனியே புறப்படுகின்றனர். வழியில் "லக்பேஷ்வா" எனும் பெயர் கொண்ட அழகிய ஒரு பெண் நடத்தும் சூதாட்ட விடுதி ஒன்றைக் கண்டு அதில் நடக்கும் "பகடை" ஆட்டத்தில் வென்றால் அப்பெண் தம் வசப்படுவாள் என அறிந்து ஆசையால் சூதாடி சகோதரர்கள் இருவரும் தங்களை அடிமைகளாக சூதாட்டத்தில் அப்பெண்ணிடம் தோற்று இழந்து விடுகின்றனர். அதன் பின்னர் அங்கே வரும் எம்ஜியார் அண்ணன்மார்களை அடிமைக் கோலத்தில் கண்டு மனம் வருந்தி அவர்களை விடுவிக��க வழி செய்வார். + +சூதாட்டம் தொடர்பான காட்சிகளைத் தொகுத்து அவற்றை ஒரு பாடலுடன் ஒருங்கிணைத்து வழங்கியுள்ளார் இயக்குனர். டி.ஆர். ராஜகுமாரி லக்பேஷ்வாக நடிக்க, டணால் தங்கவேலு அவரது கூட்டாளியாக வரும் அரசகுமாரர்களை ஏமாற்றும் காட்சிகள் மிகவும் சுவாரசியமான விதத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. + + + + + +குணசுந்தரி + +குண சுந்தரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஈ. மாதவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +டவுன் பஸ் + +டவுன் பஸ் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நல்ல தங்கை + +நல்ல தங்கை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. நடராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல் ஒன்று திரைப் படத்தில் இடம்பெற்றது. ஏனைய பாடல்களை கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், ஆர். லட்சுமண தாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர். பி. லீலா, ஜிக்கி, ஏ. ஜி. ரத்னமாலா, டி. வி. ரத்தினம், (ராதா) ஜெயலட்சுமி, ஜி. இராமநாதன், திருச்சி லோகநாதன், டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோர் பின்னணி பாடினர். + + + + +நல்லவன் (1955 திரைப்படம்) + +நல்லவன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். திருவெங்கடம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நம் குழந்தை + +நம் குழந்தை 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நீதிபதி (திரைப்பட��்) + +நீதிபதி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்திற்கான இசை இரட்டையர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி. அ. மருதகாசி, உடுமலை நாராயண கவி, கண்ணதாசன் ஆகியோர் பாடல்களை எழுதினார்கள். + + + + +போர்ட்டர் கந்தன் + +போர்ட்டர் கந்தன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். கே. முஸ்தபா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர். பாடல்களை அ. மருதகாசி, அழ. வள்ளியப்பா, கா. தொ. சண்முகசுந்தரம் ஆகியோர் இயற்றினர். திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன், செல்லமுத்து, மாதவன், வி. என். சுந்தரம், கண்டசாலா, ஜிக்கி, கே. ராணி, பேபி ராஜகுமாரி, கிருஷ்ணவேணி, பேபி ஜெயா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +மகேஸ்வரி + +மகேஸ்வரி 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மிஸ்ஸியம்மா + +மிஸ்ஸியம்மா ("Missiyamma") 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்திலும் பொம்மிரெட்டி நாகிரெட்டி, அலுரி சக்ரபாணி ஆகியோரின் தயாரிப்பிலும் வெளிவந்தது. சி.பி. ஜம்புலிங்கம் மற்றும் கல்யாணம் ஆகியோர் திரைப்படத்தினை எடிட் செய்திருந்தனர். + +ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் தமிழில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. இரண்டிலும் வேறு வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். தெலுங்கு திரைப்படத்தில் என். டி. ராமராவ், சாவித்திரி, அக்கினேனி நாகேஸ்வர ராவ், ஜமுனா மற்றும் எஸ். வி. ரங்கராவ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். தமிழில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு, மா. நா. நம்பியார் மற்றும் கே. சாரங்கபாணி ஆகியோர் முறையே ராமாராவ், நாகேஷ்வர ராவ், ரமணா ரெட்டி மற்றும் வெங்கட ரமஸ் ஆகியோரின் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். + +12 ஜனவரி 1955 ல் பொங்கல் விடுமுறை நாட்களில் மிஸ்ஸியம்மா திரையிடப்பட்டது. தமிழிலும், தெலுங்கிலும் வணிக ரீதியாக வெற்றி பெற்றது. இத்திரைப்படம் நடிகை ஜமுனாவிற்கு புகழைப் பெற்றுத் தந்தது. இத்திரைப்படம் இந்தியில் மிஸ் மேரி என்ற பெயரில் எல்.வி. பிரசாத்தின் இயக்கத்திலேயே 1957ம் ஆண்டு வெளிவந்தது. + + + + + +மேனகா (1955 திரைப்படம்) + +மேனகா 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வள்ளியின் செல்வன் + +வள்ளியின் செல்வன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா, எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஒன்றே குலம் + +ஒன்றே குலம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், எஸ். வி. சஹஸ்ரணாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தூத்சாகர் அருவி + +"பாற்கடல் அருவி" என்னும் நேரடிப் பொருளுடைய தூத்சாகர் அருவி ("Dudhsagar Falls") இந்தியாவிலுள்ள கோவாவில், மண்டோவி ஆற்றில் அமைந்துள்ளது. இது கோவா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் எல்லைக்கு அருகில் பனாஜியில் இருந்து 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. +தூத்சாகர் அருவி, மண்டோவி ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளதால், வரண்ட காலங்களில் கவர்ச்சியாக இருப்பதில்லை. எனினும், மழைக் காலங்களில் இந்தியாவின் வலுமிக்க அருவிகளில் ஒன்றாக மாறுகிறது. 310 மீட்டர் உயரம் கொண்ட இது இந்தியாவின் ஐந்தாவது உயரமான அருவியாக உள்ளதுடன், உலகின் உயர்ந்த அருவிகளில் 227 ஆவது இடத்திலும் உள்ளது. + + + + + + +கோகிலவாணி (திரைப்படம்) + +கோகில வாணி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. நடராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், ரகுவீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ரா��நாதன். பாடல்களை டி. கே. சுந்தர வாத்தியார், லட்சுமணதாஸ், எஸ். டி. சுந்தரம், அ. மருதகாசி ஆகியோர் இயற்றினர். வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் திருவருட்பா ஒன்றும் திரைப்படத்தில் இடம்பெற்றது. எஸ். சி. கிருஷ்ணன், டி. எம். சௌந்தரராஜன், டி. பி. இராமச்சந்திரன், சீர்காழி கோவிந்தராஜன், மூர்த்தி, பி. எஸ். தங்கமணி, இளங்கோவன், எஸ். ஆர். இராமதாஸ், பேபி சரோஜா, தேவகி, கஜலட்சுமி, ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + +சுத்த தன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்ட "சரச மோகன சங்கீதாம்ருத" என்ற பாடல் பிரபலமடைந்தது. + + + + +சதாரம் + +சதாரம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சி. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நல்ல வீடு + +நல்ல வீடு 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜே. சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஆர். எஸ். மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நன்நம்பிக்கை (திரைப்படம்) + +நன் நம்பிக்கை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா,டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நாகபஞ்சமி (திரைப்படம்) + +நாக பஞ்சமி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நானே ராஜா + +நானே ராஜா 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நான் பெற்ற செல்வம் + +நான் பெற்ற செல்வம்1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாய்ராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +படித்த பெண் + +படித்த பெண் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷியாமளா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாசவலை + +பாசவலை 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பிரேம பாசம் + +பிரேம பாசம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பெண்ணின் பெருமை + +பெண்ணின் பெருமை ("Pennin Perumai") 1956 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். இத்திரைப்படம் தெலுங்கில் வெளிவந்த ஆர்தாங்கி என்ற திரைப்படத்தின் தமிழ்ப் பதிப்பாகும். தெலுங்குப் பதிப்பில் அக்கினேனி நாகேஸ்வர ராவ், சாவித்திரி, கும்மடி ஆகியோர் நடித்திருந்தனர். + +சிவாஜி கணேசன் எதிர்மறை வேடத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற "அழுவதா இல்லை சிரிப்பதா" என்ற பாடல் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலாவுடன் சேர்ந்து பாடிய முதல் பாடலாகும். + + + + + + +மர்ம வீரன் + +மர்ம வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படமானது அமெரிக்க எழுத்தாளர் ஜான்ஸ்டன் மெக்கல்லியின் (Johnston McCulley) புகழ்பெற்ற ‘ஸோரோ’ வரிசை புதின சாகசக் கதாபாத்திரமான டான் டியாகோவை நினைவூட்டும் வேடத்தில் மகேந்திரனாகவும் பரம்வீர் ஆகவும் இரண்டு பரிமாணங்களில் ஸ்ரீராம் நடித்து தானே படத்தையும் தயாரித்தார். இந்த சாகசப் படத்தில் வைஜெயந்திமாலா நாயகியாக நடித்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், என். டி. ராமராவ், வி. கே. ராமசாமி, எஸ். வி. ரங்கராவ், ஆர். நாகேஷ்வரராவ் என அன்று திரையில் ஒளிர்ந்த பல பெரிய நடிகர்களும் ஸ்ரீராமின் நட்பு���்காக இப்படத்தில் நடித்துக் கொடுத்தார்கள். பெரும் பொருட்செலவில் உருவான இந்தப் படம், நான்கு வாரங்களுக்குமேல் ஓடாததால் பெரும் இழப்பை அளித்தது. + + + + + +மறுமலர்ச்சி (திரைப்படம்) + +மறுமலர்ச்சி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். என். நம்பியார், ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மூன்று பெண்கள் + +மூன்று பெண்கள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ரங்கோன் ராதா + +ரங்கோன் ராதா 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +கா. ந. அண்ணாதுரையால் எழுதப்பட்ட ரங்கோன் ராதா எனும் புதினத்துக்கு, மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய படமாகும். + + + + + + +ரம்பையின் காதல் (1956 திரைப்படம்) + +ரம்பையின் காதல் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஏ. தங்கவேலு, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜா ராணி (1956 திரைப்படம்) + +ராஜா ராணி 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். +மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதிய இப்படத்தில் கருணாநிதியால் எழுதப்பட்ட சேரன் செங்குட்டுவன், சாக்ரடீஸ் போன்ற பல ஓரங்க நாடகங்கள் இடம்பெற்றன. +ராணி என்ற பெண் கண்ணிழந்த ஞானக்கண்ணுவின் ஒரே மகள். குடும்ப நிலை காரணமாக வேலை தேடுகிறாள். "கீதா நாடகக் கம்பெனி"யில் டிக்கெட் விற்பவளாக வேலை கிடைக்கிறது. நாடகக் கம்பெனி முதலாளி பாபு ஒரு ஸ்திரீ லோலன். அவன் ராணியை தன்வசப்படுத்த திட்டம் போடுகிறான். ஒரு நாள் சில முரடர்கள் ராணியின் ஆபீசுக்குள் நுழைந்து அவளுக்கு மயக்க மருந்து கொடுத்து பணத்தைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். அங்கு வந்த பாபு அவளைக் கெடுக்க முயற்சி செய்யவே அவள் பயந்து ஓடிப்போய் ஒரு காருக்குள் பதுங்கிக் கொள்கிறாள். + +ராஜா ஒரு எலெட்ரிக்கம்பெனி சொந்தக்காரன். நாடகக் கலையில் பற்றுள்ளவன். அவன் பாபுவின் நாடகக் கம்பெனி நாடகங்களில் நடித்து வந்தான். ராணி அவனுடைய காரில்தான் ஏறியிருந்தாள். மயக்க மருந்து காரணமாக அவள் உறங்கி விட்டாள். அவள் காரில் இருப்பதை அறியாத ராஜா காரை ஓட்டிச் செல்கிறான். வீட்டுக்கு வந்தபோதுதான் காரில் ஒரு பெண் இருப்பதை அறிகிறான். அவளை வீட்டில் படுக்க வைக்கிறான். + +தினசரிப் பத்திரிகையில் லீலா என்ற பெண் கல்யாண விஷயமாக பெற்றோரிடம் மனத்தாங்கல் கொண்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என்ற செய்தியை ராஜா படிக்கிறான். இந்தப் பெண் தான் லீலா என நினைத்து அந்த முகவரிக்கு அவளை காரில் அழைத்துச் செல்கிறான். + +தான் தான் லீலா என ராணி சொல்லி அந்த வீட்டு வாசலில் காரிலிருந்து இறங்கிக் கொள்கிறாள். ராஜா போனதும் தன் வீட்டுக்குப் போனாள். + +பின்னர் ராணி வேலை தேடி ராஜாவின் எலெக்ட்ரிக் கம்பெனிக்கு வருகிறாள். அங்கு ராஜாவைக் கண்டதும் திடுக்கிடுகிறாள். என்றாலும் தான் லீலா தான் என்றும் பொழுது போக்கிற்காக வேலைக்கு வந்ததாகக் கூறுகிறாள். ராஜா அவளுக்கு வேலை கொடுக்கிறான். + +ராஜா ஒவ்வொரு நாளும் பங்களா வாசலில் ராணியை (லீலாவை) இறக்கி விடுவான். பங்களாவின் சொந்தக்காரியான சாந்தம் ராணி ஒவ்வொரு நாளும் தங்கள் வீட்டு வாசலில் வந்து இறங்குவதைக் கவனித்து, தனது கணவன் சமரசத்தைச் சந்தேகிக்கிறாள். + +நாடகத்துறையில் ராஜா புகழ் பெற்று வந்தான். பாபு அவனை தனது நாடகக் கம்பெனியிலிருந்து நீக்கி விடுகிறான். ராஜா சொந்தமாக ஒரு நாடகக் கம்பெனி தொடங்கி சாக்ரடீஸ் நாடகம் நடத்தும்போது பாபுவின் ஏற்பாட்டால் உண்மையான நஞ்சைக் கொடுக்க முற்பட சமரசம் மூலம் உண்மை வெளிப்பட்டு பாபு கைது செய்யப்படுகிறான். + +பின்னர் சாந்தத்துக்கு ஏற்பட்ட சந்தேகம் நீங்கிய விதத்தையும், ராஜாவும் ராணியும் திருமணத்தில் ஒன்று சேர்வதையும் சொல்வதே திரைக்கதை. +ராஜா ராணி திரைப்படத்தில் கிரேக்க ஞானி சாக்ரடீஸ் ஓரங்க நாடகமாக இடம் பெற்றிருக்கிறது. சாக்ரடீஸாக சிவாஜி கணேசன் நடித்திருப்பாா். கிரேக்க வீதியொன்றில் சாக்ரடீஸ் 'உன்னையே நீ அறிவாய்' என்று அறிவுரை ஆற்றுகின்றாா். அப்போது அனிடெஸ், மெலிடெஸ் இருவரும் சாக்ரடீஸை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துகின்றனா். நீதிபதி, சாக்ரடீஸ் விஷம் தின்று உயிா்விட வேண்டும் என மரண தண்டணை விதிக்கிறாா். சிறையில் இருக்கும் சாக்ரடீஸ் தம் மனைவியை எண்ணிப் பேசுகிறாா். கிாிட்டோ என்பவா் சாக்ரடீஸை எண்ணி வருந்துகிறாா்.காவலன் விஷக்கிண்ணத்துடன் வருகிறான். விஷமருந்தி சாகும்முறை பற்றி காவலன் கூற, சாக்ரடீஸ் கிண்ணத்தை வாங்குகிறாா். கிாிட்டோ சிறிது நேரம் கழித்துக்கூட சாக்ரடீஸ் விஷமருந்தலாம் எனக் கூறுகிறாா். அது அற்ப ஆசை என்று கூற, சாக்ரடீஸின் உடல் எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என கிாிட்டோ கேட்க, சாக்ரடீஸ் விளக்கமளிக்கிறாா். + +தயாரிப்பாளர்: தின்ஷா கே.தெஹ்ராணி
+இயக்குநர்: ஏ. பீம்சிங்
+கதை, வசனம்: மு. கருணாநிதி
+இசை: டி. ஆர். பாப்பா
+ஒளிப்பதிவு இயக்குநர்: ஜித்தன் பானர்ஜி
+ஒளிப்பதிவு: ஜி. விட்டல் ராவ்
+ஒலிப்பதிவு மேற்பார்வை: தின்ஷா கே.தெஹ்ராணி
+ஒலிப்பதிவு: எம். லோகநாதன்
+நடனம்: ஹீராலால், சம்பத்குமார்
+கலை: எஸ். அம்மையப்பன்
+மேக்கப்: டி. தனகோடி
+படப்பிடிப்பு நிலையம்: நியூடோன் +ராஜா ராணி படத்துக்கு இசையமைத்தவர் டி. ஆர். பாப்பா. பாடல்களை இயற்றியவர்கள்: மு. கருணாநிதி, ஏ. மருதகாசி, வில்லிபுத்தன், எம். கே. ஆத்மநாதன், விவேகன் ஆகியோர். பாடியவர்கள்: என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, டி. வி. இரத்தினம் ஆகியோர். + + + + +
+ +வானரதம் + +வான ரதம் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. சன்னி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், ஜீவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வாழ்விலே ஒரு நாள் + +வாழ்விலே ஒரு நாள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்��னர். + + + + +ஆரவல்லி + +ஆரவல்லி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். வி. கிருஷ்ண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஈஸ்வர், ராதாகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எங்கள் வீட்டு மகாலட்சுமி + +எங்கள் வீட்டு மகாலட்சுமி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கற்புக்கரசி + +கற்புக்கரசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். கே. ராதா, சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ஒரு தேவ கன்னிகையான சசிகலாவைத் தான் அடைய வேண்டும் என ஒரு மந்திரவாதி விரும்புகிறான். மன்னராக இருக்கும் ஒருவரை அவரது மகன் ஒரு கிரகண தினத்தில் கொல்ல வைத்தால் சசிகலாவைத் தான் அடையலாம் என மந்திரவாதிக்குத் தெரிய வருகிறது.
+வஜ்ரபுரி மன்னரான ஜெயசீலர் வேட்டைக்குச் சென்ற இடத்தில் சந்திரிகா என்ற ஏழைப் பெண்ணைக் காதலித்து அவளை மணம் செய்கிறார். சந்திரிகா ராணி ஆனதைக் கண்டு பொறாமை அடைந்த அவளது சிற்றன்னை சிங்காரி, மந்திரவாதியின் உதவியினால் தன் மகள் மோகனாவை சந்திரிகா போல் உருமாற்றி மகாராணி இடத்தில் அமர்த்தி விடுகிறாள். நிஜச் சந்திரிகா மோகனாவாக உருமாற்றப்பட்டு பிரதாபனைப் பெற்றெடுக்கிறாள். போலி மகாராணிக்கு ஜெகவீரன் மகனாகப் பிறக்கிறான். மந்திரவாதி ஜெகவீரனுக்கு ஆசானாக இருந்து அவன் தந்தையைக் கொல்லும் வகையில் வளர்த்து வருகிறான். +பிரதாபன் தன் நண்பன் சிலம்பனோடு நகருக்கு வருகிறான். மந்திரியின் மகளான மஞ்சுளாவின் காதலைப் பெறுகிறான். ஒரு மதம் பிடித்த யானையை அடக்கி மன்னரின் அன்பையும் ஜெகவீரனின் விரோதத்தையும் சம்பாதிக்கிறான்.
+பல மந்திர, தந்திரங்கள், தடைகள் என எல்லாவற்றையும் முறியடித்து பிரதாபன் தான் உண்மையில் இளவரசன் என்பதை நிலைநாட்டி, மஞ்சுளாவைத் திருமணம் செய்கிறான். + +நடிகர்கள் பட்டியல் கற்புக்கரசி பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. + +இந்தப் பட்டியல் கற்புக்கரசி பாட்டுப் புத்தகத்திலிருந்து பெறப்பட்டது. + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், ஏ. மருதகாசி, உடுமலை நாராயண கவி ஆகியோர் இயற்றினார்கள். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடினர். பி. பி. ஸ்ரீநிவாஸ், எம். எல். வசந்தகுமாரி இருவரும் பாடிப் பிரபலமான "கனியோ, பாகோ, கற்கண்டோ" பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. + + +
+ +சமய சஞ்சீவி + +சமய சஞ்சீவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பட்டு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சக்கரவர்த்தித் திருமகள் + +சக்கரவர்த்தித் திருமகள்1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. குமார் எழுதிய கதைக்கு இளங்கோவன் உரையாடல் எழுத, பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சௌபாக்கியவதி + +சௌபாக்கியவதி1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நீலமலைத்திருடன் + +நீலமலைத் திருடன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எம் .கே. ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பக்த மார்க்கண்டேயா + +பக்த மார்க்கண்டேயா 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகைய்யா, கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாக்யவதி + +பாக்யவதி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +புது வாழ்வு + +புது வாழ்வு (Pudhu Vazhvu) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எம். கே. தியாகராஜ பாகவதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், டி. எஸ். பாலையா ,லலிதா மாதுரி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +வைகுண்டம் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞன். அவன் ஒரு நல்ல பாடகராகவும், நாகம்மையை நேசிப்பவராகவும் அன்புடன் இருக்கிறார். ஆனால் நாகம்மையின் சகோதரர் அவர்களது காதலை எதிர்த்து நிற்கிறார். ஒரு நாள் அவர் வைகுந்தத்தை ஒரு மரத்தில் கட்டி வைத்து விடுகிறார். அவ்வழியே வந்த ஒரு செல்வந்த பெண்ணால் வைகுண்டம் காப்பாற்றப்படுகிறார். அவள் தனது நகரத்திற்கு வைகுந்தத்தை அழைத்துச் செல்கிறாள். வைகுந்தம் பாடல்களை பாடும் திறமை வாய்ந்தவர் என்று தெரிந்தவுடன், அவரை ஒரு பாடகராக விளம்பரப்படுத்துகிறார். அவர் அவரை "கீதாமணி" என்று மறு பெயரிடுகிறார்.. வைகுண்டம் புகழ்பெற்றவராகவும் பணக்காரராகவும் ஆகிறார். அவர் தனது பெற்றோரை புறக்கணித்து, அவர்களை தவறாக நடத்துகிறார். அவரது காதலி நாகம்மாள் அவரது நடத்தை காரணமாக தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். கீதாமணி எவ்வாறு தனது தவறை புரிந்துகொள்கிறார், என்பதும் நாகம்மாள் மற்றும் தனது பெற்றோருடன் எவ்வாறு சேர்கிறார் என்பது மீதி கதையாகும். + +தி இந்து நாழிதளில் வெளிவந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. + +தியாகராஜ பாகவதர்
+மாதுரி தேவி
+பி. பி/ ரங்காச்சாரி
+லலிதாகுமாரி துளசி
+என். எஸ். கிருஷ்ணன்
+டி. ஏ. மதுரம்
+டி. எஸ். பாலையா
+டி. எஸ். துரைராஜ்
+அம்பிகா
+ஆள்வார் குப்புசாமி
+கே. என். கமலம்
+கே. ஏ. தங்கவேலு
+குலதெய்வம் ராஜகோபால்
+எஸ். ஆர். கோபால்
+டி. பி. பொன்னுசாமி
+வி. கே. ஆச்சார்
+டி. வி. கல்யாணி அம்மாள் +இசையமைப்பு ஜி. ராமநாதன் மற்றும் சி. என். பாண்டுரங்கன், பாடல்கள் பாபநாசம் சிவன், தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி, நடராஜ சுந்தரம் ,சரவணபவானந்தா மற்றும் சுரதா. பாடல்களைப் பாடியோர் தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் டி. ஏ. மதுரம் , பி. லீலா, ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி மற்ற��ம் ஜெயலஷ்மி. + +திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2014 இல் இவ்வாறு எழுதுகிறார். 2014 ஆம் ஆண்டில் இந்த திரைப்படம் தோல்விப்படமாக இருந்தாலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதன் இசை இன்னும் கேட்கும் விதமாக இருக்கிறது. + +Pudhu Vazhvu 1957, ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 13, 2014 + + +
+ +புதுமைப்பித்தன் (1957 திரைப்படம்) + +புதுமைப்பித்தன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை வசனம் எழுத. டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மகதலநாட்டு மேரி + +மகதல நாட்டு மேரி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், ரகுவீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மக்களைப்பெற்ற மகராசி + +மக்களைப்பெற்ற மகராசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மணாளனே மங்கையின் பாக்கியம் + +மணாளனே மங்கையின் பாக்கியம் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மணமகன் தேவை + +மணமகன் தேவை 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மல்லிகா (திரைப்படம்) + +மல்லிகா 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தளியத் ஜூனியர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். + +பர்மாவில் வர்த்தகம் செய்து கொண்டிருந்த ஒருவர் வியாபாரத்தில் நஷ��டம் ஏற்பட்டதனால் தன் குடும்பத்தோடு இந்தியாவுக்குத் திரும்புகிறார். வரும் வழியில் விமானம் விபத்துக்குள்ளாகி அவ்ரும் அவரது மனைவியும் உயிரிழக்கின்றனர். பெரிய மகள் கமலாவும் சிறிய மகள் பத்மாவும் உயிர் தப்புகிறார்கள். பத்மாவுக்குக் கண்பார்வை பாதிக்கப்படுகிறது. வாழ்க்கைச் செலவுக்கும், தங்கையின் சிகிச்சைக்குப் பணம் சேர்க்கவும் கமலா ஒரு நடனக் குழுவில் சேருகிறாள். பல இடங்களில் நடனமாடிப் புகழ் அடைகிறாள். வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மோகன் என்ற வாலிபனைக் கண்டு அவனை விரும்புகிறாள். அவள் நாட்டியக்காரி என்பதால் மோகனின் பெற்றோர் மோகன் அவளைத் திருமணம் செய்வதை விரும்பவில்லை. இதற்கிடையில் மோகனின் தந்தையை யாரோ கொலை செய்து விடுகிறார்கள். மோகன் கைது செய்யப்படுகிறான். அவனைக் காப்பாற்றுவதற்காக கமலா பழியைத் தான் ஏற்றுக் கொள்கிறாள். ஆனால் இறுதியில் உண்மை தெரியவந்து மோகன், கமலா ஒன்று சேருகிறார்கள். பத்மாவின் கண்பார்வையும் குணமடைகிறது. + +இப்பட்டியல் தி இந்து நாளேட்டிலிருந்து தொகுக்கப்பட்டது. + + +இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜோசப் தளியத் ஜூனியருக்குச் சொந்தமான சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த முதல் திரைப்படம் இதுவாகும். வசனம் எழுதிய நாஞ்சில் ராஜப்பா உதவி இயக்குநராகவும் பணியாற்றினார். நடன ஆசிரியராக ஹீராலால் பணியாற்றினார்கள். அவருக்கு உதவியாக சின்னி, சம்பத் ஆகியோர் பணியாற்றினர். பிற்காலத்தில் "நாயுடு ஹால்" நிறுவனத்தைத் தொடங்கிய எம். ஜி. நாயுடு இத்திரைப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். + + + + +மகாதேவி + +மகாதேவி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +மாயா பஜார் (1957 திரைப்படம்) + +மாயா பஜார் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்திற்கு கண்டசாலா இசையமைக்க, தஞ்சை இராமையாதாஸ் பாடல்களை எழுதியிருந்தார். + + + + + + +முதலாளி + +முதலாளி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +யார் பையன் + +யார் பையன் 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +இத்திரைப்படத்தின் இசை அமைப்பாளர் எஸ். தட்சிணாமூர்த்தி ஆவார். பாடல்களை மருதகாசி எழுதிய. ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா, எஸ். சி. கிருஷ்ணன், ஜிக்கி, பி. சுசீலா, ஆர். பாலசரஸ்வதி தேவி, டி. வி. ரத்தினம், ஜி. கஸ்தூரி, சி. கோமதி, தங்கப்பன், பொன்னம்மாள் ஆகியோர் பின்னணி பாடியுள்ளனர். + + + + +வணங்காமுடி (திரைப்படம்) + +வணங்காமுடி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் சிவாஜிக்கு வைக்கப்பட்டது. 80 அடி உயரமுள்ள அந்த கட்-அவுட் சித்ரா தியேட்டரில் அப்போது வைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் என்று அது பற்றி கூறப்பட்டது. இதனை சென்னை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தார் தயாரித்திருந்தனர். + + + + +அன்பு எங்கே + +அன்பு எங்கே 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அன்னையின் ஆணை + +அன்னையின் ஆணை 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அவன் அமரன் (திரைப்படம்) + +அவன் அமரன் 1958 ஆம் ஆண்டு வெளிவந��த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இல்லறமே நல்லறம் + +இல்லறமே நல்லறம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +உத்தம புத்திரன் (1958 திரைப்படம்) + +உத்தம புத்திரன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கன்னியின் சபதம் + +கன்னியின் சபதம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கடன் வாங்கி கல்யாணம் + +கடன் வாங்கி கல்யாணம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +குடும்ப கௌரவம் + +குடும்ப கௌரவம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சபாஷ் மீனா + +சபாஷ் மீனா 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சாரங்கதரா (1958 திரைப்படம்) + +சாரங்கதரா 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ஜி. இராமநாதன் இசைய��ைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை அ. மருதகாசி எழுதினார். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. இராஜகோபாலன், பி. பானுமதி, {ராதா) ஜெயலட்சுமி, பி. சுசீலா, ஜிக்கி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, கே. ராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + +மாரிமுத்தா பிள்ளை இயற்றிய "ஏதுக்கித்தனை மோடி தான்" என்ற கீர்த்தனை குமாரி கமலாவின் நடனத்திற்குப் பயன்படுத்தப்பட்டது. + + - முழு நீள திரைப்படம் + + + + +பாஸ்கரராயர் + +பாஸ்கர ராயர் (1690 - 1785) இந்துக் கடவுளான பராசக்தியைப் பற்றி எழுதிய ஒரு மூல எழுத்தாளர். சாக்த மந்திரங்களைப்பற்றி ரகசியமாக இருந்து வந்த பல உட்பொருள்களையெல்லாம் வடமொழியில் இயற்றியவர். இந்து சமயம் இவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறது. இவருடைய 'வரிவஸ்யா ரகசியம்', 'ஸௌபாக்கிய பாஸ்கரம்', 'சேது பந்தம்' முதலிய மூன்று படைப்புகளும் முக்கியமானவை. + +இவருடைய தந்தை கம்பீரராயர், தாய் கோனமாம்பா. கம்பீரராயர் பெரும் பண்டிதர். விசயநகர மன்னனால் பாரதி எனப் பட்டமளிக்கப்பட்டவர். தந்தையார் தம் மகனை எட்டாவது வயதில் காசிக்கு அழைத்துச்சென்று அங்குள்ள நரசிம்மாத்வரி என்பவரிடம் வேதக்கல்வியைக் கற்க ஏற்பாடு செய்தார். கங்காதர வாஜபேயி என்பவரிடம் கௌட தர்க்கத்தைப் பயின்றார். + +லலிதா சகஸ்ரநாமத்திற்கு விளக்க உரை எழுதிய பாஸ்கரராயர் மஹாராஷ்டிரத்தில் "பாகா" எனும் இடத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பெரிய வித்வான். இவரது தந்தை இவரை காசிக்கு அனுப்பித்து ஒரு அரிய கலைஞரிடம் சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் கற்க வைத்தார். இவர் பிறகு குஜராத் மாகாணத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து பராசக்தியின் பெருமைகளை நிலைநாட்டினார். இதைக் கேள்விப்பட்ட தஞ்சாவூர் மன்னன் காவிரிக்கரையில் ஒரு கிராமத்தை இவருக்குக் கொடுத்து அங்கு இவரை வசிக்கச் செய்தார். திருவிடைமருதூருக்கருகில் இருக்கும், பாஸ்கரராயபுரம் என்று தற்காலத்தில் வழங்கி வரும் கிராமம் தான் அது. அங்கு தான் இவர் அவருடைய எஞ்சிய வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆன்மிகப்பெருமைகள் தமிழ்நாட்டு மக்களிடையே பரவலாக இன்றும் பேசப்படுகிறது. + +உரிய வயதில் ஆனந்தீ என்னும் மங்கையை மணந்து பாண்டுரங்கன் என்னும் மைந்தனைப் பெற்றார். நான்காம் வேதம் ஆகிய அதர்வண வேதத்தைப் பயில்வார் அருகி வருவதை உணர்ந்து, தாமே பயின்று பல மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். தேவி வழிபாட்டில் ஈடுபட்டுப் பிரகாசானந்த நாதர் என்னும் தீட்சைப் பெயருடைய சிவதத்த சுக்லர் என்பவரிடம் ஸ்ரீவித்யை உபதேசம் பெற்றார். பின்னர் பாசுரானந்த நாதர் என அழைக்கப்பட்டார். தம் மனைவியையும் ஸ்ரீவித்யையில் ஈடுபடுத்தி பத்மாவதி எனப் பெயர் வழங்கினார். இவரால் வெல்லப்பட்ட ஒரு துறவி தம் பூர்வாஸ்ரம உறவினப்பெண் ஆகிய பார்வதியை இரண்டாவது மனைவியாக மணமுடித்தக்கொடுத்தார். இவர் காசியில் இரு மனைவியருடன் சில காலம் வசித்தார். இவருடைய வாழ்நாளிற்குப் பிறகு இவருடைய மூத்த மனைவியால் பாஸ்கரராஜபுரத்தில் பாஸ்கரேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு இன்றளவும் வழிபாடுகள் செம்மையாக நடைபெறுகின்றன. இவரால் வழிபடப்பெற்ற ஸ்ரீசக்ர பூர்ணமேரு இன்றும் திருவிடைமருதூர்ப் பெருங்கோயிலில் மூகாம்பிசை சன்னிதியில் வழிபடப்படுகிறது. + +லலிதா ஸஹஸ்ரநாமம், ஸௌந்தரியலஹரி, இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே முக்கிய உரைகளாகும். + +தஞ்சாவூர் பண்டித எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரிகள் அவர்களும் (1934), சென்னை குகானந்த ண்டலியைச் சேர்ந்த ந.சுப்ரமணிய அய்யர் அவர்களும் (1938) பாஸ்கர ராயருடைய சில வடமொழி நூல்களைத் தமிழ் உரையுடன் வெளியிட்டுள்ளனர். + + + + +செங்கோட்டை சிங்கம் + +செங்கோட்டை சிங்கம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உதயகுமார், சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +திருமணம் (திரைப்படம்) + +திருமணம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வலம்புரி பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +எஸ். எம். சுப்பையா நாயுடு, டி. ஜி. லிங்கப்பா ஆகியோர் திரைப்படத்துக்கு இசையமைத்தார்கள். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், சுரதா, எம். கே. ஆத்மநாதன், சுப்பு ஆறுமுகம் ஆகியோர் யாத்தனர். பாரதியாரின் பாடலொன்றும், ���ள்ளலாரின் திருவருட்பா ஒன்றும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றன.எம். எம். தண்டபாணி தேசிகர், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், ஜிக்கி, பி. லீலா, பி. சுசீலா, ஏ. ஜி. ரத்னமாலா, ஏ. பி. கோமளா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +திருடர்கள் ஜாக்கிரதை + +திருடர்கள் ஜாக்கிரதை1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நரச்சிம்ம ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேடி வந்த செல்வம் + +தேடி வந்த செல்வம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தை பிறந்தால் வழி பிறக்கும் + +தை பிறந்தால் வழி பிறக்கும்1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இது பிரேம் நசீர் நடித்த முதல் தமிழ்த் திரைப்படமாகும். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, கண்ணதாசன், கு. சா. கிருஷ்ணமூர்த்தி, கே. முத்துசுவாமி, சுரதா ஆகியோர் பாடல்களை யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி. லீலா, ஆர். பாலசரஸ்வதி தேவி, எம். எஸ். ராஜேஸ்வரி, கே. ஜமுனாராணி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +நல்ல இடத்து சம்மந்தம் + +நல்ல இடத்து சம்மந்தம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இதுவே ஏ. பி. நாகராஜன் தயாரித்த முதல் திரைப்படமாகும். அவரும் வி. கே. ராமசாமியும் இணைந்து "லட்சுமி பிக்சர்ஸ்" என்ற திரைப்பட நிறுவனத்தைத் தொடங்கி இந்தப் படத்தைத் தயாரித்தார்கள். வி. கே. ராமசாமி கதை எழுத, ஏ. பி. நாகராஜன் வசனங்கள் எழுதினார். +எல். ஆர். ஈஸ்வரி பின்னணி பாடகியாக அறிமுகமானதும் இந்தப் படத்தில் தான். இதற்கு முன் வடிவுக்கு வளைகாப்பு என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு "ஹம்மிங்" மட்டும் கொடுத்திருந்தார். அதுவரை இவரது பெயர் டி. எல். ராஜேஸ்வரி (டேவிட் லூர்துமேரி ராஜேஸ்வரி) என்றே அறியப்பட்டது. அக்காலத்தில் இன்னொரு ராஜேஸ்வரி (எம். எஸ். ராஜேஸ்வரி) பிரபலமாக இருந்ததால் ஏ. பி. நாகராஜன் இவரது பெயரை எல். ஆர். ஈஸ்வரி என மாற்றி வைத்தார். + +திரைப்படத்துக்கு கே. வி. மகாதேவன் இசையமைத்தார். அ. மருதகாசி, அ. ச. நாராயணன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பின்னணி பாடியவர்கள் சூலமங்கலம் ராஜேஸ்வரி, எல். ஆர். ஈஸ்வரி, கஸ்தூரி, கஜலட்சுமி, உடுத்தா ஆகியோர். + + + + +நாடோடி மன்னன் (1958 திரைப்படம்) + +நாடோடி மன்னன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 30 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. + +இப்படத்திற்கு கண்ணதாசன் வசனம் எழுதியிருந்தார். + + + + + +நான் வளர்த்த தங்கை + +நான் வளர்த்த தங்கை 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாரயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நீலாவுக்கு நெறஞ்ச மனசு + +நீலாவுக்கு நெறஞ்ச மனசு 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பானை பிடித்தவள் பாக்கியசாலி + +பானை பிடித்தவன் பாக்கியசாலி 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பிள்ளைக் கனியமுது + +பிள்ளைக் கனியமுது 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா ,ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +சச்சிதானந்தம் ,வெளியில் ஒரு நல்ல மனிதராக தோன்றினாலும், உண்மையில் அவர் ஒரு சுயநலவாதி. அவர் முத்தம்மா அதே வீட்டில் உள்ள தோட்டக்காரர் முருகனை நேசிக்கிறாள். அவர்களது திருமண வாழ்க்கை பற்றி கனவு காண்கிறார்கள், அவர்கள் இருவரும் தங்கள் முதல் குழந்தைக்கு "பாபு" என்று பெயரிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சச்சிதானந்தம் தான் நடத்திய மோகனாவின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு, தனது விருந்தினர் இல்லத்தில் தங்கும்படி அவளை அழைக்கிறார். அவளும் ஒப்புக்கொள்கிறாள். அவளுடைய தேவைகளை கவனிக்க முருகன் நியமிக்கப்படுகிறான். + +சச்சிதானந்தம் முத்தம்மாவை தொந்தரவு செய்ய முயற்சிக்கிறார், ஆனால் சச்சிதானந்தத்தின் மனைவி குணவதியால் முத்தம்மா காப்பாற்றப்படுகிறாள். இதற்கிடையே மோகனாவும் முருகனும் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார்கள். சச்சிதானந்தம் முத்தம்மாவை கடத்திக்கொண்டு வரும்போது, ஏற்படும் சூழ்நிலையால், முனியன் இறந்து விடுகிறார். முத்தம்மா அனாதையாகிறாள். முருகன், மோகனா இருவருக்கும் நடந்த மோதலில் மோகனா இறந்துவிடுகிறார். முருகனுக்கு ஏற்படும் ஒரு விபத்தில் கண்பார்வை போய்விட மகனுடன் பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். இறுதியில் முத்தம்மா முருகனை சந்தித்து அவனுடன் வாழ்க்கையைத் தொடர்வதாக மீதமுள்ள கதை முடிகிறது. +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோர் பாடல்களை யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி, பி. சுசீலா, எம். எஸ். ராஜேஸ்வரி, கஸ்தூரி, உடுத்தா சரோஜினி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +பெரிய கோவில் (திரைப்படம்) + +பெரிய கோவில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பெற்ற மகனை விற்ற அன்னை + +பெற்ற மகனை விற்ற அன்னை, 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமா��ும். வி. ராமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், மாஸ்டர் கோபால், சி. ஆர். விஜயகுமாரி, பண்டரிபாய் டி. பி. முத்துலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள் இரட்டையர் விஸ்வநாதன் - இராமமூர்த்தி. தஞ்சை இராமையா தாஸ், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அ. மருதகாசி, எஸ். டி. சுந்தரம் ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தார்கள். திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எம். ராஜா, எஸ். சி. கிருஷ்ணன், பி. லீலா, ஜிக்கி, கே. ஜமுனாராணி, பி. சுசீலா, டி. எஸ். பகவதி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடியிருந்தார்கள். + +"காலமெனும் காட்டாறு" என்ற பாடல் எஸ். டி. சுந்தரம் எழுதிய கவியின் கனவு என்ற மேடை நாடகத்திலிருந்து எடுக்கப்பட்டது. + + + + +மனமுள்ள மறுதாரம் + +மனமுள்ள மறுதாரம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வே. ஆர். சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி,தங்கவேலு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாங்கல்ய பாக்கியம் + +மாங்கல்ய பாக்கியம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை உடுமலை நாராயண கவி, தஞ்சை ராமையாதாஸ், கண்ணதாசன் ஆகியோர் இயற்றினார்கள். சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், எம். எல். வசந்தகுமாரி, கே. ஜமுனாராணி, ஏ. ஜி. ரத்னமாலா, ஏ. பி. கோமளா, பி. லீலா, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +மாய மனிதன் + +மாயமனிதன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். +"போக்கு காட்டியே போறவளே பொன்னம்மா - கொஞ்சம் +புடிகொடுத்துப் பேசினாத்தான் என்னம்மா..." +- என்ற பாடலை A.L.ராகவன், A.G.ரத்னமாலா பாடினார்கள். இந்த பாடல் காட்சியில் காக்கா ராதாகிருஷ்ணன், முத்துலட்சுமி நடித்துள்ளார்கள். பாடலாசிரியர் மருதகாசி + + + + +வஞ்சிக்கோட்டை வாலிபன் + +வஞ்சிக்கோட்டை வாலிபன் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அவள் யார் + +அவள் யார் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அழகர்மலை கள்வன் + +அழகர்மலை கள்வன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கேம்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, நாகைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அபலை அஞ்சுகம் + +அபலை அஞ்சுகம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலரும் நடித்துள்ளனர். அறிமுகத் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகை மனோரமாவின் பெயர் ஆர். எம். மனோரமா எனத் திரைப்படப் பெயர்ப்பட்டியலில் காட்டப்பட்டது. + + + + +அதிசயப் பெண் + +அதிசயப் பெண் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், வைஜெயந்திமாலா, மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +அதிசயப் பெண் திரைப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். + + + + +அருமை மகள் அபிராமி (திரைப்படம்) + +அருமை மகள் அபிராமி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +உலகம் சிரிக்கிறது + +உலகம் சிரிக்கிறது1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். ராமமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் + +உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். +தனது கணவன் இறந்த பின்னர் ஒரு ஏழைப் பெண்ணொருத்தி தன் இரு மகன்களை ஆளாக்க பாடுபடுகிறாள். மூத்த மகனை ஆலை உரிமையாளர் ஒருவர் தத்தெடுத்து வளர்க்கிறார். பின்னர்,அவன் அந்த ஆலைக்கு முதலாளி ஆகின்றான். அவளது இளைய மகன் அந்த ஆலையிலேயே தொழிலாளியாக பணிபுரிகிறான். ஆனால் இருவருக்குமே தாங்கள் சகோதரர்கள் எனத் தெரியாது. இருவரும் ஒரே பெண்ணை நேசிக்கின்றனர். இதனால் அண்ணன் தனது தம்பியை வேலையிலிருந்து அனுப்பி விடுகிறான், தம்பியானவன் தனது தாயுடன் சேர்ந்து சிறு நிலத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறான் ,நாளடைவில் வளர்ச்சியடைகிறான். ஆலைத்தொழிலாளிகள் பலரும் அவனது வயலில் வேலை செய்ய வருகிறார்கள். மூத்தவன் அவனது வயல்வெளிகளை நாசம் செய்ய நினைக்கிறான். அந்தப் பெண்ணிற்கு அண்ணனின் இச் செயல் பிடிக்கவில்லை, தம்பிக்கு தகவல் அளித்ததால் தொழிலாளிகள் உயிர் தப்பினர். அண்ணனின் எண்ணம் ஈடேறியதா?, வயல்வெளி என்னவாயிற்று?, இருவரும் இணைந்தனரா? என்பது மீதிக்கதையாகும். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, கண்ணதாசன், டி. கே. சுந்தர வாத்தியார் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், சி. எஸ். பாண்டியன், ஏ. எல். ராகவன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +எங்கள் குலதேவி + +எங்கள் குலதேவி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, கருணாநிதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர் அ. மருதகாசி. திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், கே. ஜமுனாராணி, பி. சுசீலா, ���. ஜி. ரத்னமாலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +ஒரே வழி + +ஒரே வழி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. எஸ். பாலையா, ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +கல்யாண பரிசு (திரைப்படம்) + +கல்யாண பரிசு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார். + + + + + + +கண் திறந்தது + +கண் திறந்தது 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். ராமநாதன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கல்யாணிக்கு கல்யாணம் + +கல்யாணிக்குக் கல்யாணம், 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். +படிப்பறிவில்லாத கல்யாணி தனது தாயார் மற்றும், இரு சகோதரர்களுடன் கிராமத்தில் வசித்து வருகிறாள்.அவளது மாமன் குமரேசன் பட்டப்படிப்பு படிக்கும் தனது மகன் சதாசிவத்திற்கு திருமணம் செய்து தர ஒப்புக்கொள்கிறார். படிப்பறிவில்லாத கல்யாணி தனக்கு வேண்டாம் என முதலில் மறுத்த சதாசிவம் பின்னர் அவளை நேரில் கண்டு சம்மதிக்கிறான். குமரேசன் இத்திருமணத்திற்காக வரதட்சணை கேட்கிறார். முன்னதாக கல்யாணியின் தந்தை தான் இறப்பதற்கு முன்னர் உள்ளூர் பண்ணையாரிடம் தனது மகளின் திருமணத்திற்காக சிறுது பணம் கொடுத்து வைத்திருந்தார். பண்ணையார் கல்யாணியை தான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார். கல்யாணியின் சகோதரன் சுந்தரம் பண்ணையாரிடம் உள்ள தொகையை கேட்க பண்ணையார் அவரை ஏமாற்றுகிறார். பணமில்லாமல் வீடு திரும்ப மனமிலாத சுந்தரம் பணம் சம்பாதிக்க சென்னை செல்கிறார். அங்கே அவரது சுசீலா என்ற பணக்காரப் பெண் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள���. இதற்கிடையில் கல்யாணியின் தாயார் தனது வீட்டை அதே பண்ணையாரிடம் அடகு வைத்து அதில் கல்யாணியின் திருமணத்தை நடத்துகிறார். + +அந்த வீட்டில் கல்யாணிக்கு ஒரு சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகிறது. ஒரு தீ விபத்தில் அவளது கண்பார்வை பறிபோகிறது. இதை கேட்ட அவளது தாயார் அதிர்ச்சியில் இறந்து போகிறார், அவளது கணவன் அவளை விட்டு மேற்படிப்பிற்காக வெளியூர் சென்று விடுகின்றான். தனது அண்ணன் சுந்தரமும் அவளை கைவிட்டுவிடுகிறார். இதற்கு பிறகு கல்யாணிக்கு என்ன நடக்கிறது என்பது படத்தின் மீதமுள்ள கதை உருவாக்குகிறது. +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கு. மா. பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் இயற்றினார்கள். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், வி. ஆர். ராஜகோபாலன், எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, கே. ஜமுனாராணி, பி. பி. ஸ்ரீநிவாஸ், பி. சுசீலா, கமலா ஆகியோர் பின்னணி பாடினார்கள். +பிலிம் நியூஸ் ஆனந்தன் என்பாரது தகவல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. and from the song book. + + + + + + + +காவேரியின் கணவன் + +காவேரியின் கணவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கூடி வாழ்ந்தால் கோடி நன்மை + +கூடி வாழ்ந்தால் கோடி நன்மை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். ராஜகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சகோதரி (திரைப்படம்) + +சகோதரி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, பிரேம் நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +சிவகெங்கைச் சீமை (திரைப்படம்) + +சிவகெங்கைச் சீமை, 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கண்ணதாசன் திரைக்கதை, வசனம், மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர். + + + + + +சுமங்கலி (1959 திரைப்படம்) + +சுமங்கலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கே. ஆர். நம்பியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, சி. எஸ். பாண்டியன், ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சொல்லு தம்பி சொல்லு + +சொல்லு தம்பி சொல்லு (Sollu Thambi Sollu) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவை திரைப்படமாகும். இப் படத்தின் கதை வில்லியம் சேக்சுபியர் எழுதிய "ஆஸ் யூ லைக் இட்" நாடகத்தின் தழுவலாகும். டி. வி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், நம்பியார், எஸ். எஸ். ராஜேந்திரன், ராஜசுலோசனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +செல்வந்தரான சுந்தரம்பிள்ளையின் ஒரே மகன் சின்னத்தம்பி (பிரேம் நசீர்). இவர் ஏழை உதவியாளரின் மகளான கல்யாணியை (ராஜசுலோசனா) காதலிக்கிறான். இவர்களது காதல் பல தடைகளைச் சந்திக்கிறது. முடிவில் இவர்கள் இருவரின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே இப் படத்தின் கதையாகும். + + +"சொல்லு தம்பி சொல்லு" திரைப்படம் வில்லியம் சேக்சுபியர் எழுதிய "ஆஸ் யூ லைக் இட்" நாடகத்தின் தழுவலாகும். 1958 சூலையில் இதன் திரைக்கதை வளர்ச்சியில் இருந்தது. இப் படத்தின் இயக்குநர் டி. வி. சுந்தரம். இவரே தனது நிறுவனமான டி. வி. எஸ். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் இப் படத்தை தயாரித்துள்ளார். இத் திரைப்படத்தின் வசனங்களை எழுதியவர் விந்தன். இப் படத்தின் முழு நீளம் ஆக இருந்தது. + +இத் திரைப்படத்திற்கு இசை அமைத்தவர் கே. வி. மகாதேவன், மற்றும் பாடல்களை எழுதியவர் அ. மருதகாசி. + +"சொல்லு தம்பி சொல்லு" திரைப்படம் மார்ச்சு 27, 1959இல் வெளியிடப்பட்டது. இப் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை. + + + + +தங்கப்பதுமை + +தங்கப்பதுமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்தி���ைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன. + + + + + +தலை கொடுத்தான் தம்பி + +தலை கொடுத்தான் தம்பி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாய் மகளுக்கு கட்டிய தாலி + +தாய் மகளுக்கு கட்டிய தாலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அண்ணாதுரை அவர்களின் எழுத்தில், ஆர். ஆர். சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை + +தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தெய்வபலம் + +தெய்வபலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வசந்தகுமார் ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நல்ல தீர்ப்பு + +நல்ல தீர்ப்பு1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நாலு வேலி நிலம் + +நாலு வேலி நிலம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சகஸ்ரநாமம், ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நான் சொல்லும் ரகசியம் + +நான் சொல்லும் ரகசியம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஸ்ரீதர் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நாட்டுக்கொரு நல்லவள் + +நாட்டுக்கொரு நல்லவள் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தசரத ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், பாலைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பத்தரைமாத்து தங்கம் + +பத்தரைமாத்து தங்கம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலைய்யா, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாகப்பிரிவினை (திரைப்படம்) + +பாகப்பிரிவினை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படம் 1960இல் சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது (குடியரசுத் தலைவரின் வெள்ளிப் பதக்கம்) பெற்றது. + + + + +பாஞ்சாலி (திரைப்படம்) + +பாஞ்சாலி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாண்டித் தேவன் + +பாண்டித் தேவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் + +பிரசிடெண்ட் பஞ்சாட்சரம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ராமையா எழுதி, ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சரோஜாதேவி, சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். கண்ணதாசன், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், கு. மா. பாலசுப்பிரமணியம் ஆகியோர் பாடல்களை இயற்றினர். சுப்பிரமணிய பாரதியார் இயற்றிய பாடலொன்றும் திரைப்படத்தில் இடம்பெற்றது. எம். எல். வசந்தகுமாரி, (ராதா) ஜெயலட்சுமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, டி. எம். சௌந்தரராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், சீர்காழி கோவிந்தராஜன், கே. ஜமுனாராணி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா, பி. லீலா, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +பெண்குலத்தின் பொன் விளக்கு + +பெண்குலத்தின் பொன்விளக்கு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. விட்டாலாச்சாரியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மஞ்சள் மகிமை + +மஞ்சள் மகிமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆத்தூத்தி சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மனைவியே மனிதனின் மாணிக்கம் + +மனைவியே மனிதனின் மாணிக்கம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, நாகைய்யா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +மாலா ஒரு மங்கல விளக்கு + +மாலா ஒரு மங்கல விளக்கு 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முகர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகைய்யா, துரைசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் சி. என். பாண்டுரங்கன். பாடல்களை வில்லிபுத்தன், இரா. பழநிச்சாமி ஆகியோர் இயற்றினர். ஆர். பாலசரஸ்வதி, சூலமங்கலம் ராஜலட்சுமி, (ராதா) ஜெயலட்சுமி, ஏ. எம். ராஜா, சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீநிவாஸ், தங்கப்பன், ஏ. வி. சரஸ்வதி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +மின்னல் வீரன் + +மின்னல் வீரன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வீரப்பா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +யானை வளர்த்த வானம்பாடி + +யானை வளர்த்த வானம்பாடி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ��த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +ராஜ சேவை + +ராஜசேவை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. காமேஸ்வர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ராஜா மலயசிம்மன் + +ராஜா மலையசிம்மன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வண்ணக்கிளி + +வண்ணக்கிளி 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் இடம்பெற்ற "அடிக்கிற கைதான் அணைக்கும்" எனத் துவங்கும் பாடல் வெகுவாக அறியப்பட்டது. + +இத்திரைப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். பாடல்களைக் கவிஞர் அ. மருதகாசி எழுதியிருந்தார். பாடல்களை சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, ஏ. ஜி. ரத்தினமாலா ஆகியோர் பாடியிருந்தனர். + + + + +வாழவைத்த தெய்வம் + +வாழவைத்த தெய்வம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வாழ்க்கை ஒப்பந்தம் (திரைப்படம்) + +வாழ்க்கை ஒப்பந்தம் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆடவந்த தெய்வம் + +ஆடவந்த தெய்வம் 1960 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் திரைப்படமாகும். ப. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், ஈ. வி. சரோஜா, எம். ஆர். ராதா, அஞ���சலிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர். + +இசை, நடனம் போன்ற நுண்கலைகளில் விருப்பமுடையவனான ஆனந்தன் மருதூர் மிட்டாதார்.
பைரவி பூஞ்சோலை கிராமத்துத் தெரு நடனக்காரி. எதிர்பாராத சந்திப்பால் இருவரிடையே காதல் மலர்கிறது.
+ஆனந்தனின் தாய் சரஸ்வதி தன் அண்ணன் சிங்காரம் பிள்ளையின் மகள் கல்யாணியை ஆனந்தனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணியிருக்கிறாள். +மலையப்பன் ஒரு தபுதாரன் (தாரமிழந்தவன்). அவனுக்குக் கல்யாணி மீது ஒரு கண்.
+ஒரு நாள் கல்யாணி நடனமாடுவதைக் கண்ட ஆனந்தன் அவளைப் பாராட்ட, கல்யாணி ஆனந்தன் தன்னை விரும்புவதாக நினைக்கிறாள்.
+சரஸ்வதி ஊரில் இல்லாத நேரத்தில் மலையப்பன் சதி செய்து சிங்காரத்தை ஜெயிலுக்கு அனுப்பிவிடுகிறான்.
+தந்தையை மீட்பதற்காகக் கல்யாணி ஆனந்தன் நடத்தும் நடனப் போட்டியில் கலந்து கொள்கிறாள். மலையப்பனின் சூழ்ச்சியால் மேடையில் உடைந்த கண்ணாடித்துண்டுகள் தூவப்படுகின்றன. கல்யாணி ஆட முடியாமல் மயங்கி விழ, அதைப் பார்த்த ஆனந்தன் அதிர்ச்சியால் பைத்தியமாகிறான்.
+மலையப்பன் கல்யாணியைக் கடத்திக் கொண்டுபோகிறான். ஆனால் அவள் தப்பி விடுகிறாள். தப்பியவள் பைரவியிடம் சென்றடைகிறாள். பைரவியுடன் தங்கியிருக்கும்போது தனக்குத் தெரிந்த நடனங்களை பைரவிக்குக் கற்றுக் கொடுக்கிறாள்.
+கல்யாணி ஆனந்தனுக்கு ஒரு கடிதம் எழுத, அக்கடிதம் மலையப்பன் கையில் சிக்குகிறது. அவள் இருக்குமிடத்தை அறிந்து கொண்ட மலையப்பன் கல்யாணியைப் பிடித்து வர ஆட்களை அனுப்புகிறான். அவர்கள் தவறுதலாக பைரவியைப் பிடித்து வருகின்றனர்.
+பைரவி ஆனந்தனுக்குப் பைத்தியம் பிடித்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவனைக் குணப்படுத்த பாடுபடுகிறாள். கல்யாணி கற்றுக்கொடுத்த ஒரு நடனத்தை பைரவி ஆட ஆனந்தனுக்குப் பைத்தியம் தெளிகிறது.
+ஆனந்தனுக்குப் பைத்தியம் என அறிந்த கல்யாணி மருதூருக்கு வருகிறாள். ஆனந்தனும் பைரவியும் காதலர்கள் என அறிகிறாள். அவர்கள் இருவரையும் மலையப்பன் தீர்த்துக் கட்ட திட்டமிடுவதை அறிந்து, அவர்களைக் காப்பாற்ற சமையற்காரியாக வேடம் போட்டு அவர்களுடன் தங்குகிறாள்.
+பைரவி ஆனந்தனை அழைத்துக்கொண்டு பூஞ்சோலை கிராமத்துக்கு வருகிறாள். கல்யாணியின் துணி மூட்டைக்குள் அவள் ஆனந்தனுக்கு எழுதி வைத்திரு���்த காதல் கடிதத்தை பைரவி கண்டு ஆனந்தனை சந்தேகிக்கிறாள். கல்யாணியை கலைத்தெய்வம் என்றும், அவளைத்தான் ஒருபோதும் காதலித்ததில்லை என்றும் ஆனந்தன் கூறுகிறான். மாறுவேடத்தில் இருக்கும் கல்யாணி இதைக் கேட்டு வேதனைப்படுகிறாள். அதே நேரம், ஜெயிலில் அவள் தகப்பன் இறந்துவிட்டதாகச் சேதி வருகிறது.
+இந்தச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் சமையற்காரி வேடத்தில் இருப்பது கல்யாணிதான் என மலையப்பனுக்கு தெரியச் செய்து விடுகிறது. அவனிடமிருந்து தப்பி தன் வாழ்வை முடித்துக் கொள்ள கல்யாணி ஓடுகிறாள்.
+அதே சமயம் பைரவியும் தற்கொலை செய்யும் நோக்கத்துடன் ஓடி வருகிறாள். அதைக் கண்ட கல்யாணி அவளைத் தடுத்து ஆனந்தனுக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பதற்காக மலையப்பனைத் தான் திருமணம் செய்வதாகச் சொல்கிறாள். ஆனந்தன் பைரவி திருமணம் நடக்கிறது. ஆனால் மலையப்பன் கல்யாணி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க, கல்யாணி விஷமருந்தி உயிர் விடுகிறாள்.
ஆனந்தனும் பைரவியும் அவளைத் தெய்வமாக மதிக்கின்றனர். + + +இத் திரைப்படத்தின் கதை எழுத்தாளர் எல்லார்வி எழுதிய "கலீர் கலீர்" என்ற நாவலைத் தழுவி எழுதப்பட்டதாகும். மெஜஸ்டிக் ஸ்டூடியோ அதிபர் முத்துக்கருப்ப ரெட்டியாரின் அனுசரணையுடன் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தை இந்திரா ஃபிலிம்ஸ் வெளியிட்டனர். மெஜஸ்டிக் ஸ்டூடியோவை பின்நாளில் இயக்குநரும் தயாரிப்பாளருமான கே. எஸ். கோபாலகிருஷ்ணன் விலைக்கு வாங்கி "கற்பகம் ஸ்டூடியோஸ்" எனப் பெயரிட்டார். + +இசையமைப்பு: கே. வி. மகாதேவன். பாடல்களை இயற்றியவர்: ஏ. மருதகாசி + + + +
+ +ஆளுக்கொரு வீடு + +ஆளுக்கொரு வீடு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்யன், டி. எஸ். முத்தையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்புக்கோர் அண்ணி + +அன்புக்கோர் அண்ணி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இரும்புத்திரை (திரைப்படம்) + +இரும்புத்திரை 1960 ஆம் ��ண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வைஜெயந்திமாலா, எஸ். வி. சுப்பையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +1959 ஆம் ஆண்டில் ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் தமிழ், இந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரு படத்தைத் தயாரிக்கத் தொடங்கினார். இந்தித் திரைப்படத்துக்கு "பைகாம்" (Paigham) எனப் பெயரிப்பட்டது. தமிழ்ப் படத்திற்குப் பெயரிடப்படவில்லை. படத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என ஊழியர்களிடம் ஆலோசனை கேட்டார். 2500 விண்ணப்பங்கள் வந்தன. அவற்றைப் பரிசீலித்து இரும்புத் திரை என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்தார். எல்லா ஊழியர்களையும் அழைத்து ஒரு விருந்து வைத்ததுடன் பெயரை முன்மொழிந்த பையனுக்கு பரிசாக ஒரு தொகையும் அளித்தார் வாசன். + +நிஜ வாழ்வில் தாயும் மகளுமான வசுந்தரா தேவியும் வைஜெயந்திமாலாவும் இந்தப் படத்திலும் தாயும் மகளுமாக நடித்துள்ளார்கள். + + + + +இருமனம் கலந்தால் திருமணம் + +இருமனம் கலந்தால் திருமணம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +எங்கள் செல்வி + +எங்கள் செல்வி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஒன்று பட்டால் உண்டு வாழ்வு + +ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கடவுளின் குழந்தை + +கடவுளின் குழந்தை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாதா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +களத்தூர் கண்ணம்மா + +களத்தூர் கண்ணம்மா 1960 ஆம் ஆண்���ு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், டி. எஸ். பாலையா, சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். தகாத சூழ்நிலைகளினால் பிரிந்து போகும் இளவயதுத் தம்பதிகளையும், அவர்களுக்குப் பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அநாதை இல்லத்தில் வளர்வதைப் பற்றியும் இப்படம் தத்ரூபமாக எடுத்தியம்புகின்றது. + +இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது. அத்துடன் மட்டுமன்றி இந்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருது போன்ற விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றது. "மவூரி அம்மாயி" எனும் பெயரில் தெலுங்கு மொழியில் இத்திரைப்படம் மொழிபெயர்க்கப்பட்டது. இதே திரைப்படம் "சுனில் தத்" மற்றும் "மீனாகுமாரி" போன்றோரின் நடிப்பில் இயக்குனர் ஏ. பீம்சிங் இயக்க "மெயின் சப் ரஹுன்கி" (Main Chup Rahungi) எனும் பெயரில் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது. சிங்கள மொழியிலும் கூட இது மங்கலிக்கா (Mangalika) எனும் பெயரில் ரீமேட் செய்யப்பட்டது. + + + + + + + +கவலை இல்லாத மனிதன் + +கவலை இல்லாத மனிதன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் -இராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். சந்திரபாபு பாடிய "பிறக்கும் போதும் அழுகின்றோம்" பாடல் உட்பட அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார். + + + + + +குறவஞ்சி (திரைப்படம்) + +குறவஞ்சி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. ஆர். ராஜகோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +குழந்தைகள் கண்ட குடியரசு + +குழந்தைகள் கண்ட குடியரசு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கைராசி + +கைராசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆர். கோவர்தனம் இசையமைத்திருந்தார். + +பாடல்களை ஆர். கோவர்த்தனம் இசையமைத்திருந்தார். பாடல்களை கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, டி. எஸ். பகவதி, கமலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னனிக் குரல் கொடுத்திருந்தனர். + + + + + +கைதி கண்ணாயிரம் + +கைதி கண்ணாயிரம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்மனோகர், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சவுக்கடி சந்திரகாந்தா + +சவுக்கடி சந்திரகாந்தா 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, டி. கே. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சங்கிலித்தேவன் + +சங்கிலித்தேவன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சிவகாமி (திரைப்படம்) + +சிவகாமி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்தா மிராசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், சிவ சூரியன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சோலைமலை ராணி + +சோலைமலை ராணி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராவ், பிரேம்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்கம் மனசு தங்கம் + +தங்கம் மனசு தங்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எம். கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தங்கரத்தினம் + +தங்கரத்தினம் (thangarathinam) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +தங்கம் சென்னையில் படிக்கும் ஒரு பணக்கார குடும்பத்து இளைஞன் , விடுமுறை நாட்களில் தனது கிராமத்திற்கு செல்லும் போது, ​ஏழைப் பெண்ணான ரத்னத்தைச் சந்திக்க இருவரும் காதலிக்கிறார்கள். தங்கத்தின் தந்தை மிராசுதார் நல்லமுத்து பிள்ளைக்கு இக் காதல் பற்றி தெரிவதற்கு முன்னால் அவன் சென்னைக்கு வந்து விடுகிறான். செல்வம் தங்கத்தின் நண்பன், சீதை மற்றும் மீனா இரண்டு பெண்கள் செல்வத்தை காதலிக்கிறார்கள். ஆனால் செல்வம் சீதையைத்தான் நேசிக்கிறான். மீனாவின் தாயாருக்கு உடல் நலமில்லாத காரணத்தால், அவள் கிராமத்திற்கு செல்லும் போது, ​​அவளுடைய தாயார் ஏற்கனவே இறந்துவிடுகிறார். அவளது தந்தை வடிவேலுவிற்கு தனது கடன்களைத் தீர்க்கும் வழி தெரியாத காரணத்தால், மிராசுதார் நல்லமுத்து பிள்ளை அவர்களுக்கு உதவ முன்வருகிறார், மேலும் அவர் மீனாவை இரண்டாம் தாரமாக மணக்கிறார். தனது தந்தை வயது முதிர்ந்த ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிந்தவுடன் தங்கம் அவனது தாயைப் பார்க்க வீட்டுக்குத் திரும்புகிறான். மீனா தனது நண்பன் செல்வத்தை ஏமாற்றி விட்டதாக தங்கம் நினைக்கிறான். அதனால் அவன் வீட்டை விட்டு வெளியேறி, சமூக சீர்திருத்த நடவடிக்கைகளில் ஈடுபடுகிறான். அவன் தனது வாழ்வாதாரத்திற்காக ஒரு வேலைக்கு செல்கிறான். ரத்னத்தையும் அவளுடைய தந்தை வீராசாமியையும் அவருடைய தந்தையார் தவறாக நடத்துவதை அறிந்து அவர்களைச் சந்தித்து ஆறுதல் அளிக்கிறான். மீதமுள்ள பிரச்சினைகள் எவ்வாறு சரியாகிறது என்பது மீதமுள்ள கதையாகும். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், அ. மருதகாசி, குடந்தை கிருஷ்ணமூர்த்தி, எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் யாத்தனர். எஸ். எஸ். ராஜேந்திரன் ஒரு நாட்டுப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். பி. சுசீலா, கே. ஜமுனாராணி, சி. எஸ். ஜெயராமன், டி. எம். சௌந்தரராஜன் ஆகியோர் பின்னணி பாடினார்கள் . + + + + +தந்தைக்குப்பின் தமையன் + +தந்தைக்குப்பின் தமையன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், ஓ. ஏ. கே. தேவர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தெய்வப்பிறவி + +தெய்வப்பிறவி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +இத்திரைப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார். + + + + +தோழன் (திரைப்படம்) + +தோழன்1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நான் கண்ட சொர்க்கம் + +நான் கண்ட சொர்க்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தங்கவேலு, பி. டி. சம்மந்தம், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பக்த சபரி + +பக்த சபரி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அசோகன், நாகைய்யா மற்றும் பலர் நடித்திருந்தனர். + + + + +படிக்காத மேதை + +படிக்காத மேதை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாக்தாத் திருடன் + +பாக்தாத் திருடன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +துணைத் தளபதி கையூமின் (அசோகன்) வஞ்சகம் காரணமாக நாட்டின் அரசனும் அரசியும் கொல்லப்படுகிறார்கள். ஆனால் பச்சிளம் குழந்தையான அவர்களின் மகன் அபு ஒரு பசுவுடன் சேர்த்துக் கட்டப்பட்டு, பசுக்கூட்டத்துடன் கலந்து தப்ப வைக்கப்படுகிறான். திருடர் கூட்டமொன்று குழந்தையைக் கண்டெடுத்து வளர்க்கிறார்கள். நாளைடைவில் அபு வளர்ந்து திருடர் கூட்டத்தின் தலைவனாகிறான். அபு (எம். ஜி. ஆர்) இருப்பவர்களிடம் திருடி இல்லாதவர்களுக்குக் கொடுக்கிறான். + +போலி அரசன் (டி. எஸ். பாலையா) கொடுங்கோல் ஆட்சி நடத்துகிறான். போலி அரசனுக்கும் போலி அரசிக்கும் (சந்தியா), சுபேரா (எம். என். ராஜம்) என்ற மகள் இருக்கிறாள். போலி இளவரசர் ஹைதர் (எம். என். நம்பியார்). + +அரசனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தும் வரை தனக்கும் தன் கூட்டத்தினருக்கும் மகிழ்ச்சி இல்லை என சூளுரைக்கிறான் அபு. + +அடிமைப் பெண்ணான ஜெரீனாவை (வைஜெயந்திமாலா) அடிமைத் தளையிலிருந்து மீட்கிறான் அபு. + +எடுத்துக்கொண்ட சபதத்தை முதல் ஆளாக மீறி ஜெரீனாவை அபு திருமணம் செய்கிறான். + +நண்பர்களை சமாதானப்படுத்தி நாட்டில் கிளர்ச்சியைத் தூண்டி, பல போராட்டங்கள், சமயோசித திட்டங்கள் மூலம் கொடுங்கோல் அரசனையும் துரோகி தளபதியையும் போலி இளவரசனையும் வென்று உரிமையை நிலை நாட்டுகிறான் அபு. + +எம். ஜி. இராமச்சந்திரன் - "அபு"
+வைஜெயந்திமாலா - "ஜெரினா"
+டி. எஸ். பாலையா - "போலி அரசன்"
+ஏ. சந்தியா - "போலி அரசி"
+எம். என். ராஜம் - "இளவரசி சுபேரா"
+எம். என். நம்பியார் - "போலி இளவரசர் ஹைதர்"
+எஸ். ஏ. அசோகன் - "வஞ்சக தளபதி கையூம்"
+டி. ஆர். இராமச்சந்திரன் - "அபுவின் தோழன்"
+பத்மினி பிரியதர்சினி
+எஸ். என். லட்சுமி
+எம். எஸ். எஸ். பாக்கியம்
+கே. எஸ். அங்கமுத்து
+நடனம்
+கோபி கிருஷ்ணா
+ஹெலன்
+பத்மினி
+லலிதா
+ராகினி + +தயாரிப்பாளர்: டி. பி. சுந்தரம்
+தயாரிப்பு நிறுவனம்: சதர்ன் மூவிஸ்
+இயக்குநர்: டி. பி. சுந்தரம்
+திரைக்கதை, வசனம்: ஏ. எஸ். முத்து
+இசை: ஜி. கோவிந்தராஜுலு நாயுடு
+பாடல்கள்: ஏ. மருதகாசி
+கலை: ராஜு
+எடிட்டிங்: ஜி. டி. ஜோஷி
+படப்பிடிப்பு: எம். கிருஷ்ணசுவாமி
+நடனம்: ஆர். கிருஷ்ணராஜ், பி. சோகன்லால், ஜெயசங்கர், வி. எஸ். முத்துசாமி பிள்ளை
+சண்டைப் பயிற்சி: ஆர். என். நம்பியார்
+ஒலிப்பதிவு இயக்குநர்: சி. பி. கன்னியப்பன் + +மேனாள் கோல்டன் ஸ்டூடியோ அதிபர் நாயுடு பாக்தாத் திருடன் படத்துக்கான நிதியைக் கொடுத்தார். எம். ஜி. ஆர். ஒவ்வொரு காட்சிக்கும் புதிதாக 'செட்' போட வேண்டும் என நிபந்தனை விதித்தார். ஒரு காட்சிக்கு 'செட்' போட ₹30, 000 செலவாயிற்று. இந்த ரீதியில் படம் எடுத்து முடிய ₹5 லட்சம் செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. இதற்கு மேலும் ₹2 லட்சம் செலவிட வேண்டும் என எம். ஜி. ஆர். சொன்னபோது நாயுடுவுக்கு பயம் ஏற்பட்டது. +எம். ஜி. ஆர். வைஜெயந்திமாலாவுடன் சேர்ந்து நடித்த முதல் படம் இதுவாகும். படம் எடிட்டிங் செய்யப்பட்ட போது எம். ஜி. ஆர். உடனிருந்தார். "(வைஜெயந்திமாலாவின்) அசைவுகள் சீராக இருந்ததால் எடிட்டிங் செய்வது சுலபமாக இருந்தது" என எம். ஜி. ஆர். குறிப்பிட்டார் என வைஜெயந்திமாலா தெரிவித்தார். +இந்தப் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்த எஸ். என். லட்சுமி ஒரு சந்தர்ப்பத்தில் 'டூப்' போடாமலேயே புலியுடன் மோத வேண்டி ஏற்பட்டது. "இந்தப் படத்தின் கதாநாயகன் நானா அல்லது இந்த இளம் பெண்ணா?" என எம். ஜி. ஆர். வேடிக்கையாகக் கேட்டாராம். + +பாக்தாத் திருடன் படத்துக்கு இசையமைத்தவர் ஜி. கோவிந்தராஜுலு நாயுடு. அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஏ. மருதகாசி. பின்னணி பாடியவர்கள்: டி. எம். சௌந்தரராஜன், ஏ. பி. கோமளா, ஜிக்கி, பி. சுசீலா, கே. ஜமுனாராணி ஆகியோர். + + +
+ +பார்த்திபன் கனவு (1960 திரைப்படம்) + +பார்த்திபன் கனவு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வைஜயந்திமாலா, எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பிரபல எழுத்தாளர் கல்கி எழுதிய பார்த்திபன் கனவு எனும் புதினத்தை அடிப்படையாக வைத்து இந்தத் திரைப்படம் இயக்கப்பட்டது. + + + + + + +பாட்டாளியின் வெற்றி + +பாட்டாளியின் வெற்றி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாதை தெரியுது பார் + +பாதை தெரியுது பார் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சகஸ்ரநாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ரெயில்வேயில் பணியாற்றிய கே. விஜயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர். கே. கண்ணன் எழுத, பாடல்களை கே. சி. எஸ். அருணாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதினார்கள். எம். பி. சீனிவாசன் பாடல்களுக்கு இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் இத்திரைப்படப் பாடல்கள் பெரு வெற்றியை அடைந்தன. படம் தோல்வியடைந்தாலும் தமிழில் வந்த சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது. + + + + + +புதிய பாதை + +புதிய பாதை 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தபி சாணக்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பெற்ற மனம் + +பெற்ற மனம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பெற்றவள் கண்ட பெரு வாழ்வு + +பெற்றவள் கண்ட பெருவாழ்வு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, மனோகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பொன்னித் திருநாள் + +பொன்னித் திருநாள் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், பக்கிரிசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை தஞ்சை ராமையாதாஸ், பி. கே. முத்துசாமி, அ. மருதகாசி, புத்தநேரி சுப்பிரமணியம் ஆகியோர் யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ஏ. எல். ராகவன், எஸ். வி. பொன்னுசாமி, பி. சுசீலா, சூலமங்கலம் ராஜலட்சுமி, (ராதா) ஜெயலட்சுமி, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி ஆக���யோர் பின்னணி பாடினார்கள். + + + + + +மீண்ட சொர்க்கம் + +மீண்ட சொர்க்கம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +யானைப்பாகன் (திரைப்படம்) + +யானைப்பாகன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உதயகுமார், பி. எஸ். வீரப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். அ. மருதகாசி, கோவை குமாரதேவன், புரட்சிதாசன், ஆலங்குடி சோமு ஆகியோர் பாடல்களை யாத்தனர். சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +இரத்தினபுரி இளவரசி + +ரத்தினபுரி இளவரசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ராஜமகுடம் + +ராஜ மகுடம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், வி. ஆர். ராஜகோபாலன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் மாஸ்டர் வேணு. பாடல்களை தஞ்சை ராமையாதாஸ் இயற்றினார். திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எல். ராகவன், பி. லீலா, ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +விஜயபுரி வீரன் + +விஜயபுரி வீரன் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தாலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், எஸ். ஏ. அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +விடிவெள்ளி (திரைப்படம்) + +விடி வெள்ளி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி���ாஜி கணேசன், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.படத்தின் வெளிப்புறக் காட்சிகள் அனைத்தும் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புத்தூர் என்ற கிராமத்தில் படப்பிடிக்கப்பட்டன. +சந்துருவின் (சிவாஜி கணேசன்) தங்கை மீனாவுக்கு (எம். என். ராஜம்) திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காக சந்துரு ஒரு வைர நெக்லசைத் திருடித் தருவார். அந்த நெக்லசில் மூடி ஒன்று இருக்கும். திருமணம் ஆனதும், அந்த நெக்லசின் மூடி திறந்து கொள்ள, அதில் ஒரு வாலிபனின் படம் இருப்பதைப் பார்த்து, கணவன் ரவி (பாலாஜி) மீனாவை பிறந்த வீட்டுக்கு அனுப்பிவிடுவார். அந்த நெக்லசானது செல்வந்தரின் மகளான சித்ராவினுடையது (சரோஜாதேவி) பின்னர் சித்ராவும், சந்துருவும் காதலிப்பார்கள். சந்துரு எப்படி மீண்டும் தங்கையை வாழ வைக்கிறார் என்பதும் சந்துருவும் சித்ராவும் வாழ்வில் இணைந்தார்களா என்பதுதான் மீதிக் கதை. + + +ஏ. எம். ராஜா இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி, கு. மா. பாலசுப்பிரமணியன் ஆகியோர் எழுதியிருந்தனர். இப்பாடல்களை பின்னணிப் பாடகர்கள் ஏ. எம். ராஜா, திருச்சி லோகநாதன், பி. பி. ஸ்ரீநிவாஸ், ஜிக்கி ஆகியோர் பாடியிருந்தனர். + +பாடல்கள் + + + + + +வீரக்கனல் + +வீரக்கனல்1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். என். நம்பியார், பி. எஸ். வீரப்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கே. ஏ. தங்கவேலு, எம். சரோசா நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர். + + +கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், அ. மருதகாசி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் ஆகியோர் எழுதியிருந்தனர். + + + + +அன்பு மகன் + +அன்பு மகன் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அரசிளங்குமரி + +அரசிளங்குமரி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி வசனம் எழுத. ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில��� வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலர் நடித்திருந்தனர். + +திரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். பாடல்களை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், கு. மா. பாலசுப்பிரமணியம், கே. எஸ். கோபாலகிருஷ்ணன், உடுமலை நாராயண கவி, இரா. பழனிச்சாமி, முத்துக்கூத்தன் ஆகியோர் இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. லீலா, பி. சுசீலா, கே. ஜமுனாராணி, எஸ். ஜானகி, சூலமங்கலம் ராஜலட்சுமி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +குமுதம் (திரைப்படம்) + +குமுதம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆதூத்தி சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்திற்கு கே. வி. மகாதேவன் இசையமைத்திருந்தார். + +கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சிறப்பான வரவேற்பு பெற்ற பாடல்களாகும். + +தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் "மஞ்சி மனசுலு" என்ற பெயரில் 1972 ஆவது ஆண்டில் வெளியானது. + + + + +கானல் நீர் (திரைப்படம்) + +கானல் நீர்1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +குமார ராஜா + +குமார ராஜா 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் டி. ஆர். பாப்பா. பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், அ. மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கே. டி. சந்தானம் ஆகியோர். பாடகர்: ஜே. பி. சந்திரபாபு. பின்னணி பாடியவர்கள்: வி. என். சுந்தரம், பி. லீலா, கே. ஜமுனாராணி, சூலமங்கலம் ராஜலட்சுமி, ஏ. ஜி. ரத்னமாலா ஆகியோர். + + + + +எல்லாம் உனக்காக + +எல்லாம் உனக்காக 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுபராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கொங்கு நாட்டு தங்கம் + +கொங்கு நாட்டு தங்கம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சி. எல். ஆனந்தன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை அ. மருதகாசி, ஆலங்குடி சோமு, புரட்சிதாசன், கோவை குமாரதேவன் ஆகியோர் யாத்தனர். எம். எல். வசந்தகுமாரி, பி.சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி, சீர்காழி கோவிந்தராஜன், டி. எம். சௌந்தரராஜன், ஏ. எல். ராகவன் ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +சபாஷ் மாப்பிள்ளை + +சபாஷ் மாப்பிளே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், மாலினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நல்லவன் வாழ்வான் + +நல்லவன் வாழ்வான் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அண்ணாதுரை அவர்களின் எழுத்தில், பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், ராஜசுலோச்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நாகநந்தினி + +நாகநந்தினி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாய் சொல்லை தட்டாதே + +தாய் சொல்லைத் தட்டாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +தாயில்லா பிள்ளை + +தாயில்லா பிள்ளை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத. எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், எம். வி. ராஜம்மா மற்றும் பலரும் நடித்திருந்த��ர். + + + + +திருடாதே (திரைப்படம்) + +திருடாதே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இதை ஏ. எல். சீனிவாசன் தயாரித்தார். + + + + + +தூய உள்ளம் (திரைப்படம்) + +தூய உள்ளம்1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பணம் பந்தியிலே + +பணம் பந்தியிலே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர் கா. மு. ஷெரீப். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். வி. பொன்னுசாமி, சூலமங்கலம் ராஜலட்சுமி, பி. சுசீலா, எஸ். ஜானகி, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +பனித்திரை + +பனித்திரை 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாக்கிய லட்சுமி + +பாக்கிய லட்சுமி 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள் திரைப்படத்துக்கு இசையமைத்தார்கள். பாடல்களை பாபநாசம் சிவன், கண்ணதாசன், வி. சீதாராமன் ஆகியோர் யாத்தனர். ஏ. எல். ராகவன், எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனாராணி, பி. சுசீலா, (ராதா) ஜெயலட்சுமி, எல். ஆர். ஈஸ்வரி, ரேணுகா ஆகியோர் பின்னணி பாடினர். + +"சிங்கார சோலையே" என்ற பாடல் முதலில் "கல்லூரி ராணிகாள்" என எழுதப்பட்டு, இசைத்தட்டிலும் அப்படியே வெளிவந்தது. தணிக்கைக்குழு முதல் நாலு வரிகளை அனுமதிக்கா��தால் பின்னர் திரைப்படத்தில் சொற்கள் மாற்றப்பட்டன. "வரலட்சுமி வருவாய் அம்மா" என்ற பாடல் திரைப்படத்தில் இடம் பெறவில்லை. + + + + +புனர்ஜென்மம் + +புனர்ஜென்மம் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே + +மாமியாரும் ஒரு வீட்டு மருமகளே 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. திலக் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், எம். என். ராஜம், தேவிகா, வி. கே. ராமசாமி, கே. பாலாஜி, எஸ். வி. சுப்பையா, எம். சரோஜா, சி. கே. சரஸ்வதி, எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +யார் மணமகன் + +யார் மணமகன் 1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், குமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆலயமணி (திரைப்படம்) + +ஆலயமணி 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +அவனா இவன் + +அவனா இவன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், வசந்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +அன்னை (திரைப்படம்) + +அன்னை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +காத்திருந்த கண்கள் + +காத்திருந்த கண்கள் 1962ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இதில் ஜெமினி கணேசன், சாவித்திரி, எம். ஆர். ராதா, எஸ். வி. ரங்கா ராவ், வி. எஸ். ராகவன், பண்டரி பாய் ஆ��ியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இதை தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கினார். இத்திரைப்படம் தெலுங்கில் ஆஷா ஜோதி என்ற பெயரில் வெளியானது. எம். எஸ். சோலைமலை கதை எழுதினார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைத்திருந்தனர். + + +பிறந்த உடனேயே வறுமையின் காரணமாக சகோதரிகள் இருவரும் பிரிய நேர்கிறது. ஒரு பெண்ணை வறுமையில் வாடும் தாயும் இன்னொருத்தியை செல்வந்தரும் வளர்க்கின்றனர். மருத்துவர் அந்த நோய்வாய்ப்பட்ட தாய்க்கு மருத்துவம் செய்கிறார். அவர் மீது காதல் கொள்கிறாள் தாயுடன் வளர்க்கப்பட்ட பெண். இதை அவர் அறிந்திருக்கவில்லை. +இறக்கும் தறுவாயில், தன் மகளிடம் அவள் இரட்டையரில் ஒருத்தி என்ற உண்மையை சொல்கிறாள் தாய். தன் சகோதரியைத் தேடிச் செல்கிறாள் அந்தப் பெண். அதிர்ஷ்டவசமாக, சகோதரிகள் இருவரும் ஒரே ரயிலில் பயணிக்கிறார்கள். ரயில் விபத்தில் செல்வந்தருடன் வளர்ந்த மகள் நினைவிழக்கிறாள். அவள் இறந்து விட்டதாக அனைவரும் நம்புகின்றனர். அவள் பயணித்த ரயிலில் சென்ற தாயுடன் வளர்க்கப்பட்ட பெண்ணையே பணக்காரப் பெண் என்று நினைத்து மணக்கிறார் மருத்துவர். இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. பணக்கார சகோதரி திரும்புகிறாள். சிக்கல்கள் எப்படித் தீர்ந்தன என்பது மீதிக்கதை. + +இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி + + + + +குடும்பத்தலைவன் + +குடும்பத் தலைவன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கொஞ்சும் சலங்கை + +கொஞ்சும் சலங்கை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சாரதா (திரைப்படம்) + +சாரதா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். குடும்பக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட படங்களையே அதிகம��� இயக்கியவரான கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன்முதலில் இயக்கிய திரைப்படம் இது. +பாடம் செல்லித்தர வந்த ஆசிரியர் சம்பந்தத்தைக் (எஸ்.எஸ்.ராஜேந்திரன்) காதலித்து, தந்தையின் (எஸ். வி. ரங்காராவ்) எதிர்ப்பை மீறி அவரையே மணம்புரிந்தும்விடுகிறார் சாரதா. திருமணத்துக்குப் பிறகே தன் கணவனால் தாம்பத்திய வாழ்கையில் ஈடுட இயலாது என உணர்கிறாள். அவனுக்கு ஏற்பட்ட விபத்தால் ஏற்பட்ட நிலை என உணர்ந்து, அதிர்ச்சியைத் தாங்கிக்கொள்கிறாள். + +தன் கையாலாகாத நிலையை அறிந்த கணவன் சம்பந்தம், சாரதாவுக்கு மறுமணம் செய்துவைக்க விரும்புகிறான். சாரதாவிடமிருந்து மணவிலக்கு பெற்று, அவளுடைய மாமனையே (எஸ். ஏ. அசோகன்) மணமகனாக்குகிறான் சம்பந்தம். எல்லோரும் ஏற்றுக்கொண்டபோதும், சாரதாவால் இன்னொரு திருமணத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் மரணமடைகிறாள். + + + + +சுமைதாங்கி (திரைப்படம்) + +சுமை தாங்கி 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்', 'மயக்கமா கலக்கமா' ஆகிய பாடல்கள் பிரபலமானவையாகும். + + + + +செந்தாமரை (திரைப்படம்) + +செந்தாமரை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, எஸ். எஸ். ராஜேந்திரன்,கே. ஆர். ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தோர் விஸ்வநாதன் ராமமூர்த்தி. + + + + +தாயைக்காத்த தனயன் + +தாயைக் காத்த தனயன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தென்றல் வீசும் + +தென்றல் வீசும் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கல்யாண்குமார், கிருஷ்ணகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு இசை விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்கள். கண்ணதாசன், மாயவநாதன் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். பி. சுசீலா, டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி, ஜி. கே. வெங்கடேஷ், பி. பி. ஸ்ரீநிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +நிச்சய தாம்பூலம் (திரைப்படம்) + +நிச்சய தாம்பூலம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ரங்கா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எஸ். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்திருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, எம். எஸ். ராஜேஸ்வரி ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். வசனங்களை விடுகை இராமசாமி எழுதியிருந்தார். + + + + + +பலே பாண்டியா (1962 திரைப்படம்) + +பலே பாண்டியா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர். + + + + + +பந்த பாசம் + +பந்த பாசம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாத காணிக்கை + +பாத காணிக்கை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். + + + + + +பார்த்தால் பசி தீரும் + +பார்த்தால் பசி தீரும் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், சாவித்திரி போன்ற நடிகர்களும் குழந்தை நட்சத்திரமாகக் கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பாசம் (திரைப்படம்) + +பாசம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆ���். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +போலீஸ்காரன் மகள் + +போலீஸ்காரன் மகள் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பாலாஜி, எஸ். வி. சகஸ்ரநாமம், விஜயகுமாரி, சந்திரபாபு, மனோரமா, நாகேஷ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது மணிக்கொடி இதழ் இதழ் எழுத்தாளர்களில் ஒருவரான பி. எஸ். இராமையா எழுதிய நாடகம்த்தின் திரை ஆக்கமாகும். + + + + +மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் + +மங்கையர் உள்ளம் மங்காத செல்வம் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மடாதிபதி மகள் + +மடாதிபதி மகள்1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிலிம்ஸ்தான் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். இத்திரைப்படம் 1954 இல் இந்தியில் வெளி வந்த "நாஸ்திக்" என்ற படத்தின் மொழி மாற்று ஆகும். + + + + +மாடப்புறா (திரைப்படம்) + +மாடப்புறா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஏ. சுப்புராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பாடல்களுக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பின்னணி இசை அமைத்தவர் "வயலின்" மகாதேவன். பாடல்களை யாத்தவர் ஏ. மருதகாசி. டி. எம். சௌந்தரராஜன், சூலமங்கலம் இராஜலட்சுமி, பி. சுசீலா ஆகியோர் பின்னணி பாடினார்கள். + + + + +ராணி சம்யுக்தா + +ராணி சம்யுக்தா 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +வடிவுக்கு வளைகாப்பு + +வடிவுக்கு வளைகாப்பு 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பி. நாகராஜன் இயக்கத்தி��் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வளர் பிறை + +வளர் பிறை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +விக்ரமாதித்தன் (திரைப்படம்) + +விக்ரமாதித்தன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +வீரத்திருமகன் + +வீரத் திருமகன் 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், சச்சு, ஈ. வி. சரோஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். விசுவநாதன் இராமமூர்த்தி இரட்டையர்கள் இப்படத்துக்கு இசையமைத்தனர். + +விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களைக் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் புகழ் பெற்றவை. அவற்றுள் "ரோஜா மலரே ராஜகுமாரி", "வெத்தலை போட்ட பத்தினிப் பொண்ணு", "பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்" பாடல்கள் மிகவும் பிரபலமானவை. + + + + +உலகம் சுற்றும் வாலிபன் + +உலகம் சுற்றும் வாலிபன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. ஆர் தயாரித்து இயக்கிய இத்திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் எம். ஜி. ஆரும், மஞ்சுளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். அதிக பொருட்செலவில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டது. + +அப்போதைய ஆளும் கட்சியாக இருந்த திமுக, சுவரொட்டி விளம்பரங்களுக்கு வரியை உயர்த்தியமையால், சுவரொட்டிகள் இல்லாமலேயே விளம்பரம் செய்யப்பட்டது. + + +இத்திரைப்படம் ம. சு. விசுவநாதன் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும். + +உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவரும் காலத்தில் எம்.ஜி.ஆர் திமுகவினை விட்டு விலகி, அதிமுக என்ற புதுக் கட்சியை தொடங்கியிருந்தார். அதனால் ஆளும் கட்சியாக இருந்த திமுக தரப்பு உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படம் வெளிவருவதை தடுக்க முயற்சிகள் மேற்கொண்டது. திரைப்படத்தின் விளம்பரத்திற்கு பிரதானமாக சுவரொட்டிகளை மட்டுமே நம்பியிருந்த காலத்தில் சுவரொட்டிகளின் மீதான வரியை தமிழக அரசு ஏற்றியது. நிதி நெருக்கடி காரணமாக சுவரொட்டிகள் விளம்பரத்தினை எம்.ஜி.ஆர் தவிர்த்தார். + + + + + +சண்முகப்ரியா (திரைப்படம்) + +சண்முகப்ரியா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சூரியகாந்தி (திரைப்படம்) + +சூரிய காந்தி1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சொந்தம் (தமிழ்த் திரைப்படம்) + +சொந்தம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சொல்லத்தான் நினைக்கிறேன் + +சொல்லத்தான் நினைக்கிறேன் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீவித்யா, ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை கவிஞர் வாலி எழுதினார். இப்படத்தில் இடம்பெறும் "சொல்லத்தான் நினைக்கிறேன், உள்ளத்தால் துடிக்கிறேன்" என்ற பாடல் மிகவும் பிரபலமானது. + + + + +தெய்வக் குழந்தைகள் + +தெய்வக்குழந்தைகள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தெய்வாம்சம் + +தெய்வாம்சம் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சந்���ிரகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேடிவந்த லட்சுமி + +தேடி வந்த லட்சுமி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ராதா (திரைப்படம்) + +ராதா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ராஜபார்ட் ரங்கதுரை + +ராஜாபார்ட் ரங்கதுரை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +Old film, new perspective + + + + +வள்ளி தெய்வானை (திரைப்படம்) + +வள்ளி தெய்வானை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தாயகம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வந்தாளே மகராசி + +வந்தாளே மகராசி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதி, தனது சொந்த ஸ்டூடியோவில் இயக்க, சங்கர் கணேஷ் இசை அமைத்தார். இந்தத் திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா (இரட்டை வேடம்), வி. எஸ் ராகவன், சோ. ராமசாமி, புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +பெற்றோர் இல்லாதா மருத்துவர் சுந்தரம் (ஜெய்சங்கர்) கிராம வாசிகளுக்கு சேவை செய்ய வருகிறார். அங்கே, மங்கம்மாவும் (எம். என். ராஜம்) அவரது தாயும் (சி. கே. சரஸ்வதி) சேர்ந்து செய்யும் மனிதநேயமற்ற காரியங்களை கண்டு அதிர்ந்து போகிறார் சுந்தரம். மங்கம்மாவின் வீட்டில், கணவர் சிவலிங்கம் (வி. எஸ் ராகவன்), மாமியார் (எஸ். ஆர். ஜானகி), சகோதரன் (சோ ராமசாமி) ஆகியோர் இருந்தனர். உமாவையும் (புஷ்பலதா) அவளது குழந்தைகளையும் துன்புறுத்துகிறார் மங்கம்மா. மங்கம்மாவின் சகோதரனை ஆசிரியை லக்ஷ்மி (ஜெயலலிதா) மணக்கிறார். லட்சுமியையும் மன ரீதியாகவும், உடல் ரீத��யாகவும் துன்புறுத்துகிறார் மங்கம்மா. + +அந்நிலையில், லட்சுமி போன்ற முகஜாடை கொண்ட ராணியை (ஜெயலலிதா) சுந்தரம் சந்திக்க நேரிடுகிறது. மங்கம்மாவிற்கு ஒரு நல்ல பாடம் புகட்ட முடிவு செய்கிறார் சுந்தரம். அதனால், ராணியை லட்சுமியாக ஆள் மாற கோரிக்கை விடுத்தார். ஒப்புக் கொண்ட ராணி, மங்கம்மா வீட்டிற்கு லட்சுமியாக செல்கிறாள். லக்ஷ்மியின் திடீர் சுபாவ மாற்றத்தை கண்டு மங்கம்மா குடும்பம் அதிர்ந்து போனது. ஆள் மாறாட்டத்தை மங்கம்மா கண்டுபிடித்தாரா? ராணியின் உதவியுடன் மங்கம்மாவிற்கு சுந்தரம் பாடம் புகட்டினாரா? போன்ற கேள்விகளுக்கு விடை காணுதலே மீதிக் கதையாகும். + +வாலி எழுதிய பாடல் வரிகளுக்கு, ஷங்கர் கணேஷ் இசை அமைத்தார். + + + + + + +வாக்குறுதி + +வாக்குறுதி 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் காந்திராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர்,நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +விஜயா + +விஜயா 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வீட்டுக்குவந்த மருமகள் + +வீட்டுக்கு வந்த மருமகள் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விட்டல் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், லதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வீட்டு மாப்பிள்ளை + +வீட்டு மாப்பிள்ளை 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. கே. சுப்பிரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஸ்கூல் மாஸ்டர் (1973 திரைப்படம்) + +ஸ்கூல் மாஸ்டர் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +உள்ளத்தில் குழந்தையடி + +உள்ளத்தில் குழந்தையடி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உனக்கும் வாழ்வு வரும் + +உனக்கும் வாழ்வு வரும் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உறவுகள் என்றும் வாழ்க + +உறவுகள் என்றும் வாழ்க 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சட்டம் என் கையில் + +சட்டம் என் கையில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அசோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சதுரங்கம் (1978 திரைப்படம்) + +சதுரங்கம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சக்கைப்போடு போடு ராஜா + +சக்கைப்போடு போடு ராஜா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா, சோ, தங்கவேலு, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். கமல்ஹாசன் மற்றும் படாபட் ஜெயலட்சுமி சிறப்புத் தோற்றத்தில் பங்களித்துள்ளனர். + + + + +சங்கர் சலீம் சைமன் + +சங்கர் சலீம் சைமன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சீர்வரிசை (திரைப்படம்) + +சீர்வரிசை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சொர்ணம் இயக்��த்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சொன்னது நீதானா + +சொன்னது நீதானா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். முத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +டாக்சி டிரைவர் (1978 திரைப்படம்) + +டாக்சி டிரைவர் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்க ரங்கன் + +தங்க ரங்கன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். தட்சிணாமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தப்பு தாளங்கள் + +தப்பு தாளங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தாய் மீது சத்தியம் + +தாய் மீது சத்தியம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திருபுரசுந்தரி (திரைப்படம்) + +திருபுர சுந்தரி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜயா கணேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஸ்ரீகாந்த், பிரபா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருக்கல்யாணம் (திரைப்படம்) + +திருக்கல்யாணம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சந்திரபோஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தியாகம் (திரைப்படம்) + +தியாகம்1978 ஆம் ��ண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாலாஜி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பருவ மழை (திரைப்படம்) + +பருவ மழை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மேஜர் சுந்தராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ப்ரியா (திரைப்படம்) + +ப்ரியா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை சுஜாதா எழுதிய ப்ரியா என்ற புதினத்தின் கதையாகும். + + + + +பாவத்தின் சம்பளம் + +பாவத்தின் சம்பளம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ரஜினிகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +புண்ணிய பூமி + +புண்ணிய பூமி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பேர் சொல்ல ஒரு பிள்ளை + +பேர் சொல்ல ஒரு பிள்ளை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பைலட் பிரேம்நாத் + +பைலட் பிரேம்நாத் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படம் இந்திய-இலங்கைக் கூட்டுத் தயாரிப்பாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், இலங்கை நடிகை மாலினி ஃபொன்சேகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். + + + + +ராதைக்கேற்ற கண்ணன் + +ராதைக்கேற்ற கண்ணன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜாவுக்கேற்ற ராணி + +ராஜாவுக்கேற்ற ராணி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ருத்ர தாண்டவம் + +ருத்ர மண்டலம்1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. கே. ராமசாமி, சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வணக்கத்திற்குரிய காதலியே + +வணக்கத்திற்குரிய காதலியே 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமாரி, ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வண்டிக்காரன் மகன் + +வண்டிக்காரன் மகன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. அமிர்தம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வருவான் வடிவேலன் + +வருவான் வடிவேலன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், லதா, படாபட் ஜெயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வட்டத்துக்குள் சதுரம் (திரைப்படம்) + +வட்டத்துக்குள் சதுரம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஸ்ரீகாந்த், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வயசு பொண்ணு + +வயசு பொண்ணு 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ரோஜாமணி மற்றும் பலர���ம் நடித்துள்ளனர். + + + + +வாழ நினைத்தால் வாழலாம் + +வாழ நினைத்தால் வாழலாம் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவராஜ் மோகன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வாழ்க்கை அலைகள் + +வாழ்க்கை அலைகள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. சி. சேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வாழ்த்துங்கள் + +வாழ்த்துங்கள் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். திரைக்கதை, வசனம், பாடல்களை தெள்ளூர் மு. தருமராசன் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற அருள் வடிவே பாரம் பொருள் வடிவே, பூந்ததேரே சின்ன சின்ன போன்ற பாடல்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளன. + + + + +வெற்றித் திருமகன் + +வெற்றித் திருமகன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். பி. பாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், மாதுரி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +லவகுசா (1963 திரைப்படம்) + +லவகுசா 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், அஞ்சலி தேவி, ஜெமினி கணேசன், எம். ஆர். இராதா, காந்தாராவ், நாகையா, எஸ். வரலெட்சுமி, கண்ணம்பா மற்றும் பலர் நடித்திருந்தனர். + +மருதகாசி பாடல்களுக்கு கே. வி. மகாதேவன் இசை அமைக்க, பின்னணி குரல் பாடியவர்கள் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன், கண்டசாலா ஆவர். இப்படத்தின் திரைக் கதையை சமுத்திரள இராகவாச்சாரியார் எழுத, வசனத்தை ஏ. கே. வேலவன் எழுதியுள்ளார். +இத்திரைப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகியவற்றில் இதே பெயரில் வெளிவந்தது. இத்திரைப்படம் இந்து இதிகாசமான இராமாயணத்தினை அடிப்படையாகக் கொண்டது. + + + + +மகளே உன் சமத்து + +மகளே உன் சமத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். ராஜகோபாலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எல். ஆனந்தன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். - “தாத்தா தாத்தா பொடிகொடு - இந்த தள்ளாத வயசிலே சடுகுடு” - என்று எல்.ஆர்.ஈஸ்வரியுடன் சேர்ந்து பாடினார் மனோரமா. இதுவே மனோரமா பாடிய முதல் பாட்டு ஆகும். + + + + +முரடன் முத்து + +முரடன் முத்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சரசா பி.ஏ + +சரசா பி. ஏ 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாலாஜி, பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சாந்தி (திரைப்படம்) + +சாந்தி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சிவாஜி கணேசன், தேவிகா, எஸ். எஸ். ராஜேந்திரன், விஜயகுமாரி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்த, இத்திரைப்படம் ஏ. பீம்சிங் இயக்கத்தில் ஏ. எல். சீனிவாசன் தயாரிப்பில் உருவான திரைப்படமாகும். + +சிவாஜியும், எஸ். எஸ். ராஜேந்திரனும் உயிர் நண்பர்கள். எஸ்.எஸ்.ராஜேந்திரன் வேட்டைக்கு செல்லும்போது எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார். +எஸ்.எஸ்.ஆர். மனைவி விஜயகுமாரிக்கு கண் தெரியாது. கணவன் இறந்த செய்தி தெரிந்தால் அதிர்ச்சி தாங்காமல் விஜயகுமாரி இறந்து விடுவார் என்பதால், சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன் போல் நடிக்க நேரிடுகிறது. கடைசியில் விஜயகுமாரிக்கு கண் பார்வை திரும்பும்போது சிவாஜிகணேசனை துரோகி என்று நினைப்பார். ஆனால் அவர் உத்தமர் என்பதை பிறகு உணர்ந்து கொள்வார். + +கதையின் மையக்கருத்தை ஏற்க முடியாது என்று கூறி, படத்துக்கு அனுமதி அளிக்க தணிக்கைக் குழு மறுத்ததால், இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ. எல். சீனிவாசன் படத்தை காமராஜருக்கு போட்டுக் காட்டினார். படம் முழுவதையும் பார்த்த காமராஜர், 'படம் நன்றாகதானே இருக்கிறது! இதற்கு ஏன் அனுமதி மறுக்கிறார்கள்?' என்று வியப்ப��டன் கூறினார். மறு தணிக்கையில், படத்துக்கு அனுமதி கிடைத்தது. படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. + +இத்திரைப்படம் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். + + + + +திருவிளையாடல் (திரைப்படம்) + +திருவிளையாடல் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். +இத்திரைப்படத்தில் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று கூறும் நக்கீரர் வேடத்தில் தோன்றினார். இத்திரைப்படம் திருவிளையாடல் புராணம் எனும் புகழ் பெற்ற சைவ இலக்கியத்தை அடிப்படையாகக் கொண்டது. +திருவிளையாடல் புராணத்தில் மொத்தமுள்ள 64 தொகுப்புகளில் 4 தொகுதிகளை மட்டும் தொகுத்து இத்திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். + + +பத்து பாடல்கள் இடம்பெற்ற இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன் ஆவார். கவியரசு கண்ணதாசன் எழுதிய இத்திரைப்படத்தின் பாடல்கள் காலத்தால் அழியாதவை. +சிவாஜி கணேசன் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும். +இத்திரைப்படத்தின் மற்ற நடிகர்களான ஆர். முத்துராமன், நாகேஷ், டி. எஸ். பாலையா, டி. ஆர். மகாலிங்கம் ஆகியோர் கொஞ்ச நேரமே திரையில் தோன்றினாலும் அவர்களது கதாபாத்திரங்கள் பார்வையாளர்கள் ரசிக்கும்படியாக அமைக்கப்பட்டிருந்தது. சினிமா சாட் தனது விமர்சனத்தில் இத்திரைப்படத்திற்கு 5நட்சத்திரங்கள் கொடுத்தது. மேலும் இத்திரைப்படம் மீண்டும் மீண்டும் பார்த்து ரசிக்கத்தூண்டும் திரைப்படம் எனப் பாராட்டியது." தி இந்து பத்திரிக்கைக்கு இயக்குநர் அமீர் அளித்த பேட்டியில் திருவிளையாடல் பக்தித் திரைப்படமாக இருந்தாலும், இதன் இயக்குநர் ஏ. பி. நாகராஜன் இத்திரைப்படத்தை ரசிக்கும்படியாக அமைத்திருப்பார். இதுவரை தமிழில் வெளிவந்துள்ள சிறந்த திரைப்படங்களுள் இதுவும் ஒன்றாகும் என பாராட்டுகிறார். + +1965-ம் ஆண்டில் வெளியானத் இத்திரைப்படம் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக அமைந்தது. நடிகர் சிவாஜி கணேசனுக்கு சொந்தமான சென்னை சாந்தி திரையரங்கில் 25 வாரங்கள் ஓடி சாதனை படைத்த இத்திரைப்படம் ஒரு வெள்ளி விழா திரைப்படமாகும். + +இத்திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினை வென்றது. 1965 வது ஆண்டில் வெளியான சிறந்த திரைப்படங்களுள் இத்திரைப்படத்திற்கு மூன்றாவது இடமாகும். + + + + + +விளக்கேற்றியவள் + +விளக்கேற்றியவள் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தளியத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆதித்தன், வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் + +ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ஜே. மகாதேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டி 1996 + +துடுப்பாட்ட உலகக்கிண்ண இறுதிப்போட்டி 1996 ("1996 Cricket World Cup Final", கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டி 1996) என்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் ஆறாவது உலகக் கிண்ணத்துக்காக இடம்பெற்ற சுற்றுப் போட்டிகளின் இறுதிப் போட்டி பற்றியதாகும். இப்போட்டி 1996 மார்ச் 17 ஆம் நாள் பாக்கித்தானின் கடாபி அரங்கில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி மார்க் டெய்லர் தலைமையிலான ஆத்திரேலிய அணியை 7 இலக்குகளால் வெற்றி பெற்று முதல் தடவையாக உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொண்டது. + +இந்த ஆட்டத்துக்கான நடுவர்களாகக் களத்தில் மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த "எஸ். ஏ. பக்னரும்", இங்கிலாந்தைச் சேர்ந்த "டி. ஆர். ஷெப்பேர்ட்"டும், தொலைக்காட்சி நடுவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த "சி. ஜே. மிச்சலே"யும் பணியாற்றினர். "சி. எச். லொயிட்" ஆட்ட நடுவராகக் கடமையாற்றினார். + +இலங்கை அணியின் தலைவராக அர்ஜூன றணதுங்கவும், துணைத் தலைவராக அரவிந்த டி சில்வாவும் ரொமேஷ் களுவிதாரண குச்சக்காப்பாளராகவும் பணியாற்றினர். இவர்களுடன் சனத் ஜயசூரிய, அசங்க குருசிங்க, எச். பி. திலகரத்ன, ரொஷான் மகாநாம, சமிந்த வாஸ், முத்தையா முரளிதரன், எச். டி. பி. கே. தர்மசேன, ஜி. பி. விக்கிரமசிங்க ஆகியோரும் அணியின் உறுப்பினர்��ளாக இருந்தனர். + +ஆஸ்திரேலிய அணியில் அணித்தலைவராக மார்க் டெய்லரும், குச்சக்காப்பாளராகஐ. ஏ. ஹீலியும் பணியாற்றினர். மார்க் வோ, றிக்கி பொன்டிங், ஸ்டீவ் வா, ஷேன் வோர்ன், எஸ். ஜி. லா, எம். ஜி. பெவன், பி. ஆர். ரீபெல், டி. டபிள்யூ. பிளெமிங், கிளென் மெக்ரா ஆகியோர் ஏனைய அணி உறுப்பினர்கள். + +நாணயச் சுண்டலில் வெற்றி பெற்ற இலங்கை முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் மட்டையாடக் களமிறங்கிய ஆஸ்திரேலியா 50 பந்துப் பரிமாற்றங்களில் 7 இலக்குகளை இழந்து 241 ஓட்டங்களைப் பெற்றது. அடுத்துக் களமிறங்கிய இலங்கை அணி, மூன்று இலக்குகளை இழந்து, 46.2 பந்துப் பரிமாற்றங்களில் 245 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. + + + + + +இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி + +இசுட்டாக்குஃகோம் நோய்க்கூட்டறிகுறி அல்லது இசுட்டாக்குஃகோம் அறிகுறித் தொகுப்பு ("Stockholm syndrome") என்பது ஒரு கடத்தப்பட்ட பிணையாளியின் ("hostage") உள்ளத்தில் ஏற்படும் ஒரு குறிப்பிட்ட உளவியல் தூண்டற்பேற்றைக் குறிக்கும் பெயராகும். தனக்கு இடர் விளையும் அல்லது விளைய வாய்ப்புள்ளது என்று அறிந்திருந்தும் தன்னைக் கடத்தியவர்மீது ஏற்படும் பற்றுதல் இவ்வறிகுறிகளின் அடிப்படையாகும். + +சுவீடன் நாட்டின் தலைநகரான இசுட்டாக்குஃகோம் நகரில் நிகழ்ந்த ஒரு வங்கிக் கொள்ளையினைத் தொடர்ந்து இவ்விளைவு இப்பெயர் பெற்றது. 1973-ம் ஆண்டு நிகழ்ந்த அக்கொள்ளையின்போது கொள்ளையர்கள் வங்கி ஊழியர்களை ஆகஸ்டு 23-ல் இருந்து ஆகஸ்டு 28 வரை பிணையாளிகளாக வைத்திருந்தனர். இந்நிகழ்வின்போது பிணையாளிகளுக்கு அவர்களை அடைத்துவைத்திருந்த கொள்ளையர்கள்மீது ஒருவித உளவுணர்வுத் தொடுப்பு ஏற்பட்டது. இதனால் ஆறு நாட்களுக்குப்பின் அவர்கள் விடுவிக்கப்பட்ட பின்னரும் கொள்ளையர்களின் செயலை ஆதரிக்கத் துவங்கினர். இந்த நிகழ்வையடுத்து ஒரு தொலைக்காட்சிச் செய்தி ஒளிபரப்பில் பங்கேற்ற நீல்சு பெசிரோட் என்ற குற்றவியல் மற்றும் உளவியல் வல்லுநர் முதன்முதலாக இப்பெயர் கொண்டு இவ்விளைவைக் குறிப்பிட்டார். + +சூர்யா மற்றும் ஜோதிகா நடித்த "மாயாவி" என்ற தமிழ்த்திரைப்படத்தில் சூர்யாவால் கடத்தப்படும் ஜோதிகா தன்னைக் கடத்திய சூர்யா மீது காதல் கொள்வது போன்ற திரைக்கதை அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு ���ெளிவந்த "பயணம்" திரைப்படத்திலும், வன்முறையாளர்கள் விமானத்தையும் பயணிகளையும் பிணையாக வைத்திருக்கும்போது, உள்ளிருக்கும் மருத்துவர் ஒருவர் தன்னருகே அமர்ந்திருக்கும் மற்றொரு பயணியிடம் இவ்விளைவைப்பற்றி விளக்கும் காட்சி ஒன்று உள்ளது. + + + + + + +ஏப்ரல் 28 + + + + + + + +ஏப்ரல் 29 + + + + + + + +ஏப்ரல் 30 + + + + + + + +பங்கொன்றின் உழைப்பு + +பங்கொன்றின் உழைப்பு(Earnings per share சுருக்கமாக EPS)என்பது வழங்கி இறுத்த பங்குகளின் எண்ணிக்கைக்கும் நிதியாண்டு முடிவில் தேறிய இலாபத்திற்கும் இடையேயான விகிதத்தினை குறிக்கும். + +இவ் பங்கொன்றின் உழைப்பு வீதம் நிறுவனத்தின் வருமானக் கூற்று முடிவில் தேறிய இலாபம் கண்டபின் இவ் வீதம் எனைய ஆண்டுகளுடன் ஒப்பிட்டு காட்டப்படும். + +பங்கொன்றின் உழைப்புற்கான அடிப்படை சமன்பாடு: + + + + + +எண்ணுப் பெயர்கள் + +எண்ணிக்கையைக் குறிப்பதற்குப் பயன்படும் பெயர்ச் சொற்கள் எண்ணுப் பெயர்கள் எனப்படுகின்றன. தமிழ் மொழியில் உள்ள எண்ணுப் பெயர்களை முழு எண்ணுப்பெயர்கள், பின்னங்கள், கலப்பு எண்ணுப்பெயர்கள் என மூன்று வகையாகப் பகுக்கலாம் எனத் தற்காலத் தமிழ் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். + +முழு எண்ணுப் பெயர்கள் ஒன்று தொடக்கம் மேல் நோக்கி அமைகின்ற முழு எண்களைக் குறிக்கும் பெயர்களாகும், ஒன்று, எட்டு, பத்து, நாற்பது, ஐம்பத்தைந்து, நூறு, ஆயிரம், இலட்சம், கோடி என்பன முழு எண்ணுப் பெயர்களுக்கு எடுத்துக் காட்டுகள் ஆகும். முதல் எட்டு முழு எண்ணுப் பெயர்களுக்கும் பெயரடை வடிவங்கள் உள்ளன. இவை பின்வருமாறு அமைகின்றன. + +பத்துக்கு மேற்பட்ட முழு எண்ணுப் பெயர்கள் கூட்டல் முறை, பெருக்கல் முறை, இரண்டும் கலந்த முறை ஆகிய மூன்று முறைகளில் உருவாகின்றன. கீழே தரப்பட்டுள்ளவை இவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகள் ஆகும். + + + + + +மே 2 + + + + + + + +அப்பூதியடிகள் நாயனார் + +அப்பூதி அடிகள் என்பவர் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். சைவ சமயத்தில் சிவ���ெருமானும், அடியாரும் ஒருவரே என்பதை விளக்க அப்பூதி அடிகள் வரலாறு கூறப்படுகிறது. அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேரு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது. + +திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்த அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார். திருநாவுக்கரர் அப்பூதியடிகளின் இந்த நற் தொண்டினை அறிந்து அவரில்லத்திற்கு சென்றார். திருநாவுக்கரசருக்கு அப்பூதியடிகள் உணவிட ஆயத்தம் செய்த போது, அப்பூதியடிகள் மகனார் பாம்பு தீண்டி இறந்தார். அதனை அறிந்த திருநாவுக்கரசர் இறைவன் மீது பாடல்கள் பாடி அப்பூதியடிகளின் மகனை உயிர்ப்பித்தார். + +அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அந்நாளில் திருநாவுக்கரசரின் சிவத்தொண்டினை அறிந்து அவர்பால் பக்தி கொண்டார். அதனால் திருநாவுக்கரசர் பெயரால் மக்களுக்கு அன்னம் படைத்தல், சத்திரம் அமைத்தல், நீர் கொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தார். ஒரு முறை திருநாவுக்கரசர் அப்பூதி அடிகள் வசித்த ஊருக்கு சென்ற போது, அங்கு தன்னுடைய பெயரால் தர்மங்கள் நடப்பதைக் கண்டு வியந்தார். அப்பூதி அடிகளார் பற்றிக் கேள்விப் பெற்று அவரில்லம் சென்றார் திருநாவுக்கரசர். + +அப்பூதியடிகளை சந்தித்த திருநாவுக்கரசர், ஏன் உங்கள் பெயரில் தர்மச் செயல்களைச் செய்யாமல் திருநாவுக்கரசரின் பெயரில் செய்கின்றீர்கள் என்று வினவினார். அதற்கு அப்பூதியடிகள் திருநாவுக்கரசர் சமண சமயத்தில் பெரும் துறவியாய் இருந்ததையும், சிவனருளால் அச்சமயம் விட்டு சைவ மதமேற்று தொண்டுகள் புரிந்து வருவதையும் எடுத்துரைத்தார். இறைவனின் மீது அன்பு கொள்வதை விடவும், அவனுடைய அடியார்கள் மேல் அன்பு கொள்ளுதல் மேலும் சிறப்பானது என்று எடுத்துரைத்தார். அதன் பின்பு தானே திருநாவுக்கரசர் என்று தன்னை வெளிப்படுத்தினார் திருநாவுக்கரசர். திருநாவுக்கரசரே தன்னுடைய இல்லம் வந்திருப்பதை அறிந்து மகிழ்ந்த அப்பூதி அடிகள் உணவு உண்ண அழைத்தார். + +வாழை இலையை அறுக்கச் சென்ற அப்பூதி அடிகள் மகன் பாம்பு தீண்டி இறந்தார். திருநாவுக்கரசர் வந்திருக்கும் போது மகன் இறந்து போனதால், அதைக் கூறி திருநாவுக்கரசரை உணவு உண்ண தடை செய்து விடக்கூடாதென அப்பூதி அடிகளும், அவரது மனைவியும் துயத்தினை மறைத்து உணவு இட்டனர். ஆனால் திருநாவுக்கரர் தன்னுடன் அப்பூதியடிகளின் மகனையும் உணவருந்த அழைத்துவர கோரிக்கை வைத்தார். அப்பூதி அடிகள் தன்னுடைய மகன் பாம்பு தீண்டி இறந்ததை தெரிவித்தார். எல்லாம் இறைவனின் திருவிளையாடல் என பாடல்பாடி அப்பூதி அடிகளின் மகனை உயிர்ப்பித்தார். + +மிகுந்த சிவ பக்தரான இவர், மேற்சொன்ன அறுபத்து மூவருள் முதன்மையான நால்வருள் ஒருவரான திருநாவுக்கரசு நாயனார் காலத்தில் 7ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இதுவே அவரை ஒரு நாயனாராக மதிக்கப்படும் அளவுக்கு உயர்த்தியது. + + + + + + +பெர்ள் + +பெர்ள் ("Perl") ஒரு கணினி நிரலாக்க மொழி. இது ஒரு மேல் நிலை, இயங்கியல், படிவ நிரலாக்க மொழி வகையைச் சார்ந்தது. இதன் முதல் பதிப்பு 1987-ம் ஆண்டு "ஆக்கர் லாரி வோல்" (Larry Wall) என்பவரால் வெளியிடப்பட்டது. 1988 இல் இரண்டாவது பதிப்பும் 1989 இல் மூன்றாவது பதிப்பும் வெளியானது, பெர்ள் 6 விரைவில் வெளி வர இருக்கிறது. உரை ஆவணங்களை பகுப்பாய்வு செய்ய உதவும் சுருங்குறித்தொடர்களை பெர்ள் தொடக்கத்திலியே மொழியின் ஒரு கூறாக ஏதுவாக்கியது. உரை ஆவணப் பகுப்பாய்வு, கணினி நிர்வாகம், வலைப்பின்னல் நிரலாக்கம், தரவுதள வலை செயலிகள் வடிவமைப்பு போன்ற பல தேவைகளுக்கு பெர்ள் பயன்படுகிறது. +இது ஒரு கட்டற்ற மென்பொருளாகும். குனு கட்டற்ற ஆவண உரிமத்தின் கீழும் வெளியிடப்படுகிறது. + +இது சி, ஆக், செட், பேசிக் போன்ற பல நிரல் மொழிகளின் வசதிகளையும் தன்மைகளையும் உள்வாங்கி உருவாக்கப்பட்டது. இருப்பினும் எழுத்துத்தொடர்களை("strings") எளிதில் கையாளும் வசதிகள் மற்றும் ஒத்த மொழிகளில் இருந்த சில கட்டுக்கள் இல்லாதிருத்தல் ஆகியவற்றால் இது பெரிதும் பயன்படுத்தப்படத் துவங்கியது. + +பின்னர், இதன் கட்டற்ற தன்மையும் எவர் வேண்டுமானாலும் பங்களிக்கலாம் என்ற உரிமமும் அதற்கு வசதியான பகுதிக்கூறு கட்டமைப்பும் ("modular architecture") இதை ஒரு வளர்ந்த மேம்பட்ட நிரல் மொழியாக உருமாற்றியது. தற்போது ஏறத்தாழ அனைத்து பெரிய நிறுவனங்களிலும் ஏதேனும் ஒரு வடிவில் இது பயன்படுத்தப்படுகிறது. + +இதன் உருவாக்குநர் மற்றும் துவக்க கால பங்களிப்போரின் ��ாய்வின் விளைவாக இது மனிதர்கள் பயன்படுத்தும் இயல்மொழிகளின் மொழியியலைப் பல இடங்களில் பின்பற்றுகிறது. அணிகள்கூட இதில் உண்டு! இதனாலும், "எளிதானவற்றை இன்னும் எளிமையாக்குதல், முடியாதவற்றையும் கூடச் செய்யுதல்" மற்றும் "எதையும் பல வழிகளில் நிறைவேற்றும் வசதி" போன்ற கொள்கைகளினாலும், இது சற்றே மாறுபட்டு நிற்கிறது. பொதுவாக நிரல்மொழிகள் "சொல்வதைச் செய்"யும் மொழிகளாக இருக்குமிடத்தில் பெர்ள் "சொல்ல விழைந்ததைச் செய்"யும் மொழியாக உள்ளது. இந்த நோக்கில் இதில் பல வசதிகள் உள்ளன. எடுத்துக்காட்டாக தாமாகவுயிர்ப்பித்தல் போன்ற வசதிகள் பிற நிரல்மொழிகளில் அரிது. + +பெர்ள் எளிமையான notepad, Crimson Editor போன்றவற்றிலும் தொகுக்கலாம் இருப்பினும் DzSoft Perl Editor போன்றவை கூடிய ஒத்துழைப்பு தரும். எடுத்துக்காட்டாக அவை ஒரு நிரலில் உள்ள தரவு இனங்களை, செயலிகளை இடப்பக்கக் கட்டத்தில் காட்டும். Regular expressions சோதனை செய்ய உதவும். மேலும் களை எடுக்கவும் உதவும். + +பெர்ள் மொழியில் ஐந்து தரவு இனங்கள் பரவலாய பயன்படுகின்றன. அவையானவை +$foo # a scalar +@foo # an array +%foo # a hash +FOO # a file handle +&FOO # a constant (but the & is optional) +&foo # a subroutine (but the & is optional) + + if ( "expr" ) "block" + +ஒவ்வொரு மென்பொருளுக்கும் அதற்கான உள்ளமைவு கோப்பை உருவாக்குவது நன்று. + +projectConfig.pm +பயன்படுத்தல் + + + + +யான் ஆறு + +யான் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 6வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 13வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2371 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 17 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1520 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 10வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +மகா ஆறு + +மகா ஆறு அல்லது மகா ஓயா இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 9வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 7வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3644 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 34 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1510 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 11வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +முந்தெனி ஆறு + +முந்தெனி இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 14வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2907 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 12 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1280 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 12வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +நில்வலா ஆறு + +நில்வலா ஆறு அல்லது நில்வலா கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 6வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3079 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 45 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 960 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 17வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +மோதரகம் ஆறு + +மோதரகம் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 21வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1216 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 17 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 932 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 18வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +கரகராயன் ஆறு + +கரகராயன் ஆறு ("Karakarayan Aru") இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 25வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1338 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 4 சத���ீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 896 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 20வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +கும்புக்கன் ஆறு + +கும்புக்கன் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 12வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 18வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2115 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 12 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1218 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 14வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +கிரிந்தி ஆறு + +கிரிந்தி ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 11வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 16வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1872 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 16 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1165 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 15வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +மீ ஆறு + +மீ ஓயா இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 15வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 26வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1596 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 3 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1024 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 16வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +கிங்கங்கை + +கிங்கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாயும் இது காலி மாநகரின் எல்லையில் கடலுடன் சேர்கிறது. இது இலங்கையின் நீளத���தின் படி 14வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 4 ஆவது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3396 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 59 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 922 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 19வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +மாணிக்க ஆறு + +மாணிக்க ஆறு அல்லது மாணிக்க கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பஸ்சரை மலைகளின் தெற்குச் சாய்வில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 13வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 19வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2124 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 10 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1272 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 13வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +தெதரு ஆறு + +தெதரு ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மாத்தளையில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 5வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 8வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4313 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 27 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2616 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 5வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +அந்தெல்லா ஆறு + +அந்தெல்லா ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 20வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 960 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 22 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 522 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 27வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +ந�� ஆறு + +நே ஆறு இலங்கையில் உள்ள ஆறு ஆகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 24வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 842 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 10 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 560 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 26வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +கரம்பல ஆறு + +கரம்பல ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலைநாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின்படி 15வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 973 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 33 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 589 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 25வது பெரிய நீரேந்துப் பகுதியாக உள்ளது. + + + + + +எத ஆறு + +எத ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 17வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 1139 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 26 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 604 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 24வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +பெந்தர ஆறு + +பெந்தர ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 9வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 2802 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 35 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 622 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 23வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +ரேகாவ ஆறு + +ரேகாவ ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்தி�� மலை நாட்டிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீரோட்டத்தின் படி 27வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 153 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 7 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 755 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 22வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +தேவேந்திரமுனை + +தெய்வேந்திர முனை இலங்கையின் மிகத்தெற்கில் இந்து மாக்கடலில் அமைந்துள்ளது. இதுனருகில் தூந்தர என்ற சிறிய நகரம் காணப்படுகிறது. இது பண்டைய இலங்கயில் ஒரு தலைந்கரமாகவும் விளங்கியது. முனையில் பௌத்த விகாரை ஒன்றும் வெளிச்ச வீடு ஒன்றும் காணப்படுகிறது. முன்ன இம்முனையில் காணப்பட்ட தொண்டீஸ்வரம் போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டது. இன்று இவ்விடத்தில் விஷ்ணு கோவில் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது இவ்விடத்தில் ஜூலை-ஆகஸ்டு மாதங்களில் தெய்வேந்திர சந்தையும் பெரகராவும் நடைப்பெற்று வருகின்றது. + + + + +கிரிகல்பொத்த + +கிரிகல்பொத்த ("Kirigalpotha") என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் நுவரேலியா நகருக்கு அண்மையில் அமைந்துள்ளது. இது இலங்கையின் இரண்டாவது உயரமான மலை. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 2,388 மீ (7,835 அடி) ஆகும். +இது ஓட்டன் சமவெளி தேசிய பூங்காவில் இருந்து சுமார் 7 கிமீ தொலைவில் அமைத்துள்ளது. இதன் அடிவாரத்தை அடைவதற்கு சமவெளி, அடர்ந்த காடுகள் மற்றும் சதுப்புநிலங்களுக்கூடாக செல்ல வேண்டும். இந்த மலையை ஏறுவதற்கு ஓட்டன் சமவெளி தேசிய பூங்காவில் அனுமதி பெறுவது அவசியமாகும். தை, மாசி மற்றும் ஆடி, ஆணி மத காலங்களில் ஏறுவதும், மழை காலங்களில் ஏறுவதை தவிர்த்தலும் பரிந்துரைக்கப்படுகிறது. + +ஓட்டன் சமவெளி அருங்க்காட்சியகத்திற்கு அருகே ஆரம்பமாகும் சிறிய அடிப் பாதையை பின்தொடர்ந்து இந்த மலை ஏறும் பயணம் ஆரம்பமாகிறது .முதல் 2 கிமீ வரை சமவெளியையும் அதன் பிறகு இறந்த மரம் (Dead Tree) என்று சொல்லப்படும் இலையுதிர்ந்த மரங்களும் வருகின்றன. 2 முதல் 4 கிமீ வரை செல்லும் பொது பெலிஹுல்-ஓயா (Belihul-Oya) ஆற்றை கடக்க வேண்டும். இந்த ஆற்றைக் கடந்த பிறகு அடர்ந்த பற்றை காடுகள் மற்றும் மூங்கில் காடுகளுடன் பயணத்தை தொடர வேண்டும். அதன் பிறகு சதுப்பு நிலங்கள் மற்றும் சிறிய நீரோடைகள் நிறைந்த காடுகள் மூலம் மலையின் அடிவாரத்தை அடையமுடியும். அங்கிருந்து பற்றை காடுகள் உடன் கூடிய சற்று கடினமான மேடுகளின் ஊடக மலையின் உச்சியை அடையலாம். + + + + +கொங்கலை மலை + +கொங்கலை மலை இலங்கையின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இது 1359 மீட்டர் உயரமானது. இரக்குவாணை மலைத்தொடரில் அமைந்துள்ள இம்மலை சிங்கராஜக் காட்டினைப் பார்ப்பதற்கான சிறந்த ஓர் இடமாகும். மலையின் மேற்கு புறமாக சிங்கராஜக் காட்டை காணலாம். + + + + +மே 2007 + +மே 2007 2007 ஆம் ஆண்டின் ஐந்தாவது மாதமாகும். இம்மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை 18ம் திகதி ஆரம்பித்து வைகாசி 17இல் முடிவடைகிறது. + + + + + + +பங்குனித் திங்கள் + +பங்குனித் திங்கள் விரதம் பெண்களால் கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இந்நாளில் அம்பாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவர். சிறப்பாகக் கண்ணகை அம்மன் ஆலயங்களில் பங்குனித் திங்களில் பொங்கல் வழிபாடு நடைபெறுவது வழக்கம். + +பெண்கள் அன்று நோன்பிருந்து அபிராமி அந்தாதி முதலிய பக்திப் பாடல்களை படித்து மறுநாள் உதயத்திற்கு முன் பராயணம் செய்வர். இப்படிச் செய்வதால் சகல சம்பத்தும் பெற்று வாழ்வர். + + + + + +சித்திரைப் பரணி + +சித்திரைப் பரணி விரதம் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் வைரவரை குறித்து கடைப்பிடிக்கபடும் விரதம் ஆகும். விரதம் கடைப்பிடிப்போர் பகல் ஒருபொழுது பால், பழம் அல்லது பலகாரம் அல்லது அன்னம் (சோறு) உண்டு விரதத்தை முடிக்கலாம். விரதகாலத்தில் திருமுறை ஓதுவது வழக்கம். + + + + + +திருவிளக்குப் பூசை + +திருவிளக்குப் பூசை என்பது இந்து சமயத்தினரால் கோயில்களிலும், மண்டபங்களிலும் விளக்கினை வைத்து நடத்தப்படும் பூசையாகும். வேப்ப எண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்றுவது சிறப்பென்றும், கடலை எண்ணெயில் மட்டும் தீப��ிடுதல் மறுக்கப்படுகிறது. இந்தத் திருவிளக்குப் பூசையில் விளக்கின் எண்ணிக்கை அடிப்படையில் 108 திருவிளக்குப் பூசை, 1008 திருவிளக்குப் பூசை என வகைப்படுத்தப்படுகின்றன.சித்திரை மாத நவமியுடன் வெள்ளிக்கிழமை கூடிவரும் நாளில் தேவி ஜோதியாகத் தோன்றி அனைவருக்கும் வரம் அருளும் புவனேஸ்வரியாகக் கன்னி வடிவமாகக் காட்சி தந்த நாளில் சுமங்கலிப் பூசை செய்யப்படுகின்றது. தெய்வத்தைத் திருவிளக்கில் எழுந்தருளச் செய்து பூசை செய்தல் இவ்விரதத்தின் மகிமையாகும். தேவர்கள் ஆணவத்தை அடக்கத் தேவியானவள் பேரொளி வடிவமாகத் தோன்றியதை உபநிடதங்களில் காணலாம். முறையாக இவ்விரதத்தைக் கடைப்பிடித்து ஆலயம் சென்று, அந்தணர் துணைகொண்டு ஆராதித்து, திருவிளக்கை எடுத்து ஈஸ்வரி சந்நிதானத்தில் வலம் வருதல் சகல செளபாக்கியங்களையும் பெறுவதற்கு வழிகாட்டும். இல்லற உறவு புத்திரப் பேறு இனிய வாழ்வுப் பயன்கள் உண்டு. + + + + + + +புரட்டாதிச் சனி + +புரட்டாதிச் சனி என்று சுருக்கமாக அழைக்கப்படும் புரட்டாதிச் சனிக்கிழமை விரதம் புரட்டாதி மாதத்தில் உள்ள சனிக்கிழமைகளில் சனிபகவானை நோக்கிக் கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். +சனிக்கிழமை அதிகாலையில் துயில் நீத்து,தூய நீராடி ஆசாரமாக சனிபகவானுக்கு எண்ணெய்சுட்டி, நீலமலர்மாலை என்பன சார்த்தி வழிபடுவர். + +சனிக்கிரகம் நவக்கோள்களில் ஒன்று. அவர் சூரியனுக்கு வெகு தூரத்தில் உள்ளார். சனீஸ்வரன் சூரியனுக்கும் சாயாதேவிக்கும் மகனாகப் பிறந்தார். அவர் பிறந்த செய்தியை அறிந்த சூரியபகவான் சனீஸ்வரனைப் பார்க்கச் சென்றார். சனீஸ்வரனைக் கண்டவுடன் சூரியனார் குஷ்டரோகியானார். இதனால் வெகுண்ட சூரியன் சனீஸ்வரனைத் தூக்கித்தூரவீசினார். சனிபகவான் வெகுதூரத்தில் விழுந்து முடவனார் என்று புராணங்கள் கூறும். + +இயம தர்மராஜனின் அவதாரமே சனிபகவான் என்றும் கூறுவர். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுக்களையும் வழிபடுவது கட்டாயமாகின்றது. சனீஸ்வரன் சிறந்த சிவபக்கதன். இந்தியாவில் திருநள்ளாற்றில் உள்ள சனீஸ்வரனார் கோவில் மிகவும் பிரசித்தமானது. இங்கே நள மகாராஜான் சிவபெருமானை வழிபட்டு சனீஸ்வரனால் பீடித்த துன்பத்தில் இருந்து விடுபட்டான் என்றும் கூறுவர். + +அரிச்சந்திர மகாராஜான் அரசிழந்து சுடலையில் காவல்காரன் ஆனதும், பாண்டவர்கள் 12 ஆண்டுகள் வனவாசம் செய்ததும், இராமபிரான் வனவாசம் செய்ததும், சீதை இராவணனால் கவரப்பட்டு சிறையிலிருந்ததும் சனீஸ்வரனின் தோஷத்தாலே என்று நூல்கள் கூறுகின்றன. + +இராவணனின் மகன் இந்திரசித்து இவன் பிறப்பதற்கு முன் சோதிடர்களை அழைத்து நல்ல முகூர்த்தவேளை குறிக்கும்படி கட்டளை இட்டான். அவன் கட்டளைக்கமைய சனீஸ்வரனை பதினோராம் வீட்டில் இருக்க முகூர்த்தம் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திரசித்து பிறக்கும் பொழுது சனி தனது ஒரு காலைப் பன்னிரண்டாம் வீட்டில் நுழைத்துவிட்டார். இதனால் சீற்றமடைந்த இராவணன் அவரின் ஒரு பாதத்தை துண்டித்தான் என்றும் கூறுவர். + +சனீஸ்வரன் தானியம் எள், வர்ணம் கறுப்பு, வாகனம் காகம். எனவேதான் சனீஸ்வர தோஷத்தால் பீடிக்கப்பட்டவர்கள் ஏழு சனிக்கிழமை காலை தொடர்ந்து எள்நெய் தேய்து, நீராடி, சிவாலயம் அல்லது விஷ்ணு ஆலயம் சென்று சனீஸ்வரனிற்கு எள்ளு, கறுத்தப்பட்டு தானமாகக் கொடுத்து எள்ளுப் பொட்டலம் கறுத்தத் துணியில் கட்டி அதனை ஒரு மண் சட்டியில் இட்டு, நிறைய எள்நெய் விட்டு தீபமாக சனீஸ்வரனுக்கு முன் வைத்து வழிபடவேண்டும். துளசி, கருங்காக்கணவன் மலரால் அர்சித்து பின் சிவன் அல்லது விஷ்ணு சந்தினாதமடைந்து, சனிதோஷம் நீங்கப் பிராத்திக்க வேண்டும். அதன் பின் ஆலயத்திலே எள், அன்னம் காகங்களுக்கு வைத்து வீடு சென்று ஏழைகள் மூவரிற்கு போசனம் அளித்துத் தானும் உணவு உட்கொண்டு விரத்தை முடிக்கலாம். இப்படிச் செய்வதால் தோஷம் நீங்கி நல்வாழ்வு பெறும். + +சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் இராசிக்கு 5இல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8இல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச் சனியென்றும், 12இல், 1இல், 2இல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர். இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேக மெலிவு என்பன உண்டாம். இதைச் சனிதோஷம் என்பர். இவர்களே மேற்கூறிய தோஷ நிவர்த்தியை தவ��ாது செய்தல் வேண்டும். + +ஏனையோர் புரட்டாசி மாசத்து சனிக்கிழமைகளில் மட்டும் காலையில் எண்ணெய் ஸ்நானம் செய்து ஆலயம் சென்று எள்விளக்கேற்றிச் சனீஸ்வரனை வழிபட்டுப் பின் சிவ விஷ்ணுக்களை வழிபட்டுப் பிராத்தித்து கோளறு பதிகம், சனீஸ்வர தோத்திரம், தேவாரம் ஓதி அல்லது விஷ்ணு தோத்திரம் பாடி துதிக்கவேண்டும். வீடு சென்று உணவருந்தி விரதம் முடிக்கவேண்டும். + + + + + +பொ. ஜெகந்நாதன் + +பண்டிதர் பொ. ஜெகந்நாதன் (பி. 1908) இலங்கை, வேலணையச் சேர்ந்தவர். வேலணைப் பெருங்குளம் முத்துமாரியம்மன் மீது பல பதிகங்களைப் பாடியுள்ளார். தனது பதினெட்டாவது வயதிலிருந்து கவிதைகள் யாத்துவந்த இவர் வேலணை மக்களால் "புலவர்" என்று கௌரவிக்கப்பட்டார். 1933 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் இரு குறிப்பிடத்தக்க ஆராய்ச்சி நூல்களையும் எழுதியுள்ளார். + + + + + +சந்திரா இரவீந்திரன் + +சந்திரா இரவீந்திரன் பிரித்தானிய, ஈழத்து எழுத்தாளர். 1981இல் ”ஒரு கல் விக்கிரகமாகிறது” என்ற முதற் சிறுகதை மூலம் இலங்கை வானொலி வாயிலாக சந்திரா தியாகராஜாவாக தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். + +சந்திரகுமாரி இரவீந்திரகுமாரன் இலங்கை பருத்தித்துறையில் ஆத்தியடி என்னும் கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தியாகாராஜா, சிவகாமசுந்தரி தம்பதிகளின் நான்காவது புதல்வி. இவர் தனது கல்வியை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் பயின்று யாழ் அரசாங்க செயலகத்தில் கடமையாற்றினார். தற்சமயம் இலண்டனில் வசித்து வருகிறார். இலண்டன் அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் (ஐ.பி.சி.) நிகழ்ச்சித் தயாரிப்பாளராக ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர், தற்போது வர்த்தக நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். மற்றும் 1999ம் ஆண்டிலிருந்து, 14 வருடங்கள் இலண்டன் ஆங்கிலோ தமிழ்ச்சங்கத்தின் செயற்குழுவில் இணைந்து தமிழ்ப்பாடசாலையொன்றை நடாத்தும் பணியில் தன்னை அர்ப்பணித்திருந்தார். இவர் இச்சங்கத்தில் செயற்குழு உறுப்பினராகவும், செயலாளராகவும், தலைவராகவும் இருந்து இச்சங்கத்தினை சிறப்பாக இயக்கும் பணியில் தன்னைப் பெரிதும் ஈடுபடுத்தியிருந்தார். + +இவர் ஈழத்தில் வாழ்ந்த காலத்தில் இவரின் பல சிறுகதைகள் இலங்கைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளான வீரகேசரி, தினகரன், ஈழமுரசு, ஈழநாடு, முரசொலி, சிரித்திரன், மல்லிகை, தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பின்னர் புலத்தில், பாரிஸ்ஈழநாடு, எரிமலை,'ஊடறு' பெண்கள் இதழ் மற்றும் பிரித்தானிய தமிழர் நலன்புரிச்சங்கத்தின் வெளியீடுகளான 'யுகம்மாறும்' 'கண்ணில் தெரியுது வானம்' ஆகிய தொகுப்புகளிலும், திண்ணை, பொங்குதமிழ், கீற்று ஆகிய இணையத்தளங்களிலும் வெளியாகியுள்ளன. புதுக்கவிதைகளிலும் ஆர்வமுள்ள இவரின் கவிதைகள் சில வானொலிகளிலும், சஞ்சிகைகளிலும் இடம் பெற்றுள்ளன. 1986இல் யாழ் இலக்கிய வட்டமும், ஈழமுரசும் இணைந்து நடாத்திய "இரசிகமணி நினைவுக் குறுநாவல்" போட்டியில் இவரது "நிச்சயிக்கப்படாத நிச்சயங்கள்" இரண்டாவது பரிசினைப் பெற்றுக் கொண்டதுடன், அக் குறுநாவல் பலரது பாராட்டுகளிற்கும் உள்ளாகி, அதே ஆண்டில் "ஈழமுரசு" பத்திரிகையில் தொடராக வெளிவந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சிரித்திரன் சிறுகதைப் போட்டிகளிலும் இவரது கதைகள் பரிசில்கள் பெற்றுள்ளன. + +1993ல் செ.யோகநாதன் , சுந்தரலட்சுமி ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்த நூற்றாண்டின் சிறுகதைகள் தொகுப்பான 'வெள்ளிப்பாதசரம்' தொகுப்பில் இவரது 'தரிசு நிலத்து அரும்பு' சிறுகதையும் இடம்பெற்றது. + +1988ல் இலங்கை யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் யதார்த்தா இலக்கியவட்டத்தினர் வெளியிட்ட 'நிழல்கள்' சிறுகதை குறுநாவல் தொகுப்பு இவரது முதல் நூலாகும். + +இவர் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்த பின்னர் 1992ம் ஆண்டில் பிரான்ஸிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "பாரிஸ் ஈழநாடு" பத்திரிகை நடாத்திய ஐரோப்பிய எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டியில் இவரது "அக்கினியில் கருகும் ஆத்மாக்கள்" சிறுகதை தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொண்டது. + +பின்னர் இவர் எழுதிய குறிப்பிடத்தக்க சிறுகதைகள் 'காலச்சுவடு' பதிப்பகத்தினரால் தொகுக்கப்பட்டு, 2011ம் ஆண்டில் 'நிலவுக்குத் தெரியும்' என்ற சிறுகதைத் தொகுப்பாக தமிழ்நாட்டில் வெளியானது. + + + + + + + +நிழல்கள் (நூல்) + +நிழல்கள் சந்திரா தியாகராஜாவின் சிறுகதைகளையும் குறுநாவலையும் கொண்ட தொகுப்பு நூலாகும். +அச்சுப்பதிப்பு - நியூ எரா பப்ளிக்கேஷன் லிமிடெட் + +267, பிரதான வீதி +யாழ்ப்பாணம் + +ஓஃவ்செற் அமைப்பு - தவ��் + +முகப்பு ஓவியம் - கைலாசநாதன் + +முகப்பு பதிப்பு - விஜயா அச்சகம், யாழ் + +பக்கங்கள் - 164 + + + + + + +நிழல்கள் + +நிழல் அல்லது நிழல்கள் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன: + + + + + +இலங்கை அரசு விடுதலைப் புலிகள் 2002 ஒஸ்லோ பேச்சுவார்த்தை + +இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்குமிடையான 2002 ஒஸ்லோ பேச்சுவார்தை எனப்படுவது நார்வே அரசினால் பெப்ரவரி 2002 இல் ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னர் நோர்வேயின் ஒஸ்லோ நகரில் டிசம்பர் 2 - 5,2002 நாட்களில் இடம்பெற்ற நேரடிப் பேச்சுவார்தையையே ஆகும். இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பும் போர்நிறுத்தத்தின் உறுதிப்பாடு, மனிதாபிமான மற்றும் புணர்வாழ்வு நடவடிக்கைகள், அரசியல் விடயங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தின. + + + + + +கொழுந்து (இதழ்) + +கொழுந்து ஈழத்தின் மலையகப் படைப்புகளுக்கு முக்கியத்துவமளிக்கும் ஒரு சஞ்சிகையாகும். இது மலையக வெளியீட்டகத்தினால் வெளியிடப்படுகிறது. 1988 ஜனவரியில் இதன் முதலிதழ் வெளியானது. இதன் ஆசிரியர் அந்தனி ஜீவா. அவ்வப்போது நின்று அவ்வப்போது வெளிவரும் இதழாக உள்ளது. + + + + + +க. அருணாசலம் + +கனகசபை அருணாசலம் (14 சனவரி 1946 - 27 ஏப்ரல் 2015) இலங்கைத் தமிழ்ப் பேராசிரியரும், எழுத்தாளரும், தமிழறிஞரும் ஆவார். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தவர். பல ஆய்வு நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். + +அருணாசலம் யாழ்ப்பாண மாவட்டம், சாவகச்சேரி, அல்லாரை என்ற ஊரில் கனகசபை, காசிப்பிள்ளை ஆகியோருக்கு இரண்டாவது மகவாகப் பிறந்தார். தனது ஆரம்பக் கல்வியை அல்லாரை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையிலும் உயர்கல்வியை சாவகச்சேரி இந்துக் கல்லூரியிலும் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகப் பயின்று 1971 இல் இளங்கலை சிறப்புப் பட்டம் பெற்றார். 1972 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் உதவி விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள் தொடர்பாக ஆராய்ந்து 1974 இல் முதுகலைப் பட்டமும் தமிழ் வரலாற்றுப் புதினங்கள் தொடர்பாக ஆ��ாய்ந்து 1979 ஆம் ஆண்டு கலாநிதிப் பட்டமும் பெற்றார். 1996 இல் தமிழ்ப் பேராசிரியராகப் பதவி உயர்வு பெற்றார். 1995 முதல் 1998 வரை பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். மலையகத்தில் நீண்ட காலம் பணியாற்றியதன் காரணமாக, மலையக இலக்கியத்தில் இவர் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். "மலையகத் தமிழ் இலக்கியம்" என்ற ஆய்வு நூலை எழுதினார். பழந்தமிழ் இலக்கியத்திலும் நவீன இலக்கியத்திலும் பல நூல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். + + + + + + +விளக்குவைத்த குளம் + +விளக்குவைத்தகுளம் வவுனியா மாவட்டத்தில் வவுனியாப் பிரதேசசபைப் பிரிவில் மகிலங்குளம் கிராமசேவையாளர் பிரிவில் வரும் ஒரு கிராமம் ஆகும். இது கண்டி யாழ் ஏ-9 நெடுஞ்சாலையில் மேற்குப்பக்கமாக நெடுஞ்சாலைக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. + + + + +ஒட்டுசுட்டான் + +ஒட்டுசுட்டான் அல்லது ஒட்டிசுட்டான் என்றறியப்படும் இடமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்-முல்லைத்தீவு ஏ-34 சாலையில் (ஏ-9 சாலைக்குக் கிழக்காக அமைந்துள்ள) இடமாகும். தவிர இது முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதேச சபையும் கூட. இங்கு அமைந்துள்ள ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரம் மிகவும் சரித்திர முக்கியத்துவம் மிக்கது ஆகும். இவ்விடத்தில் ஒட்டுசுட்டான் தமிழ் மகாவித்தியாலயம் என்ற தமிழ்க் கலவன் பாடசாலையும் அமைந்துள்ளது. + + + + + +திதி, பஞ்சாங்கம் + +திதி என்பது சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம். அமாவாசை அன்று சூரியனும் சந்திரனும் சேர்ந்திருப்பார்கள். அதன் பின் சந்திரன் சூரியனிடம் இருந்து விலகி செல்வார். திதி எனப்படுவது பஞ்சாங்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். + +இந்துக்களின் தமிழ் நாட்காட்டியின்படி ஒவ்வொரு மாதமும் 30 திதிகள் கடைபிடிக்கப்படுகின்றன. இதில் இரண்டு பட்சங்கள் உள்ளன. அவை கிருஷ்ண பட்சம் அல்லது தேய்பிறை மற்றும் சுக்கில பட்சம் அல்லது வளர்பிறை ஆகும். +அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் 0° (0 பாகையில்) காணப்படுவார்கள். அதனால் பூமியில் இருப்போருக்கு சந்திரனைப் பார்க்கமுடியாது. அதற்குப்பின் சந்திரன் தினமும் ஏறத்தாழ 12° சூர���யனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கும். 15 ஆம் நாளான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180° தூரத்தில் இருக்கும். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் இருக்கும். + +அமாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12° தூரம் விலகி இருக்கும். அந்நாள் பிரதமை எனப்படும். அதற்கு மறுநாள் மேலும் ஒரு 12° விலகியிருக்கும். அந்நாள் துதியை எனப்படும். மூன்றாம் நாள் திருதியை, 4-ம் நாள் சதுர்த்தி, 5-ம் நாள் பஞ்சமி, 6-ம் நாள் சஷ்டி,7-ம் நாள் சப்தமி. 8-ம் நாள் அஷ்டமி. 9-ம் நாள் நவமி. 10-ம் நாள்தசமி. 11-ம் நாள் ஏகாதசி. 12-ம் நாள் துவாதசி. 13-ம் நாள்திரயோதசி. 14-ம் நாள் சதுர்தசி. 15-ம் நாள் பெர்ணமி. + +சந்திரன் அமாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் அல்லது சுக்கில பட்சம் என்பார்கள். + +அதே போல் பௌர்ணமியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்வது தேய்பிறை எனப்படும். முதல் நாள் பெயர் பிரதமை. 2-ம் நாள் துதியை, 3-ம் நாள் திருதியை, பின்பு சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, எனச் சென்று அமாவாசையில் முடியும். + +இந்தக் காலத்தில் சந்திரன் தேய்வதால் இவை கிருஷ்ணபட்சம் அல்லது தேய்பிறைத் திதிகள் என அழைக்கப்படும். + +இவைகள் அனைத்தும் சோதிடத்தில் நல்ல நாட்கள் பார்க்க உதவுகின்றன. பொதுவாக அட்டமி, நவமித் திதிகளில் நல்ல காரியங்கள் செய்வதை எல்லோரும் தவிர்த்துக் கொள்கின்றனர். + + + + + + +சூதம் + +சூதம் ("Option") என்பது ஒரு வகை சார்பிய ஒப்பந்தம் ("derivative contract") ஆகும். இது ஒரு யூக வர்த்த முறை ("speculative trading") ஆனதால் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. "சூதம்" என்கிற தமிழ் சொல் சூது என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டுள்ளது. ஒரு சூதத்தின் விலை அதன் அடிப்படையில் அமைந்த பங்கு ("stock") அல்லது ஏனைய பிணையத்தால் ("security") உறுதிப்படுத்தப்படுகிறது. சூதங்களில் இருவகைகள் உள்ளன - வாங்கல் சூதம் ("call option") மற்றும் விற்றல் சூதம் ("put option"). + +"வாங்கல் சூதம்" என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை வாங்கும் உரிமை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு விற்கும் நிர்ப்பந்தம் உள்ளது. + +"விற்றல் சூதம்" என்னும் பத்திரத்தை வாங்குபவர்க்கு சூதத்தை விற்கும் உர��மை அளிக்கப்படுகிறது. இப்பத்திரத்தை விற்றவருக்கு வாங்கும் நிர்ப்பந்தம் உள்ளது. + +சூதங்களின் வர்த்தக முறைகளில் இரண்டு வகைகள் உண்டு. அமெரிக்க சூதங்களில் ("American Options") ஒரு தேதி அல்லது அதற்கு முன்பு அவைகளை செயல்படுத்தலாம் (excercise). ஐரோப்பிய சூதங்கள் ("European Options") ஒரு குறிப்பிட்ட தேதியில் மட்டும் செயல்படுத்தலாம். + +சூதங்களில் மேலும் ஒரு வகைபாடு உள்ளது. உன்மைச் சூதங்கள் ("Real Options") மற்றும் வணிக சூதங்கள் ("Traded Options"). சூதங்களில் மேலும் ஒரு வகைபாடு உள்ளது. உன்மைச் சூதங்கள் ("Real Options") மற்றும் வணிக சூதங்கள் ("Traded Options"). உன்மை சூதங்கள் ஒரு நிறுமத்தின் வர்த்த்க தீர்மானங்களுக்கு நிர்ப்பந்தமின்றி உரிமை அளிக்கின்றன (right but not obligation). வர்த்தகச் சூதங்கள் பங்கு மாற்றகங்களில் (stock exchange) பதிவான பிணையங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. + + + + +ஓட்டன் சமவெளி தேசிய வனம் + +ஓட்டன் சமவெளி ("Horton Plains", ஹட்டன் சமவெளி) இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனப்பூங்காவாகும். இது மொத்தம் 3159.8 எக்டேர் பரப்பளவைக் கொண்டதுடன், சராசரியாக 2130 மீட்டர் (7000 அடி) உயரமானது. 1969 ஆண்டு முதல் வனவிலங்கு சரணாலயமாக (புகலிடம்) காணப்பட்ட ஹட்டன் சமவெளி, 1988 முதல் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இங்கு பத்தனைப் புல் நிலங்களும் என்றும் பசுமையான (பசுமை மாறா) மலைக்காடுகளும் காணப்படுகின்றன. இது நுவரெலியா நகரில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது இலங்கையில் மிக உயரமானதும் தனிமைப்படுத்தப்பட்டதுமான மேட்டுநிலமாகும். இச்சமவெளி அயனமண்டல மலைக்காடுகளாலும் ஈரபத்தனைப் புல் நிலங்களாலும் ஆனாது. இது இலங்கையில் உயிரினப் பல்வகைமை கூடிய இடங்களில் ஒன்றாகும். + +பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு மனிதக்குடியிருப்புகள் காணப்பட்டமைக்கான சான்றுகள் கிடைக்கப்பட்டுள்ளன. இப்பகுதி முன்னர் மகாஎலிய என அழைக்கப்பட்டு வந்தது. இங்கு காணப்படும் தொடுபலை மலை, இராவணன் சீதையை கடத்திக் கொண்டுவந்து தனது விமானத்தில் இருந்து தரையிரங்கிய இடம் என்பது தொன் நம்பிக்கையாகும். 10,000 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கு வாழ்ந்த மனிதர்கள் பார்லி மற்றும் ஓட்ஸ் பயிரிட்டதற்கும் மந்தைகளை வைத்து இருந்ததற்குமான சான்றுகள் இங்கு கிடைக்கப்பெற்��ுள்ளன. 1831 முதல் 1837 வரையான காலப்பகுதியில் இலங்கையில் ஆளுநரான சர். வில்மட் ஹட்டன், சபரகமுவா மாகாணத்தின் தலைவருக்குமிடையில் 1836 ஆம் ஆண்டு இங்கு நடைப்பெற்ற சந்திப்பின் பின்னர் இப்பகுதிக்கு வந்த பிரித்தானிய கப்டன். வில்லியம் பிஷ்சர், கேணல். எல்பேர்ட் வொட்சன் என்பவர்கள் இப்பகுதிக்கு ஆளுநர் சர். வில்மட் ஹட்டன் என்பாரின் பெயரை இப்பகுதிக்கு இட்டனர். இப்பகுதி பிரித்தானியரின் வேட்டையாடும் காடாக மாற்றப்பட்டது. 1837 ஆம் ஆண்டளவில் யானைகள் முற்றாக அழிவுற்றிருந்தன இதற்கு அப்போதைய ஆளுநரின் நடவடிக்கைகள் காரணம் எனக் கூறப்பட்டது. + +1961 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கம் விவசாய திணைக்களத்துடன் இணைந்து இப்பகுதியில் மேற்கொண்ட உருளைக்கிழங்கு பயிர் செய்கை காரணமாக ஹட்டன் சமவெளியில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன. சூழல் ஆர்வலர்களின் எதிர்ப்பு காரணமாக பின்னர் இத்திட்டம் கைவிடபபட்டது. இருப்பினும் பயிர்ச்செய்கை நிலங்களில் ஹட்டன் சமவெளிக்கு வெளியில் இருந்து கொண்டுவரப்பட்ட தாவரங்கள் ஆக்கிரமித்தன. இன்றும் உருளைக்கிழங்கு விவசாயிகள் விட்டுச் சென்ற கட்டிடங்களை இங்கு காணலாம். + +ஹட்டன் சமவெளி சராசரியாக 2130 மீட்டர் உயரமான ஒரு மேட்டுநிலப்பகுதியாகும். இது அருகில் காணப்படும் மலைசார்ந்த பகுதிகளில் இருந்து சடுதியாக மேலெழுந்துக் காணப்படுகிறது. வனப்பகுதியின் உச்சியின் பெரும்பகுதி சமவெளியாக காணப்படுகிறது. இலங்கையின் இரண்டாவது மற்றும் மூன்றாவது உயரமான மலைகளான கிரிகல் பொத்தை, தொடுபலை மலைகள் வனப்பூங்காவின் எல்லைக்குள் அமைந்துள்ளன. வனப் பூங்காவின் தெற்கு எல்லையில் 700-1000 மீட்டர் செங்குத்துச் சாய்வு ஒன்று காணப்படுகிறது. இச்சாய்வு "உலகமுடிவு" என அழைக்கப்படுகிறது. இவ்வனம் இலங்கையின் மூன்று முக்கிய ஆறுகளான வளவை, களனி, மகாவலி ஆறுகளின் என்பவற்றின் ஆரம்ப ஆறுகளான பெலிவுல், பொகவந்தலா, அக்ரா ஆறுகள் ஹட்டன் சமவெளியில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. சமவெளியின் எல்லைக்குள் பெலிவுல் ஆற்றில் பேக்கர்ஸ் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. + +ஹட்டன் சமவெளி இலங்கையின் இரண்டு பருவப்பெயர்ச்சிக் காற்றுகளிலும் பருவபெயர்ச்சியிடைக் காலத்திலும் மழைவீழ்ச்சியைப் பெறுகின்றது. ஆண்டுக்கு 2450 மில்லிமீட்டருக்கும் கூடுதலான மழைவீழ்ச்சி இப்பகுதிய��ல் ஏற்படுகிறது. அக்டோபர் மாதம் மழைவீழ்ச்சி கூடிய மாதமாகும். ஜனவரி - மார்ச் வரையான காலப்பகுதி ஓரளவுக்கு மழைவீழ்ச்சி குறைவான காலப்பகுதியாகும். இங்கு ஆண்டு சராசரி வெப்பநிலை 13 பாகை செல்சியஸ் ஆகும். அதிகூடிய வெப்பநிலையாக ஆகஸ்ட் மாதத்தில் 27 பாகை செல்சியசும் மிகக் குறைந்த வெப்பநிலையாக ஜனவரி மாததில் 5 பாகை செல்சியசும் பதிவாகி உள்ளது. மாலை வேலைகளில் முகில் மூட்டங்கள் காணப்படும். அ + +இங்கு காணப்படும் வனங்கள் 5000 அடிக்கு மேல் உயரமான இடங்களிலுள்ள காடுகளை ஒத்ததாகும். இந்தக் காடுகள் தாவரவியலாளர் சர். ஜோசஃப் ஊக்கர் என்பவரின் முயற்சிகள் காரணமாக 1873 முதல் சிறிதளவான பாதுகாப்பைப் பெற்று வந்தன. இங்கு 57 வகையான தாவரவகைகள் காணப்படுவாதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றில் 29 வகைகள் இலங்கைக்கே உரிய தாவர இனங்களாகும். இக்காடுகளில் கலோபியம் வகை "(Calophyllum sp.)", சிஸ்ஜியம் வகை "(Syzygium sp.)", இராட்சத மரப்பன்னம் "(Cyathea sp.)" போன்ற தாவரங்கள் முக்கியமானவையாகும். நெலு "(Strobilanthes sp.)", போவிட்டியா "(Osbeckia sp.)", பினர "(Exacum trinervium)" முதலிய இலங்கைக்கே உரிய மலரினங்களும் பல ஓர்கிட் இனங்களும் இங்கு காணப்படுகின்றன. இலங்கைக்கே உரிய கர்னோடியா மூங்கில்கள் "(Arundinaria densifolia)" ஆற்றங்கரைகளில் காணப்படுகின்றன. புல்தரைகளில் கிறிஸ்போகன் செலனிகம் "(Chrysopogon zeylanicum)", கர்னோடியா மியுடீகா "(Garnotia mutica)" வகைகள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. + +இங்கு 14 இனங்களைச் சேர்ந்த பாலூட்டி விலங்குகளும், 16-20 ஈரூடக வாழி இனங்களும், 6 ஊர்வன இனங்களும், 98 பறவையினங்களும், 2 மீனினங்களும், 20 வகையான வண்ணத்துப் பூச்சியினங்களும் காணப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 98 பறவையினங்களில் 21 இலங்கைக்கே உரியவையாகக் கணக்கிடப்பட்டுள்ளன. பல பறவைகள் வேறுநாடுகளில் இருந்து குளிர்காலத்தைக் களிக்க வருபவையாகும். 70% இலங்கைக்கே உரிய பறவைகள் இங்கு காணப்படுகின்றன. இங்கு யானைகள் காணப்பட்டப் போதும் 1800களில் பிரித்தானியர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதால் இன்று இவை அருகிவிட்டன. இங்கு 4000 சாம்பர் மான்கள் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள் என்பன இங்கு காணப்படும் ஏனைய பெரிய பாலூட்டிகளாகும். இலங்கைக்கே உரிய கரடிக் குரங்கு, புள்ளிப் பூனைகள் என்பனவும் இங்கு காணப்படுகின்றன. + +ஹட்டன் சமவெளிக்கு வரும் பெரும்பாலான பயணிகள் பார்வை���ிடும் ஒரு நீர்வீழ்ச்சியாகும். இது வளவை ஆற்றின் தலையாறான பெலிவுல் ஆற்றில் அமைந்துள்ளது. பிரித்தானியர் ஆட்சியின் போது இப்பகுதியில் யானைகளை வேட்டையாடிய பிரித்தானியரான சர். சமுயெல் பேர்கஸ் என்பரின் நினவாக பெயரிடப்பட்டுள்ளது. இங்கு மக்கள் நீராடுதல் பொதுவான காட்சியாகும், இருப்பினும் இங்குள்ள நீர் வெப்பநிலை குறைவானதால் அவதானத்துடன் இருப்பது முக்கியமாகும். + +ஹட்டன் சமவெளியின் மேற்கு எல்லையில் அமைந்துள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 2,313 மீட்டர் உயரமானதாக இருந்தாலும் ஹட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதே. எனினும் இதன அடிவாரத்தை அடைவதற்கு சதுப்பநிலங்களுக்கூடாக செல்ல வேண்டும். மழை நாட்களில் ஏறுவதைத் தவிர்த்தல் நன்று. + +ஹட்டன் சமவெளியின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள இந்த மலை கடல் மட்டத்தில் இருந்து 2,360 மீட்டர் உயரமானது. ஹட்டன் சமவெளிக்கு மேலாக இதன் உயரம் சிறியதாகும். எனவே இதனை ஹட்டன் சமவெளியில் இருந்து ஏறுவது இலகுவானதாகும். மலையடிவாரமும் இலகுவாக அடையலாம். + +இது ஹட்டன் சமவெளியின் தெற்கு எல்லையில் அமைந்துள்ள 700-1000 மீட்டர் உயரமான செங்குத்து உயரத்தைக் குறிக்கும். ஹட்டன் சமவெளியின் முக்கிய கவர்ச்சிகளில் ஒன்றாகும். மழையற்ற நாட்களில் பலாங்கொடை, பெலிவுல் ஓயா போன்ற பகுதிகளைக் கீழே காணலாம். இங்கு பாதுகாப்பு வேலி காணப்படுவதில்லை. எனவே சரிவுக்கு அருகில் இருக்கும் போது அவதானமாக இருத்தல் வேண்டும். + +இது முக்கிய நுழைவாயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. ஹட்டன் சமவெளியின் தென்மேற்கு எல்லையில் அமைந்துள்ள நோர்த்-கோவ் தேயிலைப் பெருந்தோட்டத்தின் முன்னாள் அதிகாரி தோமஸ் பார் என்பவரால் 1901ஆம் ஆண்டு வேட்டையாடுவதற்கும் மீன் பிடிப்பதற்குமான தனிப்பட்ட விடுதியாக அமைக்கப்பட்டது. 1919 ஆம் ஆண்டு பார் இங்கிலாந்தில் மரணமான போது இவரது சாம்பல் ஹட்டன் சமவெளிக்கு கொண்டுவரப்பட்டு தூவப்பட்டது. இவரது மரணத்துக்குப் பிறகு விடுதி உல்லாசப்பிரய்யாணிகளுக்கான தனியார் நிறுவனமாக மாற்றப்பட்டது. 1980 ஆம் ஆண்டு இது அரசவசப்படுத்தப்பட்டது. 2004 ஆம் ஆண்டு முதல் இது ஒரு நூதனசாலையாக மாற்றப்பட்டுள்ளது. + +ஹட்டன் சமவெளி பாதுகாக்கப்பட்ட வனமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது. இது இலங்கையி��் மத்திய மலைநாட்டின் முக்கிய சுற்றுலாத்தளமாக விளங்குகிறது. தேசிய வனத்துக்குள் தனியான சுற்றுலா விடுதிகள் சிலவும், கூட்டுச் சுற்றுலா விடுதிகள் சிலவும் காணப்படுகின்றன. + +நுவரெலியாவில் இருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஹட்டன் சமவெளியின் முக்கிய நுழைவாயிலை தனியார் பேருந்து அல்லது ஏனைய வாகனங்கள் மூலம் அம்பேவலை, பட்டிபலை வழியாக அடையலாம். பொதுப் போக்குவரத்து வசதிகள் இப்பகுதியில் இல்லை. பிரதான நுழைவாயில் வரையான பாதை பல ஊசிவளைவுகளைக் கொண்டுள்ளதால் பெரிய பேருந்துக்கள் இங்கு வருவது கடினமானதாகும். பிரதான நுழைவாயிலில் இருந்து 10 கி.மீ. தூரமான வட்டப்பாதையில் செல்வதன் மூலம் இங்குள்ள முக்கிய இடங்களைக் கண்டுகளிக்கலாம். இப்பாதையில் வாகனங்கள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது. + +பிரித்தானியர் காலத்தில் அமைக்கப்பட்ட குதிரைமூலம் செல்லக் கூடிய பாதையை மேம்படுத்துவதன் மூலம் 2005 ஆண்டு முதல் பட்டிபொலைக்கு அருகிலும் ஒரு நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. + +ஒயியா தொடருந்து நிலையம் இப்பகுதியில் காணப்படும் பொதுப்போக்குவரத்து மையமாகும். இங்கிருந்து 11 கி.மீ. தூரம் மிகச்சரிவான பதையில் செல்வதன் மூலம் முக்கிய நுழைவாயிலை அடையமுடியும். அங்கிருந்து மீண்டும் 10 கி.மீ. தொலைவான பாதையில் செல்வதன் மூலம் வனத்தைக் கண்டு களிக்கலாம். + +பலாங்கொடை நகருக்கு அருகாமையில் காணப்படும் பெலிவுல்ஓயா கிராமத்தில் இருந்து நக்ரக் தேயிலைப் பெருந்தோட்டத்தின் வழியாக ஹட்டன் சமவெளியின் தெற்குப்பகுதியை அடைவதற்கான ஓரு பாதையும் காணப்படுகிறது. இப்பாதை பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் குதிரை மூலம் செல்லக்கூடியவாறு அமைக்கப்பட்ட பாதையை ஒட்டிச் செல்வதாகும். இருப்பினும் இப்பாதை தற்சமயம் பயன்பாட்டில் இல்லாததோடு பாதையும் அழிவுற்றுள்ளது. இது மொத்தம் 11 கி.மீ. நீளமான பாதையாகும். இப்பாதை செங்குத்துச் சரிவுகளையுடைய ஆபத்தான பாதையாகும். இது பொதுவான பயனர்களுக்கு உகந்த பாதையல்ல. இதற்கு அருகில் பம்பரக்கந்தை நீர்வீழ்ச்சிக்கு அருகில் கும்புருதென்னிவலை என்ற கிராமம் ஊடாகவும் ஒரு பாதை அமைந்துள்ளது. + +பொகவந்தலாவை நகரில் இருந்து நோட்டன் கோவ் தேயிலைப் பெருந்தோட்டம் வரை வாகனமொன்றில் சென்று அங்கிருந்து காட்டில் சுமார் 7 கிலோமீட்டர் செல்வதன் மூலம் ஹட்டன் சமவெளியை அடையலாம். இங்கு ஒரு ஒற்றையடிப்பாதை காணப்படுகிறது. வனத்துக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்த இப்பாதையில் நுழைவாயில்களோ காவலர்களோ இல்லை. மேலும் இப்பகுதியில் சட்டவிரோத அகழ்வுகள் நடைப்பெற்று வருவதன் காரணமாக பாதுகாப்பு பிரச்சினைகள் ஏற்படலாம். + +வனத்துக்கு உள்ளிடும் பயணிகள் பொலித்தீன் போன்ற உக்காத பொருட்களை உள்ளே கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சமவெளியின் உள்ளே குப்பைகள் இடுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகளின் நலன் கருதி எளிதில் உக்கக்கூடிய பை ஒன்றும் நுழைவாயிலில் வழங்கப்படுகிறது. + +இப்பகுதியில் தொலைபேசி சேவை நிறுவனங்கள் தமது சேவைகளைத் தருவதில்லை. எனவே இன்னல் வேளைகளில் தொலைத் தொடர்பிற்கு வாய்ப்பில்லாமல் போகலாம். இங்கு சிறுத்தைகள் காணப்படுவதால் தனியாக நடமாடுவது தவிர்க்கப்படவேண்டும். ஆண்டின் எப்பகுதியில் வந்தாலும் மழைக்கு ஆயத்தமாக வருவது பொருத்தமாக இருக்கும். பேர்கஸ் நீர்வீழ்ச்சியில் நீராடுதல் ஆபத்தானது. + +திட்டமிட்ட முறையில் இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டவிரோதமான பாரிய இரத்தினக் கல் அகழ்வு முக்கிய பிரச்சினையாக உள்ளது. பகவந்தலாவை, பெலிவுல், நொன்பெரில் பகுதிகளில் இருந்து வனத்துக்கு நுழைபவர்களை கட்டுப்படுத்த வேலைத்திட்டம் ஒன்று இல்லாமை இதற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. +வெளிநாடு ஒன்றில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டுள்ள உலெக்ஸ் யுரோபியாஸ் (Ulex Europeaus) என்ற தாவரம் இங்கு மிகவேகமாக பரவிவருவதால் இங்குள்ள தாவரங்கள் அழிவை எதிர்நோகியுள்ளன இதனால் 2002 ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் தன்னார்வலர்கள் இச்செடிகளை அகற்றி வருகின்றனர். + + + + + +மே 3 + + + + + + + +மே 4 + + + + + + +மைக்ரோசாப்ட் ஏஜன்ட் + +மைக்ரோசாப்ட் ஏஜண்ட் என்பது கணினியை இலகுவாகவும் இயற்கையாகவும் தொடர்பு கொள்வதற்காக மைக்ரோசாப்ட் உருவாக்கிய நுட்பமாகும். மைக்ரோசாப்ட் ஏஜண்ட்டில் animated characters, எழுதியதைப் பேச்சாக மாற்றும் மென்பொருள், பேச்சுணரி மென்பொருள் ஆகிய வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. + + + + +குரங்கு + +குரங்கு ("Monkey") ஒரு பாலூட்டி விலங்கு. ��ால் நீளம் தவிர்த்து 14 முதல் 16 செண்டிமீட்டர் அளவேயான சிறு குரங்குகள் முதல் ஒரு மீட்டர் உயரமான பெரிய குரங்குகள் வரை குரங்குகளில் பல வகைகள் உள்ளன. பழங்கள், இலைகள், தானியங்கள், கொட்டைகள், பூக்கள், பூச்சிகள், சிலந்திகள், முட்டைகள், பிற சிறு உயிரினங்களைக் குரங்குகள் உண்கின்றன. குரங்கில் இருந்து மனிதன் தோன்றினான் என்ற பரிணாம வளர்ச்சிக் கொள்கையை இடார்வின் முன்மொழிந்தார். இராமாயணத்தில் குரங்கிற்குத் தனி இடம் உண்டு. + +குரங்குகளுக்கு இரண்டு மூளைகள் உண்டு. ஒன்று உடலையும் மற்றொன்று வாலையும் செயற்பட வைக்கிறது. + +குடிநீர் பற்றாக்குறையில் தவிக்கும் குரங்கு + + + + + +விடுதலைக் கட்டுநர் + +விடுதலைக் கட்டுநர் ("freemasonry") என்பது சகோதரத்துவத்தை முன்னிறுத்தி செயல்படும் ஒரு ரகசிய கூட்டமைப்பு ஆகும். இதன் தொடக்கத்தை பற்றி அதிகம் தெரியவில்லை. இது 18-ம் நூற்றாண்டையொட்டி இங்கிலாந்தில் முறைபடுத்தபட்ட இயக்கம். பெரும்பாலும் கட்டிடக்கலை நிபுணர்களால் தொடங்கப்பட்டதாகவே ஒத்துக்கொள்ளபடுகிறது. மன்னர் சாலமனின் கோயிலைக் கட்டியவர்களால் தொடங்கப்பட்டது என்பது ஓர் ஐதீகம். இதன் ரகசிய நடவடிக்கைகளால் அச்சத்தையும் சந்தேகத்தையும் சம்பாதித்த ஒர் இயக்கம். அதனால், திரைகளை விலக்கி தங்கள் நடவடிக்கைகளை வெளிக்கொணர முயல்கிறது இவ்வியக்கத்தின் ஒரு பகுதி. "சகோதரத்துவம், உண்மை, உதவி" - இதுதான் இவர்களின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு. + +இதன் அடிப்படை அமைப்பு Lodge எனப்படும் ஒரு குழுமம். இவர்கள் சந்திப்பதற்காகக் கூடும் இடத்தை "கோயில்" என்பர். இப்பொழுது இது சற்றே மாறி ஹால் (மண்டபம்) என்றும் அழைக்கப்படுகிறது. லண்டனில் உள்ள Freemasons Hall மிக பிரசித்தம். ஒரு நாட்டில் இருக்கும் லாட்ஜுகளை ஒருங்கிணைப்பது Grand Lodge. இது பொது விதி. அமெரிக்காவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கிராண்ட் லாட்ஜ் உண்டு. ஒவ்வொரு லாட்ஜும் தனக்கேயுள்ள விதிமுறைகளை பின்பற்றியே செயல்படுகிறது. லாட்ஜுக்கும், கிராண்ட் லாட்ஜுக்கும் தலைவர், உப தலைவர் போன்ற பதவிகளெல்லாமுண்டு. + +ஒவ்வோரு லாட்ஜின் விதிமுறைகள் வித்தியாசப்படலாம். இவைகளுக்கு தொடர்புடைய லாட்ஜுகள், தொடர்பில்லா லாட்ஜுகள் எல்லாமுண்டு. ஒரு லாட்ஜின் உறுப்பினர், அதன் தொடர்புடைய லாட்ஜின் ���ூட்டத்திற்கு செல்லமுடியும். ஒரு லாட்ஜானது தனக்கு தொடர்பில்லா ஒரு லாட்ஜின் இருப்பையே ஒத்துக்கொள்ளாது. + +லாட்ஜுகள் பல விதமான பிரிவுகளாக இயங்கி வருகின்றன. இங்கிலாந்து பாரம்பரியத்தை சார்ந்த அல்லது கண்ட ஐரோப்பிய பாரம்பரியத்தை சார்ந்த பிரிவுகள் (anglo-saxon vs continental european), நவீன கோட்பாட்டையோ சம்பிரதாய கோட்பாட்டையோ சார்ந்திருப்பவர்கள் (moderns vs ancients) என்றெல்லாம் பல பிரிவுகள் உண்டு. + +உறுப்பினராக விரும்புபவர் விண்ணப்பம் செய்து காத்திருக்க வேண்டியதுதான். லாட்ஜின் உறுப்பினர்கள் அதனை பரிசீலித்து அவரை சேர்த்துக்கொள்வதா என முடிவு செய்வார்கள். சேரும்பொழுது உறுதிமொழி, பல்வேறு சம்பிரதாயங்கள், தனிச்சின்னங்கள், சமிக்ஞைகள் என்று பல சட்டதிட்டங்களும் உண்டு. + +மூன்று வகையான உறுப்பினர்கள் உண்டு. முதற்கட்ட உறுப்பினராய் சேர்ந்தபின் தனது தாய் லாட்ஜில் படித்து பட்டம் பெற்றே இரண்டாம், மூன்றாம் நிலையை அடைய முடியும். மூன்றாம் நிலை உறுப்பினராலேயே தனது லாட்ஜுக்குத் தொடர்புடைய லாட்ஜுகளுக்கெல்லாம் செல்லமுடியும். பாரம்பரியமாக இதில் பெண்களை சேர்த்துக்கொள்வது இல்லை. ஆயினும் சில பெண்கள் உறுப்பினராக இருந்திருக்கின்றனர். இப்பொழுது பெண்களுக்கான தனி லாட்ஜுகளும் இருக்கின்றன. + +உறுப்பினர்களாக விரும்புபவர்கள் கீழ்கண்ட தகுதிகள் பெற்றிருத்தல் வேண்டும். + +வரலாற்றில் இவர்களின் இடம் சர்ச்சைக்குறியதாகவே இருக்கிறது. இவர்களின் ரகசிய நடவடிக்கைகளே இதற்கு காரணம். பல்வேறு கட்டங்களில் இவர்கள் கிருத்துவதிற்கு எதிராக போதிக்கின்றனர் என்றும், அப்பொழுது இருந்த ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும் குற்றச்சாட்டுகள் இருந்துகொண்டே இருந்தன. இவர்களின் ரகசியத்தை சொல்ல முற்படுகின்றவர்களை கொன்றுவிடுகின்றனர் என்றும் சாத்தானையும் துர்தேவதைகளையும் வழிபடுகின்றனர் என்றும் கூட குற்றச்சாட்டுகள் உண்டு. இது போன்ற குற்றச்சாட்டுகளை இவர்கள் மறுத்தே வந்திருக்கின்றனர். + + + + + + +பெரியார் (திரைப்படம்) + +பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழத் திரைப்படம் பெரியார் ஆகும். இப்படத்தில் பெரியாராக சத்தியராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத���தை இயக்கியுள்ளார். இப்படத்தை உருவாக்குவதற்கு 95 இலட்சம் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார். + + +பாடலாசிரியர் - வைரமுத்து, இசையமைப்பு - வித்யாசாகர் + + + + + + +இந்திய அஞ்சல் துறை + +இந்திய அஞ்சல் துறை 'இந்தியா போஸ்ட்' ("India Post") என்ற பெயரில் செயல்படுகிறது. இது இந்திய அரசினால் செயல்படுத்தப்படும் அஞ்சல் சேவை ஆகும். பல வழிகளில் மக்களுக்குச் சேவை செய்து வருகிறது. நாள் ஒன்றுக்கு இரண்டு இலட்சம் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகின்றன. நாட்டின் எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கும் அதிகபட்சமாக நான்கு நாட்களுக்குள் கடிதங்கள் பட்டுவடா செய்யப்படுகிறது. + +இந்திய அஞ்சல்துறை மொத்தம் 154,000 அஞ்சல் அலுவலகங்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய துறையாகும்(சீனா இரண்டாவது இடம், 57,000 தபால் அலுவகங்கள்). இதன் பரந்து விரிந்த அலுவலகங்களால் இந்தியாவின் அனைத்து இடங்களும் இணைக்கப்படுகின்றன. இந்திய அஞ்சல் துறையில் மொத்தம் 593,878 (2001ம் வருடத்தின் படி) ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். இந்திய அஞ்சல் துறை சிறிய வகை வங்கி சேவைகளிலும் ஈடுபடுகிறது. இதன் மூலம் வங்கி வசதி இல்லாத கிராமங்களும் பயன்பெறுகின்றன.21 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு, சுமார் 6000 நபர்களுக்கு ஒரு அஞ்சல்அலுவலகம் என்ற விகிதத்தில் இது உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 10,263 அஞ்சலகங்கங்கள் உள்ளன. + +இந்தியாவில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி முதன்முதலாக 1764-1766களில் பம்பாய்(மும்பை), சென்னை மற்றும் கல்கத்தா(கொல்கத்தா) மாகாணங்களில் அஞ்சல் சேவையைத் துவக்கியது. வாரன் காஸ்டிங் கவர்னராக இருந்த போது அஞ்சல் சேவை பொது மக்களுக்காகவும் செயல்படத் துவங்கியது. அப்போது 100 மைல் தூரத்துக்குட்பட்ட கடிதங்களுக்கு 2 அணா (ஒரு ரூபாயில் எட்டில் ஒரு பங்கு) வசூலிக்கப்பட்டது. + +அஞ்சல் சேவையின் அவசியத்தை உணர்ந்தவுடன் பிறகு அனைத்து மாகாணங்களிலும் அஞ்சல் துறை செயல்படத் தொடங்கியது. 1839ல் வடமேற்கு, 1860ல் பஞ்சாப், 1861ல் பர்மா, 1866ல் மத்திய மாகாணம், 1869ல் சிந்து, 1871ல் ராஜபுதனா, 1873ல் அஸ்ஸாம், 1877ல் பீகார், 1878ல் கிழக்கு வங்காளம் ஆகிய அஞ்சல் வட்டங்கள் துவங்கப்பட்டு அஞ்சல்துறை செயல்படத் தொடங்கியது. பின் 1914ம் ஆண்டுவாக்கில் இந்த அ���்சல் வட்டங்கள் இணைக்கப்பட்டு 7 அஞ்சல் வட்டங்களாகக் குறைக்கப்பட்டன. வங்காளம்&அஸ்ஸாம், பிகார்&ஒரிஸ்ஸா, பம்பாய்(சிந்து உள்ளடக்கியது), பர்மா, மத்திய, + +சென்னை, பஞ்சாப்&வடமேற்கு மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகியனவாக இணைக்கப்பட்டன. தபால்தலைகளின் உபயோகம் 1 ஜூலை 1852ல் சிந்து மாவட்டதில் அறிமுகப்படுத்தப்பட்டது. தபால்தலைகள் வட்டவடிவில் இருந்தன. பின்னர் 1854ல் பேரரசி விக்டோரியாவின் உருவம் பொரிக்கப்பட்ட தபால் தலைகள் கல்கத்தாவில் அச்சிடப்பட்டு "EAST INDIA POSTAGE" என்ற பெயருடன் இந்தியா முழுவதும் உபயோகத்துக்கு வந்தன. + +இந்திய அஞ்சல் துறை இந்திய தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டது. இந்தியாவில் மொத்தம் 22 அஞ்சல் வட்டங்கள் தற்போது உள்ளன. ஒவ்வொரு அஞ்சல் வட்டமும் தலைமை அஞ்சல் அதிகாரியின் கீழ் இயங்குகின்றன. இந்த அஞ்சல் வட்டங்கள் தவிர இந்திய இராணுவத்தின் அஞ்சல்சேவைக்காக ஒரு சிறப்பு அஞ்சல் வட்டமும் செயல்படுகிறது. + +இந்தியாவில் உள்ள அஞ்சல் அலுவலகங்கள் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை + +இந்தியத் அஞ்சல் துறையின் அஞ்சல் சேவைகள் ஆறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை + + +அஞ்சல்கள் வேகமாகவும் குழப்பமின்றிப் பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்புவதற்கு வசதியாக அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. 1972 -ல் கொண்டு வரப்பட்ட இந்தக் குறியீட்டு எண் திட்டத்தில் 6 இலக்கங்கள் இருக்கும். முதல் இலக்கம் அதன் மண்டலத்தைக் குறிக்கும். இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தைக் குறிக்கும். மூன்றாவது இலக்கம் அந்த அஞ்சல் பிரிப்பக மாவட்டத்தைக் குறிக்கும். கடைசி மூன்று இலக்கங்கள் அந்த அஞ்சல் வட்டத்தின் அஞ்சல் நிலையத்தைக் குறிக்கும். + +உதாரணமாக, * புதுடெல்லி , சம்மு காசுமீர் , பஞ்சாப் , இமாசலப் பிரதேசம் , ஹரியானா, சண்டிகர் ஆகியவைகளுக்கு தொடக்க எண் 1 ஆக இருக்கிறது. + + + + + + + + +பொதுவாக அனைத்து அஞ்சல் நிலையங்களும் பின்வரும் சேவைகளில் ஈடுபடுகின்றன. + +இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் தபால் அனுப்பும் சேவைகளில் மட்டுமல்லாது கீழ்க்கண்ட பிற வசதிகளையும் பொதுமக்களுக்குத் தருகின்றன. + + + + + + + +போரோபுதூர் + +போரோபுதூர் (Borobudur, or Barabudur): என்பது இந்தோனீசியாவி��் உள்ள சாவகத் தீவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மகாயான பௌத்த நினைவுச் சின்னம் ஆகும். இது ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொண்டது. இவை, 2672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட கற்சுவர்களாலும், 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமைக்கப்பட்டுள்ள இருந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. + +மத்திய ஜாவாவில் 8ம் நூற்றாண்டில் பலம் வாய்ந்த அரசு ஒன்று உருவானது. பின்னர் மாத்தாரம் அரசு எனப் பெயர்பெற்ற அதன் மன்னர்கள் சைலேந்திரர் (மலை அரசர்) என்னும் இந்தியப் பட்டப் பெயரைச் சூட்டிக் கொண்டனர். அவர்கள் கட்டிய கோயில்களுள் போரோபுதூர் மிகவும் புகழ் பெற்றது.இதை சமரதுங்கா என்பவர் 8ஆம் நூற்றாண்டில் கட்டினார். 9ம் நூற்றாண்டின் மத்தியில், சைலேந்திரர்களின் அரசு ஸ்ரீவிஜயா அரசைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வந்தது. பிரமாண்டமான இக் கோயில் பராமரிக்கப்படாததால் 11ஆம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல மண்ணுக்குள் புதைந்து போனது. 14 ஆம் நூற்றாண்டில், ஜாவாவின் பௌத்த, இந்து அரசுகளின் வீழ்ச்சியுற்று, ஜாவாவில் இசுலாம் தலையெடுத்ததோடு போரோபுதூர் கைவிடப்பட்டதாகச் சான்றுகள் கூறுகின்றன 100 வருடங்களுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இந்தக் கோயிலைத் தோண்டியெடுத்து புதுப்பித்தார்கள். 1814 ஆம் ஆண்டில் ஜாவாவின் பிரித்தானிய ஆட்சியாளராக இருந்த தாமஸ் ராஃபில்ஸ் (Thomas Raffles) என்பவரால் இது மீண்டும் கண்டிபிடிக்கப்பட்டு வெளிச்சத்துக்கு வந்தது. இதன் பின்னர் இந்த நினைவுச் சின்னம் பல தடவைகள் புதுப்பிக்கப் பட்டது. இந்தோனீசிய அரசும், யுனெஸ்கோவும் இணைந்து செயற்படுத்திய பெரிய அளவிலான மீளமைப்புத் திட்டம் ஒன்று 1975 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை போரோபுதூர் கோயில் இந்தோனேஷியாவின் தேசியச் சின்னமாகவும் சரித்திர புகழ்பெற்ற தலமாகவும் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டது. + +புத்த மதத்தைச் சார்ந்தவர்களின் புனிதத் தலமாகக் கருதப்படும் இந்தக் கோயில் 55 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. சுமார் 196,800 கற்கள் பயன்படுத்தி இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயில் பத்து அடுக்குகள் கொண்டது. இந்த அடுக்குகள் பிரமிடு வடிவில் அமைக்கப்பட்டுள்ளன.இந்தக் கோயிலின் சுவர்களில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றுச் சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. தொலைவில் இருந்து பார்த்தால் சிறிய குன்று போலவும், உயரத்தில் இருந்து பார்த்தால் தாமரை போலவும் காட்சியளிப்பது கோயிலின் சிறப்பம்சமாகும். +இந் நினைவுச்சின்னம், புத்தருக்கான கோயிலாக விளங்குவதுடன், பௌத்த யாத்திரைக்குரிய இடமாகவும் உள்ளது. புனிதப்பயணம் செய்வோர், இதன் அடியில் தொடங்கி, இதைச் சுற்றியபடியே மூன்று தளங்களூடாக மேலேறுவர். இம் மூன்று தளங்களும், "காமதாது", "ரூபதாது", "அரூபதாது" எனப்படும் பௌத்த அண்டக் கோட்பாட்டில் கூறியுள்ளவாறு மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. இந்தப் பயணத்தின்போது, புனிதப்பயணிகள், 1,460 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுவர்கள், காப்புச் சுவர்கள் ஆகியவற்றுடன் அமைந்த படிக்கட்டுகள், நடைவழிகள் என்பவற்றினூடாகச் செல்கின்றனர். + + + + +கலத்தியா + +கலத்தியா என்பது அறிவியல் வகைப்பாட்டின்படி, மரந்தாசியே ("Marantaceae") குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தாவரச் சாதி ("genus") ஆகும். இச் சாதியில் ஏறத்தாழ இருபத்தைந்து இனங்கள் உள்ளன. அமெரிக்காவின் வெப்ப வலயப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட இச் சாதியின் பல இனங்கள் வீட்டுத் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன. இவற்றுட் சில இனங்களின் இலைகள் வரிக்குதிரையின் கோடுகளை ஞாபகப்படுத்துவதால் "வரிக்குதிரைத் தாவரங்கள்" ("Zebra plants") என அழைக்கப்படுவதுண்டு. + +கலத்தியா தாவரச் சாதியில் உள்ள இனங்களுட் சில பின்வருமாறு: + +"கலத்தியா அல்பேர்ட்டீ ("Calathea Albertii")" +"கலத்தியா குரோகாட்டா ("Calathea Crocata")" +"கலத்தியா லான்சிஃபோலியா Calathea lancifolia)" +"கலத்தியா லொயேசேனென் (Calathea loeseneri)" +"கலத்தியா லூசே (Calathea louisae)" +"கலத்தியா மக்கொயானா (Calathea makoyana)" +"கலத்தியா ஓர்பிஃபோலியா (Calathea orbifolia)" +"கலத்தியா ஓர்னாட்டா (Calathea ornata)" +"கலத்தியா ரோசோபிக்டா (Calathea roseopicta)" +"கலத்தியா ரூஃபிபார்பா (Calathea rufibarba)" +"கலத்தியா அண்டுலாட்டா (Calathea undulata)" +"கலத்தியா வார்சேவிச்சீ (Calathea warscewiczii)" +"கலத்தியா சீபிரீனா (Calathea zebrina)" + + + + +அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் + +அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் ("International Firefighters' Day") மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. + +வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது. + + + + + +பிகோனியா + +பிகோனியா என்பது அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில், பிகோனியேசியே (Begoniaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரச் genusயாகும். இக் குடும்பத்தில் இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன. "சிம்பிகோனியா" சாதி இப்பொழுது பிகோனியாவுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. + +ஏறத்தாழ 1500 இனங்களை உள்ளடக்கிய பிகோனியா மிகப் பெரிய பத்துப் பூக்கும் தாவரச் சாதிகளுள் ஒன்றாகும். + +இவற்றிற் பல, வெள்ளை, இளஞ் சிவப்பு, மஞ்சள் போன்ற பல்வேறு நிறங்களிலான கவர்ச்சிகரமான பூக்கள், அழகிய இலைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் இச் சாதியைச் சேர்ந்த பெருமளவிலான இனங்களும், கலப்பினங்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. இச் சாதியைச் சேர்ந்த இனங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வந்தாலும் கூட அவையனைத்தையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கலப்பினங்களை உருவாக்க முடிவது இந்தச் சாதிக்குரிய சிறப்பியல்பாகும். இதனால் இச் சாதியில் ஏராளமான கலப்பின வகைகள் காணப்படுகின்றன. அமெரிக்க பிகோனியாச் சங்கம் பிகோனியாக்களைப் பல்வேறு குழுக்களாக வகைப்படுத்தியுள்ளது. இவ் வகைப்பாடு, பிரம்பு வகை (cane-like), செடிவகை (shrub-like), குமிழ்த் தாவரவகை, கிழங்குத்தாவர வகை, தடித்த தண்டு கொண்டவை போன்ற அடிப்படையில் அமைந்துள்ளன. பெரும்பாலும் இவ் வகைப்பாடு முறையான அறிவியல் வகைப்பாட்டுடன் பொருந்துவதில்லை. சில கலப்பினங்கள் பல குழுக்களுக்குரிய இயல்புகளைக் கொண்டிருப்பதுடன், சில எந்தக் குழுவுக்குமே பொருந்திவராத நிலையும் உள்ளது. + +பயிரிடுதல் தொடர்பில் வேறுபட்ட பிகோனியாக் குழுக்களுக்கு வெவ்வேறுவகை நிலைமைகள் தேவைப்படுகின்றன. ஆனால், பல பிகோனியா இனங்கள் வெப்ப வலயப் பகுதிகளைச் சேர்ந்தவை ஆதலால், இவ்வினங்களும், அவற்றின் கலப்பினங்களும் பொதுவாக இள வெப்பச் சூழ்நிலைகளில் சிறப்பாக வளர்கின்றன. பொதுவாக இவை காடுகளில் மரங்களுக்கு அடியில் வளரும் தாவரங்களாக இருப்பதனால், இவை வளர்வதற்கு நிழல் தேவைப்படுகின்றது. கூடிய வெப்பப் பகுதிகளில் உள்ள சில இனங்கள் முழுமையான சூரிய ஒளியையும் கூடத் தாங்கி வளரக்கூடியவையாக உள்ளன. பொதுவாக பிகோனியாக்களுக்கு, தொடர்ச்சியாக ஈரலிப்பாகவோ அல்லது முழுமையாக வரண்டுபோகும் தன்மையோ இல்லாத ஆனால், இலகுவாக நீர் வடியக்கூடிய வளர்ச்சி ஊடகம் தேவை. பெரும்பாலான பிகோனியாக்கள் ஆண்டு முழுதும் வளரவும், பூக்கவும் கூடியன எனினும், குமிழ் வகைப் பிகோனியாக்களுக்கு உறக்கநிலைக் காலம் உள்ளது. இக் காலத்தில் குமிழ்களைக் குளிர்ச்சியாக வரண்ட சூழலில் சேமித்து வைக்கலாம். + +செம்பஃபுளோரன்ஸ் குழுவைச் சேர்ந்த பிகோனியாக்கள் பெரும்பாலும் படுக்கைத் தாவரங்களாக (bedding plants) வெளியில் வளர்க்கப்படுகின்றன. குமிழ் வகைப் பிகோனியாக்கள் பூஞ்சாடிகளிலேயே பெரிதும் வளர்க்கப்படுகின்றன. + + + + +மே 5 + + + + + + + +சென்ஸ் அண்ட் சென்சிபிலிடி (நாவல்) + +சென்ஸ் அன்ட் சென்சிபிலிடி ("Sense and Sensibility") 1811 ல் வெளியான பிரபலமான ஆங்கில நாவலாகும். இதன் ஆசிரியன் ஜேன் ஆஸ்டின் என்பவராவார். இக்கதை பெரும்பாலும் அக்காலத்து ஆங்கிலேயப் பாரம்பரியம், அதன் பின்னாலுள்ள வரட்டுக் கெளரவம் என்பவற்றைக் படம் பிடித்துக்காட்டுவதாக உள்ளது. இந்தக் கதை பல தடவை திரைப்படங்களாகவும்(தமிழில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்), தொலைக்காட்சித் தொடர்களாகவும் வெளிவந்துள்ளது. + + + + + +ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (நூல்) + +ஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு ("Harry Potter and the Half-Blood Prince") என்பது ஜே. கே. ரௌலிங்கின் "ஆரி பாட்டர்" தொடரில் வரும் ஆறாவது புதினமாகும். இப்புதினம் 16 சூலை 2005 அன்று புலூம்சுபெரியால் ஐக்கிய இராச்சியத்தி���ும், இசுகொலாசுடிக்கால் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், ரெயின்கோசுட்டால் கனடாவிலும் வெளியிடப்பட்டது. இது கதையின் கதாநாயகனாகிய ஆரி பாட்டர், ஆக்வாட்சில் தனது ஆறாவது வருடம் பயின்று கொண்டு வோல்டெமோர்டிற்கு எதிராக ஆக்வாட்சின் தலைமையாசிரியரும், ஆரியின் வளவாளருமான அல்பசு டம்பிள்டோருடன் சேர்ந்து இறுதிப் போருக்காக முன்னாயுத்தங்களை செய்வது பற்றி இக்கதை தொடர்கின்றது. + + + + +ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (நூல்) + +ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு ("Harry Potter and the Order of the Phoenix") என்பது ஜே. கே. ரௌலிங்கின் "ஆரி பாட்டர்" தொடரில் வரும் ஐந்தாவது புதினமாகும். இது ஆரி பாட்டரின் வாழ்க்கை ஆக்வாட்சின் ஐந்தாவது ஆண்டில் இலோர்டு வோல்டெமோர்ட்டின் திருப்பத்தையும், ஆக்வாட்சில் பரீட்சைகளையும், மந்திர அமைச்சரவையையும் எவ்வாறு சமாளிக்கின்றார் என்பதை பற்றி தொடர்கின்றது. இப்புதினம் 21 சூன் 2003 அன்று புலூம்சுபெரியால் ஐக்கிய இராச்சியத்திலும், இசுகொலாசுடிக்கால் ஐக்கிய அமெரிக்க நாடுகளிலும், ரெயின்கோசுட்டால் கனடாவிலும் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட முதல் 24 மணி நேரத்தில் ஐந்து மில்லியன் பிரதிகள் வெளியிடப்பட்டன. ஆரி பாட்டர் தொடரிலே மிக நீண்ட புதினம் இதுவாகும். + + + + +பயனெறிமுறைக் கோட்பாடு + +பயனெறிமுறைக் கோட்பாடு அல்லது பயனோக்கு கோட்பாடு ("Utilitarianism") என்பது ஒரு செயலின் ஒழுக்க மதிப்பு அதன் ஒட்டுமொத்த பயனுடைமையைப் பொருத்தே அமைகிறது என்ற அடிப்படையிலான மெய்யியல் கோட்பாடு ஆகும். இது ஒரு வகையான விளைவுநெறிமுறைக் கோட்பாடு ஆகும். இக்கோட்பாட்டின்படி "பயனுடைமை" என்பது பெருக்கப்பட வேண்டிய அடிப்படைப் பண்டமாகக் கருதப்படுகிறது. எது பயனுடைமை என்பதில் இக்கோட்பாட்டாளர்கள் வெவ்வேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர். மகிழ்ச்சி மற்றும் இன்ப நலம் என்பதே நற்பயன் என்பது ஒரு சாராரின் எண்ணம். பீடர் சிங்கர் போன்ற விருப்பச்சார்பு பயனோக்காளர்கள் எது நற்பயன் என்பது கோட்பாட்டைப் பின்பற்றுபவர்களின் இயல்பான விருப்பத்தைப் பொருத்த வரையப்படுகிறது என்று கருதுகின்றனர். அதேபோல் பொதுவாக மக்கள் நலனை மையப்படுத்தியே நற்பயன் வரையறுக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த பயன் என்கிற பொழுது மாக்களையும் உட்படுத்தி புலனுணர்வு பெற்ற அனைத்து மெய்ம்மைகளின் நலனும் கருதப்பட வேண்டும் என்று ஒரு சாரார் எண்ணுகின்றனர். + +மேற்கத்திய மெய்யியல் வரலாற்றில் இக்கோட்பாட்டின் துவக்கங்கள் எபிகியூரஸ் என்ற கிரேக்க மெய்யியல் அறிஞரின் கருத்துக்களில் உள்ளதாகக் கருதப்படுகிறது. இருப்பினும் ஒரு கருதுமுறையாக, இதைத் துவக்கத்தில் ஜெரமி பெந்தாம்தான் வளர்த்தெடுத்ததாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவரைப் பொருத்தமட்டில் வலியும் மகிழ்வுமே உலகில் அனைத்திலும் உள்ளார்ந்த மதிப்புடையவைகள் ஆவன. இத்தற்கோளிலிருந்து அவர் பயனுடைமையை வரையறுக்க விழைந்தார். அதன்படி மிகக்கூடுதலான நபர்களுக்கு மிகுதியான மகிழ்ச்சியை எது தருகிறதோ அதுவே பயன்தரும் பண்டமெனக் கொண்டார். பிற்பாடு இது இருவேறு திக்குகளில் இட்டுச்செல்லவல்ல வரையறை என்றுணர்ந்து "பெருமகிழ்ச்சிக் கோட்பாடு" என தனது கோட்பாட்டைத் திருத்திக் கொண்டார். + + + + +அகரவரிசையில் மொழிகளின் பட்டியல் + +உலகில் பல ஆயிரக்கணக்கான மொழிகள் பேசப்படுகின்றன. எத்னோலொக் (Ethnologue) அதன் உலக மொழிகள் பட்டியலில் 7,330 முதன்மை மொழிகளைப் பட்டியல் இட்டுள்ளது. அத்துடன் 39,491 மாற்று மொழிகளையும், கிளை மொழிகளையும் அடையாளம் கண்டுள்ளது. கீழே தரப்பட்டுள்ள பட்டியல் இம்மொழிகளுள் சிலவற்றையே உள்ளடக்கியுள்ளது. இங்கே தரப்பட்டுள்ளவை மனிதரால் பேசப்படும் இயற்கை மொழிகள் ஆகும். + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +[[பகுப்பு:மொழிகள்]] + +[[an:Idioma]] +[[id:Daftar bahasa]] + + + +அபன்யோம் மொழி + +அபன்யோம் என்பது நைகர் கொங்கோ மொழிகளின் எக்கோயிட் துணை மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இது நைஜீரியாவிலுள்ள கிராஸ் ரிவர் மாநிலப் பகுதியில் வாழும் அபன்யோம் மக்களால் பேசப்பட்டு வருகிறது. இம் மொழியைப் பேசும் மக்கள் தொகை ஏறத்தாழ 12,500 ஆகும். இது தெற்கத்திய பாண்டு மொழிக்குழுவின் ஒரு உறுப்பு மொழியாகும். அபன்யோம் மொழி பாண்டு மொழிகளுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டது. It is tonal and has a typical Niger-Congo noun class system. + + + + + +மாநகரப் போக்குவரத்துக் கழகம் + +மாநகரப் போக்குவரத்துக் கழகம் - சென்னை ("Metropolitan Transport Corporation - MTC") சென்னை நகரில் இயங்கும் நகரப் பேருந்துகளின் துறையாகும். சென்னை மாநகரப் பேருந்துகள் ஒரு நாளைக்கு 42 இலட்சம் பயணிகளுக்கு சேவை புரிகின்றன. சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மொத்தம் 3,365 பேருந்துகளை இயக்குகிறது. இப்பேருந்துகள் சென்னை நகரின் சுமார் 40 கி.மீ. வரை மக்களுக்கு சேவை புரிகின்றன. + +சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் (மண்டலம் - I) 1 ஜனவரி 1972ம் ஆண்டு 1029 பேருந்துகளுடன் "பல்லவன் போக்குவரத்துக் கழகம்" என்ற பெயரில் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. மேலும் பல்லவன் போக்குவரத்துக் கழகம் பிரிக்கப்பட்டு "டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம்" என்ற பெயரில் 19 ஜனவரி 1994 முதல் செயல்படத் தொடங்கியது. பின்னர் 1 ஜூலை 1997ல் பல்லவன் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I), டாக்டர். அம்பேத்கார் போக்குவரத்துக் கழகம் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) என்ற பெயரிலும் மாற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டன. பின்னர் நிர்வாகக் காரணங்களுக்காக 10 ஜனவரி 2001ல் மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - II) மாநகரப் போக்குவரத்துக் கழகம் (சென்னை மண்டலம் - I) உடன் இணைக்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. + +இன்று மொத்தம் 3,637 பேருந்துகள், 25 பணிமனைகள், குரோம்பேட்டையில் பேருந்து கட்டமைக்கும் பிரிவு, கலைஞர் கருணாநிதி நகரில் பயணச்சீட்டு அச்சிடும் பிரிவு மற்றும் பட்டுலாஸ் சாலையில் பழுதுபார்க்கும் பிரிவு ஆகியவை இயங்கிவருகின்றன. இத்துறையின் தலைமையகமான "பல்லவன் இல்லம்" எழும்பூரில் உள்ள பல்லவன் சாலையில் அமைந்துள்ளது. + + + + + + + +தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் + +தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் ("Tamilnadu State Transport Corporation – TNSTC") தமிழக அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ் இயங்கும் முக்கியமான பொதுமக்கள் போக்குவரத்துக்கான பேருந்துகளை இயக்கும் துறையாகும். இத்துறை 1972ல் தமிழக அரசால் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டிற்குள்ளேயும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளுக்குத் தமிழ்நாட்டிலிருந்தும் பேருந்துகளை இயக்குகிறது. + +தமிழ்நாடு அரசுப் போ���்குவரத்துக் கழகம் நகர் மற்றும் புறநகர்ப் பேருந்து சேவைகளையும் இயக்குகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் முழுவதும் நகர பேருந்துகளாகவும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் முழுவதும் புறநகர் சேவைகளையும் கொண்டுள்ளது. மற்ற போக்குவரத்துக் கழகங்கள் இருசேவைகளிலும் கணிசமான பேருந்துகளை இயக்குகின்றன. + +தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. + +சென்னை நகர் மற்றும் புறநகரில் நகர பேருந்துகளை மட்டும் இயக்குகிறது. +"முதன்மை கட்டுரை:அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்" + +அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தால் 300 கி.மீ. அதிகமான தூரம் கொண்ட வழிதடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருசில பேருந்துகள் குளிர்சாதன பேருந்துகளாகவும், மீதமுள்ள பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசுப் பேருந்துகளாக உள்ளன. +"முதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி" + +, தூத்துக்குடி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது. +"முதன்மை கட்டுரை:தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், மதுரை" + +மதுரை, திண்டுக்கல் ,தேனி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது. +கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது. +சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது. + +விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது. +புதுக்கோட்டை, திருச்சி, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், இராமநாதபுரம், அரியலூர், சிவகங்கை, திருவாரூர், கரூர், பெரம்பலூர் மாவ��்டத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளை உள்ளடக்கிய பணிமனைகளிலிருந்து அனைத்து நகர, புறநகர பேருந்துகளை இயக்குகிறது. + +தமிழ்நாடு போக்குவரத்துக் கழகங்களின் நிலையங்கள்: + +மாநகர பேருந்துகளில் சொகுசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு சிறப்பாக இயக்கப்பட்டு வருகின்றன. மாநகரப் போக்குவரத்துக் கழகம், சென்னையில் குளிர்சாதன நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நவீன சொகுசுப் பேருந்துகள் புறநகர பேருந்துகளாக சில போக்குவரத்துக்கழகங்களால் இயக்கப்படுகின்றன. அதிநவீன சொகுசுப் பேருந்துகள் விரைவுப் போக்குவரத்துக்கழகத்தால் இயக்கப்படுகின்றன. + + + + + + + +அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் + +அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ("State Express Transport Corporation - SETC") தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்" என அழைக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும். + +இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. + +தமிழக அரசால் மாவட்டங்களின் தலைநகரங்களை இணைக்க 1975ம் ஆண்டு அதிவிரைவுப் பேருந்துப் போக்குவரத்தினைத் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 15 செப்டம்பர் 1975 சென்னையிலிருந்து இந்த சேவை தொடங்கப்பட்டது. பின்னர் 14 ஜனவரி 1980ல் "திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம்"-ஆக செயல்படத் தொடங்கியது. +1990-ம் ஆண்டு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம்,திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என இரண்டாக பிரிக்கப்பட்டது. ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் வெளிமாநிலங்களுக்கும், திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் மாநிலத்திற்கு உள்ளேயும் சேவைகைள வழங்கியது.ஜெயலலிதா போக்குவரத்துக் கழகம் பிற்காலத்தில் ராஜூவ்காந்தி போக்குவரத்துக் கழகம��� என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. 1996-ம் ஆண்டு ராஜூவ்காந்தி போக்குவரத்துக் கழகம் மற்றும் திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் இணைக்கப்பட்டு மாநில அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் உருவாக்கப்பட்டது. + +இப்போது பெரும்பாலான வழித்தடங்களில் இயங்கும் இத்துறையின் பேருந்துகள் அனைத்தும் அதிநவீன சொகுசு பேருந்துகளாக மாற்றப்பட்டு பயணத்திற்கு இனிமை சேர்க்கின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து பெரும்பான்மையான பேருந்துகள் இயக்கப் படுகின்றன. விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்பொழுது 18 பணிமனைகள் உள்ளன. இதில் இரண்டு பணிமனைகள் பிற மாநிலங்களில்(திருவனந்தபுரம்,பாண்டிச்சேரி) அமைந்துள்ளன. இப்போக்குவரத்துக் கழகத்தின் மேற்கூரை கட்டும் பிரிவு நாகர்கோவில் பணிமனையில் அமைந்துள்ளது. + + + + + +அங்கப்போர் + +அங்கப்போர் ("Angampora", , "அங்கம்பொர") ஒரு சிங்களத் தற்காப்பு அல்லது சண்டைக் கலையாயாகும். அனுராதபுரம் சிங்கள அரச தலைநகராக இருந்த போது அரச வம்சத்தினரும் பிரபுக்களும் பயிலும் கலையாக தோற்றம் பெற்றது. காகவண்ண தீசனின் பத்துத் தளபதிகள் இந்த கலையில் வல்லவர்கள் என இராஜவலிய என்னும் இலக்கியம் குறிக்கிறது. இலங்கையின் கண்டிய அரசு ஆங்கில காலனித்துவத்துக்கு உட்பட்ட போது இக்கலை தடைசெய்யப்பட்டு, அழியலாயிற்று. + +அங்கம் என்பது உடலையும் பொர என்பது போர் செய்தலையும் குறிக்கும். உடலை வைத்து போர் புரியும் கலை என்பதால் இது அங்கம்போர என பெயர் பெற்றது. + + + + + +கோபாலசிங்கம் சிறிதரன் + +கோபாலசிங்கம் சிறிதரன் ஒரு மனித உரிமை செயற்பாட்டாளர். இவர் இலங்கை இனப்பிரச்சினையின் காரணமாக இலங்கை அரசும் ஈழப் போராளிகளும் செய்யும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தி, வெளிப்படுத்தி, தடுப்பதில் ஈடுபட்டு இருக்கின்றார். + +பன்னாட்டு மன்னிப்பு அவை, மனித உரிமைகள் கண்காணிப்பு உட்பட 11 முக்கிய பன்னாட்டு மனித உரிமைகள் அமைப்புகள் இணைந்து வழங்கும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களுக்கான 2007 ஆம் ஆண்டு மார்ட்டின் என்னல்ஸ் விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன இவர் புருண்டியைச் சேர்ந்த மற்றும��ரு மனித உரிமைச் செயற்பாட்டாளர்ரான கிளேவர் ம்போனிம்ப்பா, ராஜன் ஹூல் என்பர்களுடன் இணைந்து பெற்றுக் கொண்டார். + + + + + +வீரசோழன் + +வீரசோழன்(ஆங்கிலம்:Veeracholan) இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தை மாவட்டத்தை சேர்ந்ததிருச்சுளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும், திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)யையும் சேர்ந்தது. + +அருகில் உள்ள ரயில் நிலையம் : மானாமதுரை (31 கி.மீ) + +அருகில் உள்ள விமான நிலையம் : மதுரை(70 கி.மீ) + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,746 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 2,923 ஆண்கள், 2,823 பெண்கள் ஆவார்கள். வீரசோழன் மக்களின் சராசரி கல்வியறிவு 83.37% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரசோழன் மக்கள் தொகையில் 14.6% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். 1341 வீடுகளும் உள்ளன. + +2அரசு தொடக்கப்பள்ளிகளும் 1 உயர்நிலை பள்ளியும் உள்ளது. +அஸ்மா மெட்ரிகுலேசன் என்ற தனியார் உயர்நிலை பள்ளியும் உள்ளது. +மதரசா கைராத்துல் இஸ்லாம் என்ற அரபிக்கல்லூரி உள்ளது. இங்கு இசுலாமியக் கல்வியும், மதுரை காமராசர் பல்கலைகழகத்தின் தொலைநிலைக்கல்வி மூலமாக இளங்கலை பட்டப்படிப்பும், முதுகலை பட்டப்படிப்பும் கற்பிக்கப்படுகிறது. + +"ஜும்-ஆ மசூதி", "சின்னமசூதி", "மதரசா மசூதி", ஆகிய 3 மசூதிகள் உள்ளன. இம்முன்று மசூதிகளும் இஸ்லாமிய உறவின்முறை ட்ரஸ்ட் போர்ட் என்ற ஜமாஅத் மூலம் நிர்வாகிக்கப்படுகிறது. "ஈஸ்வரன்கோவில்", மற்றும் 1 "சிறுதெய்வ கோவில்" ஆகிய 2 கோவில்களும் உள்ளன. + +காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ச்சியான பேருந்து வசதி உள்ளது. + + + + +மே 6 + + + + + + + +வித்தாலி பூர்ணிக்கா + +விதாலி ஃபூர்ணிக்கா ("Vitaly Fournika", பி. 1940 - இ. 198?) உருசியாவைச் சேர்ந்த ஒரு தமிழ் அறிஞர். தமது மறைவுவரை தமிழுக்காக பல தொண்டுகளை ஆற்றியவர். பல தமிழ் நூல்களை உருசிய மொழியில் மொழிபெயர்த்தவர். பல நூல்களையும் எழுதியுள்ளார். சோவியத் மக்களுக்கு தமிழ் மக்களையும் அவர்களது கலை, இலக்கியங்களையும் அறிமுகப்படுத்தியவர். + +விதாலி பூர்னிக்கா சோவியத் நாட்டில் உக்ரேனில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். லெனின்கிராட்டில் கட்டிடத் தொழிலாளியாக வேலை பார்த்தவர். + +1965 ஆம் ஆண்டில் ஒரு முறை புத்தகக் கடை ஒன்றில் உருசிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்தியக் கவிதை நூல் ஒன்று அவர் கண்களுக்குத் தென்பட்டது. அது மகாகவி பாரதியாரின் கவிதைகளின் மொழிபெயர்ப்பு நூல். பாரதியாரின் சிந்தனைகளாலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்ட வித்தாலி தனது தொழிலையும் உதறித் தள்ளிவிட்டு லெனின்கிராட் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பிரிவில் மாணவனாகச் சேர்ந்தார். "செம்பியன்" என அறியப்பட்ட சோவியத் அறிஞர் சிம்யோன் நூதின் அவர்களிடம் பயிற்சி பெற்றுப் பின்னர் சென்னப் பல்கலைக்கழகத்தில் முனைவர் மு. வரதராசனிடம் பயின்றார். "தமிழகப்பித்தன்" என்று புனைபெயரும் வைத்துக் கொண்டார். + +சோவியத் அறிவியல் பேரவையின் அநுசரணையில் இயங்கிய மாஸ்கோ கிழக்கத்திய கல்விக்கழகத்தில் பயின்று கலாநிதிப் பட்டம் (முனைவர்) பெற்றார். தமது கலாநிதிப் பட்ட ஆய்விற்காக "தற்காலத் தமிழ் இலக்கியம்" மற்றும் ஜெயகாந்தனின் படைப்பிலக்கியம் முதலானவற்றைத் தமது ஆய்விற்காகத் தேர்ந்தெடுத்தார். நூற்றுக்கணக்கான கட்டுரைகளையும் எழுதினார். + +ஈழத்து படைப்பிலக்கியங்கள் பலவற்றை உருசிய மொழியில் பெயர்த்திருக்கிறார். + +தமிழகத்தில் தமிழரின் தொன்மை, நம்பிக்கைகள், சடங்குகள், போன்றவற்றை ஆராய்ந்து உருசிய மொழியில் அரிய நூல் ஒன்றினையும் வெளியிட்டார். ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" என்ற புதினத்தை உருசிய மொழியில் மொழிபெயர்த்தார். இந்நூல் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையானது. + + + + + + +சி. ஜெயசங்கர் + +சிவஞானம் ஜெயசங்கர் (பி. டிசம்பர் 29, 1965) ஒரு சமூகச் செயற்பாட்டாளர்; முதுநிலை விரிவுரையாளர்; ஆய்வாளர்; எழுத்தாளர்; நாடக நடிகர். எழுத்தாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான கமலா வாசுகியின் துணைவர் இவரென்பது குறிப்பிடத்தக்கது. + +கோண்டாவிலில் பிறந்த இவர் கோண்டாவில் இந்து மகா வித்தியாலம், கொக்குவில் இந்துக் கல்லூரி, யாழ் புனித பரியோவான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நாடகமும் அரங்கியலும் பிரிவில் சிறப்புப் பட்டம் பெற்றார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் "சுதேசிய சமுதாய அரங்காக கூத்தின் மீளுருவாக்கம்" என்ற தலைப்பில் முதுகலைமாணிப் பட்டம் பெற்றார். இப்பொழுது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். + +"Third Eye" என்ற இதழை வெளியிடும் இவர் மட்டக்களப்பில் இயங்கும் மூன்றாவது கண் உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவின் இணை இணைப்பாளராகச் சேவையாற்றுகிறார். அவ்வமைப்பினரின் "மூன்றாவது கண்" இதழின் இணையாசிரியருமாவார். பலவிதமான சமூகச் செயற்பாடுகள், பட்டறைகள், கூத்துக்கள் போன்ற அரங்க அளிக்கைகள், நூல் வெளியீடுகள் எனப் பலவிதமான சமுதாயச் செயற்பாடுகளில் ஈடுபடுபவராவார். + + + + +இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம், 2007 + +இலங்கை சுதந்திரக் கட்சி இனப்பிரச்சினையை தீர்ப்பதையும் இலங்கையின் ஒருமைப்பாட்டை காப்பதையும் முதன்மை நோக்கங்களாக கொண்டு மே 1, 2007 அன்று All Party Representative Committee (APRC) க்கு சமர்ப்பித்த திட்டமே இலங்கை சுதந்திரக் கட்சியின் புதிய அரசியல் திட்டம் ஆகும். இத்திட்டத்தில் தற்போதைய அதிகாரம் மிக்க சனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக வாக்குபதிவு, மாவட்ட நிலையில் அதிகாரப் பரவலாக்கம், சிங்களத் தமிழ் மொழிகளுக்கு சம உரிமை போன்ற விடயங்கள் விளக்கப்பட்டுள்ளன. + +இந்த புதிய அரசியல் திட்டம் அரசியலை 30 மாவட்டங்களுக்கு பிரித்து தருவது என்ற போர்வையில், சிறுபானமை மக்களின் வலிவை பிரித்து பலவீனப்படுத்தவே உதவும் என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. + + + + + +தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை + +தமிழ்நாட்டில் நடைபெறும் தானுந்து வடிவமைப்பு, உற்பத்தி, விற்பனை ஆகியவற்றை தமிழ்நாடு தானுந்து தொழிற்துறை எனலாம். இந்தியாவில் தானுந்து தொழிற்துறையில் தமிழ்நாடு முதன்மை பெறுகின்றது. தானுந்து உற்பத்தியில் முன்னிற்கும் பல பன்னாட்டு வர்த்தக நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தமது உற்பத்தி நிலையங்களை நடத்திவருகின்றன. இதன் காரணமாகத் தமிழ்நாட்க்கு, குறிப்பாக சென்னைக்கு "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று ஒரு குறிப்பு பெயர் உண்டு . + +1948ஆம் ஆண்டு, 'ஆஸ்டின் தானுர்ந்தி' தயாரிப்புகாக் அசோக் லேலண்ட் நிறுவப்பட்டது. இன்று அசோக் லேலண்ட் டிரக்குகள், பஸ் முதலியவற்றை தமிழ்நாட்டில் உள்ள மூன்று தொழில்சாலையில் இருந்து தயாரிக்கிறது..போர்ட் நிறுவனம் 1995ஆம் ஆண்டு மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனத்துடன் 50:50 கூட்டு அடிப்படையில் சென்னையில் நிறுவப்பட்டது. பின்னர் 1998 போர்ட் நிறுவனம், பெரும்பான்மை பங்குகளை வாங்கி போர்ட் இந்தியா நிறுவனம் என்று மாற்றப்பட்டது.கொரியாவை சேர்ந்த ஹுன்டாய் நிறுவனம் 1996ம் ஆண்டு திருப்பெரும்புதூரில் நிறுவப்பட்டது. + +தமிழ்நாட்டின் தொழிற்துறை முதலீட்டு அதிகரிக்க, முதலீட்டு நட்பு ஆட்சிகள், நல்ல உள்கட்டமைப்பு, துறைமுகம் ஆகியவற்றை காரணங்களாக கூறலாம். அமெரிக்கவின் கேட்டர்பிள்ளர், ஜப்பானின் கோமாட்சு, தென் கொரியாவின் தூசான் ஆகியவை, பூமியின் நகரும் உபகரணங்கள் தயாரிக்க சென்னையை தேர்ந்தெடுத்துள்ளன. சென்னை-திருப்பெரும்புதூர்-ஓரகடம் ஆட்டோமொபைல் தயாரிக்கும் மையமாக உள்ளது.தேசிய வாகன சோதனை ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையம் 450 கோடி முதலீட்டில் ஓரகடத்தில் அமைய உள்ளது. இதன் மூலம், வாகன உற்பத்தியாளர்கள் வடிவமைப்பு, மாசு, செயல்திறன் தரநிலைகளை சோதனை செய்து கொள்ளாம். + +இந்தியாவின் தானுந்து உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் துறையின் 30% தமிழ்நாட்டில் உள்ளது.ஹுன்டாய்[கொரிய நிறுவனம்] வருடத்தில் 3,30,000 கார்களை(தானுந்து) சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து தயாரிக்கிறது. ஹுன்டாய் மார்ச் 2012 வரை, 1.5 மில்லியன் கார்களை சென்னையில் உள்ள தொழில்சாலையில் இருந்து 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.டைம்லர் பேருந்து தொழில்சாலை சென்னை ஒரகடத்தில் 425 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது. பாரத் லாரிகள் மற்றும் பேருந்துகள், பியூசோ லாரிகள் , மெர்சிடஸ் பென்ஸ் பேருந்துகள் என மூன்று பிராண்டுகளை ஒரே கூரையின் கீழ் தயாரிக்கும் டெய்ம்லர் ஆலை உலகில் ஓரகடத்தை தவிர வேறு எங்கும் இல்லை. + +கீழே தமிழ்நாட்டில், தயாரிக்கபடும் டயர்/சக்கரம் நிறுவனங்கள், நிறுவிய வருடம், மற்றும் முதலீடு + + + + + + + +சிங்கராஜக் காடு + +சிங்கராஜா வனம் இலங்கையில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது இலங்கையின் சபரகமுவா, தென் மாகாணங்களின் எல்லையில் இரத்தினபுரி, காலி , மாத்தறை மாவட்டங்களில் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனம் கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர் தொடக்கம் 1170 மீட்டர் உயரம் கொண்ட அயன மண்டல மழைக்காடாகும். இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988ஆம் ஆண்டு முதல் யுனெஸ்கோவினால் உலக உரிமை தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது.உள்நாட்டு வெளிநாட்டு உள்ளாச்ப் பிரயாணிகளிடையே மிக பிரசித்தமான தளங்களில் ஒன்றாகும். + +இன்றைய சிங்கராஜா வனத்தின் பெரும்பகுதி 1875 ஆண்டு மே 8 ஆம் நாள், இலங்கைத் தரிசு நிலச்சட்டத்தின் கீழ் 4046 ஆம் இலக்க அரசிதலின் படி சிங்கராஜா வனம் இயற்கை ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேலும் பல பகுதிகள் இதற்குள் இணைக்கப்பட்டன. ஏப்ரல் 1978 ஆம் ஆண்டு இது உயிரின ஒதுக்கீடாக அறிவிக்கப்பட்டது. 1988 அக்டோபர் 21 ஆம் நாள் 528/14 அரசிதழின் படி, 7,648.2 எக்டயார் பரப்பளவு இலங்கையின் தேசிய உரிமை காடாக இது அறிவிக்கப்பட்டது. இதே ஆண்டு யுனெஸ்கோ 6,092 எக்டயார் காட்டு ஒதுக்கீடு மற்றும் 2,772 எக்டயார் முன்மொழியப்பட்ட காட்டு ஒதுக்கீடு என்பவற்றை உள்ளடக்கிய 8,864 எக்டயார் பரப்பளவை உலக உரிமைத் தளமாக அறிவித்தது. + +இது இலங்கையின் தாழ்நில ஈரவலயத்தில் அமைந்துள்ளது. சிங்கராஜா வனப்பகுதியில் ஆண்டுக்கு சராசரி வெப்பநிலை 23.6 செல்சியஸ் ஆகும். மே தொடக்கம் யூலை வரை தென்மேற்குப் பருவக் காற்று மூலமும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக் காற்று மூலமும் இக்காடு மழையைப் பெறுகின்றது. ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லிமீட்டர் மழை இங்கே பொழிகின்றது. + + + + +மே 7 + + + + + + + +மே 8 + + + + + + + +கொடுமணல் தொல்லியற் களம் + +தமிழ் நாட்டின் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம்,சென்னிமலை யிலிருந்து மேற்கே சுமார் 15 கிமீ தூரத்திலும்,திருப்பூர் மாவட்டம்,ஊத்துக்குளி யிலிருந்து சுமார் 9 கிமீ தூரத்திலும்,காவிரி ஆற்றில் கலக்கும் நொய்யல் ஆற்றின் வட கரையில், இன்றைய கொடுமணல் அமைந்துள்ளது. இதன் அமைவிடம், சங்ககாலச் சேர நாட்டின் தலைநகரமான கரூரை, மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் பண்டைய வணிகப் பாதையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. + +இவ்வூர் இரும்புக் காலம் (Iron Age), வரலாற்றுக் காலத்தின் தொடக்கக் காலம் (Early Historic period), சங்க காலம் (Sangam Age) என வழங்கப்படும் காலக்கட்டத்தில் ம��்கள் வாழ்ந்த பகுதியாகும். +கொடுமணம் என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட இவ்விடம் பற்றிப் பதிற்றுப்பத்து என்னும் சங்க நூலில் குறிப்புகள் உள்ளன. கிறிஸ்துவுக்கு முந்திய முதல் சில நூற்றாண்டுகளில் இப்பகுதி வணிகத்திலும், தொழிற் துறையிலும் சிறப்புற்று இருந்ததற்கான சான்றுகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. + +கொடுமணல் தொல்லியற் களம் 50 ஹெக்டர் வரை பரந்துள்ளது. இதில் பெரும்பகுதி புதைகுழிகள் அடங்கிய அடக்கக் களமாகக் காணப்படுகின்றது. இதனை அண்டிச் சுமார் 15 ஹெக்டர் பரப்பளவில் குடியிருப்புப் பகுதி இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன. + +இக்களம் 1961 ஆம் ஆண்டில் புலவர் செ.இராசு, செல்வி முத்தையா ஆகியோரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர் பல தடவைகளில் தொல்லியல் துறையினரால் இங்கே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாய்வுகளில், பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய 300 க்கும் மேற்பட்ட இறந்தோருக்கான நினைவுச் சின்னங்கள்,முதுமக்கள் தாழி கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை பல வகைகளிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. + +கொடுமணல் சங்க இலக்கியத்தில் "கொடுமணம்" என்னும் பெயர் பெற்றிருந்தது. அங்கு, திறமை மிக்க கைவினைக் கலைஞர் இரும்பை சக்திவாய்ந்த வெப்ப உலைகளில் இட்டு, உருக்கி எஃகாக மாற்றினர். அந்த உலோகம் பல இடங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது. + +அதுபோலவே, கொடுமணலில் நடந்த அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாசி மணிகளும், கருமாணிக்கம், நீல மணி, செவ்வந்திக்கல், மரகதம், வைடூரியம், நீலம், பச்சை, மங்கிய சிவப்புக் கல், கந்தகக் கன்மகி போன்ற நகைக் கற்களும் அங்கு அலங்காரப் பொருள் தொழிலகம் இருந்தமைக்குச் சான்று பகர்கின்றன. + +சேர நாட்டைச் சார்ந்த இந்த தொழில் நகரம் சோழ நாட்டுக் காவிரிப்பூம்பட்டினத்தோடு வியாபாரச் சாலைத் தொடர்புகொண்டிருந்தது. + +கொடுமணலில் உருவாக்கப்பட்ட உருக்கு, எஃகு மற்றும் பலவகை பாசி மணிகள் எகிப்து, உரோமை போன்ற வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டன. கொடுமணலுக்கும், மேற்குக் கடற்கரையில் முசிறி துறைமுகத்திற்கும் (இன்று கேரளத்தில் "பட்டணம்" என்று அழைக்கப்படும் நகர்) இடையே வணிக வழித் தொடர்பு இருந்தது. ஏற்றுமதிப் பொருள்கள் முசிறிக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. + +கொடுமணலில் நிகழ்ந்த அகழ்வாய்வுகளின்போது, இரும்பால் ஆன ஈட்டி முனைகள், வாள்கள், இரும்பு உருக்காலை, சிப்பி, கிளிஞ்சல் அழகொப்பனை வளையல்கள், தமிழ் பிராமி எழுத்துக்களைக் கொண்ட மட்பாண்டங்கள் போன்றவை பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டன. + +உரோமைப் பேரரசில் புழங்கிய பொன் மற்றும் வெள்ளி நாணயங்கள் பலவும் கிடைத்தன. மேலும், செப்பால் ஆன சிங்கச் சிலை மற்றும் இரும்பு உருக்கு ஆலை கண்டுபிடிக்கப்பட்டதைக் கொண்டு கொடுமணல் கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்தே தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கிய நகரமாக அறியப்பட்டுள்ளது. + +கிமு 500க்கு முற்பட்ட தமிழி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானையின் சிதிலங்களையும் பல ஆபரணங்களையும் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். + + + + + +பூக்கள் பட்டியல் + + + + + +விளாதிமிர் வெர்னாத்ஸ்கி + +விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி ("Vladimir Ivanovich Vernadsky", ;  – 6 சனவரி 1945) உருசியாவைச் சேர்ந்த ஓர் உக்ரைனிய புவிஉயிர்வேதியியலாளரும், கனிமவியலாளரும் ஆவார்.]], இவர் புவிவேதியியல், புவிஉயிர்வேதியியல், அணுக்கருப் புவியியல் ஆகிய துறைகளையும் உக்ரைனிய அறிவியல் கல்விக்கழகம் (இன்று உக்ரைனியத் தேசிய அறிவியல் கல்விக்கழகம்) எனும் அமைப்பையும் உருவாக்கியவர்.,உயிர்க்கோளத்திற்கும் புவியியலுக்குமான தொடர்புகளை ஆராய்ந்த முன்னோடி அறிவியலாளர் இவர்.இவர் 1926இல் வெளியிட்ட “உயிர்க்கோளம்” என்ற நூலுக்காக பெரிதும் போற்றப்படுபவர்.இதி அவர் உயிரினம் புவியை உருமாற்றும் முதன்மையான விசையெனக் கூறியுள்ளார். இவரது உணர்திறக் கோளம் பற்றிய எண்ணங்கள் சுற்றுச் சூழலியல் அறிஞர்கள், மாந்தரினப் படிமலர்ச்சி மெய்யியலாளர்கள், படிமலர்ச்சி அறிவியல் ஆராய்ச்சியாளர்கள், அண்டவெளியில் உயிரின் சாத்திய கூறுகளை ஆராயும் அறிவியலாளர்கள் ஆகிய அனைவருமே கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகக் கருதப்படுகிறது. இன்று உயிரியலில் முன்னணி கருதுகோளாக கருதப்படும் கயா (Gaia) கருதுகோளின் தன்மையில், இவரது ஆய்வுகளும் பார்வையும் அமைந்திருந்ததாக கயா கருதுகோளை முன்வைத்தவர்களுள் ஒருவரான நுண்ணுயிரியலா���ர் இலின்மர்குலிசு கருதுகிறார்.இவர் 1943இல் இசுட்டாலின் பரிசைப் பெற்றார். + +வெர்னத்ஸ்கி உருசியப் பேர்ரசில் இருந்த புனித பீட்டர்சுபர்கில் 1863 மார்ச் 12 |ஃபிப்ரவரி 28இல் பிறந்தார். குடும்ப வரலாற்றின்படி இவரது தந்தையர் ஒரு சப்போரோழியக் கொசாக்கு இனக்குழுவினர். புனித பீட்டர்சுபர்குக்கு வரும் முன்பு அவர்கீவ் நகரில் அரசியல் பொருளியல் பேராசிரியராக இருந்துள்ளார். இவரது தாயார் உக்ரைனியக் கொசாக்கு வழிவந்த உருசியப் பெண்மணி ஆவார். + +தனது பதினேழாவது பிறந்தநாட் பரிசாக சிறுவனான வெர்னத்ஸ்கி தன் தந்தையிடம் டார்வினின் நூல்களை பரிசாக கேட்டதிலிருந்து அவரது தேடல் தொடங்கிவிட்டது எனலாம். வெர்னத்ஸ்கியின் தந்தையால் ' எனது அன்பு மகனுக்கு 'என கையெழுத்திடப்பட்ட அந்நூல் இன்று மாஸ்கோவில் வெர்னத்ஸ்கியின் நூலக அறையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. வெர்னத்ஸ்கியின் இல்லமே காட்சியகமாக உள்ளது. இளைஞன் வெர்னத்ஸ்கி தன் 21 ஆம் வயதில் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கலைகளுக்கான மாணவர் அமைப்பில் சமர்ப்பித்த கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதியிருந்தான். + +,'ஆனால் உயிர் என்றால் என்ன ? மேலும் உறழ்திணைப்பொருள்-என்றென்றும் தொடர்ச்சியான விதிக்களூக்குட்பட்ட இயக்கங்களுடன், முடிவற்ற ஆக்கமும் அழிவும் ஓய்வற்ற தன்மையும் கொண்ட அந்த உறழ்பொருள் உயிரற்றதா ? இப்பெரும் புடவியில் காண இயலாத ஒரு சிறு புள்ளியின் மேல் மிக மெதுமென்மையாக படர்ந்திருக்கும் ஓர் சிறு படலத்தில் மட்டுமே அத்தனி சிறப்பியல்புகள் உள்ளனவா ? அப்பால் இருக்கும் பெரும் பரப்பனைத்தும் உயிரற்ற உறழ்திணைப் பொருளே அரசாள்கிறதா ? ...காலம் மட்டுமே இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். அறிவியல் ஒருநாள் இக்கேள்விகளுக்கு விடையளிக்கும். ' + +இவர் 1885இல் புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். அப்போது அப்பல்கலைக்கழக கனிமவியல் பதவி வெற்றிடமாக இருந்துள்ளது. மண்ணியலாளரான வாசிலி தோகுசேவ் என்பவரும் புவியியலாளரான அலெக்சி பாவ்லோவ் என்பவரும் சிலகாலம் அங்கு கனிமவியலில் பாடம் எடுத்துள்ளனர். வெர்னத்ஸ்கி கனிமவியலில் நுழைய விரும்பினார். இவர் 1888இல் சுவிட்சர்லாந்தில் இருந்த தன் மனைவி நடாஷாவுக்குப் பின்வருமாறு எழுதியுள்ளார்: + +மேலும் வெர்னத்ஸ்கி. 25 ஆவது வயதில் தன் வாழ்க்கை துணைவிக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் வெர்னத்ஸ்கி குறிப்பிட்டார், ' வாழ்க்கை வியப்பு மிக்கது. மானுட வரலாற்றிலும், கணிதவியலிலும் எனக்குமுதலில் ஈர்ப்பு உண்டாயிற்று. எனினும் நான் இயற்கை அறிவியலை என் ஆய்வின் வழித்தடமாக மேற்கொண்டேன். இயற்கையின் வரலாற்றிலிருந்து மாந்தரின வரலாற்றுக்கு முன்னேறக் கருதினேன். கணிதவியலை பொறுத்தவரை எனக்கே என் திறமையில் அவ்வளவாக நம்பிக்கையில்லை... ' + +தனது முப்பதாம் வயதில் அவர் டால்ஸ்டாயைச் சந்தித்தார். அச்சந்திப்பின் தாக்கம் அவர் வாழ்வு முழுவதுமாக இருந்ததை நாம் உணர முடிகிறது.ஏப்ரல் 23, 1892 இல் வெர்னத்ஸ்கி பின்வருமாறு எழுதுகிறார், ' இன்று டால்ஸ்டாய் எங்களை காண வந்திருந்தார்.நெடு நேரம் நாங்கள் அறிவியல் கருத்துக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். ... நான் முதலின் நினைத்திருந்ததைக் காட்டிலும் டால்ஸ்டாயின் எண்ணங்களில் பெரும் ஆழம் உள்ளது. அந்த ஆழம் எவை குறித்ததென்றால்: +வெர்னத்ஸ்கியின் குருவே வெர்னத்ஸ்கியின் அறிவியல் ஆளுமையின் மதிப்பீடுகளை பெரிதும் உருவாக்கியவர். அவர் புகழ் பெற்ற உருசிய மண்ணியலாளரான தோகுசேவ்(1846-1903) என்பவர் ஆவார். ஆனால் மண்ணியலைக் காட்டிலும் விரிவாக சென்ற அறிவியல் பார்வை தோகுசேவினது. சுற்றுப்புற சூழலியலின் உலகத்தரம் வாய்ந்த பாடநூலாக விளங்கும் 'சூழலியலின் அடிப்படைகள்' ஆசிரியரான ஓதம், தோகுசேவினை 'சூழலியலின் முன்னோடி அறிவியலாளர் ' என்றே குறிப்பிடுகிறார். பல தொடர்பற்றதாக தோன்றும் துறைகளிலிருந்து பெறப்பட்ட ஆராய்ச்சி விளைவுகளை அழகிய மெய்யியல் இழைகளால் ஒருங்கிணைத்து உயிக்கோளம் குறித்து புதியதோர் பார்வையை அறிவியல் சார்ந்து முன்வைத்தவர் வெர்னத்ஸ்கி. அப்பார்வையின் மூலம் புதிய இயற்கை உறவுகளை நாம் கண்டடைய முடியும். இயற்கை குறித்த நம் அறிவியல் பார்வை ஆழமும் அகலமும் கொண்டு முன்னகர முடியும். புவிவேதியியலே வெர்னத்ஸ்கியின் துறை. உயிரியல் அல்ல. இன்று போல தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத, மேலும் அரசியல் சுவர்களும் இரும்புத் திரைகளும் விடுதலையின் மூச்சுவளையை நெறித்த அக்கால கட்டத்தில், உலகெங்கும் உள்ள புவிவேதியியல் அறிஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். வெர்னத்ஸ்கி மிகப்பரவலும் ஆழமும் கொண்ட புவிவேதியியல் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் சில அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார்.1916 இல் உருசியாவில் யுரேனியக் கனிமத் தாதுவினை அவர் முதன்முதலில் கண்டுபிடித்தார். 1918 இல் ரேடியம் உருசியாவில் தயாரிக்கப்பட்டது. 1922 இல் பீட்டர்சுபர்க்கில் ரேடியம் மையத்தை உருவாக்கினார். 1938 வரை அதன் இயக்குநராக விளங்கினார். இம்மையத்தின் தொடக்க உரையில் அவர் 'அணு ஆற்றல் அளப்பரிய ஆற்றலை நம் கையில் வைத்துள்ளது. அதனை ஆக்கத்துக்குப் பயன்படுத்துகிறோமா அல்லது மானுட இன அழிவுக்கு பயன்படுத்துகிறோமா என்பது நம் கையில் உள்ளது. அளப்பரிய ஆற்றலுடன் விளங்கும் அறிவியலுக்கு விழுமியங்களின் இன்றியமையாத தேவையும் ஏற்பட்டுள்ளது. ' என குறிப்பிட்டார். இது 1922 இல் ! 1922 இல் அவர் விண்கற்கள் குறித்த ஆய்வினையும் தொடங்கினார். அது குறித்து ஆய்வுக் கட்டுரைத் தொடரினையும் அவர் வெளியிட்டார்.விண்கல் ஆய்வு கழகத்தையும் உருவாக்கினார். தன் வாழ்நாள் முழுவதும் அக்கழக செயல்பாடுகளின் வழிகாட்டியாக இருந்தார். அறிவியலுக்கு வெர்னத்ஸ்கியின் வாழ்வின் மிகப் பெரிய பங்களிப்பு, 1926 இல் இலெனின்கிராடில் (பழைய மற்றும் இன்றைய புனித பீட்டர்சுபர்க்) மிக அமைதியாக 2000 பிரதிகளே வெளியிட்ட 'உயிரிக்கோளம்'(The Biosphere) எனும் நூல்தான். 1929 இல் இதன் பிரெஞ்ச் பதிப்பு பாரிசில் வெளியாகியது. 1986 இல்தான் முதல் ஆங்கில பதிப்பு வெளியிடப்பட்டது.வெர்னத்ஸ்கி 1922-23 இல் சோபோர்னில் நடைபெற்ற புவிவேதியியல் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது அவரது உரைகளை ஒரு பிரெஞ்சு துறவியும் மற்றொரு பிரெஞ்சு கணிதவியலாளரும் கேட்டனர். லெ ராய் எனும் அந்த தத்துவ அறிஞருடனும்,தெயில் ஹார்ட் தி சார்டின் எனும் அந்த துறவியுடனும் வெர்னத்ஸ்கி நட்பு கொண்டார். நூஸ்பியர் எனும் உணர்திறக் கோளம் குறித்த உருவாக்கத்தில் அவர்கள் இணக்கம் கொண்டனர்.(சான்று தேவை) வெர்னத்ஸ்கி இறுதியாக எழுதியது 'உணர்திறக்கோளம் (Noosphere) குறித்து சில வார்த்தைகள்' எனும் கட்டுரையே. முதலில் உருசிய மொழியில் வெளிவந்த அது பின்னர் 1945 இல் அமெரிக்கன் சயிண்டிஸ்ட் இதழில் 'உயிர்க்கோளமும் உணர்திறகோளமும் ' எனும் தலைப்பில் வெளிவந்தது. 'மானுடம் முழுமையுமாக ஒரு மகத்தான புவியியல் இயங்காற்றலாக படிமலர்ந்துள்ளது ' என அதில் குறிப்பிடுகிறார் வெர்னத்ஸ்கி. தனது 82 ஆவது வயதில் காலமானார். + +வெர்னாட்ஸ்கி மிகப்பரவலும் ஆழமும் கொண்ட புவிவேதியியல் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் சில அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார். புவியின் மேல்தோட்டில் காணப்படும் பருப்பொருளை அவர் பின்வருமாறு பகுப்பு செய்தார்: இப்பகுப்பு புவிவேதியியல் அடிப்படையில் செய்யப்பட்டது என்பதனை கருத்தில் கொள்க: + + +இன்று இந்த பகுப்பு நமக்கு எளிதான ஒன்றாக தோன்றக் கூடும். ஆனால் புவிவேதியியலும் உயிரியக்கங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டிராத எல்லைகளுடன் விளங்கிய ஒரு காலகட்டத்தில் இப்பார்வை புரட்சிகரமான ஒன்றாகும். இன்றும் வளிமண்டல வேதியியல், உயிரியல்,நீரியல் ஆகிய துறைகளிடையே ஒருமித்த இழைகளை நிறுவுதலென்பது எளிதானதல்ல. செங்கடலோரம் வெட்டுக்கிளிக் கூட்டம் குறித்து ஆய்வுசெய்த கர்த்தூசரின் ஆய்வுகள் அடிப்படையில் காலத்துடன் தொடர்புடைய உயிர்வாழும் பருப்பொருளின் புவிபரவலும் இடம்பெயர்தலும் குறித்த வெர்னத்ஸ்கியின் வரிகள் அவரது பார்வையின் தன்மையை நமக்கு தெளிவாக்குகின்றன. 'உயிர்-புவி-வேதியியல் நோக்கில் ஒரு பெரும் வெட்டுக்கிளி படை என்பது என்ன ? அதி ஊக்க வேதித்தன்மையுடன், திண்மையற்ற பாறைகள் இயக்க நிலையில் நிலவுவதேயாகும்.' வெர்னத்ஸ்கிக்கு முன் ஒரு வேதியியலாளரும் இவ்வாறு உயிரை கண்டதில்லை. இன்றைய அறிவியல் கண்ணோட்டத்திலிருந்தும் கூட இப்பார்வை துணிச்சலானதுதான். ஒற்றைப்படை தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும், (காட்டாக, ஒரு பேரினத்தைச் சார்ந்த உயிரினங்கள்), மாறாக பன்மைத்தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும் அவர் வேறுபடுத்திக் காட்டினார். வெர்னத்ஸ்கி புவியின் பரப்பில் பெருமளவு 'கடந்த கால உயிரிக்கோளம் ' (Bygone Biosphere) என வரையறுத்தார். நுண்ணுயிர்கள் ஒரு பெரும் புவிவேதி இயக்கப் படையாக இந்தக் கோளம் முழுமையிலும் திகழ்வதை கணித்த முதல் அறிவியல் அறிஞர் அவரே. அவரது வார்த்தைகளில், 'இப்புவியின் பரப்பானது பல டசன் கிலோமீட்டர்களுக்கு பலவித புவியியல் போர்வைகளால் பொதியப்பட்டுள்ளது. இவ்வாறு போர்த்தியிருக்கும் படலங்களில் பல கடந்த கால உயிரிக்கோளங்களாகும். ...இப்போது இவை அனைத்துமே உயிர்க்கோளத்திலிருந்து உருவானவை என்பது தெளிவு. இவை கடந்த கால உயிரிக்கோளங்கள். ' உயிரினங்களுக்கும் புவியின் வேதி அமைப்பிற்குமான தொடர்பினை குறித்து சிந்தித்த முதன்மையான உயிரியலாளர்களில் சார்ல்ஸ் டார்வின் ஒருவராவார். ஒரு செ.மீ மண் புவி மீதுற 50 வருட காலமாகும். மண் மீது ஒவ்வொரு வருடமும் மண் புழுக்கள் தம் உடல்-வேதிவினைகளால் 4 மி.மீ படலத்தை இங்கிலாந்தில் மட்டும் சேர்க்கின்றன என கணித்தார் டார்வின். வெர்னத்ஸ்கி தன்னால் அறியப்பட்ட ஏறத்தாழ அனைத்து உயிரின-சூழல் உறவுகளினுடையவும் புவி-வேதி தாக்கத்தை காலத்தின் பிரவாகத்தில் கணித்தார். +இக்கணிப்புகளின் அடிப்படையில் அவரால் ஒரு புதிய அறிவியல் புலமே உருவாக்கப்பட்டது. 'உயிர்-புவி-வேதியியிலே ' (Biogeochemistry) அது. இப்புலத்தின் அடிப்படை விதிகளாக (இவை திட்டவட்ட மாற்ற இயலாத விதிகளல்ல, மாறாக திசைகாட்டிகள் என கொள்ளுதலே நலம்.) அவர் பின்வரும் மூன்றையும் கண்டறிந்தார். +பல படிமலர்ச்சிப் புதிர்களுக்கான விடைகளை நாம் தேட வேண்டிய திசைகளை வெர்னத்ஸ்கி நமக்கு தந்துள்ளார். தொல்பழங்கால உறைந்த உயிர் ஆராய்ச்சியாளரான ஸ்டாபன் ஜே கோல்ட் மிகவும் பிரபலபடுத்திய ஒரு உயிரியல் உண்மை காம்பிரியப் புவியூழியில் ஏற்பட்ட மாபெரும் உயிர் அமைப்பு மாற்றம். இன்று நாம் அனைத்து உயிரினங்களிலும் காணும் அடிப்படை அமைப்பு ஒற்றுமைகள் காம்பிரியப் ' உயிர்ப்பெரு வெடிப்பில் ' (Big Bang of Life) தான் தொடங்கியது. இதற்கான காரணிகளை படிமலர்ச்சி அறிவியலாளர்கள் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர். இதில் புவி-வேதி காரணிகளின் பங்கினை - அப்பங்கு நிச்சயம் தீர்மான பங்காகவே இருக்க கூடும்- அறிய வெர்னத்ஸ்கியின் விதிகள் நமக்கு பெருமளவில் உதவக்கூடும். கதிரியக்கச் சிதைவினை மனிதர்கள் கட்டுப்படுத்தி ஆற்றலுக்கு பயன்படுத்த முடியும் என கூறிய முதல் அறிவியலாளர் வெர்னத்ஸ்கியே. வெர்னத்ஸ்கி உயிரிக்கோளத்தில் மானுட எண்ணத்தின் தாக்க இழைகள் ஓடும் பகுதியை உனர்திறக்கோளம் என்றார். இந்த உணர்திறக்கோளத்தின் செயல்பாடுகளினால் ஏறபடும் புவிவேதி மாற்றங்களை உயிரிக்கோளத்துடன் இணைவித்து பார்க்கும் முயற்சியை அவர் மேற்கொண்டார். + +அண்மையில் வெளியான கட்டுரை ஒன்றில், லின் மர்குலிசின் வார்த்தைகளில், 'வெர்னத்ஸ்கி மற்றும் லாபோ (வெர்னத்ஸ்கியை குறித்து பிரபல அறிவியல் நூல்கள் எழுதிய புவியியலாளர்) குறித்து அறியாமலே ஜேம்ஸ் லவ்லாக் தன் உருசிய முன்னோடிகளின் சாராம்சத்துடன் இசைவுடைய ஒரு புதிய கோட்பாட்டினை அளித்துள்ளார். அவை இரண்டுமே பிரபஞ்சத்திலியங்கும் இப்புவியின் உள்ளார்ந்த தன்மையாக உயிரினை காண்கின்றன. லவ்லாக் உயிரியங்கு தன்மையுடன் புவியினை காண்கிறார். வெர்னத்ஸ்கி உயிரினை (புவியின் மிக முக்கியமான) புவிவேதி ஆற்றலாகக் காண்கிறார். ' உதாரணமாக வெர்னத்ஸ்கி ' உயிர்-புவி வேதியியலில் சில ஆய்வுகள் ' எனும் தன் நூலில் பின்வரும் முடிவுக்கு வருகிறார், 'உயிர் தான் சார்ந்திருக்கும் சூழலிற்குத் தகுந்தாற் போல தகவமைத்துக் கொள்வதோடு அவ்வுயிரின் சூழலும் உயிருக்கு தகுந்தாற் போல தன்னை வடிவமைத்துக் கொள்கிறது. ' உயிர்களின் அதி உயிரி தன்மையை வெளிக்கொணரும் ஆய்வு முடிவுகளை வெர்னத்ஸ்கி இலக்கியத்தில் எங்கெங்கும் காண முடியும். இது புவியின் கடல் குறித்து, ' பன்மைத்தன்மை வாய்ந்த உயிர்பொருளின் இருப்பினாலும் இயக்கத்தாலும் கடலின் உயிர்களனைத்தையும் மொத்தமாக கடலின் வேதித்தன்மையை மாற்றும் ஓர் தனி பெரும் உயிரியக்கமாக காணவேண்டும். ' பாஸ்பரம்,மாக்னீசியம், சிலிக்கான் என அனைத்து வேதிப்பொருட்களின் புவிச்சுழல்களிலும் உயிரின் பங்கினை வெர்னத்ஸ்கி கடுமையான ஆய்வுகளால் கண்டறிந்தார். எனவே வெர்னத்ஸ்கியின் அறிவியல் 'கயா ' கோட்பாட்டுமுறை அறிவியற் செயல்பாட்டிற்கான திசைகாட்டியாக விளங்குகிறது. + +இவர் 1930களிலும் 1940களின் தொடக்கத்திலும் சோவியத் அணுகுண்டுத் திட்ட்த்தில்அறிவுரையாளராகப் பணீயாற்றினார். அணுக்கரு மின்திறன் உருவாக்கத்துக்கு வன்மையாக குரல் எழுப்பினார். சோவியத் ஒன்றிய யுரேனியம் வள ஆய்வை மேற்கொண்டார். இவர் தனது ரேடியம் நிறுவனத்தில் அணுப்பிளவு ஆய்வை மேற்கொண்டார். என்றாலும் முழுத்திட்டமும் கண்காணித்து நிறைவேறுவதற்குள் இவர் இயற்கை எய்தினார். + +சமயம் பொறுத்தமட்டில் இவர் ஒரு நாத்திகர்.என்றாலும் இவர் இந்துமதம், ரிக் வேதம்அகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். + +வெர்னத்ஸ்கி தன் கிறிஸ்தவ இறையியல் சூழலை குறைபாடுடையதாகவே உணர்ந்துள்ளார். தனது 29 ஆவது வயதிலேயே அவர் எழுதிய கடிதமொன்றில் பின்வருமாறு கூறியிருந்தார், 'நாம் உடல்-மனது எனும் குறுகிய கிறிஸ்தவ இரட்டைத்தன்மையை கைவிட வேண்டும். உண்மையான ஆன்மிக வாழ்வு, மிக உயர்ந்த ஆதர்சங்களுடனான வாழ்வென்பது உடல் மற்��ும் ஆன்மாவின் மிக உன்னத இயல்புகள் இணைந்தியங்குவதிலேயே உள்ளது.' 1920 களிலிருந்து வெர்னத்ஸ்கி மேலும் மேலும் பாரத தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். 1920 லில் அவர் ஒரு ரஷிய தத்துவவியலாளரை அவரது நூலில் பாரத தத்துவத்திற்கு உரிய இடம் கொடுக்காததற்காக கடிந்து எழுதிய கடிதத்தில் அவர் குறிப்பிடுகிறார், 'ஹிந்துக்களின் சமய மற்றும் தத்துவ சிந்தனைகள் மூலம் நாம் பெறுவது நம்முடைய யூதேய-கிறிஸ்தவ சிந்தனைகளிலிருந்து நாம் பெற்றதை காட்டிலும் அதிகம் என கருதுகிறேன்.' மேலும் அவர் பிற்கால கடிதம் ஒன்றில் வேத உபநிஷதங்களை குறித்த அவர் புலமையும் ஈடுபாடும் தெள்ளத்தெளிவாகிறது, 'தெய்சினின் மொழிபெயர்ப்பில் உள்ள ரிக்வேத பாடல் ஒன்றினை அனுப்பியுள்ளேன். இம்மொழிபெயர்ப்பு அதன் மூல பாடலிற்கு நம்பிக்கையானதென்றே கருதுகிறேன். இக்கவி புத்தருக்கு நெடுங்காலம் முன்பும் ஏசுவிற்கு பல நூற்றாண்டுகள் முன்பும், சாக்ரட்டாசிற்கும் அனைத்து கிரேக்க சிந்தனைகளுக்கும் அறிவியலுக்கும் பன்னெடுங்காலம் முன்பும் இயற்றிய பாடலிது. ஆனால் இப்பாடல் நம்முள் எழுப்பும் சிந்தனைகள் இன்றைக்கும் பொருந்துகிறது.இப்பாடல் எத்தகைய உயர்ந்த எண்ணங்களை நம்முள் உருவாக்குகிறது! படைப்புக் கடவுளைக் குறித்து பெரும் ஐய வினாக்களை எழுப்புகிறது...இதுவே இதயத்தின் உள்தேடல். இதுவே அன்பின் உணர்ச்சி '. உருசிய இந்தியவியலாளர் அலெக்சாந்தர் செக்னிவிச்சின் கூற்றின் படி வெனத்ஸ்கி (அர்னால்ட் தாயின்பீ போன்றே) இந்நூற்றாண்டில் மாந்தரினம் தன் பண்பாட்டுப் பன்மையையும் மக்கட்பண்பு மதிப்பீடுகளையும் காப்பாற்ற இந்திய மெய்யியலின் துணையினைப் பெறத் திரும்பும் எனக் கருதியதாக கூறுகிறார். தன் இறுதிக்காலத்தில் வெர்னத்ஸ்கி சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகளால் மிகத் தீவிரமாகக் கவரப்பட்டார் எனத் தெரிகிறது. 1936 இல் பெங்களூரில் இயங்கி வந்த உயிர் வேதியியல் கழகத்தில் (Society for Biochemistry) இவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரானார். + +இவரது மகனான ஜார்ஜ் வெர்னத்ஸ்கி (1887–1973) அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு அவர் இடைக்கால், இக்கால உருசிய வரலாற்றில் பல நூல்களை வெளியிட்டார். + +இவருக்கு மதிப்பு நல்க, மாஸ்கோ வளாகமொன்றான உக்ரைன் தேசிய நூலகமும் கிரீமியாவில் உள்ள தாவரிதா தேசியப் பல்கலைக்கழகமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன. + +பன்னாட்டவையின் கல்வி, அறிவியல், பண்பாட்டுநிறுவனம் (யுனஸ்கோ) "Globalistics-2013", எனும் பன்னாட்டுக் கருத்தரங்கை மாஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் 2013 அக்தோபர் 23–25ஆகிய நாட்களில் இவரது 150ஆம் ஆண்டு நினைவாக நடத்தியது. + + + + + + + + + + + + + + + +
  • A.V.Lapo, “Traces of Bygone Biospheres” ‘Science for everyone’ series, Mir publishers, Moscow, 1987. (இந்த இரண்டாம் பதிப்பில் 'கயா '-வெர்னத்ஸ்கி தொடர்பு குறித்து விளக்கப்படுகிறது. முதல் (ஆங்கில) பதிப்பில் (1982) இது காணப்படவில்லை.) + +
  • Vernadsky and our times (பக். 26-44) Science in the USSR, No. 3, May-June, 1988 (125th Birth anniversary feature) + +
  • G.Aksenov,Contact-response, Science in the USSR, No. 4,July-August 1990. + +
  • Alexander Mikeye, “A pilgrimage to the world of immortal images”, Soviet Literature, No.8 (497), 1989. + +
  • http://www.amazon.de/Biosphere-Complete-Annotated-Vladimir-Vernadsky/dp/038798268X + +
  • http://www.thinnai.com/?module=displaystory&story_id=40307172&format=html + + + + + + + + + +விலங்குகள் பட்டியல் + +அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஃ
    க | ங | ச | ஞ | ட | ண | த | ந |ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன
    + + + + + + + + + + + + +
    + +உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் + +உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாள் ("International Red Cross and Red Crescent Day") மே 8ஆம் நாளன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. +முதலாவது நோபல் விருதைப் பெற்றவரும் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆரம்பகர்த்தாவுமான ஹென்றி டியூனாண்ட் ("Henry Dunant") அவர்களின் பிறந்த நாளான (மே 8, 1828) இந்நாள் 1948 ஆம் ஆண்டிலிருந்து சிறப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டது. +முதலாம் உலகப் போரின் பின்னர் சமாதானத்துக்கான தேவை உணரப்பட்டது. செக்கோசிலோவாக்கியாவில் சமாதானத்தை வலியுறுத்தி 1922 இல் ஈஸ்டர் திருநாளுக்காக மூன்று நாள் யுத்த நிறுத்தத்துக்கான வேண்டுகோள் விடப்பட்டது. இதுவே பின்னர் செஞ்சிலுவை மற்றும் செம்பிறை நாளாக அநுசரிக்கத் தூண்டுதலாக அமைந்தது. 1934 ஆம் ஆண்டு டோக்கியோவில் இடம்பெற்ற செஞ்சிலுவைச் சங்கத்தினரின் 15வது அனைத்துலக மாநாட்டில் இது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இருப்பினும் 1948 ஆம் ஆண்டிலேயே இந்நாளை செஞ்சிலுவைச் சங்கத்தை ஆரம்பித்தவரான ஹென்றி டியூனண்ட்டின் நினைவாக ஆண்டுதோறும் கொண்டாடும் தீர்மானம் எடுக்கப்பட்டது. முதலில் இந்நாள் செஞ்சிலுவைச் சங்க நாள் என்றே அழைக்கப்பட்டது. எனினும் பின்னர் பல மாற்றங்களுக்குள்ளாகி 1984 இல் இருந்து இந்நாள் "உலக செஞ்சிலுவை மற��றும் செம்பிறை நாள்" என அழைக்கப்படுகிறது. + + + + + +அப்பைய தீட்சிதர் + +அப்பைய தீட்சிதர் (1520 – 1593) தமிழ்நாட்டில் சிறந்த அத்வைத வேதாந்த பண்டிதராக வாழ்ந்து பல சாதனைகள் புரிந்தவர். பாமர மக்களுக்கெல்லாம் சிவ தத்துவத்தையும் அத்வைதத்தையும் புரிய வைப்பதற்காக தொண்டர்களைத் திரட்டி ஒரு இயக்கமே நடத்தியவர். பயணங்கள் பல செய்து வேதாந்தத்திலும் இலக்கியத்திலும் வாத-விவாதங்களில் தன் புலமையை நிலை நாட்டியிருக்கிறார். அவருடைய புகழ் வடநாட்டிலும் காசி வரையில் பரவி யிருக்கிறது. இந்து சமயத்தின் தூண்களான கருமம், பக்தி, ஆத்ம ஞானம் இவை மூன்றிற்கும் ஒரு இணையற்ற முன்மாதிரியாகவே இருந்து மறைந்தவர். + +அப்பைய தீட்சிதர் வடஆர்க்காட்டிலே வேலூருக்கு அப்பால் திரிவிரிஞ்சிபுரம் எனும் ஊரில் 1520இல் பிறந்தார். தந்தை இரங்கராச தீட்சிதர். இளம்வயதில் சிவதீட்சை பெற்று சிவமூல மந்திரத்தை முறைப்படி ஓதுபவராயிருந்தார். + +உண்மையான அத்வைதியாக இருந்த அவர் பரம்பொருளின் வெவ்வேறு பிரதிபலிப்புகளில் வேற்றுமை பார்க்கவில்லை. அவர் காலத்திற்குமுன் ஒரு நூற்றாண்டு காலமாக, வைணவ மதத்தாரிடமிருந்து சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள் மீது எதிர்ப்புகளும் மறுப்புகளும் தொடர்ந்த வண்ணம் இருந்தது. இதனால் அவர் தன்னுடைய வாழ்க்கைக் குறிக்கோளில ஒன்றாக வாத-விவாதங்கள் மூலம் இத்தொல்லைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தார். எதிராளிகளுடைய வாதங்களும் வேதத்தையும் புராணத்தையும் அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை அவர் உணர்ந்தது மட்டுமல்ல; “பிரம்மசூத்திரங்களே பல வித மாற்று அபிப்பிராயங்களுக்கு வழிகோலும்போது, மனிதர்கள் வெவ்வேறு அர்த்தங்களை உருவாக்குவதை யார் தடுக்கமுடியும்?” என்று அவரே சொல்வார். அவருடைய இப்படிப்பட்ட பரந்த நோக்குதான் எல்லா பிரிவுகளின் கொள்கைகளுக்கும் இடம்கொடுத்து சமரசம் செய்து வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டது. + +அப்பைய தீட்சிதர் வடமொழியில் உள்ள பல பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர். சிறு வயதிலேயே வேதாந்தம், இயல், இலக்கணம் யாவற்றையும் நன்கு கற்றுத் தேர்ந்தவர். வேதாந்த விமர்சனம், தத்துவம், பக்தி இலக்கியம், இவைகளில் ஆய்வுகள் அனேகம் செய்து, பெரிதும் சிறிதுமாக 104 நூல்கள் எ��ுதியதாகத் தெரிகிறது. அவைகளில் இன்றும் 60 நூல்கள் புழக்கத்தில் உள்ளன. அவருடைய உயர்ந்த கவித்திறன் அவரது படைப்புகளில் தெரிகிறது. + +அவருக்கு அத்வைத சித்தாந்தத்தில் அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததால், அவரால் மாற்று வேதாந்த தத்துவங்களில் கூட சிறந்த நூல்கள் எழுத முடிந்தது. அந்த மாற்று தத்துவ வல்லுனர்களே அவைகளை மெச்சி இவருடைய நூல்களை அவர்கள் தங்கள் சீடர்களுக்குப் பாட புத்தகமாக வைத்துள்ளனர். பிரம்மசூத்திரத்தின் நான்குவித தத்துவ உரைகளை எடுத்துக்காட்டும் வகையில் "சதுர்மதசாரம்" என்றொரு நூல் எழுதினார். அதில் "நயமஞ்சரி" அத்வைதத்தைப் பற்றியும், "நயமணிமாலை" ஸ்ரீகண்டமததைப் பற்றியும், "நய-மயூக-மாலிகா" இராமானுஜ சித்தாந்தத்தையும், "நய-முக்தாவளி" மத்வருடைய சித்தாந்தத்தையும் எடுத்து இயம்புகிறது. இந்நூல்களில் அவருடைய தராசுநிலை நேர்மையையும், உண்மையைத்தேடும் உள்ளார்ந்த முயற்சியையும் ரசித்து வைணவர்களும் மத்வ மதத்தவர்களும் முறையே "நய-மயூக-மாலிகா", "நய-முக்தாவளி" இரண்டையும் அவரவர்களின் மத நூல்களாக ஆக்கிக் கொண்டார்கள். + +அவருடைய மனதிற்குள் அத்வைதம்தான் கடைநிலை உண்மை. ஆனாலும் அவருடைய தொழுகையெல்லாம் சிவனைக்குறித்தே இருந்தது. சிவாத்வைதப் பிரிவைச் சேர்ந்தவர்கள் அவரையும் தங்களில் ஒருவராகத்தான் நினைத்தார்கள். அதனால் அவருடைய மனதிற்குகந்த மதம் சிவாத்வைதமா, அத்வைதமா என்று தீர்மானமாகச் சொல்வது கடினம் என்பது உலக வழக்கு. சிவாத்வைதம் என்பது விஷ்ணுவுக்கு பதில் சிவனைக் கொள்ளவேண்டுமே தவிர மற்றபடி இராமானுஜருடைய விசிஷ்டாத்வைதம் போலத்தான். + +அப்பைய தீட்சிதரின் வேதாந்த நூல்களில் மிகவும் பிரசித்தி பெற்றது "சித்தாந்த-லேச-சங்கிரகம்" என்ற அவருடைய சொந்தப் படைப்பு. இப்பெரிய நூலில் அத்வைத சித்தாந்தத்தின் எல்லா நெளிவு சுளுவுகளையும் ஒரே இடத்தில் கொண்டு வருகிறார். பாஷ்யங்களைப் படிக்கத் தொடங்கும் அத்வைத மாணவர்கள் யாவரும் இன்று இந்நூலில் தான் தொடங்குவார்கள். அத்வைதத்தினுள்ளே இருக்கும் பல பிரிவுகளின் கொள்கைகளும் இதனில் அலசப்பட்டு விடுகின்றன. ஏக-ஜீவ-வாதம், நாநாஜீவ-வாதம், பிம்பப் பிரதிபிம்பவாதம், ஸாக்ஷித்துவ-வாதம் முதலிய எல்லாமே விவரிக்கப்பட்டு அவைகளின் எதிர்வாதங்களும் தீட்சிதரின் அறிவுச் சாணையில் தீட்டப்பட்டு விடுகின்றன. அகிலமும் சம்மதம் என்பது போல் அவரே அந்த பரந்த நோக்கை நியாயப்படுத்தி விடுகிறார்: “உலகெல்லாம் மாயை என்பதை எல்லா அத்வைதிகளும் ஒப்புக்கொள்வதால், அம்மாய உலகத்திற்கு இவர்கள் வெவ்வேறு படங்கள் வரைவதினால் என்ன குறை வந்துவிடப் போகிறது?” + +ஆதி சங்கரரின் பிரம்ம சூத்திர பாஷ்யத்திற்கு வாசஸ்பதி மிஸ்ரர் இயற்றிய ‘பாமதி’ என்ற உரை மிகவும் மதிக்கத் தக்கது. அதற்கு அமலானந்தர் என்பவர் "கல்பதரு" என்ற ஓர் நிரடலான உரை எழுதினார். இந்த கல்பதருவை எளிதாகப் புரிந்துகொள்ளும் முறையில் அப்பைய தீட்சிதர் எழுதிய "பரிமளம்" என்ற உரை பல்வேறு ஐயங்களை ஒருவாறு மிதப்படுத்தியது. மனிதனுடைய அஞ்ஞானம், பிரம்மத்திலிருந்து வந்ததா அல்லது ஜீவனிடமிருந்து வந்ததா என்பது அத்வைதத்தின் சிடுக்கான பிரச்சினை. இதற்கு ‘பாமதி’ உரையில் கொடுக்கப்பட்ட விளக்கமும், அத்வைதத்தின் இன்னொரு பிரிவான விவரணப் பிரிவில் கொடுக்கும் விளக்கமும் இரண்டையும் கருத்தில் கொண்டு அப்பைய தீட்சிதர் இரண்டு விளக்கமும் சம்மதமே என்ற முறையில் அவருடைய "சித்தாந்த லேச சங்கிரகம்" விளக்கியிருந்ததால், அவரது "பரிமளம்" பரிமளித்தது. + +"பரிமளம்" அத்வைதத்தை அடிப்படையாககொண்டு எழுதப்பட்டது. ஸ்ரீகண்டரின் சிவ-விசிஷ்டாத்வைதத்தை ஒட்டி "சிவார்க்கமணி தீபிகை" என்ற இன்னொரு உரையையும் எழுதினார். இதுவும் பிரம்மசூத்திரத்திற்கு உரையாக எழுதப்பட்டதுதான். இதுவும் பரிமளமும் தான் அவருடைய மிகப்பெரிய உயரிய நூல்கள். சிவார்க்கமணி தீபிகையைக் கற்பதற்காக 500 மாணவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்ய மான்யம் வழங்கியவர் வேலூர் அரசர் சின்ன பொம்ம நாயக்கர். வைஷ்ணவ எதிர்ப்புகளை நாடெங்கும் சந்திப்பதற்காகவே இம்மாணவர்களை ஒன்று சேர்த்தவர் தீட்சிதர். + +வைணவ எதிர்ப்புகளை சமாளிப்பதற்காக அவர் முழு மூச்சுடன் பலஆண்டுகள் நாடெங்கும் சென்று பேசியும் எழுதியும் உழைத்தார். பல அரசர்கள் – குறிப்பாக, தஞ்சை, வெங்கடகிரி, வேலூர், விஜயநகரம் மன்னர்கள் – அவருக்கு உதவி செய்தார்கள். தீட்சிதருடைய கணிப்பில் துவைதம் முதல் படி. விசிஷ்டாத்வைதம் அதற்கு அடுத்த மேல் படி. சிவாத்வைதமும் அத்வைதமும் கிட்டத்தட்ட ஒன்றாக அதற்கடுத்த கடைசிப்படி. சிவாத்வைதத்தை அடிப்படையாக வைத்து சூத்திரங்களுக்கு பாஷ்யம் எழ��திய ஸ்ரீகண்டர் ஆதி சங்கரருடைய கருத்துகளுக்கு இணையாக இருக்கும்படிதான் எழுதியிருக்கிறர் என்பது தீட்சிதருடைய முடிவு. குணங்களுடன் கூடிய பரமனை உபாசிப்பது குணங்களற்ற பரம்பொருளில் தான் கொண்டுவிடும். இதை நிலைநாட்டும் முறையில் "ஆனந்தலஹரி சந்திரிகா" என்ற நூலில் பற்பல வித்தியாசமான தத்துவங்களும் கடைசியில் சுத்தாத்வைதத்தை அணுகித்தான் முடியும் என்று நிறுவுகிறார். + +தீட்சிதருடைய கடைக்காலத்தில் அவருக்கு ஒருவித வயிற்று வலி அவரை மிகவும் வாட்டி வதைத்தது. அவர் சிறந்த யோக சக்திகள் உடையவராதலால், தியானம் செய்யவோ அல்லது யாராவது முக்கியப்பட்டவருடன் பேசவேண்டியிருந்தாலோ, அவர் ஒரு துண்டின்மேல் அந்த வலியை தன் மந்திர வலுவால் ஈர்த்து வைத்துவிட்டு, தன் வேலையில் ஈடுபடுவாராம். அப்பொழுது அத்துண்டு இப்படியும் அப்படியும் குதித்துக்கொண்டே இருக்குமாம். பிறகு வேலை முடிந்தவுடன் திரும்ப அந்த வலியை வாங்கிக் கொள்வாராம். தொல்வினையை எப்படியும் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் என்பதை நம்பினவர் அவர். + +"ஆத்மார்ப்பண ஸ்துதி" அவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இதை அவர் இயற்றிய விதம் வெகு விந்தையானது. ஆண்டவனிடம் தன்னுடைய பக்தி உண்மையானது தானா என்று தன்னையே பரிசோதனைக்குட்படுத்திக் கொள்கிறார். மயக்க நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு பழத்தைச் சாப்பிட்டு தான் மயக்கத்தில் சொல்வதை எல்லாம் அப்படியே எழுதி வைக்கும்படி தன் சிஷ்யர்களிடம் சொல்லிவைத்து, அந்த மயக்கத்தில் அவர் ‘உளறினது’ தான் 50 சுலோகங்கள் கொண்ட "ஆத்மார்ப்பண ஸ்துதி". + + + + + +வளையம் (கணிதம்) + +இயற்கணித அமைப்பு களில் அடிப்படையானவை மூன்று. குலம், வளையம், மற்றும், களம். இவைகளில் குல-அமைப்பில் ஒரு வினைதான் உண்டு. மற்ற இரண்டிலும் ஒவ்வொன்றிலும் இரு வினைகள் உள்ளன. இவ்விரு வினைகளும் ஒன்றோடொன்று ஒத்ததாக இருக்க வேண்டும். இக்கருத்துகளின் அடிப்படையில் வளையம் வரையறுக்கப்படுகிறது. வளையத்தின் வரையறையை இன்னும் தனிப்படுத்தினால் கள-அமைப்பு உண்டாகும். + +உள்ளுணர்ந்து பார்த்தோமானால் கணிதத்தில் அடித்தளத்தில் நான்கு வினைகள் உள்ளன: கூட்டல், கழித்தல், பெருக்கல், மற்றும் வகுத்தல். இவைகளில் கழித்தல் என்பது கூட்டலின் எதிர்மறை. அதே மாதிரி வகுத்��ல் என்பது பெருக்கல் என்பதின் எதிர்மறை. + +கூட்டல், கழித்தலை மாத்திரம் வைத்து உண்டாக்கப்படுவது ‘குலம்’. ஒரே ஒரு வினையையும் அதன் எதிர்மறையும் கொண்டது. + +கூட்டல், கழித்தல், பெருக்கலை வைத்து உண்டாக்கப்படுவது ‘வளையம்’ இது இரு வினைகள் கொண்டது; ஆனால் முதல் வினைக்குத்தான் எதிர்மறை உள்ளது. + +கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய நான்கையும் வைத்து உண்டாக்கப்படுவது ‘களம்’. இங்கு இரு வினைகள், இரண்டுக்கும் எதிர்மறைகள் உள்ளன. + +கணிதத்தில் எல்லாம் துல்லியமாகப் பேசப்படவேண்டியிருப்பதால் அப்பழுக்கில்லாத வரையறைகள் தேவைப்படுகின்றன. + +ஒரு கணம் R உள்ளது. அதில் ‘+’ என்றும் ‘*’ என்றும் இரு வினைகள் இருப்பதாகக் கொள்வோம். பின் வரும் மூன்று நிபந்தனைகளுட்பட்டால் (R , ‘+’, ‘*’) ஒரு வளையம் என்று பெயர் பெறும்: + +(R 1) ‘+’ என்ற வினைக்கு R ஒரு ஏபீலியன் குலம் அல்லது பரிமாற்றுக் குலம். அதாவது, இவ்வினை சேர்ப்பு வினை, பரிமாற்று வினை, மற்றும், R இல் ஒற்றொருமை உண்டு, ஒவ்வொரு உறுப்புக்கும் நேர்மாறும் உண்டு. + +(R 2) ‘*’ வினை பின்வரும் மூன்று விதிகளுக்குட்பட்டது : + +(சேர்ப்பு / ஒட்டுறவு): R இலுள்ள எல்லா "a, b, c" க்கும், formula_1 + +(பரிமாறல்/மாற்றுறவு) : R இலுள்ள எல்லா "a, b" க்கும் formula_2 + +(முற்றொருமை யுடன் கூடியது): R இல் "e" என்ற ஓர் உறுப்பு கீழ் உள்ள இயல்புடன் உள்ள்து: + +R இல் உள்ள எல்லா "a" க்கும் formula_3 +(R 3) (*) வினை (+) வினையுடன் பங்கீட்டுக் கொள்கிறது (பிரித்தளிக்கிறது); அதாவது + +R இல் உள்ள எல்லா "a, b, c" க்கும் + +formula_4 + +formula_5 + +எல்லா முழு எண்களின் கணம் Z , சாதாரண கூட்டல், பெருக்கல் இவைகளுக்கு ஒரு வளையம் ஆகிறது. + +ஆனால் இயற்கை எண்களின் கணம் N, கூட்டல், பெருக்கலுக்கு வளையம் ஆகாது. ஏனென்றால் அது முதலில் கூட்டலுக்கு ஒரு குலமே ஆகவில்லை; ஒற்றொருமை இல்லை, உறுப்புகளுக்கு நேர்மாறு இல்லை. + +[ "a, b" ] யிலிருந்து மெய்யெண்கணம் R க்குப்போகும் எல்லா தொடர் சார்புகளையும் C[a, b] என்ற கணம் ஆக்கினால், அதனில் இரு வினைகள் உள்ளன. ‘+’ என்ற புள்ளிவழிக் கூட்டல், ( . ) என்ற புள்ளி வழிப்பெருக்கல். இவைகளுக்கு அது ஒரு வளையம் ஆகிறது. இவ்வளையத்திற்கு தொடர் சார்பு வளையம் என்று பெயரிடலாம். இருபதாவது நூற்றாண்டில் தொடங்கப்பட்ட சார்புப் புகுவியல் (Functional Analysis) என்ற கணிதப்பிரிவில் இவ்வளையத்திற்கு முக்கிய பங்கு உண்டு. உண்மையில் C[a, b] இல் வெவ்வேறு அமைப்புகள் இயக்கப்படலாம். + +வளையத்தின் வரையறையில் (R 2) இல் சொல்லப்பட்டிருக்கும் பரிமாறல் நிபந்தனைக்கு ஒவ்வாத வளையங்களும் இருக்கலாம். அவைகளை பரிமாறா வளையம் என்பர். + +வேறொரு மரபுப்படி, வளையத்தின் வரையறையில் (R 2) இல் பரிமாறல் நிபந்தனையைப் போடாமலேயே இருந்துவிடுவது. அம்மரபில் பொதுவாக வளையம் என்றால் அது பரிமாறா வளையம் தான். அப்பொழுது பரிமாறல் நிபந்தனைக்கொவ்வும் வளையங்களை பரிமாறுவளையம் என்பர். + +பரிமாறா வளையத்திற்கு தரமான எடுத்துக்காட்டு எல்லா "n x n" அணிகளின் (matrices) கணம் தான். இவ்வளையத்தில் கூட்டல் என்பது அணிக்கூட்டல். பெருக்கல் என்பது அணிப்பெருக்கல். அணிப்பெருக்கல் ஒரு பரிமாறாப் பெருக்கல் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +தொடர் சார்பு வெளி (கணிதம்) + +சார்புப் பகுவியல் (Functional Analysis) என்பது கணிதத்தில் இருபதாவது நூற்றாண்டில் தொடங்கப்பட்ட முக்கிய பிரிவு. 18, 19 வது நூற்றாண்டுகளில் சார்புகளைப்பற்றி நாம் அறிந்ததெல்லாம், இடவியல் சாதனத்தைக் கொண்டு சார்புகளையே புள்ளிகளாக்கி அவைகளுடைய வெளிகளில் பகுவியல் நடத்தினர். இதற்கெல்லாம் முதல் படிதான் தொடர்சார்புவெளி (Space of Continuous Functions). + +["a, b"] என்ற இடைவெளியில் வரையறுக்கப்பட்ட எல்லா தொடர் சார்புகளுடைய கணம் F என்று கொள்வோம். அதாவது, F இலுள்ள உறுப்புகள் ஒவ்வொன்றும் ஒரு சார்பு "f : (a, b) → R. இங்கு R" என்பது எல்லா மெய்யெண்களின் கணம். + +"f, g" என்பவைகள் F இல் இரண்டு உறுப்புகளென்றால் "f + g" ஐ இப்படி வரையறுக்கலாம்: + +["a, b"] இல் உள்ள ஒவ்வொரு "x" க்கும், + +formula_1 + +இதற்கு சார்புகளின் புள்ளிவழிக் கூட்டல் என்று பெயர். + +இக்கூட்டல் சேர்ப்புக் கூட்டல், பரிமாற்றுக் கூட்டல், என்ற நிறுவலெல்லாம் புகுவியலில் (Analysis) அரிச்சுவடி. மற்றும் கூட்டலுக்கு F க்குள் ஒரு முற்றொருமையும் உள்ளது. எப்படியென்றால், + +"0" என்ற சார்பின் வரையறையைப்பார்: + +["a, b"] இல் உள்ள ஒவ்வொரு "x" க்கும், + +"0(x) = 0". + +இப்பொழுது F இல் உள்ள ஒவ்வொரு "f" க்கும், "0 + f = f + 0". + +மற்றும் ஒவ்வொரு "f" க்கும் ஒரு நேர்மாறு "-f" இருக்கிறது. அந்த நேர்மாறு "-f" என்னவென்பதற்கு ஒவ்வொரு "x" என்ற புள்ளியிலும் "-f" இனுடைய மதிப்பு என்னவென்று சொல்லவேண்டும். அது கீழுள்ள வரையறையில் அடங்கியுள்ளது. + +"[a, b]" இல் உள்ள ஒவ்வொரு "x" க்கும், + +"(-f)(x) = - (f(x))" + +இந்த "-f" தான் "f" இன��� நேர்மாறு. ஏனென்றால், நாம் இப்பொழுது " -f + f = 0 = f + (-f)" என்று எளிதில் காண்பித்துவிடலாம். + +சார்புகளுக்குள் பெருக்கலுக்கும் இதே முறை தான். அதாவது, "f . g" ஐ + +["a, b"] இல் உள்ள ஒவ்வொரு "x" க்கும், + +formula_2 + +என்று வரையறுக்கலாம். + +புகுவியல் கோட்பாடுகளின்படி "f + g, f . g" இரண்டும் தொடர் சார்புகளே. + +ஆக, F என்ற கணத்தில், இருவினைகள் உள்ளன. முதல் வினைக்கு, அதாவது, சார்புகளின் கூட்டல் வினைக்கு F ஒரு எபெலியன் குலம் (Abelian Group) ஆகிறது. அது மட்டும் அல்ல இரு வினைகளுக்கும் F ஒரு வளையமே (Ring) ஆகிறது. இதற்கு தொடர் சார்பு வளையம் (Ring of Continuous Functions) என்று பெயர். + +F என்ற வெளியில் ஒரு இடவியல் அமைப்பை உண்டுபண்ணலாம். மிக எளிதான வழி அதனில் ஒரு தொலைவை வரையறுப்பதே. + +தொலைவு வரையறை: F இல் "f, g" என்ற இரண்டு உறுப்புகள் (இவைகள் தொடர் சார்புகளே) இருந்தால், + +இது ஒரு தொலைவு (distance metric) தான், அதாவது, தொலைவுக்கு வேண்டிய மூன்று நிபந்தனைகளையும் இது ஒப்புகிறது. + +இந்தத்தொலைவுடன் F ஒரு தொலைவு வெளி (metric space) ஆகிறது. அதனாலேயே இடவியல் வெளியாகவும் (Topological Space) ஆகிறது. அதனால் அருகாமை (Neighbourhood), ஒருங்கல் (convergence) முதலிய எல்லாம் இந்த வெளியில் சாத்தியமாகிறது. இதுதான் நுண்பியப்படுத்தப்பட்ட பகுவியலின் முதல் படி. இத்தொலைவு வெளிக்கு ஒரு நிலையான குறியீடு C[a, b] என்பது. + +ஆக, கணித மரபின் நுண்பிய வழக்கப்படி, சாதாரண எண்களைக்கொண்டு உண்டாக்கிய கூட்டல், கழித்தல் முதலிய வினைகளை இப்பொழுது சார்புகள் உலகமாகிற மேல் தளத்தில் செய்வதால் பல அரிய பெரிய நுணுக்கங்களைக் கண்டுபிடிக்கமுடிந்தது. அதோடு மட்டுமல்லாமல் அவைகளை கணித இயலர்களும் இயற்பியலர்களும் குவாண்டம் நிலையியக்க வியலிலும் (Quantum Mechanics) எடுத்துச்சென்று பயன்படுத்தி வெற்றி கண்டார்கள். + + + + +வளையத்தில் சீர்மம் (கணிதம்) + +வளையம் என்பது கணிதத்தில் ஒரு கணித அமைப்பு. அமைப்புகள் பல வகைப்படும். அவைகளில் இயற்கணித அமைப்பைச் சேர்ந்தது வளையம். வளையத்திற்குள் சீர்மம் (Ideal in a Ring) என்ற கருத்து மிகப்பயனுள்ள கருத்து. 19வது நூற்றாண்டிலேயே டெடிகிண்ட் (1831 – 1916) இக்கருத்துக்களை எண்களுடைய கணங்களுக்குக் கையாண்டிருக்கிறார். இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் ஜெர்மனியில் கெட்டிங்கனில் ஹில்பர்ட்டுடன் ஆய்வுகள் செய்த நோய்தர் என்ற அம்மையாரின் பற்���ல ஆய்வுகளிலிருந்து தோன்றிற்று நுண்பியப்படுத்தப்பட்ட இந்த சீர்மம் என்ற கோட்பாடு. + +எல்லா முழு எண்களின் கணம் Z. சாதாரணக் கூட்டல், பெருக்கலுக்கு இது ஒரு வளையமாகிறது. இதனில் ஒரு உட்கணம், எடுத்துக்காட்டாக, 3 இன் எல்லா மடங்குகளையும் கொண்டது, அதற்கு 3Z என்று பெயரிடுவோம். குறியீட்டு முறையில் சொன்னால் + +3Z = { ... -9, -6, -3, 0, 3, 6, 9, ... } . + +இங்கு Z தாய்க்கணம்; 3Z உட்கணம். தாய்க் கணத்திலிருக்கும் எந்த உறுப்பாலும் உட்கணத்திலிருக்கும் எதைப் பெருக்கினாலும் நாம் திரும்பி உட்கணத்திற்குள்ளேயே வருகிறோம். இதை தத்துவரீதியாக, குறிப்பிட்ட உட்கணம் வெளியிலிருந்து வரும் எந்த பெருக்கலுக்கும் நிலையாக ("stable") இருக்கிறது என்று சொல்லப்படும். இப்படி நிலையாக இருக்கும் உட்கணத்திற்கு சீர்மம் என்று பெயர். இப்பொழுது இதை நுண்பியப்படுத்தலாம். + +(S-1): { S, +} ஒரு உட்குலமாக இருக்கவேண்டும். + +(S-2): R இல் உள்ள எந்த "r" க்கும், S இலுள்ள "s" எதுவாயிருந்தாலும், "r . s" என்ற உறுப்பு S இல் இருந்தாகவேண்டும். + +முழு எண்களாலான {Z, + , . } என்ற வளையத்தில், "p" என்ற பகாஎண்ணுக்கு, + +"p" Z = "{ … -3p, -2p, -p, 0 , p, 2p, 3p, … }"ஒரு சீர்மம் ஆகிறது. + +தொடர் சார்பு வளையம் C[a, b] இல் பின்வரும் S என்ற கணத்தைப்பார்ப்போம். [a, b] இல் x ஒரு குறிப்பிட்ட புள்ளி. + +S = { f € C[a, b] | f(x) = 0}. + +அதாவது, C[a,b] இல் எந்தெந்த சார்புகள் x என்ற புள்ளியில் சுழிக்கின்றனவோ (vanish at x) அவையெல்லாம் சேர்ந்தது தான் S. இந்த S C[a,b] இல் ஒரு முக்கியமான சீர்மம். + + + + +மரங்கள் பட்டியல் + + + + + +("CORDIA MYXA ROXB"), + + + + + + + + + + +திருவல்லிக்கேணி + +திருவல்லிக்கேணி ("Triplicane") சென்னை மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதியாகும். மெரீனா கடற்கரையிலிருந்து சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு உள்ள பார்த்தசாரதி கோயில் (பெருமாள் கோயில்) மிகவும் புகழ் பெற்றதாகும். இந்தக் கோயில் 8ம் நூற்றாண்டில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. திருவல்லிக்கேணி வைணவர்களின் 108 திவ்வியதேசங்களில் ஒன்று.. + +திருவல்லிக்கேணி மட்டைப்பந்து ஆட்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றதாகும். எம் ஏ சிதம்பரம் மைதானம் திருவல்லிக்கேணியில் உள்ளது. + +திரு+அல்லி+கேணி= திருவல்லிக்கேணி. அல்லி மலர்கள் நிரம்பப் பெற்றதால் இப்பெயர் பெற்றதாகக் கூறுவர். +திரு+அ��ி+கேணி = திருவல்லிக்கேணி. என்றும் சொல்லப்படுகின்றது. + +இந்தப் பகுதியில் சம அளவில் இந்துக்களும் இசுலாமியர்களும் உள்ளனர். தென் இந்தியாவிலேயே மிகவும் பழமை வாய்ந்த மசூதிகள் சில இங்குதான் உள்ளன. மக்கள் சமய நல்லிணக்கத்துடன் வாழ்கின்றனர். சட்டசபைத் தேர்தலில் இசுலாமியர்கள் வெற்றி பெறுவது, வினாயகர் ஊர்வலத்திற்கு இசுலாமியர் நிதி வழங்குவதைக் கொண்டு இதனை அறியலாம். +சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஜான்பஜார் (ஜாம் பஜார்)ரின் வாலாஜா சாலையில் இவ்வாலாஜா மசூதி அமைந்துள்ளது. இம்மசூதி 1795ஆம் ஆண்டு வாலாஜா குடும்பத்தினரால் நவாப் அவர்களின் நினைவாக‌ கட்டப்பட்டது. + +திருவல்லிக்கேணி பிரம்மச்சாரிகளின் சொர்க்கம் என்றும் அழைக்கப்படுகிறது. "மான்சன்"("Mansion") என்று அழைக்கப்படும் தங்கும் விடுதிகள் இங்கு நிறைய உள்ளன. வேலை தேடி சென்னைக்கு வரும் பல இளைஞர்களுக்குத் திருவல்லிக்கேணி தான் புகலிடமாக உள்ளது. தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழிகள் பேசும் இளைஞர்களை இங்கு காணலாம். + +திருவல்லிக்கேணி புத்தகங்களுக்கும் பெயர் பெற்றது. பல பழைய புத்தகக்கடைகள் இங்கு உண்டு. இங்கு உள்ள பைகிராப்ட்ஸ் சாலை சிறிய தி.நகர் என்று அழைக்கப்படுகிறது, அச்சகங்களும் நகலகங்களும் இங்கு ஏராளம். பலவிதமான ஆடைகள் இங்கு கிடைக்கும். பல சிறிய மற்றும் பெரிய உணவுவிடுதிகள் உள்ளன. மேலும் திருவல்லிக்கேணி பகுதியில் பிரியாணிக் கடைகள் அதிகம் உண்டு. மீன் விற்கும் சந்தையும், ஜாம் பஜார் என்ற காய்கறிச் சந்தையும் அருகிலேயே உள்ளன. + +150 வருடம் பழமைவாய்ந்த இந்து மேல்நிலை பள்ளி இங்கு தான் உள்ளது. நோபல் பரிசு வென்ற சுப்பிரமணியன் சந்திரசேகர் இப்பள்ளியில் (1922 - 1925) படித்தவர் ஆவார். + +நாலாயிர திவ்யப் பிரபந்தத்திலிருந்து திருவல்லிக்கேணியை சுட்டிக்காட்டிப் பாடப்பட்ட ஒரு பாசுரம்: + + + + +தியாகராய நகர் + +தியாகராய நகர் அல்லது தி.நகர் என்பது சென்னையின் மிக முக்கியமான மற்றும் பெரிய பகுதி. இது ஒரு முக்கியமான வணிகப்பகுதி. நகரின் மையத்தில் அமைந்துள்ளது. திராவிட இயக்கத்தவரில் முக்கியமானவரும் நீதிக்கட்சியைத் ஆரம்பித்தவர்களில் ஒருவருமான சர் பி.தியாகராயாவின் நினைவாக இப்பெயர் இடப்பட்டது. + +பாண்டி பஜாரும், உஸ்மான் ச���லையும், ரங்கநாதன் தெருவும் தான் தி.நகரின் மிக முக்கியமான வணிகமையங்கள். ஆடைகள், அணிவகைகள், விளையாட்டுப்பொருட்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் இங்கு மிகக்குறைந்த விலையில் கிடைக்கும். இப்பகுதியில், பல்வேறுவகைச் சேலைகள் உட்பட்ட ஆடைகள், தங்க, வைர நகைகள் முதலியவற்றுக்கான, பல மாடிகளைக் கொண்ட மிகப் பெரிய விற்பனை நிலையங்களுடன், நடைபாதைக் கடைகளும் போட்டி போட்டுக்கொண்டு செயற்படுவதைக் காணலாம். விடுமுறை நாட்களிலும், பொங்கல் போன்ற திருவிழாக் காலங்களிலும் இந்தப்பகுதியில் கூட்டம் நிரம்பி வழியும். +திருமணம் முதலியவற்றுக்காக ஆடை அணிகள் வாங்குவதற்காகப் பலர் தொலை தூரங்களிலிருந்தும் இப் பகுதிக்கு வருகிறார்கள். உள்நாட்டிலிருந்து மட்டுமன்றி, இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் கூடச் சிறப்புத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்குத் தமிழ் மக்கள் இப்பகுதிக்கு வருவதைக் காணமுடியும். இதனால் பல தங்கு விடுதிகளும், உணவு விடுதிகளும் இங்கே பெருமளவில் உள்ளன. + +தியாகராஜ நகரில் பல புத்தக வெளியீட்டு நிறுவனங்களும் உள்ளன. + + + + +மே 9 + + + + + + + +தேர் + +தேர் என்பது பொதுவாக கோயில்களில் கடவுளரை ஊர்வலம் எடுத்துச் செல்லப் பயன்படுத்தும் ஓர் ஊர்தியாகும். இத்தேரை திருவிழா நாட்களில் பக்தர்கள் ஊர்வலமாக வடம் பிடித்து இழுத்துச் செல்வர். இதன் பீடம் மரத்தால் ஆனது. இது முழுவதும் மரச்சிற்பங்களால் அலங்கரிக்கப் பட்டு இருக்கும். இது இந்து மதத்தில் மட்டுமில்லாமல், பவுத்தம் போன்ற மதங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. சிலப்பதிகாரத்தில் புத்த சமயக் கடவுளான அருகனுக்குத் தேர் இருந்ததாகக் குறிப்பு இடம் பெற்றுள்ளது. எனவே கோயில் தேர் என்பது பவுத்த, சமண சமயங்களுக்கு உரியதாக இருந்து இந்து சமயத்திலும் அது பின்பற்றப்பட்டு வந்துள்ளதாகக் கருதலாம். + +மரங்களை வைத்துத் தேர் செய்யும் மரபு தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்துள்ளது. மரத் தேர்களின் அடிப்படையில்தான் கற்தேர்கள் என்னும் ஒற்றைக்கல் ரதங்கள், பல்லவர்களால் மாமல்ல புரத்திலும், பாண்டியர்களால் கழுகு மலையிலும் அமைக்கப்பட்டன. இருப்பினும் பழங்காலத்தில் அமைக்கப்பட்ட தேர்களைக் காண முடியவில்லை. இருப்பினும் சங்க இலக்கியங்களிலும், சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் தேர்கள் அக்காலத்தில் இருந்தமைக்கான செய்திகள் உள்ளன. அவை நெடுந்தேர், பொற்றேர், கொடிஞ்சி நெடுந்தேர், கொடித்தேர், அணிகொள்தேர் என்று பலவகையான பெயர்கள் தேர்களுக்கு வழங்கப்பட்டன. சிலப்பதிகாரம் புத்தக் கடவுளுக்கு என்று தேர்த்திருவிழா நடைபெற்றதைக் குறிப்பிடுகிறது. + +தற்போது பெரும்பான்மையான கோயில்களில் தேர்கள் உள்ளன. அவை இடைக் காலத்திலிருந்து இன்றுவரை செய்து வைக்கப்பட்டவையாகும். பல கோயில்களின் தேர்கள் விசயநகர நாயக்கர் ஆட்சிக் காலத்தில் செய்விக்கப்பட்டவை ஆகும். திருவிழாக் காலங்களில் இறையுருவங்களை வீதிகளுக்கு எடுத்துச் செல்லவே கோயில் போன்ற அமைப்புடைய இத்தேர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 866 தேர்கள் இருப்பதாகக் கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது. + +அக்காலத்தில் அரசனுக்கு இருந்த நான்கு வகைப் படைகளான தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்பனவற்றுள் தேர்ப்படை முதலாவது இடத்தில் வைக்கப்பட்டது. போர்களில் தேர் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது. + +தேர்கள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கனமான சக்கரங்களைக் கொண்டவையாகும். இவற்றின் மூன்று பக்கங்களிலும் இறையுருவங்களும், புராணக்கதைத் தொகுதிகளைக் காட்டும் சிற்பத் தொகுதிகளும், மிருகங்கள், செடி கொடிகள் ஆகியவற்றின் உருவங்களும், ஆங்காங்கே பக்தர்கள் மற்றும் கொடையாளிகளின் உருவங்களும் செதுக்கப் பட்டிருப்பதைக் காணலாம். திருவிழாக் காலங்களில் அவற்றின் மீது எண்ணெய் பூசுவதால் இச்சிற்பங்கள் அழகாகக் கற்சிற்பங்கள் போன்று கருமை நிறத்தில் காட்சியளிக்கும். தேரின் அமைப்பைப் பொறுத்தவரை அது கோயில் விமானத்தின் அமைப்பைப் பிரதிபலிப்பதாகவே அமைகிறது. இத்தேர் சதுரம், அறுகோணம், பதின்கோணம், பன்னிரண்டுகோணம், வட்டம், நீள்வட்டம், நீள் சதுரம், எண்கோணம், முட்டை வடிவம் என ஒன்பது வகைகளில் அமைக்கப்படுகிறது. + +மானசாரம் என்ற நூல் தேரில் இடம்பெற வேண்டிய உருவங்கள் இவை என சிங்கம், யானை, முதலை, பூதகணம், யக்சி, நாகம், பிரம்மா, விஷ்ணு, சண்முகன், சரஸ்வதி, கணபதி, துர்க்கை, தேவதை, சிறு தெய்வங்கள், அரசன், அர்ச்சகர்கள், பிராமணர், பக்தர்கள், துவாரபாலகர், கின்னர���், நாகர், கருடன் போன்றவற்றைக் கூறுகிறது. + +தேர்களில் புராணக்கதை தொடர்பான சிற்பங்கள், குறிப்பாக சைவக் கோயில் எனில் சைவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும், வைணவக் கோயில் எனில் வைணவப் புராணக்கதைகளை உணர்த்தும் சிற்பங்களும் பெரும்பாலும் செதுக்கப்பட்டுள்ளன. சில தேர்களில் சைவம், வைணவம் எனும் இரண்டு சமயம் தொடர்பான சிற்பங்களும் இடம் பெற்றுள்ளன. + +தமிழகத்துத் தேர்களில் முக்கியத் தட்டுகளில் உள்ள சிற்பங்கள் எட்டு அங்குலம் முதல் இரண்டரை அடி உயரமுள்ளனவாக அமைந்திருக்கும். சிற்றுருச் சிற்பங்கள் ஆறு அங்குலம் உயரம் உடையனவாகும். தேரின் அச்சுப் பகுதியில் கணபதி, முருகன், பூத கணங்கள் ஆகியோரின் உருவங்கள் வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தேர்களின் பாதுகாவலர்களாகக் கருதப்படுகின்றனர். தேர்களில் அதிட்டானப் பகுதிகளில் இந்து சமயத் தொன்மக் கதைகளும், மக்களின் அன்றாட வாழ்க்கை முறைகளைச் சித்திரிக்கும் செய்திகளும், சிற்பங்களாக வடிக்கப்பட்டிருக்கும். தேரின் பீடத்தில் நாட்டியப் பெண்கள், இசைக் கருவிகளை மீட்டுவோர், அட்டதிக் பாலகர்கள், கஜலட்சுமி ஆகியோரின் உருவங்கள் அமைக்கப்பட்டிருக்கும். + +தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், வடுகர்பேட்டை எனும் ஊரிலுள்ள கிறித்தவ தேவாலயத்திற்கான தேரில் இயேசு பெருமான் வாழ்க்கையை விவரிக்கும் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. + +தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா என்று கூட கொள்ளலாம். + + + + +தேர் வடிவமைப்பாளர்கள் + +*சோம.லெக்ஷ்மணன் ஸ்தபதி, மாலைகண்டான் + + + + + + +தொடரும் பின்னம் + +கணிதத்தில் தொடரும் பின்னம் அல்லது தொடர் பின்னம் என்பது + +(*):formula_1 + +இங்கு எல்லா + +தொடர்பின்னங்கள் பல நூற்றாண்டுகளாக கணித உலகத்தில் தட்டுப்பட்டுக் கொண்டிருந்தாலும், 17, 18 வது நூற்றாண்டில் தான் ஒரு சீரடைந்த கோட்பாடாகப் புழங்கத்தொடங்கியது. யூக்லீடின் அல்காரிதம் என்று பெயர் பெற்ற செயல் முறை தொடர் பின்னத்தின் மறு அவதாரம் தான். ஆனால் அந்தக் காலத்தில் யூக்லீடோ அல்லது வேறு எவரோ அதை அ��்த நோக்கில் பார்த்ததாகத் தெரியவில்லை. 6வது நூற்றாண்டில் இருந்த இந்தியக் கணித வல்லுனர் ஆரியபட்டர், தேரவியலா சமன்பாடுகளை (Indeterminate Equations)விடுவிக்க தொடர் பின்னங்களை வெகுவாக பயன்படுத்தினார். 1695 இல் தொடர் பின்னங்களை ஒரு கோட்பாடாக எழுதின ஜான் வல்லிஸ் என்பவர் தான் தொடர் பின்னம் என்ற பெயரையும் அதையொட்டி ஒருங்குகள் என்ற கருத்தையும் அறிமுகப்படுத்தினார். பிற்பாடு ஆய்லர் (1707-1783), லாம்பர்ட் (1728 -1777), மற்றும் லக்ராஞ்சி (1736-1813) முதலியோர் தொடர் பின்னங்களை ஆழமாக ஆய்வுசெய்தனர். இதையெல்லாம் பார்க்காமலேயே இருபதாவது நூற்றாண்டில் இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன்(1887 - 1920) எண் கோட்பாட்டில் தொடர் பின்னங்களை மூட்டை மூட்டையாகப் பயன்படுத்திய விந்தையை இன்னும் உலகக் கணித வல்லுனர்கள் அலசிக் கொண்டிருக்கிறார்கள். + +எடுத்துக்காட்டாக பின்வரும் தொடர் பின்னத்தை எடுத்துக்கொள்வோம். + +(**):formula_3 + +ஒவ்வொரு படியிலும் இதை உடைக்கலாம். முதல் படியுடன் உடைத்தால் அதன் மதிப்பு 1, அல்லது 1/1. + +இரண்டாவது படியில் உடைத்தால், அதன் மதிப்பு 1 + 1/2. இதை சுருக்கினால் 3/2 வரும். + +மூன்றாவது படியில் உடைத்தால், நமக்கு கிடைப்பது + +formula_4 + +அதாவது, formula_5 = 1 + 3/7 = 10/7 + +நான்காவது படியில் உடைத்தால், கிடைப்பது + +formula_6 + += formula_7 + += 1 + 13/30 = 43/30 + +இப்படி ஒவ்வொரு படியிலும் உடைத்து நமக்குக்கிடைப்பதை, படிப்படியாக வரும் ஒருங்குகள் என்பர். மேற்படி தொடரும் பின்னத்திற்கு, முதல் ஒருங்கு 1/1, இரண்டாவது ஒருங்கு 3/2, மூன்றாவது ஒருங்கு 10/7, நான்காவது ஒருங்கு 43/30. இன்னும் ஒவ்வொரு ஒருங்காக கணித்துக்கொண்டே போகலாம். இவ்வொருங்குகளெல்லாம் எந்த மதிப்பை நோக்கி ஒருங்குகின்றனவோ, அந்த மதிப்பு தான் இத்தொடர்பின்னத்தின் முடிவான மதிப்பு. + +தொடர் பின்னங்களைப்பற்றிய ஒரு அரிச்சுவடியைவலையில் பார்க்கலாம். தொடர் பின்னங்கள் முடிவுற்றதாகவும் இருக்கலாம், முடிவற்றதாகவும் இருக்கலாம். + +தொடர் பின்னங்களை எழுதும் முறையில் சுறுக்கு வழிகள் உள்ளன. மேலே காட்டப்பட்ட (*) குறியிட்ட தொடர்பின்னத்தை + +formula_8 என்றும் + +(**) குறியிட்ட தொடர் பின்னத்தை + +formula_9 என்றும் எழுதுவர். + +சில முக்கியமான விகிதமுறா எண்களுடைய தொடர்பின்னங்கள் பின்வருமாறு: + +formula_10 + +formula_11 + +formula_12. இது ரோஜர் கோட்ஸ் 1714 இல் கண்டுபிடித்தது. + +formula_13. இது ஜான் வல்லிஸ் 1685 இல் கண்டுபிடித்தது. + +இம்மா���ிரி விகிதமுறா எண்களின் தொடர்பின்னங்களின் சிறப்பு என்னவென்றால் அவைகளின் ஒருங்குகள் அவ்வெண்ணின் மதிப்புக்கு ஒரு தோராயமாகும். தொடரும் பின்னத்தில் எவ்வளவு உறுப்புகள் எடுத்தால் தோராயத்தின் துல்லியம் எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிடுவது ஒரு அவசியமான ஆய்வு. மேலே இருக்கும் நான்கு தொடர்பின்னங்களைப் பார்க்கும்போது சாதாரணமாக எல்லா எண்களும் சிறியதாகத்தான் இருக்கின்றன. இங்குமங்கும் சில பெரிய எண்கள் தட்டுப்படுகின்றன. ஸ்ரீனிவாச ராமானுஜனுக்கு தொடர்பின்னங்கள் விளையாட்டுப் பொருள்கள் போலவே இருந்தன.அவர் தான் இதற்கு ஒரு தந்திரம் சொன்னார். தொடர் பின்னத்தின் எண்களில், எங்கு ஒரு பெரிய எண் திடீரென்று தட்டுப்படுகிறதோ அந்த உறுப்புக்கு முன் உறுப்பு வரையில் ஒருங்கு கணித்தால் தோராயத்தின் துல்லியம் உண்மை மதிப்புக்கு வெகு அருகாமையிலேயே இருக்கும் என்பது அவருடைய உள்ளுணர்வு. + +இதன்படி பார்த்துதான் அவர் formula_14 க்கு + +formula_15 என்ற தோராயத்தை சொல்லியிருக்கவேண்டும். + +formula_14 இனுடைய தொடர்பின்னத்தின் ஒருங்குகள்: + +முதல் ஒருங்கு: 3 + +இரண்டாவது ஒருங்கு: 3 + 1/7 = 22/7 + +மூன்றாவது ஒருங்கு: + +formula_17 + += 333/106 + +நான்காவது ஒருங்கு: + +formula_18 + += 355/113 + +இந்தத்தோராயம் ஐந்தாவது நூற்றாண்டிலேயே ஒரு சீனக்கணித வல்லுனர் Tsu Chung Chih க்கு தெரிந்திருக்கிறது. இதை தசமமுறையில் எழுதினால் 3.14159292...என்று வரும். ஆனால் ராமானுஜனின் தோராயம் இப்படி formula_14 இனுடைய தொடர் பின்னத்திலிருந்து வரவில்லை. அவருக்கு formula_20 க்கு ஒரு தொடர்பின்னம் தெரியும். + +formula_20 = [97; 2,2,3,1,16539,1...]. + +இங்கு வரும் பிரம்மாண்ட எண் தான் அவருக்கு formula_22 க்கு அந்த தோராயத்தைக்கொடுத்தது. + +[97; 2,2,3,1] = 2143/22. + +இதனல் formula_14 க்கு கிடைத்த தோராயம் 99.997 % துல்லியமாக இருக்கிறது என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. + + +தொடர் பின்னங்கள் (ஆங்கிலத்தில்) + + + + +கோடம்பாக்கம் + +கோடம்பாக்கம் சென்னையின் முன்னேறியப் பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே தமிழ்த் திரையுலகைதான் குறிப்பிடுவர். தமிழ்த் திரையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும். தமிழ்த் திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் அமைந்துள்ளன. + +தியாகராய நகர், வடபழநி, நுங்கம்பாக்கம், சூளைமேடு, அசோக் நகர் மற்றும் மேற்கு மாம்ப‌லம் ஆகிய சென்னையின் பிறப் பகுதிகள் கோடம்பாக்கத்தின் எல்லைகளாக உள்ளன. சென்னைக் க‌ட‌ற்க‌ரையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து. + +கோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் ஆற்காடு சாலை (என்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவனங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். யுனைட்டட் இந்தியா காலனி, ரங்கராஜபுரம், டிரஸ்ட்புரம் மற்றும் டெய்லர்ஸ் எஸ்டேட் ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்புப் பகுதிகளாகும். + +லிபர்டி திரையரங்கம், சேகர் பேரங்காடி, மேனகா அழைப்பிதழ்கள், மீனாட்சி கல்லூரி, மீனாட்சி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, லயோலா மேனிலைப்பள்ளி மற்றும் பாத்திமா மேனிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான‌ 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது. + + + + +மே 10 + + + + + + + +மே 11 + + + + + + + +நீரிணை + +நீரிணை என்பது, இரண்டு பெரிய நீர்ப் பரப்புக்களை ஒரு நிலப்பகுதியூடாக இணைக்கும் ஒடுக்கமான நீர்ப்பரப்பு ஆகும். இதனால் நீரிணை பொதுவாக இரண்டு பெரிய நிலப் பகுதிகளுக்கு இடையே இருக்கும். உலகிலுள்ள பல நீரிணைகள் அனைத்துலகக் கடற் போக்குவரத்தில் பெரும் பங்கு வகிப்பதனால் இவை பொருளியல் ரீதியில் முக்கியமானவை. இதனால் இவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகப் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன. + + + + + +ஓர்முசு நீரிணை + +ஓர்முசு நீரிணை (ஹோர்முஸ் நீரிணை, "Straits of Hormuz") தென்கிழக்கில் ஓமான் குடாவையும், தென்மேற்கில் பாரசீகக் குடாவையும் கொண்டு அமைந்துள்ள ஒரு குறுகலான கடற் பரப்பாகும். இதன் வடக்கில் ஈரானும், தெற்கில் ஐக்கிய அரபு அமீரகமும், ஓமானின் ஒரு பகுதியான முசாந்தமும் அமைந்துள்ளன. + +இந் நீரிணையின் மிக ஒடுங்கிய பகுதி 21 மைல்கள் அகலம் கொண்டது. இதிலே, ஒன்றிலிருந்து ஒன்று 2 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள, ஒவ்வொன்றும் ஒரு மைல் அகலம் கொண்ட, இரண்டு கால்வாய்கள் கப்பல் போக்குவரத்துக்குப் பயன்படுகின்றன. பாரசீகக் குடாவைச் சுற்றியுள்ள, பெட்ரோலிய உற்பத்தி நாடுகள், திறந்த கடற்பகுதியை அடைவதற்கான ஒரே வழி இதுவே. உலகில் பயன்படுத்தப்படும் எண்ணெயின் 20% இந் நீரிணையூடாகவே கொண்டு செல்லப்படுகின்றது. இதனால் வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை இந் நீரிணை, இராணுவ முக்கியத்துவம் கொண்ட ஒன்றாகும். + +2012ல் ஈரான் அணு உலைக்கு எதிராக அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த வழியே செல்லும் எண்ணெய் கப்பல்களை மறிப்போம் என்று ஈரான் அறிவித்துள்ளது, அதனைத் தொடர்ந்து இவ்வழியே ஏற்றுமதியாகும் எண்ணெய் வியாபாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. + +ஈரான் எண்ணெய்க்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்திருப்பதற்கு எதிராக அரேபிய தீபகற்பத்தின் கச்சா எண்ணெய்களை உலகிற்கு எடுத்து செல்லும் முக்கிய வழியான ஓர்முசு நீரிணையை மூடுவதற்கு ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 100 பேர் கையெழுத்துயிட்டுள்ளனர். + + + + + +பெருவெளி (இதழ்) + +பெருவெளி இலங்கையின் அக்கரைப்பற்றிலிருந்து வெளிவர ஆரம்பித்திருக்கும் ஓர் இதழ். காலாண்டிதழாக வெளிவரும் இது பெருவெளி செயற்பாட்டாளர்களினால் வெளியிடப்படுகிறது. பெருவெளியில் பின்நவீனத்துவப் பிரதிகள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெறுகின்றன. பல முஸ்லிம் எழுத்தாளர்கள் இவ்விதழிற்குப் பங்களிக்கிறார்கள். + + +பெருவெளி இதழில் பெருவெளி பற்றிய கருத்திலிருந்து.. + +இலங்கையிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கும் சிற்றிதழ். அனைத்து வகையான அதிகாரங்களினதும் மையங்களினை நோக்கி அவற்றின் வக்கிரங்களை எதிர்த்து கதையாடுகிறது. பின்நவீனத்துவம், முஸ்லிம் தேசம் என்ற தளங்களின் முக்கிய பங்காற்றலினை பெருவெளி செய்து கொண்டிருக்கிறது. வெளியீடுகள், கதையாடல் நிகழ்வுகள் என்று விரிந்த தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் பெருவெளி இதுவரை 05 இதழ்களை அச்சில் கொண்டுவந்துள்ளது. வலைப்பின்னலூடாய் மிக விரிந்த கதையாடலுக்கு அனைவரையும் பெருவெளி அழைக்கிறது. + + + + + +பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (தமிழ்) + +ஆங்கிலத���தில் வெளியிடப்படும் கலைக்களஞ்சியமான பிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தின் சுருங்கிய வெளியீடான 'பிரிட்டானிக்கா கன்சைஸ் என்சைக்ளோபீடியா' வின் தமிழ் மொழிபெயர்ப்பு பிரிட்டானிகா தகவல் களஞ்சியம் ஆகும். இந்த படைப்பு மூன்று தொகுதிகளாக 3120 பக்கங்களுடன் 28,000 கட்டுரைகளுடனும் 2400 புகைப்படங்கள், ஓவியங்கள், அட்டவணைகள், வரைபடங்களுடனும் விகடன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. + + + + + + +கே. ஜி. அமரதாச + +கே. ஜி. அமரதாச தமிழையும் தமிழ் இலக்கியத்தையும் சிங்கள மக்களுக்கு அறிமுகப்படுத்துவதில் முன்னின்று உழைத்த சிங்களத் தமிழ் அறிஞர் ஆவார். + +1957இல் இலக்கிய உலகிற்குப் பிரவேசித்த அமரதாச தேசிய இனப்பிரச்சனையின் கூர்மையை புரிந்து கொண்டவர். தேசிய ஒருமைப்பாடு ஒருவழிப் பாதையல்ல எனக்கருதினார். பல தமிழ் இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்த்து சிங்களப் பத்திரிகைகளின் மூலம் சிங்கள வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இலங்கைக் கலாச்சார அமைச்சில் பணிபுரிந்தார். + +பாரதி நூற்றாண்டை முன்னிட்டு இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட "பாரதி பத்ய" என்னும் நூலில் மகாகவி பாரதியாரின் கவிதைகள் பல அமரதாசவின் மொழிபெயர்ப்பில் இடம்பெற்றன. "பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி", "எங்கள் நாடு", "சுதந்திரதேவியின் துதி", "புதிய ருஷ்யா", "விடுதலை" போன்ற பல பாடல்களை அவர் மொழிபெயர்த்திருந்தார். + +எஸ். எம். ஹனிபா எழுதிய "மகாகவி பாரதி" நூலைச் சிங்களத்தில் மொழிபெயர்த்தார். கண்டி-கல்ஹின்னை தமிழ் மன்றம் இதனை வெளியிட்டது. + + + + + +வலது வெண்ட்டிரிக்கிள் + +இடது வெண்ட்டிரிக்கிள் மனித இதயத்தில் உள்ள நான்கு அறைகளில் (இரு ஏட்ரியங்கள், இரு வெண்ட்டிரிக்கிள்கள்) ஒன்று ஆகும். இது ஆக்ஸிஜன் அற்ற இரத்தத்தை மூவிதழ் வால்வு வழியாக வலது ஏட்ரியத்தில் இருந்து பெறுகிறது. பின்னர் நுரையீரல் வால்வு வழியே நுரையீரல் தமனிக்கு அனுப்புகிறது. + + + + + +ஜி8+5 + +ஜி8+5 என்பது ஜி8 நாடுகள் (கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) மற்றும் பொருளாதார வளர்ச்சியடைந்து வரும் நாடுகளின் (இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, பிரேசில், மெக்சிகோ) அதிபர்களும் பிரதமர்களும் கொண்ட குழுவாகும். + + + + + +பண்டு மொழிகள் + +பண்டு மொழிகள் நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பல மொழிகளின் குழுமம் ஆகும். உண்மையில் பண்டு மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தின் துணைக் குழுவான பான்டோயிட் குழுமத்தின் ஒரு பகுதியாகும். பண்டு மொழிக் குழுவில் 513 மொழிகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதே கணக்கீட்டின்படி, பான்டோயிட் குழுமத்தில் 681 மொழிகளும், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தில் 1514 மொழிகளும் உள்ளன. + +பண்டு மொழிகள் தற்கால நைஜீரியாவுக்கு கிழக்கிலும் தெற்கிலும் உள்ள பகுதிகளில் பேசப்படுகின்றன. அதாவது, மத்திய ஆபிரிக்கா, கிழக்கு ஆபிரிக்கா மற்றும் தெற்கு ஆபிரிக்கப் பகுதிகள் இம் மொழிகள் பேசப்படும் பகுதிகளாகும். மேற்குறிப்பிட்ட பண்டு மொழிப் பகுதிகளில், நைகர்-கொங்கோ மொழிக் குடும்பத்தைச் சாராத வேறு மொழிகளும் காணப்படுகின்றன. + +பண்டு என்ற சொல்லை முதன் முதலில் இம் மொழிகள் தொடர்பில் பயன்படுத்தியவர், வில்ஹெல்ம் ஹென்றிக் இம்மானுவேல் பிளீக் (1827-1875) என்பவராவார். இது "மக்கள்" என்னும் பொருள் தருவது. + + + + +வடமேற்குக் காக்கேசிய மொழிகள் + +பொன்டிக், அப்காஸ்-அத்யாகே, சிர்க்காசியன் போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படும் வடமேற்குக் காக்கேசிய மொழிகள், சிறப்பாக, ரஷ்யா, ஜோர்ஜியா, துருக்கி, மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளில் பரந்துள்ள சிறு சமுதாயங்கள் மத்தியில் காணப்படும் மொழிக் குடும்பம் ஆகும். + +வடமேற்குக் காக்கேசிய மொழிக் குடும்பத்தில் அடையாளம் காணப்பட்ட ஐந்து மொழிகள் உள்ளன. அப்காஸ், அபாஸா, காபர்டியன் அல்லது கிழக்கு சிர்காசியன், ஆதிகே அல்லது மேற்கு சிர்காசியன், உபிக் ஆகியவை இம் மொழிகளாகும். இவை பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன: + + + + +மலாய-பொலினீசிய மொழிகள் + +மலாய-பொலினீசிய மொழிகள் என்பன ஆஸ்திரோனீசிய மொழிகளின் ஒரு துணைக் குழுவாகும். ஏறத்தாழ 351 மில்லியன் மக்கள் இம் மொழிகளுள் ஒன்றைப் பேசிவருகிறார்கள். இம் மொழிகள் தென்கிழக்கு ஆசியாவிலும், பசிபிக் பெருங்கடலிலும் காணப்படும் தீவு நாடுகளிலும், சிறிய அளவில் தலை நில ஆசியாவிலும் பேசப்படுகின்றன. இக் குழுவைச் சேர்ந்த மலகாசி மொழி, இம் மொழிகள் பொதுவாகக் காணப்படும் புவியியற் பகுதிக்கு வெளியே, இந்துப் பெருங் கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் பேசப்படுகிறது. + +பன்மையைக் குறிப்பதற்கு ஒரு சொல்லையோ அதன் பகுதியையோ இரு தடவை பயன்படுத்துதல் மலாய பொலினீசிய மொழிகளிடையே காணப்படும் ஒரு இயல்பாகும். அத்துடன் ஏனைய ஆஸ்திரோனீசிய மொழிகளைப் போல இம் மொழிகளும் எளிமையான ஒலியனமைப்பைக் (phonology) கொண்டவை. இதனால் இம்மொழியின் உரைகள் குறைவான ஆனால் அடிக்கடி வரும் ஒலிகளைக் கொண்டவை. இம் மொழிக் குழுவிலுள்ள பெரும்பாலான மொழிகளில் கூட்டுமெய்கள் (consonant clusters) இருப்பதில்லை. இம் மொழிகளுட் பல உயிரொலிகளையும் குறைவாகவே கொண்டுள்ளன. ஐந்து உயிர்களே பொதுவாகக் காணப்படுவதாகும். + + + + +வசந்த பைரவி + +வசந்தபைரவி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம்,சுத்த தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +எச்சச்சி + +எச்சச்சி இராகம் அல்லது ஹெஜ்ஜஜ்ஜி கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3ஆவது சக்கரத்தின் முதலாவது மேளமாகிய காயகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + + + + + + +கலகண்டி + +கலகண்டி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +கலகட + +கலகடா, கருநாடக இசையின் 13வது மேளகர்த்தா இராகமும், 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் முதலாவது இராகம் காயகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி), அந்தர கா��்தாரம்(க), பஞ்சமம், சுத்த தைவதம்(த), சுத்த நிஷாதம்(நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +ஹம்ச காம்போதி + +ஹம்ச காம்போதி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும். + + + + + +நதிணி + +நதிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகம் வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +குவலயாபரணம் + +குவலயாபரணம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 14ஆவது மேளகர்த்தா இராகமாகிய 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம),சுத்த தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +புவனரஞ்சனி + +புவனரஞ்சனி, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம்,சுத்த தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +தாபசப்பிரியா + +தாபசப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகம் வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பாலினி + +பாலினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியி��் 2 ஆவது இராகம் வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கலிந்தஜந்ம்திணி + +கலிந்தஜந்ம்திணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகமான வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +கலிந்தஜந்ம்திணி இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம்,சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +சந்திரசேகரப்பிரியா + +சந்திரசேகரப்பிரியா, 72 மேளகர்த்தாச் சக்கரத்தில் 3வது சக்கரமாகிய அக்னியின் 2வது இராகம் வகுளாபரணத்தின் ஜன்யமாகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம்,சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், சுத்த தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +லாசகி + +லாசகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, மேளகர்த்தாச் சக்கரத்தில் 3 ஆவது சக்கரமாகிய அக்னியின் 2 ஆவது இராகம் வகுளாபரண இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +குஷிட்டிக் மொழிகள் + +குஷிட்டிக் மொழிகள், ஆபிரிக்க-ஆசிய மொழிகளின் ஒரு துணைக் குழு ஆகும். இம்மொழிகள் "ஆபிரிக்காவின் கொம்பு" என அழைக்கப்படும் பகுதியில் பேசப்படுகின்றன. 25 மில்லியன் மக்கட் தொகை கொண்ட ஒரோமோ மொழி இவற்றுள் முதன்மையானது. அடுத்ததாக, சோமாலியா, எதியோப்பியா, ஜிபுட்டி, கெனியா ஆகிய நாடுகளில் சுமார் 15 மில்லியன் மக்களால் பேசப்படும் சோமாலி மொழி உள்ளது. இவற்றுடன், இரண்டு மில்லியன் மக்கள் பேசும், எதியோப்பியாவில் உள்ள சிடாமோ மொழி, எரித்ரியா, எதியோப்பியா, ஜிபுட்டி ஆகிய நாடுகளிலுள்ள சுமார் 1.5 மில்லியன் மக்களால் பேசப்படும் அஃபார் மொழி என்பனவும் குஷிட்டிக் மொழிகளே. + +ஜோசெப் கிரீன்பெர்க் என்பவா��ால் வகைப்படுத்தப்பட்டு, ஹரோல்ட் ஃபிளெமிங் என்பவரால் திருத்தம் செய்யப்பட்ட முறையின் படி, இம்மொழிகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. + + + + + +மே 12 + + + + + + + +மே 13 + + + + + + + +ஆடிச் செவ்வாய் + +ஆடிச்செவ்வாய் விரதம் துர்க்கை, முருகனுக்குரிய விரதமாகும். முருகப் பெருமானின் அவதாரமே செவ்வாய்க் கிரகம் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. செவ்வாய்க் கிழமைகளில் இராகு காலத்தில் மாலை 3 மணி தொடக்கம் 4:30 மணிவரை உள்ள காலத்தில் துர்க்கையை பூசிப்பது விசேடமானது என்று இந்துக்கள் கருதுகிறார்கள். பத்திரகாளி இராகுவாக அவதாரம் செய்தார் என்பர். + +செவ்வாய் தோஷத்தாலும், நாகதோஷத்தாலும் திருமணம் தடைப்பட்டவர்கள், குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்கள் செவ்வாய்க் கிழமைகளில் இராகுகாலப் பூசைகளில் பங்குபற்றுதல் நல்லது என்ற கருத்தும் உண்டு. ஆடிச்செவ்வாயில் மட்டுமன்றிப் பொதுவாகச் செவ்வாய்க் கிழமைகளில் முருகப் பெருமானை வேண்டி விரதம் கடைப்பிடிப்பதும் உண்டு. + + + + + +ஷட்விதமார்க்கிணி + +ஷட்விதமார்க்கிணி இராகம், கருநாடக இசையின் 46 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் ஸ்தவராஜம் 46 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. + + + +ஷட்விதமார்க்கிணியின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +கமனாச்ரம + +கமனாச்ரம அல்லது காமனாழ்சிரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + +கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +சுவர்ணாங்கி + +சுவர்ணாங்கி கருநாடக இசையின் 47 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) இந்த இராகத்திற்கு ஸௌவீரம் என்ற பெயர் உன்டு. + + + +சுவர்ணாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +நாமநாராயணி + +நாமநாராயணி கருநாடக இசையின் 50 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்திற்கு அசம்பூர்ண மேள பத்ததியில் நாமதேஷி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + + +ந��மநாராயணியின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +ஈரானிய மொழிகள் + +ஈரானிய மொழிகள் என்பன, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பிரிவு ஆகும். இம் மொழிக் குழு, இந்தோ-ஆரிய மொழிகளுடன் சேர்ந்து, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு கிளையான இந்தோ-ஈரானிய மொழிக் குழுவை உருவாக்குகின்றது. ஈரானிய மொழிக் குழுவைச் சேர்ந்த அவெஸ்தான், பழைய பாரசீகம் என்னும் மொழிகள் இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்திலுள்ள மிகப் பழைய மொழிகளுள் இரண்டு ஆகும். + +தற்காலத்தில், ஈரானிய மொழிகளைப் பேச்சு மொழியாகக் கொண்ட 150 - 200 மில்லியன் வரையிலான மக்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டில் கணிக்கப்பட்டபடி, 87 வகையான ஈரானிய மொழிகள் இருப்பதாகத் தெரிகிறது. இவற்றுள் மக்கட் தொகை அடிப்படையில் பெரியது 70 மில்லியன் மக்களால் பேசப்படும் பாரசீக மொழியாகும். குர்டிஷ், பாஷ்த்து என்பன ஒவ்வொன்றும் 25 மில்லியன் மக்களாலும், பலூச்சி மொழி 7 மில்லியன் மக்களாலும் பேசப்படுகிறது. + + + + +மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் + +மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் ("United Nations Human Rights Council") ஐக்கிய நாடுகளின் சர்வதேச அமைப்பாகும். இது மனித உரிமை மீறல்களைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்டது. + +47 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் அமைப்பானது முன்னைய 53 இருக்கைகள் கொண்ட மனித உரிமைகள் ஆணையத்தை மாற்றீடு செய்துள்ளது. இந்த 47 இருக்கைகளும் பிரதேச ரீதியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றது. 13 - ஆபிரிக்காவிற்கும். , 13 - ஆசியாவிற்கும், 6 - கிழக்கு ஐரோப்பிய நாடுகளிற்கும், 8 - இலத்தீன் அமெரிக்காவிற்கும், 7 - மேற்கு ஐரோப்பாவிற்கு ஏனைய நாடுகளிற்கும் பகிர்ந்தளிக்கபடுகின்றது. இந்த அமைப்பானது 16 ஜூன் 2006 இல் வேலைகளை ஆரம்பித்தது. + + + + +உலக செவிலியர் நாள் + +உலக செவிலியர் நாள் ("International Nurses Day") உலக நாடுகளனைத்திலும் மே 12 ஆம் நாளன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள் (தாதிகள்) சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. + +உலக செவிலியர் அமைப்பு ("International Council of Nurses") இந்நாளை 1965அம் ஆண்டிலிருந்து நினைவுகூர��கிறது. 1953இல் ஐக்கிய அமெரிக்காவின் அரசு சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த அதிகாரியான டொரத்தி சதர்லாண்ட் ("Dorothy Sutherland") என்பவர் இந்நாளை செவிலியர் நாளாக அறிவிக்க அன்றைய அதிபர் ஐசன்ஹோவருக்கு விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது. + +ஜனவரி 1974இல், நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த நாளான மே 12 ஆம் நாளை சிறப்பாக நினைவுகூர முடிவு செய்யப்பட்டது. + +ஆண்டுதோறும் மே 12ஆம் நாளில் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் ("Westminster Abbey") சம்பிரதாயபூவமாக இந்நாள் கொண்டாடப்படுகிறது. இங்குள்ள செவிலியர் மாளிகையில் உள்ள விளக்கு ஏற்றப்பட்டு அது அங்கு சமூகமளிக்கும் செவிலியர்கள் ஒவ்வொருவராலும் கைமாறப்பட்டு பின்னர் அது அங்குள்ள உயர்பீடத்தில் வைக்கப்படும். இது ஒரு செவிலியரில் இருந்து மற்றொருவருக்கு தமது அறிவைப் பரிமாறப்படுவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. + +ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் மே 9 இலிருந்து மே 15 வரை 1974 ஆம் ஆண்டிலிருந்து செவிலியர் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. + + + + + +1958 + +1958 (MCMLIII) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + + + +புதன் (கிழமை) + +புதன்கிழமை ("Wednesday") என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள். செவ்வாய்க்கிழமைக்கும் வியாழக்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி புதன் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள். +ஆங்கிலத்தில் இது இங்கிலாந்தில் 17ம் நூற்றாண்டு வரையில் ஆங்கிலோ-சாக்சன்களின் கடவுளாக இருந்த "Wodnes dæg" என்ற பெயரில் இருந்து மருவி Wednesday ஆகியது. ஜேர்மன் மொழியில் அதாவது நடு-வாரம் என்ற பொருளில் "Mittwoch" எனப்படுகிறது. + +"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது" என்பது தமிழ் பொன்மொழியாகும். அது நம்பிக்கை, ஐதீகத்திலானதாக இருக்கலாம். + + + + +1957 + +1957 (MCMLII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +செவ்வாய் (கிழமை) + +செவ்வாய்க்கிழமை ("Tuesday") என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வா��த்தில்) ஒரு நாள் ஆகும். திங்கட்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி செவ்வாய் என்னும் கோளுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள். + +ஆங்கிலத்தில் இந்நாளின் பெயர் "Twisday" அல்லது "Tiwes dæg", அதாவது ரோமன் கடவுளான செவ்வாய்க்கு இணையான "Tyr" என்னும் நோர்டிக் கடவுளின் பெயரடியில் இருந்து பெறப்பட்டது. இது இலத்தீன் மொழியில் இந்நாள் "Martis dies", அதாவது செவ்வாய் நாள். ஜேர்மன் மொழியில் "Dienstag", மற்றும் டச்சு மொழியில் "Dinsdag". ரஷ்ய மொழியில் "ஃப்தோர்னிக்" (இரண்டாவது), அ-வது வாரத்தின் இரண்டாவது நாளைக் குறிக்கும் சொல். + + + + +திங்கள் (கிழமை) + +திங்கட்கிழமை ("Monday") என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு கிழமையில் (வாரத்தில்) ஒரு நாள் ஆகும். ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் இந்நாள் வரும். இந்துக் காலக்கணிப்பின்படி சந்திரனுக்கு உரிய நாளாக இது பெயரிடப்பட்டுள்ளது. கிழமை என்றால் உரிமை என்று பொருள். + + +} + + + + +நிகழ்நேர இயக்குதளம் + +நிகழ்நேர இயக்கு தளம் ("Real-time operating system") என்பது இயக்கு தளங்களின் ஓர் உட்பிரிவாகும். நிகழ்நேர இயக்குதளத்தில் தகவல்கள் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகின்றன. + + + + + +இடவியல் உருமாற்றம் + +ஒரு வடிவியல் படத்தை உருமாற்றும்போது, படத்தின் ஒவ்வொரு பாகத்திலும் அண்மை என்ற உறவு பாதிக்கப் படாமலிருந்தால் அந்த உருமாற்றம் தொடர் உருமாற்றம் எனப் பெயர் பெறும். அண்மைகள் அழியாதது மட்டுமல்ல, புது அண்மைகள் தோன்றாமலுமிருந்தால், அவ்வுருமாற்றம் இடவியல் உருமாற்றம் எனப் பெயர் பெறும். இவ்வுருமாற்றங்களைப் பற்றிய இயல்தான் இடவியல். + +ஆக, ஒரு படம் இடவியல் உருமாற்றத்திற்கு உள்ளாகும்போது படத்தின் எந்தெந்த பாகங்கள் ஒன்றுக்கொன்று தொட்டுக் கொண்டிருக்கின்றனவோ அவை தொடுகையிலேயே இருக்கும்; எவை தொட்டுக் கொண்டில்லையோ அவை தொடாமலேயே இருக்கும். சுருங்கச் சொன்னால், இடவியல் உருமாற்றத்தினால் படம் உடைபடாது, புதிய சேர்க்கைகள் ஏற்படாது. குறிப்பாக இரண்டு தனித்தனிப் புள்ளிகள் தனித்தனியாகவே இருக்கும். படத்தை புள்ளிகளின் கணமாகப் பார்த்தால், இடவியல் உருமாற்றம் என்பது ஒரு ஒன்றுக்கொன்றான இயைபுடைய உருமாற்றமாகவும், இரண்டு திசையிலும் தொடர் மாற்றமாகவும் இருந்தாகவேண்டும். + +இரு இடவியல் வெளிகளுக்கிடையில் இப்படி ஒரு இடவியல் உருமாற்றம் இருக்குமேயானால் அவை இடவியல் சமானமுள்ளவை (topologically equivalent) அல்லது முழுமைத் தொடரமைவுள்ளவை (homeomorphic) என்று சொல்லப்படும். இடவியல் சமானம் என்பது ஒரு சமான உறவு. + +A என்பது ஒரு வளைகோட்டில், காட்டப்பட்ட பாகத்திலுள்ள எல்லாப் புள்ளிகளும் சேர்ந்த கணம். இயற்கையாக அதற்குள்ள இடவியலை வைத்துக்கொள்வோம். இயற்கை இடவியல் என்றால், வடிவியல் முறையில் ஒரு புள்ளி p ஐச்சுற்றி ஒரு வட்டம் வரைந்தால் அவ்வட்டத்திற்குள் A இலுள்ள புள்ளிகள் p க்கு அந்த அண்மையில் இருப்பதாகப் பொருள். இவ்விதம் p க்கு ஒரு அண்மைக்கூட்டமே இருக்கும். + +B என்பது ஒருநேர்கோட்டில் காட்டப்பட்ட பாகத்திலுள்ள எல்லாப் புள்ளிகளும் சேர்ந்த கணம். இதற்கும் ஒரு இயற்கை இடவியல் இருப்பதாகக் கொள்ளலாம். + +A யும் B யும் இடவியல் சமானமானது. ஏனென்றால், முதலில் அவைகளுக் கிடையில் ஒன்றுக்கொன்றான இயைபு உள்ளது. இதைப் பலவிதத்தில் பார்க்கலாம். மிகவும் எளிதாக மனதில் படுவது, (படிமம் 1இல் காட்டப் பட்டிருப்பது) வளை கோட்டிலிருந்து கீழே இருக்கும் நேர்கோட்டிற்கு ஒரு செங்குத்தான வீழ்ப்பு தான். அதாவது, p க்கு ஒத்த புள்ளி அதற்கு நேர் கீழே உள்ள f(p) . மேலும் இந்த கோப்பு (map) f ஒரு தொடர் கோப்பு, ஏனேன்றால் p இனுடைய அண்மையில் இல் இருக்கும் புள்ளிகள் B இல் f(p) இன் அண்மையில் இருக்கும் புள்ளிகளுக்குப் போகின்றன. எதிர் திசையிலும் f(p) இன் அண்மையில் இருக்கும் புள்ளிகள் p இன் அண்மைக்குச் செல்கின்றன. இவ்விதம் அண்மைகள் காக்கப்படுகின்றன என்பதை துல்லியமாகச் செயல்முறையில் காட்டவேண்டிய வேலை இடவியலுடையது. + +ஆக, A யும் B யும் முழுத் தொடரமைவியமுள்ளன. + +இடவியலர்கள் ஒரு வெளியின் உருவத்தைப் பற்றி கவலைப் படுவதில்லை. அதன் இடவியல் தான் அவர்களுடைய கருத்தைக் கவர்வது. எடுத்துக்காட்டாக, (படிமம் 2 ஐப்பார்க்கவும்) ஒரு முக்கோணம், ஒரு வட்டம், ஒரு மூடிய வளைவு எல்லாம் அவர்களுக்கு ஒன்றுதான். +ஆனால் ஒரு வட்டமும் ஒரு நேர்கோடும் இடவியல் சமானமல்ல. ஏனேன்றால் வட்டத்தை வெட்டினால் தான் அதை நேர்கோட்டாக்க முடியும். மேலும், நேர்கோட்டை வட்டமாக்குவ��ற்கு (படிமம் 3 ஐப்பார்க்கவும்)நேர்கோட்டின் p, q என்ற ஓரப்புள்ளிகளை ஒன்றுசேர்க்க வேண்டும். இதனால் இரண்டு விதத்தில் உருமாற்றம் தொடரமைவியத்தை இழக்கிறது. முதலில், p, q இரண்டும் வட்டத்தில் ஒரே புள்ளிக்குப் போவதால் ஒன்றுக்கொன்றான இயைபு சிதைவடைகிறது. மற்றும், p க்கும் q க்கும் C இல் இரண்டு தொட்டுக் கொள்ளாத அண்மைகள் இருக்கமுடியும், ஆனால் D இல் அவையிரண்டும் ஒரே புள்ளிக்குப் போவதால் அவ்வாறு தனித்தனி அண்மைகள் இருக்க முடியாது. ஆகையால் C யும் D யும் ஒருபோதும் இடவியல் சமானமாகாது. + +இடவியல் உருமாற்றங்கள் ரப்பராலான வடிவங்களுடைய உருமாற்றங்கள் போல் தான் என்று நினைப்பதில் ஒரு அரை உண்மை உள்ளது. ஆனால் அதற்காக ஒவ்வொரு இடவியல் உருமாற்றமும் ரப்பர் வடிவ உருமாற்றமாகத்தான் இருக்கவேண்டும் என்பது சரியல்ல. ஏனேன்றால் ரப்பர் வடிவ உருமாற்றம் என்ற கருத்தே முப்பரிமாண உருவங்களுக்குத்தான் செல்லுபடியாகும். ஆனால் இடவியலில் பரிமாணங்கள் மூன்றைத் தாண்டி முடிவிலி வரையில் செல்லும். +மேலும், முப்பரிமாண அல்லது இருபரிமாண உருவங்களில் கூட இடவியல் உருமாற்றம் ரப்பர் வடிவ உருமாற்றமாக இருக்க வேண்டியதில்லை. உதாரணத்திற்கு, படிமம் 4ஐப் பார்க்கவும். +இது ஒரு முடிச்சு. இதுவும் முடிச்சில்லாத வளையமும் இடவியல் சமானமுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள, முடிச்சில் ஏதாவது ஒரு இடத்தில் வெட்டி, முடிச்சை அவிழ்த்து அதே இடத்தில் ஒன்று சேர்த்தால் முடிச்சில்லாத வளையம் வரும். இம்மாற்றம் தொடரமைவியத்தின் இரு நிபந்தனைகளையும் ஒப்புகிறது என்பதை சற்று யோசித்தால் விளங்கும். + + + + + +மே 14 + + + + + + + +மே 15 + + + + + + + +ஜூன் 2007 + +ஜூன் 2007 2007 ஆம் ஆண்டின் ஆறாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு சனிக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஜூன் 17 இல் வைகாசி மாதம் முடிவடைகிறது. ஜூன் 18இல் ஆனி மாதம் ஆரம்பமாகிறது. + + + + + + +ஜூலை 2007 + +ஜூலை 2007 2007 ஆம் ஆண்டின் ஏழாவது மாதமாகும். இம்மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு செவ்வாய்க்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆடி மாதம் ஜூலை 17 இல் ஆ���ம்பித்து ஆகஸ்ட் 16 இல் முடிவடைகிறது. + + + + + +ஹம்சபிரமரி + +ஹம்சபிரமரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +ஹேமப்பிரியா + +ஹேமப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +பிரமரஉத்தரி + +பிரமரஉத்தரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +காம்சனவதி + +காம்சனவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +கனகபூஷாவளி + +கனகபூஷாவளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந��த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ஹைமாம்பரி + +ஹைமாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +சந்திரரேகா + +சந்த்ரரேகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +விஜயசாரங்க + +விஜயசாரங்க இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சிம்ஹாரவம் + +சிம்ஹாரவம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 58 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப் படும் 10 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஹேமவதிஇராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ரீதிச்சந்திரிக்கா + +ரீதிச்சந்திரிக்கா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்ற���கும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +ரீதிச்சந்திரிக்கா இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சுதிப்பிரியா + +சுதிப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சிறீகரி + +சிறீகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சிந்தாமணி (இராகம்) + +சிந்தாமணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ரக்திமார்க்கிணி + +ரக்திமார்க்கிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கன்கணாலங்கரி + +கண்கணாலங்கரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +தபஸ்வினி + +தபஸ்வினி 52வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ராமப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +சீமந்தனிப்பிரியா + +சீமந்தனிப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பாடலாம்பரி + +பாடலாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +விசுபதி + +விசுபதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 52 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ராமப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்��ம், சுத்த ரிஷபம் (ரி), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +குந்தலஸ்வராளி + +குந்தலஸ்வராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +குந்தலஸ்வராளி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +தீவிரவாஹினி + +தீவிரவாஹினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +தீவிரவாஹினி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த,) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ஹிந்துபோகி + +ஹிந்துபோகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சிறீகண்டி + +சிறீகண்டி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஹிந்துதன்யாசி + +ஹிந்துதன்யாசி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும���. இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப்படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +நபோமணி + +நபோமணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +நபோமணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த,) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +பகுமாரிணி + +பகுமாரிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பிரதிகாரி + +பிரதிகாரி 46வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ஷட்விதமார்க்கிணியின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +பிரஹாமி + +பிரஹாமி 46வது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்கப் படும் 8வது சக்கரத்தின் 4வது மேளமாகிய ஷட்விதமார்க்கிணியின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +சுக்திசப்பிரியா + +சுக்திசப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 46 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வஸூ" என்றழைக்க��் படும் 8 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய ஷட்விதமார்க்கிணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சுருதிரஞ்சனி + +சுருதிரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பத்மகாந்தி + +பத்மகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியாவின் இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஜோதிஸ்பதி + +ஜோதிஸ்பதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஜௌடகாந்தாரி + +ஜௌடகாந்தாரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சுத்தசாரங்கா + +சுத்தசாரங்கா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +கார்த்தியாயனி + +கார்த்தியாயினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +கோப்பிரியா + +கோப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11 ஆவது சக்கரத்தின் 2 ஆவது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + + + + + + +தேசோவதி + +தேசோவதி 62வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தின் 2வது மேளமாகிய ரிஷபப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +பிருங்கத்வனி + +பிருங்கத்வனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 62 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தின் 2வது மேளமாகிய ரிஷபப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +பிருங்கத்வனி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +உஷாகல்யாணி + +உஷாகல்யாணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53வது மேளகர்த்தா இராகமாக���ய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனாச்ரமாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +கன்னடமாருவ + +கன்னடமாருவ இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +விஜயவசந்தம் + +விஜயவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53வது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9வது சக்கரத்தின் 5வது மேளமாகிய கமனச்ரமவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், ஷ்ட்சுருதி தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + + +பிர்மத்வனி + +பிர்மத்வனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சுத்தரசாளி + +சுத்தரசாளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஹிந்துகாந்தி + +ஹிந்துகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +ஹிந்துகாந்தி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சுபிகா + +சுபிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சிரோதி + +சிரோதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), பிரதி மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +தீபரம் + +தீபரம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கனகாத்ரி + +கனகாத்ரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +நடாபரணம் + +நடாபரணம் 10வது மேளக���்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 4வது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ரசாளி + +ரசாளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "இந்திர" என்றழைக்கப்படும் முதலாவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய வனஸ்பதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + + +பானுமதி (இராகம்) + +பானுமதி இராகம் 10வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 4வது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +நாகமணி + +நாகமணி 10ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2ஆவது சக்கரத்தின் 4வது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +அலங்காரப்பிரியா + +அலங்காரப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 4வது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +கின்னரேசப்பிரியா + +கின்னரேசப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +மாதாங்ககாமினி + +மாதாங்ககாமினி 10வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2வது சக்கரத்தின் 4வது மேளமாகிய நாடகப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +சித்தபோதினி + +சித்தபோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +வைசயந்தி + +வைசயந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +யோகபோதினி + +யோகபோதினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சாந்தவபாஷினி + +சாந்தவபாஷினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 10 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப் படும் 2 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய நாடகப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +மஞ்சரி (இராகம்) + +இது 4வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +களாநிதி + +களாநிதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + + + + + + + +சிரீ சிரீ இரவிசங்கர் + +ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் (பி. மே 13, 1956) ஒரு புகழ்பெற்ற இந்திய குரு ஆவார். அவர் தமிழ்நாட்டில் உள்ள பாபநாசத்தில், ஒரு தமிழ் பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். தனது சீடர்களால் ஸ்ரீ ஸ்ரீ என்று மரியாதையுடன் அழைக்கப் படும் இவர், "வாழும் கலை" என்ற நிறுவனத்தை தோற்றுவித்தவர். இந்நிறுவனம் பண்டைய இந்திய அறிவுச் செல்வத்தை நிகழ் காலத்திற்கு ஏற்ப மாற்றி அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. + +ஸ்ரீ ஸ்ரீ, வேங்கட ரத்னம் என்ற மொழி வல்லுனருக்கும் விசாலாட்சி என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். அவர் ஆதி சங்கரர் பிறந்த நாளில் பிறந்ததால் அவருக்கு சங்கர் என்று பெற்றோர் பெயரிட்டனர். நான்கு வயதிலேயே பகவத் கீதை என்கிற இந்து புனித நூலை ஒப்பிக்கத் தெரிந்து வைத்திருந்தார். இளமைப் பருவத்திலேயே ஆழ்நிலை தியானத்தில் இருக்கும் வல்லமை பெற்றிருந்தார் என்று கருதப்படுகிறது. பதினேழு வயதில் முன்னிலை இயற்பியல் பட்டம் பெற்றார். + +இவர் மகரிஷி மகேஷ் யோகியிடம் சீடராக இருந்தார். அவரது தலைமையில் வேத விற்பன்னர்களை பயிற்றுவித்தார். அவரது அன்புள்ள சீடராகவும் விளங்கினார். பிற்காலத்தில் அவரது பெயரான ரவிசங்கருடன் ஸ்ரீ ஸ்ரீ என்கிற பெயரையும் சேர்த்துக்கொண���டார். ஏனெனில், ரவி சங்கர் என்கிற சித்தார் வல்லுநர் தனது பெயரால் குரு பயன் பெறுவதாக குற்றம் சாட்டியிருந்தார். + +1982 ஆம் ஆண்டு கர்நாடகத்தில் உள்ள ஷிமோகாவில் பத்ரா நதிக்கரையில் 10 நாள்கள் தனிமை மௌனத்திற்குப் பிறகு இவர் "சுதர்ஷன் க்ரியா" என்கிற ஒரு தாள லயமுள்ள மூச்சுப் பயிற்சியை உணர்ந்தறிந்தார். ஒரு நேர் காணலில் அவர் இந்த பயிற்சி தனக்கு ஒரு "பாடல் அல்லது உத்வேகம்" போல் தோன்றியதாக குறிப்பிட்டுள்ளார். பிறகு அவர் அதை மற்றவருக்கும் பயிற்றுவிக்கத் தொடங்கினார். அவர் சொல்கிறார்: "ஒவ்வொரு உணர்வும் மூச்சின் ஒவ்வொரு லயத்துடன் தொடர்புடையது. எனவே மூச்சை சமன் செய்வது துன்பத்தைக் குறைக்க உதவும்" + +சங்கர் 1982 ஆம் ஆண்டு "வாழும் கலை" நிறுவனத்தைத் தொடங்கினார். தலாய் லாமா மற்றும் வேறு சிலருடன் இணைந்து சர்வதேச மனித மதிப்புகள் கழகத்தை தொடங்கினார். இதன் நோக்கம் "மனித சமுதாயத்தை ஒருமைப்படுத்தும் மதிப்புகளை அறிவதும் வளர்ப்பதுவுமே" ஆகும். + +சங்கர் மூச்சை உடம்பையும் மனதையும் ஆரோக்கியமாகவும் அமைதியாகவும் வைத்துக் கொள்ள ஒரு சாதனமாகக் கருதுகிறார். அவர் தியானம் செய்வதுடன் மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் வலியுருத்துகிறார். அவருடைய நோக்கம் அறிவின் மூலம் மன உளைச்சலும் விரோதமும் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்குவது. அவர் கருத்தின்படி "உண்மை என்பது நேரானதல்ல, உருண்டையானது, எனவே அது இரு எதிர் மாறான துருவங்களைக் கொண்டுள்ளது. எந்த உருண்டையான பொருளும் இரு துருவங்களை கொண்டிருக்கும்." + +"9/11" அன்று நியூ யார்க்கிலுள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நிகழ்ந்த பிறகு, அவரது நிறுவனம் அங்கு இலவசமாக மன உளைச்சலைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டது. கொசோவோ போன்ற இடங்களிலும் நிவாரணத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஈராக்கிலும் இதன் சேவைகள் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. இதன் சேவகர்கள் சுனாமி மற்றும் கத்ரீனா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி புரிந்தனர். இது சிறைக்கைதிகளுக்கும் கூட சில பயிற்சிகளை வடிவமைத்துள்ளது. + +சுதர்ஷன் க்ரியா என்பது வாழும் கலை நிறுவனப் பயிற்சிகளின் ஒரு முக்கிய அங்கமாகும். இது உடலில் ஆற்றலைப் புகுத்தி, உடல், மனம் மற்றும் உணர்வுகளின் இயற்கையான தாள லயங்களைச் சமன் செய்யக் கூட��யதாகக் கருதப் படுகிறது. இதன் பலன்களைப் பற்றி பல்வேறு தனி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. + +இதைத் தவிர வாழும் கலை நிறுவனம் தியானம் மற்றும் குழு சார்ந்த பயிற்சிகளையும் அளிக்கிறது. ஏழ்மை மிக்க கிராம மற்றும் நகரப் பகுதிகளிலும், சிறைச் சாலைகளிலும் கூட சில பயிற்சிகளை இலவசமாக அளிக்கிறது. + +வாழும் கலை நிறுவனம் பயிற்சிகள் அளிப்பதுடன், சேவைப் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. + +ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தமது சுதர்சன் கிரியா பயிற்சிக்குக் காப்புரிமை பெற்றுள்ளார்.ஆனால் பழமையான யோகா பயிற்சிகளை மூச்சுப் பயிற்சிகளுடன் இணைத்து ஓர் மாயவலை பின்னணியில் வணிகமாக்கியிருப்பதாகவும் விமர்சகர்கள் கூறுகின்றனர். + +தன்னார்வலர்களுடன் அவர் நடத்தும் சமூக மாநாடுகளும் அவரது ஆசிரமத்திற்கு வணிகப் பலன் வேண்டியே நடத்தப்படுவதாகவும் விமரிசனம் உண்டு. + +அவரது வலைத்தளங்களிலும் பதிப்புகளிலும் உள்ள பல தரவுகள் சான்றுகள் இல்லாமலும் சரிபார்க்க இயலாதும் உள்ளன.காட்டாக,கொடுக்கப்பட்ட ஓர் பிரசுரத்தில் "இளைஞர் விழிப்புணர்ச்சி மாநாடு" (Youth Empowerment Seminar) பத்து செருமானிய பல்கலைக்கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதனை ஆங்கில இதழ் ரீடர்ஸ் டைஜஸ்ட் தம்போக்கில் ஐந்து பல்கலைக்கழகங்களில் சரிபார்த்தபோது, அவை கட்டாயமாக இல்லாமல் கல்வித்திட்டத்திலேயே இல்லாதிருந்தது தெரியவந்தது. டென்னிஸ்,உடற்பயிற்சி போன்ற மனமகிழ் செயல்பாடுகளில் ஒன்றாக விருப்பத் தேர்வாக இருந்தது. + + + + + +செருமானிய மொழிகள் + +செருமானிய மொழிகள் அல்லது இடாய்ச்சிய மொழிகள் என்பன இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தின் ஒரு பகுதிக் கிளைமொழிகளைக் குறிக்கும். இக் குழுவைச் சேர்ந்த மொழிகளின் பொதுவான முதலுரு மொழி முதலுரு இடாய்சிய மொழி (Proto Germanic) எனப்படுகிறது. இது இரும்புக் கால வட ஐரோப்பாவில், கி.மு. முதல் ஆயிரவாண்டின் நடுப்பகுதியை அண்டிய காலத்தில் (~கி.மு 500) பேசப்பட்டு வந்ததாக உய்த்திணந்தோ வருவிக்கப் பெற்றோ கூறப்பெறுகின்றது. முதலுரு இடாய்ச்சிய மொழியும் அதன் வழி வந்த கிளை மொழிகளும் பல குறித்தறியப் பெறும் தனி இயல்புகளைக் கொண்டுள்ளன. இவற்றுள் கிரிமின் விதி எனப்படும் மெய்யொலி மாற்றம் (consonant change) பரவலாக அறியப்பட்டதாகும். +��ன்று வாழும் இடாய்ச்சிய மொழிகள் யாவும் ஒன்று மேற்கு இடாய்ச்சியக் கிளையைச் சேர்ந்ததாகவோ அல்லது வடக்கு இடாய்ச்சு மொழிக் கிளையைச் சார்ந்ததாகவோ உள்ளன. மேற்கு இடாய்ச்சிய மொழிக் கிளையே மிகப்பெரியதும் பல கிளைகளைக் கொண்டதும் ஆகும். இந்த மேற்குக் கிளையின் உட்கிளைகளாக ஆங்கிலோ-ஃவிரிசியன் (Angl-Frisian), குறிப்பாக ஆங்கில மொழியும் அதன் கிளைகளும், ஐரோப்பியக் கண்டத்தின் மேற்கு இடாய்ச்சு மொழியும் அதன் கிளைகளும் (எ.கா டச்சு (இடச்சு)) உள்ளன. + + + + + +மே 16 + + + + + + + +கட்டுமானப் பொறி + +கட்டுமானப் பொறி என்பது, கட்டுமானம் மற்றும் அது தொடர்பான தேவைகளுக்குப் பயன்படும் பல வகையான கனரகப் பொறிகளுள் ஒன்றைக் குறிக்கும். இவை குடிசார் பொறியியல் மற்றும் அமைப்புப் பொறியியல் சார்ந்த கட்டுமானத் தேவைகளுக்காகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டனவாகும். + +கட்டிடம் கட்டுவதற்கு முன் இடம்பெறுகின்ற நிலநுட்பச் சோதனைகள் செய்வதிலிருந்து, கட்டிட நிலங்களை மட்டப்படுத்தல், நிலத்தை அகழ்தல், அத்திவாரம் இடுதல், கட்டிடப் பொருட்களை இடத்துக்கிடம் எடுத்துச் செல்லல், அவற்றையும் வேலையாட்களையும் பல்வேறு தளங்களுக்கு உயர்த்துதல், காங்கிறீட்டுத் தயாரித்தல், வீதிகள் அமைத்தல், கட்டிமுடித்த கட்டிடங்களைப் பேணுதல், பழைய கட்டிடங்களை இடித்தல் போன்ற இன்னோரன்ன தேவைகளுக்குக் கட்டுமானப் பொறிகள் பயன்படுகின்றன. மனித அல்லது விலங்குகளின் வலுவைப் பயன்படுத்திப் பல வாரங்கள் அல்லது மாதங்களில் செய்ய வேண்டிய பணிகளை இப் பொறிகள் சில மணி நேரங்களிலேயே செய்து முடித்துவிடுகின்றன. மனித வலுவைப் பயன்படுத்திச் செய்யவே முடியாத பல வேலைகளைக் கூடக் கட்டுமானப் பொறிகளின் உதவியுடன் மிக இலகுவாகச் செய்துவிட முடியும். பல கட்டுமானப் பொறிகள் ஊர்திகளாக இருக்கின்றன. இதனால் இவற்றைப் பொறியியல் ஊர்திகள் என்றும் அழைப்பதுண்டு. + + + + + +துளை பொறி + +துளை பொறி என்பது கட்டிடத் துறையிலும், ஏனைய குடிசார் பொறியியல் சார்ந்தகட்டுமானத் துறைகளிலும் பயன்படுகின்ற பலவகைப் பொறிகளுள் ஏதாவதொன்றைக் குறிக்கும். பல மீட்டர்கள் ஆழம் வரை நிலத்தைத் துளைக்கக்கூடிய துளை பொறிகள் உள்ளன. கட்டிடத்துறையில், பாரிய கட்டிடங்களுக்கான முளைவகை அத்திவாரங்களை அமைப்பதற்கு இவை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. நீர் பெறுவதற்காகக் குழாய்க் கிணறுகள் அல்லது துளைக் கிணறுகளை அமைப்பதிலும், பெற்றோலியத் துறையில் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதிலும் இவற்றின் பங்கு முக்கியமானது. + + + + +பாவுபொறி + +பாவுபொறி என்பது ஒரு வகைக் கட்டுமானப் பொறி அல்லது பொறியியல் ஊர்தியாகும். சாலையமைப்பு வேலைகளில் பயன்படும் இப் பொறி, சாலைப் பரப்பில் "தார்க் கலவையைப்" பரவி ஓரளவுக்கு அதனை இறுக்குவதற்கும் (compact) உதவுகிறது. சில பாவுபொறிகள் தார்க் கலவையைக் கொண்ட கொள்கலன் பொருத்தப்பட்ட வண்டியினால் இழுக்கப்படும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றில், ஏற்கனவே அமைக்கப்பட்ட அடிப்படைகளின் மீது கொட்டப்படும் தார்க் கலவையைப் பாவுபொறி சீராகப் பரவும். பின்னர் இப் படையின் மீது பாரமான உருளிகளைச் செலுத்துவதன் மூலம் மட்டமான மேற்பரப்பாக உருவாக்கப்படும். பெரும்பாலான பாவுபொறிகள் தாமாகவே நகரக்கூடியன. இறப்பரினால் ஆன சில்லுகள் பொருத்தப்பட்ட பொறிகளும், இரும்புத் தடங்கள் மூலம் இயங்கும் பொறிகளும் உள்ளன. + + + + + + +அகழ்பொறி + +அகழ்பொறி அல்லது அகழ் எந்திரம் என்பது ஒரு வகைக் கட்டுமானப் பொறியாகும். கட்டுமானத் தேவைகளுக்காக நிலத்தைத் தோண்டுவதற்கே இது பெரும்பாலும் பயன்பட்டாலும், வேறு தேவைகளுக்கும் இவற்றைப் பயன்படுத்துவது உண்டு. சில்லுகள் அல்லது இரும்புத் தடங்கள் மீது பொருத்தப்பட்ட, முழு வட்டமாகச் சுற்றக்கூடிய மேடைபோன்ற அமைப்பு இருக்கும். இதனுடன் இணைக்கப்பட்ட கை போன்ற அமைப்பு ஒன்றின் நுனியில் நிலத்தைத் தோண்டுவதற்குரிய அலகுடன் கூடிய குழிந்த பாத்திரம் போன்ற அமைப்பு இருக்கும். + +அகழ்பொறிகள் கட்டுமானத்துறையில் பல தேவைகளுக்குப் பயன்படுகின்றன. குழாய்கள் அமைத்தல், அத்திவாரம் இடுதல் போன்றவற்றுக்கான குழிகளை வெட்டுவதற்கும், கட்டிடப் பொருட்களை இடத்துக்கிடம் காவிச் செல்லவும், அமைப்புக்களைத் தகர்ப்பதற்கும், நிலத்தை மட்டப்படுத்துவதற்கும், பாரமான பொருட்களை உயர்த்துவதற்கும், திறந்த அகழ்வுச் சுரங்க அமைப்பிலும், ஆறுகளைத் தூர்வாரும் வேலைகளிலும் அகழ்பொறிகள் பயன்படுத்தப்படுகின்றன. + + + + + +மே 17 + + + + + + + + +நங்கநல்லூர் + +நங்கைநல்லூர் தமிழகத்தின் சென்னை புறநகர் பகுதியில் பன்னாட்டு விமான நிலையம் ஒட்டி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்புப் பகுதி. நங்கைநல்லூர்,பழவந்தாங்கல்,தலக்கனன்சேரி மற்றும் ஆதம்பாக்கம் கிராமங்கள் அனைத்தும் ஒருகிணைந்த குடியிருப்பு பகுதியே நங்கைநல்லூர் என்று அழைக்கப்படுகிறது. சென்னைக்கே உரித்தான பன்முகத் தன்மைகளான பல சமயங்கள், பல இனங்கள், பல மொழிகள் பேசுவோர் இவ்வூரிலும் வாழ்கின்றனர். மீனம்பாக்கம் மற்றும் பழவந்தாங்கல் ஆகிய இரண்டு தொடர்வண்டி நிலையங்களை கொண்டது. சமீப காலமாக கோயில்களால், குறிப்பாக இங்குள்ள 32 அடிக்கு மிக பிரம்மாண்டமாக உள்ள ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் கோயிலால் இவ்வூர் மிகவும் புகழடைந்து வருகிறது. + +தட்சிண தீபாலாயம் என்பது இவ்வூரின் புராண பெயராகும். சோழர்காலத்தில் இவ்வூர் தன்மீச்சுரம் என்று அழைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அருகருகே அமைந்துள்ள சோழர்காலத்திய தர்மலிங்கேசுவரர் (தன்மீச்வரர்) என்ற சிவன் கோவிலும், பல்லவர் காலத்திய லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோயிலும் இவ்வூரின் பழமையை கூறுகின்றன. + +இவை தவிர குறிப்பிட்டு சொல்லத்தக்க உத்திர குருவாயூரப்பன் கோயில், நங்கைநல்லூர் ஐயப்பன் திருக்கோயில், இராஜராஜேசுவரி கோயில், இராகவேந்திர கோயில், சத்ய நாராயணன் கோயில், தேவி கருமாரியம்மன் கோயில், முத்து மாரியம்மன் கோயில், ஏழூரம்மன் கோயில், ஹயவதன பெருமாள் கோயில், அர்த்த நாரீசுவரர் கோயில், லட்சுமி நாராயணன் கோயில், லட்சுமி ஹயக்ரீவர் கோயில், ஸர்வ மங்கள நரசிம்மர் கோயில், சித்தி விநாயகர் கோயில் உட்பட பல கோயில்களால் நிறைந்து "கோயில் நகரம்" என்றழைக்கப்படுகிறது. + +காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகளால், இவ்வூருக்கு நங்கைநல்லூர் (திருமகள் வாழும் ஊர்) எனப் பெயரிடப்பட்டு இப்போது நங்கநல்லூர் என மறுவியுள்ளது. + +அடிப்படை வசதிகளை ஒரளவுக் கொண்ட இவ்வூர் மீனம்பாக்கம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், திருசூலம் மற்றும் மூவரசம்பேட்டை ஆகிய ஊர்களை எல்லையாகக் கொண்டு சென்னையோடு 2011 ம் வருடம் இணைக்கப்பட்டது. + +தரம் வாய்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இவ்வூரிலும் இத��ை சுற்றியும் நிறைந்திருப்பது இப்பகுதியின் சிறப்புகளில் ஒன்றாகும். அவைகளில் 9.5 ஏக்கர் பரப்பில் பரந்து விரிந்த நேரு அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, ஜெயகோபால் கரோடிய பெண்கள் மேனிலைப்பள்ளி, மைய அரசினால் நடத்தப்படும் டிஜிக்யூ மேனிலைப்பள்ளிகள் இரண்டு, நம்மாழ்வார் முன்மாதிரி மெட்ரிகுலேசன் பள்ளி, செல்லம்மாள் வித்யாலயா, பிரில்லியண்ட் மெட்ரிகுலேசன் பள்ளி, ப்ரின்சு குழும பள்ளி ஆகியன குறிப்பிடத்தக்கன. +சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சிஸ் வங்கி, அக்சிஷ் வங்கி, பஞ்சாப் நேசனல் வங்கி, கரூர் வைசிய வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ஐ டி பி ஐ வங்கி, எச் டி எப் சி வங்கி, மற்றும் பல முக்கிய வங்கிகளின் கிளைகள் இங்கு உள்ளன. + + + + +மே 18 + + + + + + + +கிள்ளிவளவன் + +நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகியோரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான். கோவூர்கிழாரின் ஒரேவொரு பாடலில், பாடப்பட்டுள்ள மற்றொரு கிள்ளிவளவன், குராப்பள்ளியில் இறந்தான் என்று கூறப்படுகிறது. ஆனால் இவ்விரு மன்னர்களுமே ஒருவரே என்று கூறப்படுகிறது. இது எவ்வாறாயினும் கோவூர்கிழாரின் பாடல், கிள்ளிவளவன் கருவூரைக் கைப்பற்றிய பிறகே இயற்றப்பட்டதாகும். ஆலத்துர் கிழார் தம் பாடலில், கருவூரைக் கைப்பற்றுவதற்கு முன் நிகழ்ந்த ஒரு முற்றுகையைப்பற்றி கூறுகிறார். கிள்ளிவளவனின் புகழைப்பற்றி பத்து புலவர்கள் பதினெட்டு பாடல்கள் பாடியுள்ளனர். சிறுகுடி என்னும் பகுதியின் தலைவனான பண்ணன், என்ற இவனது நண்பனைப் புகழ்ந்து பாடப்பெற்றுள்ள பாடல் இவன் (கிள்ளிவளவனே) இயற்றியதே. இவன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். +இம்மன்னன் வீரமும் பெருந்தன்மையும் பலவகைத்திறமையும் வாய்ந்தவன். ஆனால், செருக்குமிக்கவன். இதனால் பல புலவர்கள் இவனுக்கு அறிவுரை வழங்கி, இவனை நல்ல முறையில் திருத்தியுள்ளனர். வெள்ளைக்குடி நாயனார் என்னும் புலவர் தம் ஊரின் நிலத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த வரியைத் தள்ளுபடி செய்யுமாறு கீழ்வரும் செய்யுமாறு கீழ்வரும் பாட்டினை அவர் பாடியுள்ளார். +சேரரின் தலைநகரான கரூரை முற்றுகையிட்டு, பின் அதைக் கைப்பற்றியதே கிள்ளிவளவனின் மிகச்சிறந்த போர் வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியைக்குறித்து பல நாட்கள் சிறப்பாகப் பேசுகின்றன. தனக்கு பொருத்தமில்லாத பகைவனுடன் போரிடுவது தகாது, பொருந்தாது, நியாயமாகாது என்று கிள்ளிவளவனுக்கு எடுத்துரைக்கும் வகையில் கரூரை அழிவின்றி காக்க, முயன்றவர் ஆலத்தூர் கிழார் என்னும் புலவர். ஆனால் இப்புலவரது முயற்சி வெற்றி பெறவில்லை, அழகிய நகர் வீழந்தது. இதைப்பற்றி மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் புலம்புகின்றார். +இதே போல் கபிலரும், மாறோகத்து நப்பசலையாரும், புறநானுற்றுப் பாடல்கள் பலவற்றில் புலவர்களிடம் இவன் காட்டிய கொடைத்திறனை வியந்து பாடியுள்ளனர். வெற்றிபெற்ற சோழமன்னன் மலையமானின் குழந்தைகளுக்கு அளித்த மரணதண்டனையிலிருந்து அவர்கள் தப்பி விடுதலை பெறச்செய்து இவர்களைப்போன்ற ஒரு புலவர் எழுதிய ஒரு பாடலே. +இம்மன்னன் இறந்தபொழுது பாடப்பட்ட இரு இரங்கற்பாக்கள், இவன் இறந்த இடமாகிய குளமுற்றம் எங்குள்ளது என்றோ, இவன் இறந்ததற்கு காரணம் என்ன என்றோ கூறாவிடினும் இவனது அகந்தையை எடுத்துக்காட்டுகின்றன. + + + + +சோழன் செங்கணான் + +கரிகாலனது வாழ்க்கையைப் போன்று, கோச்செங்கணான் வாழ்க்கையைச் சுற்றியும் எண்ணற்ற கற்பனைக் கதைகள் பின்னப்பட்டுள்ளன. இவன் காலத்திய சான்றுகள் பிற்காலத்தில் ஏற்பட்டு தலைமுறை தலைமுறையாக நம்பப்பட்ட செய்திகளும் இரண்டறக் கலந்துவிடாமல் பிரித்துப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. புறநானூற்று பாடலொன்றும் பொய்கையார் பாடல் நாற்பது பாடல்களைக் கொண்ட களவழியும் இவனது வாழ்க்கையைப்பற்றிய தொன்மையான சான்றுகளாகும். திருஞானசம்மந்தரும் திருமங்கையாழ்வாரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் தங்கள் பாடல்களில் இம்மன்னனது சமய வாழ்க்கையைப்பற்றி விளக்குகின்றனர். பத்து பதினோராம் நூற்றாண்டுகளில் கிடைக்கும் சோழர் செப்பேடுகளிலிருந்து தெரியும் புராண மரபுவழிகளும் இவனைப்பற்றிக் கூறிப்பிட்டுள்ளது. +நெல் முதலான விளைச்சலை அடித்து அழி தூற்றும் களத்தைப் பாடுவது 'ஏரோர் களவழி'. பகைவரை அழிக்கும் போர்க்களத்தைப் பாடுவது 'தேரோர் களவழி' தேரோர் களவழியைப் பாடும் நூல் களவழி நாற்பது. இந்தக் களவழி பெரும்பாலும் மரபுவழிச் செய்திகளையே கொடுத்தாலும், சில சமயம் கொங்கு நாட்டில் கரூருக்கு அருகே இருந்திருக்கலாம் எனக் கற்பனை செய்யப்படும் கழுமத்தில் நடைபெற்ற போரைப் பற்றி கொடூரமான வர்ணனைகளையும் தருகிறது. சோழ மன்னன் செங்கணான் சேரமன்னன் கணக்கால் இரும்பொறையை வென்று சிறையிலிட்டான் என்றும், புலவர் பொய்கையார் செங்கணான் போரைச் சிறப்பித்துப் பாடி அதற்குப் பரிசாகச் சேரனை மீட்டார் என்றும் கூறப்படுகிறது. + + +திருமால் வழிபாடு +போர் வெற்றிகள் +சிவாலயங்கள் +அன்பில் செப்பேடு + +சேக்கிழார் குறிப்பிடும், செங்கணான் என்ற இவனது பெயரும், இவன் சோழ குடும்பத்தில் பிறந்தவன் என்பதும் ஜம்புகேஸ்வரம் உள்ளிட்ட பல இடங்களில் சிவபெருமானுக்கு இவன் கோயில்கள் எடுத்த விவரங்களும் இம்மன்னனைப்பற்றி பாடியுள்ள நாயனார் யாரென்று முடிவுகட்ட உதவுகின்றன. + +தலவிருட்சம் அமைத்த மன்னர் : +தில்லைக்குத் தில்லை, மதுரைக்குக் கடம்பம், காஞ்சிக்கு மா, குற்றாலத்திற்குக் குறும்பலா என்று +ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு மரத்தை தலவிருட்சமாக அமைத்த மன்னர் கோச்செங்கணான் எனும் கடைச்சங்க காலத்துச் சோழ மன்னர். + + + + + +பெருநற்கிள்ளி + +சங்ககாலத்துச் சோழ மன்னர்களுள் இராசூய யாகத்தைச் செய்த பெருங்கிள்ளி, மிகப்பலம் வாய்ந்த மன்னனாக இருந்திருக்க வேண்டும். சேரமன்னன் மாரி வெண்கோவும், பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதியும் பெருங்கிள்ளியின் ஆட்சியின் தொடக்கத்தில் நடைபெற்ற இந்த யாகத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியைக் கண்ட ஒளைவயார் பாடிய வாழ்த்துப்பாவில் இம்மூன்று மன்னர்களையும் குறிப்பிட்டதிலிருந்து ஒருவாறு அறியலாம். +"தேவலோகம் போன்ற இந்த நாடு உன்னால் ஆளப்பட்டாலும் சரி, உன் பகைவரிடம் சென்றாலும் சரி, உண்மையில் அது துறவிகளுக்கு உரிமையானது. பிராமணர்களக்கு நீ தண்ணீரும் பூவும் பொன்னும் தருவாயாக, மிளiரும் நகைகளை அணிந்த வேலைக்காரப்பெண்கள் தங்ககுவளைகளில் தரும் மதுவை அருந்தி மகிழ்வாயாக அந்த மகிழ்ச்சியில் தேவைப்பட்டவர்களுக்கு எளியவர்களுக்கு பரிசுகளை அள்ளி வழங்குவாயாக. அறச்செயல்கள் தாமே இறுதி நாளில் உன்னைத் துணை நிற்கும் வெண்கொற்றக் குடைகளும் வீரத்தேர்களும் உடைய அர��ர்களே நீவர் நீடு வாழ்க. (புறம். 367)" +பெருங்கிள்ளிக்கும், சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறைக்கும் நடந்த போரில், தேர் வண்மலையன் என்ற தலைவன் சோழ மன்னனுக்கு ஆதரவாக போரிட்டதாக கொளு கூறுகிறது. சோழ மன்னனின் நண்பனையோ இல்லை பகைவனையோ யார் என்று அறுதியிட்டு கூறமுடியவில்லை. + + + + +அசிரியா + +பண்டைக் காலத்தில் அசிரியா என்பது, டைகிரிஸ் ஆற்றின் மேற்பகுதியைச் சார்ந்த ஒரு நிலப்பகுதியைக் குறித்தது. இப் பகுதியில் பழங்காலத் தலை நகரமாக விளங்கிய அசூர் என்னும் நகரின் பெயரைத் தழுவியே அசிரியா என்னும் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் அசிரியா லெவண்ட், பண்டைய மெசொப்பொத்தேமியா, பண்டைய எகிப்து, அனத்தோலியாவின் பெரும்பகுதி ஆகியவற்றைக் கட்டுப்படுத்திய பெரிய பேரரசாக விளங்கியது. எனினும் முறையான அசிரியா என்பது மெசொப்பொத்தேமியாவின் வட அரைப்பாகத்தையே குறித்தது. இது நினிவேவைத் தலைநகரமாகக் கொண்டிருந்தது. தென்பகுதி பபிலோனியா எனப்பட்டது. + +அசிரியத் தாயகம் மலைப் பகுதிகளை அண்டி அமைந்து, டைகிரிஸ் ஆற்றோரமாக, "அசுர் மலைகள்" என அழைக்கப்பட்ட ஆர்மீனியாவின் கார்டுச்சிய மலைத்தொடர் வரை விரிவடைந்து இருந்தது. + +அசிரிய அரசர்கள் வரலாற்றின் மூன்று கட்டங்களில் பெரும் நிலப் பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். இவை, பழைய, இடைக்கால, புதிய-அசிரிய அரசுகள் எனப்பட்டன. இவற்றுள், மிகப் பலம் பொருந்தியதும், பரவலாக அறியப்பட்டதுமான அரசு, கி.மு 911 க்கும், 612 க்கும் இடையில் நிலவிய புதிய-அசிரிய அரசு ஆகும். + +அசிரியாவிலுள்ள பெரும்பாலான புதியகற்காலக் களங்கள், ஹஸ்சுனா பண்பாட்டின் மையமான டெல் ஹஸ்சுனாவில் காணப்படுகின்றன. அசிரிய அரசின் முற்பட்ட வரலாறு பற்றி அதிக தகவல்கள் கிடையா. சில யூத-கிறிஸ்துவ மரபுகளின்படி, அசுர் நகரம், ஷெம்மின் மகனான அஷுர் என்பவனால் நிறுவப்பட்டது எனக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் அஷுர் இந் நகரத்தின் காவற் கடவுளாகக் கருதப்பட்டான். + +மேல் டைகிரிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதி தொடக்க காலங்களில் சுமெர், அக்காட், வட பபிலோனிய அரசுகளால் ஆளப்பட்டதாகத் தெரிகிறது. + +அசிரிய ஆட்சியாளர்களில் முந்திய கல்வெட்டுக்கள் கி.மு 2000 ஆம் ஆண்டுக்குப் பிந்தியவை. அக்காலத்தில், அசிரியா பல நகர ஆட்சிப் பகுதிகளையும், சிறிய செமிட்டிக் அரசுகளையும் கொண்டிருந்தது. அசிரிய முடியாட்சியை நிறுவியவனாக கி.மு 1900 ஆவது ஆண்டுக்குப் பின் வாழந்தவனான ஸுலிலு என்பவன் என்று கருதப்படுகிறது. + + + + + + +ஆப்பெழுத்து + +ஆப்பெழுத்து உலகின் மிக முற்பட்ட எழுத்து முறைகளுள் ஒன்றாகும். இது சுமார் கி.மு. 3000 ஆண்டளவில் சுமேரியர்களால் உருவாக்கப்பட்டது. ஆப்பெழுத்துக்கள் தொடக்கத்தில் பட எழுத்துக்களாகவே ஆரம்பித்தன. காலப் போக்கில் இவை எளிமையாக்கப்பட்டுப் நுண்மமாக்கல் (abstract) தன்மை கொண்டனவாக மாறின. + +ஆப்பெழுத்துக்கள் களிமண் தகடுகளில், ஸ்டைலஸ் எனப்படும் மழுங்கிய புற்களால் எழுதப்பட்டன. இவற்றால் உருவான பதிவுகள் ஆப்பு வடிவில் இருந்ததால், இவை ஆப்பெழுத்துக்கள் எனப்பட்டன. + +ஆப்பெழுத்துகள் மெசொப்பொத்தேமியாவின் சுமேரிய மொழி அக்காடிய மொழி, எலமைட் மொழி, ஹிட்டைட் மொழி, ஹுரியன் மொழி போன்ற மொழிகளை எழுதுவதற்குப் பயன்பட்டது. + + + + +தேனீ + +தேனீக்கள் ஆறுகால்கள்(orthropods) கொண்ட பறக்கும் சிறு பூச்சி இனத்தில் ஒன்றாகும். இவை பூவில் இருந்து பூந்தேனை உறிஞ்சி சேகரித்து தேனடையில் தேனாக சேகரித்து வைக்கின்றன. + +இவை ஈ பேரினத்தில் ஒரு வகை ஆகும். ஈ பேரினத்தில் இன்று ஏறத்தாழ 20,000 வகைகள் அறியப்பட்டுள்ளன. அவற்றுள் ஏழு இனங்கள்தான் தேனீக்கள் ஆகும். இந்த தேனீக்களில் மொத்தம் 44 உள்ளினங்கள் உள்ளன. அறிவியலில் தேனீக்கள் "ஏப்பிடே" (Apidae) என்னும் குடும்பத்தில், "ஏப்பிஸ்" (Apis) என்னும் இனத்தைச் சேர்ந்தவை. + + +தேனீக்கள் பெருங்கூட்டமாக, தேனடை என்னும் ஆயிரக்கணக்கான அறுகோண அறைகள் கொண்ட கூடு கட்டி, அதில் தேனை சேகரித்து வாழ்கின்றன். தேனீக்கள் தமது உடலில் இருந்து வெளியேற்றும் மெழுகால் இந்தக் கூடுகள் அமைக்கப்படுகின்றன. + +தேனீக்கள் ஏறக்குறைய ஒரு லட்சம் கிலோ மீட்டர் வரை பயணிக்கும் திறனைக் கொண்டதாகும். +தேனீக்கள் ஏன் தேனை சேமித்து வைக்கின்றன? என்ற கேள்விக்கு விடை தேடிச் சென்றால் நமக்குக் கிடைக்கும் பதில் மலர்கள் பூக்காத உணவு உற்பத்திக்கு வழியே இல்லாத குளிர் காலத்திற்காக இவைகளால் முன் கூட்டியே சேகரிக்கப்படும் பாதுகாப்பு நடவடிக்கைதான் தேன் சேகரிப்பு ஆகும். தேனீக்கள் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றல் பெற்றதாகும். ஒரு வருடத்தில் இவைகளினால் கூட்டிற்கு 450 கிலோ எடையுடைய மலரின் குளுகோஸ், மரங்களிலிருந்து கொண்டு வரப்படும் புரொபோலிஸ் என்னும் பிசின், நீர் மற்றும் மகரந்தம் கொண்டு வரப்படுகின்றன என்று சொன்னால் ஒரு கூட்டில் வேலைக்காரத் தேனீக்களின் பங்களிப்பு என்னவென்பதை நம்மால் உணர முடிகின்றது. இவை இவ்வளவு தொலைவிலிருந்து சேகரித்து வரும் மலரின் குளுகோஸ் ஏறக்குறைய ஒரு பவுன்டு எடையுடைய தேனை உற்பத்தி செய்ய போதுமானதாகும். இவை முதலில் கூட்டை விட்டு வெளியில் சென்று மலர்களின் உள்ளே இருக்கும் மலரின் மதுவை(nectar) உறிஞ்சி உட்கொள்கின்றன. பின்னர் மலரின் மகரந்தத்தையும் சேகரித்து திரும்பி கூட்டிற்கு வருகின்றன. திரும்பிய உடன் மகரந்தத் தூளை நேரடியாக அறைக் கூட்டில் இட்டு சீல் வைக்கின்றன. இந்த மகரந்தத் தூள் நிறைய புரதம் மற்றும் தாதுத் பொருட்கள் நிறைந்ததாகும். மேலும் இவற்றில் 10 க்கு மேற்பட்ட அமினோ அமிலங்கள் உள்ளன. இதைத் தேனுடன் கலந்து லார்வாக்களுக்கு கொடுக்கின்றன. பின்னர் கூட்டை பராமரிக்கும் தேனீக்களின் வாயில் இவை வயிற்றிலிருந்து வெளிகொணர்ந்த தேனை கொடுக்கின்றன. இவை ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றிலிருந்த கக்குகின்றன. இவை வெளியில் ஏதேனும் புதிய மலர் பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை துல்லியமாக ஒரு வித்தியாசமான நடன அசைவின் மூலம் மற்ற தேனீக்களுக்கு தெரிவிக்கின்றன. + +வரலாற்றில் தொல்லுயிர் எச்சங்களில் தேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததாகத் தெரிகின்றது. இத்தொல்லுயிர் எச்சங்கள் ஐரோப்பாவில் கிடைத்திருந்தாலும், தேனீக்கள் பெரும்பாலும் கிழக்கு ஆசியாவில் இருந்து தோன்றியதாக அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர். மாந்தர்கள் கி.மு 4000 ஆண்டுகளிலேயே தேனீக்கள் வளர்த்து தேன் உற்பத்தி செய்தார்கள் என்றும் கி.மு.1500-2000 என்றும் பல்வேறு கணிப்புகள் உள்ளன + +தேனீக்கள் பூவுக்குப் பூ சென்று மகரந்தத்தை (பூந்துகள்) சேகரிக்கையில், அவற்றை ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்கு கடத்துவதால், பூக்களிடையே சூலுற (கருவுற) உதவுகின்றது. இதனால் சில மரஞ்செடிகள் காய்த்து விதையிட்டு இனம் பெருக்குவதில் தேனீக்களின் பங்கும் இருக்கிறது. இதனை பூந்துகள் சேர்க்கை (மகரந்தச்சேர்க்கை) என்பர். + +உலகில் தேனீக்களால் நிகழும் பொருளியல் ஈட்டம் பில்லியன் டாலர் கணக்கில் இருக்கும். அமெரிக்காவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 94 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கிறார்கள் (1985 ஆம் ஆண்டுக் கணக்கு) , கனடாவில் ஆண்டொன்றுக்கு ஏறத்தாழ 34 மில்லியன் கிலோ கிராம் தேன் உற்பத்தி செய்கின்றார்கள் + +தேனீக்களின் வாழ்க்கை முறையும் சற்று வேறுபாடானது. இவை கூட்டமாய் ஓரினமாய் இணைந்து வாழ்கின்றன. இவைகளை "குமுகப் பூச்சியினம்" என்பர். ஒரு கூட்டத்திற்கு ஒரு பெண் தேனீ தான் அரசியாக இருக்கின்றது. அதனைச் சுற்றி ஏறத்தாழ 1000 ஆண் தேனீக்கள் இனப்பெருக்கதிற்காக மட்டுமே உள்ளன. இவைதவிர பணிசெய்ய பெண் தேனீக்கள் 50,000-60,000 வரை இருக்கும். பணிசெய் தேனீக்களின் வாழ்நாள் 28 முதல் 35 நாட்கள் ஆகும். தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப் படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள். + +இராணித் தேனீ மற்ற தேனீக்களைக் காட்டிலும் பெரியதாக இருக்கும். இவை 16 மி.மீ நீளம் முதல் 20 மி.மீ நீளம் வரை இருக்கும். இவை 16 நாட்களுக்குப் பிறகு முழு வளர்சியடைந்து கூட்டிலிருந்து வெளி வந்து கிட்டத்தட்ட ஒரு கிழமையில் வெளியே பறந்து சூழலை அறிமுகப்படுத்திக் கொள்ளும். இது அறிமுகப் பறப்பு (Orientation flight) எனப்படும். அதன்பிறகு விரைவில் கலவிப்பறப்பை (nuptial flight or mating flight) மேற்கொள்ளும். கலவிப் பறப்பின்போது ஏறக்குறைய 10 முதல் 18 ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது. தரை மட்டத்திலிருந்து, 65-100 அடி உயரத்தில் பறந்த நிலையிலேயே ஆண் தேனீக்களுடன் கலவி கொள்கின்றது. இயக்குநர் Markus Imhoof என்பவரால் தயாரிக்கப்பட்ட More Than Honey எனப்படும் விவரணப்படத்தில் இந்த கலவிப்பறப்பு மிகவும் அருகில் தெளிவாகக் காட்டுகின்றது +இராணித்தேனியின் அடையாளம்: + +அதன் மூலம் மில்லியன் கணக்கான ஆண் உயிர் அணுக்களை பெற்றுக் கொள்கின்றது. அதன் பின்னர் அவை இறக்கும் காலம் வரை உறவில் ஈடுபடுவதில்லை. அவை ஆண் ஈக்களிடமிருந்து பெற்ற அந்த உயிரணுக்களைக் கொண்டே அது இறக்கும் காலம் வரை முட்டையிட்டுக் கொண்டிருக்கும். இனப்பெருக்கத்தில் ஈடுபட்டதன் பின்னர் 10 நாட்கள் கழித்து முட்டையிட ஆரம்பிக்கின்றது. ஒரு இராணித் தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 முட்டைகளையும் வருடத்திற்கு இரண்டு லட்சம் முட்டை வரையிலும் இடக்கூடிய திறன் பெற்றதாகும். + +இவை இட��விடாது பணியில் ஈடுபடுவதால் இவற்றிற்கு ஓய்வு என்பதே இல்லை என்று சொல்லுமளவிற்கு பணியில் ஈடுபடுகின்றது. இராணித் தேனீயின் உணவுத் தேவையை கவனிப்பதற்கென்றே 5 முதல் 10 தேனீக்கள் வரை அமர்த்தப்படுகின்றன. 20 முட்டை வரை இட்டதன் பின்னர், முட்டை இட்ட களைப்புத் தீர ஒரு முறை இவற்றிற்கு ஆகாரம் அளிக்கப்படுகின்றது. + +இவை தங்கள் இறுதி காலத்தில் கிழப் பருவமெய்தி முட்டையிடும் தகுதியை இழந்துவிடுகின்றன. இதை அறிந்த உடன் வேலைக்காரத் தேனீக்கள் புதிய இராணித் தேனீயை உருவாக்கும் முயற்சியில் துரிதமாக இறங்கிவிடுகின்றன. புதிய இராணித் தேனீயை உருவாக்க அறை விரைவாக பழுது பார்க்கப்படுகின்றது. கடைசி நேரத்தில் இடப்பட்ட முட்டைகள் சில தேர்ந்தெடுக்கப்பட்டு இராணித் தேனீயை உருவாக்க கட்டப்பட்ட பெரிய அறைகளில் முட்டைகள் வைக்கப்பட்டு, விரைவில் பொரித்து வெளிவர ஆவன செய்யப்படுகின்றது. + +ஆண் தேனீ பொதுவாக செயலற்ற நிலையில் பெரும்பகுதி நேரத்தைக் கழிக்கக் கூடியதாகும். ஒரு கூட்டில் இவற்றின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் அமைந்திருக்கும். இவை தேன் சேகரிக்க வெளியில் செல்வதுமில்லை. தங்கள் கூட்டிற்கு ஆபத்து வரும் போது அவற்றைக் காக்கும் பொருட்டு எதிரியை கடிக்கும் திறனையும் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் இவற்றிற்கு கொடுக்கு அமைப்பு இல்லை. + +இவற்றிற்கு கூட்டிற்குள் எந்தத் தகுதியும் இல்லை என்பதை இவை உணர்ந்து நடந்து கொள்கின்றன. இவை தங்கள் உணவுத் தேவை மற்றும் பாதுகாப்புத் தேவைக்கு வேலைக்காரத் தேனீக்களைச் சார்ந்து வாழ்கின்றன. + +தேனீக்களின் நடனம்: தேனீக்களின் கூடு கட்டும் நிலைகள், கூட்டினை இடம்பெயர்த்தல் என்பது எறும்பினை ஒத்தது. எறும்புகள் வேதியியல் முகர்ச்சி மூலம் தங்களுக்குள் பேசிக்கொள்கிறது. மாறாக தேனீக்கள் நடனம் மூலம் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்கின்றன. + +இடம்பெயர முதலில் ஒரு இடத்தை வேவுபார்க்கும் வேலைக்காரத்தேனீ உகந்த இடத்தை நடந்து அளக்கிறது. அதற்கு முன் பலவித இடங்களை தேர்ந்தெடுக்கிறது. பிறகே அதனை அளக்கிறது. அத்தகவல்களை, பிற வேலைக்காரத்தேனிக்களின் குழுவிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது. அவை பறந்து சென்று, புதிய இடத்தைக் கண்டுணரந்து, கூட்டிலுள்ள பிற தேனிக்களிடம் நடனம் மூலம் தெரிவிக்கிறது. + +இறுதியா�� கூட்டிலுள்ள பல்லாயிரக்கணக்கானத்தேனிக்கள் ஒருசில நிமிடங்களில் புதிய இடத்திற்கு இடம் பெயர்ந்து விடுகிறது. இத்தகைய துல்லியமான இடம் பெயர்ப்பு நிகழ்வு நடனம் மூலமே நிகழ்கிறது. + +புதிதாகப் பொரித்து வெளிவரும் இராணித் தேனீக்களுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உயிர் விடுவதே இந்த ஆண் தேனீக்களின் செயலாகும். இந்த ஒரு இனப்பெருக்கக் காரணத்திற்காகவே இவை மற்றவைகளினால் சகித்துக் கொள்ளப்படுகின்றன. + +இவை பறந்த வண்ணம் இராணித் தேனீயுடன் இனப் பெருக்கத்தில் ஈடுபட்டவுடன் இவற்றின் சிறகுகள் உதிர்ந்து கீழே விழுந்து இறந்துவிடுகின்றன. மேலும் சில பொழுது இவற்றின் சோம்பேறித் தனத்திற்கு பரிசாகக் கூட்டில் உணவு பற்றாக் குறை ஏற்படும் போது பலவந்தமாக, நிர்க்கதியாக கூட்டை விட்டு வெளியேற்றப்பட்டு பட்டினியால் சாகடிக்கப்படுகின்றன. இதன் காரணத்தாலேயே இவை 'சோம்பேறிகள்' என்றும் அழைக்கப்படுகின்றன. + +மலரின் மது தேனீக்களினால் உறிஞ்சி உட்கொள்ளப்பட்டு பின்னர் அவற்றின் வயிற்றிலிருந்து வெளிவருவதுதான் இனிய நலன் பயக்கும் தேன் ஆகும். முட்டையிட்டு சந்ததிப் பெருக்கம் செய்ய இயலாத மலட்டுப் பெண் தேனீக்களே வேலைக்காரத் தேனீக்கள் ஆகும். இவைதான் அதிசய ஆற்றலும் தகவமைப்பும் பெற்று விளங்கக் கூடியவை. இந்த வேலைக்காரத் தேனீக்களால்தான் கூட்டில் இருக்கும் இராணித் தேனீ, குடம்பிகள் மற்றும் ஆண் தேனீக்களுக்கு உணவு அளிக்கப்படுகின்றது. + +இவற்றின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து (wax gland) சுரக்கும் மெழுகைக் கொண்டுதான் கூடுகள் கட்டப்படுகின்றன. மேலும் இவற்றின் வயிற்றில் அமைந்த தேன் பைகளினால் (honey sac) மலரின் குளுகோஸ் வேதியியல் மாற்றத்துக்கு உட்பட்டு தேனாக மாற்றப்படுகின்றது. மேலும் இவற்றின் பின்புறக் கால்களில் அமைந்த மகரந்தக் கூடை என்னும் உறுப்பின் மூலம் மகரந்தச் சேகரிப்பும் இவற்றைக் கொண்டு நடைபெறுகின்றது. + +கூட்டின் வெப்ப நிலையை குறைக்கவும் தேவையின் போது குளிர் காலங்களில் கூட்டில் வெப்ப நிலையை ஏற்படுத்துவதும், எதிரிகள் தங்கள் கூட்டைத் தாக்க வரும் போது தங்கள் கொடுக்கினால் எதிரியைக் கொட்டி பாதுகாக்கவும் செய்கின்றன. இவை ஒரு முறை எதிரியை கொட்டியவுடன் இறந்து விடுகின்றன. இவற்றின் கொடுக்கு அதனுடைய விசப் பையுட��் இணைந்து இருப்பதனால் கொட்டும் போது அதன் கொடுக்கு எதிரியின் உடலில் குத்தப்பட்டு அங்கேயே தங்கிவிடுவதனால் அவற்றுடன் இணைக்கப்பட்ட விசப் பையின் வாய் சிதைந்து விசம் எதிரியின் உடலில் பரவி, உயிரிழக்கக் காரணமாக அமைந்து விடுகின்றது. தங்கள் கூட்டைக் காக்கும் போராட்டத்தில் இவை உயிரைத் தியாகம் செய்கின்றன. + +2007 ஆம் ஆண்டில் செய்த ஆய்வின் பயனாக எதனால் ஒரு தேனீயானது பெரிதும் மாறுபட்ட ஓர் அரசித் தேனீயாக மாறுகின்றது என்று கண்டு அறிந்துள்ளனர். புழுநிலையில் (larva, லார்வா) உள்ள தேனீக்கள் உணவு உட்கொள்ளும்பொழுது ராப்பாமிசின் அடைவி (Target of Rapamycin, TOR) என்னும் ஒரு நொதியத்தால் உருமாற்றம் பெற்று ஒரு தேனீ "அரசித் தேனீ"யாக வளர்ச்சி பெறுகின்றது என்று அறிந்துள்ளனர். இந்த "ராப்பாமைசின் அடைவி" (TOR) என்னும் நொதியமானது உணவில் உள்ள ஊட்டச்சத்தை உணர்ந்து உடல்வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஒரு பொருள் ஆகும். இந்த ராப்பாமைசின் அடைவி நொதியமானது அரசித் தேனீயில் அதிகம் இருப்பதையும், அந்த நொதியத்தைத் தடுத்துவிட்டால் புழுநிலையில் உள்ள தேனீ வெறும் பணித்தேனீயாக மட்டுமே வளர்ச்சி கொள்வதையும் கண்டு பிடித்துள்ளனர். + +தேனீயின் கூடு வேலைக்காரத் தேனீக்களின் உள்ளுறுப்புகளில் ஒன்றான மெழுகு சுரப்பியிலிருந்து சுரக்கும் மெழுகைக் கொண்டு கட்டப்படுகின்றது. இதுவே மனிதர்களின் பல பயன்பாட்டிற்கு உதவும் தேன் மெழுகு ஆகும். இவற்றின் கூடு பொதுவாக மரங்கள், மலைக் குகை, மனிதர்கள் எளிதில் அடைய முடியாத கட்டிடத்தின் முடுக்கு, பொந்துகள் போன்றவற்றில் கட்டப்பட்டிருக்கும். + +இவற்றின் கூட்டு அறை மிக சரியாக அறுகோண வடிவத்தில் அமைந்துள்ளது. கலைப் பொருட்களை நாம் எப்படி நேர்த்தியாக செய்வோமோ அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக, பார்க்க இரசனை அளிக்கக் கூடிய முறையிலே தேனீக்கள் கூட்டைக் கட்டுகின்றன. கணித ரீதியாக அறுகோண வடிவம் என்பது அதிக எடையைத் தாங்கும் அமைப்பாகும். இராணித் தேனீயின் குடம்பி அறை மட்டும் நிலக்கடலையின் வடிவிலும் மற்றவற்றைக் காட்டிலும் சற்றுப் பெரியதாகவுமிருக்கும். கூட்டின் மேற்பகுதியில் தேன் சேமிப்பு அறை அமைந்துள்ளது. இவற்றின் அறைச்சுவற்றின் தடிமன் ஒரு அங்குலத்தில் ஆயிரத்தில் இரண்டு பகுதி உடையதாயிருக்கும். இவை இந்த அளவிற்கு மெல்லியதாக ���ருப்பினும் அவை அதன் எடையைக் காட்டிலும் 25 மடங்கு எடையைக் தாங்கக் கூடிய திறன் உடையதாயிருக்கும். இவற்றின் கூடு முழுதும் இத்தகைய துளை அறைகளை கொண்டதாயிருக்கும். நாட்கள் கூடக் கூட இவற்றின் கூட்டின் அளவும் பெரியதாகிக் கொண்டே செல்கின்றது. + +ஒரு நல்ல ஆரோக்கியமான கூட்டில் 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் தேனீக்கள் வரை இருக்கும். இத்தகைய பிரம்மாண்டமான எண்ணிக்கையில் இருப்பினும் கூட இவற்றிற்கிடையே எந்த விதமான நிர்வாகக் கோளாறுகளோ அல்லது குளறுபடிகளோ வருவதில்லை. ஒரு நல்ல கூட்டின் சுற்றளவு 3 மீட்டர் வரை கூட இருக்கும். + +இவற்றின் கூடு அதிகமான தேனீக்களின் எண்ணிக்கையினால் ஏற்படும் அதிக படியான எடையால் விழுந்து விடாமல் இருப்பதற்காக வேலைக்கார தேனீக்கள் மரங்களின் பிசினைக் கொண்டு, அவற்றில் சில நொதியங்களைச் சேர்த்து புரொபோலிஸ் என்னும் பிசின் போன்ற பொருளைக் கொண்டு உறுதியாக ஒட்டப்படுகின்றது. மேலும் இவற்றைக் கொண்டு கூடுகளில் ஏற்படும் விரிசல் போன்ற பழுதுகளைச் சரி செய்யப்படுகின்றன. + +தேனீயை சுறுசுறுப்பு, கூட்டு முயற்சி, தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவற்றிற்கு உதாரணமாய் கூறுவார்கள். + +முட்டை இடுவது ஒன்றே அரசித்தேனீயின் முக்கியமான பண்பாகும். அரசித்தேனீயானது மெழுகால் அறைகள் கட்டுவது தேனை சேகரிப்பது போன்ற பணிகளை செய்யாது. அரசித் தேனீ இல்லையென்றால் மற்ற பணிசெய் தேனீகள் மிகவும் குழம்பிப்போய், தமது கட்டுக்கோப்பான சேர்ந்து வாழும் பண்பை இழக்கின்றன. அரசித் தேனீயானது, பணி செய்யாவிட்டாலும், எல்லாத் தேனீக்களையும் ஈர்த்து ஓர் ஒழுங்கில் இருக்க உதவுகின்றது. + +பல்வேறு நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாக தேன் விளங்குகிறது. (குறிப்புகள் தேவை) + + +தேனீக்களிலிருந்து கிடைக்கும் பலவிதமான பயன்களைக் கருதி தேனீக்களை செயற்கையாக பானைகள் வைத்து அல்லது கூடுகள் அமைத்து வளர்க்கும் முறையே தேனீ வளர்ப்பு எனப்படுகின்றது. இங்கே தேனீக்கள் தங்கியிருந்தாலும், அவை சுதந்திரமாக வெளியே சென்று, தேன், மகரந்தச் சேகரிப்பில் ஈடுபடுவதனால், தாவர இனப்பெருக்கத்தில் தமது பங்கை வழங்குவதுடன், தேனீக்களால் சேகரிக்கப்படும் மேலதிக தேன் மக்களின் பயன்பாட்டுக்கு வருகின்றது. + +அண்மைய காலங்களில் பெருந்தொகையாக தேனீக்கள் அழிந்துவருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஐரோப்பாவிலும், வட அமெரிக்காவிலும் தேனீக்களின் எண்ணிக்கை மிக விரைவாக குறைந்து வருவதாக தேனீ வளர்ப்பவர்களும், அறிவியலாளர்களும், சூழலியலாளர்களும், சில அரசியல்வாதிகளும் குரல் கொடுத்து வருகின்றனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. தேனீக்கள் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கு உதவும் மகரந்தச்சேர்க்கையில் முக்கியமான பங்களிப்பை வழங்குவதால், மனிதர்களின் உணவுச் சங்கிலி யில் தேனீக்கள் முக்கிய பங்கை ஆற்றுகின்றன. எனவே தேனீக்களின் அழிவு பலவகை பயிர்கள், பழவகைகள் உற்பத்தியில் வீழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதனால், இது மிகவும் அவதானத்தில் கொள்ள வேண்டிய பிரச்சனைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. + +"பின், நீ எல்லாவிதமான கனிகளின் மலர்களிலிருந்தும் உணவருந்தி உன் இறைவன் (காட்டித் தரும்) எளிதான வழிகளில் (உன் கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல்" (என்றும் உள்ளுணர்ச்சி உண்டாக்கினான்). அதன் வயிற்றிலிருந்து பலவித நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகிறது அதில் மனிதர்களுக்கு (பிணி தீர்க்க வல்ல) சிகிச்சை உண்டு. நிச்சயமாக இதிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது.(16:69) + +கிறித்தவர்களும் யூதர்களும் திருநூலாகப் போற்றுகின்ற திருவிவிலியத்தில் தேன் மற்றும் தேனீ பற்றிய குறிப்புகள் பல உள்ளன. அவற்றுள் ஒரு சில கீழே தரப்படுகின்றன: + + + + + +மே 19 + + + + + + + +மே 20 + + + + + + + +மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு + +மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இலங்கையில் மெதடிஸ்த திருச்சபையினால் 1814 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். இதுவும் யாழ் மத்திய கல்லூரியும் மெதடிஸ்ட் திருச்சபையினாலேயே ஆரம்பிக்கப்பட்டன. +இதன் ஸ்தாபகர் வண.வில்லியம் ஓல்ட் அடிகளாவர். இலங்கையின் மிகப்பழமையான பாடசாலை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியாகும். + + + + +1956 + +1956 (MCMLI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். + + + + + + + + + +20-ஆம் நூற்றாண்டு + +20 ஆம் நூற்றாண்டு ("20th century") கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1901 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2000 இல் முடிவடைந்தது. + + + + + + + + +கணித மாறிலி + +கணித நிலையெண் ("ஆங்கிலம்:" Mathematical constant) அல்லது கணித மாறிலி என்பது ஒரு சில வகையில் இன்றியமையாத பண்புகள் கொண்ட ஒரு சிறப்பு எண் ஆகும். இது பெரும்பாலும் மெய்யெண்ணாகும். அவ்வாறு இன்றியமையாத கணிதப் பண்புகள் இல்லாத சில எண்களும் வரலாற்றுக் காரணங்களால் நிலையெண்களாக விளங்குகின்றன. நிலையெண்கள் பல காலங்களாகப் படித்தும், பலமுறை பதின்ம எண்களாகக் கணிக்கப்பட்டும் உள்ளது. + +பெரும்பாலான கணித நிலையெண்கள், விவரிக்கக்கூடிய மெய் எண்களாகவும், கணிக்கக்கூடிய மெய் எண்களாகவும் (சைத்தினின் நிலையெண் விதிவிலக்கு) விளங்குகின்றன. + +உதாரணம்: +இங்கு "a","b","c" என்பன நிலையெண். "x" மாறெண்: அதாவது "x" வெவ்வேறு பெறுமானங்கள் எடுக்கலாம், ஆனால் "a","b","c" என்பன நிலையான பெறுமானம் கொண்டவை. இந்த உதாரணத்தில் நிலையெண்கள் பல்லுறுப்பியின் குணகங்களாக அமைகின்றன. இவற்றில் "c" ஆனது "x" இன் குணகமாகும். + +கணிதத்தின் நிலையெண்களில் மிகச் சிறப்பானவை மூன்று. அவற்றின் குறியீடுகள் உலகனைத்திலும் எல்லா மொழிகளிலும் ஒரே விதமாக இருப்பதே அவற்றின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றன. அவை + +• அடுக்குமாறிலி e (the exponential) + +• π என்ற கிரேக்க எழுத்தால் அறியப்படும் பை, மற்றும், + +• கற்பனை எண் என்று தவறுதலாகவே குறிக்கப்பட்டு வழக்கில் அப்படியே நிலைபெற்றிருக்கும் "i". + +கணித ஒப்புருக்களுடன் இணைந்துள்ள e, π மற்றும் பைகென்பௌம் நிலையெண்கள் போன்றவை புறநிலைக் கோட்பாடுகளையும், யூக்கிலிடியன் வடிவவியல் பகுப்பாய்வு மற்றும் ஏரண வரைவுகள் போன்றவற்றையும் விளக்கப் பயன்படுகிறது. ஏப்பெரேஸ் நிலையெண்கள் மற்றும் கோல்டன் விகிதம் போன்ற கணித நிலையெண்கள் எதிர்பாரா வண்ணம் கணிதத்தை விட்டு வெளியே பயன்படுகின்றன. +"π" = 3.14159…. + +இதை 1767 இல் லாம்பர்ட் ஒரு விகிதமுறா எண் என்று நிறுவினார். 1882 இல் லிண்டெமன் இதுவும் ஒரு விஞ்சிய எண்ணே என்று நிறுவி சாதனை புரிந்தார். + +யூக்கிலிடியன் வடிவவியலில், "π" நிலையெண்ணின் இயற்கையான விளக்கத்தை "ஓர் விட்டம் கொண்ட ஒரு வட்டத்தின் சுற்றளவே " எனக் காட்டினாலும், சில வேறு கணிதப் பாடங்களிலும் இது பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சிக்கல் பகுப்பாய்வில் காசியன் தொகை���ீடு, எண் கோட்பாட்டில் ஒன்றின் வேர்கள் மற்றும் நிகழ்த்தகவில் காசி விரிவரிசை. எப்படியாயினும், இதன் வட்டம் தூய கணிதத்தினுள் மட்டுமே காணப்படுவதில்லை. மாறாக, கெய்சென்பெருக்கின் அறுதியின்மைக் கொள்கை போன்று இயற்பியலில் பல்வேறு வாய்ப்பாடுகளிலும் காணப்படுகிறது. அண்டவியல் நிலையெண் போன்ற நிலையெண்களும் இந்த "π" நிலையெண்ணைப் பயன்படுத்துகின்றன. இயற்பியலில் காணப்படும் இந்த "π" நிலையெண், விதிகளிலும், வாய்ப்பாடுகளிலும் மிக எளிதாக விளக்கக்கூடியதாக திகழ்கின்றது. எடுத்துக்காட்டாக, இரண்டு மின்னூட்டுகளின் இடையில் காணப்படும் மின்னிலை விசையின் பருமையும், அதற்கிடையில் உள்ள தொலைவிடமும் கீழ் சதுரமாக்கப்படுவது கூலும் விதியெனப்படும். இதனைப் பின்வருமாறு பை நிலையெண்ணைப் பயன்படுத்தி எழுதலாம். + +வெற்றிடத்தின் மின்காப்பு நிலையெண்ணான formula_3-க்கு இடையில் இவ்வாய்ப்பட்டின் கீழுள்ள formula_4 என்னும் காரணி ஒரு formula_5 ஆரம் கொண்ட உருண்டையின் மேற்பரப்பினைக் குறிக்கிறது. இதனால் இது தெளிவுறக் காணப்படுகிறது. + +"e" = 2.718281828459... இது ஒரு விகிதமுறா எண் (irrational number) மட்டுமல்ல; ஒரு விஞ்சிய எண்ணுங்கூட (transcendental number) . இது விகிதமுறா எண் என்பதை ஆய்லர் 1737 இல் நிறுவினார். விஞ்சிய எண் என்பதை 1873 இல் ஹெர்மைட் என்பவர் நிலைநாட்டினார். இதை ஆய்லர் எண் என்று சொல்வது பொருந்தாது என்ற மாற்றுக்கருத்தும் உண்டு. + +ஆய்லர் எண் அல்லது அடுக்க வளர்ச்சி நிலையெண் (மாறிலி) பெரும்பாலான கணிதப் பாடங்களிலில் காணப்படுகின்றன. அதில் ஒரு கூடிய பொருள்விளக்கம் பின்வரும் வாய்ப்பாட்டின் மதிப்பாகும். + +தொடர் மீள்செய்கை குறிப்பிடல் என்பது இயக்கக் கட்டகங்களுக்கு எளிதாக திகழ்கிறது. இது போன்ற மீள்செய்கை செயல்முறையினால் காணப்படும் நிலையெண்கள் இரண்டிற்கும், மிட்செல் பைகென்பௌம் (Mitchell Feigenbaum) என்ற இயற்பியலாளரின் நினைவாக பைகென்பௌம் நிலையெண்கள் என பெயரிடப்பட்டன. அவை இருகூறாக்க வரைப்படமும், இருமடி மீப்புள்ளியும் கொண்ட தகவுப்பொருத்தக் குறிப்புப்படங்களின் கணித வேறுபாடற்றவைகள் ஆகும். + +தகவுப்பொருத்த வரைபடம் என்பது ஒரு எளிய நேரியலற்ற இயக்க கட்டகத்தில் காணப்படும் ஒழுங்கின்மை நிலை எப்படி என்பதற்கு மேற்கோள் காட்டப்படும் பல்லுறுப்பு வரைபடமாகும். இராபருட்டு மே என்னும் அசுதிரேலிய உயிர��யலாளரின் 1976-இன் ஆய்வுத்தாளில் இந்த வரைபடும் முதலில் பிரபலமானது. பியர் பிரான்சுவா வேர்கோல்சிட்டு முதலில் உருவாக்கிய தகவுப்பொருத்த சமன்பாட்டிற்கு இணையான தனித்த கால மாதிரி ஓவிய ஒப்புருவாக ஆய்வுத்தாளில் இந்த வரைபடம் வெளியானது ஆகும். இதன் வேறுபாட்டு சமன்பாடு மறுபிறப்பு மற்றும் தேய்தல் ஆகிய இரண்டு விளைவுகளையும் அறிவதற்கு பயன்படுத்தப்படுகிறது. + +இரீமன் ஜீட்டா சார்பின் சிறப்பு மதிப்பாக இது விழங்கினாலும், அப்பெறீய் நிலையெண் இயற்கையாக பல்வேறு புறநிலை சிக்கல்களில் காணப்படுகின்றன. துளிம மின்னியக்கவியலைப் பயன்படுத்தி கணிக்கப்பட்ட மின்னணுவின் சுழல்காந்த விகிதத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மதிப்பிலும் இது காணப்படுகிறது. ζ(3)-இன் தோராயமான எண்மதிப்பு 1.2020569031595942853997381615114499907649862923404988 என்பதாகும். இதை கணித மென்பொருளான வுஃப்ரேம் நிருவனத்தின் தளத்தில் இணைப்பினால் இயங்கிப்பார்க்கலாம் . + +இதை கற்பனை எண் என்றும் சொல்வதுண்டு. ஆனால் இது அப்படியொன்றும் கற்பனையில் மாத்திரம் இருக்கும் எண்ணல்ல. சிக்கல் தளத்தில் (complex plane) ஒவ்வொரு புள்ளிக்கும் இரண்டு ஆயங்கள் உள்ளன. அவைகளில் (0, 1) என்ற புள்ளி தான் அமைகண எண் "i" . எந்த பலக்கெண்ணையும் "i" ஆல் பெருக்கினால் பலக்கெண்தளத்தில் அவ்வெண்ணின் இடம் 90 பாகை அல்லது சுழியளவு இடச்சுழியாகத் திரும்பும். அதனால் இதையே மறுபடியும் "i" ஆல் பெருக்கினால் (0,1) என்ற இடத்தில் இருக்கும் "i " (-1,0) என்ற இடத்திற்குப் போய்ச் சேரும். +இதைத்தான் கீழேயுள்ள சமன்பாடு சொல்கிறது: + +formula_7 + +e = -1 +இதுதான் ஆய்லருடைய முற்றொருமைச் சமன்பாடு. இதனில் மூன்று சிறப்பு மாறிலிகளும் சம்பந்தப்படுகின்றன என்பது இதன் முதல் சிறப்பு. இதைத்தவிர இந்த முற்றொருமைக்கு இன்னும் பல சிறப்புகளும் உள்ளன. + + + + + +போரிஸ் பாஸ்ரர்நாக் + +போரிஸ் லியோனிடவிச் பாஸ்ரர்நாக் அல்லது போரிஸ் லியோனிடவிச் பாஸ்டர்நாக் (Boris Leonidovich Pasternak, (ரஷ்ய மொழி: Борис Леонидович Пастернак) (பெப்ரவரி 10 1890 - மே 30, 1960) ரஷ்யக் கவிஞரும், புதின எழுத்தாளருமாவார். 1958 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசைத் தனது டாக்டர் ஷிவாகோ புதினத்துக்காகப் பெற்றவர். இப்புதினத்தின் மூலம் அவர் மன்னர் காலத்து உயர் வகுப்பினரதும் ஏனைய வகுப்பைச் சார்ந்தவர்களினதும் நடைமுறை உண்மை���ை எடுத்துக் காட்டியிருந்தார். அக்டோபர் புரட்சியின் பின்னர் ஏற்பட்ட மாறுதல்களை விவரித்திருந்தார். இந்நாவல் முதன் முதலில் இத்தாலிய மொழியில் 1957இல் மொழிபெயர்க்கப்பட்டது. இதன் ஆங்கில மொழிபெயர்ப்பு 1958இல் வெளிவந்தது. + +மொஸ்கோவில் 1890 இல் பிறந்தவர் பாஸ்ரர்நாக். இவரது தந்தை "லியனீட் பபஸ்ரர்நாக்" ஒரு யூத இனத்தைச் சேர்ந்த ஒரு ஓவியர். தாயார் "ரோசா ராயிட்சா கோஃப்மான்", பியானோ இசைக் கலைஞர். போரிஸ் முதலில் இசைப் பயிற்சி பெற்று பின்னர் கலைத் துறையில் நாட்டம் கொண்டார். பின்னர் 1910 இல் "மாபர்க் பல்கலைக்கழகத்தில்" சேர்ந்து ஸ்கண்டியன் சித்தாந்தவாதிகளான ஹேர்மன் கோஹன் மற்றும் நிக்கலாய் ஹார்ட்மன் ஆகியோரின் கீழ் தத்துவம் பயின்றார். + +1914இல் மொஸ்கோ திரும்பி எழுத்துலகில் புகுந்தார். பல கவிதைத் தொகுதிகளை வெளியிட்டார். The twins I the clouds (1914), Over the Barriers (1917), My sister Life (1917) போன்றவை குறிப்பிடத்தக்கவை. + +புரட்சி நிலவிய காலத்தில் அவர் பிரபல கவிஞர்களான சிர்கேய் எசெனின் (Sergei Esenin), விளாதிமீர் மயக்கோவ்ஸ்கி போன்றவர்களுடன் நெருங்கிப் பழகினார். + +"கடைசிக் கோடைகாலம்" ("The last summer") என்ற நாவலை எழுதினார். இவரது சுயசரிதை "Safe conduct" என்னும் பெயரில் 1931இல் வெளிவந்தது. + +ஷேக்ஸ்பியரின் படைப்புகளை ரஷ்ய மொழியில் மொழிபெயர்த்தும் உள்ளார். + +முதலாம் உலகப் போர்க் காலகட்டத்தில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த காலகட்டத்திலேயே அவர் தனது டாக்டர் ஷிவாகோ என்ற புதினத்துக்கான தகவல்களைப் பெற்றுக்கொண்டார். இப்புதினத்தை அவர் 1948இல் எழுத ஆரம்பித்தவர், அதனை முடிக்க அவருக்கு சுமார் 10 வருட காலம் எடுத்தது. + +1958இல் டாக்டர் ஷிவாகோ நாவலுக்காக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. எனினும் இப்பரிசை அக்கால அரசின் அழுத்தம் காரணமாக ஏற்க மறுத்துவிட்டார். இந்நாவல் 1988இலேயே ரஷ்யாவில் வெளியிடப்பட்டது. 1903ம் ஆண்டு வரையில் மருத்துவராகவும் கவிஞராகவும் திகழ்ந்த யூரி ஷிவாகோவின் வாழ்க்கையைக் கருபொருளாகக் கொண்டதே இப்புதினமாகும். இப்புதினம் பின்னர் 1965ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. + +பாஸ்ரர்நாக் 30 மே 1960 இல் நுரையீரல் புற்றுநோய் காரணமாக மரணமானார். + + + + + + +ரூபராணி ஜோசப் + +ரூபராணி ஜோசப் (செப்டம்பர் 5, 1935 - ஏப்ரல் 23, 2009) மட��டக்களப்பைப் பிறப்பிடமாகக் கொண்ட மலையகப் பெண் எழுத்தாளர். சிறுவர் இலக்கியம், நாடகம், சிறுகதை, நாவல் எனப் பல இலக்கியப் படைப்புகளை எழுதிருக்கிறார். கலை இலக்கியப் பணி தவிர இவர் சமூக, கல்வி, தொழிற்சங்கம், அரசியல் துறைகளிலும் இவரின் பங்கு கனதியானவை. மலைநாட்டு மக்களின் மேம்பாட்டுக்காக இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் இணைந்து மாதர் சங்கத் தலைவியாக செயற்பட்டவர். + +இவர் தனது நூல்களுக்காக தேசிய, மத்திய மாகாண, வட, கிழக்கு மாகாண பரிசுகளும் விருகளும் பெற்றவர். சிறந்த பேச்சாளருக்கான "சொல்லின் செல்வி" பட்டத்தையும், "கலாபூஷணம்" என்ற விருதினையும் பெற்றவர். கண்டி நல்லாயன் மகளிர் கல்லூரியில் கால்நூற்றாண்டு காலமாக ஆசிரியராக கடமையாற்றியவர். + + + + + + +1955 + +1955 (MCMLV) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + + +தொழிற்துறை வணிக நிறுவனங்கள் பட்டியல் + + + + + + + + + + + + + + + + +18-ஆம் நூற்றாண்டு + +18ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி ஜனவரி 1, 1701 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 1800 இல் முடிவடைந்தது. + + + + +லீக்கின்ஸ்டைன் + +லீக்கின்ஸ்டைன் ("Liechtenstein", ; ; ), என்பது நடு ஐரோப்பாவில் உள்ள இடாய்ச்சு மொழி பேசும் ஒரு சிறிய நிலம்சூழ் நாடு ஆகும். இது லீக்கின்ஸ்டைன் இளவரசரின் தலைமையில் ஆளப்படும் ஒரு அரசியல்சட்ட முடியாட்சி நாடாகும். இந்நாடு மேற்கு, மற்றும் தெற்கே சுவிட்சர்லாந்து, கிழக்கு மற்றும் வடக்கே ஆஸ்திரியா ஆகிய நாடுகளால் சூழப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 160 சதுர கிலோமீற்றர்கள் (62 சதுர மைல்கள் ஆகும். மொத்த மக்கள்தொகை 37,000. 11 மாநகரசபைகளைக் கொண்ட இந்நாட்டின் தலைநகர் வாதூசு ஆகும். + +பொருளாதாரரீதியில், கொள்வனவு ஆற்றல் சமநிலை]யின் படி லீக்கின்ஸ்டைன் ஆள்வீத வருமான அடிப்படையில் உலகில் கத்தார் மற்றும் லக்சம்பர்க்கிற்கு அடுத்த படியாக மூன்றாவது நிலையில் உள்ளது. வேலையின்மை அடிப்படையில் இது உலகின் 1.5% என்ற வீதத்தில் உலகின் மிகக்குறைந்த நிலையில் உளது. + +ஆல்ப்சு காலநிலை கொண்ட லீக்கின்ஸ்டைன், குறிப்பாக மலைப்பாங்கான நாடாகும். குளிர்கால விளையாட்டுகளுக்��ுப் பெயர் பெற்றது. தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் சிறிய பண்ணைகள் காணப்படுகின்றன. நாட்டின் பலமான நிதிச் சேவைகள் வாதூசு நகரில் அமைந்துள்ளன. லீக்கின்ஸ்டைன் ஐரோப்பிய ஒன்றிய நாடாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய தடையற்ற வணிகக் கூட்டமைப்பில் உள்ளது. + + + + + +பூரிகல்யாணி + +பூரிகல்யாணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 53 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய கமனச்ரம இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +பூரிகல்யாணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +மத்திமராவளி + +மத்திமராவளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +போகவதி + +போகவதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +மகுடதாரிணி + +மகுடதாரிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +நாகவல்லி + +நாகவள்ளி 4வது மேளகர்த்தா இர��கமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சுத்த மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +வரமு + +வரமு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஓம்காரி + +ஓம்காரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ஜெயநாராயணி + +ஜெயநாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +ஜெயநாராயணி இராகத்தில் சட்சம் (ச), சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த), கைசிக நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: + +இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 6 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இது "சாடவ-சம்பூர்ண" இராகம் எனப்படுகின்றது. + + + + + + +இனகரப்பிரியா + +இனகரப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜ���், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ஸ்வரபூஷணி + +ஸ்வரபூஷணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +ஸ்வரபூஷணி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + + +ருத்ரப்பிரியா + +ருத்ரப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +ருத்ரப்பிரியா இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சாதாரண தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +சித்தசேனா + +சித்தசேனா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +சித்தசேனா இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +கிரணாவளி + +கிரணாவளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + + +மனோகரி + +மனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாக���ம். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +மாளவசிறீ + +மாளவசிறீ இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +நாஹரி + +நாஹரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஜெயந்தசேனா + +ஜெயந்தசேனா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் சட்சம் (ச), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுச்ருதி தைவதம் (த), கைசிக நிசாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு: + +இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமையாததால் இது "வர்ஜ" இராகம் எனப்படுகிறது. இதன் ஆரோகணத்தில் 5 சுரங்களும் அவரோகணத்தில் 6 சுரங்களும் உள்ளன. இதனால் இது "ஔடவ-சாடவ" இராகம் எனப்படுகின்றது. + + + + + + +பூர்ணகளாநிதி + +பூர்ணகளாநிதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவத��� மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +லலிதமனோகரி + +லலிதமனோகரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பலமஞ்சரி + + + + + + + +தேவக்கிரியா + +தேவக்கிரியா 4வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + +முத்துசுவாமி தீட்சிதரின்படி, சுத்தசாவேரிக்கு தேவக்கிரியா என்ற பெயர். + + + + + +பாலச்சந்திரிக்கா + +பாலச்சந்திரிக்கா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 4 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 4 ஆவது மேளமாகிய கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த) கைசிகி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கரக + +கரக இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +பாவினி + +பாவினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +தாரவம் + +தாரவம் 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +கோபிகாகுசும + +கோபிகாகுசும இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +மதராங்கப்பிரியா + +மதராங்கப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ருக்மாம்பரி + +ருக்மாம்பரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பாஞ்சாலி (இராகம்) + +பாஞ்சாலி 15வது மேளகர்த்தா இராகமாகிய, "��க்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +நேப்பாளகௌள + +நேப்பாளகௌள இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +நேப்பாளகௌள இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கிருஷ்ணவேணி + +கிருஷ்ணவேணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +லலிதகௌரி + +லலிதகௌரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +லலிதகௌரி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +மித்திரகிரணி + +மித்திரகிரணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +மித்திரகிரணி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கௌரி (இராகம்) + +கௌரி இராக��் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய மாயாமாளவகௌளையின் ("அக்னி"/3வது சக்கரம் 3வது மேளம்) ஜன்னிய இராகம் ஆகும். + +கௌரி இராகம் ஜகதேகமல்லர் இயற்றிய "சங்கீத சூடாமணி"யிலும், ஸ்ரீனிவாஸரின் "ராக தத்வ விபோத"த்திலும், பாவபட்டரின் (Bhavabhatta) "அனுப சங்கீத விலாச"த்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. "ப்ரஹதர்ம புராணம்" கௌரியை "காந்தாரத்தின்" ராகிணியாக (மனைவி ராகம்) குறிப்பிடுகிறது. + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + +கௌரி ஒரு ஔடவ-சம்பூர்ண ராகம். உபாங்க ராகம். திரிஸ்தாயி ராகம். கான ரஸ ராகம். இதில் வரும் "ரி" ஏகஸ்ருதி ரிஷபத்திற்கு அருகிலுள்ளது. "நி" கம்பித கமகத்துடன் பிடிக்கப்படுகிறது. "ம" மற்றும் "நி" ராகத்தின் சாயையை அளிக்கும் ஸவரங்கள். "க" நியாஸ ஸவரம். "ப" அம்ஸ ஸ்வரம். விரிவான ஆலாபனைக்கு இடமளிக்காது. "ரிரிபமபா" என்பது ரக்திப்பிரயோகம். "பதபஸ்" விசேஷ சஞ்சாரம். இந்த ராகத்தில் உருப்படிகள் (பாடல்கள்) "ரி"-யில் தொடங்குகின்றன. + + + + + + +மேகரஞ்சனி + +மேகரஞ்சனி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகம்|மேளகர்த்தா இராகமாகிய]], "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + + +மலையாத்தி + +மலையாத்தி அல்லது மந்தாரை ("Bauhinia variegata") பேபியேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரம் ஆகும். இது தென்கிழக்காசியா, தென் சீனாவிலிருந்து மேற்கே இந்தியா வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதன் பூ, ஆர்க்கிட் பூவை ஒத்திருப்பதால் ஆங்கிலத்தில் இதனை "ஆர்க்கிட்மரம்" (Orchidtree) என்றும் அழைப்பதுண்டு. + +சிறியது முதல் நடுத்தரம் வரை உயரமான இம் மரம் 10-12 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது. கோடையில் இலைகளை உதிர்த்து விடுகின்றது. இதன் இலை 10-20 சதமமீட்டர் வரை நீள, அகலங்களைக் கொண்டது. இவ்விலையின் அடியும், நுனியும் இரண்டாகப் பிளவுபட்டு வளைந்த வடிவை உடையதாகக் காணப்படும். வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிறத்தில் ஐந்து இதழ்களைக் கொண்ட கவர்ச்சியான இதன் பூக்கள், 8-12 சமீ விட்டம் கொண்டவை. 15-30 சமீ வரை நீளம் கொண்ட இதன் பழங்கள் பல விதைகளை உள்ளடக்கியவை. + +இது வெப்பவலயப் பகுதிகளில் மிகவும் விரும்பி வளர்க்கப்படுகின்ற அலங்காரத் தாவரங்களில் ஒன்றாகும். சிறப்பாக இதன் வாசனை உள்ள பூக்களுக்காக இவை விரும்பப்படுகின்றது. + + + + + + +குண்டக்கிரியா + +குண்டக்கிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +பூரணபஞ்சமம் + +பூரணபஞ்சமம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +சிந்துராமக்கிரியா + +சிந்துராமக்கிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +மேச்சபௌளி + +மேச்சபௌளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய மாயாமாளவகௌளை இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +மேச்சபௌளி இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சு���்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +குர்ஜரி + +குர்ஜரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப் படும் 3வது சக்கரத்தின் 3வது மேளமாகிய மாயாமாளவகௌளையின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +பின்னபஞ்சமம் + +பின்னபஞ்சமம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சாமவராளி + +சாமவராளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சுருட்டிமல்லாரு + +சுருட்டிமல்லாரு இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +டக்கா + +டக்கா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராக��் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +லலிததோடி + +லலிததோடி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பின்னஷட்ஜமம் + +பின்னஷட்ஜமம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +பின்னஷட்ஜம இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +மார்க்கவி + +மார்க்கவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +மராளகமினி + +மராளகமினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +வத்ஸா + +வத்ஸா 9வது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2வது சக்கரத்தின் 3வது மேளமாகிய தேனுகவின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், ���ுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +வஜ்ஜிரகாந்தி + +வஜ்ஜிரகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 9 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "நேத்ர" என்றழைக்கப்படும் 2 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய தேனுக இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +குலபூஷணி + +குலபூஷணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +சாமந்தசாளவி + +சாமந்தசாளவி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கல்யாணவசந்தம் + +கல்யாணவசந்தம் இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 3வது மேளமாகிய கீரவாணியின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +நாகதீபரம் + +நாகதீபரம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது ��ேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ரிஷிப்பிரியா + +ரிஷிப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +உகவாணி + +உகவாணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 3வது மேளமாகிய கீரவாணியின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +சந்திரிக்கா (இராகம்) + +சந்திரிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +சிவிகா + +சிவிகா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +பானுப்பிரியா (இராகம்) + +பானுப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "���ேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), சாதாரண காந்தாரம் (க), சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஸ்ரோத்தஸ்வினி + +ஸ்ரோத்தஸ்வினி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கதரம் + +கதரம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 21 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப் படும் 4 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய கீரவாணி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சாதாரண காந்தாரம் (க), சுத்த மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +கமலாப்தம் + +கமலாப்தம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), பிரதி மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +தீபகம் + +தீபக இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +போகவசந்தம் + +போகவசந்தம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆ��து மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கனகரசாளி + +கனகரசாளி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ஹிந்துமதி + +ஹிந்துமதி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கமகப்பிரியா + +கமகப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ஹம்சநாராயணி + +ஹம்சநாராயணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + + + + + + + +ஜடானப்பிரியா + +ஜடானப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கல்தவப்பிரியா + +கல்தவப்பிரியா இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 51 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பிரம்ம" என்றழைக்கப்படும் 9 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய காமவர்த்தனி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த), ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +தீரசாவேரி + +தீரசாவேரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +தீரசாவேரி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +நவரத்னபுஷணி + +நவரத்னபுஷணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +நவரத்னபுஷணி இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +கோத்ராரி + +கோத்ராரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + +ரவிஸ்வரூபிணி + +ரவிஸ்வரூபிணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ரமணி (இராகம்) + +ரமணி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ரத்னகாந்தி + +ரத்னகாந்தி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + + + +பிருந்தாவனகன்னட + +பிருந்தாவனகன்னட இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), அந்தர காந்தாரம் (க), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +லலிதாங்கி இராகம் + + + + + +தாத்திரி + +தாத்திரி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். + +இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி), பிரதி மத்திமம் (ம), பஞ்சமம், சுத்த தைவதம் (த) காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ரணில்ஸ்வரூபி + +ரணில்ஸ்வரூபி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 63 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப்படும் 11 ஆவது சக்கரத்தின் 3 ஆவது மேளமாகிய லதாங்கி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும். +ரணில்ஸ்வரூபி இராகத்தில் ஷட்ஜம், அந்தர காந்தாரம் (க), பஞ்சமம், சுத்த தைவதம் (த), காகலி நிஷாதம் (நி) ஆகிய சுரங்கள் வருகின்றன. + + + + +ஈரப்பலா + +ஈரப்பலா () அல்லது சீமைப்பலா ("Artocarpus incisa") பலா இனத்தை சார்ந்த மரம் ஆகும். மலாயத் தீவக்குறை மற்றும் மேற்குப் பசிபிக் தீவுகளைத் தாயகமாகக் கொண்ட ஒரு மரம். ஆயினும் இது வெப்பவலயப் பகுதிகளில் வேறு பல இடங்களிலும் பரவலாக வளர்க்கப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தாவரவியல் மாதிரியாக எச்எம்எஸ் பவுண்டி என்னும் கடற்படைக் கப்பலினால் சேகரிக்கப்பட்ட இதனை, அக் கப்பல் தலைவனாக இருந்த வில்லியம் பிளை (William Bligh) என்பவர், மேற்கிந்தியத் தீவு களில் இருந்த பிரித்தானியரின் அடிமைகளுக்கான மலிவான உயர் ஆற்றல் தரக்கூடிய உணவாக அறிமுகப்படுத்தினார். + +ஈரப்பலாக் காய் இலங்கையில் சிங்களவர் உணவில் முக்கிய இடம் பெறுகிறது. + + + + + +கடற்புலிகள் + +கடற்புலிகள் (Sea Tigers) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்படைப் பிரிவாகும். இந்தப் பிரிவுக்கு கேணல். சூசை தலைமை தாங்கினார். கடற்புலிகள் இலங்கைக் கடற்படைக்கு எதிராக பல வெற்றிகரமான தாக்குதல்களை நிகழ்த்தி ஈழப் போரில் ஒரு முக்கிய பங்கு வகித்தனர். + + + + +பல கடற்கலங்களில் அணிகளாகச் சென்று, அந்த அணிகளுக்குள் இருக்கும் சில கடற்கரும்புலிக் கலங்கள் இலக்குகளை நோக்கி சென்று முட்டி வெடித்து அழிப்பது கடற்புலிகள் தாக்குதல் முறைகளில் ஒன்று. + + + + +பகுப்பு;தமிழர் கப்பற்கலை + + + +மே 22 + + + + + + + +மே 23 + + + + + +