diff --git "a/train/AA_wiki_47.txt" "b/train/AA_wiki_47.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_47.txt" @@ -0,0 +1,6352 @@ + +மட்டக்களப்பு மாவட்டம் + +மட்டக்களப்பு மாவட்டம் ("Batticaloa district") இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு நகரம் இதன் தலைநகரமாகும். மட்டக்களப்பு மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 346 கிராமசேவகர் பிரிவுகளையும் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. + +மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்தப்பரப்பளவு ஏறத்தாழ 2633.1 சதுர கிலோமீட்டர் ஆகும். இம்மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே திருகோணமலை மாவட்டம், வடமேற்கே பொலன்னறுவை மாவட்டம், தெற்கு மற்றும் தென்மேற்கே அம்பாறை மாவட்டம், கிழக்கே வங்காள விரிகுடா ஆகியவை உள்ளன. + +இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், அடுத்தபடியாக முஸ்லிம்களும், பின்னர் பரங்கியரும் வாழ்கின்றனர். + +மட்டக்களப்பு மாவட்டத்தின் சனத்தொகை 2012 இல் 525,142 ஆக இருந்தது. இம்மாவட்டத்தின் இலங்கைத் தமிழர் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. + +மட்டக்களப்பு மாவட்டம் ஒரு மாநகர சபையையும் இரு நகர சபைகளையும் ஒன்பது பிரதேச சபைகளையும் கொண்ட 12 உள்ளூராட்சி சபைகளைக் கொண்டுள்ளது. + + + + +அம்பாறை மாவட்டம் + +அம்பாறை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. அம்பாறை நகரம் இதன் தலைநகரமாகும். இந்நகரம் இலங்கைத் தலைநகரமான கொழும்பிலிருந்து 320 கிலோமீற்றார் தூரத்தில் அமைந்துள்ளது. முஸ்லிம்கள், தமிழர், சிங்களவர், ஆகிய மூவினத்தவரும் இந்நகரத்தில் வசிக்கின்றனர். அம்பாறை மாவட்டம், கல்முனை, சம்மாந்துறை, பொத்துவில், அம்பாறை ஆகிய நான்கு நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 504 கிராமசேவகர் பிரிவுகளையும் 19 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. + +அம்பாறை மாவட்ட மொத்தச் சனத்தொகையில் முஸ்லிம்கள் 44.0 வீதம், சிங்களவர்கள் 37.5 வீதம், இலங்கைத் தமிழர்கள் 18.3 வீதம், ஏனையோர் 0.2 வீதமாகவும் உள்ளனர். + +வரலாற்றுக்காலத்தில் அம்பாறை மாவட்டம், உரோகணப் பகுதியுடன் இணைந்து காணப்பட்டது. இங்கு அமைந்திருந்த தீர்த்தவாவி (இன்று திகவாவி) அல்லது நாக்கை எனும் விகாரம், தமிழ் - சிங்கள பௌத்தர் போற்றிய பழம்பெரும் வழிபாட்டுத்தலமாகும். பத்தாம் நூற்றாண்டு��்குப் பின், இன்றைய அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உருவாகிய முக்குவர் வன்னிமைகள், மட்டக்களப்புத் தேசத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றின. இன்றைய சம்மாந்துறையே அன்றைய மட்டக்களப்புத் தேசத்தின் தலைநகராக விளங்கியது. திருக்கோவில் முருகன் கோயில், கிழக்கின் தேசத்துக்கோவில்களில் முதன்மையானதாக திகழ்ந்தது. கண்டியின் செனரத் மன்னன் காலத்தில் குடியேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் சோனகர், இன்றைய அம்பாறை மாவட்டத்திலேயே குடியேறினர். பதினாறாம் நூற்றாண்டில், இன்றைய தமணை, உகணை, இறக்காமப் பகுதிகளில் சீதாவாக்கை நாட்டிலிருந்து சிங்களவர் குடியேறியதை நாடு காட்டுப் பரவணிக் கல்வெட்டு விவரிக்கின்றது. + +1961 ஆம் ஆண்டு வரை இன்றைய மட்டு - அம்பாறை மாவட்டங்கள், ஒரே மாவட்டமாகவே இணைந்து காணப்பட்டன. சுதந்திரத்தின் பின், தென்கிழக்கிலங்கையின் விவசாய உற்பத்தியை அதிகரிக்க, கல்லோயாத் திட்டம், இலங்கை அரசால் முன்மொழியப்பட்டது. 1949இல் ஆரம்பித்த அத்திட்டம், 1953இல் முடிவடையும் வரை, பெருமளவான சிங்களக் குடியேற்றம், தென்மட்டக்களப்புப் பகுதியில் ஏற்பட்டது. 1959 தேர்தல்தொகுதி மீள்நிர்ணயப் பரிந்துரைகளின் கீழ், பழைய நாடுகாட்டுப் பகுதியில், 19.03.1960 அன்று, "அம்பாறை" எனும் புதிய தேர்தல் மாவட்டம் உருவானது. எனவே, 1960இன் இறுதியில், மட்டக்களப்பின் தென்பகுதியில், பொத்துவில், கல்முனை, நிந்தவூர், அம்பாறை எனும் நான்கு தேர்தல் மாவட்டங்கள் அமைந்திருந்தன. + +10.04.1961 அன்று இந்நான்கு தேர்தல் மாவட்டங்களையும் ஒன்றிணைத்து, புதிய நிர்வாக மாவட்டமொன்றை இலங்கை அரசு பிரகடனம் செய்தது. இதன்மூலம், பாரம்பரியமிக்க தமிழர் தாயகமான மட்டக்களப்புத் தேசம், மட்டக்களப்பு, அம்பாறை எனும் இரு மாவட்டங்களாகத் துண்டாடப்பட்டது. 1978 இலங்கைச் சட்டத் திருத்தத்துக்கு அமைய, இந்த நான்கு ஓரங்கத்தவர் தேர்தல் மாவட்டங்களும் அகற்றப்பட்டு, பல்லங்கத்தவர் தெரிவாகும் "திகாமடுல்ல" தேர்தல் மாவட்டமும் உருவாக்கப்பட்டது. பதுளைக்குரிய "தெகியத்த கண்டி" பிரதேசமும் பிற்காலத்தில், அதனுடன் இணைக்கப்பட்டு, இன்றைய அம்பாறை மாவட்டம் முழுமை பெற்றது. + +2012 குடித்தொகைக்கணக்கெடுப்பின் படி, அம்பாறை மாவட்டத்தின் குடித்தொகை 648,057 ஆகும். இனம் மற்றும் சமய ரீதியில் பன்மைத்துவம் கொண்ட இலங்கைய��ன் குறிப்பிடத்தக்க மாவட்டங்களில் அம்பாறையும் ஒன்றாகும். இலங்கையின் ஏனைய வட-கீழ் மாவட்டங்கள் போலவே, அம்பாறை மாவட்டமும், [[[[ஈழப் போர்|உள்நாட்டு யுத்தத்தால்]] மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட ஒன்றாகும். இம்மாவட்டத்தில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் போரில் மாண்டுபோயுள்ளனர். இலட்சக்கணக்கான தமிழர் [[புலம்பெயர் ஈழத்தமிழர்|புலம்பெயர்ந்து]] வாழ்ந்து வருகின்றனர். போரால் பாதிக்கப்பட்ட தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளதுடன், யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர், தற்போது மீள்குடியமர ஆரம்பித்துள்ளனர். + +அம்பாறை மாவட்டமானது 20 [[இலங்கையின் பிரதேசச் செயலகங்கள்|பிரதேச செயலகங்களாகவும்]](முன்பு உதவி அரசாங்க அதிபர் பிரிவு) , அவை மேலும் 507 [[கிராம சேவையாளர்]] பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. + +[[பகுப்பு:அம்பாறை| ]] +[[பகுப்பு:அம்பாறை மாவட்டம்| ]] +[[பகுப்பு:இலங்கையின் மாவட்டங்கள்]] + + + +ஆமொன் ரா வளாகம் + +எகிப்தில் உள்ள லக்சோருக்கு அருகில் அமைந்துள்ள அமொன் ரே வளாகம், கர்னாக் கோயில் தொகுதியை உருவாக்குகின்ற நான்கு பகுதிகளுள் ஒன்றாகும். பண்டைய எகிப்தியப் பண்பாட்டுக்கு உரிய கட்டிடங்களைக் கொண்ட இந் நான்கு பகுதிகளுள் பெரியதும், பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதிக்கப்படுவதுமான ஒரே பகுதியும் இதுவே. இக் கோயில் பண்டைய எகிப்தியர்களின் கடவுளான அமொனுக்காக அமைக்கப்பட்டுள்ளது. + +இக்களம் 250,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. மிகவும் பெரிதான இப் பகுதி பல அமைப்புக்களையும், கொண்டு அமைந்துள்ளது. இதன் பல பகுதிகளில், அகழ்வாய்வும், மீளமைப்பும் நடைபெற்று வருவதால் அப்பகுதிகளுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதன் வட மேற்குப் பகுதியில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது. + + + + +பிபாசா பாசு + +பிபாசா பாசு ("Bipasha Basu", பிறப்பு: ஜனவரி 7, 1979) ஒரு இந்திய நடிகை. இவர் ஒரு மாடல் அழகியும் ஆவார். 2001 இலிருந்து நடித்து வருகிறார். தமிழ்த் திரைப்படமான சச்சினில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +பிரியங்கா சோப்ரா + +பிரியங்கா சோப்ரா ; ஜூலை 18, 1982 -ல் பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி. நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார். + +சோப்ரா தமிழ் மொழித் திரைப்படமான "தமிழன்" (2002) மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் " " (2003) இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் "ஆண்டாஸ்" படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார். அதே படத்திற்காக அவர் பிலிம்பேரின் சிறந்த பெண் அறிமுக நடிகை விருதை வென்றார். 2004 ஆம் ஆண்டில் அப்பாஸ்-முஸ்தானின் "ஐத்ராஸ்" (2004) இல் மிகவும் பாராட்டும்படியான அவரது நடிப்பிற்காக சிறந்த வில்லன் நடிகருக்கான பிலிம்பேர் விருது பெறும் இரண்டாவது பெண்மணியானார். சோப்ரா பின்னர் "முஜ்சே ஷாதி கரோகி" (2004), "க்ரிஷ்" (2006) போன்ற வணிக வெற்றிப் படங்களைக் கொடுப்பதில் கவனம் செலுத்தினார். "டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்" (2006) அவருடைய மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றிப் படமாகும். 2008 ஆம் ஆண்டில், சோப்ரா "பேஷன்" திரைப்படத்தில் சிறந்த நடிப்புக்காக பிலிம்பேர் சிறந்த நடிகை விருதைப் பெற்றார். அதுவே அவரை ஒரு பிரபலமான நடிகையாக நிலைநாட்டியது. + +சோப்ரா அவர்கள் மருத்துவத் தம்பதிகளான அசோக் சோப்ரா மற்றும் மது அகௌரி தம்பதிகளுக்கு ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் பிறந்தார். சோப்ரா பாரெய்லி, உத்தரப் பிரதேசம்; நியூட்டன், மாஸ்சசூசெட்ஸ்; மற்றும் சேடார் ரேபிட்ஸ், ஐயோவா ஆகியவற்றில் தனது குழந்தைப் பருவத்தைக் கழித்தார். அவரது தந்தை ராணுவத்தில் இருந்ததால் அவரின் குடும்பம் அடிக்கடி இடம்பெயர்ந்தது. அவரது தந்தை பாரெய்லியில் வசிக்கும் பஞ்சாபி காத்ரி சமூகத்திலிருந்து வந்தவர். அவரது தாய் ஜாம்ஷ்ட்பூரில் வசிக்கும் மலையாளக் குடும்பத்திலிருந்து வந்தவர். அவருக்கு அவரைவிட ஏழு வயது சிறியவரான சித்தார்த் என்ற ஒரு சகோதரர் இருக்கின்றார். + +சோப்ரா இளம் சிறுமியாக இருந்தபோது பாரெய்லியில் உள்ள புனித மரியா கோரெட்டி பள்ளியிலும் லக்னோவில் உள்ள லா மார்டினியரி பெண்கள் பள்ளியிலும் பயின்றார். அசோக் இந்திய இராணுவத்தில் மருத்துவராகப் பணிபுரிந்ததால் இந்த அடிக்கடியான இடம்பெயர்வு நிகழ்ந்தது. இந்த இடம்பெயர்வு அவரை அமெரிக்க ஒன்றி��த்துக்கு அழைத்துச் சென்றது. அங்கு அவர் நியூட்டன், மாஸ்சசூசெட்ஸில் உள்ள நியூட்டனின் நியூட்டன் சவுத் உயர்நிலைப் பள்ளியிலும் பின்னர் சேடார் ரேபிட்ஸ், ஐயோவாவில் உள்ள ஜான் எஃப். கென்னடி உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். பிறகு இந்தியா வந்த அவர் பாரெய்லியில் உள்ள ராணுவப் பள்ளியில் அவரது உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்தார். மும்பையிலுள்ள ஜெய் ஹிந்த் கல்லூரியில் கல்லூரி படிப்பைத் தொடங்கினார். ஆனால் "உலக அழகி" பட்டம் வென்ற பிறகு வெளியேறிவிட்டார். + +சோப்ரா "இந்திய உலகின் அழகி"யாக முடிசூட்டப்பட்டார். பின்னர் 2000 ஆம் ஆண்டில் "உலக அழகியானார்". அதே ஆண்டில், இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா மற்றும் தியா மிர்ஸா ஆகிய இருவரும், பிரபஞ்ச அழகியாகவும் ஆசிய பசுபிக் அழகியாகவும் முறையே முடிசூட்டப்பட்டனர். ஒரே நாட்டிற்கு அரிதான மூன்று வெற்றிகள். + +சோப்ரா உலக அழகி மகுடத்தை வென்றதால், அப்பட்டத்தை வெல்லும் ஐந்தாவது இந்தியப் பெண்ணாகவும் ஏழாண்டுகள் இடைவெளியில் அப்பட்டத்தை வெல்லும் நான்காவது பெண்ணாகவும் ஆனார். + +உலக அழகிப் பட்டம் வென்ற பின்னர் சோப்ரா ஒரு நடிகையானார். அவர் 2002 ஆம் ஆண்டில் "தமிழன்" என்ற தமிழ்த் திரைப்படத்தில் விஜய் உடன் அறிமுக நாயகியானார். அதில் அவர் பிண்ணனியும் பாடியுள்ளார். அதன் பின்னர் பாலிவுட் திரையுலக்குச் சென்றுவிட்டார். 2003 ஆம் ஆண்டில், அவரது முதல் பாலிவுட் திரைப்படமான "" வெளியிடப்பட்டு வெற்றியும் பெற்றதால் அவருக்கு நல்ல மதிப்புரைகள் கிடைத்தன. அத்திரைப்படத்திற்கு சராசரிக்கும் குறைவான மதிப்பீடு கொடுக்கப்பட்ட போதிலும், அந்த ஆண்டின் அதிக வசூலைப் பெற்ற திரைப்படங்களில் அத்திரைப்படமும் ஒன்றானது. + +அவரின் அடுத்த படம், அக்‌ஷய் குமாருடன் நடித்த "ஆண்டாஸ்" ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. அப்படம் மூலம் அவர் பிலிம் பேர் சிறந்த பெண் அறிமுகம் விருதையும் பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரையையும் பெற்றார். அவரின் அடுத்த சில திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மோசமாக ஓடிய படங்களாக இருந்தன. + +2004 ஆம் ஆண்டில், அவருடைய "முஜ்சே ஷாதி கரோகி" திரைப்படம் வெளியிடப்பட்டது. மேலும் அந்தப்படம் அந்த ஆண்டில் அதிக வசூலான திரைப்படங்களில் மூன்றாவதாக வந்தது. அவரின் அடுத்த வெளியீடு "ஐத்ராஸ்", இது டெமி மூர் நட��த்த "டிஸ்க்ளோசர்" என்ற படத்தின் இந்தி மறுதயாரிப்பாகும். அது அவரின் முதல் "எதிர்மறை" பாத்திரம், அதில் அவர் வில்லியாக நடித்தார். அவரின் மிகவும் பாராட்டும்படியான நடிப்பு அவருக்கு பிலிம்பேரின் சிறந்த வில்லன் விருதைப் பெற்றுத்தந்தது. அவர் இரண்டாவது முறையாக பிலிம்பேர் சிறந்த துணை நடிகை விருதுக்கான பரிந்துரையையும் பெற்றார். அதே ஆண்டில், "டெம்ப்டேஷன் 2004" என்ற உலகச் சுற்றுலாவில் ஷாருக் கான், சைப் அலி கான், ராணி முகர்ஜி, ப்ரீத்தி ஜிந்தா மற்றும் அர்ஜூன் ராம்பால் உள்ளிட்ட பாலிவுட் நடிகர்களுடன் கலந்துகொண்டார். + +2005 ஆம் ஆண்டில் அவரது பல படங்கள் வெளியாகின. இருப்பினும் அவற்றில் பெரும்பாலானவை பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடும்படி இல்லை. + +2006 ஆம் ஆண்டில், சோப்ரா அந்த ஆண்டின் பெரும் வெற்றிபெற்ற இரண்டு திரைப்படங்களில் நடித்தார் - "க்ரிஷ்" மற்றும் "டான் - தி சேஸ் பிகின்ஸ் அகெய்ன்". + +நிகில் அத்வானியின் குழு படைப்பான, "" திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் சோப்ராவின் முதல் வெளியீடாகும். அந்தத் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றிபெற தவறிவிட்டது. சோப்ராவின் அடுத்த வெளியீடான, "பிக் பிரதர்" திரைப்படமும் வெற்றி பெறவில்லை. + +2008 ஆம் ஆண்டில் சோப்ரா நடித்த ஆறு படங்கள் வெளிவந்தன. அவரின் முதல் நான்கு வெளியீடுகளான, "லவ் ஸ்டோரி 2050", "காட் துசி கிரேட் ஹோ", "சாம்கு" மற்றும் "த்ரோனா" ஆகியவை வெற்றியடையத் தவறிவிட்டன. இருப்பினும் பின்னர் வந்த அவரின் இரண்டு படங்களான "பேஷன்" மற்றும் "தோஸ்தனா" ஆகியவை முறையே 26,68,00,000 மற்றும் 44,42,00,000 என்று பாக்ஸ் ஆபிசில் வசூலித்தன. மேலும் பேஷனில் அவரின் நடிப்பு பிற விருதுகளுடன் பிலிம்பேர் சிறந்த நடிகை விருதைப் பெற்றுத் தந்தது. + +2009 ஆம் ஆண்டில் நடிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ள திரைப்படங்கள், விஷால் பரத்வாஜ் இன் "காமினி", ஆசுதோஷ் கோவாரிகரின் "வாட்ஸ் யுவர் ராசி?" மற்றும் ஜூகல் ஹன்ஸ்ராஜ் உடைய "பியார் இம்பாசிபிள்" ஆகியவை. + +2008 ஆம் ஆண்டில் ஹிந்துஸ்தான் யூனிலீவர் பாண்ட்ஸின் தயாரிப்பின் வணிகத் தூதராக சோப்பராவை நியமித்தது. பின்னர் அவர் சருமத்தை வெண்மையாக்கும் வணிகத் தயாரிப்புகளுக்கான சிறிய தொலைக்காட்சி விளம்பரத் தொடர்களில் சைப் அலி கான் மற்றும் நேஹா துபியா ஆகியோருடன் இணைந்து நடித்தார்; இந்த விளம்பரங்கள் இனவெறியைத் தூண்டுவதாக பரவலா��� விமர்சிக்கப்பட்டன. + + + + +கஜோல் + +கஜோல் (, ) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974) ஒரு இந்தித் திரைப்பட நடிகை ஆவா். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார். + + + + + + +கணித அமைப்பு + +கணிதத்தில் ஆய்ந்து அலசப்படும் கருத்துப் பொருட்களெல்லாம் கணங்களை அடிப்படையாகக்கொண்டன. இப்பொருட்கள் உண்டாகும் முறைகளை இருபதாவது நூற்றாண்டின் தொடக்கத்தில் கணிதவியலர்கள் அமைப்பு என்ற புதிய கண்ணோட்டம் தரும் தலைப்புகளில் வகைப்படுத்தினர். இந்த வகைப்படுத்தலால் கணிதவியலில் புரட்சிகரமான பாதை தோன்றி பற்பல முக்கிய விளைவுகள் தோன்றின. அவற்றுள் முதலாவது, காலம் காலமாக பல மேதைகளின் கண்டுபிடிப்புகளினால் தொகுத்து வைத்திருந்த கணிதமெல்லாம் ஒன்று சேர்ந்து இணையக்கூடிய வாய்ப்பு உருவானதோடு மட்டுமல்லாமல் சென்ற நூற்றாண்டில் கணிதத்தை வியப்பூட்டும் அளவுக்கு விரிவடையவும் செய்தது. + +இதை எடுத்துக் காட்டுகள் மூலம் தான் விவரிக்க வேண்டி யிருக்கிறது. + +எல்லா மெய்யெண்களின் கணம் R என்று கொள்க. அவ்வெண்களில் தன்னியல்பாக உள்ள கூட்டல் செயல் ‘+’ என்ற குறியீட்டால் குறிக்கப் படுவதாகக் கொள்வோம் . இப்பொழுது, "x, y, z" என்பவை R இல் உள்ள எந்த உறுப்புகளானாலும், + +"x + y" எப்பொழுதும் R இலேயே இருக்கும் ... (a) + +"(x + y) + z = x + (y + z)" ... (b) +"x + y = y + x " ... (c) +R இல் ‘"0"’ என்ற ஓர் உறுப்பு கீழுள்ள இயல்புடன் உளது: + +"0 + x = x + 0" . ... (d) +R இல் "‘-x’" என்ற ஓர் உறுப்பு கீழுள்ள இயல்புடன் உளது: + +"x + (-x) = 0 = (-x) + x" … (e) + +இவ்வைந்து விதிகளும் ஏதோ மிக எளிமையான, அற்பமான கூற்றாக முதலில் தோன்றலாம். ஆனால் அதனுள்ளே பொதிந்திருக்கும் கருத்து இனிமேல்தான் விளங்கும். + +இப்பொழுது எல்லா நேர்ம மெய்யெண்களின் கணம் R ஐ எடுத்துக்கொள்க. அவ்வெண்களில் தன்னியல்பாக உள்ள பெருக்கல் செயல் ‘.’ (புள்ளி) என்ற குறியீட்டால் குறிக்கப் படுவதாகக் கொள்வோம். இப்பொழுது "x, y, z" R இல் என்னவாக இருந்தாலும், + +"x . y" எப்பொழுதும் R இல் இருக்கும் ... (A) + +"(x . y) . z = x . (y . z)" ... (B) + +"x . y = y . x" ... (C) + +R இல் ‘1’ என ஒரு உறுப்பு கீழே உள்ள இயல்புடன் உளது: + +"1 . x = x = x . 1" ... (D) + +R இல் ‘"x"’ என ஒரு உறுப்பு கீழே உள்ள இயல்புடன் உளது: + +"x" . "x" = "1" = "x" . "x" ... (E) + +இவைகளும் மிக எளிதான அற்பமான கூற்றுகளாகத் தோன்றலாம். ஆனால் (a) இலிருந்து (e) வரையிலுள்ள ஐந்து கூற்றுகளையும் (A) இலிருந்து (E) வரையிலுள்ள ஐந்து கூற்றுக்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் முதல் ஐந்தும் பின் ஐந்தும் ஒரே ‘அமைப்பில்’ இருப்பதை அறியலாம். இருந்தாலும் ஒரு விதிவிலக்கு உள்ளது. முதலைந்திலிருந்து இரண்டாவது ஐந்து ஒரு விதத்தில் மாறுபடுகிறது. முந்தையதிலுள்ள, + +R, ‘+’, ‘"0"’ , ‘-"x"’ + +ஆகிய நான்கின் இடத்தில், பிந்தையதில் முறையே + +R, ‘.’ , ‘"1"’, ‘"x"’ + +ஆகியவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாற்றத்தைத்தவிர, இரண்டு ‘அமைப்புகளும்’ ஒரே மாதிரி தான். இதைத்தான் கணிதத்தில் ‘அமைப்பு’ (Structure) என்ற கலைச் சொல்லால் குறிப்பிடுகிறார்கள். முதல் வகையில் நாம் பார்த்த அமைப்பிற்கு ‘ R க்கு கொடுக்கப்பட்ட கூட்டல் அமைப்பு’ என்றும் இரண்டாவது வகையில் பார்த்த அமைப்பிற்கு ‘Rக்குக் கொடுக்கப்பட்ட பெருக்கல் அமைப்பு’ என்றும் சொல்லல் தகும். + +இவ்விதம் இரு அமைப்புகள், பெயர் மாற்றம் என்பதைத் தவிர மற்றபடி ஒரே விதிகளுக்குட்பட்டிருந்தால் அவ்விரண்டு அமைப்புகளும் ஓருரு அமைவுடையவை (Isomorphic) என்று சொல்லப்படும். + +உண்மையில் ‘கூட்டல்’ அல்லது ‘பெருக்கல்’ என்ற பெயர்கள் கூட தேவையில்லை. மேலே விவரிக்கப்பட்ட கணித அமைப்பை பின்வருமாறு பொதுமைப்படுத்தலாம். வேண்டியதெல்லாம் ஒரு கணமும் அதில் ஒரு செயல்முறையும் (Operation) தான். செயல்முறை என்றால் அக்கணத்திலிருக்கும் எந்த இரு உறுப்புகளில் அச்செயல்முறை செயல்பட்டாலும் அதன் முடிவு தனித்த (unique) ஒரு உறுப்பாக அதே கணத்திற்குள் இருக்கும். இச்செயலை ஈருறுப்புச் செயல் என்றும் சொல்வார்கள். + +G என்ற கணமும் அதில் ‘*’ என்ற செயலும் கொடுக்கப் பட்டு, அவை கீழேயுள்ள ஐந்து விதிகளை பின்பற்றுவதாகவும் கொள்வோம்: + +‘*’ ஓர் ஈருறுப்புச்செயல் (closure); அ-து, "x, y G" இல் இருந்தால், "x * y" ம், G இல் இருக்கும். ... (G1) + +‘*’ ஒரு சேர்ப்பு விதி; அ-து, "x, y, z" G இல் இருந்தால், +"(x * y) * z = x * (y * z)" … (G2) + +‘*’ ஒரு பரிமாற்று விதி (commutativitity); அ-து, "x, y" G இல் இருந்தால் +"x * y = y * x" … (G3) + +G இல் ஒரு முற்றொருமை (Identity) உளது; அ-து, G இல் ‘e’ என்ற ஒரு உறுப்பு கீழேயுள்ள இயல்புடன் உளது: + +"x * e = x = e * x" … (G4) + +G இல் உள்ள ஒவ்வொரு "x" க்கும், ஒரு நேர்மாறான உறுப்பு உளது; +அ-து, ஒவ்வொரு "x" க்கும் ஒரு "x" கீழேயுள்ள இயல்புடன் உளது: + +"x" * "x" = "e" = "x" * "x" … (G5) + +ஏதாவது G என்ற ஒரு கணம் ஒரு ‘*’ என்ற செயல் முறையுடன் (G1) இலிருந்து (G5) வரையுள்ள ஐந்து விதிகளுக்கும் உட்படுமானால் அந்த G க்கு ‘குலம்’ (Group) என்று பெயர். + +R, ‘+’ என்ற கூட்டல் செயலுடன், ஒரு குலம் ஆகிறது. + +R, ‘.’ என்ற பெருக்கல் செயலுடன், ஒரு குலம் ஆகிறது. + +இவ்விரண்டு எடுத்துக்காட்டுகளும் ‘முடிவில்லாத குலங்கள்’ ஆகும். ஏனென்றால் அவைகள் சார்ந்திருக்கும் அடிப்படை கணங்களான R ம், R, ம் முடிவில்லாத கணங்கள். + +முடிவுள்ள குலங்கள் மிகப்பல இருக்கின்றன. + +(G3) மாத்திரம் இல்லாமல், மற்ற நான்கு விதிகளுக்கும் உட்பட்டு இருக்கும் ஒரு G என்ற கணம் (அதன் ‘*’ என்ற செயலுடன்) ஒரு 'பரிமாறாக்குலம் ' (Non-commutative Group) என்று சொல்லப் படும். இதிலிருந்து பிரித்துப்பேசுவதற்காக நாம் மேலே சொன்ன குலத்தை ‘பரிமாற்றுக் குலம்’ (Commutative Group) என்றும் சொல்வதுண்டு. ‘ஏபீலியன் குலம்’ (Abelian Group) அதற்கு இன்னொரு பெயர். ‘ஏபெல்’ (1802 - 1829) என்ற கணித வல்லுனர் முதன்முதல் இதை அறிமுகப்படுத்தினார். + +இரு அமைப்புகள் (கணிதத்திலோ அல்லது இயற்பியல் முதலிய இதர துறைகளிலோ) ஓருரு அமைவுடையவை என்று அடையாளம் காட்டுவதற்கு மாத்திரம் அமைப்பு என்ற கருத்து ஏற்படவில்லை. கணிதத்திலேயே பல உட்துறைகளிலும், பல பிரச்சினைகளிலும் தொடரப்படும் வாதங்களிலுள்ள ஒற்றுமையை பயன் படுத்தி அவைகளை பண்பளவில் உயர்த்தி, அவ்வுயர்ந்த தளத்தில் செய்யப்படும் ஒரே வாதத்தினால் கீழ்த்தளத்திலுள்ள பல சந்தர்ப்பங்களுக்கும் ஒரே அடியில் முடிவு சொல்ல பயன் பட்டது. இதற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டைப் பார்ப்போம். + +கெய்லி(1821 - 1895) என்னும் கணிதவியலாளர் ஒவ்வொரு அணிக்கும் நேர்மாற்று அணி தனித்தன்மை வாய்ந்தது என்று நிறுவினார். வகையீட்டுச் சமன்பாடுகளில் (Differential Equations) பல சந்தர்ப்பங்களில் காலப்போக்கில் வேறு வேறு கணித ஆய்வாளர்கள் அந்தந்த சமன்பாடுகளுக்கு அவர்கள் கண்டுபிடித்த விடைகள் தனித்தன்மை வாய்ந்தவை என்று பல்வேறு முறைகளைக் கையாண்டு நிறுவினர். இவைகளெல்லாமே ஒரே வாதத்தின் நிழல்கள்தாம் என்பது ‘குலம்’ என்ற அமைப்பை ஆராய்ந்தபோது தெரிய வந்தது. + +ஒரு குலத்தில் ஒவ்வொரு உறுப்பிற்கும் நேர்மாற்றுறுப்பு தனித்தன்மை வாய்ந்தது என்ற நிறுவல் மேற்சொன்ன பல நிறுவல்களையும் ஒன்று படுத்துகிறது. அந்த உயர்தள நிறுவலைக் கீழே காணலாம். + +"x’ , x’’" இரண்டு உறுப்புகள் G இல் "x" இன் மாற்றுறுப்பு +" x" இனுடைய இயல்பாகிற (G5) ஐ பெற்றிருக்கு மானால், + +"x’ * x" = "e" = "x * x’" +மற்றும், +"x’’ * x" = "e" = "x * x’’" +ஆக, + +"x’ = e * x’ = (x’’ * x ) * x’ = x’’ * (x * x’) = x’’ * e = x’’." + +இதனால் நமக்குத்தெரிவது, குலம் G இல் ஒவ்வொரு உறுப்புக்கும் உள்ள மாற்றுறுப்பு தனித்தன்மையுடையது. ஒவ்வொரு உறுப்புக்கும் மாற்றுறுப்பு இருக்கவேண்டும் என்பது ‘குலம்’ என்பதன் வரையறை. அம்மாற்றுறுப்பு ஒன்றுக்குமேல் இருக்கமுடியாது என்பது குலத்தின் ஐந்து விதிகளிலிருந்து உருவாகும் ஒரு கிளைத்தேற்றம். இன்னும் பற்பல தேற்றங்கள் உருவாகலாம். இந்த வழியில் ‘குலம்’ என்பதை பண்பியல் தளத்தில் ஆராய்ச்சி செய்ததால் கிடைத்த முடிவுகள் எல்லாம் சேர்ந்து தான் குலக் கோட்பாடு (Group Theory) என்று கணிதத்தின் ஒரு பெரிய கிளைத்துறையாக இன்று நடமாடுகிறது. + +இவ்வாறு ஒரு நுண்புலப்பொருளான ‘குலம்’ என்பதன் விதிகளிலிருந்து பண்பியல் தளத்தில் ஆய்ந்து அடையப்படும் முடிவுகளை கீழ்த்தளத்திலுள்ள எல்லா தனிப்பட்ட துறைகளிலும், அதாவது, எந்தெந்த துறைகளில் எந்தெந்த சந்தர்ப்பங்களில் ‘குலம்’ என்ற அமைப்பைக் கண்டு கொள்கிறோமோ அந்தந்த சந்தர்ப்பங்களிலெல்லாம், அந்த முடிவுகளைத் தனிப்படுத்தினால், நமக்கு ஒரே சமயத்தில் வெவ்வேறு பிரச்சினைகளில் அநேகச் சிறப்பு விளைவுகள் கை சொடுக்கும் நேரத்தில் கிடைக்கும் வாய்ப்புக்கள் உண்டு. இப்படி உண்டென்பதும், இதனால் கணித உட்துறைகளிலும் மற்றும் இயற்பியலிலும் ஏராளமான புது விளைவுகளை நேரில் கண்டறிந்ததும், இருபதாவது நூற்றாண்டின் அறிவியல் சாதனைகளில் முக்கியமான ஒன்று. + +குலம் என்பது ஒரு "அமைப்பு" தான். இன்னும் கணிதத்தில் பல அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு அவைகளும் சீரிய முறையில் வரையறுக்கப்பட்டு, பயன் படுத்தப் பட்டிருக்கின்றன. அவ்வமைப்புகளில் முக்கியமானவைகளுடைய பட்டியல்: + + +மற்றும் பல. + + +கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்) + +கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்) + + + + + + + +திருகோணமலை மாவட்டம் + +திருகோணமலை மாவட்டம் ("Trincomalee district") இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. திருகோணமலை நகரம் இதன் தலைநகரமாகும். திருகோணமலை தேர்தல் மாவட்டம் 3 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 230 கிராமசேவகர் பிரிவுகளையும் 10 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. இலங்கையில் விகிதாசாரத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட முன் இம் மாவட்டத்தின் திருகோணமலை, மூதூர், சேருவிலை ஆகிய தேர்தல் தொகுதிகளிலிருந்து நான்கு உறுப்பினர்கள் இலங்கை நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர். இவற்றுள் திருகோணமலையும், சேருவிலையும் தலா ஒவ்வொரு உறுப்பினரைத் தெரிவு செய்யும் ஒற்றை உறுப்பினர் தொகுதிகளாகவும் மூதூர் இரண்டு உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் இரட்டை உறுப்பினர் தொகுதியாகவும் இருந்தது. + +திருகோணமலை மாவட்டத்தின் பரப்பளவு 2727 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இது நாட்டின் மொத்தப் பரப்பளவின் 4.16% ஆகும். + +திருகோணமலை மாவட்டம் இலங்கைத் தீவின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இம் மாவட்டத்தின் வடக்கில் முல்லைத்தீவு மாவட்டமும், மேற்கில் அனுராதபுர மாவட்டமும், தெற்கில் பொலநறுவை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களும், கிழக்கில் கடலும் உள்ளன. புகழ் பெற்ற இயற்கைத் துறைமுகமாகிய திருகோணமலைத் துறைமுகம் இம் மாவட்டத்திலேயே உள்ளது. + +கடைசியாக முறையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்ட 1981 ஆம் ஆண்டுக்கான கணக்கெடுப்பின்படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள்தொகை 255,948 ஆகும். இலங்கையில் நடைபெற்ற 2001 ஆண்டுக்கான கணக்கெடுப்பு வடக்குக் கிழக்கு மாகாணங்களில் முழுமையாக இடம்பெறவில்லை. எனினும் இவ்வாண்டில் இம் மாவட்டத்தின் மக்கள்தொகை 340,158 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 1.81% ஆகும். + +திருகோணமலை மாவட்டம் இலங்கையில் மிகக் குறைந்த மக்களடர்த்தி கொண்ட மாவட்டங்களுள் ஒன்று. 2001 ஆம் ஆண்டு மதிப்பீடுகளின் படி இம் மாவட்டத்தின் மக்களடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு 138 ஆகும். இலங்கையின் சராசரி மக்களடர்த்தியான 300 என்ற அளவின் பாதியிலும் இது குறைவே. + +இம் மாவட்டத்தின் இன அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கீடுகள் இங்கே 93,132 தமிழரும், 85,503 சிங்களவரும், 75,039 சோனகரும் இருந்ததாகக் காட்டுகின்றன. இதன்படி இம் மாவட்டத்தில் வாழும் இவ்வினங்களில் நூற்றுவீத (விழுக்காடு) அளவுகள் முறையே 36.39%, 33.41%, 29.32% ஆகக் காணப்படுகின்றன. + + + + + +புத்தளம் மாவட்டம் + +புத்தளம் மாவட்டம் ("Puttalam district") இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. புத்தளம் நகரம் இதன் தலைநகரமாகும். புத்தளம் மாவட்டம் 5 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 548 கிராமசேவகர் பிரிவுகளையும் 16 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. + + + + +அனுராதபுரம் மாவட்டம் + +அனுராதபுரம் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. அனுராதபுரம் நகரம் இதன் தலைநகரமாகும். + + + + +பொலன்னறுவை மாவட்டம் + +பொலன்னறுவை மாவட்டம் ("Polannaruwa district") இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ளது. பொலன்னறுவை நகரம் இதன் தலைநகரமாகும். பொலன்னறுவை மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 290 கிராமசேவகர் பிரிவுகளையும் 7 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. + + + + +குருணாகல் மாவட்டம் + +குருணாகல் மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது வடமேற்கு மாகாணத்தில் அமைந்துள்ளது. குருணாகல் நகரம் இதன் தலைநகரமாகும். குருநாகல் மாவட்டம் 14 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 1610 கிராமசேவகர் பிரிவுகளையும் 27 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டத்தில் உள்ள "ரம்பொடகல" மகாவிகாரையில் ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை உள்ளது. + + + + +பதுளை மாவட்டம் + +பதுளை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. பதுளை நகரம் இதன் தலைநகரமாகும். பதுளை மாவட்டம் 9 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 597 கிராமசேவகர் பிரிவுகளையும் 15 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. + + + + +மொனராகலை மாவட்டம் + +மொனராகலை மாவட்டம் இலங்கையின் 25 மாவட்டங்களில் ஒன்றாகும். இது ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. மொனராகலை நகரம் இதன் தலைநகரமாகும். மொனராகலை மாவட்டம் 3 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்டுள்ளது. இது 319 கிராமசேவகர் பிரிவுகளையும் 11 பிரதேச செயலர் பிரிவுகளையும் கொண்டுள்ளது. + + +2008 - மூலம் + + + + + + + +அன்னை பூபதி + +அன்னை பூபதி (நவம்பர் 3, 1932 - ஏப்ரல் 19, 1988), மட்டக்களப்பில் இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக சாகும் வரை உண்ணாநிலையிருந்து உயிர் நீத்தவர். + +பூபதியம்மாவின் கணவர் பெயர் கணபதிப்பிள்ளை. பத்துப்பிள்ளைகளின் தாய். மட்டக்களப்பு - அம்பாறை அன்னையர் முன்னணியின் செயற்பாட்டாளர். விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைக்கும் சண்டை நடந்து கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் இந்தியப் படைக்கு எதிராக குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு-அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. அவர்கள் இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து இந்திய அரசுக்கெதிராக உண்ணா நோன்புப் போராட்டத்தைத் தொடங்கினர். + +அவையாவன: + + +அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் 1988ம் ஆண்டு ஜனவரி 4 ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் கொழும்பில் இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடங்க முடிவு எடுத்தனர். +அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் "அன்னம்மா டேவிட்" தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு பெப்ரவரி 16 ஆம் நாள் அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில் அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை. + +இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை மார்ச் 19 1988 இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சி��்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார்.இடையில் பல தடங்கல்கள் வந்தன.உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார். + +அன்னை பூபதியின் நினைவுநாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள் என்றும் நினைவு கூறப்படுகிறது. + + + + + + +சோழர் இலக்கியங்கள் + +சோழர் இலக்கியங்கள் என விளிக்கப்படுவது தென்னிந்தியாவினை சோழ மன்னர்கள் வலிமை பெற்று ஆட்சி புரிந்த ஒன்பதாம் நூற்றாண்டு முதல் 13ம் நூற்றாண்டு வரையான காலபகுதியிலே எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும்.சோழர் வலிமையாக ஆட்சி புரிந்த காலப்பகுதியிலே அந்நிய படையெடுப்பு,கலகம்,குழப்பம் எதுமற்ற நிலமையும்,சைவம்,வைணவம் பக்தி இயக்கங்களின் எழுச்சியும்,சோழமன்னர்கள் கலை,இலக்கியங்கள் மீதான விருப்பும்,புலவர்கள் மீது காட்டிய பரிவும் மிகச் சிறந்த இலக்கியங்கள் தமிழில் தோன்ற காரணமாயிற்று.சாளுக்கிய சோழர்கள்ளுடைய ஆட்சிக்காலம் தென்னிந்திய கலை,இலக்கியங்களின் பொற்காலம் என சரித்திர ஆய்வாளர்கள விதந்து குறிப்பிடுவர். ஒரு சில இலக்கிய பிரதிகள் தவிர சோழர்கால இலக்கியங்கள் பலதும் தற்போதும் அழியாது கிடைக்கப்பெற்றுள்ளன.சோழர் காலத்தில் எழுதப்பட்ட இலக்கிய பிரதிகள பற்றிய விபரங்கள் பல கல்வெட்டுகளில் காணக்கிடைக்கின்றன. + +இக் காலகட்டத்தில் எழுதப்பெற்றவற்றை பக்தி இலக்கியங்கள்,தமிழ் இலக்கணங்கள்,அரசர் புகழ்பாடும் துதி இலக்கியங்கள் என வகைப்பிரிக்கலாம். + +ஏனைய துறைகள் பலவற்றைப் போலவே, இலக்கியத் துறையிலும் சோழப்பேரரசர்களின் காலமே, தென்னிந்திய சரித்திரத்தில் ஆக்கத்திற்கு உரிய காலப்பகுதியாகச் சிறந்து விளங்குகிறது. சங்க காலத்தில், சோழ வம்சத்து(அரசர்களும்) இளவரசர்களும் கவஞர்களைப் போற்றும் புரவலர்களாகவும் சில சமயம் தாங்களே புலவர்கள் அல்லது நூலாசிரியர்களாகவும் விளங்கினர்; சங்க காலம், இலக்கி��த் துறையில் ஏற்றம் பெற்று விளங்கியது. அதன் பிறகு, அடுத்த நான்கு அல்லது ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பல்லவர்கள், பாண்டியர்கள் ஆதரவில், பாதுகாப்பில், இலக்கியமும் கலைகளும் இருந்து வந்தன. + +இந்தக் காலத்தில் தமிழ் இலக்கியமும் சமஸ்கிருத இலக்கியமும் விரிவான வளர்ச்சியடைந்தன. குறிப்பாக்க புத்த சமயத் துறவிகள், இக்காலத்தில் பாலி மொழியிலும் சில நூல்களை உருவாக்கினர். தேவாரம், திருவாசகம் தமிழ் வைணவர்களுடைய நாலாயிர திவ்ய பிரபந்தந்தத்தின் பெரும்பகுதி ஆகியவை இக்காலத்தில் தோன்றியவையே என்பதில் ஒரு சிறிதும் சந்தேகம் இல்லை பாண்டிக்கோவை, சூளாமணி, நந்திக் கலம்பகம், பெருந்தேவனாரின் பாரத வெண்பா ஆகியவையும் இதே காலத்தைச் சேர்ந்தவையே. சமஸ்கிருத இலக்கியத்தில் புகழுடன் விளங்குபவர்களான குமாரலரும் சங்கரரும் இக்காலத்தவரே. + +சோழர் கை ஓங்கியதிலிருந்தே, இலக்கியம் பல வடிவங்களில் பெருகியது. தென்னிந்தியாவில் முதல் தடவையாக ஒரு பேரரசு ஏற்பட்டது என்பதையொட்டி, உணர்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்தது. அதன் எதிரொலி இலக்கியங்களில் பிரதிபலிக்கலாயிற்று. சோழப்பேரரசு தோன்றியது என்பது புதிதாக ஏற்பட்ட அரசியல் உண்மை ஆனால் இந்த நிகழ்ச்சிக்கும் புதிய இலக்கிய படைப்புக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. + +சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் அலங்காரமான மெய்க்கீர்த்தி(பிரசஸ்தி) வாசகங்களையும் கவிதைகளையும் அவற்றின் வீறு நடையையும், முன்காலத்திய கல்வெட்டுக்களின் உப்பு சப்பில்லாத வாசகத்துடன் ஒப்பிட்டால் எவ்வாறு சோழப் பேரரசு தோன்றியதன் பயனால் புதிய இலக்கிய படைப்புக்கள் தோன்றியது என்ற கேள்விக்கு, தெளிவான விடை கிடைக்கும். படித்தவர்களின் மொழி அல்லது புலமை மொழியான சமஸ்கிருதத்தைக் காட்டிலும், மக்கள் பேசிய மொழியான தமிழ் தெளிவாக நாம் காணுமாறு இந்த வேற்றுமை உள்ளது. முதலாம் இராஜராஜ சோழன் காலத்திலிருந்து சோழ அரசர்களின் மெய்க்கீர்த்திகள் எல்லாவற்றையும் ஒரு சில விதிவிலக்குகள் நீங்கலாக, அக்காலத்து இலக்கியத்துக்குச் சிறந்த சான்றாக, எடுத்துக்காட்டாக வகைப்படுத்திச் சொல்லலாம். + +அவற்றின் ராஜ கம்பீரமான வசகம், செய்யுள்களின் ஆற்றொழுக்குப் போன்ற நட வரலாற்று நிகழ்ச்சிகளை விறுவிறுப்புடன் தொகுத்துச் சொல்லும் பாங்கும் போக்க���ம் அவற்றுக்குத் தமிழ் இலக்கியத்தில் தனி இடத்தைத் தருகின்றன. பேரரசர்களின் பிரசஸ்திகள் தவிர, கல்வெட்டுக்களில் எத்தனையோ இலக்கிய வகைகல் உள்ளன. சிதம்பர, திருஆரூர்க் கல்வெட்டுக்கள், இவ்வகையில் உதாரணங்கள். இவை முதலாம் குலோத்துங்க சோழனிடமும் விக்ரம சோழனிடமும் அதிகாரியாக இருந்து பெரும் புகழுடன் விளங்கிய நரலோக வீரனின் வரலாற்றையும் சாதனைகளையும் கூறுவன. அட்டி, வயலூர்(வைலூர்), விருத்தாச்சலம் ஆகிய ஊர்களில் காணப்படும் கல்வெட்டுக்களில் காடவர்களின் பிரசஸ்திகளும் குறிப்பிடத்தக்கன. + +இவை அனைத்திலும் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா முதலிய பல செய்யுள் வகைகளும் திறமையாக ஆளப் பெற்றிருக்கின்றன. தமிழ் யாப்பிலக்கண விதிகள் கரடுமுரடானவையாக இருந்த பொழுதிலும் அவையும் நயமுறக் கையாளப் பெற்றிருக்கின்றன. ஆசிரியர்கள், விளங்காத சொற்களையும் செயற்கையான வாக்கியப் போக்கையும் தவிர்த்திருக்கிறார்கள். வருணனைப் பாடல்கள் என்ற வகையில் இந்தக் கல்வெட்டுக்கள், பேரரசுகளின் பிரசஸ்திகளில் மிகச் சிறந்து விளங்குகின்றன. எனவெ, இந்தக் கவிதைகளைப் புலமை நிறைந்த அவைக்களக் கவிஞர்கள் இயற்றினார்கள் என்பதற்கும் அவர்களை அடிக்கடி நன்கு பயன்படுத்திப் போற்றி, ஊக்குவித்து வந்ததால் அக்காலத்தில் சமயச் சார்பற்ற இலக்கியம் ஏற்றம் பெற்றது என்பதற்கும் சிறிதளவும் சந்தேகம் கிடையாது. + +கல்வெட்டுக்களில் சில நூல்களின் பெயர்கள் தற்செயலாக சொல்லப் பெற்றிருக்கின்றன. மற்றபடி இவை பற்றி ஒன்றும் தெரியவில்லை; ஒரு காலத்தில் அந்த நூல்கள் போற்றப்பட்ட போதிலும், நமக்கு இப்போது அந்த நூல்கள் கிடைக்காததால், அந்த நூல்களுக்கு இருந்த பெருமை அவற்றின் இலக்கியச் சிறப்பாலா அல்லது ஆற்றை எழுதியவர் உள்ளூர்க்காரர் என்ற பற்றுதலாலா அல்லது நூலாசிரியரின் தனிப்பட்ட செல்வாக்காலா என்பதை முடிவு செய்யமுடியவில்லை. இந்த நூல்களின் பெயரிலிருந்தும், கல்வெட்டுக்களிலிருந்தும் இவை சொல்லப்பட்டிருக்கிற சந்தர்ப்பங்களிலிருந்தும் மக்களுக்கு இவற்றில் ஆர்வம் இருந்ததென்றும் இவ்வகை இலக்கியங்களை அக்காலத்தார் விரும்பி வரவேற்றார்கள் என்றும் தெரிகிறது. சோழப் பரம்பரையில் ஈடும் இணையும் இல்லாதவன் முதலாம் இராஜராஜன். இந்த ஒப்பற்ற சக்கரவர்த்தியைப் பற்றி ஒர�� நாடகமும் ஒரு காவியமும் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றின் பெயர் இராஜராஜஸ்வர நாடகம், இராஜராஜ விஜயம். + +முதலில் சொல்லிய நூல், தஞ்சைப் பெரியகோயிலில் திருவிழாக்களில் நடிப்பதற்காக எழுதப் பெற்றது. இரண்டாவது நூல், திருப்பூந்திருத்திக் கோயிலில் படிப்பதற்காக ஆக்கப் பெறது. இவற்றை நடிப்பதற்கும் படிப்பதற்குமாக அறக்கட்டளைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த நூல்கள் தமிழில் எழுதப்பட்டிருந்தனவையா சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருந்தனவையா என்பது உறுதியாகத் தெரியவில்லை. இந்த நாடகம் இராஜராஜ சோழனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட நாடக நூலாக இருந்திராது. சைவச் சமயத்தாரிடம் வழிவழியாக வழங்கி வருகிற ஒரு சில கதைகளைப் பரப்புவதோடு நிற்காமல் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய பெருமையையே சுவையுடன் தெரிவிப்பதற்காக, நாடக பாணியில் இதை எழுதியிருக்க வேண்டும். + +பெருங்கதை அல்லது உதயணன் கதை என்பது பிரஹத் கதையின் தமிழ்வடிவம். இது ஒரு முக்கியமான நூல், கொங்கு நாட்டைச் சேர்ந்த சிற்றரசரனான கொங்கு வேளிர் என்ற புலவர் இதை எழுதியிருக்கிறார். பாண்டிய-பல்லவர் காலத்தின் இறுதியில் இது உருவாகியிருக்கலாம். கொங்கு வேளிரின் வாழ்க்கையைப் பற்றிய விவரமான செய்திகள் அவ்வளவாகத் தெரியவில்லை. இரண்டாம் சங்க காலத்தில் பல நூல்களைப் படித்து 'உதயணன் கதை' எழுதப்பட்டதாக சிலப்பதிகாரத்திற்குச் சிறந்ததொரு உரை எழுதியுள்ள அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டிருக்கிறார். + +இந்த நூல் கி.பி. 3ம் நூற்றாண்டிலோ அதற்கு முன்னரோ எழுதப்பட்டிருக்கலாமென்று முடிவு செய்திருக்கிறார்கள். ஆனால், இது முடிந்த முடிவு அல்ல. அடியார்க்கு நல்லார் வாழ்ந்த கி.பி. 12-ம் நூற்றாண்டில், 'உதயணன் கதை'யைப் பற்றிய இந்த நம்பிக்கை நிலவியது என்று சொல்லலாம். இந்த நூலில் எஞ்சியுள்ள பகுதிகளுக்கு மிகச் சிறந்த பதிப்பைத் தந்துள்ளார் டாக்டர் உ.வே. சாமிநாத ஐயர். வருணனைக் கவிதைகளுக்கு ஏற்றதான அகவற்பாவில் இந்த நூல் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியருடைய நடை கூர்மையாயும்(திட்பமாயும்) தெளிவாயும் இருக்கிறது. தமிழ் இலக்கிய உலகம், இந்த நூலை சிறந்ததொரு காப்பியமாக மதித்து வருகிறது. + +திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மஹாகாவியங்களுள் - ஐ���்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. இது வாதீபசிம்ஹனின் க்ஷத்ர சூடாமணியைப் பின்பற்றியது, அந்த மூல நூலோ, கி.பி. 898-ல் குணபத்திரன் எழுதிய உத்தரபுராணத்தை அடிப்படையாகக் கொண்டது. எனவே சீவக சிந்தாமணி பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டிருக்க வேண்டும். சிந்தாமணியைத் தந்த ஆசிரியர் சோழ வம்சத்தில் பிறந்தவர் என்று நச்சினார்க்கினியர் சொல்கிறார். சமண புராணங்களில் தொன்று தொட்டு நிலவிவரும் கதைகளை ஜனரஞ்சகமாகவும் இனக்கவர்ச்சியுடனும் கற்பனையுடனும் தமிழில் எழுத திருத்தக்க தேவர் விரும்பினார்; அம்முயற்சியில் அவர் வெற்றிகண்டார் என்பதும் உண்மை. + +நமக்கு இப்போது கிடைத்திருக்கும் சீவக சிந்தாமணி செய்யுள்கள் ஒவ்வொன்றும் நான்கு வரிகள் கொண்ட 3,141 செய்யுட்கள் உடையது. ஆசிரியர் 2,700 செய்யுட்களையே செய்தார் என்று அறியப்படுகிறது. ஏனைய 445 செய்யுட்களில் சில அவருடைய குருஆலும் வேறு சில வேறு யாரோ ஒருவராலும் எழுதப்பட்டவை. இரண்டு செய்யுட்களை, இவை குருவால் எழுதப்பட்டவை என்று உரையாசிரியர் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஏனைய செய்யுட்களை யார் எழுதியது என்ற விவரம் இல்லை. பெரிய புராணம் எழுத சீவக சிந்தாமணி நேரடியாகக் காரணமாக இல்லை; ஆனாலும், சீவக சிந்தாமணி அதற்கு தூண்டுகோலாக இருந்திருக்கும் என்று அறியப்படுகிறது. + +ஐம்பெரும் காப்பியங்கள் என்பவற்றுள் வளையாபதியும், குண்டலகேசியும் அடங்கும். இவை முழுமையாகக் கிடைக்கவில்லை. வேறு சில நூல்களில், இவற்றின் சில சில பகுதிகள் மட்டுமே காணப்படுகின்றன. இவையும் ஏறத்தாழ சீவக சிந்தாமணியின் காலத்தில் செய்யப்பட்டவையே. பௌத்த மதத்தார்த் தமிழுக்கு வழங்கியுள்ள இலக்கியச் செல்வங்கள் மிகக்குறைவு. அவற்றுள் ஒன்ரு குண்டலகேசி. புகழ்பெற்ற மணிமேகலை என்னும் நூலும் பௌத்தர்களால் படைக்கப்பட்டதே. + +கல்லாடனார் இயற்றியது கல்லாடம் என்னும் கவிதை நூல், ஓர் ஊரின் பெயரை வைத்து நூலுக்கும் நூலாசிரியருக்கும் பெயர் இடம் பெற்றிருக்கின்றன. கல்லாடர் என்ற பெயரில் சங்க காலப் புலவர் ஒருவரும் இருந்திருக்கிறார்; அவருடைய பாடல்களாக, புறநானூற்றில் ஐந்து செய்யுள்களும் அகநானூற்றிலும் குறுந்தோகையிலும் பல செய்யுள்கள் காணப்படுகிறன. கல்லாடத்தின் ஆசிரியர் திருச்சிற்றம்பலக்கோவையைத் தன் நூலுக���கு அடிப்படையாகக் கொண்டார் என்றும் செவிவழிச் செய்திஉள்ளது; இது நம்பத்தகுந்ததே. மரபுக்கு மாறுபட்டும் செயற்கை நடையிலும் இந்நூல் இயற்றப்பட்டிருக்கிறது. சங்க காலக் கவிதைப் பாணியையும் சொல்லமைப்பு முறையையும் இவர் கொண்டிருக்கிறார். + +கர்வம் அல்லது புலமைச் செருக்கு உடைய ஒருவரின் படைப்பு என்பது இந்நூலை மேற்போக்காகப் பார்த்தாலும் தெரியவரும். இதிலுள்ள நூறு செய்யுள்கள் ஒவ்வொன்றும் அகத்துறையில் ஒரு இயல்பைப் படம் பிடித்துக் காட்டுவன. கோவை என்னும் பிரபந்த வகையில் வரும் காதல் கவிதைகளை உயிரோட்டமின்றி, கல்லாடத்தில் காணலாம். திருக்கோவையிலிருந்து செய்யுள்களைத் தொகுத்து முன்மாதிரியாக வைத்து, நூலாசிரியர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டுவிட்டார். மேலும் தான் வாழ்ந்த காலத்திற்குப் பொருத்தமில்லாத மொழிமரபைப் பின்பற்ற வேண்டுமென்று வலிய முயன்று அதில் தோல்வி கண்டுள்ளார். ஒரு பரிகாசமான நூலாகவோ கேலிச்சித்திரமாகவோ அவர் இதை எழுதவில்லை. + +திருக்கோவை சிறப்பை கல்லாடர் கூறிய விளக்கங்களுக்குப் பின்னரே, சங்க காலப் புலவர்கள் ஒப்புக்கொண்டதாக ஒரு வதந்தி உண்டு. இந்த நூல் ஆடம்பரமான நடையில் அமைந்தது ஆகையால் 'கல்லாடம் கற்றவனோடு மல்லாடதே' என்று ஒரு பழமொழி உண்டு. அண்மைக் காலங்களில் கூட சில அறிஞர்களும் புலவர்களும் இந்நூலைப் பெரிதும் மதித்து வருகிறார்கள். மதுரையில் சிவபெருமான் நடத்திய திருவிளையாடல்களைக் கல்லாடர் நன்கு தெரிந்து வைத்திருந்தார். மாணிக்கவாசகர், தருமி, இடைக்காடர் முதலிய பலருக்காக சிவபெருமான் நிகழ்த்திய அற்புதச் செயல்களைக் கல்லாடர் எடுத்துக் கூறுகிறார். + +முதல் குலோத்துங்கனின் ஆட்சியின் இறுதியில் அரசவை கவிஞரான ஜெயங்கொண்டார், கலிங்கத்துப் பரணியைப் பாடினார். நமக்குக் கிடைத்துள்ள பரணிகளுள் இதுவே காலத்தால் முந்தியதும் சிறப்புமிக்கதும் ஆகும். 'பரணிக்கு ஒரு ஜெயங்கொண்டான்' என்ற பழமொழியிலிருந்து இந்நூலின் அருமையும் பெருமையையும் உணரலாம். எது வரலாறு, எது கட்டுக்கதை எது கற்பனை என்று வாசகர்களுக்குத் தெரியுமாறு எழுதியிருப்பது இந்நூலின் தனிச்சிறப்புக்களுள் ஒன்று. ஆசிரியரின் சொல் வளமும், பலவகைச் செய்யுள்களை ஒருங்கே இணைக்கும் திறமும் அவற்றுடன் நிகழ்ச்சிக்களைப் பின்னிப் பிணைக்கும் ஆற்றலும் குறிப்பிடத்தக்கவை. பரணி என்பது போர் பற்றியது; போரின் விவரங்களையும் சூழல்களையும் மட்டுமின்றிப் போர்க்களத்து நிகழ்ச்சிகளையும் சோகம், விரம் முதலிய சுவைகள் தோன்ற எடுத்துரைப்பது. + +குலோத்துங்கனின் கலிங்கப் போரைப் பிண்ணனியாகக் கொண்ட பல்வேறு இலக்கியங்கள் தோன்றியதாகத் தெரிகிறது. வீரசோழியம் உரை, தண்டியலங்காரம் உரை ஆகியாவ்ற்றில் ஒரு சில செய்யுள்கள் மட்டுமே கிடைக்கின்றன; கலிங்கத்துப் போர் பற்றிய ஏனைய பல செய்யுள்கள் நமக்குக் கிடைக்கவில்லை. அவை இனி நமக்குக் கிடைப்பதற்கு வழியில்லை. கலிங்கத்துப் பரணி அழியாது கிடைத்திருக்கிற்றது எனினும், அதன் மிக உன்னதமான இலக்கியத்தரமே அதற்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஒரு சிறந்த நூல், மட்டமான ஏனைய நூல்களை அழித்துவிடும் என்பதற்கு, இந்திய இலக்கியங்களில் வரலாற்றில் பல உதாரணங்கள் உள்ளன. ஜெயங்கொண்டாரைப் பார்த்து எழுதியவர்கள் பலர்; ஆனால், பிற்காலப் புலவர்களில் எவரையும் ஜெயங்கொண்டானுக்குச் சமமானவர்கள் என்றோ அவருடன் போட்டியிடக் கூடியவர்கள் என்றோ சொல்வதற்கில்லை. + +கூத்தன் என்பது ஓட்டக்கூத்தனின் சுருக்கமான பெயர். இவர் செங்குந்தர் மரபினர். அம்மரபினர் போர்ப்படையில் சாதாரணப் பட்டாளத்துக்காரன் முதல் படைத்தலைவன் வரை பல வேலைகளில், மற்றும் நெசவுத் துறையிலும் ஈடுபட்டிருந்ததாகத் தெரிகிறது. கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளலின் தகப்பனுமான சங்கரன் என்பவனிடம் ஊழியம் செய்து வந்தார். சங்கரனிடம் வீட்டு ஏவல்களைச் செய்வதை விட வேறு பெரிய பதவிக்கு உரிய தகுதிகள் ஒட்டக்கூத்தனுக்கு இருப்பதை ஒரு காங்கேயன் உணர்ந்தான்; தன் பெருமையை அறிந்து அந்த வள்ளலுக்கு நன்றி கூறத்தான், கூத்தன் ஒரு 'நாலாயிரக்கோவை' பாடினர். + +கூத்தனின் புகழைக் கேள்விப்பட்ட மூன்று சோழப் பேரரசர்கள் அவரை அரண்மனைப் புலவனாக்கிக் கொண்டார். அவர்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் ஒரு உலாவைப் பாடினார். ஒரு பரணி பாடி, விக்கிரமச் சோழனின் கலிங்கப் போர் வெற்றியைச் சிறப்பித்தார். இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒரு பிள்ளைத் தமிழும் பாடினார். இந்தப் பிள்ளைத் தமிழே ஒட்டக்கூத்தனின் படைப்புக்களிலெல்லாம் சீரும் சிறப்பும் உடையது. காரணம் - சொல்வளம், செய்யுள்களின் ஓசை நயம், அழகான உருவகத் திறமை வாய்ந்தமையாகும். ஈட்டி எழுபது, எழுப்பெழுபது, தக்கயாகப் பரணி ஆகியவற்றைக் கூத்தன் எத்தகைய சூழ்நிலையில் பாடினார் என்பதைப் பற்றிப் பல கதைகள் வழங்குகின்றன. + +கம்ப இராமாயணம் பாடிப் பெரும் புகழ்பெற்றவர் கம்பன். தமிழ் இலக்கியத்தில் கம்ப இராமாயணமே மிகப்பெரிய இதிகாசம். வால்மீகியைப் பின்பற்றி எழுதியிருப்பதாகக் கம்பரே சொல்லுகிற போதிலும், கம்பராமாயணம் சமஸ்கிருத மூல நூலின் மொழிபெயர்ப்பு ஆகாது; அதன் தழுவலும் இல்லை; கதை நிகழ்ச்சிகளைச் சொல்லுகிற பொழுதிலும், அதன் முக்கிய பாத்திரங்களைப் படைக்கும் முறையிலும், கம்பன் தனித்த உத்திகளை வால்மீகியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு கையாளுகிறான். தமிழ் இலக்கியத்தில் எங்குமே ஒப்பிட்டுக் காட்ட முடியாதபடி, ஆழமான கவிதை அனுபவத்தையும் புலமைத் திறனையும் கற்பனை ஆற்றலையும் கம்பனின் கைவண்ணமாகப் பார்க்கிறோம். + +எத்தனையோ பெரும் புலவர்கள் இந்திய மொழிகளையும் கீழைநாட்டு மொழிகளையும் இராம காதை எழுதிப் பெருமைப் படுத்தியிருக்கிறார்கள். அவர்களைப் போலவே கம்பனும் தன்னுடைய கதையில், அதன் வருணனையில் தன் காலத்து நிகழ்ச்சிகளையும் தான் வாழும் தமிழ்நாட்டின் சாயலையும் இடையிடையே புகுத்துகிறான் அல்லது படம் பிடித்துக் காட்டுகிறான். எனவே அவன் காட்டும் கோசலநாடு சோழநாடே என்று கூறலாம். நிலாவின் பெருமையை எடுத்துரைக்கும் பொழுது அவனுக்கு ஆதரவு வழங்கிய வள்ளலான திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் புகழ் போல, நிலவின் ஒளியும் எங்கும் பரவியிருந்தது என்று சொல்லி தன் வாசகர்களைக் கம்பன், காந்தம் போல தன்பாலும் தன்னைப் புரந்த(ஆதரவளித்த) வள்ளலின் பாலும் ஈர்க்கிறான். சமஸ்கிருத மொழியில் எவ்வாறு சொல்வன்மை பெற்றிருந்தானோ அவ்வாறே, கம்பன் தமிழ் மொழியிலும் சொல்வன்மை(நாவன்மை) பெற்றிருந்தான். + +சில சமயம், கம்பனும் ஏனைய தமிழ்ப்புலவர்கள் போல, பாவியல் மரபில் சிக்கிக் கொள்கிறான்; அவற்றின் போக்குக்குக் கட்டுப்பட்டு விடுகிறான். சான்று: மிதிலைக்கு இராமன் வந்தவுடன் எதிர்பாராத விதமாக இராமனும் சீதையும் சந்தித்துவிடும் சந்தர்ப்பத்தில் அவர்களுடைய உணர்ச்சிகள் எவ்வாறு இருந்தன என்பதை, மிக விரிவாக விவரிக்கிறான். இராமனுடைய மோதிரத்தை அநுமான், சீதையிடம் கொடுத்த பொழுது சீதைக்கு இருந்த உணர்ச்சிகளையும் கம்பன�� விவரிக்கிறான்; கணவனுடன் மீண்டும் கூடி விட்டது போலச் சீதை நினைத்து மகிழ்ந்தாள் என்று மட்டும் வால்மீகி சொல்லியிருக்கிறான். கம்பன் அதோடு நிறுத்தவில்லை, அதை இன்னும் விரிவாகக் கூறுகிறான். ஆனால், தசரதனுடைய அசுவமேதயாகம் முதலியவற்றை வால்மீகி சொல்வதைவிடச் சுருக்கமாகவே கம்பன் தெரிவிக்கிறான். + +புகழேந்தி, ஒட்டக்கூத்தன் காலத்தவர் என்ற கருத்து நீண்ட காலமாக இருந்து வருகிறது, அவர் தொண்டை நாட்டில் 'களந்தை' என்னும் ஊரில் பிறந்து, பாண்டிய அரசர்களிடம் பணிபுரிந்ததாகக் கூறுவது வழக்கம். பிறகு சோழ அரசன் ஒருவன் பாண்டிய இளவரசி ஒருத்தியை திருமணம் செய்து கொண்ட பொழுது, இவனும் பாண்டிய அரசனால் சோழர் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். அங்கு கூத்தன், அவன் மீது பொறாமை கொண்டான். கூத்தனுக்கு புகழேந்திக்கும் ஏற்பட்ட பூசல் அரச குடும்பத்துக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது. கடைசியில் அரசனே தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தினான். பிறகு அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்துக் கொண்டார்கள் என்று செவிவழிக்கதைகள் உள்ளன. ஆனால் இதை நம்புவதற்கு ஆதாரங்கள் இல்லை. + +மேலும் செஞ்சியர்கோன் என்றழைக்கப்படும் செஞ்சி நாட்டுச் சிற்றரசனான கொற்றண்டை என்பவனைப் பலவகைப் பாக்களில் புகழ்ந்து புகழேந்தி ஒரு கலம்பகம் பாடியதாகத் தொண்டை மண்டல சதகம் கூறுகிறது. ஒட்டக்கூத்தரும் புகழேந்தியும் சமகாலத்தவர் என்ற கருத்தை நாம் ஏற்றுக்கொண்டால் செஞ்சியை ஆண்ட இந்தச் சிற்றரசன் விக்கிரம சோழ உலாவில் குறிப்பிடப்பட்டவனாகயிருக்கவேண்டும். ஆனால் இது சந்தேகத்திற்குரியது. புகழேந்தி கூத்தருக்கு ஒரு நூற்றாண்டுக்கு பின்னரே வாழ்ந்ததாகக் கொள்ளலாம். புகழேந்தி நளவெண்பா மூலம் புகழ் பெற்றவர். "வெண்பாவிற் புகழேந்தி" என்பது ஒரு சொற்றொடர். நளவெண்பா நளன் கதையை 400 வெண்பாக்களில் கூறுகிறது சமஸ்கிருதத்தில் அனுஸ்டுப் என்பதற்குச் சமமானது தமிழ் வெண்பா; தக்க திறமையும் புலமைமுடைய கவிஞர்கள் கையாண்டால், வெண்பா சிறந்த பலன் தரும். + +புகழேந்தியின் வெண்பாக்கள் மிகச்சிறந்த தரும் உடையன. நளன் கதையில் மக்கள் கொண்டிருந்த ஆர்வத்தால் நளவெண்பா மிகவும் பரவியது, இலக்கியச் சிறப்பில்லாத பல நூல்களைப் புகழேந்தியால் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறன. நளவெண்பாவைப் புகழ���ந்தி, எளிய முறையில் எழுதியதால், அதே முறையைப் பின்பற்றி வேறு சிலர் எழுதிய நூல்களையும் புகழேந்தியுடன் தொடர்புபடுத்திச் சொல்லும் மரபு உண்டாயிற்று. ஆனால் நளவெண்பாவுக்கும், இந்த நூல்களுக்கும் உள்ள வேற்றுமை, மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு போன்றது. புகழேந்தியின் காலத்தைப் பற்றி அறிதியிட்டு ஒன்றும் சொல்லமுடிவதில்லை. + +மாளுவ நாட்டில் முரணைநகர் சந்திரன் சுவர்க்கி என்பவனைப் புகழேந்தி குறிப்பிடுகிறார். இவனைப் பற்றி எந்தக் கல்வெட்டிலும் தகவல் இல்லை. கம்பனுடைய கருத்துக்களும், கம்பன் கையாண்டுள்ள சொற்றொடர்களும், புகழேந்தியின் நளவெண்பாவில் காணப்படுவதால், புகழேந்தி, கம்பனுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாது என்ற தீர்வுக்கு வரலாம். + + + + +அல்-உக்சுர் + +அல்-உக்சுர் (ஆங்கில வழக்கு: லக்சர், "Luxor") எகிப்து நாட்டிலுள்ள ஒரு நகரம். இது அந்நாட்டின் அல் உக்சூர் ஆட்சிப்பகுதியின் தலைநகரமும் ஆகும். இது தற்போது அண்ணளவாக 150,000 மக்கட் தொகையைக் கொண்டுள்ளது. இந்த நகரம், தீபை (Thebes) என்னும் பண்டைய எகிப்திய நகரம் இருந்த இடத்தில் அமைந்துள்ளதாலும், புகழ் பெற்ற பண்டைய எகிப்தியக் கோயில்கள் இந் நகர எல்லைகளுக்குள் உள்ளதாலும், இந்த நகரம் உலகின் சிறப்புமிக்க திறந்தவெளி அருங்காட்சியகம் எனக் குறிப்பிடப்படுவது உண்டு. + +இதற்கு நேர் எதிரே, நைல் நதிக்கு அப்பால் மேற்குக் கரை நெக்ரோபோலிசில் அரசர்களின் பள்ளத்தாக்கு, அரசிகளின் பள்ளத்தாக்கு என்பவை உட்படப் பல கோயில்களும், சமாதிகளும் வேறு நினைவுச் சின்னங்களும் காணப்படுகின்றன. ஆண்டுதோறும் பல்லாயிரக்காணக்கான சுற்றுலாப் பயணிகள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் இவற்றைப் பார்ப்பதற்காக இங்கு வருகிறார்கள். இந் நகரத்தின் பொருளாதாரத்தின் பெரும்பகுதி, இச் சுற்றுலாத் துறையில் தங்கியுள்ளது. + +இந் நகரின் பொருளாதாரம் பெரும்பாலும் சுற்றுலாத்துறையை அடிப்படையாகக் கொண்டிருந்த போதும், பெருமளவு மக்கள் வேளாண்மைத் துறையிலும் ஈடுபட்டுள்ளனர். சிறப்பாகக் கரும்புச் செய்கை முக்கியமான ஒரு பொருளாதார நடவடிக்கையாக விளங்குகிறது. + +இங்கே அல்-உக்சுர் அனைத்துலக வானூர்தி நிலையம் எனப்படும் வானூர்தி நிலையம் ஒன்று உண்டு. இது இந் நகரத்தை உல��ின் பிற பகுதிகளோடு இணைக்க உதவுகிறது. முன்னர் நைலின் கிழக்குக் கரைக்கும் மேற்குக் கரைக்குமான போக்குவரத்துத் தொடர்பு படகுச் சேவைகளினூடாகவே நடைபெற்று வந்தது. அண்மையில், நகரில் இருந்து சிறிது தொலைவில் புதிய பாலம் ஒன்று இந் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டுள்ளது. + + + + + + +சத்யராஜ் + +சத்யராஜ் (பிறப்பு: அக்டோபர் 3, 1954) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் "ரெங்கராஜ் சுப்பையா" ஆகும். இவர் எதிர்மறை நடிகராகத் தன் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்து, பின்னர் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். இவரது மகன் சிபிராஜ் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் ஒரு கடவுள்மறுப்பு கொள்கையுடையவர். இவர் நடிகர் மணிவண்ணனின் கல்லூரி நண்பர் ஆவார். + +வில்லாதி வில்லன் திரைப்படத்தினை இயக்கி நடித்துள்ளார். லீ என்ற திரைப்படத்தினை தயாரித்துள்ளார். இப்படத்தில் இவர் மகன் சிபிராஜ் கதாநாயகனாக நடித்தார். + +1987இல் சத்யராஜூம், அவருடைய மனைவியும், சத்யராஜின் தங்கையின் திருமணத்திற்கு எம்.ஜி.ஆரைப் பத்திரிகை வைத்து அழைத்தனர். அதன்படி எம்.ஜி.ஆரும் தன் துணைவியாருடனும், அமைச்சர் முத்துசாமியுடனும் சென்றார். அதன்பின் திருமணத்திற்கு வந்தமைக்கு எம்.ஜி.ஆருக்கு நன்றி சொல்ல சென்ற போது எம்.ஜி.ஆர் உடற்பயிற்சி செய்யும் கர்லாக்கட்டையைப் பரிசாகக் கேட்டு வாங்கிக் கொண்டார் சத்யராஜ். + +சத்யராஜ், தந்தை பெரியார் திரைப்படத்தினை ஊதியம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். அதற்காகப் பெரியாரியவாதிகளின் பெரும் மதிப்பும் அவருக்கு கிடைத்தது. திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி பெரியார் மோதிரத்தை அன்பளிப்பாக சத்யராஜிற்கு கொடுத்தார். இப்படத்தில் நடிகை குஷ்பு சத்யராஜிற்கு ஜோடியாக மணியம்மை வேடத்தில் நடித்துள்ளார். + +பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் நடிகர் சத்யராஜ் பங்கேற்றார். இதில் இயக்குநர் மணிவண்ணன் மற்றும் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன் மற்றும் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர். + + + + + + +அல்-உக்சுர் கோயில் + +அல்-உக்சுர் கோயில் ("Al 'Uqṣur temple" or "Luxor temple") இன்று லக்சோர் என அழைக்கப்படும் நகரத்தில் நைல் நதியின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள பெரிய பண்டைய எகிப்தியக் கோயில் ஆகும். இக் கோயில் அமுன், மட், சொன்ஸ் என்னும் பண்டைய எகிப்தியர்களின் மூன்று கடவுளர்களுக்காக அமைக்கப்பட்டது. பழங்கால எகிப்தின் புதிய அரசுக் காலத்தில் கொண்டாடப்பட்டு வந்த ஒப்பெட் விழா (Opet Festival) இக் கோயிலை மையமாகக் கொண்டே இடம்பெற்றது. இவ் விழாவில், அமுன் கடவுளின் சிலை அருகாமையில் உள்ள கர்னாக் கோயிலிலிருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். இங்கே அமுன், அவரது துணைவியான "மட்" பெண் கடவுளுடன் தங்க வைக்கப்பட்டு, விழாக் கொண்டாடப்படும். + +இக் கோயிலுக்கான நுழைவாயில் வடக்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நுழைவாயிலுக்குச் செல்லும் பாதையின் இரு மருங்கும் வரிசையாக "ஸ்ஃபிங்ஸ்" உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப் பாதை, பிற்காலத்தில், 30 ஆவது அரச வம்சத்தைச் சேர்ந்த முதலாவது நெக்டனெபோவின் காலத்தில் அமைக்கப்பட்டது. + +கோயிலின் நுழைவாயிலில், 24 மீட்டர் (79 அடி) உயரம் கொண்ட கோபுரம் போன்ற அமைப்பு (Pylon) உள்ளது. இது இரண்டாவது ராமேசஸினால் (Ramesses II) கட்டுவிக்கப்பட்டது. இதில், ராமேசஸின் போர் வெற்றிகள் குறித்த கட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. பிற்காலத்திலும், குறிப்பாக, நூபிய மற்றும் எதியோப்பிய மரபுகளைச் சேர்ந்த அரசர்களும் தமது வெற்றிகளை இதிலே பதிவு செய்துள்ளனர். முன்னர் இந்த நுழைவாயிலின் இரு பக்கங்களிலும் ராமேசஸின் மிகப் பெரிய ஆறு சிலைகள் அமைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றுள் நான்கு இருந்த நிலையிலும், இரண்டு நின்ற நிலையிலும் அமைந்திருந்தன. இன்று இவற்றுள் இருந்த நிலையிலுள்ள இரண்டு சிலைகள் மட்டுமே தப்பியுள்ளன. + +இளஞ்சிவப்புக் கருங்கல்லினால் அமைந்த 25 மீட்டர் (82 அடி) உயரமான தூண் (obelisk) ஒன்றும் இங்கே காணப்படுகின்றது. இவ்விடத்தில் இருந்த இதே போன்ற இன்னொரு தூண் 1835 ஆம் ஆண்டு பாரிஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள பிளேஸ் டி லா கொன்கோர்டே என்னும் சதுக்கத்தில் நிறுவப்பட்ட அது இன்றும் அங்கே காணப்படுகின்றது. +1: நீத் கர்ப்பமுறுவாள் என தூத் (பறவை அலகுடன் கூடிய உருவம்) அவளுக்கு அறிவித்தல். +2: நெஃப் (Kneph) மற்றும் ஹேதர் (Hathor) இருவரும் "ஆங்க்" (ankh) கருவி மூலம் நீத்தைக் கருவுறச் செய்தல். +3: "ரா" வின் பிறப்பு. +4: The adoration of Ra by the gods and the courtiers.]] +இக் கோபுர நுழைவாயில் உள்ளே அமைந்துள்ள தூண் வரிசைகளால் சூழப்பட்ட முற்றம் ஒன்றுக்கு இட்டுச் செல்கிறது. இப் பகுதியும் இரண்டாம் ராமேசஸ் காலத்தில் கட்டப்பட்டதே. இப்பகுதியும், நுழை வாயிலும் கோயிலின் ஏனைய பகுதிகளிலிருந்து வேறுபட்ட கோணத்தில் அமைந்திருப்பதைக் காணலாம். இம் முற்றத்துக்கு அப்பால், தூண் வரிசைகளோடு கூடிய ஊர்வலப் பாதை உள்ளது. மூன்றாம் அமென்ஹோட்டெப் (Amenhotep III) என்பவனால் கட்டப்பட்ட இப்பாதை 100 மீட்டர் (328 அடி) நீளம் கொண்டது. இப் பாதை 14 பப்பிரஸ் வடிவப் போதிகைகளைக் கொண்ட தூண் வரிசைகளைக் கொண்டது. + +சுவரில் அமைந்துள்ள அலங்காரப் பட்டிகளில் ஒப்பெட் விழாவின் பல்வேறு கட்டங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கர்னாக்கில் நடைபெறும் பலிகள், அமொன் கடவுள் லக்சோருக்கு வருதல், மீண்டும் திரும்பிச் செல்லுதல் ஆகிய காட்சிகள் இவற்றுள் அடங்கும். + + + + +இசுபிங்சு + +இசுபிங்சு (Sphinx) என்பது, சிங்கத்தின் உடலும், செம்மறி ஆடு, வல்லூறு, மனிதன் ஆகியவற்றுள் ஒன்றின் தலையுடனும் கூடிய ஒரு உருவத்தைக் குறிக்கும். இது பண்டைய எகிப்தியர்களின் பழைய அரசுக்காலத்து உருவாக்கமாக இருந்தாலும், பண்பாட்டுத் தொடர்புகளினால் கிரேக்கத் தொன்மங்களிலும் இடம் பெற்றுள்ளது. + +எகிப்திய இசுபிங்சு தொன்மம் சார்ந்த கற்பனைப் பிராணிகள் ஆகும். எகிப்திய சிற்ப மரபில் இவை காவலுக்கு உரியவையாகக் கருதப்படுகின்றன. ஸ்ஃபிங்ஸ்கள் மூன்று விதமான வடிவங்களில் காணப்படுகின்றன. + +எகிப்தில் உள்ளவற்றில் பெரியவையும், புகழ் பெற்றவையுமான இசுபிங்சுகள் கீசாவில், நைல் நதியின் மேற்குக் கரையில், வடக்கு நோக்கியபடி, அமைந்து உள்ளதாகும். இதன் பாதங்களுக்கு இடையில் சிறிய கோயிலொன்றும் உள்ளது. கீசாவின் பெரிய இசுபிங்சின் தலை எகிப்திய ஃபாரோவான கஃப்ரா (Khafra) என்பவருடையது அல்லது அவருடைய தம்பியான ஜெடெஃப்ரா (Djedefra) என்பவருடையது எனக் கருதப்படுகின்றது. இதன் அடிப்படையில் இது நாலாம் மரபுவழிக் (கி.மு. 2723 - கி.மு. 2563) காலப்பகுதியில் கட்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. எனினும் இதன் கட்டுமானத்தை இன்னும் பழைய காலத்துக்குத் தள்ளும் எடுகோள்களும் உள்ளன. + +மனிதத் தலையும் சிங்�� உடலும் கொண்ட உயிரினங்கள் பற்றிய தகவல்கள், தெற்காசியா மற்றும் தென்கிழக்காசிய நாடுகளின் மரபு, தொன்மங்கள், சிற்பங்கள் முதலியவற்றில் காணப்படுகின்றன. இவை பலவிதமாகப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் "புருஷமிருக" (சமஸ்கிருதம்), "புருஷமிருகம்", "நரசிம்ஹ" என்றும், "மனுசிஹ" அல்லது "மனுதிஹ" என மியன்மாரிலும், "நோரா நைர்" அல்லது "தெப்நோரசிங்" எனத் தாய்லாந்திலும் இசுபிங்சைக் குறிக்கப் பெயர்கள் வழங்குகின்றன. + +எகிப்து, மெசொப்பொத்தேமியா, கிரீஸ் போன்ற இடங்களில், பண்பாட்டுத் தொடர்ச்சியின்மை காரணமாக, இசுபிங்சு பற்றிய மரபுகள் அற்றுப்போனாலும், ஆசிய இசுபிங்சுகள் பற்றிய மரபுகள் இன்றும் புழங்கிவருன்றன. + + + + +ஸ்ரீவித்யா + +ஸ்ரீவித்யா (1953 - 2006) ஒரு புகழ்பெற்ற தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கர்நாடக இசை பாடகி எம். எல். வசந்தகுமாரியின் மகள். இவர் 1970களில் இருந்து 2000களின் தொடக்கம் வரை நடித்து வந்தார். 2003ஆம் ஆண்டு மார்புப் புற்று நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 2006, அக்டோபர் 19ஆம் தேதி இறந்தார். + +இவர் நடித்த சில திரைப்படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. + + + + +ஆண்டுகளின் பட்டியல் + +இப்பக்கம் ஆண்டுகளைப் பட்டியல் இடுகிறது.. + + + + +பகடிப்பட இயற்பியல் + +பகடிப்பட இயற்பியல் ("Cartoon physics") என்பது பொதுவாக அறியப்பட்டுள்ள இயற்பியல் கோட்பாடுகளும் விதிகளும் இயக்கமூட்டப்பட்ட பகடிப்படங்களில் நகைச்சுவை பொருட்டு மீறப்படுவதைக் குறிக்கும் சொற்றொடர் ஆகும். இதில் வெகுவாக அறியப்படும் ஒரு விளைவு: ஒரு பகடிப்படப் பாத்திரம் விரைவாக ஓடிவருகையில் மலைமுகட்டைத் தாண்டியும் ஓடிவிடுதலும், அதை அப்பாத்திரம் உணரும் வரை புவியீர்ப்பு விசை செயல்படாதிருத்தலும். + +""இயக்கமூட்டப்படும் பகடிப்படங்கள் இயற்பியல் பொதுவிதிகளைப் பின்பற்றுகின்றன−வேறு விதமாக இருந்தால் நகைச்சுவை தருமென்றில்லாதபோது (மட்டும்)."" என்று ஆர்டு பாப்பிட் என்ற பகடிப்பட வல்லுநர் மொழிந்ததாகக் கருதப்படும் கூற்று இந்த நிகழ்வை வரைவுபடுத்துகிறது. மேலும், பகடிப் படங்களில் வரும் காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் இசைவுள்ள நெறிமுறைகளைப் பின்பற்றத் துவ���்கியுள்ளதை இவ்விளைவு காட்டுகிறது. + +பகடிக்கதாபாத்திரங்கள் இயலுலகிலிருந்து மாறுபட்டு நடந்து கொண்டாலும் அவை குறிப்பில்வழியாக அல்லாமல் முன்னறியும் வகையில் இருக்கின்றன என்ற கருத்து இத்துறை துவங்கிய காலம் தொட்டே இருந்து வருகிறது. எடுத்துக்காட்டாக 1956-ம் ஆண்டு வால்ட்டு டிஸ்னி "த புளாசிபில் இம்பாசிபில்" ("இயலக்கூடிய இயல்தகாமை" ) என்ற தலைப்பில் வெளியிட்ட ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இயக்கமூட்டற் படங்களில் நடக்கமுடியாதவை கூடய உளம் ஏற்கும் வகையில் தென்படுகின்றன என்பதை விளக்கியுள்ளார். + +"கார்ட்டூன் ஃபிசிக்சு" என்ற சொற்றொடர் முதன்முதலாக 1980-ம் ஆண்டு எஸ்கொயர் பருவ இதழில் வெளிவந்த "ஓ டொனெலின் பகடிப்பட நகர்வு விதிகள்" என்ற தலைப்புடைய கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 1994-ம் ஆண்டி ஐஇஇஇ அமைப்பு இக்கட்டுரையின் ஒரு பதிப்பை பொறியாளர்களுக்கான இதழில் வெளியிட்டபின் இக்கருத்து பரவலாக அறியப்படவும் வெகுவாகச் சீர்திருத்தப்படவும் துவங்கியது. + +இந்நிலைப்பாடு பரவலாக அறியப்பட்டிருந்ததன் அடையாளமாக 1949-ல் வெளிவந்த ஒரு பகடிப்படத்தில் "பக் பன்னி" என்ற முயல் கதாபாத்திரம் "இது புவியீர்ப்பு விசையின் விதிகளை/சட்டத்தை மீறுவது என்பது எனக்குத் தெரியும்; ஆனால், நான் சட்டம் படிக்காததால் அவை என்னைக் கட்டா." என வேடிக்கையாகவும் வழக்கறிஞர்களைக் கேலி செய்யும் வகையிலும் கூறுவதாக வருகிறது. அண்மையில் ரோகர் ரேபிட் மற்றும் போங்கர்ஸ் போன்ற பகடிப்படங்களில் கதாபாத்திரங்களே இந்த இயற்பியலைப் பற்றி கூறுவதும் எந்நேரங்களில் இது நகைச்சுவை விளைவை ஏற்படுத்தும் என்று விளக்குவதும் போன்ற காட்சிகள் அமைந்திருக்கின்றன. + +ஸ்டீபன் கௌல்டு என்பவர் "புதிய விஞ்ஞானி" என்ற இதழில் ""... தற்கால பகடிப்படங்களைப் பகுப்பாய்ந்ததில், இவற்றில் காணப்படும் பொருத்தமில்லாமல் தோன்றும் நிகழ்வுகளும் தோற்றப்பாடுகளும் இயலுலகின் இயற்பியல் நெறிகளைப் போன்றே முரணற்ற இசைவுள்ள நெறிகளாலும் கோட்பாடுகளாலும் விளக்கப்படக் கூடும். பொருத்தமற்றதாகவும் பொது அறிவுக்கு முரணாகவும் தோன்றும் இத்தகைய நிகழ்வுகள் பகடிப்படங்களில் மட்டுமல்ல இயலுலகிலும் நடைபெறுகின்றன."" என்று குறிப்பிட்டுள்ளார். இதே அடிக்கருத்தை முனைவர்.ஆலன் சோலோடென்கோ ""த நட்டி யுனிவர்ஸ் ஆஃப் அனிமேசன்"" ("இயக்கமூட்டல் படங்களின் விளையாட்டுத்தனமான உலகம்") என்ற கட்டுரையில் மேலும் விளக்கியுள்ளார். + +படிமலர்ச்சி உளவியல் ("Evolutionary psychology") கோட்பாடுகளை ஏற்கும் பலர் இயற்பியல் விதிகளைப் பற்றிய உள்ளுணர்வும் உளவியலின்படியான தன்னுணர்வும் இணைவதால் இங்கு நகைச்சுவை ஏற்படுகிறது என்று கருதுகின்றனர். மலைமுகட்டைத் தாண்டிய பாத்திரம் விழும் என்ற பொதுஅறிவு தரும் பரிந்துரையும், தான் அறியாத வரையில் புவியீர்ப்பு தாக்காது என்ற பகடிப்படங்களின் "இசைவான" விதி ஏற்படுத்தும் எதிர்பார்ப்பும் ஒருசேர அமைவதால் நகைச்சுவை ஏற்படுகிறது என்பது அவர்களின் கணிப்பு. + +அண்மையில் ஏற்பட்டுள்ள கணினித்துறை வளர்ச்சியைத் தொடர்ந்து இயக்கமூட்டற் படங்கள் சட்டங்களின் ("frames") தொடர்வாக எண்ணப்படுவது குறைந்துள்ளது. மாறாக, பகடிப்பட இயற்பியல் நெறிகளுக்குட்பட்ட சூழலொன்றில் ஒரு திரைக்கதைக்குட்பட்டு பாத்திரங்களை உலவவிடுவது என்ற கட்டமைப்பில் பகடிப்படங்களை வடிவமைக்க ஏதுவாகியுள்ளது. இது வடிவமைப்பாளர்களின் இயல்பான எண்ணுமுறையுடன் ஒத்திருப்பதால் பலக்கிய ("complex") படங்களையும் முன்பைக் காட்டிலும் எளிதில் உருவாக்க முடிகிறது. + + + + + +பொழில் + +பொழில் ("Rainforest", மழைக்காடு) என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள் ஆகும். "பொழிதல்" என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழி "பொழில்" என்றாயிற்று. இச்சொல் இன்றைய அறிவியலில் மழைக்காடு என்று அழைக்கப்படுவதுதான். பொதுவாக ஆண்டு மழை பொழிவானது 1750 மில்லி மீட்டருக்கும், 2000 மிமீ க்கும் இடையில் உள்ள காடுகளே இன்றைய அற்வியலில் மழைக்காடுகள் என்னும் வரைவிலக்கணத்துக்குள் அடங்குகின்றன. + +உலகிலுள்ள விலங்குகள், தாவரங்களில் 40% தொடக்கம் 75% வரையானவை மழைக்காடுகளுக்கு உரியவை. பெருமளவான மருத்துவக் குணம் கொண்ட இயற்கைப் பொருட்கள் காணப்படுவதால், ஈரவலய மழைக்காடுகள், உலகின் மிகப் பெரிய மருந்துச் சாலைகளாகக் கருதப்படுகின்றன. உலகின் ஒட்சிசன் உருவாக்கத்தின் 28% பொழிகளினாலேயே ஏற்படுகின்றது. + +பெருமளவில் தாவர இனங்கள் வளர்ந்தாலும் கூட, மழைக்காடுகளின் மண் மிகவும் தரக் குறைவானதாகும். பாக்டீரியா சார்ந்த உக்கல் விரைவாக நடைபெறுவது இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது. லட்ட���ைட்டாக்கம் ("laterization") மூலம் இரும்பு மற்றும் அலுமினியம் ஆக்சைட்டுகளின் செறிவு அதிகரிப்பதனால் மண் பிரகாசமான சிவப்பு நிறம் கொண்டதாக மாறுகின்றது. + +மழைக் காடுகளின் பெரும்பாலான பகுதிகளில், நிலமட்டத்தில் போதிய அளவு சூரிய ஒளி கிடைக்காமையினால் சிறுதாவர வளர்ச்சி குறைவாகவே காணப்படுகிறது. இது மனிதரும், விலங்குகளும் காட்டினூடாக இலகுவில் நடந்து செல்வதற்கு வசதியாக அமைகிறது. + +வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமான வெப்பத்தையும் மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளாகும். இதன் சராசரி வெப்பநிலை 18°C தொடக்கம் 27°C வரை காணப்படும். இதன் வருட சராசரி மழைவீழ்ச்சி 1680mmஐ விடக்குறையாமல் காணப்படும். இது சில பிரதேசங்களில் 10000mmஐ விட அதிகமாகும். பொதுவாக மழைவீழ்ச்சி 1750mm(175 cm) தொடக்கம் 2000mm(200 cm) வரை இருக்கும். + +உலகின் பெரும்பாலான பொழில்கள், வெப்பமண்டலங்களிடை ஒருங்கல் வலயம் எனப்படும் பருவக்காற்றுத் தாழ்பகுதிகளுடன் தொடர்புடையவை. வெப்பமண்டலப் பொழில்கள், கடகக்கோட்டுக்கும், மகரக்கோட்டுக்கும் இடைப்பட்ட புவிநடுக்கோட்டுப் பகுதியில் காணப்படும் பொழில்கள் ஆகும். வெப்பமண்டலப் பொழில்கள், மியன்மார், பிலிப்பைன்சு, மலேசியா, இந்தோனீசியா, பப்புவா நியூகினியா, வடகிழக்கு ஆசுத்திரேலியா ஆகியவற்றை உள்ளடக்கிய தென்கிழக்காசிய, ஆசுத்திரேலியப் பகுதிகளிலும், இலங்கை, கமெரூனில் இருந்து கொங்கோ வரையான பகுதிகளிலும், தென்னமெரிக்கா, நடு அமெரிக்கா, பல பசிபிக் தீவுகள் ஆகியவற்றிலும் காணப்படுகின்றன. வெப்பமண்டலப் பொழில்கள் புவியின் மூச்சுப்பை என அழைக்கப்பட்டு வந்தன. எனினும், தாவரங்களின் ஒளித்தொகுப்பு மூலம் வெப்பமண்டலப் பொழில்கள், புவியின் வளிமண்டலத்துக்கு அளிக்கும் ஒட்சிசனின் அளவு மிகவும் குறைவே என்று தற்காலத்தில் அறியப்பட்டு உள்ளது. + +மிதவெப்பமண்டல மழைக்காடுகள் புவிக்கோளத்தின் பெருமளவு பகுதிகளை மூடியுள்ளன. எனினும் இவை உலகின் சில பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன. + +வட அமெரிக்காவில் பசிபிக் வடமேற்கு, பிரித்தானியக் கொலம்பியாக் கரையோரங்கள், பாறை மலைத் தாழ்பகுதிகளின் உட்பகுதிகள், பிரின்சு சார்ச்சுக்குக் கிழக்கேயுள்ள பகுதிகள் ஆகியவற்றிலும், ஐரோப்பாவில் அயர்லாந்து, இசுக்காட்லாந்து ஆகியவற்றின் கரையோரங்களை உள்ளடக்கிய பிரித்தானிய��் தீவுகளின் சில பகுதிகளிலும், தெற்கு நார்வே, அட்ரியாட்டியக் கரையை ஒட்டிய மேற்குப் பால்க்கன் பகுதிகளிலும், வடமேற்கு இசுப்பெயின், ஜார்ஜியா, துருக்கி ஆகியவற்றை உள்ளடக்கிய கிழக்குக் கருங்கடலின் கரையோரப் பகுதிகளிலும் இக்காடுகள் உள்ளன. + +அத்துடன், கிழக்காசியாவில் தென் சீனா, தாய்வான், சப்பான், கொரியா ஆகியவற்றின் பெரும்பாலான பகுதிகள், சக்காலின் தீவு, அருகில் அமைந்துள்ள உருசியத் தூர கிழக்குக் கரையோரம் என்னும் இடங்களிலும், தென்னமெரிக்காவில் தெற்குச் சிலியிலும், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆகிய நாடுகளிலும் மிதவெப்ப மண்டலப் பொழில்கள் காணப்படுகின்றன. இக்காடுகளின் வெப்பநிலை வெப்பமண்டல மழைக்காடுகளின் வெப்பநிலையை விடக் குறைவானதாகும். + +வெப்பமண்டலப் பொழில்கள் பொதுவாக நான்கு அடுக்குகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றிலும் அந்தந்த அடுக்குகளுக்கு இசைவாக்கம் பெற்ற விலங்குகளும், தாவரங்களும் காணப்படுகின்றன. இந்நான்கு அடுக்குகள் வெளிப்படு அடுக்கு, மரக்கவிகை அடுக்கு, மரக்கீழ் அடுக்கு, காட்டுத்தரை என்பன. + +வெளிப்படு அடுக்கில் குறைந்த எண்ணிக்கையிலான மிகப் பெரிய மரங்கள் இருக்கும். இவை பொதுவான மரக் கவிகைக்கு மேலாக வளர்ந்து 45-55 மீட்டர் உயரத்தை எட்டுகின்றன. சில வேளைகளில் சில மரங்கள் 70-80 மீட்டர் உயரத்துக்கு வளர்வதும் உண்டு. மரக்கவிகைகளுக்கு மேல் இருக்கக்கூடிய உயர்ந்த வெப்பநிலைகளையும், கடுங் காற்றையும் தாக்குப்பிடிக்க வேண்டிய நிலை இவற்றுக்கு உண்டு. கழுகுகள், வண்ணத்துப் பூச்சிகள், வௌவால்கள், சிலவகைக் குரங்குகள் போன்றவை இந்த அடுக்கில் வாழுகின்றன. + +30 மீட்டர் (98 அடி) முதல் 45 மீட்டர் (148 அடி) வரை வளரக்கூடிய மிகப்பெரிய மரங்களிற் பெரும்பாலானவை மரக்கவிகை அடுக்கிலேயே காணப்படுகின்றன. மரங்களின் மேற்பகுதிகள் ஏறத்தாழத் தொடர்ச்சியாகக் காணப்படுவதால், உயிரிப்பல்வகைமையின் அடர்த்தி கூடிய பகுதிகள் இந்த அடுக்கிலேயே உள்ளன. சில மதிப்பீடுகளின்படி உலகின் 50% அளவான தாவர வகைகளின் வாழிடம் மரக்கவிகை அடுக்கே எனத் தெரியவருகிறது. இதிலிருந்து, உலகின் மொத்த உயிரினங்களில் அரைப்பங்கு இந்த அடுக்கிலேயே வாழக்கூடும் என்பதும் சாத்தியமே. மழையில் இருந்தும், தாங்கும் மரத்தில் சேரும் சிதைபொருட்களில் இருந்தும் நீரை���ும், கனிமங்களையும் பெறும் மேலொட்டித் தாவரங்கள் அடிமரங்களிலும் மரக்கிளைகளிலும் பற்றிக்கொண்டு வாழுகின்றன. வெளிப்படு அடுக்கில் உள்ளது போன்ற விலங்குகளே இங்கும் வாழ்ந்தாலும், இங்கு கூடிய பல்வகைமை காணப்படுகின்றது. இந்த அடுக்கு ஒரு வளம்மிக்க வாழிடம் என அறிவியலாளர்கள் நீண்டகாலமாகவே கருதி வந்தாலும், நடைமுறையில் இதை ஆராய்வதற்கான வழிமுறைகள் அண்மையிலேயே உருவாக்கப்பட்டுள்ளன. 1917 ஆம் ஆண்டிலேயே வில்லியம் பீபே என்னும் இயறை ஆய்வாளர், உயிர்கள் வாழும் இன்னொரு கண்டம் கண்டுபிடிக்கப்பட வேண்டி இருப்பதாகவும், அது புவியில் அன்றி, அதிலிருந்து 100 தொடக்கம் 200 அடிகளுக்கு மேல் பல ஆயிரம் சதுர மைல்களுக்குப் பரந்துள்ளது என்றும் கூறியிருந்தார். இந்த வாழிடம் தொடர்பான உண்மையான ஆய்வுகள் 1980களிலேயே தொடங்கின. கயிறுகளை அம்புகள் மூலம் மரக்கவிகைகளுக்கு எய்து அவற்றை எட்டுவது போன்ற வழிமுறைகளை அறிவியலாளர்கள் உருவாக்கிய பின்னரே இது சாத்தியம் ஆயிற்று. + + மரக்கீழ் அடுக்கு, மரக்கவிகை அடுக்குக்கும், காட்டுத்தரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மரக்கீழ் அடுக்கு பறவைகள், பாம்புகள், பல்லிவகைகள் ஆகியவற்றுடன், சிறுத்தை முதலிய கொன்றுண்ணிகளுக்கும் வாழிடமாக உள்ளது. இந்த அடுக்கில் இலைகள் பெரிதாக இருக்கும். பூச்சி வகைகளும் பெருமளவில் காணப்படுகின்றன. மரக்கவிகை அடுக்குக்கு வளரவுள்ள மரக்கன்றுகள் பலவும் இந்த அடுக்கில் காணப்படும். இந்த அடுக்கைச் செடி அடுக்கு என்றும் சொல்லலாம். செடி அடுக்கை இன்னொரு அடுக்காகவும் கொள்வது உண்டு. + +எல்லா அடுக்குகளுக்கும் கீழாக அமைந்திருப்பது காட்டுத்தரை. இது 2% ஆன சூரிய ஒளியையே பெறுகிறது. குறைவான சூரிய ஒளிக்கு இயைபு பெற்ற தாவரங்கள் மட்டுமே இந்த அடுக்கில் வளர முடியும். அடர்த்தியான நிலமட்டத்திலான தாவர வளர்ச்சிகளைக் கொண்ட ஆற்றங்கரைகள், சதுப்பு நிலங்கள், மரங்கள் வெட்டி அழிக்கப்பட்ட பகுதிகளுக்கு அப்பால், காட்டுத்தரை வளர்ச்சிகள் அற்ற வெளியாகவே இருக்கக் காணலாம். குறைவான சூரிய ஒளி கிடைப்பதே இதற்குக் காரணம். இந்த அடுக்கு சிதைவடைந்து கொண்டிருக்கும் தாவரப் பொருட்களையும் விலங்குப் பொருட்களையும் கொண்டிருக்கும். இளஞ்சூடான, ஈரப்பற்றுக்கொண்ட சூழலில் இவை விரைவாகவே சிதைந்து விடுவதால் விரைவாகவே மறை���்து விடுகின்றன. + +உலகின் தாவர விலங்கு வகைகளில் அரைப் பங்குக்கு மேற்பட்டவை பொழில்களிலேயே காணப்படுகின்றன. பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள், முதுகெலும்பிலிகள் போன்ற பல்வேறு வகைப்பட்ட விலங்கு வகைகளுக்குப் பொழில்கள் ஆதாரமாக விளங்குகின்றன. பாலூட்டிகளில் உயர் விலங்கினங்கள், பூனை வகை உயிரினங்கள் போன்ற பல வகைகள் அடங்குகின்றன. பொழில்களில் காணப்படும் ஊர்வனவற்றுள் பாம்புகள், ஆமைகள், ஓணான்கள் போன்றவையும், பறவைகளுள் வங்கிடா, குக்குலிடா போன்ற குடும்பங்களைச் சேர்ந்தனவும் அடங்குகின்றன. இங்கு காணப்படும் முதுகெலும்பிலிகளும் மிகப்பல. சிதைவடையும் தாவர விலங்குகளில் உணவுக்காகத் தங்கியிருக்கும் பூஞ்சண வகைகளும் பொழில்களில் மிகவும் பொதுவாகக் காணப்படுகின்றன. காடழிப்பு, வாழிட இழப்பு, வளிமண்டலம் மாசடைதல் போன்ற காரணங்களால் பொழில்வாழ் உயிரினங்கள் பல விரைவாக அழிந்து வருகின்றன. + +வெப்பமண்டலப் பொழில்களில் தாவர வகைகள் வளருகின்ற போதும் பெரும்பாலும் அங்குள்ள மண் தரம் குறைந்தது ஆகும். பக்டீரியாக்களினால் ஏற்படு சிதைவு விரைவாக நடைபெறுவதால் மக்கல்கள் சேர்வது தடுக்கப்படுகிறது. செறிவாகக் காணப்படும் இரும்பு, அலுமினியம் ஒட்சைட்டு என்பன செம்புரையாக்க வழிமுறை மூலம் கடுஞ் சிவப்பு நிறம் கொண்ட தீய்ந்த மண்ணை உருவாக்குவதுடன் சில வேளைகளில், போக்சைட்டு போன்ற கனிமப் படிவுகளையும் உருவாக்குகின்றன. ஆழத்தில் போதிய ஊட்டப் பொருட்கள் இல்லாமையால், பெரும்பாலான மரங்களின் வேர்கள் நில மட்டத்துக்கு அருகிலேயே காணப்படுகின்றன. மரங்களுக்குத் தேவையான கனிமங்கள் பெரும்பாலும் மேல் படையில் சிதைவடைகின்ற தாவர விலங்குப் பொருட்களில் இருந்தே கிடைக்கின்றன. + +இயற்கையான பொழில்கள் பெருமளவு காபனீரொட்சைட்டை வெளியேற்றுவதுடன், அதை உறிஞ்சவும் செய்கின்றன. உலக அளவில், குலைவுக்கு உள்ளாகாத பொழில்களில், நீண்ட கால நோக்கில், இதன் அளவு ஏறத்தாழச் சமநிலையிலேயே உள்ளது. அதனால், புவியின் வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டின் அளவில் பொழில்களின் தாக்கம் மிகவும் குறைவே. ஆனாலும், முகில்களின் உருவாக்கம் போன்ற பிற விடயங்களில் பொழில்களின் தாக்கம் காணப்படுகின்றது. தற்காலத்தில் எந்தவொரு பொழிலுமே குலைக்கப்படாதது என்று சொல்ல முடியாது. மனிதரால் தூ���்டப்படும் காடழிவுகள், பொழில்கள் அதிகமான காபனீரொட்சைட்டை வளிமண்டலத்துக்குக் கொடுப்பதற்குக் குறிப்பிடத்தக்க காரணமாக அமைகின்றன. அத்துடன், காடுகள் எரிதல், வரட்சி போன்ற மனிதனால் தூண்டப்படுவனவும், அல்லாதனவுமான நிகழ்வுகள் காடுகளில் மரங்கள் அழிவதற்குக் காரணமாகின்றன.. ஊடாடு தாவர வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட சில தட்பவெப்ப மாதிரிகள், 2050 ஆம் ஆண்டளவில், வரட்சியினாலும், காடுகள் கருகுவதாலும், தொடர்ந்த காபனீரொட்சைட்டு வெளியேற்றத்தினாலும் பெருமளவு அமேசன் பொழில்கள் அழிந்துவிடும் என்று எதிர்வு கூறுகின்றன. இன்னும் 5 மில்லியன் ஆண்டுகளில் அமேசன் பொழில்கள் மரங்களற்ற வெப்பமண்டலப் புல்வெளிகளாக மாறி இறுதியில் தாமாகவே அழிந்துவிடும் எனக் கருதப்படுகின்றது. மனிதர் இன்றே தமது காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டால் கூட இத்தகைய மாற்றங்கள் நடந்தே தீரும் என்று சொல்லப்படுகிறது. இன்று நமக்குத் தெரிந்த விலங்குகளின் வழிவந்த எதிர்கால விலங்குகள் வரண்ட காலநிலக்குத் தம்மைத் தகவமைத்துக் கொண்டு வாழக்கூடும். + + + + + +கொத்மலை ஆறு + +கொத்மலை ஆறு அல்லது கொத்மலை ஓயா இலங்கையின் மத்திய மாகாணத்தில் பாயும் ஆறாகும்.இது மகாவலி கங்கையின் முக்கிய கிளையாறாகும். கொத்மலை ஆறு அக்ரா ஆறாக ஓட்டன் சமவெளியில் ஊற்றெடுக்கிறது. வழியில் தம்பகஸ்தலாவை ஆறு, நானு ஓயா, புண்டுல் ஆறு, பூணா ஆறு என்பன கலக்கின்றன. கொத்மலை ஆறு நாவலப்பிட்டிக்கு தெற்கே மகாவலி கங்கையுடன் இணைகின்றது. + +கொத்மலை ஆறு மகாவலி கங்கையுடம் கலக்குமிடத்துக்கு 6.6 கிலோ மீட்டர் (4.1 மைல்) மேலாற்றில் கடதொர என்னுமிடத்தில் 87.0 மீட்டர் உருயரமும் 600 மீட்டர் நீளமும் கொண்ட அனைக்கட்டு ஒன்றின் மூலம் கொத்மலை நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வனக்கட்டு துரிதமகாவலி திட்டத்தின் கீழ் சுவீடன் அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படது. இவ்வணைக்கட்டுக்கான கட்டுமானப்பணிகள் 1979 ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு 1985 ஆம் ஆண்டு முதல் மின்சார உற்பத்தியை தொடங்கியது. + +செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சி இவ்வாற்றில் அமைந்துள்ள முக்கியமான நீர்வீழ்ச்சியாகும். இவ்வாற்றை தலவாக்கலை நகருக்கண்மையில் செயிண்ட். கிளயார் நீர்வீழ்ச்சிக்கு மேலாக அனைக்கட்டி மறிப்பதன் மூலம் மேல்கொத்மலை நீர்மின்த்திட்டம் அமைக்கபட தொடக்க வேலைகள் நடபெற்று வருகின்றன. இத்திட்டம் சூழல் பாதிப்பை ஏற்படுத்துபதாக பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது. + + + + +1962 + +1962 (MCMLXII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். + + + + + + + + + +இலங்கையின் ஆறுகள் + +இலங்கையின் ஆறுகள் நாட்டின் மத்திய உயர்நிலத்தில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கின்றன. 1959 ஆண்டு ஆய்வொன்றின் படி இலங்கையில் மொத்தம் 103 ஆறுகள் காணப்படுகின்றன. இவற்றுள் 10 ஆறுகள் முக்கியமானவையாகும். மகாவலி கங்கை மிக நீளமான ஆறாகும். இலங்கையின் முக்கிய ஆறுகளில் கலா ஓயா மாத்திரமே உயர்நிலமல்லாத குளம் ஒன்றில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையின் ஆறுகளில் களு ஆறு, களனி ஆறு, ஜின் ஆறு, நில்வல ஆறு, மகாவலி கங்கை என்பன வெள்ளப்பெருக்கு அபாயத்துக்கு உட்பட்டவையாக கருதப்படுகின்றன. + + + + + +இலங்கையின் மாவட்டங்கள் + +இலங்கையின் மாவட்டங்கள் ("disticts") என்பவை இரண்டாம்-தர நிருவாக அலகுகளாகும். இவை மாகாணங்களுக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இலங்கையின் 9 மாகாணங்களில் 25 மாவட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டமும் நடுவண் அரசினால் நியமிக்கப்படும் மாவட்டச் செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிருவகிக்கப்படுகிறது. நடுவண் அரசு மற்றும் பிரதேசச் செயலகங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஒருங்கிணைபதே மாவட்டச் செயலாளரின் முக்கிய பணியாகும். மாவட்ட ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது, மாவட்டத்துக்குக் கீழுள்ள சிறிய நிருவாக அலகுக்கு உதவிகள் வழங்குவது போன்றவையும் மாவட்ட செயலாளரின் பணிகளாகும். அத்துடன் வருவாய் சேகரிப்பு, மாவட்டங்களில் தேர்தல்களை ஒழுங்குபடுத்துவது போன்ற பணிகளும் முக்கியமானவையாகும். + +மாவட்டம் ஒவ்வொன்றும் பல பிரதேச செயலகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நாட்டில் மொத்தம் 256 பிரதேச செயலகங்கள் உள்ளன. பிரதேச செயலகங்கள் மேலும் கிராம சேவகர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. + +2012 கணக்கெடுப்பின் படி, மாவட்ட ரீதியாக மக்கள்தொகை தரவுகள்: + + + + +நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவை + +நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனத்துலக அவை (International Council on Monuments and Sites) என்பது உலக அளவில் உயர்தொழில் அறிஞர்களை உள்ளடக்கிய ஒரு அமைப்பு ஆகும். ஆங்கிலத்தில் ICOMOS என்னும் சுருக்கப்பெயரால் அறியப்படும் இந்த அவை, பண்பாட்டு மரபு சார்ந்த இடங்களைக் காப்பாண்மை (conservation) செய்வதையும், பாதுகாப்பதையும் (protection) நோக்கமாகக் கொண்டு செயற்பட்டு வருகிறது. கோட்பாடுகள், வழிமுறைகள், அறிவியல் நுட்பங்கள் என்பவற்றைப் பயன்படுத்திக் கட்டிடக்கலை மற்றும் தொல்லியல் சார்ந்த மரபுச் சின்னங்களைக் காப்பாண்மை செய்வதில், ஈடுபட்டுள்ள, அனைத்துலக மட்டத்திலான ஒரே அரசுசாரா நிறுவனம் இதுவேயாகும். 1964 ஆம் ஆண்டில் வெனிஸ் நகரில் கூடிய அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நினைவுச் சின்னங்களையும், களங்களையும் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பிலான பட்டயத்தின் அடிப்படையிலேயே இதன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பட்டயம் "வெனிஸ் பட்டயம்" எனப் பரவலாக அறியப்படுகிறது. உலக மரபுக் களங்கள் தொடர்பில் இவ்வமைப்பு ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு (யுனெஸ்கோ) ஆலோசனைகளை வழங்கி வருகிறது. + +கட்டிடக்கலைஞர்கள், வரலாற்றாளர்கள், தொல்லியலாளர்கள், கலை வரலாற்றாளர்கள், புவியியலாளர்கள், மானிடவியலாளர்கள், பொறியியலாளர்கள், நகரத் திட்டமிடலாளர்கள் போன்ற பல்துறை அறிஞர்கள் இவ்வமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இது இவ்வமைப்பின் பணிகளில் பல்துறைப் பங்களிப்பைப் பெற்றுக்கொள்வதற்கு வசதியாக உள்ளது. + +உலகின் பண்பாட்டு மரபுகளின் பல்வகைமை தொடர்பிலும், அவற்றைப் பாதுகாப்பதிலும், காப்பாண்மை செய்வதிலும் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் 18 ஆம் நாளை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் என அறிவித்துக் கொண்டாடி வருகிறது. + + + + +ஏப்ரல் 25 + + + + + + + +நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் + +நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான அனைத்துலக நாள் ("International Day for Monuments and Sites") ஆண்டு தோறும் ஏப்ரல் 18 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. உலகப் பண்பாட்டு மரபின் பல்வகைமைத் தன்மை தொடர்பிலும், அவற்றைக் காப்பாண்மை செய்தல் மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். + +1982 ஆண்டில் துனீசியாவில் நடைபெற்ற நினைவுச்சின்னங்களுக்கும் களங்களுக்குமான அனைத்துலக அவையின் கருத்தரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. + +1983 நவம்பரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொதுச் சபையின் 22 ஆவது கூட்டத் தொடரில், ஏப்ரல் 18 ஆம் நாளை, நினைவுச்சின்னங்களுக்கும், களங்களுக்குமான நாள் என அறிவிப்பது பற்றி ஆலோசிக்கும்படி அதன் உறுப்பு நாடுகள் கேட்டுக்கொள்ளப்பட்டன. + + + + +சோதிடக் கருத்துருக்கள் + +சோதிடத் துறையின் பெரும்பகுதி தற்காலத்தில் அறிவியல் அடிப்படையற்றதாகக் கணிக்கப்படுகிறது. எனினும் ஒரு காலத்தில் அறிஞர்கள் அறிந்திருக்க வேண்டிய ஒரு உயர் மதிப்பு மிக்க துறையாகக் கருதப்பட்டு வந்தது. மிகப் பழைய காலத்திலேயே உருவாகி நீண்டகாலமாக வளர்ந்து வந்த இத் துறையும், பிற துறைகளைப் போலவே பல கருத்துருக்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இச் சோதிடக் கருத்துருக்கள் இப் பக்கத்தில் பட்டியல் இடப்பட்டுள்ளன. இந்தியாவில் கிறீஸ்துவுக்கு முந்திய காலப்பகுதியிலிருந்தே இது பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன் பல நூல்களும் எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாட்டிலும் சங்ககாலத்திலேயே சோதிடக் கருத்துருக்கள் பலவற்றை மக்கள் அறிந்திருந்ததற்கான சான்றுகள் சங்க நூல்களில் காணப்படுகின்றன. + + + + + +இலங்கையில் தேயிலை உற்பத்தி + +இலங்கையில் தேயிலை உற்பத்தி வெளிநாட்டு வருவாயைப் பெற்றுத்தரும் பிரதான வளமாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2% ஆக இருந்து, 2013 இல் 1,527 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொடுத்தது. + +இலங்கையில் கறுப்புத் தேயிலையின் உற்பத்��ி திவில் காணப்பட்ட கோப்பி பெருந்தோட்டங்கள் "ஏமியா வஸ்டரிக்ஸ்" (Hemileia vastatrix) என்ற நுண்மத்தாக்குதலுக்கு உள்ளாகி அழிவுற்றதன் பின்னர் தொடங்கியது. கோப்பி பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான தேவையை உணரத்தொடங்கினர். லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஜேம்ஸ் டெய்ளர் 1867 தேயிலைப் பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பெயிரிடப்பட்டது. +வட இந்தியாவில் தேயிலை வளர்ப்பு, தேயிலை உற்பத்தி போன்றவற்றில் அனுபவம் பெற்றிருந்த டெய்ளர், தனது வீட்டின் முன்னரையில் உற்பத்தி தொடர்பான பல சோதனைகளைச் செய்தார். தேயிலை இலையைக் தனது கைகளால் சுருட்டி, வாடிய அத்தேயிலைகளை களிமண் அடுப்பில் கரியைப் பயன்படுத்தி சுட்டார். இவ்வாறு தயாரிக்கப்பட்ட தேயிலை இலண்டன் நகரின் ஏலத்தில் கூடிய விலையைப்பெற்றது. இது இலங்கையில் தேயிலை உற்பத்தியை ஊக்கமூட்டியது. 1890 இல் இலங்கை 22,900 தொன் தேயிலையை உற்பத்தி செய்தது இது 1873–1880 வரை உற்பத்தி செய்யப்பட்ட 12 கிலோவுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய வளர்ச்சியாகும். + +1971 வரை பெரும்பாலான தேயிலைப் பெருந்தோட்டங்கள் பிரித்தானியர் வசமே காணப்பட்டது, இவை நில மறுசீரமைப்புச் சட்டத்தின்படி அரசவசப்படுத்தப்பட்டது. 1990 ஆண்டு முதல் தேயிலைப் பெருந்தோட்டங்களின் நிர்வாகம் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. + +இலங்கையில் முக்கிய தேயிலை வளப்புப் பகுதிகள் ஆறு காணப்படுகின்றன: + +இலங்கை கறுப்புத் தேயிலை இலங்கையில் வளர்க்கப்படும் கறுப்புத் தேயிலையாகும். இது நல்ல நறுமணத்தைக் கொண்டிருப்பதோடு சிற்றஸ் அமிலத்தின் மணத்துக்கு ஒப்பானதாகும். தேயிலை சுவையூட்டிகள் கலந்தோ அல்லது கலக்கப்படாமலோ அருந்தப்படுகிறது. தேயிலை பல பெருந்தோட்டங்களில் பல உயரங்களில் வளர்க்கப்படுகிறது, உயரத்துக்கமைய சுவையும் வேறுபடுகிறது. + + + + + + +லூல்கந்துரை + +லூல்கந்துரை இலங்கையின் முதலாவது தேயிலைப் பெருந்தோட்டமாகும். இது 1867 ஆம் ஆண்டு ஸ்கொட்லாந்து நாட்டவரான ஜேம்ஸ் டெய்லர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இது கண்டிக்கு அருகில் அமைந்துள்ளது. இலங்கையில் தேயிலையின் உற்பத்தி, தீவில் காணப்பட்ட கோப்பிப் பெருந்தோட்டங்கள் "ஏமியா வஸ்டரிக்ஸ்" ("Hemileia vastatrix") என்ற நுண்மத்தாக்குதலுக்கு உள்ளாகி அழிவுற்றதன் பின்னர் தொடங்கியது. கோப்பி பெருந்தோட்ட அதிகாரிகள் வேறு ஒரு பயிருக்கான தேவையை உணரத்தொடங்கினர். லூல்கந்துரை பெருந்தோட்டம் தேயிலை வளர்ப்பிற்கான ஆர்வத்தைக் கொண்டிருந்தது. பெருந்தோட்டத்துக்கு வந்திருந்த ஜேம்ஸ் டெய்லர் 1867 தேயிலையைப் பயிரிட்டார். மொத்தம் 19 ஏக்கர் நிலத்தில் தேயிலை பயிரிடப்பட்டது. மேலும் டெய்லர் இங்கு தேயிலை அரைக்கும் பொறி ஒன்றைக் கொண்ட தேயிலைத் தொழிற்சாலை ஒன்றையும் அமைத்தார். + + + + + + +கரப்பான் + +கரப்பான் ("Cockroach" அல்லது "roach") பூச்சி இனங்களில் ஒன்றாகும். உலகில் துருவப் பகுதிகள் தவிர்ந்த ஏனைய எல்லாப் பகுதிகளிலும் வீட்டுத்தங்குயிரியாகக் காணப்படுகிறது. ஆறு குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3490 கரப்பான் இனங்கள் இப்பொழுது வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. + +கரப்பான் பூச்சிகள் எதையும் உண்ணக் கூடிய அனைத்துண்ணிகள் ஆகும். ஹீமோகுளோபின் இல்லாததால் இவற்றின் குருதி வெண்ணிறமாக இருக்கும். கரப்பான் பூச்சிகளின் நரம்பு மண்டலம் எளிமையானது. உடல் பலபகுதிகளாகப்ப பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியிலும் அதைக்கட்டுப்படுத்தும் நரம்பணுத்திரள்கள் உள்ளன. எனவே தலையை வெட்டிவிட்டால் கூட கரப்பான் பூச்சிகள் இரண்டு வாரத்திற்கு உயிர்வாழும். +அணுகுண்டு வெடிப்பையும் தாண்டி கரப்பான்கள் வாழும் என்று நம்பப்படுகிறது. கரையான்கள் கரப்பான்களில் இருந்து பரிணமித்திருக்கக் கூடும் என்றும் கருதப்படுகிறது. + +பூச்சிகள் பட்டியல் + + + + +பாலைவனங்களின் பட்டியல் + +இக்கட்டுரை உலகில் உள்ள பாலைவனங்களைப் பட்டியல் இடுகிறது. + + + + + + + + + + +தமிழ்நாட்டுக் கோயில் இசைத் தூண்கள் + +கோயிலில் உள்ள தூண்கள் இசை எழுப்பும் வண்ணம் அமைப்பது தமிழர் இசை கட்டுமான நுட்ப கலைப் பரிமாணங்களில் ஒன்று. சென்னையில் உள்ள யானை கோயிலில் இப்படிப்பட்ட இசைத் தூண்களுக்கு நல்ல எடுத்துக்காட்டு. மிடறு என்று அழைக்கப்படும் "கற்தூண்கள் இசை" என்ற தமிழிசை மரபின் எடுத்துக்காட்டாக இவற்றைக் கொள்ளலாம். + +பண்டைய காலத்தில் இவ்வாறான தூ��்கள் செதுக்கப்படும் போதே "ச ரி க ம ப த நி" என்ற ஏழு விதமான இசையை எழுப்பப்படும் விதத்தில் இத்தூண்கள் உருவாக்கப்படுள்ளன. + + + + + +மாத்தியூ எய்டன் + +மாத்தியூ லாரன்ஸ் எய்டன் (Matthew Lawrence Hayden பிறப்பு அக்டோபர் 29, 1971) குயின்ஸ்லாந்து அவுஸ்திரேலியா) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் ஆவார். இவர் மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் தொடக்க மட்டையாளராக களமிறங்குவார். இவர் ஆட்டத் தொடக்கத்தில் அதிவேகமாக ஓட்டங்களைக் பெறுவதில் திறமை மிக்கவராவார். பதினைந்து ஆண்டுகாலம் துடுப்பாட்டம் விளையாடினார். இவர் ஆத்திரேலிய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். + +தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீர்ர்களில் முதலிடத்தில் உள்ளார். இவர் 380 ஓட்டங்கள் எடுத்து இந்தச் சாதனையை புரிந்தார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அதன் சொந்த மண்னில் சென்னையில் 201 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் இந்தியாவில் அதிக ஓட்டங்கள் எடுத்த ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரும் ஜஸ்டின் லங்கரும் துவக்க வீரர்களாகக் களம் இறங்கியதே அனைத்துக் காலத்திற்குமான ஆத்திரேலிய அணியின் சிறந்த துவக்க இணை ஆகும். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அடம் கில்கிறிஸ்ற் உடன் இணைந்து வீரராக களம் இறங்கினார். ஜனவரி 2009 இல் இவர் ஓய்வினை அறிவித்த போது இவரின் தேர்வு துடுப்பாட்ட சராசரி 50.7 ஆகும். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் குவித்த் துவக்க வீரர்களில் இரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளார். மேலும் சர்வதேச தரவரிசையில் 6 வது இடத்தை ஜாக் கலிசுடன் பகிர்ந்துகொண்டார். மேலும் துவக்க வீரர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்களில் இவர் முதலிடத்தில் உள்ளார். + +செப்டம்பர் 2012 இல் மாத்தியூ எய்டன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2017 ஆம் ஆண்டில் ஆத்திரேலிய துடுப்பாட்ட வாரியம் இவரை "ஹால் ஆஃப் ஃபேமாக" அறிவித்தது. + +மேத்தியூ எய்டன் மொத்தமாக 160 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்ப���ட்டப் போட்டிகளில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியுள்ளார். 1993 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். 1993-1994 ஆம் ஆண்டுகளில் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய பின் இவரை 2000 ஆம் ஆண்டு வரை அணியில் சேர்க்கவில்லை. + +இவர் 2003 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் விளையாடிய ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியில் விளையாடினார். 2005 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் நிலையான திறனை வெளிப்படுத்தத் தவறியதால் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. பின் 2006-2007 ஆம் ஆண்டில் இவருக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஷேன் வாட்சனுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைத்தது. + +பெப்ரவரி 20, 2007 ஆம் ஆண்டில் ஆமில்டன், நியூசிலாந்து, செட்டன் பார்க்கில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 181 ஓட்டங்கள் எடுத்தார். இதுதான் ஒருநாள் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டம் ஆகும். மேலும் ஆத்திரேலியத் துடுப்பாட்டக்காரர்களின் அதிகபட்ச ஓட்டமாகவும் இது அமைந்தது. தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் ஆகிய இரண்டுவடிவங்களிலும் அதிகபட்ச ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். பின் 2011 ஆம் ஆண்டில் ஷேன் வாட்சன் ஒருநாள் போட்டிகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 185* ஓட்டங்கள் எடுத்து இவரின் சாதனையை தகர்த்தார். மேலும் தோல்வி அடைந்த ஒருநாள் போட்டிகளில் எடுத்த அதிகபட்ச ஓட்டங்களில் இவர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சார்லஸ் கவென்ட்ரி 194* ஓட்டங்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். + + + + +பாட்டு + +ஓசையுடன் தூக்கிப் பாடப்படுவது பாட்டு ("song") இஃதுஒலிநயத்துடன், சொற் கோர்வைகளாக, இசை, உணர்ச்சி, கற்பனை முதலானவை வெளிப்படும் வகையில் கருத்தின் வெளிப்பாடாக வரும். பத்துப்பாட்டுத் தொகுப்பில் உள்ள நீண்ட செய்யுள்களைப் பாட்டு எனவும்எட்டுத்தொகை நூலில் உள்ள செய்யுள்களைப் பாடல் எனவும் வழங்கும் மரபு தொன்றுதொட்டு இருந்துவருகிறது. + +ஒலிநயம் உள்ள சொற்களைக் கோர்த்து உணர்ச்சியையும் கற்பனையையும் கருத்தையு���் சில பரவலான யாப்பு வடிவங்களுக்கு ஏற்ப வெளிப்படுத்தலை பாட்டு எனலாம். இது வாய்மொழி இலக்கியமாகவோ அல்லது எழுத்து இலக்கியமாகவோ அல்லது இரண்டாகவும் அமையலாம். பொதுவாக பாட்டு இசையுடன் பாடப்படும். + + + +கலைப் பாடல் (Art songs) என்பது கின்னரப்பெட்டி துனைகொண்டு தனி நபரால் பாடப்படும் பாடல் ஆகும். கலைப் பாடலுக்கு நல்ல குரல்வளமும், மொழிவளமும் தேவை. + +கலைப் பாடல் என்பது பல்வேறு மொழிகளில் பல்வேறு பெயர்களில் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக ஜெர்மனி நாட்டில் உருவாக்கப்படுகின்ற பாடல்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. + +16-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாலிபோனிக் இசையானது உச்சத்தில் இருந்தது. அந்த நேரத்தில் வீணை இசைக்கருவியானது புகழ்பெறத் தொடங்கியது, 1600 ஆம் ஆண்டு காலகட்டங்களில் பெரும்பாலான மக்கள் வீணையினை வாசிக்கக் கற்றிருந்தனர். + + + +நாட்டார் பாடல் என்பது பாரம்பரிய மற்றும் 20-ஆம் நூற்றாண்டின் மறுமலர்ச்சி பெற்ற இசையின் கலவையாகத் தற்போது உள்ளது. நாட்டார் பாடல் என்ற சொற்கூறு 19-ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டது, ஆனால் அதற்கு முந்தைய காலகட்டத்திலும் இவ்வகையான இசை பயன்படுத்தப்பட்டுள்ளது. பாரம்பரிய நாட்டார் பாடல்களானது பலவகைகளில் அறியப்படுகிறது. அவையாவன, +20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பாரம்பரிய நாட்டார் பாடலில் இருந்து நவீன வடிவத்திற்கு மாற்றம் பெறத் தொடங்கியது. இந்தச் செயல்பாடு நாட்டார் இசைக்கான இரண்டாவது மறுமலர்ச்சியாக அறியப்படுகிறது. 1960 களில் இவ்வகையான இசை உச்சத்திலிருந்தது. இதன் வடிவங்களில் ஏற்பட்ட மாற்றங்களினால் இவை சில நேரங்களில் சமகால இசையாகவும் கருதப்படுகின்றன. + +பாரம்பரிய நாட்டார் பாடலுக்கான விளக்கங்கள் தெளிவில்லாமல் அல்லது மழுப்புகின்ற அளவில் உள்ளது. நாட்டார் இசை, நாட்டார் பாடல், நாட்டுப்புற நடனம் என்ற பல பெயர்களில் தற்போதைய பயன்பாட்டில் உள்ளது. இவைகள் அனைத்துமே நாட்டுப்புறவியல் என்பதன் உட்பிரிவுகளாகவே கருதப்படுகிறது. நாட்டுப்புறவியல் என்ற சொல்லாடல்1846 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் தொல்பொருள் ஆய்வாளரான வில்லியம் தாம்ஸ் என்பவரால் உருவாக்கப்பட்டது. இவருடைய கூற்றுப்படி நாட்டுப்புறவியல் என்பது மக்கள் தங்களின் மரபு, பழக்கவழக்கங்கள் , மற்றும் மூடநம்பிக்கைகள் போன்றவற்ற�� விளக்குவதற்காகப் பாடப்படுவது ஆகும் எனக் கூறியுள்ளார். நாட்டார் இசை என்பது நாட்டின் பல்வேறு இசைகளைத் தன்னகத்தே உள்ளடக்கியது ஆகும். + +இரண்டு நூற்றாண்டுகள் ஆன பின்பும் இதற்கான ஒரு தெளிவான வரையறை கிடைக்கவில்லை. நாட்டார் இசைக்கு என சில பண்புகள் இருந்தாலும் அவை முழுமையான இசை என்று அறியப்படுவதற்குப் போதுமானவையாக இல்லை என கூறப்படுகிறது. அறியப்படாத நபர்களால் பாடப்பட்ட பாடல் என்பதே இதற்கான விளக்கமாகப் பெரும்பாலும் பார்க்கப்படுகிறது. + +பின்வரக்கூடிய பண்புகள் வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு நாட்டார் இசைக்கான பண்புகளாகப் பார்க்கப்படுகின்றன. + +இந்திய நாட்டுப்புற இசை ( Indian folk music) இந்தியாவின் பரந்த கலாச்சாரப் பன்முகத்தன்மை காரணமாகப் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. இது, பாங்கரா (நடனம்) லாவணி, தாண்டியா, மற்றும் ராஜஸ்தானி உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் உள்ளது. மற்றும் பரப்பிசை போன்றவற்றின் வருகையால் நாட்டார் இசையின் புகழ் குறையத் தொடங்கியது. இந்தியாவில் நாட்டார் இசை என்பது நடனம் சார்ந்தது ஆகும். + + +முதன்மை கட்டுரை : பாங்கரா (இசை) + +பாங்கரா: பஞ்சாபி குடியேறிய பஞ்சாபிய (இந்தியா) இளைஞர்களுடன் தொடர்புடையது. இது இந்தியா, பாக்கித்தான் நாட்டிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களால் 1970 ஆம் ஆண்டு உருவாகியது. + +கர்பா (பாடல்) நவராத்திரி காலத்தில் இந்து கடவுள்களை வணங்கும் பொருட்டு பாடப்படுவது ஆகும். கிருட்டிணன், அனுமன், இராமன், மற்றும் பிற கடவுள்களை போற்றி பாடுகின்றனர். + + + + +புவி நாள் + +புவி நாள் ("Earth Day") என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் 1970ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஒரு சிறப்பு நாளாகும். + +1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் யுனெஸ்கோ மாநாடு ஒன்று நிகழ்ந்தது. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் ஜான் மெக்கானெல் ("John McConnell"). அவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்த ஒரு மாமனிதர். மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்க��ிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவை என்று அவர் வலியுறுத்தினார். அதோடு, ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாடுவது பொருத்தம் என்றும் மெக்கானெல் கருத்துத் தெரிவித்தார். இவ்வாறு புவி நாள் என்னும் பெயரும் கருத்தும் எழுந்ததாகக் கருதப்படுகிறது. + +அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும் மேலவை உறுப்பினருமான "கேலார்ட் நெல்சன்" என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய அறிவைப் பரப்பத் தகுந்த நாளாக 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 நடத்த அழைப்பு விடுத்தார். இந்த நாளின்போது புவியின் வடகோளப் பகுதி வசந்த காலமாகவும், தென்கோளப் பகுதி இலையுதிர் காலமாகவும் காணப்படுகிறது. + +அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் இந்நாள் 175 நாடுகளில் "(புவி [பூமி] நாளாக"க் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. + +ஐக்கிய நாடுகள் அவை சூன் 5ம் நாளன்று உலக சுற்றுச் சூழல் நாளை அனுசரித்து வருகிறது. + +1969 ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலமாகிய கலிபோர்னியாவின் சாந்தா பார்பரா நகர் அருகே நிகழ்ந்த பெரும் எண்ணெய்க்கசிவைப் பார்வையிட்ட விஸ்கான்சின் அமெரிக்க மேலவை உறுப்பினர் ("Senator") கேலார்ட் நெல்சன் 1970 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில் சுற்றுச்சூழல் குறித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடைபெறுமென 1969 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாஷிங்டனின், சியாட்டிலில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் அறிவித்தார். சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக நாடு தழுவிய அளவில் சுற்றுச்சூழல் அழிவு தவிர்க்கும் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தப்போவதாகக் கேலார்ட் நெல்சன் தேசிய நிகழ்ச்சி நிரலில் முதன் முதலில் முன்மொழிந்தார். + +திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகரான எட்டி ஆல்பர்ட் என்பவர் புவி நாளை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். இப்போது வரை நடக்கும் இந்த வருடாந்திரச் சுற்றுச்சூழல் நடவடிக்கைகள்குறித்த பணிகளை 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறப்பாக மேற்கொண்ட ஆல்பர்ட்டின் பணி சிறப்பானது என்றாலும், புவி நாள் ஆல்பர்ட்டின் பிறந்த நாளான ஏப்ரல் 22 ஆம் தேதி கொண்டாடப்படுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்பது ஒரு தரப்பினரின் கூற்றாகும். + +அந்தக் கால கட்டத்தில் கலாச்சார மற்றும் சுற்றுச்சூழ��் விழிப்புணர்வு மீது அளவு கடந்த தாக்கத்தை ஏற்படுத்திய "கிரீன் ஏக்கர்ஸ்" என்ற தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காக ஆல்பர்ட் இன்றளவும் சிறப்பான முறையில் அறியப்படுகிறார். + +ரான் கோப் ("Ron Cobb") என்னும் கருத்துப்பட ஓவியர் சுற்றுச்சூழல் குறித்த குறியீடு ஒன்றை உருவாக்கினார். அது பின்னர் புவி நாள் குறியீடாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், 1969 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்சில் பத்திரிக்கையாளர்களிடம் அறிமுகம் செய்யப்பட்டது; அத்துடன் அது மக்களின் பொதுச் சொத்தாகவும் அறிவிக்கப்பட்டது. அந்தக் குறியீடு முறையே "Environment" மற்றும் "Organism" என்கிற ஆங்கில வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்ட "E" மற்றும் "O" எழுத்துகளின் ஒருங்கிணைப்பாகும். + +கிரேக்க மொழியின் எட்டாம் எழுத்தாகிய "தேட்டா" ("Theta" - பெரிய வடிவம் "Θ", சிறிய வடிவம் "θ") சாவு போன்ற பேரிடரைக் குறிக்கும் எச்சரிக்கை அடையாளமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1970 ஏப்ரல் 21 இல், "லுக்" பத்திரிகை தனது இதழில் அந்தக் குறியீட்டை ஒரு கொடியுடன் இணைத்து வெளியிட்டது. பச்சை, வெள்ளை என்று மாறி மாறி 13 வண்ணப்பட்டைகளுடன் காணப்பட்ட அந்தக் கொடி அமெரிக்க கொடியைப் பின்பற்றி அமைக்கப்பட்டிருந்தது. அமெரிக்கக் கொடியில் காணப்படும் நட்சத்திரங்களுக்குப் பதிலாகப் பச்சை நிறத்தில் சுற்றுச்சூழல் குறித்த குறியீட்டுடன் இக்கொடி காணப்பட்டது. 1969 ஆம் ஆண்டு விளம்பர வாசக எழுத்தாளரான ஜுலியன் கேனிக் ("Julian Koenig") என்பவர் அமெரிக்க மேலவை உறுப்பினர் நெல்சனின் அமைப்புக் குழுவில் இருந்ததுடன், இந்த நிகழ்விற்குப் "புவி நாள்" என்று பெயரிட்டார். இந்தப் புதிய நிகழ்வைக் கொண்டாடத் தேர்ந்தெடுப்பட்ட நாள் ஏப்ரல் 22 என்பதுடன், அது கேனிக்கின் பிறந்த நாளாகவும் அமைந்தது. + +"பெர்த் டே" என்கிற சந்தம் அமைந்ததால் "எர்த் டே" என்று பெயரிடுவது எளிதாக இருந்ததாக அவர் கூறினார். 1969 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு கட்டுரையில் கிளேட்வின் ஹில் ("Gladwin Hill") பின்வருமாறு எழுதினார்: +"சுற்றுச் சூழல் நெருக்கடி" பற்றிய அதிகரித்து வரும் கவலை, வியட்நாம் போர்பற்றிய மாணவர்களின் அதிருப்தியை மங்கச் செய்து விடும் விதத்தில் நாட்டில் சுழல்போல் வேகமாகப் பரவி வருகிறது...வியட்நாமில் நடந்த போராட்டங்களைப் போன்று சுற்றுச்சூழல் ப��ரச்சனைகளுக்காக அடுத்த வசந்த காலத்தில் ஒரு நாளைத் தேசிய நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலை குழு விவாதப் பொருளாகக் கருதி மேலவை உறுப்பினர் கேலார்ட் நெல்சனின் அலுவலகத்திலிருந்து நாடு முழுவதும் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது..."
என்று கூறினார். +மேலவை உறுப்பினர் நெல்சனின் இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் ஒருங்கிணைக்க டெனிஸ் ஹேய்ஸ் என்பவர் பணியில் அமர்த்தப்பட்டார். + +1970 ஏப்ரல் 22 ஆம் தேதி ஏற்படுத்தப்பட்ட புவி நாள் நவீன சுற்றுச்சூழல் போராட்டத்தின் துவக்கம் என்று கூறலாம். ஒரு ஆரோக்கியமான சுற்றுச்சூழலை உருவாக்கும் குறிக்கோளுடன் ஏறத்தாழ இரண்டு கோடி அமெரிக்கர்கள் இதில் பங்கேற்றனர். ஹேய்சும் அவரது அலுவலர்களும் ஒரு கடலோரத்திலிருந்து மறு கடலோரம் வரையிலான மிகப் பெரிய பேரணிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆயிரக்கணக்கான கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சுற்றுச்சூழல் சீரழிவை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தின. மாசுபடுத்தும் தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், சீர்படுத்தப்படாத கழிவு நீர், நச்சுத் தன்மையுள்ள குப்பைகள், பூச்சிக்கொல்லிகள், காடுகளை அழித்தல் மற்றும் காட்டு விலங்குகளின் பேரழிவு போன்றவற்றை எதிர்த்துப் போராடி வந்த குழுக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டன. + +1990 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி புவி நாளன்று 141 நாடுகளில் 20 கோடி மக்களைத் திரட்டிச் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை உலகம் முழுவதும் அறியச்செய்ததன் மூலம், மறுசுழற்சி முயற்சிகளுக்கு ஒரு மிகப் பெரிய உந்துதல் சக்தி கிடைத்தது. அத்துடன் 1992 ஆம் ஆண்டு ரியோ டி ஜனேரோவில் ஐக்கிய நாடுகள் சபை புவி குறித்து விவாதிப்பதற்கான உயர்மட்ட சந்திப்பிற்கு வழி கோலியது. + +2000 ஆம் ஆண்டு நெருங்கும் தறுவாயில், புவி வெப்பமடைதல் மற்றும் சுத்தமான எரிசக்தியை மையப்படுத்திய மற்றுமொரு செயல் திட்டத்தைத் தலைமை ஏற்று நடத்த ஹேய்ஸ் ஒப்புக் கொண்டார். 2000 ஆம் ஆண்டின் ஏப்ரல் 22 புவி நாளானது, 1990 ஆம் ஆண்டு புவி நாளில் பொது மக்கள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையை நினைவுபடுத்துவதாக இருந்தது. 2000 ஆம் ஆண்டு புவி நாளுக்கான, போராட்டக்காரர்களை இணைக்க இணையம் உதவியாக அமைந்தது. அத்துடன் வரலாற்றுச் சாதனையாக 184 நாடுகளின் கோடிக்கணக்கான மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உலகம் முழுவதும் 5000 சுற்றுச்சூழல் குழுக்கள் கூடி விட்டனர். ஒரு பேசும் முரசு ஆப்பிரிக்காவின் காபோன் இல் கிராமம் கிராமமாகச் சென்றதுடன், லட்சக்கணக்கான மக்கள் அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியின் தேசிய வணிக மையத்தில் கூடினர். + +2007 ஆம் ஆண்டு புவி நாளன்று, உக்ரைனின் கீவ், வெனிசுவேலாவின் கேரகாஸ், துவாலு, பிலிப்பைன்சின் மணிலா, டோகோ, எசுப்பானியாவின் மாட்ரிட், லண்டன் மற்றும் நியூயார்க் போன்ற ஆயிரக்கணக்கான இடங்களில் ஏறத்தாழ 100 கோடி மக்கள் இதுகுறித்த நடவடிக்கைகளில் பங்கேற்க ஒன்றிணைந்தனர். இன்றளவில் நடத்தப்பட்ட புவி நாட்களுள் இதுவே மிகப் பெரியது எனலாம். + +1970 ஆம் ஆண்டு முதன் முதலில் சுற்றுச்சூழல் குடியுரிமை, வருடந்தோறும் அதிகரிக்கும் உள்நாட்டு மற்றும் உலகம் தழுவிய நடவடிக்கையை ஊக்கப்படுத்த நிர்வாகிகளால் புவி நாள் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. புவி நாள் கூட்டமைப்பு மூலமாகப் போராட்டக்காரர்கள் உள்ளூர், உள்நாடு மற்றும் உலக அளவிலான கொள்கை மாற்றங்களைத் தெரிந்து கொள்ள முடியும். சர்வதேச கூட்டமைப்பு 174 நாடுகளில் 17000 அமைப்புகளை ஒன்றிணைக்கிறது. உள்நாட்டு செயல் திட்டம் 5000 குழுக்களையும் 25000க்கும் அதிகமான பயிற்சியாளர்களையும் வருடந்தோறும் சமூக முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகிறது. + +வானியலின் படி இரவும் பகலும் சமமான புவி நாள், வடகோளப் பகுதியில் மத்திய வசந்தின் நடுப்பகுதி மற்றும் தென்கோளப் பகுதியில் மத்திய இலையுதிர் காலத்தின்போது ஏற்படுவதாகும். துல்லியமான தருணத்தைக் குறிக்கும் விதமாக இரவும் பகலும் சமமான நாள் மார்ச் 20 ஆம் தேதிவாக்கில் கொண்டாடப்படுகிறது. + +இரவும் பகலும் சமமான நாள் என்பது நேரத்தின் அடிப்படையில், சூரியனின் மையப் பகுதியானது நிலக்கோள நடுக்கோட்டின் நேர் "உச்சியில்" ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 20 மற்றும் செப்டம்பர் 23 தேதிவாக்கில் அமைகின்ற நிகழ்வாகும் (ஒரு முழு நாள் அல்ல). பெரும்பாலான கலாச்சாரங்களில் இரவும் பகலும் சமமான நாள் என்பது கதிரவனின் தென்பயணக் காலத்தில் தொடங்கி, வடபயணக் காலத்தில் நிறைவடையும்படியாக இருக்கிறது. +1969 ஆம் ஆண்டு நடைபெற்ற சுற்றுச்சூழல் பற்றிய யுனெஸ்கோ மாநாட்டில் "பு���ி நாள்" எனப்படும் உலகம் தழுவிய விடுமுறை நாளை ஜான் மெக்கானெல் முதன் முதலில் அறிவித்தார். 1970 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ நகர மேயர் ஜோஸப் ஆலியோடோவால் முதல் புவி நாள் பிரகடனம் வெளியிடப்பட்டது. சான் பிரான்சிஸ்கோவின், டேவிஸ் மற்றும் பல நகரங்களில் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றதுடன், கலிபோர்னியாவில் பல-நாள் தெரு விருந்துகளும் நடத்தப்பட்டன. ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் ஊ தாண்ட் இந்த வருடாந்திர நிகழ்சியை கொண்டாடும் மெக்கானெல்லின் முயற்சியை ஆதரித்தார் என்பதுடன், 1971 ஆம் ஆண்டு பெப்ரவரி 26 ஆம் தேதி இதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டு பின்வருமாறு கூறினார்: +நமது அழகான விண்கப்பலான பூமி தனது வெதுவெதுப்பான, மென்மையான, உயிரோட்டமுள்ள வாழ்வினங்களுடன் குளிர்ந்த விண்வெளியில் சுற்றிச் சுழன்று கொண்டே இருக்க இனி அமைதியான, உற்சாகமான புவி நாட்கள் மட்டுமே வர வேண்டும். +1972 ஆம் ஆண்டின் இரவும் பகலும் சமமான மார்ச் புவி நாளை ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் குர்ட் வால்ட்ஹைம் அறிவித்தார் என்பதுடன், அந்த மார்ச் சம இரவு நாளிலிருந்து ஐக்கிய நாடுகள் அவையின் புவி நாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்கின்றன (ஐக்கிய நாடுகள் அவை ஏப்ரல் 22 ஆம் தேதி உலகம் தழுவிய புவி நாள் நிகழ்ச்சியில் நிர்வாகிகளுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறது). + +மார்கரெட் மீட் சம இரவு நாள் கொண்டாட்டமான புவி நாளுக்குத் தனது ஆதரவை அளித்ததுடன், 1978 ஆம் ஆண்டு பின்வருமாறு அறிவித்தார்: + +"புவி நாள் என்பது எல்லா தேசீய எல்லைகளையும் கடந்து, எல்லா பூகோள ஒருமைப்பாடுகளையும் பாதுகாத்து, மலைகளையும், கடல்களையும், மணிநேர நிலப்பகுதிகளையும் உள்ளடக்கி, அதே சமயம் உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரையும் இணைக்கும் ஒரு ஒப்பந்தம் ஆகும். அதே சமயம் இயற்கையின் இசைவை பாதுகாக்க, அதே சமயம் கால அளவீடும் விண்வெளி வழியிலான உடனடி தொடர்பு, மற்றும் தொழில் நுட்பத்தின் வெற்றிகளையும் எடுத்துக்கொண்டு செயல்படும் புனிதமான நாளாகும். + +புவி நாள் வானவியல் விநோதங்களை ஒரு புதிய வழியில் நோக்குகிறது - அது ஒரு மிகப் பழைமையான வழியும் கூட. வசந்த கால சம இரவு நாள் கதிரவன் நிலக் கோளத்தின் நடுக்கோட்டைக் கடக்கும் ���ேரம் மற்றும் பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு பகல் நேரங்கள் சமமாக இருக்கும் தருணத்தைச் சிறப்பிக்கிறது. ஆண்டு நாள்காட்டியில் இந்நாள் தனிப்பட்ட, பிளவுபடுத்தும் ஒரு குறியீடாகவும் இருப்பதில்லை. ஒரு வாழ்க்கைமுறை மற்றொரு வாழ்க்கைமுறைக்கு மேலானது எனும் கருத்தும் அங்குத் தோன்றுவதில்லை. மார்ச் சம இரவு நாளைச் சிறப்பிப்பதில் உலக மக்கள் அனைவரும் பொதுவான வானவியல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். அத்துடன் விண் வெளியிலிருந்து பூமியைப் பார்த்தால் கிடைக்கக்கூடிய தோற்றத்தின் அடிப்படையில் புவி நாளைக் குறித்த ஒரு கொடி உருவாக்கப்பட்டுள்ளதும் மிகப் பொருத்தமே." +சம இரவு நாளில், ஜப்பானால் ஐக்கிய நாடுகளுக்கு நன்கொடையாகத் தரப்பட்ட ஜப்பானிய அமைதி மணியை ஒலித்துப் புவி நாள் கடைப்பிடிப்பது மரபாகும். ஐக்கிய நாடுகள் கொண்டாட்டம் நடக்கும் அதே சமயத்தில் உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. 2008 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் சடங்குகளைத் தவிர நியூசிலாந்து, கலிபோர்னியா, வியன்னா, பாரிஸ், லித்துவேனியா, டோக்கியோ மற்றும் பல இடங்களில் மணி ஒலித்துச் சடங்குகள் நடத்தப்பட்டன. சம இரவுப் புவி நாள் ஐக்கிய நாடுகள் அவையில் "புவி சமூக அறக்கட்டளை" என்னும் அமைப்பால் ஏற்பாடு செய்யப்படுகிறது. + +1960 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் கோட்பாட்டு ரீதியாகவும், நடைமுறை ரீதியாகவும் அமெரிக்காவின் மிகவும் சுறுசுறுப்பான காலம் ஆகும். 1960 ஆம் ஆண்டின் மத்தியில் காடுகளுக்கான சட்டத்தை அமெரிக்கக் காங்கிரஸ் நிறைவேற்றத் தொடங்கியது. + +நியூயார்க்கின் நசாவ் மாவட்டத்தில் நடந்த 1960 ஆம் ஆண்டிற்கு முந்தைய டிடிடீக்கு எதிரான அடித்தளப் போராட்டம், ரேச்சல் கார்சன் தனது அதிக அளவு விற்பனையிலான "ஒலியிழந்த வசந்தகாலம்" ("Silent Spring") என்ற புகழ்பெற்ற நூலை 1962 ஆம் ஆண்டு எழுதுவதற்கு உந்துதலாக அமைந்தது. 1970 ஆம் ஆண்டு ரால்ஃப் நேடர் சுற்றுப்புறவியலின் முக்கியத்துவம் பற்றிப் பேச ஆரம்பித்தார். + +பரவலான சுற்றுச்சூழல் சீரழிவுக்கு பதிலளிக்கும் விதத்தில், அமெரிக்க மேலவை உறுப்பினர் கேலார்ட் நெல்சன், சுற்றுச்சூழல் குழு விவாதப்பொருள் அல்லது 1970 ஏப்ரல் 22 நடைபெற இருந்த புவி நாளுக்கு அழைப்பு விடுத்தார். அந்த ஆண்டு 2 கோடிக்கும் மேலான மக்கள் பங்கேற்றனர். சுற்றுச்சூழல் போராட்டக்காரரான கேலார்ட் நெல்சன், இந்தக் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதில் ஒரு முக்கிய பங்காற்றினார், அத்துடன் அவர் தனக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கை நிரூபிக்கச் சுற்றுச்சூழல் குறித்த ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் காலத்தில் நடைபெற்ற வியட்னாம் போர் எதிர்ப்புப் போராட்டங்களைப் பின்பற்றி இந்த நிகழ்ச்சிக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். புவி நாள் என்கிற கருத்து முதன் முறையாக ஜேஃஎப் கென்னடி க்கு பிரெட் டட்டனால் எழுதப்பட்ட ஒரு அலுவலகக் குறிப்பில் முன்மொழியப்பட்டது. + +கலிபோர்னியா சமூக சுற்றுச்சூழல் பேரவையின் கூற்றுப்படி: 1969 ஆம் ஆண்டு கடலோரத்திற்கு அப்பால் ஏற்பட்ட பயங்கரமான எண்ணெய்க் கசிவுக்குப் பிறகு செனட்டர் கேலார்ட் நெல்சன் சான்டா பார்பராவுக்கு மேற்கொண்ட பயணத்திற்குப் பிறகுதான் புவி நாள் என்கிற திட்டம் உருப்பெற்றது என்றும், அத்துடன் அவர் அந்த நிகழ்வைக் கண்டதன் மூலம் மிகவும் கொதிப்படைந்து பின்னர் வாஷிங்டன் டிசிக்கு திரும்பிச் சென்றார். பின்னர் சுற்றுச்சூழல் குறித்த நிகழ்வைக் கொண்டாடுவதற்கு ஏப்ரல் 22 ஆம் தேதியைத் தேசிய நாளாக அறிவிக்கும் ஒரு மசோதாவை அவர் சமர்ப்பித்தார். +இந்த நடவடிக்கைகளுக்கான தேசிய ஒருங்கிணைப்பாளராக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவரான டெனிஸ் ஹேய்ஸை செனட்டர் நெல்சன் தேர்ந்தெடுத்தார். புவி நாளானது "பாரம்பரிய அரசியல் செயல்முறையை ஒதுக்கித் தள்ள வேண்டும்" என்று தான் விரும்புவதாக ஹேய்ஸ் கூறினார். காரெட் டுபெல் என்பவர் சுற்றுச்சூழலுக்கான குழு விவாதப்பொருள் பற்றிய முதல் விளக்க வழிகாட்டியாக விளங்கியதுடன், சுற்றுப்புறச் சூழலுக்கான கையேடு ஒன்றை ஒழுங்குபடுத்தி தொகுத்தார். + +இந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் ஒருவர் கீழ்வருமாறு கூறினார்: + +"ஒரு மிகப்பெரிய அளவிலான பொது நலன் காரணமாக, பல வகையான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகள்மீதும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். தவறான பாதையில் விரைந்து போய்க் கொண்டிருக்கும், இவை எல்லாவற்றையும் ஒரே சீராக எடுத்துச்செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுக்குள்ளது. மேலும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக அவர்களை ஒரு சமுதாயத்தின் கீழ் ���ன்றிணைக்கவே நாங்கள் பாடுபடுகிறோம். +"இது ஒரு மிகப்பெரிய விஷயமாக இருக்கும் என்று நினைக்கிறேன். தற்போது சுமார் 12000 உயர்நிலைப் பள்ளிகளிலும், 2000 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் குழுக்கள் செயல்படுகின்றன. மேலும், ஓரிரு ஆயிரம் மற்ற சமுதாயக் குழுக்களும் ஈடுபட்டுள்ளன. வெவ்வேறு விதங்களில் பங்கேற்கக்கூடிய மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களில் இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம்." +நாடு தழுவிய நிகழ்ச்சியில் வியட்நாம் போர் எதிர்ப்பும் நிகழ்ச்சிநிரலில் இருந்தது, ஆனால் இது சுற்றுச்சூழல் மையக் கருத்திலிருந்து கவனத்தை திசை திருப்பும் என்று கருதப்பட்டது. வாஷிங்டன் டிசியில் நடந்த நிகழ்ச்சியில் பீட் சீகர் ஒரு முக்கியமான பேச்சாளர் மற்றும் அரங்க காட்சியாளராக இருந்தார். பால் நியூமன் மற்றும் அலி மக்கராவ் போன்றோர் நியூயார்க் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.. + +"அமெரிக்க புரட்சியின் மகளிர் அமைப்பு" ("Daughters of the American Revolution") என்ற நிறுவனம் இந்த நிகழ்ச்சியை எதிர்த்த மிகவும் குறிப்பிடத் தக்க அமைப்பாகும். + +அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் புவி நாள் கொண்டாட்டம் சிறப்புப் பெற்றது. முதல் புவி நாளன்று அமெரிக்கா முழுவதும் இரண்டாயிரம் கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்கள், சுமார் பத்தாயிரம் ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான சமுதாயங்களின் பங்கேற்பாளர்கள் மற்றும் கொண்டாட்டக்காரர்கள் இருந்தனர். குறிப்பாக, இது "சுற்றுச்சூழல் சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவான அமைதிப் போராட்டங்களுக்கு 2 கோடி அமெரிக்கர்கள் வசந்தகாலக் கதிரவனின் ஒளியில் இறங்கிவர வழியாயிற்று." + +அந்தப் புவி நாள் "வெற்றிக்கு" அடித்தள மக்களின் தன்னார்வப் பங்கேற்பே காரணம் என்று செனட்டர் நெல்சன் கூறினார். 2 கோடி போராட்டக்காரர்களும் ஆயிரக்கணக்கான பள்ளிகளும் உள்ளூர் சமுதாயங்களும் பங்கேற்றனர். சுற்றுச்சூழலுக்காகச் சட்டம் இயற்றுதல் ஒரு கணிசமான, நீடித்து நிற்கக்கூடிய மக்கள் ஆதரவைப் பெற்றுத் தரும் என்று அமெரிக்க அரசியல்வாதிகளை உணரச்செய்திருப்பதாக நெல்சன் நேரிடையாகக் குறிப்பிட்டார். 1970 ஆம் ஆண்டு புவி நாள் காரணமாகச் சுத்தமான காற்று, காட்டு நிலங்கள், கடல் போன்றவற்றைப் பாதுகாப்பதற்காக அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியது. + +தற்போது அது ஆதாய நோக்கமில்லாத புவி நாள் கூட்டமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்டு 175 நாடுகளில் பின்பற்றப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு கூற்றுப்படி புவி நாள் இப்போது "ஒவ்வொரு வருடமும் 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் கொண்டாடப்படுகிற, உலகத்தின் மிகப் பெரிய மதச் சார்பற்ற விடுமுறை நாளாகும்." சுற்றுச் சூழல் பாதுகாப்பு குறித்து மனிதர்களின் வாழ்க்கை முறையில் மாற்றம் கொணர்வதற்கும், நாடுகளின் கொள்கைகளில் மாற்றம் கொணர்வதற்கும் புவி நாள் கொண்டாட்டம் துணையாகும் என்பது சுற்றுச் சூழல் குழுக்களின் எதிர்பார்ப்பு ஆகும். + + +இந்த நாள் ஐக்கிய அமெரிக்காவில் தேர்வு காலத்தின்போதோ வசந்த கால விடுமுறையிலோ வரவில்லை. அத்துடன் மத சம்பந்தப்பட்ட உயிர்ப்பு விழா அல்லது யூத பாஸ்கா விழா போன்ற விடுமுறை நாட்களிலும் வரவில்லை. இது வசந்த காலத்தில் வசதியான காலநிலையில் வரும் நாளாகவும் உள்ளது. + +வகுப்பில் அதிக அளவு மாணவர்கள் இருக்கக்கூடும், எனவே வாரத்தின் மத்தியில் மற்ற நிகழ்ச்சிகளுடன் குறைவான போட்டியே இருக்கும் என்ற காரணத்தினாலே, ஏப்ரல் 22 ஆம் தேதி புதன் கிழமையை அவர் தேர்ந்தெடுத்தார். + +லெனினின் 100வது பிறந்த நாளை வேண்டுமென்றே தான் தேர்ந்தெடுத்தீர்களா என்று கேட்டதற்கு, நெல்சன் ஒரு விளக்கம் தந்தார். அதாவது, உலகத்தில் 370 கோடி மக்கள் இருக்கின்றனர்; ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் மட்டுமே என்ற நிலையில் ஒவ்வொரு நாளும் ஒரு கோடி மக்களின் பிறந்த நாள் வருகிறது என்பது நெல்சன் அளித்த விளக்கம். + +"எந்த ஒரு நாளிலும் நல்ல மனிதர்களும், கெட்ட மனிதர்களும் பிறக்கக்கூடும்" என்று அவர் மேலும் தெரிவித்தார். + +"உலகத்தின் முதல் சுற்றுச்சூழல்வாதி என்று பலராலும் கருதப்படும் அசிசியின் பிரான்சிசு ஏப்ரல் 22 அன்று பிறந்தவர்தான்." + +" அமெரிக்காவின் ஃபெடரல் பியுரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷனின் இயக்குனர் ஜே.எட்கர் ஹூவருக்கு லெனின் தொடர்பு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கக்கூடும்; 1970 ஆம் ஆண்டு போராட்டங்களின்போது ஃஎப்பிஐ வேவு பார்த்ததாகச் சொல்லப்பட்டது. லெனின் எப்போதுமே ஒரு சுற்றுச்சூழல்வாதியாக அறியப்பட்டவர் அல்லர் என்றபோதிலும், லெனினின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடத்தான் அந்த நாள் தேர்ந்தடுக்கப்பட்டது என்கிற எண்ணம் சில இடங்களில் இன்னும் நிலவுகிறது. +ஆரம்ப கால ஏற்பாடுகள் நடந்த சமயத்தில் ஏப்ரல் 22 ஐத் தேர்வு செய்யச் சில இடது சாரிக் குழுக்கள் நெல்சன் மீது "செல்வாக்கைப் பயன்படுத்தியதாக" கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அவர் வேண்டுமென்றே எடுத்த முடிவாகத் தோன்றவில்லை. + + +ஆர்போர் டே 1885 ஆம் ஆண்டு நெப்ராஸ்காவில் ஏப்ரல் 22 அன்று நிரந்தரமாகக் கொண்டாடப்படுகிற ஒரு சட்டப்பூர்வமான விடுமுறை நாளாக ஆனது. +நேஷனல் ஆர்போர் டே அமைப்பின் கூற்றின்படி +"அரசாங்க அனுஷ்டிப்புகளுக்கு மிகவும் பொதுவான நாள் ஏப்ரலின் கடைசி வெள்ளிக்கிழமை தான்... ஆனால் பல அரசு விடுமுறை நாட்கள் மரம் நடுவதற்கு ஏற்ற தட்பவெப்ப நிலைக்கு ஒத்துப்போகிற சமயங்களில் வருகின்றன." + +பல நகரங்கள் புவி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சி அட்டவணையை வழக்கமாக ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 22 புவிநாள் அன்று முடியும்படி ஒரு முழு வாரத்திற்கும் நீட்டிக்கின்றன. இந்த நிகழ்ச்சிகள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய அதிகப்படியான மறுசுழற்சி, செம்மையான எரிபொருள்-செயல்திறன், மற்றும் கழித்துக்கட்ட வேண்டிய பொருட்களைக் குறைத்தல் உள்ளிட்ட நடத்தைகளை ஊக்குவிக்கும் விதமாக ஏற்படுத்தப்பட்டவை. +ஏப்ரல் 22 உலகெங்கிலும் உள்ள பல லட்சம் மக்களால் கொண்டாடப்படும் புவி நாளாக இருந்து வருகிறது. + +"ஃபிளாக்ஸ் ஆப் தி வேர்ல்ட்" என்னும் அமைப்பின் கூற்றுப்படி, "சுற்றுப்புறவியல் கொடி", ஓவியர் ரான் கோப் ஆல் உருவாக்கப்பட்டது. லாஸ் ஏஞ்செலீஸ் ஃப்ரீ பிரஸ் இல் 1969 நவம்பர் 7 ஆம் நாள் பிரசுரிக்கப்பட்டது, பிறகு பொதுச் சொத்தாக மக்கள் மத்தியில் வைக்கப்பட்டது. + +பெட்சி வோகெல் ஒரு 16 வயது உயர்நிலைப் பள்ளி மாணவி. வித்தியாசமான பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு சுற்றுச்சூழல் கொள்கைப் பரப்பாளர் மற்றும் சமுதாயப் போராளி, முதல் புவி நாளைக் கொண்டாடும் பொருட்டு, ஒரு [41]4 x பச்சை மற்றும் வெள்ளை "தேட்டா" சுற்றுப்புறவியல் கொடியை உருவாக்கினார். லுயிசியானாவின் ஸ்ரேவ்போர்ட் இல் உள்ள சி.ஈ.பைர்ட் உயர்நிலைப் பள்ளியில் அந்தக் கொடியைப் பறக்கவிட ஆரம்பத்தில் அனுமதி மறுக்கப்பட்ட வோகெல், பின்னர் லுயிசியானா மாநில சட்டமன்ற மற்றும் லுயிசியானா ஆளுநர் ஜான் மகேய்த்தனை அணுகி, புவி நாள் அன்று அக்கொ���ியைப் பறக்கவிட அதிகாரம் பெற்றார். + +அலெக்ஸ் ஸ்டெஃபன் போன்ற சில சுற்றுச் சூழல் ஆதரவாளர்கள், குறிப்பாக ஒளிரும் பச்சைச் சுற்றுச் சூழல் முகாமைச் சேர்ந்தவர்கள், புவி நாளை எதிர்மறையாக விமர்சிக்கிறார்கள். புவி நாள் என்பது சுற்றுச் சூழல் கரிசனையை ஓரங்கட்டிவிட்டதற்கான குறியீடாக மாறி விட்டிருக்கிறது; இந்தக் கொண்டாட்டங்களால் இனிப் பயனேதும் இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். + +2009 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி தி வாஷிங்டன் டைம்ஸ் பத்திரிகையில் வந்த ஒரு தலையங்கம் "ஆர்போர் டே" கொண்டாட்டத்தைப் புவி நாள் கொண்டாட்டத்துடன் ஒப்பிட்டது. ஆர்போர் டே என்பது ஒரு மகிழ்ச்சிகரமான, அரசியல் கலப்பில்லாத மரங்களின் கொண்டாட்டம்; ஆனால் புவி நாள் என்பதோ மனிதர்களை எதிர்மறை ஒளியில் சித்தரிக்கும் எதிர்மறையான அரசியல் சித்தாந்தம் என்றது. + +’’புவிநாள் பண்’’ + +Our cosmic oasis, cosmic blue pearl + +the most beautiful planet in the universe + +all the continents and the oceans of the world +united we stand as flora and fauna + +புடவியின் பேரழகுக் கோளே! + +அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே! + +ஒன்றி வாழ்வோம் ஒருநிரை யாக + +கண்டங்களும் கடல்களும் களித்துயிர் களோடே! + +united we stand as species of one earth + +black, brown, white, different colours + +we are humans, the earth is our home. + +புவியில் வாழும் உயிரினங் களோடும் + +கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ + +மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம். + +மாந்தர் நாமே நம்குடில் பூமி! + +Our cosmic oasis, cosmic blue pearl + +the most beautiful planet in the universe + +புடவிப் பெருவெளிப் பேரழகுக் கோளே! +அண்ட ஓடையில் ஒளிர்நீல முத்தே! + +all the people and the nations of the world + +all for one and one for all + +united we unfurl the blue marble flag + +black, brown, white, different colours + +we are humans, the earth is our home. + +உலக நாட்டு இணைந்த மக்கள்யாம் + +எலாமொருவருக்கு;ஒருவரெலார்க்கும் + +நீலப் பளிங்குக்கொடி நெடிதுயர்த்தினோம் + +கருப்போ சிவப்போ பழுப்பு நிறமோ + +மாந்த ரெல்லாம் ஓர்நிரை யாவோம். + +மாந்தர் நாமே நம்குடில் பூமி! . + +’’புவிநாள் பண்’’ + +எத்தனை வியப்புகள் புவியினிலே-அதை + +எத்தனை எழிலுடன் புனைகின்றோம் + +எளிய கொடைகளை இயற்கைதரும்-அட + +எனினும் புவியோ வானாகும் + +பெற்றவை போதும் சூளுரைப்போம்-அதைப் + +பேணுவம் என்றும் புதிதாக + +சிற்றிளங் கையால் தொடுகையிலே-உடற் + +சிலிர்க்கணும் சிணுங்கணும் சிரித்துடனே-அட + +புத்தம் புதியதாய் பொலியணுமே! + +இதுவரை, + +பெற்றவை போதும் சூளுரைப்போம்-அதைப் + +பேணுவம் என்றும் புதிதாக + +சிற்றிளங் கையால் தொடுகையிலே-உடற் + +சிலிர்க்கணும் சிணுங்கணும் சிரித்துடனே-அட + +புத்தம் புதியதாய் பொலியணுமே! + + +Earth Day Anthem +Joyful joyful we adore our Earth in all its wonderment + +Simple gifts of nature that all join into a paradise + +Now we must resolve to protect her + +Show her our love throughout all time + +With our gentle hand and touch + +We make our home a newborn world + +Now we must resolve to protect her + +Show her our love throughout all time + +With our gentle hand and touch + +We make our home a newborn world[56] + + +ஏப்ரல் 22 புவி நாள் + + +
+ +மட்டையாளர் + +மட்டையாளர் என்பது துடுப்பாட்டத்தில் மட்டையடித்துக் கொண்டிருக்கும் வீரரையோ அல்லது மட்டையடிப்பதற்கான சிறப்புத் திறமைகளைக் கொண்டிருக்கும் வீரரையோ குறிக்கும். மட்டையாளர் என்பது பால் வித்தியாசமின்றி இருபாலாரையும் குறிக்க பயன்படுத்தப்படுகிறது. + +விளையாட்டின் போது, மட்டையடிக்கும் அணியின் இரண்டு வீரர்கள் ஆடுகளத்தில் இருப்பார்கள், ஏனையவர்கள் களத்துகு வெளியே அரங்கத்தில் அணியின் அறையில் இருப்பார்கள். களத்தில் இருக்கும் இரண்டு வீரர்களும் தற்போதைய மட்டையாளர்கள் எனப்படுவர். இவ்விரு வீரர்களும் களத்தின் மையத்துக்கு அருகாமையில் இருக்கும் பட்டிகையின் இரு அந்தங்களிலும் காணப்படும் குச்சங்களுக்கு அண்மையில் இருப்பார்கள். + +இரண்டு மட்டையாளர்களும் வெவ்வேறு பனிகளைக் கொண்டிருக்கின்றனர்: + +பந்துவீச்சுகளில் இருந்து குச்சத்தை காப்பதோடு அதனை மறித்து களத்துக்குள் மட்டையாள் அடித்துவிட்டு ஆடுபவரும் காத்திருப்பவரும் முனைகளை மாற்றுவதன் மூலம் ஓட்டங்கள் பெறப்படும். ஒரு முறை முனைகள் மாறினால் ஒரு ஓட்டம் பெறப்படும். மட்டையாளர்கள் களத்தடுப்பில் உள்ள அணியிணர் பந்தைப்பிடித்து ஏதாவது குச்சத்துக்கருகில் பறிமாற்றும் வரையில் முனைகளை மாற்றி ஓட்டங்களைக் குவிக்கலாம். பந்து களத்தின் எல்லைக்கோட்டைத் தாண்டிச் செல்லும் போது முனைகளை பரிமாற்றாமலேயே ஓட்டங்கள் பெறப்படும். ஆடுபவர் பந்தை எதிர்தாட தயாராக உள்ளபோது காத்திருப்பவர் பொதுவாக ஓட்டத்துக்கு தயாராக காத்திருப்பார். + +சிறந்த மட்டையாளரிடமிருந்து எதிபார்க்கப்படும் திறமைகள் போட்டியின் வகையையும் சந்தர்ப்பத்தையும் பொறுத்து வேறுபடும். பொதுவாக மட்டையாளர்கள் அநாவசிய ஆபத்துக்களை எதிர்கொண்டு தனது இலக்கை விட்டுக் கொடுக்காமல் கூடிய வேகத்தில் ஓட்டங்களைக் குவிக்க வேண்டப்படுவார்கள். சில சந்தர்ப்பங்களில் ஓட்டம் எதனையும் பெறாவிட்டாலும் தனது ��லக்கை விட்டுக்கொடுக்காமல் போட்டி நேரம் முடிவடையும் வரையில் மெதுவாக ஆட வேண்டப்படுவார்கள். ஓட்ட விகிதம் மற்றும் ஓட்ட வேகம் என்பன மட்டையாளர் ஒருவரின் திறமையை அளவிடும் முறைகளாக பயன்படுத்தப்படுகிறது. + + + + +சரத் பொன்சேகா + +ஜெனரல் கர்டியெவா சரத் சந்திரலால் பொன்சேகா (பிறப்பு: 18 திசம்பர் 1950) 2005 டிசம்பர் 6 முதல் இலங்கை இராணுவத்தின் கட்டளைத் தளபதியாக பதவி வகித்து வந்தவர். இவர் இலங்கை உள்நாட்டுப் போரின் தொடக்கம் முதலே இலங்கை இராணுவத்தில் பணியாற்றி வந்திருக்கின்றார். + +இவர் தமிழ் மக்கள் 20000க்கும் மேற்பட்டோரை வன்னி போர்முனை பகுதியில் படுகொலை செய்வதற்குக் காரணமான முக்கிய சூத்திரதாரியாக சர்வதேச மனிதாபிமான ஆர்வலர்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். நவம்பர் 16, 2009 அன்று தமது பதவியிலிருந்து விலகி இலங்கையின் அடுத்த அதிபர் தேர்தலில், அப்போதைய அதிபர் மகிந்த ராஜ்பக்சேவிற்கு எதிராக போட்டியிட முடிவெடுத்தார். + +அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பொன்சேகா, இலங்கை அரசினால் இராணுவப் புரட்சிக்கு திட்டமிட்டார் எனக் குற்றம் சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டார். இதன் பின்னர் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் பொன்சேகா குற்றவாளியாக அடையாளம் காட்டப்பட்டார். + +மைத்திரிபால சிறிசேன இலங்கையின் புதிய அதிபராக பதவியேற்றபின், சரத் பொன்சேகா மீண்டும் இலங்கை இராணுவத்தின் தலைமைப் படைத்தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.. 22 மார்ச் 2015இல் இலங்கை இராணுவத்தின் முதல் பீல்டு மார்சல் எனும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது என அதிகாரப் பூர்வமற்ற செய்திகள் கூறுகிறது. + + + + + +கட்டுரை + +பல நூற்றாண்டுகளாக செய்யுள் வடிவமே தமிழில் இலக்கியமும் தத்துவமும் பயன்படுத்தப்பட்டது. உரை வடிவம் இலக்கணங்களுக்கும், செய்யுள் விளக்கம் கூறவும், சாசனங்கள் (records) பதியவும் பயன்படுத்தப்பட்டது. 20ஆம் நூற்றாண்டிலேயே உரை வடிவம் வளர்ச்சி பெற்று, மக்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்கும் பயன்படுகின்றது. கட்டுரையே உரைநடை வெளிப்பாட்டின் முக்கிய வடிவம் ஆகும். + +கா. சிவத்தம்பி அவர்கள் கட்டுரை () "பகுப்பாய்வுக்கான (analysis) ஒரு வடிவம்" என்றும், "விவாதித்து விபரிப்பதே" அதன் பண்பு என்றும் குறிப்பிடுகின்றார். ���. சொக்கலிங்கம் அவர்கள் "ஒரு பொருள்பற்றி சிந்தித்துச் சிந்தித்தவற்றை ஒழுங்குபடுத்தி எழுதுவதே கட்டுரை" என்கிறார். இவர்கள் கருத்துக்கேற்பவே கட்டுரை தர்க்க வெளிப்பாட்டிற்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் உரிய வடிவமாக இன்று பயன்படுகின்றது. + +கட்டுரை எழுதும்பொழுது பொருள் ஒழுங்கு, சொல் தெரிவு, சிறு வாக்கிய அமைப்பு, பந்தி அமைப்பு, குறியீடுகள் உபயோகம் என்பவற்றில் கவனம் தேவை என்று க. சொக்கலிங்கம் "கட்டுரை கோவை" என்ற நூலில் குறிப்பிடுகின்றார். மேலும் "தெளிவு, ஆடம்பரமின்றி ஒன்றை நேராக் கூறல், சுருங்கிய சொல்லால் விரிந்த பொருளை குறித்தல், குறிப்பாற் பொருளை சுட்டுதல்" (வி. செல்வநாயகம்) போன்ற பண்புகள் பேணப்பட வேண்டும். + +கட்டுரைகளை நடை மற்றும் நோக்கம் ரீதியாக பின்வருமாறு வகைப்படுத்தலாம். + +ஆயினும், "ஆங்கிலத்தில் "essay, article, feature writing" என நுண்ணியதாக வேறுபடுத்துவனவற்றைத் தமிழில் இன்னும் வேறுபடுத்திச் சுட்டுவதில்லை" என்று கா. சிவத்தம்பி சுட்டிகாட்டுகின்ற்றார். + +பொதுவாக தர்க்க கட்டுரைகளே தமிழில் முக்கியம் பெறுகின்றன. தர்க்க கட்டுரைகள் தனது வாதங்களை (premises) முன் வைத்து, வாதங்களால் நிலைநிறுத்ப்படும் முடிவுகளுக்கு (conclusions) இட்டு செல்லும். ஒரு செய்தி கட்டுரை (article) செய்தி பற்றிய ஐந்து முக்கிய கேள்விகளான 'என்ன? எங்கே? எப்பொழுது? ஏன்? யார்?' என்பவற்றிற்க்கு உடனடியாக பதில் தர முயலும். விஞ்ஞான விடயங்களை பகிர முனையும் ஆய்வு கட்டுரைகள் விபரண, தர்க்க, செயல்முறை நடைகளை தகுந்தவாறு பயன்படுத்தி விடயங்களை முன்நிறுத்தும். + +கா. சிவத்தம்பி அவர்கள் "நடை" பின்வரும் கூறுகளால் நிர்ணயிக்கப்படுகின்றது என்கிறார். + +மேலும், "நடை என்பது கவிதையோ, உரையோ கையாளப்படும் முறைமை பற்றியதாகும்", அது "எழுதுபவர்களின் ஆளுமையோடு தொடர்புடையது" என்கிறார். + +பேச்சு தமிழுக்கும் உரைநடை (கட்டுரை) தமிழுக்கும் வித்தியாசம் உண்டு. பேச்சு தமிழ் பாமரர் தன்மை ("lowstatus") உடையதாகவும், கட்டுரை தமிழ் பண்டித தன்மை ("high status") உடையதாகவும் கருதுவோரும் உளர். கட்டுரைக்கு என்றும் கருத்துச் சொறிவு, தெளிவு முக்கியம். வாசகரின் நேரத்தை வீணாக்காமல் இருக்க சீரமைக்ப்பட்ட (edited), ஒழுங்கமைக்ப்பட்ட (organized), கட்டமைப்பு (structure) கட்டுரைக்கு அவசியம். ஆகையால், பேச்சு தமிழ் போல எழுத வேண்டும் என்ற கருத்த�� நடைமுறையில் இல்லை. இருப்பினும், பேச்சு தமிழில் உள்ள எளிய சொற்களை உபயோகபடுத்தல் மூலம் அதன் எளிமையையும், பேச்சு தமிழில் உள்ள வேகத்தையும் கட்டுரை பெற்று கொள்ளும். + +தமிழ் ஒலி சார்ந்த மொழி. அதுவே அதற்குப் பலமும் பலவீனமும். ஒவ்வொரு பிரதேசத் தமிழர்களினதும் உச்சரிப்பு, நடை சற்று வேறுபடும். ஆகையால், பிரதேச மொழி நடையில் எழுதும் பொழுது, ஒரு சொல் பல வடிவங்களைப் (spelling) பெறுகின்றது. அது பரிச்சியம் அற்ற வாசகர்களைக் குழப்பி விடுகின்றது. இலக்கிய நயத்திற்காகக் கதைகளிலோ கவிதைகளிலோ பிரதேச தமிழ் நடையைப் பயன்படுத்தினாலும், தகவல்களைத் தரும் கட்டுரைகளில் சீரிய கட்டுரைத் தமிழ் நடையைப் பயன்படுத்துவதே பன்முகத் தமிழரும் புரிந்து கொள்ள உதவும். + + + + + + + +இடவியல் + +இடவியல்(Topology) (கிரேக்கம் τόπος, "இடம்", மற்றும் λόγος, "படிப்பு") கணிதத்தின் ஒரு பெரிய உட்துறை. அடிப்படைக் கணித அமைப்புகளுக்குக் குந்தகமில்லாமல் வடிவவியல் முறையிலோ அல்லது இயற்கணித முறையிலோ செய்யப்படும் உரு மாற்றங்களைப் பற்றி இத்துறை விபரிக்கின்றது. ஆங்கிலத்தில் Topology என்றும், பிரென்ச், ஜெர்மானிய மொழிகளில் Topologie என்றும் கூறப் படுகிறது. + +முக்கியமாக 1736 இல் ஆய்லர் (Euler), 1895 இல் புவான்காரே (Poincare), 1906 இல் ஃப்ரெஷெ (Frechet) , 1914 இல் ஹௌஸ்டார்ப்ஃ (Hausdorff) , 1922 இல் குரடோவ்ஸ்கி (Kuratowski) ஆகியவர்களும் இன்னும் சிலரும் செய்த ஆய்வுகளும் தொகுப்புகளும் சேர்ந்து இத்துறை உருவாகியது. அதிலிருந்து ஓர் ஐந்தாறு பத்தாண்டுகளுக்கு இத்துறைதான் கணித உலகெங்கும் ஆய்வாளர்களால் வேண்டப்பட்ட துறையாக இருந்தது. காலப்போக்கில் அதனுள்ளேயே இரண்டு உட்துறைகளாகப் பிரிந்து விரிந்துள்ளது: அதாவது, கணக்கோட்பாட்டு இடவியல் (Set-theoretic Topology), இயற்கணித இடவியல் (Algebraic Topology). முந்தியது பொதுவாக "இடவியல் வெளி" (Toplogical Space) களைப் பற்றியும், பிந்தியது இடவியல் உரு மாற்றங்களினால் (Topological transformations) "மாற்றமுறா சிறப்பியல்புகளைப்" (Invariant characteristics) பற்றியும் பேசுகின்றன. + +யூக்லீடின் வடிவவியலில் இரண்டு வடிவவியற் பொருள்கள் சமானமாக (equivalent) இருப்பதாக எப்பொழுது சொல்கிறோம்? ஒரு சுழற்சியோ, பெயர்ச்சியோ, எதிர்வமோ (பிரதிபலித்தலோ) அடங்கிய ஏதாவதொரு சம அளவை (Isometric) உருமாற்றத்தினால் ஒரு பொருள் இன்னொன்றாக மாறினால் அவையிரண்டும் வடிவவியற் சமானம் எ��்று சொல்கிறோம். இடவியலிலோ சமானத்திற்காக எடுத்துக் கொள்ளப்படும் உருமாற்றங்கள் இவைகளைவிட மிகப்பொதுவாக இருந்தால் போதும். + +ஒரு சுவையான எடுத்துக்காட்டு இதனை விளக்கும். பக்கத்தில் உள்ள படிமத்தில் ஒரு தேனீர் கோப்பை உருமாறி தமிழ்நாட்டு வடை (அல்லது, மேற்கத்திய நாடுகளின் ‘டோநட்’) உருவை அடைகிறதல்லவா? இவ்விரண்டு வடிவங்களும் இடவியலில் சமானமானவை என்று இயம்பப்படும். இவ்வுருமாற்றத்திற்கு இடவியல் உருமாற்றம் என்று பெயர். +இடவியல் என்னும் அறிவியலின் இலக்கு, இவ்வுரு மாற்றங்களை துல்லியமாக வரையறுத்து அவைகளால் எந்தெந்த சிறப்பியல்புகள் மாறாமல் இருக்கும் என்பதை நிச்சயிப்பதுதான். இவ்விதக் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்தி மற்ற பல கணித உட்துறைகளில், குறிப்பாக, தொகையீட்டுச் சமன்பாடுகளோ, அல்லது வகையீட்டுச் சமன்பாடுகளோ வரும் துறைகளில் வியப்பு தரும் தீர்வுகளைக் கண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்ல. இன்றைய கணித உலகின் உயர்மட்டங்களில் இடவியல் வெளி என்பது குலம், வளையம், களம் என்னும் இயற்கணித கருத்துகளுடன் சேர்ந்து வெவ்வேறு உட்துறைகளின் கருத்துகளை ஒன்று சேர்க்கிறது. கணிதமத்தனையும் ஒரே நூலில் கோர்க்கப்பட்ட மாலையாகக் கருதவும், கற்கவும் வழிசெய்கிறது. + +ஏதாவதொரு கணம் S ஓர் இடவியல் வெளியாக ஆக்கப்பட்டது என்பதும் அதன்மேல் ஓர் இடவியற்கூறு படைக்கப்பட்டது என்பதும் ஒன்றுதான். இதைச்செய்வதற்கு மூன்று வழிகள் உண்டு. முதல் வழி எல்லைப் புள்ளிகள் மூலம். S இல் அடங்கிய ஒவ்வொரு உட்கணம் "X" க்கும், மற்றும் ஒவ்வொரு உறுப்பு " s" க்கும், “"s", கணம் "X" உடைய எல்லைப் புள்ளியா?” என்ற கேள்விக்கு பதில் கிடைக்கும் நிபந்தனை விதிகள் உருவாக்கப்பட்டால், S ஓர் இடவியல் வெளியாக ஆக்கப்பட்டது என்று கொள்ளலாம். ஆக, கணம் S இன்மேல் பற்பல இடவியற்கூறுகள் படைக்கப்பட வாய்ப்பிருக்கிறது. இந்த இடவியற்கூறுகளில் இரண்டு புறக்கோடிகள் உள்ளன. + +எந்த "s" ம் எல்லா "X" க்கும் எல்லைப் புள்ளிதான் என்று நிபந்தனை வைக்கலாம். இதன்படி S இன்மேல் ஏற்படும் இடவியற்கூறு "அற்பமானது", "எளிமையானது", என்று சொல்லப்படும். இது ஒரு புறக்கோடி. இது தான் மிகச்சிறியது. இதை ஆங்கிலத்தில் Trivial Topology என்பார்கள்.தமிழில் "வெற்று இடவியற்கூறு" எனலாம். + +மறுகோடியில், ஒரு "s" கூட ஒரு முறையான உட்கணம் "X" க்கு ���ல்லைப்புள்ளி ஆகாது, என்ற நிபந்தனை விதிக்கலாம். இதன்படி S இன்மேல் ஏற்படும் இடவியற்கூற்றிற்கு "தன்னிலை இடவியற்கூறு" என்று பெயர். இதுதான் மிகப்பெரியது.இதை ஆங்கிலத்தில் Discrete Topology என்பர். + +இவ்விரண்டு புறக்கோடிகளை விட்டு மற்ற பல நிபந்தனைகளால் ஏற்படும் இடவியற்கூறுகள் தான் கசடறக் கற்கப்படுபவை, கற்கவேண்டியவை. அவை இவ்விரண்டு கோடிகளுக்கும் இடையில் உள்ளவை. + +ஏற்கனவே கொடுக்கப்பட்ட எல்லைப்புள்ளியின் வரையறையைப் பயன்படுத்தினால், மெய்யெண்களின் கணமான R இல் அடங்கிய ஒவ்வொரு "X" க்கும், ஒவ்வொரு உறுப்பு "s" க்கும் எதெது எல்லைப் புள்ளியாக இருக்கும் என்பது திட்டவட்டமாகத் தெரியும். இதனால் R இல் ஒர் இடவியற்கூறு உண்டாக்கப்பட்டு விட்டது. மெய்யெண்களின் இவ்விடவியற்கூறு "இயற்கையான" (அல்லது, "திட்டமான") இடவியற்கூறாகக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக கணித உலகில் R இந்த இயற்கை இடவியற்கூற்றுடன் தான் புழக்கத்தில் இருந்திருக்கிறது; ஆனால் நாம் தான் அவ்விடவியற்கூற்றிற்குப் பெயரிடவில்லை! + +ஏதாவதொரு கணம் S ஐ இடவியல்வெளி ஆக்குவதற்கு எல்லைப்புள்ளி வழி அவ்வளவு எளிதானதல்ல. "திறந்த கணங்கள்" என்ற கருத்து மூலம் ஒரு சிறந்த வழி இருக்கிறது. S இனுடைய உட்கணங்களில் சில கணங்களைப் பொறுக்கி இவைகள் திறந்த கணங்கள் என்று, கீழ்காணும் (தி1, தி2, தி3 என்ற) மூன்று கட்டுப்பாடுகளுக் கொப்ப நிபந்தனை இடுவது தான் இந்த வழி. (தி = திறந்தகணம்) + +(தி 1): வெற்றுக்கணமும், முழுக்கணம் S ம், திறந்த கணங்கள்; + +(தி 2):எவ்வளவு திறந்த கணங்கள் எடுத்துக்கொண்டாலும் அவைகளின் ஒன்றிப்பு, திறந்த கணமாயிருக்க வேண்டும்; + +(தி 3): ஒரு முடிவுள்ள எண் கணக்கில் திறந்த கணங்கள் எடுத்துக் கொண்டால் அவைகளின் வெட்டு, திறந்த கணமாயிருக்க வேண்டும். + +இவ்விதம் ஏற்படுத்தப்பட்ட இடவியல் வெளியில் எல்லைப் புள்ளியின் வரையறை இப்படி ஆகும்." a" என்ற ஓர் உறுப்பு, உட்கணம் "X" க்கு எல்லைப் புள்ளியாக இருக்கவேண்டுமானால் "a" ஐ உள்ளடக்கிய ஒவ்வொரு திறந்த கணமும் " a" ஐத்தவிர "X" இன் வேறொரு உறுப்பையும் உள்ளடக்கியாக வேண்டும். + +இதனால் R இன் இயற்கை இடவியற்கூற்றில் ("a" – "ε", "a" + "ε") போன்ற திறந்த இடைவெளிகள் எல்லாம் "a" ஐ உள்ளடக்கிய ‘திறந்த கணங்கள்’ ஆகின்றன. + +அற்ப இடவியல் கூற்றில், வெற்றுக்கணமும், முழுக்கணமும் ஆக இரண்டே கணங்கள் தான் ��ிறந்த கணங்கள். அதனால் எல்லா புள்ளிகளும் எல்லா உட்கணங்களுக்கும் எல்லைப் புள்ளிகள். இதன் மறுகோடியில், தனிநிலை இடவியல் கூற்றில் ஒரு புள்ளியும் எந்த உட்கணத்திற்கும் எல்லைப் புள்ளி யாகாது. + +திறந்த கணங்கள் மூலம் உண்டாக்கப்பட்ட இடவியல்வெளி S ஒன்றில் "அண்மை" என்ற கருத்து இப்படி வரையறுக்கப்படுகிறது. வெளி S இல் "p" என்ற புள்ளியை உள்ளடக்கிய எந்தத்திறந்தகணமும் அதை உள்ளடக்கிய எந்த உட்கணமும் p இன் அண்மையாகும். இவ்விதம் ஒவ்வொரு p க்கும் அண்மைகள் ஏற்படும். ஒரு p இன் எல்லா அண்மைகளின் தொகுதி A கீழ்க்கண்ட மூன்று கட்டுப்பாடுகளுக் குட்பட்டிருக்கும்: ( அ = அண்மை) + +(அ 1) : S ε A ;, + +(அ 2): " A" என்ற கணம் A இல் இருந்தால் "A" இன் ஒவ்வொரு மிகைக்கணமும் A இல் இருந்தாக வேண்டும்; + +(அ 3): "A", "B" இரண்டும் A இல் இருந்தால் "A" ∩ " B" ம் A இல் இருந்தாக வேண்டும். + +இதன் மறுதலையாக, அண்மைகள் மூலம் இடவியல் அமைப்பை உண்டாக்குவதற்கு S இல் தொடங்கி அதிலுள்ள ஒவ்வொரு "p" க்கும், "p" ஐ உள்ளடக்கிய எல்லா கணங்களிலிருந்து மேற்சொல்லிய (அ1), (அ2), (அ3) க்குட்பட்டபடி ஒரு தொகுதி A யைப்பொறுக்கி இவைதான் "p" இன் அண்மைகள் என்று நிபந்தனை இட்டுவிட்டால் இடவியல் வெளி உண்டாகிவிடும். + +இம்மூன்று வழிகளில் ஏதாவதொன்றின் மூலம் இடவியல் அமைப்பை ஏற்படுத்திய பிறகு, எல்லாவற்றிலும் அண்மைகள் எவை, திறந்த கணங்கள் எவை, எல்லைப் புள்ளிகள் எவை என்றெல்லாம் திட்டவட்டமாகத் தெரிந்து கொள்ளும் முறைகள் தான் இடவியல் துறையின் அறிமுக அத்தியாயம். இதற்குப் பிறகுதான் இடவியலின் இயல்புகளே தெரிய வரும். + +எல்லைப்புள்ளிகள் தான் இடவியலுக்கு அடித்தளம். S, T என்ற இரண்டு இடவியல் வெளிகளை எடுத்துக் கொள்வோம். S இலிருந்து T க்குச் செல்லும் உருமாற்றங்களைப் (Transformations) பார்ப்போம். இவைகளில் சில, எல்லைப் புள்ளிகளை ஒன்றும் செய்யாது; அதாவது, எல்லைப் புள்ளிகளாகவே வைத்திருக்கும். இவ்விதம் எல்லைப் புள்ளிகளை அப்படியே வைத்திருக்கும் உருமாற்றங்களை "தொடருருமாற்றங்கள்" (Continuous Trans-formations) அல்லது "தொடர்ச்சியுள்ள உருமாற்றங்கள்" என்பர். S ம், T ம் மெய்யெண்களின் கணங்களாகவும், இயற்கை இடவியற் கூற்றுடனும் இருந்தால், இந்தத் தொடருருமாற்றங்கள் வழக்கமான தொடர் சார்புகளே (Continuous Functions). அவைகள் தான் எல்லைப் புள்ளிகளை அப்படியே வைத்திருக்கும். + +இத்தொடருருமாற்றங்கள், மேலும் ஒன்றுக் கொன்றான கோப்பாகவும் (one-one maps), மற்றும் முழுக் கோப்பாகவும் (onto maps), இருந்து அவைகளின் நேர்மாறுகளும் (Inverses) தொடர்ச்சி யுள்ளதாகவே இருந்தால் அவை இடவியலுருமாற்றங்கள் (Topological Transformations) என்று பெயர் பெறும். + +எந்த இரண்டு இடவியல்வெளிகளுக் கிடையில் ஒரு இடவியலுருமாற்றம் இருக்கிறதோ அந்த இடவியல் வெளிகள் இடவியலில் சமானமாகக் (equivalent) கருதப்படும். அதாவது இடவியலைப் பற்றினவரையில் அவையிரண்டும் ஒன்றே. இதுதான் "இடவியல் சமானம்" என்ற கருத்து. இக்கட்டுரையின் தொடக்கத்தில், தேனீர் கோப்பைக்கும் வடைக்கும் ஒரு உருமாற்றம் காட்டப்பட்டதல்லவா? அது இடவியல் சமானத்தை எடுத்துக்காட்டுகிறது. இடவியல் சமானமுள்ள இரு இடவியல் வெளிகளின் அண்மைகள் ஒன்றுக்கொன்றான இயைபுடையன. திறந்த கணங்களின் நிலையும் அப்படியே. தேனீர்க் கோப்பையிலுள்ள ஒவ்வொரு புள்ளிக்கும் அதனுடைய அண்மைகள் சிதறாமல் அப்புள்ளியின் உருமாற்ற பிம்பப்புள்ளி வடையில் எங்கிருக்கிறதோ அப்புள்ளியின் அண்மைகளாக இருக்கும். இது மாத்திரமல்ல, இதன் மறுதலையும் உண்மை. + +இடவியல் உருமாற்றங்களுக்கு மற்றொரு பெயர் "முழுமைத் தொடரமைவியம்". ஆங்கிலத்தில் Homeomorphism. முழுமை என்பது, முழுக்கோப்பை மட்டுமல்ல, இருபக்கமும் ஒன்றுக்கொன்றான இயைபுடன் இருப்பதையும் தெரிவிக்கிறது. தொடர் என்பது தொடர்ச்சியை அறிவிக்கிறது. அமைவியம் என்பது இருபக்கமும் இடவியல் என்ற ஒரே அமைப்பு உள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. + +இடவியல் சமானம் என்பது ஒரு சமான உறவு. இதனால் எல்லா இடவியல் வெளிகளும் "சமானப் பகுதிகளாகப்" பிரிக்கப்படுகின்றன. ஒவ்வொரு பகுதிக்குள்ளும் இருக்கும் வெளிகள் ஒன்றுக்கொன்று இடவியல் சமானமாக இருக்கும். இப்படி எல்லா இடவியல் வெளிகளையும் பிரிக்கும் நோக்கத்துடன் தான் புவான்காரே 19வது நூற்றாண்டின் முடிவில் பலவித ஆய்வுகள் இயற்றினார். அப்பொழுது தொடங்கியதுதான் "அமைப்பு ஒப்பு இயல்". (Homology Theory). இதனுடைய ஜோடி "அமைப்பு ஒத்த இயல்" (Homotopy Theory). இவையிரண்டும் இடவியல் மாறா இயல்புகளைக் கண்டுபிடிப்பதையே இலக்காகக் கொண்டுள்ளன. புவான்காரே காலத்திலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இடவியல் மாறாஇயல்பு அவருடைய பெயரிலே உள்ளது: "ஆய்லர்-புவான்காரே மாறாஇயல்பு" (Euler-Poincare characteristic). + +இருபதாவது நூற்றாண்டில் கணிதத்தில் ஏற்பட்ட மாபெரும் நுண்பியல் புரட்ச��யில் இடவியல்வெளி என்ற கருத்து மையக் கருத்தாகவே மலர்ந்தது. ஏனென்றால் நாம் வடிவியலில் அன்றாடம் புழங்கும் புள்ளி, தொலைவு, அருகாமை, என்ற கருத்துக்களை இயற்கணிதம் (எண்களையும் எண்களைச்சார்ந்த குறியீடுகளையும் கொண்டது), சார்புகள் (ஒரு எண்கணத்திற்கும் மற்றொரு எண் கணத்திற்கும் உள்ள கோப்புகள்), இவைகளைப்பற்றிய புகுவியலில், சார்புகளையும், உருமாற்றங்களையுமே புள்ளிகளாகவும், அவைகளுக்கிடையே தொலைவு, அருகாமை முதலிய கருத்துக்களை நுண்பிய நிலையில் புதிதாக உண்டாக்கி அவைகளைப் பரிமாற்றிக் கொள்வதற்கு வேண்டிய உயர்மட்ட புகுவியலையும் செய்துகொடுத்தது. இதனால், கணிதம் என்றால் எண்களைப் பற்றியது என்ற எளிய பழைய உண்மை பொய்யாக்கப்பட்டு, கணிதம் எந்தத் துறையிலும், கணிதத்திற் கப்பாற்பட்ட துறையிலும் கூட, கையாளப்படும் உருமாற்றங்களை தன்னுடைய(நுண்பியப்) ‘புள்ளி’களாகச் செய்துகொண்டு, அவைகளுடைய தராதரங்களையும் வேறுபாடுகளையும் அலசுவதற்கு வேண்டிய திறனைப்பெற்றது. இருபதாவது நூற்றாண்டில் கணிதம் எப்படி அறிவியல் முழுதும் வியாபித்தது என்பதற்கு இது ஒரு முக்கிய மூலகாரணம். + + + + + + + +எல்லைப்புள்ளி (கணிதம்) + +நுண்கணிதம் (Calculus) என்ற உட்துறையின் வெற்றி பயக்கும் மேன்மையால் 18, 19வது நூற்றாண்டுகளில் கணிதம் உயர்ந்த அறிவியல் சாதனமாக வளர்ந்தது. இதற்கெல்லாம் வேர்க் கருத்தாக இருந்தது, இன்னும் இருப்பது, ‘எல்லை’ (Limit) என்ற தத்துவம். ஆனால் 20வது நூற்றாண்டில் இடவியலில் ஆராயத் தொடங்கினவுடன் ‘"எல்லை"’ என்பதைவிட ‘எல்லைப்புள்ளி’ (Limit Point) என்ற தத்துவம் தான் நுண்பியச் சாதனைகளுக்குகந்தது என்று தெரிந்து கொண்டார்கள். இதன் மூலம் கணிப்பியல், அதைவிட நுண்பியமான பகுவியல் (Analysis) இரண்டும் உயர்ந்த நுண்பிய நிலையில் இடவியலில் ‘இடவியல் வெளி’ என்று பரிமளித்தது. ஆக, ‘எல்லைப்புள்ளி’ என்ற தத்துவத்தில் இடவியல் அமைப்பைப் படைப்பது ஒரு முக்கியமான வழி. + +மெய்யெண்களிலிருந்து ஒரு கணம் S ஐ எடுத்துக் கொள்வோம். ஒரு மெய்யெண் "a" இதற்கு எல்லைப்புள்ளி என்று சொல்லப்பட வேண்டுமானால் "a" இன் இரு பக்கங்களிலுள்ள ஒவ்வொரு "ε"-தொலைவிலும் S இலிருந்து ஏதாவது ஒரு எண் "s" ≠ "a" இருந்தாக வேண்டும். சுருங்கச் சொன்னால், "a" இன் ஒவ்வொரு அண்மையிலும் (neighbourhood), S இனுடைய எண்ணற்ற உறுப்புகள் இருக்கவேண்டும். + +எ.கா.: + +S = {-1+1/2, 1-1/2, -1+1/3, 1-1/3, -1+1/4. 1-1/4, ……}க்கு இரண்டு எல்லைப்புள்ளிகள் உள்ளன. அவை: -1, மற்றும், 1. + +S = {1, 2, 3, 4, …. } க்கு எல்லைப்புள்ளிகளே கிடையாது. + +S = {1, ½, 1/3, ¼, ….}க்கு 0 ஒரே ஒரு எல்லைப்புள்ளி. ஒரே ஒரு எல்லைப்புள்ளிதான் என்ற நிலை ஏற்படும்போது அதை ‘எல்லை’ (Limit) என்றே சொல்வார்கள். + +இடவியல் + + + + +தொலைவு தகு வெளி + +தொலைவு தகு வெளி (ஆங்கிலம்:Metrisable Space) கணிதத்தில் பகுவியல் என்ற பிரிவில் உள்ள ஒரு முக்கிய கருத்துப்பொருள் ஆகும். இது இடவியல் வெளிகளில் மிகவும் பயன்படும் ஒரு வெளியாகும். மெய்யெண்களின் கணத்தின் மேல் உள்ள இயற்கை இயல்வெளிக்கு பல அதிகப்படி இயல்புகளுள்ளன. அவைகளில் முக்கியமானது தொலைவு என்ற கருத்தை அதனுள் கொண்டது தான். அதாவது, R (மெய்யெண்களின் கணம்) இல் "x" , "y" என்ற எந்த இரண்டு புள்ளிகளுக்கிடையேயும் + +formula_1 + +என்ற ஒரு தொலைவு எண் உள்ளது. இந்தத்தொலைவு எண் அடித்தளத்தில் நான்கு கட்டுப்பாடுகளைக்கொண்டது. இவை 1906 இல் ஃப்ரெஷெ (Frechet) யால் முதன்முதல் இப்படி வகுக்கப்பட்டது. "x, y, z" என்பவை வெளியில் எந்த மூன்று புள்ளிகளாக இருந்தாலும், + +(தொ 1): formula_2 என்றால் formula_3 ஒரு நேர்ம மெய்யெண்." + +(தொ 2): formula_4 + +(தொ 3): formula_5 + +(தொ 4): formula_6 + +ஒரு இடவியல் வெளியில் இப்படி ஒரு ‘"d"’ என்ற தொலைவு இருக்க முடியுமானால் அவ்விடவியல் வெளிக்கு "தொலைவுதகு வெளி" என்று பெயர். தொலைவு ஒன்று மேற்கண்ட நான்கு கட்டுப்பாடுகளுடன் இருந்துவிட்டால் அவ்வெளியை "தொலைவு வெளி" என்றே சொல்லப்படும். + +எல்லா இடவியல் வெளியிலும் இது சாத்தியமில்லை. ஆனால் பல செயற்பாடுகளில் தொலைவு தகுமை என்பதைவிட ஒரு குறைந்த கட்டுப்பாடே போதுமானதாக உள்ளது. அது என்னவென்றால், +(*) "p, q" என்ற ஒவ்வொரு இரண்டு புள்ளிகளுக்கும் ஒன்றை ஒன்று வெட்டாத இரண்டு அண்மைகள் இருக்கவேண்டும். + +இவ்விதம் (*) என்ற கட்டுப்பாட்டை மெய்யாக்கும் இடவியல்வெளிக்கு ஹௌஸ்டார்ப்ஃ வெளி என்று பெயர். தொலைவுதகு வெளிகள் ஹௌஸ்டார்ப்ஃ வெளிகள்தாம். + +இதைச்சார்ந்த ஒரு சோகமான குறிப்பு. ஹௌஸ்டார்ப்ஃ (1868 – 1942) ஒரு சிறந்த ஜெர்மானிய கணிதவியலாளர்கணித இயலாளர். கணிதத்தில் பல சாதனைகளை புரிந்தவர். தற்கால இடவியலின் முன்னோடி. அதை முதன் முதலில் கணிதத்தின் ஒரு பிரிவாக்கி நூலாக எழுதியவர். அவரும் அவரது மனைவியாரும் ஜெர்மனியில் அக்காலத்து நிலைமையினால் உந்தப்பட்டு தற்கொலை புரிந்துகொண்டார்கள். + + + + +வருமானக் கூற்று + +வருமானக் கூற்று "(Income statement)" அல்லது இலாப நட்ட கணக்கு "(Profit and Loss Statement)" எனப்படுவது வணிக நிறுவனமொன்றின் குறித்த நிதியாண்டின் முடிவில் செயற்பாடுகளின் முடிவில் ஏற்பட்ட தேறிய இலாபத்தினை அல்லது நட்டத்தினை முதலீட்டாளர்களுக்கு,முகாமையாளருக்கு விபரிக்கும் நிதிக்கூற்றாகும்.இக் கூற்று வணிகநிறுவனம் வணிக நடவடிக்கையில் பெற்ற வருமானம் கூற்றின் மேல் பாகத்திலும் செய்த செலவீனம் கூற்றின் கீழ் பாகத்திலும் குறிக்கப்பட்டிருக்கும். + +வரையறுக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் நிதியாண்டின் முடிவில் கட்டாயமாக சமர்பிக்கப்பட வேண்டிய நிதிகூற்றுகளில் வருமானக் கூற்றும் அடங்கும்.(மற்றையவை ஐந்தொகை,காசுபாய்ச்சல் கூற்று,உரிமை மாற்றல் கூற்று) + +வருமானக் கூற்றின் வடிவங்கள் அவற்றின் தேவைக்கேற்வும் (உள்ளக மற்றும் பிரசுரிமை) வேறுபட்ட நாடுகளினால் ஏற்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டு நியமங்களுக்கு() ஏற்பவும் இவை சிறுது வடிவம் மாறுபடக்கூடும். + +வருமானக் கூற்றானது முதலீட்டாளர் மற்றும் கடன்கொடுப்போர் என்பவர்கள் நிறுவனதின் கடந்தகால செயற்திறனை அறிந்து கொள்ள உதவுவதுடன் வருங்காலதில் நிறுவனம் தொடர்ந்து இயங்குமா என்பதை துணியவும் பயப்படுகின்றது. + +எனினும் வருமானக் கூற்றில் சில வரையரையும் உண்டு: + +வருமானகூற்று மாதிரி: + +குறிப்பு + + + + + + +கனேடியத் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் + +கனடா வாழ் தமிழர்களால் திரையிடப்பெற்ற திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + 11. கோன் (2013) + + + + + +அந்தனி ஜீவா + +அந்தனி ஜீவா (பிறப்பு: மே 26, 1944) ஈழத்தின் மலையக எழுத்தாளர்களில் ஒருவர். இதழியல், நாடகத் துறைகளிலும் பங்களித்து வருபவர். கொழுந்து சஞ்சிகையின் ஆசிரியர். மலையக எழுத்துக்களைப் பதிப்பிக்கும் முயற்சிகளிலும் பங்களித்து வருகிறார். + +இவர் தனது அநுபவங்களை ஜீவநதி என்ற சிற்றிதழில் "ஒரு வானம்பாடியின் கதை" என்ற தலைப்பில் தொடராக எழுதி வந்தார். + + + + +அரப்பா + +அரப்பா "(Harappa)" என்பது இந்தியத் துணை கண்டத்தின் மிகப்பழமையான நாகரிகம் இருந்தததாகக் கருதப்படும் பண்டைய நகரங்களில் ஒன்று ஆகும். இத்தொல்லியல் தளம் இன்றைய பாக்கித்தானின் வடகிழக்குப் பகுதியில் பஞ்சாப் மாகாணத்தின் சகிவால் நகரத்திற்கு மேற்கில் 24 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்தது. அரப்பா என்ற இத்தளத்தின் பெயர் ராவி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள நவீன கிராமத்தின் பெயரிலிருந்து வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்நதி தற்போது இத்தளத்திர்கு வடக்கில் 8 கிலோ மீட்டர் தொலைவில் (5 மைல்) ஓடுகிறது. தற்போது அரப்பா என்றழைக்கப்படும் கிராமம் பண்டைய தொல்லியல் தளம் அமைந்துள்ள இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் அமைந்துள்ளது. நவீன அரப்பா பிரித்தானியர் ஆட்சிக் காலத்தில் இருந்து இருக்கின்ற ஒரு மரபுரிமை ரயில் நிலையமாக இருந்தாலும், இன்றும் அந்நகரம் 15,000 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட ஊராக உள்ளது. + +இத்தொல்லியல் தளத்தில் வெண்கலக் காலத்தைச் சேர்ந்த பண்டைய கோட்டை நகரத்தின் இடிபாடுகள் காணப்படுகின்றன. இந்நகரமும் இடிபாடுகளும் சிந்து மற்றும் பஞ்சாப்பை மையமாகக் கொண்டிருந்த சிந்து சமவெளி நாகரிகத்தையும் மற்றும் அதைத் தொடர்ந்து இருந்த கல்லைறை எச் கலாச்சாரத்தையும் சேர்ந்ததாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நகரத்தில் 23500 குடும்பங்கள் 370 ஏக்கர் பரப்பளவில் களிமண்ணும் சுட்ட செங்கற்களும் சேர்த்து கட்டப்பட்ட வீடுகளில் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறசுது. சுமார் கி.மு 2600 – 1900 ஆண்டுக் காலத்தில் வாழ்ந்த இந்நாகரிகத்தின் காலத்தை முதிர்ந்த அரப்பன் காலகட்டம் என்கிறார்கள். அந்தச் சமயத்தில் இது ஒரு மிகப்பெரிய நாகரிகமாகக் கருதப்படுகிறது . முன்னர் அறியப்படாத நாகரிகங்களுக்கு பெயரிடும் தொல்பொருள் மாநாட்டில், முதல் அகழ்வாராய்ச்சியால் கண்டுபிடிக்கப்பட்ட சிந்து சமவெளி நாகரிகத்தை அரப்பா நாகரிகம் என்று பெயரிட்டு அழைத்தனர். + +பண்டைய அரப்பா நகரம் பிரித்தானியர்களின் ஆட்சிக்காலத்தில் மிகவும் சேதமடைந்தது, இடிபாடுகளில் இருந்து கிடைத்த செங்கற்களை லாகூர்-முல்தான் ரயில்வே கட்டுமானத்தில் இரயில்வே பாதைகள் அமைக்கப் பயன்படுத்தப்பட்டன. இத்தளத்தில் சர்ச்சைக்குரிய ஒரு கேளிக்கை பூங்கா அமைக்கும் திட்டம் 2005 ஆம�� ஆண்டில் தொடங்கப்பட்டு பின்னர் கைவிடப்பட்டது, கட்டடத்தின் ஆரம்ப கட்டப் பணிகளின்போது அங்கிருந்து கலைப்பொருட்கள் பல தோண்டி எடுக்கப்பட்டன. பாக்கித்தானிய தொல்பொருள் ஆய்வாளரான அகமத் அசன் டானி கலாச்சார அமைச்சகத்திற்கு வைத்த ஒரு வேண்டுகோள் இந்த தளத்தின் மறுசீரமைப்புக்கு காரணமாக இருந்தது . + +சிந்து சமவெளி நாகரிகம் பண்டைக்காலக் குடியேற்றப் பகுதியாகக் கருதப்படும் மெகெர்கர் போல தோராயமாக கி.மு 6000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்லியல் ஆய்வுகளுக்கு உரிய மிக முக்கியமான பண்டைய வேர்கள் இங்குள்ளன. மொகஞ்சதாரோ அரப்பா ஆகிய இரு பெரிய நகரங்கள் கி.மு. 2600 ஆம் ஆண்டுகளில் பஞ்சாப் மற்றும் சிந்துவில் சிந்து நதிக் கரையோரம் இருந்த பள்ளத்தாக்கில் தோன்றின . லாகூரின் தெற்கே உள்ள மேற்கு பஞ்சாப் பகுதியில் அரப்பாவும் லர்கானாவுக்கு அருகிலுள்ள சிந்து பகுதியில் மொகஞ்சதாரோவும் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், ஒரு சாத்தியமான எழுதும் முறை, நகர்ப்புற மையங்கள் மற்றும் பல்வேறு சமூக மற்றும் பொருளாதார அமைப்புகள் ஆகியவற்றைக் கொண்ட இந்த நாகரிகம் மீண்டும் 1920 களில் மீண்டும் கண்டறியப்பட்டது. வடகிழக்கு இந்தியா, கிழக்கு பஞ்சாப்பு, தெற்கில் குசராத்து மேற்கில் பாக்கித்தானின் பலுசிசுதான் போன்ற இமயமலையின் அடிவாரத்தில் நீட்சியாக வளர்ந்திருக்கும் பல தொல்லியல் தளங்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அரப்பாவில் உள்ள தொல்பொருள் ஆய்வு தளம் 1857 ஆம் ஆண்டில் சேதமடைந்தது . சிந்து மற்றும் பஞ்சாப் இரயில்வேயைச் சேர்ந்த பொறியாளர்கள் லாகூர்-முல்தான் இரயில் பாதை கட்டுமானத்தின் போது இரயில்வே பாதைகள் அமைக்க இத்தளத்திலிருந்து செங்கற்களை எடுத்துப் பயன்படுத்தினர் .இங்கு கண்டுபிடிக்கப்பட்ட செங்கற்கள் சிவப்பு மணல், களிமண், கற்களால் மிக அதிக வெப்பநிலையில் சுடப்பட்டு தயாரிக்கப்பட்டவையாகும். மேற்கு பஞ்சாபில் 1826 ஆம் ஆண்டு அரப்பா கண்டுபிடிக்கப்பட்டவுடன் இந்தியாவில் இருந்த பிரித்தானிய அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தது, அரப்பாவில் ஆரம்பகால அகழ்வாராய்ச்சிகளுக்கு வித்திட்டவர்கள் அவர்களேயாகும். + +சிந்துவெளிப் பண்பாடு பெரிதும் நகரமயப் பண்பாடாக இருந்திருக்கிறது. தம் தேவையைவிடக் கூடுதலான விவசாயப் பொருள்க��ையும் கைவினைப் பொருள்களையும் கொண்டு சுமேரியாவுடனும் தெற்கு மெசபடோமியாவுடனும் வணிகம் செய்து வளமாக இருந்திருக்கிறது. மொகஞ்சதாரோவும் அரப்பாவும் பொதுவாக, தட்டைக்கூரை கொண்ட செங்கல் வீடுகள் தனியாகவும், கோட்டைக்குள் பாதுகாக்கப்பட்ட அரண்மனை அல்லது வழிபாட்டுக் கட்டடங்கள் கொண்டதாகவும் பிரிக்கப்பட்ட வாழ்விடங்களைக் கொண்டதாக இருந்திருக்கின்றன. இப்படிப்பட்ட நகரமைப்பு இரண்டுக்கும் பொதுவான சீரமைக்கப்பட்ட திட்டமிட்ட நகரமைப்பு இருந்திருக்க வேண்டும் என்ற கருத்துகளுக்கு இடம் கொடுத்திருந்தாலும் உண்மையில் இரண்டு நகரங்களின் அமைப்புகளை ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் வெவ்வேறாகத்தான் கட்டப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்க்கலாம். + +அதே சமயம சிந்துவெளிப் பண்பாட்டின் எடைகளும் அளவைகளும் திட்டமிட்டுச் சீரமைக்கப் பட்டவை என்பது தெளிவு. தனித்தனி முத்திரைகள் ஒருவேளை சொத்துகளையும் விற்பனைச் சரக்குகளையும் அடையாளம் காண உருவாக்கப் பட்டிருக்கலாம். செம்பும் வெண்கலமும் பயன்பாட்டில் இருந்திருந்தாலும் இரும்பு சிந்துவெளிப் பண்பாட்டின் காலத்தில் பயனில் இல்லை. பஞ்சு நூற்கப்பட்டு நெய்யப்பட்டிருக்கிறது. துணிகளுக்குச் சாயம் இருந்திருக்கிறது. அரிசியும் கோதுமையும் பல காய்களும் கனிகளும் விளைந்திருக்கின்றன. திமில் கொண்ட காளை உட்பட்டப் பல வீட்டு விலங்குகள் இருந்திருக்கின்றன. சண்டைக் கோழிகளும் இருந்திருக்கின்றன. + +சக்கரத்தால் செய்த மட்பாண்டங்கள், விலங்குகள், வடிவங்கள் வரைந்த பானைகள் எல்லாச் சிந்துவெளி அகழ்வாய்வுத் தளங்களிலும் ஏராளமாகக் கிடைக்கின்றன. ஒவ்வொரு நகரிலும் நகராட்சிக்கான நடுவமைப்பு ஒன்று இருந்திருக்கிறது. சிந்துவெளிப் பண்பாடு முழுவதும் ஒரே குடையின் கீழ் இருந்ததா என்று சொல்ல முடியாவிட்டாலும், நகரங்களில் ஆட்சி இருந்ததற்கான தடயங்கள் கிடைத்திருக்கின்றன. நகரங்களுக்குள் சீரான பண்பாடு இருந்திருக்கிறது. நகராட்சி வணிகர்களிடமிருந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அரப்பா மக்கள் சிந்து நதியின் வழியாக வணிகத்தடங்கள் அமைத்துப் பாரசீக வளைகுடா, மெசபடோமியா, எகிப்து வரைக்கும் வணிகம் செய்திருக்கிறார்கள். + +ஆனால், சிந்துவெளிச் சமூகம் எல்லாமே பிணக்கில்லாமல் இருந்ததில்லை என்று அங்கு கிடைத்துள்ள மனித எலும்புக்கூட்டுகளின் எச்சங்களின் மூலம் தெரிகிறது. அவற்றில் காணப்படும் காயம் (15.5%) தெற்காசியாவின் முன்வரலாற்றிலேயே மிகவும் கூடுதலான ஒன்று. + +அதே போல் பண்டையநோய்க்குறியியல் பகுப்பாய்வின் மூலம் மக்களிடையே தொழுநோயும் காசநோயும் இருந்திருக்கிறது தெரிகிறது. அப்படி நோய்வாய்ப்பட்டவர்களை நகருக்கு வெளிப்புறமாக ஒதுக்கியிருக்கிறார்கள் என்பதும் தெரிகிறது. மேலும் இந்தத் தொற்று நோய்கள் காலப்போக்கில் கூடியிருக்கின்றன என்றும் சிந்துவெளிப் பண்பாட்டின் வீழ்ச்சியின்போது இவை மிகுந்திருக்கின்றன என்றும் தெரிகிறது. + +அரப்பா களத்தை அகழ்ந்தவர்கள் அரப்பாவின் குடியேற்றக் காலங்களைப் பற்றிக் கீழ்க்காணும் கட்டங்களை முன்மொழிந்திருக்கிறார்கள்: + +அரப்பா அகழ்வாய்வில் கிடைத்த பொருள்களிலேயே மிகவும் நேர்த்தியான ஆனால் புரிபடாத கைவினைப்பொருள்கள் மனித வடிவமோ அல்லது விலங்கு வடிவமோ பொறித்த சிறிய நாற்கட்ட முத்திரைகள்தாம். மொகஞ்ச-தாரோவிலும் அரப்பாவிலும் எண்ணற்ற முத்திரைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றில் பலவற்றில் படவடிவில் உள்ள பொறிப்புகள் ஒரு விதமான வரிவடிவம் அல்லது எழுத்து என்று ஆய்வாளர்கள் சிலரால் கருதப்படுகிறது. அவை எழுத்தே அல்ல என்று வேறு சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். உலகெங்கிலுமிருந்து பல மொழியறிவாளர்கள் முயன்ற போதிலும், தற்கால மறைப்பியல் பகுப்பாய்வை மேற்கொண்ட போதிலும் இந்த முத்திரைச் சின்னங்களின் மறைப்பு நீக்கம் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படாத புரிபடாத சின்னங்களாகத்தான் இருக்கிறது. அவை வரிவடிவமாக இருந்தால் எந்த மொழியின் எழுத்துகள் என்பதிலும் சச்சரவு நீடிக்கிறது. அவை உண்மையிலேயே முந்தைய திராவிட மொழியின் எழுத்துகளா, வேதிய மொழியின் எழுத்துகளா அல்லது முண்டா அல்லது வேறு மொழியின் எழுத்துகளா என்பதிலும் தெளிவு இல்லை. சிந்து வெளிப் பண்பாட்டின் சிலைவடிவங்களையும் வரிவடிவங்களையும் வரலாற்றுக்கால தெற்காசியப் பண்பாடுகளோடு பொருத்திப் பார்ப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. தெற்காசியா ஆய்வாளர்களின் அரசியல், பண்பாட்டுப் பின்னணியும், அவர்கள் முன்மொழியும் கருத்துகளும் பின்னிப் பிணைந்திருப்பதும் இதற்குக் காரணம். பாக்கிஸ்தான் ஆய்வாளர்கள் கருத்துகளும், ��ந்தியாவின் ஆரிய, திராவிட மொழிக்குடும்பத்திலிருந்து வரும் ஆய்வாளர்களின் கருத்துகளும் ஒருவரோடொருவர் பெரிதும் முரண்படுவது தெளிவு. + +பெப்ரவரி 2006 இல் தமிழ்நாட்டிலுள்ள செம்பியன் - கண்டியூர் என்ற சிற்றூரில் ஒரு பள்ளியாசிரியர் கண்டுபிடித்த கற்கோடரியில் 3500 ஆண்டுகள் பழைமையானது என்று கணிக்கப்பட்ட பொறிப்புச் சின்னங்கள் ஆய்வுலகில் பரபரப்பேற்படுத்தின. + + + + + + +லோத்தல் + +லோத்தல் சிந்துவெளி நாகரிகக் கால நகரங்களில் ஒன்றாகும். ஹரப்பா பண்பாட்டின் தொடர்ச்சியான லோத்தல் நகரத்தின் அழிபாடுகள் தற்கால இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ளது. இதன் தோற்றத்தின் காலம் கி.மு 3700 எனக் கணிக்கப்பட்டுள்ளது. இக்காலத்தைச் சேர்ந்த, இந்தியாவிலுள்ள முக்கியமான தொல்லியல் களமாக இது கருதப்படுகின்றது. 1954 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இவ்விடத்தில், 1954ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு முடிய அகழ்வாய்வுகள், இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தினால் நடத்தப்பட்டது. + +அகமதாபாத் மாவட்டத்தின் தோல்கா தாலுகாவில் உள்ள சரக்வாலா கிராமத்தின் அருகில் அமைந்துள்ளது. அகமதாபாத் நகரத்திலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் லோத்தல் அமைந்துள்ளது. + +இந்தியத் தொல்லியல் ஆய்வகம், லோத்தல் அகழாய்வில் கிடைத்த தொல்பொருட்களைக் கொண்டு அகமதாபாத் நகரத்தில் லோத்தல் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைத்துள்ளது இந்தியத் தொல்லியல் ஆய்வகம் + + + + + + +அன்சாக் நாள் + +அன்சாக் நாள் ("Anzac Day") அவுஸ்திரேலியாவிலும் நியூசிலாந்திலும் ஆண்டு தோறும் ஏப்ரல் 25ம் நாள் நினைவுகூரப்படுகிறது. 1915ஆம் ஆண்டில் இந்நாளில் அவுஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் முதலாம் உலகப் போரின் போது பிரித்தானியப் பேரரசின் துருக்கி மீதான கலிப்பொலி போர் நடவடிக்கையின் போது கலிப்பொலி என்ற இடத்தில் தரையிறங்கியதை நினைவுகூரும் முகமாகவும், அப்போரின் போது பங்குபற்றிய மற்றும் இறந்த இராணுவத்தினரை நினைவுகூரவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்சாக் நாள் குக் தீவுகள், சமோவா மற்றும் தொங்கா ஆகிய நாடுகளிலும் அரச விடுமுறை நாளாகும். + +அன்சாக் ("ANZAC") என்பது "Australian and New Zealand Army Corps" என்பதன் சுருக்கமாகும். முதலாம் உலக யுத்தத்தின் போது கூட்டுப் படைகளின் போர்க்கப்பல்கள் கருங்கடலுக்கு இலகுவாகச் செல்வதற்கு ஏதுவாக வழி அமைப்பதற்காக 1915ம் ஆண்டில் துருக்கியின் "கலிப்பொலி" என்ற இடத்திற்கு அவுஸ்திரேலிய, நியூசிலாந்துத் துருப்பினர் அனுப்பப்பட்டனர். துருக்கியின் தலைநகரான இஸ்தான்புல்லைக் கைப்பற்றுவதே முக்கிய நோக்கமாக இருந்தது. துருக்கிய இராணுவத்தினரின் பலத்த எதிர்ப்பையும் மீறி அவர்கள் கல்லிபொலியை ஏப்ரல் 25 இல் அடைந்தனர். ஆனாலும் இச்சண்டை எட்டு மாதங்கள் வரையில் நீடித்தது. 1915 இன் இறுதியில் இருபக்கங்களிலும் ஏற்பட்ட பலத்த சேதங்களின் பின்னர் கூட்டுப் படைகள் பின்வாங்கின. 21,255 ஐக்கிய இராச்சிய, ஏறத்தாழ 10,000 பிரெஞ்சு, 8,709 ஆத்திரேலிய, 2,721 நியூசிலாந்து, 1,358 பிரித்தானிய இந்தியப் படையினர் இச்சண்டையின்போது கொல்லப்பட்டனர். + +ஏப்ரல் 25 நாள் 1916 ஆம் ஆண்டில் "அன்சாக் நாள்" என உத்தியோகபூர்வமாகப் பெயரிடப்பட்டது. அவ்வருட அனசாக் தினம் அவுஸ்திரேலியா எங்கும் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. காயமுற்ற பல அவுஸ்திரேலியத் இராணுவத்தினர் சிட்னியில் நடந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். 2,000க்கு மேற்பட்ட அவுஸ்திரேலிய, நியூசிலாந்து இராணுவத்தினர் லண்டன் வீதிகளில் மாபெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். எகிப்தில் முகாமிட்டிருந்த அவுஸ்திரேலியர்கள் விளையாட்டு நாளாகக் கொண்டாடினர். + + + + + + +பிரபு (நடிகர்) + +பிரபு (பிறப்பு: டிசம்பர் 25, 1956) தமிழகத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்தவற்றுள் தமிழ்மொழி திரைப்படங்களே அதிகம். இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மகன் ஆவார். "சங்கிலி" திரைப்படத்தில் இருந்து நடித்துவரும் இவர் சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் திரைப்பட விருதை இயக்குநர் பி. வாசுவின் இயக்கத்தில் உருவான சின்னத் தம்பி திரைப்படத்திற்காகப் பெற்றார். கும்கி, அரிமா நம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் விக்ரம் பிரபு இவரது மகனாவார். + +பெங்களூருவில் உள்ள பிஷப் காா்டன் பள்ளியில் படித்து முடித்த பிறகு, அவரது சித்தப்பா வி. சி. சண்முகம் தயாரித்த திரைப்படங்களில் அவருடன் இணைந்து நிர்வாக தயாரிப்பாளராகப் பணியாற்றின���ர். திரைப்படத் தயாரிப்பில் உள்ள நுணுக்கங்களை இவர் சிறந்த முறையில் கற்றார். படப்பிடிப்பின் போது கலைஞர்கள் அமர நாற்காலிகள் எடுத்துபோடுவது வரையான அனைத்து வேலைகளையும் இவர் செய்தார். பிரபுவின் தந்தையான நடிகர் சிவாஜி கணேசன், பிரபு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பத்தில் தயக்கம் காட்டினார். ஆனால் பிரபுவின் நடிப்புத் திறமையைப் பார்த்து பல தயாரிப்பாளர்களிடம் இருந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தன. + +பிரபுவின் பெற்றோர் நடிகர் சிவாஜி கணேசன், கமலா ஆவார்கள். இவரது மூத்த சகோதரர் ராம்குமார், திரைப்படத் தயாரிப்பாளராவார். இவருக்கு சாந்தி மற்றும் தேன்மொழி என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர் புனிதா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது மகனான விக்ரம் பிரபு, 2012வது ஆண்டில் வெளியான கும்கி திரைப்படத்தின் வாயிலாக நடிகராக அறிமுகமானார். + + + + + +எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா + +சொலமன் வெஸ்ட் ரிச்சர்ட் டயஸ் பண்டாரநாயக்கா (, , சுருக்கமாக, எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, "S. W. R. D. Bandaranaike", ஜனவரி 8, 1899 - செப்டெம்பர் 26, 1959) இலங்கையின் நான்காவது பிரதமர் ஆவர். இவர் பிரதமராக பதவி வகித்த போது பௌத்த பிக்கு ஒருவரால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். + +பிறப்பால் பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராவார். இவரது மூதாதையர் கண்டியை ஆண்ட தெலுங்கு கண்டி நாயக்கர் வம்சத்தை சார்ந்தவர்.சர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க இவரது தந்தையாவார். சிறுவயதில் ஏற்பட்ட நோய்கள் காரணமாக பாடசாலை செல்லாத இவர் வீட்டில் இருந்தபடியே கல்வி கற்றார். 15 வயதில் பாடசாலை செல்லத் தொடங்னார். பின்னர் இங்கிலாந்தின் ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தில் சட்டத்தரணியாகக் கல்வி கற்று முடித்த பின்னர் இலங்கை அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். பண்டாரநாயக்க இலங்கையில் அரசியல் செல்வாக்கு மிகுந்து காணப்பட்ட இரத்வத்தை பரம்பரையைச் சேர்ந்த சிறிமாவோ திருமணம் செய்துக் கொண்டார். தனது கணவரின் மரணத்துக்குப் பின்னர் சிறிமாவோ கணவரின் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வென்றதன் மூலம் உலகின் முதல் பெண் பிரதமரானார். இவர் இலங்கையின் பிரதமரும் அதிபருமான சந்திரிகா குமாரத்துங்க, அனுரா பண்டாரநாயக்கா மற்றும் சுனேத்திரா பண்டாரநாயக்காவின் தகப்பனாரும் ஆவர். + +பண்டாரநாயக்கா ஓர் அங்கிலிக்கன் கிறிஸ்தவராகப் பிறந்தபோதும் அரசியல் நோக்கங்களுக்காகத் தம்மை ஓர் பௌத்தராகவே அடையாளம் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியில் 1931 முதல் 1951 வரை இணைந்த இவர் பல்வேறு பதவிகளை வகித்தார். இவர் 1951 இல் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து பிரிந்து தனியாக இலங்கை சுதந்திரக் கட்சியினைத் தோற்றுவித்தார். + +1956 இல் பிரதமராகிய பண்டாரநாயக்கா இலங்கையின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்த ஆங்கிலத்தை இல்லாதொழித்து சிங்களத்தை மாத்திரமே அதிகாரப்பூர்வ மொழியாக்கினார். + +தனது அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஞானசார பௌத்த பிக்குவால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மரணச் சடங்குகள் கிறிஸ்தவ முறையிலேயே இடம்பெற்றன. + +1950 இன் நடுப்பகுதியில் தமிழைப் புறக்கணித்து தனிச் சிங்கள கோட்பாடுகளைக் கையாண்டனர். இதுவே இலங்கை இனப்பிரச்சினைக்கு முதல்வித்தாக அமைந்தது எனபது இப்போது பலரும் ஏற்றுக் கொள்ளும் கருத்தாகும். தனிச் சிங்கள சட்டத்தால் தமிழ்ப் பகுதிகளில் ஏற்பட்ட அமைதியின்மையை நீக்கும் நோக்குடன் செய்யப்பட்ட பண்டாரநாயக்க செல்வநாயகம் ஒப்பந்தத்தையும் பௌத்த பிக்குகளினதும் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவினதும் போராட்டங்கள் காரணமாக கிழித்தெறிந்தார். இதன் மூலம் நாட்டின் தலைமை சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு தலை குனியும் நிலைமையை உருவாக்கியவர் இவராகவே கருதப்படுகிறார். + + + + +பஞ்சாப் + +பஞ்சாப் ("Punjab") என்பது பாரசீக மொழியில் "ஐந்து ஆறுகள்". இப்பெயரிலுள்ள விக்கிப்பீடியா கட்டுரைகள்: + + + + + +இலக்கினம் + +பூமியைச் சுற்றியுள்ள வெளி 12 இராசிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. புவி தன்னைத்தானே ஒரு நாளுக்கு ஒருமுறை சுற்றுவதால், அதன் பரப்பிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் எல்லா இராசிகளையும் கடந்து செல்கின்றது. பூமிக்குச் சார்பாகப் பார்க்கும்போது இந்த இராசி மண்டலம் ஒரு நாளில் ஒரு முறை பூமியை முழுவதுமாகச் சுற்றிவருகிறது எனலாம். எனவே குறிப்பிட்ட ஒரு நேரத்தில், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்க��ச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி இருக்கும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே, அக் குறிப்பிட்ட இடத்திற்கு அந் நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப் படுகின்றது. + +மனிதர்களின் பிறந்த நேரத்துக்குக் கணிக்கப்படும் சாதகக் குறிப்பில், அப் பிறந்த நேரத்தில் அடி வானத்தில் தோன்றிய இராசியின் புள்ளி அச் சாதகத்துக்குரிய இலக்கினமாகக் குறிக்கப்பட்டிருக்கும். பொதுவாக இலக்கினம் என்னும்போது அப் புள்ளி இருக்கும் இராசியின் பெயரையே கூறுவது வழக்கமாயினும், சோதிடத்தில் அச்சொட்டான கணிப்புகள் தேவைப்படும்போது, இலக்கினத்தைக் குறிக்கும் துல்லியமான கோண அளவு பயன்படுகின்றது. + + + + + +கார்த்திக் சிவகுமார் + +கார்த்திக் சிவகுமார், சுருக்கமாக கார்த்தி, ஒரு தமிழ் திரைப்பட நடிகர்; இயக்குநர் மணிரத்னத்திடம் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் "பருத்தி வீரன்" ஆகும். இவரது மிகச்சிறந்த திரைபடமாக பருத்திவீரன் தீரன் அதிகாரம் ஒன்று. ஆகிய படங்களை குறிப்பிடலாம் 2018 வரை. இதை தவிர தோழா படத்தில் இரண்டு நாயகர்கள் கதைப்படி மற்றொரு நாயகனாக தெலுங்கு நடிகர் நாகார்ஜூனா உடன் சேர்ந்து நடித்தார் இருவருக்கும் சமமான கதைக்களமான போதிலும்.தெலுங்கு திரை உலகில் முன்னணி நட்சத்திரமான நாகார்ஜூனாவுக்கு சமமாக தனது அமைதியான நடிப்பில் உள்ளம் கவர்வார். + +கார்த்தி 1977, மே 25 ஆம் நாளில் நடிகர் சிவகுமார், லட்சுமி அவர்களுக்கும் சென்னையில் பிறந்தார். இவர் இயந்திரப் பொறியியல் பட்டப்படிப்பை படித்தார். பின்னர் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை படித்து முடித்தார். இவர் நடிகர் சூர்யாவின் தம்பியும் ஆவார். + +இவரது திருமணம் திரு சின்னசாமி - ஜோதி மீனாட்சியின் மகள் ரஞ்சனியுடன், சூலை மாதம் 3 ஆம் தேதி 2011 அன்று கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. + + + + +அருவி ஆறு + +அருவி ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மத்திய மலைநாட்டிலிருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 2வத��ம் நீரோட்டத்தின் படி 12வதும் பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4919 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 10 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 3246 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 2வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +கலா ஓயா + +கலா ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது மாத்தளை மாவட்ட மலைகளிலிருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 3வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 11வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4052 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 8 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2772 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 3வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + + + + + +களுகங்கை + +களுகங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது சிவனொளிபாதமலையில் இருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 10வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 2வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 11872 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 64 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2688 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 4வது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + +களு ஆற்றின் முக்கிய கிளையாறுகளில் ஒன்றான குகுலே ஆற்றில் 200 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் நீர் மின்த்திட்டம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையின் யுனெஸ்கோ உலக பொக்கிச இடமான சிங்கராஜ மழைக்காட்டின் எல்லையில் கலவானை நகருக்கு அருகில் அமைந்துள்ளது. 400 மொகா வாட் வலுவிலான மின்சாரம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. + +1968 ஆன் ஆண்டு அமெரிக்க நிறுவனம் ஒன்றால் முன்மொழியப்பட்ட களு ஆற்றின் நீரை அம்பாந்தோட்டக்கு, அம்பாறை, மொனராகாலை பகுதிகளுக்கு திசைத்திருப்புவதற்கான முன் மொழிவுகள் செய்யப்பட்டன. ஆனால் இன்னமும் செயற்படுத்தப்படவில்லை.இந்த முன்மொழிவுகளை திருத்திய வடிவில் முன்னெடுப்பதற்கு சன���திபதி மகிந்த ராஜபக்ச முனைகிறார். + +களு ஆறு இலங்கையின் வெள்ளப்பெருக்குகள் கூடிய ஆறுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இதன் காரணமாக இரத்தினபுரி நகரம் வெள்ளப்பெருக்கு ஆபாயத்தை எதிர் கொண்டவண்ணம் உள்ளது. 2003 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 60 ஆண்டுகளில் ஏற்பட்ட பெரிய வெள்ளப்பெருக்காகும். இதன் போது ஆக குறைந்தது 200 பேர் கொல்லப்பட்டும், 175,000 பேர் அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். + + + + +1961 + +1961 (MCMLXI) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். + + + + + + + + +வளவை ஆறு + +வளவை ஆறு இலங்கையில் பாயும் ஓர் ஆறாகும். இது ஓட்டன் சமவெளியிலிருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இலங்கையில் 7வது நீளமான ஆறான இது, நீரோட்டத்தின் படி 5வது பெரிய ஆறாகும். இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 4820 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 35 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 2442 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 6வது பெரிய நீரேந்துப் பகுதியுமாகும். + + + + + +கல் ஆறு + +கல் ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது பதுளை மாவட்ட மலைகளின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப் பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 16வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 22 ஆவது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3169 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 5 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1792 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 8 ஆவது பெரிய நீரேந்துப் பகுதியாகும்., + + + + + +டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் + +டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் (Terminator 3: Rise of the Machines ( டெர்மினேட்டர் 3 அல்லது டி3 என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது 2003 ஆண்டைய அமேரிக்க அறிபுனை அதிரடித் திரைப்படமாகும். படத்தை ஜொனாதன் மோதோ இயக்கினார். படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர், நிக் ஸ்டால், க்ளைர் டேனஸ், கிறிஸ்டானா லோகென் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இது டெ���்மினேட்டர் தொடர் படங்களான (1991), த டெர்மினேட்டர் (1984) ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக 2003 ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அமெரிக்காவில் ஜூலை 2, 2003 இல் வெளிவந்தது. +இத்திரைப்படம் ஆர்னோட் கலிபோர்னியா மாநில ஆளுநர் ஆவதற்கு முன்னர் வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் டிவிடி ஆர்னோல்ட் கலிபோர்னியா ஆளுநர் ஆனபின்பே வெளிவந்தது. இந்த வரிசையின் முதல் இரண்டு படங்களையும் இயக்கிய ஜேம்ஸ் கேமரன் இதில் பணியாற்றவில்லை. இது உலகளவில் $ 434 மில்லியன் வசூலைக் கடந்துவிட்டது. + +ஜான் கானர் (ஸ்டாஹ்ல்) பிறப்பதற்கு முன்னரே அவரது தாயாரான சாரா கானரைக் கொல்லத் ஸ்கானெட் முயன்று அது தவறிய பின்னர், ஜான் கானர் சிறுவனாக இருக்கும்போதும் கொல்ல முயன்று தோல்வியுற்றது, இப்போது ஸ்கைநெட் மற்றொரு டெர்மினேட்டரான டி-எக்ஸ் (லோக்கன்) என்ற எந்திரத்தை அனுப்பி, முடிந்தவரை எதிர்க்கும் பல மனித சக்திகளை அழிக்க முயற்சிக்கின்றது. இதில் ஜான் கானரின் எதிர்கால மனைவியான கேட் ப்ரூஸ்டரையும் (டேன்ஸ்) கொல்ல முயல்கிறது. டி-எக்ஸ் ஜானை கொல்லத் துரத்துவதால் அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதேசமயம் டி-எக்சின் இலக்குகளை பாதுகாக்கவும் அதை எதிர்க்கவும் தங்கள் சொந்த டெர்மினேட்டரை (ஸ்வார்ஸ்னேக்கர்) எதிரிகாலத்தில் இருந்து மீண்டும் அனுப்புகின்றனர். + +இந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியாக டெர்மினேட்டர் சால்வேசன் (2009) வெளிவந்தது. +ஜான் கானர் தன் பழைய ஊர் வாழ்கை என அனைத்தையும் விடுத்து ஒரு புதிய இடத்தில் வாழ்கிறான். அவனது தாயார் அவனது சிறுவயதில் அவனது எதிர்காலத்தில் நாட்டின் தலைவனாகி இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் போரில் இயந்திரங்களுக்கு எதிராக மனிதர்களுக்கு தலைமை ஏற்று அவர்களைக் காப்பான் என கூறிவந்ததையும், உலகின் அழிவையும் நினைத்துக் கவலைகொள்கிறான். + +இக்காலக்கட்டத்தில் எதிர்காலத்தில் இருந்து டி-எக்ஸ் என்ற நவீன இயந்திரப் பெண் ஜான் கானரின் எதிர்கால மனைவியும், அவனுக்குப் பின்னாள் நாட்டை வழிநடத்தப் போகிறவளுமான கிளையர் டோனசை கொல்லும் எண்ணத்துடன் அவளைத் தேடி வருகிறது. அதேசமயம் எதிர்காலத்தில் இருந்து கேட் ப்ரூஸ்டரையும், ஜான் கானரையும் காக்கும் நோக்கத்துடன் டெரிமினேட்டர் இயந்திர மனிதன் வருகிறது. இது டி-எக்ஸ் இயந்திரப் பெண்ணைவிட ஆற்றலிலும் தொழில் நுட்பத்திலும் பழையது. + +ஜான் கானரின் மற்றும் கிளையர் டோனசையும் தேடிவந்து கொல்ல முயலும் டி-எக்சிடம் இருந்து இருவரையும் டெரிமினேட்டர் காக்த்து ஒரு ஜீப்பில் ஏற்றிக் கொண்டு தப்பிக்கிறது. அவர்களிடம் அவர்கள் எதிர்காலத்தில் என்னவாக இருப்பார்கள் என்றும், இன்று நாட்டின் அணு ஆயுதங்கள் போன்றவை ஸ்கானெட்டின் கட்டுப்பாட்டில் செல்லும் என்றும் இதனால் பெருமளவிலான மனிதர்கள் கொல்லப்படுவார்கள். என்றும் கிளைர் டோனசின் தந்தை டி-எக்சால் கொல்லப்படுவார் என கூறுகிறது. இந்த அழிவில் இருந்து உலகை காக்க டோனசின் தந்தையை எச்சரித்து ஸகானெட்டின் கட்டுப்பாட்டில் நாட்டின் கணிணி தகவல் வலையமைப்பை ஒப்படைப்பதை தடுக்க வேண்டுமென டெர்மினேட்டருடன் விரைகின்றனர். + +இந்நிலையில் கிளைர் டோனசின் தந்தை ராபர்ட் பிரிவ்சர் அமேரிக்க படைத்துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவர் தலைமையினான குழுவினர் ஸ்கானெட் என்னும் அதி புத்திசாலியான இயந்திரத்தை இராணுவத் தேவைக்காக வடிவமைக்கிறார். இந்நிலையில் இராணுவத்தின் கணிணிகளையும், தகவல் தொடர்பையும் தீநிரல்கள் தாக்குகின்றன. இதனால் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வாக நாட்டின் அனைத்து கணிணிகளையும் ஸகானெட்டின் கட்டுப்பாட்டில் விட்டால் தீநிரல்கள் அழிக்கப்படும் என என்ற ஆலோசனையை செயல்படுத்துமாறு நாட்டின் அதிபர் இவருக்கு ஆணையிடுகிறார். ஜான் கானரின் மற்றும் கிளையர் டோனஸ் ஆகியோர் வந்து சேர்வதற்குள் ஸ்காய்னெட்டின் கட்டுப்பாட்டின்கீழ் படைத்துறையின் கணிணிகள் போன்றவை ராபர்ட் பிரிவ்சரால் விடப்படுகின்றன. ஸ்காய்னெட் மனிதர்களுக்கு எதிரான போரைத் துவக்குகிறது இதில் பலர் கொல்லப்படுகின்றனர். இதைக்கண்டு வருந்தி காயமுற்றதால் இறக்கும் தறுவாயல் உள்ள ராபர்ட் பிரிவ்சர் ஜான் கானரினிடம் தன் மகளைப் பார்த்துக் கொள்ளுமாறும், மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள நிலவறைக்கு செல்லுமாறு கூறி அதற்கான கோப்புகளை அளித்துவிட்டு இறந்துவிடுகிறார். + +இதைத் தொடர்ந்து ராபர்ட் பிரிவ்சரின் குடிட்டி விமானத்தில் நிலவறை இருக்கும் பகுதிக்குச் செல்கின்றனர். இவர்களைக் கொல்ல தொடர்ந்து டி-எக்சும் ஒரு உலங்கு வானூர்தியில் வர, அ��ைத் தொடர்ந்து டெர்மினேட்டரும் இன்னொரு உலங்கு வானூர்தியில் வந்து இருவரையும் நிலவறைக்குள் அனுப்பி டி- எக்சுடன் மோதி டெர்மினேட்டர் தன்னை அழித்து உடன் டி-எக்சையும் அழிக்கிறது. + + + + +மதுரு ஆறு + +மதுரு ஆறு இலங்கையில் உள்ள ஆறாகும். இது பதுளையின் கிழக்குச் சாய்வுகளில் இருந்து ஊற்றெடுத்துப்பாய்கிறது. இது இலங்கையின் நீளத்தின் படி 8வது பெரிய ஆறாகும், நீரோட்டத்தின் படி 10வது பெரிய ஆறாகும். இது நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 3060 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 26 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 1541 சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் 9வது பெரிய நீரேந்துப் பகுதியாகும்., + + + + +பதிவழிப்பு (கணக்கியல்) + +பதிவழிப்பு ("Write-off") என்பது கணக்கியலில் பயன்படுத்தப்படும் ஒர் சொல்லாகும். காப்புறுதி நிறுவனங்களில், வங்கிகளில், வணிக நிறுவனங்களில் கணக்கேட்டில் உள்ள ஒர் தரவினை நீக்குவதனை இது குறித்து நிற்கும். + +கடன்பட்டோர், நன்மதிப்பு, தொடக்கச்செலவு என்பன நிறுவனத்தின் கொள்கைக்கு அமைவாக பதிவழிக்கப்படும். இவ் பதிவழித்த தொகை வருமான கூற்றில் நட்டமாக/செலவாக காட்டப்படும். + +கடன்பட்டோர் சிலரிடமிருந்து பணம் அறவிடமுடியாது என உறுதியாக தெரியவரும் பொழுது அத்தொகையினை குறிப்பிட்ட நபரின் கணக்கிலிருந்து பதிவழிப்பு செய்யப்படும். இத்தொகை அறவிடமுடியாக்கடன் ஆக வருமான கூற்றுஇல் காட்டப்படும். அதாவது, ஓர் வியாபார நட்டமாக காட்டப்படும். + +இதே போல் அருவ சொத்தான நன்மதிப்பும் சில வேளைகளில் நிறுவன தீர்மானித்த வீதத்திற்கேற்ப குறிப்பிட்ட தொகை பதிவழிக்கப்படும். அவ் பதிவழிக்கப்பட்ட தொகை நிதிக்கிரயமாக வருமான கூற்றில் காட்டப்படும். எஞ்சிய நன்மதிப்பு தொகை ஐந்தொகையில் சொத்தாக காட்டப்படும். + +தொடக்கச் செலவு எனும் பங்கு வழங்கலால் ஏற்படும் செலவானது அவ் வருடத்திலே முழுமையாக பதிவழிக்கப்படும்.இத்தொகையில் குறிப்பிட்ட வீதம் நட்டமாக எடுத்து வருமான கூற்றில் நிதிக்கிரயம் பகுப்பில் காட்டப்படும் எஞ்சிய தொகை ஐந்தொகையில் காட்டப்பட்டுள்ள நிதி ஒதுக்கத்தினை பயன்படுத்தி மு���ுமையாக கழிக்கப்படும். + +குறிப்பு +2007 இலங்கையில் நடைமுறையில் உள்ள கணக்கீட்டு நியமத்திற்கு ஏற்ப கட்டுரை அமைக்கப்பட்டுள்ளது. பதிவழிப்பு கொள்கை நாட்டுக்கு நாடு மாறுபடும். + + + + + +வி. குமார் + +”மெல்லிசை சக்ரவர்த்தி” என அறியப்பட்ட வி. குமார் (சூலை 28, 1934 - சனவரி 7, 1996) இந்தியாவின் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவரது இசையமைப்பு சமகாலத்தில் இசையமைத்து வந்த எம். எஸ். விஸ்வநாதன், கே. வி. மகாதேவன் போன்றோரின் இசையமைப்பிலிருந்து மாறுபட்ட மெல்லிசையாக காணப்பட்டது. இவர் இந்திய மற்றும் மேற்கத்தேய இசைக்கருவிகளை கலந்து பயன்படுத்தினார். இவர் தொடர்ச்சியாக பல கே. பாலச்சந்தரின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்தார். "காதோடுதான் நான் பேசுவேன்", "உன்னிடம் மயங்குகிறேன்", "நான் உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்", "கண்ணொரு பக்கம்", "இளமை கோவில் ஒன்று இரண்டே தீபங்கள்", " சிவப்புகல்லு மூக்குத்தி", "வா வாத்யாரே வூட்டாண்ட", "நீ போட்ட மூகுத்தியோ", "நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை ", போன்றப் பாடல்கள் இவரின் தலைசிறந்த பாடல்களாகும். + + + + + +பாகை (அலகு) + +பாகை என்பது கோணத்தை அளப்பதற்குரிய ஒரு அலகு ஆகும். இது 60 கலைக்குச் சமனானது ஆகும். இது ° என்னும் குறியீட்டினால் குறிக்கப்படுவது வழக்கம். 60° என எழுதும்போது அது 60 பாகை என்பதைக் குறிக்கும். ஒரு தளத்தில் அதிலுள்ள ஒரு புள்ளியை முழுவதுமாகக் சுற்றி அமையும் கோணம் 360 பாகை (360°) ஆகும். + +பொதுவான தேவைகளுக்கு ஒரு பாகை என்பது போதுமான அளவு சிறிய அலகு ஆகும். ஆனால் வானியல் போன்ற தொலை தூர நிகழ்வுகளைக் கையாளும் துறைகளில் ஒரு பாகை என்பது ஒப்பீட்டளவில் சிறியது அல்ல. + +பாகையை அளக்கப் பாகைமானிகள் பயன்படுத்தப்படுகின்றன. துல்லியமிக்க பல பாகைமானிகள் பயன்பாட்டில் உள்ளன. + + + + +கொடுங்கரடி + +கொடுங்கரடி (Grizzly bear) ஒரு வகைக் கரடி இனமாகும். இது வட அமெரிக்காவின் மேற்குப் பகுதி உயர்நிலங்களில் வாழ்கிறது. இது 180 முதல் 680 கிலோகிராம் எடையுடையதாகக் காணப்படுகிறது. கொடுங்கரடிகளில் ஆண் கரடி பெண்ணைவிட 1.8 மடங்கு எடையுடையதாகும். + + + + +ம. சு. விசுவநாதன் + +மனயங்கத்து சுப்பிரமணியன் ���ிசுவநாதன் அல்லது எம். எஸ். விஸ்வநாதன் ("M. S. Viswanathan"), அல்லது பொதுவாக எம்எஸ்வி, (24 சூன் 1928 - 14 சூலை 2015) தமிழ்த் திரைப்படவுலகில் புகழ்பெற்று விளங்கிய இசையமைப்பாளர் ஆவார். இவர் கேரளாவின் பாலக்காட்டுக்கு அருகில் எலப்புள்ளி என்ற கிராமத்தில் 1928ம் ஆண்டு மலையாளக் குடும்பத்தில் பிறந்தார். இவரின் தந்தை சுப்பிரமணியன் தாய் நாராயண குட்டியம்மாள் (நானிக்குட்டி). விசுவநாதன் 1953 ஆம் ஆண்டில் வெளிவந்த ம. கோ. இராமச்சந்திரனின் ஜெனோவா திரைப்படத்தில் வெளிவந்த நான்கு பாடல்களுக்கு முதன் முதலாக இசையமைத்தார். தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் சுமார் 1700 திரைப்படங்களுக்கு இசையமைத்தார். தெலுங்கு, இந்தி மொழிப் படங்களுக்கும் இசையமைத்திருந்தார். + +தனது நான்காவது வயதிலேயே தந்தையை இழந்த விசுவநாதன் கண்ணனூரில் உள்ள தன் தாத்தா கிருசுணன் நாயர் வீட்டிற்கு சென்று வளர்ந்தார். பள்ளிப் படிப்புப் படிக்காத இவர் இசையின் மீது கொண்ட நாட்டத்தால் அங்கு கருநாடக இசையை நீலகண்ட பாகவதரிடம் பயின்று 13​வது வயதிலேயே மேடைக் கச்சேரி நிகழ்த்தினார். இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன் இசைக்குழுவில் இவர் ஆர்மோனியத்தையும் டி. கே. ராமமூர்த்தி வயலினையும் வாசிப்பவர்களாக பணிபுரிந்தார்கள். + +உடல்நல குறைவு காரணமாக, சி. ஆர். சுப்புராமனுடைய மறைவால் முழுமை பெறாமல் இருந்த தேவதாஸ், சண்டிராணி, மணமகள் போன்ற படங்களை அவரின் உதவியாளர்களாக இருந்த விசுவநானும் ராமமூர்த்தியும் முடித்துக்கொடுத்தார்கள். தேவதாஸ் (தமிழ் & தெலுங்கு) மற்றும் சண்டிராணி (தமிழ், தெலுங்கு & இந்தி) படங்களின் இணை இசையமைப்பாளராக இவர்கள் இருவரும் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். இப்படங்கள் வெற்றி பெற்றதால் இந்தியில் சங்கர்-ஜெய்கிஷன் என்ற பெயரில் புகழ்பெற்ற இரட்டை இசையமைப்பார்கள் இருந்தது போல் தமிழில் விசுவநாதன்-இராமமூர்த்தி என்ற இரட்டை இசையமைப்பாளராக உருவாகலாம் என்ற எண்ணத்தை விசுவநாதன் இராமமூர்த்தியிடம் தெரிவித்து அவரது இணக்கத்தைப் பெற்றார். இவர்கள் இருவரும் பணம் என்ற திரைப்படத்திற்கு முதலில் இணைந்து இசையமைத்தார்கள். ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வரை இணைந்து இசையமைத்தார்கள். 1995-ல் சத்யராஜ் நடித்த எங்கிருந்தோ வந்தான் என்ற திரைப்படத்தில் இருவரும் மீண்டும் இணைந்து இசையமைத்தார்கள். வ��ஸ்வநாதன் தனியாக 950 படங்களுக்கு மேல் இசையமைத்தார். இளையராஜாவோடு சேர்ந்து, மெல்லத் திறந்தது கதவு, செந்தமிழ்ப் பாட்டு, செந்தமிழ்ச்செல்வன் என மூன்று படங்களுக்கு இசை அமைத்தார். 1963ம் ஆண்டு சூன் மாதம் 16-ஆம் தேதி மதராசு திரிப்ளிகேன் கல்சுரல் அகாடமி சார்பில் இந்து நாளிதழ் உதவியுடன் இயக்குனர் ஸ்ரீதர் மற்றும் "சித்ராலயா"கோபு முன்னிலையில் நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனால் விசுவநாதன்-இராமமூர்த்திக்கு மெல்லிசை மன்னர்கள் என்று பட்டம் வழங்கப்பட்டது. + +கண்ணகி, காதல் மன்னன், காதலா காதலா போன்ற 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஏ. பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, ஏ. சி. திருலோசந்தர், கே. பாலசந்தர் என்ற இயக்குநர்களுடன் அதிகமாக பணியாற்றினார். தமிழ்த் தாய் வாழ்த்தான நீராடும் கடலுடுத்த பாடலுக்கு மோகன இராகத்தில் இசைக் கோர்ப்பு செய்தவர் விசுவநாதன். வி.குமார், இளையராஜா, அ. இ. ரகுமான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா, ஜி. வி. பிரகாஷ் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடினார் . + + +இராமமூர்த்தியுடன் இணைந்து சுமார் 750 திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார். + + +எம். எஸ். விஸ்வநாதன் 14 சூலை 2015 அன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையில் காலமானார். + + + + + + +புல்வெளி + +புல்வெளி அல்லது புன்னிலம் என்பது பரந்துவிரிந்த ஓரளவு தட்டையான புல் நிலப்பகுதியாகும். சில மில்லிமீற்றர் உயரப் புற்கள் முதல் 2.1 மீற்றர் உயரமும் 1.8 மீற்றர் வேர்நீளமும் கொண்ட புற்கள் ஈறாகப் பலவகையான புற்களைக் கொண்ட புல்வெளிகள் உலகில் காணப்படுகின்றன. +புல்வெளி என்பது புற்கள் மற்றும் மரம் அல்லாத சிறு தாவரஙகள் வாமும் இடமாகும். புல்வெளியானது சூழ்நிலையியல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புல்வெளியில் தாவரங்கள் மற்றும் விலங்குகள் செழித்து வாழ்கிறது. ஏனெனில், அவ்வாழிடம் திறந்த வெளியாகவும், சூாிய வெளிச்சம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் நன்றாக ஈர்த்துக்கொள்ளும் படியும் அமைந்துள்ளது. இதே போன்ற தட்பவெப்பம் வேறு எங்கும் காணமுடியாது. புல்வெளியானது இயற்கையாக காணப்படும் அல்லது செயற்கையான முறையில் புதர்செடிகள் அல்லது மரவகைகளை அழித்துவிட்டு கூட அமைக்கலாம். புல்வெளிகளில் தாவரங்கள் போதுமான அளவில் இருந்தால் பலவிதமான வனவில���்கு கூட்டத்தை பெருக்குவதுடன், விலங்குகள் இணை சேர்வதற்கான இடமாகவும், கூடு கட்டுவதற்கு, உணவு சேகாிப்பதற்கு மற்றும் சில நேரங்களில் வாழிடமாகவும் அமைகிறது. நிறைய புல்வெளிகளில் பரந்த வாிசையில் காட்டுமலர்கள் காணப்படுகின்றன இவை மகரந்தசேர்க்கையில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மகரந்த சேர்க்கையில் ஈடுபடக்கூடிய புசிசியினங்கள் தேனீகள் போன்றகற்றை கவர்ந்திழுக்கப் பயன்படுகின்றன. மேலும் அந்த சூழ்நிலையியல் முழுவதும் மகரந்தசேர்க்கை நடைபெற உதவுகின்றன. +விவசாயத்தில், புல்வெளி என்பது வீட்டில் வளர்க்கப்படும் கால்நடைகளால் வழக்கமாக மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் கால்நடைகளானது தேவையற்ற தாவரங்கள் உற்பத்தி ஆகாமல் தாவரங்களை தடையின்றி வளர அனுமதிக்கிறது. +விவசாயம் +குறிப்பாக ஐக்கிய நாடுகள் மற்றும் அயர்லாந்தில், புல்வெளி என்பது காய்ந்த வைக்கேலையும் பசும்புல் வெளி நிலத்தினையும் குறிக்கிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் காய்ந்த புல்லாக காணப்படுகிறது. வேளாண்மை செய்யக்கூடிய புல்வெளியானது பொதுவாக தாழ்ந்த பகுதிகள் அல்லது உயர்ந்த விளை நிலங்களிலும் காணப்படுகிறது. அதற்கும் மேலே மேய்ச்சல் புற்கள் காணப்படுகின்றன. இவை தானாகவே முளைக்கிறது அல்லது கைகளால் விதைக்கப்படுகிறது. பழங்காலத்தில் வைக்கோல் புல்லானது இங்கிலாந்து கிராமங்களில் காணப்பட்டது ஆனால் தற்போது குறைந்து விட்டது. சூழ்நிலையாளர் பேராசிாியர் சான் சாட்வெல் என்பவர் கூறியதாவது கடந்த நுாற்றாண்டுகளில் இந்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகள் 97 சதவீதம் புல்வெளியை இழந்துள்ளது என்கிறார். 3 சதவீதத்திற்கும் மிகக் குறைவான 15.000 ஏக்கர் நிலம் மட்டுமே ஐக்கிய நாடுகள் மற்றும் நிறைய பகுதிகளில் சிறு சிறு துண்டுகளாக காணப்படுகின்றன. 25 சதவீத புல்வெளியானது வெர்சென்டர்சயரில் உள்ளது. வெர்சென்டர்சயர் வன உயிாிகள் அறக்கட்டளையின் மூலம் இது முக்கிய பகுதியாக பாதுகாக்கப்படுகிறது. + +பாரம்பரியமான புல்வெளி எங்கு காணப்படுகிறது என்றால் விளைநிலங்கள், மேய்சல் நிலங்கள், துாய்மையாக சுத்தம் செய்யப்பட்டாத போன்ற நிலங்களில் நீண்ட நாட்கள் வெட்டப்படாத அல்லது மேய்ச்சலுக்கு உட்படுத்தப்படாத நிலங்களில் புற்கள் அமோகமாக வளர்ந்து காணப்படும். இவை பூத்த�� தானாகவே விதைகளைப் பரப்புகின்றன. இவை காட்டுப் பூக்களை உடைய சிற்றினமாக கருதப்படுகிறது. இந்த நிலையானது தற்காலிகமானதே, ஏனெனில் புற்கள் உண்மையிலேயே புதர்களும் மர வகைத் தாவரங்களும் நன்கு வளர்ந்து விடும் சூழ்நிலையில் தானாகவே கருகத் தொடங்குகின்றன. இந்நிலை தற்காலிகமானது தான், ஏனெனில் புற்களானது புதர்கள் மற்றும் மரங்களின் நிழலாலும் மறைக்கப்படுகிறது. பாரம்பாிய முறைப்படி செயற்கையாக இரு விளைநிலம் சாகுபடி முறை பின்பற்றப்படுகிறது. இதில் மண் வளபராமாிப்பும் மற்றும் புல்வெளி மாறிமாறி 10 முதல் 12 வருடம் பாதுகாக்கப்படுகிறது. + +நிரந்தர புல்வெளி, இயற்கையான புல்வெளி என்றும் அழைக்கப்படுகிறது. இப்புல்வெளிக்கு சூழ்நிலைக் காரணிகளான தட்பவெப்பம் மற்றும் மண்ணின் தன்மைக்கு ஏற்ப எப்பொழுதும் நிரந்தரமாக காணப்படுகிறது. இதன் வளர்ச்சியானது மரங்களின் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. நிரந்தர புல்வெளியின் வகைகள்: +ஆல்பைன் புல்வெளியானது மிக உயர்ந்த பகுதிகளில் அதாவது மரங்களின் உயதத்திற்கு மேல் உயரம் + + + + +சித்தி (திரைப்படம்) + +சித்தி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, முத்துராமன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எங்க பாப்பா + +எங்க பாப்பா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கௌரி கல்யாணம் + +கௌரி கல்யாணம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இரு வல்லவர்கள் + +இரு வல்லவர்கள் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஷ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காதல் படுத��தும் பாடு + +காதல் படுத்தும் பாடு 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோசப் தலியாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கொடிமலர் + +கொடிமலர் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +குமரிப் பெண் + +குமரிப்பெண் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +லாரி டிரைவர் + +லாரி டிரைவர் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், ஷீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மதராஸ் டு பாண்டிச்சேரி + +மதராஸ் டு பாண்டிச்சேரி(Madras to Pondicherry) 1966 ஆம் ஆண்டு வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கல்பனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். +இப் படத்திற்கு உசிலை சோமநாதன் திரைக்கதை எழுதியுள்ளார். வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்ற இப் படம்இந்தியில் "பாம்பே டு கோவா"(1972) என்ற பெயரில் எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 2004இல் மராத்தி மொழியில் "நவ்ரா மழ நவ்சச்சா" என்கிற பெயரிலும், 2007இல் கன்னடம் மொழியில் "ஏகதந்தா" என்கிற பெயரிலும் எடுக்கப்பட்டது. + +மாலா, திரைப்பட நடிகை ஆகும் ஆர்வத்தில் தன் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இதைக் கண்ட குண்டர்கள் குழு ஒன்று அவளைத் துரத்தியது. மோதலில் குழுவிலிருந்த ஒருவன் சுடப்பட்டான். இதை மாலா பார்த்துவிட்டதால் அக்குழு அவளைத் துரத்தியது. அவர்களிடமிருந்து தப்பிக்க மாலா மதராஸிலிருந்து பாண்டிச்சேரி செல்லும் பேருந்தில் ஏறிக்கொள்கிறாள். குண்டர்கள் குழுவும் அந்தப் பேருந்தில் ஏறி அவளைக் கொல்வதற்காக காத்திருந்தனர். பாஸ்கர் என்ற இளைஞனும் அப் பேருந்தில் ஏறுகிறான். மாலாவின் ஆபத்தை உணர்ந்துகொண்டு அவளைக் காப்பாற்றுகிறான். அவளிடம் காதல் கொள்கிறான். முடிவில் பாஸ்கரும் மாலாவும் இணைந்தனரா என்பதுடன் கதை முடிவுக்கு வருகிறது. + +மாலா - கல்பனா(கன்னட நடிகை) +பாஸ்கர் - ரவிச்சந்திரன் +பேருந்து நடத்துனர் - நாகேஷ் +பிராமணர் பெண்மணி - மனோரமா +பேருந்து ஓட்டுநர் - ஏ. கருணாநிதி +பிராமண தம்பதியின் மகன் - "பக்கோடா" காதர் +பிராமண மனிதன் - ஏ. வீரப்பன் + +"மதராஸ் டு பாண்டிச்சேரி"திருமலை மகாலிங்கம் இயக்கத்தில், உசிலை சோமநாதன் திரைக்கதையில் வெளிவந்த திரைப்படமாகும். இப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிடோன் சார்பில் டி. எஸ். ஆதிநாராயணன், பி. எம். நாச்சிமுத்து, எஸ். சிவராமன் மற்றும் ஜி. கே. செல்வராஜ் தயாரித்துள்ளனர். இது சாலையில் ஓடும் பேருந்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஆகும். + +இப் படத்திற்கு இசை அமைத்தவர் டி. கே. ராமமூர்த்தி, பாடல்களை ஆலங்குடி சோமு, பஞ்சு அருணாசலம், தஞ்சை வாணன்,மற்றும் நாகக்கல் வரதராஜன் எழுதியுள்ளனர். + +"மதராஸ் டு பாண்டிச்சேரி" திசம்பர் 16, 1966இல் வெளியிடப்பட்டது. திரைப்பட வரலாற்றாளர் ராண்டார் கை இப் படத்தின் அருமையான திரைக்கதை, மனதை தொடும் இசை, மற்றும் நடிகர்கள் நாகேஷ், மனோரமா, கல்பனா, ரவிச்சந்திரன், பக்கோடா காதர் போன்றோரின் நடிப்புத் திறனில் வெளிப்படும் நகைச்சுவை என்றும் நினைவிலிருக்கும் என்று தனது விமரிசனத்தில் குறிப்பிட்டுள்ளார். + + + + +மேஜர் சந்திரகாந்த் + +மேஜர் சந்திரகாந்த் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், நாகேஷ், முத்துராமன், ஏ. வி. எம். ராஜன் மற்றும் ஜெயலலிதா முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் வி. குமார். + +மோகன் அவன் தங்கை விமலா பிரபுவை ஏமாற்றிய காதலன் ரஜினிகாந்தைக் கொன்றுவிடுகிறான். இந்த கொலைக்குப் பின் மேஜர் சந்திரகாந்திடம் தஞ்சமடைகிறான் மோகன். மேஜரின் போலீஸ் மகனான ஸ்ரீகாந்த் கொலைகாரனுக்கு அடைக்கலம் கொடுத்த தன் தந்தையை கைது செய்வானா? நம்பிக்கை, நாணயம் மற்றும் ஏய்ப்பு என்று மனிதனின் முக்கிய குணாதிசியங்களை சோதித்து பார்க்கும் படம் மேஜர் சந்திரகாந்த். + + +வி.குமாரின் இசையமைப்பில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ள���. + + + + + + + + +மணிமகுடம் + +மணி மகுடம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத. எஸ். எஸ். ஆர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி, ஜெ. ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மறக்க முடியுமா + +மறக்க முடியுமா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுத. முரசொலி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மோட்டார் சுந்தரம் பிள்ளை + +மோட்டார் சுந்தரம் பிள்ளை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +முகராசி + +முகராசி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் பன்னிரண்டே நாட்களில் எடுக்கப்பட்டதாகும். + + + + +நாம் மூவர் + +நாம் மூவர் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நான் ஆணையிட்டால் + +நான் ஆணையிட்டால் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர் + + + + +நாடோடி (திரைப்படம்) + +நாடோடி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +நம்ம வீட்டு மகாலட்சுமி + +நம்ம வீட்டு மகாலட்சுமி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் தி���ைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பறக்கும் பாவை + +பறக்கும் பாவை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பெரிய மனிதன் + +பெரிய மனிதன் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சி. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. ராமச்சந்திரன், உதய சந்திரிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பெற்றால்தான் பிள்ளையா + +பெற்றால்தான் பிள்ளையா 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ராமு + +ராமு 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது 1964இல் இந்தி மொழியில் வெளியான கிஷோர் குமார் நடித்த "தூர் ககன் கி சாஓன் மெய்ன்" என்ற படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. + + + + +சாது மிரண்டால் + +சாது மிரண்டால் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், நாகேஷ், கல்பனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சரஸ்வதி சபதம் + +சரஸ்வதி சபதம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களையும் கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். + + + + + +செல்வம் (1966 திரைப்படம்) + +செல்வம் 1966 ஆம் ஆண்டு வெளிவந��த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். +கதைப்படி நாயகிக்கு மாங்கல்ய தோஷம் உள்ளது. அவள் யாரைத் திருமணம் செய்துகொள்கிறாளோ அவன் ஓராண்டில் மரணமடைந்துவிடுவான் என்கிறார்கள் சோதிடர்கள். நாயகன் தன் மனதுக்கு உகந்த மாமன் பெண்ணைக் திருமணம் செய்ய விரும்புகிறான். அவளும் அவனுக்காகவே காத்திருக்கிறாள். இந்நிலையில் சோதிடத்தைப் புறந்தள்ளிவிட்டு நாயகியைக் கைபிடித்துவிடுகிறான் நாயகன். +மாங்கல்ய தோஷத்தை மீறித் திருமணம் செய்ததால் ஒரு பரிகாரமாக ஓராண்டுக்கு கணவன் மனைவி என இருவரையும் பிரிந்திருக்கச் சொல்கிறார்கள் சோதிடர்கள். ஆனால், இருவரும் இளமை வேகத்தில் அதை மீறிவிடுகின்றனர். அதன்பிறகு என்ன ஆனது சோதிடம் பலித்ததா, இல்லையா என்பதையும், சோதிடம் தொடர்பான பல விமர்சனங்களுடன், சோதிடம் என்பதை மனிதர்கள் தங்கள் சுயலாபத்துக்கே பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் படத்தில் இயக்குநர் வலியுறுத்தியுள்ளார். + + + + +தாயின் மேல் ஆணை + +தாயின் மேல் ஆணை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தாலி பாக்கியம் + +தாலி பாக்கியம் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், சரோஜா தேவி, எம். என். ராஜம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +தனிப்பிறவி + +தனிப்பிறவி 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். வர்மா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தட்டுங்கள் திறக்கப்படும் + +தட்டுங்கள் திறக்கப்படும் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்திரபாபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சந்திரபாபு, சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாயே உனக்காக + +தாயே உனக்காக1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சிவகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேடிவந்த திருமகள் + +தேடி வந்த திருமகள் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேன் மழை + +தேன் மழை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வல்லவன் ஒருவன் + +வல்லவன் ஒருவன் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +யார் நீ + +யார் நீ 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +யாருக்காக அழுதான் + +யாருக்காக அழுதான் 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆலயம் (திரைப்படம்) + +ஆலயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +அனுபவம் புதுமை + +அனுபவம் புதுமை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அரச கட்டளை + +அரச கட்டளை 1967 ஆ���் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. சக்ரபாணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அதே கண்கள் + +அதே கண்கள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +பக்த பிரகலாதா + +பக்த பிரகலாதா1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஹெச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. ரங்கராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
+இத்திரைப்படத்தில் பிரபல கருநாடக இசைப் பாடகர் எம். பாலமுரளி கிருஷ்ணா நாரதர் வேடத்தில் நடித்துள்ளார். + +இப்படம், இதே பெயரில் 1967 ஆம் ஆண்டில் தெலுங்கில் வெளியான மூலத் திரைப்படத்தின் மொழிமாற்றுத் திரைப்படமாகும். + + +
+ +பாமா விஜயம் (1967 திரைப்படம்) + +பாமா விஜயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பவானி (திரைப்படம்) + +பவானி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், அசோகன்,விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எங்களுக்கும் காலம் வரும் + +எங்களுக்கும் காலம் வரும் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விண்செண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +எதிரிகள் ஜாக்கிரதை + +எதிரிகள் ஜாக்கிரதை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். மனோகர், எல். விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +67-ல் எ���். எஸ். கிருஷ்ணன் + +67 இல் என். எஸ். கிருஷ்ணன் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஏ. துரைராஜன் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இரு மலர்கள் + +இரு மலர்கள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + + +கண் கண்ட தெய்வம் + +கண்கண்ட தெய்வம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பைய்யா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கற்பூரம் (திரைப்படம்) + +கற்பூரம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காதலித்தால் போதுமா + +காதலித்தால் போதுமா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காவல்காரன் (திரைப்படம்) + +காவல்காரன் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, சிவகுமார், எம். என். நம்பியார், அசோகன், மனோகர், வி. கே. ராமசாமி, நாகேஷ், பண்டரிபாய், மனோரமா, புஷ்பமாலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். காவல்காரன் படம் 1966 இன் பிற்பகுதியில் பூசை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி, படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த நிலையில், 1967 சனவரி 12 ஆம் தேதி எம்.ஜி.ஆரை எம்.ஆர். ராதா துப்பாக்கியால் சுட்டுவிட்டுவிட்ட நிகழ்வு நேர்ந்தது. இந்நிகழ்வுக்கு முன்பே பெரும்பாலும் படப்பிடிப்பு முடிக்கப்பட்ட தாய்க்குத் தலைமகன், அரச கட்டளை ஆகிய படங்கள் தொடர்ந்த வெளியாயின. 1967 செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி காவல���காரன் வெளிவந்தது. இந்தப் படத்தின் 95 சதவீதக் காட்சிகள் துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குப் பிறகு எடுக்கப்பட்டன. எம்.ஜி.ஆர். பேசும் காட்சிகளில் அவரது வழக்கமான குரல் உடைந்துபோய், சற்று வார்த்தைகள் தெளிவில்லாமல் ஒலித்தது. +ஒரு பெரிய பங்களா வீட்டில் நடக்கும் குற்றச்செயல்களைக் கண்டுபிடிக்க வரும் ஒரு காவல் அதிகாரி கொல்லப்படுகிறார். அந்த பங்களாவில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டுபிடித்து குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துகிறார் கதாநாயகன் மணி (எம்.ஜி.ஆர்). கதாநாயகனின் தம்பியாக சிவகுமார் நடித்துள்ளார். நம்பியாரிடம் கார் டிரைவராக வேலைக்குச் சேரும் மணி, நம்பியாரின் மகளான சுசீலாவுடன் (ஜெயலலிதா) காதல் வசப்படுகிறார். + +தந்தையின் எதிர்ப்பை மீறி சுசீல் காதலனைக் கரம்பிடிக்கிறார். தன்னை அழிக்க முயலும் எதிரிகளின் திட்டங்களைத் முறியடித்து குற்றவாளிகளைச் சிறைக்கு அனுப்புகிறார் எம்.ஜி.ஆர். நம்பியாரிடம் டிரைவராக வேலைக்குச் சேர்ந்த மணி ஒரு துப்பறியும் போலீஸ் அதிகாரி என்று கடைசியில் தெரிகிறது. +படம் பார்த்த அவரது தீவிர ரசிகர்கள் மாறிப்போன அவரது குரலைக் கேட்டு கண்ணீர் சிந்தி அழுதனர். அவரது மாறிப்போன குரலே படத்துக்குப் பெரிய விளம்பரமாகி, படம் மிகப் பெரிய வெற்றிபெற்றது. சென்னையில் குளோப், அகஸ்தியா, மேகலா ஆகிய திரையரங்குகள் மற்றும் மதுரை, திருச்சி, சேலம் நகரங்களில் 100 நாட்களை கடந்தும், இலங்கை யாழ்ப்பாணத்தில் 160 நாட்களைக் கடந்தும் ஓடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. + + + + +மாடிவீட்டு மாப்பிள்ளை + +மாடி வீட்டு மாப்பிள்ளை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். கே. ஏ. சாரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மகராசி + +மகராசி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மனம் ஒரு குரங்கு + +மனம் ஒரு குரங்கு1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வ��ளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +முகூர்த்த நாள் (திரைப்படம்) + +முகூர்த்த நாள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நான் (1967 திரைப்படம்) + +நான் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நான் யார் தெரியுமா + +நான் யார் தெரியுமா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நெஞ்சிருக்கும் வரை + +நெஞ்சிருக்கும் வரை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நினைவில் நின்றவள் + +நினைவில் நின்றவள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஊட்டி வரை உறவு + +ஊட்டி வரை உறவு 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, எல். விஜயலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாலாடை (திரைப்படம்) + +பாலாடை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பந்தயம் (1967 திரைப்படம்) + +பந்தயம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் ���ிரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜய நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பட்டணத்தில் பூதம் + +பட்டணத்தில் பூதம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். வீனஸ் பிக்சர்சுக்காக "பிராஸ் பாட்டில்" என்னும் ஆங்கில நகைச்சுவைப் படத்தைத் தழுவி, பட்டணத்தில் பூதம் என்ற இக்கற்பனைக் கதையை புகழ்பெற்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் உருவாக்கினார். மேலும் இப்படத்தில் பூதமாகத் தோன்றினார். + +கூடைப்பந்து வீர்ரான பாஸ்கர் (ஜெய்சங்கர்), தொழிலதிபர் தங்கவேலின் (வி. கே. ராமசாமி) மகள் லதாவை (கே. ஆர். விஜயா) சந்திக்கிறார். இவர்களது காதலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார் கே. பாலாஜி. இதற்கிடையில் கலைப்பொருள் என்று நினைத்துப் பழம்பெரும் ஜாடி ஒன்றை வாங்கிவருகிறார் தங்கவேல். அதன் பிறகு நடக்கும் சில சம்பவங்களால் அதை துரதிஷ்டம் என நினைக்கும் தங்கவேல், அந்த ஜாடியைக் கவிதைப் போட்டிக்கு நன்கொடையாக அளித்துவிடுகிறார். அந்தப் போட்டியில் வெல்லும் பாஸ்கருக்கு ஜாடி பரிசாகக் கொடுக்கப்படுகிறது. பாஸ்கரும் அவரது நண்பர் சீசர் சீனுவும் (நாகேஷ்) வீட்டுக்கு வந்து ஜாடியில் என்ன இருக்கிறது என அறிய அதை சிரம்ப்பட்டு திறக்கிறார்கள். + +அதிலிருந்து அரேபிய பூதம் விடுதலையாகிறது. அந்த பூதம் பாஸ்கர், சீசர் சீனு ஆகியோருக்கு சேவை செய்கிறது, பாஸ்கரை சந்தேகப்பட்டுப் பிரியும் லாதாவை அரேபிய பூதமான ஜீ பூம் பா. சேர்த்து வைப்பதோடு; தங்கவேலுவின் தொழில் கூட்டாளியான சபாபதியும் ( வி.எஸ்.ராகவன்) அவரது மகனும் மோசமான கள்ளக் கடத்தல் கும்பலின் சூத்திரதாரிகள் என்பதைக் கண்டறிந்து அவர்களை போலீஸிடம் பிடித்துக்கொடுக்க உதவுகிறது. இறுதியில் பூதம் பூமியை விட்டுக் கிளம்புகிறது. + + +பாடல்கள் + + + + + +பட்டத்து ராணி (திரைப்படம்) + +பட்டத்து ராணி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பி. பானுமதி மற்றும் பலர் நடித்திருந்தனர��. + + + + +பெண் என்றால் பெண் + +பெண் என்றால் பெண் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரூர்தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பெண்ணே நீ வாழ்க + +பெண்ணே நீ வாழ்க 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பேசும் தெய்வம் + +பேசும் தெய்வம் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பொன்னான வாழ்வு + +பொன்னான வாழ்வு 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜாத்தி (திரைப்படம்) + +ராஜாத்தி1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், உதயா சந்திரிக்கா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சபாஷ் தம்பி + +சபாஷ் தம்பி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சீதா (திரைப்படம்) + +சீதா 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தாய்க்குத் தலைமகன் + +தாய்க்குத் தலைமகன் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தங்கை (திரைப்படம்) + +தங்கை 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்கக் கம்பி + +தங்கக் கம்பி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தெய்வச்செயல் + +தெய்வச்செயல் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், மனோகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருவருட்செல்வர் + +திருவருட்செல்வர் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வாலிப விருந்து + +வாலிப விருந்து 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடலை எழுத, முரசொலி மாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +விவசாயி (திரைப்படம்) + +விவசாயி 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அன்பு வழி + +அன்பு வழி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். நடேசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அன்று கண்ட முகம் + +அன்று கண்ட முகம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பொம்மலாட்டம் (1968 திரைப்படம்) + +பொம்மலாட்டம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சக்கரம் (திரைப்படம்) + +சக்கரம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +டில்லி மாப்பிள்ளை + +டில்லி மாப்பிள்ளை 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேவி (1968 திரைப்படம்) + +தேவி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. வேலன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படம் ஏ. கே. வேலன் இயக்கத்தில் 1965 இல் மலையாளத்தில் வெளிவந்த "காவியமேளா", 1961 இல் கன்னட மொழியில் வெளியான "கந்தரேடு நோடு" ஆகிய திரைப்படங்களின் தமிழ்ப் பிரதி ஆகும். + + + + +என் தம்பி + +என் தம்பி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, மற்றும் பலரும் இணைந்து நடித்திருந்தனர். + + + + + + +எங்க ஊர் ராஜா + +எங்க ஊர் ராஜா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஜீவனாம்சம் (திரைப்படம்) + +ஜீவனாம்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் மங்கலம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கலாட்டா கல்யாணம் + +கலாட்டா கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். சித்ராலயா கோபு எழுத்தில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். +இப்படமானது 1965 இந்தியா பாக்கித்தான் போரின்போது போர் நிதி திரட்டும் விதமாக சித்ராலயா கோபு எழுதி சிவாஜி கணேசன் இயக்கி, தமிழ்த் திரையுலக பிரபலங்கள் நடித்த கலாட்டா கல்யாணம் என்ற நாடகத்தை அடிப்படையாக கொண்டு அதேபெயரில் சிவாஜி கணேசனின் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படமாகும். +நான்கு பெண்களைப் பெற்ற ஒரு தந்தை, தன் பெண்களுக்கு வரன் பார்க்கும் வேலையை அவரது இரண்டாவது பெண்ணின் காதலனிடம் ஒப்படைக்கிறார். முதல் பெண் ஆண்களை வெறுப்பவர். மூன்றாவது பெண் இசைப் பைத்தியமாகவும், நான்காவது பெண் சினிமா பைத்தியமாகவும் இருக்கின்றனர். வெவ்வேறு குணாம்சங்கள் கொண்ட இந்தப் பெண்களுக்கு மாப்பிள்ளை தேடும் வேளையில் இரண்டாவது பெண்ணின் காதலன் ஈடுபட்டு அதனால் ஏற்படும் சிரமங்களே படத்தின் கதை. + + + + +கல்லும் கனியாகும் + +கல்லும் கனியாகும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராஜன், விஜயகுமாரி, வி. எஸ். ராகவன், எஸ். வி. சகஸ்ரநாமம், நாகேஷ், டைப்பிஸ்ட் கோபு, கள்ளப்பார்ட் நடராஜன், எம். என். ராஜம், விஜயகுமாரி, ராஜஸ்ரீ, சச்சு, எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். + + + + + +கணவன் (திரைப்படம்) + +கணவன் ((() 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கண்ணன் என் காதலன் + +கண்ணன் என் காதலன் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +காதல் வாகனம் + +காதல் வாகனம் 1968 ஆம் ஆ���்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +குடியிருந்த கோயில் + +குடியிருந்த கோயில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர். + + + + +குழந்தைக்காக + +குழந்தைக்காக (Kuzhanthaikkaga) பி. மாதவன் இயக்கத்தில் ,டி. ராமா நாயுடு தயாரிப்பில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதை துறையூர் கே. மூர்த்தி, இசையமைப்பு ம. சு. விசுவநாதன். இப்படத்தில் பேபி ராணி, மேஜர் சுந்தரராஜன், இரா. சு. மனோகர், எஸ். வி. ராமதாசு மற்றும் பத்மினி போன்றோர் முன்னணி வேடங்களிலும், இவர்களுடன் எஸ். ஏ. அசோகன் எஸ். வி. சகஸ்ரநாமம், தேங்காய் சீனிவாசன் மற்றும் டி. கே. பகவதி ஆகியோரும் நடித்திருந்தனர். "பாப்ப கோசம்" என்ற தெலுங்கு மொழியில் வெளிவந்த மடத்தின் மறு ஆக்கமாகும். "நன்ஹா ஃபரிஸ்தா" என்ற பெயரில் இந்தியிலும் , மலையாள மொழியில் "ஓமனக்குஞ்சு" என்ற பெயரிலும் வெளிவந்தது. + +ஒரு கிறிஸ்தவரான ஜோசப் (இரா. சு. மனோகர்), முஸ்லீமான நசீர் (எஸ்.வி.ராமதாஸ்), மற்றும் இந்துவான ஜம்பு (மேஜர் சுந்தரராஜன்) ]) ஆகிய மூவரும் துப்பாக்கி முனையில் பயணிகளின் நகைகளை திருடுகிறார்கள். அவர்கள் பல கடைகள் மற்றும் உணவு விடுதிகளிலும் திருடி வருகின்றனர்; அவர்களுடைய அட்டூழியங்கள் நகரெங்கும் ஒரே பேச்சாக உள்ளது. அந்த மூன்று பேரும் பணக்காரரான பிரபாகரின் (கிருஷ்ணா) வீட்டில் நுழைந்து குழந்தையைத் தவிர மற்ற அனைவரையும் கொன்று பணத்தை திருடுகின்றனர். குழந்தை கீதாவின் (பேபி ராணி) மீது ஜம்பு பாசம் காட்டத் தொடங்குகிறான். மற்ற இருவருக்கும் இது பிடிக்கவில்லை, ஆனால் ஜம்பு தன்னுடன் குழந்தையை அழைத்து வர முடிவு செய்கிறான். காவலர்கள் வந்ததும் அந்த மூன்று பேரும் குழந்தையுடன் தப்பி ஓடிவிடுகின்றனர். காவலர்கள் அவர்களை பிடித்துத் தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் வெகுமதி அளிப்பதாக அறிவிக்கின்றனர். அவர்கள் மறைந்து வாழும் போது ஜம்பு குழந்தையிடம் நெருக்கமாகிறான், மற்ற இருவரும் குழந்தையை வெறு���்கின்றனர். ஆனால் அக்குழந்தை தனது அன்பால் மற்ற இருவரையும் கவர்கிறாள். இப்போது மூன்று பேரும் அக்குழந்தையை கடவுள் போல நம்புகிறார்கள். குழந்தை கீதா சாப்பிடாமல் அடம் பிடிக்கிறாள் . இதற்காக அவர்கள் கௌரி (பத்மினியை) நியமிக்கிறார்கள். கௌரியின் நடத்தையால் காவல் துறை அதிகாரி (எஸ். ஏ. அசோகன்) இதை எப்படியோ மோப்பம் பிடித்து விடுகிறார். பிறகு என்னவாயிற்று என்பதை படத்தின் மீதிக்கதை சொல்கிறது. +பேபி ராணி - பாப்பா என்கிற கீதா
+பத்மினி - கௌரி
+மேஜர் சுந்தரராஜன் - ஜம்பு
+இரா. சு. மனோகர் - ஜோசப்
+எஸ். வி. ராமதாசு - நசீர்
+எஸ். ஏ. அசோகன் - காவல் துறை அதிகாரி
+எஸ். வி. சகஸ்ரநாமம் காவல் துறை உயர் அலுவலர்
+தேங்காய் சீனிவாசன் - காவலர்
+டி. கே. பகவதி - மருத்துவர் ராமானாதன்
+மனோரம - காவலரின் மனைவி
+சோ - ஜோஸியர்
+கிருஷ்ணா - பாப்பாவின் தந்தை
+பண்டரிபாய் -கௌரியின் தாயார்
+கே. ஏ. தங்கவேலு - நாச்சி முத்து
+ஏ. கருணாநிதி - சிங்க முத்து
+வெண்ணிற ஆடை நிர்மலா
+ஜம்பு + +கலை: ராஜேந்திர குமார்
+புகைப்படம்: சிட்டி பாபு மற்றும் ஷ்யாம்
+வடிவம்: ஈஸ்வர்
+விளம்பரம்: எலிகன்ட்
+படக் கலவை: எஸ். ரங்கநாதன் விஜயா லபாரேடரிக்காக
+ஒலிப்பதிவு: ஜி. வி. ரமணன்
+பின்ணை ஒலிப்பதிவு: சுவாமிநாதன்
+நடனம்: பி. எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் கே. எஸ். ரெட்டி
+சண்டை: சேது மாதவன்
+வெளிப்புறம்: பிரசாத் புரடக்சன்ஸ் + +சிறந்த தமிழ்த் திரைப்பட பாடல்களுக்கான தேசிய அளவில் மிகவும் பாராட்டப்பட்டது மேலும் இரண்டு தேசிய விருதுகளை பெற்று கூடுதலாக 100 நாட்களுக்கு மேல் ஓடியது + +இப்படத்தின் இசை ம. சு. விசுவநாதன் பாடல்கள் கவிஞர் கண்ணதாசன். பாடல்களை டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி. பி. ஸ்ரீனிவாஸ், தாராபுரம் சுந்தர்ராஜன், ஏ. வீரமனி மற்றும் பி. சுசீலா ஆகியோர் பாடியிருந்தனர்.. + + +
+ +லட்சுமி கல்யாணம் + +லட்சுமி கல்யாணம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மூன்றெழுத்து + +மூன்றெழுத்து 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +முத்துச் சிப்பி (திரைப்படம்) + +முத்துச் சிப்பி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நாலும் தெரிந்தவன் + +நாலும் தெரிந்தவன் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நீலகிரி எக்ஸ்பிரஸ் (திரைப்படம்) + +நீலகிரி எக்ஸ்பிரஸ் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயா நிர்மளா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நீயும் நானும் + +நீயும் நானும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜ்ஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நேர்வழி + +நேர் வழி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஜி. பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நிமிர்ந்து நில் + +நிமிர்ந்து நில் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஒளி விளக்கு + +ஒளி விளக்கு 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பால் மனம் + +பால்மனம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். சேதுராமன் இயக்கத்தில் வெளி���ந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பணமா பாசமா + +பணமா பாசமா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இசை கே. வி. மகாதேவன், பாடல்கள் கவியரசு கண்ணதாசன். + + + + +பூவும் பொட்டும் + +பூவும் பொட்டும் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்தா மிராசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +புதிய பூமி + +புதிய பூமி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் எழுதியிருந்தனர். + +இப்படத்தில், டி. எம். சௌந்தரராஜன் பாடிய "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" பாடல் எம். ஜி. இராமச்சந்திரனின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக அமைந்தது. + + + + +புத்திசாலிகள் + +புத்திசாலிகள்1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அருண் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராதிகா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரகசிய போலீஸ் 115 + +ரகசிய போலீஸ் 115 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சத்தியம் தவறாதே + +சத்தியம் தவறாதே 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ஷீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +செல்வியின் செல்வம் + +செல்வியின் செல்வம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் த��ரைப்படமாகும். மோகன் காந்திராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சிரித்த முகம் + +சிரித்த முகம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜய நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சோப்பு சீப்பு கண்ணாடி + +சோப்பு சீப்பு கண்ணாடி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜய நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +டீச்சரம்மா + +டீச்சரம்மா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டானா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தாமரை நெஞ்சம் + +தாமரை நெஞ்சம் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேர்த் திருவிழா (திரைப்படம்) + +தேர்த் திருவிழா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தெய்வீக உறவு + +தெய்வீக உறவு 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தில்லானா மோகனாம்பாள் + +தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, தங்கவேலு, டி. எஸ். பாலையா, சுந்தரிபாய், நாகேஷ், மா. நா. நம்பியார், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய கதையை ஏ. பி. நாகராசன் திரைப்படமாக இயக்கினார். + +நாதஸ்வரம் வாசிப்பதில் மிகவும் புகழ்பெற்றவரான சண்முக சுந்தரம் (சிவாஜி கணேசன்) எதையும் நேர்பட பேசக்கூடியவர். பரதநாட்டியம் ஆடுவதில் மிகவும் திறமைசாலியான மோகனாம்பாள் (பத்மினி) இருவரும் தங்களது முதல் சந்திப்பிலேயே ஒருவரின் மேல் ஒருவர் காதல் வயப்படுகிறார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் இருவரும் சண்டையிட்டுப் பிரிகிறார்கள். அவர்கள் மீண்டும் எவ்வாறு இணைகிறார்கள் என்பதே இத்திரைப்படத்தின் மீதக் கதையாகும். + +கே. வி. மகாதேவன் இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவியரசு கண்ணதாசன் ஆவார். + + + +நூல்: புகழ்பெற்ற 100 சினிமா கலைஞர்கள்; ஆசிரியர்: ஜெகாதா; பதிப்பகம்: சங்கர் பதிப்பகம் + + + + +உயிரா மானமா + +உயிரா மானமா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜய நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அக்கா தங்கை + +அக்கா தங்கை 1969 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ம் திகதி வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்பளிப்பு (திரைப்படம்) + +அன்பளிப்பு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அஞ்சல் பெட்டி 520 + +அஞ்சல் பெட்டி 520 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்னையும் பிதாவும் + +அன்னையும் பிதாவும் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அத்தை மகள் (திரைப்படம்) + +அத்தை மகள் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமன்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அவரே என் தெய்வம் (திரைப்படம்) + +அவரே என் தெய்வம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. என். சண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆயிரம் பொய் + +ஆயிரம் பொய் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +காப்டன் ரஞ்சன் + +காப்டன் ரஞ்சன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வனஜா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +செல்லப் பெண் + +செல்லப் பெண் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இணைப்புத் தலைப்புகே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தெய்வமகன் + +தெய்வமகன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படம் இது. + + + + +ஐந்து லட்சம் (திரைப்படம்) + +ஐந்து லட்சம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +குருதட்சணை (திரைப்படம்) + +குருதட்சணை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தம��ழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இரு கோடுகள் + +இரு கோடுகள் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கண்ணே பாப்பா + +கண்ணே பாப்பா 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கன்னிப் பெண் + +கன்னிப் பெண் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காவல் தெய்வம் (திரைப்படம்) + +காவல் தெய்வம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெயகாந்தனின் "கை விலங்கு" என்ற புதினத்தின் திரைவடிவமாக, கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +குலவிளக்கு + +குல விளக்கு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +குழந்தை உள்ளம் + +குழந்தை உள்ளம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரியின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மகனே நீ வாழ்க + +மகனே நீ வாழ்க 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மகிழம்பூ (த���ரைப்படம்) + +மகிழம்பூ 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மனைவி (திரைப்படம்) + +மனைவி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. கே. ராமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மனசாட்சி (திரைப்படம்) + +மனசாட்சி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மன்னிப்பு (திரைப்படம்) + +மன்னிப்பு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நம் நாடு (1969 திரைப்படம்) + +நம் நாடு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நான்கு கில்லாடிகள் + +நான்கு கில்லாடிகள் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +தங்களது குற்றங்களுக்காகச் சிறைத்தண்டனையில் இருந்து மீண்டுவரும் நான்கு நண்பர்கள் திரைப்படம் எடுத்து தம் குடும்பத்திற்குப் பண உதவி செய்ய முயலுகின்றனர் . பிரம்மா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படத்தயாரிப்பில் இறங்குகிறார்கள். நரேந்திரன், சந்தோஷ்குமாரி என்னும் முன்னணி நடிகர்களை வைத்து ஒரு கொலைச் சம்பவத்தை மையப்படுத்தி படமும் எடுக்கின்றனர். சந்தோஷ்குமாரி, இயக்குனர் குமார் இருவருக்கும் இடையே காதல் மலருகிறது. சந்தோஷ்குமாரியை மணக்க விரும்பும் நரேந்திரன் தனது கையாள் மூலம் இயக்குனர் குமாரைக் கொல்ல ஏற்பாடு செய்கிறான். கொலை முயற்சி தோல்வியுற்று, நரேந்திரனும் அவன் கையாளும் கைது செய்யப்படுகிறார்கள். இயக்குனர் குமார் ஜெய்சங்கர், தயாரிப்பாளர் ஐயர் மனோகர், மேனேஜர் நடனம் தேங்காய் சீனிவாசன், பார்ட்னர் பாபு சுருளிராஜன் தங்கள் தயாரிப்பான "பூக்காரி" படத்தை வெளியிடுகிறார்கள். அந்த படத்தைத் தயாரித்து வெளியிட தாம் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு நால்வரும் சிறைக்குச் செல்கிறார்கள். படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் தமது குடும்பத்தாரைச் சந்தித்து சீக்கிரம் திரும்பி வருவதாக நான்கு நண்பர்களும் விடைபெறுகிறார்கள். + + + + +நில் கவனி காதலி + +நில் கவனி காதலி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நிறைகுடம் (திரைப்படம்) + +நிறைகுடம்1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஓடும் நதி + +ஓடும் நதி 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பால் குடம் (திரைப்படம்) + +பால்குடம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பெண்ணை வாழவிடுங்கள் + +பெண்ணை வாழ விடுங்கள் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பொண்ணு மாப்பிள்ளை + +பொண்ணு மாப்பிள்ளை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். ராமநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், காஞ்சனா மற்றும் பலரும் நடித���திருந்தனர். + + + + +பூவா தலையா + +பூவா தலையா 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெய்சங்கர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +பொற்சிலை + +பொற்சிலை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இரத்த பேய் + +இரத்த பேய் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மூபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கலைக்குமார், சுசீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சாந்தி நிலையம் + +சாந்தி நிலையம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற "இயற்கை என்னும் இளையகன்னி" பாடல் எஸ். பி. பாலசுப்பிரமணியம் திரைப்படங்களில் பாடிய முதலாவது பாடலாகும். + + + + + +சிங்கப்பூர் சீமான் + +சிங்கப்பூர் சீமான் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சுபாஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சிவந்த மண் + +சிவந்த மண் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சுபதினம் + +சுப தினம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாலா���்டு (திரைப்படம்) + +தாலாட்டு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விபின் தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜபாண்டியன், விஜயஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்க மலர் + +தங்க மலர் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தங்கச் சுரங்கம் (திரைப்படம்) + +தங்கச் சுரங்கம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திருடன் (திரைப்படம்) + +திருடன் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +துலாபாரம் (திரைப்படம்) + +துலாபாரம் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விண்செண்ட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சாரதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உலகம் இவ்வளவு தான் + +உலகம் இவ்வளவு தான் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வா ராஜா வா + +வா ராஜா வா 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபாகரன், சுமதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அனாதை ஆனந்தன் + +அனாதை ஆனந்தன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சி. ஐ. டி. சங���கர் + +சி. ஜ. டி. சங்கர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஏ. சகுந்தலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +வேதா இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். + + + + +என் அண்ணன் + +என் அண்ணன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +எங்க மாமா + +எங்க மாமா 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எங்கள் தங்கம் + +எங்கள் தங்கம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்த படத்தை முரசொலி மாறன் தயாரித்தார் + +எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. + + + + +எங்கிருந்தோ வந்தாள் + +எங்கிருந்தோ வந்தாள் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எதிர்காலம் (திரைப்படம்) + +எதிர்காலம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். சோலமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +எதிரொலி (திரைப்படம்) + +எதிரொலி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஜீவநாடி + +ஜீவநாடி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. சுப்ரமணியன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காலம் வெல்லும் + +காலம் வெல்லும் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +சங்கர் கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். + + + + +கல்யாண ஊர்வலம் + +கல்யாண ஊர்வலம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கண்மலர் + +கண் மலர் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கண்ணன் வருவான் + +கண்ணன் வருவான் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி, முத்துராமன், நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +கதை:- A. குருசாமி; திரைக்கதை, வசனம்:- A.L. நாராயணன்; தயாரிப்பு:- V.S. ரங்கநாதன். + +சங்கர் - கணேஷ் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். + + + + +கஸ்தூரி திலகம் + +கஸ்தூரி திலகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தர்ராஜன், சிவகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +காதல் ஜோதி + +காதல் ஜோதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +காவியத் தலைவி + +காவியத் தலைவி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்ச���்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +தேவியும் சுரேஷும் காதலித்தனர். சுரேஷ் பாரிஸ்டர் படிப்பிற்கு வெளிநாட்டு சென்றார். தேவியின் தந்தை அந்த நேரத்தில் கடன் தொல்லையால் அவதிப்பட்டார். கடன் கொடுத்த பரந்தாமன் 'பணத்தை திருப்பி கொடு அல்லது உன் மகளை கொடு' கேட்டான். பணத்தை திருப்பி கொடுக்க முடியாததால் தேவி பரந்தாமனை மணந்தாள். குதிரை சூதாட்டத்தில் ஆர்வம் கொண்ட பரந்தாமன் தன்னிடம் இருந்த பணம் முழுவதையும் இழந்தான். பணத்திற்காக மனைவியை விற்கமுற்பட்டான். அங்கிருந்து தப்பி ஓடி வந்து ஒரு ரயிலில் ஏறுகிறாள் தேவி. + + +எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். + + + + +மாலதி (திரைப்படம்) + +மாலதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாணவன் (திரைப்படம்) + +மாணவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கமல்ஹாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மாட்டுக்கார வேலன் + +மாட்டுக்கார வேலன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +கே. வி. மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். + + + + +நம்மவீட்டு தெய்வம் + +நம்ம வீட்டு தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +== பாடல்கள் + + + + +நம்ம குழந்தைகள் + +நம்ம குழந்தைகள் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீகாந்த் இயக்கத்தில் வெ���ிவந்த இத்திரைப்படத்தில் மேஜர் சுந்தரராஜன், பண்டரி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1970 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில விருது பெற்றது. + +இத்திரைப்படத்தின் கதை குழந்தைகள் எழுத்தாளர் பூவண்ணன் எழுதிய “ஆலம் விழுது” ஆகும். + + + + +நவக்கிரகம் (திரைப்படம்) + +நவக்கிரகம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. + + + + +நிலவே நீ சாட்சி + +நிலவே நீ சாட்சி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நூறாண்டு காலம் வாழ்க + +நூறாண்டு காலம் வாழ்க 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். சம்பத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாதுகாப்பு (திரைப்படம்) + +பாதுகாப்பு 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பத்தாம் பசலி + +பத்தாம் பசலி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +வி. குமார் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் ஆலங்குடி சோமு. + + + + +பெண் தெய்வம் + +பெண் தெய்வம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +���ாமன் எத்தனை ராமனடி + +ராமன் எத்தனை ராமனடி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சங்கமம் (1970 திரைப்படம்) + +சங்கமம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +டி. கே. ராமமூர்த்தி இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் கண்ணதாசன். + + + + + +சிநேகிதி + +சிநேகிதி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சொர்க்கம் (திரைப்படம்) + +சொர்க்கம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்த இப்படத்தின் பாடல்களை கவிஞர் கண்ணதாசனும் ஆலங்குடி சோமுவும் எழுதியுள்ளார்கள். + + + + +தபால்காரன் தங்கை + +தபால்காரன் தங்கை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +தலைவன் (திரைப்படம்) + +தலைவன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. தோமஸ் மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +எஸ். ஏம். சுப்பையா நாயுடு இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் வாலி. + + + + +தரிசனம் (திரைப்படம்) + +தரிசனம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்��டத்தில் ஏ. வி. எம். ராஜன், புஷ்பலதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேடிவந்த மாப்பிள்ளை + +தேடி வந்த மாப்பிள்ளை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திருடாத திருடன் + +திருடாத திருடன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். பி. சாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திருமலை தென்குமரி + +திருமலை தென்குமரி 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சீர்காழி கோவிந்தராஜன், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வைராக்கியம் + +வைராக்கியம் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வீட்டுக்கு வீடு + +வீட்டுக்கு வீடு1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது கோபு எழுதி அரங்கேற்றிய "திக்கு தெரியாத வீட்டில்" என்னும் நாடகத்தைத் தழுவி எடுக்ப்பட்ட திரைப்படமாகும், சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +விளையாட்டுப் பிள்ளை + +விளையாட்டுப் பிள்ளை 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வியட்நாம் வீடு + +வியட்நாம் வீடு 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஏன் + +ஏன் 1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆதி பராசக்தி (திரைப்படம்) + +ஆதி பராசக்தி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +அன்புக்கு ஒரு அண்ணன் + +அன்புக்கு ஒரு அண்ணன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அன்னை வேளாங்கண்ணி (திரைப்படம்) + +அன்னை வேளாங்கண்ணி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. தங்கப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +இப்படத்திற்கு ஜி. தேவராஜன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கண்ணதாசன், வாலி, மற்றும் அய்யாசாமி ஆகியோர் எழுதியிருந்தனர். + + + + +அருணோதயம் (திரைப்படம்) + +அருணோதயம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அருட்பெருஞ்ஜோதி + +அருட்பெரும்ஜோதி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கே இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகராஜன், தேவகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அவளுக்கென்று ஒரு மனம் + +அவளுக்கென்று ஒரு மனம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர் க��்ணதாசன் எழுதியிருந்தார். + + + + +பாபு (திரைப்படம்) + +பாபு 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +இரு துருவம் + +இரு துருவம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராமனாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +இருளும் ஒளியும் + +இருளும் ஒளியும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டானா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +ஜஸ்டிஸ் விஸ்வநாதன் + +ஜஸ்டிஸ் விஸ்வநாதன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், சி. ஜ. டி சகுந்தலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +கண்காட்சி + +கண்காட்சி (() 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +கண்ணன் கருணை + +கண்ணன் கருணை1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். டி. ராம்ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கெட்டிக்காரன் + +கெட்டிக்காரன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லீலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +குலமா குணமா + +குலமா குணமா 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +மீண்டும் வாழ்வேன் + +மீண்டும் வாழ்வேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. என். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +முகமது பின் துக்ளக் (திரைப்படம்) + +முகமது பின் துக்ளக் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இது 1968ல் சோ இயக்கத்தில் அங்கத நாடகமாக அரங்கேறிய பின் வெளிவந்த திரைப்படம். இத்திரைப்படத்தில் சோ, மனோரமா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மூன்று தெய்வங்கள் + +மூன்று தெய்வங்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தத்தா மிராசி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நான்கு சுவர்கள் + +நான்கு சுவர்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +1960 + +1960 (MCMLX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும். + + + + + + + + + +நீரும் நெருப்பும் + +நீரும் நெருப்பும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்தார். + + + + +நீதி தேவன் + +நீதி தேவன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். தேவராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நூற்றுக்கு நூறு + +நூற்றுக்கு நூறு 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஒரு தாய் மக்கள் + +ஒரு தாய் மக்கள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, முத்துராமன், அசோகன், பண்டரி பாய், எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாட்டொன்று கேட்டேன் + +பாட்டொன்று கேட்டேன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பொய் சொல்லாதே + +பொய் சொல்லாதே 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். பாலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பிராப்தம் (திரைப்படம்) + +பிராப்தம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாவித்திரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சாவித்திரி, சிவாஜி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +புதிய வாழ்க்கை + +புதிய வாழ்க்கை 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயபாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +புன்னகை (திரைப்படம்) + +புன்னகை 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரங்க ராட்டினம் + +ரங்க ராட்டினம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரிக்சாக்காரன் (திரைப்படம்) + +ரிக்‌ஷாக்காரன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுள��� மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். + + + + +சபதம் (திரைப்படம்) + +சபதம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சவாலே சமாளி + +சவாலே சமாளி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா,வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சூதாட்டம் (திரைப்படம்) + +சூதாட்டம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதுரை திருமாறன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சுடரும் சூறாவளியும் + +சுடரும் சூறாவளியும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ஆர். புட்டண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சுமதி என் சுந்தரி + +சுமதி என் சுந்தரி 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்க கோபுரம் + +தங்க கோபுரம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். சோலமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்கைக்காக + +தங்கைக்காக 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தெய்வம் பேசுமா + +தெய்வம் பேசுமா 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பானுசித்ரா ஜகத் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், நிர்மளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேன் கிண்ணம் + +தேன் கிண்ணம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேனும் பாலும் + +தேனும் பாலும் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தேரோட்டம் (திரைப்படம்) + +தேரோட்டம் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. அரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருமகள் (திரைப்படம்) + +திருமகள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +துள்ளி ஓடும் புள்ளிமான் + +துள்ளி ஓடும் புள்ளிமான் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. ராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +உத்தரவின்றி உள்ளே வா + +உத்தரவின்றி உள்ளே வா (Uttharavindri Ulle Vaa) 1971 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும். சித்ராலயா பிக்சர்ஸ் சார்பில் ஸ்ரீதர் தயாரிப்பில், என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா ,நாகேஷ், ரமா பிரபா, வெண்ணிற ஆடை மூர்த்தி, சச்சு, தேங்காய் சீனிவாசன், மற்றும் ஜெமினி மாலி போன்ற பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் கதையை சித்ராலயா கோபு எழுதி, எம். எஸ். விஸ்வநாதன் இசையைமைத்துள்ளார். + + + + +உயிர் (1971 திரைப்படம்) + +���யிர் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சரோஜா தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வீட்டுக்கு ஒரு பிள்ளை + +வீட்டுக்கு ஒரு பிள்ளை 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வெகுளிப் பெண் + +வெகுளிப் பெண் (Vegulipen) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். தேவதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். வி. குமார் இசை அமைப்பில், எஸ். எம். அப்துல் ஜாபர் தயாரிப்பில் 2 ஜூலை 1971 ஆம் தேதி வெளியானது. சிறந்த தமிழ்ப் படத்திற்கான இந்திய தேசிய விருதைப் பெற்றது. + +ஜெமினி கணேசன், தேவிகா, வெண்ணிறாடை நிர்மலா, ஆர். முத்துராமன், வி. கே. ராமசாமி, நாகேஷ், ராதிகா, சச்சு, எம். சுந்தரி பாய், கே. பாலாஜி, எஸ். வரலக்ஷ்மி, எஸ். ராமா ராவ். + +காவல் ஆய்வாளர் ராமு (ஜெமினி கணேசன்) - ஜானகி (தேவிகா) தம்பதியருக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஜானகியின் வெகுளியான தங்கை ராதா, அவர்களுடன் வாழ்ந்து வருகிறாள். ஜானகி மருத்துவர் எஸ். வி. லட்சுமியுடன் நெருக்கமாக இருந்து வருகிறாள். லட்சுமியின் மகன் மனோகர் (கே. பாலாஜி) ஒரு மனநல மருத்துவர் ஆவார். ராமுவின் சகோதரர் முத்து சென்னைக்கு திரும்புகிறார். ரயில் வண்டியில், பூபதி ராஜாவின் மகள் ராணியை சந்திக்கிறார் முத்து. முத்துவின் வெற்றியை கேள்விப்பட்டு வெகுவாக ஈர்க்கப்படுகிறாள் ராணி. + +ராமு தன் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்கிறான். மோகனின் நடவடிகைகைளை பார்த்து, கண்டிக்கிறான் ஜானகி. ஆனாலும் ராதாவை காதலிப்பதாக திட்டவட்டமாக கூறிவிடுகிறான். + +பின்னர், முத்து-ராதா திருமணத்தை நடத்த ராமு-ஜானகி முடிவு செய்கிறார்கள். மாறாக ராதாவிற்கு அதில் ஒப்புதல் இல்லை. அவ்வாறாக ஒருமுறை ராமு ஊரில் இல்லாத பொழுது, பாலில் தூக்க மாத்திரையை கலந்து ராதாவுக்கு கொடுக்கிறான் மோகன். மறுநாள், ராணுவ முகாமிற்கு சென்றுவிடுகிறான். மூன்று மாதங்களுக்கு பிறகு ராதா கர்ப்பமாக இருக்கிறாள் என்பது தெரியவருகிறது ஆனால் அதற்கு காரணம் யார் என்று தெரியவில்லை. இறுதியில் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கண்டிபிடித்தலே மீதிக் கதையாகும். + +வெள்ளிக்கிழமை என்ற நாடகத்தைத் தழுவிய வெகுளிப் பெண் திரைப்படத்தை எஸ். எஸ். தேவதாஸ் இயக்கினார். + +இப்படத்திற்கு, வி. குமார் இசை அமைத்தார். + + + + + +யானை வளர்த்த வானம்பாடி மகன் + +யானை வளர்த்த வானம்பாடி மகன் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயநிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆசீர்வாதம் (திரைப்படம்) + +ஆசீர்வாதம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அகத்தியர் (திரைப்படம்) + +அகத்தியர் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் மனோகர், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + +குன்னக்குடி வைத்தியநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை உளுந்தூர்பேட்டை சண்முகம், பூவை செங்குட்டுவன், கே. டி. சந்தானம், இரா. பழனிசாமி, புத்துனேரி சுப்பிரமணியம், நெல்லை அருள்மணி ஆகியோர் எழுதியிருந்தனர். + + + + +அன்னை அபிராமி (திரைப்படம்) + +அன்னை அபிராமி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. என். வேலுமணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அன்னமிட்ட கை + +அன்னமிட்ட கை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +அன்னமிட்ட கை - தமிழிசை + + + +அப்பா டாட்டா + +அப்பா டாட்டா 1972 ஆம் ஆண்டு வ��ளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,பத்மினி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவள் (1972 திரைப்படம்) + +அவள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சசிகுமார், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +அவசரக் கல்யாணம் (திரைப்படம்) + +அவசரக் கல்யாணம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +டில்லி டு மெட்ராஸ் + +டில்லி டு மெட்ராஸ் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +எல்லைக்கோடு (திரைப்படம்) + +எல்லைக் கோடு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ராஜஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +என்ன முதலாளி சௌக்யமா + +என்ன முதலாளி சௌக்யமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மல்லியம் ராஜகோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கங்கா (திரைப்படம்) + +கங்கா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ராஜ் கோகிலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஞான ஒளி + +ஞானஒளி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சாரதா, மேஜர் சுந்தரராஜன் ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்திருந்தனர். எம். ஆர். ஆர். வாசு உட்பட மற்றும் ப���ரும் நடித்திருந்தனர். + +இந்தப் படத்தில் நான்கு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பாடல்களைக் கண்ணதாசன் எழுதியிருந்தார். இவை, + + + + +ஹலோ பார்ட்னர் + +ஹலோ பார்ட்னர் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஷ், விஜயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இதய வீணை + +இதய வீணை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், மஞ்சுளா, லெட்சுமி, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இதோ எந்தன் தெய்வம் + +இதோ எந்தன் தெய்வம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். விஜயா, ஆர். முத்துராமன், சுந்தர்ராஜன், இரா. சு. மனோகர், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு வசனத்தை வியட்நாம் வீடு சுந்தரமும் பாடல்களை கவிஞர் கண்ணதாசனும் எழுதியிருந்தனர். + + + + +ஜக்கம்மா + +ஜக்கம்மா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எம். கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கனிமுத்து பாப்பா + +கனிமுத்து பாப்பா ("Kanimuthu Pappa") என்பது 1972ஆம் ஆண்டில் எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சுப்பிரமணிய ரெட்டியார் தயாரித்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், முத்துராமன், லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு டி. வி. ராஜூ இசையமைத்திருந்தார். + + + + + + +கண்ணா நலமா + +கண்ணா நலமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், ஜெயந்தி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கண்ணம்மா + +கண்ணம்மா1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ��த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை, உரையாடலை எழுத, எம். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பாரதியின் கண்ணம்மா பாடல்கள் பிரசித்தி பெற்றவை. + + + + +கருந்தேள் கண்ணாயிரம் + +கருந்தேள் கண்ணாயிரம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராமசுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி, இரா. சு. மனோகர், தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காசேதான் கடவுளடா (1972 திரைப்படம்) + +காசே தான் கடவுளடா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், லட்சுமி, மனோரமா, தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +காதலிக்க வாங்க + +காதலிக்க வாங்க (Kadhalikka Vanga) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஐ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்), மேஜர் சுந்தரராஜன் , மனோரமா, கவிதா, விஜயாகிரிஜா மற்றும் தேங்காய் சீனிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். கங்கா, காவேரி மற்றும் யமுனா, என்ற மூன்று சகோதரிகள், தங்கள் தந்தையிடமிருந்து ஒரு வைரத்தை திருட திட்டமிடுகின்றனர். ஆனால் வைரத்தைத் திருடுகையில் ரமேஷ், என்ற ஒரு திருடனால் திட்டங்கள் யாவும் தோல்வியடைந்தன. + +கங்கா (மனோரமா), யமுனா (விஜயா கிரிஜா) மற்றும் காவேரி (கவிதா) ஆகிய மூன்று சகோதரிகளும் ஒரு விடுதியில் சந்திக்கிறார்கள். காவேரி தனது சகோதரியிடம் தனது வீட்டிலேயே திருடப்போவதாக ஒரு பந்தயம் கட்டுகிறாள். இதை கொள்ளைக்காரன் ரமேஷ் (ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) ) மறைந்திருந்து கேட்கிறான். தமிழரசு ஜெய்சங்கர் அந்த விடுதியில் பணி புரிந்து வருகிறான். காவேரி தனது தந்தை தேங்காய் சீனிவாசனை மிரட்டி வீட்டிலுள்ள வைரத்தை எடுத்து வெளியில் நிற்கும் தனது மற்ற இரு சகோதரிகளிடம் காண்பிக்கிறாள் அதே சமயம் அங்கே மறைந்திருந்த ரமேஷ் அந்த வைரத்தை அவளிடமிருந்து தட்டிப் பறிக்கிறான். யமுனா ரமேஷின் (ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)) வண்டி எண்ணை கவனித்து அனைவரும் சேர்ந்து காவல் நிலையத்தில் நடந்த திருட்டைப்பற்றி புகார் அளிக்கின்றனர். + +ரமேஷ் (ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்) அவரது வாகனத்தை ஓட்டிச்செல்லும்போது, காவலர்கள் தடுக்க அவர் அவர்களிடமிருந்து தப்பித்து, ஓடி, ஒரு சுவரின் பின்னால் தனது கையிலிருக்கும் பெட்டியை வீசுகிறார். அவ்வழியே தனது வீட்டிற்குத் திரும்பி வரும் தமிழரசு (ஜெய்சங்கர்) அப்பெட்டியை திறக்க ,வைரம் உள்ளே இருப்பதைப் பார்க்கிறார், அங்கே திடீரென்று வந்த, ஜூடோ (மேஜர் சுந்தரராஜன்) பெட்டியை தமிழரசினிடமிருந்து பறித்துச் செல்கிறார். பின்னர் நடக்கும் பல சுவாரஸ்யமான கதை நகர்த்தளில் பல திருப்பங்கள் ஏற்படுகிறது. கடைசியாக தேங்காய் சீனிவாசன் தனது மூன்று மகள்களயும் மும்பை துப்பறியும் அதிகாரிகளான ஜூடோ (மேஜர் சுந்தரராஜன்) , ரமேஷ்(ஸ்ரீகாந்த் (பழைய தமிழ் நடிகர்)) மற்றும் டில்லி துப்பறியும் அதிகாரியான தமிழரசு ஆகிய மூவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார். + + +இப்படத்தின் இசை ஜே. வி. ராகவா நாயுடு பாடல்கள் எழுதியது கவிஞர் வீரபாண்டியன். +=மேற்கோள்கள்== + + + + +குறத்தி மகன் + +குறத்தி மகன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஆர். விஜயா, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாப்பிள்ளை அழைப்பு + +மாப்பிள்ளை அழைப்பு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மிஸ்டர் சம்பத் + +மிஸ்டர் சம்பத் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, மனோரமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நல்ல நேரம் + +நல்ல நேரம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நான் ஏன் பிறந்தேன் + +நான் ஏன் பிறந்தேன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +இத்திரைப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். + + + + +நவாப் நாற்காலி + +நவாப் நாற்காலி (Nawab Naarkali) 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலகிருஷ்ணன் தயாரிப்பில் சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் இப்படம் வெளிவந்தது கோமல் சுவாமிநாதன் என்பார் கதையை எழுதியுள்ளார். இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லஷ்மி ,நாகேஷ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் ரமாபிரபா, வி. கே. ராமசாமி, எஸ். வி. சகஸ்ரநாமம், மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். கோமல் சுவாமிநாதனால் இதே பெயரில் எழுதப்பட்ட நாடகத்தை தழுவி இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. + +அப்பாசாமி (வி. கே. ராமசாமி) இவர் ஒரு அப்பளம் விற்று வருபவர். அவரது மனைவி பாக்யம் (எஸ். என். பார்வதி), அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ரவி (ஜெய்சங்கர்) கால்பந்து விளையாடும் ஒரு சட்டக் கல்லூரி மாணவன். அவன் பகுதி நேரமாக, வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகிப்பது, மற்றும் ஆசிரியராகவும் பணியாற்றி தனது கல்வி மற்றும் விடுதி செலவினங்களை ஈடு செய்து கொள்கிறான். + +தாண்டவம் (எஸ். வி. சகஸ்ரநாமம்) அவரது மனைவி (காந்திமதி மகன் சுப்பு (நாகேஷ்) மற்றும் ஒன்பது குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்துடன் வசித்து வருகிறார். காஞ்சனா லட்சுமி அவரது தந்தை ராஜவேலுவுடன் (வி. எஸ். ராகவன்) உடன் வாழ்கிறார். அவரது மேலாளர் நேசமணி பொன்னையா (ஏ.ஆர். சீனிவாசன்). ராஜவேலு ஏதும் அறியாத அப்பாவி. நேசமணி பொன்னையாவால் வழங்கப்பட்ட இரண்டு லட்சம் ரூபாயை கொல்கத்தா அரண்மனை விடுதியில் தொலைத்து விடுகிறார். செவிலி கிறிஸ்டி (ராமபிரபா) ராஜவேலுவை கவனித்து வருகிறார். ஒரு நாள், சுப்பு ஆங்கிலத் திரைப்படம் பார்ப்பதற்காக 25 ரூபாயை தனது தந்தையிடம் கேட்கிறான். ஆனால் அவர் மறுத்துவிடுகிறார். எனவே, சுப்பு தனது வீட்டிலுள்ள பழைய நாற்காலியை (இது நவாபினுடையது என தனது மனைவிடம் தாண்டவம் கூறியுள்��ார்.) திருடிச் சென்று ஏலத்தில் ரூ.25 க்கு விற்று விடுகிறான். ஏலக்கடைக்காரர் ரூ.250 க்கு அப்பாசாமியிடம் அந்த நாற்காலியை நவாப் வைத்திருந்ததாகவும் அதனால் அவருக்கு நிறைய குழந்தைகள் உண்டாயிற்று எனவும் பொய் சொல்லி விற்று விடுகிறார். அப்பாசாமி அந்த நாற்காலியை வீட்டிற்கு எடுத்து வருகிறார். + +இதற்கிடையில், அந்த நாற்காலியை சுப்பு ஏலத்தில் விற்றதையும், பின்னர் அது, அப்பாசாமியிடம் உள்ளதையும் அறிந்த தாண்டவம் சுப்புவைத் திட்டி வீட்டை விட்டு வெளியேற்றுகிறார். அப்பாசாமியின் வீட்டிலிருந்து எப்படியாவது அந்த நாற்காலியை திருட ஒரு திட்டம் தீட்டுகிறார். அதற்காக, அவர் ஒரு சாமியாரைப் போல வேடமிட்டு அப்பாசாமியிடம், அவர் ஒரு குழந்தையை பெற வேண்டுமென்றால் 10 குழந்தைகளுடன் உள்ள குடும்பத்தை அவரது வீட்டில் வாடகைக்கு வைக்க வேண்டுமெனக் கூறுகிறார். (ஆனால் சுப்புவை வீட்டை விட்டு வெளியேற்றியதை மறந்து விடுகிறார்). இந்த சமயத்தில் ரவி தாண்டவத்தை சந்தித்து தனக்கு வாடகைக்கு வீடொன்று வேண்டுமென கேட்கிறான். ரவியை தனது மகனாக நடிக்க வைத்து ,அனைவரும் அப்பாசாமியின் வீட்டிற்குள் வருகின்றனர். காஞ்சனா, தன்னை அப்பாசாமியின் சகோதரியின் மகள் எனக் கூறிக் கொண்டு அவ்வீட்டிற்குள் வருகிறான். ஏற்கனவே காஞ்சனா, ரவிதான் இரண்டு லட்சத்தை திருடியிருக்க வேண்டும் என சந்தேகம் கொண்டுள்ளாள். அந்த வீட்டிற்குள் வந்த பின்னர்தான் ரவி அந்த இரண்டு லட்ச ரூபாயைத் திருடவில்லை எனத் தெரிய வருகிறது. அவளது சந்தேகம் தற்போது சுப்புவிடமும், அப்பாசாமியின் பக்கமும் திரும்புகிறது. பின்னர், அவர்களும் அப்பாவிகள் என விசாரித்து தெரிந்து கொள்கிறாள். ரவி ஒரு நாள் இரவு மூன்று நபர்கள் நவாபின் நாற்காலியை வீட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்வதை காண்கிறான். அவன் நாற்காலியையும், ரூபாய் 2 லட்சத்தையும் மீட்க ஒரு நாடகமாடி அந்த நாற்காலியை கிழித்து விடுகிறான். அதில் மறைத்து வைத்த பணம் வெளிவருகிறது. தாண்டவம் அது தனது பணமென்றும் கூறுகிறார். ஆனால் விசாரணையில் அது ராஜவேலுவால் தரப்பட்டது என்கிறார். அதை நம்பாத தாண்டவம், ராஜவேலுவின் வீட்டிற்குச் செல்கிறார். பணம் பறிபோனதை அறிந்த ராஜவேலு பைத்தியாமாகிறார். இத்தனை நாளாக அவர் நடித்து வந்துள்ளார். இது கருப்புப் பணமென்���தால் அரசாங்கத்திடம் ஒப்படைக்க ரவி முடிவெடுக்கிறான். தாண்டவனையும், அவரது குடும்பத்தாரையும் வீட்டை விட்டு வெளியேறுமாறு அப்பாசாமி கூறுகிறார். ஆனால் அவரது மனைவி கர்ப்பமாக இருப்பதாகக் கேள்விப்பட்டவுடன், அவர் மனதை மாற்றிக்கொண்டு, எல்லோரும் அவருடனேயே தங்கிக்கொள்ளக் கேட்டுக்கொள்கிறார். + + + +எம். எஸ். விஸ்வநாதன் பாடல்களை கண்ணதாசன் எழுத எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்துள்ளார். + + + + +நீதி (திரைப்படம்) + +நீதி 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பதிலுக்கு பதில் + +பதிலுக்கு பதில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பட்டிக்காடா பட்டணமா + +பட்டிக்காடா பட்டணமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +"== வெளி இணைப்புகள் == + + + + +பிள்ளையோ பிள்ளை + +பிள்ளையோ பிள்ளை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி கதை திரைக்கதை, உழையாடலை எழுத, கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மு. க. முத்து, லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். மு. கருணாநிதியின் சொந்த படம். இந்தப் படத்தை கிரஸன்ட் பிலிம்ஸ் தயாரித்தது. + +2ஜி அலைக்கற்றை ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் ஈடிஏ குழுமத்திற்கும் திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்திற்கும் உள்ள நெருக்கத்தை இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டதைப் பற்றி அதிமுக பொதுச்செயலாளர் செயலலிதா 2010ல் கோவையில் நடந்த +ஆர்ப்பாட்டத்தில் தெரிவித்தார். + + + + +பொன் மகள் வந்தாள் + +பொன்மகள் வந்தாள் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விஜய நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்���ில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +புகுந்த வீடு + +புகுந்த வீடு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சந்திரகலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ரகசியப்பெண் 117 + +ரகசியப் பெண் 117 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அனுராதா தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்குமார், அனுராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜா (திரைப்படம்) + +ராஜா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராமன் தேடிய சீதை + +ராமன் தேடிய சீதை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராணி யார் குழந்தை + +ராணி யார் குழந்தை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சங்கே முழங்கு + +சங்கே முழங்கு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லட்சுமி,வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சவாலுக்கு சவால் + +சவாலுக்கு சவால் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எஸ். வேணு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தாய்க்கு ஒரு பிள்ளை + +தாய்க்கு ஒரு பிள்ளை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பட்டு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தங்கதுரை + +தங்கதுரை1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் சேகர், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தர்மம் எங்கே + +தர்மம் எங்கே 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தவப்புதல்வன் + +தவப்புதல்வன் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா, பண்டரிபாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைத்தவர் எம். எஸ். விஸ்வநாதன் + + + + +தெய்வ சங்கல்பம் + +தெய்வ சங்கல்பம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +தெய்வம் (திரைப்படம்) + +தெய்வம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். ஏ. திருமுகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருபானந்த வாரியார்,ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +முருகனின் அருள் திருவிளையாடல்கள் ஆறினை அக்காலத்தின் முறைமையில் நடைபெற்றதைப்போல் கிருபானந்த வாரியார் தம் சொற்பொழிவில் மக்களுக்கு அறிவிப்பதைப்போன்று தொடங்குகிறது. தனித்தனி பிரச்சனைகளும் அதனை முருகன் தன் திருவிளையாடலில் ஆட்கொள்ளுதலுமாக காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. + +[[பகுப்பு:[[பகுப்பு:நாகேஷ் நடித்த திரைப்படங்கள்]] +[[பகுப்பு:ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்]] +[[பகுப்பு:சௌகார் ஜானகி நடித்த திரைப்படங்கள்]] + + + +திக்குதெரியாத காட்டில் + +திக்கு தெரியாத காட்டில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருநீலகண்டர் (1972 திரைப்படம்) + +திருநீலகண்டர் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +உனக்கும் எனக்கும் + +உனக்கும் எனக்கும் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். மணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், பாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வரவேற்பு + +வரவேற்பு 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜ. என். மூர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயா கௌசல்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வசந்த மாளிகை + +வசந்த மாளிகை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ, வி. எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 1 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. + + + + +வாழையடி வாழை + +வாழையடி வாழை 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், பிரமிளா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வெள்ளிவிழா + +வெள்ளி விழா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன்,வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +யார் ஜம்புலிங்கம் + +யார் ஜம்புலிங்கம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். கோபிநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்குமார், ஜோதி லக்ஸ்மி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆரவல்லி சூரவல்லி + +ஆரவல்லி சூரவல்லி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஜி. எஸ். பாகவதர் கதை வசனம் எழுதினார். பாபநாசம் சிவன், ஜி. எஸ். பாகவதர் பாடல்களை இயற்றினார்கள். ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். + + + + +அர்த்தனாரி (திரைப்படம்) + +அர்த்தனாரி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +குமரகுரு (திரைப்படம்) + +குமரகுரு 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோதிஸ் சின்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கிருஷ்ணா ஐயர், வித்வான் மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சகடயோகம் + +சகடயோகம் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஸ்ரீ முருகன் (திரைப்படம்) + +ஸ்ரீ முருகன் 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜூப்பிட்டர் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வால்மீகி (திரைப்படம்) + +வால்மீகி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், டி. எஸ். பாலையா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வித்யாபதி + +வித்யாபதி (Vidyapathi) 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், ஆர். பாலசுப்ரமணியம், கே. தவமணி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். "ஜூபிடர் பிக்சர்ஸ்" சார்பில் இப்படத்தை எம். ���ோமசுந்தரம் மற்றும் மொஹைதீன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். + +ஒரு இளைஞன் தன் பெற்றோரிடம், ஒரு பெண்ணுடன் பழகி, காதலித்துத்தான் திருமணம் செய்வேன் என்று சொல்கிறான். அவன் பத்திரிகையின் வந்த திருமண விளம்பரத்தில் ஒரு பெண்ணைப் பற்றிய குறிப்பைக் காண்கிறான். அந்தப் பெண்ணை சந்திக்க செல்லும் வழியில் அவனது உடைமைகள் திருடப்படுகின்றன. அவனுக்கு ஒரே ஒரு ஆடை மட்டுமே மிஞ்சுகிறது., இந்த நிலையில் ஒரு போலி சாது அந்த இளைஞனை தன்னுடன் அழைத்துச் செல்கிறான். அந்த போலிச்சாது இளைஞனை ஒரு யோகி போல மாற்றுகிறான். இதற்கிடையில், ஒரு நடனமாடும் தேவதாசியை விரும்பிய ஒரு ஜமீன்தார், அவரது மனைவியையும் மகளையும் புறக்கணிக்கிறார். அந்த போலி சாதுவும், யோகியும் (இளைஞன்) பணம் சம்பாதிப்பதற்கான ஒரு யோசனையுடன் அப்பெண்ணை சந்திக்கிறார்கள். ஆனால், இளைஞனும் பெண்ணும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துகிறார்கள். பல திருப்பங்களுக்குப் பிறகு, அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்கிறார்கள். + +பிலிம் நியூஸ் ஆனந்தன். அவர்களின் தகவல் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது. + +டி. ஆர். இராமச்சந்திரன்
+கே. தவமணி தேவி
+திருச்சூர் பிரேமாவதி
+மா. நா. நம்பியார்
+டி. பாலசுப்பிரமணியம்
+எம். ஆர். சுவாமிநாதன்
+டி. என். சிவதாணு
+எம். எஸ். எஸ். பாக்கியம்
+டி. ஜி. கமலா தேவி
+சி. கே. சரஸ்வதி
+கே. மாலதி
+எம். எம். ராதா பாய் + + +திருமதி ரெயின்பர்ட் அமைத்த ஒரு மேற்கத்திய வகை நடனத்திற்கு கே. தவமணி தேவி நடனமாடியுள்ளார். பின்னணி இசையை சி. ஜி. ராப் மற்றும் அவரது குழுவினர் அமைத்தனர். தமிழ் பாடல் ஒன்று ஆங்கில வார்த்தைகளை கொண்டு அந்த நேரத்தில் வந்தது ஒரு புதுமையாக இருந்தது, ஆங்கில வார்த்தைகள் கே. தவமணி தேவியால் எழுதப்பட்டது. படத்தில் தனது ஆடைகளை அவரே வடிவமைத்து கொண்டார். + +இப்படத்தின் இசை ஏ. ராமா ராவ், பாடல்கள் எழுதியது உடுமலை நாராயணகவி. + +திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2010 இல் எழுதியது: "சுவாரஸ்யமான கதை, நகைச்சுவை உரையாடல், நல்ல பாடல் மற்றும் எண்ணற்ற நடனங்கள் மற்றும் தவமணியின் அற்புதமான நடிப்பு போன்ற நல்ல அம்சங்கள் இருந்தன. + + +
+ +விஜயலட்சுமி (திரைப்படம்) + +விஜயலட்சுமி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் தி���ைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +விகடயோகி + +விகடயோகி 1946 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்ரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, எஸ். எம். குமரேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி (திரைப்படம்) + +ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், என். ஆர். சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார். + + + + +சித்ரபகாவலி + +சித்ரபகாவலி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நன்னுபாய் வாகில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்குமார், சித்ரலேகா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தெய்வ நீதி + +தெய்வ நீதி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எம். எல். டாண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, வி. ஏ. செல்லப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த டபிள்யூ. எம். எஸ். தம்பு இப்படத்தைத் தயாரித்தார். + +திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு படலம் இப்படத்தின் கதையாகும். மதுரை சோமசுந்தரேசுவரரின் பக்தரான பாண்டிய மன்னனின் ("செல்லப்பா") நீதிமன்றத்துக்கு வரும் ஒரு பெண் ("செல்லம்") தனது ஒரே மகளை வேட்டைக்காரன் ("ராமசாமி") கொலை செய்தான் என்று முறையிடுகிறாள். குற்றவாளியாகக் காணப்பட்ட வேட்டைக்காரனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. வேட்டைக்காரனின் மனைவி ("கண்ணாம்பா") அரண்மனைக்கு வந்து தனது கணவன் குற்றவாளி அல்ல எனக் கூறுகிறாள். ஆனாலும் அதனை செவி மடுக்க மன்னன் அக்கறை காட்டவில்லை. அன்றிரவு மன்னனின் கனவில் ஒலித்த ஒரு குரல், மன்னன் நீதி தவறி விட்டான் என்றும் , வேட்டைக்காரன் கொ��ையாளி அல்ல என்றும் கூறுகிறது. இறுதியில் உணமை தெரிய வந்து வேட்டைக்காரன் விடுதலை ஆகிறான். வேட்டைக்காரனாக வந்தது முருகன் எனத் தெரிய வருகிறது. இறந்த மகள் உயிர் பெற்றெழுகிறாள். + +இளங்கோவன் திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தார். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதியிருந்தார். எம். எஸ். ஞானமணி இசையமைத்திருந்தார். ராமசாமி, செல்லப்பா, கண்ணாம்பா ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர். துரைராஜ், நாகலட்சுமி ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தனர். + + + + +தன அமராவதி + +தன அமராவதி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். ராமையாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. எஸ். சரோஜா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +ஜே. பி. சந்திரபாபு நடித்த முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்தில் அவர் பாடி நடித்திருந்தார். + + + + + +ஏகம்பவாணன் + +ஏகம்பவாணன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கடகம் (திரைப்படம்) + +கடகம் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கஞ்சன் (திரைப்படம்) + +கஞ்சன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. ஏ. ஐயா முத்து இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா, எம். என். நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +கன்னிகா + +கன்னிகா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், டி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வி. நரசிம்ம பாரதி நடித்துள்ளனர். + + + + +குண்டலகேசி (திரைப்படம்) + +குண்டலகேசி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்��டமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, பொம்மன் டி. ராணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மகாத்மா உதங்கர் + +மகாத்மா உதங்கர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. பட்டு ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, வித்வான் ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +21-ஆம் நூற்றாண்டு + +21ம் நூற்றாண்டு கிரிகோரியன் நாட்காட்டிப்படி தற்போதைய நூற்றாண்ட்டாகும். இது ஜனவரி 1, 2001 இல் ஆரம்பித்து டிசம்பர் 31, 2100 இல் முடிவடையும். + + + + + + + +மலைமங்கை + +மலைமங்கை 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாஸ்கர் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். மது, விமல்குமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மதனமாலா + +மதனமாலா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீராம், எம். வி. மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மிஸ் மாலினி + +மிஸ் மாலினி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி இயக்கினார். இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் கதையானது புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆர். கே. நாராயணன் எழுதிய ஆங்கலப் புதினமான "மிஸ்டர் சம்பத்" ஆகும். + + + + +நாம் இருவர் + +நாம் இருவர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பைத்தியக்காரன் (திரைப்படம்) + +பைத்தியக்காரன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சஹஸ்ரணாமம், என். எஸ். கிருஷ்ணன், எம். ஜி. ஆர், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பொன்னருவி (திரைப்படம்) + +பொன்னருவி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜகுமாரி (திரைப்படம்) + +ராஜகுமாரி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். உடுமலை நாராயணகவியின் பாடல்களுக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார். + +ராஜகுமாரி எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடித்த முதலாவது திரைப்படமும், மு. கருணாநிதி முதன் முதலாக வசனம் எழுதிய திரைப்படமும், ஏ. எஸ். ஏ. சாமி முதன் முதலில் இயக்கிய திரைப்படமும் ஆகும். இத்திரைப்படத்திலேயே முதன் முதலில் பின்னணிக் குரல் பயன்படுத்தப்பட்டது. ‘காசினிமேல் நாங்கள்’ என்ற எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்து திருச்சி லோகநாதன் பாடிய பாடலுக்கு எம். என். நம்பியார் வாயசைத்தார். இப்படத்துக்கு உரையாடலை மு. கருணாநிதி எழுதியபோதும் உரியமுறையில் அவர் பெயர் படத்தில் இடம்பெறவில்லை. படத்தின் பாட்டுப் புத்தகத்தின் பழைய பிரதியில், ‘கதை, வசனம், டைரக்‌ஷன்’ ஏ.எஸ்.ஏ.சாமி பி.ஏ., ஹானர்ஸ் என்றும் ‘உதவி ஆசிரியர்’ – மு.கருணாநிதி என்றும் அச்சிடப்பட்டிருக்கிறது. + + + + +ருக்மாங்கதன் (திரைப்படம்) + +ருக்மாங்கதன் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாய்நாடு (1947 திரைப்படம்) + +தாய்நாடு 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, எஸ். டி. வில்லியம்ஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தியாகி (திரைப்படம்) + +தியாகி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்ஜி பாய் ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, சேதுராமன், வி. என். ஜானகி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் இந்து ஆலய நுழைவுப் போராட்டத்தைக் கதைக்கருவாகக் கொண்டது. + + + + +துளசி ஜலந்தர் + +துளசி ஜலந்தர் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வீர வனிதா + +வீர வனிதா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் பட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், சகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வேதாளபுரம் (திரைப்படம்) + +வேதாளபுரம் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நனுபாய் வகில் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகேஸ்வர ராவ், மாதவராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +விசித்ர வனிதா + +விசித்ர வனிதா 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். கிருஷ்ணசாமி, கே. குமாரசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஸ்ரீ ஆண்டாள் (திரைப்படம்) + +ஸ்ரீ ஆண்டாள் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேலுச்சாமி கவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், வி. ஏ. செல்லப்பா, எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஆதித்தன் கனவு + +ஆதித்தன் கனவு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்துக்கான வசனங்களை எழுதியவர் ப. கண்ணன். + +ஓர் அரசனிடம் சேனாதிபதிகளாக இருக்கும் இரண்டு வீரர்கள் தாங்கள் மணம் செய்து கொண்டால், தங்களுக்கு ஆணும் பெண்ணுமாகக் குழ���்தைகள் பிறந்தால், அவர்கள் இருவருக்கும் திருமணம் முடித்து வைப்பதானால் என்ன சீர் செய்ய வேண்டும் என்ற விளையாட்டில் இறங்கி, அடுத்த நிமிடத்திலேயே இருவரும் விரோதிகளாக மாறி, பிரிகிறார்கள். ஆண், பெண் அழகுப் போட்டியில் கலந்துகொண்ட இரண்டு கந்தர்வர்கள், சேனாதிபதிகளின் புதல்வி ஞானவடிவும், புதல்வன் ஆதித்தனும் சந்தித்து, ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்கிறார்கள். இரு குடும்பங்களும் ஒன்று சேர்கின்றன. + + +நடன அமைப்பு: வழுவூர் பி. இராமையா பிள்ளை + +பாடல்களுக்கான இசையை ஜி. ராமநாதன் வழங்கியிருந்தார். பாடல்களை பாபநாசம் சிவன், அவரது சகோதரர் பாபநாசம் ராஜகோபால ஐயர் ஆகியோர் எழுதியிருந்தனர். அஞ்சலிதேவிக்கான பாடல்களுக்கு குமாரி ரத்தினம் பின்னணி பாடியுள்ளார். + + + + + +அபிமன்யு (திரைப்படம்) + +அபிமன்யு 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். சோமசுந்தரம், ஏ. காசிலிங்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இடம்பெற்ற திருச்சி லோகநாதன்-யூ, ஆர்.ஜீவரத்தினம் ஆகியோர் பாடிய "புது வசந்தமாமே வாழ்விலே" என்ற பாடல் மிகப் பிரபலமானது. இப்பாடலுக்கு இசையமைத்தவர் சுப்பராமனிடம் உதவியாளராக இருந்த எம். எஸ். விஸ்வநாதன் ஆவார். திரைப்படத்துக்கென அவர் முதன்முதலில் மெட்டமைத்தது இந்தப் பாடலுக்குத்தான். இந்தப் படத்துக்கு ஏ.எஸ்.ஏ. சாமியுடன் இணைந்து மு. கருணாநிதி வசனம் எழுதினார். ஆனால், அவரது பெயர் படத்தில் இடம்பெறவில்லை. + + + +பாடல்களை பாபநாசம் சிவன், சுந்தர வாத்தியார், பூமிபாலகதாஸ் ஆகியோர் இயற்றியிருந்தனர். + + + + +அஹிம்சாயுத்தம் + +அஹிம்சா யுத்தம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. கே. செட்டியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பலரும் நடித்துள்ளனர். + + + + +பக்த ஜனா + +பக்த ஜனா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, ஹொன்னப்ப பாகவதர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பில்ஹணன் (திரைப்படம்) + +பில்ஹணன் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. ஸ்ரீநிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +போஜன் (திரைப்படம்) + +போஜன் ("Bhojan") 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன், டி. ஆர். சுந்தரம் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பெரும் பொருட் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த வரலாற்றுப் படத்தில் லலிதா - பத்மினி சகோதரிகளின் வள்ளி திருமணம் நடனம், மற்றும் தாரா சௌத்ரியின் நடனக் காட்சி ஆகியன சேர்க்கப்பட்டுள்ளன. + +தாரா நாட்டு வாரிசான போஜன் சிறுவனாக இருந்தமையால் அவனது சிறிய தந்தை முஞ்சன் ("ஆர். பாலசுப்பிரமணியம்") அவனுக்குப் பதிலாக நாட்டை ஆண்டு வந்தான். முதலமைச்சர் புத்திசாகரிடம் வளர்ந்து வரும் போஜனைக் ("பி. எஸ். கோவிந்தன்") கொல்ல முஞ்சன் பல சூழ்ச்சிகள் செய்கிறான். ஆனால் அவை தோல்வியிலேயே முடிகின்றன. அரசேற்கும் பருவம் வந்த போஜனுக்கு முடிசூடும் படி புத்திசாகர் முஞ்சனை வற்புறுத்துகிறார். ஆனால் முஞ்சன் முதலமைச்சரை பதவியில் இருந்து விலக்கி, தன் தங்கை மகள் விலாசவதியை போஜனுக்கு மணம் செய்து வைத்து விட்டு, அவளையும் தானே அடைய முயற்சிக்கிறான். அவனின் சூழ்ச்சிகளையெல்லாம் போஜனின் நண்பன் சஞ்சீவி ("காளி என். ரத்னம்"), சேனாதிபதி வத்சன், புத்திசாகர் ஆகியோர் இணைந்து முறியடிக்கின்றனர். போஜன் முஞ்சனின் சூழ்ச்சிக்குத் தப்பி காட்டில் ஒரு பில்லர் கூட்டத்தில் அகப்பட்டுக் கொள்கிறான். ஆனால், பில்லர் கூட்டத்தின் தலைவரின் மகள் லீலாவதி அவன் மேல் காதல் கொண்டு அவனைக் காப்பாற்றித் தப்பிக்க வைக்கிறாள். இறுதியில், நண்பர்களின் உதவியுடன் போஜன் தாரை, உஜ்ஜயினி, பூபாளம் ஆகிய நாடுகளுக்குப் பேரரசனாக முடிசூடுகிறான். முஞ்சன் தற்கொலை செய்து கொள்கிறான். + + + + + + +பிரம்மரிஷி விஷ்வாமித்திரா + +பிரம்மரிஷி விஷ்வாமித்திரா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெகநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராம்சிங், டி. வி. சேதுராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சக்ரதாரி + +சக்ரதாரி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, புஷ்பவல்லி, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். டி. பார்த்தசாரதி இசையமைக்க பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்பிரமணியன் ஆகியோர் பாடல்களை இயற்றினர். குயவராகப் பிறந்து வைணவ பக்தராகி, பாண்டுரங்கனின் பாதநிழலை அடைந்த பக்த கோரா கும்பரின் கதையைத் திரைப்படமாக ஜெமினி நிறுவனத்தினர் தயாரித்திருந்தனர். + + +பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு, சங்கு சுப்பிரமணியன் ஆகியோரின் பாடல்களுக்கு வி. நாகையா, டி. வி. ரத்தினம், எம். கல்பகம் ஆகியோர் பாடியுள்ளனர். எம். டி. பார்த்தசாரதி இசையமைத்திருந்தார். எம். டி. பார்த்தசாரதி + + + + + +சந்திரலேகா (1948 திரைப்படம்) + +சந்திரலேகா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். வாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +தேவதாசி (திரைப்படம்) + +தேவதாசி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். எல். டாண்டனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கண்ணன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். வங்க எழுத்தாளர் கிடார் சர்மா எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு 1941 இல் வெளியாகிய சித்ரலேகா படத்தின் திரைக்கதையே தேவதாஸி படத்துக்கு உந்துதலாக அமைந்தது. + + + + +என் கணவர் + +என் கணவர் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், வி. சீதாராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஞானசௌந்தரி (1948 திரைப்படம்) + +ஞான சௌந்தரி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கோகுலதாசி + +கோகுலதாசி (Gokuladasi) 1948ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், என். கிருஷ்ணமூர்த்தி , லலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +காமரூபன் (ஹொன்னப்ப பாகவதர்) என்ற அரசன் தனது முற்பிறவியில் பார்வதி தேவியின் சாபத்தின் காரணமாக, கோகுலம் நகரத்தில் நகைக்கடைக்காரராக பிறந்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு அந்நகரத்திலுள்ள தேவதாசி அனுராதாவின் (ராஜம்மா) மீது நாட்டமுள்ளது . மற்றொருபுறம், அனுராதா, தனது முந்தைய பிறப்பில் பார்வதி தேவி மீது பக்தி கொண்ட பாடகி மற்றும் நடன கலைஞராகவும் இருந்துள்ளார். ஒரு சமயம், நாரதரை (ஹொன்னப்ப பாகவதர் ) அவமானபடுத்தியதற்காக அவரால் சபிக்கப்பட்டு, மறுபடியும் அனுராதாவாக பிறந்தார். அனுராதா தனது முந்தைய பிறப்பு ஞாபகங்களை உணராதிருப்பதை கண்டு பாகவதர் அவருக்கு அதை நினைவு படுத்த முயற்சிக்கிறார். இந்த விவகாரத்தை தீர்ப்பதற்கு, பகவான் கிருட்டிணன் (பத்மினி) கொண்டு செல்லும் வழிமுறைகள் நகைச்சுவையாகவும், தேவதாசியின் சாபத்தை போக்குவதை நோக்கியும் கதை செல்கிறது. + +பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் "தி இந்து" தகவல் தொகுப்பிலிருந்து பெறப்பட்டது. + +கொன்னப்ப பாகவதர் - நாரதர்/காமரூபன்/நகைக்கடைக்காரர்
+எம். வி. ராஜம்மா - அனுராதா
+டி. ஆர். இராமச்சந்திரன்
+என்.கிருஷ்ண்மூர்த்தி
+லலிதா
+பத்மினி - கிருட்டிணன்
+செளதாமினி
+ஆர். எம். சோமசுந்தரம்
+என். திருவேங்கடம்
+கே. எஸ். அங்கமுத்து
+எஸ். சரோஜினி
+பேபி சத்யவதி
+ +லலிதா
+பத்மினி +கே. சுப்பிரமணியம் தன்னுடைய மெட்ராஸ் யுனைட்டட் ஆர்டிஸ்ட்ஸ் கார்ப்பரேஷன் என்ற தனக்கு சொந்தமான நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியுள்ளார் கதை, வசனம் இளங்கோ என்பவருடன் இணைந்து இவரும் எழுதியுள்ளார். நெப்டியூன் ஸ்டுடியோஸில் படத்திற்கான முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது. திரைப்படத்தின் இணை இயக்குநர்களில் ஒருவர் எல். கிருஷ்ணன் ஆவார், இவர் பின்னாளில், மலேசிய திரைப்படவரலாற்றில் ஒரு முக்கிய திரைப்பட தயாரிப்பாளராக ஆனார். "தடுக்" என்ற கௌரவத்தையும் பெற்றார்.. + +எஸ். வி. வெங்கட்ராமன் அவர்கள் பா���ல்களுக்கு இசைக்க பாபநாசம் சிவன் மற்றும் ராஜகோபால் அய்யர் இருவரும் பாடல்களை எழுதியுள்ளனர். + +திரைப்பட வரலாற்றாசிரியர் ரண்டர் கை, "கோகுலதாசி" ,திருவாங்கூர் சகோதரிகளின் மகிழ்ச்சியான இசை, பாடல் மற்றும் நடனங்களை நினைவுபடுத்தியது, ராஜம்மா, ஹொன்னப்ப பகவதார் மற்றும் டி. ஆர். ராமச்சந்திரன் ஆகியோரின் நடிப்பு நன்றாக இருந்தது என எழுதியுள்ளார். + + +
+ +இது நிஜமா + +இது நிஜமா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த சமூகத் தமிழ்த் திரைப்படமாகும். கே. கிருஷ்ண கோபால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், வி. சீதாராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +இத்திரைப்படத்தின் கதை 1945 இல் ஆங்கிலத்தில் வெளியான "வொண்டர் மேன்" என்ற திரைப்படக் கதையின் தழுவலாகும். திரைக்கதையை எஸ். பாலச்சந்தரும், வசனங்களை வி. சீதாராமனும் எழுதியிருந்தனர். + +மாதுவும் கோபாலும் ஒரே சாயல் கொண்ட இரட்டைக் குழந்தைகள் (எஸ். பாலச்சந்தர்). கோபால் இசைக் கருவிகள் விற்பனையாளர். மற்றவன் மாது இலண்டன் சென்று படிக்கிறான். அத்துடன் நடனக் குழுவிலும் சேர்ந்து கொள்கிறான். வீணை திருத்துவதற்காக கடைக்கு வந்த நளினி கோபாலைக் காதலிக்கிறாள். இலண்டனில் இந்திய சங்க நிதிக்காக மாது ஒரு நடன நிகழ்ச்சி நடத்துகிறான். அதில் நடனமாடிய நிர்மலா மாதுவைக் காதலிக்கிறாள். நிர்மலாவைக் காதலித்து வந்த சண்முகம் பொறாமையால் மாதுவைக் கொலை செய்கிறான்.ஆனால், மாதுவின் ஆவி சண்முகத்தைப் பழி வாங்க உறுதி கொண்டு அவனையே சுற்றி வருகிறது. மாது கொலை செய்யப்பட்டதை அறியாத நிர்மலா அவனைத் தேடி இந்தியா வருகிறாள். சண்முகமும் அவளைப் பின்தொடருகிறான். + +சென்னையில் மாதுவின் ஆவி கோபாலிடம் உண்மையைக் கூறுகிறது. உணவு விடுதி ஒன்றில் கோபாலைச் சந்தித்த நிர்மலா அவனை மாது என நினைக்கிறாள். இதனால் நளினிக்கு கோபால் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இறுதியில் சண்முகம் தான் காதலித்த நிர்மலாவையே சுட்டுக் கொன்று விட்டு, காவலரிடம் பிடிபட்டு இறக்கிறான். நிர்மலாவின் ஆவியும், மாதுவின் ஆவியும் உல்லாசமாக வான வீதியில் செல்கின்றன. கோபால் - நளினி திருமணம் இனிதே நிறைவேறுகிறது. + + +இப்படத்தின் கதாநாயகியாக நடித்த சரோஜினி ஐராவதி 1947 இல் வெளிவந்த ருக்மாங்கதனில் நடித்திருக்கிறார். "சிற்பியின் காதல்" என்ற நடனக் காட்சியையும் இத்திரைப்படத்தில் இணைத்திருக்கிறார்கள். + + + + +ஜீவ ஜோதி + +ஜீவஜோதி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எம். முல்தானியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +காமவல்லி + +காமவல்லி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புதுமைப்பித்தன் கதை, உரையாடல் எழுத, மாணிக்கம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். +தியான சந்திரன் என்ற கவிஞன் தன் மனைவி நந்தினியோடு ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்து வருகிறான். தியான சந்திரனின் புலமையைக் கேள்விபட்ட மன்னன் அவனுக்கு அரசவையில் பதவி தருகிறான். முதியவனான அந்த அரசனின் இளம் மனைவிக்கு தியான சந்திரனின் மீது மோகம் ஏற்படுகிறது. அவனிடம் தன் இச்சையைத் தீர்த்துக்கொள்ள முயலும் அரசி அதில் தோல்வியடைகிறாள். இதனால் கோபமுற்ற அரசி தியான சந்திரன் தன்னை வல்லுறவு கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டுகிறாள். தீரவிசாரிக்காத மன்னன் கவிஞனை சிரச்சேதம் செய்ய கட்டளை இடுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதே கதை. + + + + +ஸ்ரீ கிருஷ்ணதுலாபரம் + +ஸ்ரீ கிருஷ்ண துலாபாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சந்தானம் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், ஏ. கே. ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஸ்ரீ லட்சுமி விஜயம் + +ஸ்ரீ லட்சுமி விஜயம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பொம்மன் டி. ராணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மகாபலி (திரைப்படம்) + +மகாபலி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாமா பிக்சர்ஸ் நிறுவனத்தினரில் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. வரதாச்சாரி, லட்சுமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாரியம்மன் (திரைப்படம்) + +மாரியம்மன் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, எஸ். டி. சுப்பையா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மோகினி (திரைப்படம்) + +மோகினி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.லங்கா சத்யம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, மாதுரிதேவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். ஜி. ஆர் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். அவருடன் வி. என். ஜானகி முதன்முதலாக இணைந்து நடித்தார். + + + + + + + +நவீன வள்ளி + +நவீன வள்ளி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், எஸ். ராகவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பிழைக்கும் வழி + +பிழைக்கும் வழி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எஸ். துரைராஜ் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். துரைராஜ், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் சில: + + + + +ராஜ முக்தி + +ராஜமுக்தி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். புதுமைப்பித்தன் எழுத, ராஜ சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராம்தாஸ் (திரைப்படம்) + +ராமதாஸ் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராமனாத ஐயர், வை. வி. ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சம்சார நௌகா + +சம்சார நௌகா 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எல். என். சிம்ஹா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. ஆர். பந்துலு, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +1935 ஆம் ஆண்டு சம்சார நௌகா திரைப்படம் கன்னட மொழியில் முதன் முதலில் வெளியிடப்பட்டது. இதுவே கன்னட மொழியில் வெளிவந்த முதலாவது சமூகப் படம் ஆகும். மிகப் பெரும் வெற்றியைத் தந்த இத்திரைப்படம் இதே பெயரில் புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றைத்தழுவி எடுக்கப்பட்டது. இந்நாடகம் தென்னிந்தியா முழுவதும் 4,000 தடவைகளுக்கு மேல் மேடையேறியுள்ளது. + +கதாநாயகன் (பந்துலு) கதாநாயகியை (பிரேமாவதி) அவனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மணக்கிறான். பின்னர் செய்யாத ஒரு கொலைக்கு குற்றம் சாட்டப்படுகிறான். + +தமிழ்த் திரைப்படத்தின் வசனங்களை ஏ. டி. கிருஷ்ணசுவாமி (அறிவாளி, மனம் ஒரு குரங்கு, ஸ்ரீவள்ளி, சபாபதி திரைப்படங்களை இயக்கியவர்) எழுதியிருந்தார். + + + + +சம்சாரம் (1948 திரைப்படம்) + +சம்சாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாபு ராவ் சௌகான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், விமல்குமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சண்பகவல்லி (திரைப்படம்) + +சண்பகவல்லி 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். லங்கா சத்தியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, ஏ. என். பெரியநாயகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பி. ஆர். ராஜகோபாலய்யரின் பாடல்களுக்கு சாமா இசையமைத்திருந்தார். தில்லை பொன்னப்பா வசனம் எழுதினார். + +விக்கிரமாதித்தன் கதையை அடிப்படையாகக் கொண்ட இத்திரைப்படத்தில் நடித்திருப்போர்: + + + + +திருமழிசை ஆழ்வார் (திரைப்படம்) + +திருமழிசை ஆழ்வார்1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. கண்ணன் பிள்ளை தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி, பி. வி. ரங்காச்சாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வானவில் (திரைப்படம்) + +வானவில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ஆர். சஞ்சீவி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எச். ஆர். காமராகி, ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வேதாள உலகம் + +வேதாள உலகம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அபூர்வ சகோதரர்கள் (1949 திரைப்படம்) + +அபூர்வ சகோதரர்கள் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தேவமனோகரி + +தேவ மனோகரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், எம். ஆர். சுவாமிநாதன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கீத காந்தி + +கீத காந்தி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், வி. குமாரசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இன்பவல்லி + +இன்பவல்லி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எஸ். நோடானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. எஸ். சரோஜா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர். ஆர். ஆர். ராஜகோபால ஐயர் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமனாதன் இசையமைத்தார். சேலம் ரத்னா ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. + + + + +கனகாங்கி (திரைப்படம்) + +கனகாங்கி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்டேட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கங்காதரன், ஸ்ரீநிவாசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கன்னியின் காதலி + +கன்னியின் காதலி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், கே. ஆர். ராம்சிங், அஞ்சலிதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். மாதுரி தேவி இதில் இரட்டை வேடத்தில் நடித்���ிருந்தார். ஆங்கில நாடகாசிரியரான ஷேக்ஸ்பியரின் பிரபல நகைச்சுவை நாடகமான என்பதைத் தழுவி எடுக்கப்பட்டது இத்திரைப்படம். என். டி. சுந்தரத்தின் வசனத்திலும் வேதாந்தம் ராகவய்யாவின் நடனப்பயிற்சியிலும் உருவான இத்திரைப்படம் சென்ட்ரல் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டது. கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எல். வசந்தகுமாரி பின்னணி பாடினார். + +ஒரே சாயலுள்ள அண்ணன் ஆதித்தனும் தங்கை சந்திரிகாவும் விதிவசத்தால் பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குச் செல்கின்றனர். (அண்ணனாகவும் தங்கையாகவும் "மாதுரி தேவி" நடிக்கிறார்). தனது பெண்மையைக் காத்துக் கொள்ளும் பொருட்டு ஆண்வேடம் தாங்கி கலைமணி என்ற பெயர் பூண்ட சந்திரிகா, வசந்தபுரி மன்னனின் ("எஸ்.ஏ.நடராஜன்") ஆஸ்தான கவியாக அமர்ந்து அவனது காதலியான மேகலையிடம் ("அஞ்சலிதேவி") காதல் தூது செல்கிறாள். கலைமணியை உண்மை வாலிபன் என எண்ணிய மேகலை தன் உள்ளத்தைப் பறி கொடுக்கிறாள். சமயத்தில் ஆதித்தனும் அங்கு வருகிறான். உடன்பிறந்தவர்களின் தோற்றப் பொருத்தத்தால் தோன்றிய குழப்பங்கள் தீர்ந்து மேகலையை ஆதித்தனும், வசந்த குமாரனைச் சந்திரிகாவும் மணக்கின்றனர். கதையும் சுபமாக முடிகிறது. + + + + + +கிருஷ்ண பக்தி + +கிருஷ்ண பக்தி 1949-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். ராஜகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +உடுமலை நாராயணகவி எழுதிய பாடல்களை பி. யு. சின்னப்பா, எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி, சிதம்பரம் ஜெயராமன் ஆகியோர் பாடியுள்ளனர். "லேனா" என அழைக்கப்பட்ட எஸ். எம். லட்சுமணன் செட்டியார் இப்படத்தைத் தயாரித்திருந்தார். + +இத்திரைப்படத்தின் கதையை ஆர். எஸ். மணி எழுதியிருந்தார். எஸ். டி. எஸ். யோகி, சுத்தானந்த பாரதியார், கு. ப. சேது அம்மாள், சாண்டில்யன்ஆகியோரின் வசனங்கள் கதையில் இணைக்கப்பட்டன. எம். எல். வசந்தகுமாரி இப்படத்தில் மட்டுமே பாடி நடித்திருந்தார். + +பரம பாகவத சிரோன்மணி என்ற வெளிவேடமிட்டு ஊரை ஏமாற்றும் வஞ்சகன் ஒருவன், ராஜசிம்மன் எனும் மன்னனிடம் ராஜகுருவாக (பி. யு. சின்னப்பா) இருக்கிறான். அவனது போலிப் பக்தியை உண்மை என நம்பி, அவனது வஞ்சக வலையில் வீழ்ந்து விடுகிறாள் தேவகுமா��ி (டி. ஆர். ராஜகுமாரி) என்ற அழகிய தேவதாசி. தன்னைக் குருவாகக் கருதி வந்த தேவகுமாரியை, ராஜகுரு மானபங்கம் செய்ய முயற்சிக்கும்போது, அவனது மனச்சாட்சி அவனது பரம விரோதியாக உருவெடுத்து அவன் தவறை விளக்கி, உபதேசம் செய்கிறது. திருந்திய ராஜகுரு தேவகுமாரியைத் தன் குருவாக எண்ணி, ஓர் உண்மை பக்தனாக மாறுகிறான். + +இன்னும் பலர். + +இப்படத்திற்கான பாடல்களை உடுமலை நாராயணகவி இயற்றியுள்ளார். எஸ். வி. வெங்கட்ராமன், குன்னக்குடி வெங்கட்ராம ஐயர் ஆகியோர் இசையமைத்துள்ளனர். + + + + + +கிருஷ்ண விஜயம் + +கிருஷ்ண விஜயம் 1950 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். சுந்தர் ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, ஏ. எல். ராகவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திருமாலின் கிருஷ்ண அவதாரம் பற்றிய கதை. ஸ்ரீ கிருஷ்ணரின் பிறப்பு, அவர் தனது மாமனாகிய அரசன் கம்சனை அழித்தது, சிறுவனாக அவர் கோபியர்களுடனும் நண்பர்களுடனும் நடத்திய விளையாட்டுகள் பற்றியதே இத்திரைப்படமாகும். + +இந்தப் பட்டியல் தி இந்து நாளிதழ் கட்டுரையிலிருந்து தொகுக்கப்பட்டது. + +நடனம்: +இப் பட்டியல் பிலிம் நியூஸ் ஆனந்தன் தரவுத் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது. + +திரைப்படத்திற்கு இசையமைத்தவர்கள்; சி. எஸ். ஜெயராமன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோர். பாடல்களை இயற்றியோர்: பாபநாசம் சிவன், டி. கே. சுந்தர வாத்தியார், பூமி பாலகதாஸ், கே. பி. காமாட்சி ஆகியோர். என். சி. வசந்தகோகிலம் பாடிய "நவநீத கண்ணனே .." என்ற பாடல் பிரபலமானது. இந்தப் பாடலை இயற்றியவர் கே. பி. காமாட்சி. இசையமைத்தவர் சி. எஸ். ஜெயராமன். "என்னடி அநியாயம் இது.." என்ற குழுப்பாடலும் பிரபலமானது. இப்பாடலை பி. லீலா, கே. வி. ஜானகி, டி. வி. ரத்தினம், டி. ஆர். பாகீரதி குழுவினருடன் பாடியிருந்தனர். + +இத்திரைப்படம் இனிமையான இசையுடன் நன்றாகப் படமாக்கப்பட்டிருந்தது. ஆயினும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கவில்லை. இக்கால கட்டத்தில் ரசிகர்களுக்குப் புராணப் படங்களிலிருந்த ஆர்வம் குறையத் தொடங்கியிருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. ஜூபிடர் நிறுவனத்தார் இதற்கு முன் வேலைக்காரி என்ற சமூகத்தை மையப்படுத்திய ஒரு திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டிருந்தனர். அத் ���ிரைப்படம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. + + + + +மங்கையர்க்கரசி (திரைப்படம்) + +மங்கையர்க்கரசி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாயாவதி (திரைப்படம்) + +மாயாவதி, 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கணபதி பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எஸ். வி. சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நல்ல தம்பி (1949 திரைப்படம்) + +நல்ல தம்பி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை, உரையாடல் எழுதினார். இக்கதை மிஸ்டர் டீட் கோஸ்டு டவுன் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலாகும். + + + + + +நம் நாடு (1949 திரைப்படம்) + +நம் நாடு 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. சாந்தாராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் உமேஷ் ஷர்மா, மன்மோகன் கிருஷ்ணா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நாட்டிய ராணி (திரைப்படம்) + +நாட்டிய ராணி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ராஜா ஐயங்கார், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +நவஜீவனம் + +நவஜீவனம்1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசனம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. நாகையா, ஸ்ரீராம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். முதன்முறையாகத் திரைப்படங்களுக்கான விருதுகளை வழங்க சென்னை மாகாண அரசு முடிவு செய்தபோது 1949 இல் சிறந்த திரைப்படமாக நவஜீவனம் தேர்ந்தெடுக்கப்பட்டது. +எளிய தொழிலாளி நாகையாவும். அவ���ுடைய மனைவி கண்ணாம்பாவும், பெற்றோரை இழந்த தன் தம்பி ஸ்ரீராமைச் சிறுவனாக இருக்கும்போதிருந்து வளர்க்கிறார்கள். வளர்ந்து கல்லூரிக்கு செல்லும் ஸ்ரீராம் உடன் பயிலும் மாணவி வரலட்மியைக் காதலிக்கிறார். + +வரலட்சுமி மில் முதலாளியின் மகள். பணக்கார சம்பந்தம் நமக்கு வேண்டாம் என்று அண்ணனும் அண்ணியும் ஸ்ரீராமை எச்சரிக்கிறார்கள். ஆனால், அவர்களின் சொல் கேளாமல் வரலட்சுமியைத் திருமணம் செய்து கொள்ள்கிறார். மாமனாரின் மரணத்துக்குப் பின் ஸ்ரீராம் முதலாளி ஆகிறார். + +அண்ணன், அண்ணியைத் தன்னுடன் வற்புறுத்தித் தங்கவைத்துக்கொள்ளும் ஸ்ரீராம், தன் பழைய வாழ்க்கையை மறந்து ஆடம்பரத்தில் திளைக்கிறார். மனைவியைக் கடிந்துகொள்ளும் அண்ணியை ஸ்ரீராம் அடித்துவிட, அண்ணனும் அண்ணியும் வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். பிறகு ஸ்ரீராம் மனம் திருந்துகிறார். பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. + + + + +பவளக்கொடி (1949 திரைப்படம்) + +பவளக்கொடி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஈ. வரதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பொன்முடி + +பொன்முடி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. நரசிம்ம பாரதி, ஆர். பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் கதையானது கவிஞர் பாரதிதாசனின் "எதிர்பாரத முத்தம்" என்னும் குறுங் காப்பியத்தைத் தழுவியது. எடுத்தவரை படத்தைப் போட்டுப்பார்த்த படத்தயாரிப்பாளர் டி. ஆர். சுந்தரத்துக்குத் திருப்தியில்லாததால். படத்தில் இன்னும் கொஞ்சம் கதையைச் சேர்க்க முடிவுசெய்தார். அதையடுத்து படத்தின் பின்பகுதியில் கூடுதல் கதையை மு. கருணாநிதியைக் கொண்டு எழுதவைத்து படமாக்கி வெளியிட்டார். இது ஒரு வெற்றிப்படமாக ஆனது. + + + + +வாழ்க்கை (1949 திரைப்படம்) + +வாழ்க்கை 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராம��்சந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +வேலைக்காரி (திரைப்படம்) + +வேலைக்காரி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர் அறிஞர் அண்ணாதுரை இப்படத்துக்கு திரைக்கதை, உரையாடலை எழுதியிருந்தார். சென்ட்ரல் ஸ்டூடியோவில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. + + + + + +வினோதினி (திரைப்படம்) + +வினோதினி 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்ஜி பாய் ஆர்யா மற்றும் எஸ். ஆர். கிருஷ்ண ஐயங்கார் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஏழை படும் பாடு + +ஏழை படும் பாடு 1950 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் இன்ஸ்பெக்டர் ஜாவட் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததனால் சீதாராமன் ஜாவட் சீதாராமன் என அழைக்கப்படலானார். (அப்பெயர் பின்னர் ஜாவர் சீதாராமன் என மருவியது) + +சிறையிலிருந்து தப்பியோடிய கந்தன் என்ற ஒரு குற்றவாளியை கண்டிப்பானவரும் கருணையற்றவருமான இன்ஸ்பெக்டர் ஜாவட் மீண்டும் கைது செய்கிறார். ஒரு கிறீஸ்தவ பேராயரினால் கந்தன் வாழ்க்கையில் ஒரு புது அத்தியாயம் தொடங்குகிறது. விடுதலையான கந்தன் ஒரு கண்ணாடித் தொழிற்சாலை ஆரம்பிக்கிறான். தனது ஆளடையாளத்தை மாற்றிக்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான். அவன் வாழும் நகரத்தின் முதல்வர் ஆகிறான். இன்ஸ்பெக்டர் ஜாவட் அவனை அடையாளம் கண்டுகொண்டு அவனது பழைய வாழ்க்கையை வெளிப்படுத்தப் போவதாக பயமுறுத்துகிறார். ஒரு சந்தர்ப்பத்தில் கந்தன் ஜாவட்டின் உயிரைக் காப்பாற்றுகிறான். கந்தனுக்கு நன்றிக் கடன் பட்ட ஜாவட் கந்தன் பற்றி மேலிடத்துக்கு அறிவிக்க விரும்பாமல் தானே தற்கொலை செய்துகொள்கிறார். + + + +இத்திரைப்படத்தை எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு தமது பட்சிராஜா ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாகத் தயாரித்தார். பிரெஞ்சு நாவலாசிரியர் "விக்டர் ஹியூகோ" எழுதிய "லேஸ் மிசராபிள்ஸ்" என்ற கதையைத் தழுவி சுத்தானந்த பாரதியார் ஒரு நாவல் எழுதியிருந்தார். அதன் அடிப்படையில் இத்திரைப்படக் கதை அமைந்தது. + +தொடக்கத்தில் பேராயராக நடிக்க நாகர்கோவில் கே. மகாதேவன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால் சில காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் ஸ்ரீ ராமுலு நாயுடு அவரை மாற்றி அந்தப் பாத்திரத்தில் செருகளத்தூர் சாமாவை நடிக்க வைத்தார். ஸ்ரீ ராமுலு நாயுடு கண்டிப்புக்கும், நேரந்தவறாமைக்கும் பெயர் பெற்றவர். ஒரு நாள் படப்பிடிப்புக்கு இயக்குநர் ராம்நாத் வரவில்லை. அதனால் நடிகர் கோபாலகிருஷ்ணன் அன்றைக்குப் படப்பிடிப்பு இருக்காது என எண்ணி சென்றுவிட்டார். ஆனால் ஸ்ரீ ராமுலு நாயுடு நடிகை ராகினிக்கு ஆண் வேடம் போட்டு அன்றைய படப்பிடிப்பை நடத்திவிட்டார். + +இத்திரைப்படம் "பீதல பாட்லு" என்ற பெயரில் தெலுங்கிலும் ஒரே சமயத்தில் படமாக்கப்பட்டது. + +ஏழை படும் பாடு, 1950 ஆம் ஆண்டு தீபாவளி நாளன்று சென்னை காஸினோ திரையரங்கில் வெளியானது. வியாபார ரீதியாகவும், விமர்சகர் பார்வையிலும் இது வெற்றிப் படமாக அமைந்தது. + +இத் திரைப்படத்துக்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்தார். கண்ணன் மன நிலையை என்ற பாரதியார் பாடல் படத்தில் இடம்பெற்றது. ஏனைய பாடல்களை எழுதியவர் கோபாலகிருஷ்ணன் திரைப்படத்தில் 8 பாடல்கள் இடம்பெற்றன. பாடகர்: சித்தூர் வி. நாகையா. பின்னணிப்பாடகர்கள்: திருச்சி லோகநாதன், எம். எல். வசந்தகுமாரி, பி. ஏ. பெரியநாயகி & ராதா ஜெயலட்சுமி ஆகியோர். + + + + +இதய கீதம் + +இதய கீதம் 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ் திரைப்படமாகும். ஜோசப் தளியத் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். + +ஒரு அரசன் தான் சாகும் தறுவாயில் தன் மனைவியான அரசியையும், மகளையும் நன்றாகக் கவனித்துக்கொள்ளுமாறு தன் நண்பனிடம் தெரிவிக்கிறான். அந்த நண்பனுக்கு இரண்டு மகன்கள். பெரியவன் ஒரு யுத்தத்தில் போரிடச் செல்கிறான். அச்சமயம் இளையவனுக்கும் இளவரசிக்குமிடையே காதல் மலர்கிறது. பெரியவன் சண்டையில் வெற்றி பெற்றுத் திரும்பி வருகிறான். இளவரசியைத் தனக்குத் திருமணம் செய்து வைக்கும்படி தந��தையிடம் கேட்கிறான். இளவரசி குழப்பமடைகிறாள். அவளால் ஒரு தீர்மானத்துக்கு வரமுடியவில்லை. இதைக் கண்ட இளையவன் தானும் போருக்குப் புறப்பட்டுச் செல்கிறான். ஆனால் அவன் காயத்துடன் திரும்பி வருகிறான். அவன் தன்னால் தான் போருக்குப் போனான் என உணர்ந்த இளவரசி அவனது காயம் ஆறுவதற்கு அளிக்கப்படும் சிகிச்சையில் தானும் பணிவிடை செய்கிறாள். இளவரசியை யார் மணப்பது என்பதைத் தீர்மானிக்க அண்ணனும் தம்பியும் சண்டை போடுகிறார்கள். சண்டையில் தம்பி வெற்றி பெறுகிறான். அவனே இளவரசியைத் திருமணம் செய்கிறான். + +இந்தப் பட்டியல் தி இந்து நாளிதழில் வெளியான இத்திரைப்படம் பற்றிய விமர்சனக் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. +"நடனம்": + +பின்வரும் பட்டியல் தமிழ்த் திரைப்பட வரலாற்றாசிரியர் பிலிம் நியூஸ் ஆனந்தனின் தரவுத் தளத்திலிருந்து தொகுக்கப்பட்டது. + +இத்திரைப்படம் பின்னர் "ஜீவன் தாரா" என்ற தலைப்புடன் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை இத்திரைப்படம் வசூலில் எதிர்பார்த்த அளவு வெற்றியைக் கொடுக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். + +இத்திரைப்படத்துக்கு எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்தார். கம்பதாசன், கே. பி. காமாட்சி ஆகியோர் பாடல்களை இயற்றினர். "வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே", "ஓடி வா வெண்முகில் போலே" ஆகிய இரண்டு பாடல்கள் பிரபலமாயின. இரண்டு பாடல்களையும் டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். ராஜகுமாரி, ஆகியோர் பாடியிருந்தனர். + + +
+ +லைலா மஜ்னு (1950 திரைப்படம்) + +லைலா மஜ்னு 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு எஸ் வி. வெங்கட்டராமன் இசையமைக்க, கம்பதாசனும், சி. ஏ. லட்சுமணனும் பாடல்களை எழுதினர். இபடத்துக்கு வல்லிக்கண்ணன் உரையாடல் எழுதியதாக காட்டப்பட்டாலும், தான் முழுமையாக இந்தப் படத்துக்கு உரையாடலை எழுதவில்லை என பிற்காலத்தில் தெரிவத்தார். + + + + + +மச்சரேகை + +மச்ச ரேகை 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாரிஜாதம் (1950 திரைப்படம்) + +பாரிஜாதம் 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், எம். வி. ராஜம்மா, பி. எஸ். சரோஜா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்தில் மூன்று கதைகள் உள்ளன. +முதல் பகுதியில் நரகாசுரனின் கதை இடம்பெற்றுள்ளது. கடவுளர்களிடம் தான் பெற்ற வரங்களால் நரகாசுரன் அதிக வல்லமை உள்ளவனாகி பல அழிவுகளை ஏற்படுத்துகிறான். நரகாசுரனின் முந்தைய பிறப்பிலே அவனுக்குத் தாயாக இருந்த கிருஷ்ணரின் மனைவியாகிய சத்தியபாமாவினால்மட்டுமே நரகாசுரனை அழிக்க முடியும் என நாரதருக்குத் தெரிகிறது. நரகாசுரனை அழிப்பதற்கு ஒரு திட்டம் தயார் செய்கிறார் நாரதர். பாரிஜாத மலர் ஒன்றை கிருஷ்ணனிடம் கொடுத்து அதை அவனது முதல் மனைவியாகிய ருக்மிணியிடம் கொடுக்கும்படி சொல்கிறார். ஆனால் இதற்கிடையில் சத்தியபாமாவினால் நரகாசுரன் கொல்லப்பட்டு விட்டான். +இரண்டாவது பகுதியில் கிருஷ்ணன் பாரிஜாத மலரை ருக்மிணிக்குக் கொடுத்ததால் பாமாவுக்கு கிருஷ்ணன் பேரில் கோபமேற்படுகிறது. நாரதரின் உதவியோடு கிருஷ்ணர் ஒரு திட்டம் வகுத்து ருக்மிணி தம்மீது எவ்வளவு பற்றுள்ளவாளாக இருக்கிறாள் என்பதை பாமாவுக்கு உணர்த்துகிறார். +மூன்றாவது பகுதி தனிக்கதை. என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் இருவரும் சேர்ந்து மற்றக் கதைகளின் இடையே நகைச்சுவை விருந்தளிக்கிறார்கள். இவர்கள் இருவருடன் காகா ராதாகிருஷ்ணன், புளிமூட்டை ராமசாமி ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். + +இந்தப் பட்டியல் "அன்று கண்ட முகம்" வலைப்பூவிலிருந்து தொகுக்கப்பட்டது. + +நடனம்: + +இந்தப் பட்டியல் "அன்று கண்ட முகம்" வலைப்பூவிலிருந்து தொகுக்கப்பட்டது. + +"லாவண்யா பிக்சர்ஸ்" நிறுவனத்தின் சார்பாக எஸ். கே. சுந்தரராம ஐயர் இத்திரைப்படத்தைத் தயாரித்தார். + +திரைப்படத்துக்கு சி. ஆர். சுப்புராமன், எஸ். வி. வெங்கட்ராமன் இருவரும் இசையமைத்தார்கள். பாடல்களை சந்தானகிருஷ்ண நாயுடு, பாபநாசம் சிவன், கம்பதாசன், உடுமலை நாராயண கவி, கே. டி. சந்தானம் ஆகியோர் இயற்��ினார்கள். பாடியவர்: டி. ஆர். மகாலிங்கம். எம். எல். வசந்தகுமாரி, டி. வி. ரத்தினம், கே. வி. ஜானகி, பி. லீலா and ஜிக்கி ஆகியோர் பின்னணி பாடினர். + + + + +ராஜ விக்கிரமா + +ராஜ விக்கிரமா 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கெம்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கெம்பராஜ், என். எஸ். சுப்பைய்யா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திகம்பர சாமியார் + +திகம்பர சாமியார் 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத் திரைப்படத்தில் எம். என். நம்பியார், டி. பாலசுப்பிரமணியம், பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +கும்பகோணத்தைச் சேர்ந்த நேர்மையற்ற ஒரு வக்கீலான சட்டநாதன் வடிவாம்பாள் என்ற பெண்ணைத் தன் உதவாக்கரைத் தம்பி மாசிலாமணிக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார். ஆனால் வடிவாம்பாள் கண்ணப்பன் என்ற அழகான இளைஞனை விரும்புகிறாள். திகம்பர சாமியார் எனத் தன்னைக் கூறிக்கொள்ளும் சாமியார் உடையணிந்த ஒருவன் வக்கீலின் திருகுதாளங்களை அம்பலப் படுத்த முயற்சி செய்கிறான். கதையில் பல திருப்பங்கள் வருகின்றன. அவன் பல தடவைகள் தன் உருவத்தை மாற்றிக் கொள்ளுகிறான். இறுதியில் தான் எடுத்த முயற்சியில் வெற்றி பெறுகிறான்.
+ஒருவரை 3, 4 நாட்கள் தூங்க விடாமற் செய்தால் தன் மனதில் ஒளித்து வைத்திருக்கும் இரகசியங்களை வெளியில் சொல்லிவிடுவான் என்ற கருத்து இந்தக் கதையில் வலியுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் வக்கீல் தூங்காமல் இருப்பதற்காக, திரைப்படத்தில் லலிதா, பத்மினி, குமாரி கமலா ஆகியோரின் நடனங்கள் இடம் பெற்றுள்ளன. + + + +பல்வேறு வேடங்களில் வரும் எம். என். நம்பியாரின் நடிப்புக்காகவும், பிரபலமான பாடல்களுக்காகவும் இத்திரைப்படம் நினைவில் நிறைந்திருக்கும் என திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை எழுதியுள்ளார். + +திரைப்படத்துக்கு இசையமைத்தவர்கள்: ஜி. ராமநாதன், எஸ். எம். சுப்பையா நாயுடு ஆகியோர். பாடல்களை க. மு. ஷெரிப், ஏ. மருதகாசி, கே. பி. காமாட்சிசுந்தரம், கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் இயற்றினர். பின்னணி பாடியோர்:கே. வி. ஜானகி, யு. ஆர். சந்திரா, கே. பி. கோம��ம், கஜலட்சுமி, பி. லீலா, மாஸ்டர் சுப்பையா ஆகியோர். + + +
+ +விஜயகுமாரி (திரைப்படம்) + +விஜயகுமாரி 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +புரட்சி மனம் கொண்ட இளைஞனான விஜயன் (கே. ஆர். ராமசாமி) நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் பாடுபடுகிறான். அவ்வூர் ராஜகுமாரிக்கு (டி. ஆர். ராஜகுமாரி) முடிசூட்டும் வைபவம் நடக்கும் போது விஜயன் தன் தங்கையுடன் (குமாரி கமலா) மக்களுக்கு விழிப்புணர்வு தரும் வகையில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்துகிறான். இதைப் பார்த்த வில்லன் மந்திரி (செருக்களத்தூர் சாமா) விஜயனின் இந்த நாடகத்தை மக்கள் பார்த்தால் தங்களது திட்டம் எல்லாம் மோசமான பாதிப்புக்குள்ளாகும் என்பதை உணர்ந்து பிரதம மந்திரியின் மகனை (டி. எஸ். பாலையா) இளவரசனாகப் பட்டமளித்து ராஜகுமாரியைத் திருமணம் முடித்து அரசைக் கைப்பற்றுவதற்கு சூழ்ச்சி செய்கிறான். அதே வேளையில் விஜயனும் இளவரசியும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். மந்திரி உடனே அரசனிடம் விஜயனைப் பற்றிய தவறான காரணத்தைக் கூறி அவனை அந்த நாட்டை விட்டு வெளியேற்றுகிறான். + +விஜயனும் தங்கையும் ஒரு தீவை அடைகிறார்கள். அத்தீவின் அரசி மாயா (பி. கே. சரஸ்வதி) விஜயனையும் அவளது தங்கையையும் தன்னுடன் இருக்க வைக்கிறாள். மாயா விஜயன் மேல் காதல் கொள்கிறாள். அவளது காதலை விஜயன் ஏற்க மறுக்கவே அவனை சிறையிலடைக்கிறாள். + +மீன் பிடிப்பவர்களான அண்ணன் தங்கைகளான (பாக்கியம், எம். என். நம்பியார்) ஆகியோருக்கு கடலில் ஒரு மந்திரக் கல் ஒன்று கிடைக்கிறது. அதன் மூலம் விஜயனும் அவனது தங்கையும் சிறை பிடித்திருக்கும் இடம் தெரிந்து இருவரும் விஜயனைக் காப்பாற்றப் புறப்படுகையில் பிடிபடுகிறார்கள். அதே நேரம் விஜயகுமாரியின் தோற்றத்தைக் கொண்ட இளவரசி அந்த நாட்டுக்குள் நுழைந்து மந்திரியின் முட்டாள் மகனை மணம் முடிக்கிறாள். அந்நாட்டில் பெரும் குழப்பம் ஏற்பட்டு இறுதியில் விஜயன் மீண்டு வந்து நாட்டில் மக்களாட்சியைக் கொண்டு வருகிறான். + +இத்திரைப்படத்தில் 14 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இசையமைப்பாளர் சி. ஆர். சுப்புராமன�� பாடல்களுக்கு இசையமைத்திருந்தார். + + + + + +அண்ணி (1951 திரைப்படம்) + +அண்ணி () என்பது 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். பிரகாஷ் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாஸ்டர் சேது, மாஸ்டர் சுதாகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தேவகி (திரைப்படம்) + +தேவகி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். என். கண்ணப்பா, எஸ். பாலச்சந்தர், மாதுரி தேவி, வி. என். ஜானகி, எம். என். நம்பியார், ஆர். பாரதி, ஏ. கருணாநிதி, எஸ். ஆர். ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +என். என். கண்ணப்பா - துரை +எஸ். பாலச்சந்தர் - ராஜா +எம். என். நம்பியார் - கோபு +டி. பாலசுப்ரமணியம் - ரகுநாத் +டி. என். சிவதாணு - காரியதரிசி +ஏ. கருணாநிதி - கோவிந்தன் +எஸ். எம். திருப்பதிசாமி - மெய்யப்பர் +ஏ. கணபதி - கந்தவேள் +வி. எம். ஏழுமலை - வைத்தியர் +எம். என். கிருஷ்ணன் - சிஷ்யன் +டி. எம். சௌந்தரராஜன் - பிச்சைக்காரன் +பி. எஸ். சுப்பையா - வேலையற்றவன் +வி. என். ஜானகி - தேவகி +மாதுரிதேவி - லீலா +ஆர். பாரதி - பாப்பா +எஸ். ஆர். ஜானகி - குஞ்சம்மாள் +எம். ராதாபாய் - மாணவ சங்கத் தலைவி +எம். டி. கிருஷ்ணாபாய் - மாதர் சங்கத் தலைவி +பேபி ராணி வசந்தி - செல்வமணி +திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. இராமநாதன். பாடல்களை இயற்றியோர்: ஏ. மருதகாசி, கா. மு. ஷெரீப், கண்ணதாசன் ஆகியோர். பின்னணி பாடியவர்கள்: திருச்சி லோகநாதன், பி. லீலா, பி. ஜி. கிருஷ்ணவேணி (ஜிக்கி), என். எல். கானசரஸ்வதி, ஆர். ரத்னமாலா, யு. ஆர். சந்திரா, ஆர். பார்வதி ஆகியோர். + + + + + +கைதி (திரைப்படம்) + +கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், எஸ். ஏ. நடராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கலாவதி (திரைப்படம்) + +கலாவதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். எஸ். ராமச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். துரைராஜ், ஈ. ஆர். சகாதேவன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +எம். எஸ். ஞானமணி இசையம��த்த பாடல்களை இயற்றியோர்: டி. கே. சுந்தர வாத்தியார், ஏ. எம். நடராஜ கவி, எம். எஸ். சுப்பிரமணியம் ஆகியோர். + +இத்திரைப்படத்தில் இடம்பெற்ற "நமஸ்தே" என்ற பாடல் 1950 களில் இலங்கை வானொலியின் ஆசிய சேவை தமிழ் ஒலிபரப்பில் தொடக்க இசையாக ஒலிபரப்பப்பட்டு வந்தது. + + + + +லாவண்யா (திரைப்படம்) + +லாவண்யா 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஈ. வரதன், புளிமூட்டை ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மணமகள் (திரைப்படம்) + +மணமகள் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மு. கருணாநிதி திரைக்கதை வசனம் எழுத. என். எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மர்மயோகி + +மர்மயோகி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாயக்காரி + +மாயக்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், சிவராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாய மாலை + +மாய மாலை 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மீர்ஷவூர் ராஜா சாகீப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரா ராவ், எம். வி. மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மோகனசுந்தரம் + +மோகனசுந்தரம் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +நிரபராதி (1951 திரைப்படம்) + +நிரபராதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எச். எம். ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பிரகாஷ் ராவ், அஞ்சலி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாதாள பைரவி + +பாதாள பைரவி "(Pathala Bhairavi)" 1951 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும். கே.வி.ரெட்டி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், எஸ். வி. ரங்கராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் இசையமைப்பாளர் கண்டசாலா ஆவார். இப்படம் தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாரிக்கப்பட்டது எனபது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு மொழியில் 15 மார்ச் 1951-யில் வெளியான இப்படம் வியாபார ரீதியாக மாபெரும் வெற்றி அடைந்து, 200 நாட்களுக்கு ஓடிய முதல் தெலுங்கு படம் என்ற சாதனையையும் செய்தது. தஞ்சை இராமையாதாசு தமிழ் படத்திற்கான கதை வசனம் எழுதியிருந்தார் + + +உஜ்ஜைனியின் மஹாராணி தன் மகள் இந்துமதியை (இந்து) தன் தம்பி சூரசேனாவிற்கு திருமணம் செய்ய விரும்புகிறார். தம்பி சூரசேனாவோ மிகவும் பயந்த, நிலையற்ற மனநிலை கொண்டவன். அவ்வாறாக சூரசேனா பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால், தோட்ட ராமுடு அவனை அடித்து விடுகிறான். அதனால், அரசருக்கு முன்னால் வரவழைக்கப்பட்டு, மரண தண்டனை வழங்கப்படுகிறது. ராமுடுவின் மரண தண்டனை நிறைவேற்ற ஒரு தினத்திற்கு முன்பு, அரசு காவலை மீறி மிக ரகசியமாக தப்பித்து இந்துமதியை சந்தித்து தன் காதலை வெளிப்படுத்துகிறான் ராமுடு. ஒரு தீய மந்திரவாதியிடம் இருந்து இந்துவை காப்பாற்ற ஒரு தைரியமான ஆண்மகனால் மட்டுமே முடியும் என்று ஜோசியர் கூறியது ராஜாவின் நினைவிற்கு வந்தது. அதனால், ராமுடு இந்துவை திருமணம் செய்ய உஜ்ஜைனி ராஜாவிடம் உள்ள சொத்து அளவிற்கு ராமுடு சம்பாதித்தால் அவளை மணக்கலாம் என்று ராஜா சவால் விடுகிறார். அதை ராமுடு ஒப்புக்கொள்ள, விடுதலை செய்யப்படுகிறான். + +தெருவில் மாயாஜாலம் செய்யும் ஒரு நேபாள மந்திரவாதியை ராமுடு சந்திக்கிறான். ஒரு தைரியமான புத்திசாலி ஆண் மகனை பலி கொடுத்தால் கேட்ட வரம் தரும் சிலையை தருவதாக பாதாள பைரவி வாக்கு தந்திருந்தாள். ராமுடுவை பலி கொடுக்க முடிவுசெய்கிறான் அந்த மந்திரவாதி. அந்த சமயம் புனித நீராடச் சென்ற ராமுடு, குளத்தில் முதலை ஒன்றை சண்டையிட்டு கொல்ல, சாபம் நீங்கி அது ஒரு பெண்ணாக மாறி மந்திரவாதியின் பலி திட்டத்தை ராம��டுவிற்கு சொல்லியது. அதை மனதில் வைத்துக்கொண்டு, பலிக்கு முன்னால், ராமுடு அந்த மந்திரவாதியை பலி கொடுத்து வரம் தரும் சிலையை பெற்று இந்துவை மணக்க வேண்டிய செல்வத்தையும் பெற்றுவிடுகிறான். அதனை அறிந்த ராஜா, தான் கொடுத்த வாக்குப்படி திருமணம் செய்து வைக்க முடிவுசெய்கிறார். + +மந்திரவாதியின் உதவியாள் சடஜப்பா சஞ்சீவனியின் உதவியால் தன் குரு மந்திரிவாதியை மீண்டும் உயிர் பெரும் படி செய்கிறான். உயிர் பெற்ற மந்திரவாதி, தற்கொலை செய்யப்போகும் சூரசேனனை அவன் அந்த சிலையை கொண்டுவந்து கொடுத்தால் இந்துவும் செல்வமும் கிடைக்கும் என்றுவாக்குத் தருகிறான். அதனை ஒப்புக்கொண்டு தந்திரம் செய்து அந்த சிலையை திருடிவந்து மந்திரவாதியிடம் சூரசேனன் கொடுத்ததால் ராமுடுவின் செல்வம் அனைத்தும் மறைந்துபோயின. செல்வத்தை மீட்டுவருவதாக சபதம் செய்து, அஞ்சியுடன் மந்திரவாதியின் குகையை தேடித் செல்கிறான் ராமுடு. + +அவர்கள் குகையை தேட சென்றிருக்க, மந்திரவாதி தன்னை திருமணம் செய்ய இந்துவை வற்புறுத்துகிறான். ஒப்புக்கொள்ளாதால், சிலையின் உதவியுடன் ராமுடுவை குகைக்கு வரவழைத்து இந்துவிற்கு முன்னால் துன்புறுத்தப்படுகிறான் ராமுடு. சடஜப்பா போல் வேடம் பூண்ட அஞ்சி, மந்திரவாதி தன் தாடியை சவரம் செய்தால் இந்து திருமணத்திற்கு ஒப்புக்கொள்வாள் என்றான். தாடியை எடுக்க, அனைத்து சக்தியையும் இழந்தான் மந்திரவாதி. சிலை யாருக்கு கிடைத்தது? இந்துவை யார் திருமணம் செய்தார்? என்ற கேள்விகளுக்கு விடைகாணுதலே மீதி கதையாகும். + +இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் கண்டசாலா ஆவார். பிங்களி நாகேந்திரராவ் இப்படத்தின் தெலுங்குப் பாடல்களை எழுதினார். +15 மார்ச் 1951 அன்று தெலுங்கிலும், 17 மே 1951 அன்று தமிழிலும் இப்படம் வெளிவந்தது.175 நாட்கள் தொடர்ந்து ஓடிய முதல் தெலுங்கு திரைப்படம் இதுவாகும். 200 நாட்கள் ஓடியதும் இப்படம்தான். பாதாள பைரவி விமர்சகர்களால் நன்கு பாராட்டப்பட்டப் படமாகும். + + + + + +பிச்சைக்காரி (திரைப்படம்) + +பிச்சைக்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிச்சி சுகுமாரன் நாயர், குஞ்சகுஞ்ஞா பாகவதர் மற்றும் பலரும் நடித்துள்ளனர���. + + + + +சர்வாதிகாரி (திரைப்படம்) + +சர்வாதிகாரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சிங்காரி + +சிங்காரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சௌதாமினி + +சௌதாமினி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, டி. ஆர். ராமச்சந்திரன், ப. கண்ணாம்பா, அக்கினேனி நாகேஸ்வர ராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஏப்ரல் 26 + + + + +[[பகுப்பு:ஏப்ரல்]] +[[பகுப்பு:ஆண்டின் நாட்கள்]] + + + +ஏப்ரல் 27 + + + + + + + +இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழு + +இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழு(Securities and Exchange Commission of Sri lanka)(SEC) என்பது இலங்கையில் பிணைக்களுக்கான சந்தையை ஒழுங்குபடுத்தல்,பங்கு பரிவர்த்தனை,பங்குத் தரகர்,அலகு பொறுப்பாட்சி நிறுவனம் என்பவற்றுக்கு அனுமதியளித்தல், கட்டுப்படுத்தல், வழிநடத்தல்,முதலீட்டாளர் நலன் பேணல் போன்ற நோக்கிற்காக நிறுவப்பட்டுள்ள ஒர் அரச அமைப்பாகும். + +இவ் ஆணைக்குழு பாராளமன்ற ஒதுக்கீட்டு நிதி,பங்குத் தரகர்,அலகு பொறுப்பாட்சி நிறுவனங்கள் என்பனவற்றின் செயற்பாட்டு நடவடிக்கைக்காக அறவிடும் நிதி,நன்கொடைகள்,மானியங்கள் போன்ற மூலங்களிலிருந்து நிதி ஈட்டுகின்றது. + +இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவில் 10 பேர் இடம்பெறுகின்றனர்.இவர்களின் பதவிக்காலம் 3 வருடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது. + +இலங்கை பிணைகள் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் குறிக்கோள்கள் இலங்கை பாராளமன்றத்தினால் இயற்றப்படும் சட்டங்களால் வரையறை செய்யப்படும். + +போன்ற குறிக்கோளை முதன்மையாகக் கொண்டுள்ளது. + + + + + + +ஆர். ம��த்துராமன் + +முத்துராமன் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவரது மகன் நடிகர் கார்த்திக் ஆவார். இவர் 1960-1970களில் முன்னணி நடிகராக இருந்தார். நடிகர் எஸ் வி சகஸ்ரநாமம் நடத்தி வந்த "சேவா ஸ்டேஜ்" நாடகங்களில் நடித்து வந்தார். "நவரச திலகம்" எனவும் அழைக்கப்பட்டார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். + +அக்காலத்திய முன்னணி இயக்குனர்களான ஸ்ரீதர், கே. பாலச்சந்தர் ஆகியோரின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் நடித்தார். + +பூர்விகம், மன்னார்குடி சாலையில் ஒரத்தநாடு அருகே உள்ள ஒக்கநாடு தான், முத்துராமனின் சொந்த ஊர் ஆகும். அங்குள்ள பள்ளியில்தான் 5-ம் வகுப்பு வரை படித்திருக்கிறார். முத்துராமனுக்கு பூர்வீகத்தில் 6 ஏக்கர் நஞ்சை நிலமும், ஒரு வீடும் சொந்தமாக இருந்திருக்கிறது. ,முன்னணிக் கதாநாயகனாக பல படங்களில் நடித்தபோதும், தன்னை முன்னிறுத்தாத, கதாநாயகியை முன்னிறுத்தும் பல படங்களில் (கே.ஆர்.விஜயா, சுஜாதா ஆகியோருடன்) நடித்துள்ளார். மேலும், அப்போதைய முன்னணி நட்சத்திரங்களாகத் இருந்த எம்.ஜி.ஆர் ('என் அண்ணன்', 'கண்ணன் என் காதலன்' போன்றவை) மற்றும் சிவாஜி கணேசன் ('பார் மகளே பார்', 'நெஞ்சிருக்கும் வரை', 'சிவந்த மண்' போன்றவை) ஆகியோருடன் பல திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். தனது காலத்தில் அல்லது தனக்குப்பின் அறிமுகமான ஜெய்சங்கர் (கனிமுத்துப் பாப்பா), ரவிச்சந்திரன் ('காதலிக்க நேரமில்லை') ஏவி. எம். ராஜன் ('பதிலுக்குப் பதில்', 'கொடிமலர்') ஆகியோருடன் இரண்டாவது நாயகனாகவும் நடித்துள்ளார். தனது திரைப்படங்கள் பலவற்றிலும் மிகைப்படுத்தாத தன்னம்பிக்கை மிகுந்த நடிப்பிற்காகப் பெயர் பெற்றார். + +இவரது இறுதிப்படம் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த போக்கிரி ராஜாவாகும். இதில் வில்லன் வேடம் ஏற்றிருந்த முத்துராமன், ஒரு வெளிப்புறப்படப்பிடிப்பிற்காக ஊட்டி சென்றிருந்தபோது மாரடைப்பால் காலமானார். அச்சமயமே, இவரது மகனான கார்த்திக் கதாநாயகனாக பாரதிராஜா வின் புகழ்பெற்ற அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகவாகவிருந்தார். + +இது முழுமையான பட்டியல் அல்ல. + + +பார் மகளே பார் +நெஞ்சில் ஓர் ஆலயம் +பஞ்சவர்ணக்கிளி +காதலிக்க நேரமில்லை +ஊட்டி வரை உறவு +படித்தால் மட்டும் போதுமா +கொடி மலர் +அன்னை இல்லம் +சர்வர் சுந்தரம் +பழநி +போலீஸ்காரன் மகள் +வாழ்க்கை +கற்பகம் +சித்தி +வானம்பாடி +மேஜர் சந்திரகாந்த் +கலைக்கோயில் +எதிர் நீச்சல் +நவக்கிரகம் +மகாலக்‌ஷ்மி +மல்லியம் மங்களம் +சுமைதாங்கி +குங்குமம் +மணியோசை +அம்மா எங்கே? +தெய்வத் திருமகள் +கர்ணன் +நானும் மனிதன் தான் +திருவிளையாடல் +மகாகவி காளிதாஸ் +நாணல் +பணம் தரும் பரிசு +பூஜைக்கு வந்த மலர் +தாயின் கருணை +நம்ம வீட்டு லக்‌ஷ்மி +மறக்க முடியுமா? +அனுபவம் புதுமை +அனுபவி ராஜா அனுபவி +பாமா விஜயம் +தெய்வச்செயல் +முகூர்த்தநாள் +நான் +நெஞ்சிருக்கும் வரை +ராஜாத்தி +சீதா +தங்கை +திருவருட்செல்வர் +தேவி +பூவும் பொட்டும் +டீச்சரம்மா +தேர்த்திருவிழா +உயிரா? மானமா? +அவரே என் தெய்வம் +கண்ணே பாப்பா +காவல் தெய்வம் +நிறைகுடம் +சிவந்த மண் +சுபதினம் +துலாபாரம் + + +https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/10/26121153/Muthuraman-who-is-named-Gentleman-by-actresses.vpf + + + +பிறட் ஒட்ச் + +பிறட் ஒட்ச் ("Brad Hodge", பி: டிசம்பர் 29, 1971 விக்டோரியா அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர ஓவ்-சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார். + + + + +இசுட்டீவ் கிளார்க் + +இசுட்டீவ் கிளார்க் (பிறப்பு: செப்டம்பர் 28, 1975 சிட்னி,நியூ சவுத் வேல்ஸ் அவுஸ்திரேலியா) அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் சிறப்பு பந்து வீச்சாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் வேகப்பந்து வீச்சாளார் ஆவார். + + + + +மைக்கல் கிளார்க் + +மைக்கல் ஜான் கிளார்க் (Michael John Clarke (பிறப்பு:ஏப்ரல் 2, 1981 லிவர்பூல்,நியூ சவுத் வேல்ஸ் அவுஸ்திரேலியா) ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி முன்னாள் வீரர் மற்றும் அணித் தலைவர் ஆவார். இவர் சிறப்பு மட்டையாளராக அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் "பப்" எனவும் அழைக்கப்படுகிறார். இவர் பொதுவாக அணியின் இடைநிலை மட்டையாளராக களமிறங்குவார். இவர் பகுதிநேர சுழற்பந்து வீச்சாளாரும் ஆவார். 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரை வென்ற ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். + +முதல் ப��்னாட்டு இருபது20 போட்டிக்கான ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இவர் இருந்தார். இவர் 23 எண் கொண்ட ஆடையை அணிந்தார். இதற்கு முன் இந்த எண் கொண்ட ஆடையை ஷேன் வோர்ன் அணிந்திருந்தார். அவர் ஓய்வு பெற்றதை அடுத்து கிளார்க் அணிந்தார். ஜனவரி ,2011 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக பன்னாட்டு இருபது20 போட்டிகளின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். + +2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரின் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளோடு இவர் தனது ஓய்வினை அறிவித்தார். இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 72 பந்துகளில் 74 ஓட்டங்கள் எடுத்து ஐந்தாவது முறையாக கோப்பை வெல்வதற்கு உதவினார். வெற்றி பெறுவதற்கு 9 ஓட்டங்கள் தேவைப்படும் போது இவர் "பவுல்டு" முறையில் வீழ்ந்தார். அப்போது மெல்போர்ன் துடுப்பாட்ட அரஙக்த்தில் இருந்த 90,013 பார்வையாளர்களும் இவருக்கு எழுந்து நின்று மரியாதை அளித்தனர். + +ஆகஸ்டு 8, 2015 ஆம் ஆண்டில் ஆஷஸ் தொடரின் இறுதிப் போட்டியின் போது அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். இந்தப் போட்டியில் ஒரு "இன்னிங்ஸ் மற்றும்" 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணி வெற்றி பெற்றது. கிளார்க் தலைவராக இருந்து ஆஷஸ் தொடரை இழப்பது இது இரண்டாவது முறையாகும். + +அக்டோபர் 2004 ஆம் ஆண்டில் பெங்களூரில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 151 ஓட்டங்கள் எடுத்து அணி வெற்றி பெற உதவினார். 2005 ஆம் ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடரில் நிலையான ஆட்டத் திறனை வெளிப்படுத்த தவறினார். இதனால் 2005 ஆம் ஆம் ஆண்டின் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி விளையாடிய தேர்வுத் துடுப்பாட்டங்களில் இவருக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்பாக தேர்வுத் துடுப்பாட்ட அணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்று தெரிவித்திருந்தார். + +2007 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தார். டேமியன் மார்ட்டின் ஓய்வு பெற்றதை அடுத்து இவர் ஐந்தாவதாக களம் ��றங்கினார். இந்த உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பாக விளையாடி நான்கு ,50 கள் அடித்தார். இதில் நெதர்லாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 92 ஓட்டங்கள் எடுத்தார். பின் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 93* ஓட்டங்கள் எடுத்தார். பார்படோசுவில் நடைபெற்ற இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில்60 ஓட்டங்கள் அடித்து அணியை இறுதிப் போட்டியில் விளையாடச் செய்தார். + + + + +1959 + +1959 (MCMLIX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். + + + + + + + + +இசுதிரீ சாகசம் + +இசுதிரீ சாகசம் (ஸ்திரீ சாகசம்) 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வரராவ், ரெலங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சுதர்சன் (திரைப்படம்) + +சுதர்சன் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி மற்றும் சுந்தர ராவ் நட்கர்ணி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. கண்ணாம்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படம் பி. யு. சின்னப்பா நடித்து வெளிவந்த கடைசித் திரைப்படம் ஆகும். அவர் இறந்த பின்னர் வெளியானது. + + + + +வனசுந்தரி + +வனசுந்தரி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ஆன் (திரைப்படம்) + +ஆன் (இந்தி: आन, உருது: آن, அர்த்தம்: பெருமை), 1952 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தித் திரைப்படமாகும். மெகபூப் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திலீப் குமார், பிரேம்நாத் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. + + + + +ஏழை உழவன் + +ஏழை உழவன் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இ���்திரைப்படத்தில் ஸ்ரீ ராமமூர்த்தி, லிங்கமூர்த்தி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அமரகவி + +அமரகவி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படத்துக்கு ஜி. ராமநாதன், டி. ஏ. கல்யாணம் ஆகியோர் இசையமைத்தார்கள். ஏ. மருதகாசி, சுரதா, கா. மு. ஷெரீப், பாபநாசம் சிவன், லட்சுமணதாஸ் ஆகியோர் பாடல்களை இயற்றினார்கள். + + + + +அம்மா (திரைப்படம்) + +அம்மா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திக்குறிச்சி, டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அந்தமான் கைதி + +அந்தமான் கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், திக்குறிச்சி சுகுமாறன் நாயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சின்னதுரை + +சின்னதுரை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், பி. ஆர். பந்துலு, பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தர்ம தேவதா + +தர்ம தேவதா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புள்ளைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் லிங்கமூர்த்தி, பி. என். ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +ஜமீந்தார் (திரைப்படம்) + +ஜமீந்தார்1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், ஜி. முத்துகிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +காதல் (1952 திரைப்படம்) + +காதல் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராமகிருஷ்ண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. நாகேஸ்வர ராவ், முக்கமலா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கலியுகம் (1952 திரைப்படம்) + +கலியுகம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துருபாட் வி. எஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். குமரேசன், பி. ஜி. வெங்கடேசன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கல்யாணம் பண்ணிப்பார் + +கல்யாணம் பண்ணிப்பார் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியான நகைச்சுவைத் திரைப்படமாகும். இப்படத்தின் உரையாடல்களையும், பாடல்களையும் தஞ்சை இராமையாதாஸ் எழுதினார். கண்டசாலா இசையமைத்தார். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். டி. ராமராவ், பத்மனாபன், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் தெலுங்கில் பெல்லி சேசி சூடு என்று முதலில் வெளியானது. + + + + +கல்யாணி (திரைப்படம்) + +கல்யாணி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நம்பியார், எம். ஜி. சக்கரபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +காஞ்சனா (1952 திரைப்படம்) + +காஞ்சனா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. எஸ். துரைராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர் . + + + + +குமாரி (திரைப்படம்) + +குமாரி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மனாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், ஷர்மா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மாணாவதி + +மாணாவதி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சர்வோதயா பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் முக்கமலா, மாதுரி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாப்பிள்ளை (1952 திரைப்படம்) + +மாப்பிள்ளை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், பி. வி. நரசிம்ம பாரதி, வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாய ரம்பை + +மாய ரம்பை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ரகுராமைய்யா, என். டி. ராமராவ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மூன்று பிள்ளைகள் + +மூன்று பிள்ளைகள் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படம் 1940 ஆம் ஆண்டில் வெளிவந்த "த வே ஒஃப் ஓல் பிளெஷ்" ("The Way of All Flesh") என்ற ஹாலிவுட் திரைப்படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. நாகேந்திர ராவ், கண்ணாம்பா ஆகியோரின் பிள்ளைகளாக எம். கே. ராதா, ஜெமினி கணேசன், சிறீராம் ஆகியோரும் இவர்களின் மனைவிகளாக சூர்யப்பிரபா, குமாரி வனஜா, சாசுவதி ஆகியோரும் நடித்திருந்தனர். ஜே. பி. சந்திரபாபு இத்திரைப்படத்தில் ஒரேயொரு காட்சியில் ஜெமினி ஸ்டூடியோவுக்கு முன்னால் தற்கொலை செய்து கொள்பவராக வருகிறார். + + + + +பணம் (திரைப்படம்) + +பணம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். எஸ். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி திரைக்கதையை எழுதினார். இதில் சிவாஜி கணேசன், பத்மினி, என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், எஸ். எஸ். ராஜேந்திரன், வி. கே. ராமசாமி ஆகியோர் நடித்திருந்தனர். + + + +இது சிவாஜிகணேசனின் இரண்டாவது திரைப்படம். 'பராசக்தி' வெளியாகி 2 மாதங்களுக்குப் பின் இத்திரைப்படம் வெளியாகியது. பராசக்தியும், பணமும் ஒரே நேரத்தில் தயாராகி வந்தன. பராசக்தி வெளிவருவதில் கொஞ்சம் தாமதமாகியிருந்தால், சிவாஜியின் முதல் திரைப்படமாக பணம் அமைந்திருக்கும். + + + + + +பசியின் கொடுமை + +பசியின் கொடுமை 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரேம்நசீர், திக்குறிசி சுகுமாரன் மற்றும் பலரும் ந��ித்துள்ளனர். + + + + +பிரியசகி (1952 திரைப்படம்) + +பிரியசகி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சத்தியம்,நம்பியார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +புயல் (திரைப்படம்) + +புயல் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. விஸ்வநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. எம். பஷீர்,ஏ. கே. மோகன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சியாமளா (திரைப்படம்) + +சியாமளா 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஏ. சுப்பராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், ரேவங்கி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +""ராஜன் மகாராஜன் திருவெற்றியூர் மேவும் திருவாளர் தியாக ராஜன், மகாராஜன்"" என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடல். + + + + +தாய் உள்ளம் + +தாய் உள்ளம் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மனோகர், ஜெமினி கணேசன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வளையாபதி (திரைப்படம்) + +வளையாபதி 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துகிருஷ்ணன், ஏ. கருணாநிதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார். + + + + + +வேலைக்காரன் (1952 திரைப்படம்) + +வேலைக்காரன் 1952 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. எஸ். பாலையா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கங்காவதார் + +கங்காவதார் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. கே. சச்சி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நாகர்கோவில் கே. மகாதேவன், காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கிருஷ்ணபிடாரன் (திரைப்படம்) + +கிருஷ்ண பிடாரன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மனமாளிகை + +மனமாளிகை 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. வி. சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், எஸ். ஆர். சாந்தோ மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பிருதிவிராஜன் (திரைப்படம்) + +பிருத்விராஜன் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜசூயம் + +ராஜசூயம் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். செருகளத்தூர் சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வி. என். சுந்தரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சம்சாரி (திரைப்படம்) + +சம்சாரி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். + +சம்சாரி என்ற இத்திரைப்படமும், சனியாசி என்ற திரைப்படமும் ஒன்று சேர்க்கப்பட்டு சன்யாசி-சம்சாரி என்ற ஒரு தொகுப்பாக வெளிவந்தன. புதுக்கோட்டையைச் சேர்ந்த யூபிட்டர் பிலிம்சு என்ற நிறுவனம் இதனைத் தயாரித்தது. சம்சாரி திரைக்கதையை காவை சதாசிவம் என்பவர் எழுதினார். அவரே முக்கிய பாத்திரத்திலும் நடித்திருந்தார். நடராஜ ஆச்சாரி இசையமைத்த இத்திரைப்படத்தை எம். கிருஷ்ணரத்தினம் இயக்கியிருந்தார். + + + + +சன்யாசி (திரைப்படம்) + +சன்யாசி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யூப்பிட்டர் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்றது இத்திரைப்படம். + +சன்யாசி என்ற இத்திரைப்படமும், சம்சாரி என்ற திரைப்படமும் ஒன்று சேர்க்கப்பட்டு சன்யாசி-சம்சாரி என்ற ஒரு தொகுப்பாக வெளிவந்தன. சன்யாசி திரைப்படத்தின் கதையை பிரபலமான கன்னட நடிகர் கே. இர்னைய்யா என்பவர் எழுதியிருந்தார். எம். எஸ். ஞானமணி இசையமைத்திருந்தார். பி. ஏ. குமார், பி. ஜி. வெங்கடேசன் போன்றோர் நடித்திருந்தனர். + + + + +சோகாமேளர் (திரைப்படம்) + +சோகாமேளர் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +கொத்தமங்கலம் சீனு (வி. எஸ். சிறிநிவாசன்) சோகாமேளராகப் பாடி நடித்திருந்தார். ஜி. சுந்தர பாகவதர் (இசையமைப்பாளர் ஜி. ராமநாதனின் சகோதரர்) திரைக்கதை, மற்றும் பாடல்களை எழுதியிருந்தார். அவரே இசையமைத்தும் இருந்தார். + +தாழ்த்தப்பட்ட சாதியச் சேர்ந்த சோகாமேளர் ("கொத்தமங்கலம் சீனு") பண்டரிபுரத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலுக்குள் செல்லுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பழமைவாதிகளான பிராமணர்கள் ("எம். ஆர். ராதா") அவரை உளரீதியாகப் பலவிதத்திலும் துன்புறுத்தினர். ஆனாலும், சோளாமேளரின் கடும் வழிபாட்டினால் கடவுள் அவர் முன் தோன்றினார். அத்துடன் அவரின் குடிசைக்கு நாள்தோறும் சென்று சோகாமேளர் பரிமாறிய உணவையும் உண்டார். இதனையறிந்த பழமைவாதிகள் சோகாமேளரைத் தாக்கினர். ஆனாலும் பத்ரிநாத் கோயிலில் சில அதிசயங்கள் நிகழ்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தனர். சோகாமேளர் தாக்குதலுக்குள்ளக்கப்பட்ட அதே நாளில் சோகாமேளருக்கு ஏற்பட்டிருந்த உடற்காயம் போன்ற அதே காயம் கோயிலில் இருந்த சிலையிலும் ஏற்பட்டிருந்தது. தமது மடமையை உணர்ந்த பழமைவாதிகள் சோகாமேளரிடம் மன்னிப்புக் கேட்டு, கோயிலினுள் அவரை செல்ல அனுமதித்தனர். + + + + +தமிழறியும் பெருமாள் + +தமிழறியும் பெருமாள் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். உமா பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +திருவாழத்தான் + +திருவாழத்தான் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, எ���். நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +உத்தமி + +உத்தமி 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். லட்சுமணன், சி. வி. வி. பந்துலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அக்ஷயம் + +அக்ஷயம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிலிம் லைப்ரரி நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + +தாசிப் பெண் (ஜோதிமலர்) + +தாசிப்பெண், ஜோதிமலர் அல்லது தும்பை மகாத்மியம் என்ற மூன்று பெயர்களில் 1943 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கியிருந்தார். இதில் டி. ஆர். மகாலிங்கம், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +புவனேஸ்வரிப் பிச்சர்ஸ் தயாரித்திருந்தது. லலிதா வெங்கட்ராமன், எஸ். ராஜேஸ்வர ராவ் ஆகியோர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தனர். + + + + +குபேர குசேலா + +குபேர குசேலா 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். மணி, மற்றும் பி. எஸ். இராமையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பாபநாசம் சிவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். குசேலர், குபேர குசேலராக ஆன பிறகு என்ன நடந்திருக்கும் என கற்பனை செய்து, பி. எஸ். இராமையா இப்படத்துக்கான கதை, வசனத்தை எழுதியிருந்தார். +ஏழையான குசேலன் தன் நண்பன் கண்ணனைக் கண்டு அவனால் குபேரன் போன்ற செல்வத்தை அடைகிறார். அதனால் உலகம் குசேலனை பூலோக குபேரன் என அழைக்கிறது. இதனால் செல்வத்தின் அதி தேவதையான குபேரன் ஆத்திரம் அடைகிறார். அதைத் தொடர்ந்து குசேலனுக்கு எதிராக அவர் சதிசெய்கிறார். அளவுக்கு மீறி பணம் வந்த பிறகு குசேலர் காயகல்பம் சாப்பிட்டு இளைஞர் ஆகிறார். பின்னர் டி.ஆர்.ராஜகுமாரியை காதலிக்கிறார். இதனால் அவர் குடும்பத்தில் குழப்பங்களையும், திருப்பங்களும் ஏற்படுகின்றன. +இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர். குன்னக்குடி வெங்கடராம ஐயர், எஸ்.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் இசையமைத்தி��ுந்தனர். + + + + + + +குமார குலோத்துங்கன் + +குமார குலோத்துங்கன்1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டெக்கான் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. டி. கண்ணபிரான், ஜி. கோபால் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +திவான் பகதூர் (திரைப்படம்) + +திவான் பகதூர் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். "என் உள்ளமதை கொள்ளை கொண்ட..." என்ற நகைச்சுவைப் பாடல் பிரபலம். + + + + +பக்த ஹனுமான் + +பக்த ஹனுமான் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பர்த்ருஹரி (திரைப்படம்) + +பர்த்ருஹரி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் மற்றும் சி. எஸ். வி. ஐயர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஹரிச்சந்திரா (1944 திரைப்படம்) + +ஹரிச்சந்திரா 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்டு கே. பி. நாகபூசணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா அரிச்சந்திரனாகவும், பி. கண்ணாம்பா சந்திரமதியாகவும் நடித்து வெளிவந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் பலரும் இதில் நடித்திருந்தனர். + +மொத்தம் 15 பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. + + +இத்திரைப்படம் வெளிவந்த அதே நேரத்தில் கன்னடத்தில் தயாரிக்கப்பட்ட "ஹரிச்சந்திரா" என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் 1943ல் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்திருந்தது. இத்திரைப்படமே முதன் முதலில் தென்னிந்தியாவில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவந்த முதலாவது திரைப்படம�� ஆகும். + + + + + + +ஹரிதாஸ் (1944 திரைப்படம்) + +ஹரிதாஸ் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, சுந்தர ராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படம் 10 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. + +1944ம் ஆண்டு தீபாவளி அன்று (16 அக்டோபர்) சென்னை சன் தியேட்டர்சில் திரையிடப்பட்ட இப்படம் அதே திரையரங்கில் 100 வாரங்கள் தொடர்ந்து ஓடி சாதனை படைத்தது. 1946 தீபாவளி நாள் (22 நவம்பர்) வரை தொடர்ந்து ஓடியது. பிற திரையரங்குகளையும் சேர்த்து மொத்தம் 133 வாரங்கள் ஓடியது. + +அரிதாஸ் ("எம். கே. தியாகராஜ பாகவதர்") பிராமண குலத்தில் பிறந்த தெய்வபக்தி கொண்ட ஒரு செல்வந்தரின் மகன். தாய்தந்தையருக்கு அடங்காமல் மனைவி லட்சுமியின் ("என். சி. வசந்தகோகிலம்") சொல்லுக்கு இணங்கி நடப்பவன் போல நடித்துக் கொண்டு, பிற பெண்களுடன் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் நண்பன் ரங்கனின் ("எஸ். ஆர். கிருஷ்ணய்யங்கார்") உதவியுடன் ரம்பா ("டி. ஆர். ராஜகுமாரி") என்ற நடன மங்கையை சந்தித்து, வீட்டில் தாய் தந்தையர் இல்லாத நேரத்தில் அவளையும் அவளது குழுவினரையும் வீட்டிற்கு அழைத்து வந்து வெகு விமரிசையாக நடனமாட வைத்தான். மனைவி லட்சுமிக்கு ரம்பா தாசி எனத் தெரிந்து, அவளுடன் வாக்குவாதம் செய்து வெளியே துரத்துகிறாள். இதனால் அவமானமடைந்த ரம்பா தனது துட்ட நண்பர்கள் மூலம் லட்சுமியை ஒரு மரத்தில் கட்டி அடிக்க வைக்கிறாள். அவள் அரியின் தகப்பனாரால் காப்பாற்றப்படுகிறாள். துட்டர்கள் அரிதாசிடம் அவருடைய தந்தைதான் இச்சம்பவத்திற்குக் காரணம் எனச் சொல்ல, அரிதாசும் அவனது பெற்றோர்களை வீட்டைவிட்டு விரட்டுகிறான். + +ரம்பையுடனான நட்பு நாளுக்கு நாள் அதிகரித்து, அரிதாஸ் குடிப்பழக்கம், சூதாட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு தனது செல்வம் அனைத்தையும் இழந்து தனது வீட்டை ரம்பைக்கு எழுதிக் கொடுக்கிறான். ரம்பா அரிதாசையும், லட்சுமியையும் வீட்டை விட்டுத் துரத்துகிறாள். இருவரும் காட்டில் தூங்குகையில், அரிதாசுக்கு நித்திரை தெளிந்தபோது, அழகான மூன்று பெண்களைக் கண்டு விசாரிக்க, அவர்கள் கங்கா, யமுனா, சரசுவதி என்றும் நாள்தோறும் மகாமுனிவரைக் ("பி. பி. ரெங்காச்சாரி") கண்டு அவரது ஆசீர்வாதத்தைப் பெற்று வருவதாகவும் அவருடைய மகிமையையும் சொல்கிறார்கள். அரிதாஸ் மகாமுனிவரைக் கண்டு கோபித்து அவரை உதைக்க வர முனிவர் அவனது கால்களைத் துண்டிக்கச் செய்கிறார். அரிதாசுத் தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்புக் கேட்கிறான். முனிவரின் உபதேசத்தால், தாய்ந்தந்தையரே தெய்வமென அறிந்து அவர்களைச் சந்தித்து இழந்த கால்களையும் பெறுகிறான். + +இத்திரைப்படத்தில் 20 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. பாபநாசம் சிவன் பாடல்களை இயற்ற, ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.. + + + + + +ஜகதலப்பிரதாபன் + +ஜகதலப்பிரதாபன் 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடு தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +பூம்பாவை (திரைப்படம்) + +பூம்பாவை 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரின் மேற்பார்வையில் டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை மதுரை மாரியப்ப சுவாமிகள், கம்பதாசன் ஆகியோர் எழுதினர். + + + + + +பிரபாவதி (திரைப்படம்) + +பிரபாவதி 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தாசி அபரஞ்சி + +தாசி அபரஞ்சி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோ நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். கே. ராதா, புஷ்பவல்லி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்து, கதை, உரையாடல்,பாடல்கள் போன்றவற்றை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் கொத்தமங்கலம் சுப்பு பணியாற்றினார். +மகதபுரி என்னும் ஊரில் அபரஞ்சி என்ற ஒரு தாசி இருந்தாள். அகங்காரம் மிக்கவளான அந்த தாசி யாராவது தன்னைப்பற்றி பேசினாலோ, நினைத்தாலோ ஆயிரம் பொண்ணை அபராதமாக வசூலித்து விடுவாள். மகதபுரியில் உள்ள கோயிலில் ஒரு ஏழே பூசாரி (கொத்தமங்கலம் சுப்பு) இருந்தார். அவருக்கு இந்த அபரஞ்சிமீது பெரும் மோகம் கொண்டிருந்தார். அவளை அடைய விரும்பிய பூசாரி, சர்க்கரைப் பொங்களில் வசிய மருந்தைக் கலந்து, இந்தப் பிரசாதத்தை அபரஞ்சியிடம் கொடுக்குமாறு அவளின் வேலைக்காரியான சிங்காரியிடம் (எம்.எஸ். சுந்தரிபாய்) கொடுத்தனுப்புகிறார். ஆனால் சர்க்கரைப் பொங்கலை அபரஞ்சியிடம் கொடுக்காத சிங்காரி அதைத் தானே சாப்பிட்டு எஞ்சியதை தனது ஆட்டுக்கு ஊட்டிவிடுகிறாள். வசிய மருந்தை சாப்பிட்ட சிங்காரி பிரேமை பிரேமை என்றும் ஆட்டுக்குட்டி மே மே என்றும் பூசாரியைத் தேடி ஒடுகின்றனர் இவ்வாறு கதை செல்கிறது. + + + + +பக்த காளத்தி + +பக்த காளத்தி 1945 ஆம் ஆண்டு ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஹொன்னப்ப பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார். + + + + +என் மகன் (1945 திரைப்படம்) + +"1974 இல் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப் பற்றிய கட்டுரைக்கு என் மகன் (1974 திரைப்படம்) கட்டுரையைப் பார்க்க". + +என் மகன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.ஆர். எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, டி. பாலசுப்பிரமணியம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். அன்றைய ஆங்கில அரசின் வேண்டுகோளுக்கு இணங்க கோவை சென்ட்ரல் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்டத் திரைப்படம். + +சென்னைக்கு அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி முதலியாரின் மகன் செல்வம் கல்லூரியில் படிக்கிறான். அப்பா மூர்த்தி செல்வத்தின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அப்பா ஏற்பாடு செய்துள்ள பெண் தனது காதலி விமலா தான் என்பது செல்வத்துக்குத் தெரியாது. விமலாவுக்கும் அப்படியே தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை செல்வம்தான் என்று இருவரும் வழ்கையில் வெறுப்படைந்து விமலா "ஆல் இந்தியா நர்ஸிங் சர்வீஸ்" பயிற்சிக்கு போகிறாள், "இந்தியன் ஏர்போர்ஸில்" சேருகிறான். +சப்பானியர் ஆக்கிரமிப்பிலிருந்து பர்மாவை விடுவிக்க இந்திய விமானப்படை போகிறது. போரில் செல்வம் படுகாயமடைகிறான். போர்முனையில் மருத்துவச் சிகிச்சை முகாமில் விமலாவை சந்திக்கிறான். அவர்கள் காதல் நிறைவேறுகிறது. + + + + +கண்ணம்மா என் காதலி (திரைப்படம்) + +கண்ணம்மா என் காதலி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். படத்தின் உரையாடல், பாடல் இயக்கம் கொத்தமங்கலம் சுப்பு, இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எல். நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். உலகப் போரில் ரங்கூனுக்கு ஆதரவாக பிரித்தானியர்கள் அரசின் ஆலோசனையின் பேரில் இப்படம் தயாரிக்கப்பட்டது. இதன் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் அனைத்தையும் கொத்தமங்கலம் சுப்புவே எழுதியிருந்தார். + +ரங்கூன் நகருக்கு அருகில் ஆண்டுதோறும் தீப உற்சவம் என்று ஒரு களியாட்டம் நடைபெறுவதுண்டு. அந்த உற்சவத்திற்கு மருத்துவர் சுந்தரேசன் என்பவர் தனது ஐந்து வயதுக் குழந்தை கண்ணம்மாவை அழைத்துக் கொண்டு செல்கிறார். கூட்ட நெருசலில் குழந்தையைத் திருடன் தூக்கிச் சென்று நகைகளை எடுத்துக்கொண்டு குழந்தையை விட்டு விட்டுப் போய்விடுகிறான். குழந்தையை எவ்வளவோ தேடியும் குழந்தை அகப்படவில்லை. பத்தாண்டுகள் உருண்டோடிவிடுகிறது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியதும் சப்பானியர் ரங்கூனைத் தாக்குகின்றனர். + +இந்தியாவை நோக்கி அநேகர் போய்க்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டு சுந்தரி தொடருந்து நிலையத்திற்கு வந்து முத்து ஏறினானோவென்று தேடுகிறபோது கூட்டம் அவளை தொடருந்தை விட்டு இறங்க விடாமல் நெருக்குகிறது. சுந்தரியால் இறங்க முடியவில்லை, தொடருந்து புறப்பட்டு விடுகிறது. தொடருந்தை சப்பானியர் குண்டு எறிந்து தாக்கவே பயணிகள் பலர் காயமடைகின்றனர். சுந்தரிக்கும் பலத்த காயம் ஏற்படுகிறது. +காயத்துக்கு மருந்திடும் போது சுந்தரியின் மச்சத்தைக் கண்டு காணாமல்போன தனது குழந்தை கண்ணம்மா என ஆனந்தமடைகிறார் மரு. சுந்தரேசன். + + + + +பரஞ்சோதி (திரைப்படம்) + +பரஞ்சோதி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதை உரையாடல் எழுதி பி. எஸ். இராமையா இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சாலிவாகனன் (திரைப்படம்) + +சாலிவாகனன் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், கே. எல். வி. வசந்தா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தில் எம். ஜி. ஆர் (ராமச்சந்தர்) வில்லனாக நடித்துள்ளார். + + + + +ஸ்ரீ வள்ளி (1945 திரைப்படம்) + +ஸ்ரீ வள்ளி 1945 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் மற்றும் ஏ. டி. கிருஷ்ணசாமி ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அலிபாபாவும் நாற்பது திருடர்களும் (1941 திரைப்படம்) + +அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் உரையாடல் எழுத, கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. பி. காமாட்சி, மற்றும் யானை வைத்தியநாதையர் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு என். எஸ். பாலகிருஷ்ணன் இசையமைத்திருந்தார். நடனங்களை எம். ஜெயசங்கர் இயக்கியிருந்தார். + + + + + +பக்த கௌரி + +பக்த கௌரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். நோதானி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, யு. ஆர். ஜீவரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +யு. ஆர். ஜீவரத்தினம் முதன் முதலில் இத்திரைப்படம் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் அவர் பாடிய "தெருவில் வாராண்டி, வேலன் தேடி வாராண்டி" பாடல் இவருக்குப் புகழ் பெற்றுக் கொடுத்தது. + +இத்திரைப்படத்தின் கதை திருவிளையாடல் புராணத்தில் வரும் ஒரு பகுதியை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது. சிவனும் விஷ்ணுவும் ஒருவரா அல்லது வேறு வேறா என்பதே கதையின் கரு. இது குறித்து பூலோகத்தில் பல வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. நாரத முனிவரின் படி இருவரும் ஒருவரே. நாரதர் இவ்வாக்குவாதம் குறித்து சிவனுக்குத் தெரிவிக்கிறார். இதனை நிரூபிக்க, சைவத் தம்பதிகள் இருவரையும் (��ே. கே. பெருமாள், ராஜாமணி) ஆசீர்வதிக்கிறார். இவர்களது மகள் (ஜீவரத்தினம்) வைணவ இளைஞர் ஒருவரை (எஸ். டி. சுப்பையா) சந்தித்து மணந்து கொள்கிறாள். அவளது மாமியார் (சிவபாக்கியம்) இவர்களது திருமணத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கிறாள். பல இன்னல்களுக்கு மத்தியில் இருவரும் ஒன்றிணைந்து சிவனும் விஷ்ணுவும் ஒருவரே என நிரூபிக்கின்றனர். + +இத்திரைப்படத்துக்கான பாடல்களை யாத்தவர் எஸ். வேலுசாமி கவி. + +இசை வழங்கிய வாத்திய குழுவினர்: + + + + + + +தயாளன் + +தயாளன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. மித்ராஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, டி. ஆர். மகாலிங்கம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +இழந்த காதல் + +இழந்த காதல் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். மணி இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + + +காமதேனு (திரைப்படம்) + +காமதேனு 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நந்தலால் ஜெஸ்வன்லால் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. வத்சால், ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கோதையின் காதல் + +கோதையின் காதல் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுந்தரமூர்த்தி ஓதுவார், கே. ஆர். சாரதாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கிருஷ்ணகுமார் (திரைப்படம்) + +கிருஷ்ணகுமார் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. எஸ். யோகி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொன்னப்ப பாகவதர், வி. ஏ. செல்லப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மதனகாமராஜன் (திரைப்படம்) + +மதன காமராஜன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. எஸ். இராமையா எழுதி, பி. என். ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், என். கிருஷ்ணமூர்த்தி, கொத்தமங்கலம் சுப்பு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +மானசதேவி (திரைப்படம்) + +மானச தேவி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மெட்ராஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. கே. பாவலர், கே. நடராஜன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மந்தாரவதி + +மந்தாரவதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. மார்கோனி மற்றும் டி. எஸ். பாபு இயக்கத்தில் வெளிவந்தது இத்திரைப்படம். டி. ஆர். ராஜகுமாரி முக்கிய பாத்திரத்தில் நடித்திருந்தார். + + + + +பிரேமபந்தன் + +பிரேமபந்தன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பக்வான் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, கே. சுவாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜாகோபிசந் + +ராஜா கோபிசந்த் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ரிஷ்யசிருங்கர் (திரைப்படம்) + +ரிஷ்யசிருங்கர் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், எஸ். பாலச்சந்தர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். நியூடோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட இப்படப் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர். + +ரிஷ்யசிருங்கர் திரைப்படத்தில் நடிததவர்களும், அவர்கள் ஏற்றுக் கொண்ட பாத்திரங்களும்: +இத்திரைப்படத்தில் வரும் பாடல்களை இயற்றியவர் பாபனாசம் ராஜகோபால் ஐயர். + +=உசாத்துணை== + + + + +சபாபதி + +சபாபதி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: + + + + + +சாந்தா + +சாந்தா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பக்டனி புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். சீனுவாசராவ், ராஜு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சுபத்ரா அர்ஜூனா + +சுபத்ரா அர்ஜுனா 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாமா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சூர்யபுத்ரி + +சூர்யபுத்திரி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சுப்பு உரையாடல் எழுதி நடிக்க உடன் கொத்தமங்கலம் சீனு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தர்மவீரன் + +தர்ம வீரன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, கே. கே. பெருமாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +திருவள்ளுவர் (திரைப்படம்) + +திருவள்ளுவர் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, எம். லட்சுமணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வனமோகினி + +வனமோகினி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பகவானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எஸ். எஸ். கோக்கோ, கே. தவமணி தேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +இத்திரைப்படம் "த ஜங்கில் பிரின்செசு" என்ற ஹாலிவுட் திரைப்படத்தை ஒட்டித் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் நடித்த டொரத்தி லமூர் நடித்த பாத்திரத்தில் தவமணி தேவி அதே வகையான சாரம் அணிந்து நடித்திருந்தார். தமிழ்த் திரைப்படம் ஒன்றில் பெண்கள் இவ்வாறு அணிவது முதல் தடவையாக இருந்தது. வனமோகினி திரைப்படம் பின்னர் 1957 ஆம் ஆண்டில் அதே பெயரில் சிங்கள மொழியில் தயாரிக்கப்பட்டது. + +அடர்ந்த காட்டுப் பிரதேசம். அங்கே குழந்தைகளுக்குச் சமான நாகரிகமல்லாத பாமரக் காட்டு மனிதர்கள் நிம்மதியாக வாழ்க்கை நடத்துகின்றனர். அவர்களின் அறியாமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட பூசாரி ("கே. கொளத்து மணி") கன்னிப்பெண்களைக் காளிக்குப் பலி கொடுத்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன தன் மாமனைத் தேடிக்கொண்டு அரசகுமாரன் (எம். கே. ராதா) தன் படைகளுடன் அதே காட்டுக்கு வருகிறான். பூசாரியின் கொடுமைக்குப் பய��்து வனமோகினி ("கே. தவமணி தேவி") என்னும் பெண் சந்துர் என்ற யானையின் உதவியுடன் குகை ஒன்றில் வசித்து வருகிறாள். அரசகுமாரன் அவளைச் சந்தித்துக் காதல் கொள்கிறான். பூசாரியின் கொடுங்கோன்மை அரசகுமாரனுக்குத் தெரிகிறது. காட்டுவாசிகளைப் பூசாரியிடம் இருந்து காப்பாற்ற நினைக்கிறான். இதையறிந்த பூசாரி அரசகுமாரனுக்குப் பல துன்பங்களை இழைத்து வனமோகினியையும் பிடித்துக் கொண்டு செல்கிறான். அரசகுமாரன் வனமோகினியைக் காப்பாற்றச் சென்று தானும் அகப்பட்டுக் கொள்கிறான். அங்கிருந்து அவன் ஒருவாறு தப்பி, தனது மாமனையும் விடுவித்து, வனமோகினியையும் திருமணம் புரிகிறான். + +இத்திரைப்படத்தில் 10 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பல பாடல்களை தவமணி தேவி பாடினார். இவற்றில் "அலை மோதுதே அலை மோதுதே ஏதும் அறியாது என்மனம்" என்ற தவமணி தேவியின் பாடல் அக்காலத்தில் புகழடைந்தது. இதனால் இவர் சிங்களத்துக் குயில் என அழைக்கப்பட்டார். பாடல்களை யானை வைத்தியநாதையர் இயற்றினார். பாடல்களுக்கு இசையமைத்தவர் மகாராட்டிரத்தைச் சேர்ந்த ராம் சித்தால்க்கர். இவர் பின்னர் ஆர். ராமச்சந்தர் என்ற பெயரில் பல படங்களுக்கு இசையமைத்துப் புகழடைந்தார். + + + + + +வேதவதி (சீதா ஜனனம்) + +வேதவதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வேணுகானம் + +வேணுகானம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +அதிரூப அமராவதி + +அதிரூப அமராவதி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவக்கொழுந்து, கே. கே. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +குலேபகாவலி (1935 திரைப்படம்) + +குலேபகாவலி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவ���்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் மூன்று நாயகிகள் இருந்தனர். + + + + + +கோபாலகிருஷ்ணா + +கோபாலகிருஷ்ணா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 14.000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். டி. ஆர். பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், ஜி. போஸ்லே இயக்கிவெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜம், கௌரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சுபத்திரா பரிணயம் + +சுபத்திரா பரிணயம் 1935 ஆம் ஆண்டு, ஏப்ரல் 27 இல் வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம்ஸ் வெரைட்டி ஹால் டாக்கீஸ் பிரபுலா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா பாகவதர், பபூன் சண்முகம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +துருவ சரிதம் + +துருவ சரிதம் அல்லது துருவ சரித்திரம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். வரைட்டி ஹால் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில், சி. வி. ரமணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். தங்கப்பா, வி. சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +நவீன சதாரம் + +நவீன சதாரம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வித்வான் சங்கரலிங்கம், ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படம் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் "சதாரமே" என்ற பெயரில் கன்னடத்தில் புகழ் பெற்ற மேடை நாடகத்தின் தழுவல் ஆகும். இந்நாடகம் முதன் முதலில் கன்னட மொழியில் 1935 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. கன்னடப் படத்தில் கே. அசுவத்தாமா முதன் முதலில் பாடி நடித்திருந்தார். கே. சுப்பிரமணியம் இதனைத் அதே ஆண்டில் தமிழில் தயாரித்து வெளியிட்டார். அவரது மனைவி எஸ். டி. சுப்புலட்சுமி கதாநாயகியாக நடித்தார். பாபநாசம் சிவன் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார். + +இத்திரைப்படத்தின் ஆரம்பப் பாடலான "மா ரமணன் உமா ரமணன்" என்ற புகழ் பெற்ற பாடலை பாபநாசம் சிவனும் அவரது மருகர் எஸ். எஸ். மணி பாகவதரும் இணைந்து பாடியிருந்தனர். இதே பாடலைப் பின்னர் கே. சுப்பிரமணியம் தனது சேவாசதனம் (1938) என்ற திரைப்படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமியைக் கொண்டு பாடுவித்தார். + +பல சாகசங்களைச் செய்யும் ஒரு பெண் மீது இளவரசன் ஒருவன் காதல் கொள்வது நவீன சதாரம் திரைப்படத்தின் கதை. இதில் சதாரம் (எஸ். டி. சுப்புலட்சுமி) ஆண் வேடம் பூண்டு திருடனிடம் (பட்டு ஐயர்) இருந்து தப்புகிறாள். இளவரசி (பார்வதி பாய்) அவளை ஆண் என நினைத்து அவள் மேல் காதல் கொள்கிறாள். சதாரம் ஏற்கனவே இளவரசன் (சங்கரலிங்கம்) ஒருவனைக் காதலிக்கிறாள். அவ்விளவரசனை வேறொருத்தி காதலிக்கிறாள். இருவரையுமே அவன் மணமுடித்து இச்சிக்கலில் இருந்து விடுபடுகிறான் என்பது தான் கதை. + +மொத்தம் 28 பாடல்கள் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இந்தித் திரையின் பாடகி இந்துபாலா இரண்டு பாடல்களைப் பாடியிருந்தார். அவற்றில் ஒன்று தமிழில். பெரும்பாலான பாடல்கள் பிரபலமான இந்தித் திரைப்படப்பாடல்களின் மெட்டைத் தழுவியே அமைந்திருந்தன. + + + + +பக்த துருவன் + +பக்த துருவன் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 17000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். ஜெயராமன், பி. எஸ். சிவராமலிங்கம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர். +பின்னணிப் பாடகர் சி. எஸ். ஜெயராமன், குழந்தை நடிகராக நடித்த இப்படத்தில், ‘இனிய கான சினிமா ராணி’ பி.எஸ். சிவபாக்கியம் குறத்தியாகவும், முதன்முதலில் ஒரே படத்தில் பல வேடங்களில் நடித்த பி.எஸ். சாமண்ணா அய்யர் குறவனாகவும் நடித்துள்ளார்கள். +‘பச்சை சிகப்பு மிச்சம் கருப்புப் பாசியிருக்குது, பாசி கோர்க்கும் ஊசி இருக்குது, நரிக்கொம்பிருக்குது, பெரிய வரிப்புலி நகமிருக்குது, நம்ம புள்ளைக்கு வாங்கிப் போட்டா நல்லாருக்குமே,’ என்றும், ‘பச்சைக் குத்த ஆசை உமக்கில்லீங்களா’ என்னும் பாடலை சிவபாக்கியம் பாடியிருக்கிறார். + + + + +பூர்ணசந்திரன் + +பூர்ண சந்திரன் 1935 ஆம் ஆண்டு, ஆகத்து 17 இல் வெளிவந்த 14937 அடிநீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் டி. ஆர். தாஸ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜிராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மாயா பஜார் (1935 திரைப்படம்) + +மாயா பஜார் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வித்வான் ஸ்ரீநிவாசன், செருகளத்தூர் சாமா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +மோகினி ருக்மாங்கதா + +மோகினி ருக்மாங்கதா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 15000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். தமிழ்நாடு டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு பாடல் மற்றும் வசனம் இயற்றி, பி. வி. ரங்காச்சாரி, டி. எஸ். கிருஷ்ணசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராதா கல்யாணம் + +ராதா கல்யாணம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீ மீனாட்சி சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்தது இத்திரைப்படம். + + + + + +ராஜ போஜா + +ராஜ போஜா என்பது 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 18619 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். கிருஷ்ணசாமி, ஐயங்கார் ராஜாயி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜாம்பாள் (1935 திரைப்படம்) + +ராஜாம்பாள் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த, 16,000 அடி நீளமுடைய நாவல் மற்றும் நாடக தமிழ்த் திரைப்படமாகும். கோயம்பத்தூர் டாக்கீஸ் பட நிறுவனம் தயாரித்து, ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில், பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + +லங்காதகனம் + +லங்கா தகனம் 1935 ஆம் ஆண்டு வெளிவந்த புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். எஸ். பிரகாஷ் இயக்கி, செல்லம் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் ஏ. ரெங்கசாமி நாயுடு, எம். எஸ். ஞானாம்பாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +லலிதாங்கி + +லலிதாங்கி 1935 ஆம் ஆண்டு வெளிவந்த 20,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். ராயல் டாக்கீஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். எஸ். ராமச்சந்திர ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +கவிரத்ன காளிதாஸ் + +கவிரத்ன காளிதாஸ் 1937ஆம் ஆண்டு, சூன் 19இல் வெளிவந்த, 16,950 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். வடிவேலு நாயக்கர் இயக்கத்தில் ராணி செட்டி, தயாரித்து வெளியான இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், பி. சுந்தர பாக்யம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +கிருஷ்ண துலாபாரம் + +கிருஷ்ண துலாபாரம் 1937 ஆம் ஆண்டு. யூலை 8 இல் வெளிவந்த 16000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாஸ் சினிடோன் பட நிறுவனம் சார்பில், ஏ. நாராயணன் தயாரித்து, இயக்கி வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. கோபால், எம். ஆர். சுப்பிரமணிய முதலியார், டி. எம். சாரதாம்பாள், கே. ஆர். சாரதாம்பாள் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +சதி அகல்யா + +சதி அகல்யா 1937 ஆம் ஆண்டு, மார்ச்சு 10 இல் வெளிவந்த 14,000 அடி நீளமுடைய புராண தமிழ்த் திரைப்படமாகும். மோடேர்ன் தியேட்டர்ஸ் பட நிறுவனம் தயாரித்து டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். டி. சுப்பையா, டி. எம். சங்கரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +சதி அனுசுயா + +சதி அனுசுயா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். பிரிமியர் சினிடோன் பட நிறுவனம் தயாரித்து பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. என். பாலசுப்பிரமணியம்,எம். வி. மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +கௌசல்யா பரிணயம் + +கௌசல்யா பரிணயம் மற்றும் மிஸ்டர் அம்மாஞ்சி (இருபட இணைப்பு) 1937 ஆம் ஆண்டு வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். எம். யு. ஏ. சி நிறுவனம் சார்பில் கே. சுப்பிரமணியம் தயாரித்து சி. எஸ். வி. ஐயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. வி. வெங்கட்ராமன், சி. வி. ராமச்சந்திரன், கே. என். ராஜலட்சுமி, கே. என். கமலம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சேது பந்தனம் + +சேது பந்தனம் அல்லது சேது பந்தன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பத்மநாபன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. ரெங்காச்சாரி, நாட் அண்ணாஜிராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத் திரைப்படம் ஆர். பத்மநாபனின் இயக்கத்தில் வெளிவந்த வெற்றிப் படங்களில் ஒன்று. இராமாயணத்தின் ஒரு பகுதி இப்படத்தின் கதை. அனுமானால் ("எம்.டி.பார்த்தசாரதி") இலங்கை எரியூட்டப்பட்ட நிகழ்வில் இருந்து கதை ஆரம்பிக்கின்றது. இலங்கையை எரித்தப் பின்னர் சீதையின் மோதிரத்துடன் ராமனிடம் (நாட் அண்ணாஜிராவ்) வருகிறான். பி. பி. ரெங்காச்சாரி இராவணனாக நடிக்க, ராவணனின் மனைவி மண்டோதரியாக எம். எஸ். மோகனாம்பாள் நடித்திருந்தார். + +சிதம்பரம் வைத்தியநாத சர்மாவின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி இசையமைத்திருந்தார். + + + + +டேஞ்சர் சிக்னல் + +டேஞ்சர் சிக்னல் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மோகன்லால், மற்றும் ராமனிக்லால், தயாரித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாட்சா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +தேவ்தாஸ் (1937 திரைப்படம்) + +தேவதாஸ்1937 ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் மூலம் உருவான தமிழ்த் திரைப்படமாகும். "நியூ தியேட்டர்ஸ்" எனும் பட நிறுவனம் தயாரித்து, பி. வி. ராவ், "சரத் சந்திர சாட்டெர்ஜி" என இருவர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. வி. ராவ், டி. எஸ். கிருஷ்ண ஐயங்கார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +இத்திரைப்படம், "சரத் சந்திர சாட்டெர்ஜி" என்பவரின் வங்காள மொழி நாவல் மூலம் உருவாக்கப்பட்டதாகும். மேலும், அந்நாவலின் ஆசிரியரான சரத் சந்திர சாட்டெர்ஜி, இப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +நவீன நிருபமா + +நவீன நிருபமா 1937 ஆம் ஆண்டு, செப்டம்பர் 18 இல் வெளிவந்த, 14506 அடி தமிழ்த் திரைப்படமாகும். "மைசூர் சவுண்ட் ஸ்டூடியோ" பட நிறுவனம் தயாரித்து, வி. திம்மைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். ஐயர், ஜே. தாஸ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பக்த புரந்தரதாஸ் + +பக்த புரந்தர தாஸ் 1937 ஆம் ஆண்டு, அக்டோபர் 14 இல் வெளிவந்த புராண தமிழ்த் திரைப்படமாகும். தேவி பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. கல்யாண ராம பாகவதர், ஜி. கிருஷ்ணசாமி ஐயங்கார் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பஸ்மாசூர மோகினி + +பஸ்மாசூர மோகினி 1937 ஆம் ஆண்டு, அக்டோபர் 2 இல் வெளிவந்த 10000 அடி புராண தமிழ்த் திரைப்படமாகும். சுந்தரம் சவுண்ட் ஸ்டூடியோஸ் பட நிறுவனம் தயாரித்து சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செல்வரத்தினம் பிள்ளை, பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இப்படத்துடன், ‘மிஸ்டர் டைட் அண்டு லூஸ்‘ எனும் மற்றுமொரு திரைப்படமும் திரையிடப்பட்டது. அப்படத்தில், 'தசரதராவ்' என்பவர் "லூஸ் ஆறுமுகம்" என்னும் பாத்திரமாக நடித்துள்ளார். + + + + +பாலயோகினி + +பாலயோகினி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, பேபி சரோஜா , கே. ஆர். செல்லம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் தெலுங்கிலும் இதே பெயரில் எடுக்கப்பட்டது. தென்னிந்தியாவில் குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமாகக் கருதப்படுகிறது. + +பாலயோகினியைத் தயாரித்த கே. சுப்பிரமணியம் நூறு ரூபாய் பரிசை அறிவித்து, பொது மக்களிடம் இருந்து தம் கதைக்குத் தகுந்த முடிவைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். + + + + +மிஸ் சுந்தரி + +மிஸ் சுந்தரி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "எஸ். சுந்தரராஜன்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் "பாட்லிங் மணி, வி. எஸ். சுந்தரேச ஐயர்" மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மைனர் ராஜாமணி + +மைனர் ராஜாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. டி. சம்பங்கி, எம். ஆர். துரைராஜ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +பாலாமணி + +பாலாமணி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. வி. ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. முத்துசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். கவிஞர் பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி வெளிவந்த முதல் திரைப்படம் இதுவாகும். + +Balamani 1937, ராண்டார் கை, தி இந்து, நவம்பர் 22, 2014 + + + + +ராஜபக்தி + +ராஜ பக்தி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. என். பட்டாபி ராமன், எம். டி. பார்த்தசாரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ராஜமோகன் + +ராஜ மோகன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரேம் சேத்னா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா, காளி என். ரத்தினம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படமானது வை. மு. கோதைநாயகியின் "ராஜமோகன்" என்ற புதினத்தின் தழுவலாகும். +மோகன் என்பவன் ஒரு அனாதை இளைஞனாவான். அவன் பத்திரிக்கை அதிபரான தர்மலிங்கத்தின் மகளான ராஜம் என்பவளை காதலிக்கிறான். மேகனின் வளர்ப்புத் தாயான கல்யாணி என்பவராவார். மோகனின் உண்மையான தாய் யார் என்பதும், ராஜமும் மோகனும் இறுதியில் சேர்ந்தார்களா என்பதுமே கதைமுடிவாகும். + + + + +ராஜசேகரன் ஏமாந்த சோணகிரி + +ராஜசேகரன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, சகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். +இதுவே எம். ஆர். ராதா நடித்து வெளிவந்த முதல் திரைப்படம் ஆகும். + +ராஜசேகரன் திரைப்படத்துடன் "ஏமாந்த சோணகிரி" திரைப்படமும் காண்பிக்கப்பட்டது. + + + + +வள்ளாள மகாராஜா + +வள்ளாள மகாராஜா 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. எஸ். யு. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +விக்ரமஸ்திரி சாகசம் + +விக்ரம ஸ்திரி சாகசம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "ஸ்ரீநிவாசா சினிடோன்" நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் "எஸ். டி. சுவாமி, டி. கே. சுந்தரப்பா" மற்றும் பலரும் நடித்துள்ளனர். இரண்டு கதைகள் ஒரே திரைப்படத்தில் இடம் பெற்றன. + +இத்துடன் நவீன ஸ்திரி சாகசம் என்ற படமும் காண்பிக்கப்பட்டது. + + + + +விராட பருவம் (திரைப்படம்) + +விராட பருவம் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீநிவாசா சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் "எம். யு. கிருஷ்ணப்பா, சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +ஹரிஜனப் பெண் (லட்சுமி) + +ஹரிஜனப் பெண் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "லட்சுமி ராதா பிலிம்ஸ்" நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் "ஜோக்கர் ராமுடு, எம். எஸ். விஜயாள்" ஆகியோர் நடித்துள்ளனர். + + + + +அலிபாதுஷா + +அலிபாதுஷா 1936 ஆம் ஆண்டு, யூலை 4 இல் வெளிவந்த 16000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். யுனிவேர்சல் டாக்கீஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. எஸ். செல்வரத்தினம், பங்கஜாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாமா பரிணயம் + +பாமா பரிணயம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 16,750 அடி நீளமுடைய தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் திரைக்கதை அமைத்து இயக்கி, ராயல் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் செருகளத்தூர் சாமா, வித்வான் சீனிவாசன், டி. பி. ராஜலட்சுமி, எஸ். பி. லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + + + +சந்திரஹாசன் (திரைப்படம்) + +சந்திரஹாசன் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபுளா கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. என். சுந்தரம், பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சந்திரகாந்தா (திரைப்படம்) + +சந்திரகாந்தா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜுபிடர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில், ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்தினம், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +மடாதிபதிகளைப் பற்றிய கதை என்பதால் ரசிகர்களின் அமோக வரவேற்புப் பெற்ற இப்படத்தை தடை செய்ய பல பேர் முயன்றனர். + + + + +சந்திர மோகனா (திரைப்படம்) + +சந்திரமோகனா என்பது 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முதுரை மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எஸ். வி. வெங்கட்ராமன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படமானது கொத்தமங்கலம் எஸ். எம். சுப்ரமண்யம் என்று அப்போது அழைக்கப்பட்ட கொத்தமங்கலம் சுப்பு எழுதிய "சந்திரமோகனா அல்லது சமுதாயத் தொண்டு" என்ற புதினத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. + + + + +சதிலீலாவதி + +சதிலீலாவதி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +சீமந்தினி + +சீமந்தினி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல்லிஸ் டங்கன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. பி. ராஜகோபால் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தாராச சங்கம் + +தாராச சங்கம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 14000 அடி நீளமுடையத் தமிழ்த் திரைப்படமாகும். முருகன் டாக்கீஸ் பிலிம் கம்பெனி நிறுவனத்தினரின் தயாரிப்பில் ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. எஸ். விஜய ராவ், சீதாராமன், டி. வி. ராஜசுந்தரி பாய் மற்றும் பலர் நடித்துள்ளனர். +14000 அடி நீளம் உடைய இத்திரைப்படம் 19 நாட்களில் உருவாக்கப்பட்டதாகும். + + + + +நவீன சாரங்கதாரா + +நவீன சாரங்கதாரா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்தில் மொத்தம் 41 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. அனைத்தையு���் பாபநாசம் சிவன் இயற்றியிருந்தார். பெரும்பாலான பாடல்களை தியாகராஜ பாகவதர், எஸ். டி. சுப்புலட்சுமி ஆகியோர் பாடினர். "சிவபெருமான் கிருபை வேண்டும்", "ஞானகுமாரி நடன சிங்காரி", "அபராதம் செய்தறியே" போன்ற பாடல்கள் அக்காலத்தில் பிரபலமான பாடல்களாக அமைந்தன. + + + + + +பக்த குசேலா (திரைப்படம்) + +பக்த குசேலா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாபநாசம் சிவன், வித்வான் சங்கரலிங்கம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +எஸ். டி. சுப்புலட்சுமி இத்திரைப்படத்தில் குசேலரின் மனைவி சுசீலை ஆகவும் கிருஷ்ணராகவும் இரு வேடங்களில் நடித்தார். + + + + + +பாதுகா பட்டாபிஷேகம் (திரைப்படம்) + +பாதுகா பட்டாபிஷேகம் 1936 ஆம் ஆண்டு, ஏப்ரல் 4 இல் வெளிவந்த, 16000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் முருகதாசா, மற்றும் ராம்நாத் என இருவர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, டி. எஸ். சந்தானம், டி. டி. ருக்மணி பாய், டி. கே. ருக்குமணி பாய் மற்றும் பலரும் நடித்திருந்தனர். கே. வி. சந்தான கிருஷ்ண நாயுடு பாடல் படைத்த இப்படத்தில், எஸ். டி. பட்டேல் ஒளிப்பதிவு செய்துள்ளார். + + + + +பார்வதி கல்யாணம் (திரைப்படம்) + +பார்வதி கல்யாணம் அல்லது மூன்று முட்டாள்களின் சங்கீத கோஷ்டி 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 13,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். நேஷனல் மூவிடோன் நிறுவனம் சார்பில் பி. வை. அல்தேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், துரைசாமி தேசிகர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மகாபாரதம் (1936 திரைப்படம்) + +மகாபாரதம் (சிறீமத்) 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 19,984 அடிநீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். எஸ். சௌந்தர்ராஜன் இயக்கத்தில், தமிழ் நாடு டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் நட்டு அண்ணாஜிராவ், திருவெங்கட செட்டியார், பங்கஜவல்லி, வி. ராஜாம்மாள் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மீராபாய் (திரைப்படம்) + +மீராபாய் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த 14,000 அடி நீளமுடைய சரித்திரத் தமிழ்த் திரைப்படமாகும். சீனிவாஸ் சினிடோன் நிறுவனம் தயாரித்து ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, டி. எஸ். சந்தானம், டி. வி. ராஜசுந்தரி பாய், கிருஷ்ண வேணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +மெட்ராஸ் மெயில் + +மெட்ராஸ் மெயில் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மோகன்லால், மற்றும் ராமனிக்லால், தயாரித்து சி. எம். திருவேதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, எஸ். ஆர். கே. ஐயங்கார், டி. என். மீனாட்சி மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ருக்மணி கல்யாணம் (திரைப்படம்) + +ருக்மணி கல்யாணம் 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பத்மா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதுரி மங்கலம் நடேச ஐயர், குஞ்சு பாகவதர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + + +விஸ்வாமித்ரா (திரைப்படம்) + +விஸ்வாமித்ரா 1936 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். கோபால ஐயங்கார், பி. கே. துரைசாமி ஐயங்கார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + + +அனாதைப் பெண் (திரைப்படம்) + +அனாதைப் பெண் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "ஆர். பிரகாஷ்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். மங்களாம்பாள் அனாதைச் சிறுமியாக நடித்திருந்தார். மற்றும் எம். கே. ராதா, பி. யு. சின்னப்பா இன்னும் பலரும் நடித்திருந்தனர். இப்படமானது வை. மு. கோதைநாயகியின் "அனாதைப் பெண்" என்ற புதினத்தின் தழுவலாகும். +பாட்டியைத் தவிர யாருமற்ற அனாதையான இந்திராணியும், வளைதடிப் பந்தாட்ட வீரரான துரை ராஜாவும் காதலிக்கின்றனர். அவர்களின் வாழ்வில் ஏற்படும் துன்பங்களும் அதன் விடியலுமே கதை. + + + + +பக்த நாமதேவர் + +பக்த நாமத���வர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரௌபத் ராய் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநிவாசன், மாஸ்டர் கண்ணப்பன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாக்ய லீலா + +பாக்ய லீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "கே. அமர்நாத்" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாச ராவ், எஸ். பாஷா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ராஜதுரோகி (தர்மபுரி ரகசியம்) + +ராஜதுரோகி அல்லது தர்மபுரி ரகசியம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். சேதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். மணி, நாட் அண்ணாஜி ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +ஏசுநாதர் (1938 திரைப்படம்) + +ஏகநாதர் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "எச். எஸ். மேத்தா" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் என். கிருஷ்ணமூர்த்தி, சி. பத்மாவதிபாய், பி. ரங்கசாமி, சீதா, என். சீனிவாசன், லட்சுமி, பி. எஸ். கிருஷ்ணசாமி, இந்திராணி..ஆகியோர் நடித்திருந்தனர். கதை, வசனம், பாடல்களை எஸ். நாராயண ஐயர் எழுதினார். என். பி. எஸ். மணி, என். ராமமூர்த்தி ஆகியோர் இசையமைத்தனர். + + + + +ஸ்ரீ கந்த லீலா + +கந்தலீலா1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். "பிரீமியர் சினிடோன்" நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜா தண்டபாணி, வசந்தா மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +Sri Kandha Leela + + + + +சுவர்ணலதா (திரைப்படம்) + +சுவர்ணலதா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஒய். வி. ராவ் இயக்கியும், கதாநாயகனாகவும் நடித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. அரங்கனாயகி, சுவர்ணாம்மாள் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +1937 சூலை 15ல் ராஜாஜி தலைமையில் அமைந்த சென்னை ராஜதானியின் (மாநிலத்தின்) முதல் காங்கிரசு மந்திரிசபை காந்தியின் கனவை இந்தியாவிலேயே முதன் முதலாக நனவாக்க தான் பிறந்த சேலம் மாவட்டத்திலே மதுவிலக்கை அக்டோபர் முதல் தேதியிலிருந்து அமுலாக்கத் தொடங்கியது. இதை மைய���்படுத்தி சுவர்ணலதா திரைப்படம் தயாரிக்கப்பட்டது. + +சோளபுரம் மிராசுதார் (பெருஞ்செல்வர்) வயதானவர், அவரின் ஒரே மகன் சோமு சேலம் நகரத்திற்கு போனவன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி பல வருடங்களாக ஊருக்குத் திரும்பவில்லை. மிட்டாதார் தனது வயது முதிர்வினால் இறந்துவிடுகிறார். அவரது ஆத்மார்த்த நண்பரும், முன்சீபுமான ராகவனிடம் தனது சொத்துக்களை ஒப்படைக்கிறார். மிட்டாதாரரான தனது தந்தை இறந்த்தை அறிந்த சோமு சோளபுரம் வருகிறான், ராகவனின் வீட்டில் தங்கி இருக்கும் போது சோமுவுக்கும், ராகவனின் மூத்த மகள் சுவர்ணலதாவுக்கும் காதல் ஏற்படுகிறது. ஆனால் ராகவனின் தனது இரண்டாவது மனைவி தனது மகளை சோமுவுக்கு முடிக்க திட்டமிட்டு சுவர்ணலதாவை கொடுமைப்படுத்துகிறாள். சித்தியின் கொடுமை தாளமுடியாமல் சுவர்ணலதா தற்கொலை செய்ய ஆற்றில் விழுகிறாள், அச்சமயம் அங்கு வந்த சோமு லதாவைத் தடுத்து சேலத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறான். +ராகவன் சுவர்ணலதாவை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை. சோமுவும், லதாவும் திருமணம் செய்துகொண்டு சில காலம் இன்ப வாழ்க்கையில் இருக்கும் காலத்தில் கோபாலன் என்பவனின் சேர்க்கையால் சோமு மீண்டும் குடியும், கோகிலம் என்பவளின் தொடர்பால் அனைத்து பணம், சொத்துக்களை இழந்துவிடுகிறான் சோமு. இந்நிலையில் கோகிலம் சோமுவை அடித்து விரட்டிவிடுகிறாள். சோமு கள்ளுக்கடைக்குச் சென்று பெரும் குடிகாரனாகிறான். +சோமுவுக்கும், சுவர்ணலதாவுக்கும் குழந்தை பிறக்கிறது, அனாதையான சுவர்ணலதா குழந்தைக்குப் பால் வாங்கக் கூட காசில்லாத சுவர்ணலதா பிச்சை எடுக்கும் நிலைக்கு வந்து தெருவில் பிச்சை எடுத்துத் திரிகிறாள். சுவர்ணலதாவை தேடியலைந்த ராகவன் சுவர்ணலதாவை கண்டு தேற்றி விபரம் அறிந்து சோளபுரம் மிட்டாதார் தன்னிடம் கொடுத்துள்ள சொத்துவிபரத்தைத் தெரிவித்து இருவரும் ஆனாதைக் குழந்தைகள் இல்லம் தொடங்கி நடத்துகிறார்கள். +சோமு ஒருநாள் அனாதை இல்லத்தின் முன் பசியால் மயங்கி விழுகிறான், அனாதை இல்ல வேலையாட்கள் சோமுவை உள்ளே தூக்கிப்போகிறார்கள். சுவர்ணலதாவை சோமு பார்த்து தனது குடிப்பழக்கத்திற்கு வருந்துகிறான். இனிமேல் குடிப்பதில்லை என சத்தியம் செய்கிறான், +படத்தின் இடைஇடையே கதர்சட்டையும், கதர்குல்லாவும் அணிந்து காங்கிரசுக���ரர் ஒருவர் குடிக்கு எதிராக பாட்டும், உபதேசமும் செய்து மதுவிலக்குப் பிரச்சாரம் செய்வார். + + + + +ஜலஜா + +ஜலஜா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாகர் ரெனைசன்ஸ் தியேட்டர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. எஸ். கோபாலகிருஷ்ணன், புதோ அத்வானி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மட சாம்பிராணி + +மட சாம்பிராணி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சீனிவாஸ் சினிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் இத்திரைப்படத்தில் புலியூர் துரைசாமி ஐயங்கார், பி. எஸ். ராமுடு ஐயர் மற்றும் பலர் நடித்திருந்தனர். + + + + +தாயுமானவர் (திரைப்படம்) + +தாயுமானவர் (Thayumanavar) 1938 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில் எம். எம். தண்டபாணி தேசிகர், சி. எஸ். செல்வரத்தினம் பிள்ளை மற்றும் பலரும் நடித்துள்ளனர். பி. நரசிம்ம ராவ் இசையமைப்பில் பாடல்களை எழுதியவர் பாபநாசம் சிவன். +முத்துக்கிருஷ்ண நாயக்கர் திருச்சிராப்பள்ளியை ஆண்டு வருபவர். ஒரு நாள் வேதாரண்யம் கோவிலுக்குச் செல்கிறார். அங்கே தர்மாதிகாரி இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கிறார். அதனால் மனம் மகிழ்ந்து அவரை தனது அமைச்சராக்குகிறார். அந்த அமைச்சருக்கு தாயுமானவன் என்ற மகன் இருக்கிறார். முத்துகிருஷ்ண நாயக்கர் இறந்த பின்னர் அவரது மகன் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தாயுமானவனை தனது அமைச்சராக்கிக் கொள்கிறார். தாயுமானவன் மிகுந்த அறிவாளியாகத் திகழ்கிறார். நாட்டின் வளர்ச்சியில் அரசனுக்கு உறுதுணையாக உள்ளார். அவர் தத்துவத்திலும், ஆன்மீகத்திலும் மிக ஈடுபாடு கொண்டிருந்தார். தாயுமானவரது சக்தியை உணர்த்த அரசன் விரைவில் அவரைப் பின்பற்றும் சீடராக மாறுகிறார். தன்னுடைய ஆற்றலால் பல அற்புதங்களை நடத்திய தாயுமானவன் காலப்போக்கில் மரணத்தைத் வென்று துறவியாகிறார் + +தி இந்து நாளிதழ் தொகுப்பிலிருந்தும் ,பிலிம் நியூஸ் ஆனந்தன் அவர்களின் தொகுப்பிலிருந்தும் எடுக்கப்பட்டது. + + +1930 களின் போது பல படங்களில் ஞானிகளின் வாழ்க்கைக் கதைகள் இடம்பெற்றன. எம்.எம்.தண்டபானி தேசிகர் கர்நாடக இசையில் நன்கு பயிற்சி பெற்றிருந்ததாலும், மதம் சம்பந்தமான அறிவு கொண்டவரென்பாதாலும் தயாரிப்பாளர்களின் வெளிப்படையான தேர்வாக இருந்தார். முன்னதாக பட்டினத்தார் அதற்குப் பின்னர் நந்தனார் போன்றவை இவர் நடித்திருந்த படங்களாகும் + +பிங்கல நரசிம்ம ராவ் இசையமைத்திருந்தார். பாடல்களை பாபநாசம் சிவன் எழுதியுள்ளார். 1,500 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எம்.எம்.தண்டபானி தேசிகர் இந்த படத்தில் இடம் பெற்ற 31 பாடல்களில் பெரும்பாலானவற்றை பாடியிருந்தார் + +இந்த படத்தின் அச்சு தற்போது இல்லை என அறியப்படுகிறது. + +திரைப்பட வரலாற்று ஆசிரியர் ராண்டார் கை இந்த படம் "தண்டபாணி தேசிகரின் சிறந்த பாடல்களுக்காகவும் மற்றும் புனித இடங்களைக் கொண்ட காட்சிகளுக்காகவும் எப்பொழுதும் நமது நினைவிலிருக்கும் என 2012இல் எழுதுகிறார்." + + + + +தெனாலிராமன் (1938 திரைப்படம்) + +தெனாலி ராமன் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். எஸ். முருகேசன், ஜோக்கர் ராமுடு மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +துகாராம் (1938 திரைப்படம்) + +துகாராம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சென்ட்ரல் ஸ்டூடியோஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் முசிரி சுப்பிரமணிய ஐயர், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டு வெளியானது.
பிற்காலத்தில் பிரபல பின்னணிப் பாடகியாக விளங்கிய ஆர். பாலசரஸ்வதி இத்திரைப்படத்தில் சிறுமி வேடத்தில் துகாராமின் மகளாக நடித்திருந்தார். + +பிரபல கருநாடக இசை வித்துவானாகிய முசிரி சுப்பிரமணிய ஐயர் நடித்த ஒரே ஒரு திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் நடிப்பதற்காக அவர் மீசை வளர்த்தார். இதையிட்டு கல்கி ஆனந்த விகடன் இதழில் எழுதிய துகாராம் திரைப்பட விமர்சனத்தில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். + + +
+ +தேசமுன்னேற்றம் + +தேச முன்னேற்றம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் க��. ஆர். கோபாலகிருஷ்ணன், மாதிரிமங்கலம் நடேச ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +துளசி பிருந்தா + +துளசி பிருந்தா 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் இத்திரைப்படம் வெளிவந்தது. + + + + +வாலிபர் சங்கம் + +வாலிபர் சங்கம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. என். கல்யாண சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதிரி மங்கலம் நடேச ஐயர், லட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +தட்சயக்ஞம் (திரைப்படம்) + +தட்சயக்ஞம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜா சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, எம். ஜி. நடராஜ பிள்ளை, எம். ஜி. ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +இப்பாடல் பட்டியல் லக்ஸ்மன் ஸ்ருதி வெளியீட்டிலிருந்து எடுக்கப்பட்டது. + + + + + +சேவாசதனம் + +சேவா சதனம் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஃப். ஜி. நடேச ஐயர், எஸ். ஜி. பட்டு ஐயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். எம். எஸ். சுப்புலட்சுமி முதன் முதலில் நடித்து வெளிவந்த திரைப்படம் இதுவாகும். + +இத்திரைப்படத்தில் நடித்த ராம்யாரி என்ற முசுலிம் தெலுங்கு நடிகை யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். + + + + +பஞ்சாப் கேசரி + +பஞ்சாப் கேசரி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். "பிரேம் சேத்னா" இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. பி. கேசவன், பி. யு. சின்னப்பா மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +திரைப்படம் "வந்தே மாதரம்" என்ற பாடலுடன் தொடங்குகிறது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்களை கேட்டுக்கொள்வதாக அப்பாடல் அமைந்திருந்தது. "தோலி நேநு செசின பூஜா பலமு" என்ற தியாகராஜர் கீர்த்தனையை கதாநாயகி ராஜலட்சுமி பாடுகிறார்.பாடல்களை எச். எச். சர்மா எழுதியிருந்தார். + + + + +பூகைலாஸ் + +பூகைலாஸ் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகு��். சுந்தராவ் நட்கர்ணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். சந்தானம், கே. மகாதேவன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +போர்வீரன் மனைவி (அசட்டு வீரன் மனைவி) + +போர் வீரன் மனைவி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். வி. கிருஷ்ணப்பா, சி. பி. துரைசாமி ஐயர் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +யயாதி (திரைப்படம்) + +யயாதி 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் மூவிடோன் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, பி. வி. ரெங்காச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +விப்ர நாராயணா (1938 திரைப்படம்) + +விப்ர நாராயணா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, டி. சூர்யகுமாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +வீர ஜெகதீஸ் + +வீர ஜெகதீஸ் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. பி. கைலாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. எஸ். எம். ராஜா ராமா ஐயர், எம். ஜி. ஆர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + + + + +வனராஜ கார்ஸன் + +வனராஜ கார்ஸன் () 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹோமிவாதியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜோன் காவாஸ், கே. ஆர். செல்லம் டி. கே. டி. சாரி மற்றும் பலர் நடித்திருந்தனர். + +சந்தர்ப்ப வசத்தால் சிறுவயது முதல் காட்டில் வளர்ந்த கதாநாயகன், வில்லனின் மகளான கதாநாயகியைக் காட்டுக்குள் தூக்கிச் சென்றுவிடுகிறான். முதலில் அஞ்சும் நாயகி, பின் வனராஜனைப் பிடித்துவிடவே அவனுக்குப் பேசக் கற்றுத் தருகிறாள். இருவரும் காதல் கொள்கிறார்கள். கதாநாயகிக்குச் சிறுத்தைப் புலியின் தோலை ஆடையாக அணிவிக்கிறான் நாயகன். நாயகியின் தந்தையான வில்லன் காட்டுக்குள் துப்பாக்கியுடன் மகளை மீட்க வருகிறான். அவனிடமிருந்து நாயகியை கதாநாயகன் தூக்கித் தோளில் வைத்துக்கொண்ட�� கானகத்துள் ஓடித் தப்பிக்கிறான். பிறகு என்ன நடந்தது என்பது கதை. + + + + +நந்தகுமார் (திரைப்படம்) + +நந்தகுமார் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நாராயண ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. ஆர். இராமச்சந்திரன், மாஸ்டர் சேதுராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +தமிழ்த் திரை வரலாற்றில் முதன் முதலாக, ஒரு நடிகை நடிக்க, பின்னணியில் வேறொருவர் குரல் கொடுத்து பாடல் பாடும் முறை அறிமுகமானது. தீன தயாபரனே என்ற பாடலை படத்தில் கிருஷ்ணரின் தாயாக நடித்த நடிகைக்காக அப்போது பம்பாயில் பிரபலமாக இருந்த கருநாடக இசைப் பாடகி லலிதா வெங்கடராமன் பாடினார். நடிகை பாடலுக்கேற்ப வாயசைத்தார். + + - தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடல். + + + + +மயூரத்துவஜா + +மயூரத்துவஜா1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. டி. சௌத்ரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சம்பத் குமராசர், கே. டி. துரைசாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மாய மாயவன் + +மாய மாயவன்1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. சம்பத் குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. சம்பல்சி, ஜி. ஆர். வரதாச்சாரி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மெட்ராஸ் சி. ஐ. டி + +மெட்ராஸ் சி. ஜ. டி (அல்லது ஹரிஜன சிங்கம்) 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாட்லிங் மணி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, விட்டல் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +ஆனந்த ஆஸ்ரமம் + +ஆனந்த ஆஸ்ரமம் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சி. வி. ராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சி. வி. வி. பந்துலு, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +மந்திரியின் சொல்கேட்டு கொடுங்கோலனாக ஆட்சி செய்யும் மன்னனை எதிர்க்கும் கதாநாயகனை (சி. வி. வி. பந்துலு) இளவரசி (ஆர். பி. லட்சுமிதேவி) காதலிக்கிறாள். மந்திரி இளவரசியைத் தன் மகனுக்கு திருமணம் செய்து வைக்க சூழ்ச்சி செய்கிறான். கதாநாயகன�� மந்திரியால் நாடு கடத்தப்படுகிறான். காட்டில் யோகி ஒருவர் (எஸ். என். சுப்பையா) நாயகனுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். இறுதியில் மன்னன் திருந்துகிறான். + + + + + + +பக்த குமணன் (ராஜயோகி) + +பக்த குமணன் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. ரெங்கராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. ஏ. செல்லப்பா, வி. எஸ். மணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +பாரதகேஸரி + +பாரதகேஸரி 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராம்ஜி பாய் ஆர்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதிரி மங்கலம் நடேச ஐயர், லட்சுமணன் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + + + +மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் + +மெட்ராஸ் எக்ஸ்பிரஸ் 1939 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மதராஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர லிங்கம், எம். ஏ. ராஜமணி மற்றும் பலரும் நடித்துள்ளனர். + + +