diff --git "a/train/AA_wiki_37.txt" "b/train/AA_wiki_37.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_37.txt" @@ -0,0 +1,4523 @@ + +தாவோயியம் + +டாவோயிசம் அல்லது தாவோயிசம் ஒரு சீன சமய தத்துவக் கோட்பாடு. இது பல வகையான மெய்யியல், சமயம் ஆகியவை சார்ந்த மரபுகளையும், கருத்துருக்களையும் உள்ளடக்குகிறது. இம் மரபுகள் கிழக்காசியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இவற்றுட் சில உலக அளவிலும் பரவியுள்ளன. "டோ" என்றால் வழி என்று பொருள்படும். அண்டம் இயல்பாக ஒரு "டோ" அல்லது வழியைக் கொண்டிருக்கின்றது. மனிதன் அந்த வழியை அறிந்து ஒத்துப்போகும் பொழுது அவன் முழுமை அல்லது திருப்தி அடைகின்றான் என்று தாவோயிசம் போதிக்கிறது. டாவோயிச நெறிமுறைகள் "மும்மணிகள்" பற்றிக் குறிப்பிடுகின்றன. இவை, கருணை, அடக்கம், பணிவு என்பனவாகும். தாவோயிசச் சிந்தனைகள் நலம், நீண்ட வாழ்நாள், இறவாமை, இயல்புச் செயற்பாடு, தற்றூண்டல் (spontaneity) போன்றவற்றில் கவனம் செலுத்துகிறது. + +மக்கள் மட்டத்திலான தாவோயிசத்தில் இயற்கை வணக்கம், முன்னோரின் ஆவிகளை வணங்குதல் என்பன பொதுவாகக் காணப்படுகின்றன. முறைப்படுத்திய தாவோயிசம், அதன் சடங்கு முறைகளையும், நாட்டுப்புறச் சமயத்தையும் வேறுபடுத்திக் காண்கிறது. சீன இரசவாதம், சோதிடம், சமையல், பலவகைச் சீனப் போர்க்கலைகள், சீன மரபுவழி மருத்துவம், பெங்சுயி, "சிகொங்" எனப்படும் மூச்சுப் பயிற்சி போன்றவை தாவோயிசத்துடன் பின்னிப் பிணைந்துள்ளன. + +"தாவோ" என்பது சீனத் தத்துவவியலில் பல கருத்தியல்களுக்கு அடிப்படைக் கோட்பாடாக உள்ளது. தாவோயிசம் உலகில் இருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளின் இருப்பு குறித்த மூலம் மற்றும் அமைப்பு கொள்கையைக் குறிக்கிறது. உறுதியான சடங்கு முறைகள், மற்றும் சமுதாய ஒழுங்கு ஆகியவற்றை கட்டாயப்படுத்தாத தன்மையில் இது கன்பூசியசியத்திலிருந்து மாறுபடுகிறது. + +தாவோயிசத்தின் வேர்களானது கி.மு 4 ஆம் நுாற்றாண்டு வரையாவது செல்கிறது. ஆரம்பகால தாவோயிசம் அதன் அண்டவியல் கருத்துக்களை இயற்கைவாதிகளின் தத்துவங்கள் (இங்யாங்) மற்றும் இயற்கைவாதிகள் வசமிருந்தும், சீன கலாச்சாரத்தின் பழமையான நூல்களில் ஒன்றான யிஜிங் இடமிருந்தும் பெற்றுள்ளது எனலாம். இந்த நுாலானது, இயற்கையின் மாற்று சுழற்சிகளுக்கு இணங்க மனித நடத்தையை எவ்வாறு வைத்திருக்க வேண்டும் என்பது பற்றிய ஒரு தத்துவம��� சார்ந்த வழியை விவரிக்கிறது. லாவோ சீ () என்ற கற்பிதக் கோட்பாடு கொண்ட " தாவோ தே ஜிங் " என்ற கையடக்கப் புத்தகமும் பின்னர் ஜுவாங்சி எழுதிய எழுத்துக்கள் கொண்டுள்ள கருத்துக்களே தாவோயிச மரபின் மூலக்கருத்துக்களின் பிறப்பிடமாக கருதப்படுகிறது. + +இன்றைய நிலையில் சீன மக்கள் குடியரசில் அலுவல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஐந்து மதங்களின் தத்துவ கோட்பாடுகளில் தாவோயியத்தின் கோட்பாடும் ஒன்றாகும். தாய்வான் நாட்டிலும் தாவோயியம் அலுவல்ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தகுதியைப் பெற்றுள்ளது. தாவோயியம் கிழக்கு ஆசியாவில் தனது தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், அது விரைந்து பல்வேறு நாடுகளுக்குப் பரவிவிடவில்லை. ஆனால், அது பல சமுதாயங்களிலிருந்தும் தனக்கான பின்பற்றுபவர்களைக் கொண்டுள்ளது. குறிப்பாக இது ஹாங்காங், மாகாவ் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தனது இருப்பைப் பதிவு செய்துள்ளது. + +மாறுதல் தானாக நிகழும் என்பது லாவோ சீ கூறிய கோட்பாடு. இதுவே 'தாவோயிசம்' என அழைக்கப்பட்டது. பிரெஞ்சுப் பேரறிஞர் இழான் பவுல் சார்த்ர முன்வைத்த 'இருத்தலியல்' (Existentialism) என்ற கோட்பாட்டுக்கும், லாவோ சீ எடுத்துரைத்த தாவோயிசக் கோட்பாட்டுக்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை. + +தாவோயியம் ஆபிரகாமிய மரபுகள் வழி வந்த மதங்களைப் போன்று ஒழுங்கமைக்கப்பட்ட மதம் என்ற வரையறைக்குள் அடங்காததாகும். அதே போன்று சீன நாட்டுப்புற மதம் வேறுபட்ட வடிவம் என்றும் சொல்லிவிட முடியாது. சீன நாட்டுப்புற மதத்திற்கும், தாவோயியத்திற்கும் சில பொதுவான கோட்பாடுகள் இருந்தாலும், தாவோயியத்தின் கோட்பாடுகள் மற்றும் அடிப்படைப் போதனைகளிலிருந்து சீன நாட்டுப்புற மதமானது வேறுபட்டதாகும். சீன மொழி நாகரிக வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வாளர்கள் இசபெல்லோ ராபினெட் மற்றும் லிவியா கோன் ஆகியோர் "தாவோயியம் ஒருபோதும் ஒருமித்த மதமாக இருக்கவில்லை, தொடர்ந்து பலவிதமான உண்மையான அனுபவங்களின் வாயிலாக உணரப்பட்ட போதனைகளைின் கலவைகளை உள்ளடக்கிய வழியாகும்“ என்ற கருத்தை ஒத்துக்கொள்கின்றனா்." சீன தத்துவவாதியான சுங்-யிங் செங், சீனாவின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தில் உட்பொதிக்கப்பட்ட ஒரு மதமாக டாயிஸத்தை கருதுகிறார். "கன்பூசியம், தாவோயியம் அல்லது பிற்கால சீன பௌத்த மதம் இவை அனைத்தும் தன��த்தனியான அறிவார்ந்த மற்றும் தத்துவவியல் நடைமுறை அறிவுப்புலத்தைக் கொண்டிருந்தாலும், சிந்தனையைத் துாண்டுதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றை மதத்தின் பெயரால் நிலைக்கச் செய்வனவாகவே இருக்கின்றன என்கிறார். " + +சங்-யிங்-செங் தாவோயியப் பார்வையில் சொர்க்கம் என்பது உற்றுநோக்கல் மற்றும் தியானத்திலிருந்தே கிடைக்கிறது என்கிறார். தாவோ (கற்றுக்கொடுக்கும் வழி) மனித இயல்பை சாராமல் சொர்க்கத்துக்கான வழியை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் கூறுகிறார். சீன வரலாற்றில், புத்த மதம், தாவோயியம், கன்பூசியம் ஆகியவை தங்களது தனித்தனியான பார்வைகளில், வழிகளில் பயணித்தாலும், அவைகளுக்கிடையே ஓர் ஒத்திசைவையும், ஒருங்கிணைப்பையும் காண்பதற்கான செயல்முறைகளை உள்ளடக்கிய முயற்சிகளையும் கொண்டுள்ளன எனலாம். இதன் காரணமாகவே, நாம் “மூன்று மதங்களின் போதனைகளிலும் காணப்படும் ஒற்றுமை” (unity of three religious teaching) (சஞ்சியோ ஏயி)". + +லாவோ சீ உண்மையான, மூல முதலான மதத்தன்மை உடைய தாவோயியத்தின் நிறுவனராகக் கருதப்படுகிறார். அவர் உண்மையாகவே அவ்வாறானவராக இருந்திருப்பது குறித்து விவாதங்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றன. " தாவோ தே ஜிங்" – என்ற அவருடைய சிந்தையிலிருந்து உருவான நுாலானது கி.மு. நான்காம் நுாற்றாண்டுக்குரியதாக இருக்கிறது. + +தாவோயியம் தனது அண்டம் சார்ந்த தத்துவ அடிப்படைகளை, கி.மு 3 ஆம் நுாற்றாண்டு முதல் கி.மு.4 ஆம் நுாற்றாண்டு வரையிலான, சீனாவின் சண்டையிடும் மாநிலங்களுக்கிடையேயான காலத்தில் உருவான (யின் - யாங் மற்றும் பஞ்ச பூத நிலை என்ற) இயற்கைவாதிகளின் முக்கிய தத்துவக் கோட்பாடுகளிடமிருந்து பெற்றுள்ளது. +இராபினெட் தாவோயியம் வெளிப்படுவதற்கான நான்கு கூறுகளை அடையாளம் கண்டுள்ளார். அவை: + +தாவேயியத்தின் சில கூறுகளை அடியொட்டிச் சென்றால் அவை வரலாற்றுக்கு முந்தைய சீன நாட்டுப்புற மதங்களுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. பின்னாளில் இவை தாவோயியத்துடன் ஒன்றிப்போயுள்ளன. குறிப்பாக, போரிடும் மாநிலங்கள் சார்ந்த நுாற்றாண்டிற்குரிய நிகழ்வுகளான "வு", சீன சமனியம் (வடக்கு சீனாவில் காணப்பட்ட சமனிக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய) மற்றும் "பங்சி" ஆகியவற்றிலிருந்து பல நடைமுறைகளை தாவோயிம் பெற்றுள்ளது. ஆனால், தாவோயியத்தை பின்பற்றும் பிற்காலத்��ைச் சேர்ந்தவர்கள் இதை மறுக்கிறார்கள். சமனியம் மற்றும் பங்சி இரண்டு வார்த்தைகளுமே மந்திர தந்திரம், மருத்துவம், எதிர்காலத்தை அறிதல், நீண்ட ஆயுளைக் கொண்ட வாழ்க்கை, பேரின்பத்தை நோக்கிய பயணம், ஆவிகளைத் துரத்தும் நடைமுறை ஆகியவற்றுக்காக அர்ப்பணித்தவர்களை குறிப்பதற்குப் பயன்படுத்திய வார்த்தைகளாகும். வு, சமன்சு அல்லது சார்செரர்சு ஆகியவை வார்த்தைகளின் மொழிபெயர்ப்புகளாவே பயன்படுத்தப்படுகின்றன. பங்சியானது தத்துவார்த்தமாக இயற்கைவாதிகளின் தத்துவங்களோடு நெருங்கிய தொடர்பைக் கொண்டதாகவும், வானவியல் மற்றும் நாட்காட்டி சார்ந்த ஊகங்கள், எதிர்காலத்தைப் பற்றிய குறி சொல்லும் செயல்களையே அதிகம் சார்ந்துள்ளது. + +இரண்டாம் நுாற்றாண்டில் இறுதியில், ஐந்து முகத்தலளவை அரிசி இயக்கத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட டியான்சி யின் வானவியல் தத்துவவியலாளர்களால் (பின்னர் இது செங்யி தத்துவ மரபு என அழைக்கப்பட்டது) முதன் முதலில் தாவோயியத்தின் வடிவமானது ஒழுங்கமைக்கப்பட்டது. செங்யி டாவோ மரபானது சாங் டாவோலியங் என்பவரால் நிறுவப்பட்டது. இவர் லாவோட் சூ தனது 142 வது வயதில் தோன்றினார் என்று கூறுகிறார். டியான்சி தத்துவ மரபானது 215 ஆம் ஆண்டில் காவ் காவ் என்ற ஆட்சியாளரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்ததற்கு பலனாக அவராலேயே ஆட்சியின் அங்கீகாரத்தைப் பெற்றது. கி.மு இரண்டாம் நுாற்றாண்டின் மத்தியில் லாவோட் சூ தெய்வத்தன்மை வாய்ந்தவர் என்ற மேன்மை தங்கிய அங்கீகாரத்தைப் பெற்றார். தாவோயியம், சாங்கிங் தத்துவ மரபு வடிவில் சீனாவில் மீண்டும் டாங் வம்சத்தின் (618–907) ஆட்சிக் காலத்தில் ஆட்சி அடிப்படையிலான அங்கீகாரத்தைப் பெற்றது. டாங் வம்சத்தின் பேரரசர்கள் லாவோ சீயை தங்களது உறவினர் என்று கூறிக்கொண்டனர். + +ஷாங்கிக் இயக்கமானது, மிகவும் முன்னதாகவே, அதாவது 4 ஆம் நூற்றாண்டில், 364 மற்றும் 370 க்கு இடையில் ஒரு குறிப்பிட்ட “யாங் சி“ க்கு கடவுளர்கள் மற்றும் ஆவிகள் மூலம் தொடர்ச்சியான வெளிப்பாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக அறிய முடிகிறது. கி.மு. 397 மற்றும் 402 க்கு இடையில் கே சாவோஃபு பல தொடர்ச்சியான நூல்களைத் தொகுத்தார். இந்தத் தொகுப்பே லிங்போ பள்ளி க்கான அடிப்படையாக அமைந்தது. லிங்போ தத்துவ மரபானது சாங் வம்சத்தின் ஆட்சிக் காலத்தில் (960���1279) செல்வாக்கினை அடையப்பெற்றது. பல்வேறு சாங் வம்ச பேரரசர்கள், குறிப்பாக, உய்சாங், போன்றவர்கள் தாவோயியத்தை முன்னெடுத்துச் செல்வதில் செயலுாக்கம் மிகுந்தவர்களாக இருந்தார்கள். இவர்கள் பல்வேறு தாவோயிய உரைகளை சேகரித்து "டாவோசாங்" இன் அடுத்த பதிப்புகளை வெளியிடுவதில் கவனம் செலுத்தினர். + +பன்னிரெண்டாம் நுாற்றாண்டில் சான்டாங்கில் குவான்சென் தத்துவ மரபு தொடங்கப்பட்டது. 13 மற்றும் 14 ஆம் நுாற்றாண்டுகளில் இந்த மரபானது யுவான் வம்சத்தின் ஆட்சிக்காலத்தில் வளமும், செழுமையும் பெற்று வடக்கு சீனாவில் மிக முக்கியமான மற்றும் பெரிய தாவோயிய மரபாக விளங்கியது. 1222 ஆம் ஆண்டில் செங்கிசுகானை இந்த தத்துவ மரபின் பெருமதிப்பு பெற்ற குருவான கியு சுஜி சந்தித்தார்.செங்கிசுகான் தனது வெறித்தனமான வெற்றிகளுக்குப் பிறகும் தன்னடக்கத்தை வெளிப்படுத்தியதற்கு கியு சுஜியினால் ஏற்படுத்தப்பட்ட தாக்கமே காரணம் எனலாம். செங்கிசுானின் தீர்ப்பாணையின் காரணமாக இந்த சாண்டாங் தத்துவ மரபினரின் குருகுலங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டது. + + + + +யூதம் + +யூதம் ("Judaism", எபிரேய மொழியில் , "ஜெஹூதா" ("Yehudah"), யூடா, என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός; இலத்தீன் மொழியில் "லுதாயிஸ்மஸ்") என்பது பண்டைய ஒரு கடவுட் கொள்கை உடைய, ஆபிரகாமிய சமயம் ஆகும். இது தோராவை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளது (டனாக் அல்லது எபிரேய வேதாகம என்ற பெரிய உரையில் தோரா ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் தல்மூத் போன்ற நூல்களின் பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் துணை நூல்களாகவுள்ளன. இது யூதர்களுடைய, சமயம், மெய்யியல், பண்பாடு மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்ட பத்தாவது பெரிய சமயக் குழுவாக யூதம் இருக்கிறது. + +மரபுவழி யூதமானது, தோரா யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது. + +யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள். + +யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது. வெண்கலக் காலத்தில், மத்திய கிழக்கு நாடுகளில், யூதம் ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது. யூதம், ஒரு கடவுட் கொள்கை கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. எபிரேயர் மற்றும் இசுரயேலர்களைக் குறிக்கும் விதம்: + +* தனக் (Tanakh) புத்தகத்தில், யூதர்கள். + +* எஸ்தர் (Esther), புத்தகத்தில், யூதர்கள். + +* மற்ற புத்தகங்களில் யூதர்கள் என்ற வார்த்தைக்குப் பதிலாக "இஸ்ரேல் நாட்டின் குழந்தைகள்". +யூத மதத்தின் நூல்கள், மரபுகள் மற்றும் மதிப்புகளால் வசப்படுத்தப்பட்ட பிற மதங்கள்: + +* ஆபிரகாமிய சமயங்கள்* கிறிஸ்தவம் + +* இசுலாம் + +* பகாய் சமயம். + +யூத மதத்தின் பல அம்சங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மதச்சார்பற்ற மேற்கத்திய நன்னெறிகளையும், சிவில் சட்டங்களையும் தாக்கின.  ஹீப்ராயிசம் முக்கிய காரணியாகக் கருதப்படக் காரணங்கள்: + +* மேற்கத்திய நாகரிகம், ஹெலனிஸமாக வளர்ச்சி அடைந்தது + +* யூதவியல் வளர்ச்சி + +* கிறிஸ்தவத்தின் தாய் மதம் + +* கிறிஸ்தவ சகாப்தத்தில் மேற்கத்திய இலட்சியங்கள் மற்றும் அறநெறிகள் கணிசமாக வடிவமைக்கப்பட்டன. + +யூதர்கள் சாதி ஒழிப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.  யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றும் யூத மதத்துக்கு மாறியவர்கள் மட்டுமே முதன்மைப்படுத்தப்பட்டனர்.  2015 ஆம் ��ண்டில், உலக மக்கள் தொகையில் யூதர்களின் எண்ணிக்கை 14.3 மில்லியனாக இருந்தது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 0.2% ஆகும். + +43% யூதர்கள் இசுரேலில் வசிக்கின்றனர். 43% யூதர்கள் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வசிக்கின்றனர். மீதமுள்ளவர்களில், பெரும்பாலானோர் ஐரோப்பாவில் வசிக்கின்றனர். எஞ்சியுள்ள சிறுபான்மை குழுக்கள், தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் பரவலாக வசிக்கின்றனர். + +பிற கடவுள்களைப் போலன்றி, எபிரெயர் கடவுள், கூறுபடா  ஒற்றையராகவும் தனித்தவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.  மாறாக, எபிரேய கடவுளுக்கு, மற்ற கடவுட்களுடன் உறவு இல்லை. ஆனால் அவர், உலகோடும், குறிப்பாக தான் படைத்த மக்களோடும் முக்கிய உறவுகள் வைத்துள்ளார். இவ்வாறு யூத மதவாதம் தார்மீக ஒரு கடவுட் கொள்கையுடன்  தொடங்குகிறது. இது கடவுள் ஒருவரே என்றும், அவர் மனிதகுலத்தின் செயல்களைப் பற்றி அக்கறை கொள்வதாகவும் கூறுகிறது.  எபிரெயு பைபிள் டனாகின்படி, ஆபிரகாமுக்கு ஒரு பெரிய தேசத்தை உண்டாக்கித் தருவதாக கடவுள் அவருக்கு உறுதியளித்தார். பல தலைமுறைகளுக்குப் பிறகு, ஒரே ஒரு கடவுளை நேசிக்குமாறும், அவரையே வணங்குமாறும் இசுரயேலருக்கு அவர் கட்டளையிட்டார். அதாவது, யூத தேசம் உலகிற்கான கடவுளுடைய அக்கறையை பேணுவதாகும்.  யூத மக்கள் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார். அதாவது, யூதர்கள் கடவுளுடைய அன்பை மக்களுக்குப் பிரதிபலிக்க வேண்டும். இந்த இரண்டு கட்டளைகள் கடவுளின், 613 கட்டளைகளில், பிரதான கட்டளைகளாகும். இந்த உடன்படிக்கை (விவிலியம்) மற்றும் சார்ந்த சட்டங்கள் யூதம் மதத்தின் அடிப்படையாகும். + +யூத நாட்காட்டிகளில், யூதர்களுக்கான விசேஷ விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யூத சரித்திர நிகழ்வுகளைக் குறிக்கின்றன. அவை, படைப்பு, வெளிப்பாடு மற்றும் மீட்பு போன்ற, கடவுளுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவை மைய கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன. + +ஓய்வு நாள்: + +ஓய்வு நாள் அல்லது ஷப்பத் (Shabbat) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆ���ும். ஓய்வு நாளின் போது, யூதர்கள் மெலகாஹ் (melakah) எனும் 39 பிரிவுகளின் கீழ் வரும் எந்த செயல்களிலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஓய்வு நாளின் போது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் வழக்கமான அர்த்தத்தில் "வேலை" எனக் கருதப்படுவது இல்லை. தடை செய்யப்பட்ட வேலைகளில் சில, தீ மூட்டுதல், விளக்கு எரித்தல், பணம் பயன்படுத்துதல், பொது திரளம் சுமத்தல், போன்றவை ஆகும். + +மூன்று யாத்ரீக திருவிழாக்கள் + +சாக்ஜிம் ("chaggim") எனப்படும் யூத புனித நாட்கள், யூத வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அவை, +யூத மதத்தின் மூன்று முக்கிய திருவிழாக்கள், சுக்கட் (Sukkot), பாஸ்கா (Passover) மற்றும் சாவ்வுட் (Shavuot) ஆகியவை ஆகும். இவை "ரெகலிம்-regalim" என்னும் சமயத்துறைத்தலைமைக் கோட்பாடுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டவை ஆகும். + +உயர் புனித நாட்கள் + +யமிம் நொரைம் (Yamim Noraim) அல்லது "பயபக்தி  நாட்கள்" எனப்படுபவை 'தீர்ப்பு' மற்றும் 'மன்னிப்பு' ஆகியவற்றைச் சுற்றியுள்ள கோட்பாடுகளின் அடிப்படையிலான உயர் புனித நாட்கள் ஆகும். அவற்றுள் முக்கியமானவை: + +1. ரோஷ் ஹஷானா (Rosh Hashanah) + +2. யோம் கிப்பூர் (Yom Kippur) + +ரோஷ் ஹஷானா: இது அதி பரிசுத்த நாட்களில் முதலாவது ஆகும். யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினம் ஆகும். இது "நினைவுகூர் நாள்" என்றும், "ஷோபார் ஊதுதல் தினம்" என்றும், "ஆண்டின் தலை நாள்" என்றும் குறிப்பிடப்படுகிறது. + +யோம் கிப்பூர்: இது யூத ஆண்டின் புனிதமான நாள் ஆகும். யூதத்தின் மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு இந்நாள் முதல் தொடங்கும். இது, ஒருவர் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் நோக்கம் உடையது ஆகும்.  + +பூரிம் ஒரு மகிழ்ச்சியான யூத விடுமுறை நாள் ஆகும். பாரசீக யூதர்களை அழிக்க முயன்ற துன்மார்க்கன் ஹாமானின் (Haman) சதியிலிருந்து விடுவித்த நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இது எஸ்தரின் பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. + +யூதர்கள், ஹனூக்கா எனும் தீபத் திருநாள் அல்லது ஒளி விழாவைக் கொண்டாடுகிறார்கள். இத்திருநாள் எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25 ஆம் நாள் துவங்குகிறது.  எட்டு நாட்கள் நடைபெறுகிறது. எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. + +திஷா பீஏவ் (Tisha B'Av) எனப்படுவது யூதர்களின் முதல் மற���றும் இரண்டாம் கோயில்களின் அழிவை நினைவுகூரும் ஒரு துக்கம் மற்றும் விரத நாள் ஆகும். இது பிற்காலங்களில், ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. + +திருவிழாவின் முக்கிய மற்றும் ஓய்வு நாள் அல்லது ஷப்பத் பிரார்த்தனை சேவைகள் டோராவின் பொது வாசிப்பில் உள்ளன. தனக் (Tanakh) மற்றும் ஹஃப்தரத் (Haftarah) ஆகியவற்றின் வாசிப்புகளும் உடன் இணைக்கப்படும். + + + + + +சி++ எடுத்துக்காட்டுகள் + +கீழே சில சி++ நிரலாக்கல் எடுத்துக்காட்டுகள் தரப்பட்டுள்ளன. இவை இலவச போர்லாண்ட் சி++ 5.5 கட்டளை இருமமாக்கியில் (Borland C++ Command Line Compiler) இல் சோதிக்கப்பட்டவை. + +சி++ நிரலானது ஹெடர் கோப்புக்களைக் கொண்டுள்ளது இவற்றை நிரலில் சேர்ப்பதற்கு. +
#include using namespace std; + +கவனிக்கவும் சி++ பழைய நிரல்களில் சீர்தரமாக இருமமாக்கிகளில் வரும் தலைப்புக் கோப்புக்களைச் சேர்பதற்கு
#include என்றவாறும் நிரலாக்கர்கள் உருவாக்கிய தலைப்புகளைச் சேர்ப்பதற்கு #include "programmercreated.h" என்றவாறு சேர்ப்பதே பழைய நிரல்லாக்க வழமையாகும். இவை பழைய நிரல்களை வாசித்துப் புதிய நிரல்களாக மாற்றப் பயனபடுத்தலாம். +#include +
using namespace std; +
int main() +
{ +
cout «"Hello C++ World"; + +இதில் cout என்பது முனைய (Console) வெளிப்பாடாகும். முனையங்கள் விசைப்பலகையும் கணினித் திரையும் ஆகும். ஆகவே இந்நிரலாக்கத்தில் வெளியீடானது கணினித் திரையில் காண்பிக்கப்படுகின்றது. லினக்ஸ் இயக்கு தள முனையங்களில் தமிழிலும் எழுத்துக்கள் உடைந்தவாறு வெளியீடுகளைக் காட்டலாம் என்றாலும் விண்டோஸ் கட்டளையகத்தில் (Commmand Prompt) தமிழ் உட்பட இந்திய மொழிகளை இன்று வரை ஆதரிக்காததால் தமிழ் எழுத்துக்களை கட்டளையகத்தில் காட்ட முடியாது. + + + +
+ +நாதநாமக்கிரியா + +நாதநாமக்கிரியை இது 15வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 3 வது மேளமாகிய மாயாமாளவகௌளையில் பிறக்கும் ஜன்னிய இராகம் ஆகும். கருணைச்சுவையை வெளிப்படுத்தும் இவ்விராகம் ஒரு துணை இராகம் (உபாங்க இராகம்) ஆகும். மாலையில் பாட உகந்த இந்த இராகமானது இசை நாடகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படும். + + + + + + + + + + + + +ஆஹிரி + +ஆஹிரி ��ராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 14வது மேளகர்த்தா இராகமாகிய, "அக்னி" என்றழைக்கப்படும் 3வது சக்கரத்தின் 2 வது மேளமாகிய வகுளாபரணத்தில் பிறக்கும் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஆரோகண-வக்ர சம்பூர்ண இராகம் ஆகும். இரவில் பாட ஏற்ற இவ்விராகம் பாஷாங்க இராகம் ஆகும். சோகச் சுவையை வெளிப்படுத்துகின்ற இராகம். "ஆஹிரியைக் காலையில் பாடினால் அன்னம் கிடைக்காது" என்பது ஒரு பழமொழி. + + + + + + + +லோறன்ஸ் லெசிக் + +லோறன்ஸ் லெஸிக் (Lawrence Lessig, பி. ஜூன் 3, 1961) ஓர் அமெரிக்கக் கல்வியியலாளர். கிரியேட்டிவ் காமன்ஸ் இனைத் தாபித்தவர். இப்போது ஸ்டான்ஃபர்ட் சட்டக் கல்லூரியில் கற்பிக்கிறார். + + + + + +திமிங்கலச் சுறா + +திமிங்கலச் சுறா ("Rhincodon typus") என்பது உலகில் உள்ள மீன்கள் யாவற்றினும் மிகப்பெரிய வகை மீன் ஆகும். இச் சுறாமீன் வெப்ப மண்டலக் கடல்களில் வாழ்கின்றன. நிலநடுக்கோட்டிலிருந்து சுமார் ±30° பகுதிகளில் வாழ்கின்றன. சுமார் 700 மீட்டர் ஆழத்தில் வாழ்கின்றன. இவை வாழும் கடற்பகுதிகளை படத்தில் காணலாம். + +இச் சுறா மீன்கள் சுமார் 18 மீட்டர் (60 அடிகள்) நீளமும் சுமார் 14 மெட்ரிக் டன் எடையும் கொண்டவை. +இவை தனியாகவே வாழ்கின்றன. ஒரு நாளைக்கு 2.6 டன் எடை உணவு உட்கொள்ளும். + +சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய மீன் இனம் என்பர். + + + + +சொராட்டிரிய நெறி + +சொராட்டிரியம் (ஆங்கிலம்: Zoroastrianism, ஜொராஷ்ட்ரியம்) உலகின் பழைமை வாய்ந்த சமயங்களில் ஒன்றாகும். சிறுபான்மையாக இது மாஸ்டா நெறி என்றும் மயியானியம்என்றும் சரத்துஸ்திர சமயம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. ஈரானிய இறைதூதர் சொராட்டிரரின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு, பேரறிவு வடிவமான அகுரா மாஸ்டா எனும் ஏக இறைவனைப் போற்றுவதாக இந்தச் சமயம் எழுச்சி பெற்றது. + +பொ.மு 5000 முதல் 2000 ஆண்டுகளுக்கு இடையில் சொராட்டிரியம் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்க ஆரம்பிக்கின்றன. பொ.பி 633 முதல் 654 வரை இடம்பெற்ற இஸ்லாமியப் படையெடுப்புக்கு முன்பு, சொராட்டிரியமே பாரசீகப் பேரரசுகளின் முதன்மை நெறியாக விளங்கியிருக்கிறது. இன்றைக்கும் பெரும்பாலான சொராட்டிரிகள் இந்தியாவிலும் ஈரானிலும் வாழ்ந்து வருகின்றனர். + +சொராட்டிரர் (ஜொராஸ்ட்ரர்) என்பது, அந்நெறியை உண்டாக்கிய ‘’சரத்துஸ்திரர்’’ எனும் ஞானியின் கிரேக்க மொழி ஒலிப்பு ஆகும். வெவ்வேறு மொழிகளில் அவர் பலவிதமாக அழைக்கப்படுகின்றார். வடகீழ் ஈரானில் அல்லது தென்மேல் ஆப்கானில் பிறந்திருக்கக்கூடிய சொராட்டிரர் இந்தியப் பண்பாட்டின் தொல்வடிவங்களில் ஒன்றுக்கு நெருக்கமானதும், பல்தெய்வங்களையும் பலியிடலையும் நம்பியதுமான சமூகமொன்றில் தோன்றினார். சொராட்டிரிய பழம்பெரும் நூல்களில் இவரது வாழ்க்கை ஓரளவு பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஒரு பூசகராகப் பணியாற்றிய சொராட்டிரியருக்கு மனைவி, மூன்று மகன், மூன்று மகள் இருந்த செய்தியை அவை சொல்கின்றன. ஹோமச்செடியை (வேதங்களின் சோமச்செடி) உட்கொள்வதையும் விலங்குப்பலியையும் நிராகரித்த அவர், சாதியப்பாகுபாடு கொண்ட தொல் ஈரானிய பழஞ்சமயத்தை எதிர்த்தே இந்நெறியைத் தோற்றுவித்தார் என்று அவேஸ்தா காதாக்கள் சொல்கின்றன. + +இறைத்தூதர் சொராட்டிரரின் "காதா" என்று அறியப்படுகின்ற திருவார்த்தைகள் சொராட்டிரிய மதத்துக்குரிய புனித நூல் அவேஸ்தாவில் அடங்குகின்றன. இந்நூலில் இறைவனை அகுரா (படைத்தவன்) மாஸ்டா (முற்றறிவாளன்) என்ற பெயர்களால் குறிப்பிடும் சொராட்டிரர், இறைவன் ஒருவனே என்பதையும் வலியுறுத்துகிறார். அகுரா மாஸ்டா என்ற பெயரைப் பின்பற்றி, சொராட்டிரிய நெறி, அதைப் பின்பற்றுவோரால் அதிகம் "மாஸ்டாயாஸ்னா" என்றே அறியப்படுகின்றது. அது மாஸ்டாவின் வழிபாடு எனப் பொருள்படும் சொல். + +பொ.மு 2000ஆமாண்டுக்கு முற்பட்ட இந்தோ –ஈரானிய நம்பிக்கைகளின் பரிணாமத் தொடர்ச்சியாக இந்நெறி ஆய்வாளர்களால் நோக்கப்படுகின்றது. இந்நெறியின் இறைதூதர் சொராட்டிரியர் பொ.மு 10 முதல் 6ஆம் நூற்றாண்டுக்கு இடையே வசித்தவராகக் கொள்ளப்படுகின்றார். பொ.மு 5ஆம் நூற்றாண்டிற்குரிய கிரேக்க வரலாற்றாளர் எரோடோட்டசுவின் குறிப்பொன்று திறந்தவெளியில் இறந்தோரை இடும் சொராட்டிரிகளைச் சுட்டிக்காட்டுகின்றது. சொராட்டிரிகள் ‘’மாகிகள்’’ என்று அதில் சொல்லப்படுவதுடன், ஈரானின் அகாமனிசியப் பேரரசு காலத்தில் (648–330 பொ.மு), அவர்கள் அரசியலில் பெற்றிருந்த முக்கியத்துவமும் சுட்டிக்காட்டப்படுகின்றது அகாமனிசியப் பேரரசு அகுரா மாஸ்டா கொண்டிரு��்த பக்தியை பெஹிஸ்ட்டன் கல்வெட்டு முதலான சாசனங்களில் காணலாம். அவெஸ்தா நூலின் பெரும்பாலான பாகங்கள் இக்காலத்திலேயே இயற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இக்காலத்தில் உருவான அகாமனிசிய நாட்காட்டியும், யசதாக்கள் (சொராட்டிரிய தேவதூதர்கள்) பற்றிய நம்பிக்கையும் இன்றும் மாஸ்டா நெறியினர் மத்தியில் தொடர்கின்றது. + +பேரரசர் அலெக்சாந்தர் பெர்சப்பொலிஸ் நகரைக் கைப்பற்றியபோது, பெரும்பாலான சொராட்டிரிய நூல்கள் அழிக்கப்பட்டதாக பிற்கால மாஸ்டா நூல்கள் கூறுகின்றன. அலெக்சாந்தரின் படையெடுப்பால் சொராட்டிரியம் நலிவுற்றாலும், அகாமனிசியப் பேரரசின் முக்கியமான பாகங்களாக விளங்கிய அனத்தோலியா, மெசொப்பொத்தேமியா, காக்கேசியா முதலான நகரங்கள் முக்கியமான சொராட்டிரிய மையங்களாக தொடர்ந்தும் திகழ்ந்தன. பொ.மு முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றாசிரியர் இசுட்ராபோ, நெருப்பை வழிபடும் சொராட்டிரிய பாரசீகர்கள் பற்றிய குறிப்பை எழுதியுள்ளார். பார்த்தியப் பேரரசு காலம் வரை, ஆர்மேனிய அரசின் அரசநெறியாக சொராட்டிரிய சமயத்தின் ஒரு வடிவம் விளங்கியதற்கான ஐயமற்ற சான்றுகள் கிடைத்துள்ளன. அடுத்து வந்த சாசானியப் பேரரசு, தான் கைப்பற்றிய இடங்களிலெல்லாம் தீக்கோயில்களை அமைத்ததுடன், சொராட்டிரியத்தின் இன்னொரு வடிவமான சூர்வனியத்தை பரப்புவதில் தீவிரமாக இருந்தது. காக்கேசியா பகுதியில் ( இன்றைய அசர்பைஜான்) சொராட்டிரியம் நிலைகொண்டது இக்காலத்தில் தான் என்று சொல்லப்படுகின்றது. + +கிறித்துவ உரோமைப் பேரரசுடன் பாரசீக அரசுகளுக்கு உண்டான உறவை அடுத்து பொ.பி முதலாம் நூற்றாண்டளவில், அங்கு கிறித்தவம் கால்பதிக்கலானது, அது மெல்ல மெல்ல சொராட்டிரியத்தை முற்றாக வீழ்ச்சியடைய வைத்தாலும், பொ.பி 5ஆம் நூற்றாண்டு வரை, இரண்டாம் பெருநெறியாகவேனும் சொராட்டிரியம் மத்திய ஆசியாவில் விளங்கியது என்பதற்கான சான்றுகள் உண்டு. + +பொ.பி ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த பாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு அங்கிருந்த சொராட்டிரிய அரசை தகர்த்தெறிந்ததுடன், பாரசீகத்தை முற்றாக இஸ்லாமியமயமாக்கியது. உமையா கலீபகத்தின் கீழ் வந்த பாரசீக நாட்டில், இஸ்லாமியர் அல்லாதோருக்கான உரிமைகளுடன் சொராட்டிரிகள் வாழ அனுமதிக்கப்பட்டனர் . எனினும் சொராட்டிரி எண்ணிக்கை குறைந்து அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லீம்களாக மதமாற்றப்பட்டதும், அவர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். பொ.பி 9ஆம் நூற்றாண்டில், தன் கையாலேயே சொராட்டிரியர் நட்டதாகச் நம்பிப் போற்றப்பட்ட ஊசியிலை மரமொன்று, மாளிகை ஒன்றைக் கட்டுவதற்காக, குராசான் நகரில் தறிக்கப்பட்ட சம்பவம், இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் அமைந்தது.. + +இஸ்லாமிய மயமாக்கத்தால் பல்வேறு இடர்ப்பாடுகளைசந்தித்தாலும், சொராட்டிரியம் பக்தாத்திலிருந்து சற்று அப்பால் அமைந்திருந்த சில பகுதிகளில் இறுக்கமாகப் பின்பற்றப்பட்டது. புகாராவில் இன்றைய உஸ்பெகிஸ்தான்) ஒன்பதாம் நூற்றாண்டளவில் அரேபியத் தளபதி ஒருவர் மீண்டும் மீண்டும் மூன்று தடவை அரசாணை பிறப்பித்து மக்களை இஸ்லாமுக்கு மதமாற்றி, அதில் தோல்வியடைந்தது இவற்றில் குறிப்பிடத்தக்கது. இறுதியில் வேறுவழியின்றி அவர்களின் சொராட்டிரியக் கோயிலை பள்ளிவாசலாக மாற்றம் செய்து, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வருவோருக்கு இரண்டு திர்காம் பணமும் கொடுத்து மிகக்கடினமான முயற்சியின் மத்தியிலேயே அவர்களை வெற்றிகரமாக முஸ்லீம்களாக மதமாற்றமுடிந்தது. இத்தகைய சிக்கலான சந்தர்ப்பங்களில் தங்கள் பூர்வீக நிலத்தைவிட்டு, சொராட்டிரிகள் புலம்பெயர்ந்ததும் வரலாற்றில் பதிவாகியுள்ளது. அம்மதத்தின் எச்சங்களுள் ஒரு குழுவினர் குராசான் நகரிலிருந்து புலம்பெயர்ந்து மேற்கிந்தியாவின் குயராத் பகுதியை வந்தடைந்தனர். இவர்களே, இன்றுள்ள சொராட்டிரிகளின் இருபெரும் குழுக்களில் ஒன்றான பார்சி மக்கள் ஆவர். + +பொ.பி ஒன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு வந்த சொராட்டிரியம் அங்கிருந்த நெறிச்சுதந்திரத்தால் செழிப்போடு வளர்ந்தது. கிறித்துவத்தின் அறிமுகத்துக்கு முந்திய சொராட்டிரியக் குடிகளின் எச்சங்கள் ஆர்மீனியாவில் 1920கள் வரை வாழ்ந்ததை உறுதிப்படுத்துகின்றன. ஈராக்கிலும் மத்திய ஆசியாவிலும் சொராட்டிரிகளின் சிறுபான்மைச் சமூகங்கள் இன்றும் உண்டு. அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா முதலான பகுதிகளில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த பார்சிகள் வாழ்கின்றனர். + +தஜிகிஸ்தான் அரசின் கோரிக்கைக்கேற்ப, ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம், 2003ஆமாண்டை, ‘’சோராட்டிரியப் பண்பாட்டின் 3000ஆம் பேராண்டாக’’ பிரகடனம் செய்ததை அடுத்து, உலகெங்கும் பெருமளவு கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. 2011இல் முதன்முதலாக சொராட்டிரியம், ஈரானிலும் வட அமெரிக்காவிலும் பெண்களைப் பூசகர்களாக ஏற்றுக்கொண்டது. + +துறவறத்தின் எல்லா அம்சங்களையும் நிராகரிக்கும் மாஸ்டா நெறி, வாழ்க்கை வாழ்வதற்கே எனும் கொள்கையைக் கொண்டது. வாழ்க்கை என்பது, நன்மைக்கும் தீமைக்கும் இடையிலான போராட்டம் தொடர்கின்ற ஒரு தற்காலிக நிலையாகவே இந்நெறியில் கொள்ளப்படுகின்றது. அகுரா மாஸ்டா உலகைத் தோற்றுவித்ததிலிருந்து, பிறப்பிற்கு முன்னான கணம் வரை, ஒரு உர்வன் (ஆன்மா) ஆனது, அதன் காவல் தேவதையுடன் (பிராவசி) இணைந்த நிலையில் காணப்படுகின்றது. இறப்பின் நான்காம் நாளின் பின் அது மீண்டும் பிராவசியுடன் இணைகின்றது. எனினும் மரபார்ந்த சொராட்டிரியத்தில் மறுபிறவிக் கொள்கை இல்லை. +தீயும் நீரும் மாஸ்டா நெறியில் புனிதமானவை. தீ ஆன்மிக ஞானத்தை வழங்கும் ஊடகமாகவும், நீர் அந்த ஞானத்தின் மூலமாகவும் கருதப்படுகின்றது. தீயின் முன்னிலையிலேயே வழிபாடுகளை நிகழ்த்துவது சொராட்டிரிய மரபு. சடங்கின் உச்சத்தில் நீரைப் பயன்படுத்துவர். +இறந்த சடலங்கள் சொராட்டிரியரைப் பொறுத்தவரை அழிவுச்சக்திக்குரியவை. இறைவனின் படைப்பை அசிங்கப்படுத்தாது சடலங்கள் அப்புறப்படுத்தவேண்டியதன் அவசியத்தை அவேஸ்தா கூறுகின்றது. பிணங்கள் பறவைகளுக்கு உணவாவதற்காக அமைக்கப்பட்ட அமைதிக்கோபுரங்கள், சொராட்டிரிய நெறியில் முக்கிய இடம் பிடிக்கின்றன. எனினும் பெரும்பாலான சொராட்டிரியர்கள் பிணத்தை புதைக்கவோ எரிக்கவோ செய்வதும் உண்டு. இந்தியாவின் சொராட்டிரியர்களான பார்சிகள் மதமாற்றத்தை ஏற்றுக்கொள்வதில்லை. எனினும் கலப்புமணத்தில் பிறந்த குழந்தைகளை சிலவேளைகளில் சொராட்டிரிகளாகக் கருத்திற்கொள்வதுண்டு. பார்சிகளைப் போலன்றி, ஈரானிய சொராட்டிரிகள் மதமாற்றத்தை அனுமதித்திருக்கின்றார்கள். +வாழ்க்கையின் நோக்கம் என்று, பல விடயங்களை சொராட்டிரியம் முன்வைக்கின்றது. அவற்றுள், ஹுமாதா, ஹுக்தா, ஹுவர்ஷ்தா (நல்லெண்ணம், நற்சொற்கள், நற்செயல்கள்) ஆகிய மூன்றையும் கடைப்பிடித்தல், உண்மையின் பாதை எனும் ஒரு பாதையில் மட்டும் நம்பிக்கை வைத்தல், பலனை எதிர்பார்த்து எப்போதும் நல்லவற்றையே செய்தல் முதலான நன்னெறிகளை முன்வைக்கின்றது. + +சொராட்டிரிகளின் முழுமுதல் கடவுள் அகுரா மாஸ்டா என்று அறியப்படுகின்றார். இருபெயராலான அச்சொற்கள், அவேஸ்த மொழியில் உயிரும் உள்ளமும் எனப் பொருள்படுவதாகவும், அது பரம்பொருளின் ஆணோ பெண்ணோ அற்ற தன்மையைக் குறிப்பதாகவும் சொராட்டிரிகள் நம்புகின்றனர். இயற்கை இறைவனின் அம்சம் என்ற சொராட்டிரக் கருத்துடன் , இந்திய சமயங்களை இணைத்துப் பார்த்து ஒப்பிடுகின்றனர் ஆய்வாளர்கள். மாஸ்டா இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்ததற்கு ஆதாரமாக "ஆசா" (பேரறம்) விளங்குகின்றது. ஆசாவுக்கு எதிர்ப்பதமாக “திருச்சு” (Druj – த்ருஜ், பொய்மை, அழிவு) என்பதை சொராட்டிரிகள் முன்வைக்கின்றனர். ஆசாவானது அகுரா மாஸ்டாவால் இயக்கப்பட, இத்திருச்சுவானது, அகிர்மான் அல்லது அங்க்ரா மைன்யூ எனப்படுகின்ற அழிவுச்சக்தியால் இயக்கப்படுகின்றது. அகுரா மாஸ்டாவின் எதிர்விசையாக அவேஸ்தா குறிப்பிடுகின்ற ‘’அங்க்ரா மைன்யூ’’ பிற்கால நூல்களில் “அக்ரிமான்” எனப்படும் கொடுந்தேவதையாக சித்தரிக்கப்படுகின்றது. ஆஷாவும் திருச்சும் இருபெரும் இருமைகளாக மோதிக்கொண்டிருப்பதன் இயக்கமே உலக இயற்கை என்பது சொராட்டிரிய முடிபு. + +அகுரா மாஸ்டா அங்க்ரா மைன்யூவை வென்று, அதன் விளைவாகப் படைப்பைத் துவங்கியபோது, தன் அம்சமாக, அமேசா ஸ்பந்தாக்கள் எனும் திருத்தூதர்களை வெளிப்படுத்தினார். இவர்களே உலகின் படைப்புக்கு அடிப்படையானதுடன், அமேசா ஸ்பந்தாக்கள், "யசதா" எனப்படுகின்ற வேறுவகை இறையம்சங்களின் துணையுடன் விளங்குகிறார்கள். யசதாக்கள், பௌதிக உலகியல் அம்சங்களின் பருவடிவங்கள் ஆவர். மாஸ்டா நம்பிக்கையில் இயற்கை முழுவதும் யசதா இறையுருவங்களால் ஆனதால், சொராட்டிரியத்தில் இயற்கையைப் பாதுகாப்பது முதன்மைக்கடமைகளுள் ஒன்றாக வலியுறுத்தப்படுகின்றது. உலகைக் காப்பது யசதாக்களை வாழவைப்பது என்ற அவர்களின் தீவிரமான நிலைப்பாடு, அம்மதத்தை உலகின் முதல் சூழலியல் மதம் என்று புகழ்பெற வைத்திருக்கின்றது. + +சொராட்டிரிகளின் புனிதநூலான அவேஸ்தாவானது அகுரா மாஸ்டாவால் அருளப்பட்டதாக நம்பப்படுகின்றது. அகுரா மாஸ்டாவால் சொராட்டிரியருக்கு வழங்கப்பட்ட 21 பகுதிகள், சொராட்டிரியரின் சீடரான விஸ்தஸ்பா மூலம் உலகுக்குக் கிடைத்தன. பழைமையான அவேஸ்தாவின் சிறுபகுதியே இன்று எஞ்சியுள்ளது. எஞ்சியது, கடந்த ஆயிரமா���ாண்டில் தொகுக்கப்பட்டதாகும். அவேஸ்தாக்களில் 1288இல் எழுதப்பட்ட பாகமொன்றே இறுதியாக எழுதப்பட்டதாக நம்பப்படுகின்றது. காதா, யஸ்னா, விஸ்பராட், வெந்திடாட் என்பன இன்றுள்ள முக்கியமான அவேஸ்தாக்கள். வீட்டு வழிபாட்டுக்காக கோர்டே அவேஸ்தா எனும் நூல் பயன்படுகின்றது. + +பஹ்லவி எழுத்துருவில் எழுதப்பட்ட மத்தியகால பாரசீக நூல்கள் பொ.பி 9ஆம் 10ஆம் நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டன. சொராட்டிரியத்தில் இவை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டிருந்தாலும், மாஸ்டா நெறியினரைப் பொறுத்தவரை இவை இரண்டாம் தர நூல்களாகவே கொள்ளப்படுகின்றன. + +சில சொராட்டிரிய நம்பிக்கைகள், அதன் பின்பு தோன்றிய ஆபிரகாமிய சமயங்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கம் செலுத்தியுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. சொராட்டிரியம் நம்புகின்ற சொர்க்கம், நரகம் முதலான கோட்பாடுகள், இறைத்தூதர் என்ற நம்பிக்கை முதலான இயல்புகளை கிறித்தவம் மற்றும் இஸ்லாம் முதலான சமயங்களுடன் ஒற்றுமையாகக் காணலாம். அதுபோலவே, அச்சமயங்களின் கொள்கைகளைத் தழுவி அவற்றைச் சார்ந்து சொராட்டிரியம் பிற்காலத்தில் தன்னை வளப்படுத்திக்கொண்டது. + +வேதநெறியில் சொராட்டிரியத்தின் சில அம்சங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக அகுரா என்பதற்கும் வேதத்திலுள்ள அசுர (பலம்வாய்ந்தவர்) என்பதற்கும் உள்ள ஒற்றுமையைக் குறிப்பிடலாம். எனவே சொராட்டிரியமும் வைதிக நெறியும் ஒரு முந்து – இந்தோ ஈரானிய தொல்நெறியிலிருந்து கிளைத்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. + +தெற்கு ஆசியாவிலுள்ள பார்சிகளும் , மத்திய ஆசிய சொராட்டிரியர்களும் இன்றுள்ள சொராட்டிரியரின் இருபெரும் வகுப்புகள். வட அமெரிக்க சொராட்டிரிய ஒன்றியத்தால் 2004இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணக்கெடுப்பு, சுமார் 124000 முதல் 190,000 இடையே சொராட்டிரியர்கள் உலகெங்கும் வாழ்வதாக திருத்தமற்ற மதிப்பீடொன்றைச் செய்தது. இந்தியாவின் 2011 மதிப்பீடு, 57,264 பார்சிகளை இனங்கண்டது. 2008இல் பார்சிகளின் பிறப்புக்கு இறப்பு விகிதம், 1:5 ஆக இருந்தது. குறைந்த பிறவிவீதத்தாலும் இடம்பெயர்வாலும் பார்சிகளின் எண்ணிக்கை இந்தியாவில் வீழ்ச்சிகண்டு வருகின்றது. 2020 அளவில் வெறும் 23,000 அல்லது 0.002% பார்சிகள் மட்டுமே இந்தியாவில் இருப்பர் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. + +மேற்கிந்தியா, மத்திய ஈரான், தென் பாகிஸ்தான், புலம்பெயர் சொராட்டிரிகள் பெரிய பிரித்தானியா, கனடா ஆத்திரேலியா, அமெரிக்காவின் கலிபோர்னியா என்பவற்றில் வாழ்கின்றனர். + + + + + + +பின்யின் + +பின்யின் என்பது சீர்தரம் செய்யப்பட்ட மாண்டரின் சீன மொழியின் பலுக்கலை (சொல் ஒலிப்புகளை) ரோமன் எழுத்துக்களைக் கொண்டு எழுதும் முறையாகும். ரோமன் எழுத்துக்கள் சீன மொழியின் ஒலிப்புகளை தருவதற்காகப் பயன்படுகின்றதே தவிர, பின்யின் முறை சீனமொழியை ஆங்கிலப்படுத்துவதன்று. + +பின்யின் முறையானது ரோமன் எழுத்துக்களை அறிந்தவர்கள் சீன மொழியைக் கற்க உதவுகின்றது. பின்யின் என்னும் சொல்லில் உள்ள "பின்" என்னும் சொற்பகுதி எழுத்து என்பதனையும்," யின்" என்னும் சொற்பகுதி ஒலி என்பதனையும் குறிக்கும். பரவலாக அறியப்பட்ட சிறு மாறுபாடுடைய பின்யின் முறையை "ஹான்யூ பின்யின்" ( "Hanyu Pinyin" () என அழைக்கின்றனர். + +ஹான்யூ பின்யின் முறையினை சீனாவின் அரசு 1958ல் ஏற்று கொண்டு 1979ல் பின்பற்றத்தொடங்கியது. இம்முறை அதற்கு முந்தைய ரோமன் எழுத்து முறைகளாகிய வேடு-கைல்ஸ் முதலியவற்றை நீக்கி முன்வைக்கப்பட்டது. பின்யின் முறை சீர்தரத்திற்கான அனைத்துலக நிறுவனத்தின் (ஐஎஸ்ஓ ISO) ஏற்பும் பெற்றது ((ISO-7098:1991)., சிங்கப்பூர் அரசாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. + +"கவனிக்க: கீழே தரப்படும் தகவல்கள் உறிதிப்படுத்தப்படவேண்டும்." + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1954 + +1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1955 + +1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1956 + +1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1957 + +1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1958 + +1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +மக்கின்டொஷ் + +மக்கின்டொஷ் ("மக்கின்ரோஷ்", "மாக்கின்டோஷ்", "Macintosh") என்பது ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் ஓர் இலகு தனிநபர் கணினியாகும். 1979 - 1984 காலத்தில் உருவாக்கப்பட்ட இது முதன்முதலில் 1984 ஜனவரி 24 அன்று வெளியிடப்பட்டது. கட்டளை வரி இடைமுகத்திற்குப் பதிலாக வரைகலை பயனர் இடைமுகம் (GUI) மற்றும் சுட்டியினைப் பாவித்து வணிக ரீதியில் வெற்றிபெற்ற முதற் தனிநபர் கணினி இதுவாகும். + + + + + +தனி மேசைக் கணினி + +ஒரு கணினியின் விலை, அளவு, மற்றும் கணிமை வலு ஒரு தனியாளின் பயன்பாட்டுக்கு பொருத்தமாக இருக்கும் பொழுது அதை தனியாள் கணினி எனலாம். பொதுவாக அது மேசை மீது வைத்து பயன்படுத்தப்பட்டதால் தனியாள் மேசைக் கணினி எனப்படலாயிற்று. + +ஆங்கிலத்தில் personal desktop computer என்று சொல்லப் படுவதைத் தமிழில் தனி மேசைக் கணினி என்று அழைக்கலாம். +"தனியாள் கணினி" யென்று personal computer ஐ அழைக்கலாம். + + + + +எழுத்துரு + +எழுத்துரு என்பது ஒரு மொழியின் எழுத்துக்களின் வரிவடிவம் அல்லது வரிமுகம் ஆகும். அச்சுத் தொழிலிலும், தட்டச்சுப் பொறிகளிலும் பதிக்கப்படும் எழுத்து உருவங்களும், கணினியின் அச்சுப் பொறிகளின் வழி அச்சிட என சிறப்பாக மென்பொருள் வழி உருவாக்கப்படும் எழுத்து வரி வடிவுகளும் (எழுத்தின் வரிமுகங்களும்) எழுத்துரு எனப்படும். படத்தில் சில எழுத்துருக்கள் காட்டப்பட்டுள்ளன. கால மாற்றத்திற்கேற்ப கணினி மற்றும் அச்சுப் பயன்பாட்டுக்காக அனைத்து மொழி எழுத்துருகளும் மாற்றம் பெற்றுவருகின்றன. + + + + + +தட்டச்சுக் கருவி + +தட்டச்சுக் கருவி ("typewriter") என்பது, பொறிமுறை (mechanical), மின்பொறிமுறை (electromechanical) அல்லது மின்னணுவியல் (electronic) கருவியாகும். இதிலுள்ள எழுத்துக்களுக்குரிய விசைகளை அழுத்தும்போது அக்கருவியில் பொருத்தப்படுகின்ற காகிதத்தின்மீது எழுத்துக்கள் பொறிக்கப்படுகின்றன. + +20 ஆம் நூற்றாண்டின் பெரும் பகுதியில், அலுவலகங்களிலும், தொழில்முறை எழுத்தர்கள் மத்திய��லும், தட்டச்சுக் கருவி இன்றியமையாத ஒன்றாக விளங்கியது. 1980களை அண்டிக் கணினிகளும், அவற்றில் பயன்படுத்தப்படக்கூடிய சொல் தொகுப்பிகளும் அறிமுகப்படுத்தப்பட்டபோது தட்டச்சுக் கருவியினால் அச்சுப்பொறித்தல் செல்வாக்கிழந்தது. எனினும் இன்னும் பல வளர்ந்துவரும் நாடுகளில் தட்டச்சுக் கருவியின் பயன்பாடு குறிப்பிடத்தக்க அளவில் இருந்துவருகிறது. + +பாதுகாப்பு ரகசியங்கள் கசிவதைத் தடுப்பதற்காக, பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான நிறுவனங்களில் பழைய தட்டச்சுக் கருவிகளையே பயன்படுத்த ரஷ்யா 2013 ஜூலை மாதம் முடிவெடுத்தது. + +2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, சிமித்-கொரோனா, ஒலிவெட்டி, அட்லர்-ரோயல், பிரதர், நாகாஜிமா ஆகிய நிறுவனங்கள் தட்டச்சுக் கருவி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. கைமுறைத் (manual) தட்டச்சுக் கருவி உற்பத்தி செய்கின்ற ஒரே மேனாட்டு நிறுவனம் ஒலிவெட்டியாகும். ஏனைய தற்கால வகைகள் அனைத்தும் மின்னணுத் தட்டச்சுக் கருவிகளே. + + + + + +வளையாபதி + +தமிழில் ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கப்படும் ஐந்து நூல்களுள் ஒன்றாக விளங்குவது வளையாபதி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படும் இது சமண சமயம் சார்ந்த ஒரு நூல். இதனை எழுதியவர் யாரென்பதும் அறியப்படவில்லை. இந்நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலுக்குரிய 72 பாடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுப் புதிப்பிக்கப் பட்டுள்ளன. இக் காப்பியத்தின் கதைப் பொருள் பற்றி ஊகங்கள் நிலவினாலும், கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு இக்காப்பியத்தின் கதை இன்னதுதான் எனக் கூறமுடியாதுள்ளது. + +கிடைத்துள்ள பாடல்களைக் கொண்டு, இக்காப்பியம் இலக்கியச் சுவையும் பொருட் செறிவும் கொண்ட பாடல்களால் அமைந்தது என்பதைக் கூறமுடியும். திருக்குறள், குறுந்தொகை போன்ற சங்க இலக்கியங்களிலிருந்து, கருத்துக்களை மட்டுமன்றிச் சொற்றொடர்களையும் கூட வளையாபதி ஆசிரியர் எடுத்துப் பயன்படுத்தியுள்ளமை கிடைக்கும் பாடல்களை அவதானிக்கும் போது தெரிகின்றது. + + + + + + + +குண்டலகேசி + +தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்ற குண்டலகேசி என்னும் நூல் ஒரு பௌத்தம் சார்ந்த நூலாகும். பல்வேறு தமிழ் நூல்களுக்கு உரை எ��ுதிய ஆசிரியர்கள் தங்கள் உரைகளிலே குண்டலகேசிப் பாடல்களை எடுத்தாண்டுள்ளார்கள். இந்நூலிலிருந்து கிடைத்துள்ள பாடல்கள் அனைத்தும் இவ்வாறு வேறு நூல்களிலிருந்து கிடைத்தவையே. பத்தொன்பது முழுமையான பாடல்கள் மட்டுமே இவ்வாறு கிடைத்துள்ளன.குண்டலகேசியை இயற்றியவர் நாதகுத்தனார். இதன் காலம் 10-ஆம் நூற்றாண்டு. +தன்னை கொல்ல முயன்ற கணவனைக் கொன்றுவிட்டுப் பிக்குணியாகி பௌத்த சமயத்தின் பெருமையைப் பரப்புவதில் ஈடுபட்ட குண்டலகேசி என்னும் வணிகர் குலப் பெண்ணொருத்தியின் கதையே இக் காப்பியத்தின் கருப்பொருளாகும். + +குண்டலகேசி காப்பியத்திற்கு பெருமழைப் புலவர் பொ. வே. சோமசுந்தரனார் விளக்க உரை வழங்கியுள்ளார். + + + + + + + +ஜெயதேவர் + +ஜெயதேவர் (முழுப்பெயர் ஜெயதேவ கோஸ்வாமி) இந்திய வரலாற்றின் இணையற்ற கவிகளில் ஒருவர். சமஸ்கிருத மொழி வல்லுனர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இவரது முக்கிய படைப்பானது, புகழ்பெற்ற "கீத கோவிந்தம்" என்னும் காவியம். இந்த கவிதைப் படைப்பானது, இந்து சமயக் கடவுளாக கண்ணன் மற்றும் ராதை க்கு இடைய இருந்த தெய்வீக காதலை, அற்புதமான வரிகளுடன், அழகான இசையுடன் விவரிக்கும். இந்திய பக்தி இயக்கத்தில் இவரது படைப்பு முக்கியமானன ஒன்றாக விளங்குகிறது. + +செயதேவர் ஒடிசா மாநிலத்திலுள்ள குர்தா மாவட்டத்து பிராச்சி பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கெந்துளி சாசன் என்றவிடத்தில் பிறந்தார். இது புகழ்பெற்ற கோவில் நகரமான பூரிக்கு அண்மையில் உள்ளது. இவர் ஒடிசாவை கிழக்கு கங்கை பேரரசு ஆண்டு கொண்டிருந்தபோது பிறந்துள்ளார். சோடகங்க தேவர் மற்றும் அவரது மகன் இராகவா மன்னராக இருந்த காலங்களில் ஜெயதேவர் தமது படைப்புக்களை ஆக்கியிருக்க வேண்டும் என கோவில் கல்வெட்டுக்களிலிருந்து தெரிய வருகிறது. + +கோவில் கல்வெட்டுக்களிலிருந்தே இவரது பெற்றோரின் பெயர்கள் "போஜதேவன்" என்றும் "ரமாதேவி" என்றும் தெரிய வருகின்றன.மேலும் இவர் தமது வடமொழிக் கல்வியை கூர்ம்படகா என்றவிடத்தில் கற்றதாகத் தெரிகிறது. இது தற்போதைய கோனரக்கிற்கு அருகே இருக்கலாம். இவர் "பத்மாவதி"யை திருமணம் புரிந்துள்ளார். ஒடிசா கோவில்களில் தேவதாசி முறையை ஒழுங்குபடுத்திய ஜெயதேவர் கோவில் நடனக்கிழத்தியை மணம் புரிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. + +லிங்கராஜ் கோவில், மதுகேசுவர் கோவில் மற்றும் சிம்மாசலம் கோவில்களில் அண்மையில் கண்டறிந்த கல்வெட்டுக்களிலிருந்து முனைவர். சத்தியநாராயணன் ராஜகுரு ஜெயதேவரின் வாழ்க்கையைக் குறித்த சில புரிதல்களை வெளியிட்டுள்ளார். இவற்றில் ஜெயதேவர் கூர்ம்படகாவில் ஆசிரியப்பணியாற்றியதைப் பகர்கின்றன. இவரும் அங்கேயே படித்திருக்கலாம்.இங்கு அவருக்கு கவிதை, இசை மற்றும் நடனத்தில் பயிற்சி ஏற்பட்டிருக்கலாம். + +ஒடிசாவிற்கு வெளியே ஜெயதேவரைக் குறித்த குறிப்புகள் பிருத்திவிராச் சௌகான் அரசவைக் கவிஞராக இருந்த சாந்த் பர்தாய் பாடல்களில் உள்ளன. இதற்கு அடுத்ததாக கி.பி 1201இல் ராசா சாரங்கதேவர் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. இவற்றிலிருந்து கீத கோவிந்தம் இயற்றப்பட்ட சிறிது காலத்திலேயே இந்தியா முழுமையும் பரவலாக அறியப்பட்டது என தெரிய வருகிறது. பூரியிலுள்ள ஜெகன்னாதர் கோயிலில் வழமையாக கீத கோவிந்த நிகழ்ச்சி நடைபெற்று வந்திருக்கலாம். + +மேலும் சில குறிப்புக்கள் ஒடிசா வைணவக் கவி மாதவ பட்நாயக்கின் நூலிலிருந்து பெறலாம். இவரது நூல் சைதன்யர் பூரி வந்தபோது கெந்துல் சாசன் சென்று ஜெயதேவரை வணங்கியதாகவும் கீத கோவிந்தத்திலிருந்து சில கீர்த்தனைகளைப் பாடியதாகவும் விவரிக்கிறது. இந்த நூலிலிருந்தே ஜெயதேவரின் பிறப்பிடம் கெந்துல் சாசன் என அறிகிறோம். + + + + + +நீலகேசி + +நீலகேசி என்பது ஐஞ்சிறு காப்பியங்கள் எனப்படும் ஐந்து தமிழ் இலக்கிய நூல்களுள் ஒன்றாகும். சமண சமய நூலான நீலகேசி ஒரு கதைப் பின்னணியில் சமணக் கொள்கைகளை விளக்குகின்றது. தமிழில் எழுதப்பட்ட முதலாவது தருக்க நூல் இதுவெனக் கூறப்படுகின்றது. பௌத்த சமயத்தின் பெருமை கூற எழுந்த காப்பியமான குண்டலகேசி எனும் நூலுக்கு மறுப்பாகவே நீலகேசி எழுதப்பட்டுள்ளது. எனினும் இதனை எழுதியவர் யார் எனத் தெரியவில்லை. இதன்காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என கணிக்கப்பட்டுள்ளது. இந்நூலுக்கு நீலகேசி திரட்டு என்ற பெயரும் காணப்படுகிறது. + +இந்நூல் கடவுள் வாழ்த்து தவிரப் 10 பகுதிகளாக வகுக்கப்பட்டுள்ளது. இப்பதினொரு பகுதிகளிலும் மொத்தமாக 894 பாடல்கள் உள்ளன. இவையனைத்தும் விருத்தப்பாவினால் ஆனது. இப்பகுதிகளின் பெயர்களையும், அவற்றில் உள்ள பாடல்க���ின் எண்ணிக்கைகளையும் கீழுள்ள பட்டியலில் காணலாம். + +நீலகேசியில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தர்ம கீர்த்தி சிந்தனைகள் காணப்படுகிறது. எனவே நீலகேசி கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தோன்றியது என லி. சிவகுமார் கருதுகின்றார். + + + + + + + +வில்லுப்பாட்டு + +வில்லுப்பாட்டு (அல்லது வில்லிசை) என்பது தமிழர் கலை வடிவங்களில் ஒன்றாகும். வில்லின் துணைகொண்டு பாடப்படும் பாட்டு "வில்லுப்பாட்டு" எனப் பெயர் பெற்றது. துணை இசைக்கருவிகள் பல இருப்பினும் வில்லே இங்கு முதன்மை பெறுகிறது. துணைக்கருவிகளாகப் பயன்படுத்தப்படுபவை: உடுக்கை, குடம், தாளம், கட்டை என்பனவாகும். + +வில்லுப்பாட்டின் தோற்றம் குறித்த காலத்தை வரையறுத்துக் கூற முடியவில்லை. மனிதன் வேட்டையாடுதலைத் தொழிலாகக் கொண்டிருந்த நேரம் அவனுக்கு உதவியது வில்லாகும். அதில் கட்டப்பட்டிருந்த மணி ஓசையில் மயங்கி அதனடிப்படையில் வில்லுப்பாட்டிசை உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. + +வீரர்களின் பொழுதுபோக்குச் சாதனமாக முதலில் விளங்கிய வில்லுப்பாட்டு, காலப்போக்கில் வளர்ச்சி பெற்று மக்களின் பொழுது போக்கிற்காகவும், குறிப்பாகச் சமுதாயச் சீர்திருத்தக் கருத்துக்களை சொல்வதற்கும் பயன்பட்டது. + +‘’’வில்லுப்பாட்டு’’’ எப்படி உருவானது என்பதற்கு செவிவழிக்கதை ஒன்று உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார். பல விலங்குகளை வேட்டையாடினார். மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் கலக்கம். அமைச்சரிடம் ‘’இந்த உயிர்களை இப்படிக் கொல்லுகிறோமே... நமக்கு சந்தோஷம், அவற்றுக்கோ துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி எப்படித் தவிக்கிறது பார்த்தீர்களா?’’ என்றார். +‘’சரி, இதற்கெல்லாம் பரிகாரம் உண்டா?’’ +‘’உண்டு ராஜா... இறைவன் மீது மனமுருகப் பாடி பாவ மன்னிப்புக் கோருங்கள். இசை ஒன்றுக்குத் தான் இசைவான்’’ என்றார் அமைச்சர். உடனே காட்டிலேயே கச்சேரி நடத்த முடிவானது. ஆனால் பக்க வாத்தியங்கள் இல்லை. கொண்டு வந்த பொருட்களை இசைக்கருவிகளாக்கினர். வில்லைத் தரையில் வைத்து அம்பால் தட்டி இசை எழுப்பினார் மன்னர். அப்படி தட்டும் போது வில் சரிவர நிற்காத்தால். தண்ணீர் கொண்டு போயிருந்த மண் குட்த்தைக் கட்டித் தட்டினார். டும் டும் என்று நாதம் பிறந���துவிட்டது. +ராஜா பாட்த் துவங்கும் முன், ‘தந்தனத்தோம்’ என்று அடியெடுத்துக் கொடுத்தார் அமைச்சர். மன்னர் பாடும் போது, ஆமோதிக்க வேண்டாமா? அதனால் மன்னரின் உதவியாட்கள் ‘ஆமாம்’ போட ஆரம்பித்தனர். அந்தப் பழக்கம் வில்லுப்பாட்டில் இன்னும் தொடர்கிறது. + +வில்லுப்பாட்டின் கட்டமைப்பு பெரும்பாலும் பின்வரும் ஏழு வகைகளாக வகுக்கலாம்: + +இறைவணக்கம் செய்தல் தமிழர் மரபாகும். அந்த முறையில் வில்லுப்பாட்டின் முதல் பகுதி காப்புப் பகுதியாக அமைகிறது. பெரும்பாலும் இது விருத்தமாக அமையும். + +குறிப்பிட்ட கதையை இன்று வில்லில் கூறப்போவதாக ஆசிரியர் முன்கூட்டியே குறிப்பிடுவது வருபொருள் உரைத்தலாகும். இதனை "நுதலிப்பாடுதல்" எனவும் கூறுவர். இது பாடலாக அமையப்பெறும். + +தனக்கு ஆசிரியனாக இருந்தவரை நினைத்து வணங்கி நலம் உண்டாக உதவுமாறு கோருவது "குருவடி பாடுதல்" எனப்படுகிறது. + +கதை கூறுவோர் தன்னை எளியோனாகவும், கேட்போரைச் சான்றோராகவும் கருதி கூறப்பெறுவது "அவையடக்கம்" ஆகும். பிழை நேருமிடத்துப் பொருத்துக்கொள்ள வேண்டுவதாக அப்பகுதி அமையப்பெறும். + +கதையின் தொடக்கத்தில் பொதுவாக நாட்டு வளமே கூறப்படும். + +நாட்டுவளத்தினை அடுத்து கதை முழுமையாகக் கூறப்பெறும். கதையின் தலைவன், தலைவியரின் சிறப்பு இதில் புகழ்ந்துரைக்கப்படும். + +இறுதிப் பகுதியாக வாழ்த்துப் பகுதி அமையும். கதை கேட்போர், கதை மாந்தர், கதை கூறுவோர் என அனைவரும் நலம்பெற வாழ்த்துவதாக மங்களமாக முடிவு பெறும் நிலை "வாழிபாடுதல்" என்பது. + + + + + + + +பிபிசி தமிழோசை + +பிபிசி தமிழோசை என்பது பிபிசி உலக சேவை வானொலியின் தமிழ் சேவையாகும். இவ்வானொலி சேவையானது 1941 மே 3 ஆம் நாள் முதல் இயங்கி வருகின்றது. இவ்வானொலி நாள்தோறும் 30 நிமிடங்கள் தமிழ் மொழியில் உலகச் செய்திகளையும் வேறு பல நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகின்றது. இங்கு இந்திய, இலங்கைச் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதோடு செய்தியரங்கம் பகுதியில் அவை விரிவாக ஆராயப்படுகிறது. தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் இச்சேவை வானலைகளில் ஒலிபரப்பப்படுவதோடு ஏனைய பிரதேசங்களில் இணைய தளத்தில் பரப்பப்படுகிறது. + +இந்நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது தேசிய சேவையில் மறு ஒலிபரப்பு செய்கிறது. + +2015 ஆம் ஆண்டு மே மாதம் 3 ஆம் திகதி அன்று 74 ஆண்டுகளை நிறைவு செய்து, 75 ஆவது ஆண்டில் அடியெடுத்துவைத்து தமிழோசைக்கு பவளவிழா தொடங்கியது. + +தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு, 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதியோடு நிறுத்தப்படுகிறது. இந்தியாவிலும் இலங்கையிலும் தொலைக்காட்சி, இணையம் போன்ற ஊடகங்களின் தாக்கத்தால் ஆதரவு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக தமிழோசையின் ஒலிபரப்பு நிறுத்தப்படுவதாகவும் பிபிசி தெரிவித்தது. + + + + + + +யோசப் வாசு + +புனித யோசப் வாசு ("Saint Joseph Vaz", CO, கொங்கணி மொழி: "Bhagivont Zuze Vaz", டச்சு: "José Vaz", 21 ஏப்ரல் 1651 - 16 சனவரி 1711), இந்தியாவின் கோவாவில் பிறந்து இலங்கையின் கத்தோலிக்க நம்பிக்கை ஒல்லாந்தரால் அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டிருந்த வேளையில் இலங்கை கத்தோலிக்கருக்கு சேவை செய்வதற்கு வந்த கத்தோலிக்க குருவானவர் ஆவார். இவர் ஈழத்தில் யோசேவாஸ் முனீந்திரர் எனவும் அழைக்கப்பட்டார். பிற்காலத்தில் இவர் கண்டி இராச்சியத்தில் தங்கியிருந்து இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையை மீளமைத்தார். + +கத்தோலிக்கர்களுக்கு இவர் ஆற்றிய பணிகளுக்காக இவர் இலங்கையின் திருத்தூதர் என அழைக்கப்பட்டார். 1995 சனவரி 21 ஆம் நாள் கொழும்பு நகரில் இவருக்கு திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் அருளாளர் பட்டம் வழங்கினார். 2015 சனவரி 14 அன்று திருத்தந்தை பிரான்சிசு காலிமுகத் திடலில் வைத்து புனிதராகத் திருநிலைப்படுத்தினார். + +கி.பி. 1685 ஆம் ஆண்டில் கோவாவின் Oratary of St. Philip Neri இல் இணைந்த யோசப் வாஸ் அடிகளார் 1687 ஆம் ஆண்டு ஏப்ரலில் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தார். அப்போது இலங்கையில் ஆட்சியில் இருந்த ஒல்லாந்தர் கால்வினிசத்தைப் பின்பற்றியவர்கள். எனவே கத்தோலிக்கரையும், குருமாரையும் கொலை செய்தனர். பாடசாலைகளைத் தரைமட்டமாக்கினர். இதனால் பிச்சைக்கார வேடத்தில் இலங்கை வந்த அடிகளாருக்கு சில்லாலையூர் மக்கள் புகலிடம் வழங்கினர். அவர் அங்கேயே தங்கி சில்லாலையிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் கத்தோலிக்க மக்களுக்கு தனது சேவையை வழங்கினார். பின்னர் அவர் மாறுவேடத்தில் கால்நடையில், 24 ஆண்டுகளாகப் வன்னி, புத்தளம், மன்னார், பூநகரி ஆகிய இடங்களுக்கும் சென்று மதப்பிரசாரம் செய்தார். + +1692 இல் கண்டிக்குச் சென்ற வாஸ் அடிகளார், அங்கு றோமன்-கத்தாலிக்க மதத்தை மீளத் தாபிக்கப் பெருமுயற்சி செய்தார். இதனால் அவர் அங்கு இரண்டாண்டுகள் சிறையிலும் இருக்க நேரிட்டது. கண்டியிலிருந்தே தனது சேவையைத் தொடர்ந்த வாஸ் அடிகள் 1696 இல் இலங்கையின் Vicar-General பதவியைப் பெற்றார். 1710 ஆம் ஆண்டில் மட்டக்களப்பு தாண்டவன்வெளி பரி. வியாகுலமாதா கோயில் வளவில் சிறு ஓலைக் கோயில் கட்டிப் பலி ஒப்புக் கொடுக்கும் போது காட்டிக் கொடுக்கப்பட்டு மரத்தில் கட்டி அடிக்கப்பட்டார். 1711 ஆம் ஆண்டில் கண்டியில் காலமானார். +வாஸ் அடிகளார் இலங்கை நாட்டில் தமிழ் மக்கள் நடுவிலும் சிங்கள மக்கள் நடுவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் திருவிவிலியத்தை தமிழிலும் சிங்களத்திலும் பெயர்த்தார்.. அந்த இருமொழிகளிலும் மக்கள் கடவுளை வழிபடுவதற்கான நூல்களையும் இயற்றினார். + +மடு நகரில் அமைந்துள்ள அன்னை மரியா கோவிலைப் புதுப்பித்துக் கட்டுவதற்கு வாஸ் அடிகளார் துணைபுரிந்தார். மேலும், கிறிஸ்தவ நம்பிக்கையை இலங்கையில் பரப்புகையில், அந்தந்த மக்களின் பண்பாட்டுப் பாணிகளை மதிக்க வேண்டும் என்பதிலும் அவர் கருத்தாயிருந்தார். மொழி, இன வேறுபாடுகளைக் களைந்து, கடவுள் நம்பிக்கையில் மக்கள் வளர வேண்டும் என்பது அவருடைய குறிக்கோளாக இருந்தது. + +இன்று "இலங்கையின் அப்போஸ்தலர்" என அழைக்கப்படும் யோசப் வாஸ் அடிகளார், 1995, சனவரி 20 இல் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் கொழும்பு வந்திருந்த போது சனவரி 21 இல் காலிமுகத்திடலில் இடம்பெற்ற திருச்சடங்கின் போது யோசப் வாஸ் அருளாளர் பட்டம் பெற்றவராக அறிவிக்கப்பட்டார் + +திருத்தந்தை பிரான்சிசு 2015, சனவரி 14 அன்று, தனது இலங்கை திருப்பயணத்தின்போது காலி முகத்திடலில் இடம்பெற்ற திருப்பலி நிகழ்வில் வாஸ் அடிகளாருக்குப் புனிதர் பட்டம் அளித்தார். வழக்கமாக புனிதர்பட்டமளிப்புக்கு தேவைப்படும் இரண்டாம் புதுமையினை வேண்டாம் என்று திருத்தந்தை பிரான்சிசு வாஸ் அடிகளாருக்குப் விதிவிலக்கு அளித்தார் என்பது குறிக்கத்தக்கது. இவர் இலங்கையில் முதலாவது புனிதர் பட்டம் பெறுபவர் அவராவார். இந்த நிகழ்வில் திருத்தந்தையிடம் ஆசிபெறுவதற்காக (4 இலட்சத்திற்கு மேற்றபட்ட) பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். + + + + + +ம��்டபசாலை + +மண்டபசாலை, விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டையில் இருந்து இராமநாதபுரம் மாவட்டம் கமுதி, சாயல்குடிக்கு செல்லும் முக்கிய சாலையில் அமைந்துள்ளது. இவ்வூரின் மக்கள்தொகை ஏறத்தாழ 1300. ஏறத்தாழ 250 வீடுகளைக் கொண்ட இந்த கிராமத்தினுடைய முக்கிய தொழில் விவசாயம் ஆகும். பருத்தி, உளுந்து, நெல், பாசி, மொச்சை, கம்பு, சோளம் ஆகியவை முக்கிய விளைபொருள்களாகும். முக்கிய தொழில் விவசாயம் என்றாலும் இந்த கிராமத்தின் எழுத்தறிவு 75% ஆகும். பல பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், இந்திய அரசுப்பணி அதிகாரிகளையும் தனது பங்காக அளித்துள்ளது இவ்வூர். + + + + +காய்ச்சல் + +ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (fever) எனப்படுகின்றது. மனிதனுடைய உடல் வெப்பநிலை பொதுவான 98.6 பாகை F. (37 பாகை C.) இலும் அதிகமாகும்போது, காய்ச்சல் இருப்பதாகக் கொள்ளப்படலாம் ஆயினும், 100.4 பாகை F. (38 பாகை C.) அளவுக்கு வெப்பநிலை உயரும்வரை ஒருவருக்குக் குறிப்பிடத்தக்க அளவில் காய்ச்சல் இருப்பதாகக் கருதப்படுவதில்லை. + +காய்ச்சல் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடல் வெப்பநிலை உயர்வதனால், பல நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. எனினும், இத்தகைய காய்ச்சல்கள், வேறு பிரச்சினைகளுக்குரிய நோய்க்குறித் தொகுப்புகளுடன் (symptoms) சேர்ந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகின்றது. 100.4 பாகை F. வெப்பநிலைக்கு மேல் காய்ச்சல் ஏறும்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. சன்னி, வலிப்பு முதலியவை ஏற்படக்கூடும். இத்தகைய காய்ச்சல்களுக்கு உடனடியான மருத்துவ உதவி தேவை. + +காய்ச்சலைக் குறைப்பதற்குப் பயன்படும் மருந்துகள் காய்ச்சலடக்கிகள் எனப்படுகின்றன. பாராசித்தமோல், ஆஸ்பிரின் போன்றவை இவற்றுள் அடங்கும். + +காய்ச்சலைச் செயற்கையாக உண்டாக்குவதன் மூலம் நோய்களைத் தீர்க்கும் முறையும் ஒரு காலத்தில் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரியாவைச் சேர்ந்த மருத்துவரான ���ூலியஸ் வாக்னர் வொன் ஜோரெக் (Julius Wagner von Jauregg) (1857-1940) என்பவர் இந்த முறையை அறிமுகப்படுத்தினார். எனினும் தற்காலத்தில் இம்முறை பயன்படுத்தப்படுவதில்லை. + +அதிக காய்ச்சல் இருந்து குணமாகிய நோயாளிகள் சிலருக்கு, இதனுடன் சம்பந்தப்படாத நோய்கள் சில தணிந்திருக்கவும், சில சமயம் முற்றாகவே குணமாகியும் இருப்பதாகக் கூறப்படுகிறது. + + + + + +கீத கோவிந்தம் + +கீத கோவிந்தம் (சமஸ்கிருதம்: गीत गोविन्द) ("கோபியர் பாடல்") பன்னிரண்டு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு காவியம் ஆகும். இதனை கி.பி. 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெயதேவர் என்பவர் இயற்றினார். பக்தி இலக்கியத்தின் முக்கியமான நூலாகவும், சமஸ்கிருத கவிதை நூல்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது இந்நூல். சமஸ்கிருதத்தில் காவியங்கள் இரண்டு வகைப்படும். அவை "சாதாரண காவியம்", மற்றும் "மஹா காவியம்" ஆகும். கீத கோவிந்தம் மஹா காவியம் வகையைச் சார்ந்ததாகும். + +இதன் ஒவ்வொரு பாகமும் 24 பிரபந்தங்களை அடக்கியதாகும். ஒவ்வொரு பிரபந்தத்திலும் எட்டு இருவரிச் செய்யுள்கள் இருக்கும். அதனால் இவற்றுக்கு அஷ்டபதி என்றும் பெயர். 'சந்தன சர்சித நீல களேபர' என்று துவங்கும் அஷ்டபதி, நாட்டியங்களிலும் மற்றும் இசை அரங்குகளிலும் இன்றளவும் மிகவும் பிரபலம். + +1792 இல், சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவரால் முதல்முதலில் இந்நூல் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. + + +இந்திய சங்கீத சாஸ்திர நூல்களில் காலத்தால் முந்தியதென்று வழங்கும் சாரங்கதேவருடைய "சங்கீத ரத்னாகரத்துக்கும்" ஏறக்குறைய 200 வருடங்கள்க்கு முந்திய சங்கீத முறையை அஷ்டபதி விளக்குகின்றது. எனவே தென்னிந்தியாவும், வட இந்தியாவும் அடங்கியுள்ள பாரத நாட்டின் வெகு புராதன இசைநூல் இதுவாகும். + + +இங்கே ஆங்கில மொழியாக்கமும், அதன் விரிவுரையும் மின்னூல் வடிவில் கிடைக்கிறது + + + + +வள்ளுவர் கோட்டம் + +வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவருக்காகக் கட்டப்பட்டுள்ள ஒரு நினைவகம் ஆகும். இது சென்னையில், கோடம்பாக்கம் பெருந்தெரு, வில்லேஜ் தெருக்கள் சந்திப்புக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந் நினைவகம்,1973 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்க் 27��ம் நாள் அப்போதைய முதல்வர் கலைஞர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1976 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டது. + +இங்கு பலரையும் கவர்வது திருவாரூர்க் கோயில் தேரின் மாதிரியில் கட்டப்பட்டுள்ள சிற்பத் தேர் அமைப்பு ஆகும். இதன் அடிப்பகுதி 25 x 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) அளவு கொண்ட பளிங்குக் கல்லால் ஆனது. இது 128 அடி (39 மீட்டர்) உயரம் கொண்டது. 7 அடி (2.1 மீட்டர்) உயரமான இரண்டு யானைகள் இத்தேரை இழுப்பது போல அமைக்கப்பட்டுள்ளது. தேரின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொன்றும் தனிக்கல்லில் செதுக்கப்பட்ட நான்கு சக்கரங்கள் காணப்படுகின்றன. கரைகளில் உள்ள சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொன்றும் 11.25 அடி (3,43 மீட்டர்) குறுக்களவும், 2.5 அடி (0.76 மீட்டர்) தடிப்பும் கொண்டவை. நடுவில் அமைந்துள்ள இரு சக்கரங்களும் சிறியவை. +இத் தேரில் திருவள்ளுவரின் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறை நில மட்டத்திலிருந்து 30 அடி (9 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. எண்கோண வடிவில் அமைந்துள்ள இக் கருவறை 40 அடி (12 மீட்டர்) அகலமானது. இக்கருவறை வாயிலில் திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்த தூண்கள் அழகுற அமைந்துள்ளன. இத் தேரின் முன்னுள்ள அரங்கத்தின் கூரைத் தளத்திலிருந்து இச் சிலை வைக்கப்பட்டுள்ள கருவறைப் பகுதியை அணுக முடியும். இத் தேர் அமைப்பின் கீழ்ப்பகுதி, திருக்குறளிலுள்ள கருத்துக்களை விளக்கும் புடைப்புச் சிற்பங்களால் அழகூட்டப் பட்டுள்ளது. + +220 அடி (67 மீட்டர்) நீளமும், 100 அடி (30.5 மீட்டர்) அகலமும் கொண்ட இங்குள்ள அரங்கம் 4000 மக்களைக் கொள்ளக்கூடியது என்று கூறப்படுகின்றது. இவ்வரங்கத்தின் வெளிப்புறமாக 20 அடி (6 மீட்டர்) அகலம் கொண்ட தாழ்வாரங்கள் உள்ளன. இவ்வரங்கத்தின் ஒரு பகுதியில் மேற் தளம் அமைக்கப்பட்டுள்ளது இது குறள் மணிமாடம் எனப் பெயரிட்டு அழைக்கப்படுகின்றது, திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களும், கற்பலகைகளில் செதுக்கிப் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் அறத்துப்பாலைச் சேர்ந்த குறள்கள் கருநிறப் பளிங்குக் கற்களிலும், பொருட்பால், காமத்துப் பால் என்பவற்றுக்குரிய பாடல்கள் முறையே வெள்ளை, செந்நிறப் பளிங்குக் கற்களிலும் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன், குறள்களில் உள்ள கருத்துக்களைத் தழுவி வரையப்பட்ட, நவீன, மரபுவழி ஓவியங்களும் உள்ளன. + +அரங்கத்தின் கூரைத��தளம் வேயாமாடம் எனப்படுகின்றது. இவ் வேயாமாடத்துக்குச் செல்வதற்கு அரங்கத்தில் வாயிலுக்கு அருகில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இத் தளத்திலிருந்து, கருவறையை அணுக முடியும். இங்கேயிருந்து சில படிகள் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் பார்க்கலாம். இத் தளத்திலிருந்து கருவறை மேல் அமைந்த கோபுரத்தையும் கலசத்தையும் அண்மையிலிருந்து பார்ப்பதற்கு இத் தளம் வசதியாக உள்ளது. அத்துடன், கட்டிடத்தைச் சுற்றியுள்ள பூங்காவின் அழகையும் இங்கிருந்து பார்த்து ரசிக்கமுடியும். + +இக் கட்டிடங்களைச் சுற்றியுள்ள பகுதியில், பூஞ்செடிகளும், வேறு பல அழகூட்டும், நிழல்தரு மரங்களும் நடப்பட்டுப் பூங்காவாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. + + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1959 + +1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1960 + +1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1961 + +1961 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1962 + +1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1963 + +1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1964 + +1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + +கட்டிடக்கலைஞர் சங்கங்கள் + +பொதுவாகப் பல நாடுகளில், தேசிய மட்டத்தில் கட்டிடக்கலைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட கட்டிடக்���லைஞர் சங்கங்கள் உள்ளன. இவை பொதுவாக, கட்டிடக்கலையின் தரத்தை அந்தந்த நாடுகளில் மேம்படுத்துவதையும், கட்டிடக்கலைத் தொழில் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்துவதையும், கட்டிடக்கலைஞர்களுடைய நலன்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்படுகின்றன. பெரும் எண்ணிக்கையில் கட்டிடக்கலைஞர்களைக் கொண்ட நாடுகளிலும், பரப்பளவில் பெரிய நாடுகளிலும், நிலப்பகுதி அடிப்படையில் இத் தேசிய சங்கங்களின் பிரிவுகள் அமைவது உண்டு. குறிப்பிட்ட நாடுகளுக்குரியனவாயினும், சில சங்கங்கள் அனைத்துலக அளவில் உறுப்பினர்களைக் கொண்டிருப்பதையும் காணலாம். ஆர் ஐ பி ஏ (RIBA) எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படும் பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கம் (Royal Institute of British Architects) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும். சில குறிப்பிட்ட புவியியற் பகுதிகளுக்குள் அடங்கிய பல நாடுகளைச் சேர்ந்த சங்கங்கள் சில நோக்கங்களுக்காக ஒன்றிணைந்து செயற்படுவதும் உண்டு. ஆசியக் கட்டிடக்கலைஞர் சங்கம் அவ்வாறானதொரு சங்கம் ஆகும். + + + + + +பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கம் + +பிரித்தானியக் கட்டிடக்கலைஞர்களுக்கான இராயல் நிறுவனம் "(Royal Institute of British Architects)" என்பது கட்டிடக்கலைஞர்களுக்காக ஐக்கிய இராச்சியத்தில் நிறுவப்பட்ட ஒரு உயர்தொழில் முறை நிறுவனம் ஆகும். தொடக்கத்தில் பிரித்தானியக் கட்டிடக் கலைஞர்களுக்காக தொடங்கப்பட்ட நிறுவனம் பின்னர் அனைத்துலக கட்டிடக் கலைஞர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. கட்டிடக் கலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்நிறுவனத்திற்கு 1837 ஆம் ஆண்டு எழுத்துப்பூர்வமான அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. 1971 இல் இந்நிறுவனத்திற்கு துணை அதிகாரமும் வழங்கப்பட்டது. + +1834 ஆம் ஆண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டபோது இலண்டன் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்கள் சங்கம் என்ற பெயரிலேயே தொடங்கப்பட்டது. பிரித்தானியாவின் முக்கிய கட்டிடக் கலைஞர்களான டெசிமசு பார்டன், பிலிப் ஆர்டுவிக், தாமசு அல்லோம், வில்லியம் தாந்தோர்ன், தாமசு லெவெர்டன் டொனால்டுசன், வில்லியம் ஆடம்சு நிக்கோல்சன், யான் பியூனோரொட்டி பாப்வொர்த், தாமசு டி கிரே மற்றும் இரண்டாம் இயர்ல் ���ி கிரே உள்ளிட்ட கலைஞர்கள் இந்நிறுவனத்தை தொடங்குவதற்கு காரணமாக இருந்தார்கள். + +பிரித்தானிய அரசின் நிதி உதவி கிடைக்கப் பெற்றவுடன் இலண்டன் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களின் ராயல் நிறுவனம் என்ற பெயரில் அனைவராலும் அறியப்பட்டது. இறுதியாக 1892 இல் இப்பெயர் தலைநகர் இலண்டனுக்கும் அறிவிக்கப்பட்டது. நிறுவனத்தின் தற்போதைய தலைமை இடமான போர்ட்லேண்டு பிளேசு என்ற இடத்திற்கு 1934 ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டது. அரசர் ஐந்தாம் சியார்ச்சும் இராணி மேரியும் இப்புதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர். + +அரசர் நான்காம் வில்லியம் காலத்தில் 1837 ஆம் ஆண்டு இந்நிறுவனத்திற்கு உரிய அரசு அதிகாரப் பத்திரம் வழங்கப்பட்டது. 1887, 1909, 1925 ஆம் ஆண்டுகளில் படிப்படியாக வழங்கப்பட்ட பிற்சேர்க்கை அதிகாரங்கள் அனைத்தும் 1971 ஆம் ஆண்டு ஒன்றாக்கப்பட்டன. அன்று முதல் அவ்வப்போது சிறுசிறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கட்டிடக் கலையை மேலும் மேம்படுத்துதல் மற்றும் அதனோடு தொடர்புடைய பல்வேரு வகையான பிற துறை சார்ந்த கலை மற்றும் அறிவியல் அறிவை வளர்த்துக் கொள்ளுதல் மற்றும் அவற்றை கட்டிடக் கலையில் பயன்படுத்துதல் போன்ற பொதுவான இலக்கை மையமாகக் கொண்டுதான் இந்நிறுவனம் தொடங்கப்பட்டது. + +நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த செயல்பாடுகளுக்கு வழிகாட்ட அமைப்பு விதிகள் உருவாக்கப்பட்டன. இவ்விதிகள் அவசியத்தின் அடிப்படையில் அடிக்கடி புதுப்பிக்கப்பட்டன. புதிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய சூழல்களில் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரம் பெறப்படவேண்டும் என ஒரு பாதுகாப்பு விதியும் இயற்றப்பட்டிருந்தது . + +பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களுக்கான ராயல் நிறுவனம் 44,000 உறுப்பினர்களைக் கொண்ட ஓர் அமைப்பு ஆகும். இந்நிறுவனத்தின் உறுப்பினர்கள் தங்களை நிறுவனத்தின் கட்டிடக் கலைஞர் என்று சொல்லிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டிருந்தது. அங்கத்தினர்கள் அவர்கள் பெயர்களின் பின்னாலும் இந்நிறுவனத்தின் பெயரை சேர்த்துக் கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. மாணவ உறுப்பினர்களுக்கு இத்தகைய உரிமைகள் அளிக்கப்படவில்லை. முன்னதாக இந்நிறுவனத்தில் ஆய்வு உதவித் தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது வழங்கப்படுவதில்லை. இருப்பினும்; இந்��� தலைப்பை தொடர்ந்து வைத்திருப்பவர்கள் அதற்கு பதிலாக நிறுவனத்தின் பெயருக்கு முன்னால் உறுப்பினர் என்ற சொல்லை சேர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். உறுப்பினர்கள் நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் அணுக முடியும். நிறுவனத்தால் வெளியிடப்படும் மாதாந்த பத்திரிகையையும் தொடர்ந்து இவர்கள் பெறுவார்கள். + +2008 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களுக்கான ராயல் சங்கத்திற்கு ஒரு வணிகத் தர அடையாளம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. + +இலண்டனில் 66 போர்ட்லேண்டு பிளேசு என்ற இடத்தில் பிரித்தானிய கட்டிடக் கலைஞர்களின் ராயல் நிறுவனம் கட்டப்பட்டுள்ளது. எட்வர்ட் பைன்பிரிட்ச்சு கோப்நல் மற்றும் யேம்சு உட்ஃபோர்டு போன்ற சிற்பிகளின் துணையுடன் சியார்ச்சு கிரே வோர்னம் இக்கட்டிடத்தை வடிவமைத்தார். இந்த லண்டன் கட்டிடத்தின் பகுதிகள் நூலகன் உட்பட பொது மக்களுக்காக திறக்கப்படுகின்றன. இங்கு ஒரு மிகப்பெரிய கட்டடக்கலை தொடர்பான புத்தகக் கடை, ஓர் உணவகம் மற்றும் விரிவுரை அரங்குகள் முதலியவை உள்ளன். நிகழ்வுகளுக்கு அறைகள் வாடகைக்கும் விடப்படுகின்றன. + +ஐக்கிய இராச்சியம் முழுவதும் இந்நிறுவனத்திற்கு பனிரெண்டு மண்டல அலுவலகங்கள் உள்ளன. கிழக்கு இங்கிலாந்திற்கான முதலாவது மண்டலம் கேம்பிரிட்சில் 1966 இல் திறக்கப்பட்டது. + +பிரித்தானிய கட்டிடக்கலைஞர்களுக்கான அரச சங்கத்தின் இணையத் தளம் + + + + +திரு.பால்பேர் எதிர் திருமதி.பால்பேர் வழக்கு + +திரு.பால்பெர் எதிர் திருமதி.பால்பேர் வழக்கு (Balfour v. Balfour) வழக்கு ஆங்கில நீதிமன்றில் இடம்பெற்ற ஒப்பந்தசட்டம் தொடர்பாக முக்கிய கருத்துரைக்கப்பட்ட வழக்குகளில் ஒன்றாகும்.இவ் வழக்கு 1919 யூன் 25 ம் திகதி திருமதி பால்பேரால் அவரது கணவரிற்கு எதிராக Married Women's Property Act 1882 கீழ் தொடுக்கப்பட்டது. + +வழக்கின் விபரமானது திரு பால்பேர் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கும் ஒவ்வொர் மாதமும் 30 பவுண் பராமரிப்புச் செலவாக தருவதாக திருமதி.பால்பேரிற்கு ஒப்புதல் அளித்திருந்தார்.எனினும் அவர் மனைவியை பிரிந்திருந்தபோது அவ்வாக்குறுதிப்படி பணத்தினை அவர் கொடுக்கவில்லை. இதனைப் பெற்றுக்கொடுக்கும்படி திருமதி.பால்பேர் நீதிமன்றினை நாடினார். + +Warrington, Duke and Atkin L. JJ நீதிபதிகளில் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட இவ்வழக்கில் கணவனால் கொடுக்கப்பட்ட இவ்வாக்குறுதியானது சட்ட பிணைப்பினை (legally bound) ஏற்படுத்தும் எண்ணத்தினை கொண்டுள்ளதற்கான போதிய ஆதாரம் இல்லாததால் இதன் அடிப்படையில் நீதிமன்றம் இவ் வாய்மொழிமூல உடன்பாட்டை நிறைவேற்றக்கோரி ஆணையிடமுடியாது என தீர்ப்பளித்தது. + +இவ்வழக்கிலிருந்து வேடிக்கையான கதைகள், குடும்பவிவகாரங்கள் போன்றன தொடர்பான வாக்குறுதிகள் ஒருபோதும் நீதிமன்றினால் சட்ட பிணைப்புள்ள ஒப்பந்தமாக அங்கீகரிப்பதில்லை. + + + + + +மொபிடெல் + +மொபிடெல் இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையத்தின் GSM மற்றும் Analog சேவையை வழங்கும் நிறுவனம் ஆகும். இது இலங்கையில் 600 இற்கும் மேற்பட்ட கோபுரங்களைக் கொண்டு ஒரு பரந்த வலையமைப்பாக விளஙகுகின்றது. மொபிட்டலின் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்ட (Prepaid) இலக்கங்கள் 0713- என்றவாறும் அழைப்பின் பின்னர் கட்டணங்களை செலுத்தும் (post paid) இலக்கங்கள் 0714-, 0716- என்றவாறும் ஆரம்பிக்கும். இது அழைப்பு நெரிசல் ஓரளவு குறைவான வலையமைப்பாகும். + +இலங்கையில் உள்ள மொத்த நகர்பேசிப் பாவனையாளர்களில் 24% மொபிடல் வாடிக்கையாளர்கள் ஆகும். மொத்த வாடிக்கையாளர்கள் தொகை 3.382 மில்லியனாகும் . +விழிப்பூட்டும் குறும்செய்தி (SMS Alert) சேவைகள் இரண்டு சேவைவழங்குனரூடாக இடம்பெறுகின்றது. ஒன்று லங்காபுவத் செய்திச்சேவை மற்றையது ஜேஎன்டபிள்யு செய்திச்சேவை. இதைப் பெறுவதற்கு இரண்டு சேவைகளைப் பெறுவதற்கு REG எனக் குறுஞ்செய்தியினைத் தட்டச்சுசெய்து 2233ஜேஎன்டபிள்யு செய்திச்சேவைக்கும் 2277 ஐ லங்காபுவத் செய்திச்சேவைக்கும் பாவிக்கலாம். இச்சேவை தேவையற்றது எனின் UNREG எனத்தட்டச்செய்து மீண்டும் அதே இலக்கத்திற்கு அனுப்புவதன் மூலம் விழிப்பூட்டும் குறுஞ்செய்திச் சேவையில் இருந்து விடுபடலாம். இச்சேவைக்கு மாதம் ஒன்றிற்கு இலங்கை ரூபாயில் 30 வரை வசூலிக்கப்படும். + +மொபிடல் நிறுவனம் 3ஜி, 4ஜி தொழில் நுட்பம் மூலம் அகலப்பட்டை சேவையை வழங்குகின்றது. 3ஜி தொழில்நுட்பம் மூலம் அகலப்பட்டை வழங்க இலங்கையின் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆரம்பித்தபோது மொபிடல் நிறுவனத்தில் சேவை பலராலும் மெச்சப்பட்டது. ஆனாலும் காலப்போக்கில் சேவையின் தரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது எனப் பயனர்கள் முறையிடத் தொடங்கியுள்ளனர் . + +மோபிட்டல் அதிகாலை 0 மணிமுதல் 6 மணிவரை கட்டணம் குறைந்த இணைப்புக்களை வழங்கி வருகிறது. + + + + + + +பொம்மலாட்டம் + +பொம்மலாட்டம் தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது கலை தழுவிய கூத்து வகையைச் சேர்ந்தது. இது மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்குப் பின்னால் இருந்து இயக்கிய படி கதை சொல்லும் ஒரு சுவையான கலை நிகழ்வு. "மரப்பாவைக்கூத்து", "பாவைக்கூத்து" என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. "தோல் பொம்மலாட்டம்", "மரப்பொம்மலாட்டம்" என இரண்டு வகையில் இக்கலை நிகழ்த்தப்படுகிறது. இருப்பினும், உலகின் பல்வேறு இடங்களில் இக்கலை, மரபுவழிக் கலையாகத் திகழ்கிறது. + +இக்கலை, வட்டாரக்கலையோ, சடங்கியலாக நிகழ்த்தப்படும் கலையோ அல்ல. இது மரபுவழிக்கலை. பொம்மலாட்டக் கலையை நிகழ்த்துவோர் தற்போது 2 - 3 குடும்பங்கள் மட்டுமே; தோல் பாவைக்கூத்தை நிகழ்த்துவோர் மதுரை, கன்னியாகுமரி, கோவில்பட்டி, தேனி மாவட்டங்களிலும் சென்னை அருகிலும் மிகக்குறைவான அளவிலே வசிக்கிறார்கள். பொம்மலாட்டத்தில் இதிகாசம் மற்றும் புராணக் கதைகள், சரித்திரக் கதைகள் அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுவதுண்டு. எந்தக் கதையை எடுத்தாண்டாலும் இடையில், கரகாட்டம், காவடியாட்டம், பேயாட்டம், பாம்பாட்டம் ஆகியவற்றில் ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்பது மரபு. திருமகள் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினர், என்பது வாய்மொழியாக விளங்கும் புராணக்கதையாகும். + +தமிழ்நாட்டில் "பொம்மலாட்டம்" என்றழைக்கப்படும் இக்கலை, ஆந்திராவில் "கொய்யா பொம்மலாட்டா" எனவும், கர்நாடகத்தில் "சூத்ரதா கொம்பயேட்டா" எனவும் ஒரிசாவில் "கோபலீலா" எனவும் மேற்கு வங்கத்தில் "சுத்தோர் புதூல்" எனவும் அசாமில் "புதலா நாச்" எனவும் ராஜஸ்தானில் "காத்புட்லி" எனவும் மகாராஷ்டிரத்தில் "காலாசூத்ரி பஹுல்யா" எனவும் அழைக்கப்படுகின்றது. ஆங்கிலத்தில் பொம்மலாட்டத்தை "மேரியோனெட்டு" (marionette)என்பர். + +பொம்மலா��்டத்தில் மொத்தமாக 9 கலைஞர்கள் பங்கேற்பார்கள். இவர்களில் 4 கலைஞர்கள் பொம்மைகளை இயக்குவார்கள். மற்றைய 4 கலைஞர்கள் இசைக்கலைஞர்களாக இருப்பார்கள். ஒருவர் உதவியாளராக இருப்பார். ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா, முகவீணை ஆகிய இசைக்கருவிகள் இக்கலை நிகழ்த்தலுக்குப் பயன்படுத்தப்படும். தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். 4 மீட்டர் அகலம், 6 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபுரீதியாக இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள். முன்புறத்தில் 1 மீட்டர் இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்று கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும். + +பொம்மலாட்டத்துக்குப் பயன்படும் பொம்மைகளை கல்யாண முருங்கை அல்லது முள் முருங்கை என அழைக்கப்படும் மரத்தில் இருந்து செய்கிறார்கள். இந்த மரத்தின் கட்டைகளை நீரில் ஊற வைத்துப் பின் உலர வைத்து தலை, கால், கை என பொம்மையின் உருவங்களை தனித்தனியாக வெட்டிச் செதுக்குவார்கள். பின் மீண்டும் நன்றாக உலர வைத்து உறுப்புகளை இணைப்பார்கள். இணைக்கப்படும் உறுப்புகள் தனித்தனியாக இயங்கும் வண்ணம் இருக்கும். இந்த பொம்மைகள் 45 செ.மீட்டர் முதல் 90 சென்டி மீட்டர் வரை உயரமுடையதாக இருக்கும். +பொம்மையின் உறுப்புகளுக்கு ஏற்பவும், பாத்திரங்களின் தன்மைக்கேற்பவும் பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டுவார்கள். ஆரம்பகாலங்களில் எல்லாப் பொம்மைகளுக்கும் மஞ்சள் வண்ணம் மட்டுமே தீட்டப்பட்டது. தற்போது கற்பனைக்கும் பொம்மைகளின் வசீகரத்துக்கும் ஏற்ப பல வண்ணங்கள் தீட்டப்படுகின்றன. மரபுரீதியான கதாபாத்திரங்களுக்கு அதற்கேற்றதான மரபுரீதியான உடைகளும், சமூகக் கதைகளில் பாத்திரமாக்கப்படும் பொம்மைகளுக்கு நவீன உடைகளும் அணிவிக்கப்படும். + +பொம்மையை இயக்குவதில் சில வகைகள் உண்டு. பொம்மையின் உறுப்புகளில் கயிறுகளைப் பிணைத்து, ஒரு குச்சியில் கட்டி, அந்தக் குச்சியை அசைத்து இயக்குவது ஒரு வகை. +பொம்மையின் உறுப்புகளில் கயிறுக்கு���் பதில் கம்பிகளைப் பிணைத்து, அவற்றை ஒரு வளையத்தில் இணைத்து பொம்மையை இயக்கும் கலைஞர் தனது தலையில் அதை மாட்டிக்கொண்டு இயக்குவது இன்னொரு வகை. பொம்மையை இயக்குபவர் திரைக்குப் பின்னே இருப்பார். அவர் பார்வையாளர்களின் கண்களுக்குத் தெரிய மாட்டார். மேலும் கீழும் ஆட்டுதல், பக்கவாட்டில் ஆட்டுதல் என இருவகைகளில் பொம்மைகள் இயக்கப்படும். உயிர் அற்ற பொம்மைகள் உயிர் பெற்றுத் திரைக்கு முன்னே ஆடிப்பாடி, பேசும் உணர்வில் பார்வையாளர்களை லயிக்கச் செய்வதே இந்தக் கலையில் எதார்த்தமான தன்மையாக உள்ளது. + +இக்ககலையில் இரண்டு பாணிகள் பின்பற்றப் படுகின்றன. 1. கும்பகோணம் கலை பாணி. 2. சேலம் கலைபாணி. கும்பகோணம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் கர்நாடக இசையை ஒட்டிப் பாடல்களைப் பாடுவார்கள். சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகப் போக்கை கையாளும் இவர்கள் பொம்மைகளில் கம்பிகளை பிணைத்துக் கொள்கிறார்கள். சேலம் கலைபாணியைப் பயன்படுத்துபவர்கள் ஆர்மோனியத்தைத் தவிர்த்து முகவீணையைப் பயன்படுத்துகிறார்கள். இவர்கள் கயிறுகளில் பொம்மைகளைப் பிணைத்துக் கொள்கிறார்கள். + + + + + +எலபாத்தை + +எலபாத்தை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.எலபாத்தை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் இப்பிரதேசம் நிர்வகிக்கபப்டும் பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தென்மேற்குத் திசையில் அமைந்துள்ளது. + +எலபாத்தை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 116 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு கிராமம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். + +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் செறிவாக காணப்படும் பகுதியில் அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு முக்கிய கைத்தொழிலாக காணப்படுகிறது. + + + + + +கிரியெல்லை + +கிரியெல்லை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.கிரியெல்லை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. + +கிரியெல்லை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 185 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு கிராமம் ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். + +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரடேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1965 + +1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1966 + +1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +வெளிகேபொலை + +வெளிகேபொலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.வெளிகேபொலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. + +வெளிகேபொலை சபரகமுவா குன��றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 377 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. + +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: வெளிகேபொலை பிரதேசசபை + +மூலம்: + + + + + +பதிப்பகம் + +பொதுமக்களுக்குத் தகவல்களைக் கிடைக்கச் செய்யும் ஒரு நடவடிக்கையாக, நூல்களையும், வேறு தகவல்களையும் பதிப்பித்து வெளியிடும் நிறுவனங்கள் பதிப்பகங்கள் எனப்படுகின்றன. முன்னர் நூல்கள், செய்திப் பத்திரிகைகள், சஞ்சிகைகள், போன்ற அச்சிடப்படுவனவற்றை வெளியிடுவதே பதிப்பகங்களின் பணியாக இருந்தது. இன்று கணினித் தொழில்நுட்பத்தினதும், தகவல் தொழில்நுட்பத்தினதும் வளர்ச்சியோடு, பதிப்பகங்களினது ஈடுபாட்டு எல்லை விரிவடைந்து வருகின்றது. ஒலிப்பேழைகள், மின்நூல்கள் என்பன மேலதிகமாக இன்று பதிப்பு நடவடிக்கைகளில் இடம்பிடித்துள்ளன. அத்துடன் பல பதிப்பகங்கள் இணையப் பதிப்புக்களையும் வெளியிட்டு வருகின்றன. + + + + +ஒபநாயக்கா + +ஒபநாயக்கா இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும்.ஒபநாயக்கா என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. + +ஒபநாயக்கா சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 239 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.���ீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச செயளாலர் பிரிவு ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். + +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. + + + + + +கொடகவளை + +கொடகவளை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.கொடகவளை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக பிரிவான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. + +கொடகவளை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 288 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். + +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. + + + + + +இம்புல்பே + +இம்புல்பே இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபையாகும். இம்புல்பே என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக பிரிவான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து மேற்குத் திசையில் அமைந்துள்ளது. + +இம்புல்பே மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 627 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 22 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபையாகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். + +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. + + + + + +இரத்தினபுரி மாவட்டம் + +இரத்தினபுரி தேர்தல் மாவட்டம் அல்லது இரத்தினபுரி மாவட்டம் இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் இரத்தினபுரி மாநகரமாகும். இது தேர்தல் நோக்கங்களுக்கான ஒரு அலகாகும்.இலங்கை பாராளுமன்றத்தில் 10 ஆசனங்களைக் கொண்டுள்ளது. இது 575 கிராமசேவகர் பிரிவுகளையும் 17 பிரதேச செயளர் பிரிவுகளையும் கொண்டுள்ள அதே வேளை 17 உள்ளூராட்சி அரசியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது. + +17 அரசியல் பிரிவுகள் காணப்படுகிறது. + +இரத்தினபுரி மாவட்டம் 17 பிரதேச செயளாலர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது. + +இலங்கையில் அதிகூடிய நீர்வீச்சிகளைக் கொண்ட மாவட்டமாக இரத்திபுரி மாவட்டம் காணப்படுகிறது. இங்கு மொத்தம் 109 நீர் வீழ்ச்சிகள் காணப்படுவதாக இலங்கை நீர்வீழ்ச்சிகள் அவை செய்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. மாபான நீர்வீழ்ச்சி இம்மாவட்டத்தின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். போபத் நீர்வீழ்ச்சி, கெரண்டிகினி நீர்வீழ்ச்சி என்பன முக்கிய நீர்வீழ்ச்சிகளாகும். + + + + +நிவித்திகலை + +நிவித்திகலை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.நிவித்திகலை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் இப்பகுதி நிர்வகிகப்படும் பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது. + +நிவித்திகலை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 114 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிட��க்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. + +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: நிவித்திகலை பிரதேசசபை + +மூலம்: + + + + + +கொலொன்னை + +கொலொன்னை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.கொலொன்னை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. + +கொலொன்னை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 486 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. + +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கொலொன்னை பிரதேசசபை + +மூலம்: + + + + + +காவத்தை + +காவத்தை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.காவத்தை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தினதும் நிர்வாக அலகான பிரதேச செயளர் பிரிவினதும் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தென்கிழக்குத் திசையில் அமைந்துள்ளது. + +காவத்தை சபரகமு���ா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 258 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. + +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கொலொன்னை பிரதேசசபை + +மூலம்: + + + + + +கலவானை + +கலவானை இலங்கையின் சபரகமுவா மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பிரதேச சபை ஆகும்.கலவானை என்பது இப்பகுதியில் காணப்படும் சிறிய நகரத்தின் பெயரும் நிர்வாக அலகான பிரதேச செயளர் பிரிவின் பெயருமாகும். இது மாவட்ட தலைநகரான இரத்தினபுரி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் அமைந்துள்ளது. + +கலவானை சபரகமுவா குன்றுகள் என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 292 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 25 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு பிரதேச சபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது. எனினும் இலங்கையின் இரத்தினக்கல் படிவுகள் காணப்படும் பிரதேசத்தில் இது அமைந்துள்ளதால் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அது சார் கைத்தொழில்கள் முக்கிய இடம் வ���ிக்கின்றது. + +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கொலொன்னை பிரதேசசபை + +மூலம்: + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1967 + +1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1968 + +1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தியானலிங்கம் + +சர்வமத தியானலிங்கம் ("Dhyanalinga") என்பது தியானம் (Meditation) என்றால் என்ன என்ற உணர்வில்லாத ஒருவரையும் ஆழ்ந்த தியான நிலைக்கு எடுத்துச்செல்லக் கூடிய ஆற்றல் கொண்ட லிங்க வடிவிலான சக்தியூட்டப்பட்ட கல்லைக் குறிக்கும். இது கோயில்களில் இருக்கும் மற்ற பூஜை லிங்கத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது. ஆழமான தியான நிலையில் இருக்கும் தியானியர்களிடமிருந்து பொங்கும் ஆற்றலை உள்வாங்கிச் சேமித்து வைப்பதினால் தியானலிங்கம் சாத்தியாமாகியிருக்கிறது. லிங்க வடிவம், அறிவியல் ரீதியாக ஆற்றலை சேமித்து வைக்கும் வடிவமாக இருப்பதால், இவ்வடிவம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது ஒரு குறிப்பிட்ட எந்த மதத்தினையும் சார்ந்திராமல், யோக அறிவியலின் சாரமாக அமைந்துள்ளது. + +தியான நிலையில் இருக்கும் தியானியர்களின் எல்லையற்ற சக்தியை சேமித்து, தியானலிங்கத்தை உருவாக்க, பல்வேறு யோகிகள் முயன்று, பல்வேறு காரணங்களால் அவை வெற்றியடையவில்லை. பின்னர் 1995க்கு பின், தென்னிந்தியாவில் இருக்கும் யோக குரு என்று அழைக்கப்படும் சற்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் முயற்சியாலும், பல தியான அன்பர்களின் தீவிரமான பிராணபிரதிஷ்டையாலும் தியானலிங்கம் சக்தியூட்டப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் தொடர்ந்த பிராணபிரதிஷ்டை, சூன் 24, 1999 அன்று நிறைவு பெற்றது. இந்த தியானலிங்கத்தின் அளப்பறிய ஆற்றலை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொண்டு நல்வாழ்வு பெற ஏதுவாக, நவம்பர் 23, 1999 அன்று உலகிற்கு அர்பணிக்கப்பட்டது. + +இந்தியாவின் மாநிலம், தமிழ்நாட்டில், கோவை மாநகருக்கு மேற்கே, சுமார் 30 கி.மீ. தொலைவில், வெள்ளியங்கிரி மலைச்சாரலில் இருக்கும் வனப்பகுதியில் இந்த தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் மூன்று பக்கம் மலைகளாலும் ஒரு பக்கம் வனப்பகுதியாலும் சூழப்பட்டுள்ளது. + +தியானலிங்கம், 13 அடி, 9 அங்குலம் உயரம் கொண்டதும், ஒரே கல்லால் ஆனதுமாகும். இதனைச் சுற்றி 76 அடி விட்டமுள்ள, சிமெந்து மற்றும் இரும்பு பயன்படுத்தாமல் கட்டப்பட்டுள்ள ஒரு கருவறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கருவறை நீள்கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தியானலிங்கத்தின் தீவிர சக்தியை குளிர்விக்கும்படியாக, அதனைச் சுற்றி “ஜலசீமா” என்னும் நீர்ச்சுற்று அமைக்கப்பட்டுள்ளது. + +தியானலிங்கங்தின் கருவறையில் இருக்கும் சக்தி வாய்ந்த அதிர்வலைகளை பயன்படுத்தும் வகையிலும், சாதாரண மனிதனும் தியான நிலையை உணர்வதற்கும் ஏதுவாக 3’x4’x4’ அளவுள்ள தவக்குகைகள் சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வருபவர்கள் சிறிது நேரம் இந்த தவக்குகைகளில் அமர்ந்து, தியானலிங்கத்தின் சக்தியை பெற்றுச் செல்வதோடு, தியான அனுபவத்தையும் பெற்றுச்செல்ல ஒரு வாய்ப்பாக இருக்கிறது. + +யோக அறிவியலின் பயனை, அனைத்து மதத்தினரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையிலும், உலக மக்கள் அனைவரையும் வரவேற்கும் விதமாகமாகவும், அனைத்து மதங்களின் சின்னங்களும் பொறிக்கப் பட்டு உருக்கப்பட்ட தூண் ஆகும். இது 14 அடி உயரமுள்ள, ஒரே கல்லிலான சர்வமத தூண் ஆகும். + +தியானலிங்க கருவறைக்கு வெளியே, ஓர் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் இரு புறங்களிலும், பக்கத்திற்கு மூன்றாக, ஆறு சுவர் சிற்பங்கள், தென்னிந்திய யோகிகளின் வாழ்க்கையை சித்தரிக்கின்றன. அவைகள் + + + + +மானசாரம் + +மானசாரம் என்பது, ஒரு சிற்பநூல் ஆகும். பண்டைக்கால இந்தியாவின் நகர அமைப்பு, கட்டிடக்கலை, படிமவியல் ஆகியவை பற்றிய விடயங்கள் இந்நூலில் எடுத்தாளப்படுகின்றன. மேற்படி துறைகள் தொடர்பாகப் பல நூல்கள் இருந்த போதும், முழுமையான நூல்கள் என்று சொல்லத் தக்கவை மிகச் சிலவே. இம் மிகச்சில முழுமையான நூல்களுள் மானசாரமும் ஒன்றாகும். சிற்பநூல்களுள் மிகவும் நீளமானது என்று சொல்லத்தக்க வகையில் 5400 பாடல்களைக் கொண்டுள்ள இந்நூல், 70 அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. + +சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டுள்ளது ஆயினும், பெரும்பாலும் தென்னிந்திய மரபுகள் பற்றியே பேசுவதால், இது தென்னிந்தியாவிலேயே எழுதப்பட்டிருக்கவேண்டும் என்ற கருத்து நிலவுகின்றது. + +இதன் காலம் பற்றித் தெளிவான சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. மானசாரத்தை மொழிபெயர்த்துப் பதிப்பித்தவரான பி.கே. ஆச்சார்யா என்பவர் இது குப்தர் காலத்தைச் (கி.பி 4 – 8 ஆம் நூற்றாண்டு) சேர்ந்தது எனக் கருதுகிறார். ஆனால், இது கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டதாதல் வேண்டும் என்று வேறு சிலர் கருதுகிறார்கள். + + + + + +கும்மியாட்டம் + +கும்மி பலர் கூடி ஆடும் ஒருவகைக் கூத்து அல்லது நடனம். இது தொன்று தொட்டு வரும் ஒரு நாட்டார் கலை. 'கும்மி' ஆட்டம் ஆகும். பலர் வட்டமாக ஆடிக்கொண்டோ, அல்லது இருபுறமாக சரிசமமாக நின்று ஆடிக்கொண்டோ வரும்போது இசைக்குத் தக்கவாறு தன் கைகளைத் தட்டி கால்களையும் இடுப்பையும், தலையையும் அழகுற அசைத்து, குனிந்தும் நிமிர்ந்தும் கூட்டாக ஆடும் ஒரு கூத்து. . தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் கும்மி வழக்கில் உள்ளது.குரவை என்ற கலையில் இருந்து, கும்மி பிறந்ததாகக் கூறப்படுகிறது. + + + + + + + +சீன அரசமரபுகள் + + + + + + + +தாமரை (கவிஞர்) + +தாமரை, தமிழ்ப் பெண் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். +கோவையில் பிறந்த தாமரை, இயந்திரப் பொறியியல் பட்டதாரி. இவரின் தந்தை, கவிஞராகவும் நாடகாசிரியராகவும் விளங்கியுள்ளார். "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்" என்ற கவிதைத் தொகுப்பை அளித்துள்ள தாமரை, சிறுகதைகளும் எழுதக் கூடியவர். "சந்திரக் கற்கள்", "என் நாட்குறிப்பின் நடுவிலிருந்து சில பக்கங்கள்" ஆகிய சிறுகதைத் தொகுப்புகளைப் படைத்துள்ளார். இலக்கியப் படைப்புகளுக்காகத் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகியவற்றையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார். + +"வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ...” எனப் புகழ்மிக்க பாடல்கள் உட்பட நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இலங்கை, சிங்கப்பூர் நாடுகளுக்குப் பயணித்துள்ளார். இவர், ஆங்கிலச் சொற்களைக் கலந்து பாடல்கள் எழுதுவதில்லை என உறுதி கொண்டுள்ளார். திரையிசைத்துறையில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், இயக்குநர் கௌதம் மேனன் ஆகியோர் படங்களில் தாமரை அதிக பாடல்களை எழுதியுள்ளார். இம்மூவர் கூட்டணி வெற்றிப் பாடல்களை தந்துள்ளது. + +தாமரை கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் உற்பத்திப் பொறியியலில் பட்டம் பெற்று ஆறு ஆண்டுகள் கோவையில் பணி புரிந்தார். கவிதையில் ஏற்பட்ட நாட்டத்தால் சென்னைக்கு குடிபெயர்ந்த தாமரை, அங்கு கட்டற்ற எழுத்தாளராக கட்டுரைகள், கவிதைகள்,கதைகள் எழுதி வந்தார். அவரது இலக்கிய ஆக்கங்களால் கவனிக்கப்பட்டு திரைப்படத்துறையில் அறிமுகமானார். இயக்குனர் சீமானின் "இனியவளே" திரைப்படத்திற்காக "தென்றல் எந்தன் நடையைக் கேட்டது" என்ற பாடல் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் பெண் பாடலாசிரியராக தாமரை அறிமுகமானார். தொடர்ந்து, "உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்" ("மல்லிகைப் பூவே"), "தெனாலி" ("இஞ்சேருங்கோ இஞ்சேருங்கோ") போன்ற திரைப்படங்களில் பாடல்கள் எழுதினார். ஹாரிஸ் ஜயராஜ் இசையில் "மின்னலே" திரைபட்டத்தில் இவரது பாடல் "வசீகரா" மிகவும் புகழ் பெற்று அவரது வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது. + +"மின்னலே"க்குப் பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜயராஜ், தாமரையின் மூவர் கூட்டணி ("காக்க காக்க", "வேட்டையாடு விளையாடு", "பச்சைக்கிளி முத்துச்சரம்" & "வாரணம் ஆயிரம்") போன்ற படங்களில் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது. ஜெயராஜ் கௌதமை விட்டு விலகிய நேரத்தில் தாமரை இசையமைப்பாளர் ரகுமானுடன் கூட்டு சேர்ந்தார். சூலை 2014இல் மீண்டும் கௌதம் மேனன் , ஹாரிஸ் ஜயராஜ் தாமரை கூட்டணியாக இணைந்து அஜித் குமார் நடித்த 'என்னை அறிந்தால்..' திரைப்படத்தில் பங்காற்றினர். சனவரி 1, 2015இல் வெளியான இதன் இசைத்தொகுப்பு மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. தாமரை ரகுமான், ஜெயராஜ், கௌதம் தவிர யுவன் சங்கர் ராஜா ("நந்தா", "புதுக்கோட்டையிலிருந்து சரவணன்", "போஸ்", "பேரழகன்", "கண்ட நாள் முதல்" & "கண்ணாமூச்சி ஏனடா"), ஜேம்ஸ் வசந்தன் ("சுப்பிரமணியபுரம்" & "பசங்க") போன்ற இசையமைப்பாளர்களுடனும் பாலா, ஏ. ஆர். முருகதாஸ், வி. பிரியா, சசிகுமார் போன்ற இயக்குநர்களுடனும் பணியாற்றி உள்ளார். + +தாமரை மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான தியாகுவை திருமணம் புரிந்துள்ளார். இருவருக்கும் "சமரன்" என்ற மகன் உள்ளார். 2015 பெப்ரவரியில் தனது கணவர் 2014, நவம்பரிலிருந்து தன்னை நிராதரவாக விட்டுப் பிரிந்ததாக அறிக்கை விடுத்து தன்னைக் க��வருடன் சேர்த்து வைக்கக் கோரி உண்ணாநோன்பு போராட்டம் தொடங்கினார். முதலிரண்டு நாட்கள் சென்னையில் தியாகுவின் கட்சி அலுவலகத்தின் முன்னர் போராடிய தாமரை பின்னர் அடுத்த இரண்டு நாட்கள் வேளச்சேரியில் உள்ள தியாகுவின் மகளின் இல்லத்தின் முன் போராட்டத்தைத் தொடர்ந்தார். அடுத்து கோடம்பாக்கத்திலுள்ள பூங்கா ஒன்றில் தனது போராட்டத்தைத் தொடர்கிறார். இந்தச் சர்ச்சையில் இருதரப்பினருக்கும் பலர் ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். தோழர் தியாகு தாமரையுடன் இணைந்து வாழ்வதற்கு இனி வாய்ப்பிலை என்றும் மகனிடம் மன்னிப்புக் கேட்டும் அறிக்கை வெளியிட்டுள்ளார். + +இது முழுமையான தொகுப்பு அல்ல. + + +ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் - கவிதைத் தொகுப்பு + + + + + +திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் + +திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் (அருள்மிகு ரெங்கநாதர் கோவில்) 108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலம். காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் முதன்மையான மிகப் பெரிய அரங்கநாதசுவாமி கோயிலின் ஏழு சுற்று மதில்களுக்குள் அமைந்துள்ளதுமான திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) என்னும் ஊர், 600 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு தீவு நகரம் ஆகும். இச்சுற்று மதில்களில் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான இராஜகோபுரம், 72 மீட்டர் (220 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகின்றது. இது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாயினும், 1987 ஆம் ஆண்டு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. + +திருவரங்கம் கோவிலைப் பாதுகாத்து, திருப்பணிகள் புரிய 1966இல் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) +இக்கோயிலுக்குத் தொழிநுட்ப உதவி அளிக்க முடிவு செய்தது. இந்த நிறுவனம் பாட்ரிக் பால்க்னர், ஜார்ஜ்ரைட், ஜுனைன் அபோயர் ஆகிய +நிபுணர்களின் சேவையை அளித்தது. இவர்களுள் ஜுனைன் அபோயர் என்ற பெண்மணி இக்கோயிலின் வரலாற்றையும், அமைப்பையும் நன்கு ஆராய்ந்து பல ஆங்கிலக் கட்டுரைகள் எழுதியுள்ளார். + +திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம��பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார். இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவிரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான். + +குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி +வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி +கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு +உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே. + +ஸ்ரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு. + +கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய திருவரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருந்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான். + +இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது. இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்���து. அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது. கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன. இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை. வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது. + +இதன் ஏழு மதில் சுற்றுக்களையும் ஏழு உலகங்கள் என்று கூறுவர். + + +கோயில் தென்புறத்தில் 400 ஆண்டுகளுக்கு முன், நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு, முற்றுப்பெறாத தெற்கு ராஜகோபுரம், அகோபில மடத்தின் 44 வது ஜீயர் அழகிய சிங்கரின் முயற்சியால் கட்டுமான பணிகள் 1979ல் தொடங்கி 8 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று 13 நிலைகளுடனும், 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. + +கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள்: + +ராஜகோபுரத்தின் மொத்த எடை ஒரு இலட்சத்து 28 ஆயிரம் டன்கள் + +சங்க காலத்திலிருந்தே திருவரங்கம் கோயில் புகழ் பெற்றது. அதனால் 2000 ஆண்டுகளாக திருவரங்கம் விண்ணகரத்தில் வழிபாடு நடப்பது தெரிகிறது. சிலப்பதிகாரம் மதுரைக் காண்டம் காடுகண் காதையில் "விரிந்த அலைகளோடு கூடிய மிகப் பெரிய காவிரியாற்றின் இடைக்குறையில் திருமகள் விரும்பி உறையும் மார்பை உடையவரும், நீல நிறம் கொண்டவருமாகிய திருமால், ஆயிரம் தலைகளுடைய ஆதிசேஷன் என்னும் பாம்பணையாகிய பள்ளியின் மீது அழகுறச்சாய்ந்து கொண்டிருக்கும் தன்மை, நீல நிறமுடைய ஒரு மேகமானது பொன்மலையினைச் சூழ்ந்து படிந்திருக்கும் பான்மையில் திகழ்கின்றது" என வர்ணிக்கப்படுகிறது. + +அகநானூறிலும் (அகம் 137 பாலை உறையூர் முதுகூத்தன்னார்) திருவரங்கத்தில் நடக்கும் பங்குனி உத்திரம் திருவிழா பற்றி குறிப்புள்ளது. + +சங்கம் மறுவிய காலத்தில், மதுரகவி ஆழ்வார் நீங்கலாக அனைத்து ஆழ்வார்களும் (கிபி 5ம் நூற்றாண்டிலிருந்து 9ம் நூற்றாண்டு வரை) திருவரங்கத்தானை பற்றி பாடியுள்ளனர். நாலாயிய திவ்விய பிரபந்தத்தில், 247 பாசுரங்கள் திருவரங்கத்தான் மேல்தான். + + +9 ஆம் நூற்றாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் கோவிலில் பல கல்வெட்டுகள் கிடைக்கின்றன. சோழ மன்னர்களும் சோழ பெரும்புள்ளிகளும் திருவரங்கம் விண்ணகரத்திற்கு பல கொடைகளும் கைங்கர்யமும் செய்துள்ளதாக கல்வெட்டுகள் அறிவிக்கின்றன. 600 க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் 9ம் நூற்றாண்டிலிருந்து 20 நூற்றாண்டுவரை உள்ளன. 'கோவில் ஒழுகு' 11ம் நூற்றாண்டு வாக்கில் இயற்றப்பட்ட கோவில் வரலாறு ஆகும். கோவிலொழுகு 7ம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமங்கையாழ்வார் சில பிரகாரங்களை கட்டச் செய்தார் என கூறுகிறது. கோவிலொழுகு காலப்போக்கில் திருவரங்கம் விண்ணகரத்தில் ஏற்பட்ட சம்பவங்களை தொகுக்கிறது. + +105 கல்வெட்டுகள் சோழர் காலத்தவை. இவை முதலாம் பராந்தக சோழன், இரண்டாம் பராந்தகன், ராஜராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழர்களின் கொடைகள் கல்வெட்டிலுள்ளன. பிறகு பாண்டிய மன்னர்களும், ஹோய்சாலர்களும் ஸ்ரீரங்கத்தில் சிரத்தை காட்டினர். கிபி 1311 லும், 1323 லும் தில்லி சுல்தானின் தளபதி மாலிக் காபூர் தென்னிந்தியாவை சூரையாடுவதற்கு படையெடுத்தான். அந்த இரண்டு ஆக்கிரமிப்புகளிலும் கோவில் கொள்ளையடிக்கப் பட்டது. 1331 படையெடுப்பின் முன் , உற்சவ மூர்த்தியான நம்பெருமாள் பிள்ளை லோகாசாரியார் மூலம் திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீரங்கததின் மீது மதுரை சுல்தானின் ஆதிக்கம் (1331–1371) வீழ்ந்த பின், உற்சவ மூர்த்தி மறுபடியும் எழுந்தருள செய்யப் பட்டது. அது 13 மே 1371 ல் நடந்ததாக கல்வெட்டு கூறுகிறது. இதன் பிறகு விஜயநகர அரசர்கள், நாயக்கர்கள், தஞ்சை மன்னர்கள் பெருமளவில் உதவியிருந்தனர். + +இஸ்லாமியப் படையெடுப்பால் அழிக்கப்பெற்றதற்குப் பதிலாக கருடாழ்வாரின் புதிய செப்புச்சிலை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. (கி.பி.1415). +15,16 ஆம் நூற்றாண்டுகளில் பல தெய்வங்களின் சந்நிதிகள் மீண்டும் புதுப்பித்து அமைக்கப்பட்டன. கோபுரங்கள் கட்டப்பட்டன. கோவில் விமானம் மீண்டும் கட்டப்பட்டுப் பொன் வேயப்பட்டது. + +திருவரங்கம் விண்ணகரம் பல ஆன்மீக சான்றோர்களையும் ஈர்த்துள்ளது. ஆழ்வார்கள் கால கடைசியில் வந்தவர் கம்பர். அவர் ராமாயணத்தை சாலிவாகன வருடம் அதாவது கிபி 14 இல் ராமாயணத்தை திருவரங்கத்தில் கவியரங்கு ஏற்றினார். அம்மண்டபம் இன்றும் ரங்கநாச்சியார் சன்னதி முன்பு காணலாம். + +திருச்சி திருவரங்���ம் காவிரி ஆற்றங்கரையில் அம்மா மண்டபம் அமைந்திருக்கிறது. இந்துசமயத்தின் புனிதச் சடங்குகளுள் ஒன்றான நீத்தார் கடன் இப்பகுதியில் அதிகம் நடத்தப் பெறுகின்றன. + +மார்கழி மாதத்தின் வளர்பிறை ஏகாதேசியானது 'வைகுண்ட ஏகாதேசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த விழா திருவரங்கத்தில் 21 நாட்கள் கொண்டாப்படுகின்றன. + +இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன. ஆதி பிரம்மோட்சவம், பூபதி திருநாள் என்று இந்த பிரமோட்சவங்கள் அழைக்கப்படுகின்றன. + +இக்கோயிலில் உலக நன்மைக்காக 57 ஆண்டுகளுக்குப் பிறகு நம்பெருமாள் உபய நாச்சியார்களுக்கு 1001 கலச அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி 327 ஆகஸ்டு 2014இல் நடைபெறுகிறது. இதே போன்று இக்கோயிலில் 1957ஆம் ஆண்டு துரைபிரதட்சணம் மண்டபத்தில் 1001 கலசங்கள் வைத்து பூஜைகள் நடத்தப்பட்டன. 1001 கலசங்களில் 360 மூலிகை மருந்துகள் சேர்க்கப்பட்டு அபிஷேகம் நடைபெறுகிறது. இக்கலசங்கள் 81 கலசங்கள் பிரம்ம பதம் என்றும், 520 கலசங்கள் தேவ பதம் என்றும் 400 கலசங்கள் மானூஸ் பதம் என்றவாறு அமையும். + +இக்கோயிலில் 2001ஆம் ஆண்டு மார்ச் 15 இல் கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 5ம் தேதி முதல் துவங்கியது. சம்ப்ரோக்ஷணம் எனப்படும் குடமுழுக்கு இரு கட்டங்களில் நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் இக்கோயிலில் 43 உபசன்னதிகளுக்கும், 11 கோபுரங்களுக்கும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி 2015 ஆம் ஆண்டு அன்று காலை 5.40 மணி முதல் 6.40 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ரங்கநாதர், ரங்கநாயகி தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம், வெள்ளை கோபுரம் உள்ளிட்டவைகளுக்கு இரண்டாம் கட்டமாக கும்பாபிஷேகம் 18 நவம்பர் 2015 அன்று நடைபெற்றது. +ஆசிய பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் உள்ள கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்கும் அமைப்புகள் குறித்த அறிக்கைகளை ஆய்வு செய்த யுனெஸ்கோ அமைப்பு, திருவரங்கம் அரங்கநாதர் கோயிலுக்கு கலாச்சார பாரம்பரியம் பாேன்றவற்றை பழமை மாறாமல் பாதுகாத்ததற்கான விருதை 2017ஆம் ஆண்டில் வழங்கி சிறப்பித்தது. தமிழகத்திலேயே முதல் முறையாக இக்கோயிலுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. + +திருவரங்கம் அரங்கநாதரின் (மூலவர்) கண்களில் இருந்த ஒற்லோவ் வைரம் + +தமிழ்ந��ட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்‌களும் - v.கந்தசாமி, எம்.ஏ, எம்.எட். - இரண்டாம் பதிப்பு 2006 + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1969 + +1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1970 + +1970 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +எத்தியோப்பியா + +எத்தியோப்பியா ("Ethiopia", , ', இத்தியோப்பியா, ), அதிகாரப்பூர்வமாக எத்தியோப்பியக் கூட்டாட்சி சனநாயகக் குடியரசு"' ("Federal Democratic Republic of Ethiopia") என்பது கிழக்காப்பிரிக்காவில் ஆப்பிரிக்காவின் கொம்பில் அமைந்துள்ள ஓர் இறைமையுள்ள நாடு ஆகும். இதன் எல்லைகளாக வடக்கு, மற்றும் வடகிழக்கே எரித்திரியா, கிழக்கே சீபூத்தீ, சோமாலியா, மேற்கே சூடான், தெற்கு சூடான், தெற்கே கென்யா ஆகிய நாடுகள் உள்ளன. ஏறத்தாழ 100 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு உலகின் நிலம்சூழ் நாடுகளில் மிகுந்த மக்கள்தொகை கொண்ட நாடும், ஆப்பிரிக்காவிலேயே நைஜீரியாவுக்கு அடுத்ததாக இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நாடும் ஆகும். இதன் மொத்தப் பரப்பளவு 1,100,000 சதுர கிலோமீற்றர்கள் (420,000 சதுரமைல்) ஆகும். அடிஸ் அபாபா இதன் தலைநகரமும், மிகப்பெரிய நகரமும் ஆகும். + +உலகின் மிகப் பழைய நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் இது, தொடர்ச்சியான இறைமையைக் கொண்டு விளங்கும் ஒரே ஆபிரிக்க நாடும் ஆகும். ஆர்மீனியாவுக்கு அடுத்ததாக, உலகின் இரண்டாவது பழைமையான அதிகாரபூர்வ கிறிஸ்தவ நாடு என்ற பெருமையும் இதற்கு உண்டு. + +அண்மைக்காலக் கண்டுபிடிப்புக்கள், இந்த நாடு மனித இனத்தின் தொட்டிலாக இருந்திருக்கக்கூடும் என்ற கருத்தையும் தோற்றுவித்துள்ளது. இங்கிருந்துதான் "தற்கால மனித இனம்" வெளியேறி மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பிற பகுதிகளுக்கும் சென்றதாக நம்பப்படுகின்றது. எத்தியோப்பிய முடியாட்சியின் வரலாறு கிமு இரண்டாயிரவாண்டுக்கு முந்தையது. பொது ஊழியின் முதல் நூற்றாண்டுகளில் "அக்சம் இராச்சியம்" இந்தப் பகுதி முழுமையிலும் ஒரே சீரான நாகரிகத்தைப் பேணியது. + +19ஆவது நூற்றாண்டின் பிற்பகுதியில�� ஆபிரிக்கப் பகுதிகளைக் கைபற்றும் குடியேற்றவாத நாடுகளின் முயற்சிகளின்போது, "ஆபிரிக்காவிற்கு முந்து", காலத்தில் எத்தியோப்பியாவின் படைத்துறை மட்டுமே தன்நாட்டைக் காப்பாற்றி பெருமிதம் கொண்டது. இதனால் பிற்காலத்தில் விடுதலை பெற்ற ஆபிரிக்க நாடுகள் எத்தியோப்பியக் கொடியின் வண்ணங்களை தங்கள் கொடிகளில் ஏற்றுக் கொண்டனர். 20ஆவது-நூற்றாண்டில் உலக நாடுகள் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் அவையில் தன்னாட்சி பெற்ற முதல் ஆபிரிக்க நாடாக விளங்கியது. 1974இல் முதலாம் ஹைலி செலாசியின் ஆட்சி முடிவுற்றபோது சோவியத் ஒன்றியம் ஆதரவளித்த பொதுவுடைமைசார் படைத்துறைக்குழு, "டெர்கு", ஆட்சியைக் கைப்பற்றியது. பின்னர் "எத்தியோப்பிய மக்கள் புரட்சிகர சனநாயக முன்னணி"யிடம் (EPRDF) ஆட்சி மாறியது. 1991 வரை இவர்களது ஆட்சித் தொடர்ந்தது. + +எத்தியோப்பிக் என்றழைக்கப்படும் எத்தியோப்பியாவின் பண்டைய கி'இஜ் எழுத்துமுறை, இன்னும் உலகில் பயன்பாட்டில் உள்ள பழமையான எழுத்துக்களில் ஒன்றாகும். எத்தியோப்பிய நாள்காட்டியானது, கிரியோரிய நாட்காட்டிக்கு  ஏறக்குறைய ஏழு வருடங்கள் மற்றும் மூன்று மாதங்கள் பிற்பட்ட,  பொரன்னா நாட்காட்டியுடன் இணைந்து உள்ளது. பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர் (முதன்மையாக எத்தியோப்பியன் ஆர்த்தடாக்ஸ் த்வேஹேடோ திருச்சபை மற்றும் பேன்டேயே), மூன்றில் ஒரு பகுதி இஸ்லாமியர் (முதன்மையாக சுன்னி இஸ்லாமை) ஆவர். ஆப்பிரிக்காவின் பழமையான முஸ்லீம் குடியேற்ற பகுதியான நெகாஷில் பகுதி எத்தியோப்பியா நாட்டில் உள்ளது ஆகும். எத்தியோப்பிய மக்கள் தோகையில் கணிசமான யூத மக்கள், பெட்டி இஸ்ரேல் என அறியப்பட்டனர், 1980 ஆம் ஆண்டு வரை எத்தியோப்பியாவில் வசித்து வந்த இவரக்ளில், பெரும்பாலோர் படிப்படியாக இஸ்ரேலுக்கு குடியேறினர். எத்தியோப்பியா ஒரு பன்மொழி நாடாகும் இங்கு 80 இனக்குழுக்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரிய நான்கு இனக்குழுக்கள் ஒர்மிஃபியா, அமரா, சோமாலி, டிக்ரேயன்ஸ் ஆகும். நாட்டில் உள்ள பெரும்பான்மையான மக்கள் குஷிடிக் அல்லது செமிடிக் கிளையின் ஆபிரோசியடிக் மொழிகள் பேசுகின்றனர். கூடுதலாக, தெற்கில் வாழும் சிறுபான்மை குழுக்களால் ஒமேனோடிக் மொழிகள் பேசப்படுகின்றன. நாட்டினுடைய இனக்குழு சிறுபான்மையினரால் நீலோ-சஹரன் மொழிகள் பேசப்படுகின்றன. + +எதியோப்பியாவின் காஃபி என்ற இடத்தில் இருந்துதான் காபி கொண்டைகள் தோன்றின (இது பழைய எத்தியோப்பியா நிர்வாகத்தின் 14 மாகாணங்களில் ஒன்றாக இருந்தது). இந்த நாடு பரந்த வளமான மேற்கு, காடுகள், மற்றும் பல ஆறுகள், அதன் வடக்கே உலகின் மிகவும் வெப்பமான பக்தியான டால்லால் ஆகியவற்றை கொண்ட இயற்கை முரண்பாடுகளுடைய நிலப் பகுதியை உடையது. எத்தியோப்பியன் சிறப்பம்சம் என்றால் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய தொடர்ச்சியான மலைத் தொடர்களையும், ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய குகைகளான  சோப் ஓமர் குகைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும்  ஆப்பிரிகாவிலேயே அதிகமான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் எத்தியோப்பியாவில் உள்ளன. + +எத்தியோப்பியா ஐ.நா.வின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒன்றாகவும், ஜி -24, கூட்டுசேரா இயக்கம், ஜி 77, ஆபிரிக்க ஒற்றுமை அமைப்பு போன்ற அமைப்புகளில் உறுப்பினராக உள்ளது. எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைமையகமாக செயல்படுகிறது, மேலும் பான் ஆபிரிக்க சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீஸ்,   ஆபிரிக்க ஐக்கிய நாடுகளின் பொருளாதார ஆணையம்,   ஆப்பிரிக்க விமானப் பயிற்சித் தலைமையகம்,   ஆபிரிக்க ஸ்டாண்ட்பி ஃபோர்ஸ்,   மற்றும் ஆப்பிரிக்காவில் கவனம் செலுத்தும் பல சர்வதேச தொண்டு நிறுவனங்கள் போன்றவை செயல்படுகின்றன. 1970 கள் மற்றும் 1980 களில், எத்தியோப்பியா உள்நாட்டுப் போர்கள் மற்றும் கம்யூனிச விரோதப் போக்கினால் பாதிக்கப்பட்டது, இதனால் அதன் பொருளாதாரத்தை அழித்தது. எனினும் நாடு அண்மைக்காலமான மீண்டு வருகிறது, இப்போது கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் மத்திய ஆபிரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி (மொத்த உள்நாட்டு உற்பத்தியில்) கண்டுவருகிறது. குளோபல் ஃபயர் பவர் கூற்றுப்படி, எதியோப்பியா உலகில் 42 வது மிக சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆபிரிக்காவின் மூன்றாவது சக்திவாய்ந்ததாக இராணுவத்தையும் கொண்டதாக உள்ளது. +கிரேக்க பெயரான Αἰθιοπία (Αἰθίοψ, Aithiops, 'எதியோப்பியன்') என்பது ஒரு கூட்டுச் சொல்லாகும், இது இரண்டு கிரேக்கச் சொற்களான, αἴθω + ὤψ (aitho "I burn" + ops "face") இருந்து பெறப்பட்டது. வரலாற்றாசிரியரான எரோடோட்டசு, சகாராவுக்கு கீழே உள்ள ஆப்பிரிக்காவின் பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தினார், பின்னர் எக்குமீனை (குடியேற்றப் பகுதி ) +என்பதை குறிப்பிடப் பயன்படுத்தினார். + + + + + +விழித்திரை விலகல் + +விழித்திரை விலகல் (Retinal detachment) கண்ணில் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். விழித்திரையானது கண்ணின் உட்சுவரிலிருந்து உரிவதால் இது ஏற்படுகிறது. ஏறத்தாழ பத்தாயிரம் பேரில் ஒருவருக்கு இக் குறைபாடு ஏற்படுகின்றது. இக்குறைபாட்டிற்கு ஏற்ற உடனடிச் சிகிச்சை அளிக்காவிடின் பார்வையிழப்பு ஏற்படலாம். + +விழித்திரையில் சிறு துளை அல்லது கிழிவு ஏற்படுவதனாலேயே விழித்திரை விலக நேரிடுகிறது. அந்த இடைவெளியினூடாக நீர்மம் விழித்திரைக்குக் கீழே கசிவதால் கண்சுவருடன் ஒட்டிக்கொண்டிருக்கும் தொடுப்பு நலிவடைந்து விழித்திரை உரிகிறது. இதுவே விழித்திரை விலகலாகும். இவ்வாறு விலகிய விழித்திரையால் உள்வரும் ஒளிக்கதிர்களிலிருந்து தெளிவான படத்தைப் பெற முடியாது. + +இக் குறைபாடு பெரும்பாலும் நடுத்தர வயதுக் குறும்பார்வையுடையோருக்கே ஏற்படுகிறது. + + + + +ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் + +ஐக்கிய நாடுகளின் திட்ட அமுலாக்க அலுவலகம் என்றழைக்கப்படும் திட்ட சேவைகளுக்கான ஐக்கிய நாடுகள் அலுலகம் ஐக்கிய நாடுகளின் திட்டங்களை முன்னெடுப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும். இது ஐக்கிய நாடுகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், அரசுகளின் திட்டங்களை முன்னெடுக்கும் அமைப்பாகும். பத்தாண்டுகளுக்கும் மேலதிகமாக சமாதான முன்னெடுப்பு, அநர்த்த முகாமைத்துவம் மற்றும் தொலைநோக்கிலான வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. பல பில்லியன் டாலர்களுக்கு மேலாக ஓராண்டிற்குச் செலவிடும் இவ்வமைப்பானது ஓர் பொறியியல், கண்ணிவெடி நடவடிக்கை, சூழல் மீளமைப்பு, மீள்புனருத்தாரணம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றது. உலகின் பல்வேறு நாடுகளில் இவ்வமைப்பானது ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றது. + + + + + +வடிவமைப்பு + +வடிவமைப்பு என்பது, பொதுவாக பயன்படுகலைகள், பொறியியல், கட்டிடக்கலை மற்றும் இவைபோன்ற ஆக்க முயற்சிகள் தொடர்பில் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்முறையை வடிவமைப்புச் செய்யும்போது, அழகியல், செயற்பாடு முதலிய பல அம்சங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன. இதனால் வடிவமைப்பு முயற்சியின்போது, ஆய்வு, சிந்தனை, மாதிரியாக்கம், திருத்தம், மீள்வடிவமைப்பு போன்ற செயற்பாடுகள் அவசியமாகின்றன. இவ்வாறு வடிவமைப்பில் ஈடுபடுபவர் வடிவமைப்பாளர் எனப்படுகிறார். கட்டிடங்கள் மற்றும் இதுபோன்ற பெரிய திட்டங்கள் தொடர்பிலான வடிவமைப்புகளைத் தனியாக எவரும் செய்யமுடியாது. இத்தகைய வடிவமைப்புக்களுக்குப் பல்துறை அறிவு தேவைப்படுவதால், பல துறைகளையும் சேர்ந்த நிபுணர்கள் குழுக்களாகவே இம்முயற்சியில் ஈடுபடுவார்கள். இதனை வடிவமைப்புக் குழு என்பர். + +வடிவமைப்பதற்காகவும், அதனை வழிப்படுத்துவதற்காகவும், ஏராளமான தத்துவங்கள் உள்ளன. வடிவமைப்புத் தத்துவங்கள் பெரும்பாலும், வடிவமைப்பின் நோக்கங்களைத் தீர்மானிப்பதற்காகவே அமைகின்றன. வடிவமைப்பு நோக்கங்கள், அதிக முக்கியத்துவம் அற்ற, சிறிய பிரச்சினையொன்றுக்குத் தீர்வுகாண்பது முதல் முழுதளாவிய, பாரிய திட்டங்களை உருவாக்குவது வரை வேறுபட்டு அமையக்கூடும். எவ்வாறாயினும், இத்தகைய நோக்கங்கள் வடிவமைப்பை வழிப்படுத்துவதற்காகவே பெரும்பாலும் உருவாக்கப்படுகின்றன. + +வடிவமைப்புத் தத்துவம் என்பது, வடிவமைக்கும்போது தெரிவுகளைச் செய்ய உதவும் வழிகாட்டல் ஆகும். + +வடிவமைப்பு அணுகுமுறை என்பது ஒரு பொதுவான தத்துவமேயன்றி ஒரு குறிப்பிட்ட ஒரு செயல்முறைக்கான வழிகாட்டல் அல்ல. சில அணுகுமுறைகள் மேலோட்டமான வடிவமைப்பு நோக்கத்தை அடைய வழிகாட்டுகின்றன. வேறு சில, வடிவமைப்பாளரின் போக்கை வழிப்படுத்துவதாக அமைகின்றன. ஒன்றுக்கொன்று முரண்பாடாக இல்லாவிட்டால், ஒன்றுக்கு மேற்பட்ட அணுகுமுறைகளைக் கலந்தும் கைக்கொள்ளுதல் சாத்தியமே. + +பரவலாகக் கையாளப்படும் சில அணுகுமுறைகள்: + + + + + + + + + +பயன்படுகலை + +பயன்படுகலை (Applied arts) என்பது, அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களிலும், செயற்பாட்டுக்குரிய பொருட்களிலும், வடிவமைப்பு, அழகியல் ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. நுண்கலைகள், ஓர் அறிவார்ந்த தூண்டலைப் பார்ப்பவர்களுக்குக் கொடுக்கும் வேளையில், பயன்படுகலை, வடிவமைப்பையும், ஆக்கம் சார்ந்த குறிக்கோள்களையும் (creative ideals) தேநீர்க் கிண்ணங்கள், சஞ்சிகைகள், பூங்கா இருக்கைகள் முதலிய பய��்படு பொருட்களுக்கு அளிக்கின்றது. தொழில்துறை வடிவமைப்பு, வரைகலை வடிவமைப்பு, ஆடையலங்கார வடிவமைப்பு, உள்ளக வடிவமைப்பு, அலங்காரக் கலைகள் என்பவை பயன்படுகலைகளாகும். + + + + +மடிக்கணினி + +மடிக்கணினி அல்லது மடிக்கணி என்பது மடியில் வைத்திருந்து பயன்படுத்தத்தக்க அளவிலும், வடிவத்திலும் வடிவமைக்கப்பட்ட, இடத்துக்கிடம் கொண்டு செல்லப்படக்கூடிய கணினி ஆகும். இதில் கணித்திரையை "மடித்து" மூடிவைக்கக்கூடியதாக இருப்பதாலும் இதற்கு மடிக்கணி அல்லது மடிக்கணினி என்று பெயர். + +மடிக்கணினியானது மேசைக்கணினியின் கணினியின் உள்ளீடுகளான திரை, விசைபலகை, சுட்டி, ஒலிபெருக்கி, இணையப் படக்கருவி, ஒலிவாங்கி, வரைகலை அட்டை போன்ற அனைத்தையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது. மடிக்கணினியானது ஒரு மாறுமின்னோட்ட தகைவி மூலமாக நேரடி மின்சாரத்தினைக் கொண்டு அல்லது மீள மின்னேற்றக்கூடிய மின்கலம் மூலமாக இயக்கப்படுகிறது. தற்பொழுது பயனாளர்களுடைய வாங்கும் விலை, விருப்பத்தின் பேரில் உட்பொதிந்த மென்பொருள் மற்றும் வன்பொருள்கள் பொதிந்த மடிக்கணினிகள் விற்பனை செய்யப்படுகின்றன. + +மடிக்கணினியின் ஆரம்ப காலகட்டமானது 1980 இல் ஆரம்பித்தது. அப்பொழுது அதன் அளவும், எடையும் அதிகமாக இருந்தது. பின்வந்த காலங்களில் அதன் அளவு, எடையைக் குறைக்க திட்டமிடப்பட்டு செயற்படுத்தியதனால் தற்போது ஏ4 கடதாசி அளவுள்ள மடிக்கணினிகள் கிடைக்கின்றன. +தற்பொழுது கணினி விளையாட்டுக்களுக்காகப் பயன்படுத்தப்படும் மடிக்கணினியான ஏலியன்வேர் மட்டுமே எடை அதிகமாக உள்ளது. சராசரியாக நான்கு முதல் ஐந்து கிலோகிராம் வரை இருக்கும். + +முதல் மடிக்கணினியை பில் மாக்ரிட்ஜ் 1979 இல் வடிவமைத்தார். மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் 1982 இல் வெளியிடப்பட்டது. மடிக்கணினிகள் தொழில்நுட்ப நோக்கில் செயல்படுத்தும் முன்பாகவே அது பற்றிய கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. எழுபதுகளின் தொடக்கத்தில் "ஆலம் கே" என்பவர் முன்வைத்த "டைனாபுக்" என்ற எண்ணக்கரு அத்தகையதொன்றாகும். முதன்முதலில் வணிக நோக்கில் கிடைக்கப்பெற்ற மடிக்கணினி 1981 இல் அறிமுகமான "ஒஸ்போர்ன் 1" என்பதாகும். இன்றைய மடிக்கணினிகள் எடையில் பெரும்பாலும் 2.3 கிலோகிராம் முதல் 3.2 கிகி (5 முதல் 7 பவுண்டு வரை இருக்க��ம். ஆனால் 1.3 கிலோகிராம் அளவு குறைந்த எடை உள்ளனவும் விற்கின்றார்கள். கணித்திரையின் அளவு பெரும்பாலும் 35 செமீ முதல் 39 செமீ (14.1 அங்குலம் முதல் 15.4 அங்குலம் வரை) மூலைவிட்ட அளவு கொண்டிருக்கும். ஆனால் இன்னும் சிறிய திரைகள் உள்ளனவும் (30.7 செமீ அல்லது 12.1 அங்குலம் உடையனவும் அதனைவிட சிறியனவும்) உண்டு. பெரும்பாலான கணித்திரைகள் நீர்மவடிவப் படிகத் திரைகளால் ஆனவை. இத்திரையில் உள்ள ஒவ்வொரு புள்ளிகளையும் பின்னிருந்து இயக்கிக் கட்டுறுத்தும் மின்சுற்றுகள் மெல்லிய சீருறா சிலிக்கானால் செய்யப்பட்ட டிரான்சிஸ்டர்களால் ஆனவை. இவற்றை "ஆக்டிவ் மாட்ரிக்ஸ் தின் வில்ம் டிரான்சிஸ்டர்" என்று கூறுவார்கள். இடத்துக்கு இடம் எடுத்துச் செல்வதனால், தனியான மின்வாய் (மின்னாற்றல் தரும் ஒரு மின்கலம்) தேவைப்படும். இவை பெரும்பாலும் குறைந்த எடையில் அதிக மின்னாற்றல் தரக்கூடிய லித்தியம்-மின்மவணு வகை மின்கலங்களாக இருக்கின்றன. + +ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி என்னும் அமைப்பு குறைந்த விலையில் (சுமார் நூறு அமெரிக்க டாலர்கள்) உலகத்தில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் கிடைக்கும் வண்ணம் ஒரு கணினியை வடிவமைத்து வருகிறது. + +1970 களின் பிற்பகுதியில் சிறிய கணினிகள் அறிமுகம் செய்யப்பட்டதால் பிற்காலங்களில் அதனை வடிவமைக்கும் முயற்சி தீவிரம் அடைந்தது. +மடிக்கணினிகள் பல "பெயரும் உருவமும் செயலும்" பெற்றன. + +ஒரு பாரம்பரிய லேப்டாப் கணினி வடிவம் அதன் உள் தரப்பும் ஒரு மீது ஒரு திரை மற்றும் எதிர் ஒரு விசைப்பலகை மூலம், ஒரு கலாம் ஷெல் உள்ளது. அது மூடப்படும் போது திரை மற்றும் விசைப்பலகையை அணுக முடியாது. பொதுவாக அவர்கள் 13 முதல் 17 அங்குல விட்டம் உள்ள திரையைப் பயன்படுத்தினர். இது விண்டோஸ் 8.1 மற்றும் ஓஎசு X ஆகியவற்றை பயன்படுத்த முடியும். + +இது அளவில் சிறியதாகவும், குறைந்த எடை மற்றும் நீண்ட மின்கல ஆயுள் உடன் சந்தைப்படுத்தப்படும் மடிக்கணினி. ஒரு மின்கலத்தின் ஆயுள் அதிகபட்சமாக 10 மணிநேரம் நீடிக்கும். இதன் எடை 0.8 முதல் 2 கிலோ வரையில் இருக்கும். + +நெட்புக் கம்பியில்லா தகவல்தொடர்பு மற்றும் இணைய அணுகல் குறிப்பாக மலிவான, எடைகுறைவு, ஆற்றல் திறன் அதிகம். இது முதன் முதலில் 2008ஆம் ஆண்டு சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதன் விலை, எடை மக்களைக் கவர்ந்தது. லினக்சு பதிப்பே அதிக��ாக விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் 2012 இல் அனைத்து முக்கிய நெட்புக் உற்பத்தி நிறுவனங்களும் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளன. + +தற்போதைய மாற்றக்கூடிய மடிக்கணினிகள் விசைப்பலகைகளுடன் இணைந்து வருகின்றன. இதனை தனித்தனியாக பிரித்தும் இயக்கலாம். பெரும்பாலும் இவை தொடுதிரை அமைப்புடனே வருகின்றன. அப்பொழுது தான் இலகுவாக இருக்கும். + +இதுவே தற்பொழுது அதிகமாக சந்தையில் விற்பனை செய்யப்படும் லேப்டாப் ஆகும். இதனை அல்ரா புக் எனவும் கூறலாம். தொடுதிரை அமைப்பிலும் கூட இது வருகிறது. அடக்கமான மற்றும் நீண்ட நேரம் மின் அமைப்பை தாங்கும் மின்கலங்கள் உள்ளதால் இது சந்தையில் நல்ல விலையில் உள்ளது. இதில் தற்பொழுது விண்டோஸ் போட்டு தரப்படுகிறது. + +இந்த வகை கணினிகள் அதிக வேலைப்பாடுகளுக்காக உருவாக்கப்பட்டது. இது அளவில் சாதாரண லேப்டாப் அளவை விட பெரியதாக இருக்கும். எடையும் அதிகமாக இருக்கும். ஆனால் வேலைப்பாடு மேசைக் கணிப்பொறிக்கு இணையாக இருக்கும். இதன் திரை அளவு 15 அங்குலம் அல்லது அதற்கு மேலாக இருக்கும். இதன் மின்கலன் அளவும் பெரிதாக இருக்கும். விலையும் சற்று அதிகமாக இருக்கும். + +இது எல்லா வகையிலும் தாங்க கூடியது. காலநிலை, குளிர், வெப்பம் ஆகியவற்றை மற்ற எந்த மடிக்கணினியை விட அதிகமாக தாங்கக்கூடியது. இது வேலை அதிகமாக உள்ள பயனாளர்கள் உபயோகப்படுத்துவதாகும். + + + + +தொழிற்துறை வடிவமைப்பு + +தொழில்துறை உற்பத்திப் பொருட்களின் அழகியல், பயன்படுதன்மை ஆகிய அம்சங்களை மேம்படுத்த உதவும், பயன்படுகலையே தொழில்துறை வடிவமைப்பு (Industrial design) எனலாம். ஒரு தொழில்துறை வடிவமைப்பாளர், குறிப்பிட்ட உற்பத்திப்பொருளின் தோற்றம், அப் பொருளின் கூறுகள் அமையும் இடங்கள், நிறம், மேற்பரப்புத் தோற்றம், ஒலி, அப்பொருளின் பயன்படுதன்மை குறித்த அம்சங்கள், மனித சூழ்நிலைகளுக்குப் பொருத்தமாக இருக்கக்கூடிய அவற்றின் இயல்புகள் போன்றவற்றைத் தனது வடிவமைப்பில் கவனத்துக்கு எடுத்துக்கொள்வார். அத்துடன், அப்பொருளின் உற்பத்திச் செயல்முறை, மூலப்பொருட்கள் தெரிவு, பயனர்களுக்கு அப்பொருளை வழங்கும் முறை குறித்த அம்சங்களிலும் கவனம் செலுத்துவார். + +தொழில்துறை உற்பத்திப்பொருட்களின் உருவாக்கத்தில், வடிவமைப்பாளர்���ளை ஈடுபடுத்துவதனால், பொருளின் பயன்படுதன்மை மேம்பாடு அடைவதனாலும், உற்பத்திச் செலவு குறைவதனாலும், பொருட்கள் கவர்ச்சிகரமாக அமைவதனாலும், பொருள் அதிகப்படியான பெறுமதி உள்ளதாகின்றது. + + + + +ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில் + +ஆக்கூர் தான்தோன்றீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 46ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், கபிலதேவ நாயனார் இத்தலம் மீது பாடிய பாடல் பதினொராம் திருமுறையில் உள்ளது. இத்தலத்து இறைவனார் சுயம்பு மூர்த்தி. + +அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் அமைந்துள்ளது. செம்பொனார் கோயிலுக்கு ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. +சிறப்புலி நாயனார் அவதரித்த தலம். + +இராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே பலி பீடம், நந்தியை அடுத்து கருவறை உள்ளது. இடப்புறம் ஆயிரத்தொருவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன.பலிபீடம் நந்தியைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவர் கருவறைக்கு முன்பாக துவாரபாலகர்கள் உள்ளனர். திருச்சுற்றில் இரண்டு பாணலிங்கங்கள், விசாலாட்சி, விசுவநாதர், சிறப்புலிநாயனார், மகாலிங்கம், சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர், பரவையார், சுந்தரர், ச்ஙகிலியார், கணபதி, மகாலிங்கம், பாலமுருகன், அருணகிரிநாதர், மகாலிங்கம், கஜலட்சுமி, கைலாசநாதர், பர்வதவர்த்தினி, வாயுங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் காணலாம். ஆயிரத்தொருவர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் இங்கு உள்ளது. கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூரத்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, கோச்செங்கட்சோழன், துர்க்கை உள்ளனர். மூலவர் சன்னதிக்கு வலப்புறம் அம்மன் சன்னதி உள்ளது. அம்மன் சன்னதிக்கு முன்பாக நந்தியும் பலிபீடமும் உள்ளன. வெளிச்சுற்றில் விநாயகர், சரஸ்வதி, வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. சுப்பிரமணியர் சன்னதிக்கு முன்பாக மயிலும், பலிபீடமும் உளளன. + +சோழ மன்னனொருவன் ஆயிரம் அந்தணர்களுக்கு தினமும் உணவு அளிக்கும் போது, இறைவன் அந்த ஆயிரவர்களில் ஒருவராகக் காட்சி தந்ததால் ஆயிரத்துள் ஒருவர் என்றும் வழங்கப்படுகிறார். + +மாடக்கோயில் அமைப்பில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் தான்தோன்றியப��பர்,இறைவி வாள்நெடுங்கண்ணி. + + + + + +கம்பளை + +கம்பளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரசபை ஆகும். கம்பளை நகரச் சூழவுள்ள கிராமிய மற்றும் தோட்டப்புறப் பகுதிகள் உடாபலாத்தை பிரதேச சபையால் ஆட்சி செய்யப்படுகிறது. நகரசபை மற்றும் பிரதேசபை என்பன கூட்டாக உடாபலாத்தை பிரதேச செயலர் நிர்வாகப் பிரிவில் அடங்குகின்றன. இது மாவட்டத் தலைநகரான கண்டி நகரத்தில் இருந்து தெற்குத் திசையில் சுமார் 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இலங்கையின் நீளமான ஆறான மகாவலி கங்கை இந்நகரின் உடாகப் பாய்கிறது. இலங்கையின் பண்டைய இராசதானிகளில் ஒன்றான கம்பளை இராசதானி இந்நகரை மையமாகக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. + +கம்பளை மத்திய மலைநாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 567 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 3000-3500 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு நகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பானமையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். +இலங்கையின் தேயிலை பெருந்தொட்டங்கள் பெருவாரியாக அமைந்துள்ள பகுதிகளுக்கான பிரதான அணுகு பாதையில் மைந்துள்ளப்படியால் இங்கு தேயிலை சார்ந்த வணிகம் முக்கிய இடத்தை பெறுகிறது. நெற்பயிர்ச் செய்கை சிறிய அளவில் நடைபெற்றாலும் , மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. + +2006 உள்ளூராட்சிசபைத் தேர்தல் முடிவுகள்: கம்பளை நகரசபை + +மூலம்: + + + + + +வலிகாமம் + +வலிகாமம், இலங்கையின் வட முனையில் அமைந்துள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள ஒரு புவியியற் பிரிவாகும். அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இவற்றுள் முக்கியமானது குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் பிரிவாகும். இதன் வடக்கே இந்து மாகட��ும், மேற்கே தீவுப் பகுதிக்கும், குடாநாட்டுக்கும் இடையிலான கடல் பகுதியும், தெற்கில் யாழ்ப்பாணக் கடல்நீரேரியும், எல்லைகளாக அமைந்திருக்கத் தெற்கில் ஒருபகுதியில் தென்மராட்சிப் பிரிவும், கிழக்கில் வடமராட்சிப் பிரிவும் அமைந்துள்ளன. + +குடாநாட்டின் வளம் மிக்க பகுதிகள் பெரும்பாலும் வலிகாமப் பகுதியிலேயே அமைந்துள்ளன. யாழ்ப்பாண அரசுக் காலத்திலிருந்தே இப் பகுதி, ஒப்பீட்டளவில் அதிக மக்கள் தொகையைக் கொண்டதாகவும், மக்கள் அடர்ந்து வாழும் பகுதியாகவும் விளங்கி வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் முக்கிய நகரமாக விளங்கியதாகக் கருதப்படும் "கதிரைமலை" என அழைக்கப்படும் கந்தரோடையும், பிற்கால யாழ்ப்பாண அரசின் தலைநகரமான நல்லூரும், தற்கால வடமாகாணத்தின் தலைமை நகரமான யாழ்ப்பாணமும் வலிகாமப் பிரிவிலேயே உள்ளன. + + + + + +சதுர மைல் + +சதுர மைல் என்பது பரப்பளவைக் குறிக்கப் பயன்படும் "இம்பீரியல்" அளவை முறை சார்ந்த ஒரு அலகு ஆகும். ஒரு மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட ஒரு பகுதியின் பரப்பளவு (= நீளம் x அகலம்) ஒரு சதுர மைல் ஆகும். பெரிய நில மற்றும் நீர்ப் பரப்புகளை அளப்பதற்குப் பயன்படும் இந்த அலகு, மீட்டர் அளவைமுறையில் அண்ணளவாக 2.59 சதுர கிலோமீட்டருக்குச் சமமானது. + +"இம்பீரியல்" அளவை முறையில் சிறிய பரப்பளவுகளை அளப்பதற்குச் சதுர அங்குலம், சதுர அடி, சதுர யார் போன்ற அலகுகள் பயன்படுகின்றன. இவற்றைவிட அளவில் சிறிய நிலப் பரப்புகளையும், நீர்ப் பரப்புகளையும் அளப்பதற்குப் பரவலாக வழக்கில் உள்ள அலகுகளில் ஏக்கர், ஹெக்டேர் போன்றவை முக்கியமானவை. இவ்வலகுகளுடன் சதுர மைலுக்கு உள்ள தொடர்புகள் கீழுள்ள அட்டவணையில் தரப்படுகின்றன. + + + + +பிலிப்பு தெ மெல்லோ + +பிலிப்பு தெ மெல்லோ ("Philip de Melho") (ஏப்ரல் 27, 1723 - ஆகஸ்ட் 10, 1790) கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர். எபிரேயு, கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசம், தமிழ் ஆகிய மொழிகள் மட்டுமல்லாமல் வேதசாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர். + +கிறிஸ்தவக் குருவானவராக ஆகும் முன்னரே இவர் சத்திய வேதாகமத்தைத் தமிழிலே மொழிபெயர்க்க ஆரம்பித்திருந்தார். 1753 இல் இலங்கையின் வட மாகாணக் குரவராய் நியமனம் பெற்று யாழ்ப்பாணம் வந்தார். 1759 ���ம் ஆண்டு புதிய ஏற்பாடு முழுவதும் இலங்கையில் அச்சிடப்பட்டது. இவை மட்டுமல்லாமல் பழைய ஏற்பாட்டின் சில பாகங்களையும் மொழிபெயர்த்தார். அத்துடன் சூடாமணி நிகண்டு 2ஆம் தொகுதிக்கு அனுபந்தமாக 20 உவமைப் பாட்டுகளைப் பாடிச் சேர்த்தார். இவை "மெல்லோ பாதிரியாரால் செய்யப்பட்ட உவமைப் பாட்டுகள்" என்ற பெயரில் மானிப்பாயில் அச்சிடப்பட்ட நிகண்டுடன் சேர்ந்திருக்கின்றன. 12வது தொகுதியோடு நூறு பாட்டும் பின்னும் பல தொகுதிகளோடு வேறு சிலவும் பாடியிருக்கிறார். + + + + +நிலைக்குத்து + +நிலைக்குத்து (vertical) என்பது "மேல்", "கீழ்" இரண்டுடனும் பொருந்தி வருகின்ற ஒரு திசை சார்ந்த கருத்துருவாகும். அறிவியல் அடிப்படையில் நோக்கும்போது, ஒரு புள்ளியூடாகச் செல்லுகின்ற திசை, அவ்விடத்தில் உள்ள புவியீர்ப்பின் திசையின் போக்கில் இருக்குமானால் அது நிலைக்குத்துத் திசை ஆகும். + +நிலைக்குத்து என்ற சொல், அன்றாட நடவடிக்கைகளோடு ஒட்டியும், சாதாரணமாக நாங்கள் காணும் பொருட்கள், நிகழ்வுகள் தொடர்பிலும் மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கருத்துருவோடு ஒத்ததாக இருப்பினும், இதற்கான சரியான வரைவிலக்கணம் கூற முற்படுவது எளிமையானது அல்ல. நிலைக்குத்து என்பது தொடர்பான பின்வரும் குறிப்புக்கள் இதற்கான சரியான விளக்கத்தைப் பெறுவதற்கு உதவும். + + + + + + + + +வெள்ளவத்தை + +வெள்ளவத்தை கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் நகரின் ஒரு பகுதி ஆகும். இப்பகுதி கொழும்பு -06 என்று பாகுபடுத்தப்பட்டுள்ளது. இதன் அஞ்சற் குறியீடு 00600 ஆகும். இங்கே பெரும்பாலான வீடுகள் அடுக்கு மாடி வீடுகள் ஆகும். வெல்ல என்ற சிங்களச் சொல்லின் பொருள் மணல் என்பதாகும் வத்த எனபது தோட்டம் ஆகும். இது முன்னாளில் இப்பகுதியானது ஓரு மணற் தோட்டமாகக் காட்சியளித்தைக் குறிக்கின்றது. இங்கு வாழ்கின்ற சிங்களவர்களில் குறிப்பிடத்தக்க அளவானோர் சரளமாகத் தமிழில் உரையாடுவார்கள். + + + + + +குவாம் ஆந்தனி அப்பையா + +குவாம் ஆந்தனி அப்பையா ("Kwame Anthony Appiah"), லண்டனில் பிறந்து, கானாவில் வளர்ந்து, இங்கிலாந்தில் மேற்படிப்புப் படித்து, தற்போது அமெரிக்காவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேராசி��ியராக இருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தத்துவவியலாளர்களில் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். + +இவர் இதுவரைக்கும் எழுதியுள்ள புனைவுகள் - “In My Father’s House: Africa in the Philosophy of Culture”, “Colour Conscious”, “The Ethics of Identity” மற்றும் “Cosmopolitanism: Ethics in a Word of Strangers”. இதுபோக இவர் சில துப்பறியும் நாவல்களையும் எழுதியிருக்கிறாராம். ஆனால், அவை பெருமளவு வரவேற்பைப் பெறவில்லையென்று தெரிகிறது. + + + + + + +ஜோசப் எமானுவேல் அப்பையா + +ஜோசப் எமானுவேல் அப்பையா ("Joseph Emmanuel Appiah", 1918 - 1990) கானா நாட்டில் பிறந்தவர். தன்னுடைய மேற்படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருந்த பொழுது மேற்கு ஆப்பிரிக்க மாணவர்கள் குழுமத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு, அவருடைய சொந்த நாடான கானாவிலும் பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான வேலை செய்பவர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் முக்கியமானவர் நவீன கானாவை உருவாக்கி அதன் முதலாவது அதிபராகவும் இருந்த குவாம் ந்க்ருமாஹ்(Kwame Nkrumah). ஆனால், அப்பையா குடும்பத்தினர் கானாவுக்குத் திரும்பிச் சில நாட்களில் இவர்களது நட்பு உடைந்துபோயிற்று. 1957 ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இறங்கிய ஜோ அப்பையா, 1978 ஆம் ஆண்டுவரைக்கும் அரசாங்க மந்திரியாகவோ தூதுவராகவோ இந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் இவர் சிறைப்படுத்தவும் பட்டிருக்கிறார். பொதுவாழ்க்கையிலிருந்து விலகியபிறகு பிறந்த ஊருக்குத் திரும்பிய ஜோ அப்பையா, கடைசிவரை அவரின் இனத்தலைவராக இருந்திருக்கிறார். இவருடைய சுயசரிதையான “Joe Appiah: The Autobiolgraphy of an African Patriot”, ஆப்பிரிக்காவின் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கடைசி நாட்கள் மற்றும் பின் காலனித்துவ ஆப்பிரிக்காவைத் தெரிந்துகொள்ள மிகவும் உதவியான நூல் என்கிறார்கள். + + + + + + +பெக்கி கிரிப்ஸ் அப்பையா + +பெக்கி கிரிப்ஸ் அப்பையா (Peggy Cripps Appiah அல்லது Enid Margaret “Peggy” Cripps Appiah, 1921 - பெப்ரவரி 11, 2006), இங்கிலாந்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு இங்கிலாந்தின் நிதியமைச்சராகவிருந்த ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ்(Stafford Cripps). குடும்பத்தின் இரண்டு பக்கத்திலும் அரசியலில் ஈடுபாடு கொண்டவர்கள் நிறைந்திருந்தார்கள். அரசியல் ஈடுபாட்டோடு கிறிஸ்தவ சமயத்திலும் அக்குடும்பத்தாருக்குப் பெரும் ஈடுபாடு இருந்திருக்கிறது. இதனால், மேல் மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த பெக்கி அதற்கேற்றபடி கல்வி கற்றாலும் இங்கிலாந்துக்கு வெளியே இருக்கும் உலகத்தையும் அறிந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. பெக்கியும் அந்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். + +1938ஆம் ஆண்டு ஜமேய்க்காவில் பல மாதங்களைச் செலவழித்த பெக்கிக்கு தந்தையின் அரசியல் தொடர்புகள் காரணமாக ஜவஹர்லால் நேருவுடனும் இந்திரா காந்தியுடனும் தொடர்பு ஏற்பட்டது. 1939இல் இத்தாலிக்கு ஃப்ளோரன்ஸ் நகரின் கலை வரலாறு ஆகியவை பற்றி அறிந்துகொள்ளச் சென்றிருந்த பெக்கி இரண்டாம் உலகப்போர் தொடங்குமோ என்றிருந்தபடியால் நாடு திரும்ப நேரிடுகிறது. + +பின்னர் மாஸ்கோவில் பிரிட்டிஷ் தூதுவராகவிருந்த அவருடைய தந்தைக்கு உதவியாளராக இருந்திருக்கிறார். அப்போது பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் ஜேர்மனியின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் இருந்தபடியால் கனடா வந்து, கனேடிய ரயில்வே மூலம் கிழக்கிலிருந்து மேற்கே பயணம் செய்து, அங்கிருந்து ஜப்பான், சீனா ஆகிய நாடுகளைக் கடந்து சோவியத் யூனியனை ரயிலில் கடந்து மாஸ்கோ சென்றடைந்திருக்கிறார். அங்கிருந்த காலகட்டத்தில் அங்கே யூகோஸ்லாவியா, சீனா மற்றும் ஈரான் நாட்டைச் சேர்ந்த தூதுவர்களின் மகள்களோடு நெருங்கிய நட்பு ஏற்பட்டிருக்கிறது. + +1942இல் இந்தியாவிலிருந்து திரும்பிக்கொண்டிருந்த தந்தையோடு முதன் முறையாக ஆப்பிரிக்க கண்டத்துக்குச் செல்கிறார். இரண்டாம் உலகப்போரின் மீதிக்காலத்தில் செய்தித்துறையில் - முதலில் இந்தியா தொடர்பான அலுவலகத்திலும் பிறகு சோவியத் உறவுகளுக்கான துறையிலும் - வேலை செய்கிறார். இரண்டாம் உலகப்போரில் பெரிதும் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு, இங்கிலாந்தில் பணம் சேர்த்து உதவுகிறார் பெக்கியின் தாய். 1948இல், அவ்வாறு சேகரித்துக்கொடுத்த பணம், மக்களுக்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை நேரில் பார்த்துத் தெரிந்துகொள்வதற்காக அவரை சீனாவுக்கு வந்துபோகுமாறு சீன அரசாங்கம் கேட்கிறது. பெக்கியும் அவருடைய தாயும் சீனாவுக்குச் செல்கிறார்கள். இங்கிலாந்து திரும்பும் வழியில் இந்தியாவுக்கும் பர்மாவுக்கும் போகிறார்கள். + +சிறுவயதிலிருந்தே, ஐரோப்பாவுக்கு வெளியேயிருக்கும் நாடுகளான ஜமேய்க்கா, ரஷ்யா, ஈரான், சீனா, பர்மா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்குச் சென்று பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்தித்த அனுபவங்கள் பெக்கிக்கு பல புரிதல்களை ஏற்படுத்தியிருந்தது. இதன்காரணமாக மக்களி¨டையே ஒற்றுமை ஏற்படுத்த விழைந்த பெக்கி, Racial Unity என்ற நிறுவனத்தில் சேர்ந்து பணி புரியத்தொடங்கினார். இந்த ‘Racial Unity’ நிறுவனம், இங்கிலாந்துப் பிரதமராகவிருந்த Clement Atleeயின் சகோதரியால் தொடங்கப்பட்ட நிறுவனம். Racial Unityயில் வேலை செய்துகொண்டிருந்தபோதுதான் ஜோ அப்பையாவுடனான அறிமுகம் நடக்கிறது. அந்நேரம் ஜோ, மேற்கு ஆப்பிரிக்க மாணவர்கள் சங்கத்தின் தலைவராகவிருந்திருக்கிறார். நண்பர்களாக இருந்தவர்கள் திருமணம் செய்ய முடிவு செய்தார்கள். ஆனால், ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ் உடல்நலமில்லாமல் இருந்தபடியால் திருமணம் நடக்கத் தாமதமானது. இதனால், பெக்கியும் ஜோ அப்பையாவும் திருமணம் செய்யவிருந்த விதயம் பொதுவில் தெரிவிக்கப்படவில்லை. + +1952இல் சுவிட்ஸர்லாந்துக்கு சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்ட ஸ்டஃபோர்ட் கிரிப்ஸ் அங்கேயே மரணமடைந்தார். அப்போதைய கலாசார சூழலின்படி ஒரு வருடத்திற்கு திருமணம் செய்யக்கூடாது என்றிருந்தபடியால், பெக்கியை அப்போதைய கானா நாட்டைச் சுற்றிப் பார்த்துவரும்படி பெக்கியின் தாய் அனுப்பினார். கானா நாட்டையும் அதன் மக்களையும் பெக்கிக்கு மிகவும் பிடித்துப்போனது. அரசியல்ரீதியாகப் பிரபலமான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றபடியால், பெக்கியின் ஆப்பிரிக்க விஜயம்பற்றிப் பலருக்கும் ஆர்வமிருந்தது. பெக்கி இப்பயணத்தின்போது கானாவின் விடுதலைக்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்த பல முக்கிய தலைவர்களைச் சந்தித்தார். + +1953இல் பெக்கி கிரிப்ஸும் ஜோ அப்பையாவும் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் என்ற செய்தி இங்கிலாந்து முழுவதும், உலகம் முழுவதும் பரவியது. பலரையும் இச்செய்தி கோபத்துக்கு உள்ளாக்கியது. அப்போது தென்னாப்பிரிக்காவின் நீதியமைச்சராகவிருந்து அபார்தெயிட்(apartheid)ஐப் பரப்பிக்கொண்டிருந்த சார்லஸ் ஸ்வார்ட்(Charles Swart), இந்தத் திருமணம் அருவருக்கத்தக்கது என்றார். நைஜீரியாவின்(அப்போதைய வடக்கு ரொடீ்ஷியா) பத்திரிகையாளரொருவர், திருமணப் புகைப்படங்களைப் பார்த்தால் பன்றிக்கும் வயிற்றுக் கோளாறு வருமென்றார். (’turn the stomach of a pig’). இவர்களின் திருமணத்தில் மாப்பிள்ளைத்தோழனாக (Best Man) நின்றவர் மேற்கிந்தியாவைச் சேர்ந்த ஜோர்ஜ் பாட்மோர் (George Padmore). பிற்காலத்தில் லேபர் கட்சியில் தலைவராகவிருந்த மைக்கேல் ஃபூட் (Michael Foot), ஸ்டஃபோர்ட் கிரிப்ஸைத் தொடர்ந்து நிதியமைச்சராகவிருந்த ஹ்யூக் கெயிட்ஸ்கில் (Hugh Gaitskill), யூ.என்-இன் இந்தியத்தூதுவராகவிருந்த கிரிஷ்ண மேனன் மற்றும்பலர். ஜமேய்க்கன் பத்திரிகைச் செய்தியொன்று இப்படிச் சொல்கிறது - “top-hatted and frock-coated British aristocrats… ex-Cabinet Ministers… as well as several Tory and Socialist members of Parliament.” + +இங்கிலாந்தில் வாழ்க்கையைத் தொடங்கிய அப்பையா குடும்பம், மே 1954-இல் பிறந்த அவர்களது முதலாவது பிள்ளை குவாம் ஆந்தனி அப்பையாவுடன் நவம்பர் 1954-இல் கானா திரும்பியது. திருமணத்திற்குப்பிறகு கானாவைத் தனது சொந்த நாடாகக் கருதிய பெக்கி, அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு அங்கேயே தொடர்ந்து வாழ்ந்தார். ஜோ அப்பையா தன்னையொரு வக்கீலாகவும் அரசியல்வாதியாகவும் நிலைநாட்டிக்கொள்ள முயன்றுகொண்டிருக்கும்போது பெக்கி கானாவின் கலாசாரத்தைக் கற்பதில் ஈடுபட்டிருந்தார். கூடவே, தந்தைக்கு உதவியதுபோல ஜோ அப்பையாவிற்கும் பல விதங்களில் உதவியாகவிருந்தார். + +1950களிலிருந்து அடுத்துவந்த முப்பதாண்டுகளுக்கு அப்பையா குடும்பத்தின் நூலகம், அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்குத் திறந்துவிடப்பட்டது. சிறு குழந்தைகளிலிருந்து வளர்ந்த பிள்ளைகள் வரை அந்நூலகத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். இதைத்தவிர இன்னும் சில குழந்தைகளின் கல்வியிலும் பெக்கி கவனம் செலுத்தினார். + +1956-இல் ஜோ அப்பையா பாராளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அச்சமயத்தில் பெக்கி குமாசிக்கு (Kumasi) அருகிலிருந்த Church of St. George என்ற சிறிய தேவாலத்தில் சேர்ந்து மக்களுக்காக உழைக்கத் தொடங்கினார். கூடவே டாக்டர் அலெக்ஸ் கியெர்மாடெனுடன் (Alex Kyerematen) சேர்ந்த் கலாசார நிலையமொன்றை குமாசியில் தொடங்கினார். கூடவே சிறுவர்களுக்கான தங்குமிடம் மற்றும் அனாதைகளுக்கான தங்குமிடம் போன்றவற்றை மேம்படுத்தவும் பாடுபட்டார். பிற்காலத்தில் கானாவின் கண்தெரியாதவர்களுக்கான தேசிய அமைப்புக்கும் தன்னாலான உதவிகளைச் செய்துவந்தார். + +1961-இல் ஜோ அப்பையா, குவாம் ந்க்ருமாஹ்வின் (Kwame Nkrumah) உத்தரவின்பேரில் சிறைப்படுத்தப்பட்டபோதும் நாட்டை வி���்டுச் செல்ல மறுத்தார். அவரை, நாடு கடத்துவதற்கான ஆணை, பிரிட்டிஷ் பத்திரிகைகள் இதைப்பற்றி ஆர்வத்தோடு பேசத்தொடங்கியதும் கைவிடப்பட்டது. கணவன் சிறையில், மகன் சுகயீனமாக மருத்துவமனையில் என்ற நிலையில் பெக்கி மனதாலும் உடல்ரீதியாகவும் பலவித துன்பங்களுக்கு ஆளானார். அச்சமயத்தில், அவர் கர்ப்பமாகவிருந்ததும் ஒரு காரணம். 1962-இல் ஜோ அப்பையாவை சிறையில் சந்தித்த பெக்கியின் தாயார் லேடி கிரிப்ஸ், சுகயீனமாகவிருந்த பேரனுடன் இங்கிலாந்து திரும்பினார். கிறிஸ்துமஸ் 1962க்கு முன்னர் ஜோ அப்பையா சிறையிலிருந்த் விடுவிக்கப்பட்டதும் வக்கீல் தொழிலுக்குத் திரும்பினார். 1966-இல் குவாம் ந்க்ருமாஹ்வின் (Kwame Nkrumah) ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்த நாட்களில் பிள்ளைகளைனவரும் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல, கணவர் மறுபடியும் அரசியலில் ஈடுபட பெக்கி குமாசியில் தங்கி தன்னுடைய சமூக சேவைகளைத் தொடர்ந்தார். + +இதற்கிடையில், பெக்கி அவரது கணவர், குடும்பத்தினர் மற்றும் சந்தித்த குழந்தைகள் மூலமாக நிறைய விதயங்களைத் தெரிந்துகொண்டிருந்தார். அகான் (Akan) ஓவியங்கள் மற்றும் நாட்டார் வழக்கியல், சொலவடைகள், அனான்சி (Ananse) கதைகள் ஆகியன இவற்றிலடங்கும். 1960களின் இடைப்பட்ட காலத்திலிருந்து அனான்சி (Ananse) கதைகளைச் சிறுவர்களுக்காக எழுதி வெளியிடத் தொடங்கினார். இக்கதைகள் ஆபிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆங்கிலம் தெரிந்த உலக நாட்டு மக்களிடையே பரவத் தொடங்கியது. கூடவே கானா நாட்டுக் குழந்தைகள் ஆங்கிலம் கற்க வசதியாகச் சில நூல்களையும் வெளியிட்டார். இதுபோக குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமென்று சில நாவல்களையும் வெளியிட்டார். கவிதைகள் சிலவற்றை இரண்டு தொகுதிகளாகவும் வெளியிட்டிருக்கிறார். இவரது உழைப்பில் மிகவும் சிறந்தது, மகன் குவாம் ஆந்தனி அப்பையாவுடன் சேர்ந்து 2002இல் வெளியிட்ட ‘பு மெ பெ: அகான் சொலவடைகள்’ (Bu Me Be: Proverbs of the Akan) என்ற தொகுப்புத்தான். ஏறக்குறைய ஐம்பதாண்டுகளாகச் சேர்த்த ஏழாயிரத்துக்கும் அதிகமான சொலவடைகளின் தொகுப்பு அது. + +199-இல் ஜோ அப்பையா புற்று நோயால் இறந்து போனார். எப்போது நாடு திரும்பப் போகிறாய் என்று பெக்கியிடம் யாராவது கேட்டால், தான் தன்னுடைய நாட்டில்/வீட்டில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டார். கானாவிலேயே தொடர்ந்து தங்கி, அ��ருடைய சமூகத் தொண்டுகளையும் அகான் நாட்டார் வழக்கியல்களைத் தெரிந்துகொள்வதிலும் தன்னுடைய நேரத்தைச் செலவழித்தார். 1996-இல் இங்கிலாந்து மகாராணி இவருக்கு MBE பட்டத்தை ‘இங்கிலாந்துக்கும் கானாவுக்குமான தொடர்புகளைப்பேணியதற்கும் சமூக சேவைகளுக்காகவும்’ கொடுத்தது. + +ஆன்டி பெக்கி (Auntie Peggy) என்று எல்லோராலும் நேசிக்கப்பட்ட இவர் பெப்ரவரி 11, 2006 அன்று குமாசியில் இறந்துபோனார். + + + + + + + +தர்மசிறி பண்டாரநாயக்க + +தனது கலையுலக வாழ்வை நாடகங்களில், திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் ஆரம்பித்தவரும் திரைப்பட-நாடக நெறியாளராக அறியப்பட்டவருமான தர்மசிறி பண்டாரநாயக்க (Dharmasiri Bandaranayake : Drama & Film Director Script writer Producer) இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் வேவிற்ற என்ற இடத்தில் 06.10.1949 இல் பிறந்தார். இவரது surname நீலப் பெருமாள் (Kalukapuge) + +இவர் தானே எழுதி இயக்கிய முதல் நாடகமான ‘ஏகா அதிபதி’ 1976 இலிருந்து இன்று வரை 1400 இற்கும் மேற்பட்ட தடவைகள் மேடையேற்றப்பட்டுள்ளது. பிறமொழியல் அமைந்த நாடகங்களின் சிங்கள வடிவத்தினை அனேக தடவைகள் மேடையெற்றி தேசிய நாடகவிழாவில் சிறந்த நாடக இயக்குனர் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது இறுதியாக வெளிவந்த திரைப்படமான ‘பவதுக்க’ - பௌத்த நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகள் - யுத்தம் குறித்து, அனைத்துமே விதிப்படி என்ற பௌத்த சித்தாந்தத்தின் மீது கேள்வியை எழுப்பியிருந்தது. + +A-9 நெடுஞ்சாலை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம், வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கு விஜயம் செய்து இதுவரை 4 சிங்களத் திரைப்பட விழாக்களை நண்பர்களின் உதவியுடன் நடாத்தியுள்ளதுடன் அங்கு சிங்களநாடகங்களையும் மேடையேற்றியுள்ளார். வட-கிழக்கு கலைஞர்களை, மக்களைச் சந்தித்து தமிழர்களின் பாரம்பரியக் கலைகளான நாட்டுக்கூத்து , வில்லுப்பாட்டு, கிராமிய-நாட்டுப்பாடல்கள், இசை, நடனம் இவற்றைப் பார்வையிட்டும் கேட்டும் வியப்படைந்து வடமோடி, தென்மோடி நாட்டுக்கூத்தில் நாடகத்திற்குரிய மிகவும் வலுவான கூறுகள் (strong theatrical elements) இருப்பதையும் நாட்டார் இசையிலும் நடனத்திலும் வலுமிக்க நாடகத்திற்குரிய உருவங்கள் (strong theatrical images) இருப்பதையும் இனம் கண்டு அவற்றை விடியோ செய்ய ஆரம்பித்தா��். பேராசிரியர் மௌனகுருவின் இராவணேசன் நாட்டக்கூத்தையும் வட்டுக்கோட்டை நாட்டுக்கூத்தான தர்ம யுத்தத்தையும் விவரணப்படமாக்கி ஆங்கில உபதலைப்புக்களுடன் னஎன வடிவில் ஆவணப்படுத்தி தமிழர்கள் செய்திருக்க வேண்டிய ஒரு அரும்பணியை ஆற்றியுள்ளார். + +தர்மசிறி இந்தியாவில் நடைபெற்ற இராமாயண நாட்டுக்கூத்துத் திருவிழாவிற்குச் சென்று பார்வையிட்டுள்ளதுடன் கேரளா, தமிழ்நாடு சென்று கலைஞர்களுடன் உரையாடி அங்குள்ள கூத்துவகைகளைப் பற்றி அறிந்ததன் வாயிலாக கதகளியையும் சிங்கள நடனத்தையும் இணைத்து இராமயணத்தை சிங்கள மொழியில் தயாரித்துள்ளார். + +சிங்கள நடனவகையிலும் இந்தியாவில் உள்ள நடனவகையிலும் காணப்படும் ஒத்த தன்மைகளை இணைத்து ஆசியாவிற்குரிய பாரம்பரியத்தகை; கொண்ட கலை படைப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். + + + + + +தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் + +தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து 2004 இல் பிரிந்து சென்ற கேணல் கருணாவினால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு. + +எஇந்த அமைப்பானது மட்டக்களப்பில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ளது. இவ்வமைப்பிற்கு வவுனியா, திருகோணமலை ஆகிய இடங்களில் நகரப்பகுதியில் முகாம்கள் உள்ளன இது தவிர ஓர் அரசியல் அலுவலகத்தை கொழும்பு கிருலப்பனை அந்தரவத்தைப் பகுதியில் அலுவலகம் ஒன்றையும் கொண்டுள்ளனர். பொலநறுவையில் இவர்கள் இலங்கை இராணுவத்தின் வெலிகந்தவில் இலங்கை அரசின் 23 ஆம் படையணியின் ஆதரவுடன் ஒரு பயிற்சி முகாமையும் வைத்துள்ளனர். + +தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பிற்காக மட்டக்களப்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் இருந்து 142 இற்கும் மேற்பட்ட ஏழைச்சிறார்களைப் பலவந்தாகக் கடத்தி வந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் . இதை அதன் தலைவரான கருணாவும் இலங்கை அரச பாதுகாப்புச் செயலாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் மறுத்துள்ளபோதும் ஐக்கிய நாடுகளின் தலைவரான பான் கீ மூன் சிறுவர்களைச் போரிற்காகச் சேர்பதைக் கைவிடுமாறு இலங்கை அரசையும் விடுதலைப் புலிகளையும் கேட்டுள்ளார் . ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் அமைப்பானது கருணா குழுவினர் தம்மால் சேர்க்கப்பட்ட சிறார்களை விடுவிப்பதில் அக்கறை காட்டுவதில்லை என��று குற்றம் சாட்டியுள்ளனர். + + + + + +லினோலியம் தளமுடிப்பு + +கட்டிடங்களில், தளங்களுக்கான முடிப்புப் பொருட்களில் லினோலியம் தளமுடிப்புகள் நூற்றாண்டுகளுக்கு மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. புதுப்பிக்கக்கூடிய (renewable) வளங்களான இயற்கை உற்பத்திப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவது இதன் சிறப்பாகும். இதன் மூலப்பொருள்களுள் தாவரம் ஒன்றிலிருந்து உற்பத்தி செய்யப்படும் "லின்சீட் எண்ணெய்" முக்கியமானதாகும். இந்த எண்ணெயுடன், மரத்தூள், "கார்க்" தூள், நிறத்தூள்கள் என்பவற்றைச் சேர்த்து லினோலியம் தயாரிக்கப்படுகின்றது. + +லினோலியம் தளமுடிப்புக்காக இரண்டு வடிவங்களில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஒன்று, பொதுவாக இரண்டு மீட்டர் வரை அகலம் கொண்ட விரிப்புக்களாகச் சுருள் வடிவில் சந்தைப்படுத்தப்படுகின்றது. இன்னொன்று, 500 x 500 மில்லிமீட்டர், 600 x 600 மில்லிமீட்டர் போன்ற அளவுகளில் தள ஓடுகள் வடிவில் கிடைக்கின்றன. + +லினோலியம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது. 40 வருடங்கள் வரை தளமுடிப்புகளில் பயன்படக்கூடியது என்று கூறப்படுகின்றது. இதனால் இது அதிக மக்கள் நடமாடக்கூடிய இடங்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது. அத்துடன் லினோலியம் மீள்தன்மை (resilient) கொண்டதாக இருப்பதுடன் வளைந்து கொடுக்கக்கூடிய தன்மையும் கொண்டது. வைனைல் தளமுடிப்புக்கள் போன்ற செயற்கைப் பொருட்களைப் போலன்றி, இது மட்கிப் போகக்கூடியது என்பதால் இதன் கழிவுகளால் சூழல் அசுத்தப் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. இது இலகுவில் எரியாது, நீர் ஊடுசெல்ல விடாது, நிலைமின்னேற்றத்தை உருவாக்காது என்பனவும் இதன் சாதகமான இயல்புகளாகும். + +லினோலியம் இயற்கையாகவே பக்டீரியா எதிர்ப்புத் தன்மை கொண்டது என்பதால், வேறு சில உற்பத்திப் பொருட்களைப் போல, தனியான வேதியியல் பக்டீரியா எதிர்ப்புப் பொருட்களைச் சேர்க்கவேண்டிய தேவை இல்லை. இதனால், கட்டிடங்களுள், காற்றுத் தூய்மையைப் பேணும் முயற்சிக்கு லினோலியம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. எனினும், இது தொடர்பில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய விடயம் ஒன்று உண்டு. லினோலியம் தள விரிப்புக்களையோ அல்லது தள ஓடுகளையோ ஒட்டுவதற்குப் பயன்படக்கூடிய ஒட்டுபொருட்களில் பல, காற்றிற் கலக்���க்கூடிய வேதிப்பொருட்களைக் கொண்டிருக்கின்றன. இதனால் ஒட்டுபொருட்களைத் தெரிவு செய்யும்போது உரிய கவனம் எடுக்கவேண்டியுள்ளது. + +பல சாதகமான இயல்புகளைக் கொண்டுள்ள லினோலியத்தின் பயன்பாட்டுக்குச் சில வரையறைகளும் உண்டு. இதனை நீர்ப்பற்றுக் கொண்ட இடங்களில் பயன்படுத்த முடியாது. இதனால் காங்கிறீற்றுத் தளங்கள் நன்றாகக் காய்ந்தபின்னரே லினோலியத்தைப் பொருத்தவேண்டும். அத்துடன், நீர் மேலேறுவதற்கு வாய்ப்புள்ள நிலக்கீழ் அறைகளிலும் இதனைப் பயன்படுத்த முடியாது. அத்துடன் லினோலியம், வலுவான அமிலம், காரம் (alkali) மற்றும் பெற்றோலியப் பொருட்களால் தாக்குப்படக்கூடியது. ஆகவே, அத்தகைய பொருட்களின் பயன்பாடு இருக்ககூடிய இடங்களில் இது பொருத்தமற்றதாகும். + + + + +ஆர்ட் புச்வால்ட் + +ஆர்ட் புச்வால்ட் (ஆர்த்தர் புச்வால்ட், "Arthur Buchwald", அக்டோபர் 20, 1925 - ஜனவரி 17, 2007) மிகவும் பிரபலமான அமெரிக்க நகைச்சுவையாளர்களில் ஒருவர். த வாஷிங்டன் போஸ்ட் ("The Washington Post") பத்திரிகையில் இவருடைய பத்தி பல வருடங்களாக வந்தவொன்று. இந்தப் பத்தி, உலகெங்கிலுமுள்ள பல பத்திரிகைகளில் மறுபிரசுரம் கண்டன. அவ்வாறு வெளியிட்ட நாளிதழ்களில் சென்னையிலிருந்து வெளியாகும் 'த ஹிண்டு'வும் ஒன்று. இவருடைய பத்தி எழுத்துகளில் அரசியல் நையாண்டி மற்றும் கருத்துகள் அதிக இடம் பிடித்தன. சொந்தக் கருத்துகளை அவருடைய பத்திகளில் காண இயலாது. 1982-ஆம் ஆண்டு சிறந்த கருத்துப் பத்திக்கான புலிட்சர் விருது பெற்றார். 1986-ஆம் ஆண்டு American Academy and Institute of Arts and Lettersக்குத் தேர்ந்தெடுக்கபட்டார். + +இவர் 1950களில் பாரிஸிலிருந்து எழுதிய பத்திகள் மிகவும் முக்கியமானவை. அங்கே, 'த ஹெரால்ட் ட்ரிப்யூன்' பத்திரிகைக்கு பத்திகள் எழுதினார். + +பெப்ரவரி 2006-இல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிறுநீரகங்கள் செயலிழந்து வந்த நிலையிலும் டயாலிஸிஸ் செய்ய மறுத்துவிட்டார். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக, இவருடைய உடல்நிலை மோசமடையவில்லை. ஜூன் 2006 இல் மருத்துவமனையை விட்டு வெளியேறியவர், தன்னுடைய சிறுநீரகங்கள் வேலை செய்வதாகக் குறிப்பிட்டவர், மார்த்தா'ஸ் வைன்யாட்டில் ("Martha's Vineyard") இருக்கும் சொந்த வீட்டில் எஞ்சிய நாட்களைக் கழிக்க விரும்பினார். அதன்படி ஜூலை 2006 அவருடைய கோடைகால வீட்டிற்குத் திரும்பினார். "அந்த வீட்டிற்குத் திரும்பி வருவேன் என்று நான் நினைக்கவேயில்லை" என்றும் அவர் அச்சமயத்தில் குறிப்பிட்டார். அந்தக் கோடைகால வீட்டிலிருந்த காலத்தில் 'Too Soon to Say Goodbye' என்ற புத்தகத்தை எழுதி முடித்தார். அப்புத்தகத்தில், மருத்துவமனையில் அவர் இருந்த ஐந்து மாத அனுபவங்கள் மற்றும் அவருடைய நண்பர்கள், உற்றார் உறவினர்கள் எழுதிய அஞ்சலிகள் சேர்க்கப்பட்டன. + +ஆர்ட் புச்வால்ட் ஜனவரி 17, 2007 அன்று சிறுநீரக கோளாறினால் வாஷிங்டன் டி.சி.யில் மரணமடைந்தார். + + + + +ஜேம்ஸ் ப்ரௌன் + +ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் ("James Joseph Brown", மே 3, 1933 - டிசம்பர் 25, 2006) பலராலும் "சோல் இசையில் தந்தை" (The Godfather of Soul) என்றழைக்கப்பட்டார். "கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன்" (The Hardest Working Man in Show Business) என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். பலத்த குரலில் பாடும் பழக்கம், வெறிபிடித்த் ஆட்டம் மற்றும் தனித்தன்மையுள்ள தாளக்கட்டுக்குச் சொந்தக்காரர். + +பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். Gospel இசையெனப்படும் தேவாலயங்களில் பாடும் இசை மற்றும் rhythm and blues இசை வகைகளிலிருந்து Soul இசை மற்றும் funk இசை உருவாக மிகப்பெரும் சக்தியாகவிருந்தவர் ஜேம்ஸ் ப்ரௌன். இதுபோக, ராக் (rock), ஜாஸ் (Jazz), டிஸ்கோ (disco), டான்ஸ் (dance), இலத்திரனிசை (electronic music), ரெகே (reggae), ஆஃப்ரோ-பீட் (afrobeat), ஹிப் ஹொப் (hip hop) போன்ற இசை முறைகளிலும் இவரது சுவட்டைப் பார்க்கமுடியும். + + + + +சோலை சுந்தரபெருமாள் + +சோலை சுந்தரபெருமாள்- Solai Sundaraperumal (English) , தன் தொட்டில் பூமியான தஞ்சை மண்ணின் நேசத்தை படைப்புகளில் வெளிப்படுத்தும் தேர்ந்த படைப்பாளி. விவசாயம் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையை, வலியை, கொண்டாட்டத்தை மாறாத வட்டார மொழியில் எழுதிவரும் இவர் ஒரு பள்ளி ஆசிரியர். இவரது ‘செந்நெல்’ நாவல் இலக்கிய விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. தற்போது திருவாரூருக்கு அருகில் உள்ள காவனூர் என்ற சிறு கிராமத்தில் வசிக்கிறார். + + + +http://solaivandal.blogspot.in/ Blog Spot + + + + +போல் எல்யூவார் + +போல் எல்யூவார் (Paul Eluard) என்ற புனைபெயரில் எழுதிய யூஜீன் க்ரிண்டெல் (Eugene Grindel, டிசம்பர் 14, 1895 - நவம்பர் 18, 1952). ஒரு பிரெஞ்சுக் கவிஞர். பாரீஸுக்கு மிக அண்மையிலிருக்கும் ஸா-டெனி (Saint-Denis) என்ற ஊரில் பிறந்தவர். Surrealist கோட்பாட்டில் ஆர்வமுள்ளவர். பிறகு, பிரெஞ்சு கம்யூனிசக் கட்சியில் சேர்ந்தார். இவரது அரசியல் சார்ந்த எழுத்துகளில் ஸ்டாலினைப் புகழ்ந்து எழுதியிருக்கிறார். + + + + + +தி. ஜ. ரங்கநாதன் + +தி.ஜ.ர எனப் பரவலாக அறியப்படும் திங்களூர் ஜகத்ரட்சக ரங்கநாதன் (1901-1974) ஒரு தமிழ் எழுத்தாளர், இதழாளர். தமிழ்க் குழந்தை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவர். + +இவர் 1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவையாற்றுக்கு அருகிலுள்ள திங்களூரில் பிறந்தார். நான்காம் வகுப்பு வரைதான் படித்தார். அறிவியலிலும் கணிதத்திலும் ஆர்வம் கொண்டு அவற்றைப் புரிந்துகொள்வதற்காகவே ஆங்கிலம் படித்தார். கர்ணமாக வேலை பார்த்த தன் தந்தையுடன் பல ஊர்களுக்குச் சென்றார். நில அளவையில் பயிற்சி பெற்று சிலகாலம் கர்ணமாக வேலை பார்த்தார். திண்ணைப் பள்ளி ஆசிரியர், வக்கீல் குமாஸ்தா, மளிகைக்கடைச் சிற்றாள் என பல வேலைகள் பார்த்தார். அவருக்கு 14 வயதில் திருமணம் நடந்தது. மனைவியின் பெயர் சுந்தரவல்லி. 1916 இல் அவர் படித்த ’ஐரோப்பிய சரித்திரம்’ என்ற தமிழ் நூலின் ஐந்து பாகங்களும் தான் தனக்குத் தலைமை ஆசான் என அவர் குறிப்பிட்டுள்ளார். + +அவர் எழுதிய முதல் கட்டுரை ஆனந்தபோதினி இதழிலும் கவிதை ஸ்வராஜ்யா இதழிலும் 1916 ஆம் ஆண்டில் வெளிவந்தன. ’சமரபோதினி’ இதழில் துணையாசிரியராகப் பணியாற்றத் தொடங்கி, ஊழியன், சுதந்திரச் சங்கு, ஜயபாரதி, ஹனுமான், சக்தி, மஞ்சரி, பாப்பா ஆகிய இதழ்களில் பணியாற்றினார். +‘மஞ்சரி’ இதழ் ஆரம்பித்ததிலிருந்து அதன் ஆசிரியராக இருந்தவர். அது ஆரம்பிக்கும்போது பிறந்த தன் மகளுக்கு ‘மஞ்சரி’ என்றே பெயர் வைத்தார். ‘பாப்பா’ இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். + +‘நொண்டிக்கிளி’, ‘காளி தரிசனம்’ , ‘சந்தனக் காவடி’ போன்ற தொகுதிகள். முதலாவது தலைப்பு உருக்கமான கதை இரண்டாவதும் மூன்றாவதும் குறும்பானவை. ‘எப்படி எழுதினேன்’ புத்தகத்தில் இவற்றைப் பற்றி எழுதி இருக்கிறார். + +தமிழ் இலக்கியத்தில் ஈ.வீ.லூகாஸ், கார்டினர், மாக்ஸ் பீர்போம் போன்ற பல கட்டுரையாளர்களையும் தோற்கடிக்கும் முறையில் எழுதியவர். கட்டுரைத் துறைக்கு ஒரு முன்னோடி.பல தொகுதிகள் + +‘குமாவூன் புலிகள்’ வெண்டல் வில்கியின் ‘ஒரே உலகம்’ லூயி கராலின் அலீஸ் (அலமுவின் அதிசய உலகம் என்ற தலைப்பில்) இன்னும் பல. + +தி.ஜ.ர.வின் படைப்புகளை தமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை 2006 - 7 ஆம் நிதியாண்டில் 600 ஆயிரம் ரூபாயை அவர்தம் கால்வழியினருக்குப் பரிவுத்தொகையாக வழங்கி நாட்டுடைமை ஆக்கியது. + +தினமணி, பார்த்த நாள்:அக்டோபர் 10, 2012 + + + + + +ரொறன்ரோ தமிழியல் மாநாடு + +ரொறன்ரோ தமிழியல் மாநாடு என்பது 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டு தோறும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தெற்காசிவியல் நடுவத்தினாலும் (Center for South Asian Studies) உலக நடப்புகளுக்கான மொங் பள்ளியாலும் (Monk School of Global Affirs) ஒழுங்கு செய்யப்படும் தமிழியல் மாநாடு ஆகும். பொதுவாக மூன்று நாட்கள் ஒரு மையக் கருவை முன்வைத்து மாநாடு நடைபெறும். இந்த மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் பெரும்பான்மைக் ஆய்வுக் கட்டுரைகளும் நிகழ்வுகளும் ஆங்கிலத்தில் அமைகின்றன. + +வட அமெரிக்கா, ஐரோப்பா, தென்னாசியா, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைச் சேர்ந்த தமிழியல் புலமையாளர்களை இந்த மாநாடு ஒன்றிணைக்கிறது. மானுடவியல், தொல்லியல், புலம்பெயர் கல்வி, வரலாறு, மொழியியல், இலக்கியம், அரசியல், உளவியல், பொது நலம், சமயம், சமூகவியல், அரசறிவியல், அரங்கக் கல்வி ஆகிய பல துறைகளைச் சேர்ந்த 5பேராளர்கள் மாநாட்டில் கலந்து கொள்வது வழமை. + + + + + +எம். கண்ணன் + +எம்.கண்ணன் பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனத்தில் இந்தியவியல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றுகின்றார். 1991ல் இருந்து இந்த நிறுவனத்தின் தற்காலத் தமிழ் இலக்கியம் குறித்த ஆய்வுகளுக்குப் பொறுப்பாளராக இருக்கின்றார். தமிழில் தலித் இலக்கியம் பற்றி பல கட்டுரை எழுதியுள்ளார். ஈழத்துக் கவிஞர் சு.வில்வரத்தினத்தின் கவிதைத் தொகுதிக்கு முக்கியமான அறிமுகக் கட்டுரை எழுதியிருக்கிறார். க்ரியாவின் தமிழகராதித் திட்டத்தில் நான்கு ஆண்டுகள் பணிபுரிந்தவர். + + + + +வ. கீதா + +வ.கீதா இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், மொழி பெயர்ப்பாளர், சமூக வரலாற்று ஆசிரியர். 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்தியப் பெண���கள் இயக்கத்தில் பணியாற்றி வருபவர். தமிழிலும் ஆங்கிலத்திலுமாக 10 நூல்கள் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்ப்புக்கள் செய்துள்ளார். தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு இவர் மொழிபெயர்த்த நூல்களுள் பெருமாள் முருகனின் நாவல்கள் இரண்டு ஆகும். அவை: seasons of the palm (தமிழில் -கூளமாதாரி), current show (தமிழில் - நிழல்முற்றம்). + +எழுத்தாளர் எஸ். வி. ராஜதுரையுடன் இணைந்து பெரியார்: சுயமரியாதை, சமதர்மம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார். அவருடன் இணைந்து இவர் தொகுத்த Revolt இதழின் தொகுப்பை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. + + + + +பொ. ரகுபதி + +பொ. ரகுபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொல்லியல், மானுடவியல், சமூகவியல், தமிழ் போன்ற துறைகளில் கற்பித்து வருகிறார். இதற்கு முன்பு ஒரிசாவில் உள்ள உத்கல் பல்கலைக்கழகத்தில் தென்னாசியவியலில் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரின் ஆய்வுத்துறைகள்: தென்னாசிய வரலாறு, தொல்லியல், கல்வெட்டியல், பண்பாட்டியல், தமிழியல், சோதிடம் போன்றனவாகும். ஆங்கிலத்திலும் தமிழிலும் 15 நூல்கள் எழுதியுள்ளார். Early settlements in Jaffna என்ற ஆய்வு நூல், தென்னாசியத் தொல்லியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. + + + + + +சுரேஷ் கனகராஜா + +சுரேஷ் கனகராஜா ("Suresh A Canagarajah") ஆரம்பத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறையில் விரிவுரையாளராகப் பணிபுரிந்தவர். தற்போது நியூ யார்க்கின் சிட்டி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத் துறையில் பேராசிரியராக இருக்கிறார். அவருடைய ஆய்வுத் துறைகள்: இருமொழிப் பயன்பாடு, கற்பித்தலியல், தமிழ் இலக்கியம். ஆங்கிலத்தில் நான்கு நுìல்கள் எழுதியுள்ளார். அவருடைய நுìல் ஒன்றுக்கு உயர்ந்த விருதொன்று வழங்கப்பட்டிருக்கிறது. + + + + + +இ. அண்ணாமலை + +இ.அண்ணாமலை (பி. 1938) இந்திய மொழிகளுக்கான மைய நிறுவனத்தில் (CIIL) இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்பொழுது அமெரிக்காவில் யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழ் மொழி, மொழியியல், கல்வித் துறையில் தமிழ் மொழியின் பயன்பாடு போன்ற துறைகளில் பல நூல்களை எழுதியுள்ளார். "க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி", "தற்கால மரபுத்தொடர் அகராதி" போன்ற நூல்களின் உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்தவர். ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரான இவர் ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா, யப்பான், நெதர்லாந்து போன்ற நாடுகளில் வருகைப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். + + + + + + +ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா + +எஸ். ஜே. தம்பையா என அழைக்கப்படும் ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா ("Stanley Jeyaraja Tambiah", சனவரி 16, 1929 - சனவரி 19, 2014 என்பவர் சமூக மானிடவியலாளரும் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் "ஓய்வுபெற்ற" பேராசிரியரும் ஆவார். இவரது ஆய்வுத் துறைகள்: இனத்துவம், இனமுரண்பாடுகள், பௌத்தம், வன்முறையின் மானிடவியல், இனக்குழுமங்களின் வரலாறு, தாய்லாந்து, இலங்கை, மற்றும் தமிழர் போன்றன. இவர் ஆசியப் படிப்புகளுக்கான அமைப்பின் ("Association for Asian Studies") முன்னாள் தலைவருமாவார். மானிடவியல் ஆய்வுகளுக்காக இவருக்கு 1997ம் ஆண்டுக்கான பல்சான் பரிசு வழங்கப்பட்டது. + +ஸ்டான்லி தம்பையா இலங்கையில் யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ தமிழ்க் குடும்பத்தில் சார்ல்சு ராசக்கோன், எலீசா செலானா தம்பையா ஆகியோருக்கு ஐந்தாவது மகனாகப் பிறந்தார். கொழும்பு புனித தோமையர் கல்லூரியில் பள்ளிப் படிப்பை முடித்து பின்னர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப் படிப்பைத் தொடர்ந்தார். 1951 இல் இளங்கலைப் பட்டம் பெற்று நியூ யோர்க் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின்படிப்பைத் தொடர்ந்தார். அங்கு 1954 இல் முடித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார். + +படிப்பை முடித்துக் கொண்டு 1955 இல் இலங்கை திரும்பி இலங்கைப் பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறையில் விரிவுரையாளராக 1960 வரையில் பணியாற்றினார். பின்னர் சில காலம் யுனெஸ்கோவின் அனுசரனையில் தாய்லாந்து, பாங்கொக்கில் இயங்கும் "Bangkok Institute for Child Studies" என்ற ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார். அதன் பின்னர் 1963 முதல் 1972 வரை கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், 1973 முதல் 1976 வரை சிக்காகோ பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றினார். 1976 இல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் இணைந்தார். + + + +பேராசிரியர் எஸ். ஜே. தம்பையா நீண்ட சுகவீனத்தை அடுத்து 2014 சனவரி 19 இல் ஐக்கிய அமெரிக்காவில் மாசச்சூசெட்ஸ், கேம்பிரிட்ச் நகரில் காலமானார். இவருக்கு மனைவி மேரி. எச். தம்பையா, மற்றும் ஜொனத்தன், மேத்தியூ ஆகிய இரு மகன்மார் உள்ளனர். + + + + + +ஓவியர் ஜீவன் + +ஓவியர் ஜீவன் போரும் வன்முறையும் ஏற்படுத்தும் தீவிர உணர்வுப் பதிவுகளைப் பிரதிபலிக்கும் ஓவியங்களை வரைபவர். இவர் இலங்கையிலும் கனடாவிலும் பல ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார். + +கனேடிய நிறுவனமொன்றில் 'வரைகலை நிபுண'ராகப் பணிபுரியும் ஜீவன் இலங்கையில் இருந்த காலத்தில் மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தில் கட்டடக் கலைத்துறையில் பட்டப்படிப்பினைக் கற்றுக் கொண்டிருந்தவர். நாட்டு நிலைமைகள் காரணமாகக் கனடாவுக்குப் புலம் பெயர்ந்த இவர் புலம் பெயர்ந்ததிலிருந்து ஓவியக் கண்காட்சிகள் பலவற்றை நடத்தி வருபவர். இலக்கியத்தின் கவிதை போன்ற ஏனைய துறைகளிலும் ஆர்வம் மிகுந்து ஈடுபட்டு வருபவர். இவரது ஓவியங்கள் நவீன பாணியிலமைந்தவை. ஓவியம் தவிர சிற்பத் துறையிலும் நாட்டம் மிக்க இவர் அத்துறையிலும் தன் முயற்சிகளைத் தொடர்பவர். இவரது ஓவியங்கள் மானுட துயரங்களைச் சித்திரிப்பவை. + +ரொறன்ரோவில் Funcky Raat அமைப்பினரின் 'தெற்காசியக் கலை இரவு' மற்றும் Desh Pardesh அமைப்பினரின் 'Desh Pardesh 94' ஆகிய நிகழ்வுகளில் இவரது ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. கனடா நோவா ஸ்காசியா (Nova Scotia)வில் தொலைக்காட்சியில் சர்வதேச மன்னிப்புச் சபையைச் சேர்ந்த ஜாக்குலீன் வார்லோ (Jacqueline Warlow) The Strongest Voice is Yours என்னும் நிகழ்வில் இவரது ஓவியங்களைப் பற்றி அறிமுகப்படுத்தியிருக்கின்றார். + +'உயிர் நிழல் (பிரான்ஸ்)', 'தூண்டில் (ஜேர்மனி)', 'மனிதம்(சுவிஸ்)', 'கனவு(இந்தியா)', 'சுவர் (இலங்கை)', 'தோழி (இலங்கை)', 'சமர்(பாரிஸ்)' உட்படப் பல கலை இலக்கிய சஞ்சிகைகளும் இவரது ஓவியங்களைப் பிரசுரித்துள்ளன. + + + + + +உயிர்நிழல் கலைச்செல்வன் + +கலைச்செல்வன் ஈழத்தில் பிறந்து பிரான்ஸில் வசித்த எழுத்தாளர். ஒரு தேர்ந்த பதிப்பாளர், ஆசிரியர். எக்ஸில் பதிப்பகத்தின் மூலமாக பல நல்ல நூல்களைக் கொண்டுவந்தவர். ஐரோப்பிய மண்ணில் தமிழ் வெளியீடுகளின் முன்னோடி. 1980 களிலேயே "பள்ளம்" என்றொரு சிறு பத்திரிகையைத் தொடங்கியவர். எக்ஸில் பத்திரிகையின் ஆசிரியர் குழுவிலும், பின் உயிர்நிழல் பத்திரிக்கையின் ஆசிரியர் பொறுப்பிலும் இருந்தவர். "உயிர்நிழல்" என்ற இலக்கிய சஞ்சிகையை நடாத்தியவர். அச்சஞ்சிகையில் பல இளம் படைப்பாளிகளை ஊக்குவித்தவர். சிறந்த நடிகரான இவர் "முகம்" என்னும் ஈழத்தமிழ்த் திரைப்படமொன்றிலும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். + + + + + +லோங் அடிகள் + +அதி வணக்கத்துக்குரிய லோங் அடிகள் (1896 - ஏப்ரல் 30, 1961) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய ஓர் அயர்லாந்து அடிகள் ஆவார். 1896இல் அயர்லாந்திலுள்ள லிமெரிக் என்னுமிடத்தில் பிறந்த இவர் 1920 இல் திருநிலைப்படுத்தப்பட்டார். 1921 இல் பத்திரிசியார் கல்லூரியில் ஆசிரியராக இணைந்தார்; விளையாட்டுத் துறைக்குப் பொறுப்பாசிரியராகவும் நியமிக்கப்பட்டார். பட்டப் படிப்பக் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முடித்தார்; கலை முதுமாணிப் பட்டமும் பெற்றார். 1936 முதல் 1954 வரை 18 ஆண்டுகள் பத்திரிசியார் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றினார். யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக மாபெரும் கைத்தொழிற் களியாட்ட விழாவை நிகழ்த்தியவரும் இவரே. "அயர்லாந்தின் யாழ்ப்பாணத்தான்" என்று அழைக்கப்பட்டார். பின்னர் ஆஸ்திரேலியாவுக்குப் பணியாற்றச் சென்றார். 1961 இல் லண்டனில் காலமான இவர் அயர்லாந்தில் அடக்கம் செய்யப்பட்டார். 1990 இல் இலங்கைத் தேசிய வீரர் தினத்தன்று இவரது நினைவாக தபாற்தலையொன்று வெளியிடப்பட்டது + + + + +ஃபீல்ட்ஸ் பதக்கம் + +ஃபீல்ட்ஸ் பதக்கம் ("Fields Medal") நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலக அளவில் தேர்வுசெய்யப்பட்டு அளிக்கப்படும் ஓர் பரிசாகும். இப்பரிசு கணிதத்தின் நோபல் என கருதப்படுகிறது. நாற்பது வயதுக்கு உட்பட்ட இரண்டு, மூன்று அல்லது நான்கு கணிதவியலாளர்களுக்கு அளிக்கப்படும் இவ்விருது கனேடியக் கணிதவியலாளரான ஜோன் சாள்ஸ் ஃபீல்ட்ஸ் என்பவரால் 1924 இல் முன்மொழியப்பட்டதாகும். கனடவிலுள்ள டொராண்டோ வில் 1924 இல் பன்னாட்டு கணித காங்கிரஸ் நடந்தது. அந்த காங்கிரஸின் தலைவராக இருந்தவர் ஃபீல்ட்ஸ். காங்கிரஸை நடத்துவதற்காக சேகரிக்கப்பட்ட பணத்தில் செலவு போக மீதமிருந்ததை கணிதத்தில் உலகம் போற்றும் சாதனை செய்தவருக்கு ஒரு பரிசு கொடுப்பதற்காக இருக்கட்டும் எ��்று நன்கொடையாகக் கொடுத்தார். அவர் காலமான பிறகு 1932 இல் ஜூரிக்கில் கூடினபோது பன்னாட்டுக்கணித காங்கிரஸ் அந்நன்கொடையை ஏற்றுக் கொண்டது. + +முதல் இரண்டு மெடல்கள் 1936 இல் ஆஸ்லோ காங்கிரஸிலும், அதற்குப்பிறகு உலகப்போரினால் தடைபட்டபிறகு, 1950 இலிருந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கொருமுறை பன்னாட்டு காங்கிரஸ் கூடினபோதெல்லாம் சில முறைகள் 2 மெடல்கள், சில முறை 3 மெடல்கள், சில முறை 4 மெடல்கள் வீதம் கொடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சிறப்பு என்னவென்றால் உலகக் கணிதவியலாளர்களெல்லாம் சேர்ந்து செயல்பட்டுக் கொடுக்கப்படும் பரிசு இது. + +2006 இல் ஒவ்வொரு மெடலின் மதிப்பு 15000 கனடா டாலர்கள். ஃபீல்ட்ஸ் மெடல் என்ற பெயரில் கொடுக்கப்பட்டு வந்தாலும் மெடலில் ஃபீல்ட்ஸ் என்ற பெயர் பொறிக்கப்படுவதில்லை. + +1936 + +1950 + +1954 + +1958 + +1962 + +1966 + +1970 + +1974 + +1978 + +1982 + +1986 + +1990 + +1994 + +1998 + +2002 + +2006 + +2016 + + + + + +கிரிகோரி பெரல்மான் + +கிரிகோரி பெரல்மான் (பிறப்பு: சூன் 13, 1966) முன்னிருந்த லெனின்கிராட், சோவியத் ஒன்றியம்) (தற்போதைய செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா) இல் பிறந்த கணிதவியலாளர். இவர் சில சமயம் "கிரிஷா பெரல்மான்" என்றும் அழைக்கப்படுகிறார். இவர், Riemannian geometry மற்றும் geometric topology ஆகியவற்றில் கணிசமான பங்களித்துள்ளார். கிரிகோரி பெரல்மான் கணிதத்தில் மிக முக்கியமாகக் கருதப்படும் நூறாண்டுகளுக்குமேல் தீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிபு (Poincare Conjecture) க்கு தீர்வுகண்டவர் என போற்றப்படுகிறார். இதற்காக இவருக்கு கணித உலகில் மிகவும் போற்றப்படுகிற ஃபீல்ட்ஸ் மெடல் அளிக்கப்படுவதாக 2006 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பெற இவர் மறுத்துவிட்டார். + + + + + +சி. மௌனகுரு + +சின்னையா மௌனகுரு (பிறப்பு: ஜூன் 9, 1943) இலங்கையின் மட்டக்களப்பைச் சார்ந்த பேராசிரியர், அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், பிரதி உருவாக்குபவர் என்பதோடு மிகச் சிறந்த நடிகராகவும் கூத்துக் கலைஞராகவும் பெயர் பெற்றவர். + +ஈழத்து அரங்கத்துறையில் முக்கியப் பங்களிப்பு செய்த நான்கைந்து பேர்களில் மௌனகுரு குறிப்பிடத்தக்கவர். அரங்க நடவடிக்கைகளில் அவர் பல துறைகளில் தடம் பதித்தவர். புகழ் பெற்ற ‘இராவணேசன்’, ‘சங்காரம்’ முதலிய கூத்து நாடகங்களில் சிறப்பாக நடித்திருந்தார். இலங்கைத் தமிழ் மக்கள் மத்தியில் ஊறிப்போன சாதியத்தை எதிர்த்து அரங்கேறிய இரு முக்கிய நாடக நிகழ்வுகளென “கந்தன் கருணை”யும் “சங்காரத்தை”யும் டானியல் அவர்கள் குறிப்பிடுவார்கள். இவ்விரு நாடகங்களிலும் மௌனகுரு அவர்களின் பங்கு முக்கியமானது. + +மௌனகுரு நாடக ஆசிரியர், அரங்கத் துறை அறிஞர் மட்டுமன்று அவர் ஒரு சிறுகதை எழுத்தாளருமாவார். + +அவரது இன்னொரு முக்கியப் பரிமாணம் கல்வித் துறை சார்ந்தது. இலங்கையில் முக்கியத் தமிழ்ப் பல்கலைக்கழகங்கள் அனைத்திலும் அவர் பணியாற்றிய பங்களிப்புகள் செய்தாரென்பதோடு கிழக்குப் பல்கலைக்கழக உருவாக்கத்திலும் வளர்ச்சியிலும் அவருக்குப் பிரதான பங்குண்டு. + +பேராசிரியரின் அடுத்த பரிமாணம் தமிழ் ஆய்வு சார்ந்தது. தமிழ் இலக்கிய வரலாறு, சங்க காலம் தவிர விபுலானந்தரின் கருத்துலகம் முதலான துறைகளில் அவரது பங்களிப்பு உண்டு. நீலாவணன், சுபத்திரன் முதலான ஈழக் கவிஞர்களைத் தொடர்ந்து பாரதிதாசனையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார். + + + + + + +பேராதனை + +பேராதனை (Peradeniya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இது கொழும்பையும் கண்டியையும் இணைக்கும் பெருந்தெருவில் கண்டி நகரின் எல்லையில் அமைந்துள்ளது. மகாவலி கங்கையின் கரையில் அமைந்திருந்த இந்நகரம் 2006 கடைசிப்பகுதியில் நகரில் ஏற்பட்ட தொடர் மண்சரிவுகள் காரணமாக வேறுபகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பேராதனைப் பல்கலைக் கழகம், பேராதனை தாவரவியற் பூங்கா என்பன இங்கு அமைந்துள்ளன. + + + + +வரி + +வரி (tax) என்பது, அரசோ அதுபோன்ற அமைப்புக்களோ, தனி நபர் அல்லது நிறுவணங்களிடமிருந்து பெறும் நிதி அறவீடு ஆகும். வரி அறவிடும் வேறு அமைப்புக்களாகப் பழங்குடி இனக்குழுக்கள், விடுதலைப் போராட்டக் குழுக்கள், புரட்சிக் குழுக்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம். இத்தகைய அமைப்புக்கள் அறவிடும் வரிகள் பெரும்பாலும் சட்டபூர்வமானவையாகக் கருதப்படுவதில்லை. இதனால் அரசாங்கங்கள் இவ்வாறு அறவிடப்படும் வரியைக் கப்பம் எனக் குறிப்பிடுவது உண்டு. ஒன்றிய அரசு தவிர, உள்ளூராட்சி அமைப்புக்கள், மாநில அரசுகள் போன்ற பல துணை அரச அமைப்புக்களும் வரி அறவிடுவதுண்டு. + +வரிகள் நேரடி வரி, அல்லது மறைமுக வரியாக இருக்கலாம். வரியைப் பணமாகவோ, பொருளாகவோ, அல்லது உழைப்பாகவோ செலுத்தும் வழக்கம் இருந்து வந்தது. மரபுவழி மற்றும் முதலாளித்துவத்திற்கு முற்பட்ட முறைமைகளின் கீழேயே வரிகள் பொருட்களாகவும், ஊழியம் போன்ற உடல் உழைப்பாகவும் அறவிடப்பட்டு வந்தது. தற்காலத்தில் வரிகள் பொதுவாகப் பணமாகவே அறவிடப்படுகின்றன. + +பொதுவாக நாடுகளின் அரசுகள், அவற்றின் நிதி அமைச்சகங்களின் கீழ் அமையும் அமைப்புக்கள் மூலமாக வரிகளை அறவிடுகின்றன. வரிகள் செலுத்தப்படாவிட்டால் அபராதம், சிறை போன்ற தண்டனைகளும் வழங்கப்பட விதி முறைகள் உள்ளன. சுங்கவரி, காணிக்கை, குத்தகைக்காரர் நிலக்கிழாருக்கு செலுத்தும் வரி, கடமை வரி, விருப்ப வரி, கலால், மானியம், அரசு உதவி வரி, மதிப்புக் கூட்டு வரி என்னும் பல்வேறு பெயர்களால் வரி வசூலிக்கப்படுகின்றது. + +முதன் முதலில் வரி விதிக்கப்பட்டது கி.பி 3000-2800 வரையிலான பண்டைய எகிப்தில் ஆகும். பொதுவாக பத்தில் ஒரு பகுதியே வரியாக விதிக்கப்பட்டது. சில இடங்களில் கூலி இல்லாமல் குறித்த நாட்களுக்கு அரசில் கட்டாய பணியமர்த்துவதும் வழக்கில் இருந்தது. பார்வோன் மக்களிடம் வரி சேகரிக்க இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது அரசு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வழக்கமுடையவராய் இருந்ததாக ஆவண பதிவுகள் கூறுகின்றன. இத்தகைய வரிகளுக்கான அத்தார்சி சீட்டுகளும் கிடைத்துள்ளன. எகிப்தியர் வரி செலுத்தும் மிகப்பழைய சான்று ஒன்று விவிலியத்திலும் உள்ளது. தொடக்க நூல் 47:24இல் நிலத்தின் விளைச்சலில் ஐந்திலொரு பாகம் பார்வோனுக்குச் வரி செலுத்த யோசேப்பு ஆணையிட்டதாக கூறுகின்றது. + +பாரசீக பேரரசில் நெறிமுறைப்படுத்தப்பட்ட நிலையான வரி அமைப்பு கி.மு. 500இல் முதலாம் தேரியசினால் அறிமுகப்படுத்தப்பட்டது; இம்முரையில் அரசு முழுவதும் பகுதிகளாக பிரிக்கப்பட்டு அதனதன் விளைச்சலுக்கு ஏற்றபடி வரி வசூலிக்கப்பட்டது. அரசு முழுவது மொத்தமாக 20 முதல் 30 வரையிலான பகுதிகளைக்கொண்டிருந்தது. இவ்வகை வரிகளை வசூலிக்க தனியாக ஆளுநர்கள் நியமிக்கப்படிருந்தனர். இவர்கள் வசூளித்த வரிகளில் இருந்து அப்பகுதியின் வளைமையினை நாம் அறியலாம். எடுத்துக்காட்டாக பாபேல் பகுதியே அதிகம் வரி வசூலிக்கப்பட்ட பகுதியாகும். 1000 வெள்ளி தாளந��துகளும், நான்கு மாத படையினருக்கான உணவும் வரியாக பெறப்பட்டது. இந்தியாவிலிருந்து 4680 வெள்ளி தாளந்துகள் மதிப்புள்ள தங்கமும், எகிப்திலிருந்து 700 வெள்ளி தாளந்துகளும், 120,000 அளவை தானியமும் பெறப்பட்டது. இந்த வரி முற்றிலும் நிலங்களையும் அதன் உற்பத்தி திறன் மற்றும் காணிக்கை நிலைகளையும் அடிப்படையாகக்கொண்டு இப்பகுதிகளின் மீது விதிக்கப்பட்டிருந்தது. + +எகிப்திய எழுத்து முரையினை புரிந்து கொல்ல உதவிய ரொசெட்டாக் கல், 196 கி.பியில் ஐந்தாம் டாலமி மன்னனால் விதிக்கப்பட்ட வரிகளின் மூன்று மொழி விவரிப்பாகும். இந்தியாவில், இஸ்லாமிய ஆட்சியாளர்கள் 11 ஆம் நூற்றாண்டில் தொடங்கி ஜிஸ்யா (முஸ்லிம்கள் அல்லாதவர்களுக்கான வரி) விதித்திருந்தனர். அதனை பேரரசர் அக்பர் நீக்கினார். + +அரசினாலும், அது போன்ற அமைப்புக்களாலும், வரிகள் அறவிடப்படுவதற்கான பல்வேறு காரணங்களை வரலாற்றில் காணமுடியும். பொதுவாக அவ்வமைப்புக்களின் செயற்பாடுகளுக்கான நிதியைப் பெறவே வரிகள் அறவிடப்படுகின்றன எனலாம். இவற்றுள் பின்வருவன முக்கியமானவை: + + +பல நவீன அரசுகள், கீழே பட்டியலிடப்பட்டுள்ளவை போன்ற, நலத் திட்டங்களுக்கும், பொதுச் சேவைகளுக்காகவும்கூட வரிகள் மூலம் திரட்டப்படும் நிதியைப் பயன்படுத்துகின்றன: + + +அரசுகள் பல வகையான வரிகளை அறிமுகப்படுத்துவதோடு, குறிப்பிட்ட வரியொன்றிலேயே பல்வேறு வீதங்களில் வரி அறவிடுகின்றன. பின்வருவன இதற்கான காரணங்களாக அமையக்கூடும்: + + +பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) உறுப்பினர் நாடுகளின் வரி அமைப்புகளை ஒரு பகுப்பாய்வு வெளியிடுகிறது. இத்தகைய பகுப்பாய்வின் ஒரு பகுதியாக, OECD பொதுவாக உள்ளக வரிகள், வகைப்படுத்தலின் வரையறை மற்றும் முறையை பின்வருமாறு உருவாக்கியது. கூடுதலாக, பல நாடுகளில் பொருட்கள் இறக்குமதி செய்வதுற்கு (சுங்க வரி) விதிக்கப்படுகிறது. + +பல சட்டவாக்கங்கள் தனிநபர்களின் வருமானம் மற்றும் பெருநிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் உட்பட அனைத்து வருமானங்களுக்கும் வரி விதிக்கிறது. பொதுவாக, வரி, வணிக, நிகர ஆதாயங்கள், மற்றும் பிற வருவாய் ஆகியவற்றிலிருந்து நிகர லாபத்தை அடிப்படையில் வரி சுமத்துப்படுகிறது. வருமான வரிக் கணக்கிடலானது அதிகார வரம்பில் பயன்படுத்தப்படும் கணக்கியல் கொள்கைகளின் கீழ் தீர்மானிக்கப்படலாம், இது அதிகார எல்லைக்குள் வரி விதி கொள்கைகளால் மாற்றப்படலாம் அல்லது மாற்றலாம். வரிவிதிப்பு நிகழ்வு அமைப்புகளுக்கு இடையே மாறுபடும் மற்றும் சில அமைப்புகள் இடையே முற்போக்கான அல்லது பின்னடைவு ஆக காணலாம். வரி விகிதங்கள் வருமான மட்டத்தில் மாறுபடும் அல்லது நிலையானதாக இருக்கும். பல அமைப்புகள் தனி நபர்கள் சில தனிநபர் அனுகூலங்கள் மற்றும் இதர வியாபாரக் குறைப்புக்கள் வருமானம் வரி விலக்கு தருகிற்து,இருப்பினும் வணிக விலக்குகள் தனிப்பட்ட விலக்கங்களின்படி விரும்பப்படுபவை. + +பொருளாதாரம், ஒரு எதிர்மறை வருமான வரி (சுருக்கமாக NIT) என்பது ஒரு முற்போக்கான வருமான வரி முறையாகும், இது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சம்பாதிக்கும் மக்களுக்கு அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதற்குப் பதிலாக அரசாங்கத்திலிருந்து துணை ஊதியத்தை பெறுகிறது. + +வருமான வரி விதிப்பு மூலதன ஆதாயங்களை வரிவிதிப்புக்கு உட்படுத்தும் பெரும்பாலான அதிகார வரம்புகள். மூலதன ஆதாயங்கள் பொதுவாக மூலதன சொத்துக்களின் விற்பனைக்கு ஒரு ஆதாயம். அதாவது, சாதாரண வணிகத்தில் விற்பனை செய்யாத சொத்துகள். மூலதனச் சொத்துக்கள் பல அதிகார வரம்புகளில் தனிப்பட்ட சொத்துக்கள் அடங்கும். சில அதிகார வரம்புகள் வரிக்கு முன்னுரிமை விகிதங்கள் அல்லது மூலதன ஆதாயங்களுக்கு மட்டுமே பகுதியளவு வரி விதிக்கின்றன. சில அதிகார வரம்புகள், சொத்துக்களை வைத்திருக்கும் நேரத்தின் அளவை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு விகிதங்கள் அல்லது மூலதன ஆதாயங்களின் வரிகளை அளிக்கும். சாதாரண வருவாயை விடக் கூடுதலாக மூலதன ஆதாயங்களுக்காக வரி விகிதங்கள் பெரும்பாலும் குறைவாக இருப்பதால், மூலதனத்தின் சரியான வரையறையைப் பற்றி பரந்த சர்ச்சை மற்றும் சர்ச்சை உள்ளது. வேறுபட்ட மூலதன மற்றும் முதலீட்டு வரிகளில் வேறுபாடுகள் பொருளாதார சிதைவுகளுக்கு பங்களிப்பு செய்வதாக சில வரி அறிஞர்கள் வாதிட்டுள்ளனர். + +பெருநிறுவன வரி வருவாய், மூலதனம், நிகர மதிப்பு, அல்லது நிறுவனங்களுக்கு திணிக்கப்பட்ட பிற வரிகளை குறிக்கிறது. வரி மற்றும் வரிகளுக்கு வரி விதிக்கப்படும் நபர்கள் தனிநபர்களிடமிருந்தோ அல்லது பிற வரி செலுத்தக்கூடிய நபர்களிடமிருந்தோ வேறுபடலாம். + +பல நாடுகளில் பொதுமக்களுக்கு நிதியளிக்கப்பட்ட ஓய்வூதியம், மற்றும் சுகாதார பராமரிப்புத் திட்டங்கள் போன்ற அரச உதவிகள் வழங்கப்படுகின்றன. இந்த முறைமைகள் தொடர்பாக, நாட்டிற்கு பொதுவாக முதலாளிகள் மற்றும் / அல்லது ஊழியர்கள் கட்டாயக் கடன்களைச் செலுத்த வேண்டும். இந்த பணம் பெரும்பாலும் சுய வேலைவாய்ப்பிலிருந்து ஊதியங்கள் அல்லது வருவாய்களைக் குறிப்பதாகும். வரி விகிதங்கள் பொதுவாக நிர்ணயிக்கப்படுகின்றன, ஆனால் ஊழியர்களைவிட வேறுபட்ட விகிதங்கள் முதலாளிகளுக்கு விதிக்கப்படலாம். சில அமைப்புகள் வரிக்கு உட்பட்ட வருவாய் மீது மேல் வரம்பை வழங்குகின்றன. ஒரு குறிப்பிட்ட தொகையை விட ஊதியத்தில் மட்டுமே வரி செலுத்தப்பட வேண்டும் என்று ஒரு சில அமைப்புகள் அளிக்கின்றன. இத்தகைய மேல் அல்லது குறைந்த வரம்புகள் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கலாம், ஆனால் வரி விதிப்பு சுகாதார கூறுகள் அல்ல. ஊதியங்களில் இத்தகைய வரிகள் "கட்டாய சேமிப்பு" மற்றும் ஒரு வரி அல்ல என்று சிலர் வாதிடுகின்றனர், மற்றவர்கள் தலைமுறைகளுக்கு (புதிய கூட்டுப்பண்புகள் முதல் பழைய கூட்டுறவுகளுக்கு) மற்றும் வருமான அளவு (மற்றும் உயர் வருவாய் மட்டத்திலிருந்து) குறைந்த வருமானம் அளவுகள்) போன்ற நிகழ்ச்சிகள் உண்மையில் வரி மற்றும் செலவின திட்டங்கள் ஆகும். மூலதனத்தை உள்ளடக்கிய பரந்த வரிகள் மூலம், மனித மூலதனத்தில் விலகல் மற்றும் மூலதனச் செலவினங்களை உருவாக்குவதால், ஊதியங்கள் மீது வரி செலுத்துவதன் மூலம் மட்டுமே சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஆதரவளிப்பதாக சில வரி அறிஞர்கள் வாதிடுகின்றனர், ஏனெனில் அத்தகைய முதலீடுகளுக்கு வருமானம் ஊதியங்கள் எனக் கருதப்படுகிறது. + +அசையாச்சொத்து மற்றும் சில அசையும் சொத்துக்கள் மீது விதிக்கப்படும் வரி சொத்து வரி எனப்படும். + +நியாமற்ற வரி மற்றும் அதிக வரி உழைப்போரின் வருமானத்தை சூறையாடுகிறது அவர்களின் உற்சாகத்தை, முதலீட்டை இடையூறு செய்கிறது. அரசின் சேவைகளை பெறாமல் விட்டாலும், வரி செலுத்தாமல் இருக்க உரிமை இல்லை என்பதால் பலர் வரி வசூலிப்பதையே தவறு என்கின்றனர். வருமான வரி செலுத்துவது சட்ட அமைப்பு மூலம் கட்டாயமாதலால் சிலர் இதனை அரசாங்கம் திருடுவதாகவும், மிரட்டி பணம் பறித்தலாகவும், சொத்து உரிமைகளை மீறுவதால் அடிமை போல நடத்துவதாகவும், அல்லது கொடுங்கோன்மைக்கு ஏ��ுவாகும் என்றும் விமர்சிக்கின்றனர். + +பொதுவுடைமையாளர்கள் மற்றும் சமூகவுடைமையாளர்கள் வரிவிதிப்பினை எதிர்க்கின்றனர். காரல் மார்க்சு அரசு என்பதை ஒழித்து அரசில்லா பொதுவுடைமை நாட்டினை நிறுவ ஆவல் கொண்டார். சீனா போன்ற பொதுவுடைமை நாடுகளில் பெரும்பாலான அரசின் வருமானம் நிறுவனங்களின் மீதுள்ள உரிமையினால் வருவதால் பண வரிவிதிப்பு அவசியம் இல்லை என்று சிலர் வாதிடுகின்றனர். வரிவிதிப்பின் அறநெறி சில நேரங்களில் கேள்விக்குட்படுத்தப்பட்டாலும், வரிவிதிப்பு பற்றி மிக அதிக வாதங்கள் விதிக்கப்பட்ட வரி தொடர்புடைய அரசால் செலவு பெய்யப்படும் முறை பற்றியே உள்ளன. + + + + +கப்பம் + +உடல்ரீதியான காயங்களை ஏற்படுத்துவதாக, அல்லது வேறுவகையான பயமுறுத்தல்கள் மூலம் ஒருவரிடமிருந்து வாங்கும் பணம் அல்லது சொத்து கப்பம் () (Extortion) எனப்படுகின்றது. பொதுவாகச் சட்டப்படி இது ஒரு குற்றம் ஆகும். பல சமயங்களில் இவ்வாறு பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிப்பதாகப் பயமுறுத்தி வாங்கும் பணத்தைக், குறிப்பிட்டவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான கொடுப்பனவு என மங்கல வழக்காகவும் கூறுவதுமுண்டு. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் புரியும் குழுக்களே பெரும்பாலும் கப்பம் வாங்கும் செயலில் ஈடுபடுகின்றன. குற்றமாகக் கருதப்படுவதற்குப் பணமோ சொத்தோ உண்மையில் பரிமாறப்பட்டிருக்கவேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு பணம் அல்லது சொத்தைப்பெறும் நோக்கத்தோடு பயமுறுத்தல் விடுப்பது மட்டுமே கப்பம் வாங்கும் குற்றம் எனக் கருதப்படலாம். + + + + +வட்டி + +வட்டி என்பது ஒருவரிடமிருந்து பணம் கடனாகப் பெறுவதற்காகக் கொடுக்கப்படும் "வாடகை" ஆகும். பணம் கொடுப்பவர், அப்பணத்தைத், தனது சொந்த நுகர்வுத் தேவை உட்பட, வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தாமல் விடுவதற்கான நட்டஈடாகவே இது கொடுக்கப்படுகிறது எனலாம். முதலில் கொடுக்கப்படுகின்ற பணத்தொகை "முதல்" எனப்படுகின்றது. இவ்வாறு கொடுக்கப்படும் முதலுக்காக ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்குக் கொடுக்கப்படும் வட்டி பொதுவாக அம்முதலின் ஒரு விழுக்காடாகவே (நூற்றுவீதம்) கணிக்கப்படுகின்றது. இந்த விழுக்காடு "வட்டி வீதம்" எனப்படும். + +வட்டி அது கணிக்கப்படும் முறையைப் பொறு��்து, எளிய வட்டி, தொடர் வட்டி, உண்மை வட்டி, கூட்டு வட்டி எனப் பலவகைப்படுகின்றது. + +== இதை வங்கி, அஞ்சலகம், மற்றும் ஒரு சில அரசு பதிவு பெற்ற நிறுவஙை்கள், குழுக்கள் பெற மட்டுமே சட்டமுள்ளது. +மற்றவர்கள் இதனைச் செய்வது சட்ட விரோதமானது தண்டனைக்குரியது == + + + + +திறை + +திறை என்பது, பணிவு அல்லது அடங்கியிருத்தலுக்கு அடையாளமாக இன்னொருவருக்குக் கொடுக்கப்படும் பொருள் (செல்வம்) ஆகும். இது பணம், பொருள் போன்றவை மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக வலிமை குறைந்தவர் மீது திணிக்கப்படும் வணிக ஒப்பந்தங்கள் உருவிலும் இருக்கலாம். பொதுவாக, திறையைச் செலுத்தாவிட்டால் அதற்குரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டியிருக்கும் என்ற பயத்தின் அடிப்படையிலேயே திறை கொடுக்கப்படுகின்றது. முற்காலத்தில், வலிமை கொண்ட நாடுகள் மற்ற நாடுகளின் மீது படையெடுத்து அடிப்படுத்தியோ ஒப்பந்தங்கள் போன்ற வேறு வழிகள் மூலமோ அவற்றிடமிருந்து ஆண்டுதோறும் திறை பெறும் வழக்கம் இருந்தது. பொதுவாக, வலிமை குறைந்த நாடுகள், வலிமை கொண்ட நாடுகளுக்குத் திறை செலுத்தி வந்தன. இவ்வாறு திறை செலுத்திய நாடுகள் சிற்றரசுகள் எனப்பட்டன. நாடுகள் மட்டுமன்றி பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி போன்ற வணிக அமைப்புக்கள் கூட சிற்றரசர்களிடமிருந்து திறை பெற்றமைக்கான சான்றுகள் உண்டு. + +பெரிய வலிமைமிக்க அரசுகளுடன் கூட்டணி வைத்துக்கொண்ட சிறிய அரசுகளும், மேற்படி பெரிய அரசுகளுக்குத் திறை செலுத்தும் வழக்கம் இருந்தது. இது, பொதுவாக, போர்களுக்குப் படை திரட்டுதல் முதலியவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. கி.மு ஐந்தாம் நூற்றாண்டில், டேலியன் கூட்டமைப்பைச் சேர்ந்த நகரங்கள், அக்கூட்டமைப்பிலிருந்த வலிமைமிக்க நகரான ஏதென்சுக்குத் திறை செலுத்தின. பண்டைக்கால பாரசீக ஆர்க்கிமெனிட் பேரரசு திறை பெற்ற பழங்காலத்துத் திறை பெறும் பேரரசுக்கு ஒரு எடுத்துக்காட்டு. மத்தியகாலத்து உருசியாவின் மங்கோல் ஆட்சியாளர்கள், உருசிய அரசுகளிடமிருந்து திறையை மட்டுமே எதிர்பார்த்தனர். அவ்வாறு திறை செலுத்திய உருசிய அரசுகள் தொடர்ந்தும் தங்கள் ஆட்சியுரிமையைத் தக்கவைத்திருந்தன. அசிரியா, பபிலோன், கர்த்தாஜ், ரோம் போன்ற பேரரசுகளும் தமது மாகாணங்களிடமிருந்தும், தாம் அடிப்படுத்திய நாடுகளிடமிருந்தும் திறை பெற்றன. பண்டைக்காலச் சீனா சப்பான், கொரியா, வியட்நாம், கம்போடியா, போர்னியோ, இந்தோனேசியா, மத்திய ஆசியா போன்ற நாடுகளிடமிருந்து திறை பெற்றது. + +சுதேசி சமஸ்தானங்கள் 1857ஆம் முடிய பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளருக்கும், பின்னர் பிரித்தானிய பேரரசுக்கும் 1947ஆம் முடிய ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது தங்கம், வெள்ளி, நெல், கோதுமை போன்ற பொருட்கள் வடிவில் திறை செலுத்தி வந்தன. + +மிகப் பழங்காலத்திலேயே சீனாவில் திறை செலுத்தும் முறை நிலவி வந்தது. இது சிற்றரசுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு நிருவாக வழிமுறையாக மட்டுமன்றி, சீனாவுக்குள் வணிகம் புரிவதற்கான உரிமை தொடர்பிலும் பயன்பட்டது. திறை செலுத்தும் வெளிநாடுகள், பேரரசின் பாதுகாப்புடனும், அதன் விதிமுறைகளுக்கு அமைவாகவும் சீனாவுக்குள் இருபக்க வணிகத்தில் ஈடுபடக்கூடியதாக இருந்தது. + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1971 + +1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1972 + +1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1973 + +1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1974 + +1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +மூலதனம் + +பொருளியலில், முதல் அல்லது "மூலதனம்" என்பது ஒரு தொழிலைத் தொடங்க அல்லது ஒரு பொருளியல் ஆக்கத்தை உருவாக்கப் பயன் படும் அடிப்படையான நிலம், பொருள், இயந்திரம், பணம், முதலியவற்றைக் குறிக்கும். இது பொருளியல் ஆக்கத்திற்கு நீண்ட பயன்பாட்டுக்குரிய ஒரு உற்பத்திக் காரணியாகக் கருதப்படுகின்றது. + +மெய் மூலதனத்தை, பணம், அல்லது நிதி மூலதனத்தின் மூலம் வாங்கிக்கொள்ள முடியும். மூலதனம் என்பது பொதுவாக ஒரு தொழில் முயற்சியைத் தொடங்குவதற்கும் அதனைப் பேணுவதற்குமான நிதி வளத்தைக் குறிக்கும். + +ஆடம் ஸ்மித் மூலதனத்தை "ஒரு மனிதனின் பங்கு அந்த பகுதியை அவர் வருவாயைக் கொடுக்க எதிர்பார்க்கிறார்" என்று வரையறுக்கிறார். "பங்கு" (stock) என்ற வார்த்தை பழைய ஆங்கில வார்த்தையிலிருந்து "அடிக்கட்டை" அல்லது "மரத்தின் தண்டு" (stump or tree trunk) வார்த்தையில் இருந்து பெறப்படுகிறது. இது குறைந்தபட்சம் 1510 ஆம் ஆண்டிலிருந்து ஒரு பண்ணையின் அனைத்து நகரும் / அசையா சொத்துக்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. இடைக்காலங்களில், பிரான்சு ஒப்பந்தம் குத்தகை மற்றும் கடன்கள் குறிப்பிட்ட வட்டி கட்டணம் தாங்கியதாக இருந்தது. + +ஒரு அடிப்படைக் கருத்தில், மூலதனம் என்பது எந்தவொரு உற்பத்தி செய்த பொருளை கொண்டும், அது பொருளாதார ரீதியாக பயனுள்ள வகையில் செயல்பட ஒரு நபரின் சக்தியை அதிகரிக்க முடியும் +- ஒரு கல் அல்லது ஒரு அம்பு போன்ற பொருட்கள் ஒரு கற்காலமனிதனின் மூலதனமாக இருந்திருக்கிறது மற்றும் சாலைகள் ஒரு நகரின் மூலதனமாகும் . மூலதனம் உற்பத்தி செயல்பாட்டில் ஒரு உள்ளீடு. வீடுகள் மற்றும் தனிப்பட்ட தானியங்கிகள் பொதுவாக மூலதனமாக வரையறுக்கப்படுவதில்லை ஆனால் நீடித்த பொருட்களாக அவை விற்பனை செய்யப்படுவதில்லை, ஏனென்றால் அவை விற்பனை பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் பயன்படுத்தப்படவில்லை. + +மார்க்சிச அரசியல் பொருளாதாரம், மூலதனமானது, நிதி இலாபத்தை மீண்டும் பெறுவதற்கு மீண்டும் ஒரு பொருளை வாங்குவதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மார்க்சின் மூலதனமானது பொருளாதார பரிமாற்ற செயல்முறைக்குள்ளேயே உள்ளது - அது சுழற்சி முறையிலிருந்து வளரும் செல்வம் ஆகும், மார்க்ஸ் அது முதலாளித்துவத்தின் பொருளாதார முறைக்கு அடிப்படையாக அமைந்தது. பொருளாதாரம் இன்னும் சமகாலத்திய பள்ளிகளில், இந்த மூலதன வடிவம் பொதுவாக "நிதி மூலதனம்" என்று குறிப்பிடப்படுகிறது, மேலும் "மூலதனப் பண்டதிலிருந்து" வேறுபடுத்தப்படுகிறது. + +செந்நெறிப் பொருளியலில், மூலதனம் என்பது மூன்று உற்பத்திக் காரணிகளில் ஒன்று. நிலம், உழைப்பு என்பன ஏனைய இரண்டுமாகும். பின்வரும் இயல்புகளைக் கொண்ட பொருட்கள் மூலதனங்கள் எனலாம்: + + +வசதி கருதிய இந்த விளக்கங்கள் புதியசெந்நெறிப் பொருளியலிலும் சிறு மாற்றங்களுடன் பயன்படுத்தப்பட்டு வந்தது. மூலதனம் என்பது, உற்பத்திச் செயல்முறைகளில் பயன்படும், கருவிகள், கட்டிடங்கள், வாகனங்கள் போன்ற பொருட்களாகவே விளக்கப்பட்டுவந்தன. + +சுமார் 1960 களிலிருந்து, பொருளியலாளர்கள் மூலதனத்தின் விரிந்த வடிவங்கள் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். எடுத்துக்காட்டாக, கல்வி, திறமை ஆகியவற்றிலிடப்படும் முதலீடு, அறிவு மூலதனம் (knowledge capital) அல்லது மனித மூலதனம் ஆகியவற்றின் உருவாக்கம் என்று கருதப்படலாம், அறிவுசார் சொத்துக்களில் (intellectual property) இடப்படும் முதலீடு, அறிவுசார் மூலதனத்தின் (intellectual capital) உருவாக்கம் என்றும் நோக்கப்படலாம். + +மூலதனத்தின் பண்புகள் பல்வேறு கோட்பாட்டு அல்லது பயன்பாடுகளின் அடிப்படையில் பொதுவாக பின்வரும் பிரிவுகளில் வகைபடுத்ப்படுகிறது: + +பொது மற்றும் தனியார் துறையின் கணக்கியல் இலக்குகள், நேர அளவுகள் மற்றும் கணக்கியல் ஆகியவற்றில் வேறுபடுகிறது. மூலதனத்தின் சில வடிவங்களின் உரிமையும் கட்டுப்பாடும் அதன்படி பொருளாதார தத்துவத்தில் வேறுபடுவதை நியாயப்படுத்தலாம். உள்கட்டமைப்பாக கருதப்படுகிற மற்றும் தெளிவற்ற அல்லது மோசமான கணக்கில் வழிகாட்டுதல்களில் உற்பத்தியை ஆதரிக்கக்கூடிய தெளிவான சொத்துகளின் மூலதனத்தை குணாதிசயப்படுத்த முயற்சிக்கும் ஒரு ஒட்டுபொத்த வரையறை பொது மூலதனமாகும். நெடுஞ்சாலைகள், இரயில்வேக்கள், விமான நிலையங்கள், நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், தொலைத்தொடர்புகள், மின்சார கட்டங்கள், ஆற்றல் பயன்பாடுகள், நகராட்சி கட்டிடங்கள், பொது மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள், காவல், தீ, உள்ளிட்டவை தனியார் தொழில் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் அனைத்தும் அரசுக்கு சொந்தமான சொத்துகளின் மொத்த சொத்துக்களை இது உள்ளடக்குகிறது. பாதுகாப்பு, நீதிமன்றங்கள் மற்றும் இன்னும் பல. இந்த சொத்துக்கள் பலவற்றுடன் பகிரங்கமாகவோ அல்லது தனியார் ரீதியாகவோ இருப்பதால், இது சிக்கல் மிகுந்த வரையறையாகும் . + +இயற்கை மூலதனம் மற்றும் சமூக மூலதனம் ஆகியவற்றை விவரிப்பதற்கு தனி கருத்துக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய சொற்கள், இயற்கை மற்றும் சமுதாயம் இருவரும் பாரம்பரிய தொழில்துறை உட்கட்டமைப்பு மூலதனமாக செயல்படுகின்றன என்று பரந்த ஒருமித்த கருத்தை பிரதிபலிக்கின்றன, அவை தங்களை வேறு மூலதனமான மூலதனங்களாக குறிப்பிடுவது முற்றிலும் பொருத்தமானதாகும். குறிப்பாக, பிற பொருட்களின் உற்பத்தியில் அவை பயன்படுத்தப்படலாம், உற்பத்தி செயல்முறையில் உடனடியாக பயன்படுத்தப்படாது மற்றும் மனித முயற்சிகளால் (உருவாக்கப்பட்டால்) மேம்படுத்தப்படலாம். + +அறிவுசார் மூலதனம் மற்றும் அறிவுசார் சொத்துச் சட்டத்தின் ஆகியவற்றில் கருத்துக்கள் உள்ளது. எனினும், இது மூலதன முதலீட்டின் வழிமுறையையும், காப்புரிமை, பதிப்புரிமை (ஆக்கபூர்வமான அல்லது தனிப்பட்ட மூலதனம்) மற்றும் வர்த்தக முத்திரை (சமூக நம்பிக்கை அல்லது சமூக மூலதன) கருவிகளுக்கான சாத்தியமான வெகுமதிகள் ஆகியவற்றையும் பெருமளவில் வேறுபடுத்துகிறது. + +பொருளாதார நிபுணர் ஹென்றி ஜார்ஜ் செல்வத்தை மாற்றுவதற்கு பங்குகள், பத்திரங்கள், அடமானங்கள், உறுதிமொழி குறிப்புகள் அல்லது பிற சான்றிதழ்கள் போன்ற மூலதனம் உண்மையில் மூலதனம் அல்ல என்று வாதிட்டார்.ஏனென்றால் "அவர்களுடைய பொருளாதார மதிப்பு, மற்றொருவரின் வருவாயைத் தக்கவைத்துக்கொள்வதற்கு ஒரு வர்க்கத்தின் சக்தியைக் குறிக்கிறது." மற்றும் "அவர்களின் அதிகரிப்பு அல்லது குறைவு சமூகத்தில் உள்ள செல்வத்தின் தொகையை பாதிக்காது". + +வெர்னர் சோம்பார்ட் மற்றும் மேக்ஸ் வெபர் போன்ற சில சிந்தனையாளர்கள், மூலதன கருத்துக்களை இரட்டைப்பதிவு கணக்குவைப்பு முறை புத்தகத்தில் தோற்றுவிக்கின்றனர், இதனால் இது முதலாளித்துவத்தில் அடிப்படையான கண்டுபிடிப்பு, சோம்பார்ட் "இடைக்கால மற்றும் நவீன வணிக நிறுவனத்தில்": +மூலதனத்தின் கருத்து இந்த விஷயங்களைப் பார்க்கும் விதத்திலிருந்து பெறப்பட்டது; "மூலதனமானது, இரு-நுழைவு புத்தக பராமரிப்பில் ஒரு வகை என,முன் வைக்கப்படவில்லை என்று ஒருவர் சொல்லலாம் அல்ல்து மூலதனத்தை இலாபத்தை ஈட்டுவதற்கும் கணக்குகளில் நுழைவதற்கும் பயன்படுத்தப்படும் செல்வத்தின் அளவு எனவும் வரையறுக்க முடியும்." + +பாரம்பரிய பொருளாதாரத்தில், ஆடம் ஸ்மித் (Wealth of Nations, Book II, Chapter 1) மூலதனத்தை சுழற்றுவதில் இருந்து நிலையான மூலதனத்தை வேறுபடுத்திக் காட்டியது. ஒரு தயாரிப்பு உற்பத்தியில் பயன்படும் அசையும் சொத்துக்க்ள் முந்தியது கணக்கிடபடாமலும் (எ.கா. இயந்திரங்கள் மற்றும் சேமிப்பு வ��திகள்) பிந்தையது உற்ப்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்ட அசையும் சொத்துக்களை குறிக்கும் (எ.கா. மூலப்பொருட்கள் மற்றும் இடைநிலை பொருட்கள்).ஒரு நிறுவனத்திற்கு, இரண்டும் மூலதனத்தின் வகைகள். + +கார்ல் மார்க்ஸ் ஒரு வேறுபாட்டைச் சேர்க்கிறார் அது பெரும்பாலும் டேவிட் ரிகார்டோவோடு குழப்பிகொள்ளபடுகிறது.மார்க்சியக் கோட்பாட்டில். நிலையற்ற மூலதனம் தொழிலாளர் சக்தியில் முதலாளித்துவ முதலீட்டைக் குறிக்கிறது, உபரி மதிப்பின் ஒரே ஆதாரமாக இது கருதப்படுகிறது. இது "நிலையற்ற" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் அது உற்பத்தி செய்யப்படும் மதிப்பிலிருந்து மாறுபடும் என்பதால், அது புதிய மதிப்பை உருவாக்குகிறது. மறுபுறம், நிலையான மூலதனம், உற்பத்தி மற்றும் உற்பத்தி இயந்திரம் போன்ற மனித அல்லாத காரணிகளில் முதலீட்டைக் குறிக்கிறது. மார்க்ஸ் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு அதன் சொந்த மாற்றீட்டு மதிப்பை மட்டுமே பங்கிடுவதற்கு இது உதவும். + +முதலீடு அல்லது மூலதனக் குவிப்பு என்பது பாரம்பரிய பொருளாதார தத்துவத்தில், அதிக மூலதனத்தின் உற்பத்தி ஆகும். முதலீட்டுக்கு சில பொருட்கள் தயாரிக்கப்பட வேண்டும், ஆனால் அவை உடனடியாக நுகரப்படாமல், பிற பொருட்களை உற்பத்தி செய்ய மூலதன பொருட்களாக பயன்படுத்தப்படுகின்றன. முதலீடு சேமிப்புக்கு நெருக்கமாக தொடர்புடையது என்றாலும், ஆனால் இது இரண்டும் ஒன்று இல்லை. கெயின்ஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி, சேமிப்பு என்பது தற்போதைய பொருட்களின் அல்லது சேவைகளில் ஒரு வருமானம் அனைத்தையும் செலவழிக்காது, முதலீடு ஒரு குறிப்பிட்ட வகை பொருட்களின் செலவினங்களைக் குறிக்கிறது, அதாவது மூலதன பொருட்கள். + +ஆஸ்திரியப் பொருளாதார பள்ளியின் வல்லுனர் ஆய்கென் வொன் பொம் போவர்க், உற்பத்தி செயல்முறைகளின் சுற்றுச்சூழல் மூலம் மூலதன தீவிரத்தை அளவிடப்பட்டதாகக் கூறினார். மூலதனமானது, உயர்மட்ட பொருள்களின் பொருட்களாக அல்லது நுகர்வோர் பொருட்களை தயாரிக்க பயன்படும் பொருட்களாகவும் வரையறுக்கப்பட்டு, எதிர்கால பொருள்களாக இருப்பதன் மூலம் அவற்றின் மதிப்பு பெறுகிறது. + +மனித வளர்ச்சி கோட்பாடு மனித மூலதனமானது தனித்துவமான சமூக, முன்முயற்சி மற்றும் படைப்பு கூறுகளை உருவாக்குவதாக விவரிக்கிறது: + +கேம்பிரிட்ஜ் மூலதன சர்ச்சை, மாசசூசெட்ஸ் எம்ஐடி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பொருளாதார வல்லுனர்களுக்கிடையே மூலதன அளவீடு ஒரு பிரச்சினையாக இருந்தது. கேம்பிரிட்ஜ், இங்கிலாந்து பொருளியல் வல்லுநர்கள் ஜோன் ராபின்சன் மற்றும் பியோரா சார்பா ஆகியோர், 'மூலதன பொருட்கள்' என்ற பரம்பரையற்ற பொருள்களை ஒருங்கிணைப்பதற்கான அடிப்படை இல்லை என்று கூறுகின்றனர். + +அரசியல் பொருளாதார நிபுணர்கள் ஜொனாதன் நிட்சன் மற்றும் ஷிம்ஷோன் பிச்லர் ஆகியோர் மூலதனம் ஒரு உற்பத்தி நிறுவனமாக இல்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள், ஆனால் நிதியியல் மற்றும் மூலதன மதிப்புகள் இலாபங்களை தாங்கிக் கொள்ளும் பரந்த சமூக நிகழ்வுகளில் உரிமையாளர்களின் சார்பான அதிகாரத்தை அளவிடுகின்றன. + + + + + +உற்பத்திக் காரணிகள் + +பொருளியலில் உற்பத்திக் காரணிகள் என்பது பொருட்கள் அல்லது சேவைகளை உற்பத்தி செய்வதில் பயன்படும் வளங்களைக் குறிக்கின்றது. + +செந்நெறிப் பொருளியல் மூன்று வகையான காரணிகளைப் பற்றிப் பேசுகின்றது: + + +அறிவுப் பொருளாதாரத்தின் தோற்றத்துடன் நவீன பகுப்பாய்வுகள், முன் குறிப்பிட்ட பொருள்சார் மூலதனங்களை (physical capital) மனித மூலதனம், அறிவுசார் மூலதனம் ஆகியவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கின்றன. பின் குறிப்பிட்ட மனித மூலதனம், அறிவுசார் மூலதனம் ஆகியவற்றின் மேலாண்மைக்குப் புலன்சாரா மேலாண்மை (intangible management) சார்ந்த நுட்பங்கள் தேவைப்படுகின்றன. + +1966 ஆம் ஆண்டில், லென் ராஜர்ஸ் (Len Rogers) என்பவர் தகவல் என்பதை நான்காவது காரணியாக முன்வைத்தார். நிலம், உழைப்பு, மூலதனம் முதலியவற்றை வைத்திருக்க முடியும் என்றும், ஆனால், பல மடங்காக அதிகரித்துவரும் தொழில்நுட்பச் சூழலில் "செய்நுட்ப அறிவு" (know how) ஒரு முக்கியமான காரணியென்றும் அவர் வாதிட்டார். அணுக்கருக் கருவிகளின் உற்பத்தியை அவர் நடப்பு எடுத்துக்காட்டாக முன்வைத்தார். + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 2007 + +2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1975 + +1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1976 + +1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1977 + +1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1978 + +1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +உழைப்பு (பொருளியல்) + + +செந்நெறிப் பொருளியலிலும், எல்லா நுண்மப் பொருளியலிலும், உழைப்பு என்பது, மனிதர்களால் செய்யப்படுகின்ற வேலையின் அளவை என்பதுடன், மூன்று உற்பத்திக் காரணிகளுள் ஒன்றும் ஆகும். நிலமும், மூலதனமும் ஏனைய இரண்டு காரணிகள். பருவினப்பொருளியலில், சில கோட்பாடுகள் மனித மூலதனம் எனும் கருத்துருவொன்றை உருவாக்கி முன்வைத்துள்ளன. இது வேலையாட்கள் செய்கின்ற உண்மையான வேலையை அன்றி அவர்களிடம் உள்ள திறமையைக் குறிக்கிறது. பருவினப் பொருளியலின் வேறு கோட்பாடுகள், மனித மூலதனம் என்பது ஒரு முரண்பாடான சொற் பயன்பாடு எனக்கூறுகின்றன. + +உழைப்பிற்கான அடிப்படையான ஈடு கூலியாகும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கான ஈடு, கூலி வீதம் எனப்படும். இவ்விரு சொற்களும் சில சமயம் ஒரே பொருளிலும் பயன்படுத்தப்படுவதுண்டு. இது தொடர்பான கருத்துருக்களாவன: + + +பொருளியலாளர்கள், உழைப்பை, உழைப்பின் நேரம், மொத்தக் கூலி, அல்லது செயற்திறன் (efficiency) என்பவற்றின் மூலம் அளவிடுகிறார்கள். + +கூட்டு மனித உழைப்பை உகந்த (optimal) முறையில் ஒதுக்கீடு செய்யும் விடயத்தில் தெளிவுண்டாக்கி வழிகாட்டுவதே மாக்சியப் பொருளியலின் நோக்கம் ஆகும். நுண்மப் பொருளியலில் காணப்படுவதுபோல் மேற்கூறிய உகந்த தன்மையானது, மாக்சியப் பொருளியலில் ஒரு நுட்பியல் மாறியாகக் (technical variable) கருதப்படுவதில்லை. ஏனெனில், தொழிலாளர்கள் ஒரு உற்பத்திக் காரணி மட்டுமல்ல, அவர்கள் தங்களைத் தாங்களும், ஒருவரையொருவரும் ஒழுங்கமைப்புச் செய்து கொள்கிறார���கள். + + + + +தொடுகோடு + +தொடுகோடு அல்லது தொடலி ("Tangent") என்பது ஒரு வளைகோட்டை ஒரே ஒரு புள்ளியில் தொடும் ஒரு நேர்க்கோடு ஆகும். வளைகோட்டைத் தொடும் இடத்தில் அத் தொடுகோட்டுக்கு செங்குத்தாக ஒரு கோடு வரைந்தால் அதுவே அவ்விடத்தில் அவ் வளைகோட்டின் செங்குத்துக் கோடு் ஆகும். அதாவது தொடுபுள்ளியில் வளைகோடு எச்சாய்வு கொண்டுள்ளதோ அதே சாய்வுதான் தொடுகோடும் கொண்டுள்ளது. இந்த தொடுகோடு என்னும் கருத்துரு வடிவவியலிலும், கணிதத்திலும் மிகவும் அடிப்படையானது. பக்கத்தில் காட்டப்பட்டுள்ள படத்தின் உதவியுடன் கருத்தை மேலும் விளக்கிக் கொள்ளலாம். + + +இவ் வட்டத்திற்கு (x, y) என்ற புள்ளியிடத்து வரையப்படும் தொடுகோட்டின் சமன்பாடு: + + + + +வளைகோடு + +ஒரு வளைகோடு ("curve" or "curved line") என்பது இடத்திற்கு இடம் சாய்வு மாறும் ஒரு கோடு. சாய்வு இடத்திற்கு இடம் மாறினாலும் இச்சாய்வு திடீர் என்று மாறாமல் இருத்தல் வேண்டும். அதாவது அக்கோட்டின் எப்புறத்தில் இருந்து அணுகுகிறோம் என்பதைப் பொறுத்து ஒரே புள்ளியில் இரு வேறு சாய்வு கொண்டிராமல் இருத்தல் வேண்டும். படத்தில் நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ள கோடு வளைகோடு ஆகும். ஒப்பிடுவதற்காக சிவப்பு நிறத்தில் நேர்க்கோடும், பச்சை நிறத்தில், கோடு திடீர் என்று சாய்வு மாறும், மடிக்கோடும் காட்டப்பட்டுள்ளன. + + + + +அய்யாவழி மும்மை + +அய்யாவழி திரித்துவம், அல்லது "அய்யாவழி மும்மை", அய்யா வைகுண்டர் எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் கலியை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. + +முதலில் வைகுண்டரின் அவதார உடல் தெய்வ லோகவாசியாக இருந்து பூஉலகில் பிறந்த சம்பூரண தேவனின் உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் நாராயணர் சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் சீவன் முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் ஏகப்பரம்பொருள் வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார். + + + + + + +உள்தொடு வடிவம் + +உள்தொடு வட்டம் ("inscribed figure") என்பது ஒரு பல்கோண வடிவத்தின் ஒவ்வொரு பக்கமும��� ஒரு தொடுகோடாக அமையும் படி பல்கோணத்திற்கு உள்ளே வரையப்படும் வட்டம் ஆகும். சீரான பல்கோண வடிவங்களின் உள்ளே வரையப்பட்ட உள்தொடு வட்டங்களைப் படத்தில் காணலாம். + + + + + + +சூழ்தொடு வட்டம் + +சூழ்தொடு வட்டம் அல்லது சுற்றுவட்டம் ("circumscribed circle" or "circumcircle") என்பது ஒரு பல்கோணியின் ஒவ்வொரு முனையையும் தொட்டுக்கொண்டு இருக்குமாறு வரையப்படும் வட்டம் ஆகும். ஒரே நீளமும் கோணமும் கொண்ட பக்கங்களைக் கொண்ட சீரான பல்கோணங்கள் எல்லாவற்றுக்கும் சுற்றுவட்டம் வரைய இயலும். ஆனால் பக்க நீளங்கள் ஒரே அளவாக இல்லாத பல்கோணங்கள் யாவற்றுக்கும் சுற்று வட்டம் வரைய இயலாது எனினும், சிலவற்றுக்குச் சுற்றுவட்டம் வரைய இயலும். கீழ்க்காணும் படத்தில் ஒரு எடுத்துக் காட்டைப் பார்க்கலாம். + +சுற்றுவட்டம் கொண்ட பல்கோணிகள், வட்டப் பல்கோணிகள் ("cyclic polygon") எனப்படுகின்றன. சீரான பல்கோணிகள், இருசமபக்க சரிவகங்கள், முக்கோணங்கள், செவ்வகங்கள் வட்டப் பல்கோணிகள் ஆகும். + +சுற்றுவட்டத்தின் மையமானது சுற்றுவட்ட மையம் ("circumcenter") என்றும் ஆரமானது சுற்றுவட்ட ஆரம் ("circumradius") எனவும் அழைக்கப்படுகிறது. + +அனைத்து முக்கோணங்களும் வட்ட முக்கோணங்கள் ஆகும். அதாவது அனைத்து முக்கோணங்களுக்கும் சுற்று வட்டங்கள் வரைய முடியும்.. +ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையமானது அம்முக்கோணத்தின் மூன்று உச்சிகளிலிருந்தும் சமதொலைவில் இருக்கும். அதே சமயம் ஒரு கோட்டுத்துண்டின் நடுக்குத்துக்கோட்டின் மீதுள்ள எந்தவொரு புள்ளியும் அக்கோட்டுத்துண்டின் இரு முனைகளிலிருந்தும் சமதொலைவில் இருக்கும். அதனால் முக்கோணத்தின் ஏதேனும் இரு பக்கங்களின் நடுக்கோடுகள் சந்திக்கும் புள்ளியானது முக்கோணத்தின் அந்த இரு பக்கங்களின் முனைகளிலிருந்து சமதொலைவில் இருக்கும். எனவே ஒரு முக்கோணத்தின் ஏதாவது இரு பக்கங்களின் நடுக்குத்துக்கோடுகள் சந்திக்கும் புள்ளியே அம்முக்கோணத்தின் சுற்றுவட்ட மையமாகும். +ஒரு முக்கோணத்தின் சுற்றுவட்டமையத்தின் அமைவிடம் அம்முக்கோணத்தின் தன்மையைப் பொறுத்தது: + +முக்கோணத்தின் ஏதாவதொரு பக்கத்தின் அளவை அந்தப் பக்கத்திற்கு எதிரான கோணத்தின் சைன் மதிப்பால் வகுக்கக் கிடைக்கும் மதிப்பு, சுற்றுவட்டத்தின் விட்டத்தின் அளவாக இருக்கும். சைன் விதியின் விளைவாக முக்கோணத்தின் மூன்று பக்கங்களில் எந்தவொன்றைக் கொண்டும் சுற்றுவட்ட விட்டத்தைக் கணக்கிட முடிகிறது. முக்கோணத்தின் ஒன்பது-புள்ளி வட்டத்தின் விட்டத்தின் அளவு, சுற்றுவட்டத்தின் விட்டத்தின் அளவில் பாதியாக இருக்கும். Δ"ABC" இன் சுற்றுவட்ட விட்டத்தின் அளவு: +சுற்றுவட்டத்தின் விட்டத்திற்கான மற்றுமொரு வாய்ப்பாடு: + +எந்தவொரு முக்கோணத்திலும் அதன் சுற்றுவட்டமையமானது அம்முக்கோணத்தின் நடுக்கோட்டுச்சந்தியுடனும், செங்கோட்டுச்சந்தியுடனும் சேர்ந்து ஒரே கோட்டில் அமையும். இம்மூன்று புள்ளிகளும் அமையும் கோடு முக்கோணத்தின் ஆய்லர் கோடு ஆகும். +சுற்றுவட்டமையமும் செங்குத்துச்சந்தியும் ஒன்றுக்கொன்று சமகோண இணையியமாகும். + +உள்ஆரம்(உள்தொடுவட்டத்தின் ஆரம்) r, மூலைவிட்டம் p, q யின் அடிப்படையில் : + +சாய்சதுரத்தின் இரட்டை பலகோணம் செவ்வகம் ஆகும் : + + + + + +தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண் + +தொடர் பல்கோணத் தொடுவட்டச் சிறப்பெண் என்பது கீழ்க்காணும் முறையில் அறியப்படும் ஒரு சிறப்பெண் ஆகும். இதன் மதிப்பு 8.700036625...என நிறுவியிருக்கிறார்கள். இச்சிறப்பெண்ணை அறிய முதலில் ஒரு சமபக்க முக்கோணம் வரைந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்த முக்கோணத்திற்கு உள்ளே, முக்கோணத்தின் பக்கங்களைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு ஒரு உள்தொடு வட்டம் வரைதல் வேண்டும். பின்னர் அந்த முக்கோணத்தைச் சூழ்ந்து முக்கோண முனைகளைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு சூழ்தொடு வட்டம் வரைதல் வேண்டும். பிறகு இந்த வட்டத்தைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு கட்டம் (சதுரம்) வரைதல் வேண்டும். இந்த கட்டத்தின் முனைகளைத் தொட்டுக்கொண்டு இருக்குமாறு ஒரு சூழ்தொடு வட்டம் வரைதல் வேண்டும். பிதகு இந்த வட்டத்தைத் தொட்டுக்கொண்டு ஒரு ஐங்கோணம், பிறகு சூழ் தொடுவட்டம், பின்னர் அறுகோணம், பின்னர் தொடுவட்டம் என்று வரைந்து கொண்டே முடிவின்றிச் சென்றால், அடையக்கூடிய வட்டத்தின் ஆரம், முதலில் முக்கோணத்திற்குள் இட்ட தொடுவட்டத்தின் ஆரத்தை விட எவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை குறிக்கும் நிலை எண்ணாகும் இச்சிறப்பெண். இவ்வெண் ஏறத்தாழ 8.700036625...என நிறுவியிருக்கிறார்கள். + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1979 + +1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1980 + +1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + + + + + +டக்வோர்த் லூயிஸ் முறை + +டக்வோர்த் லூயிஸ் முறை (Duckworth-Lewis method) அல்லது ட/லூ முறை என்பது துடுப்பாட்ட பன்னாட்டு ஒருநாட் போட்டிகளில் மற்றும் இருபது20 போட்டிகளில் ஆட்டம் வானிலை அல்லது பிற காரணங்களால் தடைபட்டால், இரண்டாவதாக ஆடும் அணிக்கான ஓட்ட இலக்கை கணிதவியலின் உதவியுடன் அறுதியிடும் (நிர்ணயிக்கும்) ஓர் முறையாகும். இது ஆங்கிலேய புள்ளியியலாளர்களாகிய பிராங் டக்வோர்த், டொனி லூயிஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்டதாகும். பன்னாட்டு துடுப்பாட்ட மன்றம் இதனை சீர்தரமாக (நியமமாக) ஏற்றுக் கொண்டுள்ளது.இது பொதுவாக நியாயமான,துல்லியமான இலக்கை அறுதியிடும் முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், ஆட்டம் இயல்பாக முடிந்திருந்தால் "என்ன நடந்திருக்கலாம்" என்று முன்னுரைக்க முயல்வதால் சிலநேரங்களில் சர்ச்சைகளை கிளப்புகிறது. + +2008 தொடரில் நான்காவது இந்தியா- இங்கிலாந்து ஒருநாட்போட்டியில் முதல்முறை ஆட்டமே மழையினால் இருமுறை தடைபட்டு ஒவ்வொரு அணியும் 22 ஓவர்களே விளையாடுமாறு அமைந்தது. முதலில் ஆடிய இந்தியா 166/4 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் ஓட்ட இலக்கு ட/லூ முறையில் 22 ஓவர்களில் 198 ஓட்டங்களாக அறுதியிடப்பட்டது. + +இந்த எடுத்துக்காட்டில் முதல்முறை ஆட்டம் தடைபட்டால் இரண்டாம் முறை ஆடும் அணியின் இலக்கு ட/லூ முறையில் எவ்வாறு கூடுதலாகிறது என்பதை விளக்குகிறது. இங்கிலாந்து அணிக்கு முன்னதாகவே 22 ஓவர்கள் மட்டுமே ஆடவேண்டும் என்பது "தெரிந்திருந்தமையால்" தடைபட்ட முதல்முறை ஆட்டத்தில் இந்தியா எடுத்த ஓட்டங்களை விட கூடுதலாக எடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பை உள்ளடக்கியுள்ளது. இங்கிலாந்து 22 ஓவர்களில் 178/8 எடுத்ததால் ஆட்டத்தை "இந்தியா ட/லூ முறையில் 19 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக" அறிவிக்கப்பட்டது.. + +2006ஆம் ஆண்டு ஒருநாள் தொடரில் இந்தியாவிற்கும் பாக்கித���தானிற்கும் நடந்த முதல் ஒருநாள் போட்டி ஓர் எளிய எடுத்துக்காட்டாகும். முதலில் ஆடிய இந்தியா 49வது ஓவரிலேயே 328 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவதாக ஆடிய பாக்கித்தான் 7 விக்கெட் இழப்பிற்கு 311 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது 47வது ஓவரில் ஒளிக்குறைவு காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டது. + +இந்த எடுத்துக்காட்டில், பாக்கித்தானின் இலக்கு, ஆட்டம் தொடர்ந்திருந்தால் மூன்று ஓவர்களில் (18 பந்துகளில்) 18 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்திருக்கும். ஆட்டத்தில் எடுத்த ஓட்டவேகத்தைக் கணித்தால் இதனை பெரும்பாலான அணிகள் எட்ட இயலும். ட/லூ முறையின்படியும் ஓட்ட இலக்கு 47 ஓவர் முடிவில் 304 ஓட்டங்களாக இருந்தது. ஆகவே "பாக்கித்தான் ட/லூ முறையில் 7 ஓட்ட வேறுபாட்டில் வென்றதாக" பதியப்பட்டது.. + +2010 பன்னாட்டு துடுப்பாட்ட மன்றம் உலகக்கிண்ணம் இருபது20 போட்டிகளில் ட/லூ முறை இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையேயான குழுநிலை ஆட்டத்தில் பயன்படுத்தப்பட்டது. சிறீலங்கா முதலில் ஆடி 20 ஓவர்களில் 173/7 ஓட்டங்களை எடுத்தது. இரண்டாவதாக ஆடிய சிம்பாப்வே அணி 5 ஓவர்களில் 29/1 எடுத்திருந்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. சிறீலங்கா ட/லூ முறையில் 14 ஓட்டங்கள் வேறுபாட்டில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. + +அதேநாளில், மற்றொரு குழுநிலை ஆட்டத்தில் இங்கிலாந்திற்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையேயான ஆட்டத்திலும் மழை காரணமாக ட/லூ முறை பயன்படுத்தப்பட்டது. இங்கிலாந்து தனக்கான 20 ஓவர்களில் 191/5 ஓட்டங்கள் எடுத்தது. மேற்கு இந்தியத்தீவுகள் அணி ஆடியபோது 30/0 ஓட்டங்கள் எடுத்திருந்தநிலையில் 2.2 ஓவர்களில் ஆட்டம் தடைபட்டது. ட/லூ முறைப்படி மே.இ.தீவுகளுக்கான ஓட்ட இலக்கு 6 ஓவர்களில் 60ஆக அறுதியிடப்பட்டது. இதனை அவ்வணி ஒரி பந்து மீதம் உள்ளபோதே எடுத்து வென்றது.. இங்கிலாந்து அணித்தலைவராக இருந்த பவுல் காலிங்வுட் ட/லூ முறையைப் பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து இது இருபது20 ஆட்டங்களுக்கு சரிவருமா என்ற கேள்வியையும் எழுப்பினார். . + +ட/லூ முறையின் சாராம்சம் "வளங்கள்" ஆகும். ஒவ்வொரு அணியும் மிகுந்த கூடுதல் ஓட்டங்கள் எடுக்க இரு வளங்களைக் கொண்டுள்ளன; பெறவிருக்கும் ஓவர்களின் (அல்லது பந்துகளின்) எண்ணிக்கை மற்றும் இன்னும் விழாத விக்கெட்கள். எந்தமுறை ஆட்டத்திலும் எந்தநிலை��ிலும் ஓர் அணி கூடுதலாக எடுக்கக்கூடிய ஓட்டங்களின் எண்ணிக்கை இந்த இரு வளங்களைப் பொறுத்தே அமையும். பல்லாண்டு ஓட்ட எண்ணிக்கைகளை ஆராயந்தால் ஓர் அணியின் இறுதி எண்ணிக்கைக்கும் அந்த அணிக்குக் கிடைத்த இவ்விரு வளங்களுக்கும் இடையே ஓர் ஒப்பு இயைபு இருப்பதைக் காணலாம். இதனையே ட/லூ முறை பயன்படுத்துகிறது. + +அச்சிடப்பட்ட அட்டவணைகளிலிருந்து, இவ்விரு வளங்களின் சதவீதத்தை மீதமிருக்கும் ஓவர்கள் (அல்லது பந்துகள்) மற்றும் விக்கெட்கள் இழப்பு இவற்றைக்கொண்டு அறிந்து மேற்பட்டு எழும் வளங்களின் குறைவிற்கு ஏற்ப மேலேயோ கீழேயோ சரிசெய்து ஓட்ட இலக்கினை அறுதியிட முடியும். இந்த சதவீதத்தைக் கொண்டு கணக்கிடப்படும் இலக்கு சமன் என்று கூறப்படும். இரண்டாவது அணி இதனை எட்டினால் வென்றதாக அறிவிக்கப்படும். அதே இலக்கை (கீழுள்ள முழு எண்ணிற்கு திருத்தப்பட்டது) அடைந்தால் ஆட்டம் சமநிலையில் முடிந்ததாகக் கொள்ளப்படும். + +இம்முறையில் ஆட்டத்தின் வெற்றிதோல்விகளை கணக்கிட ஒரு நாள் துடுப்பாட்டப்போட்டிகளில் குறைந்தது 20 ஓவர்களும் இருபது20 ஆட்டங்களில் குறைந்தது 5 ஓவர்களும் ஆடப்பட்டிருக்க வேண்டும். + + + + + +கணபதி ஐயர் + +கணபதி ஐயர் (1709 - 1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முன்னோடி என அறியப்படுபவர். அத்துடன் இவர் ஒரு சிற்றிலக்கியப் புலவரும் ஆவார். + +இப்புலவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வசித்தவர். தமது சுற்றத்தவர்களுள் ஒருவரான சண்முக ஐயர் என்பவர் சில கீர்த்தனைகளுடன் தொடங்கி நிறைவேற்றாதுவிட்ட சுந்தரி நாடகத்தை "வாளபிமன் நாடகம்" என்று மாற்றி, எல்லோரும் வியக்கும் வண்ணம் பாடி முடித்தவர். + + + + + + + +களுத்துறை + +களுத்துறை இலங்கையின் மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள மாநகரசபை ஆகும். இது மாவட்ட தலைநகரமுமாகும். கொழும்பில் இருந்து தெற்குத் திசையில் இலங்கையின் மேற்கு கரையோரத்தில் களுகங்கை கடலோடு கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. களுத்துறையில் காணப்படும் பௌத்த விகாரை இலங்கை பௌத்தர்களுக்கு முக்கியமான வணக்கத்தலமாகும். + +களுத்துறை கரையோர சமவெளி என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 0-11 மீற்ற���் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 27 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக்காற்று மூலம் கிடைக்கிறது. 2500-3125 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது. + +இது சிங்களவரை பெரும்பான்மையாக கொண்ட ஒரு மாநகரசபை ஆகும். இங்குள்ள மக்களில் பெரும்பான்மையினர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவராவர். + +நகரத்தில் சேவை சார் தொழில்கள் முக்கிய இடம் வகிப்பதோடு நகரைச் சுற்றிய பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை முக்கிய இடத்தை பெறுகிறது. + + + + +பாலிவைனைல் குளோரைடு + +பாலிவினைல் குளோரைடு "(Polyvinyl chloride)" என்பது, பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒரு நெகிழியாகும். இதை பாலிவைனைல் குளோரைடு, வினைல் அல்லது பொதுவாக பி.வி.சி என்ற பெயர்களாலும் அழைப்பர். வருமான அடிப்படையில் நோக்கும்போது இது வேதித் தொழில்துறையின்பெறுமதிப்பு மிக்க வேதிப் பொருள்களுள் ஒன்றாகும். பாலியெத்திலீன் மற்றும் பாலிபுரோப்பைலீனுக்கு அடுத்ததாக செயற்கை முறையில் பரவலாக நெகிழி பலபடியாக உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது. + +நெகிழிகள் இரண்டு அடிப்படை வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. கடின நெகிழி, இளகும் நெகிழி என்பன அவ்விரண்டு வகைகளாகும். கடின நெகிழியை சிலநேரங்களில் சுருக்கமாக ஆர்.பி.வி.சி என்று சுருக்கி அழைப்பார்கள். நீர் வழங்கும் அல்லது கழிவகற்றும் குழாய்கள் கட்டுமானம், கதவுகள் மற்றும் சன்னல்கள், கிராமப்போன் தட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் பயன்பாடுகளில் கடின நெகிழி பயன்படுத்தப்படுகிறது.மேலும் இது புட்டிகள் எனப்படும் பாட்டில்கள், உணவு அல்லாத பொருட்களை சிப்பமாக்கல் அட்டைகள் தயாரித்தல் (வங்கி அல்லது உறுப்பினர் அட்டைகள் போன்றவை) போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெகிழியாக்கிகளை கூடுதலாக கடினநெகிழிகளுடன் சேர்க்கும் போது மேலும் மென்மையான நெகிழ்வான தன்மை கொண்டதாக உருவாக்க முடியும். தாலேட்டுகள் எனப்படும் நெகிழியாக்கி மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இளகு குழாய்கள், மின் கம்பிகளுக்கான காப்பு உறைகள், மழை ஆடைகள், சாயல் தோல், விளம்பர வடிவங்கள், வரைவி பதிவேடுகள் போன்றவற்றைத் தயாரிக்க இளகு��் நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஊதுபொருட்கள் மற்றும் பல பயன்பாடுகளில் நெகிழிகள் இரப்பருக்கு மாற்றாக வந்துள்ளன . +தூய பாலிவினைல் குளோரைடு வெள்ளை நிறம் கொண்டதாகும். உடையக்கூடியதும் திடமானதுமாகவும் காணப்படுகிறது. ஆல்ககாலில் இது கரையும் ஆனால் டெட்ராஐதரோபியூரானில் சற்றே கரையும். +உலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிவிசியின் 50% கட்டுமானத் தொழிலிலேயே பயன்படுகின்றது. பிவிசியினால் உருவாக்கப்படும் கட்டிடப்பொருட்கள் விலை குறைந்தவை என்பதுடன் சுலபமாகப் பொருத்தப்படக்கூடியவை. அண்மைக்காலங்களில் பிவிசி, பாரம்பரியமான கட்டிடப்பொருட்களான மரம், காங்கிறீற்று, உலோகம், களிமண் போன்ற பொருட்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பல வழிகளிலும் சிறப்பானதாகத் தோன்றும் இப்பொருளால் சூழலுக்கும், மனிதர்களின் உடல் நலத்துக்கும் ஏற்படக்கூடிய தீங்குகள் பற்றிக் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், சூழல் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி இயங்கிவரும் பல நிறுவனங்கள், பிவிசியின் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகின்றன. + +செருமன் வேதியியலாளர் இயுகென் பௌமான் 1872 ஆம் ஆண்டில் தற்செயலாக இதைத் தயாரித்தார் . வினைல் குளோரைடு குவளையின் உள்ளே ஒரு வெண்மையான திண்மமாக இந்த பலபடி தோன்றியது, அதை சூரிய ஒளியின் வெளிச்சத்தில் படுமாறு வைக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசிய வேதியியலாளர் இவான் ஓசுட்ரோமிலன்சுக்கி மற்றும் செருமனிய இரசாயன நிறுவனமான கிரெசெய்ம்-எலக்ட்ரான் நிறுவனத்தைச் சேர்ந்த பிரிட்சு கிளாட்டி என்ற இருவரும் வணிகப் பொருட்கள் தயாரிப்பில் நெகிழியைப் பயன்படுத்த முயற்சித்தனர், ஆனால் கடினத்தன்மையை செயலாக்குவதில் அவர்களுக்கு இடர்பாடுகள் தோன்றின. சில சமயங்களில் உடையும் பலபடி அவர்களின் முயற்சியை முறியடித்தது. 1926 ஆம் ஆண்டில் வால்டோ செமன் மற்றும் பி.எப்.காட்ரிட்சு நிறுவனம் நெகிழியாக்கியைச் சேர்த்து இளக்கும் ஒரு புது முறையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து நெகிழிப் பயன்பாடு பரவலாக்கப்பட்டது. + +வினைல் குளோரைடை பலபடியாக்குவதன் மூலம் பாலிவினைல் குளோரைடு உற்பத்தி செய்யப்படுகிறது. + +கிட்டத்தட்ட 80% நெகிழி தொங்கல் பலபடியாக்கல் முறையில் தயாரிக்கப்படுகிறது. பால்மப் பலபடியாக்கல் முறையில் 12% நெகிழியும், பருமப் பலபடியாக்கலில் 8% நெகிழியும் தயாரிக்கப்படுகின்றன. பலபடியாக்கல் வினையை பல்லுறுப்பாக்கல் வினை என்றும் அழைக்கலாம். தொங்கல் பலபடியாக்கலில் கிடைக்கும் நெகிழிகளில் உள்ள துகள்கள் சராசரியாக 100–180 μமீ அளவில் காணப்படுகின்ற்ன.பால்மப் பலபடியாக்கலில் இதைவிடச் சிறிய துகள்கள் 0.2 μமீ அளவில் காணப்படுகின்றன. +வினைல் குளோரைடு ஒருமமும் தண்ணீரும் பலபடியாக்க வினை முடுக்கிகள் மற்றும் இதரக் கூட்டுசேர் பொருட்கள் உள்ள உலையில் சேர்க்கப்படுகின்றன. வினைநிகழும் உலையில் உள்ள வினைப்பொருட்கள் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக ஒருமத்தையும் நீரையும் கலந்து தொங்கல் பராமரிக்கப்படுகிறது. பாலிவினைல் குளோரைடு பிசினில் உள்ள துகள்களின் அளவு ஒரே சீரான அளவாக இருப்பது உறுதிபடுத்திக் கொள்ளப்படுகிறது. வினையானது வெப்ப உமிழ் வினையாகும் என்பதால் இங்கு குளிரூட்டல் அவசியமாகும். வினையின்போது கன அளவு குறையுமென்பதால் வினைக் கலவையுடன் தொடர்ச்சியாக நீர் சேர்க்கப்பட்டு தொங்கல் பராமரிக்கப்படுகிறது . + +வினைல் குளோரைடு ஒருமத்தின் பலபடியாக்கல் வினை வினைமுடுக்கிகள் எனப்படும் சேர்மங்களின் நீர்த்துளிகளால் துவக்கப்படுகிறது. இச்சேர்மங்கள் உடைந்து தனியுறுப்பு சங்கிலி வினைகளைத் தொடங்குகின்றன. டையாக்டனோயில் பெராக்சைடு மற்றும் டைசீட்டைல் பெராக்சி டைகார்பனேட்டு போன்ற சேர்மங்கள் குறிப்பிட்ட சில வினை முடுக்கிகளாகும். சில வினைமுடுக்கிகள் வினையை விரைவாகத் தொடங்குகின்றன ஆனால் விரைவில் சிதைவடைகின்றன. சில வினைமுடுக்கிகள் இதற்கு தலைகீழாக செயல்படுகின்றன. பலபடியாக்கம் ஒரு சீரான விகிதத்தில் நிகழ இரு வேறுபட்ட வினை முடுக்கிகளின் கலவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. பலபடி சுமார் 10 மடங்காக வளர்ந்த பின்னர் குறுகிய பலபடி வினைல் குளோரைடு ஒருமத்திற்குள் வீழ்படிவாகின்றது. இவ்விழ்படிவில் பலபடியாக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. வர்த்தக பலபடிகளின் எடைச் சராசரி மூலக்கூற்று எடை 100,000 முதல் 200,000 வரையாக இருக்கும். எண்ணிக்கைச் சராசரி மூலக்கூற்று எடை 45,000 முதல் 64,000 ஆகவும் இருக்கும். +வினையின் பாதை ஒரு முறை தொடங்கியவுடன் உருவாகும் பாலிவினைல் குளோரைடு குழம்பிலிருந்���ு வாயு நீக்கப்படுகிறது. அதிகப்படியாக உள்ள வினைல் குளோரைடு ஒருமம் தனியே பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. உருவான பலபடியிலுள்ள தண்ணீரை அகற்றுவதற்காக அது மையவிலக்கு அமைப்பின் வழியாகச் செலுத்தப்படுகிறது. பின்னர் இக்குழம்பு காற்றுப் படுக்கையில் உலர்த்தப்படுகிறது. இப்போது கிடைக்கும் தூளை சிறுசிறு உருண்டைகளாக்குவதற்கு முன்னர் நன்றாகச் சலித்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக இவ்வாறு கிடைக்கின்ற பாலிவினைல் குளோரைடில் வினைல் குளோரைடு ஒருமம் மில்லியனுக்கு ஒரு பகுதி அளவிற்கே காணப்படும். + + + + +குழாய் + +குழாய் என்பது உள்ளீடற்ற ஒரு உருளை வடிவில் அமைந்த ஒரு பொருள். இது திரவப் (நீர்மப்) பொருட்களை அல்லது வளிமங்களை ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்துக்குக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றது. நகரங்களிலே, நீர் வழங்குவதற்கும், கழிவு நீரை அகற்றுவதற்கும் குழாய்கள் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல்வேறு பொருட்களால் செய்யப்படும் குழாய்கள் பல அளவுகளில் கிடைக்கின்றன. குழாயின் அளவு பற்றிய விவரம் கொடுக்கும்போது, அதன் வெட்டுமுகத்தின் உள் அல்லது வெளி விட்டத்தின் அளவு, சுவரின் தடிப்பு என்பன குறிப்பிடப்படுகின்றன. கடினமான இரும்பு போன்ற கடினமான பொருட்களாலான குழாய்கள் வளையும் தன்மையற்றவை. தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கக்கூடிய தன்மை கொண்ட குழாய்கள், பலவகையான பிளாஸ்டிக்குப் (நெகிழிப்) பொருட்களை) பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. + + + + + +வவுனியா விபுலாநந்தா கல்லூரி + +வவுனியா விபுலாநந்தா கல்லூரி இலங்கையின் வவுனியாவில் உள்ள பண்டாரிகுளம் எனும் கிராமத்தில் உள்ளது. இக்கல்லூரியில் சாதாரண தரம், உயர் தரம் ஆகியவற்றில் ஏறத்தாழ 3500 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். + +முன்னர் வவுனியா விபுலானந்தர் வித்தியாலயம் என்ற பெயருடன் இருந்த பாடசாலையே தற்போது வவுனியா விபுலாநந்தா கல்லூரி என தரமுயர்த்தப்பட்டுள்ளது. + +இக்கல்லூரியின் முன்னை நாள் அதிபர் திரு சி வீ பேரம்பலம் அவர்கள் கல்லூரியினை வளர்த்தெடுப்பதில் பெரும் பங்கு ஆற்றியவர். ஆரம்பத்தில் மிக சிறிய பாடசாலையாக இருந்த இப் பாடசாலையினை முன்னணிப��� பாடசாலையாக மாற்றியதில் பெரும் பங்குடையவர். அவருடைய பணி தற்போது மு ஜெயதரன் அவர்களால் முன்னெடுத்து செல்லப்படுகின்றது. + +சுவாமி விபுலானந்தரின் பெயர் கொண்டு இயங்கும் இந்த பாடசாலை விபுலானந்தர் கழகம் என்னும் பெயரில் மாணவர்களை அங்கத்தவர்களாகக் கொண்டு கழகம் ஒன்றையும் நடாத்தி வருகின்றது. கழக மாணவர்கள் தமது திறன்களை வெளிக்கொண்டுவர இக் கழகம் உதவி புரிகின்றது. + + + + + +சித்தி அமரசிங்கம் + +சித்தி அமரசிங்கம் (ஜனவரி 5, 1937 - ஜனவரி 2007) என்று அறியப்படும் சி. அமரசிங்கம் திருக்கோணமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு கலைஞரும் சேகரிப்பாளருமாவார். ஈழத்து இலக்கியச் சோலை என்ற பதிப்பகத்தை நிறுவி அதன்மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டுள்ளார். + +த. தம்பிமுத்து - முத்தம்மா தம்பதியின் மூத்த மகனாக திருக்கோணமலையில் பிறந்தார். ஆரம்பக் கல்வியினை மயிலிட்டி மெதடிஸ்த மிஷன் வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்டார் பின்னர் திருக்கோணமலை இ.கி.ச.இந்துக்கல்லூரியில் கற்றார். + +அ. சச்சிதானந்தம் என்பவரோடு இணைந்து "அமரன் ஆனந்தன்" என்ற அமைப்பின் கீழ் தமிழில் "ROCK-N-ROLL" எனும் இசையுடன் கூடிய நடன நிகழ்வை மட்டக்களப்பு, திருக்கோணமலை, கேகாலை போன்ற இடங்களில் மேடையேற்றியுள்ளார். +1952 இல் "யாழ்" எனும் கையெழுத்து சஞ்சிகையினை ஆரம்பித்து நடத்தி வந்தார். பிரமீள், சி. சிவசேகரம், புலவர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் இச்சஞ்சிகையில் எழுதி பின்னர் பிரபலமான எழுத்தாளர்களாவர். + +1958 இல் கலைவாணி நாடக மன்றத்தினை உருவாக்க பங்களித்த இவர் "அமரன் ஸ்கிரீன்" என்ற அமைப்பை உருவாக்கி திருக்கோணமலைச் சூழலில் பல்வேறு நாடகங்களை உருவாக்கி அளித்திருந்தார். + +திருக்கோணமலை தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதில் பெரும் அக்கறை கொண்ட இவர் தனது சிறு வீட்டில் ஏராளமான பழைய ஆவணங்களையும் நூற்களையும் சேகரித்து வைத்திருந்தார். திருக்கோணமலை மாவட்டத்தை சேர்ந்த முக்கிய ஆளுமைகள் தொடர்பான தகவல்களை சேகரிப்பதையும் தன் வாழ்நாள் பணியாக கொண்டிருந்த இவர் தனது இறுதிக்காலத்தில் திருக்கோணமலையின் முக்கிய ஆளுமைகள் தொடர்பான நூலொன்றினை எழுதிக்கொண்டிருந்தார். + +ஈழத்தில் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டுவந்த காலப்பகுதியில் Dr. எஸ். ஆர். வேதநாயகம் தயாரித்த தென்றலு��் புயலும் என்ற திரைப்படத்தில் "வினோதன்" என்ற நகைச்சுவைப்பாத்திரத்தில் நடித்துமிருந்தார். அமரசிங்கம் திறமையான வில்லிசைக் கலைஞருமாவார். + +1972 இல் ஈழத்து இலக்கியச் சோலை என்ற பெயரில் ஒரு வெளியீட்டகத்தை ஆரம்பித்து பல்வேறு நூற்களை வெளியிட்டு வந்தார். + +சித்தி அமரசிங்கம் திருக்கோணமலை சிவயோக சமாஜம் மீதும் சுவாமி கெங்காதரானந்தா மீதும் ஆழமான பற்றினை கொண்டிருந்தார்.. + +தொழிலுக்குத் தொழில், கீக்கிரடீஸ் போன்ற நாடகங்களை வானொலிக்காக தயாரித்திருந்தார். இவரது மேடை நாடகமான இராவண தரிசனம் பின்னர் இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பாகியது. + +சித்தி அமரசிங்கத்தினால் உருவாக்கப்பட்ட கலைவாணி நாடக மன்றம் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியது. + + +மதிவளர் கலாமன்றம் சார்பில் + + +போன்ற நாடகங்களை மேடையேற்றியுள்ளார். + + +அமரன் ஸ்க்ரீன் சார்பில் பின்வரும் நாடகங்களை மேடையேற்றியுள்ளார். + + +இவை மாத்திரமன்றி, கீழைத் தென்றல் கலாமன்றம், திருமறைக் கலாமன்றம் போன்றவற்றோடும் இவர் இணைந்து இயங்கியுள்ளார். + +பல சிங்கள நாடகங்களிலும், ஏனைய நாடகக்கலைஞர்களின் நாடகங்களிலும் இவர் பங்கேற்று நடித்துள்ளார் + + + + + + + +வவுனியா சர்வதேசப் பாடசாலை + +வவுனியா சர்வதேசப் பாடசாலை இலங்கையின் வவுனியாவில் உள்ள வைரவப் புளியங்குளம், கதிரேசு வீதியில் இயங்கி வரும் ஒரு பன்னாட்டுப் பாடசாலை ஆகும். இது ஒரு கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படுகின்றது. இங்கு ஆங்கிலம் வழி கற்பித்த கடைப்பிடிக்கப்படுகின்றது. + + + + +இலங்கை வானொலியின் வன்னிச் சேவை + +இலங்கை வானொலியின் வன்னிச் சேவை வவுனியா, மன்னார், கிளிநொச்சி, ,முல்லைத்தீவு மக்களை நோக்கி இலங்கை அரசாங்கத்தினால் வவுனியாவிலிருந்து ஒலிபரப்பாகின்றது. இவ் ஒலிபரப்புக் கோபுரம் (Broadcasting Tower) வவுனியாவில் அனுராதபுர எல்லைப் பகுதிக்கு அருகில் வவுனியாவில் உள்ளஇராணுவ முகாமான ஈரற்பெரிய குளத்தில் அமைந்துள்ளது. இது வவுனியாவிலிருந்து அனுராபுரம் வழியில் கண்டி-யாழ் (A9) சாலையில் அண்ணவளாக 3 கிலோ மீற்றருக்கு அப்பால் வவுனியா நகரத்திற்குத் தெற்காக உள்ளது. + + + + +காக்டெய்ல்கள் + +காக்டெயில் என்பது ஒரு மதுபானங்கள் கலந்த குடிவகையாகும். வழக்கமாக ஒன்றோ, பலவோ மது, பழம், பழரசம், தேன், பால், சுகந்தவர்க்க வஸ்துìகளும் கலப்படமானது. + +இவை மேற்கு நாடுகளில் 200 வருடங்களாக செய்யப்படுகின்றன. 1970 வரை, காக்டெயில்கள் முக்கியமாக ஜின், விஸ்கி, ரம்களுடன் செய்யப்பட்டன. 1970 களிலிருந்து வோட்கா அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. மரபாக காக்டெயில் ஜின்களான கிம்லெட் அல்லது மார்டினி உபயோகத்தை வோட்காவினால் மாற்றியுள்ளார்கள். வாயுபானகங்களான் சோடா நீர், டானிக் நீர், செல்ஸ்சர் போன்றவையும் கலக்கப் படுகிறன. + +சர்வதேச வெயிட்டர்கள் சங்கம் பல காக்டெயில்களை ஆமோதிக்கிறது. இவை நான்கு வகைகளாக பிரிக்கப் படுகிறது. + +அமெரிகானோ + +பகார்தி + +டகரி + +ப்ரான்க்ஸ் + +கீர் + +கீர் ராயல் + +மன்ஹாட்டன் + +மர்கரீடா + +மார்டினி + +கின்சன் + +நெக்ரோனி + +சுவர்கம் + +ராப் ராய் + +கசப்பு விஸ்கி + +அலெக்சாண்டர் பிராண்டி + +கருப்பு ரஷ்யன் + +வெள்ளை ரஷ்யன் + +பிரெஞ்ச் கனெக்ஷன் + +காட் பாதர் + +காட் மதர் + +தங்க காடிலேக் + +துருபிடிச்ச ஆணி + +பெல்லினி + +பிளடி மேரி + +பக்ஸ் பிஸ் + +மிமோசா + +புல்ஷாட் + +ஜின் பிஸ் + +ஹார்வி வால்பாங்கர் + +பின கலாடா + +கங்காணி பட்டை + +ஆணிதள்ளி + +சிங்கப்பூர் ஒடி + +டெக்கிலா சூரியோதயம் + +ஆப்பிள் மார்டினி + +பி-52 + +காஸ்மோபாலிடன் + +கூபா லீப்ரே + +லாங் தீவு ஐஸ் டீ + +மை-டை + +மோயிடோ + +கடற்கரை காதல் + +உப்பு நாய் + + + + + + + +நெகிழி + +நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும். களிமண் ஒரு வகையான நெகிழிப் பொருள். பீங்கான், கண்ணாடி போன்ற பொருட்கள் முறுகலான பொருட்கள் அவை வளைந்து கொடுக்காமல் உடைந்துவிடும். இரும்பு (எஃகு), வெள்ளி தங்கம் போன்ற மாழைகளை (உலோகங்களை) அறை வெப்பநிலையில் வளைத்தால், அவை மீண்டும் தன் நிலையை எய்தும். இத்தகு மீட்சித் திறன் (மீண்மை) கடந்த நிலையில் பல பொருட்கள் பிசைவு (அல்லது நெகிழ்வு) நிலையை அடைகின்றன. தங்கம், வெள்ளி போன்ற மாழைகளை விசை தந்து இழுத்தால், அவை முதலில் மீண்மைப் பண்புகளைக் காட்டும், பின்னர் இன்னும் அதிக விசையுடன் இழுத்தால் மீண்மை நிலையைக் கடந்து நெகிழ்வு நிலை அடையும். இதனை இளக்கம் ("yield") என்பர். ஆனால் நெகிழிப் பொருள் அல்லது பிளாஸ்டிக்கு என்பது பெரும்பாலும் செயற்கையாக வேதியியல் முறையில் பல்கிப் பெருகக்கூடிய ஒரு மூலக்கூறு (சேர்மம்) வடிவை பல்லுருத் தொடராக செய்வித்து ஆக்கப்பட்ட பொருள் ஆகும். + +நெகிழி முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் "பார்க்ஸ்டைன்" என்ற பெயரிட்டார். முற்காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள் கொண்டு "செராடின்" என்ற நெகிழியும், சில வண்டு, பூச்சிகளில் இருந்து "ஷெல்லாக்" வார்னிஷும் செய்யப்பட்டன. பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது. 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், 'டுபாண்ட் அமெரிக்க நிறுவணம்'வெடி பொருள் நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது. 1913-ல் கட்டுவதற்கான நெகிழி உருவானது. 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது. + +காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் பாய் வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் ம��ன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. இரப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது. + + +பாலித்தீன் என்ற செயற்கை நெகிழி கீழ்க்கண்ட வகையில் உருவாகிறது. +பாலித்தீன் ஆயிரக்கணக்கான கார்பன் அணுக்களுடன் உருகிய நிலையில் இருப்பதால் பலவகைப் பொருள்களைச் செய்யலாம். அழுத்திச் சுருட்டித் தாள்களையும், உருக்கி வ்ளைத்து புட்டிகள் ஆகியவைகளை செய்யாலாம். சமன் பாட்டில் ஹைடரஜனுக்குப் பதிலாக குளோரின் அல்லது ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன் பயன்படுத்தியும் பல்வேறு வகைகள் உருவாக்கலாம். குறைந்த அடர்த்தியப் பாலித்தீன்கள், அதிகமாக நெகிழக்கூடிய வகையில் இருப்பதால் சில வேதி மாற்றங்கள் செய்து சிப்பக் கட்டு, லாமினேசன், பைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது. சற்று இறுக்கமான நிலையிலுள்ள அதிக அடர்த்தியப் பாலித்தீன்களைக் கொண்டு உருளை, கொள்கலன், குப்பி, வாளி, நாற்காலி என்று பல பொருள்கள் செய்ய முடியும். பாலிபுரோபலின் என்ற நெகிழிதான் கைப்பெட்டிகள் போன்றவை செய்யப் பயன்படுகிறது. இவ்வகை நெகிழிகள் செய்ய பல்வேறு வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. வண்ணம், மணம் பளபளப்புக்காகவும் சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. + +வெப்பத்தால் எற்ற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு. + +வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் இளகி-இறுகி என எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. +கோ பாலிமர் வினார், நைலான், பாலி புரோப்பிலின், பாலிவினைல் குளோரைடு (PVC), பாலி அசிட்டேட் நெகிழி, வினைல்,அக்ரிலிக் நெகிழி,செல்லுலோஸ் அசிட்டேன், செல்லுலாயிட், ஈதைல் செல்லுலோஸ் ஆகியவை இளகும் வகை நெகிழிகள் ஆகும். +வெவ்வேறு வகை மூலக்கூறுகள், பாலிமரைசேஷன் மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் கோ பாலிமர் வினார் ஆகும். + +வெவ்வேறு மூலக்கூறுகளைச் சுருக்குதல்(Condensation) மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் நைலான் ஆகும். + +இவை கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள்,குப்பிகள் ஆகியவை செய்யவும���, இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன. +இவை மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது. + +வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது. + +டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள். + +இது நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது.இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம் + +இந்நெகிழியுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர். + +இதுவே முதன் முதலில் உருவாக்கப்பட்ட நெகிழியாகும். இது எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது. +பொருள்கள் மீது மேல் பூச்சு (Coating)அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும், ஈதைல் செல்லுலோஸ் பயன்படுகிறது. + +இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன. +ஆல்கைடு ரெசின் என்ற நெகிழிப் பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. உறுதியானது. கடினமானது. வளையக் கூடியது. மின்சாரம் கடத்தாது. ஒளி புகும். எளிதில் நிறம் ஏற்கும் எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது. +இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது. +பீனாலிக் ரெசின்கள் என்னும் பேக்லைட்டு, மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகல் செய்யப் பயன்படுகின்றது. +இளகும் இறுகும் வகைகளுக்கு இடையில் இருக்கும் பாலியெஸ்டர் நூலிழை செயற்கை நெகிழியே ஆகும். பாலியெஸ்டர்,டெரிலின், டெக்ரான் ஆகிய மக்கள் விரும்பி அணியும் இழைத் துணிகள் ஆகியவையும் செயற்கை நெகிழிப் பொருள்களே ஆகும். + +நெகிழிப் பொருள் தயாரிக்க வேதிப் பொருள்களுடன் மரத்தூள் அல்லது மைக்கா போன்ற நிரப்பிகள், நிறப் பொருள்கள், கற்பூரம் போன்று நெகிழச் செய்வன போன்றவற்றைத் தகுந்த கணித முறையில் கலந்து, அச்சில் இட்டு வார்த்தோ அல்லது நுண்துளைகள் வழியே செலுத்தியோ அல்லது திருகிப் பிழிந்து முறுக்கு போல வார்த்தோ அல்லது தகடுகளாக இழுத்தோ இயந்திரங்கள் மூலமாக பொருள்களை உருவாக்குகின்றனர். செய்யும் பொருள்களில் நெகிழி வேதிவினை தொடர்ந்து நிகழ்ந்து வெடிப்புகளோ, நொறுங்குதலோ ஏற்படாமல் இருக்க சிவப்பு சிலிகேட், காரீயம் போன்ற வேதிப் பொருள்களைச் சேர்க்கிறார்கள். + +இத்தகைய காரணங்களால் நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளன. கடன் அட்டைகள் (Credit card), அலங்காரப் பூக்கள், செடிகள், பெவிகால், முகச்சாயம், கைப்பை, குழாய், பசை, காண்டாக்ட் லென்சு, செயற்கைப் பல், தரைப் பூச்சு, சமையலறைக் கருவிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், துணி, நாப்கின்கள், மெத்தை, தலையணை, காலணி, கயிறு, பேனா... ஆகியவை நெகிழியால் செய்யப்படுகின்றன. இளகும் பிளாஸ்டிக் பொருளுடன் தகுந்த அளவு கண்னாடி இழைகள் கலந்து இருக்கும் நெகிழித் தகடு, [எஃகு] போன்று வலுவுள்ளதால், பந்தயக் கார்கள், படகுகள் செய்யப் பயன்படுகின்றன. துணி காகிதம் போன்றவற்றை நெகிழிக் கரைசலில் அடுக்கி, அழுத்தி, ஒட்டிக் கிடைக்கும் தகடுகளை மேசை, நாற்காலி, சுவர் ஆகியவற்றின் மீது ஒட்டுகின்றனர். + +தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். +மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது. + +நெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த' பயன்படுகின்றன. 90% பொருட்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன. மருத்துவமனைகளில் சேரும் நோய் பரப்பும் கழிவுப் பொருளான பஞ்சு போன்றவற்றை எரிக்கப்பயன்படும் 'இன்சினரேசன்' என்ற சாம்பலாக்கும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன. + +டி.பாலகுமார் 'எழுதிய பிளாஸ்டிக் யுகம் நல்லதா? கெட்டதா? என்ற கட்டுரை',அறிவியல் ஒளி, +பிப்ரவரி 2008 இதழ் + + + + + + +டையாக்சின் + +டையாக்சின் ("Dioxin", "Polychlorinated dibenzodioxins") என்பது குளோரின் முதலான ஆலசன் சேர்ந்த கரிம வேதிப்பொருள் குழுவைக் குறிக்கும் பரவலாக அறியப்பட்ட பொதுப் பெயர் ஆகும். பரவலாக அறியப்பட்ட டையாக்சின்களில் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (polychlorinated dibenzofurans, PCDFs) ) மற்றும் பலகுளோரின் சேர்ந்த டைபென்சோடையாக்சின்கள் (polychlorinated dibenzodioxins, PCDDs) முக்கியமானவை. பலகுளோரின் சேர்ந்த டைபென்சோபியூரான்கள் (PCDD/Fs) உயிரனங்களில் சேர்வடைந்து மாந்தர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் பெருங்கேடு விளைவிக்கின்றது என அறிந்துள்ளனர். இவ் வேதிப்பொருட்கள் உயிரினங்களின் கொழுப்பில் ஈர்ப்புத்தன்மை உடையவை ஆகும். + + + + +இயல் விருது + +இயல் விருது தமிழுக்கு ஒருவர் ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக வழங்கப்படும் விருதாகும். கனடிய தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசியக் கழகமும் இணைந்து இயல் விருதினை வழங்குகின்றன. விருது பெறுவோருக்கு இயல் விருதுக் கேடயமும், பணமுடிப்பும் பரிசளிக்கப்படுகின்றது. + + + + + + + +சுக்கிரநீதி + +சுக்கிரநீதி என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நீதி நூல்களுள் ஒன்றாகும். இதை உண்மையில் எழுதியவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் தன்னைக் காணவந்த அசுரர்களுக்குக் கூறுவதாகவே இந்நூல் அமைந்துள்ளது. இந் நூலின் தொடக்கத்தில், பிரம்ம தேவனால் உலகம் நலம்பெற நூறு இலட்சம் சுலோகங்கள் நீதி மொழிகளாக அருளப்பட்டதாகவும், வசிட்டர் முதலியவர்களும், தானும் (சுக்கிராச்சாரியார்), அவற்றை, அரசர் முதலானோர் பயன்பெறச் சுருக்கி அளித்துள்ளதாகவும், சுக்கிராச்சாரியாரின் வாய் மொழியாகத் தரப்பட்டுள்ளது. இந்நூலின் காலம் பத்தாம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. + +இந்த நூலில் ஐந்து அத்தியாயங்கள் உள்ளன. இவற்றுள் முதல் அத்தியாயத்தில் 35 தலைப்புக்களில் விடயங்கள் கையாளப்பட்டுள்ளன. இரண்டாம் அத்தியாயத்தில் 20 தலைப்புக்களும், மூன்றாம் அத்தியாயத்தில் 12 தலைப்புக்களும் உள்ளன. நான்காம் அத்தியாயம் ஏழு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட��� மொத்தமாக 88 தலைப்புக்களில் பல்வேறு விடயங்கள் பேசப்படுகின்றன. ஐந்தாம் அத்தியாயத்தில் "பொதுநீதி" என்னும் ஒரேயொரு தலைப்புக் காணப்படுகின்றது. + +முதலாம் அத்தியாயம் தொடக்கம் ஐந்தாம் அத்தியாயம் வரையில் முறையே 387, 433, 322, 1229, 88 ஆகிய எண்ணிக்கையில், மொத்தமாக 2459 சுலோகங்களால் சுக்கிரநீதி ஆக்கப்பட்டுள்ளது. + +பொதுவான நீதி நெறிகளைப் பற்றிக் கூறுகின்ற இந்நூலில், நிர்வாக முறைகள், நீதிபரிபாலனம், போர் முறைகள், கட்டிடக்கலை, சிற்பம், அரசன், அமைச்சன் மற்றும் பலவகைப்பட்ட அதிகாரிகளினதும், பணியாட்களினதும் குணநலன்கள் என்பன போன்ற ஏராளமான விடயங்கள் பற்றியும் சுக்கிரநீதியில் விவரிக்கப்படுகின்றன. + +பல்வேறு விடயங்கள் தொடர்பாகத் தற்காலத்திலும் வழக்கிலுள்ள கருத்துருக்கள் பல சுக்கிர நீதியிலும் காணக்கிடைக்கின்றன. எடுத்துக்காட்டாக, இரண்டாம் அத்தியாயத்தில், "கூலி அளவு" என்னும் தலைப்பில் எடுத்தாளப்பட்டுள்ளவற்றில் தற்கால நடைமுறைகளின் கருத்துருக்களை அடையாளம் காணமுடிகின்றது. இப் பகுதியில் பணியாட்களுக்குக் கொடுக்கும் வேதனம் மூன்று வகையாகப் பிரித்து நோக்கப்படுகின்றது: + + +நோய் வாய்ப்பட்டிருக்கும் பணியாட்களுக்கான ஊதியம் தொடர்பாகப் பின்வரும் நடைமுறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன: + + +இது தவிர அரசனிடம் நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த ஒருவனுக்குச் செய்யவேண்டியவை தொடர்பாகப் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன: + + + + + + +சாரம் + +கட்டிடங்களையோ வேறு அமைப்புக்களையோ கட்டும்போதோ அல்லது அவற்றில் திருத்த வேலைகள் செய்யும்போது உயரமான இடங்களில் நின்று வேலை செய்யவேண்டி இருக்கும். இதற்காகப் பணியாட்களையும் பொருட்களையும் தாங்கக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்ற தற்காலிகச் சட்டக ("framework") அமைப்பே சாரம் ("scaffolding" அல்லது "staging") எனப்படுகின்றது. இது, பலவகையான பொருட்களைக் கொண்டு அமைக்கப்படுவதுண்டு. முன்னர், மூங்கில், பனைமரம், நீளமான காட்டுக் கம்புகள் போன்றவை பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்றும் சில சந்தர்ப்பங்களில் இவை பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்காலத்தில் பெரிய கட்டுமானங்களின்போது பெரும்பாலும் உலோகக் குழாய்களினாலேயே சாரங்கள் அமைக்கப்படுகின்றன. + + + + +சீருறா��் திண்மம் + +சீருறாத் திண்மம் ("amorphous solid" அல்லது "non-crystalline solid") என்பது விரிந்த அளவில் அணுக்கள் யாதொரு சீரான அடுக்கோ அமைப்போ கொண்டிராத திண்மநிலையில் உள்ள ஒரு பொருள் ஆகும். அணுக்கள் ஒரே சீரான அடுக்குடன் அமைந்து இருந்தால் அப்பொருள் படிகம் எனப்படும். நாம் நித்தம் காணும் கண்ணாடி ஒரு சீருறாத் திண்மப் பொருள். இதே போல பீங்கானும் ஒரு சீருறாத் திண்மம். இப்பொருட்களில் அணுக்கள் எந்த சீரும் அணியும் இல்லாமல் தாறுமாறாக அமைந்து இருக்கும். +பொதுவாக ஒரு பொருள் உருகிய நிலையில் இருந்து குளிர்வடைந்து திண்மமாக மாறும் பொழுது, மிக விரைவாகக் குளிர்ச்சி அடைந்தால், அணுக்கள் எந்தவொரு சீரடுக்கமும் பெறாமல் தாறுமாறாக உறைந்துவிடும். இப்படித்தான் இச் சீருறாத் திண்மங்கள் உருவாகின்றன அல்லது ஆக்கப்படுகின்றன. உருக்கிப்பின் குளிரச் செய்துதான் சீருறாத்திண்மங்களை ஆக்க வேண்டும் என்பதிலை, பல்வேறான முறைகளில் படிவுறும் பொருட்களும் சீருறாத் திண்ம நிலையில்தான் பெரும்பாலும் இருக்கும். வெற்றிட உருளியில் ஒரு பொருளை ஆவியாக்கிப் படியச்செய்வது, மற்றும் மின்மமாக்கப்பட்ட அணுக்களை மின்னழுத்ததால் உந்துவித்துப் புதையப் பெறும் முறை ஆகிய முறைகளிலும் சீருறாத்திண்மம் உருவாகும். குளிர்வடையும் பொழுது மிக விரைவாகக் குளிர்வடைவதால், அணுக்கள் நகர்ந்து குறைந்த ஆற்றல்நிலையாகிய சீரடுக்க நிலையை அடைய நேரம் இருப்பதில்லை. அணுக்கள் சீராக அணிவகுத்து நிற்குமானால், அத் திண்மம் மிகக் குறைந்த ஆற்றல்நிலையில் இருக்கும், அணுக்கள் மிக நெருக்கமாகவும் திண்மம் மிக வலுவாகவும் இருக்கும். +கடற்கரையில், ஆற்றங்கரையில் உள்ள மணலானது சிலிக்கான் டை ஆக்சைடு என்னும் ஒரு சீருறாத் திண்மம். +கண்ணாடி என்பது நாம் அறிந்த ஒன்றானாலும், அறிவியலில், சீருறாத் திண்ம நிலையில் உள்ள ஆக்சைடுப் பொருட்களுக்குக் கண்ணாடி என்று பெயர். கண்ணாடிநிலை என்றால் சீருறாத் திண்ம நிலையில் உறைந்தநிலை என்று பொருள். கதிரவன் ஒளியினால் மின்னாற்றல் பெரும் ஒருவகை மின்கலங்கள் சீருறாத்திண்ம நிலையில் உள்ள சிலிக்கான் என்னும் தனிமத்தால் ஆனவை. படிக நிலையில் உள்ள சிலிக்கானைக் கொண்டும் இன்னும் ஆற்றல் தரவல்ல மின்கலங்கள் செய்யலாம் ஆயின் அவை விலை கூடியவை. கைக்கணி (calculator), கைக்கடிகாரம், மடிக்கணின���த் திரை, மேசைக் கணினித்திரை முதலியனவும் சீருறாநிலைச் சிலிக்கான் பொருளால் ஆனவையாகும். + + + + +தமிழ் ராப் இசை (சொல்லிசை) + +சொற்களை இராகத்துடன் கோவையாக விரைவாக தொடராகப் பாடுவதை ராப் இசை எனலாம். ராப் இசை வடிவம் அமெரிக்காவில் 1970 களில் கறுப்பின மக்களின் இசை ஆக்க வெளிப்பாடாகத் துவங்கி உலக பொதுப் பாட்டின் ஒர் உறுப்பாகிவிட்டது. அமெரிக்க கறுப்பின மக்களின் பண்பாட்டு சூழமைவில் தோன்றியதால், ராப் இசை வடிவமும் அதன் பிரதிகளும் அந்த மக்களின் பின்புலத்தையும் உள்வாங்கியே பிரதிபலிக்கின்றன. தமிழ் ராப் இசை அமெரிக்க ராப் இசைவடிவத்தின் தமிழ் வடிவம் எனலாம். தமிழில் ராப் இசையை சொல்லிசை என்றும் குறிப்பிடுவர். தமிழில் அடுக்குமொழித் தொடர்கள் ராப் பாடல்களில் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. + +12_கலிங்கத்துப்_பரணி_போர்_பாடியது + + + + + + + +ஏ. வெள்ளாளப்பட்டி + +ஏ. வெள்ளாளப்பட்டி (ஆங்கிலம்:A.Vellalapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது மதுரையிலிருந்து 32 கிமீ தொலைவில், மேலூர் - அழகர்கோவில் சாலையில் உள்ளது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8325 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். + + + + + +அபிராமம் + +அபிராமம் (ஆங்கிலம்:Abiramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும். பரமக்குடி - கமுதி சாலையில் அமைந்த அபிராமம், பரமக்குடியிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,930 வீடுகளும், 8,144 மக்கள்தொகையும் கொண்டது. + +இது 3.83 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது பரமக்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 41 மீட்டர் (134 அடி) உயரத்தில் இருக்கின்றது. + + + + +அச்சம்புதூர் + +suresh +அச்சம்புதூர் (ஆங்கிலம்:Achampudur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில��� அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,407 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அச்சம்புதூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அச்சம்புதூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆசாரிப்பள்ளம் + +ஆசாரிப்பள்ளம் (ஆங்கிலம்:Acharipallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +தற்போது ஆசாரிப்பள்ளம் பேரூராட்சியானது நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. + +2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஆசாரிபள்ளம் பேரூராட்சியின் மக்கள் தொகை 16,822 ஆக உள்ளது. அதில் இந்துக்கள் 60.28% ஆகவும், இசுலாமியர் 0.90% ஆகவும், கிறித்தவர்கள் 38.71%, சீக்கியர்கள் 0.02% ஆகவும், பௌத்தர்கள் 0.02% ஆகவும், சமணர்கள் 0.01% ஆகவும், சமயம் குறிப்பிடாதவர்கள் 0.07% ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1037 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 95.08% ஆகவுள்ளது. + +பழைய திருவாங்கூர் சமஸ்தான காசநோய் மருத்துவமனை வளாகத்தில் இன்று கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆண்டுக்கு 100 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 100 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்த இயற்கை எழில் கொஞ்சும் இடமாக இது அமைந்துள்ளது. பசுமை பாதுகாப்பு இயக்கம் எனும் பெயரில் மாணவர்களும் மருத்துவர்களும் சேர்ந்து மரங்கள் நட்டு வருகின்றனர். + + + + +அசிப்பட்டி + +"ஆச்சிபட்டி"' (ஆங்கிலம்:Achipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7459 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அசிப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அசி���்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அதிகரட்டி + +அதிகரட்டி (ஆங்கிலம்:Adikaratti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,996 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். அதிகரட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அதிகரட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆலம்பாளையம் + +ஆலாம்பாளையம் (ஆங்கிலம்:Alampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,823 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஆலம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அலங்காநல்லூர் + +அலங்காநல்லூர் (ஆங்கிலம்:Alanganallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் ஜல்லிக்கட்டு விளையாட்டிற்குப் பெயர் பெற்றது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 185 மீட்டர் (606 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 6,286 ஆண்கள், 6,045 பெண்கள் ஆவார்கள். அலங்காநல்லூரில் 1000 ஆண்களுக்கு 962 பெண்கள் உள்ளனர். அலங்காநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78.71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86.27%, பெண்களின் கல்வியறிவு 70.93% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட சற்று குறைவானதே. அலங்காநல்லூர் மக்கள் தொகையில் 1,269 (10.29%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெட���ப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.75% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 1.19%, இஸ்லாமியர்கள் 0.81%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அலங்காநல்லூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 16.42%, பழங்குடியினர் 0.13% ஆக உள்ளனர். அலங்காநல்லூரில் 3,171 வீடுகள் உள்ளன. + +தமிழகத்தின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு இந்த ஊரின் மற்றொரு முக்கிய அடையாளமாகும். + + + + + + +ஆலங்காயம் + +ஆலங்காயம் (ஆங்கிலம்:Alangayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 572 மீட்டர் (1876 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆலங்காயம் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்காயம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆலங்குளம் (திருநெல்வேலி) + +ஆலங்குளம் (Alangulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் வட்டத்தில் உள்ள தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். + +ஆலங்குளத்திற்கு அருகமைந்த பாவூர்சத்திரம் தொடருந்து நிலையம் 15 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகமைந்த ஊர்கள் முறையே கிழக்கில் திருநெல்வேலி 28 கிமீ; மேற்கில் தென்காசி 24 கிமீ; வடக்கில் சங்கரன்கோவில் 42 கிமீ; தெற்கில் அம்பாசமுத்திரம் 20 கிமீ. + +12.29 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 130 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5,796 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 20,948 ஆகும் +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (416 அடி) உயரத்தில் இருக்கின்றது. +ஆலங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களில் விவசாயம�� பிரதான தொழிலாக உள்ளது + + + + +அல்லாபுரம் + +அல்லாபுரம் (ஆங்கிலம்:Allapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,660 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அல்லாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அல்லாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அலூர் + +அல்லூர் (ஆங்கிலம்:Alur), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள ஹாசன்(Hassan) மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 975 மீட்டர் (3198 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6133 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அல்லூர் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆழ்வார்குறிச்சி + +ஆழ்வார்குறிச்சி (ஆங்கிலம்:Alwarkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியிலிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள சிவசைசலத்தில் உள்ள சிவசைலம் கோயிலில் பங்குனி மாதம் கடைசி நாள் அன்று பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதருக்குத் தேர் திருவிழா நடைப்பெறுகிறது மேலும் வைகாசி விசாகத்தன்று தெப்பத்திருவிழாவும் நடைபெறுகிறது. + +இது திருநெல்வேலிக்கு மேற்கில் 58 கிமீ தொலைவிலும், தென்காசிக்கு தெற்கில் 23 கிமீ தொலைவிலும், வடக்கில் அம்பாசமுத்திரம் 12 கிமீ தொலைவிலும், கிழக்கில் விக்கிரமசிங்கபுரம் 10 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ள ஆழ்வார்குறிச்சி ஆகும். + +14.05 சகிமீ பரப்பும், 15 வா��்டுகளும், 77 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 2793 வீடுகளும், 10,043 மக்கள்தொகையும் கொண்டது. + + + + + +அம்மைநாயக்கனூர் + +அம்மைநாயக்கனூர் (ஆங்கிலம்:Ammainaickanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,547 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அம்மைநாயக்கனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்மைநாயக்கனூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அம்மாவாரிக்குப்பம் + +அம்மாவாரிக்குப்பம் (ஆங்கிலம்:Ammavarikuppam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9374 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அம்மாவாரிக்குப்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்மாவாரிக்குப்பம் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்குள்ள மக்கள் பெரும்பான்மையானோர் முதலியார் வகுப்பை சார்ந்தவர்கள். நெசவு பிரதான தொழில். + + + +அம்மூர் + +அம்மூர் (ஆங்கிலம்:Ammoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,296 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அம்மூர் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்மூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அனகாபுத்தூர் + +அனகாபுத்தூர் (ஆங்கிலம்:Anakaputhur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,733 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அனகாபுத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அனகாபுத்தூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + +அனகாபுத்தூர்ஆறுவெள்ளம் பார்க்க + + + + +அனந்தபுரம் (விழுப்புரம்) + +அனந்தபுரம் (ஆங்கிலம்:Ananthapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5869 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆனந்தபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆனந்தபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அஞ்சுகிராமம் + +அஞ்சுகிராமம் (ஆங்கிலம்:Anjugramam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9355 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அஞ்சுகிராமம் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அஞ்சுகிராமம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அன்னூர் + +அன்னூர் (ஆங்கிலம்:Annur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆ���ும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 338 மீட்டர் (1108 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,163 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அன்னூர் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அன்னூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆப்பக்கூடல் + +ஆப்பக்கூடல் (ஆங்கிலம்:Appakudal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9516 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆப்பக்கூடல் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆப்பக்கூடல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +ஆப்பக்கூடலில் சர்க்கரை ஆலை ஒன்று உள்ளது. + + + + +அரச்சலூர் + +அரச்சலூர் அல்லது அறச்சலூர் (ஆங்கிலம்:Arachalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,313 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரச்சலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அரச்சலூர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +அரகண்டநல்லூர் + +அரகண்டநல்லூர் (ஆங்கிலம்:Arakandanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4450 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரகண்டநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரகண்டநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அரசிராமணி + +அரசிராமணி (ஆங்கிலம்:Arasiramani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,822 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அரசிராமணி மக்களின் சராசரி கல்வியறிவு 44% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 55%, பெண்களின் கல்வியறிவு 31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அரசிராமணி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அரவங்காடு + +அரவங்காடு (ஆங்கிலம்:Aravankad) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேருர் ஆகும். இங்கு பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் துப்பாக்கிக் குண்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5304 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அரவக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 87% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரவக்காடு மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அரியூர் (வேலூர்) + +அரியூர் (ஆங்கிலம்:Ariyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5429 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அருமனை + +அருமனை (ஆங்கிலம்:Arumanai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,576 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அருமனை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அருமனை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +அருமனை இப்பொழுது ஒரு முதல் தர பேரூராட்சி ஆகும். குமரி மாவட்டத்தின் மிகப்பெரிய நதியாகிய கோதையாறு இப்பகுதியின் வடகிழக்கு மற்றும் கிழக்கு எல்லைக்கோடு வழியாக பாய்கிறது. இம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தளங்களில் ஒன்றாகிய திற்பரப்பு நீர்வீழ்ச்சி அருமனையில் இருந்து 5.6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. + +அருமனையும் அதன் சுற்றுப்புறப்பகுதிகளும் எப்போதும் வளங்கொழித்துக்காணப்படும். மேலும் இப்பகுதி அனைத்து மேற்குக்கடற்கரைச் சுரப்பியின் இனங்களும் வளரும் தன்மையைப்பெற்றுள்ளது. 1950 களில் இப்பகுதியைச்சுற்றியுள்ள மலைப்பிரதேசங்கள் மற்றும் சமநிரப்பு பாதைகளிலும் ரப்பர் விவசாயம் ஆரம்பிக்கப்பட்டது. இப்பொழுது ரப்பர் விவசாயமே விளவன்கோடு தாலுக்கவிலுள்ள பல பகுதிகளில் முக்கிய விவசாயமாக உள்ளது. + +அருமனையிலும் அதன் சுற்றுப்பகுதிகளிலும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளன. இங்கே நடுத்தர , மேல்நிலை, உயர்நிலை மற்றும் தொடக்கப்பள்ளிகள் என அனைத்து வகைப்பள்ளிகள் அமைந்ததோடு ஆங்கிலம், தமிழ் மற்றும் மலையாளம் எனப்பல மொழிக்கல்வி முறையும் அமைந்துள்ளது. தமிழகத்தில் வெகு சில அரசுப்பள்ளிகளில் மட்டுமே ஆங்கிலம்,தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிக்கல்வியும் கற்பிக்கப்படுகின்றது. அதில் அருமனை அரசு உயர்நிலைப்ப்பள்ளியும் ஒன்று என்பது இப்பகுதியின் சிறப்பான்மையாகும். மேலும் இப்பகுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கலைக்கல்லூரி ஒன்றும் சிறப்பே செயல்பட்டுவருகிறது. + + + + +அரும்பாவூர் + +அரும்பாவூர் (ஆங்கிலம்:Arumbavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.அரும்பாவூரில் உலகப்புக��் பெற்ற மர சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170 மீட்டர் (557 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,083 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரும்பாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரும்பாவூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அத்தாணி + +அத்தாணி (ஆங்கிலம்:Athani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +அத்தாணி ஈரோடு மாவட்டத்தில் பவானி கரையோரம் அமைந்துள்ள கிராமமாகும். பவானி ஆறு அத்தாணிக்கும் சவண்டப்பூர்க்கும் இடையே பாய்கிறது. ஆற்றங்கரையில் அமைந்துள்ளதினைக்கொண்டு இங்கு விவசாயம் பெருமளவு செய்யப்படுகிறது. மஞ்சள்,நெல்,தேங்காய்,கரும்பு மற்றும் பல இங்கு சாகுபடி செய்யப்படுகிறது. + +புகழ்பெற்ற பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோயில் இவ்விடமிருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அத்தாணி மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 43% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அத்தாணி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அத்தனூர் + +அத்தனூர் (ஆங்கிலம்:Athanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது இராசிபுரம் வட்டத்தில் உள்ளது. இங்கிருந்து 1 கிமீ தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 7ல் புகழ்பெற்ற அத்தனூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக் கோயிலிலுள்ள நவகண்ட சிற்பம் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் தனது கழுத்தை நீண்ட கத்தியால் தானே அரிந்து கொள்வதைப் போல் அமைந்துள்ளது. இக்கோவில் கடையேழு வள்ளல்களில் ஒருவனான வல்வில் ஓரி வழிப்பட்ட ஒன்றாக கருதப்படுகிறது + +இராசிபரத்திற்கு நீர் கொண்டு செல்லும் பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரேற்று நிலையத்தில் ஒன்று இங்கு உள்ளது. + +அத்தனூர் இராசிபுரத்திலிருந்து 8 கி.மீ தொலைவிலும், சேலத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், நாமக்கல்லிருந்து 33 கி.மீ தொலைவிலும், திருச்செங்கோட்டிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9014 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆதனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆதனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அதிமராபட்டி + +அதிமராபட்டி (ஆங்கிலம்:Athimarapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,527 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அதிமராபட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அதிமராபட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆத்தூர் (தூத்துக்குடி) + +ஆத்தூர் (ஆங்கிலம்:"Athur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது தூத்துக்குடியிலிருந்து 23 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 17 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள ஆறுமுகநேரியில் உள்ள ஆறுமுகநேரி தொடர்வண்டி நிலையம்யாகும். + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,047 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 11,910 ஆகும் + +25.26 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 37 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + + + + +ஆட்டையா���்பட்டி + +ஆட்டையாம்பட்டி (ஆங்கிலம்:Attayampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். +ஆட்டையாம்பட்டி கைமுறுக்குக்கு புகழவாய்ந்தது. இங்கு சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக கைமுறுக்கு செய்யும் தொழில் குடிசை தொழிலாக நடந்து வருகிறது. ஆட்டையாம்பட்டி மற்றும் இதைச்சுற்றியுள்ள கிராமங்களில் ஏறக்குறைய 200 குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். முறுக்கு உற்பத்தி சார்ந்த மாவு அரைத்தல், முறுக்கு சுற்றுதல் போன்ற பணிகளில் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பெண்கள் நாள் கூலி அடிப்படையில் வேலையில் ஈடுபடுகின்றனர். +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,867 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஆட்டையாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆட்டையாம்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அவடத்தூர் + +அவடத்தூர் (ஆங்கிலம்:Avadattur), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8982 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அவடத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அவடத்தூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அவல்பூந்துறை + +அவல்பூந்துறை (ஆங்கிலம்:Avalpoondurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் ஈரோடு - காங்கேயம் செல்லும் வழியில் அமைந்துள்ளது. வேளாண்மையே இவ்வூரின் முக்கியமான தொழிலாகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,230 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அவல்பூந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இ��ில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவல்பூந்துறை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அவிநாசி + +அவிநாசி () (ஆங்கிலம்:Avanashi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இங்கு சமயக்குரவர்களில் ஒருவரான சுந்தரரால் பாடல் பெற்ற பிரசித்தி வாய்ந்த சிவன் கோவில் உள்ளது. + +கொங்கு மண்டலத்திலுள்ள பாடல்பெற்ற ஏழு சிவஸ்தலங்களில் அவிநாசியும் முதன்மையானது ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 314 மீட்டர் (1030 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவிநாசி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவிநாசி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அவனியாபுரம், மதுரை + +அவனியாபுரம் (ஆங்கிலம்:Avaniapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாநகராட்சியின் ஒரு பகுதி ஆகும். மதுரைக்குத் தெற்கே, மதுரை விமான நிலையத்திற்குச் செல்லும் வழியில் 4 கி.மீ தூரத்தில் அவனியாபுரம் அமைந்துள்ள இப்பகுதி கடந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலில் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இது மதுரை மாநகராட்சியின் 94 வது வார்டாக இருக்கிறது. இதன் பழமையான பெயர் அவனிபசேகரமங்கலம் என்றும் பிள்ளையார்பாளையம் எனவும் அழைக்கபட்டுள்ளது. நாளடைவில் இதன் பெயர் மருகி அவனியாபுரம் என தற்போது அழைக்கபடுகிறது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 51,587 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அவனியாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அவனியாபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +சங்க இலக்கிய ந��லான திருமுருகாற்றுப்படையில் "மாடமலி மறுகின் கூடற் குடவயின்", என்ற பாடல் வரியில் " மாடங்களோடு கூடின மாளிகைகள் நிறைந்த மற்றைத் தெருக்களையும் உடைய மதுரை நகரத்திற்கு மேற்கில் உள்ள திருப்பரங்குன்றம்" என்ற வரியின் பொருள் திருப்பரங்குன்றத்தின் இருப்பிடம் குறித்து நக்கீரன் பாடல் உணர்த்துகிறது. அந்த காலத்தில் மதுரை என்பது திருப்பரங்குன்றத்தின் மேற்கில் இருந்தது என புலப்படுகிறது. ஆய்வாளர்கள் கருதுகோளின் படி பழைய மதுரை என்பது அவனியாள்புரம் எனப்படும் அவனியாபுரமாக இருந்திருக்க வேண்டும். + +அவனியாபுரத்தின் கிழக்கே உள்ள வல்லானந்தபுரம் என்ற ஊரில் கி.பி 1693 ஆம் ஆண்டை சேர்ந்த கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு ஆனந்த அனுமார் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே சிதைந்த நிலையில் கோவிலின் அதிட்டான பகுதியில் உள்ள கல்வெட்டுகளில் "வல்லப சதுர்வேதி மங்கலம்" என்ற பிராமண ஊர் பெயரும்,"வல்லப விண்ணகரம்" என்ற பெருமாள் கோவில் பெயரும் இடம்பெற்றுள்ளது. இங்கு துர்க்கைக்கான கோயிலும், அதற்கான நிலகொடைகள் குறித்தும், பிரவுவரி திணைக் களத்து முக வெட்டி அதிகாரியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டை "தேவன் பணையன்" என்ற அண்டை நாட்டு தச்சன் செதிக்கியுள்ளதாகவும் இக்கல்வெட்டு கூறுகிறது. இக்கோவில் முன் உள்ள கல்வெட்டு தூணில் சங்கு, சக்கரம், நாமம் செதுக்கபட்டுள்ளன. இக்கோவிலை கட்டியது ராணி மங்கம்மாள் என்பதும் தெரியவருகிறது. இக்கோவிலின் பெயர் அனுமார் ஆழ்வார் என கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது. இக்கோவில் அருகில் அவரால் கட்டப்பட்ட அலங்கார பிள்ளையார் கோவில் தற்போது இல்லை. ராணி மங்கம்மாள் தனது முத்தியப்ப நாயக்கருக்கு புண்ணியமாக கோவிலை கட்டியுள்ளார் என்பது கல்வெட்டு மூலம் தெரியவருகிறது. அனுமார் கோவில் எதிரே உள்ள கருடதம்பத்தின் அடிப்பகுதியின் பெண்ணரசியின் உருவம் வணங்கியநிலையில் உள்ளது. இந்த பெண்ணரசியின் தலையில் கிரீடம், இடையில் வாள் மற்றும் பாதம் வரை ஆடை என வடிவமைக்கபட்டுள்ளது. இந்த உருவச்சிலை ராணி மங்கம்மாள் சிலை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். + +இக்கோவிலில் கல்யாண சுந்தரேஸ்வரர் (செவ்வந்தீஸ்வரர் ) மூலவராகவும், பாலாம்பிகை தயாராகவும் அருள் பாலிக்கின்றனர். இத்தல விருட்சம் வில்வம் ஆகும். மலையத்துவச பா��்டியனின் மகளாக அவதரித்த மீனாட்சி தனது குழந்தைப் பருவத்தில் பிள்ளையார் பாளையம் என்று அழைக்கப்பட்ட இன்றைய அவனியாபுரத்தில் தோழியருடன் விளையாடி மகிழ்ந்தாள். தனது பருவ வயதில், சுந்தரேஸ்வரரை மணம் முடித்துச் செல்லும் ‌போது தோழியர்கள் கேட்டுக் ‌கொண்டதின் பேரில், மணக்கோலத்தில் கணவர் கல்யாண சுந்தரருடன் இத்தலத்தில் காட்சியளித்ததாக வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன. இதுவே இத்தல வரலாறு ஆகும். + + +தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தை மாதம் முழுவதும் நடத்தப்படும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரத்தில் தை முதல் நாளில் நடைபெறுகிறது. + +http://temple.dinamalar.com/New.php?id=579 + + + + +பி. மல்லாபுரம் + +பி. மல்லாபுரம் (ஆங்கிலம்:B. Mallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,488 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பி. மல்லப்புரம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பி. மல்லப்புரம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +பாலகிருஷ்ணம்பட்டி + +பாலகிருஷ்ணம்பட்டி (ஆங்கிலம்:Balakrishnampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8596 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலகிருஷ்ணம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலகிருஷ்ணம்பட்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +பாலகிருஷ்ணபுரம் + +பாலகிருஷ்ணபுரம் (ஆங்கிலம்:Balakrishnapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப��பின்படி 19,661 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலகிருஷ்ணபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலகிருஷ்ணபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +பாலபள்ளம் + +பாலபள்ளம் (ஆங்கிலம்:Balapallam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,638 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பாலபள்ளம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பாலபள்ளம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +பாலசமுத்திரம், திண்டுக்கல் மாவட்டம் + +பாலசமுத்திரம் (ஆங்கிலம்:Balasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 14.179 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 31 சகிமீ பரப்பும், 15 வார்களும், 76 தெருக்களும் கொண்டது. இது பழனி நகரத்திற்கு தெற்கே 5 கிமீ தொலைவில் உள்ளது. இது பழனி சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,281 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பாலசமுத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. பாலசமுத்திரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + + +பர்கூர் + +பர்கூர் (ஆங்கிலம்:Bargur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்���டி 12,577 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பர்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பர்கூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +வத்தலக்குண்டு + +வத்தலக்குண்டு ("Batlagundu") இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இது மதுரை - கொடைக்கானல் செல்லும் வழியில், மதுரையிலிருந்து 56 கிமீ தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 33 கிமீ தொலைவிலும் உள்ளது. இந்தப் பேரூராட்சி கோடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 22,928 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.94 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 169 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். வாழையிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், பருத்தி நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம். + +வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. + +2011-ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்தலகுண்டு பேரூரட்சியின் மொத்த மக்கள்தொகை 22,928 ஆகும். இதில் இந்துக்கள் 81.80%, கிறித்தவர்கள் 5.35%, இசுலாமியர்கள் 12.68%, மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர். + + + + + + + + +பேளூர், தமிழ்நாடு + +பேளூர் (ஆங்கிலம்:Belur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 324 மீட்டர் (1062 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9008 மக்���ள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பேளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பேளூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +பவானிசாகர் + +பவானிசாகர் (ஆங்கிலம்:Bhavanisagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4156 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பவானிசாகர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பவானிசாகர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +புவனகிரி + +புவனகிரி (ஆங்கிலம்:Bhuvanagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது. +புவனகிரி என்ற சொல்லானது இரண்டு தமிழ்மயமான சமஸ்கிருத சொற்களான - புவணம் (உலகம்) மற்றும் கிரி (மலை அல்லது அசைக்கமுடியாத பொருள்) ஆகியவற்றின் சேர்க்கையாகும். ஆக, புவனகிரி என்ற பெயரின் பொருள் "நகர்த்த இயலாத இடம் (உலகம்)" என்று பொருள். +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,876 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புவனகிரி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புவனகிரி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +பிக்கெட்டி + +பிக்கெட்டி (ஆங்கிலம்:Bikketti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகு��். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6850 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். பிக்கெட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பிக்கெட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +போடிநாயக்கனூர் + +போடிநாயக்கனூர் (ஆங்கிலம்:Bodinayakkanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்ற போது, மதுரை மண்டலத்தை நிர்வகித்த விசுவநாத நாயக்கர், மதுரை மண்டலத்தை 72 பாளையங்களாகப் பிரித்தார். இந்த 72 பாளையங்களில் +போடிநாயக்கனூர் பாளையமும் ஒன்றாக இருந்தது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 73,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். போடிநாயக்கனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. போடிநாயக்கனூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இந்த நகரம், ,இந்தியாவின் முதல் பிரதம மந்திரி அவர்களால் "தெற்கு காஷ்மீரம்" என அழைக்கப்பட்டுள்ளது இந்நகரின் சிறப்பு. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் அடிவாரத்தில், மூன்று பக்கமும் மலைகளால் சூழப்பட்ட, 'ஏலக்காய் நகரம்' எனவும் அழைக்கப் படும் ஒரு சிறிய நகராகும்.இந்த நகர், ஏலக்காய், காப்பி "குளம்பி", தேயிலை, பருத்தி விற்பனை செய்வதற்கான, விலை நிர்ணயிக்கக்கூடிய நகரங்களில் ஒன்றாகவும் இருக்கிறது.விவசாயமே முக்கிய தொழிலாக இருந்தாலும், அதிகமாக பெண்கள் ஏலக்காய் கடைகளுக்கும், காப்பி கடைகளுக்கும் (ஏலக்காய்/ காப்பி ) வேலைக்குச் செல்கின்றனர்.குறிப்பிட்ட அளவு மாங்காய் விவசாயம் நடைபெறுகிறது + +போடிநாயக்கனூர் பகுதிக்குத் தேவையான குடிநீர் குரங்கணியில் உள்ள கொட்டகுடி ஆற்றிலிருந்து நீர், குழாய்களில் கொண்டு வரப்பட்டு, பரமசிவன் கோவில் மலையடிவாரத்தில் குடிநீராகப் பிரித்தெடுத்து/சுத்திகரிக்கப்பட்டு ஊருக்குள் வழங்கப்படுகிறது.நீர் பிடிப்புப் பகுதியில் இருந்து வீட்டிற்கு தண்ணீர் வரும் வரை மின்சாரம் செலவளிக்கப்படுவதில்லை என்பது இதன் சிறப்பம்சமாகும். இப்பணியை நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. + + + +போடிநாயக்கனூர் (நகராட்சி) தேனியில் இருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. போடிநாயக்கனூர் 'போடி' என்று சுருக்கமாக அழைக்கபடுகிறது. இதனை அடுத்து 22 கி.மீ. தூரத்தில் உள்ள போடிமெட்டு என்னும் இடத்தில் இருந்து கேரள மாநிலத்தின் எல்லைப் பகுதி தொடங்குகிறது. மலைசூழ்ந்த இயற்கை அழகைக் கண்குளிர கண்டு மகிழலாம். போடிமெட்டில் இருந்து இரவு நேரத்தில் தேனிமாவட்டத்தின் பலபகுதிகள் மின்விளக்கு ஒளியில் மின்னுவது காணக்கிடைக்காத காட்சியாகும். போடியில் இருந்து சுமார் ஒரு மணி நேரத்தில் போடிமெட்டுக்கு செல்லலாம். போடியில் இருந்து கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு சுமார் 70 கி.மீ. தூரத்தில் உள்ளது.முந்தல் என்னும் சந்திப்பில் இருந்து போடிமெட்டு மற்றும் குரங்கணி ஆகிய இடங்களுக்கு பாதைகள் பிரிகின்றன. போடியில் பரமசிவன் கோவிலும்,விடா பாறை அருவி என்ற இரு இடங்கள் காணத் தகுந்தது.பரமசிவன் கோவில் போடி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் தொடர்ந்து 7 நாட்கள், அரசு சார்பாக இந்த கோவிலின் திருவிழா கொண்டாடப்படுகிறது. + + + + + +பூதப்பாண்டி + +பூதபாண்டி (ஆங்கிலம்:Boothapandi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,721 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பூதபாண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. பூதபாண்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +தமிழகத்தில் தலைசிறந்த பொதுவுடைமைத் தலைவராக விளங்கிய ப. ஜீவானந்தம் பிறந்த ஊர் என்னும் பெருமை பூதப்பாண்டிக்கு உண்டு. + +பூதபாண்டி தாடகை மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது. நாகர்கோவில்-பாலமோர் சாலையில் நாகர்கோவிலிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இது பூதபாண்டியன் என்ற பாண்டிய மன்னர் தோற்றுவித்த தொன்மையான ஊராகும். பழையாறு ஆற்றின் கரையில் மிக அருமையான இயற்கைச் சூழலில் இவ்வூர் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வில் முக்கியம் வாய்ந்த ஊர். இங்குள்ள ஆலயத்தின் தெய்வத்தின் பெயர் அருள்மிகு பூதலிங்கம் ஆகும். ஆண்டுத் தேர்த் திருவிழா சிறப்பான நிகழ்வாகும். + + + + + +பிராமண பெரிய அக்கிரஹாரம் + +பிராமண பெரிய அக்கிரஹாரம் (ஆங்கிலம்:Brahmana Periya-Agraharam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +ஆற்றை ஒட்டி அமைந்துள்ளதால் இப்பகுதியில் நிறைய தோல் தொழிற்சாலைகளும் சலவைப் பட்டறைகளும் அமைந்துள்ளன. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,275 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பிராமண பெரிய அக்கிரஹாரம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பிராமண பெரிய அக்கிரஹாரம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +செங்கல்பட்டு + +செங்கல்பட்டு (ஆங்கிலம்:Chengalpattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் செங்கல்பட்டு வட்டத்தின் தலைமையகமான ஒரு நகராட்சி ஆகும். செங்கல்பட்டு சென்னையின் புறநகர் பகுதியாகும். காஞ்சிபுரதிற்கு பிறகு பெரிய நகரமாக இந்த மாவட்டத்தில் செங்கல்பட்டு கருதப்படுகிறது. முந்தய காலத்தில் இந்த மாவட்டம் முழுவதும் செங்கல்பட்டு மாவட்டம் என்று அழைக்கப்பட்டது, பிறகு காஞ்சிபுரம் மாவட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +இங்கு கடன் வசதி செய்துதர நிறைய நிறுவனங்கள் உள்ளன அவற்றில் "ஈக்விடாஸ் ஸ்மால் ஃபைனான்ஸ் லிமிடெட்" குறிப்பிடத்தக்கது. + +களபணியாளர் கைபேசி: 8939006478. + +முன்பு இங்குள்ள நீர்நிலைகளில், செங்கழுநீர்ப் பூக்கள் நிறைந்திருந்தன என்பர். எனவே, செங்கழுநீர்ப்பட்டு என்றழைக்கப்பட்டது. அது மருவி செங்கல்பட்டு என அழைக்கப்படலாயிற்று. + +விஜயநகரப் பேரரசு வழி அரசர் கட்டிய கோட்டை இங்குள்ளது. அவர்களின் தலைநகராக குறிப்பிட்ட காலத்திற்கு இருந்தது என வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 30,982 ஆண்கள், 31,597 பெண்கள். செங்கல்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். செங்கல்பட்டு மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இந்நகரில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி உள்ளிட்ட பல கல்வி நிலையங்கள் உள்ளன. உதாரணமாக இராஜேஸ்வரி வேதாச்சலம் அரசினர் கலைக்கல்லூரியை கூறலாம். +இன்னும் பல கல்வி நிலையங்கள் உள்ளன. + +தமிழ்நாட்டின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் செங்கல்பட்டின் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. + +செங்கல்பட்டு ஒரு தொடருந்து சந்திப்பாகும். முக்கிய அகலப் பாதையைக் கொண்டுள்ள இவ்வூரில் தமிழ்நாட்டின் தெற்கு நோக்கிச் செல்லும் தொடருந்துகள் நின்றுசெல்லும். + + + + +செங்கம் + +செங்கம் (ஆங்கிலம்:Chengam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,200 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செங்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்க்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. +இந்த கோவிலின் கட்டிடக் கலை மற்றும் கட்டிட அமைப்பு, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு முன்மாதிரி என்று சொல்லப்படுக்கின்றது. இக்கோயிலில் +மகாகரு��� சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் +மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும். + + + + +சென்னசமுத்திரம் + +சென்னசமுத்திரம் (ஆங்கிலம்:Chennasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7353 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சென்னசமுத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னசமுத்திரம் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +சென்னிமலை + +சென்னிமலை (ஆங்கிலம்:Chennimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். நெசவுத் தொழில் இங்கு ஒரு முதன்மையான தொழிலாகும். விடுதலைப் போராட்ட வீரரான திருப்பூர் குமரன் பிறந்ததும் இவ்வூரேயாகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 330 மீட்டர் (1082 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,526 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சென்னிமலை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சென்னிமலை மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +சேரன்மகாதேவி + +சேரன்மகாதேவி (Cheranmahadevi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரில் நவகைலாயங்களில் ஓன்றான சேரன்மகாதேவி அம்மைநாதர் கோயில் உள்ளது. தாமிரபணி ஆற்று கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயில் கி.பி 650 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக கல்வெட்டுகள் கூறுகின்றன. + +திருநெல்வேலி - பாபநாசம் செல்லும் பாதையில், திருநெல்வேலியிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு சேரன்மாதேவி தொடருந்து நிலையம் உள்ளது. + +சேரன்மாதேவிக்கு கிழக்கில் 2 கிமீ தொலைவில் பத்தமடையும், மேற்கில் 6 கிமீ தொலைவில் வீரவநல்லூரும், வடக்கே 9 கிமீ தொலைவில் முக்கூடலும், தெற்கே 25 கிமீ தொலைவில் களக்காடும் உள்ளது. + +8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ஆழ்வார்குறிச்சி பேரூராட்சி 4,756 வீடுகளும், 18,327 மக்கள்தொகையும் கொண்டது. + + +மூலக்கோவில், அப்பன் வெங்கடாசலபதி கிருஷ்ணன் கோவில், வைத்தியநாத சுவாமி கோவில், ராமசாமி கோவில், நடூவூரளப்பர் கோவில், பத்மவச்சல்ர் கோவில், அம்மைநாத சுவாமி கோவில், மிளகு பிள்ளையார் கோவில், அருள்மிகு அம்மநாதர் திருக்கோயில் + + + + +சேத்துப்பட்டு + +சேத்துப்பட்டு (ஆங்கிலம்:Chetpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,786 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சேத்துப்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேத்துப்பட்டு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +செட்டியார்பட்டி + +செட்டியார்பட்டி (ஆங்கிலம்:Chettiarpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம் , இராஜபாளையம் வட்டம் , இராஜபாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 6950 வீடுகளும், 17,520 மக்கள்தொகையும் கொண்டது. இது 9.42 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 53 தெருக்களும் கொண்ட செட்டியார்பட்டி முதல்நிலை பேரூராட்சி இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + + + + +செட்டிபாளையம் + +செட்டிபாளையம் (ஆங்கிலம்:Chettipalayam), இந���தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும் +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,379 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். செட்டிபாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செட்டிபாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +செட்டித்தாங்கல் + +செட்டித்தாங்கல் (ஆங்கிலம்:Chettithangal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6029 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செட்டித்தாங்கல் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செட்டித்தாங்கல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +சின்ன அனுப்பானடி + +சின்ன அனுப்பானடி (ஆங்கிலம்:Chinna Anuppanadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,415 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சின்ன அனுப்பனடி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்ன அனுப்பனடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். +இந்த ஊர் அருகில் வேலம்மாள் மருத்துவமனை உள்ளது. 2011 ஆம் வருடம் மதுரை மாநாகராட்சி உடன் இணைக்கப்பட்டது. + + + + +சின்னக்கம்பாளையம் + +சின்னக்கம்பாளையம் (ஆங்கிலம்:Chinnakkampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பி��்படி 10,837 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சின்னக்கம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 52% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 60%, பெண்களின் கல்வியறிவு 44% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. சின்னக்கம்பாளையம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +சின்னாளப்பட்டி + +சின்னாளப்பட்டி (ஆங்கிலம்:Chinnalapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 26,227 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 4.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. திண்டுக்கல் – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த சின்னாளப்பட்டி ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. புகழ் பெற்ற சுங்குடி சேலைகள் சின்னாளபட்டியில் நெய்யப்படுகிறது. காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் வளாகம் இவ்வூரின் அருகாமையில் உள்ளது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,353 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னாளப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னாளப்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + + + +சின்னமனூர் + +சின்னமனூர் ("Chinnamanur"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 375 மீட்டர் (1230 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +ராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளாராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் சின்னமனூர் என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியமர்த்தியதே காரணம் . இங்கு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் . + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னமனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னமனூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +செப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்தை புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர். + + +மாணிக்கவாசாகர் இங்கு வந்து சென்றதிற்கான அடையாளமாக தனிக்கோவில் ஒன்று உள்ளது. + +தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது. + + + + + + + + +சின்னம்பாளையம் + +சின்னம்பாளையம் (ஆங்கிலம்:Chinnampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7191 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சின்னம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னம்பாளையம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +சின்னசேலம் + +சின்னசேலம் (ஆங்கிலம்:Chinnasalem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,519 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். ��வர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னசேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னசேலம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +சின்னசேக்காடு + +சின்னசேக்காடு (ஆங்கிலம்:Chinnasekkadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9744 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சின்னசேக்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னசேக்காடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +சின்னவேடம்பட்டி + +சின்னவேடம்பட்டி (ஆங்கிலம்:"Chinnavedampatti"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,349 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சின்னவேதம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னவேடம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இவ்வூர் கோவையின் புறநகர்ப் பகுதியாக இருப்பதால் பல நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்கு அமைந்துள்ளன. + + + + +சித்தோடு + +சித்தோடு (ஆங்கிலம்:Chithode), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7695 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சித்தோடு மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல��வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சித்தோடு மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +சிட்லப்பாக்கம் + +சிட்லப்பாக்கம் (ஆங்கிலம்:Chitlapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,292 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். சிட்லப்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சிட்லப்பாக்கம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + + + + +சோழபுரம் + +சோழபுரம் (ஆங்கிலம்:Cholapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இது,பூர்வ காலத்தில் "பைரவபுரம்" என்று அழைக்கப்பட்டது.சோழபுரம் தஞ்சாவூரிலிருந்து வடக்கே 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து 11 கி. மீ. தொலைவிலும் சென்னையில் இருந்து 261 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. அத்தியூர்(Athiyur)(3 கிமீ),ஆணூர்(2.5 கிமீ), குருகூர்(2 கிமீ) ஆகியவை இதன் அருகில் உள்ள கிராமங்கள் ஆகும்.சோழபுரம் கிழக்கு நோக்கி திருவிடைமருதூர் வட்டம், தெற்கு நோக்கி கும்பகோணம் தாலுகா, மற்றும் தெற்கு நோக்கி வலங்கைமான் தாலுக்கா, கிழக்கு நோக்கி திருப்பணந்தாள் தாலுகா சூழப்பட்டுள்ளது. + +2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சோழபுரத்தில் 48% ஆண்கள் மற்றும் 52% பெண்கள் 6364 மொத்த மக்கள் தொகை ஆக இருந்தது.எழுத்தறிவு விகிதம் 72% ஆக இருந்தது.இது கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில், மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் கீழ் வருகிறது. + +கிராம மக்கள் வருவாய் விவசாயம் சார்ந்து இருக்கிறது.விவசாயத்திற்கு "மண்ணியாறு" மற்றும் மோட்டார் (பம்புசெட்) போன்றவை நீர்ப்பாசனம் வழங்குகிறது.சோழபுரத்தில் நெல்,கோதுமை, பயிறு வகைகள், எள், நிலக்கடலை சவுக்கு மரம், பழங்கள், மிளகாய், வாழை மரம் மற்றும் கரும்பு பயிரிடப்படுகிறது. + +அரசு உயர்நிலை பள்ளி,மார்னிங்ஸ்டார் மெட்ரிகுலேஷன் பள்ளி கல்வி வழங்குகிறது. + +கைலாசநாதர் கோவில்,சாரபேஸ்வரர் கோவில்,விநாயகர்,அம்மன், முனீஸ்வரன், அய்யனார் கோவில்கள் மிகவும் பிரபலமானது. ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா நடத்தப்படுகிறது. + +கும்பகோணம் ரயில் நிலையம் சோழபுரம் மிக அருகில் உள்ள ரயில் நிலையமாகும். எனினும் தஞ்சாவூர் ரயில் நிலையம் சோழபுரம் அருகில் உள்ள பெரிய ரயில் நிலையமாகும், 50 கி.மீ. தொலைவில் உள்ளது.கிராம மற்றும் நகர பகுதி போக்குவரத்துக்கான முக்கிய பேருந்து முனையம் கும்பகோணத்தில் உள்ளது. தஞ்சாவூர் மற்றும் திருச்சியில் நவீன விமான நிலையங்கள் உள்ளது. + + + + + +குன்னூர் + +குன்னூர் (ஆங்கிலம்:Coonoor), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். நீலகிரி மலையில் உதகைக்கு அடுத்த பெரிய ஊரும் இதுவே ஆகும். இங்கு ஒரு பேருந்து நிலையமும் இரயில் நிலையமும் உள்ளன. நீலகிரி மலை இரயில் பாதையில் இந்த இரயில் நிலையம் அமைந்துள்ளது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1502 மீட்டர் (4927 அடி) உயரத்தில் இருக்கின்றது. +இதன் ஊரின் சரியான தமிழ்ப்பெயர் குன்றூர். சங்ககாலத்தில் வேளிர் குடியினர் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். அவர்கள் உழவர்கள். இந்த உழவர் பெருமக்கள் வயலில் மேயும் ஆமைகளைப் பிடித்துவந்து அதனைச் சுட்டு உண்பர். இவர்கள் "தொன்முது வேளிர்" என்று சிறப்பிக்கப்பட்டுள்ளனர். ( பரணர், நற்றிணை 280) + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50,079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். குன்னூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குன்னூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +குற்றாலம் + +குற்றாலம் ("Courtalam"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். + +மாரிக்காலத்தில் இங்கு விழும் அருவிகளில் குளிப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் பல பகுதிகளில் இருந்தும் இங்கு வருகின்றனர். இங்குள்ள திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோயில் கோவிலும் பெயர் பெற்றது. இவ்விடத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ் சிற்றிலக்கியங்களில் புகழ் பெற்றது. + +"குறு" "ஆல்" என்பது ஒருவகை ஆலமரம். அத்தகைய மரங்கள் அதிகமாகக் காணப்படும் வனப்பகுதி என்பதால், குற்றாலம் எனும் பெயர் ஏற்பட்டது. சங்ககாலத்தில் இது தேனூர் என்னும் பெயருடன் திகழ்ந்தது. இவ்வூர் சங்கப் பாடல்களில் பெண்ணின் அழகுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. + +இது திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலவிலும், செங்கோட்டை (நகரம்)|செங்கோட்டையிலிருந்து]] 5 கிமீ தொலவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. + +திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தென்காசியிலிருந்து 7 கிமீ தொலவிலும், செங்கோட்டையிலிருந்து 5 கிமீ தொலவிலும், இலஞ்சியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் குற்றாலம் உள்ளது. + +8.5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 78 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி குற்றாலாம் பேரூராட்சி 556 வீடுகளும், 2,089 மக்கள்தொகையும் கொண்டது. + +குற்றாலம் செங்கோட்டையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவிலும், தென்காசியில் இருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்,திருநெல்வேலியில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரியிலிருந்து 137 கிலோமீட்டர் தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 112 கிலோமீட்டர் தொலைவிலும், மதுரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. குற்றாலத்தின் அருகே 100 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம் தூத்துக்குடி விமான நிலையமாகும். செங்கோட்டை மற்றும் தென்காசி தொடர்வண்டி நிலையங்கள் குற்றாலத்தின் அருகே அமைந்துள்ள தொடர்வண்டி நிலையங்களாகும். + +தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. + +குற்றால அருவிகள் தென் தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இந்த மலையானது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும�� தாமிரபரணி ஆகிய ஆறுகளின் பிறப்பிடமாகும். குற்றால அருவிக்கரையில் குற்றால நாதர் (சிவன்) சன்னதி உள்ளது. குற்றாலத்தில் மொத்தம் ஒன்பது அருவிகள் அமைந்துள்ளன. +1.பேரருவி, 2.ஐந்தருவி, 3.சிற்றருவி, 4.பாலருவி, 5.புலியருவி, 6.பழத்தோட்டஅருவி, 7.சென்பகாதேவியருவி, 8.பழையகுற்றால அருவி, 9.தேனருவி. +இந்த அருவிகளில் இருந்து கிளம்பும் சாரல் வெகு தொலைவு வரை தென்படும். + + + + + +தளவாய்பட்டி + +தளவாய்பட்டி (ஆங்கிலம்:Dalavaipatti), என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6256 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தளவாய்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தளவாய்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +தேன்கனிக்கோட்டை + +தேன்கனிக்கோட்டை (ஆங்கிலம்:Denkanikottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருக்கும் தேன்கனிக்கோட்டை வட்ட தலைநகர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,331 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தேன்கனிக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேன்கனிக்கோட்டை மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +புகழ்பெற்ற வேட்டையாடிய பிரான் கோயில் அல்லது பேட்ராய சாமி கோயில் (பேட்டே என்ற கன்னட சொல்லுக்கு வேட்டை என்று பொருள்)தேன்கனிக் கோட்டையில் உள்ளது. இக்கோயில் சுமார் 500 ஆண்டுகள் பழமையானது என்று கருதப்படுகிறது. + + + + +தேசூர் + +தேசூர் (ஆங்கிலம்:Desur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 114 ம��ட்டர் (374 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5156 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேசூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேசூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + +தேசூர் அருகில் சியமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்கு பல்லவ அரசரால் கட்டப்பட்ட குகைக் கோவில் உள்ளது. + + + + + +தேவதானப்பட்டி + +தேவதானப்பட்டி (ஆங்கிலம்:Devadanapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இது வத்தலகுண்டு - பெரியகுளம் நெடுஞ்சாலையில் உள்ளது. +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 18,952 மக்கள்தொகையும், 6 உட்கிடை கிராமங்களும் கொண்ட தேவதானப்பட்டி பேரூராட்சி, 14 சகிமீ பரப்பும், 4298 குடியிருப்புகளும், 18 வார்டுகளும், 86 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,772 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவதானப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட அதிகமானதே. தேவதானப்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இந்தப் பகுதி தெய்வங்களை வழிபடுவதற்காக பாண்டிய மன்னனால் தானமாகக் கொடுக்கப்பட்டதால் “தெய்வதானப்பதி” என்று பெயர் பெற்றிருந்தது. பின்னர் இது நாளடைவில் மருவி “தேவதானம்” என்றாகி தற்பொழுது “தேவதானப்பட்டி” என்று மாறிவிட்டது என்கின்றனர். + +இப்பகுதியை நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த பூசாரி நாயக்கர் என்பவர் ஆட்சி செய்தார். இங்குள்ள காமாட்சி அம்மன் ஆலயத்தை இவர் கட்டியுள்ளார். திருமலைநாயக்கருக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார் . + +இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் வடக்கு, கிழக்குப் பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புகளை அதிக அளவில் உள்ளன. இந்த விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. + + +தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் தேனி மாவட்டத்தின் சிறப்பு பெற்ற கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் சிலைகளோ, உற்சவ விக்கிரகமோ இல்லை. கோயிலுக்கு முன்புள்ள கதவுக்குத்தான் பூசை நடைபெறுகிறது. இங்கு நெய்த்தீபமின்றி வேறு தீபம் ஏற்றப்படுவதில்லை. அன்ன நைவேத்தியம் இல்லை. உடைக்காத தேங்காயும், உரிக்காத வாழைப்பழமுமே நைவேத்தியமாக படைக்கப்படுகின்றன. மார்ச் (மாசி) மாதம் வரும் மகாசிவராத்திரி நாள் சிறப்புத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. + + +அருகில் உள்ள முருகமலையில் பரமசிவன் பார்வதி திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோவில் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இத்தலத்தில் மூலவர் சுயம்புக்கடவுளாக அமைந்துள்ளனர் .இங்கு வந்து தரிசிக்கும் தம்பதிக்கு குழந்தை வரம் கிட்டும் என்றும் அதிலும் ஆண் குழந்தை வேண்டுவோர்க்கு ஈசன் வரம் தருவார் என்றும் சொல்லப்படுகிறது. இங்கு மாத பவுர்ணமி, பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. இங்கு கார்த்திகை மாதம் பெரிய கார்த்திகை அன்று திருக்கார்த்திகை தீபத்திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுகிறது .திருவிழா நடைபெறும் இரண்டு நாட்களும் அன்னதானம் வழங்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண சுற்றுவட்டார மக்களும் வருகின்றனர். திருவிழாவின் கடைசி நிகழ்ச்சியாகப் பக்தர்களினால் வழங்கப்பட்ட தீபப்பொருட்களினால் மாலையில் மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது . .. + +தேவதானப்பட்டியில் ஜும்மா பள்ளிவாசல் உள்ளது. இதில் சின்ன பள்ளிவாசல் என கட்டப்பட்டு நாளடைவில் மக்கள் தொகைப் பெருக்கத்தால் பெரிய பள்ளிவாசலாக கட்டப்பட்டது. பண்டைய காலத்தில் வெள்ளிமலை பள்ளிவாசல் என்ற பள்ளிவாசல் உருவாக்கப்பட்டு தற்பொழுது ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பெருநாள் தொழுகை தொழ வைக்கப்படுகிறது. இவை தவிர மட்டமலை தர்கா, காட்வாவா சாகிபு தர்கா, தைலயார் அருகில் கொந்தாளம் சாயபு தர்கா என பல தர்காக்கள் உள்ளது. + +இங்கு ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியும், அரசு தொடக்கப்பள்ளியும், ஒரு தனியார் நடுநிலைப்பள்ளியும் , இன்னொரு தனியார்  தொடக்கப்பள்ளியும் உள்ளன . இங்கு ஆரம்ப சுகாதார நிலையம், காவல் நிலையம், அஞ்சலகம் போன்றவையும் உள்ளன. இங்கு வாரந்தோறும் கூடும் சந்தையில் காய்கறிகளும், மளிகை சாமான்களும் கால்நடைகளும் விற்கப்படுகின்றன. + + + + + +தேவகோட்டை + +தேவகோட்டை ("ஆங்கிலம்":), +இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊர் நாட்டுக்கோட்டை நகராத்தார்களின் முக்கிய வாழ்விடமாகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது காரைக்குடி சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ளது. சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் கீழ் வருகிறது. + +திருச்சிராப்பள்ளி – இராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், திருச்சியிலிருந்து இராமேசுவரம் செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள மதுரை விமான நிலையமாகும். அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள தேவகோட்டை ரோடு ரயில் நிலையமாகும். தேவகோட்டையில் இருந்து சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன. + +இந்திய 2001 கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவக்கோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அதிக அளவில் வசிக்கும் ஊர்களில் ஒன்றாகும். + +தேவகோட்டை-தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டது பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தேவகோட்டை என்றானது என்றும் கூறுவர். + +மகாத்மா காந்தி அவர்கள் தேவகோட்டைக்கு 1934ஆம் ஆண்டு, தலித் இனத்தைச் சேர்ந்த பூச்சி என்பவர் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் இறந்தமைக்கு வருந்தம் தெரிவிப்பதற்காக வந்தார், அப்போது தலித் மற்றும் நாட்டார் இனத்தைச் சேர்ந்த மக்களிடம், தலித்துகள் மேலாடை அணிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் வந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அவர் தங்கியிருந்த சரஸ்வதி வாசக சாலையில் ஜனவரி 2009ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. + +தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர். + +தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள் + + +தேவகோட்டையில் மசூதிகள் அமைந்துள்ள இடங்கள் + +தேவகோட்டையில் தேவலாயங்கள் அமைந்துள்ள இடங்கள் + +தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள் + +தேவகோட்டை நகர இணையதளம் + + + + +தேவனக்குறிச்சி + +தேவனக்குறிச்சி (ஆங்கிலம்:Devanangurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6817 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். தேவனக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவனக்குறிச்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +தேவர்சோலா + +தேவர்சோலா (ஆங்கிலம்:Devarshola), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,085 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தேவர்சோலா மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவர்���ோலா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +தளவாய்புரம் + +தளவாய்புரம் (ஆங்கிலம்:Dhalavoipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் தளவாய்புரம் ஊராட்சியின் ஒரு கிராமம் ஆகும். + +இக்கிராமத்தில் தளவாய்புரம் மாடசாமி கோயில் மற்றும் தளவாய்புரம் பிரம்மதேச அம்மன் கோயில் உள்ளது. + + + + +தளி + +தளி ("Dhali"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 367 மீட்டர் (1204 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6303 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தளி மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. தளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +தமிழகத்தில், உடுமலை அருகே திருமூர்த்திமலை அருவிக்கு செல்லும் வழியில் உள்ளது தளி பேரூராட்சி. இந்தப் பகுதியை "பாளையக்காரர்கள்" செல்வ செழிப்புடன் ஆட்சி செய்துள்ளனர். இதற்கு ஆதாரமாக இன்றும் பல்வேறு சிலைகளும், பழங்கால பொருட்களும் உள்ளன. + +"யானை கட்டி போரடித்த களம்" இன்றும் இப்பகுதியில், பழமை மாறாமல் உள்ளது. தளி பொன்னாலம்மன் சோலை பகுதி ஆங்கிலேயர்களையே எதிர்த்த "தளி பாளை பட்டு" தலைமையிடமாக இருந்தது. பாளையக்காரர்கள் வேட்டைக்கு செல்வதற்கு இப்பகுதியை தான் பயன்படுத்தியுள்ளனர். + +இப்பகுதிக்கு பொன்னாலம்மன் கோவிலுக்கு செல்வதாக இருந்தாலும்; வேட்டைக்குச் செல்வதாக இருந்தாலும், யானைகள் மேல் சவாரி செய்து வருவது பாளையக்காரர்கள் வழக்கம். விளையும் தானியப்பொருட்கள், மலைப்பகுதியிலுள்ள நெல்லிக்காய், தேன், மாங்காய் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்லவும் யானைகளே பயன்படுத்தப்பட்டது. + +தட்டை பாறைகளை "அல்வா" போல் குடைந்து இரண்டு பக்கமும் துவாரம் போன்று அதன் மூலம் சங்கிலி பிணைத்து யானைகளில் கால்களில் கட்டியுள்ளனர். விளையும் தானியங்களை பாறைகளில் காய வைத்து, தா���ியங்களை பிரிக்கவும் யானைகளை பயன்படுத்தியுள்ளனர். இதற்காக, யானைகளை கட்டும் வகையில், நான்கு இடங்களில், குழிகள் அமைக்கப்பட்டது. தோற்றத்தில், யானைகளின் முகத்தை போல் இக்குழிகள் உள்ளன. இதை "யானை கட்டும் பாறை" என அழைக்கப்படுகிறது. + +பாளையக்காரர்கள் ஆட்சிக்காலத்தில், பயன்படுத்தப்பட்ட இப்பாறை காலப்போக்கில், குடியிருப்பாக மாறியுள்ளது. ஆனாலும், யானை கட்டுவதற்காக அமைக்கப்பட்ட தட்டை பாறை குழிகள் மட்டும் இன்றும் அழியாமல் அப்படியே உள்ளன. + + + + +தளியூர் + +தளியூர் (ஆங்கிலம்:Dhaliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8579 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். தளியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தளியூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +தாராபுரம் + +தாராபுரம் (ஆங்கிலம்:Dharapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +தாராபுரம் பகுதியின் பழைய பெயர் விராடபுரம் ஆகும். ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் கொங்கு நாட்டில் ஆன்பொருநைக் கரையில் (ஆம்பிராவதி) உள்ள கொங்கு வஞ்சி என்ற நகரத்தை அரண்களால் வலிமிக்கதாக்கினான். அதன்கண் சேரர் குடியில் தோன்றிய அரசியற் செல்வருள் ஒருவரை நிறுவிச் சேரர் கொங்கில் நாடு காவல் புரியச் செய்தான், இடைக்காலச் சோழ வேந்தர் கொங்கு வஞ்சியைக் கைப்பற்றி அதற்கு இராசராசபுரம் என்று பெயரிட்டனர். இதனை அவர்களுடைய கல்வெட்டுகள், “நறையனூர் நாட்டுக் கொங்கு வஞ்சியான ராசராசுபுரம்" என்று குறிப்பதினால் அறிகின்றோம். பிற்காலத்தே இதன் ஒரு பகுதி “இராசாதிராசத் சதுர்வேதிமங்கல”மாகியது. இந்த இராசராசபுரம் தாராபுரம் என்று மருவியது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 245 மீட்டர் (803 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,137 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49.6% ஆண்கள், 50.4% பெண்கள் ஆவார்கள். தாராபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தாராபுரம் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +தாராபுரம் பகுதியில் பலமான காற்று வீசும் என்பதால், தமிழகத்தின் முக்கியமான ஒரு காற்றாலை நகரமாக மாறியிருக்கிறது. குறிப்பாகத் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் நூற்றுக்கணக்கான காற்றாலைகள் அமைந்திருக்கின்றன. மேலும் தாராபுரம்-காங்கேயம் சாலைப் பகுதியிலும் காற்றாலைகள் அமைந்துள்ளன.அனைத்து தென் நகரங்களுக்கும் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.காங்கயம்,பழனி,உடுமலை,பொள்ளாச்சி போன்ற நகரங்களுக்கு மையமாக அமைந்துள்ளது. + + + + +தூசி, திருவண்ணாமலை மாவட்டம் + +தூசி ("Dusi") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 74 மீட்டர் (242 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5102 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தூசி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 48% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தூசி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +எடகணாசாலை + +எடகணாசாலை (ஆங்கிலம்:Edaganasalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 29,593 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். எடகணாசாலை மக்களின் சராசரி கல்வியறிவு 50% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59%, பெண்களின் கல்வியறிவு 39% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. எடகணாசாலை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +இடைக்கோடு + +��டைக்கோடு (ஆங்கிலம்:Edaikodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,320 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இடைக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இடைக்கோடு மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +இடக்கழிநாடு + +இடக்கழிநாடு (ஆங்கிலம்:Edakalinadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,769 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். இடக்கழிநாடு மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இடக்கழிநாடு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +எலத்தூர் + +எலத்தூர் (ஆங்கிலம்:Elathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7887 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். எலத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 46% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 58%, பெண்களின் கல்வியறிவு 35% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. எலத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஏழாயிரம்பண்ணை + +ஏழாயிரம்பண்ணை (ஆங்கிலம்:Elayirampannai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 101 மீட்டர் (331 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6354 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இங்கு முக்குலத்தோர் (தேவர்) எ��� அழைக்கப்படும் மக்கள் பெருவாரியாக வசிக்கின்றனர் . இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ஏழாயிரம்பண்ணை மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஏழாயிரம்பண்ணை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஏரல் + +ஏரல் (ஆங்கிலம்:Eral), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்த இவ்வூரின் சேர்மன் அருணாசல சுவாமி கோயில் புகழ்பெற்றதாகும். + +இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 28 கிமீ தொலைவில் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 8 கிமீ தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,388 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 9,478 ஆகும் + +1.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 98 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது. + + + + +இரணியல் + +இரணியல் (ஆங்கிலம்:Eraniel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் வருவாய் கிராமாகும்.கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரயில் நிலையங்களில் இரணியல் இரயில் நிலையம் முக்கியமானதாகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10375 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இரணியல் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இரணியல் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +எரியோடு + +எரியோடு (ஆங்கிலம்:Eriyodu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 8,890 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 15.17 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. எரியோடு பேருராட்சியானது திண்டுக்கல் நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவில், திண்டுக்கல் - கரூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ளது. இப்பேரூராட்சியில் பொறிக்கடலை தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7866 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எரியோடு மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எரியோடு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + + +நெல்லை ஏர்வாடி + +ஏர்வாடி (ஆங்கிலம்:Eruvadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேனரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 38 கிமீ தொலைவிலும்; நாங்குநேரியிலிருந்து 8 கிமீ தொலைவிலும்; திருக்குறுங்குடியிலிருந்து 6 கிமீ தொலைவிலும் வள்ளியூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் ஏர்வாடி பேரூராட்சி உள்ளது. + +8.4 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4239 வீடுகளும், 18067 மக்கள்தொகையும் கொண்டது. + +மக்கள் ஏர் உழும்போது பாடிக்கொண்டு உழுததால் ஏர்பாடி என்பது ஏர்வாடியாக மருவியது என்பர். ஏர்வாடி என்னும் இந்த சொல் "ஏர்" "கலப்பை" என்னும் என்னும் சொல்லில் இருந்தது வந்தது. + +இவ்வூரின் நடுவே நம்பி ஆறு பாய்கிறது. தற்பொழுது உள்ள தட்ப வெட்ப காரணங்களினால் ஆற்றில் நீர் வற்றி காணபடுகிறது. + +திருநெல்வேலி நகரத்தில் இருந்து ஏறத்தாழ 38 கிலோ மீட்டர் தொலைவில் இவ்வூர் அமைந்து��்ளது. இவ்வூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வள்ளியூரில் ரயில் நிலையம் ஏர்வாடி மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையமாக இருகின்றது. சாலை வழியாக ஏர்வாடி சென்னையுடனும் (670 கிலோ மீட்டர்), மதுரையுடனும்(205 கிலோ மீட்டர்) இன்னும் இன்ன பிற நகரங்களுடனும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இவ்வூரின் அருகாமையில் உள்ள விமான நிலையம் 125 கிலோ மீட்டர் தொலைவில் திருவனந்தபுறத்தில் இருகின்றது. + +ஏர்வாடி பேரூராட்சியில் பல்வேறு பள்ளிகளின் விவரம். + +மெட்ரிகுலேசன் பள்ளிகள்: + +அரசு பள்ளிகள்: + +இங்கு பலதரப்பட்ட விளையாட்டுக்கள் விளையாடப்படுகின்றன. இவற்றுள் முக்கியமானவை கிரிக்கெட் மற்றும் கைபந்து. கைபந்து விளையாட்டை இவர்களது ஊர் விளையாட்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இது போக கிராமத்து விளையாட்டுகளான கில்லி, கோலி, பம்பரம், கபடி ஆகியவை இந்த ஊர் சிறுவர்களிடையே பிரசித்தம். கில்லி விளையாட்டினை இவ்வூரில் குச்சி-கம்பு என்று அழைப்பார்கள். + +ஏர்வாடி முஸ்லிம், இந்து, கிறித்தவ மக்கள் தொகையை கொண்டுள்ளது. ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்களுக்கான வழிபாட்டு தலங்கள் உள்ளன. + +ஏர்வாடியில் உள்ள மசூதிகளில் + +இது போக சிறிய பள்ளிவாசல்களும், தர்காகளும் இருக்கின்றன. வருடம் ஒரு முறை கந்தூரிகளும் சந்தன கூடு திருவிழாவும் நடைபெறுவது உண்டு. + +பெருமாள் கோவில் திருகுரங்குடி - ஏர்வாடி பாதையில் அமைந்து இருக்கின்றது. இது போக ஹரிஹர சாஸ்த கோவிலும் பெரியநாயகி அம்மன் கோவிலும் இங்கு அமைந்துள்ளது. சக்தி வாய்ந்த அம்மன் கோயில் உள்ளது. சந்தன மாரி முப்பிடாதி உச்சினிமாளி ஆகிய மூன்று சக்தி வாய்ந்த தெய்வங்கள் உள்ளன + +ஏர்வாடியில் புனித ஜோசப் தேவாலயம் பிரசித்தம். + + + + +எட்டிமடை + +எட்டிமடை (ஆங்கிலம்:Ettimadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7887 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எட்டிமடை மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. எட்டிமடை மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கணபதிபுரம் + +கணபதிபுரம் (ஆங்கிலம்:Ganapathipuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,653 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கணபதிபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கணபதிபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். வடக்கு கன்னகுறிச்சி என்னும் கிராமம் உள்ளது இங்கு அருள் மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திரு கோவில் உள்ளது திருவிழா வெகுவாகக் நடைபெறும் + + + + +காந்தி நகர் (காட்பாடி விரிவு) + +காந்தி நகர் (காட்பாடி விரிவு) (ஆங்கிலம்:Gandhi Nagar(Katpadi Ext.)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 9708 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். காந்தி நகர் (காட்பாடி விரிவு) மக்களின் சராசரிக் கல்வியறிவு 90% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91%, பெண்களின் கல்வியறிவு 90% ஆகும். இது இந்திய தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. காந்தி நகர் (காட்பாடி விரிவு) மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கங்கைகொண்டான் (திருநெல்வேலி) + +கங்கைகொண்டான் (ஆங்கிலம்:Gangaikondan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருநெல்வேலி வட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு ஊராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,254 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். கங்கைகொண்டான் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கங்கைகொண்டான் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கங்கவள்ளி + +கங்கவள்ளி (ஆங்கிலம்:Gangavalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,584 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கங்கவள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கங்கவள்ளி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கெங்குவார்பட்டி + +கெங்குவார்பட்டி (ஆங்கிலம்:Genguvarpatti) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், பெரியகுளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது கொடைக்கானல் செல்வதற்கான நுழைவு வாயிலாக உள்ளது. இது வத்தலகுண்டு - கொடைக்கானல் நெடுஞ்சாலையில் உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,928 மக்கள்தொகையும், 5 சகிமீ பரப்பும், 15, வார்டுகளும், கொண்டது. இப்பேரூராட்சியானது பெரியகுளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +கெங்குவார்பட்டி 10.170677 அட்ச ரேகையிலும், 77.6979885 தீர்க்க ரேகையிலும், கடல் மட்டத்திலிருந்து 883.332 அடி(269.240 மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளது. இதற்கு வடக்கில் கொடைக்கானல் மலையும், மேற்கில் தேவதானப்பட்டியும், கிழக்கில் வத்தலக்குண்டும் எல்லைகளாக அமைந்துள்ளன. + +இது பழனி மலைக்குன்றுகளின் அருகே அமைந்துள்ளதால் இங்கே வருடம் முழுவதும் மிதமான வெப்பநிலையே நிலவுகிறது. அதிகபட்ச வெப்பநிலை 43°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 12°C ஆகவும் உள்ளன. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,592 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,377 ஆண்கள், 5,215 பெண்கள் ஆவார்கள். கெங்குவார்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இ��ு இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கெங்குவார்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 74 தெருக்கள் இருக்கின்றன. காமக்காபட்டி, கோட்டார்பட்டி, செங்குளத்துப்பட்டி, பாலப்பட்டி, மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்கள் கெங்குவார்பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்டவையாக இருக்கின்றன. தேனி மாவட்டத்தின் எல்லையாகவும் அமைந்திருக்கிறது. + +இவ்வூரின் பெரும்பாலான மக்கள் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்கின்றனர். இந்த ஊரின் பெரும்பாலான பகுதிகள் நீர்ப்பாசனம் உள்ள காரணத்தால் பசுமைத் தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இங்கு நெல், கரும்பு, வாழை வயல்கள் மற்றும் தென்னந்தோப்புக்கள் அதிக அளவில் உள்ளன. விவசாயப் பணிகளுக்கு மஞ்சளாறு அணையிலிருந்து கால்வாய் மற்றும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சிறிய தடுப்பணைகளிலிருந்து நீர் பெறப்படுகிறது. தேங்காய், நெல், கரும்பு, வாழை, பருத்தி மற்றும் காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. + +இங்கு பள்ளிக் கல்விக்காகக் கீழ்க்காணும் பள்ளிகள் அமைந்துள்ளன. +ஒரேயொரு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது . + +ஆகிய கோவில்கள் அமைந்துள்ளன. ஊரின் பொதுக் கோவிலாக இருக்கும் முத்தாலம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் திருவிழா கொண்டாடப்படுகிறது. + + + + + +செஞ்சி + +செஞ்சி (ஆங்கிலம்:Gingee), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 92 மீட்டர் (301 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 20,896 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செஞ்சி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செஞ்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ��வார்கள். + +செஞ்சிக் கோட்டையை கட்டியவர் மாமன்னர் ஆனந்த கோனார் என்பவர் ஆவார். இவர் 11 வயதிலயே மன்னராக முடிசூட்டிக் கொண்டவர். இவரைத் தொடர்ந்து இவர் பரம்பரையினர் 300 வருடமாக செஞ்சி கோட்டையை ஆண்டு வந்தனர். அனந்த கோனார் ஆனந்தகிரி அல்லது ராஜகிரி கோட்டையை கட்டினார். இவரின் மகன் கிருஷ்ண கோனார் மேலும் செஞ்சி கோட்டையை விரிவுப்படுத்தி மேலும் உட்புற கிருஷ்ணகிரி கோட்டை கட்டி கொத்தளங்கள் படைகளை விரிவுபடுத்தி ஆட்சி செய்தார். இக்கோட்டையை பல மன்னர்கள் கைப்பற்ற முயன்றனர் இவர்கள் வலிமை குன்றிய பொழுது இக்கோட்டையை பிற மன்னர்கள் ஆக்கிரமித்து ஆட்சி செய்தனர். + + +மேலுள்ளவர்கள் வரையும் ஆனந்த கோன் வாரிசுகள். இவர்களது ஆட்சி கி.பி. 1190 முதல் கி.பி. 1330 வரை நடைபெற்று வந்திருக்கிறது. + +கோனார்களுக்குப் பின்னால், குறும்ப இடையர் ஆண்டனர். கோபலிங்கன் அல்லது கோட்டியலிங்கன் 1320-1330. + +13ஆம் நூற்றாண்டு பிற்பகுதியிலும் 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் பொய்சாலர் ஆட்சி(ஹோய்சாலர்) நடைபெற்றது. + +14ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் செஞ்சி, கோபன்னராயா என்பவற்றின் பொறுப்பில் இருந்து வந்தது. அதன் பின்னர் கி.பி.1490ல் கிருஷ்ண தேவ ராயர், துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கரை ஆட்சியில் அமர்த்தினார். கி.பி.1521 வரை ஆண்ட இந்த துப்பாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர் என்பவர் தான் செஞ்சியை ஆண்ட முதல் செஞ்சி நாயக்கர் அரசர் ஆவார். செஞ்சி நாயக்கர்களின் இறுதி மன்னரான இராமகிருஷ்ணப்ப நாயுடு செஞ்சிப் பகுதியை 1649 முடிய அரசாண்டார். + +கி.பி.1649ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் கடைசியாக செஞ்சியை ஆண்டு வந்த நாயக்க அரசர், பீஜப்பூர் படைத்தலைவனால் வெல்லப்பட்டார். கி.பி.1677 வரை பீஜப்பூர் ஆட்சியின் கீழ் செஞ்சி இருந்து வந்தது. + +தெற்கு நோக்கி சிவாஜி படையெடுத்து வந்த போது, செஞ்சியை ஆண்டு வந்த பீஜப்பூர் சுல்தானின் கவர்னர் நாசர் முகம்மதுவை சிவாஜியின் படைத்தலைவன் சந்தித்து ஐம்பதனாயிரம் உரூபாய் வருவாயுள்ள பெரிய ஜாகீரைக் கொடுத்து செஞ்சியை விட்டுச் செல்லும்படி தூண்டினான். அவரும் ஜாகீரைப் பெற்றுக்கொண்டு செஞ்சி ஆட்சியை மராத்தியரிடம் விட்டுச் சென்றுவிட்டார். சிவாஜி செஞ்சியின் ஆட்சியை சம்பாஜியிடம் ஒப்புவித்தார். பின்னர், தொடர்ந்து ஏழு ஆண்டுகள் முற்றுகைக்குப் பிறகு, மராத்திய மன்னரான ���ாமராஜா என்பவரிடமிருந்து செஞ்சியின் ஆட்சி பறிக்கப்பட்டு, அங்கு முகலாயர்களின் ஆட்சி ஆரம்பமாயிற்று. + +மராத்தியருக்கு எதிரான வெற்றியை முகலாயருக்கு ஏற்படுத்திக் கொடுத்தவர் ஔரங்கசீப் அரசவையில் பெரும்புகழுடன் விளங்கிய தளபதி ஜுல்பிர்கான் ஆவார். செஞ்சியில் முகலாயர் ஆட்சியை நடத்தி வந்த ஔரங்கசீப், பண்டில்கண்டின் தலைவரான சொரூப் சிங்கை செஞ்சியின் ஜாகீர்தாராக ஆக்கி கி.பி.1700ல் அவரிடம் அதன் ஆட்சியை ஒப்படைத்தார். இவர் மொகலாய அரசுக்குக் கட்ட வேண்டிய பாக்கித்தொகை பத்து வருடங்களாக கட்டப்படாமலிருந்ததால் 70 இலக்கம் உரூபாய்க்கும் மேலாகப் பாக்கி இருந்தது. அப்போது, கருநாடக நவாபு, இதை தில்லி பாதுஷாவுக்குத் தெரிவித்தார். பல தடவைகள் பாக்கித் தொகையை வசூலிக்க முயன்ற போதெல்லாம், சொரூப் தொகையைக் கட்டாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தார். இதற்கு தில்லியில் முகலாயர் ஆட்சியில் ஏற்பட்டிருந்த சிக்கல்களும், கருநாடக நவாபு பதவி பற்றிய உரிமையில் எழுந்திருந்த சர்ச்சைகளும் காரணமாக இருந்திருக்கலாம். இந்த நிலையில், சொரூப் சிங் கி.பி.1714ன் ஆரம்பத்தில் வயது முதிர்ச்சியின் காரணமாகக் காலமாகி விட்டார். பின்னர், சொரூப் சிங்கின் மகனான தேசிங்கு, பரம்பரை பாத்தியம் கொண்டாடி செஞ்சிக்கு அரசராக ஆனார். இதை ஆற்காடு நவாபான சாதத் உல்லாகான் ஆட்சேபித்தார். செஞ்சிக்கு, பரம்பரை பாத்தியம் கொண்டாடி தேசிங்கு அரசராக வந்தது, தில்லியில் முகலாயர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் பிரதிநிதியாக இங்கு இருந்த ஆற்காடு நவாபு சாதத் உல்லாகானுக்கும் பிடிக்கவில்லை. இதனிடையே ஆற்காடு நவாபு முன்னறிவிப்பு இல்லாமல் செய்த படையெடுப்பில், தேசிங்கும் அவர் படைத்தளபதியான மகமத்கானும் இறந்தனர். + +11-9-1750 முதல் 1761 சனவரி வரை +1780-1799 + +6-4-1761 முதல் 1780 +1799- + +செஞ்சி என்ற ஊர் தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ளது. திண்டிவனத்திலிருந்து 23 கி.மீ தொலைவில் இவ்வூர் உள்ளது. செஞ்சியிலிருந்து 1 கி.மீ தொலைவில் செஞ்சிக் கோட்டை உள்ளது. + +கி.பி. 13ஆம் நூற்றாண்டிலிருந்து செஞ்சி தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியத்துவம் பெறத் தொடங்கிற்று. சுமார் கி.பி. 1200இல் அனந்த கோனார் என்பவர் செஞ்சியிலுள்ள மலையில் கோட்டையைக் கட்டியதாகக் கூறப்படுகிறது. இக்கோட்டை அனந்தகிரிக் கோட்டை எனப்பட்டது. சுமார் கி.பி. 1240இல் அனந்த கோனார் வழிவந்த கிருஷ்ண கோனார் செஞ்சியில் மற்றொரு கோட்டையைக் கட்டினார் என்றும், இதுவே கிருஷ்ணகிரி கோட்டை எனப்பட்டது என்றும் கூறப்படுகிறது. + +கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதியில் செஞ்சி விஜய நகர அரசின் ஆட்சியின்கீழ் வந்தது. விஜய நகர அரசுக் காலத்தில் செஞ்சிக் கோட்டை மிக்க பலம் வாய்ந்ததாக ஆக்கப்பட்டது. விஜய நகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் (கி.பி. 1509-1529) நாயக்கர் மரபைச் சேர்ந்த வையப்பர் என்பவரைத் தம் பிரதிநிதியாகச் செஞ்சியில் நியமித்தார். வையப்பர் செஞ்சியைத் தலைநகராகக்கொண்டு தொண்டை மண்டலப் பகுதியை ஆட்சி புரியலானார் (1526). இவர் விஜய நகர மன்னர்களிடம் விசுவாசமாக நடந்துகொண்டார். வையப்பரை அடுத்து துபாகி கிருஷ்ணப்பர் என்பவர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர் ஆனார். துபாகி கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் அனந்தகிரிக் கோட்டை ‘இராஜகிரிக் கோட்டை’ என்ற பெயரைப் பெற்றது. இவர் இராஜகிரி மலையில் கொத்தளங்கள், தானியக் களஞ்சியங்கள், மூன்று குன்றுகளைச் சுற்றியுள்ள மதில்கள் ஆகியவற்றைக் கட்டினார். இவரையடுத்து முதலாம் கிருஷ்ணப்பர், இரண்டாம் கிருஷ்ணப்பர் ஆகியோர் செஞ்சி நாயக்க அரசின் ஆளுநர்களாக இருந்தனர். + +இரண்டாம் கிருஷ்ணப்பர் (1570-1608) வலிமைமிக்க மன்னராகத் திகழ்ந்தார். சிறந்த ஆட்சியாளராக விளங்கினார். இவரது மேலாதிக்கத்தை வேலூரில் ஆட்சி புரிந்த நாயக்க வம்சத்தினரும் ஏற்றனர். இவர் ஆட்சிக் காலத்தில் செஞ்சி தமிழ்நாட்டில் புகழ்மிக்க நகராக விளங்கியது. இவர் டச்சுக்காரர்களுக்குக் கடலூருக்கு அருகில் வாணிபத்தலம் அமைக்க அனுமதி கொடுத்தார். இவர் விஜய நகர அரசருக்குக் கப்பம் செலுத்தத் தவறியதால், விஜய நகர அரசர் முதலாம் வெங்கடன் செஞ்சிமீது படையெடுத்து வென்றார், இரண்டாம் கிருஷ்ணப்பர் சிறை பிடிக்கப்பட்டார். இவருக்குப்பின் செஞ்சி நாயக்க அரசு வலிமையற்றதாகிவிட்டது. கி.பி.1649இல் கடைசி செஞ்சி நாயக்கரைத் தோற்கடித்து பீஜப்பூரின் படைகள் செஞ்சியைப் பிடித்தன. பீஜப்பூர் படைகள் செஞ்சியை பாதுஷா பாத் என்று பெயரிட்டு ஆட்சி புரிந்தன. 1677இல் மராட்டிய தலைவர் சிவாஜியால் செஞ்சி கைப்பற்றப்பட்டது. சிவாஜி காலத்தில் இக்கோட்டை வலுவானதாக்கப்பட்டது. மொகலாய மன்னர் ஒளரங்கசீப் காலத்தில் அவர் தளபதி சுல்பிகர்கானின் நீண்ட முற்ற���கைக்குப்பின் செஞ்சி +மராட்டியரிடமிருந்து கைப்பற்றப்பட்டது. சுல்பிகர்கான் சொரூப்சிங் என்ற இராஜ புத்திரரிடம் செஞ்சியின் ஆட்சியை ஒப்படைத்தார். பின் செஞ்சி மொகலாயருக்கு உட்பட்ட, கர்நாடக நவாபின் ஆட்சிப்பகுதி ஆயிற்று. + +சொரூப்சிங்கின் வீரமகன் தேசிங்குராஜன் ஆவார். இவர் ஆர்க்காட்டு நவாபின் மேலதிகாரத்தை ஏற்க மறுத்து, அவருக்குக் கப்பம் கட்டவில்லை. இதனால் ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லா-கான் கி.பி. 1713இல் ஒரு படையுடன் தேசிங்கு ராஜனைத் தாக்கினார். செஞ்சி நகருக்கு அருகில் ஒரு முக்கிய போர் நடந்தது. தேசிங்குராஜன் வீரமாகப் போரிட்டார். அவருக்கு மாபத்கான் என்ற நண்பரும் உதவினார். இருப்பினும் தேசிங்குராஜன் போரில் கொல்லப்பட்டார். +ஆர்க்காட்டு நவாப் செஞ்சியைக் கைப்பற்றினார். தேசிங்கின் மனைவி உடன் கட்டையேறினார். அவ்வரசியின் வீரத்தைப் பாராட்டி ஆர்க்காட்டு நவாப் இராணிப்பேட்டை என்ற ஊரை ஆர்க்காட்டுக்கு அருகில் உண்டாக்கினார். + +கி.பி. 1750இல் புஸ்ஸி என்ற பிரெஞ்சுத் தளபதி செஞ்சியைக் கைப்பற்றினார். 1750முதல் 1761வரை செஞ்சிக் கோட்டை பிரெஞ்சுக்காரர் வசம் இருந்தது. 1761இல் ஸ்டீபன் சுமித் என்ற ஆங்கிலேயரால் செஞ்சி கைப்பற்றப் பட்டது. 1780இல் மைசூர் மன்னர் ஹைதர் செஞ்சியைப் பிடித்தார். ஆனால், மைசூர் போரின் இறுதியில் செஞ்சி ஆங்கிலேயர் வசம் வந்தது. இதன்பின் செஞ்சிக்கோட்டை அதன் இராணுவ முக்கியத்துவத்தை இழந்தது. இன்று செஞ்சிக் கோட்டை ஒரு தொல்பொருள் சின்னமாகக் காட்சியளிக்கிறது. + +கிருஷ்ணகிரி, இராஜகிரி, சந்திரகிரி என்ற மூன்று குன்றுகளை வளைத்து, சுமார் 5 கி.மீ. சுற்றளவில் முக்கோண வடிவில் செஞ்சிக் கோட்டை கட்டப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலுள்ள இக்கோட்டை கீழ்க்கோட்டை (Lower Fort) எனப்படும். ஒவ்வொரு குன்றின்மீதும் பாதுகாப்பான கோட்டையும் கொத்தளங்களும் உள்ளன. கீழ்க்கோட்டையினுள் நுழைய ஆர்க்காடு அல்லது வேலூர் வாயில், பாண்டிச்சேரி வாயில் என்ற இரு வாயில்கள் உள்ளன. + +திசைகளை வைத்துப் பார்ப்பின் கிருஷ்ணகிரிக் கோட்டை வடக்கிலும், இராஜகிரிக் கோட்டை மேற்கிலும், சந்த்ரயன் துர்க்கம் தெற்கிலும் உள்ளது. இம்மூன்று மலைக்கோட்டைகளின் உச்சிகளுக்கும் செல்லப் படிக்கட்டு வசதி உள்ளது. இம்மூன்றில் இராஜகிரிக் கோட்டையே மிகவும் உயர்ந்தது. இதன் உ���ரம் 235 மீட்டர் ஆகும். + +கிருஷ்ணகிரி மலைக்கோட்டை + +செஞ்சி-திருவண்ணாமலை சாலைக்கு வெகு அருகில் லையின் வலதுபுறம் கிருஷ்ணகிரி மலைக்கோட்டை உள்ளது. மலைமீது ஏறி உச்சிக்குச் செல்லும் வழியில் இரு பெரிய தானியக் களஞ்சியங்களைக் காணலாம். இதையடுத்துத் தெய்வ மில்லாத ரெங்கநாதர் கோவிலும் சிப்பாய்கள் தங்கிய கட்டடமும் +இதர சில கட்டடப் பகுதிகளும் உள்ளன. + +இராஜகிரி மலைக்கோட்டை + +செஞ்சி-திருவண்ணாமலை சாலையின் இடதுபுறம் சாலையிலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் இராஜகிரி மலைக்கோட்டை உள்ளது. இராஜகிரிக்குச் செல்லும் வழியில் பட்டாபி ராமர் கோவில் உள்ளது. இராஜகிரி கோட்டைக்குள் மராத்தியக் கட்டடக்கலை முறைப்படி உருவான கல்யாண மண்டபம் உள்ளது. 7 அடுக்குகளைக்கொண்ட இக்கட்டடம் மரத்தைப் பயன்படுத்தாது கட்டப்பட்டுள்ளது. கல்யாண மண்டபத்தை அடுத்து வெடிமருந்துச்சாலை, பெரிய தானியக் களஞ்சியம், வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்கள், இராஜா தேசிங்கின் உடல் தகனம் செய்யப்பட்டதாகக் கருதப்படும் மேடை, வெங்கட ரமணா கோயில் ஆகியவை உள்ளன. வெங்கடரமணா கோவிலின் வேலைப்பாடுமிகுந்த ஒற்றைக் கற்றூண்கள் சிலவற்றைப் பெயர்த்து, பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிக்குக் கொண்டு சென்றுள்ளனர். + +இராஜகிரி மலைக்கோட்டையில் 9 வாயில்கள் உள்ளன. எட்டாவது வாயிலுக்குள் நுழையுமிடத்தில் மரப்பாலம் ஒன்று உள்ளது. உச்சியில் நாணயச்சாலை, தெய்வமில்லாத ரெங்க நாதர் கோவில், இராஜா தேசிங்கு ‘தர்பார்’ மண்டபம், மணிக் கூண்டு ஆகியவற்றைக் காணலாம். + +இராஜகிரி மலைக்கோட்டையை அடுத்து உட்கோட்டை (Inner Fort) உள்ளது. இக்கோட்டைப் பகுதியில் புதுச்சேரி வாயில், வேலூர் வாயில் ஆகியவை உள்ளன. புதுச்சேரி வாயில் அருகில் பிரெஞ்சுக்காரர்கள் கட்டிய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. வாயிலருகிலுள்ள கோட்டைச் சுவரில், ஆர்க்காட்டு நவாப் சாதத் உல்லாகான் கி.பி. 1713இல் தேசிங்குராஜனை வீழ்த்தி இக்கோட்டையைப் பிடித்த வெற்றிச் செய்தியைக் குறிக்கும் ‘பாரசீக மொழிக் +கல்வெட்டு’ உள்ளது. + +இராஜகிரி மலைக்கோட்டைக்குத் தெற்கில் சந்த்ரயன் துர்க்கம் மலைக்கோட்டை உள்ளது. + +தமிழ்நாட்டில் செஞ்சி கோட்டையைப்போல் சிறப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை எனலாம். இக்கோட்டை நமது பண்பாட்டை அறிய உதவும் சிறந்த தொல்பொருள் சின்��மாகும். + +செஞ்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் தளவனூர் என்ற இடம் உள்ளது. இங்குள்ள பஞ்ச பாண்டவர் மலையின் தென் பகுதியில் பல்லவர்காலக் குடைவரைக்கோவில் ஒன்று உள்ளது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் (கி.பி. 600-630) இக்கோவில் குடையப்பெற்றதாக அறியப்படுகிறது. +கல்வெட்டுகளிலிருந்து இக்குடைவரைக் கோவில் சத்ரு மல்லீஸ்வரர் என்ற சிவாலயமாக எழுப்பப்பட்டதாக அறியப்படுகிறது. + +தளவனூரிலிருந்து 10 கி.மீ. தொலைவில் மண்டகப்பட்டு குகைக்கோயில் உள்ளது. இக்குகைக் கோவிலை அமைத்தவர் விசித்திர சித்தனான மகேந்திரவர்ம பல்லவர் ஆவார். +மற்றும் செஞ்சியிலிருந்து 23 கிமீ தொலைவில் கெங்கவரம் மலை பகுதியில் செஞ்சி கோட்டை போல ஒன்று உள்ளது. + + + + + +கோபிச்செட்டிப்பாளையம் + +கோபிசெட்டிப்பாளையம் (ஆங்கிலம்:Gobichettipalayam), (கோபி என்று அழைக்கப்படும்) இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு முக்கிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் ஈரோடு மாவட்டத்தில் ஒரு வட்டத்தின் தலைமையகம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 213 மீட்டர் உயரத்திலும், மாவட்ட தலைமையகம் ஈரோட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. கோபிசெட்டிபாளையம் 'சின்ன கோடம்பாக்கம்' அல்லது 'மினி கோலிவுட்' என்று அழைக்க படுகிறது, ஏனெனில் இங்கு படப்பிடிப்பு அதிகமாக நடைபெறும் என்று அறியப்படுகிறது. + +தற்போது உள்ள கோபிசெட்டிபாளையம் முன்னர் ஒரு முக்கிய பகுதியாக வீரபாண்டி கிராமம் என்று அழைக்க பட்டது. அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் இன்னும் அந்த பெயரையே பயன்படுத்தகின்றன. + +கோபிசெட்டிப்பிள்ளான் என்பவர் இப்பகுதியில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததால் கோபிசெட்டிபாளையம் என பெயர் பெற்றது. அவர் ஒருமுறை வறியோருக்குக் கொடுக்கத் தன்னிடம் பொருளின்றி வருந்தி கொண்டத்துக் காளியம்மனிடம் முறையிட்டு புலிப்புதருக்குச் சென்று உயிர்விடத் துணிந்து அதன் உள்ளே குதித்தார். அந்த நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங்கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டிருந்த ஒரு திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட்களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட்களை எடுத்து ஏழைகளுக்கு கொண்டுத்தார் என்று வரலாறு. + +இந்த இடம் முன்னர் கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னர் ஆட்சி நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் சேர மன்னர்களால் கை பற்றபட்டு ஆட்சி செய பட்டது. அதன் பிறகு திப்பு சுல்தான் இந்த ஊரை தனதாக்கி கொண்டான். முடிவில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கொண்டனர். +கோபிசெட்டிபாளையம் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியான கொங்கு நாட்டில் அமைந்துள்ளது. சென்னை சுமார் 390 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து, பவானி ஆற்று கரையில் அமைந்துள்ளது. இங்கு வெப்பநிலை சூடாக இருக்கும். கோடை மாதங்களில் தவிர, மற்ற மாதங்களில் மிதமான வெப்பமும், அதிக மழையளவும் கொண்டு இருக்கும். + +கோபிசெட்டிபாளையம் நகராட்சி 2008ஆம் ஆண்டு தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பின் படி 60,279 மக்கள்தொகை கொண்டுள்ளது. இதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% ஆவார்கள்". 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 74% எழுத்தறிவு விகிதம் உள்ளது: ஆண் எழுத்தறிவு விகிதம் 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். +கொங்கு தமிழ், தமிழ் மொழியின் ஒரு கிளை ஆகும். இதுவே பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழி. ஆங்கிலமும் தமிழும் சேர்த்து ஒரு உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படுகிறது. மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளும் பேசப்படுகின்றன. உணவு பெரும்பாலும் தென் இந்திய அடிப்படையில் அரிசி சார்ந்தது ஆகும். + +நகரம் விரைவாக தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 31%, வர்த்தக மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் 56% மற்றும் 13% "இரு செயல்பாடு" என்று அரசாங்கம் விவரிக்கிறது. விவசாயம் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றுகிறது. நெல். கரும்பு, வாழை, புகையிலை மற்றும் மஞ்சள் முக்கிய பயிர்கள் ஆகும். வெண் பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது. + +நான்கு முக்கிய ஆங்கில மொழி செய்தித்தாள்கள் தி இந்து, தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நகரில் கிடைகின்றன. தமிழ் செய்தித்தாள்கள் தினமலர், தினத்தந்தி, தினமணி, தினகரன் (அனைத்து காலை செய்தித்தாள்கள்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவன அடங்கும். ஒரு நடுத்தர அலை இயக்கப்படும் வானொலி நிலையம் ஆல் இந்தியா ரேடியோ மற்��ும் ஐந்து பண்பலை வானொலி நிலையங்களின் சேவை இங்கு உள்ளது. அனைத்து முக்கிய கைபேசி சேவை வழங்குநர்களும் இங்கு சேவை வழங்குகின்றனர். + +நகரில் அரசு மருத்துவமனை தவிர பல முக்கிய மருத்துவமனைகள் உள்ளன. + +கோபிச்செட்டிபாளையம் 2008 வரை ஒரு மக்களவை தொகுதியாக இருந்தது. இப்பொது திருப்பூர் தொகுதியின் ஒரு பாகமாக இருக்கின்றது. +மேலும் இந்த நகரம் கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்தது. + +கோபிச்செட்டிபாளையம் ஒரு நல்ல கல்வி உள்கட்டமைப்பு உள்ள நகரமாக விளங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த அளவில் மாணவர்களை அனுப்புகிறது . தரமான கல்வி வழங்கும் பள்ளிகள் உள்ளன. +இங்குள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒரு தலை சிறந்த கல்விக் கூடமாக தன்னாட்சி அங்கீகாரத்துடன் விளங்குகிறது.நூற்றாண்டுகளுக்கும் மேல் இயங்கி வரும் வைரவிழா மேல்நிலைப் பள்ளியும் இந்த நகரத்தின் அடையாளம் ஆகும். + +கோபிச்செட்டிபாளையம் நகராட்சி சாலைகள் மொத்தம் 67.604 கி.மீ. நீளம் ஆகும். மாநில நெடுஞ்சாலைகள் இவற்றில் 6.6 கிமீ உள்ளது. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பெரிய மத்திய பேருந்து நிலையம் இயக்கப்படுகிறது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் 28 கிமீ தொலைவில் அமைந்து உள்ள ஈரோடு சந்திப்பு ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் 74 கிமீ தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும். + +கொடிவேரி அணை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பவானி ஆறு மேல் உள்ள பவானிசாகர் அணை மற்றொரு முக்கிய அணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சத்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது. + +இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் ஆகும். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில், ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் முருக பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை விசேஷம் வாய்ந்தவை. + +கோபி நகருக���கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக பச்சைமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மற்றும் பவளமாலை முருகன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. சுற்றுலா பயணிகள் இம்மூன்று இடங்களையும் பார்க்க தவறுவதில்லை. + + + + +கோபாலசமுத்திரம் + +கோபாலசமுத்திரம் (ஆங்கிலம்:Gopalasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி வட்டம், சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +மாவட்டத் தலமையிடமான திருநெல்வேலியிலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்த கோபாலசமுத்திரத்திற்கு கிழக்கே 10 கிமீ தொலைவில் மேலப்பாளையம், மேற்கே 9 கிமீ தொலைவில் சேரன்மாதேவி; வடக்கே 4 கிமீ தொலைவில் பேட்டை; தெற்கே 22 கிமீ தொலைவில் களக்காடு உள்ளது. + +10.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2890 வீடுகளும், 10694 மக்கள்தொகையும் கொண்டது. + +நூற்றாண்டைக் கடந்த பண்ணை வெங்கட்டராமய்யர் உயர்நிலைப்பள்ளி இங்கு உள்ளது. இந்த ஊர் மக்களின் முக்கியமான தொழில் விவசாயம் கோபாலசமுத்திரம் கிராமம் மன்னர் காலத்தில் பள்ளியின் நிறுவனர் குடும்பத்திற்கு தானமாக வழங்கப்பட்டதாக கூறுகின்றனர். + +தாமிரபரணி நதியின் கரையில் அமைந்துள்ளது பழமையான சிவன் கோவில், பெருமாள் கோவில், வெள்ளை பிள்ளையார் கோவில்கள் இங்குள்ளன. + + + + +கவுண்டம்பாளையம் + +கவுண்டம்பாளையம் (ஆங்கிலம்:Goundampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 46,984 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கவுண்டம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கவுண்டம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +குடியாத்தம் + +குடியாத்தம் (ஆங்கிலம்:Gudiyatham), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ஆகத்து 15, 1947 அன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்றிய இந்திய தேசிய கொடி குடியாத்தம் நகரில் நெய்யப்பட்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 91,376 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குடியாத்தம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குடியாத்தம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இந்நகரானது கைத்தறி எனும் நெசவுத் தொழிலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது. + + + + + +கும்மிடிப்பூண்டி + +கும்முடிபூண்டி +கும்முடிப்பூண்டி (ஆங்கிலம்:Gummudipoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,116 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். கும்முடிபூண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கும்முடிபூண்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அரூர் + +அரூர் (ஆங்கிலம்:Harur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இந்த ஊரை கிராம மக்கள் அரியூர் எனக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளிலும் இவ்வூரை இப்பெயரிலேயே அழைக்கின்றன எனவே அரியூர் என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும் அரூர் என்பது அதன் திரிபு. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 350 மீட்டர் (1148 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,607 வீடுகளில் 25,469 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 12543 ஆண்கள், 12926 பெண்கள் ஆவார்கள். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஹார்விப்பட்டி + +ஹார்விப்பட்டி (ஆங்கிலம்:Harveypatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அமைந்த 97-வது வார்டு ஆகும். முன்னர் இது ஒரு பேரூராட்சியாக இருந்தது. மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் போது, ஹார்விப்பட்டி பேரூராட்சி, மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8135 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஹர்வேப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஹர்வேப்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +நெடுஞ்சாலை (ஊர்) + +நெடுஞ்சாலை (ஆங்கிலம்:Highways), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7028 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நெடுஞ்சாலை மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெடுஞ்சாலை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஓசூர் + +ஓசூர் ("Hosur") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இவ்வூர் சென்னை நகரில் இருந்து மேற்கே 306 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூர் நகரத்தில் இருந்து 40 கி.மீ தொலைவிலும் உள்ளது. இந்த நகரம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநில எல்லைப் பகுதியில் உள்ளது. இந்நகரம் பெருகி வரும் தொழிற்சாலைகளாலும், குளிர்ந்த தட்பவெப்பநிலையாலும் அறியப்படுகிறது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 879  மீட்டர் (2883  அடி) உயரத்தில் இருக்கின்றது. வாரணாசி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை எண் 7 இவ்வூரின் வழியாகச் செல்கிறது. + +ஒசூர் பழங்காலத்தில் செவிடபாடி என்று 11-ம் நூற்றாண்டு சோழர் கால கல்வெட்டுகளால் அறியப்படுகிறது"பிறகு செவிடபாடி என்ற பெயர் செவிடவாடி என்றும் 13-ம் நூற்றாண்டில் ஒய்சால மன்னன் வீர ராமநாதன் ஆட்சிக்கால கல்வெட்டில் சூடவாடி என குறிப்பிடப்படுகிறது." கி.பி.1674-ம் ஆண்டைச் சேர்ந்த மைசூர் மன்னர்கள் கால கல்வெட்டில் ஹொசாவூரு என்ற பெயர் குறிக்கப் படுகிறது ஹொசவூரு-ஹொசூரு-ஹொசூர்-ஒசூர் என்று மாற்றம் அடைந்துள்ளது."ஹொச என்ற கன்னடச் சொல்லின் பொருள் புதிய என்பதாகும். ஒசூர் என்பதன் பொருள் புதூர் (புதிய ஊர்) என்பதாகும். + +1980 ஆண்டு தொழில்மயமாக்கல் தொடங்கிய போது சிப்காட் உதவியுடன் தமிழகத்தில் ஓசூர் ஒரு சிறந்த தொழில் வளர்ச்சி அடைந்து வரும் ஒரு முக்கிய தொழிற்சாலை நகரம் ஆனது. +பிரித்தானிய ஆட்சிக் காலத்தில், சேலம் கலெக்டர் வால்டன் லிலியட், ஓசூரை சேலம் மாவட்டத்தின் தலைமையகமாக செய்தார். 1902 இல் ஒசூர் ஊராட்சியானது, 1969 ல் ஓசூர் தேர்வு நிலை பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. பின் 1992 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக மேம்படுத்தப்பட்டது. 1998 இல் தேர்வு நிலை நகராட்சியானது. 2011 ஆண்டு மத்திகிரி பேரூராட்சி, சூசூவாடி, மூக்கண்டபள்ளி, ஆவலப்பள்ளி, சென்னத்தூர் ஆகிய ஊராட்சிகள் ஒசூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டு சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 2019 பெப்ரவரி மாதம் அச்செட்டிபள்ளி ஊராட்சி, பேகேபள்ளி ஊராட்சி, சென்னசந்திரம் ஊராட்சி, கொத்தகொண்டபள்ளி ஊராட்சி, ஒன்னல்வாடி ஊராட்சி, நல்லூர் ஊராட்சி, தொரபள்ளி அக்ரஹரம் ஊராட்சி, பேரண்டப்பள்ளி ஊராட்சி உள்ளிட்ட எட்டு ஊராட்சிகள் ஒசூருடன் இணைக்கப்பட்டு, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனைமூலம் ஒசூர் மாநகரின் பரப்பளவானது 200 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு விரிவடைந்துள்ளது. + +ஒசூரின் மலையுச்சியில் சந்திர சூடேசுவரர் கோயில் உள்ளது.காவிரிக் கரையிலுள்ள தலைக்காட்டை தலைநகராகக் கொண்டு ஆண்ட கங்க மன்னர்கள் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக செவிடபாடி (ஒசூர்) பகுதி இருந்துள்ளது. இக்கோயில் இவர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என கருதப்படுகிறது." இராசராச சோழனின் ஆட்சிக்காலத்தால் செவிடபபாடியை உள்ளடக்கிய கங்க நாட்டை சோழர்கள் கைபற்றி தங்கள் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்கள். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,16,821 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 59,411 ஆண்கள், 57,410 பெண்கள் ஆவார்கள்.மக்களின் சராசரி கல்வியறிவு 88.24% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 91.57%, பெண்களின் கல்வியறிவு 84.79% ஆகும்.மக்கள் தொகையில் 13,288 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலான மொழிகள் பேசப்படுகின்றன. + +இந்நகரில் இயந்திரத்தொழில் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. டிவிஎஸ் மோட்டார், அசோக் லேலண்ட், டைட்டன் நிறுவனம், இந்துஸ்தான் மோட்டர்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், இந்துஸ்தன் யூனிவர்சல், கேடர்பிள்ளர், டாட்ரா வேக்ட்ரா, தநீஜா ஏரொஸ்பேஸ் & ஏவிஎசன் லிமிடெட், பாடா இந்திய லிமிடெட், ஆரொ கிரைநைட், மதுகான் கிரைநைட், ஏஃசஈடு, INEL-இந்தியா நிப்பான் எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட், சுந்தரம் பாஸ்ட்னர்ஸ், முதலான நிறுவனங்களின் தொழிற்சாலைகள் இங்குள்ளன. தமிழக அரசால் 1538.41 ஏக்கரில் தொடங்கப் பட்ட சிப்காட் தொழிற்பேட்டை (சிப்காட்-1 & சிப்காட்-2) இங்கு செயல்பட்டு வருகிறது. + +ஓசூரில் இருந்து தோபஷபெட் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை என்.எச்207 இங்கு இருந்து ஆரம்பமாகிறது. அதே போல் இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை என்.எச்44 (பழைய எண் என்.எச்7) உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி (காசி அல்லது பெனாரஸ்) என்னும் நகரத்தில் இருந்து தமிழ் நாட்டில் உள்ள கன்னியாகுமரி நகரையும் இணைக்கும் இந்த சாலை ஓசூர் வழியாகச் செல்கிறது. + +ஓசூரின் மையப்பகுதியில் "“அமரர் கே.அப்பாவு பிள்ளை பேருந்து நிலையம்”" அமைந்துள்ளது. இப்பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் துறையின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் கருநாடக, ஆந்திரப் பிரதேச அரசுடமை பேருந்துகள் மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. ஆகஸ்டு 31, 2007ல் பழைய பேருந்து நிலையத்தின் திட்டம் ஆரம்பித்து சுமார் 10.5 கோடி ருபாய் மதிப்பில் புதிய நவீன பேருந்து நிலையம் கட்டப்பட்டு ஜூலை 18, 2010ல் துவக்கி வைக்கபட்டது. இந்த பேருந்து நிலையம் 53 பேருந்து விரிகுடாக்களுடன் கூடிய நவீன வசதிகளுடன் அமைந்துள்ளது இதில் தரை தளத்தில் 48 கடைகள் மற்றும் முதல் தளத்தில் 28 கடைகள் உள்ளன. விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக கோட்டம் சார்பில் இயக்கப்படும் (VOLVO A/c) வால்வோ குளிர்சாதன பேருந்து வழி எண்-503 சென்னை முதல் ஓசூர் வரை இயக்கப்படுகின்றது. + +ஓசூரின் வான்வெளிக்களம் இந்தியாவில் பொது விமான போக்குவரத்து விமானங்கள் உற்பத்தி செய்யும் முதல் தனியார் துறை நிறுவனம் 1994 இல் நிறுவப்பட்டது. தானுஜா விண்வெளி மற்றும் விமான லிமிடெட் (தால்), நிர்வகிக்கப்படுகிறது. இந்கு ஏர்பஸ் ஏ 320 மற்றும் போயிங் 737 விமானம் ஏற்று திறன் 7012 அடி நீண்ட மற்றும் 150 அடி அகலம், 09/27 சார்ந்த ஒரு நிலக்கீல் ஓடுபாதை மற்றும் இரவு இறங்கும் வசதிகள் உள்ளன. பெங்களூர் சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையம் 80 கிமீ தொலைவில் உள்ளது. + +ஓசூர் தொடருந்து நிலையம் தென் மேற்கு ரயில்வே பெங்களூரு-சேலம் ரயில் பாதை உள்ளது. அருகில் உள்ள முக்கிய ரயில் நிலையம் பெங்களூர் நகர சந்திப்பு (40 கிமீ) ஆகும். + + + + + +சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி (1878–1972), ஓசூர் அருகில் உள்ள தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர். தமிழ்நாடு அரசு சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரி நினைவைப் போற்றும் வகையில் கிருட்டிணகிரி மாவட்டம் தொரப்பள்ளியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாகவும், அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடமான சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது. + +ஓசூரில் இருந்து காய்கறிகள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 100 சரக்குந்துகள் மூலம் தென்னிந்திய மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இங்கு தக்காளி, முட்டைக்கோசு, வெங்காயம், சென்னிற முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி, குடைமிளகாய், பீட்ரூட், கேரட், புடலங்காய், பின்ஸ், கொத்தமல்லி, நூகொல், பூக்கோசு, திராட்சை பழம் மற்றும் மாம்பழம் உள்ளிட்ட காய்கறிகள் விளைகின்றன. + +விவசாயிகளால் வளர்க்கப்படும் ரோஜாக்கள் டன்ஃப்லோரா (Tanflora) வால் விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு, டன்ஃப்லோரா (Tanflora) என்ற பெயரில் சந்தை படுத்தப்படுகிறது. முதன்மையாக ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, தூர கிழக்கு மற்றும் ஜப்பானுக்கு ஏற்றுமதியாகிறது. மேலும் உள்நாட்டு சந்தையில் அதிகரிப்பின் காரணமாக, நல்ல மலர்கள் முக்கியமாக தில்லி, ஐதராபாத், சென்னை சந்தையில் விற்கப்படுகின்றன. + +இங்கு சுமார் 80,000 sq.ft. குளிர் அறை வசதிகள் 19,000 sq.ft உட்பட தர மண்டபம��, இதில் ஆண்டிற்கு சுமார் 95 மில்லியன் தண்டுகள் கையாள முடியும். + +ஓசூரில் உள்ள கால்நடைப் பண்ணை 1824ஆம் ஆண்டு குதிரை வளர்ப்பு மற்றும் இனப்பெருக்கம் செய்யவும் பிரித்தானிய அரசாங்கத்தால் 1641.41 ஏக்கரில் நிறுவப்பட்டது. இந்த பண்ணை ஆசியாக் கண்டத்தில் உள்ள மிகப்பெரிய பண்ணைகளில் ஒன்று ஆகும். + +ஓசூரில் மத்திய அரசால் மத்திய பட்டுப்புழு வளர்ப்பு மரபியல் மூலவளம் காப்பாற்றும் மையம் (Central Sericultural Germplasm Resources Centre (CSGRC) 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மனிதர்களால் சேமிக்கும், முசுக்கொட்டை (Mulberry) மற்றும் பட்டுப்புழு மரபியல் மூலவளம் காப்பாற்றிப் பாதுகாத்து வைக்கப் படுகின்றது. இது தேசிய களஞ்சியத்தின் முசுக்கொட்டை மரபியல் மூலவளம் மற்றும் தேசிய செயல்படும் மரபியல் மூலவளம் (NAGS) மையத்தின் இடமாகும். இதில் முசுக்கொட்டை மரபியல் மூலவளம் ஆராய்ச்சியும் விருத்தியும் (NAGS)/ (R&D)கில் உள்ளது. இதில் 10 அறிவியல் அறிஞர்களுக்கு மேல் சேமிப்பில் இடுபாட்டு முழுவதையும் பாதுகாத்து நிர்வாகம் செய்கிறார்கள். இங்கு பரிமாற்றம் மற்றும் தகவல் கலந்துரையாடலுக்கு இந்த மையத்தில் இணைய சேவைகள் மேம்படுத்தப்பட்டு பலதரப்பட்ட முசுக்கொட்டை மரபியல் மூலவள பற்றிய வினா கலந்துரையாடல்கள் இந்த சேவை www.silkgermplasm.com வலைத்தளத்தின் மூலம் நடக்கிறது. + + + + + + +ஹப்பத்தாலா + +ஹப்பத்தாலா (ஆங்கிலம்:Hubbathala), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,974 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஹப்பத்தாலா மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஹப்பத்தாலா மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஹுலிகல் + +ஹுலிகல் (ஆங்கிலம்:Huligal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,048 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஹுலிகல் மக்க���ின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஹுலிகல் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +இடிகரை + +இடிகரை (ஆங்கிலம்:Idikarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6251 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இடிகரை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 89% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இடிகரை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +இளம்பிள்ளை + +இளம்பிள்ளை () (ஆங்கிலம்:Ilampillai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 257 மீட்டர் (843 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,629 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இளம்பிள்ளை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இளம்பிள்ளை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்கு உள்ள மக்கள் நெசவுத் தொழில் மூலம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். + +இளைஞரான திருமூலருக்கு வாய்த்த சீடரோ தொண்டுகிழம். காலாங்கி நாதர் என்னும் அக்கிழவர் கலிங்கத்தில் இருந்து வந்தவர். காயம் உடலை மூப்படையாது கல்லாக மாற்றி எப்பொழுது இளமைநலம் நல்கும் காயகல்பத்தைத் தேடி குருவான திருமூலர் காட்டிற்குள் சென்றுவிட்டார். குருவுக்கு சீடர் உணவாக்கத் தொடங்கினார். அடிப்பிடித்துவிடக்கூடாதே என அக்காட்டில் கீழே கிடந்த ஒரு குச்சியை எடுத்து அவ்வுணவை அக்கிழவர் கிண்டத் தொடங்கினார். உணவு கருகிவிட்டது. பதறிப்போன அவ்வுணவைக் கீழே இறக்கிவைத்துவிட்டு குருக்கு புது உணவை ஆக்கினார். கருகிய உணவு வீணாகிவிடக்கூடாதே என அதனை எடுத்து சீடராகி அக்கிழவர் உண்டார். அதனை உண்டுமுடித்ததும் கிழவரான காலாங்கிநாதர் இளம்பிள்ளையாக மாறிவிட்டார். அவ்வாறு அவர் உருமாறிய இடமே இந்த இளம்பிள்ளை என்னும் ஊர் என்பது தொன்மம். + + + + +இலஞ்சி + +இலஞ்சி (ஆங்கிலம்:Ilanji), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். இங்கு இலஞ்சி குமாரர் கோயில் உள்ளது. + +இலஞ்சி பேரூராட்சி, மாவட்டத் தலைமையிடமான திருநெல்வேலியிலிருந்து 60 கிமீ தொலைவிலும், தாலுக்கா தலைமையிடமான தென்காசியிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. +இலஞ்சிக்கு மேற்கே 4 கிமீ தொலைவில் செங்கோட்டையும், வடக்கே 4 கிமீ தொலைவில் குத்துக்கல்வலசையும், தெற்கே 4 கிமீ தொலைவில் குற்றாலம் மற்றும் மேலகரம் 4 கிமீ தொலைவிலும் உள்ளது. + +8 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 118தெருக்களும் கொண்ட இலஞ்சி பேரூராட்சி தென்காசி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி பேரூராட்சி 2823 வீடுகளும், 10282 மக்கள்தொகையும் கொண்டது. + +இலஞ்சி குமாரர் கோயில் அமைந்துள்ள இவ்வூர் மிக அருமையானதாய் உள்ளது. கோவிலின் மூன்றுபுறம் வயல்வெளிகளும் பின்புறம் நீரோடையும் உள்ளது. + +இராமசாமி பிள்ளை மேனிலைப் பள்ளி + +Bhartha Montessori Matric Hr. Sec. School - http://www.bharathschool.in/aboutus.html + + + + + +இலுப்பையூரணி + +இலுப்பையூரணி (ஆங்கிலம்:Iluppaiyurani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,843 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலுப்பையூரணி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலுப்பையூரணி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +இலுப்பூர் + +இலுப்பூர் (ஆங்கிலம்:Iluppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் வருவாய் வட்டத்தின் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 142 மீட்டர் (465 அடி) உயரத்தில் இருக்கின்றது. +இவ்வூர் மக்களின் முக்கிய தொழில் விவசாயம். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,051 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இலுப்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இலுப்பூர் மக்கள் தொகையில் 17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +இனாம்கரூர் + +இனாம் கரூர் (ஆங்கிலம்:Inam Karur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 45,254 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இனாம் கரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இனாம் கரூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இந்நகராட்சி 2011ல் கரூர் நகராட்சியுடன் இணைக்கப்பட்டது. + + + + + +ஈஞ்சம்பாக்கம் + +ஈஞ்சம்பாக்கம் (ஆங்கிலம்:Injambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,084 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஈஞ்சம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஈஞ்சம்பாக்கம் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + + +இருகூர் + +இருகூர் (ஆங்கிலம்:Irugur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்த��� இவ்வூர் சராசரியாக 343 மீட்டர் (1125 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,622 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். இருகூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இருகூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இவ்வூரில் இரயில் சந்திப்பு ஒன்றும் உள்ளது. இங்கிருந்து திருப்பூர், கோவை, பாலக்காடு ஆகிய ஊர்களுக்கு வழித்தடம் உள்ளது. + + + + +ஜாபராபாத் + +ஜாபராபாத் (ஆங்கிலம்:Jaffrabad), இந்தியாவின் தில்லி மாநிலத்தில் அமைந்துள்ள வட கிழக்கு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,460 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். ஜாபராபாத் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜாபராபாத் மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஜகத்தாலா + +ஜகத்தாலா (ஆங்கிலம்:Jagathala), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,657 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஜகத்தாலா மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜகத்தாலா மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +சலகண்டாபுரம் + +ஜலகண்டாபுரம் (ஆங்கிலம்:Jalakandapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 269 மீட்டர் (882 அடி) உயரத்தில் இருக்கின்றது +செல்வாஸ் + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,116 மக்கள் இங்கு வசி���்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஜலகண்டபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜலகண்டபுரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஜல்லடியம்பட்டு + +ஜல்லடியம்பட்டு (ஆங்கிலம்:Jalladiampet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7576 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஜல்லடியம்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜல்லடியம்பட்டு மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஜெயங்கொண்டம் + +ஜெயங்கொண்டம் (ஆங்கிலம்:Jayankondam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,268 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஜெயங்கொண்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜெயங்கொண்டம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +திருச்சி விமானநிலையம் விமான போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. + +அரியலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகியவை ஜெயங்கொண்டத்திக்கு அருகில் உள்ள இரு முக்கிய ரயில் நிலையங்கள். அங்கிருந்து சென்னை மற்றும் திருச்சி வழியாக வடக்கு, மற்றும் தெற்குப்பகுதிகளுக்கு சென்று வரும் ரயில்களால் பயன்படுத்தப்படுகிறது. + +ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர், திருச்சி, கும்பகோணம், சிதம்பரம், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், புதுச்சேரி, மற்றும் சென்னை போன்ற ஊர்களுக்கு போக்குவரத்து நடைபெறுகிறது. + +அரசு மேல் நிலைப்பள்ளி, +பாத்திமா பெண்கள் மேல் ���ிலைப்பள்ளி, +பெரியார் மெட்ரிக்குலெசன் பள்ளி, +மாடர்ன் மெட்ரிக்குலெசன் பள்ளி, +பாத்திமா மெட்ரிக்குலெசன் பள்ளி. + +அரசு மருத்துவமனை + + + + + + +சோலையார்பேட்டை + +சோலையார்பேட்டை (ஆங்கிலம்:Jolarpet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,477 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஜோலார்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஜோலார்பேட்டை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +கடத்தூர் (தருமபுரி) + +கடத்தூர் (ஆங்கிலம்:Kadathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9814 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கடத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கடையால் + +கடையால் (Kadayal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,226 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கடையால் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கடையால் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +களக்காடு + +களக்காடு (ஆங்கிலம்:Kalakad), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள நாங்குநேரியில் உள்ளது. + +மாவட்டத் தலைமையிட நகரமான திருநெல்வேலியிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து 6 கிமீ தொலைவிலும்; நாங்குநேரியிலிருந்து 12 கிமீ தொலைவிலும்; வள்ளியூரிலிருந்து 22 கிமீ தொலைவிலும்; சேரன்மாதேவியிலிருந்து 25 கிமீ தொலைவிலும் களக்காடு உள்ளது. + +17 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 234 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 9377 வீடுகளும், 30923 மக்கள்தொகையும் கொண்டது. + +முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா” மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரை சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. ஊரின் மையப் பகுதியில் கௌதம நதி ஓடுகிறது. இந்த நதியின் மூலம் தான் நான்குநேரியின் நான்கு ஏரிகளும் நிரம்பி வந்தன. + +1. செங்கல்தேரி : மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள அழகான பகுதி செங்கல்தேரி ஆகும். களக்காடு முண்டன் துறை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால் பாளையங்கோட்டை என்.ஜி.ஓ ஏ காலனியில் உள்ள மாவட்ட வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றே இங்கு செல்ல வேண்டும். + +2. தலையணை: களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ளது தலையணை. இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களை போல் காட்சியளிக்கும். தலையணைக்கு சற்று கீழே தேங்காய் உருளி உள்ளது. இது கிட்டத்தட்ட மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஆகும். தலையணை மற்றும் தேங்காய் உருளி பகுதிகளுக்கு களக்காடு சுற்றுப் பகுதி மக்கள் வார நாட்களில் சென்று குளித்து மகிழ்வர். காணும் பொங்கல் தினத்தில் இந்த பகுதி முழுவதும் களை கட்டும். + +3. பச்சையா��ு அணை: களக்காடு நகரின் வடமேற்கே உள்ள மஞ்சுவிளை பகுதியில் உள்ளது இந்த பச்சையாறு அணை. + +இங்கு ஓர் பழமையான சிவன் கோவிலும் உண்டு. + +தற்போது 'களக்காடு' என்று வழங்குகிறது. களா மரங்கள் நிறைந்த காடு; எனவே இப்பகுதி "களக்காடு" என்று பெயர் பெற்றது. +இவ்வூர் பண்டை நாளில் 'திருக்களந்தை' என்று வழங்கப் பெற்றது. இராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் "சோரகாடவி" என்று அழைக்கப்படுகிறது. சீதையின் பிரிவால் வருந்திய இராமனும், இலக்குவனனும் புன்னை மரத்தின் நிழலில் தங்கியிருந்த சிவபெருமானை வழிபட, அப்போது இறைவன் அவர்களுக்கு "சீதையை மீட்டுவர யாம் துணையிருப்போம்" என்று சத்திய வாக்கினை தந்தார். பின்னர் சீதையை மீட்டு வந்த இராமன், இத்தலத்திற்கு சீதை, இலக்குவனன் ஆகியோருடன் வந்து இறைவனுக்கு சத்தியவாகீசப் பெருமான் என நாமஞ் சூட்டி வணங்கிச் சென்றனர் என்பது தலவரலாறு. +ஒருமுறை, காசிப முனிவருக்கு பிள்ளைகளாகப் பிறந்த தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் யுத்தம் ஏற்பட்டது. தேவர்கள் சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு வேண்டி நின்றனர். இறைவனார் தேவர்களிடம் பொதிகைமலையின் தென்புறத்தில் தாம் எழுந்தருளியிருக்கும் களக்குடி சென்று தவஞ்செய்யுமாறு கூறினார். தேவர்களும் அவ்வாறே செய்தனர். பின்னர் தேவர்கள் அசுரர்களுடன் போர் புரிய, சிவபெருமான் தமது கணங்களுடன் தோன்றி அசுரர்களை அழித்து தேவர்களுக்கு வெற்றியை நல்கினார். இதன் காரணத்தினாலேயே தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமானுக்கு "சத்தியவாகீசர், பொய்யாமொழியார்" என்றும், இப்பதிக்கு "சத்திய நகரும்" என்றும், இங்குள்ள தீர்த்தம் "சத்திய தீர்த்தம்" என்றும் பெயர் வழங்கலாயிற்று என்றும் தலவரலாறு சொல்லப்படுகிறது. + +இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும். +ராஜ கோபுரம் 9 நிலைகளைக் கொண்டது - 156 அடி உயரம். +மணி மண்டபத்தில் அழகிய சிற்பங்களும் இசைத் தூண்களும் அமைந்து உள்ளன. 21 கதிர்கள் உள்ள தூண்களில் தட்டினால் மூன்று ஸ்தாயியிலும் உள்ள 21 ஸ்வரங்கள் முறையே உண்டாகின்றன. +திருப்பெருந்துறையில் உள்ளது போலவே, 32 கொடுங்கைகள் உள்ளன. +இத்தலத்திற்கு சோராரணியமென்றும், புன்னைவனமென்றும் பெயர்களுண்டு. +சுவாமிக்கு 1. புன்னைவனநாதர், 2. பிரமநாயகன், 3. பரிதிநாயகன், 4. சுந்தரலிங்கம், 5. களந்தை லிங்கம், 6. பைரவ லிங்கம், 7. வீரமார்த்தாண்ட லிங்கம், 8. திரிபுரஹரன், 9. வைரவநாதர், 10. சாமள மகாலிங்கர், 11. சோம நாயகர், 12. குலசை நாயகர் முதலிய பெயர்களும் வழங்குகின்றன. +கோயிலின் முன் வாயிலில் இக்கோயில் திருப்பணி செய்த வீரமார்த்தாண்டவர்மனும், சுந்தரரும், சேரமானும் இருபுறமும் உள்ளனர். +மார்ச்சு மாதம் 20, 21, 22 ஆகிய நாள்களிலும், செப்டம்பர் 20, 21, 22 ஆகிய நாள்களிலும் சூரியனின் கதிர்கள் சுவாமி மீது படும் அற்புதக் காட்சி கண்டு மகிழத்தக்கது. +கி.பி. 12ஆம் நூற்றாண்டில் வீரமார்த்தாண்ட வர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. +இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது. + +திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு. + +திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேரூந்தான கணபதி பஸ் இயங்குகிறது. இதே பஸ் திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம். + +கன்னியாகுமரி, நாகர்கோவில் - தென்காசி, நாகர்கோவில் - புளியரை செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன. + +1. நாகன்குளம் +2. சிதம்பராபுரம் +3. மூங்கிலடி +4. கலுங்கடி +5. சிங்கம்பத்து +6. கருவேலன்குளம் +7. கட்டார்குளம் +8. பத்மனேரி +9. குடில்தெரு (அ) சிவசண்முகபுரம் +10. மடத்து தெரு +11. கீழப்பத்தை +12. மேலப்பத்தை +13. மஞ்சுவிளை +14. வண்டிகாரன் தெரு +15. சாலை நயினார் பள்ளிவாசல் +16. தோப்பூர் +17. சாலை புதூர் +18. மாவடி +19. திரட்டூர் +20. காமனேரி +21. கோவிலம்மாள் புரம் +22. குட்டுவன் குளம் +23. சவளைக்காரன் குளம் +24. ஊச்சிக் குளம் +25. பறையர் குளம் +26. படலையார் குளம் +27. ஜெ.ஜெ. நகர் +28. செட்டிமேடு +29. சுப்பிரமணியபுரம் +30. மீனவன் குளம் +31. கேசவநேரி +32. ராமகிருஷ்ண புரம் +33. வடுகச்சி மதில் +34. கள்ளிக்குளம் +35. சீவலப்பேரி +36. வடகரை +37. கடம்போடு வாழ்வு +38. பெருமாள் குளம் +39. ஆரைகுளம் +40. பெல்ஜியம் (Island of Peace) +41. தம்பி தோப்பு +43. அம்பேத்கார் நகர் +44. கக்கன்நகர் +45.புதுத்தெரு +46.சிவபுரம் +47.வடகரை +48.கருப்பந்தோப்பு +49.பச���சாந்தரம் + + + + + +காளப்பட்டி + +காளப்பட்டி (ஆங்கிலம்:Kalapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,089 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். காளப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காளப்பட்டி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காளப்பநாயக்கன்பட்டி + +கள்ளப்பநாயக்கன்பட்டி (ஆங்கிலம்:Kalappanaickenpatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +காளப்பநாயக்கன் பட்டி நாயக்கர் ஆட்சி காலத்தில் சேந்தமங்கலம் பகுதியை ஆட்சி செய்த ராமச்சந்திர நாயக்கர் என்பவரின் ஆட்சி எல்லைக்கு உட்பட்டது . இப்பகுதி மக்கள் செவி வழி செய்தி ஒன்றை சொல்லி வருகின்றனர் . இவ்வூர் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது , 700 வருடம் முன்பு இங்கு குடியமர்ந்த ராஜகம்பளம் என்று சொல்லப்படும் நாயக்கர் மக்கள் இப்பகுதிக்கு வந்து தங்களை குடியமர்த்திகொண்டனர். இவர்கள் இங்குள்ள காடுகளை அழித்து ஊர் அமைத்து வந்தனர் என்றும் , அதன் பின்னர் திருமலை நாயக்கர் ஆட்சி காலத்தில் குடியேறிய பலிஜா இனத்தவர்களும் , ஏனைய தெலுங்கு மொழி பேசுபவர்களும் இங்கு குடியமர்ந்தனர் என்று சொல்லபடுகின்றது . + +நாயக்கர் இனத்தில் தோன்றிய ஒரு இளைஞர் , கொல்லிமலையில் வாழ்ந்த ஒரு பழங்குடி பெண்ணை காதலித்து வந்ததாகவும் , இக்காதல் இங்குள்ள நாயக்கர் மக்களுக்கு தெரிந்து அந்த இளைஞர் மற்றும் பழங்குடி பெண்ணையும் கொன்று விட்டதாகவும் ,அப்பழங்குடி பெண் கொடுத்த சாபத்தால் நாயக்கர் மக்கள் பலர் இறந்ததாகவும் , இதனை போக்க அவரை வழிபட்டும் , இவ்வூருக்கு காளப்ப நாயக்கர் பட்டி என்று இவருடைய பெயரிலேயே ஊர் அமைந்து விட்டது என்று கூறுகிறார்கள் .இங்குள்ள பலிஜா நாயக்கர் இனத்தினை சேர்ந்தவர்கள் பொருளாதார நிலையில் நன்கு வளர்ந்துள்ளனர் . இவ்வூர் இயற்கை அழகுடன் உள்ளது , கருமலை கொல்லிமலை போன்ற மலைகளில் இரு���்துவரும் நீரினால் விவசாயம் செழிப்புடன் அமைகிறது . + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,282 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கள்ளப்பநாயக்கன்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கள்ளப்பநாயக்கன்பட்டி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கலவை, வேலூர் மாவட்டம் + +கலவை (ஆங்கிலம்:Kalavai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +கலவை, காஞ்சிபுரத்திலிருந்து 45 கிமீ தொலைவிலும், வேலூரிலிருந்து 43 கிமீ தொலைவிலும், ஆரணியிலிருந்து 22 கிமீ தொலைவிலும், ஆற்காட்டிலிருந்து 20 கிமீ தொலைவிலும், இராணிப்பேட்டையிலிருந்து 23 கிமீ தொலைவிலும் உள்ளது. + +கலவை காஞ்சி சங்கர மடத்தின் கிளையில், 66 & 67-வது ஆச்சாரியர்களின் சமாதிகள் உள்ளது. சந்திரசேகர சரசுவதிகள், கலவையில் துறவற தீட்சை எடுத்துக் கொண்டு, காஞ்சி சங்கர மடத்தின் 68-வது ஆச்சாரியாராகப் பொறுப்பேற்றார். + +கலவை பேரூந்து நிலையம் அருகே, சங்கர மடத்தின் சார்பில் முதியோர் இல்லம் மற்றும் உடல் ஊனமுற்றோர் இல்லம் இயங்கி வருகிறது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 138 மீட்டர் (452 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9761 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கலவை மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கலவை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கழிஞ்சூர் + +களிஞ்சூர் (ஆங்கிலம்:Kalinjur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,918 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். களிஞ்சூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. களிஞ்சூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +களியக்காவிளை + +களியக்காவிளை (ஆங்கிலம்:Kaliyakkavilai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது ஒரு தமிழக-கேரள எல்லையாகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,307 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். களியக்காவிளை மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. களியக்காவிளை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கல்லுக்கூட்டம் + +கல்லுக்கூட்டம் (ஆங்கிலம்:Kallukoottam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,093 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49.4% ஆண்கள், 50.6% பெண்கள் ஆவார்கள். கல்லுக்கூட்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 81% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கல்லுக்கூட்டம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காமயக்கவுண்டன்பட்டி + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகையும், 13 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +காமயகவுண்டன்பட்டி பேருராட்சி முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ளது. மேற்குதொடர்ச்சி மலையானது இப்பேருராட்சியின் கிழக்குப்பக்கம் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் திராட்சை பயிரிடுதல் முக்கிய தொழிலாகும். மேலும் திராட்சை பழரசம் தயாரிக்கும் பணியும் நடைபெறுகிறது. + + + + +கமுதி + +கமுதி (ஆங்கிலம்:Kamuthi), இந��தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் பேரூராட்சி ஆகும். ஒன்றாகும். உலகின் பெரிய சூரியசக்தி மின்நிலையங்களுள் ஒன்று கமுதியில் செயல்பட்டு வருகிறது. + +கமுதி பேரூராட்சி இராமநாதபுரத்திலிருந்து 85 கிமீ தொலைவிலும், மானாமதுரையிலிருந்து 39 கிமீ தொலைவில் உள்ளது. பரமக்குடி, மதுரை, அருப்புக்கோட்டை, இராமநாதபுரத்திலிருந்து கமுதிக்கு பேருந்து வசதிகள் உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,379 வீடுகளும், 14,754 மக்கள்தொகையும் கொண்டது. + +இது 5.10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 101 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது முதுகுளத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +அம்பேத்கர் வாரச்சந்தை என்ற பெயரில் கமுதியில் வாராவாரம் செவ்வாய் கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். + +கமுதியில் உள்ள பள்ளிகள் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சிறந்த பள்ளிகளில் சில. இங்குள்ள பள்ளிகள் பரமக்குடி கல்வி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டவை. சத்திரிய நாடார் ஆண்கள் தொடக்க மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், மீனாட்சி பாலபோதினி பெண்கள் தொடக்கப்பள்ளி, சத்திரிய நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரிய நாடார் மெட்ரிகுலேசன் பள்ளி, ரஹ்மானியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி,kalaviruthi high school, கெளரவ உயர்நிலைப்பள்ளி ஆகியவை மிகவும் பெயர்பெற்றவை. சேகனாதபுரம் க.உ.ஓ ஆரம்பப்பள்ளி பல ஆசிரியர்களை உருவாக்கிய பள்ளி. கமுதி கோட்டைமேட்டில் பசும்பொன் திரு.உ.முத்துராமலிங்கத்தேவர் நினைவுக் கல்லூரி உள்ளது. + +கமுதியில் உள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றது. இக்கோவில் ஊரின் நடுவில் அமைந்திருக்கிறது. மேலும் கமுதி சத்திரிய நாடார்கள் உறவின்முறையினரால் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. +மேலும் வங்காருபுரம் எனும் கிராமத்தில் உள்ள ‌‌‌பதினெட்டாம் படி கருப்பண்ணசாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது. +மற்றொரு சிறப்புமிக்க கோவில் ஸ்ரீமீனாட்சி சமேத சொக்கநாதர் ஆலயம் ஆகும். இது பல ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மன்னர்களால் கட்டப்பட்டு இன்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.சேகனாதபுரம் அருகில் மீனாட்சி அம்மன் கோவில் ஒன்று இருந்தது .அது பிற்காலத்தில் வெறும் கட்டடம் மட்டுமே உள்ளது. அதே ஊரில் முசுலிம் மக்கள், இந்து சேர்த்து வழிபட கூடிய காதரியம்மன் தர்கா ஒன்று உள்ளது கந்தூரி விழா சிறப்பாக நடைபெறுகிறது + +வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. சுமார் மூன்று வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், தீ மிதித்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும். + +கமுதியில் குண்டாற்றின் கரையில் ஒரு கோட்டை உள்ளது. இது சிவகங்கை மன்னர்களால் கட்டப்பட்டது. இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை சிலகாலம் இக்கோட்டையில் ஆங்கிலேயர்களிடம் இருந்து மறைந்து வாழ்ந்ததாக வரலாறு கூறுகிறது. இந்த இடம் கோட்டைமேடு என்று அழைக்கப்படுகிறது. + + +கமுதியில் குண்டாறு பாய்கிறது. மேலும் கண்ணார்பட்டி ஊருணி, செட்டிஊருணி என நீர்நிலைகள் இருந்தாலும், அவை மழைக்காலத்தில் மட்டுமே நிறைகின்றன. + + + + + +கானாடுகாத்தான் + +கானாடுகாத்தான் (ஆங்கிலம்:Kanadukathan), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், [காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது சிவகங்கை நகரத்திலிருந்து 60 கிமீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 15 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள செட்டிநாடு தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி இராமேஸ்வரம் - திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண். 210-இல் உள்ளது + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,362 வீடுகளும், 5,275 மக்கள்தொகையும் கொண்டது. +இது 8 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 59 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +பல நூற்றாண்டுகளைக் ��டந்தும் புதுப்பொலிவுடன் திகழும் பழமைச் சிறப்பு மிக்க அரண்மனை போன்ற வீடுகள் நிறைந்த இப்பேரூராட்சியை தமிழக அரசால் புராதன நகராமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரக்கணக்கான அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளும், கட்டிடக்கலை ஆராய்ச்சியாளர்களும் வந்து பயன்பெறும் வகையில் இப்பேரூராட்சி முக்கியத்துவம் பெற்றுள்ளது + +சிவகங்கை மாவட்டம் கானடுகாத்தான் அருகில் உள்ள பெரியகோவில் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடனுறை சௌந்தரநாயகி அம்பாள் கோவில் மிக சக்தி வாய்ந்த திருத்தலம் ஆகும். இந்த கோவில் உள்ள சிவலிங்கம் சுயம்பு ஆக தோன்றியவர்.மேலும் இந்த ஊரை சுற்றி கரை மேல் அய்யனார் கோவில், பொன்னழகி அம்மன் கோவில், வரத ராஜபெருமாள் கோவில், முனிஸ்வரன் கோவில் ஆகிய கோவில்களும் உள்ளன.குழந்தை பேறு இல்லாதவர்கள்,கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள்,திருமணம் ஆகாதவர்கள் இந்த ஊரில் உள்ள தெய்வங்களை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்கி நன்மை அடைவதாகக் கூறப்படுகிறது. + +வழி:காரைக்குடி வருபவர்கள் திருச்சி அல்லது தஞ்சாவூர் பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்கவேண்டும்.திருச்சியில் இருந்து வருபவர்கள் காரைக்குடி அல்லது தேவகோட்டை பேருந்தில் ஏறி நேமதான்பட்டியில் இறங்க வேண்டும்.இந்த ஊரை சுற்றி கலைநயம் மிக்க நகரத்தார் வீடுகளும் உள்ளன. + + + + + +கணக்கம்பாளையம் + +கணகம்பாளையம் (ஆங்கிலம்:Kanakkampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,180 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கனகம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கனகம்பாளையம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கானம் + +கானம் (ஆங்கிலம்:Kanam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இது தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலி��ுந்து 9 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் அமைந்த தொடருந்து நிலையம், 6 கிமீ தொலைவில் உள்ள குரும்பூரில் உள்ளது. + +4.58 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 13 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 880 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 3,134 ஆகும் + + + + +கண்டனூர் + +கண்டனூர் (ஆங்கிலம்:Kandanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி "பாலையூர்" மற்றும் "கண்டனூர்" என இரண்டு உட்கிராமங்கள் கொண்டது. + +காரைக்குடி - அறந்தாங்கி செல்லும் பாதையில், சிவகங்கையிலிருந்து 63 கிமீ தொலைவில் கண்டனூர் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம் 9 கீமீ தொலைவில் உள்ள காரைக்குடி ஆகும். + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 1,959 வீடுகளும், 7,696 மக்கள்தொகையும் கொண்டது. +இது 5.12 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 46 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது காரைக்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +சிவகங்கை சீமையின் பாலைய நாடான கண்டனூர், புதுவயல், கோட்டையூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான் ஆகிய ஐந்து கிராமப் பஞ்சாயத்துகளின் தலைமையிடமாக கண்டனூர் அமைந்திருந்தது. கண்டனூர் ஊராட்சியாக இருந்த காலத்தில், 1905ஆம் ஆண்டு முதல் 1908 ஆம் ஆண்டு வரை நகரத்தார் திரு.வ.யி.ராம.ப. பெரியணன் செட்டியார் அவர்கள் சேர்மனாக சேவை செய்து வந்தார். பின்னர் தமிழக அரசு ஆணை எண்.1287, நாள்.15.03.1929ல் காணும் உத்தரவுபடி கண்டனூர் முதல்நிலை பேரூராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. + + + + + +காங்கேயம்பாளையம் + +காங்கேயம்பாளையம் (ஆங்கிலம்:Kangayampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 3845 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆனோர் ஆண்களும் 49% ஆனோர் பெண்களும் ஆவர். காங்கேயம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 80% உம் பெண்களின் கல்வியறிவு 64% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. காங்கேயம்பாளையம் மக்கள் தொகையில் 7% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். + + + + +கணியூர் + +கணியூர் (ஆங்கிலம்:Kaniyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5807 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கணியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கணியூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காஞ்சிக்கோயில் + +காஞ்சிக்கோயில் (ஆங்கிலம்:Kanjikoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,148 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காஞ்சிக்கோயில் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 66%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. காஞ்சிக்கோயில் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கண்ணனேந்தல் + +கண்ணனேந்தல் (ஆங்கிலம்:Kannadendal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும் . + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,987 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கண்ணனேந்தல் மக்களின் சராசரி கல்வியறிவு 86% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 90%, பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்ணனேந்தல் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +விக்கி மேப்பியாவில் கண்ணநேந்தல் அமைவிடம் + + + + +கன்னங்குறிச்சி + +கன்��ங்குறிச்சி (ஆங்கிலம்:Kannankurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,026 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கன்னங்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னங்குறிச்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கன்னிவாடி + +கன்னிவாடி (ஆங்கிலம்:Kannivadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மேற்கு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 10,369 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 17.70 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 63 தெருக்களும் கொண்டது. இது ஆத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4249 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கன்னிவாடிமக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கன்னிவாடிமக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +அருகில் உள்ள மலைக்குகை கோவிலான சோமலிங்க சுவாமி கோவில் இந்த ஊரில் காணவேண்டிய முக்கியமான தளமாகும்.  +கோபிநாத சுவாமி மலை கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் . இது கன்னிவாடிக்கு மிக அருகில் உள்ள முத்துரன்பட்டி என்று கிராமத்தில் அமைந்துள்ளது  + + + + + + +கப்பியறை + +கப்பியறை (Kappiyarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,475 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கப்பியாரை மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% வ���ட கூடியதே. கப்பியறையின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காரம்பாக்கம் + +காரம்பாக்கம் (ஆங்கிலம்:Karambakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,591 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். காரம்பாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரம்பாக்கம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காரிமங்கலம் + +காரிமங்கலம் (ஆங்கிலம்:Kariamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,033 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கரியமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கரியமங்கலம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காரியாபட்டி + +காரியாபட்டி (ஆங்கிலம்:Kariapatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி வட்டத்தில் அமைந்த முதல்நிலைப் பேரூராட்சி ஆகும். + +மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 24 கிமீ தொலைவிலும், விருதுநகரிலிருந்து 21 கிமீ தொலைவிலும் காரியாப்பட்டி உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, காரியாப்பட்டி பேரூராட்சி 4,881 வீடுகளும், 18,191 மக்கள்தொகையும் கொண்டது.இது 9.20 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்ட காரியாப்பட்டி பேரூராட்சி திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)க்கும், இராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,194 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காரிய��பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரியாப்பட்டி மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்குள்ள கோவில்கள் மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி, ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம், மாந்தோப்பு மாரியம்மன்ஆலயம், மாந்தோப்பு பெருமாள் கோவில், மாந்தோப்பு காருப்புசாமி கோவில் , முக்கு ரோடு முத்துமாரியம்மன் கோவில்,NGO மாரியம்மன் ஆலயம்,வைத்தீஸ்வரன் கோவில்,சின்னகாரியாபட்டி ஐயப்பன் ஆலயம், செவல்பட்டி பெருமாள் கோவில்கள் உள்ளது. கிருஸ்தவர்களுக்கு அமல அன்னை ஆலயமும், முஸ்லிம் மதத்தவர்களுக்கு மூன்று பள்ளிவாசல்களும் உள்ளன. + +வருடாவருடம் பங்குனி மாதம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெறும் பங்குனித் திருவிழாவும் வைகாசி மாதம் நடைபெறும் முக்கு ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவும் மிகவும் புகழ்பெற்றது. சுமார் இரண்டு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும் +மாந்தோப்பு ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி ஸ்ரீவாலகுருநாதன் ஆலயம் வருடாவருடம் வைகாசி திருவிழா மிகவும் புகழ்பெற்றது சுமார் ஒரு வாரங்கள் நடைபெறும் விழாக்கள் கோவிலில் காப்புக்கட்டுடன் தொடங்கும். பக்தர்கள் காப்புக்கட்டி விரதமிருந்து அம்மனை வழிபட்டு வருவார்கள். பின் பொங்கல், அக்கினிச் சட்டி எடுத்தல், திருவிளக்கு பூஜை, முளைப்பாரி ஆகியன வெகுவிமரிசையாக நடைபெறும் . + +காரியாபட்டியில் வாராவாரம் வியாழக்கிழமை நடைபெறும் சந்தை சுற்றுவட்டாரத்தில் பிரபலம் ஆகும். அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மக்கள் சந்தையில் தேவையான பொருட்களைக் குறைந்த விலையில் வாங்கிச் செல்வர். + + + + +மதுரை 24 கிமீ, அருப்புகோட்டை 18கிமீ, விருதுநகர் 21 கிமீ, திருமங்கலம் 30 கிமீ, மாந்தோப்பு 13 கிமீ. . + +http://www.census2011.co.in/data/subdistrict/5851-kariapatti-virudhunagar-tamil-nadu.html + + + + + +கருமத்தம்பட்டி + +கருமத்தம்பட்டி (ஆங்கிலம்:Karumathampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள க��யம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,162 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கருமத்தாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கருமத்தம்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + +கருமத்தம்பட்டி, தேசிய நெடுஞ்சாலை எண் ௪௭(47)இல் அமைந்து உள்ளதால் ௨௪(24)மணி நேரமும் பேருந்து மூலமாக தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களுடன் இணைக்க பட்டு உள்ளது. + +இணைப்பு நகரங்கள் + + + + +கருங்கல் (ஊர்) + +கருங்கல்(Karungal) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் சிறு நகரம் ஆகும். + +இந்திய 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,691 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8,030 ஆண்களும்,8,661 பெண்களும் ஆவார்கள்.10.07% அதாவது இவர்களில் 1,680 பேர் ஆறு வயதுக்குட்பட்டோராவர்.இங்கு சராசரியாக ஆயிரம் ஆண்களுக்கு 1,076 பெண்கள் என்ற விதத்தில் உள்ளனர்.ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் சராசரியுடன் ஒப்பிடுகையில் ஆயிரம் ஆண்களுக்கு 996 பெண்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.91.91 சதவீத மக்கள் கருங்கலில் கல்வியறிவு பெற்றோர் ஆவர்.இதில் ஆண்கள் 94.35 சதவீதமும்,பெண்கள் 89.81 சதவீதமும் ஆகும்.கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2,011 கணக்கெடுப்பின்படி 4,368 வீடுகள் உள்ளன.மொத்தம் பதினெட்டு வார்டுகளாக கருங்கல் பேரூராட்சி பிரிக்கப்பட்டுள்ளது. + +கருங்கலின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 34.68 சதவீதம் இந்துக்களும்,0.25 சதவீதம் முஸ்லீம்களும்,64.75 சதவீதம் கிறிஸ்தவர்களும்,0.30 சதவீதம் என்ற அளவில் ஏனய மதத்தினரும் வசிக்கின்றனர்.. + +இப்பகுதியில் விவசாயம் மிகக் குறைந்த அளவே நடைபெறுகிறது.அதற்கு காரணம் விவசாய நிலம் அரிதாகிப்போனதே.பெரும்பாலான மக்கள் கூலிவேலையிலேயே ஈடுபடுகின்றனர்.வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கும் இப்பகுதி மக்கள் பொருளீட்டுவதற்காக பயணிக்கின்றனர்.கணிசமானோர் இராணுவம் போன்ற சேவைச்சார்ந்த தொழில்களிலும் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +கருப்பூர் + +கருப்பூர் (ஆங்கிலம்:Karuppur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,003 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். கருப்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கருப்பூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காசிபாளையம் (ஈரோடு) + +காசிபாளையம் (ஈரோடு) (ஆங்கிலம்:Kasipalayam (E)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மூன்றாம் நிலை நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 52,500 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காசிபாளையம் (ஈரோடு) மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காசிபாளையம் (ஈரோடு) மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காசிப்பாளையம் (கோபி) + +காசிப்பாளையம் (கோபி) (ஆங்கிலம்:Kasipalayam (G)), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8483 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காசிப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 56% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 65%, பெண்களின் கல்வியறிவு 47% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. காசிப்பாளையம்-கோபி மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காத்துச்சுகனாப்பள்ளி + +காத்துச்சுகனாப்பள்ளி (ஆங்கிலம்:Kathujuganapalli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு கண��்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,488 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காத்துச்சுகனாப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காத்துச்சுகனாப்பள்ளி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காட்பாடி + +காட்பாடி (ஆங்கிலம்:Katpadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 224 மீட்டர் (734 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,925 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். காட்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்பாடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கத்திவாக்கம் + +கத்திவாக்கம் (ஆங்கிலம்:Kattivakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 13 மீட்டர் (42 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 32,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கத்திவாக்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கத்திவாக்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காட்டுப்புத்தூர் + +காட்டுப்புத்தூர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தொட்டியம் வட்டதில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். வருவாய் கிராமத்தின் அடிப்படையில் காட்டுப்���ுத்தூர் கிழக்கு, காட்டுப்புத்தூர் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளன. + +2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 11,115 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காட்டுப்புத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காட்டுப்புத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்கு ஒரு அரசு உதவி பெறும் ஜமீந்தார் மேல்நிலைப்பள்ளி, இரு தொடக்கப்பள்ளிகள், அரசு மருத்துவமனை, காவல் நிலையம், தொலைப்பேசி நிலையம், பேருந்து நிலையம், அஞ்சல் நிலையம், கிளை நூலகம் மற்றும் ஆறு கோவில்கள் உள்ளன. +ஏர்டெல், ரிலையன்ஸ் மற்றும் டாடா இண்டிகாம் போன்றவை செல்பேசி சேவையையும், பிஎசுஎன்எல் (BSNL) தரைவழி மற்றும் செல்பேசி சேவையையும் அளிக்கின்றன. + + +எம்.டி.கே மற்றும் செந்தில் என இரு திரையரங்குகள் காட்டுப்புத்தூரில் இயங்கின. சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.டி.கே திரையரங்கு இடிக்கப்பட்டு, வீட்டுமனைகளாக விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது செந்தில் திரையரங்கு மட்டுமே செயல்படுகிறது. + +இப்பகுதி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். நெல், வாழை, கரும்பு மற்றும் வெற்றிலை முக்கியமாக பயிரிடப்படுகின்றன. காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள நிலங்கள் காவிரி ஆற்றிலிருந்து வாய்க்கால் வழியாக பிரிந்து வரும் நீரையே தமது பயன்பாட்டிற்கு நம்பியுள்ளன. குடிநீரும் காவிரி ஆற்றிலிருந்தே பெறப்படுகிறது. + +காட்டுப்புத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை சந்தைகேட் என்ற இடத்தில் வாரசந்தை கூடுகிறது. இது இப்பகுதியில் வெள்ளிச்சந்தை என்று அழைக்கபடுகிறது. வெள்ளிச்சந்தையன்று சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து விவசாயிகள் காய்கறி உட்பட்ட விளைப்பொருட்களையும், மற்ற நகரங்களிருந்து வரும் வியாபாரிகள் பலசரக்கு பொருட்களையும் விற்பனை செய்வர். மொத்த வியாபாரிகள் இங்கு வந்து காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்வர். மேலும் வெள்ளி இரவு சந்தையொன்று ஜமிந்தார் மேல் நிலைப் பள்ளி அருகே நடைபெறுகிறது. + +இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி போன்ற பொதுத்துறை வங்கிகள் காட்டுப்புத்தூரில் இயங்குகின்றன. ஸ்��ேட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் லட்சுமி விலாஸ் வங்கியின் ஏடி.எம்களும் உள்ளன. இத்துடன் வேளாண்மை கூட்டுறவு வங்கியும் இங்கு செயல்படுகிறது. + + +காட்டுப்புத்தூரில் வாழ்ந்த நாராயண பிரம்மேந்திரர் எனும் துறவி தன்னுடைய 120வது அகவையில் சமாதி அடைந்த இடத்தினை மடம் என்று அழைக்கிறார்கள். இந்த மடத்தில் பழநி சாமியார் போன்றோரின் சமாதிகளும் உள்ளன. மடத்துடன் இணைந்தவாறு திருமணம் மண்டமும் நிர்வகிக்ப்பட்டு வருகிறது. + +சிவன் கோவில் விழாக்கள், மாரியம்மன் கோவில் விழாக்கள், பிள்ளையார் கோவில் விழா என எல்லா தெய்வங்களின் விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. மேலும் தை திருவிழாவான பொங்கல் ஏக போகமாக கொண்டாடப் படுகிறது. மேலும் சித்திரை திருவிழாக்கள், ஆடி பதினெட்டு மற்றும் தீபாவளி ஆகியவை மிக முதன்மையான திருவிழாக்களாக கொண்டாடப்படுகின்றன. + +நாமக்கல், துறையூர், சேலம், தொட்டியம், முசிறி, திருச்சி, மோகனூர், பரமத்தி-வேலூர், கரூர், திருச்செங்கோடு, கோயம்புத்தூர் போன்ற நகரங்கள் நேரிடையாக தரைவழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துக்களால் இணைக்கப்பட்டுள்ளன. சென்னை நகரத்திற்கு நேரடியான பேருந்து தினந்தோறும் இரவு ஒரு முறை மட்டும் காட்டுப்புத்தூரிலிருந்து இயங்குகிறது. + +காட்டுப்புத்தூரை சுற்றியுள்ள சீத்தப்பட்டி, கணபதிபாளையம், கருக்கமடை, மூங்கில்ப்பட்டி, ஆலாம்பாளையம்புதூர், சுள்ளிப்பாளையம், பிடாரமங்கலம், முருங்கை போன்ற கிராமங்கள் தங்கள் முதன்மை தேவைகளுக்கு காட்டுப்புத்தூரை சார்ந்தே இருக்கின்றன. + + + + +கயத்தாறு + +கயத்தாறு (ஆங்கிலம்:Kayatharu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், கோவில் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கயத்தாறு பே%ராட்சியில் வீரபாண்டிய கட்டபொம்மன் துhக்கிலிடப்பட்ட இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இதன் அருகமைந்த நகரங்கள், வடக்கில் கோவில்பட்டி 30 கிமீ, தெற்கில் திருநெல்வேலி 30 கிமீ, கிழக்கில் தூத்துக்குடி 55 கிமீ. அருகமைந்த தொடருந்து நிலையம், 12 கிமீ தொலைவில் உள்ள குரும்பூர் ஆகும். + +6.23 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,799 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 10,400 ஆகும் + +பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன் அக்டோபர் 16 , 1799, அன்று ஆங்கிலேயரால் இவ்வூரில் தான் தூக்கிலிடப்பட்டார்.வீரபாண்டி கட்டபொம்மனின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவிடம் இவ்வூரில் உள்ளது. இந்த நினைவிடம் அக்டோபர் 16 1970 ஆம் ஆண்டு அன்று பத்மஸ்ரீ நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் சிலை நிறுவப்பட்டு, நீ. சஞ்சீவ ரெட்டி விழாத் தலைவராகவும், மற்றும் காங்கிரசு பெருந்தலைவர் கு. காமராசரால் சிலை திறந்து வைக்கப்பட்டது. இந்த நினைவிடம் தேசிய நெடுஞ்சாலையும் உள்ளூர் சாலையும் சந்திக்கும் சந்திப்பில் இந்த நினைவிடம் உள்ளது.இங்கு ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட பழைய விமானதளம் ஒன்று உள்ளது. + +சந்தைகள் : +இவ்வூரில் வாரசந்தை ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை சந்தை நடைபெருகின்றது. அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள தனிப்பட்ட இடத்தில் செயல்படுகின்றது. இங்கு சமையலுக்குத் தேவையான அனைத்துக் காய் கறிகள், தானியங்கள், கனி வகைகள், மற்றும் இறைச்சி வகைகள், ஒரு பக்கமாகவும். மறுபக்கத்தில் பசுமாடுகள், ஆடு, கோழிகள், என மிருகங்கள் சார்ந்தவைகள் மற்றபகுதிகளிளும் விற்க்கப்படுகின்றது. இந்த சந்தைக்கு பக்கத்தில் உள்ள 50 கிராமங்களின் மக்கள் வருகைத்தருகின்றார்கள். + +இங்கு மழைக் காலங்களில் மழை நீர் இந்த நீர் நிலையில் சேமிக்கப்பட்டு விவசாயத்திற்க்காகவும் மற்றும் மேச்சல் கால் நடைகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றது. + +இங்கு பாய் தயாரிப்புடன் மிகப்பெரிய தொழில்சாலையும், இந்த வட்டாரத்திலேயே மிகப் புகழ்பெற்ற மின்சாரக் காற்றாலை உள்ளது. இதையேற்று மத்திய அரசின் ஒரு அலுவலகமும் உள்ளது. இதை முன்னால் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் திறந்து வைத்தார். + + இந்துக் கோயில்கள் + +1)அகிலாண்ட நாயகி - கோதண்ட ராமேஸ்வரர் கோயில். + +2)திருமலை நாயகி - திருநீலக்கண்டேஸ்வர் கோயில். இவைகள் மன்னர்கள் ஆட்சி காலக்கட்டத்தில் எழுப்பப்பட்ட கோயில்கள் என அறியப்பட்டவைகள். + +3)கயத்தாறு ஆத்தங்கரை சுடலை மாடன் சாமி கோயில். இந்த கோவிலின் கொடைத் திருவிழா வருடாவருடம் ஓர் குறிப்பிட்ட நாள் அன்று விழா நடைபெருகின்றது. + +1)புனித லூர்த் மாதா தேவாலயம். இது ரோமன் கத்தோலி��்க தேவாலயமாகும். + +2)தென்னிந்திய திருச்சபைகள் மற்றும் இதரக்குழுக்களின் தேவாலயங்களும் இங்கு உள்ளது. + +இந்த ஊரில் புகழ்பெற்ற மசூதி(பள்ளி வாசல்) ஒன்று உள்ளது இது இந்த நகரத்தின் மேற்கு திசையில் அமைந்துள்ளது. + + + + +கெலமங்கலம் + +கெலமங்கலம் (ஆங்கிலம்:Kelamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருட்டிணகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 810 மீட்டர் (2657 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,994 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கெலமங்களம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கெலமங்களம் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கேத்தி + +கேத்தி (ஆங்கிலம்:Kethi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,465 மக்கள் இங்கு வாழுகின்றனர். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கேத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கேத்தி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கீழம்பாடி + +கீழம்பாடி (ஆங்கிலம்:Kilampadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6345 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கீழம்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழம்பாடி மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கீழ்க்குளம் + +கீழ்க்குளம் (Kilkulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,352 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கீழ்க்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழ்க்குளம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கீழ்குந்தா + +கீழ்குந்தா (ஆங்கிலம்:Kilkunda), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,150 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கீழ்குந்தா மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழ்குந்தா மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கீழ்பெண்ணாத்தூர் + +கீழ்பெண்ணாத்தூர் (ஆங்கிலம்:Kilpennathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,504 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவர். கீழ்பெண்ணாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5%ஐ விட கூடியதாகும். கீழ்பெண்ணாத்தூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். + + + + +குளச்சல் + +குளச்சல் (ஆங்கிலம்:Colachel), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,227 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குளச்சல் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 75% ஆக���ம். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குளச்சல் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கொளப்பலூர் + +கொளப்பலூர் (ஆங்கிலம்:Kolappalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8717 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொலப்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கொலப்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +சிறப்புகள் + + + + +கோம்பை + +கோம்பை ("Kombai"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூர் கோம்பை நாய் வகைக்குப் பெயர்பெற்றதாகும். கோம்பை, தேனியிலிருந்து 37 கிமீ தொலைவில் உள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, கோம்பை பேரூராட்சி 15,960 மக்கள்தொகையும், 19.02 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 7 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது கம்பம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +கோம்பை என்பதற்கு "முடக்கு", "மலையடிவாரம்", "தென்னை" என்று பல பொருள் குறிக்கும் சொல் என்றாலும், இங்கு பன்றிமலை, மேற்குமலை, கழுகுமலை என்னும் மூன்று மலைகளிடையே முன்பு முடங்கிக் கிடந்ததால் "முடங்கில்" இருந்ததால் இப்பெயர் பெற்றது + +நாயக்கர் ஆட்சி காலத்தில் ஏற்பட்ட 72 பாளையங்களில் கோம்பை ஒன்று. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 399 மீட்டர் (1309 அடி) உயரத்தில் இருக்கின்றது. இவ்வூரானது மேற்கே மேற்குத்தொடர்ச்சி மலைகளின் ஒரு பகுதியான ஏலமலைகளையும் கிழக்கே சாலைமலைக்குன்றையும் கொண்டு இடையே அமைந்துள்ளது. உத்தமபாளையம் போடிநாயக்கனூர் சாலை வழித்தடத்தில் உத்தமபாளையத்திலிருந்து 6 கிமீ தொலைவில் உள்ளது. + +பெரும்பான்மையான மக்கள் இந்துக்கள். கிறித்தவர்களும் இசுலாமியர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். மேற்குமலை அடிவாரத்தில் 400 ஆண்டுப் பழைமையான திருமலைராயப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் தேர், வைணவக் கோவில் தேர்களுள் இரண்டாவது பெரியதாகும். 150 ஆண்டுப் பழைமையான சிறீ கன்னிகா பரமேசுவரி பள்ளிகள் ஊருக்குத் தெற்கே உள்ளன. + +முதன்மைத்தொழிலாக வேளாண்மை விளங்குகிறது. தென்னை, காய்கறிகள், நிலக்கடலை, சோளம், கம்பு ஆகியன பொதுவாகப் பயிரிடப்படுகின்றன. வெள்ளிதோறும் ஊருக்குக் கிழக்கே வாரச்சந்தை கூடுகிறது. இது இன்றளவும் உயிர்ப்புடன் உள்ள சிற்றூர்ச்சந்தைகளுள் ஒன்றாகும். சுற்றுவட்டாரங்களில் மஞ்சள்காமாலை நாட்டு மருத்துவத்துக்குப் பெயர்பெற்றது. + + + + +கோனாவட்டம் + +கோனாவட்டம் (ஆங்கிலம்:Konavattam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9351 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோனாவட்டம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 60% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோனாவட்டம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + +