diff --git "a/train/AA_wiki_32.txt" "b/train/AA_wiki_32.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_32.txt" @@ -0,0 +1,4551 @@ + +அரசு + +அரசு () என்பது அரசாங்கத்தில் உயிர் வாழும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு அரசியற் சமூகமாகும். அரசுகள் அரசுரிமை உள்ளவையாக இருக்கலாம். பல அரசுகள் மாநிலங்களாக அல்லது கூட்டரசுகளாக இருக்கலாம். அவற்றில் சில கூட்டு ஒன்றியத்தினூடாக கூட்டரசில் பங்குபெறுகின்றன. சில அரசுகள் வெளி அரசுரிமை அல்லது அரசியல் ஆதிக்கம் கொண்டவையாக, இன்னொரு அரசின் மீது அதன் உச்ச அதிகாரம் செயல்படக்கூடியவாறு காணப்படும். அரசு என்னும் பதம் ஒர் அரசினுடைய அரசாங்கத்தின் நிலைத்த பகுதிகளுக்குள்ளும் பாவிக்கப்படும். இது சமயமாகவோ அல்லது குடிமக்கள் நிறுவனமாகவோ காணப்படும்.மனித குலத்தின் மிகப் பழைய மற்றும் முதல் சமூக நிறுவனமாக அரசு கருதப்படுகிறது. + +பொதுவாக ஒரு நவீன அரசில் நேரடி மற்றும் மறைமுக உறுப்புகளாக பின்வருவன அமைகின்றன. + + + +அரசு என்பது அரசறிவியல் சார்ந்த ஒரு சொல் ஆகும். அதன்படி அரசு என்பது ஐந்து உறுப்புகள் இணைந்து உருவாகிறது. அவை, + +அரசின் ஆரம்பமானது கிரேக்க நகர அரசுகள் தொடக்கம் கி.மு 7ம் நூற்றாண்டு முதல் நிலவுகிறது என்பதே அரசறிவியல் அறிஞர்களின் கருத்தாகும். + +கிரேக்க நகர அரச முறையில் ஆரம்பித்த அரசு முறை தொடர்ச்சியாக, + +என வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. + + +பல வகை அரசுகள் புழக்கத்தில் உள்ளன + +ஒர் அரசு உருவாக முக்கியமான 5 அம்சங்கள் - 1) நிலம் அல்லது ஆள்புல எல்லை 2) மக்கள் 3) இறைமை 4 அரசாங்கம் 5) சர்வதேச அங்கீகாரம் + +தொடக்கக் கால நோமட்டிக் பழங்குடியினர் கங்கை, நைல், யூப்ரட்டீஸ் ரைகிரிஸ், மஞ்சள் ஆறு, யங்சூ போன்ற பள்ளத்தாக்குப் பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளனர். இப்பள்ளத் தாக்குகளில் மனித நாகரீகம் தோன்றி வளர்ச்சிப் பெற்றதுடன், அரசுகளும், பேரரசுகளும் தோற்றம் பெற்றன. இவ் அரசுகள் தொன்மரபுவழி மன்னர்களினால் ஆளப்பட்டது. இவர்கள் சமயம், அரசியல் ஆகியவற்றை ஒருங்கிணைத்து வளர்ச்சியுறச் செய்தனர். சமயங்கள் பல சட்டங்களுக்குரிய தகவமைகளை அரசனின் ஒப்புதலுடன் பெற்றுக்கொண்டன. மக்கள் தமக்குரிய அடிப்படை உரிமைகள், சுதந்திரம் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை. அரசகட்டளைகளுக்குக் கீழ்படிதலைத் தலையாய கடமையாகக் கொண்டனர்.இது குறித்து, கெட்டல் என்பார், கீழைத்தேச அரசு குறித்து, ஆட்சியா��ர்கள் தமது மக்களை அடிமையாக்குபவர்களாகவும், வரி அளவிடத்தக்க உறுப்பினர்களாகவும் மட்டுமே வைத்திருப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தனர். + +கி.மு 1000 நூற்றாண்டில் கிரேக்கத்தில் நகர அரசுகள் தோற்றம் பெற்று வளர்ச்சி அடைந்தன. உண்மையில் அரசியல் அறிவியல் பற்றி அறிய முற்படும்போது, அரசின் தோற்ற வளர்ச்சியினைக் கிரேக்க நகர அரசின் உருவாக்கத்துடன் தொடர்புபடுத்திக் கோட்பாட்டாளர்கள் எடுத்துரைக்கின்றனர். கிரேக்க நகர அரசுகள் அரசியல் சிந்தனைகளை அடிப்படையாகக் கொண்டவை. மேலும், இவை உணர்வுப் பூர்வமாக வளர்ச்சியுற்ற முதல் சமூகங்களாகக் கொள்ளப்படுகின்றன. + +ஐரோப்பாவில் கிரேக்கர்கள் தம்மை அரசியல் ரீதியாக நிலைப்படுத்திக் கொள்ள முயற்சித்தனர். இருப்பினும், தொல்குடிச் சமூக ஒழுங்கமைப்பின் அடிப்படையில் அவர்கள் பிரிந்து வேறுபட்டுக் காணப்பட்டனர். ஒருதரப்பினர் பொது மரபுக்குடியின் அடிப்படையிலும்,மற்றொரு தரப்பினர் பழங்குடி மக்களாகவும் இருக்கின்றனர். இவர்கள் மலைகள்,கடல் ஆகியவற்றால் பிளவுபட்டிருந்த கிரேக்கத் தீவுகளில் குடியேற்றத்தை உருவாக்கியிருந்தனர். ஏதன்ஸ் நகர அரசின் வளர்ச்சி மூலமாக கிரேக்க உள்ளூர் சமுதாயம் பரிணாம வளர்ச்சி அடைந்து நகர அரசாக மாற்றம் பெற்றதை அறியவியலும். + +ஒவ்வொரு நகர அரசுகளும் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்டுக் காணப்படும். இந் நகர அரசுகள் சுதந்திரமானவையாகும். மேலும், மாகாண அளவில் மட்டுப்பட்டும் மக்கள்தொகை அடிப்படையில் மிகக் குறைந்தும் உள்ளன. கிரேக்க அரசியல் தத்துவமானது, ஒவ்வொரு நகர அரசும் அரசியல், சமூக, பொருளாதார, இலக்கிய வாழ்க்கை என்பது சிறியதாக இருக்கும் வரையிலேயே சாத்தியமாகும் என எடுத்துரைக்கிறது. + +கிரேக்க நகர அரசுகள் சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு வளர்ச்சியடைந்துள்ளன. மக்கள் அனைவரும் போர் வீரர்களாகவும்,ஆட்சிமன்ற உறுப்பினர்களாகவும் காணப்பட்டனர். அக் கிரேக்க நகர அரசுகளில் நேரடி மக்களாட்சி முறை நடைமுறையிலிருந்தது. இதன் உறுப்பினர்கள் சட்ட ஆக்கச் செயற்பாட்டிற்காக நேரில் ஒன்று கூடினர். அதாவது, கிரேக்க நகர அரசில் மக்கள் அதிகாரம் மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். + +இத்தாலியில் இருந்த சிறிய நகர அரசுகளில் ஒன்றுதான் உரோமை நகர அரசு என்றழைக்கப்படுகிறது. கிரேக்க நகர அரசுகளைப் போலவே, இத்தாலிய உரோமை நகர அரசுகளும் புவியியல் ரீதியாகப் பல்வேறு பிரிவுகளாகப் பிளவுபட்டுக் காணப்பட்டன. உரோமை நகர அரசானது கொடுங்கோல் ஆட்சியாக இருந்தது. பின்னர், மக்கள் கொடுங்கோன்மை ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்தும் அவர்களைத் தோற்கடித்தும் குடியரசு ஆட்சியினை நிறுவினர். உரோமையில் தோற்றுவிக்கப்பட்ட குடியாட்சி முறையில் இரட்டை நிர்வாக முறை நிலவியது. தொன்மரபின் வழி வந்த ஆட்சியாளர்களும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட செனற்சபை உறுப்பினர்களும் இணைந்து ஆட்சி புரிந்து வந்தனர். இதனால், உரோமைக் குடியரசு உயர்குடி சிறுகுழுவாட்சி முறையாக மாற்றம் பெற்றது. + +ஐரோப்பாவின் பல பகுதிகளை ஆக்கிரமித்ததன் காரணமாக உரோமை அரசு உரோமைப் பேரரசாக மாறியது. பிரான்ஸ், ஸ்பெயின், பிரித்தானியா, ஜெர்மனி, வட ஆப்ரிக்கா ஆகிய பகுதிகள் உரோமையின் ஆட்சிப் பகுதிகளாக ஆயின. உரோமைப் பேரரசும் கொடுங்கோல் தன்மையுடன் ஆட்சி மேற்கொண்டது. உரோமைப் பேரரசர் அனைத்து வகைப்பட்ட அதிகாரங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தார். அவருடைய வார்த்தைகள் உரோமையின் சட்டங்களாக காணப்பட்டன. கிறித்தவம் அரச சமயமாக்கப்பட்டது. ஆன்மீக உரிமைக் கோட்பாடு விவரணைச் செய்வது போன்று அரசர் இறைவனின் தூதராகக் கருதப்பட்டார். அவரைக் கீழ்ப்படிவது என்பது இறைவனைக் கீழ்ப்படிவதற்கு ஈடாகப் பார்க்கப்பட்டது. + +உரோமைப் பேரரசு அரசியல் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றி வந்தது. அரசிற்குள் குடும்ப மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் போக்கினை வலியுற���த்திச் செயற்படுத்தியது. இருப்பினும், உரோமைக் குடிமக்களின் உரிமைகளையும் பொறுப்புகளையும் வரையறைப்படுத்தி விரிவுப்படுத்தியது. நாடுகளின் சட்டம் என்பது உரோமைப் பேரரசின் அடிப்படைக் கொள்கையாக விளங்கியது. இதுவே, உரோமர்களின் சட்டமுறைமையின் வடிவமாக அமையப் பெற்றிருந்தது. + +உரோமைப் பேரரசில் பல நிர்வாகச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டன. குடிமைச் சேவைகளில் காணப்பட்ட துணிவின்மைப் போக்குகள், அச்சவுணர்வு தன்மைகள் ஆகியவற்றால் மக்களிடையே அவநம்பிக்கைகள் உருவாயின. இவற்றிலிருந்து பேரரசை மீட்டெடுப்பது என்பது கடினப் பணியாக இருந்தது. உரோமைப் பேரரசு இதன்காரணமாகப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியது. இக்காலக் கட்டத்தில் நிலவுடமையாளர்கள் எழுச்சிப் பெற்றனர். இது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தது. இதனால், நிலவுடமையாளர்கள் தம்மிடம் பணியாற்றும் எளியவர்கள் மீது செலுத்தப்பட்டு வந்த அதிகாரம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டது. + +இவ் அரசில் ஒவ்வொரு மாவட்ட நிலப்பகுதியும் ஒவ்வொரு நிலவுடமையாளரின் கீழ் இருந்தது. இவர்கள் தம்மை குறுநில மன்னர்களாக நினைத்துக்கொண்டு ஆட்சிசெய்து வரத் தொடங்கினர். உரோமை அரசியல் அதிகாரமானது நிலவுடமையுடன் தொடர்புடையதாக இருந்தது. இச்சூழ்நிலையில் வலிமை பெற்ற நிலவுடமையாளர்கள் வலிமை குன்றிய நிலவுடமையாளர் பகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை விரிவுபடுத்திக் கொண்டனர். இதன்விளைவாக, மீளவும் சிற்றரசுகள் உருவாகத் தொடங்கின. போர் நிகழ்வுகள் மற்றும் திருமண உறவுகள் மூலமாக சிற்றரசுகள் பேரரசுகளாக மாற்றம் பெற்றன. நிலவுடமைக் கோட்பாட்டின்படி அரசன் இறைவனின் ஊழியனாகச் செயல்பட்டு அரசினை வழிநடத்த கடமைப்பட்டவனாவான். அதுபோல, அரசர்கள் தமது இறைமையினை நிலவுடமையாளர்களுக்குச் செலுத்தும் விசுவாசத்தினூடாகப் பெற்றுக்கொள்ளும் வழக்கிருந்தது. இதனால், அரசன் இறந்தபின் அவனுடைய அதிகாரங்களும் பொறுப்புகளும் நிலவுடமையாளர்களுக்குச் சொந்தமானது. +திருச்சபைக் காலத்தில் சமயரீதியாக உரோமை அரசுகளுக்கிடையில�� இணக்கப் போக்குகள் நிலவின. இது அனைத்துலக பேரரசு என்பதைத் தலையாயக் குறிக்கோளாகக் கொண்டு உலக அரசுகளை ஒன்றுபடுத்தி வைத்திருந்தது. + +நவீன தேசிய அரசுகளின் வளர்ச்சியில்,பிரெஞ்சுப் புரட்சி தலையாயதாகும். கி. பி. 1789 இல் பிரெஞ்சு மக்கள் கொடுங்கோன்மை முடியாட்சிக்கு எதிராகப் புரட்சியில் ஈடுபட்டனர். அதன் மூலம் மக்களாட்சி அரசியலை முன்வைத்தனர். விடுதலையும், இறையாண்மையும் கொண்ட குடியரசாகப் பிரான்சை அறிவித்துக் கொண்டனர். அனைத்து மனிதர்களும் சில உரிமைகளுடன் பிறக்கின்றனர்; சமத்துவமாக உருவாக்கப்படுகின்றனர் என்கிற கருத்துக்களைத் தேசிய அரசுகள் வலியுறுத்தின. + +பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சியின் விளைவாக ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் கண்டுபிடிப்புக்கள், இயந்திரங்களின் அதிகரிப்புகள், பொருட்களின் உற்பத்தி மற்றும் உற்பத்திகளின் அமைப்புமுறை என்பன தேசிய அரசுகளின் தோற்றத்திற்கு வித்திட்டன. அனைத்துலக வர்த்தகம் துரிதமடைந்ததுடன், தேசிய வர்த்தகமும், வங்கித் தொழிலும் அதிகரித்தன. மேலும், போக்குவரத்திலும், தகவல் தொடர்பிலும், சமூகப்பொருளாதார வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. இம்மாற்றங்கள் நவீன தேசிய அரசுகளின் எழுச்சிக்கு உறுதுணையாக அமைந்திருந்தன. + + + + +வெண்குருதியணு + +வெண்குருதியணுக்கள் அல்லது வெண்குருதிச் சிறுதுணிக்கைகள் அல்லது இரத்த வெள்ளையணுக்கள் அல்லது லியூக்கோசைற் (White Blood Cells or Leucocytes) குருதியில் காணப்படும் ஒரு வகை உயிரணுக்களாகு��். இவை எலும்பு மச்சைகளில் தயாரிக்கப்பட்டு குருதியினால் உடல் முழுவதும் எடுத்து செல்லப்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது. தொற்றுநோய்களையும், வேறு வெளிப் பொருட்களை எதிர்ப்பதிலும் முக்கிய பங்காற்றும் குருதியின் கூறாக அமையும். வெண்குருதியணுக்களின் வாழ்வுக்காலம் ஒரு சில நிமிடங்களில் இருந்து, ஒரு சில நாட்கள் வரை இருக்கும். இவ்வெண்குருதியணுக்கள் குருதிச் சுற்றோட்டத்தொகுதியிலும், நிணநீர்த்தொகுதியிலும் பரந்து உடல் முழுவதும் காணப்படும். + +உடலிலுள்ள நோய் நிலைமையினை அடையாளம் காண வெண்குருதியணுக்களின் எண்ணிக்கை முக்கிய குறிகாட்டியாக இருப்பதனால், மொத்தக் குருதி கணக்கீடுகளில் வெமண்குருதிக் கலங்களின் எண்ணிக்கை முக்கியமானதாகும்.குருதிப் பரிசோதனையில் ஒருவரது வெண்குருதிக் கனங்களின் எண்ணிக்கை 4 × 10/L முதல் 1.1 × 10/L ஆக இருக்கும். அமெரிக்காவில் இது 4,000 முதல் 11,000 வெண்குருதிக் கலங்கள் ஒரு மிக்ரொ லீட்டருக்கு என அளவிடப்படும். இது ஆரோக்கியமான ஒருவரது மொத்தக் குருதியில் கனவளவுப்படி ஏறக்குறைய 1% ஆக இருக்கும் +வெண்குருதியணுக்களில் ஐந்து வேறுபட்ட வகையான உயிரணுக்கள் உள்ளன. ஆனால் அவை யாவும் என்பு மச்சையில் இருக்கும் குருதியணுமூலக் குருத்தணு (hematopoietic stem cell) எனப்படும் ஒரு குறிப்பிட்ட உயிரணுக்களில் இருந்தே உருவாகின்றன. +நடுவமை நாடிகள் வெண்குருதி கலங்களிலே அதிக அளவில் காணப்படும் உயிரணுக்கள் ஆகும். இது சுமார் + +60-70% அளவில் காணப்படும். இவை தொழிற்பாட்டு அடிப்படையில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படும்; அவை: கொல்லும் நடுவமை நாடி, சிறைப்படுத்தும் நடுவமை நாடி. இவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைக்கு எதிராக தொழிற்பட்டு பாதுகாக்கின்றன.இவையே நுண்ணங்கித் தொற்று ஏற்படும் போதுமுதலில் அதற்கு எதிராக தொழிற்படுவது. + +இயோசிநாடிகள் மொத்த வெண்குருதியணுக்களில் 2-4% காணப்படும். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் , பருவத்துக்கு பருவம் மற்றும் மாதவிடாய் காலங்களில் மாறுபடும். ஒவ்வாமை, ஒட்டுண்ணித்தொற்று, கொல்லஜன் நோய் மற்றும் மைய நரம்புத்தொகுதி பாதிப்புகளின் போது எண்ணிக்கையில் அதிகரிக்கும். இவற்றின் அளவு குருதில் குறைவாகும். ஆனால் சுவாசப்பை, உணவுச் சமிபாட்டுத் தொகுதி, சிறுநீர் சிறுகுழாய் என்பவற்றில் அதிகளவு காணப்படும்.. + +கார நாடிகள் ஒவ்வாமை, பிறபொருட்கள் உள்ளெடுக்கப்படுதல் என்பவற்றுக்கு எதிராகச் செயற்படுவதில் முக்கியமானது. இதன் விளைவாக பெறப்படும் எப்பாரின் குருதிக் குழாய்களில் குருதி உறைவடைதலைத் தடுக்கும் வெண்கருதியணுக்களில் மிகக் கூறைவாகக் காணப்படுவது: அதாவது 0.5% இலும் குறைவானது. + +நிணநீர்க் குழியங்கள் குருதியின் நிணநீர்த் தொகுதியில் பொதுவானவையாகக் காணப்படும். நிறமூட்டப்படும் போது நன்கு நிறமூட்டப்படும். மையத்தில் பாரிய கருவையும் ஒப்பீட்டு அளவில் சிறிய குழியவுருவையும் கொண்டிருக்கும். + +ஒற்றைக் குழியங்கள் , வெண்குருதியணுக்களில் காணப்படும் மிகப்பெரிய கலங்களாகும். இவை நடுநிலை நாடிகளில் வெற்றிடத் தூய்தாக்கி போல் தொழிற்டும். இவை அதிக காலம் வாழும். + +வெண்குருதியணு சார்ந்து இரண்டு கோளாறுகள் பொதுவாகக் கூறப்படும், அவை: வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பது (கல அதிகரிப்புக்கோளாறு) மற்றையது கலங்களின் எண்ணிக்கை குறைவுபடல்( லியுக்கொபீனியா) வெண்குருதியணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பொதுவாக (தொற்றுகளுக்கெதிராகப் போராட) ஆரோக்கிய நிலைமைதான் ஆயினும் அபரிமிதமாகப் பெருக்கமுறுதல் பாதிப்பானது. + +மற்றொரு வகையில் வெண்குருதியணுக்கள் சார்ந்த நோய் குறித்து ஆராயும் போது அவற்றின் எண்ணிக்கை சாதாரணமாகக் காணப்பட்ட போதிலும் அவற்றின் செயற்பாடு அசாதரணமாயிருப்பதை குறிப்பது. + +வெண் குருதியணு குறைவுபடுவதனால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. இத்தகைய வெண்குருதியணு குறைவு பொதுவாக நடுவமைநாடிகள் குறைவுபடுவதனாலேயே நிகழ்கின்றது. இதனால் இத்தகைய குறைபாடு நியுட்ரோபீனியா என அழைக்கப்படுகின்றது.மிகக் குறைவாக , நிணநீர்ச் செல்களின் குறைவுபடல் ஏற்படலாம். இதன் போது இக்குறைபாடு லிம்போசைற்றொபீனியா என அழைக்கப்படும். + +நியுட்ரோபீனியா பெற்றுக் கொண்ட நோயாக அல்ல்து பரம்பரை வழியாக கடத்தப்படும் நோயாக காணப்படலாம். நடுவமைநாடிகளின் அளவு குறைவு படுதல் அவற்றின் உற்பத்தி குறைவுபடுவதனால் அல்லது அவை குருதியிலிருந்து அகற்றப்படுவதனால் நிகழலாம் என ஆய்வுகூடப் பரிசோதனைகள் காட்டுகின்றன. பின்வரும் சில காரணங்கள் ஏதுவாக அமையும்: +நியுட்ரோபீனியாவின் மிகப்பெரிய பாதிப்பு தொற்றுகள் ஏற்படுவதற்கன வாய்ப்புகளாகும். + + + + +தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்களின் பட்டியல் + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +நிகழ்படத் துண்டு + +நிகழ்பட துண்டு (video clip ) ஒரு குறுந்திரைப்படத்தையோ அல்லது குறுகியநேரத்தில் ஒரு முழுமையான நிகழ்வையோ அல்லது செய்தியையோ அல்லது வேறு ரசிக்ககூடிய படைப்புக்களையோ கொண்டுள்ள நிகழ்படத்தைக் குறிக்கும். இவை இணையத்தில் 2006 ஆண்டு பரவலாக கிடைக்க ஆரம்பித்தன. + + + + + + +ரவி வர்மா + +ராஜா ரவி வர்மா (ஏப்ரல் 29, 1848 - அக்டோபர் 2, 1906) நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். + +ராஜா ரவிவர்மா கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள +கிளிமானூர் என்னும் ஊரில் 1848-ஆம் ஆண்டில் உமாம்பா - நீலகண்டன் தம்பதிகளுக்குப் பிறந்தவர். சிறு வயதிலிருந்தே சமஸ்கிருதம், மலையாளம் ஆகியவற்றுடன் ஓவியத்தையும் தம்முடைய உறவினர் ராஜா ராஜவர்மாவிடமிருந்து கற்றுக்கொண்டார். + +ராஜா ராஜவர்மா, ரவிவர்மாவுக்குத் தமக்கு ஓவியத்தில் தெரிந்தவற்றை +யெல்லாம் கற்றுக்கொடுத்தார். திருவாங்கூர் மன்னர் ஆயில்யம் திருநாள் மகாராஜாவின் உதவியுடன் 1862 ஆம் ஆண்டில் திருவனந்தபுரம் அரண்மனையில் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் ஒன்பது ஆண்டுகள் பயின்றார்.அவரிடம் ஓவியக்கலையை கற்க ஆரம்பித்தார் .தைலவண்ண ஓவியங்களில் உள்ள நுணுக்கங்களை தஞ்சாவூர் அரண்மனை ஓவியரான அழகிரி நாயுடுவிடமும் அறிந்து கொண்டார். சுதேசிமுறையில் செய்யப்பட்டன. அவ்வேளையில் அரச குடும்பத்தைச் சேர்ந்ததொரு பெண்ணை மணந்துகொண்டார். + +இலைகள், மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றிலிருந்து வண்ணங்கள் தயாரித்தே அக்காலத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டன. ஐரோப்பியர்களின் எண்ணெய் வண்ண ஓவியங்களைப் பற்றி சில உத்திகளைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ரவிவர்மா விரும்பினார். "தியோடோர் ஜென்சன்" என்னும் ஐரோப்பியர் 1868 இல் அரண்ம���ை வந்திருந்தபோது அவர் ஓவியம் வரையும் முறையயும் உத்திகளையும் அருகில் இருந்து கவனித்து அதன் மூலம் தாமும் அந்த ஐரோப்பியக் கலையைக் கற்றுக்கொண்டார். அந்நாளில் அவர் சென்னை ஆளுனராகிய பக்கிங்க்ஹாம் கோமகனாரை வரைந்த ஓவியம் அவருக்குப் புகழ் தேடித்தந்தது. +ஆயில்யம் திருநாள் மகாராஜா, ரவிவர்மா தம்மை மிகச்சிறப்பாக +வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை அளித்துக் +கௌரவித்தார். 1870 - 1880 ஆண்டுகளில் கிளிமானூரிலேயே தங்கி நிறைய ஓவியங்களைப் படைத்தார். + +"மஹாராஜா மூன்றாம் சத்யாஜிராவ் கெய்க்வாட்" (Sathyajirao Gaekwad) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ரவிவர்மா பரோடா சமஸ்தானத்தில் 19ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பத்து ஆண்டுகள் தங்கினார். அவரது பெரும்பாலான சிறந்த ஓவியங்கள் அங்குதான் படைக்கப்பட்டன. தமது வாழ்வின் பெரும்பகுதியை அவர் மும்பாயில் கழித்தார். அங்குதான் 1894 இல் அவர் தமது அச்சகத்தைத் நிறுவினார். 1896 இல் அவரது அச்சகத்தில் முதல் பிரதி ஓவியம் தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடும் ஓவியம் அச்சிடப்பட்டது. 1899 இல் அச்சகத்தை ஸ்லிஷர் ("Slisher") நகரத்துக்கு மாற்றினார். 1906 இல் தமது 58ஆவது வயதில் அவர் இறைவனடி சேர்ந்தார். + +1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். "நவம்பர் 24 2002 இல் டில்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது "யசோதையும் கிருஷ்ணனும்" ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது". + +இந்தியக் கலை விமர்சகர்கள் அவரது ஓவியங்களில் வெறும் கதை சொல்லும் (illustrative) தன்மையும், உணர்ச்சி மேலோங்கிய தன்மையும்தான் காணப்படுகின்றன என்றும் அவர் கற்பனை வரட்சி மிக்க, மேலை நாட்டுப் பாணியை நகல் செய்யும், இந்தியக் கலையியலைப் புறக்கணித்த ஓவியர் என்றும் குறைகூறினார்கள். அவரது அச்சகத்தில் அச்சிடப்பட்ட பிரதி ஓவியங்கள் 'கேலண்டர் ஓவியர்' என்று அவரை கொச்சைப் படுத்தப் பயன்பட்டன. மேலை நாட்டு உத்தியான தைல வண்ணத்தை பயன்படுத்தி இந்திய வண்ண உத்தியை அவர் அவமதித்ததாகக் கூடக் குறிப்பிட்டார்கள். + + + + + +அக்டோபர் 7 + + + + + + + +பெப்ரவரி 5 + + + + + + + +அக்டோபர் 8 + + + + + + + +ஆண்கள் இயக்கம் + +ஆண்கள் இயக்கம் (Men's Movement) பொதுவாக மேற்கு நாடுகளில் ஆண்கள் தொடர்பாக வலுப்பெற்றுவரும் சில கருத்துப் போக்குக்களையும் அமைப்புக்களையும் குறிக்கின்றது. குறிப்பாக திருமணம் குழந்தைகள் தொடர்பான உரிமைகளில் ஆண்களுக்கு தகுந்த உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கொள்கை வலியுறுத்தப்படுகிறது. இந்த இயக்கம் பெண்ணிய கொள்கைகளுக்கு எதிரான ஒரு அமைப்பு என்று கூற முடியாது. + + + + +சத்யா (1988 திரைப்படம்) + +சத்யா திரைப்படம் 1988 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அமலா போன்ற பலர் நடித்திருந்தனர். + +நாடகப்படம் + + +சத்யா (கமல்ஹாசன்) வேலை தேடிக்கொண்டிருக்கும் ஒரு பட்டதாரி இளைஞனாவான். வீட்டில் தனது தந்தையின் புதிய மனைவியான அவன் சித்தியினால் பலமுறை பேச்சுக்களுக்கும் இன்சொற்களுக்கும் ஆளாகின்றான் சத்யா. இதனால் வீட்டில் அதிக அளவில் தங்கி இருப்பதனையும் விரும்புவதில்லை. நண்பர்களுடன் வெளியில் சுற்றித் திரியும் சத்யா சமுதாயத்தில் நடக்கும் பல அட்டூழியங்களைக் கண் கொடுத்துப் பார்த்து கோபம் கொள்கின்றான். காடையர்களால் தாக்கப்படும் ஒருவனைக் காப்பாற்றவும் செய்கின்றான். + +இதற்கிடையில் திருடனிடம் நகையினைப் பறி கொடுத்த பெண்ணை (அமலா) அத்திருடனிடமிருந்து காப்பாற்றி அவள் வீடு வரை வழியனுப்புகின்றான் சத்யா. பின்னர் இருவரிடையே காதல் மலர்கின்றது. பல நாட்கள் கழித்து தமது குழுவினர்கள் தாக்கப்பட்டதையறிந்த காடையர் கூட்டம் சத்யாவின் தங்கையினை நடுத் தெருவில் மக்கள் முன்னிலையில் வைத்து அவளது ஆடையினை உருவினர். இதனை அறிந்து கொள்ளும் சத்யா அக்காடையர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்களைத் தாக்கினான்.இதனையறிந்த காடையர்களின் தலைவனாக விளங்குபவனால் சத்யாவின் நண்பர்களில் சிலரைக் வெட்டிக் கொலை செய்தான் அவனுடைய காடையர் பட்டாளத்துடன். இதற்கிடையில் நல்லவனாக சத்யாவைத் தனது பக்கம் இருக்குமாறு கூறிக்கொள்ளும் ஒரு தீய��னால் சத்யா கைக்கூலியாக்கப்படுகின்றான். பின்னர் அவனின் தீய மனதை அறிந்து கொள்ளும் சத்யா அவனை எதிர்க்கவே சத்யாவைக் கொலை செய்வதற்காக காடையர்களை அனுப்புகின்றான் அவ்வரசியல்வாதியும்.காடையர்களினால் தாக்கப்பட்டு பின்னர் சுட்டுக்காயப்படுத்தப்படுகின்ற சத்யமூர்த்தி நினைவு வந்தவுடனேயே தனக்கு இந்நிலைமையினை ஏற்படுத்தியவர்களைப் பழி வாங்குகின்றான். + +இளையராஜா இசையமைத்த இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் கவிஞர் வாலி எழுதியவை. + + + + +விவேக் (நகைச்சுவை நடிகர்) + +விவேக் () தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். 1961 நவம்பர் 19 ஆம் நாளில் அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் ஆகியோருக்கு மதுரையில் பிறந்தார். இவரது சொந்த ஊர் கோயில்பட்டி - இலுப்பை ஊரணி. இவரது தந்தை இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் ஆசிரியராக பணியாற்றியவர். இவரது நகைச்சுவை இலஞ்சம், மக்கள்தொகைப் பெருக்கம், அரசியல் ஊழல்கள், மூட நம்பிக்கை போன்றவற்றை இடித்துரைப்பதால் இவரை சிலர் "சின்னக் கலைவாணர்" என்றும் "சனங்களின் கலைஞன்" என்றும் அடைமொழியிட்டு அழைக்கின்றனர். 1990களின் தொடக்கத்தில் துணைநடிகராகத் தமிழ்த் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது புகழ்பெற்ற நடிகராக உள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் கதை நாயகனின் நண்பனாக வேடம் ஏற்று நடித்துள்ளார். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை பரப்புவதற்காக இவர் பாராட்டப்பட்டாலும், இவர் பேசும் இரட்டை பொருள் பொதிந்த வசனங்களுக்காக விமர்சிக்கப்படுவதும் உண்டு. "புதுப்புது அர்த்தங்கள்", "மின்னலே", "பெண்ணின் மனதை தொட்டு", "ரன்", "நம்மவீட்டுக் கல்யாணம்", "தூள்" முதலிய படங்கள் இவரது நகைச்சுவை நடிப்பில் வெளிவந்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும். + +புதுப்புது அர்த்தங்கள் படத்தில் இவர் பேசிய 'இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்' என்ற வசனம் இவரை பிரபலபடுத்தியது. + +இந்திய அரசு வழங்கும் 2009 ம் ஆண்டுக்கான பத்ம ஸ்ரீ விருதை இவர் பெற்றார். + + + + + + + + + +கிருதியை அலங்கரிக்கும் அணிகள் + +கிருதியை அலங்கரிக்கும் அணிகள் எனப்படுபவை அனுபல்லவி இல்லாத கிருதிகளுக்கு அழகு செய்யும் "இசையணிகள்" ஆகும். + +பொதுவாக கிருதிகள், கீர்த��தனைகள் போன்ற இசை வடிவங்களுக்கு இன்றியமையாத அம்சங்கள் பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகும். சில சமயங்களில் அனுபல்லவி இல்லாத கிருதிகளுக்கு அழகு செய்யும் அம்சங்கள் பல உண்டு. அவை "இசை அணிகள்" என்று அழைக்கப்படுகின்றன. + +இசையணிகளாவன: "கமகம்", "சங்கதி", "மத்திமகால சாகித்தியம்", "சிட்டைஸ்வரம்", "ஸ்வர சாகித்தியம்", "ஸ்வர அட்சரம்", "சொற்கட்டு ஸ்வரம்", "சொற்கட்டு சாகித்தியம்", "கோபுச்சயதி", "சுரோத்தவாகயதி", "பிராசம்", "யமகம்", "மணிப்பிரவாளம்" ஆகியன. + +தென்னக இசையின் சிறப்பியல்புகளில் ஒன்று "கமகம்". இந்த கமகம் இல்லாத பாடல் நீரில்லாத ஆறு என்றும், நிலவில்லாத இரவு என்றும் வர்ணிக்கப்படுகின்றது. இன்று சாதாரணமாக 10 வகையான கமகங்கள் கையாளப்படுகின்றன. + +எடுத்துக்காட்டுக்கள் :- "ஸ கா ம ப நீ ஸ்" - என்ற தன்யாசி இராகத்தின் காந்தாரத்தையும் நிஷாதத்தையும் நீட்டியும் அழுத்தியும் பிடிக்கும் போது அதை "கம்பித கமகம்" எனக் கூறுவர். + +"சங்கதி" என்பது பல்லவி, அனுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகளில் ஒன்றிரண்டு குறிப்பிட்ட ஆவர்த்தனங்களை எடுத்துக் கொண்டு அவற்றை இராக வடிவம், சொல்நயம் விளங்கப் பலமுறை பல்வேறு விதமாகப் பாடுதலே ஆகும். சாதாரணமாக இவற்றைக் கிருதிகளை இயற்றியோரே அமைத்திருப்பர். +எடுத்துக்காட்டுக்கள் :- "தாரினி தெலுசு" (சுத்தசாவேரி - ஆதி - தியாகராஜர்) + +சௌக்க நடையில் பொதுவாகச் செல்லும் கிருதிகளுக்கு அணியாக விளங்குவது "மத்திமகால சாகித்தியம்" ஆகும். இது கிருதியின் ஏதாவது ஒரு அங்கத்தின் முடிவில் அமைந்திருக்கும். முத்துஸ்வாமி தீஷிதரின் பல கிருதிகள் மத்திம கால சாகித்தியத்தைக் கொண்டிருக்கும். + +எடுத்துக்காட்டுக்கள் :- ""ஆடிக்கொண்டார்"" (மாயாமாளவகௌளை - ஆதி - முத்துத் தாண்டவர்) இங்கு சரணத்தில் மத்திமகால சாகித்தியம் காணப்படும். + +சிட்டை ஸ்வர்ம், கிருதிகள் சிலவற்றில் அனுபல்லவிக்குப் பின்னர் தாள ஆவர்த்தனத்தையொட்டி வரும். அழகான சுவரக்கோர்வையாகும். அனுபல்லவி பாடிய பின் சிட்டை ஸ்வரத்தை முதல் காலத்திலும் சரணம் பாடிய பின் அதே சிட்டை ஸ்வரத்தை இரண்டாம் காலத்திலும் பாடுவது வழக்கம். அல்லது இருமுறையும் மத்திமகாலத்தில் பாடுவதும் உண்டு. + +"விலோம சிட்டைஸ்வரம்" +எடுத்துக்காட்டு :- ""தாயே திரிபுரசுந்தரி"" (சுத்தசாவேரி - கண்ட சாபு - பெரியசாமி தூரன்) + +"மகுட ஸ்வரம்" +எடுத்த��க்காட்டு :- ""பாவயாமி ரகுராமம்"" (இராகமாலிகை) (சாவேரி - ரூபகம் - ஸ்வாதித்திருநாள் மகாராஜா & செம்மங்குடி சிறீநிவாச அய்யங்கார்.) +க்ரிஸ்தா ; ரிஸ்தா, ஸ் ; தா; க்ரி நிதமகரிஸத// + +இந்தப்பகுதி கிருதி இயற்றியவரின் திறமையை நன்கு காட்டுகிறது. இதன் சிறப்பு என்னவென்றால் அழகாக அமைக்கப்பட்ட ஸ்வரக்கோர்வைகளிற்கு பொருத்தமாக இயற்றப்பட்ட சாகித்தியமாகும். ஸ்வர சாகித்தியத்தின் ஸ்வரப் பகுதியை அனுபல்லவியின் முடிவிலும், சாகித்தியப் பகுதியைச் சரணத்தின் முடிவிலும் பாடுவது வழக்கம். + +எடுத்துக்காட்டு :- ""ஜகதீஸ்வரி"" (மோகனம் - ஆதி - திருவாரூர் இராமசாமிப் பிள்ளை) + +கிருதிகளில் சாகித்திய எழுத்தும் ஸ்வர எழுத்தும் ஒன்றாக வருமானால் அதற்கு "ஸ்வர அட்சரம்" என்று பெயர். + +எடுத்துக்காட்டு :- நவராகமாலிகை வர்ணத்தில் +பா தா ஸா +ப த ஸ + +சில கிருதிகளில் ஏதாவது ஓர் அங்கத்தின் முடிவில் ஸ்வரங்களும், சாகித்தியமும், ஜதிகளும் சேர்ந்து வருவதுண்டு. இவ்வாறு சேர்ந்து வரும் பகுதிகளை சொற்கட்டு ஸ்வரம் என்கிறோம். இது பெரும்பாலும் கணபதி, நடராஜர், கிருஷ்ணன் முதலிய நாட்டிய சம்பந்தமான தெய்வங்களைப் பற்றிய இசை வடிவங்களில் காணப்படும். இவற்றைப் பாடும் போது விறுவ்றுப்பும், கம்பீர உணர்வும் ஏற்படுகின்றது. + +எடுத்துக்காட்டு :- ""ஆனந்த நடனப்பிரகாசம்"" (கேதாரம் – சாபு – முத்துசுவாமி தீட்சிதர்) + +சொற்கட்டுப் பகுதி முழு சாகித்தியமாகவே பொருள் கொடுக்குமானால் அதை சொற்கட்டு சாகித்தியம் என்கிறோம். + +""ஆடியபாதா"" (சங்கராபரணம் - ஆதி - கோபாலகிருஷ்ண பாரதியார்) என்ற கிருதியில் கீழ்காணும் வரிகள் அருமையான சொற்கட்டு சாகித்தியத்தைக் கொண்டுள்ளது. +எடுத்துக்காட்டு :- ""நந்தி மத்தளம் போடவும் தகும் தகும் தகும் தகும் என்று நடனம்"" + +கோபுச்சயதி என்பது பசுவின் வாலைப் போல ஆரம்பத்தில் அகலமாகவும் பின் குறுகிக் கொண்டே போகும் சாகித்திய அமைப்பு ஆகும். + +எடுத்துக்காட்டு :- ""தியாகராஜா"" (ஆனந்த பைரவி - ஆதி - முத்துசுவாமி தீஷிதர்) + +தியாகராஜ யோக வைபவம் + +யாகராஜ யோக வைபவம் + +ராஜ யோக வைபவம் + +யோக வைபவம் + +வைபவம் + +பவம் + +வம் + +சுரோத்தவாகயதி என்பது ஆற்றைப் போல தொடக்கத்தில் குறுகியும் பின் விரிந்து கொண்டே போகும் சாகித்திய அமைப்பு ஆகும். +எடுத்துக்காட்டுக்கள் :- ""தியாகராஜா"" (ஆனந்த பைரவி - ஆதி - முத்துஸ்வாமி தீ���ிதர்) + +சம் + +பிரகாசம் + +சுவரூப பிரகாசம் + +சகல சுவரூப பிரகாசம் + +சகல தத்வ சுவரூப பிரகாசம் + +சிவசக்தி ஆதி சகல தத்வ சுவரூப பிரகாசம் + +""அடுத்தானை"" (எதுகுலகாம்போஜி - திரிபுடை) எனத் தொடங்கும் தேவாரப் பாடலில் கீழ்க் கண்டவாறு உள்ளது. + +கொடுத்தானை + +பதம் கொடுத்தானை + +பாசுபதம் கொடுத்தானை + +அர்ச்சுனர்க்கு பாசுபதம் கொடுத்தானை + +ஒரு பாடலின் ஒவ்வொரு வரியிலும் வரைமுறையாக எந்த ஓர் எழுத்து அல்லது எழுத்துக்கள் திரும்பத் திரும்ப இனிமையுடன் ஒலிக்கின்றதோ அவற்றுக்கு பிராசம் என்று பெயர். இது மூன்று வகைப் படும். + +1. ஆதிப்பிராசம் (அட்சரப் பிராசம்) :- இதை "முதல் அழகு" என்றும் "எதுகை" என்றும் அழைப்பதுண்டு. +எடுத்துக்காட்டு :- ""தோடுடைய செவியன்"" (சம்பந்தர் தேவாரம்) +இப்பாடலில் "டு" என்ற எழுத்து "ஆதிப்பிராசம்" அல்லது "துவி அட்சரப் பிராசம்" (முதல் அழகு) என அழைக்கப்படுகின்றது. + +2. அனுப்பிராசம் :- இதற்கு "இடையழகு" எனப்பெயர். +எடுத்துக்காட்டு :- ""எதுட நிலசிதே"" (தியாகராஜர் கிருதி - சங்கராபரணம் - ஆதி) +இப்பாடலின் சரணத்தில், + +""தரான தொரதனி பராகு நாயெட" + +"நுராம ஜேசிதே சுராசுருலுமே" + +"துராமி புடு ஈஹரா மிதனமே..."" + +"ரா" என்ற எழுத்து இடையிடையே வந்து இனிமையாக ஒலிப்பதால் இது "அனுப்பிராசம்" அல்லது "இடையழகு" என அழைக்கப்படுகின்றது. + +3. அன்னியப்பிராசம் :- இதற்கு "முடிவழகு" என்று பெயர். +எடுத்துக்காட்டு :- ""கருணாசாகரா"" (மாயூரம் வேதநாயகம்பிள்ளை - அடாணா - ஆதி) + +""நிச்சய ஞானமே நினது ஸ்வாதீனம்" + +"நீ தராவிடில் எனக்கேது மெய்ஞானம்" + +"அச்சமில்லாமலே அபயப் பிரதானம்..."" + +மேலே கொடுக்கப் பட்ட பாடலின் ஒவ்வொரு வரியிலும் இறுதியிலும் வரும் "னம்" என்ற எழுத்துக்கள் "அன்னியப்பிராசம்" அல்லது "முடிவழகு" எனப்படுகின்றது. + +ஒரு பாடலின் ஒரு சொல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளுடன் பயன்படுத்தப்பட்டால் அதற்கு யமகம் அல்லது மடக்கு என்று பெயர். +எடுத்துக்காட்டு :- ""தெலிசிராம"" (தியாகராஜர் கிருதி - பூர்ணச்சந்திரிக்கா - ஆதி) +இக்கீர்த்தனையில் "ராமா" என்ற சொல் பெண்கள், பிரம்மன் என்ற இரு பொருளைத் தருகின்றது. + +ஒரு பாடலில் இசை யாப்பிலக்கண ஒழுங்குகளுக்கு ஏற்ப ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு மணிப்பிரவாளம் என்று பெயர். +எடுத்துக்காட்டு :- ""வெங்கடாச்சலபதே"" (முத்துஸ்வாமி தீட்சிதர் - காபி - ஆதி) +இங்கு பல்லவியிலும், அனுபல்லவியிலும் சமஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. + +மேலே கூறப்பட்ட அம்சங்கள் அனைத்தும் பல்வேறு இசைப் பாடலாசிரியர்களால் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் கிருதிகளையும் கீர்த்தனைகளையும் நன்கு ஒளிரச் செய்யும் அணிகள். + + + + +இந்திய அமைதி காக்கும் படை + +இந்திய அமைதி காக்கும் படை (IPKF-Indian Peace Keeping Force) 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பப்பட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன் யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர்துறந்தார். இதுவே விடுதலைப் புலிகளுக்கும் இந்திய அமைதிப்படைகளுக்குமான போருக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. பின்னர் மார்ச் 31, 1990 அப்போதைய இலங்கை அதிபர் பிரேமதாசவினால் திருப்பி அனுப்பப்பட்டனர். + +ஸ்ரீ பெரும்புதூரில் மே 21, 1991 இல் நடைபெற்ற வாக்குச் சேகரிப்புக் கூட்டம் ஒன்றில் தற்கொலைக் குண்டுதாரியினால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அத்தற்கொலைப்படை பெண் புலிகள் இயக்கத்தை சேர்ந்தவர் எனச் சொல்லபடுகிறது.. இதற்கு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி இலங்கையில் இந்திய அமைதி காக்கும் படையினை அனுப்பியமை, இந்தியப் படையினரால் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டமை, பல தமிழ்ப் பெண்கள் இந்திய இராணுவ வீரர்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டமை ஆகியவை காரணமாக இந்திய நீதிமன்றங்களால் கருதப்படுகின்றது. + +இராஜீவ் காந்தி கொலையானது ஓர் துன்பியற் சம்பவம் என விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரான அன்டன் பாலசிங்கம் மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராஜீவ் காந்தி கொலைக்கும் தன் விடுதலை புலிகள் இயக்கத்துக்கும் எந்த தொடர்புமில்லை என பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்விகளில் கூறியுள்ளார். + + + + + +இலட்சுமி + +லட்சுமி, இலட்சுமி அல்லது லக்ஷ்மி என்ற பெயரில் உள்ள கட்டுரைகள்: + + + + + + + + + +சனவரி 10 + + + + + + + +தமிழ் இஸ்லாம் இணையத்தளம் + +2000ம் ஆண்டில், சவுதி அரேபியா ரியாத் மாநகரில் தகவல், மற்றும் தொழில் நுட்பத்துறையில் பணிபுரியும் தமிழ்நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் ஒன்று கூடி ஆலோசித்து தமிழ் முஸ்லீம் மக்களுக்காக குர்ஆன், சுன்னா, ஹதீஸ்களை தெளிவாக தமிழில் தரவேண்டும் என்ற நோக்குடன் துவங்கப்பட்டதே இந்த தமிழர்களுக்கான இஸ்லாமிய வலைமணை. + +துவங்கிய காலங்களில் ஏஓன்ரியலிஸம்.காம் என்று பெயரிடப்பட்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த தமிழ் வலைமணை பின்னர் தமிழ்இஸ்லாம்.காம் என்று பெயரிடப்பட்டு உலக வலம் வந்தது. ஆயிரக்கணக்கில் நேயர்களை பெற்றிருந்த இணையத்தளம் என்ற புகழும் இதற்கு உண்டு. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங், சவுதி அரேபியா, துபாய், குவைத், கத்தார், பஹ்ரைன், ஓமன், போன்ற நாடுகளிலிருந்தும் வாசகர்களைப் பெற்றிருக்கும் வலைமணை இது என்றும் சொல்லலாம். + + + + + +மரபுப்பொருளியல் + +மரபுப்பொருளியல் (Classical economics) என்பது முதன்மையாக தோற்றுவிக்கப்பட்ட நவீன பொருளியல் சிந்தனை கருத்துக்களாகும். ஆடம் சிமித்,டேவிட் ரிக்கார்டோ, தோமஸ் மால்துஸ், ஜோன் ஸ்ருவார்ட் மில் போன்ற பொருளியலாளர்கள் வெளியிட்ட கருத்துக்கள் மரபுப் பொருளியலாக கொள்ளப்படும். இவர்கள் தவிர பின் வந்த வில்லியம் பிர்ரி, யொகான் வான் தியூனென், கெய்ன்ஸ், கார்ல் மார்க்ஸ் போன்றவர்கள் மேற்கூறப்பட்ட பொருளியலளர்களின் கருத்துக்களை மேலும் தங்களது ஆய்வுகளின் மூலம் விரிவாக்கி மேம்படுத்தினார்கள். + +1776ம்,வெளியிடப்பட்ட அடம் ஸ்மித்தின் "நாடுகளின் செல்வங்கள்" ("The Wealth of Nations") எனும் நூலே மரபுப்பொருளியல் கருத்துக்களின் தொடக்க புள்ளியாகக் கருதப்படுகின்றது. +19ம் நூற்றாண்டில் செயற்பாடுடையாதாக காணப்பட்ட தொன்மைப்பொருளியல் கருத்துக்கள் பின்னர் புதிய மரபுப் பொருளியலாக (neoclassical economics) மாற்றமுற்றது. மரபுப்பொருளியலாளர்கள் (Classical economists) வளர்ச்சி, அபிவிருத்தி என்பன குறித்து விளக்கமளிப்பதில் பெரிதும் முயன்று அவற்றில் பகுதியளவான வெற்றியும் பெற்றுள்ளனர். தொழிற்புரட்சி காரணமாக நிலமானிய சமுதாய அமைப்பு முதலாளித்துவ சமூகமாக மாற்றம் கொள்ளத் தொடங���கிய காலகட்டத்திலே இவர்களுடைய உன்னதமான செயலூக்கமுள்ள கருத்துகள் வெளியிடப்பட்டன. +அத்துடன் ஆட்சியாளரின் விரும்பம் சாராமல் பொருளியல் கருத்துக்களை வெளியிட்டும் வந்தனர்.உதாரணமாக அடம் ஸ்மித் நாடுகளின் செல்வம் என்பதை அரச கருவூலத்திற்கு மாற்றாய் வருடாந்த தேசியவருமானத்தை கொள்கின்றமை இங்கே குறிப்பிடதகுந்த விடயங்களுள் ஒன்றாகும். + + + + + + +இருவர் (திரைப்படம்) + +இருவர் திரைப்படம் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன்லால், பிரகாஷ் ராஜ், நாசர் மற்றும் பலரும் நடித்திருந்தனர். + +கலைப்படம் / நாடகப்படம் / உண்மைப்படம் + +திரைப்பட நடிகராக வேண்டுமென்ற கனவுகளோடு வாழ்பவர் ஆனந்தன் (மோகன்லால்). இவருடைய கனவுகளை நிறைவேற்றும் வகையில் இவருடைய நண்பராகத் திகழ்கின்றார் கவிஞரான தமிழ்ச்செல்வம் (பிரகாஷ் ராஜ்). இருவரும் சமுதாயத்தில் மாற்றங்கள் ஏற்பட தங்களின் பழக்கப்பட்ட ஊடகங்களான கவிதை ஆற்றலின் மூலமும், நடிப்பாற்றலின் மூலமும் தெரிவித்து மக்களின் மனங்களைக் கவருகின்றனர். எழுத்தாளரான தமிழ்ச்செல்வன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கின்றார். தொடர்ந்து நடிகர் ஆனந்தனும் தமிழ்ச்செல்வன் உள்ள கட்சியில் சேர்ந்துகொள்கின்றார். இவர்கள் கட்சித் தலைவராகவிருந்த வேலுத்தம்பி (நாசர்) மரணத்திற்குப் பின்னர் இருவரிடையே பதவி ஆசை குடிகொள்ளத்தொடங்கியது. முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ச்செல்வனின் கட்சியில் உள்ளவர்களின் சொத்துக்களின் விபரங்களை மக்களுக்குத் தெரிவிக்கவேண்டுமென்று ஆனந்தன் எடுத்துரைக்கும்பொழுதிலிருந்து தமிழ்ச்செல்வனும், ஆனந்தும் பகைவர்களாகின்றனர். இதன்பின்னர் மத்திய அரசுடன் கூட்டு சேர்ந்து தனக்கென புதிய கட்சியொன்றினை ஆரம்பிக்கின்றார் ஆனந்தன். அவர் தனது கட்சி சார்பான கருத்துக்களை தனக்குச் சாதகமான ஊடகமான திரைப்படங்கள் மூலம் மக்களுக்கு விளம்பரம் செய்கின்றார். மக்கள் அவர் திரைப்படங்கள் மீதும் அவர் மீதும் கொண்டிருந்த பற்றுதல்கள் காரணமாக தேர்தலில் வெற்றிபெற்று முதல்வர் பதவியை ஏற்கின்றார். இதன் பின்னர் தன் அதிகாரத்தினைப்பயன்படுத்தி தமிழ்ச்செல்வனை சிறையில் அடைக்கவும் செய்கின்றார். இறுதியில் அவர் இறக்கும் சமயம் அவரின் பூதவுடலைப் பார்க்க வரும் தமிழ்ச்செல்வன் தன் நண்பனின் உடலைக்கூடப் பார்க்கமுடியாது போகவே மனம் நொந்து தன் நண்பனைத் தன் கவியினால் அரவணைத்துக்கொள்கின்றார். + +1998 தேசிய திரைப்பட விருது (இந்தியா) + + + + +கே. பி. ஹரன் + +கே. பி. ஹரன் (அக்டோபர் 17,1906 - அக்டோபர் 14, 1981) தமிழ்நாட்டிலும் இலங்கையிலும் தலைசிறந்த பத்திரிகையாளராக இருந்தவர். + +கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் எனப்படும் கே. பி. ஹரன் தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் திருவையாறு என்னும் ஊரில் பிறந்தார். தனது 23வது வயது முதல் தமிழ்ப்பத்திரிகை உலகில் பல பத்திரிகைகளில் பணியாற்றிய இவர் பத்திரிகைத் துறையில் 50 ஆண்டு அனுபவங்களைப் பெற்றவர். முதல் 10 ஆண்டுகள் சென்னையில் "தமிழ்நாடு", "ஸ்வராஜ்யா", "தாருல் இஸ்லாம்", "ஹனுமான்", "ஹிந்துஸ்தான்" ஆகிய பத்திரிகைகளிலும், பின்னர் இலங்கையில் வீரகேசரியில் (1939-1959) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும், ஈழநாட்டில் (1959-1979) 20 ஆண்டுகள் பிரதம ஆசிரியராகவும் எனத் தமிழ்ப் பத்திரிகை உலகில் 50 ஆண்டுகாலம் பணியாற்றியவர். 1959 இல் யாழ்ப்பாணத்தில் கே.சி.தங்கராசா மற்றும் மருத்துவர் சண்முகரத்தினம் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட "ஈழநாடு" இதழின் முதலாவது பிரதம ஆசிரியர் இவரேயாவார். + +வீரகேசரியில் "ஊர்க்குருவி" என்ற பெயரில் இவர் தினமும் எழுதிய கட்டுரைகள் தமிழ் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டவை. அதேபோன்று "ஈழநாடு" இதழில் "ஐயாறன்" என்ற பெயரில் எழுதியவையும் சிறப்பானவை. சில நேரங்களில் "கே.பி.எச்" என்ற பெயரிலும் எழுதியுள்ளார். + +ஈழத்தில் இவரது ஆன்மீகச் சொற்பொழிவுகள் பெயர்பெற்றவை. + +1979 இல் சென்னை திரும்பிய இவர் தனது இறுதிக் காலத்தை மயிலாப்பூரில் கழித்தார். இவர் 1981 இல் தனது 75 ஆவது வயதில் காலமானார். + + + + + + +அக்டோபர் 14 + + + + + + + +இந்தித் திரைப்பட நடிகர்களின் பட்டியல் + +
+ + + + +தமிழ்த் திரைப்படப் பாடகர்களின் பட்டியல் + +இப்பக்கம் தமிழ்த் திரைப்பட பாடகர்களை அகரவரிசையில் பட்டியல் இடுகிறது. + + + + + +அக்டோபர் 9 + + + + + + + +அ. க. செட்டியார் + +அ. க. செட்டியார் (நவம்பர் 3, 1911 - செப்டம்பர் 10, 1983) தமிழில் பயண இலக்கியம் என்னும் புதிய இலக்கிய வகைக்கு முன்னோடியாக அமைந்தவர். இதழாசிரியர், எழுத்தாளர். முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி வரலாற்று ஆவணப் படத்தை 1940 இல் தமிழில் எடுத்தவர். + +தமிழ் நாடு திருவண்ணாமலை அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த இவரின் இயற்பெயர் "கருப்பன்". தனது இளமைக்கல்வியைத் திருவண்ணாமலையில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பயின்றவர், மேற்படிப்பு எதையும் படிக்கவில்லை. பின்னர் 1935 இல் ஜப்பானில் இம்பீரியல் ஆர்ட்ஸ் கலைக்கழகத்தில் புகைப்படத்துறையைப் பயின்றார். சிறப்புப் பயிற்சிக்காக 1937இல் நியூயோர்க் சென்று அங்கு "Photographical Institute" இல் ஓராண்டு பயின்று டிப்ளோமா பட்டம் பெற்றார். + +முதன் முதலில் மகாத்மா காந்தி பற்றி 1940 ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணப் படம் எடுத்தவர் ஏ. கே. செட்டியாரே ஆவார். இந்தப் படம் தொடர்பாக செய்திகளைத் திரட்ட இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்றார். முதலில் 1937 ஆம் ஆண்டில் எஸ். எஸ். சமரியா என்ற கப்பலில் தென்னாபிரிக்கா சென்றார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் பயணம் செய்து பல நாட்டு அரசாங்கங்களிடமிருந்தும் தனியார்களிடம் இருந்தும் காந்தி தொடர்பான படச்சுருள்களைச் சேகரித்தார். சுமார் மூன்று ஆண்டு காலமாக சேகரிக்கப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து 12,000 அடி நீளமான "மகாத்மா காந்தி" படத்தை தமிழில் தயாரித்து வெளியிட்டார். சில நாட்களில் இது தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிட்டார். ஆனால் இவ் ஆவணப் படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை. இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் இந்தி மொழியில் திரையிடப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 23, 1948 இல் தமிழிலும் தெலுங்கிலும் திரையிடப்பட்டன.. இத்திரைப்படத்தின் பிரதிகள் (படிகள்) எதுவுமே இப்போது இல்லை. + +செட்டியார் பின்னர் இத்திரைப்படத்தை 1953 ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் ஹாலிவுட்டில் தயாரித்து அங்கு வெளியிட்டார். காணாமல் போனதாகக் கருதப்பட்ட இத்திரைப்படத்தின் படியொன்று முனைவர் ஆ. இரா. வேங்கடாசலபதியால் சான் பிரான்சிஸ்கோ மாநிலப் பல்கலைக்கழகத்தி���் கண்டுபிடிக்கப்பட்டு ஜனவரி 19, 2006 இல் சென்னையில் காண்பிக்கப்பட்டது. + +"Mahatma Gandhi: Twentieth Century Prophet" என்ற இந்த 55 நிமிட திரைப்படத்தில் 1912 ஆம் ஆண்டில் கோபாலகிருஷ்ண கோகலேயின் தென்னாப்பிரிக்கப் பயணம், அங்கு காந்தியுடனான சந்திப்பு, ஜவகர்லால் நேரு சக்கரம் சுற்றும் காட்சி, உப்புச் சத்தியாக்கிரகத்தை முடித்துக் கொண்டு காந்தி தண்டி கடற்கரையில் நீராடும் காட்சி போன்ற அரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. + +பயண இலக்கியத்தின் முன்னோடி என மதிக்கப்படும் செட்டியார் பல பயண நூல்களைப் படைத்ததுடன் மற்றவர்களது நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டும் உள்ளார். 1850 - 1925 காலப்பகுதியில் எழுதப்பட்ட பலரின் 140 கட்டுரைகளைத் தொகுத்து, "பயணக் கட்டுரைகள்" என்ற பெயரில் ஆறு நூல்களாக வெளியிட்டார். தாம் வெளிநாட்டுப்பயணம் மேற்கொண்டிருந்த போது பல இதழ்களுக்கு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பை "உலகம் சுற்றும் தமிழன்" என்ற பயண நூலாகத் தமிழில் எழுதி 1940 இல் வெளியிட்டார். இவர் எழுதிய பின்வரும் பயண நூல்கள் மிகச் சிறந்தவையாகக் கருதப்படுகின்றன: + +தமிழில் மிகச் சிறந்த ஆய்வுக்கட்டுரைகளையும் அறிவுக் கருத்துக்களையும் வெளியிடுவதற்கென்று குமரிமலர் என்ற மாத இதழைத் தொடங்கினார். இது செப்டம்பர் 1943 முதல் 1983 வரை 40 ஆண்டுகளாக வெளிவந்தது. ஏ. கே. செட்டியார் 20 வயதில் பர்மா சென்று இரங்கூனில் "தனவணிகன்" என்ற இதழை வெளியிட்டார். 1926 இல் பூதலூர் வைத்தியநாத ஐயர் "ஆனந்த விகடன்" என்ற பெயரில் நகைச்சுவை மாத இதழைத் தொடங்கியபோது அவரை ஊக்கப்படுத்தியவர் ஏ. கே. செட்டியார் ஆவார். + + + + + +வின்லினக்சு + +வின்லினக்ஸ் ஓரு க்னூ/லினக்ஸ் இயங்குதளம். இது விண்டோஸ் இயங்குதளத்தில் நிறுவிப் பயன்படுத்தத்தக்கது.. இது விண்டோஸ் இயங்குதளத்தினுள்ளேயே மாற்றங்கள் செய்து, தனிப்பயனாக்கி பயன்படுத்தப்படக்கூடியது. FAT32 முறையில் வடிவூட்டப்பட்ட வன்தட்டு வகிர்வுகளில் நிறுவப்படக்கூடியது . இது ஏனைய விண்டோஸ் வகிர்வுகளோடும் தொடர்பாடக்கூடியது. இது விண்டோஸ் 95, 98, மில்லேனியம், பதிப்புக்களில் இயங்கக்கூடியது. விண்டோஸ் 2000, XP, விஸ்டா இயங்குதளங்களில் இயங்காதெனினும் நிறுவப்படக்கூடியது. + +இதன் பிந்தைய பதிப்பு வின்லினக்ஸ் 2003 ஆகும் இது விண்டோஸ் கணினியில் ஓரு குறுக்கு வழியின் மூலம் ஆரம��பிக்கக்கூடியது. இவ்வாறு ஆரம்பித்ததும் விண்டோஸின் இயக்கமானது நிறுத்தப் பட்டு கணினி லினக்ஸ்ஸை ஆரம்பிக்கும். பின்னர் லினக்ஸ்ஸின் இயக்கத்தை நிறுத்தி கணினியை மீள ஆரம்பிக்கும்போது விண்டோஸில் கணினி பழையபடி இயங்கும். இது KDE பணிச்சூழலை பயனர்களுக்கு வழங்குகின்றது. வரைகலை இடைமுகம் KDE இல் இருந்து வருவதாகும் விண்டோஸில் இருந்து வருவதல்ல. + + + + + +சனவரி 9 + + + + + + + +கமலாம்பாள் சரித்திரம் + +கமலாம்பாள் சரித்திரம் தமிழில் வெளிவந்த முதல் தொடர்கதையாகவும் தமிழில் வெளிவந்த இரண்டாவது நாவலாகவும் (புதினம்) கருதப்படுகிறது. இதனை பி. ஆர். இராஜமையர் விவேக சிந்தாமணி இதழில் 1893 பெப்ரவரியில் இருந்து எழுதத் தொடங்கினார். + +விவேக சிந்தாமணியின் முதல் இரண்டு இதழ்களில் இப்புதினம் அநியாய அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்ற தலைப்பிலும் மூன்றாவது இதழில் இருந்து ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் சரித்திரம் என்னும் தலைப்பிலும் தொடர்ந்து வந்து 1895 ஜனவரியில் நிறைவுற்றது. விவேக சிந்தாமணியில் இக்கதை வெளிவந்தபோது "பி. ஆர். சிவசுப்பிரமணிய ஐயர்" என்ற பெயரிலேயே எழுதினார். + +ராஜமய்யர் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அழ்ந்த அறிவும், புலமையும் பெற்றிருந்தார். வில்லியம் தாக்கரே, கோல்ட் ஸ்மித் போன்ற ஆங்கில நாவலசிரியர்களை படித்திருந்தார். ஆயினும் "கமலாம்பாள் சரித்திரம்", எந்த ஆங்கில நடையின் தாக்கமும் இல்லாமல், தன்னுடைய கலைத்திறன் மற்றும் வாழ்க்கையினை நோக்கும் பாதை ஆகியவற்றை கொண்டு ஒரு புதிய இலக்கிய மரபை துவக்கிவைத்தார். + +சிறுகுளம் என்ற கிராமத்தில் வாழும், முத்துசாமி அய்யர் - கமலாம்பாள் என்ற தம்பதியினரை கதைமாந்தர்களாகக் கொண்டது இந்த நாவல். சிறுகுளத்திலிருந்து பனராஸ் வரை இந்நாவலின் களம் விரிந்திருக்கிறது. நிறைவாக வாழ்ந்த இத்தம்பதியர்களின் வாழ்க்கை, சுற்றம் மற்றும் பந்துமித்திரர்களின் அபவாதங்களால் சீரழிவதைப் பற்றிய கதைக் களனைக் கொண்டது இந்த நாவல். + +19ஆம் நூற்றாண்டின் மக்களினைப் பற்றியும், அவர்களுடைய வாழ்க்கை முறை, பேச்சுவழக்கு மற்றும் நாட்டுப்புற சூழல் பற்றி கூரியமான அவதானிப்பினை பதிவு செய்துள்ளது இந்த நாவல். இந்த அவதா��ிப்பினை பதிவு செய்ததாலும், தத்துவ மற்றும் இயல்பான நகைச்சுவை பரவியிருப்பதாலும், இந்நாவல் ஒரு பொக்கிஷமாக கருதப்படுகிறது. இந்நாவல் தெற்காசிய இலக்கியத்தின் ஒரு மைல் கல்லாக திகழ்கிறது. + +கமலாம்பாள் சரித்திரத்தின் முற்பகுதியானது ராஜமய்யரின் இலக்கியக் கலைத்திறனாலும், அனுபவ செழுமையாலும் நிறைந்துகிடக்கிறது. இயல்பான பேச்சும், பல வண்ணங்கள் கொண்ட நகைச்சுவையும், யதார்த்தமான நடையும், நடமாடும் கதைமாந்தரின் குணச்சித்திரமும் பிரமிக்க வைக்கும் நேர்த்தியோடு அமைந்திருக்கிறது. + +பி. ஆர். ராஜமய்யர் எழுதிய கமலாம்பாள் சரித்திரம். உலகக் கலாசார வரிசையில் வெளியிடுவதற்காக ஐக்கிய நாட்டு ஸ்தாபனம், சுமார் ஐம்பதாண்டுகளுக்கு (1950இல்) முன்பே தேர்ந்தெடுத்தது. அதன் ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகியது. என்ன காரணமோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டது. மொழிபெயர்ப்பும் தொலைந்துவிட்டது. + +பின்னர் இந்த நாவல், The Fatal Rumour என்று ஆங்கிலத்தில் ஸ்டூவர்ட் ப்ளாக்பர்ன் (Stuart Blackburn) என்பவர், பல ஆண்டுகள் அந்த நாவலை ஆராய்ந்து, 1999 இல் அடிக்குறிப்புகளும் சிறப்பு அகராதியும் இணைத்து அந்த நாவலை ஆங்கில மொழியில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்தால் வெளியிடச் செய்தார். இந்த மொழிபெயர்ப்பு, 2000ஆம் ஆண்டின் ஏ. கே. ராமானுஜன் மொழிமாற்றப் படைப்புக்கான விருதினைப் பெற்றது. + + + + + +செல்லினம் + +செல்லினம் என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான "முரசு நிறுவனம்" உருவாக்கியது. இதை தைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிட்டது. நோக்கியா, சாம்சங் போன்ற கருவிகளில் இயங்கி வந்த செல்லினம், பின்னர் ஐபோன், ஐபேடு, ஆண்டிராய்டில் இயங்கும் கருவிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரையிலும், ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானோர் இதை பதிவிறக்கி உள்ளனர், + + + + + +கலைப்படம் + +கலைப்படம் என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.திரைப்படத்தில் வரும் கதையின் தத்ரூபக் காட்சியமைப்புகள், எளிதில் புரிந்து கொள்ள இயலாத திரைக்கதை வடிவமைப்பு போன்ற பல நோக்கங்களைக் கொண்டு எடுக்கப்படுவதே கலைப்படம் எனப்படும். கலைப்படம் வாழ்க்கையில் நடைபெறும் அன்றாட உண்மைச் சம்பவங்களினையும், கதைகளினையும் இயக்குனரின் கலைப் பார்வையுடன் கேளிக்கை பார்வையற்று முற்றிலும் தத்ரூபமாக அமைக்கப்படுவதென்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலியத் திரைப்படங்கள் மற்றும் பிரெஞ்சுத் திரைப்படங்கள் பெரும்பாலும் கலைப்பட நயத்துடன் வெளிவருவது குறிப்பிடத்தக்கது. + + + + +நின்டென்டோ கேம்கியூப் + +நின்டென்டோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த நின்டென்டோ கேம்கியூப் நிகழ்பட ஆட்ட இயந்திரம் இந்நிறுவனத் தயாரிப்பில் வெளிவந்த நான்காவது இயந்திரமாகும். ஆறாம் தலைமுறையினருக்கான வெளியீடுகளான எக்ஸ் பாக்ஸ்,சேகா ட்ரீம்காஸ்ட்,பிளேஸ்டேசன் 2 போன்ற இயந்திரங்களுடன் செப்டம்பர் 14, 2001 ஜப்பானிலும்; நவம்பர் 18, 2001 வட அமெரிக்காவிலும்;மே 3, 2002 ஐரோப்பியக் கண்டத்திலும்; மே 17, 2002 ஆஸ்திரேலியாவிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. + + + + +2006 ஆம் ஆண்டின் உலக பணக்காரர்கள் பட்டியல் + +2006 ஆம் ஆண்டின் கணிப்பின்படி 49 நாடுகளிலிருந்தும் சுமார் 793 பில்லியனர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. + + + + + + +எட்மண்ட் ஃவெல்ப்ஸ் + +எட்மண்ட் எஸ். ஃவெல்ப்ஸ் (பி. ஜூலை 26, 1933) அவர்கள் ஒரு புகழ்பெற்ற பொருளியல் அறிஞர். இவர் 2006ஆம் ஆண்டுக்கான பொருளியல் நோபல் நினைவுப் பரிசைப் பெற்றார். இவர் அமெரிக்காவில் உள்ள இல்லினாய் மாநிலத்தில் உள்ள எவன்ஸ்ட்டன் என்னும் ஊரில் பிறந்தார். 1960களில் இவர் யேல் கவ்லெஸ் நிறுவனத்தில் இருந்தபொழுது முன்வைத்த பொருளியல் வளர்ச்சிக் கருத்துக்கள் புகழ் பெற்றவை. தனிமனிதர்களின் பொருளியல், சிறு நிறுவனங்களின் பொருளியல் போன்றவற்றை ஆராயும் சிற்பொருளியல் (microeconomics) துறையின் கருத்துக்களோடு, வேலையற்றோரின் எண்ணிக்கைநிலை, பணப்புழக்கம்-கூலி, பணவீக்கம் முதலிய பேரினப்பொருளியல் கருத்துக்களை உறவுப் படுத்தியது இவருடைய அறிவார்ந்த பொருளியல் கொள்கைகள் எனக் கருதப்படுகின்றது. + +ஃவெல்ப்ஸ் அவர்கள் 1955ல் ஆம்ஹெர்ஸ்ட் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். ப���ன்னர் யேல் பல்கலைக்கழகத்தில் 1959ஆம் ஆண்டில் முனைவர் பட்டம் பெற்றார். யேல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணியைத்தொடங்கிய பின், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்திலும், கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார். + +நோபல் பரிசுக் குழு அளித்த பட்டையத்தில் இவருடைய பொருளியல் கருத்துக்கள், குறுகிய-கால, நெடுங்காலப் பொருளியல் கொள்கைகளின் விளைவுகளுக்கு இடையே உள்ள உறவை ஆழ அறிந்துகொள்ள உதவியன என்று குறிப்பிடுகின்றது. + + + + + + + +அக்டோபர் 10 + + + + + + + +சனவரி 8 + + + + + + + +அக்டோபர் 11 + + + + + + + +பட்டாம்பூச்சி + +பட்டாம்பூச்சி அல்லது வண்ணத்துப் பூச்சி அல்லது வண்ணாத்திப் பூச்சி ("butterfly") என்பது கண்ணைக் கவரும், மிக அழகான நிறங்களில் இறக்கைகள் உள்ள பறக்கும் பூச்சி இனமாகும். பற்பல வண்ணங்களில் இறக்கைகள் கொண்டு, அழகாக இருப்பதனால், இவை வண்ணத்துப் பூச்சி எனவும் அழைக்கப்படுகின்றன. இப்பூச்சிகள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும், மிக ஒடிசலாக இங்கும் அங்கும் சிறகடித்துப் பறப்பதும் பலரையும் கண்டு களித்து இன்புற்ச்செய்யும். முட்டையிலிருந்து, குடம்பிநிலையில் புழுவாக அல்லது மயிர்க்கொட்டியாக உருமாறி, பின்னர் கூட்டுப்புழு எனப்படும் உறங்கு நிலைக்குப் போய், பின்னர் அழகான பட்டாம்பூச்சியாய் உருமாற்றம் பெறுவது மிகவும் வியப்பூட்டுவதாகும். பட்டாம்பூச்சிகள் உயிரின வகைப்பாடுகளில் லெப்பிடோப்டரா (Lepidoptera) என்னும் அறிவியல் பெயர் தாங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவை. இந்த அறிவியல் பெயரில் உள்ள" லெப்பிசு" (Lepis) என்பது செதில் என்று பொருள்படும், "தெரான்" (pteron) என்பது இறக்கை (சிறகு) என்று பொருள்படும். எனவே பட்டாம்பூச்சிகள் "செதிலிறகிகள்" என்னும் இனத்தைச் சேர்ந்தவை. பொதுவில் இரவில் இரை தேடும் விட்டில் பூச்சிகளும் இந்த செதிலிறகிகள் இனத்தில் அடங்குபவை.உண்மைப் பட்டாம்பூச்சிகள்(பாப்பிலியோனோய்டியா), தலைமைப் பட்டாம்பூச்சிகள் (எசுபெரியோடியா), அந்துப்பூச்சி பட்டாம்பூச்சிகள் (எடிலோய்டியா) முதலிய பலவும் இக்குடும்பத்தைச் சார்ந்தவைகளாகும்.40-50 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இடை இயோசீன் ச��ாப்தத்துடன் பட்டாம்பூச்சிப் படிமங்கள் தொடர்புடையனவாக நம்பப்படுகிறது. + +பட்டாம்பூச்சிகளில் 15,000 முதல் 20,000 வகையான பல்வேறு உள்ளினங்கள் உள்ளன. இவற்றில் மிகப்பெரியதான பட்டாம்பூச்சியானது பப்புவா நியூகினி நாட்டில் காணப்படும் "குயின் அலெக்ஸாண்டிரா" என்பதாகும். அது தன் இறக்கைகளை விரித்திருக்கும் பொழுது 28 செ.மீ நீளம் இருக்கும். அமெரிக்காவில் காணப்படும் "மேற்குக் குட்டிநீலம்" எனப்படும் பட்டாம்பூச்சி இறக்கையை விரித்திருக்கும் பொழுது 1 செ.மீ தான் இருக்கும். பட்டாம்பூச்சியின் இறக்கைகளில் காணப்படும் நிறங்கள் மிகப்பலவாகும். அதில் காணப்படும் நிறவடிவங்களும் கோலங்களும் அழகு வாய்ந்தவை. பட்டாம்பூச்சிகள் உலகில் பெரும்பாலான இடங்களில் வாழ்கின்றன. மிகப்பலவும் வெப்ப மண்டலக் காடுகளில் வாழ்ந்தாலும், சில குளிர்மிகுந்த உயர் மலைப்பகுதிகளிலும் (இமய மலையிலும்), கனடாவின் வடமுனைக்கு அருகான பகுதியிலும், கடும் வெப்பம் நிறைந்த பாலைநிலங்களிலும் கூட வாழ்கின்றன. இப்பூச்சிகள் பல்லுருத்தோற்றத்தை வெளிப்படுத்தினாலும் ஒன்றைப் போல மற்றொன்றின் தோற்றம், பண்புகள், ஒலியெழுப்புதல், இருப்பிடம் முதலியவற்றில் ஒன்றுபட்டு வண்ணத்துப்பூச்சிகளாகவே காணப்படுகின்றன. சில பட்டாம்பூச்சிகள் வியப்பூட்டும் விதமாக வெகுதொலைவு (3,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவு) வலசையாகப் பறந்து செல்கின்றன (எ.கா: வட அமெரிக்க செவ்வரசு பட்டாம்பூச்சி (monarch butterfly, மானார்க் பட்டாம்பூச்சி) சிலவகைப் பட்டாம்பூச்சிகள் ஒருசெல் உயிரினங்கள், ஈக்கள், எறும்புகள், முதுகெலும்பற்றவை மற்றும் முதுகெலும்புள்ளவை போன்றவற்றுடன் ஒட்டுண்ணிகளாகவும் வாழ்கின்றன. + +முழுவளர்ச்சியடைந்த பட்டாம்பூச்சிகள் மலரிலிருந்து தேனை உறிஞ்சிப் பருகுவதும் உணவு தேடுவதுமாகப் பறந்து திரிந்தாலும், இனப்பெருக்கம் செய்வது அவைகளின் இன்றியமையாத வாழ்க்கைக்கூறாகும். ஆண் பூச்சியோ பெண் பூச்சியோ இணைவு விருப்பத்தை தெரிவிக்கவும் அறியவும் சில குறிப்புகளைப் பயன்படுத்துகின்றன. இவை கண்ணால் காணக்கூடியதாகவோ மணமாக உணரக்கூடியதாகவோ இருக்கும். கண்ணால் காணக்கூடிய குறிப்புகள் (குறிகைகள், signals), தன் இறக்கைகளில் உள்ள செதில்களை அசைத்து புற ஊதாக்கதிர்களை பல்வேறு விதமாக எதிர்வுகொள்ளச் செய்கின்றன. இவ்வகைக் குறிப்புகள் மூலம் தான் ஆணா, பெண்ணா, எந்த இனத்தைச் சேர்ந்த பட்டாம்பூச்சி என்பனவற்றைத் தெரிவிக்கின்றன. குறிப்புச் செய்திகள் (குறிகைகள்) சரியாக இருந்தால் அவ்வினத்தைச் சேர்ந்த எதிர்பால் (ஆண்-பெண் பால்) பூச்சி இணைய இசைவு தரும். இறக்கைகளின் செதிலில் மணம்பரப்பும் வேதியல் பொருட்களும் உண்டு. இம்மணம்பரப்பிகள் வெகுதொலைவு செல்லும் திறன் கொண்டவை. எனவே வெகு தொலைவில் உள்ள தன் இனப் பட்டாம்பூச்சியை ஈர்க்க வல்லது. பெரும்பாலான இனங்களில், ஆண் பூச்சியும் பெண் பூச்சியும் புணர்ந்த பின், ஆண் பூச்சி இறந்து விடுகின்றது. புணர்ந்த பின் சில மணிநேரத்திலேயே பெண்பூச்சியால் முட்டையிட இயலும். எனவே பெண் பட்டாம்பூச்சிகள் முட்டைகளையிட தகுந்த இடம் தேடிச்சென்று முட்டைகளை இடுகின்றன. ஒவ்வொரு பட்டாம்பூச்சியும் தன் வளர்ச்சியில் நான்கு நிலைகளைக் கடக்கின்றன. (1) முட்டைப் பருவம், (2) புழுப் பருவம் (குடம்பிப் பருவம்) (3) கூட்டுப்புழு பருவம், (4) இறக்கைகளுடன் பறக்கவல்ல முழுப் பட்டாம்பூச்சி நிலை. + +பட்டாம்பூச்சியின் முட்டைகள் பல அளவிலும் வடிவிலும் நிறத்திலும் காணப்படுவன. சில நம் கண்ணுக்கே தெரியாத மிகச்சிறியனவாயும், சில 2.5 மில்லி மீட்டர் வரையிலும் உள்ளன. பெரும்பாலானவை மஞ்சள் அல்லது இளம்பச்சை நிறத்தில் சிறு உருண்டை, நீளுருண்டை முதலிய வடிவங்களில் இருப்பவை. சில மழு மழுப்பாகவும், சில சொரசொரப்பாகவும், சில வரிகள் உடையதாகவும் இருக்கும். பெண் பட்டாம்பூச்சிகள் தம்முட்டைகளைப் பெரும்பாலும் பின்னர் முட்டையிலிருந்து பொரிக்கும் புழுவுக்கு உணவாக அமையக் கூடிய இலைகளில் இடுகின்றன. முட்டையை இடும்முன் முட்டையில் உள்ள சிறு துளை வழியாக தான் புணர்ந்தபொழுது கிடைத்த விந்துகளை இத்துளையில் இடுகின்றன. பின்னர் கோந்து போன்ற ஓர் ஒட்டும் நீர்மத்தால் முட்டைகளை ஒன்றாக ஒட்ட வைக்கின்றன. சில முட்டைகள் சில நாட்களிலேயே பொரிக்கின்றன. சில பொரிப்பதற்கு பல மாதங்கள் கடக்கின்றன. முட்டையில் இருந்து வெளி வரும் புழு தன் உணவைத் தானேதான் தேர்ந்து உண்ணவேண்டும். + +முட்டையில் இருந்து முதலில் வெளிவரும் புழுக்கள், மிகுதியாக இருக்கும் முட்டைகளையே உண்டுவிடும். பின்னர் அருகில் உள்ள இலைகளை உண்ணத் தொடங்கும். புழு நிலையில் இருக்கும் பொழுது மிக விரைவாக நிறைய உணவு உட்கொள்ளுகின்றது. ஒரு நாளிலேயே தன் உடல் எடையை விட அதிகமாக உணவு உட்கொள்ளும். இப்புழுக்கள் பார்ப்பதற்குப் பொதுவாக பச்சை நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருக்கும். சிலவற்றின் உடலில் வரிவரியாய் பல நிற அமைப்புகளும் கொண்டிருக்கும். சில புழுக்கள் உடலில் முடிகளுடன் இருக்கும். இவைகளை கம்பளிப்புழுக்கள் அல்லது மயிர்க்கொட்டிகள் என்றும் கூறுவர். இதன் வேறு பெயர்கள் கம்பளிப்பூச்சி, பச்சைப்புழு, எரிபுழு, சடைப்பூச்சி, மயிர்க்குட்டி (மயிர்க்கொட்டி என்றும் சொல்வர்), முசுக்கட்டைப்பூச்சி என்பனவாகும்.பொதுவாக புழுவின் உடல் அமைப்பு தன்னைத் தன் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிக் கொள்ளுமாறு இருக்கும். +புழுவின் உடலில் தெளிவாக அடையாளம் காணுமாறு உடலுறுப்புகள் இருக்கும். உடலில் 14 பகுதிகள் மடிப்புகளாகத் தெரியும். முதல் பகுதியில் தலையும், அதில் இருக்கும் மெல்லும் வாய் உறுப்புகளும், இரு உணர்விழைகளும் இருக்கும். தலைப்பகுதியில் இரு புறமும் பக்கத்துக்கு ஆறு கண்களாக மொத்தம் பன்னிரண்டு கண்கள் இருக்கும். இக்கண்கள் உருவங்களைப் பார்க்க இயலாவிடிலும், வெளிச்சம் இருட்டு போன்ற ஒளியடர்த்தியை உணர வல்லவை. + +புழுவின் உடலில் உள்ள அடுத்த மூன்று பகுதிகளும் மார்புப் பகுதியாகும். இம்மூன்று பகுதிகளில் ஒவ்வொன்றிலும் இரு இணைக்கப்பட்ட கால்கள் வீதம் ஆறு கால்கள் உள்ளன. இவையன்றி பெரும்பாலான புழுக்களின் உடலின் ஏழாவது, எட்டாவது, ஒன்பதாவது, பத்தாவது பகுதிகளில் ஒரு பகுதிக்கு இரு கால் போன்ற உறுப்புகளுடன் எட்டு போலிக்கால்கள் உள்ளன. உடலின் இரு புறமும் உள்ள மூச்சுத்துளை வழியாக மூச்சு விடுகின்றது. + +புழுவின் வாய்ப்பகுதிக்குக் கீழே சற்று நீண்டு தொங்கிகொண்டு இருக்கும் ஒரு சிறு உறுப்பும் உண்டு. "கோந்துமிழி" என்னும் இப்பகுதியானது ஒட்டும் பண்புள்ள நீர்மத்தை நீரிழையாக வெளிவிடும் திறன் கொண்டது. இந்நீர்மம் உலர்ந்து பட்டுபோன்ற இழையாக மாறுகின்றது. இவ்வமைப்பு புழு ஊர்ந்து செல்லும் இடங்களுக்கு ஒரு பற்றுக்கோடாக இருந்து உதவுகின்றது. புழுவின் வால்புறம் ஒரு கால் போன்ற பற்றும் அமைப்பும் உள்ளது. இதனைக் குண்டிக்கால் அல்லது கழிவாய்க்கால் (anal proleg) எனலாம். புழு நிலையானது ஏறத்தாழ இரண்டு கிழமைகளே (வாரங்களே) நீடிக்கும். இக்காலத்தில் ஏ���ாளமாக உணவை உண்ணுவதால் மிக விரைந்து உடல் பருக்கும். ஆனால் புழுவின் மேல் தோல் அதிகம் விரிவடைந்து தர இயலாது. அதனால் நீளவாக்கில் மேல் தோல் பிளவுறும். ஆனால் அப்படிப் பிளவுறும் முன்னர் உள்ளே ஒரு தோலுறை உருவாகும். மேற்தோலை "புற எலும்புறை" (exoskeleton) என்று அழைப்பர். புதிதாக உண்டான புற எலும்புறை இளகி இருப்பதால், உடல் வேண்டிய அளவு முதலில் விரிந்து கொடுக்கும். பிறகு புழுவானது அதிகம் அசையாமல் நகராமல் சில மணிநேரம் இருக்கும். இக்காலத்தில் புற எலும்புறை வலுவுற்று உறுதி பெறுகின்றது. இது போல புழுவானது தன் புற எலும்புறையை நான்கைந்து தடவை மாற்றும். + +புழுவானது அந்நிலைக்கான முழு வளர்ச்சியை அடைந்தபின், அடுத்த நிலையாகிய கூட்டுப்புழு நிலைக்கு அணியமாகின்றது (தயாராகின்றது). ஒரு சில பட்டாம்பூச்சி இனங்களில், முழு வளர்ச்சி அடைந்த புழுவானது தன் கோந்துமிழி உறுப்பின் உதவியால் பட்டுநூல் போன்ற இழையை வெளியுமிழ்ந்து தன்னைச்சுற்றி ஒரு கூடு கட்டிக்கொள்ளுகின்றது. முற்றிலுமாய் தன்னுடலைச் சுற்றி நூலிழை போன்ற கூடு கட்டியபின், புழுவின் புற எலும்புறையானது தலைப்பக்கம் பிளவுற்று, அதன் வழியாக புழு பாதுகாப்பாக கூட்டுக்குள்ளேயே வெளிவந்து இருக்கும். இப்படி கூட்டுக்குள் இருக்கும் நிலையே கூட்டுப்புழு நிலை என்பதாகும். இப்படியாக கூட்டுப்புழு நிலையில் அசையாமல் சில நாட்கள் இருக்கும் (சில இனங்களில் இந்நிலை ஒராண்டுக்கு மேலேயும் இருக்கும்). இக்காலப்பகுதியில் கூட்டுக்குள் இருக்கும் புழுவானது வியப்பான மாறுதல்களுக்கு உள்ளாகின்றது. உடல் உறுப்புகள் உள்ளும் புறமுமாய் முற்றிலுமாய் உருமாறுகின்றது. பறக்க வல்ல செதில்களினால் ஆன இறக்கைகளும் முளைக்கின்றன. + +கூட்டுக்குள் முழு வளர்ச்சி அடைந்தபின், பட்டாம்பூச்சியானது இருந்து காலால் உந்தி கூட்டில் இருந்து வெளிப்படுகின்றது. இப்படி கூட்டில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள சில நிமிடங்களே ஆகும். வெளி வந்தவுடன், பட்டாம்பூச்சியின் இறக்கைகள் சற்று ஈரமாய் இருக்கும். புதிய புற எலும்புறையும் சற்று இளக்கமாக இருக்கும். வெளிவந்தவுடன் பட்டாம்பூச்சியானது தன்னுடைய உடற்தசையை இறுக்கி, காற்றையும் இரத்தத்தையும் அமுக்கித் தன்னுடலெங்கும் செலுத்துகின்றது. கூட்டுப்புழு நிலையில் இருந்து வெளியேறிய பட்டாம்பூச்சி ஏறத்தாழ ஒரு மணி நேரத்தில் இறக்கையை மேலும் கீழுமாய் அடித்துப் பறக்க அணியமாய் இருக்கும். முழுப் பூச்சிநிலையை அடைந்த பட்டாம்பூச்சிக்கு ஆறு நீளமான கால்களும், உறிஞ்சுகுழாய்களும், இரண்டு நீண்ட உணர்விழைகளும், ஒரு பக்கத்துக்கு இரண்டு இறக்கைகளாக நான்கு இறக்கைகளும், தலை-மார்பு-வயிறு என முப்பாகம் கொண்ட உடலுமாக தோற்றம் அளிக்கும். இப்படி முழுவளர்ச்சி அடைந்த பட்டாம் பூச்சி ஓரிரு கிழமைகள்தாம் (வாரங்கள்தாம்) வாழுகின்றன. ஒரு சில பட்டாம்பூச்சி இனங்கள் ஒராண்டு, ஒன்றரை ஆண்டு வரையும் வாழுகின்றன. +பட்டாம் பூச்சிகள் இலங்கையிலிருந்து மதுரைக்கு பருவகாலங்களில் வலசை வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. +இவற்றில் மதுரைப்பகுதியில் மட்டுமே 70 வகையான பட்டம்பூச்சிகள் காணப்படுகின்றன. அவற்றில் பருபலா வெள்ளையன், வெண்புள்ளி கருப்பன், மயில் அழகி, நீல வசீகரன் என்பன போன்ற பட்டம்பூச்சிகளும் இவற்றில் அடங்கும். +பொதுவாகப் பறவைகள் எந்தப் பூச்சியைப் பார்த்தாலும் சாப்பிட்டுவிடும். ஆனால் பட்டாம்பூச்சிகளை பெரும்பாலும் பறவைகள் வேட்டையாடுவதில்லை. காரணம் அதிக வண்ணங்களோடு பளிச்சென்று இருக்கும் உயிரினங்கள் ஆபத்தானவை எனப் பறவைகளின் மூளையில் பதிவாகி இருக்கிறது. + +பட்டாம்பூச்சிகள் பெரும் பாலும் நச்சுச்செடிகளின் இலைகளில்தான் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும். அந்த முட்டையிலிருந்து வெளிவரும் இளம் கம்பளிப்புழு, அந்த நச்சு இலைகளைத் தின்றே வளர்கிறது. இதனால், அதன் உடலிலேயே நச்சு கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்துவிடுகிறது. பட்டாம்பூச்சியாக உருவெடுத்த பிறகும் இந்த நச்சுத்தன்மை நீடிக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தெரியாமல் பறவைகள் பட்டாம்பூச்சியைக் கொத்தித் தின்றால் பறவைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுமாம். +ஆனால் வயதான பிறகு பட்டாம்பூச்சியின் உடலில் விஷத்தன்மை குறைந்துவிடுமாம். அப்போது அதன் வண்ண நிறமும் மங்கிவிடும். இதைப் புரிந்து கொள்ளும் சில புத்திசாலிப் பறவைகள், பட்டாம்பூச்சியைக் கொத்தி தின்றுவிடுகின்றன. + +வளர்ந்த பட்டாம்பூச்சி நான்கு சிறகுகள்: முன்னிறகும் பின்னிறகும் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் உடலிக் காணப்படும். உடல் மூன்று கூறுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்: தலை, மார்பு மற்றும் அடிவயிறு. அவற்றுக்கு இரு உணர்கொம்புகளும், இரு கூட்டுகள் கண்கள், மற்றும் ஒரு உறிஞ்சுகுழல் காணப்படும். + + + + + + +சனவரி 7 + + + + + + + +உயரம் தாண்டுதல் + +உயரம் பாய்தல் என்பது தடகள விளையாட்டுக்களில் ஒன்றாகும். இதிலே போட்டியாளர்கள், குறித்த அளவு உயரங்களில் கிடை நிலையில் வைக்கப்படும் சட்டம் (bar) ஒன்றைத் தாண்டிப் பாய்தல் வேண்டும். ஜேவியர் சாட்டோமேயர் (Javier Sotomayor) என்பவரே இப்பொழுது இவ்விளையாட்டில் உலக சாதனையாளராக உள்ளார். இவர் பாய்ந்த உயரம் 8 அடி 1/2 அங்குலம் ஆகும். + +இவ்விளையாட்டுக்கான போட்டி ஒன்றில், தாண்ட வேண்டிய சட்டம் ஆரம்பத்தில் குறைந்த அளவு உயரத்தில் வைக்கப்படும். பின்னர், ஒரு குறிப்பிட்ட அளவினால் உயர்த்திச் செல்லப்படும். இந்த அளவு பொதுவாக 3 சமீ அல்லது 5 சமீ ஆக இருக்கும். சாதனைகளுக்காகப் பாயும் போது உயரம் ஒவ்வொரு சதம மீட்டரால் உயர்த்தப்படுவதும் உண்டு. எந்த உயரத்தில் தொடங்குனது என்பதை ஒவ்வொரு போடியாளரும் தாங்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட உயரத்தை ஒருவர் தாண்டி விட்டால், பின்வருபவர்கள் அதிலும் குறைந்த உயரத்தில் பாயத் தொடங்க முடியாது. ஒரு குறிப்பிட்ட உயரத்தை முயற்சிப்பதா இல்லையா என்பதைப் போட்டியாளரே தீர்மானித்துக் கொள்லலாம். ஒவ்வொரு போட்டியாளருக்கும் ஒரு குறிப்பிட்ட உயரத்தைத் தாண்ட மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்படும். அவ்வுயரத்தைப் பாயத் தொடங்கிய பின்னரும், தொடர்ந்து வரும் வாய்ப்புக்களை விட்டுவிட்டு அடுத்த உயரத்தைப் பாய முயற்சிக்கலாம். ஆனால், குறிப்பிட்டதொரு உயரத்தில் மூன்று வாய்ப்புக்களிலும் தோல்வியுறும் போட்டியாளர்கள், போட்டியிலிருந்து விலக்கப்படுவர். அதிக உயரம் தாண்டும் போட்டியாளர் வெற்றி பெற்றவர் ஆவார். ஒன்ன்றுக்கு மேற்பட்ட போட்டியாளர்கள் ஒரே அளவு ஆகக்கூடிய உயரத்தைத் தாண்டியிருந்தால், இறுதி உயரத்தைப் பாயும்போது, குறைந்த அளவு வாய்ப்புக்களைப் பயன்படுத்தியவரே வென்றவராக அறிவிக்கப்படுவார். இதிலும் சமநிலை காணப்பட்டால், முழுப் போட்டியிலும் குறைந்த அளவு தோல்வியில் முடிந்த முயற்சிகளுடன் கூடிய போட்டியாளர் வெல்வார். இதிலும் முடிவு எட்டப்பட முடியாவிட்டால், அப்போட்டிய���ளர்கள் மீண்டும் பாய வாய்ப்பு அளிக்கப்படும். இவ்வாறு அளிக்கப்படும் மேலதிக வாய்ப்புக்களும், சாதனைகளுக்காகக் கணக்கில் எடுக்கப்படும். + + + + +அ. ஜெ. கனகரத்னா + +அலோசியசு ஜெயராஜ் கனகரத்னா அல்லது ஏ. ஜே. கனகரத்னா ("A. J. Canagaratna", ஆகத்து 26, 1934 - அக்டோபர் 11, 2006) ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் உழைத்தவரும் தலைசிறந்த விமர்சகரும் ஈழத்து எழுத்தாளரும் ஆவார். ஆங்கில இலக்கியம், தமிழ் இலக்கியம், இலக்கிய விமர்சனம், நவீன இலக்கியம், நாடகம் என்று பல்துறை ஆளுமை மிக்கவராகத் திகழ்ந்தவர். பல இளம் எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகவும், ஆசானாகவும் அடக்கமான தொண்டு செய்த இவர் பொதுவாக "ஏஜே" என்றே அழைக்கப்பட்டார். + +ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட அலோசியஸ் ஜெயராஜ் கனகரத்னா யாழ்ப்பாணத்தில் வளர்ந்தவர். யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தேறினார். யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி, மட்டக்களப்பு தம்பிலுவில் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியராக இருந்த ஏ.ஜே. பின்னர்யாழ் பல்கலைக்கழகத்தில் சுமார் 18 ஆண்டு காலம் ஆங்கில போதனாசிரியராகப் பணிபுரிந்தார். + +"சிலோன் டெய்லி நியூஸ்" ("Ceylon Daily News") பத்திரிகையில் ஆசிரியர் குழுவில் கடமையாற்றிய ஏ.ஜே, பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த "Co-Operatur" இன் ஆசிரியராகவும் "Saturday Review" பத்திரிகையின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். "திசை" பத்திரிகையின் பிரதம ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். + +பல தமிழ்ச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, உள்நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளியிட்ட பெருமைக்கு உரியவர். இலங்கையின் மற்றொரு சிறந்த விமர்சகரான றெஜி சிறிவர்த்தனாவின் ஆக்கங்களை 2 தொகுதிகளாக வெளியிட்டவர் ஏ.ஜே. கனகரட்னா. + +"சாகித்திய அக்கடமி" விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற இவர் 2004 ஆம் ஆண்டில், சிறந்த தமிழறிஞர் விருதையும் பெற்றார். கனடாவில் இருந்து வெளியாகும் ""காலம்" இலக்கிய சஞ்சிகை "ஏ.ஜே.சிறப்பிதழ்" ஒன்றை வெளியிட்டிருந்தது. அந்நாட்டின் "இலக்கியத் தோட்டம்" அமைப்பு அண்மையில் அவருக்கு ஐம்பதினாயிரம் ரூபா வழங்கிக் கௌரவித்தது. +அவர் ச���றிது காலம் சுகவீனமுற்று மருத்துவ சிகிச்சைக்காகக் கொழும்பு சென்றிருந்தவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அக்டோபர் 11, 2006 அன்று காலமானார். + + + + + + + + +சிற்றிஸென்டியம் + +சிற்றிஸெண்டியம் திட்டமானது விக்கிப்பீடியாவை உருவாக்கியவர்களுள் ஒருவரான "லாரி சாங்கரினால்" செப்டம்பர் 15, 2006 அன்று முன்மொழியப் பட்டதிட்டமானது விக்கிப்பீடியாவின் ஓர் கிளைத் திட்டமாகும். இத்திட்டமானது மக்களால் (Citizen) சுருக்கமாக (Compendium) எடுத்துரைத்தல் என்ற பொருள்படும் + +Citizendium.org இன் கருத்துப் படி இது விக்கிப்பீடியாவின் ஓர் கிளைத்திட்டமாகவே ஆரம்பிக்கப்படும். குனூ கட்டற்ற அனுமதி மூலம் ஆங்கில விக்கிப்பீடியாவின் தேர்ந்தெடுக்கப் பட்ட கட்டுரை அல்லாது ஓவ்வொரு கட்டுரையும் சிற்றிஸெண்டியத்தில் சேமிக்கப் படும். எனினும் சிற்றிஸெண்டியம் குழு மின்னஞ்சலில் உள்ளவர்களின் கருத்துப் படி ஆங்கில் விக்கிப்பீடியாவில் அநேகமான கட்டுரைகள் கலைக்களஞ்சியத் தரத்தில் இல்லை எனவே எல்லாக கட்டுரைகளையும் இணைப்பது சிற்றிஸெண்டியதின் தரத்தைப் பாதிக்கும் என்று கருதுகின்றார்கள். காலப்போக்கில் சிற்றிஸெண்டியம் திட்டத்தில் மேம்படுத்தப்படாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவில் இருந்து மேம்படுத்தப் படும். + +இந்தத திட்டத்தில் இலக்கானது துறைசார் வல்லுனர்களைப் பயன்படுத்தி புதிய சுருக்கமாக அறிவைப் பரப்புவதாகும். வல்லுனர்களின் வழிகாட்டல்களில் மக்கள் எழுதும் திட்டமே இதுவாகும். வல்லுனர்களின் கல்வித் தராதரங்கள் திறந்த முறைமூலமாகக் கண்டறியப் படும். + +சிற்றிசெண்டியம் திட்டத்தில் எவரும் எதேச்சையாக எழுதமுடியாது. + +ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் இந்தத் திட்ட்மானது பின்னர் ஏனைய மொழிகளுக்கும் விரிவு படுத்தப்படும் என்று எதிர்வுகூறப்படுகின்றது. + +நியூபீடியா திட்டமும் வல்லுனர்களின் வழிகாட்டலில் இணையமூடான கலைக்களஞ்சியம் ஒன்றை உருவாக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பெரிதாகக் கட்டுரைகள் ஏதும் இல்லாமல் தோல்வியில் இடைநிறுத்தப் பட்டது. இத்திட்டமும் நியூபிடியாக் கொள்கைகளை ஓரளவு கொண்டுள்ளதால் வெற்றிகொள்ளவது அவ்வளவு சுலபமான காரியம அல்லது. தவிர ஆங்கில மொழியிலேயே இன்னமும் இத்திட்டத்தில் கட்டு���ைகள் இல்லை தமிழில் வருவதற்கு நீண்டகாலம் எடுக்கலாம் அல்லது தமிழில் வராமலும் போகலாம். இப்போதைக்கு விக்கிப்பீடியாவில் கவனம் செலுத்துவதே நல்லது. + + + + +அக்டோபர் 12 + + + + + + + +சனவரி 6 + + + + + + + +திப்பு சுல்தான் + +திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனஹள்ளி – மே 4, 1799, ஸ்ரீரங்கப்பட்டணம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். பிரித்தானியப் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாகவிருந்த திப்பு தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு அகற்றுவதற்காக பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தைகூட நடத்தினார்.மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார். மே 4, 1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் போரின் போது இறந்தார். + +"கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் " திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்."ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்".என்று கடிதம் எழுதுகிறான் மார்க்வெஸ் வெல்லஸ்லி."ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று மரணப்படுக்கையில் திப்பு முழங்கினார். + +திப்பு சுல்தானின் ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடி. + +இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் முயற்சி ���டுத்துக்கொண்டார். உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதினையும் சர் பெர்னார்டு லோவல் எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபிக்கிறார். + +திப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், திப்பு சுல்தானை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டான். சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது. +துரோகத்தின் சின்னமாக கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது. +2015 ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது. + + + + + + +அக்டோபர் 13 + + + + + + + +பாரதி (திரைப்படம்) + +பாரதி திரைப்படம் 2000 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஞான ராஜசேகரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பாரதியாராக சாயாஜி ஷிண்டேயும், செல்லம்மாவாக தேவயானியும் நடித்துள்ள இத்திரைப்படம் 2000 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. + +இத்திரைப்படம் மகாகவி சுப்பிரமணிய பாரதியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படமாகும். இந்திய விடுதலைப் பேராட்டத்தில் பாரதியின் பங்கையும், பாரதியின் உ���ர்வான சிந்தனைகளும் இப்படத்தின் மூலமாக நாம் அறிந்து கொள்ளலாம். + +கலைப்படம் / வரலாற்றுப்படம் + +இத்திரைப்படம் இளையராஜா இசையமைத்த திரைப்படமாகும் + + + + + + +தமிழ்த் திரைப்படப் பாடகிகளின் பட்டியல் + + + + + +இந்திய நாடாளுமன்றம் + +இந்திய நாடாளுமன்றம் என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை () மற்றும் மக்களவை () என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. இவை இரண்டும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டவை ஆகும். + +அமைச்சரவை நாளுமன்றத்திற்கு, அதிலும் குறிப்பாக மக்களவைக்கு, கடமையுற்றது. + +மாநிலங்களவையின் 238 உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலுக்கு செல்ல வேண்டியிருக்கும். மக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். + +செயல் அதிகாரம் பிரதமரிடமும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அமைச்சரவையிடமும் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள கட்சி அல்லது கூட்டணியின் தலைவரை குடியரசுத் தலைவர் பிரதமராக நியமிப்பார். பிரதமரின் ஆலோசனைக்கேற்ப பிற அமைச்சர்களை குடியரசுத் தலைவர் அங்கீகரிப்பார். + + +மக்களவை அல்லது லோக் சபா இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். + +இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552. இது ஒன்றியப் பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினரகளான ஆங்கிலோ இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்படுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும். + +ஆங்கிலோ இந்தியரை பொறுத்தவ���ை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையை கூட்டவோ குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது. + +2009 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலின் மூலம் இந்தவை நாட்டின் 15 வது மக்களவையை துவக்கியுள்ளது. இவர்கள் மக்களின் நேரடியான சார்பாளர்கள் ஆவர். இவர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். அதன்பிறகு இதன் ஆயுள் மற்றும் பொறுப்புகள் தானாகவே செயலிழந்துவிடும். அவசரநிலைப்பிரகடன காலத்தின் இதன் செயல்பாடுகளை குறிப்பிட்டகாலம் வரை முடக்கப்படலாம் அல்லது ஒரு வருடம் காலம் வரை நீட்டித்து முடக்கலாம். மக்களவையை தலைமையேற்று வழிநடத்துபவராக மக்களவைத் தலைவர் செயல்படுகின்றார். இவரின் வழிகாட்டுதலின்படி மக்களவை உறுப்பினர்கள் மக்களவையில் செயல்படுகின்றனர். + +தற்பொழுது 15 வது மக்களவை நடைபெறுகின்றது. மக்களவைத் தொகுதிக்கான எல்லைகள் மற்றும் சீரமைவுகள் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதும் அல்லது தேர்தல் ஆணையத்தினராலும் மேற்கொள்ளப்படும். இருப்பினும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரை இந்த சீரமைவுகள் பாதிக்காது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதின்படி அந்த மக்களவையின் ஆயுள் முழுவதும் தொடர்வார். + +மாநிலங்களவை அல்லது ராஜ்ய சபா இந்திய நாடாளுமன்றத்தின் 250 உறுப்பினர்கள் கொண்ட மேலவை ஆகும். இவர்களில் 12 பேர் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் கலை, இலக்கியம், அறிவியல் போன்ற அவரவர்களுக்குரிய துறைகளில் சிறந்து விளங்குபவர்களாக இருப்பர். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர் மாநில சட்டசபை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்படுவர். இதன் கட்டமைவு இந்திய அரசியலமைப்பு சட்ட விதி 81 இல் கூறப்பட்டுள்ளதின்படி அமைக்கப்பட்டுள்ளது. + +இவர்களின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள். மேல்சபையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூர்த்தியாகும். குடியரசுத் துணைத்தலைவர் இந்த அவையின் தலைவராக இருப்பார். + +மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறுவதாகும் சபை கலைப்பிற்கு இது பொருந்தாது. இதன் அதிகாரங்கள் மக்களவ���க்கு ஈடானதாகவும் மக்களவைக்கென வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை குறைக்காதனவாகவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளை இரு அவைகளின் கூட்டு கூட்டு அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டு அமர்வுகளில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) தடை (வீட்டோ) அதிகாரங்களை கொண்டதாக கூட்டு கூட்டங்களில் கருதப்படுகின்றது. + +மாநிலங்களவையின் தற்பொழுதய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் மேதகு வெங்கையா நாயுடு பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்லைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர். + + +நாடாளுமன்றம் அல்லது இந்தியில் "சன்சத் பவன்" என்ப்படும் இம்மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 1912-1913 ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டு இதன் கட்டுமானம். 1921 இல் துவக்கப்பட்டு பின் 1927 இல் மாநிலங்களவைக்காகவும் (home of the concil of state), மைய சட்டமன்றத்திறகாகவும் மற்றும் இளவரசர்களின் மாளிகைக்காகவும் (Chamber of Princes) திறக்கப்பட்டது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்றும் கூறப்படுகின்றது. + +இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் அவைகள் மைய மண்டபமான ஜன்பத் அருகில் அமைக்கப்பட்டுள்ளது. இதனின்று செல்வதற்கு ஏதுவாக குடியரசுத்தலைவர் மாளிகைக்கு இணைக்கும் பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும். + + + + + +சனவரி 5 + + + + + + + +இலட்சுமி மித்தல் + +இலட்சுமி நிவாசு மித்தல் (லக்ஷ்மி நிவாஸ் மித்தல்) (சூன் 15, 1950) இலண்டன் நகரத்தில் வசிக்கும் இந்தியர். இராச்சசுத்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சுரு பகுதியில் சதுல்பூர் என்னும் ஊரில் பிறந்த இலட்சுமி மித்தல் இன்று கெனி��்சிட்டன், இலண்டனில் வசித்து வருகின்றார். பிரித்தானியாவிலேயே அதிக சொத்துக்களை உடைய இவர் அந்நாட்டின் பணக்காரர் பட்டியலில் முதலாவதாக உள்ளார். + +இலட்சுமி மித்தல் சிறுவயதில் தனது கூட்டுக் குடும்பத்தினருடன் சதுல்பூரில் ஜந்து ஆண்டுகள் தங்கியிருந்தார். லக்ஷ்மி மித்தல், மார்வாரி அகர்வால் இனத்தைச் சேர்ந்த எளிமையான குடும்பத்தில் பிறந்தவர். இவரது பாட்டனார் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர் மார்வாரி தொழில் நிறுவனம் ஒன்றில் வேலை செய்தார். மேலும் இலட்சுமி மித்தலின் தந்தை மோகன் கொல்கத்தாவில் உள்ள இரும்புத் தொழிற்சாலை நிறுவனத்தில் பங்காளராக விளங்கினார். 1969 ஆம் ஆண்டு புனித சேவியர் கல்லூரி, கொல்கத்தா கல்லூரியில் இலட்சுமி மித்தல் பட்டம் பெற்றார். + +1994 ஆம் ஆண்டுகளில் தந்தையின் தொழில் நிறுவனமாக விளங்கிய மித்தல் இரும்புத் தொழிலை வெளிநாடுகளில் வளர்க்கத் தொடங்கினார். இன்று உலகளவில் அதிக இரும்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக உள்ள மித்தல் இரும்பு நிறுவனத்தின் தலைவராக இலட்சுமி மித்தல் திகழ்கிறார். 22 சூன் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற இவர் மகள் வனிசாவின் திருமணத்திற்காக 65 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையிலான செலவுகளைச் செய்திருந்தார். மேலும் இத் திருமணமே உலகில் நடைபெற்ற அதிக செலவுகள் செய்யப்பெற்ற திருமண நிகழ்வாகும். + + + + + + +அ. பாலமனோகரன் + +அண்ணாமலை பாலமனோகரன் (பிறப்பு: சூலை 7, 1942) ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர். சிறந்த நாவலாசிரியர். முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தண்ணீரூற்று என்ற கிராமத்தில் பிறந்த இவர் "இளவழகன்" என்ற புனைபெயரில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார். வன்னி மண்ணின் மணம் கமழும் "நிலக்கிளி" என்னும் புதினம் சாகித்திய விருது பெற்றது. நாவல், சிறுகதை, மொழிபெயர்ப்பு, ஓவியம் என பலவழிகளில் தன் திறன் காட்டுபவர். தற்சமயம் டென்மார்க் நாட்டில் வசித்து வருகிறார். + +வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்றவர். 1962ல் ஆண்டான்குளம் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் தன் ஆசிரியப்பணியை ஆரம்பித்த இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் ஆங்கில ஆசிரியருக்கான சிறப்புப் பயிற்சி பெற்ற பின் 1967ல் மூதூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் ஆசிரியப்பணி ஏற்றார். பின்னர் முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரியில் பணியாற்றினார். + +மூதூரில் ஆசிரியராக இருக்கும்போதுதான் முதுபெரும் எழுத்தாளரான வ. அ. இராசரத்தினத்தின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. இவரது இலக்கியப்பணிக்கு இந்த நட்பே காரணமானது. சிந்தாமணி பத்திரிகையில் வெளியான "மலர்கள் நடப்பதில்லை" என்பதே இவரது முதலாவது சிறுகதையாகும். 1973ல் வீரகேசரி பிரசுரமாக இவரது புகழ்பெற்ற நாவலான 'நிலக்கிளி' வெளிவந்தது. அவ்வாண்டின் சிறந்த நாவலுக்கான சாகித்திய மண்டலப்பரிசு இந்நாவலுக்கே கிடைத்தது. மித்திரன் பத்திரிகையில் இவரது 'வண்ணக் கனவுகள்' என்ற தொடர் நாவல் வெளியானது. + + + + + + +கேம் ரெயிலர்ஸ் இணையத்தளம் + +கேம் ரெயிலர்ஸ் (Game trailers) இணையத்தளமானது புதியதாக மற்றும் பழைய நிகழ்பட ஆட்டங்களின் விளம்பர ஒளித்துண்டுகளை இலவசமாகக் காண்பிக்கப்படும் இணையத்தளமாக விளங்குகின்றது.மேலும் பல புதிய வெளியீடுகளான நிகழ்பட ஆட்டங்கள் நிகழ்பட ஆட்ட இயந்திரங்கள் போன்றவற்றின் செயற்திறன்கள் மற்றும் அதன் புள்ளிகள் பலவற்றினையும் தெளிவாக விளக்கும் இணையத்தளமாகவும் விளங்குகின்றது.இவ்விணையத்தளமானது எம்.டி.வி நிறுவனத்தினை நடத்தும் வியாகோம் நிறுவனத்தின் ஒரு வெளியீடு என்பதும் குறிப்பிடத்தக்கது. + + + + +அகிரா குரோசாவா + +அகிரா குரோசாவா (Akira Kurosawa) (ஜப்பானிய மொழி 黒澤 明 "குரோசாவா அகிரா", 黒沢 明 ஷின்ஜிடாய், 23 மார்ச், 1910 6 செப்டம்பர், 1998) உலகப் புகழ்பெற்ற ஜப்பானியக் கலைப்பட இயக்குனராவார்.1943 ஆம் ஆண்டு வெளியான சன்ஷிரோ சுகடா என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.1993 ஆம் ஆண்டு தனது இறுதிப்படைப்பான மடடாயோ திரைப்படத்தினை இயக்கிய அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருதினையும் பிரெஞ்சு விருதான லீஜியன் டி ஹானர் விருதினையும் பெற்றவரென்பது குறிப்பிடத்தக்கது. + + +"தெர்சு உசாலா" மென்மையான உணர்வுகள் வழியாக ஆழமான நட்பையும், அந்த நட்பின் வழியாக இயற்கையின் இயல்புகளையும் பிரமாண்டங்களையும்,கருணையையும் பற்றி விரிவாக பேசுகிறது ,அதே நேரத்தில் நம்முடைய நவீன வாழ்க்கைமுறை மாற்றத்தால் தவிர்க்க முடியாமல் அழிந்துக் கொண்டிருக்கும் இயற்கையையும்,முதுமையின் தாங்கவொண்ணா சிரமங்களையும் நுட்பமாக அலசுகிறது . படத்தின் கதை மிகவும் எளிமையானது. + +அகிரா குரோசாவா இயக்கிய முப்பது படங்களும் டிவிடிக்களில் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது அவரது படங்களின் ப்ளு-ரே தட்டுகள் +வெளியிடப்படுகின்றன. + +இவர் செப்டம்பர் 6, 1998 அன்று இதயத்திசு இறப்பால் காலமானார். இவர் பெயரில் இரண்டு திரைப்பட விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒன்று சான் பிரான்சிஸ்கோவின் அனைத்துலக திரைப்பட விழாவில் "அகிரா குரோசாவா வாழ்நாள் சாதனையாளர்" விருதாகவும், மற்றொன்று டோக்கியோ அனைத்துலக திரைப்பட விழாவில் "அகிரா குரோசாவா" விருதாகவும் வழங்கப்படுகிறது. அனகியம் பல்கலைக்கழகம் இவரது குடும்பத்தாரோடு இணைந்து "அகிரா குரோசாவா திரைப்படப் பள்ளி"யை துவக்கி அதன் மூலம் திரைப்பட இயக்கத்துக்கான பயிற்சியை வழங்கி வருகிறது. + +அகிரா குரோசாவாவின் திரைப்படங்களும் அவர் திரைப்படங்களை இயக்கும் முறையும் அவருக்கு பெரியளவு புகழை ஏற்படுத்தித் தந்தன. அதேசமயம் இவரின் திரைப்பட்ங்களுக்கு இவர் அதிகம் பொருட்செலவு செய்வதாகவும் வேறு பல விமர்சனங்களும் இவர் மேல் எழுந்ததுண்டு. + + + + + + + +ஸ்டீவன் ஸ்பில்பேர்க் + +ஸ்டீவன் ஆலென் ஸ்பில்பேர்க், (டிசம்பர் 18, 1946) அன்று சின்சினாட்டி நகரில் அமெரிக்காவில் பிறந்தார்.அப்பா கணினி தயாரிப்பில் ஈடுபட்ட மின்னியல் பொறியியலாளர்,அம்மா உணவு விடுதிகளில் பியானோ வாசிப்பாளர் ஆக இருந்தார். ஸ்பீல்பெர்க் அப்பா செல்லம்.அப்பா தன் உடைந்த ஸ்டில் காமிராவை அளித்தது தான் இவர் வாழ்வில் மிகப்பெரிய உந்துதல். +சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கார் விருதினை பெற்ற அமெரிக்கத் திரைப்பட இயக்குநரும், திரைப்படத் தயாரிப்பாளருமாவார். சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கார் விருதிற்காக ஆறு முறை பரிந்துரைக்கப்பட்ட இவர் ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட் மற்றும் சேவிங் ப்ரைவேற் றையான் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கான சிறந்த இயக்குநர் ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. +ஸ்டீவன் ஸ்பில்பேர்க் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம்வேர்க்ஸ் எஸ்கேஜியினைத் தனது நண்பர்களின் உதவியுடன் ஆரம்பித்தார். மேலும் திரைப்படமல்லாது பல தொலைக் காட்சித் தொடர்களையும், நிகழ்பட ஆட்டங்களின் திரைக்கதைகளினையும் தயாரித்து இயக்கவும் செய்தவர். + + + + + + +சிங்களத் திரைப்படத்துறை + +சிங்களத் திரைப்படத்துறை என்பது இலங்கையில் வாழும் சிங்களவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற ஒரு துறையாகும். பல தத்ரூபங்கள் அமையப்பெற்ற சிங்களத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு விருதுகளைப் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. + +1925 ஆம் ஆண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்டு சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட ராஜாகீய விக்ரமாயா ("Royal adventure") முதன் முதலில் தயாரிக்கப்பட்ட சிங்களத் திரைப்படமாகும். பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் 1947 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிடப்பட்ட கடவுனு பொறந்துவ ("The Broken Promise") திரைப்படமே முதன் முதலில் இலங்கையில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் இந்தியத் திரைப்படத் துறையினரால் வெளியிடப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. 1948 ஆம் ஆண்டு "சிரிசேன விமலவீர" வெளியிட்ட அம்மா என்ற அவரது முதற் திரைப்படம் மூலம் இந்தியத் திரைப்படத் துறைக்கும் சிங்களத் திரைப்படத் துறைக்கும் இருந்த ஒற்றுமைகளைக் கலைந்து புதிய திரைப்பட வகையினை வெளிப்படுத்தினார். 1956 ஆம் ஆண்டின் பண்டாரநாயக்கா ஆட்சிக் காலத்தில் புத்தமதத்தின் கூற்றுக்களுக்கு மதிப்பளித்து சிங்களத் திரைப்படங்கள் வெளிவந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் எடுக்கப்படும் திரைப்படங்களைப் போன்று காதல் கதைகள் அல்லாது பல வகைகளிலும் சிங்களத் திரைப்படங்கள் எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் வெளியிட்ட ரேகவா ("The Line of Destiny") திரைப்படத்தில் காதல் அற்ற பல விடயங்கள் ஆராயப்பட்டிருப்பதனையும் அறியலாம். மேலும் இத்திரைப்படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குகொண்ட முதல் சிங்களத் திரைப்படமென்பதும் குறிப்பிடத்தக்கது. +இத்திரைப்ப்டத்தினைத் தொடர்ந்து இவர் இயக்கிய கம்பெரலிய (Changing Village) டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்ப்ட விழாவில் கிராண்ட் பிரிக்ஸ் விருதைப் பெற்றது.மேலும் இவரின் படைப்பான நிதனய (Treasure)திரைப்படம் வெனிசில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெற்றதும் குறிப்பிடத்தக்கன. +இயக்கி வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. + + + + +தமிழ்நெட் + +தமிழ்நெட் ("Tamilnet") என்பது இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை உலகறியச் செய்துவரும் ஒரு செய்தி இணையத் தளம் ஆகும். ஈழப்போர், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் படுகொலைகள் சம்பந்தமான தகவல்களை வெளிப்படுத்தும் ஆங்கிலத்தில் அமைந்த, வணிக நோக்கற்ற ஒரு இணைய செய்தி ஊடகமாகும். இது 1997, சூன் 7 இல் ஆரம்பிக்கப்பட்டது. இத்தளம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல், வெளியிடப்பட்ட செய்திகளை ஆண்டு, மாதம், திகதி வாரியாக ஆவணப்படுத்தி வருவது இத்தளத்தின் ஒரு தனிச்சிறப்பாகும். + +2005 ஆம் ஆண்டில் தமிழ்நெட்டின் ஆசிரியரும் இலங்கையின் பிரபல இராணுவ ஆய்வாளரான தராக்கி சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். + +இந்தத் தளம் இலங்கையின் இனமுரண்பாடு, மனிதவுரிமை மீறல்கள், அரச வன்முறைகள் போன்றவற்றை அறிய முனையும் உலகின் ஏனைய சமூகத்தவரிடையேயும், உலகெங்கும் உள்ள தமிழர்களிடையேயும் பிரசித்திப்பெற்ற தளமாக மாற்றம் பெற்றது. இந்தத் தளத்தில் வெளியிடப்படும் செய்திகள் அநேகமான செய்தி ஊடகங்கள் போன்று அழிக்கப்படாமல் திகதி வாரியாக ஆவணப்படுத்தப்படுவதால், காலம் கடந்த செய்திகளையும் உடனடியாக எவரும் எளிதாக பார்வையிடும் வசதியினையும் கொண்டிருப்பதால், புலம்பெயர்ந்து வாழ்வோரின் பல்வேறு கோரிக்கைகளின் போது இத்தளத்தின் செய்திகள் மேற்கோளாகக் காட்டப்படுவதால், இத்தளம் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குப் பயன்மிக்கதாக அமைந்து வருகின்றது. + +அதேவேளை இலங்கை அரசு இலங்கை ஊடக முடக்கத்தை ஏற்படுத்தி, ஊடகங்களை முடக்கி வேளையில், தமிழ்நெட் இணையத்தளம் இலங்கை அரசத் தரப்பினருக்கு பெறும் சவாலாக இருந்தது. இதனால் தமிழ்நெட் புலிகளின் சார்பான ஒரு தளமாக இலங்கை அரசால் சித்தரிக்கப்பட்டது. + +தமிழ்நெட் தளத்தில் பிரதான ஆசிரியரான சிவராம், புலிகளின் எதிர் கொள்கைகளைக் கொண்ட புளொட் இயக்கத்தின் முன்னார் உறுப்பினராகவும், இலங்கையின் புகழ்பெற்ற செய்தியாளராக இருந்தும், அவரை ஒரு புலிகளின் ஆதரவாளராக இனங்காட்டிப் படுகொலையும் செய்யப்பட்டது. தற்போதும் தமிழ்நெட் தளம் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதால், அத்தளத்தினைப் புலிகளின் சார்பு தளமாகவும், அதன் செய்���ிகள் பக்கசார்பு உடையதாகவும் குற்றம் சுமத்தி வருகிறது. அதன் இன்னொரு கட்டச் செயல்பாடாக இலங்கையில் தமிழ்நெட் தளத்திற்கான இணக்கமும் ஒரு காலக்கட்டத்தில் மறுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. + +தமிழ்நெட் தளத்தினை இலங்கையில் உள்ளோர் பார்வையிடுவதற்கான அணுக்கம் மறுக்கப்பட்ட அதேவேளை, தமிழ்நெட் டிவி எனும் இணைய முகவரியில், மிகவும் இழிவான வகையிலும் ஆபாச படங்களையும் பயன்படுத்தி, தமிழ்நெட் தளத்தின் வடிவமைப்பையும், சின்னத்தினையும் பயன்படுத்தி செய்திகள் வெளியிடப்பட்டன. அத்துடன் தமிழ்நெட் டிவி எனும் இணையத்தளத்தில் வெளியிடப்படும் இழிவான செய்திகளை, இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான செய்திகள் வெளியிடப்படும் தளங்களில் "தமிழ்நெட்" எனும் பெயரில் பின்னூட்டங்கள் இட்டும், இழிவான செய்திகளை வெளியிட்டும், தமிழ்நெட் தளத்தினை அவமானப்படுத்தும் முயற்சியும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. + +இந்தப் போலியான தமிழ்நெட் டிவி இணையத்தளம், புலிகளை மட்டுமன்றி, பொதுவாகத் தமிழர்களை இழிவு படுத்தி, ஆபாசப் படங்களுடன் வெளியிட்டு வருகிறது. ஆப்பிரிக்கத் தமிழரான, மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, தமிழக மற்றும் மலேசிய தமிழ் அரசியலாளர்கள் போன்றவர்கள் பற்றி ஆபாசப்படங்களுடன் மிகவும் இழிவான வகையில் செய்திகள் வெளியிட்டு வருகின்றது. + +இலங்கையில் இணைய சேவை வழங்குனரூடாகத் தமிழ் நெட் இணையத் தளம் 19 ஜூன், 2007 முதல் டிசம்பர் 29 2007 வரையிலான காலப் பகுதியில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் அணுக்கம் மறுக்கப்பட்டுள்ளது. + + + + + +பரஹா + +பரஹா "ஷேஷாத்திரி சந்திரசேகரரினால்" விருத்தி செய்யப்பட்ட இந்திய மொழிகளைக் கணினியில் தட்டச்சுச் செய்ய உதவும் இலவச மென்பொருளாகும். பரஹா இலகுவாக ஆவணங்களை உருவாக்குவதற்கும், மின்னஞ்சலைகளை உருவாக்குவதற்கும் இணையப்பக்கங்களை உருவாக்குவதற்குமான மென்பொருளாகும். + +பரஹா 7.0 தமிழ்,கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, குஜராத்தி, குறுமி, வங்காளம், ஒரியா மொழிகளை ஆதரிக்கின்றது. + + + + + +இளஞ்சேட்சென்னி + +இளஞ்சேட்சென்னி, பண்டைத் தமிழகத்தில் இருந்த சோழநாட்டின் மன்னர்களுள் ஒருவன். இவன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்றும�� அழைக்கப்படுகிறான். கி.பி 1 ஆம் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்தவன் ஆதலால் இவன் முற்காலச் சோழ அரசர்கள் வரிசையில் உள்ளவன். இம் மன்னனைப் பற்றிக் கிடைக்கப்பெற்ற தகவல்கள் சங்க இலக்கிய நூல்களிலிருந்து கிடைக்கப் பெற்றவையே. புறநானூற்றிலும், அகநானூற்றிலும் இவனைப் பற்றிய பாடல்கள் உள்ளன. புறநானூற்றில், கி.பி முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும், பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் இவனைப்பற்றிப் பாடியுள்ளனர். + +கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தான். வம்பர், வடுகர் ஆகியோரை முறியடித்தவன் என இவனைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் மன்னனுடைய குதிரைப் படை, யானைப் படை என்பன பற்றிய குறிப்புக்களைத் தருகின்ற புறநானூற்றின் நான்காம் பாடல், அவன் குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது. + +இவன், அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தான். இவ்விருவருக்கும் பிறந்தவனே, +முற்காலச் சோழர்களுள் புகழ் பெற்றவனும், கூடுதலாக அறியப்பட்டவனுமான கரிகால் சோழன். கரிகாலன் சிறுவனாய் இருந்த போது இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டான். + +வேல்கெழு குட்டுவன் என்ற சேர மன்னன் இளஞ்சேட் சென்னியின் சமகாலத்தவர்களாகக் கருதப்படுகிறான். + + +உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி பற்றிப் பரணர் + + + + +விண்டோஸ் மில்லேனியம் + +விண்டோஸ் மில்லேனியம் 16/32பிட் கலப்பு வரைகலை இடைமுகமுடைய ஒர் இயங்குதளமாகும். இது செப்டெம்பர் 14, 2000 வெளியிடப்பட்டது. + +விண்டோஸ் 95, விண்டோஸ் 98 வழிவந்த விண்டோஸ் 2000 ஒப்பிடுகையில் வீட்டுப் பயன்பாட்டுக்காக உருவாக்கப் பட்ட ஓர் இயங்குதளமாகும். நிறுவனப் பயன்பாட்டுக்கான விண்டோஸ் 2000 இதற்கு 7 மாதங்கள் முன்னரே வெளியிடப்பட்டது. இது மைக்ரோசாப்ட் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5, விண்டோஸ் மீடியாபிளேயர் 7.0 மற்றும் அடிப்படையான நிகழ்படங்களை (வீடியோ) உருவாக்கி மாற்றங்களை உண்டுபண்ணக்கூடிய விண்டோஸ் மூவிமேக்கர் மென்பொருட்களை உள்ளடக்கியிருந்தது. இதில் இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.5 மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர் பழைய விண்டோஸ் இயங்கு தளங்களிலும் பதிவிறக்கம��� செய்து பயன்படுத்தக்கூடியவை. விண்டோஸ் XP ஹோம் பதிப்புப் போன்று, இது விண்டோஸ் NT வழிவந்த அலுவலங்களை இலக்காகக் கொண்ட இயங்குதளம் அன்று; மாறாக இது மைக்ரோசாப்ட் டாஸ் வழிவந்த ஓர் இயங்குதளமாகும். + +விண்டோஸ் மில்லேனியமே குறுகிய வாழ்நாள் உள்ள விண்டோஸ் இயங்குதளமாகும். மாறாக விண்டோஸ் XP மிக நீண்ட ஆயுட்காலமுள்ள இயங்குதளமாகும் விண்டோஸ் XP அக்டோபர் 25, 2001 வெளிவந்தது. விண்டோஸ் எக்சுப்பிக்கு அடுத்து வெளிவந்த விண்டோஸ் விஸ்டா 2007, சனவரி 30 அன்று வெளியானது. + +2006 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பிசிவேல்டு (ஆங்கிலம்:PCWorld) இதழ் மிகமோசமான தொழில் நுட்டப் மென்பொருட்களுள் இதை நான்காவதாக விண்டோஸ் மில்லேனியம் பதிப்பை இதிலுள்ள தொழில் நுட்பச் சிக்கல்களினால் தெரிவுசெய்தது. (முதல் மூன்று இடங்களைப் பிடித்தவை முறையே அமெரிக்கா ஆன்லைன், ரியல்பிளேயர், சின்கரனஸ் சாப்ட் ராம்.) + + + + +பல பயனர்கள் விண்டொஸ் மில்லேனியத்தைக் குறைகூறுவதற்கு வன்பொருட்களுக்கான ஒத்திசைவின்மையும் இயங்குதளம் நேர்த்தியாக இயங்காமையும், இயங்குதளம் உறைதலும், தொடங்கும் போதும் நிறுத்தும் போதும் உள்ள பிரச்சினைகளும் காரணமாக அமைந்தன. ஒத்திசைவின்மை வன்பொருட் தயாரிப்பாளர்கள் விண்டோஸ் 95, 98 இற்குத் தயாரித்த டிரைவர் மென்பொருட்களை சரிப்பார்க்காமலே மில்லேனியத்தில் பயன்படுத்தியதால் ஏற்பட்டது. பெரும்பாலான வேளைகளில் விண்டோஸ் மில்லேனியம் சரிவர இயங்குவதற்கு கணினியின் BIOS மேம்படுத்தல்கள் தேவைப்பட்டது. + +இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து விண்டோஸ் மில்லேனியத்தை ஓர் குழப்பமான இயங்குதளமாகத் தீர்மானித்தது. + +இவ்வாறாகப் பலகுழப்பங்கள் நிலவியதால் விண்டோஸ் மில்லேனியத்தில் வரும் "ME" எழுத்துக்களைப் பலரும் கிண்டலாக மைக்ரோசாப்ட் சோதனை (Microsoft Experiment), தவறுதலான பதிப்பு (Mistake Edition), புரியாத பதிப்பு (Miserable Edition), வேலைசெய்யாத பதிப்பு (Malfunctioning Edition), பெரும்பாலும் பிழைகள் (Mostly Errors), பலபிழைகள் (More Errors) என்றவாறு அழைத்தனர். + +வேறுசிலரோ இது தேவையே அற்றபதிப்பு, இதிலுள்ள பெரும்பாலான வசதிகளை கட்டணமின்றிப் பதிவிறக்கம் செய்யக் கூடிய மென்பொருட்கள் மூலம் பெற முடியும் என்றனர். + +பெரும்பாலும் அலுவலகக் கணினிகளை நோக்கிவெளிவந்த விண்டோஸ் NT சார்பான விண்டோஸ் 2000-த்தோடு வெளியான இது வீட்டுத்தேவைக்காகவே அறிமுகமானது. மைக்ரோசாப்ட் 2006, ஜூலை 11 அன்று விண்டோஸ் 98, விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்புடன் விண்டோஸ் மில்லேனியத்திற்கான தொழில்நுட்ப ஆதரவையும் விலக்கிக் கொண்டது. இது பழைய ஓர் இயங்குதளம் என்பதாக மைக்ரோசாப்ட் கருதுவதால் இதற்கான தொலைபேசியூடான ஆதரவையும், பாதுகாப்பு மேம்பாடுகளையும் இடைநிறுத்திக் கொண்டது. + +விண்டோஸ் 2000 ஐப்போன்றல்லாமல் இயங்குதளத்தை நிறுவும் போதே கோப்புக்களை ஆவணப்படுத்தும் மென்பொருளை நிறுவமாட்டாது. + +விண்டோஸ் மில்லேனியத்தின் குறைந்த வன்பொருள் தேவை, 150 MHz பெண்டியம் அல்லது அதனுடன் ஒத்தியங்கும் செயலியும், 320 மெகா பைட் இடவசதியும், 32 மெகாபைட் நினைவகமும் ஆகும். + +எனினும், ஆவணப் படுத்தப்படாத ஓர் முறையில் வேகம் குறைந்தகணினிகளில் "/nm" என்னும் மாற்றி(சுவிச்)களை தருவதன் மூலம் நிறுவ இயலும். + + + + + + +நலங்கிள்ளி + +நலங்கிள்ளி முற்காலச் சோழர்களுள் ஒருவன். இன்னொரு முற்காலச் சோழ மன்னனான நெடுங்கிள்ளி என்பவனுடன் ஏற்பட்ட அதிகாரப் போட்டி தொடர்பாகவே இவனுடைய பெயர் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. +புறநானூற்றில் 14 பாடல்களுக்குக் குறையாமல் நலங்கிள்ளியைப் புலவர்கள் பாடியுள்ளார்கள். இவற்றில் பாதிக்கும் மேலான பாடல்களை பாடியுள்ள கோவூர்கிழார், கரிகாலனைப்போன்று, நலங்கிள்ளியும் தமிழ் அரசர்களில் தலைமை ஏற்றான் என்று கூறுகிறார். இப்பாடல்களைக் கீழ்காணுமாறு மிகைப்படுத்திப் பாடியுள்ளார். + +"அறத்தின் பயனாகவே பொருளும் இன்பமும் நிலையாகக் கிடைக்கும் உன்னுடைய எதிரிகளாக இருக்கும் சேரர் பாண்டியர் உனக்குப்பின்னே வர உன்னுடைய ஒப்பற்ற வெண்கொற்றக்கொடை முழுநிலாப்போல புகழுடன் செல்லுகிறது. நீயும் அரண்மனைக்குள் அல்லது தலைநகருக்குள் இராமல் வெற்றிநடைபோட்டு, போர்க்களத்திலேயே இருக்கின்றாய். உன்னுடைய யானைகளோ, எதிரிகளுடைய நீண்டுயர்ந்த கோட்டைகளைத் தகர்க்கவல்லவை, உன்னுடைய படையோ, வீரக்கழலை உடைய மறவர்களைக் கொண்டது. அவர்கள் அடர்த்தியான காடுகளினுடே சென்று எதிரியின் நாட்டை அடைய அஞ்ச மாட்டார்கள். உன்னுடைய குதிரைப்படை, கீழைக்கடற்கரையில் புறப்பட்டால் மேலைக்கடற்கரைவரை பிடித்துத்தான் நிற்கும். எனவே நீ எங்கே படையெடுத்து விடுவாயோ என்று எந்த நேரமும் வடநாட்டு அரசர்கள் கவலையால் கண்துயிலாது இருக்கின்றனர். (புறம்.)" +தன் மன்னனைப் பலவாறு புகழந்து பாடிய புலவர் இச்சகம் பாடுபவர் அல்லர். மேற்சொன்ன பாடலுக்கு முரணாகக் கீழ்க்காணும் பாடலில, நெடுங்கிள்ளியைத் தோற்கடிக்கும் பொருட்டு, உறையூரை முற்றுகையிட்ட நலங்கிள்ளியிடம் சமாதானத்தை நிலை நாட்டக் கோரி வற்புறுத்திக் கூறுவதைக் காணுகிறோம். +"பெரிய பனையினது வெளியத் தோட்டைச் சூடினோனல்லன், கரிய தோட்டினையுடைய வேம்பினது தாரையுடையவனும் அல்லன், உன்னுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக்கட்டப்பட்டது, ஆதலால் உங்கள் ஒருவர் தோற்பினும், தோற்பது உங்கள் குடியன்றோ? இருவரும் வெல்லுதல் இயல்புமன்று ஆதலால் உனது செய்கை உன் குடிக்கு தக்கதொன்றின்று, ஆதலால் இதை(போரை)த்தவிர்த்தலே உமக்கு நல்லது +இப்புலவரது அறிவார்ந்த அறிவுரையை நலங்கிள்ளி, செவிமடுக்கவில்லை என்பது தெரிகிறது. காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி என்ற பட்டப்பெயரிலிருந்து, இவ்விருவருக்குமிடையே ஏற்பட்ட போர், நெடுங்கிள்ளி இறந்த பிறகே முடிவிற்கு வந்திருக்க வேண்டும். என்பதை அறிகிறோம். + +இவனது காலத்தில் வாழந்த பல மன்னர்களைப் போன்று நலங்கிள்ளியும் இலக்கியங்களில் ஈடுபாடு கொண்டிருந்தான். இவன் இயற்றிய பாடல்களில் இரண்டு புதுமையான உறுதிமொழி பற்றிக் கூறுகிறான். +"நட்பால் என்னிடம் வந்து வேண்டிக் கொண்டால் நான் என்னுடைய ஆட்சியைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன். பழமையும் தொன்மையும் உடையதே என்று பார்க்காமல் என்நாட்டை மகிழ்ச்சியுடன் இரப்பவனிடம் ஓப்புவத்துவிடுவேன், கெஞ்சிக் கேட்பவனுக்காக என் உயிரையும் கொடுப்பேன். ஆனால் என் ஆற்றல் இன்னது என்று தெரியாமல் என்னுடன் போரிட வருவார்களாயின், தூங்குகிற புலியை எழுப்புவது போல் ஆகிவிடும். என் போர்ப்படை எதிரிகளை அழிக்கும். அப்படி அழிக்காவிட்டால் கற்பில்லாப் பெண்டிரோடு என் மார்பகம் கிடந்து முயங்குவதாக. " + + + + + +சனவரி 4 + + + + + + + +நெடுங்கிள்ளி + +நெடுங்கிள்ளி, முதலாம் கரிகால் சோழனுக்குப் பின் பட்டத்துக்கு வந்த சோழ அரசனாவான். இவன் கி.பி முதலாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சிபீடமேறி இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. நெடுங்கிள்ளி முற்காலச் சோழர் வரிசையில் ஒருவன். இவன் ஆட்சி���ீடம் ஏறியபோது சோழ நாடு நல்ல நிலையிலேயே இருந்ததெனினும், நெடுங்கிள்ளிக்கும், நலங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது. + +கோவூர் கிழார் என்னும் புலவர் பாடிய 44 ஆம், 45 ஆம் புறநானூற்றுப் பாடல்கள், இவ்விரு சோழர்களுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி மற்றும் அதனால் மக்களும், விலங்குகளும்கூடப் படும் துன்பங்கள் பற்றிய செய்திகளைத் தருகிறது. அது மட்டுமன்றி இரு சோழர்களுக்கும் இடித்துரைத்து ஆலோசனை கூறும் தொனியையும் இப் பாடல்களிலே காண முடிகின்றது. + +ஒப்புநோக்குக; மாவளத்தன் + + + + +காவிரிப்பூம்பட்டினம் + +காவிரிப்பூம்பட்டினம் (பூம்புகார்), பண்டைய தமிழ் நாட்டிலிருந்த முக்கியமான துறைமுக நகரங்களில் ஒன்று. இது சோழ நாட்டைச் சேர்ந்தது. காவிரி ஆற்றின் கழிமுகத்தை அண்டி அமைந்திருந்த இந் நகரம், காவேரிப் பட்டினம், புகார், பூம்புகார் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. இதன் வணிக முக்கியத்துவம் காரணமாக, பல நாடுகளிலிருந்தும் மக்கள் இங்கே வந்தார்கள். அவர்களுக்கான குடியேற்றங்களும் இப் பட்டினத்தில் காணப்பட்டதாகச் சங்க காலம் மற்றும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்த இலக்கியங்கள் கூறுகின்றன. + + + + + + +பரணர், சங்ககாலம் + +பரணர் என்னும் பெயர் கொண்ட பல புலவர்கள் பல்வேறு காலங்களில் வாழ்ந்து வெவ்வேறு வகையான பாடல்களைப் பாடியுள்ளனர். அவர்களில் சங்ககாலப் பரணர் பாடிய 85 பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இவர் தாம் பாடிய அகப்பொருள் பாடல்களிலும் அவர் காலத்தனவும், அவரது காலத்துக்கு முன்னர் நிகழ்ந்து தாம் அறிந்தனவுமாகிய பல வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளார். எனவே இவர் வரலாற்றுப் புலவர் எனப் போற்றப்படுகிறார். + +இவர் தம் பாடல்களில் குறிப்பிட்டுள்ள வரலாற்றுப் பதிவுகளைப் புலவர் கால மன்னர் என்னும் தொகுப்பில் மேற்கோள் குறிப்புகளுடன் அறியலாம். +மொத்தம் 85. அவை: + + +எழுமுடி மார்பின் எய்திய சேரல், கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், குடவர் கோமான் பெருஞ்சேரலாதன், குட்டுவன், குட்டு��ன் சேரல், சேரமான் கடலோட்டிய வேல்கெழு குட்டுவன், சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், பெரும்பூண் பொறையன், பொறையன், மாந்தரன் பொறையன் கடுங்கோ, +கரிகாலன், சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி, (சோழன் மணக்கிள்ளி), சோழன் வேல்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளி, தித்தன், +செழியன், பசும்பூட் பாண்டியன், +அழிசி, சேந்தன், அகுதை, அஞ்சி, அதிகன், அறுகை, அதியமான் நெடுமானஞ்சி, ஆட்டனத்தி, ஆய், ஆய் எயினன், ஆரியப் பொருநன், (ஆரிய அண்ணல்), எயினன், எவ்வி, ஐயை, ஓரி, கட்டி, கணையன், கழுவுள், குறும்பியன், ஞிமிலி, தழும்பன், திதியன், தித்தன் வெளியன், நள்ளி, நல்லடி, நன்னன், நன்னன் ஆய், நன்னன் உதியன், நெடுமிடல், பழையன், பாணன், பிண்டன், பேகன், மத்தி, மருதி, மலையன், மிஞிலி, மோகூர்(மன்னன்), வல்லங்கிழான் நல்லடி, விச்சியர் பெருமகன்,விரான், வெளியன் வேண்மான், (கண்ணகி, கடவுள் பத்தினி), கண்ணகி(பேகன் மனைவி), அன்னி மிஞிலி, +வேண்முது மக்கள், ஆரியர், கொங்கர், கோசர், பூழியர், வேளிர், வேண்மகளிர், + + + + + +உறையூர் + +உறையூர் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. + +உறையூர் தமிழகத்தில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று. இன்று திருச்சிராப்பள்ளி நகரில் ஒரு பகுதியாக இருந்தாலும், வரலாற்றில் இது ஒரு தனிபெரும் நகரமாகவே திகழ்ந்திருக்கிறது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகரமாகும். உறந்தை எனவும், கோழியூர் எனவும் இதனை வழங்குவர். மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து
அறம் நின்று நிலையிற்று ஆகலின்
- புறநானூறு (39) என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் புறநானூற்றில் மாறோக்கத்து நப்பசலையார் பாடுகிறார். + +புலவர் பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் கொடை பெருமையை இவ்வாறு பாடுகிறார். +குமரி அம் பெருந் துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவைஆயின் இடையது
சோழ நல் நாட்டுப் படினே கோழி
உயர் நிலை மாடத்து குறும்பற�� அசைஇ
- புறநானூறு (67) +பிசிராந்தையார் அன்னச்சேவலிடம் இவ்வாறு கூறுமாறு பா அமைந்துள்ளது. அன்னச்சேவலே, குமரித்துறையில் அயிரை மீனை உண்டு, உன் பெட்டையோடு வடமலை செல்கிறாய். இடையே சோழநாட்டுக்குப் போகும்போது கோழியூரின்(உறையூர்) உயர்நிலை மாடத்தில் உள்ள சோழனிடம் நான் பிசிராந்தையாரின் சேவல் என்று சொன்னாய் என்றால், அவன் உன் பெட்டைக்கோழிக்கு நல்ல ஆபரணங்களைத் தருவான். + +"செங்கடல் செலவு" நூலிலும் உறையூர் பற்றியக் குறிப்பைக் காணலாம். உறையூரின் பெயர் இதில் அர்காலோ எனவும் அர்காரூ எனவும் வழங்கப்படுகிறது. இங்கிருந்து முத்துகளும், மென்பருத்தித் துணிகளும் வாங்கப்படுவதாக குறிக்கப்பட்டு இருக்கின்றது. + +இவைத் தவிர தமிழ்ப் பெருங்காப்பியமான இளங்கோ இயற்றிய சிலப்பதிகாரத்திலும் உறையூர் கூறப்படுகின்றது. +காவுந்திஐயையும் தேவியும் கணவனும்
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனன் புரிந்து என்
- சிலம்பு (புகார்க் காண்டம், நாடு காண் காதை) +முன்னொரு காலத்தில் சோழமன்னனின் யானை உறையூரை அடைந்தபோது, அதனை ஒரு கோழி தாக்கி வென்றது. அதனால் சோழன் தன் தலைநகரை அங்கு அமைத்துக்கொண்டான். கோழியூர் எனவும் பெயரிட்டான். இளங்கோ கோவலனும், கண்ணகியும், கவுந்தி அடிகளும் உறையூருக்குச் செல்லும்போது, உறையூரைக் கோழிச்சேவல் யானையை வீழ்த்தின இடம் என்று குறிப்பிட்டுப் பாடியிருக்கிறார். இப்பாடலில் "முறம் செவி வாரணம்" என்றால் யானையையும், "புறம் சிறை வாரணம்" என்றால் கோழிச்சேவலையும் குறிக்கும். + +முற்காலச் சோழர்கள் வலிமையிழந்து சோழ நாடும் வீழ்ச்சியுற்ற பின்னரும், சோழச் சிற்றரசர்கள் உறையூரில் இருந்து ஆட்சி செலுத்தினர். + +சங்ககாலப் புலவர்கள் +நாயன்மார்கள் + +ஆழ்வார்கள் + +வெக்காளியம்மன் கோயில், நாச்சியார் கோயில், பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் மற்றும் உறையூர் அழகிய மணவாளர் கோயில் ஆகிய கோயில்கள் உறையூரில் புகழ்பெற்றக் கோயில்களாகும். + +தொல்பொருள் ஆராய்ச்சி உறையூரில் 1965 முதல் 1969 வரை நடத்தப்பட்டது. அப்போது எழுத்துகள் பொறிக்கப்பட்டக் கருப்பு மற்றும் சிகப்பு நிற மண்பாண்டங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. + + + +
+ +அரிஞ்சய சோழன் + +அரிஞ்சய சோழன் இடைக்காலச் சோழர் மரபைச் சேர்ந்தவன். இவன் முதலாம் பராந்தக சோழன்னின் மகன், கண்டராதித்த சோழனின் தம்பியாவான். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவன், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு முயன்றான். இம் முயற்சி தோல்வியின் முடிந்து, ஆற்றூர் என்னுமிடத்தில் இறந்தான். இவனுக்கு அந்த ஊரில் பள்ளிப்படை அமைக்கப்பட்டது. + +வீமன் குந்தவையார், கோதைப்பிராட்டியார் என்ற இவனுடைய இரு மனைவியர், இவனுக்குப்பின்னும் உயிர்வாழ்ந்து, இவனது மகனுடைய ஆட்சிக்காலத்தில் பல தானங்களைச் செய்தனர். வீமன் குந்தவை என்பவள் வேங்கிநாட்டு மன்னனாகிய இரண்டாம் வீமன் சாளுக்கியனின் புதல்வி. + +956 ஆன் ஆண்டளவில் அரசனான இவனது ஆட்சி மிகக் குறுகிய காலமான சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது. இவனைத் தொடர்ந்து சுந்தர சோழன் அரியணையில் அமர்ந்தான். + + + + +இராஜாதிராஜ சோழன் + +இராஜாதிராஜ சோழன் முதலாம் இராஜராஜ சோழனின் பேரனும், இராஜேந்திர சோழனின் மகனும் ஆவான். இராஜேந்திர சோழனின் காலத்திலேயே மன்னனுடைய மூத்த மகனாக இல்லாவிடினும் இவனுடைய திறமையைப் பாராட்டி இவனுக்கு இளவரசுப் பட்டம் வழங்கப் பட்டது. மேலும் தன் தந்தையின் ஆட்சிக் காலத்திலேயே தனக்கென்று மெய்க்கீர்த்திகளையும் பட்டங்களையும் பெறும் தனிச் சிறப்பும் இராஜாதிராஜ சோழனுக்கு அளிக்கப்பட்டது. இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவன் பதவிக்காலத்தில் சோழப் பேரரசின் தெற்கில் ஈழத்திலும், சேர பாண்டிய நாடுகளிலும், கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இராஜாதிராஜன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டான். எனினும், வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் இடைவிடாது தொல்லை கொடுத்தனர். இதனால், இராஜாதிராஜனுக்குப் பல தடவைகள் சாளுக்கியருடன் போரிட வேண்டியேற்பட்டது. இவ்வாறான ஒரு போரின்போது, துங்கபத்திரை ஆற்றை அண்டிய கொப்பத்தில் மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் நடைபெற்ற போரில் இறந்தான். + +வடநாட்டு மன்னர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுவது பொதுவான வழக்கமாக இருந்தது, ஆனால் சோழ இராச்சியத்தை உறுதியாக நிலைநாட்டிய இராஜராஜனும், அவனுடைய திறமை மிக்க மகன் இராஜேந்திரன் காலங்களில் இந்த வழக்கு தலைகீழாக மாறி, சோழருடைய வெற்றிச் சின்னமான புலிக்கொடி வடக்கே வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இராஜேந்திரனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மக்களும், ஒருவரை அடுத்து ஒருவராக அரியணை ஏறினர். தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற பரந்த இராய்ச்சியத்தை அதன் புகழ் மங்காதவண்ணம் இம்மூவரும் திறமையுடன் காத்தனர். + +இராஜேந்திரனுக்குப் பிறகு அரியணையேறியவன் மூத்த மகன் இராஜாதிராஜன் என்று வீரராஜேந்திரனின் கன்னியாகுமரிக் கல்வெட்டு தெளிவாகக் கூறுகிறது. இராஜேந்திரனை அடுத்து அரியணையேறிய மூன்று மன்னர்களின் கல்வெட்டுகளும் இதனை உறுதிப்படுத்துகின்றன. இராஜாதிராஜனின் 35-ம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று 'தம்பித் துணைச் சோழ வளநாடு' என்ற முக்கியமான பெயரைக் குறிப்பிடுகிறது. இப்பெயர், 'திருமகள் மருவிய' என்று தொடங்கும் இரண்டாம் இராஜேந்திரனின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ளா செய்தியை நினைவூட்டுகிறது. இம்மெய்க்கீர்த்தியில் சாளுக்கியருக்கு எதிரான போரில் எவ்வாறு தன் மூத்த சகோதரன் இராஜாதிராஜனுக்கு பெருந்துணையாக இருந்தான் என்பதை இராஜேந்திரன் கூறுகிறான். + +வீரராஜேந்திரன் என்பவன் இராஜேந்திர சோழன் தம்பியான வீரசோழனே. இவனுக்கு கரிகாலச் சோழன் என்றா பட்டத்தை இராஜேந்திரன் அளித்தான். இவனையே மேலைச் சாளுக்கியக் கல்வெட்டுகள் பொதுவாக 'வீர' என்ற அடைமொழியுடன் அழைக்கின்றன. இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வீரராஜேந்திரனின் கல்வெட்டு ஒன்று இவன் தந்தை கங்கை, பூர்வதேசம், கடாரம் ஆகிய நாடுகளை வென்றவன் என்று குறிப்பிடுகிறது. + +இம்மன்னர்களது கல்வெட்டுக்கள் குறிப்பிடும் ஆண்டுகளைப் பார்க்கும்போது, இவர்களது ஆட்சிக் காலங்களில் ஒன்றோடொன்று இணைந்து இருப்பது விளங்கும். இராஜாதிராஜன் தன் தந்தையுடன் சேர்ந்து 25 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இராஜாதிராஜனின் கல்வெட்டுக்களிலிருந்து இவனுடைய ஆட்சி ஆண்டு 36 என்பது புலனாகின்றது. அதாவது கி.பி 1053 - 54 வரை. இரண்டாம் இராஜேந்திரன் கி.பி 1052ம் ஆண்டு மே திங்கள் 28ம் நாளன்று அரியணை ஏறினான். அதே போன்று இரண்டாம் இராஜேந்திரன் கி.பி 1064வரை சுமார் 12 ஆண்டுகள் அரசாண்டான். வீரராஜேந��திரன் கி.பி 1062 - 63ம் ஆண்டு அரியணை ஏறினான். இவ்வாண்டே இம்மன்னனது கல்வெட்டுகளில் இவனது முதலாவது ஆண்டாகக் குறிப்பிடப்படுகிறது. + +வீரராஜேந்திரன் அரியணையேரும் முன் இராஜகேசரி இராஜமகேந்திரன் அரியனையேறினான். இவனுடைய மூன்றாம் ஆண்டு வரையிலான கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. இம்மன்னன் மனுநீதிப்படி ஆட்சி செய்ததாக இவனுடைய மெய்க்கீர்த்தி கூறுகிறது, இதையே கலிங்கத்துப் பரணியும் உறுதிப்படுத்துகிறது. கொப்பம் போரில் முடிசூடின மன்னனுக்கும்(இரண்டாம் இராஜேந்திரன்) கூடல் சங்கமத்தில் வெற்றி பெற்ற மன்னனுக்குமிடையில்(வீரராஜேந்திரன்) 'முடி சூடியவன்' என்று கலிங்கத்துப் பரணி இம்மன்னனைப் பற்றி கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் இராஜமகேந்திரனின் கல்வெட்டு ஒன்றும் கிடைத்துள்ளதூ. + +'போர் யானையின் மூலம் ஆகவமல்லன் ஆற்றங்கரையிலிருந்து புறமுதுகிட்டு ஓடச் செய்தான்' என்று இக்கல்வெட்டுக் கூறுகிறது. + +இவன் இராஜேந்திர சோழன் புதல்வனாதல் கூடும், இரண்டாம் இராஜேந்திரனின் 9ம் ஆண்டு கல்வெட்டில் கூறப்படும் இராஜேந்திரன் என்பது இவனது இயற்பெயராகும். இதன் பின்னர் இவன் இளவரசப் பட்டம் பெற்ற பொழுது இராஜமகேந்திரன் என்ற பெயரைப் பெற்றிருக்கக்கூடும். தன் தந்தை இராஜேந்திர சோழன், தன் பாட்டனார் இராஜேந்திர சோழன் ஆகியோரிடமிருந்து தன்னைத் தனித்துக் காட்டும் வகையில் இவன் இப்பெயரை ஏற்றிருக்க வேண்டும். இராஜமகேந்திரன், இராஜேந்திரன் இருவருமே வீரராஜகேசரிப் பட்டம் பெற்றவராயிருந்தும் அடுத்தடுத்துப் பதவிக்கு வந்தனர். இளவரசுப் பட்டம் பெற்ற போதே ஒருவன் இறந்ததால் இந்நிலை ஏற்பட்டது. + +இவ்வரலாற்றுக் குறிப்புக்களை ஆதாரமாக வைத்து சோழ அரியணையைப் பெற்ற மன்னர்களின் பட்டியலை கால வரிசைப்படி கீழ்க்காணுமாறு வரிசைப்படுத்தலாம். + +அரசன் இறந்தபோதும், அவனது தம்பியான இரண்டாம் இராஜேந்திரன், போரைத் தொடர்ந்து சாளுக்கியரை முறியடித்தான். அவன் அவ்விடத்திலேயே சோழமன்னனாக முடிசூட்டிக் கொண்டதாகத் தெரிகிறது. + + + + +தேவர் மகன் + +தேவர் மகன் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இந்தியத் தேசிய திரைப்பட விருதினை 1993 ஆம் ஆண்டு பெற்ற இத்திரைப்படம் ஆஸ்கார் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திரைப்பட வெற்றியினை அடுத்து இந்தியில் "விரசாத்" என்ற திரைப்படப் பெயரில் மறுதயாரிப்பு செய்யப்பட்டது. + +கிராமப்படம் + + +லண்டனில் படிப்பை முடித்து சக்தி (கமல்ஹாசன்) தனது சொந்த ஊருக்குத் தனது காதலியுடன் திரும்பி வருகின்றார். அங்கு தந்தையான பெரியத் தேவரைச் சந்தித்து தனது காதலியை அறிமுகமும் செய்து வைக்கின்றார். ஆரம்பத்தில் கோபம் கொள்ளும் பெரிய தேவர் பின்னர் அமைதி கொள்கின்றார். இதற்கிடையில் அவ்வூரில் இருக்கும் பெரிய தேவரின் சகோதரனின் பகை உணர்வுகளால் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. பின்னர் அது கலவரமாகவும் வெடித்தது. இதற்கிடையில் வெளியூருக்குச் செல்லும் சக்தியின் காதலியோ பின்னாளில் வரும்பொழுது சக்தி வேறொருவரை மணம் செய்துள்ளது கண்டு கடுங்கோபம் கொள்கின்றார். சக்தியும் பெரியவர் ஒருவருக்குக் கொடுத்த வாக்கின்படியே தான் திருமணம் செய்ததெனக் கூறுகின்றார். இறுதியில் பெரிய தேவரின் சகோதரரின் மகனிடம் ஏற்படும் தகராறுகளினாலும் பலமுறை கூறியும் அவன் காவல்துறையினரிடம் சென்று செய்த தவறுகளைக்கூறவில்லை என்ற காரணத்தினாலும் அவனைத் துரத்துகின்றார் சக்தி. இதற்கிடையில் தெரியாத்தருணமாக அவரின் தலையையும் துண்டித்து விடுகின்றார். அவ்வூர் மக்கள் எடுத்துக் கூறியும் செய்த தப்பிற்காக தண்டனை பெறவும் செய்கின்றார் சக்தி. + + + + + + +சொதோம் கொமோரா + +அதியாகமத்தின் படி, சொதோம் (סְדוֹם, எபிரேய மொழி Sədom, டைபீரிய எபிரேய மொழி வழக்கு ') கொமோரா (עֲמוֹרָה, எபிரேய மொழி ', டைபீரிய மொழி ', ') என்பன அந்நகரவாசிகளின் பாவங்களுக்காக கடவுளால் அழிக்கப்பட்ட இரண்டு நகரங்களாகும். எபிரேய மொழியில் சொதோம் என்பது "எரிக்கப்பட்ட" எனவும் கொமோரா என்பது "அழிக்கப்பட்ட மேடு" எனவும் பொருள் படும். இதன் மூலம் இவை இந்நகரங்களின் அழிவுக்குப் பிறகு இவற்றுக்கு வழங்கப்பட்டப் பெயர்களாக தோன்றுகின்றது. + +நகரில் வாழ்ந்த மக்களின் அதீத பாவங்கள் காரணமாக சொதோம், கொமோரா,அத்மா, செபோயிம் நகரங்கள் மீது "ஆண்டவர் வானத்திலிருந்து கந்தகமும் நெருப்பும் பொழியச் செய்தார்" . அது தொடக்கம் இந்நகரங்களின் பெயர் பாவத்துகும் அதன் மூலம் கடவுளால் வரும் அழிவுக்கும் உதாரணமாக பயன்படுத்தப்படுகிறது.. + +சொதோம் நகரமானது ஐந்து நகரங்களின் தலைமை நகரமாகும். இவற்றின் அமைவிடம் பற்றிய ஐயம் நிலவுகிறது. பிரபல வரலாறாசிரியரான ஜொசபசின் கருத்துப்படி இது சாக்கடலின் தெற்கில் அமைந்துள்ளது.. கொண்டர் என்ற வரலாற்றாசிரியரின் கருத்துப்படி சாக்கடலுக்கு வடக்கே 7 மைல் தூரத்தில் உள்ள டெல் எஷ்-சகுர் என்ற இடமாகும். வேறு சிலரின் கருத்து இது சாக்கடலுக்கு தெற்கே 3 மைல் தூரத்தில் உள்ள எஸ்-சபீக் என்ற இடமாகும். + +இந்நகரங்கள் கூட்டாக "சவெளியின் நகரங்கள்" என விவிலியத்தில் அழைக்கபப்ட்டுள்ளது. ஆதியாகமம் 13:10 இல் இவை யோர்தான் நதிக்கரையில் இருந்ததாக கூறப்ப்பட்டுள்ளது. விவிலியத்தின் படி, அபிரகாமின் மைத்துனரான லோத்து என்பவர் சோதோம் நகருக்கு அருகாமையில் காணப்பட்ட செழிப்பான புல்வெளிகள் காரணமாக அங்கே வசித்து வந்தார். + + + + +அக்டோபர் 15 + + + + + + + +யாகூ! அவதாரம் + +யாகூ அவதாரம் எனபது யாகூ பயனரின் நடத்தைகளுக்கிசைவான பிரத்தியேகப்படுத்தப்பட்ட படமாகும்.இது HTML ஊடாக யாகூ! 360 மற்றும் யாகூ! மெசன்ஜரின் உரையாடலிற் பயன்படுத்தக் கூடியது. + +யாகூ அவதாரம் எல்லாப் பயனர் கணக்கிலுமுள்ள ஓர் வசதியாகும்.இவ்வசதி தானகவே யாகூ! மெசன்ஜர் மற்றும் 360 பயனர் பக்கத்திற் சேர்க்கப்படக்கூடியது. யாகூ! அவதாரம் ஆரம்பத்தில் நிகழ்நிலை உரையாடலில் (Chat) பயன்படுத்தப்பட்டது. + +அவதாரத்தை உருவாக்க அடோபி (அல்லது அடோப் முன்னைய மக்ரோமீடியா) பிளாஷ் பிளேயர் தேவைப்படும். இது தோலின் வடிவம் மற்றும் நிறம் ஆகியவற்றை மாற்றவுதவும். அத்துடன் சட்டையைத் தயாரிக்கும் புகழ்பெற்ற நிறுவனங்களான அடிடாஸ் போன்றவற்றையும் தேர்ந்தெடுக்கலாம். 2006ஆம் ஆண்டில் யாஹூ! பெருமளவில் பின்னணிகளையும் பொருட்களையும் அதிகரித்துக் கொண்டது. + + + + + +யாகூ! 360° + +யாஹூ! 360° ஆனது ஆர்குட் போலவே பிரத்தியேகத் தொடர்பாடல் போர்ட்டலாகும். இது இப்போது சோதனை நிலையிலேயே உள்ளது. இது சமூகவலையமைப்பு, வலைப்பதிவு, படங்களைப் பகிர்தல் போன்றவற்றில் ஈடுபடமுடியும். + +பயனர்கள் பிரத்தியேக இணையப் பக்கங்கள் அமைத்து யாஹூ! போட்டோஸ் ஊடாகப் புகைப்படங்களைப் பகிர்ந்து, வலைப்பதிவுகளை மேற்கொண்டும் இணையத்தொடர்பிலுள்ள நண்பர்கள் போன்றவிபரங்களையும் பெற்றுகொள்�� முடியும். யாஹூ! 360° நண்பர்களின் மேம்படுத்தற் சுருக்கங்களும் காட்டப்படும். + +இச்சேவையானது மார்ச் 29, 2005 இல் ஆரம்பிக்கப்பட்டது. + +இச்சேவையானது மார்ச் 29, 2005 இல் அழைப்பின் பேரிலேயே இணையமுடிந்தது. ஜூன் 24 2005 18 வயதிற்கும் மேற்றபட்ட பயனர்களுக்கு இச்சேவை கிடைக்கின்றது. + +யாஹூ! 360° உள்ள வசதிகள் + +யாஹூ! மெசன்ஜரின் 8 ஆம் பதிப்பில் இருந்து யாஹூ! 360° பக்கத்தைப் பார்க்கக் கூடியது. யாஹூ! மெசன்ஜரிலிருந்தவாறே வலைப்பதிவுகளைச் செய்யவும், மனச்சிதறல்களை மேம்படுத்தவும் முடியும். இந்த சேர்தியங்கும் முறையால நண்பர்களை மேம்படுத்தல்கள உடனுக்குடன் தெரியப்படுத்தவியலும். + +யாஹூ! 360 ஆனது மெசன்ஜருடன் மாத்திரம் அன்றி ஏனைய யாஹூ! இன் சேவைகளுடனும் சேர்ந்தியங்குகின்றது. + +யாஹூ! 360° குழுவானது அதிகாரபூர்வமாக யாஹூ! பயனர்களிடம் இருந்து கருத்துக்களைக் கேட்டறிந்து வலைப்பதிவுகளூடாக விடையளிக்கின்றனர். + + + + + +குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் + +குண்டசாலை விவேகானந்தா தமிழ் வித்தியாலயம் இலங்கையின் கண்டி மாவட்டம், குண்டசாலையில் உள்ள ஒரு தமிழ்ப் பாடசாலை ஆகும். இது 1941ஆம் ஆண்டு தமிழ் வித்தியாலயம் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. ஜூன் 13, 1994 இல் இப்பாடசாலையானது தற்போதைய பெயரைப் பெற்றது. 2006ஆம் ஆண்டின் கணக்குப்படி இப்பாடசாலை 350 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கொண்டுள்ளது. இப்பாடசாலையில் விளையாட்டுத்திடல் மற்றும் விஞ்ஞான ஆய்வுகூடம் என்பனவும் அமைந்துள்ளன. + + + + +மோகனம் + +மோகனம் 28வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய ஹரிகாம்போஜியின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் சர்வ ஸ்வர கமக வரிக ரத்தி இராகம் ஆகும். சுபகரமான இவ்விராகம் விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுக்கும். + + + + + + + + + + + + +சனவரி 3 + + + + + + + +ஆளவந்தான் (திரைப்படம்) + +ஆளவந்தான் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அப்ஹெ என்று ஹிந்தியிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டும் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா மற்றும் ���லர் நடித்துள்ளனர். + +நாடகப்படம் / திகில்படம் + +நந்தகுமார் (கமல்ஹாசன்) தனது சித்தியின் கொடுமைகளால் சிறு வயதிலேயே பெண்களை மீது வெறுக்கிறான். சித்தியினைக் கொலை செய்து சிறுவர்களுக்கான மன நோயாளிகள் காப்பகத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றான். நந்தகுமாரின் சகோதரனோ இந்திய இராணுவத்தில் பணியாற்றுபவராகவும் விளங்குகின்றார். தீவிரவாதிகளிடமிருந்து பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்ட பொது மக்களை விடிவிப்பதற்காகத் தன் உயிரையும் பணயம் வைத்து அவர்களைக் காப்பாற்றவும் செய்கின்றார். திடீரென ஒரு நாள் இவர் தன் மனைவியுடம் நந்துவைப் பார்ப்பதற்கு சிறைச்சாலைக்குச் செல்கின்றார். அங்கு இவரின் மனைவியை பார்த்து கோபம் கொள்கின்றான். பின்னர் அவளைக் கொலை செய்வதற்காகவும் சிந்தனைகளை வளர்க்கின்றான். அனைத்துப் பெண்களையும் சித்தியின் அவதாரங்களாக எண்ணும் மனதைக் கொண்ட நந்து சிறையிலிருந்து தப்பிச் செல்வதற்காக திட்டம் தீட்டுகின்றான். + +அங்கு தன் நண்பர்களான இருவரிடமும் நாம் மூவரும் சிறையிலிருந்து தப்பிச் செல்லப் போகின்றோம் என்று வஞ்சகமான முறையில் ஆசை காட்டி பின்னர் அவர்களை சிறையிலிருந்து தப்பிச் செல்லும் வழியிலேயே கொலையும் செய்கின்றான் நந்து. பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்லும் நந்து இறந்துவிட்டான் எனக் கருதும் காவல் துறையினர் நந்து அவன் சகோதரனின் மனைவியைக் கொலை செய்யும்பொருட்டுடன் பல முறை முயற்சிகள் செய்கின்றான். இதனை அறிந்து கொள்ளும் அவன் சகோதரனும் தடுக்க முனைகின்றான். கட்டிடங்கள்,வீடுகள் மூலம் தாவிச் செல்லும் சற்றும் பயமில்லாத நந்து இறுதியில் தன் உயிரை மாய்த்தும் கொள்கின்றான். + + + + +சில்ரன் ஆப் ஹெவன் + +சொர்க்கத்தின் குழந்தைகள் (, பாச்சிகா-யெ அசெமான்) என்பது 1997 ஆம் ஆண்டு இரான் நாட்டிலிருந்து பாரசீக மொழியில் வெளிவந்த ஒரு குடும்பத் திரைப்படம் ஆகும். இதனை மசித் மசிதி எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் சில்ரன் ஆப் ஹெவன் ("Children of heaven") என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. + +இப்படம் ஒரு சகோதரன் சகோதரி இடையே நிலவும் அன்பு, சகோதரியின் காலணிகள் தொலைந்து விடுவதால் அவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள், அதை சமாளிக்க அவர்கள் கைய��ளும் ருசிகர உத்திகள், இரானில் நிலவும் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றை குழந்தைகளின் பார்வையிலிருந்தும் நகைச்சுவையுடனும் சித்தரிக்கிறது. இத்திரைப்படத்திற்கு 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிற மொழித் திரைப்படத்துக்கான அகாதமி விருது கிடைத்தது. + + + + + +மனதோடு மழைக்காலம் + +மனதோடு மழைக்காலம் திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அற்புதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் திரைப்பட நடிகை நித்யதாஸ் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். + +நாடகப்படம் / மசாலாப்படம் + +வயது போனவரென்ற காரணத்தினால் அவமானப் பேச்சுக்களுக்கு ஆளாகும் சிவா (ஷாம்) தன்னுடைய பழமை நினைவுகளை அலைமோதச் சிந்திக்கின்றார். தனது கல்லூரியில் படித்த சத்யாவிடம் (நித்யதாஸ்) நெருங்கிய தோழனாக இருந்ததனையும் பின்னைய காலங்களில் சத்யாவின் பெற்றோர் அவர்கள் காதலர்கள் என்ற தவறான கூற்றினை தெரிவிக்கும் போது கோபம் கொள்கின்றார் சிவா. இவர்களிடையே இருப்பது காதல் அதனால் தனக்கு மணமாக இருந்த காதலியைச் சிவாவிற்காக விட்டிக் கொடுக்க நினைக்கின்றார் கார்த்திக் (ஜெய் சூர்யா) ஆனால் அவர்கள் வெறும் நண்பர்களே என அறிந்து அனைவரும் புரிந்தும் கொள்கின்றனர். இதற்கிடையில் சிவாவைக் காதலித்த பெண்ணான ஸ்ருதியையே சிவா திருமணமும் செய்து கொள்கின்றார். ஆனால் குழந்தையொன்றினைப் பெற்றெடுத்த பின்னர் அவர் இறக்கவே நொந்து போகின்றார் சிவா. பின்னர் அவர் வயதானபின்னர் சத்யா நோய்வாய்ப்பட்டு இறக்கவே சத்யாவின் கணவரான கார்த்திக்கிற்கு ஆறுதல் கூறுகின்றார் சிவா. சிவாவின் மகனோ சிவாவை வெளியில் விரட்டுவதற்காக தனக்கு வேலை மாற்றம் வந்திருப்பதாக பொய்யொன்றினையும் கூறுகின்றான். இதனால் வருத்தப்படும் சிவாவுக்கு ஆறுதலாக அவரின் உயிரினும் மேலாக மதித்த தோழியான சத்யாவின் கணவர் விளங்குகின்றார். + + + + +குட்டி (2001 திரைப்படம்) + +குட்டி (2001) ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும் + +குட்டி தனது கிராமத்தில் பெற்றோர்களின் செல்ல மகளாக வளர்க்கப்படுகின்றாள். இடையே அவளின் தந்தை விபத்தில் இறந்து போகிறார். நகரத்தில் வேலை ஒன்று இருப்பதனை அறியும் இவளின் தாயாரின் சொற்கேட்டு அங்கு ஒருவரின் வீட்டில் பணிப்பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்படுகின்றாள். அங்கு பல கொடுமைகளுக்கும் ஆளாகின்றாள் குட்டி இருப்பினும் அங்கு பலசரக்குக் கடை வைத்திருந்த ஒருவனிடம் அவ்வீட்டில் எஜமானி அம்மாவின் தாயார் பல முறை அடிப்பதாகவும் கூறுகின்றாள். இதனைக் கேட்டு தனது பெற்றோர்களுக்குக் மடல் ஒன்றினையும் அனுப்பி வைக்கச் சொல்லுகின்றாள் குட்டி ஆனால் ஊரின் பெயரினை ஞாபகம் வைத்திருக்கத் தவறியதால் மடலை அனுப்பமுடியாமலும் போய்விடுகின்றது. பின்னர் அக்கடையருகே வந்திருக்கும் காடையன் ஒருவன் கண்ணில் குட்டியும் அகப்படுகின்றாள். ஒரு நாள் யாருக்கும் தெரியாதவண்ணம் அவளை அவளின் ஊருக்கே அழைத்துச் செல்வதாகப் பொய்யொன்றினைக் கூறி விலைமாதுவாக விற்கவும் செய்கின்றான் அக்கொடியவன். + +2002 கெய்ரோ சிறுவர்களுக்கான சர்வதேச திரைப்பட விழா (எகிப்து) + +2002 தேசிய திரைப்பட விருது (இந்தியா) + + + + + +டெங்குக் காய்ச்சல் + +டெங்குக் காய்ச்சல் ("Dengue fever") என்ற டெங்கி காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் மனிதர்களிடையே டெங்கு வைரசால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும், இது கொசுக்களால் பரவுகிறது. இந்நோய் வந்தால் கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் (கடுமையான குருதிப்போக்கை ஏற்படுத்தும்) மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். இது உயிர் ஆபத்துகளை விளைவிக்கக் கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் எலும்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும். + +வடக்கு ஆர்ஜெண்டீனா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஸ்ட்டா ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கெளதமாலா, குயான, ஹெயிட்டி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை போன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது. + +டெங்குக் காய்ச்சலின் நோய்க்காரணி ஒரு தீநுண்மம் (வைரசு) ஆகும். இது ஒரு ஆர்.என்.ஏ தீநுண்மம் ஆகும். இது மஞ்சட் தீநுண்மக் குடும்பம், மஞ்சள��� தீநுண்மப் பேரினத்தைச் (இலங்கை வழக்கு: இனம்) சார்ந்தது. மஞ்சள் காய்ச்சல் தீநுண்மம், மேற்கு நைல் தீநுண்மம், யப்பானிய மூளையழற்சித் தீநுண்மம் போன்றனவும் மஞ்சள் தீநுண்மப் பேரினத்தில் அடங்குகின்றன. இவை நோய்க்காவிகளால் காவப்பட்டு ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரப்பப்படுகின்றது. பெரும்பாலும் கணுக்காலிகளால் (கொசுக்கள் அல்லது தெள்ளுகள்) காவப்படுகின்றன, எனவே கணுக்காலிகள் காவும் தீநுண்மங்கள் எனும் ஆங்கிலப் பெயரைச் சுருக்கியதன் மூலம் உருவான (arbo: arthropod-borne viruses) ஆர்போ எனும் பெயர்கொண்டும் அழைக்கப்படுகின்றன. + +டெங்குத் தீநுண்மத்தின் மரபணுத்தொகை 11,000 நியூக்கிளியோட்டைடு அடிக்கூறுகளைக் கொண்டுள்ளது, இவை மூன்று வெவ்வேறு புரத மூலக்கூறுக்களை (C, prM, E) உருவாக்குவதில் மரபணுக்குறியாகப் பயன்படுகின்றன, இப்புரத மூலக்கூறுகளே தீநுண்மத் துகளை உருவாக்குகின்றன. ஏனைய ஏழு வகையான புரத மூலக்கூறுகள் (NS1, NS2a, NS2b, NS3, NS4a, NS4b, NS5) தொற்றுநோய்க்கு உட்பட்டவரின் உயிரணுக்களில் தீநுண்மத்தின் பெருக்கத்துக்குத் தேவைப்படுகின்றது. + +டெங்குத் தீநுண்மத்தின் இனத்தில் நான்குவகையான குருதிப்பாய (serotype) வகைகள் (DENV-1, DENV-2, DENV-3, DENV-4) உள்ளன. இந்த நான்கு வகையும் தனித்தனியே முழு அளவிலான நோயை ஏற்படுத்த வல்லன. ஒரு குறிப்பிட்ட குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் முழுவதும் அக்குருதிப்பாய வகையிலிருந்து நோயெதிர்ப்பு கிடைக்கின்றது, ஏனைய மூன்று வகையில் இருந்தும் நோயெதிர்ப்பு உருவான போதிலும் அவை குறுகிய காலத்துக்கே நீடிக்கின்றன. டெங்குத் தீநுண்மத்திலிருந்து முற்றுமுழுதாக நோயெதிர்ப்பு உருவாக வேண்டுமெனின் குறித்த நபர் ஒருவருக்கு இந்நான்கு குருதிப்பாய வகைத் தீநுண்மங்களும் நோயை உருவாக்கி இருக்க வேண்டும், ஆனால் இரண்டாம் முறை தொற்று ஏற்படுவது நோயாளிக்கு மிகக் கடுமையான பாதிப்பை உண்டாக்கும். DENV-1 குருதிப்பாய வகையால் தொற்று ஏற்பட்டு மீண்டும் DENV-2 அல்லது DENV-3 யால் தொற்று ஏற்படல், DENV-3யால் முதலில் தொற்று ஏற்பட்டு பின்னர் DENV-2யால் ஏற்படல் போன்றவற்றில் கடுமையான விளைவுகள் ஏற்படும். + +ஏடிசு எனப்படும் பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் இந்த நோயின் நோய்க்காவியாகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு (Aedes) வகைக் கொசுக்களால் (இலங்கை வழக்கு: நுளம்பு), குறிப்ப���க ஏடிசு எகிப்தியால், இந்நோய் பரவுகிறது. + +மனிதனே முதன்மை வழங்கியாக இருப்பினும், குரங்கினத்தின் இடையேயும் தீநுண்மங்கள் சுற்றி வருகின்றன. ஒரு தரம் கொசு கடிப்பதே நோய் உண்டாவதற்கு வழிகோலும். நோயுள்ள ஒருவரைக் கடித்த உடனேயே நோயற்றவரை இக்கொசு கடிக்குமாயின் தீநுண்மங்கள் பரவக்கூடும். இதைவிட, பெண் கொசு தனது குருதி உணவை நோய் தொற்றியுள்ளவரிடமிருந்து பெற்ற பின்னர், கொசுவின் குடற்கலங்களை தீநுண்மங்கள் அடைகின்றன. 8 – 10 நாட்கள் கழிந்து கொசுவின் ஏனைய இழையங்களுக்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன, இவ்வகையில் உமிழ்நீர்ச் சுரப்பியையும் அவை சென்றடைகின்றன. நோயில்லாத ஒருவரை இக்கொசுக்கள் கடிக்கும்போது தீநுண்மங்கள் செறிந்த தமது உமிழ்நீரை அவருக்குள் செலுத்துகின்றன, இதன் மூலம் அவரும் தொற்றுக்கு உள்ளாகின்றார். எனவே கொசுவானது உடனேயோ அல்லது 8-10 நாட்கள் சென்ற பின்னரோ நோய்க்காவியாகத் தொழிற்படுகின்றது. + +இத்தீநுண்மங்கள் கொசுவுக்குக் கேடுதரும் விளைவுகள் ஏற்படுத்துவதில்லை, இவை கொசுவின் ஆயுட்காலம் ( பொதுவாக 21 நாட்கள்) முழுவதிலும் தொற்றி இருக்கின்றன. +மனிதனுக்கு அருகாமையில் உள்ள செயற்கையான நீர்நிலைத் தேக்கங்களில் முட்டை இடுவதை ஏடிசு எகிப்திக் கொசுக்கள் விரும்புகின்றன, எனவே தமது குருதி உணவுஉணவைப் பெற்றுக்கொள்ள முடியும். + +குருதி மாற்றீடு, உறுப்பு மாற்றீடு (Organ transplantation) போன்ற சந்தர்ப்பங்களிலும் நோய்த் தொற்றுள்ள குருதி மூலம் டெங்குத் தீநுண்மங்கள் பரவுகின்றன.கர்ப்பிணித் தாயிலிருந்து சேய்க்கும் அல்லது பிறப்பின்போதும் பரவிய நிகழ்வுகள் அறியப்பட்டுள்ளன. இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடுகை மூலம் பெரும்பாலும் பரவுவதில்லை, எனினும் வழமைக்கு மாறாக அத்தகைய நிகழ்வுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன. + +குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது.ஆண்களைக் காட்டிலும் கூடுதலாகப் பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக்கூடிய பாதிப்பை உண்டாக்கும். + +டெங்குத் தீநுண்மத்தைக் காவும் கொசு ஒருத்தரைக் கடிக்கும்போது அக்கொசுவின் உமிழ்நீருடன் தோற் பகுதிக்குத் தீநுண்மம் செல்கின்றது. பின்னர் வெண்குருதியணுக்களுடன் ஒட்டிக்கொண்டு அவற்றின் உள்ளே நுழைந்து இனம் பெருகுகின்றது. வெள்ளணுக்கள் இதற்கு மறுவினையாக, இனம்பெருகலைத் தடுப்பதற்குரிய இன்டெர்பெரோன் போன்ற சமிக்ஞைப் புரதங்களைத் தயாரிக்கின்றன, இதுவே காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படுவதற்குக் காரணம் ஆகின்றது. + +கடுமையான தொற்றில் தீநுண்மத்தின் தன்பிரதி அமைத்தல் மிகையாகின்றது; கல்லீரல், என்புமச்சை போன்ற பல்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. குருதிக்குழாயிலிருந்து நீர்மங்கள் வெளியே கசியத் தொடங்கும். குருதிக்குழாய்ச் சுவரின் ஊடுபுகவிடு தன்மை கூடுவது இதற்குக் காரணமாகின்றது. இவற்றின் காரணமாகக் குருதிக்குழாய்களுள் குறைவான அளவு குருதி உடலில் சுற்றோட்டத்துக்கு உட்படுகின்றது, இதனால் குருதி அழுத்தம் குறைகின்றது, முக்கிய உறுப்புகளுக்குப் போதியளவு குருதி விநியோகம் கிடைப்பது தடைப்படுகின்றது. என்புமச்சையின் பாதிப்பால் குருதிச் சிறுதட்டுக்களின் எண்ணிக்கையில் குறைவு ஏற்படுகின்றது, எனவே குருதி உறைதலைக் கட்டுப்படுத்தும் தொழிற்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது, இதனால் குருதிப்பெருக்கு உண்டாகும் தீங்கு ஏற்படுகின்றது. + +தோலின் உள்ளே வந்தடைந்த தீநுண்மம் இலங்ககான் உயிரணுக்களுடன் (தோலில் அமைந்துள்ள கிளையி உயிரணுக்கள் கூட்டம், இவை நோய்க் காரணியைக் கண்டறிகின்றன) பிணைப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. தீநுண்மங்களின் சூழ்உறையில் (envelope) உள்ள புரதங்கள் இலங்ககான் உயிரணுக்களில் உள்ள புரத ஏற்பிகளுடன் பிணைப்பை ஏற்படுத்தி உயிரணு உள்வாங்கல் (endocytosis) முறைமூலம் அவற்றுள் புகுகின்றன. இதன்போது தீநுண்மம் அகவுடல் (endosome) எனும் உருண்டை வடிவப் பகுதியால் சூழப்பட்டு குழியமுதலுருவை அடைகின்றது, அங்கே அமிலத்தன்மை கூடுகின்றது (pH குறைகின்றது), இதன்போது தீநுண்ம சூழ்உறைப்புரதம் தனது வடிவத்தை மாற்றுகின்றது, இச் செயற்பாடு அகவுடலிலிருந்து தீநுண்மம் வெளியேற உதவுகின்றது. இப்போது சூழ்உறை அகன்று, தீநுண்மம் புரத உறையுடன் (capsid) வெளியே வருகின்றது. புரத உறையும் உடைந்து அகன்றுவிட, தீநுண்மத்தின் ஆர்.என்.ஏ இழைகள் வெளியேறி அகக்கலவுருச் சிறுவலையை அடைகின்றது, அங்கே புதிய தீ நுண்மத்துக்கான புரதம் தொகுக்கப்படுகின்றது. முதிர்ச்சியடையாத தீ நுண்மத் துகள்கள் கொல்கிச் சிக்க��ுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. இறுதியில் தொற்றுக்குட்படுத்தப்பட்ட உயிரணுவிலிருந்து உயிரணு வெளித்தள்ளல் (exocytosis) முறைமூலம் முதிர்ந்த பல தீநுண்மங்கள் வெளியேறி வேறு உயிரணுக்களை (வெள்ளணுக்கள்) நாடுகின்றன. + +சில தீநுண்ம குருதிப்பாய வகைகள் இன்டெர்பெரோன் உருவாகும் வேகத்தைக் குறைக்கின்றன என்று அறியப்பட்டுள்ளது. இன்டெர்பெரோன்கள் நோயெதிர்ப்புத் தொகுதியை எச்சரிக்கை செய்யும் வேளையில் பிறபொருளெதிரிகள், T-உயிரணுக்கள் உருவாக்கப்படுகின்றன, இவை தீநுண்மம் உள்ள உயிரணுக்களைத் தாக்குவதற்கு செல்கின்றன. வெவ்வேறுபட்ட பிறபொருளெதிரிகள் உருவாக்குகின்றன; அவற்றுள் சில, தீநுண்மப் புரதங்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி அவற்றை தின்குழியங்களுக்கு அனுப்பி தின்குழியமை முறைமூலம் அகற்ற உதவுகின்றன. இம்முயற்சி சிலவேளை பிழைத்தால், தீநுண்மங்கள் தின்குழியங்களால் அழிக்கப்படுவதற்குப் பதிலாகத் தின்குழியங்கள் உள்ளேயே நுழைந்து பல்கிப் பெருகும். + +முதன்முதலில் நோயின் தொற்றுக்குள்ளானவர் பெரும்பாலும் ( 50 – 90%) அறி உணர்குறிகளின்றிக் காணப்படுவர், அல்லது கேடில்லாத காய்ச்சல் மட்டுமே இருக்கும், ஏனையோர் டெங்குவின் மரபார்ந்த அறிகுறிகளைக் கொண்டிருப்பர், அவையாவன: திடீரென அதிகரித்துச் செல்லும் மிகையான காய்ச்சல், தலைவலி, கண் பின்பகுதி வலி, உடல்வலி (தசை, எலும்பு வலி), களைப்பு, வாந்தி, குமட்டல், தொண்டைப்புண், சுவையில் மாற்றம், தோல் தடித்து சிவப்படைந்து சினைப்பு உண்டாதல். இவர்களுள் சிறிய பகுதியினர் (5%) நோய் கடுமையாகிக் காணப்படுவர். +ஏற்கனவே ஒரு குருதிப்பாய வகை தீநுண்மத்தால் பாதிப்புற்ற சிறிய வீதமான மக்களில் மீண்டும் பிறிதொரு குருதிப்பாய வகைத் தொற்று ஏற்படின் குருதிக்குழாய்களில் சிதைவு ஏற்பட்டு குருதிப்போக்கு உண்டாகும் தீவிளைவு உண்டு, இத்தகைய நிலைமை டெங்குக் குருதிப்போக்குக் காய்ச்சல் எனப்படும். + +நோயரும்பு காலம் (கொசு தீநுண்மத்தை செலுத்தியதிலிருந்து அறிகுறிகள் தோன்றும் காலம்) 3 – 14 நாட்களாகும், சராசரியாக 4 – 7 நாட்கள். எனவே அயனமண்டலப் பகுதிகளிலிருந்து வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்பவர், அங்கு வருகை தந்து 14 – 16 நாட்களுக்கும் மேற்பட்டால் டெங்குக் காய்ச்சல் ஏற்பட வாய்ப்பில்லை. அதேவேளையில் அக்குறிப்பிட்ட காலப்பகு���ியில் அறிகுறிகள் தென்படின் டெங்குக் காய்ச்சலாக இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டியது முக்கியமானது. + +நோயின் பருவங்களை மூன்றாகப் பிரிக்கலாம்: காய்ச்சல், கடுமையான பருவம், மீள்நிலைப் பருவம். +நோயரும்பு காலப் பகுதியை அடுத்து, முக்கிய அறிகுறியான காய்ச்சல் உடனே தோன்றி மிகையாகும். உடல் வெப்பநிலை 40 °C (104 °F)க்கு மேற்செல்லும், இதனுடன் கடுமையான தலைவலி, குறிப்பாகக் கண்களின் பிற்புறத்தே வலி தோன்றும். பொதுவாகக் காய்ச்சல் இரண்டு தொடக்கம் ஏழு நாட்களுக்கு நீடிக்கும். வெகு அரிதாக ஆனால் சிறார்களில் பொதுவாக, இக் காய்ச்சல் 2 – 5 நாட்களுக்கு நீடித்து, பின்னர் ஓரிரு நாட்களுக்கு இராது, மீண்டும் காய்ச்சல் ஓரிரு நாட்களுக்குத் தோன்றும், பின்னர் அறவே நிற்கும். பத்து நாட்களுக்கு மேலே காய்ச்சல் நீடித்தால் அது டெங்குக் காய்ச்சலாக இருக்கும் சாத்தியக்கூறுகள் குறைவு. +இப்பருவத்திலே ஏனைய அறிகுறிகள் காணப்படும். அவையாவன: + + +காய்ச்சல் தொடங்கியுள்ள காலப்பகுதியில் தோல் நமைச்சல், சினைப்பு தோன்றக்கூடும். முதல் அல்லது இரண்டாம் நாள் (காய்ச்சல் மற்றும் மற்றைய அறிகுறிகள் தோன்றியதிலிருந்து) தோலின் சில பகுதிகள் சிவப்பு நிறமாக மாறும். அடுத்த 4-7 நாட்களில் சின்னமுத்து நோயில் உண்டாகும் சினைப்பைப் போன்று சிறிய சிறிய சிவப்பாலான புள்ளிகள் போன்ற தோற்றம் பெறும். முதலில் உடலிலும் பின்னர் முகத்திலும் நமைச்சல் தோன்றும். இந்நிலையில் குருதி நுண் குழாயில் (குருதி மயிர்த்துளைக்குழாய்) கசிவு ஏற்பட்டு வாய், மூக்கு போன்ற பகுதிகளில் சிறியளவிலான குருதிப்போக்கு உண்டாகாலாம். + +சிலருக்கு இந்நோய் கடுமையான பருவத்தைக் கொண்டிருக்கும். காய்ச்சல் முடிவடைந்த பின்னர் ஏற்படும் இப்பருவம் ஓரிரு நாட்கள் நீடிக்கும். இப்பருவத்தில் உடலில் நீர்மத்தேக்கம் ஏற்படும். குருதி நுண் குழாயின் ஊடுபுகவிடும் தன்மை அதிகரித்து கசிவு ஏற்படலால் நெஞ்சறை, வயிற்றுப் பகுதிகளில் நீர்மத்தேக்கம் உண்டாகின்றது. இதனால் சுவாசச் சிக்கல், வயிறு புடைத்தல் ஏற்படும். இப்பருவத்தில் உறுப்புகள் செயலிழப்பு, கடும் குருதிப்போக்கு (முக்கியமாக, இரையகக் குடலியத் தொகுதியில்) என்பன ஏற்படும். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் இது அடுத்த கட்ட நிலையான டெங்கு அதிர்ச்சிக் கூட��டறிகுறிக்குச் செல்லும். வயிற்று வலி, வாந்தி, அமைதியின்மை போன்றவற்றுடன் பொதுவான அதிர்ச்சியின் அறிகுறிகளும் இதன்போது ஏற்படும். டெங்கு தொற்றுக்குட்பட்டவருள் 5% மானவரிலேயே இக்கடுமையான அறிகுறிகள் தோன்றுகின்றது, ஏற்கனவே டெங்கு தீநுண்மத்தின் பிறிதொரு குருதிப்பாய வகையால் பாதிக்கப்பட்டோருக்கு இவ்வறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். + +அடுத்ததாக மெதுவாக நிகழும் மீள்நிலைப் பருவம், இதில் குருதிக்குழாய்க்கு வெளியே கசிந்த நீர்மம் குருதிக்குழாய்க்குள் இழுக்கப்பட்டு குருதியை அடையும். இது இரண்டு, மூன்று நாட்களுக்கு நீடிக்கும். இந்நிலையின்போது நமைச்சல், தாழ் இதயத் துடிப்பு போன்றன காணப்படலாம், மேலும் நீர்ம அதிகரிப்பு இந்நிலையில் ஏற்பட்டால் மூளையைப் பாதித்துச் சுயநினைவு இழத்தல், வலிப்பு போன்றவற்றை உண்டாக்கலாம். +நோயின் பின்விளைவுகளில் கல்லீரல் பாதிப்பு ஏற்படலாம். இது டெங்கு கல்லீரல் அழற்சி எனப்படும். + +நோய்த்தொற்று பரவியுள்ள ஊர்ப்பகுதிகளில் நோயாளியின் அறிகுறிகளையும் மருத்துவரின் பரிசோதனையும் வைத்து அறுதியிடப்படுகின்றது, எனினும் ஆரம்பகட்ட நோய்ப் பருவத்தை ஏனைய தீநுண்ம நோய்களிலிருந்து வேறுபடுத்தி அறிவது சுலபமாக இராது. சரியான அறுதியிடலுக்கு, காய்ச்சலுடன் பின்வரும் அறிகுறிகளில் குறைந்த பட்சம் இரண்டேனும் இருத்தல் வேண்டும்: குமட்டலும் வாந்தியும், தோல் சினைப்பு, உடல் வலி, குறைவான வெண்குருதியணுக்கள், நேரான குருதியடக்குவடப் பரிசோதனை, அல்லது அட்டவணையில் காட்டப்பட்டுள்ள ஏதாவது எச்சரிக்கைக் குறிகள். எச்சரிக்கைக் குறிகள் கடுமையான நோய் உருவாக முன்னர் தோன்றும். + +குருதியடக்குவடப் பரிசோதனை உடனடியாக நோயைக் கண்டறிய துணைபோகின்றது. குருதியழுத்தமானியின் குருதியடக்குவடத்தை ஏறத்தாழ 100 மில்லிமீட்டர் இரசம் அழுத்தத்தில் ஐந்து நிமிடங்களுக்கு மேற்கையில் வைத்திருக்க வேண்டும், பின்னர் அவ்விடத்தில் சிவப்புப் புள்ளிகள் தோன்றுகின்றனவா என்பதை அவதானிக்க வேண்டும், அதிக எண்ணிக்கையிலான புள்ளிகள் தோன்றின் குருதியடக்குவடப் பரிசோதனை நேரானது, அதாவது டெங்கு குறித்த நபருக்கு இருக்கலாம் என்று அறியலாம். சிக்குன்குனியா நோயிலிருந்து டெங்குவை வேறுபடுத்தலில் சிக்கல்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. +ஆய்வுகூடப் பரிசோதனையில் முழுமையான குருதியணுக்கள் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும், நோயின் ஆரம்பகாலத்தில் வெண்குருதியணுக்கள் குறைவடைவதை அவதானிக்கலாம், அதன் பின்னர் குருதிச் சிறுதட்டுகள் குறைவது (< 100 x 10/லீட்டர்) தோன்றும். அசுபார்ட்டேட் அமினோட்ரான்சுபெரேசு, அலனின் அமினோட்ரான்சுபெரேசு போன்ற நொதிகளின் அளவுகள் மிகையாகும். இவை ஆரம்ப காலத்தில் உயர்வடையத் தொடங்கி இரண்டு வாரத்தில் உச்ச நிலையை அடையும். + +நோயின் கடுமை கூடும்போது, குருதிப்பாயம் குறைவதால் குருதியின் அடர்த்தி கூடும், இதைச் சிவப்பணுக் கனவளவு வீதம் (hematocrit) கூடி இருப்பதை வைத்து உறுதி செய்யலாம். அல்புமின் புரதம் குருதியில் குறைந்துள்ளதும் இங்கு அவதானிக்கலாம். மருத்துவரின் நேரடிப் பரிசோதனைமூலம் பெரிதளவில் ஏற்பட்டுள்ள நுரையீரல் உறை நீரேற்றம் மற்றும் வயிற்றில் நீர்க் கோர்ப்பு என்பவற்றை அறியலாம், எனினும் மீயொலி நோட்டம் மூலம் துவக்கத்திலேயே அறியலாம், இது அதிர்ச்சி வருவதை முற்கூட்டியே அறிய வழிவகுக்கின்றது. + +சிறுநீர்ப் பரிசோதனையில் சிறுநீருடன் குருதி சேர்ந்திருப்பதை அவதானிக்கலாம். சிறுநீர், குருதி, மூளை தண்டுவடத் திரவம் போன்றவற்றை நுண்ணுயிரியல் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு அனுப்புதல் வேறு நோய்களுடன் இருந்து வேறுபடுத்திக்கொள்ள உதவுகின்றது. +நெஞ்சறை எக்சு-கதிர்ப் படம்மூலம் நுரையீரல் உறை நீரேற்றம் உள்ளதென்பது உறுதிப்படுத்தப்படும். + +ஆய்வுகூடத்தில் தீநுண்மத்தை வேறுபடுத்தி அவதானிக்கலாம், இதற்கு உயிரணுவில் தீநுண்மம் வளர்த்தல், கருவமில ஆய்வு, தீநுண்ம பிறபொருளெதிரியாக்கியை அல்லது பிறபொருளெதிரிகளைக் கண்டறிதல் துணைபோகின்றது. ஆனால் இத்தகைய பரிசோதனைகள் மிகவும் செலவு கூடிய காரணத்தால் எல்லா இடங்களிலும் நடத்தப்படுவதில்லை. + +நோய்க்கான குறிப்பிட்ட மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும் பெரும்பாலும் இந்நோய் இரண்டு வாரங்களில் குணமாகி விடுகிறது. நல்ல ஓய்வு, நிறைய நீர்ம உணவு உட்கொள்ளுதல், காய்ச்சலுக்குத் தகுந்த மருந்து உட்கொள்தல் போன்றவை நோயின் கடுமையைக் குறைக்க உதவும். மருத்துவமனையில் செய்யும் சிரைமூல நீர்ம ஈடு, குருதிப்பரிமாற்றம் போன்றவை நோயைக் கட்டுப்படுத்துகின்றது. மருத்துவமனையில் அனுமதிக்கலாமா இல்லையா என்பது ‘எச்சரிக்கைக் குறிகளை’ வைத்துத் தீர்மானிக்கப்படுகின்றது. + +காய்ச்சலுக்கு பரசிட்டமோல் பயன்படுத்தப்படுகின்றது. அஸ்பிரின், இயக்க ஊக்கி மருந்துகள் (corticosteroids), அழற்சிக்கு எதிரான இசுட்டீரோய்டு இல்லாத மருந்துகள் அறவே பயன்படுத்தல் கூடாது, ஏனெனில் இவை குருதிப்போக்கை மேலும் மிகையாக்கிவிடும். மேலும் தசை வழியே ஊசி போடுதல் போன்ற குருதிப்பெருக்கை ஏற்படுத்தவல்ல மருத்துவ முறைகள் தவிர்க்கப்படல் வேண்டும். + +நோயின் மீள் நிலைப் பருவத்தில் சிரைவழியான நீர்மம் செலுத்துதல் நிறுத்தல் அவசியமாகின்றது, ஏனெனில் இப்பருவத்தில் நீர்ம அதிகரிப்பு நிலை உண்டாகும். + +பாதிக்கப்பட்ட நோயாளி நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு, மலைவேம்பு சாறுகளை காலை, மாலை ஆகிய இரண்டு வேளை அருந்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து ரத்தத்தில் உள்ள தட்டை அணுக்களின் அளவு குறையாமல் பாதுகாக்கபடுவதாகச் சித்த மருத்துவம் கூறுகின்றது. + +டெங்கு காய்ச்சலை உண்டாக்கும் தீ நுண்மத்தில் நான்கு குருதிப்பாய வகைகள் உண்டு எனவே ஒருத்தருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். இதனால் டெங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி முறை இன்னமும் ஆய்வில் உள்ளது. தடுப்பூசி இல்லாத காரணத்தால் டெங்கு நோயைப் பரப்பும் கொசுவிலிருந்து பாதுகாத்துக் கொள்வதே இன்றியமையாத தடுப்பு முறையாகும். + +கொசு (ஏடிசு) உருவாகாமல் தடுப்பதற்கு சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்தல், அவற்றின் வதிவிடத்தை முற்றுமுழுதாக அழித்தல், வதிவிடத்தில் இனம்பெருகாது கட்டுப்படுத்தல் என்பன முக்கியமானது. சுற்றுப்புறத்தில் தேங்கு நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றை வெறுமைப் படுத்துதல் அல்லது நீர் தேங்கி உள்ள அத்தகைய இடங்களில் பூச்சிகொல்லி மருந்துகளைத் தெளித்தல், உயிரியற் கட்டுப்பாட்டுக் காரணிகளை இடல் போன்றன கொசுக்களின் பெருக்கத்தைத் தடுக்கின்றது. பூச்சிகொல்லி மருந்துகளால் மாந்தருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் கருதுமிடத்து தேங்கிய நீர்நிலைகளை வெறுமைப் படுத்தும் முறையே சாலச்சிறந்தது. தோலை மூடக்கூடிய உரிய ஆடைகள் அணிவது, தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது, கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும். + +டெங்குவாக இருக்கக்கூடிய காய்ச்சல் நோய் ஒன்று முதன்முதலில் சீன மருத்துவ அறிகுறிகள் என்சைகிளோபீடியாவில் சின் பேரரசுக் காலத்தில் (265 – 420 கி.பி) பதிவு செய்யப்பட்டுள்ளது. பறக்கும் பூச்சிகளுடன் தொடர்புடைய நீர் நச்சுமையால் இது ஏற்பட்டுள்ளதாக அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. + +டெங்குவாகக் கருதக்கூடிய காய்ச்சலுடன் கூடிய பரந்த தொற்று நிகழ்வு ஒன்று முதன்முதலில் 1635இல் மேற்கிந்தியத்தீவுகளில் நடந்ததாகப் பதியப்பட்டுள்ளது. + +1779–1780 ஆண்டுப் பகுதியில் முதலாவது டெங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தொற்று நிகழ்வு ஆசியா, வட அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. 1789 இல் அமெரிக்க மருத்துவர் பெஞ்சமின் ரஷ் 1780 ஆம் ஆண்டு பிலாடெல்பியாவில் நிகழ்ந்திருக்கக்கூடிய டெங்கு தொற்று நிகழ்வுபற்றிக் குறிப்பிட்டுள்ளார், இவர் அதன் அறிகுறிகளை வைத்து ‘எலும்பு முறிப்பு நோய்’ என்று பெயரிட்டார். + +1820 இன் முற்பகுதிகளில் கிழக்கு ஆப்பிரிக்காவில் டெங்குவாக இருக்கக்கூடிய தொற்று நிகழ்வு நிகழ்ந்தது. இதனை சுவாகிலி மொழியில் கெட்ட ஆவியால் திடீரென உண்டாகுமெனப் பொருள்படும் ‘கி டெங்கா பெபோ’ (ki denga pepo) என்று அழைத்தனர். 1827–28 இல் கரிபியனில் நிகழ்ந்த தொற்று நிகழ்வின் பின்னர் இசுப்பானிய கரிபியர்களால் டெங்கு என அழைக்கப்பட்டது. +1906 இல் ஏடிசுக் கொசுவால் இது காவப்படுகின்றது என்பது அறியப்பட்டது. இரண்டாம் உலகப் போரின் பின்னர் பெரும்படியான தொற்று நிகழ்வுகள் நிகழ்ந்தன. இந்த மீன் கொசுவின் குடம்பிகளைத் தின்னும் இக்காய்ச்சலின் காரணமாக இந்திய மாநிலமான தமிழகத்தில் மட்டும் 2015 ஆம் ஆண்டில் 4484 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். + +டெங்கு நோயைத் தடுக்க அல்லது ஒழிக்கப் பல ஆராய்ச்சிகள் உலகின் பல பாகங்களிலும் செய்யப்பட்டு வருகின்றன. நோய்க்காவிகளின் கட்டுப்பாடு, தீநுண்மத்துக்கான (வைரசுக்கான) தடுப்பு மருந்து உருவாக்கம், வைரசுக்கெதிரான மருந்துகள் கண்டுபிடிப்பு எனப் பல வழிகளிலும் ஆராய்ச்சியாளர்கள் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். + +கப்பி (guppy) எனும் ஒருவகை மீன்வகைகளை தேங்கிக் கிடக்கும் நீர்நிலைகளில் வளர்ப்பது, அவை கொசுக்களின் குடம்பிகளைத் தின்னுவது மூலம் கொசுக்களின் இனவிருத்தி கட்டுப்படுத்தப்படுகின்றது. இம்முயற்சி ஓரளவு வெற்றியைத் தந்துள்ளதென அறியப்படுகின்றது. + +டெங்குக் காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பைச் சுமார் 16 வாரங்களுக்கு முன்பாகவே கண்டறிந்து, முன்னெச்சரிக்கை விடுப்பதற்கான அமைப்பைச் சிங்கப்பூரைச் சேர்ந்த யின் லிங் ஹி வடிவமைத்து வருகிறார். வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதன் மூலம் டெங்கு காய்ச்சலுக்கு காரணமாகும் கிருமிகளின் நிலையை அறிய முடியும் என்பதே அவரது முக்கிய கண்டுபிடிப்பு. + + + + + +ரெட் வயலின் + +ரெட் வயலின் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு கனேடியத் திரைப்படம் ஆகும். இப்படம் அமெரிக்க நகர்ப்பட அகாதமியின் (ஆஸ்கார் விருது) சிறந்த திரை இசை விருது பெற்றது. இக்கதையின் மையமாகத் திகழ்கின்ற ஒரு வயலின் மூன்று நூற்றாண்டுகளில் ஐந்து நாடுகளின் வழியாய் பலதரப்பட்ட கதாபாத்திரங்களின் வாழ்க்கையைத் தொட்டுச் செல்வதை இப்படம் சித்தரிக்கின்றது. கதை நிகழ்கின்ற தருணத்திற்கு ஏற்றாற் போல அந்நாட்டின் மொழியில் (இத்தாலி, ஜெர்மன் மொழி, பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் மேன்டரின்) வசனம் அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் சிறப்பம்சமாகும். + +திரையிசைக்கான ஆஸ்கார் விருது + + + + +அக்டோபர் 16 + + + + + + + +யாகூலிகன்ஸ்! + +யாகூலிகன்ஸ்! யாகூவின் சிறுவர்களுக்கான இணையவாயில் (வெப்போட்டல்) ஆகும். இதிலுள்ள ஆக்கங்கள் யாகூப் பணியாளர்களினால் பொருத்தமான தலைப்புகளின் கீழ் உருவாக்கப் பட்டவை. இத்தளமானது கணினி விளையாட்டுக்கள், மின்மடல்கள், திரைப்படங்கள், தினமொரு தகவல் மற்றும் ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்குமான கல்வி வழிகாட்டிகள் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. + + + + + +இரண்டாம் இராஜேந்திர சோழன் + +இரண்டாம் இராஜேந்திர சோழன் முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகனும், முதலாம் இராஜராஜ சோழனின் பேரனும் ஆவான். சோழ மன்னனாயிருந்த இவனது அண்ணன் சாளுக்கியமன்னனான முதலாம் சோமேசுவரனுடனான போரொன்றில் கொல்லப்பட, போரைத் தொடர்ந்து நடத்திச் சோழர்களின் தோல்வியைத் தவிர்த்தவன் இவன். கி.பி 1054 இல் போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இவன் 1064 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினான். + +இவன் காலத்திலும், மேற்குச் சாளுக்கியருடனான சோழரின் பகைமை நீடித்திருந்தது. அவர்களுடன் போரிட்டு வெற்றியும் பெற்றுள்ளான். கீழைச் சாளுக்கியருடனான உறவு நல்ல நிலையில் இருந்தது. தனது மகளான மதுராந்தகி என்பவள் கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன். + +இரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னனானான். + + + + +குருதிப்புனல் (திரைப்படம்) + +குருதிப்புனல் (1995) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி.சி ஸ்ரீராம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், அர்ஜூன், கௌதமி, நாசர் போன்ற பலர் நடித்துள்ளனர். பாடல்களே இல்லாமல் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டிற்கான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ரோடெர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் இத்திரைப்படம் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படம் 1989-ல் வெளியான அபூர்வ சகோதரர்கள் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. + +ஆதி நாராயணனும் (கமலஹாசன்) அப்பாசும் (அர்ஜூன்) காவல் துறை அதிகாரிகள்.தீவிரவாத அமைப்பொன்றின் தலைவனான பத்ரி (நாசர்) குழுவினுள் காவல் துறையினரைச் சேர்ந்த இருவர் வேவுபார்ப்பதற்காக அனுப்பப்படுகின்றனர். மேலும் பத்ரியினை ஒரு சம்பவத்தில் கைது செய்து கொள்ளும் ஆதி நாராயணன் தீவிரவாதக் குழுக்கள் பற்றியும் விசாரணைகள் நடத்துகின்றார். ஆனால் அவரே அத்தீவிரவாத குழுக்களின் தலைவரென்பதனை அறியவும் இல்லை ஆதி. பின்னர் அறிந்து கொண்டபோது ஆதியின் குடும்பத்திற்கு தீங்குகள் விளைகின்றன. ஆதியின் மகன் தீவிரவாதிகளின் அதிஉயர் ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டுக் காயமடைகின்றான். இதனை அறிந்து கொள்ளுன் ஆதி பத்ரியினைக் கொலை செய்யப்போவதாகவும் பயமுறுத்துகின்றார். இதனைப் பார்த்துப் பயப்படாத பத்ரி ஆதியின் குடும்பத்தாருக்குத் தீங்கு விளையப் போகின்றது எனக் கூறுகின்றார். அவர் தான் தீவிரவாதிகளின் த���ைவன் என்பதனை அறியாத ஆதி அவரை விடுதலையும் செய்கின்றார். இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகளின் இடத்திற்குச் சென்ற இரு காவல்துறையினர் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அத்தீவிரவாதிகளின் இடத்தினை நோக்கிச் செல்கின்றார் அப்பாஸ் அங்கு அவர் பத்ரியால் கைது செய்யப்பட்டு கொலையும் செய்யப்படுகின்றார். பின்னர் அப்பாஸைத் தேடிச் செல்லும் ஆதி அங்கு இருக்கும் வேவு பார்க்கும் காவல்துறையினரைச் சந்தித்துக் கொள்ளவே இதனை அறிந்து கொண்டு உள்ளே நுழைய முனைந்த தீவிரவாதிகளிடமிருந்து அவ்வேவு பார்ப்பவர்களை அடையாளம் காட்டாத வண்ணமிருப்பதற்காகத் தன்னைச் சுடவும் சொல்கின்றார் ஆதி. அவ்வாறே அக்காவல்துறை அதிகாரியும் செய்கின்றார். + + + + +சனவரி 2 + + + + + + + +இலங்கையில் சோழர் ஆட்சி (993–1077) + +பத்தாம் நூற்றாண்டின் நாலாம் காற்பகுதி தொடக்கம் சுமார் 70 ஆண்டு காலம் இலங்கையில் சோழர் ஆட்சி நிலவியது. இலங்கை அரசன் ஐந்தாம் மகிந்தன் என்பவன், சோழர்களுக்கும் அவர்களின் பகைவர்களான பாண்டியர், சேரர் ஆகியோருக்கும் இடையிலான போட்டியில் சோழரின் பகைவர்களுக்கு ஆதரவு கொடுத்ததாகத் தெரிகிறது. இதனால் சோழ மன்னனான முதலாம் இராஜராஜன் கி.பி 993 இல் இலங்கையின் மீது படையெடுத்து தலை நகரமான அனுராதபுரத்துடன் சேர்த்து நாட்டின் வட பகுதியைக் கைப்பற்றிக் கொண்டான். அனுராதபுரத்தைக் கைவிட்டுப் பொலன்னறுவை என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினான். சோழர் ஆட்சிக்குட்பட்ட இலங்கையின் பகுதி "மும்முடிச் சோழ மண்டலம்" எனப் பெயரிடப்பட்டு, தலைநகரான பொலன்னறுவையும் "ஜனநாதமங்கலம்" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆயினும் இலங்கையின் தென்பகுதியான ருகுணு இராச்சியம் 24 வருடங்கள் ஜந்தாம் மகிந்த மன்னன் தலைமையில் சோழர் இடையூறு இன்றி ஆட்சி நடத்தி வந்தது. +கி.பி 1017 ஆம் ஆண்டில், பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த மணிமுடியையும், செங்கோலையும் கைப்பற்றுவதற்காக முதலாம் இராசேந்திர சோழன் எஞ்சியிருந்த ருகுணு இராச்சியத்தையும் படைகளை அனுப்பிக் கைப்பற்றினான். இதன் மூலம் முழு இலங்கையையும் சோழர் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்தான். இந்த தாக்குதலின் போது ருகுணு இராச்சியத்தின் மன்னன��ன ஐந்தாம் மகிந்தன், இராணிகள் மற்றும் அரச ஆபரணங்களை சோழர்படை கைப்பற்றியது. சோழரினால் கைது செய்யப்பட்ட ஐந்தாம் மகிந்தன் 1029 இல் சோழர் சிறையில் மரணமானான். + +ஐந்தாம் மகிந்தனின் மரணத்தைத் தொடர்ந்து ருகுணுவின் சிங்களப்படையினர் சோழர்படைகளுக்கு எதிராகப் புரட்சி செய்ய ஆரம்பித்தனர். சோழர் ருகுணுவைத் தாக்கி ஐந்தாம் மகிந்தனைக் கைப்பற்றியபோது அவனது மகனும் இலங்கையின் இளவர்சனுமான காசியப்பன் தப்பித்து ஓடிவிட்டான். ஐந்தாம் மகிந்தனின் மறைவிற்குப் பின்னர் றுகுணுவில் இருந்து ஆரம்பித்த சிங்கள சோழ எதிர்ப்பிற்கு 12 வயது நி்ரம்பிய காசியப்பன் தலைமை வகித்தான். + +காசியப்பன் பற்றி அறிந்து கொண்ட இராஜேந்திர சோழன் தனது மகன் இராசாத்தி இராசன் தலைமையில் கி.பி.1041-ல் ஒரு படையை அனுப்பி காசியப்பனை எதிர்த்தான். இந்தப் போரில் காசியப்பன் உயிரிழந்ததுடன் சோழர்படை பெரும் வெற்றி ஈட்டியது . இதேவேளை சூளவம்சத்தை ஆதாரமாகக் கொண்ட வரலாற்றுத் தகவல்கள் ஆறுமாதம் தொடர்ந்த இந்த யுத்தம் இரண்டு சிங்களத் தளபதிகள் தலைமையில் இடம்பெற்றதாகவும் இந்த யுத்தம் காரணமாக சோழர்கள் படை ருகுணுவில் இருந்து வெளியேறியதாகவும் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முதலாம் விக்கிரமபாகு எனும் பெயரில் காசியப்பன் தனது அரசை ருகுணுவில் அமைத்துக்கொண்டான் எனவும் சூளவம்சம் கூறுகின்றது. + +தொடர்ந்து தனது படைப்பலத்தைப் பெருக்கியதுடன் மக்களை தனக்கு ஆதரவாகத் திருப்பும் நோக்கிலும் விக்கிரமபாகு ஈடுபட்டான். இதேவேளை சோழருக்கு எதிரான பாண்டியர், சேரருடன் நல்லுறவை வளர்த்துக்கொண்டான். இதேவேளை அவ்வப்போது ருகுணு இராச்சியத்தின் மீது சோழர்படைகள் தாக்குதல் நடத்தினாலும் ருகுணுவைக் கைப்பற்றும் நோக்கம் அவர்களுக்கு இருக்கவில்லை. + +விக்கிரமபாகுவின் படைபெருக்கும் நடவடிக்கை எதிர்பார்த்ததைவிட மிகவும் நீண்டகாலம் எடுத்து சுமார் எட்டு வருடங்கள் தொடர்ந்தது. ஆயினும் பெருக்கிய படைமூலம் சோழர்மேல் படையெடுக்க முன்னர் விக்கிரமபாகு நோய்வாய்ப்பட்டு தெய்வேந்திர முனையில் மரணமடைந்தான் . + +கி.பி 1070 வரை இலங்கையில் நீடித்த சோழர் ஆட்சி பல்வேறு காரணங்களால் வீழ்ச்சியுற ஆரம்பித்தது. முதலாம் விக்கிரமபாகுவிற்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தினால் அரசாட்சிக்கான போட்டி ருக���ணு இராச்சியத்தில் அரங்கேறியது. இந்த நிலமையை சோழர்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டனர். பதவிக்குப் போட்டியிட்ட ஐந்து இளவரசர்களில் மூன்று இளவரசர்கள் சோழர்படைகளினால் வெற்றிகரமாகக் கொலைசெய்யப்பட்டனர். + +கி.பி 1055 இல் முதலாம் விஜயபாகு எனும் அரசன் பதவியேற்றுக்கொண்டான். பதவி ஏற்ற விஜயபாகு சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலநறுவையைக் கைப்பற்றத் திட்டம் தீட்டினான். கி.பி 1066 இல் தனது முதலாவது தாக்குதலை பொலன்னறுவை மேல் நடத்தினான். இதன் போது பொலன்நறுவை நகரத்தை வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும் சிறிது நாட்களில் தென்னிந்திய சோழ சாம்ராச்சியத்தில் இருந்து கிடைத்த மேலதிகப் படையுதவிகாரணமாக சோழர் மீளவும் விஜயபாகுவை விரட்டித் தமது தலைநகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். + +1069-1070 காலப்பகுதியில் சோழ இராச்சியத்தில் உள்நாட்டு யுத்தம் உருவானது. இதன் காரணமாக சோழ அரசிற்கு இலங்கைபற்றி கவலைப்படும் நிலையில் இருக்கவில்லை. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய விஜயபாகு தனது இரண்டாவது தாக்குதலைப் பொலன்னறுவை மீது ஏவினான். மூன்று முனைகளில் படைகளை ஏவிய விஜயபாகு மேற்குப் பக்கமாக ஒரு படையணியை அனுப்பி மாந்தை மூலம் சோழர் உதவிப்படை அனுப்பினால் அதை எதிர்கொள்ள தயாரானான். அதேவேளை மேற்கு, கிழக்கு பகுதிகளால் இரண்டு படையணிகளையும் நேரடியாக தெற்கிலிருந்து தனது தலைமையில் பிரதான படையணியையும் கொண்டு பொலனறுவையை முற்றுகையிட்டான். சுமார் 17 மாதங்கள் தொடர்ந்த முற்றுகை விஜயபாகுவிற்கு வெற்றியாக அமைந்தது.. கி.பி 1070 இல் பொலன்னறுவையைத் தலைநகரமாகக் கொண்டு விஜயபாகு இலங்கையின் மன்னனாக முடி சூடிக்கொண்டான். + +17 வருடங்கள் தொடர்ந்த இடைவிடாத தாக்குதல் மூலம் சோழர்படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றியதுடன் இலங்கையை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைத்தான். அண்ணளவாக ஒரு நூற்றண்டு காலத்தின் பின்னர் இலங்கையை ஒரு குடையின் கீழ் சேர்த்த பெருமை இவனைச் சாரும். இவ்வாறு சோழர் ஆட்சி இலங்கையில் முடிவடைந்தது. + + + + + +பன்றி + +பன்றி இரட்டைப்படைக் குளம்பி வரிசையில் பன்றிக் குடும்பத்தில் அடங்கும் ஒரு பேரினம் ஆகும். பன்றிப் பேரினத்தில் கொல்லைப்படுத்தப்பட்ட பன்றி ("Sus domestica") காட்டுப் பன்றி ("Sus scrofa") உட்பட 12 இனங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிகள் அவற்றின் இறைச்சிக்காகவும், தோலுக்காகவும் பல நாடுகளில் பண்ணைகளிலும் வீடுகளிலும் வளர்க்கப் படுகின்றன. இவற்றின் முடி பொதுவாக தூரிகை செய்யப் பயன்படுகின்றது. + +கிட்டத்தட்ட 2 பில்லியன் எண்ணிகையைக் கொண்டுள்ள கொல்லைப்படுத்தப்பட்ட பன்றிகளே பன்றி இனங்களில் அதிக எண்ணிகையானவையாகும். பன்றிகள் அனைத்துண்ணிகள் ஆகும். பன்றிகள் புத்திகூர்மையுள்ள சமூக விலங்குகள் ஆகும். + +பன்றிகளுக்கு தகுந்த வியர்வை சுரப்பிகள் இல்லாத காரணத்தால் அவை நீரில் இருப்பதன் மூலமோ சேற்றைப் பூசிக்கொள்வதன் மூலமோ தங்கள் உடம்பைக் குளிர்வித்துக் கொள்கின்றன. மேலும், இந்த சேற்றுப் பூச்சானது சூரிய வெப்பம் மற்றும் பூச்சிகளிடம் இருந்து காத்துக்கொள்ளவும் உதவுகிறது. + +பன்றிகள் அறிவுக்கூர்மை உள்ள விலங்குகளாகக் கருதப்படுகின்றன. நாய், பூனைகளை விட இவற்றை எளிதில் பழக்க முடியும். எனவே இவற்றை செல்ல விலங்குகளாகவும் மக்கள் வளர்க்கின்றனர். +பன்றிகள் இசுலாமியர்களால் வெறுக்கப்படுகின்றன. +பேக்கன் (பன்றி இறைச்சி) என்பது ஒரு பன்றியிலிருந்து தயாரித்த பதனம் செய்த மாமிச உணவு ஆகும். அது முதலில் உப்புக் கரைசல் அல்லது உலர்ந்த பொதிதலில் அதிக அளவு உப்புடன் சேர்த்து பதனம் செய்த மாமிச உணவு ஆகும்; அதில் இருந்து கிடைப்பதே புத்தம் புதிய பேக்கன் அல்லது பன்றி இறைச்சி ஆகும். + +பன்றியின் சுவாச பையில் இருக்கும் எச்1என்1 என்ற வைரஸ் கிருமிகள் ஆர்.என்.ஏ. மூலக் கூற்றை அடிப்படையாக கொண்டு உருமாறி மனிதர்களை தொற்ற கூடியவை.மெக்சிகோ பன்றி பண்ணையில் பரவ துவங்கிய இந் நோய் 1,300 பேரை தாக்கியுள்ளது. இந்த நோயின் கொடுமையை தாங்க முடியாமல் அந்நாட்டில் 176 பேர் பலியாகியுள்ளனர்.கண்டேஜியஸ் (தொடுவதால் பரவும்) நோயான பன்றிக் காய்ச்சல், வெகு விரைவில் பரவி வருகிறது.குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால் இந்த நோய் அவர்களை வெகுவாக பாதிக்கிறது. குழந்தைகளுக்கு இந்த நோய் முற்றினால் உடல் நீல நிறமாக மாறி விடுகிறது. அதுமட்டுமல்லாது மூச்சு விட சிரமப்படுவர். + +பன்றி வளர்ப்பு பெரும்பாலும் இறைச்சிக்காகவே நடைபெறுகின்றது. +பன்றிகள் மனிதனால் உட்கொள்ள முடியாத உணவுப்பொருட்களான பசுந்தீவனம், தானியங்களின் உப பொருட்கள், இறைச்சிக் கழிவுகள், சம���யலறைக்கழிவுகள் ஆகியவற்றை உண்கின்றன.பன்றிகளின் சாணம் மண்ணின் தன்மையினைப் பாதுகாக்கும் உரமாக பயன்படுகிறது. +பன்றிகள் வேகமாக வளரும் தன்மையுடையன. அவை நல்ல பராமரிப்பில் ஒரே சமயத்தில் ஒன்று முதல் பனிரெண்டு குட்டிகளை ஈனக்கூடியவை +பன்றிகளை இறைச்சிக்காக வெட்டும் போது சராசரியாக அவற்றின் உயிர் எடையில் 60-80 சதவிகித இறைச்சி பெறப்படுகிறது. பன்றிகள் சிறிய இடைவெளியிலேயே தன் இனத்தைப் பெருக்கும். ஒரு பெண் பன்றி 8-9 மாதங்களிலேயே குட்டி ஈனும். ஒரு வருடத்திற்கு 2 முறை குட்டி ஈனும். ஒவ்வொரு இனப்பெருக்கத்தின் போது 8-12 பன்றிக்குட்டிகளை ஈனும்.பன்றி வளர்ப்பினால் விரைவில் வருமானம் 6-8 மாதங்களிலிருந்து கிடைக்கிறது. + +பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது கீழ்க்கண்டவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் +ஒரு குறிப்பிட்ட பன்றி இனத்தினை தேர்வு செய்வதை விட ஒரு பன்றி பண்ணையிலிருந்து ஒரு நல்ல பன்றியினை தேர்வு செய்வதே மிக முக்கியமாகும். பன்றிகளை இனவிருத்திக்காக தேர்வு செய்யும் போது நோயில்லாத பன்றிப்பண்ணையிலிருந்து தேர்ந்தெடுக்க வேண்டும். ஒரு முறை பன்றிகளை இனப்பெருக்கத்திற்காக தேர்வு செய்த பின்பு மீண்டும் இரண்டாம் முறையாக தேர்வு செய்வதற்கு பன்றிகளின் உற்பத்தி திறனை கவனத்தில் கொள்ள வேண்டும். +பன்றி வளர்ப்பு மேல் மற்றும் வடமேல் மாகாணங்களி்ன் கரையோரப் பகுதிகளில் பிரதானமாக மேற்கொள்ளப்படுகின்றது. இத்துறையில் விசாலமான நடுத்தர உள்ளக, உள்ளக வளர்ப்பு போன்ற முறைமைகள் காணப்படுகின்றன. நிகழ்கால பன்றி சனத்தொகையில் ஏறக்குறைய 80,000 ஆகவும், வருடாந்த பன்றியிறைச்சி உற்பத்தி 9,500 மொத்த தொகை ஆகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பன்றியிறைச்சி 1% ஐ செலுத்துகிறது. ஆடு வளர்ப்புத் துறையை போன்றே பன்றி வளர்ப்புத் துறையும் கடந்த சில தசாப்பங்களாக குறிப்பிடக்கூடிய வளர்ச்சி எய்தவில்லை. + + + + + +பேப் (திரைப்படம்) + +பேப் (Babe) 1995 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும்.சிறந்த தந்திரக் காட்சிகளிற்கான ஆஸ்கார் விருதினைப் பெற்ற இத்திரைப்படம் மலேசியாவில் தடைசெய்யப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது. + +சிறுவர்படம் + +பன்றிகள் இனத்தில் பிறக்கும் பேப் நாய்கள் இனமாக இருக்க விரும்புகின்றது.சிறுவயதிலேயே பெற்றோர்களை இழந்து தவிக்கும் பேப் நாய்களால் வளர்க்கபட்டதே இத்தகு காரணமாகும்.சிறிது காலங்கள் கழித்து எஜமானரால் நாய்கள் விளையாடும் ஓட்டப்போட்டிக்கு அழைத்தும் செல்லப்படுகின்றது பேப்.ஆனால் அங்கிருந்து தன்னாலும் நாய்களைப் போல் ஓடமுடியும் என்பதனை அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் உணர்த்தியும் காட்டுகின்றது பேப்.இதன் பின்னர் புகழின் உச்ச நிலையினை அடையும் பேப் முன்னர் எஜமானரால் கவனம் எடுக்கப்படாமலிருந்து பின்னர் மிகுந்த பாசத்துடன் வளர்க்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.இத்திரைப்படத்தில் வரும் அனைத்து விலங்கினங்களும் உரையாடிக்கொள்வதும் குறிப்பிடத்தக்கது. + + + + + + +திரிசா + +திரிஷா கிருஷ்ணன் (பிறப்பு - மே 4, 1983, சென்னை), தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். + + + + + + +முகம்மது யூனுஸ் + +பேராசிரியர். முகமது யூனுஸ் (ஆங்கிலம்:Muhammad Yunus,வங்காள மொழி: মুহাম্মদ ইউনুস "Muhammod Iunus") (பிறப்பு - ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்), வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார். ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் 'Banker to the Poor' எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபெல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார். + +யூனுஸ் 1940 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகரில் உள்ள சிற்றூர் ஒன்றில் பிறந்தார். தந்தையின் பெயர் Hazi Dula Mia Shoudagar; இவர் ஒர் நகை வணிகர் ஆவார். தாயாரின் பெயர் Sufia Khatun ஆகும். 1947 ம் ஆண்டில் சிட்டக்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தன் ஊரிலேயே வாழ்க்கையினைச் செலவிட்டார். Jahangirnagar பல்கலைக்கழகப் பேராசிரியரான Afroji Yunus என்பவரை மணமுடித்துள்ளார். இவருக்கு Dina Yunus, Monica Yunus என்று இரு மகள்கள் உண்டு. + +யூனுஸ் சிட்டங்கொங் நகருக்கு இடம்பெயரும் வரையில் தனது தொடக்கக் கல்வியை கிராமப்பள்ளி ஒன்றினிலே கற்றார்.அதன்பின்னர் Lamabazar தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வியையும் Chittagong Collegiate School இல் மேல் படிப்பையும் கற்று, பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் வெற்றியும் பெற்றார். இக்காலகட்டத்திலே அவர் சாரணர் இயக்கம், கலை நிகழ்ச்சிகள் போன்ற பலவித கல்விசாரா நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். + +1957 ஆம் ஆண்டில் டாக்கா பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தில் மாணவனாக சேர்ந்து 1960 ம் ஆண்டில் இளங்கைலைப் பட்டமும் 1961 ல் முதுகலைப் பட்டத்தினையும் பெற்றார். அதன்பிறகு 1969ம் ஆண்டில் அமெரிக்காவில் உள்ள Vanderbilt University இல் பொருளியலில் முனைவர் பட்டமும் பெற்றார். அன்றிலிருந்து நாடு திரும்பும் வரையில் Middle Tennessee State University இல் பொருளியல்துறை உதவிப் போராசிரியராகப் பணியாற்றினார். நாடு திரும்பிய பின் சிட்டகொங் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறைப்போராசிரியராகக் கடமையாற்றினார். + +வறிய பங்களாதேசத்தவர்களுக்கு கடன் வழங்கும் எண்ணத்துடன் 1976 ம் ஆண்டில் யூனுஸ் கிராமின் வங்கியினை (Grameen Bank,தமிழில் கிராம வங்கி) ஆரம்பித்தார்.இவ் வங்கி இன்றளவும் US$ 5.1பில்லியன் தொகையினை 5.3 மில்லியனுக்கு அதிகமான மக்களுக்கு கடனாக வழங்கியுள்ளது.பணத்தினை மீளச்செலுத்துவதை உறுதிப்படுத்த "solidarity groups" எனும் முறைமையினை வங்கி கையாளுகின்றது.இந்த ஒருங்கிணைக்கப்பட்ட குழுவானது சேர்ந்து வங்கிக்கடனை பெற விண்ணப்பிப்பதுடன் ,ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கான கடனுக்கு கூட்டு உத்தரவாதத்தினை அளித்தல்,பொருளியல் ரீதியான முன்னேற ஆதரவு வழங்குதல் போன்றவற்றியும் மேற்கொள்ளவேண்டும்.சிறுகடன் வழங்குதல் தவிர கிராமின் வங்கி பல மேலதிக தேவைக்காகவும் கடனை வழங்குகின்றது. கல்விசார்கடன்கள்,வீடமைப்புக்கடன்,மீன்பிடி,விவசாய,கைத்தறி போன்ற கைத்தொழில்களுக்கான கடன்கள் போன்றவை சிலஎடுத்துக்காட்டாகும்.சிறுகடன் பெறுபவர்களில் 96% மானோர் பெண்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயங்களுள் ஒன்றாகும். + +வறிய மக்களின் சமூக,பொருளியல் முன்னேற்றத்திற்காக முன்னிற்று பாடுபட்டமைக்காக முகமது யூனுஸ்க்கும் அவரால் தோற்றுவி��்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து 2006 ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபெல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. +இது பற்றிய நோபெல் பரிசு குழுவின் அறிவிப்பு: + +இவ் அறிவிப்பின் பின் யூனுஸ் தனக்கான பரிசின் பங்கான $1.4 மில்லியன் டொலரினை கொண்டு வறிய மக்களுக்கு குறைந்த விலையினில் நிறைபோசாக்கு உணவினை வழங்கும் திட்டமொன்றிக்கு செலவிடப்போவதாகவும் எஞ்சிய தொகையினை கண் மருத்துவமனை அமைப்பதற்கு செலவிடப்போவதாகவும் தன் கருத்தினை வெளியீட்டார். + + + + + + + +ந. சி. கந்தையா பிள்ளை + +ந. சி. கந்தையா (1893 - 1967) தமிழிலக்கியத் துறையில் சிறப்பாக செயலாற்றியவர். எளிய பாமர மக்களும் படித்துப் பலன் பெறுமாறு உரைநடையில் தமிழ் இலக்கியங்களை வழங்கினார். + +ந. சி. கந்தையாபிள்ளை யாழ்ப்பாணத்தில் உள்ள கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டு நன்னியர் சின்னத்தம்பி அவர்களின் புதல்வராகப் பிறந்தார். அவ்வூரிலேயே கல்வி கற்றுத் தேறி, சில காலம் ஆசிரியப்பணி செய்தார். ஆசிரியப் பணியிலிருக்கும்போதே ஈழத்தில் பெரும் புலவர்களின் அறிமுகத்தில் தமிழ் இலக்கண, இலக்கியங்களை கற்றுத் தேர்ந்தார். + +சில காலம் மலேயாவில், பிருத்தானியா தொடர்வண்டி சேவையில் சில காலம் பணியாற்றினார். பின்னர் இலங்கை திரும்பி தமிழ்மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இவர் நவாலியூர் மருதப்பு என்பவரின் மகளான இரத்தினம்மாவைத் திருமணம் செய்தார். திருநாவுக்கரசு, மங்கையற்கரசி என இரு பிள்ளைகள் உள்ளனர். + +தமிழ் ஆர்வம் பெற்ற இவர், தமிழ்மொழி, தமிழ்நாகரிகம், சிவவழிபாடு ஆகியவற்றின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். தமிழ்நாடு சென்று தமிழ்நூல்களை ஆராயும் முயற்சியிலும் ஈடுபட்டார். தொல்பொருள் ஆதாரங்களைப் பெற்று ஆராய்ந்தறிந்தார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு பல ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டார். அவற்றில் சில: + + +ஆகியன. + +தாம் எழுதிய நூல்களை பதிப்பித்து வெளியிடுவதற்காகத் தமிழ் நாட்டிற்கு சென்று, அங்கு வீரபாகுப் பிள்ளை என்பவரால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த "ஒற்றுமை நிலையம்" மூலமாகத் தனது நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகிய பதிப்பகங்களும் ந.சி.கந்தையா அவர்களுடைய நூல்களை வெளியிட்டன. + +தமிழியம் பற்றிய ஆய்வை மேற்கொண்ட பல அறிஞர்களுள் ந.சி.கந்தையா அவர்களின் பணி முதன்மையானது. பொது அறிவுத் துறையிலும், அகராதித் துறையிலும் தனித்துவமான இடத்தை பெற்றார். "செந்தமிழ் அகராதி, தமிழ் இலக்கிய அகராதி, தமிழ்ப் புலவர் அகராதி, காலக்குறிப்பு அகராதி, திருக்குறள் அகராதி" போன்ற அகராதிகள் இவரால் தோற்றம் பெற்றன. ஐம்பதிற்கும் மேற்பட்ட நூல்களை இவர் எழுதியுள்ளார். + +இவர் தனது 74 வது வயதில் 1967 இல் இலங்கையில் காலமானார். + + + + + +மனோரமா (நடிகை) + +மனோரமா (26 மே 1937 - 10 அக்டோபர் 2015) தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவார். நகைச்சுவைக் கதாபாத்திரங்களில் தனது திறனை வெளிப்படுத்திய இவர் 1500 திரைப்படங்களுக்கு மேல் நடித்தார். இவர் தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். + +இவர் தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். கா. ந. அண்ணாதுரை, மு. கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். தவிர ஜெயலலிதா மற்றும் ம. கோ. இராமச்சந்திரன் இவருடன் தமிழ்த் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். மேலும் என். டி. ராமராவ் தெலுங்கு படங்களில் இவருடன் நடித்திருக்கிறார். + +இவரது இயற்பெயர் கோபிசாந்தா. இவரது பெற்றோர் காசியப்பன் 'கிளாக்' உடையார் மற்றும் ராமாமிர்தம். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ராஜமன்னார்குடியில் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை ஒரு சாலை ஒப்பந்தக்காரராகப் பணியாற்றியவர். தந்தை காசி கிளாக்குடையார் மனோரமாவின் தாயின் தங்கையை இரண்டாம் தாரமாகத் திருமணம் புரிந்தார். இதனை அடுத்து கணவனால் புறக்கணிக்கப்பட்ட இராமாமிருதம் மனோரமாவுடன் வறுமையின் காரணமாக காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். ஆறாம் ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். அங்கு அவர்கள் பலகாரம் சுட்டு விற்பனை செய்து வாழ்க்கையைத் தொடங்கினார்கள். தனது பனிரெண்டாவது அகவையில் நடிப்புத் தொழிலில் இறங்கினார். "பள்ளத்தூர் பாப்பா" என அழைக்கப்பட்டார். நாடக இயக்குனர் திருவேங்கடம், ஆர்மோனியக் கலைஞர் தியாகராஜன் ஆகியோர் இவருக்கு "மனோரமா" எனப் பெயர் சூட���டினர். + +ஆரம்பத்தில் "வைரம் நாடக சபா" நாடகங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அக்காலத்தில் புதுக்கோட்டையில் எஸ். எஸ். ராஜேந்திரன் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது அவருக்கு மனோரமா பி. ஏ. குமார் என்பவரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். மனோரமாவின் திறமையை அறிந்துகொண்ட இராசேந்திரன் தனது "எஸ்.எஸ்.ஆர். நாடக மன்றத்தில்" சேர்த்துக் கொண்டார். இந்நாடக நிறுவனத்தின் "மணிமகுடம்", "தென்பாண்டிவீரன்", "புதுவெள்ளம்" உட்பட நூற்றுக்கணக்கான நாடகங்களில் நடித்தார். மனோரமா முதன் முதலாக மஸ்தான் என்பவர் இயக்கிய ஒரு சிங்கள மொழித் திரைப்படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். பின்னர் ராஜேந்திரன், தேவிகா நடித்த ஒரு திரைப்படத்தில் இவர் நடித்தார். ஆனால் இத்திரைப்படம் வெளிவராமல் பாதியிலேயே நின்று விட்டது. + + +மனோரமா 1964 ஆம் ஆண்டில் தனது நாடகக் கம்பனியைச் சேர்ந்த எஸ். எம். ராமநாதன் என்பவரைக் காதலித்துத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு பூபதி எனும் மகன் பிறந்தார். 1966 ஆம் ஆண்டில் இராமநாதனுடன் மணமுறிப்புப் பெற்று, சென்னையில் தனியாக வாழ்ந்து வந்தார். + +மனோரமா தனது 78 ஆவது அகவையில் 2015 அக்டோபர் 10 அன்று இரவு 11:00 மணியளவில் மாரடைப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். + +மஞ்சள்கயிறு + + + + + +அத்தடு + +அத்தடு (தெலுங்கு:అతడు), 2005ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். இது நந்து என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே ஆண்டில் வெளிவந்தது. + +நந்து (மகேஷ் பாபு), மல்லியுடன் (சோனு சூத்) இணைந்து பணத்திற்காக கொலை செய்யும் தொழில்முறை கொலைகாரனாவான். ஒரு முறை, கட்சித் தலைவர் சிவா ரெட்டியை (சாயாஜி ஷிண்டே) கொல்லும் முயற்சியில் காவல்துறையினரிடம் இருந்து தப்புகிறான். அந்தக் கொலையை அவன் செய்யாதபோதும் அக்கொலைப்பழி நந்து மேல் விழுகிறது. தப்பியோடும் வழியில் அவனை அறியாமல் பார்துவின் (ராஜிவ்) சாவுக்கு காரணமாகிறான். பார்து 12 ஆண்டுகள் கழித்து தன் ஊருக்குத் திரும்பி வரும் ஓர் இளைஞனாவான். எனவே, பார்துவின் பெயரில் அவனுடைய கிராமத்துக்கு வீட்டுக்குச் செல்கிறான் நந்து. அங்கு பார்துவின் முறைப்பெண் பூரி (த்ரிஷா) மற்றும் குடும்பத்தினர், நண்பர்களின் மனங்கவர்ந்தவனாகிறான். உண்மையில் அக்கொலையைச் செய்தது யார், நந்து யார் என்பதை பார்துவின் குடும்பத்தினர் அறிந்தனரா என்பது பட முடிவில் தெரிகிறது. + + + + + + + + +மகேஷ் பாபு + +மகேஷ் பாபு (), (பிறப்பு - ஆகஸ்டு 9, 1975, சென்னை), தெலுங்கு மொழித் திரைப்பட நடிகர் ஆவார். மகேஷ் பாபு, முன்னாள் முன்னணித் திரைப்பட நடிகரான கிருஷ்ணாவின் மகனாவார். இள வயதில் தன் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த இவர், தனது 25ஆவது வயதில் "ராஜகுமாருடு" என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். + +இவரது "முராரி, ஒக்கடு, அத்தடு, போக்கிரி" ஆகிய திரைப்படங்கள் அவற்றின் வணிக வெற்றிக்காக அறியப்பட்டவை. ஒக்கடு திரைப்படம் கில்லி என்ற பெயரில் தமிழில் திரைப்படமாக்கப்பட்டது. போக்கிரி (திரைப்படம்) அதே பெயரில் தமிழாக்கப்பட்டது. மகேஷ் ஆறு நந்தி விருதுகளையும்,இரண்டு பிலிம்பேர் விருதுகளையும் பெற்றுள்ளார். + +இந்தித் திரைப்பட நடிகை நம்ரதா ஷிரோத்கரை விரும்பி மணம் முடித்துள்ளார். இவர் தம்சப் , அமர்தாஞ்சன் , யுனிவர்செல் ஆகியற்றின் விளம்பரத் தூதராவார். + +மகேஷ் பாபு ஆகஸ்ட் 9,1975 ஆண்டு சென்னை யில் சிவராம கிருஷ்ணா மற்றும் திருமதி.இந்திரா தேவி ஆகியோருக்கு மகனாக பிறந்தார். +இவரது இளைய சகோதரர் ரமேஷ் பாபு திரைப்படத் தயாரிப்பாளராவார். இவர் தம் இளமை பருவத்தைத் தம் பாட்டி இல்லத்தில் கழித்தார். சிறு +வயதிலேயே தம் தந்தையின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இவர் பள்ளி பருவத்தில் தமிழ் நடிகர் கார்த்தி யின் வகுப்பு தோழர் ஆவார். + + + + + +அபுர் சன்ஸார் + +அபுர் சன்ஸார் (வங்காளமொழி: অপুর সংসার "Opur Shôngshar", ஆங்கிலம்|The World of Apu)அப்புவின் இளம் பருவத்தினையும் அவன் வாழ்க்கையின் முடிவுகளினையும் காட்டும் இத்திரைப்படம் அப்பு திரைப்படத்தின் மூன்றாம் பாகமென்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு 1959 ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. + +கலைப்படம் + +அப்பு வேலை தேடி கொல்கத்தாவிற்குப் பயணமாகின்றான்.கொல்கத்தாவில் வாடகை வீட்டில் குடிக்கொண்டிருக்கும் அப்பு தன்னைப் பற்றிய கதையொன்றினை ஆவலாக எழுதியும் கொண்டிருக��கின்றான்.கதைகள் எழுதுவதில் ஆர்வம் காட்டிய அப்பு தன்னுடைய கதையும் பதிப்பாகும் என்பதில் முனைப்போடு இருக்கின்றான்.அங்கு தங்கியிருக்கும் வேளையில் அவனுடைய பழைய நண்பனான புழுவைச் சந்திக்கின்றான் பின்னர் இருவருமாக புலுழின் சொந்தக் கிராமத்தில் நடைபெற இருக்கும் சொந்தக்காரப் பெண்ணின் திருமணத்திற்குச் செல்கின்றனர்.மேலும் அப்பெண்ணை மணம் செய்யவிருந்த இளைஞனும் மனநோயாளி என்பதனை அறிந்து கொள்ளும் அவளின் பெற்றோரும் திருமணம் நடைபெற வேண்டிய நேரத்தில் நடைபெற்றே தீரவேண்டுமென்று கூறிகின்றனர்.அதன்படி பல வற்புறுத்தல்களின் பின்னர் அப்புவே அவளை மணம் செய்துகொள்கின்றான்.அபர்னாவுடன் கொல்கத்தாவிற்குச் செல்லும் அப்பு அங்கு அவளுடன் வாழ்ந்தும் வருகின்றான்.கஜால் என்னும் மகனைப் பெற்றெடுக்கும் அபர்னா பிரசவத்தின் பின்னர் இறந்தும் போகின்றாள்.இச்செய்தியை மனதால் தாங்கமுடியாத அப்பு அக்குழந்தையினை பாட்டானார்களிடம் விடுத்து +காடு மேடு என அலைந்து ஆன்மீகவாதியாகவே மாற்றம் கொள்கின்றான்.பின்னர் சிறிது காலம் கழித்து தன் மகனைப் பார்க்க பிரியப்பட்டு அவனிடம் சென்றடைகின்றான்.ஆரம்பத்தில் அவனிடம் வரமறுக்கும் கஜால் பின்னர் தன் தந்தையிடம் ஓடிச் சென்று கட்டித் தழுவுகின்றான். + + + + + +அபராஜிதோ + +அபராஜிதோ (வங்காள மொழி: অপরাজিত "Ôporajito", ஆங்கிலம் The Unvanquished), அப்புவின் கல்லூரி வாழ்க்கையினையும் அவனது தந்தையின் இழப்பு போன்ற பல நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அப்பு திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக 1957 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.மேலும் இத்திரைப்படம் டைம் இதழின் நூறு சிறந்த திரைப்படங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. + +கலைப்படம் + +அப்புவின் சகோதரியின் மரணத்திற்குப் பின்னர் வாரனாசியில் வந்து தங்குகின்றனர் அப்புவின் பெற்றோர் அப்புவும் அவர்களுடன் செல்கின்றான்.அங்கு சிறிது காலங்களிலேயே அப்புவின் தந்தையும் இறந்து போகின்றார்.இதனைத் தொடர்ந்து அப்புவின் தாயான சர்போஜா வங்காளத்திற்குச் சென்று அங்கு ஒரு கிராமக் குடிசையினுள் வாழ்க்கை நடத்துகின்றார்.இதனைத் தொடர்ந்து அப்புவும் படிப்பதற்காக கொல்கத்தா நோக்கிச் செல்கின்றா���்.பள்ளி விடுமுறைகளுக்கு அம்மாவை வந்து சந்தித்தும் கொள்கின்றான். + + + + + +மன்னாதி மன்னன் + +மன்னாதி மன்னன்1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எம்.ஜி.ஆர், பத்மினி மற்றும் பலர் நடித்த இத்திரைப்படத்தினை எம். நடேசன் இயக்கியிருந்தார்.கண்ணதாசன் எழுதிய ஆட்டனத்தி ஆதிமந்தி கதையே இத்திரைப்படம் ஆகும்.இக்கதையை சேரதாண்டவம் என்ற தலைப்பில் பாரதிதாசன் பாடியுள்ளார். + +காவியப்படம் / நாடகப்படம் + +சேர நாட்டு இளவரசனான மணிவண்ணன் (எம்.ஜி.ஆர்) அங்கு நடனம் புரிபவளான சித்ராவைக் (பத்மினி) காதல் கொள்கின்றான்.இதனை அறியாத இளவரசனின் தந்தையும் கரிகாலச் சோழனின் மகளான கற்பகவல்லியைப் பெண்கேட்டு தகவலும் அனுப்புகின்றார்.இதனைக் கேட்டுக் கோபம் கொள்ளும் கரிகாலச் சோழனும் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவளான மணிவண்ணனின் தாயாரைக் காரணம் காட்டி மணிவண்ணனுக்குப் பெண் கொடுக்கவும் ம்றுத்துக்கூறுகின்றான். இச்செய்தியைக் கேட்டுக் கோபம் கொள்ளும் மணிவண்ணன் கரிகாலச் சோழனின் கொட்டம் அடக்குவதற்காக அந்நாட்டு இளவரசியான கற்பகவல்லியை அபகரித்துவருவதாகத் தாயிடம் கூறித் தனது நண்பனுடன் புறப்பட்டுச் செல்கின்றான்.உறையூரில் இருந்த அரண்மனைக்கரிகிலேயே இருந்த குளத்தில் தோழிகளுடன் நீராடிக் கொண்டிருந்த கற்பகவல்லியைக் காட்டு எருமை ஒன்று தாக்க வந்தது.இதனைப் பார்த்த மணிவண்ணனும் அவளைக் காப்பாற்றுகின்றான்.பின்னர் அவள் தான் அந்நாட்டு இளவரசி எனவும் தெரிந்து கொள்கின்றான் மணிவண்ணன்.பின்னர் அங்கு அவளுடன் தங்கியிருக்கும் அவன் மன்னரிடம் தான் பாண்டிய நாட்டில் குக்கிராமம் ஒன்றிலிருந்து வந்த முத்து பைரவன் என்றும் பொய்யைக் கூறுகின்றான் மணிவண்ணன். + +இதற்கிடையில் இவன் காதலித்த நடனம் புரிவளான சித்ராவை வேறொருவன் தன் காம ஆசைக்காக அவளைக் காதலிப்பதாகக் கூறுகின்றான்.இதனை சித்ராவோ மறுக்கின்றாள்.இதற்கிடையில் சோழ நாட்டிற்கு வந்திருப்பவன் சேர நாட்டு இளவரசன் மணிவண்ணனே எனத் தெரிந்து கொள்ளும் கரிகாலச் சோழன் அவனைக் கொல்வதென எத்தனிக்கும் பொருட்டு மணிவண்ணனும் கற்பகவல்லியைக் கடத்தி தப்பியும் செல்கின்றான்.இதே சமயம் சேர நாட்டில் சித்ராவும் தன்னைக் காதலிப்பதாகக் கூறிய மன்னனிடம் தான் மணிவண்ணனைத��தான் காதலிப்பதாகவும் கூறுகின்றாள்.இதனைக் கேட்டுக் கோபம் கொள்ளும் அவன் மணிவண்ணனைக் கொல்வதற்குப் பெரும்படை அனுப்புகின்றான்.இப்படையினை தடுத்து நிறுத்துவதற்காக சித்ரா அவன் ஆசைப்படியே அவன் முன் நடனம் ஆடுகின்றாள் பின்னர் அவன் அவளை தொட முயற்சி செய்யும் பொருட்டு வந்த மணிவண்ணன் அவளைக் காப்பாற்ற வாற்சண்டை போடுகின்றான்.பின்னர் சித்ரா அவன் அழைக்காது வந்தவளெனக் கூறும் தீயவனின் சொற்கேட்டு சித்ரா மீது வெறுப்படைகின்றான் மணிவண்ணன்.பின்னர் கற்பகவல்லியைத் திருமணம் செய்தும் கொள்கின்றான்.இவற்றினை அறிந்து கொள்ளும் சித்ரா புத்தமதத்திற்குத் தன்னை அற்பணித்தும் கோல்கின்றாள். + +அதன் பின்னர் காவேரி நதிக்கரையருகில் விழாவொன்று நடைபெற்றிருந்த சமயம் காவேரி நதிக்கரையில் சித்ராவின் உருவம் தென்படவே மனம் நொந்து கொள்ளும் மணிவண்ணனும் காவேரி ஆற்றினுள் குதித்துக்கொள்கின்றான்.இவனைப் பலர் தேடியும் அவன் கிடைக்கவில்லை இவனைத்தேடி கற்பகவல்லியும் காவேரி நதிக்கரையோரமாகச் செல்கின்றாள்.இறுதியில் சித்ராவால் காப்பாற்றப்படும் மணிவண்ணன் சித்ராவை அடையாளம் கண்டு கொண்டு அவளுடன் வாழ்வதற்கு எத்தனித்தபொழுது அங்கு கற்பகவல்லியும் வந்து சேர்கின்றாள்.இதனை அறிந்து கொள்ளும் சித்ராவும் தன்னை மாய்த்துக் கொள்வதற்காக மலையின் உச்சியிலிருந்து ஆற்றில் குதிக்கின்றாள்.பின்னர் கற்பகவல்லியும் மணிவண்ணனும் முயற்சி செய்தும் அவள் இறுதியில் மரணிக்கின்றாள். + + + + + + +அக்டோபர் 17 + + + + + + + +புலிக்கோவில் + +புலிக்கோவில் அல்லது "'வாட் வா லுவாங் டா புவா" ("Tiger Temple / Wat Pha Luang Ta Bua") மேற்குத் தாய்லாந்தில் உள்ள ஒரு புத்தக் கோவில் ஆகும். இது காஞ்சனபுரி மாகாணத்தில் காஞ்சனபுரி நகருக்கு வடமேற்கே 38 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் புலிகள் உட்பட பல விலங்குகள் கட்டின்றி சுற்றித்திரிகின்றன. + +இக்கோவிலுக்கு முதலில் கிராம மக்களால் ஒரு புலிக்குட்டி கொடுக்கப்பட்டது. பின்னர் அது இறந்து விட்டது. பின்னர் தாய்ப்புலிகள் வேட்டைக்காரர்களால் கொல்லப்படும்போது விடப்படும் பல புலிக்குட்டிகள் இக்கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு கணக்கின்படி மொத்தம் 17 புலிகள் உள்ள���. இப்புலிகள் பெரும்பாலான நேரம் கூண்டுகளிலேயே இருக்கின்றன. உலர்ந்த பூனை இறைச்சியும் சமைக்கப்பட்ட கோழியும் இவற்றிற்கு உணவாகக் கொடுக்கப்படுகின்றன. கிப்பன் குரங்கு, மான் ஆகியனவும் இக்கோவிலில் உள்ளன. + + + + + +சனவரி 1 + +ஐரோப்பாவில் கத்தோலிக்கத் திருச்சபையின் செல்வாக்கு நிறைந்த நடுக்காலப் பகுதியில், மேற்கு ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் ஆண்டின் ஆரம்ப நாளாக திசம்பர் 25 (இயேசுவின் பிறப்பு), மார்ச் 1, மார்ச் 25 (இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு), அல்லது உயிர்ப்பு ஞாயிறு போன்ற முக்கிய கிறித்தவத் திருவிழா நாட்களைத் தேர்ந்தெடுத்தன. மரபுவழித் திருச்சபையைப் பின்பற்றிய கிழக்கு ஐரோப்பிய நாடுகள் செப்டம்பர் 1 ஆம் நாளை ஆண்டின் ஆரம்ப நாளாகத் தேர்ந்தெடுத்தன. + +இங்கிலாந்தில், சனவரி 1 புத்தாண்டு விழாவாகக் கொண்டாடப்பட்டது, ஆனால் 12-ஆம் நூற்றாண்டு முதல் 1752 வரை இங்கிலாந்தில் மார்ச் 25 இல் ஆண்டுத் துவக்கமாக இருந்தது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகள் கிரெகொரியின் நாட்காட்டியைப் பின்பற்றுவதற்கு முன்னரேயே சனவரி 1 ஐ ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடின. எடுத்துக்காட்டாக, இசுக்கொட்லாந்து 1600 இல் சனவரி 1 ஐ புத்தாண்டாகக் கொண்டாட ஆரம்பித்தது. இங்கிலாந்து, அயர்லாந்து, மற்றும் பிரித்தானியக் குடியேற்ற நாடுகள் நாட்காட்டிச் சட்டம், 1750 இன் படி, 1752 இல் புத்தாண்டை சனவரி 1 இற்கு மாற்றின. அதே ஆண்டின் செப்டம்பரில், பிரித்தானியா, மற்றும் அதன் குடியேற்ற நாடுகளில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகமானது. + +சனவரி 1 அதிகாரபூர்வமான ஆண்டுத் துவக்கமாக அறிமுகப்படுத்தப்பட்ட காலக்கோடு பின்வருமாறு: + + + + + + + + +கழுதை (விலங்கு) + +கழுதை ("Donkey") என்பது பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்காகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. கழுதை, பாலூட்டிகளில் குதிரை, வரிக்குதிரையைப் போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். முகத்தில் மூக்கின் அருகே வெண்மையாக இருப்பது இதன் அடையாளங்களில் ஒன்று. + +கழுதை அதனுடைய சகிப்புத்தன்மைக்குப் பெயர் பெற்றது. கழுதைகளின் தாக்குப்பிடிக்கும் திறன் அதிகம். எனவே இவை கரடுமுரடான பகுதிகளில் மிகுந்த பாரம் தூக்கிச் செல்ல பய���்படுத்தப்படுகின்றன. + +பெரும்பாலான காட்டுக் கழுதைகள் 102 முதல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. வீடுகளில் வளர்க்கப்படும் கழுதைகள் 91-இல் இருந்து 142 செ.மீ உயரம் வரை இருக்கின்றன. கழுதைகள் மிதமான பாலைநிலங்களில் வாழவல்லவை. இவை குதிரைகளை விட குறைவான உணவே உட்கொள்கின்றன. அதிகமான உணவு கொடுக்கப்படும் கழுதைகள் 'லேமினிடிஸ்' என்னும் நோயால் பாதிக்கப்படுகின்றன. கழுதைகளால் மிக்க ஒலி ஏற்படுத்த முடியும். + + + + +முதலாம் குலோத்துங்க சோழன் + +கி.பி 1070 ஆம் ஆண்டில் சோழ நாட்டின் ஆட்சி பீடம் ஏறிய அதிராஜேந்திர சோழன் சில மாதங்களிலேயே இறந்ததனால், நாட்டில் அரசுரிமைப் பிரச்சினை உருவானது. அதிராஜேந்திரனுக்கு வாரிசு இல்லை. இந்தப் பின்னணியில், இரண்டாம் ராஜேந்திர சோழனின் மகள் வழிப் பேரனான கீழைச் சாளுக்கிய இளவரசன் ஒருவனைச் சோழ மன்னனாக்கினர். இவனே முதலாம் குலோத்துங்க சோழன் ஆவான். ஆண் வழியில் இவன் சாளுக்கிய மரபைச் சேர்ந்த +இராஜராஜ நரேந்திரச் சாளுக்கியன் மகன் என்பதால் இவன் சாளுக்கிய சோழன் எனப்படுகிறான். இவனது வழி வந்தவர்களும் சாளுக்கிய சோழர் என அழைக்கப்படுகின்றனர். இவன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை ஆண்டான். + +இவன் திறமையான அரசனாக இருந்தாலும், இவன் காலத்தில் சோழப்பேரரசு ஆட்டம் காணத் தொடங்கியது. ஏறத்தாழ 70 ஆண்டு காலம் சோழர்களின் ஆட்சியின் கீழிருந்த ஈழத்தை, விஜயபாகு என்பவன் தலைமையிலான சிங்களப் படைகள் மீண்டும் கைப்பற்றிக் கொண்டன. சேர நாட்டிலும், பாண்டி நாட்டிலும் கிளர்ச்சிகள் உருவாகின. ஈழத்தைக் கை விட்டாலும், பாண்டிய, சேர நாடுகளில் தோன்றிய விடுதலைப் போக்குகளைக் குலோத்துங்கன் அடக்கினான். திறை செலுத்த மறுத்த வட கலிங்கத்து மன்னனுக்கு எதிராகக் குலோத்துங்கனின் சோழர் படை கலிங்கம் வரை சென்று போராடி வெற்றி பெற்றது. + +கி.பி 1115 ஆம் ஆண்டை அண்டி அவனது முதுமைக் காலத்தில், விட்டுணுவர்த்தன் என்பான் வடக்கிலிருந்து படையெடுத்து வந்து சோழ நாட்டில்பெரும் அழிவுகளை உண்டாக்கினான். + +இவன் மக்களுக்கு உவப்பான பல பணிகளைச் செய்ததாக அறிய வருகிறது. நில வரி தவிர்ந்த ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், "சுங்கம் தவிர்த்த சோழன்" என இவன் அழைக்கப்ப��்டான். கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் சாசனங்களில் குறிப்புக்கள் காணப்படுகின்றன. + +குலோத்துங்கனின் சோழ மரபு உரிமை + +ராஜேந்திர சோழனின் மகளாகிய அம்மங்கை தேவிக்கும் சாளுக்கிய மன்னனாகிய ராஜ ராஜ நரேந்திரனுக்கும் மகனாக பிறந்தவன் அநபாய சாளுக்கியன். வேங்கி தேசம் சோழ தேசத்துடன் இவ்வாறாக தொடர்பு இருந்ததால் வேங்கி தேசத்தின் அரசுரிமைகளை சோழ ராஜ்யம் தலையிட்டது. சாளுக்கிய சோமேஸ்வரனை எதிர்த்த ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு தனது மகளைக் கொடுத்தான் வீர ராஜேந்திர சோழன். ஆதலால் வேங்கி நாட்டினை விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தன் ஆட்சி செய்ய உதவினான். நேரடி வாரிசான அனபாயநிற்கு அரசு இல்லாமல் போனது. + +ஆனால் தன் மாமன் வீர ராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டினான் அநபாயன். இதன் பொருட்டு விருதராச பயங்கரன் என்ற பட்ட பெயரினை பெற்றான். அதி ராஜேந்திர சோழனின் மரணத்திற்கு பின் சோழ அரியணை ஏறினான் அனபாயனாகிய குலோத்துங்க சோழன். ஆறாம் விக்கிரமாதிதனுக்கும் குலோத்துங்க சோழனுக்கும் உறவுகள் நிலையானதாக இல்லாததால் விக்கிரமாதித்தனின் சபை புலவர் பில்கனர் குலோத்துங்கன் அதி ராஜேந்திரனை சதி செய்து கொன்று ஆட்சியை பிடித்தான் என்று கூறுகிறார். இக்கூற்றின் உண்மை தரத்தினைப் பற்றி நாம் முன்பே பார்த்துள்ளோம். (அதி ராஜேந்திர சோழன் பற்றி படிக்கவும்). இவ்வாறாக குலோத்துங்கன் சோழ அரியணை ஏற்கின்றான், நேரடி வாரிசு இன்றி சாளுக்கிய சோழ அரசு ஆரம்பம் ஆகின்றது. ஆனால் சோழர்களின் புகழ் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. + +குழப்பங்கள்: + +சோழர்களின் நேரடி அரசு அமையாமல் போனதால் சிற்சில குழப்பங்களை குலோத்துங்கன் சந்திக்க நேர்ந்தது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. அரசுரிமையை அடைந்த உடனே சாளுக்கியனுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது, அது மட்டும் இல்லாமல் பாண்டியர்களும் சேரர்களும் சந்தர்பத்தை பயன் படுத்திக் கொள்ள முயன்றதால் இவன் அரசு ஏறிய பின் தொடர்ந்து சில காலங்கள் போரிலும் கலகங்களை அடக்குவதிலும் செலவிட நேர்ந்தது. இவ்வாறு அருகே நிகழ்ந்த குழப்பத்தினில் ஈழத்தில் நிகழ்ந்த கழகத்தை அடக்குவதில் சிரத்தை காட்டாமல் விட���டுவிட்டான். ஆதலால் நூறு ஆண்டுகள் இருந்து வந்து ஈழ ஆட்சி இவன் காலத்தில் நின்று போனது. ஈழ தேசத்தை விஜயபாகு கைப் பற்றி ஆட்சி புரிய துவங்கினான். + +சாளுக்கியப் போர் + +அரசுரிமையை ஏற்றவுடன் குலோத்துங்கன் கலகங்களை கட்டுப்படுத்துவதில் ஈடுப்பட்டான். அதி ராஜேந்திரனின் மைத்துனன் ஆகிய ஆறாம் விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசுடன் சோழ அரசை சேர்த்து பெரும் சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்யும் எண்ணத்தில் இருந்தான் ஆதலால் குலோத்துங்கன் அரசுரிமை பெற்றதை தாளாமல் தொடர்ந்து கலகங்களை மக்கள் மூலம் ஏற்படுத்தினான். இதன் பொருட்டு சாளுக்கியனுடன் போர் புரிந்தான் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கியனாகிய இரண்டாம் சோமேசுவரன் குலோத்துங்கனுக்கு உதவும் பொருட்டு (விக்கிரமாதித்தனை வெல்லும் பொருட்டு) தன் படைகள் மூலம் விக்கிரமாதித்தனை பின் பக்கமாக தாக்க ஆரம்பித்தான். சோழ படைகளோ சாளுக்கியப் படைகளை வேகமாக தக்க ஆரம்பித்தன, தோல்விதனை உணர்ந்த விக்கிரமாதித்தன் படைகளைப் பின்னுக்கு இழுக்க ஆரம்பித்தான். தனது வெற்றியை உறுதி செய்த்த குலோத்துங்கன், சாளுக்கிய படைகளை நசுக்கித் தள்ளிவிட்டு சோமேஸ்வரனுடன் ஒப்பந்தம் செய்து சோழ நாடு திரும்பினான். சாளுக்கிய போரில் சாளுக்கியனுடன் உறவுக் கொண்ட கங்கபாடி, இரட்டல மண்டலம் ஆகிய இடங்களை வென்றான். + +படைத் தளபதிகள்: + +சாளுக்கிய போரில் ஈடுப்பட்ட குலோத்துங்க சோழனின் படைத் தலைவர்கள். + +1) இளவரசன் ராஜேந்திர சோழன் + +குலோத்துங்க சோழனின் முதல் மகனாகிய இளவரசன் ராஜேந்திர சோழன். இவன் யானைப் படைகளை கை கொள்வதில் சிறந்தவனாக விளங்கியதாக கூறப்படுகின்றது. வாள் பயிற்ச்சியில் மிகப் பெரும் வீரனாக விளங்கியதாக அறியப் படுகின்றது. + +2) அரையன் காளிங்கராயர்: + +குலோத்துங்கனின் அரசபையில் மிகவும் முக்கியம் வாய்ந்த அமைச்சனாகவும் படைகளை கையாள்வதில் அன்புவம் மிகுந்த செனதிபதியாகவும் விளங்கியவர் அரையன் காளிங்கராயர். இவரது படைத் தலைமையில் தான் சாளுக்கிய போர் நிகழ்ந்ததாக அறியப்படுகின்றது. இவரின் மறு பேர் அரையன் பொன்னம்பலக் கூததன். + +3) சேனாதிபதி இருங்கோவேள் + +4) அரையன் சயந்தன் ஆகியோர் இப்போரில் கலந்துக் கொண்டதாக காணப் படுகின்றது. + +பாண்டிய சேர யுத்தங்கள்: + +குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்கள் போர்க் களத்தில் தான் பெர��தும் செலவிடப் பட்டன. தான் ஆட்சி ஏறிய பின்பு தனது ஆட்சியை நிலைப் படுத்தும் பொருட்டு ஏற்ப்பட்ட போர்கள் ஆதலால் அவனே முன் நின்று போர் புரிய வேண்டிய முக்கியத்துவம் வேண்டி இருந்தது. அவனிற்கு துணை நின்று போர் புரியவும் தலை சிறந்த படைத் தலைவர்கள் கிடைத்தார்கள். + +சாளுக்கிய தேசத்தில் போரினை வென்று அவன் சோழ தலைநகரிற்கு திரும்பாமல் நேராக பாண்டிய தேசம் நோக்கி சென்றான். சோழர்களின் படைத் தலைவர்களாகிய காளிங்கராயரையும் சயந்தனையும் சாளுக்கிய தேசத்திலேயே விட்டுவிட்டு பாண்டிய நகர் நோக்கி திரும்பினான். அங்கே அவனது நான்காம் மைந்தன் விக்கிரமன் தயாராக இருந்தான் குலோதுங்கநிற்கு உதவும் பொருட்டு. அவனுடன் சோழர்களின் படைத் தளபதி பல்லவ தொண்டைமான் என்கின்ற கருணாகர தொண்டைமானும் உடையான் ஆதித்த வேடவனாமுடையானும் படை முகாம் மிட்டு இருந்தனர். இவர்கள் பொன்னமராவதி அருகே முகாமிட்டு குலோதுங்கனுக்காக காத்திருந்தனர். குலோத்துங்கன் வந்தவுடன் படைகளுடன் பாண்டிய தேசத்திற்குள் நுழைந்து கழகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர். இத்தனை அடுத்து தனது இளவல் விக்கிரமனை பாண்டிய சோழன் என்ற பேருடன் பாண்டிய தேசத்தில் மகுடாபிஷேகம் செய்வித்தான் குலோத்துங்கன். + +படைத் தளபதிகள்: + +1) கருணாகரப் பல்லவன் + +கருணாகரப் பல்லவன் என்கின்ற பல்லவ தொண்டைமான் குலோத்துங்கனின் ஆரம்பக் காலங்களில் இருந்தே தோழனாக இருந்தவனாக காணப் படுகின்றது. ஆதலால் குலோத்துங்கன் ஆட்சி தொடக்கத்திலிருந்தே படைகளை ஆளுமைப் படுத்தி வந்தவன் என்பது திண்ணம். கருணாகரனும், காளிங்கராயனும் குலோத்துங்கனின் அனைத்துப் போர்களிலும் பங்கு பெற்ற படைத் தலைவர்களாவர். இவ்விரண்டு நபர்களை மையப் படுத்தியே பெரும் போர்களை குலோத்துங்கன் புரிந்தான் என்பதும் திண்ணம். + +2) உடையான் ஆதித்தன்: + +உடையான் ஆதித்தன் என்கின்ற அரையன் மூவேந்தவேளாண். இவன் குலோத்துங்கனின் படைத் தளபதிகளுள் ஒருவன் ஆவான். மூவேந்த வேளாண் பாண்டியப் போரினை அடுத்து நிகழ்ந்த சேர யுத்தத்திலும் கலந்துக் கொண்டவன். ஆதலால் இப்பய்ரினைப் பெற்றான். + +3) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் + +4) அழகிய மணவாள நம்பி + +5) ராஜ ராஜ மதுராந்தகன். + +இவர்கள் அனைவரும் பாண்டிய போரிலும் அதன் அடுத்து நிகழ���ந்த சேரப் போரிலும் ஈடுப் பட்டவர்கள். இவர்களில் அழகிய மணவாள நம்பியும், ராஜ ராஜ மதுராந்தகனும் விக்கிரமனுடன் பாண்டிய தேசத்திலே இருக்க வைக்கப் பட்டனர். + +சேர யுத்தம் : + +காந்தளூர் எனப்படும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காக விளங்கியது. ராஜ ராஜ சோழனின் காலம் தொட்டு காந்தளூர் சேரர்களின் புரட்சி இடமாகவே இருந்து வந்தது. பாண்டியர்களுடன் சேர்ந்து சோழர்களை எதிர்த்த சேரர்கள் பாண்டியர்கள் தோற்பதை எண்ணியவுடன் பின்வாங்கினர். காந்தளூர் அருகே சேர மன்னன் ரவி மார்த்தாண்ட வர்மன் தயாரக இருந்தான் குலோத்துங்கனை எதிர்க்க. பாண்டியக் கழகத்தினை ஒடுக்கிய குலோத்துங்கன் காலத்தினைக் கடக்காமல் சேரர்களை எதிர்நோக்கி சென்றான். பாண்டியர்களை விட வலிமை பொருந்தியவர்களாக இருந்தனர் சேரர்கள். பாண்டியர்களுக்கு துணை இருந்த இலங்கைப் படை பின் வாங்கி கடலோடியது. பாண்டிய படையும் இலங்கை படையும் சேரப் படைக்கு உதவினார்கள். இவ்வாறாக சேரப் படை சோழர்களை எதிர்நோக்கி காத்திருந்தது. + +கருணாகரத் தொண்டைமான், உடையான் ஆதித்தன் தலைமயில் போரினால் ஈடுப் பட்டது சோழர்கள் படை. சாளுக்கிய தேசத்தில் இருந்து காளிங்கராயரும் சோழ தேசம் திரும்பி இருந்ததால் அவர் நேராக காந்தளூர் போரிற்கு படையுடன் வந்தார். ஆதலால் குலோத்துங்கன் தனது பெரும் படையுடன் சேரனை எதிர்த்து போரிட்டான். மிகவும் இளைய வயதினை உடைய ரவி மார்த்தாண்ட வர்மன் குலோதுங்கனுக்கு ஈடுக் கொடுக்க முடியாமல் சரணடைந்தான். அதனை அடுத்து மார்த்தாண்ட வர்மனையே ஆட்சி புரிய விட்டுவிட்டு உடையான் அதித சோழனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சேர தேசத்தினை வென்று திரும்பினான் சோழன். + +படைத் தளபதிகள்: + +கருணாகரத் தொண்டைமான், காளிங்கராயர், உடையான் ஆதித்தன் இவர்களைத் தவிர வேறு சில படைத் தலைவர்கள் இப்போரினில் பங்கேற்றனர். + +1) கரனை விழுப்பரையர் + +2) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி + +இலங்கைப் போர் : + +வீர ராஜேந்திர சோழனின் காலத்திலேயே புரட்சிதனைத் தொடங்கிய விஜயபாகு குலோத்துங்கன் ஆரம்ப ஆட்சிக் காலத்தை நன்கு பயன் படுத்திக் கொண்டான். சிங்கள தேசத்தில் இருந்த சோழ வீரர்களை கட்டுப்படுத்த சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்க செய்தான். குலோத்துங்கன் சாளுக்கிய தேசம் மீது கவனம் செலுத்திய காலத்தில் இலங்கை தேசத்தில் சோழ அரசு பலம் குன்றியது. சாளுக்கிய தேசத்தை வென்ற பின் குலோத்துங்கன் பாண்டிய தேசத்தை நோக்கி பயணப்பட்டான். சிங்கள தேசத்தை இழக்க விருப்ப படாத குலோத்துங்கன் தனது மைந்தன் ராஜேந்திரனை இலங்கைக்கு அனுப்பினான். ராஜேந்திரன் இலங்கையை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர். + +ராஜேந்திரனின் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் மிகவும் சீரிய போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. இத்தோல்வியினை அடுத்த மனம் குன்றாத விஜயபாகு மகானகக்குளா என்ற இடத்தில் படை வீடு அமைத்து திட்டம் தீட்டினான். சுதந்திர சாம்ராஜ்யத்தை அமைத்திட திட்டம் தீட்டிய விஜய பாகுவின் அடி மனதில் வேள்வி எரிந்துக் கொண்டிருந்தது. ஆதலால் அவன் புத்திக்கு சிறந்த யோசனை எழுந்து படை வீட்டைக் கலைத்தான். + +சிங்களர்களின் பூமியாகிய புலனருவா என்ற இடத்தில் தனது ரகசியப் படைத்தளத்தை அமைத்து சோழர்களை எதிர்க்க திட்டம் தீட்டினான் சிங்கள இளவல். மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை திடப் படுத்தி விட்டு, புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் சிங்களன். நடுவில் இருந்த மகானகக்குல்லாவிலும் எதிர்பாராத விதமாக கழகம் ஏற்பட்டது. இவ்வாறாக சோழ அரசின் பலம் சிங்கள தேசத்தில் குன்றியது. + +சாளுக்கியனுடனும் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்ப்பட்ட போர்கள் காரணமாக இலங்கையில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்கன் ராஜேந்திரனை சோழ தேசம் திரும்பும் படிக் கட்டளை இட்டான். அருகே குழப்பங்களை கலைந்த பின்பு இலங்கையை பின்பு பார்க்கலாம் என்று எண்ணிய அவன் சோழப் படைகளைப் பின்னுக்கு எழுத்தான். இவ்வாறாக விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான். இருப்பினும் வடக்கே சோழர்களின் வீரர்கள் கட்டுக்குள் வைத்திருந்தனர். ஆயினும் குலோத்துங்கனின் ஆட்சியில் இலங்கையை சோழ அரசு இழந்திருந்தது. இலங்கையை மட்டுமே இழந்திருந்தது. + +படைத் தளபதிகள்: + +1) இளவரசன் ராஜேந்திரன் + +2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் + +3)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் + +முதலாம் கலிங்கத்துப் போர் + +குலோத்துங்கன் தெற்கே பாண்டிய தேசம் நோக்கித் திரும்பிவுடனே சாளுக்கிய அரசை கைப்பற்றினான் ஆறாம் விக்கிரமாதித்தன். அரசை கைப் பிடித்தவுடன் மீண்டும் சோழனுடன் போர் புரிய விரும்பாத அவன், கலிங்க தேசத்தினை துண்டி விட்டான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான், அதனை எதிர்த்து வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் சோழ தேசத்தின் மீது போர் தொடுத்தனர். வெங்கிக்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர். முதலாம் கலிங்கத்துப் போர் குலோத்துங்கனின் ஆரம்ப ஆட்சிக் காலங்களில் நிகழ்ந்த ஒரு போராகும். + +படைத் தளபதிகள்: + +குலோத்துங்கனின் மைந்தன் விக்கிரம சோழன் இப்போரினில் பங்கு கொண்டான். அவனிற்கு துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர். + +இரண்டாம் கலிங்கத்துப் போர் + +இந்த இரண்டாம் கலிங்கத்துப் போரே தமிழக வரலாற்றின் சிறப்பு மிகுந்த போராக காணப் படுகின்றது. களிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் மிகக் கடுமையாக போர் நிகழ்ந்ததாக காணப்படுகின்றது. + +இப்போரின் தலைமை ஏற்று நடத்தியவன் கருணாகரத் தொண்டைமான். இப்போரின் காரணங்கள் தெளிவாக அறிய இயலவில்லை ஆனால் கலிங்கத்தின் மீது குலோத்துங்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் இப்போரினை புரிந்துள்ளதாக தெரிகின்றது. கலிங்கத்துப் பரணி என்றக் காவியத்தினை இப்போரினை அடுத்து ஜெயம் கொண்டார் என்ற புலவன் பாடியதன் மூலம் இப்போரின் தன்மைதனை உணர்கின்றோம். ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது பரணி என்ற தொடரின் மூலம் கருணாகரன் மிக வலுவுள்ள படைதனை எதிர்க் கொண்டு வெற்றிப் பெற்றுள்ளான் என்று அறிகின்றோம். மிக வலுமை மிகுந்த படைதனைக் கொண்டிருந்த அனந்தவர்மன், கங்கபாடி, இரட்டை மண்டலம் மற்றும் சாளுக்கியப் படைகளின் தோழமைப் பெற்று சோழனை எதிர்த்து நின்றான். காஞ்சி நகர் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இருப் பெரும்படைகளும் மோதியதில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழ தேசம் கலிங்கத்தை அடிப்பணிய வைத்தது. இந்த யுத்தமே கலிங்கத்துப்பரணியாக மாறியது. + +படைத் தளபதிகள்: +1) கருணாகரப் பல்லவன் + +2) அரையன் காளிங்கராயர் + +3) அரையன் ராஜ நாராயணன் + +வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் + +இலங்கை நாட்டினை குலோத்துங்க சோழன் இழந்திருந்தாலும் அவனது வெளிநாட்டு வணிகத் தொடர்புகள் மிகவும் மேலோங்கி இருந்தது. வீர ராஜேந்திர சோழரின் ஆட்சி காலத்திலேயே குலோத்துங்கன் ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்த குலோத்துங்கன், அவனது ஆட்சி காலத்தில் நெருங்கிய தொடர்புகளைப் பெற்றிருந்தான். சாம்ராஜ்ய போட்டியில் சமாதானத்தை நிறுவும் வலிமை மிக்கவனாக இருந்தான். ஸ்ரீ விஜய தேசத்தில் சோழர்களின் பிரதிநிதியாக குலோத்துங்கனின் மைந்தன் ராஜ ராஜ சோழன் பெரும் படையுடன் இருந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. + +ஸ்ரீவிஜய சாம்ராஜ்யம் மட்டும் அல்லாமால், குலோத்துங்க சீன தேசத்துடனும் தொடர்புகள் கொண்டிருந்தான். அவனே இளவயதில் சீன தேசம் சென்று வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. அவன் ஆட்சி அமைத்த பின்பு சீன தேசத்திற்கு ஒரு வணிக குழுவினை அனுப்பி வைத்தான். இவ்வாறு வாணிகம் அவனது ஆட்சி ஆண்டில் சிறப்புற விளங்கியது. மேலும் வாநிகத்தினை பேருக்கும் வண்ணம், சுங்கத்தை நிறுத்தினான் ஆதலால் இவனை பரணியில் ஜெயம்கொண்டார் சுங்கம் தவிர்த்த சோழன் என்றுப் பாடுகின்றார். + +சீன தேசம் அடுத்து குலோத்துங்கனின் அவையினர் கம்போச நாட்டிலும், சக்கர கோட்டத்திற்கும், பாலி தேசத்திற்கும் , பாகர் (burma) நாட்டிற்கும் சென்று வந்துள்ளனர். + +அமைச்சரவை + +வாசுதேவ பட்டர் + +குலோத்துங்கனின் குருவாகவும் அவனது பிரம்மராயராகவும் ராஜ ராஜ பிரம்மராயர் என்கிற வாசுதேவ பட்டர் விளங்கினர். இவர் திருவரங்கம் ரங்கநாதனின் மேல் மிகுந்த பக்தி கொண்டவர். சமயப் பற்றும் சாம்ராஜ்யப் பற்றும் கொண்டிருந்த இவரின் ஆலோசனைகளின்படிதான் பாண்டிய தேசம் மீதும் சேர தேசம் மீதும் படைப் எடுத்தான் குலோத்துங்க சோழன். + +பிரம்மராயர் பார்த்திவேந்திரர் + +குலோத்துங்கனின் பெரும் மதிப்புக்குரிய பிரம்மராயனாக விளங்கியவர் பார்த்திவேந்திரர். மதி நுட்பம் வாய்ந்த இவரின் ஆலோசனைகளின் படி வெளிநாட்டுத் தொடர்புகளை புதுபித்தான் மன்னன். + +படைத் தலைவர்கள்: + +1) கருணாகரப் பல்லவன் 2) அரையன் காளிங்கராயர்3) சேனாதிபதி இருங்கோவேள் 4) அரையன் சயந்தன் 5) உடையான் ஆதித்தன் 6) அருள்மொழி ராஜாதிராஜ வானதிராயர் 7) அழகிய மணவாள நம்பி 8) ராஜ ராஜ மதுராந்தகன் 9) கரனை விழுப்பரையர் 10) சேனாதிபதி வீரசோழ சக்கரபாணி2)வீர விச்சாதிர மூவேந்த வேளார் 11)சேனாதிபதி வீர ராஜேந்திர அதிகைமான் 12) அரையன் ராஜ நாராயணன் + + + + +ஆபோகி + +ஆபோகி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 22வது மேளகர்த்தா இராகமாகிய, "வேத" என்றழைக்கப்படும் 4வது சக்கரத்தின் 4 வது மேளமாகிய கரகரப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும். + + + + + + + + + +மத்தியமாவதி + +மத்தியமாவதி இராகம் 22வது மேளகர்த்தா இராகமாகிய "வேத" என்றழைக்கப் படும் 4வது சக்கரத்தின் 4 வது இராகமாகிய கரகரப்பிரியாவின் ஜன்ய இராகம் ஆகும். தேவாரப் பண்களில், "செந்துருத்தி" என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது. இது பாடவேண்டிய காலம் நண்பகல் ஆயினும், மிகவும் சுபகரமான இராகமானதால் இதை எப்போதும் பாடலாம். + + + + + + + + + + + + + + + +வரலாறு (திரைப்படம்) + +வரலாறு, 2006ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆரம்பத்தில்" காட்ஃபாதர்" என்ற தலைப்பினைக் கொண்ட இத்திரைப்படம் "வரலாறு" என மாற்றம் கொண்டது. இப்படம் 2002-ல் வெளியான வில்லன் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. + +அப்பாவின் அறிவுரைப்படி, தங்கள் குடும்பம் தத்து எடுத்திருக்கும் கிராமத்திற்கு தன் நண்பர்களுடன் சேவை செய்யப்போகும் பிள்ளைக்கு, அங்கு காணும் கல்லூரி மாணவி அசின் மீது எதிர்பாராமல் காதல் வருகிறது. அசினும் காதல் கொள்ள இருவீட்டு சம்மதத்துடன் கல்யாண தேதி குறிக்கப்படுகிறது. + +இந்த நிலையில் அசின் வீட்டிற்கு குடித்து விட்டு செல்லும் அஜீத், பயங்கர கலாட்டாவில் ஈடுபடுகிறார். அதைதட்டிக் கேட்கும் தன் அப்பா அஜீத்தையே கொல்லத் துணிகிறார். அசினின் உறவுக்காரத் தோழியை அசின் கண் எதிரிலேயே பலாத்காரம் செய்கிறார். இதை எல்லாம் செய்து விட்டு நான் எதையுமே செய்யவில்லை என்று சொல்கிறார். இதனால் அவரை பைத்தியம் என்று முடிவு செய்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்கின்றனர். + +இதற்கிடையில் அஜீத்தைப் பெற்றத் தாய், உயிருடன் இருக்கும் உண்மை அஜீத்துக்குத் தெரிய வருகிறது. தன் தாய் உயிருடன் இருக்கும் போதே அப்பா அஜீத், தன் அம்மா இறந்துவிட்டதாக கூறி தன்னை வளர்க்க வேண்டிய அவசியம் என்ன? எனும் குழப்பமும், தன் பெயரில் யாரோ குற்றங்கள்... அதுவும் தன் அப்பாவையே கொலை செய்ய முயற்சிக்கும் அளவிற்கு குற்றங்கள் புரிவது ஏன்? எனும் கேள்விகள் அஜீத் மனதில் எழுகிறது. + +அந்த கேள்விகளுக்கு விடை கிடைத்ததா? அஜீத்திற்கு உண்மையாகவே பைத்தியம் பிடித்துள்ளதா? அப்பா அஜீத்தைக் கொன்றாரா? தன் அம்மாவை பார்த்தாரா? அசினை கரம் பிடித்தாரா..? இது மாதிரி பல நூறு கேள்விகளுக்கு சுவரஸ்யமான திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'வரலாறு' படத்தின் மீதிக்கதை! + +கவிஞர் வைரமுத்து அவர்கள் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளார். + + + + + + +பான் கி மூன் + +பான் கி மூன் ஐக்கிய நாடுகள் அவையின் எட்டாவது பொதுச் செயலாளராவார்.. ஏழாவது பொதுச் செயலாளர் கோபி அன்னான் ஓய்வு பெற்றவுடன், ஜனவரி 1, 2007 முதல் இவர் அப்பொறுப்பை ஏற்றார்.. இவர் ஜூன் 13, 1944 அன்று கொரியாவின் சுங்ஜு நகரத்தில் பிறந்தவர். பொதுச் செயலாளர் பதவிக்கு வரும்முன் தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார்.ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர் பதவி 2016 ஆம் ஆண்டு திசம்பர் 31 இல் நிறைவுற்றது. + +பான் கி மூன் 1970ஆம் ஆண்டு சியோல் தேசிய பல்கலைக்கழகத்திலிருந்து, பன்னாட்டு உறவுகள் பாடத்தில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1985ஆம் ஆண்டு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஜான் எப் கென்னடி அரசாட்சிப் பள்ளியிலிருந்து பொது ஆட்சி பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். + +தென் கொரியாவின் இந்தியத் தூதரகத்தில் முதன் முதலாகப் பணியில் சேர்ந்த மூண், கொரிய வெளியுறவுத்துறையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். கடந்த ஆண்டோடு நின்று போன வட கொரிய அணு ஆயுத உற்பத்தி சம்பந்தமான ஆறு நாடுகள் பேச்சுவார்த்தையிலும் இவர் பங்காற்றினார். + +மரணதண்டனைகள் நிறுத்தப்படவேண்டும் என பான் கி மூன் வலியுறுத்தியபோதும் சதாம் குசேனின் மரணதண்டனையை இடைநிறுத்த ஆக்கபூர்வமான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. + +பான் கி மூன், ஐ. நா. பொதுச் செயலாளர் பதவிக்கு நடைபெற்ற நான்கு (உறுப்பினர் விருப்பமறியும்) தேர்வுகளிலும் முதலாவதாக வந்தார். இரண்டாவதாக வந்த இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்டோர் படிப்படியாகப் போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து ஐ. நா. பாதுகாப்பு அவை இ���ரை முறைப்படி தெரிவு செய்து பொதுச் சபைக்கு சிபாரிசு செய்துள்ளது. இத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின்போது இவரும், தென் கொரிய அரசும் பணபலத்தை பயன்படுத்தி ஏழை நாடுகளின் ஆதரவைப்பெற முயற்சித்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தகுந்தது. தவிர பிரெஞ்சு மொழியில் பரீட்சயமானவர் என்றவாறு அவர் குறிப்பிட்டபோதும் பிரஞ்சு மொழியில் அவ்வளவான புலமையைக் காணவியவில்லை. + + + + +அக்டோபர் 18 + + + + + + + +தொலெமி + +தொலெமி அல்லது தாலமி ("Ptolemy", ) என்று பொதுவாக அழைக்கப்படும், குளோடியஸ் தொலெமாயெஸ் (Claudius Ptolemaeus, , ; 168) ஒரு புவியியலாளரும், வானியலாளரும், சோதிடரும் ஆவார். இவர் கிரேக்க மொழி பேசியவர். ரோமரின் கீழிருந்த எகிப்தில், கிரேக்கப் பண்பாட்டினராக இவர் வாழ்ந்தார். இவர் கிரேக்கப் பண்பாட்டைத் தழுவிக்கொண்ட ஒரு எகிப்தியராகவும் இருக்கக்கூடும். இவருடைய குடும்பப் பின்னணி பற்றியோ, உருவ அமைப்புப் பற்றியோ, விபரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் அவர் எகிப்தில் பிறந்தவர் என்பதே பலரது கருத்தாகும். + +தொலெமி, துறைசார் அறிவியல் நூல்கள் பலவற்றை எழுதியுள்ளார். அவற்றுள் மூன்று நூல்கள், பிற்காலத்து, இஸ்லாமிய மற்றும் ஐரோப்பிய அறிவியல் தொடர்பில் முக்கியத்துவம் பெற்றவையாக விளங்குகின்றன. ஒன்று, வானியல் துறைசார் நூலாகிய அல்மாகெஸ்ட் (Almagest) என்பதாகும். அல்மாகெஸ்ட் என்பது கிரேக்க மொழியில் "பெரு நூல்" ("The Great Treatise") எனப் பொருள்படும். அடுத்தது, "ஜியோகிரஃபியா" என்னும் புவியியல் தொடர்பான நூல். இது, கிரேக்கர்களும், ரோமர்களும் அறிந்திருந்த புவியியல் பற்றிய முழுமையான விளக்க நூல் ஆகும். மூன்றாவது, ஒரு சோதிட நூல். "நான்கு நூல்கள்" என்ற பொருள் தரும் "டெட்ராபிப்லோஸ்" என்பதே நூலின் பெயர். இதிலே ஜாதகம் முதல் அரிஸ்ட்டாட்டிலின் இயற்கைத் தத்துவம் வரை எடுத்தாண்டுள்ளார். + + + + +பசுமைக்கரங்கள் திட்டம் + +பசுமைக்கரங்கள் திட்டம் என்பது தமிழ் நாட்டின் பசுமைப் போர்வையை அதிகரிக்கவும் பாதுகாக்கவும் இலாப நோக்கமற்ற பக்க சார்பற்ற ஈசா அறக்கட்டளை அமைப்பினால் முன்னெடுக்கப்படும் திட்டமாகும். இத்திட்டம் 17 அக்டோபர் 2006 அன்று ஈசா அறக்கட்டளையின் நிறுவ��ர் ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் அப்போதைய தமிழ்நாடு முதலமைச்சர் மு. கருணாநிதியால் துவங்கி வைக்கப்பட்டது. 17 அக்டோபர் அன்று ஒருநாளில் சுமார் 7 இலட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கைத் தாண்டி 8,52,587 மரக்கன்றுகள், 27 மாவட்டத்தில் உள்ள 6,284 இடங்களில் நடப்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. + + + + + + + +ஏ. ஆர். முருகதாஸ் + +ஏ. ஆர். முருகதாஸ் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களை இயக்கி வருகிறார். தீனா திரைப்படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பின்னர், ரமணா, கஜினி, துப்பாக்கி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். + +முருகதாஸ் கள்ளக்குறிச்சியில் பிறந்து திருச்சி பிசப் ஹீபர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அவர் தனது கல்லூரிப் பருவத்தில் தமிழ் சினிமா துறையில் ஆர்வமாக இருந்துள்ளார். கல்லூரிப் பருவத்தில் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்பது, நடிப்பது, பிரபலமான நடிகர்களைப் போல் குரல் மாற்றிப் பேசுவது போன்ற விசயங்களில் ஆர்வமாக இருந்துள்ளார். +பள்ளிப்பருவத்திலே சிறுகதைகள், நாவல்கள் எழுதுவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதை அவரது நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தனது தொழிலை எழுத்தாளர் கலைமணியிடமிருந்து ஆரம்பித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பூச்சுடவா என்ற தமிழ்ப் படத்தில் நடித்துள்ளார். எஸ். ஜே. சூர்யாவிடம் வாலி, குஷி போன்ற படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். + +இவரது "ரமணா" திரைப்படம், நடிகர் விஜயகாந்தின் முக்கியத் திரைப்படமாக அமைந்ததுடன், அதன் புரட்சிகரமான கருத்துக்களுக்காக பெரிதும் பாராட்டப்பட்டது. ரமணா திரைப்படம், தெலுங்கில் "தாகூர்" என்ற பெயரில் சிரஞ்சீவி நடிக்க மீண்டும் திரைப்படமாக்கப்பட்டது. + + + + +சாளுக்கியர் + +சாளுக்கியர் என்பவர்கள் இந்தியாவின் அரச வம்சம் ஒன்றைச் சேர்ந்தவர்கள். கி.பி ஆறாம் நூற்றாண்டுக்கும், 12 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டு வந்தனர். சாதவாகனப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, தங்கள் சுதந்திரத்தை உறுதிப்படுத்திக்கொண்ட இவர்கள், இந்திய வரலாற்றில் சிறந்த அரசர்களில் ஒருவனான, இரண்டாம் புலிகேசியின் (கி.பி 609 - 642) ஆட்சியின் போது வேகமாக முன்னணிக்கு வந்தனர். இவன் காலத்தில், தெற்கே பல்லவ நாட்டின் வடக்கு எல்லை வரை விரிவடைந்திருந்தது சாளுக்கியப் பேரரசு. வடக்கில், ஹர்சவர்தனரை நர்மதை நதிக்கரையில் தோற்கடித்து அவனது தெற்கு நோக்கிய முன்னேற்றத்தைத் தடுத்தான். தென்கிழக்குத் தக்காணத்தில் விஷ்ணுகுண்டினர்களையும் தோற்கடித்தான். ஆனாலும், பல்லவன் நரசிம்மவர்மன், புலிகேசியைத் தோற்கடித்து அவனைக் கொன்று வாதாபி கொண்டான் நரசிம்மவர்ம பல்லன் என்றும் மள்ள வம்சமான இவன் மாவீரன் புலிகேசியை வென்றதால் "மா மள்ளன்" எனும் பெயரும் பெற்று அதன் வெற்றியைக் கொண்டாட இன்றையச் சென்னையான பல்லவக் கடற்கரையில் மாமள்ளப்பட்டினத்தை உருவாக்கினான்.புலிகேசியின் தலைநகரான வாதாபியையும் ஆக்கிரமித்திருந்தான்.சாளுக்கியரின் தலைநகரம் வாதாபி என்பதால் வாதாபி சாளுக்கியர் என்றும் அவர்கள் அழைக்கப்படுகின்றனர். + +இரண்டாம் புலிகேசிக்குப் பின், உட் பூசல்களால் சாளுக்கியர் சிறிது காலம் வீழ்ச்சியுற்று இருந்தனர். இரண்டாம் விக்கிரமாதித்தனின் காலத்தில் மீண்டும் முன்னணிக்கு வந்தனர். இவன் இரண்டாம் நந்திவர்ம பல்லவனைத் தோற்கடித்து அவன் தலைநகரமான காஞ்சியையும் கைப்பற்றினான். இராஷ்டிரகூடர்களின் எழுச்சியைத் தொடர்ந்து வாதாபிச் சாளுக்கியர் தாழ்ச்சியுற்றனர். + +கி.பி 10 ஆம் நூற்றாண்டில், இரண்டாம் தைலப்பா (கி.பி 973 - 997) என்பவனின் கீழ் சாளுக்கியர் மீண்டும் புகழ் பெறத் தொடங்கினர். இவர்கள் மேலைச் சாளுக்கியர் எனப்படுகின்றனர். மேலைச் சாளுக்கியர், இன்று "பசவகல்யாண்" என அழைக்கப்படும் கல்யாணி என்னுமிடத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். இன்னொரு பிரிவினர், வேங்கி என்னுமிடத்தைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள் கீழைச் சாளுக்கியர் எனப்படுகின்றனர். கீழைச் சாளுக்கிய நாட்டின் கட்டுப்பாட்டுக்காக, மேலைச் சாளுக்கியருக்குச் சோழருடன் ஓயாத போட்டி இருந்துவந்தது. சுமார் 300 ஆண்டுகள் புகழுடன் விளங்கிய சாளுக்கியர், போசளர் மற்றும் யாதவர்களினால் ஒடுக்கப்பட்டனர். கி.பி 1184 தொடக்கம் 1200 வரை ஆண்ட நாலாம் சோமேஸ்வரனே குறிப்பிடத்தக்க சாளுக்கியர்களில் இறுதிய��னவன் ஆவான். + + +நூல்கள் + + + + +பீட்டாநியூசு + +பீட்டாநியூஸ் மென்பொருள் சம்பந்தமான செய்திகள் மற்றும் மென்பொருட்களை வழங்கும் இலவச இணையத்தளமாகும். இங்கே மென்பொருட்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மற்றும் சோதனைப்பதிப்பு, இலவச மென்பொருட்கள் மற்றும் பணம்கொடுத்துப் பாவிக்க்கவேண்டிய மென்பொருட்களும் இவ்விணையத்தளமூடாகக் கிடைக்கின்றது. அத்துடன் கோப்புக்களைப் பராமரித்து புதிய கோப்புக்கள் வரும்போது இல்வசமான மின்னஞ்சல் மூலமாகத் தெரிவிக்கும் வசதியும் உண்டு.பிட்டொரென்ட் ஊடாகக் கோப்புக்களைப் பரிமாறும் வசதி இவ்விணையத்தளத்தில் இன்னமும் கிடையாது. இவ்விணையத்தளத்தில் கோப்புக்கள் பற்றிய கருத்துக்களும் பரிமாறப்படுகின்றபோதிலும் சில நடுநிலையற்றவையாகவும் உள்ளன சில நிறுவனங்களைப் போற்றியும் தூற்றியும் எழுதப்படும் கருத்துக்களும் காணப்படுகின்றன. + + + + + +அஞ்சலி (திரைப்படம்) + +அஞ்சலி திரைப்படம் (1990) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் என்ற புகழ் பெற்ற இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு போன்ற பலர் நடித்துள்ளனர். + +இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளர வேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது. + +1991 தேசிய திரைப்பட விருது (இந்தியா) + +பாடலாசிரியர் வாலி. + + + + + + +திருடா திருடா + +திருடா திருடா ("Thief Thief") திரைப்படம் (1993) ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்த்.பிரசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. + +திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் கதிரும் (ஆனந்த்) அழகும் (பி��சாந்த்) இணைபிரியாத நண்பர்கள் மேலும் இவர்களின் தோழியான ராசாத்தியும் இவர்களுடன் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகின்றாள்.காவல் துறையினரிடமிருந்து பலமுறை தப்பிச் செல்லும் இவர்கள் நடனமாடும் பெண்ணொருத்தியைச் சந்திக்கின்றனர்.மேலும் அவளின் கூற்றுப்போல 1000 கோடிகள் மதிப்புடைய பணத்தினைத் தேடியும் செல்கின்றனர்.இதன் பிறகு அவள் சர்வதேச அளவிலான திருட்டுத் தொழில்களில் ஈடுபடும் திருட்டுக் கும்பலில் ஒருத்தியெனவும் மேலும் அவள் வைத்திருக்கும் அடையாள அட்டை ஒன்றின் மூலமே அக்கும்பல்களின் தலைவனால் கடத்தப்பட்டுச் செல்லப்படும் பணத்தினைப் பெற முடியும் என்பதனையும் அறிகின்றனர்.இவற்றைத் தெரிந்து கொள்ளும் அத்திருடர்களின் தலைவன் அவனுடைய காடையர் கூட்டத்துடன் தனக்குத் துரோகம் செய்தவளைத் தேடுகின்றான்.பின்னர் அவர்கள் அப்பணத்தை எடுத்தார்களா இல்லை கதிரும் அழகும் அப்பணத்தைப் பெற்றனரா என்பதே கதையின் முடிவாகும். + +பாடலாசிரியர் - வைரமுத்து + + + + + + + +பம்பாய் (திரைப்படம்) + +பம்பாய் திரைப்படம் (1995)ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மேலும் இத்திரைப்படத்தில் வரும் சம்பவங்கள் பம்பாயில் 1992 முதல் 1993 வரை நடைபெற்ற கலவரங்களினாலும் உண்மைச்சம்பவங்களினாலும் பின்னப்பட்ட கற்பனைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் மாற்றம் செய்து வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. + +நாடகப்படம் + +இந்து சமயத்தைச் சேர்ந்தவனான சேகர் (அரவிந்த் சாமி) பம்பாயிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தனது பெற்றோர்களைச் சந்திப்பதற்காக வருகின்றார். அங்கு இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த சைலா பானு (மனிஷா கொய்ராலா)வைச் சந்திக்கின்றார். அவர் மீது காதலும் கொள்கின்றார். ஆரம்ப காலங்களில் இவரைக் கண்டு கொள்ளாத சைலா பின்னர் அவரைக் காதலிக்கின்றார். இவர்கள் காதலிப்பதை சேகர் தனது தந்தைக்கு தெரியப்படுத்தும் பொழுது தந்தை கடுங்கோபம் கொள்கின்றார். அவ்வாறு இஸ்லாமியப் பெண்ணை மணம் முடித்துக் கொடுக்கவும் முடியாதெனவும் அவர் தெரிவிக்கின்றார். +இதனைப் பொருட்படுத்தாத சேகர் தனது காதலியான சைலா பானுவை அழைத்துக் கொண்டு பம்பாய் செல்கின்றார். அங்கு அவரைத் திருமணமும் செய்து கொள்கின்றார். ��ின்னர் இரு மகன்களைப் பெற்றவர்களைக் காண்பதற்காக இருவரின் குடும்பத்தாரும் அங்கு வந்து சேர்கின்றனர். இரு குடும்பத்தாரும் நல்லுறவைப் பேணவும் செய்கின்றனர். அச்சமயம் அங்கு ஏற்படும் இந்து, இஸ்லாமியக் கலவரத்தின் போது சேகரின் குழந்தைகள் காணாமல் போய்விடுகின்றனர். அங்கு வந்த இவர்களின் பெற்றோர்கள் இருவரும் வீட்டில் ஏற்படும் தீயினால் இறந்து விடுகின்றனர். பின்னர் இக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் தமது இரு குழந்தைகளையும் தேடிச் செல்லும் சேகரும் பானுவும் குழந்தைகளைக் காண்கின்றனர். பின்னர் அங்கு சமாதானம் நிலவியதா என்பதே கதையின் முடிவு. + +1996 அரசியல் திரைப்படக் குழுமம் (அமெரிக்கா) + +1996 தேசிய திரைப்பட விருது (இந்தியா) + +1995 பில்ம்பேர் விருது (இந்தியா) + +பாடலாசிரியர் - வைரமுத்து + + + + + + + +7ஜி ரெயின்போ காலனி + +7ஜி ரெயின்போ காலனி 2004 ஆம் ஆண்டு வெளி வந்த தமிழ்த் திரைப்படம். இந்தத் திரைப்படத்தில் ரவி கிருஷ்ணா அறிமுகமானார். சோனியா அகர்வால் நடித்திருந்த இப்படத்தை எழுதி இயக்கியவர் செல்வராகவன். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையுடன் அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவில் இத்திரைப்படம் உருவானது. + +உண்மைப்படம் / மசாலாப்படம் + +வேலையில்லாமல் நண்பர்களுடன் சுற்றித்திரியும் இளைஞனான ரவி கிருஷ்ணா அவன் தங்கியிருக்கும் தொகுப்பு குடியிருப்பு-க்கு குடிவரும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவரைக் ( சோனியா அகர்வால் ) காதல் கொள்கின்றார். பல முறை அவரின் விருப்பத்தைத் தெரியப்படுத்த முயற்சிகளும் செய்கின்றார். இவர் பல முறை முயற்சிகள் செய்தும் பொருட்படுத்தாதிருக்கும் அப்பெண்ணிற்கு வீட்டின் மூலம் மாப்பிள்ளை ஒருவனைத் தேர்ந்தெடுக்கின்றார் அவள் தந்தை. திருமணம் நடைபெறுவதற்கு முன்பதாகவே அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ள எத்தனிக்கும் மாப்பிள்ளையைத் தடுத்து நிறுத்துகின்றார் ரவி கிருஷ்ணா. பின்னர் அப்பெண்ணும் ரவி கிருஷ்ணாவைக் காதலிக்கின்றார். காதல் ரவி-யை செம்மைப்படுத்துகிறது. பொறுப்புடைய இளைஞனாக மாறுகிறான். பெண்ணின் தாயார் எதிர்க்கிறார். வேறு இடம் குடிபெயர்கின்றனர். பெண், வீட்டில் சிறை செய்யப்படுகின்றாள். பின்னர் தப்பிச் சென்று, ஒரு சுற்றுலா விடுதியில் இருவரும் உடலுறவினையும் க���ள்கின்றனர். அதன் பிறகு சிறிய சண்டை காரணமாக தெருவிலிருந்து விலகிச் செல்லும் பொழுது ரவியின் காதலியை வாகனமொன்று மோதி இறக்கின்றார். பின்னர் காதலியின் நினைவுடனேயே வாழ்கின்றார் ரவி. + +தமிழ்நாட்டில் மட்டும் 92 திரைகளில் வெளியிடப்பட்ட இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் 7 ஜி பிரிந்தாவன் காலனி என வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. + +7ஜி ரெயின்போ காலனி திரைப்படமானது யுவன் சங்கர் ராஜா இசையமைப்பினில் பத்து பாடல்களைக் கொண்டுள்ளது. + + + + +மன்னா + +மன்னா அல்லது மனா அல்லது மன்னு என்பது விவிலிய நூலில் யாத்திராகமம் நூலில் கூறப்பட்டுள்ள இசுரவேலருக்காக பாலைவனத்தில் அதியசமாக உருவாக்கப்பட்ட உணவாகும். திருக்குர்ஆனில் இது மன்னு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரவேலர் வாக்களிக்கப்பட்ட நாட்டில் முதலாவது அறுவடை செய்த போது மன்னா பொழிவது நின்றுப்போனது. "மன் வு" அல்லது "மன்னா என்ற" எபிரேய மொழிப் பதம் "இது என்ன?" என மொழிப் பெயர்க்கப்படும். மொழியியலாளர் யோர்ஜ் கொசென் என்பவர் இப்பதம் உணவு என்ற பொருளுடைய எகிப்திய "மென்னுயு" என்ற சொல்லின் மறு வடிவம் என் கருதுகின்றார். மன்னா என்பது இன்று ஆன்மீகக் கொடைகளை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. + +யூத-கிறித்தவ-இசுலாமிய சமயங்களின் படி, மன்னா அதிசயமாக கடவுளால் இசுரவேலருக்கு அவர்களது 40 ஆண்டு பாலைவன வாழ்க்கையில் கொடுக்கப்பட்டதாகும். அது இரவில் பனி போலப் பொழிந்தது. மேலும் அது கொத்துமல்லி விதையளவாகவும் முத்துப் போன்ற நிறமாகவும் காணப்பட்டது அது சூரிய வெப்பத்தால் உருகிப்போக முன்பாக சூரியோதயத்துக்கு முன்பாக சேகரிக்கப்பட்டது. அவகள் அதை சேகரித்து அரைத்து அல்லது இடித்து சமைத்தனர். சபாத்துக்கு முதல் நாள் இரட்டிப்பான அளவு மன்னா பொழிந்தது சபாத் நாளில் மன்னா பொழியவில்லை. இஸ்ரவேலர் கிகால் என்னும் இடத்துக்கு வந்து நிசான் மாதாம் 14 ஆம் நாள் அங்கு அறுவடை செய்யப்பட்ட தானியங்களை உண்ட போது மன்னு பொழிவது நின்றுப்போனது. + + + + +அக்டோபர் 19 + + + + + + + +பூதலூர் + +பூதலூர் (Budalur) தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஊர் ஆகும் . இவ்வூருக்கு கல்லணை கால்வாயும் வெண்ணாறும் கரைகளாக உள்ளன. ப���தலூர் வட்டம் 12 பிப்ரவரி 2014 அன்று புதிதாக நிறுவப்பட்டது. . +இங்குள்ள தொடருந்து நிலையம் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் இருப்புப்பாதை வழித்தடத்தில் அமைந்துள்ளது. +இது சோழ மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்த பகுதி. + + + + +வரிக்குதிரை + +வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். இது ஒரு தாவர உண்ணி. இது குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன. + +வரிக்குதிரைகள் ஒரு சமூகவிலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்றுகொண்டே தூங்கும் பண்பு கொண்டது இது. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின்மீது ஒன்று மீது தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன. நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 - 2 மீட்டர் உயரமும் 2 - 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை. காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள்வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள்வரை உயிர் வாழும். + +வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் இன்னொன்றினதைப்போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல ஒன்றுபோல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன் புறம் நெடுக்குக்கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன. + + + + +வீரராஜேந்திர சோழன் + +இரண்டாம் இராஜேந்திர சோழனைத் தொடர்ந்து சோழ நாட்டு ஆட்சிபீடம் ஏறியவன் வீரராஜேந்திர சோழன் (கி.பி 1063 - 1070). இவன் இரண்டாம் இராஜேந்திரனின் தம்பி ஆவான். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திரன், தந்தைக்கு முன்னரே இறந்து விட்டதால், வீரர���ஜேந்திரன் அரசனாக்கப்பட்டான். + +இவனுடைய காலம் சோழ நாட்டின் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. + +வீரராஜேந்திரன் சோழர்களின் பரம்பரை எதிரிகளான சாளுக்கியருடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கீழைச் சாளுக்கியப் பகுதியான வேங்கி மீது சோழருக்கு இருந்த ஈடுபாடே இப் போர்களுக்கு முக்கிய காரணம் எனலாம். அத்துடன், தெற்கில், பாண்டி நாட்டிலும், ஈழத்திலும் சோழரின் மேலாண்மையைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. + +இவனுடைய ஆரம்ப காலத்தில், சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக அங்கே சென்று போரிட்டான். பாண்டி நாட்டிலும், சில பாண்டிய இளவரசர்களின் கிளர்ச்சிகளை முறியடித்தான். இச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மேற்குச் சாளுக்கிய மன்னனான முதலாம் சோமேசுவரன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான். + +வீரராஜேந்திரன் சாளுக்கியருடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய தகவல்களை அவன் காலத்திய கல்வெட்டுக்கள் எடுத்தியம்புகின்றன. வீரராஜேந்திரன் மன்னன் ஆகுமுன்பே, அப்போதைய முடிக்குரிய இளவரசனான இராஜமகேந்திரனின் தலைமையில் சாளுக்கியருடன் போரிட்டுள்ளான். இப்போரில் சாளுக்கியரை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அவமானமுற்ற சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். அவன் முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான். + +அழைப்பை ஏற்ற வீரராஜேந்திரன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்துக்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தான். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று சாளுக்கியப் படைகள் தென்படவில்லை. ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திரன் சுற்றியிருந்த சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினான். + +தானே அழைப்பு விடுத்த போருக்குச் சோமேஸ்வரன் வராது விட்ட காரணம் தெரியவில்லை ஆனாலும், இந் நிகழ்வினால் முன்னரிலும் கூடிய அவமானப்பட்ட சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றத��. + +கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வெங்கிக்குச் சென்ற வீரராஜேந்திரனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை முறியடித்தன. இப் போரில் வீரராஜேந்திரன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தான். வெங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திரன் அடிப்படுத்தினான். விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வெங்கியில் மன்னனாக்கினான். வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றான். + +சோழரின் ஆட்சியின் கீழ் இருந்த இலங்கைத் தீவின் தென் பகுதியில் தன்னை உறுதிப்படுத்தி வந்த விஜயபாகு என்ன்னும் சிங்கள அரசன், சோழர்களை இலங்கையில் இருந்து துரத்த எண்ணி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தான். வீரராஜேந்திரன் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான உறுகுணைப் பகுதிக்கு அனுப்பினான். விஜயபாகுவின் வேண்டுகோளுக்கு இணங்கி பர்மாவின் அரசன் அவனுக்குத் துணையாகக் கப்பல்களையும் படைகளையும் அனுப்பினான். இவற்றின் துணையுடன் இலங்கையின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான். இலங்கையில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டன. இதன் மூலம் வீரபாண்டியன் கிளர்ச்சிகளை அடக்கினான் எனினும், உருகுணைப் பகுதியில் தனது பலத்தை, விஜயபாகு மேலும் அதிகரித்துக் கொண்டான். விஜயபாகுவின் நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது. + +வீரராஜேந்திரனின் ஏழாம் ஆட்சியாண்டில் பொறிக்கப்பட்ட சாசனம் ஒன்று, அவன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகவும், அதனை அம்மன்னனுக்குக் கையளித்ததாகவும் கூறுகின்றது. உதவி கோரிய மன்னன் தொடர்பான தகவல்களோ, வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. இந் நிகழ்ச்சி கி.பி 1068 இல் இடம் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. + +முதலாம் சோமேஸ்வரனின் இறப்புக்குப் பின்னர், கி.பி. 1068 ஆம் ஆண்டில், இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய ஆட்சிபீடம் ஏறினான். தொடர்ந்து இவனுக்கும், இவனது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே நிகழ்ந்த அதிகாரப் போடியினால் உள்நாட்டுக் கலகம் தோன்றியது. சோமேஸ்வரன் நாட்டின் தென் பகுதியை விக்கிரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தான். நிலைமையைப் பயன்படுத்திக் கொண்ட வீரராஜேந்திரன், விக்கிரமாதித்தனுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்டு தனது மகளையும் அவனுக்கு மணமுடித்து வைத்தான். + +வீரராஜேந்திரன் கி.பி 1070 ஆம் ஆண்டில் காலமானான். இவன் தனது ஆண் மக்களைச் சோழநாட்டின் பகுதிகளில் ஆளுநராக நியமித்திருந்தான். வீரராஜேந்திரனின் இறப்பைத் தொடர்ந்து இவர்களில் ஒருவன் அதிராஜேந்திரன் என்னும் பெயருடன் அரசனானான். + + + + + +ஐரோப்பிய தமிழ் இலக்கியச் சந்திப்பு + +புலப்பெயர் தமிழ் படைப்பளிகளினால் ஐரோப்பாவில் கூட்டப்படும் ஒரு இலக்கிய நிகழ்வே இலக்கியச் சந்திப்பு ஆகும். மனித உரிமைகள், பெண்கள், தலித்துக்கள், மலையக மக்கள், முஸ்லீம்கள் உரிமைகள் போன்ற ஈழத்தமிழ் தேசிய மைய கதையாடலில் புறக்கணிக்கப்பட்ட கருப்பொருட்களை மையமாக இந்த சந்திப்புக்களில் அலசப்படுவது இந்த சந்திப்பின் சிறப்பு ஆகும். இச்சந்திப்பு 1988ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றது. இச்சந்திப்பு தமிழர்களின் முக்கிய பிரச்சினையான சிங்கள-தமிழ் இனப்பிரச்சினையை அலட்சியப்படுத்தி, அதன் முக்கிய பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இயங்குவாதக விமர்சனங்கள் உண்டு. + + + + + +கனடாவின் அரசியலமைப்பு + +கனடாவின் அரசியல் அமைப்பு ("Constitution of Canada") கனடாவின் மீயுயர் சட்டமாகும்; நாட்டின் வரையறுக்கப்பட்ட ஆளும் மன்றத்தின் இயற்றுச் சட்டங்களையும் வரையறுக்கபடாத வழமைகளையும் அரசியல் வழக்கங்களையும் ஒன்றிணைத்த அரசியலமைப்புச் சட்டம் ஆகும். மாக்னா கார்ட்டாவை அடித்தளமாகக் கொண்ட இதுவே உலகின் மிகவும் பழைமையான, செயற்பாட்டில் உள்ள அரசியலமைப்புச் சட்டமாகும். இந்தச் சட்டம் கனடிய அரசு, கனடாக் குடிமக்களின் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் மற்றும் கனடாவில் வாழ்வோரின் உரிமைகளை வரையறுக்கின்றது. கனடாவின் அரசி��லமைப்புச் சட்டம் அரசியலமைப்பை விளக்குவதுடன் அதன் செயற்பாட்டை விவரிக்கின்றது. கனடாவின் அரசியலமைப்பு சட்டம் அதன் மத்திய மாகாண அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரயறைசெய்து, சட்ட உருவாக்க வழிமுறைகளையும் விவரிக்கின்றது. மாகாண அரசுகள் உள்ளூர் அரசுகளின் அதிகாரங்களையும் கடமைகளையும் வரையறைசெய்கின்றன. அரசுகள் தகுந்த வழிமுறைகளுக்கமைய சட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துகின்றன. + +கனடாவின் அரசியலமைப்பின் அங்கங்களை அரசியலமைப்புச் சட்டம் 1982, உபபிரிவு 52(2) விவரிக்கிறது; இதன்படி கனடாச் சட்டம், 1982, அட்டவணையிலுள்ள அனைத்துச் சட்டங்களும் குறிப்பாணைகளும் அரசியலமைப்புச் சட்டம் 1867இல் (முன்னாளைய பிரித்தானிய வட அமெரிக்கச் சட்டம், 1867) உள்ளதும், இவற்றிற்கான ஏதேனும் திருத்தங்களும் அடங்கும். கனடாவின் உச்சநீதி மன்றம் இந்தப் பட்டியல் முழுமையானதல்ல என்றும் கூட்டமைப்பு உருவானதிற்கு முன்பிருந்த சட்டங்களும் எழுதப்படாத அங்கங்களையும் உள்ளடக்கியது என்றும் கூறியுள்ளது. + +கனடாவின் நீதிமன்றயமைப்பு சட்டங்களை புரிந்து அமலாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அரசியல் அமைப்பு சட்டத்தை மீறும் சட்டங்களை செல்லுபடியாகாமல் செய்யும் அதிகாரம் நீதியமைப்புக்கு உண்டு. கனடாவின் உச்ச நீதி மன்றமே சட்ட கட்டமைப்பின் அதி உயர் அதிகாரம் கொண்டது. + + + + + +அகத்தீஸ்வரம் + +அகத்தீஸ்வரம் (ஆங்கிலம்:Agastheeswaram ,അഗസ്തിശ്വരം )இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். + +இந்த பேரூராட்சிக்கான மக்கள்தொகை விவரங்கள்: + +இந்த ஊர் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் உள்ளது. + + + + +அருப்புக்கோட்டை + +அருப்புக்கோட்டை ("Aruppukkottai"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 97 மீட்டர் (318 அடி) உயரத்தில் இருக்கின்றது.இந்த ஊர் மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை(45-B)யில் மதுரையில் இருந்து 48 KM தொலைவில் அமைந்துள்ளது. + +அருப்புக்கோட்டையின் பழைய பெயர் செ���்காட்டு இருக்கை இடத்துவழி என்பதாகும். + +விஜய நகர பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து இங்கு வந்து குடியேறி வேளாண்மை தொழில் செய்து வந்ததால் 'அரவகோட்டை' என அழைக்கப்பட்டது. பின் கால மாற்றத்தில் தற்போது அருப்புக்கோட்டை என அழைக்கப்படுகிறது. அருப்புக்கோட்டையை அண்டிய சிற்றூர்கள் மல்லிகை அரும்பு உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. அருப்புக்கோட்டை என்பது அரும்புகோட்டை என்னும் சொல்லின் மருவுச் சொல் எனவும் கூறப்படுகிறது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,722 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 43,558 ஆண்கள், 44,164 பெண்கள் ஆவார்கள். அருப்புக்கோட்டை மக்கள்தொகையின் பாலின விகிதம் 1014. அதாவது 1000 ஆண்களுக்கு 1014 பெண்கள் இருக்கிறார்கள். அருப்புக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 89.97% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 85.18% ஆகும். இது தமிழக சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. அருப்புக்கோட்டை மக்கள் தொகையில் 7,654 (8.73%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சிவகாசியில் 23,803 வீடுகள் உள்ளன. + +2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 91.47% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 6.42% கிருஸ்துவர்கள் 2.02%, என்ற விகிதத்தில் இருக்கின்றனர். அருப்புக்கோட்டை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 7.04%, பழங்குடியினர் 0.16% ஆக உள்ளனர். + +நெசவு மற்றும் அதை சார்ந்த தொழில்கள், விவசாயம், பெரும்பான்மை நகர மக்களாலும் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராம மக்களாலும் செய்யப்படுகின்றன. இந்நகரைச் சுற்றியுள்ள சுமார் ஆயிரம் கிராம மக்களுக்கு இது கல்வி மற்றும் சந்தைக்கான மைய இடமாக விளங்குகிறது. இந்நகரைச் சுற்றிலும் சுமார் பத்திற்கும் மேற்பட்ட தனியார் நூற்பு ஆலைகள் உள்ளன. + + + + + + + + + + + + +அபயபுரி + +அபயபுரி (ஆங்கிலம்:Abhayapuri), இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள Bongaigaon மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூர்ப் பகுதிக் குழு ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,671 மக்கள் இங்கு வச��க்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அபயபுரி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அபயபுரி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆபு சாலை + +ஆபு சாலை (ஆங்கிலம்:Abu Road), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள சிரோஹி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 47,320 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அபு சாலை மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அபு சாலை மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அதிராம்பட்டினம் + +அதிராம்பட்டினம் (ஆங்கிலம்:Adirampattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,066 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். அதிராம்பட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 79.31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அதிராம்பட்டினம் மக்கள் தொகையில் 13.08% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு ஆண்கள் 47.95% (14897) பெண்கள் 52.04% (16169). இங்கு முஸ்லிம்கள் 70% மற்றவர்கள் 30% ஆகும். + +இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. + + + + + +அடூர் + +அடூர் (ஆங்கிலம்:Adoor), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,943 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். அடூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 84% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அட��ர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆடுதுறை + +ஆடுதுறை (ஆங்கிலம்: Aduthurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் ஓர் பேரூராட்சி ஆகும். இது கும்பகோணம் - மயிலாடுதுறை சாலையில் அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி மையம் உள்ளது. + +16.81 சகிமீ பரப்பளவு கொண்ட இப்பேரூராட்சி 15 வார்டுகளும், 80 தெருக்களும் கொண்டது. இதன் தற்போதைய மக்கள்தொகை 14,750 (2017) ஆகும். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,705 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,858 பேர் ஆண்கள், 5,847 பேர் பெண்கள் ஆவார்கள். ஆடுதுறை மக்களின் சராசரி கல்வியறிவு 88.23 % ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 93.11%, பெண்களின் கல்வியறிவு 83.38% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே. ஆடுதுறை மக்கள் தொகையில் 10.17% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +ஆவணியாபுரம், மஞ்சமல்லி, கிள்ளுக்குடி, சாத்தனூர், மேல மருத்துவக்குடி, கீழ மருத்துவக்குடி, வானாதிராஜபுரம், திருமங்கலக்குடி, நரசிங்கன்பேட்டை, தியாகராஜபுரம், சூரியனார் கோவில், போன்ற கிராமங்கள் உள்ளது. + + + + + +அடையாறு, கர்நாடகா + +அடையாறு (ஆங்கிலம்:Adyar), இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள தட்சிண கன்னட மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6501 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அடையாறு மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அடையாறு மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அகரம் + +அகரம் (ஆங்கிலம்:Agaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 297 மீட்டர் (974 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,784 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்க���ில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 49% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அகரம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அகமத்நகர் + +அகமத்நகர் (ஆங்கிலம்:Ahmadnagar), இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள அகமதுநகர் மாவட்டதில் அமைந்த ஒரு நகராட்சி மன்றம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 649 மீட்டர் (2129 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 307,455 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அஹ்மத்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அகமத்நகர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அஹ்மத்பூர் + +அஹ்மத்பூர் (ஆங்கிலம்:Ahmedpur), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ள பிர்பம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 38 மீட்டர் (124 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8397 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அஹ்மத்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அஹ்மத்பூர் மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அஜ்மீர் + +அஜ்மீர் (ஆங்கிலம்:Ajmer), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள அஜ்மீர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். ஆரவல்லி மலைத்தொடர்களால் சூழப்பட்டுள்ள இந்த நகரம் பிருத்திவிராச் சௌகான் என்னும் புகழ் பெற்ற மன்னனின் தலைநகரங்களில் ஒன்றாக இருந்தது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 472 மீ��்டர் (1548 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 485,197 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அஜ்மீர் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அஜ்மீர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அக்பர்பூர் + +அக்பர்பூர் (ஆங்கிலம்:Akbarpur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள Kanpur Dehat மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகர மன்றம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 133 மீட்டர் (436 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 17,368 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அக்பர்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 57% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அக்பர்பூர் மக்கள் தொகையில் 18% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அகோலா + +அகோலா (ஆங்கிலம்:Akola), இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள அகோலா மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 501 மீட்டர் (1643 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 399,978 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அகோலா மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அகோலா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +அழகப்பபுரம் + +அழகப்பபுரம் (ஆங்கிலம்:Alagappapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +2011ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு + + + + +ஆலந்தூர் + +ஆலந்தூர் (ஆங்கிலம்:Alandur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருக்கும் சென்னை மாவட்டத்தில் ஒரு பகுதியாகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 164,162 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலந்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆலங்குடி + +ஆலங்குடி("Alangudi") இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) சிக்கப்பட்டி, மேலத்துர், கீலாத்துர், பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள் + +ஆலங்குடி வட்டத்தில் மிகவும் சக்தி பெற்ற, சித்தி வினாயகர் ஆலயம் துவரங்கொல்லைப்பட்டியில் அமைந்துள்ளது. + +ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு: + + + +1.நகரம் முருகன் கோவில் + +2.கீரமங்கலம் சிவன் கோவில் + +3.நாடியம்பாள் கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்) +4.திருவரங்குலம்-பெரியகோவில் +5.வம்பன்-வீரகமாகாளீயம்மன் கோவில் +6.மாஞ்சன்விடுதி-தேரடிகருப்பர் கோவில் + + + + +ஆலங்குளம் (விருதுநகர்) + +ஆலங்குளம் (ஆங்கிலம்:Alangulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். + +அரச�� சீமைக்காரை ஆலை +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 127 மீட்டர் (416 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4965 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குளம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குளம் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆலந்துறை + +"'ஆலாந்துறை" (ஆங்கிலம்:Alanthurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இவ்வூர், கோவை மாவட்டத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. + +துறை என்பது ஆற்றங்கரையில் அமைந்த ஊர்களைக்குறிக்கும்.நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த காரணம் பற்றி இப்பெயர் பெற்றிருக்கலாம். + +தமிழ் மொழியே பெரும்பாலும் முதன்மை மற்றும் நாளாந்த மொழியாக உள்ளது. இளைய தலைமுறையினர், ஆங்கிலம் அறிந்தவர்களாக உள்ளனர். கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. +வளர்த்துவரும் குறு நகராகவும் உள்ளது. பெருவாரியான உணவகங்கள்,அரசு மற்றும் இந்திய வங்கிகள் உள்ளது.அருகே உள்ள நாதேகவுண்டன் புதூரில் பொறியியல் கல்லூரியும் இச்சிறிய நகரைசுற்றி தனியார் மற்றும் அரசு பள்ளிகள் உள்ளன.மாரி அம்மன் கோவில் சிறப்பு வாய்ந்தது.மேலும் வருமான வரி அலுவலகம் இங்குதான் உள்ளது.பலதப்பட்ட மக்கள் வசிக்கும் குறு நகரமாக வளர்ந்து வருகிறது.பழனி பாதயாத்திரை (பாதைபயணம்) மற்றும் சபரி மலை பாதயாத்திரை (பாதைபயணம்) செல்வோர் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகம். + +வேளாண்மை முதன்மை தொழில். மேலும் வேளாண் சார்த்த தொழில்கள், ஆலாந்துறை முதன்மை சாலையில் அமைந்துள்ளதால் தேநீர் விடுதி, அடுமனை முதலானவையும் இங்கு நடைபெறுகின்றன. +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7173 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆலாந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 55% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குற���ந்ததே. ஆலாந்துறை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆலப்பாக்கம் + +ஆலப்பாக்கம் (ஆங்கிலம்:Alapakkam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 5421 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். ஆலப்பாக்கம் மக்களின் சராசரிக் கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஆலப்பாக்கம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆலப்புழா + +ஆலப்புழா (ஆங்கிலம்:Alappuzha), ( +மலையாளம்: ആലപ്പുഴ) இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரமாகும். இந்நகரம் ஒரு நகராட்சியாகவும் உள்ளது. ஆலப்புழா இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் ஆகும். கயிறு தயாரிப்பதே இந்நகரின் பிரதான தொழிலாகும். + +கொச்சி வானூர்தி நிலையம் அருகில் உள்ள வானூர்தி நிலையமாகும். திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் 160 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு தொடர்வண்டி நிலையமும் உள்ளது. பெங்களூர், சென்னை, கோழிக்கோடு, அமிர்தசரசு, ஆகிய நகரங்களிலிருந்து தொடர்வண்டிகள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலை 47, இந்நகரை, எர்ணாகுளம், திருச்சூர், கொல்லம், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது.. + +இந்நகரில் மலையாளமே பிரதான மொழியாகும். இங்கு பேசப்படும் வட்டார வழக்கு திருவாங்கூர் வழக்கு ஆகும். இருப்பினும், கொங்கணி பேசுவோரும், தமிழ் பேசுவோரும் குறிப்பிடத்தக்க அளவில் வாழ்கின்றனர். + +2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 177,079 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆனோர் ஆண்களும் 52% ஆனோர் பெண்களும் ஆவர். ஆலப்புழா மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 85% உம் பெண்களின் கல்வியறிவு 82% உம் ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% ஐ விடக் கூடியதே. ஆலப்புழா மக்கள் தொகையில் 11% ஆனோர் ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர். + + + + +அலிகஞ்��் + +அலிகஞ்ச் (ஆங்கிலம்:Aliganj), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள Etah மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி பேராயம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 154 மீட்டர் (505 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,269 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அலிகஞ்ச் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அலிகஞ்ச் மக்கள் தொகையில் 18% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அலிராஜ்பூர் + +அலிராஜ்பூர் (ஆங்கிலம்:Alirajpur), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள Jhabua மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 25,161 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அலிராஜ்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அலிராஜ்பூர் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆழ்வார்திருநகரி + +ஆழ்வார்திருநகரி (ஆங்கிலம்:Alwarthirunagiri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும். + +திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் தூத்துக்குடியிலிருந்து 41 கி.மீ.தூரமும், திருநெல்வேலியிலிருந்து 35 கி.மீ. தூரமும், திருச்செந்தூரிலிருந்து 32 கிமீ. தூரத்தில் அமைந்துள்ளது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சியின் 9,289 மக்கள்தொகை 9,289 ஆகும் + +10 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 73 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஸ்ரீவைகுண்டம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இவ்வூர் நம்மாழ்வார் பிறந்த தலமாகும். இங்கு அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் சிறப்புமிக்க 108 வைணவத் திருத்தலங்களுள் ஒன்��ாகும். ஆழ்வார்திருநகரி நவதிருப்பதி தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.. இங்கு மேலும் திருவேங்கடமுடையான் கோயிலும், திருவரங்கநாதன் கோவில் பிள்ளைலோகாச்சாரியார், அழகர், தேசிகர், ஆண்டாள் திருக்கோவில், உடையவர் கோவில், உய்யக்கொண்டார், பெரியநம்பி, கிருஷ்ணன், திருக்கச்சி நம்பி, கூரத்தாழ்வான் ஆகிய கோவில்கள் உள்ளன. + +"பூதலவீரராம" என்று பொறிக்கப்பட்ட பழைமையான காசுகள் இப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. + +இவ்வூரில் பத்துப்பாட்டு நூல்களைத் தேடி சுமார் முப்பது கவிராயர்கள் வீட்டு ஓலைச்சுவடிகளைப் பிரித்துப் பார்த்துத் தேடியிருக்கிறார் தமிழ்தாத்தா உ.வே.சா இவ்வூரில் கிடைத்த ஐங்குறுநூறு ஏட்டுப்பிரதியே தாம் ஐங்குறுநூற்றைப் பதிப்ப்பிப்பதற்கு ஆதாரமானது என்று குறிப்பிடுகின்றார். + + + + + +அம்பாலா, அம்பாலா மாவட்டம் + +அம்பாலா (ஆங்கிலம்:Ambala), இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள அம்பாலா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 264 மீட்டர் (866 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 139,222 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அம்பாலா மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்பாலா மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அம்பாசமுத்திரம் + +அம்பாசமுத்திரம் (ஆங்கிலம்:Ambasamudram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,645 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அம்பாசமுத்திரம் மக்களின் சராசரி கல்வியறிவு 86.94% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 92.79%, பெண்களின் கல்வியறிவு 81.40% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09 % விட கூடியதே. அம்பாசமுத்திரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +வரகுண பாண்டிய மன்னரது (கி.பி 862-865) காலக்குறிப்பின்படி அம்பாசமுத்திரத்திலுள்ள பழமையான கோயிலான எரிச்சாவுடையார் கோயில் வட்டெழுத்துக் கல்வெட்டில் + +என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. + +முள்ளிநாட்டைச் சேர்ந்த இளங்கோக்குடி என்பதே அம்பாசமுத்திரத்தின் பழம் பெயராகும். + +காசிநாதர் கோயிலில் கர்ப்பகிருக வடசுவரில் உள்ள கல்வெட்டிலும் இளங்கோக்குடி என்று வருகிறது. + +அம்பாசமுத்திரத்திற்கு இளங்கோக்குடி வேளாக்குறிச்சி என்ற பெயர்கள் கி.பி. 16 ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை அதாவது திருவிதாங்கூர் மன்னன் உதயமார்த்தாண்டவர்மன் காலம் வரை இருந்து வந்தது. இளவரசன் தங்கிய இடம் என்ற பொருளில் இளங்கோக்குடி என்று பெயர் ஏற்பட்டதாகச் செவிவழிச் செய்தி கூறுகிறது. வேளாக்குறிச்சி என்ற பெயர் வேளாளர் வாழ்ந்த பகுதிக்கு வைக்கப்பட்ட பெயராக இருந்திருக்கலாம். + +தமிழ்நாட்டு மன்னர்கள், செல்வந்தர்கள் உண்டாக்கிய பெரிய ஏரிகள் கடல் என்றும், சமுத்திரம் என்றும் அழைக்கப்பெற்றன. நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இந்தப் பகுதியில் வந்து குடியேறிய படைத்தலைவர்கள் பெயரில் பெருங்குளங்கள் பல ஆங்காங்கே அமைந்தன. அவற்றைச் சார்ந்த ஊர்களை அவரவர் பெயரால் அழைத்தனர். இரவணன், வடமலை, அரங்கன், தளபதி, வாலன், கோபாலன் என்பவர்களுடைய பெயரால் தென்பாண்டி நாட்டில் ஆங்காங்கே ஊர்கள் அமைந்தன. இரவண சமுத்திரம், வடமலை சமுத்திரம், அரங்க சமுத்திரம், தளபதி சமுத்திரம், வாலசமுத்திரம், கோபால சமுத்திரம் என்பவை இவ்வாறு பெயர் பெற்ற ஊர்களாகும். பெருங்கடல் போல மிகுந்த நீருடைய பெருங்குளத்தைக் கொண்ட ஊர்கள் சமுத்திரம் எனும் பெயரால் சேர்த்து அழைக்கப்பெற்றன. இங்கு அம்பா, அம்மா, அம்மை என்ற சொற்கள் தாய், காளி, உமாதேவி என்ற பொருளை உடையன.இந்த ஊரிலுள்ள முதன்மைக் கோயிலான மரகதவல்லி அம்மையின் பெயரால் இது அமைந்து அம்மை சமுத்திரம் என்றாகி இருக்க வேண்டும். + + + + + +அம்பத்தூர் + +அம்பத்தூர் (ஆங்கிலம்:Ambattur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் ஒரு மாநகராட்சியின் ஒரு பகுதியாகும் . + +சென்னை மாநகர ஏழாவது மண்டல அலுவலகம் அம்பதூரில் தான் உள்ளது . அம்பத்தூர் மண்டலத்தில்(சென்னை மாநகராட்சி மண்டலம் 7) பாடி, கொரட்டூர், அண்ணா நகர் மேற்கு-விரிவு, மொகப்பேர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய இடங்களும் அடங்கும். + +இப்பகுதியின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +அம்பத்தூரின் நீர்-பிடிப்புப் பகுதிகளாக அம்பத்தூர் ஏரியும் சித்து +ஒரகடம் ஏரியும் உள்ளன. அம்பத்தூருக்கு வெளியே, சென்னையின் நீராதரமாக +விளங்கும் புழலேரி உள்ளது. இவற்றில் அம்பத்தூர் ஏரியைப் பொருத்தவரை +நீரெடுப்பு , ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய பிரச்சினைகள் உள்ளன +(ஆக்கிரமிப்பு தற்போது படிப்படியாகக் குறைந்து வருகிறது). சித்து ஒரகடம் +ஏரியைப் பொருத்தவரை சாக்கடைநீர்க் கலப்பு, குப்பை கொட்டுதல் ஆகிய +பிரச்சினைகள் உள்ளன. இந்த ஏரியைச் சுற்றி பூங்கா அமைக்கும் திட்டம் நிறைவுப்பெறும் தருவாயில் உள்ளது + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,78,134 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அம்பத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 92.69% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்பத்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்கு தொழிற்பேட்டை உள்ளதால் சிறு, குறு, பெரிய நிறுவனங்கள் மட்டுமல்லாமல் +உள்நாட்டு, வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளதால் பொருளாதாரம் நன்றாக உள்ளது + +அம்பத்தூரில் உள்ள முக்கிய மருத்துவமனைகளின் பட்டியல்: + +147 - தி நகர் முதல் அம்பத்தூர் ஓ டி வரை. + + + + +திருவேங்கட நகர் பூங்கா (11 அக்டோபர் 2013இல் திறக்கப்பட்டது) + +ராக்கி திரையரங்கம் + +முருகன் திரையரங்கம் + + + + + +அம்பிகாபூர் + +அம்பிகாபூர் (ஆங்கிலம்: Ambikapur), இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் அமைந்துள்ள சர்குஜா மாவட்டத்தில் இருக்கும் ஒரு சென்சஸ் நகரம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 603 மீட்டர் (1978 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 65,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அம்பிகாபூர் மக்களின் சராசரி கல���வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அம்பிகாபூர் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆம்பூர் + +ஆம்பூர் (ஆங்கிலம்:Ambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சியும், ஆம்பூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். + +'ஆம்' என்னும் சொல் ஊற்றுநீரைக் குறிக்கும். ஊற்று கசியும் ஊர் ஆம்பூர் எனப்பட்டது. ஆம்பூரில் மல்லியும் மிகவும் பிரசித்தி பெற்றிருந்தது. மேலும் ஆம்பூரின் பழங்காலத்தைய பெயர் காட்டாம்பூர் என்பதாகும். அது மருவி கடாம்பூர் என்றும் ஆம்பூர் என்றும் தனித்தனியே அழைக்கப்படுகிறது. அவ்விதம் ஆம்பூர் காடாக இருந்துள்ளது. ஆம்பூரில் ஆம்பூர் பிரியாணி மிகவும் பிரபலம். தோல் தொழிற்சாலைகளும் அதிகமாக இருக்கின்றன. இது பண்டைக் காலத்துத் தொண்டைநாட்டு ஆமூர்க் கோட்டம். + +ஆம்பூரில் மிக அதிகமான தோல் தொழிற்சாலைகள் இயங்குகின்றன. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்துள்ளனர். பல காலணிகள் கடைகளும் உள்ளன. இதனால் மாநில, மத்திய அரசுகளுக்கு அன்னியச் செலவாணிகளை அதிகம் ஈட்டித் தருகின்றன. குறிப்பிடத்தக்க தொழிற்சாலையில் பரிதா, ப்ளோரன்ஸ், டிஏடபிள்யூ ஆகியவையாகும். + +தோல் தொழிற்சாலைக் கழிவுகளினால் ஆம்பூர் பகுதியில் பாலாற்றின் இருபுறமும் சுற்றுச்சூழல் மாசடைந்துக் காணப்படுகிறது. இதைத் தடுக்க அண்மைக் காலங்களில் பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், தனி சுத்திகரிப்பு நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன. + +இரைச்சல் மாசு (noise pollution) பரவலாக ஆம்பூரில் உள்ளதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. + +வேலூர் மாவட்டத்தில் புதிதாக ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இதில் வேலூர் வட்டத்தைச் சார்ந்த அக்ரஹாரம், தோளப்பள்ளி, குருவராஜபாளையம், அகரம், அர்ஜாதி, பலபாடி, நெடும்பாளையம், அரிமலை, ராமநயனிகுப்பம், குப்பம்பட்டு, வேப்பங்குப்பம், குப்பம்பாளையம், பாக்கம்பாளையம், பாக்கம், சின்னபள்ளிகுப்பம், மேல்பள்ளிபட்டு, ஆசனாம்பட்டு, தென்புதுப்பட்டு மற்றும் கள்ளப்பாறை கிராமங்களும், வாணியம்பாடி வட்டத்தைச் சார்ந்த வடபுதுப்பட்டு, கீழ்ம���ருங்கை, வெங்கிளி, குளித்திகை, தோடாளம், மாதனூர், கூத்தம்பாக்கம், அகரம்சேரி, கொல்லமங்கலம், பள்ளிக்குப்பம், பாலூர், திருமலைக்குப்பம், மிட்டாளம், வெங்கடசமுத்திரம், காரபட்டு, கதவாளம், பரசானபள்ளி, கரும்பூர், நாயக்கனேரி, பெரியாங்குப்பம், சோலூர், கம்மகிருஷ்ணப்பள்ளி, குமாரமங்கலம், மலையாம்பட்டு, தென்னம்பட்டு, மணியாரகுப்பம், வீராங்குப்பம், ஆலாங்குப்பம், கன்னடிகுப்பம், கம்மியம்பட்டு, நாச்சாரகுப்பம், விண்ணமங்கலம், மின்னூர், வடகரை, மேல்சாணாங்குப்பம், சின்னபள்ளிகுப்பம், ஈச்சம்பட்டு, இளையநகரம், வெளளத்திகாமணிபெண்டா, சிந்தகம்பெண்டா, மதனஞ்சேரி, கொள்ளகுப்பம், வடச்சேரி, பாபனபள்ளி, செங்கிலிகுப்பம், வெள்ளக்கல் மற்றும் கிரிசமுத்திரம் கிராமங்களும், ஆம்பூர் நகராட்சியும் அடங்கும். ஆம்பூர் நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 316 மீட்டர் (1036 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,13,856 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 56,052 ஆண்கள், 57,804 பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 86.83% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 91.18%, பெண்களின் கல்வியறிவு 82.65% ஆகும். மக்கள் தொகையில் 12,150 ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இவர்களில் இந்துக்கள் 45.80%,முஸ்லிம்கள் 50.10%, கிறித்தவர்கள் 3.83% +ஆவார்கள். + +1. நாகநாத சுவாமிகள் ஆலயம் (ஆம்பூர்), ஆம்பூர் + +2. சாமுண்டீஸ்வரி கோவில், பெரியாங்குப்பம் + +3. கைலாசகிரி மலை, கைலாசகிரி + +4. முருகன் கோவில், ஆம்பூர் சர்க்கரை ஆலை + +5. பெருமாள் கோவில், ஆம்பூர் + +6. கங்கையம்மன் கோவில், ஆம்பூர் + +7. ஆஞ்சநேயர் கோவில், ஆம்பூர் + +8. சாமுண்டியம்மன் கோவில், ஆம்பூர் + +9. காளியம்மன் கோவில், ஆம்பூர் + +10. கங்கையம்மன் கோவில், சாணாங்குப்பம் + +11. பிள்ளையார் கோவில், சாணாங்குப்பம் + +12. அழகிய அம்மன் கோவில், சாணாங்குப்பம் + +13. ௧ற்பக விநாயகர் கோவில், வீராங்குப்பம் + +14. சாமுண்டீஸ்வரி கோவில், வீராங்குப்பம் + +1. ஜாமியா மசூதி, ஆம்பூர் + +2. முகமதுபுறா மசூதி, ஆம்பூர் + +3. சிறிய மசூதி, ஆம்பூர் + +4. சந்தாபெட் மசூதி, ஆம்பூர் + +5. அக்பர் மசூதி ரெட்டி தோப்பு, ஆம்பூர் + +1. லுத்தரன் தேவாலயம், ஆம்பூர் + +2. சி.எஸ்.ஐ தேவாலயம், ஆம்பூர் + +3. தென்னிந்திய தேவாலயம், ஆம்பூர் + +4. ஏழாம் நாள் தேவாலயம், ஆம்பூ���் + +1. மஜாருல் உலூம் கல்லூரி + +2. இந்து மேனிலைப்பள்ளி, ஆம்பூர் + +3. இந்து பெண்கள் மேனிலைப்பள்ளி + +4. கன்கார்டியா ஆசிரியர் பயிற்சிப்பள்ளி + +5. கேஏஆர் பாலிடெக்னிக் + +6. மஜாருல் உலூம் மேனிலைப்பள்ளி + +7. ஹஸ்னத்-இ-ஜாரியாஹ் பெண்கள் மேனிலைப்பள்ளி + +8. டி. அப்துல் வாஹிப் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி + +9.அக்பர் நசீம் உதவிபெறும் நடுத்தர பள்ளி + +10. ஆனைகார் ஓரியன்டல் அராபிக் மேனிலைப்பள்ளி + +11. கன்கார்டியா மேனிலைப்பள்ளி + +12. ஹபிபியா ஓரியன்டல் பெண்கள் மேனிலைப்பள்ளி + +13. அல் அமீன் பள்ளி + +14. பிலெசோ மெட்ரிகுலேஷன் பள்ளி + +15. பெத்தேல் மெட்ரிகுலேஷன் பள்ளி + +16. நடேசன் கல்வி நிலையம், சாணாங்குப்பம் + +17. இந்து மேனிலைப்பள்ளி, கரும்பூர் + +18. கிரெசியஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி + +19. சாலமன் ஆரம்ப ஆங்கிலப்பள்ளி, பெரியாங்குப்பம் + +20. ஜலாலியா ஆரம்ப ஆண்கள் பள்ளி + +21.விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளி + +22. குறிஞ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி, பெரியாங்குப்பம் + +ஆம்பூர், சென்னை-பெங்களூரு தேசிய விரைவுப்பாதையில் (என்.எச். 46) உள்ளதால் பல நகரங்களுக்கும் (வாணியம்பாடி, திருப்பத்தூர், பேரணாம்பட்டு, குடியாத்தம், வேலூர்) இங்கிருந்து பேருந்துகள் செல்கின்றன/ இணைக்கப்பட்டுள்ளன. மேலும், ஆம்பூர், சென்னை-சோலையார்பேட்டை இரயில் வழியில் உள்ளதால் பல (சென்னை, பெங்களூரு, ஈரோடு, சேலம்) நகரங்களுக்குச் செல்லும் இரயில் வண்டிகள் இங்கு நின்று செல்கின்றன. + + +இந்திய அரசு வழங்கும் பத்மசிறீ பட்டம் பெற்றவர்கள் + +1. மெக்கா ரபீக் அஹ்மத் - தொழில் மற்றும் வணிகம் - 2011 + +2. பேராசிரியர் (மருத்துவர்) மதனுர் அஹ்மத் அலி - மருத்துவம் - 2011 + + + + + +அமேதி + +அமேதி (ஆங்கிலம்:Amethi), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள லக்னோ மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகர மன்றம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 100 மீட்டர் (328 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,366 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அமேதி மக்களின் சராசரி கல்வியறிவு 39% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 46%, பெண்களின் கல்வியறிவு 31% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அமேதி மக்கள் தொகையில் 18% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +அம்மாப்பேட்டை + +அம்மாப்பேட்டை (ஆங்கிலம்:Ammapettai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1 மீட்டர் (3 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8991 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அம்மாப்பேட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அம்மாப்பேட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +அமராவதி (மகாராட்டிரம்) + +அமராவதி (ஆங்கிலம்:Amravati), இந்தியாவின் மகாராஷ்டிரம் மாநிலத்தில் அமைந்துள்ள அமராவதி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 343 மீட்டர் (1125 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 549,370 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். அமராவதி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அமராவதி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அமிருதசரசு + +அமிருதசரசு ( பஞ்சாபி மொழியில், ਅੰਮ੍ਰਿਤਸਰ, Amritsar, அம்ரித்ஃசர்), இந்தியாவின் பஞ்சாபு மாநிலத்தில் அமைந்துள்ள அமிருதசரசு மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். வரலாற்றின்படி "இராம்தாசபூர்" என்றும் பேச்சு வழக்கில் "அம்பர்சர்" என்றும் அறியப்படுகிறது. இது இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரமாகும். இது பஞ்சாப் மாநிலத்தின் மஜ்ஹா பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரம் சண்டிகர் தலைநகருக்கு 217 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும் இது பாகிஸ்தானுக்கு மிக  அருகில் உள்ளது.இந்திய பாகிஸ்தான் எல்ல���ப்பகுதியான வாகா 28 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 219 மீட்டர் (718 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 975,695 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். அம்ரித்சர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அமிருதசரசின் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆனைமலை + +ஆனைமலை (ஆங்கிலம்:Anaimalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள மாசாணியம்மன் கோயில் கொங்கு வட்டாரத்தில் புகழ்பெற்றது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 258 மீட்டர் (846 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,556 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆனைமலை மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆனைமலை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +ஆனைமலைக்கோவில் செல்லும் வழியில் மிகப்பழைமையான அரிய போர்வாள்கள் பத்து கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 4500 வருடங்களுக்கு முற்பட்டவை என்று சிந்து சமவெளி நாகரிக தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். + + + + + +ஆனையூர் + +ஆனையூர் (ஆங்கிலம்:Anaiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 63,917 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 32,114 ஆண்கள், 31,803 பெண்கள் ஆவார்கள். ஆனையூரில் 1000 ஆண்களுக்கு 990 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-யை விட குறைவானது. ஆனையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 91.67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 95.42%, பெண்களின் கல்வியறிவு 87.92% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட அதிகமானதே. ஆனையூர் மக்கள் தொகையில் 6,166 (9.65%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 916 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு குறைவானதாக உள்ளது. + +2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 85.09% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிருஸ்துவர்கள் 8.81% இஸ்லாமியர்கள் 5.90% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். ஆனையூர் மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 10.98%, பழங்குடியினர் 0.32% ஆக உள்ளனர். ஆனையூரில் 16,351 வீடுகள் உள்ளன. + + + + + +ஆனந்த் நகர் + +ஆனந்து நகர் (ஆங்கிலம்:Anand Nagar), இந்தியாவின் அஸ்ஸாம் மாநிலத்தில் அமைந்துள்ள Dhubri மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5026 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஆனந்து நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 48% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 56%, பெண்களின் கல்வியறிவு 39% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. ஆனந்த் நகர் மக்கள் தொகையில் 19% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அனந்த்பூர் + +அனந்த்பூர் (ஆங்கிலம்:Anandapur), இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் அமைந்துள்ள கேந்துஜர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,043 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அனந்த்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அனந்த்பூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அனந்த்நகர் + +அனந்த்நகர் (ஆங்கிலம்:Anandnagar), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள Maharajganj மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகர மன்றம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 88 மீட்டர் (288 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,181 மக்��ள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அனந்த்நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அனந்த்நகர் மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அனந்த்பூர் சாஹிப் + +அனந்த்பூர் சாஹிப் (ஆங்கிலம்:Anandpur Sahib), இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள Rupnagar மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,886 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அனந்த்பூர் சாஹிப் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அனந்த்பூர் சாஹிப் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆண்டிப்பாளையம் + +ஆண்டிப்பாளையம் (ஆங்கிலம்:Andipalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 5471 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஆண்டிப்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 57% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆண்டிப்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆண்டிபட்டி + +ஆண்டிபட்டி (ஆங்கிலம்:Andipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது ஆண்டிபட்டி, சக்கம்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி எனும் மூன்று ஊர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியில் மீனாட்சி சுந்தரேஸ்வர் கோவில், காளியம்மன் கோவில் மற்றும் சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில்கள் உள்ளன. + +2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 27,287 மக்கள்தொகை கொண்ட ஆண்டிப்பட்டி பேரூராட்ச���, 5 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்டது. + +இப்பேரூராட்சியானது ஆண்டிப்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +ரெட்டியாம்பட்டி பாளையத்தின் பாளையத்தை ஆட்சி செய்த 9 வது பட்டம் ஏற்ற ராஜகம்பளம் வகையாரா நீலகிரி தொப்ப நாயக்கர் மற்றும் 10 வது பட்டமேற்ற அவரது மகன் காட்டாரித் தொப்ப நாயக்கர் காலத்தில் இக்கிராமம் உருவாக்கப்பட்டது . இந்த கிராமம் பிரண்டைக்காடுக்கு மேற்காகவும் , சக்கிலிச்சி மலைக்கு கிழக்காகவும் உருவாக்கப்பட்டு குடிகளும் குடியமர்த்தப்பட்டனர் . இது திண்டுக்கல் தொல்லியியல் கையேட்டில் பதிந்துள்ளது. + +ஆண்டிபட்டியின் ஒரு பகுதியாகிவிட்ட சக்கம்பட்டியில் கைத்தறி நெசவுத் தொழில் அதிக அளவில் நடைபெற்று வந்தது. தற்போது கைத்தறித் தொழில் விசைத்தறித் தொழிலாக மாற்றமடைந்து விட்டாலும் சிலர் கைத்தறிகளைக் கொண்டு நெசவு செய்து வருகின்றனர். இங்கு நெசவுத் தொழில், இங்குள்ள சாலியர் சாதியைச் சேர்ந்தவர்களால் அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது. சக்கம்பட்டியில் நெசவு செய்யப்பட்ட சேலைக்குச் சிறப்புப் பெயர் உண்டு. முதல் மரியாதை படத்தில் வரும் "அந்த நிலாவைத்தான் கையிலே பிடித்தேன்..." என்று தொடங்கும் கவிஞர் வைரமுத்துவின் பாடலில் "சக்கம்பட்டி சேலை கட்டி..." என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. + +சுற்றிலும் மலைப் பகுதியாக இயற்கை எழில் சூழ இருப்பதால் நிறைய தமிழ்த் திரைப்படங்கள் இங்கு படமாக்கப்பட்டுள்ளன. வாஞ்சிநாதன் (திரைப்படம்), அழகர்சாமியின் குதிரை, தர்மதுரை, பருத்திவீரன், கருத்தம்மா (திரைப்படம்), வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்), சுந்தர பாண்டியன் (திரைப்படம்), மதயானைக் கூட்டம் (திரைப்படம்) போன்ற படங்களின் பெரும்பாலான காட்சிகள் இங்கு படமாக்கப்பட்டவையே. + + + + +அண்ணாமலை நகர் + +அண்ணாமலை நகர் (ஆங்கிலம்:Annamalai Nagar), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8974 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 41% ஆண்கள், 59% பெண்கள் ஆவார்கள். அண்ணாமலை நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, ���ெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அண்ணாமலை நகர் மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அன்னவாசல் + +அன்னவாசல் (ஆங்கிலம்:"Annavasal"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 128 மீட்டர் (419 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7630 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அன்னவாசல் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அன்னவாசல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அந்தியூர் + +அந்தியூர் (ஆங்கிலம்:Anthiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு வட்டம் ஆகும். அந்தியூரின் மையப் பகுதியில் காமராசர் பேருந்து நிலையமும் வார சந்தையும் பத்ரகாளியம்மன் கோவிலும் அமைந்துள்ளது. அந்தியூர் வெற்றிலை மிகவும் பெயர் பெற்றதாகும்.வேளாண்மையே இவ்வூரின் முதன்மையான தொழிலாகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,697 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அந்தியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அந்தியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்குள்ள பத்ரகாளியம்மன் கோவிலும் குருநாதசாமி கோவிலும் இவ்வூரில் புகழ்பெற்றவை. மேலும் குருநாதசாமி தேர்த்திருவிழாவின் போது நடைபெறும் குதிரை, மாட்டுச் சந்தையும் புகழ்பெற்றதாகும். அந்தியூருக்கு சுமார் 8 கி.மீ தொலைவில் மலைக்கருப்புசாமி கோவில் உள்ளது. சித்திரை மாதம் திருவிழா நடக்கும்.அப்போது மடப்பள்ளி அமைந்திருக்கும் கரட்டுப்பாளையத்திலிருந்து கருப்புசாமி , தவசியப்பன் மற்றும் முனியப்பன் ஆகிய சாமிகள் ஊர்வலமாக எடுத்த��ச்செல்லப்பட்டு இரண்டு நாட்கள் மலையடிவாரத்தில் இருக்கும் கோவிலில் பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.அதுசமயம் சுற்று வட்டாரத்தில் இருக்கும் மக்கள் திருவிழாவிற்கு வந்து பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செய்து வழிபடுவார்கள். + +இவ்வூரில் வரட்டுப்பள்ளம் என்ற அணை உள்ளது. மேலும் பெரிய ஏரி, கெட்டிசமுத்திரம் ஏரி , எண்ணமங்கலம் ஏரி ஆகிய ஏரிகளும் உள்ளன. + + + + +அரக்கோணம் + +அரக்கோணம் ("Arakonam"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +ஆரல்வாய்மொழி + +ஆரல்வாய்மொழி (ஆங்கிலம்:Aralvaimozhi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,307 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆரல்வாய்மொழி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆரல்வாய்மொழி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆரணி + +ஆரணி (ஆங்கிலம்:Arani), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில், 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய ஊராகும். திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு [[காஞ்சிபுரம்] திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகளுக்கு மற்றும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் இந்த ஆரணி நகரம். மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 151 [[மீட்டர்]] (495 [[அ���ி]]) உயரத்தில் இருக்கின்றது. +ஆரணி கமண்டல நாகநதி கரையில் அமைந்துள்ளது.12.67°N 79.28°E + +ஆரணி, சென்னையிலிருந்து 126 கி.மீ தொலைவிலும், வேலூரில் இருந்து 38 கி.மீ தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து இருந்து 60.கி.மீ தொலைவிலும் உள்ளது . + +இந்நகரம் பல்வேறு நன்கு அமைக்கப்பட்ட சாலைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மாநில நெடுஞ்சாலைகள்-4 (ஆற்காடு – ஆரணி – செஞ்சி – விழுப்புரம் சாலை), மாநில நெடுஞ்சாலை-132 (வேலூர் – ஆரணி சாலை), ஆரணி-திருவண்ணாமலை சாலை ஆகிய முக்கிய சாலைகள் ஆரணியை இணைக்கின்றன. ஆரணிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் களம்பூர். இது 10.7 கி.மீ (6.65 mi) தொலைவில் ஆரணி-போளூர் சாலையில் அமைந்துள்ளது. + +ஆரணிக்கு வெளியே ஆரணியை இணைக்க சென்னை (ஆற்காடு) சாலை, சென்னை சாலை மற்றும் கடலூர் சாலை ஒரு பைபாஸ் சாலை பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆரணி வழியாக ரயில்கள் இணைக்க நகரில் இருந்து திண்டிவனம் பாதை மத்திய அரசு மூலம் திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. அத்துடன், ஆரணி சைதாபேட்டையில் அமைய வேண்டிய நிலையம் தனியார் பேருந்து நல முதலாளிகள் நீதிமன்றம் மூலம் தடை உத்தரவு பெற்றுள்ளதால் ரயில் நிலையம் களம்பூருக்கு மாற்றப்பட்டது. +ஆரணி பேருந்து போக்குவரத்து நிர்வாக வசதிக்காக ஆரணியில் இரண்டு பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை: + +1. புதிய பேருந்து நிலையம் (அ) கோட்டை பேருந்து நிலையம் +திருவண்ணாமலை, போளூர், செங்கம், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர்,ஈரோடு,திருச்சி, வந்தவாசி, சேத்பட், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, உத்திரமேரூர், கடலூர், படவேடு, தேவிகாபுரம், வாழைப்பந்தல் மற்றும் துரிஞ்சிகுப்பம் வரை செல்லும் பேருந்துகள் மற்றும் கிராம பகுதிகளில் செல்லும் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்திலிருந்து செல்லும். +2. பழைய பேருந்து நிலையம் (அ) புரட்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையம் +சென்னைக்கு (தடம் எண்:202)அதிகப்படியான பேருந்து சேவைகள் உள்ளன. குறிப்பாக 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. சொகுசு, டீலக்ஸ்(தடம் எண் - 202UD) பேருந்து சேவைகளும் இயக்கப்படுகிறது. +சென்னை, திருவள்ளூர், தாம்பரம், காஞ்சிபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி, வேலூர், பெங்களூரு, கண்ணமங்கலம், கலவை, பூந்தமல்லி, சித்தூர், அமிர்தி(ஜவ்வாது மலை) வரை செல்லும் பேருந்துகள�� மற்றும் கிராம பகுதிகளில் செல்லும் பேருந்துகளும் இந்த பேருந்து நிலையத்தில் இருந்து செல்லும். + +2011 இந்திய [[மக்கள்தொகை]] கணக்கெடுப்பின்படி 14,889 வீடுகளுடன், 63,671 மக்கள் ஆரணி நகரத்தில் வசிக்கின்றார்கள். மக்கள்தொகையில் ஆண்கள் 31,268 ஆகவும், பெண்கள் 32,403 ஆகவுள்ளனர். ஆரணி மக்களின் சராசரி கல்வியறிவு 85.41% ஆகும். ஆரணி நகர மக்கள் தொகையில் ஆறு வயதுக்குட்பட்டோர் 9.97% ஆகும். ஆரணி நகர மக்கள்தொகையில் இந்துக்கள் 89.16%, இசுலாமியர்கள் 7.39%, கிறித்தவர்கள் 1.80%, [[சைனம்|சமணர்கள்]] 1.43% ஆகவும், மற்றவர்கள் 0.21% ஆகவுள்ளனர். + +[[பகுப்பு:திருவண்ணாமலை மாவட்ட வட்டங்கள்]] +[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]] + + + + +அறந்தாங்கி + +அறந்தாங்கி (ஆங்கிலம்:Aranthangi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +பெயர்க்காரணம் + +அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 34,266 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அறந்தாங்கி மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அறந்தாங்கி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +அறந்தாங்கி means அறம்+தாங்கி. + +போன்ற பள்ளிகள் மட்டுமே 1990 ஆண்டுகளுக்கு முன்பிருந்து செயல் பட்டு வருகின்றன  அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளும் இன்று மிகுந்து காணப்படுகின்றன   + +தனியார் பள்ளிகளும் நிறைந்து காணப்படுகிறான அறந்தாங்கியில்  கலை  கல்லூரிகளும்  ஐ டி ஐ கல்லூரிகளும்  அறந்தாங்கியில்   அருகாமையிலேயே உள்ளன + +2. Aranthangi local + + + + +அரவக்குறிச்சி + +அரவக்குறிச்சி (ஆங்கிலம்:Aravakurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி வட்டத்தில் இர��க்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இங்கு இந்துக்கள், இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் அனைவரும் உள்ளனர். பொதுவாக மாமன், மச்சான் அண்ணன், தம்பி உறவு முறை கூறி அனைவரும் சமூக ஒற்றுமையுடன் இங்கு இணக்கமாக வசிப்பது சிறப்பு. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,273 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரவக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 70% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 62% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரவக்குறிச்சி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +அரவக்குறிச்சி அருகில் உள்ளது பூலாம்வலசு. இங்கு பொங்கல் தினத்தில் நடை பெரும் சேவல் சண்டை மிகவும் பிரசித்தம். சேவல்கள் கத்தி கட்டப்பட்டு களத்தில் இறக்கப்படும் தோல்வி அடைந்த சேவல் கோச்சை என்று வெற்றி பெற்ற சேவல் உரிமையாளரிடம் கொடுக்கப்படும். + +அருகில் உள்ள ரங்கமலையில் ஒரு புகழ் பெற்ற சிவன் கோவில். இங்கு ஆடிப்பெருக்கு விழா மிகவும் பிரசித்தம். + +அருகில் உள்ள வெஞ்சமாங்கூடலூர் ஒரு பாடல் பெற்ற சிவதலமாகும். + +அரவக்குறிச்சியில் முருங்கைக்காய் மற்றும் செம்மறி ஆடுகள் மிகவும் பிரபலம்; + + + +தீயணைப்பு நிலையம் + + + + + + + +ஆர்.சி. சர்ச் + +சி.எஸ்.ஐ. சர்ச் + + + + +ஆற்காடு + +ஆற்காடு (ஆங்கிலம்:Arcot), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 164 மீட்டர் (538 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 70,000 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஆற்காடு மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆற்காடு மக்கள் தொகையில் 15% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, ஆற்காடு நகர தொழிலாளர் பங்கு விகிதம் 25.50% ஆகும். ஆற்காடு வட்டத்தின் தலைமையகமாக இருப்பதால் முதன்மைத் தொழிற்துறை தொடர்புகள் குறைவாகவும் , சேவைத்துறை நடவடிக்கைகளில��� வளர்ச்சி மிகையாகவும் கொண்டுள்ளது. தோல்தொழில், விவசாய வணிகத்தொழில் மற்றும் நகரைச்சுற்றியுள்ள தொழிற்சாலைகள் வாயிலாக இவ்வூர் மக்களுக்கு பெரும்பாலும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தொழிலாளர்களில் சுமார் 85 சதவீதம் பேர் போக்குவரத்துச் சேவைகள், வணிகம் மற்றும் சேவைத்துறைகளில் பணிபுரிபவர்களாக உள்ளனர். உற்பத்தி சார்ந்த தொழில்கள் மற்றும் குடிசைத் தொழில்கள் போன்ற இரண்டாம் நிலை தொழிற்துறை நடவடிக்கைகளில் 10 சதவீத தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நகரில் உள்ள மொத்தத் தொழிலாளர்களில் ஆண்களின் பங்கு 50 சதவீதமும் பெண்களின் பங்கு 20 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. சென்னை இராயபுரத்திற்கும் வாலாசாபேட்டைக்கும் இடையில் அமைக்கப்பட்ட தெற்காசியாவின் இரண்டாவது ரயில் பாதையின் வளர்ச்சியோடு ஆற்காடு மற்றும் அதன் அருகில் இருக்கும் தொழில் நகரங்களும் தொடர்ந்து நிலையாக தொழில்துறை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. + +ஆற்காடு சுற்றியுள்ள இராணிப்பேட்டை நகரம் நூற்றுக்கணக்கான தோல் மற்றும் தோல் பதனிடும் வசதிகள் கொண்ட தொழிற்சாலைகள் இருக்கின்றன. இந்த மாவட்டத்தில் இருந்துதான் நன்கு பதனிடப்பட்ட உயர்ரக தோல்பொருட்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. நாட்டின் மொத்த தோல் ஏற்றுமதியில் வேலூர் மாவட்ட தோல் தொடர்பான பொருட்கள் 37 சதவீதம் ஆகும். + +இந்தியாவின் தொழில்நுட்பக் கல்வி வளர்ச்சியில் ஆற்காடு சுற்றியுள்ள கல்வி பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இங்கு ஓர் அரசுப் பல்கலைக்கழகம், ஒரு தனியார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஓர் அரசு மருத்துவக்கல்லூரி, ஒரு தனியார் மருத்துவக்கல்லூரி தவிரப் பல பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. + +சுமார் 104.332 கிமீ, அதாவது (64.829 மைல்) நீளமுள்ள சாலைகளை வேலூர் மாநகராட்சி பராமரித்து வருகிறது.இதில் 50.259 கிமீ (31.229 மைல்) நீளமுடைய சிமெண்ட் சாலைகள், 6.243 கிமீ நீளமுள்ள (3.879 மைல்) மண் சாலைகள் மற்றும் 47.88 கி.மீ. (29.75 மைல்) நீளமுடைய நிலக்கரித்தார் சாலைகள் உள்ளன. பெங்களூர் – சென்னை சாலையில் உள்ள கிருட்டினகிரியையும் வாலாசாவையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 46 ஆற்காடு வழியாகச் செல்கிறது. மேலும் தேசிய நெடுஞ்சாலை எண் 4 ராணிப்பேட்டை – சென்னை மற்றும் கடலூர் – சித்தூர் சாலைகளை இணைத்துச் செல்கிற���ு. + +தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுடன் ஆற்காடு இணைக்கப்பட்டுள்ளது. ஆற்காட்லிருந்து சென்னை, கோயம்புத்தூர், பெங்களூர், திருப்பதி, சேலம், சித்தூர், ஓசூர், நாகர்கோவில், கடலூர், கர்னூல், திருச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கன்னியாகுமாரி, ஆரணி, மதுரை, திருநெல்வேலி, காஞ்சிபுரம், கல்பாக்கம்,குடியாத்தம், தருமபுரி, ஈரோடு, திருப்பூர், பாலக்காடு,கிருஷ்ணகிரி, செஞ்சி மற்றும் தென் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் சென்றுவர பேருந்து சேவை வசதிகள் உண்டு. சுமார் 30 கிலோமீட்டர் அருகிலுள்ள புறநகரங்களை நகரப்பேருந்து சேவை ஆற்காடு வேலூருடன் இணைக்கிறது. + +சென்னை பெங்களூர் அகன்ற இரயில் பாதையில் அமைந்துள்ள காட்பாடி இரயில் நிலையம் சென்னை, பெங்களூர், திருப்பதி மற்றும் திருச்சி இரயில் நிலையங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. தினசரி 150க்கும் மேற்பட்ட இரயில்கள் இந்நிலையத்தின் வழியாகச் செல்கின்றன. விஜயவாடா, திருப்பதி, புவனேஸ்வர், நாக்பூர், பெங்களூரு, போபால், மும்பை, மங்களூர், திருச்சிராப்பள்ளி, பிலாஸ்பூர், கோர்பா, பாட்னா, எர்ணாகுளம், திருவனந்தபுரம், கன்னியாகுமரி, ஷிரடி, கான்பூர், கயா, தன்பாத், ஜம்முதாவி, மதுரை, பிலாய், குவாலியர், சென்னை சென்ட்ரல், ஹவுரா இரயில் நிலையம், புது தில்லி இரயில் நிலையம், கோயம்புத்தூர், குவஹாத்தி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, ஜெய்ப்பூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுக்கு காட்பாடியில் இருந்து நேரடி இரயில் இணைப்புகள் உள்ளன. + +விமான நிலையம், இங்கிருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் சென்னை சர்வதேச விமான நிலையமும் சுமார் 250 கி.மீ தூரத்தில் பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் உள்ளன. சுமார் 90 கி.மீ தூரத்தில் திருப்பதி உள்நாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. + + + + +அரிமளம் + +அரிமளம் (ஆங்கிலம்:Arimalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 66 மீட்டர் (216 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +சங்க காலத்தில் இந்த அரிமளம் என்னும் ஊர் 'அரிமணவாயில்' என்னும் பெயருடன் விளங்கியது. அந்த ஊருக்குப் பக்கத்தில் ஊறத்தூர் என்னும் ஊர் இருந்தது. இந்தப் பகுதி பசும்பூண் பாண்டியனின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. இந்தப் பாண்டியனை எதிர்த்த பகைவர்கள் சிலர் அவனது படைத்தலைவன் 'நெடுமிடல்' என்பவனைப் போரில் கொன்றனர். எவ்வி காவிரியாற்றின் வடகரையிலுள்ள 'நீடூர்' என்னும் ஊரின் மன்னன். இவன் இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்தான். இந்த வெற்றிக்குப் பின்னர் நெடுமிடலை வீழ்த்திய கூட்டணி அரிமணவாயில் உறத்தூரில் போராரவாரத்தோடு பெருஞ்சோறு (பெருவிருந்து) உண்டு மகிழ்ந்தனர். (இந்தச் செயதி பலரது வாயில் பேசப்பட்டது போல, தலைவனோடு தனிமையில் கொண்டிருந்த உறவை ஊர்மக்கள் பலரும் பேசிக்கொண்டனர் என்று தலைவி ஒருத்தி கூறுவதாக இந்தப் பாடல் அமைந்துள்ளது). + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7811 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரிமளம் மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரிமளம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +அரியலூர் + +அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. + +விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது. + +இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று. +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm +cement city + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + +அர���யலூரில் கோதண்டராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும். + + + + +அரியப்பம்பாளையம் + +அரியப்பம்பாளையம் (ஆங்கிலம்:Ariyappampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரியப்பம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 64%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அரியப்பம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆறுமுகநேரி + +ஆறுமுகநேரி (ஆங்கிலம்:Arumuganeri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இவ்வூர் தூத்துக்குடியிலிருந்து 35 கிமீ தொலைவிலும், திருச்செந்தூரிலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள தொடருந்து நிலையம் 2 கிமீ தொலைவில் உள்ள காயல்பட்டினம் ஆகும். + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,968 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 27,266 ஆகும் + +30 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாத யாத்திரையாக காவடி தூக்கி வரும் பக்தகோடிகள், திருச்செந்தூரில் உறையும் ஆறுமுகப்பெருமானைக் கண்டு வணங்கி வழிபட நேர் வழியாக இவ்விடம் அமைந்ததால் இப்பெயர் பெற்றது. ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள நகரம் என்பதால் "ஆறுமுகநகரி" என்று வழங்கப்பட்டு, பின்னர் "ஆறுமுகநேரி" என்று மருவி தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. + +உப்பு வியாபாரம், நெல் சாகுபடி, முருங்கைக்காய் வியாபாரம், சந்தை வியாபாரம், தொழிற்சாலைப்பணி போன்றவை இவ்வூர் மக்கள் செய்து வரும் முக்கியத் தொழிலாகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 6 மீட்டர் (19 அடி) உயரத்த���ல் இருக்கின்றது. + + + + +அசோக் நகர் + +அசோக் நகர் (ஆங்கிலம்:Ashok Nagar), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அசோக் நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 57,682 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். அசோக் நகர் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அசோக் நகர் மக்கள் தொகையில் 16% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அசோகபுரம் + +அசோகபுரம் (ஆங்கிலம்:Ashokapuram), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9676 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அசோகபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 87%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அசோகபுரம் மக்கள் தொகையில் 7% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அத்திப்பட்டு + +அத்திப்பட்டு (ஆங்கிலம்:Athipattu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8382 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அத்திப்பட்டு மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அத்திப்பட்டு மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஆவடி + +ஆவடி (ஆங்கிலம்:Avadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் சென்னை மாநகரில் வடமேற்கில் அமைந்த ஒரு நகராட்சி மற்றும் புறநகர் குடியிருப்புகளில் ஒன்றாகும். ஆவடி நகராட்சி பகுதியில் திருமுல்லைவாசல் மாசிலாமணிஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு போர் ஊ���்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது. +ஆவடி( Avadi ) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் “Armoured Vehicles and Ammunition Depot of India” என்றவற்றின் சுருக்கம் ஆகும். 1960க்கு பிறகு இந்த நகர் வளர்ச்சி அடைந்தது. +தமிழில் “ஆ“ என்றால் பசு என்று பொருள். இந்த நகர் நிறைய பசு நிறைந்த ஊர் என்பதால் ஆ+அடி=ஆவடி என்று கூறுவதுண்டு. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 17 மீட்டர் (55 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +சரியாக ஆவடி வீட்டு வசதி வாரியத்தின் பின்னால் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி 2.64 கிலோமீட்டர் நீளமானது. வற்றாத ஏரி என்ற பெருமையை இந்த ஏரி பல ஆண்டுகள் பெற்று இருந்தது. நீண்ட நாட்களுக்கு முன்பு இந்த ஏரி நீர் முழுவதும் விவசாயத்திற்கு தான் பயன்படுத்தப்பட்டது. ஆவடி ஏரி பல பறவைகளின் புகலிடமாக இருந்தது. ஆனால் தற்போது இந்த ஏரியின் பெரும்பகுதி நகர்ப்புற வளர்ச்சி காரணமாக கட்டிடங்களாக மாறியுள்ளது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 3,44,701 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். ஆவடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆவடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + + + + + +அயோத்தி + +அயோத்தி (ஆங்கிலம்:Ayodhya), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள பைசாபாத மாவட்டத்தில் இருக்கும் ஒரு அயோத்தி மாநகராட்சி ஆகும். ராமர் பிறந்த இடம் ராம ஜென்மபூமி அயோத்தியில் அமைந்துள்ளது. இந்நகரம் சரயு ஆற்றாங்கரையில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சமசுகிருதம் - பாரசீகம் கலந்த அவதி மொழி பேசப்படுகிறது. + +அயோத்தி நகரம், பண்டைய கோசல நாட்டின் தலைநகரம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 93 மீட்டர் (305 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +சர்ச்சைக்குரிய பாபர் மசூதியும், ராமர் கோவிலும் அமைந்துள்ளது. இந்தியாவின் அரசியல் தலைஎழுத்தை கொஞ்சம் மாற்றி எழுதிய ஊர் இது. விஷ்ணுவின் அவதாரமான இராமர், இந்த அயோத்தியை தலை நகராகக் கொண்டு கோசல நாட்டை ஆட்சி செய்ததாக வால்மீகி எழுதிய இராமாயண இதிகாசம் கூறுகிறது. + +அவத் பகுத��� இசுலாமியர்களின் ஆட்சியில் அவுத் நவாப்புகள் ஆளுகையின் கீழ் 1722 முதல் 1948 வரை வந்தது. பாபரின் தளபதிகளில் ஒருவரால் இங்குள்ள பாபர் மசூதி கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் இங்கிருந்த ராமர் கோவில் இடித்துவிட்டு இங்குள்ள மசூதி கட்டப்பட்டதாக சங்கப் பரிவார் இயக்கங்களால் அரசியல் சர்ச்சைகளுக்கு ஆளானது. பல ஆயிரம் உயிர்கள் கடவுளின் பெயரால் கொல்லப்பட்ட கொடுமை அரங்கேறியது. இதில் உச்சகட்டமாக அங்கிருந்த மசூதி சங்கப் பரிவார இயக்கங்களால் தகர்த்தெறியப்பட்டது. அயோத்தி பிரச்சினை இந்தியாவின் தலையாய பிரச்சனைகளில் ஒன்றாக இன்றும் விளங்குகிறது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,593 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 59% ஆண்கள், 41% பெண்கள் ஆவார்கள். அயோத்தி மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அயோத்தி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +அயோத்தியாபட்டினம் + +அயோத்தியாபட்டினம் (ஆங்கிலம்:Ayothiapattinam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி தாலுகாவில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9956 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அயோத்தியாபட்டினம் மக்களின் சராசரி கல்வியறிவு 67% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அயோத்தியாபட்டினம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அய்யலூர் + +அய்யலூர் (ஆங்கிலம்:Ayyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், வேடசெந்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அய்யலூர் பேரூராட்ட்சி 21 சகிமீ பரப்பும், 2011-இல் 17100 மக்கள்தொகையும், 15 வார்டுகளும், 52 தெருக்களும் கொண்டது. அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 14,362 மக்கள் இங்��ு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அய்யலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 63%, பெண்களின் கல்வியறிவு 42% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. அய்யலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அய்யம்பாளையம் + +அய்யம்பாளையம் (ஆங்கிலம்:Ayyampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி 12,175 மக்கள்தொகை கொண்ட அய்யம்பாளையம் பேருராட்சியானது திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் (என். எச். 45) தெற்மேற்கில் உட்பகுதியில் அமைந்துள்ள ஊர் ஆகும். 19.20 சகிமீ பரப்பு கொண்ட அய்யம்பாளையம் பேரூராட்சி 15 வார்டுகளையும், 102 தெருக்களையும் கொண்டது. இது ஆத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,131 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அய்யம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 69%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அய்யம்பாளையம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + + +அழகியபாண்டியபுரம் + +அழகியபாண்டியபுரம் (:Azhagiapandiapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,060 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அழகிய பாண்டியபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அழகிய பாண்டியபுரம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +எடப்பாடி + +எடப்பாடி (ஆங்கிலம்:Edappadi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தி���் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். ஒரு காலத்தில் அதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே மேட்டூரும், மேற்கே ஈரோடும், தெற்கே பவானியும் எல்லைகளாக அமைந்துள்ளன. "இடைப்பாடி" என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,05,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +எடப்பாடியில் அதிக அளவில் நெசவுத் தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது. மேலும் விவசாயம் மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகள் நடைபெறுகின்றது. + +சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது. + + + + + +ஏலூர், கேரளம் + +ஏலூர் (ஆங்கிலம்:Eloor), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள நகரம் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,092 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஏழூர் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது. ஏழூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +எழுமலை + +எழுமலை (ஆங்கிலம்:Elumalai) (எழில்மிகு எழுமலை ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்தில் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.இது உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +இந்நகரமானது நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தெற்கே சதுரகிரி, மேற்கே மாவூத்து வேலப்பர் மலை, வடக்கே குதிரை கிரி என்கிற வாசிமலை மற்றும் கிழக்கே திடியன் மலை, இதன் வடக்கே உள்ள வாசி மலையில் கண்ணன் கோவில் உள்ளது. இங்கே தான் மதுரை மீனாட்சி அம்மன் பிறந்ததாகக் கூறப்படும் மீனாட்சி பண்ணை உள்ளது. தெற்கே உள்ள சதுரகிரியில் சுந்தரமகாலிங்கமும், சந்தன மகாலிங்கமும், மேற்கே உள்ள மலையில் மாவூற்று வேலப்பர் (முருகன்) கோவிலும் உள்ளது. + +சித்திரை 01, மாவூற்று வேலப்பருக்கும், சித்தர பௌர்ணமி அழகர் வைகையாற்றில் எழுந்தருளல் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமியும், ஸ்ரீ திருவேங்கடநாத பெருமாள் சுவாமியும் எழுந்தருளல், வைகாசியில் ஸ்ரீ பத்ரகாளியம்மன், ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோவில் திருவிழாக்கள், ஆடி அமாவாசை சுந்தர மகாலிங்கம், புரட்டாசி மாதம் வாசிமலையானுக்கு உகந்த மாதம், ஆதலால் இவ்வூரில் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. திருக்கார்த்திகை திருநாள் அன்று ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோவில் திருவிழாவும், மார்கழி மாதம் அனைத்து கோவில்களிலும், பங்குனி மாதம் முழுவதும் ஸ்ரீ பொட்டல் காளியம்மன், ஸ்ரீ காச்சகாரியாம்மன் கோவில் திருவிழாக்களும் கொண்டாடப்படும்.இதன் சிறப்பாக சல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 208 மீட்டர் (682 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,746 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 7,890 ஆண்கள், 7,856 பெண்கள் ஆவார்கள். எழுமலையில் 1000 ஆண்களுக்கு 996 பெண்கள் உள்ளனர். இது தமிழக மாநில சராசரியான 996-க்கு சமமாக உள்ளது. எழுமலை மக்களின் சராசரி கல்வியறிவு 65.15% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74.67%, பெண்களின் கல்வியறிவு 55.60% ஆகும். இது மாநில சராசரி கல்வியறிவான 80.09% விட குறைவானதே. எழுமலை மக்கள் தொகையில் 1,725 (10.96%) ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 974 பெண்கள் என்றுள்ளது. இது தமிழக சராசரியான 943-க்கு அதிகமாக உள்ளது. + +2011 ஆம் ஆண்டின் மதவாரியான கணக்கெடுப்பின் படி இந்துக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 96.77% ஆக இருக்கின்றனர். அதையடுத்து இஸ்லாமியர்கள் 2.58% கிருஸ்துவர்கள் 0.35% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். எழுமலை மொத்த மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் 4.98%, பழங்குடியினர் 0.00% ஆக உள்ளனர். எழுமலையில் 4,224 வீடுகள் உள்ளன. + + + + + +எருமைப்பட்டி + +எருமைப்பட்டி (ஆங்கிலம்:Erumaipatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இது நாமக்கலில் இருந்து துறையூர் செல்லும் வழியில் உள்ளது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9303 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். எருமைப்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 63% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எருமைப்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +ஏழுதேசம் + +ஏழுதேசம் (ஆங்கிலம்:Ezhudesam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,652 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஏழுதேசம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஏழுதேசம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +அக்டோபர் 20 + + + + + + + +கடம்பூர் + +கடம்பூர் (ஆங்கிலம்:Kadambur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி வட்டம், கோவில்பட்டி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +கடம்பூர் பேரூராட்சி கடம்பூர்,சிவலிங்கபுரம், சங்கரப்பேரி (எ) கோடங்கால், சங்கரப்பேரிகாலனி, தங்கம்மாள்புரம், தங்கம்மாள்புரம்காலனி ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது. + +14.53 சகிமீ பரப்பும், 12 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,209 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 4,155 ஆகும் + +தூத்துக்குடியிலிருந்து 40 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 37 கிமீ தொலைவிலும் கடம்பூர் உள்ளது. சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் நகரங்கள�� இணைக்கும் தொடருந்து நிலையம் கடம்பூரில் உள்ளது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 84 மீட்டர் (275 அடி) உயரத்தில் இருக்கின்றது. + + + + +காடையாம்பட்டி + +காடையாம்பட்டி (ஆங்கிலம்:Kadayampatti) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9691 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். காடையாம்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 61%, பெண்களின் கல்வியறிவு 44% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கடையம்பட்டி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கடையநல்லூர் + +கடையநல்லூர் (ஆங்கிலம்:Kadayanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 57,277 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி தமிழ‌க‌ அர‌சு உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. + +இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் மலைகளின் அடிவாரத்தில் குற்றாலம் அருவி மற்றும் தென்காசிக்கு அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை சாரலுக்கு மற்றும் நெல் வயல்களுக்கு பெயர் பெற்றது. + +கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முன���வர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால் தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரி வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனை சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகாநல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது. + +கடையநல்லூர் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் . நகரின் மொத்தப் பரப்பு 52.25 skm. மழைக்காலம் தவிர, பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது. + + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 90,364 பேர் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் இந்துக்கள் 55.98 %,முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 80.54% ஆகும். + + + + + + + +கைலாஷ்பூர் + +கைலாஷ்பூர் (ஆங்கிலம்:Kailashpur), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள Saharanpur மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9724 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். கைலாஷ்பூர் மக்களின் சராசரி கல்வியறிவு 53% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59%, பெண்களின் கல்வியறிவு 46% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கைலாஷ்பூர் மக்கள் தொகையில் 20% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கல்லிடைக்குறிச்சி + +கல்லிடைக்குறிச்சி (ஆங்கிலம்:Kalladaikurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில், தாமிரபரணி ஆற்றின் கரையில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும��. + +மாவட்டத் தலைமையிட நகரமான திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்த கல்லிடைக்குறிச்சிப் பேரூராட்சியின் வடக்கில் தென்காசி 40 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியில் திருநெல்வேலி - செங்கோட்டை செல்வதற்கான, கல்லிடைக்குறிச்சி தொடருந்து நிலையம் உள்ளது. + +6.56 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 93 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7708 வீடுகளும், 27,816 மக்கள்தொகையும் கொண்டது. + + + + +கள்ளக்குறிச்சி + +கள்ளக்குறிச்சி (ஆங்கிலம்:Kallakkurichi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். 2019, சனவரி 8 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாகும் வரை இந்நகராட்சி விழுப்புரத்துடன் இணைந்திருந்தது. + +முக்கிய சுற்றுலாதளங்கள் + +கோமுகி அணை, மணிமுக்தா அணை,ஆஞ்சினேயர் கோவில்,கல்வராயன் மலை,மேகம் நீர்வீழ்ச்சி,பெரியார் நீர்வீழ்ச்சி,தியாகத்துருகம் மலை மற்றும் பழமைவாய்ந்த பீரங்கி குண்டுகள்.எஸ்.ஒகையூர் பெரிய ஏரி மற்றும் பழமைவாய்ந்த சிவன் கோவில்,சித்தலுர் பெரியாய்க்கோவில்,தொழிற்சாலைகள். + +1,கோமுகி சக்கரைஆலை +2,மூங்கில்துறைபட்டு சக்கரைஆலை +3,தியாகத்துருகம் சக்கரைஆலை +4,கள்ளக்குறிச்சியை சுற்றி பரவலாக அரிசிஆலைகள் +4,தியாகத்துருகம் கல்குவாரி + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 36,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கள்ளக்குறிச்சி மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கள்ளக்குறிச்சி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +கல்லக்குடி + +கல்லக்குடி (ஆங்கிலம்:Kallakudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,625 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவ���ர்கள். கல்லக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கல்லக்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கழுகுமலை + +கழுகுமலை (ஆங்கிலம்:Kalugumalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கழுகுமலையில் புகழ்பெற்ற கழுகுமலை வெட்டுவான் கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் அமைந்துள்ளது. + +கோவில்பட்டிக்கும், சங்கரன்கோவிலுக்கும் நடுவில் அமைந்த கழுகுமலை, தூத்துக்குடியிலிருந்து 20 கிமீ தொலைவிலும், கோவில்பட்டியிலிருந்து 14 கிமீ தொலைவிலும் உள்ளது. +11.45 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 94 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி கோவில்பட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. + +2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 4,208 வீடுகள் கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள்தொகை 14,738 ஆகும் + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 105 மீட்டர் (344 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இங்கு மூன்று முக்கிய கோயில்கள் உள்ளன. அவைகள் வெட்டுவான்கோயில், கழுகுமலை முருகன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் ஆகும். + +இது ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கலைநயம் மிக்க கோயில். பாண்டிய மன்னர்களால் 8ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. அழகிய சிற்பங்களைக் கொண்ட இக்கோயில் முழுவதுமாக முடிக்கப்படவில்லை. பிற்காலத்தில் விநாயகர் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்து வணங்கப்படுகிறார். +அரைமலை என்னும் பழம் பெயரைக்கொண்ட கழுகுமலையின் கிழக்கு பக்கம் வெட்டுவான் கோயிலும் அதன் அருகில் தென்புற மலையில் சமணதீர்த்தங்கரர் உருவங்களும் உள்ளன. வெட்டுவான் கோயில் எல்லோராவிலுள்ள கைலாசநாதர் கோயிலைப்போன்றது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. பெரிய மலைப்பாறையில் ஏறக்குறைய 7.5 மீட்டர் ஆழத்திற்கு சதுரமாக வெட்டிஎடுத்து அதன் நடுப்புறத்தை கோயிலாக செதுக்கியுள்ளனர். இது பாண்டிய மன்னனால் தோற்றுவிக்கபட்ட ஒற்றை கோயிலாகும். கோயிற்பணி முற்று பெறவில்லை. சிகரம் மட்���ும் முற்றுப் பெற்றுள்ளது. இதில் கருவறையும் அர்த்த மண்டபமும் உள்ளன. சிற்ப வேலைபாடுகள் நிறைந்த இக்கோயிலிலுள்ள உமாமகேசுவரர், தட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா ஆகியோரின் சிற்ப வடிவங்கள் எழில் வாய்ந்தவை. விமானத்தின் மேற்பகுதியில் நரசிம்மரும் வடக்கில் பிரம்மனும் காட்சி தருகின்றனர். விமானத்தின் நான்கு மூலைகளிலும் நந்தி சிலைகளும் இவற்றுக்கு கீழ் யாளிவரியும் கபோதகமும் அமைந்துள்ளன. + +இங்குள்ள சமணர் படுகைகளில் தீர்த்தங்கரர்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. சமணர்கள் தங்கள் குரு, தாய், தந்தை, மகள் ஆகியோரின் நினைவாக இங்கு தீர்த்தங்கரர் சிற்பங்களை உருவாக்கியுள்ளனர். இச்சிற்பங்களின் கீழே அவற்றை உருவாக்கியவரின் பெயர் வட்டெழுத்தில் பொரிக்கப்பட்டுள்ளது. இங்கு சமணசித்தாந்தம் போதிக்கப்பட்டது. இச்சிற்பங்கள் பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் தோற்றுவிக்கபட்டவை. + + + + +கல்யாணி + +கல்யாணி (ஆங்கிலம்:Kalyani), இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் அமைந்துள்ள Nadia மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 81,984 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கல்யாணி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கல்யாணி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கம்பைநல்லூர் + +கம்பைநல்லூர் (ஆங்கிலம்:Kambainallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,847 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். கம்பைநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 54% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 62%, பெண்களின் கல்வியறிவு 45% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கம்பைநல்லூர் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கம்பம் + +கம்பம் () (ஆங்கிலம்:Cumbam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391 மீட்டர் (1282 அடி) உயரத்தில் இருக்கின்றது. +மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கபடுகிறது. +புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, ஷன்முகநதி, ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்ட ஏலம் விவசாயிகளில் 80 சதம் இங்குள்ள தமிழர்கள் ஆவர் + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 58,713 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கம்பம் மக்களின் சராசரி கல்வியறிவு 68% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கம்பம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காங்கேயம் + +காங்கேயம் (ஆங்கிலம்:Kangeyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இவ்வூரைச் சேர்ந்த காளைகள் புகழ்பெற்றவை. இவை காங்கேயம் காளைகள் எனப்படுகின்றன. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 28,356 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். காங்கேயம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காங்கேயம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +காங்கேயநல்லூர் + +காங்கேயநல்லூர் (ஆங்கிலம்:Kangeyanallur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,672 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காங்கேயநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், ���தில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காங்கேயநல்லூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +கிருபானந்த வாரியார் இவ்வூரில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +கண்ணமங்கலம் + +கண்ணமங்கலம் (ஆங்கிலம்:Kannamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7297 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கண்ணமங்கலம் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்ணமங்கலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கண்ணம்பாளையம் + +கண்ணம்பாளையம் (ஆங்கிலம்:Kannampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,890 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். கண்ணம்பாளையம் மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்ணம்பாளையம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +கண்ணபுரம் + +கண்ணபுரம் (ஆங்கிலம்:Kannapuram), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊர் ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,568 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கண்ணபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 86%, பெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்ணபுரம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + +கண்ணூர் + +கண்ணூர் (ஆங்கிலம்:Kannur), இந்தியாவின் கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கண்ணூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மேலும் இது கண்ணூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இவ்வூரில் நடைபெறும் தெய்யாட்டம் மிகவும் புகழ்பெற்றது. இந்நகரில் இந்தியக் கைத்தறி தொழில்நுட்பக் கழகம் செயல்படுகிறது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 63,795 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். கண்ணூர் மக்களின் சராசரி கல்வியறிவு 83% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 83% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கண்ணூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + + + +காரைக்கால் + +காரைக்கால் (ஆங்கிலம்:Karaikal), இந்தியாவின் பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள காரைக்கால் மாவட்ட தலைநகர் ஆகும். +இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ளது. காரைக்கால் தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில் அமைந்திருக்கும் துறைமுக நகரம் ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டில் பிறந்த மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமான புனிதவதி என்கிற காரைக்கால் அம்மையார் பிறந்த ஊர். + +காரைக்கால், சென்னை மாநகரில் இருந்து 310 கி.மீ. தொலைவில், தமிழகத்தின் கடற்கரை பகுதியின் மத்தியில், வங்கக் கடலோரத்தில் அமைந்த இந்திய நடுவண் அரசின் ஒன்றியப் பகுதி ஆகும். இது பிரெஞ்சு நாட்டின் பகுதியாக இருந்தது. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்கு மேல் பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்ததால் பிரெஞ்சுச் சொற்களை வெகு லாகவமாக அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் இடமாகவும் இருக்கிறது. ஆந்திர மாநிலத்தின் காக்கி நாடாவுக்கு அருகாமையிலுள்ள ஏனாம் நகரும், தமிழகத்தின் கடலூரின் அருகாமையிலுள்ள புதுச்சேரி நகரும், கேரள மாநிலத்தின் கோழிக்கோட்டுக்கு அருகிலுள்ள மாஹே நகரும் இந்த மாநிலத்தின் (ஆட்சிப் பகுதியின் பிராந்தியங்கள்) அங்கமாகையால், ஆங்கிலம், பிரெஞ்சு, தமிழ் மொழிகளுடன், தெலுங்கு, மலையாளம் மொழி பேசும் மக்களும் சிறுபான்மையாக இருக்கிறார்கள். +காரைக்கால் மராத்திய மன்னர் ஷாகோஜி போன்ஸ்லேவின் தஞ்சை பிரதிநிதியிடம் இருந்து சந்தா சாகிப் என்பவரால் பிரஞ்சியருக்கு வாங்கி ��ொடுக்கப்பட்டதாகும். அப்போது பிரஞ்சு கவர்னராக இருந்தவர் துய்மா அவர்கள். பிற்பாடு கவர்னராக இருந்த டூப்லெக்ஸ் காரைக்காலை சுற்றியுள்ள சில ஊர்களை விலைக்கு வாங்கி இந்த ஊரை விரிவாக்கம் செய்தார். +இதை பிரஞ்சியர் சாதிக்க முக்கிய காரணமாக இருந்தவர், பிரஞ்சியரிடம் துபாஷியாக இருந்த பெத்ரோ கனகராய முதலியார் ( இவருடைய பாட்டனார் தானப்ப முதலியாரால் பிரஞ்சியருக்கு வாங்கிக்கொடுக்கப்பட்டதுதான் புதுச்சேரி மாநிலமாகும்.) இவருடைய புத்தி கூர்மையான யோசனைகளால் காரைக்கால் புதுச்சேரிக்கு கிடைக்கும் சாத்தியமானது. +காரைக்கால் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும், இது முன்னர் பிரெஞ்சு இந்தியாவின் பகுதியாக இருந்தது. புதுச்சேரி, யானம் மற்றும் மஹே போன்ற பிற முன்னாள் பிரஞ்சு பிரதேசங்களுடன் சேர்ந்து புதுச்சேரி ஒன்றியத்தை உருவாக்குகிறது. +காரைக்கால் நகரம் நாகப்பட்டினத்திலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) வடக்கிலும் மற்றும் தரங்கம்பாடியிலிருந்து 12 கிலோமீட்டர் (7.5 மைல்கள்) தெற்கே அமைந்துள்ளது, இது காரைக்கால் மாவட்ட தலைமையகம் ஆகும். + +காரைக்கால் மண்டலம் காரைக்கால் நகராட்சி மற்றும் நகராட்சி மன்றங்களால் உருவாக்கப்பட்டது.அவை: +குடமுருட்டி, அரசலாறு, திருமலைராயன் ஆறு, வீரசோழனார் மற்றும் விக்ரமனார் ஆகியவை காவேரி ஆற்றின் முக்கிய கிளை நதிகள் ஆகும்.காரைக்கால் பகுதி வழியாக அரசலாறும் அதன் கிளைகளும் பரவி இருந்தாலும், குடமுருட்டி மற்றும் வீரசோழனார் ஆகியவற்றின் நீர்த்தேக்கங்களும் அப்பகுதியின் பாசன தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. +காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். கையிலை மலையின் மீது கைகளால் நடந்து சென்றவரை, சிவபெருமான் அம்மையே என்று அழைத்ததாலும், காரைக்கால் மாநகரில் பிறந்தவர் என்பதாலும் காரைக்கால் அம்மையார் என்று வழங்கப்பெறுகிறார். பரமதத்தன் என்பவரை மணந்து இல்லற வாழ்வில் ஈடுபட்டிருந்தவர், ஒரு நாள் கணவன் கொடுத்தனுப்பிய மாம்பழத்தினை சிவனடியாருக்கு படைத்துவிட்டு, அந்த மாம்பழத்தினை கணவன் கேட்க, இறைவனிடம் வேண்டி மாம்பழத்தினைப் பெற்ற நிகழ்விலிருந்து இறைவனை சரணடைந்தார். + +இவர் இசைத்தமிழால் இறைவனைப் பற்றி முதன்முதலாக பாடியவராகவும், தமிழுக்கு அ���்தாதி எனும் இலக்கண முறையை அறிமுகம் செய்தவராகவும் அறியப்பெறுகிறார்.அற்புதத் திருவந்தாதி, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திரு இரட்டை மணிமாலை போன்ற நூல்களைத் தந்து சைவத்தமிழுக்கு பெரும் தொண்டாற்றியுள்ளார். இவருடைய பதிக முறைகளைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரப் பதிகங்கள் இயற்றப்பட்டன.இவருக்கென காரைக்கால் கோவிலில் தனி சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது. அக்கோவில் காரைக்கால் அம்மையார் கோவில் என்று மக்களால் அழைக்கப்பெறுகிறது. +காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் அம்மையார் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது. காரைக்கால் அம்மையார் கோயில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம், பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். + +இந்திய 2009 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 227589 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். காரைக்கால் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்கால் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்காலின் பூர்வீக‌ குடிமக்களில் சில‌ ஆயிரக்கணக்கானோர் இந்தியா மற்றும் ஃபிரான்ஸ் நாட்டு குடிமை உரிமை பெற்று இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக உள்ளார்கள். + +காரைக்கால் நகரத்தில் பிரெஞ்சுக்காரகளால் அமைக்கப்பட்ட சாலைகள் பெரும்பாலும் நேர்கோட்டில் அமைந்தவை என்பது காரைக்காலின் ஓர் சிறப்பு. அது குறித்தான ஒரு சொலவடை, ‘நீதி அழகு இல்லையென்றாலும் வீதி அழகு உண்டு’ என்பதாகும். துறைமுக நகரான‌ காரைக்கால் கிழக்குப் பகுதியில் கடற்கரை உள்ளது. மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசமான காரைக்கால்தான் நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் என்று மூன்று மாவட்டங்களுக்குள் உள்ளடங்கிய பகுதிகளில் பெரிய நகரம் மட்டுமல்லாது ��ொழில் நகரமும்கூட‌. இங்கு, ஏராளமான இரும்பு உருக்கு ஆலைகள், நூற்பாலைகள், டைல்ஸ், பாலிதீன் மற்றும் ரசாயன தொழிற்சாலைகள் பெட்ரோல் சுத்திகரிப்பு ஆலை உள்ளன. மேலும் தேசிய தொழில்நுட்ப கழகம் (N.I.T), மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், வேளான் கல்லூரி, என்று கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்பக்கல்லூரிகள் நிறைந்த நகரம். பக்தர்கள் குவியும் திருநள்ளாறு காரைக்காலை ஒட்டிய திருத்தலம். + +நாட்டின் தென்கிழக்கு கடற்கரையில் அனைத்து பருவ நிலைகளுக்கும் ஏற்ற முக்கிய உயர் தொழில்நுட்ப வசதி கொண்டது காரைக்கால் துறைமுகம். 680 கி.மீ. தென்கிழக்கு கடற்கரையில் சரியான மையத்தில் சென்னைக்கும் தூத்துக்குடிக்கும் நடுவில், இத்துறைமுகம் அமைந்துள்ளது.தமிழக கடற்கரை மத்திய‌ பகுதியில் மிக வேகமாக பெரிய அளவில் உருவாகிவரும் துறைமுகம். + +காரைக்காலில் கட்டமைக்கப்பட்டு 2014இல் நிறைவேற்றப்பட உள்ள இந்த விமான‌ நிலையம் இந்தியாவில் முற்றிலுமாகத் தனியார் முதலீட்டில் கட்டமைக்கப்படும் முதல் விமான‌ நிலையமாகத் திகழும். பொதுப் பயன்பாட்டிற்கான தனியார் துறை கட்டமைப்பாக இதனை நிறைவேற்றிட குடியியல் பறப்பு அமைச்சகம் பெப்ரவரி 2011இல் ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையத்தின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் இந்திய வானூர்தி நிலையங்களின் ஆணையத்தால் இயக்கப்பட உள்ளது. இந்த விமான‌ நிலையம் காரைக்காலுக்கு மட்டுமல்லாது சுற்றியுள்ள பல சமயத் திருத்தலங்களுக்கும் முக்கிய நகரங்களுக்கும் பேருதவியாக இருக்கும். +2011 ஆம் ஆண்டில், காரைக்காலில் 227,589 மக்கள் இருந்தனர், இதில் ஆண் மற்றும் பெண் முறையே 111,492 மற்றும் 116,097 பேர் இருந்தனர். 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்கால் மக்கள் தொகை 170,791 ஆக இருந்தது, இதில் ஆண்களின் எண்ணிக்கை 84,487 மற்றும் பெண்கள் 86,304 பேர். 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் வெளியிடப்பட்ட முதல் தற்காலிக புள்ளிவிவரங்கள், காரைக்கால் மாவட்டத்தின் அடர்த்தி சதுர கிலோ மீட்டர்க்கு 1,275 பேர் எனக் காட்டுகிறது. 2011 ஆம் ஆண்டில் காரைக்காலின் சராசரி கல்வியறிவு 81.94 ஆக இருந்தது. + +காரைக்கால் யூனியன் பிரதேசப் போராட்டம் குழு 2005 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இது காரைக்காலுக்கு தனி யூனியன் நிலைப்பாட்டைக் கோருகிறது. குறிப்பாக புதுச்சேரிக்கு மாநில அரசியலை வழங்கும் சமயத்தில் யூனியன் நிலைப்பாட்டைக் காரைக்காலுக்கு கொடுக்க கோருகிறது. காரைக்காலின் பொருளாதார பின்தங்கிய நிலை, புதுச்சேரி மீது மட்டும் கவனம் செலுத்துவதன் விளைவாக இருந்து வருகிறது. + +காரைக்காலில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தளங்கள்: + +2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, காரைக்கால் மக்களின் கல்வியறிவு 83% ஆகும். காரைக்கால் பிராந்தியத்தில் ஆரம்ப நிலை முதல் கல்லூரி நிலை வரை கல்வி நிறுவனங்களின் பரந்த நெட்வொர்க் உள்ளது. + +ஜவஹர்லால் முதுநிலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (ஜிப்மர்) காரைக்கால் நகரில் 2016 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மாணவர்கள் நாடு முழுவதும் நடத்தப்படும் நுழைவு தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.தேசிய தொழில்நுட்பக் கழகம் புதுச்சேரி 2010 இல் காரைக்காலில் நிறுவப்பட்டது. மாணவர்களுக்கு JEE MAIN நுழைவு தேர்வு மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு தேர்வுசெய்யப்படுவர்.அறிஞர் அண்ணா அரசு. கலைக் கல்லூரி, அவ்வையார் அரசு பெண்கள் கல்லூரி, பாரதியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, விநாயகம் மிஷன் மருத்துவக் கல்லூரி காரைக்காலில் நன்கு அறியப்பட்ட நிறுவனங்கள்.பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம் , காரைக்காலில் அதன் முக்கிய வளாகம் கொண்ட ஒரே பி.ஜி. கல்லூரி இது.இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஒரே வேளாண் நிறுவனம் ஆகும். + +அதிகாரப்பூர்வ இணையதளம் + + + + +காரைக்குடி + +காரைக்குடி (ஆங்கிலம்:Karaikudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். "செட்டிநாடு" என்றும் கல்வி நகரம் அழைக்கப்படும் பிரதேசத்தின் பகுதியாகும். சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டு, கரை வீடுகள் என்று அழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த வீடுகளின் அடிப்படையில், காரைக்குடி தமிழக அரசால் பாரம்பரியமிக்க நகரென அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு சிறந்த கல்வி நிறுவனங்களான அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிலையம் (CECRI) அமையபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. + +காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும், காரைக்குடி கீழ்பட்டுள்ளது. நகரானது, 13.75 சதுர கிலோமீட்டர் தூரத்தை உள்ளடக்கிய காரைக்குடி நகராட்சியினால் நிர்வகிக்கப்படுகின்றது. 2011ஆம் ஆண்டைப் பொறுத்தவரை காரைக்குடியின் மக்கள் தொகை 306,714 ஆகும்.போக்குவரத்தைப் பொறுத்தமட்டில் சாலை வழிப் போக்குவரத்தே முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றது என்றபோதிலும், காரைக்குடி சந்திப்பு, தேவகோட்டை சாலை ரயில் நிலையம், கோட்டையூர் ரயில் நிலையம், கண்டனூர் ரயில் நிலையம் ஆகியவை, காரைக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற மக்களின் போக்குவரத்து தேவைக்கு இன்றியமையாததாக விளங்குகின்றன. மேலும், காரைக்குடி நகரிலிருந்து 97.2 கிலோமீட்டர் தொலைவில், மதுரை விமான நிலையமும் மற்றும் 83.6 கிலோமீட்டர் தொலைவில், திருச்சிராப்பள்ளி விமானநிலையமும் அமைந்துள்ளன. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 82 மீட்டர் (269 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 106,793 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 53,425 ஆண்கள், 53,368 பெண்கள் ஆவார்கள். காரைக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரைக்குடி மக்கள் தொகையில் 9,940 +ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +காரைக்குடி நகராட்சி நிர்வாகம் 1928ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு, 1988ஆம் ஆண்டு தேர்வு நிலைக்கு உயர்த்தப்பட்டது, 2013 ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. ஒவ்வொரு வார்டிற்கும், தனித்தனியே ஒரு கவுன்சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நகராட்சிப் பணிகள் ஆறு துறைகளாக பிரிக்கப்பட்டுளன: அவை, பொது நிர்வாகம்,பொறியியல், வருவாய், சுகாதாரம், திட்டமிடுதல் மற்றும் தகவல் தொழில்நுட்பம். ஆறு துறைகளும், நகராட்சி ஆணையரால் நிர்வகிக்கப்படுகின்றன. இவரே நிர்வாகத் தலைவர் ஆவார். சட்டமன்ற அதிகாரங்கள் 36 உறுப்பினர்களுடன் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறுப்பினரும் தனித்தனியே ஒவ்வொரு வார்டுகளைச் சார்ந்தவர்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர், மற்றும் துணைத்தலைவர் தலைமையில் சட்டமன்ற அவை ஸ்திரப்படுத்தப்பட்டுள்ளது. + +காரைக்குடி தேர்தல் தொகுதியி��் ஒரு பகுதியாக காரைக்குடி திகழ்ந்து, ஐந்தாண்டுக்கு ஒருமுறை தமிழக சட்டசபைக்கு ஒரு உறுப்பினரை தேர்ந்தெடுக்கின்றது. நான்கு முறை அதிமுகவும் (1977, 1984, 1991 மற்றும் 2009 தேர்தல்கள்), இரண்டு முறை திமுகவும் (1980, 1989), ஒரு முறை தமிழ் மாநில காங்கிரசும் (1996), மற்றொரு முறை இந்திய தேசிய காங்கிரசும்(2006) இத்தொகுதி தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியின் தற்போதைய சட்டசபை உறுப்பினர் இந்திய தேசிய காங்கிரஸை சார்ந்த கே. ஆர். ராமசாமி ஆவார். + +திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, ஆலங்குடி, மானாமதுரை மற்றும் சிவகங்கையை உள்ளடக்கிய சிவகங்கை பாராளுமன்ற தொகுதியின் பகுதியாக காரைக்குடி திகழ்கிறது. இத்தொகுதியின் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், அதிமுகவின் செந்தில்நாதன் ஆவார். 1967ஆம் வருடத்திலிருந்து, இத்தொகுதியின் பாராளுமன்ற தேர்தல்களில் 8 முறை இந்திய தேசிய காங்கிரஸும் (1980, 1984, 1989, 1991, 1999, 2004 மற்றும் 2009 தேர்தல்கள்), இரு முறை அதிமுகவும் (1977 மற்றும் 2014 தேர்தல்கள்), இரு முறை தமிழ் மாநில காங்கிரஸும் (1996 மற்றும் 1998 தேர்தல்கள்), இரு முறை திமுகவும் (1967 மற்றும் 1971 தேர்தல்கள்) வெற்றி பெற்றுள்ளன. + +காரைக்குடி நகரின் சட்டம் ஒழுங்கு, தமிழ்நாடு காவல்துறையின் துணைக் கண்காணிப்பாளர் தலைமையிலான சிவகங்கை உட்பிரிவினால் பராமரிக்கப்படுகின்றது. நகரில் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையத்துடன், மொத்தம் மூன்று காவல் நிலையங்கள் உள்ளன. சிறப்புப் பிரிவுகளான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, சமூக நிதி மற்றும் மனித உரிமை, மாவட்ட குற்ற பதிவு மற்றும் சிறப்புப் பிரிவு ஆகியவை உள்ளன. இவை கண்காணிப்பாளர் தலைமையில் இயங்கி மாவட்ட அளவிலான காவல்துறை பிரிவுகளில் இயங்குகின்றன. + + + + + +காரமடை + +காரமடை (ஆங்கிலம்:Karamadai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கோவை ஊட்டி நெடுஞ்சாலை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 353 மீட்டர் (1158 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,799 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். காரமடை மக்களின் சராசரி கல���வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. காரமடை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +காரமடை அரங்கநாதர் கோவில் இப்பகுதியில் பெயர்பெற்றது. + + + + +கறம்பக்குடி + +கறம்பக்குடி (ஆங்கிலம்:Karambakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கறம்பக்குடி வட்டத்திலுள்ள பேரூராட்சி ஆகும். +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 36 மீட்டர் (118 அடி) உயரத்தில் இருக்கின்றது. இந்த ஊர் புதுக்கோட்டையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12,007 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். கரம்பக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கரம்பக்குடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + + + +http://www.surekaa.com/2010/02/blog-post_17.html + + + + +கார்கில் + +கார்கில் (ஆங்கிலம்:Kargil), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கார்கில் மாவட்டத்தில் இருக்கும் ஒரு அறிவிக்கப்பட்ட பகுதியின் குழு ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 3200 மீட்டர் (10498 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9944 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 61% ஆண்கள், 39% பெண்கள் ஆவார்கள். கார்கில் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கார்கில் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +