diff --git "a/train/AA_wiki_30.txt" "b/train/AA_wiki_30.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_30.txt" @@ -0,0 +1,4257 @@ + +அரித்துவார் + +ஹரித்வார் அல்லது அரித்துவார் என்பது (ஹிந்தியில் ஹர்த்வார் என உச்சரிக்கப்படுகிறது, ஹிந்தி: हरिद्वार भारत) ) இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள ஒரு புனித நகரமும் நகராட்சி மன்றமும் ஆகும். ஹிந்தியில் ஹரித்வார் என்பது, "ஹரியின் த்வாரம்" அல்லது "கடவுளின் வழி", அதாவது ஹரி என்றால் கடவுள் மற்றும் த்வார் என்றால் வழி எனும் பொருளில் வழங்கப்படுகிறது. + +முக்தி தரும் ஏழு இந்து புனித நகரங்களில் அரித்துவாரும் ஒன்றாக கருதப்படுகிறது. + +தனது ஆதாரமான கொவுமுக்கிலிருந்து 253 கி.மீ. (157 மைல்கள்), கடல் மட்டத்திலிருந்து 3,139 மீட்டர் (10,300 அடி) கங்கோத்ரி பனிமுகட்டின் முனை வரையில் பயணம் செய்த பின்னர் கங்கை நதியானது வட இந்தியாவின் ஹரித்வாரில், இந்திய-கங்கை சமவெளிக்குள் முதல் முறையாக நுழைகிறது. இதுதான் கங்கை சமவெளிக்குள் இறங்கும் இடத்தில் அந்நகரத்திற்கு அதன் பழம் பெயரான "கங்கத்வாரா" (गंगाद्वार) என்பதனை அளித்தது. + +இந்து வேத சாசனங்களின்படி, ஹரித்வார் என்பது அமிர்தம் என்கிற அழியாத்தன்மைத் தருகிற திரவம் சமுத்திர மந்தனுக்குப் பிறகு தெய்வீகப் பறவையான கருடனால் எடுத்துச் செல்லப்படும் போது பெரிய குடுவை ஒன்றிலிருந்து சிந்திய நான்கு இடங்களில் ஒன்றாகும். உஜ்ஜயின், ஹரித்வார், நாசிக், அலஹாபாத் ஆகியவை இந்த நான்கு இடங்களாகும். இன்று, கும்பமேளா இந்த நான்கு இடங்களில் ஒன்றில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது. மஹா கும்பமேளா பன்னிரெண்டாம் வருடத்தில் அலஹாபாத்தின் பிரயாக்கில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவைக் கொண்டாட உலகம் முழுவதும் இருந்தும் இலட்சக்கணக்கான யாத்ரீகர்களும், பக்தர்களும் மற்றும் சுற்றுலாப் பயணிகளும் இங்கு கூடுகின்றனர். இவர்கள் கங்கை நதியின் கரைகளில் சடங்குகளுடன் புனித நீராடுவர். + +அமிர்தம் விழுந்த இடம் ஹரித்வாரின் மிகப் புனிதமான மலைவழியான ஹர் கி பாவ்ரியில் (நேர்ச்சரியாக, "இறைவனின் காலடிகள்") "பிரம்ம குந்த்" எனக் கருதப்படுகிறது; ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் புனித யாத்ரீகர்கள் திருவிழாக்களின் போது திரள்வர் அல்லது இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் புனித "முழுக்கு" ஒன்றினைச் செய்துகொள்ள வருவர��. இச்செயல் ஒருவர் தனது பாவங்களைக் களைந்து மோட்சத்தினை அடைவதற்கு இணையானதாகும். + +ஹரித்வார் மாவட்டம் 1988 ஆம் ஆண்டு 28 டிசம்பர் அன்று சஹரான்புர் கோட்ட ஆணையரகத்தின் பகுதியாக இருந்தது. 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று உத்தரப்பிரதேச சட்ட மன்றமானது 'உத்தரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டம்' 1998' என்பதனை நிறைவேற்றியது. இறுதியாக இந்திய நாடாளுமன்றமும் இந்திய ஒருங்கிணைந்த சட்டம் - 'உத்தரப்பிரதேச மறு சீரமைப்புச் சட்டம் 2000' என்பதனை நிறைவேற்றியது. ஆகையால் 2000 ஆம் ஆண்டு 9 நவம்பர் அன்று ஹரித்வார் இந்தியக் குடியரசின் 27 ஆவது மாநிலமாகப் புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தின் (அப்போதைய உத்தராஞ்சல்) ஒரு பகுதியானது. + +இன்று இந்நகரம் அதன் மத ரீதியிலான முக்கியத்துவத்தையும் கடந்து, மாநில உட்கட்டமைப்பு & தொழிற்துறை மேம்பாட்டுக் கழகத்தின் (SIDCUL) வேகமான வளர்ச்சியுடன் கூடிய மாநிலத்தின் முதன்மை தொழிற்துறை இலக்காகவும், தொழிற்பேட்டையுடனும், அருகிலுள்ள பி.எச்.ஈ.எல் (பாரத மிகுமின் நிறுவனம்) தன்னாட்சி நகரமும் மற்றும் அதனுடன் இணைந்த துணைத் தொழிலகங்களோடும் உருவாகி வரும் நகரமாக உள்ளது. + +இயற்கை ஆர்வலர்களுக்கு சொர்க்கபுரியான ஹரித்வார், இந்தியாவின் பண்பாடு மற்றும் நாகரீகத்தை பலவண்ணக்காட்சியாக அளிக்கிறது. இது வேத சாசனங்களில் கபிலாஸ்தானம், கங்காத்வார் மற்றும் மாயாபுரி என்று பலவாறாகக் குறிப்பிடப்படுகிறது. உத்தராகண்டம் மாநிலத்தில் உள்ள நான்கு புனித தலங்களான (சார்தாம்) (பத்ரிநாத் கோயில், கேதார்நாத்துக் கோயில், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகியவற்றுக்கு நுழைவாயிலாக உள்ளது. எனவே இதனைச் சைவர்கள் (சிவ பெருமானைப் பின்பற்றுபவர்கள்) ஹர்த்வார் என்றும், வைணவர்கள் (விஷ்ணுவைப் பின்பற்றுபவர்கள்) ஹரித்வார் என்றும் அழைக்கின்றனர், இவை முறையே ஹர் என்பது சிவனையும் ஹரி என்பது விஷ்ணுவையும் குறிக்கின்றன. + +மகாபாரதத்தின் வனபர்வத்தில் தௌமிய முனிவர் யுதிஷ்டிரரிடம் இந்திய தீர்த்தங்களைப் பற்றி கூறும்போது, கங்காத்வார் அதாவது ஹரித்வார் மற்றும் கான்கால் ஆகிய தீர்த்தங்கள் பற்றிக் குறிப்பிடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் அந்நூலானது அகத்திய முனிவர் அவரது மனைவி லோபமுத்ராவுடன் (விதர்பாவின் இளவரசி) இங்கு தவமிருந்ததாகவும் குறி��்பிடுகின்றது. + +கபில முனிவர் அங்கு ஒரு ஆசிரமத்தை கொண்டிருந்ததால், அது பழமையான பெயரான கபிலா அல்லது கபிலஸ்தானம் என்ற பாரம்பரியப் பெயரைப் பெற்றது. + +பண்டையகாலத்து அரசனான பாகீரதன், சூரியவம்ச அரசனான சாகரின் (இராமரின் மூதாதையர்) கொள்ளுப்பேரன் ஆவார். இவர் சத்ய யுகத்தில் கபில முனிவரின் சாபத்திலிருந்து தனது மூதாதையர்கள் 60,000 பேரை சாபவிமோசனமடையச் செய்வதற்காக தனது வருடக் கணக்கிலான தவத்தின் மூலமாக சொர்க்கத்திலிருந்து கங்கை நதியைக் கொண்டுவந்தார். இதுவே ஆழ்ந்தப் பற்றுடைய இந்துக்கள், இறந்து போன தங்கள் குடும்பத்தினர் மோட்சமடைவதற்காக அவர்களின் சாம்பலை (அஸ்தியை) இங்கு கொண்டு வந்து கரைப்பது ஒரு மரபாகவே தொடரப்படுகின்றது. பகவான் விஷ்ணு தனது காலடிச் சுவடை ஹர்-கி-பாவ்ரி மேற்சுவற்றின் மீது அமைந்துள்ள கல்மீது பதித்துவிட்டுச் சென்ற இடத்தை, புனித கங்கை நதியானது எல்லா நேரமும் தொட்டு விட்டுச் செல்கிறது. + +மௌரிய பேரரசின் (கி.மு.322-185) கீழ் வந்த ஹரித்வார், பின்னர் குஷான பேரரசின் கீழ் (சிர்கா. முதல்-மூன்றாம் நூற்றாண்டுகளில்) வந்தது. அகழ்வாய்வுப் பணிகளின் கால அளவியல் கண்டுபிடிப்புகளானவை, அங்கு சுடுமண் நாகரீகம் கி.மு. 1200 ஆம் ஆண்டிற்கும் கி.மு. 1700 ஆம் ஆண்டிற்கும் இடையில் நிலவியதாக நிரூபித்தது. முதல் நவீன கால ஹரித்வாரின் எழுத்துப்பூர்வ ஆதாரம் இந்தியாவிற்கு கி.பி. 629 ஆம் ஆண்டில் விஜயம் செய்த சீனப் புனிதப் பயணியான ஹுவான் சுவாங்கின் பயணக் குறிப்புகளில் காணப்படுகிறது. அரசர் ஹர்ஷவர்த்தனரின் (590-647) ஆட்சிக் காலத்தில் ஹரித்வாரை அவர் 'மோ-யு-லோ' என்று பதிவு செய்தார். மீதமுள்ள ஆதாரங்கள் நவீன நகரத்தின் சிறிது தெற்கேயுள்ள மாயாபூரில் இன்றும் உள்ளது. ஒரு கோட்டையும் மற்றும் மூன்று கோயில்களும் உடைந்துப் போன கல் சிற்பங்களுடன் அந்த இடிபாடுகளின் மத்தியில் உள்ளன. மேலும் கங்கையின் நுழைவாயிலான 'கங்கத்வாரா' என்று அழைக்கப்படுகின்ற மோ-யு-லோவிற்கு வடக்கில் ஒரு கோயில் இருப்பதையும் அவர் குறிப்பிடுகிறார். + +இந்நகரம் துருக்கிய படையெடுப்பாளரான டிமுர் லாங் (1336-1405) என்பவரால் 1399 ஆம் ஆண்டு ஜனவரி 13 அன்று படை எடுக்கப்பட்டது. + +சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் (1469-1539) தனது ஹரித்வார் பயணத்தின் போது 'குஷன் காட்' டில் குளித்தார். அங்குதான் பிரபலமான 'செடிகளுக்கு நீருற்றுதல்' சம்பவம் நடந்தேறியது. அவரது அந்தப் பயணம் இக்காலத்தில் குருத்வாரா (குருத்வாரா நானக்வாரா) என்று நினைவூட்டப்படுகிறது. இரு சீக்கிய ஜனம்சாக்கிகளின் படி, இவ்வருகையானது கி.பி 1504 ஆம் ஆண்டில் பைசாகி தினத்தன்று நடந்தது. பின்னர் அவர் கார்வாலின் கோட்த்வாராவிற்கு வருகை தந்தபோது வழியில் கன்க்காலிற்கும் வந்தார். பெரும்பாலான இந்துக்களின் மரபுவழி ஆய்வுப் பதிவுகளை ஹரித்வாரின் பாண்டாக்கள் வைத்திருப்பதற்காக அறியப்படுகின்றது. வாஹிஸ் என அறியப்படும் இந்த ஆவணங்கள் ஒவ்வொரு வருகையின் போதும் புதுப்பிக்கப்படுகிறது. அவை வட இந்தியாவின் பரவலான குடும்பக் கிளையமைப்புகளின் களஞ்சியமாகும். + +"அய்-னி-அக்பரி" என்ற நூலை அபுல் ஃபசல் என்பவர் 16 ஆம் நூற்றாண்டில் மொகலாய பேரரசர் அக்பர் காலத்தில் எழுதினார். இது இந்துக்களின் ஏழு புனித நகரங்களில் ஒன்றான கங்கையின் மீதுள்ள ஹர்த்வார் என அறியப்பட்ட அந்நகரை மாயா (மாயாபுர்) எனக் குறிப்பிடுகின்றது. மேலும் அது நீளத்தில் பதினெட்டு கோக்களை (ஒவ்வொன்றும் தோராயமாக 2 கி.மீ) உள்ளதாகவும், சைத்ராவின் 10 வது நாளில் பெரும்திரளான யாத்ரீகர்கள் கூடுவார்கள் எனவும் குறிப்பிடுகிறது. மேலும் மொகலாயப் பேரரசர் அக்பர் அவரது பயணங்களின் போதும், அரண்மனையிலிருந்த போதும் கங்கையின் நீரை பருகினார் எனவும், அதனை 'அழிவின்மையை வழங்கும் நீர்' எனவும் அழைத்தார் என்றும் குறிப்பிடுகின்றது. அவர் செல்லுமிடங்களுக்கெல்லாம் முத்திரையிடப்பட்ட ஜாடிகளில் நீரை அனுப்புவதற்காக சோருன்னிலும், பின்னர் ஹரித்வாரிலிருந்தும் பிரத்தியேக நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். + +முகலாயர் காலத்தில், ஹரித்வாரில் அக்பரின் செப்புக் காசுகளை அச்சு வார்க்கும் நாணயச் சாலை இருந்தது. ஆம்பரின் அரசரான ராஜா மான் சிங் தற்போதைய ஹரித்வாரின் நகரத்திற்கு அடிக்கல் நாட்டினார் எனவும், ஹர்-கி-பாவ்ரி மலைவழியைப் புனரமைத்தார் எனவும் கூறப்படுகிறது. அவரது மறைவிற்குப் பிறகு அவரின் சாம்பல் பிரம்ம குந்த்தில் மொகலாய பேரரசர் அக்பரின் மூலமாகவே கரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பேரரசர் ஜஹாங்கீர் (1596-1627) காலத்தில் இந்நகரத்திற்கு வருகைத் தந்த தாமஸ் கோர்யாட் என்ற ஓர் ஆங்கில பயணி, இதை 'ஹரித்வாரா' அதாவது சிவனின் தலைநகரம் எனக் ��ுறிப்பிட்டார். + +தற்போது இருக்கின்ற நகரங்களில் பழமையான ஒன்றாகவும், தொன்மையான இந்து வேத சாசனங்களிளும் குறிப்பிடப்பட்டுள்ள ஹரித்வார், புத்தர் காலத்திலிருந்து மிகச்சமீபத்திய பிரிட்டிஷ் வருகை வரையில் வாழ்க்கை முறைகளினாலும் காலங்களிலும் நீடித்துப் பின்னிக் கிடக்கின்றது. ஹரித்வார் தொன்மையான வளமான மத மற்றும் பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளது. இந்நகரம் இன்னும் பல பழைய மாளிகைகளையும் சீரிய சுவர்ச்சித்திரங்களையும் பெரும் புதிரான கல் வேலைப்பாடுகளையும் தாங்கியுள்ள மற்றும் பெரிய வீடுகளையும் கொண்டிருக்கிறது. + +இங்கு கங்கை நதியின் மீது அமைந்திருக்கும் பெரிய இரு அணைகளில் ஒன்றான 'பீம்கோடா அணை' உள்ளது. இது 1840களில் 'உயர் கங்கை கால்வாய்' மூலம் சுற்றுப் புறத்திலுள்ள நிலங்களுக்கு கங்கையின் நீரினை திருப்பி பாசன வசதியளிப்பதற்காகக் கட்டப்பட்டது. இருப்பினும், இது கங்கையின் நீரோட்டத்தை கடுமையாக பாதித்தது. மேலும் கங்கையை ஒரு உள் நாட்டு நீர் வழியாக 18 ஆம் நூற்றாண்டு வரை கிழக்கிந்திய கம்பெனியால் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டதையும், மேலும் டெஹ்ரி உயர்ந்த துறைமுக நகரமாக இருந்ததையும் பாழடித்தது. கங்கைக் கால்வாய் அமைப்பின் முக்கிய நீர்த் தேக்கப் பணி ஹரித்வாரிலுள்ளது. 1837-38 வறட்சியினால் தூண்டப்பட்ட உயர் கங்கைக் கால்வாய் திட்டமானது 1842 ஆம் ஆண்டு ஏப்ரலில் துவங்கப்பட்டு, 1854 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. கால்வாயின் தனித்த சிறப்பம்சமான அரை-கிலோ-மீட்டர் நீளமுள்ள கால்வாய்ப் பாலமானது ரூர்கியிலுள்ள சோலானி நதியின் மீது அமைந்துள்ளது. உண்மையான நதியிலிருந்து 25 மீட்டர்கள் கால்வயை உயர்த்துகிறது. + +'ஹரித்வார் ஒன்றிய நகராட்சி' 1868 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இது அப்போதைய கிராமங்களான மாயாபூர் மற்றும் கன்கால் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஹரித்வார் முதலில் 1886 ஆம் ஆண்டில் லக்சர் வழியாக கிளைப் பாதை மூலமாக இரயில்பாதைகளுடன் இணைக்கப்பட்டது, அச்சமயம் அவத் மற்றும் ரோஹிலாகண்ட் இரயில்வேப் பாதையானது ரூர்கியிலிருந்து சஹரான்புர் வரையில் நீடிக்கப்பட்டது. இது பின்னர் 1900 ஆம் ஆண்டில் டெஹ்ராடுன் வரை நீடிக்கப்பட்டது. + +1901 ஆம் ஆண்டில், அது 25,597 மக்கட் தொகையினைக் கொண்டு யுனைட்டெட் மாகாணத்தின் சஹரான்புர் மாவட்டத்தில் ரூர்கி தேஹ்சிலின் ப��ுதியாக இருந்தது. அது 1947 ஆம் ஆண்டில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் உருவாக்கம் வரை அவ்வாறேயிருந்தது. + +ஹரித்வார் உள்ளத்தாலும், சிந்தனையாலும் ஆன்மாவிலும் சோர்வுற்றவர்களின் உறைவிடமாக உள்ளது. பல்வேறு கலைகள், அறிவியல் மற்றும் பண்பாடுகளை கற்றுக்கொள்வதற்கான கவரும் மையமாகவும் உள்ளது. இந்நகரம் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் மூலிகை மருத்துவத்தின் நீண்ட கால வளமான மையமாக விளங்கி வருகிறது. மேலும் தனித்த குருகுலத்தின் இல்லமாகவும், (பாரம்பரிய கல்விப் பள்ளி) குருகுல் காங்க்ரி விஷ்வவித்யாலயாவையும் உள்ளடக்கியுள்ளது. அது 1802 ஆம் ஆண்டு முதல் பரந்த வளாகத்தில் தனது சொந்த பாரம்பரியக் கல்வியை கொடுத்து வருகிறது. ஹரித்வாரின் வளர்ச்சியில் உயர் திருப்பம் 1960களில் ஏற்பட்டது. 1962 ஆம் ஆண்டில் 'நவரத்ன பொதுத் துறை நிறுவனமான 'பெல்'லின் மூலமாக நவீன நாகரீகத்தின் கோயில் நிறுவப்பட்டது. அது தனது சொந்த பெல் ராணிப்புர் தன்னாட்சி நகரப்பகுதியை ராணிப்புர் கிராமங்களின் அருகில் கொண்டு வந்ததோடு மட்டுமின்றி அப்பகுதிக்கு துணை நிறுவனங்களின் அணியையும் கொணர்ந்தது. தற்போது ஐஐடி ரூர்க்கி என்றுள்ள ரூர்கி பல்கலைக்கழகம், பழமையான மற்றும் மிக கௌரவமான அதன் செயற்பாட்டு களங்களான அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளின் நிறுவனங்களில் ஒன்றாகும். + +ஹரித்வார் மாவட்டம் மேற்கில் சஹரான்புர், கிழக்கிலும் வடக்கிலும் டெஹ்ராடுன், கிழக்கில் பௌரி கர்வால், தெற்கில் ரூர்க்கி, முசாபர்நகர் மற்றும் பிஜ்னூர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட உத்தரகண்ட் மாநிலத்தில் சேர்க்கப்படும் முன்னர், இம் மாவட்டம் சஹரான்புர் கோட்ட ஆணையத்தின் ஒரு பகுதியாக இருந்தது. + +இம் மாவட்டம் ஒரு நாடாளுமன்றத் தொகுதியையும், பகவான்புர், ரூர்க்கி, இக்பால்புர், மாங்கலாவுர், லாந்துவ்ரா, லக்சர், பட்த்ராபாத், ஹரித்வார் மற்றும் லால்டாங் உள்ளடங்கிய உத்தரகண்ட் மாநிலத்தின் 9 சட்ட மன்றத் தொகுதிகளையும் கொண்டிருக்கின்றது. + +மாவட்டமானது நிர்வாக ரீதியாக மூன்று வட்டங்களாக பின்வரும் உட்-பிரிப்புக்களைக் கொண்டுள்ளது: ஹரித்வார்,ரூர்க்கி மற்றும் லக்சர். மேலும் அது பின்வரும் ஆறு வளர்ச்சி முகமைகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது: பகவான்புர்,ரூர்க்கி,நர்சான்,பஹ��்ராபாத்,லக்சர் மற்றும் கான்புர். தற்போதைய ஹரித்வார் (மக்களவைத் தொகுதி) நாடாளுமன்ற உறுப்பினராக (எம்.பி) 'ஹரிஷ் ராவத்' அவர்களும், ஹரித்வார் நகரத் தொகுதி உத்தரகண்ட் மாநில சட்டப் பேரவை உறுப்பினராக 'மதன் கௌஷிக்' அவர்களும் உள்ளனர். + +மாவட்டத் தலைமை அலுவலகம், ஹரித்வாரின் இரயில்வே நிலையத்திலிருந்து 12 கிமீ தூரத்திலுள்ள ரோஷ்னாபாத்தில் உள்ளது. தலைமை வளர்ச்சி அதிகாரியின் அலுவலகம் விகாஸ் பவன், ரோஷ்னாபாத்தில் உள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விகாஸ் பவன், மாவட்ட நீதிமன்றம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், காவல் வரம்பு, மாவட்டச் சிறை, மாவட்ட விளையாட்டரங்கம், ஜவஹர் நவோதயா வித்யாலயா போன்றவை இப்பகுதியில் நிறுவப்பட்ட முக்கிய அலுவலகங்களாகும். இதர நிர்வாக அலுவலகங்களான லோக் சேவா ஆயுக் மற்றும் சமஸ்கிருத கல்வி நிறுவனம் ஆகியவையும் இங்கே நிறுவப்பட்டுள்ளன. + +ஹரித்வார் கங்கை மலையிலிருந்து தோன்றி சமவெளிகளைத் தொடுகின்ற முதலாவது நகரங்களில் ஒன்றாகும். மழைக்காலங்கள் தவிர கங்கையின் நீர் பெரும்பாலும் தூய்மையாகவும் பொதுவாக குளிர்ந்துமிருக்கும். அப்போது மேற்புறப் பகுதிகளிலிருந்து கீழே தரைப் பகுதிக்கு மண் விழுகின்றது. + +கங்கை வரிசையான ஒன்றையொன்று விலகிய கால்வாய்களில் பாய்கிறது. அக்கால்வாய்களில் மரங்கள் அடர்ந்திருக்கும். ராணிப்பூர் ராவ், பத்ரி ராவ், ராவி ராவ், ஹர்னாயி ராவ், பேகம் நதி முதலியவை பிற சிறு பருவகால நீரோடைகள் ஆகும். மாவட்டத்தின் பெரும்பகுதி காடாக உள்ளது. மேலும் ராஜாஜி தேசியப் பூங்கா மாவட்டத்தின் வரையறைக்குள் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் சாகசப் பிரியர்களுக்கு பொருத்தமான செல்லிடமாக உள்ளது. ராஜாஜி தேசியப் பூங்கா பல்வேறு வாயில்கள் வழியாக அணுகக்கூடியது; ராம்கர் வாயில் மற்றும் மோஹந்த் வாயில் ஆகியவை டேஹ்ரடூனிலிருந்து 25 கி.மீ. தூரத்திலுள்ளன, மோடிச்சூர், ராணிப்பூர் மற்றும் சில்லா வாயில் ஆகியவை ஹரித்வாரிலிருந்து சுமார் 9 கி.மீ. தூரத்திலுள்ளன. குனாவோ வாயில் ரிஷிகேசத்திலிருந்து 6 கி.மீ. தூரத்திலும், லால்தாங் வாயில் கோட்வாராவிலிருந்து 25 கி.மீ. தூரத்திலும் உள்ளன. + +ஹரித்வார் மாவட்டம், இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியில் சுமார் 2360 கி.மீ² பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் அட்���க் கோடு முறையே வடக்கில் 29.96 கோணத்திலும் தீர்க்கக் கோடு கிழக்கில் 78.16 கோணத்திலும் உள்ளன. + +ஹரித்வார் கடல் மட்டத்திலிருந்து 249.7 மீட்டர் உயரத்தில், வடக்கு மற்றும் வட கிழக்கில் ஷிவாலிக் மலைகளுக்கும் தெற்கில் கங்கா நதிக்கும் இடையிலுள்ளது. + +இன்று இந்தியர்களுக்கும் வெளி நாட்டில் குடியேறியவர்களுக்கும் நன்கு அறியப்படாத ஒன்று பாரம்பரிய பழக்கமான கடந்த பல தலைமுறைகளுக்கான இந்து குடும்பங்களின் விரிவான மரபுவழி ஆய்வுகள் ஆகும். தொழில்முறையிலான இந்து பிராமண பண்டிதர்கள் பிரபலமாக "பாண்டாக்கள்" என அறியப்படுபவர். இந்துப் புனித நகரான ஹரித்வாரில் கையால் எழுதப்பட்ட பதிவேடுகளில், அவர்களின் பண்டித மூதாதையர்களால் தலைமுறைகளாக கைமாற்றப்பட்டது என்பது ஒருவரின் மூதாதையர்களின் உண்மையான மாவட்டம் மற்றும் கிராமங்களின்படி பிரிக்கப்பட்டது. குறிப்பிட்ட மாவட்ட பதிவேடுகள் குறிப்பிட்ட சிறப்பு பண்டிதக் குடும்பங்கள் பொறுப்பிலிருக்கும். இன்னும் சில நேர்வுகளில் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் விடப்பட்டு இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த பாரம்பரிய கிராம, மாவட்ட இந்துக்களின் விவரங்கள் உட்பட வைக்கப்பட்டிருக்கும். பல நேர்வுகளில் தற்போதைய வழித்தோன்றல்கள், இக்காலத்தில் சீக்கியர்களாகவோ முஸ்லிம்களாகவோ அல்லது கிறிஸ்தவர்களாகவோ இருக்கலாம். இது பொதுவான வழக்கத்திற்கு அப்பாற்பட்டதல்ல. ஒருவர் அவரது கடந்த ஏழு தலைமுறைகளின் வரையோ அல்லது அதற்கு மேற்பட்ட விவரங்களை இந்த குடிவழிப்பட்டியல்களில் காணும்படி "ஹரித்வாரின் பாண்டாக்கள்" வைத்துள்ளனர். + +நூற்றாண்டுகளாக புனித நகரான ஹரித்வாருக்கு விஜயம் செய்யும் இந்து முன்னோர்கள், எக்காரணத்தினை முன்னிட்டும் வருபவர்கள் பெரும்பாலும் புனித யாத்திரை அல்லது/மற்றும் அவர்களது இறந்தவர்களின் உடலை எரிக்க அல்லது இந்து மத வழக்கப்படி எரிக்கப்பட்ட உறவினர்களின் சாம்பல் மற்றும் எலும்புகளைப் புனித நதியான கங்கையில் கரைக்க வரும்போது, பாரம்பரிய வழக்கமாக குடும்ப பண்டிதரிடம் சென்று அவர்களது குடும்பக் கிளையின் விவரங்களோடு அனைத்து திருமணம், பிறப்பு மற்றும் இறப்புகளுடன் ஒருவரது விஸ்தரித்த கூட்டுக் குடும்ப பதிவுகளைப் புதுப்பிப்பர். + +இன்றைய இந்தியாவில் ஹரித்வாருக்கு விஜயம��� செய்யும் மக்கள் பண்டிதர்கள் எதிர்பாராமல் வருந்தி அழைத்து அவர்களது மூதாதையரின் குடும்ப கிளையின் குடிவழிப்பட்டியலினை புதுப்பித்துக்கொள்ளும்படி கேட்கும்போது வாயடைத்து போகின்றனர். இச்செய்தி காட்டுத்தீ போல் பண்டிதர்களிடம் பரவி ஒருவரது குடும்பத்தின் வரையறுக்கப்பட்ட பண்டிதர் அவரது விஜயம் பற்றி விரைவாக அறிவிக்கப்படுகின்றார். தற்காலத்தில் இந்து கூட்டுக் குடும்ப அமைப்பானது தனிக் குடும்பங்களாக மக்களால் விரும்பப்பட்டு பிரிகையில், பதிவுகளை வைத்திருக்கும் பண்டிதர்கள் ஹரித்வாருக்கு விஜயம் செய்பவர்களை அவர்களது அனைத்து விஸ்தரிக்கப்பட்ட குடும்பங்களைத் தொடர்பு கொண்டு எல்லா சம்பந்தப்பட்ட கிராமம் மற்றும் மாவட்டம் பற்றிய விவரங்களையும், பாட்டன்மார் பெயர்கள் மற்றும் கொள்ளு பாட்டன்மார் மற்றும் அந்த விஸ்தரிக்கப்பட்ட குடும்பத்தில் நடைபெற்ற திருமணங்கள், பிறப்புக்கள் மற்றும் இறப்புக்களுடன் திருமணம் செய்துகொண்ட குடும்பங்களின் முடிந்தளவு அதிகமான விவரங்களுடன் தயாராக வரும்படி கூறுகின்றனர். விஜயம் செய்யும் குடும்ப உறுப்பினர் தனிப்பட்ட முறையில் "குடும்ப பாண்டா" வினால் அமைத்துக் கொடுக்கப்பட்ட குடும்ப மரபு வழியில் அதனை எதிர்கால குடும்ப உறுப்பினரின் வருகைக்காக புதுப்பித்தும், எதிர்கால தலைமுறைகள் அதனைப் பார்த்து புதுப்பிக்கப்பட்ட பதிவுகளை அங்கீகரிக்கவும், கையொப்பம் இடவும் வேண்டும். விஜயத்தின் போது உடன் வரும் நண்பர்களும் குடும்ப உறுப்பினர்களும்கூட சாட்சியங்களாகக் கையொப்பமிடத் தேவையுள்ளது. + +வெப்பநிலைகள்: + + + இந்திய மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி , ஹரித்வார் மாவட்டம் மக்கட்தொகையாக 2,95,213 பேர்களைக் கொண்டிருந்தது. மக்கள் தொகையில் 54% ஆண்களும், 46% பெண்களும் ஆவர். ஹரித்வாரின் கல்வியறிவு விகிதம் 70%, இது நாட்டின் கல்வியறிவு விகிதமான 59.5% என்பதை விட அதிகமாகும்: ஆண்கள் கல்வியறிவு விகிதம் 75% மற்றும் பெண்கள் கல்வியறிவு விகிதம் 64% ஆக உள்ளன. ஹரித்வாரில், 12% மக்கட்தொகை ஆறு வயதிற்குட்பட்டவராவர். + +இந்து மரபுகளில், ஹரித்வாரிலிருக்கும் 'பஞ்ச தீர்த்தங்கள்', கங்கத்வாரா ("ஹர்-கி-பாவ்ரி" ), குஷ்வர்த் ("காட்" ), கன்கால், பில்வா தீர்த் ("மன்சா தேவி" ) மற்றும் நீத் பர்வத் ("சாண்டி தேவி" ) ஆகியவையாகும். + +இந்த புனித ��லைவழிப்பாதை விக்கிரமாதித்யா அரசரால் (கி.மு முதலாம் நூற்றாண்டு) அவரது சகோதரர் பிரித்ஹரியின் நினைவாக கட்டப்பட்டது. பிரித்ஹரி ஹரித்வாருக்கு வருகை புரிந்து புனித கங்கையின் கரைகளில் தவமிருந்ததாக நம்பப்படுகிறது. அவர் இறந்த பிறகு அவரது சகோதரர் அவரது பெயரில் மலைவழிப்பாதையை கட்டினார், அது பின்னர் ஹர்-கி-பாவ்ரி என அறியப்பட்டது. ஹர்ர்-கி-பாவ்ரியின் உள்ளே இருக்கும் மிகப் புனிதமான மலைவழிப்பாதை பிரம்ம குந்த் ஆகும். மாலை மங்கிய நேரத்தில் மாலைப் பொழுதில் கங்கா தேவிக்கு ஹர்-கி-பாவ்ரியில் (கடவுள் ஹர அல்லது சிவன் காலடி) செய்யப்படும் பூஜை (ஆர்த்தி), எந்தவொரு வருகையாளரையும் மயக்கும் அனுபவமாகும். ஒரு காணத்தக்க காட்சியாக ஒலியும் நிறமும் பூஜைக்குப் பின்னர் காணப்படும், புனித யாத்ரீகர்கள் தியாக்களையும் (தீபப் பூக்களை) நறுமணப்புகையினையும் அவர்களது இறந்துப் போன மூதாதையர்களின் நினைவாக மிதக்கவிடுவர். உலகெங்குமிருந்து வரும் ஆயிரக்கணக்கான மக்கள் அவர்களின் ஹரித்வார் வருகையில் இப் பூஜையின் போது உடனிருப்பது பற்றி உறுதிப்படுத்திக் கொள்வர். பெரும்பாலான தற்போதைய மலைவழிப்பாதைகள் 1800 களில் பேரளவில் உருவாக்கப்பட்டன. + +இக் கோயில் கங்கை நதியின் கிழக்குக் கரையில் 'நீல் பர்வத்தின்' மீது அமர்ந்திருக்கும் சாண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது கி.பி 1929 ஆம் ஆண்டில் காஷ்மீர அரசர் சுசாத் சிங்கினால் கட்டப்பட்டதாகும். ஸ்கந்த புராணம் ஒரு புராணக் கதையைக் கூறுகிறது, அதில் உள்ளூர் அரக்க அரசர்களான "ஷும்ப்" மற்றும் "நிஷும்ப்" ஆகியோரின் படைத் தளபதியான "சண்ட-முண்ட" என்பவன் சாண்டி தேவியால் கொல்லப்பட்டதால் அதன் பொருட்டு இப்பகுதி சாண்டி தேவி எனும் பெயர் பெற்றது. முதன்மைச் சிலை ஆதி சங்கரரால் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இக் கோயில் சாண்டிகாட்டிலிருந்து 3 கி.மீ தொலைவு அமைந்துள்ளதை நடைப்பயணமாகவும், இழுவை வண்டிப் போக்குவரத்து மூலமும் அடையலாம். தொலைபேசி:01334-220324, நேரம்-காலை 8.30 முதல் மாலை 6 வரை. + +பில்வ பர்வத்தின் மீது அமைந்திருக்கும் மன்சா தேவியின் இக் கோயில் சரி நேராக ஆசைகளை நிறைவேற்றும் கடவுள் எனப் பொருள்படுவதானது, ஒரு சுற்றுலா இலக்காகும், குறிப்பாக நகரின் முழுமையையும் கண்ணைக் கவருகிற விதத்த��ல் கம்பி வாகனங்களால் அளிக்கப்படும் காரணத்தினால் புகழ்பெற்றது. முதன்மைக் கோயில் இரு தேவியரைக் கொண்டுள்ளது, ஒன்று அதில் மூன்று வாய்களையும் ஐந்து கரங்களையும், மற்றொன்று எட்டுக் கரங்களையும் வைத்திருக்கிறது. தொலைபேசி: 01334-227745. + +11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த பழமையான மாயா தேவிக் கோயில் ஹரித்வாரின் ஆதிஷத்ரி திருவுருவச் சிலையைக் கொண்டது. இது சித்தபீடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, சதி தேவியின் இதயமும் தொப்புளும் விழுந்த இடமாகக் கூறப்படுகிறது. ஹரித்வாரில் இன்றும் நிலைத்திருக்கும் மிகச் சில நாராயணி ஷீலா மற்றும் பைரவ் கோயில் போன்றப் பழமையான கோயில்களில் இதுவும் ஒன்றாகும். + +தெற்கு கன்கால் நகரில் இடம் பெற்றிருக்கும் பழமையான தக்‌ஷா மஹாதேவ் ஆலயம் தக்‌ஷேஸ்வரா மஹாதேவ் கோயில் எனவும் அறியப்படுகிறது. இந்து நூல்களுக்கிணங்க அரசர் தக்ஷ பிராஜாபதி, இறைவன் சிவனின் முதல் மனைவி, தக்ஷயாயிணியின் (சதி) தந்தை, ஓர் யக்ஞம் புரிந்து அதற்கு வேண்டுமென்றே கடவுள் சிவனை அழைக்காமலிருக்கிறார். அவர் அழைக்கப்படாமலிருந்தும் வருகைதர, மேலும் அரசரால் அவமானத்திற்குள்ளாக்கப்படுகிறார். இதனைக் கண்டு சீற்றமடையும் சதி யக்ஞ குண்டத்தில் தன்னைச் சுய-பலியிடுகிறார். + +பின்னர் சிவனின் கோபத்தால் உருவாகும் சிறு தெய்வமான வீரபத்ரா அரசர் தக்ஷாவைக் கொல்கிறார். அதன் பிறகு சிவனால் அரசர் மீண்டும் ஆட்டின் தலையுடன் உயிர்ப்பிக்கப்படுகிறார். தக்ஷ மஹாதேவ் கோயில் இப்பழங்கதைக்குப் பங்களிப்பாகும். + +இந்த பறவைகள் சரணாலயம் முக்கிய கங்கை நதியின் மேல் அல்லது நீல் தாராவில் பீம்கோடா குறுக்கணையில் இடம் பெற்றுள்ளது. இது பறவை நோக்கர்களுக்கு ஒரு சொர்க்கமாகும். மேலும் குளிர் காலங்களில் இடம் பெயரும் பறவைகளுக்கு வீடாகவும் உள்ளது. + +சதி குந்த், நன்கறியப்பட்ட புராண பாரம்பரியம் கன்காலிலிருப்பது ஒருமுறை பயணம் செய்யத் தகுதியானது. இந்த குந்த்தில்தான் சதி தன்னைச் சுய பலி கொடுத்ததாக புராணக்கதைகள் கூறுகின்றன. + +ஹர்-கி-பாவ்ரியிலிருந்து இந்த ஏரி சுமார் ஒரு கி.மீ. தூரத்திலுள்ளது. பாண்டவர்கள் இமயமலைக்கு ஹரித்வார் வழியாகச் செல்லும் போது இளவல் பீமன் நிலத்தின் மீது தனது முழங்கால் மூட்டினால் உதைத்து பாறைகளிலிருந்து நீரை வரவழைத்ததாகக் கூறப்படுகிறது. + +அதன் எழிலானது பல வண்ணத் தோற்ற கண்காட்சிக்குப் பிரபலமானது. மேலும் ஒரு மிகப் பெரிய வெள்ளைச் சிலை புகழ் பெற்ற சமுத்ர மந்தன் கதைப் பகுதியினை பிரதிபலிப்பகிறது, அது எந்தவொரு வருகையாளருக்கும் கட்டாயம் காண வேண்டியதாக உள்ளது. + +இது ஹரித்வாரின் அருகிலுள்ள கண்ணைக் கவருகிற இடமாகும். அங்கு பெயர் வரிசைப்படி, காஷ்யபர், வஷிஷ்டர், அத்ரி, விஷ்வாமித்ரா, ஜமதாக்னி, பாரத்வாஜர் மற்றும் கௌதமர் ஆகிய ஏழு பெரும் முனிவர்கள் அல்லது சப்தரிஷிகள் தவமிருந்த இடமாகக் கூறப்படுகிறது. கங்கை இப்பகுதியில் அதன் பாய்ச்சலால் ரிஷிகள் தொந்தரவுக்கு ஆளாகக் கூடாது என்று தன்னைத்தானே ஏழு நதியோட்டங்களாக பிரித்துக் கொண்டு பாய்கிறாள். + +ஹரித்வாரின் நகரிலுள்ள இரயில் நிலையத்திற்கு அருகிலிருக்கும் ஷ்ரவன் நாத் நகரில் அமைந்திருக்கும் இது, இராமானந்த் சம்ப்ரதாயின் முக்கிய ஆசிரமமாகும். இந்த ஆசிரமத்தின் தலைவராக மஹந்த் பக்வான் தாஸ் உள்ளார். + +இந்த மந்திர் (கோயில்) பூபட்வாலாவில் சப்தரிஷி மார்க்கின் அருகிலுள்ளது கட்டப்பட்டு வருகிறது. மந்திர் (கோயில்) காசியின் பஞ்சகங்கா காட்டிலுள்ள ஸ்ரீமடத்தின் சுவாமி இராமானந்தச்சார்யா ஸ்மாரக் சேவா நியாய்ஸ்சின் தலைவரான ஜகத்குரு ராமானந்தச்சார்ய சுவாமி ராம்நரேஷாச்சார்யாவினால் கட்டப்பட்டு வருகிறது. இந்த ராமர் கோயில் இந்தியாவிலேயே மிகப் பெரியதாக இருக்கும். + +தூதாதாரி பார்ஃபானி பாபாவின் ஆசிரமத்தின் ஒரு பகுதியான இக்கோயில் வளாகம் வெள்ளை சலவைக் கல்லில் செய்யப்பட்டுள்ளது. இது ஹரித்வாரின் மிக அழகிய இடங்களில் ஒன்றாகவும், குறிப்பாக ராம்-சீதா மற்றும் ஹனுமான் கோயில்களில் ஒன்றாகவும் உள்ளது. + +சுரேஷ்வரி தேவியின் கோயிலான இது, ராஜாஜி தேசியப் பூங்காவின் மத்தியில் அமைந்துள்ளது. தெளிந்த அமைதியும் மற்றும் மதமும் இக்கோயிலை வழிபாட்டாளர்கள், துறவிகள் முதலியவர்களை உறைவிடம் நாடி வரச் செய்கிறது. ஹரித்வாரின் வெளிப்புறத்தில் ராணிப்பூரில் அமைந்துள்ள இவ்விடம் செல்ல வனத்துறையின் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். + +இது ஒரு நவீனக் கோயில். கண்ணாடி துண்டுகளால் முழுதும் செய்யப்பட்ட இது, தற்போது ஒரு புகழ் பெற்ற சுற்றுலாத்தலமாகும். + +ஒரு பலதள அடுக்கு கோயில், பாரத மாதா, பாரத அன்னைக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டத���, ஒவ்வொரு தளத்திலும் இந்திய வரலாற்றில் ஓர் காலத்தினை ராமாயணக் காலத்திலிருந்து தற்போதைய விடுதலைப் பெற்ற இந்தியா வரை குறிக்கின்றன. + +ஹரித்வாரின் ஐந்து துணை-நகரங்களின் ஒன்றான, கன்காலில் இடம் பெற்றுள்ள இந்த ஆசிரமம், இந்தியாவின் குறிப்பிடத்தக்க துறவிகளில் ஒருவரான ஸ்ரீ ஆனந்தமோயீ மாவின் ஸ்மாதி திருவிடத்தின் இல்லமாகும். + +டில்லியின் அரசரான இப்ரஹீம் லோதியால் கட்டப்பட்ட, 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிஸ்தி வழி சூஃபி துறவியான (சர்க்கார் சபீர் பாக் எனவும் அறியப்படும்) இந்த ஹஸ்ரத் அலாதீன் சபீர் காளியாரி 'தர்ஹா' வானது, ரூர்கியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலுள்ள காளியாரி கிராமத்திலிருக்கின்றது. வருடாந்திர 'உர்ஸ்' திருவிழாவின் போது, உலகம் முழுதுமிருந்து பக்தர்களின் வருகைக் கொண்ட இது இஸ்லாமிய நாட்காட்டியின்படி ராபியுல் மாதத்தில் பிறையினைக் கண்ட முதல் நாளிலிருந்து 16 ஆம் நாள் வரை கொண்டாடப்படுகின்றது. இது இந்தியாவிலிருக்கும் மத நல்லிணக்கத்திற்கு வாழும் முன்உதாரணமாக உள்ளது. + +நகரைச் சுற்றி பல பிற கோயில்களுள்ளன. ஹரித்வாரில் மதுவோ இறைச்சி உணவோ அனுமதிக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக அறியவேண்டியதாகும். + +இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ரூர்க்கி - 30 கி.மீ. + +முன்னாள் ரூர்க்கி பொறியியல் கல்லூரியான இது, உயர்க் கல்வி அளிக்கும் முதன்மையான இந்திய நிறுவனங்களில் ஒன்றாகும். ஹரித்வாரிலிருந்து அரை மணி நேர பயண தூரத்திலிருக்கும் ரூர்க்கியில் கம்பீரமான மிகுந்த பெரிய மற்றும் அழகிய வளாகத்தினைக் கொண்டதாகும். + +ஒரு தனியார் பொறியியல் கல்லூரி ஹரித்வாருக்கும் ரூர்க்கி க்கும் இடையில் தேசிய நெடுஞ்சாலை 58 இல் அமைந்துள்ளது. + +கன்க்காலில் கங்கை நதியின் கரையில் ஹரித்வார்-ஜ்வாலப்பூர் புற வழிச் சாலையில் அமைந்துள்ள, குருகுல் கங்க்ரி பல்கலைக்கழகம் இந்தியாவின் பழமையான ஒன்றாகும். இதை 1902 ஆம் ஆண்டில் சுவாமி ஷ்ராத்தானந்தா (1856-1962) என்பவர் ஆர்ய சமாஜ்ஜின் நிறுவனரான சுவாமி தயானந்த சரஸ்வதியின் நெறிப்படி துவக்கினார். அங்கு பிரிட்டிஷ் தொழிற்சங்கத் தலைவர் சார்லஸ் ஃப்ரீர் ஆண்ட்ரூஸ் மற்றும் பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மேக்டொனால்டு ஆகியோர் தனிச் சிறப்பு மிகுந்த குருகுலத்தை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை அறிய வருகை தந்தனர். இ���்கு பழங்கால வேத மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள், ஆயுர்வேதம், தத்துவம் ஆகியவை நவீன அறிவியல் மற்றும் இதழியல் பாடங்கள் தவிர பாடத் திட்டங்களாக உள்ளன. அதன் 'அகழ்வாராய்ச்சி அருங்காட்சியகம்,'(நிறுவப்பட்டது 1945) சில அரிய சிற்பங்கள், நாணயங்கள், ஓவியங்கள், ஓலைச் சுவடிகள் மற்றும் கலைப்பொருட்கள் ஹராப்பாவின் பண்பாட்டு காலம் முதல் (சிர்கா கி.மு 2500-1500) ஆகியவற்றிற்கு உறைவிடமாகவுள்ளது. மகாத்மா காந்தி மூன்று முறை வாளாகத்திற்கு வருகைத் தந்துள்ளார், மேலும் அதன் பரந்த மற்றும் தெளிந்தமைதியான வளாகத்தில் விரிவுபடுத்தப்பட்ட காலங்களுக்கு தங்கியிருந்தார், மிகக் குறிப்பாக 1915 கும்பமேளா வின் போதும், தொடர்ச்சியாக 1916 ஆம் ஆண்டு வருகையின் போது மார்ச் 20 அன்று குருகுல் பல்கலையின் ஆண்டுவிழாவில் பேசினார். + +ஹரித்வார் நகரிலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள ஷிவாலிக் நகரிலுள்ளது. ஹரித்வாரின் அறிவியல் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. + +உத்தரகண்ட் அரசால் ஹரித்வாரில் அமைக்கப்பட்ட, உலகிலேயே பழங்கால சமஸ்கிருத வேத சாசனங்கள், நூல்களின் கல்விக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரேயொரு சமஸ்கிருத பல்கலைக்கழகம். பாடதிட்டத்தில் பழமையான இந்து சடங்குகள், பண்பாடு மற்றும் மரபினை உள்ளடக்கியது. மேலும் பழங்கால இந்து கட்டிடக்கலைப் பாணியிலான தெளிந்த அமைதியான கட்டிடத்தையும் கொண்டுள்ளது. + +புனித மேரி பள்ளி, ஜ்வாலப்பூரில் அமைந்துள்ளது. இப்பள்ளியானது மாணவர்களைத் தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் சிறப்புப் பயிற்சி பெற முயலச் செய்யும் வகையில் ஊக்குவிக்கிறது. மேலும் அவர்களிடம் குடிமை மற்றும் சமூக மனப்பாங்கினைப் படிப்படியாக ஊட்டவும் செய்கிறது. + +அந்த மண்டலத்தின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகம் முழுதுமான டெல்லி பொதுப் பள்ளிக் குடும்பத்தின் பகுதியாகவும் உள்ளது. சிறப்பான கல்விச் சாதனைகளுக்காகவும் விளையாட்டு மற்றும் சிறந்த வசதிகளுடன் கூடிய கல்வித் திட்டம் சாராத நடவடிக்கைகளுக்கும் ஆய்வுசாலைகளையும் சூழலையும் கொடுக்கப்படுவதற்கு நன்றாக அறியப்பட்டது. + +ஜக்ஜீத்பூர் பகுதியிலுள்ள டி.ஏ.வி. பள்ளி கல்வியை அளிப்பது மட்டுமின்றி, ஒழுக்க நெறியையும் அதன் மாணவர்களுக்கு அளிக்கிறது. ஆகையால் ஒவ்வொருவரும் உலகின் அனைத்து மூலைகளையும் ஒளிரச் செய்யலாம். + +ஹரித்வாரின் முன்னணி கல்வி நிறுவனமான கேந்திரிய வித்யாலயா 1975 ஆம் ஆண்டு ஜூலை 7 அன்று நிறுவப்பட்டது. மத்திய மேல் நிலைக் கல்வி வாரியத்தில் இணைக்கப்பட்டுள்ள, இப்பள்ளியில் 2000 திற்கும் மேற்பட்ட மாணவர்கள் துவக்கநிலைக்கு முந்தைய வகுப்புகள் முதல் மேல்நிலைப்பள்ளி வரை (வகுப்பு XII) பதிவேட்டிலுள்ளனர். + +நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பழமையான இடைக் கல்லூரியாகும். + +இது இந்தியாலிலுள்ள மிகப் பழமையான மருத்துவ கல்லூரிகளில் (ஆயுர்வேத) ஒன்றாகும். இது குருகுல் காங்க்ரி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 50 மருத்துவர்கள் அதிலிருந்து வெளி வருகின்றனர். + +இந்தியாவின் பழமையான ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி இதுவாகும். ஹரித்வாரிலுள்ள தேவ்புராவின் அருகிலுள்ள மேற்புற கங்கைக் கால்வாய் கரைகளின் மீது அமைந்துள்ளது. அது ஆயுர்வேதக் கல்வியில் பட்ட மேற்படிப்பு கல்வியையும் அளிக்கிறது. விரைவில் உத்தரகண்ட்டின் முதல் ஆயுர்வேத பல்கலைக்கழகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. + +இது பி.எச்.இ.எல் வளாகத்தில் அமைந்துள்ள முதன்மையான நிறுவனங்களில் ஒன்றாகும். பொதுவாக SCE அல்லது HRDC என அறியப்படுகிறது. இது DOEACC யால் சான்றாளிக்கப்பட்ட 'ஓ' நிலை மற்றும் 'ஏ' நிலை படிப்புக்களை நடத்துகிறது. DOEACC தொடர்ச்சியாக, அதனை உத்தரகண்ட்டின் சிறந்த DOEACC நிறுவனமாக தரப்படுத்தி வருகிறது. + +பி.எச்.இ.எல்., ராணிப்பூர் தன்னாட்சி நகரப்பகுதி +பாரத் மிகுமின் நிறுவனம், ஒரு நவரத்னா பொதுத் துறை நிறுவனம், 12 கி.மீ² பரப்பளவில் அமைந்துள்ள வளாகம். இந்த முக்கிய தொழிற்சாலை இரு பிரிவுகளைக் கொண்டுள்ளது: ஹெவி எலக்டிரிகல் எக்யூப்பெண்ட் பிளாண்ட் (HEEP) மற்றும் செண்ட்ரல் ஃபௌண்ட்ரி போர்ஜ் பிளாண்ட் (CFFP)ஆகியவையாகும். அவையிரண்டும் இணைந்து 8000 த்திற்கும் மேற்பட்ட திறமையான தொழிளாலர்களைப் பணியமர்த்தியுள்ளன. ஆறு பிரிவுகளாக பகுக்கப்பட்டுள்ளது, சிறப்பான குடியிருப்பு, பள்ளி மற்றும் மருத்துவ வசதிகளை அளிக்கிறது. + +இது ஹரித்வாரிலிருந்து 7 கி.மீ. தொலைவிலிருக்கும் ஹரித்வார்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையிலுள்ளது. 1955 ஆம் ஆண்டில் மேற்புற கங்கைக் கால்வாய் மீது கட்டப்பட்ட பத்ரி மின் நிலையம் அருகிலுள்ள பத்ரி கிராமத்தில் இருக்கிறது. இதற்குள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ�� பல வளர்ச்சியடைந்த கிராமங்கள் (இ.கா கேட்லி, கிஸான்புர் ரோஹார்ல்கி, போங்க்லா, சீதாப்புர், அலிப்பூர் முதலியவை) வருகின்றன. + +மாநில அரசின் வாரியமான ஸ்டேட் இண்டஸ்ட்ரியல் டெவலப்மண்ட் கார்ப்பரேஷன் உத்தராஞ்சல் லிமிடெட் (சிட்குல்)டால் உருவாக்கப்பட்ட ஒரு பெருத்த தொழிற்சாலைப் பகுதி 2034 ஏக்கர்களில் பரந்துள்ளது. பெரும் நிறுவனங்களான இந்துஸ்தான் லீவர் லிமிடெட், டாபர், மஹிந்திரா & மஹிந்திரா, ஹவேல்ஸ் ஆகியவை சிட்குலில் நகரத்தினுள் மற்றொரு தொழிற்ப்பேட்டையை உருவாக்கியமைக்க நுழைகின்றன. இது டெல்லி-ஹர்த்வார் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 3 கி.மீ தூரத்தில், பெல் நகரத்தின் ஒரு முக்கிய பொதுப் பிரிவு நகரின் அருகில் சிட்குல் அமைந்துள்ளது. + +நகரின் பழையப் பகுதியான ஜ்வாலப்பூர் நகரின் ஒரு நிதி & தொழில் தலைநகரமாகவும், தற்போது ஒரு முக்கிய வணிக மற்றும் அங்காடி நுகர்விற்கான உள்ளூர் மக்களின் மையமாகும். + +ஒரு நல்ல புறவெளிச் செல்லும் இடமாக ஓர் அணையுடனும் மற்றும் அருகிலிருக்கும் ஒரு மனிதரால் உருவாக்கப்பட்ட ஏரியுடன் கூடியது. இங்கு யானைகளையும் இதர காட்டு விலங்குகளையும் எளிதில் காண இயலும். + +ஹரித்வாரின் பழைய மற்றும் புதிய குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். பல்வேறு தொகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பெல் பணியாளர்களுக்காக முக்கியமாக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதியாகும். ஆனால் சிட்குலின் வருகைக்குப் பிறகு மக்கட்தொகை மற்றும் நிதி நடவடிக்கைகள், அதன் தகுந்த அருகாமையினால் வெடித்துள்ளது. + +ஹரித்வார் ஓர் ஆழமான மத முக்கியத்துவம் வாய்ந்த இடமாக, வருடம் முழுதும் மதத் திருவிழாக்கள் பலவற்றையும் விருந்தோம்புகிறது; அவற்றில் புகழ்பெற்றவை கங்கா ஆர்த்தி, கவாத் மேளா, சோம்வதி அமாவாஸ்யா மேளா, கங்கா தசரா, கும்பமேளா ஆகியனவற்றில் கிட்டத்தட்ட 20-25 இலட்சம் (2-2.5 மில்லியன்) பேர்கள் பங்கேற்கின்றனர். + +ஒவ்வொரு பன்னிரெண்டு ஆண்டுகளுக்கொருமுறை, வியாழன் (பிருஹஸ்பதி) கும்பத்தில் (கும்ப ராசியில்) சஞ்சரிக்கும் போது நடைபெறுகின்றது. கும்ப மேளாவிற்கான முதல் எழுத்துப்பூர்வ சாட்சியம், கி.பி 629 ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு வருகைத் தந்த சீனப் பயணி யுவான் சுவாங்கின் அல்லது க்ஸுவான்சாங்கின் (கி.பி 602 - 664) நாட்குறிப்புகளில் காணப்படுகிறது.. "தி இம்ப்பீரியல் கெஸட்டீர் ஆஃப் இந்தியா" என்பதற்கிணங்க 1892 ஆம் ஆண்டில் ஹரித்வாரில் கும்ப மேளாவின் போது காலரா நோய்த் தாக்கம் ஏற்பட்டது, இது மேளா ஏற்பாடுகளில் வேகமான முன்னேற்றத்தினை அதிகாரிகள் மூலம் விளைவித்தது. மேலும் 'ஹரித்வார் மேம்பாட்டு சமூகத்தின்' துவக்கத்திற்கும் வழியேற்படுத்தியது. மேலும் 1903 ஆம் ஆண்டில் சுமார் 400,000 பேர் திருவிழாவில் கலந்துக் கொண்டனர். 1980 களில், கும்ப மேளாவின் போது ஹர்-கி-பாவ்ரியின் அருகே ஏற்பட்ட நெரிசலில் 600 பேர் இறந்தனர், மேலும் எண்ணற்றவர் காயமுற்றனர். 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற மஹா கும்பமேளா, புனித நதியான கங்கையில் முழுக்குப் போட வருகை தந்த 80 மில்லியனுக்கும் மேற்பட்ட யாத்ரீகர்களைக் கண்டது. + +ஹரித்வார் தேசிய நெடுஞ்சாலை 58 ற்கு டெல்லிக்கும் மனாபாஸிற்கும் இடையில் சாலை மூலம் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. + +ஹரித்வாரின் ரயில் நிலைய சந்திப்பு, இந்தியாவின் அனைத்து பெருநகரங்களுடனும் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. + +அருகிலுள்ள விமான நிலையம் டெஹ்ராடூனிலுள்ள ஜோலி கிராண்ட் வானூர்தி நிலையமாக இருப்பினும், புது டில்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையமே விரும்பப்படுகிறது. + +ஹரித்வார் உத்தராஞ்சலின் வேகமாக வளர்ந்து வரும் ஓர் முக்கிய தொழில் தன்னாட்சி நகரமாக, மாநில அரசின் முகமையான சிட்குல் மாவட்டத்தில் (ஸ்டேட் இன்ப்ராஸ்ட்ரக்சர் & இண்டஸ்ட்ரியல் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் உத்தராஞ்சல் லிட்). ஏற்படுத்திய ஒருங்கிணைந்த தொழிற்பேட்டையானது, அப்பகுதியில் பல முக்கிய உற்பத்தி வசதிகளை ஏற்படுத்த தொழில் நிறுவனங்களை ஈர்க்கிறது. + +ஹரித்வார் ஏற்கனவே புறவழிச் சாலையில் செழித்தோங்கும் தொழிற் பகுதியில் முக்கியமாக 1964 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பெல்லின் துணைப் பிரிவுகள் இடம்பெற்றது, இது தற்போது 8000 ற்கும் மேற்பட்ட நபர்களை பணியமர்த்தியுள்ளது. + + + + + + +கோவலன் + +கோவலன், தமிழில் ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் வரும் முக்கியமான கதைமாந்தன் ஆவார். + +தந்தை : மாசாத்துவான் + +மனைவி : கண்ணகி + +காதலி : மாதவி + +மகள் : மணிமேகலை + +புகார்க் காண்டம் + +கோவலன், காவிரிப்பட்டிணத்தில் வாழ்ந்து வந்த மாசாத்துவான் என்னும் வணிகனின் மகன் ஆவார். இவர் மற்���ொரு வணிகரின் மகளான கண்ணகியை மணந்துக் கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். அப்பொழுது கோவலனுக்கு 16 வயதே ஆகிறது. சிலகாலத்திற்குப் பின் கோவலனுக்கு மாதவி என்னும் நாட்டியக்காரியின் அறிமுகம் கிடைத்தது. பின்னர் கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் உல்லாசமாக வாழ்ந்து வந்தான். இதற்கிடையே, சிறிது காலத்தில் அவன் செல்வம் அனைத்தும் கரைந்து போனது. இந்திரவிழாவின் போது, இருவர்க்குமிடையே கருத்து வேறுபாட்டின் காரணமாக பிரிந்தனர். பின்னர் கோவலன் மீண்டும் கண்ணகியிடம் வந்தான். செல்வம் ஏதும் இல்லாத போதிலும், கண்ணகி தன்னிடம் காட்டிய அன்பின் காரணமாக மனம் திருந்திய கோவலன், கண்ணகியுடன் மதுரை நகரத்திற்குச் சென்று புது வாழ்க்கை வாழ முற்பட்டான். + +மதுரைக் காண்டம் + +புகாரை விட்டு வெளியேறிய கோவலனும் கண்ணகியும், கவிந்தியடிகளுடன் மதுரையை நோக்கி நடந்ததனர். நீண்ட நாட்கள் பயணத்திற்கு பின்பு, மதுரை மாநகரத்தைச் சென்றடைந்தனர். அவர்களிடம் ஓரிணை சிலம்புகளைத் தவிர வேறேதும் இல்லை. அங்கு அச்சிலம்பினை விற்பதற்காக கடை வீதிக்குச் சென்றான். ஆனால் அங்கு, அரசியின் சிலம்புகளைத் திருடிய பொற்கொல்லன் என்று அறியாமல், அந்த பொற்கொல்லனிடமே அச்சிலம்பை விற்க உதவி கோறினான். அச்சிலம்பு அரசியின் சிலம்பைப் போலவே இருந்தமையால், பொற்கொல்லன் பொய்யுரை கேட்டு மதுரையின் மன்னனான நெடுஞ்செழியன் விசாரணையின்றி கோவலனைக் கொல்லுமாறு ஆணையிட்டான். கோவலனும் கொல்லப்பட்டான். + + + + +மின்னழுத்தம், அலையெண்ணின் படி நாடுகளின் பட்டியல் + + + + +மொண்டெனேகுரோ + +மொண்டெனேகுரோ (Montenegro) அல்லது மொண்டெனேகுரோ குடியரசு தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடாகும். இந் நாட்டின் பெயர் செர்னகோரா () என்று அந்நாட்டு மக்கள் அழைக்கின்றனர். தெற்கில் அட்டிரியேடிக் கடலைக் கொண்டுள்ள மொண்டெனேகுரோ மேற்கில் குரோசியாவையும், வடமேற்கில் பொசுனியாவும் எர்செகோவினாவும்வையும் வடகிழக்கில் செர்பியாவையும், தென்கிழக்கில் அல்பேனியாவையும் கொண்டுள்ளது. + +ஐரோப்பிய மத்திய காலத்தில் இருந்து 1918வரை சுதந்திர நாடாக காணப்பட்ட இந்நாடு பின்வந்த காலங்களில���, யுகோசுலாவியா மற்றும் செர்பியாவும் மொண்டெனேகுரோவும் போன்ற பல ஒன்றியங்களில் இணைந்திருந்தது. 2006 மே 21இல் நடத்தப்பட்ட மக்கள் கருத்துக் கணிப்பின் முடிவுகளின் படி மொண்டெனேகுரோ யூன் 3 2006 இல் விடுதலை பிரகடனத்தை செய்தது. யூன் 28 2006இல் ஐக்கிய நாடுகளின் 192வது நாடாக இணைத்துக்கொள்ளப்பட்டது. + + + + +பொசுனியா எர்செகோவினா + +பொசுனியாவும் எர்செகோவினாவும் பால்கான் தீபகற்பத்தில் அமைந்துள்ள தெற்கு ஐரோப்பிய நாடாகும். நாட்டின் பெயர் பொதுவாக பொசுனியா என சுருக்கப்பட்டு பாவிக்கப்படுவது வழக்கமாகும். வடக்கு, மேற்கு மற்றும் தெற்கில் குரோசியாவையும், கிழக்கில் செர்பியாவையும் தெற்கில் மொண்டெனெகுரோவையும் கொண்டுள்ள இந்நாடு 20 கிமீ அளவேயான அட்டிரியேடிக் கடல் எல்லையைத் தவிர்த்தவிடத்து முற்றாக நிலத்தால் அடைக்கப்பட்ட நாடாகும். நாடு பொதுவாக மலைப்பாங்கான புவியியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு காணப்படும் பெரும்பாலான ஆறுகள் பயணம் செய்ய முடியாதவையாகும். + + + + +செப்டம்பர் 1 + + + + + + + +இந்தோனேசியா + +இந்தோனேசியா ("Indonesia"), அதிகாரபூர்வமாக இந்தோனேசியக் குடியரசு ("Republic of Indonesia") என அழைக்கப்படுவது 17,508 தீவுகளாலான தென் கிழக்காசிய, மற்றும் ஓசியானிய நாடாகும். 33 மாகாணங்களைக் கொண்ட இந்நாட்டில் 238 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதனால் உலகில் மக்கள் தொகை கூடிய நாடுகளில் இந்தோனேசியா நான்காவது இடத்தில் உள்ளது. இது மக்களால் தெரிவு செய்யப்பட்ட சட்டசபையையும், சனாதிபதியையும் கொண்ட ஒரு குடியரசு. சக்கார்த்தா இந்த நாட்டின் தலைநகரம். பப்புவா நியூ கினி, கிழக்குத் திமோர், மலேசியா என்னும் நாடுகள் இதன் எல்லைகளில் உள்ளன. சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆத்திரேலியா என்னும் நாடுகளும், இந்தியாவின் ஆட்சிக்கு உட்பட்ட அந்தமான் நிக்கோபார் தீவுகளும் இந்தோனேசியாவுக்கு அயலில் உள்ளன. உலகில் மிகக் கூடிய முஸ்லிம் மக்களைக் கொண்ட நாடு இந்தோனேசியாவே. தென்கிழக்கு ஆசிய நாடுகள் கழகத்தின் தொடக்க உறுப்பு நாடான இந்தோனேசியா, குழு-20 முக்கிய பொருளாதாரங்கள் அமைப்பின் உறுப்பு நாடாகவும் உள்ளது. இந்தோனேசியப் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் பதினாறாவது இடத்திலும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் 15 ஆவது இடத்திலும் உள்ளது. +இந்தோனேசியத் தீவுகள், குறிப்பாக சாவகம் 500,000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஏழாம் நூற்றாண்டில் இருந்தாவது, இந்தோனேசியத் தீவுக்கூட்டம் முக்கியமான ஒரு வணிகப் பகுதியாக இருந்துவருகிறது. முதலில் சிறீவிசய இராச்சியமும், பின்னர் மசாபாகித்தும் இந்தியாவுடனும் சீனாவுடனும் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்பிரதேசம் சீனாவுக்கான வணிகப் பாதையில் அமைந்திருப்பதால் வாசனைப் பொருள் வாணிபத்தில் முன்னோங்கிக் காணப்பட்டது. இப்பகுதியை ஆண்ட உள்ளூர் ஆட்சியாளர்கள் பொதுக் காலத்தின் தொடக்க நூற்றாண்டுகளிலிருந்தே பிற பண்பாட்டு, சமய, அரசியல் மாதிரிகளை உள்வாங்கி வந்தனர். இதனால், இப்பிரதேசத்தில் இந்து மற்றும் பௌத்த இராச்சியங்கள் செழித்திருந்தன. மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது. இந்நாட்டின் இயற்கை வளங்களால் கவரப்பட்ட வெளிநாட்டு வல்லரசுகள் இந்தோனேசிய வரலாற்றில் செல்வாக்குச் செலுத்தின. கண்டுபிடிப்புக் காலம் என வழங்கப்பட்ட காலத்தில், மலுக்குத் தீவுகளின் வாசனைப் பொருள் வணிகத்தின் தனியுரிமைக்காக ஐரோப்பிய வல்லரசுகள் போட்டியிட்டதுடன், கிறித்தவ மதத்தையும் இப்பகுதியில் அறிமுகப்படுத்தின. இப்பிரதேசம் சுமார் மூன்றரை நூற்றாண்டுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் கீழ் நெதர்லாந்தின் காலனித்துவப் பிரதேசமாக இருந்தது. இரண்டாம் உலகப் போரின் போது சிறிது காலம் யப்பானிய ஆக்கிரமிப்பில் இருந்த நாடு 1945 இல் தனது விடுதலையை பிரகடனப்படுத்தியது. ஒன்றுபட்ட சுதந்திர இந்தோனேசியா 1949 ஆம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அவை 1953 இல் அங்கீகரித்தது. + +இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியில் இந்தியா எனப் பொருள்படும் "இந்துஸ்" (indus) மற்றும் தீவுகள் எனப் பொருள்படும் "நேசோஸ்" (nesos) என்ற பதங்களின் இணைப்பாகும். விடுதலைபெற்ற இந்தோனேசியா உருவாவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே, 18 ஆம் நூற்றாண்டில் இப் பெயர் தோன்றியது. 1850 ஆம் ஆண்டில் சார்ச் விண்சர் ஏர்ல் என்னும் ஆங்கிலேய இனவியலாளர், இந்தியத் தீவுக்கூட்டம், அல்லத��� மலாயத் தீவுக்கூட்டம் என அழைக்கப்பட்ட இப்பகுதியின் மக்களுக்கு "இந்துனேசியர்" அல்லது "மலாயுனேசியர்" என்னும் பெயர்களை முன்மொழிந்தார். இதே வெளியீட்டில், அவருடைய மாணவரான சேம்சு ரிச்சார்ட்சன் லோகன் என்பவர் இந்தியத் தீவுக்கூட்டம் என்பதற்கு ஒத்த பொருளில் "இந்தோனேசியா" என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். ஒல்லாந்த அறிஞர்கள் தமது நூல்களில் "இந்தோனேசியா" என்ப பெயரைப் பயன்படுத்துவதற்குத் தயக்கம் காட்டினர். அவர்கள், மலாயத் தீவுக்கூட்டம் (Maleische Archipel), நெதர்லாந்துக் கிழக்கிந்தியா, இண்டீ, கிழக்கு, "இன்சுலிந்தே" போன்ற பெயர்களைப் பயன்படுத்தினர். + +1900க்குப் பின்னர் "இந்தோனேசியா" என்னும் பெயர் நெதர்லாந்துக்கு வெளியே பொதுவான பயன்பாட்டுக்கு வந்தது. இந்தோனேசியத் தேசியவாதக் குழுக்கள் ஒரு அரசியல் வெளிப்பாடாக இந்தப் பெயரைப் பயன்படுத்தினர். பெர்லின் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த அடொல்ப் பசுட்டியன் என்பார் தான் எழுதிய "இந்தோனேசியா அல்லது மலாயத் தீவுக் கூட்டங்களின் தீவுகள், 1884–1894" "(Indonesien oder die Inseln des Malayischen Archipels, 1884–1894)" என்னும் நூல் மூலமாக இப்பெயரைப் பரவலாக அறிமுகப்படுத்தினார். சுவார்டி சூர்யனின்கிராட் என்பவர் 1913 ஆம் ஆண்டில் நெதர்லாந்தில் "இந்தோனேசிக் பேர்சு-பியூரோ" என்னும் பெயரில் ஒரு பத்திரிகைப் பணியகம் ஒன்றைத் தொடங்கியதன் மூலம், இப்பெயரைப் பயன்படுத்திய முதல் இந்தோனேசிய அறிஞர் ஆனார். + +கண்டெடுக்கப்பட்ட புதை படிவங்களும், கருவிகளின் எச்சங்களும், இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களில், 1.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து 35,000 ஆண்டுகளுக்கு முன்புவரை, சாவா மனிதன் என அழைக்கப்படும் "ஓமோ இரெக்டசுக்கள்" வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றன. "ஓமோ சப்பியன்கள்" 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் இப்பகுதிக்கு வந்தனர். 42,000 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மக்கள் பெருமளவில் பெரிய ஆழ்கடல் மீன்களைப் பிடித்து உணவாகக் கொண்டனர் என்பதற்கும், அதனால், உயரளவான கடலோடும் திறமை இவர்களுக்கு இருந்தது என்பதற்கும், இதன் மூலம் ஆழ்கடலைக் கடந்து ஆசுத்திரேலியாவையும் பிற தீவுகளையும் எட்டக்கூடிய அளவு தொழில்நுட்பம் இவர்களிடம் இருந்தது என்பதற்கும் 2011 ஆம் ஆண்டில் சான்றுகள் கிடைத்துள்ளன. + +தற்கால இந்தோனேசியாவில் பெரும்பான்மையாக வாழும் ஆசுத்திரோனேசிய மக்கள் தாய்���ானில் இருந்து தென்கிழக்கு ஆசியாவுக்குள் குடியேறியவர்கள். கிமு 2000 அளவில் வந்த இவர்கள், இத்தீவுக்கூட்டங்களூடாகப் பரவிய போது, முன்னர் குடியேறியிருந்த மெலனீசிய மக்களை தூர கிழக்குப் பகுதிகளுக்குள் முடக்கினர். வேளாண்மைக்கான சிறப்பான நிலைமைகளும், கிமு 8 ஆம் நூற்றாண்டிலேயே ஈரநில நெற் பயிர்ச்செய்கையில் இவர்கள் பெற்றிருந்த திறமையும், கி.பி. முதலாம் நூற்றாண்டில் ஊர்களும், நகரங்களும், சிறிய இராச்சியங்களும் தோன்றக் காரணமாகின. கடற்பாதையில் இந்தோனேசியாவின் முக்கிய அமைவிடம், தீவுகளுக்கு இடையிலான வணிகத்தையும், கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்பட்ட இந்திய, சீன இராச்சியங்களுடனான தொடர்புகள் உள்ளிட்ட பன்னாட்டு வணிகத்தையும் ஊக்குவித்தது. அப்போதிருந்து அடிப்படையில் வணிகமே இந்தோனேசிய வரலாற்றைத் தீர்மானிக்கும் காரணியாகச் செயற்பட்டது. +கிபி 7 ஆம் நூற்றாண்டில் இருந்து வணிக வளர்ச்சியினாலும், அதனுடன் வந்த பௌத்த, இந்து சமயங்களின் செல்வாக்கினாலும், சிறீவிசய இராச்சியம் சிறப்புற்று விளங்கியது. 8 ஆம் 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பௌத்த மதம் சார்ந்த சைலேந்திர வம்சமும், இந்து மத மத்தாராம்ம் வம்சமும் சாவாவின் உட்பகுதிகளில் சிறப்புற விளங்கிப் பின்னர் வீழ்ச்சியடைந்தன. மேற்படி வம்ச ஆட்சிகளின் வளத்துக்குச் சான்றாக மிகப்பெரிய சமய நினைவுச் சின்னங்களான சைலேந்திர வம்சத்தின் போரோபுதூரையும், மத்தாராம் வம்சத்தின் பிராம்பானானையும் அவை விட்டுச் சென்றுள்ளன. இந்து இராச்சியமான மாசாபாகித் கிழக்கு சாவகத்தில் 13 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. கஜா மடா என்னும் தளபதியின் கீழ் இந்த இராச்சியத்தின் செல்வாக்கு இந்தோனேசியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவியிருந்தது. + +இசுலாமியக் காலத்தின் தொடக்கப் பகுதியிலேயே முசுலிம் வணிகர்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஊடாகப் பயணம் செய்திருந்த போதிலும், 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திராவில் இருந்தே இந்தோனேசியாவில் இசுலாத்தைத் தழுவிய மக்கள் வாழ்ந்ததற்கான முதல் சான்றுகள் கிடைக்கின்றன. பிற இந்தோனேசியப் பகுதிகள் படிப்படியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டன. 16 ஆம் நூற்றாண்டின் முடிவில் சுமாத்திராவிலும், சாவகத்திலும் இஸ்லாமே முதன்மை ���தமாக விளங்கியது. இஸ்லாம் இப்பகுதிகளில் ஏற்கனவே பெரும்பாலும் இருந்த பண்பாட்டு சமயச் செல்வாக்குகளோடு கலந்தே இருந்தது. இது இந்தோனேசியாவில், சிறப்பாக சாவகத்தில், கைக்கொள்ளப்படும் இசுலாமியப் பண்பாட்டு வடிவம் உருவாகக் காரணம் ஆகியது. 1512 ஆம் ஆண்டில் போத்துக்கேய வணிகர்கள் பிரான்சிசுக்கோ செராவோ தலைமையில், மலுக்கு பகுதியில், சாதிக்காய், கராம்பு, வால்மிளகு போன்ற வணிகப் பொருட்களின் வணிகத்தில் தனியுரிமை பெற்றுக்கொள்ள முயன்றனர். அப்போதே இந்தோனேசிய மக்களுக்கு ஐரோப்பியருடனான முறையான தொடர்பு ஏற்பட்டது. போத்துக்கேயரைத் தொடர்ந்து ஒல்லாந்தரும், ஆங்கிலேயரும் வந்தனர். 1602 இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியை நிறுவிய ஒல்லாந்தர் முதன்மையான ஐரோப்பிய வல்லரசு ஆகினர். முறிவு நிலை எய்தியதைத் தொடர்ந்து, 1800 இல் இடச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி கலைக்கப்பட்டு இடச்சுக் கிழக்கிந்தியப் பகுதிகள் நெதர்லாந்து அரசின் குடியேற்ற நாடாக அறிவிக்கப்பட்டன. + +இந்தோனேசியாவில் 34 மாகாணங்கள் உள்ளன. அவற்றுள் ஐந்து சிறப்பு தகுதிநிலையை பெற்றவையாகும். ஜகார்த்தா, அச்சே, பப்புவா, மேற்கு பப்புவா, யோக்யகார்த்தா என்பவை அந்த ஐந்து சிறப்பு மாகாணங்களாகும். இவற்றின் சட்ட மன்றங்கள் மற்ற மாகாணங்களின் சட்ட மன்றங்களை விட அதிக அதிகாரங்களை கொண்டுள்ளன. அச்சே மாகாணம் இசுலாமிய சட்டத்தின் மாதிரியை 2003 இல் இங்கு அறிமுகப்படுத்தியது . இச்சட்டம் வேறு எந்த மாகாணத்திலும் கிடையாது. இந்தோனேசிய விடுதலைப்போரில் யோக்யகார்த்தா கொடுத்த தீவிர பங்களிப்பால் 1950 இல் அதற்கு சிறப்பு தகுதி கொடுக்கப்பட்டது. பப்புவாவிற்கு சிறப்பு தகுதி 2001 இல் கொடுக்கப்பட்டது. 2003 பிப்பரவரி அன்று இது பப்புவாகவும் மேற்கு பப்புவாகவும் பிரிக்கப்பட்டன . ஜகார்த்தா நாட்டு தலைநகரானதால் அதற்கு சிறப்பு தகுதி வழங்கப்பட்டது. + +சுமாத்திரா தீவில் 10 மாகாணங்கள் உள்ளன, சாவகத்தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, போர்னியோ தீவில் 5 மாகாணங்கள் உள்ளன, சுலாவெசி தீவில் 6 மாகாணங்கள் உள்ளன, மலுக்கு தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, மேற்கு நியு கினி தீவில் 2 மாகாணங்கள் உள்ளன, சுண்டா தீவுகளில் (தென்கிழக்கு தீவுகள்) 3 மாகாணங்கள் உள்ளன. + +2010 ஆம் ஆண்டு கணக்கெடுக்கின் படி இந்தோனேசியாவின் மக்கள் தொகை 237.6 மில்லியன். இதில் 58% ம��்கள் சாவகத் தீவில் வாழ்கின்றனர் . 2020 இல் மக்கள் தொகை 265 மில்லியன் ஆகவும் 2050 இல் 306 மில்லியன் ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 300 தனித்தன்மை வாய்ந்த இனக்குழுக்கள் உள்ளன, 742 வகையான மொழிகள் பேசப்படுகின்றன . பெரும்பாலான இந்தோனேசிய மக்கள் ஆத்திரனேசிய மொழிக்குடும்பம் சார்ந்தவர்கள். இவர்கள் மூலம் தைவானாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மற்றொரு பெரும் குழு மேலனேசியர்கள். இவர்கள் இந்தோனேசியாவின் கிழக்குப்பகுதியில் வாழ்கின்றனர் . இந்நாட்டின் பெரிய இனக்குழு சாவகத்தவர்கள் ஆவர் அவர்கள் மக்கள் தொகையில் 42% உள்ளனர். இவர்களே நாட்டின் அரசியலிலும் பண்பாட்டிலும் செல்வாக்கு செலுத்துபவர்கள் . சுண்டா இனத்தினர், மலாயர், மதுராவினர் ஆகியோர் மற்ற பெரிய இனக்குழுக்களாகும் . சீன இந்தோனேசியர்கள் மக்கள் தொகையில் 3-4% உள்ளனர் .. நாட்டின் பெரும்பாலான தனியார் தொழிற்றுறைகள் இவர்கள் வசம் உள்ளன . இதனால் சீனர்கள் மீது மற்றவர்கள் வெறுப்பு கொண்டு, அவர்களுக்கு எதிராக கலவரங்களும் நடந்துள்ளன.. + +இந்தோனேசியம் இதன் தேசிய மொழியாகும். இது மலாய் மொழியை ஒத்தது. ஜொகூர் சுல்தானகத்தில் பேசப்பட்ட மலாய் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இந்தோனேசிய மொழி நாட்டின் பள்ளிகள் அனைத்திலும் கற்பிக்கப்படுகிறது. இதுவே நாட்டின் வணிகத்திலும் அரசியலிலும் ஊடகங்களிலும் கற்பித்தலிலும் பயன்படும் மொழியாகும். எனவே இது நாட்டின் அனைத்து மக்களாலும் பேசப்படுகிறது. பெரும்பாலான மக்கள் இந்தோனேசிய மொழியுடன் உள்ளூர் மொழி ஒன்றையும் பேசுகின்றனர். அவற்றுள் சாவகம் (மொழி) அதிகம் பேசப்படும் மொழியாகும். 2.7 மில்லியன் மக்கள் தொகையுடைய பப்புவா நியூ கினியில் 270 இற்கு மேற்பட்ட பப்புவா மொழிகள், ஆத்திரனேசிய மொழிகளை பேசுகின்றனர் . + +இந்தோனேசியாவின் மக்களில் பெரும்பான்மையோர் இசுலாமிய சமயத்தை பின்பற்றினாலும் இது இசுலாமிய நாடு அல்ல. மதச் சுதந்திரம் இந்தோனேசிய அரசியலமைப்பில் உள்ளது . அரசாங்கம் இசுலாம், பௌத்தம், இந்து, ரோமன் கத்தோலிகம், சீர்திருத்த கிறித்தவம், கன்பூசியம் ஆகிய 6 சமயங்களை மட்டுமே அதிகாரப்பூர்வமாக அங்கிகரித்துள்ளது . 2010 ஆம் ஆண்டு கணக்கின் படி 87.2% மக்கள் இசுலாம் சமயத்தை பின்பற்றுகின்றனர் . . பெரும்பான்மையான இசுலாமியர்கள் சுன்னி பிரிவைச் சே���்ந்தவர்கள். 9% மக்கள் கிறித்துவத்தையும் 3% மக்கள் இந்து சமயத்தையும் 2% மக்கள் பௌத்தத்தையும் பின்பற்றுகிறார்கள். பெரும்பாலான இந்தோனேசிய இந்துக்கள் பாலி தீவைச்சார்ந்தவர்கள் . பௌத்த சமயத்தை பின்பற்றுபவர்கள் சீனர்கள் . + +தற்போது இந்து பௌத்த சமயங்களை சிறுபான்மையினர் பின்பற்றினாலும் இவற்றின் தாக்கம் இந்தோனேசியப் பண்பாட்டில் அதிகம். இசுலாம் சமயம் 13 ஆம் நூற்றாண்டில் வடக்கு சுமாத்திரா தீவு மக்களால் முதலில் ஏற்கப்பட்டது. பின்னர் 16 ஆம் நூற்றாண்டு அளவில் நாட்டின் பெரும்பான்மை சமயமாக மாறியது . கத்தோலிகம் போர்த்துகீசியர்களால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. சீர்திருத்த கிறித்தவம் ஒல்லாந்தர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது . + +இந்தோனேசியா 17,508 தீவுகளை உடையது. இதில் 6,000 தீவுகளில் மக்கள் வாழ்கிறார்கள் .. இவற்றின் தீவுகள் நிலநடுக்கோட்டுக்கு இரு புறமும் உள்ளன. போர்னியோ, சுமாத்திரா, சாவகம், நியூ கினி, சுலாவெசி என்பவை பெரிய தீவுகளாகும். இது போர்னியோ தீவில் மலேசியாவுடனும் புரூணையுடனும், நியு கினி தீவில் பப்புவா நியூ கினியுடனும் திமோர் தீவில் கிழக்கு திமோர் நாட்டுடனும் நில எல்லைகளை கொண்டுள்ளது. சிங்கப்பூர், பிலிப்பீன்சு, ஆஸ்திரலேசியா, பலாவு போன்றவற்றுடன் கடல் எல்லைகளை கொண்டுள்ளது. இந்தோனேசியாவின் தலைநகரும் மிகப்பெரிய நகருமான ஜகார்த்தா சாவகம் தீவில் உள்ளது. ஜகார்த்தா மாநகரே உலகின் இரண்டாவது மிகப் பெரிய நகரமாகக் கருதப்படுகிறது. + +இதன் பரப்பளவு 1,919,440 சதுர கிமீ ஆகும். நிலப்பரப்பை மட்டும் கணக்கில் கொண்டால் இது உலகின் 16 ஆவது பெரிய நாடாகும் . இந்நாட்டின் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 134. சாவகத் தீவு உலகின் அதிகளவு மக்களை கொண்டதாகும் . இதன் மக்களடர்த்தி சதுர கிமீக்கு சராசரியாக 940. + +இந்தோனேசியா எரிமலை வளையத்தைச் சேர்ந்த நாடாகும். இங்கு 150 உயிருள்ள எரிமலைகள் உள்ளன. + +தனியார் துறையும் அரசு துறையும் கலந்த பொருளாதாரம் இந்தோனேசியாவினுடையது.. தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்தோனேசியா பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகும். இது ஜி-20 இன் உறுப்பினர் . இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2012 ஆண்டில் 928,274 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது .. 2010 ஆம் ஆண்டு கணக்குப்படி தொழில் துறை மொத்த உள்நாட்டு உற்���த்தியில் 46.4% பங்கும், சேவைத்துறை 37.1% பங்கும், வேளாண்மை 16.5% பங்கும் வகிக்கின்றன. 2010 இல் இருந்து சேவைத்துறை மற்ற துறைகளை விட அதிக அளவில் மக்களை பணியில் அமர்த்தியுள்ளது இது மொத்த பணியாளர்களில் 48.9% ஆகும்., விவசாயத்துறை 38.3% பணியாளர்களையும் தொழில் துறை 12.8% பணியாளர்களையும் கொண்டுள்ளது . + +பெருமளவில் ஜப்பான் (17.28%) சிங்கப்பூர்(11.29%) ஐக்கிய அமெரிக்கா (10.81%) சீனா (7.62%) ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. சிங்கப்பூர் (24.96%) சீனா (12.52%) ஜப்பான் (8.92%) ஆகிய நாடுகளிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறது. இங்கு பாறை எண்ணெய், இயற்கை எரிவளி, செப்பு, வெள்ளீயம் போன்ற இயற்கை வளங்கள் அதிகமுள்ளன. உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு வளம் சுமாத்திராவின் வடக்கில் அச்சே பகுதியில் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா ஓப்பெக் அமைப்பில் 1962 ஆம் ஆண்டு இணைந்தது. பாறை எண்ணெய் ஏற்றமதியாளர் என்ற நிலையிலிருந்து இறக்குமதியாளர் என்ற நிலைக்கு வந்ததால் மே 2008 இல் இவ்வமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தது. செப்டம்பர் 2008 இல் இந்தோனேசியாவின் விலகலை ஓப்பெக் உறுதிசெய்தது. + +1997-98 காலப்பகுதியில் நிகழ்ந்த ஆசிய பொருளாதார நெருக்கடியில் இந்தோனேசியா கடுமையாக பாதிக்கப்பட்டது. பெருமளவிலான மூலதனம் நாட்டை விட்டு எதிர்பாராமல் வெளியேறியதால் இந்தோனேசிய நாணயம் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இப்பொருளாதார நெருக்கடி அரசியலிலும் எதிரொலித்ததால் 1998 இல் நாட்டின் அதிபர் சுகர்த்தோ பதவி விலகினார் . + + + + + + +பனாமா + +பனாமா மத்திய அமெரிக்காவின் தென்முனையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். தரை வழியாக வட அமெரிக்காவையும் தென் அமெரிக்காவையும் இணைக்கும் கடைசி மத்திய அமெரிக்க நாடு இதுவாகும். இந்நாட்டின் மேற்கில் கோஸ்டா ரிகாவும், வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடலும், தெற்கில் பசிபிக் பெருங்கடலும், தென்கிழக்கில் கொலம்பியாவும் அமைந்துள்ளன. + + + + + +மார்ச் 24 + + + + + + + +சுற்றுச்சூழல் + +சுற்றுச்சூழல் அல்லது உயிரியற்பியல் சூழல் என்பது ஒரு உயிரினத்தை அல்லது மக்கள் தொகையைச் சுற்றியுள்ள உயிர் உள்ள, மற்றும் உயிரற்ற கூறுகள் அனைத்தையும், அவற்றின் விளைவாக குறிப்பிட்ட ���யிரினம் அல்லது மக்கள் தொகையின் பிழைப்புத் திறன், விருத்தி, படிவளர்ச்சி அல்லது கூர்ப்பு ஆகியவற்றில் தாக்கம் செய்யக்கூடிய அனைத்துக் காரணிகளையும் உள்ளடக்கிய இயற்கைச் சூழலைக் குறிக்கின்றது. உயிரியற்பியல் சூழலானது நுண்ணோக்கி நிலையிலிருந்து, உலகளாவிய நிலைவரை வேறுபட்ட அளவுகளில் ஆராயப்படலாம். அத்துடன் சூழலின் இயல்பைப் பொறுத்து பெருங்கடல் சூழல், வளிமண்டலச் சூழல், நிலச் சூழல் போன்ற பல வேறுபட்ட சூழல்களைக் காணலாம். ஒவ்வொரு தனி உயிரினமும், தனக்கான ஒரு சூழலைக் கொண்டிருக்கின்றது எனக் கொண்டால், எண்ணிக்கையில்லா உயிரியற்பியல் சூழல்கள் இருப்பதை அறியலாம். + +சுற்றுச்சூழல் என்ற சொல்லை சமூகச் சூழல், பொருளாதார சூழல் என்ற சொற் பதங்களுடன் ஒப்பிட்டு வேறுபாடு காணலாம். பல சமயங்களில் "சூழல்" என்ற சொல் இயற்கை சுற்றுசூழலையே சுட்டி நிற்கும். சுற்றுசூழலை "சூழ்மை" என்றும் குறிப்பிடலாம். + +தப்பிப் பிழைத்த அனைத்து உயிரினங்களும், அவற்றின் சூழலுக்கு இசைவாக்கம் அடைந்துள்ளன. எந்த இனமாயினும், எந்தச் சூழலாயினும், வெப்பநிலை, ஒளி, ஈரப்பதம், மண், ஊட்டச்சத்து, போன்ற காரணிகள் அவற்றில் தாக்கம் செலுத்தும். எனினும் உயிரிகளும் தமது நிலைகள், அமைப்புக்களை மாற்றிக்கொள்ளும். நமது இந்த புவிக் கோளின் வரளாற்றின் ஊடாக, நீண்டகாலத்தில் ஏற்பட்ட பல மாற்றங்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவையாக இருக்கின்றன. எடுத்துக்காட்டாக நமது வளிமண்டலத்தில் ஆக்சிசன் இணைந்துகொண்டமை. காற்றின்றி வாழ் நுண்ணங்கிகள் தமது வளர்சிதை மாற்றச் செயல்முறையின்போது, கார்பனீராக்சைட்டை உடைத்து ஆக்சிசனை உருவாக்கியதால் ஏற்பட்ட மாற்றமாகும். இதன் பின்னர் ஆக்சிசனைப் பயன்படுத்தும் தாவரங்கள், மற்றும் விலங்குகள் உருவாகின. + +சுற்றுச்சூழலியல் என்பது உயிரியற்பியல் சூழலில் நிகழும் இடைத்தொடர்புகள் பற்றிக் கற்கும் அறிவியல் ஆகும். இந்தக் கற்கையின் ஒரு பகுதியானது, சூழலில் மனிதர்களின் தொழிற்பாடுகள் செலுத்தும் தாக்கத்தை ஆராய்கின்றது. சூழலியல் என்பது சுற்றுச் சூழலியலினதும், உயிரியலினதும் ஒரு பகுதியாகும். இருப்பினும் மனிதர்கள் சூழலில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றியது சூழலியல் எனத் தவறாகக் கொள்ளப்படுகின்றது. சுற்றுச் சூழலியல் என்பது மிகவும் பரந்த ஒரு கற்கைத் துறையாகும். இது மனிதருக்கும், சூழலுக்குமான இடைத்தொடர்பு பற்றி ஒரு முறையான கற்கைநெறியக் கொண்டுள்ளது. இதில் இயற்கைச் சூழல், கட்டியமைக்கப்பட்ட சூழல், சமூகச் சூழல் அனைத்தும் ஆராயப்படுகின்றன. + +சூழலியம் என்பது சமூக மற்றும் மெய்யியல் சார்ந்த ஒரு பெரிய இயக்கமாகும். இதன்மூலம் மனித செயற்பாடுகள் உயிரியற்பியல் சூழலில் ஏற்படுத்தும் எதிர்மறையான தாக்கங்களைக் குறைப்பதுடன், அவ்வகையான தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களை ஈடு செய்வதற்கான முயற்சி நடைபெறுகின்றது. சூழலியலாளர்கள் குறிப்பாக இயற்கைச் சூழலில் ஏற்படும் பாதிப்புகள் பற்றி அக்கறை கொண்டிருக்கிறார்கள். இவற்றில் மிக முக்கியமானவை காலநிலை மாற்றம், இனங்கள் அழிந்து போதல், சுற்றுச்சூழல் மாசுபாடு, மற்றும் வெளித் தாக்கத்துக்கு உட்படாத இயற்கையான காடுகளைக் கொண்டிருத்தல் போன்றனவாகும். + +புவியியல் சார்பான தகவல்களைப் உள்ளடக்கி உயிரியற்பியல் சூழலை ஆராய்வதும், இது தொடர்பான கற்கை நெறிகளுள் ஒன்றாகும். + +சுற்றுச்சூழல் சீர்கேடு உலக உயிர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள சுற்றுப்புறம் நாள்தாறும் மாசடைந்து வருகின்றது. இம்மாசுபாடுகளால் உலக உயிர்களின் வாழ்நாள் சுருங்கிக் கொண்டேயிருக்கிறது. நல்ல ஆரோக்கியமான வாழ்க்கையை இது தடுக்கிறது. சுற்றுச் சூழலை மாசுபடுத்துவதில் மனித நடவடிக்கைகளே பெரும்பங்கு வகிக்கின்றன. மாசுபாட்டை நீக்கி நல்ல ஒரு ஆரோக்கியமான வாழ்வை பெறுவதற்கு சுற்றுச்சூழலைச் சிறந்த முறையில் பாதுகாத்தல் அவசியம் என்பது உணரப்பட்டுள்ளது. + +"முப்பது கோடி முகமுயாள்" என்றார் பாரதி. பாரதியின் காலத்தில் முப்பது கோடி மக்கள் இருந்த பாரதம், தற்போது நூறு கோடிக்கு மேற்பட்ட மக்கள் தொகையைக் கொண்டிருப்பதனால், நிலையாக உள்ள நாட்டில் நிலையாக உள்ள பரப்பளவில் மக்கள் வசிக்கும் பரப்பளவு அதிகரித்துள்ளது. இதற்காக காடுகளும் விளைச்சல் நிலங்களும் அழிக்கப்பட்டு வீடுகளும், ஏனைய கட்டடங்களும் எழுப்படுகின்றன. அதிகமான நகர்புறங்கள் தோன்றுகின்றன. இவையெல்லாம் சுற்றுச்சூழலை மிக அதிக அளவில் மாசுபடுத்துகின்றன. மனித இனம் கல்வியறிவு பெற்று இவற்றின் ஆபத்தை அறிந்திருந்த போதிலும், மாற்றக்கூடிய சமுதாய மாற்றங்களில் இதுவும் ஒன்று என்ற எண��ணத்தில் இதைப் பெரிதுபடுத்துவதில்லை. இதனால் மனித இனத்திற்கு பெரும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. +மனிதர்களின் நடவடிக்கைகளால் பிற்காலத்தில் அவர்களது சந்ததியினருக்கும், சமுதாயத்திற்கும் வரப்போகும் பின்விளைவுகளைப் பற்றி, அபாயத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டு, அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் செய்யப்படுகின்றன. + + + + + +போத்துக்கீசத் தமிழியல் + +போத்துக்கீச தமிழியல் ("Portuguese Tamil Studies") என்பது போத்துக்கீச மொழி, போர்த்துகல், போத்துக்கீச மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். + +"ஐரோப்பாவில் இருந்து சமயப்பிரச்சாரத்திற்காக வந்த பாதிரிமார்கள் - போர்த்துக்கீசிய மொழி மூலமாகவே தமிழ்மொழிக் கற்றுக் கொண்டார்கள். பாதிரி என்பதே போர்த்துக்கீசிய சொல்தான். ஐரோப்பாவில் இருந்து தமிழ்நாடு வந்து முதன் முதலாகத் தமிழ் கற்றுக் கொண்டது, ஹென்றிக்கே ஹென்றீக்கசு ("Henrique Henriques", 1520-1600) போர்த்துக்கல் நாட்டில் யூத இனம் சார்ந்த பெற்றோருக்குப் பிறந்தவர். தம் சொத்தை எல்லாம் ஏழை எளிய மக்களுக்கு தானம் செய்துவிட்டு, கிறித்தவ சமயத்தைப் பரப்ப 1546 இல் இந்தியா வந்திறங்கினார். + +இயேசு சபை சார்பில் தமக்கு மேலதிகாரியாக இருந்த ஃபிரான்சிசு சேவியர் (1506-1552) என்பவரின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் கற்றுக் கொண்டார். தமிழ் எழுதவும் பேசவும் திறமை பெற்றார். ஹென்றிக்கே ஹென்றீக்கசு தான் தமிழ் கற்றுக் கொண்ட முதல் ஐரோப்பியர். தமிழ்மொழியைக் கற்றுக்கொண்ட அவர்தான் முதல் தமிழ் அச்சுப் புத்தகமான தம்பிரான் வணக்கம் என்னும் நூலை வெளியிட்டார். இந்திய மொழிகளிலேயே முதன் முதலாக அச்சு கண்டது தமிழ். நூல் பதித்த இடம் கொல்லம் என்றும், பதித்த நாள் 20.10.1578 என்றும் அந்நூலிலிருந்தே அறிகிறோம். தம்பிரான் வணக்கம், போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட கிறிஸ்துவ சமய போதனை நூலின் தமிழாக்கம். + +தமிழ் நூலின் முகப்புப் பக்கத்தில் மேலே DOCTRINA CHRISTAM en Lingua Malauar Tamul என்றுள்ளது. பக்கத்தின் நடுவில் மூவொரு கடவுள் (Trinity) வடிவம் பதிக்கப்பட்டுள்ளது. நான்கு ஓரங்களிலும் சிலுவைகளும் அலங்கார கோலங்களும் வரையப்பட்டுள்ளன. கீழே அக்கால வழக்கிலிருந்த தமிழ் எழுதும் ம��றையில் தமிழ்த் தலைப்பு தரப்பட்டுள்ளது. புள்ளிகள் இடப்படவில்லை; சொற்களும் பிரிக்கப்படவில்லை. எனவே, நூல் தலைப்பு இவ்வாறு தோற்றமளிக்கிறது: + +கொமபஞஞயதேசெசூ வகையிலணடிறிககிப பாதிரியாரதமிழிலெ பிறிததெழுதினதமபிரான வணககம + +மேற்காட்டிய தலைப்பை இன்றைய முறைப்படி புள்ளி மற்றும் சொல்லிடைவெளி இட்டு எழுதினால் கீழ்வருமாறு அது தோற்றமளிக்கும்: + +கொம்பஞ்சிய தெ சேசு வகையில் அண்டிறிக் பாதிரியார் தமிழிலே பிரித்தெழுதின தம்பிரான் வணக்கம் + +16 பக்கங்களை உள்ளடக்கி 1578இல் பதிக்கப்பட்ட இந்த அரிய நூல் ஹார்வட் பல்கலைக்கழக நூலகத்தில் காக்கப்பட்டு வருகிறது. + +தம்பிரான் என்பது சுய தமிழ்ச்சொல். + + + + + +இடச்சு மக்கள் + +ஒல்லாந்தர் அல்லது இடச்சு மக்கள் ("Dutch", இடச்சு: ), அல்லது நெதர்லாந்தர் ("Netherlanders") எனப்படுவோர் நெதர்லாந்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு செருமானிக் இனக் குழு ஆகும். இடச்சு மொழியைப் பேசும் இவர்கள் ஒரு பொதுப் பண்பாட்டைப் பேணி வருகின்றனர். இடச்சு மக்களும் அவர்களது சந்ததியினரும் உலகளாவிய குடியேற்ற சமூகங்களில், குறிப்பாக அரூபா, சுரிநாம், கயானா, குராசோ, அர்கெந்தீனா, பிரேசில், கனடா, ஆத்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, அமெரிக்கா. ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். + +ஐரோப்பாவின் நடுக்காலப் பகுதியில், தாழ்ந்த நாடுகள் பிரான்சுக்கும், புனித உரோமைப் பேரரசுக்கும் இடையே எல்லைப் பகுதியில் இருந்தன. இவற்றின் பல்வேறு பிராந்தியங்களும் 13-ஆம் நூற்றாண்டு அளவில் தனியான சுயாட்சியுடன் கூடிய நாடுகளாயின. ஆப்சுபர்குகளின் கீழ், நெதர்லாந்து ஒரு தனி நிருவாகத்தின் கீழ் ஒருங்கிணைந்தது. 16-ஆம், 17-ஆம் நூற்றாண்டுகளில் வடக்கு நெதர்லாந்து எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை பெற்று இடச்சுக் குடியரசு ஆனது. இருந்தாலும், டச்சு சமூகத்தின் உயர்ந்த சிறப்பு நகரமயமாக்கல் சிறப்பியல்பு ஒப்பீட்டளவில் முன்கூட்டியே இடம்பெற்றிருந்தது. குடியரசுக் காலத்திலேயே முதல் கட்ட இடச்சுக் குடியேற்றங்கள் ஐரோப்பாவிற்கு வெளியே இடம்பெற்றன. + +இடச்சு மக்கள் பொதுவாகவே முதலாளித்துவ சமூகத்தின் முன்னோடிகள் எனக் கருதப்படுகின்றனர். அத்துடன் நவீன பொருளாதாரம், சமய சார்பின்மை, கட்டற்ற சந்தைமுறை போன்றவற்றால் மேற்குலகின் சக்திகளில், குறிப்பாக பிரித்தானியப் பேரரசு, மற்றும் அவர்களது பதின்மூன்று குடியேற்றங்கள் ஆகியவற்றில் பெரும் செல்வாக்கு படைத்திருந்தனர். + +இடச்சு பாரம்பரிய கலை, கலாச்சாரம் நாட்டார் பாடல், நடனங்கள், கட்டிடக்கலைப் பாணிகள், உடைகள் போன்ற பல்வேறு வடிவங்களை உள்ளடக்கியது. இவற்றில் பல உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்டவை ஆகும். இடச்சு ஓவியர்கள், குறிப்பாக ரெம்பிரான்ட், யொஹான்னெஸ் வெர்மீர், வின்சென்ட் வான் கோ ஆகியோர் உலக அளவில் பெரிதும் புகழப்பட்டவர்கள். இடச்சுக்களின் முக்கிய சமயம் கிறிஸ்தவம் (கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து) ஆகும். ஆனாலும், இன்றைக காலத்தில் பெரும்பான்மையானோர் சமய சார்பற்றவர்களாக உள்ளார்கள். இடச்சுக்களில் பெருமாலானோர் மானுடம், அறியவியலாமைக் கொள்கை, இறைமறுப்பு அல்லது தனிமனிதத்துவம் ஆகியவற்றுக்கு ஆரவாக உள்ளனர். + +கிபி முதலாம் நூற்றாண்டுகளில் செருமானிக் மக்கள் தலைமைகள் இல்லாத பழங்குடி சமூகங்களை உருவாக்கினார்கள். போர்க் காலங்களில் மட்டும் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இவர்கள் செருமானிக்க புறச்சமய நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தனர். பொது செருமானிக் மொழியைப் பேசி வந்தார்கள். 500களில் மேற்கு நோக்கிய குடியேற்றம் நிறைவடைந்ததை அடுத்து, பெரும் கூட்டமைப்புகள் (பிராங்குகள், அலமான்னிகள், சாக்சன்கள்), உரோமைப் பேரரசு சரிய ஆரம்பித்த வேளையில், செருமானிக் சமூகங்களிடையே பல தொடர் மாற்றங்கள் ஏற்படலாயின. இவற்றில் முக்கியமாக கிறித்தவமயமாக்கம், மன்னராட்சியுடன் கூடிய புதிய அரசியல் அமைப்புகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். + +மேலே விவரிக்கப்பட்ட பொது நிலைமை, பெரும்பாலான நவீன ஐரோப்பிய இனக்குழுக்கள் செருமானிய பழங்குடியினர்களிடமிருந்து தோற்றுவிக்கப்பட்டாலும், பெரும்பாலான பிரீசியர், செருமானியர், ஆங்கிலேயர் மற்றும் வடக்கு செருமானிக் (இசுக்காண்டிநேவிய) மக்கள் ஆகியவற்றுக்கு பொருந்தும். தாழ்ந்த நாடுகளில், பிராங்குகள், பல சிறிய பழங்குடி சமூகங்களாக உரோமைப் பேரரசின் வடமேற்கு மாகாணங்களைத் தாக்கத் தொடங்கியபோது இந்த கட்டம் தொடங்கியது. இறுதியாக, கிபி 358 இல், பிராங்குகளின் மூன்று முக்கிய பிரிவுகளில் ஒன்றான சேலிய பிராங்குகள் தென் நிலங்களில் ஃபோடராட்டி என்ற பகுதிகளில் குடியே���ினர். + + + + + +டச்சுத் தமிழியல் + +டச்சு தமிழியல் ("Dutch Tamil Studies") என்பது டச்சு மொழி, நெதர்லாந்து, ஒல்லாந்தர் மற்றும் டச்சு மொழி பேசும் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். + + + + + + + + +பர்மியத் தமிழியல் + +பர்மியத் தமிழியல் ("Burmese Tamil Studies") என்பது பர்மிய மொழி, மியன்மார் (பர்மா), மியன்மார் மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். + + + + + + +செப்டம்பர் 2 + + + + + + + + +சோ. இளமுருகனார் + +சோ. இளமுருகனார் (ஜூன் 11, 1908 - டிசம்பர் 17, 1975, நவாலி, யாழ்ப்பாணம்) தமிழ் மரபு பேணுவதிலே கண்ணுங் கருத்துமாக விளங்கிய பண்டிதரவார். அரசியல் சார்பான தமிழுணர்ச்சி மிக்க ஆக்கங்களை ஆக்கியவர். நாடகாசிரியர், கண்டன ஆசிரியர் எனப் பன்முகம் கொண்டவர் + +இவர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரின் மூத்த புதல்வர். நவாலியூர் சோ. நடராசனின் தமையனார். பண்டிதை பரமேஸ்வரியின் கணவர். வவுனியா பண்டிதர் சு. இராஜ ஐயனார் முதலானோரிடம் தமிழ் கற்றவர். + + + + + +வீர சைவம் + +வீர சைவம் அல்லது லிங்காயதம் என்பது சைவ சமயப் பிரிவுகளிலிருந்து தோன்றிய ஒரு சமயமாகும். + +வீர சைவர்கள் இலிங்கத்தைக் கழுத்திலே அணிபவர்கள். கையிலே வைத்துப் பூசிப்பார்கள். இஷ்டலிங்கத்தைத் தவிர வேறொன்றையும் வழிபடுவதில்லை என்னும் கொள்கை உடையவர்கள். விக்கிரக வழிபாட்டினையும் பலதெய்வ வணக்கத்தையும் கண்டிப்பதோடு கோயில் வழிபாட்டையும், சடங்கு சம்பிரதாயம் மற்றும் சாதி முறைகளையும் இவர்கள் ஆதரிப்பதில்லை. ஒவ்வொரு இலிங்காயதரும் ஏதோவொரு வீரசைவ மடத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். + +வீரசைவ சமயத்தைக் கன்னடத்தில் 1125-1165 ஆண்டுகளில் வாழ்ந்த பசவண்ணர் தோற்றுவித்தார். இவர் கன்னட பிராமணர் குலத்தில் தோன்றியவர். 14 ஆம் நூற்றாண்டில் இது தமிழ்நாட்டில் பரவத் தொடங்கியது. 15 ஆம் நூற்றாண்டில் நவலிங்க லீலை முதலான சில நூல்கள் தமிழில் தோன்றின. பிற்காலத்தில் துறைமங்கலம் சிவப்பிரகாசர் இதனை வலுவாக்கினார். + +வீரச��வமானது மூன்று பிரிவுகளை உள்ளடக்கியிருந்தென நா ஞானகுமாரன் நயன்தரும் சைவசித்தாந்தம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அவையாவன. + +தமிழகத்தில் பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜன் காலகட்டத்தில் சைவக் கோயில்கள் ஆகம வழிபாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. அந்த ஆகமங்கள் ’அர்ச்ச’ முறை கொண்டவை. அதாவது 16 வழிபாடுகள் மூலம் சிவனை வழிபடுபவை. + +ஆனால் இவற்றுக்கு வெளியேயும் பல வழிபாட்டுமுறைகள் இருந்தன. அவை தாந்த்ரீக (குறியீட்டுச் சடங்குகள் கொண்ட) வழிபாட்டு முறையை பின்பற்றியவை. அவற்றை பக்தி இயக்கம் வெறுத்து ஒதுக்கவே அவை இரகசியச் சடங்குகளாயின. தாந்த்ரீகக் கல்வி அளிக்கும் கல்விச்சாலைகளை ராஜராஜன் அழித்தார். (காந்தளூர் சாலை கலமறுத்தருளி...காந்தளூர்ச்சாலை குமரிமாவட்டத்தில் இருந்த அதர்வவேத பாடசாலை) இந்த தாந்த்ரீக மதங்களில் பல ரகசியச்சடங்குகளாக ஆயின. பௌத்த ஞானத்தை உள்வாங்கின. ரசவாதத்துடன் கலந்தன. பின்னர் சித்தர் மரபாக உருவெடுத்தன. + +வீரசைவம் ஆகம முறைகளுக்கு வெளியே உள்ள வழிபாட்டுமுறைகளில் இருந்து பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் உருவானது. அதன் தத்துவ ஊற்றுமுகம் காஷ்மீர சைவம். அவற்றுக்குத் தனி மடங்கள் வந்தன. பல்லவர்களால் பேணப்பட்டன. பின்னர் வீரசைவம் கர்நாடகத்தில் பரவிச் செழித்தது. கர்நாடகத்தில் பசவண்னர் உருவாக்கிய சைவம் இன்று கர்நாடக வீரசைவமென சொல்லப்படுகிறது. + +தமிழ் வீரசைவர்கள் ஆகம சைவர்களால் புறக்கணிக்கப்பட்டனர். நாயக்கர் காலகட்டத்தில் வீரசைவ மடங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. ஆகவே ஆலயங்களைக் கைப்பற்ற போட்டிகள் நிகழ்ந்தன. குறிப்பாக சங்கரன் கோயில் வீரசைவர்களால் கையகபடுத்தப்பட்டு நெடுங்காலம் அவர்களின் சடங்குகளுக்குள் இருந்தது. வீரசைவர்களின் பூசாரிகள் பண்டாரங்கள் பண்டாரம் (சமய மரபு) என்றயினர். இவர்களை வைராகிகள் அல்லது வைராவிகள் என்றும் சொல்வார்கள். வீரசைவ தாந்த்ரீக நெறிகள் சிலவற்றை இவர்கள் கையாள்வதனால் இப்பெயர். இவர்கள் மெல்ல மெல்ல உபநிடத அய்யர்களால் கோயில்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இன்று சிறிதளவு எஞ்சும் செல்வாக்கு பழனியில் மட்டுமே உள்ளது. + +வீரசைவ சமயம் 'தக்கிண மத சித்தாந்தம்' என்னும் தனிக் கோட்பாட்டினைக் கொண்டது. சைவ சமயத்தின் ஒரு லிங்கம், மூன்று-லிங்கம், ஆறு-லிங்கம், முப்பத்தாற���-லிங்கம் எனத் தத்துவ லிங்கங்களாகக் காட்டுவதே வீரசைவக் கருத்தோட்டம். + + + + +இசுகெச்சப் (கீறு) + +இசுகெச்சப் ("Sketch Up")முப்பரிமாண மாதிரிகளை உருவாக்கும் கட்டிடக்கலை வல்லுனர்கள் மற்றும் குடிசார் பொறியியலாளர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள், விளையாட்டு மென்பொருட்தயாரிப்பாளர்கள் மற்றும் பல தொழில் சார் வல்லுனர்களால் பாவிக்கப்படும் மென்பொருளாகும். இம் மென்பொருளானது மிகவும் வெளிப்படையானதும் மகிழ்ச்சியூட்டுவதும் நெகிழ்ச்சியானதுமான மென்பொருளாகும். ஏனைய முப்பரிமாண மென்பொருட்களைப் போலல்லாது இது இலகுவான இடைமுகத்தாலேயே பெரிதும் விரும்பப்படுகின்றது. + +இதிலுள்ள முக்கியமான அம்சங்கள் + +ஸ்கெச்சப் ஸ்ராட்டப் நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்டது. இம்மென்பொருளின் வெற்றியானது ஏனைய மென்பொருட்களைப் போலல்லாமல் இலகுவாகக் கற்கக் கூடியதாக இருந்ததால் இதைப் படிப்பதற்கான நேரத்தைக் குறைத்து கூடுதலான நேரத்தை வரைபடங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிந்தது. + +மார்ச் 14, 2006 கூகிள் இந்நிறுவனத்தை உள்வாங்கிக் கொண்டது. + +ஸ்கெச்சப் இணையத்தளத்தில் இருந்து நீட்சிகளைப் பதிவிறக்கம் செய்யமுடியும் +ஸ்கெச்சப்பின் குறிப்பிடத்தக்க நீட்சியானது முப்பரிமாண உருக்களை .kmz கோப்புக்களாக ஏற்றுமதி செய்யவியலும். இது பின்னர் கூகிள் ஏர்த் மென்பொருளில் திறக்கப் படக்கூடியது. எனவே உலகின் எப்பாகத்தில் கட்டிடம் அமையப் போகின்றது அதன் நிலத்தோற்றம் பற்றிய விபரங்களைச் சேகரிக்கவியலும். + +வேறு நீட்சிகள் கோப்புக்களை 3D ஸ்ரூடியோ ("3D Studio") போன்ற மென்பொருடகளில் பாவிக்கக் கூடிய கோப்புக்களாக ஏற்றுமதிசெய்யவியலும் + + + + + +மார்ச் 25 + + + + + + + +மார்ச் 26 + + + + + + + +மார்ச் 27 + + + + + + + +தத்துவத்தின் வறுமை + +தத்துவத்தின் வறுமை ("The Poverty of Philosophy") என்பது ஜேர்மன் தத்துவவியலாளர் கார்ல்ஸ்மார்க்ஸினால் எழுதப்பட்ட ஆக்கங்களில் ஒன்றாகும். +1847ம் ஆண்டு பாரிஸ் மற்றும் பிரசல்சிலும் இவ் நூல் வெளியிடப்பட்டது.Pierre-Joseph Proudhon என்பவரின் "The Philosophy of Poverty" எனும் நூலின் கருத்துக்களை பொருளியல் மற்றும் தத்துவ ரீதியாக தர்க்கிக்கும் விதமாக மார்க்ஸினால் +எழுதப்பட்டது. + + + + + +கிருபானந்த வாரியார் + +திருமுருக கிருபானந்த வாரியார் (ஆகஸ்ட் 25, 1906 - நவம்பர் 7, 1993) சிறந்த முருக பக்தர். தினமும் ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதையே தவமாகக்கொண்டு வாழ்ந்தவர். சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். "அருள்மொழி அரசு", என்றும் "திருப்புகழ் ஜோதி" என்றும் அனைவராலும் பாராட்டப்பட்டவர். + +இவரது இயற்பெயர் கிருபானந்த வாரி. தமிழ் நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடிக்கு அருகில் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள காங்கேயநல்லூர் என்னும் சிற்றூரில் மல்லையதாசருக்கும், மாதுஸ்ரீ கனகவல்லி அம்மையாருக்கும் பிறந்த பதினொரு பிள்ளைகளில் நான்காவது மகவாக அவதரித்தவர். செங்குந்தர் வீர சைவ மரபினர். ஐந்தாவது வயதில் திருவண்ணாமலையில் வீர சைவ குல முறைப்படி பாணிபாத்திர தேவர் மடத்தில் சிவலிங்க தாரணம் செய்விக்கப்பெற்றார். வாரியார் சுவாமிகள் அமிர்தலட்சுமியை தனது 19ஆவது வயதில் கல்யாணம் புரிந்தார். + +இவரது தந்தையார் இசையிலும் இயலிலும் வல்லவர், மாபெரும் புராண வல்லுநர். தந்தையாரே வாரியாருக்கு கல்வி, இசை, இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தந்தார். எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே பதினாயிரம் பண்களை மனப்பாடம் செய்தவர். பதினெட்டு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும். + +வாரியாருக்கு 23 வயதானபோது, சென்னை ஆனைகவுனி தென்மடம் பிரம்மஸ்ரீ வரதாசாரியாரிடம் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் வீணைப் பயிற்சி பெற்றார். + +தனது சங்கீத ஞானத்தால் அவர் கதாகாலட்சேபம் செய்யும் பொழுது திருப்புகழ், தேவாரம், திருவாசகம் முதலான தோத்திரப்பாக்களை இன்னிசையுடன் பாடினார். + +தன் தந்தையின் வழியில் வாரியார் சுவாமிகள் தமது 15-ஆம் வயதிலிருந்தே சொற்பொழிவு செய்யும் திறம் உடையவரானார். 19-ஆம் வயதிலிருந்தே தனியாகப் புராணப் பிரசங்கங்கள் செய்யத் தொடங்கினார். அவருடைய பிரசங்கங்கள் பெரும்பாலும் பேச்சு வழக்கை ஒட்டியே அமைந்திருந்த காரணத்தால், பாம��� மக்களது உள்ளம் கவர்ந்தவரானார். அவரது "ஆன்மிக மொழி" பாமரர்களுக்கும் புரியும் விதமாக வேதாந்த உண்மைகளையும் சிந்தாந்தக் கருத்துகளையும் கூறியது. சுவாமிகள் தமிழோடு சைவ சித்தாந்தத்திலும் பெரும் புலமை பெற்றவர். + +அவருடைய சொற்பொழிவுகள் அநேகமாக நாடக பாணியில் இருக்கும். இடையிடையே குட்டிக் கதைகள் வரும். நகைச்சுவையும் நடைமுறைச் செய்திகளையும் நயம்படச் சொல்வதும் இவருக்குரிய சிறப்பியல்புகளாகும். + +சுவாமிகள் 1936-ஆம் ஆண்டு தைப்பூச விழாவுக்கு வடலூர் சென்றிருந்த சமயம், சத்திய ஞான சபையில் அமர்ந்து "திருப்புகழ் அமிர்தம்' என்ற மாதப் பத்திரிகையை வெளியிடக் கருதி "கைத்தல நிறைகனி' என்று தொடங்கும் திருப்புகழ் பாவுக்கு உரை எழுதினார். அது முதல் திருப்புகழ் அமிர்தம் திங்கள் இதழாகப் பிரசுரமாகத் தொடங்கியது. + +சுவாமிகள் அந்தப் பத்திரிகையை முப்பத்தேழு ஆண்டுகள் தொடர்ந்து நடத்தினார். அந்தப் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருப்புகழ் பாடலுக்கு விளக்கவுரையும், கந்தர் அலங்கார உரையும், கற்பு நெறிக்கதையும், வேறு பல கட்டுரைகளும் எழுதப்பட்டன. அந்தப் பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் பின்னர் தொகுக்கப்பட்டு தனித்தனி நூல்களாகப் பிரசுரமாயின. + +வாரியார் சுவாமிகள், சாதாரணமாக எழுதப் படிக்கத் தெரிந்த பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படியாக 500-க்கும் மேற்பட்ட ஆன்மிக மணம் கமழும் கட்டுரைகள் எழுதியுள்ளார். + +அவர் இயற்றியுள்ள நூல்கள் ஏறத்தாழ நூற்றைம்பது ஆகும். அவற்றுள் சிவனருட்செல்வர், கந்தவேள் கருணை, இராமகாவியம், மகாபாரதம் ஆகியவை சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவை. கேட்கும் செவிக்கும் கற்கும் சிந்தைக்கும் இன்பம் பயக்கும் அவரது சொற்பொழிவுகளுள் 83 சொற்பொழிவுகள் குறுந்தகடுகளாக வந்துள்ளன. + +குழந்தைகளுக்கு "தாத்தா சொன்ன குட்டிக்கதைகள்' என்ற நூலை அவர் எழுதினார். பாம்பன் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்றையும் வாரியார் எழுதியுள்ளார். + + +1993 அக்டோபர் 19-ஆம் தேதி வாரியார் லண்டன் பயணமானார். 1993-ஆம் ஆண்டு நவம்பர் 7-ஆம் தேதி இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு அருகே கிருபானந்த வாரியாரை சிறப்பிக்கும் வகையில் கோயில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. + + + + + +செப்டம்பர் 3 + + + + + + + +தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை + +தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எனப்படுவோர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளைக் குறிக்கும். மாவீரர்களின் எண்ணிக்கைகள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. + +விடுதலைப் புலிகளின் மாவீரர்களின் ஆண்டு வாரியான பட்டியல் பின்வருமாறு: + +கரும்புலிகளின் மாவீரர்கள் விபரம் பின்வருமாறு: + +படைநடவடிக்கைகளின்படி மாவீரர்கள் பட்டியல் பின்வருமாறு: + +எல்லைப்படை மாவீரர்கள், காவற்துறையினர் மாவீரர்கள், மாமனிதர் மற்றும் நாட்டுப்பற்றாளர்கள் விபரம் பின்வருமாறு: + + + + +மார்ச் 28 + + + + + + + +மார்ச் 29 + + + + + + + +மார்ச் 30 + + + + + + + +மார்ச் 31 + + + + + + + +அந்நியன் (திரைப்படம்) + +அந்நியன் சங்கரின் தயாரிப்பில் பெருந்தொகைப் பணத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படமாகும். இது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஆரம்பத்திலும் பின்னர் பிரெஞ்சு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் வெளிவந்தது. இதுவே பிரஞ்சு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பிரான்சில் திரையிடப்பட்ட முதலாவது இந்தியத் திரைப்படமாகும். + +இந்தத் திரைப்படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சதா மற்றும் விவேக் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 26.38 கோடி ரூபாய் ($6 மில்லியன்) செலவில் உருவாக்கப்பட்டது. + +அந்நியன் திரைக்கதையானது ஓர் அப்பாவி வக்கீலான அம்பி (இராமானுஜம் ஐயங்கார்) பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் வருந்துகின்றார். அம்பி (விக்ரம்) ஓர் நேர்மையான வக்கீல். இவர் யாராவது சட்டத்தை மீறினால் சட்டப்படி வழக்குப் தொடர்வார். எனினும் முயற்சிகள் எல்லாமே விழலுக்கிறைத்த நீராகவே முடிவடைந்தன. + +இவரது தொடர்சியான நேர்மை, நியாயம் போன்ற கொள்ளைகள் அந்நியன் என்ற குணாதியசத்தை ஏற்படுத்தியது. இது பின்னர் வளர்ச்சியடைந்து பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிய www.aniyan.com என்ற ஓர் இணையத்தள��்தையும் உருவாக்குகின்றார். அம்பியில் ஒளிந்திருக்கும் அந்நியன் ஓர் ஆக்ரோசமான குணாதியசம். சட்டங்களை மீறும் பொதுமக்களின் முறைப்பாடுகளை அம்பி அந்நியன் இணையத் தளத்தில் பதிகின்றார். பின்னர் அந்நியனாக மாறித் தண்டிக்கின்றார். அந்நியன் கருட புராணத்தின் படி தண்டனைகளை நிறைவேற்றுகின்றார். + +படத்தின் முதலரைவாசியில் மூன்று கொலைகளை நிகழ்த்துகின்றார். + +காவற்துறை அதிகாரியான பிரபாகரும் சாரியும் (விவேக்) கொலைகளைப் பற்றிப் புலனாய்வுகளில் ஈடுபட்டுவருகின்றனர். + +அம்பி அயலவாராகிய நந்தினியை (சதா) விரும்புகின்றார். எனினும் ஒரே சட்டம் சட்டம் என்று பேசும் அம்பியின் விருப்பதை மறுக்கின்றார். பின்னர் சதாவிரும்பும் ஓர் ரெமோ குணாதியத்தைப் பெறுகின்றார். + +பின்னர் நந்தினி ஓர் தொகை நிலத்தைப்பெறுகின்றார். இதை அரசாங்கத்தில் பதியும் போது வரிகட்டவேண்டும் என்பதால் விலையைக் குறைத்து மதிப்பிடுகின்றாள். இதற்கு அம்பி உடன்பட மறுக்கின்றார். பின்னர் "ரேமோ"விடம் இதைக்கூற அந்நியனாக அம்பியைப் பிந்தொடர்கின்றார் ஆவேசத்தில் அம்பியை நெருப்புக்குள் தள்ளமுயலும் போது மீண்டும் அம்பியாக மாற்றமடைகின்றார். அம்பி வைதியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுகின்றார். அங்கே பிறவாளுமைக் குறைபாடு இருப்பது தெரியவருகின்றது. வைதியரோ அம்பியின் காதலை ஏற்றால் "ரேமோ" குணாதிசயம் மறைந்து விடும் என்கின்றார் ஆனால் அந்நியன் குணாதியசம் மறைவதற்கு நாடே திருந்த வேண்டும் என்கின்றார். நந்தினி அம்பியின் காதலை ஏற்க "ரெமோ" குணாதிசயம் மறைகின்றது. + +கைப்பற்றப் படும் அந்நியனுக்கு இருவருட உளவியல் மருத்துவச்சிகிச்சை அளிக்கப்படுகின்றது இக்காலப் பகுதியில் குணமடைந்தால் விடுவிக்கப்படலாமென்று நீதிமன்று தீர்ப்பளிக்கின்றது. பின்னர் விடுதலையடைந்து இரயிலில் நந்தினியுடன் பிரயாணிக்கும்போது ஒருவர் பெண்கள் முன்னர் மதுவருந்துகின்றார். அவருக்கு தண்டனையாக இரயிலில் இருந்து வீசி விடுகின்றான். எனினும் இதை நந்தினியிடமிருந்து மறைக்கின்றார். + + + + +திலீபன் + +திலிபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா என்பவர் (நவம்பர் 29, 1963 – செப்டெம்பர் 26, 1987) தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு ஆரம்பக்கால உறுப்பினரும் முக்கிய உறுப்பினராகவும் இருந்தவராவர். இவர் இலங்கை, யாழ்ப்பாணம், ஊரெழு எனும் ஊரைச் சேர்ந்தவர். இவரின் மறைவின் பின்னர் புலிகள் அமைப்பில் லெப்டினன் கேணல் திலிபன் எனும் நிலை வழங்கப்பட்டது. இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம். + +1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலிபன் மரணம் எய்தினார். + + +திலிபனின் உண்ணாவிரதம் தொடர்பாகவோ கோரிக்கைகள் தொடர்பாகவோ இலங்கையின் பெரும்பான்மை மக்களான சிங்களவர்களின் புரிதல் மிகக் குறைவு. அதற்கான காரணம் சிங்கள ஊடகங்கள் வெளியிடும் செய்திகளே அவர்களுக்கு கிட்டுவதும், அதுவே உண்மை என பெரும்பான்மை சிங்கள சமூகம் நம்பிவிடுவதும் சில காரணங்களாகும், இருப்பினும் அதனையும் தாண்டி உண்மையறிதல் எனும் கொள்கைக் கொண்ட சிங்களவர்களும் இருக்கவே செய்கின்றனர். அவ்வாறானவர்களின் பார்வையில் திலிபனின் உண்ணாவிரதமும் அவர் கொண்ட கொள்கையின் திடமான பற்றும், அவரது சாகும் வரையான துணிவும் கூட பேசப்படுகின்றன. குறிப்பாக திலிபனின் கொள்கைக்கான உண்ணாவிரதத்தையும், விமல் வீரவங்ச போன்ற சிங்கள அரசியலாளர்களின் கபடமான போலி உண்ணாவிரதத்தையும் ஒப்பிட்ட சிங்களப் பதிவுகளும் உள்ளன. + + + + + + +வேதிப் போர் + +வேதிப் போர் எனப்படுவது பேரழிவு விளைவிக்க வேதியியல் ஆயுதங்கள் பயன்படுத்திப் போர் செய்வதாகும். வேதியியல் ஆயுதங்கள் தமது பாதிப்பை சுவாசிக்கும் போதோ, தோலுடன் தொடுகை ஏற்படுத்தும் போதோ அல்லது நச்சூட்டப்பட்ட உணவின் மூலமோ நடைபெறலாம். + +இவை பல வழிகளில் செயற்படுத்தப்படலாம். மிகப்பொதுவான முறை வளியில் தூவுவதாகும். இதைவிட நடு வானில் வெடித்து சிதறக் கூடிய எறிகணைகளைப் பயன்படுத்தலாம் அல்லது விமானம் மூலம் தேவையான இடத்தின் மீது தூவலாம். 20 ம் நூற்றாண்டிலே முதலாம் உலக யுத்தம் மற்றும் ஈரான் – ஈராக் யுத்தம் என்பனவே வேதியியல் உயிரியல் யுத்த கள முனைகளாக இருந்தன. + +இரசாயண ஆயுதங்கள் முதலில் உலக யுத்தம் ஒன்றில் பாவிக்கப்பட்டது. இதன் பின்பு ஈரான் - ஈராக் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்டது. பின்பு பேர்சியன் வளைகுடா யுத்தத்திலும் பாவிக்கப்பட்டது. இவையனைத்தின் பின்பு ஜப்பானில் அண்மைக் காலத்தில் சுரங்க இரயிலில் பாதையில் இராசாண ஆயுத தாக்குதல் நடத்தப்பட்டது. 2001 இல் அமேரிக்காவில் அந்திராக்ஸ் பக்ரீரியா கடிதம் மூலம் அரச நிறுவனங்களுக்கு அனுப்ப பட்டமை ஒரு வகை உயிரியல் தாக்குதலாகும். + +"முதன்மைக் கட்டுரை: வேதி ஆயுத உடன்படிக்கை" + +1972 வேதியியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் 1993 ஆண்டின உயிரியல் ஆயுதங்களுக்கு எதிரான உடன்படிக்கையும் குறிப்பிடத்தக்கனவாகும். பல நாடுகள் இந்த உடன் படிக்கையில கைச்சாத்திட்டுள்ள போதும் இன்னும் சில நாடுகள் இரகசியமாக இந்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் ஈராக்கை அமேரிக்காவும் பிருத்தானியாவும் ஆக்கிரமிக்க இதுவே காரணமாக இருந்தது. + + + + + +சமாரிண்டா + +சமாரிண்டா நாடு இந்தோனேசியாவின் கலிமந்தான் தீவில் அமைந்துள்ளது . இது கிழக்கு கலிமந்தான் மாகாணத்தின் தலை நகரமாகும். அருகாமையில் இருக்கும் ஒரு இந்துக் கோயிலின் கல் வெட்டில் இருந்து அறியக் கூடியதாவது ஐந்தாம் நூற்றாண்டில் இங்கு இந்தியர்கள் குடியேறி உள்ளனர் என்பதே. ஆயினும் 1668 இற் தீவின் தென்பகுதியில் இருந்து வந்த மக்கள் இங்கு குடியேறி உள்ளனர். 1846 இல் ஒல்லாந்தர் இந்த நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டனர். 1959 இல் அந்நாட்டு அதிபர் ஏற்படுத்திய ஒரு சட்டம் காரணமாக இந்நகர மக்கட்டொகை வேகமாக வளரத் தொடங்கியது. 20 ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே இந்த நகரத்தின் சனத்தொகை சுமார் 5000 ஆகவே இருந்தது ஆயினும் இன்று சுமார் அறுநூறாயிரத்திற்குக் கிட்டிய மக்கட் தொகையினர் இந்த நகரில் வசிக்கின்றனர். இந்த நகரின் வளர்ச்சி வீதம் சுமார் 4.4 ஆகும் இது தேசிய வளர்ச்சியிலும் அதிகமாகும். + + + + +ஒலிவர் டுவிஸ்ட் (திரைப்படம்) + +இத்திரைப்படம் பிரபல எழுத்தாளர் சாள்ஸ் டிக்கென்சின் ஒலிவர் டுவிஸ்ட் என்ற நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில்19 ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு அனாதை விடுதியில் இருந்து தப்பி ஓடும் சிறுவன் ஒரு திருட்டுக் கும்பலுடன் சேர்ந்து கொள்கின்றான். பின்பு ஒரு வீட்டில் திருடச்செல்லும் போது அங்கு கையும் மெய்யுமாகப் பிடிபடுகின்றான். அந்த வீட்டு சொந்தக் காரர் அந்தச் சிறுவன் தனது நெருங்கிய உறவினர் எனக் கண்டறிந்து தன்னுடன் வைத்திருக்கின்றார். ஆயினும் பழைய கொள்ளைக் கும்பல் ஒலிவரின் புதிய உறவைப் பயன்படுத்தி மேலும் கொள்ளையிட முயல்கின்றது. + + + + + +பஞ்ச பாத்திரம் + +பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச பாத்திரம் எனும் பெயரில் அழைக்கப்படுகின்றது. இதில் ஐவகை இலைகளை இட்டுப் பூஜைக்குப் பயன்படுத்துவர். அவையாவன துளசி, அருகு, வேம்பு, வில்வம், வன்னி என்பனவே. + +உத்திரிணி கரண்டி எனப்படும் கரண்டியின் மூலமாக பஞ்ச பாத்திரத்தில் உள்ள தீர்த்த நீர் பக்தர்களுக்கு தரப்படுகிறது. பொதுவாக பஞ்ச பாத்திரம் மற்றும் உத்திரிணி கரண்டி ஆகியவை செம்பினால் செய்யப்படுகின்றன. + +மகாளய அமாவாசையில் பஞ்ச பாத்திரம் ஆகியவற்றை தானம் வழங்குதலை நன்மையாக கருதுகிறார்கள். + + + + + +திருநீறு + +திருநீறு ("விபூதி") சைவர்களால் நெற்றியில் இடப்படும் புனித அடையாளம். இது ஐசுவரி்யம் என்றும் கூறப்படும். + +எத்தகையினராக இருந்தாலும், மரணத்திற்குப் பின் இறுதியில் தீயில் வெந்து அனைவரும் பிடி சாம்பலாக ஆவர் என்னும் தத்துவத்தை உணர்த்தி, நாமும் இதுபோல்தான்; ஆகையால் தூய்மையாக, அறநெறியில் இறைச்சிந்தனையோடு வாழவேண்டுமென உணர்த்துவதாக கருதப்படுகிறது. சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவனை இது குறிப்பதாக சைவர்கள் நம்புகின்றனர். ஞானம் என்னும் நெருப்பில் அனைத்தும் சுட்டெரிக்கப்பட்ட பின் எஞ்சுவது பரிசுத்தமான சிவதத்துவமே என்பதை விபூதி குறிக்கின்றது. + +திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை + +கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பது கல்பத் திருநீறு எனப்படும். + +ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும். + +மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும். + +அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும். + + +சுமனை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். +இப்பசுவானது சிவனது ஈசானிய முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது சிவப்பு நிறத்தினை உடையது. இப்பசுவின் சானத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு இரட்சை என்று அழைக்கப்பெறுகிறது. + +சுசீலை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். +இப்பசுவானது சிவனது தற்புருச முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு சாரம் என்று அழைக்கப்பெறுகிறது. + +சுரபி என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். +இப்பசுவானது சிவனது அகோர முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பஸ்மம் என்று அழைக்கப்பெறுகிறது. + +பத்திரை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். +இப்பசுவானது சிவனது வாமதேவ முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது வெண்ணிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு பசிதம் என்று அழைக்கப்பெறுகிறது. + +தந்தை என்பது சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட பஞ்ச பசுக்களில் ஒன்றாகும். +இப்பசுவானது சிவனது சத்தியோசாத முகத்திலிருந்து தோன்றியதாகும். அத்துடன் இப்பசுவானது கபில நிறத்தினை உடையது. இப்பசுவின் சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் திருநீறு விபூதி என்று அழைக்கப்பெறுகிறது. + +"மந்திரமாவது நீற���" - திருஞானசம்பந்தர், திருநீற்றுப் பதிகம். +மன் + திறம் = மந்திரம். +மும்மலங்களையும் சாம்பலாக்கி அழித்தபின் எஞ்சியது நீறு. நீறிடுதல் என்பது மாசற்ற சுத்த சாந்த நிலைக்கு அடையாளமும் ஆகும். + +புருவ நடுவே தியான நிலை;ஆத்ம பிரகாசம் உள்ளது.அப்பகுதியில் முக்கோண வடிவாக எரிவதை யோகியர் என்பர், அவ்விடத்தில் தியானம் ஊன்ற வேண்டுமென்பதற்காகவே சந்தனம், குங்குமம், திருநீறு, திருமண் முதலியவற்றினை இடுவர். புருவ நடுவின் மேல் நெற்றியின் சஹஸ்ராரத்தில் துரியவெளியுள்ளது. அவ்விடத்தில் அருட்சோதி தோன்றுவதனைக் குறிக்கவே நீறு இடுவர். + +இது தற்பொழுது உள்ள குறிப்பு. + +1.இருபுருவங்களின் நடுப்பகுதியில் மிக நுண்ணிய நரம்பு அதிர்வு நிலை உள்ளது. அதனால் மன வசியம் (hypnotisers) எளிதாக வசியம் செய்ய முடியும் என்பதற்காகவே, நெற்றியில் திலகமும், திருநீறு, திருமண் போன்றவற்றை இடுவது வழக்கம். + +2.அருட்சோதி புருவ நடுவில் தோன்றுவது இல்லை. அது கபாலக் குகைக்குள்தான் தோன்றும். புருவ நடுப்பகுதி வழியாகக் கபாலக் குகைக்குள் நுழைய முடியும் என்பதைக் குறிக்க வேண்டுமாகில் திருக்குறிகளை அங்கு இட்டிருக்கலாம். + +மனித உடலில் நெற்றி என்பது மிக முக்கிய பாகம், அதன் வழியாக மிக அதிக மாக சக்தி வெளிப்படும், உள்ளிழுக்கவும் செய்யும். இது ஒரு வர்ம ஸாதனம் கூட. + +சூரிய கதிர்களின் சக்திகளை இழுத்து நெற்றி வழியாக கடத்தும் வேலையை திருநீர் செவ்வனே செய்யும், அதனால்தான் நெற்றியில் திருநீறு பூசுகிறார்கள். + +மற்றவர்களின் பார்வையினால் வெளிப்படும் சக்திகளும் அவர்களுக்கு தெரியாமலேயே நெற்றி வழியாக அதிகம் கவரப்படும், அவர்களை தன்னிலை இழக்கச்செய்வதும் வசப்படுத்துவதும் இதன் மூலமாக எளிதாக செய்துவிடலாம். மனோ தத்துவம், ஹிப்னாட்டிஸம், மெஸ்மரிஸம் போன்றவற்றிலும் இங்கே பார்வையும் மன எண்ணங்களும் முக்கிய இடம் வகிக்கிறது. கண்ணேறு என்று சொல்லப்படும் தேவையில்லாத எண்ணங்கள் ஊடுறுவதை தடுக்கவும் திருநீறு இடப்படும். + +ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள். + +மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச்செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும், ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத்தான். இது தொடக்கம். + +நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள். + +எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள். சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி எடுக்கப்பட்டது திருநீறு. + +மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும், அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப்பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம், இதை வேதாத்ரி மகரிஷிஸ ஈஷா யோகோ போன்ற இடங்களில் சென்றால் சொல்லித்தருவார்கள். + +பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது. + +இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும். + +இதை முறையாக செய்யவேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்யவேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத் தலைவேதனையில் கொண்டுவந்து விட்டுவிடும். + +இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ். + +கற்றது கையளவு கல்லாதது உலகளவு + +வடதிசை அல்லது கிழக்கு திசையையாவது நோக்கி நின்றுகொண்டு, கீழே சிந்தாமல், வலது கையின் +ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய மூன்று விரல்களால் திருநீறை எடுத்து அண்ணாந்து நின்று, பூசிக்கொள்ளல் வேண்டும். எடுக்கும் போது திருச்சிற்றம்பலம் என்றும் பூசும் போது சிவாயநம அல்லது சிவசிவ என்று உதடு பிரியாது மனம் ஒன்றிச் சொல்லிக் கொள்ளுதல் வேண்டும். ஒன்று நெற்றி முழுவதும் அல்லது 3 படுக்கை வசக் கோடுகளாகத் தரிக்க வேண்டும். +காலை, மாலை, பூசைக்கு முன்னும் பின்னும், ஆலயம் செல்வதற்கு முன்னும், இரவு உறங்கப் போவதற்கு முன்னும் திருநீறு தரிக்க வேண்டும்.நெற்றியில் முழுவதும் பரவிப் பூசுவதை "உத்தூளனம்" எனப்படும். மூன்று படுக்கை வசக்கோடுக���ாக பூசுவதை "திரிபுண்டரம்" எனப்படும். + +உடலில் திருநீறு அணியக்கூடிய இடங்களாகப் பதினெட்டு இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை + +திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். பாவங்கள் என வரையறுக்கப் பட்டவைகளை ஒதுக்கும் மனப் பாங்கும், தொல்லைகள் அனைத்தையும் அழித்தும் அனைத்துப் பேறுகளையும் அளித்துப் பிறவிப் பிணி அறுத்து மோக்கம்(மோட்சம்) செல்ல வழிகாட்டும். இதைத்தான் திருமூலர் பின்வரும் பாடலில் தெரிவிக்கிறார். + +கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை +மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில் +தங்கா வினைகளும் சாரும் சிவகதி +சிங்கார மான திருவடி சேர்வரே! + + +திருநீறு அணிவதால் செய்த பாவங்கள் நீங்கும் என்றும், திருநீறின் பெருமையை அறிந்து முறைப்படி அணியாமல் வெறுமனே பூசிக் கொள்பவர்களுக்கும் நன்மை கிடைக்கும் என்றும் சைவ நூல்களில் கூறப்பட்டுள்ளது. ஒரு முறை பாவங்களை செய்த ஒருவன் இறந்துபோனான். அவனுடைய வாசலில் இருந்த சாம்பலில் புரண்டு எழுந்த நாயொன்று அவன் மீது நடந்து சென்றது. அப்போது அந்த நாயின் கால்களிலிருந்த சாம்பாலனது அவனுடைய உடலில் பட்டது. அவன் உடலில் திருநீறு இருப்பதை அறிந்த யமதூதர்கள் விலகினர், அவனுடைய உயிரினை சிவகணங்கள் கையிலாயத்திற்கு எடுத்து சென்றன. இந்த கதையானது திருநீறு அணிவதால் அவனுடைய பாவங்கள் போகின்றன என்பதை மக்களுக்கு கூறுகிறதாகும். + + + + + +ஸ்கொட்பொரோ வழக்கு + +ஸ்கொட்பொரோ வழக்கு 1930 களில் அமேரிக்காவில் நடைபெற்ற சர்வதேச ரீதியாகப் பேசப்பட்ட வழக்காகும். அதாவது ஒன்பது அமேரிக்க கறுப்பின இளைஞர்கள் இரண்டு வெள்ளை இனப் பெண்களை வன் புணர்தலுக்கு உட்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டனர். 1931 ல் வழக்கு ஆரம்பமாகியது. இந்த வழக்கு அக்காலத்தில் அமேரிக்காவின் இனவெறியையும் சமத்துவமற்ற நீதியையும் எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளப்படுகின்றது. + +வழக்கு நடைபெற்ற போது இந்த இளைஞர்களுக்கு போதுமான சட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. வழக்கும் சரியான முறையில் நடத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது. இவர்கள் கைது செய்யப்படும் போது வீம்ஸ் அதிகூடிய வயதான 20 ல் இருந்தார் அதே போல லியொரிஸ் 13 வயதில் இருந்தார். முதலில் பெண்கள் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள மறுத்த போதிலும் பல்வேறு வற்புறுத்தலுக்கு மத்தியில் இந்த வழக்கில் பொய் கூறினர். ஆயினும் பிந்திய வழக்கு விசாரணைகளில் இவர்கள் பிரபலமான விலை மாதுக்கள் என்று தெரிய வந்தது. International Labor Defense இந்த இளைஞர்களுக்கான சட்டத்தரனி உதவிகளைச் செய்தது. இந்த இளைஞர்களுக்கு ஆதரவாக லண்டன், மாஸ்கோ போன்ற நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது. + +1937 ல் நான்கு இளைஞர்கள் நீதி மன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். விடுதலையாகும் போது அவர்கள் ஆறு வருடங்களை சிறையில் கழித்து இருந்தனர். இதைப்போல பின்பு 1943 க்கும் 1950 ற்கும் இடையில் ஏனையவர்கள் விடுதலை பெற்றனர். 1976 ல் அலபாமா ஆளுனர் ஸ்கொட்பெரொ இளைஞர்கள் மீதான மன்னிப்பை வழங்கியபோது அந்த இளைஞர்களில் ஒருவரைத் தவிர மற்ற எந்தவொரு நபரும் உயிருடன் இருக்கவில்லை. + + + + +பெண்கள் சந்திப்பு மலர் + +பெண்கள் சந்திப்பு மலர் 1991 ம் ஆண்டிலிருந்து ஆண்டுமலராக வெளி வருகிறது. ஜெர்மனியில் நடைபெற்ற புகலிடப் பெண்கள் சந்தித்து தமது கருத்துக்களையும், பெண்களின் பிரச்சனைகளையும் பரிமாறும் பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றிலேயே பெண்கள் சந்திப்புக்கென மலரொன்று வெளியிடுவது தீர்மானிக்கப் பட்டது. இத் தீர்மானத்தில் உருவானதே பெண்கள் சந்திப்பு மலர். பெண்கள் சந்திப்பு மலரில் உலகளாவிய ரீதியிலான தமிழ்ப்பெண்களின் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள், பேட்டிகள், பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்ற மொழிபெயர்ப்புக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், பெண்கள் தொடர்பான கருத்துப் பரிமாறல்கள் போன்றவை இடம் பிடிக்கின்றன. + +பெண்கள் சந்திப்புக்கென மலர்கள் வெளியிடுவதெனத் தீர்மானிக்கப் பட்டிருந்தாலும் ஒவ்வொரு பெண்கள் சந்திப்பின் போதும் மலர்களை வெளியிடுவது என்பது ஆரம்ப காலங்களில் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. 2008 வரையில் 27பெண்கள் சந்திப்புகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆனாலும் 27 பெண்கள் சந்திப்பு மலர்கள் வெளியாகவில்லை. இலக்கியத் துறையில் பெண்கள் வெகுவாக ஈடுபட்டிருந்தாலும் குடும்பம், வே���ை, குழந்தைகள், குடும்ப உறுப்பினர்கள்... என்பவைகளைத் தாண்டி வந்து முழுமையான பங்களிப்பைச் செய்யவோ, இது விடயங்களில் அக்கறை காட்டவோ அந்தப் பெண்களால் முடியாமலே இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் பல தடைகளையும் தாண்டி வந்து தம்மாலான பங்களிப்புகளைப் பல பெண்கள் செய்திருக்கிறார்கள். இன்னும் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் 200, 300 பிரதிகள் அச்சடிக்கப்பட்ட பெண்கள் சந்திப்பு மலர் தற்போது 1000 பிரதிகள் வரை அச்சடிக்கப் படுகின்றது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு இப் பெண்கள் சந்திப்பு மலர் இலவசமாக அனுப்பி வைக்கப் படுவது குறிப்பிடத் தக்கது. + + +மிகுந்த சர்ச்சைக்குள்ளான இம் மலர் 2002 இல் பால்வினைச் சிறப்பிதழாக வெளிவந்தது. 60 பக்கங்களைக் கொண்ட இம்மலரில் முழுமுழுக்க பால்வினை சம்பந்தமான, பால்வினைத் தொழிலாளர்கள் பற்றிய விடயங்களே பேசப்பட்டன. அட்டைப்படமும், உள்ளடக்கமும் பெண்களால் கூட விமர்சிக்கப் பட்டன. இம்மலரை பெண்கள் சந்திப்பு மலர் குழுவில் அங்கம் வகிக்கும், பிரான்ஸிலிருந்து வெளிவரும் 'உயிர் நிழல்' இதழின் ஆசிரியர் லக்ஸ்மியும், நோர்வேயிலிருந்து வெளிவரும் 'சக்தி' இதழின் ஆசிரியர் தயாநிதியும் தொகுத்திருந்தார்கள். + +இம்மலர் 39க்கு மேற்பட்ட பெண் படைப்பாளிகளின் படைப்புகளுடன் 2004 இல் வெளிவந்தது. வெவ்வேறு கோணங்களிலிருந்து எழுதப்பட்ட பத்தச் சிறுகதைகளும், ஆறு கட்டுரைகளும், 23க்கு மேற்பட்ட கவிதைகளும், ஓவியர் வாசுகியுடனான செவ்வியொன்றும் இதில் இடம் பெற்றுள்ளன. +பெண்களின் விடுதலையை, அடக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் விட்டு வெளியேற முடியாத இயலாமையை. அடைந்து கிடந்தாலும் மனதால் சுதந்திரமாகப் பறக்கத் துணிந்த பெண்களின் தன்மையை, விட்டு விடுதலையாகி விடுவோம் என்ற நம்பிக்கையை, இருப்பின் அவசியத்தை, யுத்தத்தின் கோலங்களை, இயற்கையின் சீற்றங்களை... என்று பல விடயங்களை இவை உணர்வோடு பேசுகின்றன. + + + + + +சமசுகிருத தமிழியல் + +சமசுகிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இருக்கும் தொடர்பு ஆதியானது, நெருக்கமானது, மிக முக்கியமானது. சமசுகிருதத்தை பார்க்கும் பிராமிண மக்களுக்கும் தமிழ் மொழியை தமது அடையாளமாக கொள்ளும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட பலக்கிய பன்முக உறவாடல் இருந்துவருகின்றது .தமிழ் மொழியில் இருந்து பல சொற்கள் சமசுகிருதத்திற்கு கலவாடபட்டது என்ற கருத்து உள்ளது. தமிழ் சமசுகிருத மொழிகளுக்கும் அவற்றை சார்ந்த மக்களுக்கும் இருக்கும் உறவை முக்கியமாக ஆயும் இயலை சமசுகிருத தமிழியல் எனலாம். + + + + +உகர ஊகார உயிர்மெய் எழுத்து வடிவ சீர்திருத்தம் + +உகரமும் ஊகாரமும் உயிர்மெய் மூல மெய்யெழுத்தைச் சிதைத்து எழுதப்படுவதால் தமிழில் மேலதிக 24 தனி வடிவங்கள் தேவைப்படுவது தமிழுக்கு ஒரு குறையாக சிலரால் பாக்கப்படுகின்றது. இப்போது கணினியில் தமிழைக் குறிக்க (12 உயிர் + 18 மெய் + 1 அயுதம் + 12 குறியீடுகள் + 24 உகர ஊகார வடிவங்கள் = 67) 67 குறியீடுகள் தேவை. இவ் 24 எழுத்து வடிவங்களையும் மேலதிக இரு கீற்றுக்களால் குறித்தால் அனைத்து தமிழ் எழுத்துக்களையும் 41+2=43 வடிவங்களால் எழுதமுடியும். அதாவது 12 உயிர்+ 1 ஆய்தம் + 18 மெய் + 12 குறியீடுகள் = 43. இப்போது தேவைப்படும் இந்த மாற்றம் வேண்டும் என்று சில தமிழ் கணிமையாளர்களும் அறிஞர்களும் வேண்டி வருகின்றனர். + +இந்த மாற்றம் தமிழை எளிமைப்படுத்தி தமிழ் கற்பதை இலகுவாக்கும் என்றும், தமிழ் கணிமையை இலகுவாக்கும் என்றும், இச்சீர்சிருத்தத்தை வேண்டுவோர் கருதுகின்றார்கள். + +நூல்களிலும் இணையத்திலும் ஏற்கனவே இருக்கும் எழுத்துவடிவங்கள் நடைமுறையில் உள்ளன. அவற்றை மாற்றியமைப்பது இதுவரை இருக்கும் படைப்புக்களை பயனற்றதாக்கும். யாழ்ப்பாணத் தமிழ் நூலகத்தில் உள்ள நூல்களை எரித்தது போலவும், மதுரைத் தமிழ்ச்சங்க நூலகளை எரித்தது போலவும் காலங்காலமாக ஏராளமான ஏடுகள் அழிக்கப்பட்டன போலவும் ஆனால் இவற்றினும் கொடுமையாக மில்லியன் கணக்கான பக்கங்களும் நூறாயிரக்கணக்கான தமிழ்நூல்களும் (ஏறத்தாழ எல்லாத் தமிழ் நூல்களுமே) சில ஆண்டுகளிலேயே படிக்க இயலாமல் போகும். இதனால் நேரம், பொருள், உழைப்பு ஏராளமாக வீணாவதும், தொடர்பறுவதால் குறிப்பிட்ட ஒருசில கருத்துடைய நூல்கள் மட்டுமே வசதி படைத்தவர்கள் வெளியிட நேரிடலாம், என்றும் பற்பல கரணியங்கள் உள்ளன என்று எதிர்ப்பாளர்கள் சுட்டுகின்றனர். + +சீன மொழியை கற்க ஒருவர் 3000 மேற்பட்ட குறியீடுகளைக் கற்ற வேண்டும். தமிழை ஆக 67 குறியீடுகளுடன் கற்றுக்கொள்ள முடியும். ஆங்கிலமும் (Capital letters) சேர்���்தால், 54 குறியீடுகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மாற்றாக தமிழை ஏற்கனவே கற்றவர்களுக்கு புதிய முறைகள் வந்தால் அதைக் கற்பதில், நடைமுறையில் பயன்படுத்துவதில் சிக்கல் இருக்கும். + +21 ஆம் நூற்றாண்டாகிய இப்பொழுதும், மேலும் வருங்காலத்திலும், எழுத்துகளை எழுதுவதும் படிப்பதும் பனையோலைகளில் எழுதிய நாட்களில் இருந்து மிகவும் வேறுபட்டது என்றும், இதனால் இவ்வகையான "சீர்திருத்தம்" ஏதும் தேவையில்லை என்றும் இவர்கள் கூறுகிறார்கள். + +தமிழ்மொழியை கட்டுப்படுத்த செல்வாக்கு பெற்ற ஒரு அமைப்பு இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இலங்கையிலும் சிங்கப்பூரிலும் தமிழ் ஒரு அரச அங்கீகாரம் பெற்ற மொழி. மலேசியாவிலும் தமிழ் ஒரு கல்வி மொழி. பிறநாடுகள் பலவற்றிலும் தமிழ் பயிலப்படுகிறது. தமிழ்நாடு அரசு மட்டும் இதை நிறைவேற்றினால், இதர நாடுகளிலில் இருப்போர் பின்பற்றாமல் இருக்க கூடும். எனவே தமிழ் எழுத்துமுறை பிளவு பட இந்த மாற்றம் உந்தும். + + + + + + +கனடா டொலர் + +கனடா டொலர் (currency code CAD) கனடாவின் நாணயம் ஆகும். 2011 ஆம் ஆண்டின் கணக்கின்படி, கனேடிய டோலர் அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஏழாவது நாணயம் ஆகும். இது நூறு செண்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இது கனேடிய வங்கியினால் அச்சடிக்கப்படுகிறது. கனடா முழுவதும் இப்பணம் செல்லுபடியாகும் எனினும் அருகிலுள்ள பியரி மற்றும் மகுலின் தீவுகளும் (பிரான்சுக்குச் சொந்தமானவை) பயன்படுத்துகின்றன. னித இது 1858ம் ஆண்டில் இருந்து நடைமுறையில் இருக்கின்றது. இதை சுருக்கமாக $ அல்லது C$ குறியீட்டை பயன்படுத்தி குறிப்பர். "CAD", "CAD$", "CA$", "Can$" போன்ற குறியீடுகளும் பயன்படுத்தப்படுவதுண்டு. பணம் மட்டுமின்றி, 1, 2, 5, 10, 25, 50 செண்டுகளும் அச்சடிக்கப்படுகின்றன. + + + + + +ஊடறு (நூல்) + +ஊடறு முழுக்க முழுக்க பெண்களின் ஆக்கங்களை உள்ளடக்கி, றஞ்சி(சுவிஸ்), தேவா(யேர்மனி), நிரூபா(யேர்மனி), விஜி(பிரான்ஸ்) ஆகியோரின் கூட்டு முயற்சியில் உருவான ஒரு நூலாகும். இதனுள்ளே 13 கட்டுரைகளும், 5 சிறுகதைகளும், 24 கவிதைகளும், 3நூல் விமர்சனங்களும் 5 ஓவியங்களும் இடம் பெற்றுள்ளன. + +ஊடறுவின் முன் அட்டைப்படத்தை அருந்ததி ராஜும், பின் அட்டைப்படத்தை வாசுகி ஜெயசங்கரும் வரைந்துள்ளனர். + +தொகுப்பில் ���டம் பெற்றிருக்கும் கட்டுரைகள் அரசியல், சமூகம், பொருளாதாரம்.. என்று பன்முகத் திடல்களிலுமிருந்து நடைமுறைப் படுத்தப்படும் பெண்கள் மீதான அடக்கு முறைகளை மையப்படுத்திய பல தகவல்களைக் கொண்டுள்ளன. கட்டுரைகள் போலவே இப்பதிப்பில் இடம் பெற்ற அனேகமான கவிதைகளும் பெண்களின் பிரச்சனைகளை மையமாகக் கொண்டே பதியப்பட்டுள்ளன. சில கவிதைகள் போர் தந்த பாதிப்புக்களையும், அதனாலான வடுக்களையும், புலம் பெயர்ந்ததால் ஏற்பட்ட பிரிவின் துயர்களையும் பேசியிருக்கின்றன. எல்லாக் கவிதைகளிலுமே ஏதோ ஒரு சோகம் மெதுவாகவேனும் இளையோடியிருக்கின்றது. சில கவிதைகளில் ஏமாற்றத்தின் ரேகைகள் படிந்திருக்கின்றன. + + + + +செப்டம்பர் 4 + + + + + + + +ஞானம் (ஓவியர்) + +ஓவியர் ஞானம் என்று அழைக்கப்படும் ஞானசேகரம் ஈழத்தின் பிரபல ஓவியர் ஆவார். இலங்கையின் பிரபல்யமான நிறுவனங்களுக்கு விளம்பர அமைப்புகள், புத்தக முகப்பு ஓவியங்கள், உள்ளூர் உற்பத்திப் பொருட்களுக்கான முகப்புகள் முதலியவற்றை ஸ்கிறீன் முறையில் அச்சிட்டு வழங்கியவர். + +தற்போது அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து சிட்னியில் வசித்து வரும் இவர், இந்ததுறையில் அயராமல் உழைப்பவர். இலக்கிய நூல்கள், மலர்கள், சஞ்சிகைகளுக்கும் முகப்பு ஓவியங்களை வரைந்து வருகின்றார். + +இலங்கையில் நில அளவைத் திணைக்களத்தில் 25 ஆண்டு காலம் பட வரைஞராகப் பணியாற்றியுள்ளார். பின்னர் "ஞானம் ஆர்ட்ஸ் அண்ட் அட்வர்ட்டைசிங்" என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தம்பணியைத் தொடர்ந்தார். சிலகாலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பகுதிநேர படவரைவுக்கலை விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். + +அறிஞர்கள், மேதைகள், கல்விமான்கள், கலைஞர்களின் உருவப்படங்களையும் வரைந்து பாராட்டுப் பெற்றவர். 2006 இல் சிட்னியில் நடைபெற்ற உலக சைவ மாநாட்டில் அறுபத்து மூன்று நாயன்மார்களினதும் உருவப்படங்களை வரைந்து பாராட்டைப் பெற்றவர். + +சித்திரச் செல்வன், சித்திரகேசரி, ஓவிய வித்தகர் முதலான சிறப்புப் பட்டங்கள் பெற்றவர். நியூ சவுத் வேல்ஸ் மாநில பாங்க்ஸ்டவுண் ஆர்ட் சொசையிட்டியின் வருடாந்த விருதும் (2002) பெற்ற கலைஞர். + + + + +இசு��ீவ் இர்வின் + +ஸ்டீவ் இர்வின் ("Steve Irwin", பெப்ரவரி 22, 1962 - செப்டம்பர் 4, 2006), ஓர் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலரும், வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ் பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளரும் ஆவார். "முதலை வேட்டைக்காரர்" என அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன் துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக அறியப்பட்டவர். இவர் குயீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஆஸ்திரேலிய விலங்குகள் காட்சிச்சாலையை எடுத்து நடத்தி வந்தவர். + +அவருக்கு இரு குழந்தைகளும் மனைவியும் உள்ளனர். அவருடைய மனைவியும் முதலைகளை பராமரிப்பவர். ஸ்டீவ் இர்வினுடைய தந்தையும் தாயும் கற்றுக்கொடுத்ததுதான் இந்த முதலை விளையாட்டும் பராமரிப்பும். எட்டு வயதிலேயே களத்தில் இறங்கியிருந்திருக்கிறார். 44 வயதில் இறந்த அவர் வெளியுலகுக்கு அறிமுகமானது அவருடைய நண்பர் 1990ல் எடுத்த நிகழ்படக் கோப்புகள் மூலமே. + +செப்டம்பர் 4, 2006 இல் தண்ணீரில் ஆபத்தான விலங்கினங்கள் பற்றிய ஒரு விளக்கப் படம் எடுக்கும்பொழுது பெருந்திருக்கை ("stingray") என்றும் அட்டவண்ணைத் திருக்கை என்றும் சொல்லப்படும் ஒரு கொட்டும் திருக்கைமீன் எனப்படும் ஒருவகை நீர்வாழ் இனத்தின் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தார். ஆஸ்திரேலியாவின் வரலாற்றில் இந்த திருக்கை மீனினம் தாக்கி இறந்தவர்கள் மொத்தம் மூன்றே மூன்று பேர் தான் என்று சொல்லப்படுகின்றது. முதல் இரண்டு தாக்குதல்களும் 1938 இலும் 1945 இலும் நடந்தன. + + + + + +1971 + +1971 (MCMLXXI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். + + + + + + + + +விபி சிகிரிப்ட் + +விபிஸ்கிரிப்ட் விஷ்வல் பேஸிக் ஸ்கிரிப்டின் சுருக்கம் ஆகும். இதில் நிரலாக்கலானது மைக்ரொசாட்டின் விஷ்வல் பேஸிக் மொழியை ஒற்றியதாகும். இன்ரநெட் எக்ஸ்புளேளர் உலாவியில் ஜாவாஸ்கிரிப்ட் போன்றியங்கும். இது தனித்தியங்கும் *.hta கோப்புக்களாகவும் சேமிக்கப் படக் கூடியதேனினும் ஆகக் குறைந்தது மைக்ரோசாப்ட் இன்ரநெட் எக்ஸ்புளோளர் 5.0 அல்லது அதற்கு மேம்படுத்தப் பட்ட பதிப்புக்கள் தேவைப்படும். இணைய விருதியாளர்கள் கூடிய ஒத்திசைவிற்க்காக பெரும்பாலும் ஜாவாஸ்கிர்ப்ப்டையே விரும்புகின்றனர். + +விபிஸ்கிரிப்ட் ஆனது விண்டோஸ் 98 இயங்க���தளத்தில் இருந்து மைக்ரோசாப்ட் இயங்குதளத்துடன் உள்ளிணைக்கப்பட்டுள்ளது. +1996 இல் விண்டோஸ் ஸ்கிரிப்ட்டிங் தொழில்நுட்பத்தின் ஓர் அங்காக வெளியிடப்பட்டது. இது ஆரம்பத்தில் இணைய விருத்தியாளர்களை இலக்குவைத்தே வெளியிடப்பட்டது. இரண்டு வருடகாலப்பகுதியில் விபிஸ்கிர்ப்ட்டானது 1.0 பதிப்பில் இருந்து 2.0 பதிப்பிற்கு முன்னேறிக் கொண்டது. இதன் மூலம் தானியக்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளக்கூடியாதா இருந்தாலும் இது முன்னைய தொடர்ச்சியாத் செய்யக் கட்டையிடும் (Batch processing) விட வினைத்திறனாக இருந்ததினால் கணினி நிர்வாகிகள் இதை விரும்பத் தொடங்கினார்கள். + + + + + +போர்லாண்ட் டெல்பி + +போர்லாண்ட் டெல்பி போர்லாண்ட் மென்பொருள் நிறுவனத்தின் மென்பொருட்களை விருத்தி செய்வதற்கான மென்பொருளாகும். இதன் பத்தாவது பதிப்பான டெல்பி 2006 ஆனது டெல்பி நிரலாக்கல் மொழி மற்றும் சி++ ஆகியவற்றை 32 பிட் விண்டோஸ் இயங்குதளத்தில் ஆதரிக்கின்றது அத்துடன் இது C# மற்றும் மைக்ரோசாப்ட்.நெட்டையும் ஆதரிக்கின்றது. + +டெல்பியின் முக்கிய பயன்பாடானது தகவற் தளங்களைக் கையாளவதிலேயே தங்கியுள்ளதெனினும் பொதுவாக அநேகமான மென்பொருள் விருத்தி திட்டங்களிலும் இம் மென்பொருள் பயன்படுத்தப் படுகின்றது. தமிழைக் கணினிகளில் உட்புகுத்துவதில் முன்னோடியான நளினம் மென்பொருளும் டெல்பியிலேயே உருவாக்கப் பட்டுள்ளது. + +டெல்பி ஆரம்பத்திலிருந்தே துரித விருதிச் சூழல் மென்பொருளாக வெளிவந்தது. 1995ஆம் ஆண்டு 16 பிட் விண்டோஸ் 3.1 இயங்குதளத்திற்கு வெளிவந்தது. பின்னர் ஒருவருட்டத்தில் 32 பிட் இயங்குதளக் கணினிகளுக்கான டெல்பி 2 வெளிவந்தது. சிலவருடங்களில் இதே பாணியில் C++ பில்டர் மென்பொருளும் வெளிவந்தது. + +டெல்பியை ரேபோ பாஸ்கல் ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலை (IDE) உருவாக்கிய் அண்டர் ஹிஜல்பேக்கே முன்னின்று உருவாக்கினார். 1996 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் இவரை உள்வாங்கும் வரை இவரே போர்லாண்டில் டெல்பி விருத்தித் திட்டங்களிற்கு முன்னின்றார். + +2001 ஆம் ஆண்டு லினக்ஸ் இயங்குதளங்களிற்கான கைலிக்ஸ் என்ற டெல்பிக்கான லினக்ஸ் பதிப்பு உருவாக்கப் பட்டதெனினும் பயனர்களின் ஆர்வக்குறைவால் 3ஆவது பதிப்பிலிருந்து இடைநிறுத்தப் பட்டது. + +டெல்பி 6 உடன் விண்ட��ஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கும் பொதுவான பகுதிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. + +டெல்பி 8 ஆனது டிசெம்பர் 2003 வெளிவந்து மைக்ரோசாப்ட்.நெட் ஐ ஆதரிக்கும் வகையில் வெளிவந்தது. இதில் முதற்தடவையாக விஷ்வல் ஸ்ரூடியோ போன்று ஒருங்கிணைக்கப் பட்ட விருத்திச் சூழலானது மாற்றப் பட்டது. + + + +ஆரம்பதில் தகவற் தளங்களை அணுகுவதற்கு ஓர் மென்பொருளை உருவாகி வந்தனர் அக்காலத்தில் பிரபலமான ஆரக்கிள் தகவற் தளத்தை இணைப்பதற்கு டெல்பி என்ற இரகசியப் பெயருடன் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. இப்பெயரயே பலரும் விரும்பியதால் இது இன்றளவும் டெல்பி என்றே அழைக்கப் படுகின்றது. + + + + + +வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை + +இலங்கையின் வடபகுதியிலுள்ள யாழ் நகர மத்தியிலிருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில், காங்கேசந்துறை வீதி, நாவலர் வீதிச் சந்தியில் அமைந்துள்ளது வண்ணார்பண்ணை நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை. பிரித்தானியர் ஆட்சியின்போது, அவர்களால் அமைக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆங்கில, கிறிஸ்தவப் பின்னணியிலேயே கல்வி கற்பித்து வந்தன. இதனால் சைவ சமயமும், தமிழ் மொழியும் தாழ்ச்சி அடையும் நிலைமையை உணர்ந்த ஆறுமுக நாவலர் இப் பாடசாலையை நிறுவினார். + + + + + +சிவாஜி (திரைப்படம்) + +சிவாஜி, 2007ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை ஏ.வி.எம். புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பது சிறப்பம்சமாகும். இப்படத்தில் மணிவண்ணன், விவேக் முக்கிய பாத்திரங்களிலும் நயன்தாரா, மற்றும் இயக்குநர் ஷங்கரும் இத்திரைப்படத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பல்வேறுபட்ட காலதாமத்திற்குப் பின்னர் உலகளாவிய ரீதியாக 15 ஜூன் 2007 திரையரையங்குகளில் வெளிவிடப்பட்டுள்ளது. இப்படம் 2005-ல் வெளியான சந்திரமுகி பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. + +சிவாஜி என்பவர் மென்பொருள் கட்டுமான அமைப்பாளர், ஐக்கிய மாகாணங்களில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு இந்தியா திரும்புகிறார். இங்குள்ள சமுதாயத்திற்கு மருத்துவம் மற்றும் கல்வியை இலவசமாக வழங்க வேண்டும் என்ற தன்னுடைய கனவை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்புகிறார். இந்நிலையில் அதிகாரத்திலுள்ள பெருமுதலாளி ஆதிசேஷன் என்பவர் இவருடைய திட்டத்தை முடக்கி விடுகிறார். சிவாஜி எந்த வழியும் இல்லாமல் இருக்கிறார். ஆனால் தன்னுடைய வழியில் அவனுடைய திட்டத்தை முறியடிக்க நினைக்கிறார். + +பெரிதும் பேசப்பட்ட 1994 இல் வெளிவந்த காதலன் (திரைப்படம்) படத்தை இயங்கிய ஷங்கர் சன் டிவி பேட்டியில் தனது விருப்பம் தமிழ் நாட்டின் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவரையும் வைத்துத் திரைப்படம் தயாரிப்பதாகும். ஷங்கரின் அடுத்த திரைப்படம் இந்தியன் (திரைப்படம்) பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் மற்றும் நெடுமுடி வேணு முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்க ஊர்மிளா மடோண்த்கர் மற்றும் மனிஷா கொய்ராலாவும் நடித்தனர். இப்படத்தின் வெற்றியினால் பெரிதும் கவரப்பட்ட ரஜினி ஷங்கரின் இயக்கத்தில் நடிக்கத் தனது விருப்பத்தைத் தெரிவித்து இருந்தார். எவ்வாறெனினும் அடுத்தாக பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஜீன்ஸ் (திரைப்படம்) தமிழ் மற்றும் இந்தியில் வெளிவந்தது வெற்றியளித்தது. + +ஜீன்ஸ் படத்தை அடுத்த ரஜினிகாந்தை ஷங்கர் ஓர் திரைக்கதையுடன் அணுகினார். எனினும் ரஜனிகாந்த் கே. எஸ். ரவிக்குமாரின் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட படையப்பா திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தமையால் நேரக்குறைவுகாரணமாக ஒத்துக்கொள்ளவில்லை. இது பின்னர் அர்ஜூன் கதாநாயகனாக நடித்த முதல்வன் திரைப்படமாக ஆக வெளிவந்தது. இத்திரைபடத்தை அடுத்து பாய்ஸ், அந்நியன் திரைப்படங்கள் வெளிவந்து பெருவெற்றி பெற்றது. நடிகர்களான சிரஞ்சீவி, சல்மான் கான் மற்றும் விஜய் இவரது வழிகாட்டிலில் நடிக்க விருப்பத்தை தெரிவித்திருந்தாலும் அவரசப்பட்டு எந்த ஒரு திரைப்படத்திலும் ஒப்பமிட்டு துவக்கவில்லை. + +அக்டோபர் 2005 இல் தமிழ் சினிமாவில் மிகப்பழையதும் பெரியதுமான ஏவிஎம் புரொடக்ஷனை நடத்திவரும் எம். எஸ். குகன் மற்றும் எம். சரவணன் சங்கரை அணுகிப் படமொன்றை தங்களின் ஸ்ரூடியோவில் தயாரித்துத் தரும்படி கேட்டபோது சங்கர் அதற்கு ஒப்புக் கொண்டார். இந்தப் படத்தில் இந்திய சினிமாவில் மிக அதிகமாக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டார் இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்பமிட்டுச் சம்மதித்தார். தமிழ் சினிமாவில் சந்திரமுகி வெற்றியடைந்ததை அடுத்து சினிமா வாய்ப்புக்கள் கிடைத்தபோதிலும் அதை ஏற்றுக் கொண்டு நடிக்கவில்லை. சிவாஜி ராவ் கெய்க்வாட் கே. பாலசந்தர் திரையுலகில் அறிமுகம் செய்தபோது ரஜினிகாந்த் என அறிமுகப்படுத்தினார். இவரது இயற்பெயராகும் இதனையும் தி பாஸ் என்பதையும் சேர்து சிவாஜி தி பாஸ் என்றவாறு திரைப்படத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது. + +சிவாஜி: த பாஸ் திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஏப்ரல் 2, 2007ல் இவற்றின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு ஒரு சில நாட்கள் முன்னரே இப்பாடல்கள் இணையத்தில் திருட்டுத்தனமாகப் பதிவிறக்கக் கிடைத்தது. + + + + + +அமர்க்களம் (திரைப்படம்) + +அமர்க்களம் () என்ற திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் அஜித் குமார், சாலினி, ரகுவரன், நாசர் மற்றும் பலர் நடித்திருந்தனர். + +இத்திரைப்படத்தில் ஷாலினியுடன் நடித்த அஜித், பின்னர் ஷாலினியைக் காதல் செய்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. + +ஆரம்ப காலங்களில் கொலைகள், சண்டைகள் எனப் புரியும் அஜித் ரகுவரனால் தனது சொந்த மகளான ஷாலினியைக் கடத்தி செல்லுமாறு கேட்கின்றார். ஆனால் அவள் தனது சொந்த மகள் என்பதனைத் தெரிந்து கொள்ளாது பழைய பகையினைத் தீர்ப்பதாக எண்ணி அவளைக் கடத்திச் சென்று காதலிப்பதாக நடிக்கும்படி கேட்டுக் கொள்கின்றார். அவர் கூறியபடியே கடத்திச் செல்லும் அஜித் பின்னர் ஷாலினியினினால் நல்லவனாக மாற்றம் பெற்று அவள் மீது காதலும் கொள்கின்றார். + + + + +விருமாண்டி + +விருமாண்டி 2004ல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும். இதனை கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அபிராமி, பசுபதி, நெப்போலியன் போன்றவர்கள் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் தெலுங்கில் போதுராஜூ என்ற பெயரில் வெளிவந்தது. +இத்திரைப்படம் தென்கொரியாவில் நடைபெற்ற உலக திரைப்பட விழாவில் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆசிய திரைப்படம் என்ற விருதைப் பெற்றது. இத்திரைப்படம் ரஷோமோன் விளைவு என்றொரு திரைக்கதை வழியை இப்படம் கையாண்டது. கதையின் நாயகன் விருமாண்டியும், கொத்தாள தேவரும் சிறையில் அட���க்கப்பட்டிருக்கிறார்கள். மரணதண்டனைக் கைதிகள் குறித்து ஆவணப் படமெடுக்க வருகின்ற ஏஞ்சலியா காட்டமுத்து, இவர்களிடம் நடந்ததை குறித்து கேட்டு பதிவு செய்கிறார். அதன் படி, கொத்தாள தேவர் முதலில் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை விவரித்தும், அதன் பின் நாயகன் விருமாண்டி விவரிப்பதும் கதையாக அமைந்தது. இதில் மரணதண்டனை தேவையில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. + +வசுல்ரீதியாக வெற்றி பெற்றாலும்., சாதி அரசியல், மரணதண்டனை போன்ற விவாதப் பொருட்களால் இப்படம் நிறைய விமர்சனங்களை சந்தித்தது. + + +கிராமப்படம் + +விருமாண்டி (கமலஹாசன்) மற்றும் அவருக்கு நெருக்கமான பங்காளிகளான கொத்தலத் தேவர் பசுபதி மற்றும் நல்லம்ம நாயக்கர் நெப்போலியன் ஆரம்ப காலங்களில் நட்புடன் இருந்து வந்தனர். அவர்களுள் கொத்தலத் தேவர் விருமாண்டிக்கு சொந்தமான நிலச்சொத்துக்களை தானே அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையினால் விருமாண்டியின் மனைவியையும் அவரது பங்காளியினையும் கொலை செய்கின்றார். இதனை அவர் சிறையில் வேறு விதமாக தொலைக்காட்சிப் பேட்டியாளரிடம் கூறுகிறார். இத்திரைப்படத்தின் சிறப்பம்சம் திரைக்கதையாகும். விருமாண்டியின் பார்வையிலும் அவரது எதிரியின் பார்வையிலும் திரைக்கதை நகர்வது மேலும் திரைப்படத்தில் விறுவிறுப்பை கூட்டுகின்றன. + +இப்படத்தின் பெயராக "சண்டியர்" என்பது தெரிவு செய்யப்பட்டு விளம்பரங்கள் வெளிவந்தன. புதிய தமிழகம் என்றொரு கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இத்தலைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இப்படம் சாதியின் பெயரால் எடுக்கப்படுகிறது, இப்படம் வெளிவந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரட்சனை உண்டாகும் என்பது அவரது கருத்து. இதனால் தேனி மாவட்டத்தில் இப்படபிடிப்பு நிறுத்தப்பட்டது. இதற்கு பாதுகாப்பு மற்றும் அனுமதி வழங்கப்படவில்லை. அதன் பிறகு தமிழக முதல்வரை கமலஹாசன் நேரடியாக சந்தித்து விளக்கம் கொடுத்தார். அங்கு இரு தரப்புக்கும் ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் விருமாண்டி என்ற கதைநாயகனின் பெயரே திரைப்படத்திற்கு வைக்கப்பட்டது. + +இந்த பெயர் சர்ச்சையால் மன உலைச்சலுக்கு ஆளான கமலஹாசன் ஒரு காணொளியைப் பதிவு செய்து வெளியிட்டார். அதில் தமிழக கலாச்சாரத்தினைப் பற்றியும், சமூகத்தில் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான அரசியல் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். + + + + +ஈரான் – ஈராக் போர் + +ஈரான் – ஈராக் போர் ஈரானை ஈராக் செப்டம்பர் 1980 ல் ஆக்கிரமித்தபோது ஆரம்பமாகியது. இது ஆகஸ்ட் 1988 ல் ஐக்கிய நாடுகள் சபையின் அனுசரணையுடன் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த யுத்தம் 20ஆம் நூற்றாண்டின் மிக நீண்டதும் கடும் அழிவுகளை ஏற்படுத்திய போர்களில் ஒன்றாகும். இதன் போது சுமார் ஒரு மில்லியன் அளவான நபர்கள் காயமடைந்தோ கொல்லப்பட்டோ யுத்தத்தினால் பாதிக்கப்பட்டனர். இந்த போர் முடிவுக்கு வந்துள்ள போதிலும் யுத்தத்திற்கான அடிப்படை காரணிகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. + +ஈரான் – ஈராக் இடையிலான எல்லைக் கோடு பல நூற்றாண்டு காலமாகவே சர்ச்சைக்குரியதாகவே இருந்து வந்துள்ளது. 1534 ல் தற்போதைய ஈராக்கை ஒட்டமான் பேரரசு ஆக்கிரமித்த பின்பு சாம்ராஜ்ஜியத்தின் கிழக்குப் பிராந்தியமாக ஈராக் மாறியது. இதன்போது ஈரான் இதன் போது கிழக்குப் பகுதியில் ஈராக்கின் எதிரியாக அமைந்தது. முதலாம் உலக யுத்தத்தின் பின்னர் ஈராக் தனி சுதந்திர நாடு ஆகியது. இதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையில் எல்லை சம்பந்தமான இணக்கமின்மை ஏற்பட்டது. 1937 ல் ஏற்பட்ட உடன்படிக்கையின்படி சர்ச்சைக்குரிய ஷாட் அல் அரப் பிரதேசம் ஈராக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. + +எல்லைத் தகராறுக்கு அப்பால் இரு நாடுகளும் தொடர்ந்தும் முறுகல் நிலையிலேயே இருந்தன. காரணம் ஈராக் அரேபியர்களை கொண்ட நாடாக இருக்கின்ற வேளையில் ஈரான் பாரசீகர்களைக் கொண்ட நாடாக இருந்தது. வடக்கே எல்லைப் புறத்தில் குர்து மக்கள் (இவர்கள் அரேபியரோ பாரசீகரோ அல்லர்) இன மக்கள் எல்லையின் இருபுறமும் இரு நாட்டினுள்ளும் வாழ்கின்றனர். அயோத்துல்லா றுகொல்லா கொமேனி போன் ஈரானில் இருந்து நாடுகடத்தப் பட்டவர்கள் ஈராக்கில் குடியேறியமையும் இந்த நாடுகளின் உறவில் விரிசலை ஏற்படுத்தயது. + + + + +சர்வதேச இசை வகைகள் + +சர்வதேச இசை வகைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன: + +மெல்லிசையில் ஒற்றை சுவரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாய் ஒரு முறையை அனுசரித்து வரும். பாலிபோனி இசையில் ஒரு முறையை தழுவி அமைக்கப்பட்டுள்ள பல கீதங்கள் ஒரே தருணத்தில் வாசிக்கப்படும். ஹ��ர்மனிக்கல் இசையில் சுவரத்தொகுதிகள் அல்லது சுவர அடுக்குகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாய் வரும். அதாவது ஒரு சுவரத்தை வாசிக்கும் போதே அதன் இணை, நட்பு சுவரங்கள் கூடவே வாசிக்கப்படும். + +இந்தியா முதலிய கீழ்நாட்டுப் பகுதிகளில் மெல்லிசையைக் கேட்கலாம். ஐரோப்பிய நாகரிகம் பரவியுள்ள மற்றைய தேசங்களிலும் பாலிபோனி, ஹார்மனிக்கல் இசையைக் கேட்கலாம். + +இந்திய இசையை ராக சங்கீதம் எனக்கூறுவர். ராக சங்கீதத்திலுள்ள நுண்மையான சுருதிகள், கமகங்கள் முதலிய இசைத் தத்துவங்களை மேற்கத்திய இசையில் காணமுடியாது. + + + + +மாயாமாளவகௌளை + +மாயாமாளவகௌளை என்பது கருணை, பக்தி ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் இராகம் ஆகும். கருநாடக இசையின் 15 வது மேளகர்த்தா எப்போதும் பாடத்தகுந்த இராகம். இந்துஸ்தானி இசையில் இதற்கு "பைரவ தாட்" எனப் பெயர். + + + +மாயாமாளவகௌளையின் ஜன்ய இராகங்கள் இவை. + +மாயாமாளவகௌளை இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள் இவை. + + + + + + +ஆசிரியர் நாள் + +ஆசிரியர் நாள் என்பது கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் பல்வேறு நாடுகளில் பல்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் விடுமுறை நாளாகவும், பிற நாடுகளில் பணி நாளாகவும் உள்ளது. + +இந்தியாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் முனைவர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாள் ஆசிரியர்கள் நாளாகக் கொண்டாடப்படுகிறது. ஓர் ஆசிரியரான அவர், தனது நண்பர்களும் மாணாக்கரும் தனது பிறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என விரும்பியபோது, அந்நாளை ஆசிரியர் நாளாகக் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுத்தார். 2014 இல் இந்நாளை பெயர் மாற்றம் செய்து, "குரு உத்சவ்" என்று கொண்டாட வேண்டுமென மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிக்கை வெளியிட்டது. ஆனால் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அந்நாளுக்குரிய கட்டுரைப் போட்டிக்கே அப்பெயர் இடப்பட்டுள்ளதாகவும் நடுவண் கல்வி அமைச்சர் விளக்கம் தெரிவித்தார். + + + + + +காட்மாண்டு + +காத்மாண்டு அல்லது காட்மாண்டூ (நேபாள மொழி:काठमाडौं, நேபாள் பாசா:यें) நேபாளத்தின் தலைநகரமாகும். இது மத்திய நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் பாக்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. நேபாள நாட்டில் உள்ள நான்கு உலகப் பாரம்பரியக் களங்களில் காத்மாண்டு சமவெளியும் ஒன்றாக உள்ளது. + +காத்மாண்டு சமவெளியில் கிமு 900 முதலே மனிதக் குடியிருப்புகள் இருந்து வந்துள்ளன, இங்கு கிடைத்துள்ள தொல் பொருட்கள் கிறித்துவுக்கு முன் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவையாகும். இங்கு கிடைத்துள்ள மிகப்பழைய எழுத்துப் பதிவுகள் கிபி 185 ஐச் சேர்ந்தவையாகும். கௌதம புத்தர் தமது சீடருடன் கிமு 6வது நூற்றாண்டளவில் சில காலம் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது ஆனாலும் இதற்கு ஆதாரங்கள் இல்லை. + +காத்மாண்டு சமவெளியில் அமைந்த ஏழு பண்பாட்டு உலக பாரம்பரியக் களங்கள்;. + + +ஏப்ரல் - மே 2015 நிலநடுக்கத்தில் காத்மாண்டு நகரம் மிகவும் சேதமடைந்தது. எண்ணற்ற மனித உயிர்களை கொள்ளை கொண்டது. தொன்மை மிக்க கட்டிடங்களையும், வழிபாட்டுத் தலங்களும் சேதமடைந்தது. + + + + +செப்டம்பர் 5 + + + + + + + +கிழக்குத் திமோர் + +கிழக்குத் திமோர் ("East Timor", , தேதுனம்: Timór Lorosa'e, ), அல்லது திமோர்-லெசுடே மக்களாட்சிக் குடியரசு ("Democratic Republic of Timor-Leste", ) என்பது தென் கிழக்கு ஆசியாவில் திமோர் தீவின் கிழக்குப் பகுதியிலும் அருகாமையில் உள்ள அதௌரு தீவுகளிலும் இந்தோனேசியாவின் மேற்குத் திமோரின் கிழக்கு பகுதியில் உள்ள நாடாகும். இது அவுஸ்திரேலியா வின் டார்வின் நகருக்கு வடமேற்குத் திசையில் 400 மைல் தொலைவில் அமைந்துள்ளது. + +திமோர் என்பது "திமூர்" என்ற கிழக்கு என்ற பொருளுடைய மலேசிய மற்றும் இந்தோனேசிய மொழி பதத்தில் இருந்து தோன்றியதாகும் பின்னர் போர்த்துகேய மொழியில் திமோர் என மாற்றமடைந்தது. போர்த்துகேயரால் திமோர் காலனித்துவப் பகுதியாகக் காணப்பட்ட போது போர்த்துக்கேயத் திமோர் எனவும் இப்பகுதி அழைக்கப்பட்டு வந்தது. திமோர்-லேசுடே என்ற பெயரே பன்னாட்டளவில் பயன்படுத்தப்பட வேண்டும் என அந்நாட்டின் அரசு கோருவதுண்டு. + +21 ஆம் நூற்றாண்டில் உருவான முதலாவது புதிய நாடாக2002 மே 20 இல் உருவான கிழக்கு திமோர், பிலிப்பீன்சுடன் கத்தோலிக்கப் பெரும்பான்மையைக் கொண்ட இரண்டு ஆசிய நாடுகளில் ஒன்றாகும். + + + + +டிசம்பர் 27 + + + + + + +லெப்டினன்ட் சங்கர் + +செ. சத்தியநாதன் (சூன் 19, 1960 - நவம்பர் 27, 1982; கம்பர் மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்) என்ற இயற்பெயரை கொண்ட சங்கர் ஈழப்போராட்டத்தில் மரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் போராளியாவார். இவர் இறந்த நாளையே மாவீரர் நாளாக அறிவித்து ஒவ்வோராண்டும் அனைத்து இறந்த போராளிகளும் விடுதலைப் புலிகளால் நினைவு கூரப்படுகின்றார்கள். இவர் இறந்தது 27-11-1982 அன்று மாலை 6.05 ஆகும். + + + + + + +செப்டம்பர் 6 + + + + + + + +வர்க்கம் + +வர்க்கம் என்ற தலைப்பில் இத்தளத்தில் அமைந்துள்ள கட்டுரைகள் பின்வருமாறு: + + + + + +குவாம் + +குவாம் ("Guam", ; சமோரோ: Guåhån) என்பது மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவின் உள்முகப்படுத்தப்படாத ஆட்சிக்குட்பட்ட ஐந்து பிரதேசங்களில் ஒன்றாகும். + +இத்தீவின் தலைநகர் அகாத்னா ஆகும். மக்கள் அடர்த்தி அதிகமான நகரம் டெடேடோ ஆகும். 2017 கணக்கெடுப்பின்படி, குவாமில் 162,742 பேர் வசிக்கின்றனர். குவாம் மக்கள் பிறப்பினால் அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர்கள். குவாமின் மொத்தப் பரப்பளவு 210 சதுர மைல் (544 கிமீ). மக்கள்தொகை அடர்த்தி 770/சதுரமைல் (297/சகிமீ). ஓசியானியாவில் அமைந்துள்ள இத்தீவு, மரியானா தீவுகளில் அமைந்துள்ள தீவுகளில் மிகவும் பெரியதும், மைக்குரோனீசியாவில் உள்ள மிகப்பெரும் தீவும் ஆகும். இத்தீவின் மிக உயர்ந்த புள்ளி லாம்லாம் மலை ஆகும். இதன் உயரம் கடல்மட்டத்தில் இருந்து 406 மீட்டர்கள் ஆகும். + +இத்தீவின் ஆதிகுடிகளான சமோரோக்கள் கிமு 2000 ஆம் ஆண்டுகளில் இங்கு குடியேறினர். போர்த்துக்கீச நாடுகாண் பயணி பெர்டினென்ட் மகலன் 1521 மார்ச் 6 இல் இங்கு முதன் முதலில் வந்திறங்கிய முதலாவது ஐரோப்பியர் ஆவார். 1668 இல் எசுப்பானியர்கள் குடியேறினர். எசுப்பானியக் கத்தோலிக்க மதப்பரப்புனர் தியேகோ லூயிசு டி சான் விட்டோரெசு என்பவரே முதலில் இங்குவந்தார். 16-ஆம் நூற்றாண்டிற்கும், 18-ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் எசுப்பானிய மணிலா வணிகர்கள் இங்கு வந்து தங்கிச் செல்லும் இடமாக இருந்தது வந்தது. எசுப்பானிய அமெரிக்கப் போர்க் காலத்தில், ஐக்கிய அமெரிக்கா 1898 சூன் 21 இல��� குவாமை எசுப்பானியர்களிடம் இருந்து கைப்பற்றியது. 1898 பாரிசு உடன்படிக்கையின் படி, 1998 திசம்பர் 10 இல் எசுப்பானியா குவாமை அமெரிக்காவுக்குத் தந்தது. ஐக்கிய நாடுகள் அவையின் 17 சுய-ஆட்சியற்ற பிராந்தியங்களில் குவாமும் ஒன்றாகும். + +இரண்டாம் உலகப் போருக்கு முன்னர், குவாம், அமெரிக்க சமோவா, ஹவாய், வேக் தீவு, பிலிப்பீன்சு ஆகிய ஐந்து பிரதேசங்களும் பசிபிக் பெருங்கடலில் அமைந்திருந்த அமெரிக்க ஆட்சிக்குட்பட்ட பிரதேசங்களாக இருந்தன. 1941 திசம்பர் 7 இல், பேர்ள் துறைமுகத் தாக்குதல் நடந்த சில மணி நேரத்தின் பின்னர், குவாம் சப்பானியரால் கைப்பற்றப்பட்டது. சப்பான் இரண்டரை ஆண்டுகள் குவாமைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சப்பானியரின் ஆட்சிக் காலத்தில் குவாம் மக்கள் சப்பானியர்களிடம் இருந்து பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாகியிருந்தனர். பலர் கொல்லப்பட்டனர். மேலும் கட்டாயவேலை, பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 1944 சூலை 21 இல் அமஎரிக்கா குவாமை மீண்டும் கைப்பற்றியது. 1960கள் முதல், குவாமின் பொருளாதாரம் சுற்றுலாத்துறையிலும், அமெரிக்கப் படைத்தளங்களிலும் தங்கியுள்ளது. + +குவாம், மற்றும் வடக்கு மரியானா தீவுகளின் ஆரம்பகால குடியேறிகள் தென்கிழக்காசியாவில் இருந்து கிமு 2000 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரனேசிய மக்கள் என நம்பப்படுகிறது. இவர்களே தற்போதைய சமோரோ மக்கள் என இனங்காணப்படுகின்றனர். + +பண்டைய சமோரோ சமூகத்தில் நான்கு பிரிவினர் இருந்தனர்: "சமோரி" (தலைவர்கள்), "மட்டுவா" (மேல்குடி), "அச்சோட்" (நடு வகுப்பு), "மனாச்சங்கு" (கீழ்ப்பிரிவு) ஆகியோர். "மட்டுவா" என்ற மேல்குடியினர் மீன்பிடி வளங்கள் நிறைந்த கரையோரப் பகுதிகளில் வாழ்ந்தனர். கீழ்ப்பிரிவினர் குவாமின் உட்பகுதிகளில் வாழ்ந்தனர். இவர்களை விட மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றோர் ""மக்கானா"" என அழைக்கப்பட்டனர். குவாம் சமூகம் தாய்வழி வம்சத்தைக் கொண்டவர்கள். + + + + + +நெட்டாண்டு + +நெட்டாண்டு என்பது பருவ மற்றும் வானவியல் ஆண்டுடன் நாட்காட்டியை ஒருமுகப்படுத்தும் நோக்கில் கூடுதலாக ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கொண்ட ஆண்டாகும். எடுத்துக்காட்டாக பிப்ரவரி மாதத்தில் 28 நாட்களுக்குப் பதில் 29 நாட்கள் வரும் ஆண்டை குறிப்பிடலாம���. பருவங்களும் வானவியல் நிகழ்வுகளும் சரியாக ஒரே நாள் இடைவெளியில் நடைபெறுவதில்லை. எனவே, ஒரே அளவு நாட்களைக் கொண்ட நாட்காட்டி, காலப்போக்கில் அது நடக்கவேண்டிய பருவத்தில் இருந்து நகரும். இந்த நகர்வை ஓர் ஆண்டின் ஒரு நாளையோ கிழமையையோ மாதத்தையோ கூடுதலாக இணைப்பதன் மூலமாக சரிசெய்யலாம். நெட்டாண்டு அற்ற ஒரு வருடம் சாதாரண வருடம் என அழைக்கப்படுகிறது. + +இன்று பரவலாக பயன்பாட்டில் உள்ள கிரெகொரியின் நாட்காட்டியானது பிப்ரவரி மாதத்துக்கு கூடுதலான 29வது நாளை, நான்கால் வகுக்கப்படும் எண்ணிக்கையிலான ஆண்டுகளுக்கு சேர்க்கின்றது. எவ்வாறெனினும் நூற்றாண்டு ஆண்டுகளில் 400 ஆல் வகுக்கப்படும் ஆண்டுகளுக்கு மட்டுமே இது சேர்க்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, 1600, 2000 என்பன நெட்டாண்டுகளான அதேசமயம் 1700, 1800, 1900 என்பன நெட்டாண்டுகளில்லை. + +இதற்கான காரணம் வருமாறு: + +கிரெகோரியின் நாட்காட்டியானது இளவேனிற் சம இராப்பகல் நாள் மார்ச் 21 க்கு அருகாமையில் வருமாறு வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மூலம் உயிர்த்த ஞாயிறு நாளானது (மார்ச் 21 அல்லது அதற்கருகில் வரும் சந்திரனின் 14வது நாளுக்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடப்படும்) இளவேனிற் சம இராப்பகல் நாள் சார்பாக்க சரியாக இருக்கும். + +சம இராப்பகல் நாள் ஆண்டானது தற்சமயம் சுமார் 365.242375 நாள் நீளமானது. கிரெகோரியின் நெட்டாண்டு விதியானது சராசரி ஆண்டுக்கு 365.2425 நாட்களை கொடுக்கிறது. 0.0001 சற்று மிகையான கூடுதல் சேர்ப்பு காரணமாக 8000 ஆண்டுகளில் நாட்காட்டியானது ஒரு நாள் பிந்தி காணப்படும். ஆனால் 8000 வருடங்களில் சம இராப்பகல் நாள் வருடமானது முன்மொழியப்படமுடியாத அளவினால் சிறியதாக காணப்படும். எனவே கிரெகோரியின் நாட்காட்டி போதுமான அளவு துல்லியம் கொண்டுள்ளது. + +HAARIPRIYA MURUGAS + + + + +துடிப்பண்டம் + +துடிப்பண்டம் ("quasar", "QUASi-stellAR radio source") அல்லது பகுதி உடுக்கணக் கதிர்வீச்சு வாயில் என்பது விண்வெளியில் அமைந்திருக்கும் ஒளி உட்பட மின்காந்தக் கதிர்வீச்சு ஆற்றலை உமிழும் மிகப்பெரும் கதிர்வீச்சு வாயில் ஆகும். ஒரு துடிப்பண்டத்திலிருந்து உமிழும் ஆற்றல் பேரளவு பொலிவுள்ள விண்மீன்கள், ஏன்? பல நூறு அண்டங்களின் கூட்டு ஆற்றலை மீறும்! தொலைநோக்கியில் ஒரு துடிப்பண்டம் ஒரு புள்ளி ஒளிவாயில் ப��ல் தென்படும். துடிப்பண்டங்கள் அதிக சிவப்புப் பெயர்ச்சியைக் ("red shift") கொண்டவை. இந்தச் சிவப்புப்பெயர்ச்சிக்கு துடிப்பண்டங்களின் நெடுந்தொலைவே காரணம் என கருதப்படுகிறது. + + + + + +விதுரன் + +விதுரன் அஸ்தினாபுரத்தின் அரசிகளான அம்பிகா, அம்பாலிகா ஆகியோரின் பணிப்பெண்ணின் மகன் ஆவார். இவர் வியாசருக்கும் அப்பணிப்பெண்ணுக்கும் பிறந்தவர். இவர் திருதராஷ்டிரனுக்கும் பாண்டுவுக்கும் சகோதரன் முறை ஆவார். விதுரன் திருதராஷ்டிரனுக்கும் அமைச்சராக இருந்தார்.இவர் எம தர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். + +ஆணி மாண்டவ்யரின் ஆசிரமத்தில் ஒரு முறை திருடர் கூட்டம் ஒன்று ஒளிந்திருந்தது, அப்போது மாண்டவ்யர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். திருடர்கள் ஒளிந்திருந்தது அவருக்குத் தெரியாது, மன்னனின் பாதுகாவலர்கள் திருடர்களை கண்டுபிடித்தனர். திருடர்களுக்கு உதவியதாக மாண்டவ்யரை சித்ரவதை செய்தனர், பின் அவர் முன் எமன் தோன்றிய போது எவருக்கும் தீங்கு நினைக்காத தனக்கு நேர்ந்த துன்பத்திற்கு விளக்கம் கேட்டார். ஆமாம் நீ சிறுவயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய் அதற்கு பலன்தான் இது என்றார் எமன். அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது அநியாயம் என்றார் மாண்டவ்யர். அதுதான் கர்ம வினைப்பயன் என்றார் எமன். மாண்டவ்யர் கோபம் கொண்டு எமனை பார்த்து நீ பூவுலகில் பிறப்பாய் அரசகுலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாக இருப்பாய் என சாபம் கொடுத்தார். + +கௌரவர்கள் அனைவரும் திருமணம் செய்துகொண்டு,வரும் மருமகள்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்தால் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் அதனால் பாண்டுவின் மனைவிக்கும் அவள் மகன்களுக்கும் தனியாக ஓர் அரண்மனை கட்டிக் கொடுத்துவிடுவது நல்லது என்று திருதராஷ்டிரனிடம் விதுரன் கூறினார்.திருதராஷ்டிரன் சம்மதிக்கவே வாரணாவதத்தில் தனியாக ஒரு மாளிகை கட்ட உத்திரவிடப்பட்டது.கட்டிமுடித்த அந்த மாளிகையை விதுரன் பார்வையிட்ட போது அதிர்ச்சியடைந்தார்.அது முழுக்க முழுக்க அரக்கால் கட்டப்பட்டிருந்தது,பயன்படுத்தப்பட்டிருந்த பொருட்கள் எல்லாமே எளிதில் தீப்பற்றக்கூடியவையாக இருந்தது. + +விதுரர் குந்தியிடம் சென்று என் சகோதரன் உன்னை���ும்,உன் பிள்ளைகளையும் கொல்லத்திட்டமிட்டிருக்கிறான்.உங்களுக்கு ஒரு மாளிகையைப் பரிசாகத் தரப்போகிறான்,அதை நீங்கள் ஏற்க மறுக்க முடியாது. நீங்கள் அந்த மாளிகைக்குள் புகுந்ததும் உங்களை எரித்துவிடத் திட்டமிட்டுள்ளான்.ஆனால் நீங்கள் பயப்பட வேண்டாம்,நீங்கள் பத்திரமாக தப்பிப்பதற்கு மாளிகைக்கு கீழே நான் ஒரு சுரங்கப்பாதை அமைத்திருக்கிறேன்.சுரங்கப் பாதை வழியில் போனால் காட்டுக்குள் போய் விட்டுவிடும்,கௌரவர்களுக்கு சந்தேகம் வராமல் இருப்பதற்காக மாளிகைக்கு போவதை ஏற்றுக் கொண்டு மாளிகைக்குள் சென்று சுரங்கப்காதை வழியாக தப்பிச் சென்றுவிடுங்கள்.நீங்கள் திரும்பி வரும்போது நியாயம் உங்கள் பக்கம் இருக்கும்,பிறகு உங்கள் மகன்களுக்கு உரிமையோடு ஆட்சியைப் பெறமுடியும் என்று கூறினார். + +மாளிகை பாண்டவர்களுக்குக் கொடுக்கப்பட்டது,தாயும் மகன்களும் அதில் குடிபுகுந்தனர்,விதுரன் எச்சரித்தபடி அன்று இரவே மாளிகைக்கு தீவைக்கப்பட்டு, மாளிகை முழுதும் எரியத்தொடங்கியது.தாயுடன் பாண்டவர்கள் எந்த காயமுமின்றி சுரங்கப்பாதை வழியே தப்பினர்,குடும்பங்களின் சண்டை இன்னும் வலுத்தது.தீ அனைந்ததும் எரிந்து போன ஒரு பெண்ணின் உடலும்,ஐந்து இளைஞர்களின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டது.அவை குந்தி மற்றும் பாண்டவர்களின் சடலங்கள் என்றே கருதினர், திருதராஷ்டிரன் அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தான்,காந்தாரியும்,துரியோதனனும்,துச்சாதனனும் கூட கண்ணீர் விட்டனர். துரோணரும்,பீஷ்மரும் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுதார்கள். விதுரன் வருத்தப்படுவது போல் பாசாங்கு செய்தார், அவருக்கு தெரியும் குந்திக்குப் பதிலாக ஆறுபேர் மயக்க மருந்து கொடுக்கப் பட்டு மாளிகைக்குள் விடப்பட்டார்கள்,அவர்களுடைய கருகிய உடல்களே அது என்று,இந்த பயங்கர சதி வேறு யாறுக்கு தெரியும் என்ற எண்ண ஓட்டத்துடனே விதுரன் இருந்தார். + + + + + +திருதராட்டிரன் + +திருதராட்டிரன் , மகாபாரதக் கதையில் வரும் அத்தினாபுரத்தின் மன்னனான விசித்திரவீரியனின் முதல் மனைவி அம்பிகாவின் மகன் ஆவார். இவர் ஒரு பிறவிக்குருடர். காந்தாரி இவரது மனைவி ஆவார். திருதராட்டிரனுக்கு காந்தாரி மூலம் நூறு மகன்களும், துச்சலை எனும் ஒரு மகளும், பணிப்பெண் மூலம் யுயுத்சு என்ற மகனும் பிறந்தனர். இவரது மகன்களே கௌரவர்கள், இவர்களில் மூத்தவர் துரியோதனன் ஆவர். திருதராட்டிரன், பாண்டு மற்றும் விதுரனின் மூத்த சகோதரர் ஆகவும், பஞ்சபாண்டவர்களின் பெரியப்பாவாகவும் விளங்கினார். காந்தார தேசத்தின் இளவரசனும் சகுனி, காந்தாரியின் சகோதரன் ஆவார். + +குருச்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் திருதராஷ்டிரனுக்கு நீதிகளை கூறும் போது, சாகாநிலை பற்றி கூறுகிறார் விதுரர். கெளவர்கள் போரில் இறவாநிலையை அடைய வேண்டும் எனும் திருதராஷ்டிரனின் ஆசையை நிறைவேற்ற விதுரர், சனத்குமாரரை வரவழைக்கிறார். சனத்குமாரர், சாகாநிலையை அடையும் வழிகள் குறித்து திருதராஷ்டிரனுக்கு உபதேசிக்கிறார். + + + + + +நிகழ்பட ஆட்டம் + +நிகழ்பட ஆட்டம் அல்லது நிகழ்பட விளையாட்டு என்பது கணினி மூலமும் பல நிகழ்பட விளையாட்டுகளிற்காக அமைக்கப்பெற்ற நிகழ்பட ஆட்ட இயந்திரங்கள் ஊடாகவும் விளையாடக் கூடிய விளையாட்டாகும். பெரும்பாலான நிகழ்பட விளையாட்டுகள் கணினியின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன. + +உலகின் முதன்முதலான நிகழ்பட விளையாட்டுகள் 1950 மற்றும் 60 களில் ஆஸிலோஸ்கோப்ஸ் என்னும் இயந்திரத்தில் இயக்கம் பெற்றது. +"நிகழ்பட ஆட்டம்" அதிகமாவதால் குழந்தைகளில் கண் பாதிப்பாவதோடு கல்வித்தரமும் குறைந்து போகிறது. தொடர்ந்து 22 நாட்கள் விளையாடிய ரஷ்யாவைச் செர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தான். + + + + +மேளகர்த்தா இராகங்களின் வரலாறு + +மேளகர்த்தா இராகங்களின் வரலாறு 1550 இல் "ராமாமாத்தியா" இயற்றிய சுவரமேளகலானிதி என்னும் நூலில் இருந்து தொடங்குகின்றது. ராமாமாத்தியா விசயநகரப் பேரரசில் அவைப் புலவராக இருந்த "கள்ளிநாதரின்" பேரர் எனக் கருதப்படுகின்றார் இவரே மேளகர்த்தா என்னும் முறைக்குத் தந்தை என்பார்கள். மேளம் என்பது முறைப்படி அடுக்கப்பட்ட கட்டமைப்பு என்னும் பொருள் கொண்டது. பின்னர் கோவிந்த தீட்சிதர் "சங்கீத சுதா" என்னும் நூலை ஆக்கினார். கடைசியாக கோவிந்த தீட்சதரின் மகன் "வேங்கடமகி", 17ம் நூற்றாண்டில் எழுதிய "சதுர்த்தண்டிப் பிரக்காசிகை" என்னும் நூலில்தான் தற்பொழுது பரவலாக அறியப்படும் மேளகர்த்தா இராகம் அமைப்பு கூறப்பட்டுள்ளது. அவருக்குப்பின் வாழ்ந்த "கோவிந்தாச்சாரியார்" என்பவர் இயற்றிய "சங்கிரக சூடாமணி" என்னும் நூலில் இருந்தும் மேளகர்த்தாக்களின் வரலாறு அறிய முடிகின்றது. + +72 மேளகர்த்தாக்களையும் மூன்று பிரிவுகளாக வெங்கடமகி பிரித்திருக்கிறார். தனது காலத்தில் பிரசித்தமாக இருந்த 19 மேள கர்த்தாக்களை "கல்பித மேளகர்த்தக்கள்" என்றும், மிகுதி 53 மேளகர்த்தாக்களில் சீக்கிரத்தில் பிரசித்திக்கு வரக்கூடியவற்றை "கல்ப்யமான மேளகர்த்தாக்கள்" என்றும், பிற்காலத்தில் பிரசித்திமாக வரக்கூடியவற்றை "கல்பயிஷ்யமான மேளகர்த்தாக்கள்" என்றும் பிரித்திருக்கிறார். + +அனைத்து மேளகர்த்தாக்களுக்கும் அவர் பெயர்கள் கொடுக்கவில்லை. 100 வருடங்களுக்கு பின் தஞ்சை துளசி மகாராஜாவினால் எழுதப்பட்ட சங்கீத சாராம்ருதம் எனும் விடயம் காணப்படுகிறதே தவிர 72 மேளகர்த்தாக்களுக்கு பெயர்கள் காணப்படவில்லை. கிரம, ஸம்பூர்ண, ஆரோகண, அவரோகண முறையுடன் கூடிய மேளங்களைக் குறிக்கும் கனகாங்கி - ரத்னாங்கி பெயர் தொகுதியானது சங்கீத சாராம்ருதத்திற்கு பிற்காலத்தில் ஏற்பட்டது. கோவிந்தாச்சாரியார் இயற்றிய சங்கிரக சூடாமணி எனும் சமஸ்கிருத இசை நூலில் முதன் முதலில் இப்பெயர்த் தொகுதியைக் காண்கிறோம். புராதன காலம் தொட்டு மேளத்துக்கும் அதற்குகந்த இராகத்திற்கும் ஏற்பட்டுள்ள நுட்பமான வித்தியாசத்தை இம்முறையில் காப்பாற்றப் பட்டிருப்பதால் தியாகராஜ சுவாமிகள் முதலிய மகான்கள் கனகாங்கி - ரத்னாங்கி கானமூர்த்த பத்ததியையே அனுசரித்தனர். + + + + +டிசம்பர் 28 + + + + + + + +டிசம்பர் 29 + + + + + + + +டிசம்பர் 30 + + + + + + + +பொருளாதார அமைப்புக்கள் + +பண்டங்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தி,பகிர்வு,மற்றும் நுகர்வு போன்றவை ஒர் குறிப்பிட்ட சமூகத்தில் நிர்வகிக்கபடும் விதத்தினை பொருளாதார அமைப்புக்கள் ("Economic systems") தீர்மானிக்கின்றன. + +பொருளாதார அமைப்புக்களானது கிடைப்பருமையான வளங்களின் ஒதுக்கீடு, பாவனை தொடர்பில் மக்களையும் உற்பத்தி நிறுவனங்களையும் இணைக்கின்றது. ஒவ்வொரு சமூக அமைப்பும், நாடுகளும் சில அடிப்படை பொருளியல் பிரச்சனைகளான "எதனை" ���ற்பத்தி செய்தல்?,"எவ்வாறு" உற்பத்தி செய்தல்?, "யாருக்காக" உற்பத்தி செய்தல்?, "எவ்வளவு" உற்பத்தி செய்தல்? போன்றவற்றிக்கு விடையளித்தல் அவசியமாகின்றது. எல்லா சமூகங்களிலும்,நாடுகளிலும் இப்பிரச்சனை பொதுவானது எனினும் அந்தந்த நாடுகள்,சமூகங்களில் இவற்றிக்கு விடையளிப்பதற்காக கடைப்பிடிக்கும் வழிமுறைகள்,சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார அமைப்புகள் வேறானவைகள் ஆகும். + +உலகில் பொதுவாக காணப்படுகின்ற பொருளியல் அமைப்புகளாவன: + + + + +டிசம்பர் 31 + + + + + + +1970 + +1970 (MCMLXX) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். + + + + + + + + + +செப்டம்பர் 7 + + + + + + + +சுரம் + +இந்திய இசையில் சுரம் அல்லது சுவரம் (சமற்கிருதம்: ஸ்வரம்) என்பது கேட்ட உடனேயே மனத்தை ஈர்க்கும் வண்ணம் இசைக்கப்படும் அளவோடு கூடிய ஒலியாகும். இது "கோவை" அல்லது "தாது" என்றும் அழைக்கப்படும். இயற்கையாகவே இனிமையைத் தருவது. சுருதி என்ற அடி நிலையிலிருந்தே சுரம் என்ற நாதப்படிகள் தோன்றியுள்ளன. இவைகள் இசைமுறைகளை விளக்கமாயும், தெளிவாய்ப் பாடவும், வாசிக்கவும் துணை புரிகின்றன. + +தேர்ந்து கூட்டும் சுரங்களில் இருந்து இராகங்கள் பிறக்கின்றன. ஒவ்வொரு இராகமும் அல்லது பண்ணும் சில குறிப்பிட்ட சுரங்களினால் அழகுணர்வுடன் பின்னப்பட்ட ஓர் அமைப்பாகும். + +இயற்கை ஒலிகள் ஏழாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை மிருகங்கள் மற்றும் பறவைகளின் குரல்களில் இருந்து இனம் காணப்பட்டது என்று இந்திய இசை நூல்கள் தெரிவிக்கின்றன. இவையே சங்கீதத்திற்கு ஆதாரமாயுள்ள சப்தசுரங்கள் ஆகும். + + +சப்தசுரங்கள் ஏழும் தனது இயற்கையான சுர நிலகளில் இருந்து சற்றே உயர்ந்தோ அல்லது தாழ்ந்தோ ஒலிக்கும் போது அவை அந்தந்த சுரங்களின் துணை சுரமாகின்றன. இவற்றை பிரகிருதி, விக்ருதி பேதங்கள் என்பார்கள். ஷட்ஜமம், பஞ்சமம் இரண்டும் பேதமில்லாதவை. மற்றைய ஐந்தும் பேதமுடையவை. இவற்றின் விபரங்களைக் கீழே காண்க. + +இவற்றுள் இயற்கையாக உள்ள சுரநிலைகள் பன்னிரண்டே ஆகும். சில சுரங்களை வேறு சுரங்களாக நினைத்துக் கொண்டு அதாவது அந்த ஸ்தானத்தில் பாடுதல் கருநாடக சுர வகைக்கு மட்டுமே உள்ள ஒரு சிறப்பு அம்சமாகும். + +அதாவது, + +1. ஷட்ஜம்: ரிஷபம் முதல் நிஷாதம் வரையிலுள்ள 6 ஸ்வரங்களையும் பிறப்பிக்க முன்னோடியாக இருப்பதால் முதல் சுரம் ஷட்ஜ்அம் எனப்பட்டது. (வடமொழியில், ஷட் - ஆறு) +2. ரிஷபம்: இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் ரிஷபம் பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது. +3. காந்தாரம்: காந்தர்வ சுகத்தைப் பிரதிபலிக்கும் தன்மை வாய்ந்ததால், மூன்றாம் சுரம் காந்தாரம் எனப்பட்டது. +4. மத்திமம்: ஏழு சுரங்களின் மத்திய நிலையை வகிப்பதால் நான்காம் சுரம் மத்திமம் எனப்பட்டது. +5. பஞ்சமம்: ஏழு சுரங்களின் வரிசையில் ஐந்தாம் இடத்தைப் பெறுவதால், ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து) +6. தைவதம்: தெய்வ சம்பந்தமானதாலும், தைரியத் தன்மையை அடைந்துள்ளதாலும் ஆறாம் சுரம் தைவதம் எனப்பட்டது. +7. நிஷாதம்: ஷட்ஜம் முதல் ஆறு சுரங்களும் தன்னிடம் கசரம் பெற்றதால், ஏழாவது சுரம் நிஷாதம் எனப்பட்டது. + +ஸா ரே க க க க க க க - க க ரே க ம - + +க - க க ரே - ரே ரே நி, ரே ஸா - + +ஸா ஸா ப - ப ப - ப ப ப ப - ப ம த ப ம + +ம ம - ம ம ம - ம க ரே ம க + +க - க க க - க ரே க ப ப - ம - ம - + +க - க க ரே ரே ரே ரே நி, ரே ஸா + +ஸா ரே க க க - க - ரே க ம - - - - - + +க ம ப ப ப - ம க ரே ம க - + +க - க - க ரே ரே ரே ரே நி, ரே ஸா - + +ஸா ஸா ப ப ப - ப ப ப - ப ப ம த ப ம + +ம - ம ம ம - ம க ரே ம க - + +ஸாஂ நி ஸாஂ - - - - - + +நி த நி - - - - - + +த ப த - - - - - + +ஸா ரே க க க க ரே க ம - - - - - + + + + +1969 + +1969 (MCMLXIX) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். + + + + + + + + + +கிடைப்பருமை + +எண்ணிலடங்காத தேவைகளை முழுமையாக நிறைவுசெய்ய முடியும் அளவிற்கு வளங்களானது போதியளவு காணப்படாமை பொருளியலில் கிடைப்பருமை அல்லது பற்றாக்குற்றை ("Scarcity") எனப்படும். +வேறுவிதமாக கருதினால் ஒரு குமுகத்தின் (சமூகத்தின்) இலக்குகள் யாவும் ஒரே சமயத்தினில் நிறைவு செய்யமுடியாது என்பதனைக் கிடைபருமை விளக்குகின்றது. ஆகவே ஒரு பண்டத்தினை உற்பத்தி செய்வதற்கு இன்னொரு பண்டத்தின் உற்பத்தியினை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கின்றது. +பொருளியலாளரான "லயனல் ராபின்சன்" என்பவர் கிடைப்பருமையின் முக்கியத்துவத்தினை உணர்ந்து பொருளியலுக்கு அளித்த வரைவிலக்கணம் பின்வ���ுமாறு: + +"மாற்றுப் பயன் உள்ள கிடைப்பருமையான வளங்களைக்கொண்டு தனது எண்ணிலடங்காத தேவைகளை நிறைவு செய்யும் மனித நடப்புகளை ஆராயும் அறிவியலே பொருளியலாகும்." + + + + +யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு + +பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், அதனை அழைப்பதற்கும், அடையாளம் காண்பதற்குமாகத் தனித்துவமான பெயர் ஒன்றை இடுவது உலகின் எல்லாச் சமுதாயங்களிலும் இருந்து வருகின்ற வழக்கம் ஆகும். பன்னெடுங்காலமாக நிலவி வருகின்ற இந்தப் பெயரிடும் வழக்கம், உலகம் முழுவதிலும் ஒரே விதமாக இருப்பதில்லை. இது தொடர்பாகச் சமுதாயங்களிடையே பல வேறுபாடான நடைமுறைகள் காணப்படுகின்றன. அத்துடன் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திலேயே காலப்போக்கில் ஏற்படுகின்ற சமூக, அரசியல் மற்றும் இன்னோரன்ன நிலைமைகளாலும், அவை தொடர்பான தேவைகளாலும், மக்கட்பெயர்கள் தொடர்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய மாற்றங்களும் அவற்றின் விளைவுகளும், அச் சமுதாயத்தின், உலக நோக்கு, பண்பாடு, அதன் வரலாறு சார்ந்த பல அம்சங்களின் வெளிப்பாடுகளாக அமைகின்றன. இத்தகைய ஒரு பின்னணியிலே, யாழ்ப்பாணத்து மக்கட்பெயர் மரபு பற்றி ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். + +இலங்கையிலே கிறீஸ்துவுக்கு முந்திய காலப் பகுதிகளிலேயே தமிழர்கள் வாழ்ந்து வந்ததற்கான சான்றுகள் இருக்கின்றன. அத்துடன் தமிழர்கள், சிங்களவர்களிடமிருந்து அனுராதபுரத்தின் ஆட்சியைக் கைப்பற்றி ஆண்ட நிகழ்வுகளும், கிறிஸ்துவுக்கு முன் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே நடந்து வந்திருக்கின்றன. எனினும் யாழ்ப்பாணப் பகுதியிலே, இன்றைய யாழ்ப்பாணச் சமுதாயத்தின் அடிப்படையாகத் தனித்துவமான சமுதாயக் கட்டமைப்பு ஒன்றின் உருவாக்கம், ஏறத்தாள, ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் ஆட்சியின் கீழ் அமைந்த யாழ்ப்பாண அரசின் தோற்றத்துடனேயே ஆரம்பமானது எனலாம். + +யாழ்ப்பாண அரசுக் காலப்பகுதியைப் பற்றிப் பேசுகின்ற கைலாயமாலை, வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களில் காணப்படுகின்ற மக்கட்பெயர்களில், அரசர்களினதும், அவர்கள் குடும்பத்தினர் சிலரதும் பெயர்கள் தவிர, யாழ்ப்பாண நாட்டின் பகுதிகளை நிர்வகிப்பதற்காக தமிழ் நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட சிலரது பெயர்களும் உள்ளன. யாழ்ப்பாணத்துப் பொது மக்களின் பெயர்கள் மிகவும் குறைவே. + +யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தின் முதல் மன்னனாகவிருந்த இளவரசன் பற்றிக் குறிப்பிடும்போது, யாழ்ப்பாண வரலாறு கூறும் நூல்களில் முந்தியதாகக் கருதப்படும் கைலாயமாலை, பின்வருமாறு கூறுகிறது. + +இதன்படி "பாண்டியன்" (செழிய சேகரன்) மகன் "செகராசன்" என்னும் "சிங்கை ஆரியன்" என்பதே அவனை அடையாளம் காட்டும் தகவல்கள். இதில், முதற்பகுதி தந்தையையும், அடுத்த பகுதி இடப்பட்ட பெயரையும் குறித்தது. மூன்றாம் பகுதி "சிங்கை". பிற்பகுதி, "ஆரியன்" என்பதாகும். "சிங்கை" என்பது "சிங்கபுரம்" அல்லது "சிங்கைநகர்" என்னும், இந்த அரச வம்சத்தவரோடு தொடர்புள்ள, இடப்பெயரைக் குறிக்கின்றது என்பதில் கருத்து வேறுபாடு கிடையாது எனினும், எங்கேயுள்ளது என்பது பற்றியும் அதனுடன் அவர்களுக்கு உள்ள தொடர்பின் தன்மை பற்றியும் ஒத்த கருத்து இல்லை. "ஆரியன்" என்பது இவர்கள் பிராமணர்கள் என்பதைக் குறிப்பதாகச் சிலரும், இவர்கள் கலிங்கத்து ஆரியர் இனத்தவர் என்பதைக் குறிப்பதாக வேறு சிலரும் கூறுகிறார்கள். + +ஒல்லாந்தர் காலத்து இறுதிப் பகுதியில் எழுதப்பட்ட வைபவமாலைப்படி, யாழ்ப்பாணத்து ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட அரசர்களில் 1460 க்கு முற்பட்டவர்களின் பெயர்கள் மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தன. இவற்றின் அமைப்பு பின்வருமாறு இருந்தது. + + +என்னும் பெயர்கள் எடுத்துக்காட்டுகள் ஆகும். இதன் பின் வந்த அரசர்களின் பெயர்களுடன் "சிங்கை ஆரியன்", அல்லது "சிங்கையாரியன்" என்ற பகுதி சேர்க்கப்படுவதில்லை. கனகசூரிய சிங்கையாரிய மன்னனுக்குப் பின்வந்த அவனது மகனான பரராசசேகரன் தன்பெயரைச் "சிங்கைப் பரராசசேகரன்" எனவும், தனது தம்பியின் பெயரைச் "சிங்கைச் செகராச சேகரன்" எனவும் மாற்றிக்கொண்டதாக வைபவமாலை கூறுகின்றது. ஆயினும், பரராசசேகரன், செகராசசேகரன் என்பன யாழ்ப்பாண மன்னர்கள் மாற்றி மாற்றி வைத்துக்கொண்ட அரியணைப் பெயர்கள் எனப் பின்வந்த ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பின்வந்த அரசர்களையும் இளவரசர்களையும் குறிப்பிடும்போது, வைபவமாலை, வெறுமனே அவர்கள் பெயர்களை மட்டுமே தருகின்றது. + +எடுத்துக்காட்டு: "பண்டாரம்", "பரநிருப சிங்கன்", "சங்கிலி" + +போத்துக்கீசரின் கட்டுப் பாட்டின் கீழ் அரசு புரிந்த யா��்ப்பாண அரசர்களின் பெயர்களும், போத்துக்கீசர் எழுதிய நூல்களில் , "எதிர்மன்னசிங்க குமாரன்" (Hendaramana Cinga Cumara), "பெரிய பிள்ளை", "குஞ்சி நயினார்", "சங்கிலி" என ஒற்றைப் பெயர்களாகவே குறிக்கப்பட்டுள்ளன. + +இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களாகக் குறிப்பிடப்படும் பகுதித் தலைவர்களின் பெயர்கள் பல முன் குறிப்பிட்ட யாழ்ப்பாண வரலாற்று நூல்களிலே காணப்படுகின்றன. இவர்கள் அனைவரதும் பெயர்கள் அக்காலத் தமிழ் நாட்டு வழக்கப்படியே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. இவர்களுள், "பாண்டி மழவன்", "செண்பக மாப்பாணன்" போன்ற சிலருடைய பெயர்களுடன் சாதிப்பெயர்கள் சேர்ந்துள்ளன. பெரும்பாலானவர்கள் ஒற்றைப் பெயராலேயே குறிக்கப்படுகின்றார்கள். எனினும், இவர்களது ஊர், சாதி முதலியன தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாகப் பேராயிரவன் என்பவனைப்பற்றிக் கூறும்போது, அவனது ஊர், சாதி என்பவற்றையும் குறித்து, + +என்கிறது கைலாயமாலை. + +சமூகப் படிநிலையில் கீழே போகப்போக, பெயர்கள் மேலும் எளிமையாவதைக் காணமுடிகின்றது. "சோதையன், தெல்லி, நாகன், நீலவன், நீலன்" போன்ற இவ்வாறான பல பெயர்கள் வையாபாடலிலே காணப்படுகின்றன. + +பொதுவாகத் தமிழர்களின் பெயர்களாக வழங்கியவை அவர்களுக்கு இடப்பட்ட பெயராகிய ஒற்றைப் பெயர்களேயாகும். வேறு பல சமூகத்தவர்களைப் போல் குடும்பப் பெயரோ, நடுப்பெயர், முதற் பெயர் போன்ற கூறுகளைக் கொண்ட பெயரிடல் முறைமையோ தமிழர்கள் மத்தியில் இருக்கவில்லை. ஐரோப்பிய இனத்தவரின் குடியேற்றவாத ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சில சூழ்நிலைகள் காரணமாக, முக்கியமாகச் சட்டம் சார்ந்த தேவைகளுக்காக ஐரோப்பியர் முறைமையைப் போன்ற, ஒரு முதற் பெயர், இறுதிப் பெயர் ஆகியவற்றைத் தழுவிய முறைகள் தமிழர் மத்தியில் புழக்கத்துக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். பொதுவாகத் தந்தையுடைய பெயரையும் சேர்த்துக்கொண்டு இரண்டு கூறுகளைக்கொண்ட பெயர் புழக்கத்துக்கு வந்தது. (எ.கா: "முத்துவேலு கருணாநிதி"). தமிழ் நாட்டில் ஊர்ப் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளும் வழக்கமும் உண்டு. (எ.கா: "சி. என். அண்ணாதுரை" - "காஞ்சிபுரம் (Conjeevaram) நடராஜன் (Natarajan) அண்ணாதுரை"). "அண்ணாமலைச் செட்டியார்", "முத்துராமலிங்கத் தேவர்" எனச் சாதிப் பெயர்களைச் சேர்த்துக்கொள்ளும் வழக்கமும் இருந்தது. + +யாழ்ப்பாணத்துப் பெயர்���ளைப் பார்க்கும்போது, அவற்றைச் சமய அடிப்படையில் வேறுபடுத்திப் பார்க்கலாம். இவை: +இப்பிரிவுகளைச் சார்ந்த பெயர்கள் அவற்றுக்குரிய தனித்துவமான இயல்புகளைக் கொண்டு அமைந்துள்ளன. + +ஐரோப்பியர் காலத் தேவைகளுக்கு ஏற்ப, ஒற்றைப் பெயரிடும் முறையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது, யாழ்ப்பாணத் தமிழர் மரபு, தமிழக வழக்கிலிருந்து ஓரளவு வேறுபட்டு அமைந்தது எனலாம். வேறுபடுகின்ற அம்சங்களில் முக்கியமானவையாகக் கருதப்படுபவை பின்வருமாறு: + +மிகப் பெரும்பான்மையான யாழ்ப்பாண இந்துக்களின் பெயர்கள் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கின்றன. ஒன்று குறிப்பிட்ட நபருக்கு வழங்கப்பட்ட பெயர், மற்றது அவரது தந்தையார் பெயர். ஆண்களைப் பொறுத்தவரை, பெயர்கள் பின்வரும் வடிவத்தில் அமைகின்றன. + +பொன்னம்பலம் என்பவருடைய மகன் கணேசன் எனில், கணேசனுடைய பெயர் பின்வரும் மூன்று வழிகளில் எழுதப்படுவதுண்டு. + + +முதலாவது, கணேசனுடைய முழுப்பெயர் எனப்படுகின்றது. முழுப்பெயர் தேவையில்லாதபோது தந்தையின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் சேர்த்து எழுதுவது வழக்கம். இதை இரண்டாவது பெயர் காட்டுகின்றது. தந்தையின் பெயரிலிலிருந்து ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களைச் சேர்த்து, மூன்றாவது எடுத்துக்காட்டில் காணப்படுவது போல் எழுதுவதும் உண்டு. ஆனால், மிகவும் குறைந்த அளவினரே இவ்வாறு எழுதுகிறார்கள். சிலர் தங்கள் பெயரில் மூன்றாவது கூறாகப் பாட்டன் பெயரையும் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. எடுத்துக்காட்டாகக் கணேசனின் பாட்டன் சின்னத்தம்பி எனின், கணேசனின் முழுப்பெயர் பின்வருமாறு எழுதப்படும். + +இதைச் சுருக்கமாகத் தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது கீழ்க்காணுமாறு அமையும். + +பெயர்கள், பாட்டன், தந்தை, மகன் என மரபுவழியின் இறங்கு வரிசையில் எழுதப் படுகின்றன. இது ஒரு பரவலாகக் கைக்கொள்ளப்படும் மரபு எனக் கொள்வதற்கில்லை. + +பெண்களுடைய பெயர்களில் சிறிது வேறுபாடு உண்டு. இங்கே தந்தையின் பெயரைத் தங்களுடைய பெயருக்கு முன் எழுதாமல், அதற்குப் பின்னர் எழுதுவது வழக்கம். இது பின்வருமாறு அமையும். + +ஆனாலும், தலைப்பு எழுத்துக்களுடன் எழுதும்போது யாழ்ப்பாணத்தில் பொதுவாகப் பெண்களும் தலைப்பு எழுத்தை ஆண்கள் எழுதுவது போல் தங்கள் பெயருக்கு முன்னால் இட்டே எழுதுவது வழக்கம். இவற்ற��விடத் தங்கள் சொந்தப் பெயர்களின் முதலெழுத்துடன் தந்தையின் பெயரைச் சேர்த்து எழுதும் வழக்கமும் உண்டு. மேலே கூறப்பட்ட வழிகளுக்கு எடுத்துக்காட்டாகப் பொன்னம்பலத்தின் மகள் சுந்தரியின் பெயர் எழுதப்படும் விதங்களைக் கீழே காண்க. + + +யாழ்ப்பாணத்தவர் பெரும்பாலும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள். இதனால் அவர்களுடைய பெயர்கள் பெரும்பாலும் சிவன், முருகன், பிள்ளையார், உமாதேவி, விஷ்ணு போன்ற கடவுளரின் பெயர்களையும், வேறு பல பரிவார தெய்வங்களின் பெயர்களையும், சமயப் பெரியார்களின் பெயர்களையும் குறிக்கின்றன. இவை தவிரச் சமயம் சாராத பொதுப் பெயர்களையும் காணமுடியும். + +யாழ்ப்பாணத்தில் காணும் இந்துப் பெயர்களில், தமிழ், வடமொழி, வேறு மொழிகள் என்பவற்றை இனங்காணமுடியும். சமயத் துறையில் சமஸ்கிருதச் செல்வாக்கு அதிகம் இருந்ததனால், கடவுட் பெயர்கள் பெரும்பாலும் அம் மொழியிலேயே இருக்கின்றன. அதனால் மக்கட் பெயரிலும் சமஸ்கிருதச் செல்வாக்கு அதிகம். எடுத்துக் காட்டாக, + +விநாயகமூர்த்தி, ஸ்ரீஸ்கந்தராஜா, பாஸ்கரன் போன்ற ஆண்களின் பெயர்களும், தனலட்சுமி, சரஸ்வதி, இராஜேஸ்வரி போன்ற பெண்களின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்களே. ஆனாலும் பல சந்தர்ப்பங்களில் இப்பெயர்களைத் தமிழ் மொழி மரபுக்கு ஏற்றபடி மாற்றிப் பயன்படுத்துவது உண்டு. இது எழுத்தில் மட்டும், பேச்சில் மட்டும் அல்லது இரண்டிலும் கைக்கொள்ளப்படுவது உண்டு. எடுத்துக்காட்டாக, ரத்னம் என்பதை இரத்தினம் என்று எழுதுவார்கள், பேச்சில் பெரும்பாலும் ரெத்தினம் அல்லது ரத்தினம் என்பது வழக்கம். ஆனால், சரஸ்வதி என்பதைப் பெரும்பாலும் அப்படியே எழுதினாலும் பேசும்பொழுது சரசுவதி என்ற பயன்பாட்டைக் காணலாம். கணேஷன் என்பது எழுத்திலும், பேச்சிலும் கணேசன் என்றே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ் நாட்டில் பரவலாகக் காணப்படுகின்ற கணேஷ், ராஜ், கார்த்திக், முருகேஷ் போன்ற பயன்பாடுகள் யாழ்ப்பாணத்தில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. + +ஒப்பீட்டளவில் தூய தமிழ்ப் பெயர்கள் குறைவு என்றே சொல்லவேண்டும். பழைய காலத்திலும், பிற்காலத்தில் சிறப்பாகப் பொருளாதார மற்றும் சமூக அடிப்படைகளில் கீழ் மட்டத்திலுள்ள மக்கள் மத்தியிலும் தமிழ்ப் பெயர்கள் கூடுதலாகக் காணப்பட்டன. + +முருகன், நல்லதம்பி, ப��ன்னையா, எழிலன், கண்ணன், மணிமாறன், சேரன் போன்ற ஆண்களுக்குரிய பெயர்களும், அன்னப்பிள்ளை, பொன்னி, சின்னம்மா, பொன்மணி, கயல்விழி போன்ற பெண்களுடைய பெயர்களும் தமிழ்ப் பெயர்களாகும். + +யாழ்ப்பாணத்து மக்கட் பெயர்களை அவற்றை உருவாக்கிய சொற்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வகுத்து ஆராயலாம். பொதுவாகத் தமிழில் பல சொற்கள் இணைந்து பெயரை உருவாக்கும்போது சில சந்தர்ப்பங்களில் விளைவு ஒரு சொல்லாகவே கணிக்கப்படுகின்றது. இக்கட்டுரையில் சொற்களின் எண்ணிக்கை என்னும்போது பெயரை உருவாக்கிய தனியாகப் பொருள் தரக்கூடிய சொற்களே கருதப்படுகின்றன. பெரும்பாலான பெயர்கள் ஒரு சொல், இரண்டு சொற்கள், அல்லது மூன்று சொற்களுக்குள் அடங்கிவிடுகின்றன. அதற்கு மேற்பட்ட சொற்கள் கொண்டவை மிகவும் குறைவே. + +ஒருசொற் பெயர்கள் + +முருகன், வேலன், சிவா, எழிலன், அமுதன், உமா, வள்ளி, பொன்னி, பத்மா போன்ற பெயர்கள் ஒரு சொற்பெயர்கள். ஒரு சொற் பெயர்களிற் சில மேலும் பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியாதவை. சிவா, குமார், உமா, வள்ளி போன்றவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். வேறு சிலவற்றை அடிச்சொல்லாகவும் விகுதிகளாகவும் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக, + +ஆண்பால் விகுதிகளைக் கொண்ட பெயர்கள் பெரும்பாலும் "அன்", என்பதுடன், மரியாதைக்குரிய "அர்" என்னும் விகுதியும் கொண்டு அமைவதுண்டு. + +சில பெயர்களில், குறிப்பிட்ட நபரைக் குறித்து மரியாதையாகப் பேசும்போது "அன்", "ஆர்" என்ற இரு விகுதிகள் சேர்ந்து அமைவதுண்டு. + +இரண்டு சொற்களாலான பெயர்கள் + +இரண்டு சொற் பெயர்களின் தன்மைகள்பற்றிப் பார்க்கலாம். + +தனியாக நின்று பொருள் தரக்கூடிய இரண்டு சொற்கள் இணைந்து உருவாவனவே இருசொற் பெயர்கள். + + +இரு சொற் பெயர்களில், முதற்பகுதி, இறுதிப்பகுதி என்று பிரித்துப் பார்க்கலாம். பெயரை உருவாக்ககூடிய பல சொற்கள் இரண்டு இடங்களிலுமே வரக்கூடியவை. "முருகு" என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், அது முதற்பகுதியாக அமையும்போது, "முருகேசன் (முருகு + ஈசன்) போன்ற பெயர்களும், இறுதிப்பகுதியாக அமையும்போது, "வேல்முருகு" போன்ற பெயர்களும் உருவாகின்றன. இதே போல, + +போன்ற பல சொற்கள் இரு பகுதிகளிலும் அமைந்து பெயர்களை உருவாக்கக் கூடியவை. எனினும், பெரும்பாலும் முன்பகுதியிலேயே வரும் சொற்களும், பின்பகுதியிலேயே அதிகம் வர��்கூடிய சொற்களும் உள்ளன. + +முற்பகுதியிலேயே அதிகம் வரும் சொற்களும் அவற்றுக்கான சில எடுத்துக்காட்டுகளும் கீழே தரப்பட்டுள்ளன. + +சிவ : சிவராசா, சிவகுமாரன், சிவபாலன், சிவகடாட்சம், சிவகுமாரி, சிவானந்தன், சிவரூபன், சிவஞானம், சிவமலர் + +நாக : நாகராசா, நாகமணி, நாகரத்தினம், நாகேந்திரன், நாகேஸ்வரி, நாகம்மா + +பால : பாலேந்திரா, பாலசிங்கம், பாலகுமார், பாலராஜன், பாலசுந்தரம், பாலசுந்தரி, பாலராணி + +ஞான : ஞானசுந்தரம், ஞானேந்திரா, ஞானானந்தன், ஞானேஸ்வரன், ஞானேஸ்வரி + +சின்ன : சின்னத்தம்பி, சின்னராசா, சின்னக்குட்டி, சின்னையா, சின்னாச்சி, சின்னமணி, சின்னம்மா, சின்னத்தங்கம் + +இராம : இராமநாதன், இராமச்சந்திரன், இராமேஸ்வரன் + +குமார : குமாரராஜா, குமாரதேவன், குமாரசிங்கம், குமாரசாமி + +குண : குணசீலன், குணபாலன், குணரத்தினம், குணராசா, குணசேகரம், குணசிங்கம், குணரஞ்சிதம். + +மூன்று சொற்களாலான பெயர்கள் + +இவை தனியாக நின்று பொருள் தரக்கூடிய மூன்று சொற்கள் இணைந்து உருவாகும் பெயர்கள் ஆகும். இவ்வாறான முச்சொற் பெயர்களின் கூறுகளும் இரு சொற் பெயர்களில் பயன்படும் கூறுகள் போன்றவையே. பொதுவான முச்சொற் பெயர்கள் மேலதிகமாக ஒரு கூறு சேர்க்கப்பட்ட இருசொற் பெயர்களாகவே காணப்படுகின்றன. இருசொற் பெயர்களுக்கு முதலில், இடையில் அல்லது இறுதியில் புதிய கூறுகள் சேர்க்கப்படுகின்றன. சில எடுத்துக்காட்டுகள்: + +நான்கு மற்றும் அதற்கு மேற்பட்ட சொற்களாலான பெயர்கள் + +நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களாலான பெயர்கள் மிகமிக அரிதாகவே காணப்படுகின்றன. + + + + + +எக்ஸ் பாக்ஸ் + +மைக்ரோசாப்ட் எக்ஸ் பாக்ஸ் ("Microsoft Xbox") மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த ஒரு நிகழ்பட ஆட்ட இயந்திரம் ஆகும்.சிறுவர்களின் மத்தியில் பொழுது போக்கு விளையாட்டு சாதனமாகவும் பெரியவர்களும் இணைந்து விரும்பி விளையாடும் இயந்திரமாகவும் விளங்குகின்றது.எக்ஸ் பாக்ஸ் நவம்பர் மாதம் 15, 2001 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் முதன்முதலாக அறிமுகமானது. இந்நிகழ்பட ஆட்ட இயந்திரம் நிறுவனம் குழந்தைகள் முதல் பெரியவர்களின் நன்மதிப்பைப் பெற்றுவரும் ஒரு கேளிக்கை சாதனமற்ற தத்ரூப விளையாட்டுக்களை விற்பனை செய்யும் நிறுவனமாகத் திகழ்கின்றது.எக்ஸ் பாக்ஸ் இயந்திரம் விற்பனையா�� ஆரம்ப காலங்களில் ஹேலோ, ஆம்ப்ட், டெட் ஓர் அலைவ் 3 மற்றும் போன்ற நிகழ்பட ஆட்டப் பிரதிகளும் கிடைக்கப்பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. + +சீமஸ் பிளாக்லே என்னும் நிகழ்பட ஆட்டத் தயாரிப்பாளரும் அவரின் குழுவும் சேர்ந்து எக்ஸ் பாக்ஸினை வடிவமைத்தனர் மேலும் நிகழ்பட ஆட்ட இயந்திரம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் உருவாக்கத்தில் உள்ளது என்ற செய்தியை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிபரானா பில் கேட்ஸ் அவர்களால் 1999 ஆண்டு வெளியிடப்பட்டது.மேலும் 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் திகதி எக்ஸ் பாக்ஸ் இயந்திரத்தின் வெளியீட்டினை மைக்ரோசாப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. + + + + +வி. எஸ். அச்சுதானந்தன் + +வேலிக்ககத்து சங்கரன் அச்சுதானந்தன் (பிறப்பு - அக்டோபர் 20, 1923) கேரள மாநிலத்தின் இருபதாவது மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் ஆவார். 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் இவரது கூட்டணி அறுதிப் பெரும்பான்மையைப் பெறாததால் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்ற உள்ளார். "காமரேட் வி எஸ்" என்று அழைக்கப்படும் அவர், 1985 முதல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-இன் போலிட்ப்யூரோ உறுப்பினராக இருந்து வருகிறார். + +கேரளாவின் ஆலப்புழை மாவட்டம், சங்கரன் அக்கம்மா தம்பதியினருக்கு பிறந்த அச்சுதானந்தன், சிறு வயதிலேயே வறுமைக்கு உள்ளானார். தனது தாயை நான்கு வயதிலும் தந்தையைப் பதினொரு வயதிலும் இழந்த அவர், தனது ஏழாவது வகுப்புடன் பள்ளிக் கல்வியை நிறுத்தும் கட்டாயம் ஏற்பட்டது. ஒரு துணிக் கடையில் வேலை பார்க்க ஆரம்பித்த அவர், பின்னர் ஒரு கயிறுத் தொழிற்சாலையில் பணிபுரிந்தார். + +தொழில் சங்க ஈடுபாட்டின் மூலம் அரசியலுக்கு வந்த வி.எஸ், 1938ஆம் ஆண்டு மாநில கங்கிரஸில் சேர்ந்தார். கருத்து வேறுபாடுகளால், 1940ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். பின்னர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கு அளித்த அவர், ஐந்து வருடத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நிறுவிய 32 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர். +12 ஜூலை 2009 அன்று நாடாளுமன்ற தேர்��லில் ஏற்பட்ட சரிவிற்காக, கட்சி தலைமையால் கட்சியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். + + + + + + +சைனைட் (திரைப்படம்) + +சைனைட் 2006ம் ஆண்டு வெளிவந்த ஒரு தமிழ் திரைப்படம். இத்திரைப்படம் ராஜீவ் காந்தியின் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக சந்தேகத்தின் பேரில் தேடப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சிவராசன், சுபா ஆகியோரின் கடைசி 20 நாட்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. இப்படத்தை எ.எம்.ஆர் ரமேஸ் இயக்கியுள்ளார். + + + + + +மகாகவி காளிதாஸ் (திரைப்படம்) + +மகாகவி காளிதாஸ் ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் காளிதாஸாக சிவாஜி கணேசனும் இளவரசியாராக சௌகார் ஜானகியும் நடித்திருந்தனர். + +ஆன்மிகப்படம் + +காளிதாஸ் ஒரு ஏழைக் குடிமகனாவான். தனது சிறு வயது முதலே காளி பக்தனாக இருக்கும் இவன் ஒரு முட்டாளாகவும் இருக்கின்றான். திடீரென ஒரு நாள் அரச அவையில் கவி எழுதுபவர்களுக்கான போட்டி தொடங்குகிறது. காளியின் அருளால் அப்போட்டியில் பங்குகொண்டு கவிச்சக்கரவர்த்தி ஆகின்றான். பின்னர் இவனே மகாகவி காளிதாஸ் என அழைக்கப்பெற்றான். + + + + +அக்னி நட்சத்திரம் (திரைப்படம்) + +அக்னி நட்சத்திரம் 1988 இல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும். மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளி வந்த இத்திரைப்படத்தில் பிரபு, கார்த்திக், அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ் போன்ற பலர் நடித்திருந்தனர். + +நாடகப்படம் + +கௌதம் (பிரபு) மற்றும் அஷோக் (கார்த்திக்) இருவரும் பகையின் காரணமாக சண்டைகள் கொள்வர். இதன் காரணம் அஷோக்கின் தாயாரையும் கௌதமின் தாயாரையும் இவர்களது தந்தை மணம் செய்து கொண்டார் என்பதே ஆகும். மேலும் இருவரும் தங்களுக்குள் இருக்கும் பகை காரணமாக அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இவர்கள் தந்தையின் அலுவலகப் பிரச்சினைகள் காரணமாக இவரைக் கொலை செய்யப்பட இவரின் எதிரியின் முயற்சியால் இரு சகோதரர்களும் ஒற்றுமை கொள்கின்றனர். பின்னர் தம் தந்தையினைக் கொலை செய்ய முயன்றவனை இருவரும் பழி தீர்க்கின்றனர். + +இளையராஜா இசையமைத்த இப்படத்���ின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற பாடல்களாகும். + + + + + +ராம் (திரைப்படம்) + +ராம் திரைப்படம் 2005ல் தமிழில் வெளிவந்த திரைப்படமாகும்.இதில் கதாநாயகன் ஜீவா மனநோயாளியாக நடித்துள்ளார். + +மகன் அவனது தாயைக் கொன்று விட்டதாக வரும் செய்தி கேட்டு அதிர்ந்து போகும் காவல்துறையினர் தமது தேடுதலின் பின்னர் உண்மையான கொலையாளி யார் என்பதனைக் கண்டுபிடிக்கின்றனர்.இதற்கிடையே கொலைகாரனாக கைது செய்யப்படும் காதலனைப் பார்த்து மனம் வருந்துகின்றார் ராமின் காதலி.ராமின் தாய் அவனின் காதலியின் சகோதரானால் கொல்லப்படும் செய்தி கேட்டறிகின்றான் ராம்.மேலும் அவன் கஞ்சா போன்ற போதைபொருட்களினை உபயோகிப்பதனைப் பார்த்த ராமின் ஆசிரியரான தாயாரை யாருக்கும் தெரியாதவண்ணம் கொலையும் செய்யப்படுகின்றார்.அதே சமயம் அங்கு வந்த ராம் இதனைப் பார்த்து திகைத்து நிற்கையில் தாயாரின் வயிற்றில் குத்தப்பட்டிருந்த கத்தியினை தன் கையிலெடுத்து பின் மயங்கி சரிகின்றார்.இதற்கிடையில் கூடும் காவல்துறையினர் ராம் மீது கொலைப்பழியினையும் சுமத்துவது பரிதாபம்.இறுதியில் கொலைகாரனாகக் கருதப்பட்ட ராம் செய்யாத தவற்றிற்காக சிறை சென்றதற்காகவும் தாயாரைக் கொலை செய்தவனைப் பழிவாங்குவதற்காகவும் மீண்டும் கொலை செய்யத்தூண்டப்படுகின்றான். + + + + +பிதாமகன் + +பிதாமகன், 2003ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா முதலிய பலர் நடித்துள்ளனர். + +சித்தன் (விக்ரம்) இளவயதிலேயே அனாதை ஆனவன். இறந்தவர்களின் உடல்களை எரிப்பதனையே தொழிலாகக் கொண்டிருக்கும் இவன் மிருகக்குணம் கொண்டவனாக அனைவராலும் பார்க்கப்படுகின்றான். யாரேனும் இவனையோ இவனுக்கு நெருங்கியவர்களையோ எதிர்த்தால் திடீரென கோபம் கொள்வான். அப்பகுதியில் போதைப் பொருட்களை விற்பனை செய்யும் கோமதியின் (சங்கீதா) அன்பினால் ஈர்க்கப்படுகின்றான் சித்தன். சித்தனுக்கு தன் முதலாளியிடமே (மகாதேவன்) வேலை வாங்கித் தருகிறாள் கோமதி. தொடர்ந்து, முதலாளிக்காக போதைப் பொருட்களை கடத்திய வழக்கில் சித்தன் சிறைக்குச் செல்கிறான். இதற்கிடையில் மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் ��ொழிலைக் கொண்டிருந்த சக்தி (சூர்யா) மஞ்சு (லைலா) என்னும் பெண்ணிடம் தகராறுகள் செய்து பின்னர் சிறையில் அடைக்கப்படுகின்றான். சிறையில் சித்தனைச் சந்திக்கும் சக்தி அவனுடன் நண்பனாகின்றான். சிறையை விட்டு விடுதலையான பின்னர் சக்தி, அவனுடைய நண்பர்கள், கோமதி, சித்தன் அனைவரும் ஒரு வீட்டில் வாழ்கின்றனர். மஞ்சுவும் இவர்களுக்கு அறிமுகமாகிறாள். சித்தனும் கோமதியும் ஒருவர் மேல் ஒருவர் அன்பாகவும் இருக்கின்றனர். + +ஒருநாள் முதலாளி கொன்று போடும் ஒருவனின் உடலை எரிக்கிறான் சித்தன். இதனால், இந்த கொலை வழக்கில் சிக்குகிறான் சித்தன். இந்த வழக்கில் முதலாளி குறித்த உண்மைகளை அறிவிக்கப் போவதாக சக்தி கூற, இதனால் துணுக்குற்ற முதலாளி ஆட்களை அனுப்பி சக்தியைக் கொல்கிறார். நண்பனை இழந்த துயர் தாங்காத சித்தன் முதலாளியைக் கொல்கிறார். பின்னர், எவருடன் சேர்ந்து வாழ விருப்பமின்றி தன் வழியே சித்தன் செல்வதுடன் திரைப்படம் நிறைவடைகிறது. + + + + +கனகாங்கி + +கனகாங்கி கருநாடக இசையின் முதல் மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் முதல் இராகத்திற்கு கனகாம்பரி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + + + + + +கானமூர்த்தி + +கானமூர்த்தி இராகம் கருநாடக இசையின் 3வது மேளகர்த்தா இராகம் ஆகும். இந்த இராகம் கருணைச் சுவையை வெளிப்படுத்துகிறது. அசம்பூர்ண பத்ததியில் 3வது இராகத்திற்கு கானஸாமவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + + + + + +முதலாம் ஜான் பால் (திருத்தந்தை) + +திருத்தந்தை முதலாம் ஜான் பால் (தமிழ்: முதலாம் அருள் சின்னப்பர், முதலாம் யோவான் பவுல்), அதிகாரபூர்வமாக இலத்தீன் மொழியில் இயோன்னெஸ் பாவுலுஸ் I, உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் 263வது திருத்தந்தை (பாப்பரசர்) ஆவார். இவர் பாப்பரசராகவும் வத்திக்கன் நகரின் தலைவராகவும் ஆகஸ்டு 26, 1978 முதல் செப்டம்பர் 28, 1978 வரை 33 நாட்கள் பணியாற்றினார். இவரது ஆட்சிக்காலம், திருத்தந்தையரின் மிகச்சிறிய ஆட்சிக்காலங்களில் ஒன்றாகும். இவர் பாப்பரசராக மக்கள் மத்தியில் பிரபலமாவதற்கு முன்னரே இறந்துவிட்டார். இருப்பின்னும் இவரது தோழமையும் மனிதநேயமும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும���. இவரே தனது பாப்பரசுப் பெயரில் இரட்டைப்பெயரை கொண்ட முதல் பாப்பரசராவார் மேலும் தனது பாப்பரசுப் பெயரில் "முதலாவது" என்ற பயன்படுத்திய முதல் பாப்பரசரும் இவரேயாவார். + +1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வெனிஸ் நகரில் அல்பினோ லூச்சியானி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர், ஓர் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். மறைமாவட்ட குருமடத்தில் இணைந்த இவர், உயர் குருமடத்தில் பயின்று கொண்டிருந்த போது இயேசு சபையில் இணைய விரும்பினார். ஆனால் அக்குருமட அதிபரோ அதற்கு அனுமதி தர மறுத்ததால், மறைமாவட்ட குருத்துவப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு 1935ல் குருவானார். + +தான் படித்த அதே குருமடத்தில் பேராசிரியராகவும் துணை அதிபராகவும் பணியில் இணைந்த இவர், உரோம் நகரின் கிரகோரியன் பாப்பிறைப் பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற விரும்பி அங்கு படிக்கச் செல்ல விரும்பினார். ஆனால் இவர் படிக்கும்போதே கல்வி கற்பிக்கவும் வேண்டுமென குருமட அதிகாரிகள் விரும்பினர். கிரகோரியன் பல்கலைக்கழகமோ, இவர் உரோம் நகரில் வந்து ஓர் ஆண்டாவது கல்லூரியில் படிக்க வேண்டும் என்றது. இவ்வளவு முக்கிய பேராசிரியரை இழக்க விரும்பாத வெனிஸ் குருமடத்திற்காக இந்தச் சிக்கலில் நேரடியாக தலையிட்டு, அங்கேயிருந்தே முனைவர் பட்டப்படிப்பை உரோம் பல்கலைக்கழகத்தில் தொடர சிறப்பு அனுமதி அளித்தார் திருத்தந்தை 12ம் பயஸ். + +1958ம் ஆண்டு திருத்தந்தை 23ம் ஜான், குரு லூச்சியானியை ஆயராக அறிவித்து அவரை திருநிலைப்படுத்தினார். அதே திருத்தந்தை கூட்டிய இரண்டாம் வத்திக்கான் பொது அவையின் அனைத்துக் கூட்டங்களிலும் ஆயர் லூச்சியானி கலந்து கொண்டார். 1970ல் வெனிஸ் பேராயராகவும் முதுபெரும் தலைவராகவும் பொறுப்பேற்றுக் கொண்ட இவரை, 1973ல் திருத்தந்தை 6ம் பால் கர்தினாலாக உயர்த்தினார். + +1978ல் இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, தன்னை ஆயராக திருநிலைப்படுத்திய திருத்தந்தை 23ம் ஜான் மற்றும் கர்தினாலாக உயர்த்திய திருத்தந்தை 6ம் பால் ஆகியோரை கௌரவிக்கும் விதமாக முதலாம் ஜான் பால் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். வெனிஸ் நகரோடு நெருங்கிய தொடர்புடைய திருத்தந்தையர் பத்தாம் பயஸ், அருளாளர் 23ம் ஜான், முதலாம் ஜான் பால் ஆகியோர் வெனிஸ் மறைமாவட்ட பெருந்தந்தையாய் இருந்தபோது பாப்பிறையாகத் ��ேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. + +திருத்தந்தை முதலாம் ஜான் பால் தன் எளிமையான நடவடிக்கைகளாலும், புன்னகையாலும், அனைவரையும் கை நீட்டி வரவேற்கும் பண்பாலும் உலகையே கவர்ந்தார். எளிமையின் அடையாளமாக திருத்தந்தையாக பதவியேற்கும் நிகழ்ச்சியில் மும்முடி அணிதலைத் தவிர்த்தார். உலகின் ஒவ்வொரு கத்தோலிக்க ஆலயத்தின் வருமானத்திலும் ஒரு விழுக்காடு மூன்றாம் உலக நாடுகளின் ஏழைத் திருச்சபைகளுக்கு வழங்கப்படவேண்டும் என்ற விதியைத் துவக்கியவர் இவரே. + +எதைக் கூறினாலும் திருச்சபையின் சார்பாக பேசுவதாக 'நாம்' என்ற பதத்தையே அனைத்துத் திருத்தந்தையர்களும் பயன்படுத்திக் கொண்டிருக்க, அதனை 'நான்' என்று முதன் முதலில் மாற்றி பயன்படுத்தியவர் இவரே. திருத்தந்தையர்களின் பெயரில் முதலில் இரட்டைப் பெயரைப் பயன்படுத்தியவர் இவரே. பல்வேறு சீர்திருத்தங்களை திருச்சபையில் கொணர்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் இந்த எளிமையான திருத்தந்தை. + +புன்னகையின் திருத்தந்தை என்று அழைக்கப்பட்ட முதலாம் ஜான் பால், தான் திருத்தந்தையாக பதவியேற்ற 33 நாட்களில் அதாவது 1978ம் ஆண்டு செப்டம்பர் 28ந்தேதி மாரடைப்பால் காலமானார். இவரது உடல் வத்திக்கான் குகையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. + + + + +தோடி + +தோடி அல்லது ஹனுமத்தோடி என்பது கருநாடக இசையின், எந்நேரமும் பாடக்கூடிய 8 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண பத்ததியில் 8 வது இராகத்திற்கு ஜனதோடி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் "பைரவி தாட்" என்றழைக்கப்படுகிறது. + + + +ஹனுமத்தோடியின் ஜன்ய இராகங்கள் இவை. + + +இந்த இராகத்தில் அமைந்த தமிழ்பாட்டு ஒன்று கீழேத் தரப்படுகிறது. இதனை இயற்றியவர் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை. + +இராகம்:தோடி தாளம்:ரூபகம் + +பல்லவி + +திருமுடி சூட்டிடுவோம் + +தெய்வத் தமிழ்மொழிக்கு (திரு) +அநுபல்லவி + +வருமொழிஎவர்க்கும் வாரிக்கொடுத்துதவி + +வண்மைமிகுந்த்தமிழ் உண்மைஉலகறிய (திரு) + +சரணங்கள் + +பெற்றவளை இழந்து மற்றவரைத் தொழுத + +பேதைமை செய்துவிட்டோம் ஆதலினால் நம்அன்னை + +உற்றஅரசிழந்துஉரிமை பெருமை குன்றி + +உள்ளம்வருந்தின தால்பிள்ளைகள் சீர்குலைந்தோம் (திரு) +அன்னையை மீட்டும்அவள் அரியனை மீதிருத்தி + +அகலம் முழுவதும்அவள் மகிமை விளங்கச்செய்வோம் + +முன்னைப் பெருமை வந்து இன்னும் புதுமைபெற்று + +முத்தமிழ்ச் செலவியவள சித்தம் குளிர்ந்திடவே (திரு) +தாயின் மனம்குளிர்ந்தால் தவம் அதுவே நமக்கு + +தாரணி தன்னில்நம்மை யாரினிமேல் இகழ்வார் + +நோயும் நொடியும்விட்டு நுண்ணறி வோடுநல்ல + +நூலும்கலைக ளெல்லாம் மேலும்மேலும் வளர்ப்போம் (திரு) + + + + + +தேனுகா + +"இது தேனுகா இராகத்தைப் பற்றிய கட்டுரை . எழுத்தாளர் தேனுகா குறித்து படிக்க தேனுகா (எழுத்தாளர்)" + +தேனுகா இராகம், கருநாடக இசையின் 9 ஆவது மேளகர்த்தா இராகம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் 9 ஆவது இராகத்திற்குத் துனிபின்னஷட்ஜம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + + +தேனுகாவின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +அப்பாச்சி இணைய வழங்கி + +அப்பாச்சி இணைய வழங்கி (Apache HTTP Server) ஒரு கட்டற்ற இணைய வழங்கி மென்பொருளாகும். இது யுனிக்சு, லினிக்சு, விண்டோசு, நாவல் நெட்வெர் போன்ற பல்வேறு இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. அப்பாச்சி இணைய வழங்கியானது ஆரம்பத்தில் உலகளாவிய வலையமைப்பின் வளர்ச்சிக்குதவியதுடன் இன்றளவும் உலகில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் இணைய வழங்கி மென்பொருளாக உள்ளது. அத்துடன் இதுவே மற்றை இணைய வழங்கி மென்பொருட்களிற்கு மாதிரியாகத் திகழ்கின்றது. அப்பாச்சி மென்பொருட்களானது கட்டற்ற நிரலாலாளர்களால் விருத்தி செய்யப் படுகின்றது. + +ஆரம்பத்தில் வெளிவந்தபோது இது நெட்சுகேப்பின் இணைய வழங்கியின் (இன்றைய சண் யா சிசுடம் இணைய வழங்கி) அன்றிலிருந்து ஏனைய யுனிக்சு இயங்குதளத்தின் போட்டியாளராக விளங்கத் தொடங்கி ஏப்ரல் 1996 இல் உலகில் மிகப் பிரபலமான இணைய வழங்கி மென்பொருளாக மாற்றமடைந்தது. மே, 1999 இல் 57% மான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன. பெப்ரவரி 2006 இல் 68% வீதமான இணையத்தளங்கள் அப்பாச்சியினையே பாவித்தன. + +உலகளாவிய வலையின் நிலையான மற்றும் மாறுகின்ற உள்ளடக்கங்களைக் காண்பிப்பதற்காக வசதிகள் அப்பாச்சி இணைய வழங்கியில் இருந்து எதிர்பார்க்கப் படுகின்றது. + +லாம்ப் (LAMP) என ஆங்கிலத்தில் அழைக்கபடும் பிரபலான லினக்சு, அப்பாச்சி, மையெசுக்யூயெல், பி.எச்.பி/பெர்ள்/பைத்தோன் இது முக்கியமான ஒன்றாகும். + +அப்பாச்சி இணைய வழங்கியானது வேறு மென்பொருட்களுடனும் விநியோகிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக ஆரக்கிள் தகவற்தளம், ஐ.பி.எம் வெப்ஸ்பியர் பிரயோக வழங்கி, ஆப்பிள் கணினிகளின் மக்ஓஸ் X உடனும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. இது தவிர போர்லாண்ட் மென்பொருட்களான டெல்பி மற்றும் லினக்ஸ்ஸிற்கான் கைலிக்ஸ்சும் அப்பாச்சியை ஆதரிக்கின்றன. + +அப்பாச்சி கோப்பொன்றை பாதுகாப்பாக இணையமூடாகப் பகிர்வதற்காக வசதிகளை வழங்குகின்றது. எடுத்துக் காட்டாக பயனர் ஒருவர் அப்பாச்சியின் மூலக் கோப்புறைப் பக்கத்தில் (root) கோப்பொன்றை போட்டு அதைப் பகிர முடியும். + +இணயப் பக்கங்களை விருத்திசெய்யும் நிரலாக்கர்கள் தமது கணினிகளில் அப்பாச்சி இணைய வழங்கியை நிறுவிப் பரீட்சிப்பது வழமை. + +அப்பாச்சியை நிறுவ பின்வரும் கட்டளைகளைப் பயன்படுத்தலாம். +நீங்கள் நிறுவிய பின்பு, உலாவியில் http://localhost என்ற முகவரிக்குச் சென்றால், அங்கு It Works என்ற அப்பாச்சியின் இயல்பு வலைத்ப்பக்கத்தைப் பார்க்கலாம். இயல்பாக அப்பாச்சி /var/www என்ற அடைவில் வலைத்தளங்களைப் பார்க்கும். + + + + + +பில் கேட்ஸ் + +வில்லியம் ஹென்றி கேட்ஸ் (பில் கேட்ஸ்) (English: William Henry Gates or Bill Gates) (பி. அக்டோபர் 28, 1955) மைக்ரோசாப்ட் நிறுவனர்களில் ஒருவர். இவர் அதன் தலைமை கணிப்பொறி மென்பொருள் வல்லுனராகவும் (CSA), முதன்மை செயல் அதிகாரியாகவும் (CEO) பணியாற்றியுள்ளார். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ளார். போர்பஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளாக முதல் இடத்தினைப் பெற்று வருகிறார். 1999-ல் இவரின் குடும்பச் சொத்து மதிப்பு 100 பில்லியன் டாலர்களைக் கடந்தது. + +வில்லியம் ஹென்றி கேட்ஸ் அமெரிக்காவின் சியாட்டில், வாஷிங்டன் நகரில் பிறந்தார். இவரது பெற்ரோர் வில்லியம் ஹெச். கேட்ஸ், தாயார் மேரி மேக்ஸ்வெல் ஆவர். இவரது குடும்பம் இயற்கையாகவே நல்ல வளம் மிக்கதாகவும், இவரது தந்தை போற்றத்தகுந்த வழக்குரைஞராகவும் இருந்தார். இவரது தாய் யுனைடெட் வே மற்றும் இண்டர்ஸ்டேட் பேங்க் ச்ய்ச்டேமின் இயக்குநர் வாரியதில் பணியாற்றினார், மேலும் அவரது தாய் வழி தாத்தா நேஷனல் வங்கியின் தலைவராக இருந்தார். கேட்ஸ் தன் பாலகர் படிப்பில் கணிதத்தி��ும், அறிவியலிலும் நல்ல முறையில் தேர்வானார். பின்னர், தன் பதி்ன்மூன்றாவது வயதில் சியாட்டிலில் பேர் வாய்ந்த, லேக்சைட் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். + +இவர் எட்டாம் வகுப்பு பயிலும் போது, லேக்சைட் பள்ளியில் ஒரு கணினி (உண்மையில் அது ஒரு டெலிப்ரிண்டர் வகையை சேர்ந்தது ஆகும்) மற்றும் தினசரி சில மணி நேர கணினி (இது General Electric நிறுவனத்தின் கணினி ஆகும்) பயன்பாட்டுக்காக வாங்க பட்டது. மாணவர்களுக்கு கணினி பயன்று கொள்ள வசதியாக இருக்கும் என்பதே இதன் நோக்கம் ஆகும். கேட்ஸ் இதை நன்றாக பயன்படுத்தி கொண்டார். பில் கேட்ஸ் தனது முதல் கணினி நிரலை டிக்-டக்-டே விளையாட்டுக்காக எழுதினார், அது பயனாளர்களை கணினிக்கு எதிராக விளையாட வழி வகுத்தது. அவர் கணினியின்பால் பெரிதும் கவர்ந்து இழுக்கப்பட்டர். இவரது ஆர்வத்தை பார்த்து பள்ளி இவருக்கு கணித வகுப்பில் இருந்து விலக்கு அளித்தது, அதன் மூலம் இவரால் அதிக நேரம் கணினி பயிற்சியில் ஈடுபட முடிந்தது. ஆனால், கேட்ஸ் மற்றும் இதர மாணவர்கள் கணினியின் +இயங்கு தளத்தில் (Operating System) உள்ள ஒட்டைகளைப் பயன்படுத்தி அதிகக் கணினி நேரத்தை உபயோகித்ததாக குறை கூறி தினசரி சில மணி நேர கணினி பயன்பாட்டு திட்டம் பயன்படுத்த தடை செய்யப்பட்டது. + +பில்கேட்ஸ் தனது பள்ளிப் படிப்பை ஒரு தொடக்கப் பள்ளியில் தொடங்கினார். சிறு வயதிலேயே அவருக்கு நிரலாக்கத்தில் (programming) ஆர்வமிருந்ததால், தனது 13ஆம் வயதிலேயே நிரல்கள்(program) எழுதத் தொடங்கினார். பிறகு 1973ல் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தார். அங்கு அவரது நண்பர் ஸ்டீவ் பால்மரின் வீட்டில் தங்கியிருந்தார்.தனது படிப்பை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்த பிறகு, தனது பால்ய வயது சிநேகிதன் பால் ஆலங் என்பவருடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை 1975ல் துவங்கினார். கணிப்பொறி பிற்காலத்தில் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்கின்ற நம்பிக்கை அவருக்கும் அவருடைய நண்பருக்கும் இருந்தது. இதனால் அவர்கள் கணிப்பொறிக்குத் தேவையான மென்பொருள்களை எழுதத் துவங்கினர். அவருடைய இந்தத் தொலை தூர நோக்கம் தான் இன்று அவரும் அவருடைய நிறுவனத்துக்கும் மிகப் பெரிய வெற்றியைத் தேடித் தரலானது. இவருடைய தலைமையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நோக்கமானது, நிறுவனத்தின் தொடர் வளர்ச்சியும், கணினி உபயோகிப்போருக்கு பூரண மன திருப்தியையும் ஏற்பட வேண்டும் என்பதே ஆகும். +இக்காலகட்டத்தில் மைக்ரோசாப்ட் நவம்பர் 20, 1985 இல் மைக்ரோசாப்ட் விண்டோஸின் முதல் சில்லறை விற்பனை பதிப்பு வெளியிடப்பட்டது. +மற்றும் ஆகஸ்டில் OS/2 என்ற ஐபிஎம் காண தனி இயங்குதள உருவாக்க ஒப்பந்தம் செய்தனர்.பல சிக்கல்கலுக்கு பின்னர் OS/2 வின் பதிப்பு 1991 ஆம் ஆண்டில் முடிவடைந்தது. + +பில் கேட்ஸ் ஜனவரி 1, 1994 ஆம் வருடம் மெலிண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுக்கு ஜெனிபர் காதரின் , போஃப் அடேல் என்று இரு மகள்களும் ரோடி ஜான் என்ற ஒரு மகனும் உள்ளனர். + +இதுவரை பில் கேட்ஸ் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். 1995 ஆம் வருடம் நவம்பர் மாதம் வெளியான "தி ரோடு அஹெட்" என்ற புத்தகத்தை இவருடன் சேர்ந்து மைக்ரோசாப்ட்டின் சிறப்பு தொழில்நுட்ப அலுவலரான நாதன் முர்வால்டும் , பீட்டர் ரிநீர்சன் என்ற பத்திரிக்கையாளரும் எழுதியுள்ளனர்.அதில் தனி நபர் கணினி பயன்பாட்டில் ஏற்பட்ட புரட்சியைப் பற்றியும் உலகத்தில் அதிவேக தகவல் தொடர்பின் வரவு எதிர்காலத்தை எவ்வாறு மாற்றப்போகிறது என்பதைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது . பில் கேட்ஸின் “த ரோட் அகெட்'எனும் நூல் 1995 ஆண்டு பிரசுரிக்கப்பட்டு பெரும் பாராட்டினைப் பெற்றது. அதே ஆண்டு நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளில் அதிகம் விற்பனையான நூல்களின் பட்டியலில், தொடர்ந்தும் ஏழு வாரங்கள் முன்னணி நூலாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட "பிசினஸ் @ தி ஸ்பீட் ஆப் தாட் " என்ற நூலில் வியாபாரமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் , தொழில்நுட்பக் கட்டமைப்புகளும் தகவல் வளையங்களும் எப்படி போட்டி நிறைந்த வியாபார உலகில் கைகொடுக்கும் என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. + +2010 இல் எடுக்கப்பட்ட "வெயிட்டிங் பார் தி சூப்பர்மேன் " , பிபிசி தயாரித்த ஆவணப்படமான "தி வர்ச்சுவல் ரெவலுஷன்" உட்பட பல ஆவணப்படங்களில் பில் கேட்ஸ் தோன்றியுள்ளார். + +1999 ஆம் வருடம் வெளியான "பைரேட்ஸ் ஆப் தி சிலிகான் வேளி" என்ற திரைப்படத்தில் "ஆப்பிள்" மற்றும் "மைக்ரோசாப்ட்" நிறுவனங்களின் வளர்ச்சியே கதை கருவாக இருந்தது. இப்படத்தில் பில் கேட்ஸ் வேடத்தில் "அண்டோனி மைகேல் ஹால் " என்ற நடிகர் நடித்தார். + + + + + +ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள் + +ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகள் உட்பட உலகின் ஐம்பதிற்கும் மேற்பட்ட மொழிகளில் ஒருங்குறியிலான உள்ளீடுகளை எழுத்துப் பிழைதிருத்தம் தானாகவே செய்தல் (Auto Correct) வசதிகளை உள்ளடக்கியது. எனினும் ஒத்தசொல் வசதி இந்திய மொழிகளில் தமிழ் மற்றும் ஹிந்தி் ஆகிய இருமொழிகளில் மாத்திரம் தான் உள்ளது. +இதை நிறுவுவதற்கு ஆபிஸ் 2003 பதிப்பு நிறுவப் பட்டிருத்தல் வேண்டும். ஒருங்குறியில் தமிழை ஆபிஸ் பதிப்புகளில் உள்ளீடு செய்வதானால் எ-கலப்பை அல்லது வேறேதேனும் மென்பொருளைப் பாவிக்கலாம். மைக்ரோசாப்ட் தானாகவே பயன்படுத்தும் மொழியைக் கண்டுபிடித்துத் திருத்தங்களை மேற்கொள்ளும். முதலாவது படத்தில் தமிழ் ஒருங்குறியில் அமைக்கப் பட்ட சோதனைக் கோப்பொன்றில் எழுத்துப் பிழைகள் சிலவற்றைச் சரியாகவும் வேறுசிலவற்றைப் பிழையாகவும் சிகப்புக் கோடிடுவதைக் காணலாம். + + + + + +செப்டம்பர் 8 + + + + + + + +கிரெகொரியின் நாட்காட்டி + +கிரெகொரியின் நாட்காட்டி ("Gregorian calendar") என்பது உலக (சர்வதேச) அளவில் மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் பயன்படுத்தப்படும் நாட்காட்டியாகும். இந்த நாட்காட்டி கிரிகோரியன் நாட்காட்டி எனவும் அறியப்பெறுகிறது. மேலும் மேற்கத்திய நாட்காட்டி எனவும் கிறித்துவ நாட்காட்டி எனவும் வழங்கப்பெறுகிறது. இந்த நாட்காட்டியானது சர்வதேச நிறுவனங்களான சர்வதேச தபால் ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்றவற்றினால் அங்கீகரிப்பட்டுள்ளது. + +இன்று உலகில் பரவலாகப் பயன்பாட்டில் உள்ள நாட்காட்டியான இது கி. மு 45 -ல் ரோமப் பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியின் நாட்காட்டியின் ("Julian calendar") ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும். இத்தாலியரான அலோயிசியஸ் லிலியஸ் (Aloysius Lilius) என்ற மருத்துவரால் முன்வைக்கப்பட்டது. இது பிப்ரவரி 24 1582 இல் அப்போதைய திருத்தந்தையான திருத்தந்தை பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டது. இதன் காரணமாகப் பின்னாளில் இந்நாட்காட்டிக்கு "கிரகோரியன் நாட்காட்டி" என்னும் பெயர் வழங்கலாயிற்று. +இந்த நாட்காடியின் படி இயேசு பிறந்ததாகக் கணிக்கப்பட்ட ஆண்டிலிருந்து ஆண்டுகள் இலக்கமிடப்பட்டன. மேலும் இக்காலப்பகுதி "ஆண்டவரின் ஆண்டு" எனவும் பெயரிடப்பட்டது. இது கிபி 6 வது நூற்றாண்டில் டயனீசியஸ் எக்சீகுவஸ் (Dionysius Exiguus) என்னும் கிறித்தவத் துறவியால் உரோமையில் துவக்கப்பட்ட ஆண்டுக் கணிப்பு முறையாகும். + +கிரிகோரியன் நாட்காட்டி பயன்படுத்தும் முன்னர் இருந்த ரோமானிய நட்காட்டியில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜூன், செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் எனப் பத்து மாதங்கள் கொண்டதே ஒரு ஆண்டாகும். பின்னரே ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்கள் சேர்க்கப்பட்டன. +கிரகோரியின் நாட்காட்டியானது 'ஜூலியன் நாட்காட்டியின்' சராசரி ஆண்டைவிட நீளமாகக் காணப்பட்டமையால் இளவேனிற் சம இராப்பகல் நாள், நாட்காட்டியில் பின்னோக்கி நகர்வதைத் திருத்துவதற்காக முன்கொணரப்பட்டது.அதாவது கிபி.1752 ஆம் ஆண்டில் செப்டம்பர்சு மாதத்தில் சுமார் 10 நாட்கள் கிரிகோரியன் நாட்காட்டியில் இருந்து கழிக்கப் பட்டது.மேலும் உயிர்த்த ஞாயிறு நாளைக் கணக்கிட பயன்பட்ட சந்திர நாட்காட்டியும் பல குறைகளைக் கொண்டிருந்ததும் இன்னொரு முக்கிய காரணமாகும். + +ஸ்பெயின், போர்ச்சுக்கல், போலிஷ் லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் நாட்காட்டியை முதலில் ஏற்றுக் கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் நாட்காட்டியைப் பயன்படுத்தத் தொடங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆம் ஆண்டிற்குப் பிறகே கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் இந்தியாவிலும் இந்த நாட்காட்டி புழக்கத்திற்கு வந்தது. கிரிகோரியன் நாட்காட்டியைக் கடைசியாக ஏற்றுக் கொண்ட நாடுகளில் கடைசியாக வருவது கிரீஸ் ஆகும். 1923 பிப்ரவரி 15 -ல் தான் இந்நாடு கிரிகோரியன் நாட்காட்டியை அங்கீகரித்தது. + +சூரிய நாட்காட்டி வகையைச் சார்ந்தது கிரிகோரியன் நாட்காட்டியாகும். ஒரு வழக்கமான கிரிகோரியன் ஆண்டு என்பது முன்நூற்று அறுபத்து ஐந்து (365) நாட்களையும், ஒரு லீப்(நெட்டாண்டு) ஆண்டினையும் உடையதாகும். லீப் ஆண்டு என்பது வழக்கமான கிரிகோரியன் ஆண்டு நாட்களுடன், பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்து முன்நூற்று அறுபத்து ஆறு (366) உடையதாகும். பொதுவாக லீப் ஆ���்டு நான்கு கிரிகோரியன் ஆண்டுக்கொருமுறை ஏற்படுகிறது. ஜூலியன் நாட்காட்டி படி இல்லாமல் நானூறு (400) ஆண்டுகளுக்கு மூன்று (3) லீப் வருடங்களைக் கிரிகோரியன் நாட்காட்டி தவிர்த்துவிடுகிறது. + +ஒரு கிரிகோரியன் ஆண்டானது பின்வரும் பன்னிரண்டு மாதங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: + +ஒவ்வொரு மாதமும் சீரற்ற முறையில் வருகின்ற நாட்களைக் கணக்கிட கீழ்கண்ட ஈடுகோள் உதவுகிறது. + +இதில் L என்பது மாதங்களின் நாட்கள் எண்ணிக்கையைக் குறிக்கும், M என்பது 1 முதல் 12 வரையான மாதத்தின் வரிசை எண்ணைக் குறிக்கும். + +பொதுவாகப் பூமி ஒரு முறை சூரியனை சுற்றிவர 365 நாள் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடி காலத்தினை எடுத்துக் கொள்கிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலத்தினை ஒருநாள் என்று வைத்துக் கணக்கிட இருக்கும் சிரமத்தினை எண்ணி, ஒரு ஆண்டினை 365 நாட்கள் என்ற முழு எண்ணாகக் கணக்கிடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மீதமிருக்கும் 5 மணி, 48 நிமிடம், 46 வினாடிகளைத் தவர்க்க இயலாது என்பதால் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நாளாகப் பிப்ரவரி 29 என்ற நாளையும் இணைத்துக் கிரிகோரியன் நாட்காட்டில் கணக்கிடப்படுகிறது. + +இவ்வாறு ஆண்டிற்கொருமுறை ஒரு நாளை (பிப்ரவரி 29) நாளை இணைக்கையில் 100 ஆண்டுகளில் 18 மணி 43 வினாடி காலம் அதிகமாக இணைக்கப்படுகிறது. எனவேதான் நூறு வருடங்களுக்கு ஒரு முறை லீப் வருடம் (நெட்டாண்டு) கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இவ்வாறான பல சீர்த்திருத்தங்களை கொண்ட கிரிகோரியன் நாட்காட்டினாது, மேலும் தீர்வில்லாத சிக்கல்களை கொண்டிருப்பதால் இந்த நாட்காட்டியானது சரியானது இல்லை என்ற கருத்தும் அறிஞர்களிடையே உள்ளது. + +கிறிசுதுவர்கள் பொதுவாக இயேசுவின் பிறந்தநாளென்று டிசம்பர் 25 ஆம் நாளைக் குறித்துக் கொண்டாலும், இயேசு உயிர்த்தெழுந்த நாளைக் கணக்கிட கிரிகோரியன் நாட்காட்டியை அடிப்படையாகப் பயன்படுத்துகிறார்கள். இதனால் ஈஸ்டர் எனப்படும் இயேசு உயிர்த்தெழுந்த நாள் ஆண்டுதோறும் வேறுவேறு நாட்களில் வருகிறது. இதற்குச் சூரியன் மற்றும் சந்திரனின் இயக்கத்தினையும் கணக்கில்கொள்வதே காரணமாகிறது. + +ஜூலியஸ் சீசரினால் அறிமுகம் செய்யப்பட்ட நாட்காட்டியானது அவருடையப் பெயரிலேயே ஜூலியன் நாட்காட்டி என்று அறியப்பெறுகிறது. இது கிமு 46ல் அறிமுகம் செய்யப்பெற்றது. இது உரோமில��� பயன்பாட்டில் இருந்த நாட்காட்டி முறையில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக வானியல் அறிஞர் அலெக்சாந்திரியாவின் சொசிசெனசு என்பவரின் கருத்துக்கமைய சராசரி வெப்ப வலய சூரிய ஆண்டுக்கு அமைய அமைக்கப்பட்டது. அது 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட சாதாரண ஆண்டையும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பிப்ரவரியில் மேலதிக ஒரு நாளைக் கொண்ட நெட்டாண்டையும் கொண்டிருந்தது. ஆகவே யூலியன் சராசரி ஆண்டு 365.25 நாட்களாகும். + +கிரிகொரியின் நாட்காட்டி அறிமுகம் செய்ததிலிருந்து, இதற்கும் ஜூலியன் நாட்காட்டிக்குமிடையேயான நாட்களின் வித்தியாசங்கள் ஒவ்வொரு நூற்றாண்டிற்கும் மூன்று நாட்கள் என்ற வீதத்தில் அதிகத்தவண்ணம் இருந்துள்ளது. அதனைக் கீழ்கண்ட அட்டவணையில் காணலாம். + +கிரிகோரியன் நாட்காட்டி மற்றும் ஜூலியன் நாட்காட்டிகளில் எண்களின் அடிப்படையில் கணக்கிடப்படும் ஆண்டு முறைக்கு அனொ டாமினி என்று பெயர். இதற்குக் கடவுளின் ஆண்டு என்ற இலத்தீன் மொழியில் பொருளாகும். கிறிஸ்துவின் பிறப்பினை அடிப்படையாகக் கொண்ட இந்த முறை, கிறிதுவிற்கு முன் (கி.மு) என்றும் கிறிதுவிற்கு பின் (கி.பி) என்றும் காலத்தினை பகுக்கிறது. + +கிரெகொரியன் நாட்காட்டியானது ஜூலியன் நாட்காட்டியின் மாதங்களின் தொடர்ச்சியாதலால் மாதங்கள் பெயர்கள் இலத்தின் மொழியிலிருந்து எடுக்கபட்டதாகவும் மாறுபட்ட நாட்களைக் கொண்டதாகவும் இருக்கின்றன. + + + + + + + +தி காட்பாதர் (திரைப்படம்) + +தி காட்பாதர்(The Godfather) திரைப்படம் அதே பெயரில் வெளிவந்த நாவலை அடிப்படையாகக்கொண்டு எடுக்கப்பட்ட மாபெரும் சாதனைத்திரைப்படம். இத்திரைப்படம் உலகின் தலைசிறந்த திரைப்படங்களில் ஒன்றாகவும் மாபியாக்களை மையமாக வைத்து வெளிவந்த சிறந்த திரைப்படமாகவும் இன்றளவும் பேசப்படுகின்றது. + +நாடகப்படம் + +மாபியாத்தலைவரான விட்டோ கார்லியோன் தனது கொள்கைகளால் தன்னிடம் உதவி கேட்டு வருபவர்களின் விருப்பங்களிற்கேற்ப கொலை கொள்ளை ஆகிய காரியங்களில் ஈடுபட்டு வரும் இவரை அனைவரும் தந்தை என அழைப்பர்.எதிரிகளினால் இவர் கொல்லப்படவே இவரது இளைய மகன் தனது தந்தையின் பாதையில் எதிரிகளை பழிதீர்ப்பதே முதல் பாகத்தின் கதை. + + + + +1968 + +1968 (MCMLXVIII) ஒரு திங்கட���கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். + + + + + + + + + +டிரைவர் 3 + +டிரைவர் 3(Driver 3) நிகழ்பட விளையாட்டு எக்ஸ் பாக்ஸ் மற்றும் பிளேஸ்டேசன் 2 ஆகிய இயந்திரங்களிற்காக ஆனி மாதம் 21, 2003 அன்று வட அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. + +மியாமியின் காவல் துறையில் பணி புரியும் டானர் கொள்ளைக்கும்பல்களைப் பிடிக்கத்திட்டமிட்டு அந்தக் கும்பலுடனேயே கொள்ளைக்காரனாக நடிக்கும் டானர் பல வழிகளில் அவர்களுக்கு உதவி புரிகின்ற மாதிரி நடிக்கின்றார்.அதே சமயம் உதவியும் செய்கின்றார்.இவ்வாறு அவர் செய்யும் உதவிகளையே நாம் இந்நிகழ்பட விளையாட்டில் விளையாடுவது குறிப்பிடத்தக்கது. + + + + +மூன்றாம் பிறை (திரைப்படம்) + +மூன்றாம் பிறை 1982ஆம் ஆண்டில் வந்த தமிழ்த் திரைப்படமாகும்.இயக்குனர் பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கமலஹாசன் 1984 இல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. + +காதல்படம் + +விபத்தின் காரணமாக மன நோயாளியாக்கப்படும் விஜி (ஸ்ரீதேவி) பின்னர் தவறுதலாக விலைமாதுவாக விற்கப்படுகின்றார். அவரை அங்கு சந்தித்துக் கொள்ளும் நல்ல மனம் கொண்ட சீனுவாசன் (கமலஹாசன்) எனும் ஆசிரியரால் காப்பாற்றப்பட்டு பின் அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார். பின்னர் விஜிமீது காதல் கொள்ளும் சீனுவாசன், விஜிக்கு மன நோயின் பாதிப்பு இல்லாமல் போனபின் ரயில் நிலையத்தில் விஜியிடம் பேச இயலும் பல முயற்சிகள் செய்தும் அவரால் பேச முடியாது போகவே விஜியும் அவரைப் பைத்தியக்காரன் என்று பார்வையிடவும் திரைக்கதை முடிவு பெறுகின்றது. + +1984 தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா (இந்தியா) + + + + +12 பி (திரைப்படம்) + +12 பி திரைப்படம் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் ஷாம், ஜோதிகா, சிம்ரன், விவேக் போன்றவர்கள் நடித்துள்ளனர். இயக்குனர் ஜீவாவின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படமாகும். + +மசாலாப்படம் + +வேலை தேடிச்செல்லும் நபரான சக்தி ஒரு அழகிய பெண்ணைப் பார்த்து மயங்கு���ின்றார். அவர் அப்பெண்ணின் பின்னே செல்கின்றார். மேலும் அவர் செல்ல வேண்டிய பேருந்தும் சென்றது வங்கியில் அவருக்குக் கிடைக்க வேண்டிய வேலையும் பறிபோனது. அதே வேளை கதையில் மாற்றம். இவ்வாறு அவர் வேலைக்குச் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும் என்ற கற்பனைக்கதையினுள்ளும் அழைக்கப்படுகின்றோம் நாம். அவ்வாறு வேலைக்குச் செல்லும் சக்திக்கு வங்கியில் வேலை கிடைத்தது. அங்கு அவர் பின் தொடர்ந்து சென்ற பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த முயற்சி செய்தும் பயனெதுவும் இல்லை. ஆனால் வங்கியிலிருந்த ஒரு பெண்ணால் காதலிக்கப்பட்டார். பேருந்து நிலையத்தில் பெண்ணைத் தொடர்ந்து சென்ற சக்தியோ வேலை கிடைக்காது பல துன்பங்களுக்கு ஆளாக நேரிடுகின்றது. இறுதியில் நண்பர் ஒருவரின் உதவியுடன் வாகனங்களைத் திருத்துபவராகப் பணி புரிந்தார். இவ்வாறு இருக்கும் போது அவர் பின் தொடர்ந்து சென்ற பெண்ணைப் காண்கின்றார். அவரிடம் உள்ள தன் காதலை வெளிப்படுத்துகின்றார். இருவருக்கும் ஏற்படும் காதலில் திடீரென அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வந்த அவள் மாமன் அவளைத் தான் காதல் செய்வதாகக் கூறுகின்றான். இப்பிரச்சனையிலிருந்து எவ்வாறு சக்தியும் அவன் காதலியும் தப்பிக்கின்றனர் என திரைக்கதை நகருகின்றது. + + + + +நவரசா + +நவரசா "(Nine Emotions)" (2005) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி.ஸ்வேதா,குஷ்பு,பாபி டார்லிங் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. + +சுதந்திரப்படம் + +பி.ஸ்வேதா தனது இளமைப்பருவத்திலிருந்து பூப்பெய்கின்றார் அச்சமயம் தனது மாமனான கௌதம் (குஷ்பு) ஒவ்வொரு இரவும் பெண்ணாக மாற்றம் அடைவதனையும் காண்கின்றாள்.மேலும் மூன்றாம் மனித இனமாகப் பிறந்த இவளின் மாமாவும் அவ்விடத்திலிருந்து ஓடி கோவகம் விழாவில் வேறொரு மூன்றாம் மனித இனத்தைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்து கொள்ளவதற்காகச் செல்கின்றார்.இவரைத் தேடிச் செல்லும் ஸ்வேதாவும் அங்கு பல மூன்றாம் மனித இன மக்கள் பலரை நண்பர்களாகக் கொள்கின்றார்.பின்னர் அவர்களுக்கென்ற ஒரு அழகிய கலாச்சாரத்தினையும் நேசிக்கின்றார். + + +2005 மோனாகோ சர்வதேச திரைப்பட விழா (மொனாகோ) +2005 தேசிய திரைப்பட விருது (இந்தியா) + + + + + +சந்தோஷ் சிவன் + +சந்தோஷ் சிவன் (Santhosh Sivan, பிறப்பு: திருவனந்தபுரம்) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார். + + + + + + + + +ரன் (திரைப்படம்) + +ரன் திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படத்தில் மாதவன்,மீரா ஜாஸ்மின்,விவேக்,ரகுவான் மற்றும் பலர் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் நடிகை மீராஜாஸ்மின் அறிமுகமான முதல் தமிழ்த் திரைப்படமாகும். + +மசாலாப்படம் +திருச்சியிலிருந்து சென்னையில் இருக்கும் மாமாவின் வீட்டிற்குச் செல்லும் நாயகனான மாதவன் அங்கு மீராவைப் பார்த்து காதல் கொண்டு அவர் பின்னால் செல்கின்றார்.ஆனால் பல முறை மீரா தன் அண்ணன் ஒரு பெரிய தாதா எனக் கூறியும் அவள் பின்னே செல்கின்றார்.பின்னர் இருவரும் காதலிக்கின்றனர்.இதனை அறிந்து கொள்ளும் அவள் அண்ணன் மாதவனைக் கொல்ல பல முறை முயற்சி செய்தும் இயலாமல் இறுதியில் மாதவனால் தாக்கப்படுகின்றான்.பின்னர் மாதவனும் மீராவும் சேர்ந்து கொள்கின்றனர். + + + + + +மதுர + +மதுர 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரமணா மாதேஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய்,ரக்சிதா, சோனியா அகர்வால், வடிவேல், பசுபதி, சீதா போன்ற பலர் நடித்துள்ளனர். + +சென்னையில் உள்ள காமாட்சியின் (சீதா) வீட்டுக்கு அவர் மகள் சுசிலாவின் (சோனியா அகர்வால்) நண்பர்கள் என்று மதுரவேல் (விஜய்) மற்றும் பாண்டு (வடிவேல்) சுசிலாவைக் காண வருகிறார்கள். அவர்களுக்கு இங்கு யாரையும் தெரியாது என்பதால் அவர்களை அங்கேயே தங்கச் சொல்கிறார் காமாட்சி. மதுரயும் பாண்டுவும் சந்தையில் காய்கறி கடை வைக்கிறார்கள். அனிதா (ரக்சிதா) அங்கு கல்லூரி திட்டப்பணிக்காக செய்தி சேகரிக்க வருகிறார். அவர் மதுரயை காதலி்க்கிறார். சுசிலாவின் இரு தங்கைகள் காமாட்சியுடன் வசித்து வருகிறார்கள், கடைசி தங்கைக்கு பேச்சு வராது. மதுரைவேல் அவர்களுக்கு மகனாக இருந்து உதவுகிறார். காமாட்சியின் இரண்டாவது மகள் ஒருவரை காதலிப்பதை அறிந்து அவரை சந்திக்க மதுர செல்கிறார். ஆனால் அவர் தான் மதுரயின் தங்கையை திருமணம் செய்யமுடியாது எனவும் தனக்கு இது போல் நிறைய பேருடன் தொடர்பு இருப்பதாகவும் கூறுகிறார். அவரை மதுர அடித்து விடுகிறார். அதற்கு பழி வாங்க அவர் சில போக்கிரிகளையும் காவல்துறையினரையும் அனுப்புகிறார். மதுர அவர்களை அடித்து விரட்டிவிடுகிறார், காவல்துறை அலுவலர் இவரை கண்டதும் அவருக்கு வணக்கம் தெரிவித்து எல்லோரையும் அங்கிருந்து போகச்சொல்கிறார். அப்போது காமாட்சிக்கு மதுர தான் தன் மகள் சுசிலாவை கொன்றவர் என்று அறிந்து மதுர வைத்திருந்த துப்பாக்கி கொண்டு அவரை சுட்டு விடுகிறார். மருத்துவமனையில் பாண்டு மதுர சுசிலாவை கொல்லவில்லை என்றும் மதுர இங்கு ஏன் வந்தார் என்றும் கூறுகிறார். + +மதுரைவேல் மதுரை மாவட்ட ஆட்சிதலைவராக இருந்தவர் அவரிடம் செயலாளராக சுசிலா பணிபுரிந்தார். மதுரையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் கே. டி. ஆர் (பசுபதி), கலப்பட பொருட்களை விற்று வந்தவர். கலப்பட பொருட்கள் உள்ள கிடங்குகளை மதுரைவேல் பிடித்தாலும் கே. டி. ஆர் மீது வழக்கு தொடுக்க சரியான ஆதாரம் கிடைக்காமல் இருக்கிறது. சரியான ஆதாரம் கிடைக்க வழியில்லாமல் மதுரைவேல் தடுமாறுகிறார். ஆதாரம் எடுக்க சுசிலா கே டி ஆர் வீட்டுக்கு செல்கிறார் ஆதாரத்தை கண்டு அதை மதுரைவேலுக்கு தொலைநகலி மூலம் அனுப்புகிறார் ஆனால் அவர் கேடிஆரிடம் மாட்டிக்கொள்கிறார், அவரை காப்பாற்ற மதுரைவேல் வருகிறார் ஆனால் அங்கு நடக்கும் சண்டையில் மதுரைவேல் வைத்திருந்த கத்தியால் சுசிலா வெட்டுப்படுகிறார். அவரை காப்பாற்ற மதுரைவேல் முயலும் போது அவர்கள் இருந்த வீட்டை கேடிஆர் ஆட்கள் எண்ணெய் ஊற்றி கொளுத்திவிடுகிறார்கள். அதில் சுசிலா உயிர் போகிறது, மதுரைவேல் காயங்களுடன் தப்பித்து பாண்டுவின் வீட்டை அடைகிறார். சுசிலாவை கொன்று விட்டு மதுரைவேல் தலைமறைவாகி விட்டதாக செய்திவெளியாகிறது. சிறிது காலம் தலைமறைவாக இருந்து தான் குற்றவாளியல்ல என்பதை நிருபிக்க வேண்டியும் சுசிலா குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டியும் மதுரைவேல் சென்னைக்கு வருகிறார். தான் குற்றவாளி அல்ல என்பதற்கான ஆதாரங்களை சேகரித்து முதலமைச்சரிடம் கொடுக்க, முதலமைச்சர் அவரை மீண்டும் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கிறார். மதுரைவேல் கேடிஆரின் பிடியில் இருந்து மதுரையை மீட்டு கேடிஆரை கொல்கிறார். + + + + +ஆறு (திரைப்படம்) + +ஆறு 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா, திரிஷா மற்றும் பலர் நடித்துள்ளனர். + +மசாலாப்படம் + + +விஷ்வனாதனுக்குக் கூலியாளாக இருக்கும் ஆறு (சூர்யா) தனது எஜமானரான விஷ்வனாதனுக்காக (அசிஷ் விஷ்யாத்ரி) பல கொடிய செயல்களைத் துணிந்து செய்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் பரம எதிரியான ரெட்டியினால் பல பிரச்சனைகள் வரவே அவருக்கு எதிராக ஆறுவை மோதச் சொல்கின்றார். ஆனால் விஷ்வனாத்தின் சூழ்ச்சியினால் ஆறுவின் நெருங்கிய நண்பர்கள் கொல்லப்படவே பின்னைய காலங்களில் முதலாளியின் சூழ்ச்சிகளை அறிந்து கொள்கின்றார் ஆறு. பின்னர் தனது முதலாளியைப் பழி வாங்குகின்றார். + + + + +தம்பி (திரைப்படம்) + +தம்பி திரைப்படம் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இயக்குனர் சீமானின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,பூஜா, பிஜு மேனன் மற்றும் பலர் நடித்திருந்தனர். + + + + +வந்தே மாதரம் + +வந்தே மாதரம் (தேவநாகரி: वंदे मातरम / வங்காள மொழி: বন্দে মাতরম "Bônde Matorom"), இந்தியாவின் நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது. + +பங்கிம் சந்திர சட்டர்ஜி ஆங்கிலேய அரசின் கீழ் பணிபுரிந்த போதே, வந்தே மாதரத்தை எழுதும் எண்ணம் அவருள் இருந்தது என்று பொதுவாக நம்பப்படுகிறது. 1870 வாக்கில், இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள், "God Save the Queen" என்று தொடங்கும் இங்கிலாந்து இராணியைப் புகழ்ந்து பாடும் பாடலை கட்டாயமாக்கினார்கள்.. பங்கிம் சந்திரர், இப்பாடலை தான் புலமை பெற்றிருந்த வங்காள மொழி மற்றும் சமஸ்கிருத மொழிச் சொற்களைக் கொண்டு ஒரே மூச்சில் எழுதினார். எனினும், முதலில் இப்பாடலில் உள்ள சில சொற்களை உச்சரிப்பதில் இருந்த சிரமங்களால் இப்பாடல் பெரிதும் விமர்சிக்கப்பட்டது.. இப்பாடல், 1882ல் பங்கிம் சந்திரர் எழுதி வெளியிட்ட "ஆனந்தமடம்" (வங்காள மொழியில் "Anondomott" என்று உச்சரிக்கப்படுகிறது) என்ற நூலில் முதன்முதலில் காணப்பட்டது. எனினும், இப்பாடல் 1876லேயே எழுதப்பட்டுவிட்டது. அப்பொழுது, ஜாதுனாத் பட்டாச்சார்யா இப்பாடலுக்கு மெட்டமைத்துத் தந்தார்.. + +நாட்டளவ��ல், "வந்தே மாதரம்" (தாய் (மண்ணே) உன்னை வணங்குகிறேன்) என்பதே ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிரான விடுதலை முழக்கமாக இருந்தது. இந்திய மக்களிடையே விடுதலை தாகத்தை இப்பாடல் தூண்டி விடக்கூடிய ஆபத்தை உணர்ந்த ஆங்கிலேய ஆட்சியர்கள் இப்பாடலை பொது இடங்களில் பாடுவதை தடை செய்தனர்; தடையை மீறிய விடுதலைப் போராட்ட வீரர்களை சிறையில் இட்டனர். ரபீந்திரனாத் தாகூர் முதலிய பலரும் இப்பாடலை பல்வேறு காலகட்டங்களில் பொது மன்றங்களில் பாடினர். [[[[லாலா லஜபதி ராய்]] [[லாகூர்|லாகூரில்]] இருந்து வந்தே மாதரம் என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கினார்.. + +"இப்பாடல் பிரபலமடைவதை காண நான் உயிரோடு இல்லாமல் போகலாம். ஆனால், இது ஒவ்வொரு இந்தியனாலும் பாடப்படும்" என்று தன் பாடல் குறித்து தீர்க்கத்தரிசனமாகக் கூறினார் பங்கிம் சந்திரர். இப்பாடல் வரிகளை அடிப்படையாக வைத்து பல்வேறு இசை மற்றும் கவியாக்க முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. இப்பாடலின் பல்வேறு வடிவ இசைப்பதிப்புகள் இருபதாம் நூற்றாண்டு முழுக்க வெளியாகின. "Leader, அமர் ஆஷா, ஆனந்த்மத்" ஆகிய திரைப்படங்களில் இப்பாடலுக்கான காட்சியமைப்புகள் இடம்பெற்றன. [[அனைத்திந்திய வானொலி]] நிலையங்களில் ஒலிபரப்பப்படும் வந்தே மாதரப் பாடலுக்கு [[ரவி சங்கர்]] இசையமைத்துத் தந்ததாக நம்பப்படுகிறது.. இன்று வரை, "வந்தே மாதரம்" என்பது இந்தியர்கள் தங்கள் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக கருதப்படுகிறது. + +"வந்தே மாதரம்" இந்தியாவின் நாட்டுப் பண்ணாக பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் "[[ஜன கண மன]]" நாட்டுப் பண்ணாக முடிவு செய்யப்பட்டது. இசுலாமியர்கள், வந்தே மாதரப் பாடல், நாட்டை தாய்க்கும், அதன் மூலம் மறைமுகமாக இந்து தெய்வமான [[துர்கை]]க்கும் ஒப்புமைப் படுத்துவதாக கருதியதால், சமய சார்பற்ற நாட்டுப்பண்ணை தேர்ந்தெடுக்கும் முகமாக வந்தே மாதரம் நாட்டுப்பண்ணாக்கப்படவில்லை; தவிரவும், வந்தே மாதரப் பாடல் இடம்பெற்றிருந்த பங்கிம் சந்திரரின் நூல் இசுலாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்டிருந்ததாகவும் அவர்கள் கருதினார்கள். + +1937ல் [[இந்திய தேசிய காங்கிரஸ்]], இப்பாடலின் தகுதி நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியது. பாடலின் முதல் இரு பத்திகள் தாய்மண்ணின் அழகைப் போற்றிப் பாடுவதாக இருந்தாலும் பிற பத்திகள் தா���் மண்ணை துர்கையுடன் ஒப்புமைபடுத்துவதாக கருதப்பட்டது. எனவே, பாடலின் முதல் இரு பத்திகளை மட்டும் நாட்டுப் பாடலாக அறிவிப்பது என காங்கிரஸ் முடிவு செய்தது. + +"வந்தே மாதரம்" நாட்டுப் பாடலாக அறிவிக்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக [[செப்டம்பர் 7]], [[2006]] அன்று இந்தியா முழுக்க அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் பகல் 11 மணிக்கு இப்பாடலைப் பாட வேண்டும் என்று இந்திய அரசு அறிவித்தது. இப்பாடலைப் பாடுவது கட்டாயமல்ல என்றும் சமயச் சார்பற்ற முதல் இரண்டு பத்திகளை பாடினால் போதும் என்றும் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டாலும், பல இசுலாமிய அமைப்புக்கள் இந்தப் பாடலை பாடுவதற்கு தயக்கம் தெரிவித்தன. [[தமிழ்நாடு]] உள்ளிட்ட பல மாநில அரசுகள் இப்பாடலை பாடுவதை மாணவர்களின் விருப்பத்துக்கு விட்டிருந்தாலும், [[பாரதிய ஜனதா கட்சி]] ஆளும் மாநிலங்களில் இப்பாடலை பாட வைப்பதற்கு உறுதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இதை அடுத்து, சில இசுலாமிய அமைப்புகள், அன்றைய தினம் பெற்றோர் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டாலும், பல இசுலாமியர்களின் பங்கேற்போடு நாட்டுப் பாடலின் நூற்றாண்டுக் கொண்டாட்டங்கள் நாடெங்கும் நிகழ்ந்தன. + +தாயே வணங்குகிறோம் + +இனிய நீர் + +இன்சுவைக்கனிகள் + +தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை +மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை + +எங்கள் தாய் + +தாயே வணங்குகிறோம் + +வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள் + +இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள் +எழில்மிகு புன்னகை +இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள் + +எங்கள் தாய் + +சுகமளிப்பவளே + +வரமருள்பவளே + +தாயே வணங்குகிறோம் + +கோடிக் கோடிக் குரல்கள் + +உன் திருப்பெயர் முழங்கவும் + +கோடிக் கோடிக் கரங்கள் + +உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும் +அம்மா ! 'அபலா '#2 என்று உன்னை அழைப்பவர் எவர் ? +பேராற்றல் பெற்றவள் + +பேறு தருபவள் + +பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள் + +எங்கள் தாய் +தாயே வணங்குகிறோம் + +அறிவு நீ + +அறம் நீ +இதயம் நீ +உணர்வும் நீ + +எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ + +எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ + +எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும் +தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ + +தாயே வணங்குகிறோம் + +ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும் +அன்னை துர்க்கை நீ��ே +செங்கமல மலர் இதழ்களில் உறையும் +செல்வத் திருமகள் நீயே +கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே + +தாயே வணங்குகிறோம் + +திருமகளே +மாசற்ற பண்புகளின் மனையகமே +ஒப்புயர்வற்ற எம் தாயகமே +இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே +கருமை அழகியே +எளிமை இலங்கும் ஏந்திழையே +புன்முறுவல் பூத்தவளே + +பொன் அணிகள் பூண்டவளே +பெற்று வளர்த்தவளே + +பெருமைகள் அனைத்தும் அளித்தவளே + +தாயே வணங்குகிறோம் + + + + + +[[பகுப்பு:இந்திய தேசியச் சின்னங்கள்]] +[[பகுப்பு:இந்திய விடுதலைப் போராட்டம்]] +[[பகுப்பு:இந்திய இலக்கியம்]] + + + +பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 + +பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம், 1957 ஜூலை 26, 1957 அன்று அப்போதைய இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தைக் குறிக்கும். + +தனிச் சிங்களச் சட்டம், இந்தியத் தமிழ் தோட்டத் தொழிலாளர் குடியுரிமை பறிப்பு, தமிழ்ப் பிரதேசங்களில் அத்துமீறிய குடியேற்றங்களினால் ஆத்திரமடைந்து பல்வேறு வகையான (பொதுவாக வன்முறையற்ற) போராட்டங்களில் ஈடுபட்ட தமிழர்களை ஓரளவுக்கு சமாதானப்படுத்தும் நோக்குடன் இந்த ஒப்பந்தம் பண்டாரநாயக்காவால் கைச்சாத்திடப்பட்டது. + +குடியேற்றத் திட்டங்களைப் பொறுத்தவரை, பிரதேச சபைகளுக்குத் தரப்படும் அதிகாரங்களுள், அப்பிரதேசத்துள் குடியேற்றப்படுபவரை தெரிவு செய்வதும் அங்கு வேலைக்கு ஆட்களை நியமிக்கும் பொறுப்பும் அடங்கும் என்பதில் இவ்வொப்பந்தத்தில் உடன்பாடு ஏற்பட்டது. + +இவ்வொப்பந்தத்தை எதிர்த்து ஒக்டோபர் 4, 1957 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தனா உட்பட பல சிங்களத் தலைவர்கள் பலரும் கண்டிக்கு நடத்திய எதிர்ப்பு யாத்திரை காரணமாகவும் பௌத்த பிக்குகள் பலரும் தீவிரமாக எதிர்த்தமையாலும் இவ்வொப்பந்தம் நடைமுறைப் (அமுல்) படுத்தப்படவில்லை. + + + + + +திமிரு + +திமிரு 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தருண் கோபியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷால், ரீமா சென், சிரேயா ரெட்டி போன்ற பலர் நடித்துள்ளனர். + +மசாலாப்படம் + +மதுரையிலிருந்து ச��ன்னையில் அமையப்பெற்றிருக்கும் கல்லூரியில் மருத்துவப் படிப்பை மேற்கொள்ள வரும் கணேஷ் (விஷால்) பல கும்பல்களால் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் வலை விரித்துத் தேடப்படுகின்றார்.பின்னர் கல்லூரியில் படிக்கும் சக மாணவனால் கொலை செய்யப்படவிருந்த சிறீமதியைக் (ரீமா சென்) காப்பாற்றுகின்றார்.பின்னர் கணேஷ் மீது காதல் கொள்ளும் சிறீமதி பல முயற்சிகளினால் பேருந்து நிலையத்தில் தெரிவிக்க முயலும் போது அங்கு வரும் கும்பல்களால் அவரின் காதல் தடைப்பட்டது.அங்கு வரும் கும்பல்கள் கணேஷால் மதுரையில் திருமணம் செய்ய மறுக்கப்பட்ட ஈஷ்வரியின் (சிரேயா ரெட்டி) காவலர்களாவர்.ஈஷ்வரியின் வற்புறுத்தலை பல முறை மறுத்த கணேஷ் ஈஷ்வரி தன்னைக் கொலை செய்ய வரும் போது திடீரென தள்ளிவிடும் பொழுது ஏற்படும் விபத்தில் மின்சாரத்தினால் தாக்கப்படும் ஈஷ்வரி பின் தனது அண்ணனிடம் தனக்கு கிடைக்காத கணேஷ் வேறொருவரையும் திருமணம் செய்யக் கூடாது எனவும் கூறிவிட்டு மரணிக்கின்றாள். + + + + +சாமி (திரைப்படம்) + +சாமி 2003 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஹரி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விக்ரம், திரிஷா, விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர். + +மசாலாப்படம் + +இது ஹாரிஸ் ஜயராஜ் இசையமைப்பில் வெளியான திரைப்படமாகும். + + + + +மின்சார கனவு + +மின்சார கனவு, 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜிவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் அரவிந்த் சாமி, பிரபு தேவா, கஜோல் மற்றும் பலர் நடித்திருந்தனர். + +1997 தேசிய திரைப்பட விருது (இந்தியா) + + + + + +ஆய்த எழுத்து (திரைப்படம்) + +ஆய்த எழுத்து இத்திரைப்படம் 2004 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த்திரைப்படமாகும். மணிரத்னத்தின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழிலும் ஹிந்தியில் யுவா எனவும் வெவ்வேறு நடிகர்களைக் கொண்டு ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. + +பாலமொன்றினில் சந்தித்துக் கொள்கின்றனர் மூன்று இளைஞர்கள் அவர்களில் இன்பசேகர் (மாதவன்) ஒரு அடிதடிகுணம் கொண்டவன். அவன் மைக்கேலை (சூர்யா) அப்பாலத்தில் சுட்டு வீழ்த்துகின்றான். இச்சம��பவத்தை நேரில் பார்க்கிறான் அர்ஜூன் (சித்தார்த்). இதனை அனைவருக்கும் தெரிவுபடுத்துகின்றான். இச்சம்பவத்தின் பின் மைக்கேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றான். பின்னர் மூவரும் எவ்வாறு இச்சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதனை அவர்களின் வாழ்க்கைக் கதைகளை திரைப்படம் விளக்குகின்றது. கல்லூரி மாணவனான மைக்கேல் அரசியலில் நடக்கும் அநீதிகளை மக்களுக்கு விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றான். இதனையறிந்த அரசியல்வாதிகள் அவனைக் கொல்வதற்காக இன்பசேகரை பயன்படுத்துகின்றனர். இன்பசேகர் கூலிக்காக கொலை கொள்ளை போன்ற பல தீய செயல்களில் ஈடுபட்டு வருபவன். இருப்பினும் அவன் தன் மனைவி சசி (மீரா ஜாஸ்மின்) மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தான். கீதாவைக் காதலிக்கும் மைக்கேல் அவளைத்திருமணம் செய்வதற்காக ஆயத்தமான வேளையில் இன்பசேகரின் துப்பாக்கி குண்டுகளில் காயப்பட்டு பாலத்திற்கு அருகில் இருந்த நதியில் வீழ்கின்றான். இதனை அமெரிக்காவிற்குச் சென்று கல்வி பயில இருந்த மாணவனான சித்தார்த் தனது காதலியான மீராவைச் (திரிஷா) சந்திப்பதற்காக அவசரமாக மைக்கேலின் மோட்டார் வண்டியில் சென்ற போது மைக்கேல் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்த்தான். + + + + +டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965 + +டட்லி - செல்வா ஒப்பந்தம், 1965 அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேனநாயக்காவுக்கும் தமிழர் தரப்பு தலைவர் எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களுக்குமிடையே 1965, மார்ச் 24 இல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இலங்கையின் வடக்கு, கிழக்கில் தமிழ் மொழிப் பயன்பாட்டை ஏதுவாக்குவதும், வட கிழக்கில் அரச நில பகிர்ந்தளிப்பில் தமிழ் மொழிபேசுவோருக்கே முன்னுரிமை வழங்குவதும் இவ் ஒப்பந்தத்தின் சாராம்சங்கள் ஆகும். + +1965 மார்ச் 22 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐ.தே.கட்சி 66 ஆசனங்களையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 41 ஆசனங்களையும் இலங்கைத் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் லங்கா சமசமாஜக் கட்சி 10 ஆசனங்களையும் கைப்பற்றின. 151 ஆசனங்களில் 76 ஆசனங்கள் இருந்தால்தான் அரசாங்கத்தை நடத்த முடியும். மிகுதி ஆசனங்களுக்கு மற்றக் கட்சிகளின் ஆதரவைத்தேட வேண்டியிருந்தது. ஐ.தே.கட்சிக்கு அரசமைக்கும் பங்காளியாக தமிழரசுக் கட்சி ம��ன்வந்தது. அதைத் தொடர்ந்து "டட்லி- செல்வா ஒப்பந்தம்" எழுதப்பட்டது. + + + + + + +இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 + +இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனாக்கும் இடையே யூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இந்த ஒப்பந்தம் இலங்கை ஒரு பல்லின, பல்மத, பல்மொழி நாடாக ஏற்று வடகிழக்கை தமிழ் முஸ்லீம் மக்களின் இணைந்த தாயகப்பிரதேசமாக ஏற்று தமிழ் மொழியை அரச மொழியாக ஏற்று மாகாண சபைகளுடான அதிகாரப் பரவலாக்கத்தை முன்வைக்கின்றது. இவ்வொப்பந்தம் மூலம் ஏற்படுத்தப்பட்ட வடகிழக்கு மாகாண சபை பின்னர் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் செயல்படாமல் போனது. + +இந்தியக் குடியரசின் பிரதம மந்திரி திரு.ராஜிவ்காந்தியும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி திரு.ஜே,ஆர் ஜயவர்தனவும் 1987ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி கொழும்பில் சந்தித்தார்கள். +இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பாரம்பரிய நட்புறவை ஆதரித்துத் தீவிரப்படுத்தி மேலும் வலுப்படுத்துவதின் முக்கியத்துவத்தை கருத்திற் கொண்டும், இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் அதன் விளைவான வன்செயல்களுக்கும் தீர்வு காண வேண்டியதன் தவிர்க்க முடியாத அவசியத்தையும் இலங்கையிலுள்ள சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் பாதுகாப்பு, நழன்புரி நடவடிக்கைகள், சுபீட்சம் ஆகியவற்றை உணர்ந்தும், + +இந்த நோக்கங்களை நிறைவேற்றுவதற்காகப் பின்வரும் உடன்படிக்கையை இந்தத் தினத்தில் ஏற்படுத்திக் கொண்டார்கள். + +1. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றைப் பேணிக்காக்க விரும்பி, + +2. இலங்கை சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள், பறங்கியர் ஆகியோரைக் கொண்ட பல்லின, பன்மொழி சமூகங்கள் வாழும் நாடு என்பதை உணர்ந்து, + +3. மிகக் கவனமாகப் பேணிக் காப்பாற்ற வேண்டிய தனித்தனிக் கலாசாரம்,மொழி அடையாளங்களை ஒவ்வொரு இனமும் கொண்டுள்ளதென்பதையும், + +4. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் அங்கு ஏனைய இனக்குழுக்களுடன் எல்லாக் காலத்திலும் ஒன்றாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுப்பூர்வமான வசிப்பிடங்கள் என்பதையும் அங்கீக���ித்து, + +5. இலங்கையின் ஐக்கியம், இறைமை, பிரதேச ஒருமைப்பாடு ஆகிய அம்சங்களைப் பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்த சகல பிரஜைகளும் சமத்துவமாகவும், பாதுகாப்பாகவும், ஒற்றுமையாகவும் சுபீட்சத்துடன் தங்கள் அபிலாசைகளை நிறைவேற்றி வாழும் பல இன, பல மொழி பேசும் பல மதங்களைக் கடைப்பிடிக்கும் தன்மையைப் பேணி, + +பின்வரும் உடன்பாட்டிற்குவருகிறோம்: + +1. இலங்கை அரசாங்கம் அருகருகேயுள்ள மாகாணங்களை ஒரு நிர்வாக அலகாகச் சேர்த்துக் கொள்ளக்கருதும் கீழ் விவரிக்கப்பட்டவாறு வடக்கு, கிழக்கு என்று அவற்றைப் பிரிக்கும் பட்சத்தில் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்துவது என்றும், + +2. மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்படும் திகதியில் இருந்து 3இல் தெரிவிக்கப்பட்டவாறு சர்வஜன வாக்குரிமை நடத்துவது திகதி வரையான காலப்பகுதி இடைக்காலப்பகுதியென்று கருதப்படும். 8ம் வாசகத்திற்கு அமைய சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் வரை தற்போதுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரு மாகாண சபையை உள்ளடக்கிய ஒரு நிர்வாக அலகாக இருக்கும். இத்தகைய அலகில் ஓர் ஆளுநர், ஒரு முத்லமைச்சர், ஓர் அமைச்சரவை ஆகியன செயற்படும். + + + + + +இலங்கை அரசு விடுதலைப் புலிகள் போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 + +விடுதலைப் புலிகள் இலங்கை அரசு போர் நிறுத்த ஒப்பந்தம், 2002 நோர்வே நாட்டின் அனுசரணையுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே பெப்ரவரி, 2002 காலப்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறிக்கும். புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் அப்போதைய இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். + + + + + +திம்புப் பேச்சுவார்த்தைகள் + +திம்புப் பேச்சுவார்த்தைகள் இந்திய அரசின் அனுசரணையுடன் இலங்கை அரசுக்கும் ஈழத் தேசிய விடுதலை முன்னணிக்குமிடையே ஈழத்தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்குடன் பூட்டான் நாட்டின் தலைநகரான திம்புவில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளை குறிக்கும். இப்பேச்சுவார்த்தைகள் 1985ம் ஆண்டு ஜூலை 8இல் ஆரம்பமாகியது. + +இப்பேச்சு வார்த்தையில் தமிழர் சார்பாக பங்��ு பற்றிய ஈழத் தேசிய விடுதலை முன்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகளும் நான்கு உறுப்பு இயக்கங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. + + + + +பிரேமதாசா விடுதலைப்புலிகள் ஒப்பந்தம், 1989 - 1990 + +பிரேமதாசா புலிகள் ஒப்பந்தம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அப்போதையை இலங்கை ஜனாதிபதி பிரேமதாசாவுக்குமிடையே ஏற்படுத்தப்பட்ட உத்யோகபூர்வமற்ற ஒரு ரகசிய உடன்படிக்கையை குறிக்கின்றது. இந்திய இலங்கை ஒப்பந்தம், 1987 காரணமாக இலங்கையில் இருந்த இந்திய சமதானப் படைகளை வெளியேற்றும் நோக்குடன் இவ்வுடன்படிக்கை அமைந்தது. இவ்வுடன்படிக்கை 1990 இறுதிப்பகுதியில் முறிவடைந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளாலேயே பிரேமதாசா பின்னர் கொலை செய்யப்பட்டார் என பொதுவாக கருதப்படுகின்றது. + + + + +தீஃவ்: டெட்லி சாடோஸ் + +தீவ்ப்: டெட்லி சாடோஸ்(thief:deadly shadows) தமிழில் திருடன்: பயங்கர நிழல்கள் இந்நிகழ்பட ஆட்டம் தீவ்ப் ஆட்டத் தொடர்களின் மூன்றாம் வெளியீடாகும்.முந்தைய இருபாகங்களில் இருந்தும் முற்றிலும் மாறுபட்டு தந்திரக் காட்சிகளில் அவ்விரு ஆட்டங்களிலும் சிறந்ததாக காணப்படுகின்றது.மேலும் இதனை எக்ஸ் பாக்ஸிலும் மைக்ரோசாப்ட் விண்டோஸிலும் ஆடமுடியும். + +காரெட் என்பவனால் பல இடங்களின் பல திருட்டுக்கள் நடைபெறுகின்றன.இவ்வாறு காரெட் தனது திருட்டுப் பயணங்களை அரண்மனை,பாகன்களின் இடம்,பேய்களின் கப்பல்,மற்றும் பல இடங்களின் மேற்கொள்கின்றான்.இவ்வாறு இருக்கும் பொழுது இவனுக்கு இரகசிய சமூகம் ஒன்றினால் ஒரு வேலை வழங்கப்படுகின்றது.அதாவது பல இடங்களில் மறைத்து வைத்திருக்கப்பட்டிருக்கும் ஒரு பிரிக்கப்பட்ட சின்னத்தைச் சேர்த்து ஒரு இடத்தில் ஒட்ட வேண்டும்.இதனை காரட்டும் செய்கின்றான்.இவ்வாறு இவன் செய்வதை நாம் செய்வதே இந்நிகழ்பட ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். + + + + +சந்திரிகா விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995 + +சந்திரிகா - விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகள், 1994 - 1995 சமாதானத்தை முன்வைத்து 1994 இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரிகா குமாரதுங்க தலைமை���ிலான இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையான பேச்சுவார்தைகளை குறிக்கின்றது. இப்பேச்சுவார்த்தைகள் பலதரப்பட்ட எதிர்பார்ப்புக்களுடன் 1995 ஜனவரி 3இல் இருதரப்பாலும் ஆரம்பிக்கப்பட்டாலும் குறுகிய காலப்பகுதியில் இறுக்க நிலையை அடைந்தது. தமிழ் மக்களின் உடனடி அடிப்படைப்பிரச்சினைகளை அரசாங்கம் கவனிக்க மறுக்கின்றது எனக் காரணம் காட்டி விடுதலைப் புலிகள் ஏப்ரல் 19, 1995ம் ஆண்டு முன்னறிவித்தலுடன் பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகிக்கொண்டனர். + + + + + +டி. ஆர். ராஜகுமாரி + +டி. ஆர் ராஜகுமாரி (மே 5, 1922 – செப்டம்பர் 20, 1999) தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தவர். நடிப்பு, நடனம், பாடல் அனைத்திலும் பெயர்பெற்றவர். + +ராஜாயி என்னும் இயற்பெயரைக் கொண்ட டி. ஆர். ராஜகுமாரி தஞ்சாவூரில் பிறந்தவர். தாயார் ரெங்கநாயகி தஞ்சை குஜலாம்பாள் அவா்களின் புகழ் பெற்ற இசை மேதை குடும்பத்தை சோ்ந்தவா். ராஜகுமாாி பிறந்த சில நாட்களிலே தகப்பனரான ராதாகிருஷ்ணன் இறந்தார். இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் சகோதரர் டி. ஆர். ராமண்ணா குடும்பத்துக்கு ஆதரவாக வாழ்ந்தார். + +1939 ஆம் ஆண்டு டெக்கான் சினிடோனின் குமார குலோத்துங்கன் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து "மந்தாரவதி", "சூர்யபுத்ரி" படங்களில் கதாநாயகியாக நடித்தார். இவையனைத்தும் படுதோல்விப் படங்களாயிருந்தும் அதைத் தொடர்ந்து கே. சுப்பிரமணியத்தின் தயாரிப்பில் வெளிவந்த கச்ச தேவயானி படம் பெரு வெற்றி பெற்றது. + +எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யு. சின்னப்பா, எம். கே. ராதா, டி. ஆர். மகாலிங்கம் என அன்றைய முன்னணிக் கதாநாயகர்களுடன் நடித்துப் புகழ் பெற்றவர் ராஜகுமாரி. + +பி. யு. சின்னப்பாவுடன் மனோன்மணி படத்திலும், பாகவதருடன் சிவகவி, ஹரிதாஸ் படங்களிலும் நடித்தார். ஹரிதாஸ் 1945 தீபாவளியன்று வெளியாகி 1946 தீபாவளி முடிய தொடர்ந்து 110 வாரங்கள் ஒரே திரையரங்கில் ஓடி சாதனை படைத்தது. ஜெமினியின் சந்திரலேகா படம் இவருக்கு பேரும் புகழும் தேடிக் கொடுத்தது. இதில் எம். கே. ராதாவுக்கு சோடியாக நடித்தார். அதில் இவர் ஆடிய ஜிப்சி நடனம், திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் இடம்பெற்ற டிரம்ஸ் நடனம் இவருக்கு இந்திய அளவில் பாராட்டுகளைக் குவித்தது. இந்தி சந்திரலேகாவிலும் நடித்தார். + +கலைஞர் மு. கருணாநிதியின் வசனத்தில் உருவான மனோகரா படத்தில் வசந்தசேனையாக இவர் நடித்திருந்தார். வானம்பாடி படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரனுக்கு அக்காவாக நடித்திருந்தார். சிவாஜியுடன் அன்பு திரைப்படத்திலும், தனது 37ஆவது வயதில் தங்கப்பதுமை திரைப்படத்திலும் நடித்திருந்தார். எம்.ஜி.ஆருடன் பணக்காரி திரைப்படத்தில் இணையாகவும், பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் சகோதரியாகவும் நடித்திருந்தார். + +சென்னையில் முதன் முதலாக தன்னுடைய பெயரிலேயே சொந்தமாக திரையரங்கினைக் கட்டிய முதல் நடிகை இவராவார். + + +இதய கீதம் திரைப்படத்தில் "வானுலாவும் தாரை நீ என் இதய கீதமே", "ஓடி வா வெண்முகில் போலே" ஆகிய இரண்டு பாடல்களை டி. ஆர். மகாலிங்கத்துடன் இணைந்து பாடியிருந்தார். + + + + + +நாடகப்பிரியா + +நாடகப்பிரியா கருநாடக இசையின் 10 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 10 வது மேளத்திற்கு நடாபரணம் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + + +நாடகப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +கோகிலப்பிரியா + +கோகிலப்பிரியா கருநாடக இசையின் 11 வது மேளகர்த்தா இராகமாகும். முத்துசுவாமி தீட்சிதர் பாரம்பரியத்தில் (அசம்பூர்ண மேள பத்ததியில்) 11 வது இராகத்திற்கு கோகிலாரவம் என்ற பெயர். + + + +கோகிலப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +சக்ரவாகம் + +சக்ரவாகம் கருநாடக இசையின் 16 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் 16 வது இராகத்திற்குத் தோயவேகவாகினி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + +தியாகராஜர் இந்த இராகத்தை வழக்கிற்கு கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த மகா வைத்தியநாத சிவன் இந்த இராகத்தைத் தன் 12 வது வயதில் சிறப்பாகப் பாடியதால் "மகா" என்ற புனைபெயர் பெற்றதாகச் சொல்லப்படுகிறது. + + + +சக்ரவாகம் இராகத்தில் அமைந்த பாடல்கள்: +சக்கரவாகத்தின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + + +வகுளாபரணம் + +வகுளாபரணம் கருநாடக இசையின் 14வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 14வது மேளத்திற்கு வாடிவஸந்தபைரவி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + + +வகுளாபரணத்தின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +செப்டம்பர் 9 + + + + + + + +பண்டத்தரிப்பு + +பண்டத்தரிப்பு ("Pandatherippu") என்பது இலங்கையில் வட மாகாணத்தில் யாழ்ப்பாண நகரத்திலிருந்து 16 கிலோமீட்டர் வடக்கே அமைந்துள்ள ஒரு சிறு நகரமாகும். பண்டத்தரிப்பு நகரசபையானது அதனையண்டிய சிற்றூர்களை உள்ளடக்கியது. அவையாவன: சில்லாலை, வடலியடைப்பு, காடாப்புலம், பனிப்புலம் மற்றும் பிரான்பற்று (பிராம்பத்தை) என்பனவாகும். + +"பண்டத்தரிப்பு" என்ற பெயர் அமைந்ததற்கான காரணம் சரியாக யாருக்கும் தெரியாவிட்டாலும், வெவ்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒருசிலர் இது ஒரு காலத்தில் பண்டங்களை தரித்துவைக்கும் (storage) தளமாக இருந்திருக்கலாம் என்பர். வேறு சிலர் இது பாண்டியர் படையெடுப்பின்போது அதன் படைகள் தரித்துச்செல்லும் இடமாக சிலகாலம் இருந்ததால் முன்னர் "பாண்டியன் தரிப்பு" என்று அழைக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பாக மருவியதாகவும் கூறுவர். + +1993ம் ஆண்டளவில் இலங்கை இராணுவ படையெடுப்பு காரணமாக பண்டத்தரிபில் வசித்துவந்த அனைவரும் முற்றிலுமாக இடம்பெயர வேண்டி ஏற்பட்டது. இந்தக்கால கட்டத்தில் பண்டத்தரிப்பு முழுமையாக பாழடைந்த நகரம் எனும் நிலைக்கு தள்ளப்படவிருந்தாலும், மக்கள் சிறிதுசிறிதாக மீண்டும் குடியேறியமையால் ஓரளவு பழைய நிலமைக்கு வந்துள்ளது + + + + +வி. எஸ். குமார் ஆனந்தன் + +விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (சுருக்கமாக குமார் ஆனந்தன்) அல்லது ஆழிக்குமரன் ஆனந்தன் (25 மே 1943 - 6 ஆகத்து 1984) இலங்கையின் நீச்சல் வீரரும் வழக்கறிஞரும் ஆவார். பாக்கு நீரிணையை நீந்தி கடந்த வீரர். ஏழு உலக சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றவர். + +1954 ஆம் ஆண்டில் பாக்குநீரிணையை நீந்திக்கடந்த நீச்சல்வீரர் மு. நவரத்தினசாமியின் ஆசியுடன் பாக்குநீரிணையை ஒரே தடவையில் நீந்திக்கடந்தார் ஆனந்தன். 1975இல் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாரை நீந்திச் சாதனை படைத்தார். அப்போது வீரகேசரி ஆசிரியராக இருந்த எஸ். டி. சிவநாயகம் அவருக்கு "ஆழிக்குமரன்" என்ற பட்டத்தை வழங்கி சிறப்பித்தார். + +யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆனந்தன் சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டாலும், நீரில் மிதத்தல், மெதுநடை, தொடர்ந்து நடனம் என்று பல செயல்களில் சாதனைகளைப் படைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றார். ஒர் ஈருந்து (மோட்டார் சைக்கிள்) தீநேர்ச்சியின் (விபத்தின்) விளைவால் இவரது மண்ணீரல் அகற்ற நேரிட்டது. ஆயினும் அவர் மனம் தளரவில்லை. + +இவர் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்கத் திட்டமிட்டு இங்கிலாந்து சென்றார். குறுகிய பயிற்சியில் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடக்க முற்பட்டார். 1984 ஆகத்து 6 ஆம் நாள் ஆங்கிலக் கால்வாயை நீந்திக்கடந்தபோது குளிரால் பாதிக்கப்பட்டு சாதனை முயற்சியின் போதே மரணத்தையும் தழுவினார். "குளிர்ந்த கடலே கவலை தருகிறது. அதற்கேற்ப என்னை தயார் செய்ய கால அவகாசம் போதவில்லை" என்று தெரிவித்தார். இதுதான் அவர் இறக்கு முன்னர் கூறிய கடைசி வார்த்தை. + + + + + +லாரி பேஜ் + +லாரன்ஸ் எட்வர்ட் "லாரி" பேஜ் ("Larry Page", பி. மார்ச்,1973) கூகுள் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது "பக்கத் தரவரிசை படிமுறைத் தீர்வு" ("pagerank algorithm") இணையத் தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது. தற்போது கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக உள்ளார். + +இவருடைய தாய் தந்தை இருவரும் கணினியியல் வல்லுநர்கள். லாரி பேஜ் பள்ளிப் படிப்புக்குப் பிறகு மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கணினியியல் கல்வி படித்தார். அதற்குப் பின்னர் கலிபோர்னியாவின் ஸ்டான்போர்டில் ஆராய்ச்சிப் பட்டப் படிப்பில் இறங்கினார். அங்கு செர்கே பிரின் என்னும் மாணவருடன் அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை, குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தைக் கொண்டு தொடங்கினார்கள். + + + + + +ஆகஸ்டு 2006 + +ஆகத்து 2006 (August 2006), ஒரு செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு வியாழக்கிழமையில் முடிவடைந்தது. + + + + + +ஸ்டார் வார்ஸ் + +"ஸ்டார் வார்ஸ்" என்பது ஜார்ஜ் லூகஸால் உருவாக்கப்பட்ட விண்வெளி சாகச உரிம காவியமாகும். இதன் முதல் உரிமத் திரைப்படம் 20 ஆம் சென்ச்சுரி பாக்ஸால் (20th Century Fox) 1977 ஆம் ஆண்டு மே 25 அன்று வெளியிடப்பட்டது. மேலும் இது உலகளாவிய அளவில் உயர்வான கலாச்சார நிகழ்வாக மாறியது. அதன் அடுத்த இரண்டு காவியங்களும் மூன்று ஆண்டு இடைவெளிகளில் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. முத்தொகுப்புகளின் இறுதித் திரைப்படம் வெளியிடப்பட்டு பதினாறு ஆண்டுகளுக்கு பின்னர், புதிய நிறைவுசெய்யப்பட்ட திரைப்படங்களின் முத்தொகுப்பு முதல் முறையாக வெளியிடப்பட்டது. இது வெளியாகி மூன்று ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர், 2005 ஆம் ஆண்டு மே 19 அன்று இதன் இறுதித் திரைப்படம் வெளியிடப்பட்டது. + +இந்தத் திரைப்படம் 2008 ஆம் ஆண்டிலிருந்து "ஜேம்ஸ் பாண்ட்" மற்றும் "ஹாரி பாட்டர்" திரைப்படங்களுக்குப் பின்னர், திரைப்படத் தொடர்களின் மொத்த வருவாயில் மூன்றாவது பெரிய வருவாயை ஈட்டியது. ஆறு "ஸ்டார் வார்ஸ்" திரைப்படங்களின் மூலம் வசூல் செய்யப்பட்ட வருவாயாக மொத்தம் சுமார் 4.3 பில்லியன் டாலரை ஈட்டியிருந்தது. + +"ஸ்டார் வார்ஸ்" திரைப்படத் தொடரானது புத்தகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், வீடியோ விளையாட்டுகள் மற்றும் காமிக் புத்தகங்கள் உள்ளிட்ட பிற ஊடகங்களின் பயன்பாடுகளுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது. திரைப்பட முத்தொகுப்புகளின் இந்தக் கூடுதலான இணைப்புகள் ஸ்டார் வார்ஸ் விரிவாக்கப்பட்ட படைப்புகளை உள்ளடக்கியிருந்தது. மேலும் இந்தத் தொடரின் குறிப்பிடத்தக்க அளவில் புனையக்கதை படைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தது. திரைப்பட முத்தொகுப்புகளுக்கு இடையேயான இடைப்பட்ட நேரத்தில் செயல்படுத்துவதற்கான உரிமத்தை இந்த ஊடகம் கொண்டிருந்தது. 2008 ஆம் ஆண்டில், முதல் முறையாக உலகளவில் அரங்கேற்றப்பட்ட "ஸ்டார் வார்ஸ்" முக்கிய முத்தொகுப்புகளுடைய திரைப்படமாக "ஸ்டார் வார்ஸ்: த குளோன் வார்ஸ்" (Star Wars: The Clone Wars) சர்வதேச அளவில் வெளியிடப்பட்டது. இது முதன் முறையாக உரிமம் வழங்கப்பட்ட அனிமேசன் திரைப்படமாகும். முந்தைய 2D அனிமேசன் செய்யப்பட்ட தொடரான ஸ்டார் வார்ஸ்: த குளோன் வார்ஸ் (Star Wars: Clone Wars (2003 TV series)) என்ற டிவித் தொடரைப் போன்ற பெயரை அடிப்படையாகக் கொண்டு, 3D CGI அனிமேசன் செய்யப்பட்ட தொடராக விரிவாக்கப்பட்ட படைப்புக்கு அறிமுகமாக அந்தத் தொடரின் அதே பெயர் திட்டமிடப்பட்டது. + +கற்பனையான விண்மண்டலத்தில் "ஸ்டார் வார்ஸ்" ஊடக நிகழ்ச்சிகள் நிகழ்வதாக சித்தரிக்கப்பட்டது. அதில் பல வேற்றுகிரகவாசிகள் (பெரும்பாலும் இயந்திர மனிதர்கள்) சித்தரிக்கப்பட்டிருந்தனர். இதில் தானியங்கி டிராய்டுகள் மிகவும் வழக்கமான ஒன்றாக இருந்தன. மேலும் பொதுவாக அவை அவற்றின் எஜமானர்களுக்கு பணிபுரிவதற்காக உருவாக்கப்பட்டன. விண்வெளிப் பயணம் இங்கு சாதாரணமாக இருந்தது. மேலும் விண்மண்டலத்தின் பல கிரகங்கள் கேலடிக் பேரரசு எனவும், பின்னர் மறுசீரமைக்கப்பட்ட கேலடிக் குடியரசின் உறுப்பினராகவும் இருந்தன. + +"ஸ்டார் வார்ஸின்" சிறப்புமிக்க அடிப்படைக்கூறுகளில் ஒன்றாக "ஆற்றல்" உள்ளது, அதன் செயல்திறத்தால் அன்றாட வேலைகளில் எங்கும் நிறைந்திருக்கும் ஆற்றலுடைய அமைப்பில் பயன்படுத்தப்படுகின்றன. "ஒரு ஆற்றல் களமானது நம்மைச் சுற்றியுள்ள, நம்மில் ஊடுருவியுள்ள [அது] உயிரினங்களிடமே உருவாக்கப்படுகிறது, [மேலும்] விண்மண்டலத்தை மொத்தமாக கட்டுப்படுத்துகிறது" என முதலில் தயாரிக்கப்பட்ட திரைப்படத்தில் விவரிக்கப்பட்டது. இந்த ஆற்றலானது பயனர்களை பல்வேறான (டெலிகினிசிஸ், ஞானதிருஷ்டி, முன்னுணர்வு, மற்றும் மனக் கட்டுப்பாடு போன்ற) சூப்பர்நேச்சுரல் வித்தைகளை நிகழ்த்துவதற்கு இடமளிக்கிறது. மேலும் ஏதோ சில உடல் சார்ந்த தனிச்சிறப்புடைய, வேகம் மற்றும் எதிரொலிகள் போன்றவற்றை நிகழ்த்த இடமளிக்கிறது; இந்தத் திறமைகள், பயிற்சியின் காரணமாக ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக பயனருக்கு பயனர் மாறுபடுகிறது. ஆற்றலானது நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தப்பட்டபோது, பகைமை, வலிந்து தாக்குதல் மற்றும் ஆழ்ந்த வெறுப்புகளுடன் பயனர்களால் இதன் இருண்ட பக்கமும் பயன்படுத்தப்பட்டது. ஆற்றலை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்தும் ஜெடியையும், விண்மண்டலத்தைக் கைப்பற்ற தீய சக்திகளைப் பயன்படுத்தும் சித்தையும் இதன் ஆறு திரைப்படங்களும் கொண்டிருந்தன. முக்கியமாக இரண்டு பாத்திரங்களால் (பார்க்க: சித்தின் தொடக்கம்), விரிவாக்கப்பட்ட படைப்பில் சித்தைக் காட்டிலும் பல டார்க் ஜெடி போன்ற இருண்ட பக்க பயனர்கள் இருந்தனர். + +இந்தத் திரைப்படத் தொடரானது "ஸ்டார் வார்ஸ்" 1977 ஆம் ஆண்டு மே 25 ஆம் தேதி வெளியானதிலிருந்து தொடங்கியது. இதைத் தொடர்ந்து இரண்டு திரைப்படங்கள் வெளியாகின; 1980 ஆம் ஆண்டு மே 21 அன்று 'த எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" என்ற திரைப்படமும், 1983 ஆம் ஆண்டு ம�� 25 அன்று "ரிட்டர்ன் ஆப் த ஜெடி" என்ற திரைப்படமும் வெளியானது. அந்தத் திரைப்படங்கள் பொதுவாக அதன் தனிப்பட்ட துணைத்தலைப்புடன் விளம்பரப்படுத்தப்பட்டாலும், திரைப்படங்களின் தொடக்க நகர்வுகள் முறையே "எபிசோட் V" மற்றும் "எபிசோட் VI" என எண்ணிட்டு அழைக்கப்பட்டது. தொடரின் முதல் திரைப்படம் சாதாரணமாக "ஸ்டார் வார்ஸ்" எனத் தலைப்பு இடப்பட்டிருந்தாலும், பிறகு அதன் தொடர் பாகங்கள் மற்றும் முன் தொடர்களில் இதை வேறுபடுத்திக் காட்ட "எபிசோட் IV: எ நியூ ஹோப்" என்ற துணைத்தலைப்பு இடப்பட்டது. + +1997 ஆம் ஆண்டில், "ஸ்டார் வார்ஸ்" வெளியிடப்பட்டதன் இருபதாவது ஆண்டுவிழாவுக்கு பொருந்தும் படி, "சிறப்பு பதிப்புகளை" உடைய மூன்று திரைப்படங்களை திரையரங்குகளில் லூகஸ் வெளியிட்டார். திரைப்படத்தின் மறுவெளியீடுகள் தொடக்க திரைப்படங்களில் இருந்து மாற்றங்களைக் கொண்டிருந்தது, அந்த நேரங்களில் இயற்கையாக எடுக்கப்படும் காட்சி அமைப்புகளில் சாத்தியப்படாத காட்சிவிளைவுகளை ஏற்படுத்தும் வகையில், CGI மற்றும் பிற சிறப்பு விளைவுகளைக் கொண்ட தொழில்நுட்பங்களில் முக்கியமாக முன்னேற்றங்களை ஏற்படுத்தியிருந்தனர். 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று முதன் முறையாக இதன் DVDயை வெளியிட்டது போன்று, பின் தொடர்ந்து வந்த வெளியீடுகளுக்காக தொடக்க முத்தொகுப்புகளுக்கு, லூகஸ் தொடர்ந்து மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். + +"எ நியூ ஹோப்" வெளியிட்டு இருபது ஆண்டுகளுக்கும் மேலான பிறகு, நீண்டகாலம் எதிர்பார்த்துக் காத்திருந்த, இந்தத் திரைப்படத் தொடர் முன் தொடர் முத்தொகுப்பு தொடர்ந்து வெளியிடப்பட்டன; 1999 ஆம் ஆண்டு மே 19 அன்று "எபிசோட் I: த பேந்தம் மேனஸ்" திரைப்படமும், "எபிசோட் II: அட்டாக் ஆப் த குளோன்ஸ்" திரைப்படமும், மேலும் 2005 ஆம் ஆண்டு மே 19 அன்று "எபிசோட் III: ரிவென்ஜ் ஆப் த சித்" உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியிடப்பட்டன. + +ஜெடி நைட் குய்-கோன் ஜின்னால் கண்டறியப்பட்ட அனகின் ஸகைவால்கரின் அறிமுகத்துடன் முன் தொடரும் முத்தொகுப்பு தொடர்ந்தது. ஜெடி தீர்க்க தரிசனத்தால் முன்பே அறிந்திருந்த, படைக்குப் பலத்தைக் கொடுக்கும் "தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவராக" அவர் நம்பப்பட்டார். ஜெடி கவுன்சிலை யோதா வழிநடத்துகிறார், அவரது எதிர்காலம் இருளடைந்த அச்சத்துடன் இருப்பதை உணர்கிறார், ஆனால் சித் த���ைவர் டர்த் மவுலால் குய்-கோன் கொல்லப்பட்ட பிறகு குய்-கோனின் தொழில் பழகுநர் ஒபி-வன் கெனோபி, அனகின்னுக்கு பயிற்சியளிக்க விருப்பமில்லாமல் அனுமதியளிக்கப்படுகிறார். அதே சமயத்தில், நபோ கிரகம் தாக்குதலுக்கு ஆளாகிறது, அந்த தாக்குதலை வெற்றிகரமாக தடுத்து நிறுத்துவதற்காக அதன் அரசியான ராணி பட்மி அமிடலா ஜெடியின் ஆதரவைத் தேடுகிறார். சித் தலைவர் டார்த் சிதிடியஸ் அவருக்கு மாற்றான செனட்டர் பலப்டைன், கேலக்டிக் குடியரசுடைய அதிகார முக்கிய அமைச்சரிடம் போலியாக நடித்து தாக்குதலை நடத்தி அவரை வீழ்த்த இரகசியமாகத் திட்டமிடுகிறார். முன் தொடரும் முத்தொகுப்புகளின் எஞ்சிய பதிவுகளில் அனகின் இருண்ட பாகத்தில் சேர்கிறார், இதில் சிடியஸ் ஜெடியை வீழ்த்துவதற்கு ஒரு இராணுவத்தை உருவாக்க முயற்சிக்கிறார், அதற்கு லூர் அனகின் அவருடன் தொழில் பழகுநராக இருக்கிறார். அனகின் மற்றும் பட்மி இருவரும் காதல் வயப்பட்டு இரகசியமாக மணமுடிக்கின்றனர், அதன் விளைவாக பட்மி கருவுறுகிறார். விரைவில் அனகின், சித் தலைவர் டார்த் வடெராக மாறுவதற்கு அவரது சினத்தை விட்டுக்கொடுக்கிறார். சிடியஸ், கேலடிக் எம்பயரின் குடியரசுக்குள் மறு ஒழுங்கு செய்யும் போது, ஜெடியின் உத்தரவை நிர்மூலமாக்க வடேர் பங்குகொள்கிறார், இதன் உச்சநிலையில் அவருக்கும் ஒபை-வன்னுக்கும் இடையே லைட்சாபெர் சண்டை நிகழ்கிறது. அவரது முந்தைய தொழில் பழகுநரை வீழ்த்திய பிறகு, வடேர் இறப்பதற்காக ஒபை-வன் விலகிச் செல்கிறார். எனினும், பிறகு சிடியஸ் அவரைக் காப்பதற்காக விரைவில் அங்கு வந்து சேர்கிறார், அவரை உயிருடன் வைத்திருப்பதற்காக கருப்பு கவச உடையில் வைக்கிறார். அதே நேரத்தில், பட்மி அவரது இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் போது இறக்கிறார். அந்த இரட்டைக் குழந்தைகள் வடேரிடம் இருந்து மறைக்கப்படுகின்றன, மேலும் அவர்களுக்கு உண்மையான பெற்றோர்களைப் பற்றி தெரியப்படுத்தப்படவில்லை. + +உண்மையான முத்தொகுப்பு 19 ஆண்டுகளுக்குப் பிறகு, வடேர் டெத் ஸ்டார் எனப்படும் மிகப்பெரிய விண்வெளி நிலையத்தை முடிக்கும் தருவாயில் தொடங்குகிறது, இதன் மூலம் வடேரும், தற்போது மோசமான அரசனாக இருக்கும் சிடியோஸும், அவர்களுக்கு எதிரான கலகக்காரர்களையும் அழிக்க இது துணையாக இருக்கிறது. டெத் ஸ்டாருக்கு திட்��ங்களைத் திருடிய இளவரசி லேய்யா ஓர்கனாவை அவர் கைது செய்து, R2-D2 எனப்படும் டிராய்டில் அவர்களை மறைத்து வைக்கிறார். R2-D2, மற்றும் அவனது மற்றொரு பிரதியான C-3PO இருவரும், டட்டோயின் கிரகத்திற்கு தப்பித்து செல்கின்றனர். அங்கு, அனகின் மகனான லுக் ஸ்கைவால்கர், அவரது வளர்ப்பு மாமா மற்றும் அத்தையுடன் டிராய்டுகளை விலைக்கு வாங்குகிறார். லுக் R2-D2வை சுத்தம் செய்யும்போது, அந்த இயந்திர மனிதனில் குறிப்பிட்ட தகவலை எதிர்பாராத விதமாக அழுத்துகிறார், அது லேயா, ஒபை-வன்னிடம் இருந்து உதவியை அழைக்கும் தகவலாகும். பிறகு லுக், பென் கெனோபி என்ற மறு பெயரில் நிலையற்று பழைய துறவியாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெடி நைட்டை கண்டுபிடிக்க டிராய்டுகளுக்கு உதவுகிறார். ஒபை-வன், லுக்கின் அப்பாவின் மேன்மையை லுக்கிடம் எடுத்துக் கூறி, வடேரால் அவரது அப்பா கொலை செய்யப்பட்டதையும் கூறுகிறார். கலகக்காரர்களிடம் ஒபை-வன்னையும் லுக்கையும் கூட்டிச்செல்ல, கோர்லியன் விண்வெளி விமானியும் கள்ளக்கடத்தல்காரருமான ஹான் சோலோ மற்றும் அவரது ஊக்கி துணை-விமானியான சிவ்பக்கா இருவரையும் அவர்கள் பணியமர்த்துகின்றனர். ஒபை-வன், லுக்கிற்கு ஆற்றலைப் பற்றி பயிற்சியளிக்கத் தொடங்குகிறார், ஆனால் வடேரிடம் இருந்து லேய்யாவை மீட்கும் போது அவராகவே இறந்துவிடுவதைப் போல வெளிப்படுத்துகிறார். அவரது இந்தத் தியாகம், அவர்களது திட்டங்களின் படி குழுவினரை கிரகத்திலிருந்து தப்பிக்க உதவியாக இருக்கிறது, மேலும் டெத் ஸ்டாரை கலகக்காரர்கள் அழிப்பதற்கும் இது உறுதுணையாக இருக்கிறது. + +வடேர், கலகக்காரர்களுக்கு தொடர்ந்து தொல்லையளிக்கும் வகையில் இரண்டாவது டெத் ஸ்டாரை கட்டமைக்கத் தொடங்குகிறார். ஜெடியாக பயிற்சிபெற யோதாவைத் தேடி லுக் பயணிக்கிறார், ஹன் மற்றும் பிறரைக் கைது செய்து வடேர், லுக்கை வஞ்சகமாக சூழ்ச்சி வலைக்குள் விழவைப்பதால் அவரது எண்ணம் தடைபடுகிறது. வடேர், தானே லுக்கின் அப்பா என்பதை அறிந்து கொண்டு, லுக்கை இருண்ட பக்கத்திற்கு திருப்புவதற்கு முயற்சிக்கிறார். லுக் அவரிடமிருந்து தப்பித்து, யோதாவிடம் அவரது பயிற்சிக்குத் திரும்புகிறார். ஜெடியாக மாறுவதற்கு முன்பு அவர் கண்டிப்பாக அவரது அப்பாவை எதிர்கொள்ள வேண்டுமென்பதையும், லேய்யா அவரது இரட்டைச் சகோதரி என்பதையும் லு���் அறிகிறார். ஒரு கலகக்காரராக இரண்டாவது டெத் ஸ்டாரை தாக்குவதற்காக, அரசனுக்கு காவலாக இருக்கும் வடேருடன், லுக் நேருக்கு நேர் மோதுகிறார். இருண்ட பக்கத்திற்கு லுக்கை இணைக்க அறிவுறுத்துவதற்கு பதிலாக, லைட்சபேர் மற்போரில் வடேரை இளைய ஜெடி தோற்கடித்து இன்னும் அவரிடம் சில நல்ல விசயங்கள் எஞ்சியிருப்பதை வலியுறுத்துவதற்கு முயலுகிறார். வடேர் அவரது காயங்களினால் இறப்பதற்கு முன்பு அரசனைக் கொல்கிறார், மேலும் விண்மண்டலத்திற்கு சுதந்திரத்தை மீட்டுத்தருவதற்கு இரண்டாவது டெத் ஸ்டார் அழிக்கப்படுகிறது. + +கற்பனை வடிவங்களுடைய முன் மாதிரிகளை எடுத்துரைக்கும் வகையில் (ஜெடி) போர்வீரர்கள், சூனியக்காரிகள், மற்றும் இளவரசிகள் போன்ற அடிப்படைக் கூறுகளை "ஸ்டார் வார்ஸ்" கொண்டிருந்தது. மாசுற்ற, அழுக்கடைந்த வகையில் சித்தரிக்கப்படும், மென்மையான மற்றும் எதிர்காலம் சார்ந்த அமைப்புகளைக் கொண்டு இருக்கும் அறிவியல்-புனையக்கதை மற்றும் கற்பனைத் திரைப்படங்களைப்போல், "ஸ்டார் வார்ஸ்" உலகம் இல்லை. லுகாஸின் பார்வையில் "பயன்படுத்தப்பட்ட பிரபஞ்சம்" தொடர்ந்துவந்த அறிவியல் புனையக்கதை-திகில் திரைப்படங்களில் பிரபலப்படுத்தப்பட்டது, "ஏலியன்" என்ற திரைப்படம் அழுக்கடைந்த விண்வெளி விமானத்தில் அமைக்கப்பட்டது; "மேடு மேக்ஸ் 2" பிந்தைய அப்போக்கலிப்டிக் பாழ்நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தது; மற்றும் "ப்ளேடு ரன்னர்" சிதைக்கப்பட்ட, வருங்கால அழுக்கடைந்த நகரத்தில் அமைக்கப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்க வகையில், முன் தொடர்கள் படைக்கப்பட்ட போது லுக்கின் அப்பா அனகினின் பயணம் மற்றும் லுக் ஸ்கைவால்கரின் பயணம் போன்ற இணையான காட்சிகள் மற்றும் படங்களுக்கு இடையே ஆன உரையாடல் போன்றவற்றில் ஞாபகத்திற்கு கொண்டுவரும் முயற்சியை லூகஸ் எடுத்திருந்தார். + +"ஸ்டார் வார்ஸ்" தொடரின் அனைத்து ஆறு திரைப்படங்களுக்கும் ஒரு 2.35:1 உடைய நோக்கு விகிதத்தில் படம் பிடிக்கப்பட்டது. தொடக்க முத்தொகுப்பில் அனமார்ஃபிக் லென்ஸுகளுடன் படம் பிடிக்கப்பட்டது. எபிசோட்கள் IV மற்றும் V போன்றவை பனாவிசனைக் கொண்டும், எபிசோட் VI எடுக்கும் போது ஜோ டுண்டோன் கேமரா (JDC) வீச்செல்லையைக் கொண்டும் படம் பிடிக்கப்பட்டது. எபிசோட் I, அர்ரீஃப்ளெக்ஸ் கேமராக்களில் ஹாவ்க் அனாமோர்பிக் லென்ஸ��களுடன் படம் பிடிக்கப்பட்டன, மேலும் எபிசோடுகள் II மற்றும் III போன்றவை சோனியின் சினிஆல்டா ஹை-டெபனிசன் டிஜிட்டல் கேமராக்களைக் கொண்டு படம் பிடிக்கப்பட்டன. "எ நியூ ஹோப்" பில் ஒலி விளைவுகளை கண்காணிக்க பென் புரெட் என்பவரை லூகஸ் பணியமர்த்தினார். + +புரெட்டின் சாதனைக்காக அகடமி ஆப் மோசன் பிச்சர்ஸ் அண்ட் சைன்சஸ் சிறப்பு சாதனை விருதை அவருக்கு பரிசளித்தது, ஏனெனில் அந்த நேரத்தில் அவர் செய்து கொண்டிருந்த வேலைக்கு எந்த விருதும் இல்லை. லூகஸ்பிலிம், THX ஒலி மறுதயாரிப்பு தரத்திற்காக "ரிட்டன் ஆப் த ஜெடி" யை உருவாக்கினர். ஆறு "ஸ்டார் வார்ஸ்" திரைப்படங்களுக்கும் ஜான் வில்லியம்ஸ் இசையமைத்திருந்தார். லூகஸ் "ஸ்டார் வார்ஸுக்காக" சிறந்த இசை ஒலிகளை வடிவமைத்து இருந்தார், அதாவது மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கும் முக்கிய கருத்துகளுக்காகவும் தனிப்பட்ட இசைகளை கொடுத்திருந்தார். வில்லியம்ஸ்' "ஸ்டார் வார்ஸ்" தலைப்புக் கருப்பொருளானது, நவீன இசை வரலாற்றில் மிகவும் பிரபலமான மற்றும் அனைவரும் அறிந்த இசைத் தொகுப்புகளுள் ஒன்றானது. + +தொடக்க முத்தொகுப்புக்கான தொழில்நுட்ப லைட்சாபெர் ஆடற்கலையானது ஹாலிவுட் உடைவாள்-குரு பாப் ஆண்டெர்சனால் உருவாக்கப்பட்டது. வேடர் ஆடையை அணிந்து கொண்டு லைட்சாபெர் மற்போர்களின் போது, டார்த் வேடராக அனைத்து உடைவாள் வித்தைகளையும் செயல்படுத்த நடிகர் மார்க் ஹாமிலிற்கு ஆண்டெர்சன் பயிற்சியளித்தார். தொடக்க ஸ்டார் வார்ஸ் முத்தொகுப்பில் பாப் ஆண்டெர்சனின் பாத்திரம், "ரீகிளைமிங் த ப்ளேடு" திரைப்படத்தில் முக்கியமானதாக இருந்தது, திரைப்படங்களுக்காக லைட்சாபெர் தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கு, சண்டை பயிற்சிளாராக அவரது அனுபவத்தை அதில் பகிர்ந்து கொள்கிறார். + +1971 ஆம் ஆண்டில் யூனிவர்சல் ஸ்டுடியோஸ், "அமெரிக்கன் கிராஃபிட்டி" மற்றும் "ஸ்டார் வார்ஸ்" என்ற படங்களை இரண்டு-படங்கள் ஒப்பந்தத்தில் எடுக்க ஒப்புக்கொண்டது, இருந்தபோதும் பிறகு "ஸ்டார் வார்ஸ்" , அதன் முந்தைய கருத்துப்படிவ நிலைகளில் மறுக்கப்பட்டது. 1973 ஆம் ஆண்டில் "அமெரிக்கன் கிராஃபிட்டி" நிறைவுபெற்றது, மேலும் சில மாதங்களுக்குப் பிறகு லூகஸ் "த ஜர்னல் ஆப் த வெளய்ல்ஸ்" எனப்படும் குறுந்தொகுத்துரையை எழுதினார., விண்வெளி ஆற்றல் புராணக்கதையில் விண்வெளி படைவீரர் "ஜெடி-பெண்" என்ற தொழில்பழகுநராக சி.ஜே. தோர்ப் பயிற்சி பெறுவதாக இந்தக் கதையில் கூறப்பட்டிருந்தது. ஏமாற்றம் தரும் வகையில் இவரது கதை புரிந்துகொள்வதற்கு மிகக் கடினமாக இருந்தது, அதனால் இதற்காக லூகஸ் "த ஸ்டார் வார்ஸ்" என்றழைக்கப்படும் 13-பக்க விரிந்துரையை எழுதினார், இது அகிரா குரோசவாவின் "த ஹிட்டன் போர்ட்ரெஸ்" திரைப்படத்தின் உறுதியற்ற மறுதயாரிப்பாக இருந்தது. 1974 ஆம் ஆண்டில், சித், டெத் ஸ்டார் போன்ற அடிப்படைக்கூறுகளை இணைத்து தற்காலிக வரைவு காட்சியோட்டங்களை அமைத்து இந்த விரிந்துரையை விரிவுபடுத்தினார், கதையின் முக்கிய மாந்தராக அனிகின் ஸ்டார்கில்லர் எனப் பெயரிடப்பட்ட ஒரு இளைஞனை அதில் அமைத்திருந்தார். இரண்டாவது வரைவுக்காக, லூகஸ் மிகப்பெரிய அளவில் தெளிவுகளை ஏற்படுத்தியிருந்தார், மேலும் கதையில் லுக் என்ற இளைஞனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அனகினை துணை ஜெடி நைட்டாகவும், லுக்கின் அப்பாவாகவும் மாற்றினார். "ஆற்றல்", ஒரு சூப்பர்நேச்சுரல் சக்தியாக அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த வரைவில் அப்பா பாத்திரம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக பென் கெனோபி மாற்றப்பட்டார், மேலும் 1976 ஆம் ஆண்டில் முக்கிய நிழற்படக்கலைக்காக நான்காவது வரைவு தயாரிக்கப்பட்டது. இந்தத் திரைப்படம் "ஜர்னல் ஆப் த வெளய்ல்ஸில் இருந்து எடுக்கப்பட்ட லுக் ஸ்ட்டார் கில்லரின் சாகசங்கள், சகா I: த ஸ்டார் வார்ஸ்" என தலைப்பிடப்பட்டது. தயாரிப்பின் போது, லுக்கின் பெயரை ஸ்கைவால்கர் என லூகஸ் மாற்றினார், மேலும் தலைப்பை "த ஸ்டார் வார்ஸ்" என்றும் முடிவாக "ஸ்டார் வார்ஸ்" என்றும் திருத்தி அமைத்தார். + +அந்த சமயத்தில், அந்தத் திரைப்படம் தொடரின் ஒரு பாகமாக மாறும் என லூகஸ் எதிர்பார்க்கவில்லை. கையெழுத்து படிவத்துடைய நான்காவது வரைவு மிக நுட்பமான மாறுதலுக்கு உட்பட்டது, டெத் ஸ்டார் அழிவதன் காரணமாக பேரரசும் அதனுள்ளேயே அழிவதாக, இது ஒரு நிறைவான திரைப்படமாக அதிகமாக நிறைவளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. எனினும், தொடர் சாகங்களுடைய முதலாவது திரைப்படமாக லூகஸ் மனதில் இதை உருவாக்கி "வைத்திருந்தார்" . பிறகு, வீரகாவியத்தின் இரண்டாவது முத்தொகுப்பு திரைப்படம் தொடர்வரிசையில் முதலாவதாக வருவதற்கு சாத்தியமில்லை என்பதை அவர் உணர்ந்தார். 1994 ஆம் ஆண்டில் "ஸ்ப��லிண்டர் ஆப் த மைண்ட்'ஸ் ஐ" யின் மறுபதிப்பின் முன்னுரையில் ஜார்ஜ் லூகஸ்' இதை விளக்கமாக கூறியுள்ளார் : +நான் ஸ்டார் வார்ஸ் எழுத ஆரம்பித்து வெகுதூரம் கடக்கவில்லை, ஒரு தனித் திரைப்படம் கொண்டிருப்பதை விட அதிகமான கதையை இது கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். ஸ்கைவால்கர்கள் மற்றும் ஜெடி நைட்டுகளின் மடிக்கப்பெறாத வீரகாவியமான இந்தக் கதையைச் சொல்வதற்கு குறைந்தது ஒன்பது திரைப்படங்களின் மூன்று முத்தொகுப்புகள் தேவைப்படும் என்பதை நான் உணர ஆரம்பித்தேன், என்னுடைய பாணியின் வழியில் முன்கதை, பின்கதை என்று உருவாக்குதால், உண்மையில் நான் மையக்கதையை எழுதத் தொடங்கியுள்ளேன். +இரண்டாவது வரைவு, எப்போதும் உருவாக்கப்படாத "ஓண்டோஸுடைய இளவரசியைப்" பற்றிய கடுமையான கதைத்தொடர்ச்சியைக் கொண்டிருந்தது. மேலும் சில மாதங்களுக்குப் பிறகு மூன்றாவது வரைவு நேரத்தில், இரண்டு கதைத் தொடர்ச்சிகளை உருவாக்கும் உரிமை லூகஸுக்கு ஒப்பந்தத்தில் மாற்றி வழங்கப்பட்டது. பிறகு வெகுசில காலத்திற்குள், நூலாசிரியர் ஆலன் டீன் போஸ்டரை லூகஸ் சந்தித்து, இரண்டு கதைத் தொடர்ச்சிகளை நாவலாக எழுத அவரை பணியமர்த்தினார். "ஸ்டார் வார்ஸ்" வெற்றிபெற்றால், காட்சிவிளைவுகளில் அந்த நாவல்களை பொறுத்திக் கொள்வதென்பது லூகஸின் உள்நோக்கமாக இருந்தது. அந்த சமயத்தில், அவரது எழுத்து செயல்பாடுகளின் உதவிக்கு பின்கதையை அழகாய் விரிவுபடுத்தி உருவாக்கினார். + +"ஸ்டார் வார்ஸ்" வெற்றியை நிரூபித்த போது, விரிவாக்கம் செய்யப்பட்ட தொடருக்கான அடிப்படையாக இந்தத் திரைப்படத்தை பயன்படுத்துவதென லூகஸ் முடிவெடுத்தார், இருந்தபோதும் ஒருசமயத்தில் அவர் தொடரிலிருந்து முற்றிலுமாக வெளியேறி நடக்க எண்ணினார். எனினும், லூகஸ் ஒரு சுதந்திரமான திரைப்படத் தயாரிப்பு மையத்தை உருவாக்க விரும்பினார், ஸ்கைவால்கர் ரான்ச் என்ற பணியிடம் உருவானது, மேலும் இதில் ஒரு நிதி முகவராக இந்தத் தொடரை பயன்படுத்தும் வாய்ப்பை அவர் கண்டார். ஏற்கனவே ஆலன் டீன் போஸ்டர் முதல் தொடர்ச்சி கதைக்கான நாவலை எழுதத் தொடங்கி இருந்தார், ஆனால் போஸ்டரின் வேலையை மாற்றியமைக்கும் திட்டத்தை கைவிட லூகஸ் முடிவெடுத்தார்; அடுத்த ஆண்டில் அந்தப் புத்தகமானது "ஸ்பிலிண்டர் ஆப் த மைண்ட்'ஸ் ஐ" என்ற பெயரில் வெளியானது. ஜேம்ஸ் பாண்ட் தொடரைப் போன்று பட்டியலுடைய எண்களின் தொகுப்பில்லாத திரைப்படங்களின் தொடரை லூகஸ் முதலில் பார்த்தார். 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் "ரோலிங் ஸ்டோன்" உடனான நேர்காணலில், அவரது நண்பர்கள் ஒவ்வொருவரும் திரைப்படங்களை இயக்குதில் பொறுப்பு எடுத்துக் கொண்டு, தொடரில் தனித்தன்மை வாய்ந்த விளக்கத்தைத் தரவேண்டுமென விரும்புவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் கூறியபோது, டார்த் வடேர் இருண்ட பக்கத்திற்குச் செல்லும் பின்கதையில், லுக்கின் அப்பாவை கொலை செய்யப்படுவதும் கேலடிக் குடியரசு வீழ்ச்சியால் எரிமலையின் மேல் பென் கெனோபி சண்டையிடுவதாகவும் ஒரு சிறப்பான கதைத் தொடர்ச்சியாக இருக்கும் எனக்கூறினார். + +அந்த ஆண்டிற்குப் பிறகு, "ஸ்டார் வார்ஸ் II" ஐ எழுதுவதற்காக லூகஸ் அவருடன் அறிவியல் புனையக்கதை நூலாசிரியர் லேய்க் பிராக்கெட்டை பணியமர்த்தினார். நவம்பர் 1977 இன் பிற்பகுதியில் அவர்கள் கதைக்கலந்தாய்வு மேற்கொண்டனர், பிறகு "த எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" எனப்படும் கையெழுத்துப் படிவ விரிந்துரையை லூகஸ் தயாரித்தார். லுக்கின் அப்பா டார்த் வேடர் என்பது வெளிப்படுவதைத் தவிர்த்து அந்த விரிந்துரையானது இறுதித் திரைப்படத்தைப் போன்றே இருந்தது. இதன் முதல் வரைவில் லுக்கின் அப்பா ஆவியாகத் தோன்றி லுக்கிற்கு அறிவுறுத்துவதாக இதிலிருந்து பிராகெட் எழுதியிருந்தார். + +1978 இன் முற்பகுதியில் பிராக்கெட் அவளது முதல் வரைவை நிறைவு செய்தார்; லூகஸ் அதில் ஏமாற்றம் அடைந்ததாகக் கூறினார், ஆனால் பிராக்கெட் புற்றுநோயால் உயிரிழப்பதற்கு முன்பே அதைப் பற்றி அவளிடம் அவர் கருத்து பரிமாறிக் கொண்டிருக்க வேண்டும். எந்த எழுத்தாளரும் இல்லாத காரணத்தால், அவரது அடுத்த வரைவை லூகஸே எழுதும் படியானது. இந்த வரைவே, லூகஸ் திரைப்படங்களுக்காக முதன் முதலில் "எபிசோட்" என எண்ணிட்டு பயன்படுத்தத் தொடங்கினார்; "எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" திரைப்படம் "எபிசோட் II" எனப் பட்டியலிடப்பட்டது. "த சீக்ரெட் ஹிஸ்டரி ஆப் ஸ்டார் வார்ஸில்" மைகேல் காமின்ஸ்கி வாதிடும் போது, அநேகமாய் முதல் வரைவுடனான ஏமாற்றத்திற்குக் காரணம், கதையை எடுப்பதற்கு பல்வேறு வழிகளை லூகஸ் ஆராய்ந்ததால் இருக்கலாம் எனக் கூறியுள்ளார். டார்த் வடேர், லுக்கின் அப்பா என உரிமை கொண்டாடுவதை புதிய கதைத் திருப்பமாக அவர் பயன்படுத்தினார். லூகஸைப் பொறுத்தவரை, முதல் திரைப்படத்தை எழுத நீண்ட காலமாய் போராடியதற்கு மாறாக, மேலும் இரண்டு வரைவுகளை விரைவிலேயே எழுதினார், இந்த வரைவு எழுதுவதற்கு உற்சாகமளிப்பதாக உணர்ந்துள்ளார், இந்த இரண்டும் 1978 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் எழுதப்பட்டதாகும். ஹான் சோலோ கார்போனைட்டில் அடைத்து வைக்கப்படுவதாகவும், பிறகு சிறையிலிருந்து வெளியேறுவதாகவும் இதன் எழுத்துப்படிவத்திற்கு அவர் இருளின் உச்சத்தைக் கொடுக்கிறார். + +டார்த் வடேர், லுக்கின் அப்பா எனக் கூறப்படும் புதிய கதைத் திருப்பமானது, தொடரில் தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தியது. மைக்கேல் காமினிஸ்கி அவரது புத்தகத்தில் வாதிடுகையில், 1978க்கு முன்புவரை கதைத் திருப்பத்தைப் பற்றி எப்போதும் அக்கறையுடன் கவனித்தோ அல்லது எண்ணிப்பார்த்ததாகத் தெரியவில்லை, மேலும் லுக்கின் அப்பாவிடம் இருந்து வேடரைப் பிரித்து முழுமையாக மாற்று கதைத் தொடர்ச்சியின் கீழ் செயல்படும் முதல் திரைப்படமாக அமைந்தது; 1978 ஆம் ஆண்டுக்கு முன்பு வரையில் இந்தக் கதையின் முனையைப் பற்றிய எந்த ஒரு சிறிய குறியீடும் இருந்ததில்லை என வாதிடுகிறார். இதன் முக்கிய பகுதி அறிமுகப்படுத்தப்பட்ட "எம்பயர் ஆப் பேக்" உடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது வரைவுகளை எழுதிய பிறகு, லூகஸ் அவர் உருவாக்கிய புதிய பின்கதையை மதிப்பாய்வு செய்தார்: அதில் பென் கெனோபியின் மிகச்சிறந்த மாணவர் அனகின் ஸ்கைவால்கர் ஆவார்; அவருக்கு லுக் என்ற பெயரில் ஒரு குழந்தை இருந்தது, ஆனால் அது பேரரசர் பல்படைனால் இருண்ட பகுதிக்கு அலைக்கழிக்கப்படுகிறது (சாதாரண அரசியல்வாதியாக அல்லாமல் சித்தாக மாறுகிறது). எரிமலை இருக்குமிடத்தில் பென் கெனோபியுடன் அனகின் சண்டையிட்டு காயப்படுகிறார். ஆயினும் பின்னர் டார்த் வடேராக உயிர் பெற்று எழுகிறார். இதற்கிடையில், குடியரசின் பேரரசாக வடேர் மாறி ஜெடி நைட்டுகளை கண்டுபிடிக்கும் போது, டாட்டுயினில் லுக்கை கெனோபி மறைத்து வைக்கிறார். + +இந்தப் புதிய பின்கதைக்குப் பொருத்தமாய், இந்தத் தொடர் முத்தொகுப்பாக இருக்கவேண்டுமென லுகாஸ் முடிவு செய்து, அடுத்த வரைவில் "எபிசோட் II" இலிருந்து "எபிசோட் V" க்கு "எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" கை மாற்றினார். "ரைடர்ஸ் ஆப் த லாஸ்ட் ஆர்க்" கை எழுதி நிறைவு செய்திருந்�� லாரன்ஸ் காஸ்டன், அடுத்த வரைவுகளை எழுதுவதற்கு பணியமர்த்தப்பட்டார், மேலும் இயக்குனர் இர்வின் கெர்ஷனரிடம் இருந்து கூடுதான உள்ளீடுகள் அளிக்கப்பெற்றன. புதிய இருளடைந்த கதைத் தொடர்ச்சியால் சீர்படுத்தப்பட்டு காஸ்டன், கெர்ஷ்னர், மற்றும் தயாரிப்பாளர் கேரி குருட்ஸால் இந்தத் திரைப்படம் மிகவும் தீவிரமான வயது வந்தவர்களுக்கான திரைப்படமாகக் காணப்பட்டது. மேலும் முதல் திரைப்பட ஒளி சாகச ஆதாரங்கள் போன்றவை தொடரில் முன்னேற்றம் அடைந்திருந்தன. + +1981 ஆம் ஆண்டு அந்நேரத்தில் அவர் "எபிசோட் VI" கதையை எழுதத் தொடங்கி (பிறகு "ரிவென்ஜ் ஆப் த ஜெடி" எனத் தலைப்பிடப்பட்டது), அதில் அதிக அளவு மாற்றங்களைச் செய்தார். "எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" என்ற முக்கியத்துவம் வாய்ந்த விலையுயர்ந்த படைப்பால், லூகஸின் சொந்த வாழ்க்கை சிதைவுற்றது. இந்த சிதைவினால், 1983 ஆம் ஆண்டு மே மாதத்தில் "டைம்" பத்திரிக்கை உடனான நேர்காணலில் இனி எந்த ஒரு "ஸ்டார் வார்ஸ்" திரைப்படங்களையும் எடுக்கத் தேவையில்லை எனவும் உறுதி செய்து தொடரை முடித்துக்கொண்டதாக அவர் கூறினார். லூகஸின்' 1981 ஆம் ஆண்டு தற்காலிக வரைவுகளில் லுக்கை சொந்தமாக்கிக் கொள்ள டார்த் வடேர் பேரரசுசுடன் போட்டியிடுவதாகக் கொண்டிருந்தன—மேலும் இரண்டாவது கையெழுத்து படிவத்தில், "திருத்தப்பட்ட தற்காலிக வரைவில்" வடேர் ஒரு இரக்கமுள்ள பாத்திரமாக மாறியிருந்தார். இந்த இறுதி வரைவுகளில், லாரன்ஸ் காஸ்டன் மீண்டும் ஒருமுறை பொறுப்பேற்றுக் கொள்ள பணியமர்த்தப்பட்டார், இதில் வடேர் இறுதியில் வெளிப்படையாய் முகமுடியை அகற்றுகிறார். பாத்திரத்தின் இந்த மாறுதல் "டார்த் வடேருடைய பேரிடர்" கதைத் தொடர்ச்சிக்கு தொடக்கமாய் அமைகிறது, இது முன் தொடர்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. + +1987 ஆம் ஆண்டில் விவாகரத்து கணக்குமுடிக்கப்பட்டு லூகஸ் அவருடைய பெருஞ்செல்வத்தை இழந்த பிறகு, "ஸ்டார் வார்ஸுக்கு" திரும்புவதற்கு எந்த விருப்பமும் லூகஸுக்கு இருக்கவில்லை, மேலும் "ரிட்டன் ஆப் த ஜெடி" வெளியான நேரத்தில் பின்தொடர் முத்தொகுப்பை அதிகாரப்பூர்வமின்றி ரத்துசெய்தார். இருந்தபோதும் முழுதும் உருவாக்கப்பட்ட அவரது முன் தொடர்கள், அவரைத் தொடர்ந்து வசீகரித்தன. டார்க் கார்ஸின் காமிக் நூல் மற்றும் திமோதி ஜானின் முத்தொகுப்பு நாவல்கள் மூ���ம் உயிர்த்தெழச்செய்து மீண்டும் ஒருமுறை "ஸ்டார் வார்ஸ்" பிரபலமான பிறகு, இன்னும் பெரும்பாலான ரசிகர்கள் இதற்கு இருப்பதை லூகஸ் உணர்ந்தார். அவரது குழந்தை வளரத் தொடங்கி இருந்தது, மேலும் இப்போது CGI தொழில்நுட்பம் வளர்ச்சிகளுடன் அவர் மீண்டும் இயக்குனராக முடிவெடுத்தார். பிற தொடக்கக் கதைகள் பலவற்றுள் "வேறுபட்ட" , முன் தொடர்களை அவர் எடுக்கப் போவதாக 1993 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. மேலும் அவர் கதைச் சுருக்கத்தை அமைக்கத் தொடங்கினார், இப்போது அனகின் ஸ்கைவால்கர்ஸின் பயங்கரமான கொடிய உருவமாற்றத்தை பரிசோதனை செய்வதாக தொடர் சுட்டிக்காட்டப்பட்டது. தொடக்கக் கதைக்கு இணையாக எப்படி முன்தொடர்கள் எஞ்சி இருக்கும் என்பதை லூகஸும் மாற்றத் தொடங்கினார்; முதல் வேலையாக வரலாறு, பின்கதை, தொடக்க கதைக்கு உண்டான முந்தைய ஒப்புமை அல்லது வேறுபாடு போன்றவற்றை அவர்கள் "உள் நிரப்ப" வேண்டி இருந்தது, ஆனால் அனகினின் குழந்தை பருவத்தில் தொடங்கி அவரது இறப்பு வரை ஒரு பெரிய கதையை அவர்கள் அமைக்கலாம் என்பதை அவர் அப்போது உணர்ந்தார். இந்த "வீரகாவிய" திரைப்படத் தொடரை எடுப்பதற்கு இது இறுதி நிலையாகும். + +1994 ஆம் ஆண்டில், லூகஸ் "எபிசோட் I: த பிகினிங்" என முதல் திரைக்கதைக்கு தலைப்பிட்டு எழுதத் தொடங்கினார். அந்தத் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, அடுத்த இரண்டு திரைப்படங்களை இயக்குவதாகவும் லூகஸ் அறிவித்து, "எபிசோட் II" இன் வேலைகளை அந்த நேரத்தில் தொடங்கினார். முதன்மை நிழற்படக்கலைக்கு சில வாரங்களுக்கு முன்பு "எபிசோட் II" இன் முதல் வரைவு முடிவுற்றது, இந்த வரைவை மேலும் பக்குவப்படுத்துவதற்காக "த யங் இண்டியானா ஜோன்ஸ் குரோனிக்கல்ஸ்" எழுத்தாளரான ஜோனதன் ஹாலஸை லூகஸ் பணியமர்த்தினார். படத்தின் தலைப்பு முடிவெடுக்கப்படாத நிலையில், லூகஸ் திரைப்படத்தை "ஜார் ஜார்'ஸ் கிரேட் அட்வெண்ட்சர்" என நகைச்சுவையாகப் பெயரிட்டு அழைத்தார். "த எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" கை எழுதுகையில், லாண்டோ கல்ரிசியன் ஒரு குளோன் என்றும், "எ நியூ ஹோப்" பில் கெனோபியால் குறிப்பிடப்பட்ட "குளோன் போர்களுக்கு" காரணமாக அமைந்த குளோன்களுடைய கிரகங்களில் இருந்து வந்தவர் எனவும் தொடக்கத்தில் லூகஸ் முடிவெடுத்திருந்தார்; பிறகு அவர் நெடுந்தூர கிரகத்திலிருந்து வந்து திடீரெனத் தாக்குபவர்களின் ஒ���ு இராணுவ குளோன் குடியரசைத் தாக்குவதாகவும், மேலும் ஜெடி நைட்டுகளால் கலகம் செய்யப்படுவதாகவும் ஒரு மாறுபட்ட கருத்துடன் வந்தார். பின்கதையின் அடிப்படை மூலக்கூறானது "எபிசோட் II" க்கான அடிப்படைக் கதையாக அமைந்தது. அதில் வரும் சம்பவங்கள் அனைத்தும் பலபட்டைனின் சொந்தத் திறமையில் நடத்தப்பட்டது என்ற புதிய இரகசியச் செய்தியும் இதில் சேர்க்கப்பட்டது. + +"அட்டாக் ஆப் த குளோன்ஸ்" வெளியாவதற்கு முன்பே "எபிசோட் III" க்கான வேலைகளை லூகஸ் தொடங்கினார், ஏழு குளோன் போர்களுடைய தொகுப்புகளுடன் திரைப்படம் தொடங்குவதாக கலைஞர்கள் கருத்தை அதில் அமைத்திருந்தார். கதைத் தொடர்ச்சியை அந்தக் கோடைகாலத்தில் அவர் மதிப்பாய்வு செய்தார், இருந்தபோதும், கதையின் மூலக்கூறுகள் அவ்வப்போது மாற்றி அமைக்கப்படும் என அவர் கூறினார். லூகஸ் மாபெரும் கதை மாற்றத்தை செய்வதற்காக இருண்ட பக்கத்தில் அனகின் விழுவதை "த சீக்ரெட் ஹிஸ்டரி ஆப் ஸ்டார் வார்ஸில்" மைக்கேல் காம்னிஸ்கி தெளிவாகக் காட்டி உள்ளார், முதலில் மாற்றியமைக்கப்பட்ட தொடக்க காட்சிகளில் பாலபட்டைன் கடத்தப்படுவதாகவும், அதன் முதல் நடவடிக்கையாக டோக்கு அனகின்னால் கொல்லப்படுவதாகவும் பிறகு அனகின் இருண்ட பகுதிக்கு மாறுவதாகவும் கூறப்பட்டது. 2003 ஆம் ஆண்டில் முதன்மை நிழற்படக்கலை நிறைவுற்ற பிறகு, அனகின் முழுவதுமாக இருண்ட பக்கத்தில் சேர்வதாக அனகின் பாத்திரத்தில் மேலும் சில பெரிய மாற்றங்களை லூகஸ் மாற்றி எழுதினார்; அவர் உண்மையில் ஜெடியை கொடியவராக நம்புவதாகவும் குடியரசைக் கைப்பற்ற சூழ்ச்சி செய்வதாகவும் உள்ளிட்ட முந்தைய பதிப்பில் கூறப்பட்ட பல்வேறு காரணங்களைக் காட்டிலும் இப்போது அவர் முக்கியமாக பட்மியை இறப்பிலிருந்து காக்கப் போராடுவதாகக் கூறியிருந்தார். முதன்மை அடிக்கணக்குத் தொகுப்பின் வழியாக இதன் அடிப்படையானது மீண்டும் எழுதப்பட்டு நிறைவுற்றன, மேலும் 2004 இன் போது மீண்டும் புதிய மற்றும் மாற்றியமைக்கப்பட்ட காட்சிகள் திரையிடப்பட்டது. + +தொடருக்காக லூகஸ் எழுதியிருந்த ஆவணங்களை பெரும்பாலும் மிகைப்படுத்திக் கூறியிருந்தார்; இதில் பெரும்பாலானவை தொடரின் தோற்றப்பாடில் 1978 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு பிறகிலிருந்து வளர்ச்சியுற்றதாகும். விளம்பரம் மற்றும் பாதுகாப்பு அளவுகளுக்காக இ���ை மிகைப்படுத்தப்பட்டன என மைக்கேல் காமினிஸ்கி தெளிவுபடுத்தியிருந்தார். காமினிஸ்கி ஆண்டுகள் முழுவதும் தொடரின் கதை அடிப்படையில் மாற்றப்படுவதில் இருந்து பகுத்தறிந்தார், ரசிகர்கள் அவரது தொலைநோக்கு பார்வையில் மட்டுமே கதையைப் பார்த்ததால், கடந்த கால செயல்பாடுகளைப் பாதிக்கும் வகையில் எப்போதும் தொடக்க கதையை மாற்றுவது லூகஸின் எண்ணமாக இருந்தது. + +2005 ஆம் ஆண்டின் சோவெஸ்ட் பேரவையில், புதிய தொழில்நுட்பத்தை லூகஸ் செயல்படுத்திக்காட்டினார். மேலும் 2007 ஆம் ஆண்டில் "எ நியூ ஹோப்" பில் தொடங்கி, புதிய 3-D திரைப்பட பாணியில் ஆறு திரைப்படங்களை வெளியிட திட்டமிட்டு இருப்பதாக லூகஸ் கூறினார். எனினும், 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், "ஸ்டார் வார்ஸ் வீரகாவியத்தை 3-டியில் (3D) வெளியிடுவதற்கு எந்த ஒரு வரையறையான திட்டங்கள் அல்லது தேதிகள் இல்லை" என்று StarWars.com இணையத்தளத்தில் லூகஸ்பிலிம் குறிப்பிட்டது. 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் செலபரேசன் ஈரோப்பில், லூகஸ்பிலிம் "அனைத்து ஆறு படங்களையும் எடுத்து அதை 3-டி க்கு மாற்ற திட்டமிட்டுள்ளார்கள்" என ரிக் மெக்குலம் உறுதி செய்தார், ஆனால் அவர்கள் "ஒவ்வொருவருக்கும் பயனுள்ள விலை மட்டத்திற்கு ஏற்ற வகையில் இதை எடுப்பதற்கு இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க வெளியில் இருக்கும் நிறுவனங்களுக்காக காத்திருக்கின்றன" எனக் கூறினார். +2008 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ட்ரீம்ஒர்க்ஸ் அனிமேசன்ஸின் CEOவான ஜெப்ரே கட்ஜென்பெர்க், அனைத்து ஆறு திரைப்படங்களும் 3Dயில் எடுக்க ஜார்ஜ் லூகஸிற்கு வலியுறுத்தினார். + +ஆறு "ஸ்டார் வார்ஸ்" திரைப்படங்களுடைய மிகவும் தெளிவான பதிப்புகள், அடுத்த தலைமுறை வீட்டு-வீடியோ பாணியில் லூகஸ் வெளியிடப் போவதை முன்பே மறைமுகமாகக் குறிப்பிட்டிருந்தார். இறுதி வெளியீட்டிற்கான அவருடைய திரைப்படங்களின் இறுதி திருத்தங்கள், மாறுதல்கள், சேர்க்கைகள், மற்றும்/அல்லது கழித்தல்கள் போன்ற எதையும் எடுப்பதற்கு லூகஸ் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென ஆங்காங்கே கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தன. "த பேந்தம் மெனேஸில்" இருந்து திருத்தி வெட்டப்பட்ட காட்சிகள் குறும்படமாக "ரிவென்ஜ் ஆப் த சித்" DVD வெளியீட்டில் இணைக்கப்பட்டிருந்தது, அந்த குறும்படம் கணினியில் உருவாக்கப்பட்ட யோதா மாற்றப்பட்டு உண்��ையான பொம்மையைக் கொண்டிருந்தது; "ரிவென்ஜ் ஆப் த சித்" தில் வேலை செய்வதற்கு முன்பு யோதாவை சோதனை முயற்சியாக இந்த காட்சிகளில் உருவாக்கியதாக அனிமேசன் இயக்குனர் ராப் கோல்மன் கூறியிருந்தார். லூகஸ்பிலிமின் சந்தை விற்பனைத் துணைத் தலைவர் ஜிம் வார்டு, இந்தத் திரைப்படங்களில் அதிகமாக வேலை செய்ய லூகஸ்பிலிம் விரும்புவதாக அறிவித்தார், "தொழில்நுட்ப முன்னேற்றமாக, நமது வாடிக்கையாளர்களால் எளிதாக பயன்படுத்தக் கூடிய அதிக-வரையறை திட்டத்தில் நாம் ஈடுபட்டுள்ளோம், இந்த நிலைமை மிகவும் சாதகமாக உள்ளது, ஆனால் அதற்காக எப்போதும் வேலை நிறைவேற வேண்டும்" என அவர் கூறினார் + +ஒரே நேரத்தில் ஆறு திரைப்படங்கள் அகாடமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன, அதில் 7 ஐ வென்றன. + +"எக்ஸ்பேண்டடு யூனிவெர்ஸ்" ("EU" ) என்பது ஆறு திரைப்படங்களுக்காக, "ஸ்டார் வார்ஸ்" வெளிப்புற ஆவண அதிகாரப்பூர்வ உரிமையை பெற்றதற்கான ஒரு சிறப்புத் தொகுதிச் சொல்லாகும். "த பேந்தம் மேனேஸுக்கு" 25,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழும் ஏதேனும் ஒரு இடத்திலிருந்து "ரிட்டர் ஆப் த ஜெடி" க்கு 140 ஆண்டுகளுக்கு பிறகு வரை திரைப்படங்களில் கூறப்பட்ட கதைகளை இந்த ஆவணம் விரிவாய் கூறுகிறது. 1978 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மார்வெல் காமிக்ஸ்' "ஸ்டார் வார்ஸ்" #7இல் முதல் "எக்ஸ்பேண்டடு யூனிவெர்ஸ்" கதை தோன்றியது (தொடரின் முதல் ஆறு வெளியீடுகள் திரைப்படத்தைத் தழுவி இருந்தன), தொடர்ந்து வந்த மாதத்தில் ஆலன் டீன் போஸ்டெரின் நாவலான "ஸ்பிலிண்டர் ஆப் த மைண்ட்'ஸ் ஐ" விரைவாக வெளியிடப்பட்டது. + +ஜார்ஜ் லூகஸ், "ஸ்டார் வார்ஸ்" யூனிவர்சின் மேல் கலையாற்றல் கட்டுப்பாடைத் தொடர்ந்து வைத்திருந்தார். எடுத்துக்காட்டாக, மையப் பாத்திரங்களின் இறப்பு மற்றும் அதை போன்ற மாறுதல்களை நூலாசிரியர்கள் செயல்படுத்துவதற்கு முன்பு அதன் நடைமுறை நிலை முதலில் லூகஸின் பார்வைக்கு கண்டிப்பாக வந்து செல்ல வேண்டும். கூடுதலாக, நிறுவனங்களின் பல்வேறு நூலாசிரியர்களுடைய வேலைகளுக்கு இடையே ஆன தொடர்ச்சியை உறுதிசெய்து ஒப்புதல் வழங்குவதற்காக அவை லூகஸ்பிலிமிடம் ஒப்படைக்கப்படும். "த பேந்தம் மேனேஸில்" பயன்படுத்தப்படுவதற்கு முன்பு திமோதி ஜானின் நாவலான "ஹேய்ர் டூ த எம்பயரில்" முதலில் தோன்றிய தலைநகர கிரகமான கோருஸ்கண்ட் போன்று, எக்ஸ்பேண்டடு யூனிவெர்ஸுடைய அடிப்படைக்கூறுகள், லூகஸ் திரைப்படங்களில் பயன்படுத்துவதற்காக பின்பற்றப்பட்டன. டார்க் ஹார்ஸ் காமிக்ஸ்' "ஸ்டார் வார்ஸ்" தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பாத்திரமான, ஆய்லா செக்யூரா எனப்பெயரிடப்பட்ட ஒரு நீள டிவி'லெக் ஜெடி நைட், லூகஸால் பெரிதும் விரும்பப்பட்டு "அட்டாக் ஆப் த குளோன்ஸில்" ஒரு பாத்திரமாக சேர்க்கப்பட்டது. + +நேரடி-அதிரடித் தொடர் மற்றும் தயாரிப்புக்கு முன் நிலையில் உள்ள ஒரு 3D CGI அனிமேசன் தொடர், அதே போன்று 2008 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியிடப்பட்ட ஒரு 3D CGI முழு-நீள திரையரங்குத் திரைப்படம் த குளோன் வார்ஸ் உள்ளிட்டு இன்றைய தேதிவரை, ஆறு திரைப்படங்கள் மற்றும் மூன்று அனிமேசன் தொடர் தொலைக்காட்சிக்காகத் தயாரிக்கப்பட்டுள்ளன. தொலைக்காட்சி செயல்முறைத் திட்டங்களின் தயாரிப்புகளில் லூகஸ் பெரும் பங்காற்றியுள்ளார், வழக்கமாக கதையாசிரியர் அல்லது நிர்வாகத் தயாரிப்பாளராக பணியாற்றுவார். "ஸ்டார் வார்ஸ்" ஏராளமான வானொலி தகவமைப்புகளைக் கொண்டிருந்தது. 1981 ஆம் ஆண்டில் தேசிய பொது வானொலியில் "எ நியூ ஹோப்" புடைய வானொலித் தகவமைப்பு முதன்முதலில் ஒலிபரப்பப்பட்டது. அறிவியல் புனைக்கதை நூலாசிரியர் பிரைன் டாலேயால் இந்த தகவமைப்பு எழுதப்பட்டு ஜான் மட்டேனால் இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டில் "த எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" மற்றும் 1996 ஆம் ஆண்டில் "ரிட்டன் ஆப் த ஜெடி" யும் தகவமைக்கப்பட்டது. லூகஸால் உருவாக்கப்பட்ட ஆனால் திரைப்படங்களில் பயன்படுத்தப்படாத பின்னணி ஆவணங்களை இந்த தகவமைப்புகள் உள்ளிட்டிருக்கும். "ரிட்டன் ஆப் த ஜெடி" யில் ஜோசுவா பார்டொனால் லுக் பாத்திரமும், ஆர்யே கிராஸால் லாண்டோ பாத்திரமும் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தவிர்த்து, மார்க் ஹாமில், அந்தோனி டேனியல்ஸ், மற்றும் பில்லி டீ வில்லியம்ஸ் போன்றவர்கள் முறையே லுக் ஸ்கைவால்கர், C-3PO, மற்றும் லாண்டோ கல்ரிசியன் பாத்திரங்களில் மீண்டும் பயன்படுத்தப்பட்டனர். திரைப்படங்களில் இருந்து ஜான் வில்லியம்ஸின் தொடக்க இசையையும் பென் புரூட்டின் தொடக்க ஒலி வடிவமைப்புகளையும் இந்தத் தொடர் கொண்டிருந்தது. + +இரண்டு முத்தொகுப்புகளுடன் கூடுதலாக, பல்வேறு அதிகாரப்பூர்வத் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன: + + +"ஸ்டார் வார்ஸ்" திரைப்படங்களின் வெற்றி மற்றும் அதைப் பின் தொடர்ந்த வர்த்தக வெற்றியைத் தொடர்ந்து, இளம் ரசிகர் கூட்டத்திற்காக பல்வேறு அனிமேசன் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கப்பட்டன, அவை: + + +1976 ஆம் ஆண்டில் நாவல் வடிவில் உருவாக்கப்பட்ட "ஸ்டார் வார்ஸ்" புனையக்கதையின் அடிப்படையைக் கொண்டு "ஸ்டார் வார்ஸ்" என்ற முதல் திரைப்படம் வெளியிட முன் தேதியிடப்பட்டது(கோஸ்ட் - லூகஸுக்காக ஆலன் டீன் போஸ்டெரால் எழுதப்பட்டது). போஸ்டெரின் 1978 ஆம் ஆண்டு நாவலான, "ஸ்பிலிண்டர் ஆப் த மைண்ட்'ஸ் ஐ" , முதல் எக்ஸ்பேண்டடு யூனிவெர்ஸ் வேலையாக வெளியிடப்பட்டது. திரைப்படங்களுக்கு இடையே ஆன நேரத்தை நிரப்புவதற்கு, இந்த கூடுதலான உள்ளடக்கம் "ஸ்டார் வார்ஸின்" நேரவரைவுக்கு முன்பும் பின்புமாக திரைப்படத் தொடரில் பெருமளவில் விரிவாக்கப்பட்டது. "ஸ்டார் வார்ஸ்" புனைக்கதையானது, அதன் ஆரம்பத் தொடர் (1977–1983) காலத்தின் போது மேலோங்கியது, ஆனால் பிறகு மெதுவாக அதன் வளர்ச்சி குன்றியது. எனினும், 1992 ஆம் ஆண்டில், திமோதி ஜானின் "த்ரான் முத்தொகுப்பு" வெளியானது, "ஸ்டார் வார்ஸ்" யூனிவெர்சின் மேல் ஒரு புதிய ஆர்வத்தை உண்டாக்கியது. அதில் இருந்து, அதைத் தொடர்புபடுத்தி பாந்தம் மற்றும் டெல் ராய்யின் நாவல்கள் பல நூற்றுக்கணக்கில் பிரசுரிக்கப்பட்டது. 1996 ஆம் ஆண்டில் ஸ்டீவ் பெர்ரியின் "சாடோஸ் ஆப் த எம்பயர்" என்ற நாவலும் அதே போன்ற மறுமலர்ச்சியை எக்ஸ்பேண்டடு யூனிவெர்ஸுக்கு கொடுத்தது, இவை "எபிசோட்டுகள் V" மற்றும் "VI" க்கு இடையே அமைக்கப்பட்டன, மேலும் அதன் வழியே வீடியோ கேம் மற்றும் காமிக் புத்தக தொடர் போன்றவை உருவாயின. + +"ரிட்டன் ஆப் த ஜெடி" க்கு ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் "நியூ ஜெடி ஆர்டர்" தொடருடைய அறிமுகத்துடன் "ஸ்டார் வார்ஸ்" யூனிவெர்ஸுடைய முகத்தை அடிப்படையிலிருந்து லூகஸ்புக்ஸ் மாற்றியது, மேலும் தொடர் ஆரம்பங்களிலிருந்து புதிய பாத்திரங்களுடைய தொகுப்பையும் மாற்றியது. இளைய ரசிகர்களுக்காக, மூன்று தொடர் அறிமுகப்படுத்தப்பட்டன. "த ஜெடி அப்பரண்டீஸ்" தொடரானது "எபிசோட் I" க்கு முன்பு குய்-கோன் ஜின் மற்றும் அவரது தொழில்பழகுநர் ஒபை-வன் கெனோபியின் சாகசங்களை பின்பற்றியதாகும். "த ஜெடி குவெஸ்ட்" தொடரானது "எபிசோட் I" க்குப் பிறகு மற்றும் "எபிசோட் II" க்கு முன்பு ஒபை-வன் கெனோபி மற்றும் அவரது ���ொழில்பழகுநர் அனகின் ஸ்கைவால்கரின் சாகசங்களை பின்பற்றியதாகும். மூன்றாவது மற்றும் இப்போது நடைமுறையில் ஓடிக்கொண்டிருக்கும் தொடரான "த லாஸ்ட் ஆப் த ஜெடி" தொடரானது "எபிசோட் III" க்கு பிறகு உடனடியாய் ஒபை-வன் கெனோபி மற்றும் எஞ்சியிருக்கும் ஜெடியின் சாகசங்களை பின்பற்றியதாகும். + +1977 ஆம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு வரை "ஸ்டார் வார்ஸ்" காமிக் புத்தக தொடர் மற்றும் அதன் தழுவல்களை மார்வெல் காமிக்ஸ் பிரசுரித்தது. ராய் தாமஸ், ஆர்சி குட்வின், ஹோவர்டு சாய்கின், அல் வில்லியம்சன், கார்மின் இன்பாண்டினோ, ஜெனி டே, வால்ட் சைமன்சன், மைக்கேல் கோல்டன், கிரிஸ் க்லேர்மோண்ட், வெளயில்ஸ் போர்டசியோ, ஜோ டுஃப்பி மற்றும் ரான் பிரென்ஸ் உள்ளிட்ட பரவலான பல்வேறு விதமான படைப்பாளர்கள் இந்தத் தொடருக்காக பணி செய்தனர். பிறகு ஆசிரியரின் புனைப்பெயரின் கீழ் ரஸ் மானிங், ஸ்டீவ் கெர்பெர், மற்றும் ஆர்சி குட்வின் போன்றவர்களால் "ஸ்டார் வார்ஸ்" பத்திரிக்கைப் பட்டைகளும் பிரசுரிக்கப்பட்டது. 1980களின் பிற்பகுதியில், டாம் வெய்ட்ச் மற்றும் கேம் கென்னடியால் புதிய "ஸ்டார் வார்ஸ்" காமிக் பிரசுரிக்கப்படலாம் என மார்வெல் அறிவித்தது. எனினும், 1991 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், டார்க் ஹார்ஸ் காமிக்ஸ், "ஸ்டார் வார்ஸ்" உரிமத்தை கையகப்படுத்தியது, இதைப் பயன்படுத்தி ஆரம்ப முத்தொகுப்பிற்கு பதிலாக, மிகவும் பிரபலமான "டார்க் எம்பயர்" கதைகள் உள்ளிட்ட, பேராவல்மிக்க ஏராளமான பின் தொடர்களை அறிமுகப்படுத்தியது. "ஸ்டார் வார்ஸ்" யூனிவெர்ஸில் பல ஆரம்ப சாகசங்களைத் தொடர்ந்து அவர்கள் பிரசுரித்து வருகின்றனர். "டேக் மற்றும் பிங்க்" உள்ளிட்ட நகைச்சுவை காமிக்ஸையும் அவர்கள் பிரசுரிக்கின்றனர். + +1982 ஆம் ஆண்டிலிருந்து, பேக்கர் பிரதர்ஸால் அடாரி 2600 க்காக "ஸ்டார் வார்ஸ்: த எம்பயர் ஸ்ட்ரைக்ஸ் பேக்" வெளியிட்டதில் தொடங்கி, ஏராளமான வீடியோ கேம்கள் "ஸ்டார் வார்ஸ்" பெயரைத் தாங்கி வெளியிடப்பட்டன. பின்னர் அதிலிருந்து, விண்வெளி-விமானம் மாதிரிகளைக் கொண்ட விளையாட்டுகள், முதல்-மனித வேட்டையாடுபவர் விளையாட்டுகள், குறிப்பிட்ட பாத்திரத்தைக் கொண்ட விளையாட்டுகள், RTS விளையாட்டுகள், மற்றும் பிற விளையாட்டுகளுடைய எண்ணற்ற "ஸ்டார் வார்ஸ்" விளையாட்டுகள் உருவாக்கின. அதிகாரப்பூர்வமாக "ஸ்டார் வார்ஸ்" யூனிவர்ஸுக்காக இரண்டு மாறுபட்ட பாத்திரங்களைக் கொண்ட விளையாட்டுகள் மேசையில் ஆடும்படி உருவாக்கப்பட்டன: 1980களில் மற்றும் 1990களில் வெஸ்ட் எண்ட் கேம்ஸால் ஒரு பதிப்பும், 2000 ஆண்டின் போது விசார்ட்ஸ் ஆப் த கோஸ்டால் ஒன்றுமான விளையாட்டுகள் உருவாக்கப்பட்டன. "லெகோ ஸ்டார் வார்ஸ்" மற்றும் "பேட்டில்ஃப்ரண்ட்" தொடர் போன்றவை முறையே 12 மில்லியன் மற்றும் 10 மில்லியன் என்ற அளவுகளில் விற்று இன்று வரை சிறப்பாக விற்பனை செய்யப்பட்ட விளையாட்டுகளாக உள்ளன. Star Wars: Knights of the Old Republic என்பது யாவரும் மிகுந்த அளவில் அறிந்த விளையாட்டாக உள்ளது. + +நவீன விளையாட்டுகளான "Lego Star Wars: The Complete Saga" மற்றும் "ஸ்டார் வார்ஸ்: த போர்ஸ் அன்லீஸ்டு" போன்றவை பிஎஸ்3, பிஎஸ்பி, பிஎஸ்2, எக்ஸ்பாக்ஸ் 360, நிண்டெண்டோ டிஎஸ் மற்றும் வீக்காக வெளியிடப்பட்டன. "த கம்பிளீட் சாகா" , தொடரின் அனைத்து ஆறு எபிசோடுகளையும் மையப்படுத்தி இருந்தது, இந்தப் பல்லூடக செயல் திட்டத்தில் ஒரு பகுதியாக அதே பெயரைக் கொண்ட, "த போர்ஸ் அன்லீஸ்டில்" , "Star Wars Episode III: Revenge of the Sith" மற்றும் "Star Wars Episode IV: A New Hope" இடைப்பட்ட காலத்தில் கண்டுபிடிக்கப்படாத இடத்தில் மிகப்பெரிய அளவில் நிகழுவதாகவும், இதன் பாத்திரங்களாக விளையாடுபவர்கள் டார்த வடேராக "இரகசிய தொழில்பழகுநனான" எஞ்சியிருந்த ஜெடியை கண்டுபிடிப்பதாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த விளையாட்டு ஒரு புதிய விளையாட்டு இயந்திரத்தை கொண்டிருந்தது. குளோன் வார்ஸை அடிப்படையாகக் கொண்ட மேலும் இரண்டு தலைப்புகள், 2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நிண்டெண்டோ டிஎஸ் (Star Wars: The Clone Wars - Jedi Alliance மற்றும் வீக்கிற்காக (Star Wars: The Clone Wars - Lightsaber Duels) வெளியிடப்பட்டன. + +1977 ஆம் ஆண்டில் டோப்ஸின் முதல் 'புளூ' தொடரிலிருந்து ஸ்டார் வார்ஸ் வர்த்தக அட்டைகள் வெளியிடப்பட்டன. அமெரிக்காவில் உரிமம் பெற்ற படைப்பாளரான டோப்ஸுடன் இருந்து ஏராளமான தொடர்கள் தயாரிக்கப்பட்டன. பிற அட்டைகள் வரைந்திருந்த போது, சில தொடர் அட்டை திரைப்பட நிழற்படமாக இருந்தது. 1993 விண்மண்டத் தொடர் II 'மிதக்கும் யோதா' P3 அட்டை பெரும்பாலாக US$1000 அல்லது அதற்கு அதிகமான தொகைக்கு கட்டுப்படுத்தியது போன்ற, சில மிக அறிய 'விளம்பரங்களினால்' பெரும்பாலான அட்டைகள் பெருமளவில் சேர்க்கப்படுபவையாக மாறின. பெரும்பாலான 'அடிப்படை' அல்லது 'வழக்கமான அட்டை' தாராளமாகக் கிடைத்த போது, பல 'நுழைவு' அல்லது 'துரத்து அட்டைகள் மிகவும் அறிதாக இருந்தன. + +ரிஸ்க் ஸ்டார் வார்ஸ்: த ஒரிஜினல் டிரையாலஜி எடிசன் (2006) மற்றும் ரிஸ்க் ஸ்டார் வார்ஸ்: குளோன் வார்ஸ் எடிசன் (2005) போன்ற ஹாஸ்புரோவின் இரண்டு பதிப்புகளின் தொடரானது ரிஸ்க் என்ற பலகை விளையாட்டைத் தழுவி இருந்தது. + +"ஸ்டார் வார்ஸ்" வீரகாவியம் மூலமாக பல ரசிகர்கள் கவரப்பட்டு அவர்களது சொந்த உறுதி செய்யப்படாத சமய நூலின் தொகுப்பை "ஸ்டார் வார்ஸ்" விண்மண்டலத்தில் உருவாக்கும் அளவுக்கு அமைந்தது. அண்மைக் காலங்களில், இவை ரசிக-புனையக்கதை எழுதுவதிலிருந்து ரசிகத் திரைப்படங்கள் எடுக்கும் அளவுக்கு சென்றது. 2002 ஆம் ஆண்டில், லூகஸ்பிலிம் முதலாம் ஆண்டு அதிகாரப்பூர்வ ஸ்டார் வார்ஸ் ரசிகர் திரைப்பட விருதுகளுக்கு ஆதரவளித்து, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் பிரிவுகளை அதிகார்வபூர்வமாக அங்கீகரித்தது. மூல பதிப்புரிமை மற்றும் வாணிக உரிமை வெளியீடுகள் போன்ற பிரச்சனைகளால், பகடிகள், பொய் விளக்கப்படங்கள், மற்றும் விளக்கப்படங்களுக்கு மட்டுமே இந்தப் போட்டி தொடக்கத்தில் திறக்கப்பட்டது. ரசிக-புனையக்கதைத் திரைப்படங்களின் தொகுப்பு, தொடக்கத்தில் "ஸ்டார் வார்ஸ்" யூனிவர்ஸில் தகுதிபெறவில்லை, ஆனால் 2007 ஆம் ஆண்டில் புனையக்கதை பதிவுகள் யூனிவர்சில் அனுமதிக்கப்படும் தரத்தை லூகஸ்பிலிம் மாற்றி அமைத்தது. + +பல ரசிகத் திரைப்படங்கள் அவர்களது கதையை சொல்வதற்காக எக்ஸ்பேண்டடு யூனிவர்ஸின் உரிமத்திலிருந்து அடிப்படைக்கூறுகளை பயன்படுத்தியபோதும், "ஸ்டார் வார்ஸ்" விதியின் கீழ் அவை அதிகாரப்பூர்வமான பகுதியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், "பிங்க் பைவ்" தொடரிலிருந்து முன்னணி பாத்திரம் திமோத் ஜானின் 2007 நாவல் "அலீகியன்ஸில்" ஒருங்கிணைக்கப்பட்டது, அதிகாரப்பூர்வ விதியை எப்போதும் கடந்திராத ரசிகரால் உருவாக்கப்பட்ட "ஸ்டார் வார்ஸ்" பாத்திரம் முதல் முறையாக குறியிடப்பட்டது. லூகஸ்பிலிம், பெரும்பாலான பகுதிகளுக்காக, ரசிக-புனையக்கதை வேலைகளில் இருந்து உருவாக்கப்பட்ட இந்தப் படைப்பு அதிகமாக அனுமதிக்கப்படவில்லை, அது வரை வருவாய் ஈட்டுவதற்காக அதைப் போன்ற எந்த வேலை முயற்சிகளும் எந்த வகையிலும் "ஸ்டார் வார்ஸ்" உரிமைக்கு களங்கம் ஏற்படும் வகையில் செய்யப்பட்டதில்லை. லூகஸ்பிலிமின் ரசிகப் படைப்புகளுக்கான திறந்த ஆதரவு மற்றும் ஒப்புதல், பல்வேறு பிற பதிப்புரிமை உரிமையாளர்களின் மனநிலைகளில் முரண்பாடை உருவாக்கியது. + +"ஸ்டார் வார்ஸ்" வரலாறு, நவீன அமெரிக்க பாப் நாகரீகத்தில் ஒரு குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் திரைப்படங்கள் மற்றும் பாத்திரங்கள், எண்ணற்ற திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சியில் கேலிசெய்யப்பட்டுள்ளன. லூகஸின் அபிமான ஸ்டார் வார்ஸ் கேலிச்சித்திரம் என அவரால் குறிப்பிடப்பட்ட 13 நிமிட 1977 "ஹார்டுவேர் வார்ஸ்" உள்ளிட்ட, லூகஸால் நிறைவேற்றப்பட்ட விளைவுகளான தொழில் சம்பந்தமான ஒளி & மந்திரம் போன்றவைகளை உள்ளடக்கிய மெல் புரூக்ஸின் "ஸ்பேஸ்பால்ஸ்" போன்றவை "ஸ்டார் வார்ஸை" கேலி செய்த குறிப்பிடும் படியான திரைப்படங்களாகும். லூகஸ்பிலிம் அவர்களாகவே இரண்டு பொய் விளக்கப் படங்களை தயாரித்தனர், "ரிட்டன் ஆப் த ஈவோக்" (1982) என்ற, விக்கெட் டபிள்யூ. வரெக்கின் நடிகரான வார்விக் டேவிஸைப் பற்றிய திரைப்படம், மற்றும் R2-D2வின் "வாழ்க்கை வரலாற்றை" சித்தரிக்கும் "R2-D2: பெனீத் த டோம்" (2002) என்ற திரைப்படத்தையும் உருவாக்கியிருந்தனர். ஸ்டார் வார்ஸ் யூனிவெர்ஸை அடிப்படையாகக் கொண்டு பல பாடல்களும் உள்ளன. "வியர்டு அல்" யான்கோவிக் இரண்டு கேலிப்பாடல்களைப் பதிவு செய்தார்: "யோதாவை", "லோலா" என த கின்க்ஸால் கேலிசெய்யப்பட்டது; மேலும் "அமெரிக்கன் பை" என்ற ஆல்பத்தில் "த சாகா பிகின்ஸ்" என்ற டான் மெக்லேனின் கேலிப்பாடலில் "த பேந்தம் மேனேஸில்" ஒபை-வன் கெனோபியின் உருவ அமைப்பை வேறொரு வகையில் கேலிசெய்யப்பட்டது. + +ரொனால்டு ரேகன் ஸ்டேரடஜிக் டிபென்சிவ் இனிசியேட்டிவ் (SDI) என்ற லேசர்களுடைய அமைப்பு மற்றும் உள்வரும் ஏவுகணைகளைத் தகர்க்கும் ICBMக்கு திட்டமிட்டபோது, இந்தத் திட்டம் விரைவாக "ஸ்டார் வார்ஸ்" என முத்திரையிடப்பட்டது, இது அறிவியல் புனையக்கதையை குறிப்பால் உணர்த்துவதாக இருந்தது, மேலும் இது ரொனால்ட் ரீகனின் நடிப்பு வாழ்க்கையுடன் தொடர்பு ஏற்படுத்துவதாக இருந்தது. ஃபிரான்ஸஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்டின் படி, ரொனால்ட் ரீகன் இதனால் கோபம் கொண்டார், ஆனால் பாதுகாப்புத்துறையின் உதவி செயலாளர் ரிச்சர்ட் பெர்லெ அவரது சகபணியாளர்களிடம் "அதில் அந்த பெயர் அவ்வளவொன்றும் தவறாக இல்லை."; "'இல்லையா?' என்று கூறினார். 'இது ஒரு நல்லத் திரைப்படம். மேலும், நல்லவர்கள் வெல்வார்கள்.'" இது சோவியத் ஒன்றியத்தை ஈவில் பேரரசாக ரீகன் விவரித்த போது தொடர்ந்து எதிரொலித்தது, இது "எ நியூ ஹோப்" புக்கு தொடக்க நகர்வாக எடுத்துக்கொள்ளப்பட்டது. + +ஜெடிசம் என்பது ஸ்டார் வார்ஸ் புனையக்கதையின் ஜெடி தத்துவங்கள் மற்றும் போதனைகளை அடிப்படையாகக் கொண்ட புதிய தெய்வ நம்பிக்கை இல்லாத ஒரு சமய இயக்கமாகும். 2001 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, 390,000 மக்கள் தங்களை ஜெடியாக அறிவித்துக் கொண்டதால், பிரிட்டனின் நான்காவது பெரிய சமயமாக இது கருதப்பட்டது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் ஜெடிசம் பெரிய அளவில் காணப்படுகிறது. உலகளவில், ஜெடி நம்பிக்கையாளர்கள் அறை மில்லியனுக்கு மேல் பற்றுதல் உள்ளதாக வெளிப்படுத்தியுள்ளனர். + + + + + + + +போயிங் 737 + +போயிங் 737 ("Boeing 737") உலகின் மிகப் பிரபலமான பயணிகள் விமானமாகும். போயிங் நிறுவனத்தால் 1967 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகத் தயாரிக்கப்படும் இவ்வகை விமானங்கள் இதுவரை 5,000 க்கும் அதிகம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஏறத்தாழ 1,250 பாவனையில் உள்ளன. சராசரியாக ஒவ்வொரு ஐந்தாவது நிமிடத்திலும் ஒரு போயிங் 737 விமானம் பறக்கத் தொடங்குகிறது அல்லது தரையிறங்குகிறது என்று கணிப்பிடப்பட்டுள்ளது. + + + + +ஜோர்ச் லூகாஸ் + +ஜார்ச் வால்டன் லூகாஸ் ஜூனியர் (George Walton Lucas, Jr. பி. மே 14, 1944) உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார்.இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ் மற்றும் "இண்டியானா ஜோன்ஸ்" போன்ற படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர்.அமெரிக்காவின் தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார். + + + + +மெய்நிகர் வலையமைப்பூடான கணினி + +மெய்நிகர் வலையமைப்பூடான கணினி அதாவது Virtual Network Computing (VNC) அமெரிக்காவின் பெல் ஆய்வுகூடத்தால் திறந்த மூலநிரலில் உருவாக்கப்பட்ட ஓர் மென்பொருளாகும். இம் மென்பொருளானது ஒரு கணினியில் இருந்து பிறிதோர் கணினியை (பொதுவாக சேவர்களை) இயக்குவதாகுப் பயன்படுகின்றது.. கணினி வழங்கி அல்லது சேவரிற்கு 24 மணிநேரமும் வல்லுனர்களை வைத்து நேரத்தையும் பணத்தையும் வீணடிக்காது தேவையேற்படும் சமயத்தில் இவ்வாறான பிரச்சினைகளை இணைய இணைப்பின் மூலம் பெரும்பாலும் அலுவலகத்திற்கு வராமலே வீட்டில் இருந்தே சரிசெய்ய வழிவகுக்கும் மென்பொருளாகும். இதில் விசைப்பலகைகளின் தட்டச்சு மற்றும் மவுஸ் கிளிக் போன்றவை இம்மென்பொருளூடாக (VNC கிளையண்ட்) மற்றக் கணினிக்கு வழங்கப்படும் (VNC சேவர்) அந்தக் கணினியின் திரையானது (பொதுவாக சேவரின்) VNC கிளையண்டிற்கு அனுப்பப்படும். இதில் முக்கிய ஓர் அம்சம் என்னவென்றால் இது இயங்குதளத்தைச் சாராது அதாவது விண்டோஸ் இயங்குதளத்தின் திரையை லினக்ஸ் இயங்குதளத்திலும் லினக்ஸ் இயங்குதளத்தின் திரையை விண்டோஸ்ஸிலும் பார்க்கவியலும். சில சந்தர்பங்களில் விண்டோஸ் இயங்குதளத்தில் Ctrl+Alt+Delete ஓர் விசேட செய்கை என்பதால் இச் செயற்பாட்டிற்கான தட்டச்சுச் செயன்முறையை மற்றைய கணினிக்கு அநுப்ப விசேட வழிமுறைகள் கையாளப்படும் இது பாவிக்கும் மென்பொருளில் தங்கியுள்ளது (Real VNC இல் F8 விசைப்பலகையை அழுத்தி send Ctrl+Alt+Delete என்பதைத் தெரிவுசெய்யவும்). + + + + + + +சன் தொலைக்காட்சி + +சன் டிவி அல்லது சன் தொலைக்காட்சி என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 600 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும். இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும். + +சன் குழுமத்தின் முதல் தொலைக்காட்சியாக 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சன் டிவி தொடங்கப்பட்டது. 2006 ஏப்ரல் 24, இல் மும்பை பங்குச் சந்தையால் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பட்டியலில் சன் டிவி $133 மில்லியன் டாலர்கள் வருவாய் உயர்ந்தது என அறிவிக்கப்பட்டது. தமிழர்களால் அதிகமாக பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் டிவிக்கு முதல் இடம், அதே தருணம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் டிவி முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது. + +சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்பம் சார்த்தே கதை அமைந்திருக்கும். 1993 இல் இருந்து இன்று வரை 300 மேல் பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது. + + + + + + +த டெரரிஸ்ட் + +த டெரரிஸ்ட் (The Terrorist) திரைப்படம் 1998 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் ராஜீவ் காந்தி தற்கொலைத் தாக்குதலுடன் ஒத்தே இருப்பதும் குறிப்பிடத்தக்கது. + +விடுதலை இயக்கமொன்றில் முக்கிய உறுப்பினராக இருக்கும் பெண்ணான மல்லி (ஆயிஷா தக்கர்) அங்கிருப்பவர்களின் வேண்டுகோளுக்கிணையவும் தனது விருப்பத்தின்படியும் அரசியல் தலைவர் ஒருவரைத் தற்கொலைத் தக்குதலில் கொள்வதற்காகச் செல்கின்றார்.இவரது இத்தற்கொலைத் தாக்குதலிற்காக இந்தியாவில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் செல்வதற்கு ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.அதே சமயம் தனது சொந்த இடத்திலிருந்து செல்லும் வழியில் பிராமணச் சிறுவனொருவனினால் உதவி செய்யப்பட்டு அங்கிருக்கும் கண்ணிவெடிகளைத் தாண்ட உதவப்படுகின்றாள் மல்லி.அவளை அனுப்பிய பின்னர் அங்கு வரும் இராணுவத்தினரால் அச்சிறுவன் சுட்டு வீழ்த்தப்படுவதையும் உணர்கின்றாள் மல்லி.பின்னர் இந்தியாவின் வள்ளம் மூலம் வந்திறங்கும் மல்லி கிராமம் ஒன்றில் உள்ள வயோதிபரிடம் ஆராய்ச்சியாளர் என்ற பொய்யைக்கூறி அங்கு குடி கொள்கின்றாள் மல்லி.அங்கு அவளைத் தன் மகள் போல அன்பு செலுத்தும் அவ்வயோதிபர் பின்னர் அவள் கர்ப்பபிணிப் பெண் என்பதனையும் உணர்கின்றார்.இதற்கிடையில் அரசியல் தலைவரைக் கொல்வதற்கான நேரம் நெருங்கியது.அங்கிருந்து தற்கொலைத் தாக்குதலிற்கு ஆயத்தம் செய்து கொண்டு செல்கின்றாள்.இதற்கிடையில் வயோதிபரின் மனைவியும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே அசைவேதும் இல்லாதிருப்பதனையும் காண்கின்றாள்.அரசியல் தலைவர் அவ்வூருக்கும் வந்திறங்குகின்றார்.அவரிடம் செல்லும் அவள் தனது வயிற்றில் இருக்கும் குழந்தையின் உயிருக்காக தன்னுடலை வெடிப்பதனை நிறுத்துகின்றாள். + + + + + + +யாசிர் அரஃபாத் + +யாசிர் அரஃபாத் (யாசர் அராஃபத், "Yasser Arafat") என்று பரவலாக அழைக்கப்படும் முகம்மது யாசிர் அப்துர் ரஹ்மான் அப்துர் ரவூப் அரஃபாத் அல்-குத்வா அல்-ஹுசைனி (ஆகஸ்டு 4 (அ) ஆகஸ்டு 24, 1929 – நவம்பர் 11, 2004) பலஸ்தீன விடுத���ை இயக்கத்தின் தலைவராக செயலாற்றியவர். அபூ அம்மார் என்று அவரது ஆதரவாளர்களால் அழைக்கப்பட்டார். 1994 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மூவரில் ஒருவர். அரபாத் ,சுயநிர்ணய-பாலஸ்தீனம் என்ற பெயரில் இஸ்ரேலுக்கு எதிராக மிகவும் வலிமையான போராட்டம் நடத்தியவர் . அவர் இஸ்ரேல் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் தொடர்ந்து ஈடுபட்டு பல தசாப்தங்களாக நிலவிய மோதலுக்கு முடிவு எட்ட முயற்சித்தார் .அவற்றின் மத்தியில் முக்கியமானவை - 1991 மாட்ரிட் மாநாடு, 1993 ஒஸ்லோ உடன்பாடு மற்றும் 2000 காம்ப் டேவிட் உச்சி மாநாடு. + +அரபாத் கெய்ரோ, எகிப்தில் பாலஸ்தீன பெற்றோருக்கு பிறந்தார்.அவரது தந்தை, அப்தெல் ரௌஃப் அல் குட்வா அல் ஹூஸ்சைனி,அவரது தாயார், ஜாஹ்வா அபுல் சவுத். அரபாதின் தந்தை தனது பரம்பரை குடும்ப நிலங்களுக்கான உரிமைக்காக போராடினார். ஏனெனில் 25 ஆண்டுகளாக எகிப்திய நீதிமன்றங்களில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தது.ஆனால் அராபத்தின் தந்தை வெற்றியடையவில்லை.பின் சாகினி மாவட்டத்தில் ஒரு ஜவுளி வியாபாரத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார் அராபத்தின் தந்தை.அரபாத் ஏழு குழந்தைகளில் இரண்டாவது இளம் மகனாக பிறந்தார். 1933 ல் , அரபாத் நான்கு வயதாக இருந்த போது அவரின் தாய்,சிறுநீரக நோயால் இறந்தார். + +1944 -ல் கிங் புவாட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் அராபத்.அந்த காலத்திலேயே யூதர்கள் பற்றிய வாசிப்புகளை மேற்கொண்டார்.பின் பேச்சுவார்த்தைகள் மூலம் யூத மற்றும் சியோனிஸம் ப்ற்றி நன்றாக புரிந்து கொள்ள ஆரம்பித்தார் . கல்லூரியில் படித்து 1950 -ல் சிவில் பொறியாளர் பட்டம் பெற்றார்.1948 -ல் நடைபெற்ற அரபு-இஸ்ரேல் போரின் போது கல்லூரியில் இருந்து வெளியேறி அரபுப்படைகளுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட்டார். + +1990 -ல் யாசிர் அரஃபாத் தனது 61 வயதில் சுஹா தாவில் என்ற 27 வயது பாலஸ்தீன கிறித்தவப் பெண்ணை மணந்தார்.திருமணத்திற்கு முன் சுஹா தாவிலை அவரது அம்மா யாசிர் அரஃபாத் அவர்களிடம் ப்ரான்ஸில் வைத்து அறிமுகப்படுத்தினார். சுஹா தாவில் அரஃபாத்தின் உதவியாளராகப் பணிபுரிந்தவர். இவர்களுக்கு 1995 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் நாள் மகள் பிறந்தார். அரஃபாத்தின் மனைவி இவருடனான மணவாழ்க்கையை விரும்பாதவராக இருந்தார்.பல முறை அவரை விட்டு விலகிச் செல்ல விரும்பியிருக்கிறார். எனது திருமணத்தை மறுபடியும் செய்யமுடியுமென்றால் நான் அரஃபாத்தை திருமணம் செய்ய மாட்டேன் என அவரது மனைவி சுஹா தாவில் கூறினார்.1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தியதி அரஃபாத் பயணம் செய்த விமானம் தரையிரங்கும் போது விபத்திற்குள்ளானது. அதில் விமானஓட்டிகள் இருவரும் கொல்லப்பட்டனர். + +1980 களில் லிபியா , ஈராக் , சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலிருந்து பண உதவி பெற்றார். அதைக் கொண்டு பலஸ்தீன விடுதலை இயக்கத்தை பலப்படுத்தினார். + +யாசிரின் மரணம் தொடர்பாக பல கருத்துகள் கூறப்பட்டன. அதில் மிக முக்கியமானதாக இருப்பது நச்சு உட்கொண்டார் என்னும் காரணம் ஆகும்.மற்ற காரணங்களாக கல்லீரல் நோய், இரத்தத் தட்டுக்களின் சீர்கேடு என பரவலாகக் கூறப்பட்டு வருகின்றது. + +2004 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று திடீரென நோயுற்றதால் கூட்டத்தில் வாந்தி எடுத்தார். துனிஸிய , ஜோர்டானிய மற்றும் எகிப்திய மருத்துவர்களின் பரிசோதனைக்குப் பின் இவர் பிரான்சு நாட்டின் ' பெர்சி ராணுவ மருத்துவமனை ' யில் அனுமதிக்கப்பட்ட இவர் நவம்பர் 3 ஆம் நாள் கோமா நிலைக்குச் சென்றார்.நவம்பர் 11 அன்று தனது 75 ஆவது வயதில் அவர் இறந்துவிட்டார். + +கதிரியக்க இயற்பியல் நிறுவனம் மற்றும் நியூயார்க் டைம்ஸ் உட்பட பல ஆதாரங்களின் அடிப்படையில் விஷம் என்று கூறுகின்றனர். + +இவரது இறப்புத் தொடர்பாகச் சந்தேகப்படுவதற்கான காரணிகளைப் பெற்றுக்கொண்ட இவரது மனைவியின் வேண்டுகோளின் பேரில் இவரது ஆடை உட்பட இறப்பின் போது இவரிடமிருந்த பொருட்கள் 2012 இல் சுவிட்சர்லாந்து நாட்டுப் பரிசோதனைக்கூடம் ஒன்றில் வேதியியற் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. யாசிர் அரபாத்தின் இறப்புக்குக் காரணம் அவருக்குப் பொலோனியம்-210 நஞ்சூட்டப்பட்டிருப்பதே என்பதை அவ்வாய்வுகள் உறுதிப்படுத்தின. + +அவரது சவப்பெட்டியில் பாலஸ்தீனிய கொடி போர்வையாகச் சூழப்பட்டு 11 நவம்பர் 2004 இல் பிரெஞ்சில் ஒரு சிறிய விழா நடைபெற்றது . ஒரு இராணுவ இசைக்குழு , பிரஞ்சு மற்றும் பாலஸ்தீன தேசிய கீதங்களை வாசித்தனர். பிரஞ்சு ஜனாதிபதி ஜாக் சிராக் அவரை 'தைரியத்தின் மனிதன் ' என பாராட்டினார். அடுத்த நாள் , அராபதின் உடல் மாநிலங்களில் உள்ள பிரதம மந்திரிகள் மற்றும் வெளியுறவு மந்திரிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டது.பின் பிரஞ்சு விமானப்படையின் விமானம் மூலம் விமானத்தில் பாரிஸ் இருந்து ஜெருசலெமுக்கு பறந்தது. +ரமலாவில் அரபாதை ஒரு " தற்காலிக " கல்லறையில் , 2004 இல் புதைத்தனர். + +இஸ்ரேல் அரசு ஜெருசலேமில் அராபதை புதைக்க மறுத்துவிட்டது .மேலும், இஸ்ரேலிய அமைச்சர் டாமி " ஜெருசலேம் யூத அரசர்களின் புதையிடம் ,அரபு பயங்கரவாதிகளின் புதையிடம் இல்லை ," என்று கூறினார். +பின் அராபத்தின் கல்லறை முசொலியத்தில் பி.என்.ஏ ஜனாதிபதி தலைமையகத்தில் நவம்பர் 10 , 2007 இல் திறக்கப்பட்டது. + + + + +செப்டம்பர் 10 + + + + + + + +திருத்தந்தை அருள் சின்னப்பர் + +உரோமன் கத்தோலிக்க திருச்சபையின் இரண்டு திருத்தந்தையர்கள் இதுவரை அருள் சின்னப்பர் (John Paul) என்ற பெயரை தமது ஆட்சிப் பெயராகக் கொண்டுள்ளனர்: + + + + + + +சூர்யகாந்தம் + +சூர்யகாந்தம் கருநாடக இசையின் 17 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 17 வது இராகத்தின் பெயர் சாயாவதி. + + +சூர்யகாந்தத்தின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +நடபைரவி + +நடபைரவி கருநாடக இசையின் 20 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 20 வது இராகத்தின் பெயர் நாரீரீதிகௌள. இந்துஸ்தானி இராகத்தில் இதற்கு ஈடானது "அசாவேரி தாட்". + + + +நடபைரவியின் ஜன்ய இராகங்கள் இவை. + + +நடபைரவி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: + + + + + +கீரவாணி + +கீரவாணி என்பது கருநாடக இசையில் 21வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் கிரணாவளி. விரிவான ஆலாபனைக்கு இடம் கொடுப்பதுடன், பக்தி சுவையையும் வெளிப்படுத்தும். எப்போதும் பாடலாம். + + + + +கீரவாணியின் ஜன்ய இராகங்கள் இவை. + + +கீரவாணி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: + + + + +கரகரப்பிரியா + +கரகரப்பிரியா (கரஹரப்பிரியா) கருநாடக இசையின் 22 வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சிறீராகம் 22 வது இராகமாகக் கொள்ளப்படுகிறது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "காபிதாட்" என்பது பெயர். + + + + +கரகரப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. + + +கரகரப்பிரியா இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: + + + + + +தமிழ் முரசு + +"இக்கட்டுரை சிங்கப்பூர் நாளிதழைப் பற்றியது. தமிழ்நாட்டு நாளிதழைப் பற்றி அறிய தமிழ் முரசு (இந்தியா) கட்டுரையைப் பாருங்கள்." + +தமிழ் முரசு சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ்ப் பத்திரிகையாகும். இது 1935 ஆம் ஆண்டு ஜூலை 6 இல் தமிழவேள் கோ. சாரங்கபாணியால் ஆரம்பிக்கப்பட்டது. சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் 16 பத்திரிகைகளில் இதுவும் ஒன்று. ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்கு அடுத்தபடியாக, நாட்டின் இரண்டாவது ஆகப்பழமையான பத்திரிகை இது. + +குடும்பப் பத்திரிகையாக இருந்த தமிழ் முரசை சிங்கப்பூரின் அனைத்து மொழி நாளிதழ்களையும் வெளியிடும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் 1995 ஆம் ஆண்டில் ஏற்று நடத்த முன் வந்தது. + +தமிழ் முரசு இந்திய சமூகத்தைப் பற்றிய செய்திகளை வழங்கி வருகின்றது. இது மாத்திரம் அன்றி பல விடயங்களை உள்ளூர் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுக்கள் பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை பிரசுரிக்கப் படுகின்றன. இப்பத்திரிகையானது சிங்கப்பூர்த் தமிழ் சமூகத்தின் குரலாகத் திகழ்கின்றது. + +உள்ளூர்ச் செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், விளையாட்டுச்செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள் போன்றவை தமிழ் முரசில் வெளியிடப்படுகின்றன. மேலும் உள்ளூர் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வண்ணம் உள்ளூர் எழுத்தாளர்களின் கவிதைகளும் கதைகளும் ஞாயிறுதோறும் தமிழ் முரசில் வெளியிடப்படுகிறது. திங்கட்கிழமைகளில் மாணவர்களுக்காக மாணவர் முரசு வெளியிடப்படுகிறது. மாணவர் முரசில் தொடக்கப்பள்ளி முதல் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் வரை தங்கள் கட்டுரைகளைப் படைப்பர். வியாழக்கிழமைகளில் இளையர்களுக்கென இளையர் முரசு வெளியிடப்படுகிறது. இந்தப் பக்கத்தில் இளையர்களின் சாதனைகள், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் போன்ற செய்திகளைக் காணலாம். மேலும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழ்த் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவதை இலக்காகக் கொண்டு நாள்தோறும் தமிழ்ப் பயிற்சிப் பாடங்கள் வெளியிடப்படுகிறது. + +2004 கணிப்பீட்டின் படி நாளொன்றிற்கு 8,504 படிகளும் (பிரதிகளும்) ஞாயிற்றுக் கிழமைகளில் 18,232 படிகளும் (பிரதிகளும்) விற்பனையாகின்றன. + + +தமிழ் முரசு சொந்தமாகவே "தப்லா" இலவச ஆங்கில வார இதழை 2008, அக்டோபர் 10 இல் வெளியிட ஆரம்பித்தது. + + + + + +திருத்தந்தை பெனடிக்ட் + +பெனடிக்ட் என்பது தற்போதைய திருத்தந்தையின் ஆட்சிப் பெயராகும். இவருக்கு முன்னர் 14 அல்லது 15 திருத்தந்தையர்கள் இப்பெயரில் திருத்தந்தையாக ஆட்சி செய்தனர். இவ்வெண்ணிக்கை பத்தாம் பெனடிக்ட் திருத்தந்தையாகவா அல்லது எதிர்-திருத்தந்தையாக கணிக்கப்படுகிறாரா என்பதில் வேறுபடும். கத்தோலிக்க திருச்சபையின் அதிசார்ப்பூர்வப் பட்டியலில் பத்தாம் பெனடிக்ட் எதிர்-திருத்தந்தையாக கணக்கிடப்படுகின்றார். + + +முன்று எதிர்-திருத்தந்தையர்களும் இப்பெயரைக் கொண்டிருந்தனர்: + + + + +தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் பட்டியல் + +தமிழ் இலக்கிய உலகப் பெண்களை நினைத்தால் மனதில் உடனே தோன்றுபவர் ஒளவையார்தான். இதையடுத்து ஆண்டாள், காக்கைப் பாடினியார், காரைக்கால் அம்மையார் போன்று ஒரு சிலரே தெரிந்தவராக உள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆதி மந்தியார், குற மகள் இளவெயினியார், வெறிபாடிய காமக் கண்ணியார், கீரன் எயிற்றியார், ஒக்கூர் மாசாத்தியார், காவற்பெண்டு, நக்கண்ணையார், குமுழி ஞாழல் நப்பசையார், வெள்ளி வீதியார், பூதப்பாண்டியனின் உள்ளங் கவர்ந்த பெருங்கோப்பெண்டு, பாரிமகளிர் என்று தமிழ்ப் பெண்பாற் புலவர்களின் பட்டியல் நீளமானது. + +நாகூரைச் சேர்ந்த சித்தி ஜூனைதா பேகம் என்ற பெண்மணிதான் முதல் தமிழ் முஸ்லிம் பெண் எழுத்தாளர். இவர் எழுதிய முதல் சிறுகதை, 1929ஆம் ஆண்டு தாருல் இஸ்லாம் இதழில் வெளிவந்தது. + + + + + +1967 + +1967 (MCMLXVII) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். + + + + + + + + +இலங்கை இனப்பிரச்சினைக் காலக்கோடு + +2015 | 2014 | 2013 | 2012 | 2011 | 2010
+2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
+1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
+1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
+1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
+1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
+1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950
+1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940
+1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 | 1930
+1929 | 1928 | 1927 | 1926 | 1925 | 1924 | 1923 | 1922 | 1921 | 1920
+1919 | 1918 | 1917 | 1916 | 1915 | 1914 | 1913 | 1912 | 1911 | 1910
+1833 | 1796 |1668 | 1620
+இவற்றையும் பார்க்க
+ஆதாரங்கள்
+வெளி இணைப்புகள் + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
+ +தொழில் நிறுவனங்கள் + +தொழில் நிறுவனம்("Business Organization") எனப்படுவது இலாபத்தினை உழைப்பதற்காக தனியாளாகவோ அல்லது கூட்டாகவோ வணிகத்தினை நடாத்துவதற்காக உருவாக்கப்படும் சட்டபூர்வமான அமைப்பு ஆகும். + +இத்தகைய நிறுவனங்கள் இலாபநோக்கற்ற நிறுவனங்களிலிருந்து முழுமையாக வேறுபடும். தொழில் நிறுவனத்தின் அமைப்பாக்கத்திற்கு பௌதீகவளம், மனிதவளம், நிதிவளம் மற்றும் தகவல்வளம் என்பன அவசியமாகும். இவ் வளங்களினைக் கொண்டு தொழில் நிறுவனங்களானது உற்பத்தி, கொள்வனவு, விற்பனை, சேவைகள் வழங்குதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. + +நபர்களின் எண்ணிக்கை,கடன் பொறுப்புக்கள் தொடர்பில் பின்வருமாறு தொழில் நிறுவனங்கள் வகைப்படுத்தப்படும்: + + + + +செவன் இயர்ஸ் இன் திபெத் (திரைப்படம்) + +செவன் இயர்ஸ் இன் திபெத் (seven years in Tibet) இத்திரைப்படம் அதே பெயரில் 1957ல் வெளிவந்த புத்தகத்தினை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகவும் அதே சமயத்தில் ஹெயின்ரிச் ஹாரெரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புமாகும். + +வரலாற்றுப்படம் / காதல்படம் + +ஆஸ்திரியர்களான ஹாரெரும் அவரது நண்பருமான பீட்டர் ஆவ்ப்சினைட்டரும் இமாயலய மலைத்தொடரின் உச்சியினை அடையவிரும்பி இமயம் நோக்கி பயணிக்கின்றனர். அம்மலையின் உச்சியினை தொடாத வண்ணம் இருக்கையில் பிரித்தானிய அரசால் கைது செய்யப்படுகின்றனர். அதே சமயம் ஹெயின்ரிச் ஹாரெருக்கு அவரின் மனைவி அனுப்பிய கடிதத்தில் வேறொருவரை தான் மணம் செய்து கொள்வதாக ஓர் இடியினை அவர் தலையில் போட்டார். சிறிது காலத்திற்குப் பின்னர் ஹெயின்ரிச் ஹாரெர் மற்றும் பீட்டர் ஆவ்ப்சினைட்டரும் சிறையிலிருந்து வட இந்தியாவிற்குத் தப்பியோடுகின்றனர். இதற்கிடையில் பிரியும் இருவரும் இந்தியாவிலும் பிரித்தானிய அரசின் ஆட்சி என்று தெரிந்த பின்னால் சந்திக்கும் இவர்கள் திபெத்தில் புதியதொரு வாழ்வினை வாழ்கின்றனர். அங்கு 14 ஆம் தலாய் லாமாவின் நல்லாதரவைப் பெறும் இவர்களால் புத்தரின் கொள்கைகளின் மகிமைகளை அறிய முடிகின்றது. பின்னர் அங்கு ஏற்படும் சீனாவின் கம்யூனிச படையெடுப்பு காரணமாக சுமார் ஒரு மில்லியன் திபெத்திய மக்கள் அழித்தொழிக்கப்பட்டது வரலாறு. போர் ஓய்ந்தது மேலும் மன்னர் பதவியை 14ஆம் தலை லாமா பெறுகின்றார். ஆஸ்திரியாவிலிருக்கும் தனது மகனைக் காண்பதற்காக அங்கிருந்து விடை பெறுகின்றார் ஹெயின்ரிச் ஹாரெர். + + + + + +வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் + +வட இலங்கை முசுலிம்களின் கட்டாய வெளியேற்றம் என்பது வட மாகாணம், இலங்கையைத் தாயகமாகக் கொண்ட முசுலிம்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உத்தரவுக்கமைய வெளியேற்றப்பட்டமையைக் குறிக்கும். 72 மணித்தியாலங்களுக்குள் யாழ்ப்பாண முசுலிம்கள் மட்டுமல்லாமல் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு (தண்ணீரூற்று) உட்பட இலங்கையின் வட மாகாணம் இருந்த முசுலிம்கள் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் 1990 இல் வெளியேற்றப்பட்டனர். இந்த வெளியேற்றமானது சிறுபான்மை மக்களின் உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் ஈழப்போராட்டத்துக்கு ஒரு பாரிய பின்னடைவு எனக் கூறப்படுகிறது. இது தமிழீழ விடுதலைப் புலிகள் இழைத்த பாரிய ஈடுசெய்ய முடியாத தவறு என்பதை அவர்களே பின்னர் ஒத்துக்கொண்டார்கள். + +இவ்வெளியேற்றத்தில் அகதிகளாக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான (கிட்டத்தட்ட 58,500 ) முசுலிம்களில் ஒரு பகுதியினர் ஈழப்போர் 2009 ஆம் ஆண்டில் முடிவடைந்ததை அடுத்து தமது தாயகப் பகுதிகளில் மீள்குடியேறியுள்ளனர். பலர் இன்னமும் புத்தளம், அனுராதபுரம் பகுதியில் பல முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வவுனியா சாலம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு நடவடிக்கைகளை அடுத்து அரச அதிபரிடம் இப்பகுதியானது பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. + +1981 செப்டம்பர் 21 இல் இலங்கை முசுலிம்களுக்கெனத் தனியான அரசியல் கட்சி சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு என்ற பெயரில் உருவாக்கப்பட்டதை அடுத்து இலங்கை முசுலிம்கள் தமிழரில் இருந்து வேறுபட்ட இனம் என்ற கோட்பாடு மீண்டும் தலைதூக்கியது. இதனால், தமிழீழம் என்ற நாடு உருவாகினால் தாம் அந்த நாட்டில் சிறுபான்மையினராக ஆகி விடுவோம் என்ற அச்சம் முசுலிம்களிடம் எழுந்தது. தமிழீழக் கோட்பாட்டை முசுலிம் காங���கிரசு கட்சி பலமாக எதிர்த்து வந்தது. அத்துடன் இலங்கை அரசு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள முசுலிம்களின் பகுதிகளில் முசுலிம் ஊர்க்காவல் படைகளை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதங்களையும் அளித்தமை இரு இனங்களிடையே மேலும் முறுகல் நிலையை வளர்த்தது. இதனால் ஆங்காங்கே இரு இனத்தவரிடையேயும் வன்முறைகள் வெடித்தன. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்களின் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "முசுலிம்கள் துரோகிகள் என்றும், காட்டிக்கொடுப்பவர்கள் என்றும் தமிழ் மக்களிடையே ஒரு தேய்வழக்கு வழங்கி வந்தது" என எழுதியுள்ளது. + +முதலாவது கட்டாய வெளியேற்றம் சாவகச்சேரியில் இடம்பெற்றது. சுமார் 1,500 முசுலிம்கள் வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னர் கிளிநொச்சி, மன்னார் முசுலிம்களும் தமது பூர்வீக இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டனர். யாழ்ப்பாண முசுலிம்கள் 1990 அக்டோபர் 30 இல் வெளியேற்றப்பட்டனர். வாகனங்களில் வந்திருந்த விடுதலைப் புலிகள் அனைத்து முசுலிம்களையும் யாழ்ப்பாணம் ஒசுமானியா கல்லூரியில் கூடும்படி கட்டளை இட்டனர். அங்கு கூடியிருந்தோரை இரு மணி நேரத்தினுள் நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து அனைத்து முசுலிம்களும் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறினர். 1881 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் யாழ்ப்பாணத்தில் 14,844 முசிலிம்கள் வசித்து வந்திருந்தனர். தாம் உடுத்திருந்த உடுப்புடனும் ஆகக்கூடியது 50 ரூபாய் பணத்துடனும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் இவர்கள் இருந்த குடியிருப்புகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. வட மாகாணத்தில் இருந்து 14,400 முசுலிம் குடும்பங்கள் (கிட்டத்தட்ட 72,000 பேர்) வெளியேற்றப்பட்டனர். இவர்களில் மன்னாரில் இருந்து 38,000 பேரும், யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் இருந்து 20,000 பேரும், வவுனியாவில் இருந்து 9,000 பேரும், முல்லைத்தீவில் 5,000 பேரும் அடங்குவர். + +இவர்களில் பலர் புத்தளம் மாவட்டத்திலும், ஏனைய பகுதிகளிலும் குடியமர்த்தப்பட்டனர். + + + + + +தலதா மாளிகை குண்டுவெடிப்பு + +ஜனவரி 1998ல் லொறியொன்றில் வந்த தற்கொலைக் குண்டுகாவிகளினால் தலதா மாளிகை தாக்குதலுக்குள்ளானது. இச்சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்ததோடு பெளத்த சமயத்தின் புனித தலமான தலத�� மாளிகை சேதமடைந்தது. இக்குண்டு வெடிப்பை தமிழீழ விடுதலைப் புலிகளே நிகழ்த்தினார்கள் என்று அரசு குற்றம் சுமத்தியது. பொதுவாக அரச, பொருளாதார இலக்குகளையே தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் இலக்குகளாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. + + + + + +செப்டம்பர் 11 + + + + + + + + +சீனக் குடியரசு + +சீனக் குடியரசு கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு தீவு நாடாகும். முன்னர் முழுச் சீனாவினதும் அரசாக இருந்து சீன உள்நாட்டு யுத்தம் காரணமாக சீனப் பெருநிலப்பரப்பின் ஆட்சியை சீன மக்கள் குடியரசிடம் இழந்தது. 1940 களின் பிறகு சீன குடியரசு, தாய்வான் அத்துடன் பெங்க்ஹு,கின்மேன், மாட்சு உட்பட சில தீவுக்கூட்டங்களை மட்டுமே ஆட்சி செய்து வருகிறது. பின்வந்த காலங்களில் சீனக் குடியரசானது "தாய்வான்" என்றே அழைக்கப்பட்டது. 1970களின் பின்னர் "சீனா" என்பது சீன மக்கள் குடியரசைக் குறிப்பதாக அமைந்துவிட்டது. மேலும் சீனக் குடியரசானது சீன தைபே என அழைக்கப்படலாயிற்று. அண்டை நாடுகளாக மேற்கில் சீன மக்கள் குடியரசு , கிழக்கு மற்றும் வடகிழக்கில் ஜப்பான் மற்றும் தெற்கில் பிலிப்பைன்ஸ் ஆகியவை அமைந்துள்ளது.இதன் தலை நகரமாக தைப்பே உள்ளது இது தைவான் அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மையமாக உள்ளது. மிக அதிக மக்கள்தொகை கொண்ட நகரமமாக புதிய தைபே உள்ளது. + +தைவான் தீவு 17 ஆம் நூற்றாண்டின் போது டச்சு நாட்டவரால் கண்டுபிடிக்கப்பட்டது.அதுவரை அதன் பூர்வீக குடிமக்களாக தைவான் பழங்குடியினரினர் இருந்தனர்.1624 ஆம் ஆண்டு சீலாண்டியா என்ற கோட்டையை டச்சு கிழக்கிந்திய நிறுவனத்தார் கட்டினார்கள்.1642 ஆம் ஆண்டு வரை வலிமையாக திகழ்ந்த இக்கோட்டை பின்னர் வீழ்ந்தது.பின்னர் 1683 இல் சீனாவின் மிங் வம்சத்தை சேர்ந்த செங் ஜெங்சியோன் என்பவரால் தைவான் கைப்பற்றப்பட்டது. +அதன் பின்னரே அதிக அளவில் சீன மக்கள் அங்கு குடியேற துவங்கினர் அவர்களில் பெரும்பான்மையினர் ஹான் சீன வம்சாவளியை சேர்ந்தவர்கள்.அதன் பின்னர் 1891-94 வரை நடந்த முதலாம் சீன ஜப்பானிய போரில் கின் வம்சம் தோல்வியடைந்ததை அடுத்து தைவான் 1895 ல் ஜப்பான் நாட்டிற்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. +சீனக் குடியரசானது 1912 இல் கடைசி சீன அரசவம்சமான கின் அரச வம்சத்தை நீக்கிவீட்டு அமைக்கப்பட்டதாகும். இத்தோடு இரண்டாயிரம் ஆண்டு பழைமையான சீன அரசாட்சி முடிவுக்கு வந்தது.ஆகவே இதுவே கிழக்காசியாவின் மிகப்பழைமையான குடியரசாகும். சீன பெருநிலப்பரப்பில் சீன குடியசின் ஆட்சியானது சிற்றரசு ஆட்சி, மற்றும் யப்பானிய ஆக்கிரமிப்பு சீன உள்நாட்டு யுத்தம் போன்றவற்றைக் கண்டது. +1945 ல் இரண்டாம் உலக போரின் முடிவில் ஜப்பான் நேச நாடுகள் சார்பில் சீன குடியரசு இராணுவ படைகளுக்கு தைவானை திரும்ப தந்தனர்.எனினும் சீன உள்நாட்டு யுத்தம் 1950 இல் முடிவடையும் போது சீன கம்யூனிசக் கட்சி சீன பெருநிலப்பரப்பின் பெரும் பிரதேசத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. சீனக் குடியரசோ தாய்வான் உட்பட சில தீவுகளை மட்டுமே கொண்டிருந்தது. சீன கம்யூனிச கட்சி 1949இல் பீஜிங்கில் மக்கள் சீனக் குடியரசு என்ற புதிய நாட்டை பிரகடனப்படுத்தியது. ஆனால் சீன குடியரசு முழுச்சீனா மிதான சட்டப்படியான அரசு தானே என்ற கருத்தை கொண்டிருந்தது. இதுவே 1970கள் வரையும் பல நாடுகளின் கருத்தாகவும் காணப்பட்டது. +1971 இல் ஐக்கிய நாடுகள் சபையில் சீன மக்கள் குடியரசு சீனா பகுதிகளை தனதாக்கி கொண்டது. +சீன குடியரசு அரசாங்கம் சீனா மற்றும் மங்கோலியா எல்லைபகுதிகள், தைவான் ஆகியவற்றை சொந்தம் கொண்டாடி வந்தாலும் 1992 ல் இருந்து சீனாவினை திரும்பபெறும் முடிவை மாற்றிக்கொண்டது. +1928 முதல் சீன குடியரசானது சீனத் தேசியக் கட்சியால் (குமிண்டாங்) சர்வாதிகார முறையில் ஆளப்பட்டது. 1950 மற்றும் 1960 இல் சீ.தே.க. ஊழல்களை குறைத்து பொருளாதார சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தது. இதன் காரணமாக நாட்டில் யுத்த அபாயமும் குழப்பநிலையும் தொடர்ந்த போதும் பொருளாதாரம் மிக வளர்ச்சி கண்டது. 1980 மற்றும் 1990 இல் சீன குடியரசான சனநாயக முறைக்கு மாறுவதற்கான தொடர்ந்த ஈடுபாடு காரணமாக அரசியல் புது வடிவைக் கண்டது. இதன் படி 1996 இல் அது முதலாவது அதிபர் தேர்தலை நடத்தியது. 2000 ஆம் ஆண்டு தேர்தல் மூலமாக சீ.தே.க. சார்பற்ற ஒருவர் முதல் முறையாக அதிபராக பதவியேற்றுள்ளார். + +20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தைவான் விரைவான பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் அனுபவம் காரணமாக ஒரு மேம்பட்ட தொழில்துறை பொருளாதார சக்தியாக உள்ளது.தைவான் "நான்கு ஆசிய புலிகள்"' எனப்படும் நாடுகளுள் ஒன்றாகவும் மற்றும் உலக வணிக அமைப்பு,ஆசிய பசுபிக் பொருளாதார அமைப்பிலும் உறுப்பினராக உள்ளது.இது உலகின் 19 வது பெரிய பொருளாதார நாடாகவும் அதன் மேம்பட்ட தொழில்நுட்ப துறை மூலம் உலக பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.மேலும் தைவான் பத்திரிகை சுதந்திரம்,சுகாதாரம்,பொது கல்வி,பொருளாதார சுதந்திரம் மற்றும் மனித வளர்ச்சி ஆகியவற்றில் உயர்ந்த இடத்தில் உள்ளது. + +தைவான் தீவு சீனாவின் தென்கிழக்கு கடற்கரையில் இருந்து 180 கிலோமீட்டர் (110 மைல்) தூரத்தில் தைவான் நீரிணை பகுதியில் அமைந்துள்ளது மற்றும் ஒரு பகுதியில் உள்ளது.தன எல்லைகளாக வடக்கில் கிழக்கு சீன கடல், கிழக்கில் பிலிப்பைன் கடல், தென்மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் தென் சீன கடல் ஆகியவற்றை கொண்டுள்ளது. தைவான் தீவின் மொத்த பரப்பளவு 35,883 சதுர கிமீ (13,855 சதுரமைல்) ஆகும். + +தைவான் உயர்ந்த பகுதி 3952 மீட்டர் (12,966 அடி) உயரம் உள்ள யூ ஷான் (ஜேட் மலை) மற்றும் 3500 மீ (11,500 அடி) க்குள் மேற்ப்பட்ட உயரம் கொண்ட இதர ஐந்து சிகரங்களையும் கொண்டு உலகின் நான்காவது மிக உயர்ந்த தீவாக உள்ளது. + + + + +அமோனியா + +நவச்சாரியம், நவச்சாரகம் அல்லது அமோனியா ("Ammonia") என்பது ஒரு நைதரசன் அணுவுடன் மூன்று ஐதரசன் அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு NH. அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை கடும் நாற்றம் (நெடி) கொண்டது. அமோனியா காற்றைவிட இலேசானது. + +அமோனியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகின் மொத்த உற்பத்தியில் எடையளவில் (டன்னளவில்) இரண்டாவதாக உள்ள வேதிப்பொருள். உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்களில் மொத்த மதிப்பில் (பணம்), முதல் இடம் வகிக்கின்றது. 1980களின் துவக்கத்தில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உறபத்தி செய்யப்பட்டது. அமோனியா பயிர்களுக்கு இடும் உர உற்பத்தியில் பயனாகும் ஒரு பொருள். பல்வேறு வகையான மருந்துப்பொருட்கள் உற்பத்தியிலும் அமோனியா பயன்படுகின்றது. + +அமோனியா என்ற பெயர் இன்றைய லிபியா நாட்டில் அம்மானில் (Ammon) முன்பு இருந்த வியாழனுக்கான கோயிலில் (Temple of Jupiter Ammon), ஒட்டகத்தின் சாணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருளாக இருந்ததால், "அம்மோனியம்" என்னும் பெயர் பெற்றது ஆனால், அமோனியாவில் இருந்து பெற்ற உப்புகளை "ஹார்மோனிக்கஸ் சால்" (சால் = உப்பு) "Hammoniacus sal" என்று ரோமானிய எழுத்தாளர் பிளினி (கி.பி. 23-79) குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதுதான் பிற்காலத்தில் அறியப்பட்ட "சால்-அம்மொனியாக்" ("sal-ammoniac".) என்பதா, இதிலிருந்து அமோனியா என்னும் பெயர் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை. + +அமோனியாவின் உட்கூறுகளை முதன் முதலாகக் 1777ல் கண்டுபிடித்தவர் கிளாடெ லூயி பெர்ட்டோலே (Claude Louis Berthollet) என்பார். ஆனால் இவ் வளிமத்தை 1774 ஆம் ஆண்டு முதன் முதலாக தனியான ஒரு வளிமமாகக் கண்டுணர்ந்தவர் ஆங்கிலேய வேதியியலாளர் ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley). ஜோசப் பிரீஸ்ட்லி இதனைக் "காரக காற்று" (ஆல்க்கலைன் காற்று, alkaline air) என்று பெயர் சூட்டினார். + +தொழிலகங்களில் பயன்படும் அம்மோயாவை நீரற்ற அமோனியா என்று கூறுவர். ஏனெனில் அதில் நீர் சேராமல் இருக்கும். அமோனியா -33 °C வெப்பநிலையிலேயே கொதிக்கத் தொடங்குவதால், அதனை அதிக அழுத்தத்தில் கீழ் வெப்பநிலையில் வைத்திருப்பர். திண்ம நிலையில் இருந்து உருகும் வெப்பநிலை -77.7 °C. அமோனியா நீரில் நன்றாகக் கரையும். நீரில் எடையளவில் 45% கரையவல்லது. முழுக்கரைசைலாக உள்ளபொழுது இது அமோனியம் ஹைட்ராக்ஸைடு (NHOH) என்று அழைக்கபடும். இது ஒரு காரப்பொருள் (ஆல்க்கலைன்). அமோனியா எரியும் பொழுது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத் தீக்கொழுந்தாக எரிகின்றது. + +அமோனியா ஒரு வலுக்குறைந்த காரமாகும். அமோனியா ஏனைய காரங்களைப் போல அமிலங்களுடன் தாக்கமடைந்து உப்பைத் தோற்றுவிக்கும் இயல்புடையது. உதாரணமாக அமோனியா ஐதரோ குளோரிக் அமிலத்துடன் தாக்கமடைந்து அமோனியம் குளோரைட்டை உருவாக்கும். எனினும் முழுமையாக நீரற்ற சூழ்நிலையில் இத்தாக்கம் நடைபெறாது. அருகருகே அமோனியா மற்றும் ஐதரோ குளோரிக் அமில போத்தல்களை வைத்தால் இரண்டுக்கும் இடையே வெள்ளை நிற மூடுபனி போன்ற தோற்றத்தோடு அமோனியம் குளோரைட்டு உருவாகும். + +அமோனியா அமிலங்களுடன் தாக்கமடைந்து உருவாக்கும் உப்புக்கள் அனைத்தும் அமோனியம் உப்புக்கள் என அழைக்கப்படுவதுடன் இவை அமோனியம் அயனைக் (NH) கொண்டிருக்கும். + +அமோனியா ஒரு மிகவும் வலுக்குறைந்த அமிலமாகவும் தொழிற்படக்கூடியது. சில உலோகங்களுடன் தாக்கமடைந்��ு அமைட்டுகளை உருவாக்கல் அமோனியாவின் அமில இயல்பை உறுதிப்படுத்துகின்றது. உதாரணமாக சோடியத்துடன் தாக்கமடைந்து சோடியம் அமைட்டை உருவாக்கும். + +இவ்வாறு காரமாகவும் அமிலமாகவும் தொழிற்பட்டு அமோனியா ஈரியல்பைக் காட்டும் வாயுவாகத் திகழ்கின்றது. + +நீரைப்போல அமோனியாவும் கற்றயனாகவும், அனயனாகவும் பிரிகையடையும் இயல்புடையது. + +அமோனியா ஒக்சிசனில் எரிந்து நைதரசனையும், நீரையும் தோற்றுவிக்கும். இது புறவெப்பத்தாக்கமாகும். + +எனினும் தகுந்த ஊக்கிகள் காணப்பட்டால் இயக்கவியல் விளைவுகளாக நைதரசனின் ஒக்சைட்டுகள் தோன்றும். இத்தோற்றப்பாடே நைட்ரிக் அமில உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றது. + +இவ்வாறு தோன்றும் நைத்ரிக் ஒக்சைட்டை நைத்ரிக் அமிலம் உற்பத்தி செய்வதற்காகப் பயன்படுத்துகின்றனர். எனினும் அமோனியா எரியும் போது சிறிதளவு வெப்பமே வெளிப்படுவதால் இத்தாக்கத்தை ஊக்கிகளின்றித் தொடர்தல் கடினமாகும். +அமோனியா ஒரு நிறமற்ற வாயு ஆகும். காரச்சுவை இதை அடையாளப்படுத்துகிறது. காற்றை விட இது இலேசானது ஆகும். காற்றின் அடர்த்தியைக் காட்டிலும் அமோனியாவின் அடர்த்தி 0.589 முறை அதிகமாகும். மூலக்கூறுகளுக்கு இடையில் வலிமையான ஐதரசன் பிணைப்பு இருப்பதன் காரணமாக இதை எளிதில் திரவமாக்க முடியும். −33.3 °செல்சியசு வெப்பநிலையில் இது கொதிக்கிறது. −77.7 ° செல்சியசு வெப்பநிலையில் இது வெண் படிகங்களாக உறைகிறது. ஒரு வளிமண்டல அழுத்தம் அல்லது தாழ் வெப்ப நிலையில் −33.34 °செல்சியசு வெப்பநிலையில் அமோனியா கொதிக்கிறது. எனவே இதை அழுத்தத்தின் கீழ் சேமிக்க வேண்டும். + +அமோனியா அதிக பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. எனவே மிக அதிகமாக உற்பத்தி செய்யப்படும் கனிம வேதியியல் சேர்மங்களில் இதுவும் ஒன்றாகும். உலகெங்கிலும் பல தொழிற்சாலைகள் அமோனியாவை உற்பத்தி செய்கின்றன. மனிதனால் உருவாக்கப்பட்ட அனைத்து சக்திகளிலும் 1% க்கும் மேலான நுகர்வும், உலக ஆற்றல் வரவுசெலவு திட்டத்தில் குறிப்பிடத்தக்க ஒதுக்கீடும் அம்மோனியா உற்பத்திக்காக என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்..2014 ஆம் ஆண்டு உலகாய அளவில் உற்பத்தி செய்யப்பட்ட அமோனியாவின் அளவு 176 மில்லியன் டன்கள் ஆகும். இதில் 32.6 சதவீதம் அமோனியா சீனாவில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உருசியா 8.1 சதவீதம், இந்தியா 7.6% அமோனியாவையும் அமெரிக்கா 6.4% அமோனியாவையும் உற்பத்தி செய்துள்ளன. 88% அமோனியா உற்பத்தியானது விவசாய விதைகளுக்கு உரமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டின் உலகாய அமோனியா உற்பத்தி இயற்கை வாயுவில் இருந்தே தயாரிக்கப்படுள்ளது. இது கிட்டத்தட்ட 72% ஆகும். +முதலாம் உலகப் போர் துவங்குவதற்கு முன்னர், பேரளவு அமோனியா உலர் வடித்தல் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நைட்ரசன் மிகுந்த காய்கறிகள், ஒட்டக சாணி உள்ளிட்ட விலங்குகளின் கழிவு பொருட்கள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. இவை நைட்ரசு அமிலத்தின் ஒடுக்கம் மூலமும் நைட்ரைட்டுகளுடன் ஐதரசன் சேர்க்கப்பட்டும் வடிக்கப்பட்டன. +நைட்ரஜன் அமிலம் மற்றும் நைட்ரைட்டுகள் ஹைட்ரஜன் கொண்ட நைட்ரஜன் அமிலம் மற்றும் நைட்ரெயினைக் குறைப்பதன் மூலம் வடிகட்டப்பட்ட நைட்ரஜன் காய்கறி மற்றும் விலங்கு கழிவுப்பொருட்களின் உலர் வடித்தல், [93] அதிக அம்மோனியா பெறப்பட்டது; கூடுதலாக, இது நிலக்கரி வடிகட்டல் மூலமாக தயாரிக்கப்பட்டது, மேலும் ஆல்குலின் ஹைட்ராக்ஸைடுகளின் [94] ஆல்மோனியம் உப்புக்களின் சிதைவு காரணமாக இது சுழற்சியை போன்றது, உப்பு பொதுவாக பொதுவாக குளோரைடு (சால் அம்மோனியா) என்று பயன்படுத்தப்படுகிறது: +கூடுதலாக நிலக்கரியை வடித்தல் மூலமும், ஆல்கலின் ஐதராக்சைடுகளால் அமோனியா உப்புகளை சிதைவடையச் செய்தும் அமோனியா தயாரிக்கப்பட்டது. கால்சியம் ஆக்சைடு உப்பு பொதுவாக இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. +அம்மோனியா தொகுப்புக்கு தேவையான ஐதரசன் , நீர் வாயுவைப் பயன்படுத்தியும் பொருளாதார ரீதியாக உற்பத்தி செய்யப்படலாம். நிர்வாயு வினையைத் தொடர்ந்து நீர்வாயு மாற்ற வினை இதற்காக பயன்படுத்தப்படுகிறது. நீராவியை செஞ்சூடான் கல்கரின் வழியாகச் செலுத்தி ஐதரசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு வாயுக்களின் கலவை பெறப்படுகிறது. பின்னர் கார்பன் டை ஆக்சைடு நீக்கப்படுகிறது. 2500 கிலோபாசுக்கல் வளி மண்டல அழுத்தத்தில் இக்க்லவையை நீரால் கழுவினால் கார்பன் டை ஆக்சைடு நீக்கப்படுகிறது. அல்லது நிலக்கரி அல்லது நிலக்கரி வாயுவை போன்ற பிற ஆதாரங்களைப் பயன்படுத்துவதன் மூலமும் கார்பன் டை ஆக்சைடைப் பிரிக்கலாம். . +நவீன அம்மோனியா உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் ஐதரசன் உற்பத்தியைச் சார்ந்தே இருக்கின்றன. தொழிற்சாலைகளில�� இருந்து கிடைக்கும் ஐதரசனே மேக்னடைட்டு வினையூக்கியைப் பயன்படுத்தி அல்லது அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்ட இரும்பு வினையூக்கியைப் பயன்படுத்தி வளிமண்டல நைட்ரசனுடன் வினைபுரிகின்றன. 10000 கிலோபாசுக்கல் வளிமண்டல அழுத்தமும் 450 பாகை செல்சியசு வெப்பநிலையும் இங்கு பயன்படுகின்றன. நீரற்ற திரவ அமோனியா உருவாகிறது. இச்செயல் முறை ஏபர்-போசு செயல்முறை என்று அழைக்கப்படுகிறது. +அம்மோனியா தொகுப்புக்காகத் தேவைப்படும் ஐதரசனை பிற ஆதார மூலங்களான நிலக்கரி அல்லது கல்கரி போன்றவற்றை வணிகமுறை வளிமயமாக்கல் அல்லது நீரை நீராற்பகுக்கும் செலவின முறை மூலமும் தயாரிக்கலாம். ஐரோப்பாவின் அம்மோனியா உற்பத்தி பெரும்பாலும் மின்னாற்பகுப்பு வழியாக வெமொர்க்கில் தயாரிக்கப்பட்டது. புதுப்பிக்கத் தக்க ஆற்றல் மூலங்களைப் பயன்படுத்தியும் மின் உற்பத்தியை சரிசெய்து கொள்ளலாம். + +உலகில் உற்பத்தி செய்யப்படும் 83% நவச்சாரியம் உரமாகவே பயன்படுத்தப்படுகின்றது. இது யூரியா அல்லது அமோனியாவின் உப்புக்களாக மாற்றப்பட்டு பயன்படுத்தப்படுகின்றது. உலகளவில் ஒவ்வொரு வருடமும் 110 மில்லியன் தொன் அமோனியா உரமாகப் பயன்படுகின்றது. + +அனைத்து வகையான நைதரசன் சேர்மங்களுக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ அமோனியாவிலிருந்தே உற்பத்தி செய்யப்படுகின்றன. அமோனியாவிலிருந்து பெறப்படும் மிக முக்கிய சேர்மம் நைத்ரிக் அமிலமாகும். பிளாட்டினம் ஊக்கிக்கு மேல் 700–850 °C வெப்பநிலையில் கிட்டத்தட்ட 9 மடங்கு வளிமண்டல அமுக்கத்தில் அமோனியாவை ஒக்சியேற்றுவதன் மூலம் நைத்ரிக் அமிலம் பெறப்படுகின்றது. இத்தாக்கத்தின் இடை விளைவாக நைத்ரிக் ஒக்சைட்டு உருவாகி அது பின்னர் நைத்ரிக் அமிலமாக மாற்றப்படுகின்றது. + +இவ்வாறு உருவாக்கப்படும் நைத்ரிக் அமிலத்திலிருந்து இரசாயன உரங்கள், வெடிமருந்துகள் உட்பட பல்வேறு வகையான நைதரசன் சேர்மங்களை உற்பத்தி செய்துகொள்ள முடியும். + +கண்ணாடி, வெண்களி, உருக்காலான பொருட்களை சுத்தப்படுத்தவும் வெதுப்பிகளை சுத்தப்படுத்தவும் 5-10% செறிவுடைய நீரில் கரைக்கப்பட்ட அமோனியா பயன்படுத்தப்படுகின்றது. + +அற்கஹோல் உற்பத்தியில் நொதித்தலின் போது pH அளவைக் கட்டுப்படுத்தவும் மதுவத்துக்கு நைதரசன் வழங்கியாகவும் 16% - 25% அமோனியா கரைசல் பயன்படுத்தப்படுகின்றது. + +இதன் பல்வேறு வகையான பயன்பாடு காரணமாக (முக்கியமாக விவசாயத்தில் உர உற்பத்தியால்) அமோனியா உலகில் அதிகளவு உற்பத்தி செய்யப்படும் அசேதனச் சேர்மங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. மனிதன் பயன்படுத்தும் செயற்கை ஆற்றலில் 1% அமோனியா உற்பத்திக்குச் செலவாதல் இதன் உற்பத்தியின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்றது. 2012ஆம் ஆண்டில் 198 மில்லியன் தொன்கள் உற்பத்தி செய்யப்பட்டதுடன் 2019ஆம் ஆண்டளவில் இன்னும் 35 மில்லியன் தொன்களால் இது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவில் 28.6% மும், இந்தியாவில் 8.6% மும் உற்பத்தி செய்யப்படுவதுடன் இவ்வுற்பத்தியில் 80% இரசாயன உரத்துக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. + +தற்காலத்தில் ஹேபர் பொஸ்ச் முறை என்ற முறையே அமோனியா உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகின்றது. மக்னறைட் அல்லது இரும்பு ஊக்கியின் மேல் அல்லது 10,000 kPa அமுக்கத்தில் 450 °C வெப்பநிலையில் ஐதரசன் வாயுவையும் நைதரசன் வாயுவையும் தாக்கமடையச் செய்வதால் அமோனியா உற்பத்தி நடைபெறுகின்றது. + + + + +சட்டத் தமிழ் + +சட்டத்துறைத் தமிழ் கலைச்சொற்களை, அத் துறையில் தமிழின் பயன்பாட்டை, பயன்பாட்டு முறைமைகளை சட்டத் தமிழ் எனலாம். "நீதியை நாடிச் சொல்லும் போது, வழக்கினைப் பதிவு செய்வதும், வழக்குரைஞர்கள் வாதிடுவதும், நீதிமன்ற நடுவர் தமது தீர்ப்பை வழக்குதல் மக்கள் மொழியில் இருத்தல் வேண்டும் அதுவே மக்களாட்சி நடைபெறுவற்குச் சான்றாக அமையும்." என்ற மு. முத்துவேலுவின் கருத்துக்கு ஏற்ப ஒரு மக்கள் குழுவுக்கு அது ஒழுங்க வேண்டிய சட்டங்கள் அவர்களுக்கு புரியக்கூடிய மொழியில் இருப்பது அவசியமானது என்ற நோக்கில் சட்டத் தமிழ் முக்கியம் பெறுகிறது. + +தமிழ்நாட்டில் மணவை முஸ்தபா போன்ற தமிழ் அறிஞர்கள் சட்ட நடைமுறைகளில் அனைத்து மட்டங்களிலும் சட்டத்தமிழை ஏதுவாக்க முயற்சி செய்கின்றார்கள். இலங்கையில் காவல்துறையிலும், சட்டத்துறையிலும் தமிழ்ப் பயன்பாடு தற்போது மிக அரிது. + + + + + + +1966 + +1966 (MCMLXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். + + + + + + + + + +போத்துக்கீசர் + +போத்துக்கீசர் (இலங்கை வழக்கு: போர்த்துக்கேயர்) என்னும் சொல் போர்த்துக்கல் நாட்டைத் தாய்நாடாகக் கொண்டவர்களையும் போத்துக்கீச மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்களையும் குறிக்கும். இவர்களில் பெரும்பாலோர் ரோமன் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுபவர்களாவர். + +போத்துக்கீசர் தெற்கு ஐரோப்பிய மக்களாவர். இவர்கள் ரோமருக்கு முற்பட்ட கெல்ட்டிக் மற்றும் ஐபீரிய இனக்குழுக்களின் கலப்பினால் உருவானவர்கள். உரோம பண்பாட்டின் செல்வாக்கு பெருமளவுக்கு போத்துக்கீசப் பண்பாட்டில் காணப்படுகின்றது. இதுதவிர, கிரேக்கர், போனீசியர், கார்த்தஜீனியர் போன்றோரின் செல்வாக்கும் சிறிய அளவில் இவர்களிடம் காணப்படுகின்றது. போத்துக்கீச மொழி இலத்தீனிலிருந்து உருவானது. + +இவர்கள் மத்தியில் கறுப்பு நிற முடியும், பழுப்பு நிறக் கண்களுமே பெரும்பாலும் காணப்படுகின்றன. ஆனாலும், பொன்னிற முடியும், நீல/பச்சைக் கண்கள் உடையவர்களும் உள்ளார்கள். + +போர்த்துக்கல் நாட்டில் ஏறத்தாழ ஒரு கோடி போத்துக்கீசர் உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டிலும் நடைபெற்ற பெரும் புலப்பெயர்வுகள் காரணமாக, சுமார் 3.5 கோடி பிரேசிலியர் போத்துக்கீசப் பின்புலத்தை உடையவர்களாகக் காணப்படுகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் தொடங்கி உலகளாவிய அளவில், இந்தியா, இலங்கை, இந்தோனீசியா, இலத்தீன் அமெரிக்க நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் போன்றவற்றுக்கு ஏற்பட்ட போத்துக்கீசப் புலப்பெயர்வினால், இன்று உலகம் முழுவதிலும் 10 கோடிக்கு மேற்பட்ட போத்துக்கீச இரத்தத் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்படுகின்றது. போத்துக்கீசரின் வழி வந்தவர்கள் இன்றும், இந்த நாடுகளில் சிறுபான்மையினராகக் காணப்படுகின்றார்கள். + + + + +பொசுனியா (பிரதேசம்) + +பொசுனியா என்பது வரலாற்றுப்படியும் புவியியல்படியாகவும் நன்கு அறியப்பட்ட இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது வடக்கு பிரதேசமாகும். இது பிரதானமாக அல்ப்சு மலைச்சார்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது. சாவா, டிரினா என்ற இரு நதிகள் இதன் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளை அமைக்கிறது. இதன் தெற்கு எல்லையாக எர்செகோவினா பிரதேசம் காணப்படுகிறது. + +பொசுனியா சுமார் 41,000 ச.கி.மீ. அளவுடையதாகும் மேலும் இது இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது பரப்பளவின் 80%த்தை பிடிக்க்க��றது. எர்செகோவினாவுக்கும் பொசுனியாவுக்குமிடையில் எல்லை ஒன்று கிடையாது. + +இவ்விரு பிரதேசங்களும்(பொசுனியாவும் எர்செகோவினாவும்) கூட்டாக பொசுனியா என அழைக்கப்பட்டு வந்துள்ளன. + +பொச்சுனியா மத்திய காலத்தில் காணப்பட்ட 6 சேர்பிய மாகாணங்களில் ஒன்றாகும். அது பல அரசுகளின் ஆட்சியின் கீழ் காணப்பட்டது. 12 வது நூற்றாண்டிலிருந்து குயிலின் என்ற இனத்தவர்கள் இங்கு ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கினாகள். 1360களில் பொசுனிய இராச்சியம் இன்றைய எர்செகோவினா பிரதேசத்தையும் உள்ளடக்கி காணப்பட்டது. 1463–1878 காலத்தில் ஒட்டோமான் பேரரசின் கீழ் இது காணப்பட்டது. 1853 இல் ஆப்போதைய அரசிய மாற்றங்கள் காரணமாக இப்பிரதேசம் "பொசுனியாவும் எர்செகோவினாவும்" என்ற பெயரை பெற்றது. + + + + +பொசுனியா + +பொசுனியா அல்லது பொஸ்னியா பின்வருவனவற்றைக் குறிக்கலாம்: + + + + + + +கௌரிமனோகரி + +கௌரிமனோகரி கருநாடக இசையின் 23வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூரண மேள பத்ததியில் இந்த இராகத்திற்கு கௌரீ வேளாவளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. + + + + +கௌரிமனோகரியின் ஜன்ய இராகங்கள்: + + + + + + + +சாருகேசி + +சாருகேசி கருநாடக இசையின் 26வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் இந்த இராகத்தின் பெயர் தரங்கிணி. + + + + +சாருகேசியின் ஜன்ய இராகங்கள் இவை. + + +சாருகேசி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: + + + + + +சரசாங்கி + +சரசாங்கி என்பது கருநாடக இசையில் 27வது மேளகர்த்தா இராகம். அசம்பூர்ண மேள பத்ததியில் சௌரசேனா என்று பெயர். + + + + +சரசாங்கியின் ஜன்ய இராகங்கள் இவை. + + +சரசாங்கி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: + + + + + +அரிக்காம்போதி + +அரிக்காம்போதி அல்லது ஹரிகாம்போஜி கருநாடக இசை முறையில் 28வது மேளகர்த்தா அல்லது பிறப்பு (ஜனக) இராகமாகும். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம். அசம்பூர்ண (எழுநிறைவற்ற) மேள பத்ததியில் இவ்விராகத்திற்கு அரிக்கேதாரகௌள என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் இதற்கு "கமஜ் தாட்" என்பது பெயர். + + + + +ஹரிகாம்போதியின் ஜன்ய இராகங்கள் இவை. + + + +ஹரிகாம்போஜி இராகத்த��ல் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: + + + + +செப்டம்பர் 12 + + + + + + + +கினி + +கினி அல்லது கினி குடியரசு என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இது கினி-பிசாவு, செனகல் என்பற்றை வடக்கிலும், மாலியை வடகிழக்கிலும், ஐவரி கோஸ்ட்டை தென் கிழக்கிலும் லிபியாவை தெற்கிலும், சியெரா லியானை மேற்கிலும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. மேற்கில் அத்லாந்திக் சமுத்திரத்தை நோக்கியவாறு உள்ளது. இது நைஜர் நதி, செனகல் நதி, கம்பியா நதி என்பவற்றின் ஊற்றுப்பிரதேசங்களை கொண்டுள்ளது. இது ஒரு முன்னாள் பிரெஞ்சுக் குடியேற்ற நாடாகும். விடுதலைக்கு முன்னர் இது பிரெஞ்சு கினி என்று அழைக்கப்பட்டது. முன்னர் கினி என்பது சகாராவுக்கு தெற்கேயுள்ள ஆபிரிக்க மேற்குக் கரைக்கு வழங்கப்பட்ட பெயராகும். இது பெர்பிய மொழியில் "கருப்பர்களின் நிலம்" என்ற பொருள் கொண்ட பதத்தில் இருந்து வருவதாகும். 10.5 மில்லியமன் மக்கள் தொகை கொண்ட நாடான கினி 245,860 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவு கொண்டுள்ளது + + + + +கிழங்குகளின் பட்டியல் + + + + + +கீரைகளின் பட்டியல் + +கீரைகளின் பட்டியல். + + + + + + + +சுவைப்பொருட்களின் (பலசரக்குகளின்) பட்டியல் + + + + + + + + + + + + + + + + +நோய்கள் பட்டியல் + +ஆல்சைமர் நோய் + + + + + + + + + + + + + + + + + + +பரிதிமாற் கலைஞர் + +பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் (சூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும் இயற்றிவர். + +இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் "சூரியநாராயணன்" என்பது. பின்னாளில் "சூரியநாராயண சாஸ்திரியர்" என்று அழைக்கப்பட்ட இவர், தமிழ் மேல் கொண்ட ��ற்றினால் தனது பெயரை வடமொழி கலக்காத தூய தமிழில் "பரிதிமாற் கலைஞர்" என்று மாற்றிக்கொண்டார். + +மதுரை அருகே விளாச்சேரி ஊராட்சி எனும் ஊரில் கோவிந்த சிவன், லட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு மகனாக இவர் பிறந்தார்.வடமொழியை தந்தையாரிடமும் ,தமிழை மதுரை சபாபதி முதலியாரிடமும் கற்றார் . இளவயது முதலே தமிழ் மொழியின் மீதும், இலக்கணத்தின் மீதும், இலக்கியத்தின் மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வர் பின்னாளில் இளங்கலை பட்டப்படிப்பில் தமிழ்மொழியிலும், மெய்யியலிலும் மாநிலத்திலேயே முதலாவதாகத் தேறினார். "தமிழ்மொழியின் வரலாறு" மற்றும் "நாடகவியல்" (நாடகங்களுக்கான இலக்கணம்) உட்பட பல நூல்களை எழுதினார்.கலாவதி (1898),ரூபாவதி என்ற நாடக நூல்களை எழுதி தாமே கலாவதி,ரூபாவதி எனும் பெண் பாத்திரங்களில் நடித்தார் . இராவ் பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் "திராவிட சாஸ்திரி " என சிறப்பிக்கப்பட்டார் .தனக்கு தமிழ் கற்பித்த ஆசிரியர் சபாபதி முதலியாரிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார் . +அவர் 1898 ல் மறைந்தபோது, +என்று பாடி வருந்தினார் + +இது தவிர வடமொழியற்ற நல்ல தமிழ்மொழி வேண்டும் என்பதில் பெரும் முனைப்பு காட்டினார். + +தமிழக அரசு இவரது மரபுரிமையாளர் 19 பேருக்கு ரூபாய் 15 லட்சம் பரிவுத் தொகையாக அளித்து இவரது பதின்மூன்று நூல்களும் 2006 டிசம்பர் 2 அன்று தமிழக அரசால் அரசுடமையாக்கப்பட்டன. + +பரிதிமாற் கலைஞர் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் குறிப்பிடத்தக்க நூல்கள் பின்வருமாறு: + + +நவம்பர் 2, 1903ல் பரிதிமாற் கலைஞர் மறைந்தார். 33 ஆண்டுகளே வாழ்ந்து இவர் மறைந்தபோது இவரது பேராசிரியர் மில்லர் (ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர்) பின்வருமாறு புலம்பி அழுதுள்ளது அவரது ஆளுமைக்குச் சான்றாகும்: + 19 ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கியம் --மயிலை சீனி வேங்கடசாமி + + + + + +சுர்சித் சிங் பர்னாலா + +சுர்சித் சிங் பர்னாலா ("Surjit Singh Barnala", 21 அக்டோபர் 1925 - 14 சனவரி 2017 ) இந்திய அரசியல்வாதி ஆவார். தமிழ்நாடு மாநில ஆளுநராக நவம்பர் 3, 2004 முதல் ஏழு ஆண்டுகள் பணியாற்றியவர். + +சுர்சித் சிங், ஹரியானா மாநிலத்திலுள்ள அடேலி பேக்பூரில் பிறந்தார். பள்ளிப் படிப்பை நாபாவில் முடித்தவுடன் உயர் கல்வி கற்க லக்னோ சென்று லக்னோ பல்கலைக்கழகத்தில் 1946 ஆம் ஆண்டு சட்டம் பயின்று தேறினார். அவர் 1942 ஆம் ஆண்டு லக்னோவில் இருந்தபோது "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் கலந்து கொண்டார். 1967 ம் ஆண்டு பர்னாலாவில் மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றினார். அதே ஆண்டு பர்னாலா தொகுதியிலிருந்து சட்டமன்றப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். + +இந்தத் தொகுதி உறுப்பினராக 1999 ஆம் ஆண்டு வரை இருந்தார். 1969 ஆம் ஆண்டு பஞ்சாப் மாநில கல்வி அமைச்சரானார். அமிர்தசரஸிலிருக்கும் குரு நானக் தேவ் பல்கலைக்கழகம் அமைந்ததில் இவருடைய சேவை குறிப்பிடத்தக்கது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராகி மொரார்ஜி தேசாய் தலைமையில் விவசாயம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். 1985 ஆம் ஆண்டு சிரோமணி அகாலி தள் கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு பஞ்சாப் மாநில முதல்வரானார்.பஞ்சாப் மாநிலத்தில் மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் முதலமைச்சர் பதவி வகித்தவர் பர்னாலா (29.9.1985 - 11.6.1987). பொற்கோவிலில் நடந்த ‘நீல நட்சத்திர நடவடிக்கை’ என்ற ராணுவத் தாக்குதலால் சீக்கியர்கள் மன நிம்மதி இழந்திருந்த நாட்கள் அவை. தங்களின் முக்கிய கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற பஞ்சாபியர்களின் கோபமும் வருத்தமும் மேலும் அதனுடன் சேர்ந்துகொண்டது. மிகவும் கொந்தளிப்பான காலகட்டம் என்றால் அது மிகையில்லை. + +சிரோமணி அகாலி தளம் கட்சியில் குருசரண் சிங் டோரா, பிரகாஷ் சிங் பாதல் ஆகியோருடன் மூன்றாவது பெரும் தலைவராகக் கருதப்பட்டவர் சுர்ஜித் சிங். + +1975-ல் நெருக்கடி நிலை காலத்தில் கைதுசெய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். 11 மாதங்கள் தனிமைச் சிறையில் இருந்தார். நெருக்கடி நிலை விலக்கப்பட்டு, 1977-ல் மக்களவைக்கு நடந்த பொதுத் தேர்தலில் சாங்ரூர் தொகுதியில் வெற்றி பெற்று, பிரதமர் மொரார்ஜி தேசாய் தலை மையிலான அரசில் வேளாண் அமைச்ச ராகப் பதவி வகித்தார். 1978-ல் வங்க தேசத்துடன் கங்கை நதி நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான வரலாற்றுப் புகழ் மிக்க ‘ஃபராக்கா’ ஒப்பந்தத்தில் இந்தியா சார்பில் அவர்தான் கையெழுத்திட்டார். + +1990 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு ஆளுநராக நியமிக்கப்பட்டார். + +அரசியல் உள்நோக்கத்தோடு கருணாநிதி தலைமையிலான திமுக அரசைக் கலைக்க, ‘உரிய வகையில் அறிக்கை தருமாறு’ பிரதமர் சந்திரசேகர் கோரியபோது, அதை ஏற்க முடியாதென்று உறுதியாக மறுத்தவர் பர்னாலா. கண்���ியத்துக்கு உரிய பர்னாலாவைப் பதவி விலகுமாறு கேட்க முடியாமல், உடனடியாக அவரை பிஹார் மாநில ஆளுநராக இடம்மாற்றினார் சந்திரசேகர். போதும் இந்த அரசியல் அசிங்கம் என்று பதவியைத் துறந்தார் பர்னாலா. மக்களவை உறுப்பினராக 1996 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு வேதிப்பொருட்கள், உரம் மற்றும் உணவுத்துறை அமைச்சரானார். + +இந்திய நாட்டுப் பிரதிநிதியாக ஐக்கிய நாடுகள் அவை போன்ற அனைத்துலக நிறுவனங்களில் இடம் பெற்றிருந்தார். இவர் இயற்கையை ரசித்தல், ஓவியம் வரைதல், புத்தகம் படித்தல், எழுதுதல் மற்றும் பயணம் மேற்கொள்ளுதல் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர். 1988 ஆம் ஆண்டு இவருடைய ஓவியங்கள் பாட்டியாலா பல்கலைக்கழக கலைக்கூடத்தில் கண்காட்சியாக்கப்பட்டது. + +தமிழ் நாடு அரசு ஆளுநராக 03. 11. 2004 அன்று முதல் ஆகத்து 31 வரை ஏழாண்டுகள் பதவி வகித்தார். ஒடிசாவின் ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வகித்தார். ஒன்றியப் பகுதிகளான புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகளின் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தார்தமிழ்நாடு, ஆந்திரம், உத்தராகண்ட் ஆகிய மாநிலங்களில் ஆளுநராகவும் அந்தமான் - நிகோபர் தீவுகளில் துணை நிலை ஆளுநராகவும் பதவி வகித்தவர். நாட்டில் கித்வாய்க்குப் பிறகு, அதிக ஆண்டுகள் ஆளுநராக இருந்தவர்.. + +சண்டிகரிலுள்ள அரசு மருத்துவமனையில் இவர் உயிர் பிரிந்தது. + + + + + +சனவரி 31 + + +1944 – நீலன் திருச்செல்வம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 1999) + + + + + +மாமிசக்கறிகளின் பட்டியல் + + +இவை தவிர காட்டு எருமை, ஆமை, நரி, ஓநாய், ஒட்டகம் ஆகியவை மாமிசமாக பயன்படுகின்றன + +மட்டி Can be translaed as Oyster + +கணவாய் மீன் Can be translated Scallop + +கொக்கு நாரை ஆகிய பறவைகளும் இறைச்சியாக பயன்படுகின்றன. + + + + +தவளைக்கால் இறைச்சி + +தவளைக்கால் இறைச்சி (Frog legs) என்பது பிரெஞ்சு, சீன, வியட்நாம் சமையலில் விரும்பப்படும் இறைச்சியாகும். இந்த இறைச்சி பிற நாடுகளில் அதிகம் உண்ணப்படாவிட்டாலும், இதன் சுவை பலராலும் உண்ணப்படும் கோழி இறைச்சி போன்று இருக்கும். பெரும்பாலும், பின்காலின் மேற்பகுதியே சமையலுக்கு பயன்படுகின்றது. + + + + +கங்காரு இறை���்சி + +கங்காரு இறைச்சி என்பது ஆஸ்திரேலியாவில் வாழும் கங்காரு மிருகத்திடம் இருந்து பெறப்படும் இறைச்சி ஆகும். இது பெரும்பாலும் காட்டில் வாழும் கங்காருவை வேட்டையாடிப் பெறப்பட்ட இறைச்சியேயாகும். இதை ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் தம் உணவாக நெடுங்காலமாக உட்கொண்டு வருகின்றனர். இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு உள்ளது. முதலில் அவுஸ்திரேலியா காட்டில் வேட்டையாடி ஏற்றுமதி செய்தது, 2010ஆம் ஆண்டில் 55 நாடுகள் ஏற்றுமதி செய்துள்ளனர். + + + + +பழங்களின் பட்டியல் + + + + + + + + + + + + + + + + + + + + + +குழி முயல் + +குழி முயல் உலகின் பல பகுதிகளிலும் காணப்படும் ஒரு பாலூட்டி விலங்காகும். குடும்பமாக வாழும் இவை தாவர உண்ணிகளாகும். இவை நான்கு முதல் பத்து ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இறைச்சிக்காகப் பண்ணைகளிலும் செல்ல விலங்காக வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் காதுகள் இவற்றை குளிர்மையாக வைத்திருக்க உதவுகின்றன. + +ஆண் முயலினை "பக்" ( buck) என்றும் பெண் முயலினை "டோய்" ( Doe ) என்றும் அங்கிலத்தில் குறிப்பிடுவர். + +முயல்கள் சமவெளி காடுகள் சதுப்பு நிலங்கள் புல்வெளிகள் மற்றும் பாலை நிலங்களில் வாழும் விலஙகினமாகும். முயல்கள் கூட்டமாக வாழ்பவை. வட அமெரிக்கவில் முயல்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றன. முயல்கள் ஐரோப்பிய தென்மேற்கு ஆசியா சுமத்ர ஆப்ரிக்கா தென்அமெரிக்க மற்றும் ஜப்பானின் சில தீவுகளை பிறப்பிடமாக கொண்டுள்ளன. முயல்கள் மிக வேகமாக இனப்பெருக்கம் செய்பவை என்பதால் இவை பல நாடுகளில் வேளாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளன. முயல்களின் ஒருநாள் சராசரி உறங்கும் நேரம் 8.5 மணிநேரம். + + + + +ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டுவரிசை) + +2016 |2015 |2014 |2013 | 2012 | 2011 | 2010
+2009 | 2008 | 2007 | 2006 | 2005 | 2004 | 2003 | 2002 | 2001 | 2000
+1999 | 1998 | 1997 | 1996 | 1995 | 1994 | 1993 | 1992 | 1991 | 1990
+1989 | 1988 | 1987 | 1986 | 1985 | 1984 | 1983 | 1982 | 1981 | 1980
+1979 | 1978 | 1977 | 1976 | 1975 | 1974 | 1973 | 1972 | 1971 | 1970
+1969 | 1968 | 1967 | 1966 | 1965 | 1964 | 1963 | 1962 | 1961 | 1960
+1959 | 1958 | 1957 | 1956 | 1955 | 1954 | 1953 | 1952 | 1951 | 1950
+1949 | 1948 | 1947 | 1946 | 1945 | 1944 | 1943 | 1942 | 1941 | 1940
+1939 | 1938 | 1937 | 1936 | 1935 | 1934 | 1933 | 1932 | 1931 | 1930
+1929 | 1928 | 1927 | 1926 | 1925 | 1924 | 1923 | 1922 | 1921 | 1920
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
+ +அடிப்படை இசைக் கலைச்சொற்களின் பட்டியல் + + + + + +நாதம் + +நாதம் என்பது இசைக்கு மிக முக்கியமானது என்பதுடன் இசைக்கு ஆதாரமானதும் ஆகும். காதிற்கு இனிமையைத் தரும் த்வனி, நாதம் என்று அழைக்கப்படும். நாதத்தினிலிருந்து சுருதிகளும், சுருதிகளிலிருந்து ஸ்வரங்களும், ஸ்வரங்களிலிருந்து இராகங்களும் உற்பத்தியாகின்றன. + +நாதம் இரு வகைப்படும். + +மனிதனுடைய முயற்சியால் உற்பத்தியாக்கப்படும் நாதம் ஆகத நாதம் ஆகும். நாம் கேட்கும் சங்கீதம், பாடும் சங்கீதம், வாத்தியங்களில் வாசிக்கப்படும் சங்கீதம் முதலியவைகள் எல்லாம் ஆகத நாதத்தைச் சேர்ந்தவையாகும். + +மேலும் இந்நாதம் மூன்று வகைகளாகப் பிரிக்கப்படும், + +அதாவது உயிருள்ள தேகத்திலிருந்து உற்பத்தியாகும் நாதம். உ+ம் : வாய்ப்பாட்டு + +அதாவது வஸ்துகளாகிய வீணை போன்ற தந்தி வாத்தியங்களினின்று உற்பத்தியாகும் நாதம். + +அதாவது உயிருள்ள பிராணிகளின் ஸஹாயத்தைக் கொண்டு மூங்கிலைப் போன்ற வஸ்துக்களில் உற்பத்தியாக்கப்படும் நாதம். கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்ட குழல், நாதசுவரம் போன்ற கருவிகளினின்று உண்டாக்கப்படும் நாதம் இதற்கு உதாரணமாகும் + +மனிதனுடைய முயற்சியின்றி இயற்கையிலேயே கேட்கப்படும் நாதம். இது யோகிகளாலும், சித்தர்களாலும் மட்டும் அறியக்கூடியது. தியாகராஜ சுவாமிகள் ஒரு சிறந்த நாத யோகியாக கருதப்படுகிறார். அனாகத நாதத்தை உணர்ந்து தனது அனுபவங்களை "ஸ்வர ராக ஸூதாரஸ" போன்ற கிருதிகளில் வெளியிட்டிருக்கின்றார். + + + + +வாகதீச்வரி + +வாகதீச்வரி கருநாடக இசையின் 34 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண மேள பத்ததியில் 34 வது இராகத்திற்கு போகாச்சாயாநாட என்று பெயர். + + + +வாகதீச்வரியின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +சுபபந்துவராளி + +சுபபந்துவராளி இராகம் கருநாடக இசையின் 45 வது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு சிவபந்துவராளி என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்துஸ்தானி இசையில் "தோடி தாட்" என்று பெயர். + + + + +சுபபந்துவராளியின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +பவப்பிரியா + +பவப்பிரியா கருநாடக இசையின் 44 வது மேளகர்த்தா இராகமாகும். இந்த மேளத்தின் ஜன்யமான பவானி என்ற இராகம், அசம்பூர்ண மேள பத்ததியில் 44 வது மேளமாகக் கையாளப்படுகிறது. + + + + +பவப்பிரியாவின் ஜன்ய இராகங்கள் இவை. + + + + + +காமவர்த்தனி + +காமவர்த்தனி கருநாடக இசையின் 51 வது மேளகர்த்தா இராகம். இவ்விராகமே பந்துவராளி என்றும் அழைக்கப்படுகின்றது. அசம்பூர்ன மேள பத்ததியில் காசிராமக்கிரியா என்றழைக்கப்பட்டது. இந்துஸ்தானி இசையில் "பூர்வி தாட்" என்று பெயர். + + + + +காமவர்த்தனியின் ஜன்ய இராகங்கள் இவை. + + +காமவர்த்தனி இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்: + + + + +ஏறுவரிசை, இறங்குவரிசை + +ஏறுவரிசை (ஆரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் சுருதியில் முறையே உயர்ந்து கொண்டு போகும் சுரங்களையுடைய ஒரு தொடராகும். இதனை ஆரோஹி, ஏற்றம், ஆரோசை, ஏறுவரிசை, ஆர்முடுகல், ஏறுநிரை அல்லது ஏறுநிரல் என்றும் சொல்வதுண்டு. + +உதாரணம்: ஸ ரி க ம ப த நி ஸ் + +இறங்குவரிசை (அவரோகணம்) என்பது சப்தஸ்வரங்கள் (ஏழுசுரங்கள்) சுருதியில் முறையே குறைந்து கொண்டு போகும் சுரங்களை உடைய ஒரு தொடராகும். இதனை இறக்கம், அவரோஹி, அமரோசை, அமர்முடுகல், இறங்குநிரை அல்லது இறங்குநிரல் என்றும் சொல்வதுண்டு. + +உதாரணம்: ஸ் நி த ப ம க ரி ஸ + + + + +செருமேனியம் + +செருமேனியம் "(Germanium)" என்பது Ge என்ற குறியீடு கொண்ட ஒரு தனிமம் ஆகும். இதனுடைய அணு எண் 32 மற்றும் அணு நிறை 72.64 ஆகும்.கார்பன் குழுவில் இடம்பெற்றுள்ள இத்தனிமம் பளபளப்பும் கடினத்தன்மையும் கொண்டது ஆகும். சாம்பல்-வெள்ளை நிறத்தில் ஒரு உலோகப் போலியாக இது காணப்படுகிறது. வேதியல் முறைப்படி இதனை அடுத்துள்ள வெள்ளீயம், சிலிக்கன் ஆகிய தனிமங்களின் பண்புகளை செருமேனியத்தின் பண்புகளும் ஒத்துள்ளது. தூய செருமேனியம் சிலிக்கனைப் போல ஒரு குறைக்கடத்தியாகும். தோற்றத்தில் செருமேனியமும் தனிமநிலை சிலிக்கானைப் போலவே காணப்படுகிறது. அதைப்போலவே செருமேனியமும் இயல்பாகவே செயல்பட்டு இயற்கையில் ஆக்சிசன் கொண்ட அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. + +எப்போதாவது அரிதாக செருமேனியம் அதிக அடர்த்தியுடன் இயற்கையில் தோன்றுக���றது என்பதால் வேதியியல் வரலாற்றில் செருமேனியம் மிகத் தாமதமாகவே கண்டறியப்பட்டுள்ளது எனலாம். புவியின் மேலோட்டில் அதிகமாகக் கிடைக்கும் தனிமங்களின் பட்டியலில் செருமேனியம் 15 ஆவது இடத்தில் இருப்பதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. 1869 ஆம் ஆண்டு திமித்ரி மெண்டலீப் என்பவர் இப்படியொரு தனிமம் புவியில் இருக்கலாம் என முன்கணித்தார். தனிம வரிசை அட்டவணையில் இத்தனிமத்தின் இடத்தையும் ஊகித்த இவர் அதன் அடிப்படையில் சில பண்புகளையும் முன்கணித்தார். எகாசிலிக்கான் என அத்தனிமத்திற்கு ஒரு பெயரையும் சூட்டினார். கிட்டதட்ட இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் 1886 ஆம் ஆண்டு கிளமென்சு விங்களர் என்பவர் வெள்ளி மற்றும் கந்தகம் போன்ற தனிமங்களுடன் சேர்த்து ஒரு புதியதாக ஒரு தனிமத்தைக் கண்டுபிடித்தார். ஆர்கைரோடைட்டு என்ற கனிமத்தில் இத்தனிமங்கள் கிடைத்தன. இப்புதிய தனிமம் பார்ப்பதற்கு தோற்றத்தில் ஆண்டிமனி மற்றும் ஆர்சனிக் போன்ற தனிமங்களைப் போல காணப்பட்டது. செருமேனியம் பிற சேர்மங்களுடன் இணையும் விகிதங்கள் மெண்டலீப் கணித்தபடி சிலிக்கானின் சேர்க்கை விகிதங்கள் காணப்பட்டன. விங்களர் தன்னுடைய நாட்டின் பெயரான செருமனி என்பதைக் குறிக்கும் வகையில் இப்புதிய தனிமத்திற்கு செருமேனியம் என்ற பெயரை வைத்தார். இப்போது துத்தநாகத்தின் முக்கிய தாதுவான இசுபேலரைட்டு என்ற தாது செருமேனியம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. வர்த்தக ரீதியாக ஈயம், வெள்ளி, செப்பு உள்ளிட்ட தாதுக்களிலிருந்தும் செருமேனியம் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். + +தனித்துப் பிரிக்கப்பட்ட செருமேனியம் டிரான்சிசுட்டர் போன்ற பல்வேறு மின்வரலாஇன்னணு சாதனங்களில் ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. வரலாற்றில் முதல் தலைமுறை மின்னணுவியல் முழுக்க முழுக்க செருமேனியத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருந்தது. இன்று குறைக்கடத்தி மின்னணுவியல் துறைக்காகத் தயாரிக்கப்படும் செருமேனியத்தின் அளவானது, இதே காரணத்திற்காகத் தயாரிக்கப்படும் மீத்தூய சிலிக்கானில் ஐம்பதில் ஒரு பங்காகும். தற்காலத்தில் செருமேனியம் இழை ஒளியியல், அகச்சிவப்பு ஒளியியல், ஒளி உமிழும் இருமுனையங்கள் போன்ற கருவிகளில் பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. செருமேனியத்தின் சேர்மங்கள் பலபடியாதல் வினையூக்கிகளிலும் கூட பயன்படுத்தப்படுகின்றன. மிகச் சமீபத்திய கண்டுபிடிப்பின்படி இவை நானோகம்பிகள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. +செருமேனியம் அதிக எண்ணிக்கையில் டெட்ராயெத்தில்செருமேனியம் போன்ற கரிமவுலோக சேர்மங்களாக உருவாகின்றது. இவை கரிமவுலோக வேதியியலில் ஏராளமான பயன்களைக் கொடுக்கின்றது. +வாழும் உயிரினங்களுக்கு செருமேனியம் ஓர் அத்தியாவசியமானத் தேவையாக கருதப்படவில்லை. சில கரிம செருமேனியம் அணைவுச் சேர்மங்கள் மருந்தாகப் பயன்படலாம் என்ற நோக்கில் ஆராயப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை எதுவும் வெற்றிகரமான முடிவுகளைத் தரவில்லை. சிலிக்கான் மற்றும் அலுமினியம் போல இயற்கை செருமேனியம் சேர்மங்கள் தண்ணீரில் கரையாமல் உள்ளன. இதனால் வாய்வழியாகச் செல்லும் போது இவை சிறிது நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகின்றன. எனினும் கரையும் செருமேனிய உப்புகள் செயற்கையாகத் தயாரிக்கப்படுகின்றன. இவை சிறுநீரக நச்சாகக் கருதப்படுகின்றன. இதேபோல ஆலசன் மற்றும் ஐதரசனுடன் வினைபுரியக்கூடிய வினைத்திறன் மிக்க செயற்கை முறையில் தயாரிக்கப்படும் செருமேனியம் சேர்மங்கள் நஞ்சுகளாகவும், அரிப்புத்தன்மையுடனும் காணப்படுகின்றன. + +1869 ஆம் ஆண்டு உருசிய வேதியியலாளர் திமித்ரி இவானோவிச்சு மெண்டலீப் தனிமவரிசை அட்டவனையின் போக்குகளின் படி கணக்கிட்டு மேலும் சில தனிமங்கள் இந்த அட்டவனையில் இடம்பெறும் என ஊகித்துக் கூறினார். அவற்றில் ஒன்று கார்பன் குடும்பத்தில் சிலிக்கனுக்கும் வெள்ளீயத்திற்கும் இடையில் ஒரு தனிமம் இடம்பெற வேண்டியுள்ளது என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் . எகாசிலிக்கான் என்று இதற்குப் பெயரிட்ட மெண்டலீப் அதனுடைய அணு எடை 72.0 வாக இருக்கும் என்றும் அறுதியிட்டுக் கூறினார். + +திட்ட நிலைகளின் கீழ் செருமேனியம் நொறுங்கக்கூடிய, வெள்ளியின் வெண்மை நிறமுடைய, பகுதியளவு உலோகத்தன்மை கொண்ட தனிமம் ஆகும். +120 பார்களுக்கு மேலான அழுத்தத்தில், இது β-வெள்ளீயத்தின் அமைப்பினையொத்த "β-செருமேனியம்" என்ற புறவேற்றுமை வடிவமாக மாறுகிறது. சிலிக்கான், காலியம், பிஸ்மத், ஆண்டிமணி, மற்றும் நீர் போன்று செருமேனியம் திண்மமாக்கலின் (உறைய வைத்தலின் போது) போது விரிவடையும் பண்பைக் கொண்டுள்ளது.���ெருமேனியம் ஒரு குறைக்கடத்தி ஆகும். வெப்பத்தால் உருக்கி துாய்மைப்படுத்தும் நுட்பங்கள், குறைக்கடத்திகளாகப் பயன்படும், 10 இல் ஒரு பகுதியளவே மாசுகளைக் கொண்ட படிக செருமேனியத்தைத் தயாரிக்க உதவின. இந்த சுத்திகரிப்பு எப்பொழுதும் கிடைக்கப்பெறாத துாய்மையான பொருட்களில் ஒன்றாக செருமேனியத்தை ஆக்குகிறது. +2005 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட யுரேனியம், ரோடியம், செருமேனியம் ஆகியவற்றாலான உலோகக் கலவையானது மிகத்தீவிர வலிமையான உலோகப் பொருள் மீக்கடத்தியாக செயல்பட்டது. + +தனிம செருமேனியம், 250 °செல்சியசு வெப்பநிலையில், மெதுவாக ஆக்சிசனேற்றம் அடைந்து செருமேனியம் டை ஆக்சைடாக (GeO) மாறுகிறது. செருமேனியமானது, நீர்த்த அமிலங்கள் மற்றும் ஆல்கலிகளில் கரையும் தன்மையற்றது. ஆனால், சூடான அடர் கந்தக அமிலம் மற்றும் நைட்ரிக் அமிலங்களில் மெதுவாகக் கரைந்தும் மற்றும் உருகிய ஆல்கலிகளோடு தீவிரமாக வினைபுரிந்தும் ஜெர்மானேட்டுகளைத் () தருகின்றன. செருமேனியம் பெரும்பாலும் +4ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகின்றது. இருப்பினும் +2 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படும் சேர்மங்களும் அறியப்பட்டுள்ளன. இதர ஆக்சிசனேற்ற நிலைகள்: +3 ஆக்சிசனேற்ற நிலை GeCl போன்ற சேர்மங்களிலும், மற்றும் +3 , +1 ஆகியவை ஆக்சைடுகளின் மேற்பரப்புகளில் காணப்படுகின்றன. சில நேரங்களில் -4 போன்ற எதிர் ஆக்சிசனேற்ற நிலையை செருமான்களிலும் வெளிப்படுத்துகின்றன. செருமேனியம் எதிரயனித் தொகுதிகள் Ge, Ge, Ge, [(Ge)] போன்றவை ஆல்கலி உலோகங்களைக் கொண்டுள்ள உலோகக்கலவைகள் பிரித்தெடுக்கும் போதும், எதிலீன்டையமீன் முன்னிலையில் திரவ அம்மோனியாவில் உள்ள செருமேனியத்திலிருந்து பிரித்தெடுக்கும் போதும் கிடைக்கப்பெறுகின்றன. இத்தகைய அயனிகளில் காணப்படும் தனிமத்தின் ஆக்சிசனேற்ற நிலையானது முழு எண்களாக அல்லாமல், ஓசோனைடுகளில் (O) உள்ளதைப் போன்று உள்ளன. + + + + + +செப்டம்பர் 13 + + + + + + +வீரசிங்கம் ஆனந்தசங்கரி + +வீரசிங்கம் ஆனந்தசங்கரி (பிறப்பு: சூன் 15, 1933) ஓர் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியாவார். இவர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர். தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழ் தேசிய கூட்டமைப்பில் சேரும்பொழுது எழுந்த கருத்து வேறுபாடு���ளில் இவர் கூட்டமைப்பில் இணையமறுத்து தமிழர் விடுதலை கூட்டணியிலே அரசியலை தொடர்ந்தார். ஆனாலும் அடுத்தடுத்த தேர்தல்களில் பிரகாசிக்க முடியாவிட்டாலும் 2017 ஜனவரி 10 ம் திகதி நடந்த உள்ளூராட்சி தேர்தலில் சராசரி வெற்றியை இவரது கட்சி ஈட்டியது. + +ஆனந்தசங்கரி 2006 இல் தேசியதலைவர் பிரபாகரனுக்கு எழுதிய மடல் தொடர்பில் மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் எழுந்த போதும் தலைவருக்கு ஆனந்தசங்கரி மீதிருந்த மதிப்பு குறையவில்லை. இதன் காரணமாக 2016 இல் இவர் புனர்வாழ்வளிக்கபட்ட போராளிகளை தனது கட்சியில் இணைத்துக்கொண்டார். + +ஆனந்தசங்கரி 1955 ஆம் ஆண்டில் இடதுசாரி இலங்கை சமசமாஜக் கட்சியில் சேர்ந்து கொண்டார். 1960 மார்ச் மாதத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி தேர்தல் தொகுதியில் இக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு 1,114 வாக்குகள் மட்டும் பெற்றுத் தோல்வியடைந்தார். 1960 சூலை, மற்றும் 1965 தேர்தலிலும் சமசமாஜக் கட்சியின் சார்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். 1965 ஆம் ஆண்டில் கிளிநொச்சி கரைச்சி கிராமசபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். + +1966 மே மாதத்தில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1968 ஆம் ஆண்டில் புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி நகரசபையின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970 இல் தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் இளைஞர் அணியின் தலைவரானார். 1970 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் மு. ஆலாலசுந்தரத்தை 657 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். + +1972 ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியை ஆரம்பித்து அதனை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தனர். அன்று தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆனந்தசங்கரி மட்டுமே தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொண்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் கிளிநொச்சியில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு அன்றைய இலங்கை சுதந்திரக் கட்சியின் அமைச்சர் சி. குமாரசூரியரை 11,601 வாக்குகளால் தோற்கடித்தார். இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்��த்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் வீரசிங்கம் ஆனந்தசங்கரி நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார். ஆறாம் திருத்தச் சட்டத்துக்கு அமைய சத்தியப் பிரமாணம் எடுக்க மறுத்ததை அடுத்து வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமையும் இவருக்கு மறுக்கப்பட்டது. + + + + + +தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு + +தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ("Tamil National Alliance") என்பது இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டணியாகும். இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணத் தமிழ் மக்களிடையே இக்கட்சி பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளது. இக்கூட்டமைப்பில் இலங்கையின் மிதவாதத் தமிழக் கட்சிகள், மற்றும் முன்னாள் போராளிக் குழுக்கள் அங்கம் வகிக்கின்றன. 2001 ஆம் ஆண்டில் இருந்து இக்கூட்டமைப்பு தேர்தல்களில் பங்குபற்றி வருகிறது. 2015 செப்டம்பர் முதல் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக பதவியில் உள்ளார். + +இலங்கைத் தமிழர்களுக்கு சுயாட்சியை இக்கூட்டமைப்பு ஆரம்பத்தில் வலியுறுத்தி வந்திருந்தாலும், 2010 ஆம் ஆண்டில் சுயாட்சிக் கோரிக்கையைக் கைவிட்டு, பிராந்திய தன்னாட்சி அமைப்பை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது. + +தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வாக தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை ஆதரித்து வந்தது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கி. சிவநேசன், ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இக்கொலைகளை இலங்கை அரசாங்கமே செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது. + +2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் 2001 அக்டோபர் 20 இல் நான்கு கட்சிகள் இணைந்து இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. +தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓர் அரசியல் கட்சியாக இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாமையினால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சூரியன் சின்னத்தில் 2001 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது. + +தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பின்னர் கூட்டமைப்பில் இருந்து விலகின. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சில அங்கத்தவர்கள் இரா. சம்பந்தனின் தலைமையில் கூட்டமைப்பில் தொடர்ந்து இயங்கினர். இவர்கள் முடக்கி வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தமது கட்சியாக ஏற்றனர். இக்கட்சியின் வீட்டுச் சின்னத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல்களில் போட்டியிட்டது. 2013 ஆம் ஆண்டில் வீ. ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ஆகியன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் சேர்ந்து கொண்டன. 2013 ஆம் ஆண்டில் பின்வரும் கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன: + + +2004 ஏப்ரல் 2 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 6.84% வாக்குகளைப் பெற்று, 22 இடங்களைக் கைப்பற்றியது. + +2015 ஆகத்து 17 இல் இடம்பெற்ற தேர்தல்களில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெற்றது. இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4.62% வாக்குகளைப் பெற்று, இரண்டு தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 16 இடங்களைக் கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வந்தது. முக்கிய கட்சிகளான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி (ஐமசுகூ) ஆகியன முறையே 106, 95 இடங்களைக் கைப்பற்றியிருந்தன. ஐதேக ஆட்சியமைப்பதற்குத் தேவையான அறுதிப் பெரும்பான்மை கிடைக்காததால், இரண்டு முக்கிய கட்சிகளும் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைத்தன. இதனால் 16 இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது இடத்தில் இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் 2015 செப்டம்பர் 3 இல் எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். + +ததேகூ வென்ற தேர்தல் மாவட்டங்கள் +2008 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்குபற்றவில்லை. 2013 இல் நடைபெற்ற 1வது வட மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. + +2012 கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 37 இடங்களில் 11 இடங்களைக் கைப்பற்றியது. + +2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று 1வது வட மாகாண சபையின் ஆட்சியைக் கைப்பற்றியது. + + + + + +சனவரி 30 + + + + + + + +இராகங்களும் இலட்சணங்களும் + + + + + +உருப்படி + +இசைக்கப்படுவதற்கான வடிவங்கள் உருப்படிகள் என அழைக்கப்படுகின்றன. இவை இரு வகைப்படும். + +இசைப்பயிற்சிக்கான வடிவங்களை "அப்பியாசகான உருப்படிகள்" என்று முன்னர் அழைப்பதுண்டு. இவை +ஆகியவைகளாகும். வர்ணம் என்ற இசை வடிவம் மட்டுமே இசைப்பயிற்சி, அரங்கிசை ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்தப்படுகின்றது. + +அரங்கிசை வடிவங்கள் என்றாலும் "சபாகான உருப்படிகள்" என்றாலும் ஒன்றே ஆகும். ஓர் இசைவாணர் தனது இசைப் புலமையினை காட்டி அவையில் உள்ளவர்களை மகிழ்விக்கக் கையாளும் இசை வடிவங்கள் இவை ஆகும். +முதலியன அரங்கிசை உருப்படிகள் ஆகும். + + + + +கீதம் + +கீதம் அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் மிகவும் எளிதானது. கீதங்கள் ஒரே காலத்தில் அமைந்திருக்கும். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்க வித்தியாசங்கள் கீதங்களில் இல்லை. சங்கதிகளும் கடினமான வக்ர பிரயோகங்களும் வராது சுலபமான நடையிலே அமைந்திருக்கும். கீதத்தில் அமைந்திருக்கும் பொருளற்ற அ, ஐ, ய, இய, திய்ய, வாஇய முதலிய சொற்கள் கீதாலங்கார சொற்கள் என்றும் மாத்ருகா பதங்கள் என்றும் சொல்லப்படும். சங்கீத அப்பியாச முறைகளில் அலங்காரத்திற்குப் பின்னர் கீதங்கள் கற்பிக்கப்படும். கீதங்கள் 2 வகைப்படும். + +சஞ்சாரி கீதமானது இராகத்தின் களையைத் தெளிவாக உணர்த்தும். இதன் சாகித்தியம் தெய்வத்துதியாகவும் பல புதுப்புதுக் கருத்துக்களை உணர்த்தும் சாகித்��ியங்களைக் கொண்டு அமைந்திருக்கும். சில கீதங்கள் பெரியோரைப் புகழ்வதாக அமைந்திருக்கும். இதற்கு அங்க வித்தியாசங்கள் இல்லை. இதனைச் சாமானிய கீதம் என்றும், சாதாரண கீதம் என்றும், லஷிய கீதம் என்றும் அழைப்பர். + +"கணாநாத" :மாயாமாளவகௌளை. + +"வரவீணாம்" :மோகனம். + + +இக்கீதம் தெய்யவத்அதாவது அதன் ஆரோகணம், அவரோகணம், அன்னிய ஸ்வரம், கான காலம் (பாடும் நேரம்), ரசம் போன்றவற்றைக் கொண்டிருக்கும். துதியாக இல்லாது எந்த இராகத்தில் இயற்றப்பட்டுள்ளதோ அவ்விராகத்தின் இலட்சணத்தை சாகித்தியத்தில் விளக்கியிருக்கும். இலட்சண கீதம், + +என இரு வகைப்படும். ராகாங்க ராக இலட்சண கீதங்களில் அங்க வித்தியாசங்கள் உண்டு. அவையாவன: + +இக்கீதங்களின் உதவியால் இராகங்களின் லட்சணத்தை அறியலாம். + +"ஆரபிப்பண்ணின்" :ஆரபி. + +"முகாரி ராகம்" :முகாரி. + + + + + +குரோமியம் + +குரோமியம் (தமிழில் நீலிரும்பு, "Chromium") Cr என்கிற வேதியியல் குறியீடு கொண்டுள்ள ஒரு தனிமம். இதுவொரு மாழையும் (உலோகமும்) ஆகும். இதன் அணுவெண் 24. குரோமியம் இயற்கையில் தனி உலோகமாகக் கிடைப்பதில்லை. குரோமியத்தின் செழுமை பூமியின் மேலோட்டுப் பகுதியில் ஓரளவு செறிவாகக் (0.02 %) காணப்படுகிறது. குரோமியம், குரோமைட்டு என்ற செவ்வீயத் தாது, குரோமிடைட்டு, குரோகோய்சைட்டு போன்ற கனிமங்களில் காணப்படுகின்றது. இதில் குரோமைட்டு கனிமம் இந்தியாவில் சேலம் மாவட்டத்திலும் துருக்கி, ஈரான், அல்பேனியா, பின்லாந்து, பிலிப்பைன்சு, மலகாசி, தென் உரொடீசியாவிலும் கிடைக்கின்றது. + +இத் தனிமம் 1797 ல் வாக்குலின் என்ற வேதியலாரால் கண்டுபிடிக்கப்பட்டது. குரோ கோய்சைட்டு கனிமத் தூளை பொட்டாசியம் கார்பனேட்டுடன் கலந்து கொதிக்க வைக்க ஈய கார்பனேட்டும் ஒரு வகையான மஞ்சள் நிற நீர்மமும் விளைந்தன. இது ஒரு வகைப் புதிய காடியின் (அமிலத்தின்) பொட்டாசிய உப்பாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். பல்வேறு வினைமங்களுடன் இந்த நீர்மத்தைச் சேர்க்க கரைசல் பல்வேறு நிறங்களைப் பெறுவதைக் கண்டார். பாதரச உப்புக்கள் சிவப்பு நிறத்தையும், ஈய உப்புக்கள் மஞ்சள் நிறத்தையும், டின் குளோரைடு பச்சை நிறத்தையும், கரைசலுக்கு ஊட்டின. இதன் காரணமாக நிறம் என்ற பொருள் தரக் கூடிய கிரேக்க மொழிச் சொல்லான 'குரோமா' என்ற சொல்லிலிருந்து குரோமிய��் என்ற சொல்லை உருவாக்கி அப்புதிய தனிமத்திற்குப் பெயர் சூட்டினார் + +அலுமினியத்தினால், குரோமியம் ஆக்சைடை ஆக்சிசனீக்க வினைக்கு வெப்பவூட்டல் முறையினால் உட்படுத்திப் பெறமுடியும். இது மாங்கனீசு உலோகத்தைத் தனித்துப் பிரிப்பதற்குப் பின் பற்றப்படும் வழிமுறையை ஒத்தது. + +தோராயமாக 2013 ஆம் ஆண்டில் மட்டும் 28.8 மில்லியன் மெட்ரிக் டன் சந்தைப்படுத்தப்படும் குரோமைட்டு தாது குரோமைட் தாது உற்பத்தி செய்யப்பட்டது மற்றும் 7.5 மெட்ரிக் டன் குரோமியத் தாதுவானது பெரோகுரோமியமாக மாற்றப்பட்டது. குரோமைட்டு தாது இறுதிகட்டச் செயல்முறையில் பெர்ரோகுரோமாக மாற்றப்படுகிறது. இதன் இறுதிப்பயன்பாடு துரு ஏறாத எஃகு தயாரிக்கப் பயன்படுவதுமேயாகும் என்று யான் எஃப். பாப் என்பவர் ஒரு செய்தி இதழில் வெளியிட்டார். +உலகில் 2013 ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்கா (48%), கசகிசுத்தான் (13%), துருக்கி (11%), இந்தியா (10%) போன்ற நாடுகள் அதிக அளவில் குரோமியம் தாதுவை உற்பத்தி செய்தன. எஞ்சியிருக்கும் 18% குரோமியத்தை உலகிலுள்ள பிற நாடுகள் அனைத்தும் சேர்ந்து உற்பத்தி செய்தன. +குரோமியம் தாதுவை சுத்திகரிப்பு செய்வதால் இரண்டு முக்கிய பொருட்கள் பெரோகுரோமியமும் உலோக குரோமியமும் முக்கியமான விளைபொருட்களாகக் கிடைக்கின்றன. இந்த பொருட்களை தாதுப்பொருள்களில் இருந்து தயாரிக்கும் செயல்முறைகள் கணிசமாக வேறுபடுகின்றன. +பெரோகுரோமியம் பேரளவில் உற்பத்தி செய்ய குரோமைட்டு தாதுவானது (FeCr2O4), மின்சாரவில் உலையில் இட்டு ஒடுக்கப்படுகிறது. அல்லது அலுமினோ வெப்பச் செயல்முறையில் சிறிய உலைகளில் இட்டு ஒடுக்கப்படுகிறது. +தூய குரோமியம் தயாரிப்பதற்கு முதலில் இரும்பு குரோமியத்திலிருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு வறுத்தல் மற்றும் கழுவிப்பகுத்தல் என்ற இரண்டு படி நிலைகள் பயன்படுகின்றன. +கால்சியம் கார்பனேட்டு மற்றும் சோடியம் கார்பனேட்டு ஆகியவற்றை குரோமியத் தாதுவுடன் சேர்த்து கலவையை காற்றின் முன்னிலையில் சூடுபடுத்த வேண்டும். குரோமியம் அதன் ஆறு இணைதிற வடிவில் ஆக்சிசனேற்றமடைகிறது. இரும்பு அதனுடைய நிலைப்புத்தன்மை மிக்க Fe2O3 சேர்மமாக மாறுகிறது. உயர் வெப்பனிலைகளில் மேற்கொள்ளப்படும் அடுத்தடுத்த கழுவிப்பகுத்தல் செயல்முறைகளால் குரோமேட்டுகள் கரைந்து கரையாத இரும்பு ஆக்சைடு வீழ்படிவாகிறது. குரோமேட்டு கந்தக அமிலத்தின் மூலம் டைகுரோமேட்டாக மாற்றப்படுகிறது. +இவ்வினையில் உருவாகும் டைகுரோமேட்டை கார்பன் சேர்த்து அலுமினோ வெப்பச் செயல்முறை மூலம் ஒடுக்குதல் வினைக்கு உட்படுத்தி குரோமியம்(III) ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. + +குரோமியம் ஒரு சாம்பல் நிற அதிக பளபளப்பும் கடினமும் கொண்டுள்ள மாழை. அதன் உருகுநிலை உயர்வானது. குரோமியத்தில் பெரும்பாலுமாக காணப்படும் உயிரியவேற்ற (ஆக்சிசனேற்றா) நிலைகள் +2, +3, +6 ஆகும்; அதில் +3 உயிரியவேற்ற நிலை அதிகளவு நிலைப்பானது. +1, +4, +5 உயிரியவேற்ற நிலைகள் அரிதானவை. +6 உயிரியவேற்ற நிலை கொண்டுள்ள நீலிரும்புச் சேர்மங்கள் வலுவான உயிரியவேற்றிகள் (oxidants). குரோமியம் ஆக்சிசனுடன் மந்தமாகவே தாக்கமடையும், அதாவது மிகமெல்லிய, கரையாத, பாதுகாப்பளிக்கும் ஆக்சைடுப் படலத்தைக் குரோமியத்தின் மேல் தோற்றுவிக்கும். இது மேலும் அந்த உலோகம் ஆக்சிசனேற்றமடைவதைத் தடுக்கிறது. + +இதன் வேதிக் குறியீடு Cr ஆகும் .இதன் அணுவெண் 24 ,அணு நிறை 52, அடர்த்தி 7190 கிகி/கமீ,உருகு நிலையும் கொதி நிலையும் முறையே 2173 K, 2873 K ஆகும். குரோமியம் மெல்லிய நீலம் பாய்ந்த வெண்ணிறங் கொண்ட மிகவும் கடினமான, பொலிவு மிக்க, உடைந்து நொருங்கக் கூடிய ஓர் உலோகமாகும். அதனால் இதை முழுஅளவில் மெல்லிய தகடாக அடிக்கவோ கம்பியாக இழுக்கவோ முடிவதில்லை ஆக்ஸி- ஹைட்ரஜன் சுடரில் பிரகாசமாய் எரிந்து அதன் ஆக்சைடை உண்டாக்குகின்றது . செந்தணலாய் சூடுபடுத்தப் பட்ட குரோமியம் நீராவியைப் பகுக்கின்றது . + +காற்று வெளியில் நிலையானது. நீர்த்த அமிலங்களில் மெதுவாகக் கரைந்து, காற்று வெளித் தொடபில்லாத போது நீல நிறத்தில் குரோமஸ் உப்புக் கரைசலையும், ஐதரசனையும், காற்று வெளித் தொடர்பு கொள்ளும் போது அக்கரைசல் விரைந்து பச்சை நிறங் கொண்ட குரோமிக்கு உப்புக் கரைசலாகவும் மாற்றம் பெறுகிறது. உயர் உருகு நிலை, உயரளவு கடினத் தன்மை ,பிற உலோகங்களுடன் கலந்து கலப்பு உலோகத்தை ஏற்படுத்தக் கூடிய நல்லிணக்கம், போன்ற பண்புகள் கலப்பு உலோகத் துறையில் பலன் தருகின்றன. மிகச் சிறிதளவு வேற்றுப் பொருள் தூய குரோமியத்தோடு கலந்திருந்தாலும் அதை நொறுங்கும் தன்மையுடையதாக்கி விடுகின்றது. ஆனால் குரோமியக் கலப்பு உலோகங்கள் இக் குறைபாடுகளைப் பெற்றிருப்பதில்லை . + +குரோமியம் நல்ல மின் மற்றும் வெப்பங் கடத்தியாக உள்ளது. ஆனால் 37 பாகை செல்சியசில் குரோமியத்தின் இத்தகைய பண்புகள் மாறுதலுக்கு உள்ளாகின்றன. இதன் அக உராய்வு பெருமத்தை எட்டுகிறது. மீள் குணகம் சிறுமத்தைத் தொடுகிறது. வெப்பஞ் சார்ந்த பெருக்கம், வெப்ப மின்னியக்கு விசை ,மின் கடத்தும் திறனில் கூட திடீர் மாற்றங்கள் ஏற்படுகின்றன. வெப்ப நிலை சார்ந்து இணை திறனில் ஏற்படும் மாற்றங்கள் குரோமியத்தின் உலோக நிலைகளை வேறுபடுத்தலாம் என்று சிலர் கருதுகின்றனர் +அதிக எண்ணிக்கையில் குரோமியம்(III) சேர்மங்கள் அறியப்படுகின்றன. தனிம நிலைக் குரோமியத்தை ஐதரோ குளோரிக் அமிலம் அல்லது கந்தக அமிலங்க்களில் கரைத்து குரோமியம்(III)அயனிகளைப் பெறலாம். அலுமினியம் அயனியின் கிட்டத்தட்ட அதே அணு ஆரத்தை குரோமியம் அயனியும்(III) கொண்டுள்ளது. குரொம் படிகாரம் மற்றும் படிகாரம் போன்ற சில சேர்மங்களில் அவை ஒன்றுக் கொன்று தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. குரோமியம் அயனிகள் எண்முக அனைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. குரோமியம் மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அயனிகளைப் பொருத்தே அந்த அணைவுச் சேர்மத்தின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. + +அதிக எண்ணிக்கையில் குரோமியம்(III) சேர்மங்கள் அறியப்படுகின்றன. தனிம நிலைக் குரோமியத்தை ஐதரோ குளோரிக் அமிலம் அல்லது கந்தக அமிலங்க்களில் கரைத்து குரோமியம்(III)அயனிகளைப் பெறலாம். அலுமினியம் அயனியின் கிட்டத்தட்ட அதே அணு ஆரத்தை குரோமியம் அயனியும்(III) கொண்டுள்ளது. குரொம் படிகாரம் மற்றும் படிகாரம் போன்ற சில சேர்மங்களில் அவை ஒன்றுக் கொன்று தங்களுக்குள் பரிமாற்றம் செய்து கொள்கின்றன. குரோமியம் அயனிகள் எண்முக அனைவுச் சேர்மங்களாக உருவாகின்றன. குரோமியம் மையங்களுடன் இணைக்கப்பட்டுள்ள அயனிகளைப் பொருத்தே அந்த அணைவுச் சேர்மத்தின் நிறம் தீர்மானிக்கப்படுகிறது. + + + + + + + + + + + + + + + + + +செப்டம்பர் 14 + + + + + + + +பின்வருநிலையணி + +சொல் பின்வரும் நிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ இவ்விரண்டுமோ பல முறை பின்னரும் வருவது. + +பின்வருநிலையணி மூன்று வகைப்படும்: + + +சொல் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளிலோ அல்லது வேறு ஒரு பொர���ளிலோ பின்னரும் பலமுறை வருவது. + +எ.கா: +இக்குறட்பாவில் 'உடைமை' என்ற சொல்லானது பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளதால் இது "சொல் பின்வருநிலையணி" ஆகும். + +பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் ஒரே பொருள் தரும் பல சொற்கள் வருவது. + +எ.கா: +இப்பாடலில் மலருதல் என்னும் பொருள் தரக்கூடிய "அவிழ்தல், அலர்தல், நெகிழிதல், விள்ளல், விரிதல்" ஆகிய சொற்கள் பல முறை வந்துள்ளமையால் இது பொருள் பின்வருநிலையணி ஆகும் + +சொற்பொருள் பின்வருநிலையணி என்பது செய்யுளில் முன்னர் வந்த சொல் அதே பொருளில் பல முறை வருவது. + +எ.கா: +அணிப் பொருத்தம்: +இக்குறட்பாவில் "விளக்கு" என்னும் சொல் ஒரே பொருளில் பல முறை வந்துள்ளதால் இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும் + + + + +தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 + +தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 அல்லது தகவல் பெறும் உரிமைச் சட்டம், 2005 ("Right to Information Act", சட்டம் இல. 22/2005) இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும். இச்சட்டம் டிசம்பர் மாதம் 2004, ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டு மே 11, 2005, மக்களவையிலும், மே 12, 2005, ஆம் ஆண்டு மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. ஜூன் 15 2005 குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டது. ஜூன் 21, 2005, அரசுப் பதிவிதழில் வெளியிடப்பட்டு அக்டோபர் 12,2005 ஆம் நாள் முதல் நடைமுறைக்கு வந்தது.இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவின் பிறப் பகுதிகள் அனைத்திற்கும் பொருந்தும். இதன்படி ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்/மகளும் தகவல் பெறும் உரிமை பெற்றவர்கள். + +அரசு அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டிருப்பதும், ஊழலைக் கட்டுப்படுத்தி தவிர்ப்பதும், அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள் மற்றும் துறைகள், மக்களுக்குத் தேவையானத் தகவல்களைத் தரக் கடமைப்பட்டுள்ளதை உறுதிசெய்வதும் தகவல் பெறும் சட்டத்தின் நோக்கங்களாகும். + +அரசாங்கம் சார்ந்த அல்லது அரசு உதவிப் பெறும் நிறுவனங்கள், துறைகள், அலுவலகங்கள் அனைத்தும் தங்களைப் பற்றிய தகவல்களைத் தாமாகவே முன்வந்து மக்களுக்குக் கொடுக்க வேண்டும். குறிப்பாகத் தகவல்களைப் பெறும் நோக்கோடு மக்கள் தங்களிடம் கேட்கும்பொழுது தகவல்களை அளிக்கவேண்டியது அரசு, நிறுவன அலுவலர்களின் கடமை என இச்சட்டம் கூறுகின்றது. + +தகவல் என்றால் பிரிவு 2 (1) இன் படி பதிவேடுகள் , + +தகவல் பெற விரும்பும் நபர் ஆங்கிலம் அல்லது இந்தி அல்லது விண்ணப்பம் செய்யப்படும் நிலப்பகுதியின் அலுவல் மொழியில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். +குறிப்பு-; தகவல் கோரும் விண்ணப்பத்தாரர், அத்தகவல் பற்றிய விபரங்களையும் அவரைத் தொடர்புக் கொள்வதற்கான முகவரியையும் தவிர வேறு விவரங்கள் எதையும் கொடுக்க வேண்டியதில்லை. + +காலக்கெடு-; விண்ணப்பம் கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல் அலுவலர் பதில் அளிக்கவேண்டும். +குறிப்பு-; அவசரத் தகவல்கள் என்றால் 48 மணி நேரத்துக்குள் சம்பந்தப்பட்டவர் பதிலளிக்கவேண்டும் + +இந்தியக் குடிமக்கள் எவருக்கும் பிரிவு 8 (1) இன் கீழ் பின்வரும் தகவல்களைக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை. + +இச்சட்டத்தின்படி தவறு செய்யும் தகவல் அலுவலர்கள் (அதிகாரி) மீது நடவடிக்கை எடுத்து அபராதம் வழங்கும் அதிகாரம் என்பது மத்தியத் தகவல் ஆணையம் அல்லது மாநிலத் தகவல் ஆணையத்திடம் உள்ளது. குறித்த நேரத்தில் தகவல் அளிக்காமை, தவறான தகவல்கள் தருதல் அல்லது வேண்டுமென்றே திருத்தப்பட்ட தகவல்களை தருதல் ஆகியவற்றிற்காக துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்க நடவடிக்கை எடுக்கலாம். மேலும் தலா 250 ரூபாய் வீதம் 25 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் தகவல் ஆலுவலரிடமிருந்து அபராதம் வசூலிக்கவும் இச்சட்டம் வழிகோலுகின்றது. + + + + + +சனவரி 29 + + + + + + +சமன்பாடு + +கணிதத்தில் சமன்பாடு அல்லது "ஈடுகோள்" ("equation") என்பது இரு கோவைகள் சமமானவை என்பதை உறுதிப்படுத்தும் ஒரு கூற்று. ஒரு சமன்பாட்டில், சமமான இரு கோவைகளுக்கு இடையே சமக்குறியிட்டு (=) எழுதுவது அண்மைக்கால வழக்கமாக உள்ளது. + +எடுத்துக்காட்டுகள்: +இச்சமன்பாடு, "x"+3 மற்றும் 5, இவையிரண்டும் சமம் என்பதைக் குறிக்கிறது. + +formula_2 எனும் சமக்குறியீடு, வேல்சு]] கணிதவியலாளர் "ராபர்ட் ரெக்கார்டால்" (1510–1558) கண்டுபிடிக்கப்பட்டது. ஒரேயளவு நீளம் கொண்ட இரு இணைகோடுகளை விட வேறெவைய���ம் சமமானவையாக அமைய முடியாது என்பது ராபர்ட் ரெக்கார்டின் கருத்து. + +மதிப்பறியப்பட்ட கணியங்களுக்கும் மதிப்பறியப்படாத கணியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை சமன்பாடுகள் தருகின்றன. மதிப்பறியப்படாத கணியங்கள் "x", "y", "z", "w", … எனும் முடிவிலமையும் ஆங்கில எழுத்துக்களாலும், மதிப்பறியப்பட்ட கணியங்கள் "a", "b", "c", "d", … எனும் ஆரம்ப ஆங்கில எழுத்துக்களாலும் குறிக்கப்படுகின்றன. மதிப்பறியப்படாத கணியங்கள் மாறிகள் எனவும் மதிப்பறியப்பட்ட கணியங்கள் மாறிலிகள் எனவும் அழைக்கப்படுகின்றன. + +ஒரு சமன்பாட்டிலுள்ள மாறிகளை, அதிலுள்ள மாறிலிகள் மூலமாகக் காண்பது அச்சமன்பாட்டினைத் "தீர்த்தல்" அல்லது "தீர்வு காணல்" எனப்படும். ஒரு மாறியில் அமைந்த சமன்பாட்டில் அச்சமன்பாட்டை நிறைவு செய்யும் அம்மாறியின் மதிப்பு, அச்சமன்பாட்டின் "தீர்வு" அல்லது "மூலம்" எனப்படும். ஒருங்கமைந்த ஒரு சமன்பாட்டுத் தொகுதியிலுள்ள சமன்பாடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்திருக்கும். அச்சமன்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே நிறைவு செய்யும் மாறிகளின் மதிப்புகள் அச்சமன்பாட்டுத் தொகுதியின் தீர்வாகும். + +இரு கோவைகள் சமமானவை என்பதை உறுதிப்படுத்தும் கூற்றாக அமையும் சமன்பாடானது, அக் கோவைகளுக்கு இடையே சமக்குறியிட்டு (=) எழுதப்படுகிறது. சமப்படுத்தப்படும் கோவைகள் இரண்டும் எண்கோவையாக அல்லது இரண்டும் இயற்கணிதக்கோவையாக அல்லது ஒன்று இயற்கணிதக்கோவையாகவும் மற்றொன்று எண்கோவையாகவும் அமையலாம். + +எண்கணிதச் செயற்பாடுகள் வாயிலாக எண்களைச் சேர்த்து உருவாக்கப்படும் தொடர்புகள் ”எண்கோவை” அல்லது ”எண்கணிதக் கோவை” எனப்படும். எடுத்துக்காட்டாக, 4+(5+7), (2×6)÷6 மற்றும் (5×7)-(7×3-4) ஆகியன எண் கோவைகள். + +எடுத்துக்காட்டுகள்: + +மாறிகள் மற்றும் மாறிலிகள் ஆகியவற்றைக் கணிதச் செயல்பாடுகள் மூலமாகச் சேர்த்து எழுதுவது இயற்கணிதக் கோவை என்றழைக்கப்படுகிறது. + +இயற்கணிதக் கோவையொன்றின் முக்கியக் கூறுகளாக அமைபவை: +உறுப்பு எனப்படுவது ஒரு மாறியாகவோ அல்லது மாறிலியாகவோ அல்லது மாறி மற்றும் மாறிலிகளின் பெருக்கலின் சேர்க்கையாகவோ அமையும். + +எடுத்துக்காட்டு: +2x^2+5x+1 என்னும் இயற்கணிதக் கோவையில், 2x^2, 5x மற்றும் 1 என்பவை கோவையின் உறுப்புகள் ஆகும். + +ஓர் உறுப்பில் உள்ள மாறி அல்லது காரணியின் கெழு எனப்���டுவது இவ் உறுப்பின் பிறிதொரு கூறாகும். கெழு அல்லது குணகம் (coefficient) என்பது ஒரு பல்லுறுப்புக்கோவை, தொடர் அல்லது கோவையின் உறுப்புகளின் பெருக்கல் காரணியாகும். பொதுவாக கெழுக்கள் எண்களாகவே இருக்கும். அதனால் அவை மாறிலிகளாகும். எனவே எண் கெழு அல்லது எண் குணகம் (Numerical Coefficient) எனவும் அழைக்கப்படுகிறது. மேலுள்ள எடுத்துக்காட்டில் 2x^2 உறுப்பின் வெழு 2; 5x உறுப்பின் கெழு 5. + +ஒரு மாறி x ஐ, இரண்டு முறை பெருக்குவதன் பெருக்கற்பலன் x×x=x^2 ஆகும். இதில் x என்பது அடிமானம் எனப்படும். 2 என்பது அடுக்கு எனப்படும். + +ஒத்த அடுக்குகளைக் கொண்ட ஒத்த மாறி அல்லது மாறிகளின் பெருக்கல் ஒத்த உறுப்புகள் என்றழைக்கப்படுகிறது. x, 2x, -5x ஆகிய உறுப்புகள் a என்ற மாறியில் அடுக்கு ஒன்றுடையதாக இருப்பதால் இவை ஒத்த உறுப்புகள் ஆகும். + +வேறுபட்ட உறுப்புகள் எனப்படுவது வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட வெவ்வேறு மாறிகள் அல்லது மாறிகளின் பெருக்கல் ஆகும். 5x, 3y ஆகியவை வேறுபட்ட உறுப்புகளாகும். ஏனெனில் இவற்றின் அடுக்குகள் ஒத்திருந்தாலும் மாறிகள் வேறுபடுகின்றன. + +இயற்கணிதக்கோவைகளிலமைந்த சமன்பாடுகள்: + +சமன்பாடுகளிலுள்ள செயலிகளின் வகைகள் மற்றும் கணியங்களைப் பொறுத்து அவற்றை வகைப்படுத்தலாம். + +சமன்பாடுகளின் முக்கிய வகைகள்: + +ஒரு சமன்பாட்டில் அமைந்துள்ள மாறிகளின் அனைத்து மதிப்புகளுக்கும் அச்சமன்பாடு உண்மையானதாக இருக்குமானால் அச்சமன்பாடு முற்றொருமை என அழைக்கப்படும். + +எடுத்துக்காட்டு: + +"x" -ன் அனைத்து மதிப்புகளுக்கும் பின்வரும் சமன்பாடு உண்மையாவதால் அது ஒரு முற்றொருமையாகும். + +ஆனால் சமன்பாடுகள் அவற்றிலுள்ள மாறிகளின் குறிப்பிட்ட மதிப்புகளுக்கு மட்டுமே உண்மையாக அமையும். அக்குறிப்பிட்ட மதிப்புகள் சமன்பாடுகளின் தீர்வுகள் ஆகும். ஒரு சமன்பாட்டினை நிறைவு செய்யும் மாறிகளின் மதிப்பை அச்சமன்பாட்டைத் தீர்ப்பதன் மூலம் காணலாம். + +எடுத்துக்காட்டு: + +இச்சமன்பாடு, "x" -ன் இரண்டு மதிப்புகளுக்கு மட்டுமே உண்மையாகும். + +இச்சமன்பாட்டின் தீர்வுகள்: + +பல கணிதவியலாளர்கள் சமன்பாட்டிற்கும் முற்றொருமைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்த்தும் வகையில் இரண்டாவதைக் குறிப்பதற்கு மட்டுமே சமன்பாடு என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றனர். சமன்பாட்டிற்கும் முற்றொருமைக்கும் உள்ள வேறுபாடு நுட்பம��னது. + +இதன் தீர்வுகள்: + +ஒரு கூற்று முற்றொருமையா அல்லது சமன்பாடா என்பதனை அது கூறப்படும் சூழலைக் கொண்டு தீர்மானிக்கலாம். சில இடங்களில் சமன்பாட்டிற்கு சமக்குறியையும் (formula_15) முற்றொருமைக்கு சமானக் குறியையும் (formula_16) பயன்படுத்துவதன் மூலம் இரண்டுக்குமான வேறுபாடு காட்டப்படுகிறது. + +சில இயற்கணித முற்றொருமைகள்: + +ஆரம்ப ஆங்கில எழுத்துக்கள் "a", "b", "c"... மாறிலிகளையும் முடிவிலுள்ள ஆங்கில எழுத்துக்கள் ..."x", "y", "z" மாறிகளையும் குறிக்கும் வழக்கம் பிரெஞ்சு கணிதவியலாளர் ரெனே டேக்கார்ட்டால் அறிமுகப்படுத்தப்பட்டது. + +அடிப்படை இயற்கணிதத்தில் ஒரு சமன்பாடு உண்மையானதாக இருக்குமானால் பின்வரும் செயலிகளைப் பயன்படுத்தி மற்றொரு உண்மைச் சமன்பாட்டினை உருவாக்கலாம்: + +எடுத்துக்காட்டாக, formula_24 சமன்பாட்டிற்கு formula_25 ( x -ன் எந்த மதிப்பிற்கும்) மற்றும் formula_9 (y-ன் எந்த மதிப்பிற்கும்) என இரு தீர்வுகள் உள்ளன. + +இச்சமன்பாட்டின் இருபுறமும் வர்க்கம் காணக் (அதாவது இருபுறமும் formula_27 என்ற சார்பைச் செயல்படுத்த) கிடைக்கும் புதிய சமன்பாடு: + +இச்சமன்பாட்டிற்கு பழைய தீர்வுகள் மட்டுமல்லாது கூடுதலாக formula_29 ( x -ன் எந்த மதிப்பிற்கும்) என்ற தீர்வும் உள்ளது. + + +ஒரு சமன்பாட்டிலுள்ள மாறிகளை, அதிலுள்ள மாறிலிகள் மூலமாகக் காண்பது அச்சமன்பாட்டினைத் "தீர்த்தல்" அல்லது "தீர்வு காணல்" எனப்படும். ஒரு மாறியில் அமைந்த சமன்பாட்டில் அச்சமன்பாட்டை நிறைவு செய்யும் அம்மாறியின் மதிப்பு, அச்சமன்பாட்டின் "தீர்வு" அல்லது "மூலம்" எனப்படும். ஒருங்கமைந்த ஒரு சமன்பாட்டுத் தொகுதியிலுள்ள சமன்பாடுகள் ஒன்றுக்கு மேற்பட்ட மாறிகளில் அமைந்திருக்கும். அச்சமன்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே நிறைவு செய்யும் மாறிகளின் மதிப்புகள் அச்சமன்பாட்டுத் தொகுதியின் தீர்வாகும். + +இதன் தீர்வு: + + +மேலுள்ள இருபடிச் சமன்பாட்டின் தீர்வுகளின் தன்மையை அதன் தன்மைகாட்டி என அழைக்கப்படும் formula_33 இன் மதிப்பினைக் கொண்டு பின்வருமாறு வகைப்படுத்தலாம்: + +இரண்டு அல்லது மூன்று மாறிகளில் அமைந்த நேரியச் சமன்பாடுகளைக் கொண்ட முடிவுறு கணம் என்பது அந்த மாறிகளில் உள்ள நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பு என்றழைக்கப்படுகிறது. இச் சமன்பாடுகளின் தொகுப்பு ஒருங்கமைச் சமன்பாடுகள் என்றும் அழைக்கப்படும். + +நேரியச் சமன்பாடுகளின் தொகுப்பு இருவகைப்படும். அவை: + + +சமன்பாடு ax+by=c என்பதாவது ஒரு நேரியச் சமன்பாடு ஆகும். ஏனெனில், இச்சமன்பாட்டில் உள்ள மாறிகளில் ஒரு படி மட்டுமே கொண்டவையாக இருக்கின்றன. மேலும், இம் மாறிகளின் பெருக்கற்பலன் இச்சமன்பாட்டில் இல்லை. அதாவது சமன்பாட்டின் உறுப்புகளின் படியானது அதிகபட்சம் ஒன்றாக உள்ளது + + +பிரதியிடும் முறை என்பது ஒரு சமன்பாட்டிலுள்ள இரு மாறிகளில் ஒன்றை மற்றதின் சார்பாகக் கண்டறிந்து பின்னர் அதை அடுத்த சமன்பாட்டில் பிரதியிட்டுத் தீர்க்கும் முறையாகும். + +எடுத்துக்காட்டு: + +2x+5y=2 மற்றும் x+2y=3 சமன்பாடுகளைப் பிரதியிடும் முறையில் தீர்க்கும் வழிமுறைகளாவன: + +சமன்பாடு (2)-லிருந்து கிடைப்பது + +x இன் மதிப்பை சமன்பாடு(1) இல் பிரதியிட, + +ஃ y=-4. + +y = -4 என்னும் மதிப்பை சமன்பாடு 3 இல் பிரதியிட, + +ஃ x =11 மற்றும் y = -4 ஆகும். + +இரண்டு மாறிகளில் ஒன்றை முதலில் நீக்கியபின் சமன்பாட்டுத் தொகுப்பிற்கு தீர்வு காணும் முறை நீக்கல் முறை எனப்படும். + +இரு மாறிகளில் காணப்படும் பகுதி, தொகுதிகளை முறையே குறுக்குப் பெருக்கல் மூலம் தீர்க்கும் முறைக்குக் குறுக்குப் பெருக்கல் முறை என்று பெயர். + + + + + +பிளேஸோபீடியா + +பிளேஸோபீடியா விக்கிப்பீடியாவுடன் கூகிள் தேசப்படங்களை இணைக்கும் இணையமூடான முறையாகும். இது ஐக்கிய இராசியத்தின் எனது சமூகம் எனப்பொருள்படும் மைசொசாயட்டியினாரால் செப்டெம்பர் 2005 முதல் ஆரம்பித்து நிர்வாகிக்கப் படுகின்றது. + +பயனர்கள் தேசப்படத்தில் இடங்களைக் குறிக்கவியலும் (போதுமான அளவுத்திட்டத்தின் கீழ்) பின்னர் அதை ஆங்கில விக்கிப்பீடியாக் கட்டுரையுடன் இணைக்கவியலும். பின்னர் யாராவது தேசப்படத்தைப் பார்வையிடும் போது விக்கிப்பீடியாவுடன் இணைக்கும் குண்டூசியானது காட்சியளிக்கும் அத்துடன் அவ்விணைப்பைத் தந்தவரின் பெயர் விபரங்களும் காண்பிக்கப்படும். திருத்தங்களும் மீள்பரிசீலனைகளை பிளேஸோபீடியாவிற்கு வேலை செய்பவர்கள் மேற்கொள்வார்கள். + +KML கோப்பூடாக கூகிள் ஏர்த் பயன்ர்களும் இதனைப் பார்வையிட முடியும். இப்பக்கமானது RSS ஊட்டுக்களை அளிக்கின்றது. + +பல்வேறு பட்ட திட்டங்கள் கூகிள் ஏர்த்துடன் இணைப்பதற்க்கக ஆரம்பிக்கப் பட்டுள்ள பொழுதும் ஆள்கூறுகளைப் பயன்படுத்துவதால் பயனர்களின் உதவி தேவைப் படுகின்றது. + + + + + +விக்கிமேப்பியா + +விக்கிமேப்பியா ("WikiMapia") ஒரு இணையதள வரைபடம் மற்றும் துணைக்கோள் படிம வளம். இது கூகுள் மேப்ஸ்களை விக்கி அமைப்புடன் இணைக்கிறது, பயனாளர்கள் தகவல்களை பூமியின் எந்த இடத்திலும் குறிப்பு வடிவத்தில் சேர்க்க அனுமதிக்கிறது.. இது அலெக்சாண்டர் கொரியாகினே மற்றும் எவ்கேனி சவேலியெவ் ஆகியோரால் உருவாக்கப்பட்டது, மற்றும் "முழு உலகத்தை விளக்கும்" நோக்கத்துடன் மே 24 2006 இல் தொடங்கப்பட்டது. இதில் இப்பொழுது ஒன்பது மில்லியனுக்கும் மேல் இடங்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. பதிவு செய்யும் பொழுது விக்கிமேப்பியாவில் தொகுக்கவோ அல்லது சேர்க்கவோ தேவையில்லை, உலகை சுற்றி இரண்டு லட்சத்திற்கும் மேலான பயனாளர்கள் தற்பொழுது இதில் பதிவு செய்துள்ளனர். + +விக்கிமேப்பியா எந்த ஒரு உதவியாளரையும் "இணைப்பை" (இடக்குறி) எந்த இடத்திலும் சேர்க்க இவ்விடத்தைச் சுற்றி ஒரு பல்கோணியை (polygon) குறியிட்டு அதன் பிறகு ஒரு கோட நிலை மொழி, தலைப்பு, விவரிப்பு மற்றும் பல வகைகளை வழங்க அனுமதிக்கிறது. ஒரு விருப்ப குறிப்பு வழங்கப்படலாம், அத்துடன் படிமங்கள் மற்றும் யூட்யூப்பில் பதித்த நிகழ்படங்கள், இவை அனைத்தும் இடத்துக்கான தகவல் விண்டோசில் தோன்றுகின்றன. + +நீங்கள் கணிபொறி சுட்டியை ஒரு பிரிவின் மீது அசைக்கும் பொழுது காட்டப்படும் "சேர்க்கை" பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் இடக்குறியில் பல வகைகளை சேர்க்கலாம். (ஒரு வகையினோடு காட்டப்படும் எண்கள் அந்த வகைக்கான இடக்குறி எண்களை குறிக்கும். ஒரு இடகுறிக்காக விக்கிபீடியா பக்கம் இருக்கிறதென்றால், நீங்கள் அந்த பக்கத்திற்கும் இணைப்பு போடலாம். + +விக்கிபீடியாவை போல, விக்கிமேப்பியாவின் எல்லா பயனாளர் உள்ளடக்கங்களின் உரிமை விக்கிமேப்யாவிற்கு தனித்து வழங்கப்பட்டுள்ளது. விக்கிமேப்யா ஜிஎப்டிஎல் (GFDL) உரிமத்தை உபயோகிக்கவில்லை, எனவே ஆதாய உரிமைகள் மற்றும் பல உபயோக உரிமைகளும் விக்கிமேப்யாவில் சமர்ப்பிக்கும் போது இழக்கப்படுகிறது. தளத்தின் சேவை வார்த்தைகளின் படி, பயனாளர் சமர்ப்பணங்கள் சொந்த அல்லது வர்த்தகம் அல்லாத பாட குறிக்கோளுக்காக இணையதளம் மூலம் கிடைக்கிறது. + +உலகின் ஒரு சில பகுதிகளில் காலவாதியாகிவிட்ட அல்லது அதி�� விலைமிக்க வரைபடம், அதாவது இந்தியா, போன்ற இடங்களில் விக்கிமேப்யாவின் வளர்ச்சி ஆச்சர்யத்திற்குரிய வேகத்தில் இருக்கிறது. இவ்வேகமான வளர்ச்சி அதற்கான பிரச்சனைகளை கொண்டு வந்தது, இருந்தாலும். நகரப்புறங்கள் ஆயிரக்கணக்கான ஒன்றுக்குமேல் ஒன்றாக செவ்வகங்கள் சூழ்ந்திருக்கிறது தனி வீடுகள் அமைப்பு குறிக்கப்பட்டுள்ளது, ஆனால் விக்கிமேப்யா இன்டர்பேஸ் பொது மக்களின் ஆர்வமுள்ள இடங்களில் இருக்கும் வீடுகளை பிரித்துகாட்ட வழியில்லை. சமீபத்தில், பிரிவு உலாவி அறிமுகபடுத்தப்பட்டிருக்கிறது, இது பயனாளர்கள் எந்த பிரிவு அல்லது பிரிவுகளுக்கான அம்சங்களை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அனுமதிக்கிறது. + +நீங்களும் இந்த இடத்தில் படங்களை சேர்க்கலாம். உதாரணமாக, நீங்கள் ஷேபீல்ட்டில் (Sheffield) உள்ள டின்ச்லே கூலிங் டவர்ஸ் (Tinsley Cooling Towers) விரிவாக்கத்தை செய்கிறீர்கள் என்றால், இடத்தின் விளக்கத்தின் மூலை பகுதியில் உள்ள "பட்டியலை" க்ளிக் செய்வீர்கள். பிறகு "அட் / மானேஜ்" படங்கள் க்ளிக் செய்து நீங்கள் படத்தை சேர்க்கலாம். + +இது முழுவதும் பன்மொழி இடகுறிகள். தற்பொழுது மொத்தம் 93 மொழிகள் ஆதரவு தரப்பட்டுள்ளது, மற்றும் நூறு சதவிகித இன்டர்பேஸ் 56 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. பதிவுப்பெற்ற பயனாளர்கள் விக்கிமேப்யாவின் இன்டர்பேஸ் ஒரு சிறப்பு பக்கத்தில் மொழிப்பெயர்க்க உதவி செய்யலாம்.(http://wikimapia.org/translate/). + +விருப்ப பணியாளர் கணக்குகள் அக்டோபர், 2006 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பதிவுப்பெற்ற பயனாளர்கள் சொந்த செய்திகளை ஒருவருக்கொருவர் அனுப்பலாம் மற்றும் அக்டோபர் 2007 இல் தொடங்கப்பட்ட பொது மன்றத்தையும் உபயோகிக்கலாம். விக்கிமேப்யா தனது பதிவுப்பெற்ற பயனாளர்களை வரைபடங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிக்க கண்காணிப்பு பட்டியலை அமைக்க அனுமதிக்கிறது. இந்த வசதிக்காக நீங்கள் Wikimapia->Profile->Watchlist சென்று அதன் பிறகு சரியான அளவு இடத்தில வாட்ச்லிஸ்டை சேர்க்கலாம். + +விக்கிமேப்யா FAQ வில் மூன்று பயனாளர் நிலைகள் விவரிக்கப்பட்டுள்ளன. பயனாளர்கள் தனக்கு சாதகமாக அல்லது மற்ற பயனாளர்கள் பங்களிப்புகளுக்கு எதிராக வாக்களிக்கலாம், இது பயனாளர்களின் அந்தஸ்த்து சமூகத்தில் உயர அனுமதிக்கிறது. இங்கே பயனாளர்கள் ஸ்டாட்ஸ் மற்றும் தரப்பலகை ��ள்ளது, இது தானகவே பயனாளர்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு தரம் படுத்துகிறது. + +அக்டோபர் 2008 இல் பதிவுப்பெற்ற பயனாளர்களின் சோதனைக்காக பீட்டா பதிப்பு தொடர்புக்கு வைக்கப்பட்டது. புதிய இன்டர்பேஸ், புதிய சிறப்பம்சங்களை சேர்த்திருக்கிறது அதாவது "டெர்ரேய்ன் பாச்சஸ்' (terrain patches) மற்றும் ஒரு புதிய படை "விக்கிமேப்யா மேப் ". விக்கிமேப்யா வரைபடம் விக்கிமேப்யா பயனாளர்களால் தயாரிக்கப்பட்ட தகவல்களை மட்டும் காட்டுகிறது, அதாவது பல்கோணிகள் மற்றும் சாலைகள் - ஒவ்வொரு இடக்குறியின் பிரிவை பொருத்து பல்கோணிகள் வெவ்வேறு நிறங்களில் இருக்கும், உதாரணமாக ஏரி அல்லது அணைக்கு நீலம் அல்லது பூங்காவிற்கு பச்சை. பிரிவாக காட்டப்பட்டிருக்கும் இடங்களை எல்லாம் நீங்கள் வடிக்கட்டலாம். விக்கிமேப்யா விக்கி ஆவணம் செய்வதற்காகவும் மற்றும் கூட்டமைப்பிற்கு உதவுவதற்காகவும் ஆரம்பிக்கப்பட்டது. + +கூகுள் விளம்பரங்கள் மூலம் இந்த தளம் வருமானம் உண்டாக்குகிறது. ஜூலை 2007 இல், விக்கிமேப்யாவை நிறுவியவர்கள் தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு முதலீட்டாளர்களை தேட ஆரம்பிக்க முடிவு செய்தனர். + +ஒரு ஜிபிஎஸ் (GPS பெறுநர் ப்லக்-இன் திட்டம் உபயோகித்து விக்கிமேப்யாவில் இணைக்கப்படலாம் (பீட்டா, விக்கிமேப்யா தளத்திலிருந்து விண்டோஸ் ஒ எஸ்க்கு (Windows OS) இறக்கலாம்(). + +வரையறுக்கப்பட்ட விக்கிமேப்யாவின் செயல்கள் கிடைக்குமிடம்: + + + + + + +கிட்டு + +சதாசிவம் கிருஸ்ணகுமார் (ஆங்கிலம்:Sathasivam Krishnakumar) என்னும் இயற்பெயர் கொண்ட கேணல் கிட்டு இவர் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக அறியப்படுபவர். இவர் தனது பதினெட்டாவது வயதில் 1979 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். + +சதாசிவம் கிருஸ்ணகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் வெங்கிட்டு எனப் பெயர் மாற்றம் பெற்று, பின்னர் கேணல் கிட்டு என தோழர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். இவர் இலங்கையின் வல்வெட்டித்துறையில் சனவரி 2, 1960 ஆம் ஆண்டு அன்று சதாசிவம், ராஜலட்சுமி அவர்களுக்கு மகனாகப் பிறந்தார். +மேலும் இவரது தந்தைக்கு வல்வெட்டித்துறையில் ஒரு அச்சகம் இருந்தது. இவருடையத் தாயார் யாழ்ப்பாணத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (Ilankai Thamil Arasu Kadchi) என்னும் அரசியல�� கட்சியின் மகளிர் பிரிவின் தலைவராக இருந்தார். +மேலும் இவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் நெருங்கிய உறவினர் ஆவார். +மேலும் கிட்டு, 1991 ஆம் ஆண்டு கொழும்பில் யுத்த நிறுத்த காலத்தில் தனது காதலியான சிந்தியாவை திருமணம் செய்து கொண்டார். சிந்தியா ஒரு மருத்துவக் கல்வி மாணவி ஆவார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. + +தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இராணுவப் பயிற்சி பெற்றார். 1983 ஏப்ரல் 7 இல் விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியில் கிட்டு இரண்டாவது பொறுப்பாளராக நிலையுயர்த்தப்பட்டார். அதன் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை பகிஸ்கரிக்கும் பொருட்டு யாழ்ப்பாணம், கந்தர்மடம் வாக்குச்சாவடியில் இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், ஜூலை 23 இல் இராணுவ வாகனங்கள் மீது நடத்தப்பட்ட திருநெல்வேலிக் கண்ணி வெடித்தாக்குதல் என்பனவற்றிலும் கலந்து கொண்டார். + +1983 இன் இறுதிக் காலத்தில் இந்தியாவுக்குப் பயிற்சிக்காகச் சென்ற இயக்கத்தின் முதல் குழுவில் கிட்டு இடம் பெற்றார். பயிற்சியை முடித்து தமிழீழம் வந்த கிட்டு 1984 மார்ச் 2 இல் நடைபெற்ற குருநகர் இராணுவமுகாம் தாக்குதல் உட்பட்ட பல்வேறு தாக்குதல்களில் முக்கிய பங்கு வகித்து நெறிப்படுத்தினார். அதே நேரம் யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேப்டன் பண்டிதர் 1985 ஜனவரி 9 தில் போரினால் மரணமடைய அவரின் இடத்திற்கு கிட்டு நியமிக்கப்பட்டார். யாழ். மாவட்டத் தளபதி ஆனவுடன் யாழ். காவல் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று நடத்தி, அங்கிருந்த பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினார். 1987 மார்ச் இறுதியில் கைக்குண்டுத் தாக்குதலினால் தனது இடதுகாலை இழந்தார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் தனது சிகிச்சைக்காக இந்தியா சென்றார் கிட்டு. கிட்டுவை இந்திய அரசு வீட்டுக்காவலிலும், சென்னை மத்திய சிறையிலும் கைதியாக அடைத்து வைத்திருந்தது. இந்திய அரசு அவரை தமிழீழத்தில் விடுதலை செய்தது. + +1989 இல் இலங்கை அரசுடன் பேசுவதற்கு கொழும்பு சென்ற குழுவில் அங்கம் வகித்த கிட்டு விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுப் பிரிவுப் பொறுப்பாளராக அங்கிருந்தபடியே லண்டன் சென்றார். பின்னர் லெப். கேணல் குட்டிசிறி உட்பட 10 பேருடன் குவேக்கர்ஸ் இன் சமாதானச் செய்தியுடன் சர்வதேச கடற்பரப்பினூடாக எம்.வி ��கத் என்ற கப்பலில் தமிழீழம் திரும்புகையில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து கொல்லப்பட்டார். + + + + + + +கீர்த்தனை + +கீர்த்தனை இறை இசைப் பகுதியைச் (வைதீக கானத்தை) சேர்ந்தது. சாகித்யம் இறைவன் அல்லது இறைவியைப் புகழ்வதாகவோ அல்லது அவர்களிடம் மன்னிப்பு வேண்டுவதாகவோ பக்தி நிரம்பியதாக இருக்கும். புராண நிகழ்ச்சிகளைப் பற்றியும் பக்தர்களின் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதாகவும் இருக்கலாம். எனவே கீர்த்தனைகளில் சுரப்பகுதியை (தாதுவை) விட சொற்பகுதியே (மாதுவே) முக்கியமானது என்று கருதப்படுகிறது. + +கீர்த்தனைக்குப் பிறகு தான் கிருதி என்ற இசைவடிவம் தோன்றியது. கீர்த்தனைக்குப் பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற மூன்று பகுதிகள் உண்டு. இந்த சரணங்கள் எல்லாம் ஒரு வகையான சுரப் பகுதியைக் கொண்டிருக்கும். சில சமயங்களில் பல்லவிக்குரிய சுரப்பகுதியே சரணத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது. + +சாதாரண இசையறிவு உள்ளவர்களும் கீர்த்தனைகளைப் பாட இயலும். ஏனெனில் அவை எளிமையான, பழக்கமான இராகங்களில் அமைக்கப்பட்டவையாகவும், பலர் சேர்ந்து பாட ஏற்றதாகவும் இருக்கும். + + + + + +செப்டம்பர் 15 + + + + + + + +சனவரி 28 + + + + + + +முகல்-இ-அசாம் + +முகல்-இ-அசாம் இத்திரைப்படம் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்துஸ்தானி மொழித் திரைப்படமாகும்.இத்திரைப்படம் ஒன்பது வருடங்களின் படப்பிடிப்புகளின் பின்னர் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.வெளியிடப்பட்ட ஆரம்பத்தில் வரவேற்பைப்பெறாத இத்திரைப்படம் பின்னால் வரவேற்புக்குள்ளானது. + +வரலாற்றுப்படம் / காதல்படம் + +அக்பரின் ஆட்சிக்காலத்தில் நடைபெறும் இத்திரைக்கதையில் அக்பரின் மகனான சலீம் நடனமாடும் பெண்ணான அனார்க்கலியைக் காதலிக்கின்றார்.இதனை எதிர்க்கும் அக்பர் மகனுடன் போர் புரிநது பின்னர் மகனைக் கொல்வதற்காக ஆயத்தம் செய்யும்பொழுது மன்னர் தனது மனதை மாற்றுகின்றார். + + + + +வீர்-சாரா + +வீர்-சாரா திரைப்படம் 2004 இல் வெளிவந்த ஹிந்தித் திரைப்படமாகும்.இத்திரைப்படத்தின் கதாநாயகனாக ஷாருக்கானும் நாயகியாக ரா��ி முகர்ஜியும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. + +நாடகப்படம் / காதல்படம் + +பாக்கிஸ்தானியப் பெண்ணான சாரா ஹாயத் கான் (பிரீத்தி சிந்தா) இந்தியாவிற்குச் சுற்றுலா செல்கின்றார். போகும் வழியிலே விபத்தொன்றில் மாட்டிக் கொள்ளும் அவரை விமான ஓட்டியான வீர் பிரதாப் சிங்கால் (ஷா ருக் கான்)காப்பாற்றப்படுகின்றார். பின்னர் வீர் தனது சொந்த ஊரான பஞ்சாப்பிற்கு சாராவை அழைத்துச்செல்கின்றார்.அங்கு வீரின் பெற்றோர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் சாரவை காதலிக்கின்றார் வீர்.சாரா தனது சொந்த நாட்டிற்குத் திரும்பும் தருணம் அவருக்கு கல்யாணம் நிச்சயமாகியிருப்பதாக அறிந்து கொள்கின்றார் வீர்.இதனையடுத்து அவர் தனது காதலை தியாகம் செய்து கொள்கின்றார்.சிறிது காலங்களில் வீரின் மீது தான் காதல் கொண்டிருப்பதாக உணர்ந்து கொள்ளும் சாரா வீரை சந்திப்பதற்காக அவரின் சொந்த ஊருக்குச் செல்லும் அதே சமயம் வீரும் சாராவைக் காண்பதற்காக பாகிஸ்தான் புறப்பட்டுச் செல்கின்றார் இவரின் வருகையினை அறிந்து கொள்ளும் சாராவினை மணக்க இருந்தவர் வீரினை இந்தியாவிலிருந்து வேவு பார்க்க வந்தவரென பொய்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அவரை 22 வருடங்கள் சிறையில் அடைக்கச் செய்கின்றார்.மேலும் 22 வருடங்களின் பின்னர் சாமியா சித்திக் (ராணி முகர்ஜி) என்னும் வழக்கறியனரால் விடுதலை செய்யப்படுகின்றார்.பின்னர் தனது சொந்த ஊரான பஞ்சாப்பில் சாராவைச் சந்திக்கின்றார் வீர் பிரதாப் சிங். + + + + +மிட்னைட் எக்ஸ்பிரஸ் (திரைப்படம்) + +மிட்னைட் எக்ஸ்பிரஸ் (Midnight Express) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஆங்கிலத் திரைப்படமாகும். ஆலன் பார்க்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிராட் டேவிஸ், ராண்டி குவேட் மற்றும் பலரும் நடித்துள்ளனர். + +நாவல்படம் + +1970 களில் பில்லி ஹேய்ஸ் என்னும் அமெரிக்கர் துருக்கியில் உள்ள இஸ்தான்புலில் உள்ள காவல்துறையினரால் தீவிரவாதி என நினைக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றார். மேலும் அவரது உடலில் போதைப் பொருளை மறைத்துச் சென்ற காரணத்தினாலும் தீவிரவாதிகள் தாக்குதலை ஏற்படுத்தப்போவாதாக எச்சரிக்கையாக இருந்த காவல்துறையினர் இவரை நான்கு ஆண்டுகள் சிறையில் அடைத்தனர். சிறையிலிருந்து தப்பிச் செல்ல பெருதும் முயற்சிகள் மேற்கொள்ளும் ஹேய்ஸ் தப்ப முடியாமல் துருக்கி உயர் நீதிமன்றத்தினால் 1974 இல் முப்பது ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட தீர்ப்பைப் பெறுகின்றார். அங்கு பல கொடிய காட்சிகளையும் கொலைகளையும் பார்க்கும் இவர் சிறைக் காவலன் ஒருவனைக் கொன்று விட்டு காவல் புரிந்து வந்த ஒருவனின் உடையுடன் அச்சிறைச்சாலையிலிருரிந்து தப்பிச் செல்கின்றார். + + + + + +பருப்பு + +பருப்பு என்பது உணவாகப் பயன்படும் ஒரு தாவரப் பகுதி ஆகும். பருப்புவகைத் தாவரங்கள் ஓராண்டு அவரை வகைத் தாவரங்களாகும். அதிகளவு புரதத்தையும் அமினோ அமிலங்களையும் கொண்டிருப்பதால் பருப்பு ஒரு முக்கிய உணவாகும். விலங்கு உணவாகவும் பயன்படுகிறது. உலகில் அதிக பருப்பு உற்பத்தியும் அதிக இறக்குமதியும் இந்தியாவால் மேற்கொள்ளப்படுகிறது. + +பருப்புவகைத் தாவரங்களில் இருந்து பொதுவாக அவற்றின் உலர்விதைகளே (dry seeds) உணவாகப் பயன்படுத்தப்படும். சோயா அவரை, நிலக்கடலை போன்ற அவரைத் தாவரங்கள் எண்ணெய் உற்பத்தியில் பயன்படுவதனால், அவை பருப்புவகையாக கொள்ளப்படுவதில்லை. அதேபோல், Clover. Alfalfa போன்ற அவரைத்தாவரங்களின் இலைகள் நார்த்தீவனமாக, விலங்கு உணவாக பயன்படுத்தப்படுவதனால், அவையும் பருப்புவகையாகக் கொள்ளப்படுவதில்லை. மேலும் சில உலர் விதைகள் உணவாகப் பயன்படும் அவரைத் தாவரங்களின் நெற்றுக்காய்கள் (pods), உலர முன்பே மரக்கறியாகவும் சமையலில் பயன்படுத்தப்படும். + + + + + +தானியம் + +தானியம் என்பது புல் வகைத் தாவரங்களில் விளைவிக்கப்படும் (தாவரவியல் முறைப்படி இவை உலர் வெடியாக்கனி அல்லது காரியாப்சிஸ் வகைக் கனி ஆகும்) உணவுப்பொருட்களைக் குறிப்பதாகும். பெரும்பாலான தானியங்கள் முளை சூழ்தசை, முளைக்குறுத்து மற்றும் தவிடு (உமி) ஆகியவற்றைக் கொண்டுள்ளன. உலகளாவிய அளவில் தானிய மணிகள் மற்ற பயிர்களைக் காட்டிலும் பெருமளவு விவசாயம் செய்யப்படுகின்றன. இவை தவிர பிற தாவரக் குடும்ப வகைகளில் இருந்தும் தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தானியப் பயிர்கள் உண்ணத்தகுந்த அவற்றின் தானியங்கள் அல்லது விதைகளுக்காகப் பயிரிடப்படுபவை ஆகும். +இயற்கையான முழு தானியமானது அதிகளவு உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள், கார்பொஹைட்ரேட��டுகள், கொழுப்புச்சத்துக்கள், எண்ணெய்ச் சத்து, மற்றும் புரதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆனால் அதனை இயந்திங்கள் கொண்டு உமி நீக்கப்படும் போது மேற்கண்ட அனைத்துச் +சத்துக்களும் நீக்கப்பட்டு மீதமிருக்கும் முளை சூழ்தசையில் (Endosperm) கார்பொஹைட்ரேட்டுகள் மட்டுமே எஞ்சியிருக்கும். பல வளரும் நாடுகளில் தானியங்களானது அரிசி, கோதுமை, வரகு, சோளம் போன்ற வடிவில் தினசரி உணவாக உட்கொள்ளப் படுகிறது. வளர்ந்த நாடுகளில் தானிய நுகர்வானது மிதமான, மாறுபடக்கூடிய அளவிலும் உள்ளன. + +தானியத்திற்கான ஆங்கிலச் சொல் "செரல்" ("Cereal") என்பது அறுவடை மற்றும் வேளாண்மையின் கிரேக்கப் பெண் கடவுளான செரஸ் ("Ceres") என்ற பெயரில் இருந்து தோன்றியதாகும். + +இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அதியசயிக்கத் தக்க வகையில் தானியங்களின் உற்பத்தி அதிகரிக்கத் துவங்கியது.இதன் மூலம் நெல் மற்றும் கோதுமையின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கியது. 1940 களில் அறிமுகப்படுத்தப்பட்ட பயிர்செய்கை நுட்பங்கள் வேளாண் உற்பத்தியை பன்மடங்கு பெருக்கின. இந்த வேளாண் தொழில்நுட்பமும் அதனால் நிகழ்ந்த சமூக பொருளாதார அரசியல் மாற்றங்களும் பசுமைப் புரட்சி (Green Revolution) எனப்படுகிறது. பசுமைப் புரட்சி தொடக்கி வைத்த வேளாண் ஆராய்ச்சி கட்டமைப்புகள் தொடர்ந்தும் வேளாண் தொழில்நுட்பத்தில் பங்கெடுத்து வருகின்றன. பசுமைப் புரட்சியினால் உருவாக்கப்பட்ட உத்திகள் பட்டினியைத் தடுக்கவும், தானியங்கள் மொத்த உற்பத்தியை அதிகரிப்பதில் மிகவும் வெற்றிகரமாகவும் இருந்தன, ஆனால் ஊட்டச்சத்து தரத்திற்கு போதுமான அளவு பொருத்தமானதாக இல்லை. இந்த நவீன உயர் விளைச்சல் தானியங்களில் தரம் குறைந்த புரதங்கள் கொண்டவைகளான உள்ளன. அத்தியாவசிய அமினோ அமில குறைபாடுகளுடன், கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, மற்றும் சமச்சீர் குறைந்த அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற தர காரணிகள் இவற்றில் உள்ளன. + +ஒவ்வொரு தனித் தானியப் பயிரும் அதற்கே உரிய தனித்துவத்தைக் கொண்டுள்ளன. ஆயினும் அனைத்து தானியப் பயிரின் பயிரிடு முறையும் ஒரே மாதிரியாகவே உள்ளன. பெரும்பாலான தானியப் பயிர்கள் ஆண்டுத் தாவரங்களாகும். இதனால் ஒரு முறை நடவு செய்தால் ஒரு முறை மட்டுமே அறுவடை செய்ய முடியும். கோதுமை, வாற்கோதுமை, காடைக்கண்ணி, புல்லரிசி ஆகியவை குளிர்-கால பயிர்களாகும். இவை மிதமான காலநிலையில் நன்கு வளரக்கூடியவை மற்றும் வெப்பமான வெப்பநிலையில் (சுமார் 30 டிகிரி செல்சியஸ், ஆனால் இனங்கள் மற்றும் பல்வேறு வகைப் பயிர்களைப் பொறுத்து மாறுபடும்) வளரக்கூடிய கடினமான தாவரங்களாகும். வெப்பமான காலநிலைகளில் வளரும் தானியங்கள் மென்மையானவை மற்றும் வெப்பத்தன்மையை விரும்பக்கூடியன. பார்லி மற்றும் கம்பு ஆகியவை சைபீரியா போன்ற கடினமான குளிர் பிரதேசங்கள் மற்றும் பகுதி குளிர் பிரதேசங்களிலும் வளரக்கூடியது. + +கடந்த பல தசாப்தங்களாக பல்லாண்டு தானியப் பயிர்களை உற்பத்தி செய்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்த ஆர்வமானது பல்லாண்டு வாழ் தானியப் பயிர்களை உருவாக்கி அதன் மூலம் மண் அரிப்பு தடுப்பு, உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் , விவசாயிகளுக்கு இடுபொருள் செலவினத்தை மிச்சப்படுத்துதல் ஆகியவற்றில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இருப்பினும் இதற்கான ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் "சலினா கன்சாஸ்" எனுமிடத்திலுள்ள நில நிறுவனம் ("Land Institute") அதிக நல்ல மகசூல் தரக்கூடிய பயிர்களை உருவாக்க முயன்று வருகின்றன. + +கீழ்கண்ட அட்டவைணை மூலம் 1961, 2010,2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளின் வருடாந்திர தானிய உற்பத்தி ஒப்பீட்டளவு தொடர்பான விவரங்களை அறியலாம். . + +2012 ஆம் ஆண்டின் புள்ளிவிவரக் கணக்கீட்டின் படி சோளம், அரிசி, கோதுமை இவை மூன்றும் உலகலாவிய உற்பத்தியில் 89% கொண்டுள்ளன. ஆயினும் 1960 களில் இருந்த அளவை விட காடைக்கண்ணி மற்றும் கலப்பின புல்லரிசி (triticale) ஆகிய தானியப்பயிர்களின் பயன்பாடு குறைந்து வருகிறது. + +சூலை 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு வெளியிட்ட அறிக்ககையின் படி 2013 ல் உலக தானிய உற்பத்தி சாதனை அளவாக 2,521 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு சிறிது குறைந்து 2,498 மில்லியன் டன் என்ற அளவில் உள்ளது. + +பெரும்பாலான தானியப் பயிர்கள் நடவு செய்யப்பட்டு வளர்ந்து முதிர்ச்சியடைந்தவுடன் அதன் வாழ்க்கை சுழற்சி முடிவடைகிறது. தானியப் பயிர் செடியானது இறந்து பின் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடுகிறது. தாவர பாகங்கள் மற்றும் தானியம் அடங்கியுள்ள கனி காய்ந்தவுடன் அறுவடை தொடங்குகிறது. +வளர்ந்த நாடுகளில் தானியப் பயிர்களின் அறுவடை இயந்திரங்களைக் கொண்டே செய்யப்படுகிறது. அறுவடைக்குப் பயன்படும் இயந்திரங்கள் அறுத்தல்,கதிர் அடித்தல்,கொழித்தல், தூய்மைப்படுத்துதல், போன்ற அனைத்து செயல்முறைகளும் ஒருங்கே அமைந்ததாக உள்ளன. இத்தகைய நவீன வசதிகள் கொண்ட இயந்திரங்கள் மூலம் ஒரே மூச்சில் வயல்வெளிகளில் அறுவடை செய்யப்படுகின்றன.தானியங்களை கதிர் அரிவாள் கொண்டு கைகளால் அறுவடை செய்தல் போன்று தானியப் பயிர்களின் அறுவடை முறைகள் பலவாறு பயன்பாடடில் உள்ளன. + +சில தானியங்களில் அமினோ அமிலம், லைசின் போன்ற ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன. அதனால் தான் பல சைவ உணவுப்பிரியர்கள் சீரான சரிவிகித உணவைப் பெறுவதற்காக, பருப்பு வகைகளை தானியங்களுடன் சேர்த்துப் பயன்படுத்துகின்றனர். + +சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் தானியத் தயாரிப்புகளை ICS 67.060 ன் படி தர வரிசைப்படுத்தி வெளியிட்டுள்ளது. + +கூலம் பதினாறு என்று நற்றினை உரை கூறிப் பின் பதினெட்டெனவும் குறிப்பிடுகிறது. அவை; + + + + + +இந்தியத் தொலைக்காட்சி சேவைகள் + +இந்தியாவில் தொலைக்காட்சி சேவைகள் 1959 ஆம் ஆண்டு டெல்லியில் தொடங்கின. இது முதன்முதலாக கல்வி ஒளிபரப்பிற்காகத் தொடங்கப்பெற்றது. சின்னத்திரைகளின் நிகழ்ச்சிகள் 1980 முதலாக தொடங்கியது. முதன்முதலாக தேசிய ஒளிபரப்புச் சேவையை தூர்தர்சன் தொடங்கியதும் இதே கால கட்டமே ஆகும். இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு காப்பியங்களே முதன் முதலாக தொலைக்காட்சித் தொடர்களாக தயாரிக்கப்பட்டன. மேலும் இத்தொடர்கள் உலகில் அதிகமாக பார்க்கப்பெற்ற தொடர்களாகவும் புகழ் பெற்றிருந்தன. 1990கள் வரை அரசு தொலைக்காட்சி சேவைகள் மட்டுமே இந்தியாவில் ஒளிபரப்பப்பட்டு வந்தன. 1990கள் முதல் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சி சேவைகள் உருவாகின. தற்போது இந்தியாவெங்கும் கம்பிவழி தொலைக்காட்சி சேவைகளும், நேரடி ஒளிபரப்பு (DTH) சேவைகளும் அதிகம் உள்ளன. சில இடங்களில் இணையவழி தொலைக்காட்சி சேவைகளும் (IPTV) துவக்கப்பட்டுள்ளன. + + + + +சுவரஜதி + +சுவரஜதி ("ஸ்வரஜதி") அப்பியாச கானத்தைச் சேர்ந்த உருப்படிகளில் ஒன்றாகும். ஜதிகள் என்பது சொற்கட்டுக்கள். ஸ்வரஜதிகளில் ஸ்வரங்களுக்குரிய சாகி���்தியங்களும் ஜதி அமைப்பில் அமைந்துள்ளதால் ஸ்வரஜதி எனப் பெயர் பெறுகிறது. + +இதற்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற அங்க வித்தியாசங்கள் உண்டு. பல சரணங்களை உடையது. அனுபல்லவி இடம் பெறாத ஸ்வரஜதிகளும் உண்டு. இதன் சாகித்தியம் தெய்வத் துதியாக அல்லது, சிருங்கார சாகித்தியமாக அல்லது, பெரியோர்களைப் பற்றியதாக அமைந்திருக்கும். ஸ்வரஜதியில் சாகித்தியம் மட்டுமே பாடப் படும். + +சியாமசாஸ்திரிகளின் ஸ்வரஜதிகள் சபாகானத்திற்கும் ஏற்றவை. இது நாட்டியத்திற்கு உகந்த உருப்படியாகும். நாட்டியத்திற்காக ஏற்பட்ட ஸ்வரஜதிகளில் ஆங்காங்கே ஜதிகள் காணப்படும். + +என்னும் ஸ்வரஜதிகள் பிரபலமானவை. + + + + + +பதம் (இசை, நாட்டியம்) + +பதம் என்பது நாயகன், நாயகி, சகி பாவத்தில் அமைக்கப்பட்ட தெய்வீக உருப்படி ஆகும். இது முதலில் நாட்டிய சங்கீதத்தில் மட்டுமே உபயோகிக்கப்பட்டது. பின்பு அதன் இனிமை கருதி இசைக் கச்சேரிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது. +நாயகன் அல்லது நாயகி அல்லது சகி (தோழி)யால் பாடப்படுவதாகப் பதத்தின் சாகித்தியம் அமைந்திருக்கும். பெரும்பாலான பதங்கள் நாயகிகளாலும், சகிகளாலும் பாடப்பட்டவையாகவே உள்ளன. இது மதுர பாவத்தில் அமைந்த உருப்படியாகும். + +பதங்களில் அதாவது பதங்களின் சாகித்தியம் வெளிப்படையாகச் சிருங்காரப் பொருளைக் கொடுப்பினும் (சிற்றின்பக் கருத்து) ஆழமாக நோக்கினால் பெரிய தத்துவம் அடங்கியிருக்கும். அதாவது நாயகன், நாயகி, சகி என்னும் மூவரில் நாயகன் பரமாத்மா ஆகிய கடவுளையும், நாயகி ஜீவாத்மாவாகிய மனிதனையும், சகி ஜீவாத்மாவை பரமாத்மாவிடம் சேர்க்கும் ஞான குருவையும் குறிக்கும். + +சிருங்காரத்தின் அதி தேவதையாக சித்தரிக்கப்படும் கிருஷ்ணனை நாயகனாகக் கொண்டு அதிக பதங்கள் இயற்றப்பட்டுள்ளன. பச்சையான சிற்றின்பத்தை விபரிக்கும் பதங்களும், ஏளனப் பதங்களும், நகைச்சுவைப் பதங்களும் உண்டு. சில பதங்களில் பழமொழிகள், இராகங்களின் பெயர்கள், மருந்துகளின் பெயர்கள், ஆபரணங்களின் பெயர்கள் முதலியனவும் காணப்படுகின்றன. + +பதத்திற்கு பல்லவி, அனுபல்லவி, சரணம் என்னும் அங்கங்களும் உண்டு. 2, 3 சரணங்கள் இருப்பினும் பெரும்பாலும் சரணத்தின் பின் இரு அடிகளும் அனுபல்லவியின் தாதுவைப் பின்பற்றியிருக்கும்.""பாலனே வானிபை"" எனத் தொடங்கும் காம்போதி இராகப் பதம் அனுபல்லவியில் தொடங்குகிறது. + +பதத்தின் சாகித்தியம் பேச்சு வழக்குச் சொற்களால் ஆக்கப்பட்டிருக்கும். பதங்களை இயற்றுவதற்கு அலங்கார சாஸ்திர ஞானமும், கவித்துவமும், இராக ரஸ உணர்ச்சியும் இருப்பது மிக அவசியம். பதங்களில் சந்தோஷம், சலிப்பு, துக்கம் முதலிய உணர்ச்சிகளைக் கொண்டு சாகித்தியம் அமைந்திருக்கும். ஷேத்ரக்ஞர் சிருங்கார சாஸ்திரத்திலுள்ள ஒவ்வொரு அம்சத்தையும் தனது பதங்களின் மூலமாகச் சித்தரித்துள்ளார். பதங்களில் சங்கதிகள் அனேகமாகக் காணப்படாது. கடினமான பிரயோகங்கள் இருக்காது. இராகத்தின் ஸ்வரூபம் பதங்களில் சிறப்பாகக் காணப்படும். + +பதங்களில் நிரவல், கற்பனை ஸ்வரம் பாடுவது வழக்கமில்லை. தெலுங்குப் பதங்கள் கிருஷ்ணனை நாயகனாகவும், தமிழ்ப் பதங்கள் முருகனை நாயகனாகவும் கொண்டுள்ளன. + + + + + + +சனவரி 27 + + + + + + + +இந்திய தொலைக்காட்சி அலைவரிசைகள் பட்டியல் + + + + + + + + + + + + + + + + + +ஆங்கிலம் + +ஹிந்தி + +தமிழ் + +ஹிந்தி + +வங்காளம் + +மலையாளம் + +தமிழ் +தெலுங்கு + +ஆங்கிலம் + +ஹிந்தி + +வங்காளம் + +கன்னடம் + +மலையாளம் + +பஞ்சாபி + +தமிழ் + +தெலுங்கு + + + + + + +செப்டம்பர் 16 + + + + + + + + +வல்லிபுரம் வசந்தன் + +கப்டன் மில்லர் என அழைக்கப்படும் வல்லிபுரம் வசந்தன் (1 சனவரி 1966 - 5 சூலை 1987) தமிழீழ விடுதலைப் புலிப் போராளியும் முதலாவது கரும்புலியும் ஆவார். இவர் 1987 சூலை 5 அன்று யாழ்ப்பாணம் வடமராட்சிக் கோட்டத்தில் நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த இலங்கைப் படைத்தளம் மீதான தாக்குதலில் மரணமடைந்தார். + +யாழ்ப்பாணம், துன்னாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட வசந்தனுடன் கூடப் பிறந்தவர்கள் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் ஆவர். தந்தை பருத்தித்துறை, இலங்கை வங்கிக் கிளையில் பணி புரிந்தவர். வசந்தன் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்றார். + +இளம் வயதிலேயே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்த வசந்தன் மிக விரைவிலேயே கரும்புலிப் பிரிவில் இணைக்கப்பட்டார். இயக்கத்தில் இவர் மில்லர் என அழைக்கப்பட்டார். இலங்க�� இராணுவம் வடமாராட்சி மீதான தாக்குதலை ஆரம்பித்தபோது, வசந்தன் இயக்கத்திற்காகத் தனது உயிரைக் கொடுக்கத் துணிந்தார். 1987 சூன் 5 ஆம் நாளன்று வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட சுமையுந்து ஒன்றை கரவெட்டியில் அமைந்துள்ள நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் நிலை கொண்டிருந்த இராணுவத்தினரின் முகாம் மீது செலுத்தி வெடிக்க வைத்தார். இதன் போது 40 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மில்லரின் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகள் இராணுவத் தளம் மீது தாக்குதல்களைத் தொடர்ந்தனர். + +240 கரும்புலிகள் மில்லர் முதலாவது கரும்புலியாகவும், புலிகளின் முதலாவது தற்கொடைப் போராளி எனவும் புகழப்படுகிறார். கரும்புலிகள் நாள் ஆண்டு தோறும் சூலை 5 ஆம் நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது. இவரது நினைவாக தாக்குதல் நடைபெற்ற இடத்தில் 2002 ஆம் ஆண்டில் மில்லரின் சிலை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. + + + + + +காந்தரூபன் + +மேஜர் காந்தரூபன் (செப்டம்பர் 10, 1971 - ஜூலை 10, 1990; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக் கொண்ட யோகராசா கோணேஸ்வரன் தமிழ் விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். + +கடற்கரும்புலியான இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார். + +இவரது வேண்டுகோளுக்கு அமைய காந்தரூபன் அறிவுச்சோலை என்ற சிறுவர் இல்லம் 1993 நவம்பர் 13ம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரான்ஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பினரின் ஏற்பாட்டில் மேஜர் காந்தரூபன் நினைவாக வருடம்தோறும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. + +முதாலாவது கடற்கரும்புலிகளில் கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோருடன் மேஜர் காந்தரூபனும் ஒருவராவார். இவர்கள் மறைந்த நாளின் 25 ஆம் ஆண்டு தினம் 10 சூலை 2015 அன்று நினைவுக்கூறப்பட்டது. + + + + +வினோத் (போராளி) + +கப்டன் வினோத் (19/08/1970 - 10/07/1990; வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) எனும் இயக்கப்பெயரைக்கொண்ட வேலுப்பிள்ளை திலகராசா தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். + +கடற்கரும்புலியான இவர் 10-07-1990 அன்று வல்வெட்டித்துறை கடலில��� சிறீலங்கா கடற்படைக் கப்பல் 'எடித்தாரா' மீதான கரும்புலித் தாக்குதலில் கொல்லப்பட்டார். முதாலாவது கடற்கரும்புலிகளில் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ் ஆகியோருடன் கப்டன் வினோத்தும் ஒருவராவார். இவர்களது 25 ஆம் ஆண்டு நினைவு நாள் அண்மையில் கடைப்பிடிக்கப்பட்டது. + + + + +தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை + +தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழி இராணுவமாக பரிமாணிக்கும் ஒரு கொரிலா இயக்கம். த.வி.பு களிடம் இறுகிய இராணுவ அதிகாரப் படிநிலை இன்னும் ஏற்படவில்லையெனினும், அது உண்டு. அதாவது ஒரு தரத்தில் இருந்து இன்னொரு தரத்துக்கு முன்னேறுவது தற்போதைய சூழலில் ஒவ்வொரு சாதாரண போராளியாக்கும் சாத்தியமானதே. இந்நிலை ஆக உயர்மட்ட அதிகார வட்டத்தை தவிர்த்து எனலாம். + +தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ அதிகார படிநிலை தரங்களை பின்வருமாறு வரிசைப்படுத்தலாம். + + + + + +மறுபக்கம் + +மறுபக்கம் "(The Other Side)" (1990) K.S. சேது மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் நான்கு தேசிய விருதுகளைப்பெற்றது. மேலும் 1990 ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களுக்கான இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது வழங்கப்பட்டது. + + + + +தமிழர் சமையல் + +தமிழர் சமையல், பல நூற்றாண்டுகளாக தென் இந்தியா, இலங்கை மற்றும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட, உலகின் சிறந்த சமையல்களில் ஒன்றாகும். இயற்கையுடனும் காலநிலைகளுடனும் இணைந்த ஒரு கிராமிய சூழலிலேயே இச்சமையல் வளர்ந்தது. பலவகை உணவுகளை சுவையுடன் சமைக்க விருந்தோம்ப தமிழர் சமையற்கலை வழிசொல்கின்றது. + +பல்வகை மரக்கறிகள் (காய்கறிகள்), சுவையூட்டும் நறுமணம் தரும் பலசரக்குகள், கடலுணவுகள் தமிழர் சமையலில் இன்றியமையா இடம் பெறுகின்றன. சோறும் கறியும் தமிழரின் முதன்மை உணவாகும். கறிகளில் பலவகையுண்டு; எடுத்துக்காட்டுக்கு, மரக்கறிக் குழம்பு, பருப்பு, கீரை, வறை, மசியல், மீன் கறி என்பன. பொதுவாக, தமிழர் உணவுகள் காரம் மிகுந்தவை. தேங்காய், மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம், உள்ளி, இஞ்சி உட்பட பல்வகை பலசரக்குகள் கறிகளுக்கும் பிற பக்க உணவுகளுக்கும் சேர்க்கப்படுவது வழக்கம். + +பழந்தமிழ் இலக்கியத்தில் உணவு சமைக்கும் முறைகளைக் கூறும் நூல் "மடை நூல்" என அழைக்கப்படுகிறது. அதனைப் பற்றிய செய்திகள் சிறுபாணாற்றுப்படை, மணிமேகலை, பெருங்கதை முதலிய நூல்களில் கூறப்படுகின்றன. காலத்திற்கும், நிலத்துக்கும் ஏற்ற உணவுகளை அந்நூல்களில் அறிந்துகொள்ளலாம். சீவக சிந்தாமணியில் முத்தியிலம்பகத்தில் "இருது நுகர்வு" என்னும் பகுதியில் சில பெரும்பொழுதிற்குரிய உணவு வகைகள் கூறப்பட்டுள்ளன. + +தமிழ் இலக்கிய ஆதாரங்களைக்கொண்டு அ. தட்சிணாமூர்த்தி தனது "தமிழர் நாகரிகமும் பண்பாடும்" என்ற நூலில் "பண்டைய தமிழரின் உணவு" பற்றி குறிப்புகள் தந்துள்ளார். வாழ்த நிலத்துக்கேற்பவும் குலத்துக்கேற்பவும் பண்டைய தமிழரிடையே உணவுகள் வேறுபடுகின்றன. எனினும், அனேக தமிழர்கள் சோறும், மரக்கறியும், புலாணுவும், மதுவும் விரும்பியுண்டனர் என்பது தெரிகின்றது. நெற்சோறு, வரகுச்சோறு, வெண்ணற்சோறு, நண்டுக் கறி, உடும்புக் கறி, வரால்மீன் குழம்பு, கோழியிறைச்சி வற்றல், பன்றியிறைச்சி, முயல், ஈயல், மாங்கனிச் சாறு, மாதுளங்காய்-மிளகுப்பொடி-கறிவேப்பிலை பொரியல், ஊறுகாய் என தமிழ்நாட்டில் வாழ்ந்த பலதரப்பட்டோர் உண்ட உணவுகளை தமிழ் இலக்கிய சான்றுகளோடு அ. தட்சிணாமூர்த்தி விபரிக்கின்றார். + +"கடுகு இட்டுக் காய்கறிகளை தாளிப்பது", "பசுவெண்ணையில் பொரிப்பது", "முளிதயிர் பிசைந்து தயிர்க் குழம்பு வைப்பது", கூழைத் "தட்டுப் பிழாவில் ஊற்றி உலரவைப்பது", "மோரில் ஈயலை ஊறப்போட்டு புளிக்கறி சமைப்பது" போன்ற பழந்தமிழர் சமையல் வழிமுறைகளையும் அ. தட்சிணாமூர்த்தி சுட்டியுள்ளார். மேலும், தென்னைக் கள்ளு, பனங்கள்ளு, வீட்டில் சமைத்த "தோப்பி" என்ற ஒருவகைக் கள்ளு ஆகியவற்றை பழந்தமிழர்கள் விரும்பி உண்டனர் என்கிறார். + +"பார்ப்பார் சங்க நாளில் புலால் உண்டார் என்றுகோடல் சரியன்று" என்று அ. தட்சிணாமூர்த்தி சுட்டியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது. + +தமிழர்கள் கைகளை நீரில் கழுவிய பின்னர், ஒரு கையினால் (பொதுவாக வலதுகை) உணவு உண்ணும் வழக்கம் கொண்டவர்கள். இது கரண்டி, முள்ளுக்கரண்டி, கத்தி போன்ற கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும் மேலைநாட்டு வழக்கத்துக்கும் குச்சிகள் ("chop sticks") போன்ற கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும் சீன வழக���கத்துக்கும் மாறுபட்ட வழக்கம் ஆகும். தமிழர்கள் விரும்பி உண்ணும் சோறு, இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகளையும் கறிகளுடன் கைகளால் உண்ணுவதே இலகு. குறிப்பாக கறிகளை ஏற்ற அளவுக்கு சேர்த்து உண்ணுவதற்கு கைகள் பயன்படுகின்றன. தற்காலத்தில், கரண்டி போன்ற கருவிகளை பயன்படுத்தி உணவுண்ணும் மேற்கத்திய முறையும் தமிழர்களிடம் பரவிவருகின்றது. + +கிராமப் புறங்களில் தரையில் அல்லது தாள் இருக்கைகளில் அமர்ந்து உணவு உண்ணுதலே வழக்கம். உணவு உண்ணும்போது பேசுவதை நற்பழக்கமாகக் கருதுவதில்லை. + + +விருந்துகளில் அல்லது அன்னதானங்களில் வாழையிலையில் உணவுண்பது தமிழர் வழக்கம். இந்தியாவிலும் இலங்கையிலும் வாழையிலை இலகுவாக பெறக்கூடிய மலிவான பொருள் ஆகையால் பலருக்கு உணவளிக்கும்பொழுது வாழையிலையை பயன்படுத்தியிருக்கலாம். நடுத்தர உணவகங்களில் பாத்திரங்களின் மேல் அளவாக வெட்டப்பட்ட வாழை இலையை வைத்து உணவு பரிமாறுவது உண்டு. இப்பயன்பாடு, பாத்திரங்களில் தூய்மை காக்கவும், சுத்தப்படுத்துவதற்கான நீரை சேமிக்கவும் உதவுகிறது. சிற்றுண்டிகளை தட்டில் பரிமாறும் உணவகங்கள் கூட சோற்றை வாழையிலையில் பரிமாறுவதே வழக்கம். உணவகங்களில் பாத்திரங்களின் தூய்மையை பற்றி ஐயமுறுவோர், வாழையிலையில் உண்ண விரும்புவதும் உண்டு. வாழையிலையில் கைகளால் உணவுண்ணுவது உணவுக்கு சுவைகூட்டும் என்பது பலரது எண்ணமாக இருக்கிறது. இது தவிர, பிற சாதியினருக்கு தாங்கள் பயன்படுத்தும் தட்டுகளில் உணவு பரிமாற விரும்பாத சிலர், நாசூக்காக வாழையிலையை பயன்படுத்துவதும், இதே காரணத்துக்காக உணவகங்களில் வாழையிலை உணவுண்ண விரும்புவதும் உண்டு. சில மலிவு விலை உணவகங்களில் தேக்க இலையிலும் தைக்கப்பட்ட பிற மர இலைகளிலுமோ உணவு பரிமாறப்படுவதுண்டு. + +தமிழர்கள் பெரும்பாலும் விருந்தோம்பலின் போது வாழையிலையில் தான் பரிமாறுவர். அவ்வாறு பரிமாறும் போது ஒரு சீரான உணவு பரிமாறும் முறையை கடைபிடிக்கின்றனர். அதாவது வாழையிலை எவ்வாறு பந்தியில் வைக்கவேண்டும் என்பதிலிருந்து எவ்வகையான உணவை வாழையிலையில் எங்கு வைக்க வேண்டும் என்பதுவரை அனைத்திற்கும் சில வழிமுறைகளை வைத்துள்ளனர். அவை வருமாறு + + + + + +இலையில் ஒவ்வொருவரும் ஒரு பலகாரத்தை பரிமாறிக் கொண்டு வருவார்கள். இப்படத்தில் உள்ளப்படி இல��யில் வைக்கவேண்டிய பலகாரப் பட்டியல் வருமாறு. + +பொதுவாக, தமிழர்கள் காலை வேளைகளில் தேநீர் அல்லது காப்பி அருந்தும் வழக்கம் உடையவர்கள். சிலர் நீர் அல்லது பழரசங்கள் அருந்தும் வழக்கமும் உடையவர்கள். காலை உணவாக இட்லி, தோசை, இடியப்பம் போன்றவற்றை சாம்பார், சட்னி போன்றவற்றுடன் உண்பர். அடிமட்ட, நடுத்தர குடும்பங்களில் காலையில் சோறுண்பவர்களும் உளர். பழைய சோறு உண்ணும் வழக்கமும் தமிழர்களிடம் உண்டு. உணவகங்களில் காலையில் வெண் பொங்கல், வடை, தோசை, இட்லி, பூரி போன்றவை கிடைக்கும். + +நன்பகல் உணவே தமிழர்களின் முதன்மையான உணவு ஆகும். சோறும் கறியுமே தமிழரின் முதன்மையான நன்பகல் உணவாக விளங்குகிறது. பலவித பக்க உணவுகளும் மதிய வேளைகளில் சேர்த்து உண்ணப்படுவதுண்டு. இரசம், தயிர், மோர் போன்ற நீர்ம உணவுகளும் மதிய உணவில் சேர்த்து உண்ணப்படுகின்றது. + +பிற்பகலிலும் மாலையிலும் சிற்றுண்டிகளும் பழங்களும் உண்ணும் வழக்கமும் பலருக்கு உண்டு. தேநீர் கடைகள், வெதுப்பகங்கள் ஆகியவற்றில் இந்நேரத்தில் வடை, பஜ்ஜி, போண்டா ஆகியவை விரும்பி வாங்கி உண்ணப்படுகின்றன. + +இரவு உணவாக வீடுகளில் சோறு, தோசை, பிட்டு, இடியப்பம், பூரி, சப்பாத்தி, போன்றவை உண்ணப்படுகின்றன. உணவகங்களில் பரோட்டா போன்ற உணவுகளும் கிடைப்பதுண்டு. + +பல ஏழைத் தமிழர்கள் ஒருவேளை உணவுக்கே அவலப்படுகின்றார்கள். "வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவராகக் கருதப்படும், 35 சதவீத மக்கள் (தமிழ்நாடு) பெரும்பாலும் ஒரு நேர உணவையே முழுமையாக உண்பதாக கொள்ளலாம். இவர்கள் 2200 கலோரிக்கும் குறைவாக ஊன்பதாகக் கணக்கிடுவர்". ஈழத்தில் அகதிகள், இடம்பெயர்ந்தவர்கள், போரினால், அடக்குமுறைகளினால் பாதிக்கப்பட்டவர்கள், மலையகத் தமிழர்கள் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளனர். + +தமிழ் நாடும் தமிழீழமும் நீண்ட கடற்கரையை கொண்டுள்ளமையால், தமிழர்கள் உணவில் கடலுணவு முக்கிய பங்கு வகிக்கின்றது. மீன், இறால், நண்டு, கணவாய், மட்டி ஆகியவை தமிழர்களால் விரும்பி உண்ணப்படுகின்றது. + +தமிழர்கள் கோழி, ஆடு, முயல், உடும்பு, மான், காடை, மீன் போன்ற உணவுகளை உண்ணும் வழக்கம் உடையவர்கள். கோயில்களில் விலங்குகளை (ஆடு, கோழி) காவு கொடுத்து அவ்விறைச்சியை பங்கு போட்டு உண்ணும் வழக்கம் சில கிராமங்களில் உண்டு. மாடு உண்பதை இந்து சமயத்தை பின்பற்றும் தமிழர்கள் பெரும்பாலும் தவிர்க்கின்றார்கள்; ஆனால், புலம்பெயர்ந்த நாடுகளில் இந்து சமயத்தை பின்பற்றும் சில தமிழர்களால் மாடும் உண்ணப்படுகின்றது. + +தமிழர் சமையலில் மரக்கறி உணவு சிறப்பிடம் பெறுகின்றது. பெரும்பாலான தமிழர்கள் சைவ சமயத்தை பின்பற்றுவதால், அச்சமயத்தில் மரக்கறி உணவு பரிந்துரைக்கப்படுவதால் மரக்கறி உணவு தமிழர் சமையலில் ஒரு நீண்ட வரலாற்றையும் விரிவடைந்த ஒரு பங்கையும் வகிக்கின்றது. + + + + + + + + + + +மௌன ராகம் + +மௌன ராகம் பிரபல இயக்குனரான மணிரத்தினத்தின் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். + +நாடகப்படம் / காதல்படம் + +பெற்றோர்களின் வற்புறுத்தலுக்கு ஏற்ப சந்திரகுமாரை (மோகன்) மணந்து கொள்ளும் திவ்யா (ரேவதி), தனது காதலன் கார்த்திக் ஐ இழந்த பழைய நினைவுகளை மறக்க முடியாது தனது கணவரிடமிருந்து விலகிச்செல்ல விவாகரத்துக் கேட்கின்றார். அவரின் விருப்பத்திற்கேற்றாற் போல விவாகரத்துப் பெற்றுத் தருகின்றார் சந்திரகுமார். நீதிமன்றத்தின் தீர்ப்பின் பேரில் ஒரு ஆண்டு காலத்திற்கு ஒன்றாக வாழ்கின்றனர். இக்கால கட்டத்தில் இருவருக்கும் ஏற்படும் காதல் இருவரையும் ஒன்று சேர்க்கின்றது. + + + + +மயிலாடுதுறை + +மயிலாடுதுறை எனும் இந்த ஊர் வடமொழியில் மயூரம் என்றும், கௌரி மாயூரம் என்றும் அழைக்கப்பட்டு பிற்காலத்தில் மாயவரம் அல்லது மாயூரம் என்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வூர் இந்தியாவில், தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. + +சிவனிடம் பெற்ற சாபம் காரணமாக இந்த ஊரில் ஓடும் காவிரி நதியின் தென்புறத்தில் உமையவள் மயிலுருவில் தவமியற்றுகிறாள். தவத்தை மெச்சிய சிவன் ஆண் மயிலுருகொண்டு பெண்மயிலான பார்வதியுடன் ஆடிய காரணத்தால் மயிலாடிய காவிரித்துறை என்று இத்தலம் பெயர் பெற்றுள்ளது. அரசாங்க ஏடுகளில் சில பல ஆண்டுகளுக்கு முன் வரை மாயவரம் என்றே இருந்த இவ்வூர், திருமுறைகளில் “மயிலாடுதுறை” என காணப்படுவதை சுட்டிக்காட்டி “மயிலாடுதுறை” என்று எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழக அரசால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +தமிழக டெல்டாவின் முக்கிய நகரங்களான திருவாரூர், கு��்பகோணம், சிதம்பரம்,மன்னார்குடி, நாகை ஆகிய நகரங்களின் பிரதான சந்திப்பாக இந்த ஊர் விளங்குகிறது. +இந்த ஊரிலிருந்து மேற்குறிப்பிட்ட நகரங்கள் அனைத்தும் தலா ஒன்றரை மணி பயணத்தொலைவில் அமைந்துள்ளன. + +நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் மயிலாடுதுறையும் ஒரு நகராட்சி ஆகும். +பூம்புகார், சீர்காழி, மயிலாடுதுறை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதியாக மயிலாடுதுறை விளங்குவதோடு தமிழகத்தின் பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் பொழுது அளவில் சிறிய நகரமாய் இருந்தாலும் உலக அளவில் அறியபட்டுள்ள நகரமாக இது விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. + +குறிப்பிட்டு சொல்லும்படியான தொழிலகங்கள் இவ்வூரில் இல்லையென்றாலும் மக்களின் முதன்மை தொழிலாக விவசாயமே இருந்துவருகிறது. + +நகரின் முக்கிய சுற்றுபுற ஊர்களான குத்தாலம், மங்கைநல்லூர், வைத்தீஸ்வரன்கோயில், செம்பனார்கோயில் உள்ளிட்ட சிறுநகர மக்களும் அப்பகுதிகளைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்களும் வேளாண்மையையே முதல் தொழிலாக மேற்கொள்ளுகின்றனர். காவிரியில் நீர்வரத்து இல்லாத போதும் நிலத்தடிநீர் பாசனம் கைகொடுப்பதால் டெல்டா வட்டாரத்தில் உள்ள ஊர்களில் இன்றும் முப்போகம் விளையும் பகுதியாக இது திகழ்கிறது. + +அதேபோல நகர்புறத்தில் வசிக்கும் மக்களில் பலர் அரசு பணியாளர்களாக இருப்பதோடு மற்றவர்கள் தனியார் நிறுவனங்களிலும் பணி புரிகின்றனர். +இவர்கள் தினம் அருகில் உள்ள நகரங்களுக்கு வேலை நிமித்தமாக பேருந்து அல்லது இரயில் மார்க்கமாக சென்று வருவதும் குறிப்பிடத்தக்கது. + +மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதி மக்களின் கல்வியறிவு வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய பெருமை நகரிலிருந்து குறிப்பிடும் தொலைவில் அமைந்த ஞானாம்பிகை கல்லூரி, தருமபுரம் ஆதினக்கலை கல்லூரி, ஏ.வி.சி கல்லூரிகள் ஆகிய கல்வி நிறுவனங்களைச் சாரும். +இந்த மூன்று கல்வி நிறுவனங்களும் பாரம்பரிய பெருமை கொண்டதோடு மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதில் இருந்தும் இன்றைய நாட்களில் மாணவர்கள் வந்து பயிலும் வண்ணம் சிறப்பு எய்தியுள்ளன. பள்ளிகளை பொறுத்த வரை தேசிய மேல்நிலை பள்ளி, நகராட்சி மேல்நிலை பள்ளி, +புனித பால்கு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் பாரம்பரிய சிறப்பு கொண்டவையாகவ���ம், ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்ட கல்வி போதிப்பதிலும் சிறப்புற்று விளங்குகின்றன. + +மயிலாடுதுறை நகராட்சியாக விளங்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுவட்டார ஊராட்சிகளின் ஒன்றியமாகவும் திகழ்கிறது. மேலும் குற்றவியல் நீதிமன்றங்கள், அமர்வு நீதி மன்றங்கள், அரசு பெரியார் மருத்துவமனை, அனைத்து மகளிர் காவல் நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய அரசு நிறுவனங்கள் இங்கு இயங்கி வருகின்றன. + +நகரத்தின் முக்கிய வீதிகளாக வண்டிகார தெரு,பட்டமங்கலத் தெரு, கச்சேரி சாலை, மகாதானதெரு, கண்ணாரத்தெரு, துலாக்கட்டம்,தருமபுரம் சாலை, தரங்கை சாலை, பெரிய கடைதெரு, சின்னகடைத்தெரு, காந்திஜி சாலை, கூறைநாடு, மயூரநாதர் பிரகார வீதிகள் உள்ளிட்ட தெருக்கள் அமைந்துள்ளன. + +நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை இந்த ஊரில் நடைபெறும் “கடை முழுக்கு” திருவிழாவிற்கும் விடப்டுகிறது. ஐப்பசி மாதம் முழுவதும் மயூரநாதசுவாமி ஆலயத்தில் நடைபெறும் திருவிழாக்களின் பிரதான நிகழ்வான “கடைமுக தீர்த்தவாரி”முழுக்கு என்ற பெயரில் வழங்கப்படுகிறது. துலா மாதம் முழுவதும் காவிரியில் அனைத்து தீர்த்தங்களும் சங்கமிப்பதாக கருதப்படுவதால் முப்பது நாளும் தீர்த்த வாரி நடைபெறும். மாதத்தின் கடைசி பத்து நாட்களில் மட்டும் மயூரநாத சுவாமி சன்னதியில் மட்டுமல்லாது நகரின் அனைத்து சிவாலயங்களில் இருந்தும் சுவாமிகள் துலாகட்டம் என்னும் காவிரி படித்துறைக்கு எழுப்பபட்டு தீர்த்தவாரி செய்யப்படும். இதில் ஐப்பசி மாதத்தின் முப்பதாம் நாளான இறுதிநாளன்று மக்கள் அதிகமாக நீராடுவதால் இது “கடை முழுக்கு” எனும் பெயரில் கோலாகலமாக இந்நகரில் கொண்டாடப் படுகிறது. இந்நாட்களில் புதியபேருந்து நிலையம் அருகில் அமைக்கப்படும் வீட்டு உபயோக பொருட்காட்சி “முழுக்குகடை” என்ற பெயரில் இரண்டுமாத காலம் நீடிக்கிறது. + +மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர், கூறைநாடு சாந்தநாயகி உடனுறை புனுகீசுவரர், சித்தர்காடு திரிபுரசுந்தரி உடனுறை பிரும்மபுரீசுவரர், மூவலூர் மங்களநாயகி சௌந்தரநாயகி உடனுறை மார்க்கசகாய சுவாமி, சோழம்பேட்டை அறம்வளர்த்த நாயகி உடனுறை அழகியநாதர், துலாக்கட்டம் காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர், அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் ஆகிய திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. + +“ஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகாது” என்ற சிறப்பு சொலவடையை பெற்றுள்ள இந்நகரம் +மாயவரம் பில்டர் காப்பி, கைமுறுக்கு, காளியாகுடி ஹோட்டல் போன்றவை இன்றளவும் உலக தமிழர்கள் சிலாகிக்கும் ஒன்றாகும் + +நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மயிலாடுதுறையில் 2007ல் சிந்துவெளி எழுத்துக்கள் பொறித்த கற்கோடரி ஒன்று கிடைத்துளது. இதிலிருந்து சிந்துவெளி மக்களும் தமிழரும் ஒரே மொழியையோ அல்லது ஒரே தாய்மொழியிலிருந்து பிரிந்த கிளை மொழிகளையோ பேசியதாக தெரிகிறது என்பது ஐராவதம் மகாதேவன் கருத்து.[8] இதன் காலம் கி.மு. 2000 - கி.மு. 1500 ஆகும். + +நகரில் மயூரநாதர், ஐயாறப்பர், காசிவிஸ்வநாதர், மேதாதட்சிணாமூர்த்தி மூர்த்தி ஆலயம் போன்ற சிவாலயங்களோடு கீழ்காணும் ஆலயங்கள் நகரை சுற்றி அமைந்துள்ளன. + + + +அருகிலுள்ள நகரங்கள் + + + + + +செப்டம்பர் 17 + + + + + + + +ஜதீசுவரம் + +ஜதீஸ்வரம் என்பது நாட்டியத்திற்காக உருவாக்கப்பட்ட உருப்படி ஆகும். ஜதிக் கோர்வைகளை ஆதாரமாகக் கொண்டு அமைந்த உருப்படி ஆகையால் இதற்கு ஜதீஸ்வரம் என்ற காரணப் பெயர் ஏற்பட்டது. இவ்வுருப்படிக்கு சாகித்தியம் இல்லை. ஸ்வரூபமாக அமைந்த உருப்படியாதலால் "சுரபல்லவி" என்றும் அழைக்கப்படும். + +இராகமாலிகையாக அமைந்த ஜதீஸ்வரங்களும் உண்டு. சௌக்ககாலத்திலும், மத்திம காலத்திலும் அமைந்த ஜதீஸ்வரங்களும் உள்ளன. + +நாட்டியத்ய கச்சேரியில் அலாரிப்பு ஆடிய பின்பு ஜதீஸ்வரம் ஆடப்படும். ஜதீஸ்வரத்தை இசை கற்கும் மாணவர்கள் பயிலுவதால் ஸ்வர, லய, ஞானம் ஏற்படுகிறது. ஜதீஸ்வரத்தில் பல்லவி, அனுபல்லவி என்னும் அங்கங்களுடன் பல சரணங்களையும் கொண்டிருகும். + + + + + +நளாயினி தாமரைச்செல்வன் + +நளாயினி தாமரைச்செல்வன் (பி. ஆகஸ்ட் 5, 1968, சிறுப்பிட்டி]). +ஈழத்து சிறுகதை எழுத்தாளர், கவிஞர். நூல் விமர்சகர். + +யாழ்ப்பாணம் சிறுப்பிட்டியைப் பிறப்பிடமாக கொண்ட இவர், சுண்டிக்குளி மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். 1990 இல் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைப் பிறப்பிடமாக கொண்ட தாமரைச் செல்வனை திருமணம் புரிந்தார். ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளார்கள். தற்சமயம் சுவிஸ் நாட்டில் வசித்து வருகின்றார். + + + + + + +வைரம் + +வைரம் ("Diamond") என்பது படிக நிலையில் உள்ள கரிமம். பட்டை தீட்டிய வைரம் ஒளியை அழகோங்க சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது. வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் வைரத்தின் உறுதி எண் 10 ஆகும். இவ்வுறுதியின் அடிப்படையிலேயே வைரத்திற்கு தமிழ்ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. இதன் மிகுகடினத்தன்மை காரணமாக தொழிலகங்களில் அறுத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது. அறிவியல் அறிஞர்கள் பல்வேறு முறைகளில் செயற்கையாகவும் வைரம் செய்து காட்டியுள்ளனர். இவைகள்தாம் பெரும்பாலும் தொழிலகக் கருவிகளில் பயன்படுகின்றன. ஆபிரிக்கக் கண்டத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே வைரம் பெருமளவிற் காணப்படுகிறது. கனடா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26,000 கிலோ கிராம்) வைரம் அகழ்ந்தெடுக்கப்படுகிறது. + +பழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்துதான் கிடைத்ததாகவும். தற்போது உலகில் 96% வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கருகிலுள்ள சம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. இவை சுரங்கங்களிலல்லாமல் ஆற்றோரங்களிலும் ஆற்று மணலிலும் கிடைக்கின்றன. ஆற்று வைரங்களே சிறந்தவை ஆகும். சுரங்கங்களில் ஒருவகை நீலநிற மண்ணில் வைரம் காணப்படுகிறது. இந்த மண் மேலே கொண்டுவரப் பட்டுக் காற்றிலும் வெயிலிலும் உலர்ந்து தூளாகிறது.கரியும் மணலும் சேர்ந்து சிலிக்கன் கார்பைடைகளில் வைரம் காணப்படுகிறது. வைரங்கள் வெண்மையாக நிறமற்றுத்தான் உள்ளன. வைரங்களின் மூலம் எக்ஸ்-கதிர் ஒளி செல்வதில்லை. + +வைரங்கள் முதலில் இந்தியாவில் கண்டறிந்து தோண்டி எடுக்கப்பட்டதாக கருதப்படுகிறது. வைரக்கல்லின் வண்டல் படிவு பென்னாறு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுப் படுகைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (குறைந்தது 3,000 ஆண்டுகள்) இருந்ததாக அறியப்படுகிறது. + +வைரங்கள் பண்டைய இந்தியாவில் மத சின்னமாக பயன்படுத்தியதை அடுத்து ராசிக்கல்லாக கருதப்படுகிறது. வேலைப்பாட்டு கருவிகளில் அவற்றின் பயன்பாடு ஆரம்பகால மனித வரலாற்றில் இருந்தே இருக்கிறது. +அதிகரித்த தேவை, மேம்படுத்தப்பட்ட பட்டை தீட்டும் முறை மற்றும் பாலிஷ் நுட்பங்கள், உலக பொருளாதாரத்தில் வளர்ச்சி, புதுமையான மற்றும் வெற்றிகரமான விளம்பர பிரச்சாரங்களினால் வைரத்தின் புகழ் 19 ஆம் நூற்றாண்டு முதல் உயர்ந்துள்ளது. + +1772 ஆம் ஆண்டில், அந்தோனி லெவாய்சர் ஆக்சிஜன் உள்ள சூழலில் உள்ள ஒரு வைர கல்லின் மீது சூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழ செய்து, கார்பன் டை ஆக்சைடு மட்டுமே உருவாவதை காட்டி வைரமும் ஒரு வகை கார்பன் தான் என்று நிரூபித்தார். பின்னர் 1797 இல், ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும் போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்றதை விளக்கி இந்தப் பொருட்களின் இரசாயன சமானத்தை நிறுவினார். + +வைரங்களின் மிகப் பிரபலமான பயன்பாடு அலங்காரம். பழங்காலத்தில் இருந்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை ஒளியை சிதறல் அடைய செய்து நிறமாலை வண்ணங்களை வெளிப்படுத்துவது வைரத்தின் முதன்மைப் பண்பாகும். வைரத்தின் பொதுவான நான்கு பண்புகள் காரட், வெட்டு, நிறம், மற்றும் தெளிவு ஆகும் ஒரு பெரிய, குறைபாடற்ற வைரம் பாரகான் என அறியப்படுகிறது. + +வைரம் விதிவிலக்கான பண்புகளை கொண்டிருப்பதால் அதற்கு பல பயன்கள் உண்டு. குறிப்பிடத்தக்கவை அதன் தீவிர கடினத்தன்மை மற்றும் வெப்பம் கடத்தும் தன்மை (900–) , +அத்துடன் பரந்த பட்டை இடைவெளி மற்றும் உயர் ஒளி சிதைவு . 1700 செல்சியஸ் (1973 கெல்வின் / 3583 F}}) க்கு மேல் வெற்றிடம் அல்லது ஆக்சிஜன் இல்லாத சூழலில், வைரம் கிராஃபைட்டாக மாறுகிறது ; இயற்கையில் வைரத்தின் அடர்த்தி 3.15g/cm3 இருந்து 3.53 g/cm3 வரை இருக்கும். தூய வைரத்தின் அடர்த்தி 3.52 g/cm3 இருக்க வேண்டும். வைரத்தில் உள்ள கார்பன் அணுக்களின் இரசாயனப் பிணைப்பு கிராஃபைட்டை ���ிட பலவீனமாக உள்ளது. கிராஃபைட்டில், அணுக்கள் ஒன்றன் மீது ஒன்று எளிதாக சரிய முடியும். அதனால் அதன் ஒட்டுமொத்த கட்டமைப்பு பலவீனமாக உள்ளது. அதேசமயம் வைரம் ஒரு நெகிழ்வற்ற முப்பரிமாண அணி அமையப்பெற்றுள்ளது. + +ஒரு பொருளின் கடினத்தன்மை அதன் அரிப்பு எதிர்ப்புத் தன்மையை கொண்டு வரையறுக்கப்படுகிறது. கடினத்தன்மையின் அளவுக்கோலான மோவின் அளவுகோலில், வைரம் 10 ( மிகவும் கடினமான பொருள் ) எனக் குறிப்பிடப்படுகிறது. வைரத்தின் கடினத்தன்மை பழங்காலத்தில் இருந்தே அறியப்படுகிறது. + +வைரத்தின் கடினத்தன்மை அதன் தூய்மை, படிக பூரணம், நோக்குநிலை ஆகியவற்றை பொறுத்தது. ஒரு சில வகை வைரங்களை போரான் நைட்ரைடு போன்ற பிற பொருட்களை கொண்டு வெட்ட முடியும். ஆனால் கடினமான வைரங்களை மற்ற வைரம் மற்றும் நானோகிரிஸ்டலின் வைரக் கூட்டின் மூலமே வெட்ட முடியும். + +வைரத்திற்கு பல சிறப்பு பயன்பாடுகள் உள்ளன அல்லது குறைகடத்தியாக பயன்படுத்துவது உட்பட சில புது பயன்பாடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சில நீல வைரங்கள் இயற்கைக் குறைக்கடத்திகளாக செயல்படுகின்றன. மாறாக வைரங்கள் சிறந்த மின்காப்புப்பொருள்களாகும். இந்த கடத்தும் திறன் மற்றும் நீல நிறம் போரான் அசுத்தத்தால் ஏற்படுகிறது. + +கணிசமான கடத்துதிறன் இரசாயன ஆவி படிதல் முறையில் தயாரிக்கப்பட்ட வைரத்தில் காணப்படுகிறது. இந்த கடத்துதிறன் மேற்பரப்பில் பரப்பு ஹைட்ரஜன் தொடர்பான இனங்கள் ஈர்க்கப்படுவதால் ஏற்படுகிறது. அது வெம்மென் அல்லது பிற மேற்பரப்பு சிகிச்சைகள் மூலம் நீக்க முடியும் . + +வைரத்தின் மேற்பரப்பை நீர் ஈரமாக்க முடியாது, ஆனால் எளிதாக எண்ணெயால் ஈரமாக்க முடியும். இந்த இயல்பு செயற்கை வைரங்கள் செய்யும் போது எண்ணெய் பயன்படுத்தி வைரத்தை பெறுவதற்கு பயன்படுத்த முடியும். வைர பரப்புகளில் சில அயனிகளால் வேதியியல் மாற்றம் ஏற்படும் போது அது மனித உடல் வெப்பநிலையில் நீர் பனியின் பல அடுக்குகளை உறுதிப்படுத்த முடியும். + +வைரம் அதிகமாக எதிர்வினை புரிபவை அல்ல. அறை வெப்பநிலையில் வைரங்கள் வலுவான அமிலங்கள் மற்றும் காரங்கள் உள்ளிட்ட எந்த இரசாயன மறுதுணைப்பொருட்களோடும் வினைபுரிவது இல்லை. ஒரு வைர மேற்பரப்பில் ஒரு சில ஆக்ஸிஜனேற்றிகளால் அதிக வெப்பநிலையில் ( 1,000 °C கீழே ) ஒரு சிறிய மாற்றம் நிகழலாம். எ���வே, அமிலங்கள் மற்றும் செயற்கை வைரங்கள் சுத்தப்படுத்த பயன்படுத்த முடியும் . + + + + + + +செல் பயர்பாக்சு + +செல்லுமிடம் எல்லாம் எடுத்துச் செல்லக்கூடிய செல் பயர்பாக்ஸ் அதாவது காவக்கூடிய பயர்பாக்ஸ் (போட்டபிள் எடிசன் - Portable Edition). ஜான் T. ஹாலரினால் மீள் பொதிசெய்யப்பட்ட பயர்பாக்ஸ் பதிப்பாகும். இந்தப் பயர்பாக்ஸ் பதிப்பானது இறுகுவட்டு யுஎஸ்பி பிளாஸ்டிஸ்க் ஊடக விண்டோஸ் கணினிகளிலும் மற்றும் லினக்ஸ்/யுனிக்ஸ் ஆப்பிள் மாக் ஓஸ் இயங்குதளங்களில் வைன் ஊடாகவும் இயங்கக் கூடியது. இந்தப் பதிப்பானது கணினியில் பயர்பாக்ஸ்ஸை நிறுவவேண்டிய அவசியம் இல்லை அத்துடன் நிறுவியுள்ள பயர் பாக்ஸ் உடனும் எந்தவிதத்திலும் இடையூறை உண்டுபண்ணாது. முக்கியமாக பிரத்தியேகத் தன்மையான விடயங்களை அக்கணினியில் விடாமல் நீங்கள் தூக்கிக் கொண்டே திரியக் கூடிய வசதிகளை அளிக்கின்றது. தவிர அலுவலக வலையமைப்புக்களில் உங்களிற்கு கணினியின் மென்பொருளை நிறுவும் வசதிகள் தரப்படாவிட்டாலோ அல்லது மறுக்கப்படிருந்தால் கூட இப்பதிப்பினைப் பயன்படுத்தலாம். + +இது மொஸிலா பயர்பாக்ஸ் போன்றே நீட்சிகள் மற்றும் உலாவியின் மேம்படுத்தல்களை ஆதரிக்கின்றது. எனினும் மாறுதல்கள் சில செய்யப்பட்டு யுஎஸ்பி பிளாஷ் டிஸ்குகளில் வாழ்நாளினைக் குறைக்காவண்ணம் அடிக்கடி எழுதி எழுதி அழிப்பது இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. இதில் உலாவியின் காஷ் என்னும் தற்காலிக சேமிப்பு மற்று உலாவியின் பார்க்கப்பட்ட பக்கங்களின் வரலாறும் செல் பயர்பாக்ஸில் இருந்து வெளிவந்ததும் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது (அழிக்கப்படும்). இணையத்தை உலாவரும்போது பதிவிறக்கப்படும் குக்கீஸ் (மென்பொருள்) உலாவியை நிறுத்தியதும் அழிக்கப்படும். இவை விருப்பத் தேர்வுகளூடாக மாற்றக் கூடியனவேயெனினும் அவ்வாறு செய்வதானது யுஎஸ்பி டிஸ்குகளின் வாழ்நாளினைக் குறைத்துவிடும். + +பிரத்தியேக சேமிப்புக்களாகப் புத்தகக் குறிப்பு, சேர்ந்து இயங்கும் அடோப் (முனைநாள் மக்ரோமீடியா) பிளாஷ் (flash) ஷாக்வேவ் (Shockwave) மற்றும் தீம்ஸ் (Themes) ஆகியவை பிளாஷ் டிஸ்க்கிலேயே சேமிக்கப்படும். பல்வேறு பட்ட பாவனையாளர்களிற்கு பயர்பாக்ஸ்ஸை விளக்குவதற்கும் இதனைப் பயன் படுத்தலாம். + +இதன் 2.0 பதிப்பானது 20 நவம்ப��் 2006 இல் வெளிவந்தது. இது விண்டோஸ் 95, விண்டோஸ் 98, விண்டோஸ் மில்லேனியம், விண்டோஸ் 2000 ,விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா ஆகியவற்றுடன் ஒத்தியங்கக் கூடியது. + + + + + + + +கூகிள் பேஜ் கிறியேட்டர் + +கூகிள் பேஜ் கிறியேட்டர் கூகிள் ஆய்வுகூடத்திலிருந்து பெப்ரவரி 23, 2006 இலிருந்து சோதனை நிலையிலிருக்கும் சேவையாகும். இது ஜிமெயில் கணக்கு உள்ளவர்கள் இலகுவாக இணையப் பக்கங்களை உருவாக்கப் பயன் படுகின்றது. இன்னமும் இதன் இறுதிப் பதிப்பிற்கான திகதி அறிவிக்கப் படவில்லை. + +இது பார்ப்பதையே பெறும் () இடைமுகத்தை அளிக்கின்றது. இதில் பயனர்கள் 100MB அளவான இடவசதியுடன் வலைப் பாவனையையும் பெறுவர். + +கூகிள் பேஜ் இணையப் பக்கமானது உருவாக்கப் பட்டதும் "http://username.googlepages.com" என்ற முகவரியில் தோற்றமளிக்கும். + + +கூகிள் பேஜ் மின்னஞ்சல் பக்கத்தை இணையப் பக்கதிற்குப் பயன் படுத்துவதால் குப்பை அஞ்சல்கள் பெருகுவதற்கு வாய்ப்புள்ளது. + + + + + +மதுரை காமராசர் பல்கலைக்கழகம் + +மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இந்தியாவின் தென் தமிழ்நாடில் மதுரையில் அமைந்துள்ளது. இது 1966ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. 18 பாடசாலைகளையும் 72 திணைக்களங்களையும் கொண்டுள்ளது. இப் பல்கலைக் கழகமானது 109 இணைக்கப் பட்ட கல்லூரிகளையும் (9 தனித்தியங்கும்) உடன் அனுமதிபெற்ற 7 மாலைக் கல்லூரிகளையும் கொண்டுள்ளது. தற்போது இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக முனைவர் பி.பி.செல்லத்துரை உள்ளார். இவர் இந்தப் பல்கலைக்கழகத்தின் 16 வது துனணைவேந்தர் ஆவார். +பல்கலைக்கழக நிகர்நிலை குழுவினால் வழங்கப்படும் ஆற்றல்சார் பல்கலைக்கழகத்திற்கான தகுதியை பெற்றுள்ளது. + +மதுரை காமராசர் பல்கலைக் கழகம் (மதுரை பல்கலைக் கழகம் ஆரம்பத்திலிருந்து அறியப் படுகின்றது) இந்தியாவில் சரித்திர முக்கியத்துவமான நகரமான மதுரையில் பண்டைய பாண்டிய அரசரினின் தலைநகரில் அமைந்துள்ளது. 1978இல் மறைந்த தமிழ்நாட்டு முதலமைச்சர் காமராசர் நினைவாக நினைவாக இப்பல்கலைக் கழகமானது மதுரை காமராசர் பல்கலைக் கழகமாகப் பெயர் மாற்றப்பட்டது. + + + + + +இதன் திறந்த பாடக் கற்கைநெறிகளை இலங்கையில் கொழும்பில் அம்பிகா கல்வி நிலையமூடாக செப்டம்பர் 6 2000 முதல் ��ெளிவாரிக் கற்கை நெறிகளை வழங்கி வருகின்றனர். சில நிலையங்களில் ஆய்வுகளையும் ஆசிரியர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்காக உள்ளது. + + + + + +மொறட்டுவைப் பல்கலைக்கழகம் + +மொறட்டுவைப் பல்கலைக்கழகம் ) இலங்கையில் புகழ் பெற்ற தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது கொழும்பிற்குத் தெற்கே கட்டுப்பத்த (மொறட்டுவை) பகுதியில் அமைந்துள்ளது. பல தொழில் சார்வல்லுனர்களை உருவாக்கிய இப்பல்கலைக்கழகம் http://.lk எனும் இலங்கைக்கான இணைய வழங்கியைத் தனது ஆதர் சி.கிளாக் ஆய்வுக்கூடத்தில் கொண்டுள்ளது. மைக்ரோசாப்டின் நகர்பேசி ஆய்வுக்கூடமும் இப்பல்கலைக்கழகத்திலுள்ளது. இப்பல்கலைக்கழகம் இலங்கையில் மிகக் கூடுதலான லினக்ஸ் இயங்குதளங்களையும் கணினிகளைத் தன்னகத்தே கொண்டுள்ளது. பட்டப் படிப்புகளுக்கு மேலதிகமாக வெளிவாரிப் படிப்பாக BIT (Bachelors of Information Technology) கற்கை நெறிகளையும் வழங்கி வருகின்றது. +மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் "கூகுள் நிரல் கோடை" போட்டிகளில் 2007, 2008, 2009, 2010, and 2011 ஆண்டுகளில் வென்றுள்ளனர். தவிரவும் இப்பல்கலையின் மாணவர்கள் சிறீலங்கா இமாஜின் கோப்பையிலும் ஐஈஈஈ எக்சுட்ரீம் உலகளாவியப் போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். "கூகுள் நிரல் கோடை" போட்டிகளில், 2005ஆம் ஆண்டில் இந்தப் போட்டிகள் துவங்கப்பட்டதிலிருந்து ஐந்தாண்டுகளில் மொறட்டுவ பல்கலைக்கழகம் பெற்ற விருதுகளுக்காக உலகளவில் முதல்நிலைப் பல்கலைக்கழகமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. + +இங்கு மூன்று பிரதான துறைசார் பிரிவுகள் உண்டு. அவையாவன "பொறியியல் பிரிவு", "தகவல் தொழில்நுட்ப பிரிவு", "கட்டிடக்கலை பிரிவு". + +இங்கு பின்வரும் கிளைத்துறைகளில் இளமானி பொறியியல் கற்கைநெறி வழங்கப்படுகிறது. + + + + + + +ஆர்க்குட் + +ஆர்க்குட் அல்லது ஓர்க்குட் ("Orkut") கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் சமூக வலையமைப்பு (குமுகவலை) சேவையாகும். இச்சேவை இதனைத் தொடங்கிய கூகிள் ஊழியர் ஆர்க்குட் புயுக்கோக்டன் என்பவருடைய பெயராலேயே ஆர்க்குட் என வழங்குகின்றது. இக் குமுகவலை (சமூக வலையமைப்பு) புதிய நட்புறவை வளர்ப்பதோடு இருக்கின்ற நண்பர்களின் தொடர்பையும் நட்புறவையும் பேணிப் பாதுகாக்கின்றது. ஆர்க்குட் அதனுடய போட்டியான குமுக வலையமைப்புகளைக் காட்டிலும் மிகுந்த உரையாடல் விவாதத்தளங்களுக்கும் வழி வகுத்து தருகின்றது. இக் குமுகவலையின் அழைப்பின் பேரிலேயே இதில் இணையமுடியும். + +ஆர்க்குட் ஆரவாரம் இன்றி ஜனவரி 22, 2004 இல் கூகிளினால் தொடங்கி வைக்கப்பட்டது. துருக்கி நாட்டு நிரலாக்கரான ஆர்க்குட் புயுக்கோக்டன் மென்பொருள் விருத்தியாளரான தனிப்பட்ட மென்பொருள் கூகிளின் நிர்வாகக் கோட்பாடுகளிற்கமைய விருத்தி செயய்ப்பட்டது. + +ஆர்க்குட அழைப்பின் பேரிலேயே இணையமுடியுமென்பதால் குறைவாகவே ஆட்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஜூலை 2004 ஆர்குட் 1 மில்லியன் பயனர்களைத் தாண்டியது செப்டம்பர் 2004, 2 மில்லியன் பயனர்களை தாண்டியது. + +அண்மைக் காலத்தில் ஆர்கூட்டிற்கு தமிழ் இடைமுகம் வழங்கப் பட்டது. இதன் மூலம் இந்திய தமிழ் பேசும் சந்தையை கூகிள் இந்தியா குறி வைத்துள்ளது. + +எனினும் அதற்கு பிறகு, கூகிள் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் ஆர்குட் கணக்கு வழங்குவது துவங்கப்பட்டது. + +அக்டோபர் 11 2006 29,609,324 பயனர்களைக் கொண்டுள்ளது + +ஆர்க்குட் சமுதாயம் பிரேசில் பயனர்கள் குறைவடைந்து வருகையில் ஆர்க்குட் சேவையில் பெருவெள்ளமாக வரும் பிரேசில் பயனர்கள் இச்சேவையினைப் பதிந்து வருதலானது நல்லதோர் அறிகுறியல்ல. அக்டோபர் 1, 2006 இன்படி பிரேசில் பாவனையாளர்கள் 63% வீதமும் அமெரிக்கா 13.8% உம் இந்தியா 9.5% வீதமும் ஆகும். அளவுக்கதிகமான பிரேசில் பயனர்களால் இச்சேவையில் அதிருப்தி அடைந்துள்ளனர். இச்சேவையில் முதலாவது மாற்றுமொழியாக போர்த்துகீசிய (பிரேசில்) மொழியேயுள்ளது. சமுதாயத்தை நிர்வாகிக்கும் பலர் பயனர்களை ஆங்கிலத்தில் மாத்திரமே தமது கருத்துக்களைத் தெரிவிக்குமாறு வேண்டியுள்ளனர். வேறுசிலரோ இக்குற்றச்சாட்டுக்களையே கருப்பொருளாகக் கொண்டும் குழுக்களை அமைத்துள்ளனர். + +புள்ளிவிபரங்களின் படி பிரேசிலில் 9% வீதமானவர்கள் இச்சேவையைப் பதிவுசெய்துள்ளனர். இதுவே ஒரு நாட்டில் பதிவுசெய்யப் பட்டவர்க்ளின் மிகக் கூடுதலான வீதம் ஆகும். பிரேசில் செய்தித் தளத்தில் ஆர்க்குட்டின் அண்மைய பேட்டியில் ஆர்க்குட வட அமெரிக்கர்கள் ஏன் இந்த சேவையைப் புறக்கணிக்கின்றனர் என்பது தனக்குத் தெரியாது என்றும் ஆர்குட்டின் முதன்மையான (பிரதான) இலக்கு பிரேசில் நாடாகவ�� இருக்கும் என்றார். + +இவற்றில் சில இனவாதம் பற்றியும் நாசிசம் (ஆரியரே உயர்வென்று கூறும்) வெள்ளையர்களே உயர்ந்தவர்கள் என்று கூறும் குழுக்கள் பயனர் அனுமதியை மீறுவதாகக் கூறி அழிக்கபபட்டன. எனினும் இவ்வாறான மனிதப் பண்பற்ற குழுக்களை அடையாளம் காண்பது ஆர்க்குட்டிற்குக் கடினமானதால் இவ்வாறான குழுக்கள் சில இன்னமும் இயங்கி வருகின்றன. + +2005 ஆம் ஆண்டில் கறுப்பினத்தவருக்கு எதிராக எழுதிய கருத்துக்களினால் பிரேசில் நாட்டவர் ஒருவர் சிறைத்தண்டனை பெற்றார். + +ஆர்க்குட்டின் பயனர் ஒப்பந்தம்: + +"ஆர்க்குட்.காம் இணையத்தளத்தில் வெளியிடப்படுபவையோ அல்லது காட்டப்படுபவையோ உலகளாவிய வகையில் பிரதி பண்ணக் கூடிய (படி எடுக்ககூடிய) அனுமதியை ஏனையவர்களுக்கு வழங்குவதாகும்" + +ஈரான் நாட்டில் மிகப் பரவலமாக (பிரபலமாக) இருந்த ஆர்க்குட் இணையத்தளமானது அந்நாட்டினால் தணிக்கைக்குள்ளாக்கப் பட்டுள்ளது. இதற்கு இது இஸ்லாமியக் கொள்கைகளுக்கெதிராக துணைகள் தேடுதல், டேட்டிங் (Dating) போன்றவற்றில் ஈடுபடுவதாலாகும். இவ்வாறு ஈரான் நாடானது இச்சேவையை இடைநிறுத்தியதும் http://www.orkutproxy.com/ என்னும் ஓர் இணையத்தளம் ஆரம்பிக்கப் பட்டதெனினும் இச்சேவையானது இடைநிறுத்தப் பட்டுள்ளது. Open Proxy server ஊடாக இணையமுடியுமெனினும் இது சாதாரண கணினிப் பாவனையாளரால்(பயன்படுத்துபவரால்) செய்யமுடியாத ஒன்றாகும். + +ஆகஸ்ட் 2006 இல் ஐக்கிய அரபு அமீரகமும் தணிக்கையில் ஈரானுடன் இணைந்து கொண்டது. + +ஃபேஸ்புக்கிற்க்கு முன்னோடியாக திகழ்ந்த ஆர்க்குட் சமூக வளைத்தளமானது யாகூ! நிறுவனத்தின் ஒரு அங்கமாகும். இதனை 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதியிலிருந்து மூடிவிடப்போவதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. + + + + +மேளகர்த்தா இராகங்களின் அமைப்பு + +கருநாடக இசையில் 72 மேளகர்த்தாச் சக்கரத்தின் அமைப்பு முக்கியமானது. இந்த அமைப்பைக் கொண்டு எந்தவொரு இலக்கம் உள்ள மேளகர்த்தா இராகத்தின் அடையாளப் பண்பையும் (இராக லட்சணத்தையும்) எளிதில் அறிந்து கொள்ளலாம். இந்த 72 மேளகர்த்தாச் சக்கரம் கர்நாடக சங்கீதத்திற்கு மகுடம் போன்றது என்பர். இம் முறையை வேங்கடமகி தாம் இயற்றிய சதுர்த்தண்டிப்பிரகாசிகை என்னும் நூலில் விளக்கியுள்ளார். + +ஒரு கட்டையில் (ஸ்தாயியிலுள்ள) 12 சுரங்கள் உள்ளன என்பது பல நாட்டு இசைக்கும் பொதுவானது. இந்த 12 சுரங்களைக் கொண்டு பின்னி விரிவாக்கப்பட்டிருக்கும் (பிரஸ்தரிக்கப் பட்டிருக்கும்) 72 மேளகர்த்தாக்கள், பிற நாட்டு இசை இலட்சண, இலட்சிய கலைஞர்களும் போற்றும் ஒன்று. + +72 மேளகர்த்தாச் சக்கரம் 2 சரிசமமான பாகங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு "பூர்வ மேளகர்த்தாக்கள்" என்றும் இரண்டாம் பாகத்தில் வரும் 36 மேளகர்த்தாக்களுக்கு "உத்தர மேளகர்த்தாக்கள்" என்றும் பெயர். 1-36 மேளகர்த்தாக்களில் சுத்த மத்திம சுரமும், 37- 72 மேளகர்த்தாக்களில் பிரதி மத்திம சுரமும் வருவதால் பூர்வ மேளகர்த்தாக்களை "சுத்த மத்திம மேளகர்த்தாக்கள்" என்றும், உத்தர மேளகர்த்தாக்களை "பிரதி மத்திம மேளகர்த்தாக்கள்" என்றும் அழைப்பர். பூர்வ பாகத்திலும், உத்தர பாகத்திலும் மேளகர்த்தா இராகங்கள் ஒரே விதமான வரிசை முறைப்படி வருகிறன. + +72 மேளகர்த்தாக்களும் 12 சிறிய சக்கரங்களின் கீழ் வகுக்கப் பட்டிருக்கின்றது. அவையாவன: + +"ரி" , "க" சுரங்கள் சக்கரத்திற்கு சக்கரம் வேறுபடும். + +தைவத நிஷாத சுரங்கள் கர்த்தாவுக்கு கர்த்தா வேறுபடும். + + + + + +சூளாதி + +சூளாதி என்பது கன்னட மொழியில் புரந்தரதாசர் இயற்றிய ஒரு வகை உருப்படி ஆகும். ஒரே இராகத்தில் 2, 5, 7 தாளங்களைக் கொண்டு இது அமைந்திருக்கும். சில சூளாதிகள் தாளமாலிகைகளாகவும் மற்றும் சில கீர்த்தனைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் சூளாதிகள் தாளப் பிரபந்தங்களாகத் தோன்றி நாளடைவில் அவை மறைந்து போயின. ஆதி தாளமும், இரட்டித்த மத்திய தாளமும் சூளாதிகளில் அநேகமாகக் காணப்படுகிறன. சூளாதி தாளங்களில் அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல்களையும் நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணியில் தரங்கங்களையும் காணலாம். சில சூளாதிகள் இராக தாள மாலிகையாகக் காணப்படும். திருப்பதி அன்னமார்ச்சாரியார் தெலுங்கில் இரக தாள மாலிகையாக அமைந்துள்ள ஒரு சூளாதி இயற்றியுள்ளார். கலாநிதி கே. பொன்னையாப் பிள்ளை அவர்கள் பஞ்ச சூளாதி ஒன்றைத் தமிழில் இயற்றியுள்ளார். + + + + +பிரபந்தம் (உருப்படி) + +பிரபந்தத்திற்கு பண்டைக் காலத்தில் ஆசிரியர்கள் விசேட இலக்கணங��களைக் கூறியுள்ளனர். இவற்றுள் சில மறைந்து விட்டன. தற்போது வழக்கத்திலுள்ள ஒரு பிரபந்தமானது + என்னும் 6 அங்கங்களை உடையது. + +மேற்கூறிய அங்கங்களோடு கூடிய பிரபந்தங்கள் 5 வகையாகும். அவை: + ஆகும். + +பிரபந்தத்தில் முதல் பாகத்தின் பெயர். + + + + +சத்யமேவ ஜெயதே + +சத்யமேவ ஜெயதே (தமிழில்: வாய்மையே வெல்லும்) என்ற சமஸ்கிருத வாக்கியம் இந்தியாவின் தேசிய குறிக்கோளுரை ஆகும். இக்குறிகோளுரை இந்தியாவின் தேசிய சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. + +இது முண்டக உபநிடதத்தின் புகழ் பெற்ற மந்திரங்களில் ஒன்றாகும். + + + + +செப்டம்பர் 18 + + + + + + + +ஆபிரகாம் கோவூர் + +ஆபிரகாம் கோவூர் (ஏப்ரல் 10, 1898 - செப்டம்பர் 18, 1978), பகுத்தறிவாளர், உளவியலாளர், எழுத்தாளர், ஆசிரியர். + +இவர், கேரளாவில் திருவள்ளா என்னுமிடத்தில் 1898ஆம் ஆண்டு ஏப்பிரல் 10ஆம் நாள், மார் தொம்மா சிரியன் திருச்சபையின் தலைவரான கோவூர் ஈய்ப்பெ தொம்மா காத்தனாரின் மகனாகப் பிறந்தார். கொல்கத்தாவில் கல்வி கற்று பின்னர் கேரளாவில் சில காலம் கல்லூரி உதவி விரிவுரையாளராக இருந்த கோவூர், தன் வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தைக் கொழும்பில் கழித்தார். இலங்கையில் பல பாடசாலைகளில் தாவரவியல் ஆசிரியராகப் பணிபுரிந்து கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியிலிருந்து 1959 இல் பணி ஓய்வு பெற்றார். கல்லூரிப் பணி ஓய்வு பெற்ற பின்னரே, ஆவிகள் ஆதன்களின் விந்தை நிகழ்வுகள் தொடர்பான தம் வாழ்நாள் ஆராய்ச்சியைப் பற்றிப் பேசவும் எழுதவும் தொடங்கினார்; இறுதிவரை அவர் தீவிர பகுத்தறிவாளராகவே கொள்கை முழக்கம் செய்தார். + +தான் கடவுளின் அவதாரம் அல்லது தெய்வீக ஆற்றல் உள்ள மகான் என்று சொல்லும் அனைவருமே பொய்யர்கள், ஏமாற்றுவாதிகள் என்பதை நிறுவுவதே கோவூரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. "Rationalist Association of Sri Lanka" என்னும் சங்கத்தைத் தோற்றுவித்து, வெகு காலம் அதன் தலைவராக இருந்தார். + +ஆவி, பிசாசு தொடர்பாகக் கூறப்பட்ட எல்லாவகை விந்தை நிகழ்வுகளையும் அரை நூற்றாண்டுக்கும் மேல் முழுவதுமாக ஆராய்ந்தவர்.அத்தகைய நிகழ்வுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால், நம் சிந்தனைக்கு அப்பாற்பட்டதான உண்மை ஏதும் சிறிதும் இல்லை என்று முடிவு கண்டவர் கோவூர். ஆவி, பேய் ஆகியவை தொடர்பான ஆற்றல்கள் பெற்றுள்ளதாகக் கூறுகின்ற எல்லாரும் ஒன்று ஏமாற்றுக்காரர்களாக இருக்க வேண்டும் அல்லது மூளைக்கோளாறோ மனநோயோ கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதே அவரின் உறுதியான கருத்தாகும். + +அவை தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டாருள், அத்துறைப் பணிக்காக மின்னசோட்டா மெய்யறிவு நிலையம் (இப்போது இந்நிறுவனம் செயல்பாட்டில் இல்லை) கவுரவ முனைவர் பட்டம் வழங்கியது -- இத்தகைய பட்டங்களை முதலில் இருந்தே எதிர்த்து வந்த கோவூர், முனைவர் பட்டத்தைத் திருப்பி அனுப்பினார். + +இயற்கைக்கு அப்பாற்பட்ட வியக்கத்தக்க ஆற்றல்களைப் பெற்றுள்ளதாகக் கூறும், உலகின் எந்தப் பகுதியிலுள்ள எவரும், மோசடியின்றி செய்முறைகள் மூலம், அவர்கள் திறமைகளை மெய்ப்பித்துக் காட்ட முடியுமானால், அவருக்கு ஓரிலட்ச சிறீலங்க ரூபாய் பரிசளிக்க அவர் தயாராக இருப்பதாக அறைகூவினார். தான் இறக்கும் வரையில், அல்லது இதன் தொடர்பான முதல் வெற்றியாளரைக் காணும் வரையில், இந்த அறிவிப்பு செயற்பாட்டிலிருக்கும் என்றும் அறிவித்தார். இறுதி வரையில் எவருமே அப்பரிசை வெல்லவில்லை. + +டாக்டர்.கோவூரின் சவால்கள்: + +“எனக்கு சாவைக் கண்டு அச்சமில்லை; எனவே, என்னை புதைக்க வேண்டாம்” என்று தன் உயிலில் எழுதி வைத்த கோவூர், தன் கண்களை ஒரு கண் வங்கிக்குத் தானமாக அளித்தார்; தன் உடலை மருத்துவக்கல்லூரிக்கு ஆய்வுக்காகவும் தன் எலும்புக்கூடு தற்சுட்டன் கல்லூரியின் அறிவியல் ஆய்வகத்திற்கு அளிக்கப்பட வேண்டும் என்று எழுதியிருந்தார். + +கோவூரின் நூல்களிலுள்ள நிகழ்வாய்வு (case study) உண்மை நிகழ்ச்சிகளை பல்வேறு நாடுகளில் பல பத்திரிகைகளும், செய்தித் தாள்களும் தொடர்ச்சியாக வெளியிட்டன. + +அக்கதைகளுள் ஒன்று, மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரைப்படமாக எடுக்கப்பட்டது. அவருடைய நூலின் மற்றொரு உண்மைக்கதை, 'நம்பிக்கை' என்ற பெயரில் தமிழ் நாடகமாகப் பலமுறை அரங்கு நிறைந்த அவையோர் முன் நடித்துக் காட்டப் பட்டது. + + + + + + +ஆசியா பவுண்டேசன் + +ஆசியா பவுண்டேசன் இலாபநோக்கற்ற அரசு அல்லாத அமைப்பாகும். இது ஆசிய பிராந்தியத்தில் அமைதியாக வசதியாக இருப்பதை விருத்தி செய்யும் அமைப்பாகும். "டக் பிறீற்றுவர்" (Doug Bereuter) இந்த அமைப்பின் தலைவராகப் பணியாற்றுகின்றர். + +இந்த அமைப்பின் நோக்கமானது ஆசியப் பிராந்தியத்தில் ஆட்சி மற்றும் சட்டங்களை மேம்படுத்தல், பொருளாதாரச் சீரமைப்பு, பெண்கள் விருத்தி மற்றும் சர்வதேச விவகார மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது. 50 ஆண்டு கால அநுபவத்தில் இந்த அமைப்பானது அரச மற்றும் தனியார் பங்காளிகளாக் கொண்டு ஆளுமைகளை விருத்தி செய்யவும் கொள்கைகளை விருத்தி செய்து பரிமாறவும் உதவுகின்றது. + +ஆசியாவில் 18 அலுவலகங்களுடன் (காபூல், இஸ்லாமபாத், காத்மண்டு, கொழும்பு, டாக்கா, பாங்கொக், கோலாலம்பூர், ஜகார்த்தா, தில்லி, மணிலா, ஹானோய், பினோம்பினே, ஹாங்ஹாங், தாய்பி, பீஜிங், சியோல், ரோக்கியோ மற்றும் உலன் பட்டார்) அத்துடன் வாஷிங்டனிலும் அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இதன் தலைமை அலுவலகம் ஆனது சான்பிரான்சிஸ்கோவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பானது பிரச்சினைகளை நாடளாவிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் அலசி ஆராய்கின்றது. + +2004ஆம் ஆண்டு இந்த அமைப்பானது 72 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதியான புத்தகங்கள் மற்றும் கல்வி சம்பந்தப் பட்ட உபகரணங்களை ஆசியா முழுவது 28 மில்லியன் பெறுமதியில் வழங்கியது. + + + + + +சனவரி 26 + + + + + +