diff --git "a/train/AA_wiki_24.txt" "b/train/AA_wiki_24.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_24.txt" @@ -0,0 +1,2948 @@ + +அந்தமான் நிக்கோபார் தீவுகள் + +அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்களில் ஒன்றாகும். இத்தீவுகள் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளன. இது இரண்டு தீவுக் கூட்டங்களைக் கொண்டது. அவை அந்தமான் தீவுகள் மற்றும் நிகோபார் தீவுகள் ஆகும். இவை அந்தமான் கடலையும் இந்தியப் பெருங்கடலையும் இணைக்கின்றன. இப்பிரதேசத்தின் தலைநகரம் போர்ட் பிளேர் என்னும் அந்தமானில் உள்ள நகரம் ஆகும். + +8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அந்தமான் நிகோபார் தீவுகளின் மொத்தம் எண்ணிக்கை 572 ஆகும். இதில் மக்கள் குடியிருக்கும் தீவுகளின் எண்ணிக்கை 36 ஆகும். இத் தீவுக்கூட்டங்களைக் கொண்ட இந்தத் தொகுதி ஒரு முனையில் இருந்து மறு முனைவரை 700 கி.மீட்டருக்கும் அதிகமான தொலைவு கொண்டது. அந்தமான் நிகோபாரின் தலைநகரான போர்ட் பிளேயரில் இருந்து கப்பல் மூலம் பொருட்களை தென் முனைத்தீவுகளுக்குக் கொண்டு சேர்க்க 50 மணி நேரம் வரை பிடிக்கும். இங்குள்ள தீவுகள் அரிய வகை கடல் உயிரினங்கள், தென்னை மரம் சூழ்ந்த கடற்கரைகள், பவளப் பாறைகள், பசுமைக் காடுகள், அருவிகள் போன்றவற்றைக் கொண்டுள்ளன. + +இன்னும் ஆவணப்படுத்தப்பட்ட முந்தைய தொல்லியல் சான்றுகள் சில 2,200 ஆண்டுகளுக்கு முன் செல்கிறது;. எனினும், மரபணு மற்றும் கலாச்சார ஆராய்ச்சி கூறுவது என்னவெனில், உள்நாட்டு அந்தமானீஸ் மக்கள் மத்திய கற்காலம் முதல் மற்ற மக்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு இருதிருக்கலாம் என்று கூறுகின்றது. அந்த கால கட்டத்தில், ஜாரவா. செண்டினல், சாம்பென், ஒன்கே மற்றும் அந்தமானியர் பழங்குடி மக்கள் தங்களுக்கென்று தனித்துவமான மொழி, கலாச்சாரம் மற்றும் பிராந்திய குழுக்களை கொண்டவர்களாக இருந்தனர். வெளி உலக தொடர்பற்ற இவ்வின மக்களின் தொகை தற்போது அருகிக் கொண்டே வருகிறது. + +நிக்கோபார் தீவுகள் பல்வேறு பின்னணியில் உள்ள மக்கள் வாழ்ந்ததாக தோன்றும். ஐரோப்பிய தொடர்பு கொண்ட காலத்தில், மொன்-குமேர் (Mon-Khmer) மொழி பேசும் நிகோபார்சி பழங்குடி மக்கள் மற்றும் ஷொம்ப்பென் (Shompen) மக்கள் இருந்தனர். ஷொம்ப்பென் (Shompen) மக்களின் மொழி நிச்சயமற்ற தொடர்பு கொண்டதாக இருந்தது. இவ் இரண்டு நிகோபார்சி சமூகத்தினருக்கும், அந்தமானீஸ்களுக்கும் எந்த ��ிதமான சம்பந்தமும் இல்லை. + +ராஜேந்திர சோழன் I (கிபி 1014 முதல் 1042 வரை), ஒரு தமிழ் சோழப்பேரரசர், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளை கைப்பற்றி, ஒரு இந்து மதம் மலாய் பேரரசுக்கு (ஸ்ரீவிஜயா பேரரசு, சுமத்ரா மற்றும் இந்தோனேஷியா தீவுகள்) எதிராக ஒரு கடற்படை தளமாக பயன்படுத்தினர். அவர்கள் இத்தீவுகளை தின்மைத்தீவு என்று அழைத்தனர். + +தீவுகள் 17 ஆம் நூற்றாண்டில் மராட்டிய பேரரசின் ஒரு தற்காலிக கப்பல் தளமாக அமைந்தது. பழம்பெரும் அட்மிரல் கன்ஹோஜி ஒரு அடிப்படை கடற்படை மேலாதிக்கத்தை இத் தீவுகளில் நிலைநிறுத்தியது, இந்தியாவுடன் அந்த தீவுகள் இணைவதற்கு பெறும் பங்கு வகிக்தது. + +டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் டச்சுகாரர்கள் டிசம்பர் 12 , 1755 அன்று நிக்கோபார் தீவுகள் வந்த போது தீவுகளில் ஒழுங்கமைக்கப்பட்ட ஐரோப்பிய குடியேற்றம் வரலாறு தொடங்கியது. 1 ஜனவரி 1756 அன்று, நிக்கோபார் தீவுகள் டச்சுகரர்களின் ஆளுமைக்கு கீழ் வந்தது, அதற்கு புதிய டென்மார்க் (New Denmark) என்று பெயரிட்டனர். பின்னர் ( டிசம்பர் 1756 ) பிரடெரிக் தீவுகள் ( Frederiksøerne ) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1754–1756 காலத்தில் தரங்கம்பாடியில் (Continental டேனிஷ் இந்தியாவில்) இருந்து இத்தீவு நிர்வகிக்கப்பட்டது. இத் தீவுகள் மீண்டும் மீண்டும் 14 ஏப்ரல் 1759 மற்றும் 19 ஆகஸ்ட் 1768, 1787 முதல் 1807/05 வரை, 1814 முதல் 1831 வரை, 1830 முதல் 1834 வரை மற்றும் 1848 முதல் முழுமையாக மலேரியா நோய் பரவியதன் கரணமாக கைவிடப்பட்டன. + +1778 ஜூன் 1 முதல் 1784 வரை , ஆஸ்திரியா தவறுதலாக டென்மார்க் நிக்கோபார் தீவுகள் அதன் கூற்றுக்களை கைவிட்டுவிட்டது என்று கருதி, தெரெசிய (Theresia) தீவுகள் என்று மறுபெயரிட்டு, அவர்களுக்கு ஒரு காலனி உருவாக்க முயன்றார் என்று கருதப்படுகிறது. + +1789 இல் பிரிட்டிஷ், ஒரு கடற்படை தளம் மற்றும் தண்டனைக்குரிய காலனி அமைக்க, அந்தமான் அடுத்த இப்போது போர்ட் பிளேர் நகரம் உள்ள இடத்தில் முனைந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் காலனி கிரேட் அந்தமான் போர்ட் கார்ன்வாலிசுக்கு மாற்றப்பட்டது, ஆனால் அது நோயின் காரணமாக 1796 இல் கைவிடப்பட்டது. + +டென்மார்க் நாட்டின் பிரவேசம் முறையான ஒரு முடிவை எட்டியது 16 அக்டோபர் 1868 அன்று தனது நிக்கோபார் தீவுகள் உரிமையை ஆங்கிலேயர்களிடம் விற்றவுடன். 1869 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்கள் அதனை பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்தனர். + +1858 இல் ஆங்கிலேயர்கள் மீண்டும் போர்ட் பிளேயரில் ஒரு காலனி நிறுவினர். இதன் முதன்மை நோக்கம், இந்திய துணை கண்டத்தில் இருந்து எதிர்ப்பாளர்கள் மற்றும் சுதந்திரப்போராளிகளுக்கு ஒரு தண்டனைக்குரிய இடம் அமைக்கவே. இக் காலனி பிரபலமற்ற செல்லுலார் சிறை கொண்டதாக இருந்தது. + +1872 ஆம் ஆண்டில், அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் போர்ட் பிளேயர் ஒரு ஒற்றை தலைமை கமிஷனரின் கீழ் ஒன்றினைக்கப்பட்டது. + +இரண்டாம் உலகப்போரின் போது, தீவுகள் பெயரளவிற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஆசாத் ஹிந்த் அதிகாரத்தின் கீழ், நடைமுறையில் ஜப்பான் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. போஸ் யுத்தத்தின் போது தீவுகளுக்கு வந்து "ஷாகித்-dweep" (தியாகிகள் தீவு) மற்றும் "ஸ்வராஜ்-dweep" (சுய ஆட்சி தீவு) என்று அவர் பெயர் மாற்றம் செய்தார். + +இந்திய தேசிய இராணுவ ஜெனரல் லோகநாதன், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 1944 பிப்ரவரி 22 ஆம் தேதி அவர் சேர்த்து நான்கு ஐ.என்.ஏ. அதிகாரிகள் - மேஜர் மன்சூர் அலி ஆல்வி, சப். லெப்டினென்ட் மேரிலாண்ட் இக்பால், லெப்டினென்ட் Suba சிங் மற்றும் சுருக்கெழுத்தாளர் போர்ட் பிளேர் விமான நிலையத்தில் சீனிவாசன் வந்தார். 21 மார்ச் 1944 அன்று சிவில் நிர்வாகத்தை தலைமையகம் அபர்தீன் பஜாரில் உள்ள குருத்வாரா அருகே நிறுவப்பட்டது. 2 அக்டோபர் 1944 அன்று, கர்னல் லோகநாதன் மேஜர் ஆல்வியிடம் ஒப்படைத்துவிட்டு திரும்ப மாட்டேன் என்று போர்ட் பிளேர் விட்டு கிளம்பினார். + +அந்தமான் நிக்கோபார் தீவுகளை 7 அக்டோபர் 1945 அன்று 116-வது இந்திய காலாட்படை பிரிவு பிரிட்டிஷ் மற்றும் இந்திய படைகள் மூலம் மீண்டும் மீண்டும் கைப்பற்றிய பின் சப்பான் காவற்படை சரணடைந்தனர். + +இந்தியா (1947) மற்றும் பர்மாவிலிருந்து (1948), பிரிட்டிஷ் வெளியேரும் பொழுது, ஆங்கிலோ-இந்தியர்கள் மற்றும் ஆங்கிலோ-பர்மா மக்களின் சொந்த ஆட்சி அமைக்க, பிரிட்டிஷ் அறிவித்தது. ஆனால் அது நடைமுறைக்கு வரவில்லை. பிறகு 1950ல் இந்திய யூனியன் பிரதேசமாக மாறியது. + +போர்ட் பிளேர் வீர் சாவர்க்கர் பன்னாட்டு வானூர்தி நிலையம் இந்தியாவின் சென்னை, கொல்கத்தா, புதுதில்லி, பெங்களூரு, ஹைதராபாத்]] போன்ற முக்கிய நகரங்களுக்கு வானூர்தி சேவைகள் உள்ளது. மேலும் இலங்கை, மலேசியா மற்றும் சிங்கப்பூர் வெளி நாடுகளுக்கு பன்னாட்டு வானூர்திகள் உள்ளது. + +அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தலைநகரம் போர்ட் பிளேர் நகரத்திற்கு, சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் துறைமுகங்களிலிருந்து பயணிகள் கப்பல் போக்குவரத்து வசதிகள் உள்ளது. இவைகளை இந்திய கப்பல் கழகம் இயக்குகிறது. கப்பல் பயண நேரம் 56 மணி நேரம் முதல் 60 மணி நேரம் ஆகிறது. சென்னை மற்றும் கொல்கத்தாவிலிருந்து மாதத்திற்கு நான்கு முறையும், விசாகப்பட்டினத்திலிருந்து மாதம் ஒரு முறையும் பயணிகள் கப்பல் போர்ட்பிளையருக்கு செல்கிறது. +அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கிடையே பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்திற்காக பதினைந்து சிறிய கப்பல்களையும், எம். வி. இராமானுஜம் என்ற பெரிய கப்பலையும் அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் நிர்வகிக்கிறது. + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மொத்த மக்கள் தொகை ஆக 380,581 உள்ளது. கிராமப்புறங்களில் 62.30% மக்களும், நகரப்புறங்களில் 37.70% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 6.86% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் 202,871 ஆண்களும் மற்றும் 177,710 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 876 பெண்கள் வீதம் உள்ளனர். 8,249 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 46 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 86.63 % ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 90.27 % ஆகவும், பெண்களின் படிப்பறிவு 82.43 % ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40,878 ஆக உள்ளது. + +இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 264,296 (69.45%) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை 32,413 (8.52%) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 80,984 (21.28%) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 31 (31) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 338 (0.09%) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 1,286 (0.34%) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 564 (0.1 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 669 (0.18%) ஆகவும் உள்ளது. + +இப்பகுதியின் ஆட்சி மொழிகளான இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் தமிழ் மொழி, தெலுங்கு மொழி, வங்காளம் மற்றும் ஜாரவா. செண்டினல், சாம்பென், ஒன்கே மற்றும் அந்தமானிய பழங்குடி மக்களால் எழுத்து வழக்கு இல்லாத மொழிகளும் பேசப்படுகிறது. 2011-ஆம் ஆண்டுக் கணக்கின் படி தமிழ் மூன்றாவது பெரும்பான்மை மொழியாக இருக்கிறது. + +"முதன்மைக் கட்டுரை 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கமும் ஆழிப்பேரலையும்" + +26 டிசம்பர் 2004 அன்று அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் கடலோர பகுதிகள், 2004 இன் இந்திய பெருங்கடல் நிலநடுக்கத்தை தொடர்ந்து வந்த 10 மீட்டர் (33 அடி) உயர் சுனாமி பேரலையால் அழிக்கப்பட்டது. அதன் விளைவு, 2,000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்தனர். 4,000 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அனாதையான அல்லது ஒரு பெற்றோர் இழப்பு ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாயினர். குறைந்தபட்சமாக 40,000 மக்கள் தங்களின் வீடுகளை இழந்தனர். மோசமாக பாதிக்கப்பட்ட நிக்கோபார் தீவுகளில் Katchal மற்றும் இந்திரா கடற்படை தளம் குறிப்பிடத்தக்கது. பிந்தைய 4.25 மீட்டர் அடங்கிய பகுதி கடலில் மூழ்கியது. இந்திரா கடற்படை தளத்தின் கலங்கரை சேதமடைந்தது. ஆனால், பின்னர் அது சரி செய்யப்பட்டது. பிரதேசத்தின் ஒரு பெரும் பகுதி இப்போது மூழ்கடிக்கப்பட்டுள்ளது. 8.073 கிமீ 2 (3,117 சதுர மைல்) இருந்த பிரதேசத்தில், வெறும் 7.950 கிமீ 2 (3,070 சதுர மைல்) தான் இப்போது உள்ளது. + +தீவுகளில் புதிதாக குடியேறியவர்களே சுனாமியால் மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்தித்தனர். பல தலைமுறையாக வாழ்ந்த மக்கள் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களின் மூதாதையர்கள், பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே வாய்வழி மரபுகள் மூலமாக பெரிய பூகம்பங்களுக்கு பின்னர், பெரிய அலை வருமாயின் அவ்விடம் விட்டு வெளியேற வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர். + + + + + + +ஐந்திணை + +ஐந்திணை என்பது தமிழரின் அகவாழ்வு-நெறி. அகத்திணை, புறத்திணை ஆகிய ஒவ்வொன்றையும் தொல்காப்பியர் ஏழு ஏழாகப் பகுத்துக் கோட்டுகிறார். அவற்றில் அகத்திணைக்கு உரிய 7 திணைகளில் கைக்கிளை, பெருந்திணை ஆகிய இரண்டும் பொருந்தாக் காமங்கள். எனவே இவை இரண்டையும் விடுத்து ஏனைய ஐந்தை ஐந்திணை என்பர். + +ஒரு பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது என்பது ஒழுக்கத்தின் அடிப்படையிலேயே கொள்ளப்படுகிறது. அதாவது 'திணைப் பாகுபாடு' செய்யப்படுகிறது. உரிப்பொருள் அல்லாதவை மயங்கும் எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. எனவே மயங்காத உரிப்பொருளான திணைக்குறிய ஒழுக்க முறைகளே இன்ன திணையைச் சேர்ந்தது என வரையறுத்துக் காட்டும் என்பது தெளிவு. + + + + +அந்தமான் தீவுகள் + +அந்தமான் தீவுகள் என்பது வங்காள விரிகுடாவில் உள்ள ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இது இந்தியாவின் அந்தமான் நிகோபார் தீவுகளின் ஒரு பகுதியாகும். + +போர்ட் பிளேர் நகரமே இதன் நிர்வாக மையம் ஆகும். அந்தமான் தீவுகள் அனைத்தும் அந்தமான் மாவட்டம் என்ற நிர்வாக அமைப்பின் கீழ் வருகின்றன. மற்றொரு மாவட்டமான நிக்கொபார் மாவட்டம் 1974-ஆம் ஆண்டு உருவானது. அந்தமானின் மக்கள் தொகை 2001-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 314, 084 ஆகும். + +சோழ காலத்தில் "தீமைத்தீவுகள்" என்று அழைக்கப்பட்டது. + +இத்தீவுக்கூட்டத்தில் மொத்தம் 576 தீவுகள் உள்ளன. அவற்றில் இருபத்து ஆறு தீவுகளில் குடியேற்றங்கள் உள்ளன. இவை கொல்கத்தா துறைமுகத்திலிருந்து 950 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடாவில் உள்ளன. இத்தீவுத் தொடரின் மொத்த நீளம் 352 கி.மீ. அதிகபட்ச அகலம் 51 கி.மீ ஆகும். அந்தமானின் மொத்த பரப்பளவு 6408 சதுர கி.மீ. ஆகும். + +அந்தமான் நிக்கோபார் தீவுகளின் தென்கோடித் தீவிலுள்ள "இந்திரா முனை" என்ற இடம், இந்திய நாட்டின் தென்முனையாகும். + + + + + +அனல் மின் நிலையம் + +அனல் மின் நிலையம் "(Thermal Power Plant)" என்பது மின்சாரம் உற்பத்தி செய்யும் மின்நிலையங்களில் ஒன்றாகும். இவ்வகை மின் நிலையங்களில் நீராவி உருளைகள் சுழற்றப்படும்போது கிடைக்கும் இயந்திர ஆற்றலைக் கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.பொதுவாக வெப்ப ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய பொருட்களை எரித்து, அதனின்று வெளிப்படும் வெப்பத்தினால் நீராவி உற்பத்தி செய்து, அதனால் நீராவிச்சுழலியை இயக்கி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டரிலிருந்து மின் சக்தியை உற்பத்தி செய்வது அனல்மின் நிலையம் ஆகும். + +இந்த முறையிலான மின்னுற்பத்திக்கு நீர், நிலக்கரி ஆகியவை முக்கிய தேவைகள் என்பதால், இவை அதிகமாக அல்லது எளிதாகக் கிடைக்கக் கூடிய இடங்களில், அனல் மின் நிலையங்கள் நிறுவப்படுகின்றன. பொதுவாக அனல் மின் நிலையங்கள் நிலக்கரியை எரிபொருளாக உபயோகித்தாலும், இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்ட பல அனல் மின் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. + + + + + + +தீ (பக்கவழி நெறிப்படுத்தல்) + +தீ என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்: + + + + + +அப்துல் காதர் லெப்பை + +அப்துல் காதர் லெப்பை இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க ஈழத்து முஸ்லிம் கவிஞர்களுள் ஒருவர். இவர் 1913 செப்டெம்பர் 7 ஆம் நாள் காத்தான்குடியில் பிறந்தார். 1934 ஆம் ஆண்டு பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் 1943 ஆம் ஆண்டில் தலைமையாசிரியராகப் பதவியுயர்வு பெற்றார். + +1965 ஆம் அண்டு கிண்ணியாவில் நடைபெற்ற இஸ்லாமியக் கலை இலக்கிய விழாவில் இவருகுக் "கவிஞர் திலகம்" என்ற பட்டம் வழங்கப்பட்டது. உமர் கய்யாம் பாடல்களின் மொழிபெயர்ப்பான "ரூபாய்யாத்" இவருக்கு இலங்கை சாஹித்திய மண்டலப் பரிசைப் பெற்றுக் கொடுத்தது. 1984 அக்டோபர் 7 ஆம் நாள் காலமானார். + + + + + + +அழ. வள்ளியப்பா + +அழ. வள்ளியப்பா (நவம்பர் 7, 1922- மார்ச் 16, 1989) குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார். + +புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இராயவரத்தில் 1922 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த அழகப்ப செட்டியார், உமையாள் ஆச்சி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் வள்ளியப்பன். இராயவரம் காந்தி ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் இராமச்சந்திரபுரத்தில் உள்ள பூமீசுவரசுவாமி இலவச உயர்நிலைப் பள்ளியில் படித்தார். + +தொடர்ந்து படிக்க முடியாததால் 1940 ஆம் ஆண்டில் வாழ்வாதாரம் தேடி வை. கோவிந்தனின் சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தார். அப்போது சக்தி ஆசிரியராக இருந்த தி. ஜானகிராமனின்ஊக்குவிப்பின் காரணமாக சக்தி இதழிலேயே எழுத ஆரம்பித்தார். "ஆளுக்குப் பாதி" என்னும் தம் முதல் கதையை எழுதினார். + +சக்தியில் பணியாற்றிய போது வள்ளியம்மை என்பாரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகனும், நான்கு மகள்களும் உள்ளனர். + +1941 -ல் சக்தியில் இருந்து விலகி இந்தியன் வங்கியில் சேர்ந்தார். வங்கிப் பணியில் இருந்தவாறு கவிதையும் கட்டுரையும் எழுதத் தொடங்கியவர் 1982 -ல் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெறும் வரை எழுதினார். ஓய்வுக்குப் பின்பும் எழுதிக் கொண்டுதான் இருந்தார். + +வங்கிப் பணியில் இருக்கும்போதே பாலர் மலர், டமாரம், சங்கு ஆகிய செய்தித் தாள்களுக்கு கௌரவ ஆசிரியராகப் பணியாற்றினார். 1951 முதல் 1954 வரை பூஞ்சோலை என்ற இதழுக்கும், ஓய்வு பெற்ற பின் 1983 முதல் 1987 வரை, கல்கி வெளியீடான கோகுலம் என்ற இதழிலும் ஆசிரியராக இருந்தார். + +குழந்தை எழுத்தாளர்கள் பலரைத் திரட்டி 1950 -ல் குழந்தை எழுத்தாளர்கள் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். சக்தி வை.கோவிந்தன் இச்சங்கத்தின் முதல் தலைவராக இருந்தார். அவரைத் தொடர்ந்து வள்ளியப்பா இந்த அமைப்பின் காரியதரிசியாகவும், தலைவராகவும், வழிகாட்டியாகவும் பல பொறுப்புகளை ஏற்றுச் செயல்பட்டார். + +செல்லமே செல்லம் எனும் YouTube சேனலில் திரு அழ வள்ளியப்பாவின் நூல்களை குறிப்பாக கொண்டு பல பாடல்கள் குழந்தைகளுக்காக அனிமேஷன் வடிவில் இருக்கின்றன . + +அவற்றுள் சில : +மற்றும் பல https://www.youtube.com/user/MagicboxTamRhy + +வள்ளியப்பாவின் 23 பாடல்கள் கொண்ட முதல் கவிதைத் தொகுதி "மலரும் உள்ளம்" 1944 ஆம் ஆண்டு வெளிவந்தது. 1954 இல் 135 பாடல்கள் கொண்ட தொகுதியும், 1961 இல் ஒரு தொகுதியும் வெளியிட்டார். "சிரிக்கும் பூக்கள்" என்ற தொகுதியை வெளியிட்ட பிறகுதான், "குழந்தைக் கவிஞர்" என்ற பெயரிட்டு அனைவரும் அழைக்கத் தொடங்கினர். + +நம் நதிகள் என்ற தலைப்புடன் தென்னாட்டு ஆறுகள் பற்றிய இவரது நூலை, தேசீய புத்தக டிரஸ்ட் பதினான்கு இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. + +அழ. வள்ளியப்பாவின் நூல்களுள் சில: + +அழ. வள்ளியப்பா 11 பாடல் தொகுதிகள், 12 புதினங்கள், 9 கட்டுரை நூல்கள், 1 நாடகம், 1 ஆய்வு நூல், 2 மொழிபெயர்ப்பு நூல்கள், 1 தொகுப்பு நூல் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார். இவற்றில், 2 நூல்கள் இந்திய நடுவண் அரசின் பரிசும், 6 நூல்கள் தமிழக அரசின் பரிசும் பெற்றன. + + + + + + + +பேலஸ் ஆன் வீல்ஸ் + +பேலஸ் ஆன் வீல்ஸ் ("Palace on Wheels", "சக்கரத்தில் மாளிகை" எனப் பொருள்படும்.) இந்திய இரயில்வேயில் உள்ள நான்கு சொகுசுத் தொடர்வண்டிகளில் ஒன்றாகும். + +இது புது தில்லியில் இருந்து புறப்படுகிறது. இதன் எட்டுப் பயண நாட்களில், ஜெய்ப்பூர், ஜெய்சால்மீர், ஜோத்பூர், சவாய் மதோபூர், சித்தார்கார், உதய்பூர், பரத்பூர் மற்றும் ஆக்ரா ஆகிய நகரங்களின் வழியாக செல்கிறது. இதன் பெரும்பான்ம��யான பயணம் இராஜஸ்தான் மாநிலத்தினுள் உள்ளது. பயணத்தின் ஒரு பகுதியாக, முக்கிய சுற்றுலாத் தலங்களான, ஹவா மஹால் ("The Palace of Winds", காற்று மாளிகை), இராத்தோம்போர் தேசிய பூங்கா, ஜக் நிவாஸ் (ஏரி மாளிகை, "Lake Palace"), ஜக் மந்திர் (நகர மாளிகை, "City Palace"), கியோலடியோ தேசிய பூங்கா மற்றும் தாஜ் மஹால் ஆகியவை காண்பிக்கப் படுகின்றன. + +பேலஸ் ஆன் வீல்ஸ் முழுவதும் குளிர்ப் பதனப்படுத்தப்பட்ட, அழகூட்டப்பட்ட 14 சொகுசு இரயில் பெட்டிகள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் முந்தைய இராஜபுதன அரசாங்கத்தின் மாநிலங்களின் பெயரில் அழைக்கப்படுகின்றன. ""The Maharaja"" (பேரரசர்), ""The Maharani"" (பேரரசி) என்ற பெயர்களில் இரண்டு ஆடம்பர உணவகங்கள் இதில் உள்ளன. + +சில காலத்துக்கு முன்பு இதில் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் பயண விலை அமெரிக்க டாலர்களில் பட்டியலிடப்பட்டுள்ளது. + + + + + +தமிழகத் திரைப்படத்துறை + +தமிழகத் திரைப்படத்துறை எனப்படுவது தமிழ் நாட்டில் இருந்து இயங்கும் தமிழ்த் திரைப்படத் துறையை ("Tamil Cinema") குறிக்கும். 1980கள் வரை, சென்னையில் கோடம்பாக்கத்தில் இருந்த திரைப்படத் தயாரிப்பு வசதிகளை முன்னிட்டு பெரும்பாலான மலையாள, தெலுங்கு மொழித் திரைப்படங்களும் இங்கிருந்தே தயாரிக்கப்பட்டன. இதனால் தமிழ்த் திரைப்படத் துறை கோலிவுட் ("Kollywood") எனவும் அழைக்கப்படுகிறது. காத்மாண்டு​வில் இருந்து இயங்கும் அளவில் சிறிய நேபாளத் திரைப்படத்துறையும் கோலிவுட் என்று அழைக்கப்படுவதுண்டு. + +"மலையாள மனோரமா" 2000ஆம் ஆண்டு நூலின் படி, 5000க்கும் கூடுதலான தமிழ்த் திரைப்படங்கள் இருபதாம் நூற்றாண்டில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தியத் திரைப்படத் தணிக்கை நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின் படி, 2003ல் இந்தியாவின் மூன்றாவது பெரிய திரைப்படத் தயாரிப்புக் களமாக கோலிவுட் விளங்கியது. 1916 முதலே தமிழில் மௌனத் திரைப்படங்களும், 1931 முதல் வசனங்களுடன் கூடிய திரைப்படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 1939ல் மெட்ராஸ் சட்டமன்றம் ஒப்புதலளித்த "பொழுதுபோக்கு வரிச் சட்டம் 1939", அக்காலத்தில் நிகழ்ந்த தமிழ்த் திரைப்படத்துறையின் அபார வளர்ச்சிக்கு சான்றாகும். + +இந்தித் திரைப்படங்களுக்கு இணையாகவோ மிக ��ெருக்கமாவோ தமிழ்த் திரைப்படங்களின் பார்வையாளர் வட்டமும் பெரிதாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வாழும் தமிழர்கள் தமிழ்த் திரைப்படங்களை விரும்பிப் பார்ப்பதுடன், புதிதாக வெளியாகும் தமிழ்த் திரைப்படங்கள் உடனுக்குடன் கேரளம், ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நேரடியாகவோ மொழிமாற்றியோ காண்பிக்கப்படுகின்றன. வணிக வெற்றி பெறும் பல தமிழ்த் திரைப்படங்கள் பின்னர் இந்திய மொழிகளில் மொழிமாற்றப்பட்டு வெளியிடப்படுவதும் (எ.கா. - ரோஜா), அத்திரைப்படங்களின் கதையை பிற மாநிலத்தவர் வாங்கி மீண்டும் அம்மாநில் மொழி நடிகர்களை கொண்டு படமாக எடுப்பதும் வாடிக்கை. சிலவேளைகளில், முன்னணி இயக்குனர்கள் ஒரே கதையை தமிழ், இந்தி, தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே நடிகர்களை கொண்டோ (எ.கா. - பாம்பே, ஹேராம்) வெவ்வேறு நடிகர்களை கொண்டோ (எ.கா - ஆய்த எழுத்து (திரைப்படம்)) எடுப்பதும் உண்டு. + +இதே போல், வணிக வெற்றியை உறுதி செய்வதற்காக, பிற மொழித் திரைப்படங்களின் கதைகளை தமிழில் எடுப்பதும் வழக்கமான ஒன்று தான். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் காலங்காலமாக வாழும் தமிழர்களும் வேலைவாய்ப்புத் தேடி அங்கு செல்லும் தமிழர்களும் தமிழ்த் திரைப்படங்களை விரும்பிப் பார்த்து அவற்றின் வணிக வெற்றிக்கு ஒரு காரணமாய் இருக்கின்றனர். இலங்கை இனப் பிரச்சினை, வளைகுடா நாட்டு வேலைவாய்ப்புகள், இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக உலகின் பல நாடுகளிலும் குடியேறியிருக்கும் தமிழர்கள் தமிழ்த் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை உருவாக்கித் தருகின்றனர். தென்னாப்பிரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நிலவும் பண்பாட்டுச் சூழல்கள் காரணமாக, தமிழ்த் திரைப்படங்கள் இங்கும் வரவேற்பைப் பெற்றுள்ளன. பிரியசகி, ஆப்பிரிக்க மொழியான சூலுவில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் தமிழ்த் திரைப்படமாகும். ரஜினிகாந்த் - மீனா நடித்த முத்து திரைப்படம் ஜப்பானில் குறிப்பிடத்தக்க அளவு ஓடியதாக கருதப்படுகிறது. ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களுக்கு இணையாக தமிழ்த் திரைப்படங்களும் ஒரே நாளில் உலகெங்கும் வெளியிடப்படுகின்றன. வெளிநாட்டு விநியோக உரிமைகள், வெளிநாட்டுத் தொலைக்காட்சி உரிமைகள் ஆகியவற்றை விற்பதன் மூலம் மு��்னணித் திரைப்படங்கள் கணிசமான வருமானம் ஈட்டுகின்றன. எனினும், இவ்வாறு தரப்படும் வெளிநாட்டு உரிமைகள் திரைப்படங்களின் திருட்டுப் பிரதிகளை இலகுவாக எடுக்க வழிசெய்கிறது என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. + +தமிழ்நாட்டின் மொத்த மாநில உற்பத்தியில் தமிழ்த் திரைப்படத்துறையின் பங்கு ஒரு விழுக்காடு என்று கருதப்படுகிறது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்புப் போக்குகள் காலமாற்றங்களுக்கு ஏற்ப ஏறி வந்துள்ளன. அவற்றின் விவரம் கீழ்வருமாறு: + + +1990கள் வரை போட்டியற்ற பொழுதுபோக்கு ஊடகமாக இருந்த தமிழ்த் திரைப்படத் துறை, செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளின் வருகையால் ஆட்டம் கண்டது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் திரையரங்குக்கு வராமலேயே எளிதாக திருட்டுத் தனமாக வீட்டிலிருந்தே படங்களை பார்க்க வழி செய்தன. உலகத் திரைப்படங்களுடனான மக்களின் பரிச்சயம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்புத் தரத்தில் எதிர்பார்க்க வைத்தது. நாள்தோறும் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர்களில் பெண்களின் கவனம் திரும்பியதாலும், உயர்ந்து வந்த திரையரங்குச் சீட்டுக் கட்டணங்களாலும், போக்குவரத்து நெரிசல்களாலும் குடும்பத்துடன் திரையரங்குக்கு வரும் போக்கு குறைந்தது. கூடி வரும் தயாரிப்புச் செலவுகள், கணிக்க இயலாத மக்களின் இரசனை, அதிக ஊழியம் வாங்கும் நடிகர்கள், திருட்டுத் திரைப்பட வட்டுப்புழக்கம், விலை உயர்வான திரையரங்குச் சீட்டுகள், தரமற்ற திரையரங்குகள் ஆகியவை தற்போதைய தமிழ்த் திரைப்படத் துறையின் பிரச்சினைகளாக கருதப்படுகின்றன. + +தமிழரின் அன்றாட வாழ்விலும் ஆர்வங்களிலும் தமிழ்த் திரைப்படத் துறை ஏற்படுத்தும் தாக்கம் குறிப்பிடத்தக்கது. தமிழ்த் திரைப்படத் துறையை சார்ந்து பல தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. தமிழ்த் திரைப்படங்கள் ஊடாக நாட்டு விடுதலை கருத்துக்கள், சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், அரசியல் இயக்கங்களின் முழக்கங்கள் ஆகியவை மிகவும் வெற்றிகரமாக பரப்பபட்டுள்ளன. மேலை நாடுகளில் இருப்பது போல் வணிக ரீதியில் தனித்தியங்கும் இசை, நடன, கலை முயற்சிகள் தமிழ்நாட்டில் மிகக் குறைவு என்பதால், தமிழ்த் திரைப்படத் துறை தமிழ்நாட்டின் வாழ்க்கை முறை, நவீனம், கலையார்வம் ஆகியவற்றில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்து���ிறது. எழுத்து, இசை, நடனத் துறைகளில் சிறந்தோர் கூடுதல் புகழ் வெளிச்சம், பணம் ஆகிய காரணங்களுக்காக தமிழ்த் திரைப்படத் துறையில் இணைந்து பங்காற்றவதும் பொதுவாக காணத்தக்கது. பிற கலைத்துறைகளைப் போலவே, திரைப்படத் துறையினரின் புகழ் வெளிச்சமும் மிகையான ஒன்று. இந்தி பேசப்படாத நாடுகளில் கூட பாலிவுட் நடிகர்களின் தாக்கம் இருக்கையில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பாலிவுட்டின் தாக்கம் ஏறக்குறைய இல்லாமலே இருப்பது, தனித்தியங்கும் தமிழ்த் திரைப்படத் துறையின் பரப்பை விளங்கிக் கொள்ள உதவும். + +அன்றாட வாழ்வில், மாநிலத்தின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் தமிழ்த் திரைப்படத்துறையின் கலைத் திறம் கேள்விக்குரிய ஒன்றுதான். வணிகத் திரைப்பட முயற்சிகள் அளவுக்கு கலை நுட்பம் மிகுந்த திரைப்படங்களுக்கு தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லாத நிலை இருக்கிறது. கலை நுணுக்கத்துடன் எடுக்கப்படும் திரைப்படங்கள் அத்திபூத்தாற் போல் வணிக வெற்றியடைவதும் உண்டு. வணிகத் திரைப்படங்களின் கதைகள் நகரம் சார்ந்தும் கதைத் தலைவன் சார்ந்தும் இருப்பதால், அவை யதார்த்தம் குறைந்தும் புதுமை குறைந்தும் இருப்பதும் ஒரு குறை. தற்போது, இளைஞர்களே திரையரங்குகளுக்கு வரும் முதன்மை பார்வையாளர்களாக உள்ளனர். இம்மாற்றம், கதைக் களத்தையும் இளைஞர்களுக்கு ஆர்வமூட்டுவதாக்கச் செய்தது. 1990கள் வரை தமிழ்த் திரைப்படங்களில் காணப்பட்ட ஊரகக் கதைகள், குடும்பக் கதைகள் குறைந்து சண்டைகள், வண்ணமயமான பாடல் காட்சிகள், காதல் கதைகள், பல வேளைகளில் ஆபாசத்தை நெருங்கும் காட்சியமைப்புகள், இரட்டை அர்த்த வசனங்கள் என்று திரைப்படங்களின் உள்ளடக்கங்கள் மாறத் தொடங்கின. + +உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இடையில் தமிழ்த் திரைப்படங்கள் ஒரு வலுவான பாலமாகத் திகழ்கின்றன. நிகழ்காலப் பேச்சுத் தமிழ், நாட்டு நடப்புகள், பண்பாட்டுப் போக்குகள் ஆகியவை குறித்த தோற்றத்தை நிறுவுவதில் தமிழ்த் திரைப்படங்களின் பங்கு இன்றியமையாதது. எனினும், இப்பொறுப்பை உணராமல் திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதாகவும், தமிழ்த் திரைப்படத் துறை சமூகத்தின் மீது ஏற்படுத்தும் நல்விளைவுகளைக் காட்டிலும் தீய விளைவுகளே கூடி வருவதாகவும் பொதுவான குற்றச்சாட்டு இருக்கிறது. தமிழ்த் திரைப்படங்கள், ���ண்மையான தமிழர் வாழ்க்கையை காட்டாது மாயத் தோற்ற கதைக் களங்களில் இயங்குவதால், தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள், பிற மொழி மற்றும் நாட்டவர் தமிழர்கள் குறித்த பிழையான புரிதலைப் பெறவும் வழிவகுக்கிறது. இதன் காரணமாகவும் தமிழ்த் திரைப்படத்துறை தரும் தன்னல வலிமை காரணமாகவும், பல்வேறு அமைப்புக்களும் தமிழ்த் திரைப்படத் துறையின் மீது தங்கள் கட்டுப்பாட்டை கொண்டு வர முயல்கின்றனர். அரசியல்வாதிகளாக உருவாகக்கூடிய போக்குகளை காட்டும், அரசியல் கட்சிகளின் கருத்துக்களை எதிர்க்கும் நடிகர்களின் திரைப்படங்கள் அரசியல் கட்சிகளின் காழ்ப்புணர்ச்சிக்கு ஆளாகின்றன. தங்களுக்கு உகாத கருத்துக்களை திரைப்படங்களில் காட்டக்கூடாது என்று சில சமயம் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பண்பாட்டுக் காப்பு, மொழிக் காப்பு ஆகிய காரணங்களை முன்னிட்டு திரைப்படங்களின் பெயர்கள், விளம்பர ஒட்டிகள், முன்னோட்டங்கள், காட்சிகள், கதையமைப்புகள் என அனைத்து கூறுகளிலும் பொதுமக்கள், அரசியல் பிரிவினர் எதிர்ப்பு தெரிவிப்பது, கலைச் சுதந்திரத்தை பறிப்பதாக திரைப்படக் கலைஞர்கள் கருதுகின்றனர். + +"நமது தமிழ்த் திரைப்படங்கள் கனவின் பணியைப், புராணங்களின் பணியைச் செய்கின்றன. அதாவது வாழ்க்கையைச் சிதைத்துப் பிரதிபலிக்கின்றது. பொய்மைகளைப் தீர்வுகளாகப் புலப்படுத்துகின்றன. இத்திரைப்படங்கள் தமிழ் மக்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பு மேலோட்டமானதல்ல. ஆழமானது. உளவியல் ரீதியானது." + + + + +த டா வின்சி கோட் (திரைப்படம்) + +த டா வின்சி கோட் ஒரு புத்தகத்தை மையமாகக் கொண்டு எடுக்கப் பட்ட திரைப்படம் ஆகும். இதில் நாயகனாக டாம் ஹாங் நடித்திருந்தார். இத் திரைப்படம் உலகளவில் பெரும் சர்ச்சைக்குள்ளானது காரணம் இதில் யேசு நாதருக்கு சந்ததி இருந்ததாக கூறப்பட்டமையே ஆகும். + +டாம் ஹாங் குறியியல் (Symbols) பற்றி ஆராய்ச்சி செய்யும் ஒரு அமெரிக்கப் பேராசிரியர். பாரிசுக்கு ஒரு விரிவுரை நிகழ்த்த வந்த இடத்தில் விதி விளையாட ஆரம்பிக்கின்றது. + +பாரிஸ் அருங்காட்சியத்தில் நூதனப் பொருட்களின் காப்பாளராக பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்படுகின்றார். இறந்த நூதனசாலை பணியாளர் தன் நெஞ்சில் நட்சத்திரக்குறி போன்ற தடயங்கள�� கீறி விட்டு மரணித்து விடுகின்றார். பாரீஸ் காவல் துறை டாம் ஹாங்கின் உதவியை நாடுகின்றது. பின்பு இறந்தவரின் பேத்தியுடன் சேர்ந்துகொள்ளும் டாம் ஹாங் பல புதிர்களை ஒன்றின் பின் ஒன்றாக விலக்குகின்றார். இதே வேளையில் காவல்துறையின் சந்தேகம் டாம் ஹாங்கின் பக்கம் திரும்புகின்றது. இப்படியாக கதை நகர்கின்றபோது இயேசு நாதருக்கு சந்ததி உள்ளமை தெரிய வருகின்றது. + +இதற்கிடையில் இயேசு பிரானின் சந்ததி பற்றிய ஆதாரங்களை அழிக்க ஒரு குழுவும், இரகசியமாகப் பாதுகாக்க இன்னுமொரு குழுவும் அலைந்து திரிகின்றது. இதில் முன்னைய குழுவால் டாம் ஹாங்கும் நாயகியும் துரத்தப்படுகின்றனர். நம்பிக்கை, நம்பிக்கைத் துரோகம் என்று கதை விறு விறுப்பாக நீள்கின்றது + +ஒவ்வொரு கட்டத்திலும் பல வரலாற்று உண்மைகளை கதையுடன் இணைத்துள்ளவிதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக டா வின்சியின் இறுதி இராப்போசனம் சித்திரத்தில் செய்யப்படும் வெட்டுக் கொத்து + + + + + +விவிலியம் + +விவிலியம் (திருவிவிலியம், "Bible"), என்பது யூதர் மற்றும் கிறித்தவர் ஆகியோரின் புனித நூலாகும். பல தனித்தனி நூல்களை உள்ளடக்கிய விவிலியமானது, ஒரு நூல்தொகுப்பாக இருப்பதோடு மட்டுமன்றி, உலகில் அதிக மொழிகளில் பெயர்க்கப்பட்ட நூல் என்ற பெருமையையும் கொண்டுள்ளது. ஒரே பெயரைக் கொண்டிருப்பினும் யூதர், கிறிஸ்தவரது விவிலியங்கள் வெவ்வேறானவையாகும். + +கிறித்தவரும் யூதரும் ஏற்றுக்கொள்ளும் விவிலியப் பகுதி கிறித்தவர்களால் "பழைய ஏற்பாடு" என்றும் யூதர்களால் தனக் என்றும் அழைக்கப்படுகிறது. கிறித்தவரும் யூதரும் விவிலியத்தைக் கடவுள் வெளிப்படுத்திய புனித வாக்கு என நம்புகின்றனர். + +இக்கட்டுரை கிறித்தவ விவிலியத்தைக் குறித்து மட்டுமே கருத்திற்கொள்ளும். + +உலகத்திலேயே திருவிவிலியம் எனும் 'பைபிள்' தான் அதிக மொழிகளில் (சுமார் 2,100) மொழிபெயர்க்கப்பட்ட நூல். அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட 1815ஆம் ஆண்டிற்குப் பின் சுமார் 500 கோடிக்கும் மேலான விவிலியப் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. + +விவிலியமானது பல தனி நூல்களின் தொகுப்பாகும். விவிலியத்தில் அடங்கியிருக்கும் நூல்களில் எவற்றை அதிகாரப்பூர்வமானவை என ஏற்பது என்பது குறித்து கிறிஸ்தவ பிரிவினரான கத்தோலிக்கர், கிழக்கு மரபுவழி திருச்சபையினர், சீர்த்திருத்தகர்கள் ஆகியோரிடையே ஒத்த கருத்து கிடையாது. முக்கியமாக யெருசலேமின் இரண்டாவது ஆலயத்துக்குப் பின்னரான காலப்பகுதியின் "இணைத் திருமுறை" நூல்களை ("The Deuterocanonical books") கத்தோலிக்க, கிழக்கு மரபுவழி மற்றும் சில சீர்த்திருத்த திருச்சபைகள் பழைய ஏற்பாட்டின் நூல்களாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை பெரும்பாலான சீர்த்திருத்த திருச்சபைகள் இந்நூல்களை அதிகாரப்பூர்வமானவையாக ஏற்றுக்கொள்வதில்லை. மேலும், இந்நூல்கள் யூதமத விவிலியத்திலும் காணப்படுவதில்லை. இச்சிறு வேறுபாடுகளைத் தவிர்த்தவிடத்து விவிலியத்தில் வேறு வேற்றுமைகள் இல்லை. மேலும், இணைத் திருமுறை நூல்கள் சேர்க்கப்படுவதாலோ அல்லது அவை நீக்கப்படுவதாலோ கிறிஸ்தவத்தின் அடிப்படைகள் மாற்றமடைவதில்லை. + +கிறித்தவ விவிலியம் இரு பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. அவையாவன: + +பண்டைய மொழிகளான எபிரேயத்திலும் கிரேக்கத்திலும் எழுதப்பட்ட நூல்தொகுதியாகிய விவிலியத்தின் மொழிபெயர்ப்புகளில் ஆங்காங்கே மாறுபாடுகள் காணப்படுகின்றன. + +விவிலியத்திலுள்ள நூல்கள் வரலாற்றின் வெவ்வேறு கட்டங்கள் பற்றி எடுத்துக் கூறுகின்றன. விவிலியத்தில் கூறப்பட்டுள்ள வரலாற்றைப் பின்வருமாறு சுருக்கலாம்: + + +இது உலகம் படைக்கப்பட்ட வரலாறு தொடங்கி, இயேசு இவ்வுலகிற்கு வரும்வரையான காலப்பகுதியில் கடவுள் மக்களுடன் தொடர்பு கொண்ட முறைகளையும், இஸ்ரயேலரின் வரலாற்றையும் கூறுகிறது. இதில் காணப்படும் "இணைத்திருமுறை" நூல்களைச் சில கிறித்தவப் பிரிவினர் அதிகாரப்பூர்வமாக ஏற்பதில்லை. + + + + +புதிய ஏற்பாடு இயேசுவின் பிறப்புடன் தொடங்குகிறது. இவ்வேற்பாட்டில் 27 நூல்கள் காணப்படுகின்றன. இவையனைத்திலும் இயேசுவே மையக்கர்த்தாவாக இருக்கிறார். கிறிஸ்தவத்தின் எல்லா உட்பிரிவினரும் இவற்றை மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றனர். புதிய ஏற்பாட்டு விவிலியத்திலுள்ள நூல்களைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம். + + + + + + + + + + + + +கூத்தரங்கம் (இதழ்) + +கூத்தரங்கம் யாழ்ப்பாணத்தில் இயங்கும் செயற்திறன் அரங்க இயக்கத்தினரால் (Active Theatre Movement) வெளியிடப்படும் சஞ்சிகையாகும் (இதழாகும்). இது மார்ச் 2004 இலிருந்து வெளிவருகின்றது. இதன் ஆசிரியர்களாக தே. தேவானந், அ. விஜயநாதன் ஆகியோர் பணியாற்றுகின்றனர். அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான கட்டுரைகள், நேர்காணல்கள் என்பவற்றோடு நாடகப் பிரதிகளும் வெளியிடப்படுகின்றன. கடந்தகால அரங்கச் செயற்பாடுகள் தொடர்பான பதிவுகளும் ஆவணப்படுத்தப் படுகின்றன. கூத்தரங்கத்தின் (சிறப்பு) விசேட அளிக்கையாக சிறுவர் அரங்கு எனும் சிறப்பிதழ் முழுக்க முழுக்க சிறுவர் அரங்கு தொடர்பாக வெளிவந்துள்ளது. + + + + + +ஜே. எம். கோட்ஸி + +ஜே. எம். கோட்ஸி (John Maxwell Coetzee)(பிறப்பு - பெப்ரவரி 9, 1940, கேப்டவுண்) என்பவர் தென்னாபிரிக்க புதின எழுத்தாளர், கட்டுரையாளர்,மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவருக்கு 2003 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. கோட்ஸி இரு முறை புக்கர் பரிசும் பெற்றுள்ளார். 2002 ஆத்திரேலியாவில் உள்ள அடிலெயிடில் குடியேறினார். 2006 ஆம் ஆண்டில் ஆத்திரேலியக் குடியுரிமையைப் பெற்றார். + +2013 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்க வலைதள பத்திரிக்கையாளரான ரிச்சர்டு பாப்லக் என்பவர் கோட்சியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார். "எந்த ஐயமும் இன்றி போற்றிப் பாராட்டப் படவேண்டிய ஆங்கில மொழி எழுத்தாளர் எனப் பாராட்டுகிறார். 2003 ஆம் ஆண்டில் நோபல் பரிசு பெறுவதற்கு முன்பாக எருசலேம் விருது, சி என் ஏ விருதினை மூன்று முறையும், பிரிக்ஸ் ஃபெமினா விருது, ஐரிசு டைம்ஸ் பத்திரிகையின் சர்வதேச புனைவு விருது, புக்கர் பரிசினை இருமுறையும் பெற்றிருக்கிறார். + +ஜான் மேக்ஸ்வெல் கோட்ஸி பெப்ரவரி 9, 1940 இல் தென்னாப்பிரிக்காவிலுள்ள கேப்டவுணில் பிறந்தார். இவருடைய தந்தை சாக்கரியாசு கோயட்ஸி அரசுப் பணியாளர் மற்றும் பகுதிநேர வழக்கறிஞர். இவருடைய தாய் வேரா கோயட்ஸி பள்ளிக்கூட ஆசிரியர் ஆவார். இவர்களுடைய குடும்பத்தில் ஆங்கிலம் தான் பெரும்பாலும் பேச்சு மொழியாகைருந்தது. ஆனால் ஜான் தனது உறவினர்களிடம் ஆப்பிரிக்க மொழியில் பேசினார். + +கோயட்ஸி தனது ஆரம்பகாலத்தின் பெரும்பாலான நேரங்களில் கேப்டவுனிலும், வோர்செஸ்டரிலும் இருந்தார். இவருடைய தந்தை அரசு வேலையை இழந்தவுடன் இவருடைய குடும்பம் வோர்செஸ்டர் சென்றது. அப்போது கோட்ஸிக்கு எட்டு வயதாகும். பின் புனித ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். பின் கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் சேர்ந���தார். 1960 ஆம் ஆண்டில் ஆங்கிலப் பிரிவில் கௌரவ இலங்கலைப் பட்டமும், 1961 ஆம் ஆண்டில் கணிதப் பிரிவில் கௌரவ இளங்கலைப் பட்டமும் பெற்றார். + +கோட்ஸி தனது வாழ்நாள் முழுவதும் பல விருதுகளைப் பெற்றுள்ளார்,விருதுகளைப் பெறுவதில் இவர் ஆர்வம் காட்டவில்லை, அதனாலேயே இவர் அதிகமாகப் புகழப்பட்டார். + +மான் புக்கர் பரிசு இரண்டுமுறை பெற்ற முதல் எழுத்தாளர் இவர் தான். 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த லைஃப் அண்ட் டைம்ஸ் ஆஃப் மிக்கேல் கே (மிக்கேல் கே வின் வாழ்க்கைப் பயணம்) மற்றும் 1999 ஆம் ஆண்டு வெளிவந்த டிஸ்கிரேசு (அவமானம்) என்பதற்காகவும் இரண்டுமுறை இந்த விருதினைப் பெற்றார். பின் 1988 மற்றும் 2001 இல் பீட்டர் கேரியும், 2009 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் ஹிலாரி மன்டலும் இருமுறை விருதினைப் பெற்றுள்ளனர். + +அக்டோபர் 2 2003 இல் சுவீடன் அகாதமியின் தலைவரான ஹொராஸ் எங்தல் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் இந்த வருடத்திற்கான இலக்கியத்திற்கான பிரிவில் நோபல் பரிசு பெறுபவராக ஜான் மேக்ஸ்வெல் கோட்ஸி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என இருந்தது. மேலும் இந்தவிருதினைப் பெறும் நான்காவது ஆப்பிரிக்க எழுத்தாளர் எனும் சிறப்பினையும் நடைன் கார்டிமருக்குப் பிறகு இந்த விருதினைப் பெறும் இரண்டாவது தென்னாப்பிரிக்க எழுத்தாளர் எனும் பெருமை பெற்றார். இந்த விருது வழங்கும் நிகழ்வானது டிசம்பர் 10, 2003 இல் ஸ்டாக்ஹோமில்நடைபெற்றது. + +வாழ்க்கைக் குறிப்புநோபிள் பாரிசு. ஆர்க் + +ஜே எம் கோயட்சி நோபள் பரிசு + +ஜே எம் கோயட்ஸி at "தெ நியூயார்க் டைம்ஸ்" + + + +பெலருஸ் + +பெலருஸ் (: ˈbɛləruːs, பெலருசிய மொழி: Беларусь, ரஷ்ய மொழி: Белору́ссия, ) முற்றிலும் நில எல்லைகளைக்கொண்ட கிழக்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஒரு நாடாகும். இதன் எல்லைகள் வலஞ்சுழியாக ரஷ்யா, உக்ரைன், போலந்து, லித்துவேனியா, லத்வியா ஆகிய அண்டை நாடுகளைக் கொண்டுள்ளது. இந்நாட்டின் தலைநகர் மின்ஸ்க்(Minsk). பிரெஸ்த், குரோத்னோ, கோமல், மகிலெவ், வித்தெப்ஸ்க் என்பன இந்நாட்டின் மற்றைய முக்கிய நகரங்கள் ஆகும். இந்நாட்டின் 207,600 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 40% வனப்பகுதியாக உள்ளது. நாட்டின் முக்கிய பொருளாதாரம் விவசாயத்திலும் விவசாய உபகரண உற்பத்தியிலும் தங்கியுள்ளது. + +பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவ��னியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. உருசியப் புரட்சியின் விளைவாக பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக(பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பு போலந்தில் 1939இல் நடைபெற்றதன் விளைவாக போலந்துக் குடியரசின் சிறுபகுதி பெலருசுடன் இணைந்தது, இதுவே இன்று காணப்படும் பெலாரசில் நிகழ்ந்த இறுதியான இணைப்பாகும். இந்நாட்டின் பகுதிகளும் தேசியமும் இரண்டாம் உலகப்போரில் சூறையாடப்பட்டன, பெலாரஸ் தனது மூன்றில் ஒரு பகுதி மக்களை இதன் போது இழந்தது; அரைவாசிக்கும் அதிகமான பொருளாதார வருவாயை இழந்தது. பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு 1945 இல்சோவியத் யூனியனுடனும் உக்ரேய்ன் சோவியத் சோசலிசக் குடியரசுடனும் சேர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்புடன் சேர்ந்தது. + +27 சூலை1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகத்து 1991 இல் பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். மேற்குலக நாட்டரசாங்கங்களின் எதிர்ப்பு இருந்தும் இவரது தலைமைத்துவத்தின் கீழ் சோவியத் காலத்து நடைமுறைகள் நடைமுறையில் உள்ளன. சில நிறுவனங்கள், நாடுகளின் மேற்கோற்படி வாக்கெடுப்புகள் நியாயமற்ற முறையில் நிகழ்ந்து அரசியல் எதிர் வேட்பாளர்கள் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டனர். 2000ம் ஆண்டிலிருந்து ஒரு ஒப்பந்தம் அயல்நாடான ரஷ்யாவுடன் கைச்சாத்திடப்பட்டது, இது இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் ஆகும். + +இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்னோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது. + +2009ம் ஆண்டில் பெலருசின் சனத்தொகை 9.6 மில்லியன்கள் ஆகும். இந்நாட்டில் 80%க்கும் அதிகமானோர் பெலருசியர் ஆவர், இவர்களை விட சிறுபான்மையாக உருசியர்கள், போலந்து நாட்டவர், உக்ரேனியர் ஆகியோரும் உள்ளனர். இந்நாட்டின் அரசகரும மொழி இரண்டு: பெலருசிய மொழி, உருசிய மொழி. + +முதன்���ைக் கட்டுரை: பெலருஸ் வரலாறு + +பெலருஸ் எனும் பெயர் "வெள்ளை ருதேனியா" அல்லது "வெள்ளை ருஸ்" (Белая Русь: Белая = வெள்ளை ) எனும் மூலத்தில் இருந்து உருவானது என நம்பப்படுகின்றது. இப்பெயர் எங்கிருந்து பெறப்பட்டது என்பது பற்றி பற்பல ஐயப்பாடுகள் உள்ளன. ஒரு மதக்கோட்பாட்டின் படி, பழைமை வாய்ந்த ருதேனிய நிலப்பரப்புகளில் ஒரு பகுதி லித்துவேனியாக்குட்பட்டு இருந்தது, அங்கே கிறித்துவ சிலாவிய இனம் குடிகொண்டிருந்தது, இவர்களை வெள்ளை ருதேனியர்கள் என்றும் எஞ்சிய பெரு நிலப்பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட பால்டிக் இனத்தவர் கறுப்பு ருதேனியர் என்றும் அழைக்கப்பட்டது என அறிய முடிகின்றது. வேறோர் பெயர்க்காரணம், வெள்ளை ஆடை அணிந்த சிலாவிய இனத்தவர் என்பதாகும். இன்னும் வேறொரு கொள்கையில், பழைமை வாய்ந்த ருதேனிய நிலப்பரப்பு (போலட்ஸ்க், வித்சியெப்ஸ்க், மகிலியோவ்) தாத்தார்களால் வெற்றிகொள்ளப்படவில்லை, இப்பகுதி மக்கள் "வெள்ளை" என அழைக்கப்பட்டனர். வேறு ஒரு ஆதாரத்தில் 1267க்கு முன்னர் மொங்கோலியர்களால் வெற்றிகொள்ளப்படாத நிலம் "வெள்ளை ருஸ்" என அழைக்கப்பட்டது. + +தற்போதைய ஒரு பார்வையில், சிலாவனிய கலாச்சாரத்தில் திசைகளை நிறம் மூலமாகக் குறிப்பிட்டனர் என்றும், "கறுப்பு" தெற்கைக் குறிக்கவும், "வெள்ளை" வடக்கைக் குறிக்கவும் பயன்பட்டது என்றும் மேலதிகமாக வெண்கடல் வடக்கிலும், கருங்கடல் தெற்கிலும் உள்ளது போன்ற கருத்துக்களும் பெயர்க்காரணத்தைக் கூறுகின்றன. +வெள்ளை ருஸ் எனும் பெயர் "வெள்ளை உருசியா" என்று மன்னராட்சியில் அழைக்கப்பட்டது, மன்னர்களால் பெரிய,சிறிய,வெள்ளை உருசியா என்று பெரும்பகுதிகள் பிரிக்கப்பட்டிருந்தது. 1991இல் பெலருசிய சோவியத் சமூகவுடைமைக் குடியரசு தனது விடுதலையின் பின்னர் "பெலருஸ்" (Belarus; Беларусь) என்று அழைக்கப்படவேண்டும் எனும் சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தது. + +பெலருஸ் ஆறு மாகாணங்களாகப் (பெலருசிய மொழி: вобласць, உருசிய மொழி: область) பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றின் நிருவாக மையம் ஒவ்வொன்றும் மாகாணங்களின் அதே பெயரைக்கொண்ட நகரத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு மாகாணமும் மேலும் மாவட்டங்களாகப் (பெலருசிய மொழி: раён, உருசிய மொழி: район).பிரிக்கப்பட்டுள்ளன. + +பெரும்பான்மையான பெலருசிய பொருளாதாரம் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இது “சோவிய��் பாணி” என விவரிக்கப்படுகின்றது. இவ்வாறாக, 51.2% பெலருசியர்கள் அரசாங்க கட்டுப்பாட்டு நிறுவனங்களில் பணிபுரிகின்றனர், 47.4% ஆனவர்கள் தனியார் நிறுவனங்களிலும் (இவற்றில் 5.7% பகுதியாக வெளிநாட்டுக்குச் சொந்தமானது), 1.4% வெளிநாட்டுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் பணிபுரிகின்றனர்.. பெட்ரோலியம் உட்பட்ட பெரும்பாலான பொருட்களுக்கு இந்நாடு உருசியாவில் தங்கியுள்ளது. பெலருசியாவின் முக்கியமான விவசாய உற்பத்திகள் உருளைக்கிழங்கு மற்றும் இறைச்சி உள்ளிட்ட கால்நடை மூலமான பொருட்கள் ஆகும். கனரக இயந்திரங்கள் (குறிப்பாக டிராக்டர்கள்), உரம் போன்ற விவசாயப் பொருட்கள் பெலருசியாவின் பிரதான ஏற்றுமதிகளாகும், எனினும் பொட்டாசிய உரவகைகள் உற்பத்தியில் உலகில் முன்னோடிகளில் ஒருவராக பெலாருஸ் விளங்குகின்றது. + +பெலருசிய நாணயம் ரூபிள் ஆகும். பத்து ரூபிள் தொடக்கம் 200,000 ரூபிள் வரையிலான நாணயத்தாள்கள் புழக்கத்தில் உள்ளன. கொப்பேய்க் என்று அழைக்கப்படும் சில்லறை நாணயங்கள் தற்பொழுது புழக்கத்தில் இல்லை. + + + + +நயாகரா அருவி + +நயாகரா அருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில் வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில் உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம் கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும் கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன் கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது. + +இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும், முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது. அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு. + +அழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும். இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ) ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல் உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல் ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை. + +குதிரை லாட நீர்வீழ்ச்சி சுமார் 173 அடியிலிருந்து (53 மீ) விழுகிறது. அமெரிக்க நீர்வீழ்ச்சியின் உயரம் அதற்கு கீழே இருக்கும் பெரிய கற்பாறைகளால் வேறுபடுகிறது. இதன்காரணமாக நீர்வீழ்ச்சியின் உயரம் 70-100 அடி (21-30 மீ) என வேறுபடுகிறது. பெரிய குதிரை லாட அருவியின் அகலம் 2,600 அடியாகவும் (790 மீ), அமெரிக்க நீர்வீழ்ச்சியின் அகலம் 1.060 அடியாகவும் (320 மீ) இருக்கிறது. நயாகரா நீர்வீழ்ச்சியின் அமெரிக்க உச்சிநிலைக்கும் கனடிய உச்சிநிலைக்கும் இடையே உள்ள தூரம் சுமார் 3,409 அடியாகும் (1,039 மீ) ஆகும். + +உச்ச பருவநிலை காலங்களில் நீர்வீழ்ச்சியிலிருந்து விழுகின்ற நீரின் அளவு வினாடிக்கு 202,000 என கன அடி (5,700 மீ 3) அளவு கூட சில சமயங்களில் இருக்கிறது. இவ்வாறு நீர்வீழ்ச்சியில் விழுகின்ற நீரானது அதிரிப்பதன் காரணமாக எறீ (Erie) ஏரியின் நீர்மட்ட உயர்வு��் அதிகமாகிறது, எனில் இவை நேரடியாக தொடர்பில் உள்ளன. இந் நிகழ்வு பொதுவாக வசந்த காலத்தின் பிற்பகுதி அல்லது கோடையின் துவக்கத்தில் நிகழ்கிறது. + +நயாகரா அருவியை விட உலகில் ஐநூறுக்கும் மேற்பட்ட உயரமான அருவிகள் இருந்தாலும் அவை குறைந்த அளவு நீரையே தருகின்றன. நயாகரா அருவியின் உயரமும் கொள்ளவும் சேர்ந்தே அதற்கு பெரும்புகழைத் தேடித்தந்தன. வெனிசுலாவில் உள்ள தேவைதை அருவியே 979 மீட்டர்கள் உயரத்தோடு உலகின் மிக உயரம் கொண்ட அருவியாக இருக்கிறது. + +மெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும் நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும் இதற்கான படகுகள் செல்கின்றன. + +பிரைடல் வெய்ல் அருவி அமெரிக்கப் பகுதியில் அமெரிக்கன் அருவிக்கு அருகில் உள்ளது. இவ்வருவியை கீழிருந்து பார்க்க மரப் படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள். +வானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது. +இவ்வருவி 10,000 ஆண்டுகளுக்கு முன் விசுகான்சின் பனியாற்றின் மூலம் உருவானது. இப்பனியாறே அமெரிக்கப் பேரேரிகள் உருவானதற்கு காரணமாகும். + +நயாகரா என்ற பெயர் எப்படி இவ்வருவிக்கு வந்தது என்பது பற்றி பல்வேறு கருத்துகள் உள்ளன. பிரூசு டிரிக்கர் என்ற அறிஞரின் கூற்றுப்படி இது இப்பகுதியில் வாழ்ந்த பழங்குடிகள் நயாக்கராராகே என்று அழைக்கப்பட்டார்கள் அதன் மூலம் வந்திருக்கலாம் என்கிறார். ஜியார்ஜ் சூடுவர்ட் என்ற அறிஞர் பழங்குடிகளின் நகரான ஓங்னியாகரா என்பதில் இருந்து வந்திருக்கலாம் என்கிறார். என்றி சுகுல்கிராப்ட் என்ற அறிஞர் இது மோகாக் என்ற பழங்குடியினரின் சொல் என்கிறார். + +நயாக்கரா அருவியின் ஆற்றல் மின் உற்பத்திக்கு உகந்தது என அறியப்பட்டது. இவ்வருவியின் நீரை முதலில் கட்டுக்குள் கொண்டு வர 1759ல் முயன்றார்கள். + +இந்த அருவியில் கோடை காலத்தில் காலை மாலை என இரு பொழுதுகளிலுமே அதிக பார்வையாளர்கள் வருகிறார்கள். கனடா நாட்டிலுள்ள நயாகராவின் பகுதியில் வெள்ளொளிகளை அருவியின் இரண்டு பக்கத்தில் இருந்துமே பாய்ச்சுகிறார்கள். இது வழக்கமாக நள்ளிரவு வரை நீடிக்கிறது. கி .பி. 2007ஆம் ���ண்டில் மட்டும் இரண்டு கோடி பார்வையாளர்கள் இங்கு வந்து சென்றார்கள். கி .பி. 2009ஆம் ஆண்டில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 2.8 கோடியாக கூடியது. பல காலமாகவே இப்பகுதியில் நடக்கும் "மெய்டு ஆஃப் தி மிசுடு" படகோட்டம் மிகப் பிரபலம். இந்த நிகழ்வு கி .பி. 1846ஆம் ஆண்டு முதலேயே நடத்தப்படுகிறது. + + + + + +மனோரா + +1814ல் கடல் போரில் நெப்போலியனுடன் போரிட்டு ஆங்கிலேயர்கள் வெற்றி பெற்றதைப் பாராட்டும் வகையில், தஞ்சையை ஆண்ட தஞ்சாவூர் மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜி ஒரு நினைவுச்சின்னத்தை நிறுவினார். அந்நினைவுச்சின்னத்தை மனோரா என்று அழைக்கின்றனர். + +அறுகோண வடிவமும் 8 அடுக்குள்ள இந்தக் கோபுரத்தின் உயரம் 120 அடி, உச்சியை அடைய 120 படிகள் உள்ளன. இது தஞ்சை மாவட்டக் கடலோரத்தில் உள்ள அதிராம்பட்டினம் அருகே மல்லிப்பட்டினத்தில் உள்ளது. தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது. + +2004ல் நிகழ்ந்த ஆழிப்பேரலையால் சேதமடைந்தது. +2007 ல் தமிழ்நாடு சுற்றுலாத்துறையினரால் புனரமைக்கப்பட்டது. + + + + + + +இரஞ்சன்குடி கோட்டை + +ரஞ்சன்குடிகோட்டை பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்பு மிக்க ஒரு அழகிய சிறிய கோட்டையாகும். + +கி.பி 17ஆம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப் வழி வந்த ஜகின்தார் என்பவரால் கட்டப்பட்டது. தற்பொழுது இந்திய தொல்பொருள் அளவை கழகத்தின் பராமரிப்பில் உள்ளது. கி.பி 1751 ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கும்(முகமது அலி உதவியுடன்) பிரஞ்சு படையினருக்கும்(சந்தா சாகிப் உதவியுடன்) இடையே நடைபெற்ற வாலிகொண்டா போர் நடைபெற்ற இடம். முகலாய மன்னர்களின் கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. + +இக் கோட்டையின் சுவர்கள் ஒழுங்காக வெட்டப்பட்ட கற்தொகுப்புக்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. வலுவான வெவ்வேறு உயரங்களில் கட்டப்பட்டுள்ள மூன்று அரண்களால் சூழப்பட்டுள்ள இக் கோட்டையில் அரசர்களுக்கு உரிய மாளிகை, குடியிருப்பு கட்டிடங்கள், சுரங்க அறைகள், மசூதி மற்றும் கொடிக் கம்பம் ஆகியவை உள்ளன., + +திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH 45) பெரம்பலூருக்கு வடக்கே 22 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. மங்களமேடு காவல் நிலையத்தின் எதிரில் உள்ள பாதையில் சென்றால் ரஞ்சன்குடி கோட்டையை எளிதில் அடையலாம். + + + + +வெள்ளை மாளிகை + +வெள்ளை மாளிகை ("White House") ஐக்கிய அமெரிக்க நாடுகளினது ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடமும் முதன்மை அலுவலகமும் ஆகும். வெள்ளை மாளிகையானது வெள்ளை வர்ணம் பூசப்பட்ட 1600 பென்சில்சேனியா அவெனியூ வாசிங்டன் டி.சி.யில் அமைந்துள்ள நியோகிளாசிக்கல் கட்டடக்கலை முறையிலமைந்த ஒரு மணற்கல் மாளிகையாகும் (). +அமெரிக்க ஜனாதிபதியின் அலுவலகமாக இது இருப்பதனால் அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் நிர்வாகத்தைக் குறிக்க "வெள்ளை மாளிகை" என்னும் சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. வெள்ளை மாளிகை தேசிய பூங்கா சேவைக்கு ("National Park Service") சொந்தமாக உள்ளது. 20 டாலர் அமெரிக்கப் பணத்தாளின் பின்புறத்தில் வெள்ளை மாளிகைளின் படம் பதிக்கப்பட்டுள்ளது. + +1812 யுத்தத்தின் போது, 1814 இல் இதன் சுற்றுச்சுவர் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தீ விபத்தால் பாதிக்கப்பட்டது. எனவே அதன் பிறகு வெள்ளை மாளிகை மீண்டும் கட்டப்பட்டது. + + + + +மறைமலை அடிகள் + +மறைமலை அடிகள் (சூலை 15, 1876 - செப்டம்பர் 15, 1950) புகழ் பெற்ற தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர். தமிழையும் வடமொழியையும் ஆங்கிலத்தையும் நன்கு கற்றவர். உயர்தனிச் செம்மொழியாம் தமிழை, வடமொழிக்கலப்பின்றித் தூய நடையில் எழுதிப் பிறரையும் ஊக்குவித்தவர். சிறப்பாக தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கித் தமிழைச் செழுமையாக வளர்த்தவர். பரிதிமாற் கலைஞரும் மறைமலை அடிகளும் தனித்தமிழ் இயக்கத்தின் இரு பெரும் முன்னோடித் தலைவர்கள். குலசமய வேறுபாடின்றிப் பொதுமக்களுக்குக் கடவுட்பற்றும், சமயப் பற்றும் உண்டாக்கும் முறையில் சொற்பொழிவுகள் ஆற்றுவதில் வல்லவர். சைவத் திருப்பணியும், சீர்திருத்தப் பணியும் செவ்வனே செய்து தமிழர்தம் உள்ளங்களில் நீங்காத இடம் பெற்றவர். + +மறைமலை அடிகளின் இயற்பெயர் வேதாசலம். இவர் 1876 சூலை 15 ஆம் நாள் மாலை 6.35க்கு திருக்கழுக்குன்றத்திலே பிறந்தார். இவர் தந்தையார் சொக்கநாதர், தாயார் சின்னம்மையார். தந்தையார் நாகப்பட்டினத்தில் அறுவை மருத்துவராய் பணியாற்றி வந்தார். பல்லாண்டுகள் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்து திருக்கழுக்குன்றம் சிவன் வேதாசலரையும் , அம்மை சொக்கம்மையையும் வேண்டி நோன்பிருந்து பிள்ளைப்பேறு பெற்றதால், தம் பிள்ளைக்கு வேதாசலம் என்று பெயரிட்டார். பின்னர்த் தனித்தமிழ்ப்பற்று காரணமாக 1916-ல் தம் பெயரை மறைமலை (வேதம் = மறை, அசலம் = மலை) என்று மாற்றிக்கொண்டார். அவர் தம்முடை பிள்ளைகள் திருநாவுக்கரசு,நீலாம்பிகை தவிர மற்றவர்களின் வடமொழிப்பெயர்களைத், திருஞான சம்பந்தம்: அறிவுத்தொடர்பு, மாணிக்க வாசகம் : மணிமொழி, சுந்தரமூர்த்தி: அழகுரு, , திரிபுரசுந்தரி : முந்நகரழகி எனத் தனித்தமிழாக்கினார். + +மறைமலைஅடிகள், நாகையில் வெசுலியன் தொண்டு நிறுவனக் கல்லூரியைச் சேர்ந்த உயர்நிலைப்பள்ளியில் நான்காம் படிவம் வரை படித்தார். அவருடைய தந்தையாரின் மறைவு காரணமாக அவரால் பள்ளிப்படிப்பைத் தொடர முடியவில்லை. ஆனால்,நாகையில் புத்தகக் கடை வைத்திருந்த தமிழ்ப்புலமை மிகுந்த நாராயணசாமிப் பிள்ளை என்பவரிடம் தமிழ் கற்றார். 'சைவ சித்தாந்த சண்டமாருதம்' என்று புகழ் பெற்றிருந்த சோமசுந்தர நாயக்கர் அவர்களிடம் சைவ சித்தாந்தம் கற்றார். + +சென்னைக்கு வந்த பின்னர்க் கிறித்தவக் கல்லூரியில் வீ.கோ.சூரியநாராயண சாத்திரியாருடன் தமிழாசிரியராகப் பணிபுரிந்தார்.1905 இல் "சைவ சித்தாந்த மகா சமாசம்" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார். அதன் மாநாட்டுத் தலைமையையும் ஏற்றார். பல ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியபின், பல்லாவரத்தில் இராமலிங்க வள்ளலாரின் கொள்கைப்படி22.04.1912-இல் “சமரச சுத்த சன்மார்க்க சங்கம்” தொடங்கினார். பின்னர் தனித்தமிழ் ஈடுபாட்டால் அதனைப் “பொதுநிலைக் கழகம் “ எனப் பெயர் மாற்றினார். திருமுருகன் அச்சுக்கூடத்தை ஏற்படுத்திப் பல நூல்களை வெளியிட்டார். "மணிமொழி நூல்நிலையம்" என்னும் நூல்நிலையத்தை உருவாக்கினார். + +மறைமலை அடிகள் "பல்லாவரம் முனிவர்" என்றும் குறிப்பிடப்பட்டார். + +இவர் காலத்தில் பல புகழ் பெற்ற தமிழறிஞர்கள் வாழ்ந்தனர். மனோன்மணீயம் இயற்றிய சுந்தரனார், பெரும்புலவர் கதிரைவேலர், திரு. வி. கலியாணசுந்தரனார், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார், ‘தமிழ் தாத்தா’ உ. வே. சாமிநாதையர், தணிகைமணி வ.சு.செங்கல்வராயர், ரசிகமணி டி. கே. சிதம்பரநாதர், பேராசிரியர் ச. வையபுரியார், கோவை இராமலிங்கம், சுப்பிரமணிய பாரதியார், மீனாட்சி சுந்தரனார், பொத்தக வணிகரும் மனோன்மணீயம் ஆசிரியர் சுந்தரனாரின் ஆசிரியரும் ஆன நாராயணசாமி, 'சைவசித்தாந்த சண்டமாருதம்' என்று புகழப்பட்ட சோமசுந்தர நாயகர், என்று பலர் வாழ்ந்த காலம். + + +ஆகிய 54 நூல்களை எழுதியுள்ளார். + +புலவர் இரா இளங்குமரன், "தமிழ் மலை - மறைமலை அடிகள்", திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை-8, 2ம் பதிப்பு 1992 (முதல் பதிப்பு 1990). பக். 1 - 112. + + + + + +கிறித்து கற்பித்த செபம் + +கிறிஸ்து கற்பித்த செபம் அல்லது கர்த்தர் கற்பித்த செபம் அல்லது பரலோக மந்திரம் ("The Lord's Prayer") என்பது திருத்தூதர்கள் எப்படி செபிப்பது என இயேசுவிடம் கேட்டபோது அவர் சொல்லிக்கொடுத்த செபமாகும். விவிலியத்தில் மத்தேயு 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்றே சுருக்கமான வடிவத்தில் இந்த இறைவேண்டல் லூக்கா 11:2-4 பகுதியில் உள்ளது. எல்லா கிறிஸ்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்றபோதும், கத்தோலிக்கர் அதிகமாக பாவித்துவருகின்றனர். + +ஒவ்வொரு நாளும் கத்தோலிக்க கோவில்களில் நிகழ்கின்ற திருப்பலியின்போது குருவும் மக்களும் நற்கருணை விருந்தில் பங்கேற்பதற்கு முன் இச்செபத்தை அறிக்கையிடுகின்றனர். மேலும், அன்னை மரியாவின் புகழ் சாற்றுகின்ற செபமாலை செபிக்கும்போதும், ஒவ்வொரு பத்துமணியின் தொடக்கத்திலும் இச்செபம் அறிக்கையிடப்படுகிறது. + +சமயம் தொடர்பான பொது நிகழ்ச்சிகளைத் தொடங்கும் வேளையிலும் கிறித்து கற்பித்த செபத்தை அறிக்கையிடும் பழக்கம் பரவலாக உள்ளது. + +கிறிஸ்து கற்பித்த செபத்தின் வசன நடை இடத்துக்கு இடம் வேறுபட்டாலும் அடிப்படையான பொருள் மாறுவது இல்லை. கைகளை விரித்து வான்நோக்கி உயர்த்தியபடியோ, குழுவாக உச்சரிக்கும் போது அருகிலுள்ளவரின் கையை பிடித்து ஒருமனித சங்கிலி அமைத்தவாறோ இச்செபத்தை சொல்வது வழக்கமாகும். + +இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்த செபத்தில் மொத்தம் ஏழு மன்றாட்டுகள் அடங்கி இருக்கின்றன. அவற்றில் முதல் மூன்றும் இறைவனின் திருவுளம் பற்றியும், அடுத்த நான்கும் மனிதரின் தேவை பற்றியும் செபிப்பதாக அமைந்துள்ளன. இந்த இறைவேண்டலின் அமைப்பு பின்வருமாறு: + + + + +ஒலி முழக்கம் + +ஒலி முழக்கம் (Sonic Boom) என்பது, வளியில் ஏற்படும் அதிர்வலை ஒன்றின் செவிப்புலனாகக்கூடிய கூறாகும். இச்சொல்லானது பொதுவாக மீயொலி விமானங்கள், விண்வெளி ஓடங்கள் போன்றனவற்றின் பறப்பின் காரணமாக ஏற்படும் வளி அதிர்ச்சியை குறிக்கவே பயன்படுகிறது. இந்த ஒலி முழக்கமானது மிகப்பெருமளவிலான ஒலி வலுவினை உற்பத்தி செய்கிறது. இதன் போது ஏற்படும் முழக்கம் குண்டு வெடிப்பினை போன்று மிகப்பெரும் ஓசையுடையதாய் இருக்கும். சாதாரணமாக இவ்வதிர்வலைகள் சதுர மீட்டருக்கு 167 மெகா வாட்டுக்களாகவும், 200 டெசிபலை அண்மித்ததாகவும் இருக்கும். + +விமானம் ஒலித்தடையினை அண்மித்து இருக்கும் போது இயல்புக்கு மாறான முகிற் கூட்டம் ஒன்று உருவாகலாம். அதிர்வலை ஒன்று உருவாகுவதன் காரணமாக வளி அமுக்கம் திடீரென குறைவடையலாம். இவ்வாறு வளியமுக்கம் குறைவடையும் போது அது திடீர் வெப்பநிலை வீழ்ச்சியை அச்சூழலில் உருவாக்குகிறது. ஈரப்பதனான காலநிலைகளிலில் இச்சூழலிலுள்ள நீராவி இவ்வெப்பநிலை வீழ்ச்சி காரணமாக திடீரென ஒடுங்கி இம் முகிலினை உருவாக்குகிறது. + +ஒரு பொருள் வளியில் அசையும் போது அது தன் முன்னாலும் பின்னாலும் அமுக்க அலைகளை தோற்றுவிக்கிறது. இவ்வலைத் தோற்றமானது படகொன்று நீரில் செல்லும்போது தோன்றும் அலைவடிவத்தை ஒத்திருக்கும். இவ்வலைகள் ஒலியின் வேகத்தில் பயணம் செய்கின்றன. பறக்கும் பொருளின் வேகம் அதிகரிக்கும்போது, இவ்வமுக்க அலைகள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமுறுகின்றன. இவ்வாறு நெருக்கமுற்ற அமுக்க அலைகள் தம்மிடையே ஒன்றுடன் ஒன்று மேற்பொருந்தும்போது பரிவு உருவாகி ஒரு தனித்த அதிர்வலை ஒலியின் வேகத்தில் உருவாக்கம்பெறுகிறது. இந்த உச்ச வேகம், Mach 1 என்று அறியப்படுகிறது. இவ்வதிர்வலையின் வேகம் கடல்மட்டத்தில் ஏறத்தாழ 1225 கிலோமீட்டர்/மணி நேரம் ஆக இருக்கும். + +அதிர்வலையானது, விமானத்தின் மூக்குப்பகுதியில் ஆரம்பித்து வாற்பகுதியில் முடிவுறும். மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படுவதோடு அது வாற்பகுதியை நோக்கி செல்ல படிப்படியாக குறைவடைந்து பின் சடுதியாக இயல்பு நிலையை அடையும். இவ்விளைவு N அலை என்று சொல்லப்படுகிறது. அவ்வலையின் வடிவம் ஆங்கில எழுத்து N போல இருப்பதாலேயே இப்பெயர் ஏற்பட்டது. திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போது முழக்கம் ஏற்படுகிறது. N அலை காரணமாக இரட்டை முழக்கம் உணரப்படுகிறது. ஒன்று மூக்குப்பகுதியில் திடீர் அமுக்க உயர்வு ஏற்படும்போதும், இரண்டாவது வாற்பகுதியில் திடீரென அம���க்க இயல்பு நிலைக்கு திரும்பும் போதும் ஏற்படுகிறது. இவ்விளைவே மீயொலி விமானங்களில் இருந்து எழும் இரட்டை முழக்க ஒலிக்கு காரணமாகிறது + +வான்படை பயிற்சி, நகர்வுகளின்போது இவ்வமுக்க விநியோகம் வேறு வகையாக இடம்பெறுகிறது. U அலை என்று அறியப்படும் வடிவத்தில் இது ஏற்படுகிறது. பறப்பிலிருக்கும் கலம் மீயொலி வேகத்திலிருக்கும் நேரம் முழுவதும் இதன்போது முழக்கம் ஏற்பட்டவண்ணமிருக்கும். இச்சந்தர்ப்பத்தில் கலம் பறக்கும் பாதை வழியாக நிலத்திலும் அதிர்வு பரவலுறும். + + + + + +ஆமென் + +ஆமென் () (எபிரேயம்:אָמֵן ’Āmēn ,அரபு: آمين ஆமீன்) ஆம் அல்லது அப்படியே ஆகுக என பொருள்படும். யூத மதத்தில் பழங்காலம் முதல் இச்சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. கிறிஸ்தவரது செபங்கள் மற்றும் பாடல்களை முற்றும் சொல்லாக பாவிக்கப்பட்டு வருகிறது. திருக்குர்ஆனில் மகிழ்சியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. இஸ்லாம் மதத்தில் சுராக்களை முற்றும் சொல்லாக பயன்படுத்தபடுகிறது. +விவிலியத்தில் மூன்று பயண்பாடுகள் நோக்கத்தக்கவை. +கிறிஸ்தவ விவிலியத்தில் மொத்தம் 99 முறை "ஆமேன்" பாவிக்கப்பட்டுள்ளது. + + + + +ஏஜாக்ஸ் + +ஏஜாக்ஸ் (AJAX = Asynchronous JavaScript And XML) என்பது வலைச்செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு முறைமையாகும். இது ஒரு தனித்துவமான நிரலாக்க மொழியோ மென்பொருளோ அல்ல. ஜாவாஸ்க்ரிப்ட், எக்ஸ் எம் எல் போன்ற வலைத்தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் மொழிகளைப் பயன்படுத்தி பயனர் இடையீட்டுடன் கூடிய, இணையத்தை அடிப்படையாக கொண்டியங்கும் செயலிகளை வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப உத்தியே ஆகும். + +இவ்வடிப்படையில் வலைத்தளம் அல்லது வலைச்செயலி ஒன்றை வடிவமைக்கும்போது மரபான முறைமைகள் வழியாக அமைக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், பயனர் ஊடாட்டம் இலகுபடுத்தப்பட்டும் இருக்கும்.இதன் பயன்பாட்டுக்கு உதாரணமாக கூகுள் மேப்புகள் உள்ளன. + +இம்முறைமை பின்வரும் நிரலாக்க மொழிகளை அடிப்படையாகக் கொண்டது. + + + + + +பிறயன் லாறா + +பிறயன் சார்லஸ் லாறா (Brian charles Lara) (பிறப்பு: மே 2, 1969) என்பவர் முன்னாள் மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் மட்டையாளர் ஆவார். அனைத��துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தேர்வுத் துடுப்பாட்டத் தரவரிசைகளில் பலசமயங்களில் முதல் இடத்தில் இருந்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பல சாதனைகளைப் புரிந்துள்ளார். குறிப்பாக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தது. மேலும் 1994 ஆம் ஆண்டில் தர்ஹாம் அணிக்கு எதிராக 501 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருவர் ஐந்து சதம் எடுப்பது அதுவே முதல் முறை. இந்தச் சாதனை இதுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. 2004 ஆம் ஆண்டில் ஆன்டிகுவா குவாத்தமாலாவில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக 400 ஓட்டங்கள் எடுத்து வீழாமல் இருந்தார். இந்த ஓட்டங்களே தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியின் ஒரு பகுதியில் தனி நபர் ஒருவரின் அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும்.லாறா மட்டுமே நூறு, இருநூறு, முந்நூறு, நாநூறு, ஐந்நூறு ஆகிய ஓட்டங்களை எடுத்த ஒரே வீரர் ஆவார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒர் ஓவரில் அதிக ஓட்டங்கள் எடுத்தவரும் லாறா தான். 2003 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் ராபின் பீட்டர்சன் ஓவரில் 28 ஓட்டங்கள் எடுத்தார். அதன் பின்பு 2013 ஆம் ஆண்டில் ஜோர்ஜ் பெய்லி இந்தச் சாதனையை சமன் செய்தார். + +1999 இல் பார்படோசுவில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக வீழாமல் 153 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு இந்தப் போட்டியை இரண்டாவது சிறந்த மட்டைச் செயல்பாடாக தரவரிசைப்படுத்தியது. 1937 ஆம் ஆண்டில் ஆஷஸ் போட்டியில் டான் பிராட்மன் 270 ஓட்டங்கள் அடித்தது முதல் இடத்தில் உள்ளது. விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பானது சிறந்த தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் சிறந்த பந்துவீச்சாளராக முத்தையா முரளிதரனை அறிவித்தது. முரளிதரன், லாறாவிற்கு பந்துவீசுவது தான் மிகச் சவாலாக இருந்ததாகக் கூறினார். 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டின் சிறந்த விசுடன் துடுப்பாட்டாளராக லாறா தேர்வானார். சோபர்ஸ் மற்றும் ஷேன் வோர்ன்க்கு அடுத்தபடியாக பி பி சி யின் இஓவர்சீஸ் விருது பெறும் மூன்றாவது வீரர் லா���ா ஆவார். + +நவம்பர் 27,2009 ஆம் ஆண்டிலி "ஆர்டர் ஆஃப் ஆத்திரேலியா" எனும் விருதினைப் பெற்றார். செப்டம்பர் 14, 2012 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் "ஹால் ஆஃப் ஃபேமாக" அறிவிக்கப்பட்டார். 2012-2013 இல் நடைபெற்ற விழாவில் கிளென் மெக்ரா மற்றும் இங்கிலாந்து பெண் துடுப்பாட்ட அணியைச் சார்ந்த சகலத் துறையர் எனித் பேக் வெல் ஆகியோருக்கும் இந்த விழாவில் "ஹால் ஆஃப் ஃபேமாக" அறிவிக்கப்பட்டனர். + +பிறயன் லாறா "தெ பிரின்ஸ் ஆஃப் போர்ட் ஆஃப் ஸ்பெயின் அல்லது தெ பிரின்ஸ்" எனவும் அழைக்கப்பட்டார். + +பிறயன் லாறா மே 2, 1969 இல் சாண்டாகுரூஸ், டிரினிடாட் மற்றும் டொபாகோவில் பிறந்தார். இவரின் தந்தை பண்டி. லாறாவின் பெற்றோருக்கு மொத்தம் பதினொரு குழந்தைகள் உள்ளனர். இவரின் மூத்த சகோதரி ஆக்னஸ் சைரஸ் , லாறாவிற்கு ஆறு வயதாக இருக்கும் போதே ஹார்வர்டு பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார். இதன் மூலம் மிகச் சிறு வயதிலேயே துடுப்பாட்ட நுட்பங்களைக் கற்றார். புனித "ஜோசப் ரோமன் கத்தோலிக்க துவக்கப்பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார். இவரின் பதினான்காம் வயதில் பாத்திமா கல்லூரியில் சேர்ந்தார்.அங்கு ஹேரி ராம்தாஸ் என்பவரின் பயிற்சியின் கீழ் சிறந்த விளையாட்டு வீரரானார்." + + + + +பப்புவா நியூ கினி + +பப்புவா நியூ கினி அல்லது அதன் முழுப்பெயராக பப்புவா நியூ கினி சுதந்திர நாடு ("Independent State of Papua New Guinea") என அழைக்கப்படும் இந்நாடு ஓசானியாவிலுள்ள (பெருங்கடலிட நாடுகளில் உள்ள) நியூகினித்தீவின் கிழக்கு அரைவாசியையும் (மேற்கு அரைவாசி இந்தோனேசியாவின் ஆளுகைக்குட்பட்ட மேற்கு பாப்புவா மற்றும் இரியன் ஜெயா மாகாணங்களைக் கொண்டது) மற்றும் பல தீவுகளையும் கொண்டது. + +19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மெலனேசியா என அழைக்கப்படும் பசுபிக் பெருங்கடல் தென்மேற்குப் பகுதியில் இந்நாடு அமைந்துள்ளது. இந்நாட்டின் மிகச்சிறிய எண்ணிக்கையிலுள்ள நகரங்களிலொன்றான போர்ட் மோர்ஸ்பி இதன் தலைநகராகும். இந்நாட்டின் முடிக்குரிய அரசியாக இரண்டாம் எலிசபெத் மகாராணியும், ஆளுநராக சேர் பவுலியாஸ் மதானேயும், பிரதம மந்திரியாக சேர் மைக்கல் சொமாரேயும் உள்ளனர். + +உலகிலுள்ள மிகவும் பன்முகத்தன்மையுடைய நாடுகளில் இந்நாடும் ஒன்றாகும். மக்கள் தொகை 5 மில்லியனே உள்ள இந்நாட்டில் 850 இற்கும் மேற்பட்ட ஆதிக்குடிவாசிகளின் மொழிகளும் குறைந்தது அதே எண்ணிக்கையுடைய பழங்குடிக் குழுக்களும் பரம்பியுள்ளன. இந்நாடு அதிகமாக கிராமங்களைக் கொண்டது. 18 சதவீதமான மக்களே நகர்ப்புறத்தில் வசிக்கின்றனர். பெரும்பாலான மக்கள் பாரம்பரிய சமுதாயத்திலேயே வாழ்வதுடன் அன்றாட உணவுத் தேவைக்கு மட்டுமே விவசாயத்தில் ஈடுபடுகிறார்கள். இப்பாரம்பரிய சமுதாயங்களுக்கும் அவற்றின் சந்ததிகளுக்கும் இந்நாட்டின் சட்டங்களினால் போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளன. + +இந்நாட்டின் புவியியலும் மிகவும் பரந்த பன்முகத்தன்மை கொண்டது. நடுவே மலைகளும் உயர்நிலங்களையும் தாழ்நிலங்களில் அடர்த்தியான மழைக்காடுகளையும் கொண்ட இந்நாட்டின் தரைத்தோற்ற அமைப்பு போக்குவரத்துக் கட்டுமானங்களை வளர்த்தெடுக்க மிகவும் சவாலாக விளங்குகிறது. சில இடங்களுக்கு விமானம்(வானூர்தி) மூலம் மட்டுமே போய்வர முடியும். 1888 இல் இருந்து மூன்று வேற்று நாட்டவர்களின் ஆளுகைக்குட்பட்ட பின்னர் 1975 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினி அவுஸ்திரேலியாவிடமிருந்து சுதந்திரம் (முழு விடுதலை) பெற்றுக்கொண்டது. + + + + + +கர்த்தூம் + +கர்த்தூம் சூடான் நாட்டின் தலைநகரமும் கார்த்தௌம் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். இது +உகாண்டாவில் இருந்து வடக்கு நோக்கிப் பாயும் வெள்ளை நைல் மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து மேற்கு நோக்கிப் பாயும் நீல நைல் ஆகிய ஆறுகள் இணையும் இடத்தில் இருக்கிறது. இந்தத இரு நைல்களின் இணைவு "மோக்ரான்" எனப்படுகிறது. இவ்விரு ஆறுகள் இணைந்து உருவாகும் நைல் ஆறானது வடக்கு நோக்கி எகிப்து வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் இணைகிறது. + +இங்கு பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதுவே சூடான் நாட்டின் இரண்டாவது மக்கள் தொகை மிகுந்த நகரம் ஆகும். + + + + +தாமேயாக்குமை + +தாமேயாக்குமை ("autovivification") பெர்ள் நிரலாக்க மொழியின் இயங்குநிலையில் (dynamic) தரவுக் கட்டமைப்புகளை (data structures) உயிர்ப்பிக்க அனுமதிக்கும் ஒரு தனிச்சிறப்புப்பெற்ற வசதியாகும். ஒரு நிரலாக்கத்தில் அதுவரை வரையறுக்கப்படாத ஒரு மாறியை மேற்கோளாகக்கருதி அணுகமுயன்றால் தாமாகவே ஒரு மேற்கோள் வகை இனங்காட்டி ("reference type variable") உருவாகி அதற்கு நினைவகத்தில் பதிவிடமும் ஒதுக்கப்படும் வசதியையே தாமாகவுயிர்ப்பித்தல் என்கிறார்கள். அதாவது, இல்லாதவோர் இயைபுத் தொகுப்புத் தரவினத்தின் ("associative array") உறுப்பையோ அல்லது நினைவடுக்குத் தரவினத்தின் உறுப்பையோ அணுக முற்படும்போது முறையே அவ்வியைபுத் தொகுப்பு அல்லது நினைவடுக்கு உருவாக்கப்பட்டு அணுகப்பட்ட உறுப்புடன் நினைவடுக்கில் அவ்வுறுப்பின் குறியெண் ("index") வரையிலான அனைத்து உறுப்புக்களும் உருவாக்கப்பட்டுவிடுகின்றன. + +இது பிற உயர்நிலை நிரல்மொழிகளான பைத்தான், பிஹெச்பி, ரூபி, ஜாவாசுகிரிப்டு தவிர சி நிரலாக்க மொழியைத் தழுவிய பிற மொழிகளிலும் இல்லாத ஒரு சிறப்பு வசதியாகும். இருப்பினும் அண்மையில் இவ்வசதியைப் போலவே பெர்ளுக்குப் பிற்பாடு வந்த ரூபியிலும் கொண்டுவரமுடியும் எனக் கூறப்படுகிறது. + +பின்வரும் பெர்ள் நிரலின்மூலம் தாமேயாக்குமையின் விளைவைக்காணலாம். + +use Data::Printer; +use YAML; +use strict; +my %lineage; +p %lineage; +print Dump( \%lineage ); +%lineage என்ற மாறியின் உள்ளமைப்பு கீழ்க்காணுமாறு இருக்கும். +அந்தப்படிநிலையின் எளிதில்படிக்கக்கூடிய YAML வடிவம். + + + + +டான் பிராட்மன் + +சர் டொனால்ட் ஜார்ஜ் பிராட்மன் (Sir Donald George "Don" Bradman ஆகஸ்டு 27, 1908 – பிப்ரவரி 25, 2001) தெ டான் எனவும் அழைக்கப்படும் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் ஆவார்.துடுப்பாட்ட வரலாற்றிலேயே மிகச்சிறந்த மட்டையாளர் என்று பெரும்பாலோரால் ஏற்றுக்கொள்ளப்படுபவர். பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட 99.94 என்பது புள்ளிவிவரப்படி, முக்கிய விளையாட்டுகள் அனைத்திலும் உயரிய சாதனையாகக் கருதப்படுகிறது. + +துவக்கத்தில் பிராட்மன் அச்சுப்பொறி உருண்டை மற்றும் குச்சம் வைத்து விளையாடியதாக ஆத்திரேலியாவில் கதைகள் உண்டு. இவர் இரண்டே ஆண்டுகளில் புல் தரை துடுப்பாட்டத்திலிருந்து ஆத்திரேலிய அணியின் தேர்வுத் துடுப்பாட்ட அணியில் சேர்ந்தார். தனது இருபத்தி இரண்டாம் பிறந்த நாளுக்கு முன்பாக இவர் பல சாதனைகளை நிகழ்த்தினார் குறிப்பாக அதிக ஓட்டங்கள் எடுப்பதில். இவரின் பல சாதனைகள் இன்றுவரை முறியடிக்கப்படாமல் உள்ளது. பெரும் பொருளியல் வீழ்ச்சி காலத்தில் ஆத்திரேலிய விளையாட்டு உலகத்தின் இலட்சிய மனிதராகப் பார்க்கப்பட்டார். + +இவரின் இருபது வருட துடுப்பாட்ட வரலாற்றில் நிலையான ஓட்டங்களை எடுத்துள்ளார். இதனைப் பற்றி ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் அணித் தலைவர் பில் உட்ஃபுல் என்பவர் கூறுகையில் பிராட்மன் மூன்று ஆத்திரேலிய விரர்களுக்குச் சமம் என இவரைப் பாராட்டியுளார். + +இவரின் ஓய்விற்குப் பிறகும் கூட முப்பது ஆண்டு காலங்கள் நிர்வாக இயக்குநர், தெரிந்தெடுப்பி, எழுத்தாளராக இருந்தார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ஐம்பது ஆண்டுகள் கழித்து 2001 ஆம் ஆண்டில் ஆத்திரேலியாவின் இருபத்தி ஐந்தாவது பிரதமரான ஜோன் ஹவார்ட் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களில் மிகச்சிறந்தவர் என பிராட்மனைப் பாராட்டினார். + +இவரின் சாதனைகளைப் பாராட்டும் விதமாக இவர் வாழ்ந்த காலகத்திலேயே இவரின் உருவப்படம் பொறித்த நாணயம்,வில்லை , அருங்காட்சியகம் ஆகியவை ஏற்படுத்தப்பட்டது. மேலும் இவர் பிறந்து நூறாண்டுகள் ஆனதையொட்டி ஆகஸ்டு 27, 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ராயல் மின்ட்டானது பிராட்மனின் உருவம் பொறித்த $5 மதிப்புள்ள தங்க நாணயத்தை வெளியிட்டது. 2009 இல் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை ஹால் ஆஃப் ஃபேமாக (புகழ் பெற்ற மனிதராக) அறிவித்தது. + +டொனால்டு ஜார்ஜ் பிராட்மன் ஆகஸ்டு 27, 1908 இல் நியூ சவுத் வேல்ஸ், ஆத்திரேலியாவில் பிறந்தார். இவரின் தந்தை ஜார்ஜ், தாய் எமிலி ஆவார். இவருக்கு விக்டர் எனும் சகோதரனும் இஸ்லத், லிலியன் மற்றும் எலிசபெத் மேஎனும் மூன்று சகோதரிகள் உள்ளனர். இவரின் மூதாதைகள் 1826 இல் இத்தாலியில் இருந்து ஆத்திரேலியாவிற்குப் புலம்பெயர்ந்தனர். பிராட்மனின் பெற்றோர் ஸ்டாகின்பின்கலுக்கு அருகிலுள்ள யோ யோ எனும் சிறிய கிராமத்தில் வாழ்ந்து வந்தனர். பிராட்மன் பிறந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக உள்ளது. பின் இவரது பெற்றோர் நியூ சவுத் வேல்சிலுள்ள பவ்ராலுக்கு குடியேறினர். இந்த இடமானது எமிலியின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் இருந்தது. + +டொனால்ட் பிராட்மனின் தேர்வுத் துடுப்பாட்ட ஓட்டங்களின் சராசரி 99.94. இருபது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளுக்கு மேல் விளையாடிய எந்த ஒரு வீரருக்கும் சராசரி 61க்கு மேல் இருந்ததில்லை. பிராட்மன் 29 முறை நூறு (துடுப்பாட்டம்) 12 முறை இரட்டை நூறு (துடுப்பாட்டம்)எடுத்துள்ளார். தனது கடைசித் த��ர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமல் சுழியில் 'ஏரிக் ஹோல்லிச் பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். தனது கடைசி தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் நான்கு ஓட்டங்கள் எடுத்திருந்தால் பிராட்மனின் சராசரி 100ஆக இருந்திருக்கும். + +ஸ்டீவ் வா, முத்தையா முரளிதரனைப் பந்து வீச்சின் பிராட்மன் என வர்ணித்துள்ளார். + + + + + +தேவநேயப் பாவாணர் + +தேவநேயப் பாவாணர் ( Devaneya Pavanar ) (பெப்ரவரி 7, 1902- சனவரி 15, 1981) மிகச்சிறந்த தமிழறிஞரும், சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் சொல்லியல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார். மறைமலை அடிகளார் வழியில் நின்று தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆழ்வேராய் இருந்து சிறப்பாக உழைத்தார். இவருடைய ஒப்பரிய தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் கருதி, சிறப்பாக பெருஞ்சித்திரனாரால் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்று அழைக்கப்பட்டார். + +தமிழ் உலக மொழிகளில் மூத்ததும் மிகத்தொன்மையான காலத்திலேயே செம்மையான மொழியாக வடிவம் பெற்றது எனவும்; திராவிடத்திற்குத் தாயாகவும் ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கிய மொழியென வாதிட்டவர். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் உள்ளிட்டவைகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்தது என்று நிறுவியவர் பாவாணர் ஆவார். தமிழின் வேர்ச்சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக்காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் அவரின் நூல்களின் வழி உலகிற்கு எடுத்து இயம்பினார். + +பாவாணர் 1902 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் கோமதிமுத்துபுரத்தில் பிறந்ததாகத் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் (சங்கரன்கோவில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை (Stokes)கிறித்தவ மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார் . ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி, திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களைக் கிறித்துவர்கள��க்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர். 1906 - பாவாணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்' துரை என்பார் காப்பில் தேவநேயப் பாவாணர் தொடக்கக் கல்வி பயின்றார். + + + +மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 15 பின்னிரவு (அதிகாலை) இயற்கை எய்தினார். +தமிழ்த்தேசியத்தந்தையாகப் போற்றப்படும் பாவலரேறு பெருஞ்சித்திரனாருக்கு ஆசிரியராக இருந்த இவர், அவரின் தென்மொழி வாயிலாகவே உலகிற்கு வெளிப்பட்டார். தென்மொழி இயக்கமே அவரின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைநின்றது. மொழிஞாயிறு பட்டமும் தென்மொழியே வழங்கியது. + + +தேவநேயரின் வாழ்க்கை வரலாற்றைப் "பாவாணர்" என்னும் தலைப்பில் இரா. இளங்குமரன் நூல்வடிவில் எழுதியுள்ளார். இந்நூல் 2000 இல் வெளிவந்தது. தேவநேயப் பாவாணரின் மகன் தே. மணி தம் தந்தையாரின் வாழ்க்கை வரலாற்றைப் "பாவாணர் நினைவலைகள்" என்னும் தலைப்பில் 2006 இல் ஒரு நூலாக எழுதியுள்ளார். + + + + + + + + + + + + + + + + + + + + +மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணி + +துடுப்பாட்ட விளையாட்டில் தேர்வு மற்றும் ஒருநாள் போட்டிகளில் மேற்கிந்தியத்தீவுகள் ஒரு அணியாக விளையாடி வருகின்றன. ஆயினும் மேற்கிந்தியத்தீவுகள் என்பது ஒரு நாடல்ல. பார்படோசு, திரினிடாட் டொபாகோ, யமேக்கா, அன்டிகுவா பர்புடா போன்ற கரிபியன் கடற்பிரதேசத்துத் தீவுக்கூட்ட நாடுகளிலிருந்து வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் விளையாடுகிறார்கள். மேற்கிந்தியத்தீவுகள் அணி 1928 இல் தேர்வுத் துடுப்பாட்டத் தகுதி பெற்றது. + + + + +அர்ஜுன றணதுங்க + +அர்ஜுன றணதுங்க (பிறப்பு - டிசம்பர் 1, 1963) இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர். இவர் ஆனந்தக் கல்லூரியில் கல்விகற்றார். இடதுகைத் துடுப்பாளராகவும் மத்திம வேக சுழல் பந்தாளராகவும் விளையாடிய ���வரது தலைமைத்துவத்திலேயே இலங்கை அணி 1996 இல் உலகக் கோப்பையை வென்றது. இவர் 2000 ஆம் ஆண்டு முதல் இலங்கை அரசியலில் ஈடுபட்டுள்ளார். + +இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஜனநாயக தேசிய முன்னணி சார்பில் களுத்துறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.இவர் 2015 செப்டம்பர் 4 அன்று துறைமுகங்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டார். + +50/4,C பெலவத்தை ரோட், நுகேகொடயில் வசிக்கும் இவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். + + + + + + +ஜாவெட் மியன்டாட் + +முகமது ஜாவெட் மியன்டாட் (Mohammad Javed Miandad (Urdu: ;பிறப்பு - ஜூன் 12, 1957, கராச்சி)பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரர் மற்றும் தலைவர் ஆவார். தனித்துவமான மட்டையாடும் திறனாலும் இவரின் தலைமைப் பண்பினாலும் பரவலாக அறியப்பட்டார். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இவரின் தனித்துவமான விளையாடும் திறன் மூலம் பிரபலமானார். துடுப்பாட்ட விமர்சகர்கள் மற்றும் பல சாதனையாளர்களின் மூலமாக பல பாராட்டுக்களையும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களில் மிகச் சிறந்த மட்டையாளர் ஜாவெட் தான் என ஈஎஸ்பிஎன் தெரிவித்தது.அனைத்துக் காலத்திற்குமான சிறந்த துடுப்பாளார்களில் இவரும் ஒருவர் என இவரின் சமகால துடுப்பாட்ட வீரர் மற்றும் பயிற்சியாளரான இயன் செப்பல் தெரிவித்தார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையை ஈஎஸ்பிஎன் நிறுவனம் "லெஜன்ட்ஸ் ஆஃப் கிரிக்கெட்" எனும் பெயரில் வெளியிட்டது.இதில் இவருக்கு 44 ஆவது இடம் கிடைத்தது. இவர் 1975 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை பாக்கித்தான் அணிக்காக விளையாடினார். இவர் பாக்கித்தான் அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். 1986 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் நான்கு ஓட்டங்கள் தேவைப்பட்ட போது கட���சிப் பந்தில் ஆறு ஓட்டங்கள் அடித்ததன் மூலம் பிரபலமானார். 1992 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடரில் பாக்கித்தான் அணி கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். இவரின் ஓய்விற்குப் பிறகு பல சமயங்களில் இவர் பாக்கித்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராகவும் பாக்கிஸ்தான் துடுப்பாட்ட வாரியத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவரின் மகன் தாவூத் இப்ராகிமின் மகளைத் திருமணம் செய்தார். + +பாக்கித்தான் துடுப்பாட்ட அணியின் முதல் தேர்வுத் துடுப்பாட்டத் தலைவர் அப்துல் ஹாபிஸ் காதர் இவரை 1970 ஆண்டுகளின் துவக்கத்தில் பார்த்தபோது இந்த நூற்றான்டின் சிறந்த வீரர் இவர்தான் எனத் தெரிவித்தார். இவரின் வருகை ஏற்கனவே முஷ்தாக் அகுமது, மஜீத் கான், சாதிக் முகம்மது, சஹீர் அப்பாஸ் மற்றும் வசீம் ராசா ஆகிய வலுவான மட்டையாளர்களின் வரிசையை மேலும் வலுவாக்கியது. 1976 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணி பாக்கித்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையடியது. அக்டோபர் 9 , லாகூரில் , கடாஃபி மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இதன்முதல் ஆட்டப் பகுதியில் இவர் 163 ஓட்டங்கள் அடித்தார். இரண்டாவது ஆட்டப் பகுதியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25* ஓட்டங்கள் அடித்தார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 119 நாட்கள் ஆகும். இந்தப்ம் போட்டியில் பந்துவீச்சில் இவர் ஒரு இலக்கினை வீழ்த்தினார். இந்தப் போட்டியில் பாக்கித்தான் அணி 6 இலக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.. இந்தத் தொடரின் மூன்றாவது போட்டி கராச்சியிலுள்ள தேசிய மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் 206 ஓட்டங்கள் எடுத்து தனது முதல் இருநூறினைப் பதிவு செய்தார்.இதன்மூலம் 47 வயதான ஜார்ஜ் ஹெட்லியின் சாதனையைத் தகர்த்தார். மேலும் மிகக் குறைந்த வயதில் இருநூறு அடித்த வீரர் எனும் சாதனை படைத்தார். அப்போது இவருக்கு வயது 19 ஆண்டுகள் 140 நாட்கள் ஆகும். பின் இரண்டாவது ஆட்ப் பகுதியில் 85 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒரே போட்டியில் இருநூறு மற்றும் நூறு ஓட்டங்கள் அடிக்கும் சாதனையைத் தவறவி���்டார். இந்தத் தொடரில் அதிக ஒட்டங்கள் அடித்த வீரர்கள் வரிசையில் முதல் இடம்பிடித்தார். இவர் 504 ஓட்டங்களை 126.00 எனும் சராசரியோடு எடுத்தார். இவரின் சிறப்பான செயல்பாட்டினால் இந்தத் தொடரை 2-0 எனும் கணக்கில் பாக்கித்தான் அணி கைப்பற்றியது. + + + + +வழங்கிப்பண்ணை + +வழங்கிப்பண்ணை ("Server Farm") என்பது, பெரும் நிறுவனங்களினுடைய வழங்கித் தேவைகள் தனியொரு வழங்கி கணினியின் இயலுகைகளை தாண்டிப்போகும் போது, அத்தேவையைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக உருவாக்கப்படும் வழங்கிக் கணினிகளின் தொகுதி ஆகும். + +பொதுவாக வழங்கிப்பண்ணைகளில் ஒரே நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முதன்மை வழங்கியும் அதற்குக் காப்பாக காப்பு வழங்கியும் காணப்படும். முதன்மை வழங்கி செயலிழக்கும் சந்தர்ப்பத்தில் காப்பு வழங்கி இடையீடின்றி பணியை செய்வதோடு, தடையற்ற சேவையை உறுதிப்படுத்தும். + +தற்போது பெரு நிறுவனங்களில் Mainframe கணினிகளின் பயன்பாட்டுக்கு மாற்றாக, அல்லது அதனோடு ஒத்தியங்கும் வண்ணம் வழங்கிப்பண்ணைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வழங்கிப்பண்ணைகள் Mainframe கணினிகளுக்கு நிகரான மாற்றாக முடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. + +கூகிள் போன்ற இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் வழங்கிப்பண்ணைகளைப் பயன்படுத்துகின்றன. + + + + + +மஹ்மூட் தர்வீஷ் + +மஹ்மூட் தர்வீஷ் ("Mahmoud Darwish") (மார்ச் 13, 1941 - ஆகஸ்ட் 9, 2008) ஒரு பாலஸ்தீன படைப்பிலக்கிய கர்த்தாவாவார். + +இவர் பலஸ்தீனத்தில் அக்றே என்ற நகருக்கு கிழக்கேயுள்ள பிந்வா என்ற கிராமத்தில் 1941 இல் பிறந்தார். அக்கிராமம் 1948 இஸ்ரேலியரால் அழிக்கப்பட பெற்றோருடன் லெபனானுக்குக் குடிபெயர்ந்தார். 1971 இல் இஸ்ரேலை விட்டு வெளியேறி கெய்ரோவில் வாழ்ந்தார். 1972 முதல் அவர் பெய்ரூத்தில் வாழ்ந்துவந்தார். + +பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் ஆராய்ச்சி நிலைய இயக்குநராக பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஜனரஞ்சக இசைக்கலைஞர்களுக்கு நிகரான பிரபலம் இவருக்கு இருப்பதாக கூறப்படுகிறது. + +1969 இல் ஆசிய ஆபிரிக்க எழுத்தாளர் அமைப்பு இவருக்கு தாமரை விருது வழங்கி கௌரவித்தது. + +இவரது முதல் கவிதைத்தொகுதியான சிறகிழந்த பறவைகள் 1960 இல் வெளிவந்தது. + + + + + + + + +இவருடைய பல கவிதைகள் தமிழில் பலரால் மொழிபெயர்க்கப்பட்���ிருக்கின்றன. பாலஸ்தீனக் கவிதைகள் என்ற தொகுப்பு நூலில் இவருடைய கவிதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நூலில் தர்வீஷின் கவிதைகளோடு சேர்த்து பல பாலஸ்தீனக் கவிஞர்களுடைய கவிதைகளும் மொழி பெயர்க்கப்பட்டிருந்தது. + +எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா மொழிபெயர்த்து தொகுத்த "மண்ணும் சொல்லும் மூன்றாம் உலகக் கவிதைகள்" என்னும் நூலிலும் இவருடைய கவிதைகள் இடம் பெற்றிருக்கின்றன. + +உயிர்மை பதிப்பகத்தினுடைய "நான் மடிந்து போவதைக் காணவே அவர்கள் விரும்புவர்" என்ற நூலில் தர்வீஷினுடைய கவிதைகள் மட்டுமே மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. + + + + + +பலத்தீன விடுதலை இயக்கம் + +பலஸ்தீன விடுதலை இயக்கம் பலஸ்தீன விடுதலைப்போராட்டத்தை முன்கொண்டுசெல்லும் இயக்கங்களுள் ஒன்றாகும். + +இவ்வமைப்பு 1964 இல் அரபு லீக் இனால் உருவாக்கப்பட்டதாகும். ஆரம்பத்தில் இவ்வமைப்பினுடைய குறிக்கோள், ஆயுதப்போராட்டம் ஒன்றின் மூலம் இஸ்ரேல் நாட்டு அரசினை அழித்தொழித்து சுதந்திர பலஸ்தீன நாட்டினை ஜோர்தான் ஆற்றுக்கும் மத்தியதரைக்கடலுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் உருவாக்குவதாகவே இருந்தது. +ஆயினும் பின்னர் இஸ்ரேலும் பலஸ்தீனமுமாக இரு நாடுகள் அருகருகே இருப்பதை பரிந்துரைக்கும் "இரு நாட்டு தீர்வு" என்ற கருத்தை ஏற்று அதனையே தனது குறிக்கோளாக்கிக்கொண்டது. + +ஆயினும் பின்னர் இஸ்ரேலும் பலஸ்தீனமுமாக இரு நாடுகள் அருகருகே இருப்பதை பரிந்துரைக்கும் "இரு நாட்டு தீர்வு" என்ற கருத்தை ஏற்று அதனையே தனது குறிக்கோளாக்கிக்கொண்டது. + +அடிப்படையில் இப்போராட்டத்தின் எழுகை, பாலஸ்தீன அரபிக்கள் தமது சொந்த நிலத்தின் மீது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் கோரும் உரிமை கொண்டவர்கள் என்ற வாதத்தை மூலமாக கொண்டிருக்கிறது. + + + + + + + + +சனத் ஜயசூரிய + +தேசபந்து சனத் தெரன் ஜயசூரிய (Sanath Teran Jayasuriya ( பிறப்பு: ஜூன் 30, 1969) இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் மட்டையாளர் மற்றும் தலைவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட சிறந்த வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் அதிரடியாக ஓட்டங்கள் சேர்ப்பதினாலும், சகலத் துறையினராக போட்டியில் அணியை வெற்றி பெறச் செய்ததற்காகவும் ப��வலாக அறியப்படுகிறார். + +இவர் துடுப்பாட்டத்தில் சகலத்துறையராக விளங்கினார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருபது ஆண்டுகளாக விளையாடினார். மேலும் மொத்தமாக 12,000 ஓட்டங்களும் 300 இலக்குகளும் எடுத்தார். இதன் மூலம் ஒருநாள் துடுப்பாட்டப் போட்டிகளின் அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணப் போட்டி காலத்தில் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். மேலும் 1997 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்த ஐந்து சிறந்த துடுப்பாட்ட வீரர்களின் பட்டியலில் இவரின் பெயரும் இடம்பெற்றது. 1993 முதல் 2003 ஆம் ஆண்டு வரை இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக இருந்தார். + +டிசம்பர் 2007 இல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும், சூன் 2011 இல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இலங்கைத் துடுப்பாட்ட அணி வாரியம் இவரை வீரர்களைத் தேர்வு செய்யும் குழுவின் செயலாளராக அறிவித்தது. இவரின் தேர்வுக் காலத்தில் தான் 2014 ஐசிசி உலக இருபது20 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. + +சனத் ஜயசூரிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், "(சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்)" ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிசார்பில் மாத்தறை மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினரானார். அந்தத் தேர்தலில் இவர் 74,352 வாக்குகள் பெற்றார். மகிந்த ராசபக்சவின் அமைச்சரவையில் தபால் துறையின் உதவி அமைச்சராகப் பதவியேற்றார். + +சனத் ஜயசூரியா சூன் 30, 1969 இல் தென் இலங்கையிலுள்ள மாத்தறையில் பிறந்தார். இவருக்கு சந்தான ஜயசூரியா எனும் மூத்த சகோதரர் உள்ளார். மாத்தறையிலுள்ள புனித செர்வாதியஸ் கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது கல்லூரியின் முதல்வர் ஜி. எல். கணபதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர் லயோனல் வகசின்ஹே ஆகியோர் இவரின் துடுப்பாட்டத் திறனை மேம்படுத்தினர். + +1997 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடந்த தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 340 ஓட்டங்கள் எடுத்தார். இதன் மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த இலங்கை அணி வீரர் எனும் சாதனையை��் படைத்தார். இந்தப் போட்டியில் ரொசான் மகாநாமவுடன் இணைந்து 576 ஓட்டங்கள் எடுத்தார்.இரண்டாவது இணைக்கு எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையைப் படைத்தார். இந்த இரு சாதனைகளும் 2006 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியின் போது மகேல ஜயவர்தன 374 ஓட்டங்களும் , குமார் சங்கக்காரவுடன் இணைந்து 624 ஓட்டங்களும் எடுத்து தகர்த்தனர். செப்டம்பர் 20, 2005 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற வங்கதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் மூலம் நூறாவது தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடியவர் எனும் சாதனையைப் படைத்தார். இந்தச் சாதனையைப் படைத்த முதல் இலங்கை வீரர் மற்றும் 33 வது சர்வதேச வீரர் ஆவார். + +ஏப்ரல் 2006 இல் ஓய்வு பெற இருப்பதாக தனது விருப்பத்தை அறிவித்தார். ஆனால் அதனை திரும்பப் பெற்றுக் கொண்டு மே 2006 இல் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் விளையாடும் அணியில் இடம்பிடித்தார். முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாது , மூன்றாவது போட்டியில் விளையாடினார். + + + + + + + +ஆண்குறி + +ஆண்குறி என்பது முதுகெலும்புள்ள, முதுகெலும்பற்ற உயிரினங்களின் இனப்பெருக்க உறுப்பாகும். இவ்வுருப்பே சிறுநீரை வெளியேற்ற பயன்படுகின்ற கழிவேற்ற உறுப்பாகவும் செயல்படுகிறது. இஃது ஆணுறுப்பு என்றும் லிங்கம் என்றும் அறியப்பெறுகிறது. ஆண் உயிரிகளும், இரு பாலின உயிரிகளும் பெண் உயிரியினுள் விந்துவை செலுத்த இவ்வுறுப்பினை பயன்செய்கின்றன. + +ஆனால் ஆண்குறியின்றியே இனப்பெருக்கம் செய்கின்ற உயிர்களும் உள்ளன. ஆண் தன்மையையும், பெண் தன்மையும் தன்னகத்தே கொண்ட சில உயிர்கள் இப்பிரிவினை சார்ந்தவை. பழங்காலத்தில் வாழந்த Pterosaur என்ற பறக்கும் தன்மையுடைய தொன்ம உயிரினம் உதாரணமாக கூறப்பெறுகிறது. + +penis என்ற ஆங்கில வார்த்தையானது, லத்தீன் வார்த்தையான வால் என்பதிலிருந்து எடுக்கப்பெற்றதாகும். இந்தோ - ஐரோப்பிய வார்த்தையானது, கிரேக்க சொல்லான πέος என்பதிலிருந்து வந்ததாகவும் நம்பிக்கையுண்டு. மேலும் ஆண் குறியானது யார்டு (yard) என்றும் காக் (cock) என்றும் அறியப்பெறுகிறது. லிங்கம் என்ற சொல்லும், பீசம் எனும் சொல்லும் தமிழில் ஆண்குறியை குறிக்க பயன்படுகிறது. + +மனித ஆண்குறியானது மற்றைய பாலூட்டும் வ���லங்குகளின் ஆண்குறியிலிருந்து பல விடயங்களில் வேறுபாடானதாக இருக்கிறது. மற்றைய விலங்குகளில் சிலவற்றில் காணப்படுவதைப்போல இவ்வுறுப்பில் நிமிர்வென்புகள் (ஆண்குறி எழுச்சிக்கு உதவும் எலும்புகள்) காணப்படுவதில்லை. மாறாக இரத்த அழுத்தம் காரணமாகவே மனித ஆண்குறியில் எழுச்சி நிகழ்கிறது. இவ்வாறான எழுச்சி நிலையில் ஆண்குறி சமநிலையில் அல்லாமல் சற்று வளைந்த நிலையில் காணப்படுகிறது. மற்ற விலங்குகளின் உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக அமைகிறது. + +உடலுறவின் போது ஆண்குறியிலிருந்து பெண்குறிக்கு விந்தானது விந்து பீச்சு நாளத்தின் மூலம் செலுத்தப்பெறுகிறது. அந்த விந்து திரவத்திலிருந்து முப்பது லட்சத்திற்கும் மேற்பட்ட விந்தனுக்கள் கருப்பாதையில் பயனிக்கின்றன. இறுதியாக ஒரே ஒரு விந்தனு மட்டும் அண்டத்தினை துளைத்து கருவினை உண்டாக்குகிறது. மற்றவை கழிவாக வெளியேற்றப்படுகின்றன.பல்வேறு, கலாச்சார, மத, மற்றும் அரிதாக மருத்துவ காரணங்களுக்காக ஆண்குறியின் மொட்டுப் பகுதியை மறைக்கும் முனைத்தோல் எனும் சளிச்சவ்வினை அகற்றுதல் விருத்த சேதனம் எனப்படுகிறது. இவ்வாறு செய்பவர்களின் ஆண்குறி மொட்டு உலர்ந்து காணப்படும். இவ்வாறு விருத்த சேதனம் செய்வது குறித்து கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. + +மனித ஆண்குறி ஆண்குறி தண்டுப்பகுதி (radix), ஆண்குறி மொட்டு, சளிச்சவ்வு ஆகிய வெளிப் பகுதிகளை கொண்டுள்ளது. உட்பகுதியில் விந்து சுரபி, விரைப்பை அல்லது விந்துக் கொள்பை, சிறுநீர்க் கால்வாய், சுரபிகள் போன்றவற்றினை கொண்டுள்ளது. + +உற்பத்தியான விந்தணுக்களை சேகாரம் செய்துவைத்திருக்கும் இரு கொள்பைகள் விந்து கொள்பைகளாகும். மனித உடலிலுள்ள வெப்பம் விந்தணுக்களை பாதிக்கும் தன்மையுடையது என்பதால், உடலிருந்து தனித்து இந்த விந்து கொள்பைகள் வெளியில் வந்துள்ளன. + +விந்து கொள் பையிலிருந்து விந்து நாளத்துடன் இணைந்து சுமார் 2.5 செ.மீ நீளமுள்ளது விந்து பீச்சு நாளமாகும். இது சிறுநீரை வெளியேற்றும் கால்வாயக்குள் முடிவடைகிறது. + +ஆணுப்பில் சிறுநீர் வெளியேறவும், விந்து வெளியேறவும் இருக்கின்ற பொதுவான பாதைக்கு சிறுநீர்க் கால்வாயென பெயர். இது புராஸ்டேட் யூரித்ரா, மென்படல யூரித்ரா, பீனிஸின் யூரித்ரா ��ன்ற மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. + +ஆண்குறியைப் பற்றி ஏராளமான மூடநம்பிக்கைகள் உள்ளன. அதிலும் மிகப்பெரியதாக இருக்கவேண்டும் என்ற எண்ணம், ஆண் பெண் இருபாலருக்குமே காணப்படுகின்றது. ஆண்குறியின் அளவை வைத்தே அவனின் ஆண்மையை கணக்கிட வேண்டும் என்று பலரும் நினைக்கின்றார்கள். இது முற்றிலும் தவறானதாகும். + +பகுலம் (Baculum) அல்லது ஓஎஸ் பீனிஸ் என்ற எலும்பானது பெரும்பாலான பாலூட்டிகளில் காணப்படுகின்றது என்ற போதும், மனிதர்களிடமும், குதிரைகளிடமும் காணப்படுவதில்லை. + +பாலூட்டிகளில் ஆண்குறியானது மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது: + +ஆண்குறியின் தண்டுப்பகுதி - +ஆண்குறியின் உடல் - +ஆண்குறியின் மொட்டுப்பகுதி - ஆண்குறியின் நுனியில் அமைந்துள்ளது. + +பெரும்பாலான ஆண் பறவைகள் (எ.கா., ரூஸ்டர், வான்கோழி) ஒரு எச்ச துவாரத்தில் ஆண்குறி போன்ற ஒன்று உள்ளது. இது போலி ஆண்குறி (Pseudo-penis) என்ற சொற்பதத்தினால் குறிக்கப்பெறுகிறது. + +சில கட்டிடங்கள் தற்செயலாகவோ, படைப்பின் திறனை ஆண்குறியாக பெருமை கொள்ளவோ ஆண்குறி அமைப்பினை ஒத்து அமைக்கப்பெறுகின்றன. இவ்வாறான கட்டிடங்கள் உலகம் முழுவதிலும் உள்ளன. இவை சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான இடங்களாகவும், பண்டைய கலாச்சாரங்கலையும், பாரம்பரியமான தொன்பொருள்களாகவும் உள்ளன. + +சில ஆண்குறி அமைப்புடைய கட்டிடங்கள் கீழே பட்டியளிடப்பட்டுள்ளன. + + +படைப்பாற்றல் என கொள்ளும் அளவிற்கு ஆண்குறி தொடர்புடைய சிலைகள் பெரும்பாலும் கற்காலத்திலும், வெண்கலக் காலத்தலும் அதிகமாக படைக்கப்பெற்றுள்ளன. ஆண்குறி வெளியே தெரியும் படியான ஆண்களின் சிலைகள், ஆண்குறியை பயன்படுத்தி அலங்காரப் பொருள்கள் போன்றவையும் இதில் அடங்கும். கிரேக்கத்தில் பல கடவுள்களின் சிலைகள் ஆண்குறி தெரியும்படி நிர்வாணமாகவே, ஆடை விலகிய நிலையிலோ படைக்கப்பட்டதையும் கவனத்தில் கொள்க. + +சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளாக வணங்கப்பெறும் சிவபெருமானை கோவில்களில் லிங்க வடிவில் அமைக்கின்றார்கள். இந்த லிங்க வடிவமானது ஆண்குறியை குறிப்பதாக நம்பப்படுகிறது. ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம். இந்த லிங்கமானது ஆண் பாகமென்றும், ஆவுடையார் பெண் பாகமென்றும் வழங்கப்பெறுகிறது. இவை இணைந்தும் ஆலிங்கனம் செய்வதை சிவாலயங்களில் மூலவராக வழிபடுகின்றனர். + +வைணவ சமயத்தின் குறியீடான திருமண்ணில் இரு பாதங்களுக்கு நடுவே இருக்கும் சிவப்பு பாகமானது ஆண்குறியை குறிப்பதாக நம்பப்படுகிறது. + + + + + +சுய இன்பம் + +சுய இன்பம் (Masturbation) என்பது பாலுறவு தவிர்ந்த வழிமுறைகள் மூலம் பாலுறுப்புக்களை தொடுகை மூலமோ, வேறு வழிகளாலோ தூண்டி பால்கிளர்ச்சி அடைவதைக் குறிக்கும். பெரும்பாலும் இவ்வாறான தூண்டுகை, புணர்ச்சிப் பரவசநிலையை அடைவதை நோக்காகக் கொண்டிருக்கும். இச்செயல் எல்லா பாலினருக்கும் பொதுவான செயற்பாடாகும். சுயமாக பாலுறுப்புக்களை தூண்டுவது மட்டுமல்லாது, ஒருவர் மற்றவருடைய பாலுறுப்புக்களைத் தூண்டுவதும் இந்த வகைக்குள்ளேயே அடங்கும். + +மனிதரில் குழந்தைப்பருவம் தொட்டே இந்நடத்தையை அவதானிக்கலாம். + +இந்நடத்தையும் இது தொடர்பான பொது உரையாடலும் சமூக அளவில் அங்கீகாரம் பெறாததோடு மதங்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படும் கலாச்சார சூழலில் தவறான செயற்பாடாகவும், தீமை பயக்கும் நடத்தையாகவும் கற்பிக்கப்படுகிறது. + +சுய இன்பத்துக்கான பல்வேறு கருவிகளும் உபகரணங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. + +சுய இன்பமும் பாலுறவும் பாலூட்டி உயிரினங்களில் அவதானிக்கப்படக்கூடிய இரு மிகப்பொதுவான பாலியல் நடத்தைகளாகும். இரண்டும் தம்மளவில் தனித்துவமானவை என்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மாற்றாக அமைபவை அல்ல. + +விலங்கு இராச்சியத்தில் சுய இன்பமானது பல பாலூட்டும் விலங்குகளில் அவதானிக்கப்படக்கூடியதாகும். வளர்ப்புப் பிராணிகளிலும், காடுகளில் வாழும் பிராணிகளிலும் இந்நடத்தையை அவதானிக்கலாம். + +சுய இன்பம் செய்தால் ஆண்மை போய் விடும், தனது மனைவியை திருப்திபடுத்த முடியாது, ஆணுறுப்பு சிறுத்து விடும், சுருங்கிவிடும் என்று பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தனியார் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் சுயஇன்பத்தைப் பற்றியதான பயம் மக்களிடையே உள்ளது. + +சுய இன்பத்தால் நரம்புத் தளர்ச்சி, ஆணுறுப்பில் சுருக்கம், பால்வினை நோய்கள், விந்து நீர்த்து போதல், மனைவியை திருப்திபடுத்த முடியாமை போ��்ற எந்த விதமான பாதிப்புகளும் வராது என மருத்துவ உலகம் கூறுகிறது. இதனை நரம்பியல் துறை வல்லுனர்களும் சுய இன்பம் தீங்கானது அல்ல என்று நிருபித்து உள்ளார்கள். + +பண்டைய கிரேக்க நாடுகளில் சிறுவர்கள் இப்பழக்கத்தை செய்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களின் ஆண்குறிக்கு பூட்டு போடப்பட்டது. அதன் சாவியை அவன் தந்தையிடம் கொடுத்து விடுவர். சிறுநீர் கழிக்கும் போது மட்டும் அதை திறந்து கொள்ளலாம். + + + + +சாயிட் அன்வர் + +சாயிட் அன்வர் ("Saeed Anwar", செப்டம்பர் 6, 1968) பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஆரம்பத்துடுப்பாளர் மற்றும் தலைவர் ஆவார். அன்வர் ஓர் இடதுகைத் துடுப்பாளர். கராச்சி அணி சார்பாக முதற்தரப் போட்டிகளில் ஆடத்தொடங்கிய அன்வர் 1990 இல் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக பைசலாபாத்தில் தன் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இவர் 189 முதல் 2003 ஆம் ஆண்டுகள் வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த பாக்கித்தானிய வீரர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார். இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாஅடி 4052ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் 11 நூறுகள் அடங்கும்.இவரின் சராசரி 45.52 ஆகும். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார். + +1990 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். பின் 1994 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான 3 ஆவது துடுப்பாட்டப் போட்டியில் இவர் 169 ஓட்டங்கள் எடுத்தார். பின் 1998 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் இறுதிவரை ஆட்டமிழக்கமல் 188* ஓட்டங்கள் சேர்த்தார். இதன்மூலம் தேர்வுப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார், 1993-1994 இல் சார்ஜா துடுப்பாட்ட அரங்கத்தில் நடைபெற்ற ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். மே 22, 1997 இல் இந்தியாவுக்கெதிரான போட்டியில் 147 பந்துவீச்சுக்களை எதிர்கொண்டு 194 ஓட்டங்களைப் பெற்றமையே அச்சாதனையாகும். அப்போது இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் எடுக்கப்பட்ட அதிக அளவு ஓட்டங்களாக இருந்தது. அதன் பின்னர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் வீரேந்தர் சேவாக் ஆகியோர் இச்சாதனையை முறியடித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஒரே போட்டியில் அதிக ஓட்டங்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் தற்போது இவர் ஆறாவது இடம் பிடித்துள்ளார். .இவர் மூன்றுமுறை துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ளார். இவர் 11 ஒருநாள் போட்டிகள் மற்றும் 7 தேர்வுப் போட்டிகளுக்கு தலைமை தாங்கினார். ஆகஸ்டு 2003 இல் சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். + +சனவரி 1989 இல் மேற்கு ஆஸ்திரேலிய துடுப்பாட்ட சங்க அரங்கத்தில் நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் இவர் 3 ஓட்டங்களை எடுத்தார். டிசம்பர் 1989 இல் குஜ்ரன்வாலாவில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 42 ஓட்டங்கள் எடுத்து பாக்கித்தான் அணி வெற்றி பெற உதவினார். + +அன்வர் மொத்தம் 247 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவர் 8842 ஓட்டங்களை 39.21 எனும் சராசரியில் எடுத்தார். ஒருநாள் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் சேர்த்த பாக்கித்தானிய வீரர்களில் இவர் மூன்றாமிடம் பிடித்துள்ளர். முதல் இரண்டு இடங்களில் இன்சமாம் உல் ஹக் மற்றும் முகம்மது யூசுப் ஆகியோர் உள்ளனர். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 20 நூறுகள் அடித்துள்ளார். இதன்மூலம் அப்போது அதிக நூறுகள் அடித்த பாக்கித்தானிய வீரர்களில் முதலிடம் பிடித்தார். + + + + + +கொட்னி வோல்சு + +கொட்னி வோல்சு் (கொட்னி வோல்ஷ், Courtney Walsh, அக்டோபர் 30, 1962) மேற்கிந்தியத்தீவுகள் அணியின் குறிப்பிடத்தக்க பந்தாளர். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் முதன்முதலாக 500 இலக்குகளைப் பெற்றவர் இவராவார். 1962 ஒக்ரோபர் 30 ஆம் திகதி பிறந்த வோல்சு ஜமெய்க்காவுக்காக ஆட அரம்பித்து 1984இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பேர்த்தில் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் ஆடினார். இங்கிலாந்தின�� குளோசெசுரசயர் அணிக்காகவும் ஆடியுள்ளார். வலதுகை வேகப்பந்தாளரான இவர் மொத்தமாக 519 தேர்வுத் துடுப்பாட்ட இலக்குகளை வீழ்த்தியுள்ளார். + + + + + +இயன் போத்தம் + +இயன் போத்தம் ("Ian Botham", பிறப்பு : நவம்பர் 24, 1955) இங்கிலாந்து துடுப்பாட்ட அணியின் குறிப்பிடத்தக்க சகலதுறை ஆட்டக்காரர். 1955 நவம்பரில் பிறந்த பொதம் உள்ளூரில் சோமர்செற், டர்ஹாம், வொர்செஸ்டர்சயர் கழகங்களுக்காகவும் இங்கிலாந்துக்காகவும் ஆடியவர். பெரும் பலமுடையவர். அதனால் Guy the Gorilla என அழைக்கப்பட்டவர். ரெஸ்ற்களில் 300 இலக்குகள் மற்றும் 5000 ஓட்டங்கள் என்ற எண்ணிக்கையை முதன்முதலில் எட்டியவர். + +துடுப்பாட்டம் + +பந்துவீச்சு + + + + + + +அலெக்சாந்தர் பூஷ்கின் + +அலெக்சாந்தர் செர்கேயெவிச் பூஷ்கின் ("Aleksandr Sergeyevich Pushkin", , - ) உருசிய மொழியின் ஒரு சிறந்த கவிஞர், நாடகாசிரியர், எழுத்தாளர். மிகப்பெரிய கவிஞராக பலரால் கருதப்படும் இவர் நவீன உருசிய இலக்கியத்தின் நிறுவனர். + +பூஷ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும் உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார். அத்துடன் ரஷ்ய இலக்கியத்தில் ஒரு தனித்துவமான கதைசொல்லும் பாங்கையும் உருவாக்கியிருந்தார். இவை முன்னெப்போதுமில்லாத அளவில் பிற்கால ரஷ்ய எழுத்தாளர்களிடம் மிகுந்த தாக்கத்தினை ஏற்படுத்தின. + +அலெக்சாந்தர் புஷ்கின் ரஷ்ய உயர்குடியைச் சேர்ந்த செர்கேய் புஷ்கினுக்கும் நதேழ்தா கண்ணிபாலுக்கும் மகனாக 1799ல் பிறந்தார். +தன் மைத்துனரான ஜார்ஜா த அந்தேசுடனான துப்பாக்கிச் சண்டையில் குண்டடிபட்டு இறந்தார். + + + + +குனூ திட்டம் + +குனூ திட்டம் (GNU Project) ஆனது, கட்டற்ற மென்பொருள் அடிப்படையிலமைந்த முழுமையான இயக்குதளம் (குனூ) ஒன்றினை உருவாக்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட செயற்றிட்டமாகும். + +இரிச்சர்டு இசுட்டால்மன் அவர்கள் இத்திட்டத்தினை ஆரம்பித்தார். குனூ (GNU) என்ற சுருக்கப்பதத்தின் விரிவு Gnu is Not Unix (அதாவது குனூ யூனிக்ஃசு அன்று) என்பதாகும். + +குனூ இயங்குதளம் யுனிக்சை ஒத்தது, ஆனால் யுனிக்சின் ஆணைமூலத்தை பயன்படுத்தவில்லை என்பதால் இப்பெயர் தெரிவுசெய்யப்பட்டது. + +இத்திட்டத்துக்கான அறிவித்தலை திரு. இரிச்சர்டு இசுட்டால்மன் 1983 இல் வெளியிட்டார். 1984 சனவரியில் இதற்கான மென்பொருள் வளர்ச்சிப் பணிகள் தொக்கமாயின. இன்று வரை இத்திட்டமானது "வளர்ச்சி" என்னும் நிலையிலேயே இருக்கிறது. நிறைவு எய்தவில்லை. ஆயினும், இத்திட்டத்தின் பெறுப்பேறாக உருவான கட்டற்ற திறந்தமூல மென்பொருட்களையும், லினக்ஸ் கருவினையும் கொண்டு உருவாக்கப்பட்ட குனூ/லினக்ஸ் இயங்குதளம் இன்று மிகவும் பரவலாகியுள்ளது. + +இச்செயற்றிட்டத்தின் பொதுவில் அறியப்பட்ட வெளியீடுகள் பெரும்பாலும் மென்பொருட்களாகவும் தொழில்நுட்பம் சார்ந்தவையாகவும் இருந்தபோதும் இத்திட்டமானது, சமூக, அற, அரசியல் இயக்கமாகவே ஆரம்பிக்கப்பட்டது. + +மென்பொருட்களையும், மென்பொருள் உரிம ஒப்பந்தங்களையும் உருவாக்குவதுபோன்றே குனூ திட்டமானது பெருமளவில் தத்துவம் சார் எழுத்தாக்கங்களை வெளியிட்டு வருகிறது. இவை பெரும்பாலும் இரிச்சர்டு இசுட்டால்மனால் எழுதப்படுபவையாகும் + +சைலோயிக் தாச்சாரி (Loïc Dachary) + + + + + +பொண்டாய் கடற்கரை + +பொண்டாய் கடற்கரை ("Bondi Beach") அவுஸ்திரேலியாவிலுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பொண்டாய் என்னும் இடத்திலுள்ள புகழ்பெற்ற கடற்கரை ஆகும். இது சிட்னியின் கிழக்குப் பிரதேசத்தில் நகரின் மத்தியில் இருந்து அண்ணளவாக ஏழு கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. வருடம் முழுவதும் பெருந்தொகையான உல்லாசப்பயணிகள் பொண்டாய் கடற்கரைக்கு வருகைதருகிறார்கள். பல பிரித்தானிய மற்றும் அயர்லாந்து சுற்றுலாப்பயணிகள் கிறிஸ்துமஸ் தினத்தினை இங்கே கழிக்கிறார்கள். + + + + +அரவிந்த டி சில்வா + +தேசபந்து பின்னாதுவகே அரவிந்த டி சில்வா (Deshabandu Pinnaduwage Aravinda de Silva ( பிறப்பு: அக்டோபர் 17, 1965) இலங்கைத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாளர் ஆவார் . கொழும்பில் பிறந்த இவர் டீ. எஸ். சேனானாயகே மகா வித்தியாலயத்தில் கல்வி கற்றார். இங்கிலாந்து மாகாணத் துடுப்பாட்டத்திலும் விளையாடியுள்ளார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த மட்டையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். இலங்கைத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பல பதவிகளில் இருந்துள்���ார். சர்வதேச போட்டிகளில் இருந்து 2003 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். + +அரவிந்த டி சில்வா கொழும்புவில் உள்ள டி. எஸ். சேனானாயகே கல்லூரியிலும் , இசிபதானா கல்லூரியிலும் பயின்றார். + +இவர் இங்கிலாந்தின் கென்ட் மாகாண அணிக்காக முதல் தரத் துடுப்பாட்டங்களில் 1995 ஆம் ஆண்டுகளில் விளையாடினார். இவரின் துடுப்பாட்ட வாழ்க்கையில் இது திருப்புமுனையாக அமைந்தது. + +1984 ஆம் ஆண்டில் இலார்ட்சு துடுப்பாட்ட மைதானத்தில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். இவர் துவக்க காலங்களில் அதிரடியாக ரன் குவிப்பவர் ஆனால் நிலையில்லாத ஆட்டத் திறனை வெளிப்படுத்தக் கூடியவர் என்று அறியப்பட்டார். இதனால் "மேட் மேக்ஸ்" என்ற புனைபெயரால் அழைக்கப்பட்டார். பின் இவரது அதிரடியாக அடிக்கும் திறன்களால் இவர் பரவலாக அறியப்படுகிறார். தனது மூர்க்கத்தனமான ஆட்டத் திறனைப் பற்றிக் கூறும்போது இது தான் எனது இயற்கையான விளையாட்டு முறை. இவ்வாறு விளையாடும் போது தான் எனக்கு நம்பிக்கை வருகிறது. எனவே எனது விளையாடும் முறையினை மாற்றம் செய்யவேண்டியதில்லை. பந்துவீச்சில் ஆதிக்கம் செலுத்த நினைத்தால் அவர்கள் அதனைச் செய்யட்டும்.ஆனால் இது தான் எனது விளையாடும் முறை. என்னுடைய இளவயதில் இருந்து இந்தமாதிரி தான் விளையாடி வருகிறேன் எனத் தெரிவித்தார். + +1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தை இலங்கைத் துடுப்பாட்ட அணி வெல்வதற்கு பிரதான பங்களிப்பை அளித்தார். ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தது மட்டுமின்றி மூன்று இலக்குகளை எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். தேர்வுத் துடுப்பாட்டத்தின் இரு பகுதிகளிலும் நூறு அடித்தவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் இந்தச் சாதனையை இந்தியத் துடுப்பாட்ட அணியைச் சார்ந்த சுனில் காவஸ்கர், ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியைச் சேர்ந்த ரிக்கி பாண்டிங் ஆகியோர் மூன்று முறைகள் அடித்துள்ளனர். + +பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிராக இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பின் அந்தத் தொடரின் இரண்டாவது போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பாக இவர் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்தப் போட்டியின் முதல் பகுதியில் ரன்கள் எதுவும் இவர் எடு��்கவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியில் சந்திகா ஹதுருசிங்ஹாவுடன் இணைந்து 176 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார். மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று அந்தத் தொடரை 2-1 என்று வெற்றி பெற்றது. மேலும் அதே அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தொடரையும் 2-1 என வெற்றி பெற்றது. இந்தத் தொடரின் போது 5 இலக்குகள் எடுத்து இலங்கை வீரர்களில் அதிக இலக்குகள் வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடம் பிடித்தார். மேலும் இவரின் பந்துவீச்சு சராசரி 17.80 ஆகும். + + + + +நைஜீரியா + +நைஜீரியா அல்லது நைஜீரிய சமஷ்டி குடியரசு மேற்கு ஆப்ரிக்காவிலிலுள்ள ஒரு நாடாகும். மேலும் இது ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மக்கள்தொகை மிகுந்த நாடு ஆகும். இதன் மேற்கில் பெனின் குடியரசும் சாட், கேமரூன் ஆகியன கிழக்கிலும் நைஜர் வடக்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் கடற்கரைப் பகுதி தெற்கில் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள கினியா வளைகுடாவில் அமைந்துள்ளது. இது 36 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதி தலைநகர் பிரதேசமான   தலைநகர் அபுஜா அமைந்துள்ளது. நைஜீரியா உத்தியோகபூர்வமாக ஒரு ஜனநாயக மதச்சார்பற்ற நாடு. இந்த நாட்டில் ஐநூற்றுக்கும் அதிகமான இன மக்கள் வாழ்கின்றனர். + +நவீனகால நைஜீரியா நூற்றாண்டுகளாக பல இராச்சியங்கள் மற்றும் பழங்குடி மாநிலங்களின் தளமாக இருந்து உள்ளது. நவீன அரசு 19 ஆம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியில் இருந்து உருவானது,   1914 இல் தென் நைஜீரியா மற்றும் வடக்கு நைஜீரியா ஆகியவை இணைக்கப்பட்டன. பிரித்தானிய ஆட்சியின் கீழ், மறைமுக ஆட்சியை நடைமுறைப்படுத்திய அதே சமயத்தில் பிரித்தானிய நிர்வாக மற்றும் சட்ட கட்டமைப்புகள் அமைக்கப்பட்டன. நைஜீரியா 1960 இல் சுதந்திரமான கூட்டமைப்பு ஆனது, 1967 முதல் 1970 வரை நாடு உள்நாட்டுப் போரில் மூழ்கியது. ஆட்சியானது ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்கள் மற்றும் இராணுவ சர்வாதிகாரங்களுக்கு இடையில் மாறியது, இந்நலை 1999 இல் நிலையான ஜனநாயகத்தை நாடு அடையும் வரை நிலவியது. 2011 இல் நடந்த ஜனாதிபதித் தேர்தலே முதன் முதலில் நியாயமாக நடந்த தேர்தலாக கருதப்பட்டது. + +நைஜீரியா அதன் பெரிய மக்கள்தொகை மற்றும் பொருளாதாரம் காரணமாக, பெரும்பாலும் "ஆபிரிக்காவின் இராட்சசன்" என அழைக்கப்படுகிறது. சுமார் 184 மில்லியன் மக்களுடன், நைஜீரியா ஆப்பிரிக்காவில் மிகவும் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும், உலகின் ஏழாவது மிக அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகவும் உள்ளது. உலகின் மிக அதிகளவில் இளைஞர்களைக் கொண்ட நாடுகளில் நைஜீரியாவும் ஒன்றாகும். இந்த நாட்டில் 500 க்கும் அதிகமான இனக்குழுக்கள் வசித்து வருவதால், இது பல நாடுகளைக் கொண்ட நாடு என கருதப்படுகிறது. நாட்டின் மூன்று பெரிய இனக்குழுக்களாக ஹுசா, இக்போ, யுவோர் ஆகியவை உள்ளன. இந்த இனக்குழுக்கள் 500 க்கும் மேற்பட்ட வெவ்வேறு மொழிகளை பேசி, பல்வேறு கலாச்சாரங்களுடன் அடையாளம் காணப்படுகின்றன. நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி ஆங்கிலம்.  நாட்டின் தெற்கு பகுதியில் பெரும்பாலும் கிருத்தவர்கள் வாழ்கின்றனர், வடக்கு பகுதிகளில் முஸ்லிம்கள் உள்ளனர். நைஜீரியாவின் சிறுபான்மை பழங்குடி மக்களான இக்போ மற்றும் யொரூப மக்கள் பழங்குடி மதங்களைப் பின்பற்றுகிறார்கள். + +2015 ஆம் ஆண்டு காலத்தில், நைஜீரிய உலகின் 20 வது மிகப்பெரிய பொருளாதார சக்தியாக உள்ளது,   2014 ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாக தென் ஆப்பிரிக்காவைத் தாண்டிச் சென்றது. 2013 கடன்-க்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் 11% ஆகும். நைஜீரியா உலக வங்கியால் வளர்ந்துவரும் சந்தையாகக் கருதப்படுகிறது; மேலும் ஆபிரிக்க கண்டத்தில் பிராந்திய சக்தியாக அடையாளம் காணப்பட்டுள்ளது, பன்னாட்டு விவகாரங்களில் ஒரு நடுத்தர சக்தியாகவும், வளர்ந்துவரும் ஒரு உலகளாவிய சக்தியாகவும் அறியப்படுகிறது. நைஜீரியா MINT குழு நாடுகள் அமைப்பின் உறுப்பினராக உள்ளது,   இது உலகின் அடுத்த "BRIC- பொருளாதார நாடு போன்று வளரக்கூடியதாக பரவலாக அறியப்படுகிறது. இது உலகில் மிகப்பெரிய "அடுத்த 11" பொருளாதர நாடுகளில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது.   நைஜீரியா ஆபிரிக்க ஒன்றியத்தின் ஒரு நிறுவன உறுப்பினராகவும் ஐக்கிய நாடுகள், காமன்வெல்த் நாடுகள் மற்றும் OPEC உள்ளிட்ட பல சர்வதேச அமைப்புக்களின் உறுப்பினராகவும் உள்ளது. + +நைஜீரியா ஒரு குடியரசு நாடு. இதன் அரசு அமெரிக்க அரசினை ஒத்தது. நாட்டின் உயரிய பதவியை அதிபர் வகிப்பார். மேலவை, கீழவை என இரண்டு அவைகள் உண்டு. செனட் எனப்படும் மேலவையில் 109 உறுப்பினர்கள் சேர்க்கப்படுவ���். கீழவையில் 360 உறுப்பினர்கள் இருப்பர். சுதந்திரத்துக்கும் முன்னரும், பின்னரும், சமயம், பழங்குடியினர், சாதி ஆகியன அரசியலில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நைஜீரிய மக்கள் குடியரசுக் கட்சி, நைஜீரிய அனைத்து மக்கள் கட்சி ஆகியன பெரிய கட்சிகளாக உள்ளன. ஹௌசா, இக்போ, யொருபா இனத்தவர் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். + +நைஜீரிய அரசின் ராணுவத்திற்கு சில பொறுப்புகள் உண்டு. நைஜீரியாவைப் பாதுகாத்தலும், மேற்கு ஆப்பிரிக்காவில் அமைதியை நிலை நாட்டுவதும் இதன் பொறுப்புகள். இது வான்படை, தரைப்படை, கடற்படை ஆகிய முப்படைகளையும் கொண்டுள்ளது. பிற நாடுகளில் அமைதியை நிலைநாட்டவும் பங்கு வகித்துள்ளது. + +இது மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவில் உள்ளது. இதன் பரப்பளவு 923,768 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். பெனின், நைகர், சாடு, கேமரூன் உள்ளிட்ட நாடுகளுடன் எல்லையைப் பகிர்ந்துகொண்டுள்ளது. இங்கு நைஜர், பெனுவே ஆறுகள் பாய்கின்றன. + +பொதுமக்களுக்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. வடக்குப் பகுதியில் வாழும் இசுலாமியருக்கான தனி சட்டங்களும் உண்டு. இதன் உயர்மட்ட நீதிமன்றம், நைஜீரியாவின் உயர்நீதிமன்றம் ஆகும். + +இது முப்பத்தாறு மாநிலங்களைக் கொண்டுள்ளது. இவற்றைப் பிரித்து, 774 உள்ளூர் பகுதிகளும் உண்டாக்கப்பட்டுள்ளன. அபுஜே என்னும் தேசியத் தலைநகரம் தனியாக நிர்வகிக்கப்படுகிறது. லேகோஸ் என்ற நகரம் அதிக மக்களைக் கொண்டுள்ளது. + +விவசாயம் முக்கிய பங்கு வகிக்கிறது. உலகளவில் பெட்ரோலிய உற்பத்தியாளர்களில் 12வது இடத்தைப் பெற்றுள்ளது. கடலை, கோக்கோ, பனைமரத்து எண்ணெய் ஆகியன முக்கிய வேளாண்மை உற்பத்திப் பொருட்கள் ஆகும். தொலைத்தொடர்புகள் துறையிலும் முன்னேறி உள்ளது. + +அலுவல் மொழியாக ஆங்கிலம் ஏற்கப்பட்டுள்ளது. கல்வி மொழியாகவும், வணிக மொழியாகவும் பயன்படுகிறது. இந்த நாட்டில் வெவ்வேறு மொழிகளைப் பேசும் பூர்விக மக்கள் வாழ்கின்றனர். பெரும்பான்மையோர் ஆங்கிலத்திலும், தங்கள் தாய்மொழியிலும் பேசும் வல்லமை பெற்றுள்ளனர். நகர்ப்பகுதிகல் தவிர்த்த பிற இடங்களில், ஆங்கில அறிவு குறைவாகவே உள்ளது. அண்டை நாடுகளில் பேசும் பிரெஞ்சு மொழியையும் சிலர் கற்றிருக்கின்றனர். ஹவுசா, இக்போ, யொருபா ஆகியன பிற முக்கிய மொழிகள் ஆகும். + +இது ஆப்பிரிக்காவிலேயே அதிக ம���்கள் தொகையைக் கொண்ட நாடு. ஏறத்தாழ 151 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். ஆப்பிரிக்க மக்கள் தொகையில் 18% மக்கள் இங்குள்ளனர். உலகளவில் மக்கள் தொகை அடிப்படையில் ஏழாவது இடத்தில் உள்ளது. மக்கள் நலவாழ்வு சதவீதம் மிகக் குறைவாக உள்ளது. + +இங்கு வாழும் மக்களில் பெரும்பாலானோர் இசுலாம், கிறித்தவ சமயங்களைப் பின்பற்றுகின்றனர். + +இங்கு கால்பந்தாட்டம் முக்கிய விளையாட்டாக உள்ளது. இதுவே தேசிய விளையாட்டாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கூடைப்பந்தாட்டமும் விளையாடுகின்றனர். + +மக்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்பது அரசின் கொள்கை. ஆனால், கட்டாயக் கல்வி முறை இல்லை. பள்ளி வகுப்புகளில், மாணவர்களின் வருகைப்பதிவுகள் குறைவாக உள்ளன. பள்ளிக் கல்வி முறை, ஆறு ஆண்டுகள் இளநிலையும், மூன்று ஆண்டுகள் இடநிலையும், மூன்றாண்டுகள் மெல்நிலையும் உள்ளது. நான்காண்டுகள் பல்கலைக்கழக படிப்பு மேற்கொள்ளப்படும். + +அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம், பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பிலும் பங்கு கொண்டுள்ளது. + +நைஜீரியாவைச் சேர்ந்த வோலே சோயின்கா என்பவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றுள்ளார். + +ஆப்பிரிக்க இசையில் நைஜீரியா பெரும்பங்கு வகித்துள்ளது. திரைத்துறையை நோல்லிவுட் என அழைக்கின்றனர். + + + + + +நைசின் விசுவாச அறிக்கை + +நைசின் விசுவாச அறிக்கை (Latin: Symbolum Nicenum), அல்லது நிசேயா நம்பிக்கை அறிக்கை என்பது பண்டைக்காலத்திலிருந்தே கிறித்தவ மறையின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான நம்பிக்கைத் தொகுப்பு ஆகும். கி.பி. 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இத்தொகுப்பை வடிவமைத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டதால் இதற்கு நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் பெயர் ஏற்படலாயிற்று. + +நிசேயா நம்பிக்கை அறிக்கை என்னும் கிறித்தவக் கொள்கைத் தொகுப்பை வடிவமைத்த பொதுச்சங்கம் கூடிய நகரம் இன்றைய துருக்கி நாட்டில் உள்ள "இஸ்னிக்" (İznik) என்னும் இடமாகும். இது அந்நாட்டின் வட மேற்குப் பகுதியில் உள்ளது. பண்டைக்காலத்தில் நிசேயா நகரம் கிரேக்க கலாச்சாரத்துக்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருந்தது. கிரேக்க மொழியில் அந்நகரம் "நிக்காயா" (Νίκαια) என்று அழைக்கப்பட்டது. அதுவே இலத்தீன் வடிவத்தில் "நிசேயா" (Nicaea) என்றாயிற்று. + +நிசேயா நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர், கிழக்குப்பகுதி (Oriental) மரபுவழி கிறிஸ்தவர், ஆங்கிலிக்கன், அசீரிய சபை, லூதரன், மற்றும் பல திருச்சபையினரும் ஏற்கும் அடிப்படை உறுதிமொழி அறிக்கையாகும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி கிறிஸ்தவ திருச்சபைகளில் திருப்பலியின் போது இந்த நம்பிக்கைத் தொகுப்பு அறிக்கையிடப்படுகிறது. இது விசுவாசத்தின் அடையாளம்,விசுவாசத்தின் மறைபொருள் அல்லது விசுவாச அறிக்கை எனவும் அழைக்கப்படுகிறது. + +கிறித்தவ சமயத்தில் "நம்பிக்கை அறிக்கை" அல்லது "விசுவாச அறிக்கை" (இலத்தீன்: Credo; ஆங்கிலம்: Creed) எனப்படுவது அச்சமயம் உண்மை எனக் கருதுகின்ற கொள்கைகளை நிர்ணயிக்கும் அளவீடு (yardstick) ஆகும். வரலாற்றில் கிறித்தவ சமயக் கொள்கைகளை யாராவது மறுத்தால் அவ்வமயம் உண்மைக் கொள்கையை எடுத்துக்கூறும் விதத்தில் "நம்பிக்கை அறிக்கைகள்" வெளியிடப்பட்டன. + +இத்தகைய நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல் "சிம்பொலோன்" (σύμβολον = symbolon; இலத்தீன்: symbolum; ஆங்கிலம்: symbol) என்பதாகும். இச்சொல்லின் மூலப்பொருள் "உடைந்த பொருளின் அரைப்பகுதி" என்பது. அப்பகுதியை எஞ்சிய பகுதியின் அருகே வைத்துப் பார்க்கும்போது உடைந்த பொருளின் "தான்மை" (identity) தெளிவாக வெளிப்படும். இந்த மூலப்பொருளின் அடிப்படையில் "symbolon" என்னும் கிரேக்கச் சொல் கிறித்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை அடையாளம் காட்டும் அளவுகோல் என்னும் பொருள் பெறலாயிற்று. தமிழில் "விசுவாசப் பிரமாணம்" என்றும் "விசுவாச அறிக்கை", "நம்பிக்கை அறிக்கை" என்றும் இது வழங்கப்படுகிறது. + +இத்தகைய நம்பிக்கை அறிக்கைகளுள் மிகப் பழமையான ஒன்று நிசேயா நம்பிக்கை அறிக்கை ஆகும். + +காண்ஸ்டண்டைன் மன்னர் நிசேயா நகரில் கி.பி. 325இல் கூட்டிய பொதுச்சங்கம் (முதலாம் நிசேயா பொதுச்சங்கம்) கிறித்தவ சமயத்தின் கொள்கைத் தொகுப்பைச் சுருக்கமாக எடுத்துரைத்தது. அச்சங்கத்தில் கிறித்தவ திருச்சபையின் எல்லா ஆயர்களும் (மரபுப்படி 318 ஆயர்கள்) கலந்துகொண்டார்கள். + +ஆரியுஸ் என்னும் கிறித்தவப் போதகர் "இயேசு கிறித்து கடவுள் தன்மை கொண்டிருந்தாலும் கடவுளால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்க���்பட்டவரே" என்று கூறியதால் திருச்சபையில் குழப்பம் ஏற்பட்டது. ஆரியுசின் கொள்கை தவறு என்று கண்டனம் செய்யப்பட்டது. அக்கொள்கையை மறுத்து, "இயேசு கிறித்து உண்மையில் கடவுள் தன்மை கொண்டவர்" என்றும் "படைப்புக்கு முன்னரே எக்காலத்திலும் கடவுளோடு கடவுளாக இருக்கின்றார்" என்றும் நிசேயா நம்பிக்கை அறிக்கை வரையறுத்தது. + +நிசேயா பொதுச்சங்கத்திற்குப் பின் கி.பி. 381இல் காண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கூடிய பொதுச்சங்கம் நீசேயா நம்பிக்கை அறிக்கையைச் சற்றே விரிவாக்கியது. இவ்வாறு விரிவாக்கப்பட்ட அறிக்கை கீழை மரபுவழி திருச்சபையால் ஏற்கப்பட்ட பாடம் ஆயிற்று. "நம்புகிறோம்" (We believe)என்றிருந்த பன்மை வடிவம் மட்டும் மாற்றப்பட்டு "நம்புகிறேன்" (I believe) என்னும் ஒருமை வடிவம் பெற்றது. + +எபேசு நகரில் கி.பி. 431இல் கூடிய பொதுச்சங்கத்தில் 381 ஆண்டின் நம்பிக்கை அறிக்கையானது மாற்றமின்றி ஏற்கப்பட்டது. மேலும் நம்பிக்கை அறிக்கையில் இனி மாற்றம் செய்யலாகாது எனவும் முடிவாயிற்று. ஆனால் இத்தகைய முடிவு அறுதியானதன்று என சிலர் கருதுகின்றனர். + +கி.பி. 381இல் வடிவமைக்கப்பட்ட "நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை" கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இலத்தீன் வழிபாட்டு முறை சார்ந்த திருச்சபைகளால் சிறிது மாற்றப்பட்டது. அதாவது "தூய ஆவி தந்தையிடமிருந்து புறப்படுகிறார்" என்னும் பாடம் "தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறார்" என்று மாற்றப்பட்டது. இம்மாற்றம் கிறித்தவ திருச்சபை வரலாற்றில் "Filioque controversy" (மகன் குழப்பம்) என்று அழைக்கப்படுகிறது. + +"Filioque" என்னும் இலத்தீன் சொல் "மகனிடமிருந்தும்" (and [from] the Son) எனப்பொருள்படும். தந்தைக் கடவுளே அனைத்திற்கும் ஊற்றாவார் என்றும் அவரோடு இணையான விதத்தில் கடவுள் தன்மை கொண்டு, தெய்வீக ஆள்களாக விளங்குகின்ற மகனும் (இயேசு கிறித்து) தூய ஆவியும் காலங்களுக்கு முன்னரே அவரிடமிருந்து "புறப்படுகின்றனர்" (proceed) என்றும் "நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை" எடுத்துக் கூறியிருந்தது. இதைச் சற்றே விரித்து "தூய ஆவி தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படுகிறார்" என்று இலத்தீன் வழிபாட்டு சபைகள் விளக்கம் தந்தன. அத்தகைய விளக்கம் சரியல்ல என்று கீழை மரபுவழித் திருச்சபை கருதியது. இதனால் பெரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது ஒரு பெரிய பிளவுக்கு வழிகோலியது. + +இந்த நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்க திருச்சபையால் இன்று ஞாயிறு மற்றும் பெருவிழாக்களில் கொண்டாடப்படும் திருப்பலியில் அறிக்கையிடப்படுகிறது. "உரோமைத் திருப்பலிப் புத்தகம்" (Roman Missal) என்று அழைக்கப்படும் கத்தோலிக்க வழிபாட்டு நூலில் காணப்படுகின்ற பாடம் இதோ: + + +கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி வழிபாட்டின்போது அறிக்கையிடப்படுகின்ற மற்றொரு அறிக்கை "திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை" அல்லது "அப்போஸ்தலர்களின் விசுவாச அறிக்கை" (Apostles' Creed) என்று அழைக்கப்படுகிறது. திருப்பலி தவிர, செபமாலை, சிலுவைப்பாதை, திருமுழுக்கு வழங்குதல் போன்ற வழிபாடுகளிலும் இந்த அறிக்கை உரைக்கப்படுகிறது. + +"திருப்பலிப் புத்தகம்" தரும் பாடம் இதோ: + + +மேலே தரப்பட்ட தமிழ்ப் பெயர்ப்பில் வடமொழிச் சொற்கள் அதிகம் பயின்றுவருவதைத் தவிர்த்து, தூய தமிழில் கீழ்வரும் பெயர்ப்பு தமிழக ஆயர் குழுவால் செய்யப்பட்டது. அந்த "நம்பிக்கை அறிக்கை" பாடம் இதோ: + +எல்லாம் வல்ல தந்தையாகிய / கடவுளை நம்புகிறேன். +இயேசு கிறிஸ்துவையும் நம்புகிறேன். +தூய கன்னி மரியாவிடமிருந்து பிறந்தார். +இறந்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார். +கடவுளின் வலப்பக்கத்தில் வீற்றிருக்கிறார். +தீர்ப்பு வழங்க மீண்டும் வருவார். + + + + + +சினுவா அச்சிபே + +சினுவா அச்சிபே ("Chinua Achebe", நவம்பர் 16, 1930 - மார்ச்சு 22, 2013) நைஜீரியாவைச் சேர்ந்த நாவலாசிரியர், கவிஞர், இலக்கிய விமர்சகர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், சிறுவர் கதைகள் எனப் பரவலாக எழுதினார். இவற்றில், இவரது புதினங்களே மிகவும் குறிப்பிடத்தக்கவையாக கணிக்கப்படுகின்றன. + +இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, கனடா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு பல்கலைக்கழகங்கள் முப்பதுக்கும் மேற்பட்ட கௌரவப் பட்டங்களை இவருக்கு வழங்கியுள்ளன. + + + + +நுகுகி வா தியங்கோ + +நுகுகி வா தியங்கோ ("Ngũgĩ wa Thiong'o", பிறப்பு: சனவரி 5, 1938) கென்யாவைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் ஆங்கிலத்திலேயே எழுதினார். ஜேம்ஸ் நுகுகி என்ற தம்முடைய பெயரை அது ஏகாதிபத்தியத்தின் அடையாளம் எனக்கருதி தமது கிகுயு மொழி மரபிற்கேற்ப "தியெங்கோவின் மகன் நுகுகி" எனப் பொருள்பட நுகுகி வா தியங்கோ என மாற்றிக் கொண்டார். + + + + + + +வோலே சொயிங்கா + +வோல் சொயிங்கா (பிறப்பு - ஜூலை 13, 1934) நைஜீரியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்திலேயே கவிதைகள், நாடகங்கள் மற்றும் நாவல்களை எழுதினார். இவரது கவிதைகளும் நாடகங்களும் மிகவும் குறிப்பிடத்தக்கவை. இவர் 1986 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற படைப்பாளியாவார். + + + + +அறிவியல் ஒப்புரு + +அறிவியல் ஒப்புரு (Scientific Model) உலக இயல்பை ஒரு கருத்து பின்புலத்தில் பிரதிநிதிப்படுத்துகின்றது. + +உலக இயல்புகளை வடிவவியல், இயற்பியல் மற்றும் அறிவியல் கோட்பாடுகள், கணித சமன்பாடுகள் கொண்டு விபரித்து அறிவியல் ஒப்புருக்களை உருவாக்கி அறிவியல் பொறியியல் பிரச்சினைகளை தீர்க்கலாம். அவ்வியல்பு நோக்கிய புரிதலுக்கும், தொடர்புடைய பொறியில் வடிவமைப்புக்கும் இவ் ஒப்புருக்கள் பயன்படுகின்றன. + + + + + +டெல் இயக்கி + +திசையன் நுண்கணிதத்தில் டெல் இயக்கி (Del Operator) ஒரு திசையன் வகையீடு இயக்கி ஆகும். + +முத்திரட்சி அல்லது முப்பரிமாண (R) கார்ட்டீசிய ஒப்புச்சட்ட முறையில் (ஆள்கூறுகள் "x", "y", "z"), டெல் (del) என்பது பகுதிய நுண்பகுப்புக்கெழுமி (partial derivative)இயக்கியின் வடிவில் கீழ்க்காணுமாறு வரையறுக்கப்படுகின்றது: + +மேலுள்ளதில் formula_2 என்பன அவ்வவ் திசையின் அலகுத் திசையன்கள் (unit vectors). + +இப்பகுதியில் டெல் இயக்கியின் முத்திரட்சி (முப்பரிமாண) வரையறையைப் பற்றி மட்டுமே கூறப்பட்டாலும், இதனை யூக்ளீடிய n-திரட்சி அல்லது n-பரிமாண வெளிக்கும் பொதுமைப்படுத்தலாம் (R). கார்ட்டீசிய ஒப்புச்சட்ட முறையில், ஒவ்வொரு திசை ஆள்கூற்றினையும் குறித்தால் ("x", "x", ..., "x"), டெல் என்பது: + +என்றாகும், மேலே உள்ளதில் formula_4 என்பது அடித்திசை அலகு (standard basis) (அதாவது ஒவ்வொரு திசைக்கும் அத்திசையில் அமைந்த ஓரலகு கொண்ட திசையன்). + +ஐன்சுட்டைனின் ஒடுக்கக் கூட்டற்குறியீட்டின் படி: + +இந்த டெல் இயக்கியை மற்ற ஒப்புச்சட்ட அமைப்பு முறைகளிலும் எழுதலாம் (எ.கா உருளை ஒப்புச்சட்டமும் உருண்டை ஒப்புச்சட்டமும்). + + + + +விரிதல் (திசையன் நுண்கணிதம்) + +திசையன் நுண்கணிதத்தில் விரிதல் ஒரு செயலி (operator) ஆகும். இது திசைபுலம் ஒரு புள்ளியில் இருந்து விரிதல் அல்லது குவிதலை செய்யக்கூடிய தன்மையை அளவிடுகின்றது. இதன் பெறுமதி ஒரு அளவெண் (scalar) ஆகும். + + + + +பரிசல் + +பரிசல் என்பது அதிக ஆழம் இல்லாத நீரில் செலுத்தும் வட்ட வடிவ படகு போன்ற கலம். இது பெரும்பாலும் மூங்கிலால் வேயப்பட்டு, எருமைத் தோலால் போர்த்தப்பட்ட கலம் ஆகும். இதனை செலுத்த பரிசற்காரர் ஒரு நீண்ட கழியை (கொம்பை), வைத்து உந்தி நகர்த்துவர். பரிசல் பெரும்பாலும் அதிக விரைவில் நீரோடாத ஆறுகளிலும் அமைதியாய் உள்ள நீர்நிலைகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்பொழுது இதன் பயன்பாடு அருகி வருகிறது. பரிசல் ஓட்டிகள் சங்கம் தமிழ்நாட்டில் 2014ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. + + + + + + +எண்கோணம் + +எண்கோணம் என்பது ஒரு சம பரப்பில் எட்டு கோணங்களைக் கொண்ட முற்றுப்பெறும் ஒரு வடிவம். இதில் எட்டு முனைகளும், எட்டுப் பக்கங்களும் (பக்கம் என்பது நேர்க்கோடால் ஆனது), எட்டுக் கோணங்களும் உள்ளன. எல்லா பக்கங்களும் ஒரே நீளமும், எல்லா கோணங்களும் ஒரே அளவாய் இருந்தால் அதற்கு சீரான எண்கோணம் என்று பெயர். படத்தில் எண்கோண வடிவத்தைப் பார்க்கலாம். எண்கோணம் பல்கோண வடிவங்களில் ஒன்று. சீர் எண்கோணத்தின் ஒரு பரவலான பயன்பாட்டை பலரும் சாலை விதிகளைக்காட்டும் சைகைகளில் பார்த்திருப்பர். சாலைகள் கூடுமிடங்களில் ஊர்திகளை நிறுத்தக் காட்டும் சாலை விதிச் சைகைகளில் சிவப்பான நிறத்தில் உள்ள சீர் எண்கோண நிறுத்தற் குறிகளை பலரும் பார்த்திருப்பர். + + + + +மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் + +மேற்குத் தொடர்ச்சி மலை ("Western Ghats") இந்திய துணைக்கண்டத்தின் மேற்புறத்தில் அரபிக்கடலுக்கு இணையாக அமைந்துள்ள தொடர்மலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலை அரபிக்கடலில் இருந்து வரும் குளிர்ந்த காற்றைத் தடுத்து அதன் மேற்பகுதியில் அமைந்துள்ள கேரளா மற்றும் மேற்கு கடற்ரையில் நல்ல மழையைத் தருகின்றது. இதனால் இம்மலைத்தொடரின் கிழக்குப்பகுதியிலுள்ள தக்காணப் பீடபூமி குறைந்தளவு மழைப்பொழிவையே பெறுகிறது. உலகில் பல்லுயிர் வளம் மிக்க எட்டு இடங்கள���ல் மேற்குத் தொடர்ச்சி மலைகளும் ஒன்றாகும். +இங்கு சுமார் 5000 வகை பூக்கும் தாவரங்களும், 139 வகை பாலூட்டிகளும், 508 வகை பறவைகளும், 176 வகை இருவாழ்விகளும் உள்ளன. + +இம்மலைத்தொடர் மராட்டியம், குசராத் மாநிலங்களின் எல்லையில் உள்ள தபதி ஆற்றுக்கு தெற்கே துவங்கி மராட்டியம், கோவா, கருநாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் வழியாகச் சென்று கன்னியாகுமரியில் முடிவடைகிறது. இதன் நீளம் சுமார் 1600 கிலோமீட்டர்கள். இதன் சராசரி உயரம் 900 மீட்டர்கள். இம்மலைத் தொடர்களின் பரப்பளவு சுமார் ஒரு லட்சத்து 60,000 சதுர கிமீ. இம்மலைத் தொடர் மராட்டியம், கர்நாடகத்தில் சாயத்ரி மலைத்தொடர் எனவும் தமிழகத்தில் ஆனைமலை, நீலகிரி மலைத்தொடர் எனவும் கேரளாவில் மலபார் பகுதி, அகத்திய மலை எனவும் அழைக்கப்படுகிறது. இம்மலைத்தொடரின் உயரமான சிகரம் கேரளாவிலுள்ள ஆனைமுடி (2,695 மீ) ஆகும். இதுவே தென்னிந்தியாவின் உயரமான சிகரமும் ஆகும். + +இந்த மலைத் தொடர் கோண்டுவானா நிலப்பரப்பின் ஒரு பகுதி என புவியியல் வரலாறு கூறுகிறது. முற்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகள் தற்போதைய ஆப்பிரிக்கா, மடகாசுக்கர் மற்றும் செசல்சு தீவுகளோடு இணைந்திருந்தது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற புவியியல் மாற்றத்தால், கோண்டுவானா நிலப்பரப்பில் இருந்து பிரிந்த தென் இந்தியப் பகுதிகள் ஆசிய கண்டத்தை நோக்கி இடம் பெயர்ந்தது மற்றும் ஏறக்குறைய 100 முதல் 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தென் இந்தியப் பகுதிகள் ஏற்பட்ட எரிமலை வெடிப்பும் சேர்ந்து உருவாக்கிய புவியியல் அமைப்பே மேற்கு தொடர்ச்சி மலைகள் ஆகும். இன்றும் மராட்டிய மாநிலத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில் எரிமலை இருந்ததற்கான சுவடுகள் காணப்படுகிறது. இத்தகைய தனித்துவம் வாய்ந்த புவியியல் அமைப்பு பிற்காலத்தில் அரிய தாவரங்களும் விலங்குகளும் உருவாக காரணமானது. + +தென் இந்தியாவின் பல முக்கிய ஆறுகள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் உருவாகுகின்றன. இங்கு உருவாகி கிழக்கு நோக்கி தக்காண பீடபூமி வழியாகப் பாய்ந்து வங்காள விரிகுடா வில் கலக்கும் முக்கியமான ஆறுகள் சில கோதாவரி, கிருஷ்ணா, காவிரி மற்றும் தாமிரபரணி. கோவையில் சிறுவாணி "உலகின் இரண்டாம் சுவைமிகு நீர்" ,பவானி ,நொய்யல் என நதிகள் பிறக்கின்றன. இவை தவிர பல சிறு ஆறுகள் இம்மலைத்தொடரில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கின்றன. புவியியல் ரீதியாக மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் அரபிக்கடலிற்கு அருகில் அமைந்துள்ளதால் மேற்கு நோக்கி பாயும் ஆறுகள் சிறிய ஆறுகளேயாகும். அவற்றுள் சில சிட்லாறு, பீமா ஆறு, மணிமுத்தாறு, கபினி ஆறு, கல்லாவி ஆறு, பெண்ணாறு மற்றும் பெரியாறு ஆகும். + +இந்த ஆறுகளின் குறுக்கே பல அணைகள் கட்டப்பட்டு பாசனத்திற்கும், சாகுபடிக்கும் மற்றும் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவுகின்றன. மகராட்டினத்தில் உள்ள கோபாளி அணை, கோய்னா அணை, கேரளாவில் உள்ள பரம்பிகுளம் அணை, தமிழ்நாட்டில் உள்ள மேட்டூர் அணைக்கட்டு போன்றவை குறிப்பிடத்தகுந்தவைகளாகும். + +இம் மலைத் தொடரை உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. +பருவநிலை மாற்றத்தால் மேற்குத் தொடர்ச்சி மலையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், புவியியல் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க இந்திய அரசுக்கு பரிந்துரை செய்யவும், மத்திய அரசு பேராசிரியர் மாதவ் காட்கில் தலைமையில் 14 பேர் கொண்ட குழுவை 2010 மார்ச் 4 அன்று அமைத்தது. இந்தக்குழு தனதுஅறிக்கையை 2011 ஆகஸ்ட் 30 அன்று மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இந்த அறிக்கையை 2012 மே - 23ந்தேதி இணையதளத்தில் வெளியிட்டு, கருத்துக் களையும், விமர்சனங்களையும் அனுப்புமாறு கேட்டுக்கொண்டது. அரசால் பிராந்திய மொழிகளில் இவ்வறிக்கை 2014 வரை மொழிபெயர்க்கப்படவில்லை. 1700 பேர் மட்டுமே இவ்வறிக்கை தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இதிலும் 30.34 சதவீத பேர் மட்டுமே அறிக்கைக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் மாதவ் காட்கில் அறிக்கையை திறம்பட அமல்படுத்தும் வகையில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்க டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் 9 பேர் கொண்ட உயர்மட்டக்குழு ஒன்றை 2012 ஆகஸ்ட் 17 அன்று மத்திய அரசு அமைத்தது. + +மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்பு பற்றிய கஸ்தூரிரங்கன் அறிக்கையில் மலையில் அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும், மணல் குவாரிகள், சுரங்க பணிகள் தடைசெய்யவேண்டும், 20,000 சதுர மீட்டர்களுக்கு மேல் கட்டுமானம் கூடாது, 50,000 ஹெக்டேருக்கு மேல் வீடுகள் கட்டக்கூடாது எனக்கூறிய அறிக்கையை மத்திய அரசு தடை செய்தது. இந்தக்குழு தனது அறிக்கையை 2013, ஏப்ரல் 15 அன்று அரசிடம் சமர்ப்பித்தது. இதனடிப்படையில் 37 சதவீதம் பகுதியை பாது காக்கப்பட்ட பகுதியாக மத்திய அரசு அறிவித்துள்ளது. + +மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை சூழ்ந்த 41 சதவீத பகுதியில் 37 சதவீத பகுதியை சுலபமாக பாதிப்புக்குள்ளாகும் பகுதி என கஸ்தூரிரங்கன் குழு வரையறுத்துள்ளது. மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ள இப்பகுதியில் முதல் மண்டலத்தில் 4156 கிராமங்கள் வருகின்றன. இதில் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய எட்டுமாவட்டங்களில் 135 கிராமங்கள் வருகின்றன.இந்தப் பகுதியில் புதிதாக பட்டா வழங்கக்கூடாது. புதிய விவசாய பகுதிகள் விஸ்தரிக்கக்கூடாது. புதிய குடியிருப்புகள் கட்டக் கூடாது. வளர்ச்சி திட்டங்கள் எதையும் செயல்படுத்தக்கூடாது, அதாவது, பள்ளி, மருத்துவ மனை, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, போக்குவரத்து ஆகியவை கூடாது. வனநிலங்களை வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது.வன உரிமைச் சட்டம் 2006ன் படி வன நிலங்களில் பயிர் செய்து வாழ்ந்து வரும் ஆதிவாசி மக்களுக்கு குடும்பத்துக்கு 10 ஏக்கர் வரை வழங்க வேண்டும். ஆனால் கஸ்தூரிரங்கன் அறிக்கை அதற்கு தடைவிதிக்கிறது. தமிழ்நாட்டில் 1989ம் ஆண்டு முதல் மலைப்பகுதிகளில் பட்டா வழங்க தடைவிதிக்கப் பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில், வனநிலங்களில் பயிர் செய்து வரும் மக்கள் வெளியேற்றப்படும் நிலை ஏற்படும். இந்த கட்டுப் பாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட கிராமத்திலிருந்து 10 சதுர கிலோமீட்டர் சுற்றளவுக்கு பொருந்தும் என்று அறிக்கை குறிப்பிடுகிறது. + + + + + + +மில்லோ பாலம் + +மில்லோ என்னும் பாலம் தென் பிரான்சிலே உள்ள வியப்பூட்டும் பொறியியல் சாதனை படைத்த வான் வீதி என அழைக்கும் மிகு உயர் பாலம். இப்பாலம் டார்ன் ஆற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்க 2,460 மீ நீளமுடைய பாலம். டிசம்பர் 14, 2004ல் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது. உலகில் உயரமிக்க பாலமாக இது காணப்படுகிறது. + + + + + +அறுகோணம் + +அறுகோணம் என்பது ஒரு சமபரப்பில் ஆறு கோணங்களும் ஆறு நேர்க்கோடால் ஆன பக்கங்களும் கொண்டு முற்றுப் பெறும் ஒரு வடிவம். அறுகோணம் என்பது வடிவவியல் கணிதத்தில் பல்கோண வடிவுகளில் ஒரு வடிவம். ஆறு கோணங்களும் அதே போல ஆறு பக்கங்களும் ஒரே அளவினதாக இருந்தால் அது சீர் அறுகோணம் எனப்படும். ஒரு பரப்பை நிரப்ப எப்படி சதுர வடிவங்களைக் கொண்டோ, அல்லது சமபக்க முக்கோண வடிவங்களைக் கொண்டோ இடைவெளி ஏதும் இல்லாமல் நிரப்ப முடியுமோ, அதே போல சீர் அறுகோணங்களைக் கொண்டும் நிரப்ப முடியும். ஒரே வடிவுடைய தட்டையான கற்களைக் கொண்டு ஒரு பரப்பை அடைக்க வல்ல முறைக்கு தரை பாவும் திறம் கொண்டது என்னும் பொருளில் தரைபாவுமை (அல்லது நிறைமை, அடைமை) (tessellation) என்று பெயர். எல்லா சீரான பல்கோண வடிவங்களுக்கும் இப்படிப்பட்ட தரை பாவுமை கிடையாது. முக்கோணம், சதுரம் மற்றும் அறுகோணம் ஆகிய இம்மூன்று வடிவங்களுக்கு மட்டுமே இப்பண்பு உண்டு. + +தேனீயின் தேனடையில் உள்ள ஒவ்வொரு அறையும் இப்படி சீர் அறுகோண வடிவில் இருக்கும், இதனால் குறுகிய பரப்பில் திறமுடன் அதிக தொடர்புடன் அறைகளை அமைக்கமுடிகின்றது. + +formula_4 + + + + + +கட்டற்ற மென்பொருள் + +கட்டற்ற மென்பொருள் அமையத்தின் வரைவிலக்கணப்படி, கட்டற்ற மென்பொருள் என்பது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த, நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறு விநியோகம் செய்யப்படக்கூடியமென்பொருளாகும். +மென்பொருட்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையுறுதலே இதன் அடிப்படைக் கருத்துருவாகும். + +கட்டற்ற மென்பொருள் என்பதற்கு எதிர் நிலையிலுள்ளவை தனியுரிமை மென்பொருட்களாகும் ( proprietary software). மென்பொருட்களை விலைக்கு விற்றல் என்பது கட்டற்ற மென்பொருள் தத்துவத்தின் படி தவறான செயல் அல்ல. + +பொதுவாக மென்பொருள் ஒன்று கட்டற்ற மென்பொருளாக விநியோகிக்கப்படுவதற்கு, அம்மென்பொருளானது கட்டற்ற மென்பொருள் உரிம ஒப்பந்தம் ஒன்றோடு விநியோகிக்கப்படுகிறது. அத்தோடு, இருமக்கோப்புக்களாக வழங்கப்படும் மென்பொருட்களுக்கு, அவற்றின் ஆணைமூலமும் சேர்த்தே விநியோகிக்கப்படுகிறது. + +"கட்டற்ற மென்பொருள் என்பது "சுதந்திரத்" தோடு சம்பந்தப்பட்டது. சமூகத்திற்கு பயனுள்ள எல்லா வழிகளிலும் ஒரு மென்பொருளைப் பயன்படுத்துவதற்கு, மக்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இருக்கக் கூ���ாது."--GNU அதிகாரப்பூர்வ வலைத்தளம். + +பயனாளர் பயன்படுத்த(தொழிற்படுத்த), நகலெடுக்க, விநியோகிக்க, கற்க, மாற்றங்கள் செய்ய, மேம்படுத்த அனுமதிக்கும் மென்பொருட்கள், கட்டற்ற மென்பொருட்கள் எனப்படும். (பார்க்க: மென்பொருள்) + +இது நான்கு வகையான தளையறு நிலைகளைப் பயனர்களுக்கு வழங்குகிறது. + + + + + +ஒரு மென்பொருள், பயனாளர்களுக்கு மேற்கண்ட எல்லா தளையறு நிலைகளையும் வழங்கும்பட்சத்திலேயே அது கட்டற்ற மென்பொருள் எனக் கொள்ளப்படும். + +இத்தகைய மென்பொருட்களின் நகல்களை, மாற்றங்கள் செய்யப்பட்டநிலையிலோ அல்லது மாற்றம் எதுவும் செய்யாமலோ, இலவசமாகவோ, கட்டணங்கள் பெற்றுக்கொண்டோ, எங்கேயும் எவருக்கும் மீள்விநியோகம் செய்வதற்கு நீங்கள் எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. செய்யும் மாற்றங்கள் பற்றி எவருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. + +மென்பொருளைப் பயன்படுத்துவதற்கான தளையறுநிலை என்பதால் குறிப்பிடப்படுவது யாதெனில், எவராலும், எந்த நிறுவனத்தாலும், எந்த கணினித் தொகுதியிலும், எந்தப்பணிக்காகவும், தயாரிப்பாளருடன் எத்தகு தொடர்புகளையும் பேணாமலேயே குறிப்பிட்ட மென்பொருளைப் பயன்படுத்தலாம் என்பதாகும். + +நகல்களை விநியோகிக்கும்போது, இருமக்கோப்புகளையும், அவற்றுக்கான ஆணை மூலத்தினையும் (பார்க்க: ஆணைமூலம்) கட்டாயமாக உள்ளடக்க வேண்டும். +இருமக்கோப்புகளை உருவாக்கச் சில மொழிகள் அநுசரணை வழங்குவதில்லை என்ற காரணமும் இருப்பதால், இருமக்கோப்புக்களை வழங்குவது எல்லா வேளைகளிலும் கட்டாயமல்ல. + +கட்டற்ற மென்பொருள் குறித்த ரிச்சர்டு ஸ்டால்மனின் தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகள், மென் விடுதலை நாள் 2008 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாகப் புத்தகமாக வெளியிடப்பட்டது. + +BSD + +GNU/GPL + +MIT + + + + + + +தூரயா + +தூரயா ("Thuraya") என்பது பூமிக்குச் சார்பான (geosynchronous) இரண்டு செயற்கைக்கோள்கள் மூலம் இயங்கும் செய்மதித் தொலைபேசியாகும். இது ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா நாடுகளை முதன்மையாகக் கருத்திற் கொண்டு நிலையாக இயங்கும் பூமி சார் தொலைத் தொடர்பாடல் செயற்கைக்கோள் ஆகும். இன்னும் ஒரு செயற்கைக்கோள் பின்னணியில் இயங்குகின்றது. மேலும் ஒரு செயற்கைக்கோள் 2007 நவம்பர் 21 ஆம் தேதி ஏவ முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் 2007 ஆம் ஆண்ட���ல் இறுதியில் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் இருந்தும் இந்த வலையமைப்பை அணுகுவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட இருக்கின்றன. + +மார்ச் 2006 இன்படி 250,000 வாடிக்கையாளர்களை தூரயா கொண்டுள்ளது. 2001 ஆம் ஆண்டில் இருந்து 360,000 தொலைத்தொடர்பாடல் கருவிகளை விற்றுள்ளனர். + +ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷாவில் தலைமை அலுவலகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஏப்ரல் 15, 1997 இல் தொடங்கப்பட்டது. இது வேறு சேவை வழங்கும் உரிமைகளை வேறு நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது. + +தூரயா தற்பொழுது கீழ்வரும் செய்மதியூடான சேவைகளை வழங்கி வருகின்றது: + +தூரயாவின் பன்னாட்டு அழைப்பு எண் +88216 ஆகும். இது வட்டார செய்மதித் தொலைத் தொடர்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளதே அன்றி பன்னாட்டு செய்மதித் தொலைபேசி வலையமைப்பு என வகைப்படுத்தப்படவில்லை. இது ஏனைய நிறுவனங்கள் எடுத்துக்காட்டாக இரிடியம் போன்ற நிறுவனங்கள் தமது உலகளாவிய நகர்பேசி வலையமைப்பில் +881 என்றவாறு பயன்படுத்துவதைப் போன்றல்லாமல் 5 இலக்கங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. + +போயிங் நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இரண்டு தொடர்பாடற் செய்மதிகளைத் தூரயா நிறுவனம் பயன்படுத்துகின்றது. + +இம் முதற் செயற்கைக் கோள் சூரிய கலத்தில் இருந்து மின்னுருவாக்கத்தில் குறைபாடுகள் உள்ளதால் சரியாக இயங்கவில்லை. இச்செயற்கைக் கோள் கொரியாவின் வான்பரப்பின்மேல் சோதனைகளுக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இது 21 அக்டோபர் அன்று சீலான்ச் ஊடாக செனிட் 3எஸ்எல் ராக்கெட் மூலம் ஏவப்பட்டது. அப்போது அதன் நிறை 5250 கிலோகிராம் ஆகும். ஏவி விடும் போது அதன் நிறை 5250 கிலோகிராம் ஆகும். + +தூரயா 2 சீ-லான்ச்சினால் 10 ஜூன் 2003 அன்று ஏவப்பட்டது. இது பூமியுடன் பூமிக்குச் சார்பாக ஓரே இடத்தில் இருக்கும் வகையில் 44 பாகை நெட்டாங்கிலும் 6.3 பாகை ஏற்றத்திலும் இருக்கக்கூடியதாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இச்செய்மதி 13, 750 ஒலியழைப்புக்களை ஒரே நேரத்தில் கையாளவல்லது. + +தூரயா 3 செய்மதி வசந்த காலத்தில் ஏவ முடிவெடுக்கப்பட்டபோதிலும் ஜனவரி 2007 இல் வேறொரு ராக்கெட்டைச் செலுத்துவதில் ஏற்பட்ட பிழையினால் பல முறை பின்போடப்பட்டு தைப்பொங்கற் தினமான 15 ஜனவரி 2008 அன்று ஏவப்பட்டது. இல்இது இன்னமும் ஏவப்படவில்லை. இச் செய்மதி மூலம் தூரகிழக்கு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவிற்கும் இதன் மூலம் தொடர்பு கொள்ளக்கூடியவாறு விரிவாக்கும் எண்ணக்கருவுடனேயே இச்செய்மதி ஏவப்பட இருக்கின்றது. இது ஏவப்பட்டு 2 மாதத்தின் பின்னர் இது பணியாற்றத் தொடங்கும். + +பெரும்பாலும் எல்லா தூரயா தொலைபேசிகளும் (SO-2510 தவிர) செய்மதியூடாகவோ அல்லது உள்ளூர் நகர்பேசி சேவைவழங்குனர் ஊடாகவோ இரண்டு வகையாகவும் வேலைசெய்யக் கூடியது. இதற்காகத் தூரயா 200க்கும் மேற்பட்ட நகர்பேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. + +இலங்கையில் தூராய தொலைபேசிகளை டயலாக் ஊடாக ஓரளவு குறைவான கட்டணத்தில் அழைப்புக்களை ஏற்படுத்த #உடன் இலக்கத்தை டயல் செய்யலாம் . + + + + + +அடம் கில்கிறிஸ்ற் + +அடம் கில்கிறிஸ்ற் (ஆடம் கில்கிறிஸ்ட் (த.வ.) Adam Gilchrist, பிறப்பு நவம்பர் 14, 1971) ஆஸ்திரேலியாவின் விக்கெட் காப்பாளர். இடதுகைத் துடுப்பாளரான இவர் ஒருநாட் போட்டிகளில் ஆரம்பத் துடுப்பாளராவார். அதிரடியாக ஆடுபவர்.Gilly,Churchy என்ற செல்லப் பெயர்களால் ரசிகர்களால் அழைக்கப்படும் கில்கிறிஸ்ட் உலகின் தலைசிறந்த விக்கெட் காப்பாளர்களில் ஒருவராவார்.தொண்ணூற்று ஆறு டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 379 பிடி எடுப்புகள்,37 ஸ்டம்பிங் என மொத்தம் 416 ஆட்டமிழப்புகளை செய்த இவர் தென் ஆபிரிக்காவின் மார்க் பவுச்சர்க்கு அடுத்ததாக டெஸ்ட் போட்டிகளில் அதிக ஆட்டமிழப்புகளை மேற்கொண்ட வீரராக காணப்படுகின்றார்.287ஒருநாள் போட்டிகளில் 417 பிடியெடுப்புகள் 55 ஸ்டம்பிங்ஸ் என மொத்தம் ஆட்டமிழப்புகளை மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக வீரர்களை ஆட்டமிழக்கச் செய்த விக்கெட் காப்பாளராக திகழ்கின்றார்.96 டெஸ்ட் போட்டிகளில் 17சதங்கள் 26அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 5570 ஓட்டங்களையும் 287 ஒருநாள் போட்டிகளில் 16 சதங்கள் 55 அரைச்சதங்கள் அடங்கலாக மொத்தம் 9922 ஓட்டங்களையும் 13 T20 போட்டிகளில் மொத்தம் 272 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.இவர் சதமடித்த பதினாறு ஒருநாள் போட்டிகளிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய அணியின் உபதலைவராகவும் ரிக்கி பாண்டிங் இல்லாத சமயங்களில் காப்டனாகவும் பணியாற்றிய கில்கிறிஸ்ட் இங்கிலாந்து பிராந்திய அணியான மிடில்செக்ஸ் அணிக்கும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் டெக்கான்,கிங்ஸ் லெவின் பஞ்சாப் ஆகிய அணிகளுக���கும் காப்டனாக திகழ்ந்துள்ளார்.இல் தென்னாப்பிரிக்காவில் இடம்பெற்ற ஐ.பி.எல்லின் இரண்டாவது சீசனில் தொடரின் சாம்பியனான டெக்கான் அணியை அணித்தலைவராக இருந்து வழிநடாத்திச் சென்றவர் கில்கிறிஸ்ட் ஆவார்.இத் தொடரின் அரையிறுதியில் டெல்லி அணிக்கெதிராக பதினேழு பந்துகளில் அரைச்சதம் கடந்து அணியை வெற்றி பெறச்செய்தார்.இன்றைய நாள் வரை ஐ.பி.எல் தொடரின் அதிவேக அரைச்சதமாக இதுவே உள்ளது.17/05/2011அன்று பஞ்சாபின் தர்மசாலாவில் நடைபெற்ற பெங்களூர் அணிக்கெதிரான போட்டியில் கில்கிறிஸ்டும் ஷோன் மார்சும் இரண்டாவது விக்கெட்டுக்காக இருநூற்று ஆறு ஓட்டங்களை பகிர்ந்ததே இன்று வரை எந்த ஐ.பி.எல் போட்டி ஒன்றில் எந்த ஒரு விக்கெட்டுக்காகவும் பகிரப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.கில்கிறிஸ்ட்டின் மனைவியின் பெயர் மெலிண்டா.கில்கிறிஸ்ட் –மெலிண்டா தம்பதியினருக்கு ஹரிசன்,ரெட்,அர்ச்சி ஆகிய மூன்று மகன்களும் அன்னி ஜீன் எனப்படும் ஒரு மகளும் உண்டு.கிரிக்கெட்டில் மிக நேர்மையான வீரர்களில் ஒருவராக திகழ்ந்த கில்கிறிஸ்ட் பல தடவை நடுவர் ஆட்டமிழப்பு என்று அறிவிக்காதபோதும் கூட தன் சுய முடிவின் அடிப்படையில் மைதானத்தை விட்டு வெளியேறியிருக்கிறார்.இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு நடந்த உலககிண்ண இலங்கைக்கு எதிரான அரையிறுதியில் இவரது சுய முடிவிலான ஆட்டமிழப்பு பலரின் கவனத்தை ஈர்த்தது.கில்கிறிஸ்ட்டின் சுயசரிதை நூலான TRUE COLOURS 2008 ஆம் ஆண்டில் வெளியானது + + + + விக்கிபீடியாவின் ஆங்கிலப்பக்கம்-அடம் கில்கிறிஸ்ட் +டைம்ஸ் ஒப் இந்தியாவில் வெளிவந்த கட்டுரைகள் + + + + +தரைபாவுமை + +தரைபாவுமை ("tessellation") என்பது தட்டையான வடிவுடைய துண்டுகளைக் கொண்டு இடைவெளி விடாமலும், ஒருதுண்டின் மீது மற்றொன்று ஏறிக்கொள்ளாமலும் ஒரு சமதளத்தை முற்றிலுமாக நிறப்பும் தன்மை கொண்டிருப்பதும். எனவே இதனை நிறப்புமை என்றும், அடைப்புமை என்றும் கூறலாம். + +ஒரு சமபரப்பை ஒரே வடிவம் கொண்ட உருவாலோ, அல்லது ஒரு சில வடிவங்கள் மட்டுமே கொண்ட உருவங்களினாலோ, சீராக அடுக்கி ஒரு சமபரப்பில் ஒரே இயல்பான வடிவம் தோன்றும் படி நிறைப்பது ஒரு கலை. டச்சுக்காரரான எம். சி. எஷெர் என்பாருடைய இப்படிப்பட்ட அறிவைத்தூண்டும் கலைப்படைப்புகள் புகழ் பெற்றவை. இக்கலைக்கு சீர்வடிவ சுவரோவியம் (Wallpaper group) எனக் கூறலாம். இது கணிதத்துறையில் ஒரு உறுப்பாகவும், படிகவடிவ இயலிலும் ஒரு துறையாகவும் உள்ளது. பொதுவாக 17 வகையான சீர்வடிவ சுவரோவிய வகைகள் உள்ளனவாகக் கண்டுள்ளனர். சீர்வடிவ சுவரோவியம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் அடிப்படை வடிவங்களின் இணையொப்புமையைப் பொருத்து பல்வேறு வகைகள் உருவாகின்றன. இணையொப்புமை என்பது ஒரு வடிவத்தை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் ஒரு அச்சை மையமாகக் கொண்டு திருப்பினாலோ, நகர்த்தினாலோ அவ்வடிவம் அதே தோற்றம் கொண்டிருப்பது. ஒரு சமபக்க முக்கோணத்தை 120 பாகை, 120 பாகையாக திருப்பினால் ஒரே வடிவம் கொண்டு இருப்பது போல. சில வகையான சீர்வடிவ சுவரோவியம் படங்களில் காட்டப்பட்டுள்ளன. + + + + +வா. செ. குழந்தைசாமி + +வா. செ. குழந்தைசாமி (சூலை 14, 1929 - திசம்பர் 10, 2016) இந்திய பொறியியல் (நீரியல்துறை) அறிஞரும், கல்வியாளரும் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் நிறுவனத் தலைவராகப் பணியாற்றியவர். + +இன்றைய கரூர் மாவட்டத்திலுள்ள வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர். கரக்பூரிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், ஜெர்மனியிலும் அமெரிக்காவிலும் உயர்படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆய்விற்காக இல்லினாயிசு பல்கலைக்கழகத்திடமிருந்து நீர்வளத்துறையில் முனைவர் பட்டம் பெற்றார். நீர்வளத்துறை இலக்கியத்தில் இவரது கண்டுபிடிப்பு குழந்தைசாமி மாதிரியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. + +இவர் உலக அளவில் நீர்வளத்துறையில் பல குறிப்பிடத்தக்க பதவிகள் வகித்துள்ளார். பல ஆய்வுக்குழுக்களிலும், திட்டக்குழுக்களிலும் பங்கேற்றுள்ளார். பொறியியல் கல்வியில் ஆர்வம் கொண்ட இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், மற்றும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகவும் பதவி வகித்துள்ளார். + +இவர் "குலோத்துங்கன்" என்ற புனைப்பெயரில் பல கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். இவைதவிர ஆங்கிலத்திலும், தமிழிலும், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். + +இவர் தனது ஆறு கவிதைத் தொகுப்புகள் மற்றும் ஏழு கட்டுரைகளுக்காக 1999-ம் ஆண்டு தமிழக அரசின் தி���ுவள்ளுவர் விருது பெற்றார். தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் தலைவர் பதவியோடு சென்னை ஆசியக் கல்வி நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் இவர் உள்ளார். + +தமிழ் இலக்கியத்திற்கு இவரது பங்களிப்புகளைப் பாராட்டி சாகித்ய அகாடமி விருது வழங்கியுள்ளது. மேலும், கல்வி மற்றும் அறிவியல் துறைகளில் இவரது பங்களிப்பிற்காக பத்மசிறீ விருது 1992-ம் ஆண்டும், பத்மபூசண் விருது, 2002-ம் ஆண்டும் வழங்கப்பட்டது. இவரது தமிழ்ப் படைப்புகளுக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு 1980-ம் ஆண்டு கௌரவ முனைவர் பட்டமளித்தது. + +நீர்வளத்துறையில் இவருடைய கண்டுபிடிப்பை குழந்தைசாமி மாதிரியம் என அழைக்கிறார்கள். + +இவரைப் பற்றி அதிராம்பட்டினம் காதிர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் திரு. ஆ.ஜான்சன் கென்னடி அவர்கள் "முனைவர் வா.செ.குழந்தை சாமியின் தமிழியற்பணி-ஓர் ஆய்வு" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். + + + + + + +வீரேந்தர் சேவாக் + +வீரு என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக் (Virender Sehwag பிறப்பு: அக்டோபர் 20, 1978) இந்தியாவின் முன்னாள் துடுப்பாளர்.வலது கைத் துடுப்பாளரான இவர் அனைத்துக் காலத்திற்குமான அபாயகரமான துடுப்பாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அவ்வப்போது வலது கை புறத்திருப்ப பந்து வீச்சாளராகவும் செயல்பட்டார். 1999 ஆம் ஆண்டில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்திலும் , 2001 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்திலும்அறிமுகமானார். 2008 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக 2009 ஆம் ஆண்டின் சிறந்த வீரர்களுள் ஒருவராக இவரை விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. அந்த ஆண்டில் இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்திய வீரர் இவர் ஆவார். + +இவர் பல சாதனைகளைப் படைத்தார். குறிப்பாக சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கத்தில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 319 ஓட்டங்கள் எடுத்தார். இவர் 278 பந்துகளில் 300 ஓட்டங்களை எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக மூன்று நூறுகள் அடித்து சாதனை படைத்தார். மேலும் டிசம்பர் 3, 2009 இல் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 207 பந்துகளில் 250 ஓட்டங்கள் எடுத்தார். இதன்மூலம் அதிவிரைவாக 250 ஓட்டங்கள் எடுத்தவர் எனும் சாதனையைப் படைத்தார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் ஒருமுறைக்கும் அதிகமாக மூன்றுநூறுகள் அடித்த நான்கு வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மேலும் மூன்றுநூறுகள் மற்றும் ஐந்து இலக்குகளை ஒரே ஆட்டப் பகுதியில் எடுத்த ஒரே வீரர் இவர் ஆவார். 60 பந்துகளில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இதன் மூலம் விரைவாக நூறு ஓட்டங்கள் அடித்த இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். டிசம்பர் 8, 2011 ஆம் ஆண்டில்மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இருநூறு ஓட்டங்கள் அடித்தார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக இந்தச் சாதனையைப் புரிந்த இரண்டாவது வீரரானார். இந்தப் போட்டியில் 149 பந்துகளில் 219 ஓட்டங்கள் எடுத்தார். இதுவே ஒருநாள் போட்டிகளில் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஓட்டங்கள் ஆகும். ஆனால் இந்தச் சாதனையை நவம்பர் 13, 2014 இல் ரோகித் சர்மா 173 பதுகளில் 264 ஓட்டங்கள் எடுத்து முறியடித்தார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டங்களில் இருநூறு ஓட்டங்களும் , தேர்வுத் துடுப்பாட்டங்களில் மூன்று நூறுகளும் அடித்த இருநபர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். மற்றொருவர் கிறிஸ் கெயில் ஆவார். + +கிருஷ்ணன் (சேவாக்கின் அப்பா), கிருஷ்ணா (அம்மா) சேவாக் தம்பதிக்கு மூத்த மகனாக அக்டோபர் 20, 1978 அன்று பிறந்தார் வீரேந்தர் ; அவருடன் பிறந்தவர்கள் மூன்று பேர். டெல்லியின் புறநகர்ப் பகுதியான நஜவ்கட்டில் கோதுமை, அரிசி, வயல் விதைகள் ஆகியவற்றை வணிகம் செய்து வருகின்றது சேவாக்கின் குடும்பம். + +சேவாக் ஆர்த்தி அஹ்லாவத் என்பவரை ஏப்ரல்,2004 இல் திருமணம் செய்தார். இந்த திருமணத்தை அப்போது பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவருடைய வீட்டில் வைத்து இவர்களை உபசரித்தார்.. இவருக்கு ஆர்யாவிர் மற்றும் வேதாந்த் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இதில் ஆர்யாவிர் அக்டோபர் 18, 2007 இல், வேதாந்த் 2010 இல் பிறந்தனர் + +மொகாலியில் ஏப்ரல் 2009 இல் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதன் முதலாக களமிறங்கிய சேவாக் வெறும் ஒரு ஓட்டம் எடுத்த நிலையில் சோயப் அக்தரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்கு பந்து வீசிய சேவாக் மூன்று ஓவர்களை வீசி 35 ஓட்டங்களை விட்டுக் கொடுத்தார். இப்போட்டியில் பேட்டிங்கிலும் பந்து வீச்சிலும் சரியாக செயல்படாததால் அடுத்த 20 மாதங்களுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போனது. + +இந்தியன் பிரீமியர் லீக்கின் முதலிரண்டு பருவங்களிலும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக இருந்த சேவாக், பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்துவதற்காக மூன்றாவது பருவத்தில் அணித்தலைவர் பதவியை கவுதம் கம்பீரிடம் விட்டுக் கொடுத்தார். ஆனால் நான்காவது பருவத்தில் கவுதம் கம்பீர் வேறு அணிக்கு சென்று விட்டதால் இவர் மீண்டும் டெல்லி டேர்டெவில்ஸ் அணித்தலைவராக நியமிக்கப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் ஐந்தாவது பருவத்தில் பங்கேற்ற ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக ஐந்துமுறை அரைசதம் அடித்து அசத்தினார். + +இருபது20 போட்டிகளில் தொடர்ச்சியாக ஐந்து போட்டிகளில் அரைசதம் அடித்துள்ள ஒரே வீரர் இவர் மட்டுமே. + + + + + + + + + + + + + + + + + + + + +சமிந்த வாஸ் + +சமிந்த வாஸ் (பிறப்பு ஜனவரி 27, 1974) இலங்கை அணியின் வேகப் பந்தாளர். கொழும்பு புனித யோசப் கல்லூரியில் கல்விகற்ற வாஸ் 1994 இல் பாகிஸ்தானிற்கு எதிரான போட்டியில் இலங்கை அணியில் இடம்பிடித்தார். இடதுகை மிதவேகப் பந்தாளரான இவர் அணியின் தொடக்கப் பந்தாளராக ஆடுபவர். இடதுகைத் துடுப்பாளராகவும் ஓரளவு திறமையை வெளிக்காட்டும் சகலதுறை ஆட்டக்காரர். சிம்பாவேக்கு எதிராக இவர் 19 ஓட்டங்களுக்கு எட்டு இலக்குகளை வீழ்த்தியமையே ஒருநாட் போட்டிகளில் சாதனையாகும். ஒருநாள் போட்டிகளில் 300 க்கும் அதிகமான இலக்குகளை வீழ்த்தியுள்ளார். + + + + + +ஐந்தொகை (கணக்கியல்) + +ஐந்தொகை, என்பது நியம கணக்கீட்டுவடிவமாகும்,இது ஒர் குறித்த நடப்பாண்டு ஒன்றில் வியாபாரம் ஒன்றில் அல்லது நிறுவனமொன்றில் இடம்பெற்ற வருமானம்,செலவுகள் என்பனவற்றில் ஏற்பட்ட இறுதி விளைவுகளை தெரிவிக்கும் ஒர் கணக்கு கூற்றாகும். இதன் மூலம் ஒர் குறித்த ஆண்டின் கம்பனி ஒன்றின் நிதி நிலைமையினை அறியலாம். + + கீழேதரப்பட்டது ஐந்தொகை ஒன்றின் மாதிரி வடிவமாகும்.முழுமையான அமைப்பு அல்ல. + +1.1 +Sunrise Ltd கம்பனி புதிதாக ஆரம்பிக்கப்பட்டு உரிமையாளர் மூலதனம் ரூபா.10,000 வங்கியில் இடப்பட்டதற்கான ஐந்தொகை பதிவு: + +1.2 + +1.3 +கம்பனியானது 3000 ரூபா பெறுமதியான தொக்குகளை (stock) கடன��க்கு வாங்கியது அவை சம்பந்தமான ஐந்தொகைப்பதிவு: +பொறுப்புக்கள் + +மொத்த சொத்தானது பொறுப்புக்களுக்கு சமனாக இருக்கவேண்டும் +பின்னர் ஏற்பட்ட மாற்றங்களுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் விபரம்: + +பொறுப்புக்கள்: + +1.4 +நிலையான மற்றும் நடைமுறைச்சொத்துகளின் முழு பட்டியல்: + +‘’’நிலையான சொத்து’’’ + +1.5 +அனைத்து தரவுகளும் அடங்கிய ஐந்தொகை: + +கவனிக்க வேண்டியவைகள்: + + + + + +விந்து தள்ளல் + +விந்து தள்ளல் ("Ejaculation") எனப்படுவது ஆண்குறியிலிருந்து விந்துப் பாய்மம் வெளித் தள்ளப்படுதலாகும். பொதுவாகப் புணர்ச்சிப் பரவசநிலையில் இது நிகழ்கிறது. + + + + + +கருப்பை + +கருப்பை () அல்லது "கர்ப்பப்பை" மனிதர்கள் உட்பட பெரும்பாலான பாலூட்டிகளின் முக்கிய பெண் இனப்பெருக்க உறுப்பாகும். இதன் ஒரு முனையான கருப்பை வாய் புணர்புழையுடனும் மற்றைய பகுதி பாலோப்பியன் குழாய்களுடன் இணைக்கப்படிருக்கும். + + + + +தகவல் தொழிநுட்ப கலைச்சொல் அகரமுதலி (நூல்) + +இந்நூல் இலங்கை அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டதாகும்.. இதில் ஆங்கில தகவல் தொழிநுட்ப கலைச்சொற்களுக்கான தமிழ் கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளது. + +இதன் முதற்பிரசுரம் 2000ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்க அச்சுத்திணைக்களத்தால் அச்சிடப்பட்டது. + +இவ்வகரமுதலியை ஆக்கும் பணி 1999 ஓகஸ்ட் மாதம் ஆரம்பித்து 2000 மேயில் நிறைவுற்றது. சிங்கப்பூரில் நிகழ்ந்த மூன்றாவது தமிழ் இணைய மாநாட்டில் இவ்வகரமுதலி சமர்ப்பிக்கப்பட்டது. + +தமிழ்நாட்டு, ஈழத்து அறிஞர்கள் ஒன்றிணைந்து இதனை ஆக்கியுள்ளனர். சொல் முரண்பாடுகள் ஏற்படும் இடங்களில் தமிழ்நாட்டு வழக்கு தனியாகவும் இலங்கை வழக்கு தனியாகவும் வழங்கப்பட்டுள்ளது. + + + + +முனைவர் ம. இளங்கோவன் + + + + +சமஷ்டியா தனிநாடா (நூல்) + +தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் செல்நெறியில் சமஷ்டித்தீர்வின் சாத்தியங்கள் என்ற பின்னணியில் உலகம் முழுவதும் காணப்படும் சமஷ்டி முறைகளையும் சமஷ்டி வரலாற்றையும் ஆராயும் நூல். + + + + + +��லஸ்தீனக் கவிதைகள் (நூல்) + +பலஸ்தீன கவிஞர்கள் பலருடைய கவிதைகளின் தமிழாக்கத்தினை இத்தொகுதி கொண்டிருக்கிறது + + + + +புவியிடங்காட்டி + +புவியிடங்காட்டி அல்லது உலக இடநிலை உணர்வி அல்லது தமிழ்:தடங்காட்டி ("Global Positioning System" - GPS) என்பது உலகத்தில் ஓரிடத்தைத் துல்லியமாக வானில் இருந்து அறியும் ஓர் கருவியும் திட்ட அமைப்பும் ஆகும். உலகைச் சுற்றி "பல" செயற்கைத் துணைக்கோள்களை நிறுவி, அதன் உதவியால், வானொலி மின்காந்த அலைகளை வானில் இருந்து வாங்கியும் செலுத்தியும், புவியில் ஓர் இடத்தில் ஓர் உணர்கருவி இருப்பதைத் துல்லியமாக அறியப் பயன்படும் கருவி அல்லது அமைப்பு ஆகும். இது அமெரிக்காவின் பாதுகாப்பு துறையால் முதன் முதலில் உருவாக்கப்பட்டு, அமெரிக்காவின் வானூர்திப் படையின் 50 -வது விண்வெளிப் பிரிவால் நிர்வகிக்கப்படுகிறது. இது மட்டும் தான் உலகத்தில் முழுதும் இயங்கக்கூடிய பயனுடைய உலக இடங்காண் செயற்கைத் துணைக்கோள்கள் அமைப்பு ("global navigation satellite system" - GNSS) ஆகும். இதை யாராலும் எங்கேயும் எளிதில் பயன்படுத்தமுடியும். இது ஊடுருவுதல் பயன்பாட்டுக்காக பொதுமக்களிடையே பயன்படுத்தப்படுகிறது. + +1995 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 ஆம் தேதியிலிருந்து இவை உலகம் முழுதும் இயங்கக்கூடியவையாக மாறின. புவியிடங்காட்டி உலகம் முழுதும் ஊடுருவலுக்கு ஒரு பயனுடைய கருவியாக குறிப்பாக நில வரைபடங்களை உருவாக்குவதற்கும், நில அளவை தொடர்பானவற்றுக்கும், வழியைப் பின்தொடர்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்பதுடன், தெளிவான நேரக்குறிப்பிற்காக பல பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது நிலநடுக்கம் பற்றிய ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. + +முதல் செயற்கைக்கோள் ஊடுருவல் முறையானது, ட்ரான்சிட் எனப்படும். இது அமெரிக்காவின் கடற்படையால் பயன்படுத்தப்படுகிறது. 1960 ஆம் ஆண்டு இது முதன் முதலில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்டது. ஐந்து செயற்கைகோள்களின் தொகுப்புகளைப் பயன்படுத்தி இது ஊடுருவல் முறையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஒரு நிலைப்பாட்டை தரமுடியும். 1967 ஆம் ஆண்டு அமெரிக்கக் கடற்படை டிமேஷன் செயற்கைகோளை உருவாக்கி அதை வளிமண்டலத்தில் மிகவும் சரியான கடிகாரங்களைக் கொண்டு பொருத்தின. இந்தத் தொழில்நுட்பத்��ையே ஜி.பி.எஸ் மிகவும் சார்ந்துள்ளது. 1970 ஆம் ஆண்டுகளில் நிலம் சார்ந்த ஒமேகா ஊடுருவல் முறை உருவானது. இது அலை வரிசை தொகுப்புகளின் ஒப்பீட்டின் அடிப்படையில் உலகசார் ரேடியோ ஊடுருவல் முறையில் முதலாவதாகத் தோன்றியதாகும். + +ஜி.பி.எஸ்ஸின் வடிவமைப்பானது ஒரே வகையான நில-சார் ரேடியோ ஊடுருவல் முறையை சிறிதளவு சார்ந்து உள்ளது. லோரன் டெக்கா ஊடுருவல்கள் உள்ளிட்டவை 1940 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டன. இவை உலக போரின் போது பயன்படுத்தப்பட்டன. சோவியத் யூனியன் எப்பொழுது மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கைக் கோளான ஸ்புட்னிக்கை விண்ணில் ஏவியதோ அப்பொழுது, ஜி.பி.எஸ்ஸை பற்றிய ஆர்வமும் அதிகரிக்கத் தொடங்கியது. டி.ஆர். ரிச்சர்டு பி கெர்ஷ்னர் தலைமை அமெரிக்க அறிவியல் அறிஞர்களைக் கொண்டு ஸ்புட்னிக்கின் ரேடியோ அலை ஊடுருவல்களை பற்றி கவனித்து கொண்டிருந்தது. ஸ்புட்னிக்கிலிருந்து வரும் குறியீட்டு அலைகள் டாப்ளர் விளைவு காரணமாக செயற்கைக்கோளின் அதிர்வெண்ணை அதிகமாக்கியது. செயற்கைக்கோளை விட்டு தூரம் போகப் போக அவற்றின் அதிர்வெண் குறைந்து கொண்டே போகிறது. இந்தக் குறியீட்டு அலைகளின் சரியான இடங்களை அறிந்ததன் மூலம், அவர்கள் டாப்ளர் விளைவின் தாக்கத்தை அளவிடுவதன் மூலம் செயற்கைகோளையும் அவை சுற்றும் வட்டப் பாதையையையும் உணர்ந்தார்கள். + +கொரியன் விமானம் 007 சுட்டு வீழ்த்தப்பட்ட பின், 1983 ஆம் ஆண்டு யு.எஸ்.எஸ்.ஆர் இன் தடை விதிக்கப்பட்ட வளிமண்டலத்தில் சென்று ஜி.பி.எஸ்ஸை எளிமையான மக்களுக்கு கிடைக்கும் வகையில் ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன். செயற்கைகோள்கள் 1989 மற்றும் 1993 ஆண்டுகளுக்கு இடையே ஏவப்பட்டன. + +ஆரம்பத்தில் அதிகப்படியான குறியீட்டு அலைகள் ராணுவ உபயோகத்திற்காக ஒதுக்கப்பட்டது. எஞ்சிய குறியீட்டு அலைகள் சாதரண மக்களுக்காக ஒதுக்கப்பட்டது, பின்னர் அதற்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. (அதவாது கிடைக்கும் குறியீட்டு அலைகளைப் பொறுத்து என்று ஆனது, எஸ்.எ) கிடைக்கும் குறியீட்டு அலைகளைப் பொறுத்து பொதுமக்களுக்கு ஒதுக்குவது என்பது 2000 –ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அதவாது பொதுமக்களுக்கு கிடைக்கும் ஜி.பி.எஸ் 100 -எம் என்பதில் இருந்து பின்னர் 200-எம் என்று ஆனது. + +ஜி.பி.எஸ் இயக்கத்திற்கு அடிப்படையானது எதுவென்��ால் வளிமண்டலத்தில் அணு கடிகாரங்களைப் பொறுத்துவதாகும். இது 1955 –ஆம் ஆண்டு பரீட்வார்ட் விண்டேர்பெர்க் என்பவரால் கூறப்பட்டது. இதனால் மட்டுமே தேவையான மிகவும் சரியான இடம் சார் நிலையை நிர்ணயிக்க முடியும். + + + +ஒரு ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு தனது நிலையை ஜி.பி.எஸ் செயற்கைகோள்கள் பூமிக்கு மேல் செலுத்திய குறிப்பீட்டு அலைகளை சரியாக நேரத்தில் நிலைபடுத்துகிறது. ஒவ்வொரு செயற்கைகோளும் தொடர்ந்து செய்திகள் மற்றும் காலக் குறிப்புகளையும், சுற்றுவட்டப் பாதை குறித்த தகவல்களையும் (எபிமெரிஸ் என்று அழைக்கப்படும்), இயங்கும் முறை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், மற்றும் எல்லா ஜி.பி.எஸ் செயற்கைகோள்களின் கடினமான சுற்றுபாதைகளை பற்றிய செய்திகளையும் அனுப்பி வருகிறது. பெறுதல் அமைப்பு ஒவ்வொரு செய்தியின் கடத்தும் நேரத்தையும் மற்றும் ஒவ்வொரு செயற்கைக்கோளின் தூரத்தையும் அளவிடுகிறது. ஜியோமெட்ரிக் டிரைலேடர்ஷன் என்பது இந்த தூரங்களை செயற்கைகோள்களின் இடத்தோடு சேர்த்து, பெறுதல் அமைப்பின் இடத்தையும் தீர்மானிப்பதாகும். இந்த நிலையானது இயங்கக்கூடிய ஒரு வரைபடம் மூலம் காண்பிக்கப்படுகின்றது. அல்லது நீளவாட்டு மற்றும் அதன் வரையறுப்பை பொறுத்து, உயர்த்தி காணும் தகவல்கள் உள்ளடக்கப்படலாம். பல ஜி.பி.எஸ் யூனிட்டுகள் திசை மற்றும் வேகம் ஆகியவற்றைக் குறித்த நிலை மாறுபாடுகளை கணக்கிடுகிறது. + +வளிமண்டலம் முப்பரிமாணங்களை கொண்டுள்ளதால் மூன்று செயற்கைகோள்கள் மட்டுமே நிலைமையை நிர்ணயிக்கத் தேவைப்படும் என்று தோன்றும். இருந்த போதிலும் ஒரு சின்ன கடிகாரத்தின் பிழை கூட மிக அதிகமான வேகம் கொண்ட ஒளியின் வேகத்தோடு பெருக்கப்பட்டு இதனால் செயற்கைக்கோள் குறிப்பு அலைகளின் வேகம் மாற்றப்பட்டு இதன் மூலம் நிலையை காண்பதில் பிழை காணப்படுகிறது. ஆகையால் பெறுதல் அமைப்பு நான்கு அல்லது அதற்கும் மேலான செயற்கைகோள்களின் உதவியுடன், "t" இன் மதிப்பைக் கொண்டு பெறுதல் கடிகாரத்தை சரி செய்ய உதவுகிறது. பெரும்பாலும் ஜி.பி.எஸ் பயன்பாடு அமைப்புகள் கணிக்கப்பட்ட இடங்களையே உபயோகிக்கின்றன. மேலும் அவை மிகவும் சரியாக கணிக்கப்பட்ட நேரத்தை மறைக்கின்றன. இவைகளில் ஒரு சில சிறப்பான ஜி.பி.எஸ் பயன்பாடு அமைப்புகள் நேர பரிவர்த்தனை, பயண குறிப்பலைகளின் நேரம் மற்றும் செல்போன்களின் ஒருமுகபடுத்தப்பட்ட ஒரு குறிப்பிட்ட இடத்தில் வைக்கப்பட்ட ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு ஆகியவைகளை பயன்படுத்துகின்றன. + +நான்கு செயற்கை கோள்கள் சாதரணமான இயக்குதலுக்கு தேவைப்படுகின்றன. மேலும் சில செயற்கை கோள்கள் ஒரு சில சிறப்பு பயன்பாட்டு அமைப்புகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட மாறக்கூடிய மதிப்பைக் கொண்ட அடையாளத்தை கொள்வோமேயானால் (எடுத்துகாட்டாக ஒரு கப்பல் அல்லது விமானம் உயர்த்தப்பட்ட அமைப்பை பெற்றிருக்கலாம்), அதன் மூலம் ஒரு பெறுதல் அமைப்பு அடையாளத்தின் நிலையை மூன்று செயற்கைகோள்களைக் கொண்டு நிர்ணயிக்க முடியும். பல ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகள் கூடுதலான குறிப்புகள் அல்லது அனுமானங்களை (அதாவது கடைசியாக அறிந்த உயரம், தற்போது நிலையை முன்னதாக இருந்த நிலையை வைத்து அறிதல், கணினி மற்றும் இயக்க நிலையில் உள்ள சென்சார் அமைப்புகளின் மூலம் தற்போது நிலையை அறிதல், அல்லது சார் கணினிகளில் உள்ள தகவல்களை கொள்ளுதல்) வைத்து சற்றே ஏறக்குறைய உள்ள நிலையை, நான்கிற்கும் குறைவாக உள்ள செயற்கைகோள்கள் காணப்படும்போது கணிக்கின்றன. (பார்க்க பக்கம் , பிரிவு 7மற்றும் பிரிவு 8 , மற்றும் பக்கம் + +ஒரு ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு எவ்வாறு வேலை செய்கிறது மற்றும் அதன் சார் அளவை பிழைகள் உள்ளிட்டவை இந்தப் பிரிவில் ஒதுக்கப்படுகின்றன. குறைந்தபட்சமாக நான்கு செயற்கை கோள்களில் இருந்து செய்திகள் பெறப்பட்டு, அதன் மூலம் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு ஒரு செயற்கைகோளின் நிலையையும் அது செய்திகள் அனுப்பிய நேரத்தையும் நிர்ணயிக்கிறது. x, y மற்றும் z ஆகியவற்றைக் கொண்ட நிலை சார்ந்த நேரங்கள் formula_1 என இவை குறிக்கப்படுகின்றன. இங்கே" i " என்பது செயற்கைக்கோள் எண் ஆகும். இது 1,2,3 அல்லது 4 என்ற மதிப்பைக் குறிப்பிடுகிறது. செய்தியானது ஒளியின் வேகத்தைக் கொண்டும், பயணித்தது என்ற அனுமானத்தைக் கொண்டும் c என்ற தூரத்தையும் மற்றும் formula_2 என்பதையும் formula_3 கணக்கிடுகிறது. ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பிலிருந்து செயற்கைகோளின் தூரத்தை கணக்கிடுவது என்பது செயற்கைகோளின் நிலையை ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு கோளத்தின் பரப்பில் பொருத்தி, பின்னர் அதை செயற்கைகோளின் மத்தியில் வைப்பதாகும். ஆதலால் ஜி.பி.எஸ்ஸின் பெறுதல் அமைப்பின் குறிப்பிடப்பட்ட நிலை என்பது நான்கு கோளங்கள் சந்தித்துக்கொள்ளும் பொதுவான பகுதி என அறிகிறோம். கொள்கை அடிப்படையில் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு பிழையில்லாமல் இருக்கிறது என்று கருதினோமானால் ஜி.பி.எஸ் அமைப்பு நான்கு கோளங்களின் சந்திப்பில் அவற்றின் பொதுவான பரப்பில் இருக்கும். இரண்டு கோளங்களின் பகுதிகள், அவைகள் சந்திக்கும் இடங்கள் ஒரு புள்ளிக்கு மேல் என இருக்குமானால் அவைகள் வட்டத்தில் சந்திக்கின்றன. இந்தப் படமானது, அதாவது "இரண்டு கோளங்கள் எவ்வாறு ஒரு வட்டத்தில் சந்திக்கின்றது" என்பதை கீழ்கண்டவாறு காண்பிக்கின்றது. +ட்ரைலேடரசன் பற்றிய குறிப்பேடு இரண்டு கோளங்களின் பரப்புகளை கணிதரீதியாக பார்க்கும் போதும், ஒன்றுக்கு மேலான புள்ளிகளில் சந்திக்கும் போதும் ஒரே வட்டத்தில் சந்திக்கின்றன என சொல்கின்றது. + +பல நேரங்களில் ஒரு கோளமும் ஒரு வட்டமும் இரண்டு புள்ளிகளில் சந்திக்கின்றன. இவைகள் பூச்சிய அளவு எனும் மிகக்குறைவான தாழ்நிலை சக்தியில் சந்தித்துக் கொள்கின்றன என நாம் அறிந்ததே. ஒரே தளத்தில் மூன்று கோளங்கள் இருக்கும் பட்சத்தில் (அவைகள் ஒரே கோட்டில் இருக்கின்றன). அப்பொழுது கோளங்களானது வட்டத்தின் முழு சுற்றளவில் சந்திக்கின்றன. மற்றொரு படமான" கோளத்தின் பரப்பு ஒரு வட்டத்தில் இரண்டு புள்ளிகளில்" (டிஸ்க் அல்லாத) சந்திக்கும் போது, இவைகளின் இந்த ஒன்றுக்கொன்று சந்தித்துக்கொள்ளும் வெட்டுபரப்பை காண்பிக்கின்றது. இந்த இரண்டு வெட்டும் புள்ளிகள் வேறுபடுத்தப்பட்ட புள்ளிகளால் காண்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் ட்ரைலேட்ரஸன் கணித ரீதியாக இதை தெளிவாக காண்பிக்கிறது என அறியலாம். சரியான ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் நிலை என்பது பூமியின் இயங்குரக பொருட்களின் பகுதியும் வளிமண்டலத்தின் மிக அருகே உள்ள பூமியின் பகுதியும் சந்திக்கும் பகுதியாகும். ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் நிலை என்பது நான்கு செயற்கைகோள்களின் கோளப்பகுதிகள் ஒன்றை ஒன்று சந்தித்துக்கொள்ளும் போது அவற்றிற்கு மிக மிக அருகே உள்ள பகுதியாகும். ஒரே தளத்தில் மூன்று செயற்கைகோள்கள் உள்ளன என்று கருதும் பட்சத்தில் இந்த இரண்டு சந்திப்புகளுமே ஒரே மாதிரியாக உள்ளன. இந்த மூன்று செயற்கைகோள்களும் ஒரே சுற்றுப்பாதை தளத்தில் இல்லாவிடில், இந்த செயற்கைகோள்கள் ஒரே செங்குத்துத் த��மாக, பூமியின் மையம் வழியாக செல்லும்படியாக இருக்க முடியாது. இதைப் பார்க்கும்போது செயற்கைகோள்கள் ஒன்றுகொன்று சந்தித்துக்கொள்ளும் பொதுவான பகுதிகளில் ஒன்று பூமிக்கு மிக அருகில் மற்றதை விட நெருங்கி இருக்கும் என நாம் அறிய முடிகிறது. வளிமண்டலத்திற்கு மிக அருகே உள்ள பூமியின் பரப்பு நியர்-எர்த் சாதனத்தின் சந்தித்துக்கொள்ளும் பொதுபரப்பு ஆகும்.எந்த பொதுபரப்பு பூமியிலிருந்து அதிகம் தூரம் உள்ளதோ அதுதான் விண்வெளி சாதனங்களுக்கு சரியான நிலை ஆகும். + +எந்த ஒரு பிழையும் இல்லாத பட்சத்தில் நிலையை காண்பது பற்றி விவாதிக்கப்பட்டது. +இதில் மிகவும் முக்கியமான பிழையை தரக்கூடிய ஆதாரம் எதுவென்றால் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் கடிகாரம் ஆகும். மிக அதிக அளவிலான மதிப்போடு வரும் ஒளியின் வேகமானது, அதவாது "சி" எனப்படும் ஒளியின் வேகம், ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பிலிருந்து கணிக்கப்பட்ட செயற்கைகோளின் தூரமான சூடோரேன்ஜஸ் ஆகியவைகள் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் கடிகாரத்தில் மிக நுணுக்கமான பிழைகள் ஆகும். இது ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புக்கு மிகவும் சரியான மற்றும் விலை உயர்ந்த கடிகாரம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்துகிறது. மற்றொரு வகையில் உற்பத்தியாளர்கள் விலை குறைந்த ஜி.பி.எஸ் அமைப்புகளையே சந்தைகளில் விற்பனைக்கு கொண்டு வர விரும்புகிறார்கள். இந்த வகையான குழப்பத்திற்கு ஒரே தீர்வு கோளப்பகுதிகள் எவ்வாறு ஜி.பி.எஸ் வகை பிரச்சினைகளுடன் ஒத்துப்போகிறது என்பதைப் பொருத்து அமைகிறது. + +மூன்று கோளங்களை எடுத்துக்கொண்டால் அவற்றில் முதல் இரண்டு கோளங்கள் சேரும் பொதுப்பகுதி பொதுவாக பெரிதாக காணப்படும். ஆதலால் மூன்றாவது கோளப்பகுதியின் பரப்பு இந்த இரண்டு பகுதிகளின் பொதுப்பரப்பில் இணையும் நான்காவது கோளப்பரப்பின் மூன்று கோளப்பரப்புகளின் இரண்டு பொதுப்பகுதி புள்ளிகளை மட்டுமே தொடக்கூடிய சாத்தியக்கூறு மிகவும் குறைவாக உள்ளது. அதாவது கடிகாரப் பிழை காரணமாக ஏதாவது ஒரு பொதுப்பகுதி புள்ளியை தவறவிடுவதற்கு சாத்தியக்கூறு உள்ளதால் இவ்வாறு கூறப்படுகிறது. ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பிலிருந்து கோளத்தின் பரப்பிற்கு உள்ள தூரத்தை, சரியான கணிப்பின் மூலம் கணித்து பின்னர் நான்காவது செயற்கைக்கோள் கோளத்தின் உதவியோடு கடிகார பிழையை சரி செய்��� முடியும். formula_4 என்பது ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பிலிருந்து நான்காவது செயற்கைகோளின் கோளத்தின் பரப்பிற்கு உள்ள தூரத்தை, சரியான கணிப்பின் மூலம் கணித்த தூரம் என்று கொள்க. formula_5 என்பது நான்காவது செயற்கைகோளின் சூடோரேன்ச் ஆகும். formula_6 என்று கொள்க. formula_7 என்பது கணிக்கப்பட்ட ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் நிலையிலிருந்து நான்காவது செயற்கைகோளின் கோளப்பகுதியின் பகுதிக்கு உள்ள தூரம் என்று கொள்க. ஆதலின் ஈவு எனும் +formula_8, என்ற கணிப்பு + +ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் கடிகாரத்தை \ b என முன்னோக்கி சரி செய்ய முடியும் \ b என்பது முன்னோக்கிய மதிப்பாக இருக்கும் பட்சத்தில். \ b என்பது பின்னோக்கி மதிப்பாக இருப்பின் இது பின்னோக்கி சரி செய்யப்படும் + +இந்த ஜி.பி.எஸ் மூன்று முக்கிய பகுதிகளை கொண்டுள்ளது. அவைகள் வளிமண்டல பகுதி (எஸ்எஸ்), கட்டுப்பாடு பகுதி (சி.எஸ்) மற்றும் உபயோகப்படுத்துவோர் பகுதி என மூன்று பகுதிகளாக உள்ளன. + +வளிமண்டலப் பகுதி (எஸ்.எஸ்) என்பது சுற்றும் பாதையில் உள்ள செயற்கைகோள்கள் அல்லது வானவீதி உபகரணங்களை (எஸ்.வி) ஜி.பி.எஸ் மொழிப்படி கூறலாம். ஜி.பி.எஸ் வடிவமைப்பு என்பது 24 எஸ்.விக்கள் என கொள்ளப்படும். எட்டு என ஒவ்வொரு தளத்திலுமாக மூன்று வட்ட பாதை தளங்கள் உள்ளன. ஆனால் இவைகள் ஆறு தளங்கள் என ஒவ்வொரு தளத்திலும் நான்கு எஸ்.விக்களை கொண்டு மாற்றப்பட்டன. சுற்றும் தளங்கள் பூமியை பொறுத்து மத்தியமாக்கப்பட்டன. ஆனால் இவைகள் தூரத்து நட்சத்திரங்களை பொறுத்து மையம் ஆக்கப்படவில்லை. ஆறு தளங்கள் ஏறக்குறைய 55° கோணத்தோடு காணப்படுகின்றன(பூமியின் மத்திய கோட்டிலிருந்து சாய்வான நிலையில்). இது ஏறுமுகத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியுடனும் வலது பக்க கோணத்தில் 60°மாறுபடுகின்றது (அதாவது பூமியின் மத்தியப்பகுதியில் இருந்து சுற்றும் பாதைகளின் இணைப்புகள் சேரும் ஒரு புள்ளியை பொறுத்து இந்த கோணம் அமைகிறது). சுற்றும் பாதைகள் குறைந்தது 6 செயற்கைகோள்கள் கொண்டு ஒரே கோட்டில் உள்ளவாறு என பூமியின் பரப்பில் இருந்து பார்வைக்கு தெரியும்படி அமைக்கப்பட்டுள்ளது. + +சுற்றுப்பாதையில் ஏறக்குறைய 20,200 கிலோ மீட்டர்கள் உயரத்தில் 10 செயற்கைகோள்கள் ஒரே வரிசையில் பார்வைக்கு தெரியும்படி உள்ளது (12,900 மைல்கள் அல்லது 10,900 நாடிகல் மைல்கள் ஆகும்; சுற்றுப்பாதையின் ஆரம் 26,600 கே.எம் (16,500 ���ி அல்லது 14,400 என்.எம் ஆகும்)), ஒவ்வொரு எஸ்.வி இரண்டு முழுமையான சுற்றுகளை சைடிறல் டே எனும் நாளில் அதவாது ஒரு சூரிய நாளை விட குறைவான நேரத்தை கொண்ட நாளில் சுற்றுகின்றன. ஆதலால் ஒவ்வொரு செயற்கைகோளிலும் கீழ்நிலை வட்டம் மேற்சொன்ன ஒரு (சைடிறல்) நாளை கொள்கின்றன. நான்கு செயற்கை கோள்களை மட்டுமே வைத்து சில மணி நேரங்கள் ஒரு புள்ளியில் இருந்து காண்பது என்பது அவைகளின் நிலைகள் ஒரு புள்ளியில் இருந்து சரியானவைகளாக இருக்கின்றன என்பதை உறுதி செய்ய உதவுகின்றன. அதுவும் முன்னேற்றப்பாதையில் செல்லும் போது மேற் சொன்ன கணிப்பு மிகவும் உதவியாக இருந்தது. ராணுவம் சார்ந்தவைகளுக்கு கீழ் நிலை வட்டத்தின் பயன்பாடு போர்க்களங்களில் சிறப்பாகப் பயன்படும் வகையில் மாற்ற முடியும். + +, 31 நடைமுறையில் இயங்கும் செயற்கைகோள்கள் ஜி.பி.எஸ் தொகுப்பில் உள்ளன. இவற்றில் இரண்டு பழமையானவைகள் ஆகும். இவைகள் நடைமுறையில் இயங்குவதிலிருந்து விடை கொடுக்கப்பட்டு சுற்று வட்ட பாதைகளின் உபரிகளாக வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக வைக்கபட்டுள்ள செயற்கைகோள்கள் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் கணக்கீடு நுணுக்கத்தை முன்னேற்ற உதவுகிறது. இது எப்படி உதவுகிறது என்றால் தேவையற்ற அளவீடுகளை ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புக்கு தெரிவித்து உதவுகிறது. செயற்கைகோள்களின் எண்ணிக்கைத் தொகுப்பானது ஒரே மாதிரியாக இல்லாத அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே மாதிரியாக இல்லாத அமைப்பைக் கொண்ட இந்த முறையை உபயோகபடுத்தும் போது, பல்வேறு செயற்கைகோள்கள் செயல் இழப்பது போன்றவை இல்லாமல், சார்புதன்மையை அதிகபடுத்துவதாக உள்ளது. + +செயற்கை கோள்களின் பறக்கும் பாதைகள் அமெரிக்க விமானப்படையால் கண்காணிக்கப்படுகின்றன. கண்காணிக்கும் தளங்களானது ஹவாய், க்வாஜாலின், அசென்சன் தீவு, டிகோ கார்சியா, கொலோரோடோ மற்றும் தேசிய ஜியோஸ்பேடியா ஏஜென்சி (என்.ஜி.எ) அமைப்பால் இயக்கப்படும் கண்காணிப்பு தளங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கண்காணிக்கப்படும் தகவல்கள் வான் படையின் வளிமண்டல கட்டளைகளின் தலைமை கட்டுப்பாடு உள்ள ச்கீரிவர் எனும் இடத்தில் உள்ள வான் படை தளம் கொண்ட நிலையத்திற்கு செலுத்தப்படுகிறது. இவைகள் இரண்டாம் வளிமண்டல வான்படை இயக்க ஸ்குவாட்ரன் (2 சோப்ஸ்) எனும் அமெரிக்க வான் படை அமைப்பால் இயக்கப்படுகிறது (யு.எஸ்.எ.எப்). அதன் பிறகு 2 சோப்ஸ் ஒவ்வொரு செயற்கை கோளையும் தொடர்பு கொண்டு வழக்கமான ஊடுருவல் தொடர்பான தற்போதைய தகவல்களை தருகின்றன. கீழ்நிலை அலைகடத்தி அசேன்சன் தீவு, டிகோ கார்ஸியா, குவாஜெலின் மற்றும் கொலோரோடோ ஸ்ப்ரிங்க்ஸ் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. இந்த தகவல்கள் நிலையத்தில் உள்ள அணு கடிகாரங்களை ஒரு சில நானோ வினாடிகளுக்குள் ஒருமுகப்படுத்துகின்றன. இதனைத் தொடர்ந்து செயற்கைகோள்கள் தங்களின் எபிமெரிஸ் எனும் உள் சார்ந்த அமைப்பை மாற்றி கொள்கின்றன. + +செயற்கை கோள் வழி ராணுவம் சார்ந்த நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது ஜி.பி.எஸ் முறைப்படி மிகவும் சரியானது என்று கருத முடியாது. ஆகையால் ஒரு செயற்கைகோளின் பாதையை மாற்ற அந்த செயற்கைக்கோள் "செயல்பாடு அற்ற நிலையில்" உள்ளது என குறிக்கப்பட வேண்டும். அதனால் பெறுதல் அமைப்புகள் இந்த பாதைகளை தங்களது கணக்கீடு முறையில் கொள்ளாது. அதன் பிறகு ராணுவம் சார்ந்த நடமாட்டங்களை கண்காணிக்க முடியும். முடிவு நிலை வட்டப்பாதையை கீழ் நிலையில் இருந்து பின் தொடர்ந்து பெற முடியும். அதன் பிறகு புது எபிமெரிஸ் ஏற்றப்பட்டு செயற்கை கோள் ஆரோக்கியமாக அறிவிக்கப்படுகிறது. + +உபயோகிப்பாளர் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு என்பது ஜி.பி.எஸ்ஸின் உபயோகிப்பாளர் பகுதி ஆகும். பொதுவாக ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு என்பது ஒரு அலைகடத்தியானது செயற்கை கோள் அனுப்பும் அதிர்வுகளுக்கு ஏற்ப தன்னை தானே அதற்கு ஒத்த அதிர்வுகளாக மாற்றிக்கொண்டும், பெறுதல் அமைப்பின் முக்கிய செயல்பாட்டு அமைப்புகள் மற்றும் உயர்ந்த நிலையான கடிகாரம் (இது படிகார வகை அல்லது கிரிஸ்டல் அதிர்வூட்டிகள் என அழைக்கப்படுகின்றன) போன்றவை உபயோகிப்பாளருக்கு ஒரு சின்னத்திரை போன்ற அமைப்பை கொண்டு இடத்தையும் வேகத்தை பற்றிய தகவல்களையும் கொடுக்கின்றன) ஆகியவற்றின் மூலம் எத்தனை வழி கட்டுப்பாடுகள் உள்ளன என்பதை விவரிக்கும் முறையாகும். இது எத்தனை செயற்கை கோள்களை கண்காணிக்க முடியும் என்ற தகவலை தருகிறது. உண்மையில் வழி கட்டுப்பாடுகளின் எண்ணிக்கை நான்கு அல்லது ஐந்து என முதலில் நிர்ணயிக்கப்பட்டு பின்னர் படிபடியாக இவைகளின் எண்ணிக்கை காலப்போக்கில் உயர்ந்து , தற்போதைய தகவலின்படி இவைகளின் எண்ணிக்கை 12 மற்றும் 20 ஆகியவற்றிற்கு இடை���ே இருக்கலாம். + +ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகள் வகை சார்ந்த பிழை திருத்தலுக்கு ஒரு உள்ளீடு அமைப்பை, அதாவது ஆர.டி.ஸி.எம் எஸ்.ஸி-104 முறைப்படி கொண்டிருக்கலாம். இந்த அமைப்பானது ஆர.எஸ்-232 எனப்படும் சந்தியை 4,800 பிட்டுகள்/செகண்ட் என்ற வேகத்தில் கொண்டிருக்கும். தகவல்கள் உண்மையில் மிகவும் குறைவான வேகத்தில் செலுத்தப்படுகிறது. இதனால் இது ஆர.டி.ஸி.எம் மூலம் செலுத்தப்படும் குறிப்பு அலைகளின் தெளிவு நிலையை குறைக்கிறது. பெறுதல் அமைப்புகள் உள்சார்ந்த டி.ஜி.பி.எஸ் பெறுமானியுடன் இருப்பின் மேற்சொன்ன குறைவான தெளிவு நிலை என்ற நிலையை தவிர்த்து செயல்பட முடியும். 2006 ஆம் ஆண்டின்படி குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட யூனிட்கள் பரந்த முறையில் விரிவாக்கத்தை கொண்டு செயல்படும் முறையை (டபுயு.எ.எ.ஸ்) பெறுதல் அமைப்பில் கொண்டுள்ளது. + +பல ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகள் நிலை சார்ந்த தகவல்களை பி.ஸி அல்லது மற்ற வகையான சாதனங்களுக்கு செலுத்த என்.எம்.ஈ.எ 0183 என்ற புரோடோகால் அல்லது புது வகையான அல்லது குறைந்த முறையில் உபயோகப்படுத்தப்படும் என்.எம்.ஈ.எ 2000 என்ற புரோட்டாக்காலை உபயோகப்படுத்துகின்றன. [58] இந்த வகையான புரோட்டக்கால்கள் என்.எம்.ஈ.எ அமைப்பால் அதிகாரப்பூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன. இந்த வகை புரோட்டக்கால்களைப் பற்றி குறிப்பிட வேண்டுமாயின் இந்த வகையான புரோட்டக்கால்கள் பொதுத் தகவலின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. இவைகள் அனைவராலும் பயன்படுத்தப்படும் சாதனங்களான ஜி.பி.எஸ்.டி சார்ந்த புரோட்டக்கால்களை வாசிப்பதற்கு புரோடக்காலின் உள்கட்ட அமைப்பின் உள் சார்ந்த பண்பினை மாற்றாமல் அனுமதி செய்கின்றன. மற்ற புரோடக்கால்களான எஸ்ஐஆர்எப் எம்டிகே ஆகியவை இதற்குப் பயன்படுகின்றன. பெறுதல் அமைப்புகள் மற்ற சாதனங்களுடன் தொடர் இணைப்பு, யு.எஸ்.பி அல்லது புளு டூத் ஆகிய முறைகள் மூலம் தொடர்புகொள்கின்றன. + +ஒவ்வொரு ஜி.பி.எஸ் செயற்கைக்கோள் அமைப்பும் பிட்ரேட் ஜி.பி.எஸ் வீக் எண் மற்றும் செயற்கை கோள் ஆரோக்கிய எண் ( இவைகள் எல்லாம் செய்தியின் முதல் பாகத்தில் கொடுக்கப்படுகின்றன) அனைத்தும் ஒரு "எபிமெரிஸ்" ஆகும் (செய்தியின் இரண்டவாது பாகத்தில் கொடுக்கப்படுகின்றது). "அல்மநக் " (செய்தியின் பிந்தைய பகுதியில் கொடுக்கப்பட்டது) ஒலியைப் பரப்புகின்றன. செய்திக��் ஒரு தொகுப்பாக அடுக்குகள் மூலம் மூலம், 30 வினாடிகளில் 1500 பிட்ச்களை கடத்துகின்றன. + +இந்த வகை கடத்தல்கள் ஒவ்வொரு 30 வினாடிக்கும் ஒரு நிமிடம் மற்றும் 30 நிமிடத்திற்கு அணு கடிகாரத்தின் படி ஆரம்பிக்கிறது. ஒவ்வொரு அடுக்குகளும் 5 பிட்ஸ்களைக் கொண்டுள்ளது. ஒரு அடுக்கானது 300 பிட்ஸ்களை 6 வினாடி என்ற நேரத்திற்கு நீட்டிக்கும் அதே சமயம், அதன் கீழ் உள்ள ஒவ்வொரு துணை அடுக்கின் உதவியுடன் 10 வார்த்தைகளை கொண்டு 30 பிட்ஸ்களை கொண்டு 0.6 வினாடி வரை நீட்டிக்கிறது. + +வார்த்தைகள் 1 மற்றும் 2 ஆகியவைகள் ஒரே மாதிரியான தகவல்களை கொண்டுள்ளன. முதல் வார்த்தையானது ஒரு டெலிமேட்ரி வார்த்தை ஆகும். இவை துணை அடுக்கின் தொடக்கம் ஆகும். இவைகள் சினச் எனு கூர்வை மூலம் ஊடுருவல் செய்தியோடு பயன்படுத்தப்படுகிறது. இரண்டவாது வார்த்தை ஆனது ஹௌவ் அல்லது இந்த கொடுக்கப்பட்ட வார்த்தை நேரக் கோர்வைகளை கொண்டுள்ளது. இவைகள் துணை அடுக்கை அடையாளம் கொள்ள உதவுகிறது. இவைகள் அடுத்த துணை அடுக்கு செலுத்தப்பட்ட நேரத்தையும் தருகின்றன. + +3 முதல் 10 வரையிலான துணை அடுக்கு வார்த்தைகள் செயற்கைக்கோள் கடிகாரத்தையும், ஜி.பி.எஸ் நேரத்துடன் அதற்கான தொடர்பையும் விவரிக்கின்றன. வார்த்தைகள் 3 முதல் 10 வரை ஒவ்வொன்றின் துணை அடுக்கு 2 மற்றும் 3 ஆனது, எபிமெரிஸ் தகவல்கள் மூலம் செயற்கைகோளின் அதனுடைய சொந்த வட்ட பாதையை நிர்ணயிக்க உதவுகிறது. எபிமெரிஸ் இரண்டு மணிக்கு ஒருமுறை புதுபிக்கப்படுகிறது என்பதுடன், இவைகள் 4 மணி நேரம் கொண்ட தகவல்களாக இருக்கும். சில நேரங்களில் 6 மணி நேரம் அல்லது அதற்கு மேல் நிலைமைகளுக்கு ஏற்ப செய்திகள் புதுபிக்கப்படுகின்ற்ன. எபிமெரிசை கொள்வதற்கு தேவையான நேரம் என்பது முக்கியமானது. + +அல்மனக் கனத்த சுற்றுப்பாதையை கொண்டும், ஒவ்வொரு தொகுப்பின் செயற்கைகோளின் நிலை தகவல்களை கொண்டும், ஒரு அயனாதிக்க மாதிரி மற்றும் ஜி.பி.எஸ் தொடர்பான தொகுப்பு வரையறுப்பு நேரம் உலக பொது நேரத்திற்கு கோர்வையாக பயன்படுகிறது. வார்த்தைகள் 3 முதல் 10 வரையிலான துணை அடுக்கு 4 மற்றும் 5 அல்மனக்கின் புதிய பகுதியாக உள்ளன. ஒவ்வொரு துணை அடுக்கும் அல்மனக்க்கில் 1/25 ஆக உள்ளது. ஆகையால் 12.5 நிமிடங்கள் என்பது ஒரு முழு அல்மனக்கை செயற்கை கோளில் இருந்து பெறுவதற்கான நேரம் ஆகும். அல்மனக் பலவகையான செயல்பாடுகளுக்கு உதவுகிறது. எத்தனை செயற்கைகோள்கள் சேகரிப்புகளுக்கு உள்ளன என்று கொள்ளவேண்டும். எபிமெரிஸ் மூலம் செயற்கைக்கோள் வழியாக நிலைகள் மற்றும் நேரங்கள் கணிக்கபடுகின்றன. பழைய தகவல்களை அல்மனக் இல்லாமல் நிலை காண்பதில் அதிக நேரம் ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு செயற்கை கோளையும் தேடுவது என்பது ஒரு மெதுவான செயல்பாடு ஆகும். உடற்கூறு வடிவைப்பதில் ஏற்பட்ட முன்னேற்றம் இந்த சேகரித்தலை அதி வேகம் ஆக்கியுள்ளது. ஆதலால் அல்மனக் இல்லாதது ஒரு பிரச்சினையாக இருக்க முடியாது. இரண்டாவதாக ஜி.பி.எஸ்லிருந்து பெறப்பட்ட நேரத்தை (ஜி.பி.எஸ் நேரம்) யு.டி.சி எனும் சர்வதேச நேரத் தரத்திற்கு உயர்த்துவதாகும். கடைசியாக அல்மனக் ஒரே அதிர்வெண்ணை கொண்டு செயல்படும் பெறுதல் அமைப்பின் மூலம் அயனடிக்க பிழையை சரி செய்கிறது. இது உலக பொது சார் அயனாதிக்க மாதிரியை பயன்படுத்தி செய்யப்படுகிறது. இந்த சரிசெய்தல் முறையானது மிகவும் சரியாக பெருக்குதல் முறைகளான வாஸ் அல்லது இரு அதிர்வெண் கொண்ட பெறுதல் அமைப்பு மூலம் செயல்படுத்தப்படும் முறை போல் இல்லை. எனவே பிழையை சரி செய்தல் என்பதை காட்டிலும் பிழையை சரி செய்யாமல் இருப்பது மேல் என்று தெரிகிறது. ஏனெனில் அயனாதிக்க பிழை என்பது ஒரே ஒரு ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் மிக அதிகமான பிழை ஏற்படுத்தும் பகுதி ஆகும். அதிர்வெண்ணுள்ள ஒரு முக்கியமான தகவலை சேகரிக்க, செயற்கைகோள்கள் அதன் சொந்த "எபிமேரிசை" மட்டும் கடத்தி செல்ல அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லா செயற்கைகோள்களுக்குமாக ஒரு "அல்மனக்கை" கடத்துகின்றன. + +எல்லா செயற்கைகோள்களும் ஒரே மாதிரியான இரண்டு அதிர்வெண்ணில் ஒலியை பரப்புகின்றன. 1.57542 ஜி.எச்.ஸி (L1 குறிப்பு அலைகள்) மற்றும் 1.2276 ஜி.எச்.ஸி (L2 குறிப்பு அலைகள்) ஆகியவைகள் இதில் முக்கியமானதாகும். பெறுதல் அமைப்பு எல்லா வகை செயற்கைகோள்களில் இருந்தும் குறிப்பு அலைகளை பெற முடியும். ஏனெனில் ஜி.பி.எஸ் குறியீடு வகை வகுத்தல் முறை பல வகை தொடர்பு கொள்ளுதல் (ஸி.டி.எம்.எ) எனும் ஸ்ப்ரெட்-ஸ்பெக்ட்ரம் தொழில்நுட்பம் மூலம் செய்கிறது. இதில் குறைந்த வகை பிட்டுகளிலான செய்தி மிகவும் அதிக சூடோ ராண்டம் முறைப்படி மாற்றம் செய்யப்படுகிறது. இந்த சூடோ ராண்டம் எண் ஒவ்வொரு செயற்கைகோளுக்கும் மாறுபடுகிறது. பெறுதல் அமைப்பு ஆனது பி.ஆர.எண் ���ுறியீடுகளை ஒவ்வொரு செயற்கைக் கோளுக்கும் பெற்று அதன் மூலம் செய்திகளை மறு உருவாக்கம் செய்ய முடியும். இந்தச் செய்தியானது 50 பிட்டுகள் பெர் செகண்ட் என்ற விகிதத்தில் கடத்தப்படுகின்றன. இரண்டு மாறுபட்ட ஸி.டி.எம்.எ மறு உருவாக்கங்கள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இது 1023 மில்லியன் சிப்ஸ் பெர் செகண்ட் என்ற விகிதத்தில் செயல்படுகிறது. மற்றொரு முறையான தெளிவான (பி) குறியீடு (10.23 மில்லியன் சிப்ஸ் பெர் செகண்ட்) விகிதத்தில் செயல்படுகிறது. எல்1 கேரியர் ஸி/எ மற்றும் பி குறியீடுகளால் உயர்த்தப்பட்டு, எல்2 கேரியர் என்பது பி குறியீட்டால் மட்டும் உயர்த்தப்படுகிறது. ஸி/எ குறியீடு என்பது பொதுவானது மற்றும் பொதுமக்கள் பெறுதல் அமைப்பால் பயன்படுத்தப்படுகிறது. பி குறியீடு என்பது மறு உருவாக்கம் செய்யப்பட்டு அவைகள் பி (ஒய்) என அழைக்கப்படுகின்றன. இவைகள் ராணுவ உபகரணங்களுக்காகவும் மற்றும் சரியான மறுகுறியாக்க சாவியாகவும் செயல்படுகிறது. இரண்டு வகையான ஸி/எமற்றும் பி(ஒய்) குறியீடுகள் குறித்த நேரம் மற்றும் நாளின் நேரம் ஆகியவற்றை உபயோகிப்பாளர்களுக்கு தருகிறது. + + +எல்லா விதமான செயற்கைகோள் சமிக்ஞைகள் ஒரே வகையான எல்1 எனும் கடத்தி அதிர்வெண்ணைக் கொண்டுள்ளது. ஆதலால் குறிப்பீடு அலைகளிலிருந்து மீள் நிலைக்கு இவற்றை கொண்டுவரத் தேவையில்லை. இந்தத் தங்கக் குறியீட்டு எண்கள் மிகவும் ஒன்றுகொன்று செங்குத்து ஆனவை. ஆதலால் ஒரு செயற்கைகோள் குறியீட்டு அலை என்பதை மற்றொன்றாகப் புரிந்து கொள்ளப்படுவது என்பது பெரும்பாலும் இல்லை அதே போன்று தங்கக் குறியீடு என்பது தானாகவே கொள்ளும் கோர்வைப் பண்பினைப் பெற்றுள்ளது. + +1025 வேறுபட்ட தங்கக் குறியீடுகள் 1023 பிட்ஸ் நீளத்தை கொண்டுள்ளன. ஆனால் இவற்றுள் 32 மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. இந்த தங்கக் குறீயீடுகள் சூடோ ராண்டம் எண்கள் என்று பெரும்பாலும் அழைக்கப்படுகின்றன. ஏனெனில் இவை பெரும்பாலும் எந்தத் தகவலையும் உள்ளடக்குவதில்லை, அத்துடன் இவை ஒரு தாறுமாறான வரிசையைப் பின்பற்றுகின்றன. இருந்த போதிலும் இவை தவறாக நம்மை எடுத்துச் செல்லலாம். ஏனெனில் இவை அனைத்தும் தீர்மானமான வரிசைகளாக உள்ளன. + +அல்மனக் தவல்கள் முன்னதாகவே பெறப்படின், பெறுதல் அமைப்பு ஆனது எந்த செயற்கைகோளை கவனிக்க வேண்டும் என்பதைத் தேர்ந்த��டுக்கிறது. இது பெறுதல் அமைப்பின் பி.ஆர்.என் என்பதன் மூலம் செய்யப்படுகிறது. அல்மனக் தகவல்கள் முன்னதாகவே சேமிக்கபடாவிடில் பெறுதல் அமைப்பு தேடும் நிலையை அடைகிறது. இவை பி.ஆர்.என் எண்கள் மூலம் ஒரு பூட்டை ஏதாவது ஒரு செயற்கை கோள் மீது பெறும் வரை, தொடர்ந்து சுற்றுகின்றன. ஒரு தொடக்கத்தைப் பெற செயற்கைகோளில் இருந்து தெளிவான பார்வை ஒரே கோட்டில் உள்ளவாறு பெறுதல் அமைப்பிற்கு இருக்க வேண்டும். பெறுதல் அமைப்பு ஆனது அல்மனக் தவல்களை சேகரிப்பதுடன், எந்த செயற்கைக்கோள் இதை கவனிக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கிறது. இது ஒவ்வொரு செயற்கைகோளின் குறியீடு அலைகளை கவனிப்பதால் தெளிவான சி/எ குறியீட்டு அமைப்பு வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்கிறது. + +பெறுதல் அமைப்பு சி.எ குறியீட்டை ஒரே மாதிரியான பி.ஆர்.என் எண்கள் மூலம் செயற்கைகோளிலிருந்து ஒரே ஆப்செட் எனும் 0 வை கணிப்பதற்கு சிறந்த ஒத்துதலை தருகிறது. ஆப்செட் 0 என்பது முயற்சி செய்து பிழையை திருத்துதல் எனும் முறை மூலம் சரி செய்யப்படுகிறது. 1023 பிட்டுகள் அதவாது செயற்கைகோளின் பிட்டுகள் எனும் பி.ஆர்.என் குறியீட்டு அலைகள், பெறுதல் அமைப்பின் பி.ஆர்.என் குறியீட்டு அலைகளோடு ஒப்பிடப்படுகின்றன. இவ்வாறு கோர்வையானது பெறப்படாவிடின், உள்சார்ந்து பெறப்பட்ட 1023 பெறுதல் அமைப்பின் பிட்டுகள் ஒன்றன் பின் ஒன்றாக ஒரு ஒரு பிட்டுகளாக செயற்கைகோளின் பி.ஆர்.என் குறியீட்டுக்கு மாற்றப்படுகின்றன. மீண்டும் குறியீட்டு அலைகள் ஒப்பீடு செய்யப்படுகின்றன. இந்த முறையானது மீண்டும் மீண்டும் செய்யப்படுகிறது. எதுவரை என்றால் கோர்வை என்பது பெறப்பட்டது அல்லது 1023 எல்லா வகையான பிரிவுகளிலும் இது மாதிரி முயற்சி செய்யப்பட்டது என்ற நிலையை எட்டும் வரையாகும். அனைத்து 1023 பிரிவுகளிலும் இது மாதிரி முயற்சி செயப்பட்டு ஒன்றில் கூட கோர்வை பெறப்படவில்லை எனில், பின்னர் அவை அதிர்வூட்டி அடுத்த மதிப்பிற்கு சோதனை செய்யப்படுகிறது. மேலே சொன்ன முறையானது மீண்டும் மீண்டும் இந்த புதிய மதிப்பிற்காக சோதனை செய்யப்படுகிறது. + +கடத்தி அதிர்வெண் என்பது டாப்ளர் விளைவு என்பதன் காரணமாக மாறலாம். பெறப்பட்ட பி.ஆர்.என் வரிசை தொடங்குவது என்பது 0 சார்ந்த ஒருமித்த மில்லி செகண்டுகளால் மாறுபடலாம். ஆகையால் இந்தக் கடத்தி அதிர்வெண் ஆனத�� பி.ஆர்.என் குறியீடு மூலம் பெறுதல் செயற்கைக்கோள் அமைப்பின் பி.ஆர்.என் குறியீட்டு அலைகள் எப்பொழுது தொடங்குகிறது என்பதை தீர்மானிக்க உதவுகிறது. முந்தைய கணிப்புகளைப் போல் அல்லாமல் லாக் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்றால் ஒரு பல்ஸில் பாதியை அல்லது அதை விட குறைவான அகலத்தை ஒதுக்கீடு செய்து அதன் மூலம் செய்யப்படுகிறது. [69]இந்தத் தேடுதல் என்பதைத் திருத்தம் செய்ய, பெறுதல் அமைப்பு இரண்டு அளவுகளை கவனிக்கின்றன. ஒன்று பேஸ் பிழை மற்றும் மற்றொன்று பெறப்பட்ட அத்திர்வேண்ணின் ஆப்செட் ஆகும். பெறப்பட்ட பி.ஆர்.என் குறியீட்டின் கோர்வையானது உண்டாக்கப்பட்ட பி.ஆர்.என்.குறியீட்டின் கோர்வையோடு ஒப்பீடு செய்யப்படுகின்றன. இவ்வாறு செய்வதன் மூலம் இவைகள் தவறாக தொடர்பு கொண்டு உள்ளதா என்பதை அறியலாம். பெறுதல் அமைப்பின் மூலம் கணக்கிடப்பட்ட பி.ஆர்.என் குறியீடு அரை பல்ஸ் முன்னதாகவும் மற்றும் அரை பல்ஸ் பின்னதாகவும் பெறப்பட்ட பி.ஆர்.என் குறியீட்டு அலைகளையும் கொண்டு தேவையான மாறுதல்களை கணக்கிடப்படுகின்றன. இந்த சரி செய்தல் ஆனது அதிகமாக பேஸ் பிழையை சரி செய்ய உதவுகிறது. பெறப்பட்ட அலையின் அதிர்வெண்னானது பெறுதல் அமைப்பின் மூலம் பெறப்பட்டபிறகு அந்த அதிர்வெண்னாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் பேஸ் விகிதப் பிழையை உத்தேசம் செய்யலாம். அதிர்வெண்களை உருவாக்குவதில் கட்டளைகள் மற்றும் மேற்படியான பி.ஆர்.என் குறியீடு போன்றவை இடம் பெயர்த்தலுக்கு ஒரு பயனாளரை வேண்டுகிறது. இதன் மூலம் பேஸ் பிழை மற்று பேஸ் வீத பிழை ஆகியவைகள் கட்டுப்படுத்தப்படுகிறது. டாப்ளர் திசைவேகம் என்பது ஒரு பயனாளர் அமைப்பாக கடத்தி அதிர்வெண்ணில் இருந்து உருவாக்கப்படுகிறது. டப்பளர் திசைவேகம் என்பது பெறுதல் அமைப்பின் திசைவேக கோர்வையாக ஒரே கோட்டில் செயற்கைகோளுக்கு தொடர்பாக வரையறுக்கப்படுகிறது. + +பெறுதல் அமைப்பு ஆனது தொடர்ந்து பி.ஆர்.என் வரிசையை வாசிக்கின்றன. அவ்வாறு செய்யும் பொழுது ஒரு சமயம் திடீர் மாற்றத்தை, 1023 பிட்டுகள் கொண்ட பெறுதல் அலை வேகத்தில் பெறுகிறது. இது ஊடுருவல் செய்தியின் தகவல் பிட்டின் ஆரம்பத்தைக் குறிக்கின்றது. ( பார்க்க 1.4.2.5 பிரிவு ). இது பெறுதல் அமைப்பு ஊடுருவல் செய்தியை 20 மில்லி செகண்டுகள் பிட்ஸ் என்ற வீதத்தில் வாசிக்க உதவுகிறது. ஒவ்வொ���ு ஊடுருவலின் துணை அடுக்கு என்பது டெலிமெட்ரி எனும் வேறொரு தொலை தூரத்திலிருந்து அளவீடுகளை செய்தல் என்பதை குறிக்கும் வார்த்தை ஆகும். இது பெறுதல் அமைப்பின் துணை அடுக்கு எனும் தொடக்கத்தை அறிய உதவுகிறது என்பதுடன், பெறுதல் அமைப்பின் கடிகார நேரத்தை அறிய உதவுகிறது. இந்த நேரத்தின்படி ஊடுருவல் துணை அடுக்கு என்பதன் தொடக்கம் தொடங்குகிறது. ஒவ்வொரு ஊடுருவலின் துணை அடுக்கு என்பது ஹான்ட் ஓவர் வார்த்தையில் (ஹௌ) உள்ள பிட்டுகளின் மூலம் அறியப்படுகின்றன. இதன்மூலம் பெறுதல் அமைப்பு எந்த துணை அடுக்கைச் சார்ந்தது என்பதை முடிவு செய்ய உதவுகிறது. (பார்க்க பகுதி 1.4.2.6 பக்கம் 72மற்றும் "எசெனசியல்ஸ் ஆப சாடிலைட் நாவிகேஷன் காம்பெண்டியம்" என்பதன் பகுதி 2.5.4 ஆகியவைகளை காண்க)முதல் நிலையை பற்றிய கிட்டத்தட்ட கணிப்பு 30 செகண்டுகள் வரை கால தாமதம் ஏற்படுத்த முடியும்.ஏனெனில் எபிமெரிஸ் தகவல்களை கோளத்தில் ஏற்படும் வெட்டுபகுதிகளை கணக்கிடுவதற்கு முன்பாக அவைகளை உள்ளீடாக கொள்ள வேண்டும் என்ற தேவை காரணமாக அவ்வாறு செய்யப்படுகிறது. + +ஒரு துணை அடுக்கு உள்ளீடாக செலுத்தப்பட்டு, பின்னர் அவை உள்ளே கொள்ளப்பட்டன என்று கொள்வோம். அடுத்த துணை அடுக்கு செலுத்தப்பட்டு அவை கடிகார சரி செய்தல் தகவல்கள் மற்றும் ஹௌ ஆகியவற்றின் மூலம் கணிக்கப்படுகிறது. பெறுதல் அமைப்பு என்பது பெறுதல் அமைப்பின் கடிகாரத்தை அறிய உதவுகிறது. இது எப்பொழுது என்றால் அடுத்த துணை அடுக்கின் தொடக்கமான டெலிமெட்ரி வார்த்தையின் கண்டுபிடிப்பைத் தொடர்ந்து ஏற்படுகிறது. இதன் மூலம் கடத்தல் நேரம் கணிக்கப்படுகிறது. இதன் மூலம் இவை சூடோ எண் வகையாக உள்ளது என்பதை அறியலாம். பெறுதல் அமைப்பு ஆனது ஒரு புது சூடோரேஞ்ச் அளவை ஒவ்வொரு துணை அடுக்கின் தொடக்கத்தின் போதும் பெறக்கூடிய திறனை பெற்றுள்ளது. அல்லது 6 செகண்டுளுக்கு ஒரு முறை இந்த புதிய சூடோரேன்ச் அளவை பெறுகின்றன. + +அதன் பிறகு சுற்றும் வட்டங்களில் உள்ள நிலைப்பாடு பற்றிய தகவல்கள் அல்லது எபிமெரிஸ் என்பதை ஊடுருவல் செய்தி மூலம் சரியாக கணக்கிட முடியும். இதில் செயற்கைக்கோள் செய்தியின் தொடக்கத்தில் வைக்கப்பட்டிருந்தது. மிகவும் நுண்ணியமாக உணரக்கூடிய பெறுதல் அமைப்பு என்பது திறனுடன் கூடிய வேகமான எபிமெரிஸ் தகவல்களை சேகரிக்க முடியு���். குறைவாக உணரக்கூடிய பெறுதல் அமைப்பின் மூலம் சேகரித்தல் என்பதை முற்றிலும் திறனாகக் காட்டுகிறது. அதிலும் குறிப்பாக சத்தமாக உள்ள ஒரு சுழ்நிலையில் இது நன்றாக செயல்படுகிறது. + +இந்த செயல்பாடு முறையானது ஒவ்வொரு செயற்கைகோளுக்கும் தொடர்ந்து செய்யப்படுகிறது. ஒவ்வொரு செயற்கைகோளும் எந்த பெறுதல் அமைப்பை கவனிக்கிறதோ அந்த பெறுதல் அமைப்பிற்கு இவ்வாறான செயல்பாடு செய்யப்படுகிறது. + +ஊடுருவல் முறையைப் பயன்படுத்தி அளவிடுதலை சூடோரேஞ் என்று விவாதிக்கப்பட்டது. மற்றொரு முறை ஜி.பி.எஸ் தொடர்பான கண்காணித்தல் பயன்பாடுகளில் கேரியர் பேஸ் டிராகிங் ஆகும். கடத்தி அதிர்வெண் வீதம் ஒளியின் வேகத்தை நேரத்தோடு உடன்படச் செய்கிறது. இதன் மூலம் அலை நீளம் என்பது 0.19 மீட்டர் என L1 கேரியருக்கு கூறப்படுகிறது. 1% என்ற அலைநீளம் துல்லியமாக இந்த சூடோ ரேஞ்ச் வகைப் பிழையின் கோர்வையை 2 மில்லிமீட்டர் வரை குறைவாக காண முடியும். இது 3 மீட்டர்கள் என சி/எ குறியீட்டுடனும், 0.3 மீட்டர்கள் என பி குறியீட்டுடனும் ஒப்பிடப்படுகிறது. + +இருந்த போதிலும் 2 மில்லி மீட்டர் துல்லியம் என்பது மொத்த பேசியும் அளந்து அதாவது மொத்த எண்ணிக்கையிலான அலைநீளம் மற்றும் மிகச்சிறிய அளவிலான அலைநீளம் ஆகியவற்றுடன் கூட்டப்படுகிறது. இது மிகச்சிறப்பான பெறுதல் அமைப்புகளின் தேவைகளை உணர்த்துகின்றன. இந்த முறையானது பல பயன்பாடுகளையும் இந்த மதிப்பீடு முறையில் கொண்டுள்ளது. + +இதற்காக நாம் ஒரு முறையை பெறுதல் அமைப்பு 2 - ன் நிலையை காண உதவுகிறது. கொடுக்கப்பட்ட பெறுதல் அமைப்பு 1 -ஐப் பயன்படுத்தியும் மூவகை வகைப்படுத்தலை பயன்படுத்தியும், அதன் எண்கணித வர்க்க மூலத்தை கண்டுபிடித்தும் லீஸ்ட் ஸ்குயர் எனும் கணித முறையை பயன்படுத்தி இந்த முறை வரையறுக்கிறது. பிழைகளைப் பற்றிய விவரமான விவாத முறை ஒரு எதிர்மறையான கருத்தை உருவாக்கக்கூடாது என்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. இந்த வரையறுப்பில் வேறுபாடுகள் என்பது செயற்கைகோளை கொண்டு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. மேலும் பெறுதல் அமைப்பிற்கு இடையே உள்ள வேறுபாடுகளை கொண்டு செய்யப்படுகின்றன. இரண்டு கால அளவுகள் உடைய வேறுபாட்டை கொண்டு இது கணக்கிடப்படுகிறது. இதுதான் ஒரே வழி என்றும் இந்த வரிசைதான் ஒரே வரிசை என்ற முடிவுக்கும் வர முடியாது. ந���ச்சயமாக மற்ற வரிசைகளின் வேறுபாடுகளை கொண்டு செய்தலும் இதற்கு சமமானதாகக் கருதப்படுகிறது. + +செயற்கைக்கோள் கடத்தியின் மொத்த பேஸ் எவ்வாறு அளக்கப்படுகிறது என்றால் ஒரு நிச்சயமற்ற தன்மையோடு சுழற்சி வட்டங்களின் எண்ணிகையோடு அதாவது மற்றும் கேரியர் பீட் பேஸ் என்ற முறைப்படியும் வரையறுக்கப்படுகிறது. +formula_9 என்பது கடத்தி செயற்கைகோளின் பேஸை குறிக்கட்டும். j என்பது செயற்கைகோளை குறிக்கட்டும் . i என்பது பெறுதல் அமைப்பு ஆகும். இந்த பெறுதல் அமைப்பு formula_10என்ற நேரத்தில் பெறப்படுகிறது என்று கொள்வோம். இந்தக் குறியீடுகள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது என்றால் இந்த கீழ் குறியீட்டுகள் i,j மற்றும் k ஆகியவைகள் சராசரி மதிப்பை கொண்டுள்ளன என்பதை குறிப்பதற்க்காக இவ்வாறு செய்யப்படுகிறது. பெறுதல் அமைப்பு, செயற்கைக்கோள் மற்றும் கால அளவு ஆகியவை ஆங்கில எழுத்து வரிசைப்படி கொண்டு வரப்படுகின்றன. சார் உபயோக அமைப்பின் உள் கட்டமைப்பானது எவ்வாறு உள்ளது எனில் ஓர் உபயோக அமைப்பின் உட்கட்ட அமைப்பான formula_11 என்பதைப் போல் இருக்கிறது. இவை வாசிப்பதற்கும், சிறியவைகளாக உள்ளவைகளுக்கும் உள்ள தொடர்பை சரியாக வைப்பதற்கு பயன்படுகிறது.formula_12 என்பது சுருக்கமாக கொடுக்கப்பட்ட ஒரு சுருக்கக் குறியீடு என்போம். அவைகளாவான formula_13 ஆகியவைகள் ஆகும். இவை பெறுதல் அமைப்பு செயற்கைக்கோள் மற்றும் கால அளவுகள் இவைகளுக்கு இடையே உள்ள வேறுபாட்டை அளக்கின்றன. மேற்சொன்ன வரிசைப்படி இவைகளின் வேறுபாடுகள் குறிக்கப்படுகின்றன. இந்த ஒவ்வொரு பயனாளர் அமைப்புகளும் ஒரே தளத்தில் அமையுமாறு மாறும் மதிப்புகளை கொள்ளுமாறு செய்து அவைகளின் கலவைகளைக் கொண்டு உள்ளடக்க அமைப்பானது மூன்று கீழ்க்குறியீட்டுகளாக குறிக்கப்படுகிறது. இந்த மூன்று உபயோக அமைப்புகள் கீழே வரையறுக்கப்படுகின்றன. formula_14 என்பது ஒரு உபயோக அமைப்பு ஆகும். இது தசம மதிப்பு இல்லாத எண் மதிப்புகளை உட்கொண்டுள்ளது. இவைகளின் உட்கட்ட அமைப்பு எவை எனில் i, j மற்றும் k ஆகியவை ஆகும். இவைகள் சரியான உட்கட்ட அமைப்புகள் ஆகும். :formula_13 என்பது எண் மதிப்புகளுடன் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது என்றால் + +மற்றும் formula_19 ஆகிய இவைகள் மூன்று உபயோகி அமைப்பு என்றும், அவைகளுள் உள்ள உள் அமைப்புகள் a,b மாறிலிகள் என கொண்டால் +formula_20 என்பது ஒரு சரியான உபயோகி அமைப்பில் பயன்படுத்தப்படும் அமைப்பு ஆகும். + +பெறுதல் அமைப்பின் கடிகாரப் பிழை என்பதை விளக்க முடியும். இது எவ்வாறு என்றால் செயற்கைகோள் 1 -லிருந்து பெறப்பட்ட பேஸ் மற்றும் செயற்கைக்கோள் 2 -லிருந்து பெறப்பட்ட பேஸ் ஆகியவைற்றை ஒரே எபோச் எனும் இரண்டு செயற்கை கோள்களுக்கிடையே வேறுபாடு என்று கருதுவாயின் அதன் பொருட்டு அளவிட்டு இந்த வேறுபாட்டை formula_24 என்று கருதுகிறோம். + +இரு வகையான வகைபடுத்துதல் என்பதை செயற்கைகோளின் வேறுபாட்டை பெறுதல் அமைப்பின் உதவி கொண்டு செய்யப்படுகிறது. பெறுதல் அமைப்பு 1, என்பது பெறுதல் அமைப்பு 2 மூலம் கண்காணிக்கப்படுதலை வைத்து கணக்கிடப்படுகிறது. செயற்கைக்கோள் கடிகாரப் பிழைகள் என்பது இந்த பெறுதல் அமைப்புகளின் வித்தியாசத்தை பொறுத்து விலக்கப்படுகின்றன. இந்த இருவகையான வேறுபாடுகள் என்பது எவ்வாறு குறிக்கப்படுகின்றது என்பதை கீழே காண்க. +formula_25 +formula_26 . + +மூவகை வகைபாடுகள் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் இரு வகை வகை வேறுபாடுகள் formula_27 என்ற நேரத்தில் செய்யப்படுதலும், மற்றொரு இருவகைவேறுபாடு formula_28 என்ற நேரத்தில் செய்யப்படுதலையும் வைத்து கணக்கிடப்படுகின்றன. இது அலைநீளத்தின் நிச்சயமற்ற தன்மையை விலக்குகிறது. அதாவது அலைநீளம் தொடர்பாக உள்ள கடத்தி பேசில் உள்ள முழு எண் கோர்வையானது நேரத்தை பொறுத்து மாறுபடவில்லை என்றால் அப்போது இது விலக்கப்படுகிறது. ஆதலால் மூவகை வேறுபாடு என்பது கடிகார சம்பந்தமான எல்லா வகை பிழைகளையும் விலக்கியுள்ளன. நடைமுறையில் பார்கப்போயின் எல்லா கடிகார வகை பிழைகளையும், முற்றும் நிச்சயமற்ற தன்மையின் எண்கள் சார்ந்த தெளிவின்மையையும் விலக்கியுள்ளன. வளிமண்டல தாமதம் என்பதை ஒட்டிய பிழைகள் மட்டும் செயற்கைக்கோள் எபிமெரிஸ் ஆகியவற்றை குறிப்பாக கொண்டுள்ளது. மூவகை வேறுபாடு பின்வருமாறு குறிக்கப்படுகிறது என்பதை காண்க +formula_29 . + +மூவகை வேறுபாடுகளின் காரணமாக வரும் முடிவுகள் மாறுகின்ற மதிப்புகளை கொண்ட பெயரிடப்பட்ட ஒரு காரணிக்கு மதிப்புகளை கணிக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக பெறுதல் அமைப்பு நிலை தெரிந்ததாக உள்ளது என்போம். ஆனால் பெறுதல் அமைப்பின் நிலை அறியப்படாததாக உள்ளது என்போம். அப்படியானால் பெறுதல் அமைப்பின் நிலையை எண்கணிதம் வர்க்கமூலம் மூலம் அறியப்படுகிறது. இவற்றின் மூலம் குறைந்த மதிப்பு உள்ள வர்க்கம் மூலம் அறியப்படுகிறது. மூவகை வேறுபாடுகள் என்பது தனித்தனியான நேர ஜோடிகளுக்கு முடிந்த வரையில் காணப்படுகிறது. இது இரணடாவது பெறுதல் அமைப்பின் நிலைபாட்டின் மூன்று கோர்வைகளை காண உதவுகிறது. இது எண்கணித முறைப்படி ஒரே வரிசை இல்லாத சமன்பாடுகளை கொண்டு வர்க்க மூலங்களை காணுதல் மற்றும் ஒரே வரிசை இல்லாத சமன்பாடுகளை, முந்தைய பாகங்களில் கண்டது போன்று, தீர்வுகளாக கொடுத்தல் என்பதன் படி செய்யலாம். மேலும் வர்க்க மூலங்களை காணுதல் என்பதை பற்றி ஒரு முன்னோட்டம் காண்க. இந்த வகையான ஒரு எண் கணித முறையை பயன்படுத்த ஒரு ஆரம்ப மதிப்பீடாக பெறுதல் அமைப்பான 2 -ன் நிலை தேவைப்படுகிறது. இந்த ஆரம்ப மதிப்பு ஆனது நிலை கணித்தல் எனும் ஊடுருவல் செய்தியின் அடிப்படையில் கிடைக்கப் பெறுகிறது என்பதுடன், கோளப்பரப்புகளின் வெட்டுதலை பொறுத்தும் அமைகிறது. பல்வேறு பரிமாணங்களில் எண்கணித மூலத்தை கணிப்பது என்பது பிரச்சினைகளை உருவாக்கும் என்றாலும், இந்த பிரச்சினை வரமால் இருக்க ஒரு நல்ல ஆரம்ப நிலை கணித்தல் மதிப்பு மூலம் இதை சரி செய்யலாம். இந்த முறையை பயன்படுத்தி மூன்று கால ஜோடிகள் மற்றும் முக்கிய ஆரம்ப மதிப்பு இவைகளை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் கிடைக்கப்பெறும் மூன்று வித்தியாசங்களின் மூலம் இரண்டவாது பெறுதல் அமைப்பின் நிலை கணிக்கப்படுகிறது. அதிகமான துல்லியம் என்பது இந்த மூன்று வித்தியாசங்களை கொண்டு கூடுதலான மூன்று தனிப்பட்ட கால ஜோடிகளுக்கு செயல்படுத்துவதன் மூலம் நிர்ணயிக்கலாம். இது தேவைப்படுவதை விட பல்வேறு முடிவுகளை கொண்ட ஒரு முறை ஆகும். இந்த வகையான முறைக்கு மதிப்பீடு என்பது லீஸடு ஸ்குயர்ஸ் என்பதன் மூலம் செய்யப்படுகிறது. இந்த லீச்டு ஸ்குயர் முறை பெறுதல் அமைப்பு 2 -ன் நிலையை அறிய உதவுகிறது. இந்த கவனிக்கப்பட்ட மூவகை வித்தியாசம் பெறுதல் அமைப்பின் 2 நிலைகளை சதுரங்களின் கூடுதல்களை குறைவாக வைத்து கணித்தல் என்ற நிர்ணயத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. + +நிலையை கணிக்க உதவும் கணித கணிப்பை கூறுவதற்கு முன்பு அதை பற்றிய தலைப்புக்கள் இங்கே விவாதிக்கப்படுகின்றன. ஜி.பி.எஸ் பற்றிய பெறுதல் அமைப்பை அறிவதற்கு முன்பு அதில் எழும் பிழைகள் ஒதுக்கப்பட வேண்டும். நான்கு செயற��கைக்கோள்களிலிருந்து வரும் செய்திகளை கொண்டு ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு செயற்கைக்கோள் நிலைகளையும் அதன் நேரத்தையும் நிர்ணயிக்கமுடியும். x, y மற்றும் z ஆகிய நிலை பற்றிய கோர்வைகள் மற்றும் நேரங்கள் ஆகியவைகள் formula_1 என கொள்ளப்படுகின்றன. இங்கே i என்பது செயற்கைகொளின் எண்ணிக்கையை குறிக்கும் காரணியாக உள்ளது. இது 1, 2, 3, or 4 என்ற மதிப்பை கொண்டிருக்கும் செய்தியானது கிடைக்கப்பெற்ற நேரத்தை கொண்டு அந்த நேரம் formula_31, என்பதானால் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு குறித்த பயணிக்கும் நேரமான formula_32 என்பதை காண உதவுகிறது. செய்தியானது ஒலியின் வேகத்தை கொண்டு பயணிக்கிறது அந்த வேகம் c என்று கொள்வோம். தூரமானது formula_2 என கொள்வோம். இது formula_3 செய்தியின் வேகம் என கணிக்கப்படுகிறது. ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பிலிருந்து செயற்கை கோளின் தூரத்தை கொண்டும், செயற்கை கோளின் நிலை ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பை உள்ளடக்கியதாக கொண்டும், செயற்கை கோளின் மத்தியில் ஒரு கோளத்தை கொண்டு அந்த பரப்பின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஆகையால் ஜி.பி.எஸ் குறித்த நிலை என்பது இந்த நான்கு கோளங்கள் வெட்டும் பகுதிகளின் அருகில் அல்லது இந்த நான்கும் பகுதிகள் வெட்டும் பகுதியில் உள்ளது அன்பதை நாம் அறிவோம். கொள்கையின் அடிப்படையில் பார்த்தால் எந்த பிழையும் இல்லாத பட்சத்தில் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு நான்கு கோளங்கள் வெட்டும் பகுதியில் இருக்கும். இரண்டு கோளங்கள் இந்த ஒரு வட்டத்தில் ஒரு புள்ளிக்கு மேல் சந்திக்கிறது என்று கொள்வோம் இங்கே ஒத்த இரு கோளங்களின் நடைமுறைக்கு ஒத்துவராத ஜி.பி.எஸ் பயன்பாடுகளை விலக்கி வைக்கிறோம். இரண்டு கோளங்கள் ஒரு வட்டத்தில் வெட்டுகிறது என கீழ் கொடுக்கப்பட்டது போல் கொள்வோம். இதை வாசிப்பவர் இந்த வெட்டும்பகுதிகளை கண்டு கொள்ள மற்றும் அதைப் பற்றி கருத்தாழம் கொள்ள உதவுகிறது. இந்த கோளங்களின் இரண்டு புள்ளிகளில் வெட்டும் பகுதிகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு புள்ளிகளுகிடையே உள்ள தூரம் வெட்டும் பகுதிகளின் வட்டத்தின் விட்டம் ஆகும். இதைப் பற்றி நீங்கள் முழுவதும் நம்பவில்லை எனில் இரண்டு கோளங்களின் வெட்டும் பகுதி பக்கவாட்டிலிருந்து எவ்வாறு உள்ளது என்பதை காண்போம். இந்த காணும் அமைப்பு நேரில் காணும் அமைப்பு போலவே இருக்கும். ஏனெனில் இந்த கோளங்கள் ஒத்த வடிவங்களை கொண்டுள்ளதால் இவ்வாறு அமைகிறது. கிடைமட்டமான பார்வை கூட முன்னர் பார்த்த உருவத்தை ஒத்து இருக்கும். இது வாசிப்பவருக்கு இரண்டு கோளங்களின் வெட்டும் பகுதிகள் ஒரு வட்டத்தில் சந்திக்கின்றன என்பதை தெளிவாக்க வேண்டும். குறிப்பு செய்தியான டிரைலேடரஷன், கணித ரீதியாக ஒரு வட்டத்திற்கு சமன்பாடு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை கூறுகிறது. ஒரு வட்டமும் ஒரு கோளமும் பொதுவாக பெரும்பாலான நேரங்களில் இரண்டு புள்ளிகளில் ஒன்றை ஒன்று சந்தித்து கொள்கின்றன. அவைகள் 0 அல்லது 1 புள்ளியில் சந்தித்து கொள்கின்றன என்பது அதன் உட்கருத்து ஆகும். இங்கே ஒரே தளத்தில் உள்ள நடைமுறைக்கு உதவாத ஜி.பி.எஸ் பயன்பாடுகளை மூன்று கோளங்களை ஒரே கோட்டில் உள்ள அவற்றின் மையங்களை காண்போம். மற்றொரு படமான வட்டத்தை வெட்டும் ஒரு கோளமான (டிஸ்க் அல்லாதவை) இரண்டு புள்ளிகளை காண்போம். இதை பற்றி புரிந்து கொள்ள கீழே உள்ள படம் உதவும். மீண்டும் டிரைலேடரஷன் இதை கணிதரீதியாக தெளிவாக விளக்குகிறது. சரியான நிலை என்பது நான்காவாது கோளத்திற்கு அருகே உள்ள பகுதி ஆகும். இங்கே கொடுக்கப்பட்டவைகள் ஜி.பி.எஸ் பற்றிய அடிப்படை கருத்துக்களை தெரிவிக்கின்றன. இவைகள் ஒரு சில பிழைகளை விலக்கிவிட்டு கொடுக்கப்பட்டுள்ளன. அடுத்ததாக பிழைகள் இருக்கும் பட்சத்தில் எவ்வாறு கையாள்வது என்று காண்போம். +இங்கே formula_35 என்பது கடிகாரப்பிழை அல்லது கொள்கைரீதியாக ஆரம்பத்தில் ஏற்படும் பிழை என்று கொள்வோம். ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு நான்கு தெரியாத கோர்வைகளை கொள்வோம். இவைகளுள் மூன்று கோர்வைகள் ஜி.பி.எஸ் நிலைப்பாடு பெறுதல் சம்பந்தமானைவை மற்றும் ஒன்று கொள்கை காரணமாக கடிகாரப்பிழையை வலியுறுத்தி முன்னே கொள்ளும் பிழை ஆகும். இந்தப் பிழை formula_36 என்பது ஆகும். கோளங்களின் சமன்பாடுகளை எவ்வாறு கொடுக்கப்படுகிறது என்றால் அவைகளாவன +formula_37, formula_38 +சூடோரேஞ்சுகள் என்பதன் மூலம் சமன்பாடுகளின் உபயோகமான பயன்பாடு எதுவென்றால் ஜி.பி.எஸ் பெறுதல் கடிகாரத்தின் கணிக்கப்பட்ட மதிப்புகளை கொண்டவை ஆகும். அவைகளாவன formula_39 பின்னர் சமன்பாடு எவ்வாறு ஆகிறது என்றால் + +formula_40. +இரண்டு மிகவும் முக்கியமான முறைகள் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் மூலம் நிலையை கணித்தல் மற்றும் கடிகாரப் பிழை எவை என்றால் ட்ரைலேட்ரசன் மற்றும் அதை த��டர்ந்து ஒரு பரிமாண வழி எண்கணித வர்க்க மூலம் காணுதல் மற்றும் பல பரிமாண வழி நியுடன்-ராப்சன் கணக்கீடுகள் ஆகும். இந்த இரு முறைகளின் பயன்பாடுகளையும் அவற்றின் முறைகளை பற்றியும் இங்கே விவாதிக்கப்படுகிறது. + + + + + +ஒரு நிலையை கணித்தல் என்பது பி(ஒய்) குறியீட்டு அலைகளைக் கொண்டு செய்வது என்பது பொதுவான கொள்கையை உடையதாக இருக்கிறது. அதாவது புரிந்துகொள்ள முடிகிறது என்ற அனுமானத்தின் அடிப்படையில் இந்தக் கருத்து கூறப்படுகிறது. என்கிரிப்சன் எனும் இயந்திர மொழிக்கு மாற்றுதல் பாதுகாப்பானதாகும். ஒரு குறியீட்டு அலை வெற்றிகரமாக புரிந்து கொள்ளப்படுமாயின், அதாவது அது ஜி.பி.எஸ் செயற்கைகோளால் அனுப்பப்பட்ட உண்மையான அலை என்று ஒரு அனுமானம் கொள்வோம். சிவில் பெறுதல் அமைப்புகள் மூலம் ஏமாற்றுகள் அதிகம் நடைபெறும் சாத்தியம் உள்ளதால் சரியாக முறையாகப்பட்ட சி/எ குறியீட்டு அலைகளை உடனடியாக குறியீட்டு அலைகளை உற்பத்தி செய்யும் ஒரு அமைப்பு மூலம் உருவாக்க முடியும். ரைம் வசதிகள் இந்த ஏமாற்றுதலில் இருந்து தப்பிப்பதற்கு ஒன்றும் செய்யவில்லை. ஏனெனில் ரைம் குறியீட்டு அலைகளை ஊடுருவதல் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கிறது. + +உபயோகிப்பாளர் வகை சமமான பிழைகள் (யு.ஈ.ஆர்.ஈ) இங்கே கொடுகப்பப்பட்டுள்ளன. எண்கணித பிழை கொடுக்கப்பட்ட மதிப்பீட்டுடன் உள்ளது. அதவாது formula_48 இதன் மதிப்பு கிட்டத்தட்ட ஒரு மீட்டர் ஆகும். பொதுவாக ஏற்படும் ஸ்டாண்டர்டு டீவீயஷன் எனும் வேறுபாடுகள், formula_49, என்பது பற்றி கடினமான சேகரிப்பு மற்றும் தெளிவான குறியீடுகள் இங்கே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டாண்டர்ட் டீவியேஷன் தனிப்பட்ட காரணிகளின் வர்கங்களின் வர்க்க மூலங்களை கொண்டு தீர்மானிக்கப்படுகின்றன. (ஐ.எ ஆர்.எச்.எச் என்ற வர்கங்களின் எண் மூலம் பெறுதல் அமைப்பின் ஸ்டாண்டர்ட் டீவீயேஷன் காண்பது என்பது இந்த வகை பிழைகள் சரியாக கொண்டு வரப்பட்ட தெளிவான மதிப்பு கோர்வைகளை கொண்டு எண்கணிதத்தோடு ஆர்.எஸ்.எஸ் படுத்தப்படுகிறது. எலெக்டிரானிக் வகை பிழைகள் என்பது சரியான மதிப்பீடுதலை அட்டவணைப்படி குறைக்கின்றன மொத்தமாக கருதும்போது தனிப்பட்ட சிவிலியன் ஜி.பி.எஸ் சமமான அமைப்பு நிலைகள் 15 மீட்டர் வரை துல்லியமாக உள்ளன. (50 அடி) இந்த விளைவுகள் மேலும் தெளிவான பி(ஒய்) குறியீட்டி��் தெளிவை குறிக்கின்றன. இருந்த போதிலும் தொழில் நுணுக்க முன்னேற்றம் காரணமாக ஜி.பி.எஸ் நிலைகள் வானத்திலிருந்து தெளிவான நிலையை கொண்டு வருகின்றன. இவைகள் சராசரியாக கிட்டத்தட்ட 5 மீட்டர் (16 அடி) துல்லியம் கொண்டுள்ளன. (அட்டவணை அருகே உள்ள "சோர்ஸ் ஆப எர்ரர்ஸ் இன் ஜி.பி.எஸ்" என்பதன் முடிவில் காண்க) + +உபயோகிப்பாளர் சமமான வகை பிழை என்பது (யு.ஈ.ஆர் .இ) ஒரு பகுதியின் செயற்கைகோளிலிருந்து பெறுதல் அமைப்புக்கு உள்ள தூரத்தின் ஸ்டாண்டர்ட் டீவியேஷனின் பிழை ஆகும். பெறுதல் அமைப்பின் ஸ்டாண்டர்ட் டீவியேஷனின் பிழையானது formula_50 எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் பி டாப் என்பதுடன் (நிலை துல்லியமாக நிர்ணயிக்கும் முறை) formula_49வைக் கொண்டு பெருக்கி உபயோகிப்பாளர் வகை சமான பிழைகளின் ஸ்டாண்டர்ட் டீவியேஷன் கணக்கிடப்படுகிறது. + +பி டாப் என்பது ஒரு உபயோகிப்பாளர் அமைப்பாக பெறுதல் மற்றும் செயற்கைக்கோள் ஆகியவைகளின் நிலைகளை உள்ளடக்கியதாக உள்ளது. ஒரு அலகு வெக்டர்களை பெறுதல் அமைப்பிலிருந்து செயற்கைகோளுக்கு உள்ளவைகளை கருதுக. இந்த யூனிட் வெக்டர்களை இணைப்பதன் மூலம் நமக்கு ஒரு டெட்ராஹெட்ரான் கிடைக்கிறது. பி டாப் என்பது எவ்வாறு உத்தேசிக்கபபடுகிறது என்றால் டெட்ரா ஹெட்ரான் கன அளவை பொறுத்து எதிர்மறையாக முடிவு செய்யப்படுகிறது. கூடுதலாக மேலும் விவரமான தவல்களை அதாவது பி டாப் என்பதை கணிப்பதற்கு இந்த பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியானது கணித அறிவியல் முறைப்படி பூமியின் வடிவங்களை பற்றிய தெளிவான கணிப்பு ஆகும் (டாப்) + +formula_49 என்பது எவ்வாறு கொடுக்கப்படுகிறது என்றால் +formula_53 = 6.7 மீட்டர்கள் சி/எ குறியீடுக்கு என வரையறுக்கப்படுகின்றன. ஸ்டாண்டர்ட் டீவியேஷன் எனும் பிழையானது கணிக்கப்பட்ட பெறுதல் அமைப்பின் நிலையானது formula_50, எவ்வாறு கொடுக்கப்படுகிறது என்றால் formula_55formula_56 ஆகியவைகளாக சி/எ குறியீடுக்கு கொடுக்கப்படுகின்றன. வலது பக்கம் கொடுக்கப்பட்ட பிழை வரைபடம் என்பதில் கொடுக்கப்பட்ட பெறுதல் அமைப்பின் நிலையாகும் அதாவது உண்மையான பெறுதல் அமைப்பின் நிலை ஆகும். இவைகள் நான்கு கோளப்பரப்புகளின் வெட்டுதல் பகுதி ஆகும். + +நிலை எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் தற்போதைய நேரம், செயற்கை கோளின் நிலை மற்றும் தீர்மானிக்கப்பட்ட பெறுதல் அமைப்பின் அலையின் காலப் பிழை ஆகியவைகளை கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. நிலை பற்றிய துல்லியம் என்பது செயற்கைகோளின் நிலை மற்றும் குறியீட்டு அலைகள் வருவதில் ஏற்படும் பிழை அகியவற்றைப் பொறுத்து அமைகிறது. + +இந்தக் கால அளவை அளக்க, பெறுதல் அமைப்பு செயற்கை கோளிலிருந்து பிட்டுகள் வரும் வரிசையை உள் சார்ந்த அமைப்பு மூலம் கணக்கிடுகிறது. இந்த பிட்டு வரிசைகளின் மேல் மற்றும் கீழே போகும் ஓரங்களை வைத்து நவீன மின்னணுவியல் மூலம் குறியீட்டு அலைகளின் ஏற்ற இறக்கங்களை ஒரு சதவிகித பிட் பல்ஸ் அகலத்திற்குள் formula_57 என கணக்கிடுகிறது அல்லது 10 நாநோ செகண்ட்ஸ் என சி.எ குறியீட்டு அலைக்கு கணக்கிடுகிறது. ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகள் ஒளியின் வேகத்தை ஒத்து பரவுவதால் இது பிழையை 3 மீட்டர் ஒத்து காண்பிக்கிறது. + +இந்த நிலை பகுதியின் கோர்வையை மேம்படுத்த முடியும். இது எவ்வாறு என்றால் 10 என்ற காரணியை கொண்டு, ஹையர்-சிப்ரேட் பி(ஒய்) குறியீட்டு அலைகளின் மூலம் முடியும். ஒரே மாதிரியான ஒரு சதவிகித பிட்டு பல்ஸ் அகல துல்லியத்தை கொண்டு உயர் அதிர்வெண் கொண்ட பி(ஒய்) குறியீட்டு அலைகள் formula_58 எனும் துல்லியத்தை வெளிப்படுத்துகின்றன அல்லது கிட்டதட்ட 30 சென்டிமீட்டர்களுக்கு துல்லியத்தை வெளிப்படுத்துகின்றன. + +வளிமண்டலத்தின் நிலையில்லா நிர்ணயங்கள் ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகளின் வேகத்தை பாதிக்கின்றன. ஏனெனில் அவைகள் பூமியின் வளிமண்டலம் வழியாக குறிப்பாக அயனாதிக்க வட்டம் வழியாக பயணிக்கின்றன. இந்தப் பிழைகளை திருத்துவதன் மூலம் ஜி.பி.எஸ்ஸின் துல்லியத்தை மேம்படுத்த முடியும். செயற்கைக்கோள் ஜி.பி.எஸ்சுக்கு சற்றே மேலாக இருக்கும் பட்சத்தில், பூமியானது வளிமண்டலத்தை தொடும் பகுதி அதவாது ஹரிஸான் அருகே இருக்கும் போதும் இந்த விளைவுகள் என்பது மிகச்சிறியதாக இருக்கும் (காற்று நிரப்பிய நிறைகளை பற்றி காண்க). பெறுதல் அமைப்பின் உத்தேசிக்கப்பட்ட இடம் தெரிந்தவுடன், ஒரு கணித வகை மாதிரி என்பது இந்த வகைப் பிழைகளை உத்தேசிக்கவும், இவைகளை சமன் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. + +அயனாதிக்க காலப்பிழை என்பது மைக்ரோ அலை குறியீட்டு அலைகளின் வேகத்தை அவற்றின் அதிர்வெண்களைப் பொறுத்து ஒளிச்சிதறல் எனும் பண்பு மூலம் இரண்டு அல்லது அதற்கு மேலான அதிர்வெண் ஒளிகற்றைகளின் கட்டமைப்பின் ம��லான கால அளவை குறைக்கின்றன. இந்த ஒளிகற்றைகள் கொண்ட கட்டமைப்பு மூலம் ஒளிச்சிதறலை கணக்கிட முடியும். இந்த அளவானது பின்னர் ஒவ்வொரு அதிர்வெண்ணிலும் ஏற்படும் காலப்பிழையை கணிக்க உதவுகிறது. சில ராணுவம் மற்றும் விலை மதிப்பு மிக்க சிவிலியன் பெறுதல் அமைப்புகள் பல்வேறு காலப் பிழைகளை L1 மற்றும் L2 அதிர்வெண்களில் வளிமண்டல ஒளிச்சிதறல் அளவை கணிக்கின்றன. பிழை திருத்தலில் மிகவும் சரியான தெளிவான சரி செய்தலையும் செய்கிறது. இது சிவிலியன் பெறுதல் அமைப்புகளில் பி(ஒய்) சமிக்ஞைகளை டிக்ரிபிசன் எனும் இயந்திர மொழியை புரிந்து கொள்ளுதல் நுட்பம் மூலம் அல்லாமல், இவைகள் எல்2 கடத்திகளின் மூலம் பரப்புகின்றன. அதாவது கடத்தி அலைகளை புதிதாக உருவாக்கப்பட்ட குறியீடு ஆக்கம் என்று இல்லாமல், கடத்தி அலைகளை தொடர்ந்து செலுத்துகின்றன. இதை குறைவான செலவு கொண்ட பெறுதல் அமைப்புகளில் வசதியாக செய்ய எல்2 மீது புதிய சிவிலியன் குறியீடு எனப்படும் எல்2ஸி பிளாக் ஐ.ஐ.ஆர்-எம் செயற்கை கோள்களோடு கூடுதல் செய்யப்பட்டுள்ளது. இது எல்1 மற்றும் எல்2 ஆகியவைகளின் நேரடி ஒப்பீடுகளை அளவீடு செய்கிறது. இது குறியீட்டு அலைகளின் உதவி கொண்டு செய்யப்படுகிறது. அதாவது கடத்தி அலைகளைக் கொண்டு செயல்படுவதை விட மேற்சொன்ன அலைகளின் மூலம் செய்யப்படுகிறது. (வளிமண்டல விளைவுகள் என்பதை "சோர்சஸ் ஆப் எரர்ஸ் இன் ஜி.பி.எஸ்" என்பதில் காண்க + +அயனாதிக்க விளைவுகள் என்பது மெதுவாகவே நடைபெறும் மாற்றமாகவே உள்ளது. இவை ஒரு குறிபிட்ட காலத்திற்கு பின்பு சராசரியாக்கப்படுகின்றன. எந்த ஒரு குறிப்பிட பூகோளப்பகுதிக்கும் இதன் விளைவுகள் எளிதில் கணக்கிடப்படலாம். அதாவது ஜி.பி.எஸ் மூலம் அளக்கப்பட்ட நிலையிலிருந்து தெரிந்த பகுதியில் உள்ள நிலைக்கு ஒப்பீடு செய்வதன் மூலம் இது எளிதாக செய்யப்படுகிறது. இந்தப் பிழை திருத்தம் என்பது மற்ற பெறுதல் அமைப்புகளுக்கும் ஒரு பொதுவான பகுதியில் உள்ளது. பல முறைகள் இந்த தகவல்களை ரேடியோ அலைகள் மூலமோ அல்லது மற்ற இணைப்புகள் மூலமோ செய்கின்றன. இதன் மூலம் எல்1 வகை பெறுதல் அமைப்புகள் அயனாதிக்க திருத்தங்களை மேற்கொள்ள உதவுகிறது. அயனாதிக்க தகவல்கள் என்பது செயற்கைக்கோள் மூலம் செயற்கைக்கோள் அடிப்படை கொண்ட பெருக்குதல் முறைகள் ஆன டபியு.எ.எ.எஸ் (வட அமெரிக்காமற்��ும் ஹவாய்), எக்நோஸ் (ஐரோப்பா மற்றும் ஆசியா) அல்லது எம் சாஸ் (ஜப்பான்), ஆகியவைகள் ஜி.பி.எஸ் அதிர்வெண்ணில் இவைகளை கடத்துகின்றன. அதவாது ஜி.பி.எஸ் அதிர்வெண் மூலம் ஒரு சிறப்பு சூடோ-ரேண்டம் சத்த வரிசைகளை கொண்டு (பி.ஆர்.என்) செய்யப்படுகிறது. அதவாது ஒரே ஒரு அலைபரப்பி மற்றும் பெறுதல் அமைப்புகள் தேவைப்படுகின்றன. + +ஈரப்பதமும் மாறுகின்ற காரணியை கொண்ட காலப்பிழைகளை உருவாக்குகின்றன. இதன் தாக்கமாக மற்ற பிழைகள் உருவாகுகின்றன. இதனால் அயனாதிக்க காலப்பிழையை போன்று இவைகள் ட்ரோபோ ஸ்பியரை உருவாக்குகின்றன. இந்த விளைவானது மிகவும் பகுதி சார்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவைகள் அயனாதிக்க விளைவுகளை விட மிகவும் விரைவாக செயல்படுகின்றன. இந்த வகைகள் மிகத் தெளிவான அளவுகளை கணிப்பதற்கும் மற்றும் ஈரப்பதம் சம்பந்தமான பிழைகளை சமன் செய்யவும் பயன்படுகின்றன. இவைகள் அயனாதிக்க விளைவுகளை விட கடினமானவை. + +பெறுதல் அமைப்பின் உயரத்தில் செய்யும் மாற்றங்களும் கால அளவில் ஏற்படும் பிழைகளை சரி செய்ய உதவுகின்றன. ஏனெனில் குறைந்த நிலை வளிமண்டலத்தின் மூலமாக குறியீட்டு அலைகள் உயர்ந்த நிலையில் உள்ள சாய்வுகளில் செல்வதன் மூலம் இவ்வாறு ஏற்படுகிறது. இந்த ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகள் இந்த உத்தேசமான உயரங்களை கணக்கிடுவதால் இந்த வகை பிழைகளை சரி செய்வது என்பது எளிதாகும். அதவாது ஒரு ரெக்ரசன் எனும் உபயோகி அமைப்பு மூலம் அல்லது வளிமண்டல பிழையினை சுற்றியுள்ள அழுத்தத்தோடு பேரோ மீட்ரிக் அல்டிமீட்டர் என்ற உபகரண உதவி கொண்டு சரி செய்யப்படுகிறது. + +ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகள் பல வழி பிரச்சினைகள் மூலம் பாதிக்கப்படுகின்றன. ரேடியோ குறியீட்டு அலைகள் சுற்றியுள்ளவைகளை வைத்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கட்டடங்கள், சுற்றியுள்ள சம நிலைகள், பள்ளத்தாக்கு சுவர்கள் மற்றும் கடின நிலங்கள் ஆகியவைகள் இந்த சுற்றியுள்ளயவைகள் பட்டியலில் அடங்கும். இதில் பல வகை தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளில் குறுகிய வளிமண்டல வழி உபகரணம் எனும் நேரோ கோரிலேடர் என்பது பலவழிப் பிழைகளை சரி செய்ய உதவுகிறது. இந்த மல்டி பாத் எனும் நீண்ட காலப்பிழை மூலம் பெறுதல் அமைப்பு ஆனது தவறான குறியீட்டு அலைகளை உணர்ந்து அவைகளை புறக்கணிக்கின்றன. தரை நிலையிலிருந்து வரும் குற���யீட்டு அலைகளின் பல வழி மூலம் வரும் அலைகளின் குறுகிய காலப்பிழையை பற்றி குறிப்பிட வேண்டுமாயின், இவைகளை சிறப்பு வகை அலைபரப்பிகளை (ஈ.ஜி சோக் மோதிர வகை அலைபரப்பி) உபயோகப்படுத்தி குறியீட்டு அலைகளின் பெறுதல் அமைப்பின் மூலம் பெறும் திறனிலிருந்து அந்த திறனின் அளவை குறைக்கலாம். குறுகிய காலப்பிழை கொண்ட பிரதிபலிப்புகள் இவைகளை தனித்து பிரித்து எடுப்பது என்பது கடினமானது. ஏனெனில் இவைகள் உண்மையான குறியீட்டு அலைகளோடு தொடர்பு கொண்டு தனித்து பிரித்து எடுக்க முடியாத அளவுக்கு வழக்கமான மாற்றங்களை வளிமண்டல காலப் பிழையை கொண்ட விளைவுகளை ஏற்படுத்துகின்றன. + +பல் வழி விளைவுகள் வாகனங்களை செலுத்துவதற்கு அதிக தீவிரமாக பயன்படுவதில்லை. ஜி.பி.எஸ் அலைபரப்பி செல்லும்போது பிரதிபலிக்கப்பட்ட குறியீட்டு அலைகள் மூலம் தவறான முடிவுகள் கிடைக்கின்றன. இவைகள் வேகமாக சுருங்குவதற்குப் பயன்படுகின்றன. நேரடி குறியீட்டு அலைகள் மட்டுமே நிலையான தீர்வுகளை தர முடியும். + +எபிமெரிஸ் தகவல்கள் ஒவ்வொரு 30 வினாடிக்கு ஒரு முறை புதுபிக்கப்படுகின்றன. தகவல்கள் அதிகபட்சமாக இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக கிடைத்த பழைய தகவல்களாகவே இருக்க முடியும். டி.டி.எப்.எப் எனும் வேகமான நேரத்தைக் கொண்டு முதல் நிலையை உறுதி செய்யபடுவேண்டுமாயின் ஒரு தகுதியான எபிமெரிசை பெறுதல் அமைப்புக்கு மாற்று செய்ய வேண்டும். இதற்கு கூடுதலாக நேரத்தை நிர்ணயிப்பது மட்டும் அல்லாமல் கூடுதலாக இட நிலை என்பதை 10 வினாடிக்கு உள்ளாக நிர்ணயிக்க முடியும். இந்த வகை எபிமெரிஸ் தகவல்களை இணைய தளத்தில் இட்டு அவற்றிலிருந்து கைபேசி வகை ஜி.பி.எஸ் உபகரணங்களுக்கு மாற்றுவது என்பது சாத்தியமே. மேலும் அசிஸ்டெட் ஜி.பி.எஸ் என்பதை பற்றியும் காண்க + +செயற்கைகோளின் அணு கடிகாரங்கள் சத்தங்களை மட்டும் கடிகார மேல் மற்றும் கீழ் ஏற்ற இறக்க வகை பிழைகளை ஏற்கிறது. ஊடுருவல் செய்தியானது இந்த வகை பிழைகளுக்கு திருத்தங்களைக் கொண்டுள்ளது. இந்த வகை மதிப்பீடுகளின் துல்லியம் அணு கடிகாரங்களின் துல்லியத்தை ஒத்து இருக்கின்றன. இருந்த போதிலும் இவைகள் அவற்றை கண்காணித்தலை பொறுத்து உள்ளன. இவைகள் கடிகாரத்தின் தற்போதைய நிலையைக் குறிக்காமல் இருக்கலாம் + +இந்தப் பிரச்சினைகள் மிகச் சிறிய பிரச்சினையாகவே உள்ளன. ஒரு சில மீட்டர்கள் தூரம் வரை இந்த பிரச்சினைகள் போக முடியும். + +மிகவும் தெளிவான நிலை காணுதல்களான ஈ.ஜி. ஜியோடெசி எனும் மண்ணியல் சார் அறிவியல் படிப்பு. இந்த விளைவுகள் வகைபடுத்தப்பட்ட ஜி.பி.எஸ் மூலம் விலக்கப்படுகின்றன. இரண்டு அல்லது அதற்கு மேலான பெறுதல் அமைப்புகளை பல ஆய்வு புள்ளிகளில் வைப்பதன் மூலம் இவ்வாறு செய்யலாம். 1990 ஆம் ஆண்டுகளில் பெறுதல் அமைப்புகள் அதிக விலை மதிப்பாக இருந்த பொது "குவாசி வகைபடுதப்பட்ட ஜி.பி.எஸ்கள் " உருவாக்கப்பட்டன. இவைகள் "ஒரே ஒரு" பெறுதல் அமைப்பை மட்டும் உபயோகப்படுத்துகின்றன. ஆனால் அளவிடும் புள்ளிகளைக் கொண்டு ஆக்கிரமித்து கொள்கின்றன. டி.யு வீட்னாவில் இந்த முறைக்கு " குயு ஜி.பி.எஸ் " என பெயர் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு செயல்படுத்தியதற்கு பின் தேவையானவைகளை செய்ய மென்பொருள் உருவாக்கப்பட்டது. + +டோப்பை பற்றி கணிப்பதற்கு முன் பெறுதல் அமைப்பிலிருந்து வரும் யூனிட் வெக்டரை செயற்கைகோளில் பெறுவதாகக் கொள்க. இவைகள் i பகுதிகளை கொண்டுள்ளன. + +ஒவ்வொரு எ-யின் முதன் மூன்று உள்ளார்ந்தவைகள் செயற்கைகோளில் இருந்து பெறுதல் அமைப்புக்கு உள்ள ஒரு யூனிட் வேக்டரின் காரணிகளாகும். நான்காவது செங்குத்து வரிசையில் உள்ள c என்பது ஒளியின் வேகத்தை குறிக்கிறது.. Q எனும் அணியை, கொள்க + +இந்தக் கணக்கீடு ஆனது "செக்சன் 1.4.2 -ல் உள்ள செயற்கைக்கோள் நிலைபாடுகளுக்கான கொள்கைகள்" ஆகும். இதில் எடையிடப்பட்ட அணியாக பி கொள்ளப்படுகிறது. இது ஒரு அழகு அணியாக வரையறுக்கப்படுகிறது. + +இந்த கு அணியின் உள்ளடங்குவைகளாக எவைகள் உள்ளன என்று பார்த்தால் + +கீரக் எழுது formula_67 என்பது எங்கே நாம் d -யை உபயோகிக்கிறோமோ அங்கு பயன்படுத்தப்படுகிறது. இருந்த போதிலும் க்யு அணிகள் மாறுபாடுகளையும், அதனுடன் உள்ள சார்ந்த உடன் மாறுபாடு கோர்வைகளையும் குறிக்கவில்லை. ஏனெனில் இவைகள் ஒரு சில சந்தர்ப்பங்களை வைத்தும் மட்டும் புள்ளியியலால் விவரிக்கப்படுகின்றன. இவைகள் மண்ணியியல் சார் அறிவியலின் குறிப்பீடுகளை கொண்டுள்ளன. ஆகவே d என்பது இந்த கணித்தல் குறித்த துல்லியத்தை குறிக்க உதவுகிறது. பிடோப், டிடோப் மற்றும் ஜிடோப் ஆகியவைகள் எவ்வாறு கொடுக்கப்படுகின்றன என்றால் + +கிடைமட்ட வழி நுணுக்க முறைப்படி formula_71 என்பது ஆகும். மற்றபடி செங்குத்து வழி நுணுக்க ம��றைப்படி formula_72 என்பது ஆகும். இந்த இரண்டு மதிப்புகளும் இதை பயன்படுத்தும் தளத்தை பற்றி அமையும். கிடைமட்ட தளத்தை மற்றும் செங்குத்து தளத்தை குறிக்க x,y மற்றும் z என்ற நிலைகளை வடகிழக்கு மற்றும் அதன் கீழ் உள்ள தளத்தை உபயோகப்படுத்த வேண்டும் அல்லது தெற்கு, கிழக்கு, மேல் தள முறைகளை உபயோகப்படுத்த வேண்டும். + +ஜியோமெட்ரி சார் சமன்பாடுகளை கொண்டுவருவதற்கு அதற்கான கோர்வைகளை முந்தைய பகுதிகளில் பார்த்தோம். இந்தப் பகுதி இந்த சமன்பாடுகளை கொண்டுவருவதற்கான விளக்கத்தை கொடுக்கிறது. இந்த முறையானது "உலகசார் நிலைபாடு முறை (ஒரு நீரோட்டம்) பார்கின்சன்மற்றும் ஸ்பைகர் ஆகியோரால் எழுதப்பட்டது). + +நிலை சார் வேக்டரான பிழை வேக்டரை formula_73 என கொள்க. நான்கு கோளங்களின் வெட்டுதலின் சூடோ வகை எண்களின் தாக்கமாக பெறுதல் அமைப்பின் உண்மையான நிலையை பொறுத்து இது formula_74 வரையறுக்கப்படுகிறது. formula_75 என்பதில் தடிமனாக உள்ளவைகள் வெக்டர்களை குறிக்கின்றன. இது x,y மற்றும் z அச்சின் வழி வரையறுக்கப்படுகிறது. formula_76 என்பது காலப்பிழை என கொள்க, அதாவது உண்மையான நேரம் என்பதில் இருந்து பெறுதல் அமைப்பு குறித்த நேரத்தை கழித்தலாகும் formula_73 என்பதன் மற்றும் formula_76 ஆகியவைகளின் சராசரி மதிப்பு பூஜ்யம் ஆகும். + +இதில் formula_80 என்பது சூடொரேஞ் வகை பிழைகள் ஆகும். இவைகள் 1 லிருந்து 4 வரை மதிப்பை கொள்கின்றன. பெறுதல் அமைப்பு, செயற்கைக்கோள், மற்றும் பெறுதல் கடிகார பிழைகள் ஆகியவைகள் சூடோ ரேஞ் வகை எனக் கொண்டு இந்த சமன்பாடுகளை ஒரே தளத்தில் அமையுமாறு செய்யப்படுகிறது. இதை இந்த இணைப்பு மூலம் காண்க. http://en.wikipedia.org/wiki/Global_Positioning_System#multi_nr . +இருபுறமும் formula_81 என்பதால் பெருக்குக + +இருபுறம் தலைகீழாக மாற்றுக + +சமன்பாடு இரண்டினை அதன் பிறகு அந்த அணியை இருபுறமும் சமன்பாடு 3 -ஆல் பெருக்குக. + +இருபுறமும் எதிர்பார்க்கப்பட்ட மதிப்புகளை கருத்திற்கொண்டு, சமச்சீர் அல்லாத ஒரு வரிசை அமைப்பை கொள்ளாத இந்த அணியை எதிபார்த்த கணித மதிப்பிற்கு வெளியே எடுக்க + +சூடோரேஞ் பிழைகள் ஆனது தொடர்பற்றவை இவைகள் ஒரே மாதிரியான மாறிலி மதிப்பை கொண்டு மாறுகின்றன. கோவேரியன்ஸ் எனும் அணியோடு வரும் ஒத்த தொடர்புடைய மாறிலி மதிப்பு என்பதை வலது பக்கம் ஒரு அலகு அணியை போன்று எவ்வளவு மடங்காக உள்ளது என்பதாக வரையறுக்கப்படுகிறது. ஆகையால் + +குறிப்��ு : formula_88 என்பதால் formula_89 + +சமன்பாடு 7 என்பதில் இருந்து குறித்த பெறுதல் அமைப்பின் தொடர்புடைய மாறிலி மதிப்புமற்றும் நேரம் யாதெனின். + +மீதியுள்ள நிலை மற்றும் காலப்பிழை தொடர்புடைய மாறிலி மதிப்பு என்பது மாறுவது நேரடியாக உள்ளது. + +ஜி.பி.எஸ் குறியீடு அலைகள் ஒரு இயங்கா தன்மையை கொண்டுள்ளன. (தற்பொழுது இயங்காதன்மை). அந்த தன்மையை செலேக்டிவ் அவையலபிலிட்டி (எஸ்.எ) என்று கூறுகிறோம். அதவாது செயற்கைமுறையில் காலப் பிழைகளை கிட்டத்தட்ட 100 மீட்டர் வரை (328 அடி) ஊடுருவல் அலைகளுக்கு பொதுவாக கிடைக்குமாறு செய்து உருவாக்குகிறது. +இது சிவிலியன் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகளை உபயோகப்படுத்தி நுணுக்கமாக ஆயுத உபகரணங்களை உபயோகம் செய்வதை தடுப்பதற்க்காக இவ்வாறு செய்யப்படுகிறது. + +எஸ்.எ பிழைகள் என்பது சூடோராண்டம் வகையை சேர்ந்தது ஆகும். இது பாதுகாப்பு நெறிமுறை மூலம் ஒரு வகைபடுதப்பட்ட சீடு வழி மூலம் செய்யப்படுகிறது. இது அதிகாரம் பெற்ற உபயோகிப்பாளர்களால் மட்டுமே செய்யபட முடியும் (அமெரிக்க ராணுவம், அதன் துணை படைகள், மற்றும் பிற உபயோகிப்பாளர்கள், பெரும்பாலும் அரசாங்கம்). இவர்கள் ஒரு சிறப்பு ராணுவ ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகளை பெற்றிருப்பார்கள். பெறுதல் அமைப்பை மட்டும் பெற்றிருப்பது போதுமானதாக கருதப்படமுடியாது. இவைகளை மிகவும் நன்றாக கட்டுபடுத்தக்கூடிய ஒரு டெய்லி கீ எனும் ஒரு கட்டுப்பாடு அமைப்பு தேவைப்படுகிறது. + +இது மாற்றப்படுவதற்கு முன்பு 2000 ஆம் ஆண்டு மே 1 ஆம் தேதி அன்று நடைமுறையில் ஏற்படும் எஸ்.எ பிழைகள் 10 மீட்டர்கள் (32 அடிகள்) கிடைமட்டத்திலும், 30 மீட்டர் (98 அடிகள்) வரை செங்குத்தாக இருந்தன. ஆகையால் எஸ்.எ விளைவுகள் ஒவ்வொரு பெறுதல் அமைப்பை கொடுக்கப்பட்ட ஒரு பரப்பில் சமமாக பாதிக்கிறது. ஒரு நிலையான அமைப்பு மூலம் தெளிவாகத் தெரிந்த எஸ்.எ பிழை மதிப்புகள் அளவிடப்படுகிறது. இவைகள் அந்த வட்டார ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகளோடு கடத்தல் செய்து அதன் மூலம் நிலைகளை உறுதி செய்யலாம். இது வகைப்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ் அல்லது டி.ஜி.பி.எஸ் என அழைக்கப்படுகிறது. டி.ஜி.பி.எஸ் என்பது ஜி.பி.எஸ் சம்பந்தப்பட்ட முக்கியமான பிழைகளை சரி செய்கிறது. முக்கியமாக அயனாதிக்க பிழை என்பதை சரி செய்ய உதவுகிறது. எனவே இந்த எஸ்.எ அமைப்பு வேறு திசைக்கு மாற்றப்பட்ட போதிலு��் பரவலாக உபயோகப்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிய முடிகிறது. இந்த எஸ்.எ-வின் திறம்பட செயல்படாத தன்மை பரவலாக கிடைக்கும் டி.ஜி.பி.எஸ் என்பதை பொறுத்து ஒரு உட்கட்ட அமைப்பாக எஸ்.எ வேறு திசையில் பயணிப்பதற்கு உதவுகிறது. இதைப் பற்றி அமெரிக்க ஜனாதிபதியான கிளிண்டனால் 2000 ஆம் ஆண்டு ஆணை வெளியிடப்பட்டது. + +மற்றொரு தடை ஜி.பி.எஸ் இல் உள்ளது எதுவென்றால் ராணுவம் இல்லாத சிவில் மக்களுக்கு L2 மற்றும் L5 வகை சமிக்ஞைகளை மறுப்பதாகும். இது பி-குறியீடு உருவாக்கத்தை ஏற்படுகிறது. இதன் மூலம் எதிரி இதை போன்று உருவாக்கத்தை தருவித்து கடத்தல் உபகரணங்கள் மூலம் தவறான தகவல்களை அனுப்ப முடியாது. சில சிவிலியன் பெறுதல் அமைப்புகள் பி குறியீடுகளை எப்பொழுதும் உபயோகப்படுத்தியதில்லை. தெளிவு என்பது பொதுவாக உள்ள சி.எ குறியீட்டுடன் ஒத்து பெறக்கூடியது என்பது உண்மையில் எதிர்பார்த்ததை விட (குறிப்பாக டி.ஜி.பி.எஸ்) நன்றாக உள்ளது. ஆகையால் ஆன்டிஸ்புப் எனும் L2மற்றும் L5 குறியீட்டு அலைகளை பெரும்பாலும் சிவிலியன் பெறுதல் அமைப்புகள் பெறாமல் இருப்பது என்பது குறைவான தாக்கத்தையே கொண்டுள்ளது. இந்த ஆன்டிஸ்புப் என்பதை நிறுத்துவதன் மூலம் அறிவியல் அறிஞர்களையும் மற்றும் கண்காணிப்பளார்களுக்கும் பயன் ஏற்படுத்தும். ஏனெனில் இவர்களுக்கு அதிகமாக சரியான நிலைகள் தேவைப்படுகிறது. டெக்டானிக் தட்டின் இயக்கத்தை காண்பது போன்ற ஆய்வுகள் இவைகள் ஆகும். + +டி.ஜி.பி.எஸ் சேவைகள் அரசாங்கரீதியாகவும் மற்றும் வர்த்தகரீதியாகவும் கிடைக்கிறது. வர்த்தகரீதியாக கிடைப்பவைகள் எவைகள் எனில் டபியுஎஎஎஸ் அமெரிக்க கடல் சார் எல்.எப்பின் கடல் ஊடுருவல் குறியீடுகளின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு ஆகியவைகள் ஆகும். இந்த பிழைதிருத்தலின் துல்லியமானது உபயோகிப்பாளர் டி.ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு இவைகளுக்கிடையே உள்ள தூரத்தைப் பொறுத்தது ஆகும். இந்த தூரம் அதிகமானால் பிழைகள் இந்த இரண்டு இடங்களில் தொடர்பை ஏற்படுத்தாது. இதனால் குறைவான தெளிவான வகைபாட்டு திருத்தங்களே ஏற்படும். + +1990–91 ஆம் ஆண்டுகளில் அரபு நாடுகள் மீது நடந்த போரில் , ராணுவ ஜி.பி.எஸ் தட்டுபாடு காரணமாக பல ராணுவ குழுக்கள் உடனடியாக கிடைக்கும் சிவிலியன் யூனிட்டுகளை தங்களது குடும்பத்தாரிடம் இருந்து பெற்றனர் இது அமெரிக்காவி��் மொத்த ராணுவமும் போர்க்களத்தில் ஜி.பி.எஸ் பயன்பாட்டை கொள்வதற்கு தடையை ஏற்படுத்தியது. எனவே எஸ்.எ-வை போரின் போது உபயோகப்படுத்துவதை தடை செய்வது என்ற முடிவுக்கு வந்தது. + +1990 ஆம் ஆண்டுகளில் எப்.எ.எ எனும் அமைப்பு ராணுவத்தை எஸ்.எ-வை முழுவதுமாக உபயோகப்படுத்துவதை தடை செய்ய அதிகமாக வற்புறுத்தியது. இது எப்.எ.எ-வுக்கு மில்லியன் கணக்கில் ஒவ்வொரு வருடமும் டாலர்களை சேமிக்க உதவும். அதாவது அவர்களின் ரேடியோ ஊடுருவல் முறையை நடைமுறைபடுத்தி செல்வதற்கு உதவும். பிழையின் அளவு என்னவென்று பார்த்தல் "பூஜியத்திற்கு செயல்படுத்துக" என்பதாகும் இது 2000 ஆம் ஆண்டு மே 1 அன்று அமெரிக்க ஜனாதிபதியான பில் கிளிண்டன் அறிவிப்பு செய்த பின்பு கொண்டு வரப்பட்டதாகும். அதாவது இதன் மூலம் உபயோகிப்பாளர் L1 குறியீட்டு அலைகளை பிழையில்லாமல் பெறமுடியும். இதன்படி எஸ்.எ-வின் தாக்க பிழை என்பது எந்த ஒரு பிழையையும் பப்ளிக் எனப்படும் பொதுக் குறியீட்டு அலைகளுடன் கூட்டு செய்வது ஆகும். கிளிண்டனின் இந்த மேலான ஆணையின் படி 2006 ஆம் ஆண்டில் எஸ்.எ-க்கள் பூஜியம் என ஆரம்பிக்கப்பட்டது. இது 2000 ஆம் ஆண்டு முறைப்படுத்தப்பட்டது. அதாவது அமெரிக்க ராணுவம் ஒரு புதிய முறையை வடிவைத்த பிறகு இவ்வாறு செய்யப்பட்டது. இந்த புது முறையானது ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகளை எதிரிகளின் முகாம்களுக்கு இக்கட்டான கால கட்டங்களில் ஒரு குறிபிட்ட இடங்களுக்கு அலை குறியீடுகளை கொடுக்கும் தன்மையை மறுக்கின்றன (மற்றும் மற்ற ஊடுருவல் சேவைகளும் அடங்கும்). இவைகள் உலகத்தின் பிற பகுதிகளை பாதிக்காமல் செய்யப்படுகிறது. அமெரிக்க ராணுவம் உட்சார்ந்து இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. + +செலெக்டிவ் அவையபிலிட்டி L2மற்றும் L5 குறியீட்டு அலைகளை சிவிலியன் பெறுதல் அமைப்புகளுக்கு தர மறுத்தல் முறையானதே ஆகும். இந்த முறையினால் ஜி.பி.எஸ்ஸின் செயல்பாடு மிகச்சிறந்த முறையில் உள்ளது . இந்த கருத்தின்படி இந்த முறையில் உள்ள பிழையானது கொள்கையாக இருந்த போதிலும் மீண்டும் எந்த நேரத்திலும் நடைமுறைக்கு கொண்டுவர முடியும். நடைமுறையில் பார்க்கப்போயின் ஆபத்துகளையும் விலைகளையும் கருத்திற் கொண்டு இது அமெரிக்காவை ஊக்குவிக்கும் நடைமுறையாக உள்ளது. அமெரிக்காவிலும், அமெரிக்க அரசாங்கத்திலும், அரசாங்க நிர்வாகத்திடம��ம், மற்றும் வெளிநாடு கடற் சார் பயணங்களுக்கும் மேற் சொன்ன இந்த முறை மீண்டும் நடைமுறையில் வரப்போவதில்லை. எப.எ.எ-விலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படாது. + +ஒரு சிறப்பான பக்க விளைவு செல்க்டிவே அவைலபிளிட்டி மூலம் கிடைப்பது எவை என்றால் ஜி.பி.எஸ் அதிர்வெண்களை பிழை திருத்தல் செய்வது ஆகும். ஜி.பி.எஸ் மற்றும் காசியம் ரூபிடியம் அணு கடிகாரங்கள் கிட்டத்தட்ட 2 × 10 என்ற தெளிவைத் தருகின்றன (ஐந்து டிரில்லியன்களில் ஒன்று ஆகும்). இது கடிகாரங்களின் மேம்பட தெளிவை பற்றிய குறித்த முன்னேற்றத்தை உணர்த்தியது + +2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 19 அன்று அமெரிக்க பாதுகாப்புதுறை எதிர்கால ஜி.பி.எஸ் III செயற்கைகோள்கள் எஸ்.எ-வை செயல்படுத்தும் திறன் இல்லாதைவகளாக இருக்கும் என்றும் இதன்படி இந்த கொள்கையை நிரந்தரமாக்க வேண்டியிருக்கும் என்றும் உரைத்தது. + +பல வகையான பிழைகள் ரிலேடிவிட்டி கொள்கை விளைவுகளின் காரணமாக ஏற்படுகிறது. எடுத்துகாட்டாக, ரிலேடிவிட்டி நேரம் என்பது "குறைவாகிறது" . எதனால் என்றால் செயற்கை கோளின் வேகம் என்பது 10 என்பதில் ஒரு பாகம் ஆகும். புவிஈர்ப்பு நேரம் அதிகமாதல் என்பது செயற்கைக்கோள் 5 பாகங்களாக 10 என்பதில் அதிக மடங்காக பூமியின் மீது வைக்கப்பட்ட கடிகாரத்தை விட "வேகத்துடன் " செயல்படுகிறது. சாக்னக் விளைவு என்பது பூமியின் பெறுதல் அமைப்பின் சுற்றுதல் காரணமாக ஏற்படுகிறது. இந்த தலைப்புக்கள் கீழே ஒரு நேரத்தில் ஒவ்வொன்றாக ஆய்வு செய்யப்படுகின்றன. + +ரிலேடிவிட்டி கொள்கைப்படி கடிகாரங்களின் மாறாத இயக்கம் ஆனது அதாவது அதன் இயக்கம் பூமியின் மையப்பகுதியை பொறுத்து வைக்கப்பட்டுள்ள சுற்றாத ஒரு ஆரம்ப இயக்க குறிப்பு அடுக்குகளின் உயரத்தை பொறுத்து அமைகிறது. செயற்கைகோள்களில் வைக்கப்பட்டுள்ள கோள்கள் ஆனது அவைகளின் வேகத்தை பொறுத்து பாதிக்கப்படுகின்றன. இந்த சிறப்பு ரிலேடிவிட்டி கொள்கை இந்த அணு கடிகாரங்கள் ஜி.பி.எஸ் சுற்று வேகத்தில் போகுமானால் இவைகள் மெதுவாக செல்லும் என்பதை குறிக்கிறது. இவைகள் நிலையாக உள்ள பூமியில் வைக்கப்பட்டுள்ள கடிகாரங்களை விட 7.2 μs என ஒரு நாளைக்கு மெதுவாக செல்லும் + +ஜி.பி.எஸ் செயற்கை கோள்களுக்கு, பொதுவான தொடர்பு என்பது அணு கடிகாரங்களை ஜி.பி.எஸ் சுற்று உயரத்தில் சற்று விரைவாக அமையும் கால நிர்ணயித்தைக் குறிப்பது. அதாவது 45.9 மைக்ரோசெகண்டுகளில் (μs) என ஒரு நாளைக்கு அமைவதாக இருக்கும், ஏனெனில் இவைகள் பூமியின் மீதுள்ள அணு கடிகாரங்களை விட உயர்வான புவிஈர்ப்பு விசையை கொண்டுள்ளதாக இருக்கும். + +கலவை செய்வதன் மூலம் பிழை என்பது ஒரு நாளைக்கு 38 மைக்ரோசெகண்டுகளுக்கு வருகிறது. இந்த வேறுபாடு என்பது 4.465 பாகங்களாக 10 என்பதாக வரையறுக்கப்படுகிறது. இந்த பிழையை கணக்கில் கொள்வதற்கு அதிர்வெண் வீதம் ஆனது ஒவ்வொரு செயற்கைகோளுக்கும் ஏவுவதற்கு முன்பாக சமன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் விருப்பப்படும் அதிர்வெண்ணுக்கு சற்றே குறைவாக அமையுமாறு பூமியில் ஓடுமாறு செய்து குறிப்பாக 10.22999999543 MHz என்பதாக அமையுமாறு 10.23 MHz என்பதில்லமால் செய்யப்படுகிறது. அணு கடிகாரங்களை செயற்கை முறையில் ஈன்ஸ்டினின் பொது விளைவை சோதனை செய்தல் என்பது ப்ரைடுவார்ட் விண்டேர்பெர்க் என்பவரால் தொடங்கப்பட்டது. + +ஜி.பி.எஸ் பற்றிய கண்காணிப்பு அளவுகள் என்பது சாக்னக் விளைவை மாற்று செய்ய வேண்டும். ஜி.பி.எஸ் கால அளவு என்பது ஒரு இயக்க முறையாக செயல்படுத்தப்படுகிறது ஆனால் இதை படிய கண்காணிப்புகள் பூமி மையமான, பூமியில் பொருத்தப்பட்ட (உடன் சுற்றும் ஒரு அமைப்பை கொண்டு) ஒரு முறை மூலம் செய்யப்படுகிறது (உடன் சுற்றும் ஒரு அமைப்பு). இந்த உள் சுற்றும் அமைப்பு முறையில், ஒத்தவைகள் எனும் பண்பு ஒரே மாதிரியாக விளக்கப்படவில்லை ஒரு லோரன்ஸ் மாறுபாடு என்பது இயக்க முறையிலிருந்து ஈ.சி.ஈ.எப் முறைக்கு மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. முடிவான குறியீட்டு அலைகள் பிழை திருத்தம் செயற்கைகோளின் எதிர்மறையான கணிதக்குறியீடுகளை கொண்டு கிழக்கு மற்றும் மேற்கு வானவெளி ஹெமி ஸ்பியர்களில் செய்யப்படுகிறது. இந்த விளைவை புறக்கணித்தால் இதன் மூலம் கிழக்கு மேற்கு பிழை ஏற்படுகிறது. இது 100 மற்றும் அதற்கும் மேற்பட்ட நானோ செகண்டுகள் என்றும் கால அளவில் கணிக்கப்படுகிறது. அல்லது நிலை பத்தின் மடங்காக கணக்கிடப்படுகிறது. [125] + +ஜி.பி.எஸ் குறிப்பு அலைகள் சமமான பெறுதல் அமைப்புகளில் வலுவிழந்து உள்ளது. இயற்கை ரேடியோ குறிப்பு அலைகள் அல்லது ஜி.பி.எஸ் குறிப்பு அலைகளின் சிதறல் என்பது பெறுதல் அமைப்பை குறைந்த அளவு திறன் உடையதாக ஆக்குகிறது. இதன் மூலம் குறிப்பு அலைகளைப் பெறுதல் மற்றும் செயற்கைக்கோள் குறிப்ப�� அலைகளை தொடர்ந்து போகுதல் என்பது கடினமாக அல்லது இயலாத காரியமாக உள்ளது. + +வளிமண்டல தட்பவெப்பநிலை சாய்வு ஜி.பி.எஸ் இயக்கம் என்பது இரண்டு வழிகளில் ஏற்படுகிறது. சூரியனின் ரேடியோ வெடிப்புகள் மூலம் ஏற்படும் சத்த வெடிப்புகள் உள்ள ஒத்த அதிர்வெண்ணில் உள்ள ஒளிகற்றை மூலமும் மற்றும் ஜி.பி.எஸ் ரேடியோ அலைகளை கொண்ட அயனாதிக்க ஒழுங்கின்மை என கருதப்படும் ஒளிர்தல் எனும் முறை மூலமும் நடைபெறுகின்றன. இந்த இரண்டு வகையான பரிதபமானவைகளும் 11 வருடங்கள் சூரிய வட்டத்தை சார்கின்றன. மேலும் அதிகப்படியான செறிவான காந்தப்புலத்தை கொண்ட சூரியப்புள்ளிகளை கொண்டுள்ளன. இவைகள் எந்த நேரத்திலும் ஏற்படலாம். சோலார் ரேடியோ வெடிப்புகள் என்பது சோலார் ப்ளேர்கள் என்ற சூரியனின் வளிமண்டலத்தில் வெடிப்புகளை ஏற்படுத்துபவைகளோடு சம்பந்தமானது ஆகும். ஒளி வெளியிடுதல் என்ற நிலை பெரும்பாலும் ஈரப்பதமான உயரத்தில் நடைபெறுகிறது. அதாவது இது ஒரு இரவு நேர நிகழ்ச்சி ஆகும். இவைகள் குறைவாகவே உயர்ந்த உயரத்தில் அல்லது மத்திய உயரத்தில் நடைபெறுகிறது. காந்தபுலமானது ஒளி வெளியிடுதல் என்ற தன்மையை அடைகிறது . இந்த ஒளி வெளியிடுதல்களை தவிர காந்தப்புலங்கள் வலுவான அயனாதிக்க சாய்வுகளை வெளிப்படுத்துகின்றன. + +தன்னிச்சையாக இயங்கும் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகள் உலோகதன்மையை கொண்டுள்ளன. டிப்ராஸ்டார் அல்லது கார் கதவுகளுக்கான சுருள்கள் ஆகியவைகள் பாரடே கூண்டாக செயல்படுகின்றன. அதவாது பெறுதல் செயல் காரின் உள்ளே நடைபெறுமாறு செய்கின்றன. + +மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஈ.எம்.ஐ (மின்காந்த தொடர்புகள்) கூட நெருக்குதலை ஏற்படுத்தும் அல்லது ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகளில் தடங்கல்களை ஏற்படுத்த முடியும். நன்றாக தகவல்களை அடுக்கி கொடுக்கப்பட்ட ஒரு தகவல் சேகரிப்பு புத்தகத்தில் உள்ள தகவலின்படி கலிபோர்னியாவில் உள்ள மோஸ் லாண்டிங்கில் உள்ள முழு துறைமுகம் ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகளை பெற முடியவில்லை. ஏனெனில் தவறாக தகவல்களை மாற்றும் அலை பெருக்கியால் இவ்வாறு செய்யப்பட்டது. பொதுவாக பார்ப்பின் வலிமையான் குறியீட்டு அலைகள் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகளுடன் அதை சுற்றி தொடர்பு கொள்கின்றன. இவைகள் எப்பொழுது ரேடியோ குறியீட்டு அலை வகைகளுக்குள் உள்ளதோ அல்லது பார்வைக்கு படும்படியாக உள்ளதோ அப்பொழுது இது நடக்கின்றது. 2002 -ஆம் ஆண்டு இதைப் பற்றிய விரிவான விவரிப்பு என்பது பற்றியும் எவ்வாறு குறுகிய வகை ஜி.பி.எஸ் எல்1 சி/எ நெருக்குதல் அமைப்பு உருவாக்கப்படுவது பற்றியும் இணைய தள பத்திரிகையான பிரேக் மூலம் விவரிக்கப்பட்டது. + +அமெரிக்க அரசாங்கம் நம்புவது என்னவென்றால் நெருக்குதல் அமைப்புகள் எப்பொழுதாவது 2001 ஆம் ஆண்டு பயன்படுத்தியிருக்கலாம். அதவாது ஆப்கானிஸ்தான் போரின் போது பயன்படுத்தியிருக்கிறது. அமெரிக்க ராணுவம் 6 ஜி.பி.எஸ் நெருக்குதல்களை ஈராக் போரின் போது அழித்திருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதில் ஜி.பி.எஸ் வழி நடத்தி செல்லும் ஒரு அணுகுண்டை கொண்ட நெருக்குதல் அமைப்பும் அடங்கும். இந்த மேற் சொன்ன நெருக்குதல் அமைப்பு எளிதில் இடம் சார்ந்து கண்டுபிடிக்கவும் ரேடியோ அலை ஊடுருவல் எனும் ரேடியேஷனுக்கு எதிரான ஏவுகணைகளை அழிக்கவும் பயன்படுகிறது. அமெரிக்க பாதுகாப்புத்துறை ஒரு நெருக்குதல் முறையை இங்கிலாந்தின் மேற்கு பகுதியில் சோதித்துள்ளது. இது 2007 -ஆம் ஆண்டு ஜூன் 7மற்றும் 8 தேதிகளில் நடைபெற்றது. + +பல நாடுகள் ஜி.பி.எஸ் ரிபீடர் எனும் ஒரு அமைப்பினை கொண்ட ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் மூலம் ரேடியோ குறியீட்டு அலைகளை உள் அரங்கங்களிலும் மற்றும் மறைமுகமான இடங்களிலும் பயன்படுத்துகிறார்கள். இவைகளின் பயன்பாடு கட்டுபடுதப்பட்டுள்ளது ஏனெனில் குறியீட்டு அலைகளின் தொடர்புகள் மற்ற ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகளோடும் தொடர்பு கொண்டு, அதன் மூலம் தகவல்களை ஜி.பி.எஸ் செயற்கைகோள்களில் இருந்தும் மற்றும் ரிபீடர் எனும் அமைப்பு மூலமும் பெறுகின்றன. + +இந்த தொடர்பினை பற்றி விவரிக்க இயற்கை மற்றும் செயற்கையான மனிதனால் உருவாக்கப்பட்ட சத்தங்கள் மூலம் பல வகையான நுட்பங்களை கொண்டு விவரிக்க முடியும். முதலில் ஜி.பி.எஸ்ஸை ஒரே ஒரு ஆதாரமாகக் கருதி அதை மட்டுமே நம்பி இருக்கக்கூடாது. ஜான் ரூலியை பொருத்தமட்டும் "ஐ.எப்.ஆர் விமானிகள் ஜி.பி.எஸ் தகவல்கள் தவறாக செயல்படும் பட்சத்தில் அதை சரிசெய்து கொள்ளும் திறன் உடையர்வகளாக தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கொண்டு இருக்க வேண்டும். பெறுதல் அமைப்பின் சுயேட்சையான ஒரு சார் கண்காணித்தல் (ரைம்) எனும் வசதி மூலம் இப்பொழுது ஒரு சில பெறுதல் அமைப்புகளின் மூலம் நெருக்குதல் அல���லது அது போன்ற பிரச்சினைகளை உபயோகிப்பாளர் பெறக்கூடின் அவர்களுக்கு முன்னரே எச்சரிக்கை விடுவதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் பாதுகாப்பு துறையில் மேம்பட்ட முனேற்றத் தொழில்நுட்பம் கொண்ட பெறுதல் அமைப்பை செலுத்தியுள்ளது. இது தேவைப்படும் போது கிடைக்கும் தன்மையை பொறுத்து செயல்படும் / ஏமாற்று வேலைகளுக்கு எதிரான (எஸ்.எ.எ.எஸ்.எம்) பாதுகாப்பு துறையில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்ப சார் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு ஆகும். விளக்க வீடியோ காட்சிகளில் டி.எ.ஜி.ஆர் என்பது நெருக்குதலை காணவும் மற்றும் இதன் ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகளின் இயந்திர மொழியின் மீது எப்பொழுது இந்த தொடர்புகளின் பொது சிவிலியன் பெறுதல் அமைப்புகள் பாதுகாப்பை இழக்கிறதோ அவற்றின் மீது பாதுகாப்பை ஏற்படுத்தப் பயன்படுகிறது. + +தெளிவுதன்மையை மேம்படுத்தலுக்கு பெருக்கல் முறை என்பது வெளியே உள்ள தகவல்களை ஒருமித்த கணிக்கும் முறைக்கு ஒன்று சேர்ப்பதாகும். இதற்கு பல முறைகள் உள்ளன. இவைகள் பொதுவாக பெயர் கொடுக்கப்படுகின்றன அல்லது விவரிக்கப்படுகின்றன. இது ஜி.பி.எஸ் சென்சார் எவ்வாறு தகவல்களை பெறுகின்றன என்பதை பொறுத்தது ஆகும். பல முறைகள் கூடுதல் தகவல்கள் அனுப்புகின்றன. இவைகள் பிழைகளின் மூலங்களை பற்றி கூறுகின்றன. (கடிகார வகை மேல்மற்றும் கீழ் போகுதல் நிலை, எபிமெரிஸ், அல்லது அயனாதிக்கம் மூலம் நேரப்பிழை ஆகியவைகள் ஆகும்). மற்றவைகள் நேரடியான அளவீடுகளை கூறுகின்றன. எவ்வளவு அலைகள் கடந்த காலத்தில் அழிக்கப்பட்டன என்பதைக் கூறுகின்றன. மூன்றாவது குழு கூடுதலான ஊடுருவல் அல்லது சாதன தகவல்களைக் கணிக்கும் முறையோடு ஒருமிக்கப்படுகின்றன என்பதை கூறுகின்றன. + +பெருக்குதல் முறைக்கு எடுத்துகாட்டாக பரந்த முறை பெறுதல் முறை, மற்றும் வேறுபாடு ஜி.பி.எஸ் மற்றும் இயக்க ஊடுருவல் முறை மற்றும் அசிஸ்டெட் ஜி.பி.எஸ் ஆகியவைகளை கூறலாம். + +கணக்கீடுதலின் மிகச் சரியான தன்மையை எவ்வாறு சரி செய்ய முடியும் என்றால் ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகளை சரியாக கண்காணித்தலும் மற்றும் தற்போதைய ஜி.பி.எஸ்ஸின் கூடுதலான குறியீட்டு அலைகளை அளவிடுவதும ஆகும் அல்லது மாற்று வழிகளில் வந்த ஜி.பி.எஸ் குறியீட்டு அலைகளை அளவிடுவதாகும். + +எஸ்.எ என்பதை சரி செய்த பின்பு மிகப் பெரிய பிழை ஜி.பி.எஸ்ஸில் எதுவென்றால் அயனாதிக்கம் மூலம் கணிக்க முடியாத நேரம் ஆகும். வளிமண்டல மூல ஒலி பரப்பப்படுதல் அயனாதிக்க மாதிரி காரணிகள் மூலம் நடக்கின்றன. ஆனால் பிழைகள் இருக்கின்றன. இதனால் ஜி.பி.எஸ் வளிமண்டலம் வழி செய்தல் என்பது இரு அதிர்வெண்களான எல்1 மற்றும் எல்2 ஆகியவைகளை பொறுத்து அமைகின்றன. அயனாதிக்க பின் தங்குதல் என்பது ஒரு வரையறுக்கப்பட்ட அதிர்வெண்ணை கொண்ட உபயோகப்படுத்தல் முறை ஆகும். பாதை மூலம் இதன் மொத்த மின்னேற்றிகளின் உள்ளடக்கம் (டி.இ.சி) என்பது அலைகளின் அதிர்வெண்களின் வரும் நேரங்களின் வேறுபாடுகளை அளவிட்டு, டி.இ.சி என்பதை கணக்கிட்டு அதன் மூலம் சரியான அயனாதிக்க நேரம் பின் தங்குதலை ஒவ்வொரு அதிர்வெண்ணிலும் கணக்கிடுவதாகும். + +பெறுதல் அமைப்புகள் மறுகுறியாக்க சாவிகளை பெற்றிபின் பி(ஒய்) குறியீட்டை எல்1 எல்2 என இருபுறமும் அதிர்வெண்களில் செலுத்தி தகவல்களை பண்பிறக்கி எனும் இயந்திர மொழி மாற்றுதலை செய்ய முடியும். இருந்த போதிலும் இந்த திறப்பு சாவிகள் ராணுவம் மற்றும் அதிகாரம் பெற்ற அமைப்புகளுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகின்றன. இது பொது மக்களுக்கு கிடையாது. திறப்பு சாவிகள் இல்லமல் இந்த "குறியீட்டு இல்லா" முறையானது பி(ஓய) குறியீடுகளை L1மற்றும் L2 ஆகியவைகளில் செலுத்தி அதிகமான பிழை தகவல்களை பெறமுடியும். இருந்த போதிலும் இந்த தொழில்நுட்பம் மெதுவாக உள்ளது. எனவே இது சிறப்பான ஆய்தலுக்கு மட்டும் என இதன் எல்லை வரையறுக்கப்படுகிறது. வரும் காலங்களில் கூடுதலான சிவிலியன் குறியீடுகள் இந்த L2 L5 அதிர்வெண்கள் மூலம் செலுத்தப்பட உள்ளன என்று எதிர்பார்க்கப்படுகிறது. (ஜி.பி.எஸ் நவீனப்படுத்தல், என்பதை கீழே காண்க). அதன் பிறகு எல்லா உபயோகிப்பாளர்களும் இருமுறை அதிர்வூட்டல் எனும் இந்த டூயல்-ப்ரிகன்சி முறைப்படி அளவுகளை அளக்க முடியும் மற்றும் நேரடியாக அயனாதிக்க மூலம் வரும் தாமத பிழைகளை கணிக்க முடியும். + +தெளிவான முறையில் கண்காணிப்பதில் இரண்டாவாது முறை எது என்றால் கடத்தியின் வீரியத்தை மேம்படுத்தல் (சி.பி.ஜி.பி.எஸ்) ஆகும். இந்தப் பிழை ஏன் வருகிறது என்றால் பி.ஆர்.என் எனும் இந்த பல்ஸ் மாற்றம் உடனுக்குடன் ஏற்படுவது அல்ல. ஆதலால் கோர்வையானது (செயற்கைக்கோள்-பெறுதல் அமைப்பு இவற்றிக்கிடையே உள்ள ஒத்த வரிசை) பெறக்கூடிய முறை சரியானதாக இல்லை. சி.பி.கிப்.பி.எஸ் முறை எல்1 என்ற தூக்கி செல்லும் கடத்தி அலையின் கால அளவு சி/எ பிட் கால அளவில் ஓர் ஆயிரம் பிட் கால அளவு ஆகும். இது கூடுதலான கடிகாரம் வகை குறிப்பு அலைகள் ஆகும். இது நிச்சயமற்ற தன்மையை தீர்வு காண உதவுகிறது. பேஸ் வேறுபாடு பிழை என்பது சாதாரன முறை ஜி.பி.எஸ்படி 2-லிருந்து 3-மீட்டர் வரை உள்ள தெளிவுதன்மை ஆகும். (6 முதல் 10 அடி) சி.பி.ஜி.பி.எஸ் என்பதன் மூலம் வேலை செய்தல் என்ற 1 % சரியான பரிமாற்றம் மூலம், இந்த பிழையை 3 சென்டி மீட்டர் (1 இன்ச்) தெளிவுதன்மையை அடைய முடிகிறது. இந்த பிழையை நீக்குவதன் மூலம் சி.பி.ஜி.பி.எஸ் என்ற இந்த பிழையை டி.ஜி.பி.எஸ் என்ற தொழில் நுட்பத்துடன் சேர்ப்பதன் மூலம் 20 முதல் 30 வரை (8 முதல் 12 இன்சுகள் வரை) சரியான தெளிவுதன்மையை காண முடிகிறது. + +சார்பு கினிமடிக் நிலை காணுதல் முறை (ஆர்.கே.பி) என்பது மற்றொரு முறை ஆகும். இது தெளிவான ஜி.பி.எஸ் அடிப்படையில் உள்ள ஜி.பி. நிலைபாட்டு முறை ஆகும். இதன் மூலம் இந்த வகைக் குறியீட்டு அலைகளின் மூலம் உறுதியாக தீர்வு செய்யக்கூடியது என தன்மையை தெளிவுதன்மையை 10 சென்டி மீட்டர் (4 இன்) மூலம் கருதப்படுகிறது. பெறுதல் அமைப்பின் மூலம் அனுப்பிய மற்றும் பெறப்பட்ட செய்திகளின் சுழற்சி வட்டங்களின் எண்ணிக்கையை தீர்வு செய்வதன் மூலம் காண்பது ஆகும். இந்த முறையை வகைப்படுத்தப்பட்ட ஜி.பி.எஸ் (டி.ஜி.பி.எஸ்) சரிசெய்தல் முறை, ஜி.பி.எஸ் சமிக்ஞை வீரியத் தகவல்களை ஊடுருவச் செய்தல் மற்றும் நிச்சயமற்ற தகவல்களின் அடிப்படையில், புள்ளியியல் முறைப்படி தீர்வு காணும் முறை (நடைமுறை கினிமடிக் பொசிசனிங் முறை, ஆர.டி.கே) ஆகியவைகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. + +எல்லா கடிகாரங்களும் உலக ஒத்த நேரம் (யு.டி.சி) எனும் முறைக்கு ஒருமுகப்படுதப்பட்டுள்ளன. செயற்கைகோள்களில் உள்ள அணு கடிகாரங்கள் ஜி.பி.எஸ் நேரத்திற்கு ஒத்து போகுமாறு வைக்கப்பட்டுள்ளது. வேறுபாடு என்னவென்றால் ஜி.பி.எஸ் நேரம் என்பது பூமியின் சுழற்சியின் நேரத்தை ஒத்து சரி செய்யப்படுவதில்லை. ஆகையால் இது லீப் செகண்ட்ஸ் அல்லது வேறு வகையான பிழை திருத்தல்கள் போன்ற வழக்கமாக யு.டி.சியோடு உள்ளவைகள் இல்லாததே காரணம் ஆகும். ஜி.பி.எஸ் முறையானது ஒத்த உலக நேரம் எனும் (யு.டி.சி) முறையோடு 1980-ஆம் ஆண்டு ஒத்துப்போகுமாறு செய்யப்பட்டது. ஆனால் இன்று வரை அது மாற்றம் நிறைந்தாகவே உள்ளது. பிழை திருத்தலில் பிழை என்றால் அது ஜி.பி.எஸ் நேரம் நாடுகளுக்கிடையே பின்பற்றப்படும் அணு நேரம் என்பதோடு ஒரு மாறிலியாக ஆப்செட் ஆக உள்ளது என்பதாகும் (டாய்) (டாய்-ஜி.பி.எஸ்=19 செகண்டுகள்) வழக்கமான கணக்கிடுதல் என்பது வைக்கப்பட்ட கடிகாரத்தில் கணிக்கப்படுகிறது. இது ரிலேடிவிச்டிக் விளைவுகளை சரி செய்ய உதவுகிறது. இது கீழ் நிலை கடிகாரங்களோடு ஒருமுகப்படுதப்படுகின்றன. + +ஜி.பி.எஸ் ஊடுருவல் செய்தி என்பது ஜி.பி.எஸ் நேரம் மற்று யு.டி.சி நேரம் இவற்றின் வேறுபாடு ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இது 2009 –ஆம் ஆண்டின்படி 15 செகண்டுகள் ஆகும். இது எதனால் என்றால் யு.டி.சியுடன் லீப் செகண்டு 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 என்ற தேதியுடன் கூட்டப்பட்டுள்ளது. பெறுதல் அமைப்பு இந்த ஆப்செட்டை ஜி.பி.எஸ் நேரத்திலிருந்து கழித்து யு.டி.சி மற்றும் குறிபிட்ட பகுதிகளின் மதிப்பை கணக்கிட உதவுகின்றது. இந்த ஜி.பி.எஸ் யூனிட்டுகள் என்பது சரியான யு.டி.சி நேரத்தை யு.டி.சி ஆப்செட் செய்தியை பெறுதலை தொடர்ந்து சரியான நேரத்தை காட்டாமல் இருக்கலாம் ஜி.பி.எஸ்-யு.டி.சி ஆப்செட் பகுதி என்பது 255 லீப் செகண்டுகளை (எட்டு பிட்டுகள்) தன்னுள் கொள்ளும். இது பூமியன் சுழற்சி வீதத்தை ஒட்டி சரியாக இருக்க வேண்டும். (ஒரு லீப் செகண்டு என்பது கிட்டத்தட்ட 18 மாதம் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 2300 வருடம் வரை இந்த லீப் செகண்டுக்கும் வருடத்துக்கும் உள்ள தொடர்பு தொடர வேண்டும். + +வருட, மாத மற்றும் நாள் என்ற கிரகோரியன் காலண்டரை ஒட்டி என்பதற்கு மாறாக ஜி.பி.எஸ் நாள் என்பது ஒரு வார எண் ஆக காட்டப்படுகிறது மற்றும் டே-ஆப்-வீக் எண் ஆக மாற்றப்படுகிறது. வார எண் என்பது 10 இலக்க பிட்டு எண்ணாக சி.எ.மற்றும் பி(ஒய்) ஊடுருவல் செய்திகளில் மாற்றப்படுகின்றன. ஆகையால் இது 0 ஆக ஒவ்வொரு 1024 வாரங்களுக்கும் மாற்றப்படுகின்றன (19.6 வருடம்) ஜி.பி.எஸ் வாரம் என்பது 00:00:00 UTC (00:00:19 TAI) 1980 –ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. வார எண் என்பது சீரோவாக முதன் முதலில் 23:59:47 UTC என 1999 –ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி வருகிறது. (00:00:19 TAI என்று ஆகஸ்டு 22,1999 -ல் ஆகிறது)சரியான க்ரோகோரியன் தேதியை கணக்கிட ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பு சரியான செய்தியை பெற்று ஜி.பி.எஸ் தேதி சார் குறிப்பு அலைகளாக மாற்றப்படுகின்றன. இதைப் பற்றி சொல்லவேண்டுமாயின�� ஜி.பி.எஸ் அமைப்பு 13 பிட்டுகளை கொண்டு ஊடுருவல் செய்தியை பரப்ப உதவுகிறது. + +முழு இயக்க தன்மையை இது அடைந்துவிட்டது இருந்த போதிலும் தொழில்நுட்ப விரிவாக்கம் காரணமாக இது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. + +இந்த திட்டம் மிக நுணுக்கமான தெளிவோடும் மற்றும் எல்லா வகை உபயோகிப்பவர்களிடையே பயன்படுத்தவும் ஒரு கட்டுபாடு தொகுப்பை பயன்படுத்துகிறது (ஜி.பி.எஸ் ஒ.சி.எக்ஸ்). புதிய தாழ்நிலை அமைப்புகள், புதிய செயற்கைகோள்கள், மற்றும் கூடுதலான ஊடுருவல் அலைகள் ஆகியவற்றை இவை கொண்டுள்ளன. புதிய குறிப்பீட்டு அலைகள் எல்2சி , எல்5 and எல1ஸி ; புதிய ராணுவ கோடு ஆனது எம்-கோடு ஆகும். "ஆரம்ப இயக்க தன்மை" (ஐ.ஒ.சி) எல்2சி கோடின் மூலம் என்பது 2008 – ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்படுகிறது. +2013 –ஆம் ஆண்டு இலக்கு என்று இந்த திட்டத்திற்கு குறிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தக்காரர்களுக்கு ஊக்குவிக்கும் தொகைகள் அவர்கள் 2011 ஆம் ஆண்டை ஒட்டி இந்த திட்டத்தை முடிக்கும் பட்சத்தில் அளிக்கப்படுகின்றன. (பார்க்க ஜி.பி.எஸ் சிக்னல்கள்) + +உலக நிலை சார் முறை என்பது ஒரு ராணுவ சம்பந்த திட்டம் ஆகும். இது "டூயல் யூஸ்" எனும் இரு வகை நுணுக்கங்களை கொண்டுள்ளது. இவைகள் ராணுவம் மற்றும் பொதுமக்களிடையே பயன்படுத்தப்படுகிறது. + +ஜி.பி.எஸ்ஸின் பயன்பாடுகள் ராணுவ பயன்பாட்டில் அதிகம் உள்ளன. + +பல பொதுமக்கள் சார்பிலான பயன்பாடுகள் ஜி.பி.எஸ் குறியீடு அலைகள் மூலம் பயன் பெறுகின்றன. இவைகள் ஒன்று அல்லது மூன்றிக்கும் மேற்பட்ட ஜி.பி.எஸ் அடிப்படை காரணிகளான சரியான இடம், சார்பு இயக்கம் மற்றும் நேர பரிவர்த்தனை ஆகியவைகளை சார்ந்துள்ளது + +பெறுதல் அமைப்பின் சரியான நிலையை கண்டிபிடிக்கும் திறன் என்பது ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகளை ஒரு ஆய்வு செய்யும் திறனான உதவி உபகரணமாக ஆக்குகிறது அல்லது ஊடுருவலுக்கு உதவும் ஒரு உபகரணமாக உள்ளது. சார்பு இயக்கத்தை கண்டுபிடிக்கும் திறன் என்பது பெறுதல் அமைப்பை அதன் திசைவேகம் மற்றும் அதன் தோற்றம், ஆகியவைகளை கண்டுபிடிக்க உதவுகின்றன. இவைகள் பூமியின் கண்காணிப்புகள் மற்றும் பாத்திரங்களில் உதவுகின்றன. முக்கிய பரிவர்த்தனையின் போதும் மற்றும் கண்காணித்தலின் போதும் கடிகாரங்களை ஒருமுகப்படுத்தல் என்பதன் மூலம் சரியான தரத்தை அடைந்து அவைகள் மூலம் நேர பரிவர்���்தனை என்பதை சரியாக கடை பிடிக்க முடிகிறது. எடுத்துகாட்டாக சி.டி.எம்.எ எனும் டிஜிடல் செல்லுலர் ஒவ்வொரு அடிப்படை அமைப்பு என்பது ஜி.பி.எஸ் நேர பெறுதல் அமைப்பை கொண்டு ஒருமுகபடுத்தலை அவற்றின் பரவும் ஜி.பி.எஸ் குறிப்புகள் மூலம் மற்ற அமைப்புகளுக்குப் பரப்புகிறது. இது செல்களுக்கிடையே உள்ள இன்டர்-செல்-ஹான்ட்-ஆப் எனும் தகவல் பரிவர்த்தனை மற்றும் அவசர அழைப்புகளுக்காகவும் மற்ற பயன்பாடுகளுக்க்காகவும் பயன்படும் உயர் வகை ஹைபிரிட் ஜி.பி.எஸ்/சி.டி.எம்.எ எனும் கைபேசிகளின் மூலம் நிலை காணுதலுக்கும் உதவுகிறது. +முடிவாக ஜி.பி.எஸ் ஆய்வாளர்களுக்கு பூமியை சூழ்ந்துள்ள வளிமண்டலம், அயனாதிக்கம் மற்றும் ஈர்ப்பு புலம் ஆகியவைகளை பற்றி தீவிரமாக அறிய உதவுகிறது. ஜி.பி.எஸ் பொது ஆய்வுப்படி ஆய்வு சாதனங்கள் டெக்டானிக்ஸ் என்ற மண்ணியல் சார்ந்த படிப்பில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இது எவ்வாறு என்றால் பூமி அதிர்வின் போது ஏற்படும் மடிப்பின் இயக்கத்தை நேரடியாக அளவிட்டு இவ்வாறு செய்துள்ளது. + +அமெரிக்க அரசாங்கம் ஒரு சில சிவிலியன் வகை பெறுதல் அமைப்புகளை ஏற்றுமதி செய்வதை கட்டுப்பாடு செய்கின்றது. எல்லா வகையான ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புகளும் 18 கே.எம்க்கு (60,000 அடி) மேல் உயரத்தில் செயல்படும் திறம் .மற்றும் 515 எம்/எஸ் (1000 நாட்டுகள்) ஆகியவைகளை கொண்டுள்ளன . இவைகள் எம்யுனிசன்ஸ் (ஆயதங்கள்) என அழைக்கப்படுகின்றது. இவைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் ஏற்றுமதி அங்கீகாரம் தேவைப்படுகின்றது. இந்த காரணிகள் தேர்தெடுக்கப்பட்டது எதற்கு என்றால் பெறுதல் அமைப்பின் உபயோகத்தை உபரிபாதையில் சுற்றும் விமானரகங்களிடையே தடுப்பது ஆகும். இது சுற்றுலா வகை விமான ரகங்களில் பயன்படுத்துவதற்கு தடை செய்யாது. ஏனெனில் இந்த வகை விமானங்களில் இவைகளின் உயரங்கள் மற்றும் வேகமானது சாதரணமான விமானங்களை ஒத்து உள்ளது. + +இந்த விதியானது பொதுமக்கள் சார் யூனிட்கள் என அழைக்கப்படும் சிவிலியன் யூனிட்களில் கூட பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் எல்1 அதிர்வு மற்றும் சி/எ குறிப்புகளை கொண்டுள்ளது. மற்றும் எஸ்.எ ஆகியவற்றை சரி செய்ய முடியாது. + +இந்த இயக்கத்தை எல்லைகளுக்கு மேல் செயலாக்கம் இல்லமால் ஆக்குவது என்பது பெறுதல் அமைப்பை முனிடன் என்ற வகையை சார்ந்துள்ளதாக ஆக்குகிறது. ப��வேறு தரப்பு வர்த்தகர்கள் இதை இந்த வரையறுப்புகளை வித்தியாசமாக கவனிக்கிறார்கள் இந்த விதிப்படி 18 கி.எம் உயரத்திற்கும் மேலும் மற்றும் 515 எம்/எஸ் வேகத்தோடும் செயல்படுகிறது. ஆனால் பல பெறுதல் அமைப்புகள் 18 கி.எம் உயரத்திற்கு மேல் நிலையாக இருக்கும்போது கூட இயங்குவதை நிறுத்துகிறது. இது பொழுதுபோக்கிற்காக விடும் ராட்சஸ பலூன்களின் ஏவல்களில் பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. அதவாவது இந்த பலூன்கள் 100,000 உயரத்தை அடையும் போது (30 கே.எம்) இந்த பிரச்சினையை சந்தித்தது + +ஜி.பி.எஸ் டூர்ஸ் ஆகியவை பொதுமக்கள் பயன்படுத்துவனவற்றில் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். ஜி.பி.எஸ் எந்த வகையான உள்ளடக்கத்தை காட்டுவது என்பதை தீர்மானிக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக ஒரு நினைவகத்தை நெருங்கும் போது அது நினைவகத்தை பற்றி சொல்லும். + +ஜி.பி.எஸ் வகை செயல்பாடு இப்பொழுது கை பேசிகளில் எல்லா வகையிலும் வரத் தொடங்கியுள்ளது. ஜி.பி.எஸ் அமைப்பை உள்ளடக்கிய கைபேசி அமைப்பு 1990 – ஆம் ஆண்டுகளில் பிந்தைய பகுதியில் வந்தது. இவைகள் வாடிக்கையாளர்களுக்கு நெக்ஸ்டெல், ஸ்பிரின்ட்,மற்றும் வெரிசன் ஆகியவைகள் வைத்திருந்த ஒருங்கிணைத்த இணைப்பு மூலம் கிடைத்தது. இவைகள் யு.எஸ் எப்.சி.சி விதித்திருந்த விதிகளுக்கு உட்பட்டு கைபேசி அமைப்பு நிலையை அவசரமான அழைப்புகளின் போது செய்தது. வேறொரு மூன்றாம் வகை மென்பொருளை கொண்டு இந்த வகை நுணக்க அமைப்புகளுள் ஊடுருவது என்பது மெதுவாகவே நடந்தது. நெக்ஸ்டெல் எனும் மென்பொருள் இந்த வகையான எபிஐ-க்களை ஊடுருவி முதன் முதலில் செய்தது. பின்னர் ஸ்பிரின்ட் 2006 –ஆம் ஆண்டில் வந்தது. பின்னர் வெரிசன் அதற்கு பிறகு வந்தது. + +இரண்டு அறிஞர்கள் ஜி.பி.எஸ் சம்பந்தமான விஷயத்தில் சார்ல்ஸ் சடார்க்கின் நேஷனல் அகாடமி விருதினை 2003 –ஆம் ஆண்டிற்கான விருதாகப் பெற்றார்கள். + + +ஜி.பி.எஸ் வளர்ச்சிக்கு காரணமான ரோஜெர்.எல்.ஈஸ்டன் என்பவர் நேஷனல் மெடல் ஆப டெக்னாலஜி எனும் விருதை 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி வெள்ளை மாளிகையில் பெற்றார். + +1993 ஆம் ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதியன்று தேசிய விமானப்படை அமைப்பு ஆனது உலக நிலை சார் அமைப்பை 1992 –ஆம் ஆண்டின் வெற்றி பெற்றவர்களாக அறிவித்து ராபெர்ட்.ஜெ.கோலியர் என்பவருக்கு விருதை தந்தது. இது ஒரு சிறப்பு மிக்க விருதாக அமெரிக்காவில் கருதப���படுகிறது. இந்த குழுவானது கடல் சார் ஆய்வு பரிசோதனை மையம் யு.எஸ்.ஏர் போர்ஸ் ஏரோஸ்பேஷ் கார்ப்பரேஷன் ராக்வெல் இன்டர்நேஷனல் ஐ.பி.எம் பெடெரல் சிஸ்டம்ஸ் கம்பெனி ஆகியோர்களை கொண்டதாகும். இதை பற்றி குறிப்பிட வேண்டுமாயின் ஜி.பி.எஸ் குழுவினை இந்த அமைப்பு டிராபி விருது போன்றவைகள் மூலம் கௌரவித்து செயல்படுகிறது. இந்த விருது வளிமண்டலம் மற்றும் அவைசார்ந்த ஏவுகணைகள், சாதனங்கள் ஆகியவைகளை கண்காணித்து குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காகவும், பாதுகாப்பான திறம்பட ஊடுருவல் செய்தலுக்கும் வழங்கப்படுகிறது. இது 50 வருடங்களாக இந்தப் பணிக்காக வழங்கப்பட்டது. + +வழக்கத்தில் உள்ள மற்ற வகை செயற்கை கோள்கள் முறைகள் அல்லது முன்னேற்றத்தின் பாதையில் உள்ள பல்வேறு நிலைகள் + + +இந்த பகுதியானது பொசிசன் கால்குலேஷன் அட்வான்சிடு என்பதில் உள்ள இரண்டாவாவது முறையில் பயன்படுத்தும் சமன்பாடுகளை பற்றி விரிவாக விவாதிக்கிறது. + +ஒரே வரிசை சமன்பாடுகள் சரியான பகுதி வரையறுப்புகள், மற்றும் அது படிப்படியாக எவ்வாறு வரையறுக்கப்படுகின்றது என்பதை பொறுத்து அவைகள் முழுமையாக கொடுக்கப்படுகின்றன. என்ற இடத்தில் அதே முறை விவாதிக்கப்படுகிறது ஆனால் சமன்பாடுகள் கொடுக்கப்படுவதில்லை. formula_93 ஆகியவை ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்பின் நேரத்தை பொறுத்த உண்மையான சார்பு மதிப்புகள் என கொள்வோம். formula_35 என்பது தெரியாத பிழை மதிப்பு அல்லது சோதனைகள் மூலம் இல்லாது அனுமானிக்கப்பட்ட கருத்து காரணமாக பெறுதல் கடிகாரம் மெதுவாக உள்ளது என்று கருதுவோம். செயற்கைக்கோள் மற்றும் அனுப்பிய செய்திகள் ஆகியவற்றின் ஒரு அச்சு சார்ந்த ஆதார மதிப்புகள் என formula_1 -ஐ கொள்க. ஜி.பி.எஸ் கடிகாரத்தின் குறிப்பிடப்பட்ட பெறுதல் நேரம் formula_96 என கொள்க. 'c" என்பது ஒளியின் வேகம் என கொள்க. சூடோரேஞ்ச் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால் +formula_39. செய்தியானது ஒளியின் வேகத்தில் போகிறது என்று கொள்வோமாயின் சூடோரேஞ்ச் எனும் கிட்டத்தட்ட தூரம் செயற்கைகோளுக்கும் ஜி.பி.எஸ் பெறுதல் அமைப்புக்கும் என்பது சமன்பாட்டை நிறைவு செய்கிறது. + +உத்தேச மதிப்பீடு formula_43 கொண்டு சரியான மதிபபீடு , formula_36 அல்லாமல் சமன்பாடு ஒன்றில் பயன்படுத்துவோமாயின் formula_102 என்பது அங்கே வரும் மீதம் ஆகும் . formula_2 என்பதை சமன்பாட்டின் வலது பக்கத்திற்கு மாற்று செய்வோமாயின் அங்கே கிடைப்பதை கீழே காண்க. + +ஒரு முடிவு எப்பொழுது காணப்படுகிறது என்றால் எப்பொழுது formula_102 +என்பது பூஜ்யம் அல்லது பூஜ்யத்தை ஒட்டி என கீழ் கண்ட மதிப்புகளான formula_107 ஆகிய இவைகளை சமன்பாட்டில் இடும் போது வருகிறதோ அப்பொழுது காணப்படுகின்றது. + +சமன்பாடு 2 ஐ ஒரு வரிசையாக மற்ற, அதன் சார் பகுதி வரையறுப்புகள் கணக்கிடப்படுகிறது எவ்வாறு என்றால் + +அங்கே + +சமன்பாடு 2 - ன் வலது பக்கத்தை ஒரு வரிசையாக உத்தேச மதிப்பிடு முறை மூலம் மாற்ற இவ்வாறு வருகிறது. + +formula_113 என்ற மீதமானது ஒரு வரிசை அல்லது சார் சமன்பாட்டு முறைப்படி வந்ததாகும். இது மீதமான formula_114 என்பதுடன் உத்தேசமான மதிப்பு முறை மூலம் கூடுதலான வந்த மீதமாகும் + +இந்த மதிப்பான formula_115 பூஜ்யத்திற்கு மிக அருகில் கொண்டு வருவதற்கு மதிப்புகளான formula_44 என்பவைகளை ஒரு முறை கொண்டு தேர்ந்தெடுக்க + +அதாவது மதிப்புகளை தேர்ந்தெடுக்க + +சமன்பாடு 2 - ல் வரும் மீதமானது சற்றே ஏறக்குறைய மதிப்புடன் வருகிறது என + +கொள்க + +இடம் மாற்றி formula_122 - ன் மதிப்பை சமன்பாட்டின் இடப்புறம் கொள்வோமானால் அங்கே வருவதாவது + +சமன்பாடு 6 ஒரு நான்கு ஒரு சார் சமன்பாடுகளை நான்கு டெல்டா வகை வரையறுப்புகளை கொண்டு கொடுக்கின்றது. அவைகள் தீர்வுக்கான முறையில் உள்ளன. மதிப்புகளான மற்றும் என்பவைகள் மூலம் ஒரு சார் சமன்பாடு தீர்வு மூலம் கணக்கிடப்படுகின்றன. + +கணக்கிடப்படுவது எப்படி என்றால் கீழ் கொடுக்கப்பட்ட முறையின் கீழ் செய்யப்படுகின்றது. + +அதன் பிறகு formula_128 என்பதை சமன்பாடு 2 -ல் இருந்து சமன்பாடு 6 வரை வரையறுப்பு கொள்க. + +சமன்பாடு 7 ஐ சமன்பாடு 2 - ல் கொள்க, அதாவது சமன்பாடு 7 -ல் உள்ள formula_128 என்பதை சமன்பாடு 2 - ல் போட்டு மீதி வருவதை சமன்பாடு 2 - ல் காண்க. இந்த முறையானது மீதி வருவது தேவையான அளவு சிறிதாகும் வரை செய்யப்படுகிறது. + + + + + + + +கிறிஸ்தவம் + +கிறிஸ்தவம் ("Christianity") ஓரிறைக் கொள்கையுடைய சமயமாகும். நாசரேத்தூர் இயேசுவின் வாழ்வையும் அவரது போதனைகளையும் மையப்படுத்தி விவிலிய புதிய ஏற்பாட்டின்படி செயற்படுகிறது. + +கிறிஸ்தவர் இயேசுவை மெசியா மற்றும் கிறிஸ்து என்னும் அடைமொழிகளாலும் அழைப்பதுண்டு. இவ்விரு சொற்களின் பொருளும் “திருப்பொழிவு பெற்றவர்” (”அபிஷேகம் செய்யப்பட்டவர்”) என்பதாகும். மெச��யா என்னும் சொல் எபிரேய மொழியிலிருந்தும் கிறிஸ்து என்னும் சொல் கிரேக்க மொழியிலிருந்தும் பிறந்தவை (கிரேக்கம்: Χριστός, "Christos"; מָשִׁיחַ, Māšîăḥ -"Messiah" என்ற எபிரேயச் சொல்லின் மொழிபெயர்ப்பு). சுமார் 2.4 பில்லியன் உறுப்பினர்களைக் கொண்டு (உலக மக்கள் தொகையில் 33.3%) உலகின் பெரிய சமயமாகக் காணப்படுகிறது. + +கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளைக் கொண்டுள்ளது. இதில் கத்தோலிக்க திருச்சபை மிகப்பெரியதாகும். கிறிஸ்தவம் கி.பி. முதலாம் நூற்றாண்டில் யூத மதத்தின் உட்பிரிவாக இருந்ததாலும், யூதர்கள் எதிர்பார்த்த மீட்பர் கிறிஸ்து என கிறிஸ்தவர்கள் நம்புவதாலும் யூத புனித நூலை பழைய ஏற்பாடு என்னும் பெயரில் விவிலியத்தின் ஒரு பகுதியாக ஏற்கின்றனர். யூதம் மற்றும் இசுலாம் போலவே கிறிஸ்தவமும் தன்னை ஆபிரகாம் வழி வந்த சமய நம்பிக்கையாகக் கொள்வதால் அது ஆபிரகாமிய சமயங்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. + +பல பிரிவுகளாக உள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் சமயத்தின் முக்கிய அங்கமாக சில நம்பிக்கைகளை ஏற்கின்றனர். அந்நம்பிக்கைகளின் அடிப்படை, கடவுளால் வெளிப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்ற விவிலியத்தில் உள்ளதாக அவர்கள் கொண்டாலும், விவிலியத்தைப் புரிதலில் அவர்களிடையே கருத்து வேறுபாடுகளும் உண்டு. + +சமய நம்பிக்கைகளைக் குறித்த சுருக்கமான கொள்கைசார் அறிக்கைகள் அல்லது வாக்குமூலங்கள் "நம்பிக்கை அறிக்கைகள்" எனப்படுகின்றன. ஆங்கிலத்தில் "கிரீட்சு" (creeds) எனப்படும் இவை "நான் நம்புகிறேன்" என்று பொருள்தரும் இலத்தீன மொழி வேர்ச்சொல்லான "கிரெடொ", (credo) விலிருந்து வந்துள்ளது. இந்த நம்பிக்கை அறிக்கைகள் முதலில் கிறிஸ்தவத்தில் புதிதாகப் புகுந்தோர் அறிக்கையிட வேண்டிய உரைக்கூற்றுகளாகத் தோன்றின. பின்னர் 4வது, 5வது நூற்றாண்டுகளில் எழுந்த இயேசுநாதர் ஆளுமைத்துறை பற்றிய சர்ச்சைகளின்போது விரிவாக்கப்பட்டு நம்பிக்கை அறிக்கைகளாக உருவாகின. + +பல சீர்திருத்தத் திருச்சபை சார்ந்தவர்கள் நம்பிக்கை அறிக்கைகளின் சில அல்லது பெரும்பகுதியுடன் உடன்பட்டாலும் முழுமையாக ஏற்பதில்லை. பாப்டிசுட்டுக்கள் "நிகழ்வுகளை உறுதிப்படுத்த ஆதாரபூர்வ வாக்குமூலங்களாக எடுத்துக்கொள்வதற்காக நம்பிக்கை அறிக்கைகள் வழங்கப்படவில்லை" எனக் கருதுகின்றனர். கிறிஸ்து திருச்சபை, கனடாவின் சீர்திருத்த கிறிஸ்தவத் திருச்சபை போன்ற மறுசீரமைப்பு இயக்கங்கள் நம்பிக்கை அறிக்கைகளை ஏற்பதில்லை. + +நம்பிக்கை அறிக்கையில் அடங்கியுள்ள முதன்மை சமயக் கொள்கைகளாவன: + + +ஆரியசிற்கு எதிர்வினையாக 325 இல் நைசியாவிலும் 381 இல் கான்ஸ்டான்டிநோபிளிலும் கூடிய மன்றங்கள் நைசின் விசுவாச அறிக்கையை உருவாக்கின. இயேசு கிறிஸ்துவை ஆரியசு தந்தையாம் கடவுளுக்குக் கீழ்ப்பட்டவராகவும், கடவுளின் (தலைசிறந்த) படைப்பாகவும் மட்டும் பார்த்தாரே ஒழிய இயேசு கிறிஸ்துவைக் கடவுளுக்கு நிகரானவராகக் கருதவில்லை. எனவே இயேசு யார் என்பதை உறுதியாக வரையறுக்க வேண்டிய தேவை எழுந்தது. 431 இல் எபெசுசில் கூடிய முதல் மன்றம் நைசீன் நம்பிக்கை அறிக்கையை ஏற்று அதை மேலும் உறுதியாக்கியது. + +"கால்செதோன் வரையறை" அல்லது "கால்செதோன் அறிக்கை" 451 இல் உருவாக்கப்பட்டது. இந்த அறிக்கையும் இயேசு கிறிஸ்து யார் என்பதைத் துல்லியமாக வரையறுக்கும் வகையில் அமைந்தது. விவிலியத்தின் அடிப்படையில் “இயேசு கிறிஸ்து உண்மையாகவே கடவுளாகவும் உண்மையாகவே மனிதருமாக இருக்கிறார்” என்பதே கால்செதோன் வரையறையின் மையம். இதனை கிழக்கத்திய மரபுவழி திருச்சபையினர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்கள் கொள்கைப்படி, இயேசு கிறிஸ்துவுக்கு ஒரே இயல்புதான் உண்டு. அந்த ஒரே இயல்பில் அவருடைய இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் அடங்கியுள்ளன. கால்செதோன் வரையறைப்படி, “இயேசு கிறிஸ்து உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும் ஆவார். கடவுளின் வார்த்தையான அவரில் இறைத்தன்மையும் மனிதத்தன்மையும் "குழப்பமின்றி, மாற்றமின்றி, பிளவின்றி, பிரிக்கமுடியாததாக (”without confusion, change, division or separation”) உள்ளன. ஒரே ஆளில் இரு தன்மைகளும் உள்ளன. + +மேற்கத்திய திருச்சபையில் பயன்படுத்தப்பட்ட மற்றொரு அறிக்கையின் பெயர் ”அத்தனாசியுசு நம்பிக்கை அறிக்கை” (Athanasian Creed). புனித அத்தனாசியுசு என்பவரால் தொகுக்கப்பட்டதாக (தவறாக) கருதப்பட்ட இந்த அறிக்கை நைசின் மற்றும் கால்செதோனிய அறிக்கைகளுக்கு இணையானது; நம்பிக்கை அறிக்கையில் கூறப்பட்டவற்றை ஏற்காதோர் திருச்சபையின் உறவிலிருந்து பிரிந்தோர் ஆவர் என்னும் குறிப்பு இந்த நம்பிக்கை அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், மூவொரு கடவுள் கொள்கை இந்த அறிக்கையில் விளக்கமாகக் கூறப்படுகிறது: "நாங்கள் மூவொரு கடவுளை வழிப��ுகிறோம். மும்மையில் ஒருமை, ஒருமையில் மும்மை. மூன்று ஆள்களை ஒருவரோடொருவர் குழப்புவதில்லை; ஒரே பொருளான அவர்களைப் பிரிப்பதுமில்லை.” + +பெரும்பாலான கிறிஸ்தவர்கள், அதாவது, கத்தோலிக்க திருச்சபை, கிழக்கு மரபுசபை, ஓரியண்டல் மரபுசபை மற்றும் சீர்திருத்தத் திருச்சபை ஆகியவற்றின் உறுப்பினர், கிறிஸ்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகைகளை உள்ளடக்கிய “நம்பிக்கை அறிக்கைகளை” ஏற்றுக்கொள்கின்றனர்; தொடக்ககாலத் திருச்சபையில் உருவான ஒரு நம்பிக்கை அறிக்கையையாவது ஏற்றுக்கொள்கின்றனர். + +பத்துக் கட்டளைகள் என்பது நன்னெறி மற்றும் வழிபாடு குறித்த விவிலிய அறிவுரைத் தொகுப்புகளுள் முதன்மையானது; இது யூதம் மற்றும் பெரும்பாலான கிறிஸ்தவ சபைகளின் அறநெறிப் படிப்பினையில் மைய இடம் பெறுகிறது. பத்துக் கட்டளைகள் தொகுப்பு இரு பிரிவாக உள்ளது. முதல் பிரிவில் மூன்று கட்டளைகள், இரண்டாம் பிரிவில் ஏழு கட்டளைகள். முதல் மூன்று கட்டளைகளும் இறைவனை அன்பு செய்து வழிபடுகின்ற கடமைகளை எடுத்துக்கூறுகின்றன. எஞ்சிய ஏழு கட்டளைகளும் மனித சமூகத்தின் நலம் பேணுதல் பற்றிய கடமைகளை எடுத்துரைக்கின்றன. + +கட்டளை 1: உண்மையான கடவுளை நம்பி ஏற்றிடுக (போலி தெய்வங்களை ஒதுக்குதல்) +2. ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தல் ஆகாது +3. ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடி + +4. உன் தந்தையையும் தாயையும் மதித்து நட +5. கொலை செய்யாதே +6. விபசாரம் செய்யாதே +7. களவு செய்யாதே +8. பொய்ச்சான்று சொல்லாதே +9. பிறர் மனைவியை விரும்பாதே +10. பிறர் உடைமையை விரும்பாதே. + +மேற்கூறிய பத்துக் கட்டளைகளயும் வரிசைப்படுத்துவதில் கிறிஸ்தவ சபைகளுக்கிடையே சிறு வேறுபாடுகள் உண்டு. நற்செய்திகளின்படி, கிறிஸ்து இச்சட்டங்களை இரண்டு முதன்மைக் கட்டளைகளுக்குள் அடக்குகிறார். அவை: + +1) மனிதர் கடவுளைத் தம் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் அன்பு செய்ய வேண்டும். +2) மனிதர் தம்மைத் தாமே அன்புசெய்வதுபோல பிறரையும் அன்புசெய்ய வேண்டும். +(காண்க: மாற்கு 12:28-31; மத்தேயு 22:34-40; லூக்கா 10:25-28). + +இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், கடவுளால் திருப்பொழிவு பெற்றவர் (மெசியா) என்ற நம்பிக்கை கிறிஸ்தவ சமயத்தின் மையக் கொள்கை ஆகும். உலக மக்கள் அனைவரையும் பாவத்திலிருந்து மீட்கும் பொருட்டு கடவுள் தம் மகன��� இயேசுவை அபிடேகம் செய்தார் என்றும், இவ்வகையில் இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் முன் கூறப்பட்ட இறைவாக்குகளை நிறைவேற்றினார் எனவும் கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். + +மெசியா குறித்து கிறிஸ்தவர்கள் கொண்டுள்ள புரிதல் அக்கால யூதர்களின் புரிதல்களிலிருந்து வேறுபட்டுள்ளது. மனிதரின் பாவங்களைப் போக்கி, அவர்களை இறைவனோடு ஒப்புரவாக்கி, அவர்களுக்கு மீட்பையும் முடிவில்லா நிலைவாழ்வையும் வழங்கவந்தவரே இயேசு; மீட்பளிக்கின்ற அந்த இயேசுவின் சாவையும் உயிர்த்தெழுதலையும் நம்பி ஏற்றிட மக்கள் அழைக்கப்படுகிறார்கள் என்பது கிறிஸ்தவரின் நம்பிக்கை. + +கிறிஸ்தவ வரலாற்றின் துவக்க நூற்றாண்டுகளில் இயேசுவின் தன்மை குறித்து பல இறையியல் சர்ச்சைகள் எழுந்துள்ளபோதும் கிறிஸ்தவர்கள் பொதுவாக இயேசுவை கடவுளின் அவதாரமாகவும் "உண்மையான கடவுளும் உண்மையான மனிதரும்" ஆனவராக நம்புகின்றனர். இயேசு, முழுமையும் மனிதராக இருந்தமையால் சாதாரண மனிதர் உணரும் வலிகளையும் ஆசைகளையும் உணர்ந்தார்; ஆனால் எந்த விலக்கப்பட்டச் செயலையும் (பாவம்) செய்யவில்லை. கடவுளாக உயிர்த்தெழுந்தார். விவிலியத்தின்படி, "கடவுள் இறந்தோரிடமிருந்து அவரை எழுப்பினார்", அவர் விண்ணகத்திற்கு ஏறிச்சென்று "தந்தையின் வலது பக்கம் அமர்ந்தார்"; மற்ற மெசியா பணிகளை ஆற்றிட மீண்டும் திரும்பி இறந்தோரை உயிர்ப்பிப்பது, கடைசி தீர்ப்பு மற்றும் இறையரசை இறுதியாக நிறுவுதல் ஆகியப் பணிகளை மேற்கொள்வார். + +2வது நூற்றாண்டின் கிறிஸ்தவ பொதுயிட வழிபாட்டைக் குறித்து ஜஸ்டின் மார்டையர் பேரரசர் அன்டோனியசு பையசுக்கு வழங்கிய "முதல் மன்னிப்புக் கோரல்" உரையில் கூறியுள்ளது இன்னமும் பொருந்துகின்றது. அதன்படி +ஜஸ்டின் கூறியவாறே, கிறிஸ்தவர்கள் ஞாயிறன்று கூட்டு வழிபாட்டிற்காக கூடுகின்றனர்; இதற்கு வெளியேயும் வழிபாடுகள் நடத்தப்படுவதுண்டு. பழைய, புதிய ஏற்பாடுகளிலிருந்து சில பகுதிகள், குறிப்பாக நற்செய்தி விவரங்கள், தொகுக்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன. இவை வருடாந்திர சுழற்சியில் வருமாறு லெக்சனரி என்ற நூலாக தொகுக்கப்படுகின்றது. இவற்றிலிருந்து வழிகாட்டும் விரிவுரை, "செர்மன்", வழங்கப்படுகின்றது. கூட்டு விழிபாட்டின்போது பல வகையான கூட்டு செபங்கள் நடத்தப்படுகின்றன: நன்றி அறிவித்தல், ஒப���புகை, துன்புற்றோருக்காக இரங்கல் ஆகியன; மேலும் வேண்டுதல்கள் ஓதியோ, எதிர்வினை ஆற்றியோ, மவுனமாயிருந்தோ பாடியோ வெளிப்படுத்தப்படும். அடிக்கடி கிறிஸ்து கற்பித்த செபம் நடத்தப்படுகின்றது. +சிலக் குழுக்கள் இந்த வழமையான திருச்சபை கட்டமைப்புக்களிலிருந்து மாறுபடுகின்றனர். பெரும் முறையொழுங்கு, சடங்குகளைப் பேணும் "உயர் திருச்சபை" என்றும் "தாழ்ந்த திருச்சபை" என்றும் சேவைகள் பிரிக்கப்படுகின்றன. இவற்றினுள்ளும் வழிபாட்டு வடிவங்களில் பல்வேறு பிரிவினைகள் உள்ளன. ஏழாம் நாள் வருகை சபையோர் சனிக்கிழமை கூடுகின்றனர்; வேறுசிலர் வாரமொருமுறை கூடுவதில்லை. பெந்தகோஸ்து சபை இயக்கம் போன்றவற்றில் திருக்கூட்டங்கள் தூய ஆவியினால் தன்னிச்சையாகத் தூண்டப்பட்டு நடத்தப்படுகின்றன; முறையான நிகழ்ச்சித் திட்டத்தை இவர்கள் வரையறுப்பதில்லை. நண்பர்களின் சமய சமூகத்தில் தூய ஆவியால் பேசத் தூண்டப்படும்வரை அமைதியாக உள்ளனர். + +சில சீர்திருத்தச் சபை அல்லது லூத்தரன் சேவைகள் நடனம், பல்லூடகங்களுடன் ராக், பாப் இசைக்கச்சேரிகளைப் போல அமைகின்றன. பாதிரிமார்களுக்கும் வழமையான நம்பிக்கையாளர்களுக்கும் வேறுபாடில்லாத குழுக்களில் வழிபாட்டுக் கூட்டங்களை மினிஸ்டர் அல்லது ஆசிரியர் அல்லது பேஸ்டர் நடத்துகின்றனர். மேலும் சிலருக்கு தலைமையாளர்கள் எவருமில்லாதிருப்பர். சில திருச்சபைகளில், மரபுப்படியோ கொள்கைப்படியோ, இசைக்கருவிகளில்லாத தனித்துவமான இசை ("அ கேப்பெல்லா") பயன்படுத்தப்படுகின்றது. + +"கிறிஸ்துவால் ஏற்படுத்தப்பட்டு, திருச்சபையிடம் ஒப்படைக்கப்பட்ட இறை வாழ்வில் நமக்குப் பங்களிக்கும் பயன்மிகு அருளின் அடையாளங்கள் ஆகும். வெளிப்படையாக கொண்டாடப்படும் அருட்சாதன வழிபாடுகள், அருட்சாதனங்கள் வழியாக வழங்கப்படும் அருளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. அருட்சாதனங்களைப் பெறுவோரின் விருப்பத்துக்கு ஏற்ப, அவை அவர்களில் கனி தருகின்றன." மூன்று புகுமுக அருட்சாதனங்கள், இரண்டு குணமளிக்கும் அருட்சாதனங்கள், இரண்டு பணி வாழ்வின் அருட்சாதனங்கள் என மொத்தம் ஏழு அருள்சாதனங்கள் கத்தோலிக்க திருச்சபையில் வழங்கப்படுகின்றன. சாக்ரமென்ட் என அழைக்கப்படும் இச்சொல் இலத்தீனிய வேரான "சாக்ரமென்டம்" என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு "மர்மம்" எனப் பொருள் கொள்ளலாம். எந்தச் சடங்குகள் திருவருட் சாதனங்கள் என்பதிலும் எந்த செயல்கள் திருவருட்சாதனமாக கருதப்படலாம் என்பதிலும் கிறிஸ்தவப் பிரிவுகளும் மரபுகளும் வேறுபடுகின்றன. + +மிகவும் மரபார்ந்த வரையறையின்படி உட்புற அருளை வழங்கும் இயேசுவினால் நிறுவப்பட்ட வெளிப்புறச் சின்னமே திருவருட்சாதனமாகும். மிகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இரு திருவருட்சாதனங்கள் திருமுழுக்கும் நற்கருணையும் ஆகும். பெரும்பான்மையான கிறிஸ்தவர்கள் மேலும் ஐந்து திருவருட்சாதனங்களை அங்கீகரித்துள்ளனர்: உறுதி பூசுதல் ( மரபுவழி வழமையில் "கிறிஸ்துவாக்கம்"), குருத்துவம், ஒப்புரவு, நோயில் பூசுதல், திருமணம். + +கிறிஸ்தவம் பல உட்பிரிவுகளையும் வழக்குகளையும் திருச்சபைகளையும் கொண்டது. இவை இடத்துக்கும் கலாச்சாரத்துக்கும் ஏற்றபடி வேறுபடும் சமயக் கோட்பாடுகளை(doctrine) கொண்டுள்ளன. 2001 ஆண்டு உலகக் கிறிஸ்தவ கலைக்களஞ்சியத்தின் படி உலகம் முழுவதும் சுமார் 33,830 கிறிஸ்தவப் பிரிவுகள் உள்ளன. சீர்த்திருத்தத்துக்குப் பிறகு கிறிஸ்தவம் பிரதான மூன்று பிரிவுகளாகப் பிரிந்ததாக கொள்ளப்படுகிறது. +உரோமன் கத்தோலிக்கத் திருச்சபையானது கிறிஸ்தவத்தின் மிகப்பெரிய உட்பிரிவாகும். இது சில கிழக்கு கத்தோலிக்கத் திருச்சபைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. மொத்தமாக 1.2 பில்லியன் திருமுழுக்கு பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது. + +இது கிழக்குப்பகுதி (ஒரியன்டல்) மரபுவழி, கிழக்கு ஆசிறியன், கிழக்கு மரபுவழி (மேற்கு மரபுவழி திருச்சபை உற்பட) திருச்சபைகளைக் கொண்டுள்ளதோடு மொத்தம் 300 மில்லியன் ஞானஸ்நானம் பெற்ற விசுவாசிகளை கொண்டுள்ளது. + +இதில் பல உட்பிரிவுகள் காணப்படுகின்றன. அங்கிலிக்கன், லூதரன், Reformed, ஆவிக்குரிய(Evangelical), Charismatic, Presbyterians, Baptists, மெதோடிஸ்த, Nazarenes, Anabaptists, பெந்தகோஸ்தே போன்றவை பிரதானமானவையாகும். முதன் முதலாக 16 ஆம் நூற்றாண்டில் இச்சபைகள் கத்தோலிக்க திருச்சபையிலிருந்து பிரிந்தன. இவர்கள் தங்களை கிறிஸ்தவரென்றோ மீளப் பிறந்த கிறிஸ்தவரென்றோ அழைக்கின்றனர். அங்கிலிக்கன் மற்றும் புதிய-லூதரன்(Neo-Lutheranism) திருச்சபைகள் 592-650 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன. மற்றைய திருச்சபைகள் சுமார் 275 மில்லியன் விசுவாசிகளை கொண்டுள்ளன. + +ஆங்கிலிக்கம் என்பது கிறிஸ்தவத்தின் ஒரு முக்கிய��் பிரிவு மற்றும் வரலாறுமிகு பாரம்பரியமாகும். சர்வதேச ஆங்கிலிக்க ஒன்றியத்தில் இணைந்துள்ள திருச்சபைகளின் போதனையும் உபதேசமும் ஆங்கிலிக்கம் என்னப்படலாம். இவையாவும் இங்கிலாந்து திருச்சபை, அதின் வழிப்பாடு மற்றும் தேவாலய அமைப்பைப் பின் தொடருகிறன. + +ஏறத்தாழ 2.4 பில்லியன் பின்பற்றுவோரை, கத்தோலிக்கம், சீர்திருத்தத் திருச்சபை, ஓர்த்தொடாக்சு என்ற 3 முதன்மைப் பிரிவுகளில் கொண்டுள்ள கிறிஸ்தவம் உலகின் மிகப் பெரும் சமயமாகும். கடந்த 100 ஆண்டுகளாக உலக மக்கள்தொகையில் கிறிஸ்தவர்கள் ஏறத்தாழ 33% ஆக உள்ளனர்; அதாவது புவியில் மூன்றில் ஒருவர் கிறிஸ்தவராவார். ஆனால் இப்பரம்பலில் ஓர் பெரும் மாற்றம் மறைந்துள்ளது; வளரும் நாடுகளில் உயர்ந்து வருகையில் (ஏறத்தாழ நாளுக்கு 23,000 பேர்) வளர்ச்சியடைந்த நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவிலும் வட அமெரிக்காவிலும், குறைந்து வருகின்றது (ஏறத்தாழ நாளுக்கு 7,600 பேர்). + +ஐரோப்பா, அமெரிக்காக்கள் மற்றும் தெற்கு ஆபிரிக்காவில் கிறிஸ்தவம் இன்னமும் முதன்மையான சமயமாக உள்ளது. ஆசியாவில் சியார்சியா, ஆர்மீனியா, கிழக்குத் திமோர், பிலிப்பீன்சு நாடுகளில் முதன்மையான சமயமாக உள்ளது. இருப்பினும், இது வடக்கு அமெரிக்கா, மேற்கு அமெரிக்கா ஓசியானா (ஆத்திரேலியா, நியூசிலாந்து), பெரும் பிரித்தானியா உள்ளிட்ட வடக்கு ஐரோப்பா, எசுக்காண்டினாவியா), பிரான்சு, செருமனி, கனடிய மாநிலங்களான ஒன்ராறியோ, பிரிட்டிசு கொலம்பியா, கியூபெக், ஆசியாவின் பகுதிகளான (குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகள் -மதமாற்றங்களினால்), தென்கொரியா, சீனக் குடியரசு, மக்காவு) உள்ளிட்ட பல பகுதிகளில் குறைந்து வருகின்றது. + + + + + +யாழ்ப்பாணச் சரித்திரம் (முத்துத்தம்பிப்பிள்ளை) + +யாழ்ப்பாணச் சரித்திரம் நூல் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை அவர்கள் எழுதி, யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. + +இதன் முதற் பதிப்பு 22.7.1912 இல் நாவலர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. 1915இல் இரண்டாவது பதிப்பும் ஆசிரியரால் வெளியிடப்பட்டது. பின்னர் 1933இல் மூன்றாவது பதிப்பு க. வைத்தியலிங்கம் அவர்களினால் வெளியிடப்பட்டது. மூன்றாம் பதிப்பின் விலை 75 சதம். + +நான்காம் பதிப்பு சித்தாந்த இரத்தினம் க. கணேசலிங்கம் அவர்களினால் சில திருத்தங்கள் செய்யப்பட்டு பெப்ரவரி 2000 இல் ஆசிரியரின் உறவினரான தணிகை ஸ்கந்தகுமார் அவர்களினால் சிட்னியில் வெளியிடப்பட்டது. + + + + + +விருபா இணையத்தளம் + +விருபா என்பது தமிழ்ப் புத்தகங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டித்தரும் வலைத்தளமாகும். இத்தளம் புத்தகங்களின் விவரம், பதிப்பகங்களின் தொடர்பு விவரம், எழுத்தாளர்கள் பற்றிய விபரங்கள் அனைத்தையும் திரட்டித் தருகிறது. நூல்கள் பிரிவுகளாகவும் தொகுக்கப்படுகிறது. குறித்த புத்தகங்களுக்கு ஊடகங்கள் வழங்கிய மதிப்புரைகளையும் இத்தளத்தில் பார்வையிடலாம். சிற்றிதழ்கள் பற்றிய தகவல்களும் உள்ளன. + +இத்தகவல்கள் தவிர நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள நூல் வெளியீட்டு நிகழ்வுகள் மற்றும் நடைபெற்று முடிந்த, நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிகள் பற்றிய தகவல்களையும் இத்தளம் தருகிறது. விருபா தளத்தின் நிறுவனர் கணினி வல்லுநர் து. குமரேசன். + +இத்தளத்துக்காக உருவாக்கப்பட்ட "விருபா வளர் தமிழ்" செயலியானது இத்தகைய ஏனைய தளங்களுக்கும் பயன்படுத்தக் கூடியதாகும். + + + + + +பாலியல் வசைச் சொற்கள் + +பாலியல் உறுப்புக்களைக் குறிக்கும் சொற்கள் மற்றும் பாலியல் தொடர்பான சொற்கள் பலவும் பன்மொழிகளிலும் இழிசொற்களாகவும் வசைச்சொற்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. ஆரம்பத்தில் இழிசொற்களாகக் கருதப்படாத சொற்களும் கால ஓட்டத்தில் இழிசொற்களாகப் பயன்பாட்டு மாற்றம் பெற்றமைக்கு பாலியல் தொடர்பான குற்ற உணர்ச்சி காரணமாக இருக்கலாம். + +புண்டை: இது பெண் பிறப்புறுப்பினை குறிக்க பயன்படும் ஒரு சொல்லாகும். இச்சொல்லின் மூலச்சொல் லத்தீனமாகவோ, தமிழாகவோ, தென் ஆப்பிரிக்க மொழிகளில் ஒன்றாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. Punda . சமூகத்தில் அங்கீகரிக்கப்படாத வார்த்தையாக இது இருப்பதுடன், இச்சொல்லின் பிரயோகம் அநாகரிகமானதென்ற கற்பிதம் கலாசார சூழலில் காணப்படுகிறது. + +மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் மரபுவழி இலக்கியங்களில் இச்சொல் காணப்படவில்லையாயினும், தற்கால தமிழ் இலக்கியச்சூழலில் இச்சொல் பரவலாக பயன்பாட்டிலிருக்கிறது. தலித் இலக்கியங்களில் இச்சொல்லும், இதற்கு சமமான சொற்களும் பெருமளவில�� இன்று பயன்படுத்தப்படுகிறது. + +ஆனால் மரபுவழி இலக்கியங்களில் புண்டரீகம் என்ற சொல் தாமரை மலரை குறிக்க பயன்பட்டுள்ளது. பெண் பிறப்புறுப்பு தோற்றம் குவிந்து இதழ்களுடன் இருப்பதாலும், புனிதமானதாக கருதப்பட்டதாலும் (தாமரை மலர் இந்து மதத்தில் சிறப்பம்சம் பெற்றது), புண்டரீகம் என்ற சொல் மருவி புண்டை என்று வழக்கத்திற்கு வந்திருக்கலாம். விக்கிபீடியாவில் "புண்டரீகம்" இன்னமும் இடம் பெறாததால் உதாரனப் பாட்டை கீழேயே பார்க்கலாம். + +அண்டம்நீ யகண்டம்நீ யாதிமூல மானநீ
+கண்டம்நீ கருத்தும்நீ காவியங்க ளானநீ
+புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
+கொண்டகோல மானநேர்மை கூர்மையென்ன கூர்மையே!
+கண்டம் = எல்லை
+புண்டரீகம் = வெண்தாமரை
+கூர்மை = அறிவு
+நேர்மை = நுண்மை
+அண்டம், அகண்டம், ஆதிமூலம், எல்லை, மனிதனின் கருத்து, காவியம் ஆகிவைகளாய் விளங்கும் இறைவா! அறிவுக்கும் அறிவே! புண்டரீகம் என்னும் வெண்தாமரையினுள்ளே, தத்தம் சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்று சேர்த்துத் தவம் இயற்றும் புண்ணியர்கள் உணரும் நுண்மையான உணர்வுதான் நீ. + + +
+ +சூடான் + +சூடான் (அரபு:السودان அஸ்-சூடான்) என்றழைக்கப்படும் "சூடான் குடியரசு" (அரபு: جمهورية السودان‎ ஜும்ஹரியத் அஸ்-சூடான்) ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள ஒரு நாடாகும். இது சிலவேளைகளில் வட சூடான் என அழைக்கப்படுகின்றது. இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும். இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. எனினும், 2011இல் பொதுஜன வாக்கெடுப்பின் மூலம் தென் சூடான் பகுதி தனி சுதந்திர நாடாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், இது மாற்றமடைந்தது. இது தற்போது அல்ஜீரியா மற்றும் கங்கோ குடியரசுக்க அடுத்தபடியாக ஆபிரிக்காவில் மூன்றாவது பெரிய நாடாக விளங்குகின்றது. + +வடக்கில் எகிப்தும், வடகிழக்கில் செங்கடலும், கிழக்கில் எரித்திரியாவும், தென்கிழக்கில் எத்தியோப்பியாவும், தெற்கில் தென் சூடானும், தென்மேற்கில் மத்திய ஆப்பிரிக்க குடியரசும், மேற்கில் சாட் நாடும், லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன. உட்புறமாக, நைல் நதி நாட்டை கிழக்கு மற்றும் மேற்கு அரைப்பகுதிகளாகப் பிரிக்கின்றன. நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையான மக்கள் இஸ்லாம் மதத்தைப் பின்ப��்றுகின்றனர். + +சூடான் பண்டைய பல நாகரிகங்களான   குஷ், கெர்மா, நோபியாடியா, அலோடியா, மகுரியா, மெரொ மற்றும் பலவற்றுக்கு, உரைவிடமாக இருந்தது, இந்த நாகரீகங்கள் நைல் ஆற்றை ஒட்டி நெடுகிலும் செழித்தோங்கி இருந்தன. பேரரசுகளின் காலத்திற்கு முற்பட்ட காலத்தின் போது நுபியா, நாகடன், மேல் எகிப்து போன்றவை ஒரே மாதிரியானவையாக இருந்தன. சூடான் எகிப்துக்கு அருகாமையில் இருப்பதால், அதன் அண்மையில் உள்ள கிழக்குப் பகுதிகளின் பரந்த வரலாற்றில் பங்கு பெற்றது, சூடான் 6 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவமயமாக்கப்பட்டது, பின்வந்த 15 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மயமாக்கப்பட்டது. +சூடான் ஐக்கிய நாடுகள் சபை, ஆபிரிக்க ஒன்றியம், அரபு லீக், இஸ்லாமிய ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் அணிசேரா நாடுகள், இதேபோல் உலக வர்த்தக அமைப்பின் பார்வையாளர் நாடாக, போன்ற அமைப்புக்களில் அங்கத்துவம் வகிக்கின்றது. இதன் தலைநகர் கர்த்தூம் ஆகும். நாட்டின் அரசியல், கலாசார மற்றும் வர்த்தகமையமாக கர்த்தூம் நகர் காணப்படுகின்றது. சூடான், ஒரு கூட்டாச்சி ஜனாதிபதி பிரதிநிதி ஜனநாயகக் குடியரசு நாடாகும். சூடானின் அரசியல் நடவடிக்கைகள் தேசிய சட்டமன்றம் என அழைக்கப்படும் ஒரு பாராளுமன்ற அமைப்பினால் நெறிப்படுத்தப்படுகின்றது.   சூடான் சட்ட அமைப்பு இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. +நாட்டின் பெயரான சூடான் என்பது சகாராவுக்கு தெற்கே உள்ள பகுதிகளை பொதுவாக குறிப்பிடப்பயன்படும் சொல்லாகும், இச்சொல்  மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிழக்கு மத்திய ஆபிரிக்கா வரையிலான பகுதிகளைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டு வந்தது.  இந்த பெயர் பிலாடி அஸ்-சூதன் (بلاد السودان), அல்லது "கறுப்பர்களின் நிலங்கள்" என்ற அரபு மொழிச் சொல்லில் இருந்து வந்தது. + +கி.மு.எட்டாயிரம் வருட காலப்பகுதியில் புதிய கற்காலத்தின் கலாச்சாரத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு உடல் உழைப்பில்லாத வழிமுறையுடையவர்களாக சேற்று-செங்கற்கலாலான கோட்டை கிராமங்களில் குடியேறினர். அவர்கள் நைல் நதியில் மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடல் போன்ற செயல்களில் ஈடுபட்டடனர். மேலும் அப்பகுதியில் தானியங்களைப் சேகரித்ததுடன், கால்நடை மேய்ச்சலிலும் ஈடுபட்டனர். கி. மு. ஐந்தாயிரம் ஆண்டு காலப்பகுதியில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தவர���கள்] சகாராவின் உலர் பகுதியிலிருந்து நைல் சமவெளிப்பகுதிக்கு இடம் பெயர்ந்ததுடன், அங்கு விவாசயத்தில் ஈடுபட்டனர். + +[[File:Sudan Meroe Pyramids 2001.JPG|thumb|left|மெரோயில் அமைந்துள்ள நுபியன் பிரமிட்கள்.]] +குஷ் இராச்சியமானது, ஆதிகால நுபியன் மக்களைக் கொண்ட ஒரு இராச்சியமாகக் காணப்பட்டது. இது நீல நைல் ஆறு,வெள்ளை நைல் ஆறு மற்றும் அட்பரா ஆறு என்பன சங்கமிக்கும் இடத்தில் மையப்படுத்தப்பட்டதாக அமைந்திருந்தது. இது வெண்கல காலத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர், எகிப்தின் புதிய இராச்சியத்தின் சிதைவுக்குப் பின்னர் நெபாட்டாவில் ஆரம்ப நிலையிலேயே மையப்படுத்தப்பட்டது. + +மரபார்ந்த பண்டைக்காலத்தில் நுபியன்களின் தலைநகரம் மெரோயில் அமைந்திருந்தது. ஆரம்பகால கிரேக்க புவியியல்களில், மெரோடிக் இராச்சியம் [[எத்தியோப்பியா]] என அறியப்பட்டது. குஷ் நாகரிகமானது முதலில் உலகில் இரும்பு தொழிநுட்பத்தை பயன்படுத்தியது. மெரோயில் உருவாக்கப்பட்ட நுபியன் இராச்சியமானது கி.பி. நான்காம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. குசைட் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர், அதிகமான இராச்சியங்கள் அதன் பழைய இடங்களில் தோண்றின. நுபியா இவற்றில் ஒன்றாகும். + +[[File:Gebel Barkal.jpg|thumb|left|[[Jebel Barkal]] நுபியாவில் அமைந்துள்ள மலை, [[யுனெஸ்கோ]] உலக மரபுரிமைத் தளம்]] +சூடானானது வட அபிரிக்காவில் 853கிமீ(530மைல்)நீளமான செங்கடல் கரையோர எல்லையில் அமைந்துள்ளது. இது 1,886,068கிமீ(728,215 சதுரமைல்) பரப்பளவை உடையது. ஆபிரிக்கக் கண்டத்தில் மூன்றாவது பெரிய நாடாகவும், உலகில் பதினாறாவது பெரிய நாடாகவும் காணப்படுகின்றது. சூடான், [[8th parallel north|8°]] மற்றும் [[23rd parallel north|23°N]] ரேகையில் அமைந்துள்ளது. + +சூடானின் நிலப்பரப்பு பொதுவாக தட்டையான சமவெளியாகக் காணப்படுகின்றதுடன், பல மலைத்தொடர்கள் மூலம் உடைக்கப்பட்டுள்ளது. மேற்குப் பகுதியில்,மர்ரகா மலைகளில் அமையப்பெற்றுள்ள டெரிபா கல்டேரா(3,042மீற்றர் or 9,980 அடி), சூடானின் மிக உயரத்தில் உள்ள முனையாகக் காணப்படுகின்றது. + +நைல் நதியின், நீளம் மற்றும் வெள்ளை நைல் ஆறுகள் [[கார்த்தூம்]] நகரில் சந்திக்கின்றதுடன், வடக்கு நோக்கி எகிப்தின் ஊடாக மத்தியதரை கடலுக்கு பாய்கின்றது. சூடான் ஊடாக நீள நைல்நதியின் ஏறத்தாள 800கிமீ(497மைல்) செல்கின்றதுடன், சென்னர் மற்றும் [[கார்த்தூம்]] இடையில் டின்டர், ரகாத் ஆறுகளுடன் இணைகின்றது. சூடான�� ஊடாகச்செல்லும் வெள்ளை நைல் நதிக்கு துணை ஆறுகள் காணப்படுவதில்லை. +நாட்டின் தெற்கில் செல்லச் செல்ல மழை அளவு அதிகரிக்கிறது. மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளில் வடகிழக்கு ந்யூபன் பாலைவனம் மற்றும் கிழக்குப் பகுதியிலுள்ள பாயுடா பாலைவனம் போன்ற மிகவும் வறண்ட பாலைவகைப் பகுதிகள் உள்ளன;   தெற்கில் சதுப்பு நிலங்களும் மழைக்காடுகளும் உள்ளன. சூடானின் மழைக்காலமானது வடக்கே சுமார் மூன்று மாதங்கள் (ஜூலை முதல் செப்டம்பர் வரை), தெற்கில் ஆறு மாதங்கள் (ஜூன் முதல் நவம்பர் வரை) வரை உள்ளது. + +வறண்ட பகுதிகள் [[புழுதிப் புயல்|புழுதிப் புயலால்]] பாதிக்கப்படுகின்றன, இவை ஹபூப் என அழைக்கப்படுகின்றன, இது முற்றிலும் சூரிய ஒளியைத் தடுக்கும் விதத்தில் இருக்கும்.   வடக்கு மற்றும் மேற்குப் பகுதி அரை பாலைவனப் பகுதிகளில், மக்கள் அடிப்படை வேளாண்மைக்கு மழைப்பொழிவை நம்பி இருக்கின்றார்கள்.   அநேகர் நாடோடிகளாக, செம்றி ஆடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுடன் சேர்ந்து பயணம் செய்கிறார்கள். நைல் நதிக்கு அருகில் உள்ள நிலப்பகுதிகளில், பணப் பயிர்கள் செய்யப்படுகின்றன. + +அசீடா என்னும் [[கோதுமை]] ரொட்டி, கிச்ரா என்னும் [[சோளம்|சோள]] மாவு ரொட்டி, குராசா என்னும் [[மைதா]] மாவு ரொட்டியும் அங்கே அடிப்படை உணவு. + +[[File:Sudan - smiling lady.jpg|thumb|[[கர்த்தூம்]]-இல் ஒரு மாணவர்]] + +சூடானின் 2018 [[மக்கள் தொகைக் கணக்கெடுப்பு|மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்]] அடிப்படையில், சூடானின் வடக்கு, கிழக்கு, மேற்கு பகுதிகளில் கணிக்கப்பட்ட மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது. இது [[தெற்கு சூடான்]] சூடானில் இருந்து பிரிந்த பின் எஞ்சிய பகுதிகளின் நடப்பு மக்கள் தொகை 30 மில்லியனிற்கு மேற்பட்டதாக காணப்படுகின்றது என்பதை காட்டுகின்றது. 1983 இன் சூடான் மக்கள் தொகை கணக்கெடுப்பையும், தற்போதைய சூடானின் மக்கள் தொகையையும் ஒப்பிடுகையில், கடந்த இரண்டு தசாப்தங்களில் இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகும். இது கிட்டதட்ட 21.6 மில்லியன் அதிகரித்துள்ளது. கிரேட்டர் கார்ட்டூமின் ([[கர்த்தூம்]], [[ஒம்டுர்மன்]], [[வடக்கு கார்ட்டூம்]] உள்ளடங்கி) மக்கள் தொகை துரிதமாக வளர்கின்றது. இதன் மக்கள் தொகை 5.2 மில்லியனாக கணக்கிடப்பட்டுள்ளது. + + +[[பகுப்பு:சூடான்| ]] +[[பகுப்பு:முன்னாள் பிரித்தானியக் குடியேற்றங்கள்]] +[[பகுப்பு:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்]] + + + +போரும் பெயர்வும் (நூல்) + +இது திருக்கோணமலையில் பிறந்து வாழ்ந்துவரும் தாமைரைத்தீவான் என்று அறியப்படும் கவிஞரின் நூலாகும். + +இந்நூல் ஈழத்து உள்நாட்டுப்போர், இடப்பெயர்வுகள் குறித்த பல தகவல்களை கவிதையாக தருகிறது. +புவியின் உருவாக்கம் தொடக்கம், மன்னராட்சிக்காலம், ஐரோப்பிய ஆக்கிரமிப்பு, சிங்கள ஆக்கிரமிப்பு என்று காலவாரியாக அத்தியாயங்கள் வகுக்கப்பட்டுள்ளன. +கவிதைகள் அனைத்தும் மரபுக்கவிதைகள். +சம்பவங்கள் பெரும்பாலும் திருக்கோணமலை மாவட்ட கிராமங்களின் போர்க்கால பாதிப்புகளை பதிவுசெய்கின்றன. + +மொத்தம் பதின் மூன்று அத்தியாயங்களை பத்துப்பத்து பாடல்களாக இந்நூல் கொண்டிருக்கிறது. + + +கருத்துரிமை பற்றி மனிதவள மேம்பாட்டு கேட்போர் கூடத்தில் என்னை பேசவைத்த அமரர் சி. பற்குணம் அவர்களுக்கும், 1990ல் திருக்கோணமலை மாவட்டத்தில் காணாமற்போனோருக்கும் இநூல் படையலாகட்டும் +-தாமரைத்தீவான் (போரும் பெயர்வும்) + + + + +குறுங்கதை : நூறு (நூல்) + + + + + +தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் (நூல்) + +தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் என்பது, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர், சுப்பிரமணியம் வித்தியானந்தன் நினைவுப் பேருரையின் அச்சுப்பதிப்பு ஆகும். 1993 ஆம் ஆண்டில், இந்த முதலாவது பேருரையை நிகழ்த்தியவர் இ. முருகையன். இவ்வுரையின் முழுமையான தலைப்பு தமிழில் வழங்கும் எழுத்துப் பெயர்ப்பு முறைகள் - ஒரு பரிசீலனையும் சில யோசனைகளும் என்பதாகும். + +எழுத்துப் பெயர்ப்பு என்பது, ஒரு மொழியில் வழங்கும் சொற்களை வேறொரு மொழிக்குரிய எழுத்துகளைக் கொண்டு எழுதுதல் ஆகும். பிற மொழிச் சொற்களைத் தமிழில் எழுத்துப் பெயர்ப்புச் செய்து பயன்படுத்துவது நீண்ட காலமாகவே இருந்துவருகின்ற ஒன்றுதான் எனினும் தற்காலத்தில் கூடுதலான அளவில் இடம்பெற்று வருகிறது. இதை முற்றாகத் தவிர்க்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க எழுத்துப் பெயர்ப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, இவ்வாறு ஏராளமான பிற மொழிச் சொற்களைத் தமிழுக்குக் கொண்டுவருவது தமிழ் வளர்ச்சிக்கு நல்லதா? என்ற கேள்வி எழுப்பப்படுவதுடன், தற்காலத்தில் பயன்பாட்டிலுள்ள முறைகளின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டித் திருந்திய முறைகளின் தேவை பற்றியும் பேசப்படுகிறது. எழுத்துப் பெயர்ப்பைத் திறம்படச் செய்வதற்குத் தமிழில் புதிய குறியீடுகள் வேண்டும் என்பதும் சிலரது கருத்து. இத்தகைய ஒரு சூழலில், "நம்மிடையே ஏற்கெனவே வழக்கில் உள்ள எழுத்துப் பெயர்ப்பு முறைகளை வகைப்படுத்தி விவரிப்பதும், அவற்றின் நன்மை தீமைகளைப் பரிசீலிப்பதும், விமர்சனம் செய்வதும் அவசியம்" என்ற அடிப்படையில் இந்த உரை தயாரிக்கப்பட்டுள்ளது என முருகையன் குறிப்பிடுகிறார். + +தான் எடுத்துக்கொண்ட பொருளை ஆசிரியர் பின்வரும் துணைத் தலைப்புக்களின் கீழ் ஆராய்கிறார்: + + + + + +மனிதரும் சமூக வாழ்வும் (நூல்) + + + + + +இருபத்தோராம் நூற்றாண்டில் மலையகத்தமிழர் எதிர்நோக்கும் சவால்கள் (நூல்) + +இலங்கை பெருந்தோட்டத்துறையில் பணியாற்றும் மலையகத் தமிழர் வாழ்வியல், சமூகம் ஆகியவற்றில் ஈடுபாட்டுடன் பணியாற்றும் இந்நூலாசிரியர், அச்சமூகத்தின் அரசியல், பொருளாதார, சமூக விடயங்களை ஆய்வு செய்து இந்நூல் மூலம் வழங்கியுள்ளார். + + + + +வத்திக்கான் நகர் + +வத்திக்கான் நகர் ("Vatican City") இத்தாலி நாட்டின் உரோம் நகரிலுள்ள ஒரு தன்னாட்சியுடைய சுதந்திர நாடாகும். இதன் அரசியல் தலைவர் திருத்தந்தையாவார். வத்திக்கான் நகரத்தில் இவரின் அதிகாரப்பூர்வ உறைவிடமும் அலுவலகமும் அமைந்துள்ள கட்டடம் திருத்தூதரக அரண்மனை என அழைக்கப்படுகிறது. எனவே கத்தோலிக்க கிறித்தவத்தின் தலைமை மையமாக வத்திக்கான் நகரம் திகழ்கிறது. இதன் மொத்தப் பரப்பளவு 44 எக்டேர் (108.7 ஏக்கர்) ஆகவும், 2017 கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 1000 ஆகவும் இருக்கிறது. ஆதலால், இதுவே பரப்பளவு மற்றும் மக்கட்தொகை அடிப்படையில் உலகின் மிகச்சிறிய நாடாகும். + +இது ஒரு திருச்சபை அல்லது புனித தலம்-முடியாட்சி நாடு (ஒரு வகையான அரசியலமைப்பு) இதை ஆள்பவர் ரோமின் பிஷப்பான - போப் ஆவார். இதன் உயர்நிலை அலுவலர்கள் அனைவரும் பல்வேறு தேசிய மரபுகளைச் சேர்ந்த கத்தோலிக்க குருமார்களாவர். 1377 ஆம் ஆண்டில் அவிஞானில் இருந்து போப் இங்கு திரும்பியதிலிருந்து, அவர்கள் இப்போது வத்திக்கான் நகரத்தில் உள்ள திருத்தூதரக அரண்மனையில் வசித்து வந்தனர். + +வத்திக்கான் நகரம் 1929ஆம் ஆண்டு முதல் நிலைத்திருக்கும் ஒரு நகர-நாடு. 1929இல் தன்னாட்சி நாடாக உருவெடுத்த வத்திக்கான் நகரத்தைக் கிறித்தவ சமயத்தின் தொடக்கத்திலிருந்தே நிலைத்துவருகின்ற திருப்பீடத்திலிருந்து (Holy See) வேறுபடுத்திக் காண வேண்டும். வத்திக்கான் நகரின் அரசாணைகள் இத்தாலிய மொழியிலும்; திருப்பீடத்தின் அரசாங்க ஆவணங்கள் இலத்தீன் மொழியிலும் வெளியிடப்படுகின்றன. இரு ஆட்சியமைப்புககளுக்கும் வெவ்வேறு கடவுச்சீட்டுக்கள் உள்ளன: நாடில்லாத திருப்பீடம் வெறும் அரசுதொடர்புடைய மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை பிறப்பிக்கின்றது; வத்திக்கான் நகரம் குடியுறிமை கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றது. இரண்டு அரசுகளுமே குறைந்த அளவிலேயே கடவுச்சீட்டுக்களை பிறப்பிக்கின்றன. + +1929ஆம் ஆண்டு இலாத்தரன் உடன்படிக்கை மூலமாக உருவான வத்திக்கான் நகர் ஒரு புதிய உருவாக்கமாகவே அமைந்தது. முந்தைய மத்திய இத்தாலியை உள்ளக்கியிருந்த திருத்தந்தை நாடுகளின்(756-1870) சுவடாக இதனை யாரும் கருதுவதில்லை. 1860-ஆம் ஆண்டு திருத்தந்தை நாடுகள் முழுதும் இத்தாலி முடியரசோடு சேர்க்கப்பட்டது. இருதியாக உரோமை நகரமும் அதன் சுற்று பகுதியும் 1870இல் சேர்க்கப்பட்டது. + +வத்திக்கான் நகரத்தில் புனித பேதுரு பேராலயம், சிஸ்டைன் சிற்றாலயம், வத்திக்கான் அருங்காட்சியகங்கள் போன்ற சமய மற்றும் கலாச்சார தளங்கள் உள்ளன. இவை உலகின் மிகப் பிரபலமான ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டுள்ளன. வத்திக்கான் நகரத்தின் தனித்துவமான பொருளாதாரமானது அஞ்சல்தலைகள் மற்றும் சுற்றுலாப் பொருட்களின் விற்பனை, அருங்காட்சியகங்களுக்கான நுழைவுக் கட்டணம், மற்றும் வெளியீடுகளின் விற்பனை ஆகியவற்றால் திரளும் நிதி ஆதரவைக் கொண்டுள்ளது. + +வத்திக்கான் நகரத்தின் பெயர் முதலில் லடான் ஒப்பந்தத்தில் பயன்படுத்தப்பட்டது, இது 11 பெப்ரவரி 1929 இல் கையெழுத்திடப்பட்டது, இது நவீன நகர-நாட்டை நிறுவியது. இப்பெயரா��து வத்திக்கான் மலையில் இருந்து எடுக்கப்பட்டது, நாட்டின் புவியியல் அமைந்த இடம் இதுவாகும். "வத்திக்கான்" என்பது எட்ருஸ்கன் குடியேற்றத்தின் பெயரிலிருந்து தோன்றியது, வத்திக்கான் அல்லது வத்திகம் என்பதன் பொருள் தோட்டம் என்பதாகும். + +நகரத்தின் உத்தியோகபூர்வ இத்தாலிய பெயர் சிட்டா டெல் வாட்டிகானோ என்பதாகும். மரபுசார் முறையில் ஸ்டாட்டோ டெல்லா சிட்டா டெல் வட்டிகானோ என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றின் பொருள் "வத்திக்கான் நகர நாடு" என்பதாகும்.  திரு ஆட்சிப்பீடம் (இது வத்திக்கான் நகரத்திலிருந்து வேறுபட்டது) மற்றும் கத்தோலிக்க தேவாலயமும் தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் மதத்திற்குரிய (ecclesiastical) லத்தீன் மொழியையே பயன்படுத்தினாலும், வத்திக்கான் நகரம் அதிகாரப்பூர்வமாக இத்தாலிய மொழியைப் பயன்படுத்துகிறது. இந்த நகரம் லத்தீன் பெயரில் வத்திக்கானே (Status Civitatis Vaticanæ) எனப்படுகிறது . இது திரு ஆட்சிப்பீடத்தின் அதிகாரபூர்வமான ஆவணங்களில் மட்டுமல்லாமல், பெரும்பாலான அதிகாரப்பூர்வ திருச்சபை மற்றும் போப்பாண்டவர் ஆவணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. + + +மேலும் வத்திக்கான் வங்கி என்று அழைக்கப்படும் IOR வங்கி உலகளாவிய நிதி நடவடிக்கைகளை நடத்துகிறது +வத்திக்கான் நகரம் அதன் நாணயங்களை சொந்தமாக தயாரிக்கின்றது.ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு சிறப்பு ஒப்பந்தம் காரணமாக ஜனவரி 1, 1999 முதல் அதன் நாணயமாக யூரோ பயன்படுத்தப்படுகிறது. +கிட்டத்தட்ட 2,000 பேர் வேலைக்கு எந்த வத்திக்கான் நகர நிர்வாகத்தில் 2007 ஆம் ஆண்டில் 6.7 மில்லியன் யூரோக்கள் ஒரு உபரி இருந்தது ஆனால் 2008 ல் 15 மில்லியன் யூரோக்கள் ஒரு பற்றாக்குறை ஏற்ப்பட்டது. +வாடிகன் நகரில் அதிகமாக பதிவாகும் குற்றங்கள் வழிப்பறி மற்றும் திருட்டு ஆகும்.முக்கியமாக தேவலயபகுதியில் இவை அதிகம் நடக்கின்றது.வாடிகன் நகர காவல்துறையினர் பொதுவாக எல்லை பாதுகாப்பு,போக்குவரத்து,சட்டம் ஒழுங்கு பராமரிப்பு ஆகிய பணிகளை கவனிகின்றது.இந்நகரில் சிறை அமைப்பு ஏதும் இல்லாததால் இந்நகரில் குற்றம் புரிவோர் இட்லலி நாட்டு சிறைகளில் அடைக்கப்படுகிறார்கள். + +குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் போப் தலைமையில் நடந்த விசாரணைகளைத் தொடர்ந்து 384 பாதி���ியார்களை போப் பெனடிக்ட் நீக்கினார். + + + + + +மேரி ஆன் மோகன்ராஜ் + +மேரி ஆன் மோகன்ராஜ் ("Mary Anne Mohanraj", ஜூலை 26, 1971) இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பாலின்ப இலக்கிய எழுத்தாளர். இரண்டு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறிய இவர் "Bodies in Motion" என்ற நாவல், சமையல் குறிப்புக்கள், காம இலக்கியத் தொகுப்புக்கள் உட்பட பத்து நூல்கள் வெளியிட்டுள்ளார். சிக்காகோ பல்கலைக் கழகழத்தில் கல்வி கற்று ஆங்கில இலக்கியத்தில் இளமாணிப் பட்டத்தை 1993 இல் பெற்றார். உற்றா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் கலாநிதி (முனைவர்) பட்டம் பெற்றுள்ளார். + + + + + +பை (கணித மாறிலி) + +பை (π) என்பது கணக்குத்துறையில் மிக அடிப்படையான சிறப்பு எண்களில் ஒன்று. ஒரு வட்டத்தின் சுற்றளவு (பரிதி), அதன் விட்டத்தைப்போல பை (π) மடங்கு ஆகும். இந்த பை (π) என்பது சற்றேறக் குறைய 3.14159 ஆகும். பழங்காலத்தில் இதனை தோராயமாக 22/7 என்றும் குறித்து வந்தனர். பை அறிவியலிலும் பொறியியல் துறையிலும் மிகவும் பயன்படுவதால், இதனைக் கணிக்க பல சமன்பாடுகளும் தோராயமாக கணக்கிடும் முறைகளும் உண்டு. + +பைக்கு கி.பி.400-500 ஆண்டுகளில் வாழ்ந்த இந்திய அறிஞர் ஆரியபட்டா அவர்கள் கணக்கிட்ட அளவு அண்மைக்காலம் வரையிலும் மிகத் துல்லியமானது. இன்றோ பையின் (π ) அளவை ஒரு டிரில்லியன் பதின்ம (தசம) எண்களுக்கும் மேலாக, மாபெரும் வல்லமை படைத்த கணினிகளைக் கொண்டு கணித்து இருக்கிறார்கள். என்றாலும் பையின் பதின்ம எண் வரிசையிலே, எண்கள் எந்த முறையிலும் மீண்டும் மீண்டும் வாராமல் இருப்பது எதிர்பார்க்கப்பட்டது எனினும் ஒரு வியப்பான செய்தி. இந்த பையின் பதின்ம(தசம) எண்கள் வரிசையில் முடிவேதும் இல்லை. இவ்வகை எண்கள் முடிவிலா துல்லியவகையைச் சேர்ந்த சிறப்பு எண்கள். இதனை வேர்கொளா சிறப்பு எண்கள் என அழைக்கப்படும். + +பை (π) என்னும் எழுத்தானது வட்டத்தின் விட்ட வகுதியை குறித்ததற்கு வரலாற்றுக் காரணம், கிரேக்கர்கள் வட்டத்தின் சுற்றளவை குறிக்க "பெரிமீட்டர்" ""περίμετρον"" (பரிதி) என்னும் சொல்லை ஆளுவதால் அதன் முதல் எழுத்தாகிய பை (π) யைப் பயன்படுத்தினர். இன்று அனைத்துலக மொழிகளிலும் இவ்வெழுத்தே +எடுத்தாளப்பெறுகின்றது. + +பையின் மதிப்பு சற்று கூடிய துல்லிய��்தோடு இதோ: + + +"π" என்பது இயல்பாகவே வடிவவியலில் வட்டம் உருண்டை, உருளை போன்றவற்றை பற்றிய உண்மைகளைக் குறிக்கும் பல சமன்பாடுகளில் (ஈடுகோள்களில்) வரக் காணலாம். + +கோணத்தில் 180° பாகை என்பது "π" ரேடியன் ஆகும் (ரேடியன் = ஆரையம்?) + + + + + + + + + + + + + + + +கீழ்க்காணும் தொடர் பின்னத்தில், முழு எண்கள் ஒற்றைப் படைத் தொடராக 1,3,5,7.. என்றும் பின்னத்தில் மேலே உள்ள எண்கள் ஈரடுக்கு எண்களாக (2 என்பதாகும். + +அடிப்படை வானவியல் போன்ற இயற்பியல் துறைகளில் உண்மைகளைக் காணும்பொழுது "π" என்னும் எண் பரவலாக வரக் காணலாம். + + +நிகழ்தகவிலும் புள்ளியியலிலும்formula_25 -ஐக் கொண்டுள்ள வாய்ப்பாடுடைய நிகழ்தகவுப் பரவல்கள் பல உள்ளன, அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன: + + +எந்தவொரு நிகழ்தகவு அடர்த்திச் சார்பு () -க்கும் formula_28 என்பதால் மேலே தரப்பட்டுள்ள வாய்ப்பாடுகளைப் பயன்படுத்தி formula_25 -க்கான ஏனைய தொகையீட்டு வாய்ப்பாடுகளைக் காணலாம். + + + + + + + +பாலின்ப இலக்கியம் + +காம இலக்கியம் என்பதில் பாலுணர்வுகளைத் தூண்டும் புனைவுகளும் பாலியற் செயல்களுக்கான வழிகாட்டிப் பிரதிகளும் அடங்குகின்றன. காம சூத்திரம் காம இலக்கியங்களுள் மிகப் பழமையானதொன்று. திருக்குறளிலும் இன்பத்துப்பால் பகுதியில் காதலோடு பாலின்பம் பற்றியும் எழுதப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக பின் வரும் குறட்பாக்களில் பெண்ணின் தோற்றமும் புணர்ச்சியின் போதான தழுவல் நிலையும் பாடப்பட்டிருக்கின்றன. + +பாலின்பக் கதைகள் (காம கதைகள்) என்பது பாலுணர்வை தூண்டும் கதைகளைக் குறிக்கிறது. புத்தக வடிவிலும் அச்சிடப்படும் இந்தக் கதைகள் செவி வழியாகவும் தலைமுறை தலைமுறையாக பயணிக்கின்றன. இப்போது கணினியில் நவீன வடிவம் பெற்றிருக்கின்றன. + +பெண்ணின் வலியையும், நிலையினையும் உணர்த்த பாலியற் சார்ந்த கவிதைகள் உதவுகின்றன. விபச்சார பெண்களின் வாழ்க்கை முறையை கவிதை வடிவில் பலர் எழுதியிருக்கின்றார்கள். ஆண்டாள் தொடங்கி நவீன கால பெண் எழுத்தாளர்கள் வரை பாலியற் சார்ந்த கவிதைகளை படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். + +கம்பன், வள்ளுவன் என பெரும் புலவர்களும் பாலியற் கவிதைகளை எழுத தவறவில்லை. + + + + +கணக்கீட்டுச் சமன்பாடு + +கணக்கீட்டுச் சமன்பாடு(Accounting equation) ஆனது இரட்டை கணக்கு பதியல் முறையின்(double-entry book-keeping)அடிப்படையினை விளக்கும். + +சொத்தானது உரிமையாளரின் மூலதனம் மற்றும் கடன் ஈந்தவர்களின் பணம் (பொறுப்பு)ஆகியவையே என்பதனை சமன்பாடு விளக்குகின்றது +உதாரணமாக, மாணவன் ஒருவன் ரூ.50,000 பெறுமதியான கணனி ஒன்றினை கொள்வனவு செய்கின்றான்.இதில் ரூ.30,000 +வினை தன் நண்பனிடம் கடனாகவும் மீதி ரூ.20,000 வினை தன் சொந்த பணத்திலிருந்தும் செலுத்தினான்.இங்கு கணக்கீட்டுச் சமன்பாட்டின்படி +சொத்து ரூ.50,000 ஆகவும் பொறுப்பு ரூ.30,000 ஆகவும் மூலதனமாக ரூ.20,000 ஆகவும் காணப்படும். + +இச்சமன்பாட்டினை விரிவாக்கம் இவ்வாறு காணப்படும் + +codice_1 + +இங்கு சொத்திலிருந்து பொறுப்பினை கழித்தால் உரிமையாளர் மூலதனம் பெறப்படும் + +ஒவ்வொரு கணக்கீயல் ஊடுசெயலும் (transaction) கணக்கீட்டு சமன்பாட்டின் ஏதாவது ஒரு உறுப்பினைப் பாதிக்கும்,அத்துடன் சமன்பாடு +இருபுறமும் சமப்படும்: + +இவைகள் சாதாரண உதாரணங்களாகும் + +கணக்கீட்டு சமன்பாட்டின் விரிவு பெற்ற வடிவமே ஐந்தொகையாகும்.இதனால் இச் சமன்பாட்டினை ஐந்தொகை சமன்பாடு எனவும் அழைக்கலாம். + + + + + +கோம்சோல் பன்முக இயற்பியல் மென்பொருள் + +கோம்சோல் பன்முக இயற்பியல் அல்லது கோம்சோல் மல்ரிபிசிக்ஸ் (COMSOL Multiphysics) அறிவியல் ஒப்புருவாக்கம் செய்ய உதவும் ஒரு அறிவியல் கணிமை மென்பொருள் ஆகும். இது மிகவும் விலை உயர்ந்த வியாபார மென்பொருள் ஆகும். இம்மென்பொருள் தற்போதே சற்றுப் பரவலான பயன்பாட்டுக்கு வருகின்றதெனலாம். + + + + + + +அகங்களும் முகங்களும் (நூல்) + +ஈழத்துக் கவிஞர் சு. வில்வரெத்தினத்தின் முதற் கவிதைத் தொகுப்பு இதுவாகும். இதில் வெளிவந்த கவிதைகள் ஆசிரியரின் கவிதைகளின் தொகுப்பான "உயிர்த்தெழும் காலத்திற்காக" தொகுதியில் வெளியாகியுள்ளன. + + + + + + +சார்பு + +கணிதத்தில் சார்பு ("function") என்பது ஒரு கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் மற்றொரு கணத்திலுள்ள ஒரேயொரு உறுப்போடு இணைக்கும் ஒரு தொடர்பாகும். முதல் கணம் சார்பின் ஆட்களம் என்றும் இரண்டாவது கணம் சார்பின் இணையாட்களம் என்றும் அழைக்கப்படும். ஆட்களத்தின் உறுப்புகள் "உள்ளீடுகள்" எனவும் இவ்வுள்ளீடுகளோடு இணைக்கப்படும் இணை ஆட்களத்திலுள்ள உறுப்புகள் "வெளியீடுகள்" எனவும் அழைக்கப்படுகின்றன. அனைத்து வெளியீடுகளைக் கொண்ட கணம் சார்பின் வீச்சு அல்லது எதிருரு எனப்படும். + +பொதுவாக சார்பு "f" என்ற குறிகொண்டு குறிக்கப்படும். சார்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான "function" என்பதின் முதல் எழுத்தே இக்குறி. +சார்புகளுக்கு ஒரு எளிய எடுத்துக்காட்டு: + +இத்தொடர்பின்படி, + +ஒரு சார்பின் உள்ளீடு "சார்பின்மாறி" (argument) என்றும் அந்த உள்ளீட்டிற்குரிய வெளியீடு "சார்பின் மதிப்பு" எனவும் அழைக்கப்படும். + +ஒரு சார்பின் உள்ளீடுகளும் வெளியீடுகளும் எப்பொழுதும் எண்களாகவே இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. அவை எந்தவொரு கணங்களின் உறுப்புகளாகவும் அமையலாம். எடுத்துக்காட்டாக, "வடிவவியல் வடிவங்களின் பக்கங்களின் எண்ணிக்கை" என்ற சார்பு ஒரு முக்கோணத்தை எண் மூன்றுடனும் சதுரத்தை எண் நான்குடனும், ... தொடர்புபடுத்தும். + +ஒரு சார்பினைப் பலவிதங்களில் குறிக்கலாம்: + +எடுத்துக்காட்டாக மேலே தரப்பட்ட எடுத்துக்காட்டில் உள்ள வரிசைச் சோடிகள்: <"x", "x"> (<–3, 9>). இந்த வரிசைச் சோடிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் வரையப்பட்ட சார்பின் வரைபடத்தின் மீதமைந்த ஒரு புள்ளிகளின் அச்சுத்தூரங்களாகக் கருதலாம். + +சம ஆட்களமும் சம இணை ஆட்களங்களும் கொண்ட அனைத்து சார்புகளும் கொண்ட கணம் "சார்பு வெளி" எனப்படும். சார்பு வெளியின் பண்புகளைப் பற்றி மெய்ப் பகுப்பியலிலும் மெய்ப்புனைப் பகுப்பியலிலும் அலசப்படுகிறது. + +சார்புகள் பொதுவாக ஒரு உள்ளீட்டை எடுத்துக்கொண்டு அதனை வெளியீடாக மாற்றும் ஒரு இயந்திரத்தைப் போன்றதாகக் கருதப்படுகிறது. பெரும்பாலும் உள்ளீடுகள்  "x" அல்லது  "t" (உள்ளீடுகள் நேரமாக இருந்தால்) எனக் குறிக்கப்படுகின்றன. வெளியீடுகள்  "y" எனக் குறிக்கப்படுகின்றன. சார்பு, "f" எனக் குறிக்கப்படுகிறது. + +அடிக்கடிப் பயன்படுத்தப்படும் சார்புகளுக்குச் சிறப்புப் பெயர்கள் அளிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக: + +ஒரு மெய்யெண் "x" -ன் "சிக்னம் சார்பு" பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது: + +ஒரு சார்பின் அனுமதிக்கப்பட்ட உள்ளீடுகளின் கணம் "சார்பின் ஆட்களம்" எனவும் கிடைக்கக் கூடிய வெளியீடுகளின் கணம் "சார்பின் வீச்சு" அல்லது "சார்பின் எதிருரு" எனவும் அழைக்கப்படும். வீச்சை உட்கணமாகக் கொண்ட கணம் ச��ர்பின் "இணையாட்களம்" எனவும் அழைக்கப்படுகின்றன. + +எடுத்துக்காட்டாக, சார்பின் ஆட்களம் மெய்யெண்கள் கணம் எனில் அதன் வீச்சகம் எதிரிலா மெய்யெண்களின் கணமாகவும் இணையாட்களம் மெய்யெண்களின் கணமாகவும் அமையும். இச்சார்பு "f" -ஐ மெய்யெண்கள் மீதான மெய்மதிப்புச் சார்பு எனப்படும். + +ஆட்களம் மற்றும் இணையாட்களத்தைக் குறிப்பிடாமல் ஒரு ""f" ஒரு சார்பு" என்று மட்டும் சொன்னால் போதாது. + +இதன் ஆட்களத்தை மெய்யெண் கணம் R -ன் உட்கணம், "x" ≤ 2 அல்லது "x" ≥ 3 ஆகவும் இணை ஆட்களத்தை R ஆகவும் எடுத்துக்கொண்டால்தான் இது ஒரு சார்பாக அமையும். + +வெவ்வேறு வாய்ப்பாடுகள் ஒரே சார்பைக் குறிக்கலாம். எடுத்துக்காட்டாக மற்றும் இரண்டும் ஒரே சார்பையே குறிக்கின்றன. +மேலும் ஒரு சார்பானது வாய்ப்பாட்டினால் மட்டுமே குறிக்கப்பட வேண்டியதோ அல்லது எண்கள் சம்பந்தப்பட்டதாக மட்டுமே அமைய வேண்டும் என்பதோ இல்லை. சார்புகளின் ஆட்களங்களும் இணையாட்களங்களும் எந்தவொரு கணமாகவும் இருக்கலாம். உள்ளீடுகளாக தமிழ் வார்த்தைகளையும் வெளியீடுகளாக அவற்றின் முதலெழுத்துக்களையும் கொண்ட சார்பை இதற்கு எடுத்துக்காட்டாகக் காட்டலாம். + +சாதாரணமாகப் பார்த்தால், ஒரு சார்பை "X" கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு "x" -உடனும் "Y" கணத்திலுள்ள ஒரேயொரு உறுப்பு "y" -ஐ இணைக்கும் ஒரு விதி எனலாம். ஆயினும் சார்பை ஒரு விதியாகக் கருதுவது அவ்வளவு துல்லியமானதல்ல. "விதி" அல்லது "இணைப்பது" என்ற சொற்கள் ஏற்கனவே வரையறுக்கப்படாமல் இருப்பதே இம்முறையில் ஒரு சார்பை வரையறுப்பதில் உள்ள குறைபாடு. இவ்வகையான சார்பின் விளக்கம் சாதாரணமாகப் பார்க்கும் போது பொருத்தமாகத் தோன்றினாலும் தருக்கரீதியாக நுட்பமானதல்ல. + +பல புத்தகங்களில், குறிப்பாகப் பாடப்புத்தகங்களில் இம்முறைசாரா வரையறை பயன்படுத்தப்பட்டாலும் உள்ளீடுகளும் வெளியீடுகளும் எப்படியும் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளாக அமைகின்றன என்பது கவனிக்கத் தக்கது.. + +ஒரு சார்பினை பின்வரும் பண்புகள் கொண்டவரிசைச்சோடிகளாலான தொகுப்பாக விவரிக்கலாம்: + + + +தரப்பட்ட இரு கணங்கள் "X" மற்றும் "Y" என்க. + +"X" கணத்திலுள்ள ஒவ்வொரு உறுப்பு "x" -க்கும் "Y" கணத்தில் அமையும் தனித்ததொரு உறுப்பு "y" இரண்டையும் கொண்ட வரிசைச் சோடிகள் அனைத்தையும் உறுப்புகளாகக் கொண்ட கணம் "F"ஆனது, "X" லிருந்து "Y" -க்��ு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பாகும். + +எடுத்துக்காட்டாக, , ("x" ஒரு மெய்யெண்) என்ற வரிசைச் சோடிகளின் கணம் மெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்பட்ட ஒரு சார்பாகும். + +மெய்யெண்கணத்திலிருந்து மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் வர்க்கப்படுத்தும் சார்பும், மெய்யெண்கணத்திலிருந்து எதிரில்லா மெய்யெண்கணத்திற்கு வரையறுக்கப்படும் வர்க்கப்படுத்தும் சார்பும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை. + +இவ்வகையாக சார்புகளை வரையறுப்பதில் இரு வெவ்வேறான விதங்கள் உள்ளன. ஆட்களமும் இணையாட்களமும் வெளிப்படையாக அல்லது மறைமுகமாக குறிக்கப்படலாம். + +முதல் வகை வரையறை: + +இதில் சார்பின் வரையறையில் வரிசைப்படுத்தப்பட்ட மூன்று உறுப்புகள் உள்ளன: + +("X", "Y", "F") + +ஒவ்வொரு வரிசைச் சோடியிலும் முதல் உறுப்பு ஆட்களத்திலும் இரண்டாவது உறுப்பு இணையாட்களத்திலும் அமையும். மேலும் ஆட்களத்தின் ஒவ்வொரு உறுப்பும் ஒரேயொரு வரிசைச்சோடியின் முதல் உறுப்பாக இருத்தல் வேண்டும் என்பது ஒரு தேவையான கட்டுப்பாடாகவும் இருக்கும். + +இரண்டாம் வகை வரையறை: + +இவ்வகையில் வரிசைப்படுத்தப்பட்ட சோடிகளைக் கொண்ட கணமாக சார்பு வரையறுக்கப்படுகிறது. + +"தொடர்பு": + +சார்புகளை தொடர்புகளின் ஒரு வகைப்பாடாகவும் கொள்ளலாம்: + +"X" லிருந்து "Y" கணத்திற்கு வரையறுக்கப்படும் "தொடர்பு" என்பது வரிசைச் சோடிகளைக் கொண்ட கணம். இவ்வரிசைச் சோடிகளில், formula_3 மற்றும் formula_4. + +"இடது-முழுமை மற்றும் வலது-தனித்த" என அமையும் சிறப்புத் தொடர்பாக ஒரு சார்பைக் கருதலாம். "X" மற்றும் "Y" கணங்கள் குறிப்பிடப்படாமல் இருந்தால் சார்புகளைத் தொடர்பின் ஒரு வகையாகக் கருதுவது இயலாது. + +சார்பின் உள்ளீடு "சார்பின் மாறி" எனவும் அந்த உள்ளீட்டிற்குரிய வெளியீடு "சார்பின் மதிப்பு" அல்லது அவ்வுள்ளீட்டின் "எதிருரு" எனவும் அழைக்கப்படும். ஆட்களத்தில் உள்ள ஒரு உறுப்பு "x" எனில் அதனோடு இணைக்கப்படும் இணையாட்களத்தின் தனித்த உறுப்பு "y" என்பது "x" -ன் எதிருரு அல்லது, "x" -ன் சார்பு மதிப்பு எனப்படும். ƒ -ன் கீழ் இணைக்கப்படும் "x" -ன் எதிருரு ƒ("x") எனக் குறிக்கப்படும். + +ஒரு சார்பின் வரைபடம் என்பது அச்சார்பின் வரிசைச் சோடிகளை ஆள்கூறுகளாகக் கொண்ட புள்ளிகளைக் கார்ட்டீசியன் தளத்தில் குறிப்பதால் கிடைக்கும் வரைபடமாகும். + +ஆட்கள��் "X" வெற்றுக்கணமாக இருக்கலாம். "X" = ∅ எனில் "F" = ∅. இணையாட்களம் "Y" = ∅ எனில் "X" = ∅ மற்றும் "F" = ∅. இத்தைகைய "வெற்றுச்சார்புகள்" பொதுவாக காணப்படுவதில்லை என்றாலும் கொள்கையளவில் அவை உள்ளதாகக் எடுத்துக்கொள்ளப்படுன்றன. + +ஒரு சார்பின் முறையான விளக்கமானது அச்சார்பின் பெயர், ஆட்களம், இணையாட்களம் மற்றும் இணைக்கும் விதி ஆகியவற்றைக் கொண்டிருக்கும். கீழே தரப்பட்டுள்ள குறியீடு இரு பகுதிகளைக் கொண்டுள்ளது: + + +முதல் பகுதி, + +இரண்டாவது பகுதி, + +இச்சார்பின் ஆட்களம் இயல் எண் கணம், இணையாட்களம் மெய்யெண்கணம். இச்சார்பு "n" -ஐ அதனை π -ஆல் வகுக்கப்பட்ட கணியத்துடன் இணைக்கிறது. + +இதனைச் சுருக்கமாக: +"f"("n"), "f ஆஃப் (of) n" என வாசிக்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு சுருக்கமாக எழுதும்போது ஆட்களமும்(N) இணையாட்களமும் (R) வெளிப்படையாகக் குறிக்கப்படுவதில்லை. + + +"X" கணத்திலிருந்து "Y" கணத்திற்கு வரையறுக்கப்பட்ட அனைத்து சார்புகளையும் கொண்ட கணம் "சார்பு வெளி" எனப்படுகிறது. + +இதன் குறியீடு: + + + +சார்பு, ƒ: "X" → "Y" எனில் ƒ ∈ ["X" → "Y"] என்பது தெளிவு. + + + + + + +தமிழகப் பழங்குடிகள் + +தமிழகப் பழங்குடிகள் தமிழ் நாட்டு மக்கள் தொகையில் 3.5% உள்ளனர் (2001 கணக்கெடுப்பு). தமிழகத்தில் 40க்கும் மேற்பட்ட வெவ்வேறு பழங்குடிகள் உள்ளனர். இருளர், காடர், குறும்பர்,தோடர் போன்றோர்கள் பழங்குடிகளில் சிலர். தமிழ் நாட்டில் 30 மாவட்டங்களில் பழங்குடிகள் வாழ்கிறார்கள். பழங்குடிகள் பெரும்பாலும் காடும் காடுசார்ந்த நிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் பணம் சார்ந்த பொருளாதாரத்தை அதிகமாகப் பயன்படுத்துவதில்லை. இவர்கள் தங்களுக்கென தனி மொழியும், குடும்ப மற்றும் குமுகப் (சமூகப்) பழக்க வழக்கங்களையும் கொண்டவர்கள். பெரும்பாலோருடை மொழிகள் தமிழுடன் நெருங்கிய தொடர்புடையது என்றும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததென்றும் அறிஞர்கள் கருதுகிறார்கள். முதன் முதல் எட்கர் தர்ஸ்டன் என்பாரும், பின்னர் அனந்த கிருஷ்ண அய்யர், முனைவர் அய்யப்பன் போன்றோரும் பழங்குடிகளைப் பற்றிய ஆய்வுகள் செய்துள்ளனர். இவ்வகையான மக்கள் தற்போதைய சூழலில் தங்களில் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கின்றனர். + + + + +காடர் + +காடர் என்போர் தமிழ் நாட்டில் உள்ள ப���ங்குடிகளில் ஓரின மக்கள். இவர்கள் கோயம்புத்தூரில் உள்ள ஆனைமலை, பரம்பிக்குளம் கங்கடவு பெரும்பாறை போன்ற இடங்களிலும், மற்றும் திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் மொழி கன்னட மொழிக் கலப்புள்ளது. + +இவர்களின் உடலமைப்பினை கொண்டு இவர்கள் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கக் கூடும் என்று தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். எட்கர் தர்ஸ்டன் எனும் மானிடவியலாளர் இவர்களை நீக்ராய்ட் இனமாக வகைப்படுத்துகிறார். + +கேரள மாநிலத்தின் கொச்சியின் கிழக்குப் பகுதியில் உள்ள ஏலமலைப் பகுதி தென் கேரள மலைப் பகுதி மற்றும் தமிழகத்தில் கோவை மாவட்ட ஆனைமலையின் பிரமன்கடவு, பன்னிக்குழி, சவமலை, நெடுங்குன்றம், கருங்குன்றம், அயன்குளம்,வாகைமலை போன்ற இடங்களில் பலநூறாண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். + +இவர்கள் யானை வேட்டையாடுதலை முக்கிய தொழிலாகக் கொண்டவர்கள். + +அ.கா.பெருமாள். (2005). தமிழகப் பழங்குடிகள். "மனோரமா இயர்புக் 2005", 302-318. + + + + + +தோடர் + +தோடர்கள் அல்லது தொதுவர் என்பவர்கள் தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 1,600 பேர் மட்டும் பேசக்கூடிய ‘தொதவம்’ என்ற மொழியைக் கொண்ட சிறு பழங்குடி இனத்தவர் ஆவர். + +ஆய்வாளர்கள் இவர்களைத் ‘தோடா’ என்றே பதிவுசெய்துள்ளனர். ஆனால் எந்தத் தொதவரும் தம்மைத் ‘தோடா’ என்று சொல்லிக்கொள்வதில்லை. மாறாகத் தூதா, தொதவா, ஒள் என்றே குறிப்பிட் டுக் கொள்கின்றனர். தொதவர் என்பதற்குப் பொருள் ‘மக்கள்’ என்பதாகும். தோடர்கள் தாம் வாழும் இடத்தை "மந்து" என்று கூறுகின்றனர். இம்மந்துகளில் எருமை மாடுகளை வளர்க்கின்றனர். பெரும்பாலும் இவர்கள் வாழ்க்கை எருமை மாடுகளைச் சுற்றியே அமைகின்றது. இதனால் இம்மக்களை மாந்தவியலாளர் செல்லமாக "எருமையின் குழந்தைகள்" என அழைப்பர். இவர்களுடைய வீடு, கோயில் போன்றவை அரைவட்ட வடிவமானவை. வீடுகளின் நுழைவாயில் மிகமிகச் சிறியது. நன்கு குனிந்துதான் உள்ளே செல்ல முடியும். குளிரைத் தவிர்ப்பதற்கும் விலங்குகள் உள்நுழையாமல் தடுப்பதற்கும் இந்த ஏற்பாடு எனப்படுகிறது. இவர்கள் மொழி பேச்சுத்தமிழ் என்று கால்டுவெல் அறிஞர் கருதினார். தோடர்கள் பேசும் மொழி தோடா மொழி எனப்படுகிறது. இந்த மக்களுடைய மொழி மிக விரைவாக அழிந்துவரும் மொழிகள�� பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இம்மக்கள் பாடுவதில் ஈடுபாடு உடையவர்கள். இவர்கள் நீலகிரியின் பைகாரா ஆற்றை மிகவும் புனிதமானதாகக் கருதுகின்றனர். + +தோடர்கள் தாங்கள் வணங்கும் தெய்வமான "கம்பட்ராயன்" சிந்திய வியர்வையிலிருந்து தோன்றியவர்கள் என்று நம்புகின்றனர். நாவல் மரத்தை, புனிதமான மரமாக மதிக்கின்றனர். தாங்கள் வாழும் குடியிருப்பை "மந்து" என்று அழைக்கின்றனர். + +தோடப் பெண்கள் துணிமணிகளில் பூ வேலைப்பாடு செய்வதில் தேர்ந்தவர்கள். ஆண்கள் மர வேலையில் திறன் படைத்தவர். பருவப் பெண்கள் தோளிலும் மார்பிலும் பச்சை குத்திக் கொள்கின்றனர். இம்மக்கள் சைவ உணவுப் பழக்கம் கொண்டோர். எருமைப் பாலை விரும்பிக் குடிப்பர். + +தோடர்குல ஆண்கள் வீரத்தினை வெளிக்காட்ட மந்துகளுக்கு எதிரே வைக்கப்பட்டிருக்கும் பெரிய கல்லை மார்புக்கு மேலே உயர்த்திக் காட்டுவர். + +தோடர்களில் இளையோர் வயதில் முதிர்ந்தோரைக் கண்டால் மண்டியிட்டு வணங்க வேண்டும். முதியவர் இளையவரில் நெற்றியில் தனது பாதத்தை வைத்து பதுக்-பதுக் என்று சொல்லி வாழ்த்துவார். + +தோடரின மக்கள் பாரம்பரியமாக உடுத்தும் ஆடைக்கு பூத்துக்குளி என்று பெயர். விழாக் காலங்களிலும் இறுதிச் சடங்குகளிலும் இந்த பாரம்பரிய ஆடையை உடுத்திக் கொண்டு தோடர் மக்கள் பங்கேற்பர். பருத்தியிலான வெண்ணிற ஆடையில் சிவப்பு, கருப்பு நிற நூலால் பூ வேலைப்பாடுகள் கொண்டிருக்கும். தோடர் இனப் பெண்கள் கையால் பின்னும் பூத்துக்குளி உடைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. + +இவர்கள் முற்காலத்தில் பல கணவர் மணமுறையைக் கொண்டிருந்தனர். இம்முறையின் படி தோடர் குலப் பெண் ஒருவனை மணந்து கொண்டால் அவனுக்கு மட்டுமன்றி, அவன் உடன் பிறந்தோருக்கும் மனைவியாகிறாள். திருமணம், மண முறிவு போன்றவற்றில் பெண்களுக்கு முழுச் சுதந்திரம் உண்டு. + +இவர்களின் வாழ்விடச்சூழலில் அதிக பங்கு வகிக்கும் எருமைகள் விருத்தி அடைய வேண்டி திசம்பர் மாதம் "மொற் பண்டிகை" கொண்டாடுகிறார்கள். இதற்க்காக உதகையின் தலைகுந்தா அருகில் அமைந்துள்ள முத்தநாடு என்ற இடத்தில் "மூன்போ" என்றழைக்கப்படும் கூம்பு வடிவ கோயில் மற்றும் "ஓடையாள்போ" என்ற கோயில்களில் ஆண்கள் அனைவரும் கூடி சிறப்பு வழிபாடு நடத்துவர். + + + + + + + +பழங்குடிகள் + +பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும் கடவுள், சமயம், மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் +கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கிறார்கள். ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். +பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். +பழங்குடிகள் என்போர், ஒரே பண்பாட்டுக்கு உரியவர்களாகவும், ஒரே மொழியை அல்லது கிளைமொழியைப் பேசுபவர்களாகவும், பொது வரலாற்றைக் கொண்டவர்கள் என்ற உணர்வு கொண்டவர்களாகவும், மையப்படுத்திய அதிகார அமைப்பு இல்லாதவர்களாகவும் உள்ள ஒரு குழுவினர் எனப் பொருவாக வரையறுக்கப்படுகிறது. இக்குழுக்கள் குலங்களையும் (bands), கால்வழி (lineages) உறவுக் குழுக்களையும் தம்முள் அடக்கியவை. + + + + + +பூரி மாவட்டம் + +புரி ஒரிசா மாநிலத்தின் கிழக்குக் கரையோர மாவட்டமாகும். இது ஒரிசாவின் காலம் கடந்த வரலாறு, கலை மற்றும் பண்பாட்டிற்கு ஒர் உன்னத சான்றாக திகழ்கிறது. உலகப் புகழ் பெற்ற புரி ஜெகன்நாதர் கோயில் , கொனார்க் சூரியன் கோயில் மற்றும் பிப்பிலி ஆகிய இடங்கள் இம்மாவட்டத்தின் சிறப்புகள். + +புரி நகரத்தில் ஆண்டுதோறும், ஜெகந்நாதர், பலராமன் மற்றும் சுபத்திரைக்கு ந��ைபெறும் தேரோட்டம் உலகப் புகழ் பெற்றது. + + + + + +அனில் கும்ப்ளே + +அனில் கும்ப்ளே(AnilKumble (பிறப்பு: அக்டோபர் 17, 1970) இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்து வீச்சாளர் மற்றும் தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவர் ஆவார். இவர் 18 ஆண்டுகள் துடுப்பாட்டங்கள் விளையாடியுள்ளார். வலது கை சுழற்பந்து வீச்சாளரான இவர் 619 இலக்குகள் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக இலக்குகள் எடுத்தவர்கள் முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வோர்ன் ஆகியவர்களுக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ளார். இவர் ஜம்போ என்றும் அழைக்கப்படுகிறார். 1993 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டார். பின் 1996 ஆம் ஆண்டில் விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பால் சிறந்த வீரராகத் தேர்வானார். + +பெங்களூர், கருநாடகத்தில் பிறந்த இவர் பி. சி. சந்திரசேகரின் பால் ஈடுபாடு கொண்டு முழு நேர துடுப்பாட்ட வீரராக ஆனார். இவர் கருநாடக மாநிலத் துடுப்பாட்ட அணி சார்பாக முதல் தரத் துடுப்பாட்டத்தில் தனது 19 வயதில் விளையாடினார். இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டம் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரானது ஆகும். 132 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இந்திய அணியை தலைமேற்று நடத்தினார். 1990 ஆம் ஆண்டின் துவக்கத்தில் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவருக்கு நிரந்தர இடம் கிடைத்தது. மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 12 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 இலக்குகளை எடுத்தார். 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார். அதில் 7 போட்டிகளில் விளையாடி 15 இலக்குகளை எடுத்தார். அவரின் பந்து வீச்சு சராசரி 18.73 ஆகும். 1999 ஆம் ஆண்டில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அனைத்து இலக்குகளையும் வீழ்த்தி சாதனை படைத்தார். இதற்குமுன் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜிம் லேகர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். + +இந்தியக் குடியுரிமை விருதுகளில் நான்காவது பெரிய விருதாக கருதப்படும் பத்மசிறீ விருதினை 2005 ஆம் ஆண்டில் கும்ப்ளே பெற்றார். நவம���பர் 2008 ஆம் ஆண்டில் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார். அக்டோபர், 2012 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் செயலாளராக நியமனம் ஆனார். + +இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு அறிவுரையாளராக நியமனம் ஆனார். மேலும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டில் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையினால் "ஹால் ஆஃப் ஃபேமாக" அறிவிக்கப்பட்டார். + +அனில் கும்ப்ளே அக்டோபர் 17, 1970 இல் பெங்களூர், கருநாடகத்தில் பிறந்தார். இவரின் தந்தை கிருஷ்ணசாமி, தாய் சரோஜா. இவருக்கு தினேஷ் கும்ப்ளே எனும் சகோதரர் உள்ளார். இவர் சேத்தானா கும்ப்ளே என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு மயாஸ் கும்ப்ளே எனும் மகனும், ஸ்வாஸ்தி கும்ப்ளே எனும் மகளும் உள்ளனர். சேத்தானாவின் முதல் திருமணத்தில் பிறந்த ஆருனி கும்ப்ளே எனும் மகளை கும்ப்ளே தத்தெடுத்தார். + + + + + +கர்ட்லி அம்ப்ரோஸ் + +கர்ட்லி அம்ப்ரோஸ் என்றழைக்கப்படும் சர் கர்ட்லி எல்கான் லின்வால் அம்ப்ரோஸ் ( பிறப்பு செப்டம்பர் 21, 1963) மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். வலதுகை வேகப்பந்தாளரான அம்ப்ரோஸ் அன்ரிகுவாவைச் சேர்ந்தவர். இவரும் கொட்னி வோல்ஷும் தொடக்கப் பந்தாளர்களாக இணைந்து விளையாடிய 49 ரெஸ்ற் போட்டிகளில் மொத்தமாக 421 இலக்குகளை வீழ்த்தியுள்ளனர். 98 ரெஸ்ற்களில் விளையாடிய அம்ப்ரோஸ் 405 இலக்குகளை 20.99 என்ற சராசரியுடன் வீழ்த்தினார். இந்தச் சராசரியை விடச் சிறந்த சராசரியை மேற்கிந்தியர்களான மல்கம் மார்ஷல் (20.94), ஜோல் கானர் (20.97) ஆகிய இருவரும் மட்டுமே கொண்டுள்ளனர். + + + + +முகமது அசாருதீன் + +முகமது அசாருதீன் ("Mohammad Azharuddin", பிறப்பு பெப்ரவரி 8, 1963) இந்திய அணியின் முன்னாள் தலைவர், மட்டையாளர் மற்றும் அரசியல்வாதி. 1984 இல் தேர்வு போட்டிகளில் அறிமுகமாகிய அசாருதீன் தன் முதல் மூன்று தேர்வுப் போட்டிகளிலும் நூறு ஓட்டங்களைப் பெற்றார். இச்சாதனை இன்றுவரை வேறெவராலும் எட்டப்படவில்லை. வலது கைத் துடுப்பாளரான இவர் 99 தேர்வுப் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 6215 ஓட்டங்களைப் (சராசரி 45.03) பெற்றுள்ளார். துடுப்பாட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவருக்கு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தமையால் நூறாவது தேர்வுப் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார். இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். + +முகமது அசாருதீன் பெப்ரவரி 8, 1963 இல் ஐதராபாத்து இந்தியாவில் பிறந்தார். இவரின் தந்தை முகமது அசாருதீன் , தாய் யூசுஃப் சுல்தானா. இவர் ஐதராபாத்திலுள்ள "ஆல் செயின்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில்" பள்ளிப் படிப்பை நிறைவு செய்தார். பின் நிசாம் கல்லூரியில், உசுமானியா பல்கலைக்கழகம் வணிகப் பிரிவில் இலங்கலைப் பட்டம் படித்தார். + +முகமது அசாருதீன் இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக 1984 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். டிசம்பர் 31, 1984 இல் ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தாவில் நடைபெற்ற இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் நூறு ஓட்டங்கள் அடித்தார். தேர்வுத் துடுப்பாட்டங்களில் மொத்தம் 22 நூறுகள் அடித்துள்ளார். இவரின் சராசரி 45 ஆகும். மேலும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 7 முறை நூறு ஓட்டங்களும் சராசரி 37 ஆகும். களத் தடுப்பாட்டக்காரராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் 156 "கேட்ச்சுகள்" பிடித்துள்ளார். மொத்தம் 99 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக 199 ஓட்டங்கள் எடுத்தார். இது தான் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் இவரின் அதிகபட்ச ஓட்டங்களாகும். 300 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் விளையாடிய முதல் வீரர் எனும் சாதனையைப் படைத்தார். முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக நூறு ஓட்டங்கள் அடித்தவர் எனும் சாதனையைப் படைத்தவர் ஆவார். + +கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டில் இந்தியத் துடுப்பாட்ட அணியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இவரின் தலைமையில் இந்திய அணி மொத்தம் 47 தேர்வுத் துடுப்பாட்டங்களிலும், 174 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 90 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். செப்டம்பர் 2, 2014 இல் இந்தச் சாதனைய��னை மகேந்திரசிங் தோனி தகர்த்தார். 14 தேர்வுத் துடுபாட்டப் போட்டிகளில் இவரின் தலைமையில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. பின் 21 போட்டிகளி வெற்றி பெற்று சௌரவ் கங்குலி இநதச் சாதனையை தகர்த்தார். + +2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற துடுப்பாட்டப் போட்டிகளில் ஊழல் குற்றம் சாட்டப்பட்டார். தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணித் தலைவர் ஹான்ஸி குரொன்யே அசாருதீன் தான் எனக்கு தரகரை அறிமுகம் செய்து வைத்தார் எனக் கூறினார். நடுவண் புலனாய்வுச் செயலகத்தின் அறிக்கையின் படி இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் மற்றும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவருக்கு வாழ்நாள் தடை விதித்தது. துடுப்பாட்டப் போட்டிகளில் வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட முதல் வீரர் ஆனார். + + + + +குமுதினி படகுப் படுகொலைகள், 1985 + +குமுதினிப் படுகொலைகள் அல்லது குமுதினி படகுப் படுகொலைகள் என்பது 1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர். + +நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள். பின்னர் அவர்களை வாள்களாலும் கத்திகளாலும் வெட்டிக் கொன்றனர். + +சாட்சியங்கள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் பதியப்பட்டன. பொது வேலைகள் திணைக்களத்திடம் இருந்து தற்போதைய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழிருந்த குமுதினி 1960களில் இலங்கை அரசால் நெடுந்தீவுக்கு போக்குவரத்துச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. அன்றில���ருந்து இன்று வரை நெடுந்தீவு மக்களை வெளியுலகத்தொடர்பில் வைத்திருக்க உதவிய படகு இதுவாகும். இயந்திர அறை முன்பகுதி பின்பகுதி என மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது. + +குமுதினி படகு 1985 மே 15 காலை 7:15 மணிக்கு நெடுந்தீவு மாவலித் துறைமுகத்தில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்டது. நயினாதீவு நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது புறப்பட்ட அரைமணி நேரத்தின் பின் நடுக்கடலில் கண்ணாடி இழைப் படகில் வந்த இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டது. ஆறு பேர் முக்கோண கூர்க்கத்தியும் கண்டங்கோடலிகள் இரும்புக்கம்பிகள் சகிதம் குமுதினியில் ஏறினர். பின்புறமிருந்த பயணிகளை இயந்திர அறையின் முன்பக்கம் செல்லுமாறு மிரட்டினர். அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர். + +பின்புறம் இருபுற இருக்கைகளுக்கு நடுவே பலகைகளினால் இயந்திரத்தில் இருந்து பின்புறம் செல்லும் ஆடு தண்டுப்பகுதியை அவர்கள் அகற்றினர். இருக்கை மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட சுமார் 4 அடி ஆழமானதாக அது இருந்தது. + +இதன்பின் பணியாளர்கள் உட்பட ஒவ்வொருவராக உள்ளே அழைக்கப்பட்டனர். அரைகுறைத் தமிழில் அவர்கள் கதைத்தனர். குமுதினியின் இருபக்க வாசல்களிலும் உள்ளும் வெளியும் கடற்படையினர் இருந்தனர். ஒவ்வொருவராக கடற்படையினர் அழைத்து கத்தியால் குத்தியும் கண்டங்கோடலியால் வெட்டியும் இரும்புக்கம்பியால் தாக்கியும் கொன்று அந்த ஆடு தண்டுப்பகுதியில் போட்டனர். இப்படி கொல்லப்படுபவர்கள் எழுப்பும் அவல ஒலி முன்புறம் இருப்பவர்களுக்கு கேட்கக்கூடாது என்பதற்காக அவர்கள் பெயரையும் ஊரையும் உரக்கச் சொல்லுமாறு பணிக்கப்பட்டனர். அவலக் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் இருந்தவர்களும் உண்டு. கடுமையாகத் கடற்படை தாக்க குரல் எழுப்பியவர்கள் அதிகளவில் தாக்கப்பட்டு இறந்து விட்டார்கள் என கடற்படையினரால் கருதப்பட்டும் போடப்பட்டனர். பயணிகளில் ஒருவர் கடலில் குதிக்கவே அவருடன் சேர்ந்து வேறு சிலரும் கடலில் குதிக்கத் தொடங்கினர். இதனைக் கண்ட ஆயுத நபர்கள் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். + +நேரில் கண்டவர் கூறியதாவது: + +கிட்டத்தட்ட 45 நிமிடங்களின் பின்னர் கண்ணாடியிழைப் படகு அங்கிருந்து புறப்பட்டது. + +சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை ��ட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆனாலும் பன்னாட்டு மன்னிப்பு அவை இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது. 71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். + +பன்னாட்டு மன்னிப்பு அவையினர் இந்நிகழ்வில் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் விரிவான அறிக்கை ஒன்றை இலங்கை அரசுக்குச் சமர்ப்பித்து குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கெதிராக முறைப்படி சட்ட நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தியது. + +இப்படுகொலைகள் நயினாதீவு கடற்படைத்தளத்தைச் சேர்ந்தோரால் மேற்கொள்ளப்பட்டதென குற்றஞ்சாட்டப்பட்ட வேளையில் இலங்கை அரசின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத்முதலி கூறியதாவது: +தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகம் நவம்பர் 22, 2006 விடுத்த அறிக்கையில் படகில் 72 பேர் இருந்ததாகவும் 36 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறது. உயிர் தப்பியவர்கள் பலரின் வாக்குமூலங்களை அது வெளியிட்டிருக்கிறது. + + + + + +கிறெக் சப்பல் + +கிறெக் சப்பல் (பிறப்பு ஆகஸ்டு 7, 1948) முன்னாள் ஆஸ்திரேலியத் துடுப்பாளர். இவர் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகப் பணியாற்றியுள்ளார். தான் ஆடிய முதல் ரெஸ்ற், தான் தலைமை தாங்கிய முதல் ரெஸ்ற் மற்றும் தான் ஆடிய கடைசி ரெஸ்ற் ஆகிய மூன்றிலும் சதங்களைப் பெற்ற அபூர்வ சாதனையாளர். வலது கைத் துடுப்பாளரான இவர் தான் ஆடிய 87 ரெஸ்ற்களில் 48 இல் ஆஸ்திரேலிய அணித் தலைவராக இருந்தார். 7110 ரெஸ்ற் ஓட்டங்களை 53.86 என்னும் சராசரியில் பெற்ற கிறெக் 24 சதங்களையும் பெற்றுள்ளார். ஓய்வுபெறும் போது தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகள் அதிக "கேட்சுகளைப்" பிடித்தவர் எனும் சாதனை படைத்திருந்தார். + + + + + +சௌரவ் கங்குலி + +சௌரவ் சந்திதாஸ் கங்குலி (Sourav Chandidas Ganguly (சூலை 08, 1972) தாதா என அன்பாக அழைக்கப்படுகிறார். அதற்கு வங்காள மொழியில் மூத்த சகோதரர் என்பது அர்த்தமாகும். இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் வீரரும் அணித்தலைவரும் ஆவார். தற்போது இவர் வங்காளத் துடுப்பாட்ட அவையின் தலைவராக உள்ளார். சர்வதேச துடுப்பாட்ட அரங்கில் மிகச் சிறந்த அணித் தலைவராகவும் மட்டை��ாளராகவும் விளங்கினார்.வலது புறங்களில் பந்துகளை அடிப்பதில் சிறந்தவர் எனவே இவர் "காட் ஆஃப் தெ ஆஃப் சைட் (வலது புறத்தின் கடவுள்)" என அழைக்கப்படுகிறார். + +இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை நிர்வகிக்கும் நான்கு பேர்கொண்ட குழுவில் ஒவராகத் திகழ்கிறார்.இவர் உச்ச நீதிமன்றத்தினால் சனவரி 2016 இல் நியமனம் செய்யப்பட்டார். இந்தியன் பிரீமியர் லீக்கின் தொழில்நுட்பக் குழுவின் உறுப்பினராகவும் உள்ளார். + +சௌரவ் கங்குலி, இவரின் மூத்த சகோதரர் சினேஹாசிஷால் துடுப்பாட்ட உலகத்திற்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். நவீன துடுப்பாட்ட வரலாற்றில் இந்தியாவின் மிகச் சிறந்த அணித் தலைவராகக் கருதப்படுகிறார். அனைத்துக் காலத்திற்குமான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் சிறந்த வீரர்களுள் ஒருவராகத் திகழ்கிறார். இவரின் பள்ளிக்கூட துடுப்பாட்ட அணி மற்றும் மாநிலத் துடுப்பாட்ட அணிகளிலும் விளையாடியுள்ளார். ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது எட்டாம் இடத்திலும் , 10,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர், இன்சமாம் உல் ஹக் ஆகியோருக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திலும் உள்ளார். விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு 2002 ஆம் ஆண்டில் அளித்த தரவரிசையில் விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர்,பிறயன் லாறா,டீன் ஜோன்ஸ் மற்றும் மைக்கேல் பெவன் ஆகியோருக்கு அடுத்தபடியாக ஆறாவது இடத்தில் இவரின் பெயரை அறிவித்தது. + +இந்தியத் துடுப்பாட்ட அனியில் இடம் கிடைப்பதற்கு முன்பாக ரஞ்சிக் கோப்பை,துலீப் கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி வந்தார். பின் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடும் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் 131 இலக்குகள் அடித்து தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். இலங்கைத் துடுப்பாட்ட அணி, பாக்கித்தான் துடுப்பாட்ட அணி,ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிகளுக்கு எதிராக சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருது வென்றதன் மூலம் இந்திய அணியில் இவரின் இடம் நிரந்தரமானது. 1999 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இவரும் ராகுல் திராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்கள் சேர்த்து சாதனை படைத்தனர். தற்போது வரை இந்தச் சாதனை முறிய��ிக்கப்படாமல் உள்ளது. 2000 ஆம் ஆண்டில் எழுந்த சூதாட்டப் புகார் பிரச்சினைகள் மற்றும் உடல்நிலை மோசமான காரணத்தினால் அணித் தலைவர் பொறுப்பில் இருந்து சச்சின் டெண்டுல்கர் விலகினார். இதனால் தலைவர் பொறுப்பு கங்குலியிடம் வந்தது. 2002 ஆம் ஆண்டின் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது இவரின் மேலாடையைக் கழற்றியது மற்றும் வெளிநாடுகளில் அணி தோல்வியைத் தழுவியது போன்ற காரணங்களினால் இவர் விமர்சனத்திற்கு உள்ளானார். இவரின் தலைமையில் இந்திய அணி 2015 துடுப்பாட்ட உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரை சென்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியிடம் வீழ்ந்தது. இந்தியக் குடிமை விருதுகளில் விருதுகளில் ஒன்றான பத்மசிறீ விருதை 2004 இல் பெற்றார். + + + + +லூகா பசியோலி + +பிரா லூகா பார்டோலோமியோ டி பசியோலி ("Fra Luca Bartolomeo de Pacioli") சுருக்கமாக லூகா பசியோலி (1445 - 1517) இத்தாலிய நாட்டினைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர்,மற்றும் பிரான்சிஸ்கன் சபையைச் சேர்ந்த துறவியுமாவார். அத்துடன் இவர் லியனார்டோ டா வின்சியுடனும் சேர்ந்தும் பணியாற்றியிருக்கின்றார். கணக்கியல் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பின் காரணமாக கணக்கியலின் தந்தை என அழைக்கப்படுகின்றார். + +வெனிஸ் மற்றும் ரோம் நகரில் கல்வி கற்ற லூகா பசியோலி 1470 ம் ஆண்டில் துறவியானார்.1497 ம் ஆண்டு மிலன் நகரிற்குப் புலம் பெயரும் வரைக்கும்கணிதத்துறை ஆசிரியராக பணியாற்றினார். மிலன் நகரத்திலே அவர் டாவின்சியுடன் சேர்ந்து பணியாற்றியதுடன் டாவின்சிக்குப் கணிதம் போதிப்பவராகவும் விளங்கினார். 1514 ம் ஆண்டில் இறந்தார். + +லூகா பசியோலி கணிதவியல் சார்ந்து பலவித ஆக்கங்களை வெளியீட்டுள்ளார் அவற்றில் சில: + + +a person should not go to sleep at night until the debits equalled the credits! +வரவுகளும் செலவுகளும் சமப்படாவிடின் ஒருவன் நித்திரைக்குச் செல்லக் கூடாது + + + + + +பிரம்மபுத்திரா ஆறு + +பிரம்மபுத்திரா ஆறு ஆசியாவின் பெரிய ஆறுகளில் ஒன்றாகும். இவ்வாறு திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு திபெத்திலுள்ள உலகின் ஆழமான பள்ளத்தாக்கான யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு உட்பட பல பள்ளத்தாக்குகளின் வழி கிழக்கு நோக்கி பயணப்பட்டு நாம்சா-படுவா மலையருகே, தெற���கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, பின் சமவெளிப் பகுதியை அடைகிறது, சமவெளிப்பகுதியில் இவ்வாறு திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. + +அசாம் மாநிலத்தின் முதன்மை ஆறான பிரம்மபுத்திரா, ஒருசில இடங்களில் 10 கிமீ வரை அகலமுடையதாயிருக்கிறது. திப்ரூகட் அருகே அது +இரண்டாகப் பிரிகிறது. பிரிந்த அவ்விரு கிளைகளும் நூறு கிலோமீட்டருக்கு அப்பால் இணைகின்றன. இதனால் உருவாகியுள்ள தீவு மஜிலித்தீவு என்று +அழைக்கப்படுகிறது. ஆற்றால் உருவாக்கப்பட்ட தீவுகளில் இது உலகில் இரண்டாவது பெரியதாகும். இதன் குறுக்கே அசாமில் 4940 மீட்டர் நீளமும் 125 மீட்டர் அகலமும் உள்ள போகிபல பாலம் 2002ல் திறக்கப்பட்டது. 2017இல் பயன்பாட்டுக்கு வந்த9.15 கிமீ நீளமும் 12.9 மீ அகலமும் உடைய தோலா-சாதியா பாலம் அசாமையும் அருணாச்ச பிரதேசத்தையும் இணைக்கிறது, இது இந்தியாவின் நீளமான பாலம் ஆகும். அசாமிலுள்ள 2284 மீ நீளமுடைய நாரநாராயண் சேது பாலம் இரட்டை அடுக்கு பாலமாகும் கீழ் தளத்தில் தண்டவாளமும் மேல் தளத்தில் சாலையும் உள்ளது, இது 1998இல் திறக்கப்பட்டது. + +இதன் சராசரி ஆழம் 38 மீட்டர், அதிகபட்ச ஆழம் 120 மீட்டர் . மழை காலத்தில் வெள்ள பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு இவ்வாறுக்கு அதிகம். சராசரியான நீர் வெளியேற்றம் விநாடிக்கு 19,800 கன மீட்டர். + +இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது. மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, +திபெத்திலேயே சரி பாதிக்கும் மேல் பயணிக்கிறது. இது கங்கையின் கிளையாகிய பத்மாவுடன் இணைந்து மிகப்பெரிய கழிமுகத்தை உருவாக்கி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. + +பொதுவாக இந்தியாவில் பெண்பால் பெயரிட்டு அழைப்பது வழக்கம், ஆனால் இவ்வாறு 'புத்திரா' என்று முடிவதால், இது சிறப்பாக ஆண்பால் பெயரிட்டு வழங்கப்படுகின்றது. + +பிரம்புத்திரா கைலை மலை���்கு அண்மையிலுள்ள சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக கருதப்படுகிறது. கைலை மலைக்கு சற்று தொலைவிலுள்ள ஆங்சி பனியாற்றில் இருந்து உருவாவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இதன் நீளம் 3,848 கிமீ என்று சீன அறிவியல் கழகத்தின் செயற்கை கோள் நிழற்படத்தையும் ஆற்றை தொடர்ந்த தன் பயணம் மூலமும் லியு சோசுஅங் என்ற ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். சேமாயங்டங் பனியாற்றிலிருந்து உருவாவதாக சாமி பிரவவானந்தா 1930இல் கண்டறிந்து இருந்தார். + +உற்பத்தியாகும் இடத்திலிருந்து கிழக்காக இமய மலைத்தொடர் வழியாக 1,100 கிமீகளுக்கு மேல் பயணித்து பே என்ற இடத்தை கடந்ததும் வடக்கு வடகிழக்காக பயணித்து ஆழமான பள்ளத்தாக்குகளை உருவாக்கி பின் தெற்காகவும் தென்மேற்காவும் ஆழமான பள்ளதாக்குகள் வழியே பயணிக்கிறது. யர்லுங் இட்சாங்போ பெரும் செங்குத்து பள்ளத்தாக்கு இப்பகுதிலேயே உள்ளது. இதன் இருபுறமும் உள்ள மலைகளின் உயரம் 5,000 மீ. இந்த பயணித்திலேயே இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தை அடைகிறது. + +அருணாச்சலப் பிரதேசத்தில் இது சியாங் என அழைக்கப்படுகிறது. திபெத்தில் உயரமான இடத்தில் பயணித்த ஆறு விரைவாக உயரம் இழந்து சமவெளியை அடைகிறது. அந்த சமவெளி இது டிகாங் என அழைக்கப்படுகிறது. சமவெளியில் சுமார் 35 கிமீ தூரம் பாய்ந்த பின் இதனுடன் டிபாங் ஆறு சேருகிறது பின் அசாமிற்றிகுள் நுழைவதற்கு முன் லோகித் ஆறு சேருகிறது. அதன் பின்பே இவ்வாறு பிரம்மபுத்திரா என்று அழைக்கப்படுகிறது. போடோ பழங்குடிகள் இதை தங்கள் மொழியில் பர்லங்-பதூர் என அழைக்கின்றனர். அசாமில் இவ்வாறு சில இடங்களில் 8 கிமீக்கும் மேலான அகலத்துடன் பயணிக்கிறது. + +அசாமில் இவ்வாறு பெரியதாக எக்காலத்திலும் தண்ணீர் வற்றாமல் ஓடுகிறது. அசாமில் இமயமலையில் தோன்றும் பல ஆறுகள் இதனுடன் இணைகின்றன. இவற்றில் தான்சிறி, கோப்பிலி, டிகோகு, புரி-திகிங், சியாங், சுபான்சிறி, பர்ந்தி பரலி, மனசு, சங்கோசு ஆகியவை குறிப்பிடத்தக்கவை. டிபுர்கார், லக்சிமிபுர் மாவட்டங்ளில் இவ்வாறு இரு கிளைகளாக பிரிகிறது. வடக்கு கிளை கெர்குட்டியா சூடி என்றும் தென் கிளை பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது. சுபான்சிறி வடக்கு கிளை கெர்குட்டியா சூடியுடன் இணைகிறது. கிட்டதட்ட்ட 100 கிமீ பயணம் செய்த பின் அவை மீண்டும் இணைந்து ஓரே ஆறாக செல்��ிறது. அந்த இடைவெளியானது மாசுலி தீவு என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் பெரிய ஆற்றுத்தீவு ஆகும். சகுவகாத்தி அருகில் இதன் அகலம் ஒரு கிமீ, இதுவே அசாமில் இதன் குறுகிய அகலமாகும். அதனால் அங்கு சராய்காட் போர் 1676 மார்ச்சில் நிகழ்ந்தது. சராய்காடிலேயே முதல் சாலை, ரயில் தண்டவாளம் உடைய ஈரடக்கு பாலம் 1962 ஏப்பிரலில் அமைக்கப்பட்டது. . அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. + +வங்க தேசத்தில் பிரம்பபுத்திரா என்ற பெயருடன் நுழையும் இவ்வாறு இதன் நீளமான துணையாறான தீசுட்டா இதனுடன் கலந்த பின் சற்று கீழே இரண்டாக பிரிகிறது. மேற்கிலுள்ள பெரிய கிளையும் அதிக நீர் செல்வதுமான கிளைக்கு சமுனா என்று பெயர், கிழபுற சிறிய கிளைக்கு கீழ் பிரம்மபுத்திரா அல்லது பழைய பிரம்மபுத்திரா என்று பெயர் சிறிய கிளையான இது முற்காலத்தில் பெரிய கிளையாக இருந்தது. 240 கிமீ ஓடும் சமுனாவானது வங்கத்தில் பத்மா என்றழைக்கப்படும் கங்கையுடன் இணைந்து பத்மா என்ற பெயரிலேயே ஓடுகிறது. + +பழைய பிரம்மபுத்திரா டாக்காவுக்கு அருகில் மேக்னா ஆற்றுடன் இணைகிறது. பத்மா ஆறு சான்டபூர் என்னுமிடத்துக்கு அருகில் மேக்னாவுடன் இணைகிறது. பத்மா இணைந்தபின் அவ்வாறு மேக்னா என்ற பெயருடனே ஓடி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. + +பிரம்மபுத்திரா ஆற்றின் வடிநிலம் 661 334 சதுர கிமீ ஆகும். பல தற்காலிக மணல் மேடுகளை கொண்டுள்ள இது தன் போக்கை மாற்றிக்கொள்ளும் ஆற்றுக்கு நல்ல எடுத்துக்காட்டாகும். வங்காள தேசத்தில் சமுனா ஆறு உள்ள பகுதி இமயமலை உருவாகும் நில ஓடு மோதல் செயலாற்றும் பகுதியும் மலையை ஒட்டி உருவாகும் வங்காள படுகை தோன்றுமிடமாகும்.பல ஆராய்ச்சியாளர்கள் வங்கத்தின் பல பெரிய ஆறுகள் அமைந்துள்ள இடமே நில ஒட்டு கட்டமைப்புக்கு அடிப்படையான காரணம் என ஊகிக்கிறார்கள். உரசுமுனை தணிவதன் காரணமாக நில ஓடு கட்டமைப்பின் வலிமையற்ற பகுதிகளாக இப்போதுள்ள கங்கா-பத்மா-சமுனா ஆறுகள் ஓடும் பகுதி உள்ளதென மார்கனும் தெலன்டிர்ரேவும் 1959இல் கண்டறிந்தார்கள். 1999இல் சிச்மோன்மெர்கன் இக்கூற்றை மறத்து சமுனா ஆற்றின் அகலம் மாறுவது இந்த உரசுமுனைக்கு எதிர்வினையாக என்றும் மேற் புறத்தில் ஓடும் ஆற்றின் பகுதியில் வண்டல் அதிகம் சேருவதற்கும் உரசுமுனையே காரணமென்றும் கூறுகிறார். தன் கூற்றுக்கு ஆதாரமாக சில நிழற்படங்களை காட்டிய இவர் பாகபந்து பல்நோக்கு பாலம் ஆற்றின் கீழ் பகுதியிலுள்ள ஆற்றின் அகலமானது உரசுமுனையால் பாதிக்கப்படுகிறது என்கிறார். இமயமலையில் ஏற்படும் மண் அரிப்பின் காரணமாக கழிமுகத்தின் நீளம் காம்பிரியன் காலத்து கழிமுகத்தை விட சில நூறு மீட்டர்கள் அதிகமாகியுள்ளதுடன் கழிமுகத்தின் தடிமனும் பெரிதும் அதிகமாகியுள்ளது. + +கங்கை(பத்மா)-பிரம்மபுத்திரா சராசரியாக வினாடிக்கு 30,770 கன மீட்டர் நீரை ( 700,000 கன அடி) கடலுக்குள் வெளியேற்றுகிறது, இது உலக அளவில் மூன்றாவது அதிக நீர் வெளியேற்றமாகும். இதில் பிரம்ம்புத்திராவின் பங்கு மட்டும் 19,800 கன மீட்டர் ஆகும். பிரம்மபுத்திரா-கங்கை 1.84 பில்லியன் டன்கள் வண்டலை ஆண்டுதோறும் கொண்டுவருகின்றன இது உலகத்திலேயே அதிகமாமகும். + +முன்பு பிரம்மபுத்திராவின் கீழ் பகுதி சமல்பூர், மைமென்சிங் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தது. 1762 ஏப்பிரலில் ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் தீசுட்டா ஆறு கலந்ததிற்கு கீழ் உள்ள பகதூராபாயிண்ட் என்ற இடத்திலிருந்து தெற்கு நோக்கி சமுனாவாக பெருமளவு நீருடன் பாயத்தொடங்கியது, இதற்கு முதன்மையான காரணம் நிலநடுக்கத்தால் வடக்கே சமல்பூரிலிருந்து தெற்கே நாராயணகன்ச் வரையுள்ள மாதவ்பூர் மேட்டுநிலம் பல அடி உயர்ந்ததே ஆகும். + +அதிகரிக்கும் வெப்பநிலையே மேற்புறத்திலுள்ள (தலைப்பகுதி) பிரம்மபுத்திராவின் நீர்பிடிப்பு பகுதிகளிலுள்ள பனி உருக முதன்மையான காரணமாகும்.t. ஆற்றின் நீர்வெளியேற்றம் மேற்புறத்திலுள்ள பனி உருகுவதால் கடுமையாக பாதிக்கப்படுகிறது (அதிகரிக்கிறது). பனி உருகுவதால் ஆற்றில் சேரும் வண்டல் ஆற்று நீரின் ஓட்டம் தடைபட காரணமாக உள்ளது. வெப்பத்தால் பனி உருகி அதிக நீரையும் வண்டலையும் ஆற்றில் சேர்ப்பது வெள்ளம் நில அரிப்பு போன்ற இடர்களை உருவாக்குகிறது. + + + + +அக்கியோ மொறிட்டா + +அக்கியோ மொறிட்டாஅல்லது அக்கியோ மொரீட்டா(盛田昭夫 "Morita Akio", நகோயா, ஜப்பான், ஜனவரி 26, 1921 - அக்டோபர் 03, 1999) மின்னியல் துறையில் பல பொருட்களை உற்பத்தி செய்து உலகின் முன்னனி தொழில் நிறுவனமாக விளங்கும் சோனி நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். ஜப்பானியத் தொழில் முனைவர் ; "��ேடு இன் ஜப்பான்" ("Made in Japan") என்ற புகழ் பெற்ற தன்வரலாற்று நூலை எழுதியவர். + +1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரீட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரீட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார் அதனால் பள்ளியில் படித்தபோதே மொரீட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன. சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை கழற்றி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் ஆர்வமுடன் இருந்தார்.பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். + +பட்டப்படிப்பு முடிந்ததும் ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றினார். அந்த சமயத்தில் மசாரு இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலாயினும் வளர்ச்சிக்கு இடமில்லாத மதுபானத் தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது. + +1946 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் குண்டுகள் துளைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதி வாரி கடையில் 20 ஊழியர்களை கொண்டு “டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்பரேஷன்” என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவனம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார் மொரீட்டா. + +அந்த நிறுவனம் உருவாக்கிய முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. மிகப்பெரியதாக இருந்தது. மேலும் போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. எனவே மொரீட்டா அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து வானொலிக்கான(டிரான்ஸ்சிஸ்டருக்கான) உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது. சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். + +தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த “சானி பாய்ஸ்” என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 இல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்பரேஷன் என்று மாற்றினார். + +இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வகையில் மாறுபட்ட மின்னியல் பொருட்களைச் செய்வதில் மொரீட்டா ஈடுபட்டார். அவரது புத்தாக்க சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. அவ்வாறு உருவானதே வாக்மேன் ஆகும். தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் ஒலிப்பதிவுக்கருவி கொண்டு வருவதையும் அதிலிருந்த வசதியின்மையும் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். + +1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரீட்டாவின் தொழில் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, ஒளிப்பதிவுக் கருவி எனப் பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரீட்டாவின் தலைமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆம் ஆண்டின் கணக���கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு மிகப் பிடித்த சின்னமாகத் தேர்ந்தெடுத்தனர். + +அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் புகழ் பெற்றது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரீட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விலகினார். + +மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட ஒலிப்பதிவுக் கருவி தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவரிடம் சோனி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்தார். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலைமை நிறுவன பொறுப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா. + +தரம்தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்கியோ மொரீட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் இதழ் வெளியிட்ட உலகப் பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் இதழ் வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்கியோ மொரீட்டாதான். + +உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது,பிரான்ஸின் மிக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது,ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் +ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவர் பெற்றுள்ளார். + +இவரது தன்வரலாற்று நூல் மேட் இன் ஜப்பான்(Made in Japan) என்பதாகும். 1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரீட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி. + + + + + +அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் + +அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் அல்லது ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம் (United Nations High Commissioner for Refugees) என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும், ஆதரவளிப்பதற்கும், அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். 14 டிசம்பர் 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட இவ்வமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் அமைந்துள்ளது. + +இவ்வமைப்பானது "ஐக்கிய நாடுகளின் உதவி மற்றும் மீள்குடியேற்ற நிர்வாகம்" மற்றும் "சர்வதேச அகதிகள் அமைப்பின்" வழிவந்த அமைப்பாகும். அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் 1954 இலும், 1981 இலும் சமாதானத்திற்கான நோபல் பரிசினை வென்றுள்ளது. இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று கவனிப்பதுடன் சர்வதேச அமைப்புக்களுடனும் சேர்ந்து செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது. + + + + + +கூகிள் எர்த் + +Google Earth (கூகிள் எர்த்) , அளவான செயல்பாடுகளை உடைய ஒரு இலவசப் பதிப்பு; +Google Earth Plus (கூகிள் எர்த் ப்ளஸ்) (விலக்கிக் கொள்ளப்பட்டது), கூடுதல் அம்சங்களை உள்ளடக்கியது; மற்றும் Google Earth Pro (கூகிள் எர்த் ப்ரோ)(வருடத்திற்கு 400$ ), வணிக ரீதியான பயன்பாட்டுக்கானது. + +2005-ல் Google Earth (கூகிள் எர்த்) என மறு வெளியீடு செய்யப்பட்ட இந்தப் பொருளானது தற்போது Microsoft Windows (மைக்ரோசாப்ட் விண்டோஸ்) (Microsoft Windows) 2000 (2000), எக்ஸ்பி (XP), விஸ்டா (Vista), மேக் ஓஎஸ் எக்ஸ் () 10.3.9 மற்றும் அதற்கும் மேற்பட்ட பதிப்புகள் லினக்ஸ் (Linux) (2006 ஜுன் 12-ல் வெளியிடப்பட்டது), மற்றும் ப்ரீ பிஎஸ்டி (). ஆகியவற்றில் இயங்கும் தனிக் கணிணி (personal computer)களில் பயன்படுத்தக் கிடைக்கிறது. Google Earth (கூகிள் எர்த்) ஃபயர்ஃபாக்ஸ் (Firefox), சஃபாரி 3 (Safari 3), ஐ ஈ6 () மற்றும் ஐஈ7 () ஆகியவற்றிற்கான பிரவுசர் ப்ளக்-இன் (2008 ஜுன் 2-ல் வெளியிடப்பட்டது) ஆகவும் கிடைக்கிறது. இது 2008 (2008) அக்டோபர் 27 (October 27) அன்று ஆப் ஸ்டோர் () இலிருந்து இலவசப் பதிவிறக்க��ாக ஐஃபோன் ஓஎஸ் (iPhone OS) இலும் கிடைக்கச் செய்யப்பட்டது. மேற்சேர்க்கப்பட்ட Keyhole (கீ ஹோல்) அடிப்படையிலான க்ளையன்ட்-ஐ வெளியிடுவதுடன் கூடுதலாக, Google (கூகிள் ) தங்களது இணைய அடிப்படையிலான வரைபட மென்பொருளுக்கு புவித்தரவுத் தொகுப்பிலிருந்து புகைப்படங்களை சேர்த்தது.ஜுன் 2005-ல் Google Earth (கூகிள் எர்த்)-ஐ பொதுமக்களுக்கு வெளியிட்டது 2005 மற்றும் 2006 க்கு இடையில் விர்ச்சுவல் குளோப்ஸ் () மீது ஊடகக் கவனத்தைப் பத்து மடங்கிற்கு மேல் அதிகரித்தது. அது புவியிடம் () தொழில் நுட்பங்கள் மற்றும் பயன்பாடுகளில் பொது மக்களின் ஆர்வத்தைத் தூண்டியது. + +Google Earth (கூகிள் எர்த்) புவிப்பரப்பின் மாறுபடும் துல்லியத்தன்மை உடைய செயற்கைக் கோள் புகைப்படங்களைக் காட்டுகிறது. அது பயனாளர்களை நகரங்கள் மற்றும் வீடுகளை செங்குத்தாகவோ சாய்வான () கோணத்திலோ தோற்றத்தைக் (perspective) காண வழிவகை செய்கிறது. (பறவையின் கண் பார்வை (bird's eye view)யையும் பார்க்கவும்)கிடைக்கக்கூடிய துல்லியத்தன்மையின் அளவானது இடங்கள் பற்றிய விருப்பம் மற்றும் பிரபலத்தை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது, ஆனால் பெரும்பாலான நிலப்பரப்பு (சில தீவுகளைத் தவிர்த்து) குறைந்தது 15 மீட்டர்கள் துல்லியத் தன்மை உடையதுமெல்போர்ன், விக்டோரியா (Melbourne, Victoria), லாஸ் வேகாஸ், நெவாடா (Las Vegas, Nevada), மற்றும் கேம்பிரிட்ஜ், கேம்பிரிட்ஜ் ஷயர் (Cambridge, Cambridgeshire) ஆகியவை 15 செமீ என்ற (6 அங்குலங்கள்) அளவில், அதிகபட்ச துல்லியத்தன்மைக்கான உதாரணங்கள் ஆகும்.Google Earth (கூகிள் எர்த்) பயனாளர்கள் சில நாடுகளில் முகவரியைத் தேட, அமைவிட ரேகை மதிப்புகளை உள்ளிட, அல்லது ஒரு இடத்தைக் கண்டறிய வெறுமனே சுட்டெலியை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. + +புவிப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளுக்கு கிட்டத்தட்ட செங்குத்து நிலையிலிருந்து இரு பரிமாணப் படங்களே கிடைக்கின்றன. இதை சாய்வான கோணத்திலிருந்து பார்க்கும்போது, கிடை மட்டத்தில் தூரமாக உள்ள பொருட்கள் சிறியதாகக் காணப்படுவதைப் போல ஒரு தோற்றம் உண்டு, ஆனால் அது மிகப்பெரிய ஒரு புகைப்படத்தைப் பார்ப்பது போலத் தோன்றும், முப்பரிமாணத் தோற்றத்தைப் போன்று இருக்காது. + +புவிப்பரப்பின் பிற பகுதிகளுக்கு நிலப்பரப்பு மற்றும் கட்டிடங்களின் முப்பரிமாணப் படங்கள் கிடைக்கின்றன. Google Earth (கூகிள் எர்த்) நாசா (NASA)வின் ஷட்டில் ரேடார் டோபோகிராபி மிஷ���் () (எஸ்ஆர்டிஎம்)-ஆல் சேகரிக்கப்பட்ட டிஜிட்டல் எலிவேஷன் மாடல் () டிஈஎம் தரவுகளைப் பயன்படுத்துகிறது. பிற பகுதிகளைப் போன்று இருபரிமாணத்திற்குப் பதிலாக கிராண்ட் கேன்யான் (Grand Canyon) அல்லது எவரெஸ்ட் சிகரம் (Mount Everest) ஆகிய இடங்களை முப்பரிமாணத்தில் () காண இயலும் என இதற்கு அர்த்தம் .நவம்பர் 2006 முதல் எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட பல மலைகளின் முப்பரிமாணத் தோற்றங்கள், எஸ்ஆர்டிஎம் கவரேஜ்-ல் உள்ள இடைவெளிகளை நிரப்ப, துணை டிஈஎம் தரவுகளைப் பயன்படுத்தி மேம்படுத்தப்பட்டுள்ளன + +இந்தச் செயல்பாடுகளைப் பயன்படுத்தும் பலர் தங்களது சொந்தத் தரவுகளைச் சேர்த்து, அவற்றை கீழுள்ள இணைப்புப் பிரிவில் குறியிடப்பட்டுள்ள பிபிஎஸ் அல்லது வலைப்பூ போன்ற பல்வேறு மூலங்களின் வழியாகக் கிடைக்கச் செய்கிறார்கள். Google Earth (கூகிள் எர்த்) புவிப்பரப்பின் மேலுள்ள அனைத்து வகைத் தோற்றங்களையும் காட்ட இயலும், மேலும் அது ஒரு இணைய வரைபடச் சேவை () க்ளையண்ட் ஆகும்.Google Earth (கூகிள் எர்த்) Keyhole (கீஹோல்) குறியீட்டு மொழி () (கே எம் எல்) மூலமாக முப்பரிமாண புவியிடம் () தரவுகளை நிர்வகிக்க உதவுகிறது. + +Google Earth (கூகிள் எர்த்). ஸ்கெட்ச் அப் (SketchUp) என்ற ஒரு முப்பரிமாண(3D) மாதிரியாக்கல் () நிரலைப் பயனாளர்கள் உள்ளீடு செய்த கட்டடங்கள் மற்றும் அமைப்புகளின் முப்பரிமாணத் தோற்றத்தைக் காட்டும் திறனுடையது.Google Earth (கூகிள் எர்த்)-ன் முந்தைய பதிப்புகளில் (பதிப்பு 4-க்கு முந்தையது), ஒரு சில நகரங்களில் மட்டும் கட்டடங்கள் முப்பரிமாணத்தில் காட்டப்பட்டன, மேலும் தோற்றஅமைப்பு இல்லாமல் சுமாரான வடிவத்தையே காட்டின.உலகெங்கிலும் உள்ள நிறையக் கட்டடங்கள் மற்றும் அமைப்புகள் தற்போது விரிவான முப்பரிமாண அமைப்பில் காட்டப்படுகின்றன; அவை ஐக்கிய அமெரிக்க நாடுகள், கனடா, அயர்லாந்து, இந்தியா, ஜப்பான் ஐக்கிய ராஜ்ஜியம், ஜெர்மனி, பாகிஸ்தான் (Pakistan) ஆகிய நாடுகளையும் மேலும் ஆம்ஸ்டெர்டாம் (Amsterdam) மற்றும் அலெக்ஸாண்ட்ரியா (Alexandria) ஆகிய நகரங்களையும் உள்ளடக்கும் (ஆனால் அவை மட்டுமே அல்ல). 2007, ஆகஸ்ட்-ல், ஹாம்பர்க் (Hamburg) கட்டிட முகப்பு உள்ளிட்ட தோற்றஅமைப்புகள் முற்றிலும் முப்பரிமாணத்தில் காட்டப்பட்ட முதல் நகரமானது. 2008, ஜனவரி 16-ல் ஐரிஷ் நகரமாகிய வெஸ்ட்போர்ட் () முப்பரிமாணத்தில் Google Earth (கூகிள் எர்த்)-ல் சேர்க்கப்பட்டது. வெஸ்ட்போர்ட் முப்பரிமாண” மாதிரியானது முப்பரிமாணத்தில் தோற்றங்களை உருவாக்கும் நிறுவனமான AM3TD-ஆல் நீண்ட தூர லேசர் ஸ்கேனிங் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் புகைப்படவியல் ஆகியவற்றைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. மேலும் அதுவே அவ்வாறு உருவாக்கப்பட்ட முதல் ஐரிஷ் நகராமாகும்.அது தொடக்கத்தில் உள்ளுர் அரசாங்கத்திற்கு அவர்களுடைய நகர்த் திட்டமிடல் (town planning) செயல்பாடுகளுக்கு உதவ உருவாக்கப்பட்டதால், Google Earth (கூகிள் எர்த்)-இல் எந்த ஒரு இடத்திலும் காணப்படக்கூடிய அதிகபட்ச துல்லியத்தன்மை உடைய அசல் புகைப்பட தோற்றஅமைப்புகளைக் கொண்டிருக்கும். உலகெங்கிலும் உள்ள சில கட்டடங்கள் மற்றும் அமைப்புகளுக்கு முப்பரிமாணத் தோற்றங்கள் Google (கூகிள் )-ன் 3D வேர்ஹவுஸ் மற்றும் பிற இணைய தளங்கள் வழியாகக் கிடைக்கின்றன. + +சமீபத்தில், Google(கூகிள்) பயனாளர்கள் ஒவ்வொரு 200 அடிகளிலும் அமைந்துள்ள வளையங்களில் அதேசமயத்தில் போக்குவரத்து வேகத்தைக் கண்காணிக்க வழிவகை செய்யும் ஒரு அம்சத்தைச் சேர்த்துள்ளது. 2008, ஏப்ரல் 15-ல் வெளியிடப்பட்ட பதிப்பு 4.3 நிரலில் Google Street View(கூகிள் வீதிக் காட்சி) () பல இடங்களில் தெருவில் இருப்பதைப் போன்ற காட்சியை வழங்க நிரலுக்கு வழி வகுக்கும் விதமாக அது நிரலுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. + +2009, ஜனவரி 17 அன்று, Google Earth (கூகிள் எர்த்)-ன் சமுத்திரப் படுகைப் படங்கள் முழுவதும் எஸ்ஐஓ, என்ஓஏஏ, யுஎஸ் கடற்படை, என்ஜிஏ மற்றும் ஜிஈபிசிஓ ஆகியவற்றின் புதிய படங்களால் மேற்சேர்க்கை செய்யப்பட்டன. இந்தப் புதிய படங்கள் மாலத்தீவுகளில் (Maldives) உள்ள பவளத்திட்டுக்கள் போன்ற சிறிய தீவுகளை, அவற்றின் கரைகள் முழுமையாக எல்லையிடப்பட்டிருந்தபோதும் புலப்படாமல் செய்துவிட்டன. + +பதிப்பு 5.0-லிருந்து Google Earth (கூகிள் எர்த்) 37 மொழிகளில் கிடைக்கிறது (அவற்றில் நான்கு இரண்டு வகைகளில்): +2006, டிசம்பர் –ல் Google Earth (கூகிள் எர்த்) விக்கிபீடியா (Wikipedia) மற்றும் பனோராமியோ (Panoramio)-உடன் ஒருங்கிணைப்பை உள்ளடக்கிய “புவியியல் இணையம்” எனப்படும் ஒரு புதிய அடுக்கைச் சேர்த்தது.விக்கிபீடியாவில் வழியாக இட அமைப்பு ரேகை மதிப்புகளுக்காக உள்ளீடுகள் பதிவு செய்யப்படும். என்ற செயல்திட்டத்திலிருந்து ஒரு சமூக அடுக்கும் உண்டு.அதிகமான இட அமைப்புரேகை மதிப்புகள் பயன்படுத்தப்படும்போது உள்நிறுவப்பட்ட விக்கிபீடியா அடுக்க�� விட, டிஸ்பிளேவில் வெவ்வேறு வகைகள் இருக்கும் மற்றும் வெவ்வேறு மொழிகளுக்கு ஆதரவளிக்கப்படும். பார்க்க: *டைனமிக் ரெஸ்ப். மாறாத அடுக்கு. 2007, மே 30 அன்று, தான் பனோராமியோ (Panoramio)-வை வாங்குவதாக Google(கூகிள்) அறிவித்தது. + +Google Earth (கூகிள் எர்த்) பதிப்பு வி4.2 - லிருந்து ஒரு ப்ளைட் சிமுலேட்டர் மறைக்கப்பட்ட அம்சமாக (). சேர்க்கப்பட்டுள்ளது கூகிள் எர்த் பதிப்பு 4.2 - லிருந்து ஒரு ப்ளைட் சிமுலேட்டர் மறைக்கப்பட்ட அம்சமாக (). சேர்க்கப்பட்டுள்ளது பதிப்பு 4.3-லிருந்து, இந்தத் தெரிவு கொடாநிலையில் மறைக்கப்படுவதில்லை.தற்போதுள்ள சில விமான நிலையங்களுடன் கூடுதலாக எஃப்-16 ஃபால்கன் போர்விமானம் (F-16 Fighting Falcon) மற்றும் சிர்ரஸ் எஸ் ஆர் -22 () ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படக்கூடிய விமானங்கள் ஆகும். + +தற்போது எல்லா மாதிரிகளும் ஆதரவளிக்கப்படவில்லை என்ற போதிலும் சிமுலேட்டரை ஒரு சுட்டெலி அல்லது ஜாய்ஸ்டிக் கொண்டும் கட்டுப்படுத்த இயலும். + +Google Earth (கூகிள் எர்த்) ஃப்ளைட் சிமுலேட்டர் உலகில் ஆதரவளிக்கப்பட்ட எந்த இடத்திற்கும் செல்லும் திறனைக் கொண்டுள்ளது.விமானத்தைக் கிளப்ப அல்லது தரையிறக்க முயற்சி செய்ய, விமானி உலகத்திலுள்ள எந்த இடத்தையும் தேர்வு செய்யலாம்.எஃப் – 16 ரக விமானம் அதன் அதிகபட்ச வேகத்தில் சென்றாலும் ஐக்கிய அமெரிக்க நாட்டின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்ல 60 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறது என்பதால், பறக்கும் நேரத்தை மிகவும் குறைக்க முடியாது. விமானம் தரையைத் தொடும்போது மணிக்கு 250 மைல்கள் வேகத்திற்கும் குறைவாகப் பறக்கும் வரை, உலகில் எந்த மட்டத்திலுள்ள இடத்திலும் (சமுத்திரங்கள் உட்பட) தரையிறங்கலாம். + + + +2009, பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட "Google Ocean (கூகிள் ஓஷென்)" அம்சமானது, பயனாளர்கள் கடற்பரப்பிற்குக் கீழே உருப்பெருக்கிப் பார்த்து, அலைகளுக்கு அடிப்புறத்தில் உள்ள முப்பரிமாண பாத்திமெட்ரி (bathymetry) -யை காண வழிவகுக்கிறது. 20 பொருள் அடுக்குகளுக்கும் மேல் ஆதரவளிக்கும் அது, முன்னனி விஞ்ஞானிகள் மற்றும் கடலியலாளர்கள் (oceanographers) ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கிறது. + +பதிப்பு 5.0-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றுப் புகைப்படம், பயனாளர்கள் காலத்தில் பின்னோக்கிச் சென்று, எந்த ஒரு இடத்தின் முந்தைய வரலாற்றையும் தெரிந்துகொள்ள வழி���குக்கிறது. பல்வேறு இடங்களின் முந்தைய பதிவுகள் தேவைப்படும் பகுத்தாய்வு நோக்கங்களுக்கு இந்த அம்சம் மிகவும் பயன்படும். + +Google Sky (கூகிள் ஸ்கை) (Google Sky) ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் (Hubble Space Telescope) அறிவியல் செயல்பாடுகளின் மையமான பால்டிமோரிலுள்ள விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனம் () - உடன் கூட்டு முயற்சி மூலம் Google(கூகிள்) (Google) –ஆல் தயாரிக்கப்பட்டது. விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தை சேர்ந்த டாக்டர் ஆல்பர்டோ காண்டி () மற்றும் அவரது இணை உருவாக்குநர் டாக்டர் கரோல் கிறிஸ்டியன் () ஆகியோர் மதிப்பீடுகளுக்காக 2007 முதல் பொதுப் படங்களையும், ஹப்பிள்-ன் மேம்பட்ட கேமிராவிலிருந்து திரட்டப்பட்ட அனைத்து தரவுகளின் வண்ணப் படங்களையும் சேர்க்கத் திட்டமிட்டுள்ளார்கள்.புதியதாக வெளியிடப்பட்ட ஹப்பிள் (Hubble) படங்கள் அவை வழங்கப்பட்டவுடன் Google Sky (கூகிள் ஸ்கை) உடன் சேர்க்கப்படும். பன்முக அலைநீளத் தரவு, முக்கிய செயற்கைக் கோள்களின் நிலைகள், அவற்றின் சுற்றுப் பாதைகள் மற்றும் கல்வி ஆதாரங்கள் ஆகியவை Google Earth (கூகிள் எர்த்) சமூகத்திற்கு மற்றும் கிறிஸ்டியன் மற்றும் காண்டியின் ஸ்கை-க்கான இணையம் மூலமும் வழங்கப்படும் ஸ்கை மோடில் விண்மீன் கூட்டங்கள், நட்சத்திரங்கள், பால்வெளிகள் மற்றும் கோள்களை அவற்றின் சுற்றுவட்டப் பாதைகளில் காட்டும் அனிமேஷன்கள் ஆகியவையும் புலப்படும். வி ஓ ஈவென்ட் நெட் கூட்டு முயற்சியால் சமீபத்திய வானியில் சிறு நிகழ்வுகளின் அதே சமயம் Google Sky (கூகிள் ஸ்கை) Mashup - மேஷ்அப் () விஓஈவென்ட் () ப்ரோட்டோகலைப் பயன்படுத்தி வழங்கப்படுகிறது.Google Earth (கூகிள் எர்த்)-ன் வரைபடங்கள் ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கொருமுறையும் மேற்சேர்க்கப்படுகின்றன. + +Google Sky (கூகிள் ஸ்கை) மைக்ரோசாப்ட் உலகளாவிய தொலைநோக்கியிடமிருந்து () போட்டியை எதிர்கொள்கிறது. (அது Microsoft Windows (மைக்ரோசாப்ட் விண்டோஸ்) (Microsoft Windows) ஆப்பரேட்டிங் சிஸ்டம்-களின் கீழ் மட்டும் இயங்கும்) + +2008, மார்ச்-13 அன்று http://www.google.com/sky/.-ல் கிடைக்கும் Google Sky (கூகிள் ஸ்கை)-ன் இணைய அடிப்படையிலான பதிப்பை Google(கூகிள்) உருவாக்கியது. + + மார்ஸ் அம்சத்தைப் பயன்படுத்தி முப்பரிமாணத்தில் காட்டப்படும் விக்டோரியா க்ரேட்டர் () –ன் |left|thumb|அதிக துல்லியத்தன்மை உடைய காட்சி. +Google Earth (கூகிள் எர்த்) 5 மார்ஸ் கிரகத்தின் பார்க்கப்படக்கூடிய உலக உருண்டையை உள்ளடக்கியிருந்தது. வரைபடங்கள் Google Mars (கூகிள் மார்ஸ்) (Google Mars) –ன் பிரவுசர் பதிப்பில் உள்ளதை விட அதிகத் துல்லியத்தன்மை வாய்ந்தவை. மேலும் அது மார்ஸ் நிலப்பரப்பின் முப்பரிமாணப் படம் வழங்குதலையும் உள்ளடக்கியது. மார்ஸ் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் ()-ன் HiRISE () கேமிராவிலிருந்து பூமியிலுள்ள நகரங்களின் படங்களை ஒத்த அதிஉயர் துல்லியத்தன்மையுடைய சில படங்கள் உள்ளன. இறுதியாக மார்ஸ் கண்டறிதல் ரோவர்கள் (), ஸ்பிரிட் (Spirit) மற்றும் ஆப்பர்சூனிட்டி (Opportunity) போன்ற பல்வேறு மார்ஸ் லேண்டர்களிலிருந்து உயர்ந்த துல்லியத்தன்மையடைய அழகான படங்கள் கிடைக்கின்றன, அவற்றை Google Street View(கூகிள் வீதிக் காட்சி) ()-ல் காணப்படுவதைப் போன்று அதே விதத்தில் பார்க்க இயலும் + +2008, ஏப்ரல் 15 அன்று பதிப்பு 4.3 கொண்டு, Google(கூகிள்) அதன் Street View (வீதிக் காட்சி) ()-யை Google Earth (கூகிள் எர்த்)-க்குள் முழுமையாக ஒருங்கிணைத்தது. + +Google Street View(கூகிள் வீதிக் காட்சி) தெருவில் இருப்பதைப் போன்ற அழகானகாட்சிகளை 360° கோணத்தில் வழங்குகிறது மற்றும் பயனாளர்கள், தெரிவு செய்யப்பட்ட நகரங்களின் பாகங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளை தரைமட்டத்தில் பார்க்க வழி வகுக்கிறது. அது 2007, மே 25-ல் Google Maps (கூகிள் மேப்ஸ்) (Google Maps), க்காக செயல்படுத்தப்பட்டபோது ஐந்து நகரங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன. அன்றிலிருந்து அது 40 அமெரிக்க நகரங்களுக்கு விரிவடைந்துள்ளது, அவற்றில் பல நகர்களின் புறநகர்ப்பகுதிகளையும் , சிலசமயங்களில் அருகிலுள்ள நகரங்களையும் உள்ளடக்கியுள்ளது. சமீபத்திய ஒரு மேற்சேர்ப்பு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள முக்கிய நகரங்கள் பெரும்பாலானவற்றில் ஸ்ட்ரீட் வியூவை செயல்படுத்தியுள்ளது. + +Google Street View(கூகிள் வீதிக் காட்சி), இயக்கப்படும்போது, ஒரு வாகனத்தின் மீது பொருத்தப்பட்ட கேமிராவைக் கொண்டு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் காட்டுகிறது மேலும் திரை மீது உங்கள் பயணத்திசையில் காட்டப்படும் புகைப்பட ஜகான்கள் மீது சுட்டெலியைப் பயன்படுத்தி க்ளிக் செய்வதன்மூலமும் அதைச் செலுத்த முடியும். இந்த அமைப்புகளைப் பயன்படுத்தி பல்வேறு அளவுகளில், எத்திசையிலிருந்தும், பல்வேறு கோணங்களிலிருந்தும் புகைப்படங்களைக் காண இயலும். + +Google Earth (கூகிள் எர்த்) இடை முகப்பு நீல் ஸ்டீஃபன்சன் ()-ன��� சை-ஃபை (sci-fi) க்ளாசிக் " ஸ்நோ க்ராஷ் () -ல் விளக்கப்பட்டுள்ள ‘எர்த்’ நிரலுடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது. "உண்மையில், Google Earth (கூகிள் எர்த்) துணை –நிறுவனர் ஒருவர் Google Earth (கூகிள் எர்த்) " ஸ்நோ க்ராஷ் " - ஐ பார்த்து உருவாக்கப்பட்டதாகக் கூறினார். அதே சமயம் மற்றொரு துணை நிறுவனர் அறிவியல் கல்வி சார்ந்த குறும்படமான" பவர்ஸ் ஆப் டென் () ஆல் தூண்டப்பட்டதாக கூறினார் ". சொல்லப்போனால், Google Earth (கூகிள் எர்த்), விண்ணிலிருந்து ஸ்விஸ் ஆல்ப்ஸ் ()-க்கு உள்ளும் பின்னர் மேட்டர் ஹார்ன் ()-க்கு உள்ளும் குவித்துக்காட்டிய ஒரு சிலிக்கான் கிராபிக்ஸ் () டெமோவான “விண்ணிலிருந்து உங்களிடம்”- ஆல் குறைந்தபட்சம் சிறிதளவாவது தூண்டப்பட்டது. இந்த அறிமுக டெமோ – வானது க்ளிப் மேப்பிங் () –க்கு ஆதரவளித்த இன்ஃபினிட் ரியாலிடி () வரைகலை உடைய ஒரு ஓனிக்ஸ் 3000 () - ஆல் இயக்கப்பட்டது, மேலும் அது மென்பொருள் உள்அமைப்பு பேஜிங் திறன் (அது க்ளிப் மேப்பிங்கை பயன்படுத்தவில்லை என்ற போதிலும்) மற்றும் “பவர்ஸ் ஆப் டென்” – ஆல் தூண்டப்பட்டது. எர்த் வியூவர் எனப்படும் முதல் Google Earth (கூகிள் எர்த்)செயல்படுத்தல் உள்ளார்ந்த வரைகலை () யிலிருந்து கிறிஸ்டேனரின் கிளிப் மேப்பிங் () உள்அமைப்பு பேஜிங் அமைப்பின் மென்பொருள் அடிப்படையிலான நடைமுறைப்படுத்தலின் ஒரு செயல்விளக்கமாகத் தோன்றியது மற்றும் Keyhole Inc. (கீ ஹோல் இன்க்.) ஆக உருப்பெற்றது. எர்த் வியூவர் குறையில்லாத தோற்றஅமைப்பு பேஜிங் அமைப்புத் திறன்களின் தவிர்க்கமுடியாத இறுதித் திறன் பெறுதல் ஆகும், மேலும் எர்த் வியூவரில் பணியாற்றும் பலர் முன்னரே சிலிக்கான் கிராபிக்ஸ்-ன் முன்னாள் மாணவர்கள். + +விரிவான வெளியீட்டுக் குறிப்புகள் / வரலாறு/ சேஞ்ச் லாக் ஆகியன Google(கூகிள்) -ஆல் கிடைக்கச் செய்யப்பட்டன. + +Google Earth (கூகிள் எர்த்) பழைய வன்பொருள் அமைப்புகளில் இயங்குவதற்கான சாத்தியம் இல்லை கிடைக்கக்கூடிய மிகச் சமீபத்திய பதிவிறக்கங்கள் –க்கு இந்தக் குறைந்தபட்ச வன்பொருள் அமைப்புகள் தேவைப்படும் : + +செயலிழப்பதற்கான அதிகமான சாத்தியமுடையது வீடியோ ரேம் பற்றாக்குறை : கிராபிக்ஸ் கார்டால் எர்த்-க்கு ஆதரவளிக்க இயலவில்லை எனில், பயனாளரை எச்சரிக்குமாறு மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது (இது பெரும்பாலும் பற்றாக்குறை வீடியோ ரேம் () அல்லது தரமற்�� கிராபிக்ஸ் கார்டு டிரைவர்கள் காரணமாக நிகழக்கூடும்). செயலிழப்பதற்கான அதிக சாத்தியம் உடைய அடுத்தது இணையத் தொடர்பு வேகம் ஆகும். அகன்ற அலைவரிசை இணையம் () (கேபிள், டிஎஸ்எல், டி1 மற்றும் பிற) பொறுமையைச் சோதிக்காது. + + +பிற ஆப்பரேட்டிங் சிஸ்டம்களுக்கான Google Earth (கூகிள் எர்த்) பதிப்புகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. + +2006, ஜனவரி 10 அன்று, மேக் ஓஎஸ் எக்ஸ் () –க்கான ஒரு பதிப்பு வெளியிடப்பட்டது மேலும் Google Earth (கூகிள் எர்த்) இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்படக் கிடைக்கிறது. கீழே குறிக்கப்பட்டுள்ள சில விலக்குகள் தவிர்த்து, அசல் விண்டோஸ் பதிப்பைப் போலக் கிட்டத்தட்ட அனைத்து செயல்பாடுகளும் கொண்டு, மேக் பதிப்பு நிலையானதாகவும், நிறைவானதாகவும் இருக்கிறது. + +2005, டிசம்பர் 8 அன்று, மேக் பதிப்பின் ஸ்கிரீன் ஷாட்ஸ் மற்றும் அசல் பைனரி, இணையத்திற்கு வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட பதிப்பு குறிப்பிடத்தக்க அளவு நிறைவடையாமல் இருந்தது. இந்த பதிப்பு Google(கூகிள்) -ன் உட்புறப் பயன்பாட்டுக்கு மட்டும் என்பதைக் காட்டும் விதமாக, மற்ற அம்சங்களுடன், உதவிப்பட்டியோ, அதன் “உரிமம் காட்டுதல்” அம்சமோ இயங்கவில்லை. இவ்வாறு வெளியானது குறித்து Google(கூகிள்) எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை. + +மேக் பதிப்பு, மேக் ஓஎஸ் எக்ஸ் பதிப்பு 10.4 () அல்லது அதற்கும் மேற்பட்ட பதிப்புகளில் மட்டுமே இயங்கும். உள்பதிக்கப்பட்ட பிரவுசர் ஜிமெயில் (Gmail) –க்கான நேரடி இடைமுகப்பு மற்றும் முழுத் திரைத் தெரிவு ஆகியவை இல்லை. 2009 ஜனவரியில் பயன்பாடுகளுக்கு இடையில் மாறும்போது மெனுபார் தொடர்புடைய சில பிழைகளும், அனடேஷன் பலூன்கள் மற்றும் அச்சிடுதல் தொடர்பான சில பிழைகளும் இருந்தன. + +பதிப்பு 4.1.7076.4558 (2007, மே 9 அன்று வெளியிடப்பட்டது) –இலிருந்து மேக் ஓஎஸ் எக்ஸ் பயனாளர்கள் பிற புதிய அம்சங்களுடன் Google Earth (கூகிள் எர்த்) மெனுவில் உள்ள ஒரு தெரிவு மூலமாக “ப்ளஸ்” பதிப்பிற்கு தரம் உயர்த்திக் கொள்ளலாம். முன்பிருந்த அப்போதைய பதிப்பில் உருப்பெருக்கம் செய்யும்போது Google Earth (கூகிள் எர்த்) க்ராஷ் ஆனதால் சில பயனாளர்கள் இடர்பாடுகளைத் தெரிவித்திருந்தார்கள். + +பதிப்பு 4.3 – இலிருந்து, படக்கோப்புகள் கே எம் இசட் கோப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தால், ப்ளேஸ் மார்க் – களில் உள்ளடக்கப்பட்ட அனைத்துப் படங்களைய���ம் வழங்க Google Earth (கூகிள் எர்த்) – ஆல் இனியும் இயலாது. + +பதிப்பு 4-இலிருந்து தொடங்கி பீட்டா Google Earth (கூகிள் எர்த்) க்யூ டி – டூல் கிட் ()-ஐப் பயன்படுத்தி லினக்ஸ் (Linux) –ன் கீழ் ஒரு நேட்டிவ் போர்ட் ஆக செயல்படுகிறது. அது குறிப்பாக டிஜிட்டல் உரிமைகளை மேலாண்மை (Digital Rights Management)-ஐ அமுல்படுத்துவதற்கான தனியுரிமை மென்பொருள் (proprietary software); ஃப்ரீ சாப்ட்வேர் பவுண்டடேஷன் (Free Software Foundation) Google Earth (கூகிள் எர்த்)-க்கான எளிதில் இணையும் கிளையண்ட் உருவாக்குவதை உயர்முன்னுரிமை இலவச மென்பொருள் செயல்திட்டம் (High Priority Free Software Project)- ஆகக் கருதுகிறது. + +ஐஃபோன் ஓ எஸ் (iPhone OS) – க்கான (ஐஃபோன் (iPhone) மற்றும் ஐபாட் டச் ()) ஆகிய இரண்டிலும் இயங்குவது) ஒரு பதிப்பு ஆப் ஸ்டோர் () –ல் அக்டோபர் 27, 2008 அன்று இலவசமாக வெளியிடப்பட்டது . +அது புவியின் மீது நகர, உருப்பெருக்க அல்லது பார்வையைச் சுழற்ற மல்ட்டி-டச் (multi-touch) இடைமுகப்பைப் பயன்படுத்துகிறது மற்றும் ஐஃபோன் ஒருங்கிணைக்கப்பட்ட ஜிபிஎஸ் ()-ஐ பயன்படுத்தி தற்போதைய அமைவிடத்தைத் தேர்வு செய்ய வழி வகுக்கிறது. இருந்தபோதிலும், இந்தப் பதிப்பு, கணிணிப் பதிப்புகளைப் போல் அடுக்குகளைக் கொண்டிருக்காது. +Google Maps (கூகிள் மேப்ஸ்) – ஐப் போன்று அது விக்கி பீடியா மற்றும் பனோராமியோ அடுக்குகளை மட்டும் ஒருங்கிணைக்கும். + +2008, டிசம்பரில் விலக்கிக் கொள்ளப்பட்ட Google Earth Plus (கூகிள் எர்த் ப்ளஸ்), Google Earth (கூகிள் எர்த்)-ஐவிட மேம்பட்ட சந்தா செலுத்தப்பட்ட தனி நபர் சார்ந்த மென்பொருள் ஆகும். அது தற்போது இலவசமான Google Earth (கூகிள் எர்த்)-ல் கிடைக்கக்கூடிய பெரும்பாலான கீழ்வரும் அம்சங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. +மின்னஞ்சல் வழி வாடிக்கையாளர் சேவை + + +வருடம் 400$ சந்தா கட்டணத்திற்குக் கிடைக்கும் Google Earth Pro (கூகிள் எர்த் ப்ரோ), ப்ளஸ் பதிப்பைவிட அதிக அம்சங்களை உடைய Google Earth (கூகிள் எர்த்)-ன் தொழில்சார்ந்த தரம் உயர்த்தல் ஆகும். +ப்ரோ பதிப்பு கீழ்வரும் கூடுதல் மென்பொருட்களை உள்ளடக்கியது. + +ஜிஐஎஸ் டேட்டா இம்போர்ட்டர். + + +உண்மையில், இந்த அம்சங்கள் 400$ கட்டணத்தை விடக் கூடுதல் விலையுடையது, ஆனால் சமீபத்தில் இந்தப் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. + +Google Earth (கூகிள் எர்த்)-ன் இலவசப் பதிப்பைப் போல இல்லாமல், ப்ரோ பதிப்பானது லினக்ஸ்-ல் இயங்காது. + +பெரும்பாலான நிலப்பரப்புகள் செயற்கைக்கோள் புகைப்படத்தில் ஒரு பிக்செலுக்கு சுமார் 15 மீ துல்லியத்தன்மை என்ற அளவில் அடங்கும். மக்கள் வசிப்பிடங்கள் சில ஒரு மீட்டருக்கு பல பிக்செல்கள் என்ற அளவுள்ள விமானப்புகைப்படங்களிலும் அடங்கும். (ஆர்த்தோபோட்டோ ()கிராபி) சமுத்திரங்களும், அதுபோலவே நிறையத் தீவுகள் (island)-ம் குறைந்த அளவு துல்லியத்தன்மை உடையதாக இருக்கும்; குறிப்பாக, தென்மேற்கு இங்கிலாந்திலிருந்து தள்ளி இருக்கும் சிசிலித் தீவுகள் (Isles of Scilly) சுமார் 500 மீ அல்லது அதற்கும் குறைவான துல்லியத்தன்மையுடன் இருக்கும் இந்தப் படங்கள் டெர்ரா மெட்ரிக்ஸ்-ஆல் வழங்கப்பட்டன. + +Google(கூகிள்) , இந்த மென்பொருள் பொதுமக்களுக்கு அசலாக வெளியிடப்பட்டதிலிருந்து வெக்டார் மேப்பிங்-ல் உள்ள பல துல்லியமற்றதன்மைகளை, நிரலில் எவ்வித மாற்றமும் தேவைப்படாத வகையில், சரிசெய்துள்ளது. +இதற்கான ஒரு உதாரணம், 1999, ஏப்ரல் 1-ல் கனடாவில் உருவாக்கப்பட்ட நூனாவட் (Nunavut)பிரதேசம் Google Earth (கூகிள் எர்த்)-ன் வரைபட எல்லைகளில் காணப்படாதது ஆகும். இந்தத் தவறு 2006-ன் தொடக்கத்தில் செய்யப்பட்ட தரவு மேற்சேர்க்கைகள் ஒன்றில் சரிசெய்யப்பட்டது. +சமீபத்திய மேற்சேர்க்கைகள் விரிவான வான்பார்வை புகைப்படவியலின் பரப்பையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் உள்ள சில பகுதிகளில் . + +இந்தப் படங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டவை அல்ல, ஆனால் பொதுவாக தற்போதிலிருந்து மூன்று வருடங்களுக்கு முந்தைய காலக்கட்டத்திற்குள் எடுக்கப்பட்டது. படச்சோடிகள் சிலசமயங்களில் ஒன்று சேர்க்கப்பட்டிருக்காது . +புகைப்படத் தரவு தொகுப்பிற்கான மேற்சேர்க்கைகள் சில சமயங்களில் ஒரு நில அமைப்பின் தோற்றத்தில் வேகமான மாற்றங்கள் நிகழும்போது கண்டறியப்படலாம், உதாரணத்திற்கு கேத்ரீனா சூறாவளி (Hurricane Katrina) –ஐ தொடர்ந்து நியூ ஆர்லியன்ஸ் (New Orleans) நகரத்தின் நிறைவுபெறாத Google Earth (கூகிள் எர்த்)-இன் மேற்சேர்க்கைகள் அல்லது பூமிப்பரப்பில் எதிர்பாராத விதமாக ப்ளேஸ் மார்க்குகள் நகர்வதைப் போலத் தோன்றும்போது. +உண்மையிலேயே ப்ளேஸ் மார்க்குகள் நகர்ந்திருக்காத போதும், படம் உருவாக்கப்பட்டு, வேறுவிதமாகச் சேர்க்கப்பட்டிருக்கும். 2006-ன் தொடக்கத்தில் இலண்டனின் புகைப்படங்களில் செய்யப்பட்ட ஒரு மேற்சேர்க்கை பல இடங்களில் 15-20 மீட்டர்கள் இடப்பெயர்வை ஏற���படுத்தியது, துல்லியத்தன்மையும் அதிகமாக இருந்ததால் கண்டறியப்பட்டது. + +இடத்தின் பெயர் மற்றும் சாலை விபரம், இடத்திற்கு இடம் மிகவும் மாறுபடும். வடஅமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அவை, மிகவும் துல்லியமாக இருக்கும். ஆனால் வழக்கமான வரைபட மேற்சேர்க்கைகள் மற்ற இடங்களிலும் கவரேஜ்-ஐ மேம்படுத்தி வருகிறது. + +சிலசமயங்களில் ஒரு நிலப்பரப்பின் உயரத்தை அளவிடப் பயன்படும் தொழில்நுட்பம் காரணமாகப் தவறுகள் ஏற்படலாம்; உதாரணத்திற்கு அடிலெய்டு (Adelaide)-ல் உள்ள உயரமான கட்டடங்கள் நகரத்தின் ஒரு பகுதியை ஒரு சிறிய மலைபோலக் காட்டும், ஆனால் உண்மையில் அது சமதளமே. பாரிஸ் (Paris). நகரைக் காட்டுவதில் ஈபிள் கோபுரம் (Eiffel Tower)-ன் உயரம் அதுபோன்ற விளைவையே உண்டாக்கும். மேலும் 2009 பிப்ரவரியில் பதிப்பு 5.0 வெளியிடப்படும் முன்பு கடல் மட்டத்திற்குக் கீழுள்ள இடங்கள் கடல் மட்ட அளவிலேயே காட்டப்பட்டன. உதாரணத்திற்கு; சால்டன் நகரம் – 38 மீ ; டெத் வேலி −86 மீ; மற்றும் சாக்கடல் −420 மீ கடல் மட்டத்திற்கு கீழ் இருந்தபோதும் சால்டன் நகரம், கலிபோர்னியா (); டெத் வேலி (); மற்றும் சாக்கடல் (Dead Sea) ஆகியவை 0 மீ என்ற அளவில் காட்டப்பட்டிருந்தன. + +3 ஆர்க் வினாடி () டிஜிட்டல் எலிவேஷன் தரவு () கிடைக்கப் பெறாத இடங்களில், உயரமான நிலப்பரப்புகளை அடக்கும் முப்பரிமாண புகைப்படங்கள் துல்லியமாகவே இருக்காது, ஆனால் பெரும்பாலான மலைப்பிரேதசங்கள் தற்போது நன்கு வரைபடமாக்கப்பட்டுள்ளன. கீழுள்ள டிஜிட்டல் எலிவேஷன் மாடல் 3 ஆர்க் வினாடிகள் () வடதிசையில் மிகவும் தள்ளியும், 3 ஆர்க் வினாடிகள் வரை மேற்குத் திசையில் மிகவும் தள்ளியும் வைக்கப்பட்டுள்ளது. இது சில உயரமான மலைமேடுகளில் அவற்றின் தெற்குப் பார்த்துள்ள பக்கங்களில் நிழல் விழுந்திருப்பதைப் போலத் தவறாகக் காட்டும். தோன்றும். அதிகத் துல்லியத்தன்மையுடைய சில படங்களும் தவறாக வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒரு உதாரணம் 12 ஆர்க் வினாடிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள அன்னபூர்ணா ()-வை, காட்டும் படம். ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பெரும்பகுதிக்கு உயரமான இடங்களின் தரவு முந்தைய 30-மீட்டர் (1-ஆர்க்-வினாடி)-லிருந்து சமீபத்தில் 10-மீட்டர் ஆக (1/3 ஆர்க் - வினாடி) மேற்சேர்க்கப்பட்டது. + +"அளத்தல்" செயல்பாடுபுவிநடுக்கோடு (equator) –ன் அதன் உண்மையான நீளமான 40,075.02 கிமீ புவி (Earth) உடன் ஒப்பிட���ம்போது நீளம் சுமார் 40,030.24 கிமீ, என்று −0.112% பிழை காட்டுகிறது; தீர்க்கக் கோடு () -ன் பரிதி அதன் உண்மையான அளவான 40,007.86 கிமீ உன் ஒப்பிடும்போது 39,963.13 கிமீ எனக்காட்டி −0.112% பிழை காட்டுகிறது. + +2007, டிசம்பர் 16 அன்று, அண்டார்டிகாவின் பெரும்பகுதி ஆஸ்திரேலியாவின் லேண்ட் சர்ட் இமேஜ் மொசைக் -லிருந்து பெறப்பட்ட படங்களைக் கொண்டு 15 மீ துல்லியத்தன்மைக்கு மேற்சேர்க்கப்பட்டது. 2007 ஜுன்-ல் அண்டார்டிகாவின் சில பகுதிகளின் 1 மீ துல்லியத்தன்மையுடைய படங்கள் சேர்க்கப்பட்டன; இருந்தபோதிலும், ஆர்டிக் துருவப் பனி முகடு (polar ice cap) சமுத்திரங்களில் உள்ள அலைகளைப் போன்றே Google Earth (கூகிள் எர்த்)-ன் தற்போதைய பதிப்பில் முற்றிலும் காணப்படவில்லை புவியியல் ரீதியான வடதுருவம் (North Pole) ஆர்டிக் பெருங்கடல் மேல் இருப்பதுபோல் காணப்பட்டது மேலும் டைல்கள் வரையறுக்க முடியாத அளவு சிறியதாவதாலும் முழுதாக்குதல் பிழைகள் அதிகமாவதாலும் டைலிங் அமைப்பு துருவங்களுக்கு அருகில் ஆர்ட்டி பேக்ட் () களை உருவாக்குகிறது. + +மேகமூட்டம் அல்லது நிழல் (மலைகளின் மறைவுப் பகுதிகள் உட்பட) சில நிலப்பிரதேசங்களில் விவரங்களைப் பார்ப்பதைக் கடினமாக்குகிறது அல்லது இயலாததாக்குகிறது. + +Google Earth (கூகிள் எர்த்) சமூகம் என்பது ஆர்வமூட்டக்கூடிய அல்லது கல்வி நோக்கில் ப் ப்ளேஸ்மார்க்-களை உருவாக்குவதற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆன்-லைன் விவாத அரங்கு ஆகும் . +அது Google Earth (கூகிள் எர்த்) இணைய பக்கத்தில் அல்லது நிரலில் உள்ள உதவி பிரிவின்கீழ் காணப்படலாம். ஒரு ப்ளேஸ்மார்க்-ஐ பதிவிறக்கம் செய்தபிறகு, அது தானாகவே Google Earth (கூகிள் எர்த்) – ஐ இயங்கச் செய்து (இயக்கப்படாமல் இருந்தால்) அதை வைத்த நபரால் குறிப்பிடப்பட்ட பகுதிக்குச் செல்லும் . ஒருமுறை சென்றபிறகு, ஐகான் மீது வலது க்ளிக் செய்து “Save to my places” –ஐ தெரிவு செய்வதன் மூலம் நீங்கள் அதை உங்களுடைய “My places”-ல் சேர்க்கலாம். கூடுதலாக, நீங்கள் ஒரு கணக்கு வைத்திருக்கும்வரை யார்வேண்டுமானாலும் மற்றவர்கள் பதிவிறக்கம் செய்வதற்கான ஒரு ப்ளேஸ்மார்க்-ஐ வைக்கலாம்; + +ஜனவரி 12 முதல் ஜனவரி 15 முடிய தளப் பராமரிப்பிற்காக Google Earth Community (கூகிள் எர்த் சமூகம் ) ஆப்லைனில் இருந்தது. மீண்டும் செயல்பட்டபோது, அத்தளம் மறுவடிவமைக்கப்பட்டதைப் போலத் தோன்றியது. அதேபோல, பல பழைய கோப்புகளுக்கான இணைப்புகள் துண்டிக்கப்பட்டு பெரும்பாலான பொருளடக்கத்தை பதிவிறக்கம் செய்வதிலிருந்து தடுத்தது. +இருந்தபோதிலும், ஜனவரி 19 அன்று "Ink_polaroid" என்ற பெயருடைய ஒரு பயனாளர் இணைப்புகளில் உள்ள கோடிங்கை புதிய தள அமைப்புக்கு செயல்படுமாறு எழுதி, அனைத்துக் கோப்புகளையும் காணப்படுமாறு செய்தார். + +Google Earth (கூகிள் எர்த்), தொழில் தகவல்கள், விருப்பப்பகுதிகள் போன்றவற்றின் தகவலுக்கான ஆதாரங்களாகப் பல அடுக்குகளைக் கொண்டுள்ளது. அதேபோல் விக்கிபீடியா (Wikipedia), பனோராமியோ (Panoramio) மற்றும் யூடியூப் (YouTube) ஆகியவற்றைப் போன்ற பல சமூகங்களின் பொருளடக்கங்களையும் காட்சிப்படுத்துகிறது. Google(கூகிள்) , புதிய அடுக்குகளை அடிக்கடி மேற்சேர்க்கை செய்கிறது. +பனோராமியோ மற்றும் Google Earth (கூகிள் எர்த்) சமூகம் போன்ற பல Google Earth (கூகிள் எர்த்) அடுக்குகள், தொடர்புடைய இணையதளத்திலிருந்து உள்ளீடுகள் மூலம் அன்றாடம் மேற்சேர்க்கை செய்யப்படுகின்றன. + + + +பெரும்பாலான நாடுகளுக்கு சாலை வழிகளைக் காட்டுகிறது + +நியூயார்க் நகரம் (New York City) அல்லது ஹாங்காங் (Hong Kong), போன்ற முக்கிய நகரங்களில் பல முப்பரிமாண கட்டடங்களை கீழ்வரும் அமைப்பில் காட்டுகிறது. + +ஆஸ்திரேலியா (Australia), கனடா (Canada), பிரான்ஸ் (France), இத்தாலி (Italy), ஜப்பான் (Japan), நியூசிலாந்து (New Zealand), ஸ்பெயின் (Spain), மற்றும்ஐக்கிய அமெரிக்க நாடுகள் (United States) ஆகிய நாடுகளில் பல நகரங்களில் உள்ள ப்ளேஸ்மார்க்-களை 360 o கோணத்தில் தெருவில் இருப்பதைப் போன்ற அழகான (panoramic) பார்வைகளில் காட்டுகிறது + +நாடுகள் /மாநிலங்கள் ஆகியவற்றின் எல்லைகளைக் கொண்டுள்ளது. மேலும் நகரங்கள் மற்றும் டவுன்களுக்கான ப்ளேஸ்மார்க்-களைக் காட்டுகிறது. + + +அடிக்கடி மேற்சேர்க்கப்படும் போக்குவரத்துத் தகவல்களைக் காட்டுகிறது. + +காலநிலை அறிக்கை () உடன் காலநிலை ரேடார் () மற்றும் மேக (cloud) அடுக்கு ஆகியவற்றுடன் கூடிய ஒரு முழுமையான காலநிலை அறிக்கை மற்றும் உள்ளூர்க்காலநிலை அறிக்கைகளைத் தருகிறது. + +எகிப்து சுற்றுலா + + + + + +மேரி தார்ப் வரலாற்று வரைபடம் + +உலகளாவிய விழிப்புணர்வைப் பரப்பும் சேவைகளின் ஒரு தொகுப்பு. இந்த அடுக்குGoogle Earth Outreach (கூகிள் எர்த் அவுட்ரீச் ) (Google Earth Outreach)-ஆல் வழங்கப்பட்டது. இந்த பிரிவில் உள்ள அடுக்குகளுக்கு அவுட்ரீச்-ன் கட்டுரையைக் காணவும் + +பல உள்ளூர்ச் சேவைகளால் வழங்கப்பட்ட வியாபாரப் பட்டியல்களின் ஒரு தொகு��்பு. + தங்கவைத்தல் () + +Google Sky (கூகிள் ஸ்கை) (Google Sky)-க்கான அடுக்குகள். + + +இந்த மென்பொருள், தேசிய அதிகாரிகள் உள்ளிட்ட பல சிறப்பு ஆர்வக் குழுக்களால் தனிப்பட்ட விஷயங்கள் மீதான படையெடுப்பாகவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் உள்ளது என விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருள் இராணுவம் மற்றும் பிற முக்கிய அமைவிடங்கள் பற்றிய தகவல்களை வழங்குகிறது எனவும், அத்தகவல்கள் தீவிரவாதி (terrorist)- களால் பயன்படுத்தப்படக்கூடும் என்பது. கீழ்வருவன அத்தகைய சில கருத்துக்களின் தேர்வு ஆகும்: + + + +சில குடிமகன்கள் தங்களது சொத்துக்களையும், குடியிருப்புக்களையும் காட்டும் வான்பார்வைத் தகவல்கள் எளிதில் பரப்பப்படுவது குறித்துத் கவலை தெரிவிக்கக்கூடும். ஒரு நாட்டின் ரகசியத்தன்மைக்கானது போல் இல்லாமல், தனி மனிதனின் தனிப்பட்ட விஷயங்களுக்கான உரிமை (right to privacy),-யை உறுதிசெய்யக் குறைவான சட்டங்களே இருப்பதால், இது சிறிது சிறிதாக மாறிவரும், ஒரு சிறிய, விஷயமாகும். +இத்தகைய விமர்சனங்களைப் பற்றி அறிந்ததன் காரணமாக ,Google Earth (கூகிள் எர்த்) முதலில் நிறுவப்பட்டபோது, சில காலத்திற்கு, நெவாடாவிலுள்ள பகுதி 51 (Area 51) –ஐ கொடாநிலை ப்ளேஸ்மார்க்-ஆக Google(கூகிள்) கொண்டிருந்தது. + +ஐக்கிய அமெரிக்க நாட்டு அரசாங்கத்தின் வற்புறுத்தலின் விளைவாக-ல் முதன்மைக் கோளரங்க வட்டம் () துணை அதிபர் (Vice President) -ன் இல்லம் . () Google Earth (கூகிள் எர்த்) மற்றும் Google Maps (கூகிள் மேப்ஸ்) (Google Maps)-ல் பிக்செலாக்கப்படுதல் மூலம் தெளிவற்றதாகச் செய்யப்பட்டது, ஆனால் அதற்குப் பிறகு அது நீக்கப்பட்டுவிட்டது. இணையத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இடங்களின் உயர்துல்லியப் படங்களும், வான் பார்வை அளவீடுகளும் எளிதில் கிடைப்பதால், இத்தகைய தரக்குறைப்பு பலனளிக்குமா என்பது கேள்விக்குரியதே. கேபிடால் ஹில் ()பகுதியும் இவ்வாறே பிக்செலாக்கப்பட்டது, ஆனால் அது நீக்கப்பட்டுவிட்டது. + +எந்த ஒரு இடத்தையும் வேண்டுமென்றே தெளிவற்றதாக ஆக்குவதென்பது ”புவியில் நீங்கள் விரும்பும் எந்த இடத்தையும் தேர்ந்தெடுத்து உருப்பெருக்கிக் கண்டறியுங்கள்” எனப் பயனாளரை அனுமதிக்கும் கூகிளின் கூற்றிற்கு எதிரானது என்பதால், தனிப்பட்ட விருப்பங்களுக்கேற்ப தங்களது தரவுத் தொகுப்பை செயலிழக்கச்செய்ய Google(கூகிள்) முன்வருமா என்பது குற��த்து விமர்சகர்கள் கவலை தெரிவித்துள்ளனர். + +தற்போது, Google Earth (கூகிள் எர்த்)-ன் செயற்கைக் கோள் தரவைப் பயன்படுத்தி Google Earth (கூகிள் எர்த்)-லிருந்து உருவாக்கப்படும் ஒவ்வொரு படமும் பதிப்புரிமை (copyright)பெற்ற வரைபடமாகும். Google Earth (கூகிள் எர்த்)-லிருந்து கிடைக்கப்பெறும் எதுவும் பதிப்புரிமை பெறப்பட்ட தரவுகளிலிருந்து தயாரிக்கப்பட்டது, அது ஐக்கிய அமெரிக்க நாடுகளின் பதிப்புரிமைச் சட்டம் (United States Copyright Law), -ன் படி Google(கூகிள்) –ஆல் வழங்கப்படும் உரிமத்தின் கீழ் தவிர பிறவகைகளில் பயன்படுத்தப்படக் கூடாது. பதிப்புரிமைகளும், அடிப்படைப் பண்புகளும் பாதுகாக்கப்படும் வரை, வணிக நோக்கமற்ற ()தனிப்பட்ட பயன்பாடுகளுக்குப் படங்களைப் பயன்படுத்த (எ.கா தனிப்பட்ட இணையதளம் அல்லது வலைப்பூ-வில்) Google(கூகிள்) அனுமதிக்கிறது. +மாறாக, நாசா-வின் புவி மென்பொருளான வேர்ல்டு விண்ட் (World Wind) ப்ளூ மார்பிள் ப்ளூ மார்பிள் (Blue Marble), லேண்ட் சேட் (Landsat) அல்லது யு எஸ் ஜி எஸ் அடுக்கைப் பயன்படுத்தும், அது ஒவ்வொன்றும் பப்ளிக் டொமைன் (public domain)-ல் உள்ள நிலப்பரப்பு அடுக்கு ஆகும். அமெரிக்க ஐக்கிய அரசாங்கத்தின் முகமை ஒன்றினால் உருவாக்கப்படும் செயல்கள், அவை உருவாக்கப்படும் சமயத்தில் பப்ளிக் டொமைன் ஆகும். இந்தப் படங்ளைத் தடையின்றி, மாற்றலாம், மறு விநியோகம் செய்யலாம் மற்றும் வணிக நோக்கம் ()-க்கு பயன்படுத்தலாம் என்பது இதன் பொருளாகும். + +Google Earth (கூகிள் எர்த்) ஏபிஐ என்பது , பயனாளர்களுக்கு இலவசமாக இருக்கும் எந்த ஒரு இணையதளத்திற்கும் இலவசமாகக் கிடைக்கக் கூடிய ஒரு பீட்டா சேவை ஆகும். பிளக்-இன் மற்றும் அதன் ஜாவா ஸ்கிரிப்ட் ஏபிஐ பயனாளர்கள் Google Earth (கூகிள் எர்த்)-ன் பதிப்பு ஒன்றை இணையப் பக்கங்களுக்குள் வைக்க வழிவகுக்கிறது முழுமையான Google Earth (கூகிள் எர்த்) பயன்பாட்டின் அனைத்து அம்சங்களையும் ஏபிஐ கொண்டிருக்காது என்றபோதிலும், நுணுக்கமான முப்பரிமாண வரைபடப் பயன்பாடுகளை உருவாக்க உங்களுக்கு வழிவகுக்கிறது. + +பிளக் – இன் – உடையது பதிப்பு – 1.0 கீழ்வரும் அடுக்குகளுக்கு ஆதரவளிக்கிறது. + + +இது “ஸ்கை மோட்”-க்கும் ஆதரவளிக்கிறது மற்றும் முழுப்பயன்பாட்டில் உள்ளதைப் போன்ற அதே கட்டுப்பாடுகளையும், தகவல்பட்டைகளையும் அளிக்கிறது. + + + + + + + + + + +கல்வி நிர்வாகம் + +கற்றல் கற்பித்தலை அபிவிருத்தி செய்வதை நோக்காக கொண்ட ஒரு களப் பிரயோக கல்வித்துறை கல்வி நிர்வாகம் ஆகும். இத்துறை உளவியல், சமூகவியல், அரசியல், விஞ்ஞானம், பொருளியல், நிர்வாகவியல் ஆகிய துறைகளில் இருந்து கட்டியெழுப்பப்படுகின்றது. + +எல். குலிக் என்பவர் கல்வி நிர்வாக முறைகளில் பின்வரும் முக்கிய அம்சங்களை குறிப்பிடுகின்றார். + + + + + +கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை + +கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை (Colombo Stock Exchange) (CSE) அல்லது கொழும்புப் பங்குச் சந்தை (Colombo Share Market) எனப்படுவது இலங்கையில் பங்குப் பரிவர்த்தனைக்கென அமைந்துள்ள ஒரே ஒரு சந்தையாகும்.இது கொழும்பில் இலங்கை வங்கி தலைமைப்பணியகதிற்கருகில் உள்ள உலகவர்த்தகமையத்தின் 4 வது மாடியில் அமைந்துள்ளது. இதன் கிளைகள் யாழ்ப்பாணம், கண்டி, மாத்தறை, குருணாகல் ஆகிய மாவட்டங்களிலும் உள்ளது.பட்டியலிடப்பட்ட மற்றும் பட்டியலிடப்படாத கம்பெனிகளின் பங்குகள்,முன்னுரிமை பங்கு, தனிச்சங்கள், திறைசேரி முறி, திறைசேரி உண்டியல், அரசபிணைகள், நிதியங்கள் என்பனவற்றின் ஆரம்ப வழங்கல், கொள்வனவு, விற்பனை பிரதானமாக இடம்பெறுகின்றது. + +கொழும்புப் பங்குச் சந்தையில் 5 வகையான தரப்பினர் பங்கு வகிக்கின்றனர்: + +இலங்கையில் பங்குச் சந்தை 1896 ஆண்டிலிருந்து செயற்பட்டு வருகின்றது.ஆங்கிலேய தோட்டக் கம்பெனிகளின் நிதியீட்ட தேவைக்காகத் தோற்றுவிக்கப்பட்ட அப்பங்குச் சந்தை ஒர் மூடிய அமைப்பாகக் காணப்பட்டது.1984 ஆண்டில் பங்குச் சந்தை பொதுமக்களுக்காகத் திறந்துவிடப்பட்டதுடன் திறந்த கத்தல் முறை(open out cry) அறிமுகப்படுத்தப்பட்டது.1990 ம் ஆண்டு வரையறுக்கப்பட்ட கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை நிலையம் எனப் பெயர்மாற்றம் பெற்றது. இதில் உரிமம் பெற்ற 15 பங்குத்தரகு நிறுவனங்கள் அங்கம் வகிக்கின்றன. இது தவிர பங்குச் சந்தை நடப்புகளை முறைப்படுத்த இலங்கை பிணைகள் பரிமாற்று ஆணைக்குழு அமைக்கப்பட்டும் உள்ளது.1991 நடவடிக்கைகளை விரைவுபடுத்து முறையான மத்திய வைப்பு முறை (Central Depository System) அறிமுகப்படுத்தப்பட்டது.1995 ம் ஆண்டில் உலக வர்த்தக நிலையத்திற்கு இடத்தினை மாற்றிக்கொண்டது. 1999 இல் மிலங்க சுட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. அதே ஆண்டில் மாத்தறையில் கிளை அமைக்கப்பட்டது. 2003 இல் கண்டியில் கிளை அமைக்கப்பட்டது.2004 ல் Total Return Index குறிகாட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. 2010 இல் கொழும்புப் பங்குப் பரிவர்த்தனையின் யாழ்ப்பாணக் கிளை ஆரம்பிக்கப்பட்டது. + +கொழும்புப் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் தகமையினை பெறுவதற்கு பொதுக்கம்பனிகள் பலவித சட்ட,மூலதனவரையறை தேவைப்பாடுகளை கொண்டிருத்தல் வேண்டும்,அவைகளில் முக்கியவை சில: + +இவைதவிர இலங்கையில் நடைமுறையில் உள்ள 1982ம் ஆண்டு 17 ம் இலக்க கம்பனிச்சட்டம்,1987ம் ஆண்டு 36ம் இலக்க பிணைகள் சட்டம் என்பவற்றின் ஏற்பாடுகளை ஒழுகி அமைந்திருத்தல் வேண்டும். + +2006 கால முடிவில் கொழும்புப் பங்குச் சந்தையில் 16 பிரதான துறைகளின் கீழ் 241 கம்பனிகள் பட்டியலிடப்படும் தகமைகளை பெற்றுள்ளது. + +கொழும்புப் பங்கு பரிவர்த்தனையின் போக்கினை,நிலையினை அறிவதற்கு பல பங்கு சுட்டிகள் பயன்படுத்தப்படுகின்றது.இவற்றில் முக்கிய சில: +கொழும்பு பஙகு சந்தையில் பயன்படுத்தப்படும் மிக பிரபல்யமான சுட்டியாகும்.இது நாளாந்தம் கணிப்பிடப்பட்டு நாள் முடிவில் அறிவிக்கப்படும்.அன்றைய தினத்தில் கைமாறப்பட்ட அனைத்துப் பங்குகளின் விலைகளும் உள்ளடக்கப்பட்டு 1985 ம் ஆண்டை அடியாண்டாகக் கொண்டு ஒப்பிடப்பட்டு கணிக்கப்படும்.இதன் அடிப்பருவம் 100 ஆகும். +கொழும்புப் பங்குச் சந்தையில் பயன்படுத்தப்படும் மற்றுமோர் பிரபல்யமான சுட்டி இதுவாகும்.மில(விலை) அங்க(எண்) எனும் சிங்களம் சொற்களை புணர்த்தி இப்பெயர் சுட்டிக்கு வைக்க்ப்பட்டுள்து.1999 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இச் சுட்டி சந்தையிலே அதிக விசாலமான மூலதனத்தினைக் கொண்ட கம்பனிகளின் விலைமட்டங்களை அறிய பயன்படுத்தப்படுகின்றது.இதன் அடிப்பருவ சுட்டி 1000 ஆகும். + +2005 நடுவாண்டின் தரவுகளின் படி கொழும்பு பரிவர்த்தனை 497 பில்லியன் அளவான மூலதன சந்தையினைக் கொண்டுள்ளது. + +பொதுவிடுமுறை நாட்கள் தவிர திங்கள் முதல் வெள்ளி வரை முற்பகல் 9.30 தொடங்கி பிற்பகல் 2.30 வரை வியாபார நடவடிக்கைகள் இங்கு இடம்பெறும். + +கொழும்புப் பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகளை முறைப்படுத்துவதற்கு 3 முறைமைகள கையாள்கின்றது.அவையாவன: + +மத்திய வைப்புமுறை 1991 இலும்,Automated Trading System(ATS) 1997 இலும் நிறுவப்பட்டது.கணனி மையப்படுத்தப்பட்ட,தன்னியக்கமுறையில் பங்குசந்தை நடவடிக்கைகள இடம்பெற்று வருகின்றது. + +1998 அக்டோபரில் World Federation of Exchanges இல அங்கத்துவத்தினை பெற்று 52 வது உறுப்பினராக இணைந்து கொண்டது.இது தவிர இவ் அமைப்பில் இணைந்து கொண்ட தெற்காசிய வட்டச் சேர்ந்த முதலாவது பங்குச் சந்தை கொழும்புப் பங்கு பரிவர்த்தனை ஆகும் +தெற்காசிய நாடுகளின் பங்கு பரிவர்தனையில் கொழும்புப் பங்கு பரிவர்த்தனை முக்கிய அங்கம் வகிக்கின்றது. + +கொழும்புப் பங்கு பரிவர்த்தனை வளர்ந்துவரும் ஒர் சந்தையாக பொருளியலாளர்களால் கணிக்கப்படுகின்றது.1979 ம் ஆண்டிலிருந்து இலங்கையில் ஆளும் அரசுகளால் கடைப்பிடித்துவரும் திறந்த பொருளாதார கொள்கை,தனியார்மயமாக்கல் வெளிநாட்டு முதலீட்டாளர்களை கவரும் தன்மை,வரி நடைமுறையின் கடினத் தன்மை குறைக்கப்பட்டமை, என்பன அதன் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றன.எனினும் நூறு வருடகால பாரம்பரியத்தை கொண்டுள்ள இப்பங்குச் சந்தை ஒர் திறமையற்ற சந்தையாகவும் நோக்கப்படுகின்றது.உலக சந்தையில் ஏற்படும் சரிவுகள்,ஏற்றங்கள் எந்தவொரு பாதிப்பை ஏற்படுத்தாத தன்மை இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.இது தவிர கெடுபிடியான உள்நாட்டு போர்,பட்டியலிடப்பட்ட கம்பனிகளின் எண்ணிக்கை குறைவு,வட்டிவீததில் ஏற்படும் தளர்ச்சி,பங்குச் சந்தை நடைமுறை பற்றிய மக்களின் அறிவின்மை,கொழும்பை மையபடுத்திய தனமை,சந்தையில் விடப்படாமல் குடும்பத்தினர்களுக்குள்ளே பங்கு கைக் கொள்ளப்பட்டிருப்பது என்பன வேறு காரணங்களாகும். + +2001 ஆண்டில் உள்நாட்டு பிரச்சனை தொடர்பில் போர்நிறுத்த புரிந்துண்ர்வு ஒப்பந்ததின் பின் கொழும்புப் பங்கு பரிவர்த்தனையின் பெரும் வளர்ச்சி பெற்றது. 2001 ல் 500 ஆகக் காணப்பட்ட எல்லா பங்குகளுக்குமான விலைச்சுட்டி 2007 பெப்ரவரி 13 ல் 3000 னை கடந்தது முக்கிய மைல்கல்லாகும். இங்கு நாளாந்தம் சராசரியாக 776.8 மில்லியன் விற்பனை புரள்வு இடம்பெறுகின்றது. +விடுதலைப்புலிகளால் கொழும்பில் தாக்குதல் மேற்கொள்ளும் சந்தர்ப்பததில் பங்குச் சந்தையின் நடவடிக்கையில் சரிவு காண்பது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. + + + + + + + + +உலோகவியல் + +உலோகவியல் "(Metallurgy)" என்பது உலோகங்கள், இடையுலோகச் சேர்மங்கள் மற்றும் கலப்புலோகம் எனப்படும் உலோகக் கலவைகள் போன்றவற்றின் பொருளறிவியல், பொறியியல், இயற்பியல், வேதியியல் பண்புகள் முதலியனவற்றை ஆய்வு செய���கின்ற அறிவியல் களமாகும். இத்துறை பொதுவாக, தனிமங்களை அவற்றின் தாதுக்களிலிருந்து பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்துதல் தொடர்பான ஒரு நுட்பவியலாகும். தனிமங்களை உற்பத்தி செய்வதற்கு அறிவியல் துறை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதும் நுகர்வோருக்கும் பெருமளவில் தயாரிப்பவர்களுக்கும் இத்தனிமங்களை உற்பத்தி செய்வதற்கான பொறியியல் முறைகளையும் உலோகவியல் உள்ளடக்கியுள்ளது. தனிமங்களை உற்பத்தி செய்வது என்பது உலோகத் தாதுக்களைப் பதப்படுத்தி அவற்றில் இருந்து தனிமங்களைத் தனித்துப் பிரித்தெடுத்தலைக் குறிக்கிறது. மேலும், கலப்புலோகங்களாக ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கும் உலோகக் கலவையிலிருந்து உலோகத்தை தனித்துப் பிரித்தெடுத்தலையும் உலோகவியல் உள்ளடக்கியுள்ளது. உலோகவியல் என்ற சொற்றொடர் உலோகங்களைப் பயன்படுத்தி கைவினைஞர்கள் மேற்கொள்ளும் கைவினை தொழிலில் இருந்து வேறுபட்டதாகும். மருந்துகள் எவ்வாறு மருத்துவ அறிவியலுடன் தொடர்பு கொண்டுள்ளனவோ அதே போல ஒரு தொடர்பைக் கொண்டவைதான் உலோகவியலும் கைவினைஞர்களின் உலோகத் தொழிலும் என்பதை பிரித்தறிய வேண்டும். + +இரும்புசார் உலோகவியல், இரும்புசாரா உலோகவியல் என்று உலோகவியல் மேலும் இரு துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இச்சொற்றொடர் கருப்பு உலோகவியல் மற்றும் வண்ண உலோகவியல் என்ற சொற்களாலும் அழைக்கப்படுகிறது. இரும்புசார் உலோகவியல் என்பது இரும்பு என்ற உலோகத்துடன் தொடர்பு கொண்ட தாதுக்கள், தயாரிப்புமுறைகள், இவற்றின் இயற்பியல் வேதியியல் பண்புகள், உலோகக் கலவைகள் முதலியனவற்றை உள்ளடக்கியதாகும். இரும்புசாரா உலோகவியல் என்பது இரும்பை தவிர்த்த ஏனைய உலோகங்களின் தயாரிப்புச் செயல்முறைகள், கலப்புலோகங்கள் முதலியனவற்றை உள்ளடக்கியதாகும். இரும்புசார் உலோகவியலுடன் தொடர்புடைய உலோகங்களின் தயாரிப்புச் செயல்முறைகள் உலகத்தின் தனிமங்கள் உற்பத்தியில் 95 சதவீதம் செயல்பாட்டைக் கொண்டது என்பது கவனிக்கத்தக்கதாகும் . + +உலோகவியல் என்ற வேர்ச்சொல் பண்டைய கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். உலோக வேலையாள் மற்றும் உலோக வேலை என்ற பொருளின் அடிப்படையில் கிரேக்கமொழிச் சொல் ஆக்கப்பட்டிருந்தது. +கனிமங்களில் இருந்து உலோகங்களைப் பிரித்தெடுக்கும், குறிப்பாக பெருமளவில் தயாரிக்கும் செயல்முறையிலுள்ள இரசவாதி என்ற தொழிற்பெயர் உலோகவியல் என்ற சொல்லுக்கு அடிப்படையாகும். இப்பொருளின் அடிப்படையிலேயே என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்காவில் 1797 ஆம் ஆண்டு உலோகவியலின் பொருள் குறித்து விவாதிக்கப்பட்டது . 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலோகவியல் என்ற சொல்லின் பொருள் உலோகங்கள், உலோகக் கலவைகள் மற்றும் அவற்றின் செயல்முறைகள் முதலியவற்றை ஆய்வு செய்யும் துறை என்று விரிவான பொருளைப் பெற்றது. +உலோகவியல் என்ற சொல்லின் பொருள் இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் காமன்வெல்த் நாடுகள் போன்ற உலகின் பெரும்பாலான இடங்களிலும் ஒரே வகையான உச்சரிப்பும் பொருள் கொள்ளலும் கிட்டத்தட்ட சமமாகவே உள்ளன. + +மனித வரலாற்றில் மிகவும் பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட உலோகம் தங்கம் ஆகும். இது சூழ்நிலைகளால் பாதிக்கப்படாததும், வேறு வேதிப் பொருட்களுடன் வினைபுரியாத தன்மையையும் கொண்டிருப்பதால் இயற்கையில் தனித்த தனிம நிலையிலேயே கிடைக்கின்றது. பழைய கற்காலத்தில் கிமு 40000 ஆண்டுகளுக்கு முன் எசுப்பானியாவின் கற்குகைகளில் இயற்கை தங்கம் சிறிய அளவில் கிடைத்ததாக அறியப்படுகிறது. வெள்ளி, தாமிரம், வெள்ளீயம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்கள் ஆரம்பகால கலாச்சாரங்களில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது . கிமு 3000 இல் விண்கல்லில் இருந்து பெறப்பட்ட இரும்பிலிருந்து தயாரிக்கப்பட்ட எகிப்திய ஆயுதங்கள், "வானத்திலிருந்து வந்த கத்திகள்" எனக் கொண்டாடப்பட்டன .ஈயம், வெள்ளீயம், தாமிரம் போன்ற சில குறிப்பிட்ட உலோகங்கள் உயர் வெப்பநிலையில் தாதுக்களை ஊது உலையில் சுடுபடுத்தி உருக்கிப் பிரித்தல் முறையிலேயே தயாரிக்கப்படுகின்றன. + +கிமு 5 , 6 ஆம் நூற்றாண்டு காலத்தில் முதன்முதலாக பிரித்தெடுத்தல் முறையில் உலோகம் தயாரிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைக்கின்றன . செர்பியாவிலுள்ள மைதான்பெக், யர்மொவாக், புளொக்னிக் போன்ற தொல்லியல் தளங்களில் இச்சான்றுகள் கிடைத்தன. + +தற்காலத்தில் செப்பு பிரித்தெடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் பெலோவோத் தளத்தில் கிடைத்திருக்கிறது . இங்கு கிடத்த செப்புக் கோடாலி விங்கா நாகரிகத்தைச் சேர்ந்த கிமு 5500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறியப்படுகிறது. போர்ச்சுக்கல் நாட்டிலுள்ள பால்மெலா, எசுப்பானியாவில் உள்ள இலாசு மில்லேரெசு, ஐக்கிய இராச்சியத்திலுள்ள சுடோன்யெங் போன்ற தளங்களிலும் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொடக்கக் கால உலோகங்கள் பயன்பாடு குறித்த தகவல்கள் அறியப்படுகின்றன . எனினும் உலோகங்களின் தொடக்கக்கால பய்ன்பாடுகள் குறித்த உறுதியான காலம் உறுதி செய்யப்படவில்லை. இப்பொருள் தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. +தனித்த உலோகங்கள் கிமு 3500 ஆம் ஆண்டுகளில் கண்டறியப்பட்டதாக அறியப்படுகிறது. செப்பு மற்ரும் வெள்ளீயத்தைக் கலந்து வெண்கலம் கலப்புலோகம் உருவாக்கப்பட்டது மிகப்பெரிய நாகரிக மாற்றத்திற்கு வித்திட்டது. இக்காலம் வெண்கலக் காலம் எனப்படுகிறது. +இரும்புத் தாதுவிலிருந்து இரும்பைப் பிரித்தெடுத்தல் செப்பு அல்லது வெள்ளீயத்தின் தாதுவிலிருந்து செப்பு அல்லது தகரத்தைப் பிரித்தெடுப்பதைக் காட்டிலும் கடினமானதாகும். இரும்பு பிர்த்தெடுத்தல் செயல்முறை கிமு 1200 இல் இரும்பு காலத்தில் இத்தியர் நாகரிகத்தினர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இரும்பு பிரித்தெடுத்தல் மற்றும் இரும்பு வேலை செயல்முறைகள் இரகசியமாக காக்கப்பட்டு பெலிசுதரின் இன மக்களுடைய வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது என நம்பப்படுகிறது . + +இரும்புசார் உலோகவியல் வளர்ந்த வரலாற்றை பல்வேறு கடந்தகால கலாச்சார நாகரீகங்களில் காணமுடிகிறது. பண்டைய இடைக்கால பேரரசுகள் மற்றும் மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்திற்கு அருகிலிருந்த பேரரசுகள், பண்டைய ஈரான், பண்டைய எகிப்து, பண்டைய நூபியா, மற்றும் அனடோலியா (துருக்கி), பண்டைய நாக், கார்த்தேச்சு, கிரேக்கர்கள் மற்றும் பண்டைய ஐரோப்பா ரோமர், மத்திய ஐரோப்பா, பண்டைய மற்றும் இடைக்கால சீனா, பண்டைய மற்றும் இடைக்கால இந்தியா, பழங்கால மற்றும் இடைக்கால ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாகரிகங்களில் இரும்பின் பயன்பாடு இருந்ததாக அறியப்படுகிறது. ஊது உலையின் பயன்பாடு, வார்ப்பு இரும்பு பயன்படுத்தப்பட்டது, நீரியல் சாய்வுச் சம்மட்டி, துருத்தியின் பயன்பாடு இருந்ததற்கான ஆதாரங்கள் சீனாவில் கிடைத்துள்ளன . + +உலோக தாதுக்களை சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுத்தல், உலோகங்களைப் பிரித்தெடுத��தல் மற்றும் உலோகம் பிரித்தெடுத்தல் செயல்முறை வளர்ச்சி மற்றும் சிக்கலான செயல்முறைகள் முதலியவற்றை கியார்ச்சு அகரிகாலா மூலம் எழுதப்பட்ட 16 ஆம் நூற்றாண்ட்டைச் சேர்ந்த தெ ரெ மெட்டாலிகா என்ற புத்தகம் விவரிக்கிறது. அகரிகாலா "உலோகவியலின் தந்தை" எனக் கருதப்படுகிறார் . + +உலோகங்களைப் பிரித்தெடுத்தல் என்பது உலோகத் தாதுவிலிருந்து மதிப்புமிக்க உலோகங்களைத் தனியாக நீக்குவது மற்றும் சுத்திகரிப்பது எனப் பொருள்படும். உலோக ஆக்சைடு அல்லது சல்பைடு தாதுவிலிருந்து தூய உலோகத்தைப் பிரித்தெடுக்க இயற்பியல் முறை, வேதியியல் முறை அல்லது மின்முறையில் ஒடுக்கம் செய்யப்பட வேண்டும். + +உலோகப் பிரித்தெடுப்பாளர்கள் செலுத்துதல், அடர்ப்பித்தல், கழிவுகளை நீக்குதல் முதலிய மூன்று முதன்மையான செயல்களைப் பின்பற்றுகின்றனர். சுரங்கத்திலிருந்து வெட்டி எடுத்தபிறகு, பெரிய துண்டுகளாக காணப்படும் தாது அனைத்தையும் துகளாக அல்லது தூளாக நசுக்கி, அரைத்து சிறியசிறிய துகள்களாக மாற்றுகின்றனர், பிரிக்கப்பட வேண்டிய தனிமத்தை தெவையற்ற கழிவுப்பொருட்களில் இருந்து பொருத்தமான முறையில் நீக்கி அடர்த்தியாக்குகின்றனர். + +தாதுவை அரைப்பது உகந்தது என்றால் அரைத்தலுக்கு அனுப்பப்படுகிறது. கரைப்பதால் கழிவுப்பொருட்களை நீக்க முடியுமென்றால் தாதுவைக் கரைத்து தேவையற்ற மாசுக்களை நீக்கி, தனிமத்தைப் பிரித்துத் தயாரிப்புக்குத் தேவையான கரைசலை தயாரித்துக் கொள்ளலாம். + +சிலவகை தாதுக்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இம்மாதிரியான நிகழ்வுகளில் தொடக்கநிலை பிரித்தெடுப்பு முறையில் நீக்கப்படும் கழிவு அடுத்த நிலையில் மற்றொரு தனிமத்தைப் பிரித்தெடுப்பதற்குத் தேவையான தொடக்கநிலை தாதுவாக அமைகிறது. மேலும், சில நிகழ்வுகளில் அடர்ப்பிக்கப்பட்ட தாதுவிலும் ஒன்றுக்கு மேற்பட்ட தனிமங்கள் கலந்திருக்க வாய்ப்பு உண்டு. இதுபோன்ற நிகழ்வுகளில் அடர்ப்பிக்கப்பட்ட தாது மீண்டும் பொருத்தமான செயல்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனித்தனியான தனிமங்களைப் பிரித்தெடுக்க திட்டமிடப்படுகிறது. + +பொதுவாக அலுமினியம், குரோமியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், நிக்கல், தைட்டானியம், துத்தநாகம் உள்ளிட்ட உலோகங்கள் பொறியியல் உலோகங்கள் எனப்படுகின்றன. இவையே பெரும்பாலும் கலப்புலோகங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இரும்பு- கார்பன் கலப்புலோகங்கள் தொடர்பான வார்ப்பு இரும்பு, எஃகு இரும்பு போன்றவற்றின் பண்புகளைப் புரிதலுக்கு அதிகமான முனைப்பு காட்ட வேண்டியுள்ளது. வெறும் கார்பனை மட்டுமே கலப்புலோகமாகப் பயன்படுத்தி குறைந்த செலவும் அதிக வலிமையும் மிக்க கலப்புலோகங்களை தயாரிக்க முடிகிறது. வார்ப்பு இரும்பு, தேனிரும்பு போன்றனவும் இவ்வகையான கலப்புலோகங்களேயாகும். மின்தடையும் அரித்தல் பண்பும் முக்கியத்துவம் பெறும் இடங்களில் தூய எஃகும், துத்தநாக முலாமிட்ட எஃகும் பயன்படுத்தப்படுகின்றன. வலிமையும் எடை குறைவும் தேவையான இடங்களில் அலுமினியம் மற்றும் மக்னீசியம் கலப்புலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மோனெல் போன்ற தாமிர-நிக்கல் கலப்புலோகங்கள் அதிக அரிப்புத்தன்மையும் காந்தத் தன்மையும் இல்லாத சுழல் இடங்களில் பயன்படுத்தப்படுகின்றன. நிக்கல் அடிப்படையில் உருவான இங்கோனெல் போன்ற கலப்புலோகங்கள் வாயுச் சுழலிகள், சுழலிமின்னேற்றிகள், அழுத்தக்கலன்கள், வெப்பபரிமாற்றிகள் போன்ற உயர் வெப்பநிலை சுழல்களில் பயன்படுத்தப்படுகின்றன. மிகைவெப்ப சூழல்களில் ஒற்றைப்படிக கலப்புலோகங்கள் உபயோகமாகின்றன. + +நுகர்வோருக்கான பொறியியல் பொருட்களில் பயன்படுத்துவதற்குத் தேவையான உலோகங்களை உற்பத்தி செய்யும் செயல்முறையில் உற்பத்தி பொறியியல் துறை கவனம் செலுத்துகிறது. கலப்புலோகங்களை உற்பத்தி செய்தல், வடிவமைத்தல், வெப்பப்படுத்துதல், மேற்பரப்பு வடிவமைப்பு முதலியன இப்பிரிவில் முக்கியத்துவம் பெறுகின்றன. வெப்பநிலை செலவு, எடை, வலிமை, கெட்டித்தன்மை, கடினத்தன்மை, அரிப்பு, சோர்வு எதிர்ப்பு, மற்றும் செயல்திறன் உள்ளிட பொருளியற் பண்புகளை சமநிலை அடையச் செய்யும் பொறுப்பு உலோகவியல் பணியாளர்களின் கடமையாகின. இதற்காக சூழ்நிலையை அவர்கள் ஆராய்கின்றனர். உப்புநீர் சூழலில் இரும்பு, அலுமினியம் கலப்புலோகங்கள் விரைவில் அரிக்கப்பட்டுவிடுகின்றன என்பது அறியப்பட்டது, குளிர் மற்றும் கடுங்குளிர் சூழல்களில் கலப்புலோகங்கள் நொறுங்கும் தன்மையையும் இழுவை தன்மையையும் இழந்து விடுகின்றன. சில கலப்புலோகங்கள் அதிக நொறுங்கு தன்மையும் நீள்தன்மையும் பெற்று விரைவில் உடை���்து போகின்றன. உயர் வெப்பநிலை, தொடர் சுழற்சி போன்ற காரணிகளும் கலப்புலோகங்களின் பண்புகளில் பாதிப்புகளை உண்டாக்குகின்றன. + + +குளிரூட்டப்பட்டு வடிவமைத்தல் முறையில் உறைவு நிலையில் உள்ள உலோகத்தை புனைதல் அல்லது வேறு முறைகள் மூலம் தயாரிப்பு வடிவத்தை மாற்றமுடியும். இச் செயல்முறையில் கெட்டியாக்குவதன் மூலம் வலிமையை அதிகரிக்க முடியும். வடிவ மாற்றங்கள் ஏற்படும் போது உலோகத்தில் நுண்ணிய குறைபாடுகள் தோன்றுகின்றன. + +பல்வேறு வடிவங்களில் வார்ப்புருக்கள் தொழிற்துறை மற்றும் கல்வித்துறைகளில் உள்ளன. மணல் வார்ப்படம், மெழுகு வார்ப்படம் என்பன் சில வகைகளாகும். + +உலோகங்களின் வலிமையை, நீள்தன்மையை, கெட்டித்தன்மையை, கடினத்தன்மையை மற்றும் எதிர்ப்புப் பண்புகளை வெப்ப சிகிச்சையின் மூலம் மாற்ற முடியும்.பதனாக்கல், வீழ்படிவாக்கல், கெட்டியாக்கல், தணித்தல், உரனூட்டல் முதலியன பொதுவான வெப்பச் சிகிச்சை முறைகளாகும் . சூடுபடுத்துவதன் மூலம் உலோகத்தை மென்மையாக்கி பின்னர் படிப்படியாக குளிரவைத்தல் பதனாற்றுதல் முறை வெப்ப சிகிச்சையாகும். இம்முறையில் கூராக்குதல், வளைத்தல், போன்ற வடிவமாற்றங்களை ஏற்படுத்த முடியும். உலோகத்தை மிக விரைவாக வெப்பமூட்டிய பின்னர் குளிரவைப்பது தணித்தல் என்னும் வெப்ப சிகிச்சை முறையாகும். உயர் கார்பன் எஃகு தணித்தல் முறையில் கடினப்படுத்தப்படுகிறது. வெப்பநிலை மாற்றம் மூலம் உலோகத்தை உடையாமல் கெட்டியாக்கும் செயல்முறை உரனூட்டல் எனப்படுகிறது. + +பெரும்பாலும், இயந்திர மற்றும் வெப்ப சிகிச்சைகள் இரண்டையும் இணைத்து நல்ல பண்புகள் மிக்க பொருட்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. வெப்ப-இயந்திர சிகிச்சை எனப்படும் பெயரால் இம்முறை அழைக்கப்படுகிறது. மிகை கலப்புலோகங்களும் தைட்டானியக் கலப்புலோகங்களும் இம்முறையில் உருவாக்கப்படுகின்றன. + +மின்முலாம் பூசுதல் எனப்படுவது மேற்பரப்பில் ஒரு இராசாயணப்பூச்சை பூசும் சிகிச்சை நுட்பமாகும். மற்றொரு உலோகத்தின் மெல்லிய அடுக்கு தயாரிப்பு மேற்பரப்பில் பூசப்படுகிறது. தங்கம், வெள்ளி, குரோமியம் அல்லது துத்தநாகம் போன்ற உலோகங்கள் இத்தகைய பிணைப்பை உண்டாக்குகின்றன. அரிப்பை குறைக்கவும் அழகியல் தோற்றத்தை மேம்படுத்தவும் இம்முறை பயன்படுத்தப்படுகிறது. + +வெப்பத் தெளிப்பு முறையில் உலோகத்தின் பண்புகளை மாற்றுதல் மற்றொரு நுட்பமான முறையாகும். + + + + + +கொள்வனவு நாளேடு + +வணிக நிறுவனங்களில் காணப்படும் பேரேடு வகைகளில் கொள்வனவு நாளேடு ("Purchase ledger") ஒன்றாகும். கொள்வனவு நாளேட்டில் நிறுவனத்தினால் கடன் அடிப்படையில் வியாபாரத்திற்கென கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் பற்றியும் கடனளித்தோர் பற்றியுமான பதிவு இடம்பெறும். கிரய பட்டியலின் (invoices) ஆதாரத்துடன் இப்பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. + + + + +பன்னாட்டுக் காவலகம் + +சர்வதேச காவல் துறை (The International Criminal Police Organization - INTERPOL) சர்வதேச குற்ற நடவடிக்கைகளை தடுப்பதை நோக்காக கொண்டு 1923 ம் ஆண்டு உருவாக்கப்பட்ட காவல்துறை அமைப்பு ஆகும். இது 184 உலக நாடுகளை உறுப்பினர்களாக கொண்டுள்ளது. இவ் அமைப்பு நாடுகளின் காவல்துறைகளுக்கிடையான ஒத்துழைப்பு, இயைபு ஆக்கத்தை ஏதுவாக்குகின்றது. இவ் அமைப்பின் தலைமையகம் லியான்ஸ், பிரான்சில் அமைந்துள்ளது. + +Sub-bureaus shown in "italics". + + + + + +கனடாவின் போக்குவரத்துக் கட்டமைப்பு + +கனேடிய போக்குவரத்து கட்டமைப்பு (Canadian transportation infrastructure) கனடாவின் சாலைகள், தொடருந்துப் பாதைகள், ஆகாய, கடல்வழி மற்றும் குழாய்வழிக் கட்டமைப்பைக் குறிக்கின்றது. கனடாவின் பரந்த பிரதேசம் காரணமாக எல்லைக்கு எல்லை அதனை இணைக்கும் ஒரு சிறந்த போக்குவரத்து மார்க்கம் அதன் இருப்பிற்கு முக்கியமாக அமைகின்றது. மனிதர்களையும் பொருட்களையும் ஏற்றி இறக்கும் வழிமுறைகள் சிறப்பாக அமைவது பொருளாதரத்திற்கு அவசியமாகவும், அரசியலில் முக்கிய அம்சமாகவும் இருக்கின்றது. + + + + + + + + +வலை 2.0 + +வலை 2.0 (web 2.0) எனும் சொல், வைய விரிவு வலையில் பரந்துள்ள இரண்டாந்தலைமுறை இணையச்சேவைகளை குறிக்க பயன்படுகிறது. + +முதலாந்தலைமுறையோடு ஒப்பிடும்போது, வலை 2.0 ஆனது முதல் தலைமுறையின் மரபான நிலையான வலைப்பக்கங்களை தாண்டி, பொதுவாக கணினியில் பயன்படுத்தும் செயலிகள் போன்ற அனுபவத்தை பயனர்களுக்கு கொடுக்கத்தக்க வலைச்சேவைகளை கொண்டிருக்கிறது. + +வலை 2.0 வலைச் செயலிகள், 1990 களிலேயே முகிழ்க்கத்தொடங்கிவிட்ட சில தொழிநுட்பங்களை பொதுவா�� பயன்படுத்துகிறது. + + +போன்றவை அவற்றுள் சிலவாகும். + +இச்சேவைகள் பெருமெடுப்பிலான பிரசுரிப்பை, தகவல் பகிர்வை அனுமதிக்கின்றன. இந்த கருத்துருவமானது விக்கி கள், வலைப்பதிவுகள் போன்றனவற்றையும் உள்ளடக்குகின்றது. + + + + + +ஸ்ரெஃபி கிராஃப் + +ஸ்ரெஃபி கிராஃப் (அல்லது ஸ்டெபி கிராப்) (பிறப்பு: யூன் 14, 1969) முன்னாள் டென்னிஸ் வீராங்கனை. செர்மனியைச் சேர்ந்தவரான இவர் டென்னிசு வரலாற்றில் மிகக் குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். 1988 இல் எல்லா (நான்கு) கிராண்ட் சிலாம் பட்டங்களையும் வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர். டென்னிசு தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது சாதனை படைத்தவர்., இச்சாதனை இன்னும் யாரும் முறியடிக்கவில்லை. ஒவ்வொரு கிராண்ட் சிலாம் போட்டிகளையும் தொடர்ச்சியாக நான்கு முறை வென்ற ஒரே டென்னிசு வீரரும் இவரே. + +பெண்கள் டென்னிசு அமைப்பின் மூலம் 107 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். மார்ட்டினா நவரத்திலோவா 167 பட்டங்களையும் கிரிசு எவர்ட் 157 பட்டங்களையும் பெற்றுள்ளனர். மார்கரட் கோர்டும் இவரும் மட்டுமே ஒரே ஆண்டில் நடைபெறும் கிராண்ட் சிலாம் போட்டிகளில் மூன்றை ஐந்து முறை வென்றவர்கள். (1988,1989, 1993, 1995, 1996). பல்வேறு தளங்களிலும் சிறப்பாக விளையாடுவதும் முன்கை முறையில் விசையுடன் பந்தை அடித்து ஆடுவதும் ஆட்டத்திற்கு உகந்த முறையில் சிறப்பாக கால்களை நகர்த்துவதும் இவரது சிறப்பு. கிராப்பின் தடகள ஆற்றலும் கடுமையாக விளையாட்டை ஆடுவதும் தற்போதைய ஆட்ட பாணியின் அடிப்படையாக இப்போது உள்ளது. இவர் ஆறு முறை பிரெஞ்சு ஓப்பன் தனிநபர் பட்டத்தை வென்றுள்ளார். கிரிசு எவர்ட் ஏழு முறை வென்றுள்ளார். ஏழு முறை தனிநபர் விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளார். நான்கு முறை ஆசுத்திரேலிய ஓப்பன் தனிநபர் பட்டத்தையும் ஐந்து முறை யூ.எசு ஓப்பன் தனிநபர் பட்டத்தையும் பெற்றுள்ளார். 1987 பிரெஞ்சு ஓப்பனிலிருந்து 1990 பிரெஞ்சு ஓப்பன் வரை தொடர்ச்சியாக பதிமூன்று கிராண்ட் சிலாம் இறுதி ஆட்டங்களில் பங்கெடுத்து அதில் ஒன்பதில் வெற்றி பெற்றுள்ளார். கிராப் சிறந்த டென்னிசு வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். நவரத்திலோவா தான் வைத்திருக்கும் சிறந்த டென்னிசு வ��ரர்கள் பட்டியலில் இவரையும் இணைத்துள்ளார். 1999இல் பில்லி சீன் கிங் இவர் சிறந்த பெண் டென்னிசு வீரர் என்று கூறினார். 1999 டிசம்பரில் கிராப் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த பெண் டென்னிசு வீரர் என்று அசோசியேட் பிரசு வல்லுநர் குழுவை கொண்டு தேர்வு செய்தது. + +செருமனியைச் சேர்ந்தவர்களான போரிசு பெக்கரும் கிராப்புமே செருமனியில் டென்னிசை புகழைடையச் செய்தவர்களில் குறிப்பிடந்தகந்தவர்கள். கிராப் உலக தர வரிசையில் மூன்றாம் இடமிருக்கும் போது 1999இல் டென்னிசிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். அவர் அன்ட்ரே அகாசியை 2001 அக்டோபரில் திருமணம் புரிந்துகொண்டார். அவர்களுக்கு இச்சேடன் சில் & இச்சாசு எல்லே என்ற குழந்தைகள் உள்ளனர். + +சொந்த தனிப்பட்ட காரணத்தால் 1997இல் கத்தோலிக திருச்சபையிலிருந்து விலகினார். + +தொழில் வாழ்க்கையில் தன் சொந்த ஊரான இச்சூலிலும் புளோரிடாவிலுள்ள போகா ராட்டன்னிலும், நியுயார்க்கிலும் நேரத்தை செலவிட்டார். நியு யார்க்கில் மான்காட்டனில் சொகுசு பங்களா வைத்திருந்தார். + +1992-99 காலகட்டத்தில் கார் பந்தய வீரர் மைக்கேல் பார்டெல்சுடன் களவில் (dated) இருந்தார். 1999 பிரெஞ்சு ஓப்பன்னை தொடர்ந்து ஆண்ரே அகாசியுடன் களவில் (டேட்டிங் ) இருந்தார். அவர்கள் 22 அக்டோபர் 2001 இருவரின் தாயார் முன்னிலையில் திருமணம் புரிந்துகொண்டனர். திருமணத்திற்கு வேறு எவரையும் அழைக்கவில்லை. அவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். +ஸ்டெப்பி-அகாசி குடும்பத்தார் லாஸ் வேகஸ் பெருநகரத்தை சேர்ந்த லாஸ் வேகஸ் பள்ளத்தாக்கின் சம்மர்லின் என்ற இடத்தில் வசிக்கின்றனர். ஸ்டெப்பியின் தாயும் தன் நான்கு குழந்தைகளுடன் சகோதரர் மைக்கேல் கிராப்பும் அங்கேயே வசிக்கின்றனர். + +1991இல் செருமனிலுள்ள லியிப்சிக் என்ற இடத்தில் ஸ்டெப்பி கிராப் இளைஞர் டென்னிசு மையம் தொடங்கப்பட்டது. 1998இல் "சில்ரன் பார் டுமாரோ" என்ற லாப நோக்கற்ற அமைப்பை தோற்றுவித்து அதன் தலைவராக உள்ளார். இது போரினாலும் பல காரணங்களாலும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுகிறது. + +2001இல் இவர் தன்னை ஸ்டெப்பி என்று அழைப்பதை விட ஸ்டெபானி என்று அழைக்கப்படுவதையை விரும்புவதாக கூறினார். + + + + +துவிதம் (நூல்) + +இந்நூல், ஆழியாள் என்ற புனைபெயரை கொண்ட மதுபாஷினி என்ற கவிஞரின��� கவிதைகளின் தொகுப்பாகும். +எக்ஸில், ஊடறு, மூன்றாவது மனிதன், பெண்கள் சந்திப்பு மலர் 2004 போன்ற சஞ்சிகைகளிலும் நூற்களிலும் வெளிவந்த இக்கவிஞரது படைப்புக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. + + + + + +ஆழியாள் + +ஆழியாள் என்ற புனைபெயரில் எழுதும் மதுபாஷினி ரகுபதி ஈழத்தின் குறிப்பிடத்தக்க பெண் கவிஞர்களில் ஒருவர். + +இவர் 1968ம் ஆண்டு இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தில் பிறந்தார். அங்கேயே புனித சவேரியார் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்று மதுரை மீனாட்சி கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டப்படிப்பையும், அவுஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்சு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டப் படிப்பையும் பெற்றவர். யாழ்ப்பணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஆங்கில விரிவுரையாளராக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்து தற்போது ஆத்திரேலியா தலைநகர் கான்பராவில் வசித்து வருகிறார். + +தொண்ணூறுகளில் எழுதத்தொடங்கிய ஆழியாளின் இரு கவிதைத் தொகுப்புக்கள் இதுவரை வெளிவந்துள்ளன. மொழிபெயர்ப்பு, படைப்பிலக்கியம், விமரிசனம் ஆகியவற்றில் தீவிரமாக ஈடுபடுபவர். இவரது படைப்புகள் மூன்றாவது மனிதன், கணையாழி, சரிநிகர், ஆறாம்திணை, தோழி, உயிர்நிழல், அம்மா, பெண் ஆகிய இலக்கியச் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. இவரது கவிதைகள் மலையாளத்திலும், கன்னடத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. + + + + + + +எதிர்மின்னி + +எதிர்மின்னி அல்லது இலத்திரன், ("electron") என்பது அணுக்களின் உள்ளே உள்ள மிக நுண்ணிய ஒர் அடிப்படைத் துகள். நாம் காணும் திண்ம, நீர்ம, வளிமப் பொருள்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை. ஒவ்வோர் அணுவின் நடுவேயும் ஓர் அணுக்கருவும், அந்த அணுக்கருவைச் சுற்றி பல்வேறு சுற்றுப் பாதைகளை மிக நுண்ணிய எதிர்மின்மத் தன்மை உடைய சிறு துகள்களான எதிர்மின்னிகளும் சுழன்று வருவதை அறிவியல் அறிஞர்கள் கண்டுள்ளனர். அணுக்கருவின் உள்ளே நேர்மின்மத் தன்மை உடைய நேர்மின்னிகளும் (புரோத்தன்கள், "protons"), மின்மத் தன்மை ஏதும் இல்லாத நொதுமின்னிகளும் (நியூத்திரன்கள், "neutrons") இருக்கும். ஓரணுக் கருவில் உள்ள ஒவ்வொரு நேர்மின்னிக்கும் இணையாக ஓர் எதிர்மின்னி அணுக்கருவில் இருந்து சற்று விலகி ஏதேனும் ���ரு சுற்றுப்பாதையில் சுழன்றுகொண்டு இருக்கும். + +எதிர்மின்னி என்பதின் ஆங்கிலச் சொல்லாகிய electron என்பது 1894 ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் உள்ளது. இச்சொல், 1544-1603 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்த, இங்கிலாந்தின் அரசியாரின் மருத்தவரான, வில்லியம் கில்பெர்ட் (William Gilbert) என்பார் ஆண்ட electric force என்னும் சொல்லிலிருந்து பெறப்பெற்றது. இலத்திரன் எனும் சொல் கிரேக்க மொழியில் உள்ள ήλεκτρον (elektron) (கிரேக்கச் சொல் எலெக்ட்ரான் என்பது பொன் நிறத்தில் உள்ள ஒளி ஊடுருவும் அம்பர் (amber) என்னும் பொருளைக் குறிப்பது. இது காலத்தால் கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். அம்பர் என்பதைத் தமிழில் "ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி" என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது ). + +அறிவியல் முறைகளில் எதிர்மின்னியைக் கண்டுபிடித்தவர் ஆங்கில அறிவியல் அறிஞர் ஜெ. ஜெ. தாம்சன் என்பார். 1897-ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று ராயல் கழகத்தில் அவர் அளித்த உரையில் தன் கண்டுபிடிப்பை வெளிப்படுத்தினார். + +ஒவ்வொரு எதிர்மின்னியும் 9.1x10 கிலோ கிராம் எடை உள்ளது. அதன் மின்மம் (மின் ஏற்பு) 1.6x10 கூலம். இவ் எதிர்மின்னிகள்தாம் பெரும்பாலான மின்னோட்டதிற்கும் அடிப்படை. வெளிச் சுற்றுப் பாதையில் உள்ள எதிர்மின்னிகள் வேதியியல் வினைகளில் மிக அடிப்படையான முறைகளில் பங்கு கொள்கின்றன. + +எலக்ட்ரானின் எதிர் துகள் பாசிட்ரான் என அழைக்கப்படுகிறது.அது எலக்ட்ரானை ஒத்த பண்புடைய, ஆனால் நேர்மின்னூட்டதை கொண்ட துகள்கள் ஆகும்.ஒரு பாஸிட்ரான் மற்றும் ஒரு எலக்ட்ரான் மோதும் போது காமா கதிரியக்கம் உருவாகிறது. +எலக்ட்ரான்கள் லெப்டான் குடும்பத்தை சேர்ந்த முதல் தலைமுறை துகளாகும். மின் ஈர்ப்பு,மின்காந்த மற்றும் பலவீனமான பரிமாற்ற பண்புகளை கொண்டது. +எலக்ட்ரான்கள் அனைத்து தனிமங்களின் மின்சாரம்,காந்த விசை மற்றும் வெப்ப கடத்தி பண்புகளில் முக்கிய காரணமாக உள்ளது.எலக்ட்ரான்கள் ஒரு அணுவின் மொத்த நிறையில் 0.06% க்கு குறைவாக இருப்பினும் அதன் பண்புகள் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையைச் சார்ந்தே இருக்கின்றன. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் இடையே எலக்ட்ரான்கள் பரிமாற்றம் அல்லது பகிர்வு இரசாயன பிணைப்பு உருவாக முக்கிய காரணியாக இருக்கிறது. +வளிமண்டலத்தில் நுழையும் அண்டக்கதிர்கள் மூலமோ அல்லது கதிரியக்க ஓரிடத்தான்களின் பீட்டா சிதைவு மற்றும் உயர் ஆற்றல் மோதல்கள்போது எலக்ட்ரான்கள் உருவாக்கபடுகிறது.மேலும் பாசிட்ரான்கள் கொண்டு நிர்மூலமாக்கும் போது எலக்ட்ரான்கள் அழிக்கப்படலாம் மற்றும் நட்சத்திரங்களின் அணுக்கரு உருவாக்கத்தின் போது உறிஞ்சப்படுகிறது +மேலும் சிறப்பு தொலைநோக்கிகள் மூலம் விண்வெளியில் உள்ள எலக்ட்ரான் பிளாஸ்மாகளை கண்டறிய முடியும் + +எலக்ட்ரான்கள் பற்றவைப்பு,எதிர்மின் கதிர் குழாய்கள் , எலக்ட்ரான் நுண் கதிரியக்க சிகிச்சை , ஒளிக்கதிர்கள் , வாயு அயனியக்கம்,துகள் துரிதமாக்குதல்,மின்னணுவியல் உள்ளிட்ட பல பயன்பாடுகளை கொண்டிருக்கின்றன. +எலக்ட்ரான் கதிர்வீச்சுகள் உலோகபற்றவைப்புக்கு பயன்படுத்தப்படுகின்றன.இதன் உயர் ஆற்றல் அடர்த்தி குறுகிய பகுதியில் குவிக்கப்படும் போது எரிவாயு தேவை இல்லாத உலோகபற்றவைப்பை நிகழ்த்த இயலும்.எலக்ட்ரான்களை ஒரு வெற்றிடத்தில் தான் முடுக்கப்படும் செய்ய முடியும். +ஒரு மைக்ரான் விட சிறிய இணைப்புகளை குறைக்கடத்திகளில் பொறிக்க பயன்படும் ஒரு முறை ஆகும்.இந்த தொழில் நுட்பத்தை அதிக செலவுகள் மற்றும் மெதுவாக செயல்திறன் கொண்ட இம்முறையானது வெற்றிடத்தில் செயல்பட வேண்டும்.இந்த காரணத்திற்காக , EBL சிறு எண்ணிக்கையிலான சிறப்பு ஒருங்கிணைந்த சுற்றுகளை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படுகிறது. +மருத்துவ மற்றும் உணவு பொருட்களை அதன் வெப்பநிலையில் மாறுபாடு இன்றி தூய்மையாக்கும் பொருட்டு எலக்ட்ரான் தீவிர கதிரியக்கம் பயன்படுத்தப்படுகிறது. +கதிரியக்க சிகிச்சையில் நேரியல் துகள் துரிதமாக்குதல் மூலம் உடலில் உள்ள மேலோட்டமான கட்டிகள் நீக்கப்படுகிறது.இவை ஒரு குறிப்பிட்ட ஆழம் ஊடுருவி செல் கார்சினோமாஸ் போன்ற தோல் புண்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுகின்றன. +குறைந்த ஆற்றல் எலக்ட்ரான் சிதறல் (LEED) எலக்ட்ரான்களின் ஒரு கற்றை ஒரு படிக பொருளின் கட்டமைப்பை தீர்மானிக்கபயன்படுகிறது.இதற்க்கு பயன்படும் எலக்ட்ரான்கள் தேவையான ஆற்றல் வீச்சு பொதுவாக 20-200 eV ஆக உள்ளது. உயர் ஆற்றல் பிரதிபலிப்பு எலக்ட்ரான் சிதறல் (RHEED) நுட்பம் படிக பொருட்கள் மேற்பரப்பு குணாதிசயத்தை அறிய பயன்படுத்துபடுகிறது.இதற்க்கான ஆற்றல் வீச்சு பொதுவாக 8-20 keV மற்றும் ��டுகோணம் 1-4 டிகிரி ஆக உள்ளது. +எலக்ட்ரான் நுண்ணோக்கியில் எலக்ட்ரான்கள் அவற்றின் இயக்கம் திசை, கோணம் மற்றும் ஆற்றல் கற்றை பொருள் தொடர்பு பண்புகள் மூலம் பொருள் அணுவியல் அளவுகளில் தீர்க்கப்பட எலக்ட்ரான் கற்றை படங்களை தயாரிக்க முடியும். +எலக்ட்ரான் நுண்நோக்கியில் 2 முக்கிய வகைகள் உள்ளன: அவை பரிமாற்றம் மற்றும் ஸ்கேனிங். பரிமாற்ற எலக்ட்ரான் நுண்நோக்கி ஒரு பொருள் துண்டு வழியாக எலக்ட்ரான்கள் ஒரு கற்றைகளை கொண்டு சென்று அதன் மறுபுறம் அதன் அமைப்பு ஓர் உணர்வி முஉளம் உணரப்படுகின்றது. ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்நோக்கி ஒரு முப்பரிமாண படத்தை தயாரிக்கலாம் இதன் உருபெருக்கும் திறன் 100 × இருந்து 1,000,000 × அல்லது அதற்க்கு மேற்பட்டதாக உள்ளது. +கட்டற்ற எலக்ட்ரான் லேசர் கற்றை எதிரெதிர் திசைகளில் உள்ள இருதுருவ காந்த வரிசைகள் கொண்ட ஒரு ஜோடி செழுத்திவழியாக செல்கிறது.இவை கதிரியக்க துறையில் கடுமையாக அதிர்வெண்பெருக்கத்தை உருவாகப்பயன்படுகின்றது.வை எக்ஸ் கதிர் உருவாக்கத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. + + + + +மிருதங்கக் கலைஞர்கள் + +மிருதங்கக் கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்: + + + + + + +தவில் கலைஞர்களின் பட்டியல் + +தாள இசைக் கருவிகளில் ஒன்றாகிய தவில் வாசிப்பதில் மிகச்சிறந்த கலைஞர்கள்: + + + + +கஞ்சிரா கலைஞர்கள் + +தாள இசைக்கருவியாகிய கஞ்சிரா வாசிப்பில் மிகச்சிறந்த கலைஞர்கள் சிலர்: + + + + +மத்தேயு நற்செய்தி + +மத்தேயு நற்செய்தி விவிலியத்தின் புதிய ஏற்பாட்டிலுள்ள நான்கு நற்செய்தி நூல்களில் முதலாவது நூலாகும். இது இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் வழங்கிய போதனைகளையும் தொகுத்தளிக்கிறது. இந்நூல் புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள முதல் நூல். மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் நீண்ட பெயர் மத்தேயு எழுதிய நற்செய்தி, κατὰ Ματθαῖον εὐαγγέλιον (Kata Matthaion Euangelion = The Gospel according to Matthew) என்பதாகும். + +மற்ற நற்செய்தி நூல்களான மாற்கு,லூக்கா என்பவற்றுடன் இந்நூல் பொதுவான வசன எடுத்தாள்கையையும், உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. எனவே, இம்மூன்று நற்செய்த�� நூல்களும் இணைந்து ஒத்தமை நற்செய்தி நூல்கள் (Synoptic Gospels) என்று அழைக்கப்படுவதும் உண்டு. + +இது இயேசுவின் சீடரான மத்தேயுவின் பெயரைக் கொண்டுள்ளது எனினும் இந்நூலின் எழுத்தாளர் அவரா என்பது பற்றித் தெளிவில்லை. வேறு ஒருவர் எழுதி புனித மத்தேயுவின் பெயரில் வெளியிட்டிருக்கலாம்; அல்லது மத்தேயு பெயரால் செயல்பட்ட தொடக்க காலத் திருச்சபைக் குழுவால் இது உருவாக்கப்பட்டிருக்கலாம் என்பது இப்போது ஏற்கப்பட்ட கருத்தாகும். + +இயேசு கிறித்து நிறுவிய இறையாட்சி பற்றிய நற்செய்தியைத் திருத்தூதர் மத்தேயு முதன்முதலில் எழுதினார் என்றும் அதனை அரமேய மொழியில் எழுதினார் என்றும் திருச்சபை மரபு கருதுகிறது. எனினும் இன்று நம்மிடையே இருக்கும் கிரேக்க மத்தேயு நற்செய்தி நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூலாகத் தோன்றவில்லை. இயேசுவைப் பின்பற்றிய ஒரு திருத்தூதர் தாமே நேரில் கண்ட, கேட்ட நிகழ்ச்சிகளை நூலாக வடித்திருக்கிறார் என்பதைவிட, அவரது வழிமரபில் வந்த சீடரோ, குழுவினரோ இதனைத் தொகுத்து எழுதியிருக்க வேண்டும் எனக் கொள்வதே சிறப்பு. + +எருசலேம் கோவிலின் அழிவுக்குப் பின்னர் (கி.பி. 70), யூதச்சங்கங்கள் கிறித்தவர்களைத் துன்புறுத்திய ஒரு காலக்கட்டத்தில் இந்நூல் எழுதப்பட்டிருக்க வேண்டும். இயேசுவின் சீடர்கள் யூதத் தொழுகைக் கூடங்களை விட்டுவிட்டுத் திருச்சபையாகக் கூடிவரத் தொடங்கிவிட்ட காலத்தில் இந்நூல் தோன்றியிருக்கிறது. அத்தகைய தொடக்க காலத் திருச்சபைக்குள்ளும் அறம், மன்னிப்பு, நல்லுறவு ஆகியவை இன்றியமையாதவை எனக் கற்பிக்க வேண்டிய சூழல் காணப்படுவதையும் இதைப் படிப்பவர் உய்த்துணரலாம். + +இந்நூல் யூத மக்கள் பலர் வாழ்ந்த ஒரு பகுதியில், ஒருவேளை மத்திய தரைக் கடல் கிழக்குப் பகுதியில் எழுதப்பட்டிருக்க வேண்டும். சிரியாவில் உள்ள அந்தியோக்கியா நகர், அல்லது தமஸ்கு நகர், அல்லது பாலசுத்தீனக் கடல் நகராகிய செசாரியாவில் மத்தேயு எழுதப்பட்டிருக்கலாம். + +மத்தேயு நற்செய்தியில் கி.பி. 70இல் உரோமைப் படையினர் எருசலேமை அழித்துத் தரைமட்டமாக்கிய செய்தி மறைமுகமாகக் குறிப்பிடப்படுவதால் (காண்க: மத் 21:41; 22:7; 27:25) அந்நூல் கி.பி. 85 அல்லது 90ஆம் ஆண்டளவில் தொகுக்கப்பட்டிருக்கலாம் என்பது அறிஞரின் கணிப்பு. + +மத்தேயு நற்செய்தி, மாற்கு நற்செய்தியின் அடிப்படையில் ���மைந்தது என மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கருதுகின்றனர். மாற்கு நற்செய்தியை ஆங்காங்கே திருத்தியும் விரித்தும் எழுதப்பட்ட மத்தேயு நற்செய்திக்கு, வேறு இரண்டு மூல ஆதாரங்கள் பயன்பட்டன எனத் தெரிகிறது. ஒன்று "Q" என அழைக்கப்படும் ஆதார ஏடு. "Q" என்பது Quelle என்னும் செருமானியச் சொல்லின் முதல் எழுத்து; இதற்கு ஆங்கிலத்தில் Source, அதாவது மூலம், ஆதாரம் என்பது பொருள். மற்றொரு மூலம் மத்தேயுவுக்கே தனிப்பட்ட முறையில் ஆதாரமாக இருந்த ஏடு எனவும் அதற்கு "M" எனப் பெயர் வழங்குவது எனவும் அறிஞர் முடிவுசெய்துள்ளனர். + +கிரேக்க மொழி பேசும் யூதர் நிறைந்த அந்தியோக்கியா போன்ற நகரங்களில் யூதக் கிறித்தவர்களும் பிற இனத்துக் கிறித்தவர்களும் திருச்சபையில் உறுப்பினர்களாக இருந்தனர். இவர்களுக்குள் பல சிக்கல்கள் இருந்தன. இது தவிர யூதக் கிறித்தவர்கள் பலர் மற்ற யூதர்களால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மனத் தளர்ச்சியடைந்து இருந்தனர். இயேசுதான் உண்மையான மெசியாவா என்ற ஐயப்பாடு அவர்கள் உள்ளத்தில் எழுந்தது. இச்சிக்கல்களுக்குத் தீர்வுகாண இந்நூல் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்பார்த்திருந்த மெசியா இயேசுதாம் என யூதக் கிறித்தவர்களுக்கு அழுத்தமாக மத்தேயு நற்செய்தி கூறுகிறது. அவர் இறைமகன் என்பது வலியுறுத்தப்படுகிறது. அவருடைய வருகையில் இறையாட்சி இலங்குகிறது எனும் கருத்து சுட்டிக்காட்டப்படுகிறது. + +எருசலேமின் அழிவுக்குப் பின் (கி.பி. 70), யூதர்கள் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்தித்தனர். இசுரயேல் நாடு உரோமையரின் ஆதிக்கத்துக்குக் கீழ் வந்த நிலையில், எருசலேம் திருக்கோவில் அழிந்துபட்ட நிலையில், யூத சமயம் எவ்வாறு தொடர்ந்து நீடிக்க முடியும்? மத்தேயுவும் இதே கேள்வியை எழுப்பினார். அதற்கு அவர் தந்த பதில்? இயேசுவை யார்யார் ஆண்டவர் என அறிக்கையிட்டு, அவரது போதனைகளைக் கடைப்பிடிக்கிறார்களோ அவர்களே உண்மையான யூத நெறியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்பவர்கள் ஆவர். + +யூதக் கிறித்தவர்கள் பிற இனத்தாரையும் சீடராக்கும் பணியைச் செய்ய இந்நூல் அறைகூவல் விடுக்கிறது. பிற இனத்தார் திருச்சட்டம் பெறாதவர்கள். இப்போது அவர்கள் கிறித்தவர்களாக மாறிடினும் திருச்சட்டத்தின் உயர்வு பற்றி அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. இயேசு கிறித்து திருச்சட்டத்தின் நிறைவு எனவும் வலியுறுத்தப்படுகிறது. + +ஆனால் அதே நேரத்தில் மத்தேயு, இறையாட்சியின் நெறிகள் யூதச் சமய நெறிகளைவிட மேலானவை எனக் கூறிக் கிறித்தவ மதிப்பீடுகளைத் தொகுத்துப் புதிய சட்டநூலாகத் திருச்சபைக்கு வழங்குகிறார்; யாவரும் இப்புதிய சட்டத் தொகுப்பைக் கடைப்பிடிக்க அறைகூவல் விடுக்கிறார் (மத் 28:20). இதற்கு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள், முக்கியமாக அவரின் கலிலேயப் பணிகள் எவ்வாறு அடிப்படையாக அமைகின்றன எனவும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. + +இந்நூலின் கிறிஸ்தியல், திருச்சபையியல், நிறைவுகால இயல் ஆகியவற்றிற்கான அடிப்படைகள் பிணைந்து கிடக்கின்றன. + +மாற்கு நற்செய்தியிலிருந்து மத்தேயு எடுத்துக்கொண்டவை இவை: + +இவற்றை உள்ளடக்கிய அடிப்படைக் கட்டமைப்பை வைத்துக்கொண்டு, மத்தேயு தாம் தொகுத்த நற்செய்தியில் ஒரு பாயிரம் போன்ற பகுதியை இணைத்தார் (மத்தேயு முதல் இரு அதிகாரங்கள்). அப்பகுதி இயேசுவின் பிறப்புப் பற்றியும் குழந்தைப் பருவம் பற்றியும் பேசுகிறது. இயேசு இன்னார் என அடையாளம் காட்டுவதே இதன் நோக்கம். இயேசு ஆபிரகாமின் மகன், தாவீதின் மகன், கடவுளின் மகன் என இனம் காட்டுவதும், இசுரயேலின் மெசியாவாகிய இயேசு, எவ்வாறு தாவீதின் நகராகிய பெத்லகேமிலிருந்து நாசரேத்துக்குச் சென்றார் என்று விவரிப்பதும் இப்பகுதியே. + +மத்தேயு நற்செய்தியில் முதன்மை வாய்ந்த கட்டமைப்பு அதில் காணப்படும் ஐந்து பேருரைகள் (பொழிவுகள்) ஆகும். அவையாவன: + +மேற்கூறிய ஐந்து பொழிவுகளையும் அளித்து, தம் மூல ஆதாரங்களைப் பயன்படுத்தி, "இயேசு ஒருவரே நம் ஆசிரியர்" (மத் 23:10) என மத்தேயு நிலைநாட்டுகிறார். இயேசுவின் போதனைப் பகுதியில் மாற்குவை விட அதிகக் கருத்துகளும் தருகிறார். + +பழைய ஏற்பாட்டின் திருச்சட்ட நூலாகிய தோராவில் ஐந்து நூல்கள் அமைந்திருப்பதுபோல் மத்தேயு நற்செய்தி நூலிலும் முகவுரை, முடிவுரை நீங்கலாக ஐம்பெரும் பகுதிகள் அமைந்திருக்கக் காணலாம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு நிகழ்ச்சிப் பகுதியும் ஓர் அறிவுரைப் பகுதியும் காணப்படுகின்றன. + +மத்தேயுவில் காணப்படுகின்ற ஐந்து பொழுவுகள் ஒவ்வொன்றின் முன்னும் பின்னும் பல "நிகழ்ச்சித் தொகுப்புகள்" தரப்படுகின்றன. இவ்வாறு, இயேசுவின் பொதுப்பணிக்கான தயாரிப்பு அதிகாரங்கள் 3-4 பகுத��யில் விளக்கப்படுகிறது. மலைப் பொழிவுக்குப் பின்னர், திருத்தூதுப் பொழிவுக்கு முன்னால், இயேசு புரிந்த புதுமைகள் தரப்படுகின்றன (அதி. 8-9). உவமைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் போதனையைச் சிலர் ஏற்கின்றனர், வேறு சிலர் ஏற்கவில்லை என்பது விளக்கப்படுகிறது (அத். 11-12). திருச்சபைப் பொழிவுக்கு முன்னால், இயேசுவின் கலிலேயப் பணியும் இயேசு எருசலேமை நோக்கிப் பயணமாதலும் பேசப்படுகின்றன (அதி. 19-23). + +இறுதியாக, அதிகாரங்கள் 26-28இல் இயேசுவின் சாவும் உயிர்த்தெழுதலும் விளக்கம் பெறுகின்றன. மாற்கு நற்செய்தி, இயேசுவின் கல்லறை வெறுமையாக இருந்தது என்ற செய்தியோடு முடிந்தது. ஆனால், மத்தேயு நற்செய்தியில், உயிர்த்தெழுந்த இயேசு கலிலேயாவில் தோன்றிய செய்தி சேர்க்கப்பட்டுள்ளது. இறுதி முறையாகத் தோன்றிய இயேசு, தம் சீடர்களிடம் தம் நற்செய்தியை உலகெங்கும் சென்று அறிவிக்குமாறு பணிக்கின்றார் (மத் 28:16-20). + +மத்தேயு நற்செய்தியின் உள்ளடக்கத்தைக் கீழ்வருமாறு பட்டியலிட்டுக் காட்டலாம். + +மத்தேயு நற்செய்தியின்படி, இயேசு அறிவித்த போதனையின் மையக் கருத்து விண்ணரசு (கடவுளின் ஆட்சி) ஆகும். கடவுள்தாம் படைப்புலகு அனைத்தையும் ஆண்டு வழிநடத்துபவர் என்னும் உண்மையை அனைவரும் ஏற்று, அந்த நம்பிக்கைக்கு ஏற்பத் தம் வாழ்க்கையைச் சீர்படுத்திக் கொள்வதைக் குறிப்பதே கடவுளின் ஆட்சியாகும். இந்தக் கடவுளின் ஆட்சியைத்தான் மத்தேயு விண்ணரசு என்று குறிப்பிடுகிறார். யூதர்கள் கடவுளின் பெயரை வெளிப்படையாக உரைப்பதில்லை; மாறாக கடவுளின் உறைவிடமாகிய விண்ணகம் சில வேளைகளில் கடவுளையே குறிக்கும். இவ்வாறு, விண்ணரசு என்று மத்தேயு கூறுவது உண்மையிலே கடவுளின் அரசு, இறையாட்சி, கடவுளின் ஆட்சி என்றே பொருள்படும். + +மத்தேயுவில் காணும் போதனைப்படி, விண்ணரசின் முழுமை இன்னும் வரவில்லை என்பது உண்மையே. ஆகவேதான், இயேசுவின் சீடர் "உமது ஆட்சி வருக" (மத் 6:10) என்று இறைவேண்டல் செய்கிறார்கள். எனினும், கடவுளின் ஆட்சியானது ஏற்கனவே தொடங்கிவிட்டது. அந்த ஆட்சியின் முன்சுவையாக, தொடக்கமாக இருப்பவர் இயேசு. அவர் மக்களுக்கு நலமளிப்பதில் ஈடுபட்டார்; உவமைகள் வழி இறையாட்சியின் பண்புகளை விளக்கினார்; குறிப்பாக, தம் சாவு மற்றும் உயிர்த்தெழுதல் வழியாக இறையாட்சியின் உண்மையை நிலைநிறுத்தினார். + +இறையாட்சி அல்லது விண்ணரசு பற்றிய இந்த இரு கூறுகளையும் மத்தேயு நற்செய்தியில் காண்கின்றோம். ஏற்கனவே இயேசுவோடு தொடங்கிவிட்ட இந்த ஆட்சி இன்னும் தன் முழுமையை எய்தவில்லை. இந்த முழுமையை மத்தேயு நற்செய்தி விவரிக்கிறது (காண்க: மத். அதிகாரங்கள் 24, 25). இறையாட்சியின் நிறைவை எதிர்பார்த்து மனிதர் "விழிப்பாக" இருக்க வேண்டும் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது (காண்க: மத். 24:42; 25:13). + +மத்தேயு, "சிறியோர்" மட்டில் நாம் காட்ட வேண்டிய அன்பையும் கரிசனையையும் மிகவும் வலியுறுத்துகிறார் (மத் 10:42). இயேசுவின் சீடர்களும் "சிறியோராக" மாற வேண்டும். ஏன், மக்களினத்தார் அனைவருக்கும் கடவுள் தீர்ப்பு வழங்கும்போது, அவர்கள் "சிறியோர்" மட்டில் அன்புகாட்டினரா என்பதை அளவீடாகக் கொண்டே தீர்ப்பு வழங்குவார் என மத்தேயு நற்செய்தி காட்டுகிறது (மத் 25:31-46). + +இயேசுவின் வேர்கள் இசுரயேலின் வரலாற்றிலும் அதன் திருநூல்களிலும் காணக்கிடக்கின்றன என்பதை நிலைநாட்டியபின், இயேசுவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த சிறப்புப் பெயர்களுக்கு யூத மரபின் அடிப்படையில் விளக்கம் தருகிறார் மத்தேயு. + +எடுத்துக்காட்டாக, மத்தேயு நற்செய்தியின் தொடக்கத்தையும் முடிவையும் எடுத்துக்கொண்டால், மத் 1:23இல் இயேசு இம்மானுவேல் என்று அடையாளம் காட்டப்படுகிறார். இந்த எபிரேயச் சொல்லுக்குக் "கடவுள் நம்மோடு இருக்கிறார்" என்பது பொருள். நூலின் இறுதியில், உயிர்த்தெழுந்த இயேசு, "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" என வாக்களிக்கிறார் (மத் 28:20). இவ்வாறு, இயேசு கடவுளின் உடனிருப்பாக மனிதரிடையே வந்தார் என்பதோடு, அவரது உடனிருப்பும் எக்காலத்திற்கும் தொடரும் என்னும் உண்மையை மத்தேயு நற்செய்தி வழங்குகிறது. + +மத்தேயுவில் இயேசுவுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் கடவுளின் மகன் (காண்க: மத் 2:15). இங்குப் பழைய ஏற்பாட்டு நூலாகிய ஓசேயாவிலிருந்து 11:1 மேற்கோளாகக் காட்டப்படுகிறது. அதில் "இசுரயேல்" கடவுளின் மகன் என அழைக்கப்படுகிறது. அதுபோல, இயேசு தாவீதின் மகன் என அழைக்கப்படுகிறார். முற்காலத்தில் தாவீதுக்கு மகனாயிருந்த சாலமோனைப் போல, ஏன் அவரைவிடவும் மேலாக, இயேசு ஞானத்தைப் போதிப்பவராகவும் குணமளிப்பவராகவும் வந்தார். எனவே, அவர் தாவீதின் மகன்தான். + +இயேசுவுக்கு மத்தேயு வழங்கும�� இன்னொரு பெயர் கடவுளின் ஊழியன் என்பதாகும். மனிதர்களின் துன்பங்களைத் தம்மேல் சுமந்துகொண்டு (காண்க: மத் 8:17; 12:18-21), முற்காலத்தில் எசாயா இறைவாக்கினர் விவரித்த "கடவுளின் ஊழியனைப்" போல இயேசுவும் இறை விருப்பத்தை நிறைவேற்றினார் (காண்க: எசா 53:4; 42:1-4). + +மத்தேயு நற்செய்தி இயேசுவுக்குக் கடவுளின் ஞானம் என்னும் பெயரையும் வழங்குகிறது (காண்க: மத் 11:19, 25-30). இயேசு கடவுளின் ஞானத்தை மக்களுக்கு அறிவித்தவர் ஆதலால் இறைவாக்குகளும் திருச்சட்டமும் உண்மையிலேயே எதில் அடங்கியுள்ளன என்று அதிகாரத்தோடு போதித்தார் (காண்க: மத் 7:12; 22:34-40). + +இயேசு யூத சமயத் திருச்சட்டத்தை நிறைவேற்ற வந்தாரே ஒழிய, அதை அழிப்பதற்கல்ல (மத் 5:17). எனவே இயேசு வழங்கியதாக ஐந்து பேருரைகளை மத்தேயு அமைத்துள்ளார். அந்த உரைகளில் இயேசுவின் போதனை அடங்கியுள்ளது. அந்தப் போதனைகளிலிருந்து பெறப்படும் வாழ்க்கை நெறியும் தரப்படுகிறது. + +எனவே, மத்தேயு நற்செய்தியிலிருந்து இயேசுவின் வழியாகக் கடவுள் நம்மோடு இருக்கிறார் (மத் 1:23; 28:20) என்னும் உறுதியைப் பெறுகிறோம். இயேசுவின் திருச்சபை, கடவுளின் மக்களை உள்ளடக்கும் அவையாக, குழுவாக உள்ளது எனவும் அறிகிறோம் (மத் 21:33-46). + + + + + +மார்ட்டினா நவரத்திலோவா + +மார்ட்டினா நவரத்திலோவா (Martina Navratilova (Czech: "Martina Navrátilová" உச்சரிப்பு[ˈmarcɪna ˈnavraːcɪlovaː];; {பிறப்பு: அக்டோபர் 18, 1956) என்பவர் முன்னாள் டென்னிசு வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆவார். செக்கோசிலோவாக்கியாவில் பிறந்த இவர் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியுரிமையைப் பெற்றார். 2005 ஆம் ஆண்டில் டென்னிஸ் எனும் இதழானது 1965 முதல் 2005 வரையிலான காலகட்டங்களில் சிறந்த பெண் டென்னிசு வீரர் என இவரைக் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைத்துக் காலங்களுக்குமான சிறந்த வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார். + +நவரத்திலோவா மகளிர் டென்னிசு சங்கத்தின் புள்ளிவிவரத்தின் படி 332 வாரங்கள் ஒற்றையர் பிரிவில் முதல் இடத்தில் நீடித்தார். மேலும் இரட்டையர் பிரிவில் 237 வாரங்கள் முதல் இடத்தில் நீடித்தார். தற்போது வரை டென்னிசு வரலாற்றில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் 200 வாரங்களுக்கும் மேலாக முதல் இடத்தில் நீடித்தது இவர் மட்டுமே ஆவார். இவர் ஏழு முறைகள் ஒற்றையர் பிரிவில் ஆண்டு முழுவதும் முதல் இடத்தில் நீடித்தார், மேலும் அதில் ஐந்து முறைகள் தொடர்ச்சியாக முதல் இடத்தில் நீடித்தார். இரட்டையர் பிரிவில் இந்தச் சாதனையானது ஐந்து முறையும் அதில் மூன்றுமுறை தொடர்ச்சியாகவும் முதல் இடத்தில் நீடித்தார். + +நவரத்திலோவா 18 முறைகள் பெருவெற்றித் தொடரில் (டென்னிசு) கோப்பையில் வெற்றி பெற்றுள்ளார். 31 முறைகள் பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் பெருவெற்றித் தொடர் (டென்னிசு) வெற்றி பெற்றுள்ளார். மேலும் 10 முறை கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் ஒரு தனி நபர் அதிக முறை ஆண் மற்றும் பெண் பிரிவில் பெரு வெற்றித் தொடரில் வெற்றி பெற்றவர் எனும் சாதனையைப் படைத்துள்ளார். இவர் 12 முறைகள் விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். அதில் 1982 முதல் 1990 வரையிலான ஒன்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக விம்பிள்டன் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். மேலும் ஒன்பது முறை தொடர்ச்சியாக வாகையாளராகத் திகழ்ந்தார். இதன் மூலம் 8 முறை தொடர்ந்து இந்தச் சாதனை புரிந்த ஹெலன் வில்ஸ் மூடியின் சாதனையை இவர் முறியடித்தார். + +நவரத்திலோவா மற்றும் பில்லீ ஜீன் கிங் ஆகிய இருவரும் தலா 20 விம்பிள்டன் கோப்பையை வென்றுள்ளனர். டென்னிசு வரலாற்றிலேயே அதிக முறை ஒற்றையர் பிரிவில் 167 முறைகள் வாகையாளராகவும் , இரட்டையர் பிரிவில் 177 முறைகள் வாகையாளராகவும் திகழ்ந்து சாதனை புரிந்துள்ளார். இதுவரையிலான தொழில் முறை டென்னிசு போட்டிகளில் 1982 முதல் 1986 வரை தரவரிசையில் முதல் இடத்தில் நீடித்த இவரின் சாதனை முறியடிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகளில் நடந்த ஒற்றையர் பிரிவில் 442 போட்டிகளில் 428 இல் வெற்றி பெற்றுள்ளார். ஒரு ஆண்டில் மூன்றிற்கும் குறைவான போட்டிகளில் தான் இவர் தோல்வி அடைந்துள்ளார். இவரின் வெற்றி சராசரி 96.8 விழுக்காடு ஆகும். தான் ஒரு சமபாலுறவாளர் என்பதில் வெளிப்படையாக இருந்தவர். + +பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு வாகையாளர் விருதினை 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார். பன்னாட்டு டென்னிசு கூட்டமைப்பு ஆன்டுதோறும் வழங்கக் கூடிய சிறந்த வீரர் விருதினை 1978, 1979, 1982, 1983, 1984, 1985, 1986 ஆகிய ஆண்டுகளில் பெற்றுள்ளார். பிபிசியின் விளையாட்டு வீரர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2003 ஆம் ஆண்டில் வழங்கியது. செக் குடியரசு சிறந்த வீரருக்கா�� விருது 2006 இல் பெற்றார். + +– = போட்டி நடைபெறவில்லை + +A = போட்டியில் கலந்துகொள்ளவில்லை. + +வெவி = கலந்துகொண்ட போட்டிகளும் அதில் வென்ற போட்டிகளும் + +குறிப்பு: 1977ம் ஆண்டில் சனவரி, டிசம்பர் ஆகிய மாதங்களில் ஆத்திரேலிய ஓப்பன் நடந்தது. 1986 ம் ஆண்டு நடைபெறவில்லை. + + + + + +அம்பர் + +அம்பர் ("amber") என்பது பொன் நிறத்தில் உள்ள ஒரு பொருள். இது காலத்தால் சற்றேறக்குறைய கல் போல் ஆகிவிட்ட மரப்பிசின் ஆகும். பெரும்பாலான அம்பர் கட்டிகள் 30-90 மில்லியன் ஆண்டுகளாய் உறைந்து கெட்டியாய் ஆன மரப்பிசின் ஆகும். அம்பர் என்பது தமிழில் "ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி" என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது. மரப்பிசினில் விழுந்துவிட்ட சிறு பூச்சிகளும் அப்படியே காலத்தால் உறைந்திருப்பது பார்க்க வியப்பூட்டுவதாகும். இப்படி தொல்பழங்காலத்து பயினி மரம் போன்ற மரங்களின் மரப்பிசினில் விழுந்து விட்ட பூச்சிகளில் சில இன்று நிலவுலகில் இல்லாமல் முற்றுமாய் அற்றுப்போய்விட்டவை. இந்த அம்பர் கட்டிகள் பால்ட்டிக் கடற்கரைகளிலும், கடலடியிலும் கிடைக்கின்றன. சில சிறு அம்பர் கட்டிகள் மீனின் வயிற்றில் இருந்தும் எடுத்துள்ளனர். + +இந்த அம்பர் கட்டிகளை துணியில் தேய்த்த பின், சிறு வைக்கோல் துண்டுகளை ஈர்ப்பதை கிரேக்க நாட்டில் உள்ள தாலஸ் (Thales) என்பவர் கி.மு 600 வாக்கில் கண்டுபிடித்தார். ஏறத்தாழ கி.மு. 300ல் வாழ்ந்த கிரேக்க மெய்யியல் அறிஞர் பிளேட்டோ அவர்கள் அம்பரின் இந்தப் பண்பைப் பற்றி குறித்துள்ளார். இந்த அம்பரை கிரேக்கத்தில் "எலெக்ட்ரான்" என்கின்றனர் (இதன் அடிப்படையில் இதனை இலத்தீனில் எலெக்ட்ரம் என்பர்). அம்பரை துணியில் தேய்ப்பதால், அவை மின்மப் பண்பு உறுகின்றது (மின்மத் தன்மை அடைகின்றது). + + + + +தேலேஸ் + +மிலேத்தசின் தேலேசு ("Thales of Miletus", , தேலேசு ("Thalēs"; , தேலிஸ்; கிமு 624 – அண். கிமு 546) என்பவர் அனத்தோலியாவில் மிலேத்தசு நகரைச் சேர்ந்த சாக்கிரட்டீசுக்கு முந்திய கிரேக்க மெய்யியலாளர் ஆவார். இவர் கிரேக்கத் தொன்மத்தின் ஏழு ஞானிகளுள் ஒருவராகக் கணிக்கப்படுகிறார். கிரேக்க மெய்யியலில் இவர் முதன்மையானவர் எனக் குறிப்பாக அரிசுட்டாட்டில் போன்றோர�� கருதினர். கிரேக்கத் தன்னியல்பு பொருள்முதல் வாத மெய்யியற் பள்ளியைத் தொடங்கி வைத்தவரும் இவரே. இயற்கையின் தொன்முதல் நெறிமுறை ஆகவும் பொருண்மத்தின் தன்மையாகவும் நீரை இவர் கருதியதாக அரிசுட்டாட்டில் கூறுகிறார். எனவே இவர்தான் நிலவும் அனைத்துப் பண்டங்களுக்குமான அடிப்படையைப் புலன்களால் உணரமுடிந்த ஒற்றைப் புறநிலை நெறிமுறையால்முதலில் விளக்கியவராவார். + +தேலேசு இயற்கை நிகழ்வுகளைத் தொன்மத்தைப் பயன்படுத்தாமல் விளக்கினார். பெரும்பாலும் பிற அனைத்துச் சாக்ரட்டீசுக்கு முந்திய மெய்யியலாருமே அறுதி பொருளையும் மாற்றத்தையும் உலக நிலவலையும் இவரைப் பின்பற்றித் தொன்மம் சாராமலே விளக்கினர். இந்த தொன்மம் தவிர்த்தல் போக்கு அறிவியல் புரட்சியை ஏற்படுத்தியது. இவர்தான் அனைத்துக்குமான பொது நெறிமுறையையும் கருதுகோள்களையும் உருவாக்கிப் பயன்படுத்தியவர். எனவே இவர் "அறிவியலின் தந்தை" எனவும் போற்றப்படுகிறார். என்றாலும் சிலர் இத்தகுதி தெமாக்கிரித்தசுக்கே பொருந்தும் என்கின்றனர். + +பட்டைக்கூம்புகளின் உயரத்தையும் கடற்கரையில் இருந்து கப்பல் உள்ள தொலைவையும் கண்டறிய, இவர் கணிதவியலில் வடிவவியலைப் பயன்படுத்தினார். இவர்தான் முதலில் தேலேசுத் தேற்றத்தின் கிளைத்தேற்றங்களைக் கண்டறிய பகுப்புவழி பகுத்தறிதல் முறையைப் பயன்படுத்தினார். எனவே இவரே முதல் கணிதவியலாராக, ஏன், கணிதவியலின் கண்டுபிடிப்பாளராகவே கருதப்படுகிறார். + +இவர் கிமு 585-84 இல் சூரிய ஒளிமறைப்பை முன்கணித்துள்ளார். ஆம்பர் என்னும் பொருளை துணியில் தேய்த்த பின் அது வைக்கோல் துண்டுகளை ஈர்க்கும் திறம் பெறுகின்றது என கண்டுபிடித்தார். அம்பரின் இப் பண்பைப் பற்றி கிமு 300களில் வாழ்ந்த பிளாட்டோ என்பாரும் குறித்துள்ளார். மின்சாரத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்றான மின் தன்மை இவ்வகைக் கண்டுபிடிப்பில் இருந்து தொடங்கியதாகக் கருதப்படுகின்றது. + + + + + + + +லியோனார்டு ஆய்லர் + +லியோனார்டு ஆய்லர் ("Leonhard Euler", ஏப்ரல் 15, 1707 – ) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டின் மிக புகழ் பெற்ற ஒரு கணிதவியல், மற்றும் அறிவியல் அறிஞர். இவர் யாவரைக்காட்டிலும் மிக அதிகமான அளவில் கணிதவியல் மற்றும் அறிவியல் ஆய்வுக் கண்டுபிடிப்புகள் செய்த பேரறிஞர். நுண்கணிதம் முதல் கோலக் கோட்பாடு வரையிலான கணிதத்துறையின் பல்வகைப்பட்ட பிரிவுகளில் ஈடுபாடு காட்டினார். இவருடைய கண்டுபிடிப்புகள் 70க்கும் மேலான எண்ணிக்கையில் பெரும் புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அதனிலும் அவருடைய கடைசி 17 ஆண்டுகள் முழுக்கண்ணும் தெரியாமல் அவர் வாயால் சொல்லி மற்றவர்கள் எழுதினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகக்கணித வரலாற்றில் கணித இயலாளர்களின் பட்டியலில் ஆய்லருக்கு முதல் ஐந்தாறு இடங்களிலேயே ஓர் இடம் உண்டு. இவர் தற்காலக் கணிதத்துறையில் பயன்படும் பெரும்பாலான கலைச்சொற்களையும் குறியீடுகளையும் அறிமுகப்படுத்தினார். இவர் விசையியல் (mechanics), ஒளியியல், வானியல் ஆகிய துறைகளிலும் பங்களிப்புக்களைச் செய்துள்ளார். "ஆய்லரை வாசியுங்கள், ஆய்லரை வாசியுங்கள் அவரே எங்கள் எல்லோருக்கும் குரு" என்று பியரே-சைமன் லாப்பிளாஸ் கூறியதாகச் சொல்லப்படுகிறது. + +ஆய்லரின் உருவப் படங்கள் சுவிஸ் 10 பிராங்க் நாணயத்தாளின் ஆறாவது தொடரிலும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகள் வெளியிட்ட பல அஞ்சல் தலைகளிலும் இடம் பெற்றுள்ளன. 2002 ஆய்லர் என்னும் சிறுகோளின் பெயர் இவரது பெயரைத் தழுவியே வைக்கப்பட்டது. லூதரன் திருச்சபையும் இவரை தமது புனிதர்களின் நாட்காட்டியில், மே 24 ஆம் நாளில் இடம்பெறச் செய்து மதிப்பளித்தது. இவர் கிறிஸ்து சமயத்தை உறுதியாகப் பின்பற்றி வந்தார். அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த இறைமறுப்பாளர்களுக்கு எதிராக கடுமையாக வாதம் புரிந்துள்ளார். + +ஆய்லர் சுவிட்சர்லாந்தில் உள்ள பாசெல் என்னுமிடத்தில் பவுல் ஆய்லர் என்பவருக்கும், மார்கரீட் புரூக்கர் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை பவுல் ஆய்லர் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த ஒரு மதகுரு. தாயாரும் ஒரு குருவானவரின் மகளே. லியொனார்டுக்கு இரண்டு தங்கைகள் இருந்தனர். லியொனார்டு பிறந்ததுமே ஆய்லர் குடும்பத்தினர் பாசெல்லிலிருந்து ரீஹென் என்னும் நகருக்கு இடம் பெயர்ந்தனர். லியொனார்டு தனது சிறு பராயத்தின் பெரும் பகுதியை இந்நகரிலேயே கழித்தார். பவுல் ஆய்லர், அக்காலத்தில் ஐரோப்பாவில் பெயர் பெற்ற கணிதவியலாளரான ஜொஹான் பர்னோலி என்பவரின் குடும்பத்துக்கு நண்பராக இருந்தார். இது இளம் லியொனார்டின் கணித ஆர்வத்துக்குப் பெரும் பங்களி��்புச் செய்தது. + +சுவிசர்லாந்தில் பிறந்த லியனார்ட் ஆய்லர் படித்த பள்ளியில் கணிதம் பாடமாகவே இல்லை. அதனால் கணிதத்தில் ஆர்வமுடைய இவருடைய தந்தை பால் ஆய்லர் இவரை ஜான் பெர்னோவிலி (1667 – 1748) என்ற ஒரு புகழ் பெற்ற கணிதப் பேராசிரியரிடம் தனி மாணவனாகப் பாடம் கற்றுக் கொள்ள அனுப்பித்தார். ஆனால் பெர்னோவிலி இவரை சனிக்கிழமைகளில் மாத்திரம் வரச்சொல்லி உன் சந்தேகங்களைக் கேட்டுக்கொள் என்று சொல்லிவிட்டார். அதுவே ஆய்லருக்கு ஒரு வரப் பிரசாதமாகியது. ஏனென்றால் கணிதம் கற்றுக் கொள்ள இதைவிட வேறு நல்ல வழி கிடையாது என்று ஆய்லரே பிற்காலத்தில் சொல்லியிருக்கிறர். அவருடைய உழைப்பையும் கத்திமுனை புத்தியையும் பார்த்த இன்னும் இரு பெர்னோவிலிகள்தான் (டேனியல் பெர்னோவிலி, நிக்கொலாஸ் பெர்னோவிலி இருவரும்) இவன் பெரிய கணித மேதையாவான் என்று கண்டுகொண்டு, மதப் படிப்பில் இவரை ஈடுபடுத்த முயன்ற தந்தையின் மனதை மாற்றினார்கள். + +பிரஷ்யாவின் மன்னர் (1740 – 1786) இரண்டாம் பிரெடெரிக்கும் ருஷ்யாவின் அரசி (1762 -1796) முதலாம் காதெரினும் கணித உலகத்திற்குச் செய்திருக்கும் சேவை சரித்திரப் பிரசித்தி பெற்றது. பெர்லினில் ஜெர்மானிய கலைக்கூடமும், செய்ண்ட் பீடர்ஸ்பர்க்கில் ருஷ்யக் கலைக்கூடமும் அக்காலத்தில் ஐரோப்பா முழுவதற்குமே கலை, விஞ்ஞானம் இவைகளுக்குத் தலையாயதாய் இருந்தது. அங்கு வேலை பார்த்த பெரிய விஞ்ஞானிகள் எல்லோரும் அரசுக்கு வேண்டியிருந்த ஆய்வுகளையோ அல்லது ஆசிரியத் தொழிலையோ செய்ததோடு மட்டுமல்லாமல், தம் தமக்குப் பிடித்திருந்த விஞ்ஞான ஆய்வுகளைச் செய்வதில் துடியாய் இருந்தனர். அப்படி இருப்பதற்கே அவர்கள் ஊதியம் பெற்றனர். இப்பேர்ப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் ஆய்லர் அந்த இரண்டு கலைக்கூடங்களில் தன் ஆய்வுகளை நடத்தினார். + +ஆய்லர் 1727 இல் செய்ண்ட் பீடர்ஸ்பர்க் கலைக்கூடத்தில் உடற்றொழிலியல் பிரிவில் உதவியாளராகப் பணி ஏற்றார். அரசியல் காரணங்களால் வெளி உலகில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்த அச்சமயம் அவர் கணிதப் பிரிவிலேயே பணி ஆற்றுவது கவனிக்கப்படாமலே போயிற்று. 1733 இல் டேனியல் பெர்னோவிலி விட்டுச் சென்றபோது ஆய்லர் இயற்பியல் பேராசிரியர் ஆனார். ஒரு எட்டு ஆண்டுகள் உழைத்து, நிலையியக்கவியலில் (Mechanics) இருபாகம் கொண்ட ஒரு நூல் ('மெக்கானிக்கா')உள்பட, 55 ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். இதற்கு நடுவில், அவர் அரசுக்காகச் செய்துகொண்டிருந்த வேலைகள்: + +•ரஷ்யப் பள்ளிக்கூடங்களுக்கு கீழ் மட்டத்தில் பாட புத்தகங்கள் எழுதுவது; + +•அரசின் பூகோளத்துறையை மேற்பார்வை பார்ப்பது; + +•நிறைகளையும் அளவைகளையும் சீர்திருத்துவது; + +•தராசுகளை தரம் பார்ப்பதற்கு புதுச்செய் முறைகளை உண்டாக்குவது, மற்றும் + +•கப்பல் துறையிலுள்ள தொழில் நுட்ப விஞ்ஞானப் பிரச்சினைகளைத் தீர்க்க ஆய்வு செய்வது. + +இத்தனையும் செய்வதில் அவர் ஒருபொழுதும் சளைத்ததே இல்லை. அவருக்கு குழந்தைகள் என்றால் பிடிக்குமாம். அவருக்கே 13 குழந்தைகள் (அவைகளில் ஐந்து தான் வளர்ந்து ஆளானவை). மடியில் ஒரு குழந்தையும் அவரைச் சுற்றி மற்ற குழந்தைகளும் விளையாடிக் கொண்டே இருக்கும்போதே தான் அவர் தன்னுடைய கணித ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவாராம். 1738 இல் அவருக்கு ஒரு கண் பார்வை போய்விட்டது. + +1736 இல் ஆய்லர் மக்களின் கவனத்தை ஈர்த்த ஒரு பிரச்சினையை விளையாட்டுப்போல் எளிதில் விடுவித்தார். அந்த பிரச்சினையும் அதன் நிறுவலில் இருந்த தத்துவமும் மூன்று நூற்றாண்டுகளுக்குப் பிறகு இடவியல், கோலக்கோட்பாடு என்ற இரண்டு தற்காலக் கணிதப் பிரிவுகளுக்கு அடிக்கோலிட்டது. + +ஒரு ஆறு. அதில் இரண்டு பெரிய தீவுகள். படத்தில் காட்டியபடி ஆற்றின் குறுக்கே ஏழு பாலங்கள். ஏழு பாலங்களையும் ஒரு நடையில் கடக்கவேண்டும். போன பாலத்திலேயே இரண்டாம் முறை போகக்கூடாது. இது முடியுமா? இதுதான் பிரச்சினை. கோனிக்ஸ்பர்க் மக்களுக்கு இது உண்மைப் பிரச்சினை. ஏனென்றால் அவர்கள் ஊரில் தான் இத்தீவுகளும் பாலங்களும். மக்கள் நடந்து நடந்து சோதனை செய்தே அயர்ந்தனர். ஆய்லர் இதை நுண்பியப்படுத்தி கணித முறைத் தர்க்கத்தினால் விடுவித்தார். அவருடைய தீர்ப்பு: ஏழு பாலங்களையும் ஒரு நடையில் கடக்கமுடியாது. ஏன் என்பதற்கு படத்தைப் பார்ப்போம். + +ஆய்லர் கணித மரபுப்படி பிரச்சினையிலிருந்த சம்பந்தமில்லாத விஷயங்களை ஒதுக்கிவிட்டு, அதன் அடித்தளத்திலிருந்த உயிர் நாடிப்பிரச்சினையை வெளிக்கொணர்வதற்காக, பாலங்கள் பிரச்சினையை கோலம் மூலமாக எளிதாக்கினார். நிலப்பரப்புகள் ஒவ்வொன்றையும் ஒரு புள்ளியாகவும், பாலங்களை அவைகளை இணைக்கும் கோடுகளாகவும் (அவை நேர் கோடாக இருக்கவேண்டிய தேவையில்லை) செய்ததில�� படத்தில் தெரிவதுபோல் ஒரு கோலமாகியது. 4 கோணப்புள்ளிகளும் 7 இணைக்கும் கோடுகளும் உள்ள இந்தக் கோலத்தில், ஒருபுள்ளியிலிருந்து 5 கோடுகளும் மற்ற 3 புள்ளிகளில் ஒவ்வொன்றிலிருந்தும் 3 கோடுகளும் செல்கின்றன. இந்த சூழ்நிலைக்கு ஆய்லர் ஒரு கணிதத் தேற்றத்தையே நிறுவினார். அதாவது, எல்லா கோடுகளையும் கடக்கக்கூடிய ஒரு நடை இருக்க வேண்டுமென்றால், ஒன்று, எந்தப் புள்ளியிலிருந்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள் கோடுகள் செல்லக்கூடாது, அல்லது, இரண்டே புள்ளிகளிலிருந்து ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள கோடுகள் செல்லவேண்டும். + +இந்த கோனிக்ச்பெர்க் பாலப்பிரச்சினையில், 4 புள்ளிகளிலிருந்தும் ஒற்றைப்படை எண்ணிக்கையுள்ள கோடுகள் செல்வதால், நடை சாத்தியமில்லை. + +இதற்கும் இடவியலுக்கும் என்ன சம்பந்தமென்றால், இந்தப்பிரச்சினையில் புள்ளிகளிலிருந்து செல்லும் கோடுகள் எத்தனை என்ற ஒரே கேள்விதான் பிரச்சினையின் வேர். இந்த வேர் பிரச்சினையில் வேறு வடிவியல் விவகாரம் இல்லை. புள்ளிகளிலிருந்து எத்தனை கோடுகள் செல்கின்றது என்பது கோலத்தை எவ்வளவு கோணலாக்கினாலும் – அதாவது, கோடுகளை நீட்டி, மடக்கி, வளைத்தாலும் – மாறாமலிருக்கும் ஒரு எண். இந்த மாதிரி கருத்துகளைத்தான் இயற்கணித இடவியல் ஆய்வு செய்கிறது. + +1741ம் ஆண்டு பெர்லின் கலைக்கூடத்தில் சேர்ந்தார். இங்கு அவருடைய கணித ஆய்வைத்தவிர அவர் செய்த மற்ற வேலைகள்: + +•அரசுத்தோட்டங்களின் மேற்பார்வையும் மேம்படுத்தலும்; + +•பரிசுச்சீட்டுகள் மேற்பார்வை; + +•நாட்குறிப்புகளும் பூகோள வரைபடங்களும் (இதில் அரசுக்கு வருமானம் உண்டு) + +•மக்கள்தொகையைப் பற்றிய ஆய்வும், ஆயுள்காப்பு முறைகளும். + +•நாணய மாற்று முறைகளும், ஓய்வு ஊதியங்களும். + +1748, 1755, 1768, 1770 களில் அவர் எழுதிய நுண்கணித நூல்கள் வெளிவந்த அக்கணமே ஐரோப்பா முழுதும் பரவி ஒரு நூற்றாண்டுக்குக் குறையாமல் கணித வல்லுனர்களுக்கு அது கைப்புத்தகமாகத் திகழ்ந்தது. 1744இல் அவர் எழுதிய மாறுபாடுகளின் நுண்கணிதம் ("Calculus of Variations") அவரை கணிதமேதைகளில் முதல் வகுப்புக்கு ஏற்றியது, + +அரசி காத்தரீன் ஆய்லருக்கு அரசமரியாதை செய்து வரவேற்றாள். இதற்கு முன்னமேயே 1760 இல் பெர்லினில் ஆய்லரின் பண்ணையும் சொத்தும் சூறையாடப்பட்டபோது ரஷ்ய-ராணி எலிசபெத் அவருக்கு அளவுக்கு அதிகமாகவே உதவி செய்திருக��கிறாள். ஏறக்குறைய இந்த சமயத்தில்தான் ஆய்லரின் மற்றொரு கண்ணில் காடராக்ட் ஏற்பட்டு சிறிது சிறிதாகக் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. மீதமிருந்த ஒரே கண்ணின் பார்வையும் போய்விடப் போகிறது என்ற சூழ்நிலையில், ஆய்லர் சிலேட்டில் பெரிய எழுத்தில் கணித வாய்பாடுகளை கண் மூடியே எழுதிப் பழகினார். பார்வை போனபின்பு அவர் இன்னும் அதிகமாகவே கணித ஆய்வில் ஈடுபட்டார். அவருடைய வியப்பூட்டும் நினைவாற்றலும் இதற்கு உதவி செய்தது. + +கணிதத்தில் ஏற்படும் சாதாரண கணக்குகள் தவிர எந்த உயர்மட்ட கணக்குகளையும் அவர் எவ்வளவு தூரம் மனதாலேயே செய்தார் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு. ஆய்லருடைய இரு மாணவர்கள் ஒரு கடினமான ஒருங்குத் தொடரை (convergent series) 17 உறுப்புகள் வரையில் கூட்டுத்தொகை கண்டுபிடிக்க முயன்றபோது, இருவர் விடைகளும் 50 வது இலக்கத்தில் ஒரு எண்ணளவு வித்தியாசம் காட்டின. இதை சரிபார்ப்பதற்காக ஆய்லரிடம் வந்தபோது அவர் மனதாலேயே கணிப்பு செய்து சரியான விடையைப் பகர்ந்தார். இந்த சாமர்த்தியமெல்லாம் அவருக்கு கண் போனபோது மிகவும் உதவியது. + +1640 இலேயே டேக்கார்ட் யால் கண்டுபிடிக்கப்பட்டு, திரும்பவும் ஆய்லரால் கண்டுபிடிக்கப்பட்ட பின்வரும் ஒரு வாய்பாடு தான் இருபதாவது நூற்றாண்டின் இடவியலுக்கு ஒருவிதத்தில் மூல விதையாகியது என்று சொல்வதுண்டு. + +V - E + F = 2 + +என்ற இந்த வாய்பாடு ஒரு சாதாரண பன்முகியைப் பற்றியது. V, E, F மூன்றும் முறையே கோண உச்சிகள், விளிம்புகள், முகங்கள் இவைகளுடைய எண்ணிக்கை. இந்த வாய்பாடு அவைகளின் எண்ணிக்கையை மட்டும் கவனிப்பதால், பன்முகியை ரப்பரால் செய்து அதை பலவிதமாகவும் மாற்றி அமைத்தாலும் இவ்வாய்பாட்டில் மாறுதல் ஏற்படாது. கோனிக்ச்பெர்க் பாலப் பிரச்சினையை ஆய்லர் தெளிவாக்கியது போல் இதைத் தெரிந்து கொண்டு தெளிவுபெற்றது தான் இடவியலின் தொடக்கம். புவான்காரெ காலத்தில் ஏற்பட்டது. + +ஆய்லரின் காலம் வரையில், குறிப்பாக ஃபெர்மா முதலியோர் காலத்தை ஒப்பிட்டால், கணிதமுடிவுகள் அவரவர்களின் ரகசியச் சொத்தாக இருந்து வந்தன. ஆய்லரின் ஏராள பிரசுரங்களில் தன் முடிவுகளை அறிவித்ததோடு மட்டுமல்லாமல், அவைகளை அடைவதற்கு தான் முதலில் எடுத்துக் கொண்ட முயற்சிகளையும், அவை தோல்வியடைந்த விபரங்களையும் அதன் காரண காரியங்களையும் விவரித்து எழுதினார். சில வழிமுறைகள் எவ்விதம் பயனில்லாமல் போயின என்பதை அலசினார். ஏற்கனவே மற்றவர்கள் எழுதிவிட்டுப் போயிருந்த கட்டுரைகளையும் விமரிசித்து பல தவறுகளைத் திருத்தினார். இவைகளுக்கெல்லாம் அவர் காலத்தில் தோன்றிய கணித ஆய்வுப் பத்திரிகைகளும் கழகங்களும் ஒரு காரணமாக விளங்கின. இதைத் தவிர ஆய்லர் கணிதத் துறையின் பல பிரிவுகளின் அன்றைய நிலையைப் பற்றி பொதுக்கட்டுரைகள் பல எழுதினார். கணித உலகத்தில் இவையெல்லாம் புது முன்மாதிரிகளாக அமைந்தன. + + +•E.T. Bell. Men of Mathematics. 1937, 1965. Simon & Schuster, New York. ISBN 0-671-46401-9 + +•R. Parthasarathy. Paths of Innovators. 2000. East West Books (Madras) Pvt. Ltd., Chennai ISBN 81-8685-40-1 + +•Richard Courant and Herbert Robbins. What is Mathematics? 1941 O.U.P. New York. ISBN 0-19-502517-2 pbk + + +•V. Krishnamurthy. Culture, Excitement and Relevance of Mathematics. 1990. Wiley Eastern Limited. New Delhi. ISBN 81-224-0272-0 + + +