diff --git "a/train/AA_wiki_18.txt" "b/train/AA_wiki_18.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_18.txt" @@ -0,0 +1,3214 @@ + +புள்ளியியல் + +புள்ளியியல் அல்லது புள்ளிவிபரவியல் என்பது, தரவுகளைச் சேகரிப்பு, ஒழுங்கமைப்பு, பகுப்பாய்வு, விளக்கம் என்பன குறித்த பாடத்துறை ஆகும். கள ஆய்வுகள், சோதனைகள் என்பவற்றின் வடிவமைப்புத் தொடர்பிலான தரவுச் சேகரிப்புத் திட்டமிடல் உட்பட மேற்குறித்தவற்றில் எல்லா சிறப்புகளையும் இத்துறை கையாள்கிறது. + +புள்ளியியலில் உரிய பயிற்சி பெற்று அத்துறைசார் பணிகளில் ஈடுபடுபவர் புள்ளியியலாளர் எனப்படுவார். புள்ளியியலாளர்கள், புள்ளியியல் பகுப்பாய்வின் வெற்றிகரமான பயன்பாட்டுக்குத் தேவையான வழி முறைகள் குறித்து நல்ல அறிவு பெற்றவராக இருப்பார். இத்தகையவர்கள், பொதுவாகப் புள்ளியியலின் பல்வேறுபட்ட துறைகளுள் ஏதாவது ஒன்றிலோ பலவற்றிலோ பணிபுரிந்து பட்டறிவு பெற்றவர்களாகவும் இருப்பர். + +புள்ளி தகவல், புள்ளியியல் என்பன தரவுகளை சேகரித்தல், ஆராய்தல், பொருளை விளங்கவைத்தல் அல்லது விவரித்தல் மற்றும் தரவுகளை அளித்தல் போன்றவை அடங்கிய கணிதம் சார்ந்த அறிவியலாக சிலர் கருதுகிறார்கள் மற்றும் சிலர் அதனை தரவுகளை சேகரித்து அதன் பொருளை புரிந்துகொள்ளும் கணிதத்தின் ஒரு கிளையாக கருதுகின்றனர். +புள்ளியியல் வல்லுனர்கள் சோதனைகளை வடிவமைத்து மற்றும் எடுத்துக்காட்டு மதிப்பீடுகள் மூலம் தரவுகளின் தரத்தை மேம்படுத்துகிறார்கள் தரவுகள் மற்றும் புள்ளியியல் எடுத்துக்காட்டடகளை பயன்படுத்தி எதிர்கால விளைவுகளை கணிக்கவும் மற்றும் எதிர்காலத்தை பகுப்பாய்வு செய்யவும் புள்ளியியல் ஒரு கருவியாக பயன்படுகிறது. புள்ளியியல் பலதரப்பட்ட துறைகளில் பயன்படுகிறது, கல்வி சார்ந்த துறைகளில், இயற்கை மற்றும் சமுதாய அறிவியல், அரசு, மற்றும் தொழில் அல்லது வணிகம் போன்றவை அடங்கும். + +புள்ளி தகவல் முறைகளை கொண்டு தரவுகளின் சேகரிப்பை தொகுத்து அளிக்க இயலும்: இதனை "விளக்கமான புள்ளிவிபர " முறை என்று அழைக்கின்றனர். ஆய்வுகளின் தீர்வுகளை வெளிப்படுத்த, இந்த முறை ஆராய்ச்சிகளில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, தன் போக்கிலமைந்த மற்றும் சமவாய்ப்புள்ள நிலையிலான மாறும் நிலையில்லா வகையிலான தரவுகளில் உருப்படிமங்களை முன்மாதிரியாக வைத்து கண்கானித்து, மற்றும் அதிலிருந்து அதன் செய்முறை அல்லது அதன் இனத்தொகையை ஆராய்ந்து கணிப்பதை; "அனுமான புள்ளியியல் " என அறியப்படுகிறது. அறிவியற் பூர்வமாக முன்னேற்றம் அடைய அனுமானம் ஒரு தலைமை அங்கமாகும், ஏன் என்றால் ஒரு தத்துவம் தர்க்க பூர்வமாக எங்கு செல்லும் என்பதை முன்கூட்டியே அறிய (தரவுகளின் அடிப்படையில்) அது வழிவகுக்கிறது. வழிகாட்டும் தத்துவத்தை நிரூபிக்க, இவ்வகையான கணிப்புகளை சோதித்தும் பார்ப்பதுண்டு, அப்படி செய்வது அறிவியல் முறைகளின் ஒரு பங்காகும். நினைத்தல் உண்மையாக இருந்தால், அப்போது புதிய தரவுகளின் விளக்கமான புள்ளி தகவல்கள் அது அந்த கருதுகோளின் வலுவான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. விளக்கமான புள்ளியியல் மற்றும் உய்த்துணர் புள்ளியியல் (யூகிக்கும் புள்ளி தகவல்கள் என்றும் அறியப்படுவது) இவை எல்லாம் சேர்ந்து "செயல்முறை சார்ந்த புள்ளியியல் அல்லது புள்ளி தகவல்கள்" என அறியப்படுகிறது. + +இதைத்தவிர "கணிதம் சார்புடைய புள்ளியியல் " என்ற ஒரு பிரிவும் உள்ளது, அது தலைப்பின் கொள்கைகளின் அடிப்படையைப் அறிந்துகொள்ள உதவும். + +ஆங்கிலத்து சொல்லான "statistics" ஒருமையிலோ அல்லது பன்மையிலோ பயன்படுத்தலாம். அதன் ஒருமை வடிவம், "statistics" இந்த தொகுப்பில் உரைக்கப்பட்ட கணித அறிவியலைக் குறிக்கும். பன்மை வடிவில், "statistics" அதாவது "statistic" என்ற ஒருமைச் சொல்லின் பன்மை வடிவம், ஒரு அளவை குறிப்பதாகும் (அதாவது தரவுகளை கணித்துப்பெறும் நடுமட்டம்) என்ற அளவைக் குறிக்கும். + +புள்ளியியல், நிகழ்தகவுக் கோட்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு உடையது. நிகழ்தகவுக் கோட்பாட்டில், மொத்தத் தொகையின் கொடுபொருட்களில் இருந்து தொடங்கி +எடுத்துக்காட்டுகளோடு தொடர்பான நிகழ்தகவுகளை உய்த்தறிகின்றனர். ஆனால், புள்ளியியலில் இது எதிர்த் திசையில் நடை பெறுகிறது. இங்கே எடுத்துக்காட்டிலிருந்து துவங்கி முழு அளவின் கொடுபொருட்கள் உய்த்தறியப்படுகின்றன. + +சில அறிஞர்கள் புள்ளியியல் முதல் முதலாக 1663 ஆண்டில் தோன்றியதாக சுட்டிக்காட்டுகின்றனர், ஜான் கிரான்ட் என்பவர் அவ்வாண்டு "நாச்சுரல் அண்ட் பொலிடிகல் ஓப்செர்வேசன்ஸ் அபான் தி பில்ஸ் ஒப் மோர்டாலிடி " என்ற கட்டுரையை வெளியிட்டார். நாட்டின் மக்கள் தொகை மற்றும் பொருளாதார தேவைகளின் அடிப்படையில் முந்தைய சிந்தனையாளர்கள் நாட்டிற்கான கொள்கைகளை உருவாக்க நினைத்ததால், ஆங்கிலத்தில் தொடக்கத்தில் "ஸ்டேட் -" என்ற சொல்தோற்றத்திற்கு காரணமாக அமைந்தது. புள்ளியியல் என்ற பிரிவின் நோக்கெல்லை 19 ஆம் நூற்றாண்டில் மேலும் விரிவடைந்தது மேலும் பொதுவாக தரவுகளை சேகரிப்பது மற்றும் தரவுகளை ஆராய்ந்து பார்ப்பதையும் அத்துடன் இணைத்துக் கொண்டது. இன்று, புள்ளியியல் மிகவும் பரவலாக அரசு, தொழில் அல்லது வணிகம், இயற்கை அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற துறைகளில் பயன்பட்டு வருகிறது. + +அனுபவபூர்வமான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாலும், மற்றும் அதன் குவிமையம் பயன்பாட்டில் வேரூன்றியதாலும், புள்ளியியல் என்பது கணிதத்தின் ஒரு கிளையாக அல்லாமல், பொதுவாக ஒரு தனிப்பட்ட கணித அறிவியலாக கருதலாம். +17 ஆம் நூற்றாண்டில் பிளைஸ் பாஸ்கல் மற்றும் பிஎர்ரே தே பெர்மாத் ஆகிய இருவரும் நிகழ்ச்சித்தகவு கொள்கை என்ற பகுப்பை மேலும் மேம்படுத்தினார்கள் மற்றும் அதனுடைய கணிதத்திற்குரிய அடித்தளத்தையும் அமைத்தார்கள். நிகழ்ச்சித்தகவு கொள்கை என்ற பிரிவானது வாய்ப்புகளுக்கான விளையாட்டுக்களை பயிலும் போது ஏற்பட்டது. முதன் முதலாக குறைந்த வர்க்க முறை (method of least squares) கார்ல் பிரீட்ரிச் காஸ் (Carl Friedrich Gauss) என்பவர் 1794 ஆண்டுகளில் விவரித்தார். இன்றைய நவீன கணினிகளின் பயன்பாடு மிகையான அளவிலான புள்ளிவிவரங்கள் சார்ந்த கணக்கிடுதல் முறைகளை துரிதப்படுத்தியுள்ளது மேலும் மனிதனால் இயலாத சில புதிய முறைகளை செயல்படுத்தவும் அதன் மூலம் சாத்தியமாகி உள்ளது. + +தி அமெரிக்கன் ஸ்டட்டடிக்கல் அசோசியேஷன் (American Statistical Association) என்ற அமைப்பு டெமிங் (Deming), பிஷேர் (Fisher), மற்றும் சி ஆர் ராவ் (CR Rao) போன்றவர்களை எக்காலத்தையும் சார்ந்த மிகவும் மகத்தான புள்ளியியல் வல்லுனர்களாக தரவரிசைப்படுத்தியுள்ளது. + +புள்ளியியல் முறைகளை அறிவியல், தொழில் அல்லது சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு பயன்படுத்தும்போது, அதனை மக்கள்தொகை (கூட்டுத்தொகை) அல்லது வழிப்படுத்துதலை முதலில் வைத்துக்கொண்டு துவங்குவது பயில்வதற்கு முக்கியமாகும். மக்கள் தொகை அல்லது கூட்டுத்தொகை என்பது "ஒரு நாட்டில் வசிக்கும் அனைத்து மக்கள்" போன்றதோ அல்லது "ஒரு படிகத்தை சார்ந்த ஒவ்வொரு அணு" வாகவோ வேறுபட்டு இருக்கலாம். ஒரு கூட்டுத்தொகையானது ஒரு வழிபடுத்துதலுக்கான வெவ்வேறு நேரங்களில் எடுத்த பல அவதான���ப்புகள் கொண்டவையாக இருக்கலாம், ஒவ்வொரு அவதானிப்பிலும் கிடைத்த தரவு மொத்த குழுமத்தில் ஒரு தனிப்பட்ட அங்கமாக இருக்கலாம். இவ்வகை "கூட்டுத்தொகை"யில் இருந்து சேகரித்த தரவு காலத்தொடர் வரிசை எனப்படும் முறையை சார்ந்ததாகும். + +நடைமுறை காரணங்களுக்காக, மொத்த குழுவையும் சார்ந்த தரவுகளை பயன்படுத்துவதற்கெதிராக (இந்த நடவடிக்கையை மக்கள் தொகைக்கணக்கு என்பார்கள்) - கூட்டுத்தொகையில் இருந்து தெரிவுசெய்த ஒரு மாதிரி பயன்படுகிறது. பயன்படும் கூட்டுத்தொகையை பிரதிநிதியாகக்கொண்ட ஒரு மாதிரி வரையறுத்ததும், அவ்வகை மாதிரி அங்கங்களிடமிருந்து ஒரு நோக்குதற்குரிய அமைப்பிலோ அல்லது சோதனைக்குரிய அமைப்பிலோ இருந்து தரவுகள் சேகரிக்கலாம். இந்தத்தரவு பிறகு புள்ளியியல் ஆய்விற்கு உள்ளாக்கப்படும், அவை இரு தொடர்புள்ள காரணங்களுக்கு பயன்படும்; விரித்துரைப்பு (விவரணம்) மற்றும் உய்த்துணர்வு. + + +இயைபுப்படுத்தல் எனும் கருத்துப்படிவம் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். தரவு தொகுப்பு (data set) ஒன்றினை புள்ளிவிவர ஆய்விற்கு உட்படுத்தும்போது, கூட்டுத்தொகையின் இரு வேறுபட்ட குணங்கள் (properties) இணைந்து வேறுபடுவதாக காணலாம், ஏதோ அவர்களுக்கிடையே இணக்கம் இருப்பதுபோல. எடுத்துக்காட்டாக, வருடாந்தர வருவாய் பற்றிய ஆய்வறிக்கை ஒன்றில் இறந்தவர்களின் வயதுடன் கணக்கிடும் போது, பணக்காரர்களுக்கிடையே இருப்பதை விட, ஏழை மக்கள் குறைந்த வயதிலேயே இறந்து விடுவதாக காணப்படுவது. இவ்விரு மாறிகள் இயைபுப்படுத்தல் கொண்டவையாக கருதப்படுகின்றன; இருந்தாலும் அவை ஒன்றோடு ஒன்று நிகழ்வதற்கான காரணிகளாகவோ, அல்லாமலோ இருக்கலாம். இத்தகைய இயைபுப்படுதலுக்கான காரணம் ஒரு மூன்றாவதான, முன்பு கருதப்படாத ஒரு தோற்றப்பாடாக இருக்கலாம், அது ஒரு பதுங்கியிருக்கும் மாறியாக (lurking variable) இருக்கலாம் அல்லது ஒரு திகைப்பூட்டும் மாறியாக (confounding variable) இருக்கலாம். இக்காரணத்தினால், இவ்விரு மாறிகளுக்கிடையே ஒரு இயைபுப்படுத்தல் இருப்பதாக உடனுக்குடன் ஒரு காரணத்தொடர்பு உடையவையாக இருக்கும் என்று கூற இயலாது. (பாருங்கள் இயைபுப்படுத்தல் என்பது தூண்டு காரணமாக இருக்கலாம் என்று எண்ண இயலாது.) + +ஒரு மாதிரி, முழு அளவின் ஒரு காட்டாக ஆவதற்கு, அது அதன் கூட்டும��த்த அளவின் உண்மையான பிரதிநிதியாக இருத்தல் வேண்டும். ஒரு உண்மை பிரதிநிதியாக இருப்பது உறுதியானால், உய்த்துணர்வுகள் மற்றும் முடிவுகளை மாதிரிகளில் இருந்து முழு கூட்டுத்தொகைக்கு மொத்தமாக விரிவாக்கலாம். ஒரு தெரிவு செய்த மாதிரியானது எந்த அளவிற்கு உண்மையான பிரதிநிதியாக இருக்கும் என்பதை முடிவு செய்வது ஒரு பெரிய பிரச்சினையாகும். புள்ளியியல் மூலமாக ஒரு மாதிரிக்குள் ஏதேனும் இயைபிலா போக்கினை திருத்தவோ, மதிப்பீடு செய்வதற்கோ இயலும் மற்றும் தரவுகளை சேகரிக்கும் முறையையும் சரிசெய்யும். ஒரு பயில்வின் தொடக்கத்திலேயே இது போன்ற விவகாரங்களை குறைத்திடும் வகையான சோதனைகளை வடிவமைக்கவும் இயலும், அதன் மூலமாக அதன் கூட்டுத்தொகையின் உண்மை நிலவரத்தை அறிந்து கொள்ளும் திறமையை மேலும் வலுவடைகின்றது. புள்ளியியல் வல்லுனர்கள் வலுவான முறைகளை "கம்பீரமானவை" என கருதுகின்றனர்.(செய்முறைத் திட்டத்தைபார்க்கவும்.) + +சீரற்ற இயல்புகளை புரிந்துகொள்வதற்கான கணித கருத்துப்படிவம் ஊக அளவை ஆகும். கணித புள்ளியியல் புள்ளியியல் கோட்பாடு எனவும் அறியப்படுவது, இது பயன்பாட்டுக் கணிதத்தின் கிளையாகும், இது ஊக அளவை கோட்பாடு மற்றும் பகுப்பாய்வு போன்றவைகளுடன் புள்ளியியலின் அறிமுறை அடிப்படையை சோதிக்க பயன்படுகிறது. எந்த முறையான புள்ளிவிபரமுறை பயன்பாட்டிற்கும் அதன் மக்கள்தொகை அல்லது கூட்டுத்தொகையானது அந்த முறையின் கணிதமுறையிலான அனுமானங்களுடன் ஒத்துப்போக வேண்டும், அப்போது தான் அவை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும். + +புள்ளியியல் முறைகளை தவறுதலாக பயன்படுத்தினால், அப்போது நேர்த்தியான மற்றும் கடுமையான பிழைகள் மற்றும் அதன் பொருள் விளக்கம் பிழைவடையும்- நேர்த்தியானது என்பது ஏன் என்றால் அனுபவம் வாய்ந்த வல்லுனர்கள் கூட இது போன்ற தவறுகளை செய்வார்கள், மற்றும் கடுமையான என்பது அதன் காரணமாக சூறையாடும் வகையான தவறுதலான முடிவுகள் எடுப்பதற்கு காரணமாகலாம் என்பதே ஆகும். எடுத்துக்காட்டாக, சமூகக் கொள்கை, மருத்துவ பயிற்சி மற்றும் பாலங்கள் போன்ற அமைப்புகளின் நம்பகம் யாவும் புள்ளியியலின் சரியான பயன்பாட்டை பொறுத்து இருப்பதேயாகும். +புள்ளியியல் சரியாக பயன்பட்டு இருந்தாலும், சரியான தேர்ச்சி இல்லாதவர்களால் முடிவுகளை சரியான வித��்தில் பொருள் விளக்கம் செய்து கொள்ள இயலாது. தரவுகளில் காணப்படும் புள்ளிவிவர முறைப்பொருளுடைய தனிச்சிறப்புடன் கூடிய போக்கு - மாதிரியில் எந்த அளவுக்கு இயைபிலா மாறுபாடுகள் காரணமாக போக்குகள் பாதிக்கப்படுவது- அதனுடைய ஒரு உள்ளுணர்வு அளிக்கும் தனிமுறைச்சிறப்புடன் ஒத்துபோகலாம் அல்லது போகாமலும் இருக்கலாம். பொது மக்கள் தமது அன்றாட வாழ்க்கையில் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டிய அடிப்படையான புள்ளியியல் திறமைகள் (மற்றும் சந்தேகம்) போன்றவைகளை புள்ளியியல் எழுத்தறிவு என்று அறியப்படுகிறது. + +புள்ளியியல் சார்ந்த ஆராய்ச்சித்திட்டத்தின் பொதுவான குறிக்கோளானது காரணமாகச் செயல்படுதலுக்கான காரணத்தை கண்டுபிடித்தல், மற்றும் குறிப்பாக முன்கூற்றுகள் அல்லது சார்பற்ற மாறிகளில்ஏற்பட்ட மாறுதல்கள் காரணமாக சார்புடைய மாறிகளில் மாற்றங்கள் அல்லது பதில்களை கொண்டு முடிவுகளை எடுப்பதே. இரு பெரும்வகையான காரண புள்ளிவிபர ஆய்வுகளை / ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இயலும், அவை: சோதனைகளுடன் கூடிய ஆராய்ச்சிகள் மற்றும் நோக்குதற்குரிய ஆராய்ச்சிகள். இரு ஆராய்ச்சிமுறைகளிலும், ஒரு சார்பற்ற மாறியில் (அல்லது மாறிகளில்) ஏற்படும் வேறுபாடுகள் இன்னொரு சார்புடைய மாறியின் நடத்தையை எவ்வாறு பாதிக்கின்றது என்பது கண்டறியப்படுகிறது. இவ்விரு முறைகளிலும் உள்ள வேறுபாடுகள் இந்த ஆய்வு நடைமுறையில் செய்முறைப் படுத்தியதைப் பொறுத்தே இருக்கும். ஒவ்வொன்றும் பயனுள்ளதாகவே இருக்கும். + +ஒரு சோதனை ஆராய்ச்சி என்பது ஆய்வுக்கு உட்பட்ட முறைகளின் அளவுகளை அளந்துபார்ப்பது மற்றும் அந்த ஆய்வு முறையை கையாள்வது, மற்றும் பின்னர் மீண்டும் அதே முறையில் அளவுகளை அளந்துபார்ப்பது, அதன் மூலம் கையாண்டதன் விளைவாக அளவுகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்வதாகும். இதற்கு எதிராக, நோக்குதற்குரிய ஆய்வுகளில் சோதனை மூலம் கையாளும் பாங்கு நடப்பதில்லை. பதிலாக, தரவுகளை சேகரித்து, மற்றும் அதன் மூலம் ஊகங்கள் மற்றும் பதில்களுக்கு இடையேயான இயைபுப்படுத்தல் தொடர்புகள் கண்டறியப்படுகிறது. + +ஒரு நோக்குதற்குரிய ஆய்வின் பெயர்பெற்ற எடுத்துக்காட்டு ஹவ்தொர்ன் ஸ்டடி (Hawthorne study) யாகும், அதில் ஹவ்தொர்ன் என்ற இடத்தில் அமைந்த வெஸ்டேர்ன் எலெக்ட்ரிக் கம்பெனியின் ��லையில் நிலவிய பணிபுரியும் சூழலை மாற்றியமைப்பதால் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய்ந்து பார்த்தது. ஆராய்ச்சியாளர்கள் பணிபுரியும் இடத்தில் நிலவிய ஒளியூட்டத்தை அதிகரிப்பதால் பூட்டல் பட்டறை பணியாளர்களின் உற்பத்தித்திறன் மேலும் கூடுமா என்பதை அறிய விழைந்தனர். ஆராய்ச்சியாளர்கள் முதலில் நிலவிய உற்பத்தித்திறனை அளந்து பார்த்தார்கள், பிறகு ஆலையின் ஒரு பகுதியில் ஒளியூட்டத்தின் அளவை மாற்றியமைத்தார்கள் மற்றும் இவ்வகை மாறுதல்களினால் உற்பத்தித்திறனில் ஏற்பட்ட மாறுதலை கண்காணித்தார்கள். இதனால் உற்பத்தித்திறன் மேம்பட்டதை அவர்கள் கண்டார்கள். (சோதனைக்கு உட்பட்ட இடங்களில்/ நிலைமைகளில்.) இருந்தாலும், இந்த ஆய்வினை இன்று திறனாய்வாளர்கள் மிகவும் கடுமையாக விமரிசனம் செய்கிறார்கள், ஏன் என்றால் சோதனைக்குட்பட்ட செயல்முறைகளில் ஏராளமான தவறுகள் இருந்தன, முக்கியமாக அதற்கான ஒரு தனி கட்டுப்பாட்டுக் குழு இல்லாமல் செயல்பட்டது மற்றும் குருட்டுத்தன்மை போன்றவையாகும். ஹவ்தொர்ன் எப்பெக்ட் என அறியப்படுவது என்னவென்றால் ஒரு விளைவு (இந்த நிகழ்வில், பணியாளர்களின் உற்பத்தித்திறன்) நோக்குதற்குரிய காரணங்களினாலேயே மேம்பாடு அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஹவ்தொர்ன் ஆய்வில் ஈடுபட்டவர்களின் உற்பத்தித்திறன் ஒளியூட்டத்தை மாற்றி அமைத்ததால் வந்ததல்ல, ஆனால் அவர்கள் கவனிப்புக்கு ஆளானார்கள் என்பதே மெய்யாகும். + +நோக்குதற்குரிய ஆய்வுகளின் இன்னுமொரு எடுத்துக்காட்டு புகை பிடிப்போர் மற்றும் நுரையீரல் புற்றுநோயாளிகளுக்கிடையே நிலவும் இயைபுப்படுத்தலை வெளிப்படுத்துவது ஆகும். + +இதுபோன்ற ஆய்வுகளில், நாம் ஆர்வம் கொண்டுள்ள ஒரு பொருளை தெரிந்தெடுத்து அதைப்பற்றிய ஆய்விற்காக ஒரு எடுத்துக்காட்டான முறையில் கருத்தாய்வு மூலம் தரவுகளை சேகரித்து மேலும் அதனை ஒட்டிய புள்ளிவிபர ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். இந்நிகழ்ச்சியைப் பொறுத்தவரை, ஆராய்ச்சியாளர்கள் புகை பிடிப்பவர்கள் மற்றும் புகை பிடிக்காதவர்களிடம் இருந்து தரவுகளை சேகரிப்பார்கள், ஒரு வேளை கட்டுப்பாட்டுடன்கூடிய- நிகழ்வு மூலமாக, மற்றும் அவற்றில் ஒவ்வொரு குழுவிலும் நுரையீரல் புற்றுநோயால் அவதிப்படும் நபர்களின் எண்ணிக்கை, ஆய்வின் மூலம் பதிவு செய்வார்கள��. + +சோதனை புரிவதற்கான அடிப்படைகொண்ட படிகள் இவ்வாறு அமைதல் வேண்டும்: + + +புள்ளியியல் சேகரிப்பில் நான்கு வகையிலான அளவைகள் உள்ளன அல்லது அளவை நிலைகள் உள்ளன: + +புள்ளியியலுக்கான ஆராய்ச்சியில் அவற்றில் ஒவ்வொன்றிற்கும் வேறுபடும் அளவிலான பயன்பாடுகள் உண்டு. விகித அளவு முறைகளில் பூச்சியத்தின் அளவு தெளிவாக தனிப்பட்ட வகையில் அர்த்தமுள்ள மதிப்பீடு கொண்டதாகவும் மேலும் அதனுடன் சேர்ந்து இதர இடைவெளிகளைக் குறிக்கும் அளவுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன; இவற்றின் உதவியுடன் தரவுகளை ஆராய்வதற்கான மிகவும் வளைந்துகொடுக்கும் தன்மையுடைய இணக்கமுள்ள புள்ளியியல் முறைகள் மிகவும் பயனுடையதாக அமைகின்றன. இடைவெளிகளுக்கான அளவுகளில் அளவுகளுக்கு இடையேயான அளவீடுகள் முறையாக வரையறுக்கப்பட்டுள்ளது (எடுத்துக்காட்டாக ஐ க்யு அளவுகள் அல்லது வெப்பமானியில் உள்ள ஃபாரன்ஹீட்போன்ற அளவுகள்) வரிசையெண்ணுக்குரிய அளவுகளில், ஒன்றுக்குப்பின் ஒன்றாக வரும் அளவுகள் துல்லியமாக இல்லாவிட்டாலும், அதற்கான பெறுமதி மிகவும் அர்த்தமுள்ள வரிசைக்கிரமம் கொண்டதாகும். பெயரளவிலான அளவுகளில் அவற்றின் வரிசைக்கிரமம் அர்த்தமுள்ள பெறுமதிகள் கொண்டவையல்ல. + +பெயரளவிலான மற்றும் வரிசையெண்ணுக்குரிய அளவுமுறைகள் எண்ணளவில் அளவிட இயலாததால், சிலநேரங்களில் அவற்றை இணைத்து ஆணித்தரமான மாறிகள் என அழைக்கின்றனர், ஆனால் விகிதம் மற்றும் இடைவெளி அளவுகள் கொண்டவை இரண்டும் சேர்ந்து அளவையியல் அல்லது தொடரியல் சார்ந்த மாறிகளாக, அவற்றின் எண்ணுக்குரிய இயல்புகள் காரணமாக, அறியப்படுகின்றன. + +சில நன்கு-அறிந்த புள்ளியியல் சோதனைகள் மற்றும் செய்முறைகள் ஆனவை: + +சில துறைகள் பயன்பாட்டுப் புள்ளியியல் ஆராய்ச்சிகளை பரவலாக மேற்கொள்வதால், அவற்றிற்கு மிகச்சிறப்பு வாய்ந்த பெயர்களும் உள்ளன. கீழே வழங்கிய துறைகள் அவற்றை சார்ந்தவை: +வணிகவியல் மற்றும் உற்பத்தித்துறையிலும் புள்ளியியல் ஒரு முக்கிய அடிப்படைக்கருவியாக விளங்குகிறது. அதை வைத்துக்கொண்டு அளவுமானிகளின் மாறுபடும் தன்மையை அறிந்துகொள்ளவும், செய்முறைகளை கட்டுப்படுத்தவும், (புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு போன்ற (SPC), தரவுகளை தொகுப்பதற்காகவும், மற்றும் தரவுகளை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்காகவும் பயன்படுகிறது. இதுபோன்ற பணிகளில், இது ஒரு முக்கியமான கருவியாகும், மற்றும் நம்பத்தகும் ஒரே கருவியாகவும் இது இருக்கலாம். + +20 ஆம் நூற்றாண்டின் இரண்டாவது அரைப்பகுதியின் துவக்கம் முதல் கணிக்கும் முறைகளில் ஏற்பட்டுள்ள விரைவான மற்றும் விடா உறுதி வாய்ந்த ஆற்றல் புள்ளிவிவர அறிவியல் வழக்கங்களில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முந்தைய புள்ளிவிவர மாதிரிகள் அனைத்தும் நேரோட்ட செயலாக்கம் கொண்ட மாதிரிகள் ஆகும், ஆனால் வலிமையான கணினிகள், மற்றும் அதனுடன் இணைந்த ஆற்றல் மிகுந்த நெறிமுறைகள், காரணமாக நேர் போக்கற்ற மாதிரிகளை (எடுத்துக்காட்டு நரம்பு சார்ந்த வலையமைப்புகளில்) ஆர்வத்தை தூண்டியது மேலும் புதிய வகைகள் கண்டுபிடிக்கப்பட்டன, எடுத்துக்காட்டாக பொதுவான நேரிடை மாதிரிகளை மற்றும் பலவகைமட்டம் கொண்ட மாதிரிகள். + +மேம்பட்ட கணினி மூலம் கிடைத்த ஆற்றலால் கணினி- மிகையாக பயன்படுத்தக்கூடிய முறைகளான மறுமாதிரிகளின் பயன்பாட்டினை உயர்த்தியுள்ளது, அவற்றில் பல்வகை நிலை மாற்றம் அடங்கிய சோதனைகள், மற்றும் பூட்ஸ்ட்ரேப் (bootstrap), மற்றும் கிப்ஸ் சாம்ப்ளிங் முறைகள் போன்றவை பயேசியன் மாதிரிகளை (Bayesian models) மேலும் பயனுள்ளதாக மாற்றியுள்ளது. கணினி புரட்சி புள்ளியியலுக்கான எதிர்காலத்தை மேலும் "சோதனை" மற்றும் "அனுபவத்திற்குரிய" புள்ளியியலாக மேன்மையடைய வழிவகுக்கிறது. மிகுந்த எண்ணிக்கைகளில் பொதுவான மற்றும் சிறப்பு தகுதிகள் கொண்ட புள்ளியியலுக்கான மென்பொருட்கள் இப்போது கிடைக்கப்பெற்றுள்ளன. + +புள்ளியியல் அறிவாற்றலை வேண்டுமென்றே அடிக்கடி அதனை பயன்படுத்தும் வல்லுனர்கள் தவறாக பயன்படுத்துகிறார்கள் /0} என்ற எண்ணம் பொது மக்களிடையே மேலோங்கி வருகிறது மேலும் அவர்கள் தங்களுக்கு வேண்டிய முறைகளில் தரவுகளை பொருள் விளக்கம் செய்துகொள்கிறார்கள் என்ற கருத்தும் நிலவுகிறது. பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் கூறிய புகழ்பெற்ற வார்த்தைகள், "மூன்று விதங்களிலான புளுகுகள் உள்ளன: புளுகுகள், தெறுமொழிகொண்ட புளுகுகள், மற்றும் புள்ளியியல்." 1909 ஆம் ஆண்டில் ஹார்வர்ட் ப்ரெசிடென்ட் ஆன லாவ்ரென்ஸ் லோவெல் எழுதியது புள்ளியியல், ""...கன்று இறைச்சியைப்போல, அதை யார் செய்தார்கள் என்பதைப் பொறுத்து அது நன்றாக இருக்கும், மற்றும் அதில் கலந்துள்ள பொருட்களைப்பற்றியு���் உறுதியாக இருக்க வேண்டும்."" + +பல்வேறுபட்ட ஆராய்ச்சிகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தால், மக்கள் அது போன்ற ஆராய்ச்சிகளில் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு ஆய்வு ஒரு உணவுமுறை அல்லது செய்கை இரத்த அழுத்தத்தை அதிகரிப்பதாகவும், மேலும் இன்னொன்று இரத்த அழுத்தத்தை குறைப்பதாகவும் கூறலாம். இதுபோன்ற வேறுபாடுகள் சோதனை முறைகளில் நேர்த்தியான மாற்றங்கள் காரணமாக ஏற்படலாம், எடுத்துக்காட்டாக நோயாளிகளின் குழுவில் வேறுபாடு அல்லது ஆராய்ச்சிக்கான நெறிமுறைகள் மாறுபட்டிருக்கலாம், அவற்றை பொதுமக்களால் எளிதாக புரிந்துகொள்ள இயலாது. (ஊடக அறிக்கைகள் பொதுவாக இதுபோன்ற முக்கியமான தகவல்களை மொத்தமாக வழங்க தவறுகிறார்கள், அவை மிகவும் சிக்கல் கொண்டதாக இருப்பதால்.) + +ஒரு குறிப்பிட்ட மாதிரியை தெரிவுசெய்தோ (அல்லது தவிர்ப்பதாலோ, அல்லது மாற்றியமைத்தோ), முடிவுகளை கையாளலாம். இதுபோன்ற கையாளுதல் தீயநோக்குடனோ அல்லது நேரற்றதாகவோ இருக்காது; அவற்றை ஆராய்ச்சியாளர் தற்செயலாக புரிந்திருக்கலாம். தரவுகளை சுருக்கி விளக்கும் வரைபடங்கள் கூட தவறானவையாக இருக்கலாம். + +உண்மையில், கருதுகோள் சோதனை முறையானது, பரவலாக பயன்பட்டாலும் மற்றும் சட்டப்படி அல்லது விதிமுறைகள் காரணமாக வரையறுக்கப்பட்டாலும், சூனிய எடுகோள் என்ற கருதுகோளை அவை மிகையாக சார்ந்து இருப்பது ஒருவனை கட்டாயப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது மேலும் பெரிய அளவிலான ஆராய்ச்சிகளில் காணப்படும் சிறிய வேறுபாடுகளின் முக்கியத்துவத்தை மிகைப்படுத்துவதாகவும் காணப்படுகிறது என்ற ஆழ்ந்த குற்றச்சாட்டுக்கள் கொண்டதாகும். புள்ளியியல் கருத்துகள் படி மிகவும் உயர்ந்த தனிமுறைச்சிறப்பு கொண்ட ஒரு வேறுபாடு நடைமுறையில் ஒரு சிறப்பும் இல்லாமல் போகலாம். (கருதுகோள் விமரிசனம் மற்றும் சூனிய எடுகோள் பற்றிய சர்ச்சையை பார்க்கவும்.) + +இதற்கான ஒரு விடையானது "p" -மதிப்பீட்டிற்கு மிகையான முக்கியத்துவம் கொடுப்பதாகும், கூடவே கொடுக்கப்பட்ட தனிச்சிறப்பு அளவிற்கு கருதுகோள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதையும் அறிக்கையில் தெரிவிக்க வேண்டும். இருந்தாலும், "p" -மதிப்பீடானது, விளைவின் அளவை சுட்டிக்காட்டுவதில்லை. மற்றுமோர் மிகையாக பயன்படும் பொது முறையானது நம்பிக்���ை இடைவெளி யை முறையே அறிவிப்பதாகும். இது போன்ற கணிப்புகள் (calculations கணக்கீடுகள்) கருதுகோள் சோதனை முறை அல்லது "p" -மதிப்பீடுகள் செய்யும் முறையை தழுவியதாக இருப்பினும், அவை விளைவின் அளவு மற்றும் அதை சுற்றியுள்ள நிலையின்மையை, இரண்டையும் விவரிப்பதாகும். + +மரபுவழி, அரைகுறை தரம் கொண்ட ஆராய்ச்சி முறையியல் மூலமாக புள்ளியியல் உய்த்துணர்வுகளை பெற்றுவந்தது மேலும் அது மிகையான அறிவியல் பாடங்களிலும் "கற்றுக்கொள்ள தேவைப்பட்டது." புள்ளியியல் உய்த்துணர்வுகள் இல்லா சூழ்நிலைகளில் பயன்பட தொடங்கியதும் இது மாறுதல் அடைந்துள்ளது. ஒரு காலத்தில் மிகவும் வெறுப்புடன் அணுகிய ஒரு பாடம், பட்டம் பெறுவதற்காகவே பல துறைகளில் பாடமாக நுழைக்கப் பெற்றது, இன்று உற்சாகத்துடன் வரவேற்கப்படுகிறது. துவக்கத்தில் சில கணித வல்லுனர்கள் புறகணித்த இந்த பாடம், இப்போது சில துறைகளில் இன்றியமையாத ஒரு ஆராய்ச்சி முறையியலாக கருதப்படுகிறது. + + + + + + + + + + +யூலியசு சீசர் + +கையுசு யூலியசு சீசர், சுருக்கமாக யூலியசு சீசர் ("ஜூலியஸ் சீசர்", "Gaius Julius Caesar", சூலை 12 அல்லது சூலை 13, கிமு 100 – மார்ச் 15, கிமு 44) உரோம இராணுவ மற்றும் அரசியற் தலைவர் ஆவார். உலக வரலாற்றின் குறிப்பிடத்தக்க தலைவர்களுள் இவரும் ஒருவராவார். இலத்தீன் உரைநடை இலக்கியம் படைத்த எழுத்தாளருமாவார். + +உரோமைக் குடியரசின் வீழ்ச்சிக்கும் உரோமைப் பேரரசின் எழுச்சிக்கும் வித்திட்ட நிகழ்வுகளில் முக்கியப் பங்கேற்றார். கிமு 60 ஆம் ஆண்டில், சீசர், கிராசசு, பாம்பெ என்ற மூவரும் முதல் மூவராட்சியை ஏற்படுத்தினர்; இந்த அரசியல் கூட்டணி பல ஆண்டுகளுக்கு உரோமானிய அரசியலில் தாக்கத்தை விளைவித்தது. மக்கள் விரும்பும் திட்டங்கள் மூலம் அதிகாரத்தை குவிக்கும் இவர்களது திட்டங்களை செனட்டின் பழமைவாத ஆளுங்கட்சியினர் எதிர்த்தனர். கிமு 51இல் சீசர் கவுலில் பெற்ற வெற்றிகள், உரோமின் ஆட்சியை ஆங்கிலக் கால்வாய் மற்றும் ரைன் ஆறு வரை நீட்டியது. இவை இரண்டையும் கடந்த முதல் உரோமை படைத்தலைவராக சீசர் ரைன் ஆற்றின் மீது பாலத்தைக் கட்டினார்; பிரித்தானியா மீதான முதல் ஊடுருவலை மேற்கொண்டார். + +கிமு 53இல் கார்கெ போரில் கிராசசின் இறப்பிற்குப் பின்னர் பாம்பெ செனட்டுடன் ஒத்துழைக்கத் துவங்கினார்; தனது ���டைத்துறை சாதனைகளால் செல்வாக்குப் பெற்றிருந்த சீசர் பாம்பெயை எதிர்த்து நின்றார். கவுலில் போர் முடிவுற்றபோது செனட் சீசரை பதவி விலகி உரோமிற்குத் திரும்பப் பணித்தது. இதனை ஏற்க மறுத்த சீசர் கிமு 49 இல் ரூபிகான் ஆற்றைக் கடந்து உரோமானியப் படைகளுடன் கடந்து வந்து இத்தாலியை அடைந்தார். இதனால் விளைந்த உள்நாட்டுப் போரில் வென்ற சீசர் எதிர்பற்ற சர்வாதிகாரியாக மாறினார். + +அரசை தன்வயப்படுத்திய சீசர், சமூக, அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளலானார். புதிய யூலியன் நாட்காட்டியை உருவாக்கினார். குடியரசின் அதிகாரங்களை மையப்படுத்தினார். "எக்காலத்திற்கும் சர்வாதிகாரி" என அறிவித்தார். இருப்பினும் அரசியல் கிளர்ச்சிகள் முழுவதுமாக அடக்கப்படவில்லை; நட்ட நடு மார்ச்சு (15 March) கிமு44 இல், புரூட்டசின் தலைமையிலான செனட் உறுப்பினர்கள் சீசரைக் கொலை செய்தனர். தொடர்ந்து உரோமானிய உள்நாட்டுப் போர்கள் நிகழ்ந்தன; இதன்பிறகு அரசியல் சட்டத்தின்படியான முழுமையான குடியரசு நிறுவப்படவில்லை. சீசரின் வளர்ப்பு மகனான ஓக்டோவியசு,பின்னாட்களில் அகஸ்ட்டஸ், உள்நாட்டுப் போர்களில் வென்று ஆட்சியமைத்தார். இவரது ஆட்சியில் உரோமைப் பேரரசு உருவாகத் தொடங்கியது. + +ஆங்கில நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற ஜூலியஸ் சீசர் (கிபி 1599) நாடகத்தின் கதாநாயகனாகவும், கிரிகோரியன் நாட்காட்டியை சீரமைத்து தற்காலத்தில் பயன்பாட்டில் இருக்கும் நாட்காட்டியை உருவாக்கியவராகவும் சீசர் அறியப் பெறுகிறார். இவருடைய சிந்தனையில் உருவான அடிமைகள் விளையாட்டு அரங்கம் மிகவும் புகழ் பெற்றது. சீசர் கிரேக்க வரலாற்றில் பெரும் வீரராகவும், போரின் பொழுது கருணை காட்டாதவராகவும், இலக்கியவாதி மற்றும் சீர்திருத்தவாதியாகவும் அறியப் பெறுகிறார். + +யூலியசு சீசர் சாதாரண குடும்பத்தில் ஔரெலியாவின் மகனாக கி.மு.100 வது ஆண்டில் பிறந்தார். சுபுரா என்ற ரோம நகரப்பகுதியில் ஒரு சாதாரண வீட்டில் வளர்ந்தார். சீசரின் தந்தையை விட அவர் தாயின் கவனிப்பில் தான் வளர்ந்தார். சீசரின் கல்வி அவரின் ஏழாம் வயதில் இலத்தீன், கிரேக்க மொழிப் பாடங்களுடன் துவங்கியது. கிரேக்க, இலத்தீன் இலக்கணம், கணித இயல், எழுத்துத்திறன் முதலியவற்றை சீசரும், அவரின் தங்கைகளும் வீட்டிலேயே கற்று அறிந்தனர். ப���்னிரண்டு வயதில் இலக்கியம், கவிதைகள் இவற்றையும் சீசர் கற்றிருப்பார். சீசரின் ஆசிரியர் பெயர் "மார்க்குஸ் அந்தோனியுஸ் க்னிஃபொ". அவர் எகிப்திய நாட்டிலுள்ள அலெக்சாந்திரியா நகரத்தில் கிரேக்கம், இலத்தீன் மொழிகளை நன்கு கற்றுணர்ந்தார். + +யூலியஸ் சீசர் கான்சல் கொர்னெலியுஸ் மகள் கொர்னெலியாவை கி.மு. 84 ஆம் ஆண்டில் கல்யாணம் செய்துக் கொண்டார். சீசர் தன் பத்தொன்பதாம் வயதில், படைவீரனாகச் சேர்ந்தார். தெர்முஸ் என்ற உரோமப்படைத்தலைவர், மிதிலின் என்ற கிரேக்க நகரை முற்றுகையிட்டார். அம்முற்றுகை வெற்றி அடைய, அவருக்கு ஒரு கப்பல் படை தேவைப்பட்டது. சீசரின் முயற்ச்சியால், கப்பல் படையுடன் தெர்முஸ் மிதிலின் நகரை வென்றார். சீசர் “"Corona Civica"” என்ற வெற்றி முடியை அணியும் உரிமையைப் பெற்றார். கி. மு. 78 ஆம் ஆண்டில், சுல்லா உரோமை நகரில் காலமானார். +உடனே சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்து சேர்ந்தார். + +சீசர் உரோமை நகருக்குத் திரும்பி வந்ததும் தன் அரசியல் வாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டார். கி. மு. 69ஆம் ஆண்டில் சீசரின் மனைவி கொர்னெலியா காலமானார். கி. மு. 67ஆம் ஆண்டில் சுல்லாவின் பேத்தி பொம்பெயாவை மணந்து கொண்டார். அதே ஆண்டில், மிகவும் முக்கியமான ஆப்பியன் வழியை ("Appian Way") சீர்திருத்தும் பொறுப்பை ஏற்றார். இந்தப்பணியில் அவர் கற்றது கல்லியா நாட்டில் வெற்றி அடையத் துணை செய்தது. உரோமப் பேரரசின் படைவலம் ஓங்க, ஆப்பியன் வழிப் பேருதவி செய்தது. ஆப்பியன் வழியும், மற்றும் உரோமையர் கட்டிய பாலங்களும், இன்றும் நிலைத்திருக்கின்றன. + +ஏறக்குறைய அதே சமயத்தில், பொம்பெய் ("Pompeius Magnus") என்ற படைத்தலைவர் கடற்கொள்ளையரை அடக்கி மத்தியத்தரைக் கடலில் உரோமை அரசின் செல்வாக்கை நிலை நாட்டினார். மேலும், ஆசியா மைனர், சிரியா நாட்டையும் உரோமையின் அதிகாரத்துக்கு அடியில் கொண்டு வந்தார். பொம்பெயின் செல்வாக்கும், போர்த்திறமையும் வளர்ந்தது. சீசர் தன் அரசியல் செல்வாக்குக்கு, பொம்பெய் ஒரு சவாலாக வருவார் என்பதைச் சீக்கிரம் கண்டுணர்ந்தார். + +ஜூலியஸ் சீசர் எகிப்தினை போரின் மூலம் வெல்ல துணிந்தார். அப்பொழுது ஆதரவற்ற நிலையில் இருந்த கிளியோபாட்ரா சீசருடன் இணைந்து கொண்டார். கிளியோபாட்ராவை விரட்டிவிட்ட அவரது கணவன் தொலமியுடன் சீசர் போரிட்டார். இப்போரில் தோலமியை சீசர் கொன���றார். வரலாற்று ஆசிரியர்கள் சிலர் தொலமியை கொன்றது கிளியோபாட்ரா என்றும் கூறுகின்றனர். + +கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய ஜூலியஸ் சீசர் அவரை காதலியாக ஏற்றுக் கொண்டார். எகிப்பதினை வென்றவர் அதற்கு கிளியோபாட்ராவை தலைவியாக்கினார். இவர்களுக்கு சிசேரியன் என்ற மகனுண்டு. + +கி. மு. 58-ல் ஐரோப்பிய கண்டங்களிருந்து பல்வேறு பழங்குடிகள் கவுல் நகரினை நோக்கி வந்தார்கள். கவுல் என்பது வடக்கு இத்தாலி, யூகோஸ்லாவியாவின் கரையோரப்பகுதி மற்றும் தெற்கு பிரான்ஸ் ஆகிய மூன்று மாகாணங்கள் இணைந்த பகுதியாகும். பழங்குடியினரின் வருகையை அறிந்த சீசர், ரோமிற்கு இவர்களால் பிரட்சனை உண்டாகுமென எண்ணி அவர்கள் மீது போர் தொடுத்தார். அப்போரில் சீசருடைய இராணுவப் படை இருபதாயிரம் வீரர்களை மட்டுமே கொண்டிருந்தது. ஏழு ஆண்டுகள் கடுமையாக நடைப்பெற்ற இந்தப் போரானது, மிகச் சவாலாக இருந்தது. இதில் இருபது இலட்சம் பழங்குடியினர் கொல்லப்பட்டனர். பத்து இலட்சம் பழங்குடியினர் விற்பனை செய்யப்பட்டனர். இப்போர் மூலம் சீசர் பெரும் மாவீரனாக உலகிற்கு அறிமுகமானார். + +கி. மு. 75-ல் கிரேக்க நாட்டிற்கு கப்பல் வழியே பயணப்படும் பொழுது சீசர் மற்றும் கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் கடற்கொள்ளையர்களால் சிறை செய்யப்பெற்றனர். ஒவ்வொருவரையும் விடுவிக்க 20 தங்கக் காசுகள் விலையாகக் கேட்டனர். சீசர் அவர்களிடம் 38 நாட்கள் பயணக் கைதியாக இருந்தார். ஜூலியஸ் சீசரை கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்க சீசரின் நண்பர்கள் பெரும்பணம் கொடுத்தாகவும் செய்தியுள்ளது. அதனால் கடற்கொள்ளையர்கள் பலரை சீசர் சிலுவையில் அறைந்து கொன்றார். + +ஜூலியஸ் சீசர் அறிவிக்கப்படாத சர்வாதிகாரி போல ரோமில் செயல்பட்டார். கிரிகோரியன் காலெண்டர் மாற்றத்திற்கு உள்ளானது. கிரேக்கமெங்கும் சீசரின் பெரும் சிலைகள் எழுப்பப்பெற்றன. நாணயங்களில் சீசரின் உருவம் பொறிக்கப்பட்டது. இதனால் வருத்தமுற்ற சீசரின் உடனிருந்த பலர் சீசரை கொல்ல திட்டமிட்டனர். +கி. மு. 44 பங்குனி 15 ல் மார்கஸ் ப்ரூடஸ், சர்விலஸ் காஸ்கா, காசியஸ் லான்ஜினஸ் என பலர் இணைந்து சீசரை கத்தியால் குத்திக் கொன்றனர். பாம்பேயின் சிலை கீழே சீசர் விழும் பொழுது அவருடைய உடலில் முப்பத்தைந்து கத்திக் குத்துக் காயங்கள் இருந்தன. அப்பொழுது சீசரின் வளர்ப்பு ம���னான அக்டேவியஸ் பதினெட்டு வயதுடையவராக இருந்தார். + +புளூடார்ச்சின் குறிப்புகளின்படி, சீசருக்கு சிலநேரங்களில் கால்-கை வலிப்பு வந்துள்ளதாகத் தெரிகின்றது. தற்கால வரலாற்று அறிஞர்கள் இதுகுறித்து "மிகவும் பிளவுபட்டுள்ளனர்"; தவிரவும், சிலர் சீசருக்கு மலேரியா தாக்கியதாக நம்புகின்றனர். பல தலைவலி சிறப்பு மருத்துவர்கள் கால்-கை வலிப்பிற்கு மாற்றாக மைக்ரேன் தலைவலி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருத்துத் தெரிவித்துள்ளனர். வேறு சிலர் இந்த கால்-கை வலிப்புக்கள் மூளையில் தீநுண்ம தொற்றால் ஏற்பட்டிருக்கலாம் என கருதுகின்றனர். + +சீசருக்கு நான்கு முறை வலிப்பு ஏற்பட்டுள்ளதை ஆவணங்கள் உறுதி செய்கின்றன. தவிர, அவரது இளமையில் வலிப்புக்கள் வந்திருக்கலாம். சீசருக்கு ஏற்பட்ட வலிப்பு குறித்த முதல் குறிப்பை தன்வரலாற்றாளர் சுடோனியசு பதிவு செய்துள்ளார். இவர் சீசர் இறந்த பிறகு பிறந்தவராவார். வலிப்பு குறித்த பதிவுகளை எதிர்க்கும் மருத்துவ வரலாற்றாளர்கள் இத்தகைய வலிப்புகளுக்கு இரத்தச் சர்க்கரைக் குறைவைக் காரணமாகக் கூறுகின்றனர். + +2003இல் மனநல மருத்துவர் ஆர்பர் எஃப். ஓடர் சீசரின் வலிப்பு நோய் காரணமாக ஏற்பட்ட மனநோயை "சீசர் காம்ப்ளெக்சு" என்று பெயரிட்டுள்ளார்; வலிப்புநோயால் தான் வருத்தமுறுவதை மற்றவர் அறியக்கூடாதென்பதற்காகவே தனது மெய்க்காப்பாளர்களை விலக்கிக் கொண்டதும் அதுவே சீசரது கொலைக்குக் காரணமானதும் இந்த மனநோயாலேயாகும். + +சேக்சுபிரியரின் நாடக வரியொன்றிலிருந்து சீசருக்கு ஒரு காது கேளாதிருந்திருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது: "எனது வலதுகைப் பக்கம் வா, இந்தக் காது கேட்காது". எந்த வரலாற்று நூலும் சீசருக்கு காதுக் குறை இருப்பதாக குறிப்பிடவில்லை. + +உரோமானிய வரலாற்றாளர் சுடோனியசு சீசரை "உயரமான, வெண்ணிற, குறையற்ற உறுப்புகளுடைய, கருப்பு கண்களுடனான" மனிதராக விவரிக்கிறார். + + + + + +பாம்பே மற்றும் சீசரின் மகள் ஜூலியாவிற்குப் பிறந்த பெயரிடப்படாத குழந்தை. இக்குழந்தை சில நாட்களில் இறந்தது + + + +ஜூலியஸ் சீசர் தனது வாழ்க்கை வரலாற்றினை மூன்று பாகங்களாக எழுதியிருக்கிறார். அத்துடன் படையெடுப்புகளை விவரித்து ஏழு பாகங்கள் கொண்ட நூலினை எழுதியுள்ளார். + +சீசரை மையமாக வைத்து எழுதப்பெற்ற நாடகங்கள் + + + + + + +சாங்காய் + +சாங்காய் (சீனம்: 上海 "ஷாங் ஹாய்", என்னும் "கடல் பக்கத்தில்") சீன நாட்டிலும் உலகளவிலும் மக்கள்தொகைப்படி மிகப்பெரிய நகரமாகும் . இது சீனாவின் வணிக மற்றும் பொருளாதார தலைநகரமாகவும் விளங்குகிறது. 23 மில்லியன் மக்கள்தொகை கொண்ட சாங்காய் சீனாவின் நான்கு மாநிலளவிலான நகராட்சிகளில் ஒன்றாகும். பன்னாட்டு மக்களும் வாழும் இந்நகரம் வணிகம், பண்பாடு, நிதியம், ஊடகம், கவின்கலை, தொழினுட்பம், மற்றும் போக்குவரத்தில் தாக்கமேற்படுத்தி வருகிறது. முதன்மை நிதிய மையமாக விளங்கும் சாங்காய் உலகின் மிகுந்த போக்குவரத்து மிக்க சரக்குக்கலன் துறைமுகமாகவும் உள்ளது. + +இது சீனாவின் கிழக்குப் பகுதியில் யாங்சே ஆற்றின் கழிமுகப்பகுதியில் அமைந்துள்ளது. சீனக் கடலோரப் பகுதியின் மையத்தில் அமைந்துள்ளது. இதன் வடக்கு, தெற்கு மற்றும் மேற்கில் ஜியாங்சு மற்றும் செஜியாங் மாநிலங்களாலும் கிழக்கில் கிழக்கு சீனக்கடலாலும் சூழப்பட்டுள்ளது. + +பல நூற்றாண்டுகளாக முதன்மையான நிர்வாக, கடல்வணிக, பண்டமாற்று மையமாக விளங்கிய சாங்காய் 19வது நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது. சாங்காய் துறைமுகத்தின் அமைவிடமும் பொருளியல் முக்கியத்துவமும் ஐரோப்பியர்களால் உணரப்பட்டது. முதலாம் அபினிப் போரில் பிரித்தானியர் வென்றபிறகு வெளிநாட்டு வணிகத்திற்கு திறக்கப்பட்ட பல துறைமுகங்களில் இதுவும் ஒன்றாக அமைந்தது. 1842ஆம் ஆண்டில் கண்ட நாஞ்சிங் உடன்படிக்கையின்படி சாங்காயில் வெளிநாட்டினர் குடியேற்றங்கள் அனுமதிக்கப்பட்டன. இதன்பிறகு கிழக்கிற்கும் மேற்கிற்குமான வணிகத்தில் சாங்காய் முக்கிய பங்கு வகித்தது. 1930களில் ஆசிய பசிபிக் மண்டலத்தின் தன்னிகரில்லா நிதிய மையமாக முன்னேற்றம் கண்டது. இருப்பினும், 1949இல் பொதுவுடமைக் கட்சி கையகப்படுத்தி பின்னர், சோசலிச நாடுகளுக்கு மட்டுமே வணிகம் குவியப்படுத்தப்பட்டது. இதனால் பன்னாட்டளவில் இதன் தாக்கம் குறையலாயிற்று. 1990களில் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்திய சீனப் பொருளாதார சீர்திருத்தங்களால் நகர வளர்ச்சி மீண்டும் புத்துயிர் பெற்றது. வெளிநாட்டு மூலதனம் குவியலாயிற்று. + +சாங்காய் சுற்றுலாத் தலமாகவும் புகழ்பெறத் தொடங்கியது. இங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நீர்த்துறை, நகர தேவதை கோவில், யூயுவான் பூங்கா போன்றவையும் வளர்ந்துவரும் வானளாவிக் கட்டிடஙளும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சீன நிலப்பகுதியின் பொருளாதார மேம்பாட்டின் "காட்சியகமாக" சாங்காய் குறிப்பிடப்படுகிறது. + +சீன எழுத்துமுறையில் இந்நகரத்தைக் குறிக்கும் இரு எழுத்துக்களான '上' ("சாங்" - "மேலே") மற்றும் '海' ("ஹாய்" - "கடல்"), இணைந்து இதற்கு சொல்விளக்கமாக "கடல்-மேல்" எனப் பொருள்தருகின்றன. இந்தப் பெயரின் பயன்பாடு முதன்முதலில் 11வது நூற்றாண்டின் சொங் அரசமரபு காலத்தில் கிடைக்கிறது. அப்போதே இங்குள்ள ஆற்று கழிமுகத்தில் இப்பெயருடைய ஊர் இருந்துள்ளது. இந்தப் பெயரை எவ்வாறு பொருள் கொள்வது என்பதற்கு பல விவாதங்கள் நடைபெற்றபோதும் சீன வரலாற்றாளர்கள் தாங் அரசமரபு காலத்தில் இந்நகர் உண்மையாகவே கடலின் மேல் இருந்ததால் அதுவே சரியான விளக்கமாக கொள்கின்றனர். +பெரிய எழுத்துக்கள்==வெளி இணைப்புகள்== + + + + + +இமயமலை + +இமயமலை என்பது இந்தியத் துணைக்கண்டத்தின் சமவெளியையும் திபெத்திய மேட்டு நிலத்தையும் பிரிக்கும் ஒரு மலைத்தொடர் ஆன இது ஆசியாவில் அமைந்துள்ளது. + +உலகிலேயே ஒப்பற்ற மிகப்பெரிய, மிகவுயர்ந்த, மலைத்தொடர் இந்த இமயமலைத் தொடர்தான். இமயமலைத்தொடர் உலகின் சில மிக உயர்ந்த சிகரங்களின் இருப்பிடமாகும். இதில் எவரெஸ்ட் சிகரமும் ஒன்றாகும். எப்பொழுதும் உறைபனி மூடி இருக்கும். இந்திய துணைக்கண்டத்தின் வட எல்லையாக அமைந்துள்ளது. இது மேற்கே காஷ்மீர்-சிங்காங் பகுதி முதல் கிழக்கே திபெத்-அருணாசல பிரதேசம் பகுதி வரை நீண்டு இருக்கிறது. இமயமலைத்தொடரில் நூற்றுக்கு மேற்பட்ட சிகரங்கள் உள்ளன. இதில் சிலவற்றின் உயரம் 7200 மீட்டருக்கு மேலாகும். இதற்கு மாறாக, ஆசியாவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய சிகரம் அக்கோன்காகுவா அன்டேஸ் மலைத்தொடரில் உள்ளது. இதன் உயரம் 6961 மீட்டராகும். + +மூன்று இணையான உப தொடர்களைக் கொண்டுள்ள இது ஐந்து நாடுகளில் பரவியுள்ளது.பூடான், இந்தியா, நேபாளம், சீனா மற்றும் பாகிஸ்தான் என்பனவான அவற்றில் முதல் மூன்று நாடுகளில் அதிகமான மலைத்தொடர் பரவியுள்ளது. இமயமலையின் வடக்கே திபத்திய பீடபூமியையும், வடமேற்கே காரகோரம் மற்றும் இந்துக்குசு மலைத்தொடரையும் தெற்கே சிந்து-கங்கை சமவெளிய���யும் எல்லையாகக் கொண்டுள்ளது. உலகின் சில பெரிய நதிகளான சிந்து, கங்கை, மற்றும் பிரமபுத்திரா உற்பத்தியாகிறது. இந்நதிகளின் மொத்த வடிகால் 60 கோடி மக்களின் இருப்பிடமாகும். இமயமலை தெற்காசிய மக்களின் கலாச்சாரத்தை வடிவமைத்துள்ளது. இமயமலையில் உள்ள பல சிகரங்கள் இந்து மற்றும் புத்த மதங்களில் புனிதமாகக் கருதப்படுகிறது. + +இமயமலை மேற்கு-வடமேற்கு பகுதியிலிருந்து கிழக்கு-வடகிழக்கு பகுதிவரை 2400 கிலோமீட்டர் வட்டவில்லாக அமைந்துள்ளது. இதன் மேற்கில் உயர்ந்த சிகரம் நங்கா பர்பத் சிந்து நதியின் வடக்கு வளைவில் அமைந்துள்ளது, இதன் கிழக்கில் உயர்ந்த சிகரம் நம்சா பர்வா பரம்ஹபுத்ராவின் பெரிய வளைவில் மேற்கே அமைந்துள்ளது. மலைத்தொடரின் அகலம் மேற்கில் 400 கிலோமீட்டரும் கிழக்கில் 150 கிலோமீட்டரும் ஆகும். + +இமயமலையின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்களைக் காலநிலை, மழை, உயரம், மற்றும் மண் கொண்டு மாறுபடும். மலை அடிவாரத்தில் வெப்ப மண்டல காலநிலையும், மிக உயர்ந்த இடத்தில் பனிக்கட்டி மற்றும் உறைபனியாகவும் காணப்படுகிறது. கடக ரேகையின் அருகே உள்ளதால் இதன் பனி வரி 5500 மீட்டர் ஆகும். இது உலகிலேயே உயர்ந்ததவற்றில் ஒன்று. ஆண்டு மழை அளவு தெற்கு முகப்பில் மேற்க்கிலிருந்து கிழக்கு வரை அதிகரிக்கும். இத்தகைய உயர மாறுபாடு, மழை அளவு ,மண்ணின் நிலை மற்றும் மிக அதிக பனி வரி காரணமாக நிறைய தாவரங்களும் விலங்குகளும் உயிர் வாழ உதவுகிறது. உதாரணமாகத் தீவிர குளிர் மற்றும் அதிக உயரம் (குறைந்த காற்றழுத்தம்) காரணமாக உச்சவிரும்பிகள் உயிர் வாழுகின்றன. + +இமயமலையின் தனித்துவமான தாவர மற்றும் விலங்கு செல்வம் காலநிலை மாற்றம் காரணமாகக் கட்டமைப்பு மற்றும் இயைபு மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. வெப்பநிலை அதிகரிப்பு காரணமாகப் பல இனங்கள் உயரமான இடங்களுக்குச் சென்று உயிர் வாழ்கின்றன. கர்வால் இமயமலை பகுதியில் கருவாலி மரங்கள் இருந்த இடத்தில தேவதாரு மரங்கள் வளர்கின்றன. சில மர இனங்களில் குறைந்த காலத்திலேயே பூத்தலும் பழுத்தாலும் நிகழ்கின்றன, குறிப்பாக ர்ஹோடோதேண்ட்ரோன், ஆப்பிள் மற்றும் மைரிக்கா ஈஸ்கிலேண்டா. + +இமயமலை இக்கிரகத்தில் உள்ள இளம் மலைத் தொடர்களில் ஒன்றாகும். இது பெரும்பாலுமாக வலுவூட்டப்பட்ட படிவுக்கலன்கள் மற்றும் உருமாறி பாறைகளைக் கொண்டுள்ளன. நவீன டெக்டோனிக் கொள்கையின் படி இமயமலை இந்திய ஆஸ்திரேலிய தட்டு மற்றும் யூரேசியன் கண்டங்களிடையே நிகழ்ந்த மோதலால் உருவாகியது. இது தான் மடிப்பு மலை என்று கூறுகிறோம். + +வடக்கு நோக்கி நகர்ந்த இந்திய-ஆஸ்திரேலிய தகடுக்கும் யுரேசியன் தகடுக்கும் 7 கோடி ஆண்டுகள் முன்பு இந்த மோதல் தொடங்கியது . 5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, இந்த வேகமாக நகரும் இந்திய ஆஸ்திரேலிய தகடு முழுமையாகத் தெதைஸ் பெருங்கடலை மூடிவிட்டது, இதன் இருப்பு அங்குள்ள படிவ பாறைகள் மற்றும் எரிமலைகள் மூலம் அறியப்படுகின்றது. இந்தப் படிவுகள் அடர்த்தி குறைவாக இருந்ததால் அவை கடலின் கீழே போகாமல் ஒன்று சேர்ந்து மலையை உருவாக்கின. இந்திய ஆஸ்திரேலிய தட்டு கிடைமட்டமாக நகர்வதால் திபெத்திய பீடபூமி உயர்ந்து வருகிறது. மியான்மரில் உள்ள அரகான் யோமா உயர்நிலங்கள் மற்றும் வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள் இந்த மோதலால் உருவாகியது. + +இன்னும் இந்திய ஆஸ்திரேலிய தட்டு வருடத்திற்கு 67 மிமீ நகர்ந்து வருகிறது, மற்றும் அடுத்த 10 மில்லியன் ஆண்டுகளில் இது ஆசியாவினுள் 1,500 கிமீ நகரும். இந்திய-ஆசிய குவிதல் ஆண்டிற்கு 20 மிமீ தெற்கு இமாலய முகப்பின் அழுத்தத்தால் உறிஞ்சப்படுகிறது. இதனால் இமயமலை ஆண்டிற்கு 5 மிமீ உயர்கிறது. இந்தியத் தகடு ஆசியத் தகடுகள் நுழைவதால் இப் பகுதியில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்படுகின்றது. + +இமயமலைப்பகுதி 15000 பனியாறுகளைக் கொண்டுள்ளது அதில் 12000 கன கிலோ மீட்டர் தண்ணீர் உள்ளது. அதன் பனிப்பாறைகள் கங்கோத்ரி மற்றும் யமுனோதிரி (உத்தரகண்ட்) மற்றும் க்ஹும்பு பனிப்பாறைகள் (எவரெஸ்ட் பகுதியில்), மற்றும் சேமு (சிக்கிம்) ஆகியவை அடங்கும். +இமயமலை வெப்ப மண்டலத்திற்கு அருகே இருந்தாலும் அதன் உயர் பகுதிகுள் ஆண்டு முழுவதும் பனி நிறைந்து காணப்படுகிறது. இது பல வற்றாத ஆறுகளின் ஊற்றாகத் திகழ்கிறது. இவை இரண்டு பெரிய ஆறு அமைப்புகளாக உள்ளன: + +கிழக்கு இமாலய நதிகளின் கிழக்கு அயேயர்வாடி நதியை ஊட்டுகின்றன, இந்நதி திபெதில் உருவாகி தெற்கு நோக்கிப் பர்மா வழியாக அந்தமான் கடலில் கலக்கிறது. + +சல்வீன்,மீகாங்,யாங்சே மற்றும் ஹுவாங் ஹி (மஞ்சள் ஆறு) திபெத்திய பீடபூமியில் உருவாகின்றன. ஆகையால் இவை உண்மையான இமயமலை ஆறு அல்ல. சில புவியியலாளர்கள் இவ��� ஆறுகளை வெளிச்சுற்று இமாலய ஆறுகள் என்று அழைகின்றனர். +சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞானிகள் உலக காலநிலை மாற்றத்தின் விளைவாக அப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் குறைவு விகிதம் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக, பனிப்படல ஏரிகள் கடந்த சில தசாப்தங்களில் பூட்டான் இமயமலை பகுதியில் குப்பைகள் உள்ளடங்கிய பனிப்பாறைகளின் மேற்பரப்பில் வேகமாக உருவாகி வருகின்றன. இந்த விளைவு பல ஆண்டுகளாக உணரப்படாது என்றாலும் உலர் பருவங்களில் பணிப்பறைகளால் உருவாகும் ஆறுகளைச் சார்ந்து இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்குப் பேரிழப்பு ஏற்படும். + +இமயமலை பகுதியில் மானசரோவர் ஏரி போன்று நூற்றுக்கணக்கான ஏரிகள் உள்ளன. பெரும்பாலான ஏரிகள் 5,000 மீ உயரத்திற்கு கீழே உள்ளன, அதன் பரப்பு உயரத்திற்கு ஏற்றவாறு குறைந்துள்ளது. இந்திய சீன எல்லையில் விரிந்த பாங்காங்-த்சோ ஏரியும் மத்திய திபெதில் உள்ள யம்ட்ரோக் த்சோ ஏரியும் முறையே 700 சகிமீ ,638 சகிமீ கொண்டு மிகப்பெரியதாகும். குறுப்பிடத்தக்க மற்ற ஏரிகள் வட சிக்கிமில் உள்ள குருடோக்மார் ஏரி, சிக்கிமில் உள்ள த்சொங்க்மோ ஏரி மற்றும் நேபாளில் உள்ள டிளிசோ ஏரி. + +பனிப்பாறை நிகழ்வினால் ஏற்படும் மலை ஏரிகளுக்கு டர்ன்ஸ் என புவியியலாளர்களால் அழைக்கப்படுகின்றன. டர்ன்ஸ் உயர் இமயமலையில், 5500 மீட்டர் மேல், காணப்படுகின்றன. + +இமயமலை இந்திய துணைகண்டம், திபெத்திய பீடபூமி பகுதியில் உள்ள காலநிலையில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இவை உலர் விரைப்பான தென் நோக்கிச் செல்லும் ஆர்க்டிக் காற்றை தடுத்து தென் ஆசியாவை மிதவெப்பமாக வைத்து மற்றும் அவர்கள் மற்ற கண்டங்களில் தொடர்புடைய வெப்பமான பகுதிகளை விட வெப்பமாக உள்ளன. இவை பருவக்காற்றை வடுக்கு நோக்கிச் செல்வதை தடுத்து டேராய் பகுதிகளில் கன மழை பெய்ய உதவுகிறது. இமயமலை மத்திய ஆசிய பாலைவனங்களான தக்ளமகன் மற்றும் கோபி பாலைவனங்கள் உருவானதில் முக்கிய பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. + +இந்து மதத்தில் இமயமலையை பார்வதியின் தந்தையான "இமாவான்" (பனிக் கடவுள்) என உருவகப்படுத்தப்பட்டுள்ளது அவர் சிவனை திருமணம் செய்த பார்வதி , கங்கா மற்றும் சரஸ்வதியின் தந்தை ஆவார். + +இமயமலையில் உள்ள பல இடங்கள் இந்து, சமண, சீக்கிய மற்றும் புத்த மதங்களில் முக்கியத்��ுவம் வாய்ந்தவை. குறுப்பிடத்தக்க எடுதுக்க்காட்டானது பத்ம சம்பாவ புத்த மதத்தைத் தோற்றுவித்த பூட்டானில் உள்ள பரோ தக்ட்சங் இமயமலையில் உள்ளது. + +தலாய்லாமாவின் இருப்பிடம் மற்றும் திபெத்திய புத்த இடங்கள் இமய மலையில் உள்ளது. திபெத்தில் 6,000 மடங்கள் இருந்தன. திபெத்திய முஸ்லிம்கள் லாசா மற்றும் ஷிகட்சே இடங்களில் சொந்த மசூதிகள் கொண்டுள்ளனர். + +கைலாயம், பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி, யமுனோத்திரி, ஜோஷி மடம், அமர்நாத் கோயில், வைஷ்ணவதேவி கோயில் போன்ற இந்து சமய வழிபாட்டிடங்கள் உள்ளது. + +இதன் உயரமான பரவலினால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்தியாவின் இயற்கை அரணாக விளங்குகிறது. இந்திய துணைக்கண்டத்தினை மங்கோலிய, சீனா மக்களின் நாகரிகத்திலிருந்து பிரிக்கின்றது. உதாரணமாகச் செங்கிஸ்கானின் படையின் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தியதில் இமயமலைக்கு பங்கு உண்டு. + + + + + + + +அடிப்படை இயற்கணிதம் + +அடிப்படை இயற்கணிதம் ("elementary algebra") என்பது இயற்கணிதத்தின் ஒரு முக்கியப் பிரிவு. இது இயற்கணிதத்தின் அடிப்படைக் கருத்துருக்களை விவரிக்கிறது. எண்கணிதம் மற்றும் இயற்கணிதம் இரண்டிற்குமுள்ள முக்கிய வேறுபாடு, இயற்கணிதத்தில் கையாளப்படும் மாறிகள்தான். எண்கணிதத்தில் எண்கள் மற்றும் அவற்றைக் கொண்டு செய்யப்படும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகியவை குறித்த கருத்துக்கள் விவரிக்கப்படுகின்றன. அடிப்படை இயற்கணிதத்தில் "x" மற்றும் "y" போன்ற மாறிகளும், எண்களுக்குப் பதில் "a" மற்றும் "b" போன்ற மாறிலிகளும் பயன்படுத்தப்பட்டு கணிதச் செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. + +மாறிகளை உபயோகித்து நுண்மமாக (abstract) சிந்தித்து செய்யப்படும் கணிப்புக்களை +அடிப்படை இயற்கணிதம் கொண்டுள்ளது. இக்கணிதப் பிரிவை "அடிப்படை அட்சர கணிதம்" அல்லது "அடிப்படை குறுக்கணக்கியல்" என்றும் குறிப்பிடுவதுண்டு. பொதுவாக, மாணவர்கள் முதலில் எண்கணிதம் கற்று, பின்னர் இயற்கணிதத்தின் மூலம் மேலும் நுண்மமாகச் சிந்திக்க உந்தப்படுகின்றார்கள். இயற்கணிதத்தில் சமன்பாடுகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. + +இயற்கணிதத்தில் ஓர் எண்ணுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும் எழுத்து அல்லது குறியீடு மாறி என அழைக்கப்படுகிறது.கணிதச் செயல்முறைகளை விதிகளாக பொதுமைப்படுத்துவதற்கு மாறிகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன: + + +எடுத்துக்காட்டு: + +அதாவது இரு முழு எண்களைக் கூட்டும் போது வரிசை மாற்றி செயல்பட்டாலும் இறுதி மதிப்பு மாறுவதில்லை. இதனை முழு எண்களின் பரிமாற்று விதியாகப் பின்வருமாறு தரலாம். + +அனைத்து "a" மற்றும் "b" எனும் முழு எண்களுக்கு: + +formula_2 + +இது முழு எண்களுக்கு மட்டுமல்லாமல் மெய்யெண்களுக்கும் பொருந்தும். மாறிகளைப் பயன்படுத்தி செயல்முறைகளை விதிகளாக எழுதும் முறை, மெய்யெண்கள் கணத்தின் பண்புகளைப் பற்றிய அறிதலுக்கு முதல்படியாக அமைகிறது. + + +எளிய எடுத்துக்காட்டு: + +இரு முழு எண்களின் கூடுதல் 11. அவற்றின் வித்தியாசம் 5 எனில் அவ்விரு எண்களைக்காண: +கீழே உள்ள ஒருபடிச் சமன்பாடுகளின் தொகுதி பிரிவில் தரப்பட்டுள்ளபடி இச்சமன்பாடுகளைத் தீர்த்து வேண்டிய இரு எண்கள் 8, 3 என்பதைக் கணக்கிடலாம். + +இது ஒரு எளிய கணக்கு. இவ்வாறு சமன்பாடுகள் அமைத்துத் தீர்வு காணும் முறையில் மேலும் சிக்கலான கணக்குகளுக்கும் எளிதாக விடை காண முடியும். + + +எடுத்துக்காட்டு: + +ஒருவர் "x" புத்தகங்கள் விற்றால் அவருக்குக் கிடைக்கும் லாபம்: 3"x" − 10 ரூபாய். + +அடிப்படை இயற்கணிதத்தில் கோவை என்பது எண்கள் மற்றும் மாறிகளால் அமைந்த உறுப்புகளைக் கணித அடிப்படைச் செயல்களைக் கொண்டு இணைக்கப்பட்ட ஒரு அமைப்பு. கோவைகளின் இடப்பக்கத்தின் முதல் உறுப்பாக அதிக அடுக்குள்ள உறுப்பு எழுதப்படுவது வழக்கம்: + +உயர் இயற்கணிதக் கோவைகள் சார்புகளைக் கொண்டும் அமையும். + +எண் கணிதத்தில் உள்ளதுபோல அடிப்படை இயற்கணித்திலும் அடிப்படைச் செயல்களான கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் வரையறுக்கப்பட்டுள்ளன. + + + + +கணிதத்தில் ஒரு கோவையின் மதிப்பு காணும் போது அல்லது சுருக்கி எழுதும் போது அதில் அமைந்துள்ள செயல்களைக் குறிப்பிட்ட வரிசையில் செய்ய வேண்டியது முக்கியமான ஒன்று. செயல்களின் வரிசை பின்வருமாறு அமையும்: + + + + + +ஆங்கிலத்தில் இந்த செயல் வரிசையை எளிதாக நினைவில் வைத்துக் கொள்வதற்கு பின்வரும் "நினைவி" பயன்படுத்தப்படுகிறது: + +இரண்டு இயற்கணிதக் கோவைகள் ஒரே மதிப்பு கொண்டவையாக, சமமானவையாக அமையும் என்பதை ஒரு சமன்பாடு நிலைநாட்டுகிறது. சில சமன்பாடுகள் அவற்றில் உள்ள மாறிகளின் அனைத்து மதிப்புகளுக்கும் உண்மையானதாக இருக்கும். அத்தகைய சமன்பாடுகள் முற்றொருமைகள் என அழைக்கப்படும். மாறிகளின் குறிப்பிட்ட சில மதிப்புகளுக்கு மட்டும் உண்மையாக இருக்கும் சமன்பாடுகள் "நிபந்தனைக்குட்பட்ட சமன்பாடுகள்" எனப்படும். ஒரு சமன்பாட்டினை உண்மையாக்கும் மாறியின் மதிப்புகள் அச்சமன்பாட்டின் தீர்வுகள் எனவும் அம்மதிப்புகளைக் கண்டுபிடிக்கும் முறை, சமன்பாட்டைத் தீர்த்தல் எனவும் அழைக்கப்படுகிறது. + + + + +நாம் அன்றாடம் சந்திக்கக்கூடிய சமன்பாடுகள் கீழே தரப்படுகின்றன. + +ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடுகள் தீர்ப்பதற்கு மிகவும் எளிதானவை. அவை மாறிலிகள் மற்றும் ஒரேயொரு மாறியை மட்டும் கொண்டிருக்கும். + +எடுத்துக்காட்டு: + +சமன்பாட்டின் இருபுறமும் ஒரே எண்ணால் கூட்டி அல்லது கழித்து அல்லது பெருக்கி அல்லது வகுத்து அச்சமன்பாட்டில் உள்ள மாறியை சமன்பாட்டின் ஒரே பக்கமாகத் தனிமைப்படுத்துவதே இச்சமன்பாடுகளைத் தீர்க்கும் முறையாகும். சமன்பாட்டில் அமைந்துள்ள மாறி இவ்வாறாக சமன்பாட்டின் ஒரேபக்கத்துக்கு நகர்த்தப்பட்டால் சமன்பாட்டின் மற்றொரு பக்கத்தில் உள்ளது அம்மாறியின் மதிப்பாக அமையும். அதாவது அச்சமன்பாட்டின் தீர்வாக அமையும். + +மேலே தரப்பட்டுள்ள சமன்பாட்டைத் தீர்த்தல்: + +சமன்பாட்டின் இருபுறமும் 4 -ஐக் கழிக்க: + +இப்பொழுது இருபுறமும் 2 -ஆல் வகுக்க: + +சமன்பாட்டின் தீர்வு: + +இதே முறையில் இவ்வகையானப் பொதுச் சமன்பாடு formula_12 -ன் தீர்வு: + + + +இங்கு "p" = "b"/"a" மற்றும் "q" = −"c"/"a". + + +எடுத்துக்காட்டு: + +தீர்வுகள்: "x" = 2 அல்லது "x" = −5 + + +எடுத்துக்காட்டு: + + +எடுத்துக்காட்டு: + +இச்சமன்பாட்டிற்கு −1 இருமுறை தீர்வாக அமைகிறது. + +இச்சமன்பாட்டின் தீர்வு: + +ஒரு அடுக்குக்குறிச் சமன்பாட்டைத் தீர்ப்பதற்கு முன் அதனை மேலே தரப்பட்டுள்ள அடுக்குக்குறிச் சமன்பாட்டு வடிவிற்கு மாற்றக் கொள்ள வேண்டும். + +எடுத்துக்காட்டு: + +இருபுறமும் 1 -ஐக் கழிக்க: + +இருபுறமும் 3 -ஆல் வகுக்க: + +எனவே தீர்வு: + +இச்சமன்பாட்டின் தீர்வு: + +எடுத்துக்காட்டு: + +இருபுறமும் 2 -ஐக் கூட்ட: + +இருபுறமும் 4 -ஆல் வகுக்க: + +எனவே தீர்வு: + +படிமூலச் சமன்பாடு: + +இதன் தீர்வு: + +"m" ஒற்றை எண் எனில், + +"m" இரட்டை எண் மற்றும் "a" ≥ 0 எனில், + +எடுத்துக்காட்டு: + +ஒருபடிச் சமன்பாட்டுகளின் தொகுதி ஒன்றில் உள்ள சமன்பாடுகள் அனைத்தையும் நிறைவு செய்யும் தீர்வுகளை அதாவது மாறிகளின் மதிப்புகளைக் காணலாம். தீர்வுகள் காண்பதற்கு அத்தொகுதியில் உள்ள சமன்பாடுகளின் எண்ணிக்கையும் சமன்பாடுகளில் உள்ள மாறிகளின் எண்ணிக்கையும் சமமாக இருத்தல் வேண்டும். + +மூன்று மாறிகளில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதியின் பொதுவடிவம்: + +இரு மாறிகளில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதியின் பொதுவடிவம்: + +இரு மாறிகளில் அமைந்த இரண்டு சமன்பாடுகள் கொண்ட ஒரு சமன்பாட்டுத் தொகுதியைத் தீர்க்கும் முறை: + +இரண்டாவது சமன்பாட்டை இரண்டால் பெருக்க: + +இப்பொழுது இவ்விரண்டு சமன்பாடுகளையும் கூட்ட: + +இருபுறமும் 8 -ஆல் வகுக்க: + +"x" = 2 என இரண்டில் ஏதேனும் ஒரு சமன்பாட்டில் பிரதியிட்டு, "y" = 3 என்பதை அடையலாம். + +எனவே மேலே தரப்பட்ட சமன்பாட்டுத் தொகுதியின் முழுத்தீர்வு: + +இந்த நீக்கல் முறையில் "x" -க்குப் பதில் முதலில் "y" -ஐ நீக்கிவிட்டு "x"-ன் மதிப்பையும் பின் அதனைப் பயன்படுத்தி "y" -ன் மதிப்பு கண்டுபிடித்தும் தீர்வு காணமுடியும். + +இரண்டில் ஏதாவது ஒரு சமன்பாட்டிலிருந்து "y" -ஐக் வருவித்துக் கொண்டு, அதனை அடுத்த சமன்பாட்டில் பிரதியிட்டு "x" -ன் மதிப்பைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்பொழுது "x" மதிப்பை ஏதாவது ஒரு சமன்பாட்டில் பிரதியிட்டு "y" மதிப்பைக் காணலாம். அல்லது இதேபோல முதலில் "y" -க்குப் பதில் "x" -ஐ எடுத்துக் கொண்டும் தொடராலாம். + +இரண்டாவது சமன்பாட்டிலிருந்து: + +இருபுறமும் "2x" -ஐக் கழிக்க: + +இருபுறமும் -1 ஆல் பெருக்க: + +இந்த "y" மதிப்பை முதல் சமன்பாட்டில் பிரதியிட: + +x = 2 என இரண்டில் ஏதேனும் ஒரு சமன்பாட்டில் பிரதியிட்டு y = 3 எனக் காணலாம். எனவே சமன்பாட்டுத் தொகுதியின் தீர்வு: + +ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதிகளின் தீர்வுகளைப் பொறுத்து அவற்றை இரு வகைகளாகப் பிரிக்கலாம்: + +ஒருங்கிசைவுடையவை (consistent); + +ஒருங்கிசைவுடைய ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதியின் தீர்வுகள், + + +ஒருங்கிசைவற்றவை (inconsistent). + +ஒருங்கிசைவிலா ஒருபடிச் சமன்பாட்டுத் தொகுதிக்குத் தீர்வுகளே கிடையாது. + + + + + + +தமிழ்க் கணிமை செயலிகள் பட்டியல் + + + + + + +சுரதா புதுவை தமிழ் எழுதி + +சுரதா புதுவை தமிழ் எழுதி யுனிக்கோட் குறிமுறையில் கணினியில் தமிழில் எழுத உதவும் மென்பொருள் செயலி ஆகும். அஞ்சல் எனப்படும் தமிங்கில முறை, பாமினி, அமுதம், Tam ஆகிய தட்டச்சு முறைகளின் மூலம் இதில் எழுதலாம். ஜாவாஸ்க்ரிப்ட் மொழி கொண்டு எழுதப்பட்ட இச்செயலியை இலவசமாக இணையத்தில் இருந்தவாறும் தரவிறக்கியும் பயன்படுத்தலாம். இச்செயலியைக் கணினியில் நிறுவத் தேவை இல்லை என்பதால், இச்செயலியைப் பயன்படுத்த கணினிப் பயனருக்கு கணினியில் சிறப்பு அனுமதிகள் தேவை இல்லை. + +இச்செயலி உலாவியின் உதவியுடன் குறிப்பிட்ட இணையப் பக்கத்தில் மட்டுமே இயங்கும். எனவே, பிற இணையப் பக்கங்கள், ஆவணங்களில் நேரடியாக இதைக் கொண்டு எழுத முடியாது. முதலில் சுரதா எழுதியில் எழுதி பிறகு அதை வெட்டி எடுத்து பிற பக்கங்களில் ஒட்ட வேண்டும். + +எனினும், இணையத்தில் தமிழில் எழுத முனையும் பலரும் அறிந்ததாகவும் அவர்களின் முயற்சிக்குத் தொடக்கக் கருவியாகவும் இவ்வெழுதி விளங்குகிறது. + + + + +மண் பானை + +மண்பானை என்பது களிமண்ணிலிருந்து தயாரிக்கப்பட்டு நீர் மற்றும் பிற பொருட்களைச் சேமித்து வைக்கப் பயன்படுத்தப்படும் கொள்கலன் (பாத்திரம்/ஏனம்) ஆகும். பொதுவாக, உட்புறம் வெறுமென உள்ள உருண்டை வடிவில் இதன் அடிப்பாகமும் சிறிய கழுத்துப் பகுதியும் இருக்கும். களிமண் தொகுதியை சுழல விட்டு, கைகளைக் கொண்டு இதன் வடிவத்தை வரையறுத்து இவற்றை உருவாக்குவார்கள். பானை உருவாக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களைக் குயவர் என்று அழைப்பர். + +பானை கொள்கலனாக மட்டும் இன்றி ஒரு அழகுப் பொருளாகவும் பயன்படுகிறது. இத்தகைய பானைகள் பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் தயாரிக்கப்படுகின்றன. மேலும், கடம் என்ற கர்நாடக இசைக் கருவியும் பானை வடிவில் இருக்கிறது. + +இதில பலமுறைகள் உள்ளன அந்த மண்ணுக்கு ஏற்ப அவை மாறுபடும். மண்ணை நன்றாக குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி  , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள்  (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள  வண்டிச்சக்கரத்தின்   நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள் . + +நம் தமிழகத்துள் வழங்கப்பெற்ற,வழங்கப்பெறும்) பானை வகையுள் சில. + + + + + +கரும்பு + +கரும்��ு () என்பது சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இதன் அறிவியல் பெயர் சக்கரம் ஆபிசினேரம். இது 'கிராமினோ' என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தென் ஆசியாவில் சூடான வெப்பமண்டல பகுதிகளில் வளரக்கூடிய, உண்பதற்கு இனிக்கும் சர்க்கரை நிறைந்த ஒரு இடை தட்ப வெப்ப நிலைத் தாவரம் ஆகும்.வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல பகுதிகளில் கரும்பு பயிர் செழித்து வளரும் உலகெங்கும் 90 க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 20 மில்லியன் ஹெக்டேர்களில் வானிகப் பயிராக கரும்பு பயிரிடப்படுகிறது. இது நீண்ட இழைமத் தண்டுகளாகவும், தண்டுகளின் கரணைகளில் இருந்து இலைகள் மேலெழுந்து சோலையாக வளரும் இயல்புடையது. கரும்பு 6 அடி முதல் 19 அடி உயரம் வரை வளரக் கூடியது. புல் இனத்தைச் சேர்ந்த தாவரமான கரும்பு. மக்காச்சோளம், கோதுமை, அரிசி, மற்றும் பல தீவனப் பயிர்கள் உள்ளிட்ட பொருளாதார முக்கியத்துவமான தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. கரும்பில் பல கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். கரும்பு ஒரு பணம் கொழிக்கும் வாணிகப் பயிராகும்.பிரேசில், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 50 விழுக்காட்டிற்கும மேற்பட்ட கரும்பை உற்பத்தி செய்கின்றன.((க்யூபா)) அதிக அளவில் கரும்பு பயிரிடுவதால், 'உலகின் சர்க்கரை கிண்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கரும்பிலிருந்து பெறப்படும் முக்கியப் பொருள் சுக்ரோஸ் ஆகும். இது கரும்பின் தண்டுப்பகுதிகளில் சேர்த்து வைக்கப்படுகிறது. கரும்பாலைகளில் இதன் சாறினைப் பிழிந்து தூய்மைப்படுத்தப்பட்ட சுக்ரோஸ் பிரித்தெடுக்கப்படுகிறது. +சுமார் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென் பசிபிக் தீவுகளில் கரும்பு முதல் முறையாகப் பயிரிடப்பட்டது. இந்தியாவில் கி.மு. 500 - ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட சர்க்கரை தயாரிக்கும் முறை கி.மு.100 - ம் ஆண்டில் சீனாவுக்குப் பரவியது. 'சர்க்கரை' என்ற வார்த்தை சமஸ்கிருத மொழியின் ‘சர்க்கரா’ என்ற சொல்லில் இருந்து வந்ததாகும். கி.பி. 636 -ம் ஆண்டு ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு, இன்று 200 - க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது. உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்து தான் தயாரிக்கப்படுகிறது. + +கரும்பென்றால் இனிப்பு, இன்பம் என்று தமிழர் கருதுவர். ஆகையால், தைப்பொங்கல் போன��ற விழா நாட்களில் கரும்பு பகிர்ந்து மகிழ்வது வழமை. + +"கரும்பு என ஆரம்பிக்கும் தமிழ் பெயர்கள்:" +கரும்பு, கரும்பமுதம், கரும்பமுது, கரும்பரசி, கரும்பழகி, கரும்பிசை, கரும்பூராள், கரும்பெழிலி, கரும்பு, கரும்புநகை, கரும்புமொழி, கரும்புவில், கரும்புவிழி. + +"கரும்புடன் தொடர்புடைய பழமொழிகள்:" + + + + +சி (நிரலாக்க மொழி) + +சி நிரலாக்க மொழி ('C' Computer Programming Language) என்பது கணினியில் பயன்படுத்தப்படும் ஒரு கணிமொழி. இது 1970 இல் அமெரிக்காவின் AT&T (அமெரிக்கத் தொலைத்தொடர்பு தொலைபேசி) ஆய்வுக்கூடத்தின் பிரையன் கேர்நிங்காம் (Brian Kernighan) மற்றும் டென்னிசு ரிச்சி (Dennis Ritchie) ஆகியோரால் உருவாக்கப் பட்டது. + +தொடக்கத்தில் 1970இல் யுனிக்ஸ் இயங்குதளத்தில் மட்டுமே சி-மொழி இயங்கியது. பின்னர் ஏனைய இயங்குதளங்களிலும் இயக்கும் வசதியேற்பட்ட பின்னர் மிகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் நிரலாக்க மொழியாக மாறியது. புதிதாகக் கணினி பயில்பவர்களுக்கு ஏற்ற மொழியாக இல்லாவிடினும் மிக விரைவாக இயங்கியதால் கணினி இயங்குதளங்களை உருவாக்கவும் வேறு பயனுள்ள மென்பொருள்கள் உருவாக்கவும் இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. + +1969 க்கும் 1973 க்கும் இடையில் சி மொழியின் தொடக்க கால வளர்ச்சி நிகழ்ந்தது. டென்னிசு ரிச்சியின் கருத்துப்படி 1972 ஆம் ஆண்டில் தான் மிகமுக்கியமான வளர்ச்சிப்பணிகள் அமெரிக்காவின் AT&T பெல் ஆய்வுக்கூடத்தில் நடைபெற்றன. தொடக்கத்தில் BCPL (Basic Combimed Programming Lanaguage) ஐப் பின்பற்றி B என்னும் நிரலாக்கல் மொழி உருவாகியது. இதைத்தொடர்ந்து வந்த இம்மொழியின் பெயராக BCPL இல் இரண்டாவது எழுத்தான C ஐ எடுத்துக் கொண்டனர். பின்னர் ++ என்ற கூட்டல் குறியை இதன் வழிவந்த 'சி++' நிரலாக்க மொழிக்குச் சேர்த்துக் கொண்டனர். + +கீழ்கண்ட நிரலை விண்டேஸ்/டோஸ் (தமிழ் வரியை விட்டுவிடவும்) இயங்குதளங்களில் செயல்படுத்திப் பார்க்கவும். லினக்சில் gedit எனக் கட்டளையிட்டுப் பின்னர் கோப்பைச் சேமிக்க இயலும். லினக்ஸ் இயங்குதளத்தில் உள்ளவர்கள் கடைசி வரியையும் தட்டச்சுச் செய்து சோதிக்கலாம். + +இங்கு #include என்ற கட்டளை சி மொழியில் தலைப்புக் கோப்பு எனப்படும். இங்கு h தலைப்பைக் (header) குறிக்கின்றது. இங்கு stdio என்பது Standard Input Outputஆக கணினிகளில் தரவுகளை உட்புகுத்துதல் மற்றும் வெளியிடுதல் செயலுக்���ாகத் தலைப்புக் கோப்பைச் சேர்ப்பதாகும். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட நிரலாக்க முறையாக (கட்டாயமல்ல) போன்ற <தலைப்புக் கோப்பு> சி மொழியின் செந்தரக் கோப்புக்களாகும். #include "programmercreated.h" என்பது நிரலாக்கர் ஒருவர் உருவாக்கிய தலைப்புக் கோப்பொன்றை சேர்க்கும் வழிமுறையாகும். ரேபோ சி எனும் தொகுப்பி "நிரலர் உருவாக்கிய தலைப்புக் கோப்பு வரி ஒன்றைக் காண்கையில் முதலில் நிரலரின் இயங்கிக் கொண்டிருக்கும் கோப்புறையுள் இக்கோப்பினைத் தேடிவிட்டே பின்னர் நியமத் தலைப்புக் கோப்புள்ள இடத்தில் அதனைத் தேடும். + +main () இங்குள்ள முதன்மை செயற்கூறு (function) ஆகும். இங்கிருந்தே நிரலாக்கத்தின் செயற்பாடுகள் ஆரம்பிக்கும். இதில் void என்பது இயங்குதளத்திற்கு எதையும் திருப்பி அனுப்புவதில்லை என்பதாகும். மைக்ரோசாப்ட் தொகுப்பிகளான விசுவல் சி++ போன்றவை இதை int அதாவது இலக்கம் என்றவாறு எதிர்பார்த்து ஓர் எச்சரிக்கைச் செய்தியொன்றைத் தரும். இதைத் தவிர்க்க விரும்பினால் int main() என்றவாறு ஆரம்பித்து கடைசியாக } இற்கு முன்னால் return 0; என்று சேர்க்கலாம். இங்கே கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால் பஸ்கால் நிரலாக்கல் மொழி (அல்லது பாஸ்கல்) போன்றல்லாமல் இங்கே ; அரைநிறுத்தற்குறியானது (செமிகோலன்) கூற்றுக்களை வேறாக்குவதால் (Statement Separator) அல்ல கூற்றுக்களை முடிவடைக்கும் கூற்றாகும் (Statement Terminator). பஸ்கால் மொழி main பக்ஷன் நிரலின் இறுதியில் அல்லாமல் நிரலின் எந்தப் பகுதியிலும் இருக்கலாம். நிரல் main பகுதியில் இருந்தே செயற்பட ஆரம்பிக்கும். + +இதில் தமிழில் சேர்க்கப்பட்டுள்ள கடைசிவரி லினக்ஸ் இயங்குதளத்தில் சோதனைசெய்யலாம் விண்டோஸ் இயங்கு தளத்தின் டாஸ் (DOS) prompt தமிழையோ ஏனைய இந்திய மொழிகளையோ ஆதரிக்காது என்பதால் கடைசி வரியை விண்டோஸ் இயங்குதளத்தில் உள்ள நிரலாக்கர்கள் விட்டுவிடவும். லினக்ஸ் Termninal தமிழை ஆதரிக்கும் எனினும் அதுவும் திருப்பதி கரமானதல்ல என்பதையும் கவனிக்க. + +printf() ஆனது print funtion ஆகும். இந்த நிரலின் வெளிப்பாடு "This is a C program" என்பதைக் கணினித் திரையில் காட்டும். இதில் \n எனது புதிய வரியைச் சேர்ப்பதாகும் (new line feed). எனவே நிரலை இயக்கியவுடன் cursor அடுத்த வரியில் வந்து நிற்கும். + +} செயற்பாட்டின் முடிவு + +இப்போது நீங்கள் விண்டோஸ் அல்லது டோஸ் இயங்குதளத்தில் இருந்து ரேபோ சி கம்பைலரைப் பாவித்தால் F9 ஐப் பாவித்து நிரலை இயக்கலாம். லினக்ஸ் இயங்குதளங்களில் terminal இல் gcc -o desniation source.c என்றவுடன் கம்பைல் பண்ணும், இதைப் பின்னர் ./destination (உருவாக்கப்பட்ட Binary கோப்பு) என்றவாறு கொடுத்து terminal இல் இயக்கலாம். + +இந்த நிரலில் பெட்டி[stack] முறையில் சேமிக்கலாம். + +int top=-1; +int stack_arr[MAX]; +int main() +void push() +void pop() +void display() + + + + + + + + + + +நீலாவணன் + +நீலாவணன் (மே 31, 1931 - சனவரி 11, 1975) ஈழத்தின் கவிதை மரபில் முக்கியமான கவிஞர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். மஹாகவி, முருகையன் ஆகிய பிரபல ஈழத்து கவிஞர்களோடு சமகாலத்தில் எழுதிவந்தவர். நீலா-சின்னத்துரை, அம்மாச்சி ஆறுமுகம், கொழுவுதுறட்டி, வேதாந்தி, நீலவண்ணன், எழில்காந்தன், *இராமபாணம், சின்னான் கவிராயர் ஆகிய புனைபெயர்களிலும் எழுதினார். + +கவிஞர் நீலாவணன் அம்பாறை மாவட்டம் முன்னர் மட்டக்களப்பு மாவட்டம், பெரிய நீலாவணையில் பிறந்தார். சித்த வைத்தியர் கேசகப்பிள்ளை, தங்கம்மா ஆகியோரின் மூத்த புதல்வர். பயிற்றப்பட்ட தமிழ் ஆசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றிய இவர், தனது பிறந்த ஊர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே ‘நீலாவணன்’ என்னும் புனைபெயருடன் எழுதி வந்தார். + +இவர் 1948 இல் இருந்து எழுதத் தொடங்கினார். 1952 இல் இவரது பிராயச்சித்தம் என்ற சிறுகதை சுதந்திரனில் வெளியானது. கே. சி. நீலாவணன் எனும் புனைபெயரில் 1953 இல் சுதந்திரனில் வெளியான ‘ஓடி வருவதென்னேரமோ?’ எனும் கவிதை மூலம் கவிஞராக அறிமுகம் ஆனார். 1963 இல் எழுதிய ‘மழைக்கை’ கவிதை நாடகம் முதன் முதல் மேடை ஏறிய கவிதை நாடகமாகும். ‘மழைக்கை’ 1964 இல் வீரகேசரியிலும் வெளிவந்தது. + +மட்டக்களப்பில் வழங்கும் கிராமியச் சொற்களை நீலாவணன் தன் கவிதைகளில் நிறையக் கையாண்டுள்ளார். மட்டக்களப்பு மக்களின் வாழ்வுமுறை, சடங்குகள், பழக்கவழக்கங்களை நீலாவணன் தன் கவிதைகள் வாயிலாக பதிவு செய்து கொண்ட அளவுக்கு வேறு எந்தக் கவிஞரும் இதுவரை செய்யவில்லை. மட்டக்களப்பு வாழ்க்கை முறை, சடங்குகள், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய விழையும் சமூகவியலாளர்களுக்கு நீலாவணன் கவிதைகள் நிறையத் தகவல்களை வழங்கக் கூடியவை. இவரது இறுதிக் கவிதை ‘பொய்மை பொசுங்கிற்று’ என்பதாகும். + +1967 இல் கல்முனை தமிழ் இலக்கியக் கழகத்தை ஆரம்பித்து, ‘பாடும் மீன்’ என்னும் இலக்கிய இதழை நடத்தினார். இரண்டு இதழ்களே வெளி வந்தது. + +இவரது துணைவியார் அழகேஸ்வரி சின்னத்துரை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு எழில்வேந்தன், வினோதன் ஆகிய இரு புதல்வர்களும் எழிலரசி, ஊர்மிளா, கோசலா ஆகிய மூன்று புதல்விகளும் உள்ளனர். + + + + + + + +புனித டேவிட் கோட்டை + +புனித டேவிட் கோட்டை கடலூா் அருகிலுள்ள ஒரு பிரித்தானியக் கோட்டையாகும். இது இந்தியாவின் சோழ மண்டல கடற்கரையோரமாகச் சென்னையில் இருந்து நூறு மைல்கள் தொலைவில் கடலூர் அருகே உள்ளது. இது 1650 இல் மராட்டியரிடம் இருந்து பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியால் வாங்கப்பட்டது. 1756 இல் ராபர்ட் கிளைவ் புனித டேவிட் கோட்டையின் ஆளுனராகப் பதவி வகித்தார். + +கெடிலம் ஆற்றங்கரையில் அழிபாடுகளாக உள்ள புனித டேவிட் கோட்டை குறிப்பிடத்தக்க வரலாற்றை உடையது.செஞ்சி மன்னர்களால் கட்டப்பட்ட சிறிய கோட்டையாயிருந்த இது 1677 இல் செஞ்சிக் கோட்டையை சிவாஜி கைப்பற்றிய பின்னர் மராட்டியரின் கைக்கு வந்தது. மராத்தியர்களிடமிருந்து பிரித்தானியரால் 1690 ஆம் ஆண்டு இந்தக் கோட்டையும் மற்றும் சுற்றிலும் அவர்கள் கட்டுப்பாட்டிலிருந்த நகரங்கள் மற்றும் கிராமங்களும் மொத்தமாக வாங்கப்பட்டன. கோட்டை, மற்றுமுள்ள இடங்களின் எல்லைகளை வரையறை செய்வதற்காக விநோதமான வழிமுறை கையாளப்பட்டது. +புனித டேவிட் கோட்டை, கடலூர் போர்க்களம்- வரைபடம் (பிரஞ்சு),ஜூன் 13, 1783.]] + +கோட்டையில் இருந்து வானை நோக்கி ஒரு பீரங்கிக் குண்டு சுடப்பட்டு, அந்த பீரங்கிக் குண்டு விழுந்த இடம் வரை கோட்டைக்குச் சொந்தமான பகுதியாக கைக்கொள்ளப்பட்டது. இன்றும் அந்தக் கிராமங்கள் ‘பீரங்கிக்குண்டு கிராமங்கள்’ என்றே அழைக்கப்படுகின்றன. 1725ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தக் கோட்டை பெருமளவு வலுப்படுத்தப்பட்டது. + +கி.பி. 1746ஆம் ஆண்டில் இக்கோட்டை பிரித்தானியரின் தென்னிந்தியாவுக்கான தலைமையகமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே ஆண்டில் பிரெஞ்சு ஆளுனர் டூப்ளேயின் படையெடுப்பு முறியடிக்கப்பட்டது. 1756ஆம் ஆண்டு இராபர்ட் கிளைவ் பிரித்தானிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். பிரெஞ்சுக்காரா்கள் இதனை 1758ஆம் ஆண்டு கைப்பற்றினார். 1782ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்களால் மீண்டும் கைப்பற்றப்பட்ட இக்கோட்டை 1783ஆம் ஆண்டு பிரித்தானியர் தாக்குதலின்போது வெற்றிகரமாகப் பாதுகாக்கப்பட்டது. அதன் பின் 1785ஆம் ஆண்டு இறுதியாக பிரித்தானியரால் கைப்பற்றப்பட்டது. + + + + + +இசைச் சொற்பொழிவு + +"சங்கீத கதாப்பிரசங்கம்" என்ற வடமொழிச் சொற்றொடரால் பரவலாக அறியப்படும் இசைச் சொற்பொழிவு, பெரும்பாலும் இந்து சமயக் கதைகளையும் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவதற்கான ஒர் ஊடகமாகப் பயன்பட்டு வருகிறது. இது, சமயம் சார்ந்த புராணங்களையும், கருத்துக்களையும் இடையிடையே பாடப்படும் இசைப் பாடல்களின் துணையோடு மக்களுக்குச் சுவைபட எடுத்துக்கூறும் ஒரு கலையாகும். இவ் இசைச் சொற்பொழிவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழும் விரவி வரவேண்டும். இயல், இசையோடு ஏற்ற இறக்கம், உச்சரிப்புக்கள், தனியுரை, இசையிட்ட உரை, நாடகத்திற்கு புலப்படுவது போல் நல்ல முகபாவனைகள் கொண்டு முற்று முழுதாக இவ்வம்சங்களைக் கொண்டு அமைவதே இசை சொற்பொழிவாக அமைகிறது. இவ்வகைக் கலையில் இசைப் பக்கவாத்தியங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை சொற்பொழிவு தோன்றியது எனுபதற்கான ஆதாரங்கள் கிடையாது. + + + + + +ஒத்துழையாமை இயக்கம் + +ஒத்துழையாமை இயக்கம் ("Non-cooperation movement") என்பது பிரித்தானிய இந்தியாவில் காலனிய அரசுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும். இந்திய விடுதலை போராட்டத்தில் இது ஒரு முக்கிய கட்டமாகக் கருதப்படுகிறது. மகாத்மா காந்தியாலும் இந்திய தேசிய காங்கிரசாலும் முன்னெடுக்கப்பட்ட இவ்வியக்கம் செப்டம்பர் 1920 இல் தொடங்கி பெப்ரவரி 1922 வரை தொடர்ந்தது. + +ரவ்லட் சட்டம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் 1919 இந்திய அரசு சட்டத்தில் இந்தியருக்கு வழங்கப்பட்டிருந்த குறைவான அதிகாரங்களை ஏற்க மறுத்தலை வெளிக்காட்டவும் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் காலனிய அரசுடன் அனைத்து செயல்பாடுகளிலும் ஒத்துழைக்க மறுத்தனர். மாணவர்கள் கல்லூரிகளுக்கு செல்லாமல் இருப்பது, வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இருப்பது போன்ற செயல்கள் மூலம் அரசுக்கு ஓத்துழைப்பு தராமல் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரசுப் போக்குவரத்து, பிரி���்டனில் தயாரிக்கப்பட்ட துணி முதலான பொருட்கள் போன்றவையும் இந்திய தேசியவாதிகளால் புறக்கணிக்கப்பட்டன. இவ்வியக்கத்தைக் காங்கிரசின் பல மூத்த தலைவர்கள் ஆதரிக்கவில்லை. எனினும் இளைய தலைமுறை தேசியவாதிகளிடையே இது பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. ஒத்துழையாமையின் வெற்றியால் காந்தி இந்திய தேசிய காங்கிரசின் தனிப்பெரும் தலைவராக உருவெடுத்தார். + +ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த போதே காந்தியால் திடீரென்று திருப்பிப் பெறப்பெற்றது. பெப்ரவரி 5, 1922ல் உத்திரப் பிரதேசத்தில் சௌரி சௌரா என்ற இடத்தில் விடுதலை இயக்கத்தினருக்கும் காவல்துறையினருக்கும் மோதல்கள் ஏற்பட்டன. காவல் துறையினரின் செயல்பாட்டால் சில விடுதலை இயக்கத்தினர் மரணமடைந்தனர். இதனால் கோபம் கொண்ட மற்றவர்கள் காவல் நிலையத்தைத் தீயிட்டுக் கொளுத்தினர். இதில் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். வன்முறை இந்தியாவின் வேறு சில பகுதிகளுக்கும் பரவியது. அறவழியில் நடந்து வந்த இயக்கம் வன்முறைப் பாதையில் செல்வதைக் கண்ட காந்தி அதிர்ச்சியடைந்தார். ஒத்துழையாமை இயக்கம் வன்முறை இயக்கமாக மாறுவதைத் தடுக்க, அதனை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தார். வன்முறை ஓயும் வரை மூன்று வாரங்கள் உண்ணாநிலைப் போராட்டமொன்றை நடத்தினார். இதனால் ஒத்துழையாமை இயக்கம் வலுவிழந்து நின்று போனது. + +ஒத்துழையாமை இயக்கத்தை திரும்பப் பெற்றது காங்கிரசு உறுப்பினர்களிடையெ கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இச்செயல் பல தேசியவாத இளைஞர்களை ஆயுதப்புரட்சி இயக்கங்களில் சேரத்தூண்டியது. வன்முறையைத் தடுக்க காந்தி பாடுபட்டாலும் காலனிய அரசு அவர் மீது ஆட்சிவிரோத எழுத்துகளை வெளியிட்டார் என்று குற்றம் சாட்டி ஆறாண்டுகள் சிறையிலடைத்தது. + + + + +சைவ சமயம் + +சைவ சமயம், சிவநெறி என்றெல்லாம் அழைக்கப்படும் நெறி, சிவபெருமானை முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். இன்றைய இந்து சமயத்தின் கிளைநெறிகளில் ஒன்றாக அமைந்துவிளங்கும் சைவம், வைணவத்தைை பின்னால் தள்ளி இந்து மதத்தின் பெரும்பான்மையான பின்பற்றுநர்களைக் கொண்ட சமயமாகக் காணப்படுகின்றது. இன்றைய உலகில் சுமார் 452.2 மில்லியன் சைவர்கள் காணப்படுவதாக, மேற்கொள்ளப்பட்ட குடித்தொகை மதிப்பீடு ஒன்று சொல்கின்ற���ு. +திருக்கயிலையில் நந்தி தேவர் பணிவிடை செய்ய, பிள்ளையாரும் முருகனும் அருகிருக்க பார்வதி துணையிருக்க வீற்றிருக்கும் சிவபிரானே சைவர்களின் பரம்பொருளாக விளங்குகின்றார். பொ.பி 12ஆம் நூற்றாண்டில் தன் உச்சத்தை அடைந்திருந்த சைவநெறி, ஆப்கானிஸ்தான் முதல் கம்போடியா வரையான தெற்காசியா - தென்கிழக்காசியா +முழுவதற்குமான தனிப்பெரும் நெறியாக விளங்கியமைக்கான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, நேபாளம், காஷ்மீர், தமிழீழம், மலேசியா முதலான பகுதிகளின் முதன்மையான சமயமாக சைவமே திகழ்கின்றது. + +இமய மலைச் சாரலில் வாழ்ந்த மலைக்குடி வேடுவர்களின் நீத்தார் வழிபாடே சிவ வழிபாடாக வளர்ந்திருக்கின்றது என்று நம்பப்படுகின்றது. இமயம் காலத்தால் பிந்தியது என்பதால், தென்னகத்தே எழுந்த இன்னொரு மலைத்தெய்வ வழிபாடே சிவவழிபாடாக வளர்ந்து, மக்கள் குடிப்பெயர்ச்சியால் இமயம் வரை நகர்ந்திருக்கின்றது என்றும் சொல்லப்படுகின்றது. சிவனை உருவகிப்பதில் சாம்பல் பூசுதல், புலித்தோலாடை தரித்தல், மானையும் மழுவையும் கையில் வைத்திருத்தல், பன்றிக்கொம்பு, எலும்புகளை அணிதல் போன்ற பழங்குடி அம்சங்கள் முக்கிய பங்கு வகிப்பதால், பல இனக்குழுக்களின் கலப்பின் விளைவாகப் பிறந்த பெருந்தெய்வமே சிவன் எனலாம். நாகர் பழைமை வாய்ந்த தனி இனம் என்று வாதிடுவோர், சிவனின் ஆபரணங்களாக நாகங்கள் காணப்படுவதைக் கொண்டு, சிவன் நாகரின் தெய்வம் என்பர். சிவ இலிங்க வழிபாட்டுக்கு அடிப்படையாக நடுகல் வழிபாடே அமைந்திருக்கலாம் என்ற கருதுகோளும் உண்டு. இத்தகைய சான்றாவணங்களால், சிவ வழிபாடு மிகத்தொன்மையானது என்றும், மானுடர்களின் மிகப்பழைய தெய்வங்களில் ஒருவன் ஈசன் என்றும் அறியமுடிகின்றது. + +பொ.மு 2500 முதல் 2000 வரை நிலவியதாகக் கருதப்படும் சிந்துவெளி நாகரிகக் களவெளிகளில் கிடைத்த சில ஆதாரங்கள், அக்காலத்தே கூட, சிவ வழிபாடு நிலவியிருக்கக்கூடும் என்ற ஊகத்தை வலுப்படுத்துவனவாக இருக்கின்றன. மொகெஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் சிவலிங்கத்தை ஒத்த பல கற்கள் கிடைத்துள்ளன. இருகொம்புகளுடன் விலங்குகள் சூழ அமர்ந்திருக்கும் மனித உருவ முத்திரை, ஈசனின் "பசுபதித்" தோற்றத்தைக் குறிக்கின்றது என்றும் அதுவே மிகப்பழைய முந்து-சிவன் சிற்பம் என்றும் சிந்துவெ��ி ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்திருந்தனர். அதைக் கூர்ந்து ஆராய்ந்த பலர், அது சிவவடிவம் என உறுதியாகச் சொல்லமுடியாதென்றும், எனினும் அமர்ந்திருக்கும் நிலை, தெளிவற்றுத் தெரியும் மூன்று முகங்கள், பிறைநிலா எனக் கொள்ளக்கூடிய இரு கொம்புகள் என்பவற்றைக் கருத்தில் கொண்டு, இது சிவன் எனும் பெருந்தெய்வம் எழுவதற்கு முந்திய வடிவமாக இருக்கக்கூடும் என்றும் சொல்கின்றனர். + +பொ.மு 1500இற்கும் 500இற்கும் இடைப்பட்ட வேதகாலத்து நூல்களில் வருகின்ற உருத்திரன், இயமன் முதலான தெய்வங்களின் கலவையாகவே பின்னாளில் ஈசன் எழுந்தான் என்பர். இருக்கு வேதத்தில், எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல், மிகச்சில பாடல்களிலேயே போற்றப்படும் உருத்திரன், யசுர் வேதத்தின் திருவுருத்திரப் பகுதியில், இன்றைய சிவனாக வளர்ந்து நிற்பதைக் காணலாம். வேதங்களை அடுத்து உருவான உபநிடதங்களில் பல சிவ வழிபாட்டைப் போற்றுவதிலிருந்து, வேதகாலத்தின் பிற்பகுதியிலேயே சிவன் இன்றைய வழிபாட்டு முக்கியத்துவத்தை அடைந்துவிட்டதை அறியமுடியும். + +சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு பற்றிய குறிப்புகள் காணப்படும் போதும், அவை கிறிஸ்துவுக்குப் பிந்தியவை என்பது பொதுவான கருத்தாக காணப்படுகின்றது. எனினும் தமிழக மற்றும் இலங்கையில் பொறிக்கப்பட்ட கிறிஸ்துவுக்கு முந்திய பிராமிச் சாசனங்களிலும் நாணயங்களிலும் காணப்படும் "சிவ" என்ற பெயரும், நந்தி, திரிசூலம், பிறைநிலா முதலான சிவசின்னங்களும், தென்னகத்தில் பல்லாண்டுகளாகவே சைவம் நிலவிவந்ததற்குச் சான்று கூறும். + +தெளிவான அடையாளங்களுடன், சைவமானது முழுமையான ஒரு மதமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டது, பொ.மு 3 முதல் பொ.பி 2ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் என்று சொல்லப்படுகின்றது. பொ.மு 6 - 4 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே தொகுக்கப்பட்ட சுவேதாசுவதரமே மிகப்பழைமையான சைவ நூலாகக் கொள்ளப்ப்படுகின்றது. உலக இன்பங்களைத் துறந்து கடுநோன்புகள் புரிந்து தாந்திரீக நெறியில் ஈசனை வழிபடும் வழக்கம், கிறிஸ்து காலத்திலேயே ஆரம்பித்துவிட்டது. இவர்கள் "பாசுபதர்" என்று அறியப்பட்டனர். பாணினியின் அஷ்டாத்யயி எனும் சங்கத இலக்கண நூலுக்கு பதஞ்சலி முனிவர் எழுதிய மாபாடிய உரையில் (பொ.மு 2ஆம் நூற்றாண்டு) , பாசுபதர் பற்றிய குறிப்புகளைக் காணமுடிகின்றது. பாசுபதரில் தலைசிறந்தவரான இலகுலீசர் இக்காலத்திலேயே (பொ.மு 2 முதல் பொ.பி 2ஆம் நூற்றாண்டு) தோன்றி, பாசுபத நெறியை வளப்படுத்தியதாகத் தெரிகின்றது. + +இலகுலீசருக்குப் பின் அவர் ஏற்படுத்திய புரட்சி, பாசுபதத்திலிருந்து, காளாமுகம், காபாலிகம் எனும் இரு கிளைச்சைவங்களை அடுத்தடுத்து உருவாக்கியது. இவை மூன்றும் ஆதிமார்க்கம் என்றே அறியப்பட்டதுடன், துறவிகளுக்கு, குறிப்பாக அந்தணராகப் பிறந்து சைவ சன்னியாசிகளாக மாறியோரால் மாத்திரமே கடைப்பிடிக்கப்பட்டது. வைணவம், பௌத்தம், சமணம் முதலான நெறிகளுடன் இவைகொண்ட உரையாடல்கள், சைவத்தை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு இட்டுச்சென்றதுடன், பொ.பி 5ஆம் நூற்றாண்டுக்குப் பின் சைவம் மாபெரும் சமயமாக எழுச்சிபெறுவதற்கான உறுதியான கால்கோள்களாக விளங்கின. + +பொ.பி 600 முதல் 1200 வரையான காலம், சைவத்தின் பேரெழுச்சிக் காலமாக அறியப்படுகின்றது. ஆதிமார்க்கத்துக்குப் பின் உருவான சித்தாந்தமும், வாமம், தட்சிணம் முதலான புறச்சித்தாந்த நெறிகளும் மந்திரமார்க்கம் எனும் பிரிவை சைவத்தில் தோற்றுவித்தன. இவை துறவிகளுக்கு மாத்திரமன்றி, இல்லறத்தாருக்கும் உலகியல் இன்பங்களுக்கும் உரிய முன்னுரிமை கொடுத்ததால், தீவிரமாக மக்கள் மத்தியில் பரவலாயிற்று. சமணம், பௌத்தம் என்பவற்றுக்கு எதிராக, அப்பர், [சம்பந்தர்]] முதலான நாயன்மார், பக்தி இயக்கத்தை ஏற்படுத்தி, சமூக மறுமலர்ச்சிக்கு வழிவகுத்தனர். வடநாட்டில் இதேகாலத்தில் உருவான புராணங்கள் மக்கள் மத்தியில் சைவத்தை எடுத்துச்செல்லலாயின. + +இக்காலத்தில் சைவம், இந்திய உபகண்டத்தில் மாத்திரமன்றி, தென்கிழக்காசியா வரை கூட மிகச்சிறப்புடன் திகழ ஆரம்பித்தது. பாதாமி சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் (660 கி.பி), கீழைக்கங்கன் தேவேந்திரவர்மன் (682/683), காஞ்சியின் இரண்டாம் நரசிம்ம பல்லவன் (680 - 728) போன்றோர், சைவ ஆச்சாரியர்களிடம் மகுடாபிஷேகம் பெற்றே பட்டம்சூடிக்கொண்டதற்கான தரவுகள் கிடைத்துள்ளன. கம்போடியாவின் அங்கோர் வம்சத்து முதல் மன்னன் ஈசானவர்மனும் சைவத்துறவியிடமே இராஜ்யாபிஷேகம் பெற்றுக்கொண்டதும், சாவகத்து மயாபாகித்துப் பேரரசு மன்னன் விஜயன், சைவ மகுடாபிஷேகம் பெற்று நாட்டை ஆண்டதும், தென்கிழக்காசிய வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, துறவிகளின் மதமாக இருந்த சைவம், அரச ஆதரவைப் பெற ஆரம்பித்ததுடன், அதற்கு முன் அரச ஆதரவைப் பெற்றிருந்த சமணம், பௌத்தம் என்பவற்றைத் தன் தத்துவச்செழிப்பால் தோற்கடித்து தன்னை வலுப்படுத்திக்கொண்டது. +காஷ்மீரில் பல்கிப்பெருகிய சைவநெறி, தொடர்ச்சியான முகலாயப் படையெடுப்பால் தென்னகம் நாடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏற்கனவே சைவம் செழித்திருந்த தென்னகம், சைவத்தை மேலும் வரவேற்றதுடன், காஷ்மீரில் தோன்றி வளர்ந்துகொண்டிருந்த சித்தாந்த மந்திரமார்க்கத்தை மேலும் வலுப்படுத்தி, இந்திய மெய்யியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, சமஸ்கிருதம் அல்லாத வேற்றுமொழியொன்றில் - தமிழில் - சைவ மெய்யியலொன்றைத் தோற்றுவித்துச் சரித்திரம் படைத்தது. அதேகாலத்தில் பிராமண எதிர்ப்புடன் கன்னட தேசத்தில் தோன்றிய வீர சைவம் சாதிமத வேறுபாடின்றி, சகலரிடமும் சைவத்தைக் கொண்டு சேர்த்தது. இவ்வாறு, தமிழகம், காஷ்மீர், கன்னடம் ஆகிய மூன்று பகுதிகளும், சைவ சமயத்தின் தவிர்க்கமுடியாத - இன்றியமையாத பாகங்களாக மாறிப்போயின. + +ஊர்த்தசைவம், அனாதி சைவம், ஆதிசைவம், மகாசைவம், பேதசைவம், அபேத சைவம், அந்தரசைவம், குணசைவம், நிர்க்குணசைவம், அத்துவாசைவம், யோகசைவம், ஞானசைவம், அணுசைவம், கிரியாசைவம், நாலுபாதசைவம், சுத்தசைவம் என்று பதினாறு வகைப்பட்டதாய்ச் சிவனைப் பரதெய்வமாகக்கொண்டு வழிபடுஞ் சமயம், சைவம் ஆகும். +இவற்றின் தத்துவங்கள், கோட்பாடுகள் ஆகியவற்றில் சில வேறுபாடுகள் உள்ளனவாயினும் அவற்றின் அடிப்படைக் கொள்கைகளில் வேறுபாடு இல்லை. சைவ சித்தாந்தத்தை தத்துவமாகக் கொண்டு விளங்குவது சித்தாந்த சைவம், இந்தியாவில் மட்டுமன்றி நேபாளம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் பிறநாடுகளிலும் விளங்குகிறது. + +வாழ்ந்தே ஆகவேண்டிய தவிர்க்க முடியாத நியதிக்கு உட்பட்டிருக்கும் நமது வாழ்க்கை பதி (கடவுள்), பசு (உயிர்), பாசம் (பற்று) என்ற மூலங்கள் மூன்றின் சேர்க்கையால் ஆனது. இவற்றில் பதிக்குப் பாசத்தால் ஆவதொன்றுமில்லை. பாசத்துக்குப் பதியைத் தொழுது பயன் பெற்றுக் கொள்ளமுடியாது. மூன்றாவதாகிய பசுவே பதியின் இடையறாத உபகாரத்தால் தனது வினைப் பயனாகப் பிறந்து இறந்து பெறும் நீண்டகால அனுபவத்தில் பாசத்தடையில் (பற்றிலிருந்து) இருந்து நீங்கிப் பதியினைச் சார்ந்து விடுதலை பெறுவதற்கான நிலையில் உள்ளது. ���ந்த நிலையே ஞானம் எனப்படுகிறது. இந்த ஞானமே சைவ வழிபாட்டின் தனித்துவப் பண்பாகும். + +சைவ வழிபாட்டிற்கு ஆதார நூலாக விளங்கும் சிவாகமங்கள் இந்த ஞானம் பற்றிய விளக்கத்தை முதலில் வைத்தே கடவுள் வழிபாட்டு விதிமுறைகளைத் தெரிவிக்கின்றன. சைவ வழிபாட்டுத் தலமான ஆலயமும் ஞானி ஒருவரின் உடல் அமைப்பின் மாதிரியிலேயே உருவமைக்கப்படும். அங்கு நிகழும் கிரியைகள் யாவும் (விழுந்து கும்பிடுதல் முதல் பூசை செய்தல் வரை) இந்த ஞான விளக்கப் பின்னணியிலேயே அமையும். + +கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல் போன்றவற்றினை சைவம் பாவம் என்கிறது. இதனை செய்பவர்கள் நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர் என்கிறது. புண்ணியம், பதிபுண்ணியம் பசுபுண்ணியம் என இருவகைப்படும். பதி புண்ணியம் சிவபுண்ணியம் எனவும்படும். பசு புண்ணியம் உயிர்புண்ணியம் எனவும் படும். பதி புண்ணியம், சிவபெருமானை நோக்கிச் செய்யப்படும் நற்செயல்கள் ஆகும். சிவபெருமானைத் தவிர்த்து வேறு எவரையும் நோக்கிச் செய்யும் நற்செயல்கள் அனைத்தும் பசுபுண்ணியம் ஆகும். பதி புண்ணியங்கள் ஒருபோதும் அழிவில்லாமல் என்றும் நின்று முத்தியைக் கொடுக்கும். பசு புண்ணியங்களுக்கும் பயன் உண்டு; ஆனால், அப்பயன் அனுபவித்து முடிந்ததும் அழிந்துவிடும். பதி புண்ணியப்பயன் சிவபெருமானால் அனுபவிக்கப்படாததால், அழிவதில்லை. அதன் பயன், உயிர்களுக்கு நிலையான இன்பத்தைத் தருவதே ஆகும். + +இதன் பொருள் பசியோடு இருக்கும் ஒருவனுக்கு உணவு கொடுப்பது பசு புண்ணியம்; அவ்வுணவின் பயனாக, அவனுக்குள்ள பசி ஆறுகிறது. அவனுக்கு மீண்டும் பசி வரும்போது, முன்புண்ட உணவின் பயன் அனுபவிக்கப்பட்டுவிட்டதால், அவனுக்குச் செய்த பசு புண்ணியமும் அத்தோடு அழிந்துவிடுகிறது. + +சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாகும், மேலும் 1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றனவும் புண்ணியத்தில் சேர்க்கப்படுகின்றன. இவ்வாறு புண்ணியங்களை செய்தவர்கள் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர் என்று சைவர்கள் நம்புகிறார்கள். சைவ அடியாளர்கள் உடலில் திருநீறு அ��ிய வேண்டும். சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும்.திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும். தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும். + +சைவ உலகில் திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும், மாணிக்கவாசகரும் நால்வர் எனப்படுவர். இவர்களை சைவசமயக் குரவர்கள் என்றும் அழைப்பர். சந்தான குரவர் என்போர் இவரிலும் வேறுபட்ட, மெய்யியல் சான்றோர். வீர சைவருக்கு பசவர் முதலான சரணரும், காஷ்மீரிகளுக்கு அபிநவகுப்தர், வசுகுப்தர் முதலானோரும், சிரௌத்தருக்கு அப்பைய தீட்சிதர், ஸ்ரீகண்டர், அரதத்தர் ஆகியோரும், நாத சைவருக்கு கோரக்கர் முதலானோரும் முக்கியமான சைவப்பெரியோர். + +சைவ ஆகமங்கள் முக்கியமான சைவநூல்கள். வடநாட்டில் வழக்கிலுள்ள பைரவ தந்திரங்களும் இத்தகையன. தமிழ்ச் சைவருக்கு பன்னிரு திருறைகள், பதினான்கு சாத்திரங்கள் முக்கியமானவை. வீரசைவருக்கு வசன சாகித்தியம், நாத சைவருக்கு சித்த சித்தாந்த பத்ததி, சிரௌத்தருக்கு சுருதி சூக்தி மாலை என்று சைவ நூல்கள் அளவில. + + + + + + + +குறிஞ்சி + +குறிஞ்சி என்ற சொல் பல்வேறு இடங்களில் பின்வருமாறு பயன்படுகிறது. + + + + + +மணிலா + +மணிலா (en : Manila ) , பிலிப்பீன்சு நாட்டின் தலைநகரமும் , கியூசான் நகரத்திற்கு அடுத்தப்படியாக அந்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமும் ஆகும். இது பிலிப்பீன்சு தீவுக்கூட்டத்தின் மிகப்பெரிய தீவான லூசான் தீவில் அமைந்துள்ளது. மேலும் மணிலா அந்நாட்டின் தேசியத் தலைநகரப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள மெட்ரோ மணிலா ஒருங்கிணைந்த நகரப் பகுதியில் அங்கம் வகிக்கும் பதினாறு நகரங்களுள் ஒன்றாகும் . + +மணிலா நகரம், மணிலா வளைகுடாவிற்குக் கிழக்கே உள்ளது. நாட்டின் மிகப்பெரிய நகரமான கியூசான், மணிலா நகருக்கு வடகிழக்கே உள்ளது குறிப்பிடத்தக்கது. + +2010ஆம் ஆண்டில் நடைபெற்ற அந்நாட்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, மணிலா நகரில் 16,52,171 மக்கள் அதன் சிறிய 38.55 சதுர கி.மீ பரப்பளவில் வசிக்கின்றனர். எனவே, மணிலா உலகில் மக்களடர்த்தி மிகுந்த நகரங்களில் ஒன்றாகும். + +மணிலா நகரம் ஆறு சட்டமன்ற மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சட்டமன்ற மாவட்டங்கள், 16 நிர்வாக மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவை பின்வருமாறு: + +மணிலா நகரம், வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது. பூமத்திய ரேகைக்கு மிக அருகில் உள்ளதால் வெப்பமான சீதோசனநிலையே காணப்படுகிறது . ஈரப்பதமும் ஆண்டு முழுமைக்கும் உள்ளது. வெப்பநிலை பொதுவாக 20°C க்கு குறையாமலும் 40°Cக்கு மிகாமலும் உள்ளது. மேலும் வெப்பநிலை 45°C யைத் தாண்டவும் வாய்ப்புள்ளதாகக் கடந்தக் கால வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. +மழைப்பொழிவும் ஆண்டிற்கு சராசரியாக 104 நாட்கள் உள்ளது. அதிகபட்சமாக 190 நாட்கள் உள்ளது. + +மணிலா உலகின் மக்களடர்த்தி மிகுந்த பெருநகர்ப் பகுதிகளில் ஒன்றாகும். ஒரு சதுர கி.மீ பரப்பளவிற்கு ஏறத்தாழ 43,709 மக்கள் வசிக்கிறார்கள். மேலும் ஆறு மாவட்டங்களில், ஆறாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 68,266 பேர் வசிக்கிறார்கள். அடித்தபடியாக முதலாம் மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,936 பேரும், இரண்டாவது மாவட்டத்தில் ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 64,710 பேரும் உள்ளனர். கடைசியாக, ஐந்தாம் மாவட்டத்தில் மிகவும் குறைவாக ஒரு சதுர கி.மீ பரப்பளவில் 19,235 பேர் வசிக்கிறார்கள். உலக அளவில் மணிலாவிற்கு அடுத்தபடியாக இந்திய நாட்டிலுள்ள, மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரும், பிரித்தனியயிந்தியாவின் முன்னால் தலைநகருமான கல்கத்தா மாநகரம் ஒரு சதுர கி.மீக்கு 27,774 பேருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். + +பிலிப்பீன்சு நாட்டின் உள் நாட்டு மொழி பிலிப்பினோ என்பதாகும். ஆயினும் ஆங்கிலமே பெரும்பாலும் அலுவல், தொலைத்தொடர்புகளில் பயன்படுத்தப்படுகிறது. + +மணிலாவில் 16 நிர்வாக மாவட்டங்களை உள்ளது. அவை பருங்காய் எனப்படும் குறும்பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றிக்குப் பெயர் எதுவும் கிடையாது. நிர்வாக வசதிக்காக அவை எண்களால் குறிக்கப்படும் . +நிர்வாக மாவட்டங்களிலுள்ள பருங்காய்கள், அவற்றின் மக்கள் தொகை, பரப்பளவு ஆகியவை கீழே, + +பூசன்,தென்கொரியா +சாங்காய் , சீனம், +சி'அன் , சீனா . + + + + +மலையக இலக்கியம் + +இலங்கையின் மலையகப் பகுதியில் பெரும்பாலும் வசிக்கும் தமிழ் மக்களின் இலக்கிய ஆக்கங்கள் மலையக இலக்கிய��் எனப்படும். மலையகத் தமிழர் பெரும்பாலும் தேயிலை இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்வதற்காக இந்தியாவிலிருந்து குடியேற்றப்பட்டவர்களது சந்ததியினராவர். இந்தப் பின்னணி காரணமாக மலையக இலக்கியமானது மற்றைய நிலைப்பிரிவுகளிலிருந்து வெளிப்பட்ட இலக்கியத்திலிருந்து தெளிவான வேறுபாட்டைக் கொண்டுள்ளது. மலையக இலக்கியம் மலையக மக்களின் பொருளாதார, சமூக, கல்வி, அரசியல் பிரச்சினைகளை முன்வைத்து பெரும்பாலும் அமைகின்றது. சி. வி. வேலுப்பிள்ளை போன்றவர்கள் மலையக இலக்கியத்தில் குறிப்பிடத்தகவர்கள். + + + + + +ஈழத்து முஸ்லீம் இலக்கியம் + +இலங்கை முஸ்லீம்கள் என்று தனித்துவமாக அரசியல் ரீதியில் தம்மை அடையாளப்படுத்தி கொள்ளும் பெரும்பாலான இலங்கை முஸ்லீம்களின் தாய் மொழி தமிழ். அவர்களின் ஆக்கங்கள் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் எனலாம். முஸ்லீம் மரபுகளை அல்லது வடிவங்களை தமிழ் மொழியில் எடுத்தாளும் பொழுதோ முஸ்லீம்களுக்கு தனித்துவமான கருப்பொருள்களை மையமாக கொண்டு எழுதும்போதோ முஸ்லீம் எழுத்தாளர்களால் ஆக்கங்கள் படைக்கப்படும் பொழுது அவ்வாக்கங்கள் ஈழத்து முஸ்லீம் இலக்கியம் என்று குறிக்கப்படலாம். + + + + +ஈழப் போராட்ட இலக்கியம் + +இலங்கையில் தமிழர்களின் தன்னாட்சி உரிமை, மனித உரிமைகள் ஆகியவற்றை மையப்படுத்தி இடம்பெறும் ஈழப்போராட்டச் சூழலில் எழும் ஆக்கங்கள் ஈழப் போராட்ட இலக்கியம் எனலாம். உலகப்புகழ் பெற்ற எதிர்ப்பிலக்கியங்கள் வரிசையில் குறிப்பிடக்கூடியவை ஈழத்து எதிர்ப்பிலக்கியங்கள். மரணத்தில் வாழ்வோம் என்ற கவிதைத் தொகுப்பு அவ்வாறான எதிர்ப்பிலக்கியங்களை தொகுத்து ஈழத்தில் உருவாகிய முதல் நூலாகக் குறிப்பிடப்படக்கூடியது. + + + + + +சிந்தியல் வெண்பா + +சிந்தியல் வெண்பா என்பது தமிழ்ப் பா வகைகளுள் ஒன்றான வெண்பா வகைகளுள் ஒன்று. இது மூன்று அடிகளை மட்டுமே கொண்டிருக்கும். இவற்றில் முதல் இரண்டு அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்திருக்கும். இவ்வாறு நான்கு சீர்களைக் கொண்டுள்ள அடிகள் அளவடிகள் என அழைக்கப்படுகின்றன. சிந்தியல் வெண்பாவின் மூன்றாவது அடி, சிந்தடி என அ���க்கப்படும், மூன்று சீர்களைக் கொண்ட அடியாக இருக்கும். + +சிந்தியல் வெண்பாக்களில் இரண்டு வகைகள் உண்டு. அவை, + + +என்பனவாம். + + + + +அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை) + +அடி என்பது செய்யுள் உறுப்புகள் ஆறனுள் ஒன்று; செய்யுள் உறுப்புகளின் வரிசையில் ஐந்தாவதாக வைத்து எண்ணப்பெறுவது. ‘எழுத்து அசை சீர் பந்தம், அடி தொடை’ என்று அமிதசாகரரால் வைப்பு முறை சொல்லப்படுகின்றது. தமிழ்ப் பாக்களின் இலக்கணத்தைக் கூறும் யாப்பியல் நூல்கள், பாக்களின் உறுப்புக்களாக, எழுத்து, அசை, சீர், அடி என்பவற்றைக் குறிப்பிடுகின்றன. எழுத்துக்கள் சேர்ந்து அசையும், அசைகள் சேர்ந்து சீரும், சீர்கள் சேர்ந்து அடியும் உருவாகின்றன. +மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார். +என்னும் நூற்பா, ‘அடி’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது. + +சீர்களின் தொடர் இயக்கத்தால் உண்டாகும் ஒலி ஒழுக்கை அல்லது ஒலிநடையைத் (Rhythm) தளை என்றால், சீர்கள் தொடர்ந்து இயங்கும் வடிவியக்கம் (concatenated on chain movement) அடி என்று சொல்லலாம் எனவும் அடிக்கு விளக்கம் தருகின்றனர். சுருக்கமாகச் ‘சீர்கள் தம்முள் தொடர்ந்து இயங்கும் செய்யுளியக்க அலகு அடி’ என்று சொல்லி வைக்கலாம். + +என்பது குறள் வெண்பா. இது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி, + +என்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு. + +சான்று: + +இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவத�� குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர். + +மேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு. + +இவ்வகையில் ‘சீரடி’ குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும். + +மேலேயுள்ள பாடலிலே ஒவ்வொரு வரியும் ஒரு அடியாகும். முதல் அடியானது 1. "பாலும்", 2. "தெளிதேனும்", 3. "பாகும்", 4. "பருப்புமிவை" என நான்கு பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் "சீர்" என அழைக்கப்படுகின்றது. இப்பாடலிலே முதல் மூன்று அடிகள் ஒவ்வொன்றும் நான்கு சீர்களைக் கொண்டு அமைந்துள்ளன. நான்காவது அடி மூன்று சீர்களால் அமைந்துள்ளது. + +பொதுவாக பாடல்களின் அடிகளில் இரண்டு சீர்கள் முதல் பதினாறு சீர்கள் வரை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறு வெவ்வேறு எண்ணிக்கையான சீர்களைக் கொண்டு அமைந்த அடிகள் வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன. செய்யுள் அல்லது பாக்கள் யாவும் அடிகளைக் கொண்டு விளங்குபவையே. பாடலைச் சொல்லும் போது வரிகள் அல்லது சொற்கள் என்று கூறாமல், அடிகள், சீர்கள் என்றே விளிக்க வேண்டும். பொதுவாக பாவினங்களில் அடிகள் ஐந்து வகைப்படும்: + + + + + + + +பஞ்சமர் இலக்கியம் + +ஈழத்து தாழ்த்தப்பட்ட மக்களின் ஆக்கங்கள், அவர்களின் பிரச்சினைகளை கருப்பொருளாக அல்லது முன்னிறுத்தும் ஆக்கங்கள் ஆகியவை ஈழத்து பஞ்சமர் இலக்கியம் எனலாம். சாதி, ஆதிக்க, சமய, அரசியல், சமூக கட்டமைப்புக்களின் தாக்கங்கள், அக்கட்டமைப்புக்களில் இருந்து மீட்சி, அக்கட்டமைப்புகளை உடைப்பது அல்லது மாற்றியமைப்பது தொடர்பான சிந்தனைகளைத் தாழ்த்தப்பட்ட இலக்கியம் பிரதானமாக மையப்படுத்துகின்றது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியல், உலகமயமாக்கப்பட்ட இன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதர மேன்படுத்தல், மாற்று சமூக கட்டமைப்பு வடிவங்கள், சமத்துவம் என்று தாழ்த்தப்பட்ட இலக்கியக் கருப்பொருள்கள் மேலும் விரியும். ஈழத்து சூழலில் அதனை மையப்படுத்து எழும் தாழ்த்தப்பட்ட இலக்கியங்கள் பிற தாழ்த்தப்பட்ட இலக்கியங்களில் இருந்து மாறுபட்டு நிற்கும். + + + + + + +ஈழத்து சமய இலக்கியம் + +ஈழத்து தமிழ் இலக்கியத்தின் சமயம் சார் வெளிப்படுத்தல்கள் கருத்துரைகள் ஈழத்து சமய இலக்கியம் எனலாம். ஈழத்து சமய இலக்கியத்தில் சைவம், கிறீஸ்தவம், இஸ்லாம் ஆகிய சமயங்களின் படைப்புக்கள் முக்கிய கூறுகளாக அமைகின்றன. + +தக்கிணகைலாசபுராணம், திருக்கரசைப்புராணம், கதிரை மலைப்பள்ளு, வியாக்கிரபாதபுராணம், கண்ணகி வழக்குரை போன்ற நூல்கள் ஆரம்பகாலச் சமய நூல்களாகும். ஐரோப்பியரின் வருகையைத் தொடர்ந்து கிறித்தவ சமய நூல்கள் எழுதப்படலாயின. ஞானப்பள்ளு, அர்ச்யாகப்பர் அம்மானை, ஞானானந்தபுராணம், திருச்செல்வர் காவியம், சந்தியோகுமையூர் அம்மானை, திருச்செல்வர் அம்மானை, மருதப்பக்குறவஞ்சி போன்றவை ஆரம்பகால கத்தோலிக்க இலக்கியங்களாகும். + + + + +ஈழத்து சித்தர் இலக்கியம் + +ஈழத்து சித்தர் இலக்கியம் எனப்படுவது ஈழத்துச் சித்தர்களால் ஆக்கப்பட்ட ஆக்கங்கள், அவர்களை சார்ந்த அல்லது அவர்களை மையப்படுத்திய ஆக்கங்கள எனலாம். ஈழத்து சித்தர்களில் சிவ யோகர் சுவாமிகள், குடைச்சித்தர் ஆகியவர்கள் குறிப்பிடத்தகவர்கள். யோகர் சுவாமிகளின் "நற்சிந்தனைகள்" ஈழத்து சித்தர் இலக்கியத்தின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. + + + + + +நூலகத் திட்டம் + +நூலகம் திட்டம் என்பது ஈழத்து தமிழ் நூல்களையும் எழுத்தாவணங்களையும் மின்வடிவில் இணையத்தில் பேணி வைப்பதற்கான இலாப நோக்கற்ற ஒரு தன்னார்வக் கூட்டுழைப்பாகும். + + +இத்திட்டத்தின் செயற்பாடுகள் திறந்த நிலையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. திட்டத்தின் அங்கத்துவர்கள் யாவரும் மடலாடற் குழு ஒன்றில் இணைந்துள்ளனர். முக்கிய முடிவெடுப்புக்கள், விவாதங்கள் அக்குழுவிலே நிகழ்த்தப்படுகின்றன. பொறுப்புக்கள் ஆர்வத்துக்கு ஏற்பவே பகிர்ந்தளிக்கபட்டுள்ளன. இணையப் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு வழங்கி தொடர்பான கட்டுப்பாடுகள் வலைத்தள நிர்வாகி��ாக பொறுப்பேற்றுக்கொண்ட சில உறுப்பினர்களிடமே உள்ளன. + +ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களில் கிடைத்தற்கரியனவற்றுக்கும் குறிப்பிடத் தக்கனவற்றுக்கும் முன்னுரிமை அளித்தே மின்னூலாக்குவதற்கான புத்தகங்கள் தெரிவு செய்யப்படுகின்றன. ஆயினும் இத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்ய விரும்புவோர் தாம் விரும்பும் எந்த நூலையும் மின்னூலாக்கலாம். நூல் ஈழத்து எழுத்தாளரால் எழுதப்பட்டதாக இருக்கவேண்டும் என்பதே முக்கியமானது. மேலும் சமகால எழுத்தாளர்களின் நூல்களை வெளியிடுவதற்கு குறித்த நூலாசிரியரின் அனுமதி பெறப்பட வேண்டும். + +இத்திட்டம் ஈழத்து நூல்களை இலவசமாக இணையத்தில் வழங்குவதால் பதிப்புரிமை தொடர்பான சிக்கல்கள் எழ வாய்ப்புகள் உண்டு என கருதப்படுகிறது. இதனை எதிர்கொள்ளுமுகமாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. + + +இந்த நூலகம் ஆரம்பத்தில் "ஈழநூல்" என்பதாகத் தான் இருந்தது. மதுரைத் திட்டத்தால் கவரப்பட்டு ஈழத்து நூல்களுக்கான தனியான செயற்றிட்டம் தேவை என்ற எண்ணத்துடன் ஈழநூல் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதலாவது ஈழநூலாக "திருக்கோணமலையின் வரலாறு" 28. சூலை 2004 இல் சூரியன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டது. 2004 டிசம்பரில் noolaham.org என்ற பெயர் பதிவுசெய்யப்பட்டது + +2005 தையில் நூலகம் திட்டம் தி. கோபிநாத், மு. மயூரன் ஆகியோரால் வலையேற்றப்பட்டது. 2005 நடுப்பகுதியில் வழங்கி செயலிழந்தமையால் தற்காலிகமாக திட்டம் இடைநிறுத்தப்பட்டது. 2006 தைப்பொங்கலன்று நூலகம் திட்டம் நூறு மின்னூல்களுடன் இணையத்திற் பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது. + + + + + + +இறைமறுப்பு + +இறைமறுப்பு அல்லது நாத்திகம் ("Atheism") என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை. சமய நம்பிக்கை போன்றே இந்த கொள்கையும் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. எனினும் சமயம் போன்று கட்டமைப்பு, சடங்குகள், புனித நூல்கள் என்று எதுவும் இறைமறுப்புக்கு இல்லை. + +தமிழ்ச் சூழலில் இறைமறுப்பு தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. பண்டைக்காலத்தில் உலகாயுதர் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். அண்மைக்காலத்தில் ஈ. வெ. ராமசாமி தோற்றுவித்து தமிழர் ��த்தியில் செல்வாக்குப் பெற்ற சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் ஆகியவை இறைமறுப்பு கொள்கை உடையன. மார்க்சிய அல்லது இடதுசாரி நிலைப்பாடுகள் உடைய பலரும் இறைமறுப்பு கொள்கை உடையவர்கள். + +இறைமறுப்பு என்றால் என்ன என்பதை வரையறை செய்வது தொடர்பாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இறைமறுப்பு என்றால் மீவியற்கை கூறுகளை கேள்விக்குட்படுத்தலைக் குறிக்குமா? அல்லது இல்லாத ஒன்றைப் பற்றி நிலைப்பாடு எடுக்கமுடியாது என்பதைப் பற்றிய நிலைப்பாடா, அல்லது தெளிவாக இறை என்பதை நேரடியாக மறுக்கும் கொள்கையா என்று வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. + +இறை என்றால் என்ன என்பதை வரையறை செய்வதில் குழப்பம் இருப்பதால், இறைமறுப்பு என்பதை வரையறை செய்வதிலும் குழப்பம் வருகிறது. இறை என்றால் தொன்மங்கங்களில் வரும் கடவுள்களா, அல்லது மெய்யியலில் வரையறை செய்யப்படும் கருத்துருவா, அல்லது இயற்கைச் சுட்டும் வேறுபெயரா என்ற பல விதமான கருத்துருக்கள் உள்ளன. இதில் இறைமறுப்பு என்பது தொன்ம, மெய்யியல், மீவியற்கை என எல்லா கடவுள் நிலைப்பாடுகளை மறுதலிக்கக்கூடியது. + +இறை நம்பிக்கைகள் தோன்றிய காலம் தொட்டே, அத்தகைய நம்பிக்கைகளை கேள்விக்குட்படுத்திய, ஐயப்பட்ட, மறுத்த நிலைப்பாடுகளும் இருந்து வந்திருக்கின்றன. இந்திய மெய்யியலில் பொருளியவாத, இறைமறுப்புக் கொள்கையை உலகாயதம் முன்னிறுத்தியது. பெளத்தம், சமணம் ஆகியவையும் உலகை படைக்கும், பாதுகாக்கும், அழிக்கும் பண்புகளைக் கொண்ட கடவுளை அல்லது கடவுள்களை நிராகரித்தன. மேற்குலக, கிரேக்க மெய்யியலில் Epicureanism, Sophism போன்று மெய்யியல்கள் இறைமறுப்பு கொள்கைகளைக் கொண்டிருந்தன. அறிவொளிக் காலத்தைத் தொடந்த அறிவியலின் வளர்ச்சி பல்வேறு வகைகளில் பொருளியவாத, இறைமறுப்புக் கோட்படுகளுக்கு கூடிய ஆதாரங்களையும் வாதங்களையும் வழங்கி உள்ளது. 2000 களில் ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் அப்போது விரிபு பெற்று வந்த சமய தீவரவாதத்தை எதிர்த்து புதிய இறைமறுப்பு எழுந்தது. + +உலகில் எத்தனை பேர் இறைமறுப்பாளர் என்று துல்லியமாக கணிப்பது கடினமாகும். தொடர்புள்ள இறைமறுப்பு, அறியாமைக் கொள்கை, மனிதநேயம், உலகாயதம், ஐயுறவுக்கொள்கை கொள்கைகள் உடையோர் எல்லோரும் இறைமறுப்பாளர் என்ற வகைக்குள் வரார். இறைமறுப்பு பல நாடுகளில் சட்டத்துக்கு புறம��பானது, மரணதண்டனைக்கும் உரியது. எனவே வெளிப்படையாக இறைமறுப்பாளர் என்று ஒத்துக்கொள்வது சிக்கலாக இருக்கும். உலகில் 12-15 % மக்கள் இறைமறுப்பாளர்கள் எனப்படுகிறது. எனினும் இந்த எண்ணிக்கை இதவிடக் கூடுதலாக இருக்கும். ஐக்கிய அமெரிக்க அறிவியாளர்களில் பெரும்பான்யானோர் (93%) சமய நம்பிக்கை அற்றோர் என்பதும் குறிப்பிடத்தக்கது. + +சில குறிப்பிட்ட இறைமறுப்பாளர்கள் சமூகம் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள். தற்காலத்தில் மேற்குலகில் சாம் ஃகாரிசு, டானியல் டெனற், ரிச்சார்ட் டாக்கின்ஸ், கிறித்தபர் ஃகிச்சின்சு, நோம் சோம்சுக்கி போன்றோர் இறைமறுப்பு பற்றி விரிவாக எழுதியும் பேசியும் வருகிறார்கள். தமிழ்ச் சூழலில் குருவிக்கரம்பை வேலு, கமலகாசன், சத்யராசு, சி. கா. செந்திவேல், சுப. வீரபாண்டியன், சு. அறிவுக்கரசு, வே. ஆனைமுத்து, பழ. நெடுமாறன், செய்யாறு சூ. அருண்குமார் போன்றோர் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுத்து வருகிறார்கள். + +இறை உள்ளது என்பதற்கோ அல்லது ஆத்மா, மறுபிறவி, சொர்க்கம், நரகம் போன்றவற்றுக்கோ எந்தவித அனுபவ, பொருள்முறை அல்லது அறிவியல் ஆதாரமும் இல்லை. இறையை எல்லோரும் வழிபட வேண்டும் என்று கட்டளை இடும் இறை தன்னை ஏன் இலகுவாக வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. இறை பண்டைய மனிதர்களோடு பேசியதாக, அவர்களுக்கு வெளிப்படுத்தல்கள் செய்தாக கூறப்படுகிறது. ஆனால் அந்தப் "புனித நூல்களில்" ஏராளமான பிழைகள் உள்ளன. எ.கா ரனாக், விவிலியம், போன்ற புனித நூல்கள் மனித அடிமைத்தனத்தைக் கண்டிக்கவில்லை. + +தன்விருப்பு வாதங்கள் என்பன எல்லாமறிந்த, எல்லாம் வல்ல இறை என்பது மனிதரின் தன்விருப்போடு அல்லது விடுதலை பெற்ற மனிதர் என்ற நிலைப்பாட்டோடு ஓவ்வாதது என்பதை வலியுறுத்தும் வாதங்கள் ஆகும். இறை எல்லாம் அறிந்தது, எல்லாம் வல்லது என்றால் அது அனைத்தையும் கட்டுப்படுத்தவும், முன் தீர்மானிக்கவும் வல்லது. அப்படியானால் மனிதரின் சுதந்திரம், தன்விருப்பு என்பது சாத்தியம் அற்றது என்பது இந்த வாதத்தின் நிலைப்பாடு ஆகும். இறையை வழிபடுவது இத்தகைய ஓர் அடிமை ஆண்டை உறவின் வெளிப்பாடக தோன்றுகிறது. இத்தகைய இறை இருந்தாலும் வெறுக்கப்படத்தக்கதே ஆகியவை இந்த வாதத்தின் நீட்சியாகும். + +கருணை கொண்ட, எல்லாம் வல்ல, எங்கும் உள்ள இறை உள்ளது என்றால் உலகில் தீவினை, கொடுமை, துன்பம் ஏன் இருக்கிறது என்பதை எப்படி விளக்குவது. பல மெய்யியலாளர்கள் தீவினை இருப்பதும், இறைவன் இருப்பதும் ஏரணத்திபடி சாத்தியம் இல்லை என்று வாதிடுகிறார்கள். பச்சிளம் குழந்தை உணவு இல்லாமல் பட்டினி கிடந்து சாகிறது. இதை கருணை உள்ளம் கொண்டவராகக் கருதப்படும் இறை எப்படி அனுமதிக்கலாம்? கடவுள் அன்புள்ளது, பலம் பொருந்தியது, எல்லாவற்றையும் படைத்தது என்றால் பல்வேறு குறைகள் கொண்ட உலகை அது ஏன் படைத்தது? குறைகள் இருக்கிறது, தீர்க்க முடியவில்லையா? அல்லது தீர்க்க விரும்பவில்லையா? இப்படியானால் இறை, உண்மையில் கருணை உள்ளம் உடையதா? எல்லா வல்லமையும் பொருந்தியதா? போன்ற கேள்விகள் இந்த தீவினைச் சிக்கலின் தொடர் கேள்விகளாக அமைகின்றன. + +சமயங்கள் தமது உட்பிரிவுகளுக்கு இடையேயும், பிற சமயங்களோடும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சமயங்கள் தமது சமயம் மட்டுமே உண்மையானது என்று கோருவதால், அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது என்பதில் இருந்து, அன்றாட வாழ்வியல் பரிந்துரைகள், இறையியல், புனித நூல்கள், வெளிப்படுத்தல்கள், சடங்குகள் என பல வழிகளில் சமயங்கள் முரண்படுகின்றன. + +சமய முரண்பாட்டிற்கு ஒர் எடுத்துக்காட்டு: எந்த உணவு ஏற்படுடையது என்பது பற்றியதாகும். சமணம் வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. இந்து மதம் சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மாட்டை உண்ண வேண்டாம் என்கிறது. இசுலாம் மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் பன்றி உண்பதைத் தவிர் என்கிறது.காட்டுவாசிகள் சிலர் மனிதனையும் உண்கிறார்கள். இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன. + +சமயத்துக்கும் அறிவியலுக்கும் பல முனைகளில் முரண்பாடுகள் உள்ளன. பல சமய புனித நூல்களில் கூறப்படும், இறைவாக்காக் கருதப்படும் பல கூற்றுக்கள் தற்போதைய அறிவியலின் படி பிழையாக நிரூபிக்கப்பட்டுள்ளன. அறிவியலின் வளர்ச்சிக்கும், அதன் வழிமுறைகளுக்கும் சமயம் தடையாக இருந்து வந்துள்ளது. அறிவியலில் தங்கி உள்ள தற்கால உலகில், அந்த அறிவியல் கோட்பாடுகள் எவற்றிலும் இறை என்ற கருதுகோள் தேவையற்றதாக இருக்கிறது. + +எடுத்துக்காட்டுக்கு கிறித்தவ புனித நூலான பைபிள் உலகம் அல்லது அண்டம் தோற்றம் பெற்று 5,700-10,000 ஆண்ட��கள் மட்டுமே ஆகின்றன என்றும், மனிதரை இறை படைத்தது என்றும் கூறுகிறது. அறிவியல் அண்டம் 13.8 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலானா கால வரலாற்றை உடையது என்றும், மனிதர் நுண்ணியிர்களில் இருந்து பல மில்லியன் ஆண்டுகளாக படிவளர்ச்சி ஊடாக கூர்ப்புப் பெற்று தோன்றினர் என்றும் கூறுகிறது. + +பல்வேறு சமய தொன்மங்கள், நம்பிக்கைகள், கோட்பாடுகள், நடைமுறைகள் பெண்களின் ஒடுக்குமுறைக்கு காரணமாகி உள்ளன. பெண்களை தீய சக்திகளாக கட்டமைப்பது, அவர்களை கட்டுப்படுத்தும் அடக்கும் சட்டங்களை இயற்றுவது, சம உரிமைகளை வழங்காதது என பல வழிகளில் சமயங்களால் பெண்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டார்கள். பெரும்பான்மைச் சமயங்கள் ஆண் ஆதிக்க மரபைக் கொண்டவை. பெண் ஆணுக்கு கட்டுப்பட்டவள் என்ற கொள்கை உடையவை. + +கிறித்தவ தொன்மவியலில் ஆண் இறையின் உருவாகவும், பெண் ஆணின் உருவாகவும் படைக்கப்படுகிறார்கள். பெண் இறையை மீறி ஆசைப்பட்டு அப்பிள் உண்டதால்தான் மனித இனமே பாவப்பட்டு இறப்பு, நோய், துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளவேண்டி வந்தது. பெண்ணை தீய நிகழ்வுக்கு இட்டு சென்றவளாக இந்த தொன்மம் சித்தரிக்கின்றது. பெண்கள் சமய குருமார்களாக வருவதை பெரும்பான்மை கிறித்தவம் இன்னும் தீர்க்கமாக எதிர்க்கிறது. + +பல இசுலாமிய நாடுகளில் பெண்கள் ஆண்களுக்கு நிகரான உரிமைகளை சட்ட நோக்கிலோ நடைமுறை நோக்கிலோ இன்றுவரைப் பெறவில்லை. எடுத்துக்காட்டாக புனித இசுலாமிய நாடாக கருதப்படும் சவூதி அரேபியாவில் பெண்கள் தேர்தலில் ஓட்டுப் போட முடியாது. + +இந்து சமய மரபுகள் பெண்களை பல கொடுமைகளுக்கு உட்படுத்தின. உடன்கட்டை ஏறல் முற்காலத்தில் வற்புறுத்தப்பட்டது. பெண் குழந்தை வெறுக்கப்பட்டது. குழந்தைத் திருமணம் பரிந்துரைக்கப்பட்டது. பெண்ணை வன்முறைக்கு உட்படுத்த அனுமதித்தது. பெண்களுக்கு சுதந்திரம் இல்லை என்று ஆணித்தரமாய் இந்து புனித நூல் மனு பின்வருமாறு கூறுகின்றது. "In childhood a female must be subject to her father, in youth to her husband, when her lord is dead to her sons; a women must never be independent". தமிழில், "ஒரு பெண் குழந்தையாய் இருக்கும் பொழுது அவளது தந்தைக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். இளம் வயதில் அவளது கணவனுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். அவளது கணவன் இறந்த பின்பு அவளது மகன்களுக்கு கட்டுப்பட்டு இருக்க வேண்டும். ஒரு பெண் என்றும் சுந்ததிரமக இருக்கக் ���ூடாது." + +சமயம் அல்லது சமயத் தீவரவாதம் பிற சமயத்தாருக்கு எதிராகவும், சமயம் சாராதோருக்கும் எதிராகவும் வன்முறையையும் போரையும் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது. சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், புனித நூல்கள், சடங்குகள் ஆகியவை இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பலியிடுதல், அடக்குமுறை, தீவரவாதம், போர் என பல வழிகளில் சமய வன்முறை வெளிப்படுகிறது. இசுலாமியப் படையெடுப்புகள், +சிலுவைப் போர்கள், , சூனியக்காரிகள் வேட்டை, முப்பதாண்டுப் போர், தைப்பிங் கிளர்ச்சி, அயோத்தி வன்முறை, 911 தாக்குதல்கள் ஆகியவை உலக வரலாற்றில் இடம்பெற்ற சமய வன்முறைக்கு சில எடுத்துக்காட்டுக்கள். + +சமயம் ஏற்படுத்திக் கொடுக்கும் கேள்வியற்ற நம்பிக்கை சட்டகத்தாலும் (dogma, faith), பல சமயக் கொள்கைகளாலும், அதன் பலம் மிக்க நிறுவனங்களாலும் பல்வேறு சமூகக் கேடுகள் நிகழ்கின்றன. எடுத்துக்காட்டுக்கு ஆபிரிக்காவில் எயிட்சு நோய் படு கொடுமைப்படுத்துகிறது. ஆனால் அங்கே காப்புறை பயன்படுத்தி பாலியல் தற்காப்பு செய்வதை கத்தோலிக்க மத சபை எதிர்க்கிறது. பெருந்தொகை கத்தோலிக்கரை கொண்ட ஆப்பிரிக்காவில் இது எயிட்சை தடுக்க ஒரு சிறந்த வழியை இல்லாமல் செய்கிறது. நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கத்தோலிக்க சமய குருமார்களால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர் காவல் துறை அதைப் பற்றி விசாரிக்க முயன்ற போது, கத்தோலிக்க சமய நிறுவனம் அதை மூடி மறைக்க முயன்று உள்ளது. + +பிறப்பால் மனிதரின் தொழிலையும் மதிப்பையும் சமூக செல்வாக்கையும் நிர்மானுக்குமாறு சாதிக் கட்டமைப்பை இந்து சமயம் தோற்றுவித்து, இறுக்கமாக அமுல்படுத்தி பெரும்பான்மை மக்களைக் கொடுமைக்கு உள்ளாக்கியது. + +பல்வேறு நாடுகளில் தற்பால் சேர்க்கையை, தற்பால் திருமணத்தை பல்வேறு சமயங்களைச் சார்ந்தோர் எதிர்க்கின்றனர். தற்பால் சேர்க்கையாளர்கள் வன்முறைக்கு உட்படுத்தப்படுகிறார்கள், சிறை வைக்கப்படுகிறார்கள், மரண தண்டைனைக்கும் உட்படுத்தப்படுகிறார்கள். இது சமய கொள்கைகளினால் சமூகத்துக்கும் விளையும் கேடு ஆகும். + +மக்களின் தேவைகளை, உணர்வுகளைப் பயன்படுத்தி பலர் பணம் சம்பாதிப்பதையும் அல்லது சமயத்துக்கு மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்டு பல ஏமாத்தல்களில் ஈடுபடுகிறார்கள். கடவ��ள் பல தரப்பட்ட நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று பொய்ப் பரப்புரை செய்கிறார்கள். சாதகம், சோதிடம் முதற்கொண்டு பல்வேறு மூடநம்பிக்கைகளை சமயங்கள் பரப்புகின்றன. அறிவியலுக்கு ஏற்புடையாத உயிரியல், வானியல் மற்றும் பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து மாணவர்களின் கல்வியைச் சிதைக்கிறது. + +திருவிழாக்களில், கோயில்கள், சமய குருமார்களுக்கு என சமூக வளங்கள் வீணடிக்கப்பட்டு முக்கிய கல்வி, மருத்துவம் போன்ற முக்கிய தேவைகளுக்கு அவை பயன்படாமல் போகின்றன. + +பாசுகலின் பந்தயம் () என்ற இறை ஏற்பு வாதம் பின்வருமாறு. இறைவன் இருக்கென்று நிறுவ முடியாவிட்டாலும், இறைவன் இருக்கென்று கருதி செயற்படுவதால் மனிதன் இழப்பது ஏதும் இல்லை, ஆனால் அது உண்மையானல் அவன் எல்லாவற்றையும் பெறுவான் என்கிறது. இதற்கு பல்வேறு விவாதங்கள் உண்டு. எந்த இறைவனை வழிபடுவது? இறைவன் நம்பிக்கையானவரை மட்டும் ஏன் காப்பாற்றுவான் என்று எதிர்பாக்க வேண்டும்? இறைவனை நம்பி சமயத்தில் ஈடுபடுவதால் வன்முறை உருவாறதே. வளங்கள் வீணடிக்கப்படுகின்றனவே. எனவே அவை இழப்பல்லவா. இந்த வாதம் இறைவனை நம்புவது ஏன் நல்லது என்று சுட்ட முயல்கிறதே தவிர, இறை உள்ளது என்று நிறுவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. + +தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம், பெரியாரிய அமைப்புகள், இடதுசாரி அமைப்புகள் இறைமறுப்புக் கொள்கை உடையன. எனினும் திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகள் தற்போது இறைமறுப்பை முன்னெடுப்பதில்லை. கேரளாவில் இடதுசாரிகளும், பகுத்தறிவாளர்களும் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுத்தனர். இதில் யுக்திவழி இதழின் பங்களிப்பு கணிசமானது. இந்திய பகுத்தறிவாளர் ஒன்றியங்களின் பேரவை, இறைமறுப்பாளர் நடுவம் ஆகியவை இந்திய அளவில் இறைமறுப்புக் கொள்கையை முன்னெடுப்பவை. + +மேற்குநாடுகளில் புதிய இறைமறுப்பு என அறியப்படும் நூல்கள், அமைப்புகள் தற்போது முக்கியத்துவம் பெறுகின்றன. பிரைட்ஸ் இயக்கம் ("Brights movement") இளையோர் மத்தியில் செயற்படுகிறது. + + + + + + + +காபூல் + +காபூல் ஆப்கானிஸ்தான் நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் ஆகும். இதுவே அந்நாட்டின் பொருளாதார மற்றும் பண்பாட்டு மையமாகவும் திகழ்கிறது. நாட்டின் கிழக்குப் பிரிவில் அமைந்துள்ள இந்��கரின் சனத்தொகை 2015 ஆம் கணக்கெடுப்பின்படி அனைத்து இனக்குழுக்களையும் சேர்த்து சுமார் 3678034 என்று நம்பப்படுகின்றது. விரைவான நகரமயமாதல் காரணமாக காபூல் நகரம் உலகத்தின் 64 ஆவது பெரிய நகரமாகவும், விரைவாக வளர்ச்சியடையும் நகரங்கள் பட்டியலில் 5 ஆவது இடத்தையும் பெற்று வளர்ந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1800 மீட்டர் உயரத்தில் காபூல் நகரம் உள்ளது. + + + + +கரிகால் சோழன் + +கரிகால் சோழன் சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவார். இவர் தந்தையின் பெயர் "இளஞ்செட்சென்னி". கரிகால் சோழனுக்கு "திருமாவளவன்", மற்றும் "பெருவளத்தான்" என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. தனக்கு ஒப்பாரும் இல்லை, தனக்கு மிக்காரும் இல்லை எனப் புகழ் பெற்றவன். + +சோழர்களில் மிக முக்கியமானதொரு மன்னன் ஆவான்.சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்காலசோழகுலத்தை, தன் முன்னோர்கள் ஆண்ட ஆட்சிப் பகுதியிலிருந்து விரிவு படுத்தினான். + +கரிகாலன், அழகான போருக்குரிய தேர்களைப் பெற்றிருந்த இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான். கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள். இளம் வயதில் இவருக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவருக்கு வழங்கலாயிற்று. + +பட்டினப்பாலை, பொருநராற்றுப்படை, கலிங்கத்துப் பரணி, பழமொழி நானூறு முதலான நூல்கள் இவரைப் பற்றிய சில குறிப்புகளைத் தருகின்றன. + +சோழன் மகன் கரிகாலன் பகைவரால் சுடப்பட்ட இல்லத்திலிருந்து பிழைத்து மறைவாக வாழ்ந்தார். "பிடர்த்தலை" என்னும் பெயர் பெற்ற பட்டத்து யானையால் அடையாளம் கண்டு மாலை சூட்டப்பட்டு அரியணை ஏறிச் செங்கோல் செலுத்தினார். எனவே உயிர் பிழைத்திருந்தால் எதையும் செய்யலாம். +புலிக் குகை போன்ற பகைவர் சிறையில் வளர்ந்த யானை வளர்ச்சி பெற்ற பின்னர் தான் விழுந்திருந்த பகைவரின் பொய்குழியின் கரை இடியுமாறு குத்தி மேலேறி தன் பெண் யானையுடன் சேர்ந்தது போலக் கரிகாலன் அரியணை ஏறினாராம். திண்ணிய காப்புச் சிறையில் இருந்த கரிகாலன் பிறர் கண்டு அஞ்சத் தக்க தாயமாகிய ஆட்சியை ஊழ் வலிமையால் பெற்று நாடாண்டார். இவ்வாறு பெற்றதனால் நிறைவடையாமல் நாட்டை விரிவுபடுத்தினார். . +கரிகாலன் காலில் தீ பட்டு அவரது கால் கருகிப் போயிற்று. +அதனால் அவர் கரிகாலன் என்னும் பெயர் பெற்றானோ என எண்ணுமாறு இந்தப் பாடல் அமைந்துள்ளது. + +இவரது ஆட்சியில் நடைபெற்ற முதல் பெரும் போர் வெண்ணிப்போர். சோழ அரியணையைக் கரிகாலன் நிலையாகப் பெறுமாறு செய்ததும், தமிழகத்தின் முடியுடைய மூவேந்தர்க்குத் தலைவனாக விளங்குமாறு செய்ததும் இப்போரே. ஏனெனில் இவ்வெற்றியின் மூலம் தனக்கெதிராக அமைக்கப்பட்டிருந்த ஒரு பெரும் கூட்டணியை அவர் முறியடித்துவிட்டார். இப்போரில் முதுகில் புண்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், தனக்கு பெரும் அவமானம் ஏற்பட்டதாகக் கருதி வடக்கிருந்து உயிர் நீத்தார். இதை கரிகாலனின் நண்பரும் வெண்ணியில் வாழ்ந்து போரை நேரில் கண்டவருமான வெண்ணிக் குயத்தியார் என்னும் புறநானுற்றுப் புலவர் விளக்குகிறார். + +இவரது படை பலத்தைப் பயன்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேறு வாய்ப்புகள் வாய்க்காமல் போகவில்லை. வாகைப் பெருந்தலை என்னுமிடத்தில் ஒன்பது குறுநில மன்னர்களின் கூட்டணியை இவர் முறியடித்தார். கரிகாலனின் படைகள் அவரது பகைவர்களின் இராச்சியங்களை அழித்த விவரங்களையும் அவர்கள் காட்டிய வீரத்தையும் பட்டினப் பாலையின் ஆசிரியர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் மிக விளக்கமாக வர்ணிக்கிறார். + +கரிகாலனின் சொந்த வாழ்க்கையைப்பற்றி நமக்குப் பேரளவிற்கு ஒரு விவரமும் கிடைக்கவில்லை. இவர் பெண்டிருடனும் பிள்ளைகளுடனும் மகிழ்ந்திருந்தார் என்று பட்டினப்பாலை ஆசிரியர் உருத்திரங்கண்ணனார் பொதுப்படையாக கூறுகிறார். நாங்கூரைச் சேர்ந்த வேளிர் குலப்பெண் ஒருத்தியைக் கரிகாலன் மணந்தார் என்று உரையாசிரியர் நச்சினார்க்கினியர் அவரது காலத்தின் நிலவிய மரபுவழிச் செய்தியின் அடிப்படையில் கூறுகிறார். + +கரிகாற்சோழனின் மகள் ஆதிமந்தியா. ஆதிமந்தியா செய்யுள்கள் சில பாடியுள்ளார். + +பழங்காலந்தொட்டே கரிகாலனைப் பற்றிய பல புராணக் கதைகள் உருவாகி, தற்போது, இக்கதையே வரலாறாகப் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் முடியுடை வேந்தர், வடநாட்டு ஆரிய மன்னர்களை எதிர்த்து வெற்றி பெற்றனர் என்று கூறும் சிலப்பதிகாரம், கரிகாலனின் வடநாட்டுப் படையெடுப்பை பலபடப் பாராட்டுகிறது. இப்படையெடுப்பில், கரிகாலன் இமயம் வரை சென்றதோடு, வச்சிரம், மகதம், அவந்தி போன்ற சில நாடுகளை வென்றோ, அல்லது உடன்பாடோ செய்து கொண்டார். காவேரியாற்றின் கரைகளை உயர்த்திக் கட்டினார் என்பதை ஏழாம், எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த தெலுங்கு சோ(ட)ழ மன்னன் புண்ணிய குமரனின் மலேபாடு பட்டயங்களில் முதன் முதலாகக் காண்கிறோம். + +கரிகாற் பெருவளத்தான் இறுதியில் குராப்பள்ளி என்ற இடத்தில் உலக வாழ்வை நீத்தார் என்பது தெரிகிறது. ‘குராப்பள்ளி’ என்பது குராமரத்தைத் தலமரமாகக் கொண்ட திருவிடைச் சிவத்தலமாகும் என்பது கருதப்படுகிறது. + + + + + +பெருவளத்தானுக்குக் கருங்குழலாதனார் அறிவுரை + + + + +விலங்கு + +விலங்குகள் ("Animals"), அனிமாலியா ("Animalia") அல்லது மீடாசொவா ("Metazoa") இராச்சியத்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, மெய்க்கருவுயிரி உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது. சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் உருமாற்ற நிகழ்முறைக்குள் செல்கின்றன. அநேக விலங்குகள் இடம்பெயரும் தன்மையுடையவை. அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் கொன்றுண்ணிப் பழக்க முடையவையாகவும் உள்ளன. அதாவது தங்கள் வாழ்க்கைக்கு அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும். + +பல அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் புதைபடிவ பதிவுகளில் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்பிரியன் வெடிப்பு சமயத்தில் கடல்வாழ் இனங்களாகக் காட்சியளிக்கின்றன. + +"அனிமல்" என்ற ஆங்கில வார்த்தை "அனிமலே" என்கிற இலத்தீன் வார்த்தையில் இருந்து பிறந்ததாகும். இது "அனிமா" என்னும் முக்கிய மூச்சு அல்லது ஆன்மா எனப் பொருள் கொண்ட வார்த்தையில் இருந்து தோற்றம் செய்யப்பட்டது. அன்றாட பேச்சுவழக்குப் பயன்பாட்டில், இந்த வார்த்தை பொதுவாக மனிதரல்லாத விலங்குகளைக் குறிக்கிறது. விலங்கு ராச்சியம் ("Kingdom Animalia") என்னும் இந்த வார்த்தையின் உயிரியல் வரையறை மனிதன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் குறிக்கிறது. + +பிற உயிரினங்களில் இருந்து தங்களைத் தனித்துக் காட்டும் பல பண்புகளை விலங்குகள் கொண்டுள்ளன. விலங்குகள் யூகார்யோடிக்குகளாகவும் பலசெல் உயிரினங்களாகவும் உள்ளன (ஆயினும் காணவும் மிக்சோசோவா). இவை அவற்றை பாக்டீரியாக்கள் மற்றும் அநேக ஓர்செல் உயிரினங்களில் இருந்து பிர���க்கின்றன. இவை கொன்றுண்ணி பழக்கமுடையவை. பொதுவாக ஒரு உள்ளறையில் உணவு செரித்தல் நிகழ்பவை. இது தாவரங்கள் மற்றும் பாசி வகைகளில் இருந்து அவற்றை பிரிக்கின்றன (சில கடற்பாசிகள் ஒளிச்சேர்க்கைதிறனும் நைட்ரஜன் நிலைப்பாட்டு திறனும் கொண்டிருக்கின்றன என்றாலும்). உறுதியான செல் சுவர்கள் இல்லாதிருக்கும் வகையில் இவை தாவரங்கள், பாசிகள் மற்றும் பூஞ்சைகளில் இருந்தும் வேறுபடுகின்றன. எல்லா விலங்குகளும் குறிப்பிட்ட வாழ்க்கை கட்டங்களில் இடம்பெயர்பவையே என்று சொல்லலாம். அநேக விலங்குகளில், முளைக்கருவானது ஒரு கருக்கோளம் என்னும் கட்டத்திற்கு செல்கிறது. இது விலங்குகளுக்கு மட்டுமேயான தனித்துவமான பண்பாகும். + +விலங்குகள் தனித்தனி திசுக்களாகப் பிரிக்கப்பட்ட உடலமைப்புகளைக் கொண்டிருக்கின்றன. ஆயினும் கடற்பாசிகள் (துளையுடலிகள் ("Porifera") தொகுதி) மற்றும் பிளகோசோவா ஆகிய மிகக் குறிப்பிடத்தக்க சில விதிவிலக்குகளும் உண்டு. சுருங்கக் கூடியதும் நகர்வை கட்டுப்படுத்தத்தக்கதுமான தசைகள், மற்றும் சமிக்ஞைகளை அனுப்புகிறதும் பரிசீலிப்புக்குட்படுத்துவதுமான நரம்பு மண்டலத் திசு ஆகியவை இந்த உடலமைப்பில் அடங்கும். பொதுவாக ஒரு உள்ளமைந்த செரிமான அறையும் ஒன்று அல்லது இரண்டு திறப்புகளுடன் அமைந்திருக்கும். இந்த வகை ஒழுங்கமைப்புடன் கூடிய விலங்குகள் மெடாசோவான்கள் (பலசெல் உயிரினங்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அல்லது முந்தையது பொதுவாக விலங்குகளைக் குறிப்பிடப் பயன்படும் இடங்களில் இமெடாசோவான்கள் ("eumetazoans") என்று அழைக்கப்படுகின்றன. + +ஏறக்குறைய எல்லா விலங்குகளுமே ஒரு வகை பால்முறை இனப்பெருக்கத்தில் ஈடுபடுகின்றன. அவை ஒரு சில சிறப்பியல்பான இனப்பெருக்க செல்களைக் கொண்டுள்ளன. இவற்றில் சிறிய நகரும் விந்தணுக்கள் அல்லது பெரிய நகரா சினை முட்டைகளை உருவாக்க குன்றல் பிரிவு(meiosis) நடக்கிறது. இவை ஒன்றிணைந்து கருமுட்டைகளை ("zygotes") உருவாக்கி, அவை புதிய தனிஉயிர்களாய் வளர்ச்சியுறுகின்றன. + +பாலில்லா இனப்பெருக்கத் திறனையும் பல விலங்குகள் கொண்டிருக்கின்றன. (பார்தெனோஜெனிசிஸ் மூலம்) இனப்பெருக்க திறனுடைய முட்டைகள் கலவியின்றி உற்பத்தி செய்யப்படுகின்றன, அல்லது சில சந்தர்ப்பங்களில் சிறுகூறாகல் ("fragmentation") மூலமாகவும் இது நடைபெறுகின்றது. + +ஒரு கருமுட்டையானது கருக்கோளம் ("blastula") என்னும் ஒரு உள்ளீடற்ற கோளத்திற்குள் ஆரம்பத்தில் வளர்கிறது. இது மறுஒழுங்கமைவுக்கும் வேறுபாட்டிற்கும் ("differentiation") உள்ளாகிறது. கடற்பாசிகளில், கருக்கோள லார்வாக்கள் ஒரு புதிய இடத்திற்கு நீந்திச் சென்று ஒரு புதிய கடற்பாசி இனமாக உருவாகிறது. பல பிற குழுக்களில், கருக்கோளமானது இன்னும் சிக்கலான மறுஒழுங்கமைவுக்குள் உட்செல்கிறது. இது முதலில் உள்மடிந்து ஒரு செரிமான அறை, மற்றும் இரண்டு தனியான நுண்ணுயிர் அடுக்குகள் – ஒரு வெளிப்புற எக்டோதெர்ம் (புற அடுக்கு) மற்றும் ஒரு உள்முக என்டோதெர்ம் (அக அடுக்கு) – கொண்ட ஒரு ஈரடுக்கு கருக்கோளத்தை (gastrula) உருவாக்குகிறது. இந்த திசு அடுக்குகள் பின் வேறுபாட்டிற்கு உள்ளாகி, திசுக்கள் மற்றும் உறுப்புகளாக உருவாகின்றன. + +மிருகவேட்டை என்பது வேட்டையாடும் விலங்கு (வேட்டையாடுகிற ஒரு கொன்றுண்ணி பழக்க விலங்கு) தனது இரையை (தாக்குதலுக்கு இலக்காகும் உயிரினம்) உணவாகக் கொள்ளும் ஒரு உயிரியல் பரிமாற்ற நிகழ்வாகும். வேட்டை விலங்குகள் தங்களது இரையை உண்ணுவதற்கு முன்னர் அவற்றைக் கொல்லலாம் அல்லது கொல்லாமலும் போகலாம். ஆனால் மிருகவேட்டை எப்போதும் இரை இறப்பதில் முடியும். நுகர்வில் இன்னொரு முக்கிய பிரிவு பிணந்திண்ணி ("detritivory") வகை ஆகும். அதாவது இறந்த உறுப்பாக்கமுடைய உணவை நுகர்வது. சமயங்களில் இரண்டு உண்ணும் பழக்கத்திற்கும் இடையில் பேதம்பிரிப்பது சிரமமாகி விடும். உதாரணமாக ஒட்டுண்ணி உயிர்வகைகள் ஒரு உயிரினத்தை வேட்டையாடி உண்கின்றன. பின் சிதைவுறும் அந்த உடலை தமது வழித்தோன்றல்களுக்கு உணவாக்கும் வகையில் அதன் மீது தங்களது முட்டைகளை இடுகின்றன. ஒன்று மற்றொன்றின் மீது அளிப்பதான தேர்ந்தெடுத்த அழுத்தங்கள் வேட்டையாடும் விலங்குக்கும் இரைக்கும் இடையில் பரிணாமரீதியான ஆயுதப் போட்டிக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இது பல்வேறு மிருகவேட்டை-எதிர்ப்பு தகவமைவுகளுக்கு வழிவகுத்துள்ளது. + +அநேக விலங்குகள் சூரிய ஒளி சக்தியில் இருந்து மறைமுகமாக உணவைப் பெறுகின்றன. தாவரங்கள் இந்த சக்தியை ஒளிச்சேர்க்கை எனும் ஒரு நிகழ்முறையைப் பயன்படுத்தி சூரிய ஒளியை எளிய சர்க்கரைகளாக மாற்றிப் பயன்படுத்துகின்றன. கரியமில வாயு (CO) மற்றும் நீர் (HO) மூலக்கூறுகளுடன் தொடங்கி, ஒளிச்சேர்க்கையானது ச���ரிய ஒளி சக்தியை குளுகோஸ் (CHO) பிணைப்புகளில் சேகரிக்கப்படும் வேதியியல் சக்தியாக மாற்றி பிராண வாயுவை (O) வெளியிடுகிறது. இந்த சர்க்கரைகள் பின் கட்டுமான அடுக்குகளாகப் பயன்பட்டு, தாவரம் வளர அனுமதிக்கின்றன. விலங்குகள் இந்த தாவரங்களை உண்ணும்போது (அல்லது தாவரங்களை உண்டிருக்கக் கூடிய பிற விலங்குகளை உண்கையில்), தாவரத்தால் உருவாக்கப்பட்ட சர்க்கரைகள் விலங்கினால் பயன்படுத்தப்படுகிறது. அவை நேரடியாக விலங்கு வளர பயன்படுத்தப்படலாம், அல்லது உடைக்கப்பட்டு, சேகரிக்கப்பட்ட சூரிய ஒளி சக்தியை வெளியிட்டு, விலங்குக்கு நகர்வுக்கு அவசியமான சக்தியை கொடுக்கலாம். இந்த நிகழ்முறை கிளைகோலைசிஸ் என்று அழைக்கப்படும். + +விலங்குகள் பொதுவாக ஒரு சவுக்குயிர் யூகார்யோட்டில் இருந்து பரிணாமமுற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவற்றின் மிக நெருங்கிய வாழும் உறவினர்களாகக் கருதப்படுவது சோவனொஃபிளாகெல்லேட்டுகள் என்கிற, சில கடற்பாசிகளின் சோவனொசைட்டுகளை ஒத்த உருவமைப்பியல் கொண்ட கழுத்துப்பட்டியுடனான சவுக்குயிர்களாகும் ("flagellates"). செல்கூறு ஆய்வுகள் விலங்குகளை ஒபிஸ்தோகோன்ட்ஸ் என்னும் சிறப்புகுழுவில் வகைப்படுத்துகின்றன. இதில் சோவனொஃபிளாகெல்லேட்டுகள், பூஞ்சைகள் மற்றும் கொஞ்சம் சிறிய ஒட்டுண்ணி வகை ஒருசெல் உயிரினங்கள் ஆகியவை அடங்கும். அநேக விலங்குகளின் முதிர்ந்த விந்தணுவில் இருப்பது போன்று நகரும் செல்களில் கசையிழைகள் (flagellum) பிற்பக்க அமைவு கொண்டிருப்பதில் இருந்து இந்த பெயர் வருகிறது. பிற யூகார்யோட்டுகள் முற்பக்க கசையிழைகள் கொண்டிருக்க விழைகின்றன. + +விலங்குகளை பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய முதல் புதைவுகள் கேம்ப்ரியன் காலத்துக்கு முந்தைய காலத்தினதாய் தோன்றுகின்றன. இவை சுமார் 610 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த புதைவுகளாகும். ஆயினும், இவை பிற்கால புதைவுகளுடன் தொடர்புபடுத்த கடினமானவையாக உள்ளன. சில நவீன விலங்கு தொகுதிகளுக்கு முன்னறிவிப்பினை குறித்ததாய் இருந்தாலும் கூட அவை தனித்தனியான குழுக்களைச் சேர்ந்தவையாக இருக்கலாம்; அவை விலங்குகளே அல்ல என்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளது. அவை தவிர, அநேக அறியப்பட்ட விலங்கு தொகுதிகள் சுமார் 542 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாக கேம்ப்ரியன் கா��த்தில் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் தோற்றம் செய்கின்றன. கேம்ப்ரியன் வெடிப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வானது, வெவ்வேறு குழுக்கள் இடையிலான ஒரு துரித விலகுபாதையைக் குறிக்கிறதா அல்லது புதைவடிவத்தை சாத்தியமாக்கிய சூழ்நிலைகளிலான ஒரு மாற்றத்தைக் குறிக்கிறதா என்பது இன்னமும் விவாதிக்கப்படும் ஒன்றாகவே உள்ளது. ஆயினும் புதைபடிவங்கள் மூலம் ஆதிகாலத்து வாழ்க்கை வடிவங்களை ஆராய்ச்சி செய்யும் ஆராய்ச்சியாளர்களும் ("paleontologists") மற்றும் நிலநூல் வல்லுநர்களும் முன்னர் கருதப்பட்டதை விட வெகு முன்னதாகவே, சாத்தியமான அளவில் ஏறக்குறைய 1 பில்லியன் வருடங்களுக்கும் முன்னதாக, விலங்குகள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். தோனியன் சகாப்தத்தில் காணப்பட்ட தடங்கள் மற்றும் பொந்துகள் போன்ற புதைவு சுவடுகள், மெடோசோவான்கள் போன்ற டிரிப்ளோபிளாஸ்டிக் புழுக்கள் ஏறக்குறைய மண்புழுக்கள் அளவுக்கு பெரியதாகவும் (சுமார் 5 மிமீ அகலம்) சிக்கலானதாகவும் இருந்திருக்கலாம் என்பதை சுட்டிக் காட்டுகின்றன. + +கடற்பாசிகள் (துளையுடலிகள்) ஆரம்பத்தில் பிற விலங்குகளிடம் இருந்து பிரிந்து தோன்றியதாகத் தான் வெகு காலம் கருதப்பட்டு வந்தது. மேலே குறிப்பிட்டதைப் போல, அவற்றில் பிற பல விலங்கு தொகுதிகளில் காணப்படும் சிக்கலான உடலமைப்பு இல்லாதிருக்கிறது. அவற்றின் செல்கள் வகையீடுற்றவை. ஆனால் அநேக சந்தர்ப்பங்களில் தனித்தனி திசுக்களாக ஒழுங்கமைக்கப்படாததாய் இருக்கிறது. கடற்பாசிகள் ஒட்டிவாழ்பவை. பொதுவாக நீரை துளைகள் வழியே இழுப்பதின் மூலம் உணவு உட்கொள்கின்றன. ஆயினும் 2008 ஆம் ஆண்டில் 21 இனங்களில் 150 மரபணுக்களில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சிகை ஜெல்லிக்கள் தான் விலங்குகளின், குறைந்தபட்சம் அவற்றின் 21 தொகுதிகளின், அடிப்படையான வழிமரபாய் இருக்கலாம் என்று வெளிப்படுத்துகிறது. + +இரண்டுக்கும் தனித்தனி திசுக்கள் உண்டு, ஆனால் அவை உறுப்புகளாக ஒழுங்கமைக்கப்படவில்லை. புற அடுக்கு ("ectoderm") மற்றும் அகஅடுக்கு ("endoderm") ஆகிய இரண்டு முக்கிய நுண்ணியிர் அடுக்குகள் மட்டுமே உண்டு. அவற்றுக்கு இடையில் செல்கள் மட்டும் சிதறிக் காணப்படும். உள்ளபடியே, இந்த விலங்குகள் சில சமயங்களில் ஈரடுக்கு ("diploblastic") விலங்குகள் என்று அழைக்கப்படுகின்றன. சின்னஞ்சிறு பிளாகோசோவான்கள் ���த்தவையாக இருக்கும். ஆனால் அவற்றுக்கு நிரந்தரமான செரிமான அறை ஒன்று இருக்காது. + +எஞ்சிய விலங்குகள் பைலேடரியா என்னும் ஒற்றைத்தொகுதி குழுவை உருவாக்குகின்றன. அநேக பாகத்திற்கு, அவை இருசமபக்க ஒத்தமைவுடையவையாக இருக்கின்றன. பெரும்பாலும் உணவு உட்கொள்ளும் மற்றும் புலனுணர்வு உறுப்புகளுடனான சிறப்பியல்பான தலையைக் கொண்டுள்ளன. உடம்பு மூவடுக்கு கொண்டதாக இருக்கிறது. அனைத்து மூன்று நுண்ணுயிர் அடுக்குகளும் நன்கு-வளர்ச்சியடைந்தவையாக இருக்கின்றன. திசுக்கள் நல்ல வகைப்பட்ட உறுப்புகளை உருவாக்குகின்றன. செரிமான அறை இரண்டு திறப்புகளைக் கொண்டுள்ளது. ஒரு வாய் மற்றும் ஒரு மலத்துவாரம், கொயலம் ("coelom") அல்லது சூடோகொயலம் ("pseudocoelom") என்னும் இன்னொரு உள்முக உடல் துவாரமும் உள்ளது. ஆயினும் இந்த பண்புகளில் ஒவ்வொன்றுக்கும் விதிவிலக்குகள் உண்டு – உதாரணமாக முதிர்ந்த முட்தோலிகள் ("echinoderm") ஆரவகையில் இருசமபக்கம் ஒத்தவையாக இருக்கும். சில ஒட்டுண்ணி புழுக்கள் மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட உடல் அமைப்புகளைக் கொண்டிருக்கும். + +பைலேடரியாவுக்கு உள்ளான உறவுகள் மீதான நமது புரிதலில் மரபணு ஆய்வுகள் குறிப்பிடத்தக்க மாறுதல்களை ஏற்படுத்தியுள்ளன. அநேகமானவை டியூடெரோஸ்டோம்கள் மற்றும் புரோடோஸ்டோம்கள் என்னும் இரண்டு முக்கிய வம்சாவளியைச் சேர்ந்தவையாகத் தோன்றுகின்றன. + +டியூடெரோஸ்டோம்கள் புரோடோஸ்டோம்கள் என்று அழைக்கப்படும் பிற பைலேடரியாக்களில் இருந்து பல வழிகளில் வேறுபடுகின்றன. இரண்டிலுமே ஒரு முழுமையான செரிமான பாதை உண்டு. ஆயினும், புரோடோஸ்டோம்களில் ஆரம்ப துவாரம் (ஆர்சென்டெரான்) வாயாக வளர்ச்சியுறுகிறது, மலத்துவாரம் தனியாக உருவாகிறது. டியூடெரோஸ்டோம்களில் இது தலைகீழாய் நடக்கிறது. டியூடெரோஸ்டோம்கள் ஒரு வயிற்றுப்பக்கத்தை விட, முதுகுப்பக்க நரம்பு நாணை கொண்டுள்ளன. மற்றும் அவற்றின் முளைக்கருக்கள் ஒரு வேறுபட்ட பிளவுக்குள் உட்செல்கின்றன. + +இவையெல்லாம் டியூடெரோஸ்டோம்களும் புரோடோஸ்டோம்களும் தனித்தனியான, ஒற்றைத்தொகுதி வம்சாவளிகள் என்பதைக் காட்டுகின்றன. டியூடெரோஸ்டோம்களின் முக்கிய தொகுதி முட்தோலிகள் ("Echinodermata") மற்றும் முதுகெலும்புள்ளவை (Chordate)ஆகியவை. முந்தையது ஆரவடிவில் இருசமபக்கம் ஒத்தவை, நட்சத்திர மீன், கடல் முள்ளெலி, மற்று���் கடல் வெள்ளரிகள் போன்ற கடல்நீரில் மட்டும் வாழ்கின்றவை. பிந்தையவை முதுகெலும்பு கொண்ட விலங்குகளான வெர்டிப்ரேட்டுகள் வகையினால் ஆதிக்கம் செலுத்தப்பட்டவையாகும். இவற்றில் மீன், நீர்நில வாழ்விகள், ஊர்வன, பறவைகள், மற்றும் பாலூட்டிகள் ஆகியவை அடங்கும். + +சடோநாதா அல்லது அம்பு புழுக்களும் டியூடெரோஸ்டோம்களாக இருக்கலாம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் அவற்றின் புரோடோஸ்டோம் தொடர்புகளை கூறுகின்றன. + +எக்டிசாசோவாக்கள் புரோடோஸ்டோம்கள் ஆகும். இவை சிறகுதிர்ப்பது அல்லது தோலுரிவதன் ("ecdysis") மூலம் வளரும் பொதுவான பழக்கத்தால் இந்த பெயரிடப்பட்டன. மிகப்பெரும் விலங்கு தொகுதியான கணுக்காலிகள் ("Arthropoda") இதற்கு சொந்தமானதே. இதில் பூச்சிகள், சிலந்திகள், நண்டுகள் மற்றும் அவற்றின் உறவினங்கள் அடக்கம். இந்த அனைத்து உயிரினங்களும் பொதுவாக இணை ஒட்டுறுப்புகளுடன் உடல் தொடர்ச்சியான பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு கொண்டுள்ளன. ஓனிகோபோரா மற்றும் டார்டிகிராடா ஆகிய இரண்டு சிறு தொகுதிகளும் கணுக்காலிகளின் ("Arthropoda") நெருங்கிய உறவினங்கள். இவை இதே பண்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. + +எக்டிசாசோவாக்கள் நெமடோடா அல்லது உருளைப்புழுக்களையும் அடக்கியிருக்கின்றது. இவை இரண்டாவது மிகப்பெரிய விலங்கு தொகுதியாகும். உருளைப்புழுக்கள் பொதுவாக நுண்ணுயிர்களாக இருப்பதோடு, ஏறக்குறைய நீர் இருக்கும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் காணப்படக்கூடியவை. ஏராளமானவை முக்கியமான ஒட்டுண்ணிகள். நெமடோமார்பா அல்லது குதிரைமுடி புழுக்கள், மற்றும் கினோரின்ஜா, பிரியபுலிடா, மற்றும் லோரிசிஃபெரா ஆகியவை அவற்றுக்குத் தொடர்புடைய சிறு தொகுதிகள் ஆகும். இந்த பிரிவுகள் சூடோகொயலம் ("pseudocoelom") என்று அழைக்கப்படுகிற ஒரு குறைந்துபட்ட கொயலமைக் கொண்டுள்ளன. + +புரோடோஸ்டோம்களின் எஞ்சிய இரண்டு பிரிவுகளும் சில சமயங்களில் ஒன்றாக ஸ்பைரலியா என்று ஒரே பிரிவாக பகுக்கப்படுகின்றது. காரணம் இரண்டிலுமே முளைக்கருக்கள் சுருள் பிளவுடன் உருவாகின்றன. + +பிளாட்டிசோவாவில் தட்டைப்புழுவினம் ("Platyhelminthes"), தட்டைப்புழுக்கள் ஆகிய தொகுதிகள் அடக்கம். இவை ஆரம்பத்தில் மிக ஆதி காலத்து பைலேட்டரியா வகைகளில் சிலவாகக் கருதப்பட்டன. ஆனால் அவை அதனை விட சிக்கலான மூதாதையரிடம் இருந்து வளர்ச்சியுற்றிருக்கலாம் என்பதாக இப்போ��ு கருதப்படுகிறது. + +ஒட்டுயிர் தட்டைப் புழுக்கள் ("flukes") மற்றும் நாடாப்புழுக்கள் போன்ற ஏராளமான ஒட்டுண்ணிகள் இந்த குழுவில் அடங்கியுள்ளன. தட்டைப் புழுக்கள் உடற்குழியற்றவை. + +பிற பிளாட்டிசோவா தொகுதிகள் பெரும்பாலும் நுண்ணுயிரி வகைகளாக உடற்குழி உள்ளவை ("pseudocoelomate")களாக இருக்கின்றன. இவற்றில் மிகப் பிரதானமானவை ரோடிஃபெரா உயிரினங்கள் ஆகும். இவை நீர்ப்புற சூழ்நிலைகளில் மிகச் சாதாரணமாய் காணப்படும். இவற்றில் அகான்தோசெபாலா அல்லது ஊசிமுனைத்-தலை புழுக்கள், நதோஸ்டோமுலிதா, மைக்ரோநதோசோவா, மற்றும் சாத்தியமான அளவில் சைக்ளிஃபோரா ஆகியவையும் அடங்கும். இந்த பிரிவுகள் எல்லாம் சிக்கலான தாடைகள் கொண்டிருப்பதைப் பகிர்ந்து கொள்கின்றன. இதிலிருந்து இவை நாதிஃபெரா ("Gnathifera") என்று அழைக்கப்படுகின்றன. + +லோபோட்ரோசாசோவா மெல்லுடலிகள் ("Mollusca") மற்றும் வத்தசைப்புழுக்கள் ("Annelida") ஆகிய இரண்டு மிக வெற்றிகரமான விலங்கு தொகுதிகளை உள்ளடக்கியிருக்கிறது. விலங்கு தொகுதியில் இரண்டாவது மிகப்பெரியதான முன்னையதில், நத்தைகள், கிளிஞ்சல்கள், மற்றும் கடற்கணைகள் ஆகியவை அடக்கம். பிந்தையதில் மண்புழுக்கள் மற்றும் அட்டைகள் போன்ற கூறுபிரிந்த புழுக்கள் அடங்கியிருக்கின்றன. இந்த இரண்டு பிரிவுகளும் அவற்றில் பொதுவாக இருக்கும் ட்ராகோபோர் லார்வாக்களின் காரணமாக நெடுங்காலமாக நெருங்கிய உறவினங்களாக கருதப்படுகின்றன. ஆனால் வத்தசைப்புழுவினம் ("Annelida") கணுக்காலிகளுக்கு ("Arthropoda") நெருங்கியவையாகக் கருதப்படுகின்றன. ஏனென்றால் இரண்டும் கூறுபட்ட உடல் கொண்டவை. + +லோபோட்ரோசாசோவா நெமர்டியா அல்லது ரிப்பன் புழுக்கள், சிபுன்குலா, மற்றும் லோபோபோர் என்று அழைக்கப்படும் வாயைச் சுற்றி அமைந்த ஒரு பிசிர் உரோம அமைப்பு விசிறியைக் கொண்டிருக்கும் பல தொகுதிகள் ஆகியவற்றையும் அடக்கியிருக்கிறது. அவை மரபுவழியாக லோபோபோரேட்டுகள் என்று ஒன்றாக பிரிக்கப்பட்டு வந்தன. ஆனால் இப்போது அவை பாராபைலெடிக் என்றும், சில நெமர்டியாவுக்கு நெருக்கமானவை என்றும், சில மெல்லுடலிகள் ("Mollusca") மற்றும் வத்தசைப்புழுக்களுக்கு ("Annelida") நெருக்கமானவை என்றும் கருதப்படுகிறது. புதைபடிவ பதிவுகளில் பிரதானமாகக் காணப்படும் பிராசியோபோடா அல்லது விளக்கு கூடுகள், என்டோபிராக்டா, போரோனிடா, மற்றும் சாத்தியமான அளவில் ப���ரையோசோவா அல்லது பாசி விலங்குகளும் இவற்றில் அடங்குகின்றன. + +விலங்குகளில் காணப்படும் பெரும் பன்முகத்தன்மை காரணமாக, தேர்ந்தெடுத்த ஒரு சிறு எண்ணிக்கையிலான உயிரின வகைகளை ஆய்வு செய்து, பல்வேறு விஞ்ஞானிகளது வேலைகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்தி, பொதுவாக விலங்குகள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்த முடிவுகளுக்கு அதிலிருந்து தேற்றம் செய்து கொள்வது தான் விஞ்ஞானிகளுக்கு பொருளாதார ரீதியாக கூடுதல் உகந்ததாக இருக்கிறது. வளர்ப்பதும் பராமரிப்பதும் எளிது என்பதால், பழப் பூச்சியான "ட்ராசோபிலா மெலனோகாஸ்டர்" மற்றும் நெமடோடெ "கெனோஹப்டிடிஸ் எலிகான்ஸ்" ஆகியவை தான் மிகவும் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்ட பலசெல் விலங்கு ("metazoan") மாதிரி உயிரினங்களாக இருக்கின்றன. இவை தான் மரபணு ரீதியாக குறியீடு பிரிக்கப்பட்ட முதல் வாழ்க்கை வடிவங்களாகவும் இருக்கின்றன. அவற்றின் மரபணுத் தொகுதியின் நிலை இதற்கு வசதி செய்தது. ஆனால் அதன் மறுபக்க பிரச்சினை என்னவென்றால் பல மரபணுக்கள், இன்ட்ரான்கள் மற்றும் மரபணு இணைப்புகள் காணாதிருக்கும். இந்த எக்டிஸோசோவாக்கள் பொதுவாக விலங்குகளின் மூலம் குறித்து கொஞ்சம் தான் கற்றுத்தர முடியும். சூப்பர்ஃபைலத்திற்குள்ளாக இந்த வகை பரிணாமத்தின் நீட்சியானது தற்போது வளர்ந்து கொண்டிருக்கும் கிரஸ்டசீன், வத்தசைபுழுவினம், மற்றும் மெல்லுடலிகள் மரபணுத் திட்டங்களின் மூலம் தெரிய வரும். ஸ்டார்லெட் கடல் அனிமோன் மரபணுத்தொகுதியின் ஆய்வானது, இமெடாசோவாவுக்கென பிரத்யேகமான 1500 பழமைப்பட்ட மரபணுக்களின் வருகையை விளக்குவதில் கடற்பாசிகள், பிளாகோசோவாக்கள், மற்றும் சோவனோஃபிளாகெல்லேட்டுகள் இவையும் குறியீட்டு வரிசைப்படுத்தப்படுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன. + +"ஓஸ்கரெல்லா கார்மெலா" கடற்பாசி மீது செய்யப்பட்ட ஒரு ஆய்வானது, கடற்பாசிகள் மற்றும் இமெடாசோவா விலங்குகளின் பொதுவான மூதாதையரின் மரபணு அமைப்பு முன்னர் அனுமானித்திருந்ததை விட மிகவும் சிக்கலானதாக இருந்தது என்று தெரிவிக்கிறது. + +விலங்குகள் ராச்சியத்திற்கு சொந்தமான பிற மாதிரி உயிரினங்களில் எலி ("Mus musculus") மற்றும் வரிக்குதிரைமீன் ("Danio rerio") ஆகியவை அடக்கம். + +வாழும் உலகத்தை அரிஸ்டாட்டில் விலங்குகள் மற்றும் தாவரங்கள் எனப் பிரித்தார். இதனைத் தொடர்ந்து காலக்கிரம வகைப்படுத்தலில் கரோலஸ் லினீயஸ் ("Carl von Linné") வகைப்படுத்தல் வந்தது. அப்போது முதல் உயிரியல் நிபுணர்கள் பரிணாம உறவுகளில் அழுத்தம் கொடுக்கத் துவங்கியிருக்கிறார்கள். அதனால் இந்த குழுக்கள் ஒருவகையில் கட்டுப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. உதாரணமாக, நுண்ணியிர் ஒரு செல் விலங்குகள் ("protozoa"), அவை நகர்பவை என்பதால், ஆரம்பத்தில் விலங்குகள் எனக் கருதப்பட்டன. ஆனால் இப்போது அவை தனி வகையாகக் கருதப்படுகின்றன. + +லினீயஸின் ஆரம்ப வகைப்பாட்டில், விலங்குகள் மூன்று ராச்சியங்களில் ஒன்றாக, வெர்மெஸ் ("Vermes"), இன்செக்டா ("Insecta"), மீன்கள் ("Pisces"), நீர் நில வாழுயிர் ("Amphibia"), பறவையினம் ("Aves"), மற்றும் மம்மாலியா (Mammalia) ஆகிய பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அது முதல் கடைசி நான்கும் கார்டேடா ("Chordata") என்னும் ஒற்றை தொகுதிக்குள் கொண்டுவரப்பட்டன. பல பிற வடிவங்கள் பிரிக்கப்பட்டு விட்டன. மேற்கண்ட பட்டியல்கள் இந்த பிரிவு குறித்த நமது தற்போதைய புரிதலைக் குறிப்பிடுகிறது. ஆயினும் மூலத்திற்கு மூலம் சில வேறுபாடுகள் உள்ளது. + + + + + + + +ஹரோல்ட் பிண்டர் + +ஹரோல்ட் பிண்டர் ("Harold Pinter", அக்டோபர் 10, 1930 - டிசம்பர் 24, 2008) பிரித்தானியாவைச் சேர்ந்த நாடகாசிரியர், கவிஞர். 2005 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். + +இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான நாடக ஆசிரியராக அறியப்படும் இவர், 1930 ஆம் ஆண்டு கிழக்கு இலண்டனின் ஹாக்னி மாவட்டத்தில் யூத இனத்தைச் சார்ந்த தையற்காரரின் மகனாகப் பிறந்தார். + +தனது இளமைக்காலத்தில், யூத எதிர்ப்புணர்வின் (anti-semitism) காரணமாக கடுமையான மனப் போராட்டங்களுக்கு ஆளாகியிருக்கிறார். தான் ஒரு நாடக ஆசிரியர் ஆகுவதென எடுத்த முடிவிற்கு இந்நிகழ்வுகள் முக்கியக்காரணமாக அமைந்தன எனப் பிண்டர் குறிப்பிடுகிறார். இளம் வயதிலிருந்து அரசின் போக்குக்கு எதிரான கருத்துக்களைத் தொடர்ந்து முன் வைத்த பிண்டர், கட்டாயப் போர்பயிற்சிக்கான எதிரி எனத் தன்னை அறிவித்துக் கொண்டு, கட்டாய இராணுவச் சேவையில் இணைய மறுத்து விட்டார். + +நாடகங்களின் பால் ஈர்க்கப்பட்டு, நாட்டுப்புற நாடக மேடைகளில் நடிக்கத் தொடங்கிய பிண்டர், தான் இயற்றிய 'த பர்த்டே பார்ட்டி' ("1957") என்னும் நாடகத்தின் மூலம் பலரது கவனத்தைத் தன் ப��்கம் திருப்பினார். இந்நாடகம் விசித்திரமான, தனித்துவம் மிக்க நடையைக் கொண்டிருந்தது. குரூரத்திற்கும், வெறுமைக்குமான இணைப்பினை நிறுவியிருந்தார் பிண்டர். இது விவாதங்களை நிறுத்தி, அந்த விவாதங்களை, கண்டறியவியலாத ஆழமான உணர்வுகளாக மாற்றியது. + +பிண்டரின் கதாப்பாத்திரங்கள் கொண்டிருந்த உள்மன பயங்கள், ஆழமான ஆசைகள், தீர்க்கப்படவியலாத காம வேட்கைகள்யாவும் அதுவரையிலும் பிழைப்பிற்காக கட்டமைக்கப்பட்டிருந்த வாழ்வியல் முறைகளை தகர்த்தெறிபவைகளாக, அவைகளுக்கு முற்றிலும் முரண்பட்டதாக அமைந்தன. வழக்கமாக மூடப்பட்ட அறைக்குள், கதாபாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டிருக்கும். அவைகளின் நடவடிக்கைகள்யாவும், செறிவு மிகுந்த வலியூட்டும் சோகமான விளையாட்டை ஒத்திருக்கும். பெரும்பாலான தருணங்களில், நடிகர்களின் பாவனைகள், வசனங்களுக்கு நேர் மாறானதாக அமைக்கப்பட்டு, பார்வையாளனை தனது மூர்க்கமான பிடியினுள் சிக்க வைப்பது இவரது பாணி. + +அரிதான இவரது நாடக நடையும், மெளனங்களும் அதுவரை அறியப்படாத சாத்தியப்படத்தக்க, வித்தியாசமான நாடகச்சூழலைக் கொண்டு வந்தது. இப்புதிய நாடகச்சூழல் 'பிண்டெரெஸ்க்யூ' என்றழைக்கப்படுகிறது. + +'கேர் டேக்கர்' (1959) பிண்டரின் மற்றொரு படைப்பு. இரு சகோதரர்களின் உறவில் ஒரு முதியவரின் இருத்தலும், அதன் விளைவுகளும் சித்தரிக்கப்பட்டிருந்த இந்நாடகம், இவரை வணிக ரீதியில் வெற்றியாளராக்கியது. வேறொரு படைப்பான, 'ஹோம்கம்மிங்' (1964), ஆண்களால் நிரம்பியிருக்கும் வீடொன்றினுள் பெண் நுழைவதால் மறைத்து வைக்கப்படும் கட்டுப்பாடற்ற வன்முறைகளையும், குழப்பமான காம உணர்வுகளையும் வெளிப்படுத்தி மிகுந்த கவனம் பெற்றது. + +தொடர்ந்து 'த பேஸ்மெண்ட்'(1966), 'த டீ பார்ட்டி'(1964), 'ஓல்ட் டைம்ஸ்'(1970), 'நோ மேன்'ஸ் லேண்ட்'(1974) என புகழ் பெற்ற நாடகங்களை இயற்றினார். எண்பதுகளில், 'எ கைண்ட் ஆ·ப் அலாஸ்கா'(1982), 'ஒன் பார் த ரோட்'(1984), 'மெளண்டைன் லேங்குவேஜ்'(1988) ஆகிய ஓரங்க நாடகங்களை இயற்றினார். + +தனது நாடகங்களின் நுட்பங்கள், செறிவூட்டுவதற்கென செய்யப்பட்ட நுணுக்கங்கள் குறித்து நாடகத்தில் நடிக்கவிருக்கும் நடிகர்களுக்கும் கூட விளக்க மறுக்கும் பிண்டர், அமைதியை கொண்டாடுபவராகவே தொடர்ந்து இருந்திருக்கிறார். + +"நாம் கேட்கும் பேச்சு, நாம் கேட்காதவற்றின் குறியீடு. எப்போத��ம் வன்முறையாகவும், ரகசியமாகவும் தொடர்ந்து நகர்கிறது. பேச்சு கொணரும் புகைத்திரை, மற்றவைகளை அவற்றின் உண்மையான இடத்தில் வைக்கிறது. அமைதி குலையும் போது நாம் எதிரொலிப்புகளுடன் விடப் படுகிறோம். அமைதியால் நிர்வாணத்தின் அருகாமைக்கு அழைத்துச் செல்லப்படும் போது, நிர்வாணத்தை மறைக்கும் தொடர்ச்சியான தந்திரமாகப் பேச்சு செயல்படுகிறது" எனக் குறிப்பிடும் பிண்டரின் இந்தப் பார்வையே, இவரின் நாடகங்களிள் தென்படும் ஆழமான மெளனங்களின் அடித்தளம். + +1981 இல், மெரில் ஸ்டிரீப் மற்றும் ஜெர்மி ஐயர்ன்ஸ் நடித்து வெளி வந்த 'த பிரெஞ்ச் லெப்டினென்ட்'ஸ் வுமன்' என்னும் திரைப்படம், ஜான் பவலின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. இதில் திரைக்கதை அமைத்ததற்காக ,பிண்டர் ஆஸ்கார் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். + +அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 2005 ஆம் ஆண்டு ஸ்வீடிஷ் அகாடமி இவருக்கு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு வழங்கவேண்டும் என்று பரிந்துரை செய்தது . + +எண்பதுகளில், மார்கரெட் தாட்சரின் சந்தைப் பொருளாதாரம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்த பிண்டரின் செயல்பாடுகள் அதே காலகட்டத்தில் வேகமாக அரசியல் நோக்கித் திரும்பத் துவங்கின. அமெரிக்க-பிரித்தானிய அரசுகளின் போர் நடவடிக்கை குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து வரும் பிண்டர், 2003 இல் அமெரிக்காவின் ஈராக் படையெடுப்பிற்கு எதிராகத் தன் கருத்துக்களை கவிதைத் தொகுப்பொன்றில் பதிவு செய்தார். + +தனது நாட்டின் அரசு குறித்தும், உலக அரசியலில் அதன் போக்கு குறித்தும் விமர்சிக்கும் பிண்டர், இங்கிலாந்தின் அடிப்படையான நாகரீகத்தையும், உலகிற்கு அது வழங்கிய கிரிக்கெட்டையும் மிகவும் நேசிப்பதாகக் குறிப்பிடுகிறார். 'கெய்ட்டிஸ்' என்னும் கிரிக்கெட் கிளப்பின் தலைவராகவும் இருந்து வருகிறார். + +மார்ச் 2005 இல் நாடகத்தில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்று, அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவித்த பிண்டர், இதுவரையிலும் 30 க்கும் மேற்பட்ட நாடகங்களை இயற்றியுள்ளார். பி.பி.சி இவரின் 75 வது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இவர் இயற்றிய 'வாய்சஸ்' என்னும் வானொலி நாடகத்தை ஒலிபரப்பியது. + +ஒரு எழுத்தாளர், பிண்டரை "நிரந்தரமாகத் தொந்தரவு கொடுப்பவர். வாழ்வு முறைகளிலும், கலைகளிலும் ஒத்துக் கொள்ளப்பட்ட உண்மைகளின் தொடர்��்சியான கேள்வியாளர்" எனக் குறிப்பிடுகிறார். + +சாமுவேல் பெக்கெட், ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, பிரான்ஸ் காஃப்க்கா, வில்பிரெட் ஒவென், மார்செல் புரூஸ்ட், ஷேக்ஸ்பியர், 40கள், 50கள், 60களின் ரஷ்ய, பிரெஞ்சு, அமெரிக்க திரைப்படங்கள் + + + + +வலைத்தளம் + +வலைத்தளம் அல்லது இணையத்தளம் () (குறுக்கவடிவமாக தளம் என்றும் பயன்படுத்துவர்) என்பது பெரும்பாலும், இணையத்தில் குறித்த ஒரு ஆள்களப்பெயருக்கு அல்லது துணை ஆள்களப்பெயருக்கு பொதுவான வலைப்பக்கங்களை கூட்டாக குறிக்கும். + +வலைப்பக்கமானது பொதுவாக மீயுரை பரிமாற்ற வரைமுறையினூடாக (HTTP) பெற்று பார்வையிடக்கூடிய ஒரு HTML/XHTML ஆவணமாக இருக்கும். வலைத்தளத்திலுள்ள வலைப்பக்கங்கள் யாவும், பொதுவாக ஒரே வழங்கியில் வைக்கப்பட்டிருக்கும். சில வேளைகளில் வெவ்வேறு வழங்கிகளிலும் வைக்கப்பட்டிருக்கலாம். + +ஆள்களப்பெயரை உலாவியில் இட்டு வலைத்தளத்தை அணுகும்போது, அவ்வலைத்தளத்திலுள்ள அத்தனை பக்கங்களையும் சென்றடைந்துவிட முடியாது. முதலில் முகப்பு பக்கமே காண்பிக்கப்படும். முகப்புப்பக்கத்தில் மற்றைய பக்கங்களுக்கான தொடுப்புக்கள் இருக்கலாம். முகப்புபக்கத்தை முதன்மையாகக்கொண்டு மற்றைய பக்கங்கள் படிமுறை ஒழுங்கில் அடுக்கப்பட்டிருக்கும். வலைத்தளங்களை பொதுவாக இலவசமாகவே பார்வையிடலாம் என்ற போதிலும், சில வலைத்தளங்களைப் பார்வையிடவும் பயன்படுத்தவும் கட்டணம் செலுத்த வேண்டும். + +வலைத்தளங்களை பார்வையிடுவதற்கு இணைய உலாவி எனப்படும் மென்பொருள் தேவை. + + + + +நிலையான வலைத்தளங்கள் மென்பொருள் நான்கு பரந்த பிரிவுகள் பயன்படுத்தி திருத்த முடியும்: + + + + +பல வலைத்தளங்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக மாதிரிகள் பயன்படுத்தி, பணம் சம்பாதிக்க நோக்கமாக உள்ளன: + + + + + + + + +எழுத்து பாகுபடுத்தி + +எழுத்து பாகுபடுத்தி (Scanner) - வருடி என்றும் அழைக்கப்படும். இது நிரல்மொழிமாற்றியின் முதல் அங்கம். மூல மொழியில் உள்ள நீண்ட வரிசையிலான எழுத்துக்களை பாகுபடுத்தி துண்டங்களாக ஒழுங்குபடுத்தும். இச்செயல்பாட்டை எழுத்து பகுப்பாய்வு எனலாம். + +துண்டங்கள் இயற்கை மொழியில் சொற்களுக்கு இணையானது. இத்துண்டங்களை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: + +எழுத்து பாகு��டுத்தியின் தொழிற்பாடு அடுத்தடுத்தாக வரும் எழுத்துக்களை எப்படி அடையாளப்படுத்துவது என்பதுவே. அடிப்படையில் எழுத்து பாகுபாடுத்தி ஒரு நிலை பொறியாகும். + + + + + + +இலக்கணப் பாகுபடுத்தி + +எழுத்து பாகுபடுத்தி மூலம் துண்டங்களாக ஆக்கப்பட்ட ஒரு மூல நிரலை இலக்கணப் பாகுபடுத்தி இலக்கணப் பகுப்பாய்வு (Parsing) செய்து அந்நிரலின் இலக்கணக் கட்டமைப்புக்களையும், அவற்றுக்கிடையான தொடர்புகளையும் அடையாளப்படுத்தி கருத்தியல் தொடர் மர வரைபடமாக வெளிப்படுத்தும். + + + + +பொருள் பகுப்பாய்வி + +நிரலின் பொருள் அல்லது இயல்பு தொடர்பான தகவல்களை கருத்தியல் தொடர் மரத்திற்க்கு பொருள் பகுப்பாய்வி (Semantic analyzer) இணைக்கும். பொருள் பகுப்பாய்வி இலக்கண பாகுபாடுத்திக்கு அடுத்ததாக இருக்கும். + + + + +வீழ்கட்டமைப்பு (கட்டிடம்) + +கட்டடங்களை திட்டமிட்டமுறையில் சூழலியல் கோட்பாடுகளுக்கு இணைய கூறு கூறுகளாய் தகர்ப்பதை வீழ்கட்டமைப்பு (Deconstruction) எனலாம். வீழ்கட்டமைப்பு கட்டிடங்களை இடித்து தள்ளல் அல்லது அழித்தல் செயல்பாட்டில் இருந்து வேறுபடுகின்றது. + +பயன்படுத்த முடியாது என்ற நிலையில் இருக்கும் கட்டிடங்களை முற்றாகவோ அல்லது பகுதிகளையோ அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. உதாரணமாக ஈழத்தில் போரின் காரணங்களால் மிகவும் பாதிக்கப்பட்ட கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை இருக்கின்றது. நிலம் மிகவும் பெறுமதியான சென்னை போன்ற நகரங்களில் குறைந்தளவு கொள்திறன் உள்ள அல்லது பழைய கட்டிடங்களை அகற்றி புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. மேலை நாடுகளில் கட்டிடங்களை அகற்றி புகு கட்டிட தொகுதிகளை அமைப்பது ஒரு வழமையான செயல்பாடு ஆகும். எனவே கட்டிடங்களை அகற்ற வேண்டிய தேவை என்றும் எங்கும் இருக்கின்றது. + +பொதுவாக மேலை நாடுகளில் கட்டிடத்தை தகர்த்து அல்லது இடித்துத் தள்ளிவிடுவார்கள். பல கட்டிடங்கள் excavator மற்றும் bulldozer போன்றவற்றை பயன்படுத்தி தகர்ப்பர். கிரேன்களில் நாட்டப்பட்ட பாரிய தகர் பந்து (wrecking ball) கொண்டும் தகர்க்கப்படுவதுண்டு. மேலும், வெடிபொருட்கள் உபயோகித்தும் சில கட்டிடங்கள் தகர்க்கப்படுவதுண்���ு. இம் முறைகள் விரைவாக பணியை செய்ய உதவினாலும் கட்டிடங்களை தகர்ப்பதற்கு பொதுவாக சிறந்த முறை இல்லை. வீழ்கட்டமைப்பு இவற்றை விட ஒரு சிறந்த முறையெனலாம். + + +வெவ்வேறு நாடுகளில் வீழ்கட்டமைப்பு பல்வேறு நிலைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. கட்டிட கட்டல் தகர்த்தல் கழிவுகள் (Construction and Demolition Waste) கழிவு குழிகளில் (land fills) இடப்படுவதில் இருந்து எவ்வளவு வீதம் தடுக்கப்படுகின்றது என்பதை வைத்து வீழ்கட்டமைப்பு எவ்வளவு வரை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்று உத்தேசமாக மதிப்பிடலாம். எனினும், சூழல், பண்பாட்டு போக்குகள், பொருளாதாரம், தொழில்நுட்பம், அரச கொள்கைகள் ஆகிய கூறுகளையும் ஆய்தே ஒரு நாட்டில் எந்த நிலையில் வீழ்கட்டமைப்பு நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதை கணக்கிட முடியும். + +ஒழுங்கமைக்கப்பட்ட வீழ்கட்டமைப்பு (systematic deconstruction) செயல்பாடுகள் வளர்ச்சியடைந்த மேற்கத்தைய நாடுகள் சிலவற்றில் சீரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. வளர்சியடைந்துவரும் சில நாடுகளில் வீழ்கட்டமைப்பின் பல கூறுகள் சிறப்பாக நடைமுறையில் இருந்தாலும் அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட வீழ்கட்டமைப்பு என்று கூற முடியாது. + +வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் வீழ்கட்டமைப்பை அண்மையில் அறிந்து செயல்படுத்த முனையும் கனடா, நோர்வே, துருக்கி போன்ற நாடுகளையும் யப்பான், நெதர்லாந்து, ஐ.இரா போன்ற அதி நிலையில் நடைமுறைப்படுத்தியிருக்கும் நாடுகளுடன் ஒப்பிட்டு வேறுபாடுகள் காணலாம். உதாரணமாக, யப்பானில் வீழ்கட்டமைப்பு அவ்வரசின் "recycle oriented society" என்ற இலக்கின் ஒரு முக்கிய அம்சம். கனடாவில் அதன் பெரிய பரப்பளவு (கழிவு குழிகள் மலிவில் கிடைக்கும்), இயற்கை வளம் (மீள் உபயோக தேவை உடனடியாக உணரப்படுவதை தடுக்கின்றது) காரணமாக வீழ்கட்டமைப்பு மிகவும் ஆரம்ப நிலையிலேயே நடைமுறைப்படுத்தப்படுகின்றது. + + + + + + + +தமிழர் போரியல் + +பிற மனித குழுக்கள் போலவே தமிழர் வாழ்விலும் போர் ஒரு தொடர் அம்சமாக இருக்கின்றது. தமிழர் தம்மிடையேயும் பிறருடனும் போர் செய்தற்கான காரணங்கள், தமிழர் போர் மரபுகள், தமிழர் போர் நுட்பங்கள் மற்றும் உத்திகள், தமிழ் போர் சாதிகள், தமிழர் சம்பந்தப்பட்ட போர் வரலாறு, தற்கால ஈழப்போர் ஆகியவற்றை ஆயும் இயல் தமிழர் போரியல் எனலாம். + +தமிழர் தொல்காப்பியக் காலந்தொட்டே போர்க்கருவிகளைக் கையாள்வதிலும், அவற்றை வடிவமைத்துக் கொள்வதிலும் பழக்கமுடையவராக இருந்துள்ளனர். + +பண்டைக்காலத்தில் நிலப்படையானது நான்கு வகைகளாகக் பிரிக்கப்பட்டிருந்தது. அவை: +கரிப்படை (யானைப்படை), பரிப்படை (குதிரைப்படை), தேர்ப்படை, காலாட்படை என்பன. + + +வளரி, அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கேடகம், கோடாலி, சக்கரம், சிறியிலை எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு, மழு, வாள், வில், வேலுறை + +போரில் வென்றபின் வீரர்கள் தோற்ற நாட்டில் படைவீடு அமைத்துத் தங்குவர். அப்படைவீடு சிதைந்த போர்க்கருவிகளைக் கொண்டு கட்டப்பட்டு இருக்கும். + + + + + +பொருளறிவியல் + +பொருட்களின் அமைப்புக்கும் பொருட்களின் தன்மை அல்லது இயல்புகளுக்கும் உள்ள தொடர்பை ஆயும் இயல் பொருளறிவியல் (Material Science) ஆகும். மேலும், பொருட்களை எப்படிப்பட்ட செயல்பாட்டு முறைகளுக்கு உட்படுத்தி வேண்டிய செய்கை அல்லது விளைவுகளை பெறலாம் என்பதையும் இவ்வியல் ஆய்கின்றது. + +பொருளறிவியல் மனித வாழ்வுக்கு மிக அவசியமான ஒரு துறை. மனித அல்லது சமூகங்களின் வளர்ச்சியை அவர்களின் பொருளறிவியல் நிலைகளை கொண்டு வரலாற்று ஆசிரியர்கள் வகுத்து விவரிப்பர். கற்காலம், உலோக காலம், இயந்திர காலம், குறைகடத்திகள் காலம், நுண்பொருளியல் காலம் என வரலாறை பிரிக்கலாம். + +ஆரம்பத்தில் சூழலில் தான் கண்ட பொருட்களான கல், மண், தடி, எலும்பு, தோல் போன்ற பொருட்களை மனிதன் உபயோகித்தான். பின்னர் பொருட்களை செயல்பாடுகளுக்கு(process) உட்படுத்தி அல்லது செப்பனிட்டு அவற்றின் இயல்புகளை மாற்ற முடியும் என்பதை உணர்ந்தான். உதாரணமாக மண்ணிலிருந்து மட்பாண்டம், செங்கல், கண்ணாடி ஆகியவற்றை பொருளறிவியலின் துணை கொண்டு ஆக்க முடிந்தது. வேதியியலின் வளர்ச்சியும் அதனோடு இணைந்த பொருளறிவியலின் வளர்ச்சியும் இன்று மனித வாழ்வை பல வழிகளில் மேம்படுத்தி நிற்கின்றன. இன்று பொருளறிவியலின் ஒரு முக்கிய முனையான நனோ தொழில்நுட்பம் புதிய பொருட்களை புதிய அணுகட்டமைப்புகளோடு உருவாக்க தகுந்தவாறு முன்னேறி வருகின்றது. இது ஒரு பொருளாதார, சமூக புரட்சிக்கே வழிகோலும் என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றார்கள். + + + + + + + +சா. ஞானப்பிரகாசர் + +நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) பன்மொழிப் புலவர்; தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர்களுள் ஒருவர். இலத்தின், கிரேக்கம் முதலாய பதினெண் மொழிகளில் எழுதவும், பேசவும் வல்லவராய் இருந்தார். பல தமிழ் நூல்களின் ஆசிரியர். "சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி" என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். + +இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து இணையரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் என்பதாம். + +அவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். + +1893 இல் தொடர்வண்டித் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார். + +யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ். குருமடத்தில் கற்ற இலத்தீன், பிரெஞ்சும் அவரை பல மொழிகளையும் கற்றிடத் தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார். + +இறை அர்ப்பணிப்புச் சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும். + +'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதன்று, சாங்கோபாங்க சுவாமிகளே அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார். + +18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார். + +சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்குமுகமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது. வழமையாக நினைவு முத்திரைகள் தலைநகர் கொழும்பிலேயே வெளியிடப்படும். ஆனால் இந்த முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நிறுவப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்துக்குரிய எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில் யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு. பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார். + + + + + +ஒடியல் + +பனங்கிழங்கை நெடுக்கு வாட்டில் கிழித்து வெயிலில் காயவிடும்போது கிடைக்கும் உலர்ந்த கிழங்கு ஒடியல் எனப்படுகின்றது. இந்த ஒடியலை நீண்ட காலம் வைத்துப் பயன்படுத்த முடியும். பொதுவாக ஒடியலை உரலில் இடித்து மாவாக்கி அதிலிருந்து பலவகையான உணவுப் பொருட்களைச் செய்து உண்கிறார்கள். அவற்றில் பிரபலமானது ஒடியல் பிட்டு. ஒடியல் மாவுடன் காய்கறி, பலாக்கொட்டை சேர்த்து ஒடியற்கூழ் காய்ச்சுவார்கள். இவை யாழ்ப்பாணத்தில் பிரபலமான உணவு வகைகள். + + + + +திறனாய்வுக் கோட்பாடுகளின் பட்டியல் + +திறனாய்வுக் கோட்பாடுகள் இப்பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன. (விரியும்) + + + + + + + +புங்குடுதீவு + +புங்குடுதீவு ("Pungudutivu") இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஏழு தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது. + +இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடிப்பும்சிறப்பாக நடைபெறுகின்றன. + +புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. + +அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று. இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர். இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். + +மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இ���மாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். + +இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். + +பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது. + +இலங்கையின் 1981ம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டின் படி 14622 பேர் அன்று வாழ்ந்துள்ளார்கள். இன்றைய நாட்டின் இனப்பிரச்சனை காரணமாக அதிகமான மக்கள் இடம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கின்றார்கள். + + + + + + + + + + + + +அராலி + +அராலி ("Arali") யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குக் கரையோரமாக அமைந்திருக்கும் ஒரு முக்கோண வடிவான கிராமமாகும். இது வட்டுக்கோட்டைத் தொகுதியின் அல்லது கோவிற்பற்றின் ஓர் உபபிரிவாகும். + +முற்காலத்தில் அராலியில் 'ஆறா' எனும் ஒருவகை மீன் அதிகமாகக் கிடைத்ததாலோ இன்றும் இவ்வூரில் அதிகமாகக் காணப்படும் அரளிச் செடிகள் அதிகமாக இருந்ததாலோ 'அராலி' என்னும் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும். வேலணை, சரவணை, நாரந்தனை மக்கள் கடல் அருகில் அராவணையாக வந்து இறங்கிய துறைமுகம் அராலித்துறை ஆனது எனவும் கூறப்படுகிறது. இத்துறைமுகத்தில் தீவுப்பகுதிகளில் இருந்து சங்கரத்தைக்கு சங்குகள் பெருமளவு இறக்கப்பட்டது. + +அராலிக் கிராமம் அராலி கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு என நான்கு பிரிவுகளாகப் பண்டைக்காலம் தொட்டே பிரிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து செல்பவர்கள் முதலில் காண்பது அராலிப் பாலத்தையும் வழுக்கையாற்றையுமே. அராலிப்பாலம் யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகருக்குக் கடற்கரையோரமாகச் செல்லும் வீதியில் ஐந்தாவது மைல் இறுதியிலே அமைந்துள்ளது. அராலியில் அராலி கிழக்க���, அராலி வடக்கு, அராலி தெற்கு, அராலி மேற்கு, அராலி மத்தி என ஜந்து கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. + +வழுக்கையாறு தெல்லிப்பழைப் பகுதியில் ஆரம்பித்து, மல்லாகம், அளவெட்டியூடாகப் பாய்ந்து, சண்டிலிப்பாயைத்) தாண்டி அராலிக் கடலை நோக்கி ஓடிவருகிறது. அராலிப் பாலத்தின் அருகே அமைந்திருக்கும் சந்தியிலிருந்து தெற்கு நோக்கி இரண்டு மைல் தூரம் போனால் அராலித் துறைமுகத்தையடையலாம். + + + + + + + + + + +இடம் சாரா இலக்கணம் + +ஒரு மொழியின் அனைத்து இலக்கண உருவகங்களும் V → "w" என்ற உருவாக்க முறையை பின்பற்றினால் அவ்விலக்கணம் இடம் சாரா இலக்கணம் (இ.சா.இ.) (Context Free Grammar) ஆகும். இங்கே V ஒரு non-terminal குறியாகவும், w ஒரு terminal அல்லது/அத்துடன் non-terminal குறிகளாகவும் இருக்கின்றன. ஒரே ஒரு உருவாக்க முறை இருப்பதால் இலக்கண விபரிப்பில் எந்த ஒரு இடத்திலும் V யை w ஆல் பிரதிநிதிபடுத்த முடியும், ஆகையால்தான் மேற்கண்ட இலக்கணத்தை இடம் சாரா இலக்கணம் என்பர். மொழியியலிலும் கணினியியலும் மேல் தந்த வரையறை பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. + +இடம் சாரா இலக்கணம் பேக்கஸ்-நார் முறை இலக்கண விபரிப்பு முறை கொண்டு பொதுவாக விபரிக்கப்படுகின்றது. + + + + +கருவாடு + +கருவாடு () (Dried fish) என்பது உப்பு தடவப்பட்டு வெயிலில் உலர்த்தப்பட்ட மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களைக் குறிக்கும். இவ்வாறு பதப்படுத்தப்பட்ட மீன்கள் நெடுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனால், இவற்றைக் கடலில் இருந்து தொலைவில் உள்ள இடங்களுக்கு எடுத்துச் சென்று உணவிற்காக விற்பனை செய்ய முடிகிறது. + + + + + +நேரிசை வெண்பா + +நேரிசை வெண்பா என்பது தமிழிலுள்ள மரபுச் செய்யுள் வகைகளுள் ஒன்றான வெண்பாவின் துணைப் பா வகையாகும். நேரிசை வெண்பாவுக்கான இலக்கணப்படி இது பின்வரும் அமைப்பைக் கொண்டிருக்கும். + + +பின் வருவது நான்கு அடிகளிலும் ஒரே வகையான எதுகை வரும் ஒரு விகற்ப நேரிசை வெண்பா: + +"தொல்லுலகில்" என்ற தனிச்சொல்லும் நான்கு அடிகளின் எதுகைகளும் சீராக இருப்பதனை ஒட்டி இது ஒரு-விகற்ப நேரிசை வெண்பா ஆனது. + +நளவெண்பாவில் உள்ள பின்வரும் செய்யுள் இரு விகற்ப நேரிசை வெண்பாவுக்கான ஒரு எடுத்துக்காட்டு ஆகும். + +இதன் இரண்டாவது அடியில் "விஞ்சியது" என்ற சொல் "தனிச்சொல்" ஆகும். முதல் இரண்டு அடிகளும் ஒருவகை எதுகையையும் (அஞ்சல் - வஞ்சி), மூன்றாம் நான்காம் அடிகள் இன்னொரு வகையான எதுகையையும் (காணப் - மாணப்) கொண்டு அமைந்துள்ளன. எனவே இது இரு-விகற்ப நேரிசை வெண்பா ஆனது. + + + + + +கணிமை மொழியியல் சொற்கள் பட்டியல் + + + + + + + +சந்திரகுப்த மௌரியர் + +சந்திர குப்தர் (சந்திரகுப்தன்) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் சந்திரகுப்த மௌரியர் மௌரியப் பேரரசை நிறுவிய அரசனாவார். இவர் இந்தியத் துணைக் கண்டத்தின் பெரும் பகுதியைத் தனது ஆட்சியின் கீழ்க் கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். இதனால் சந்திர குப்தர் இந்தியாவை ஒன்றாக்கிய முதலாவது மன்னன் எனப்படுவதோடு, இந்தியாவின் முதலாவது உண்மையான பேரரசன் எனவும் புகழப்படுகின்றார். கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளிலுள்ள படைப்புக்களில் சந்திரகுப்தன், சாண்ட்ரோகுப்தோஸ் ("Sandrokuptos") சாண்ட்ரோகாட்டோஸ் ("Sandrokottos"), ஆண்ட்ரோகாட்டஸ் ("Androcottus") போன்ற பல பெயர்களால் குறிப்பிடப்படுகின்றார். + +இவரது அரசவையில் கிரேக்க செலுசிட் பேரரசின் செலூக்கஸ் நிக்காத்தரின் தூதுவராக மெகஸ்தெனஸ் இருந்தார். + +நந்தனனின் அரசவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் இருந்த அந்தணரான சாணக்கியர் (கௌடில்யர்) +நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார். பாடலிபுத்திரத்திலிருந்து (இன்றைய பாட்னா) தட்சசீலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார்.அந்த இளைஞன் மௌரியப் பேரரசை நிறுவி இப்போதைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட சந்திரகுப்த மௌரியர். 2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமையால் சந்திரகுப்தரின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. ராஜவம்ச ஆணுக்கும் சூத்திரப் பெண்மணிக்கும்(முரா) பிறந்தவர் என்பார்கள் சிலர். பரம்பரையாகவே வேடர் என்றும் சொல்வார்கள் சிலர். + +கல்வி, அரசியல், போர்த்த��்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து கற்றார் சந்திரகுப்தர். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையைத் திரட்டி மகத தேசத்தின்(நந்தப் பேரரசு) எல்லைப்புறங்களைக் கைப்பற்றினார். முதல் வெற்றி. அந்த சமயம் நந்தப் பேரரசு மிகவும் வலுவிழந்திருந்தது. முதல் வெற்றி தந்திருந்த உற்சாகத்துடன் பாடலிபுத்திரத்தை நோக்கி முன்னேறினார். + +சந்திரகுப்தரின் வீரத்துக்கு முன்னால் நந்த வம்சம் நிறைய நேரம் நிலைக்கவில்லை. நந்த வம்சம் மண்டியிட்டது. தனது இருபதாம் வயதில் (கி.மு 321) மகத நாட்டின் மன்னராக முடிசூடினார் சந்திரகுப்த மௌரியர். இந்த மௌரியர் என்ற சொல்லுக்கும் இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். தாய் முராவின் பெயரால் மௌரியா வந்தது என்பது ஒரு கருத்து. மயில் வளர்ப்பவர்களால் சந்திரகுப்தர் வளர்க்கப்பட்டார். அதனால் மயூரா (சமஸ்கிருதத்தில் மயிலின் பெயர்.) என்ற வார்த்தையிலிருந்து வந்தது மௌரியா என்பது ஒரு கருத்து. + +பேரரசர் அலெக்சாந்தரின் படையெடுப்பில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சில பகுதிகள் அவர் வசம் போனதும் கி.மு 323ல் மரணமடைந்தார் அலெக்சாண்டர். அவர் மரணத்துக்குப் பிறகு அவர் வென்ற பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தியாவின் கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்கோடர் என்ற தளபதி ஆண்டு கொண்டிருந்தார். கி.மு 317ல் செலுக்கஸ் மீது படையெடுத்தார் சந்திரகுப்தர். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கஸ் ஆண்டு கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான், பலுசிஸ்தான் வரை சந்திரகுப்தர் வசம் சென்றது. தவிர செலுக்கஸ் நிக்கோத்தரின் மகள் ஹெலெனாவை மணம் முடித்தார். வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது. இந்தியாவில் தமிழகமும், கலிங்கமும், வட கிழக்கின் மலை நாடுகளும் அவர் வசம் இல்லாதிருந்தன. பதிலாக மேற்கில் பெர்சியாவின் எல்லை வரை அவரது ராஜ்ஜியம் பரவியிருந்தது. பெர்சிய இளவரசி (Princess of Persia) ஒருத்தியையும் அவர் மணந்ததாகச் சொல்வார்கள். சந்திரகுப்தரின் இந்த மாபெரும் வெற்றிக்கு அவரது படை முக்கியக் காரணம். ��ன்றரை லட்சம் வீரர்கள், 30,000 குதிரைகள், 9000 யானைகள், 8000 தேர்கள் கொண்டது அவரது படை. + += ஆட்சி = +சந்திரகுப்தரை மன்னாதி மன்னர் என்று சொல்லக்காரணம் அவர் அடைந்த வெற்றிகளோ அவர் ஆண்ட நிலப்பரப்போ மட்டும் அல்ல! அவரது ஆட்சிமுறையும் கூட அவர் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற ஒரு காரணம். இன்றைய ஆட்சி முறையில் இருக்கும் துறைகள் போல, ஆறு முக்கியத் துறைகள் வகுக்கப்பட்டன. வணிகம்/தொழில், உள்கட்டமைப்பு, புள்ளியியல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அவை. நீதியும் காவலும் தழைத்தோங்கியிருந்தன. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன. தண்டனைகள் கடுமையானவை. திருட்டு, வரி ஏய்ப்புக்குக் கூட மரண தண்டனை விதிக்கப்பட்டது. வர்த்தகத்தில் பல வரைமுறைகள் செய்யப்பட்டன. முறையான அளவைகள், வரிகள் கொண்டுவரப்பட்டன. + +சந்திரகுப்தரின் ஆட்சியை இரண்டு புத்தகங்கள் மூலம் அறியலாம். எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் "அர்த்தசாத்திரம்" மூலமும், அவர் ஆட்சியில் தேசம் எப்படி இருந்தது என்பதை கிரேக்கப் பயணி மெகஸ்தனிசின் "இண்டிகா" மூலமும் அறியலாம். + +சந்திர குப்தர் காலத்து ஆட்சியில் திருட்டு கிடையாது. மக்கள் உண்மையை மதித்து நடந்தனர். சந்திர குப்தர் காலத்தில் பஞ்சாயத்து ஆட்சி முறை சிறப்பாக நடைபெற்றது என்று அவரது கால ஆட்சிச் சிறப்பை இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் குறித்துள்ளார். + +கி.மு 298 வரை அரசாண்ட சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார். துறவியாக வாழ்ந்து வந்த சந்திரர் கி.மு 298ல் இன்றைய கர்நாடகா மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவில் பத்திரபாகு முனிவர் உட்பட பலருடன் மோன நிலையடைந்தார். + +சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரர், பேரன் அசோகர் என மூன்று தலைமுறை மௌரிய வம்சம் சிறப்பான ஆட்சியை அளித்தது. அசோகர் காலத்தில் தான் அதுவரை கைப்பற்றப்படாமல் இருந்த கலிங்க நாடு (ஒரிஸ்ஸா) வேட்டையாடப்பட்டது. அதன் பிறகு புத்த மதம், இலங்கை, சாலையோர மரம் என அசோகரது வாழ்க்கை நீளும். அசோகருக்குப் பிறகு வந்த மௌரிய அரசர்கள் வலிமையாக இல்லாததால் 50 வருடம் கழித்து (கி.மு 180) மௌரியப் பேரரசு வீழ்ந்தது. + + + + + +பிந்துசாரர் + +பிந்துசாரர் "(Bindusara)" என்பவர் மௌரியப் பேரரசின் இரண்டாவது மன்னர் ஆவார். கி.���ு 297 முதல் கி.மு 273 வரையிலான கி.மு மூன்றாம் நூற்றாண்டுக் காலத்தில் இவர் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சந்திரகுப்த மௌரியரின் மகனும் மாமன்னர் அசோகரின் தந்தையுமாவார் .இவர் தனது ஆட்சிக்காலத்தின் மௌரியப் பேரரசை விரிவுபடுத்தினார் என்றாலும் தந்தை சந்திரகுப்த மௌரியர் மற்றும் மகன் அசோகர் போல இவருடைய வாழ்க்கை ஆவணப்படுத்தப்படவில்லை. அவரைப் பற்றிய தகவல்களில் பெரும்பாலானவை அவரது மரணத்திற்குப் பின் பல நூறு ஆண்டுகளாக எழுதப்பட்ட பழம்பெரும் புராணக்கதைகளில் இருந்து பெறப்பட்டவையாகும். +பிந்துசாரா தனது தந்தை உருவாக்கிய பேரரசை ஒருங்கிணைத்தார். பிந்துசாரர் தனது நிர்வாகத்தை தென்னிந்தியாவில் பெற்ற பிராந்திய வெற்றிகளால் மேலும் விரிவுபடுத்தினார் என்று 16 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பௌத்த நூலாசிரியர் தாரானாதர் பாராட்டியுள்ளார்.ஆனால் சில வரலாற்றாசிரியர்கள் இந்த கூற்றின் வரலாற்று நம்பகத்தன்மையை சந்தேகிக்கின்றனர். + +பண்டைய மற்றும் இடைக்கால ஆதார மூலங்கள் பிந்துசாரரின் வாழ்க்கை விவரங்களை தெளிவாக விவரிக்கவில்லை. ஆனால் சந்திரகுப்தரை மையமாகக் கொண்ட சமண சமயத்தினரின் புராணக்கதைகளும், அசோகரை மையமாகக் கொண்ட பௌத்த சமயத்தினரின் புராணக்கதைகளும் பிந்துசாரர் பற்றிய தகவல்களை அளிக்கின்றன. ஏமச்சந்திரரின் பரிச்சிசுட்ட பர்வன் போன்ற சமண மதத்தினரின் புராணக் கதைகள் பிந்துசாரர் இறந்த ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதப்பட்ட கதைகளாகும் . அசோகரின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றிக்கூறும் பல பௌத்த புராணங்களும் அசோகரின் மரணத்திற்கு பல நூறு ஆண்டுகளுக்கு பின்னர் வாழ்ந்த பௌத்த எழுத்தாளர்களால் எழுதப்பட்டவையாகும். இந்த எழுத்தாளர்கள் சிறிய வரலாற்று மதிப்பை மட்டுமே கொண்டிருந்தனர் . + +பிந்துசாரரின் ஆட்சியைப் பற்றி பல குறிப்புகள் உருவாக்க இந்த புராணங்களைப் பயன்படுத்த முடியும் என்றாலும், அசோகருக்கும் புத்தமதத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பின் காரணமாக அவை நம்பத்தகுந்ததாக இல்லை . +சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட பௌத்த தொன்மவியல் கதைகளைக் கொண்ட திவ்வியவதனம், இலங்கையின் மிகப்பழமையான வரலாற்றுத் தொகுப்பான பாலி மொழியில் எழுதப்பட்ட தீபவம்சம், மகாவம்சம், வம்சதபக்சினி, சமந்தபாசடிக்கா மற்றும் 16 ஆம் நூ��்றாண்டைச் சேர்ந்த தாரனாதரின் எழுத்துக்கள் உள்ளிட்டவை பிந்துசாரர் தொடர்பான பௌத்த ஆதார மூலங்களாகும் +12 ஆம் நூற்றாண்டில் ஏமச்சந்திரர் எழுதிய பரிச்சிசுட்ட பர்வன் என்ற நூலும், 19 ஆம் நூற்றாண்டில் தேவசந்திரர் எழுதிய ராசவளி கதா என்ற நூலும் பிந்துசாரர் பற்றிய தகவல்களைக் கொடுக்கும் சமண சமய ஆதார மூலங்களாகும் +பிந்துசாரர் மௌவுரிய ஆட்சியாளர்களின் மரபுவழியில் வந்தவர் என்று இந்து மத புராணங்கள் குறிப்பிடுகின்றன . கிரேக்க புராணங்கள் இவரை அமிட்ரோகேட்டு என்கின்றன. + +மௌரியப் பேரரசின் நிறுவனர் சந்திரகுப்தருக்கு மகனாக பிந்துசாரர் பிறந்தார். பல்வேறு புராணங்களும் மகாவம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங்களின் மூலம் இது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது. மறுபுறத்தில் மன்னர் சுசுநாகனின் மகனே பிந்துசாரர் என தீபவம்சம் கூறுகிறது . பிந்துசாரர் நந்தாவின் மகன் என்றும் அவர் பிம்பிசாராவின் 10 வது தலைமுறை வம்சாவளி என்றும் அசோககவதனனின் உரைநடை பதிப்பு கூறுகிறது. தீபவம்சத்தைப் போல சந்திரகுப்தரின் பெயரை முற்றிலுமாக இது தவிர்த்து விடுகிறது. அசோகோகதனவின் பரவலான பதிப்பு சில வேறுபாடுகளுடன் இதேபோன்ற மரபுவழி கொண்டிருக்கிறது. அசோகவதனனின் அளவீட்டுப் பதிப்புகளும் இதேகருத்தை சில வேறுபாடுகளுடன் குறிப்பிடுகின்றன . + +சந்திரகுப்தர் செல்லூசிட்சுடன் ஒரு திருமண உறவு கொண்டிருந்தார், இதிலிருந்து பிந்துசாரரின் தாய் கிரேக்க அல்லது மாசிடோனியாவைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஊகத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் இதற்கு எந்த ஆதாரமும் இல்லை . 12 ஆம் நூற்றாண்டில் சமண எழுத்தாளர் ஏமச்சந்திரரின் பரிச்சிசுட்ட பர்வம் நுலின் படி பிந்துசாரரின் தாயர் பெயர் தூர்தரா என்பதாகும் . + +பிந்துசாரர் என்ற பெயரை தீபவம்சம், மகாவம்சம் உள்ளிட்ட புத்த சமய நூல்கள் சிறு மாற்றங்களுடன் பிந்துசாரோ என்ற பெயராக அங்கீகரிக்கின்றன. பரிசிசுட்ட பர்வன் போன்ற சமண சமய நூல்களும் இந்து சமய புராண நூல்களும் விந்துசாரர் என்கின்றன. சந்திரகுப்தாவின் வாரிசாக வேறு பெயர்களை மற்ற புராணங்கள் தருகின்றன. + + + + +அகிலத்திரட்டு அம்மானை + +'அகிலத்திரட்டு அம்மானை' பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய சமயமான அய்யாவ��ியின் புனித நூலாகும். இதனை சுருக்கமாக அகிலம் என்றும் அழைப்பர். +இது அய்யாவழி புராண வரலாற்றின் தொகுதியாகவும் விளங்குகிறது. அம்மானை வடிவில் இயற்றப்பட்ட நூல்களுள் மிகப்பெரியதான அகிலம், கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் 27-ஆம் தியதி இறைவனால் அருளப்பட்டு, அய்யா வைகுண்டரின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடரால் எழுத்து வடிவம் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. + +அகிலத்தைப்பற்றி சீடர் அரி கோபாலன் கூறும் போது, இறைவனை பணிந்து இரவு தூங்கும் பொழுது இறைவன் அவரருகில் சென்று அகிலத்தின் முதற்பகுதியான 'காப்பு' பகுதியின் முதல் சீரான 'ஏர்' -ஐ கூறி மீதிப்பகுதியை 'உன் மனதின் அகமிருந்து கூறுவேன்' என்றதாக கூறுகிறார். ஏறத்தாழ நூறு ஆண்டுகள் பனை ஓலையில் பாதுகாக்கப்பட்டு வந்த அகிலத்திரட்டு அம்மானை கி.பி 1939-ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. + +ஆகிலத்தின் படி இந்நூல் இறைவன் கலி யுகத்தை மாற்றி தர்ம யுகத்தை மலரச்செய்யும் பொருட்டு உலகில் அவதரித்த காரண-காரியத்தை கூறுவதாகும். இது வைகுண்டரைப் பற்றிய வரலாற்று நிகழ்வுகளையும், சம்பவங்களையும் புது வடிவம் கொடுக்கப்பட்ட பழைய இந்து புராணங்களுடனும், இதிகாசங்களுடனும் இணைத்து, வேதம் முதலிய அனைத்து சாஸ்த்திரங்களுடைய கருத்துக்களின் தொகுதியாக விளங்குகிறது. இது உலகம் தோன்றியது முதல் தர்ம யுகம் வரையிலான அனைத்து நிகழ்வுகளையும் அய்யா நாராயணர் அன்னை லெட்சுமி தேவியிடம் எடுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. + +அகிலம் அரி கோபாலன் சீடரால் இயற்றப்பட்டாலும் அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று அவருக்கு தெரியாது. அவர் ஒரு கருவியாக மட்டும் பயன்படுத்தப்பட்டிருக்கிறார். அய்யா வைகுண்டம் சென்றதும் அது வரை திறக்கப்படாத ஏடு கட்டவிழ்க்கப்பட்டது. அப்போது அதிலே அய்யாவழிக்கான வழிமுறைகள் கூறப்பட்டிருந்தன. அதைப்பின்பற்றி சீடர்கள் அய்யாவழியை பரப்பலாயினர். + +அகிலம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. உலகம் தோன்றியது முதல் வைகுண்ட அவதாரத்துக்கு முன்பு வரையிலான சம்பவங்கள் முதல் பகுதியாகவும், வைகுண்ட அவதாரம் முதல் வைகுண்டர் துதி சிங்காசனத்தில் இருந்து ஈரேழுலகையும் ஆளும் தர்ம யுகம் வரையுலான நிகழ்வுகள் இரண்டாம் பகுதியாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன. + +அகிலம் தமிழில் செய்யு���் வடிவில் இயற்றப்பட்டிருக்கிறது. இதில், அம்மானை முறையில் அதிகமாக கையாளாப்படும் இரு எழுத்து முறைகளான விருத்தம் மற்றும் நடை பெரும்பாலான பகுதிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் வெண்பா, முதலிய பல இலக்கண முறைகள் அகிலத்தில் கையாளப்பட்டிருக்கின்றன. + +படிப்போரின் வசதிக்காக அகிலம், பதினேழாக பகுக்கப்பட்டுள்ளது. அகிலம் ஒன்று, இரண்டு, மூன்று... என்றவாறு பெயரிடப்பட்டுள்ளன. +அகிலத்திரட்டின் முதற்பகுதியான அகிலம் ஒன்று மூன்று நீதம், மற்றும் நீடிய யுகம், சதுர யுகம், நெடிய யுகம், கிரேதா யுகம் ஆகிய நான்கு யுகங்கள் பற்றிய செய்திகளை கூறுவதாக அமைந்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல் காப்பு, அரிகோபாலன் சீடரின் அவையடக்கம் உட்பட பல பகுதிகள் இதனுள் வருகின்றன. + + + + + +எண் அமைப்பு + + + + + + + + +அய்யா வைகுண்டர் + +அய்யா வைகுண்டர், இறைவன் கலி யுகத்தை அழித்து தர்ம யுகத்தை மலரச்செய்ய எடுத்த மனு அவதாரம் என அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது. அய்யாவழி புராணத்தின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. அகிலம் கூறும் ஒருமைக் கோட்பாட்டின் அடிப்படையாக விளங்கும் ஏகம், வைகுண்டராக அவதரிப்பதால் அவரை மையமாகக் கொண்ட ஓரிறைக் கோட்பாட்டை அய்யாவழி வலியுறுத்துகிறது. + +" முக்கியக் கட்டுரை: சம்பூரணதேவன்" + +கி.பி.1809-ஆம் ஆண்டு இந்தியாவின் தென்கோடியான குமரி மாவட்டத்திலே தாமரைகுளம் என்னும் சிற்றூரில், பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியருக்கு மகனாக ஒரு குழந்தை பிறக்கிறது. ஒடுக்கப்பட்ட சாதியாக கருதப்படும் சாணார் இனத்திலே, ஏழை குடும்பத்தில் பிறந்த அக்குழந்தைக்கு 'முடிசூடும் பெருமாள்' என்று பெயர் சூட்டுகிறார்கள். மேல் சாதியினரின் தூண்டுதலால் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் இப்பெயரை சூட்டியதை எதிர்த்ததால் குழ்ந்தையின் பெயர் 'முத்துக்குட்டி' என்று மாற்றப்பட்டது. + +முத்துக்குட்டி தெய்வீகத்தில் ஆர்வம் உடைய சிறுவனாக வளர்ந்து வருகிறான். அவன் சிறந்த விஷ்ணு பக்தனாவன். அவன் தனது வீட்டில் அவருக்கென்று ஒரு பீடம் அமைத்து வழிபட்டதாக ஆகிலம் கூறுகிறது. அவனுக்கு பதினேழு வயதில் திருமணம் நடக்கிறது. பக்கத்து ஊரான புவியூரைச் சார்ந்த திருமாலம்மா���் என்னும் மங்கையை மணக்கிறார். திருமாலம்மாளுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தாலும் முற்பிறப்பின் காரணமாக அவள் அக்கணவருக்கு செய்யவேண்டிய கர்மம் நிறைவேறியதாலும் முற்பிறப்பில் சம்பூரணத்தேவனிடம் கொண்ட காதலின் அடிப்படையில் சம்பூரணத்தெவனை சந்தித்து அவருடன் இணைகிறார், அப்பிறவியில் பரதேவதையாக இருந்த இந்த திருமாலம்மாள். + +பின்னர் முத்துக்குட்டி என்னும் இச் சம்பூரணத்தேவன் பனைத் தொழிலும், விவசாயமும் செய்து வாழ்ந்து வருகிறார் + +இவ்வாறு வாழ்ந்து வரும் அவர் தனது இருபத்து இரண்டாவது வயதில் நோய்வாய்ப்பட்டு இரு வருட காலமாக அவதியுற்று வருகிறார். ஒரு நாள் முத்துக்குட்டியின் தாயாரான வெயிலாள் ஒரு கனவு காண்கிறார். அக்கனவில் நாராயணர் தோன்றி அவளது மகனை மாசி மாதம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெறும் விழாவுக்கு கொண்டு வந்தால் மிகுந்த பேறு கொடுப்பதாகக் கூறுகிறார். அதனால் வெயிலாள் சுற்றத்தார் சூழ முத்துக்குட்டியை ஒரு தொட்டிலில் வைத்து சுமந்து செல்கிறார்கள். அங்கே கடலருகே சென்றதும் அவர் எழுந்து வேகமாக நடந்து கடலுக்குள் சென்றது போல் அனைவருக்கும் தெரிகிறது. ஒரு நாள் காத்திருந்த பிறகு அனைவரும், போனவர் வரமாட்டார்; அவர் இறந்து விட்டார் என்று ஊர் திரும்பினார்கள். ஆனால் தாய் வெயிலாள் மட்டும் அழுதழுது கடற்கரையில் அமர்ந்திருந்தார். + +அதேவேளையில் கொல்லம் ஆண்டு 1008 மாசி 20-ல்,முப்பொருளும் ஒன்றாய் விளங்கும் அய்யா நாராயணருக்கும் மகரச்சிலையாய் திருச்செந்தூர் கடலுள் நின்றிலங்கிய அன்னை மகாலட்சுமிக்கும் மகவாக அய்யா வைகுண்டர் கடலிலிருந்து திருமாலிடம் கலியழிக்கும் விஞ்சைகள் பெற்று அரூபியாக வெளிப்படுகிறார். வைகுண்டர், தான் பெற்ற விஞ்சையை செயல்படுத்தும் பொருட்டு தெட்சணம் நோக்கி நடந்தார். வைகுண்டர் கடலிலிருந்து அவதரித்த இடம் அய்யாவழி சமயத்தின் புனிதத் தலங்களுள் ஒன்றாகும். அவதாரப் பதி என்று அழைக்கப்படும் இது, செந்தூர் பதி என அகிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. + +1008 - ல் கடலில் இருந்து உதித்த வைகுண்டர் ஒரு ஒப்பற்ற அவதாரம் என அகிலம் கூறுகிறது. + +முதலாவதாக கலி யுகத்துக்கு முந்திய 6 யுகங்களிலும் குறோணியின் ஒவ்வொரு துண்டுகளும் ஒவ்வொரு உருவம் தாங்கி உலகுக்கு வருகிறது. அவற்றை அழிக்கும் பொருட���டு நாராயண மூர்த்தி உலகில் பிறந்து அவனை அழித்தார். ஆனால் தற்போதைய கலி யுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி, மாயையாக உலகிற்கு வந்து மக்களின் மனதில் குடிகொண்டுள்ளதால் அவனை முன்பு போல் அழிப்பது இயலாததாகும். மேலும் கலியன் கேட்ட கொடிய வரங்களில் அவன் மும்மூர்த்திகளின் வடிவத்தையும் வரமாகப் பெற்ற காரணத்தினால், நாராயணர் நேரடியாக உலகில் அவதரித்து அவனை அழிக்க முடியாது. இதனை அகிலம், 'முன்னின்று கொல்ல மூவராலும் அரிது' என்கிறது. ஆனால் முதலில் குறோணியை கொல்லத் தவம் இருக்கும் போது திருமால் சிவனிடம் கொடுத்த வாக்கு பிரகாரம் நாராயணர் தான் கலியனை அழிக்க கடமைபட்டிருக்கிறார். மேலும் கலியன் வரம் வாங்கி வரும் போது நாராயணருக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக, ஒரு பண்டாரத்தை கலியனை வைத்து அட்டி செய்ய வைப்பதன் மூலம், அவனை அழிக்க முடியும். இவ்வனைத்து நிலைகளையும் சரி செய்யும் வண்ணம் முதன் முதலாக, நிர்குணனாகிய, ஏகப்பரம்பொருளான இறைவன் நாராயணரை சூட்சுமமகக்கொண்டு மனித உடலிலே மூன்றின் தொகுதியாக, பண்டார வடிவத்தில் அவதரிக்கிறார். + +இறைவன் நேரடியாக பிறக்க முடியாத காரணத்தினால் அவதாரம் மூன்று நிலையில் நடக்கிறது. + + +இது முதல் சான்றோர் வழியில் வந்த மனித உடல், நாராயணரின் சூட்சும உடல், ஏகம் என்னும் காரண உடல், இவை மூன்றின் தொகுதி வைகுண்டர் என பிறக்கிறார். எனவே புதிதாக பிறந்த வைகுண்டக் குழந்தைக்கு விஞ்சை என்னும் உபதேசம் நாராயணரால் கொடுக்கப்படுகிறது. + +பின்னர் முருகனுக்கு சட்டம் வைத்த பின்னர் ஏகப்பரம்பொருள், நாராயணரை உட்படுத்தி, வைகுண்ட அவதாரம் கொண்டு கடலின் மேல் வந்து தருவையூர் என்னும் இடத்தில் மனித உடல் (பொன்னு நாடார், வெயிலாள் தம்பதியரின் மகன்னான முத்துக்குட்டியின் உடல்) எடுத்து பண்டார உருவாக தெட்சணம் நோக்கி நடந்தார். + +ஆக வைகுண்டர் என்பவர் சாதாரண மனிதர் மட்டும் அல்ல, நாராயணர் மட்டும் அல்ல, ஏகப்பரம்பொருள் மட்டும் அல்ல, ஆனால் மற்றொரு புறம், மனிதரும் தான், நாராயணரும் தான், ஏகப்பரம்பொருளும் தான். சரியாகச்சொன்னால் அவர் இம்மூன்றின் தொகுதியாவார். சிவபெருமானுடன் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப் பிரகாரம் கலியை அழிக்கும் கடமை உடையவர் இவரே. வைகுண்ட அவதாரத்தில் இவ்வளவு சூட்சுமங்கள் மேற்கொண்டதற்கு கா���ணம், கலியன் வாங்கிய வரங்களை முறியடிப்பதற்காகவே. + +"முக்கியக் கட்டுரை:வைகுண்டரின் தவம்" + +தெட்சணம் எனப்படும் பூவண்டன் தோப்பை (தற்போதய சுவாமி தோப்பு) அடைந்த வைகுண்டர் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் புரிந்தார். அவர் மூன்று நிலையில் தவம் மேற்கொண்டதாக அகிலம் கூறுகிறது. மூன்று நிலைகளும் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த நோக்கங்களை கூறும் போது அகிலம், + +மேலும் தவத்தின் இருப்பு முறையும் நிலைக்கு நிலை மாறுபட்டதாக கூறப்படுகிறது. முதல் இரண்டு வருடங்களும் அவர் ஆறு அடி குழியிலும், அடுத்த இரண்டாண்டுகள் தரையிலும், கடைசி இரண்டு ஆண்டுகள் உயர்ந்த பேடமிட்டு தவம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் தவம் புரிந்த கால கட்டத்தில் பச்சரிசிப் பால் அல்லாது வேறெந்த உணவு உட்கொள்ளவில்லை; குறைவாகப் பேசினார். + +அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளில் முக்கியமானதாக பேய்கள் எரிப்பை அகிலத்திரட்டு அம்மானை கூறுகிறது. இவை அய்யா தவம் இருந்த காலகட்டத்தில் நடந்தவைகளாகும். வைகுண்ட அவதாரத்தின் மூலம் அனைத்து பேய்களும் எரிக்கப்படுகின்றன. + +அய்யா தவம் இருந்த வடக்கு வாசலில் இச்சம்பவம் நடைபெறுகிறது. அய்யாவை தரிசிக்க வந்திருந்த மக்களிலே சிலரின் உடம்புகளில் பேய்களை ஆட வைக்கிறார் அய்யா. பின்னர் அவர்களின் சக்திகளை ஒப்படைத்து தீயிலே தங்களை மாய்த்துக்கொள்வதாக சத்தியம் செய்யவைக்கிறார். இவ்வாறௌ அய்யாவின் கட்டளைகளுக்கிணங்கி அவை சத்தியம் செய்ததும் பேயால் ஆட்கொள்ளப்பட்டவர்கள் தரையில் விழுகின்றனர். இவ்வாறு பேய்கள் எரிக்கப்படுகின்றன. அகிலம் இந்நிகழ்ச்சியை சிறப்பாக விவரிக்கிறது. + +"(மேலும் விவரங்களுக்கு:அய்யாவழி புராணத்தை) காண்க" + +பேய்களை எரித்தது போன்று மேலும் பல அவதார இகனைகளை வைகுண்டர் நடத்தியுள்ளார். இதைப்பற்றி கூறும்போது அகிலம், வைகுண்டர் மலையரசர்கள் எனப்படும் காணிக்காரர்களின் மந்திர தந்திர வாகட முறைகளை திரும்பப்பெற்று விட்டதாக கூறுகிறது. + +மலைகளில் வாழும் காணிக்காரார்கள் மிகுந்த மந்திர சக்தியுடையவர்களாகவும் குறி சொல்லும் திறமை படைத்தவர்களாகவும், பேய் ஓட்டும் சக்தி படைத்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். வைகுண்டர் அவர்களை தெச்சணம் எனப்படும் அய்யா தவம் இருந்த சுவாமிதோப்பிலே மக்கள் முன்னிலையில் தங்கள் சக்தியனைத்தையும் வைகுண்டரிடம் ஒப்படைத்து உறுதிமொழி அளிக்க செய்தாக ஆகிலம் கூறுகிறது. அய்யாவின் இச்செயலை மக்கள் மிகுந்த ஆச்சிரியத்துடன் கண்டுகளித்தனர். இச்செயல் அவர்கள் மனதில் வைகுண்டர் மீது மிகுந்த பக்தியை உருவாக்கியது. அவர்கள் அய்யாவை "வைகுண்ட சுவாமி" என அழைக்கலாயினர். பேயை எரித்த வைகுண்டர் சுற்றி இருந்த மக்களை பார்த்து கீழ்க்கண்டவாறு கூறினார், + +வைகுண்டரின் புகழ் தென் திருவிதாங்கூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் மிகவேகமாகப் பரவியது. அவர் சமுதாயப் பார்வையில் ஒரு அற்புத சக்தி படைத்த மனிதராக அறியப்பபட்டார். மறுபுறம் சமய நம்பிக்கையின் அடித்தளத்தில் பண்டாரமாக அறிவிக்கப்பட்டார். அகிலத்திரட்டு அம்மானை அவரை நாராயண பண்டாரம் என விளம்புகிறது. + +நாட்டுமக்கள் இவரது போதனைகளை கவனிக்க இவர் முன்னிலையில் கூடினார்கள். மேலும் அவர் அவர்களது நோய்களைத் தீர்த்ததாகவும் அகிலம் கூறுகிறது. அவரை மக்கள் வழிபடத்தொடங்கினர். வைகுண்டர் அவர்களை சாதி வேறுபாடின்றி ஒரே கிணற்றில் குளிக்க போதித்தார். மேலும் அவர்களை அனைத்து பேதங்களையும் கடந்து சமபந்தி உண்ணவும் போதித்தார். இந்தியாவின் முதல் சமபந்தி அய்யாவழி சமயக் கூடல்களில் தான் அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. + +அய்யா மக்களுக்கு பல போதனைகளை வழங்கினார். அவற்றில் முக்கியமானதாக, அவர் நடக்கும் கலியுகத்தை அழித்து பேரின்பநிலையான தர்மயுகத்தை மலரச்செய்து சான்றோருக்கு நித்திய வாழ்வை அளிக்கப் போவதாக கூறினார். மறுமை தர்மமான அந்நிலையை அடைய ""தாழக் கிடப்பாரை தற்காப்பதே தர்மம்"" என்னும் கோட்பாட்டை ஆதாரமாக வைத்துச் செயல்பட மக்கள் அவரால் அறிவுறுத்தப்பட்டனர். மேலும் அவரின் அவதார செயல்பாடுகள், சமுதாயப் பார்வையில் இக்கோட்பாட்டையே மையமாக வைத்தே சுழல்வதைப் பார்க்க முடிகிறது. + +சான்றோராகிய மக்கள் தர்மயுக வெளிப்படலுக்கு முக்கிய பங்கு ஆற்ற வேண்டியவர்களாக அறிவுறுத்தப்பட்டனர். அவர்கள் தங்களை தர்மயுக மக்களாக மாற்ற சில முறைகளை கடைபிடிக்க அய்யா வளியுறுத்தினார். இவ்வாய்மொழிகளில், மக்கள் தங்களை சுய மரியாதை உடையவர்களாக, மானமுடையவர்களாக, அச்சமற்றவர்களாக, வடிவப்படுத்துமளவு கலி தன்னால் அழிந்துகொண்டே வரும் என்பது முதன்மைபெற்றது. இங்குள்ளவை அனைத்தும் ஒன்றாதலால் எதற்கும் அச்சமில்லை என்னும் அத்துவித கோட்பாடடை ஒத்திருந்தது இது. மக்கள் கலியாகிய மாயை விட்டகலுமளவு வைகுண்டர் தர்ம ராஜாவாக இருந்து அவர்களை ஆளும் இத்தர்ம யுகத்தை உணரமுடியும் என்னும் அகிலக் கோட்பாடு இதை உறுதி செய்கிறது. + +அய்யாவின் புகழையும் அவரைச்சுற்றி திரளும் ஆயிரக்கணக்கான மக்களையும் கண்டு பொறையுற்ற சில மேட்டுகுடியினர் அப்பகுதியை ஆண்டு வந்த திருவிதாங்கூர் மன்னன் சுவாதி திருநாளிடம் புகார் செய்ததாக தெரிகிறது. இதை அகிலமும் குறிப்பிடுகிறது. இதன் பெயரில் மன்னன் வைகுண்டரை கைது செய்து துன்பப்படுத்தினான். அங்கு அவர் பல அற்புதங்களை செய்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. + +சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வைகுண்டர் சான்றோர் மக்களால் வாகனம் மூலம் தெச்சணம் கொண்டுவரப்பட்டார். பின்னார் சான்றோர் மக்களை பக்குவப்படுத்த புற மற்றும் அகத்தூய்மையை அளிக்கும் துவையல் தவசு எனப்படும் தவமுறையை செயல் படுத்த 700 குடும்ப மக்களை வாகைப்பதிக்கு அனுப்பிவைத்தார். மேலும் பல அவதார இகனைகளை நிறைவேற்றினார். மும்மையின் தொகுதியான வைகுண்டர் நாராயணராக இருந்து சப்த கன்னியரையும், பரப்பிரம்மம் எனப்படும் ஏகமாக இருந்து ஏழு தெய்வ கன்னியரையும் திருமணம் செய்தார். மேலும் திருநாள் இகனையையும் நடத்த உத்தரவிட்டார். + +பின்னர் வைகுண்டரை சான்றோர் தங்கள் வீடுகளுக்கு விருந்துக்கு அழைத்ததாக அகிலம் குறிப்பிடுகிறது. அவர் வாகனத்தில் சான்றோரால் சுமந்து செல்லப்பட்டார். இவ்விருந்துகளின் போது அவர் அந்தந்த இடங்களில் நிழல் தாங்கல்களை அமைத்துக் கொடுத்ததாக கூறப்படுகிறது. + +ஆனால் இக்கருத்துக்கு கருத்துக்களும் உண்டு. இவற்றை எதிர்ப்பவர்கள் அகில வரிகளை ஆதாரம் காட்டுகிறார்கள். வைகுண்டர் அவைகளுக்கு அடிக்கல் நாட்டவில்லை எனவும் அவ்விழாக்களில் அவர் கலந்துகொள்ள மட்டுமே செய்தார் என்பது அவர்கள் நிலைபாடு. ஆனால் சில தாங்கல்கள் அவர் சச்சுருவமாக இருந்தபோதே அமைக்கப்பட்டு விட்டது என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று. வைகுண்டர் ஐவரை சீடர்களாக தேர்ந்தெடுத்தார். அவர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் மூலமாகவே அய்யாவழியின் முதன்மைப் போதனை நூலாகிய அகிலத்திரட்டு அம்மானை வெளிப்படுத்தப்படுகிறது. + +வைகுண்டர் 1851- ஆம�� ஆண்டு ஜூன் மாதம், திங்கட்கிழமையில் வைகுண்டம் சென்றார். அவர் எடுத்த அவதார உடல் தற்போது சுவாமிதோப்பு பதியில் பள்ளியறையாக இருக்கும் இடத்தில் மண்ணறையில் வைக்கப்படுகிறது. இப்பார்வை அகிலத்தின் அடிகளை ஆதாரமாகக் கொண்டு கருதப்படுபவை. ஆனால் இதே வரிகளை ஆதாரமாகக் கொண்டு அவர் மனித உரு எடுக்கவில்லை என்றும், இறைவனை ஜோதிரூபமாக பள்ளியறையில் பாவித்து சான்றோர் திருநாள் நடத்தினார்கள் என்பது சில தத்துவ முதன்மை வாதிகளின் கருத்து. மேலும் சில வரிகளின் ஆதாரத்துடன், வைகுண்டர் மனித உரு எடுத்தார் எனவும், ஆனால் அவர் உடலோடு வைகுண்டம் சென்றுவிட்டதால் சுவாமி தோப்பு பள்ளியறையில் மேற்குறிப்பிட்ட மண்ணறை முறை ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்பது வேறு சில அமைப்புகளின் வாதம். + +அய்யா வைகுண்டருக்கு ஐந்து சீடர்கள் உண்டு. முந்தின யுகத்தில் பாண்டவர்களாக இருந்த ஐந்து பேரையும் இக்கலி யுகத்தில் ஐந்து சீடர்களாக பிறவி செய்யப்பட்டதாக அகிலம் கூறுகிறது. அவர்கள், + + + +அய்யா வைகுண்டர் குறித்து வெளியான நூல்கள் + + + + + + +குனூ பொதுமக்கள் உரிமம் + +குனூ பொதுமக்கள் உரிமம் (GNU GPL) என்பது குனூ திட்டத்திற்கென ரிச்சர்ட் ஸ்டால்மன் என்பவரால் எழுதப்பட்ட மென்பொருள் உரிம ஒப்பந்தமாகும். இதுவே தளையறு மென்பொருட்களுக்கென இன்று பயன்படுத்தப்படும் உரிம ஒப்பந்தங்களுள் மிகவும் பிரபலமானதாகும். + +இவ்வுரிம ஒப்பந்தத்தின் மிக அண்மைய வெளியீடு, குனூ பொது மக்கள் உரிமம் பதிப்பு 3 (GPL v3) ஆகும். இப்பதிப்பு 1991 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. +இது நான்கு வகையான தளையறு நிலைகளை பயனர்களுக்கு வழங்குகிறது. + + + + + +ஒரு மென்பொருள், பயனாளர்களுக்கு மேற்கண்ட எல்லா தளையறு நிலைகளையும் வழங்கும்பட்சத்திலேயே அது கட்டற்ற மென்பொருள் எனக் கொள்ளப்படும். + +இத்தகைய மென்பொருட்களின் நகல்களை, மாற்றங்கள் செய்யப்பட்டநிலையிலோ அல்லது மாற்றம் எதுவும் செய்யாமலோ, இலவசமாகவோ, கட்டணங்கள் பெற்றுக்கொண்டோ, எங்கேயும் எவருக்கும் மீள்விநியோகம் செய்வதற்கு நீங்கள் எவருடைய அனுமதியையும் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை. செய்யும் மாற்றங்கள் பற்றி எவருக்கும் அறிவிக்க வேண்டிய கட்டாயமும் இல்லை. + + + + +குன்று + +குன்று என்பது அதனைச் சுற்றியுள்ள இடங்களைக் காட்டிலும் உயர்ந்து காணப்படுகின்ற ஒரு நில அமைப்பாகும். குன்றுகள் பெரும்பாலும் ஒரு உச்சியை உடையனவாக உள்ளன. எனினும், உச்சி எதுவும் இல்லாமலேயே உயர்வான தட்டையான நிலப்பகுதியையும் குன்று என அழைப்பது உண்டு. + +குன்று, மலை என்பவற்றுக்கு இடையேயான வேறுபாடுகள் தெளிவாக இல்லை. எனினும், குன்று மலையைவிட உயரம் குறைந்ததாகவும், சரிவு குறைந்ததாகவும் இருக்கும். ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] புவியியலாளர்கள், கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டருக்கு (1,000 அடி) மேற்பட்ட உயரம் கொண்ட குன்றுகளையே மலை எனக் கருதி வந்துள்ளனர். ஆனால், குன்றில்நடப்போர், கடல் மட்டத்திலிருந்து 610 மீட்டர்களுக்கு (2,000 அடி) மேற்பட்டவற்றையே மலை எனக் கொள்கின்றனர். ஆக்சுபோர்டு ஆங்கில அகராதியும் 610 மீட்டர்கள் உயரத்துக்கு மேற்பட்டவையே மலை எனக் குறிப்பிட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே ஒக்லஹோமா, பொட்டேயுவில் உள்ள கவானல் குன்று உலகின் உயரமான குன்று எனக் கூறப்படுகின்றது. இதன் உயரம் 1,999 அடி ஆகும். + +தமிழகத்தின் திருக்கழுக்குன்றம், அச்சிறுப்பாக்கம், நத்தம் பழவேலி, புலிப்பாக்கம், கொல்லிமலை போன்ற தொன்மையான இடங்களில் அமைந்துள்ள குன்றுகள் மதமாற்ற கிறித்துவ போதகர்களால் சிலுவை சின்னமிடப்பட்டும் புதிதாக சர்ச்சுகள் நிர்மாணிக்கப்பட்டும் ஆக்ரமிக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.இவற்றில் அரிய வகை மூலிகைகளும், வரலாற்றுச் சின்னங்களும் உள்ள குன்றுகளும் அடங்கும். + +மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாலும் ஒரு சில அதிகாரிகள் ஆக்ரமிப்புக்குத் துணை போவதாலும் இச்செயல் தொடர்ந்து நடந்து வரலாற்று சின்னங்களாக உள்ள குன்றுகள் பல காணாமல் போகும் நிலை தொடரக்கூடும் என்று சுற்றுச்சூழல் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் கருதுகின்றனர். + + + + + +மெய்யியல் கோட்பாடுகள் பட்டியல் + + + + + + + + + + + + + + +இயற்சீர் வெண்டளை + +தமிழ்ச் செய்யுள்களிலே அடுத்தடுத்து வரும் சீர்கள் அவற்றிடையே கொண்டுள்ள தொடர்பு தளை எனப்படுகின்றது. இவ்வாறான தளைகளுள் ஒரு வகையே இயற்சீர் வெண்டளை ஆகும். + +இரண்டு சீர்களுக்கிடையே இயற்சீ���் வெண்டளை உருவாவதற்கு, + + +வெண்பாக்களுக்கு உரியதான வெண்டளை உருவாகும்போது நிலைச்சீரானது, இயற்சீர் என அழைக்கப்படும் ஈரசைச் சீராகவோ, உரிச்சீர் என வழங்கும் மூவசைச் சீராகவோ இருக்கலாம். இயற்சீரை நிலைச் சீராகக் கொண்ட வெண்டளையே இயற்சீர் வெண்டளை ஆகும். + + + + + +வணிக நிலையங்களின் தமிழ்ப்பெயர் பட்டியல் + + + + + + + +எழுத்து (யாப்பிலக்கணம்) + +யாப்பிலக்கணத்தில் செய்யுள் அல்லது பாக்களுக்கு அடிப்படையாக அமையும் உறுப்பு எழுத்து ஆகும். இங்கே எழுத்து என்பது மொழியை எழுதுவதற்குப் பயன்படும் குறியீடுகளையன்றி அவற்றினால் குறிக்கப்படும் ஒலிகளையே குறித்து நிற்கின்றது. செய்யுள்களைப் பொறுத்தவரை மொழியின் ஒலிப் பண்புகள் சிறப்புப் பெறுகின்றன. இதனால் இந்த ஒலிப் பண்புகளுக்கு ஆதாரமாக அமையும் எழுத்துக்களை, அவற்றை ஒலிப்பதற்குத் தேவையான கால அளவுகளைக் கருத்தில் கொண்டு வகைகளாகப் பிரித்துள்ளார்கள். + +தமிழில் எழுத்துக்கள் உயிரெழுத்துக்கள், மெய்யெழுத்துக்கள் என இரு பிரிவுகளாகப் பிரித்து அறியப்படுகின்றன. இவற்றுள் அ முதல் ஔ வரையான 12 உயிரெழுத்துக்கள் அவற்றுக்குரிய கால அளவுகளுக்கு அமைய குறில், நெடில் என இரண்டாக வகுக்கப்படுள்ளன. க் முதல் ன் வரையான 18 மெய்யெழுத்துக்களில் குறில், நெடில் என்ற வகைப்பாடு கிடையாது. மெய்யெழுத்துக்கள் உயிரெழுத்துக்களுடன் சேர்ந்து உருவாகும் 216 உயிர்மெய் எழுத்துக்கள், அவற்றில் அடங்கியுள்ள உயிரெழுத்துக்களின் வகையைப் பொறுத்துக் குறிலாகவோ நெடிலாகவோ அமைகின்றன. கீழேயுள்ள அட்டவணையில் இவை பற்றிய விபரங்கள் தரப்பட்டுள்ளன. + +குறில் எழுத்துக்களின் ஒலி அளவு ஒரு மாத்திரை அளவினதாகக் கொள்ளப்படுகின்றது. இதன் அடிப்படையில் நெடில் எழுத்துக்களின் கால அளவு இரண்டு மாத்திரைகளாகவும், மெய்யெழுத்துக்களின் கால அளவு அரை மாத்திரைகளாகவும் உள்ளன. உயிர்மெய்க் குறில்களினதும், உயிர்மெய் நெடில்களினதும் கால அளவுகளும், முறையே ஒரு மாத்திரையாகவும், இரண்டு மாத்திரைகளாகவும் உள்ளன. + +ஐகார, ஔகார எழுத்துக்கள் நெடில்களாகக் கொள்ளப்பட்டாலும், அவை சீர்களில் வரும்போது இரண்டு மாத்திரைகள் அளவுடன் ஒலிப்���தில்லை. இவ்விரு வகை எழுத்துக்களும் சீர் முதலெழுத்தாக வரும்போது ஒன்றரை மாத்திரைகள் அளவுடையனவாக அமைகின்றன. ஔகாரம் முதலெழுத்தாக மட்டுமே வரும். ஐகாரம் இடையிலோ அல்லது இறுதி எழுத்தாகவோ வரும்பொழுது குறில்களைப் போல ஒரு மாத்திரை அளவையே கொண்டிருக்கும். இவ்வாறு ஒலி குறைவுபட்டு வருதல் "குறுக்கம்" எனப்படுகின்றது. ஐகாரம் குறுகி வருதல் ஐகாரக் குறுக்கம் எனவும், ஔகாரம் குறுகி வருதல் ஔகாரக் குறுக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றன. இவற்றைப்போலவே சில சந்தர்ப்பங்களில் இகர, உகரங்களும் மெய்யெழுத்தான மகரமும் குறுக்கம் அடைவதுண்டு. இவ்வாறு குறுக்கமடையும்போது இகரமும், உகரமும் அரை மாத்திரையையும், மகரமெய் கால் மாத்திரையையும் பெறுகின்றன. குறுகி ஒலிக்கும் இகர, உகரங்கள் முறையே குற்றியலிகரம் எனவும், குற்றியலுகரம் எனவும் அழைக்கப்படுகின்றன. மகரமெய் குறுகி ஒலித்தல் மகரக்குறுக்கம் எனப்படும். + + + + + +அசை (யாப்பிலக்கணம்) + +மொழியில் எழுத்தின் ஒலி-அளவை மாத்திரை எனக் கூறும் தமிழ் இலக்கணம் செய்யுளில் எழுத்துக்கள் சேர்ந்து அசையும் நடைத்தொகுப்பை அசை எனக் கூறுகிறது. யாப்பிலக்கணத்தில் அசை என்பது எழுத்துக்களின் குறிப்பிட்ட, வரையறை செய்த சேர்க்கையினால் உருவாகும் ஓர் அடிப்படை உறுப்பாகும். அசைகள் சேர்ந்தே சீர்கள் உருவாகின்றன. +தொல்காப்பியம் நேர். நிரை. நேர்பு, நிரைபு என நான்கு அசைகளைக் காட்டுகிறது. தொல்காப்பியத்துக்குச் சுமார் 1500 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றிய யாபருங்கலமும், அதன் தொகுப்பாக அமைந்த யாப்பருங்கலக் காரிகையும் நேர்பு, நிரைபு என்னும் அசை-வாய்பாடுகளை விட்டுவிட்டு நேர், நிரை என்னும் இரண்டு வகை அசைநிலைகளை மட்டுமே காட்டுகின்றன. + +கீழேயுள்ளது சிறுபாணாற்றுப்படை என்னும் நூலிலுள்ள பாடலொன்றின் முதல் அடி. + +இங்கே "அருந்திறல்", "அணங்கின்", "ஆவியர்", "பெருமகன்" என்பன சீர்களாகும். இச் சீர்களை அவற்றின் ஒலியமைப்பின் அடிப்படையில் கீழே காட்டியவாறு பிரிக்க முடியும். + +மேற்காட்டியவாறு பிரிவடைந்து கிடைக்கும் ஒவ்வொரு பகுதியும் ஒரு அசையாகும். யாப்பிலக்கண விதிகளை நோக்கினால், அசைகளில் மெய்யெழுத்துக்களுக்குத் தனியான பெறுமானம் இல்லாமை புலப்படும் ஆனால் அசைகளின் எல்லைகளை���் காட்ட உதவும். எனவே ஒற்றெழுத்துக்கள் எனப்படும் மெய்யெழுத்துக்களைப் பொருட்படுத்தாது பார்த்தால் அசைகள், கூடிய அளவாக இரண்டு எழுத்துக்களை மட்டுமே கொண்டிருப்பதைக் காணலாம். இவற்றுடன் ஓர் ஒற்றெழுத்தோ அல்லது இரண்டு ஒற்றெழுத்துகளோ இறுதியில் வரக்கூடும். யாப்பிலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ளபடி அசைகள் அமையும் முறைகள் வருமாறு. + +மேற்கண்டவற்றுள் முதல் நான்கும் "நேரசை" என்றும் ஏனையவை "நிரையசை" என்றும் குறிப்பிடப்படுகின்றன. + +செய்யுள்களிலே அமையும் சீர்களின் தன்மை பற்றியும், அச் சீர்கள் ஒன்றுடன் இன்னொன்று சேரும்போது உருவாகும் தளைகள் பற்றியும் அறிந்துகொள்வதற்குச் சீர்களிலே அசைகளை இனங்காணல் அவசியம். இவ்வாறு சீர்களை இனங்கண்டு பிரித்தறிதல் "அசை பிரித்தல்" எனப்படுகின்றது. + +ஒரு சீரை அசை பிரிக்கும்போது அச்சீரின் முதல் எழுத்து ஒரு மாத்திரை அளவுக்குக் கூடுதலான எழுத்து ஆயின் அது தனியாகவே ஒரு அசையாக அமையக்கூடும். எடுத்துக்காட்டாக 2 மாத்திரைகள் அளவுள்ள நெடில் அல்லது ஒன்றரை மாத்திரை கால அளவு கொண்ட ஐகார ஔகார எழுத்துக்கள் முதலெழுத்தாக வரின் அது தனியாக ஒரு அசையாகலாம். அடுத்துவரும் எழுத்து ஒரு ஒற்றெழுத்தாக அமையாவிடின் மேற்சொன்ன எழுத்துக்களை அசையாகக் கொள்ளமுடியும். ஆனால் முதல் எழுத்தைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வருமானால் அந்த எழுத்தையும் முதல் எழுத்தோடு சேர்த்து அசையாகக் கொள்ளவேண்டும். + +கீழேயுள்ளது நான்கு சீர்களைக் கொண்ட ஒரு செய்யுள் அடியாகும். +இங்கே முதற்சீரான கேளிர் என்பதில் முதலெழுத்தான கே இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலாகும். இதைத் தொடர்ந்து ஒற்றெழுத்து வராமையால் கே தனியாகவே அசையாக அமையும். இதுபோலவே இரண்டாஞ் சீரிலும் போ தனியாகவே அசையாகும். + +மூன்றாவது சீரான கேள்கொளல் என்பதிலும் முதலெழுத்தாக இரண்டு மாத்திரை அளவுள்ள நெடிலான கேயே வருவதால், அது தனியாகவே ஒரு அசையாக அமையக் கூடும். ஆனாலும் இரண்டாம் எழுத்து ள் ஒரு ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கேள் என்பதை ஒரு அசையாகக் கொள்ள வேண்டும். நாலாஞ் சீரிலும் இதே அடிப்படையில் வே உம் ண் உம் சேர்ந்து வேண் என அசையாகும். + +சீரின் அல்லது அசைபிரிக்க எடுத்துக்கொண்ட சீர்ப்பகுதியின் முதலெழுத்து குறிலாக இருந்தால் அது தனியாக அசையாகாது. அது அடுத்த���வரும் குறில், நெடில் அல்லது ஒற்றெழுத்து ஆகிய ஏதாவது எழுத்துடன் சேர்ந்தே அசையாக முடியும். தொடர்ந்து வரும் எழுத்துக்கள் ஒற்றெழுத்துக்கள் ஆயின் அவற்றையும் சேர்த்துக் கொள்ளவேண்டும். தனிக் குறிலைத் தொடர்ந்து, சேர்த்துக்கொள்வதற்கு அதே சீரில் வேறு எழுத்துக்கள் இல்லாவிடில் தனிக் குறிலே அசையாக அமையும். + +முன்னர் எடுத்துக்கொண்ட அதே செய்யுள் அடியின் முதற் சீரில், அசையாக இனங்கண்ட கே என்பதைத் தவிர்த்தபின் மிகுதியாக உள்ள ளிர் என்ற பகுதியின் முதல் எழுத்து ளி, அடுத்துவரும் ஒற்றெழுத்தான ர் உடன் சேர்ந்து ளிர்என அசையாகும். இவ்வாறே போலக் என்ற சீரிலும், லக் ஒரு அசையாகும். + +கேள்கொளல் என்னும் சீரில் கேள் என்னும் அசை தவிர்ந்த கொளல் எனும் பகுதியில், கொ குறில் எழுத்து அவ்விடத்தில் தனியாக அசையாகாது. அடுத்துவரும் ள உடன் சேர்ந்து அசையாகலாம். ஆனால் அடுத்த எழுத்து ஒற்றெழுத்து ஆதலால், அதையும் சேர்த்து கொளல் என்பதை ஒரு அசையாகக் கொள்ளவேண்டும். + +நான்காவது சீரான வேண்டி என்பதில், வேண் என்பது ஒரு அசையாக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே மீந்துள்ள தனிக் குறிலான டி ஒரு அசையாகும். + +குறில், நெடில் எழுத்துக்கள் எவ்விதமாகச் சேர்ந்து அசைகள் உருவானாலும் தொடர்ந்து வரக்கூடிய ஒற்றெழுத்துக்களை அவற்றுடன் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்பதே யாப்பிலக்கண விதி. சில சமயங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட ஒற்றெழுத்துக்களும் இவ்வாறு சேர்ந்து அசைகளாவது உண்டு. சில எடுத்துக்காட்டுகள் கீழே தரப்பட்டுள்ளன. + + + + + +கூடைப்பந்தாட்டம் + +கூடைப்பந்தாட்டம் "(Basketball)" சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. உலகில் மிகவும் புகழ்பெற்றதும் பரவாலாக விளையாடப்படுவதுமான விளையாட்டுக்களில் இதுவும் ஒன்று ஆகும். + +ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, ��திலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும். + +கனடாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த சர்வதேச கிறித்தவ இளைஞர் மன்றத்தின் வழிகாட்டியாக விளங்கிய முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தைப் போட முயன்று விளையாடியதில் 1891 ஆம் ஆண்டில் இந்த விளையாட்டு பிறந்தது. அத்துடன் அவரது எண்ணங்களை 13 விதிகளாகத் தொகுத்தார். + +இன்றை நாள் வட அமெரிக்காவில் மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச் சங்கமும் உலகில் மக்கள் செல்வாக்கு மிகுந்த கூடைப்பந்தாட்டச் சங்கமும் ஆக என்.பி.ஏ. காணப்படுகிறது. ஐரோப்பாவின் கூடைப்பந்தாட்டச் சங்கங்களில் ஐரோலீக் மிகப்பெரியதும் மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்ததும் ஆகும். சீனக் கூடைப்பந்தட்டச் சங்கம், ஆஸ்திரேலிய தேசியக் கூடைப்பந்தாட்டச் சங்கம், தென்னமெரிக்கச் சங்கம் உலகில் வேறு சில குறிப்பிட்டதக்க கூடைப்பந்தாட்டச் சங்கங்கள் ஆகும். + +"ஃபீபா", அல்லது பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி என்பது உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். இச்சங்கத்தில் என்.பி.ஏ. மற்றும் ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்துச் சங்கம் தவிர பல்வேறு தேசிய கூடைப்பந்துச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கம் பல நாடுகளிலுள்ள கூடைப்பந்தாட்ட வழக்கங்களையும் சட்டங்களையும் உருவாக்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒரு பன்னாட்டுப் போட்டியை ஃபீபா ஒழுங்குபடுத்தி நடாத்துகிறது. + +ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸ்-இலிருந்த கூடைப்பந்து புகழவை உலகில் மிக உயர்ந்த வீரர்களும் பயிற்றுனர்களும் போற்றும் அவையாகும். + +உண்மையாகவே, கூடைப்பந்தாட்டம் முதலில் காற்பந்தாட்டப் பந்தினாலேயே விளையாடப்பட்டது. கூடைப்பந்தாட்டத்திற்கென முதன் முதலில் தயாரிக்கப்பட்ட பந்தின் நிறம் மண்ணிறம் ஆகும். அதன்பின் 1950 ஆம் ஆண்டுகளில் டொனி ஹின்கிள் (Tony Hinkle) என்பவர் விளையாடுபவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இலகுவாகக் கண்ணுக்குப் புலப்படக்கூடிய நிறமுள்ள பந்தைத் தேடலானார்; இறுதியில் அவரால் செம்மஞ்சள் நிறமுள்ள பந்து அறிமுகம் செய்துவைக்கப்பட்டது. அதுவே இன்று���் பாவனையில் உள்ளது. + +பந்தை கையால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும் பொழுது, பந்து எழும்புவதற்கு ஏதுவான கடினமான, சமமான தரைதேவை. நீளம் 28 மீட்டர், அகலம் 15 மீட்டர் கொண்ட தரை பயன்படுகிறது. இந்தத்தரை பெரும்பாலும் வூடேன் பைபர் எனும் ஒரு பதார்த்தத்தால் ஆனது. சில இடங்களில் கொண்க்கிரீட்டும் பயன்படுகிறது. + +களத்தின் இருமுனையிலும் தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரத்தில் ஒரு கூடை தொங்கும். கூடை என்பது 18 அங்குலம் விட்டமுள்ள இரும்பு வளையமும், அந்த வளையத்திலிருந்து வட்டமான தொங்கும், அடிப்பாகம் திறந்த, பதின் ஐந்து அங்குலத்தில் இருந்து பதினெட்டு அங்குலம் நீளம் கொண்ட கயிற்று வலையும் ஆகும். + +கூடைப்ந்தாட்டம் மிக வேகமான விளையாட்டாகும் . ஆதலால் அணிக்குள் மிகவும் ஒற்றுமை நிலவவேண்டும். பொதுவாக அணியை ஒரு பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பார். இவரே அணியின் தந்திரோபாயங்களை முடிவு செய்வார். அணியிடம் பந்து இருக்கும்போது பந்தை கூடைக்குள் போடுவதும், எதிரணியிடம் பந்து இருக்கும்போது பந்து கூடைக்குள் விழாமல் தடுப்பது அல்லது பந்து மீதான கட்டுப்பாடை இழக்கச்செய்வதும் அவரின் முக்கியமான செயற்பாடுகளாகும். பயிற்றுவிப்பாளர் அல்லது அணித்தலைவர் விரும்பின் ஏதாவதொரு விளையாட்டு வீரரை விளையாட்டிடிடத்திலிருந்து வெளியில் எடுத்துவிட்டு இன்னொருவரை விளையாடச் செய்யலாம். + +பந்தை எதிரணியின் கூடையில் எறிந்து விழ வைத்தால் அந்த அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். கூடைக்கு முன்பு தரையில் வரைந்துள்ள அரை வட்டத்திற்கு வெளியே இருந்தவாறே கூடையில் பந்தை எறிந்து விழ வைத்தால் மூன்று புள்ளிகள் அளிக்கப்படும். அரை வட்டத்திற்கு உட்பக்கத்தில் ஒரு வட்டம் வரையப்பட்டு நடுவில் தடையில்லா எறிதலுக்காக கோடு போடப்பட்டிருக்கும். தங்கள் கூடையில் பந்தை விழாமல் தடுக்கும் போது தப்பாட்டம் (Foul Play) ஆடினால் எதிரணியினர் இந்த கோட்டில் நின்று தடையில்லாமல் கூடையை நோக்கி பந்தை எறிய (Free throw) வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு எறிந்து கூடையில் விழும் பொழுது ஒரு புள்ளி வழங்கப்படும். + +வீரர்கள், எதிரணியின் முனைக்கும், அவர்களது 'தடையில்லா எறிதல்' (Free-throw line) கோட்டிற்கும் இடையே மூன்று வினாடிகளுக்கு மேல் நிற்கக் கூடாது. எந்த வீரரும் ஐந்து வினாடிகளுக்கு மேல் பந்தைக் கையில் வைத்திருக்கக் கூடாது. தங்களது முனையில் பந்து கையில் கிடைத்தால் எட்டு வினாடிகளுக்குள் அவர்கள் முன் பகுதிக்கு பந்தை எடுத்துச் செல்ல வேண்டும். + +சில போட்டிகளில் 24 வினாடிகளுக்குள் பந்தை தன் வசம் வைத்திருக்கும் அணி, எதிரணியின் கூடையில் பந்தை விழ வைக்க முயற்சிக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்படுவதுண்டு. + +கூடைப்பந்தில் பொதுவாக இந்த ஐந்து நிலைகளை பயன்படுத்துவார்கள். + +சில வீரர்களுக்கு இரண்டு நிலைகளில் விளையாடமுடியும். இரட்டை பின்காவல் (Combo guard) என்பவர் பந்துகையாளி பின்காவலின் உயரத்தில் புள்ளிபெற்ற பின்காவல் மாதிரி மற்ற வீரர்களுக்கு இலகுவாக்கருதுக்கு பதில் முதலில் புள்ளிகளை பெற்ற பார்ப்பார்கள். அசையாளர் (Swingman) புள்ளிபெற்ற பின்காவலாவும் சிறு முன்நிலையாவும் விளையாடமுடியும். பந்துகையாளி முன்நிலை (Point forward) என்பவர் முன்நிலை மாதிரி உயரமாக கூடைக் கிட்ட விளையாடமுடியும், ஆனால் பந்துகையாளி பின்காவல் மாதிரி பந்தை கையாளித்து மற்றவருக்கு இலகுவாக்கருத்த முடியும். முன்-நடு நிலைகள் (Forward-center) வலிய முன்நிலையிலும் நடு நிலையிலும் விளையாடமுடியும். + +சில நிலைமைகளின் இந்த நிலைகளை மாற்றமுடியும். + +கூடைப்பந்தாட்ட விளையாட்டில் மிகவும் முக்கியமான உபகரணங்கள் ஆடுகளமும் கூடைப்பந்தாட்டப் பந்துமே ஆகும். இவற்றில் ஆடுகளத்தை (court) எடுத்து நோக்கினால் அத சமதரையுடனானதும் செவ்வக மேற்பரப்பைக் கொண்டும் ஒவ்வொரு எதிர்ப் பக்கங்களிலும் இறுதி முடிவுகளில் கூடைகள், மற்றும் கூடைப்பலகையுடனும் காணப்படவேண்டும். அத்துடன் மேலதிகமாக கடிகாரங்கள், புள்ளிப் பட்டியல்கள், புள்ளிப்பலகைகள், மாற்று உடைமை அம்புக்குறிகள் ( alternating possession arrows) மற்றும் விசில் சத்தத்துடன் கூடிய நிறுத்தற் கடிகாரத் தொகுதியும் காணப்பட வேண்டும். + +சர்வதேச ரீதியிலான கூடைப்பந்தாட்ட ஆடுகளங்கள் 91.9 அடி நீளத்தையும் 49.2 அடி அகலத்தையும் கொண்டிருக்க வேண்டும். என்பிஏ மற்றும் என்சிசிஏ ஆடுகளங்கள் 94 அடி நீளத்தையும் 50 அடி அகலத்தையும் கொண்டிருக்கும். + +கூடையின் உருக்கினாலான வளையம் 18 இன்சு விட்டத்தைக் கொண்டிருக்கும். + +இரண்டு 20 நிமிட பகுதிகளாக ஆடப்படும். ஐந்து முறை தப்பாட்டம் ஆடும் வீரர் அந்த ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். சில இடங்களில் ஒரு ஆட்டத்தை நான்கு 12 நிமிடப் பக��திகளாகவும் பிரித்து ஆடுவதுண்டு. என். பி. ஏ.-யில் இந்த முறை வழக்கத்தில் உள்ளது. இவ்வாறு ஆடும் போது ஆறு முறை தப்பாட்டம் ஆடும் வீரர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். + +ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டம் 1936-ஆம் ஆண்டிலும், பெண்களுக்கான ஆட்டம் 1976-ஆம் ஆண்டிலும் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டது. 1992 முதல் முழு நேர கூடைப் பந்தாட்டக்காரர்களும் ஒலிம்பிக்ஸில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். + +ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டி முந்தைய காலத்தில் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியன்/ரஷ்யா விற்கும் இடையே தான் நடந்தது. ஐக்கிய அமெரிக்கா 12 முறையும், சோவியத் யூனியன் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அண்மைய காலத்தில் அர்ஜென்டினா, இத்தாலி, லித்துவேனியா போன்ற நாடுகளும் பன்னாட்டுப் போட்டிகளில் வென்றுள்ளன. 2004 ஒலிம்பிக் போட்டிகளில் அர்ஜென்டினா அணி தங்கப் பட்டத்தை வெற்றிபெற்றது. + + + + + + + +நோர்வே + +நோர்வே அல்லது நார்வே (ஆங்கிலம்: "Norway" ; நோர்வே மொழிகளில்: பூக்மோல் மொழியில் Norge, நீநொர்ஸ்க் மொழியில் Noreg, சாமி மொழியில் Norga) ஐரோப்பாவில் ஸ்கன்டிநேவிய தீபகற்பத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ள நாடாகும். இது அதிகாரபூர்வமாக நோர்வே இராச்சியம் என அழைக்கப்படுகிறது. இந்நாடு வடக்கே ஆர்க்டிக் பெருங்கடல், மேற்கே நோர்வே கடல், தெற்கே வட கடல் என்பவற்றையும், சுவீடன், பின்லாந்து, இரசியா என்பவற்றுடன் நில எல்லைகளையும் கொண்டுள்ளது. நோர்வே அகலம் குறைந்த நீளமான வடிவத்தையுடைய நாடாகும். நோர்வேயின் நீளமான கரையோரப் பகுதிகள் வட அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியதாய் இருப்பதுடன், புகழ்பெற்ற கடல்நீரேரிகளையும் கொண்டுள்ளது. + +நாட்டின் வடமேற்குப் பகுதியிலுள்ள யான் மாயன் தீவானது, நோர்வேயின் பிரதான நிலப்பரப்பின் ஒரு பகுதியாக கருதப்படுவதுடன், ஐஸ்லாந்து கடலை நோக்கி அமைந்த எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் சுவால்பார்ட் எனப்படும் தீவுக் கூட்டமானது யான் மாயன் போலவே, நோர்வே இராச்சியத்தின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டாலும், சுவால்பார்ட் உடன்படிக்கையின் எல்லைக்குட்பட்டு, நோர்வேயின் அரசுரிமைக்கு கீழ் இயங்குகின்றது.இங்கே சுரங்கத் தொழில் செய்யும் இரசிய மக்களும் வசிக்கின்றனர். + +நோர்வேயின் மொத்த நிலப்பரப்��ு 385,199 சதுர கிமீ ஆகும். இதில் பிரதான நிலப்பரப்பின் பரப்பளவு 323,802 சதுர கிமீ உம், சுவால்பாத்தின் நிலப்பரப்பு 61 020 சதுர கிமீ உம், சான் மேயன் 377 சதுர கிமீ ஆகவும் அமைந்துள்ளது. + +நோர்வே மிக அதிகளவில் கடல்நீரேரிகளையும், மலைகளையும் கொண்டுள்ளது. நாட்டின் மொத்தப்பரப்பில் 3/5 பங்கு மலைகளால் ஆனது. உலகிலே மிக நீண்ட கடற்கரை கொண்ட நாடாகவும் இது விளங்குகின்றது. அண்ணளவாக 25,000 கிலோமீட்டர் நீளமான கடற்கரையானது பல தீவுகளையும், கடல்நீரேரிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. தீவுகளின் கடற்கரையானது அண்ணளவாக 58,00 கிலோமீட்டர் நீளமாக உள்ளது. நிலப்பரப்பில் 1630 கிலோமீட்டர் சுவீடனை எல்லையாகவும், 736 கிலோமீட்டர் பின்லாந்தை எல்லையாகவும், 196 கிலோமீட்டர் இரசியாவை எல்லையாகவும் கொண்டு அமைந்திருக்கிறது. + +நாட்டின் நாணயம் நோர்வே குரோனர் ஆகும். + +நாட்டின் மொத்தப்பரப்பில் 1/4 பங்கு காடுகளாகும். பிரதானமாக இவை தாழ்நிலக் காடுகளாகவே உள்ளன. ஏனைய ஐரோப்பிய நாடுகளை விட நீர்வளம் நிறைந்த நாடாகும். இதனை விட இயற்கை வாயு, உருக்கு, செம்பு, நாகம் (துத்தநாகம்), நிலக்கரி மற்றும் வடகடலிலிருந்து இருந்து பெறப்படும் பெற்றோலியம் என்பன வளங்களாகும். + +சவுதி அரேபியா மற்றும் இரசியாவிற்கு அடுத்த படியாக அதிக பாறை எண்ணெய் பெற்றோலியம் உற்பத்தி செய்யும் நாடாகும். + +ஐரோப்பாவில் குறைந்த மக்கள்தொகை அடர்த்தியுடைய நாடாகும். அதிகமானோர் பின் இனத்தை சேர்ந்தவர்கள். நோர்வே மொழியே முதன்மை மொழியாகும். நாட்டின் 94 சதவீத மக்கள் கிறித்தவர்கள் ஆவர். + +இலங்கையில் 2002–06 காலகட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் போர் நிறுத்தம் ஏற்பட்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்த போது நார்வே அதில் நடுவராகப் பணியாற்றியது. நார்வே வெளியுறவுத் துறை அதிகாரி எரிக் சொல்ஹெய்ம் தலைமையிலான தூதுக்குழு இப்பேச்சுவார்த்தைகளின் முக்கிய பங்கு வகித்தது. + +ஏனைய ஐரோப்பிய நாடுகளைப் போன்று நோர்வேயிலும் கால்பந்து மிகவும் பிரபல்யமானது. இதை விட பனிக்கால விளையாட்டுக்களும் இங்கு பிரபல்யமானவை. முக்கியமாக ஸ்கீயிங, அல்பைன் என்னும் பனிச்சறுக்குதல்களிலும், ஸ்கேடிங், ஸ்கீ ஜம்ப் என்னும் விளையாட்டுக்களிலும் நோர்வே முன்னணி வகிக்கும் நாடாகும். + +நோர்வேயின் மிக முக்கிய விளையாட்டு வீரர்களாக பின்���ருபவர்களைக் கூறலாம்: +"Oscar Mathisen", "Johann Olav Koss", "Knut Johannesen" (ஸ்கேடிங்) +"John Arne Riis", "Ole Gunnar Solskjær", "John Carew" (கால்பந்து) +"Sonja Henie" (ஸ்கேடிங் நடனம்) +"Bjørn Dæhlie" (ஸ்கீயிங்) +"Ole Einar Bjørndalen" (ஸ்கீயிங் (சுடுதல்)) +"Espen Bredesen" (ஸ்கீயிங் பாய்தல்) +"Kjetil André Aamodt" (அல்பைன்) +"Grete Waitz" (பெண்களுக்கான மரதன்) +"Petter Solberg" கார் ஓட்டம் (ரலி க்ரொஸ்) + + +நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்கள் 215 வெவ்வேறு நாடுகளிலிருந்து இங்கே குடி பெயர்ந்திருக்கின்றனர். நோர்வேயிலுள்ள புள்ளி விபரங்களைச் சேகரித்துப் பாதுகாக்கும் Statistisk Sentralbyrå ("Statistics Norway") இன் கணக்கெடுப்பின்படி, 01.01.2010 இல், 459,000 வெளிநாட்டவர்களும், 93,000 பேர் வெளிநாட்டுப் பெற்றொருக்கு நோர்வேயில் பிறந்த பிள்ளைகளும் இருக்கின்றனர். இவ்விரு பிரிவினரும் சேர்ந்து, மொத்தம் 552,000 பேர் மொத்த சனத்தொகையின் 11.4% ஆக உள்ளனர். இவர்கள் நோர்வேயின் அனைத்து மாவட்டங்களிலும் வாழ்கின்றனர் ஆயினும் மிக அதிகமானவர்கள் (160, 500 பேர்) ஒஸ்லோ விலேயே இருக்கின்றனர். ஒஸ்லோவில் இருக்கும் மொத்த சனத்தொகையின் 27% த்தினர் இந்தப் பிரிவினுள் வருகின்றனர். இவர்களில்: +நோர்வேயில் வாழும் வெளிநாட்டவர்களில் போலந்து, சுவீடன், பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, செருமனி, நாட்டைச் சேர்ந்தவர்களே அதிகளவில் காணப்படுவதுடன், 35% மான வெளிநாட்டவர்கள் நோர்வே குடியுரிமை பெற்றவர்களாக உள்ளனர். +இவ் வெளிநாட்டவர்களில் 1990-2008 காலப்பகுதியில் நோர்வே வந்தோரில், 24% மானவர்கள் அகதிகளாக வந்து தஞ்சம் கோரியவர்களாகவும், 24% மானோர் தொழில்புரியவும், 11%மானோர் கல்வி கற்பதற்காகவும், 23%மானோர் ஏற்கனவே அங்கு வாழும் குடும்ப உறுப்பினருடன் இணைவதற்காகவும், 17%மானோர் குடும்பத்தை நிறுவவுமாக நோர்வே வந்தவர்களாக இருக்கின்றனர். + + + + + +சீர் (யாப்பிலக்கணம்) + +சீர் என்பது, யாப்பிலக்கணப்படி, செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. யாப்பியலில், எழுத்துக்கள் இணைந்து அசைகளும், அசைகளின் சேர்க்கையினால் சீர்களும் உருவாகின்றன. செய்யுள்களில் சீர்கள் சொற்களைப் போலத் தென்பட்டாலும், உண்மையில் சீர்களும் சொற்களும் எல்லாச் சமயங்களிலும் ஒன்றாக இருப்பதில்லை. + +மேலேயுள்ளது சீர் பிரித்து எழுதப்பட்டுள்ள சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய தேவாரம் ஆகும். இதிலுள்ள பல சீர்கள் முறையான சொற்களாக அமைந்து வராமையைக் காண்க. சீர்கள் பல சந்தர்ப்பங்களில் பொருள் விளக்கத்துக்காக அன்றி, ஓசை நயத்தின் அடிப்படையிலேயே அமைகின்றன. + +செய்யுள்களில் வரும் சீர்கள் ஒன்று தொடக்கம் நான்கு வரடவபடெயான அசைகளின் சேர்க்கையால் உருவாகின்றன. இவை, + + +எனக் குறிப்பிடப்படுகின்றன. இந்த நான்கு வகையான சீர்களும் வேறு பெயர்களினால் குறிப்பிடப்படுவதும் உண்டு. அவற்றைக் கீழேயுள்ள அட்டவணையில் காணலாம். + +மேற்சொன்ன நால்வகையான சீர்களும், அவற்றில் இடம்பெறும் அசை வகைகள், அவை இடம்பெறும் ஒழுங்கு என்பவற்றுக்கு ஏற்பப் பல்வேறு வகைகளாக அமைகின்றன. ஓரசைச் சீர்கள் இரண்டு விதமாகவும், ஈரசைச் சீர்கள் நான்கு விதமாகவும், மூவசைச் சீர்கள் எட்டு விதமாகவும், நாலசைச் சீர் 16 விதமாகவும் அமைகின்றன. இவற்றை ஞாபகத்தில் வைத்திருப்பதை இலகுவாக்கவும், குறிப்பிட்டுச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் வசதியாக இருப்பதற்காகவும், குறிப்பிட்ட சில சொற்களை யாப்பிலக்கண நூல்கள் பயன்படுத்துகின்றன. இவை வாய்பாடுகள் எனப்படுகின்றன. மேற்சொன்ன 30 விதமாக ஒழுங்கில் அமையும் சீர்களையும், அவற்றுக்கான வாய்பாடுகளையும் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. இதில் இரண்டாம் நிரலில் (Column) சீர்களில் நேரசை, நிரையசைகள் அமைந்திருக்கும் ஒழுங்கும், மூன்றாம் நிரலில் சீர்களுக்குரிய வாய்பாடுகளும், நாலாம் நிரலில் விளக்கம் கருதி அசைபிரித்து எழுதப்பட்டுள்ள வாய்பாடுகளையும் காண்க. + + + + +செய்யுள்களில் பெரும்பாலும் ஈரசை, மூவசைச்சீர்களே வருகின்றன. யாப்பிலக்கண விதிகளுக்கு அமைய, வெண்பாக்களின் இறுதிச் சீராக ஓரசைச்சீர் வரும். வேறிடங்களில் மிக மிக அரிதாகவே ஓரசைச்சீர்கள் காணப்படுகின்றன. இதுபோலவே நாலசைச் சீர்களும் குறைந்த அளவிலேயே பாக்களில் வருகின்றன. + + + + + + + +சுழியக் கழிவு + +எல்லா உற்பத்தி நுகர்வுச் செயற்பாடுகளிலும் கழிவற்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்க உந்துவிக்கும் ஓர் அணுகுமுறை சுழியக் கழிவு (Zero waste) என்று அழைக்கப்படும். இயற்கையில் எப்படி ஒரு செயல்பாட்டின் கழிவுகள் அல்லது விளைவுகள் இன்னொரு செயல்பாட்டின் உரமாக அல்லது இடுபொருள்களாக அமைகின்றதோ அதேபோல மனித செயல்பாட்டினால் உற்பத்தியாகும் கழிவுகளை தகுந்த வழிகளில் பயன்பாட்டிற்க்கு ஏற்ற மாதிரி மீள் உருவாக்கம் , மீள் உபயோகம் செய்வது சுழிய கழிவின் அடிப்படை. + +பல பொருட்கள் நுகர்வோர்களால் ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டின் பின் கழிவு என கருதப்பட்டு எறியப்பட்டுவிடும். பொதுவாக பல பொருட்கள் கழிவுக் கிடங்குகளில் போடப்படுகின்றன. அவற்றுள் சில காலப்போக்கில் அழுகி, சிதைந்து அல்லது மருவி மண்ணோடு கலந்து விடுகின்றன. பல பொருட்கள் அப்படி மருவுவதில்லை; அவை, சூழல் மாசுறுத்தலுக்கு வழிகோலுகின்றன. இப்பொருட்களின் விலை இச்சூழல் மாசுறுதலை பொருட்படுத்தி அமைவதில்லை; இதுவே சூழல் மாசுறுதலுக்கு ஒரு முக்கிய காரணி. சுழிய கழிவு அணுகுமுறையின் மூலம் எந்த ஒரு பொருளையும் கழிவாக்காமல், அதன் உண்மையான பரந்த சூழல் தாக்கங்களை கருத்தில் எடுத்து, மீள் உபயோகத்துக்கும் மீள் உருவாக்கத்துக்கும் ஏற்ற மாதிரி உற்பத்தி செய்ய முனையப்படும். + + + + + +சூழல் பேணற் செயற்பாடுகள் + +சூழல் பேணற் செயற்பாடுகள் எனப்படுபவை சூழல் மாசடைதலிலிருந்து சூழலைக் காப்பதற்கான செயற்பாடுகள் ஆகும். + +சூழல் பேண் செயற்பாடுகள் ஆவன: + + + + +தளை (யாப்பிலக்கணம்) + +தளை என்ற சொல் பிணைப்பு என்னும் பொருள்படும். செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு தளை எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் "நிலைச்சீர்" எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் "வருஞ்சீர்" என அழைக்கப்படுகின்றது. செய்யுளொன்றில் வரும் பெரும்பாலான சீர்கள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு தளைகள் அமைகின்றன. செய்யுளின் முதற் சீரும், இறுதிச் சீரும் அவற்றின் ஒரு பக்கத்தில் மட்டுமே சீர்களைக் கொண்டிருப்பதால் அவை தொடர்பில் ஒவ்வொரு தளை மட்டுமே அமையும். + +இரு சீர்களுக்கிடையேயான தளையின் இயல்பு நிலைச்சீரின் வகை, அதன் இறுதி அசை, வருஞ்சீரின் முதல் அசை என்பவற்றில் பெரிதும் தங்கியுள்ளது. +
+ +
+என்பது ஒரு திருக்குறள். இது இரு அடிகளைக் கொண்ட வெண்பா வகையைச் சேர்ந்த ஒரு செய்யுள். இதன் ஒவ்வொரு சீரும் அசைபிரிக்கப்பட்டு, அவற்றுக்குரிய அசை வகைகளுடன் கீழே காட்டப்பட்டுள்ளது. +
+ +
+இதிலே முதலிரு சீர்கள் தொடர்பில், நிலைச்சீராக அமைவது ஈரசைச்சீர். நிலைச்சீரின் ஈற்றசை நிரை. வருஞ்சீரின் முதல் அசை நேர். நி���ைச்சீர் இயற்சீராக (ஈரசைச்சீர்) இருக்க, அதன் ஈற்றுச்சீரும், வருஞ்சீரின் முதற்சீரும் வேறுபட்ட வகைகளாக இருப்பின் விளைவது இயற்சீர் வெண்டளை எனப்படும். + +இதுபோல இரண்டாம் மூன்றாம் சீர்கள் தொடர்பில் நிலைச்சீர், மூவசைச்சீர் ஆகும். நேரசையை இறுதியில் கொண்ட மூவசைச் சீர் வெண்சீர் எனப்படும். வருஞ்சீரின் முதல் அசையும் நேரசையாக உள்ளது. இவ்வாறு அமையும் தளை வெண்சீர் வெண்டளை ஆகும். + +இவ்வாறே செய்யுளிலுள்ள எல்லாச் சீர் இணைகளுக்கும் இடையிலுள்ள தளைகளின் வகைகளை அறிந்துகொள்ள முடியும். சீர்களுக்கு இடையே விளையக் கூடிய பல்வேறு வகையான தளைகளின் பெயர்களும், அத்தளைகள் ஏற்படுவதற்கான நிலைமைகளும் கீழே தரப்பட்டுள்ளன. +
+1. ஆசிரியத்தளை + +
+2. வெண்டளை + +
+3. கலித்தளை (காய் முன் நிரை) + +4. வஞ்சித்தளை + +மேலே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பல்வேறு விதமான தளைகள், ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களில் ஒவ்வொன்றுக்குச் சிறப்பாக உரியவை. இதனாலேயே குறிப்பிட்ட தளைகளின் பெயர்கள் தொடர்புடைய பாக்களின் பெயர்களால் வழங்கப்படுகின்றன. + +ஆசிரியத்தளைகள் ஆசிரியப்பாவுக்கும், வெண்டளைகள் வெண்பாவுக்கும், கலித்தளைகள் கலிப்பாவுக்கும், வஞ்சித்தளைகள் வஞ்சிப்பாவுக்கும் சிறப்பாக உரியவை. + + +
+ +ஆசிரியத்தளை + +யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் உறுப்புக்களில் ஒன்றான தளைகளில் ஒரு வகையே ஆசிரியத்தளை ஆகும். ஆசிரியப்பா எனும் செய்யுள் வகைக்குச் சிறப்பாக உரியதாதலால் இத் தளை ஆசிரியத்தளை என வழங்கப்படுகின்றது. + +செய்யுளொன்றில் அடுத்துவரும் இரண்டு சீர்களுக்கு இடையே உள்ள தொடர்பே தளை ஆகும். இவ்விரு சீர்களுள் முதலில் வருவது நிலைச்சீர் எனவும் அடுத்து வருவது வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றன. ஆசிரியத்தளை அமைவதற்கு: + +இதன் அடிப்படையில் இரண்டுவிதமான ஆசிரியத்தளைகள் அமைகின்றன. + +ஆசிரியத்தளையின் வெவ்வேறு வகையான அமைப்புக்கள் அசைச் சேர்க்கையின் ஒழுங்குகளின் அடிப்படையில் கீழே பகுத்துக் காட்டப்பட்டுள்ளது. + +மேலேயுள்ளது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு ஆசிரியப்பா. இதை வாய்பாடாக எழுதுவதன்மூலம் எவ்வாறான தளைகள் அமைந்துள்ளன என்பதை இலகுவாக அறியமுடியும். +செய்யுளிலுள்ள சீர் இணைகள் ஒவ்வொன்றையும் ��னித்தனியாக எடுத்து அவற்றின் வாய்பாடுகளை ஆசிரியத்தளை அமையும் விதம் பற்றிய அட்டவணையுடன் ஒப்பிட்டால் எங்கெங்கே ஆசிரியத்தளைகள் அமைகின்றன என்பதை அறிய முடியும். + + + + + + +யாப்பிலக்கண நூல்கள் + +யாப்பிலக்கண நூல்கள் என்பவை செய்யுள்களின் இலக்கணம் பற்றிக் கூறுகின்ற நூல்களாகும். + +தமிழ்ச் செய்யுள்களின் இலக்கணம் பற்றிய, இன்று கிடைக்கக்கூடிய நூல்களுள் காலத்தால் முந்தியது தொல்காப்பியமாகும். இது தோன்றிய காலம் ஐயத்துக்கு இடமின்றி நிறுவப்படவில்லை. எனினும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கக் கூடும் என்பது பல அறிஞர்களது கருத்து. இந்நூலில் வரும் குறிப்புக்கள் மூலம் இந்நூலுக்கு முதல்நூலாக அகத்தியம் என்னும் நூல் இருந்திருப்பதாகத் தெரிய வருகின்றது. மூன்று அதிகாரங்களைக் கொண்ட இந்நூலின் மூன்றாவது அதிகாரமான பொருளதிகாரத்தின் ஒரு பகுதியாகவே யாப்பிலக்கணம் அமைகின்றது. + +தொல்காப்பியக் காலத்துக்குப் பின் தமிழ் இலக்கியம் பல மாற்றங்களுக்கு உட்பட்டிருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றையும், பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட ஆக்கங்களையும் பார்க்கும்போது செய்யுள் இலக்கியத்திலும் பல மாற்றங்களை அவதானிக்க முடிகின்றது. சங்ககால இலக்கியச் செய்யுள் அமைப்புக்கும், சங்கம் மருவிய மற்றும் பிற்காலச் செய்யுள் அமைப்புகளுக்கும் இடையே பல வேறுபாடுகள் உள்ளதுடன் புதுமைகளும் புகுந்துள்ளன. இதனால் பல புலவர்கள் யாப்பிலக்கண நூல்கள் எழுதியுள்ளது வேறு ஆதாரங்கள் மூலம் தெரியவந்தாலும், இவற்றுள் பெரும்பான்மையானவை இன்று மறைந்து விட்டன. + +இவற்றுள் அவிநயனார் என்பவர் எழுதிய அவிநயனம் என்ற நூலும் ஒன்றாகும். இந்த நூல் இப்பொழுது இல்லை. எனினும், யாப்பருங்கலக் காரிகை எனும் பிற்கால யாப்பிலக்கண நூலில் இதுபற்றிய குறிப்பு உள்ளது. இதுதவிர யாப்பருங்கல விருத்தியுரை, நன்னூல் விருத்தியுரை, நேமிநாத உரை, தக்கயாகப்பரணி உரை ஆகிய நூல்களிலும் இதுபற்றிய குறிப்புக்கள் உள்ளதுடன், அவற்றுட் சில நூல்கள் அவிநயனத்திலிருந்து மேற்கோள்கள் காட்டியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நூலுக்கு உரையொன்றும் எழுதப்பட்டிருந்ததாகவும், அந் நூலை எழுதியவர் தண்டலங்கிழவன் இராச பவித்திரப் பல்லவத��ையன் என்றும், மயிலைநாதர் என்பவர் குறிப்பிட்டுள்ளார். + +இது தவிர காக்கைப்பாடினியார், நத்ததத்தனார், பல்காயனார், பல்காப்பினார், மயேச்சுரனார் போன்ற புலவர்களும் யாப்பிலக்கண நூல்கள் எழுதியுள்ளதாகத் தெரியவருகிறது. இவையும் எதுவும் இன்று கிடைத்தில. + +தொல்காப்பியம் தவிர யாப்பிலக்கணம் கூறும் நூல்களில் இன்று கிடைக்கக் கூடியதாகவுள்ள நூல்கள், யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்பனவாகும். இவ்விரு நூல்களையும் எழுதியவர் அமிதசாகரர் என்பவராவார். + + + + + + +நெதர்லாந்து + +நெதர்லாந்து ("The Netherlands", ; டச்சு: "Nederland") நெதர்லாந்து இராச்சியத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ள ஒரு நாடு. இது வட மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது. இதன் தீவுகள் சில கரிபியன் பகுதியில் உள்ளன. வடக்கிலும் மேற்கிலும் வடகடலும் தெற்கில் பெல்ஜியமும் கிழக்கில் ஜெர்மனியும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன. இது பெல்சியம், செருமனி, ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றுடன் கடல்சார் எல்லைகளையும் கொண்டுள்ளது. ஒற்றையாட்சி அடிப்படையில் அமைந்த இது ஒரு நாடாளுமன்ற மக்களாட்சி முறையைக் கொண்ட ஒரு நாடாகும். ஆம்ஸ்டர்டாம் இதன் தலைநகரம். அரசாங்கத்தின் இருப்பிடம் ஹேக் நகரம். நெதர்லாந்து முழுமையும் சில வேளைகளில் ஒல்லாந்து என அழைக்கப்படுவது உண்டு. ஆனால், வடக்கு ஒல்லாந்தும், தெற்கு ஒல்லாந்தும், நெதர்லாந்தின் 12 மாகாணங்களில் இரண்டு மட்டுமே. இந்த நாட்டில் உள்ள ராட்டர்டேம் துறைமுகமானது ஐரோப்பாவின் மிகப்பெரிய துறைமுகம் ஆகும். + +புவியியல் அடிப்படையில் இது ஒரு தாழ்நிலப் பகுதி. இதன் 25% நிலப் பகுதி கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்துள்ளதுடன், 21% மக்கள் அப்பகுதிகளில் வாழ்கின்றனர். அத்துடன் இதன் 50% நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து ஒரு மீட்டருக்கு உட்பட்ட உயரத்தில் அமைந்துள்ளது. இந்தத் தன்மையே இதன் பெயருக்கும் காரணமாகியது. டச்சு மொழியிலும் வேறு பல ஐரோப்பிய மொழிகளிலும் இதன் பெயர் "தாழ்ந்த நாடு" என்னும் பொருள் கொண்டது. கடல் மட்டத்துக்குக் கீழ் அமைந்த நிலப்பகுதிகளில் பெரும்பாலானவை மக்களில் நடவடிக்கைகளினால் ஏற்பட்டவை. குறிப்பாக, பல நூற்றாண்டுகளாக இப் பகுதியில் கட்டுப்பாடற்ற முறையில் இடம்பெற்ற முற்றா நிலக்கரி (peat) அகழ்வினால் இப்பகுதிகள் பல மீட்டர்கள் தாழ்ந்து போயின. + +இது ஒரு மக்கள் நெருக்கம் மிகுந்த நாடு. இந்நாடு இங்கு அமைந்துள்ள காற்றாலைகளுக்குப் புகழ்பெற்றது. + +புனித உரோமப் பேரரசரும், எசுப்பானியாவின் அரசருமான ஐந்தாம் சார்லசின் கீழ் நெதர்லாந்துப் பகுதிகள் பதினேழு மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. இவற்றுள் இன்றைய பெல்சியத்தின் பெரும் பகுதியும்; லக்சம்பர்க்கும், பிரான்சு, செருமனி ஆகியவற்றின் சில பகுதிகளும் அடங்கியிருந்தன. + +இம் மாகாணங்களுக்கும் எசுப்பானியாவுக்கும் இடையிலான எண்பது ஆண்டுப் போர் 1568ல் தொடங்கியது. 1579 ஆம் ஆண்டில் பதினேழு மாகாணங்களில் வடக்கு அரைப்பகுதி மாகாணங்கள் ஒப்பந்தம் ஒன்றின்கீழ் உத்ரெகு ஒன்றியம் (Union of Utrecht) எனப்படும் ஒன்றியத்தை உருவாக்கின. இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு மாகாணமும் எசுப்பானியப் படைகளுக்கு எதிராக ஒன்றுக்கு ஒன்று உதவுவதற்கு இணங்கின. இந்த உத்ரெகு ஒன்றியமே தற்கால நெதர்லாந்துக்கு அடிப்படையாகக் கருதப்படுகிறது. 1581 ஆம் ஆண்டு வடக்கு மாகாணங்கள், எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப் அரசரைத தமது அரசர் அல்ல என அறிவித்து விடுதலை அறிவிப்புச் செய்தன. + +எசுப்பானியாவுக்கு எதிரான டச்சு மக்களின் போராட்டத்துக்கு உதவுவதாக உறுதியளித்த இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத், 1585 ஆம் ஆண்டு இங்கிலாந்துப் படைகளை அனுப்புவதாக ஒத்துக்கொண்டு ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார். இதன்படி, இங்கிலாந்து 1585 ஆம் ஆண்டு டிசம்பரில் லேசெசுட்டரின் முதலாம் ஏர்ல் ராபர்ட் டட்லி தலைமையில் 7.500 வீரர்களைக் கொண்ட படை நெதர்லாந்துக்கு அனுப்பியது. எனினும் இப்படையால் டச்சுப் போராட்டத்துக்கு அதிக நன்மை எதுவும் கிடைக்கவில்லை. + +எசுப்பானிய அரசர் இரண்டாம் பிலிப்பு மாகாணங்கள் பிரிந்து செல்வதை இலகுவில் ஏற்றுக்கொள்வதாக இல்லை. இதனால் போர் 1648 ஆம் ஆண்டுவரை நீடித்தது. இறுதியில் நான்காம் பிலிப்பு எசுப்பானியாவின் மன்னராக இருந்தபோது ஏழு வடமேற்கு மாகாணங்களின் விடுதலையை எசுப்பானியா ஏற்றுக்கொண்டது. + +விடுதலைக்குப் பின்னர், ஒல்லாந்து, சீலந்து, குரோனிங்கென், பிரீசுலாந்து, உத்ரெகு, ஓவரீசெல், கெல்டர்லாந்து என்னும் மாகாணங்கள் சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கின. இக் கூட்டமைப்பு ஏழு ஒன்றிய நெதர்லாந்துகளின் குடியரசு என அழைக்கப்பட்டது. இம்மாகாணங்கள் ஒவ்வ���ன்றும் தன்னாட்சி உடையவையாயும், மாகாண அரசுகள் எனப்பட்ட தனித்தனியாக அரசுகளைக் கொண்டவையாகவும் இருந்தன. கூட்டாட்சி அரசு ஏக் (The Hague) நகரில் அமைந்திருந்தது. இவ்வரசில் ஏழு மாகாணங்களினதும் பிரதிநிதிகள் இருந்தனர். இவை தவிர 80 ஆண்டுப் போரின்போது பெற்றுக்கொண்ட பல பொதுப் பகுதிகளும் குடியரசின் பகுதிகளாக இருந்தன. இவை கூட்டாட்சி அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருந்தன. இவற்றுக்குத் தனியான அரசுகளோ, கூட்டாட்சி அரசில் பிரதிநிதிகளோ இல்லை. + +17 ஆம் நூற்றாண்டில் இக் குடியரசு, முக்கியமான கடல் வல்லரசாகவும், பொருளாதார வல்லரசாகவும் வளர்ச்சி பெற்றது. "டச்சுப் பொற்காலம்" காலத்தில், உலகத்தின் பல பகுதிகளிலும் வணிக மையங்களும், குடியேற்றங்களும் அமைக்கப்பட்டன. 1614 ஆம் ஆண்டில், மான்கட்டனின் தென் முனையில் நியூ அம்சுட்டர்டாம் அமைக்கப்பட்டதோடு, வட அமெரிக்காவில் டச்சுக் குடியேற்றம் தொடங்கியது. 1652 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவில் கேப் குடியேற்றத்தை உருவாக்கினர். 1650 ஆம் ஆண்டளவில் டச்சுக்காரர் 16,000 வணிகக் கப்பல்களை உடைமையாகக் கொண்டிருந்தனர். 17 ஆம் நூற்றாண்டில் டச்சு மக்கள் தொகை 1.5 மில்லியன்களில் இருந்து 2.0 மில்லியன்களாகக் கூடியது. + +பல பொருளியல் வரலாற்றாளர்கள் நெதர்லாந்தே உலகின் முதலாவது முழுமையான முதளாளித்துவ நாடு எனக் கருதுகின்றனர். தொடக்ககால ஐரோப்பாவில், நெதர்லாந்திலேயே அதிக செல்வம் பொருந்திய வணிக நகரமும் (அம்சுட்டர்டாம்), முழுமையான முதல் பங்குச் சந்தையும் இருந்தன. 18 ஆம் நூற்றாண்டில் நெதர்லாந்துக் குடியரசு இறங்கு முக நிலையை எய்தியது. இங்கிலாந்து பொருளாதாரப் போட்டி நாடாக உருவானதும், டச்சுச் சமூகத்தில் இரு பிரிவினர் இடையேயான எதிர்ப்பு உணர்ச்சி வளர்ச்சி பெற்றதும் இதற்கான முக்கிய காரணங்களாகும். + +1795 ஆம் ஆண்டு சனவரி 19 ஆம் தேதி ஆரெஞ்சின் ஐந்தாம் வில்லியம் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடியபின், நெதர்லாந்தை ஒற்றையாட்சி முறையின் கீழ் கொண்டுவந்து பத்தாவியக் குடியரசாக அறிவிக்கப்பட்டது. 1795 ஆம் ஆண்டில் இருந்து 1806 ஆம் ஆண்டு வரை பத்தாவியக் குடியரசு, பிரெஞ்சுக் குடியரசின் அமைப்பைத் தழுவியதாக இருந்தது. + +1806 ஆம் ஆண்டு ஒல்லாந்து இராச்சியம் நெப்போலியன் பொனப்பார்ட்டினால் உருவாக்கப்பட்டு, ஒரு பொம்மை அரசாக அவன் தம்பியான லூ��ிசு பொனப்பாட்டினால் 1814 ஆம் ஆண்டுவரை ஆளப்பட்டது. நெதர்லாந்தின் முக்கியமான மாகாணமான ஒல்லாந்தின் பெயர் முழு நாட்டையும் குறிக்கப் பயன்பட்டது. ஒல்லாந்து இராச்சியம், லிம்பர்க், சீலந்தின் சில பகுதிகள் என்பவை நீங்கலாக இன்றைய நெதர்லாந்து நாட்டின் பகுதிகளை உள்ளடக்கி இருந்தது. லிம்பர்க்கும், முற்சொன்ன சீலந்தின் பகுதிகளும் அக்காலத்தில் பிரான்சின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தன. 1807 ஆம் ஆண்டில், பிரசியப் பகுதிகளான கிழக்கு பிரிசியாவும், யேவரும் ஒல்லாந்து இராச்சியத்துடன் சேர்க்கப்பட்டன. ஆனாலும், 1809 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் ஆக்கிரமிப்புத் தோல்வியில் முடிந்த பின்னர், ரைன் ஆற்றுக்குத் தெற்கில் அமைந்திருந்த ஒல்லாந்தின் பகுதிகள் எல்லாம் பிரான்சின் கைக்கு மாறின. + +ஒல்லாந்து அரசனாகப் பதவியில் அமர்த்தப்பட்ட லூயிசு பொனப்பார்ட், நெப்போலியனின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக நடந்துகொள்ளவில்லை. அவன், தனது தமையனான நெப்போலியனின் நலன்களைக் கவனிப்பதை விட டச்சு மக்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தான். கண்டத்து நடைமுறைகளுக்கு மாறாக இங்கிலாந்துடனான வணிகத்தையும் அனுமதித்திருந்தான். டச்சு மொழியையும் கற்க முயற்சி செய்தான். இதனால், 1810 ஆம் ஆண்டு யூலை 1 ஆம் தேதி லூயிசு பதவி துறக்க வேண்டியதாயிற்று. தொடர்ந்து அவனது ஐந்து வயது மகன் நெப்போலியன் லூயிசு பொனப்பார்ட் இரண்டாவது லூயிசு என்னும் பெயருடன் அரசனாக அறிவிக்கப்பட்டான். ஆனால், நெப்போலியன் பொனப்பார்ட் இந்த நியமனத்தை ஏற்றுக்கொள்ளாததால், நெப்போலியன் லூயிசு 10 நாட்கள் மட்டுமே அரசனாக இருக்க முடிந்தது. நெப்போலியன் ஒரு படையை அனுப்பி ஒல்லாந்தைக் கைப்பற்றியதுடன், ஒல்லாந்து இராச்சியத்தைக் கலைத்துவிட்டு அந்நாட்டை பிரான்சுப் பேரரசின் ஒரு பகுதி ஆக்கிக்கொண்டான். + +1813 ஆம் ஆண்டுவரை நெதர்லாந்து பிரான்சின் பகுதியாக இருந்தது. அந்த ஆண்டில் நெப்போலியன் லீப்சிக் போரில் தோல்வியடைந்தபோது, அவன் நெதர்லாந்தில் இருந்து பிரெஞ்சுப் படைகளை விலக்கிக்கொள்ள வேண்டியதாயிற்று. + +முன்னர் நெதர்லாந்தின் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஆரெஞ்சின் இளவரசர் ஐந்தாம் வில்லியத்தின் மகன் நெதர்லாந்தின் முதலாம் வில்லியம், 1813ல் நெதர்லாந்துக்குத் திரும்பி அந்நாட்டின் முடிக்குரிய இளவரச��் ஆனார். 1815 மார்ச் 16ல் அவர் நெதர்லாந்தின் அரசரானார். 1815 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில், பிரான்சின் எல்லையில் ஒரு வலுவான இராச்சியத்தை உருவாக்கும் நோக்கில், நெதர்லாந்துடன் பெல்சியத்தையும் இணைத்து நெதர்லாந்து ஐக்கிய இராச்சியம் உருவாக்கப்பட்டது. பல்வேறு செருமன் பகுதிகளுக்குப் பதிலீடாக லக்சம்பர்க்கும் வில்லியத்துக்குத் தனிப்பட்ட சொத்தாக வழங்கப்பட்டது. + +கிளர்ச்சி மூலம் பெல்சியம் 1830 ஆம் ஆண்டில் விடுதலை பெற்றது. நெதர்லாந்தின் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தபோது லக்சம்பர்க்கின் உரிமை வாரிசுரிமைச் சட்டங்களின் அடிப்படையில் கைமாறியதால் 1890ல் நெதர்லாந்தும் லக்சம்பர்க்கும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன. + +19 ஆம் நூற்றாண்டில், அயல் நாடுகளுடன் ஒப்பிடும்போது நெதர்லாந்தின் கைத்தொழில்மயமாக்கம் மந்தமாகவே இடம்பெற்றது. ஆற்றலுக்குப் பெரும்பாலும் காற்றாலைகளில் தங்கியிருந்ததுடன், பெருமளவில் நீர்வழிகளைக் கொண்டிருந்த உள்கட்டமைப்பை நவீனப்படுத்துவதில் இருந்த சிக்கல்களே இதற்குக் காரணம். + +முதலாம் உலகப் போரில் நெதர்லாந்து நடுநிலை வகித்த போதிலும் இது தொடர்பில் நெதர்லாந்து தவிர்க்க முடியாதபடி தொடர்புபட்டிருந்தது. செருமனி முதலில் நெதர்லாந்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு இருந்தது எனினும், அது நடுநிலையில் இருப்பதன் அவசியத்தை முன்னிட்டு இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. + +ஐரோப்பாவில் நெதர்லாந்துப் பகுதிகள் அகலக்கோடு 50°, 54° வ என்பவற்றுக்கு இடையிலும், நெடுங்கோடுகள் 3°, 8° கி ஆகியவற்றுக்கு இடையிலும் உள்ளது. + +இந்த நாடு, கிளை ஆறுகளுடன் கூடிய ரைன் ஆறு, வால் ஆறு, மெயூசு ஆறு என்னும் பெரிய ஆறுகளால் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறுகள் இவ்விரு பிரிவுகளுக்கும் இடையே ஒரு இயற்கைத் தடுப்பாகச் செயற்பட்டதால், மரபு வழியான ஒரு பண்பாட்டுப் பிரிவு ஏற்பட்டு விட்டது. அவ்வாறுகளுக்கு வடக்கிலும், தெற்கிலும் பேசப்படும் மொழியில் காணும் ஒலிப்பியல் வேறுபாடுகள் இதற்குச் சான்றாக அமைகின்றன. + +நெதர்லாந்தின் தென்மேற்குப் பகுதி ஒரு ஆற்று வடிநிலம் ஆகும். + +நெதர்லாந்தானது கடல்மட்டத்தை விடத் தாழ்மட்டத்தில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றாகும். அதிகளவான சமவெளிகளைக் கொண்டுள்ளது. + +இந��� நாட்டில் கண்டக் காலநிலை காணப்படுகின்றது. + +இந் நாட்டில் ஒல்லாந்து இனத்தவர்களே அதிகளவாக வாழ்கின்றனர். இரண்டாம் உலகபோரின் பின்னர் அதிகளவான ஆசிய, ஆபிரிக்க நாட்டினர் குடியேறியுள்ளனர். உலகின் அதிகளவான மக்கள் அடர்த்தி கொண்ட நாடு நெதர்லாந்து ஆகும் . ஒல்லாந்த மொழியே இந்நாட்டின் அரச கரும மொழியாகும். உரோமன் கத்தோலிக்கம், புரட்டஸ்தாந்து, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றுபவர்களும் எந்தவொரு மதத்தினையும் பின்பற்றாதவர்களும் பெருமளவில் வாழ்கின்றனர். + +ஐரோப்பிய பொருளாதாரத்தில் நெதர்லாந்து முக்கிய இடம் வகிக்கிறது. முதலாளித்துவ பொருளாதாரத்தை பின்பற்றும் ஒரு நாடாகும். கப்பல் கட்டுதல், மீன்பிடி ,வர்த்தகம் போன்ற துறைகளின் மூலம் பொருளீட்டுகிறது. காலனித்துவ காலத்தில் கைப்பற்றிய நாடுகளிலிருந்து வளங்களைச் சுரண்டிய நாடுகளிலொன்றாகும். நாணயம் யூரோ. + +மன்னராட்சி இடம் பெறும் நாடாகும். எனினும் நாடாளுமன்ற ஆட்சி முறையே நடைபெறுகின்றது. மன்னர் நாட்டின் தலைவராக இருந்த போதினும் அதிகாரங்கள் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதமரிடம் இருக்கும். + +நெதர்லாந்து, மாகாணங்கள் என அழைக்கப்படும் 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் ஒவ்வொன்றும் "அரசியின் ஆணையாளர்கள்" "(Commissaris van de Koningin)" எனப்படுபவர்களால் நிர்வாகம் செய்யப்படுகின்றது. லிம்பர்க் மாகாணத்தில் மட்டும் இவர்கள் "ஆளுனர்கள்" "(Gouverneur)" என அழைக்கப்படுகின்றனர். எல்லா மாகாணங்களும் "முனிசிப்பாலிட்டி" எனப்படும் துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. 13 மார்ச் 2010 நிலவரப்படி நாட்டில் உள்ள மொத்த முனிசிப்பாலிட்டிகளின் தொகை 430 ஆகும். + +நாடு நீர் மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் நீர் மேலாண்மைக்குப் பொறுப்பாக உள்ள "நீர்ச் சபைககள்" "(water board)" இம் மாவட்டங்களை நிர்வகிக்கின்றன. 2005 ஆம் ஆண்டு சனவரி முதலாம் தேதி 27 இவ்வாறான நீர் மாவட்டங்கள் இருந்தன. நாடு உருவாவதற்கு முன்பே "நீர்ச் சபைகள்" இருந்துள்ளன. 1196ல் இவை முதன் முதலில் உருவாகின. டச்சு நீர்ச் சபை, இன்றும் செயற்படுகின்ற உலகின் சனநாயக நிறுவனங்களுள் மிகவும் பழையது எனக் கருதப்படுகின்றது. + +நெதர்லாந்தில் ஆடப்படும் அனைத்து விளையாட்டுகளினும் புகழ்பெற்று விளங்குவது கால்பந்து ஆகும். ஹாக்கி மற்���ும் கைப்பந்து அடுத்த இடத்தைப் பெறுகின்றன. நெதர்லாந்தின் தேசிய கால்பந்து அணியின் மைதானம் ஆம்ஸார்டாம் அரினா. கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று முறை[1974,1978,2010] இறுதி போட்டி வரை முன்னேறி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளில் ஓரு முறை[1988] வென்றுள்ளது + +நெதர்லாந்தில் ஆண்கள் அணி, ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று முறையும், ஓலிம்பிக் தங்கத்தை இரண்டு முறையும் வென்றுள்ளது. ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் நெதர்லாந்தில் பெண்கள் அணி ஆறு முறை வென்றுள்ளது. + +நெதர்லாந்து ஒல்லாந்து ("Holland") என்ற துணைப்பெயராலும் அழைக்கப்படுகிறது. நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாகும். + + + + + +யாப்பருங்கலக் காரிகை + +இன்று நமக்குக் கிடைக்கின்ற தமிழ் இலக்கண நூல்களிலே மிகவும் பழமையான நூலாகிய தொல்காப்பியத்திலேயே யாப்பிலக்கணம் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி அதிலே கூறப்பட்டுள்ளவை பல இன்றும் வழக்கில் இருந்துவருகின்றன. இருந்தாலும், பிற்காலத்தில் புழக்கத்துக்கு வந்த பாவினங்களிற் சில அக் காலத்தில் இல்லாதிருந்தமையால் தொல்காப்பியத்தில் இவற்றுக்குரிய இலக்கணங்கள் கூறப்படவில்லை. இதனால் பிற்காலத்தில் ஏற்பட்ட யாப்பிலக்கண வளர்ச்சிகளையும் உட்படுத்தி எழுந்த யாப்பிலக்கண நூல்களிலே யாப்பருங்கலக் காரிகை சிறப்பானது. இந்நூலே இன்று யாப்பிலக்கணம் பயில்வோரால் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. + +இந்நூற் பெயருக்குப் பலர் பல விதமாக விளக்கம் கூறுகின்றனர். யாப்பெனும் கடலைக் கடக்கும் தோணி போன்றது எனப் பொருள்படும் "யாப்பருங்கலம்" என்னும் நூலுக்கு உரைபோல் அமைந்ததன் காரணமாகவே யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சிலர் கூறுகிறார்கள். சமண சமயம் தொடர்பான திரமிள சங்கத்தின் உட்பிரிவுகளுள் ஒன்றான அருங்கலான்வயம் எனும் பிரிவைச் சேர்ந்த இந் நூலாசிரியர் தானெழுதிய நூல்களுக்கு யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை எனப் பெயரிட்டிருக்கக் கூடுமெனக் கூறுவாரும் உளர். + +யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை என்னும் இரு நூல்களையும் இயற்றியவர் "அமுதசாகரர்" என்பவராவார். இவர் சமண சமயத் துறவியாவார். அமுதசாகரரின் ஆசிரியர் பெயர் குணசாகரர் என்பதாகும்.குணசாகரரே இந்நூலுக்கு உரையாசிரியருமாவார். அமுதசாகரர் பாண்டிய நாட்டில் பிறந்து வளர்ந்து, கழுகுமலையில் ஆசிரியர் குணசாகரரிடம் பயின்று, பிற்காலத்தே தொண்டை நாட்டிற்க்கு வந்து தங்கி வாழ்ந்திருக்கின்றார். + +கி.பி 1070 - 1120 வரையான காலத்தைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழனுடைய கல்வெட்டொன்றையும் பிற ஆதாரங்களையும் வைத்து இந் நூல் எழுதிய காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி என்று ஆய்வாளர் கூறுகின்றனர். + +இந்நூல் பின்வருமாறு மூன்று இயல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. + + +செய்யுள் உறுப்புக்களான எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்பன பற்றிய இலக்கணங்களைக் கையாள்கிறது. +பாவகைகள், பாவினங்கள், அவற்றுக்குரிய ஓசைகள் முதலானவற்றின் இலக்கணங்களைக் கூறுகின்றது. +மூன்றாவது இயலான ஒழிபியலில் முதலிரு இயல்களில் கூறப்படாத யாப்பிலக்கணச் செய்திகளும் நூற்பாக்களும் கூறப்படுகின்றன. + + +யாப்பருங்கலக் காரிகை மூலம் - சென்னைநூலகம்.காம் +யாப்பருங்கலக் காரிகை மூலம் - மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் + + + + +தொடை (யாப்பிலக்கணம்) + +தொடை என்பது யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது. செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன் சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது. செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை. + +தொல்காப்பியர் தொடைகள் 13708 வகைப்படும் எனக் குறிப்பிடுகிறார். + +தொடைகள் பலவகைப் படுகின்றன. இவை, + + +என்பனவாகும். இவற்றுள் மோனை, எதுகை, முரண் மற்றும் அளபெடைத் தொடைகள் செய்யுள் அடிகளின் முதற் சீருடன் சம்பந்தப்பட்டிருக்க, இயைபுத் தொடை அடிகளின் இறுதிச் சீர் தொடர்பாக அமைகின்றது. + +மேலே கண்ட எட்டுத் தொடைகளிலே முதல் ஐந்து தொடை ஒவ்வொன்றுக்கும் அவை பாவிலே அமைந்து வருகின்ற இடங்களைப் பொறுத்து, எட்டு வகையான வேறுபாடுகள் யாப்பிலக்கண நூல்களிலே சொல்லப்பட்டுள்ளன. இவை யாப்பிலக்கணச் சொற் பயன்பாட்டு வழக்கில் "விகற்பங்கள்" எனப்படுகின்றன. மேற் கூறிய எட்டு விகற்பங்களும் வருமாறு. + + +மோனை, எதுகை, முரண், அளபெடை, இயைபு ஆகிய தொடைகளில் எட்டுவகையான விகற்பங்கள் ஏற்படும்போது மொத்த��் நாற்பது தொடை விகற்பங்கள் உண்டாகின்றன. இவற்றுடன் விகற்பங்கள் இல்லாத அந்தாதி, இரட்டை மற்றும் செந்தொடைகளும் சேர்ந்து நாற்பத்து மூன்று ஆகின்றது. + +தொடைவகை + + + +மெசொப்பொத்தேமியா + +மெசொப்பொதாமியா ("Mesopotamia"), தென்மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஒரு பிரதேசமாகும். இது டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட வளமான வண்டல்மண் பகுதியாகும். இன்றைய ஈராக், ஈரான், சிரியா மற்றும் துருக்கியின் தென்கிழக்குப் பகுதிகளை இது உள்ளடக்கியிருந்தது. பொதுவாக மெசொபொதேமியா எனும் சொல், மேற்கில் சிரியப் பாலைவனத்தாலும், தெற்கில் அராபியப் பாலைவனத்தாலும், தென்கிழக்கில் பாரசீக வளைகுடாவினாலும், கிழக்கில் சக்ரோசு மலைத்தொடர்களாலும், வடக்கில் காக்கேசிய மலைகளினாலும் சூழப்பட்ட, மேற்சொன்ன டைகிரிசு ஆறு மற்றும் யூபிரட்டீஸ் ஆறுகளின் சமவெளிகள் முழுவதையும், சுற்ற தாழ்நிலப் பகுதிகள் அனைத்தையும் உள்ளடக்கியதாகும். + +மெசொப்பொதேமியா, உலகின் மிகப் பழைய சுமேரிய நாகரிகம், சாலடிய நாகரிகம் போன்ற பண்டைய நாகரிகங்கள் தழைத்தோங்கியிருந்த இடம் என்ற வகையில் மிகவும் புகழ் பெற்றது. மெசொப்பொதேமியாவின் எழுத்து முறைமை, உலகின் மிகப் பழைய எழுத்து முறைமைகளுள் ஒன்று. இது மெசொப்பொத்தேமியா உலக நாகரிகத்தின் தொட்டில் என்று புகழப்படக் காரணமாயிற்று. + +பிராந்திய இடப் பெயராகிய "மெசொப்பொத்தேமியா" என்பது புராதன கிரேக்கச் சொற்களாகிய μέσος ("மெசொ") "மத்திய" மற்றும் ποταμός ("பொத்தேமியா") "ஆறு" என்பவற்றிலிருந்து தோன்றியது இச்சொல்லுக்கு "ஆறுகளுக்கு இடைப்பட்ட நிலம்" எனப் பொருளாகும். ஹீப்ருவில் உள்ள "நகரைம்" என்பதை மொழிபெயர்ப்பதற்கு, இது கிரேக்க செப்துவசிந்தா (கி.மு. 250) முழுவதும் பயன்படுத்தப்படுகின்றது. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, அலெக்சாந்தரின் காலத்தைக் குறிக்கும் "அனபாசிஸ் அலெக்சாந்திரி" என்ற நூலில் "மெசொப்பொத்தேமியா" என்ற சொல் உள்ளது, கிரேக்கர்கள் இச்சொல்லை முன்பிருந்தே பயன்படுத்துவதற்கு ஆதாரமாக உள்ளது. அனபாசிசில் "மெசொப்பொத்தேமியா" என்பது யுப்பிரதீஸ் நதிக்குக் கிழக்கே, வட சிரியாவில் அமைந்துள்ள நிலப்பகுதியைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரமேய வார்த்தையான "பிரிடம் / பிரிட் நரிம்" ("biritum" / "birit narim") இதே போன்ற புவியியல் கருத்தை ஒத்திருந்தது. பின்னர், மெசொப்பொத்தேமியா என்பது பொதுவாக யூப்ரடீஸ், டைக்ரிஸ் நதிகளுக்கு இடையே அமைந்துள்ள அனைத்துப் பிரதேசத்தையும் குறிக்க்ப் பயன்படுத்தப்பட்டது. அதன் மூலம் சிரியாவின் பகுதிகள் மட்டுமல்லாமல் ஈராக் மற்றும் தென்கிழக்கு துருக்கியின் கிட்டத்தட்ட அனைத்து பிரதேசங்களும் இதனுள் உள்ளடங்கின. யூப்ரதீசின் மேற்கிலும் ஜக்ரோஸ் மலைகளின் மேற்குப் பகுதியிலும் அமைந்துள்ள ஸ்டெப்பிஸ் புல்வெளியானது, பெரும்பாலும் பரவலான வகையில் மெசொப்பொத்தேமியாவின் கீழ் உள்ளடக்கப்படுகின்றது. மேலும் சில வேறுபாடுகள் பொதுவாக உயர் அல்லது வடக்கு மெசொப்பொத்தேமியா மற்றும் கீழ் அல்லது தெற்கு மெசொப்பொத்தேமியாவிற்கு இடையே செய்யப்படுகின்றன. உயர் மெசொப்பொத்தேமியாவானது "ஜெசிரா" என்றும் அழைக்கப்படுகின்றது. இது யூப்ரதீஸ் மற்றும் டைக்ரிஸ் நதிகளுக்கு இடையில் உள்ள பகுதியில் பக்தாத்திற்குக் கீழுள்ள பிரதேசமாகும். கீழ் மெசொப்பொத்தேமியாவானது தெற்கு ஈராக், குவைத் மற்றும் மேற்கு ஈரானின் சில பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. நவீன கல்விசார் பயன்பாட்டில், மெசொப்பொத்தேமியா எனும் சொல் பெரும்பாலும் ஒரு கால உட்பொருளைக் கொண்டுள்ளது. முசுலிம்கள் வெற்றிபெற்ற வரையான பகுதிகளைக் குறிக்கவே இது பயன்படுத்தப்படுகின்றது. தற்போது சிரியா, ஜெசிரா மற்று ஈரான் ஆகிய பெயர்கள் இப்பிரதேசத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இதன் பின்னர் இடக்கரடக்கல் பல்வேறு 19 ஆம் நூற்றாண்டின் மேற்கத்திய ஆக்கிரமிப்பின் மத்தியிலான பிராந்தியத்தின் காரணமாக இன்றும் நிலுவையில் இச் சொற்கள் உள்ளன என்று வாதிட்டனர். + +பெருமளவு பண்டைக்கால நாகரிகங்களைச் சேர்ந்த மக்கள் மெசொப்பொத்தேமியாவில் குடியேறியும், அதனைக் கைப்பற்றி ஆட்சி செய்தும் உள்ளனர். பண்டைய மெசொப்பொத்தேமியாவின் நிகழ்வுகளுக்கான காலத்தை நிர்ணயிப்பது இன்னும் சர்ச்சைக்குரிய ஒன்றாகவே இருந்து வருவதுடன், பல்வேறுபட்ட கால நிர்ணய முறைகளும் பயன்பாட்டிலிருந்து வருகின்றன. இதன் காரணமாக, இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள காலக் குறிப்புகள் அண்ணளவானவை என்றே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். + + + + + + + + + +மெசபடோமியாவில் வழங்கப்��ட்ட மொழி ஒரு தனிப்பட்ட வடிவம் உடைய சுமேரிய மொழியாக இருந்தது. +சுமேரியர்களிடையே செமிட்டிக் இனத்தாரிடையே ஒரு வட்டார வழக்கும் சொகுரு இனத்தாரிடையே சுபார்ட்டு என்ற மொழியும் வழங்கப்பட்டது. இவை ஹுரோ உரார்தியன் மொழி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளில் தனிப்பட்டு, பெயர்கள், நதிகள் மலைகளின் பெயர்கள் மற்றும் கைவினைப்பொருட்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது. + +அக்காடியர்கள் காலத்திலும் அசிரியர்கள் காலத்திலும் அக்காடிய மொழி பரவலாக ஆதிக்கம் செலுத்தியது. ஆனாலும் நிர்வாகம், சமய, இலக்கிய, விஞ்ஞான நோக்கங்களுக்காகச் சுமேரிய எழுத்து வடிவமானது பயன்படுத்தப்பட்டது. பல்வேறுபட்ட அக்காடிய மொழிகள் புதிய பாபிலோனியக் காலம் வரை புழக்கத்தில் இருந்தது. அதன் பின்பு மெசபத்தோமியாவெங்கும் பொதுவாக அராமைக் மொழியே வழங்கி வந்தது. இது பின்னர் புதிய அசிரியப் பேரரசு காலத்தில் ஆட்சிமொழியாக ஆக்கப்பட்டது. அதன்பின்னர் வந்த அக்கீமெனிட் பேரரசு காலத்திலும் பெர்சிய பேரரசிலும் இம்மொழியே வழங்கப்பட்டது. இவை விழ்ச்சியுற்ற போதும் ஆலயங்களில் பல நூற்றாண்டுகளாகப் புழக்கத்தில் இருந்தது. + +முந்தைய மெசபத்தோமியாவில் (கி. மு நான்காம் நூற்றாண்டின் இடையில்) கியூனிபார்ம் என்ற எழுத்துமுறை சுமேரிய மொழியில் கண்டறியப்பட்டது. கியூனிபார்ம் என்பதற்கு ஆப்பு வடிவிலான என்பது பொருள். முக்கோனவடிவ முனையுள்ள எழுத்தாணி கொண்டு ஈரமான களிமண் பலகைகளில் செதுக்கி உருவாக்கப்படும் எழுத்து முறையாகும். பட எழுத்திலிருந்து திருத்தமாக உருவாக்கப்பட்ட கியூனிபார்ம் எழுத்து முறை உருவாயிற்று. பழங்காலத்தில் உர்க் என்ற இடத்தில் உள்ள ஒரு கோயில் பெண்கடவுளான இனன்னாவிற்கு அர்பணிக்கப்பட்டதை இவ்வெழுத்து முறையில் குறிப்பிட்டுள்ளனர். + +முற்காலத்தில் சின்னங்கள் வடிவிலான எழுத்து முறையிலிருந்து கியூனிபார்ம் எழுத்துமுறை செம்மைபெற பல ஆண்டுகளாயின. ஒரு சிலர் மட்டுமே பயிற்சியால் இவ்வெழுத்த்களை எழுதக் கற்றிருந்தனர். சர்கோன்களின் ஆட்சி காலத்தில் தான் இம்முறை பரவலாக அறியப்பட்டது. அதன் பின்னர் மெசபடோமியாவில் கல்வியறிவு வளர வளரப் பல்வேறு முறையிலான எழுத்துருக்கள் உருவாயின. இவை பாபிலோனியாவில் பள்ளிகளில் பயிற்றுவிக்கப்பட்டன. + +மூன்றாம் நூற்றாண்டு காலத்த���ல் மெசபடோமியாவில் நாகரிக மாற்றம் காரணமாகச் சுமேரிய மற்றும் அக்கடிய மொழி வளர்க்கவும் பரவவும் செய்தது. மெசபடோமியாவில் அனைத்து பகுதியிலும் சுமேரியர்களின் மீதானாக்கடியர்களின் செல்வாக்கு காரணமாகவும் அவர்களின் மொழியில் இலக்கண விதிகள், வரிவடிவம், மற்றும் பேச்சொலிகளில் தாக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாகக் கி.மு மூன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் சுமேரிய மொழி மெல்ல மெல்ல மறைந்து அக்கடிய மொழியே பரவலாக மக்களின் பேச்சுமொழியாக இருந்தது. ஆனால் கி. பி. முதலாம் நூற்றாண்டு வரை இறைவழிபாடு, புனிதச் சடங்குகள், இலக்கிய மற்றும் விஞ்ஞான மொழியாகச் சுமேரிய மொழியே மெசபடோமியாவெங்கும் பயன்படுத்தப்பட்டது. + +பாபிலோனிய பேரரசின் நகரங்கள் மற்றும் கோயில்களில் நூலகங்கள் நடைமுறையில் இருந்தன. ஆண்களும் பெண்களும் மிகச்சிறந்த கல்வியைப் பெற்றிருந்தனர். மற்றும் செமிட்டிக் பாபிலோனியர்களின் இந்தத் தொடர்பு காரணமாகவும் சிக்கலான, விரிவான அசையெழுத்து கொண்ட சுமேரிய மொழியானது அழியும் நிலைக்கு ஆளானது. மேலும் பேரளவிலான சுமேரிய இலக்கியங்கள் பாபிலோனிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன. + +மதம் மற்றும் சட்டங்கள் பழைமையான சுமேரிய மொழியிலேயே நீண்ட காலமாகத் தொடர்ந்தன. சொற்களஞ்சியம், இலக்கணம், ஆகியவை மாணவர்களின் கல்விக்காகத் தொகுக்கப்பட்டன. அதே போன்று பழைமையான நூல்களுக்கான தெளிவுரைகள் மற்றும் விளக்கவுரைகளும், புரியாத சொற்கள், சொற்றொடர்களுக்கான விளக்கங்களும் எழுதப்பட்டன. மேலும் அவைகளுக்கன பெயர்களுடன் விரிவாகப் பட்டியலிடப்பட்டன. +பாபிலோனிய இலக்கியங்கள் இன்றளவிலும் பயிலப்பட்டு வருகின்றன. அவற்றுள் புகழ்பெற்ற ஒரு காப்பியம் 12 நூல்களாக உள்ள கில்கமேஷ் காப்பியமாகும். இது சுமேரிய மூல மொழியிலிருந்து சின்-லிக்-உன்னினி என்பவரால் மொழிபெயர்க்கப்பட்டதாகும். மேலும் இது வானவியல் கொள்கைகளின்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் கில்கமேஷால் நிகழ்த்தப்பட்டதாக ஒரு சாகசக் கதையைக் கொண்டதாகும். புனைவுக்கதைகளாயினும் அவை அனைத்தும் காப்பிய மையக்கருவை தொடர்பு படுத்தியதாகக் காணப்படுகின்றன. + +மெஸோபோடமியர்களின் கணிதம் மற்றும் அறிவியல் அறுபதினை அடிப்படையாக (அடியெண் 60) கொண்ட எண் முறையைக் கொண்டது. இதன் அடிப்படையில் அவர்கள் 60 நிமிடம் ஒரு மணி நேரமாகவும்,24 மணி நேரம் ஒரு நாளாகவும் மற்றும் வட்டத்தின் கோணத்தை 360 பாகைகளாகவும் கணக்கிட்டனர்.சுமேரிய நாட்காட்டி ஏழு நாள்களை அடிப்படையாகக் கொண்ட வாரத்தை உடையது. இக்கணக்கீட்டு முறையே முற்காலத்தில் வரைபடங்களை உருவாக்க அடிப்படையாக அமைந்தது. பாபிலோனியர்கள் பல வடிவங்கள் மற்றும் திட பொருட்களின் சுற்றளவு ஆகியவற்றை கணக்கிட சமன்பாடுகளை உருவாக்கினர். வட்டத்தின் சுற்றளவு, உருளையின் கன அளவு ஆகியவற்றையும் கணக்கிட அவர்கள் அளவை முறைகளைப் பயன்படுத்தினர். அவர்களின் தூரக் கணக்கீட்டு முறை பாபிலோனிய மைல் எனப்படும் தூர அளவைக் கொண்டிருந்தது. அது தற்காலத்திய 7 மைல்களுக்கு (11 கி.மீ) சமமானதாகும். இதன் அடிப்படையிலேயே அவர்கள் சூரியனுடைய பயண தூரத்தையும் கால அளவையும் கணக்கிட்டனர். + +சுமேரியர்களின் காலம் முதல் கோயில் மத குருமார்கள் கோள்கள் மற்றும் விண்மீன்களின் அமைவிடத்தை பொருத்து அவர்கள் காலத்தைக் கணித்து வந்தனர். இது அசிரியர் காலம் வரை தொடர்ந்தது. இக்காலத்தில் அசிரியர்கள் லிம்மு (உயர் அரசு அலுவலரின் பதவியின் பெயர்) எனப்படும் அரசு அலுவலர்களின் பெயரில் ஒவ்வொரு வருடத்திற்குமான பட்டியல் தயரித்தனர். அது மேற்கண்ட முறையில் நடப்பு நிகழ்வுகளுடன் கோள்கள் மற்றும் விண்மீன்களின் நிலையுடன் தொடர்புபடுத்தப்பட்டதாகவே இருந்தது. இம்முறை இன்றும் நடைமுறையில் உள்ளது. இது மிகச் சரியான முறையில் மெசொப்பொத்தேமியாவின் காலக்கணக்கீட்டு முறையில் வரலாற்றைத் துல்லியமாகக் கணக்கிட உதவுகிறது. + +அவர்கள் ஒரு வருடத்திற்க்கான நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தனர். கணிதத்தில் திறமை வாய்ந்தவர்களாக இருந்ததால் அவர்களால் சூரிய,சந்திர கிரகணங்களை முன்கூட்டியே கணிக்க முடிந்தது. வானவியல் அறிஞர்கள் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஏதேனும் ஒரு காரணம் உண்டென்று நம்பினர். இது மதம் மற்றும் சடங்குகளுடன் தொடர்புடையதாகவே இருந்தது. அவர்கள் சந்திரனின் பயணத்தைக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் 12 மாதங்களைக் கொண்ட நாட்காட்டியைப் பயன்படுத்தினர். கோடை மற்றும் குளிர் காலம் என இரண்டு பருவங்களாக ஓர் ஆண்டின் பருவங்களைப் பகுத்திருந்தனர். இக்காலத்திலிருந்து தான் வானவியல் என்ற ஒன்று தோற்றம் பெற்றது. + +கி.மு. 8 மற்றும் 7 வது நூற்றாண்டுகளில் பாபிலோனிய வானியலில் ஒரு புதிய அணுகுமுறை உருவாக்கப்பட்டது. பாபிலோனிய வானவியல் அறிஞர்களால் பிரபஞ்சத்தின் இயற்கை இயல்புகளைத் தத்துவங்களோடும் கோள்களோடும் தொடர்புபடுத்தி புதிய வானியல் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அவை பயிற்றுவிக்கப்பட்டன. இது வானியல் தத்துவத்திற்கான ஒரு முக்கியமான பங்களிப்பாகும். இவர்களின் இப்பங்களிப்பு 'விஞ்ஞானப் புரட்சி' எனக் குறிப்பிடப்படுகிறது. இப்புதிய முறையிலான வானியலை கிரேக்கர்களும் பின்பற்றி அதனை மேம்படுத்தினர். + +செல்யூசிட் மற்றும் பார்த்தியம் முறையிலான வானிலை அறிக்கைகள் முற்றிலும் அறிவியல் முறையிலேயே கணக்கிடப்பட்டது. அறிவியல் வளர்ச்சியடையாத அக்காலத்திலேயே இது போன்று துல்லியமாக நிகழ்வுகளைக் பாபிலோனியர்கள் மிகச்சிறந்த அறிவியல் முறையில் கணக்கிட்டது எவ்வாறென இன்றளவும் அறிய முடியாததாவே உள்ளது. பாபிலோனியர்களின் கோள்களின் இயக்கங்களை முன்கூட்டியே கணிக்கும் இவ்வானியல் முறை மெசொப்பொத்தேமியா வரலாற்றில் ஒரு குறிப்பிடத் தக்க முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. +[| வரலாறு வானியல்] வானியல் # மெசபடோமியா [வரலாறு] கிரகங்கள் இயக்கங்கள் கணிக்கும் முறைகள் பாபிலோனிய வளர்ச்சியில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. + +கிரேக்க பாபிலோனியரும் வானியலாளருமான செலூசியா (கி.மு. 190) என்பவர் அவருக்கு முன் வாழ்ந்த வானியல் அறிஞரான புளூடார்க் என்பவரது சூரிய மையக் கொள்கையைக் கற்றிருந்தார். எனவே, புளூடார்க்கின் கொள்கையான பூமியானது தனது சொந்த அச்சில் சுழன்றுகொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற கொள்கையை அவர் ஏற்றார். இதனை அவர் நிரூபிக்க முயன்றார். ஆனால் சந்திரனின் ஈர்ப்புவிசையால் கடலில் ஓதங்கள் உருவாகின்றன என்ற இவரது கொள்கையைத் தவிர இவரது வாதஙகள் கிடைக்கப்பெறவில்லை. +பாபிலோனிய வானியலானது கிரேக்க வானியல்,பாரம்பரிய இந்திய வானியல், சசாந்தியப் பேரரசு, பைசாந்தியப் பேரரசு, சிரியா, இடைக்கால இஸ்லாமிய வானியல், மத்திய ஆசியா மற்றும் மேற்கு ஐரோப்பா ஆகியவற்றின் வானியலுக்கு மிகவும் அடிப்படையாக அமைந்தது. + +கி.பி. 2 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலேயே பழமையான மருத்துவ நூல்கள் பாபிலோனிய பகுதியில் எழுதப்பட்டுள்ளது. மிக விரிவான பாபிலோனிய மருத்துவ நூலானது "மர��த்துவக் கையேடு"என்றறியப்படும், உம்மானு அல்லது தலைமை அறிஞர் என்றழைக்கப்படும் போர்சிப்பாவின் ஈசகில்-கின்-அப்லி என்ற அறிஞரால் பாபிலோனிய அரசரான அதாத்-அப்லா-இத்தினியா என்பரது ஆட்சியில் (கி.மு.1069-1046) எழுதப்பட்டது. + +அக்காலத்தய எகிப்திய மருத்துவத்துடன் இணைத்துப் பாபிலோனியர்கள் அறுவை சிகிச்சை, நோய் பகுப்பாய்வு, உடல் பரிசோதனை, மற்றும் மருந்துகள் போன்றவற்றில் புதிய அனுகுமுறையை அறிமுகப்படுத்தினர். மருத்துவக் கையேடு நூலில் சிகிச்சை முறைகள், நோய்க்கான காரணிகள், முன்கணிப்பு முறைகள் ஆகியவையும் நோய்களை அறிவதற்கும் நோயாளியின் உடலில் கண்டறியப்பட்ட அறிகுறிகுறிகளை இணைத்து அவற்றை ஏரண, தருக்க விதிகளுடன் இணைந்து விரிவாகப் பகுத்தறிவதற்கான முறைகளும் நோயறிகுறிகளுக்கான பட்டியல் ஒன்றும் தரப்பட்டுள்ளது. + +பாபிலோனிய மருத்துவ முறையில் காயத்திற்கு கட்டு போடுதல், களிம்பு தடவுதல், மாத்திரைகள் ஆகியவற்றின் மூலம் நோயாளியின் நோயைக் குணப்படுத்த முயன்றனர். இம்முறையில் குணப்படுத்த முடியாதவரைச் சபிக்கப்பட்ட நோயாளியாகக் கருதி பேயோட்டும் முறை அக்காலத்தில் நடைமுறையிலிருந்து வந்தது. ஆனால் ஈசகில்-கின்-அப்லி என்பவரது மருத்துவ நூல் வெளிப்படையான ஏரணங்களையும் ஊகங்களையும் அடிப்படையாகக் கொண்ட, நவீன முறையில் நோய்ப் பரிசோதனையும் ஆய்வும் செய்யும் முறையையும் கொண்டது. இதனடிப்படையில் ஒரு நோயாளியின் உடலில் ஏற்பட்டுள்ள நோய், நோய்க்காரணி, அதன் வளர்ச்சி ஆகியவற்றினை அறிந்து நோயாளியைக் குணப்படுத்த வாய்ப்பு இருந்தது. +இவர் தனது நூலில் பல்வேறு உடல்நலக் கோளாறுகளையும், நோய்களையும் அவற்றுக்கான அறிகுறிகளையும் விரிவாக விளக்கியுள்ளார். குறிப்பாகப் பல்வேறு வகையான வலிப்பு மற்றும் அதனோடு தொடர்புடைய நோய்களையும் அதற்கான அறிகுறிகளையும் ஆய்வு முறைகளையும் இந்நூல் உள்ளடக்கியது. + +மெசொப்பொத்தேமியர்கள் பல உயர் தொழில்நுட்ப முறைகளைக் கண்டறிந்து பயன்படுத்தியுள்ளனர். உலோக மற்றும் தாமிர வேலைகள், கண்ணாடி மற்றும் விளக்கு தயாரித்தல், ஜவுளி நெசவு, வெள்ள கட்டுப்பாடு, நீர் சேமிப்பு, மற்றும் பாசனமுறை போன்ற பல தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர். இவர்கள் உலகின் முதல் வெண்கல காலகட்ட மக்களுள் ஒருவராக இருந்தனர். அவர்கள் இரும்புடன் ��ெம்பு, வெண்கலம், மற்றும் தங்கத்தையும் பயன்படுத்தினர். நூற்றுக்கணக்கான கிலோ கிராம்கள் கொண்ட மிக விலையுயர்ந்த உலோகங்களால் அரண்மனைகள் அலங்கரிக்கப்பட்டன. மேலும் அவர்கள் இரும்பு, தாமிரம் மற்றும் வெண்கலத்தைப் பயன்படுத்தி வாள்கள்,ஈட்டிகள்,கவசங்கள், ஈட்டிகள், குத்துவாள், தண்டாயுதம் போன்ற ஆயுதங்களையும் செய்தனர். +சமீபத்திய கருதுகோள்களின் படி கி. மு. 7 ஆம் நூற்றாண்டின் சன்கெரிப் என்ற அசிரிய மன்னன் ஆர்க்கிமிடீசின் தத்துவ முறையில் இயங்கும் அமைப்பைப் பயன்படுத்தி பாபிலோனில் தொங்கும் தோட்டம் மற்ரிம் நினிவே என்ற இடத்திற்கான தண்ணீர் இறைக்கும் அமைப்புகளை ஏற்படுத்தினானென அறியப்படுகிறது. இக்கிரேக்கக் கண்டுபிடிப்பு பிற்காலத்திய தண்ணீர் இறைக்கும் அமைப்புகளுக்கு முன்மாதிரியாக உதவியது. பின்னர் பார்தியன் அல்லது சசானியர்களின் காலங்களில் "பாக்தாத் மின்கலம்" எனப்பட்ட உலகின் முதல் மின்கலம் மெசொப்பொத்தேமியாவில் உருவாக்கப்பட்டது. + +மெசொப்பொத்தேமியா சமயமே முதலில் பதியப்பட வேண்டியதாகும். மெசொப்பொத்தேமியர்கள் உலகம் தட்டையானது. அது மிகப்பெரிய வெளியில் சூழப்பட்டுள்ளது. அதற்குமேல் சொர்க்கம் உள்ளதென நம்பினர். அதே போன்று நீரானது மேலே,கீழே மற்றும் பக்கங்களிலென எல்லா இடத்திலும் இருப்பதாகவும் நம்பினர். பிரபஞ்சமானது கடலிலிருந்து பிறந்தாக நம்பினர். அவர்கள் மதத்தையும் பின்பற்றினார்கள். மெசொப்பொத்தேமியாவெங்கும் பிராந்திய வேறுபாடுகள் இருப்பினும் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பொதுவாக ஒன்றாகவே இருந்தன. + +சுமேரியச் சொல்லான "அன்-கி" என்பது "அனு" என்ற ஆண்கடவுளையும் "கி" என்ற பெண்கடவுளையும் குறிக்கும்.. அவர்களுடைய மகன் என்லில் வாயுக் கடவுளாவார்.என்லில் மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என அவர்கள் நம்பினர். இவரே பாந்தியன்களின் முதன்மைக் கடவுளாவார்.இவர் கிரேக்கக் கடவுளர்களான சூயஸ், ரோமானியக் கடவுளான ஜூபிடர் ஆகியோருக்கு இணையாகக் குறிப்பிடப்படுகிறார். மேலும் நாம் யார்? எங்கிருந்து வந்தோம்? இங்கு எப்படி பிறந்தோம்? போன்ற தத்துவ வினாக்களும் சுமேரியர்களிடையே இருந்தன. இதற்கான விடைகளும் விளக்கங்களும் அவர்களின் கடவுளிடமிருந்து வந்தவை என நம்பினர். தத்துவங்களின் தோற்றமெனக் கருதக் கூடியப் பண்டைய மெசொப்பொத்தேமியா தத்துவங்கள் அவர்களின் ஆழ்ந்த அறிவைப் புலப்படுத்துகின்றன. குறிப்பாக இயங்கியல், உரையாடல்கள், காப்பியங்கள், செய்யுள்கள் நாட்டுப்புறப் பாடல்கள் உரைநடைகள் மற்றும் பழமொழிகள் ஆகியவற்றில் வாழ்க்கைத் தத்துவங்கள், நெறிமுறைகள் ஆகியன கூறப்பட்டுள்ளன. +பாபிலோனியர்களின் காரண காரிய மற்றும் பகுத்தறிவானது உற்று நோக்கிய அனுபவ அறிவுக்கு அப்பாற்பட்டு இருந்தது. + +பண்டைய மெசொப்பொத்தேமியர்கள் ஒவ்வொரு மாதமும் விழாக்களைக் கொண்டாடினர். சடங்குகள் மற்றும் விழாக்களின் நோக்கமானது ஆறு முக்கிய காரணிகள்மூலம் தீர்மானிக்கப்பட்டது. + + +சுமேரியர்களின் இசைப்பாடல்கள் கடவுள் வழிபாட்டிற்காக இயற்றப்பட்டவை. இவற்றுள் பல சில முக்கியமான வரலாற்று நிகழ்வுகளை விள்க்குவதாக அமைந்துள்ளன. மன்னர்களுக்காக எழுதப்பட்டனவாயினும் சாதாரன மக்களின் வீடுகளிலும் சந்தை முதலான மக்கள் கூடுமிடங்களிலும் இவை பாடப்பட்டும் அதற்கேற்ப நடனமாடியும் களிக்கப்பட்டன. இவை எழுதப்படாமல் வழிவழியாகப் பாடப்பட்டு வாய்ப்பாட்டின் மூலமாக அடுத்த சந்ததியினருக்குக் கற்பிக்கப்பட்டது. பல நூற்றாண்டுகளாக வரலாற்று நிகழ்வுகள் இவ்வாறே ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்பபட்டன. + +தெற்கு மெசொப்பொத்தேமியாவில் கிடைத்துள்ள உருக் காலத்திய சுமார் 5000 ஆண்டுகள் பழமையான ஒரு படத்தில் மெசொப்பொத்தேமியர்கள் பயன்படுத்திய ஔத் என்ற கம்பி இசைக்கருவி காணப்படுகிறது. இது உருளை வடிவிலான ஒரு இசைக்கருவியாகும். இப்படம் டாக்டர் டொமினிக் கொலோன் என்பவரிடமிருந்து பெறப்பெற்று பிரித்தானிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரு பெண் ஓடத்தில் வலது கையால் இவ்விசைக்கருவியை வாசிப்பது போன்று இடம்பெற்றுள்ளது. மெசப்பத்தோமிய வரலாற்றில் இவ்விசைக்கருவி நூற்றுக்கும் மேற்பட்ட முறை குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தில் 18 ஆம் நூற்றாண்டில் நீண்ட கழுத்து, குறுகிய கழுத்துப்பகுதி கொண்ட இதன் வகைகள் குறிப்பிடப்படுகின்றன. ஔத் இசைக்கருவி ஐரோப்பியர்கள் வீணை ("lute") இசைக்கருவிக்கு முன்னோடியாகும். ஔத் என்ற சொல் அரபு மொழியிலிருந்து பெறப்பட்டதாகும். ஔத் மரத்திலிருந்து இக்கருவி செய்யப்பட்டதால் இவ்விசைக் கருவியும் அப்பெயர��� பெற்றது. + +வேட்டையாடுதல் அசிரிய மன்னர்களிடம் மிகவும் புகழ்பெற்றிருந்தது. குத்துச் சண்டை, மல்யுத்தம் ஆகிய கலைகளும் குதிரைகளுக்கு மாற்றாக மனிதனின் தோள்களில் அமர்ந்து விளையாடும் போலோ விளையாட்டு போன்ற ஒன்றும் விளையாடப்பட்டது. தற்போதைய கால் பந்தாட்டம் போன்று மரத்தால் செய்யப்பட்ட பந்தினைக் கொண்டு விளையாடினர். இதற்கு "மஜோர்" என்பது பெயர். மேலும் தற்போது பரவலாக அறியப்படும் செனென்ட், போக்கேமேன் ஆகிய விளையாட்டுகளைப் போன்று தலைநகரமான ஊர் என்ற இடத்தில் குழு விளையாட்டுகள் விளையாடப்பட்டன. + +மெசொப்பொத்தேமியாவில் உருக்ககினா, லிபித் இஸ்தார், ஹமுராபி ஆகிய சட்ட விதிகள் வெற்றிகரமாகக் கடைப்பிடிக்கப்பட்டன. இதன் வரலாற்றை நோக்கும்போது ஆண்கள் பெண்களைவிட சக்தி வாய்ந்தவர்களாகக் கருதப்பட்டு பெண்வழிச் சமூகம் ஆணாதிக்க சமூகமாக மாறியதை அறியலாம். உதராணமாகப் பண்டைய சுமேரிய காலத்தில் "என்" அல்லது தலைமைப் பூசாரியாகப் பெண்கடவுளுக்கு ஆணும் ஆண் கடவுளுக்குப் பெண்ணும் நியமிக்கப்பட்டிருந்தனர். +தார்க்கிட் ஜாக்கோப்சென் மற்றும் பலரின் கூற்றுப்படி பண்டைய மெசொபொத்தேமிய சமூகம் "பெரியோர்களின் சபை" என்ற ஒன்றினால் ஆளப்பட்டு வந்துள்ளது. இச்சபையில் ஆண், பெண் இருபாலரும் சமமாக இருந்தனர். காலப்போக்கில் பெண்களின் நிலை தாழ்ந்து ஆண்கள் உயர் மதிப்பு பெற்றனர். அரசர்கள், உயர்பதவியில் இருப்போர்களான குருமார்கள், மருத்துவர்கள், கோயில் நிருவாகிகள், ஆகியோரின் பிள்ளைகள் கல்வி பயின்றனர். பெரும்பாலான ஆண்பிள்ளைகள் தங்களுடை தந்தையின் வணிகத்தைத் தானும் செய்ய வேண்டி வெளியிடங்களுக்குச் சென்று வணிகப்பயிற்சி பெற்றனர். பெண்கள் வீட்டு வேலைகள், சமையல் மற்றும் இளைய குழந்தைகளைப் பராமரிக்க வீட்டிலேயே இருந்தனர். சில குழந்தைகள் தானியங்களை உடைக்கவும் பறவைகளின் இறகினைப் பிரித்துச் சுத்தம் செய்யவும் உதவ வேண்டியிருந்தது. இக்காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறாக இச்சமூகத்தில் பெண்கள் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். பெண்களுக்குச் சொத்துரிமையும் தகுந்த காரணங்களுக்காக விவாகரத்து செய்யும் உரிமையும் இருந்தது. + +மெசொப்பொத்தேமியாவின் பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட புதைகுழிகள் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. இதன் மூலம��� மெசொப்பொத்தேமியர்களின் அடக்கம் செய்யும் முறை பற்றிப் பல்வேறு விவரங்கள் கிடைக்கப்பெற்றன. ஊர் என்ற நகரத்தில் பெரும்பாலான மக்கள் தங்களின் வீடுகளுக்கடியிலேயே சில உடைமைகளுடன் புதைக்கப்பட்டனர். ஒரு சில உடல்கள் பாய்களும் கம்பளங்களும் சுற்றப்பட்ட நிலையில் இருந்தன. நோய்வாய்ப்பட்ட குழந்தைகள் பெரிய ஜாடிகளில் வைக்கப்பட்டு குடும்ப தேவாலாயங்களில் வைக்கப்பட்டனர். மற்றவர்கள் நகரின் பொதுவான இடுகாட்டில் புதைக்கப்பட்டனர். 17 கல்லறைகள் மிகவும் விலையுயர்ந்த பொருட்களுடன் காணப்படுகின்றன. எனவே இவை அரச கல்லறைகளாக இருக்கலாமெனக் கருதப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் பஹ்ரைனின் அடக்க முறையானது சுமேரியர்களுடைய அடக்க முறையைப் போலவே இருப்பது அறியப்பட்டுள்ளது. + +கி.மு.5000 இலிருந்தே பாசன முறை விவசாயமானது சக்ரோசு மலை அடிவரத்திலிருந்து சமரா மற்றும் ஹாஜி முகம்மது கலாச்சாரம் வரை பரவியிருந்தது. + +சுமேரியக் கோவில்கள் ஒரு வங்கிகள்போலச் செயல்பட்டன. மேலும் உலகின் முதல் பெருந்தொழில் கடனுதவி வங்கிகளாகவும் அவை வளர்ச்சியடைந்தன. ஆனால் பாபிலோனியர்கள் பண்டைய வங்கிமுறை வனிக வங்கிகளாகும். இது நவீன கெயின்சினுக்கு பிந்தைய பொருளாதாரத்துடன் சில வழிகளில் ஒப்பிடக்கூடியதாக இருந்தது. பழங்காலத்தில் 'ஊர்' நகரில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள் கோவிலின் உடைமைகளாக இருந்தன. ஆனால் காலப்போக்கில் அரசர்கள் மற்றும் தனியார்கள் இந்நிலங்களை வைத்திருந்தனர். + +'இன்சி' என்ற சொல் அலுவல் முறையில் கோவிலின் விவசாய வேலைகளைக் கவனித்து வருபவரைக் குறிக்கும். 'வில்லீன்கள்' எனப்படுவோர் விவசாயத்துடன் தொடர்புடைய பணியாளகளாவர். குறிப்பாக அரண்மனை அல்லது கோவில் நிலங்களில் வேலை செய்வோர் இவ்வாறு அழைக்கப்பட்டனர். +தெற்கு மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு விவசாயத்திற்கு மிகவும் ஏற்றதாக அமைந்ததாகும். நீர்ப்பாசன மற்றும் நிறந்த வடிகால் அமைப்பு காரணமாகச் செழிப்பான விவசாயம் இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டது. மெசபடோமிய நாகரிகத்தில் இதனால ஒரு சிறந்த பரிணாம வளர்ச்சி ஏற்பட்டது. + +வேளாண்மைக்கான நீர்ப்பாசனத் தேவை காரணமாகச் சுமேரியர்கள் காலம் முதல் பிந்தைய அக்கடியர்கள் காலம் வரை யூப்ரடிஸ், டைகரிஸ் மற்றும் அதன் கிளையாறுகளின் கரைகளில் த��்கள் நகரங்களை அமைத்தனர். ஊர், உருக், ஆகிய முக்கிய நகரங்கள் யூப்ரடிஸ் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டது. மற்றொரு குறிப்பிடத் தக்க நகரமான லகாஸ் டைகரிஸ் ஆற்றின் கிளையாற்றில் அமைந்ததாகும். நீர்ப்பாசனம் (உணவிற்கு) மீன்கள்(உணவு மற்றும் உரமாகப் பயன்படுத்தப்பட்டது),நாணல்,களிமண் (கட்டுமானப் பொருள்களுக்கு) ஆகிய பல நன்மைகளை இவ்வாறுகள் இம்மக்களுக்கு வழங்கின. இதனால் மெசொப்பொத்தேமிய நிலங்கள் கனடிய சதுப்பு நிலங்களுடன் ஒப்பிடப்படுகிறது. + +செழிப்பான பிறை போன்ற வடகிழக்குப் பகுதியானது டைக்ரிஸ், யூப்ரதிஸ் நதிப் பள்ளத்தாக்குகள் மற்றும் நைல், ஜோர்டான் ஆற்றுப் பள்ளத்தாக்குகளை உள்ளடக்கிய வளமான பகுதியாகும். எனவே ஆற்றுப் பகுதிகள் வளமிகுந்ததாகவும் பயிர் வளர்ச்சிக்கு ஏற்றதாகவும் இருந்தன. தண்ணீருக்குத் தொலைவில் இருந்த பகுதிகள் வறண்டதாகவும் குடியேற முடியாததாகவும் இருந்தன. எனவே மெசொப்பொத்தேமியாவில் குடியேறிவர்களுக்கு நீர்ப்பாசன வளர்ச்சி மிகவும் இன்றியமையாததாக இருந்தது. + +அணைகள்மூலம் நீரைத்தேக்கி வைத்ததும் கால்வாய்களை அமைத்ததும் மெசொப்பொத்தேமியர்களின் முக்கிய கண்டுபிடிப்பாகும். பண்டைய குடியேறிகள் வளமான நிலங்களை மரக்கலப்பை கொண்டு பதப்படுத்திப் பார்லி, வெங்காயம், திராட்சை, முள்ளங்கி, ஆப்பிள் போன்ற வற்றை பயிரிட்டனர். இவர்களே முதன் முதலில் "பீர்" "ஒயின்" ஆகியவற்றை உற்பத்தி செய்தனர். இவர்கள் விவசாயத்தில் தின்வாய்ந்தவர்களாக இருந்ததால் விவசாய வேலைகளுக்கு அடிமைகளைச் சார்ந்திருக்க வேண்டிய தேவையில்லாமலிருந்தது. ஒரு சில இடங்களில் இதற்கு மாறாக அடிமைகள் பயன்படுத்தப்பட்டனர். அடிமைகளைப் பயன்படுத்துவதில் அவர்கள் கலகங்களில் ஈடுபடுதல், தப்பித்துப் போதல் ஆகிய பல இடர்ப்பாடுகள் இருந்தன. இம்மக்களின் வாழ்வாதாரங்களான ஆறுகள் அடிக்கடி வெள்ளப்பெருக்கின் காரணமாக நகரங்களை முற்றிலுமாக அழித்தன. முன்கூட்டியே குறிப்பிட்டுக் கணிக்க முடியாத எதிர்ப்பாராத இதன் வானிலை விவசாயிகளுக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. எனவே பயிர்கள் மிகவும் சேதமடைந்தன. அதனால் இவர்கள் உணவுக்காகப் பசு, ஆடுகள் போன்ற கால்நடைகளையும் வைத்திருந்தனர். காலப்போக்கில் சுமேரிய மெசொப்பொத்தேமியாவின் தென்பகுதியில் மண்ணில் உவர்ப்புத் தன்மை கூடியதன் காரணமாக வடபகுதியிலிருந்த அக்காடியர்களின் சக்தி வாய்ந்த மையங்களான நகர்ப்புறங்களை நோக்கி இவர்கள் மெல்ல மெல்ல முன்னேறினார்கள். + +மெசொப்பொத்தேமியாவின் புவியியல் அமைப்பு அதன் அரசியலில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியது. கால்வாய்களை இணைத்துக் கட்டப்பட்ட இதன் புதிய நகரங்கள் தொலைவிலிருந்த நீண்ட பாலைவனத்திற்கு அப்பால் இருந்த நகரங்களிலிருந்து அலலது பழங்குடி மக்கள் குடியேறியிருந்த சதுப்பு நிலங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டன. எனவே இந்நகரங்களுக்கிடையேயான தகவல் தொடர்புகள் கடினமானதாகவும் அதே நேரத்தில் ஆபத்தானதாகவும் இருந்தன. இதனால் சுமேரிய நகரங்கள் மாநில நகரங்களாக மாறின. தன்னிச்சையான சுதந்திரத்தைக் கொண்டதாகவும் அவை அமைந்தன. அதே நேரத்தில் ந்கரங்கள் ஒன்றுக்கொன்று மற்ற நகரங்களை ஆக்கிரமிக்கவும் தனது நகரங்களுடன் ஒன்றிணைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டடன. ஆனால் நூற்றாண்டுகளாக இம்முயற்சிகளில் சில தடுக்கப்பட்டன. சில தோல்வியில் முடிந்தன. இதனால் சுமேரிய அரசியல் வரலாறு பெரும்பாலும் போராட்டத்திலேயே கழிந்தது. இறுதியாகச் சுமேரியா ஏன்னட்டம் என்பவரால் ஒருங்கிணைக்கப்பட்டது. ஆனால் அடுத்த தலைமுறையிலேயே அக்காடியர்கள் கி.மு. 2331 இல் சுமேரியாவைக் கைப்பற்றியதால் இவ்வொன்றிணைப்பு தோல்வியடைந்தது. அக்காடியகள் இப்பகுதியைக் கைப்பற்றி முதன் முதலில் வெற்றிகரமாக அமைதியாக இப்பகுதியை ஆண்டனர். ஆனால் இது குறுகிய காலமே நீடித்தது. சில தலைமுறைகதொடர்ந்த இப்பேரரசினை பாபிலோனியர்கள் கைப்பற்ரினர். + +மெசொப்பொத்தேமியர்கள் தங்களுடை அரசன், அரசி ஆகியோரைக் நகரின் கடவுளர்களாக நம்பினர். ஆனால் பண்டைய எகிப்தியர்கள் தங்களுடை அரசர்களை எப்போதும் கடவுளாக நம்பியதில்லை. பெரும்பாலான மன்னர்கள் 'பிரபஞ்சத்தின் மன்னர்' 'பேரரசர்' போன்ற பெயர்களைத் தாங்களாகவே சூட்டிக்கொண்டனர். மற்றொரு பொதுவான பெயர் 'மேய்ப்பர்' ஆகும் +தன் மக்களைப் பாதுகாப்பதால் அவ்வாறு அழைக்கப்பட்டார். + +அசிரியா பேரரசாக வளர்ச்சியுற்றபோது, மாகாணங்கள் என்ற இரண்டு பகுதிகளாகப் பிரிந்தது.அவை ஒவ்வொன்றும் அதன் முக்கிய நகரத்தின் பெயரால் அழைக்கப்பட்டன. நினெவே, சமாரியா, டமாஸ்கஸ், அர்பத் ஆகியன அவற்றில் சிலவாகும். ஒவ்வொரு நகரமும் அதற்��ெனத் தனிப்பட்ட ஆளுநரால் நிருவாகிக்கப்பட்டது. இவர்கள் மக்கள் செலுத்த வேண்டிய வரிகளைக் கண்காணித்தனர். இவ்வாளுநர்கள் போர்க்காலங்களின் படைவீரகளை வைத்திருக்கவும் கோவில் கட்டுமானத்திற்கான பணியாட்களை வழங்கும் அதிகாரமும் பெற்றிருந்தனர். +இவர்கள் அரசின் சட்டங்களை அமலாக்கும் பொறுப்பில் இருந்தனர். எனவே மிகப்பெரிய கட்டுக்கோப்புடன் வைத்திருக்க எளிதானதாக இருந்தது. பாபிலோனியா சுமேரியர்களின் மிகவும் அமைதியான, இறையாண்மை மிக்க நகரமாகும். இது ஆட்சியாளர் ஹமுராபியின் ஆட்சி காலத்தில் மிகப்பெரிய குறிப்பிடத் தக்க வளர்ச்சியினை அடைந்தது. இவர் சடடத்தை உருவாக்கியவராக அறியப்படுகிறார். விரைவில் பாபிலோன் மெசொப்பொத்தேமியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக ஆனது. பின்னாளில் இது கடவுளர்களின் நுழைவாயிலென அழைக்கப்பட்டது. மேலும் இது வரலாற்றில் ஒரு சிறந்த கற்றல் மையமாகவும் விளங்கியது. + +உருக் கால கட்டம் முசிவுக்கு வந்த நிலையில் உபைதிய நகரங்கள் பல தனிமைப்படுத்தப்பட்டு பெருஞ்சுவர்களால் பிரிக்கப்பட்ட பல நகரங்கள் உருவாயின. இது அங்கு நிலவைய வகுப்புவாத கலவரத்தின் எழுச்சி நிலையைக் காட்டுகிறது. பண்டைய அரசரான லுகல்பந்தா என்பவர் நகரைச் சுற்றிலும் வெண்மையான சுற்றுச் சுவரை அமைத்தார். நகரங்கள் வளர்ச்சியுற்றபோது, அவைகள் ஒன்றன் மேலொன்று ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. குறிப்பக தாழ்நிலங்கள் மற்றும் கால்வாய்களுக்காக அவைகள் ஒன்றுக்கொண்டு முரன்பட்டுக்கொண்டிருந்தன. இச்சண்டைகள் சுமேரியப் பலகைச் சாசனத்தில் கி. மு 3200 இலேயே பதியப்பட்டுள்ளது. பின்னர் இது போன்ற பதிவுகள் பொதுவாகக் கி. மு 2500 களில் நடைமுறையில் இருந்தது. + +இரண்டாவது சுமேரிய அரச வம்சத்தின் அரசரான உருக்கின் அரசர் இன்சி, கில்கமேஷ் (கி. மு 2600), ஆகியோர் சிடார் மலையின் காப்பாளரான ஹம்பாபா என்பவருக்கெதிராக எடுத்த இராணுவ நடவடிக்கைகள் பெரிதாகப் பாராட்டப்பட்டன பிற்காலத்தில் இந்நிகழ்வுகள் விழாக்களாகக் கொண்டாப்பட்டன. இதுகுறித்த கவிதைகளும் பாடல்களும் பாடப்பட்டன. இக்கவிதைகளில் இவ்வரசர்கள் மூன்றிலொரு பாகம் கடவுளாகவும் ஒரு பாகம் மனிதர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர் + +மூன்றாம் வம்ச முடிவில் (கி. மு 2600–2350) களில் வல்லூறு வடிவவில் அமைந்த ஒரு நினைவுச்சின்னத்தில் லாகாஷின் அரசரான இன்னட்டம் என்பவர் அண்மையில் உள்ள உம்மா நகரை வெற்றிகொண்ட வரலாறு பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பழமையான +படுகொலைகளைக் கொண்டாடிய முதல் சாசனமாகும். + +இது ஒருபடி முன்னேறிப் போர் என்ற ஒன்று மெசப்பொத்தேமிய அரசியலமைப்பில் இன்றியமையாததாக இணைக்கப்பட்டது. அதே நேரத்தில் இவைகளில் ஈடுபடாமல் நடுநிலை வகித்த நகரங்கள் இரு போட்டி நகரங்களுக்கிடையே மத்தியஸ்தம் செய்து ஒற்றுமை ஏற்பட உதவியாக இருந்தன. பேரரசுகள் உருக்கொண்டு வலிமை பெற்றபோது அவைகள் பிற நாடுகளுடன் சண்டையிடச் சென்றன. சான்றாக அரசர் சார்கோன் சுமேரின் அனைத்து நகரங்களையும், மாரியின் சில நகரங்களையும் வெற்றி கொண்டு வட சிரியாவையும் வென்றார். பல அசிரிய, பாபிலோனிய அரண்மனைகளின் சுவர்கள் இம்மன்னர்களின் வெற்றியையும் எதிரி மன்னர்கள் தப்பிச்சென்று ஒளிந்து கொண்டதனையும் சித்தரிக்கும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டன. + +மெசொப்பொத்தேமியா நகரங்களில் தான் முதன்முதலில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அரசர்களின் அரச ஆணைகளும் அரசரின் முடிவுகளும் சட்டங்களாக உருவாயின. உருக்ககினியா, லிபிட் இஷ்தார் ஆகிய இடங்களில் இவ்வகைச் சட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கி. மு 1780 களில் உருவாக்கப்பட்ட சாசனமான ஹமுராபியின் சட்டங்கள் இவ்வகையில் மிகவும்புகழ் பெற்றவையாகும். இதுவே உலகின் மிகப் பழைமையான சட்டத் தொகுப்பாகவும் மெசொப்பொத்தேமியாவின் பதியப்பட்ட சாசனத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும் விளங்குகிறது. இதில் இவர் இருநூற்றுக்கும் மேற்பட்ட சட்டங்களை விதித்துள்ளார். + +கி.மு 4000 லிருந்து பெர்சிய அக்கிமெனிடியப் பேரரசு இப்பகுதியை வெற்றி கொள்ளும் காலம் வரை (கி. மு 600 வரை) மேற்கத்திய யுரேசியப் பகுதியில் பண்டைய எகிப்தியக் கலைகளோடு ஒப்பிடக்கூடிய வகையில் மெசொப்பொத்தேமியக் கலை மிகவும் சிறந்ததாகவும் அதிநவீனத்துவம் கொண்டதாகவும் விளங்கியது. கற்களாலும் களிமன்னாலும் செய்யப்பட்ட சிலைகளும் ஓவியங்களும் சிதிலங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. இன்றைய கணித அடிப்படையில் தீட்டப்பட்டு தாவர நிறமிகளைக் கொண்டு வண்ணம் தீட்டப்பட்ட ஒரு சில ஓவியங்களே எஞ்சியுள்ளன. பெரும்பாலான சிலைகள் வண்ணங்கள் பூசப்பட்ட நிலையில் உள்ளன. + +இலக்கியத்திற்கு முற்பட்ட காலத்���ிய கலை மற்றும் தொழில் நுட்பத்தில் உருக் மக்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகிறது அவற்றுள் மண்பாண்டத்தில் செய்யப்பட்ட வார்க்கா சாடி, உருளை முத்திரை ஆகியவற்றைக் கூறலாம். எலாம் பகுதியில் கண்டறியப்பட்ட கி. 3000–2800 ஆண்டுகள் பழைமையான, இன்றளவும் காணக்கிடைக்கும், சுண்ணாம்புக் கல்லினால் செய்த சிங்கச் சிலை பாதியளவு மனிதனும் பாதி மிருகமும் கொண்ட ஒரு பெண்சிங்கத்தின் வடிவில் உள்ளதாகும். அதற்குப் பிந்தைய காலத்திய உருவங்களில் நீண்ட கண்களுடன் பூசாரிகள் மற்றும் பக்தர்களின் ஒரு அடி உயரத்தில் இருக்கும் சிலைகள் கிடைக்கின்றன. இவற்றும் ஒரு சிலவே எஞ்சியுள்ளன. சுமேரிய மற்றும் அக்கடியர்கள் காலத்தில் பொதுவாக நீண்ட கண்கள், பிதுங்கிய விழிகள், நீண்ட தாடியுடன் கூடிய சிலைகள் வடிக்கப்பட்டன. உர் பகுதியில் அரசர்களின் இடுகாட்டில் கண்டறியப்பட்ட கி.மு 2650 களைச் சேர்ந்த இரண்டு மனித உருவங்கள், புதரின் பின் ஆடு, செம்பிலாலான காளை, காளையின் தலை ஆகியவை மிகச்சிறந்த அக்காலத்திய படைப்புகளாகும். + +புதிய அசிரிய காலத்திற்கும் முன்பே மெசொப்பொத்தேமியாவில் கலைகள் செழித்தோங்கியே இருந்துவந்துள்ளது. உருளை முத்திரைகள், வட்டத்திற்குள் சிறிய உருவங்கள், பல்வேறு அளவிலான தேவதைச் சிலைகள், வீட்டில் பயன்படுத்தும் மண்பாண்டங்களாகியவற்றைக் கூறலாம். இவை மதம் சார்ந்தவையாகவும் வாழ்வியலுக்கானவையாகவும் உள்ளன. இக்காலத்திய மிகச்சிறந்த அளவில் பெரிய படைப்பாக நள்ளிரவு தேவதைச் ("Burney Relief") சிலையைக் கூறலாம். சுடுமண் சிற்பமான இது (20 x 15 அங்குலம்) அளவில் வார்ப்படமாகச் செய்யப்பட்ட சிலையாகும். இது நிர்வாணக் கோலத்தில் சிறகுகளுடனும் பறவைக் கால்களுடனும் தோறமளிக்கிறது. இதன் காலடியில் இரண்டு சிங்கங்களும் அருகில் இரண்டு ஆந்தைகளுடனும் காணப்படுகிறாது. இது 18 அல்லது 19 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. கோயில்களில் கிடைத்துள்ள சிற்பங்கள்மூலம் வெற்றி நிகழ்வுகளும் விழாக்களும் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. வல்லூறு சாசனம், கல்பெட்டகம், ஆகியவை கற்களால் பொறிக்கப்பட்ட சிலைகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். அசிரியர் காலத்திய கருங்கல் தூபி மிகப்பெரிய மற்றும் திடமான கல்லால் செய்யப்பட்ட பொறிக்கப்பட்ட தூணாகும். + +அசிரியர்கள் மெசொப்பொத்தேமியாவைக் கைப்பற்றிய பின்பு முன்பிருந்ததை விட அதனை மிகப்பெரிய செல்வவளம் மற்றும்ம் கலைவளம் கொழிக்கும் நாடாக மாற்றினார்கள். மிகப்பெரிய தூண்களுடன் கூடிய பெரிய அரண்மனைகளை உருவாக்கிச் சிற்பங்கள் ஆகியவற்றால் எகிப்துக்கு நிகரான வளமிக்கதாக மாற்றினார்கள். இவர்கள் காலத்திய போர் வேட்டைச் சிற்பம் இவர்களது மிகச் சிறந்த கலைப்படைப்பாகும். இது தற்போது பிரித்தானிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் குறைந்த அளவிலான வட்ட வடிவச் சிற்பங்களையே செய்தனர். பாதுகாவலர் சிலைகள், முக்கோண வடிவில், ஐந்து கால்களும், அனைத்து திசைகளையும் பார்க்கக்கூடிய வகையில் தலைகளும் கொண்ட தேவதைச் சிலையும் இவர்கள் காலத்திய படைப்பகும். அடுத்த நாகரிக மாற்றம் ஏற்படும் வரை இப்பாரம்பரியமே தொடர்ந்தது. இவர்களும் உருளை வடிவ முத்திரையினையே பயன்படுத்தினார்கள். + +மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலைபற்றி அறிய தொல்பொருள் ஆய்வுகளே சான்றாக உள்ளன. கட்டடங்களின் மாதிரிகளை விளக்கும் படங்கள், கட்டடக் கலைபற்றிய குறிப்புகள், கோவில்களைப் பற்ரிய இலக்கியச் சான்றுகள், இடங்கள், நகரச் சுற்றுச் சுவர்கள் மற்றும் வாயில்கள், மேலும் நினைவுச் சின்னங்களாக நிற்கும் கட்டடங்கள் ஆகியவை மெசொப்பொத்தேமியாவின் கட்டடக் கலையைப் பறைசாற்றும் சான்றுகளாகும். + +மெசொப்பொத்தேமியாவில் செங்கற்களே முதன்மைக் கட்டுமானப் பொருளாகப் பயன்படுத்தபப்ட்டுள்ளன. இவை இப்பகுதியில் ஏராளமாகக் கிடைத்தன. தேவையான கற்கள் தொலைவில் உள்ள நகரங்களிலிருந்து கொண்டுவரப்பட்டன. தனித்துவமான அமைப்பினைக் கொண்ட சிகுரத் எனப்படும் மிகப் புகழ்பெற்ற கோயிலானது இஸ்தார் வாயில் எனப்பட்ட மிகப்பெரிய நுழைவாயில்களுடன் விலங்கிழைகளால் ஆன செங்கற்கள் கொண்டு கட்டப்பட்டதாகும். இது பெர்லினில் உள்ள பெர்கமான் அருங்காட்சியகத்தில் இன்று காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. + +கி. மு 4000 ஆண்டின் மிகச்ச் இறந்த கட்டடக்கலைச் சான்றாக உருக்கில் உள்ள கோயில் கட்டமைப்புகள், முந்தைய சுமேரிய வம்சக் கோவில்கள்,டையலா நதிக் கரையில் அமைந்துள்ள கஃப்பாஜா மற்றும் டெல்அஸ்மர் ஆகிய தொல்லியல் இடங்களைக் கூறலாம். மூன்றாம் உர் வமிச்த்தினி நினைவூட்டும் சான்றுகளாக நிப்பூர் என்லில் அருங்காட்சியகம், ஊரில் உள்ள சின்னனா அருங்காட்சியகம், மத்திய வெண்கலக் காலகட்டத்தை நினைவூட்டும் சிரியா மற்றும் துருக்கியில் உள்ள எல்பா தொல்லாய்விடங்கள், மாரி, அலலாக், அலெப்போ, குல்டெபே ஆகிய இடங்களைக் கூறலாம். பிந்தைய வெண்கலக் காலகட்ட் இடங்கள் போகஸ்கோய், அட்டுஷா, நிவெனவா, பாபிலோனிய பாபிபலோன், உரர்தியன், முதலானவையாகும். + +வீடுகளின் கட்டமைப்புகளை நிப்பூர் மற்றும் ஊர் ஆகிய பகுதிகளில் காணலாம். கட்டடக் கட்டுமானம்குறித்த குறிப்புகளும், குடியாக்களின் உருளைகளும், 3000 ஆண்டுகால பழமையும், இருப்புக் காலத்தைச் சேர்ந்த அசிரிய மற்றும் பாபிலோனிய கல்வெட்டுகளும் இவர்களின் கட்டடக் கலைச் சான்றுகளாக இன்றும் நிற்பவையாகும். + +மெசொப்பொத்தேமியாவில் கண்டெடுக்கப்பட்ட களிமண் உருண்டைகளில் மிகவும் பழமையான தரவுகள் உள்ளதாக அண்மையில் ஆய்வாளர்கள் தங்களது ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளனர். இதுவே மனிதர்களின் முதல் தரவு சேமிப்பகமாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர். + + + + + + + + + + +மோனை + +யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் சீர்களும், அடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் முறையால் தொடைகள் அமைகின்றன. பல வகையாக அமையும் தொடைகளில் மோனை முக்கியமானவற்றுள் ஒன்று. + +இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது. + +எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம். + + +உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன. + +உயிரெழுத்து இனங்கள் + +மெய்யெழுத்து இனங்கள் + +அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும். + + + + + +எதுகை + +யாப்பிலக்கணத்தில் தொட�� என வழங்கப்படும் செய்யுள் உறுப்பு வகைகளில் எதுகை முக்கியமானதாகும். வெவ்வேறு அடிகளின் அல்லது சீர்களின் முதலெழுத்துக்கள் ஒத்துவரின் மோனை எனப்படின், இரண்டாவது எழுத்துக்கள் ஒத்துவருதல் எதுகை ஆகும். + +என்பது தொல்காப்பியர் கூற்று. + +எடுத்துக்காட்டு : + +இக்குறளில் "நீந்துவர்" "நீந்தார்" ஆகிய இரண்டு சீர்களில் உள்ள இரண்டாம் எழுத்து "ந்" ஒன்றாக அமைவதால் இங்கு எதுகை சுட்டிக் காட்டப்படுகின்றன. + +எதுகை சீர்களிலும், அடிகளிலும் வரக்கூடும். இவை முறையே சீரெதுகை என்றும் அடியெதுகை என்றும் அழைக்கப்படுகின்றன. பொதுவாக அடியெதுகையே செய்யுள்களில் சிறப்புப் பெறுகின்றது. சீரெதுகை அதிகம் கைக்கொள்ளப் படுவதில்லை. + + + + + +திருப்பரங்குன்றம் முருகன் கோவில் + +திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்கின்றது. மதுரைக்கு தென்மேற்கில் சுமார் எட்டு கி.மீ தொலைவில் உள்ள இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். + +சுப்ரமணியசுவாமியின் கருவறை கி.பி.773இல் பராந்தக நெடுஞ்சடையன் (765-815) என்ற பாண்டிய மன்னர் காலத்தில் அவரது படைத்தலைவன், சாத்தன் கணபதி என்பவரால் சிவனுக்காக எழுப்பப்பட்ட குகைக்கோவில் என்று கல்வெட்டுச் செய்தி தெரிவிக்கிறது. மதுரை நாயக்க மன்னர்களில் வீரப்பர் (1572-1595), திருமலை மன்னர் (1623-1659) ஆகியோர் திருப்பணிகளும், அரசி மங்கம்மாள் (1689-1706) திருப்பணிகளும் இக்கோயிலில் உள்ளன. + +திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி கோவிலின் கருவறை ஒரு குகைக்கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. சுப்ரமணியசுவாமி சந்நிதி, துர்காதேவி சந்நிதி, கற்பக விநாயர் சந்நிதி, சத்தியகிரீஸ்வரர் சந்நிதி, பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதி ஆகிய ஐந்து சந்நிதிகள் இங்கு உள்ளன. + +சத்தியகிரீஸ்வரர் சந்நிதி வாயிலிலுள்ள துவாரபாலர்களின் உருவங்களில் காணப்படும் ஆடை மடிப்புகளும், இதர சிற்ப அம்சங்களும் உள்ளன. ஐந்து சந்நிதிகளைத் தவிர திருப்பரங்குன்றக் கோவிலில் அன்னபூரணிக் குகைக் கோவிலும், ஜ���ஷ்டா தேவிக்கான குகைக் கோவிலும் உள்ளன. + +அர்த்த மண்டபத்தில் சத்தியகிரீஸ்வரர் சந்நிதியை அடுத்துள்ள மலைப்பாறையிலும், பவளக்கனிவாய்ப் பெருமாள் சந்நிதியை அடுத்துள்ள பாறையிலும் திருமாலின் அவதாரங்களைக் குறிக்கும் புடைப்புச் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் நுழைவாயிலிலுள்ள 10 பெரிய கற்றூண்கள் நாயக்கர் காலச் சிற்பக் கலைத்திறனைக் காட்டும் முருகன் தெய்வானை திருமணக்கோலம் போன்ற கற்றூண்கள் அமைந்துள்ளன. + +கோயிலின் கோபுரம் 46 மீட்டர் உயரமுள்ளது. கோபுரத்தின் அடிப்பகுதி சிற்ப வேலைப்பாடுமிக்கது. இதன் சிகரப் பகுதியில் காணப்படும் சுதைச் சிற்பங்களும் அழகுமிக்கவை. + + +கயிலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி க்கு ஒம் எனும் பிரணவ(பரம்பொருளே எனும் பொருளுடைய) மந்திரத்தின் உட்பொருளை உபதேசிக்கும் போது, தன் தாயாரின் மடிமீது முருகப் பெருமான் அமர்ந்திருந்தார். தாய்க்குத் தந்தையார், பிரணவ மந்திர உபதேசம் செய்தபோது முருகப்பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்டார்.புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலமாகவே அறிந்து கொள்ள வேண்டும். மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் முறைமையாகாது. அது பாவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றன. + +முருகப்பெருமான் பிரணவ மந்திரத்தினையும் அதன் உட்பொருளையும் பிரம்மதேவனுக்கு உபதேசித்த போதிலும், சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒருவரேயானாலும், உலக நியதிக்கு ஒட்டாத, சாத்திரங்கள் ஒப்பாத ஒரு காரியமாக அமைந்துவிட்டபடியால், இக்குற்றத்திற்குப் பரிகாரம் தேடி முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்தார். + +இந்நிலையில் சிவபெருமானும், பார்வதி தேவியாரும் தோன்றி, முருகப் பெருமானுக்கு அங்குக் காட்சி தந்து தவத்தைப் பாராட்டினார்கள். சிவபெருமான் - பார்வதி தேவி இங்கு பரங்கிநாதர் என்றும், ஆவுடை நாயகி என்றும் பெயர் பெற்றார்கள்.இவர்கள் காட்சியளித்த திருப்பரங்குன்றத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. எனவே திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்திற்குச் செல்லும் பக்தர்கள் முதலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று வழிபடுதல் நல்லது என்பது ஐதீகமாகக் கடைப்பிடிக்கப் படுகிறது. + +முருகப்பெருமானுக்கு சிவபெருமான் தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று காட்சித் தந்தார். எனவே தைப்பூசத்தன்று சிவபெருமானையும், முருகக் கடவுளையும் வழிபடுகின்றவர்கள் இஷ்ட சித்திகளைப் பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. எனவே திருப்பரங்குன்றத்தில் தைப்பூச விழா பத்து நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. + +முருகப்பெருமான் அவதாரம் செய்ததன் நோக்கமே சூரபத்மனையும், அவனது சேனைகளையும் அழித்து தேவர்களைக் காப்பதேயாகும். அவ்வண்ணமே முருகப்பெருமான் அவதாரம் செய்து, சூரபத்மனை அழித்து, அவனை மயிலும் சேவலுமாக்கி, மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் ஏற்றுக் கொண்டருளினார்.இதனால் மகிழ்ச்சியடைந்த தேவர்கள் துயர் களையப் பெற்றார்கள். அதனால் முருகப்பெருமானுக்குத் தன்னுடைய நன்றியைச் செலுத்தும் வகையில் இந்திரன் தன் மகளாகிய தெய்வயானையை திருமணம் செய்து கொடுக்க விரும்பினான். இதன்படி முருகன் -தெய்வானை திருமணம் இந்த திருப்பரங்குன்றத்தில் நடந்தது. + +திருமண விழாவில் பிரம்மா விவாக காரியங்கள் நிகழ்த்த, சூரிய, சந்திரர்கள் ரத்ன தீபங்கள் தாங்கி நிற்க, பார்வதி பரமேஸ்வரர் பரமானந்தம் எய்தி நிற்க, இந்திரன் தெய்வயானையைத் தாரை வார்த்து கொடுக்க, முருகப்பெருமான், தெய்வயானையைத் திருமணம் செய்து கொண்டதாகத் திருப்பரங்குன்றப் புராணம் கூறுகிறது. + +பரம்பொருளான சிவ பெருமான் குன்றம் எனும் மலை வடிவாகக் காட்சியளிக்கும் இடம் திருப்பரங்குன்றம்.திரு + பரம் + குன்றம் எனப் பிரிக்கப்படுகிறது. பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான் குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும் அடைமொழியாகதச் சேர்த்து திருப்பரங்குன்றம் என ஆயிற்று. + +இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக எல்லோராலும் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தான் இயற்றிய தேவாரத்தில் பாடியுள்ளார். + +அகநானூற்றில் இந்த மலை முருகன் குன்றம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் திருமுருகாற்றுபடை, கலித்தொகை, மதுரை காஞ்சி, பரிபாடல் போன்ற சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இத்திருத்தலத்திற்கு இலக்கியங்களில் தண்பரங்குன்று, தென்பரங்குன்று, பரங்குன��று, பரங்கிரி, திருப்பரங்கிரி பரமசினம், சத்தியகிரி, கந்தமாதனம், கந்த மலை என பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. + + + + + + + + + +ஜனவரி 2006 + + + + +காமிகாகமம் + +தமிழ் நாட்டிலும், இலங்கையிலும் வழக்கிலுள்ள சைவ சமயத் தத்துவம், சைவ சித்தாந்தம் ஆகும். சைவ சித்தாந்தத்திற்குச் சிறப்பாக அமைந்த நூல்கள் சைவ ஆகமங்கள் எனப்படுகின்றன. சைவாகமங்கள் இருபத்தெட்டு. இவற்றுள் தலையாயது காமிகாகமம் ஆகும். இது மிகப் பெரிய ஆகமங்களுள் ஒன்று. ஏனைய ஆகமங்களைப் போலவே இதுவும் சமஸ்கிருத மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது. சமஸ்கிருத மொழியில் இருந்தாலும், தமிழ் நாட்டில் மட்டும் வழங்கிவந்த கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளதால், வட இந்தியப் பகுதிகளில் இது அதிகம் அறியப்படவில்லை. + +"காமிகம்" என்பது சமஸ்கிருதத்தில் "விரும்பிய பொருள்" எனப் பொருள்படும். காமிகாகமம், ஆன்மாக்கள் விரும்பிய பொருள்களை வழங்கி, அவை மலங்களில் இருந்து விடுதலை பெற உதவுவதால், இப்பெயர் பெற்றதாகக் கூறுகிறார்கள். + +எல்லா ஆகமங்களும் நான்கு பகுதிகளாகப் ("பாதங்கள்") பிரிக்கப்பட்டுள்ளன. இவை: + + +எனப்படுகின்றன. இவற்றுள், ஞான பாதம் ஆகமங்களின் தத்துவப் பகுதியாகும். கிரியா பாதம், சமயக் கிரியைகள் பற்றிய பகுதி. ஆகமங்களின் உள்ளடக்கத்தின் பெரும் பகுதி இவ்விரண்டு பாதங்களுக்குள்ளேயே அடங்கி விடுகின்றது. ஏனைய இரண்டு பகுதிகளும் நீளம் குறைந்த பகுதிகளாகும். + +காமிகாகமத்தின் கிரியா பாதம், பூர்வ பாகம், உத்தர பாகம் என இரு பிரிவுகளாக உள்ளன. கிரியா பாதம் 12,000 செய்யுள்களைக் கொண்டது. இதில் 5166 செய்யுள்கள் பூர்வ பாகத்திலும், 6477 செய்யுள்கள், உத்தர பாகத்திலும் உள்ளன. 357 செய்யுள்கள் கிடக்கவில்லை. + +பூர்வபாகத்தில், ஆகமங்களின் தோற்றம், அன்றாடம் கடைப் பிடிக்கவேண்டிய சமய நடைமுறைகள் மற்றும் வழிபாடுகள், கோயில்கள், வீடுகள் முதலியவற்றின் அமைப்பு விதிகள், விக்கிரகங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கான விதிகளும் கிரியைகளும் என்னும் நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் கோயிற் கட்டிடக்கலை மற்றும் சிற்பங்கள் தொடர்பான விடயங்கள் மிகவும் விரிவாக எடுத்தாளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இந் நூலின் 75 பிரிவுகளில் 60 பிரிவுகள் கட்டிடக்கலை, சிற்பம் ���கியவற்றுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. + +காமிகாகமத்தில் கூறப்பட்டுள்ள கட்டிடம் மற்றும் சிற்பம் தொடர்பான அம்சங்கள், பிற்காலத்தில் உருவான தனித்துவமான சிற்பநூல்களான மயமதம், மானசாரம் போன்றவற்றுக்கு அடிப்படையாக அமைந்ததாகச் சில ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். "மயமதம்" எனும் சிற்பநூலை சமஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த புரூனோ டாகென்ஸ் (Bruno Dagens), அந் நூலுக்காக எழுதிய அறிமுகப் பகுதியில், காமிகாகமத்திலும் மயமதத்திலும், சொல்லுக்குச் சொல் சரியாக அமைந்த வசனங்களும், சில சமயங்களில் முழுமையான பத்திகளும் கூடப் பொதுவாக அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார். இரண்டில் ஏதாவதொன்று மற்ற நூலிலிருந்து விடயங்களைப் பிரதிபண்ணியிருக்கக்கூடும் எனக்கருதும் அவர், காமிகாகமத்தில் கட்டிடக்கலை தொடர்பான அம்சங்கள் ஒழுங்கின்றியும், ஒருங்கிணைவின்றியும் அமைந்திருப்பதைச் சுட்டிக்காட்டி, மயமதம் போன்ற ஒரு நூலிலிருந்து, காமிகாகமத்தில் பிற்காலத்தில் இடைச் செருகல்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் எனக் கருத்து வெளியிட்டுள்ளார். + + + + + + + +தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 + +இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி மே 8, 2006 அன்று தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 நடைபெற்றது. இத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்த இடங்களான 234 தொகுதிகளில் 163 இடங்களில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவளிக்க முன்வந்ததைத் தொடர்ந்து மு.கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது. + +ஆட்சியிலிருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிகழ்ந்த இத்தேர்தலில் முடிவுகளை முன்கூடியே கணிக்க இயலாத நிலை +இருந்ததும், கருத்துக் கணிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக வாக்குச்சாவடியின் வெளியில் பெறப்பட்ட புள்ளியியல் கள ஆய்வு முடிவுகள் இருந்ததும், பதினைந்து ஆண்டுகளில் மிகக் கூடுதலான வாக்குப்பதிவும் சிறப்பு அம்சங்களாகும். + +2006 தேர்தலில் தேசிய முற்ப��க்கு திராவிடக் கழகம் கட்சி வேட்பாளர்கள் 3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் பெற்றனர். +வாக்குப்பதிவிற்குப் பின்னர் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா கூறுகையில் மொத்தம் 70.22 விழுக்காடு வாக்குகள் பதிவாயின என்று தெரிவித்தார்.. இவற்றில் 51 விழுக்காடு ஆண்களின் ஓட்டுக்கள், 49 விழுக்காடு பெண்களுடையவை. வாக்குப்பதிவு இயந்திரக் கோளாறு காரணமாக 18 வாக்குச்சாவடிகளில் மே 10, 2006 அன்று மறுவாக்குப்பதிவு நடந்தது. அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் மே 11, 2006 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. தி.மு.க. தலைமையிலான கூட்டணி பெரும்பாண்மை பெற்றுள்ள போதும் எந்த ஒரு கட்சிக்கும் அறுதிப்பெரும்பாண்மை கிடைக்காத நிலை உள்ளது. இருந்தும், காங்கிரஸ், பா.ம.க., சி.பிஐ., மற்றும், சி.பி.எம். முதலிய கூட்டணிக் கட்சிகள் வெளியிலிருந்து ஆதரிக்க முன்வந்ததால், மு.கருணாநிதி தலைமையிலான 30 அமைச்சர்கள் கொண்ட தி.மு.க. அரசு மே 13-ம் தேதி பொறுப்பேற்றது. + +"தகவல்: http://www.bbc.co.uk/tamil/news/story/2006/05/060511_tnelection.shtml" + + +"இவற்றையும் பார்க்க: " + + + + + + +தாவர போசணை வகைகள் + +விலங்குகள் போலல்லாது தாவரங்கள் இடம் பெயர்ச்சி அடையாது இதன் காரணமாக இவற்றின் போசணை முறை விலங்கினங்களில் இருந்து பெரிதும் வித்தியாசப்படுகின்றது. இரு பெரும்பிரிவாக தாவர போசணை முறைகளை உள்ளடக்கலாம். +
+1. பச்சையம் உள்ள தாவரங்களில் காணப்படும் தற்போசணை முறை,
+2. பச்சையமற்ற தாவரங்களில் காணப்படும் பிறபோசணை முறை
+ +ஒளித்தொகுப்பு (Photosynthesis) மூலம் தமக்குத்தேவையான சேதன உணவை தாமே தயாரிக்கக்கூடிய தாவரங்கள் ‘’’தற்போசணைத்தாவரங்கள்’’’ எனப்படும். +பச்சையம்(குளோரபில்) உள்ள உயர் தாவர வகைகளில் இந்த முறை மூலம் உணவு உற்பத்தி செய்யப்படுகிறது. காபனீர் ஒக்சைட்டு () ,நீர் () ஆகிய அசேதன முலக்கூறுகள் சூரிய ஒளி முன்னிலையில் பச்சையத்தில் தாவர போசணை செய்யக்கூடிய சேதனப்பதார்தமாக மாற்றப்படுகின்றது. இம் முறையின் விளைபொருளாக ஒட்சிசன் () சூழழுக்கு விடுவிக்கப்படுகின்றது.
+ +உ+ம் : உயர் தாவரம்(Angiosperms) + +தமது போசணைத்தேவைக்குப் பிற மூலங்களில் த��்கியுள்ள தாவரங்கள் பிறபோசணை தாவரங்கள் எனப்படும். பச்சையம் அற்ற தாவரங்களே இப் போசணை முறையில் ஈடுபடுகின்றன. இதற்கென இத் தாவரங்கள் சில விசேட இயல்புக்களை தன்னகத்தே கொண்டுள்ளது.
+ +உ+ம் : நொதியங்கள், உறிஞ்சிகள்,பருகி
+ +இத் தாவரங்கள் 4 வகைப்படும்
+1. அழுகல் வளரிகள்
+2. ஒட்டுண்ணித் தாவரங்கள்
+3. ஒன்றியவாழித் தாவரங்கள்
+4. பூச்சியுண்ணும் தாவரங்கள்/ஊனுண்ணும் தாவரங்கள்
+ +இறந்து சிதைவடைந்து கொண்டிருக்கும் தாவர/விலங்கு உடல்கள் அல்லது எச்சங்கள் என்பவற்றில் வளரும் தாவரங்கள் அழுகல் வளரிகள் எ-ம். அழுகிய பொருட்களில் இருந்து தமது போசணையை பெற்றுக்கொள்கின்றன.
+ +உ+ம் : பற்றீயாக்கள், பங்கசுக்கள்,சில அல்கா + +உயிருள்ள அங்கியின் அகத்தோ அல்லது புறத்தோ தங்கியிருந்து அவற்றிலிருந்து பகுதியாகவோ அல்லது முற்றாகவோ உணவைப் பெற்றுவாழும் அங்கிகள் ஒட்டுண்ணி எ-ம். ஒட்டுண்ணிகள் தங்கி வாழ இடமளிப்பவை விருந்து வழங்கி எ-ம். இம் முறைமுலம் விருந்து வழங்கி பாதிக்கப்படலாம்.
+உ+ம் : பற்றீயாக்கள், பங்கசுக்கள், சில பூக்கும் தாவரங்கள் () (கஸ்குட்டா, குருவிச்சை) போன்றவை
+ +பூக்கும்தாவரங்களின்(Angiosperms) ஒட்டுண்ணித்தாவரங்கள் இரு வகைப்படும்
+1. முழு ஒட்டுண்ணித்தாவரங்கள்
+2. குறை ஒட்டுண்ணித்தாவரங்கள் + +தமக்குத் தேவையான முழு உணவையும், கனியுப்புக்களையும், நீரையும் ‘’’விருந்து வழங்கியில்’’’ இருந்து பெற்றுக்கொள்ளும் தாவரங்கள் முழுஒட்டுண்ணித்தாவரங்கள் எ-ம்.
+ +உ+ம் : கஸ்குட்டா(Cuscuta) + +விருந்து வழங்கியிடமிருந்து கனியுப்புக்களையும், நீரையும் மாத்திரம் பெற்றுக் கொள்ளும் தாவரங்கள் குறை ஒட்டுண்ணித்தாவரங்கள் எ-ம். இவை பச்சையத்தைக் கொண்டிருப்பதால் உணவை தாமே தயாரித்துக் கொள்ளும் ஆற்றல் உடையது.
+ +உ+ம் : குருவிச்சை + +பரஸ்பர நலன் கருதி தமது உண்வு தேவைக்காக மற்றொரு அங்கியுடன்(தாவரம் அல்லது விலங்கு) இணைந்து வாழ்ந்து வரும் தாவரங்கள் ஒன்றியவாழித் தாவரங்கள் எ-ம். இம் முறைமுலம் இவ் இரு அங்கிகளுக்குமிடையே பாதிப்பு ஏற்படாது.
+ +இத் தாவரங்கள் முற்றிலும் தற்போசணைக்குரிய தாவரங்கள் ஆகும். இவை பச்சையத்தத கொண்டுள்ளன. ஆனால் இவை நைதரசனை பெற்றுக்கொள்ளமட்டுமே பூச்சிகள்,சிறுவிலங்குகளை பிடித்து உண்கின்றன. இதற்கென இவை சில விசேட உறுப்புக்களைக் கொண்டுள்ளன.
+ +உ+ம் : நெப்பந்திசு(Nepenthes), யூற்றிக்குலேரியா(Utricularia) + + +
+ +சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் + +உலகின் பல நாடுகளின் நாடளாவிய சீர்தர (நியமங்கள்) நிறுவனங்களை உறுப்பினராகக் கொண்ட, சீர்தரங்களை உருவாக்கும் உலக நிறுவனமே சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (International Organisation for Standardization) ஆகும். ISO எனப்பொதுவாகக் குறிப்பிடப்படும் இது ஒரு அரசு சார்பற்ற நிறுவனம் ஆகும். எனினும் இது உருவாக்கும் தரங்கள் (நியமங்கள்), நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தங்கள் மூலமோ அல்லது நாட்டுத் தரங்கள் (தேசிய நியமங்கள்) மூலமாகவோ சட்டமாகும் வாய்ப்புகள் இருப்பதால், வேறு பல அரசுசார்பற்ற நிறுவனங்களைவிட இது சக்தி வாய்ந்ததாகும். உலகின் பல பெரிய வணிக நிறுவனங்களும், இதன் உறுப்பு நாடுகளிலிருந்து குறைந்தது ஒவ்வொரு தரங்கள் (நியமங்கள்) நிறுவனமும் இதன் நடவடிக்கைகளில் பங்கு கொள்கிறார்கள். + +இது மின் கருவிகள், துணைக்கருவிகளின் தரம் நிறுவும் அனைத்துலக மின்தொழில்நுட்ப ஆணையத்துடன் (IEC) நெருக்கமாக இணைந்து தொழிற்பட்டு வருகிறது. + +ISO என்பது இந்த நிறுவனத்தின் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகப் பிழையாகக் கருதப்பட்டு வருகிறது. பல்வேறு மொழிகள் வழங்கும் பல நாடுகள் இந்த நிறுவனத்தில் இருப்பதால், ஒவ்வொரு நாடும் தங்கள் மொழிகளிலுள்ள இந்நிறுவனத்தின் பெயர்களை வெவ்வேறு விதமாகச் சுருக்கிப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமுகமாக சமம் எனப் பொருள் தரும் "isos" என்னும் கிரேக்கச் சொல்லிலிருந்து பெறப்பட்ட ISO (ஐஎஸ்ஓ) என்ற பெயரைப் பயன்படுத்தி வருகிறார்கள். + +ஐஎஸ்ஓ நிறுவும் தரங்களில் (நியமங்களில்) மிகப் பெரும்பான்மையானவை ஒரு குறிப்பிட்ட உற்பத்திப்பொருள் அல்லது செயல்முறைகளுக்கெனச் (process) சிறப்பாக உருவாக்கப்பட்டவை. சில ஒரு துறை முழுவதற்குமே பொதுவாகப் பொருந்தக் கூடியவை. இப்போது பரவலாக அறியப்படுகின்ற ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 14000 தொடர் இலக்கங்கள் கொண்ட நியமங்கள் இரண்டாம் வகையைச் சேர்ந்தனவாகும். + + + + + + +ஆத்மஜோதி + +ஆத்மஜோதி ஆன்மீக மாசிகை ஈழத்தின் மலைநாட்டிலுள்ள நாவலப்பிட்டியிலிருந்து 1948ஆம் ஆண்டு திருக்கார்த்திகைத் திருநாளிலே சிவனொளிபாதச் சித்திரத்தைத் தாங்கி வெளிவரத் தொ���ங்கியது. அப்பொழுது ஆண்டு சந்தா மூன்று ரூபாய். இம்மாசிகை 1973இலே வெள்ளி விழாக் கொண்டாடிய பெருமையுடையது. + +ஆத்மஜோதியைக் கௌரவ ஆசிரியராக இருந்து வழிநடத்தியவர் க. இராமச்சந்திரா எனும் சமரசஞானி. ஏழாலை நா. முத்தையா அவர்கள் ஆரம்பகாலம் முதல் நிருவாக ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியிலே பெரும் பங்கு கொண்டவர். + +ஆத்மஜோதி மாசிகை ஆன்மீக வெளியீடுகளிலே சமரச நெறியினைப் பின்பற்றி வந்த சிறப்புடையது. அதன் வளர்ச்சிப்பாதையிலே ஆன்மீக நெறியை எவ்விதக் கலப்புமின்றி வழங்கிய பெருமையுடையது. + +1960இலே ஆத்மஜோதி அச்சகம் நிறுவப்பட்டதை அடுத்து ஆத்மஜோதியில் வெளிவந்தனவும் வெளிவராதனவுமான பல விடயங்கள் நூலுருப்பெற்றன. அதன் பத்தாம், பதினைந்தாம், இருபத்தைந்தாம் ஆண்டுகளிலே விசேட மலர்களும் வெளியிடப் பெற்றுள்ளன. + + + + +இந்து சாதனம் + +இந்து சாதனம் ("Hindu Organ") என்பது 1889 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் இதழ் ஆகும். இது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் வெளியிடப்பட்டதோடு இன்றும் சைவபரிபாலன சபையினரால் மாதமொரு முறை வெளியிடப்பட்டு வருகின்றது. + +இந்து சாதனம் பத்திரிகை செப்டம்பர் 11, 1889ம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து சைவ பரிபாலன சபையினரால் அவர்களது சைவப்பிரகாச அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டு வந்தது. இது ஆரம்பத்தில் 'டெமி' பிரமாணங் கொண்ட தாளிலே அகத்தில் தமிழும் புறத்தில் ஆங்கிலமும் ("Hindu Organ") கொண்ட ஒரு கூட்டுப் பத்திரிகையாக மாதம் இருமுறை புதன்கிழமைகளில் வெளிவந்தது. + +இந்த இரு மொழிப் பத்திரிகை ஜூலை 5, 1899 ஆம் ஆண்டிலிருந்து ஆங்கிலப் பத்திரிகை வாரம் ஒரு முறையும், ஜூலை 11, 1906 இலிருந்து தமிழ்ப் பத்திரிகை தனியாக மாதம் இரு முறையும் வெளிவர ஆரம்பித்தன. அதன் பின்னர் ஜூலை 10, 1913 இல் இருந்து ஆங்கிலப் பத்திரிகை மாதமிரு முறையும் தமிழில் வாரம் ஒரு முறையும் வெளிவந்தன. + +ஆரம்பத்தில் ஆங்கிலப் பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தவர் திருவனந்தபுரம் பிரதம நீதியரசராக முன்பு விளங்கியவரும் பிரபல கணிதவியலாளரும், ஆங்கிலம், வடமொழி மற்றும் தமிழ் ஆகியவற்றில் புலமை பெற்றவருமாகிய தா. செல்லப்பாபிள்ளை அவர்கள். இவர் 1891 இல் சுகவீனம் காரணமாக விலகவே வழக்கறிஞர் ஏ.கதிரவேலு மற்றும் அ.சபாபதி ஆகியோர் ஆங���கிலப் பதிப்புக்கு இணை-ஆசிரியர்களாயினர். ஜூலை 1892 முதல் அ.சபாபதி ஆசிரியரானார். அ.கதிரவேலு தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதி வந்தார். இவர்களைத் தொடர்ந்து ச.சிவகுருநாதர், தெ.அ.துரையப்பாபிள்ளை, எம்.எஸ்.இராஜரத்தினம், எம்.எஸ்.இளையதம்பி, வி.நாகலிங்கம், ஏ.வி.குலசிங்கம், த.முத்துசாமிப்பிள்ளை என்போர் ஆங்கிலப் பத்திரிகாசிரியர்களாக விளங்கியுள்ளனர். + +தமிழ்ப் பத்திரிகைக்கு நவம்பர் 25, 1896 வரையில் ஆசிரியராகவும் பொறுப்பாளராகவும் விளங்கியவர் ஆறுமுகநாவலரின் பெறாமகன் நல்லூர் த. கைலாசபிள்ளை. அவரை அடுத்து தமிழ்ப் பத்திரிகாசிரியர்களாகப் பெ. கார்த்திகேசபிள்ளை, எஸ்.கந்தையாபிள்ளை, கு.சிற்சபேசன், மு.மயில்வாகனம் என்போர் விளங்கியுள்ளனர். + +அ.சபாபதி, நம.சிவப்பிரகாசம் ஆகியோர் இரு பத்திரிகைகளுக்கும் ஆசிரியர்களாக இருந்திருக்கின்றனர். + +இவ்விரு பத்திரிகைகளும் சைவ சமயம் சம்பந்தமான கட்டுரைகளையும் செய்திகளையும் கருத்துகளையும் தாங்கி வந்தன. சமய சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பிரசாரஞ் செய்தன. திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் முதலிய தேவாரம் பெற்ற திருத்தலங்களின் புனருத்தாரணத் திருப்பணிகளுக்கு இவை அளித்து வந்த ஊக்கம் குறிப்பிடத்தக்கது. + + + * இந்து சாதனம் வலைத்தளம் + + + + +ஐ.எசு.ஓ 9000 + +ஐஎஸ்ஓ 9000 என்பது தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளுக்கான தரநிலைகளின் "குடும்பம்" ஆகும். தரங்களுக்கான சர்வதேச அமைப்பான ஐஎஸ்ஓ ஆல் ஐஎஸ்ஓ 9000 நிர்வகிக்கப்படுகிறது என்பதுடன், அதிகாரம் அளிக்கின்ற மற்றும் அங்கீகரிக்கப்படுகின்ற அமைப்புகள் மூலமும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தேவைகளில் ஏற்படும் மாற்றத்தைப் பொறுத்து, விதிகளும் மாற்றியமைக்கப்படுகின்றன. +ஐஎஸ்ஓ 9001:2008 (இது ஐஎஸ்ஓ 9000௦ குடும்பத்தில் காணப்படும் தரநிலைகளுள் ஒன்றாகும்) தரநிலைகளைப் பெறுவதற்கான சில தேவைகள் பின்வருமாறு +ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு “ஐஎஸ்ஓ 9001 சான்றிதழைப் பெற்றது” அல்லது “ஐஎஸ்ஓ 9001 ஆல் அங்கீகரிக்கப்பட்டது” என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்பு, அந்த நிறுவனம் அல்லது அமைப்பு ஐஎஸ்ஓ 9001 ஆல் தனிப்பட்ட முறையில் பரிசோதனை செய்யப்பட்டு, சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும். ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழ் விளைபொருட்கள் மற்றும் சேவைக��ின் தரங்களுக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை; மாறாக அது பயன்பாட்டில் இருக்கும் வியாபார நடவடிக்கைகள் சம்பந்தமான ஒழுங்குமுறைகளுக்கு உத்திரவாதம் அளிக்கிறது. + +ஐஎஸ்ஓ 9000 ஐக் குறித்து மக்களுக்கு இருக்கும் குழப்பம் மற்றும் அறிவின்மையை சந்தையிடல் துறைகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன. சரக்குகள் மற்றும் சேவைகளின் பங்களிப்பு ஐஎஸ்ஓ 9000 தரநிலையை சிறப்பான முறையில் பறைசாற்றும்படியாக இருக்கின்றன. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஐஎஸ்ஓ 9000 மற்றும் ஐஎஸ்ஓ 9001 ஆகிய இரண்டையும் ஒன்றே என்று கருதுகின்றனர். + +தரநிலைகள் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகின்றன என்பதுடன், அவைகள் பல்வேறு நிறுவனங்களில் பயன்பட்டு வருகின்றன. ஐஎஸ்ஓ சொற்களஞ்சியத்தில் “விளைபொருள்” என்பது குறிக்கோள், சேவைகள், அல்லது மென்பொருளைக் குறிக்கிறது. + +தரம் என்பது “வளர்ச்சியைக்” குறிக்கிறது – ஐஎஸ்ஓ 9001 “தரம்” முயன்று பெற வேண்டிய ஒரு முக்கிய அங்கீகாரமாகும், மேலும் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள இது மிகப்பெரிய நன்மையை அளிக்கிறது, இதன் காரணமாக வியாபாரத்தின் தர மேம்பாட்டை நிலை நிறுத்துவதற்கு உத்திரவாதம் அளிக்கிறது. + +"ஐஎஸ்ஓ 9001:2008 தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் தேவைகள்" குறித்த 30 பக்கங்கள் அடங்கிய ஆவணம் ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தேசிய தரநிலைகள் அமைப்பில் அளிக்கப்படுகின்றது. அதன் பொருளடக்கம் பின்வருமாறு: + +பயனர்கள் ஒன்று முதல் எட்டு வரை உள்ள அனைத்துப் பிரிவுகளையும் தெரிந்துகொள்வது அவசியமாகிறது, ஆனால் கியூஎம்எஸ் இல் நான்கு முதல் எட்டு வரையிலான பிரிவுகளே விவரிக்கப்பட்டுள்ளன. + +இந்தத் தரநிலைகள் பின்வரும் ஆறு அத்தியாவசியமான ஆவணங்களை குறிப்பிடுகின்றன: + +கூடுதலாக, தரக் கொள்கை மற்றும் தரக் கையேடு ஆகியவற்றை ஐஎஸ்ஓ 9001:2008 கோருகிறது (மேலே உள்ள ஆவணங்கள் சேர்க்கப்படலாம் அல்லது சேர்க்கப்படாமலும் போகலாம்). + + +ஆர். ஆட்னன் டிரை சுபியேன்டோவின் தர அமைப்பிற்கான கையேடு +11/15/08 அன்று திருத்தம் செய்யப்பட்டது + +ஐஎஸ்ஓ 9001:2008 + +அட்டவணையின் பொருளடக்கம் +பொருளடக்கப் பக்கம் +1.0 நோக்கம் 3 +2.0 ஒழுங்குமுறைக் குறிப்பு 3 +3.0 நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் 3 +4.0 தரக் கட்டுப்பாட்டு அமைப்பு 3 +5.0 நிர்வாகப் பொறுப்பு 4 +6.0 மூலவள நிர்வாகம் 6 +7.0 விளைபொருள் பகு���்பாய்வு 7 +8.0 அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம் 10 + +1.0 நோக்கம் +சிறந்த திட்டமிடப்பட்ட தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் கொண்டிருப்பதன் மூலம், வாடிக்கையாளரின் தேவைகள், மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விளைபொருட்களைத் தொடர்ந்து பயன்படுத்த இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), மேலும் இதன் காரணமாக ஒரு நிறுவனம் தனது திறமையை தெளிவாக விவரிக்க இயலும். தொடர்ந்த முன்னேற்றம் மற்றும் பொருத்தமற்ற நடவடிக்கைகளைத் தவிர்ப்பது போன்றவற்றுடன் சிறந்த அமைப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் நுகர்வோரின் மனநிறைவுக்கு உத்திரவாதம் அளிக்க இயலும். +விளைபொருள் மற்றும் தனித்தன்மை (நிறுவன மேற்பார்வையில்) ஆகியவற்றின் காரணமாக, ஐஎஸ்ஓ 9001:2008 இன் தேவைகளைப் பயன்படுத்துவதை 7.3 வடிவமைப்பு மற்றும் முன்னேற்றப் பிரிவு தவிர்த்து வருகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). வாடிக்கையாளர்கள் அல்லது அவர்களின் ஆலோசகர்கள் ஆகியோரால் விளைபொருட்களின் முக்கிய சிறப்பியல்புகள் வரையறை செய்யப்படுகின்றன. வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் சட்டரீதியான ஒழுங்குமுறைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் விளைபொருட்களை அளிப்பதற்கான இதுபோன்ற விதிவிலக்குகள் ஒரு நிறுவனத்தின் திறமை அல்லது பொறுப்புகளை பாதிப்பதில்லை. +2.0 ஒழுங்குமுறைக் குறிப்பு +இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் ஐஎஸ்ஓ 9001:2008 இன் சட்டபூர்வ அதிகாரம் ஆகியவற்றை பின்வரும் ஒழுங்குமுறை ஆவணம் கொண்டிருக்கிறது. தேதி குறிப்பிடப்பட்ட குறிப்புகள், அதைத் தொடர்ந்து வரும் திருத்தம், அல்லது பிரசுரங்களின் மறுபதிப்பு போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இருந்தபோதும், பின்வரும் ஒழுங்குமுறை ஆவணத்தின் புதிய பதிப்பைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்கு ஐஎஸ்ஓ 9001:2008 ஐ அடிப்படையாகக் கொண்ட ஒப்பந்தப் பிரிவுகள் ஊக்கப்படுத்தப்படுகின்றன. தேதி குறிப்பிடப்படாத குறிப்புகளைப் பெறுவதற்காக, ஒழுங்குமுறை ஆவணத்தின் புதிய பதிப்பு கோரிக்கையை எழுப்புகிறது. +ஐஎஸ்ஓ 9000: 2005 தரக் கட்டுப்பாட்டு அமைப்பு – அடிப்படை மற்றும் சொற்களஞ்சியம். +3.0 நிபந்தனைகள் மற்றும் வரையறைகள் +“வழங்குனர்” மற்றும் “விற்பனையாளர்” இருவரும் ஒருவரே என்பதுடன், வாங்கப்பட்��� விளைபொருட்களைப் பெறுவதற்கு இருவரும் வெளிப்புற ஆதாரத்தைத் தேடுகின்றனர் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +4.0 தரக் கட்டுப்பாட்டு அமைப்பு +4.1 பொதுவான தேவைகள் +தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆவணம் செய்யப்படுவதுடன், அமலாக்கம் செய்யப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). ஐஎஸ்ஓ 9001:2008 சர்வதேச தரநிலைகளின் தேவைகளுக்கு ஏற்ப தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சிறந்த முறையில் மேம்படுத்தப்படுகிறது. +(நிறுவனத்தின் மேற்பார்வையில்): +எ) தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் கண்டறியப்படுவதுடன், அவற்றின் முழுப் பயன்பாடும் வரையறுக்கப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), +பி) இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் கணிக்கப்படுகின்றன, +சி) இந்த நடவடிக்கைகளின் செயல்முறை மற்றும் கட்டுப்பாட்டை பயனுள்ளதாக மாற்றுவதற்குத் தேவைப்படும் அளவீடுகள் மற்றும் வழிமுறைகள் உறுதி செய்யப்படுகின்றன, +டி) இந்த நடவடிக்கைகள் சம்பந்தமான செயல்பாடு மற்றும் கண்காணிப்பை ஆதரிப்பதற்குத் தேவைப்படும் மூலாதாரம் மற்றும் தகவல்களை எளிதில் கிடைக்கும்படிச் செய்வதற்கான வழிவகை மேற்கொள்ளப்படுகிறது, +இ) பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதுடன், மதிப்பாய்வு செய்யப்படுகிறது, +எஃப்) திட்டமிடப்பட்ட முடிவுகள் மற்றும் மேற்கூறிய நடவடிக்கைகளின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைவதற்குத் தேவைப்படும் செயல்பாடுகள் நிறைவேற்றப்படுகிறது, +ஐஎஸ்ஓ 9001:2008 சர்வதேச தரநிலைகளின் தேவைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கைகள் அயலாக்கம் செய்வதற்குத் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) தேர்ந்தெடுக்கப்படும் போது, அது தேவைகளுடன் கூடிய விளைபொருட்களின் நம்பகத்தன்மையை பாதிப்பதுடன், அது போன்ற நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாட்டை உறுதி செய்கின்றது. இதுபோன்ற அயலாக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைகள் சம்பந்தமான கட்டுப்பாட்டு வகைகள் மற்றும் விரிவாக்கம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பினுள் கண்டறியப்படுகிறது. +குறிப்பு: நிர்வாகச் செயல்பாடுகள், மூலாதாரத்தை வழங்குதல், விளைபொருள் ஆராய்ச்சி, அளவீடு, பகுப்பாய்வு, மற்றும��� முன்னேற்றம் உள்ளிட்ட மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பைச் செயல்படுத்துவதற்குத் தேவைப்படுகின்றன. + +4.2 ஆவணத் தேவைகள் +4.2.1 பொதுவானவை +தரக் கட்டுப்பாட்டு ஆவணங்கள் கீழ்கண்டவற்றை உள்ளடக்கியது: +எ) தரக் கொள்கை மற்றும் தரக் குறிக்கோள்கள் ஆகியவற்றின் அறிக்கை தொடர்பான ஆவணங்கள், +பி) தரக் கையேடு, +சி) ஐஎஸ்ஓ 9001:2008 சர்வதேச தரநிலைக்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் மற்றும் பதிவுகள் தொடர்பான ஆவணங்கள், +டி) சிறந்த திட்டங்கள், செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் சம்பந்தமான கட்டுப்பாடுகளுக்கு உத்திரவாதம் அளிக்கத் தேவைப்படும் பதிவுகள் (நிறுவனத்தின் மேற்பார்வையில் தேர்ந்தெடுக்கப்பட்டது) மற்றும் ஆவணங்கள் +குறிப்பு 1: ஐஎஸ்ஓ 9001:2008 என்பது சர்வதேச தரநிலையில் “பதிவுசெய்யப்பட்ட நடவடிக்கை” என்பதுடன், அந்த நடவடிக்கை நிறுவப்பட்டு, ஆவணம் செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, நிர்வகிக்கப்பட்டு வருவது தெளிவாக விளக்கப்படுகிறது. +குறிப்பு 2: ஆவணம் எந்த ஒரு வடிவத்தையோ அல்லது எந்த ஒரு சராசரிப் பிரிவையோ சார்ந்ததாக இருக்கலாம். +4.2.2 தரக் கையேடு +தரக் கையேடை நிறுவி, நிர்வகிக்கும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) சில காரணிகள் பின்வருமாறு +எ) விலக்குதலுக்கான காரணங்களின் விவரங்களை உள்ளடக்கிய தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் குறிக்கோள், +பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, அல்லது அவற்றைப் பற்றிய குறிப்புகளை நிறுவுவதற்கான பதிவுசெய்யப்பட்ட நடவடிக்கைகள், மற்றும் +சி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைகளுக்கு இடையேயான விளைவுகளின் வரையறை. +4.2.3 ஆவணங்களின் கட்டுப்பாடு +தரக் கட்டுப்பாட்டு அமைப்பினால் கோரப்படும் ஆவணங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. தரக் கட்டுப்பாட்டு அமைப்பினால் கோரப்படும் பதிவுகள் 4.2.4 ஆம் பிரிவில் தரப்பட்டுள்ள தேவைகளுக்கு ஏற்றார் போல வரையறை செய்யப்படுகின்றன. தேவைப்படும் கட்டுப்பாடுகளை வரையறை செய்வதற்கு பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. +எ) பிரச்சினைகள் ஏற்படுவதற்கு முன்பாக போதுமான ஆவணங்களுக்கு அனுமதி அளிப்பது, +பி) தேவைப்படும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்து, திருத்தம் செய்வதுடன், மற்றும் மறுபரிசீலனை செய்வது, +சி) மாற்றம் மற்றும் திருத்தம் செய்யப்பட்ட ஆவணங்கள் சரியான முறை���ில் கண்டறியப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வது, +டி) பயன்பாட்டின் போது, பொருத்தமான பதிப்பிலான ஆவணங்கள் கிடைக்கப்பெறுகின்றதா என்பதை உறுதி செய்வது, +இ) எஞ்சியிருக்கும் ஆவணங்கள் விரைவாகப் புரிந்துகொள்ளும்படி இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வது, +எஃப்) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்டம் மற்றும் செயல்பாடுகளின் தேவைகளுக்காக நிறுவனத்தால் கண்டறியப்படும் வெளிப்புற ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் சரியான முறையில் அடையாளம் காணப்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதுடன், அவற்றின் பங்கீடுகள் கட்டுப்பாட்டில் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும், +ஜி) நடைமுறையில் இல்லாத ஆவணங்களை எந்த விதத் திட்டமுமின்றி பயன்படுத்துவதைத் தடை செய்வது, அதே சமயம் அந்த ஆவணங்கள் ஏதாவது ஒரு நோக்கத்திற்காக பாதுகாக்கப்பட்டால், பொருத்தமான அணுகுமுறையை மேற்கொள்வது. +உதவி ஆவணம் +கியூஓபி-42-01 ஆவணங்களின் கட்டுப்பாடு +4.2.4 பதிவுகளின் கட்டுப்பாடு +தேவைகளுக்கு ஏற்ப ஆதாரங்களை வழங்குவதற்கும், தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறந்த நடவடிக்கைகளை வரையறை செய்வதற்கும் பதிவுகள் ஏற்படுத்தப்படுகின்றன. அடையாளம் காணுதல், சேமிப்பு, பாதுகாப்பு, மீட்பு, பயன்படுத்தும் காலம் மற்றும் பதிவுகளை ஒழுங்குபடுத்துவது ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவைப்படும் வரையறை செய்யப்பட்ட பதிவுகள் தொடர்பான நடவடிக்கைகளை (நிறுவனத்தின் மேற்பார்வையில்) மேற்கொள்வது. பதிவுகளைத் தெளிவாகவும், சுலபமாகக் கண்டறியும் வகையிலும் வைத்திருப்பதோடு, எளிதில் மீட்கும்படியாகவும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டும். +உதவி ஆவணம் +கியூஓபி-42-02 ஆவணங்களின் கட்டுப்பாடு +5.0 நிர்வாகப் பொறுப்புகள் +5.1 நிர்வாக வாக்குறுதி +உயர்மட்ட நிர்வாகம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் வளர்ச்சி மற்றும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பேற்பதுடன், பின்வரும் காரணிகள் மூலம் அதைச் சிறந்த முறையில் மேம்படுத்துகிறது: +எ) வாடிக்கையாளரின் தேவைகள் மற்றும் சட்டரீதியான தேவைகளின் முக்கியத்துவத்தை தொடர்புபடுத்துவது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), +பி) தரக் கொள்கையை நிறுவுதல், +சி) தரக் குறிக்கோள்களை நிறுவுதல், +டி) நிர்வாக சம்பந்தமான மதிப்பாய்வுகளை மேற்கொள்ளுதல், மற்றும் +இ) மூலாதாரங்களின் பயன்பாட்டி��ை உறுதி செய்தல். +5.2 வாடிக்கையாளரை மையப்படுத்துதல் +உயர்மட்ட நிர்வாகம் வாடிக்கையாளரின் தேவைகளைக் கண்டறிவதுடன், நுகர்வோரின் மன நிறைவை மேம்படுத்தும் குறிக்கோளை அடைய வழிசெய்கிறது. (7.2.1 மற்றும் 8.2.1 பிரிவுகளைப் பார்க்கவும்) +5.3 தரக் கொள்கை +"தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கை மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றத்தின் மூலம் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பைத் தாண்டிய தேவைகளைப் பூர்த்தி (நிறுவனத்தின் மேற்பார்வையில்) செய்ய இயலும். சிறந்த விளைபொருளை சரியான நேரத்தில் மலிவான விலையில் அளிப்பதன் மூலம் வாடிக்கையாளரின் முழுமையான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலும்.” +உயர்மட்ட நிர்வாகம் தரக் கொள்கைக்கு உறுதி அளிக்கிறது +எ) அது தரக் கொள்கையின் குறிக்கோளுக்கு பொருத்தமானதாகும், +பி) அது தேவைகளுடன் கூடிய நடவடிக்கைகளுக்கு உறுதி அளிப்பதுடன், தரக் கட்டுப்பாட்டு அமைப்புகளின் சிறப்புகளை மேம்படுத்துகிறது, +சி) இது தரக் குறிக்கோள்களை நிறுவுவதற்கும், மதிப்பாய்வு செய்வதற்குமான கட்டமைப்பை அளிக்கிறது, +டி) இதை எல்லைக்குட்பட்டு (நிறுவனத்தின் மேற்பார்வையில்) தொடர்பு கொள்ள இயலும் என்பதுடன், புரிந்துகொள்ளவும் இயலும் +இ) இதைப் பொருத்தமான முறையில் தொடர்ந்து மதிப்பாய்வு செய்ய இயலும். +5.4 திட்டமிடல் +5.4.1 தரக் குறிக்கோள்கள் +விளைபொருளின் தேவைகளைப் பூர்த்தி செய்வது [7.1 எ பிரிவைப் பார்க்கவும்] உள்ளிட்ட தரக் குறிக்கோள்கள் வரையறுக்கப்பட்ட எல்லைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை உயர்மட்ட நிர்வாகம் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உறுதி செய்ய வேண்டும். அளவீடு செய்யப்பட்ட மற்றும் பொருத்தமான தரக் குறிக்கோள்கள் தரக் கொள்கைகளுடன் இணக்கமாக இருத்தல் வேண்டும். +1. சிறந்த தொடர்புகளை ஏற்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர் தேவைகளை மதிப்பாய்வு செய்தல் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய இயலும். +2. உயர்ந்த தரத்திலான விளைபொருட்கள் மற்றும் சேவைகளைப், பொருத்தமான விலையில், சரியான நேரத்தில் வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வேண்டும். +3. வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவை அளிப்பதற்கு, நாம் விளைபொருட்கள், நடவடிக்கைகள் மற்றும் சேவைகளைச் சிறப்பான முறையில் நிர்வகிக்க வேண்டும். +4. பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வை அளிப்பதோடு, பயிற்சி மற்றும் கற்பித்தல் ஆகியவற்றின் மூலம் ஊழியர்களைச் சிறந்த முறையில் மேம்படுத்த முடியும். +உயர்மட்ட நிர்வாகம் கீழ்கண்டவற்றிற்கு உறுதி அளிக்க வேண்டும்: +எ) 4.1 பிரிவில் அளிக்கப்பட்டுள்ள தேவைகள் மற்றும் தரக் கொள்கைகள் ஆகியவற்றைப் பூர்த்தி செய்யும் வகையில் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும், +பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான திட்டத்தைச் செயல்படுத்தும்போது, தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நேர்மையை நிலைநிறுத்த வேண்டும். +5.5 பொறுப்பு, அதிகாரம் மற்றும் தொடர்பு +5.5.1 பொறுப்பு மற்றும் அதிகாரம் +தரக் கட்டுப்பாட்டு அமைப்பைச் சிறந்த முறையில் மேம்படுத்துவதற்கு, பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வரையறை செய்வதுடன், அவற்றைச் சிறந்த முறையில் பகிர்ந்து கொள்ள (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உயர்மட்ட நிர்வாகம் உறுதி அளிக்க வேண்டும். கியூஎம்எஸை பாதிக்கும் செயல்பாடுகளை நிர்வகித்து, செயல்படுத்தித், திருத்தம் செய்யும் நபரின் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை அமைப்பு அட்டவணை வரையறை செய்கிறது. தர நிலைகளில் மேற்கொள்ளவிருக்கும் மாற்றங்களை நிர்வாக மதிப்பாய்வு வரம்பிற்குட்பட்டு செயல்படுத்த வேண்டும். விளைபொருள், நடவடிக்கை, கொள்ளளவு, மற்ற செயல்பாடுகள் அல்லது நிர்வாக வேறுபாடுகள் போன்ற நிகழ்வுகளுக்கு இத்தகைய மாற்றங்களே காரணமாக அமைகிறது என்பதுடன், தர அமைப்பின் சிறப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் காரணமாகிறது. +உதவி ஆவணம் +நிறுவன விளக்க வரைபடம் +5.5.2 நிர்வாகப் பிரதிநிதி +உயர்மட்ட நிர்வாகம் மற்ற பொறுப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படும் நபரை அமைப்பு நிர்வாகத்தின் உறுப்பினராக நியமிக்கிறது, மேலும் அது பின்வரும் பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டிருக்கிறது +எ) தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு, செய்து முடிக்கப்படுவதுடன், அவற்றை நிர்வகிப்பதற்கும் உறுதி அளிப்பது, +பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகளை உயர்மட்ட நிர்வாகத்திற்குத் தெரிவிப்பது, முன்னேற்றம் குறித்து விளக்கம் அளிப்பது +சி) வாடிக்கையாளர்களின் தேவைகளைக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உறுதியளிப்பது. +குறிப்பு: தரக் கட்டுப்பாட்டு அமைப்புகள் தொடர்பான விவகாரங்களில் வெளிப்புற குழுக்களை இணைப்பது உள்ளிட்டவை நிர்வாகப் பிரதிநிதியின் பொறுப்புகளாகக் கருதப்படுகின்றன. +5.5.3 உட்புற தொடர்புகள் +உயர்மட்ட நிர்வாகம் பொருத்தமான தகவல் பரிமாற்ற நடவடிக்கைகளை (நிறுவனத்தின் மேற்பார்வையில்) மேற்கொள்துவதுடன், தகவல் பரிமாற்றத்தின் மூலம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பைச் சிறந்த முறையில் மேம்படுத்தி வருகிறது. +5.6 நிர்வாக மதிப்பாய்வு +5.6.1 பொதுவானவை +உயர்மட்ட நிர்வாகம் சீரான இடைவெளியில் தரக் கட்டுப்பாட்டு அமைப்பை மதிப்பாய்வு (நிறுவனத்தின் மேற்பார்வையில்) செய்வதுடன், அதன் தகுதி, நம்பகத்தன்மை மற்றும் சிறப்புகளுக்கு உறுதி அளிக்கிறது. முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது, தரக் கொள்கை மற்றும் தரக் குறிக்கோள்கள் உள்ளிட்ட தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் மாற்றங்களைக் கண்டறிவது ஆகியவற்றை இந்த மதிப்பாய்வுகள் உள்ளடக்கியுள்ளது. நிர்வாக மதிப்பாய்வில் இருந்து பெறப்படும் பதிவுகள் சிறப்பான முறையில் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). +உதவி ஆவணம் +கியூஓபி-56-01 நிர்வாக மதிப்பாய்வு +5.6.2 மதிப்பாய்வு உள்ளீடு +பின்வரும் தகவல்கள் நிர்வாக மதிப்பாய்விற்கு உள்ளீடுகளாகப் பயன்படுகின்றன: +எ) பரிசோதனைகளின் முடிவுகள் +பி) வாடிக்கையாளர்களின் கருத்துக்கள், +சி) செயல்முறைகளின் தரம் மற்றும் விளைபொருளின் நம்பகத்தன்மை, +டி) பொருத்தமான மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் நிலை, +இ) முந்தைய நிர்வாக மதிப்பாய்வுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், +எஃப்) தரக் கட்டுப்பாட்டு அமைப்பை பாதிக்கும் மாற்றங்கள், மற்றும் +ஜி) முன்னேற்றத்திற்கான பரிந்துரைகள். +5.6.3 மதிப்பாய்வு வெளியீடு +நிர்வாக மதிப்பாய்வில் இருந்து பெறப்படும் வெளியீடு பின்வரும் எந்த முடிவுகளையோ அல்லது நடவடிக்கைகளையோ சார்ந்திருக்கலாம்: +எ) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புகள் மற்றும் அதன் நடவடிக்கைகளின் முன்னேற்றம், +பி) வாடிக்கையாளர் தேவைகளுடன் தொடர்புடைய விளைபொருளின் முன்னேற்றம், மற்றும் +சி) மூலாதாரத் தேவைகள். +6.0 மூலவள நிர்வாகம�� +6.1 மூலாதாரத்தை வழங்குதல் +தேவைப்படும் ஆதாரங்களைக் கண்டறிந்து, வழங்குவது (நிர்வாகத்தின் மேற்பார்வையில்) +எ)தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைகளை நிர்வகிப்பதுடன், அதன் செயல்திறனை தொடர்ந்து மேம்படுத்துதல் மற்றும் +பி) வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் அவர்களுக்கு மன நிறைவை அளிக்க முடியும். +6.2 மனித வள ஆதாரம் +6.2.1 பொதுவானவை +பொருத்தமான அறிவு, பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் விளைபொருட்களின் தேவைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல் வேண்டும். +6.2.2 திறமை, பயிற்சி, மற்றும் விழிப்புணர்வு +(நிறுவனத்தின் மேற்பார்வையில்) : +எ) விளைபொருட்களின் தேவைகளைப் பாதிக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆராய்தல், +பி) அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு, சிறந்த பயிற்சியை அளிப்பதுடன், மற்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுதல், +சி) எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த மதிப்பாய்வை மேற்கொள்ளுதல், +டி) அமைப்பின் நடவடிக்கைகள் மற்றும் முக்கியத்துவத்தைக் குறித்த விழிப்புணர்வு அதன் தனிப்பட்ட பிரிவாகக் கருதப்படுகிறது, மேலும் அந்த நடவடிக்கைகள் எவ்வாறு தரக் குறிக்கோள்களை நிறைவேற்ற உதவுகின்றன என்பதை உறுதி செய்தல் வேண்டும், +இ) கல்வி, பயிற்சி, திறமை மற்றும் அனுபவம் (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) ஆகியவற்றைப் பற்றிய பதிவுகளைப் பாதுகாப்பது. +உதவி ஆவணம் +கியூஓபி-62-01 தகுதி, பயிற்சி, மற்றும் விழிப்புணர்வு +6.3 உள்கட்டமைப்பு +விளைபொருளின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத், தேவைப்படும் உள்கட்டமைப்பைக் கண்டறிவது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), அளிப்பது, மற்றும் பாதுகாப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். உள்கட்டமைப்பு பின்வரும் பயன்பாடுகள் அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது: +எ) கட்டமைப்புகள், பணியிடம் மற்றும் சேவைத் தொடர்புகள், +பி) செயல்முறைச் சாதனம் (வன்பொருள் மற்றும் மென்பொருள் இரண்டிற்கும்) மற்றும் +சி) உதவிச் சேவைகள் (போக்குவரத்து, தகவல் தொடர்பு அல்லது தகவல் அமைப்பு). +உதவி ஆவணம் +கியூஓபி-63-01 உபகரணப் பாதுகாப்பு +6.4 பணிச் சூழல் +விளைபொருளின் தேவைகளை நிறைவேற்றுவதற்குத், தேவைப்படும் பணிச் சூழல் கண்டறியப்படுவதுடன் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), நிர்வகிக்கப்படுகிறது. +7.0 விளைபொரு���் ஆய்வு +7.1 விளைபொருள் ஆய்விற்குத் திட்டமிடல் +விளைபொருள் ஆய்விற்குத் தேவைப்படும் நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதுடன் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), முன்னேற்றப்படுகிறது. விளைபொருள் ஆய்வுத் திட்டம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் மற்ற நடவடிக்கைகளின் தேவைகளுக்கு ஏற்றார் போல் இருக்கிறது (4.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்). விளைபொருள் ஆய்வைப் பற்றிய திட்டம் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது: +எ) விளைபொருளுக்கான தரக் குறிக்கோள்கள் மற்றும் தேவைகள், +பி) விளைபொருளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், அதற்குத் தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை அளித்தல், +சி) சரிபார்த்தல், உறுதிப்பாடு, கண்காணிப்பு, அளவீடு, ஆய்வு மற்றும் பரிசோதனை போன்ற நடவடிக்கைகள் விளைபொருளை உருவாக்குவதற்கும், அவற்றை அங்கீகரிப்பதற்கும் தேவைப்படுகிறது, +டி) நடவடிக்கைகளை ஆய்வு செய்வது, தேவைகளைப் பூர்த்தி செய்யும் விளைபொருளைப் பெறுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஆதாரங்களை வழங்கும் பதிவுகள் தேவைப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). +நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்றார் போல, திட்டமிடுதலின் வெளியீடு இருத்தல் வேண்டும். +குறிப்பு 1: தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (விளைபொருளை ஆய்வு செய்யும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது) நடவடிக்கைகளைக் குறிப்பிடும் ஆவணம், விளைபொருள், திட்டம் அல்லது ஒப்பந்தங்களுக்கு வழங்கப்படும் ஆதாரங்கள் போன்றவை தரத் திட்டம் என்றழைக்கப்படுகின்றது. +குறிப்பு 2: விளைபொருள் ஆய்வு நடவடிக்கைகளின் முன்னேற்றத்திற்கு, 7.3 ஆம் பிரிவில் அளிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பயன்படுத்தவும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +உதவி ஆவணம் + +கியூஓபி-71-01 விளைபொருள் ஆய்வைக் குறித்துத் திட்டமிடல் +7.2 வாடிக்கையாளர்- தொடர்பான நடவடிக்கைகள் +7.2.1 விளைபொருள் தொடர்பான தேவைகளைக் கண்டறிதல் +பின்வருவனவற்றை வரையறை செய்யவும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்): +எ) விநியோக மற்றும் காலம் கடந்த விநியோக நடவடிக்கைகள் தொடர்பான தேவைகள் வாடிக்கையாளரால் குறிப்பிடப்படும் தேவைகளாகும், +பி) தேவைகள் வாடிக்கையாளர்களால் குறிப்பிடப்படுவதில்லை, ஆனால் குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது திட்டத்திற்காக தேவைகளைக் குறிப்பிடுவது அவசியமாகிறது, +சி) சட்ட ஒழுங்கு ரீதியான நிபந்தனைகளுடன் விளைபொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன, மேலும் +டி) கூடுதலான நிபந்தனைகள் கருத்தில் கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +உதவி ஆவணம் +கியூஓபி-72-02 ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மற்றும் மதிப்பாய்வு +7.2.2 விளைபொருள் தொடர்பான தேவைகளின் மதி்ப்பாய்வு +விளைபொருள் தொடர்பான தேவைகள் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). முன்னதாக வாடிக்கையாளர்களுக்கு (உதாரணமாக, ஒப்பந்தப் படிவத்தை அளித்தது, ஒப்பந்தங்கள் மற்றும் கோரிக்கைகளை அங்கீகரித்தது, ஒப்பந்தங்கள் மற்றும் கோரிக்கைகளில் மாற்றங்களை ஏற்றுக்கொண்டது) விளைபொருளை வழங்குவதாக உறுதியளித்ததன் காரணமாக இந்த மதிப்பாய்வு மேற்கொள்ளப்படுகின்றது (நிறுவனத்தின் மேற்பார்வையில்) என்பதுடன், அந்த மதிப்பாய்வு பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும்: +எ) விளைபொருளுக்கான தேவைகளை வரையறை செய்ய வேண்டும், +பி) மேலே வரையறுக்கப்பட்டதில் இருந்து வேறுபடும் ஒப்பந்தம் அல்லது கோரிக்கை தொடர்பான நிபந்தனைகளுக்குத் தீர்வு காண்பது, மற்றும் +சி) வரையறுக்கப்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறனைக் கொண்டிருப்பது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +மதிப்பாய்வின் முடிவுகள் தொடர்பான பதிவுகள் மற்றும் மதிப்பாய்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). தேவைகள் குறித்த பதிவு செய்யப்பட்ட அறிக்கையை வாடிக்கையாளர் அளிக்காத போது, அங்கீகாரம் அளிப்பதற்கு முன்பாக வாடிக்கையாளரின் தேவைகள் உறுதி செய்யப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). விளைபொருள் தொடர்பான தேவைகளில் திருத்தம் செய்யும் போது, அது தொடர்பான ஆவணங்கள் சரியான முறையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வதோடு, அதன் உரிமையாளர் திருத்தப்பட்ட தேவைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்கின்றாரா எனபதையும் உறுதி செய்ய வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +குறிப்பு: சில சந்தர்ப்பங்களில், ஒவ்வொரு கோரிக்கைக்கும் மதிப்பீடு செய்வது என்பது சாத்தியமற்றதாகும். மதிப்பாய்விற்கு மாற்றாக, அட்டவணை அல்லது விளம்பரப்படுத்தும் உபகரணம் உள்ளிட்டவை வ���ளைபொருள் தொடர்பான தகவல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. +உதவி ஆவணம் +கியூஓபி-72-02 ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் மதிப்பாய்வு +7.2.3 வாடிக்கையாளர் தொடர்பு +கீழ்காணும் கூற்றுகளின் மூலம் வாடிக்கையாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்): +எ) விளைபொருள் தொடர்பான தகவல்கள், +பி) திருத்தங்களை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் அல்லது கோரிக்கைகளைக் கையாளுவது தொடர்பான விசாரணைகள், மற்றும் +சி) வாடிக்கையாளர் புகார்கள் உள்ளிட்ட வாடிக்கையாளர்களின் அபிப்பிராயங்கள். +உதவி ஆவணம் +கியூஓபி-72-02 ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் மதிப்பாய்வு +கியூஓபி-85-02 வாடிக்கையாளர் புகார்கள் +7.3 வடிவமைப்பு மற்றும் வளர்ச்சியைத் தவிர்த்தது (1.0 பிரிவில் உள்ள நோக்கத்தைப் பார்க்கவும்) +7.4 வாங்குதல் +7.4.1 வாங்கும் செயல்முறை +தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வாங்கப்பட்ட விளைபொருட்கள் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்தல் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) வேண்டும். வழங்குனர் மற்றும் வாங்கப்பட்ட விளைபொருட்களுக்கு வழங்கப்படும் ஒழுங்குமுறைகளின் அளவானது, விளைபொருள் பரிசோதனை அல்லது விளைபொருளின் இறுதி வடிவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதா என்பதை உறுதி செய்ய வேண்டும். +உதவி ஆவணம் +கியூஓபி-74-01 வாங்குதல் +7.4.2 வாங்குவது தொடர்பான விவரங்கள் +வாங்குவது தொடர்பான விவரங்கள் சரியான முறையில் வாங்கப்பட்ட விளைபொருட்களைப் பற்றிய வரையறையைக் கொண்டுள்ளது +எ) விளைபொருள், வழிமுறைகள், நடவடிக்கைகள் மற்றும் உபகரணங்களின் அங்கீகாரத்திற்கான தேவைகள், +பி) வாடிக்கையாளர் தகுதி பெறுவதற்கான நிபந்தனைகள், மற்றும் +சி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்கான தேவைகள். +வழங்குனரைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாக, வாங்குவது தொடர்பான நிபந்தனைகள் போதுமான அளவிற்கு வரையறை செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +உதவி ஆவணம் +கியூஓபி-74-01 வாங்குதல் +7.4.3. வாங்கப்பட்ட விளைபொருளின் உறுதிப்பாடு +வாங்கப்பட்ட விளைபொருட்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்றனவா என்பதை உறுதி செய்வதற்குத் தேவைப்படும் பரிசோதனைகள் அல்லது மற்ற நடவடிக்கைகளை (நிறுவனத்தின் மேற்பார்வையில்) உறு��ி செய்ய வேண்டும். வாடிக்கையாளர் குறிப்பிட்ட நோக்கத்திற்காக வழங்குனரின் நடவடிக்கைகளைப் பரிசோதனை செய்யும்போது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), பரிசோதனைக்கான முன்னேற்பாடு மற்றும் விளைபொருளை வெளியிடும் வழிமுறை போன்றவற்றை ஆவணத்தில் தெளிவாகக் குறிப்பிட (நிறுவனத்தின் மேற்பார்வையில்) வேண்டும். +உதவி ஆவணம் +கியூஓபி-74-02 வாங்கப்படும் விளைபொருளுக்கான பரிசோதனை + +7.5 உற்பத்தி மற்றும் சேவையை வழங்குதல் +7.5.1 உற்பத்தி மற்றும் சேவையை வழங்குவதற்கான கட்டுப்பாடு +உற்பத்தி மற்றும் சேவையை வழங்குதல் போன்றவை நிபந்தனைகளுக்கு உட்பட்டு திட்டமிடப்படுவதுடன், சிறந்த முறையில் பயன்படும்படியாக மாற்றப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). அத்தகைய நிபந்தனைகள் பின்வருமாறு: +எ) தகவல்களின் பயன்பாடு விளைபொருளின் சிறப்பியல்புகளை விவரிக்கும்படியாக இருக்கிறது, +பி) பணிகள் தொடர்பான தகவல்களை எளிதில் கிடைக்கும்படி செய்தல், +சி௦) பொருத்தமான உபகரணத்தைப் பயன்படுத்துதல், +டி) கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் உபகரணங்களை எளிதில் கிடைக்கும்படி செய்வது, +இ) கண்காணிப்பு மற்றும் அளவீட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல், +எஃப்) விளைபொருள் வெளியீடு, விநியோகம் மற்றும் தாமத விநியோக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுதல். +உதவி ஆவணம் +கியூஓபி-75-01 பணி ஒழுங்குமுறை மற்றும் விளைபொருள் தொடர்பான பதிவுகள் +கியூஓபி-63-01 உபகரணங்களை நிர்வகித்தல் +கியூஓபி-76-01 அளவீடு மற்றும் கண்காணிப்பு உபகரணம் +கியூஓபி-84-02 இறுதிப் பரிசோதனை +கியூஓபி-75-06 ஏற்றுமதி +7.5.2 உற்பத்தி மற்றும் சேவை வழங்குதல் தொடர்பான நடவடிக்கைகளின் உறுதிப்பாடு +கண்காணிப்பு மற்றும் அளவீடு ஆகியவற்றினால் வெளியீட்டு முடிவை ஆய்வு செய்யாதபோது, உற்பத்தி மற்றும் சேவையை அளிப்பதற்கான செயல்முறைகள் பரிசோதிக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). மேலும் விளைபொருளைப் பயன்படுத்தும் போது அல்லது சேவைகளை விநியோகித்த பிறகு, அந்தச் செயல்முறைகளின் விளைவுகளைப் போன்று, அதன் குறைபாடுகளும் வெளிப்படுத்தப்படுகின்றன. திட்டமிடப்பட்ட முடிவுகளை அடைவதற்கான திறனை இத்தகைய செயல்முறைகள் கொண்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றது. இந்த செயல்முறைகளுக்காக பின்வரும் ஒழுங்குமுறை நடவடிக்கைகள் மே��்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்): +எ) மதிப்பாய்விற்கான வரையறை மற்றும் நடவடிக்கைகளின் அங்கீகாரம், +பி) உபகரணங்களை அனுமதித்தல் மற்றும் வாடிக்கையாளரின் தகுதி, +சி) குறிப்பிட்ட வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகளின் பயன்பாடு, +டி) பதிவிற்கான தேவைகள் (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்), மற்றும் +இ) மறுசீரமைப்பு. + +குறிப்பு: இந்தச் சமயத்தில் சிறப்பான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படுவதில்லை (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +7.5.3 அங்கீகரித்தல் மற்றும் கண்டறிதல் +பொருத்தமான விளைபொருளைக் கண்டறியும் ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம், சிறந்த விளைபொருளை அடையாளம் காண இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). விளைபொருளை ஆய்வு செய்யும் போது, தேவைகளைக் கண்காணித்து அளவிடுவதன் மூலம் விளைபொருளின் நிலையை அறிந்துகொள்ள இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). கண்டறிதல் நிபந்தனையாக இருக்கும் பட்சத்தில், விளைபொருள் சிறந்த முறையில் அடையாளம் காணப்படுகிறது என்பதுடன், அது தொடர்பான பதிவுகள் பாதுகாக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்) (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). +உதவி ஆவணம் +கியூஓபி-75-04 விளைபொருள் அங்கீகாரம் மற்றும் கண்டறியும் ஆய்வு +7.5.4 வாடிக்கையாளரின் சொத்துக்கள் +வாடிக்கையாளரின் சொத்துக்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் போதோ அல்லது பயன்பாட்டில் இருக்கும் போதோ, அவைகள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). வாடிக்கையாளரின் சொத்துக்களைப் பயன்படுத்தும் போதோ அல்லது விளைபொருளுடன் இணைக்கும் போதோ, அவை அடையாளம் காணப்பட்டு, பரிசோதனை செய்யப்படுவதுடன், சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). வாடிக்கையாளரின் சொத்துக்களை இழக்க நேரிட்டாலோ, அவர்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டாலோ, அல்லது அவர்களின் சொத்துக்களை பொருத்தமற்ற பயன்பாட்டிற்கு உபயோகிக்கும்போதோ, அது குறித்த தகவல்களை அவர்களுக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). +குறிப்பு: வாடிக்கையாளரின் தனித்தன்மை மற்றும் அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கை ஆகிய இரண்டையும் வாடிக்கையாளரின் ஆவணங்களில் சேர்த்துக் கொள்ளலாம். +குறிப்பு: தற��போது வாடிக்கையாளரின் சொத்துக்கள் எதுவும் வைத்துக் கொள்ளப்படுவதில்லை (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +7.5.5 விளைபொருள் பாதுகாப்பு +உட்புற செயல்பாடுகளின் போது, விளைபொருட்கள் சிறந்த முறையில் பாதுகாக்கப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), மேலும் தேவைகளின் உறுதிப்பாட்டை ஊர்ஜிதம் செய்வதற்கு விளைபொருட்கள் குறிப்பிட்ட நோக்கத்துடன் விநியோகம் செய்யப்படுகின்றன. அடையாளம் காணுதல், திறமையான முறையில் பயன்படுத்துதல், சிப்பமாக்குதல், சேகரிப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை பாதுகாப்பு நடவடிக்கைகளாகக் கருதப்படுகின்றன. விளைபொருளின் இன்றியமையாத பகுதியும் பாதுகாக்கப்படுகின்றது. +7.6 கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் கருவியின் ஒழுங்குமுறை +கண்காணிப்பு மற்றும் அளவீடுகளுக்கு உத்திரவாதம் அளிப்பதற்கும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), மற்றும் தேவைகளை உறுதி செய்வதற்கும், விளைபொருளின் நம்பகத்தன்மையை குறித்த ஆதாரத்தை வழங்குவதற்கும் தேவைப்படும் கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் கருவிக்கு உத்திரவாதம் அளித்தல் வேண்டும். கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதுடன் (நிறுவனத்தின் மேற்பார்வையில்), அத்தகைய நடவடிக்கைகள் கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் இருக்கின்றனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். பின்வரும் கூற்றுகள் அளவீடு செய்யும் கருவியின் முடிவுகளை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றன: +எ) சர்வதேச அல்லது தேசிய அளவீட்டுத் தரங்களுக்கு மாற்றாக மற்ற அளவீட்டுத் தரங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னர் அவைகள் சீரான இடைவெளியில் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், பரிசோதிக்கப்படுகிறது; இதுபோன்ற தரங்களைப் பயன்படுத்தாத போது, ஒழுங்குபடுத்துவது அல்லது அவற்றைப் பரிசோதிப்பதற்கான அடிப்படைத் தத்துவம் ஆவணம் செய்யப்படுகிறது, +பி) தேவைப்படும் இடங்களில் சீரமைப்பு அல்லது மறுசீரமைப்பு செய்தல், +சி) அதன் ஒழுங்குமுறை குறித்த தரத்தைக் கண்டறிவதற்கான அங்கீகாரத்தைக் கொண்டிருத்தல், +டி) அளவீடு செய்யப்பட்ட முடிவுகள் நீக்கம் செய்யப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளித்தல், மற்றும் +இ) கையாளுதல், பராமரிப்பு மற்றும் சேமிப்பு போன்ற நடவடிக்கைகளை ���ேற்கொள்ளும்போது ஏற்படும் சேதம் மற்றும் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு அளித்தல். +அளவீடு செய்யும் கருவி சரியான முறையில் தேவைகளைக் கண்டறியாதபோது, முந்தைய அளவீட்டு முடிவுகள் சரியான முறையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). கருவிகள் மற்றும் பாதிக்கப்பட்ட விளைபொருள் ஆகியவற்றின் மீது பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). ஒழுங்குமுறை மற்றும் பரிசோதனையின் முடிவுகள் தொடர்பான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). +குறிப்பு: குறிப்பிட்ட பயன்பாட்டை நிறைவேற்றும் கணினி மென்பொருளின் நம்பகத்தன்மை அதைப் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் திருத்தம் செய்வது மற்றும் வடிவமைப்பது ஆகிய நடவடிக்கைகளைப் பொறுத்தது +உதவி ஆவணம் +கியூஓபி-76-01 கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் கருவி +8.0 அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம் +8.1 பொதுவானவை +கண்காணிப்பு, அளவீடு, பகுப்பாய்வு மற்றும் முன்னேற்றம் போன்ற அத்தியாவச நடவடிக்கைகளைத் திட்டமிட்டுதல் மற்றும் நிறைவேற்றுதல் (நிறுவனத்தின் மேற்பார்வையில்): +எ) விளைபொருளின் தேவைகள் குறித்த நம்பகத்தன்மையை விளக்குவது, +பி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நம்பகத்தன்மையை உறுதி செய்தல், மற்றும் +சி) தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புத் தன்மையை மேம்படுத்துதல். +புள்ளிவிவரத் தொழில்நுட்பத் திறன் மற்றும் பயன்பாட்டின் விரிவாக்கம் உள்ளிட்ட வழிமுறைகளை இது உள்ளடக்கியுள்ளது. +8.2 கண்காணிப்பு மற்றும் அளவீடு +8.2.1 வாடிக்கையாளரின் மனநிறைவு +தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பான அளவீடுகளைப் போல, வாடிக்கையாளர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதைப் பற்றிய தகவல்கள் கண்காணிக்கப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). இந்தத் தகவல்களைப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பான வழிமுறைகள் கண்டறியப்படுகின்றன. +உதவி ஆவணம் +கியூஓபி-82-01 வாடிக்கையாளர் மனநிறைவு +8.2.2 உட்புற ஆய்வுகள் +தரக் கட்டுப்பாட்டு அமைப்பைக் குறித்து சீரான கால அளவில் மேற்கொள்ளப்படும் உட்புற பரிசோதனைகள் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) பின்வருமாறு: +எ) திட்டமிடப்பட்ட ஏற்பாடுகளை உறுதிசெ��்வதுடன் (7.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்), ஐஎஸ்ஓ 9001:2008 மற்றும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தேவைகள் குறித்தும் உறுதி செய்யப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்), +பி) உட்புற ஆய்வுகள் சிறந்த முறையில் நிறைவேற்றப்படுவதுடன், நிர்வகிக்கப்படுகிறது. +ஆய்வு நடவடிக்கைகள் திட்டமிடப்படுவதுடன், முந்தைய ஆய்வுகளின் முடிவுகளைப் போன்று, ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் மற்றும் எல்லைகள் குறித்த முக்கியத்துவம் மற்றும் நிலைகள் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆய்வின் அளவு, நோக்கம், நடவடிக்கை மற்றும் வழிமுறைகள் குறித்துத் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன. ஆய்வாளரின் தேர்வு மற்றும் ஆய்வுகளின் நடத்தை ஆகியவை ஆய்வு நடவடிக்கைகளின் நோக்கம் மற்றும் நடுநிலையை உறுதி செய்கின்றன. ஆய்வாளர்கள் தங்களின் சொந்தப் பணிகளை ஆய்வு செய்ய இயலாது. திட்டமிடுதல் மற்றும் ஆய்வுகளை நடத்துதல், முடிவுகளை அறிவிப்பது மற்றும் பதிவுகளை நிர்வகிப்பது (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) ஆகியவற்றிற்கான பொறுப்புகள் மற்றும் தேவைகள் ஆவணங்களில் தெளிவாக வரையறுக்கப்படுகின்றன. +நிச்சயமற்ற தன்மை மற்றும் பின் விளைவுகள் போன்ற உறுதி செய்யப்பட்ட பிரச்சினைகளை நீக்குவதற்குத் தேவைப்படும் பொருத்தமான நடவடிக்கைகள் காலதாமதமின்றி மேற்கொள்ளப்பட்டதா என்பதை உறுதி செய்வது, மற்றும் ஆய்வு செய்த எல்லைகள் குறித்து உறுதி அளிப்பது போன்றவை நிர்வாகத்தின் பொறுப்புகளாகும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை உறுதி செய்வது மற்றும் திருத்தம் செய்யப்பட்ட முடிவுகளை வெளியிடுவது (8.5.2 ஆம் பிரிவைப் பார்க்கவும்) உள்ளிட்டவை தொடர்ச்சியான நடவடிக்கைகளாகும். +உதவி ஆவணம் +கியூஓபி-82-02 உட்புறத் தர ஆய்வுகள் +8.2.3 கண்காணிப்பு மற்றும் அளவீடு செய்யும் நடவடிக்கைகள் +தரக் கட்டுப்பாட்டு அமைப்பு நடவடிக்கைகளின் அளவீடுகளைக் கண்காணிப்பதற்கான பொருத்தமான வழிமுறைகளை மேற்கொள்ளுதல் (நிர்வாகத்தின் மேற்பார்வையில்). திட்டமிடப்பட்ட முடிவுகளை அடைவதற்கு இதுபோன்ற வழிமுறைகள் செயல்திறனை அடையாளம் காட்டுகின்றன. திட்டமிடப்பட்ட முடிவுகளை அடையாதபோது, திருத்தம் மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகின்றன. +8.2.4 கண்காணிப்பு மற்றும் விளைபொருளின் அளவீடு +விளைபொருள் வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்றதா என்பதை உறுதி செய்வதற்கு, விளைபொருளின் சிறப்பியல்புகள் கண்காணிக்கப்படுவதுடன், அளவீடு செய்யப்படுகிறது (நிறுவனத்தின் மேற்பார்வையில்). திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையிலும் (7.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்), விளைபொருள் ஆய்வு தொடர்பான செயல்முறை அமைப்புகளின் மூலமாகவும் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அங்கீகாரத்துடன் கூடிய பொருத்தமான ஆதாரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. வாடிக்கையாளருக்கு (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) விநியோகம் செய்வதற்கான விளைபொருளை வெளியிடும் அதிகாரம் கொண்ட நபரைப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. திட்டமிடப்பட்ட ஒப்பந்தங்கள் (7.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்) முழுமையாக நிறைவடையும் வரை, அல்லது அது தொடர்பான அதிகாரங்கள் வாடிக்கையாளரால் அங்கீகரிக்கப்படும் வரை, நுகர்வோருக்கான விளைபொருளை வெளியிடுவது மற்றும் சேவைகளை அளிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை. +உதவி ஆவணம் +கியூஓபி-82-03 உட்புற செயல்முறையைப் பரிசோதித்தல் +கியூஓபி-82-04 இறுதிப் பரிசோதனை +8.3 நிச்சயமற்ற விளைபொருளின் ஒழுங்குமுறை +விளைபொருளை நோக்கமின்றி பயன்படுத்துவது அல்லது விநியோகம் செய்வதைத் தடுப்பதற்கு, தேவைகளைப் பூர்த்தி செய்யாத விளைபொருட்கள் கண்டறியப்படுவதுடன், அவைகள் கட்டுப்படுத்தப்படுவதை உறுதி செய்தல் (நிறுவனத்தின் மேற்பார்வையி்ல்) வேண்டும். நம்பகத்தன்மையற்ற விளைபொருட்களை நிர்வகிப்பதற்கான பொறுப்புகள் மற்றும் அதிகாரங்கள் தொடர்பான ஒழுங்குமுறைகளை வரையறுப்பதற்கு, ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். நம்பகத்தன்மையற்ற விளைபொருள் உடனான உறவுமுறை பின்வரும் நடவடிக்கைகளால் (நிறுவனத்தின் மேற்பார்வையில்) ஏற்படுத்தப்படுகிறது: +எ) நம்பகத்தன்மையற்ற விளைபொருளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது, +பி) வாடிக்கையாளரின் அதிகாரத்தின் கீழ் அத்தகைய விளைபொருட்கள் வெளியிடப்பட வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட வேண்டு்ம், +சி) அதன் உள்நோக்கம் மற்றும் பயன்பாட்டினைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல். +டி) விநியோகம் செய்த பிறகு அல்லது பயன்படுத்துவது தொடங்கப்பட்ட பிறகு, நம்பகத்தன்மையற்ற விளைபொருட்கள் கண்டுப���டிக்கப்பட்டால், அத்தகைய விளைபொருளின் உள்ளார்ந்த விளைவுகளுக்குப் பொருத்தமான நடவடிக்கையை எடுத்தல் வேண்டும். +நம்பகத்தன்மையற்ற விளைபொருட்கள் திருத்தம் செய்யப்படும் போது, திருத்தம் செய்யப்பட்ட விளைபொருட்கள் தேவைகளை நிறைவேற்றும் வகையில் இருக்கின்றனவா என்பதை நிரூபிப்பது அவசியமாகிறது. விநியோகம் செய்த பிறகு அல்லது பயன்படுத்தத் தொடங்கிய பிறகு, நம்பகத்தன்மையற்ற விளைபொருள் கண்டறியப்படும் பட்சத்தில், அத்தகைய விளைபொருள் காரணமாக ஏற்படும் விளைவுகளுக்கு உள்ளார்ந்த மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). சலுகை அளித்தது உள்ளிட்ட பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் தன்மை ஆகியவை சம்பந்தமான பதிவுகள் பாதுகாக்கப்படுகின்றன (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்). +உதவி ஆவணம் +கியூஓபி-83-01 நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் ஒழுங்குமுறை +8.4 தகவல்களின் பகுப்பாய்வு +தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புகள் மற்றும் தகுதியை விவரிப்பதற்கான பொருத்தமான தகவல்கள் கண்டறியப்பட்டு, சேகரிக்கப்படுவதுடன், ஆராயப்பட்டும் வருகிறது (நிர்வாகத்தின் மேற்பார்வையில்), மேலும் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சிறப்புகள் எவ்வாறு மேம்படுத்தப்பட்டன என்பதைப் பரிசோதித்தல் வேண்டும். கண்காணிப்பு, அளவீடு மற்றும் மற்ற ஆதாரங்களில் இருந்து பெற்ற முடிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தகவல்களை இந்தப் பரிசோதனை உள்ளடக்கியுள்ளது. பகுப்பாய்வு செய்யப்பட்ட தகவல்கள் பின்வரும் விவரங்களை அளிக்கின்றன: +எ) வாடிக்கையாளர் திருப்தி (8.2.1 ஆம் பிரிவைப் பார்க்கவும்), +பி) விளைபொருளின் தேவைகளை நிர்ணயம் செய்வது (8.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்), +சி) தடுப்பு நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளை உள்ளடக்கிய வழிமுறைகள், விளைபொருளின் சிறப்பியல்புகள் மற்றும் செயல் தடங்கள் (8.2.3 மற்றும் 8.2.4 ஆகிய பிரிவுகளைப் பார்க்கவும்), +டி) வழங்குனர்கள் (7.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்), +உதவி ஆவணம் + +8.5 முன்னேற்றம் +தரக் கொள்கை, தரக் குறிக்கோள்கள், ஆய்வு முடிவுகள், தகவல் பகுப்பாய்வு, சரியான மற்றும் தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் நிர்வாக மதிப்பாய்வு ஆகியவற்றின் மூலம் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் தனித்தன்��ையை முன்னேற்ற இயலும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). +உதவி ஆவணம் +கியூஓபி-85-01 தொடர்ச்சியான முன்னேற்றம் +8.5.2 திருத்தப்பட்ட நடவடிக்கைகள் +நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் விளைவுகள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன (நிறுவனத்தின் மேற்பார்வையில்). திருத்தப்பட்ட நடவடிக்கைகள் நம்பகத்தன்மையற்ற விளைபொருளுக்கு எதிரான விளைவுகளுடன் இணக்கமாக இருக்கின்றன. பின்வரும் தேவைகளை வரையறுப்பதற்கு ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகள் ஏற்படுத்தப்படுகின்றன: +எ) நம்பகத்தன்மையற்ற விளைபொருளை மதிப்பாய்வு செய்வது (வாடிக்கையாளரின் புகார்கள் உட்பட), +பி) நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் விளைவுகளைக் கண்டறிவது, +சி) நம்பகத்தன்மையற்ற விளைபொருளைத் திரும்பப் பெறாமல் இருப்பதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகளை உறுதிசெய்வது, +டி) தேவைப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, நிறைவேற்றுவது, +இ) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முடிவுகளைப் பதிவு செய்வது (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்), மற்றும் +எஃப்) திருத்தம் செய்யப்பட்ட நடவடிக்கைகளின் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் வேண்டும். +உதவி ஆவணம் +கியூஓபி-85-02 வாடிக்கையாளர் புகார்கள் +கியூஓபி-85-03 திருத்தப்பட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் +8.5.3 தடு்ப்பு நடவடிக்கைகள் +நம்பகத்தன்மையற்ற விளைபொருளை உருவாக்கும் காரணிகளைத் தடுப்பதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிதல் வேண்டும் (நிறுவனத்தின் மேற்பார்வையில்). தடுப்பு நடவடிக்கைகள் உள்ளார்ந்த பிரச்சினைகளின் விளைவுகளுடன் இணக்கமாக இருத்தல் வேண்டும். பின்வரும் தேவைகளை வரையறுப்பதற்கு ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகள் தேவைப்படுகின்றன: +எ) நம்பகத்தன்மையற்ற விளைபொருளின் உள்ளார்ந்த பிரச்சினைகள் மற்றும் விளைவுகளைக் கண்டறிவது, +பி) நம்பகத்தன்மையற்ற விளைபொருளைப் பெறுவதைத் தடுப்பதற்குத் தேவைப்படும் நடவடிக்கைகளை மதிப்பாய்வு செய்தல், +சி) தேவைப்படும் நடவடிக்கைகளைக் கண்டறிந்து, நிறைவேற்றுவது, +டி) எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் முடிவுகளைப் பதிவு செய்தல் (4.2.4 ஆம் பிரிவைப் பார்க்கவும்) மற்றும் +இ) எடுக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் விளைவுகளை மதிப்பாய்வு செய்தல் வேண்டும். +உதவி ஆவணம் +கியூஓபி-85-03 திருத்தம் செய்யப்பட்ட மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் + +பிஎஸ் 5750 என்ற இங்கிலாந்து தரத்தைப் போன்ற கட்டமைப்பை ஐஎஸ்ஓ 9000:1987 கொண்டிருந்தது, மேலும் அமைப்பின் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நோக்கத்தின் அடிப்படையில் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிற்குத் தேவைப்படும் பின்வரும் மூன்று 'மாதிரிகள்' தேர்ந்தெடுக்கப்படுகின்றன: +அமெரிக்கா மற்றும் மற்ற பாதுகாப்புத் தரங்கள் ("எம்ஐஎல் ஸ்பெக்ஸ்") "ஐஎஸ்ஓ 9000:1987" ஐப் பயன்படுத்தின, மேலும் அத்தகைய தரநிலைகள் உற்பத்தியை ஆதரிக்கும் விதத்தில் இருந்தன. உண்மையான நோக்கமாக இருந்திருக்கக்கூடிய நிர்வாகத்தின் ஒட்டுமொத்த நிகழ்முறையைக் காட்டிலும் இந்த வலியுறுத்தலானது நடைமுறைகளுடனான உடன்பாட்டில் நிறுவப்படும் நோக்கத்தையே கொண்டிருந்தது. + +"ஐஎஸ்ஓ 9000:1994" தரம் உற்பத்தி செய்யப்பட்ட விளைபொருளைப் பரிசோதனை செய்வதற்குப் பதிலாக, தடுப்பு நடவடிக்கைகள் மூலம் தர உறுதிப்பாட்டிற்கு உத்திரவாதம் அளிப்பதுடன், ஆவணம் செய்யப்பட்ட வழிமுறைகளைப் பற்றிய ஆதாரங்களைக் கோருகிறது. முதல் பதிப்பில் காணப்பட்டதைப் போன்று, இதிலும் நிதி இழப்பீட்டிற்குத் தீர்வு காணும் வழிமுறைகள் சம்பந்தமான கையேட்டை உருவாக்குவதன் மூலம் நிறுவனங்கள் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிவு செய்தது, இது ஐஎஸ்ஓ அதிகாரிகளுக்கு பெரும் சுமையாகத் தெரிந்தது. சில நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாடு மற்றும் மாற்று நடவடிக்கைகள் தர அமைப்புகளால் தாமதப்படுத்தப்படுகின்றன. + +9001, 9002, மற்றும் 9003 ஆகிய மூன்று தரநிலைகளையும் "ஐஎஸ்ஓ 9001:௦௦௦2000" இணைக்கிறது, இந்த நடவடிக்கை 9001 எனப்படுகிறது. ஒரு நிறுவனம் புதிய விளைபொருளை உருவாக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும்போது, வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. செயல்முறை நிர்வாக மையத்தின் கொள்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இந்த 2000 ஆம் ஆண்டின் பதிப்பு உதவுகிறது ("செயல்முறை நிர்வாகம்" உற்பத்தியின் முடிவில் விளைபொருளைப் பரிசோதிப்பதற்குப் பதிலாக, நிறுவனத்தின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளைத் தேர்ந்தெடுப்பதுடன், அவற்றைக் கண்காணிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது). வியாபார அமைப்பில் தரநிலைகளை ஒருங்கிணைப்பதற்கும், தரப் பணிகளை இளைய நிர்வாகிகளிடம் அளிப்பதைத் தவிர்ப்பதற்கும் 2000 ஆம் ஆண்டுப் பதிப்பு உயர் நிர்வாகிகளின் பங்களிப்பைக் கோருகிறது. செயல்முறை நடவடிக்கைகளின் அளவீடுகள், பணிகள் மற்றும் செயல்பாடுகளின் திறன் குறித்த மதிப்பாய்வுகள் ஆகியவற்றின் வழியாக விளைபயனை முன்னேற்றுவது மற்றொரு குறிக்கோளாகும். செயல்முறை முன்னேற்றத்திற்கான கோரிக்கைகள் மற்றும் வாடிக்கையாளர் மனநிறைவைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளைத் தெளிவான முறையில் மேற்கொள்ள வேண்டும். + +தரநிலை தொழில்நுட்பக் குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்களால் ஐஎஸ்ஓ 9000 மறு ஆய்வு செய்யப்படுகிறது, மேலும் அந்த குழுக்கள் தரநிலைகளை அமலுக்குக் கொண்டுவரும் ஆய்வாளர்களிடம் இருந்து ஆலோசனைகளைப் பெறுகின்றன. + +ஐஎஸ்ஓ 9001:2000 இன் தேவைகளைக் கண்டறிவது மற்றும் ஐஎஸ்ஓ 14001:2004 உடனான தொடர்பினை மேம்படுத்துவது ஆகிய நோக்கத்திற்காக ஐஎஸ்ஓ 9001:2008 அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் புதிய தேவைகள் எதுவும் கோரப்படவில்லை. ஐஎஸ்ஓ 9001:2008 ஐ மாற்றம் செய்தது தெளிவாக விவரிக்கப்படுகிறது. புதிய பதிவில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தங்களை தரக் கட்டுப்பாட்டு அமைப்பு சரியான முறையில் பின்பற்றுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கு அதன் தரத்தினை உயர்த்துவது அவசியமாகிறது.சொந்த மதிப்பாய்வை சரிபார்க்கும் பட்டியல் உள்ளிட்ட ஐஎஸ்ஓ 9001:2008 இன் நடைமுறைகளைப் பற்றிய செயல்முறை விளக்கம் + +ஐஎஸ்ஓ தானாகவே சான்றிதழை வழங்கும் ஒரு அமைப்பு அல்ல. அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகளுக்கு அதிகாரத்தை அளிக்கப் பல்வேறு நாடுகள் அதிகாரம் அளிக்கும் அமைப்புகளை நிறுவியுள்ளது, மேலும் அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் நிறுவனங்களை ஆய்வு செய்வதுடன், ஐஎஸ்ஓ 9001 சான்றிதழைப் பெற சிபாரிசு செய்கின்றன. நிறுவனத்தின் தரக் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக வழங்கப்படும் சான்றிதழ் ஐஎஸ்ஓ 9001:2008 என்றழைக்கப்படுவதுடன், ஐஎஸ்ஓ 9000:2000 சான்றிதழ் எனவும் பொதுவாக குறிப்பிடப்படுகிறது. அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் அமைப்புகள் இரண்டும் தங்களின் சேவைகளுக்கான கட்டணத்தைக் கோருகின்றன. அங்கீகாரம் அளிக்கும் அமைப்பினால் (சிபி) வழங்கப்படும் சான்றிதழ் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுவதை உறுதி செய்வதற்கு, பல்வேறு அங்கீகாரம் அளிக்கும் அமைப்புகள் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன. + +அங்கீகாரத்தைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கும் நிறுவனம் அதன் அமைவிடம், நடவடிக்கைகள், விளைபொருட்கள், சேவைகள் மற்றும் செயல்பாடுகளின் அடிப்படையில் மதிபாய்வு செய்யப்படுகிறது. அதே சமயம் பிரச்சினைகள் குறித்து ("தேவைப்படும் நடவடிக்கைகள்" அல்லது "இணக்கமற்ற தன்மை") நிர்வாகத்திடம் தகவல் தெரிவிக்கப்படுகிறது. பெரிய பிரச்சினைகள் எதுவும் கண்டறியப்படாதபோது, அல்லது நிர்வாகம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எவ்வாறு போதுமான மேம்பாட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, அங்கீகாரம் அளிக்கும் அமைப்பு ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழை வழங்குகிறது. + +ஐஎஸ்ஓ தரச் சான்றிதழைப் பெற்றுவிட்டால் அனைத்தும் முடிந்துவிட்டதாகப் பொருள்கொள்ளப்பட மாட்டாது, மாறாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அந்த அமைப்பின் மேற்பார்வையில் அந்தச் சான்றிதழைத் தொடர்ந்து புதுப்பித்தல் வேண்டும். திறன் முதிர்வு மாதிரிக்கு முரணாக ஐஎஸ்ஓ 9000க்குள்ளாக திறன் தரநிலைகள் என்று எதுவுமில்லை. + +தரச் சான்றிதழைப் பெறுவதற்குப் பின்வரும் இரண்டு வகையான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன: வெளிப்புற சான்றிதழ் அளிக்கும் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் வெளிப்புற ஆய்வு மற்றும் இந்தச் செயல்பாட்டினை மேற்கொள்ள நிறுவனத்தைச் சார்ந்த நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்படும் (உட்புற ஆய்வு). அமைப்பானது ஒழுங்கான முறையில் செயல்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பது, எங்கே மேம்பாடுகளை மேற்கொள்வது என்பதைக் கண்டறிவது மற்றும் கண்டறியப்பட்ட பிரச்சினைகளைக் களைவது அல்லது சரிசெய்வது போன்ற மதிப்பாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது இதன் முக்கிய நோக்கமாகும். உட்புற ஆய்வாளர்கள் தங்களின் நிர்வாகத்தைக் குறித்து வெளியில் சென்று ஆய்வு மேற்கொள்வது சிறந்த விஷயமாகக் கருதப்படுகிறது, இதன் மூலம் அவர்கள் தங்களின் விசாரணைகள் குறித்த தற்சார்பான முடிவுகளைப் பெற இயலும். + +1994 தரத்தின் அடிப்படையில், "இணக்கமான ஆய்வுகளை" மேற்கொள்வதன் மூலம் ஆய்வு நடவடிக்கைகள் குறித்த பின்வரும் தகவல்களைப் பெற இயலும்: + + +2000 தரநிலை வித்தியாசமான அணுகுமுறையைக் கையாளுகிறது. அபாயம், தரம் மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை மையப்படுத்துவதன் மூலம் "இணக்கத்தை" ஏற்படுத்துவதற்கான கலப்பற்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் ஆ��்வாளர்கள் தேவைப்படுகின்றனர். இதன் பொருளானது, வழக்கமாகப் பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகளைக்குப் பதிலாக, எது சிறந்தது என்பதைக் கண்டறிந்து ஆலோசனை வழங்கும் ஆய்வாளர்கள் தேவை என்பதாகும். முந்தைய தரத்திலிருந்து வேறுபடும் காரணிகள் கீழே விளக்கப்பட்டுள்ளன: + +இஎம்எஸ் (ஐஎஸ்ஓ 14001), எஃப்இஎம்எஸ் (ஐஎஸ்ஓ 22000) போன்ற மற்ற நிர்வாக அமைப்புகளைப் போன்று, ஆய்வை மேற்கொள்ளும் ஐஎஸ்ஓ 19011 தரநிலை ஐஎஸ்ஓ 9001 இல் பயன்படுத்தப்படுகிறது. + +ஐஎஸ்ஓ 9001 தரநிலை பொதுவானதுடன், சுருக்கமானது. இதன் பிரிவுகள் மிகவும் கவனமாக விரிவாக்கம் செய்யப்படுவதுடன், குறிப்பிட்ட நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பொருளுள்ளதாக மாற்றுகிறது. மென்பொருளை உருவாக்குவது என்பது பாலாடைக் கட்டியை உருவாக்குவதைப் போன்றதோ அல்லது ஆலோசனை வழங்குவதைப் போன்றதோ அல்ல; இருப்பினும் ஐஎஸ்ஓ 9001 வழிமுறைகள், வியாபார நிர்வாகத்தில் பயன்படுத்தப்படும் வழிமுறைகளாகும். காவல் துறைகள் (அமெரிக்கா), கால்பந்தாட்டக் குழுக்கள் (மெக்சிகோ) மற்றும் நகராட்சி மன்றங்கள் (இங்கிலாந்து) போன்ற பல்வேறு அமைப்புகள் வெற்றிகரமாக ஐஎஸ்ஓ 9001:2000 அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. + +பல்வேறு நி்ர்வாகத் துறைகள் சந்தைகளில் தங்களின் வழிமுறைகள் குறித்த விளக்கங்களை தெளிவாக வரையறுக்க விரும்புகிறது. ஐஎஸ்ஓ 9000 பதிப்புகள் அவைகளின் தேவைகளைப் பகுதியளவு பூர்த்தி செய்யும் வகையில் இருக்கின்றன, ஆனால் அவைகளை ஆய்வு செய்வதற்கு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, அனுபவம் வாய்ந்த ஆய்வாளர்களை அனுப்பி வைத்தல் அவசியமாகிறது. + + +பின்வருபவை ஐஎஸ்ஓ 9000 இன் சிறப்புத் தன்மையை மையப்படுத்தும் விதத்தில் இருக்கின்றது: + +வியாபார முன்னேற்றம், முதலீட்டைக் குறித்த நேர்மறையான விளைவுகள், வியாபாரப் பங்கு, விற்பனை வளர்ச்சி, விற்பனை அளவீடு, போட்டியிடும்படியான முன்னேற்றத்தை அளித்தல், சட்டரீதியான வழக்குகளைத் தவிர்ப்பது போன்ற நடவடிக்கைகளை தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மேற்கொள்வதற்கான அங்கீகாரத்தை இது வழங்குகிறது. வேட்டின் கருத்தின்படி, ஐஎஸ்ஓ 9000:2000 இல் உள்ள தரக் கொள்கைகள் முழுமை பெற்றுக் காணப்படுகின்றன, மேலும் பேர்னெஸின் கூற்றின்படி, "எந்த நிறுவனத்திடமும் போட்டியிடும்படியான தரக் கட்டுப்பாட்டு அமைப்பு மாதிரியை ஐஎஸ்ஓ 9000 நெறிமுறைகள் அள���க்கின்றன." +இலாபத்தை அதிகரிக்கும் ஐஎஸ்ஓ 9000௦ ஐப் பற்றிய லியோட்சின் தர உறுதிக் கொள்கையை பேர்னெஸ் சிறப்பான முறையில் சுட்டிக்காட்டுகிறார், மேலும் பதிவு செய்வதற்காகச் செலவிட்ட தொகையை மூன்று வருடங்களில் திரும்பப்பெற இயலும் என்று டெலாய்டி-டௌகி தெரிவிக்கிறார். "புராவிடன்ஸ் பிசினஸ் நியூஸின்" கூற்றின்படி, ஐஎஸ்ஓவை நடைமுறைப்படுத்துவதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெற இயலும்: +800 ஸ்பெயின் நாட்டு நிறுவனங்களை ஆய்வு செய்தபோது, ஐஎஸ்ஓ 9000 ஐப் பதிவுசெய்ததே அவைகளின் முன்னேற்றத்திற்குக் காரணமாக அமைந்தது என்பதைக் கண்டறிய முடிந்தது, ஏனெனில் அந்த நிறுவனங்கள் முன்பே தர கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்தன என்பதுடன், ஐஎஸ்ஓ 9000 ஐப் பற்றிய விழிப்புணர்வையும் கொண்டிருந்தன. + +பணம், கால அளவு, மற்றும் கடிதத் தொடர்புகள் போன்றவை ஐஎஸ்ஓ 9001 ஐப் பதிவு செய்வதற்கான பொதுவான பிரச்சினைகளாகக் கருதப்படுகின்றன. "மற்றவர்கள் இதை வெறும் ஆவணம் என்றே குறிப்பிடுவார்கள். ஒரு நிறுவனம் தனது தர அமைப்பை ஆவணம் செய்யும் பட்சத்தில், அந்த நிறுவனம் தனது அனைத்து அலுவலக வேலைகளையும் எளிமையாக்க இயலும் என இதை ஆதரிப்பவர்கள் தெரிவிக்கின்றனர், என்று பேர்னெஸ் குறிப்பிடுகிறார்." + +ஐஎஸ்ஓ 9001 தரச் சான்றிதழைப் பெற்ற விளைபொருட்கள் அனைத்தும் சிறந்தவை என்று பொருள் கொள்ளக்கூடாது. குறைந்த தரத்திலான விளைபொருளை உற்பத்தி செய்து வழங்கும் நோக்கத்துடன் செயல்படும் நிறுவனம், சரியான ஆவணங்களைக் காட்டி ஐஎஸ்ஓ 9001 முத்திரையைத் தனது விளைபொருளில் பயன்படுத்த இயலும். சேடெனின் கருத்தின்படி, புரி்ந்துகொள்ளுதல் மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைக் காட்டிலும், வரையறை, கட்டுப்பாடு மற்றும் வழிமுறைகள் ஆகியவற்றை ஐஎஸ்ஓ 9001 துரிதப்படுத்த இயலும். வேட்டின் கருத்தின்படி, ஐஎஸ்ஓ 9000 என்பது சிறந்த வழிகாட்டியாகும், மேலும் "சிறந்த தரத்திலான விளைபொருளை உற்பத்தி செய்வதற்கு அத்தகைய சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன என்ற தவறான எண்ணத்தை நிறுவனங்கள் கொண்டிருப்பதற்கு, ஐஎஸ்ஓ 9000 ஐ ஒரு தரமாக அங்கீகரிப்பதே காரணமாகும், ... [வலுவிழத்தல்] ஆகேவே ஒரு நிறுவனம் தனது தர அமைப்பை உறுதி செய்வது அவசியமாகிறது." வேடின் கருத்தின்படி, ஐஎஸ்ஓ 9001 வரையறைகளில் நம்பி்க்கை கொள்வதன் மூலம் வெற்றிகரமான தர ���மைப்பை உருவாக்க உறுதியளிக்க இயலாது என்பதாகும். + +சர்வேதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றபோதிலும், பெரும்பாலான அமெரிக்க வாடிக்கையாளர்கள் ஐஎஸ்ஓ 9000௦௦ ஐப் பற்றிய விழிப்புணர்வின்றி காணப்படுகின்றனர் என்பதுடன், அது தங்களுக்குப் பொருத்தமானதல்ல என்ற கருத்தையும் அவர்கள் கொண்டுள்ளனர். விளைபொருளைப் பயன்படுத்துவோருக்கு ஐஎஸ்ஓ 9000 தரம் தேவைப்படாத பட்சத்தில், அத்தகைய சான்றிதழை வாங்குவது மற்றும் அதைப் பாதுகாப்பதற்காகச் செலவிடப்படும் தொகை பயனற்றதே ஆகும். ஐஎஸ்ஓ 9000 சான்றிதழைப் பெறாத நிறுவனத்திற்கு எதிரான போட்டியின் போது, சான்றிதழைப் பெற்ற நிறுவனம் முதலீடு செய்யும் தொகைக்கு பாதுகாப்பு இல்லாமல் போக வாய்ப்புள்ளது. + +ஒரு நிறுவனம் தரத்தைக் கருத்தில் கொள்ளாமல் சான்றிதழைப் பெறுவதில் விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த நிறுவனத்தின் தரம் நிச்சயம் தோல்வியைச் சந்திக்கும். சான்றிதழ்கள் தரத்தினை மேம்படுத்துவதில் விருப்பம் தெரிவிப்பதைக் காட்டிலும், வாடிக்கையாளர்களுடன் ஒப்பந்தம் செய்வதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகின்றன. "நீங்கள் வெறும் சான்றிதழை வாங்கி அதைச் சுவரில் தொங்கவிட விரும்பினால் அது மிகவும் சுலபமானது, அதே சமயம் அதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் அலுவலக வேலைப்பாடுகளை மேற்கொள்ளும்போது அது உங்கள் வியாபாரத்திற்குப் போதுமான ஆதரவை அளிக்காது", என்று ஐஎஸ்ஓவின் ரோஜர் பாரஸ்ட் தெரிவித்தார். ஒரு தற்சார்பான ஆய்வாளரின் மூலம் சான்றிதழைப் பெறுவது என்பதும் பிரச்சினைக்குரிய விஷயமாகும், பேர்னெஸ் இன் கூற்றின்படி, "ஆலோசனை வழங்கும் சேவைகள் அதிகரித்ததற்கு இத்தகைய சான்றிதழ்கள் முக்கிய கருவியாகச் செயல்பட்டன என்பதாகும்." உண்மையில், சான்றிதழ் இல்லாமல் ஐஎஸ்ஓ 9001 ஐச் செயல்படுத்த முடியும் என ஐஎஸ்ஓ தெரிவிக்கிறது, இதன் மூலம் தரக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது எளிமையாக்கம் செய்யப்படுகிறது. + +சான்றிதழ் வழங்கும் பல அமைப்புகளுக்கு இடையேயான போட்டியே, நிறுவனங்களின் தர அமைப்புகளின் செயல்பாடுகளில் காணப்படும் சிறிய குறைகள் பெரிதாக கவனிக்கப்படாமல் விடுவதற்குக் காரணமாக அமைகிறது, என்று மற்றொரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது. + +தரச் சுற்றுக்கள் போன்ற நவீன மேலாண்மை உரையாடல்கள் மணி வளைவு வடிவத்தி���ான வாழ்க்கை சுழற்சியை பின்பற்ற முனைவது மேலாண்மை மங்கிப்போவதை குறிப்பிடுவதற்கு சாத்தியமானதாக இருக்கலாம் என்று ஆப்ரஹாம்சன் வாதிடுகிறார். + +ஐஓஸ்ஓ 9000 இன் பயன்பாட்டினை சிறப்பானதாக்குவதற்கு பேர்னஸ் தரும் சிறந்த ஆலோசனைகள்: + + + + + + + + + +கட்டடக்கலைப் பாணி + +கட்டிடக்கலைப் பாணி என்பது பெரும்பாலும், உருவம், கட்டிடப்பொருட்கள் என்பவை உட்பட, தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டிடங்களை அல்லது கட்டிடக்கலையை வகை பிரிக்கும் ஒரு முறை எனலாம். இவ்வாறு தோற்றம் சார்ந்த வகைபிரித்தல் முறை கட்டிடக்கலை முறையாக விளங்கிக் கொள்வதற்குரிய ஒரு முழுதளாவிய (holistic) முறையல்ல. இது பற்றிய ஆய்வுகள், கட்டிடக்கலை வரலாறு மற்றும் படிமலர்ச்சி போன்ற துறைகளோடு பெரிதும் ஒத்திருக்கின்றது. கட்டிடக்கலை வரலாற்றில் கோதிக் கட்டிடக்கலை பற்றி ஆய்வு செய்யும்போது, அக் கட்டிடக் கலைவடிவம் உருவாகக் காரணமான எல்லா விதமான சூழலும், பின்னணியும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. ஆனால் கட்டிடக்கலையை வகைப்படுத்தும் கட்டிடக்கலைப் பாணி பற்றிய ஆய்வுகள், அக்கட்டிடக்கலையின் சிறப்பு இயல்புகளையே முன்னிலைப் படுத்துகின்றன. இந்த அணுகுமுறை மூலமே "கோதிக் பாணி" போன்ற சொற் பயன்பாடுகள் உருவாகின்றன. கோதிக் கட்டிடக்கலை என்னும் சொற்றொடர் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் உருவான கட்டிடக்கலையைக் குறிக்கின்றது. ஆனால், கோதிக் பாணி எனும் சொல், குறிப்பிட்ட சிறப்பு இயல்புகளுடன் கூடிய, அதற்குரிய சூழல், காலம் எதனுடனும் தொடர்பற்ற கட்டிடங்களையும் குறிக்கக் கூடும். அதனால் கோதிக் பாணிக் கட்டிடம் ஒன்றை இன்றும் கட்டிக்கொள்ளமுடியும். + +கட்டிடக்கலை வரலாற்றிலே ஏராளமான கட்டிடக்கலைப் பாணிகள் உருவாகியுள்ளன. இவற்றுட் சில கீழே பட்டியலாகத் தரப்பட்டுள்ளன. + + + + +ரோமனெஸ்க் கட்டிடக்கலை + +ரோமனெஸ்க் கட்டிடக்கலை மத்தியகால ஐரோப்பாவில் கி.பி 11 ஆம், 12 ஆம் நூற்றாண்டுகளில் வளர்ந்திருந்த ஒர் கட்டிடக்கலையாகும். இக் கட்டிடக்கலை ரோமன் கட்டிடக்கலையின் பல சிறப்புக் கூறுகளைக் கொண்டிருந்த காரணத்தால் இதனை வகைப் படுத்துவதற்காக "ரோமனெஸ்க்" என்னும் பெய���ைப் பிற்கால ஆய்வாளர்கள் இதற்கு வழங்கினார்கள். + +வட்டவடிவ அல்லது சிறிதளவே கூரான கமான் வளைவுகள் (arches), உருளை வடிவக் கவிகூரைகள் (barrel vaults), சிலுவைவடிவத் தூண்களால் தாங்கப்பட்ட கவிகூரைகள், இடைவெட்டும் கவிகூரைகள் (groin vaults) போன்றவற்றின் பயன்பாடு ரோமனெஸ்க் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும். பாரிய வளைவான நுழைவாயில்களைக் கொண்ட கட்டிடங்கள் அக்காலத்தின் கட்டிடக்கலைப் புதுமைகளாக விளங்கின. ரோமர்காலத்துப் பாரிய கற்சிற்பங்களும் ரோமனெஸ்க் காலத்தில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தன. + +ரோமப்பேரரசு காலக் கட்டிடக்கலைக்குப் பின்னர் முழு ஐரோப்பாவையும் தழுவிய வகையில் வழங்கிவந்தது ரொமனெஸ்க் கட்டிடக்கலையே எனத் தெரிகின்றது. இக் கட்டிடக்கலைக்கான எடுத்துக்காட்டுகள் ஐரோப்பாக் கண்டத்தின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகின்றன. மத்தியகால மக்கள் அதிக அளவில் பயணங்களில் ஈடுபட்டிருந்ததே இதற்குக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. வணிகர்களும், பிரபுக்களும், போர்வீரர்களும், கலைஞர்களும், சாதாரண மக்களும் கூட வணிகம், போர், யாத்திரை போன்ற காரணங்களுக்காக ஐரோப்பாவையும், மத்தியதரைக் கடல் பிரதேசங்களியும் தாண்டிப் பிரயாணம் செய்தனர். இவறின்போது பல்வேறு பகுதிகளிலுமிருந்து கட்டிடங்கள் பற்றிய அறிவைத் தங்களுடன் கொண்டுவந்தனர். + + + + +பரோக் கட்டிடக்கலை + +பரோக் கட்டிடக்கலை, இத்தாலி நாட்டில் 17ஆம் நூற்றாண்டில் உருவாகியது. இது மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையிலிருந்து, ரோமானிய மனிதநேயக் கூறுகளை எடுத்து, அவற்றைப் புதிய பாணியில், பயன்படுத்தியது. இது சார்பற்ற மெய்மைக் கோட்பாட்டுவாதிகளினதும், அது சார்பான அரசினதும் வெற்றியை வெளிப்படுத்தும் விதத்தில், வெளிப்பட்டது எனலாம். நிறம், ஒளியும் நிழலும், சிற்பக்கலைக்குரிய பெறுமானம் மற்றும் செறிவு என்பன போன்ற விடயங்களில் எழுந்த புதிய அக்கறைகள் பரோக் கட்டிடக்கலையின் சிறப்பு இயல்புகளாக வெளிப்பட்டன. + +முன்னெப்பொழுதும் அறிந்திராத வகையில், வடிவமைப்பில் பிரம்மாண்டமான ஒருமைத்தன்மையை (unity) வெளிக்காட்டிய, மைக்கலாஞ்சலோவின் பிற்கால ரோமன் கட்டிடங்கள், குறிப்பாக சென். பீட்டர் பசிலிக்கா, பரோக் கட்டிடக்கலையின் முன்னோடிகளாகக் கொள்ளத்தக்கவை. அ��ரது மாணவரான ஜியாகோமோ டெல்லா போர்ட்டா (Giacomo della Porta) என்பவர் இதே பாணியைப் பின்பற்றி வந்தார். குறிப்பாக கேசு தேவாலய (Church of the Gesù) முகப்பு கவனிக்கத் தக்கது. இது, கார்லோ மதேமோ (Carlo Maderno) என்பவரால் வடிவமைக்கப்பட்ட ஆரம்பகால பரோக் தேவாலயமான சாந்தா சுசான்னாவின் முகப்புக்கு நேரடியான முன்னுதாரணமாகத் திகழ்ந்தது. 17 ஆம் நூற்றாண்டில் பரோக் பாணி ஐரோப்பாவிலும், லத்தீன் அமெரிக்காவிலும் பரவியது. + + + + + +ஜோர்ஜ் எல். ஹார்ட் + +ஜோர்ஜ் எல். ஹார்ட் கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் (பேர்க்லி) தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். பெர்க்லி பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறை ஆரம்பிக்கப்பட்டதற்கும் இவரே மூல காரணர் ஆவார். தமிழின் தொன்மையையும், பெருமையையும் உலகத்துக்கு உணர்த்தியவர்களில் இவர் முக்கியமானவர். இவருடைய கடும் முயற்சியினால் செப்டம்பர் 2004 இல் இருந்து தமிழ் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டது. பிறப்பால் இவர் ஓர் ஆங்கிலேயர் ஆவார். ஹார்ட் சமஸ்கிருதத்தில் முனைவர் பட்டத்தை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பெற்றுள்ளார். அத்துடன் விஸ்கொன்சின் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருத பேராசிரியராக பணியாற்றினார். இவருக்கு இலத்தீன், கிரேக்கம், ருஷ்யன், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம் போன்ற பல மொழிகளிலும் தேர்ச்சி உண்டு. + +ஹார்ட் பல பழந்தமிழ் நூல்களை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இவர் மொழிபெயர்த்த The Poems of The Tamil Anthologies (1979) எனும் நூல் The American Book Award க்கு பரிந்துரை செய்யப்பட்டது. The Four Hundred Songs of War and Wisdom (1999) எனும் புறநானூறு மொழிபெயர்ப்பு தென்னாசிய மையம் ஏ.கே.ராமானுஜன் பரிசைப் பெற்றது. கனேடிய இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழக தென்னாசிய மையமும் இணைந்து வழங்கும் இயல் விருதினை 2005 ஆம் ஆண்டிற்கு பெற்றுள்ளார். + + + + + + +சுற்றுச்சூழலியல் + +சூழலைப் பற்றியும், உயிரினங்களுக்கும் சூழலுக்கும் இருக்கும் தொடர்பைப் பற்றியும் அறிவியல் அணுகுமுறையில் ஆயும் இயல் சுற்றுச் சூழலியல் ஆகும். உயிருள்ளவற்றுக்கும் (குறிப்பாக மனிதன்), உயிரற்ற பூதவியல் கூறுகளுக்கும் இடையான தொடர்பாடலை விபரிக்கும் இயலாகவும் சூழலியலை கருதலாம். இவ்வியல் உயிரியல், வேதியியல், இயற்பியல், புவியியல், சமுதாயவியல், பொருளியல் ஆகிய மூல இயல்களை அறிவியல் ரீதியில் தொடர்புபடுத்தி அறியும் இயலாக கொள்லாம். + +சூழலில் ஒரு அங்கமான மனிதன் சூழலை எப்படி மாற்றியமைக்கின்றான் என்றும், மனித உடல் நலத்தை வாழ்வியலை மாறும் சூழல் எப்படி மாற்றியமைக்கின்றது என்பதும் சூழலியலின் பிரதான ஆய்வுக் கேள்விகளாக இருக்கின்றது. வள பயன்பாடு, சூழல் மாசடைதல், காலநிலை மாற்றங்கள், கழிவு பொருள் அகற்றல்/மீள் பயன்பாடு, தாங்குதிற வளர்ச்சி போன்ற துறைகளில் சுற்றுச் சூழலியலின் கவனம் இருக்கின்றது. + +"முதன்மைக் கட்டுரை: சுற்றுச்சூழல்" + + + + + + + + + +சிற்பநூல்கள் + +சிற்பநூல்கள் என்பன பண்டைய இந்தியாவின் கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பவை தொடர்பான நூல்கள் ஆகும். பல சிற்ப நூல்கள் இருந்ததற்கான சான்றுகள் இருந்தபோதிலும், இன்று முழுமையாகக் கிடைப்பவை சிலவே. இவற்றுள், மானசாரம், மயமதம், விஸ்வகர்மீயம் போன்றவை முக்கியமானவை. + +இந்தச் சிற்பநூல்களின் அடிப்படை இந்து வேதங்களில் அடங்கியிருப்பதாகச் சிலர் கூறுகின்றனர். நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வ வேதத்தின் ஒரு பகுதியாகக் கட்டிடக்கலை, சிற்பக்கலை என்பன கருதப்பட்டு, இவற்றை "ஸ்தபத்ய வேதம்" எனவும் குறிப்பிடுவர். எனினும் இதற்குச் சரியான சான்றுகள் கிடையா. அதர்வண வேதம், ஏனைய மூன்று வேதங்களுடன் ஒப்பிடுகையில் காலத்தால் பிந்தியது. ஆனாலும், அதர்வண வேதம் தொடர்பான நூல்கள் அனைத்துமே கி.மு நான்காம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவை என்று கருதப்படுகின்றது. இந்த நூல்கள் எதிலுமே கட்டிடக்கலை, சிற்பம் சம்பந்தமாகக் குறிப்பிடத்தக்க அளவில் தகவல்கள் இல்லை. முறையான சிற்பநூல்கள் அனைத்தும் கி.பி ஒன்பதாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவையே. இந்த இடைப்பட்ட பதினொரு நூற்றாண்டுகளிலாவது, அதர்வ வேதத்திலிருந்து மேற்படி கலைகளின் படிமுறை வளர்ச்சிக்குச் சான்றாகக் கருதக்கூடிய வேதம் சார்ந்த நூல்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. + + + + +தமிழக சட்டமன்றத் தொகுதிகள் + +தமிழ் நாட்டிலுள்ள சட்டமன்றத் தொகுதிகள் மொத்தம் 234. தொகுதி மறுசீரமைப்பிற்கு பிறகு, தற்போதைய தமிழக சட்டமன்றத் தொகுதிகள் மாவட்டவாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. + +இவற்றுள் 44 தொகுதிகள், பட்டியல் சாதியினர் வேட்பாளர்களாக போட்டியிட ஒதுக்கப்பட்டவையாகும். 2 தொகுதிகள் பட்டியல் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்டவையாகும். + + + + + + +வல்லவரையன் வந்தியத்தேவன் + +வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராஜராஜன் மற்றும் முதலாம் இராஜேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர். முதலாம் இராஜராஜனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். இவருக்கு குந்தவைதேவியைத் தவிர இந்தள தேவி மற்றும் மந்தர கௌரவனார் குந்தாதேவியார் என்னும் மேலும் இரண்டு மனைவிகள் இருந்தனர். + +மற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர். " + +வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள். + + + + + + +கல்கி (இதழ்) + +கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும். இது முதன் முதலில் எழுத்தாளர் கல்கி கி. கிருஷ்ணமூர்த்தியால் 1941 இல் ஆரம்பிக்கப்பட்டது. அவருக்குப் பின்னர் டி. சதாசிவம், கல்கியின் புதல்வர் கி. ராஜேந்திரன், புதல்வி சீதா ரவி ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தனர். தற்போது ஆசிரியராக இருப்பவர் கல்கியின் பேத்தி லஷ்மி நடராஜன் ஆவார். + + + + + +குந்தவை + +குந்தவை சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமைக்கையும், ஆதித்த கரிகாலனின் தங்கையும், சுந்தர சோழரின் மகளுமாவாள். சோழர்களின் மாதண்ட நாயக்கர்களுள் ஒருவரும் வாணர் குலத்து குறுநில மன்னனுமான வல்லவரையன் வந்தியத்தேவனை மணமுடித்தவள். இராஜராஜனின் ஆட்சிக் காலத்தில் மதிப்புடன் இருந்ததாகவும் பல தானங்கள் தருமங்கள் செய்திருக்கிறாள் என்றும் முதலாம் இராஜராஜனின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது. + +இராஜராஜனின் தந்தையின் பெயரால் அமைக்கப்பட்ட "சுந்தர சோழ விண்ணகர்" என்னும் விஷ்ணு கோயிலில் ஒரு மருத்துவமனை இருந்து வந்துள்ளது, அந்த மருத்துவமனைக்கு குந்தவை பிராட்டி பல தானங்கள் வழங்கியிருக்கிறார் என்று கல்வெட்டுக்கள் மூலம் அறியமுடிகிற���ு. இராஜராஜனின் 17-ம் ஆண்டில்(கி.பி. 1002ல்) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது என்றும் அதன்படி பிரமதேயங்களிலுள்ள நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல்லோரும் தங்களுடைய நிலங்களை விற்றுவிட வேண்டும் என்றும் இந்த கட்டளைக்கு நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போர் மட்டும் விதிவிலக்கென்று கொண்டுவரப்பட்டதாகவும் கல்வெட்டுகள் மூலம் தெரியவருகிறது. இப்படி இராஜகேசரி சதுர்வேதி மங்களத்தில் விற்கப்பட்ட நிலங்களை அரசனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி, அவ்வூர்க் கோயிலுக்குத் தானமாக அளித்தார் என்றும் தெரியவருகிறது. + +இப்பொழுது 'தாராசுரம்' என வழங்கும் இராஜராஜபுரத்தில் குந்தவை தேவி, பெருமாளுக்கு ஒரு கோயிலும், சிவனுக்கு ஒரு கோயிலும், ஜீனருக்கு ஒரு கோயிலுமாக மூன்று கோயில்களை ஓரிடத்திலேயே கட்டினாள். இம்மூன்று தேவாலங்களுக்கும் அவள் வழங்கிய கொடைகளை அங்கிருக்கும் ஒரு கல்வெட்டு கூறுகிறது. குந்தவை தேவி அளித்த நகைகளின் பட்டியல்களில் தங்கத்தால் ஆனதும், வைணவர்கள் நெற்றியும் இட்டுக் கொள்ளும் சின்னமாகிய 'நாமம்' என்னும் இறுதிச் சொல்லுடன் முடிவடையும் நகைகளின் பெயர்களும் உள்ளன. இப்படி பல தானங்களைக் கோயில்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் செய்யும் வலமிக்கவராக முதலாம் இராஜராஜன் மற்றும் இராஜேந்திரன் காலத்தில் குந்தவை தேவியார் இருந்திருக்கிறார். + +அதே போல் இராஜராஜன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயிலுக்கு குந்தவை தேவி, 10,000 கழஞ்சு எடையுள்ள தங்கத்தையும் 18,000 கழஞ்சு மதிப்புள்ள வெள்ளிப் பாத்திரங்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கிறார் என்று, பெரிய கோவில் சுவர்களும் தூண்களும் சொல்லுகின்றன. சமணர்களுக்கான ஒரு சமணர் கோயிலை திருச்சிராய்ப்பள்ளி மாவட்டம் திருமழபாடியில் கட்டிக் கொடுத்திருக்கிறார். + +கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்தில் ஆதித்த கரிகாலனின் தங்கையும் அருள் மொழி வர்மனின் தமக்கையுமான குந்தவை மிக முக்கியமான பாத்திரமாக இருக்கிறார். வரலாற்று நிகழ்வுகளை ஒட்டி எழுதப்பட்ட இந்தப் புதினத்தில் இவர் கதையின் நாயகனான வந்தியதேவனின் காதலியாக படிப்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்கிறார். + + + + + +வளைவு (கட்டிடக்கலை) + +கட்டிடக்கலையில் வளைவு என்பது வளைவான வடிவத்தில் உள்ள ஒரு அமைப்பு ஆகும். இது நுழைவழிகள், சாளரங்கள், சுவர்களில் அமையும் வேறு துவாரங்களுக்கு மேல் சுமத்தப்படக்கூடிய சுமைகளைத் தாங்குவதற்கான ஓர் அழகான அமைப்பு முறைமை ஆகும். + +கட்டிடக்கலை பயன்பாட்டில் உள்ள வளைவுகள் என்ற சொல், நிலவறைகள் அல்லது காப்பறைகளில் கட்டப்படும் கவிந்தகூரைகளுக்கு ஒத்ததாக கணிக்கப்படுகிறது. ஆனால் காப்பறைகளின் கவிந்தகூரை என்பது, ஒரு கூரையை உருவாக்கும் தொடர்ச்சியான வளைவுகளின் தொகுப்பு என்று வேறுபடுத்தப்படுகிறது. + +கி.மு. 2 ஆம் நூற்றாண்டில், மெசொப்பொத்தேமியாவின் (Mesopotamian) கட்டிட வேலைகளில் செங்கல் கட்டுமான வளைவுகள் தோன்றின. + +கட்டிடக்கலையில் பல்வேறு வகை வளைவுகளின் முறையான தொழில்நுட்ப கட்டமைப்பு பயன்பாடானது, பண்டைய ரோமானியர்கள் காலத்தில் தொடங்கியது, + +இந்த முறைமை புழக்கத்துக்கு வருவதற்கு முன்னர் இரண்டு தூண்களுக்கிடையில் அல்லது சுவரிலுள்ள துவாரங்களுக்கு மேல் சுமைகளைத் தாங்குவதற்காக உத்தரங்களைப் (beams) பயன்படுத்தினார்கள். பின்னர் குறிப்பிட்ட முறையில், அக்காலத்தில் உத்தரங்களுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருந்த மரம், கற்கள் முதலியவற்றைப் பயன்படுத்தி, உத்தரத்தைத் தாங்கும் இரண்டு தூண்கள் அல்லது வேறுவகையான தாங்கும் புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தைக் குறிப்பிட்ட அளவுக்குமேல் அதிகரிக்க முடியாதிருந்தது. இதற்குக் காரணம், இரண்டு தூண்களுக்கு இடையே பளுவைத் தாங்கப் பயன்படுத்தப்படும் உத்தரம், அதன் சொந்த நிறையினாலும், அதன்மீது சுமத்தப்படும் வேறு பல சுமைகளினாலும் கீழ்நோக்கி வளைய முற்படுகின்றது. இதனால் உத்தரத்தின் கீழ்ப்பகுதியில் வெடிப்புக்கள் உருவாகி அது உடைந்துவிடுகிறது. மேலும், தூண்களிடையேயான தூரத்தை அதிகரிக்கும்போது, தூரத்திற்கேற்றவாறும் அதன் மீது நிறுத்தப்படும் பொருள்களின் எடையைத் தாங்கக் கூடியவாறும் உறுதியான பருமனுள்ள உத்திரங்களை அமைப்பது அவசியமாகின்றது. இதற்குரிய பெரிய அளவிலான மரம், கல் முதலியனவும் கிடைத்தற்கு அரியதாகிவிடுகின்றன. இத்தகைய குறைபாடுகளே வளைவு அமைப்புமுறை விரிவாக்கம் அடைவதற்கு காரணமாகக் கருதப்படுகிறன. +வளைவுகளின் கட்டுமானத்தில் அளவில் சிறிய செங்கற்கள், அல்லது வேறுவகைக் கற்களே பயன்படுத்தப்���டுகின்றன. அத்துடன் இதன் வளைந்த வடிவம் காரணமாக அதை உருவாக்கிய கற்கள் ஒன்றுடன் ஒன்று அழுத்திக்கொண்டு இருப்பதால் அதில் வெடிப்பு உண்டாகாது. மேற்குறிப்பிட்ட கட்டிடப்பொருட்கள் அதிக அழுத்தத்தைத் தாங்கக் கூடியவையாக இருந்ததால் வளைவுக் கட்டுமான முறைமை ஒரு சிறந்த கட்டுமான முறையாகக் கருதப்பட்டது. + +வளைவுகளைக் கட்டும் முறைபற்றி பண்டைக்கால பபிலோனியர், எகிப்தியர், அசிரியர் போன்றோர் அறிந்திருந்தார்கள். எனினும் அவர்கள் இந்த நுட்பத்தை நிலத்தடி வடிகால்கள் போன்ற முக்கியமில்லாத கட்டுமானங்களிலேயே பயன்படுத்தினர். இந்த முறைமையைச் செம்மைப்படுத்தி சிறப்புக்குரிய கட்டிடக்கலைக் கூறாக்கிய பெருமை உரோமரையே சாரும். இவர்களுக்குப் பின்னர் வளைவுகளின் வடிவங்களில் பல்வேறு வகைகள் உருவாக்கப்பட்டன. + +வளைவுகள் பல வடிவங்களைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை அனைத்தும் அவற்றின் வடிவத்தை அடிப்படையாகக் கொண்டு மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன அவை: +கட்டிடங்களில், கவிமைமாடங்களையும், வில் வளைவுகளையும், வடிவமைக்கவும், உருவாக்கவும் வளைவுகள் கட்டமைப்பு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. + +சுழற்சி வடிவில் உள்ள வளைவுகள் வட்ட வடிவமான வளைவுகள் என்றும் குறிப்பிடப்படுகின்ன்றன. இவை பண்டைய கட்டிடவியலார் வடிவமைத்த, கனரக கட்டுமான வேலைக்கு சாட்சியாக அமைந்துள்ளன. + +பண்டைய ரோமானிய கட்டிடவியலார் அடுக்கு மாடிக் கட்டிடங்களைச் சார்ந்திருக்கும் பெரிய, திறந்த பகுதிகளைக் கடந்து வட்ட வடிவிலான வளைவுகள் அமைப்பதை பெரிதும் விரும்பினர். பல வட்டமான வளைவுகள், தொடக்கம் முதல்-இறுதிவரை வரிசையாக, ஒரே மட்டத்தில் உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் விதத்தில் அமைக்கப்பட்டன. மேலும், ரோமானிய நீர்க்குழாய்கள் போன்ற சாலகம் எனப்படும் பல மேல்வளைவுத் தொகுதிகள் உருவாக்கப்பட்டன. + +கூரான பற்கள் போன்ற கூம்புமுடி வளைவுகள் பெரும்பாலும் கோதிக் (Gothic)-பாணி கட்டிடக்கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டன. + +ஒரு வட்ட வடிவமான வளைவுக்குப் பதிலாக ஒரு கூர்மையான வளைவைப் பயன்படுத்துவதன் மூலம், வளைவுச் செயல்பாட்டு அழுத்தம் கட்டிடத்தின் அடித்தளத்தில் குறைவான உந்துதல் விசையைக் கொடுக்கிறது. எனவே கட்டிடத்திற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை. இந்த கண்டுபிடிப்பு க���திக் கட்டிடக்கலைக்கு மிகக் குறைந்த அடித்தளமும், குறுகிய நெருக்கமான இடைவெளி திறப்புகளும் அமைக்க வழி வகுத்தது. + +மாறுபட்ட வளைவுகளின் வரைபட வடிவமைப்புகளில் சில கீழே காட்டப்பட்டுள்ளன. + +கச்சோர் மற்றும் தண்டய வளைவுகள், கயிறு வளைவுகளுக்கு எதிரிடையான உண்மையான வளைவுகள் ஆகும். இவை பண்டைய கிழக்கிந்திய மற்றும் லெவந்திய (Levant) நாகரீகங்களால் நன்கு அறியப்பட்டிருந்தன. ஆனால் அவற்றின் பயன்பாடு அடிக்கடி நிகழாததாக இருந்தது. + + + + +நீராவிப் பொறி + +நீராவிப் பொறியானது நீராவியில் உள்ள வெப்ப ஆற்றலைப் பயன்படுத்தி எந்திர ஆற்றலாக மாற்றும் கருவியாகும். நீராவி கப்பல், புகை வண்டி போன்றவற்றில் இவை பயன்படுத்தப்படுகின்றன. தொழிற்புரட்சி ஏற்பட இப்பொறியே காரணமாய் இருந்தது. மின்னாற்றல் உற்பத்தி செய்ய நீராவிச்சுழலிகளிலும் இவை பயன்படுகின்றன. + +கொதிக்கும் நீரைப் பயன்படுத்தி இயக்க ஆற்றலை உருவாக்கும் முறை 2000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டதாகும். ஆனால், அக்காலத்து உபகரணங்கள் நடைமுறைக்கு ஒத்துவராதவையாகும். 18 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், இயந்திர ஆற்றலை உருவாக்க நீராவிப் பொறிகள் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன. 1781 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் வாட் காப்புரிமை செய்த நீராவிப் பொறியானது, 'தொடர்ச்சியான சுழற்சி இயக்கத்தை' தரும்வகையில் அமைந்திருந்தது. 10 குதிரைத் திறன் (Horse Power) வாய்ந்த இந்த நீராவிப் பொறிகளைக் கொண்டு 'தயாரிப்பு இயந்திரங்கள்' இயக்கப்பட்டன. நீர், நிலக்கரி அல்லது மர எரிபொருள் கிடைக்கக்கூடிய எந்த இடத்திலும் இப்பொறிகளை நிறுவ இயலும் என்பது தனிச் சிறப்பாக இருந்தது. 10,000 ஹெட்ச்.பி திறன் வாய்ந்த நீராவிப் பொறிகளை அமைப்பது 1883 ஆம் ஆண்டில் சாத்தியமானது. +டிராக்சன் என்றழைக்கப்பட்ட இழு-இயந்திரங்களிலும், இருப்புப்பாதை வண்டிகளின் இழு-இயந்திரங்களிலும் நீராவிப் பொறிகள் பயன்படுத்தப்பட்டன. நிலையான நீராவிப் பொறிகள், தொழிற்புரட்சியில் தலையாய பங்கு வகித்தன; நீராற்றல் கிடைக்காத பகுதிகளில் தொழிற்சாலைகளை அமைத்திட இவ்வகையான நீராவிப் பொறிகள் பெரிதும் உதவின. + +18 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து பல்வேறு வகையான பயன்பாட்டிற்கு நீராவியாற்றல் உபயோகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் முன்பின் அசைவு நீர் ஏற்றிகளிலும் பின்னர் 1780இலிருந்து சுழல் இயல்புடைய பொறிகளிலும் பயன்படுத்தப்பட்டது. இதனால் நூற்பாலைகள் மற்றும் மின்விசைத்தறிகள் இயங்கின. 19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கடல்வழி மற்றும் தரைவழிப் போக்குவரத்தில் நீராவியால் ஆற்றல்பெற்ற வண்டிகள் இயக்கப்பட்டன. + +தொழிற்புரட்சி ஏற்பட மிகவும் பக்கபலமாக நீராவிப் பொறி இருந்ததாகக் கருதப்படுகிறது. நூற்பாலைகள், சுரங்கங்கள் மற்றும் நீரிறைக்கும் நிலையங்களில் நீராவிப் பொறிகள் இயங்கின; இருப்புப்பாதை வண்டிகள், கப்பல்கள் மற்றும் சாலை வாகனங்களில் பயன்படுத்தப்பட்டன. விவசாயத் துறையில் நீராவிப் பொறியின் பயன்பாட்டால், விவசாயத்திற்குகந்த நிலப் பகுதிகளின் பரப்பு அதிகரித்தன. + +காலப்போக்கில் நகர்வுப் பயன்பாட்டிற்கு உள் எரி பொறிகளும், மின் இயக்கிகளும் நீராவிப் பொறியின் இடத்தை எடுத்துக் கொண்டன. நீராவி விசைச்சுழலி நிலையங்களைக் கொண்டே பெருமளவு மின்னாற்றல் இன்றைய நாட்களில் உற்பத்தியாகிறது. எனவே உலகத் தொழிற்துறை இன்றைக்கும் நீராவி ஆற்றலைப் பெருமளவு சார்ந்துள்ளது. + +தண்ணீரை கொதிக்க வைத்து நீராவியை தொடர்ந்து வழங்குவதற்கு தேவையான வெப்பம் பல்வேறு மூலங்களில் இருந்து பெறப்படுகிறது.பொதுவாக ஒரு மூடிய இடத்தில் பல்வேறு மூலங்களில் இருந்து பெறப்பட்ட தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எரித்து பெறப்பட்டது.சில நேரங்களில் வெப்ப மூலமாக ஒரு அணு உலை அல்லது புவிவெப்ப ஆற்றல் உள்ளது. +குளிர்விக்கும் அமைப்பு மூலம் சுற்றுப்புற சூழலுக்கு நீராவி வெளியிடப்பட வேண்டும். இயந்திர சக்தியை பெரிதும் அதிகரிக்க நீராவி வெளியிடப்பட்ட வேண்டும் எனவே நீராவி புகைபோக்கி மூலம் வெளியிடப்படுகிறது. +ரேங்கின் சுழற்சி மற்றும் நடைமுறையில் உள்ள நீராவி என்ஜினின் மேல் நீராவியை மறுசுழற்சி செய்ய ஒரு தண்ணீர் செலுத்தும் குழாய் உள்ளது.பொதுப் பயன்பாடு மற்றும் தொழில்துறை கொதிகலன்களில் பொதுவாக பல கட்ட மையவிலக்கு செலுத்து குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த அழுத்த கொதிகலனில் தண்ணீர் வழங்கும் மற்றொரு வழிமுறையாக ஒரு நீராவி ஜெட்உட்செலுத்தி உள்ளது. செலுத்திகள் 1850-ல் பிரபலமானது ஆனால் இது பரவலாக நீராவி வண்டிகள் போன்ற பயன்பாடுகளை தவிர வேறு எதற்க்கும் பயன்படுத்தப்படவில்லை. +பா��ுகாப்பு காரணங்களுக்காக, கிட்டத்தட்ட அனைத்து நீராவி இயந்திரங்களும் அழுத்தத்தை மற்றும் நீர் மட்டத்தை கண்காணிக்க ஒரு பார்வை கண்ணாடி போன்ற கொதிகலன் கண்காணிக்க வழிமுறைகளைப் பெற்றிருக்கும். +மனித குறுக்கீடு இல்லாமல் இயந்திரத்தின் வேகத்தை கட்டுப்படுத்தும் ஒரு கவர்னர் பல இயந்திரங்களில் பொருத்தப்படுகின்றன. + +எளிய பொறி என்பது ஒரேயொரு இயங்கு உருளையை கொண்ட பொறிகள் அகும். +கலவை இயந்திரங்களில் கொதிகலன் வரும் உயர் அழுத்த நீராவி ஒரு உயர்அழுத்த(HP) சிலிண்டர்க்குள் விரிவடைகிறது அதன்பின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அடுத்தடுத்த குறைந்தஅழுத்த சிலிண்டர்களுக்குள் நுழைகிறது. நீராவி முழு விரிவாக்கம் இப்போது பல சிலிண்டர்கள் முழுவதும் ஏற்படும் குறைந்த விரிவாக்கம் மூலம் குறைந்த வெப்பயிழப்பு ஏற்படுகிறது. +இரண்டு இயங்கு உருளைகள் அமைக்கப்பட்டுள்ள முரையில் அவை 3 வகைப்படும்,அவை + +நீராவிப் பொறிகளில் கொதிகலன்களும் பிற உறுப்புகளும் அமைந்துள்ளன. இவை அனைதுமே அழுத்தக் கலன்களாகும். இவற்றில் பேரளவு பொதிவு ஆற்றல் உள்ளது. கொதிகல வெடிப்புகளில் நீராவி வெளியேறுகிறது. இந்நீராவி வெளியேற்றம் பல உயிர்களைக் கொல்லும் வாய்ப்பு உள்ளது. பல நாடுகளில் பல்வேறு செந்தரங்கள் நிலவினாலும், கருக்கன சட்டநடைமுறைகளும் ஓர்வு, பயிற்சிமுறைகளும் செய்தல், இயக்கல் சார்ந்த அக்கறையும் காப்புறுதிக்கான சான்றளிப்பும் மிகவும் கட்டயமானதாகும். + +பிழைத்தல் முறைமைகளில் பின்வருவன அடங்கும்: + +நீராவிப் பொறியின் கொதிகலனில் நீராவி அழுத்தம் உயராமல் காக்க இருவகை தனித்த இயங்கமைவுகள் உள்ளன; ஒன்றைப் பயனாளர் மாற்றலாம். இரண்டாவது பழுதுக் காப்புள்ள பாதுகாப்புக் கவாடங்கள் ஆகும். இவை கொதிகலத்தின் மேலுள்ல நெம்பை உயழுத்த்த்தின்போது திறந்து நீராவியை காப்பாக வெளியேற்றி அழுத்தம் கூடாமல் கவனித்துக் கொள்ளும். நெம்பின் ஒருமுனையில் விற்சுருள் அல்லது சமனெடை அமைந்து நீராவி அழுத்தத்துக்கு எதிராகக் கட்டுபடுத்தும். பழைய கவாடங்கள் ஓட்டுநரால் இயக்கப்பட்டன. இந்நடைமுறை பல ஏதங்களை விளைவித்ததோடு ஆற்றலையும் தேவையில்லாமல் வீணாக்கின. அன்மைக்கால மாற்றக்கூடிய விற்சுருள் அமைந்த கவாடங்கள் இயக்குவோர் தொடாதபடி பூட்டப்பட்டுள்ளன. இது கணிசமான காப்புடையதாக உள்ளது. + +கொதிகல அடுப்பு முகட்டின்உச்சியில் உருகத்தகும் முளைத்தலைப்பு முனைகள் அமைந்திருக்கும். இவை கொதிகல நீர்மட்டம் குறைந்து அடுப்பின் முகட்டு வெப்பநிலை உயரும்போது தலைப்புமுனைகள் உருகி நீராவியை வெளியேற்றும். இது ஒட்டுநருக்கும் எச்சரிக்கையூட்டும். அப்போது அவர்கள் தீயை கட்டுபடுத்தலாம். இந்த நீராவி தப்பிப்பு தீயை மட்டுபடுத்துவதில் விளைவேதும் தருவதில்லை. முளைகள் மிகவும் சிறியவை. எனவே நீராவி வெளியேற்றமும் நீராவி அழுத்தத்தைக் கணிசமாகக் குறைக்காது.அவை பெரிதாக அமைந்தால் அதனால் பொறி இயக்குவோருக்குத் தீங்கு விளைவிக்கும். + +இரேங்கைன் சுழற்சி நீராவிப் பொறியின் வெப்ப இயங்கியல் நிகழ்வின் அடிப்படையும் உயிர்நாடியும் ஆகும். இது உறுப்புகளின் ஏற்பாட்டைக் குறிக்கிறது. இது நீரின் நிலைமாற்றத்தைப் (கொதிநீர் நீராவியைத் தர, வெளியேற்ற நீராவியின் செறிவு நீரைத் தருகிறது.) பயன்படுத்தி நடைமுறை வெப்ப /ஆற்றல் மாற்ற முறையை உருவாக்குகிறது. இதில் மூடிய ஆற்ரல் கண்ணிக்கு வெளியில் இருந்து வேப்பம் தரப்படுகிறது. இதில் ஒருபகுதி ஆற்ரல் வேலையாக மாறுகிறது. வீணாகும் எஞ்சிய பகுதி ஆற்றல் செறிகலனில் இருந்து வெளியேற்றப்படுகிறது. அனைத்து நீராவி ஆற்றல் ஆக்கப் பயன்பாடுகளிலும் இரேங்கைன் சுழற்சி தான் பயன்படுகிறது. உலகில் உள்ள ஆற்றல் பயன்பாட்டில் 1990 களில், இரேங்கைன் சுழற்சிவழியாக 90% ஆற்றல் அனைது மின் நிலையங்களிலும் பெறப்படுகிறது. இவற்றில் அனைத்து சூரிய வெப்ப மின்சாரமும் உயிரிப்பொருண்மை ஆற்றலும் நிலக்கரி அனல்மின் நிலையங்களும் அணுக்கரு மின் நிலையங்களும் அடங்கும். இச்சுழற்சி சுகாட்டிய பலதுறை அறிஞராகிய வில்லியம் ஜான் மக்குவோர்ன் இரேங்கைனால் கண்டுபிடிக்கப்பட்டது. + +பொறிதரும் எந்திர வேலையை பொறிக்குத் தரும் வெப்ப ஆற்றலால் வகுத்து நீராவிப் பொறியின் திறமையைப் பெறலாம். + + + + + + +தமிழ் மரபு அறக்கட்டளை + +தமிழ் மரபு அறக்கட்டளை அல்லது "தமிழ் முதுசொம் அறக்கட்டளை" என்பது உலகு தழுவிய ஒரு இயக்கமாகும். பல்லாயிரமாண்டு தொன்மையுள்ள தமிழ் மரபுச் செல்வம் தமிழ் மொழியாகவும், அதன் இலக்கியமாகவும், அதன் கலைகளாகவும் பல்வேறு வடிவங்களில் பரிணமித்துள்ளது. இவை தமிழ் கூறும் நல்ல���கங்களான தமிழ் நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் சமீபத்தில் தமிழர் இடப்பெயர்வு கண்ட ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கண்டங்களில் காணக் கிடைக்கின்றன. ஓலைசுவடிகளில் பதிவுற்ற இலக்கியமும் மற்ற பிற கலை வளங்களும், நாட்டிய கர்நாடக இசை வடிவங்களும் காலத்தால் அழிவுற்ற நிலையில் காக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளன. + +இத்தகைய தமிழ் மரபுச் சின்னங்கள் காலத்தை வென்று நிற்கக்கூடிய ஒரு வாய்ப்பைச் சமீபத்திய கணினி சார்ந்த தொழில்நுட்பத் திறன் அளித்துள்ளது. ஒலி, ஒளி மற்றும் வரி வடிவங்களை இலக்கப்பதிவாக்கி வைய விரிவு வலை மற்றும் மின்காந்த இலத்திரன் வடிவாக நிரந்தரப் படுத்த முடியும். தமிழ் மரபு அறக்கட்டளை தமிழ் மரபை இலத்திரன் வடிவில் நிரந்தரப்படுத்த ஏற்பட்டிருக்கும் அகில உலக இயக்கமாகும்." + +இவ்வமைப்பானது தலபுராணம் என்னும் திட்டத்தையும் முன்னெடுத்து இலகுவாக தலங்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் 2007 தைப்பொங்கல் அன்று வெளியிடப்பட்டது. + + + + + + +இ-உதவி + +தமிழில் கணினியில் அல்லது இணையத்தில் வாசிக்க, எழுத, மின்னஞ்சல் அனுப்ப, வலைத்தளங்கள் அமைக்க, மற்றும் அடிப்படை உதவிகளை நேரடியாக, தொலைபேசி மூலம், அல்லது மின் அஞ்சல் மூலம் வழங்கவென உருவாக்கப்பட்ட யாகூ இணைய குழு இ-உதவி ஆகும். தமிழ் கணிமை புதுப் பயனர்களுக்கு வழிகாட்டுவதுடன், தமிழ் கணிமை தொடர்பான பல தகவல்களை ஒருங்கே குவிவிப்பதும், பகிர்வதும் இக்குழுவின் நோக்கமாக அமைகின்றது. + + + + + +கணிமை எண்முறைகள் + +கணிதத்தில் பல வித எண்முறைகள் உண்டு. தசம எண்முறையே பொதுவான பயன்பாட்டில் இருக்கும் எண்முறை. கணினியில் கணித்தலுக்கு ஈரியல் அல்லது இருமை எண் முறையே அடிப்படையாக அமைகின்றது. இவை தவிர பிற பல எண் முறைகளும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் கணிமைக்கு உபயோகமாக அமைகின்றது, இவற்றை கணிமை எண்முறைகள் எனலாம். + + + + +ஆனி உத்தரம் + +ஆனி உத்தரம் நடராஜரின் அபிஷேக நாள் ஆகும். ஆனி மாதத்தின் உத்தர நட்சத்திரத்தில் வரும் இத்தினத்தில் உதயத்தில் நடராஜ தரிசனம் செய்யப்பட வேண்டும். + + + + +திருச���சிற்றம்பலம் + +தேவாரம் ஓதுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டுத் தொடங்குவது மரபு. காரணம் இந்த சிதம்பர புண்ணிஸ்தலம் தான் சைவத் திருமுறைகளைப் பாதுகாத்து உபசரித்து வந்துள்ளது. இது இசை உலகிற்கே பிறப்பிடம். அதனால் தான் திருமுறை ஓதுபவர்கள் ஆரம்பத்திலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் என்று சொல்வார்கள். + + + + +நாடு + +அரசியல்சார் புவியியல் மற்றும் சர்வதேச அரசியல் தொடர்பில் நாடு என்பது ஒரு புவியியற் பிரதேசமாகும். சாதாரண வழக்கில் "நாடு" என்ற சொல், "தேசம்" (பண்பாடு சார்ந்த ஒன்று) மற்றும் "அரசு" (அரசியல் சார்ந்த ஒன்று) என்னும் இரண்டு கருத்துருக்களையும் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. + + + + + + +மச்ச அவதாரம் + +மச்ச அவதாரம் என்பது வைணவ சமயக் கடவுள் விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் முதல் அவதாரம் ஆகும். மச்சம் அல்லது மத்ஸ்யம் என்பது சமசுகிருத மொழியில் மீன் எனப் பொருள் தரும். இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் மேற்பாகம் தேவருபமாகவும் கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது. + +பெரும் பிரளயத்தின் போது விஷ்ணு மீன் அவதாரம் எடுத்து, வைவஸ்தமனுவின் குடும்பத்தினரையும், சப்தரிஷிகளையும் காத்து, மீண்டும் பூவுலகில் அனைத்து உயிரினங்களையும் செழிக்க வைத்தார்.  + + + + + +கூர்ம அவதாரம் + +கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின்படி விஷ்ணு எடுத்த இரண்டாவது அவதாரம் ஆகும். இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார். இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்). + +
அசுரரும் தேவரும் மேரு மலையை மத்தாக வைத்துக் வாசுகி பாம்பை கயிறாகக் கொண்டு திருபாற்கடலைக் கடைகையில் விஷ்ணு ஆமை உரு எடுத்து மேரு மலைக்கு பிடிமானமாக இருந்தார். + + + +
+ +வராக அவதாரம் + +வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் பன்றி (வராகம்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியனின் தம்பியான் இரண்யாட்சன் என்ற அசுரனுடன் வராக அவதாரத்தில் விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம். + +சடபாதபிராமணம், தைத்தர்ய ஆரண்யகம் மற்றும் இராமாயணம் போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றி கூறப்பட்டுள்ளது. + +வராகப் படிமம் என்பதை ஆதிவராகம், யக்ஞவராகம், பிரளய வராகம் என்று மூன்றாக பிரித்துள்ளனர். இந்த பிரிவு அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது. + +ஏரான் எனும் இடத்தில் குப்தர்கள் காலத்து வராகப் படிமம் உள்ளது. இதுவே தற்போது இருக்கும் படிமங்களுல் தொன்மையானது. மாமல்லபுரத்தில் ஆதிவராக வடிவம் குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருப்பது கிபி 7 மற்றும் கிபி8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம். + +காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருப்பரங்குன்றம் ஆகியவற்றில் குடவரையாக உள்ளது. இவை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும். + + + + + +மாறி + +மாறி (Variable) கணித்தலின்போது மாறக்கூடிய ஒரு "பெறுமானத்தைப்" பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு குறியீடாகும். அடிப்படை இயற்கணிதத்தில் மாறி ஒரு ஆங்கில எழுத்தால் குறிக்கப்படும். மாறி, தெரியாத ஒரு பெறுமானத்தை குறிக்கவும் பயன்படுகின்றது. கணிதச் சமன்பாடுகளில் x என்ற மாறி பொதுவாக நேரிடையாக வரையறை செய்யப்படாத ஒரு பெறுமானத்தை குறிக்கும். மாறி நிலையானது அல்ல. மாறம்தன்மை கொண்டது. எடுத்துக்காட்டாக ஒருவரது வயதைக் காட்டலாம்; இந்த ஆண்டு 22 எனில், அடுத்த ஆண்டு 23. இங்கு வயது என்பது மாறி. 22, 23 என்பது அதன் மதிப்பு. + +மாறிகளைக் கொண்டு இயற்கணிதக் கணக்கீடுகள் எளிதாகச் செய்யப்படுகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, இருபடிச் சமன்பாட்டைத் தீர்க்கப் பயன்படுத்தப்படும் இருபடி வாய்பாட்டினைக் கூறலாம். இருபடிச் சமன்பாட்டின் உறுப்புகளின் கெழுக்களை அவ்வாய்பாட்டில் பிரதியிட்டு எளிதாக அச்சமன்பாட்டின் தீர்வுகளைக் காணமுடிகிறது. + +"மாறி" என்ற கருத்து நுண்கணிதத்திலும் அடிப்படையான ஒன்றாக உள்ளது. குறிப்பாக ஒரு சார்பு , , என இருவிதமான மாறிகளைக் கொண்டது; இதில் ஆனது சார்பின் மதிப்பையும், ஆனது சார்பின்மாறி அல்லது தருமதிப்பையும் குறிக்கின்றன சார்பின்மாறியின் மதிப்பு மாறமாற அச்சார்புமதிப்பும் அதற்கேற்றவாறு மாறுவதால் இவற்றை "மாறி" எனக் குறிப்பது பொருந்துகிறது. + +இதேபோல உயர்கணிதத்திலும் மாறி என்பது ஒரு கணிதப் பொருளைக் குறிக்கிறது. அப்பொருள் எண், திசையன் அணி, சார்பு போன்றவையாக இருக்கலாம். இங்கு மாறி என்றால் மாறும்தன்மை உடையது என்ற கருத்து பொருந்தாது. + +மாறிகளில் சார் மாறி, சாரா மாறி என இருவகையுண்டு: +y என்ற மாறி, சூரிய வெப்பப் பெறுமானத்தைக் குறித்து நின்றால், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் வெப்பப் பெறுமானம் மாறும் பொழுது, அதற்கேற்ப yயின் பெறுமானமும் மாறும். இங்கே y என்ற மாறி வெப்பப் பெறுமானத்தை அல்லது மதிப்பீட்டைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. மாறும் நேரத்தை x என்ற இன்னுமொரு மாறி கொண்டு குறிக்கலாம். + +x அல்லது நேரம் இயல்பாக மாறுகின்றது. அது எந்த ஒரு காரணிகளிலும் தங்கி அல்லது சார்ந்து இருக்கவில்லை. இத்தகைய மாறியை சாரா மாறி என்பர். ஆனால், y அல்லது சூரிய வெப்பம் நேரத்தைச் சார்ந்து இருக்கின்றது. சாதாரண ஒரு நாளில் அதிகாலையில் இள வெப்பமாகவும், நடு பகலில் உச்ச வெப்பமாகவும், மாலை வேளையில் வெப்ப நிலை தணிந்தும் இருக்கும். ஆகையால், பொதுவாக வெப்பம் நேரத்தைச் சார்ந்து மாறுகின்றது எனலாம். ஆகையால் yயை சார் மாறி என்பர். மாறிகள் மேற்கூறியவாறு சாரா மாறி என்றும், சார் மாறி என்றும் இரு வகைப்படும். +symbol + +மாறி என்பதன் ஆங்கில இணைச் சொல் "Variable" என்பதன் வேர்ச்சொல், இலத்தீன் மொழிச் சொல்லான "variābilis" ஆகும். இதன் முதற்பகுதி ""vari(us)""' என்பதன் பொருள் "various" (வெவ்வேறு); பிற்பகுதி ""-ābilis""' என்பதன் பொருள் "-able" (கூடிய) அதாவது, "மாறக்கூடியது" ஆகும். + +ஒரே கணித வாய்பாட்டில் பல மாறிகள் காணப்படலாம். அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையானவையாக இருக்கலாம். + +எடுத்துக்காட்டு: + +சார்புகளில் மாறி என்பது சார்பின்மாறியைக் குறிக்கிறது. " என்பது " என்ற சார்பின் மாறியாகும்; அல்லது " என்பது " என்ற மாறியிலமைந்த சார்பாகும். + +மாறிகளின் வேறுபெயர்கள்: + +நுண்கணிதம், இயற்பியல் மற்றும் பிற அறியவியல் துறைகளில் ஒரு மாறியின் () மதிப்புகள் மற்றொரு மாறியின் மதிப்புகளைப் பொறுத்தமைவதைக் காணலாம். கணிதத்தில் ஒரு சார்பின் மதிப்பு ஆனது அச்சார்பின்மாறியான இன் மதிப்புகளைப் பொறுத்தது. இன் மதிப்புகளைச் சார்ந்து இன் மதிப்புகள் அமைவதால் என்பது சாரா மறி; ஆனது சார் மாறி. சாரா மாறியை , சார்மாறியானது என்ற குறியீடுகளில் குறிப்பதே வழமையாகவுள்ளது. ஒரு வாய்பாட்டில் ஒரு அல்லது பல மாறிகளின் உள்ளுறைச் ச��ர்பாக அமையும் மாறியானது, "சார் மாறி" ஆகும். வேறொரு மாறியின் மதிப்புகளைச் சார்ந்திருக்காத மாறி "சாரா மாறி" ஆகும். + +சார் மற்றும் சாரா மாறி என்னும் பண்பு அந்தந்த இடத்தைப் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, என்ற குறியீட்டில் "x", "y", "z" ஆகிய மூன்றுமே சாரா மாறிகளாக இருக்கலாம். மேலும் இக்குறியீடு "x", "y", "z" என்ற மூன்று மாறிகளில் அமைந்த சார்பைக் குறிக்கும். மாறாக, , இரண்டும் ஐப் பொறுத்தமைவதாய் இருந்தால் மேலுள்ள குறியீடு என்ற ஒரெயொரு சாராமாறியில் அமைந்தது ஆகும். + + +இதில் "x" என்பது சார்பின்மாறியைக் குறிக்கும் மாறியாகும். இது எந்தவொரு மெய்யெண்ணாகவும் இருக்கலாம். + + +இந்த முற்றொருமையில் "i" என்பது கூட்டுகையின்மாறி. இம்மாறியானது 1, 2, ..., "n" என்ற முழு எண்களை மதிப்புகளாகக் கொண்டுள்ளது. இம்முற்றொருமையில் "n" என்பது ஒரு அளவுரு (parameter) ஆகும் (மேலுள்ள வாய்பாட்டுக்குள் "n" மாறாது). + +இருபடிக்கோவையின் பொதுவடிவம்: + + + + +நரசிம்மர் + +நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும். இதில் இவர் சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நர-சிம்ம அவதாரம் எடுத்தார். நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும் நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது. வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர். தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார். + +தன் பரமபக்தனான பிரகலாதனைக் காத்து இரணியன் என்ற கொடிய அரக்கனை வதம்செய்ய எடுத்த அவதாரமே நரசிம்மம் என்பது தொன்ம நம்பிக்கை (ஐதிகம்). + +பல புராண நூல்களில் நரசிம்ம அவதாரத்தைப் பற்றிய குறிப்புகள் (மையக்கருத்து 17 விதங்களில்) காணப்படுகின்றன. சில நூல்களில் மோலோட்டமாகவும் சிலவற்றில் ஆழமாகவும் விவரங்கள் தரப்பட்டுள்ளன. நரசிம்மரைப் பற்றிய குறிப்புகள் காணப்படும் நூல்கள்: + +மகாபாரதத்திலும் (3.272.56-60) நரசிம்மரைப் பற்றிய சிறிய குறிப்பு காணப்படுகிறது. + + +சத்யுகத்தில் காசியப முனிவருக்கும் தித்திக்கும் இரணியர்கள் என அழைக்கப்படும் இரணியகசிபு மற்றும் இரணியாக்சன் இரு அசுர சகோதரர்களும் பிறந்தனர். கூடலுக்கு ஆகாத அந்தி நேரத்தில் கூடியதால் அவர்களுக்கு அசுரர்கள் பிறந்து விட்டதாகக் கூறப்படுகிறது. + +வராக அவதாரத்தில் விஷ்ணுவால் இரணியா���்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள பிரம்மாவை நோக்கித் தவமிருந்தான். பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய சக்தி வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய் காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான். பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை. + +பிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், தாயின் கர்ப்பத்தில் இருந்த குழந்தை பிரகலாதனுக்கு அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார். + +பிரகலாதன் பிறந்து அவன் கல்வி பயிலும் காலம் வந்ததும் அவனுக்கு அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதிக்க, பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று சாதித்தான். இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்றச் சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களிலும் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் ��ாப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்று செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. + +பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான். + +இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார். + +இரணியனைக் கொன்ற பின்பும் நரசிம்மரின் சீற்றம் தணியவில்லை. சிவன் உட்பட பிற தெய்வங்களால் அவரைச் சாந்தமடையச் செய்ய முடியவில்லை. அதானல் அவர்கள் விஷ்ணுவின் தேவியான லட்சுமியை நாடினர். ஆனால் லட்சுமியாலும் அவரை அமைதிப்படுத்த முடியவில்ல. பின் பிரம்மாவின் ஆலோசனைப்படி பிரகலாதனை நரசிம்மரின் முன் நிறுத்தினர். அவனது அதீதமான பக்தியாலும் வேண்டுதலாலும் நரசிம்மரின் சினம் அடங்கியது. அதன் பிறகு அவர் பிரகலாதனுக்கு மன்னனாக முடிச்சூட்டி அவனை வாழ்த்தினார். + + +நரசிம்மர் பல வடிவங்களாக வழிபடுகின்றனர் அவற்றில் 9 முக்கிய வடிவங்களை நவ நரசிம்மர் என வழிபடுகின்றனர்.அவை + +ஆந்திராவில் உள்ள அகோபிலம் இடத்தில் உள்ள கோயிலில் உள்ள நவ நரசிம்மர் வடிவமானது + + +பிரகலாதனின் புராணத்தில் வரும் நரசிம்மர் வடிவங்கள் + +நரசிம்மரின் மூர்க்கமான குணங்களின் ரூபங்கள் + +வேறு ரூபங்கள் + +��ேபாளத்தில் உள்ள ராஜோபாத்யாய பிராம்மனர்கள், இறைவர் நரசிம்மரை அவதாரத்தை கொண்டாடும் வகையில் ஒரு சடங்கு நேபாளத்தில் உள்ள லலித்பூர் மாவட்டம்,காட்மண்டு பள்ளதாக்கிள் உண்டு,இந்து நாட்காட்டியின்படி ஆவனி மாதம் தேய்பிறை ஐந்தாம் நாள்(பஞ்சமி) மத சடங்கான ,ஸ்ரீ நரசிம்ம யாத்திரை உகந்த நாளாகும்.இந்த புனித மரபானது நூறு வருடங்களௌக்கு மேலாக கடைபிடிக்கபட்டு வருகிறது. + +நரசிம்மர் கோவில்கள் + +யாதகிரி லெட்சுமி நரசிம்மர் கோவில் + +நரசிங்கம்_யோகநரசிங்கப்_பெருமாள்_கோயில் மதுரை + +நரசிம்ம புராணம் + + + + + +வாமனர் + +வாமன அவதாரம் என்பது வைணவர்கள் முழுமுதற் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஐந்தாம் அவதாரம் ஆகும். அவதாரம் என்றால் இறைவன் மனித அல்லது வேறு ஒரு உருவில் இவ்வுலகில் பிறத்தல். இதன் நோக்கம் தருமத்தை நிலைநாட்டலாகும். இந்த அவதாரத்தில் இவர் கேரளத்தில் பிராமண குலத்தில் பிறந்தார். இவர் குள்ளமான உருவம் கொண்டவராய் இருந்தார். இவர் "உபேந்திரர்" என்றும் அழைக்கப்படுகிறார். + +மகாபலி சக்கரவர்த்தி தீவிர விஷ்ணு பக்தன். ஆயினும் அவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவன். அவன் ஒருமுறை உலகை வெல்ல யாகம் ஒன்று நடத்த திட்டமிட்டான். அதனை முறியடிக்க விஷ்ணு மூன்றடி வாமன உருவத்துடன், யாக சாலைக்கு வந்து அவனிடம் மூன்றடி மண் கேட்டார். மிகுந்த செருக்குடன் இருந்த மாபலி தர சம்மதம் தந்தான். பகவான் திரிவிக்கிரமன் வடிவு எடுத்து வானை ஒரு காலாலும், மண்ணுலகை ஒரு காலாலும் அளக்க, மூன்றாமடியை அவனது தலையில் வைத்து அவனது அகந்தையை ஒழித்தார். + + + + +பிராங்க் கெரி + +பிராங்க் ஓவென் கெரி (Frank Owen Gehry) (பிறப்பு: பிப்ரவரி 28, 1929) ஒரு கட்டிடக்கலைஞர். சிற்பங்களைப் போன்ற வடிவமைப்புக் கொண்ட இவரது கட்டிடங்கள் மூலம் இவர் பரவலாக மக்களுக்கு அறிமுகமானவர். மினுக்கம் கொண்ட உலோகங்களினால் மூடப்பட்ட வளைவுகள் நெளிவுகளோடுகூடிய தோற்றம் கொண்ட கட்டிடங்களை வடிவமைத்ததன் மூலம் இவர் மக்களைக் கவர்ந்தார். இவரது பாணியைச் சிறப்பாக விளக்கும், ஸ்பெயின் நாட்டின் பில்பாவோ என்னுமிடத்தில் அமைந்துள்ள குகென்ஹெய்ம் அரும்பொருட் காட்சியகம் (Guggenheim Museum), டைட்டானியம் உலோகத்தால் மூடப்பட்டதாகும். + +கனடா நாட்டிலுள்ள டொராண்டோவ��ல், யூதக் குடும்பமொன்றில் பிறந்த இவர், தனது 17 ஆவது வயதில் கலிபோர்னியாவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கே லாஸ் ஏஞ்சலீஸ் நகரக் கல்லூரியில் பயின்ற பின்னர், தென் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தின், கட்டிடக்கலைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். இதன் பின் ஹார்வாட் வடிவமைப்புக்கான பட்டப்படிப்புக் கல்லூரியில் சேர்ந்து நகரத் திட்டமிடல் கல்வி கற்றார். இன்று இவர் ஒரு அமெரிக்கக் குடிமகனாகக் கலிபோர்னியாவில் வாழ்ந்து வருகிறார். + +கெரியின் பாணி பிந்திய நவீனத்துவத்தில் (late modernism) இருந்து உருவானதாகும். இவருடைய கட்டிட அமைப்புக்களில் காணும் முறுகிய உருவ அமைப்பு (forms), நவீன கட்டிடக்கலையின், கட்டமைப்புவிலக்கவாதக் (deconstructivist) குழுமத்தினரின் கோட்பாடுகளை வெளிப்படுத்தி நிற்பதாகக் கருதப்படுகிறது. கட்டமைப்புவிலக்கவாத இயக்கம், சமூகவியல்சார்ந்த இலக்குகள் மற்றும் செயற்பாட்டுத் தேவைகளுக்கு முக்கியத்துவம் தராமை மூலமாக, நவீன கட்டிடக்கலைக் கோட்பாடுகளிலிருந்து விலகியிருப்பதைக் காணலாம். தொடக்ககால நவீனத்துவ கட்டிட அமைப்புக்களைப் போல், கட்டமைப்புவிலக்கவாத அமைப்புக்கள் குறிப்பிட்ட சமூக எண்ணக்கருத்துகளை வெளிப்படுத்துவனவாக அமையவில்லை. அத்துடன் நவீனத்துவவாதிகள் மத்தியில் பிரபலமாக இருந்த "செயற்பாட்டைப் பின்பற்றியே வடிவம் அமைகின்றது" (form follows function) என்ற நம்பிக்கையையும் கட்டமைப்புவிலக்கவாதக் கட்டிடங்கள் வெளிப்படுத்தவில்லை. கெரி தனது வடிவமைப்புகள் மூலம் கட்டமைப்புவிலக்கவாதக் கருத்துக்கு உருவம் கொடுத்ததுடன் அதைத் தொடர்ச்சியாகச் செம்மைப்படுத்தியும் வந்தார். ஐக்கிய அமெரிக்காவின் சாந்தா மொனிக்கா பகுதியிலேயே இந்தப் பாணி தொடர்பான சோதனை வடிவமைப்புகள் நிகழ்ந்ததாலும், இப் பாணியிலான கட்டிடங்கள் அப்பகுதியில் செறிந்து காணப்படுவதாலும், இது சாந்தா மொனிக்கா குழுமக் கட்டிடக்கலை (Santa Monica school of architecture) எனவும் அறியப்படுகின்றது. + +கெரி, நவீன கட்டிடக்கலைத்துறையின் ஒரு புகழ்பெற்ற மனிதராவார். இவருடைய வீடு உட்பட இவர் வடிவமைத்த கட்டிடங்கள் பல இன்று சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடங்களாக உள்ளன. இதனால் பல அரும்பொருட் காட்சியகங்களும், நிறுவனங்களும், நகரங்களும் வடிவமைப்பின் முத்திரையைப் பொறிப்பதற்காகவே இவரது சேவைகளை நாடி ���ிற்கின்றன. + +சீட்டிலில் அமைந்துள்ள அநுபவ இசைத் திட்டத்தின் இசை அரும்பொருட் காட்சியகம் (Seattle's EMP Music Museum) இவ்வாறான ஒரு கட்டிடமாகும். இந்தக் கட்டிடம், "மைக்குரோசொவ்ட்" நிறுவனத்தைச் சேர்ந்த போல் அலன் என்பவருடைய தனிப்பட்ட இசைப் பொருட் சேமிப்புகளைக் காட்சிப்படுத்தும் நோக்கத்துக்காக அமைக்கப்பட்டது. இது மறுக்கமுடியாதபடி தனிச்சிறப்பு வாய்ந்த ஒரு கட்டிடமாக உருவாகியிருந்தபோதும், பெருமளவு விமர்சனங்களுக்கும் இது உட்பட்டது. இயல்புக்கு ஒத்துப்போகாத நிறங்களின் பயன்பாடு, கட்டிட மற்றும் இயற்கைச் சூழலுடன் ஒத்திசையாமை, மற்றும் இதன் பாரிய அளவு என்பன கெரி கட்டிடத்தின் அடிப்படையையே பிழையாகப் புரிந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டுகளுக்கு அவரை இலக்காக்கின. 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஈபெல் கோபுரம் கட்டப்பட்டபோது உருவான விமர்சனங்களைச் சுட்டிக்காட்டும் இவரது ஆதரவாளர்கள், வரலாற்று நோக்கின் அடிப்படையிலேயே ஒரு கட்டிடத்தை நியாயமான முறையில் மதிப்பீடு செய்யமுடியும் என்கிறார்கள். + +கெரி தனது வடிவமைப்புகளில் திரும்பத் திரும்ப ஒரே அம்சங்களையே பயன்படுத்துவதாக, அண்மையில், விமர்சகர்களால் குற்றம் சாட்டப்பட்டார். குகென்ஹெய்ம் அருங்காட்சியகத்தில் பயன்படுத்திய உலோக போர்வையையே எல்லாக் கட்டிடங்களிலும் பயன்படுத்தியதை அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். + + + + +கீழேயுள்ளவை கெரியின் கட்டிடங்களைக் காட்டும் வேறு படங்களாகும். + + + + + +சந்தியாகோ கலத்ராவா + +சந்தியாகோ கலத்ராவா (ஜூலை 28, 1951) ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு கட்டிடக்கலைஞராவார். இவரது வடிவமைப்புகள் இன்று உலகம் முழுவதிலும் பரவலான பிரபலம் பெற்றுள்ளன. + +கலத்ராவா ஸ்பெயினிலுள்ள வலென்சியா என்னுமிடத்தில் பிறந்தார். அங்கேயுள்ள கலை மற்றும் கைவினைகள் கல்லூரியிலும், கட்டிடக்கலைக் கல்லூரியிலும் பயின்று பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து 1975 ல் சுவிட்சர்லாந்தின், சூரிச் நகரத்திலுள்ள சுவிஸ் பெடரல் பொறியியல் நிறுவனத்தில் சேர்ந்து குடிசார் பொறியியலில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். புகழ்பெற்ற பிரான்ஸ் நாட்டுக் கட்டிடக்கலைஞரான லெ கொபூசியே என்பவருடைய செல்வாக்கினால் உந்தப்பட்ட கலத்ராவா, கட்டிடக்கலையில் சிக்கலான வட���வங்களைப் புரிந்துகொள்வதும் அவற்றை உருவாக்குவதும் எப்படி என்பது குறித்து ஆராய்ந்தார். 1981 ல், அவரது முனைவர் பட்டத்துக்கான "வெளிச்சட்டகங்களின் மடிக்கப்படக்கூடிய தன்மை" (On the Foldability of Space Frames) பற்றிய ஆராய்ச்சிகளை நிறைவு செய்துகொண்டு, கட்டிடக்கலை மற்றும் குடிசார் பொறியியலில் தனது தொழிலைத் தொடங்கினார். + +தனித்துவமான, படைப்பாற்றல் சார்ந்த, பெரும் செல்வாக்கு மிக்க கலத்ராவாவின் பாணி, வளைந்து கொடாத பொறியியலின் கோட்பாடுகளும், கட்டிடக்கலையின் கவர்ச்சிமிக்க அழகியல் அம்சங்களும் இசைவுடன் இணைந்த ஒன்றாகும். இவருடைய வடிவமைப்புகளுக்கான வடிவங்களுக்கும் அமைப்புகளுக்குமான கருத்துருக்கள் பெரும்பாலும், இயற்கைச் சூழலிலிருந்து பெறப்பட்டனவாகும். பாலங்கள் முதலிய சில குடிசார் பொறியியல் வேலைத் திட்டங்களுக்கான வடிவமைப்புகளை இவரது வேலைகள் புதிய மட்டத்துக்கு எடுத்துச் சென்றன. இவர் பல தொடர்வண்டி நிலையங்களை வடிவமைத்துள்ளார். ஒளி பொருந்தியனவும், திறந்த அமைப்பும், இலகுவாகப் பயணம் செய்யத்தக்கதாகவும் இவ் வடிவமைப்புகள் அமைந்துள்ளன. + +பொதுவாக ஒரு கட்டிடக்கலைஞராகவே அறியப்பட்டாலும், கலத்ராவா ஒரு திறமையான சிற்பியும், ஓவியரும் ஆவார். கட்டிடக்கலை என்பது இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்த கலையே என்பது இவரது கருத்து. + + + + +2006 மார்ச் 5 ஆம் தேதி முதல் மெட்ரோபாலிட்டன் கலை அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி இடம்பெற்றது. + + +Maps: + +Profiles: + + + + +பாலம் + +பாலம் என்பது, வீதிகள், தொடர்வண்டிப்பாதைகள், ஆறுகள், வேறு நீர்நிலைகள், பள்ளத்தாக்குகள் போன்ற தடைகளைக் கடப்பதற்காக கட்டப்படும் அமைப்புகள் ஆகும். பாலம் கட்டப்படும் அல்லது இணைக்கப்படும் பகுதியில் அமைந்துள்ள நிலப்பரப்பின் தன்மை,  அதை உருவாக்கும் பொருள், மற்றும் அதை உருவாக்க கிடைக்கும் நிதி, பலத்தின் பயன்பாட்டு நோக்கம் ஆகிய வேறுபட்ட சூழ்நிலைகளைப் பொருந்தும் பல்வேறு வடிவமைப்புகளைக் கொண்டுள்ளன. பொதுவாகப் பாலங்கள் அவற்றுக்குக் கீழாக வீதி அல்லது நீர்ப் போக்குவரத்துக்களை அனுமதிக்கக் கூடியதாக, தகுந்த உயரத்திலும், உரிய வடிவமைப்பிலும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும். + +பொதுவாகப் பாலங்களின் நோக்கம், இடங்களுக்கிடையே தொடர்ச்சியானதும், சீரானதும், இலகுவாகப் பயணம் செயத்தக்கதுமான பாதையொன்றை உருவாக்குவதன் முலம் போக்குவரத்தை இலகுவாக்குவதாகும். + +ஆங்கிலத்தில் பாலத்தைக் குறிப்பிட உதவும் சொல்லான பிரிட்ஜ் ( bridge) என்ற சொலானது, அதே பொருளைக் கொண்ட பழைய ஆங்கிலச் சொல்லான ப்ரைக் ( brycg) என்ற சொல்லில் இருந்து வந்ததாக ஆக்ஸ்போர்டு குறிப்பிடுகிறது. இந்தச் சொல் நேரடியாக ப்ரோட்டோ-இந்தோ-ஐரோப்பியன் சொல்லான ப்ச்ரே- (*bʰrēw-.) என்பதில் இருந்து வந்திருக்கலாம், அதே பெயரில் உள்ள சீட்டு அட்டை விளையாட்டுக்கான வார்த்தை வேறு தோற்றம் கொண்டதாகும். + +மனிதர்களால் அமைக்கப்பட்ட துவக்கக்காலப் பாலங்கள், மரக்குற்றிகள் அல்லது மரப்பலகைகள் நிர்மாணிக்கப்பட்டன. இத்தகைய பாலங்களை இன்றும் கிராமப் பகுதிகளில் காணமுடியும். இதற்காகப் பொதுவாக ஒரே நீளமான, தென்னை, பனை போன்ற மரங்கள் பயன்படுத்தப்படுவதைக் காணமுடியும். பின்னர் கல்லாலான தூண்களின் மீது கல்லாலான அல்லது மர உத்தரங்களை வைத்துப் பாலம் அமைக்கப்பட்டது. இந்த  எளிமையான பால ஏற்பாட்டு முறைகள் மூலம் கூடிய தூரங்களைக் கடக்கப் பாலம் அமைக்க முடியாது. சில துவக்கக்கால அமெரிக்கர்கள் மரங்கள் அல்லது மூங்கில்களை கிணறுகள், சிறு குகைகள் போன்றவற்றை கடக்க பயன்படுத்தினர். நீளமான நாணல் அல்லது மற்றவகை நார்களைப் பயன்படுத்தி, பெரிய கயிறுகளை உருவாக்கி அதில் குச்சிகள் கட்டைகள் ஆகியவற்றைப் பினைத்து, துவக்கக்காலப் பாலங்கள் உருவாக்கிப் பயன்படுத்தப்பட்டது. +பாலங்களும், நீர்காவிகளும் அமைப்பதற்காக வளைவு (கட்டிடக்கலை) அமைப்புகளை முதன்முதலாகப் பயன்படுத்தியவர்கள் ரோமானியர் ஆவர். இவர்கள் கட்டிய மேற்படி அமைப்புக்கள் சில இன்றும் நிலைத்திருப்பதைக் காணமுடியும். +தெற்கு கிரேக்கத்தில் உள்ள பெலொபோனீசின் டிரினோஸ் கோட்டை மற்றும் எடிடோரோஸ் நகரம் ஆகியவற்றுக்கு இடையில் இரதங்களுக்கு இடமளிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சாலையின் நான்கு மைசெனீயன் கோல்பெல் வளைவுகளில் ஒன்று அர்காடிகா பாலம் ஒன்றாகும். கிரேக்க வெண்கலக் காலத்தில் (கி.மு. 13 ஆம் நூற்றாண்டு) இருந்து, தற்போதுவரை உள்ள பழமையான வளைவுகளில் இது ஒன்றாகும். ஹெலனிய காலத்தில் இருந்து பல உள் வளைந்த கற்ப் பாலங்கள் கிரேக்கத்தின் பெலொபோனீஸ் பகுதியில் காணப்படுகின்றன. + +பழங்காலத்தில் மிகப் பெரிய பாலங்களைக் கட்டியவர்கள் பண்டைய ரோமர்களே. ரோமர்கள் நன்கு நிற்கக்கூடிய வளைவான பாலங்கள் மற்றும் தொட்டிப் பாலங்களை சிறப்பான முறையில் கட்டினார்கள். இதனால் அவர்களுக்கு முந்தைய கால பாலங்களின் வடிவமைப்புகள் சேதமுற்று அல்லது அழியக்கூடிய நிலைமை ஏற்பட்டது, சில இன்றுவரை நிற்கின்றன. ஸ்பெயினில் அல்கந்தாரா எனும் இடத்தில் டாங்கஸ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அல்கந்தாரா பாலம் ஒரு எடுத்துக்காட்டு. தண்ணீர், எலுமிச்சை, மணல், எரிமலைக் கல் ஆகியவற்றை உள்ளடக்கிய பாஸ்ஸோலானா எனப்படும் ஒரு வகை சிமெண்டை ரோமர்கள் பயன்படுத்தினர், இது இயற்கை கல்லில் காணப்படும் வலிமை மாறுபாட்டை குறைத்தது. ரோமானியப் போருக்குப் பிறகு செங்கல் மற்றும் மோட்டார் பசைகளைக் கொண்டு பாலங்கள் கட்டப்பட்டன, இதனால் சிமெண்ட் தொழில்நுட்பத்தை இழந்து விட்டனர் (பின்னர் மறுபரிசீலனை செய்யப்பட்டது). + +இந்தியாவில், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் அணைகள், பாலங்களை போன்றவற்றை நிர்மாணிப்பதைப் பற்றி குறிப்பிடுகின்றன. கிர்நாரில் ஒரு மவுரியப் பாலம், ஜேம்ஸ் பிரின்ஸ்ப் அவர்களால் ஆராயப்பட்டது. இந்தப் பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் பேரரசர் சந்திரகுப்தரின் பிரதான கட்டடக்கலை வல்லுனரான புஸ்பதுபதியால் சரி செய்யப்பட்டது. 4 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மூங்கில் மற்றும் இரும்பு சங்கிலியைப் பயன்படுத்தி வலுவான பாலங்கள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. இராணுவ மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக பல பாலங்கள், இந்தியாவில் முகலாய நிர்வாகத்தால் கட்டப்பட்டன. + +மரபு கட்டுமானங்களின் பெரிய சீன மரப் பாலங்கள் போரிடும் நாடுகள் காலத்தில் இருந்த போதிலும், சீனாவில் பழங்காலத்திலிருந்து எஞ்சியிருக்கும் கல் பாலம் சுயி அரசமரபு காலத்தின் போது கி.மு. 595 முதல் 605 காலக்கட்டத்தில் கட்டப்பட்ட சாக்சோவ் பாலம் ஆகும். இது உலகின் பழமையான கல்லால் கட்டப்பட்ட வளைவுப் பாலம் என்பதால் இந்த பாலம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். + +பாலங்களில் ஆறு முக்கிய வகைகள் உள்ளன. அவை + +அதிகமான பாலங்கள் நிலையான பாலங்களாகவே காணப்படுகின்றன. அதாவது அவற்றிடம் அசைக்கக்கூடிய எந்தவொரு பகுதியும் காணப்படாது. அவை பழுதடையும் வரை அல்லது இடிக்கப்படும் வரை ஒரே இடத்திலேயே இருக்���ும். பெய்லி பாலங்களைப் போன்ற (Bailey bridges) தற்காலிக பாலங்கள், விரும்பிய வாறு மாற்றக் கூடியதாகவும் பகுதிகளை பிரித்து எடுக்கக் கூடியதாகவும் விரும்பியவாறு பாலம் இருக்கும் திசையை மாற்றக் கூடியதாகவும் மீள்-பாவனைக்கு உட்படுத்தக்கூடியதாகவும் காணப்படுகின்றது. இவ்வகைப் பாலங்கள் இராணுவப் பொறியியலில் (military engineering) முக்கியத்துவம் பெறுகின்றன. அத்துடன் பாழடைந்த பாலங்கள் சீர் செய்யப்படும் போது அவற்றுக்குப் பதிலாக இவ்வகைப் பாலங்களைப் பயன்படுத்தலாம். இவையெல்லம் பொதுவாக மின்சாரத்தால் இயக்கப்படுகின்றன. + +பாலத்தின் அமைக்கப் பயன்படுத்தப்படும் பொருளை வைத்தும் பாலங்களை வகைப்படுத்தலாம். 18 ஆம் நூற்றாண்டின் முடிவு வரை பாலங்கள் மரம், கற்கள் போன்றவற்றாலையே உருவாக்கப்பட்டது. புதிய வகைப் பாலங்கள் கொங்கிரீட், உருக்கு, துருப்பிடிக்காத உருக்கு அல்லது சேர்க்கைகள் போன்றவற்றல் கட்டப்பட்டு வருகின்றது. + + + + +கொடும்பாளூர் + +சங்க கால இலக்கியமான சிலப்பதிகாரத்தில் பேசப்படுகிற தொன்மைப் புகழ்மிக்க ஊர் கொடும்பாளூர் ஆகும். சுந்தரர் எழுதிய திருத்தொண்டர் தொகையிலும், சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்திலும் இவ்வூர் குறிப்பிடப்பட்டுள்ளது. + +மிகச்சிறந்த வடிவமைப்பு மற்றும் வரலாற்று சிறப்புக் கொண்ட கற்கோவில்களைக் கொண்டது கொடும்பாளூர். இக்கோயில்களின் சிறப்பு கொடும்பாளூரை இந்தியநாட்டு நினைவிடங்களில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தது. பல நினைவுச்சின்னங்கள் இங்கே இருந்தாலும், தற்போது இரண்டு மட்டுமே எஞ்சியுள்ளன. ஒன்று மூவர் கோயில் மற்றொன்று முசுகுந்தேஸ்வரர் கோயில். மேலும் ஐவர் கோயில் இருந்ததற்கான அடித்தளமும் மற்றொரு சிவன் கோவிலும் இருந்ததற்கான தடையம் உள்ளது. + +சுற்றுலா பயணிகள் மற்றும் வரலாற்று ஆர்வலர்களின் கவனத்தை ஈர்ப்பது ஐவர் கோயில். இந்தக் கோயில்கள் பிற்காலச் சோழர்களின் கலைக்குச் சான்றாய் விளங்குகின்றன. முக்கியமாகக் கருதப்படும் கல்வெட்டுக்களும் இங்கே காணக்கிடைக்கின்றன. + +கொடும்பாளூர் புதுக்கோட்டை மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி- மதுரை சாலையில் அமைந்துள்ளது. வேகப்பேருந்துகள் நிற்காமல் செல்லலாம். அதனால் விராலிமலையில் இறங்கி நகரப்பேரூந்துகள் மூலம் கொடும்பாளூர் வந்து சேரலாம். + +புதுக்கோட்டையிலிருந்து கொடும்பாளூர் வழியாக மணப்பாறை செல்லும் பேருந்துகள் உள்ளன. அவற்றில் ஏறினால் சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடும்பாளூர். (மணப்பாறையில் இருந்து 5 கிலோமீட்டர்). அல்லது புதுக்கோட்டையிலிருந்து விராலிமலையை அடைந்து, அங்கிருந்து நகரப்பேரூந்துகளைப் பிடிக்கலாம். + + + + + + +அப்பம் + +அப்பம், (ஆப்பம்) இலங்கையில் அதிக அளவில் உண்ணப்படும் ஓர் உணவாகும். இது அரிசி மாவிலே செய்யப்படுகின்றது. அப்பம் வெள்ளையப்பம், பாலப்பம், முட்டையப்பம் என பல வகைகளில் கிடைக்கின்றது. + +அப்பம் சுடுவதற்கான பாத்திரம் அப்பச்சட்டி எனப்படுகிறது. அப்பம் அது சுடப்படும் அப்பச்சட்டி போன்ற வடிவத்தில் வருகிறது. உட்குழிவாக அமையும் அப்பத்தின் நடுவில் முட்டையை உடைத்துப் போட்டுச் சுடும்போது முட்டை அப்பமும் சிறிதளவு தேங்காய்ப் பால் விட்டுச் சுடும்போது பால் அப்பமும் கிடைக்கின்றன. + + + + + + +மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் + +மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் "(Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA))" அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை என்று அழைக்கின்றனர். + +இத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். + +18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார். + +பணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். + +இத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது. + + +ஒரு நாளைக்கான சம்பளம் தற்போது ரூபாய் 133 லிருந்து ரூ.214.(மாநில அளவில் வேறுபாடு) ஆக உயர்த்தப்பட்டுள்ளது. + +இச் சட்ட நடைமுறை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதால் ஏழை தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைக்குழு மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு 2014இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தேசிய மனித உரிமைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியது. + + + + + +பாறை + +பாறை ("rock or stone") என்பது கனிமங்கள் அல்லது கனிமப்போலிகளின் சேர்க்கையினால் இயற்கையாக உருவாவது ஆகும். +பாறைகள் மனித வரலாற்றுடன் தொடர்ந்து இணைந்திருக்கும் ஒன்றாகும். மனிதர்கள் ஆரம்பத்தில் வேட்டைக்கும், பாதுகாப்பிற்கும் தேவையான கருவிகளை பாறைகளிலிருந்து பெற்றுக் கொண்டனர். பின்னர் வாழ்விடங்களை அமைத்துக்கொள்ள கட்டடத்திற்குத் தேவையான பொருளாகவும், நினைவுச் சின்னங்களை அமைப்பதற்குத் தேவையான பொருளாகவும் பயன்படுத்தினர். புவியோட்டின் அமைப்பு, இயல்பு மற்றும் கூர்ப்பு போன்றவற்றை காலவோட்டத்தினூடாகக் கட்டுப்படுத்தி வரும் செயல்முறை, வானிலையாலழிதல் செயல்முறை, தாவரத் தொகுதியின் உருவாக்கம் போன்றவற்றின் ஒன்றிணைந்த விளைவுகளால், தற்போது நாம் காணும் நிலத்தோற்றத்தைப் பாறைகள் உருவாக்கியுள்ளன. அத்துடன் பாறைகளில் காணப்படும் கனிமங்கள், உலோகங்கள் மனித நாகரீகத்தின் செழிப்பிற்கும், பண்பாட்டுச் சிறப்பிற்கும் மிக முக்கியமான ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. + +பாறைகள், அவற்றில் அடங்கியுள்ள கனிமங்கள், வேதியியல் சேர்க்கை, பரப்புத் தோற்றம் ("texture"), அவை உருவாகும் முறை என்பவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. பாறைகள் பொதுவாக மூன்று பெரும் பிரிவு��ளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை, தீப்பாறைகள், படிவுப் பாறைகள், மற்றும் உருமாறிய பாறைகள் என்பனவாகும். + +தீப்பாறைகள் கற்குழம்பிலிருந்து உருவாகின்றன. இவை, பாதாளப் பாறை, எரிமலைப்பாறை என இரண்டு பிரிவுகளாக அமைகின்றன. பூமியின் மையப் பகுதியிலிருந்து உருகிய கற்குழம்பு மேல் நோக்கித் தள்ளப்பட்டு, பூமியின் மேலோட்டுப் பகுதியிலுள்ள இடைவெளிகளில் தங்கி அங்கேயே மெதுவாகக் குளிர்ந்து படிவமாகும் போது பாதாளப் பாறைகள் உருவாகின்றன. எரிமலைப் பாறைகள், புவி மேற்பரப்பை அடையும் எரிமலைக் குழம்புகளில் இருந்து அல்லது ஆங்காங்கே நிகழும் வெளித்தள்ளல்களில் இருந்து உருவாகின்றன. + +பாறைத் துகள்கள், கரிமப்பொருள் துணிக்கைகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் ("chemical precipitates") என்பவை படிப்படியாக ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, காபனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும். + +தீப்பாறைகள், படிவுப் பாறைகள் அல்லது ஏற்கனவே உருவான உருமாறிய பாறைகள், அவை உருவானபோது இருந்ததிலும் வேறான வெப்பநிலை, அழுத்தச் சூழ்நிலைகள் என்பவற்றில் உருவாவனவே உருமாறிய பாறைகள் எனப்படுகின்றன. இதற்கு வேண்டிய வெப்பநிலையும், அழுத்தமும் புவி மேற்பரப்பில் காணப்படுவதிலும் அதிகமாக இருக்கவேண்டும். இது பாறைகளில் உள்ள கனிமங்கள் வேறு கனிம வகைகளாக அல்லது வேறு வடிவிலமைந்த அதே கனிமமாக உருமாறுவதற்கு (எகா: மீள்படிகமாதல் ("recrystallisation") ஏற்ற அளவில் அமைய வேண்டும். + +ஒரு பாறை வகை இன்னொரு பாறை வகையாகத் தொடர்ச்சியான முறையில் மாறிக்கொண்டிருக்கும் தோற்றப்பாட்டை, நிலவியலாளர்கள், பாறை வட்டம் எனும் நிலவியல் "மாதிரி" மூலமாக விளக்குகிறார்கள். கற்கோளம் ("lithosphere") உள்ளிட்ட புவியோடு ("Earth's crust") பாறைகளினால் உருவானதே. பாறைகள் பற்றிய ஆய்வு பாறையியல் ("Petrology") எனப்படுகின்றது. + +ஒரு கரைசல் மட்டத்தில், பாறைகள் தாதுக்கள் தானியங்களை உருவாக்குகின்றன, இது ஒரு ஒழுங்கான முறையில் நடைபெறும் ஒரு இரசாயன கலவையிலிருந்து உருவான ஒரேவிதமான திடப்பொருள்களாகும். பாறைகளை உருவாக்கும் மொத்த கனிமங்கள் இரசாயன பிணைப்புகள் மூலம் ஒன்றாக நடைபெறுகின்றன. பாறைகளில் உள்ள தாது வ��ைகள் பாறை உருவான விதத்தில் தீர்மானிக்கப்படுகிறது. பெரும்பாலான பாறைகள் சிலிக்காவை (SiO2) கொண்டுள்ளன. சிலிக்கான் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கூட்டுக்கலவைகள் 74.3% புவியின் மேலோட்டை உருவாக்ககின்றன. இந்த பொருள் பாறை மற்ற சேர்மங்கள் கொண்ட படிகங்கள் உருவாக்குகிறது. பாறை மற்றும் கனிமங்களில் சிலிக்காவின் விகிதம் அவற்றின் பெயர் மற்றும் பண்புகளை நிர்ணயிப்பதில் முக்கிய காரணியாகும் + +புவியியல் ரீதியாக பாறைகளானது அவற்றிலுள்ள தாதுக்கள் மற்றும் வேதிய கட்டுமானம்,ஊடுருவுதிறன் அங்கக துகளமைப்பு ஆகிய பண்புகளைக் கொண்டு வகைப்படுத்தப் படுகின்றன.இந்த இயற்பியல் பண்புகள் பாறைகள் உருவாகிய செயல்முறைகளின் இறுதி விளைவு ஆகும்.பாறை வட்டம் எனப்படும் நிலவியல் மாதிரியில் விவரிக்கப்பட்டுள்ளபடி காலப்போக்கில், பாறைகள் ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறும். இந்த நிகழ்வுகள் மூலம் மூன்று பொதுவான பாறைகள் உருவாக்கப்படுகின்றன அவை தீப்பாறைகள், படிமப் பாறைகள் மற்றும் உருமாறிய பாறைகளாகும். + +மூன்று வகையான பாறைகளும் பல குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. எனினும், கூட்டுப் பாறைகள் இடையே எவ்வித குறிப்பிடத்தக்க வலையறைகள் இல்லை. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தரத்திலிருந்தும் ஒன்றுக்கொன்று கடந்து செல்வதால், ஒரு குறிப்பிட்ட பாறையின் தனித்துவமான கட்டமைப்புகள் படிப்படியாக வேறொரு பாறையுடன் இணைந்துள்ளது. எனவே,பாறை பெயரிடலை நிறுவுவதில் வரையறுக்கப்பட்ட வரையறைகள் சீரான தொடர்ச்சியில் அதிகமான அல்லது குறைவான இயல்புகளைக் கொண்டு அறியப்படுகின்றன. + +தீப்பாறை (Igneous Rock) 'இக்னீயஸ்' என்ற சொல் "தீ" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து பெறப்பட்டதாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பாறைக்குழம்பு (மாக்மா-Magma) மற்றும் எரிமலைக்குழம்பு (லாவா-Lava) ஆகியவை குளிர்ந்து உருவானதாகும். தீப்பாறைகளே முதன் முதலில் தோன்றியவை ஆகும். இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே புவியோட்டில் அல்லது மூடகத்தில் (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூட���ம். + + +புவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 64.7% சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை.தீப்பறைகளில் 66 சதவீதம் பசால்ட் மற்றும் கப்ரா உள்ளன. 16 % கிரானைட் என்றறியப்படும் கருங்கல்பாறைகளும்.17% படிகக்கற்பாறைகளும் உள்ளன. 0.6 சதவிதம் சயனைட்கள் மற்றும் 0.3 சதவிதம் கிரானோடயரைட்டுகள் மட்டுமே தீப்பாறைகளில் உள்ளன.கடலடி மேற்பரப்பு 99 சதவிகிதம் பசால்டின் குழுக்கட்டுமான தீப்பாறைகள் ஆகும். கிரானைட்கள் மற்றும் ஒத்த பாறைகள், மெட்டா கிரானிடோடிஸ் என்று அழைக்கப்படும், கான்டினென்டல் மேலோடு மிகவும் உருவாக்கப்படுகின்றன.பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன + +தீப்பாறை இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. + +உந்துப்பாறை அல்லது பாதாளப்பாறை என்பது புவியோட்டில் உந்துதலின் காரணமாக பாறைக்குழம்பு (Magma) மேலெழும்பி மெதுவாக குளிர்ந்து படிகமாக மாறுவதால் உருவாகிறது. இவை எரிமலைத் தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஓட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மதிய அட்லாண்டிக் தொடர், பசால்ட் பாறையினால் ஆனவை.ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலைத் தீவுகள் பசால்ட் (பாசாற்றுக்கல்) பாறைகளால் ஆனவையே. + +தலையீடு பாறை மேற்பரப்பை அடையும் மாக்மாவின் விளைவாக எரிமலை அல்லது துண்டு துண்டாக வெளியேற்றப் படுவதால் உருவாகிறது. எடுத்துக்காட்டு- ப்யூமிஸ் அல்லது பசால்ட்.பாறைக்குழம்பின் ஏராளமான ரசாயன மற்றும் குளிரூட்டும் வீதம் பொதுவாக போவெனின் எதிர்வினைத் தொடரை உருவாக்குகிறது. இந்த அளவில் முக்கிய எரிமலை பாறைகள் காணப்படுகின்றன. பெரும்பாலான தீப்பாறைகள் இவ்வகையான அளவுகளிலேயே காணப்படுகின்றன. + + +ஒவ்வொரு நாளும் காற்று, வெப்பமநிலை, நீர் மற்றும் பனிக்கட்டிகளால் பாறைகள் சிதைக்கப்படுகின்றன, சிதைந்த பாறைத் துகள்கள் ஆற்று நீரில்கலக்கின்றன. ஆறு அத்துகள்களை ஆற்றின் கரைகளிலும் ஏரி, கடல் போன்றவற்றின் முகத்துவாரங்களிலும் படிய வைக்கிறது இவ்வாறு ஏதாவது ஓரிடத்தில் நிலைபெறுகின்ற பொருள்களே படிவுகள் எனப்படுகின்றன. முதலில் படிவுகள் மிருதுவாகவும் தளர்வாகவும் இருக்கும் இவை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்குகளாகப் படிய்வைக்கப்படுகின்றன. மேலட��க்கின் சுமையினால் கீழடுக்கிலுள்ள பொருள்களும் அழுத்தப்படும். அதே நேரத்தில் பாறைகளின் தாதுக்களும் நீரில் கரைந்து அதுகள்களைச் சுற்றித் தங்குகின்றன. தாதுக்களின் கரைசல் படிவப்பொருள்களை ஒன்றோடொன்று உறுதியாகப் பிணைக்கிறது. இதனால் மிருதுவான படிவுகள் திடமானதாக மாறுகிற்து இவ்வாறு மாறிய படிவுகளே இறுதியாகப் படிவுப்பாறையாக மாறுகிறது. +சமதளப் படிவாதல் முறையில் (Sedimentation பாறைத் துகள்கள்,நீரில் படியும் கரிமச்சேர்மத் துணுக்குகள், வேதிப்பொருள் வீழ்படிவுகள் (chemical precipitates) என்பவை படிப்படியாக ஏதெனும் ஓரிடத்தில் சேர்ந்து, பின்னர் அழுத்தப்படுவதன் மூலம் ஒன்று சேர்ந்து உருவாவதே படிவுப் பாறைகள் எனப்படுகின்றன. இவை, சிறப்பாக, கார்பனேற்றுகள் அதிகமுள்ள படிவுப் பாறைகள், புவி மேற்பரப்பிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ உருவாகக்கூடும்.புவியின் மேலோட்டில் காணப்படும் பாறைகளின் கண அளவைப் பொறுத்தவரையில் படிவுப்பாறைகள் 5 விழுக்காடே ஆகும், எனினும் நிலப்பரப்பில் ஏறத்தாழ 75 விழுக்காடு படிவுப்பாறையே ஆகும். படிவ பாறைகள் பற்றிய அறிவு கட்டிடப் பொறியியல் துறையில் சாலைகள், வீடுகள் , சுரங்கங்கள் , கால்வாய்கள் போன்றவற்றை கட்ட மிகவும் உதவிகரமாக உள்ளது.மேலும் படிவு பாறைகள் நிலக்கரி, படிம எரிபொருட்கள்,நீர்,தாதுக்கள் போன்ற இயற்கை வளங்களின் முக்கியமான ஆதாரங்களாக திகழ்கிறது.மேலும் இப்பாறைகள் பற்றிய ஆய்வு செடிமென்டாலாஜி என்று அழைக்கப்படுகிறது இது புவியியல் மற்றும் புவியியல் இயற்பியலை உள்ளடக்கியது. +படிவுப் பாறைகள் அவற்றை உருவாக்கிய படிவுகளின் மூலங்களையொட்டி வகைப்படுத்தப்படுகின்றன. இப் படிவுகளின் மூலங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம். + +உடைவுப் பாறை (clastic rock): இப்பாறைகள் ஏற்கனவே உள்ள பாறைகளில் இருந்து பின்வரும் முறைகளில் உடைந்து உருவாகின்றன. + +இப் படிவுகள் பின்னர் அழுத்தப்பட்டுப் பாறையாதல் (lithification) வழிமுறை மூலம் பாறைகளாக மாறுகின்றன. + +உருமாறிய பாறை என்பது பாறைகளின் ஒரு வகையாகும்.இது "முதல்நிலைப்பாறை (protolith)" எனப்படும் ஏற்கனவே உள்ள பாறைகள் வளருருமாற்றம் (metamorphism) என்னும் செயற்பாட்டின் மூலம் மாற்றம் அடைவதால் உருவாகின்றது. முதல்நிலைப்பாறை 150 பாகை செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையிலும், உயர்ந்த அழுத்தநிலையிலும் இயற்பியல் மற்றும் வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுகிறது. முதல்நிலைப்பாறை படிவுப் பாறையாகவோ, தீப்பாறையாகவோ அல்லது இன்னொரு பழைய உருமாறிய பாறையாகவோ இருக்கலாம். புவியோட்டின் பெரும்பகுதியை உருவாக்குபவை உருமாறிய பாறைகளே. இவை அவற்றின் மேற்பரப்புத் தன்மை, வேதியியல் மற்றும் கனிமச் சேர்மானங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இவை அடுக்குப்பாறைகள் எனவும் அழைக்கப்படும். + +பாறைகளின் பயன்பாடானது கலாச்சார மற்றும் தொழில்நுட்ப மனித இனத்தின் மிது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.2.5 மில்லியன் ஆண்டகளுக்கு முன்பிருந்தே மனித இனமும் மனித இன முன்னோடிகளான ஹோமினிட்டுகளும் (Hominid) பாறைகளை பயன்படுத்தி வந்துள்ளனர் .பழமையான மற்றும் தொடர்ச்சியான தொழில்நுட்பங்கள் கற்ப்பாறைத் தொழில்நுட்ப வளர்ச்சியில் முக்கியப்பங்காற்றுகின்றன.பாறைச் சுரங்கங்களிலிருந்து பெறப்படும் பாறைகளில் குறிப்பிட்தக்க விகிதங்களில் குறிப்பிடத்தக்க இடங்களில் பெறப்படும் உலோகத் தாதுக்கள் மனித மேம்பாட்டின் காரணிகளாக அமைகின்றன. + +by:-injas + + + + +பாறை வட்டம் + +பாறை வட்டம் ("Rock cycle") என்பது நிலவியலின் அடிப்படைக் கருத்துருக்களில் ஒன்று. இது முதன்மையான மூன்று பாறை வகைகளாகிய தீப்பாறை, படிவுப் பாறை, உருமாறிய பாறை ஆகியவற்றிடையே எற்படுகின்ற இயங்கியல் மாற்றங்களை விளக்குகிறது. ஒவ்வொரு வகைப் பாறையும் அதன் சமநிலைச் சூழலிலிருந்து அகற்றப்படும்போது, அது மாற்றமடைகிறது அல்லது அழிந்துபோகிறது. சிலவகைப் பாறைகள் வளிமண்டலத்துக்குக் கொண்டுவரப்படும் போது சிதைந்து அல்லது கரைந்து போகின்றன. பாறை வட்டம், நீர் வட்டம், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (plate tectonics) ஆகிய இயக்குவிசைகள் காரணமாக, புதிய சூழலை எதிர்கொள்ளும்போது, பாறைகளின் சமநிலை குலைந்து மாற்றமடையும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன. + +பாறை வட்டம் தொடர்பான தொடக்கக் கருத்துருவை முன்வைத்தவர், நிலவியலின் தந்தை எனப் போற்றப்படும், 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹூட்டன் (James Hutton) என்பவராவார். திரும்பத்திரும்ப நிகழும், பரிணாமமற்ற, பாறை வட்டம் பற்றிய கருத்துரு, 1960 களில் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு (plate tectonics) பற்றி அறியப்படும்வரை, முதன்மை பெற்றிருந்தது. "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக்" கொள்கையின் வளர்ச்சியுடன், அது பற்றிய விளக்கமும் அதிகரித்தபோது, பாறை வட்டம் பற்றிய கருத்து, அது முடிவின்றித் தொடரும் ஒன்று என்ற நிலையிலிருந்து, படிப்படியாக மாற்றமுறும் ஒரு நிகழ்முறை (process) என்ற நிலைக்கு மாற்றமடைந்தது. 1960 மற்றும் 70 களில், ஜே. டூசோ வில்சன் (J. Tuzo Wilson) என்பவர், "தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புக்" கொள்கையையும் உள்ளடக்கி, வில்சன் வட்டம் என அறியப்படும் புதிய "பாறை வட்ட" மாதிரியை (model) உருவாக்கினார். + +பாறைகள் புவி மேற்பரப்புக்குக் கீழே ஆழத்திற்குத் தள்ளப்படும்போது அவை உருகிக் கற்குழம்பு ஆகின்றன. மேற்படி கற்குழம்பு உருகிய திரவ நிலையில் தொடர்ந்தும் இருப்பதற்கான சூழல் இல்லாது போகும்போது, அது குளிர்ந்து திண்மமாகித் தீப் பாறையாக உருவாகும். இவ்வாறு புவிக்கடியில் உருவாகும் தீப் பாறைகள், ஊடுருவிய பாறைகள் (intrusive rocks) அல்லது பாதாளப் பாறைகள் (plutonic rocks) என அழைக்கப்படுகின்றன. இந்த நிகழ்முறையின் போது கற்குழம்பு மிக மெதுவாகவே குளிர்ந்து திண்மமாவதால், இவ்வாறு உருவாகும் பாறைகள் கரடுமுரடான (பெருப்பருக்கை = coarse-grained) பரப்புத்தோற்றம் (texture) கொண்டு அமைகின்றன. கற்குழம்பு, எரிமலை வெடிப்புப் போன்ற நிகழ்வுகள் காரணமாக வெளியேறி வளிமண்டலத்துள் வரும்போது அது விரைவாகக் குளிர்ச்சியடைகிறது. இவ்வாறு உருவானவை தள்ளற் பாறைகள் (extrusive rocks) அல்லது எரிமலைப் பாறைகள் (volcanic rocks) எனப்படுகின்றன. இத்தகைய பாறைகள் கரடுமுரடற்ற (நுண்பருக்கை = fine-grained) அல்லது வளவளப்பான பரப்புத்தோற்றம் கொண்டவையாக உருவாகின்றன. சில சமயம் இக் கற்குழம்பு குளிர்தல் மிக வேகமாக நடைபெறுவதால் படிகங்களாக (crystals) உருவாக முடியாமல் இயற்கைக் கண்ணாடியாக மாறுகிறது. மூன்று வகைப் பாறைகளில் எதுவும் உருகித் தீப்பாறையாக ஆகமுடியும். + + + + +மணப்பாறை + +மணப்பாறை (ஆங்கிலம்:"Manapparai"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். மணப்பாறை அங்கு நடக்கும் மாட்டுச்சந்தைக்கு மிகவும் புகழ்பெற்றது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 172 மீட்டர் (564 அடி) உயரத்தில் இருக்கின்றது. +இந்த ஊரில் முறுக்கு புகழ்ப்பெற்றதாகும். + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 35,644 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மணப்பாறை மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மணப்பாறை மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +இங்கு பத்துப் பள்ளிக்கூடங்கள் உள்ளன. + +இரண்டு கல்லூரிகள் உள்ளன. + + + + + +இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் + +இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம், இலங்கையின் பொது நிதியில் நடாத்தப்படும் தேசிய தொலைக்காட்சி ஆகும். கல்வி மற்றும் பயன்தரும் தகவல்களை வழங்குவதற்காக இது யப்பான் மக்களால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது. + +1982 ஆம் ஆண்டின் இல. 6 நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் தேசியத் தொலைக்காட்சிச் சேவையாக நிறுவப்பட்டது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளில் நிகழ்ச்சிகள் தொகுத்து/தயாரித்து ஒளிபரப்பப்படுகின்றன. + +ரூபவாகினி, சனல் ஐ ஆகிய இரண்டு அலைவரிசைகளில் தொழிற்படுகிறது. இவ்விரண்டு அலை வரிசைகளும் இலக்க முறை (அ) எண்மருவி (Digital) அல்லாது அனலொக் (அ) அலைமருவி (Analogue) முறையையே பயன்படுத்துகின்றன. + +இது, இலங்கை அதிபரால் (சனாதிபதி) நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் நடாத்தப்படும் ஒரு நிறுவனமாகும். இதன் முழுமையான மேலாண்மை/முகாமைத்துவம் இலங்கை அதிபரால் நியமிக்கப்பட்ட உயரதிகாரி ஒருவரிடமே (Director-General) இருக்கும். நிகழ்ச்சிகளுக்கும் ஒளிபரப்புகளுக்குமான நிதி விளம்பரங்கள் மூலமும் அரச மானியங்கள் மூலமும் பெறப்படுகிறது. + + + + + + + + + +தோல்சரக்கு நுட்பியல் + +தோல் பதனிடல், சாயம் ஏற்றுதல், தோல் பொருட்களை உற்பத்தி செய்தல் (உடைகள், செருப்பு) போன்ற நுட்பங்களை தோல்சரக்கு நுட்பியல் ஆய்ந்து பயன்படுத்துகின்றது. + + + + + +சமுதாய தொழில்முனைவகம் + +சமுதாய தொழில்முனைவகம் (Social Enterprise) ஒரு புதிய வியாபார சமுதாய சேவை நிறுவன மாதிரியாகும். ஒரு குறிப்பிட்ட சமுதாய சேவையை மையப்படுத்தியும் பொருளாதார தளத்தில் தன்னிறைவுடனும் தாங்குதிறனுடனும் இயங்கும் அல்லது அப்படி இயங்க ம��யற்சிக்கும் தாபனங்கள் சமுதாய தொழில்முனைவகங்கள் ஆகும். இவை இரு குறிக்கோள்களை கொண்டு இயங்குகின்றன, ஒன்று சமூக சேவை, மற்றது அச்சமூக சேவைக்கு உதவும் ஒரு வியாபார உத்தி அல்லது சேவை. +சமுதாய தொழில்முனைவகங்கள் இலாபத்தையே ஒரு குறியாக கொண்டு இயங்கும் முதலாளித்துவ தாபனங்களில் இருந்து வேறுபடுத்தி அடையாளப்படுத்தலாம். முதலாளித்துவ வியாபர தாபனங்கள் என்ன சேவை, என்ன பொருட்கள் விற்கப்படுகின்றன எனபதைவிட இலாபம் ஈட்டுவதையே பிரதான இலக்காக கொண்டு இயங்குகின்றன. மாற்றாக சமுதாய தொழில்முனைவகங்கள் தெளிவான சமூக சேவையை முன்நிறுத்தியும், அதற்கு உதவும் அதனோடு சார்ந்த வியாபார சேவையை பக்கபலனாகவும் கொண்டு இயங்குகின்றன. +ஒரு நிலையில் சமுதாய தொழில்முனைவகம் முதலாளித்துவ வியாபர முறைமைக்கும் சமூக சேவை நிறுவனத்துக்குமான ஒரு கூட்டு கட்டமைப்பு எனலாம். + + + + + +நெகிழித் தொழினுட்பம் + +எளிதில் நெகிழக்கூடிய, உருவாக்க கூடிய பொருட்களான நெகிழி அல்லது பிளாத்திக்குப் பொருட்களின் வேதியியல் பண்புகளையும், அவை உற்பத்தி செய்யப்பட்ட கூடிய முறைகளையும் குழைவியல் தொழினுட்பம் (Plastics Technology) அல்லது நெகிழித் தொழினுட்பம் விளக்குகின்றது. + + + + + +எயார்பஸ் எ340 + +எயார்பஸ் எ340 - எயார்பஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் நான்கு எந்திரங்கள் கொண்ட ஒரு நீண்டதூர அகலவுடல் வர்த்தக பயனிகள் விமானம்|விமானமாகும். வடிவமைப்பில் இது இரண்டு எந்திரங்கள் கொண்ட எயார்பஸ் எ330யை ஒத்ததாகும். தொடக்கத்தில் இது பழைய தலைமுறை பொயிங் 747 விமானங்களுக்கு மாற்றிடான சிறியரக விமானமாக வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது வெளிவரும் எயார்பஸ் விமானங்கள், பொயிங் 777 ரக விமானங்களுடன் நெடும்தூர மற்றும் மிக நெடும்தூர பாதைகளில் போட்டியிடுகிறது. + +எயார்பஸ் எ340 பல உயர்-தொழில்நுட்ப பண்புக்கூறுகளை உள்ளடக்கியது. + +டிசெம்பர் 11, 2005 உள்ளபடி: + +இதுவரைக்கும் எயார்பஸ் எ340க்கு எந்த பாரிய உயிரிழப்பு ஏற்படக்கூடிய விபத்துகளுக்கும் உள்ளாகவில்லை, ஆனால் இரண்டு விமான பாதுகாப்பு|உடல் இழப்பு விபத்துகள் நிகழ்ந்துள்ளன. + +எயார்பஸ் எ340-200 + +எயார்பஸ் எ340-300 + +எயார்பஸ் எ340-500 + +எயார்பஸ் எ340-600 + +இவற்றையும் பார்க்க: திகதி, பாவனை பகுப்புப்படி விமானங்களின் பட்டியல்|விமானங்களின் பட்டியல் + + + + + +லதா மங்கேஷ்கர் + +லதா மங்கேஷ்கர் (Lata Mangeshkar, பி. செப்டெம்பர் 28, 1929) இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற ஒரு பாடகியாவார். இந்தியாவின் இசைக்குயில் எனப் போற்றப் படுபவர். இந்தியக் குடிமக்களுக்கு (civilian) வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது பெற்ற இரண்டு பாடகர்களில் இவர் ஒருவராவார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. நான்கு வயதில் பாடுவதற்கு ஆரம்பித்த இவர் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். + +திருமணம் செய்யாமலே இருந்து விட்டவர். பாடகி ஆஷா போஸ்லேயின் சகோதரி. + +முதன் முதலாக 1942 இல் "கிதி ஹசால்" என்ற மராத்திப் பாடலைப் பாடினார். 1948 இல் இவர் பாடிய மஜ்பூர் என்ற திரைப்படம் இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து வந்த படங்களான பர்சாத், அந்தாஸ், துலாரி, மகால் போன்ற படங்கள் இவருக்குப் பெரும் புகழை ஈட்டிக் கொடுத்தன. இவரது பாடல்கள் அந்தக் காலத்தில் தொடங்கி இன்றுவரை தனித்துவமான கவர்ச்சியோடு பலரையும் கவர்ந்து கொண்டிருக்கின்றன.1942 ஆம் ஆண்டு சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், முதன் முதலாக “கிதி ஹசால்” என்ற மராத்தி பாடலைப் பாடினார். அதே ஆண்டில் அவருடைய தந்தையும் இறந்து விடவே, குடும்பம் கடுமையான நிதி நெருக்கடிக்கு உள்ளானது. அந்த நேரத்தில் இசையமைப்பாளர் குலாம் ஹைதர் என்பவர் “மஜ்பூர்” என்ற திரைப்படத்தில் பாட வாய்ப்பு அளித்தார். இது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம். இதனை தொடர்ந்து வந்த ‘மகால்’, ‘அந்தாஸ்’, ‘பர்சாத்’, ‘துலாரி’ போன்ற படங்கள் இவருக்கு பெரும் புகழை ஈட்டிக்கொடுத்தது. + +1942 முதல் சினிமா துறையில் பாடத்தொடங்கிய அவர், அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நவ்ஷத், எஸ்.டி. பர்மன், சி. ராம்சந்த்ரா, ஹேமந்த் குமார், சலீம் சவ்திரி, கய்யாம், ரவி, சஜ்ஜத் ஹூசைன், ரோஷன், கல்யாண்ஜி, ஆனந்த்ஜி, வசந்த் தேசாய், சுதிர் பாட்கே, ஹன்ஸ்ராஜ் பெல், மதன் மோகன், மற்றும் உஷா கன்னா, ராகுல் தேவ் பர்மன், ராஜேஷ் ரோஷன், அனு மாலிக், ஆனந்த் மிலிந்த், ஷிவ் ஹரி, ராம் லட்சுமண், ஏ.ஆர் ரகுமான், இளையராஜா என கிட்டத்தட்ட எல்லா இசையமைப்பளர்களுடன் இணைந்து பாடியு���்ளார். + +1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்த “மதுமதி” என்ற திரைப்படத்தில், இவர் பாடிய “ஆஜா ரெ பரதேசி” என்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்த “பீஸ் சால் பாத்” திரைப்படத்தில் “கஹின் தீப் ஜலே கஹின் தில்” என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு, ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்த “பரிஜாய்” என்ற திரைப்படதில் இவர் பாடிய “பீதி நா பிட்டை” என்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல் “தேசிய விருதை” பெற்றுத்தந்தது. +1969 ஆம் ஆண்டு “பத்ம பூஷன் விருது” வழங்கப்பட்டது. +1972 ஆம் ஆண்டு பீட்டி நா பிடாய் ரெய்னா (பரிஜாய்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. +1974 ஆம் ஆண்டு உலகளவில் அதிக பாடல்களை பாடியதற்காக “கின்னஸ் புத்தகத்தில்” இடம் பிடித்தார். +1975 ஆம் ஆண்டு ரூதே ரூதே பியா (கோரா காகஸ்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. +1989 ஆம் ஆண்டு “தாதா சாஹேப் பால்கே விருது” வழங்கப்பட்டது. +1990 ஆம் ஆண்டு யாரா சீலி சீலி (லேகின்) என்ற பாடலுக்காக தேசிய விருது வழங்கப்பட்டது. +1993 ஆம் ஆண்டு பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது. +1996 ஆம் ஆண்டு ஸ்டார் ஸ்க்ரீன் வாழ்நாள் சாதனையாளர் விருது. +1997 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி விருது. +1999 ஆம் ஆண்டு “பத்ம விபூஷன் விருது” வழங்கப்பட்டது. +1999 ஆம் ஆண்டு என்.டி.ஆர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளருக்கான ஜீ சினிமா விருது. +2000 ஆம் ஆண்டு லண்டனிலுள்ள ஐ.ஐ.எப்.ஏ மூலம் வாழ்நாள் சாதனையாளர் விருது. +2001 ஆம் ஆண்டு ஹீரோ ஹோண்ட மற்றும் ஸ்டார்டஸ்ட் இதழ் மூலமாக சிறந்த பின்னனி பாடகருக்கான மில்லேனியம் விருது வழங்கப்பட்டது. +2001 ஆம் ஆண்டு “நூர்ஜஹான் விருது” வழங்கப்பட்டது. +2001 ஆம் ஆண்டு “மகாராஷ்டிரா ரத்னா விருது” வழங்கப்பட்டது. +2001 ஆம் ஆண்டு “பாரத் ரத்னா விருது” வழங்கப்பட்டது. +ஆஜா ரெ பர்தேசி (மதுமதி 1958), கஹி தீப் ஜலே கஹி தில் (பீஸ் சால் பாத் 1962), தும்ஹீ மேரே மந்திர் தும்ஹீ மெரி (க்ஹண்ட 1965), ஆப் முஜிகே அசே லக்னே லகே (ஜீனே கி ராஹ் 1969), தீதி தேரா தீவார் தீவானா (ஹம் ஆப்கே ஹே ஹைன் கோன் 1994) போன்ற பாடலுக்காக ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. +லதா மங்கேஷ்கர் அவர்கள், பெங்கால் திரைப்பட பத்திரிக்கையாளர் கழக விருதுகள் என மேலும் பல விருதுகளை பெற்று, இன்றளவும் புகழ் பெற்ற பாடகியாக விளங்கி வருகிறார். + + + + +