diff --git "a/train/AA_wiki_13.txt" "b/train/AA_wiki_13.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_13.txt" @@ -0,0 +1,2740 @@ + +வாசிங்டன், டி. சி. + +வாசிங்டன், டி. சி. (வாஷிங்டன் டி. சி; "Washington, D.C".), முழுப்பெயர் வாசிங்டன், கொலம்பியா மாவட்டம் (Washington, District of Columbia) ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப் பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது. அமெரிக்காவில் பல நகரங்கள் வாசிங்டன் என பெயரிடப்பட்டுள்ளதால் இதனைக் குறிக்க இந்த நகரத்தின் முந்தையப் பெயரான "கொலம்பியா மாவட்டம்" (District Of Columbia) என்பதன் சுருக்க வடிவமாக (DC - டிசி) என்ற ஒட்டுடன் அறியப்படுகிறது. ஜார்ஜ் வாசிங்டன் அவர்களே இந்நகருக்கான நிலத்தை தேர்வு செய்தார். + +வாசிங்டன் டி.சி பொட்டாமக் நதியின் கரையில் அமைந்துள்ளது. வர்ஜீனியா & மேரிலாந்து மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட நிலங்களை கொண்டு இந்நகரம் அமைக்கப்பட்டது. எனினும் 1847 ல் பொட்டாமக் நதிக்கு தென்புறம் உள்ள வெர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வெர்ஜீனியா மீளப்பெற்றுக்கொண்டது. அவை ஆர்லிங்டன் கவுண்டி & அலெக்சாண்டரியா நகரத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. +தற்போதுள்ள வாசிங்டன் டி.சி மெரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. மேற்கில் வெர்ஜீனியா & கிழக்கு, தெற்கு, வடக்கில் மெரிலாந்து மாநிலம் எல்லையாக உள்ளது. + +உலக வங்கி, அனைத்துலக நாணய நிதியம், அமெரிக்க நாடுகளின் அமைப்பு (OAS) போன்ற பன்னாட்டு அமைப்புகளின் தலைமையிடங்கள் இங்கு உள்ளன. + +17 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பியர் வரத்தொடங்கிய காலத்தில், தற்கால வாசிங்டனில் உள்ள அனகாஸ்தியா ஆற்றைச் சூழவுள்ள பகுதிகளில் அல்காங்குயிய இனத்தைச் சேர்ந்த நாகாட்ச்டாங் என அழைக்கப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் 18 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் அங்கு வாழ்ந்த பெரும்பாலான தாயக அமெரிக்க மக்கள் அங்கிருந்து வேறிடங்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டனர். 1751 ஆம் ஆண்டில் பொட்டோமாக் ஆற்றின் வடக்குக் கரையில் மேரிலாந்து மாகாணத்தினால் ஜார்ஜ்டவுன் நகரம் அமைக்கப்பட்டது. இந் நகரம் 40 ஆண்டுகளுக்குப் பின் புதிதாக அமைக்கப்பட்ட நடுவண் அரசப் பகுதிக்குள் உள்ளடக்கப்பட்டது. வர்ஜீனியாவின் அலெக்சாந்திரியா நகரமும் 1749 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. + +1788 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி வெளியான "ஃபெடரலிஸ்ட் எண்.43" என்னும் கட்டுரையில், நடுவண் அரசுக்குரிய பகுதியொன்றின் தேவை பற்றி ஜேம்ஸ் மடிசன் விளக்கினார். நடுவண் அரசைப் பேணுவதற்கும், அதன் பாதுகாப்புக்கும் தேசியத் தலை நகரம் மாநிலங்களிலிருந்து தனித்து இருக்கவேண்டும் என அவர் வாதிட்டார். 1783 ஆம் ஆண்டில் கோபமடைந்த போர்வீரர்களின் குழுவொன்று பிலடெல்பியாவில் இருந்த காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தியமை, நடுவண் அரசு தனது பாதுகாப்பைத் தானே கவனித்துக் கொள்ள வேண்டிய அவசியத்தை எடுத்துக் காட்டியது . இதனால், நடுவண் அரசுக்குரிய தலைநகரப் பகுதியொன்றை நிறுவுவதற்கான அதிகாரம், ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 1 பிரிவு 8 இன் கீழ் வழங்கப்பட்டது. தொடர்புள்ள மாநிலங்களினதும், காங்கிரசினதும் சம்மதத்துடன் உருவாக்கப்படும் 10 மைல் சதுர அளவுக்கு மேற்படாத ஒரு பகுதி ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் இருப்பிடமாக இருக்கும் என அது கூறுகிறது. எனினும், புதிய தலைநகரத்தின் அமைவிடம் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. 1790 இன் இணக்கம் எனப் பின்னர் அழைக்கப்பட்ட ஏற்பாடு ஒன்றின்படி மடிசன், அலெக்சாண்டர் ஹமில்ட்டன், தாமஸ் ஜெபர்சன் ஆகியோர், புதிய தேசியத் தலைநகரம் தென்பகுதியில் அமைய வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில், போர்ச் செலவுகளை மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் என இணக்கப்பாட்டுக்கு வந்தனர். +1790 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி, நடுவண் அரசுக்கான அமைவிடத்தைத் தெரிவு செய்வது தொடர்பான சட்டமூலம் ஒன்றின்படி, புதிய நிரந்தரமான தலைநகரமொன்றை போட்டோமாக் ஆற்றுப் பகுதியில் அமைப்பதெனவும், சரியான இடம் சனாதிபதி வாசிங்டனால் தெரிவுசெய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டபடி தொடக்கத்தில் தலைநகரப் பகுதி, ஒரு பக்கம் 10 மைல் நீளம் கொண்ட சதுர வடிவினதாக இருந்தது. 1791 - 92 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆண்ட்ரூ எல்லிகொட் என்பவரும் அவரது உதவியாளர்களும் மேரிலாந்து, வர்ஜீனியா என்பவற்றை உள்ளடக்கித் தலைநகரப் பகுதிக்கான இடத்தை அளந்து எல்லை குறித்தனர். இவர்கள் எல்லையில் ஒரு மைலுக்கு ஒன்றாக எல்லைக் கற்களை நட்டனர். இவற்றில் பல இன்றும் காணப்படுகின்றன. புதிய நகரம் போட்டோமாக்கின் வட கரையில், ஏற்கெனவே இருந்த குடியேற்றமான ஜார்ஜ்டவுனுக்குக�� கிழக்கே அமைக்கப்பட்டது. 1791 ஆம் ஆண்டு செப்டெம்பர் 9 ஆம் நாள் தலைநகரத்துக்கு, ஜார்ஜ் வாசிங்டனுக்கு மதிப்பளிப்பதற்காக அவரது பெயர் இடப்பட்டது. தலைநகரப் பகுதிக்கு கொலம்பியா என்ற பெயர் கொடுக்கப்பட்டது. புதிய தலைநகரில் அமெரிக்க காங்கிரசின் முதல் அமர்வு 1800 நவம்பர் 17 ஆம் நாள் இடம்பெற்றது. + +1801 ஆம் ஆண்டின் சட்டமூலம் ஒன்றின்படி, வாசிங்டன், ஜார்ஜ்டவுன், அலெக்சாந்திரியா ஆகிய நகரங்களை உள்ளடக்கிய தலைநகரப் பகுதி முழுவதும் காங்கிரசின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந் நகரங்களுக்குள் அடக்கப்படாத தலைநகரப் பகுதியின் எஞ்சிய பகுதி இரண்டு கவுண்டிகளாக ஒழுங்கமைக்கப்பட்டன. போட்டோமாக் ஆற்றின் வட கரைப் பகுதிகள் வாசிங்டன் கவுண்டியாகவும், அவ்வாற்றின் தென்கரைப் பகுதிகள் அலெக்சாந்திரியா கவுண்டியாகவும் அமைந்தன. +தற்போது டொரோண்டோ எனப்படும் அப்போதைய யோர்க் நகரம் எரிக்கப்பட்டதற்கு எதிர் நடவடிக்கையாக 1814 ஆகஸ்ட் 24-25 ஆம் தேதிகளில், பிரித்தானியப் படைகள், வாசிங்டன் எரிப்பு என அழைக்கபட்ட படையெடுப்பு மூலம் தலைநகரத்தைக் கைப்பற்றி எரித்தன. வெள்ளை மாளிகை உட்பட்ட பல அரசாங்கக் கட்டிடங்கள் எரிந்து அழிந்தன. பெரும்பாலான அரச கட்டிடங்கள் உடனடியாகவே திருத்தப்பட்டன. எனினும் அப்போது கட்டட வேலைபாடுகளில் இருந்த காங்கிரசு கட்டடம் 1868 வரை கட்டி முடிக்கப்படாமல் இருந்தது . + +1830களில் செசப்பீக் ஓஹியோ கால்வாயை அண்டி, உள்நாட்டில் அமைந்திருந்த ஜார்ஜ்டவுன் துறைமுகத்தினால் ஏற்பட்ட கடுமையான போட்டி காரணமாகத் தென்பகுதி கவுண்டியான அலெக்சாந்திரியா கவுண்டி பொருளாதார வீழ்ச்சி கண்டது. அக்காலத்தில் அலெக்சாந்திரியா அமெரிக்க அடிமை வணிகத்துக்கான முக்கிய சந்தையாக இருந்தது, ஆனால் அடிமைமுறை ஒழிப்புக்காக வாதிடுபவர்கள் நாட்டின் தலைநகரில் அடிமைமுறையை ஒழித்துவிட முயல்வதாக வதந்திகள் உலாவின. லாபமீட்டிவந்த அடிமை வணிகம் நிறுத்தப்படுவதைத் தடுப்பதைப் பகுதி நோக்கமாகக் கொண்டு அலெக்சாந்திரியாவை வர்ஜீனியாவுக்கு மீண்டும் அளிக்குமாறு கோரி பொது வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. 1846 ஜூலை 9 ஆம் தேதி போட்டோமாக் ஆற்றுக்குத் தெற்கேயிருந்த தலைநகரப் பகுதி முழுவதையும் வர்ஜீனியா மாநிலத்துக்கே திருப்பிக் கொடுப்பதை காங்கிர��் ஏற்றுக்கொண்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தலைநகரப் பகுதியில் அடிமை வணிகம் ஒழிக்கப்பட்டது. எனினும் அடிமை முறை ஒழிக்கப்படவில்லை. + +1861 ஆம் ஆண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போர் தொடங்கும்வரை வாசிங்டன் ஒரு சிறிய நகரமாகவே இருந்தது. போர் காரணமாக நடுவண் அரசு விரிவு பெற்றபோது நகரின் மக்கள்தொகை கணிசமாக அதிகரித்தது. அத்துடன் விடுதலையான அடிமைகளும் பெருமளவில் நகருக்குள் வந்தனர். 1870 ஆம் ஆண்டளவில், தலைநகரப் பகுதியின் மக்கள்தொகை சுமார் 132,000 ஐ எட்டியது . நகரம் விரிவடைந்தபோதும், அழுக்கான தெருக்களும், அடிப்படை நலவியல் வசதிகள் இன்மையும் நகரில் இருந்தன. நிலைமை படுமோசமாக இருந்ததால் சில காங்கிரஸ் உறுப்பினர்கள் தலைநகரை வேறிடத்துக்கு மாற்றும் எண்ணத்தையும் முன்வைத்தனர் + +1871ல் நிறைவேற்றிய சட்டமூலம் ஒன்றின்மூலம் தலைநகரப் பகுதி முழுவதற்குமான அரசு ஒன்றை காங்கிரஸ் உருவாக்கியது. இச் சட்ட மூலம், வாசிங்டன் நகரம், ஜார்ஜ்டவுண், வாசிங்டன் கவுண்டி என்பவற்றை உள்ளடக்கி ஒரு மாநகர சபையை ஏற்படுத்தியது. இது அதிகாரபூர்வமாகக் கொலம்பியா மாவட்டம் என அழைக்கப்பட்டது . 1871 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வாசிங்டன் என்னும் பெயர் சட்டப்படி இல்லாது போய்விட்டாலும், இப் பெயர் தொடர்ந்தும் பயன்பாட்டில் இருந்ததுடன், முழு நகரமுமே வாசிங்டன் டி. சி. என அழைக்கப்பட்டது. 1871 ஆம் ஆண்டின் சட்டமூலத்தின் உதவியுடன், பொது வேலைகள் சபை ஒன்றை நிறுவி அதனிடம், நகரை நவீனமயப்படுத்தும் பொறுப்பையும் ஒப்படைத்தது. 1873 ஆம் ஆண்டில் சனாதிபதி கிராண்ட் மேற்படி சபையின் செல்வாக்கு மிக்க உறுப்பினரான அலெக்சாண்டர் ஷெப்பேர்ட் என்பரைப் புதிதாக உருவாக்கப்பட்ட ஆளுனராகத் தெரிவு செய்தார். அந்த ஆண்டில் ஷெப்பேர்ட் 20 மில்லியன் டாலர்களைப் பொது வேலைகளுக்காகச் செலவு செய்தார். இது வாசிங்டனை நவீனமயப் படுத்தினாலும் அதனை பொருளாதார முறிவு நிலைக்குத் தள்ளியது. 1874ல் ஆளுனர் பதவி ஒழிக்கப்பட்டு நகரம் காங்கிரசின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. 1901 ஆம் ஆண்டில் மக்மிலான் திட்டம் (McMillan Plan) நடைமுறைக்கு வரும்வரை வரை நகரைப் புதுப்பிக்கும் வேறெந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. + +1930ல் பெரும் பொருளாதாரத் தொய்வு ஏற்படும் வரை இம் மாவட்டத்தின் மக்கள்தொகை ஒப்பீட்டளவில் நிலையாக இருந்தது. 1933 - 1936 காலத்தில் அதிபர் பிராங்க்லின் டி. ரூஸ்வெல்ட் நடைமுறைக்குக் கொண்டுவந்த பல பொருளாதாரத் திட்டங்களால் வாசிங்டனில் அதிகார அமைப்பு விரிவடைந்தது. இரண்டாம் உலகப் போர் அரசின் நடவடிக்கைகளை மேலும் விரிவாக்கியது. இவற்றினால் 1950 ஆம் ஆண்டளவில் நடுவண் அரசின் அலுவலர்களின் எண்ணிக்கை தலைநகரில் பெருமளவு அதிகரித்தது. மாவட்டத்தின் மக்கள்தொகை 802,178 ஆனது. + +1968 ஏப்ரல் 4 ஆம் தேதி மக்கள் உரிமைத் தலைவரான இளைய மார்ட்டின் லூதர் கிங் சுட்டுக் கொல்லப்பட்டபோது, மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. இவ் வன்முறை மூன்று நாட்களுக்கு நீடித்தது. பல வணிக நிறுவனங்களும், கட்டிடங்களும் எரிக்கப்பட்டன. இவற்றுட் பல 1990கள் வரை திருத்தப்படாமல் அழிபாடுகளாகவே இருந்தன. + +1973 ஆம் ஆண்டில் காங்கிரஸ், கொலம்பியா மாவட்ட உள்ளாட்சிச் சட்டமூலம் என்னும் சட்டமூலத்தை நிறைவேற்றியது. இதன்படி இம்மாவட்டத்துக்கு ஒரு தெரிவு செய்யப்பட்ட மேயர் பதவி ஏற்பட்டதுடன் ஒரு நகர அவையும் அமைக்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டில் வால்ட்டர் வாசிங்டன் என்பவர் நகரின் முதல் மேயராகவும், முதல் கறுப்பு இன மேயராகவும் ஆனார். எனினும், தொடர்ந்து வந்த நகராட்சி நிர்வாகங்களில் மேலாண்மைக் குறைபாடுகளும், வீண் செலவுகளும் மிகுந்திருந்ததாகக் குறை காணப்பட்டது. 1995ல், கொலம்பியா மாவட்ட நிதிக் கட்டுப்பாட்டுச் சபையை நிறுவிய காங்கிரஸ் மாநகராட்சியின் செலவுகளை மேற்பார்வையிடவும், நகரை மறுசீரமைக்கவும் வழி செய்தது. 2001 ஆம் ஆண்டில் மாவட்ட நிர்வாகம் தனது நிதி தொடர்பான கட்டுப்பாட்டை மீளவும் பெற்றதுடன் மேற்பார்வைச் சபையின் நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டன. + +இதன் மொத்த பரப்பளவு 68.3 சதுர மைல்கள் (177 கிமீ) இதில் 61.4 சதுர மைல்கள் நிலத்திலும் 6.9 சதுர மைல்கள் நீரிலும் அமைந்துள்ளது . தற்போதய வாசிங்டன் டி.சி மேரிலாந்து மாநிலத்தில் இருந்து பெறப்பட்ட நிலத்திலேயே உள்ளது. 1847 ல் பொட்டாமக் ஆற்றுக்கு தென்புறம் உள்ள வர்ஜீனியா சார்ந்த பகுதிகளை வர்ஜீனியா மீளப்பெற்றுக்கொண்டது. தென்கிழக்கு, வடகிழக்கு, வடமேற்கு பகுதிகள் மேரிலாந்து மாநிலத்தாலும் தென்மேற்கு பகுதி வர்ஜீனியா மாநிலத்தாலும் சூழப்பட்டுள்ளது. வாசிங்டன் மூன்று இயற்கையாக அமைந்த நீர்வழிகளை கொண்டுள்ளது. அவை பொட்டமாக் ஆறு, அதன் கிளைகளான அனகோச���டிகா ஆறு மற்றும் ராக் கிரீக் என அழைக்கப்படும் ராக் சிறுகுடாவும் ஆகும் . + +பலரும் நினைப்பது போல் இந்நகரம் சதுப்புநிலத்தை மீளப்பெற்று கட்டப்பட்டதல்ல . ஆறுகள் மற்றும் ஓடைகளுக்கு இடைபட்ட பகுதி ஈரநிலமாக இருந்தபோதிலும் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் விவசாய நிலங்களும் மரங்கள் அடர்ந்த மலைப்பகுதிகளும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து 409 அடி (125 மீ) உயரத்திலுள்ள "பாய்ண்ட் ரேனோ" கொலம்பியா மாவட்டத்தின் (வாசிங்டன் டி சி) உயரமான பகுதியாகும். இது "டென்லேடவுன்" பகுதியிலுள்ள "போர்ட் ரேனோ" பூங்காவுக்கு அருகில் உள்ளது . தாழ்வான பகுதி கடல் மட்ட அளவுள்ள பொட்டாமக் ஆறு ஆகும். வாசிங்டன் நகரின் புவிமையம் 4வது மற்றும் L தெருக்களின் சந்திப்புக்கு அருகில் அமைந்துள்ளது . + +தோராயமாக 19.4% வாசிங்டன், டி. சி யின் நிலம் புல்தரைக்காடு ஆகும். அதிக மக்கள் அடர்த்தி உடைய நகரங்களில் நியுயார்க் நகரம் இதே அளவு விழுக்காடு புல்தரைக்காடு கொண்டதாகும். ஐக்கிய மாநில தேசிய பூங்கா சேவையமைப்பு வாசிங்டன், டி. சி யின் பெரும்பாலான இயற்கை இருப்பிடங்களை கவனித்துக்கொள்கிறது. ராக் கிரீக் பூங்கா, செசபிக் மற்றும் ஒகியோ கால்வாய் தேசிய வரலாற்று பூங்கா, தியோடர் ரூச்வெல்ட் தீவு, அனகோச்டியா பூங்கா, நேசனல் மால் ஆகியவையும் அவற்றில் அடங்கும். பொட்டாமக் ஆற்றில் வாசிங்டன் நகரின் வடமேற்கில் கிரேட் அருவி உள்ளது. 19ம் நூற்றாண்டில் சார்ச் டவுனில் தொடங்கும் செசபிக் மற்றும் ஒகியோ கால்வாய் அருவியை தவிர்த்து படகு போக்குவரத்து நடைபெற பயன்பட்டது. + +வாசிங்டன், டி. சி ஈரப்பதமுடைய கீழ்வெப்பமண்டல காலநிலையை கொண்டதாகும். வசந்த காலமும் இலையுதிர் காலமும் மிதமான வெப்பத்தையும் குறைந்த ஈரப்பதமும் கொண்டவை. குளிர் காலத்தில் வெப்பநிலையானது குறைவாக நீடித்து இருக்கும். ஆண்டு சராசரி பனிப்பொழிவு 16.6 அங்குலம் ஆகும். டிசம்பர் நடுவிலிருந்து பிப்ரவரி நடு வரை சராசரி குளிர் கால குறைந்த வெப்பநிலை 30 °F (-1 °C) ஆகும். +நான்கிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை பனிப்புயலானது வாசிங்டன் பகுதியை தாக்கும். கடும் மழை நார்ஈச்டர் என்று அழைக்கப்படும். இது பெருங்காற்று, பெரும்மழை மற்றும் அவ்வப்போது பனிப்பொழிவும் கொண்டது. இந்த கடும்மழையானது அமெரிக்காவின் பெரும்பாலான கிழக்கு கடற்கரை பக��திகளை தாக்கும். கோடை காலத்தில் மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இருக்கும். சூலை ஆகஸ்ட் மாதங்களில் இதன் வெப்பம் சராசரியாக 80 °F அளவில் இருக்கும். மிகுதியான வெப்பமும் ஈரப்பதமும் இணைவதால் இங்கு அடிக்கடி இடிமுழக்கத்துடன் கூடிய மழை பெய்யும். இந்த இடிமுழக்கம் சில நேரங்களில் சூறாவளியை இப்பகுதியில் உருவாக்கும். எப்பொழுதாவது புயல் இப்பகுதியை கடக்கும். எனினும் வாசிங்டன் கடற்கரையை ஒட்டி இல்லாமல் உள் இருப்பதால் புயல் வாசிங்டனை அடையும் முன்னர் வலு இழந்து விடும். எனினும் பொட்டாமக் ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு சொத்துகளுக்கு சேதாரம் விளைவித்துவிடும், குறிப்பாக ஜார்ஜ்டவுன் பகுதி அதிகமாக பாதிக்கப்படும் . + +அதிகபட்ச வெப்பமானது 106 °F (41 °C), இது சூலை 20, 1930 & ஆகஸ்ட் 6, 1918 இல் பதிவு செய்யப்பட்டது. குறைந்தபட்ச வெப்பமானது −15 °F (−26.1 °C), இது பிப்ரவரி 11, 1899 ல் பதிவு செய்யப்பட்டது. ஓர்ஆண்டில் சராசரியாக 36.7 நாட்கள் வெப்பம் 90 °F (32 °C) யை விட அதிகமாகவும், 64.4 இரவுகள் வெப்பம் உறைநிலையை (32 °F (0 °C)) விட குறைவாகவும் இருக்கும். + +வாசிங்டன், டி. சி திட்டமிட்டுக் கட்டப்பட்ட நகராகும். பிரெஞ்காரரும் கட்டடக்கலை நிபுணரும், பொறியாளரும் நகரவடிவமைப்பாளருமான சார்லஸ் எல்ஃபேன்ட் (Charles L’Enfant) வாசிங்டன் நகர வடிவமைப்பில் பெரும்பாங்காற்றியவர். அமெரிக்க புரட்சியின் போது இங்கு இராணுவ பொறியாளராக மேஜர் செனரல் லெஃபாயட்டெ (Lafayette) உடன் வந்தார். 1971 ல் அதிபர் வாசிங்டன் புதிய தலைநகருக்கான திட்ட வரைபடம் உருவாக்குமாறு எல்ஃபேன்ட் அவர்களை நியமித்தார். இவர் பரோகியு பாணியில் மாதிரியை அமைத்தார். அதன்படி அகன்ற சாலைகள் வட்டம் மற்றும் செவ்வக பகுதியில் இருந்து பிரிந்து செல்லும்.. திட்டமிடுதலில் அணுக்க நிருவாக முறையை எல்ஃபேன்ட் வலியுறுத்தியதால், வாசிங்டன் அவரை இப்பொறுப்பிலிருந்து மார்ச், 1972 ல் நீக்கினார். எல்ஃபேன்டுடன் பணியாற்றிய ஆண்ரூ எலிகாட் என்பவரை இத்திட்டத்தை முடிக்க நியமித்தார். மூல திட்டத்திலிருந்து சிலவற்றை எலிகாட் மாற்றினாலும் வாசிங்டன் நகர வடிவமைப்புக்கான பெருமை எல்ஃபேன்ட் அவர்களையே சாரும் . வாசிங்டன் நகரமானது தற்போதய புளோரிடா நிழற்சாலையை வடக்கிலும், ராக் கிரீக்கை மேற்கிலும் அனகோச்டிகா ஆற்றை கிழக்கிலும் எல்லைகளாக கொண்டிருந்தது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செனட்டர் ஜேம்சு மெக்மில்லன் தலைமையில் கூட்டு ஆணையம் வாசிங்டன் நகரை அழகுபடுத்த அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி சேரிகள் அப்புறப்படுத்தப்பட்டன, புதிய நடுவண் அரசு கட்டடங்களும், நினைவுச்சின்னங்களும் கட்டப்பட்டன, நகர பூங்கா அமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. இதற்காக பணி அமர்த்தப்பட்ட வல்லுனர்கள் நகரின் மூல வரைபடத்தில் எந்த மாறுதலும் செய்யவில்லை. இவர்கள் லஃபாண்ட் அவர்களின் வடிவமைப்பை முழுமை செய்தவர்களாக கருதப்படுகிறார்கள். + +1899 ஆம் ஆண்டு 12மாடிகள் கொண்ட கெய்ரோ குடியிறுப்பு வளாகம் கட்டப்பட்ட பின் நகரின் எந்த கட்டடமும் காங்கிரசு கூடும் கேபிடல் கட்டடத்தை விட உயரமாக இருக்கக்கூடாது என்று சட்டமியற்றப்பட்டது. 1910-ல் இந்த சட்டம் கட்டடங்களின் உயரம் அடுத்துள்ள தெருக்களின் அகலத்தைவிட 20 அடி கூடுதலாக இருக்கலாம் என மாற்றப்பட்டது. இதனால் இன்றும் வாசிங்டன் நினைவகமே உயரமானதாக உள்ளது. இந்த உயர கட்டுப்பாடில் இருந்து தப்பிக்க உயரமான கட்டடங்கள் விர்ஜீனியாவில் ரோசலின் பகுதியில் கட்டப்படுகின்றன. + +வாசிங்டன் டிசி சமமற்ற நான்கு பாகங்களாக (கால்வட்டம்) பிரிக்கப்பட்டுள்ளது. அவை வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.இந்த கால்வட்டத்தின் எல்லைகள் அமெரிக்க கேபிடல் கட்டடத்தை அச்சாக கொண்டு தொடங்குகின்றன . அனைத்து சாலைகளும் கால்வட்டத்தின் சுருக்க குறியீட்டை கொண்டுள்ளதால் அவற்றின் இருப்பிடத்தை தெளிவாக அறியலாம். நகரின் பெரும்பகுதி தெருக்கள் கம்பிவலை ஒழுங்கமைப்பில் அமைந்துள்ளது. கிழக்கு-மேற்கு தெருக்கள் எழுத்துக்களாலும் (எகா: ஐ தெரு வகி), வடக்கு-தெற்கு தெருக்கள் எண்களாலும் (எகா: 4வது தெரு தெமே) குறிப்பிடப்படுகின்றன. போக்குவரத்து வட்டங்களில் இருந்து தொடங்கும் நிழற்சாலைகளுக்கு மாநிலங்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 50மாநிலங்கள், போர்ட்ட ரிகோ பெயர்களும் நிழற்சாலைகளில் இடம்பெற்றுள்ளன.பென்சில்வேனியா நிழற்சாலை வெள்ளை மாளிகை, அமெரிக்க கேபிடல், கே தெரு போன்றவற்றை இணைக்கிறது. கே தெருவில் பல ஆதரவு திரட்டும் குழுக்களுக்கான அலுவலகங்கள் உள்ளன. வாசிங்டனில் 174வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன. அவற்றில் 59 மாசேசூசெட்டசு நிழற்சாலையில் உள்ளன. + +2008ல் கொலம்பியா மாவட்டத்தில் 591,833 மக்கள் இருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை கணித்துள்ளது. வேலை நாட்களில் புறநகர்களில் இருந்து இங்கு பயணப்படுபவர்களின் எண்ணிக்கையால் மாவட்டத்தின் மக்கள்தொகை 2005ல் 71.8% அதிகரித்திருப்பதாக கணக்கிட்டுள்ளார்கள். பகல் வேலைகளில் இதன் மக்கள்தொகை ஒரு மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்றும் கணித்துள்ளார்கள். அருகிலுள்ள மேரிலாந்து, வர்ஜீனியா கவுண்டிகளை இணைத்த வாசிங்டன் பெருநகர பகுதியின் மக்கள் தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும், இது ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது பெரியதாகும். + +2007ல் மக்கள்தொகையில் 55.6% கறுப்பு இன மக்களும், 36.3% வெள்ளை இன மக்களும், 8.3% எசுப்பானிய (எல்லா இனமும்) மக்களும், 5% மற்றவர்களும் (அமெரிக்க பூர்வகுடிகள், அலாசுக்கா மக்கள், அவாய் மக்கள், பசிபிக் தீவு மக்கள் இதில் அடங்குவர்) 3.1% ஆசிய இன மக்களும், 1.6% கலப்பு இன மக்களும் வாழ்வதாக கணக்கிடப்பட்டனர். இங்கு 74,000 மக்கள் வெளிநாட்டிலிருந்து குடியேறியவர்களாக கணிக்கப்பட்டுள்ளார்கள் . + +வாசிங்டன் நகரின் உருவாக்கம் முதலே இங்கு குறிப்பிடத்தகுந்த அளவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வசித்து வருகிறார்கள். தனித்துவமாக மற்ற நகரங்களை விட இங்கு அதிக அளவு விழுக்காடு ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் வசிக்கின்றனர். பின் சீராக கறுப்பு இன மக்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது இதற்கு முதன்மையான காரணம் பலர் வாசிங்டனின் புறநகரங்களில் குடியேறியது . மேலும் பல வயதான மக்கள் குடும்பத் தொடர்பு மற்றும் குறைவான வீட்டுவிலை காரணமாக தென் மாநிலங்களுக்கு குடிபெயர்ந்ததும் ஆகும் . அதேவேளை வெள்ளை இன மக்களின் எண்ணிக்கை சீராக உயர்ந்தது . ஏழை கறுப்பின மக்களின் வெளியேற்றமும் அந்த பகுதிகளில் குடியேறிய வசதி படைத்த வெள்ளை இன மக்களின் எண்ணிக்கையும் இதற்கு காரணமாகும். 2000லிருந்து 7.3% குறைந்த கறுப்பினத்தவரின் தொகையும் 17.8% கூடிய வெள்ளை இனத்தவரின் தொகையும் இதற்கு சான்றாகும். + +2000ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 33,000 வயது வந்தோர் ஓரின சேர்க்கை உள்ளோர் என தெரிவித்துள்ளனர். இது நகரின் வயது வந்தோர் தொகையில் 8.1% ஆகும். ஒரினச்சேர்க்கை உடையோர் அதிகமிருந்தாலும் இங்கு ஒரினச்சேர்க்கை மணம் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டதில்லை. +2000ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி பாதிக்கு மேற்பட்டவர்கள�� கிறுத்துவ சமயத்தை பின்பற்றுகிறார்கள். 21% கத்தோலிக பிரிவையும் 9.1% அமெரிக்க பாப்டிசுட் பிரிவையும் 6.8% தென் பாப்டிசுட் பிரிவையும், 1.3% கிழக்கு பழமைவாத பிரிவையும் 13% மக்கள் மற்ற பிரிவுகளையும் பின்பற்றுகின்றனர். 10.3% மக்கள் இசுலாத்தையும் 4.5% மக்கள் யூத மதத்தையும் 26.8% மக்கள் மற்ற மதங்களை பின்பற்றுவோராகவும் அல்லது எந்த மதத்தையும் பின்பற்றாதவார்களாகவும் உள்ளனர். + +வன்முறை குற்றங்கள் மலிந்து இருந்த 1990ம் ஆண்டுகளில் வாசிங்டன் டிசி ஐக்கிய அமெரிக்காவின் கொலைக்குற்றங்களின் தலைநகரம் என அழைக்கப்பட்டது . உச்சமாக 1991ல் 482 கொலைக்குற்றங்கள் நடந்தது. 1990களின் பின் பகுதியில் இவை வெகுவாக குறைந்தன. 2006ல் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை 169ஆக குறைந்தது . 1995லிருந்து 2007வரையான காலகட்டத்தில் வன்முறை குற்றங்களின் எண்ணிக்கை 47% ஆக குறைந்தது. இதே காலகட்டத்தில் திருட்டு மற்றும் கொள்ளை போன்ற குற்றங்கள் 48% குறைந்தது. + +மற்ற பெரிய நகரங்களை போல குற்றங்கள் போதை மருந்து மற்றும் போக்கிரி குழுக்கள் நிறைந்த பகுதிகளில் அதிக அளவில் இடம்பெற்றன. வசதியுள்ளவர்கள் வாழும் வடமேற்கு வாசிங்டன் பகுதியில் குற்றங்கள் குறைவாக இடம்பெற்றன. ஆனால் கிழக்கே போக போக குற்றங்களின் எண்ணிக்கை அதிகமாகியது. ஒரு காலத்தில் வன்முறைக்குற்றங்கள் மலிந்திருந்த கொலம்பியா ஹைட்ஸ் , டூபாண்ட் சர்க்கிள் போன்ற பகுதிகளில் வசதிமிக்கவர்கள் குடியேறியதால் அப்பகுதி பாதுகாப்பானதாகவும் பரபரப்பானதாகவும் மாறியது. இதன் காரணமாக வாசிங்டன் டிசி நகரின் குற்றங்கள் மேலும் கிழக்கே மேரிலாந்தின் பிரின்ஸ் வில்லியம் கவுண்டி பக்கமாக நகர்ந்தன. + +2006 ஜூன் 26 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் கொலம்பியா மாவட்டத்துக்கும் கேளருக்கும் நடந்த வழக்கில் நகரின் 1976 கைத்துப்பாக்கி மீதான தடை துப்பாக்கி வைத்திருக்கும் உரிமை தொடர்பான 2 ஆவது சட்டதிருத்துக்கு எதிரானது என தீர்ப்பாகியது . இருந்த போதிலும் அத்தீர்ப்பு எல்லா வகையான துப்பாக்கி கட்டுப்பாடுகளையும் தடை செய்யவில்லை + +வாசிங்டன் டிசி வளரும் பன்முக தன்மை கொண்ட பொருளாதாரத்தை கொண்டது. 2008ல் இதன் மொத்த உற்பத்தி 97.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் . 50 அமெரிக்க மாநிலங்களை ஒப்பிடும் போது இதன் நிலை 35 வது ஆகும் . 2008ல் வாசிங்டன் டிசியின் வேலைவாய்ப்புகளில் அமெரிக்க நடுவண் அரசினுடையது 27% ஆகும் . பொருளாதார பின்னடைவு காலங்களில் நடுவன் அரசு இயங்கும் என்பதால் தேசிய பொருளாதார சரிவு வாசிங்டன் டிசியை தாக்காது என்று நம்பப்பட்டது . எனினும் 2007ல் கணக்கின் படி அமெரிக்க அரசு பணியாளர்களில், நடுவன் அரசின் 14% மட்டுமே இங்கு வசிக்கின்றார்கள் . சட்ட நிறுவனங்கள், படைத்துறை மற்றும் பொதுத்துறை ஒப்பந்ததாரர்கள், லாபநோக்கில்லா அமைப்புகள், தொழிற் சங்கங்கள், தொழில் சார் வணிக குழுக்கள், அரசின் ஆதரவு பெற்று தரும் நிறுவனங்கள் போன்றவற்றின் தலைமையகங்கள் நடுவன் அரசுக்கு அருகாமையில் வாசிங்டன் டிசி மற்றும் அதன் சுற்றுபுறங்களில் அமைந்துள்ளன.. +நிதி, கல்வி, அறிவியல் ஆராய்ச்சி போன்ற அரசாங்கத்துடன் நேரடி தொடர்பில்லாத தொழில்களும் இங்கு வளர்ச்சியடைந்து வருகின்றன. ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம், ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம், ஹோவர்ட் பல்கலைக்கழகம், வாசிங்டன் மருத்துவமனை மையம், ஃவேன்னி மே ஆகியவை அதிக அளவு வேலைவாய்ப்புகளை வழங்கும் 5 நிறுவனங்களாகும் . + +2006ல் வாசிங்டன் டிசி மக்களின் தனி நபர் ஆண்டு வருமானம் $55,755 அமெரிக்க டாலராகும், இது மற்ற 50 மாநிலங்களையும் விட அதிகமாகும் . எனினும் 2005 ஆண்டு 19% மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர், இது மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். மிசிசிப்பி மாநிலத்தில் மட்டுமே வாசிங்டன் டிசியை விட அதிக மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் இருந்தனர். இது நகர மக்களிடையே உள்ள பொருளாதார ஏற்றதாழ்வை காட்டுகிறது. + +தேசிய மால் என்பது நகரின் மையத்தில் அமைந்த பரந்த திறந்த வெளி பூங்காவாகும். மாலின் மையத்தில் வாசிங்டன் நினைவகம் அமைந்துள்ளது. மேலும் இதில் லிங்கன் நினைவகம், தேசிய இரண்டாம் உலகப்போர் நினைவகம், கொரிய போர் வீரர்கள் நினைவகம், வியட்னாம் வீரர்கள் நினைவகம், ஆல்பரட் ஐன்சுட்டின் நினைவகம் ஆகியவை அமைந்துள்ளன. தேசிய பெட்டகத்தில் அமெரிக்க வரவாற்றை சார்ந்த ஆயிரக்கனக்கான ஆவணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. விடுதலை சாற்றுதல், ஐக்கிய மாநிலங்கள் அரசியலமைப்பு, தனி நபர் உரிமை போன்ற பல புகழ்பெற்ற ஆவணங்கள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. + +மாலுக்கு தென் புறத்தில் டைடல் பேசின் அமைந்துள்ளது. டைடல் பேசினின் கரையை ஒட்டி யப்பான் நாடு அன்பளிப்பாக வழங்கிய செர்ரி மரங்கள் நடப்பட்டுள்ளன. பிராங்களின் ரூசுவெல்ட் நினைவகம், ஜெப்பர்சன் நினைவகம், கொலம்பியா மாவட்ட போர் நினைவகம் ஆகியவை டைடல் பேசினை சுற்றி அமைந்துள்ளன. + +சுமித்சோனியன் நிறுவனம் கல்வி சார் நிறுவனமாக காங்கிரசால் 1849 தோற்றுவிக்கப்பட்டது. இது இந்நகரின் பெரும்பாலான அரசாங்க அருங்காட்சியகங்களையும் காட்சியகங்களையும் நிர்வகிக்கிறது. ஐக்கிய அமெரிக்க அரசாங்கம் இந்நிறுவனத்துக்கு பகுதியளவு நிதியுதவி அளிப்பதால் இதன் அருங்காட்சியகங்கள் நுழைவு கட்டணம் இல்லாமல் பார்வையாளர்களை அனுமதிக்கின்றன . தேசிய மாலை சுற்றி அமைந்துள்ள சுமித்சோனியன் அருங்காட்சியகங்கள்:- தேசிய இயற்கை வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய வான் மற்றும் விண்வெளி அருங்காட்சியகம்; ஆப்பிரிக்க கலைகளுக்கான தேசிய அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க வரலாற்று அருங்காட்சியகம்; தேசிய அமெரிக்க இந்தியன் அருங்காட்சியகம்; சாக்லர் பிரீர் காட்சியகம் கிரோசிமா அருங்காட்சியகம்; சிற்ப தோட்டம்; கலை மற்றும் தொழிலக கட்டடம்; தில்லான் ரிப்ளே மையம்; சுமித்சோனியனின் தலைமையகமாக செயல்படும் அரண்மனை என்றழைக்கப்படும் சுமித்சோனியன் நிறுவன கட்டடம் + +முன்பு தேசிய அமெரிக்க கலை அருங்காட்சியகம் என அறியப்பட்ட சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை ஒரே கட்டடத்தில் அமைந்துள்ளன. , டோனல்ட் டபள்யு ரேநால்ட் மையம் வாசிங்டனின் சீனாடவுனுக்கு அருகில் அமைந்துள்ளது. ரேநால்ட் மையம் பழைய காப்புரிமை அலுவலக கட்டடம் என்றும் அறியப்படுகிறது . ரென்விக் காட்சியகம் சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகத்தின் பகுதியாக இருந்தபோதிலும் இது வெள்ளை மாளிகையை ஒட்டிய தனி கட்டடத்தில் இயங்கி வருகிறது. மற்ற சுமித்சோனியன் அருங்காட்சியகம் மற்றும் காட்சியகங்கள்: தென்கிழக்கு வாசிங்டனிலுள்ள அனகோச்டியா சமூக அருங்காட்சியகம், ; யூனியன் ஸ்டேசனிலுள்ள தேசிய அஞ்சலக அருங்காட்சியகம்; வுட்லி பார்க்கிலுள்ள தேசிய மிருக்காட்சி சாலை. +தேசிய கலை காட்சியகத்தின் கிழக்கு கட்டடத்தில் நவீன கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. +தேசிய கலை காட்சியகம் காப்பிடலுக்கு அருகிலுள்ள தேசிய மாலில் அமைந்துள்ளது, ஆனால் இது சுமித்சோனியன் நிறுவனத்துக்கு உட்பட்டதல்ல. இது அமெரி��்க ஐக்கிய அரசாங்கங்கத்துக்கு உரியது, அதனால் இதற்கும் நுழைவு கட்டணம் இல்லை. இக்காட்சியகத்தின் மேற்கு கட்டடத்தில் 19ம் நூற்றாண்டை சார்ந்த அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கலைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன . சுமித்சோனியன் அமெரிக்க கலை அருங்காட்சியகம் மற்றும் தேசிய ஓவிய காட்சியகம் ஆகியவை தேசிய கலை காட்சியகம் என பலர் தவறாக கருதுகிறார்கள். தேசிய கலை காட்சியகம் சுமித்சோனியன் நிருவாகத்தின் கீழ் வருவததில்லை ஆனால் மற்ற இரண்டும் சுமித்சோனியன் நிறுவனத்தை சார்ந்தவை. ஜூடிசியர் சொகயர் அருகில் பழைய ஓய்வூதிய கட்டடத்தில் தேசிய கட்டட அருங்காட்சியகம் அமைந்துள்ளது. காங்கிரசால் இது தனியார் நிறுவனமாக பட்டயம் அளிக்கப்பட்டுள்ளது. + +பல தனியார் கலை அருங்காட்சியகங்களும் இங்கு உள்ளன.தேசிய பெண்களின் கலை அருங்காட்சியகம்; கோர்கோரன் கலை காட்சியகம் இதுவே வாசிங்டன் பெரிய தனியார்அருங்காட்சியகம் ஆகும். டூபான்ட் சர்க்கலில் உள்ள பிலிப்பசு கலெக்சன், இது ஐக்கிய மாநிலங்களில் அமைந்த முதல் நவீன கலை அருங்காட்சியகம் ஆகும். வாசிங்டனில் மேலும் பல தனியார் அருங்காட்சியகங்கள் உள்ளன அவை நியுசியம், பன்னாட்டு வேவு அருங்காட்சியகம், தேசிய புவி சமூக அருங்காட்சியகம் மற்றும் மரியன் கோச்லேண்ட் அறிவியல் அருங்காட்சியகம். ஐக்கிய மாநிலங்கள் ஹோலோகோஸ்ட் நினைவு அருங்காட்சியகம் தேசிய மாலுக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு ஹோலோகோஸ்ட் தொடர்பான காட்சிகள், ஆவணங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன . + +வாசிங்டன் டி சி உள்நாட்டு, பன்னாட்டு ஊடகங்களுக்கு முக்கியமான மையம் ஆகும். 1877ல் தி வாசிங்டன் போஸ்ட் ஆரம்பிக்கப்பட்டது.இதுவே பழைய மற்றும் வாசிங்டன் வட்டாரத்தில் அதிகம் வாசிக்கப்படும் உள்ளூர் செய்தித்தாளாகும் . உள்நாட்டு, பன்னாட்டு அரசியல் செய்திகளை வெளியிட்டு அலசுவதில் இச்செய்தித்தாள் குறிப்பிடத்தக்கது. வாட்டர் கேட் இழிவை வெளிக்கொணர்ந்ததில் சிறப்பாக அறியப்பட்டது . தி போஸ்ட் என அறியப்படும் இந்நாளிதழ் கொலம்பியா மாவட்டம், மேரிலாந்து & வர்ஜீனியா ஆகியவற்றுக்கு தனியான (மொத்தம் மூன்று) அச்சு பதிப்புகளை வெளியிடுகிறது. தனி தேசிய பதிப்புகள் இல்லாத போதும் 2008 செப்டம்பர் எடுக்கப்பட்ட கணக்கின் படி இந்நாளிதழ் நாட்டின் செய்தி இதழ் விற்பனையி���் ஆறாவது இடத்தில் உள்ளது. யுஎஸ்ஏ டுடே என்ற நாளிதழே அமெரிக்காவில் அதிகளவில் விற்பனையாகும் நாளிதழாகும். இதன் தலைமையகம் வாசிங்டனுக்கு அருகில் வர்ஜீனியாவில் மெக்லின் என்ற இடத்தில் உள்ளது . + +தி வாசிங்டன் போஸ்ட் நிறுவனம் தி எக்சுபிரசு என்ற இலவச பயணிகள் செய்தித்தாளை வெளியிடுகிறது. இதில் செய்திகள், விளையாட்டு, பொழுதுபோக்கு போன்றவை சுருக்கமாக வெளியிடப்படுகின்றன. மேலும் எசுப்பானிய மொழி நாளிதழ் எல் டிம்போ லாட்டினோ என்பதையும் வெளியிடுகிறது. மற்றொரு உள்ளூர் நாளிதழான தி வாசிங்டன் டைம்சு, வாரமிரு முறை இதழான வாசிங்டன் சிட்டி பேப்பர் ஆகியவற்றுக்கு வாசிங்டன் பகுதியில் கணிசமான வாசகர்கள் உண்டு . வாசிங்டன் பிளேடு, மெட்ரோ வீக்லி, வாசிங்டன் இன்பார்மர், வாசிங்டன் ஆப்ரோ அமெரிக்கன் ஆகியவை மற்ற சில இதழ்களாகும். தி ஹில் மற்றும் ரோல் கால் ஆகிய நாளிதழ்கள் காங்கிரசு மற்றும் நடுவண் அரசாங்கம் குறித்த செய்திகளுக்கு சிறப்புத்துவம் கொடுத்து வெளிவருகின்றன. +வாசிங்டன் பெருநகர பகுதியானது 2 மில்லியன் வீடுகளுடன் நாட்டின் ஒன்பதாவது பெரிய தொலைக்காட்சி ஊடக சந்தையாக உள்ளது . சி-செபான் (C-SPAN), பிளாக் எண்டர்டெய்ன்மென்ட் டெலிவிசன் (BET); தி நேசனல் ஜியோகிராபிக் சானல், சுமித்சோனியன் நெட்வொர்க், டிராவல் சானல் (செவிசேசு, மேரிலாந்து); டிஸ்கவரி கம்யூனிகேசன்சு (சில்வர் ஸ்பிரிங், மேரிலாந்து) பப்ளிக் பிராட்காஸ்டிங் சர்வீசு (PBS) (ஆர்லிங்டன், வர்ஜீனியா) ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன. நேசனல் பப்ளிக் ரேடியோ (NPR), எக்ஸ்எம் சாட்டிலைட் ரேடியோ, அமெரிக்க அரசின் பன்னாட்டு வானொலி சேவையான வாய்ஸ் ஆப் அமெரிக்கா ஆகிய வானொலி நிறுவனங்களின் தலைமையகங்கள் இங்குள்ளன + +ஐந்து தொழில்முறை ஆடவர் அணிகள் வாசிங்டன் டி சியில் உள்ளன. கூடைபந்தாட்ட அணி வாசிங்டன் விசார்ட்ஸ் மற்றும் பனி வளைதடிப் பந்தாட்ட அணி வாசிங்டன் காபிடல்ஸ் ஆகிய இரண்டும் உள்ளூர் போட்டிகளை சைனா டவுனிலுள்ள வெரிசான் மையத்தில் விளையாடுகின்றன. புகழ்பெற்ற கூடைபந்தாட்ட வீரர் மைக்கல் ஜார்டன் வாசிங்டன் விசார்ட்ஸின் சிறிய பங்குதாரராகவும் அதன் தலைவராகவும் இருந்தார். அடிபந்தாட்ட அணி வாசிங்டன் நேசனல்ஸ் உள்ளூர் போட்டிகளை தென்கிழக்கு டிசியில் புதிதாக கட்டப்பட்ட நே���னல்ஸ் பார்க் என்ற இடத்தில் விளையாடுகிறது. கால்பந்தாட்ட அணி டிசி யுனைட்டட் உள்ளூர் போட்டிகளை ஆர்எப்கே திடலில் விளையாடுகிறது. அமெரிக்கக் காற்பந்தாட்ட அணி வாசிங்டன் ரெட்ஸ்கின்ஸ் உள்ளூர் போட்டிகளை வஃடக்ஸ் களத்தில்(லாண்ட்ஓவர், மேரிலாந்து) விளையாடுகிறது. இந்த அணி மூன்று முறை சூப்பர் போல் எனப்படும் கோப்பையை கைப்பற்றியுள்ளது . + +மேலும் இங்கு இரண்டு தொழில் முறை பெண்கள் அணிகளும் உள்ளன. கூடைபந்தாட்ட அணி வாசிங்டன் மிஸ்டிக்ஸ் (WNBA) உள்ளூர் போட்டிகளை வெரிசான் மையத்திலும்; கால்பந்தாட்ட அணி வாசிங்டன் பிரீடம் உள்ளூர் போட்டிகளை ஜெர்மான்டவுன் (மேரிலாந்து) மற்றும் ஆர்எப்கே திடலிலும் விளையாடுகின்றன. + +ஐக்கிய அமெரிக்காவின் அரசியலமைப்பின் விதி ஒன்று பத்தி எட்டின்படி வாசிங்டன் டி சி மீதான உறுதியான முடிவான அதிகாரத்தை காங்கிரசிற்கு வழங்குகிறது. 1973 ஹோம் ரூல் சட்டம் நிறைவேற்றப்படும் வரை கொலம்பியா மாவட்டத்துக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை கொண்ட நகர மன்றம் கிடையாது. அச்சட்டம் காங்கிரசின் சில அதிகாரங்களை உள்ளூர் அரசுக்கு வழங்குகிறது. உள்ளூர் அரசானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர தந்தை மற்றும் 13உறுப்பினர்களை கொண்ட நகர் மன்றத்தால் நிருவகிக்கப்படுகிறது. எனினும், காங்கிரசு நகர்மன்றம் இயற்றும் சட்டங்களை மறு ஆய்வு செய்யவும் தேவைப்பட்டால் அவற்றை நீக்கக்கூடிய அதிகாரத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க சட்டமன்றமே கொலம்பியா மாவட்டம் (வாசிங்டன் டிசி) தொடர்புடைய நிகழ்வுகளில் இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் கொண்டது. + +நகர தந்தையும் நகர் மன்றமும் வரவு செலவு திட்டத்தை முடிவு செய்வார்கள் ஆனால் அது காங்கிரசால் ஒப்புதல் அளிக்கப்படவேண்டும். உள்ளூர் வருமானம், விற்பனை & சொத்து வரி 67% வருமானத்தை நகரஅரசாங்கத்துக்கு அளிக்கிறது. மற்ற 50மாநிலங்களைப்போலவே டிசிக்கும் நடுவண் அரசு பண உதவி செய்கிறது, அது இந்நகரின் வருவாயில் 26விழுக்காடு ஆகும். பாதுகாப்பு செலவினங்களை ஈடுகட்டுவதற்காக காங்கிரசு டிசி நகர அரசாங்கத்துக்கு பண உதவு செய்கிறது. 2007ல் பெறப்பட்ட தொகை $38 மில்லியன் ஆகும், அது நகர வரவு செலவு திட்டத்தில் 0.5% ஆகும் . வாசிங்டனின் நீதித்துறையை நடுவண் அரசாங்கம் நிர்வகிக்கிறது. நடுவண் அரசின் அ���ைத்து சட்டத்தை நிலைநிறுத்தும் அமைப்புகளுக்கும் இந்நகரத்தில் அதிகாரம் உண்டு, அவை நகரின் பாதுகாப்புக்கு உதவிசெய்கின்றன . உள்ளூர் குற்றங்களின் சட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் அமெரிக்க அரசின் கொலம்பியா மாவட்ட வழக்குரைஞர் கவனிப்பார். + +கொலம்பியா மாவட்ட குடிமக்களுக்கு அமெரிக்க காங்கிரசில் வாக்களிக்கும் உறுப்பினர் கிடையாது. கொலம்பியா மாவட்ட மக்கள் தேர்ந்தெடுத்த உறுப்பினர் காங்கிரசில் இருந்தாலும் அவருக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. அவர் செயற்குழுக்களில் உறுப்பினராக கலந்து கொள்ளலாம், விவாதங்களில் கலந்துகொள்ளலாம், புதிய சட்ட வரைவுகளை அறிமுகப்படுத்தலாம், ஆனால் காங்கிரசின் அவையில் வாக்களிக்கமுடியாது. வாசிங்டன் டிசிக்கு ஐக்கிய அமெரிக்காவின் மேலவை எனப்படும் செனட்டிலும் உறுப்பினர் கிடையாது. அமெரிக்க ஆட்சிக்குட்பட்ட புவேர்ட்டோ ரிக்கோ, குவாம் ஆகியவற்றிற்கும் வாக்கு உரிமை இல்லாத காங்கிரசு உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் அப்பகுதிகளை போல் அல்லாமல் வாசிங்டன் டிசி மக்கள் நடுவண் அரசின் எல்லா வரிகளுக்கும் உட்பட்டவர்கள். 2007 நிதி ஆண்டில் வாசிங்டன் டிசி மக்கள் மற்றும் தொழில்கள் செலுத்திய நடுவண் அரசின் வரி $20.4 பில்லியன் ஆகும்.; இது 19 மாநிலங்களில் வசுலிக்கப்பட்ட வரியை விட அதிகமாகும். + +2005ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்து கணிப்பின்படி 78% அமெரிக்கர்களுக்கு வாசிங்டன் டிசி மக்களின் உறுப்பினருக்கு காங்கிரசில் வாக்களிக்கும் உரிமை இல்லை என்பது தெரியவில்லை. இதைப்பற்றிய விழிப்புணர்வு உருவாக்க பரப்புரைகளை அடிமட்ட இயக்கங்கள் செயல்படுத்தின. இதன் ஒரு பகுதியாக வாசிங்டன் டிசியின் வாகன பதிவு பலகையில் "Taxation Without Representation" என்பதை அதிகாரபூர்வமற்ற குறிக்கோளுரையாக குறிப்பிடுகிறார்கள் . +பல்வேறு கருத்து கணிப்புகள் 61 - 82% மக்கள் வாசிங்டன் டிசி க்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் இருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். மக்கள் ஆதரவு இருந்த போதிலும் வாசிங்டன் டிசிக்கு காங்கிரசில் வாக்குடன் உறுப்பினர், மாநில உரிமை போன்றவை இதுவரை வெற்றி பெறவில்லை. + +வாசிங்டன் டிசி-க்கு காங்கிரசில் வாக்குடன் கூடிய உறுப்பினர் கூடாது என்போர் நாட்டின் ஆரம்பகால தலைவர்கள் வாசிங்டன் டிசி மக்களுக்கு காங்கிரசில் வாக்குடன் கூ���ிய உறுப்பினர் வேண்டும் என்பதை கருதவில்லை என்றும் அத்தகைய உறுப்பினர்கள் மாநிலங்களில் இருந்தே வரவேண்டும் என்றும் அரசியலமைப்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளதையும் குறிப்பிடுகிறார்கள். இந்நகருக்கு மாநில தரம் தரக்கூடாது என்போர் அது நாட்டிற்கு தனி தலைநகரம் என்ற கருத்தாக்கத்தை அழித்துவிடும் என்றும் மேலும் மாநில தரம் தருவது நியாயமற்ற முறையில் ஒரு நகரத்துக்கு மேலவையான செனட்டில் உறுப்பினர் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள் . + +ஜியார்ஜ் டவுன் விசிட்டேசன் பிரிபரேடரி மகளிர் உயர் நிலைப் பள்ளி 1799ல் தொடங்கப்பட்டது. + +கொலம்பியா மாவட்ட பொது பள்ளிகள் (DCPS) என்ற அமைப்பு நகரின் அரசு சார்ந்த பள்ளிளை இயக்குகிறது. 167 பள்ளிகள் மற்றும் கற்கும் மையங்கள் இதில் அடங்கும். 1999ல் இருந்து நகர பொது பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சீராக குறைந்து கொண்டு வந்துள்ளது. நகர பொது பள்ளிகளை நிர்வகிக்க அதிக செலவு பிடித்தாலும் உள்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வி தரம் போன்றவற்றில் இதன் செயல்திறன் மிகக்குறைவாகும். நாட்டின் உயர் தர தனியார்பள்ளிகள் பல இங்கு உள்ளன. 2006ல் நகரின் 83 தனியார் பள்ளிகளில் தோராயமாக 18000 மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள் . + +குறிப்பிடத்தக்க பல தனியார் பல்கலைக்கழங்கள் இங்கு உள்ளன. ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (GW), ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் (GU), அமெரிக்கன் பல்கலைக்கழகம் (AU), அமெரிக்க கத்தோலிக பல்கலைக்கழகம் CUA), ஹோவார்ட் பல்கலைக்கழகம், கல்லுடெட் (Galludet) பல்கலைக்கழகம் மற்றும் மேம்பட்ட பன்னாட்டு கல்விக்கான தி ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக பள்ளி (SAIS) ஆகியவை சில. + +இங்கு 16மருத்துவ மையங்களும் மருத்துவமனைகளும் உள்ளன. அதனால் இந்நகரை நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் மருத்துவ ஆராய்ச்சிகளின் தேசிய மையம் என்றழைக்கப்படுகிறது . நேசனல் இன்ஸ்டிடுயூட் ஆப் ஹெல்த் பெத்தஸ்டாவில்(மேரிலாந்து) அமைந்துள்ளது. வாசிங்டன் மருத்துவமனை மையம் (WHC), இந்நகரின் பெரிய மருத்துவமனை வளாகமாகும். இதுவே இப்பகுதியின் பெரிய தனியார் மற்றும் லாபநோக்கற்ற மருத்துவமனை ஆகும். WHC க்கு அருகில் குழந்தைகளுக்கான தேசிய மருத்துவ மையம் அமைந்துள்ளது. யுஎஸ் நியுஸ் & வேர்ல்ட் அறிக்கையின் படி இது நாட்டிலேயே தலைசிறந்த குழந்தைகளுக்கான மருத்துவமனையாகும் . நகரின் பல பல்கலைக்���ழகங்கள் குறிப்பாக ஜார்ஜ் வாசிங்டன், ஜார்ஜ்டவுன், ஹோவர்ட் ஆகியவை மருத்துவ கல்வி வழங்குவதுடன் மருத்துவமனைகளையும் நிர்வகித்து வருகின்றன. வால்ட்டர் ரீட் இராணுவ மருத்துவ மையம் வடமேற்கு வாசிங்டனில் அமைந்துள்ளது. இங்கு பணியிலுள்ள படையினருக்கும், ஓய்வு பெற்ற படையினருக்கும் அவர்களின் மனைவி&குழந்தைகள் போன்ற சார்ந்துள்ளளோருக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. + +2009 அறிக்கை ஒன்று இந்நகரில் உள்ள மக்களில் 3% எச்ஐவி அல்லது எய்ட்சு கொண்டுள்ளார்கள் என தெரிவித்தது. சில மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை விட இங்கு எச்.ஐ.வி தாக்கம் அதிகம் என நகர அலுவலர்கள் சிலர் கூறுகிறார்கள் . + +புகழ்பெற்ற சுமித்சோனியன் நிறுவனம் இங்குள்ளது. இது லாப நோக்கற்ற அமைப்பு, பல்வேறு அருங்காட்சியகங்களை இவ்வமைப்பு நடத்தி வருகின்றது. இவர்கள் எந்த அருங்காட்சியகத்துக்கும் நுழைவு கட்டணம் வசூலிப்பதில்லை. + +ஜெர்மனியின் நாஜிக்களால் யூத மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதை விளக்கும் ஹோலோகோஸ்ட் அருங்காட்சியகம் இங்கு உள்ளது. + +தலைவர்கள் மற்றும் போர் நடவடிக்கைகளுக்கான நினைவு மண்டபங்கள் இங்கு உள்ளன. + +அருகில் உள்ள 3 விமான நிலையங்கள் மூலம் வாசிங்டன் பெருநகரத்தை அடையலாம். + + +ரொனால்ட் ரீகன் தேசிய விமான நிலையம் வெர்ஜீனியாவில் பொட்டாமக் ஆற்றின் கரையில் வாசிங்டன் டி.சி எல்லையில் உள்ளது. மெட்ரோ ரயில் மூலம் இங்கு செல்லலாம். உள்நாட்டு விமானங்களே இங்கு அனுமதிக்கப்படுகின்றன. சத்தம் மற்றும் பாதுகாப்பு காரணமாக அதிக அளவு கட்டுப்பாடுகள் இங்குண்டு. + +வெர்ஜீனியாவில் உள்ள வாசிங்டன் டல்லஸ் பன்னாட்டு விமான நிலையம் வாசிங்டன் டி.சி க்கு வரும் பன்னாட்டு விமானங்களை கையாளுகிறது. இது வாசிங்டன் டி.சி யிலிருந்து 42.3 கி.மீ (26.3 மைல்) தொலைவில் உள்ளது. + +மெரிலாந்தில் பால்டிமோர் அருகில் பால்டிமோர்-வாசிங்டன் பன்னாட்டு தர்குட் மார்சல் விமான நிலையம் உள்ளது, இது வாசிங்டன் டி.சி யிலிருந்து 51 கி.மீ (31.7 மைல்) தொலைவில் உள்ளது. +வாசிங்டன் மெட்ரோ பாலிட்டன் ஏரியா டிரான்ஸிட் அதாரிட்டி என்ற அமைப்பு மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ பேருந்துகளை வாசிங்டன் டி.சி மற்றும் சுற்றுப்புற கவுண்டிகளில் இயக்குகிறது. 1976 மார்ச் 27அன்று மெட்ரோரயில் தொடங்கப்பட்டது. தற்போது 86 நிலையங்களையும் 106.3 miles (171.1 km) நீள தடத்தையும் கொண்டுள்ளது. [177] 2009ல் வாரநாட்களில் சராசரியாக ஒரு மில்லியன் பயணங்களை மேற்கொண்டு நியுயார்க்கின் சப்வேவிற்கு அடுத்து நாட்டின் இரண்டாவது சுறுசுறுப்பான ரயில் நிறுவனமாக உள்ளது.[178]. மெட்ரோ ரயில் 4 வண்ணம் (சிவப்பு, பச்சை, ஆரஞ்சு, நீலம்) கொண்ட பாதைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நாம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்திற்கு செல்லும் வண்ண பாதை வண்டியில் ஏறிக்கொள்ள வேண்டும். நீங்கள் ஆரஞ்சு பாதையில் இருந்து பச்சை பாதையிலுள்ள இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால் ஆரஞ்சு பாதையில் வரும் வண்டியில் ஏறி ஆரஞ்சு & பச்சை பாதைகள் சந்திக்கும் இடத்தில் இறங்கி பச்சை பாதை வண்டியில் ஏற வேண்டும். + +ஆம்டிராக் என்னும் நெடுந்தொலைவு தொடர்வண்டி வாசிங்டன் நகரத்தை நாட்டின் பல பெரிய நகரங்களுடன் இணைக்கிறது. + + + + + +மாயாவி (சித்திரக்கதை) + +மாயாவி 1939 ஆம் ஆண்டு லீ பாக் என்பவரால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனைச் சித்திரக்கதையாகும். இது பெப்ரவரி 17, 1936 முதல் நாளாந்த செய்தித்தாளில் கருப்பு வெள்ளை சித்திரக் கீற்றாக வெளியாகி மே 1936 தொடக்கம் ஞாயிறு வண்ணக் கீற்றாகவும் வெளியாகிறது. மாயாவி சித்திரக் கதைகளையும் தாண்டி தொலைக்காட்சி திரைப்படங்கள் என்பவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. + +மாயாவி "பெங்காலியா" எனும் அடர்ந்த வனப்பகுதியில் வசிப்பவர் ஆவார். அவ்வனத்தின் இயற்கை வளங்களையும், அங்கு வாழும் பழங்குடிகளையும் பல தலைமுறைகளாகக் காத்து வரும் காவலர் அவர். இவர் எப்பொழுதும் ஊதா நிற முகமூடி அணிந்திருப்பதால் இவரை முகமூடி வீரர் என்றும் அழைப்பர். இவரது மனைவியின் பெயர் டயானா பால்மர் என்பதாகும். + +தமிழில் ராணி காமிக்ஸ் மூலம் மாயாவி எனும் கதை பாத்திரம் தமிழ் வாசகர்கள் மத்தியில் பெரும் பிரபல்யம் அடைந்தது. + + + + +உயிர்ச்சத்து + +உயிர்ச்சத்து ("vitamin") என்பது பெரும்பாலான உயிரினங்களின் இயல்பான வளர்ச்சிக்கும் செயல்பாட்டிற்கும் மிகச்சிறிய அளவில் தேவைப்படும், ஆனால் மிக இன்றியமையாத கரிம நுண்ணூட்டச் சத்து ஆகும். உயிரினத்தால் உருவாக்கப்பட முடியாத அல்லது ஒரு சிறுபகுதி மாத்திரமே உருவாக்கப்படக் கூடிய கரிமச் சேர்மங்களே உயிர்ச்சத்துக்களாகக் கருதப்படுகிறது, இவற��றின் தேவை, உண்ணும் உணவுமூலம் மட்டுமே பூர்த்தி செய்யப்படுகிறது, எனினும் இவற்றை விட அதிகமான அளவில் உயிரினத்திற்குத் தேவைப்படும் அசேதன சேர்மங்களான கனிமங்கள், கொழுப்பமிலங்கள், முக்கிய அமினோ அமிலங்கள் இவற்றுள் அடங்குவதில்லை. + +ஒரு குறிப்பிட்ட உயிரினத்துக்கு உயிர்ச்சத்தாகக் கருதப்பட்டாலும் வேறு உயிரினங்களுக்கு அவை உயிர்ச்சத்தாக அமையாமல் இருக்கலாம்; எடுத்துக்காட்டாக, மனிதனுக்குத் தேவைப்படும் அசுகொர்பிக் அமிலம் (உயிர்ச்சத்து C) வேறு உயிரினங்களால் தேவையான அளவும் முழுமையாக உருவாக்கப்படுகின்றபடியால் அவற்றிற்கு உயிர்ச்சத்தாகக் கருதப்படுவதில்லை. + +சில உயிர்ச்சத்துகளைச் சிறிய அளவில் உயிரினம் உற்பத்தி செய்ய இயலும்: உயிர்ச்சத்து ஏ (A)-யை பீட்டா கரோட்டினில் இருந்தும், நியாசினை இரிப்டோஃபான் என்னும் அமினோக் காடியில் இருந்தும், உயிர்ச்சத்து டி யை (D-யை) தோல் மீது விழும் புற ஊதா ஒளிக்கதிர் மூலமும் உருவாக்கிக் கொள்ள் இயலும்; இருப்பினும், உடலுக்குத் தேவையான அளவு இவற்றைப் பெற நல்ல சத்துள்ள உணவு உட்கொள்ளுதல் கட்டாயம் ஆகும். பதின்மூன்று உயிர்ச்சத்துக்கள் இதுவரை உலகளாவிய நோக்கில் அறியப்பட்டுள்ளது. + +"விட்டமின்" (Vitamin) என்னும் ஆங்கிலச்சொல்லானது இலத்தீன் சொல்லான vita (உயிர்) + amine (அமைன்) போன்றவற்றின் சேர்க்கையால் உருவானது. நைதரசன் கொண்ட மூலக்கூறுகளே "அமைன்" என அழைக்கப்படுகிறது. "அமைன்" எனப்படும் பதம் பின்பு தவறானது எனத் தெரியவந்ததால் ஆங்கில “vitamine” என்னும் சொல் பின்னர் “vitamin” எனக் குறுக்கப்பட்டது. + +உயிர்ச்சத்துக்கள் அவற்றின் உயிர்வேதியல் "செயற்பாடுகளுக்கமையவே" பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளன, அவற்றின் கட்டமைப்பைப் பொறுத்து அல்ல. ஒவ்வொரு உயிர்ச்சத்தும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உயிர்ச்சத்துச் சமகூறுக்களைக் ("vitamers") கொண்டிருக்கும். இவற்றின் தொழில், குறிப்பிட்ட ஒரு உயிர்ச்சத்துக்குரியதாக இருந்தாலும் அவற்றின் கட்டமைப்பு வேறுபடுகிறது. உயிர்ச்சத்து “B12” யினை (பி-12 இனை) எடுத்துக்கொண்டால் அதற்குச் சையனோகோபாலமின் , ஐதரொக்சோகோபாலமின், மெத்தைல்கோபாலமின், அடினோசையில்கோபாலமின் என நான்கு உயிர்ச்சத்துச் சமகூறுகள் உள்ளது, இவை அனைத்துமே உயிர்ச்சத்து “B12” உடைய தொழிலைப் புரியும். + +உயிர்ச்சத்துக்கள் உயிரினங்களில் நடக்கும் பல்வேறு வேதிய வினைத்தாக்கங்களுக்கு ஊக்கிகளாகவும், துணை நொதிகளாகவும், இயக்குநீராகவும் தொழிற்படுகிறது. + +"முதன்மைக் கட்டுரை: உயிர்ச்சத்துக்களின் வரலாறு" + +உடல்நலத்தைப் பேண குறிப்பிட்ட சில உணவுகள் தேவை என்பதன் முக்கியத்துவம் உயிர்ச்சத்து அறிமுகமாவதற்கு முன்னரே அறியப்பட்டிருந்தது. பழங்கால எகிப்தியர், மாலைக்கண் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கல்லீரலுக்கு உண்டு என்பதனை அறிந்திருந்தார்கள், அந்த நோயே இன்று உயிர்ச்சத்து ஏ (உயிர்ச்சத்து A) குறைபாடாக அறியப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துபற்றிய வரலாற்றில் மிக முக்கியமான காலமாக 1747 ஆம் ஆண்டு அமைகிறது, அன்று சித்திரசு (Citrus) குடும்ப பழவகைகளில் காணப்படும் ஏதோ ஒரு ஊட்டச்சத்து இசுகேவி (scurvy) என்னும் நோய் உருவாகுவதைத் தடுக்கிறது என்று இசுக்காட்லாந்து நாட்டு அறுவை மருத்துவர் ஜேம்சு லிண்ட் கண்டறிந்தார். 1753 ஆம் ஆண்டு அவர் எழுதிய “இசுகேவி பற்றிய ஆய்வு (Treatise on the Scurvy)” எனப்படும் கட்டுரையில் இசுகேவியைத் தடுப்பதற்கு எலுமிச்சம்பழம் அல்லது தேசிக்காய் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். 1929இல் கோப்கின்சுக்கும் இக்மானிற்கும் பலவகை உயிர்ச்சத்துக்களைக் கண்டறிந்தமைக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1912இல் போலந்து நாட்டைச் சேர்ந்த உயிர்வேதியியலாளர் கசிமிர்சு ஃபங்க் அதே பதார்த்தத்தைப் பிரித்தெடுத்து “வைட்டமைன்(Vitamine)” என்று பெயரிட முன்மொழிந்தார். 1920இல் “vitamine” என்னும் சொல்லில் இருந்து “e”யை அகற்றி “vitamin” வைட்டமின் என்று அழைக்க சாக் செசில் துருமொண்ட் என்பவரால் பரிந்துரைக்கப்பட்டது. + +மனிதர்களுக்கு அடித்தேவையான 13 உயிர்ச்சத்துக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன, இவற்றுள் நான்கு கொழுப்பில் கரைபவை (ஏ, டி, ஈ, கே); ஒன்பது நீரில் கரைபவை (எட்டு வகை ‘பி’ உயிர்ச்சத்துகளும் உயிர்ச்சத்து ‘சி’யும் ). நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பெரும்பாலானவை உடலில் சேமிக்கப்படுவதில்லை; அளவுக்கு அதிகமானவை உடலிலிருந்து சிறுநீர் மூலம் அகற்றப்படுகின்றன, எனவே இவற்றின் தேவை மாந்த உடலிற்கு நாளாந்தமாகிறது. கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் குடலிலிருந்து கொழுப்புகளின் உதவியுடன் அகத்துறிஞ்சப்படுகிறது, அவை உடலில் சேமிக்கப்படுவதால் அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்குத் தீங்கு உண்டாக்கும், இந்த நிலைமை மிகையுயிர்ச்சத்து நோய் (hypervitaminosis, ஐப்பர்விட்டமனோசிசு) என அழைக்கப்படுகிறது. + +உயிர்ச்சத்து அட்டவணை + +ஒரு பலகல உயிரினத்தின் வளர்ச்சிக்கு அத்தியாவசியமானதாக உயிர்ச்சத்து விளங்குகின்றது. உயிரினத்தின் ஆரம்பகால வளர்ச்சியில் இருந்து இறுதிக்காலம் வரை தேவையானதாக விளங்கும் உயிர்ச்சத்து, முதன் முதலில் கருவாக இருக்கையில் தாயிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படுகிறது, இந்த நிகழ்வில் மாற்றம் ஏற்படும் போது, அதாவது போதிய அளவு உயிர்ச்சத்துகளோ அல்லது கனிமங்களோ கிடைக்காதநிலையில் பிறக்கும் குழந்தை குறைபாட்டுடன் உலகில் தோன்றுகிறது. +பெரும்பங்கு உயிர்ச்சத்துக்கள் உணவின் மூலம் பெறப்பட்டாலும், மனித குடலில் வசிக்கும் சாதாரண பாக்டீரியாக்கள் உயிர்ச்சத்து ‘கே’ மற்றும் பையோட்டின் போன்றவற்றை வழங்குவதன் மூலம் உதவி புரிகின்றன, இதே வேளையில் உயிர்ச்சத்து ‘டி’யானது சூரியனின் புற ஊதாக்கதிர்கள் மூலமாக மனித தோலில் தொகுக்கப்படுகிறது. மனித உயிரினம் சில உயிர்ச்சத்துக்களை அதன் மூலத்திலிருந்து தொகுக்கக்கூடியவாறு உள்ளது, உதாரணமாக, உயிர்ச்சத்து ‘ஏ’யானது பீட்டா கரோட்டினில் (மாம்பழம், பப்பாளி, காரட் போன்ற மஞ்சள் நிற உணவுவகைகள்) இருந்தும், நியாசின் இரிப்டோஃபானிலிருந்தும் (முட்டை வெள்ளைக்கரு, அவரை, வாழைப்பழம்) தொகுக்க முடியும். + +ஒரு சிறிய அளவே (பொதுவாக நாள் ஒன்றுக்கு ஒரு மில்லி கிராமுக்கும் குறைவாக) தேவைப்படும் உயிர்ச்சத்தின் பற்றாக்குறையால் ஏற்படும் விளைவுகள் உயிரையே போக்கும் அளவுக்கு ஆபத்தானவை, எனவே மனிதருக்கு ஒழுங்கான உயிர்ச்சத்துப் பயன்பாடு தேவையாகிறது, கொழுப்பில் கரையும் உயிர்ச்சத்துக்கள் (ஏ, டி) உடலில் சேமிக்கப்பட்டாலும் நீரில் கரையும் உயிர்ச்சத்துக்களில் பி12 உடலில் சேமிக்கப்படுகிறது. + +குடலில் அகத்துறிஞ்சாமை ஏற்படும் நிலையில் உயிர்ச்சத்துக்களும் உடலில் உள்ளெடுக்கப்படுவதில்லை. நுண்ணுயிரிகளால் ஏற்படும் தொற்றுநோய்கள் கூட உயிர்ச்சத்துப் பற்றாக்குறையை ஏற்படுத்துகின்றது. இதனைவிட சில மருந்து வகைகளின் பயன்பாடு, புகைப்பிடித்தல், குடிவயமை அல்லது குடிவெறி போன்றனவும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றன. + +நாளாந்த உட்கொள்ளல் அளவினை விட அதிகமாகப் பயன்படுத்தும் போது உயிர்ச்சத்துக்கள் பக்கவிளைவுகளைத் தருகின்றன, எனினும் உண்ணும் உணவின் மூலம் ஏற்படும் உயிர்ச்சத்தின் பக்கவிளைவு இல்லையெனவே கூறலாம், மாறாக, செயற்கை உயிர்ச்சத்து மாற்றீடுகளான மாத்திரைகள் போன்றவை அதிகம் பயன்படுத்துதல் நச்சுத்தன்மை உருவாக்கலாம். + +'உயிர்ச்சத்து மாற்றீடுகள்' + +உயிர்ச்சத்துக்கள், இலத்தீன் அகர எழுத்துக்களைக் கொண்டு A, B, C, D, E, K எனப் பெயரிடப்பட்டு உள்ளது. தொடர்ச்சியாக உள்ள அகர எழுத்துக்கள், பின்னர் விடுபட்டு E இலிருந்து K இற்கு தாவி நிற்பதனை இங்கு அவதானிக்கலாம், காரணம் என்னவென்றால், இவற்றுள் F இலிருந்து J வரையிலான எழுத்துக்களால் குறிக்கப்பட்ட உயிர்ச்சத்துக்கள் தற்பொழுது உயிர்ச்சத்துக்கள் இல்லையென்பதாலும் உயிர்ச்சத்து Bயின் உபபிரிவுகளிலும் அடங்குகின்றமையாலும் ஆகும். + +செருமானிய அறிவியலர்களால் உயிர்ச்சத்து 'கே'யானது பிரித்தெடுக்கப்பட்டு விபரிக்கப்பட்டபோது உயிர்ச்சத்து 'கே'யின் இரத்தவுறைதல் இயல்பு காரணமாக 'Koagulation' என்னும் சொல்லிலிருந்து எழுத்து 'கே'யானது எடுக்கப்பட்டு உயிர்ச்சத்து 'கே' (உயிர்ச்சத்து K) என அழைக்கப்பட்டது, இதே வேளையில் ஏற்கனவே உயிர்ச்சத்துக்கள் 'J' வரையில் பெயரிடப்பட்டதால், இச்சம்பவம் தொடர்ச்சியான பெயரீட்டு முறைக்கு வாய்ப்பாக அமைந்தது. + +உயிர்ச்சத்து எதிரிகள் எனப்படும் வேதியற் கலவைகள் உயிர்ச்சத்துகளின் அகத்துறிஞ்சலை அல்லது தொழிற்பாட்டைத் தடுக்கின்றன. எடுத்துக்காட்டாக, முட்டையில் காணப்படும் அவிடின் எனும் புரதம் பையோட்டின் உயிர்ச்சத்தின் அகத்துறிஞ்சலைத் தடுக்கின்றது. + + + + +குடும்பம் + +குடும்பம் என்பது இரத்த உறவாலோ, அல்லது திருமணம், சுவீகாரம் (தத்தெடுத்தல்) போன்ற வேறு சட்டபூர்வமான முறைகளிலோ தொடர்பு பட்ட ஒரு உறைவிடக் குழுவாகும். பல சமுதாயங்களில், குடும்பம் என்பது மேற்குறிப்பிட்டவை தவிர்ந்த வேறு கருத்துருக்களினாலும் புரிந்துகொள்ளப் பட்டிருப்பதால், "குடும்பம்" என்பது பல வேளைகளில் பெரிய மனிதக் குழுவினரை உள்ளடக்கும் ஒரு உருவகமாகவும் பயன்படுவதைக் காணலாம். எடுத்துக்காட்டாக, சமூகம், சுற்றம், நாடு, மனித குலம் போன்றவற்றையும் குடும்பம் என்ற சொல்லால் குறிப்பிடுகின்றனர். அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் 16(3) ஆவது விதிப்படி, "குடும்பம் என்பது சமூகத்தின் இயல்பானதும், அடிப்படையானதுமான குழு அலகாகும் என்பதுடன், அது சமூகத்தாலும், தேசத்தாலும் பாதுகாக்கப்படுவதற்கு தகுதி பெற்றுள்ளது." நெருங்கிய குடும்பம் என்பது வாழ்க்கைத் துணைவர், பெற்றோர், உடன்பிறந்தோர், மகன்கள், மகள்கள் ஆகியோரை உள்ளடக்கும். இவர்களோடு, பெற்றோரின் உடன்பிறப்புகள், ஒன்றுவிட்ட உடன்பிறந்தோர், மருமக்கள் போன்றோரும் சேர்ந்து விரிந்த குடும்பத்தின் உறுப்பினர்கள் ஆகின்றனர். + +பெரும்பாலான சமுதாயங்களில் பிள்ளைகள் சமூகமயமாவதற்கான முதன்மை நிறுவனமாகக் குடும்பம் விளங்குகிறது. உயிரியல், மற்றும் சமூகவியல் அடிப்படையில் நோக்குகையில் குடும்பத்தின் முக்கியமான தொழிற்பாடுகளில் ஒன்று புதிய உறுப்பினர்களை உருவாக்குவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதாகும். இந்தத் தொழிற்பாடு, பகிர்தல், கவனிப்பு, பராமரிப்பு, பேணி வளர்ப்பு என்பவற்றைக் கொடுத்தல் / பெற்றுக்கொள்ளல், ஒழுக்கநல உரிமைகள் மற்றும் கடமைகளைக் கொண்டிருத்தல், அறமுறையிலான மற்றும் உணர்ச்சிபூர்வமான பிணைப்புக்களைக் கொண்டிருத்தல் போன்றவற்றால் பேணப்படுகிறது. ஆனாலும் புதிய உறுப்பினரை உருவாக்குவது மட்டுமே குடும்பத்தின் முக்கியமான பணியல்ல. இரு நபர்களுக்கிடையில் பிணைப்பின்மூலம், பொருளியல் அடிப்படையில், ஒரு ஆக்கபூர்வமான ஒரு அமைப்பை உருவாக்குவதுமாகும். + +பிள்ளைகளைப் பொறுத்த வரையில், குடும்பமானது, குடும்ப அமைப்புக்கான ஒரு அறிமுகத்தையும், வழிகாட்டுதலையும் வழங்கும் இடமாக இருக்கிறது. அதேவேளை பெற்றோரைப் பொறுத்த வரையில், குடும்பமானது, பிள்ளைகளை உருவாக்கி, சமூகத்துடன் அவர்களைப் பிணைக்கும் இடமாக இருக்கிறது. + +"குடும்பம்" என்னும் சொல் கூடல் என்னும் பொருள் கொண்ட "குல்" என்னும் தமிழ் வேர்ச்சொல்லின் அடியாகப் பிறந்தது. "குல்" > "குள்" > "குழு" என மாற்றம் பெறும். "குழு" என்பது கூட்டம் என்ற பொருள் தருவது. "குழு" > "குழும்பு" > "குடும்பு" > "குடும்பம்" என்றவாறு குடும்பம் என்னும் சொல் பெறப்படுகிறது. இது பெற்றோரும் பிள்ளைகளும் சேர்ந்த கூட்டம் என்ற பொருள் தருகிறது. + +மனித சமுதாயத்தின் அடிப்படை அலகு, குடும்பம் ஆகும்.குடும்ப அமைப்பு,ஒழுங்கான முறையில் அமைந்தால் அது நல்ல குடும்பம் எனப்படும். + +கணவன் – மனைவி தொடர்பு, பெற்றோர் – பிள்ளைகள் தொடர்பு, உடன் பிறந்தோருக்கிடையிலான தொடர்பு போன்ற அம்சங்களில் அநேகமாக எல்லாவகைக் குடும்பங்களும் ஒத்த இயல்புகளை வெளிப்படுத்தினாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளாக அமைகின்றன. + +குடும்பங்களின் அமைப்பைக் கருத்திற் கொண்டு அவற்றை, + + +என வகைப்படுத்தலாம். + +அமெரிக்க மானிடவியல் அறிஞர் லூவி ஹென்றி மார்கன்(1818–1881),மனிதப் பண்பாட்டில் குடும்பத்தின் ஐந்து படிமலர்ச்சி நிலைகளைக் குறிப்பிடுகின்றார்.அவை: + +1.இரத்த உறவுக் குடும்பம்: + +இரத்த உறவுக் குடும்பம் (Consanguine Family) எனப்படுவது,ஒரே தலைமுறையைச் சேர்ந்த அண்ணன் தம்பியர் அவர்தம் சகோதரிகளை மணமுடிப்பதாகும். + +2.குழுமணக் குடும்பம்: + +ஓர் இரத்தக் குழுவைச் சேர்ந்த அண்ணன் தம்பியர்,பிறிதோர் இரத்தக் குழுவின் அக்காள் தங்கையரை மணந்து கொள்வது குழுமணக் குடும்பம் (Punaluan Family) ஆகும். + +3.நிரந்தரமற்ற குடும்பம்: + +நிரந்தரமற்ற குடும்பம்(Syndiasmian Family) குழுமணமுறை,ஒரு துணை மணமுறை ஆகியவற்றிற்கு இடைப்பட்ட மணமுறையினைக் கொண்டது. இவ்வகைக் குடும்ப முறையில் கணவர் மனைவி இருவரும் அவர்கள் விரும்பும்போது [மணவிலக்கு]]ப் புரிந்து கொண்டு வேறு துணையுடன் வாழ முற்படுவர். ஒரே துணையுடன் வாழும்போதும் இவர்களுக்கிடையில் பந்தம் இருப்பதில்லை. + +4.தந்தைத் தலைமைவழிக் குடும்பம்(Patriarchal Family): + +தந்தைத் தலைமைவழிக் குடும்பத்தில் (Patriarchal Family) ஆண்களிடம் குடும்பத்தின் எல்லாவிதமான அதிகாரங்களும் பொறுப்புகளும் குவிந்திருக்கும்.தொடக்கக் கால உரோமானியர்களும் எபிரேயர்களும் இம்முறையைப் பின்பற்றினார். + +5.ஒரு துணைமணக் குடும்பம்(Monogamian Family): + +ஒரு துணைமணக் குடும்ப (Monogamian Family) மணமுறையானது அண்மைக்கால தனிக்குடும்ப முறையை ஒத்ததாகும். கணவன்/மனைவி ஒரு துணையுடன் வாழும் குடும்ப முறையாகும். + +கி.பி.1877-இல் லூவி ஹென்றி மார்கன் தொன்மைச் சமுதாயம் எனும் நூலை வெளியிட்டார்.இந்நூல் மார்க்சியத்தின் இயக்கவியல் அணுகுமுறை +(Dialectical Approach),வரலாற்றுப் பொருள் முதல்வாதம்(Historical Matetialism)ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.இந்நூலைப் படித்த எங்கெல்ஸ்,குடும்பம், தனிச்சொத்து,அரசு ஆகியவற்றின் தோற்றம் என்னும் நூலை உருவாக்கினார்.இந்த நூலானது மார்கன் எழுதிய நூலின் சுருக்கமாக அமைந்திருந்தது.மார்கன் எடுத்துக்கூறிய குடும்பத்தின் தோற்றம் பற்றிய கருத்தை எங்கெல்ஸ் ஏற்றுக்கொண்டார்.எங்கெல்ஸ் மூலமாக சோவியத்து இனவியலில் மார்கன் மதிப்புமிக்க கொள்கையாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். + +திருமணம் என்பது வழக்கமாக ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலுள்ள உறவின் நெருக்கமான,பாலுறவு அம்சத்தை,அவர்களுடைய,சாராம்சத்தில் உயிரியல்,பாலுணர்ச்சித் தேவைகளை நிறைவு செய்வதை வலியுறுத்துவதாகும். + +குடும்பம் என்பது திருமணத்துடன் தொடர்புடையது.பாலுணர்ச்சித் தேவைகள் மட்டுமல்லாமல் உணவு மற்றும் இதர அன்றாடத் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்காகத் தனிநபர்கள் இடைச்செயல் புரிகின்ற நிகழ்ச்சிப் போக்கை முதன்மைப்படுத்துகிறது. + +குடும்ப அமைப்பு உருவாக,திருமணம் அடிப்படையாக உள்ளது. எனினும்,அது திருமணத்துடன் முடிந்துவிடுவதில்லை.மரபுவழி இணைப்பின் தொடர்ச்சியாகவும் நெருங்கிய மற்றும் தூரத்து உறவுகளின் மரபினை கோலோச்சுவதாகவும் அமைகிறது. + +திருமண-குடும்ப உறவுகள் ஆண்-பெண் இருவருக்கிடையில் நெருக்கமான உறவுகளை முன்னிலைப்படுத்துகின்றன.அவர்கள் குடும்பம் என்ற முறையில் இனப்பெருக்கத்திற்கும்,சமூக,பொருளாதார செயல்பாட்டிற்கும் அடிப்படை அலகுகளாக உள்ளனர்.இது உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகியவற்றைப் பெருக்கும் கருவியாக இந்த அலகு காணப்படுகிறது. + +குழு மணம் பாலுறவை நிர்ணயித்தது.இணைக் குடும்பம் பெற்றோரைத் தீர்மானித்தது.ஒருதார மணமுறை சொத்தைப் பாரம்பரியமாகப் பெறும் உரிமை மற்றும் சமூக,பொருளாதார, உற்பத்தி நுகர்வு அலகாகத் தோன்றியது. + +பண்பாடற்ற காலகட்டத்தில் இணைக் குடும்பம் பெரிய தந்தைவழிக் குடும்பமாகப் பரிணமிக்கிறது.தந்தைவழிக் குடும்பம் ஒருதார மணத்தை நோக்கி வளர்ச்சி அடைகிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கு உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.அந்த வளர்ச்சி உழைப்புப் பிரிவினையின் புதிய துறைகளையும் வடிவங்களையும் நிர்ணயிக்கிறது. + +ஒருதாரக் குடும்பங்களின் தோற்றத்திற்கு கைத்தொழில்கள் மற்றும் வாணிபம் காரணிகளாக அமைந்தன.குடும்பம் அரசு, அதிகார உறவுகளின் எதேச்சதிகாரத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. + +எங்கெல்ஸ் கூறியதாவது,'பகிரங்கமாகவோ, +மறைமுகமாகவோ உள்ள பெண் அடிமைத்தனத்தின் அடிப்படையில்தான் நவீன காலத் தனி��்பட்ட குடும்பம் இருக்கிறது;நவீன காலச் சமுதாயம் என்பதும் தனிப்பட்ட குடும்பங்களைத் தனது மூலக்கூறுகளாகக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பே.இன்று, மிகப் பெரும்பான்மையான சமயங்களில், ஆண்தான் சம்பாதிக்கிறவனாக,சோற்றுக்கு வழி செய்கிறவனாக இருக்க வேண்டியிருக்கிறது.குறைந்தபட்சம் சொத்துள்ள வர்க்கங்களில் இப்படித்தான்;இது அவனுக்கு ஆதிக்க நிலையைத் தருகிறது. அதற்கொன்றும் விசேஷமான சட்டவகைச் சலுகை உரிமைகள் வேண்டியதில்லை.' + +குலம் தழைக்கவும்,முன்னோர் சாந்தி அடையவும்,பின்னோர் செழிக்கவும் குலவழிபாடு தொன்றுதொட்டு உள்ளது. ஒவ்வொரு குடும்ப வகைகளுக்கும், ஒவ்வொரு குல தெய்வமுண்டு.இதுவே,இவர்களுக்குக் +காவல் தெய்வமாகும்.அக் காவல் தெய்வம் குல தெய்வமாக வழிபடப்படுகிறது.பெற்றோர் பிறக்கும் தம் பிள்ளைகளுக்கு,முதல் முடியினைக் குல தெய்வம் கோயிலுக்குச் சென்று எடுப்பர்.மேலும், காதணியும் அணிவிக்கப்படும். + +குலதெய்வ வழிபாடு இந்து மதத்தைப் பின்பற்றுவோருக்கு முக்கியமான +ஒன்றாகும்.குல தெய்வ வழிபாடு என்பது +மனிதனின் லௌகீக வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைகிறது. +குல தெய்வத்தை வழிபடும் ஒரு சமூக இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்,ஒத்த இனக்குழு ஆவார்கள்.இவர்கள் அண்ணன், தம்பி உறவு முறையாக கருதி வாழ்பவர்கள். இவர்களுக்குள் மணமுறை நிகழாது.மேலும், குடும்பத்தில் நிகழும் எந்தவொரு சுப நிகழ்ச்சிக்கும் முதலில் குலதெய்வத்தை வணங்கிவிட்டுதான் தொடங்கும் வழக்கம் தொன்றுதொட்டு +இருந்து வருகிறது. +அப்போதுதான் அது வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை.ஆண்டுதோறும் செய்யப்படும் குலதெய்வ வழிபாட்டால் குடும்பத்தில் அமைதியும் நன்மையும் விளையும் என்பது உண்மையாக உள்ளது. + +19 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் ஆதிக்கம் செலுத்திய கருத்துகளின்படி தந்தை வழிக் குடும்பமே சமூக அமைப்பின் ஆதி வடிவமாகக் கருதப்பட்டது. + +இரத்த உறவுமுறையின் அமைப்புகள் மற்றும் உறவுமுறையைக் குறைக்கும் வார்த்தைகள் பற்றி விஞ்ஞான ரீதியாக ஆராந்த முதல் நபரான மார்கன் தாயுரிமைக் குலமே சமூக அமைப்பின் ஆதி வடிவம் என்று கண்டுபிடித்தார்.ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிரபல வரலாற்றாசிரியரும் வழக்குரைஞருமான யோஹன் ஜாக்கப் பாஹொஃபென் தாயுரிமை என்னும் தனது நூலில் பெண்களி��் பரிபூரண ஆட்சியை முதலில் தத்துவ ரீதியாக விவாதித்தார்.ஆனால்,மார்கன் அவருக்கு மாறாக தாயுரிமைக் குலத்தின் தோற்றம் மற்றும் இருத்தலை மாயை-மதக் காரணங்களால் அல்ல, யதார்த்தமான,பொருளாதார மற்றும் உற்பத்திக் கூறுகளைக் கொண்டு விளக்கினார்.எங்கெல்ஸின்'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் எனும் நூல்',பக்.151-152. + +மேலும்,எங்கெல்ஸ் தன்னுடைய நூலில், குடும்பத்துக்கு முன்னர் குலம் இருந்தது. தந்தை வழி முறைக்கு முன்னர் தாய்வழி முறை இருந்தது என்னும் மார்கனுடைய கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு தீவிரமாக ஆதரித்தார்."தமக்குள் மணம் புரிந்து கொள்ள அனுமதிக்கப்படாதிருக்கின்ற பெண் வழி இரத்த உறவினர்களைக் கொண்ட ஒரு குறுகிய வட்டமாக"குலம் உருவாகிக் கொண்டிருந்தது. +ibid.pp.153-154. + + + + + + +நீரிழிவு நோய் + +நீரிழிவு (diabetes) என்பது இரத்தச் சர்க்கரை அதிகரிப்பைக் கொடுக்கக்கூடிய வளர்சிதைமாற்ற சீர்குலைவுகளின் தொகுப்பாகும். இலங்கையில் இது சீனி வியாதி அல்லது சர்க்கரை நோய் என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்த இயலாத நிலைமையில், இந்நோய் உள்ளவர்களின் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருக்கும். + +இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் இந்நிலை தோன்றுவதனால், இதனை உடல் சீர்குலைவுகளில் (physical disoeder) ஒன்றாகக் கொள்ளலாம். மனித உடம்பில் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற இன்சுலின் அத்தியாவசியமாக உள்ளது. குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை எனில் இறப்பை ஏற்படுத்தக்கூடிய மிகச் சிக்கலான நிலமைகளும் உருவாகலாம். கடுமையான நீண்ட காலச் சிக்கல்களாக இதயக் குழலிய நோய், பக்கவாதம், நெடுநாள் சிறுநீரகக் கோளாறு, நீரிழிவு நோயினால் ஏற்படும் கால் புண், நீரிழிவு நோயினால் ஏற்படும் கண் நோய் என்பன ஏற்படலாம். உயர் இரத்த அழுத்தம், நாடிகளின் சுவர்களில் கொழுப்பு படிந்து நாளடைவில் அடைபடுதல், இருதயத் தசைகளுக்கு குருதி வழங்கும் நாடிகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக் கூடிய ஆபத்தை அதிகரிக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர��� கழித்தல் (polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (polydipsia), அளப்பரிய பசி (polyphagia) ஆகிய மரபார்ந்த அறிகுறிகளை உருவாக்குகின்றது. + +நீரழிவு நோயின் அனைத்து வகைகளும் 1921-ஆம் ஆண்டு இன்சுலின் உபயோகத்திற்கு வந்ததிலிருந்து சிகிச்சை அளிக்கக் கூடியவையாகவே உள்ளன. இரண்டாம் வகை நீரழிவு நோயினை மருந்துகளின் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருந்தபோதிலும் முதலாம், இரண்டாம் வகை நீரழிவு நோய்கள் இரண்டுமே நாள்பட்ட நோய்களாதலால், இவற்றை எளிதாக முற்றிலும் குணமாக்க முடியாது. கணைய மாற்ற சிகிச்சை முதலாம் வகையில் முயற்சிக்கப்பட்டது. ஆனால், பெரும் வெற்றியைச் சாதிக்க முடியவில்லை. பல நோயுறுவான பருமனைக் கொண்டவர்களிலும், இரண்டாம் வகை நீரிழிவுக்காரர்களிலும் இரையக மாற்று வழி இணைப்பறுவை செய்வது வெற்றியைக் கொடுத்துள்ளது. கர்ப்பகால நீரிழிவானது பெரும்பாலும் குழந்தை பிறந்த பின் சரியாகிவிடுகிறது. + +உலக மக்கள் தொகையில் சற்றேறக்குறைய பதினோரு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில், 422 மில்லியன் மக்கள் உலகம் முழுவதிலும் நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டுள்ளனர்.இப்பாதிப்பு 2013 இல் 382 மில்லியனாக இருந்தது.1980 ஆம் ஆண்டில் நீரிழிவு நோய்ப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 108 மில்லியன் ஆகும். இவற்றுள் வகை 2 இன் பாதிப்பு விகிதம் 90 விழுக்காடாக உள்ளது.நீரிழிவு நோயாளிகளில் வகை 2 ஆல் அதிகம் பாதிக்கப்படோவோராக ஆண்கள் காணப்படுகின்றனர். இன்சுலினின் உணர்திறன், உடல் பருமன், அதிகக் கொழுப்புப் படிவு, உயர் இரத்த அழுத்தம், புகையிலை நுகர்வுகள், மதுப்பழக்கம் போன்றவை காரணிகளாக அமைகின்றன. + +நீரிழிவில் மூன்று வகைகள் உண்டு. +முதலாவதுவகை நீரிழிவானது (Type I Diabetes-IDDM- Insulin Dependent Diabetes Mellitus) குழந்தைகள், சிறுவர் சிறுமிகள், இளம் பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களுக்கு இன்சுலின் கொண்டுதான் சிகிச்சை அளிக்கவேண்டும். ஏனென்றால் இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கின்றன. பத்து சதவீதமான நீரிழிவு நோயாளிகள் வகை ஒன்றினால் பாதிக்கப்பட்டவர்களாவார்கள். + +இரண்டாவது வகை நீரிழிவு (Type II- NIDDM- Non Insulin Dependent Diabetes Mellitus) இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ அல்லது அப்படி சுரக்கப்படும் இன்சுலினுக்கு எதிர்வினை ஏற்படுவதாலோ ஏற்படுகின்றது. இந்த வகை நீரிழிவு கிட்டத்தட்ட 90 வீதமான நோயாளிகளில் காணப்படுகிறது. இந்தவகை நீரழிவை வயது வந்தவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு என்றும் கூறுவார்கள். இந்த வகை அதிக உடற்பருமன் உள்ளவர்களிடம் காணப்படுகின்றது. இந்த வகை நீரிழிவை உடல் எடையைக் குறைப்பதாலும் சாப்பாட்டுக் கட்டுப்பாட்டாலும் மற்றும் உடற்பயிற்சியினாலும் சிலசமயம் கட்டுப்படுத்தலாம். + +மூன்றாவது வகையான கர்ப்பக் கால நீரிழிவானது இரண்டு சதவீதம் முதல் நான்கு சதவீதமான பெண்களுக்கு கர்ப்பக் காலத்தின் போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. இருந்தபோதிலும், பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் நீரிழிவு உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும். இரைப்பையும் குடலும் உணவிலிருந்து குளுக்கோஸ் எனும் வெல்லத்தை எடுத்து குருதியில் செலுத்துகிறது. அதே சமயம் கணையத்திலிருந்து இன்சுலின் உற்பத்தியாகி குருதியில் கலக்கிறது. + +
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+
+ +நீரிழிவு நோய் பாதிப்பிற்கு வயது தடையல்ல. இருப்பினும், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், மரபுவழி நீரிழிவு நோய் இருப்பவர்கள், உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோருக்கு நீரிழிவு நோய் வர அதிக வாய்ப்புண்டு. இவர்கள், மருத்துவ ஆலோசனைப் பெறுவது நல்லது. + +பல சமயங்களில் அறிகுறிகள் சரியாகத் தென்படாமல் போகின்றன. பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு: + + +இரண்டாம் வகை நீரிழிவு நோயால், பார்வை இழப்பு, மாரடைப்பு, சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம், கால்களை இழத்தல், கோமா மற்றும் இறப்பு முதலான நீரிழிவு நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளாகும். + +நீரிழிவு நோயினை உறுதிசெய்வதற்கு இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அல்லது சர்க்கரையின் அளவானது அளவிடப்படுகின்றது. உண்ணாநிலை குருதிச் சர்க்கரை அளவு (Fasting plasma glucose) 7.0 மில்லி மோல்/லிட்டர் (126 மில்லி கிராம்/டெசிலிட்டர்)-லும் அதிகமாக அல்லது எதேச்சையான குருதிச் சர்க்கரையின் அளவு (Random plasma glucose) 11.1 மில்லி மோல்/லிட்டர் (200 மில்லி கிராம்/டெசிலிட்டர்) --லும் அதிகமாக காணப்பட்டால் ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளது என உறுதி செய்யப்படும். + +சர்க்கரை நோயினால் பாதிக்கப்படுகின்ற சிறார்களுக்கு, அந்த நோயின் அறிகுறிகள் பற்றி அறிவூட்டும் ம��யற்சியாக ரோபோ ஒன்று உருவாக்கப்படுகின்றது. +7 வயது முதல் 12 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு உதவக்கூடிய வகையிலான இந்த ரோபோவை பிரிட்டனில் உள்ள ஹெர்ட்ஃபோட்ஷைர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உருவாக்குகின்றனர். + +நீரிழிவு நோய் வகை 1 க்கான தடுப்பு முறைகள் என எதுவும் வரையறுக்கப்படவில்லை.பொதுவாக, வகை 2 ஆனது 85 விழுக்காட்டிலிருந்து 90 விழுக்காடு வரை பெரும்பாலும் காணப்படுகிறது. இந்த நோயினை உடல் எடைப் பராமரிப்பு, உடலியக்கச் செயற்பாடுகளில் ஈடுபாடு, ஆரோக்கிய உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றின் மூலமாகத் தடுக்கவும் தாமதப்படுத்தவும் இயலும். அதிக அளவிலான உடலியக்கச் செயற்பாடுகள் அதாவது நாளொன்றுக்கு 90 நிமிடங்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்படும்போது, நீரிழிவு அபாயம் 28 விழுக்காடு குறைகிறது.அதுபோல், நல்ல உணவுப் பழக்கவழக்கம் நீரிழிவு நோயைத் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. முழு தானியங்கள், நீர்ச்சத்து நிறைந்த உணவுவகைகள், விதைகள், பல் நிறைவுற்றக் கொழுப்புகள் அடங்கிய தாவர எண்ணெய்கள் மற்றும் மீன் உணவுகள் போன்றவை இந்நோயைக் கட்டுப்படுத்துகின்றன.சர்க்கரை பானம் மற்றும் இறைச்சி வகைகள் ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுதல், நிறைவுற்ற மற்ற கொழுப்புப் பொருட்களை எடுத்துக் கொள்ளுதல் வாயிலாக நீரிழிவைத் தடுக்கமுடியும். புகையிலைப் பயன்பாடுகள் நீரிழிவு நோய்க்குக் காரணமாக அமைவதால், புகையிலைப் பொருட்களின் நுகர்வை நிறுத்திக் கொள்வது நல்லது. வகை 2 நோய் உருவாவதில் உடற்பருமன், ஆரோக்கியமற்ற உணவு, சோம்பல் தன்மை, புகையிலைப் பயன்பாடு ஆகியவை முக்கியக் காரணிகளாக உள்ளன. சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங்களும் மக்கள்தொகை வளர்ச்சி, உலகமயமாக்கல் மற்றும் நகரமயமாக்கல் முதலிய காரணிகளும் பொது சுகாதாரச் சூழல்களும் இன்றியமையாதவையாக உள்ளன. + +நீரிழிவு நோய்க்கான இரண்டு விதமான சிகிச்சை முறைகள் இருக்கின்றன. ஒன்று, இயல்பு நிலைக்கு அருகாமையில் இரத்தத்தில் சக்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி வைத்துக்கொள்வதாகும். இரண்டாவது, நீரிழிவு நோயுடன் வாழ்வதாகும். + +நீரிழிவு நோய் வகை ஒன்றுக்கான அடிப்படைச் சிகிச்சை முறைகளாவன: + + + + + + + + + + + + + +
+ +மைசூர் + +மைசூர் அல்லது எருமையூர் இந்தியாவிலுள்ள கர���நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். இதுவே மைசூர் மாவட்டத்தின் நிர்வாக மையமாகும். மைசூர் நகரமே பண்டைய மைசூர் இராச்சியத்தின் தலைநகரமுமாகும். +எருமையூர், மையூர் என்னும் பெயர்களால் இவ்வூர் சங்ககாலத்தில் வழங்கப்பட்டு வந்தது. மைசூர்நாடு 'எருமை நன்னாடு' எனறு குறிப்பிடப்பட்டுள்ளது. + +மையூர் கிழான் என்பவன் சேரவேந்தன் இளஞ்சேரல் இரும்பொறையின் அமைச்சனாக இருந்தவன். இந்தச் சேரவேந்தனின் தந்தை குட்டுவன் இரும்பொறைக்குப் பெண் கொடுத்தவன். வேளிர் குடியைச் சேர்ந்தவன். இளஞ்சேரல் இரும்பொறைக்குத் தாய்வழிப் பாட்டன். (பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பதிகம்) + +தலையாலங்கானம் என்னுமிடத்தில் பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்துப் போரிட்ட எழுவர் கூட்டணியில் எருமையூரன் என்பவனும் ஒருவன். (அகநானூறு 36) + +மைசூர் அரண்மனையும் பிருந்தாவன் தோட்டமும் மிகப் புகழ்பெற்றவையாகும். மைசூரில் ஒரு பெரிய அருங்காட்சியகமும் உள்ளது. மைசூர் மிருகக்காட்சிசாலை (ஸ்ரீ சாமராஜேந்திர விலங்கியல் தோட்டம்) ஒரு புகழ்பெற்ற மிருகக்காட்சிசாலை.இங்கு மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையம் உள்ளது. + + + + +கண்டி + +கண்டி (() ("Kandy") இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும். + +கண்டி நகரம், கண்டி இராச்சியத்தின் அரச குலமான கண்டி நாயக்கர்களின் தலைநகரமாக விளங்கியது. + +கண்டி சிங்களவர்களை அதிகமாகக் கொண்டிருக்கிறது. தமிழர்களும் ஓரளவிற்கு வாழ்கிறார்கள். + +"மூலம்:""statistics.gov.lk" + + + + + +இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் + +இலங்கை நாடாளுமன்றக் கட்டடம் 1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கோட்டே நிர்வாகத் தலைநகரமாக ஆக்கப்பட்ட பின்னர் அங்கே அமைக்கப்பட்டது. சதுப்பு நிலமாக இருந்த பகுதி தோண்டப்பட்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியின் மத்தியில் அமைக்கப்பட்ட தீவு ஒன்றில் இ��் கட்டிடம் கட்டப்பட்டது. இலங்கைக் கட்டிடக்கலை மரபை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்ட இக் கட்டிடம், இலங்கையின் புகழ் பெற்ற கட்டிடக் கலைஞரான ஜெப்ரி பாவாவினால் வடிவமைக்கப்பட்டது. + + + + + +கணவன் + +ஓர் ஆணும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவ்விருவருக்கு இடையில் உருவாகின்ற புதிய உறவு முறையில், அக்குறிப்பிட்ட ஆண் அப்பெண்ணுக்குக் கணவன் (() ஆகின்றான். சமுதாயங்களின் பண்பாடுகளை ஒட்டிக், கணவன் என்னும் உறவு முறைக்குரிய வகிபாகம் (role) வேறுபட்டுக் காணப்படுகின்றது. + +ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற கட்டுப்பாடுடையது தமிழ்ச் சமுதாயம், இதனை ஒருதாரம்("மோனொகேமி") என்கிறோம். ஆனாலும் பலதாரங்களைக் கொண்ட கணவர்களும் உள்ளனர். மாறிவரும் உலகில் திருமணமில்லாத ஒன்றி வாழும் முறையும் தமிழகத்தில் உள்ளது. + + + + + +மனைவி + +ஓர் ஆணும் ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே ஏற்படுகின்ற புதிய உறவில் அந்தப் பெண் அவளை மணந்து கொண்ட ஆணுக்கு மனைவி என்ற உறவு முறையினள் ஆகின்றாள். மனைவி என்ற இந்த உறவுக்குரிய கடமைகளும், உரிமைகளும் சமுதாயங்களின் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் வேறுபட்டு அமைகின்றன. + +மேலும் மனைவி என்பவள் அந்த ஆணின் வாழ்க்கைக்கு மிக நெருங்கிய தொடர்புடையவள். அவனது வெற்றி மற்றும் வளர்ச்சிக்குப் பெரும் பங்கு வகிப்பவள் ஆகிறாள். குடும்ப உறவுகளைப் பேணி அதன் மூலம் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சிகளைத் தருபவள் + + + + +மணவழிக் குடும்பம் + +ஒரு குடும்பம் உருவாவதற்குரிய மிக அடிப்படையான தேவை ஒரு ஆணும் ஒரு பெண்ணும் முறைப்படி திருமணம் செய்து கொள்வதாகும். இவ்வாறு இருவரும் கணவனும் மனைவியும் ஆகி அமைக்கும் குடும்பமே மணவழிக் குடும்பம் (Conjugal Family) ஆகும். கணவன் மனைவியையும் அவர்களது சொந்த அல்லது தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளையுங் கொண்டதாக இக்குடும்பம் அமையும். திருமண உறவு முக்கியத்துவமானதாக இருக்கும். + + + + +கருக் குடும்பம் + +கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. +தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன. + + தனிக் குடும்பம் +தனிக்குடும்பத்தின் தலைவர். இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தந்தை, பிதா, தகப்பன், என்பனவாகும். + +தனிக்குடும்பத்தின் தலைவி. இவரைக் குறிப்பிடும் பிற பெயர்கள் தாய், மாதா, அன்னை என்பனவாகும். + +பிள்ளைகளில் ஆண் பிள்ளையை மகன் என்று அழைப்பர். + +பிள்ளைகளில் பெண் பிள்ளையை மகள் என்று அழைப்பர். + + பிள்ளைகள் + +உடன் பிறந்தோரில் ஆண் பிள்ளைகளை சகோதரன் என்று அழைப்பர். சகோதரன் என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும். + +சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அண்ணா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட அண்ணன்கள் இருக்கும் பட்சத்தில் பெரியண்ணன், சின்னண்ணன், குட்டியண்ணன் என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர். +சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் ஆண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தம்பி என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தம்பிகள் இருக்கும் பட்சத்தில் பெரியதம்பி, சின்னத்தம்பி, குட்டித்தம்பி என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர். + +உடன் பிறந்தோரில் பெண் பிள்ளைகளை சகோதரி என்று அழைப்பர். சகோதரி என்னும் முறை வயதில் மூத்தவர், இளையவர் என்றில்லாமல் பொதுவாக அழைக்கப்படும் சொல் ஆகும். + +சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் மூத்தவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே அக்கா என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட பெண் சகோதரிகள் இருக்கும் பட்சத்தில் பெரியக்கா, சின்னக்கா, குட்டியக்கா என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர். + +சகோதரங்களில் ஒருவர் தன்னைவிட வயதில் சிறியவராகவும் பெண் சகோதரமாகவும் இருப்பின் அவரே தங்கை என்று அழைக்கப்படுவார். சில சமயங்களில் ஒன்றுக்குமேற்பட்ட தங்கைகள் இருக்கும் பட்சத்தில் பெரியதங்கை, சின்னத்தங்கை, குட்டித்தங்கை என்று அவர்களின் வயதிற்கேற்ப அழைக்கப்படுவர் + + + + + +தகவல் வெளிப்படுத்தல் + +தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்த ப�� வழிகள், சாதனங்கள் பயன்படுகின்றன. மொழி (பேச்சு, எழுத்து), ஓவியம், இசை, பிற கலைகள், செயல்கள், என பல பரிமாணங்களில் தகவல்களை, சிந்தனைகளை வெளிப்படுத்தலாம். பின்வருவன தகவல்களை சேகரித்து பகிர உபயோகமான சில வழிமுறைகள். + +கணினி பிணையமாக்கம் தலைப்புகள் பட்டியல் + + + + +பிதுருதலாகலை + +பிதுருதலாகலை ("Pidurutalagala", சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இம்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது. + + + + +அகர்தலா + +அகர்தலா (ஆங்கிலம்:Agartala), இந்தியாவின் திரிபுரா மாநிலத்தில் அமைந்துள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி மன்றம் ஆகும். + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 16 மீட்டர் (52 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 189,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அகர்தலா மக்களின் சராசரி கல்வியறிவு 85% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அகர்தலா மக்கள் தொகையில் 8% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +அகர்த்தலா நகராட்சியில் ஒளி உமிழ் இருமுனைய விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விளக்குகளால் மின்சாரம் சேமிக்கப்படுகிறது. + + + + +தேராதூன் + +தேராதூன் ("Dehradun"; இந்தி: देहरादून; , "தெஹ்ரா தூன்") அல்லது டேராடூன் என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரமாகும். இதுவே அம்மாநிலத்தின் பெரிய நகரமும் ஆகும். இது இமயமலைக்கும் சிவாலிக் மலைக்கும் இடையே டூன் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. புது தில்லியிலிருந்து 230 கிமீ தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது. + +இந்நகரில் பல புகழ் பெற்ற கல்வி நிலையங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் உள்ளன. + +என்பன சில. + +இங்கு தனியார் நடத்தும் டூன் பள்ளி உள்ளது. ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, ராகுல் காந்தி, மணி சங்கர் ஐயர், கரண் சிங���, கமல் நாத், நவீன் பட்நாய்க், அமரிந்தர் சிங், விக்ரம் சேத், பிரணாய் ராய், கரண் தபார் ஆகியோர் இங்கு படித்தவர்களே. + +புகழ்பெற்ற எழுத்தாளரான ரஸ்கின் பாண்ட் (Ruskin Bond) தமது பல கதைகளில் இப்பகுதிகளை மையமாக வைத்து எழுதியுள்ளார். + + + + + +தருமன் + +தருமன் மகாபாரதத்தில் பாண்டு மற்றும் குந்தி ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு எமதர்மன் மூலம் பிறந்தவர்.குருச்சேத்திரப் போரில் பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் அத்தினாபுரம் மற்றும் இந்திரப்பிரஸ்தம் ஆகியவற்றின் அரசர். + +இவர் அனைத்து தர்ம சாஸ்த்திரங்களையும் அறிந்தவர். தருமரின் தந்தை பாண்டு முனிவர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார். குந்தியின் திருமணத்திற்கு முன்பு துருவாச முனிவர் செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் அளித்தார். அதை இப்போது தன் கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி குந்தி தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு எம தருமராசன் மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர். + +திரெளபதி எனும் மனைவியை தன் சகோதரர்களுடன் பகிர்ந்து குடும்ப வாழ்க்கை நடத்தினார். கௌரவர்களுடன் நடத்திய சூதாட்டத்தில் தனது நாட்டையும், சகோதரர்கள் மற்றும் மனைவி திரௌபதியையும் இழந்து 13 ஆண்டுகள் திரௌபதி மற்றும் சகோதரகளும் வனவாசம் சென்று பின்பு குருசேத்திரப் போரில் கௌரவர்களை வென்று சூதில் இழந்த இந்திரப்பிரஸ்தம் மீட்டதுடன் அத்தினாபுரத்திற்கு அரசன் ஆனான். + +எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. + + + + + +விரிந்த குடும்பம் + +கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம். + +என்பன இவ்வகைகளுள் சிலவாகும். + + + + + +பசுமைக் கட்டிடப் பொருள் + +உற்பத்தி, காவிச் செல்லல், பயன்பாடு போன்ற அம்சங்களில் குறைந்த அளவு சூழலியல் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய வகையில் அமைகின்ற கட்டிடப் பொருள்கள் பசுமைக் கட்டிடப் பொருள்கள் எனப்படுகின்றன. கட்டிடப் பொருட்களின் சூழலியல் தாக்கம் பற்றிக் கருதும்போது அது பயன் படுத்தப்படும் கட்டிடத்தின் முழு ஆயுட் காலமும் கவனத்துக்கு எடுத்துக்கொள்ளப் படுவதால், பயன்படுத்தப்படும் கட்டிடப் பொருள்கள் கட்டிடங்களின் நீண்ட காலச் சூழல் நட்புத் தன்மைக்கு மிகவும் முக்கியமானவை ஆகும். + +கட்டிடங்களும், கட்டுமான நடவடிக்கைகளும், உலகின் மூலப்பொருட் பயன்பாட்டின் 40% அளவைப் பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் மேற்படி நடவடிக்கைகள் உலக எரிபொருள் நுகர்வின் குறிப்பிடத்தக்க அளவுக்கும் காரணமாக உள்ளன. இதனால் சூழல் மாசடைவதிலும், பெருமளவில் வளங்கள் சுரண்டப்படுவதிலும் கட்டிடங்களுக்கும், கட்டுமானத் துறைக்கும் பெரும் பங்கு உண்டு. இயற்கை வளங்களை எதிர்காலச் சந்ததியினரும் அநுபவிக்கும் வகையில் அவற்றைப் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டுமென்ற உணர்வு மக்களிடையே வலுத்து வருவதன் காரணமாக, கட்டிடக் கலைஞர்கள் பசுமைக் கட்டிடப் பொருள்களின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். + + + + +பொலன்னறுவை + +பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்குமொரு அரணாகவிருந்த இந்நகரை, சோழர் இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது. + +இந்த நகரைச் சுற்றி, பல பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத் தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விகாரைகளும் , இந்து கோவில்களும் இருக்கின்றன. +கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், மாளிகைகள், கோவில்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், மருத்துவமனைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன. + + + + + +கலபதி + +கலபதி என்பது கடலோடும் கப்பற்தலைவனின் சட்டபூர்வ தகுதியாகும். அனேக வர்த்தக ஆவணங்களில் தலைவன் என்றே இவர் குறிப்பிடப்படுகிறார். கலபதியானவர் குடிமகனாகவோ அல்லது கடற்படை உறுப்பினராகவோ இருத்தல் முடியும். ஒரு கப்பலின் கட்டளைத்தலைவர் என்னும் வகையில் அவருக்கு பரந்த சட்டவுரிமை உண்டு. இவ்வுரிமையானது கலகங்களை அடக்கும் பொருட்டும் கடற் கொள்ளைகளை எதிர்க்கும் பொருட்டும் உயிர்ச் சேதம் உண்டாகக்கூடிய நடவடிக்கைகளையும் ஆணையிடும் அனுமதியை அளிக்கிறது.கலகம் என்பது, முக்கியமாக, கப்பலை கைப்பறும் நோக்குடன் கலபதியின் சட்டபூர்வ கட்டளைகளுக்கு அடிபணியாமல் இருப்பதைக் குறிக்கும். எனினும், பரவலான நம்பிக்கைக்கு மாறாக, ஒரு திருமணத்தை நடத்தி வைக்கும் சிறப்பு சட்டபூர்வ அதிகாரம் எதுவும் கலபதிக்கு கிடையாது. + + + + +கப்பல் + +கப்பல், ஒரு பெரிய கடலோடும் வாகனமாகும். சில வேளைகளில், கப்பலில் பல அடுக்குகளும் இருக்கக்கூடும். மேலும், கப்பலானது அதற்கு தேவையான அளவு பல்வேறு வகையான படகுகளையும் தன்னகத்தே வைத்திருக்கக் கூடியது. உயிர்காப்புப் படகுகள், திருப்புப்படகுகள், இழுவைப் படகுகள் போன்றன இவற்றுள் அடங்கும். "ஒரு படகை கப்பலில் உள்ளடக்க முடியும், ஆனால் கப்பலைப் படகில் உள்ளடக்க முடியாது". என்ற மரபுச் சொல் வழக்கானது ஒரு கப்பலுக்கும், படகுக்கும் இடையிலான அளவு வேறுபாட்டைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றது. இது எல்லாச் சந்தர்ப்பங்களிலும் சரியாக இருக்கும் என்பதற்கு இல்லை. பல்வேறு நாடுகளிலும் உள்ள உள்ளூர்ச் சட்டங்களும், விதிகளும் அளவு, பாய்மரங்களின் எண்ணிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு படகு, கப்பல் என்பவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை வரையறுக்கின்றன. + +கப்பல்கள் மற்றும் படகுகள் மனித வரலாற்றுடன் இணைந்து வளர்ந்தது. ஆயுத மோதல் மற்றும் அன்றாட வாழ்வில் அவை நவீன வணிக மற்றும் இராணுவ அமைப்புகளில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மீனவர்களால் மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்படுகின்றன. இராணுவ படைகள் போர் மற்றும் படைகளின் போக்குவரத்திற்காக இயங்குகின்றன. கிட்டத்தட்ட 35,000 வர்த்தக கப்பல்கள் 2007 ல் 7.4 பில்லியன் டன் எடையுள்ள சரக்கை ஏற்றிசென்றன. + +கப்பல்கள் எப்போதும் வரலாற்றின் கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கிய காரணமாக இருந்தன. கடல்வழி பயணங்களால் தான் திசைகாட்டி, வெடிமருந்து போன்ற கண்டுபிடிப்புகள் பரவியது. கப்பல்கள் காலனித்துவம் மற்றும் அடிமை வர்த்தகம் போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டு வந்தன. 16 ஆம் நூற்றாண்டுக்கு பின்னர், ஐரோப்பிய மாலுமிகள் வழியாக அமெரிக்காவிற்கு வந்த புதிய பயிர்களினால் கணிசமாக உலக மக்கள் தொகை வளர்ச்சியடைந்தது. கடல்வழி போக்குவரத்து இன்றைய உலக பொருளாதார முறையை உருவாக்கியுள்ளது. + +சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கற்கால காலகட்டத்திற்கு முன்பிருந்தே, மனிதன் கப்பல்களை அறிந்திருந்தான். ஆனால் அவற்றை முறையான கப்பல்கள் என்று கொள்ள முடியாது. முதலில் விலங்கு தோல்கள் அல்லது நெய்த துணிகளை sails பயன்படுத்த தொடங்கினர். ஒரு படகில் நிமிர்த்தியவாறு அமைக்கப்பட ஒரு கம்பின் மேல் முனையில் இவற்றை இணைத்து, நெடுந்தூரப்பயணங்களுக்கு பயன்படுத்தினான். + +மொகெஞ்சதாரோவில் காணப்பட்ட ஒரு பலகை மிதக்கும் படகோட்டத்தை சித்தரித்தது. கப்பல்கள் பல வகையாக இருந்தன; அவற்றின் கட்டுமானத்தை யுக்தி கல்ப தரு என்ற பண்டைய இந்திய உரை விவரிக்கிறது. இது கப்பல் கட்டும் நுட்பங்களை அறிய ஒரு தொழில்நுட்ப விளக்கத்தை கொடுக்கிறது. இது பல்வேறு கப்பல்களின் வகைகள், அவற்றின் அளவுகள், மற்றும் அவை கட்டப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய விவரங்களை கொடுக்கிறது. + +2007 ஆம் ஆண்டில், உலகிலுள்ள மொத்த கப்பல்களில் 1,000 டன்களுக்கும் அதிகமான வர்த்தக கப்பல்கள் 34,882 ஆகும். +இவற்றின் மொத்த எடை 1.04 பில்லியன் டன்களாகும். இக்கப���பல்கள் 2006 ஆம் ஆண்டைய கணக்கின் படி 7.4 பில்லியன் சரக்குகளை ஏற்றிச்சென்றிருக்கின்றன. அது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 8% வளர்ச்சியாகும்.2016 ஆண்டு புள்ளி விவரப்படி 1000 டன்களுக்கும் அதிகமான எடையுள்ள கப்பல்களில் 27.9 சதவீதம் எண்ணெய்க் கப்பல்கள் (tankers) , 43.1 சதவீதம் பேரளவு சரக்குக்கப்பல்கள் (bulk carriers), 13.5 சதவீதம் கொள்கலக் கப்பல்களாகும் (container ships). 4.2 சதவீதம் பொதுச் சரக்குக் கப்பல்கள் (general cargo) , 11.3 சதவீதம் மற்ற பயன்பாட்டுக் கப்பல்களாகும் (வாயு, வேதிப்பொருள் பயணிகள் கப்பல்கள் உட்பட). + +2002 ஆம் ஆண்டு நிலவரப்படி சிறிய வகை ரோந்துக் கப்பல்கள் தவிர்த்து 1,240 போர்க்கப்பல்கள் உலகளவில் உள்ளன . ஐக்கிய அமெரிக்காவிடம் 3 மில்லியன் டன் எடை மதிப்புடைய கப்பல்களும், 1..35 மில்லியன் டன் ரசியாவிடமும், ஐக்கிய இராச்சியத்திடம் 504,660 டன் எடைமதிப்புள்ள கப்பல்களும், சீனாவிடம் 402,830 டன் மதிப்புள்ள கப்பல்களும் உள்ளன.இரண்டு உலகப்போர்களின் போதும், பனிப்போரிலும்,கடற்படை நடவடிக்கைகள் மூலம் இரண்டு பிராந்தியங்களுக்கிடையே ஏற்ப்பட்ட கடற்படை அதிகாரப் போட்டிகளை 21 ம் நூற்றாண்டு பார்த்திருக்கிறது.சமீபத்தில் உலகின் பெரிய வல்லரசுகளான ஐக்கிய இராச்சியம் பாக்லாந்து தீவுகளிலும் அமெரிக்கா இராக்கிலும் தமது கடற்படை அதிகாரத்தை பயன்படுத்தியது. + +உலக மீன் பிடிக்கப்பல்களின் எண்ணிக்கையை கணிப்பதில் சிரமங்கள் உள்ளன.இவற்றுள் எண்ணக்கூடிய அளவில் பெருவணிக மீன்பிடி கலன்களும் மிகப்பெரும் எண்ணிக்கையில் சிறிய ரக மீன் பிடி கப்பல்களும் உள்ளன. பெரும்பாலான மீன் பிடி கப்பல்கள் கடற்கரைக் கிராமப்பகுதிகளில் இருப்பதால் அவற்றை எண்ணிக் கணிப்பதில் பல சிக்கல்கள் நிலவுகின்றன. 2004 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 4 மில்லியன் மீன் பிடி கப்பல்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு கணித்துள்ளது.மேலும் அதே வருடத்தில் உலகம் முழுவதும் 29 மில்லியன் மீனவர்களால் 85,800,000 டன்கள் மீன்கள் மற்றும் நண்டு இறால் வகை மீன்கள் பிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது . + +நன்னீர் கப்பல் போக்குவரத்தானது ஏரிகளிளும், ஆறுகளிலும், கால்வாய்களிலும் நடைபெறுகிறது.நன்னீரானது கடல்நீரை விட அடர்த்தி குறைவு. ஆகையால் அதற்கேற்றவாறு கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு நன்னீர் நீர்நிலைகளின் நிள அகலத்திற்கு ஏற்றவாறும் கப்பல்கள் உருவாக்கம் செய்யப்படுகின்றன. உதாரணமாக தன்யூப் ஆறு, மிசிசிப்பி ஆறு, ரைன் ஆறு, யாங்சி ஆறு, அமேசான் ஆறு மற்றும் அமெரிக்கப் பேரேரிகளில் மிகப்பெரிய கப்பல்கள் செல்லும் அளவுக்கு அகலமாகவும் மற்றும் ஆழமாகவும் காணப்படுகின்றன. + +வர்த்தக கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் - சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள், மற்றும் சிறப்பு தேவை கப்பல்கள். சரக்கு கப்பல்கள் உலர் மற்றும் திரவ சரக்கு போக்குவரத்திற்கு பயன்படுகிறது. + +பயணிகள் கப்பல்களின் அளவு சிறிய ஆற்று படகுகளில் இருந்து மிக பெரிய கப்பல்கள் வரை செல்லும். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிகளை கொண்டு செல்லும் கப்பல்கள், குறுகிய பயணங்களுக்கு பயணிகள் மற்றும் வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல்கள், இன்ப பயணங்கள் மேற்கொள்ளப்படும் கப்பல்கள் இந்த வகையில் அடங்கும். + +கடற்படை கப்பல்கள், இராணுவ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் கப்பல்கள் ஆகும். கடற்படை கப்பல் பல வகையாக உள்ளன. கடலின் மேற்பரப்பில் போர் புரியும் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், மற்றும் ஆதரவு மற்றும் துணை கப்பல்கள். + +பெரும்பாலான இராணுவ நீர்மூழ்கி கப்பல்கள் தாக்குதல் நீர்மூழ்கி கப்பல்கள் அல்லது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்கள் ஆகும். இரண்டாம் உலக போரின் முடிவு வரை டீசல் / மின்சார நீர்மூழ்கிகளின் முதன்மை பணி கப்பல் எதிர்ப்பு போர், இராணுவ படைகளுக்கு உதவி மற்றும் உளவு பணிகள். சிறந்த சோனார் அமைப்புகள், அணு உந்துவிசை வளர்ச்சி போன்ற காரணிகளால் நீர்மூழ்கி கப்பல்கள் திறம்பட பணிபுரிய முடிந்தது. + +மீன்பிடி படகுகள் வர்த்தக கப்பல்களின் ஒரு துணைக்குழு, ஆனால் அளவு சிறியதாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டும் இருக்கும். அவற்றை பல விதங்களிலும் வகைப்படுத்த முடியும்: கட்டுமானம், அவற்றல் பிடிக்கப்படும் மீன்களின் வகை, பயன்படுத்தப்படும் மீன்பிடி முறை, புவியியல் தோற்றம், மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள். + + +கப்பல் கட்டுமானம் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெறுகிறது. கட்டப்படும் கப்பலின் அளவை பொருத்து அது ஒரு சில மாதங்கள் முதல் 10 ஆண்டு��ளுக்கு மேலும் நீடிக்கும். கப்பல் கட்ட பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் கப்பலின் அளவு போன்றவை கட்டுமான முறையை தீர்மானிப்பதில் ஒரு பெரிய பங்கு வகிக்கும். ஒரு கண்ணாடியிழை படகு மேலோடு அச்சிலிருந்தும், ஒரு சரக்கு கப்பல் எஃகு பாகங்களை ஒன்றாக பற்ற வைத்தும் கட்டப்படுகிறது. + +பொதுவாக, கப்பலின் கட்டுமானம் அதன் வெளிப்புற சுவர் கட்டப்படுவதுடன் தொடங்குகிறது. இது பெரும்பாலும் நிலப்பகுதியில் செய்யப்படுகிறது. வர்ணம் பூசப்பட்ட பின், அது மிதக்கவிடப்படுகிறது. மேல் பகுதிகளை கட்டுவதும் உபகரணங்களை நிறுவுவதும் பின்னர் செய்யப்படும். கப்பல் தொடங்குதல் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக இருக்கிறது. வழக்கமாக கப்பல் அப்போது தான் முறையாக பெயரிடப்படும். + +வர்த்தக கப்பல்கள் அல்லது வணிக கப்பல்களானது, மீன்பிடி கப்பல்கள் (fishing vessels), சரக்குக் கப்பல்கள் (cargo ships), பயணிகள் கப்பல்கள் ( passenger ships) மற்றும் சிறப்பு-நோக்க கப்பல்கள் (special-purpose ships) என நான்கு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் வளர்ச்சி அமைப்பின் (UNCTAD) கடல் வழி வர்த்தகம் தொடர்பான ஆய்வறிக்கையில் (UNCTAD review of maritime transport ) கப்பல்களை பின்வருமாறு வகைப்படுத்தியுள்ளது . +இதில் மற்ற கப்பல்கள் என்பதில் திரவ பெட்ரோலிய வாயு ,திரவ இயற்கை எரிவாயு , வேதியப் பொருட்கள் ஆகியவற்றை சுமந்து செல்லும் கப்பல்கள், தூர்வாரி (dredgers) , இழுவை, மரச்சட்டங்கள் ஏற்றிச்செல்லும் கப்பல்கள் (reefers),பயணிகள் கப்பல்கள், உல்லாசக் கப்பல்கள் (cruise) போன்ற சிறப்பு வகைக் கப்பல்களும் அடங்கும். +வானிலைக் கப்பல்கள் (weather ships) போன்ற சிறப்பு வகைக் கப்பல்கள் கடல் வளிமண்டலத்தில் புவி வெப்பமயமாதல் கணிப்புகள் மேற்கொள்ளவும் கடல் மேற்பரப்பு வானியல் ஆய்வுகளுக்கும் ஒரு தளமாக கடல் பரப்பில் நிறுத்திவைக்கப்படுகின்றன. + +நாட்டின் இராணுவ மற்றும் கடற்படைப் பாதுகாப்பிற்காகவும், ரோந்துப் பணிக்காகவும் ஆயுதங்கள், விமானங்கள், சிறப்பு வகை பாதுகாப்பு உபகரணங்கள்,தொலைக்கண்டுணர்வி (radar) உள்ளிட்ட வசதிகளைக் கொண்ட கப்பல்கள் கடற்படைக்கப்பல்களாகும். இவை பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன. + + +பட்டியல்கள் + + + + +புவி சூடாதல் + +புவி வெப்பமயமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் ச���ாசரி வெப்பநிலையில் ஏற்பட்டிருக்கும் சீரான வெப்பநிலை உயர்வை குறிக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் புவியின் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை கூடியிருப்பதும் தொடர்ந்து கூடிவருவதுமான நிகழ்வு புவி வெப்பமயமாதல் எனப்படுகிறது. சென்ற நூற்றாண்டில் புவியின் மேற்பரப்பு வெப்பநிலை 0.74 ± 0.18 °C (1.33 ± 0.32 °F) கூடியிருக்கிறது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து தற்போது வரையான வெப்பநிலை கூடுவதற்கு புதைபடிவ எரிமங்களின் எரிப்பு, காடழிப்பு, போன்ற மனித செயற்பாடுகளே காரணமென தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு (IPCC) முடிவு செய்துள்ளது. கைத்தொழிற் புரட்சிக்கு முன்னர் தொடக்கம் 1950 வரை ஞாயிற்றுக் கதிர் வீசல் வேறுபாடுகள் எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை நிகழ்வுகள் புவி சூடாதலுக்கு காரணமாயிருந்திருக்கலாம் என்றும் தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழு முடிவு செய்துள்ளது. எனினும் இந்நிகழ்வுகள் முடிந்த பின்னர் சிறிய அளவில் புவி குளிமையாதலும் நடைபெற்றுள்ளது. இந்த அடிப்படையான முடிவுகள், ஜி8 நாடுகளில் அறிவியல் கழகங்கள் உட்பட 70க்கும் கூடுதலான அறிவியல் சமூகங்களாலும் அறிவியல் கழகங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. ஒரு சிறு எண்ணிகையிலான அறிவியலாளர்கள் இந்த முடிவுகளுடன் உடன்படவில்லை. + +தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ள தட்பவெப்பநிலை மாதிரிகளின் எதிர்காலா மதிப்பீடுகள் இருபத்தொறாம் நூற்றாண்டில் புவி மேற்பரப்பு வெப்பநிலை மேலும் வரை கூடலாம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஒவ்வொரு தட்பவெப்பநிலை மாதிரியும் வெவ்வேறான அளவு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் வெப்பநிலை கூட்டும் திறனையும் எதிகால உற்பத்தி அளவுகளையும் பயன்படுத்துவதால் தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகள் மாறுபடுகின்றன. புவி சூடாதல் புவியின் எல்லா இடங்களிலும் ஒரே அளவில் இருக்காது என்பது உட்பட பல நிச்சயமற்ற தன்மைகளும் இந்த தட்பவெப்பநிலை மாதிரிகளின் மதிப்பீடுகளில் காணப்படுகிறன. கூடுதலான ஆய்வுகள் 2100 ஆம் ஆண்டு வரை கருதியே செய்யப்பட்டுள்ளன எனினும், வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வு முற்றாக நிறுத்தப்பட்டாலும் பெருங்கடல்களின் பாரிய வெப்பக்கொள்ளளவு, வளிமண்டலத்தில் கரியமில வளிமத்தின் நீண்ட ஆயுட்காலம் என்பவற்றைக் கருதும் போது 2100 ஆம் ஆண்ட்டுக்கு அப்பாலும் புவி சூடாதல் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. + +கூடிவரும் புவி வெப்பநிலை கடல் மட்டத்தை உயரச் செய்து வீழ்படிவு கோலத்தை மாற்றிவிடும், மேலதிகமாக இதில் மிதவெப்ப மண்டல பாலைவனப் பகுதிகள் விரிவடைவதும் அடங்கலாம்.பனியாறுகள், நிலை உறை மண், கடல்ப் பனி என்பவை துருவங்களை நோக்கிப் தொடந்ந்து பின்வாங்கும் என் எதிர்வுக்க்கூறப்படுகிறது. சூடாதல் விளைவு ஆர்க்டிக் பகுதியில் கூடுதலாக காணப்படும். சீரற்ற தட்பவெப்பநிலை நிகழ்வுகளின் கடுமை கூடுதல், உயிரின அழிவு வேகம் கூடுதல், வேளாண்மை விளைச்சளின் மாற்றங்கள் என்பவை எதிர்பார்க்கப்படும் சில விளைவுகளாகும். + +புவி சூடாதலினைக் குறித்தும் அதைத் தடுப்பதற்கான நடைமுறைகள் குறித்தும் (சிலர் ஒன்றும் தேவையில்லை எனவும் கருதுகின்றனர்) கருத்துப் பரிமாற்றங்கள் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றன. புவி சூடாதல் விளைவுகளை தடுப்பதற்கு இப்போதைக்குள்ள முறைகளாக வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைத்தல், சூடாதல் காரணமாக ஏற்படும் விளைவுகளிற்கு ஏற்வாறு மாறிக்கொள்ளல் என்பன முக்கியமானவையாகும். வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் உமிழ்வைக் குறைக்கும் நோக்குடைய கியோத்தோ நெறிமுறையில் பல நாடுகள் கைச்சாத்திட்டு நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளன. + +புவி சூடாதலின் போது புவிக்கு அண்மித்த வெப்பநிலையின் உலகலாவிய சராசரியின் மாற்றம் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை 0.74 °C ±0.18 °C ஆல் கூடியுள்ளது. 1906-2005 வரையான காலப்பகுதியில் வெப்பநிலை கூடும் வீதத்தோடு ஒப்பிடுகையில் அதன் கடைசி 50 ஆண்டுகளில் வெப்பநிலை கூடும் வீதம் இரட்டிப்பாகியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C ±0.03 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.07 °C ± 0.02 °C என்பதை ஒப்பிடுக). நகர்ப்புற வெப்பத் தீவு விளைவு புவி சூடாதலுக்கு 1900 ஆண்டு முதல் பத்து ஆண்டுகளுக்கு 0.002 °C என்ற வீத்ததால் புவி வெப்பநிலையைக் கூட்டியுள்ளது. செய்மதி அளவீடுகளின் படி 1979 ஆம் ஆண்டு முதல் அடிவளிமண்டலத்தின் கீழ் பகுதியில் வெப்பநிலை பத்து ஆண்டுகளுக்கு 0.12 தொடக்கம் 0.22 °C வரை கூடியுள்ளது (0.22 - 0.4 °F). 1850 ஆம் ஆண்டுக்கு முந்தைய ஒன்ற��� அல்லது இரண்டு ஆயிரம் ஆண்டுகளின் காலத்தில், இடைமத்திய கால வெப்பமான காலகட்டம் அல்லது சிறு பனி யுகம் ஆகிய உள்ளூர் ஏற்றத்தாழ்வுகள் தவிர்ந்தவிடத்து ஒப்பீட்டளவில் சராசரி வெப்பநிலை கூடுதல் மாற்றம் இருந்திருந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. + +நாசாவின் கோடார்டு விண்வெளி ஆய்வுகளுக்கான நிறுவனத்தின் மதிப்பீட்டின் படி, 1800 ஆண்டுகளின் பிற்பகுதியில் வெப்பநிலை தொடர்பான நம்பகமான பரவலான கருவியியல் அளவீடுகள் கிடைக்கப் பெற்றதில் இருந்து 2005 ஆம் ஆண்டே வெப்பநிலைக் கூடிய ஆண்டாகும். இவ்வெப்பநிலை வெப்பநிலைத் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்தைப்பிடித்த 1998 ஆம் ஆண்டினதை விட சில கீழ்நூறு பாகைகள் கூடுதலாகும். உலக வானிலையியல் அமைப்பும் தட்பவெப்பநிலை ஆராய்ச்சிப் பிரிவும் மேற்கொண்ட மதிப்பீடுகளின் படி 1998 ஆம் ஆண்டு முதலிடத்தையும் 2005 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருக்கின்றன. 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் வலிமையான எல் நீனோ 1998 ஆம் ஆண்டில் நடைப்பெற்றமையால் அவ்வாண்டின் வெப்பநிலைகள் சராசரி அளவைவிட கூடுதலாக காணப்பட்டன. + +வெப்பநிலை மாற்றம் உலகுமுழுவது ஒரே அளவில் நடைப்பெறவில்லை. 1979 ஆம்ஆண்டு முதல் நிலத்தின் வெப்பநிலை கடல் வெப்பநிலையைவிட இரண்டு மடங்கு வேகமாக கூடியுள்ளது (பத்து ஆண்டுகளுக்கு 0.25 °C என்பதுடன் பத்து ஆண்டுகளுக்கு 0.13 °C என்பதை ஒப்பிடுக). நிலத்தைவிட கடல் கூடுதல் வெப்பக் கொள்ளளவைக் கொண்டுள்ளமையும் கடல் ஆவியாதல் மூலம் நிலப்பரப்பை விடவும் வெகு துரிதமாக வெப்பத்தை இழக்கக் கூடியமையும் என்ற இரண்டு கரணியங்களால் கடல் வெப்பநிலைகள் நிலப்பரப்பினதை விடவும் மெதுவாகவே கூடுகின்றன வடக்கு அரைக்கோளம் தெற்கு அரைக்கோளத்தை விட கூடுதல் நிலப்பரப்பை கொண்டிருப்பதாலும் பனி-வெண் எகிர்சிதறல் பின்னூட்டச் சக்கரத்துக்குள்ளாகும் கூடுதலான பருவ-தூவிப்பனியுள்ளநிலப் பகுதிகளும் கடல் பனியும் காணப்படுவதாலும் வடவரைக்கோளம் துரிதமாக வெப்பமடைகிறது. வெப்பம்சிக்குறுத்தும் வளிமங்கள் கூடுதலாக வடவரைக்கோளத்தில் கூடுதலாக உமிழப்பட்டாலும் அவ்வளிமங்கள் இரண்டு அரைக்கோளங்களின் வளிமங்கள் கலக்க எடுக்கும் நேரத்தை விட கூடிய நேரம் வளிமண்டலத்தில் இருப்பதால் வெப்பமடைதலில் எந்த வித்தியாசத்திற்கும் காரணமாவதில்லை. + +பெருங்க���ல்களின் கூடுதலான வெப்பக்கொள்ளளவுக் காரணமாகவும் ஏனைய நேரில் விளைவுகளின் மெதுவான தாக்கம் காரணமாகவும் தட்பவெப்பநிலை சீராக பலநூற்றாண்டுகள் ஆகலாம். ஆய்வுகளின் படி வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களிம் உமிழ்வு 2000 ஆம் ஆண்டு அள்வுகளில் கட்டுப்படுத்தப்பட்டாலும் வெப்பநிலை யினால் மேலும் கூடலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. + +தட்பவெப்பநிலையுடன் தொடர்பில்லாத காரணியங்களுக்கும் தட்பவெப்பநிலை மாற்றங்களைக் காட்டுகிறது. வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் அளவு, சூரிய ஒளிர்வில் உள்ள மாற்றங்கள், எரிமலை வெடிப்புகள், புவி சூரியனைச் சுற்றும் பாதையில் ஏற்படும் மாற்றங்கள் என்பன தட்பவெப்பநிலையில் செல்வாக்குச் செலுத்தும் வெளிக் கரணியங்களாகும். பொதுவாக இதில் முதல் மூன்று கரணியங்களே வெப்பநிலை மாற்றத்துக்கு ஏதுவாகிறது. நிலவுலகு சூரியனைச் சுற்றும் பாதை மிக மெதுவாகவே மாற்றமடைவதால் கடந்த நூற்றாண்டின் வேகமான வெப்பநிலை மாற்றங்களுக்கு இது கரணியமாகாது. + +வளிமண்டலத்திலுள்ள வளிமங்கள் அகச்சிவப்பு கதிர்களை உறிஞ்சி மீண்டும் உமிழ்வதன் மூலம் கோள் ஒன்றின் கீழ் வளிமண்டலமும் அதன் மேற்பரப்பும் வெப்பமடைதல் வெப்பம் சிக்குறும் விளைவு எனப்படுகிறது. வெப்பம் சிக்குறும் விளைவை ஜோசப் ஃபோரியர் 1824 ஆம் ஆண்டு கண்டறிந்தார், 1896 ஆம் ஆண்டில் சிவாந்தே அரினியஸ் வெப்பம் சிக்குறும் விளைவின் அளவைக் கண்டறிந்தார். புவிசூடாதலுக்கு மாந்த நடவடிக்க்கைகள் ஒரு கரணியமல்லவென கருது அறிவியலாளர்கள் உட்பட் எவராலும் வெப்பம் சிக்குறும் விளைவின் இருப்பு மறுப்புக்குள்ளாகவில்லை. மாறாக மாந்த நடவடிக்கைகளால் வளிமண்டலத்தில் உள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்கள் செறிவு மாறும் போது வெப்பம் சிக்குறும் விளைவு எவ்வாறு மாற்றமைடையும் என்பதே கேள்விகுள்ளாகியுள்ளது. + +இயற்கையாக வளிமண்டலத்திலுள்ள வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்கள் சுமார் 33 °C (59 °F) வரை சராசரியான வெப்பமாக்கும் விளைவைக் கொண்டுள்ளன. நீராவி (இது வெப்பம் சிக்குறும் விளைவில் 36-70 சதவீதத்திற்கு கரணியமாகிறது), கரியமில வளிமம்(CO, இது வெப்பம் சிக்குறும் விளைவில் 9-26 சதவீதத்திற்கு கரணியமாகிறது), மீத்தேன் (CH இது வெப்பம் சிக்குறும் விளைவில் 4-9 சதவீதத்திற்கு கரணியமாகிறது), ஓசோன் ( இது வெப்பம் சிக்குறும் விளைவில் 3-7 சதவீதத்திற்கு கரணியமாகிறது) என்பன முக்கிய வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களாகும். கதிரியக்க சமநிலையில் முகில்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன, ஆனால் இவை நீரை நீர்ம நிலையிலோ அல்லது திண்ம நிலையிலோ கொண்டிருப்பதால் இதன் வெப்பம் சிக்குறுத்தும் விளைவு நீராவியிலிருந்து வேறாக கணிக்கப்படுகிறது. + +தொழிற்புரட்சி முதல் மாந்தரின் நடவடிக்கைகள் வளிமண்டலத்தில் வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் செறிவை கூட்டியது, இதன் மூலம் CO, மீத்தேன், அடிவளிமண்டல ஓசோன், குளோரோபுளோரோகாபன், நைட்ரஸ் ஆக்சைடு வளிமங்களில் இருந்தான கதிர்வீச்சு திணிப்பிற்கு இட்டுச் செல்கிறது. 1700களின் நடு ஆண்டுகள் தொடக்கம் வளிமண்டலத்தில் CO, மீத்தேனின் செறிவு முறையே 36% மற்றும் 148% ஆல் கூடியிருக்கிறது. பனிக் கருவங்களிலிருந்து நம்பகமான தரவுகள் பெறப்பட்டுள்ள கடந்த 650,000 ஆண்டுகளைவிட இந்த அளவுகள் குறிப்பிடத்தக்க அளவு கூடுதலானவையாகும். நேரில் புவியியல் தரவுகளின் படி வளிமண்டலத்தில் இந்த அளவு CO 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே நிலவுலகில் காணப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு மாந்த நடவடிக்கைகளின் போது எரிக்கப்பட்ட புதைபடிவ எரிபொருள் மூலமே கூடியிருக்கும் CO அளவில் சுமார் முக்கால் பங்கிகு உமிழப்பட்டுள்ளது. மிகுதி CO அளவில் பெருமளவு காடழிப்பை முதன்மையகக் கொண்ட நில-பயன்பாடு மாற்றத்தினால் உமிழப்பட்டுள்ளது. + +புதைபடிவ எரிமங்களின் எரிப்பு நில-பயன்பாடு மாற்றம் கரணியமாக CO செறிவு கூடிச்செல்கிறது. எதிர்காலத்தில் CO செறிவு கூடிச்செல்லும் வேகம் பொருளாதார, சமுக, தொழில்நுட்ப, இயற்கை துறைகளில் ஏற்படும் வளர்ச்சிகளில் தங்கியுள்ளது. தட்பவெப்பநிலை மாற்றத்திற்கான அரசிடைக்குழுவின் (IPCC) வளிம உமிழ்வு சூழல்கள் மீதான சிறப்பு அறிக்கையில் 2100 ஆம் ஆண்டில் COவின் செறிவுக்கு 541 ppm முதல் 970 ppm வரை ஒரு பரந்த வீச்சை கொடுத்துள்ளது. நிலக்கரி, தார் மணல், மீத்தேன் சோமம் ஆகியவை அளவுக்கு மீறி பயன்படுத்தப்படுமானால் புதைபடிவ எரிமங்களே குறித்த அளவை எட்டுவதற்கு போதுமானவை என்பதோடு 2100 ஆம் ஆண்டு தாண்டியும் உமிழ்வுகள் தொடரக் கூடும். + +குளோரோபுளோரோகாபன்களால் மேல் வளிமண்டல ஓசோன் படை அழிக்கப்படுதல் சிலவேளைகளில் புவிசூடாதலுக்குக்கு ஒரு கரணியமாகக் கொள்ளப��படுகிறது. ஆனால் ஒசோன் படை அழிவிற்கும் புவிசூடாதலுக்கும் நெருங்கிய தொடர்பு கிடையாது. மேல் வளிமண்டல ஓசோன் அழிவு ஒரு குளிர்விக்கும் விளைவைக் கொண்டிருக்கிறது, ஆனால் 1970களின் பிற்பகுதி வரையில் ஓசோன் ஓட்டையின் பெரும்பகுதி ஏற்பட்டிருக்கவில்லை. கீழ் வளிமண்டலத்தில் ஓசோன் காணப்பட்டால் அது புவி சூடாதலுக்கு கரணியமாகிறது. + +நிலவுலகின் மேற்பரப்பில் கிடைக்கப்பெறும் ஒளிக்கதிர்களின் அளவு குறந்துச் செல்லுதல் நிகழ்வான புவி மங்குதல் 1960 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை புவி சூடாதலை பகுதியளவில் எதிரீடு செய்துவந்துள்ளது. மாசுக்களாலும் எரிமலைகளாலும் உற்பத்திச்செய்யப்படும் வளித்தொங்கல்கள் நிலவுகு மங்களுக்கும் முக்கிய கரணியமாகும். உள்வரும் சூரிய ஒளியின் தெறிப்பைக் கூட்டுவதன் மூலம் இவை ஒரு குளிர் விளைவை ஏற்படுத்துகின்றன. புதைபடிவ எரிமங்களின் எரிப்பின் போது வெளியாகும் கரியமில வளிமத்தால் (CO) உண்டாகும் சூடாக்கும் விளைவை அதே எரிப்பில் வெளியாகும் வளித்தொங்கல்கள் இல்லாது செய்து விடுகின்றன, எனவே அண்மைய ஆண்டுகளில் உள்ள வெப்பநிலை கூடுதலுக்கு கரியமில வளிமமல்லாதா ஏனைய வெப்பசிக்குறுத்தும் வளிமங்களே கரணியம் என சேம்சு என்சன்னும் (James Hansen) அவரது சகாக்களும் ஒரு கோட்பாட்டை முன்மொழிந்திருக்க்கின்றனர். + +சர்வதேச அணுசக்தி கழகம் (international atomic energy agency) அறிக்கையில் 2030ம் ஆண்டுவாக்கில் "கார்பன் டை ஆக்சைட்" உலகில் அதிகரிக்கும் என்கிறது. 2050ம் ஆண்டுக்குள் 50 முதல் 85 சதவிகிதம் வரை பசுமையில்ல வாயுக்களின் வெளியீட்டை அதிகரிக்க வேண்டும், இல்லையெனில் அதிக மோசமான விளைவுகளை உலகம் சந்திக்க வேண்டியதிருக்கும் என அறிவித்துள்ளது. + +சூரிய வெபியீட்டில் ஏற்படும் மாற்றங்கள் இறந்தகாலத்தில் தட்பவெப்பநிலை மாற்றத்து கரணியமாக இருந்துள்ளது. இருப்பினும் சூரிய வெளியீட்டில் உள்ள மாற்றம் அண்மைய நிலவுலகுச் சூடாதலுக்கு போதாது என்பது பொதுவான கருத்து. சில ஆய்வுகள் இப்பொதுக்கருத்தை பொய்பிக்கின்றன, இவ்வாய்வுகளின் படி சூரிய வெளியீட்டினால் ஏற்படும் நிலவுலகுச் சூடாதல் விளைவு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. + +வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களும் சூரிய திணிப்புகளும் வெப்பநிலையை வெவ்வேறுவிதமாக பாதிக்கின்றன. இரண்டு கரணியங்களின் கூடுகையானது அடிவளிமண்டலத்தின் வெப்பநிலையைக் கூட்டும் அதேவேளை சூரிய திணிப்பின் கூடுகை அடுக்குமண்டலத்தை சூடாக்குவதோடு வெப்பம் சிக்குறுத்தும் வளிமங்களின் கூடுகை அடுக்குமண்டலத்தை குளிர்விக்க வேண்டும். 1979 இல் செயற்கைக்கோள் அளவீடுகள் கிடைக்கப்பெற்றது முதல் அடுக்குமண்டலத்தின் வெப்பநிலை சீராகவோ அல்லது குறைவதாகவோ உள்ளது.அதற்கு முன்னர் தட்பவெப்பநிலை பலூன் அளவீடுகளையும் உள்ளடக்கினால் 1958 ஆம் ஆண்டு முதல் அடுக்குமண்டலம் குளிர்வடைவதைக் காணலாம். + +என்றிக் சிவென்சுமார்க் (Henrik Svensmark) முன்வைத்துள்ள கருதுகோளின் படி, சூரிய காந்த செயற்பாடுகள் அண்டக் கதிர்களை விலகச் செய்கிறது இதனால் முகில்கள் உருவாக தொடக்கப் புள்ளியாக செயற்படும் துகல்கள் பாதிக்கப்பட்டு முகில் துவக்கம் தடைப்படுகிறது. முகில்கள் ளால் மேக விதைப்பால் பெருக்கப்பட்டு, சமீபத்திய வெப்பநிலை அதிகரிப்பிற்கு காரணமாகியிருக்கலாம் என்பது தான் அது. ஏனைய ஆய்வுகள் அண்டக் கதிர்களுக்கும் நிலவுலகுச் சூடாதலுக்கும் தொடர்பில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. அண்மைய ஆய்வின் படி ஆண்டக் கதிர்களுக்கும் முகிழ் தோற்றத்துக்குமான தொடர்பு, முகிலில் நிகழ்ந்த மாற்றத்தைவிட நூறுமடங்கு சிறியதாகுயம். + +வெப்பமடையும் போக்கு தொடர்ந்து கூடுதலான வெப்பமடைதலுக்கு தூண்டும் விளைவுகளில் முடிகிற சமயத்தில், அது ஒரு நேர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது; விளைவுகள் குளிர்விப்பைத் தூண்டுவதானால், அந்த நிகழ்முறை எதிர்மறை எதிரொலியாக குறிப்பிடப்படுகிறது. +அடிப்படை நேர்மறை எதிரொலியில் நீராவி அடங்கியிருக்கிறது.அகச்சிவப்பு கதிர்வீச்சு உமிழ்வில் வெப்பநிலையின் விளைவே அடிப்படை எதிர்மறை எதிரொலியாகும்: ஒரு பொருளின் வெப்பநிலை உயரும்போது, அதன் தனிமுதல் வெப்பநிலையின் நான்காவது அடுக்கு அளவாக உமிழப்படும் கதிர்வீச்சு அதிகரிக்கிறது.' இது நாளடைவில் காலநிலை அமைப்பை ஸ்திரப்படுத்துகிற ஒரு சக்தி வாய்ந்த எதிர்மறை எதிரொலியை வழங்குகிறது. + + + + + + + +விஞ்ஞானிகள் காலநிலை குறித்த கணினி மாதிரிகள் கொண்டு புவி வெப்பமடைதலை ஆய்ந்திருக்கிறார்கள்.இந்த மாதிரிகள் நீர்ம இயங்கியல், கதிர்வீச்சு வழி இடமாற்றம், மற்றும் பிற நிகழ்முறைகளின் இயற்பியல் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டவை, கணினியின் திறனில் உள்ள வரம்புகள் மற்றும் காலநிலை அமைப்பின் சிக்கலான வடிவம் இவற்றின் காரணமாக எளிமைப்படுத்தல்கள் அவசியமாயிருக்கிறது.அனைத்து நவீன காலநிலை மாதிரிகளும் ஒரு கடல் மாதிரி மற்றும் நீர் மற்றும் கடல் மீதான பனி உறைகளுக்கான மாதிரிகள் இவற்றுடன் பிணைந்த ஒரு வளிமண்டல மாதிரியை உள்ளடக்கி இருக்கின்றன.சில மாதிரிகள் வேதியியல் மற்றும் உயிரியல் நிகழ்முறைகளின் முறைகளையும் உள்ளடக்கி இருக்கின்றன. இந்த மாதிரிகள் எல்லாம் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் அதிகரித்துள்ள நிலைகளின் காரணமாய் காலநிலை வெப்பமுற்றுள்ளதைக் காட்டுகின்றன. இருந்தாலும், வருங்கால கிரீன்ஹவுஸ் வாயு அளவுகளுக்கான அதே அனுமானங்களை பயன்படுத்தினாலும் கூட, அங்கு தொடர்ந்து காலநிலை உணர்திறனின் ஒரு குறிப்பிடத்தக்க வரம்பு இன்னும் தொடர்ந்து இருக்கிறது. + +வருங்கால கிரீன்ஹவுஸ் வாயு செறிவுகள் மற்றும் காலநிலை மாதிரிகளின் நிச்சயமற்ற தன்மைகள் உள்ளடங்கிய நிலையில், 1980-1999 வரையான ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 21 ஆம் நூற்றாண்டின் நிறைவுக்குள் அளவு வெப்பமடைதலை IPCC மதிப்பிடுகிறது.சமீபத்திய காலநிலை மாற்றத்திற்கான காரணங்களை, கவனிக்கப்படுகிற மாற்றங்களை பல்வேறு இயற்கையான மற்றும் மனிதரால்-உருவாகும் காரணங்களினால் உருவாகக் கூடிய மாற்றங்களாக மாதிரிகளால் கணிக்கப்படுகிறவற்றுடன் ஒப்பிட்டு பார்த்து, ஆய்வு செய்வதற்கும் மாதிரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. + +நடப்பு காலநிலை மாதிரிகள் சென்ற ஆண்டின் உலகளாவிய வெப்பநிலை மாற்றங்கள் விஷயத்தில் நன்கு பொருந்தக் கூடியவையாக இருக்கின்றன, ஆனால் காலநிலையின் அனைத்து அம்சங்களையும் கணிக்கக் கூடியனவாய் இல்லை. இந்த மாதிரிகள் எல்லாம் சுமார் 1910 முதல் 1945 வரையான காலத்தில் நிகழ்ந்த வெப்பமடைதலுக்கு இயற்கை மாறுபாட்டையோ அல்லது +மனித விளைவுகளையோ குழப்பமின்றி காரணமாய் காட்டவில்லை; என்றாலும் 1975 ஆம் ஆண்டில் இருந்தான வெப்பமடைதலுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடுகளின் காரணம் தான் மேலோங்கியதாக இருக்கிறது என்று அவை கருத்து தெரிவிக்கின்றன. + +வருங்கால காலநிலை மீதான புவி காலநிலை மாதிரி கணிப்புகள் எல்லாம் தவிர்க்கவியலாத கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு சூழ்நிலைகளால், + +பெரும்பாலும் IPCC உமிழ்வுகள் சூழ்நிலைகள் மீத���ன சிறப்பு அறிக்கையில் (SRES) இருந்தானவற்றால், நிர்ப்பந்திக்கப்படுகின்றன.சில சந்தர்ப்பங்களில், மாதிரிகள் கார்பன் சுழற்சியின் ஒரு செயற்கைத் தூண்டலையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்; பொதுவாக இந்த மறுமொழி நிச்சமயமற்றது என்றாலும் இது பொதுவாக ஒரு நேர்மறை எதிரொலியை காட்டுகிறது. சில பரிசோதனை ஆய்வுகளும் கூட + +நேர்மறை எதிரொலியைக் காட்டுகின்றன."வடக்கு அட்லாண்டிக் மற்றும் பசிபிக் வெப்பமண்டலப் பகுதிகளின் இயற்கை காலநிலை மாறுபாடுகள் கணக்கிடப்பட்ட ஆந்த்ரோபோஜெனிக் வெப்பமடைதலை தற்காலிகமாக தணிக்கும் என்பதால் புவிப் பரப்பு வெப்பநிலை அடுத்த தசாப்த காலத்தில் அதிகரிக்காது எனக் கருதலாம்" என்று பெருங்கடல் வெப்பநிலை பரிசோதனைகளை உள்ளடக்கியதன் அடிப்படையில், ஒரு சமீபத்திய ஆய்வறிக்கை கருத்து தெரிவிக்கிறது. + +மேகங்களின் பிரதிநிதித்துவம் என்பது நடப்பு-தலைமுறை மாதிரிகளில் நிச்சயமற்ற தன்மைக்கு முக்கிய மூலாதாரங்களில் ஒன்றாக +இருக்கிறது, இந்த பிரச்சினையில் முன்னேற்றம் காணப்பட்டு வருகிறது என்றாலும் கூட. + +காலநிலை மாதிரி உருவாக்கங்களில் ஒரு சிறு பிரச்சினை என்னவென்றால் உண்மையான சூழ்நிலைகளுக்கும் மாதிரிகளால் கணக்கிடப்படுவனவற்றுக்கும் இடையில் உணரப்படும் பொருத்தமின்மை.2007 இல் டேவிட் டக்டஸ் மற்றும் அவரது சகாக்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று, 22 முன்னணி புவி காலநிலை மாதிரிகளின் கூட்டு முடிவுகளை உண்மையான காலநிலை தரவுகளுடன் ஒப்பிட்டு, இந்த மாதிரிகள் வெப்பமண்டல பகுதியின் அடிவளிமண்டலத்தில் உள்ள வெப்பநிலை தன்மைகளில் காணப்பட்ட மாற்றங்களை துல்லியமாக கணக்கிட்டிருக்கவில்லை என்று கண்டறிந்தது.அவர்களது முடிவுகள் அடிப்படையில் அதே தரவுகளின் அடிப்படையில் வந்த சமீபத்திய வெளியீடுகளின் முடிவுகளில் இருந்து தீவிரமாக முரண்படுவதாக இதன் ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.லாரன்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தின் பென் சான்டர் () தலைமையிலான 17-உறுப்பினர் குழு ஒன்றினால் 2008 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கை ஒன்று டக்ளஸ் ஆய்வில் தீவிரமான கணிதப் பிழைகளும், பிழையான அனுமானங்களும் இருப்பதாகக் குறிப்பிட்டது, டக்ளஸ் ஆய்வு கூறியதற்கு மாறாக மாதிரிகளுக்கும் அளவிடப்பட்டவற்றிற்கும் இடையிலான விலக்கங்கள் புள்ளிவிவரரீதியாக ���ெரியதாக ஒன்றும் இருக்கவில்லை என்று அது கண்டது. + +குறிப்பிட்ட காலநிலை நிகழ்வுகளை புவி வெப்பமடைவதுடன் தொடர்புபடுத்துவது கடினம் என்றாலும் கூட, புவி வெப்பநிலைகளின் அதிகரிப்பானது பனியாறு பின்வாங்கல், ஆர்க்டிக் சுருக்கம், மற்றும் உலகளாவிய அளவில் கடல் மட்ட அதிகரிப்பு ஆகியவை உள்ளிட்ட பெரும் மாற்றங்களுக்கு காரணமாக முடியும்.வீழ்படிவு நிகழ்வின் அளவு மற்றும் தன்மையிலான மாற்றங்கள் வெள்ளம் மற்றும் வறட்சிக்கு காரணமாகலாம்.அதீத காலநிலை நிகழ்வுகள் நிகழும் எண்ணிக்கை மற்றும் தீவிரத்திலும் கூட மாற்றங்கள் இருக்கலாம்.விவசாய விளைச்சல்களில் மாற்றங்கள், புதிய வர்த்தக பாதைகளின் சேர்ப்பு, குறைந்து போகக் கூடிய கோடை ஓடைப்பாய்வுகள், உயிரினங்களின் அழிவுகள், மற்றும் நோய் வெக்டார்களின் வரம்பிலான அதிகரிப்புகள் ஆகியவை பிற விளைவுகளில் அடக்கம். + +இயற்கை சூழல் மற்றும் மனித வாழ்க்கை இரண்டின் மீதான சில விளைவுகளில், குறைந்தது ஒரு பகுதிக்கேனும், ஏற்கனவே புவி வெப்பமடைதல் தான் காரணமாகக் கூறப்படுகிறது.பனியாறு பின்வாங்கல், லார்சன் பனித் தட்டு போன்ற பனித் தட்டு இடையூறு, கடல் மட்ட அதிகரிப்பு, மழைப்பொழிவு தன்மைகளிலான மாற்றங்கள், மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகளின் எண்ணிக்கை மற்றும் தீவிரம் அதிகரிப்பு ஆகியவற்றிற்கு எல்லாம் புவி வெப்பமடைதலும் ஒரு பகுதி காரணம் என்று IPCC இன் 2001 ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. சில பிராந்தியங்களில் குடிநீர் பற்றாக்குறை மற்றும் மற்ற பிராந்தியங்களில் வீழ்படிவு நிலை அதிகரிப்பு, மலை பனிமூடிய பகுதிகளிலான மாற்றங்கள், மற்றும் வெப்பநிலை அதிகரிப்பால் விளையும் சுகாதார பாதிப்புகள் ஆகியவையும் பிற எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் அடங்கும். + +புவி வெப்பமடைதலின் சமூக மற்றும் பொருளாதார விளைவுகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள்தொகை அடர்த்தி அதிகரிப்பால் தீவிரமடையக் கூடும்.குளிர் தாக்குதல் இல்லாததால் இறப்பு விகிதம் குறைவது போன்ற சில அனுகூலங்களை வெப்ப பிராந்தியங்கள் அனுபவிக்கும் என்று கணக்கிடப்படுகிறது. சாத்தியமுள்ள விளைவுகள் மற்றும் சமீபத்திய புரிதல் குறித்த ஒரு சுருக்கத்தை IPCC மூன்றாவது மதிப்பீட்டு அறிக்கைக்காக செயல் குழு II தயாரித்த அறிக்கையில் காண முடியும். புதிய IPCC நான்கா��து மதிப்பீட்டு அறிக்கையின் சுருக்கம் கூறுவது என்னவென்றால், கடல் பரப்பு வெப்பநிலை அதிகரித்ததுடன் தொடர்புபட்டு (அட்லாண்டிக் பலதசாப்த ஊசலாட்டம் என்பதைக் காணவும்) சுமார் 1970 முதல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பிராந்தியத்தில் தீவிர வெப்பமண்டல சூறாவளி செயல்பாடு அதிகரித்திருப்பதற்கு பதிவாகியிருக்கும் சான்று இருக்கிறது, ஆனால் நீண்ட கால போக்குகளின் கண்டறிவு வழக்கமான செயற்கைக்கோள் பதிவு அளவீடுகளுக்கு முந்தைய பதிவேடுகளின் தரத்தினால் சிக்கற்பட்டதாக இருக்கிறது.உலகளாவிய வெப்பமண்டல சூறாவளிகளின் வருடாந்திர எண்ணிக்கையில் தெளிவான போக்கு எதுவும் இருக்கவில்லை என்றும் அந்த சுருக்கம் தெரிவிக்கிறது. + +கூடுதலாக எதிர்பார்க்கப்படும் விளைவுகளில் 1980-1999 உடன் ஒப்பிடும்போது 2090-2100 இல் கடல் மட்ட அதிகரிப்பு, + +விவசாயத்தின் மீதான தாக்கங்கள், தெர்மோஹலைன் சுழற்சியின் மந்த சாத்தியம், ஓசோன் அடுக்கில் தேய்வு, தீவிரம் அதிகமான (ஆனால் எண்ணிக்கை குறைவதாக) சூறாவளிப் புயல்கள் மற்றும் அதீத காலநிலை நிகழ்வுகள், பெருங்கடல் காரகாடித்தன்மைச் சுட்டெண் அளவு குறைவது, பெருங்கடல்களில் ஆக்ஸிஜன் அளவு குறைவது, மற்றும் மலேரியா மற்றும் டெங்கு காய்ச்சல் ஆகிய நோய்களும், இதேபோல் லைம் நோய், ஹண்டாவைரஸ் தொற்றுகள், டெங்கு காய்ச்சல், புபோனிக் பிளேக் , மற்றும் காலரா ஆகியவை பரவுவது ஆகியவையும் அடக்கம். 1,103 விலங்குகள் மற்றும் தாவர உயிரின வகைகளின் மாதிரி ஒன்றில் இருந்து 2050 ஆம் ஆண்டுக்குள் 18% முதல் 35% வரை அழிந்து போயிருக்கும் என்று வருங்கால காலநிலை கணக்கீடுகளைக் கொண்டு ஒரு ஆய்வு மதிப்பிட்டிருக்கிறது. இருப்பினும், சில இயக்கவியல் ஆய்வுகள் சமீபத்திய காலநிலை மாற்றத்தால் விளைந்த இனஅழிவுகளை ஆவணப்படுத்தியிருக்கின்றன, இனமழிவது குறித்து மதிப்பிடப்பட்டிருக்கும் விகிதங்கள் நிச்சயமற்றவை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. + +உலகெங்கிலும் காலநிலை மாற்றத்தினால் விளைந்த சேதாரங்களின் மொத்த பொருளாதார செலவுகளை மதிப்பிட சில பொருளாதார நிபுணர்கள் முயன்றிருக்கிறார்கள்.இத்தகைய மதிப்பீடுகள் இதுவரை எந்த ஒரு தீர்மானமான கண்டறிவுகளையும் வழங்கியிருக்கவில்லை; 100 மதிப்பீடுகளில் ஒரு கருத்தாய்வு செய்ததில், மதிப்புகள் கார்பன் ஒரு டன்னுக்கு (tC) US$-10, கார்ப���்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$-3 இல் தொடங்கி ஒரு tCக்கு அமெரிக்க டாலர் 350 (கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$95) வரை இருந்தது, சராசரி மதிப்பு கார்பன் ஒரு டன்னுக்கு US$43 (கார்பன்-டை-யாக்ஸைடு ஒரு டன்னுக்கு US$12) ஆக இருந்தது. + +சாத்தியமுள்ள பொருளாதார தாக்கத்தின் மீது மிகவும் பரவலாக பிரபலமான அறிக்கைகளில் ஒன்று இந்த திட்டவட்ட மறுஆய்வு .அதீத காலநிலையானது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியை ஒரு சதவீதம் குறைக்கக் கூடும் என்றும், மோசமான நிலைமைகளின் கீழ் உலகளாவிய தனிநபர்நுகர்வு 20 சதவீதம் குறையக் கூடும் என்று இது கருத்து தெரிவிக்கிறது. இந்த அறிக்கையின் வழிமுறைகள், ஆலோசனைகள் மற்றும் முடிவுகள் பல பொருளாதார வல்லுநர்களால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது, முக்கியமாக மறுஆய்வின் தள்ளுபடி செய்தல் மீதான அனுமானங்களையும் மற்றும் அதன் சூழல்கள் தேர்வையும் பற்றிய விஷயத்தில். மற்றவர்கள் பொருளாதார அபாயத்தை குறிப்பிட்ட எண்ணிக்கையில் சொல்ல முடியாவிட்டாலும் பொதுவாக அளவீடு செய்யும் முயற்சிக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். புவி வெப்பமடைதலை குறைப்பதற்கான செலவுகளும் ஆதாயங்களும் அளவில் அகன்ற அளவில் ஒப்பிடத்தக்கதாகத் தான் இருக்கிறது என ஆரம்பநிலை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. + +ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் வேலைத்திட்டத்தின் கூற்றின் படி (UNEP), காலநிலை மாற்றம் தொடர்பான சிக்கல்களை சந்திக்க இருக்கும் பொருளாதார துறைகளில் வங்கிகள், விவசாயம், போக்குவரத்து மற்றும் மற்றவை அடக்கம். விவசாயத்தை சார்ந்திருக்கும் வளரும் நாடுகள் புவி வெப்பமடைதலால் குறிப்பாக பாதிக்கப்படும். + +உலகளாவிய வெப்பநிலைகள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதில் காலநிலை விஞ்ஞானிகள் இடையே ஒரு அகன்ற உடன்பாடு நிலவுவது சில நாடுகள், அரசாங்கங்கள் , பெருநிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை மறுமொழிகளை அமல்படுத்த இட்டுச் சென்றுள்ளது.புவி வெப்பமடைதலுக்கான இந்த மறுமொழிகள் புவி வெப்பமடைதலின் விளைவுகளுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்வது மற்றும் புவி வெப்பமடைதல் நிகழ்வையே குறைப்பது அல்லது திரும்பச் செய்வது என இருவகைகளுக்கு இடையே அகன்று பிரிவதாக இருக்கிறது.இரண்டாவது தான் தணித்தல் எனக் குறிப்பிடப்படுகிறது, இது உமிழ்வைக் குறைப்பது மற்றும் யூக அடிப்படையில���, புவிப் பொறியியல் இரண்டையும் அடக்கியதாகும். + +பல சுற்றுச்சூழல் குழுக்கள் புவி வெப்பமடைதலுக்கு எதிராக பெரும்பாலும் நுகர்வோரின் தனிப்பட்ட நடவடிக்கையை ஊக்கப்படுத்துகின்றன, அத்துடன் சமூகம் மற்றும் பிராந்திய அமைப்புகளின் மூலமான நடவடிக்கைகளையும்.மற்றவர்கள் புதைபடிவ எரிபொருள் உற்பத்திக்கும் CO வெளியீடுகளுக்கும் இடையிலுள்ள நேரடியான இணைப்பை காரணம் காட்டி உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தியில் ஒரு ஒதுக்கீட்டு வரம்பிற்கு ஆலோசனை தெரிவிக்கிறார்கள். + +எரிசக்தி செயல்திறன் அதிகரிப்பு மற்றும் மாற்று எரிபொருள் பயன்பாட்டில் வரம்புக்குள்ளான நகர்வுகள் ஆகியவற்றுக்கான முயற்சிகள் உள்பட, காலநிலை மாற்றம் தொடர்பான வர்த்தக நடவடிக்கையும் இருக்கிறது.ஜனவரி 2005 இல் ஐரோப்பிய ஒன்றியம் தனது ஐரோப்பிய ஒன்றிய வாயு உமிழ்வு வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியது, நிறுவனங்களுடன் அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தங்களது வாயு வெளியீடுகளை வரம்புபடுத்துவதற்கு அல்லது தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவாக வெளியிடும் நிறுவனங்களிடம் கடனாக அளவைக் கொள்முதல் செய்ய உதவும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வு வர்த்தக திட்டமாகும் இது.ஆஸ்திரேலியா தனது கார்பன் மாசுபாடு குறைப்பு திட்டத்தை 2008 இல் அறிவித்தது.அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, தான் ஒரு பொருளாதார ரீதியான வரம்பு மற்றும் வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளார். + +புவி வெப்பமடைதலுடன் போரிடுவதில் உலகின் முதன்மையான சர்வதேச உடன்பாடு தான் கியோடோ நெறிமுறை, இது 1997 இல் உடன்படிக்கையான UNFCCC இல் திருத்தம் செய்யப்பட்டதாகும்.இந்த நெறிமுறை இப்போது உலகளாவிய அளவில் 160 நாடுகளுக்கும் அதிகமாகவும் உலக கிரீன்ஹவுஸ் வாயு வெளியீடுகளில் 55 சதவீதத்திற்கும் அதிகமாகவும் எல்லை கொண்டிருக்கிறது.அமெரிக்காவும் கஜகஸ்தானும் மட்டும் தான் இந்த உடன்படிக்கைக்கு உறுதியளிக்காதவையாக இருக்கின்றன, அமெரிக்கா வரலாற்றுரீதியாக உலகின் இரண்டாவது பெரிய கிரீன்ஹவுஸ் வாயு வெளியீட்டாளராக இருக்கின்ற சூழ்நிலையில்.இந்த உடன்படிக்கை 2012 ஆம் ஆண்டில் காலாவதியாகிறது, தற்போதையதை தொடர்ந்த அடுத்த உடன்படிக்கைக்கான சர்வதேச அளவிலான பேச்சுவார்த்தைகள் மே 2007 ஆம் ஆண்டில் துவங்கின. + +��ாலநிலை மாற்றத்துடன் போரிடுவதற்கான வழியாக மேம்பட்ட எரிசக்தி தொழில்நுட்பத்தை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் ஊக்குவித்தார், அமெரிக்காவில் இருக்கும் பல்வேறு மாகாண மற்றும் நகர அரசாங்கங்கள் கியோடோ நெறிமுறைக்கு தங்களது இணக்கத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் பிராந்திய கிரீன்ஹவுஸ் வாயு முன்முயற்சி போன்ற உள்ளூர் அடிப்படையிலான முன்முயற்சிகளைத் துவக்கியிருக்கின்றன. + +புவி வெப்பமடைவதைத் தணிப்பது மற்றும் பல்வேறு அணுகுமுறைகளின் செலவுகள் மற்றும் அனுகூலங்களை ஆராய்வது ஆகியவற்றை கையாளும் அறிக்கைகளை தயாரிப்பதற்கான பொறுப்பு IPCC இன் செயல் குழு III இன் வசம் உள்ளது.2007 ஆம் ஆண்டின் IPCC நான்காவது மதிப்பீட்டு அறிக்கையில், எந்த ஒரு தொழில்நுட்பம் அல்லது துறையும் வருங்கால வெப்பமடைதலைத் தணிப்பதற்கான முழுப் பொறுப்பாளியாக முடியாது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.எரிசக்தி வழங்கல், போக்குவரத்து, தொழில்துறை, மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளிலும் முக்கிய நடைமுறைகளும் தொழில்நுட்பங்களும் இருக்கின்றன, உலகளாவிய வாயு உமிழ்வுகளைக் குறைக்க இவை அமலாக்கப்பட வேண்டும் என்று இவை கண்டிருக்கின்றன.2030 ஆம் ஆண்டுக்குள்ளாக கார்பன் டையாக்ஸைடு நிகரளவு 445 முதல் 710 ppm க்குள்ளாக ஸ்திரப்படும் பட்சத்தில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி 0.6 சதவீத அதிகரிப்பு முதல் மூன்று சதவீத சரிவு வரை காணலாம் என்று அவை மதிப்பிடுகின்றன. +செயல்பாட்டுக் குழு III இன் கருத்துப்படி, வெப்பநிலை அதிகரிப்பை 2 டிகிரி செல்சியசுக்குள் வரம்புபடுத்த வேண்டுமென்றால், வளர்ந்த நாடுகள் ஒரு குழுவாக செயல்பட்டு தங்களது வாயு உமிழ்வு அளவுகளை 2020 ஆம் ஆண்டுக்குள்ளாக 1990 அளவுகளுக்கு குறைவாக (கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும் நாடுகளில் அநேகமானவற்றில் 1990 அளவுகளுக்கு 10 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்த அளவான மட்டத்திற்கு) கொண்டுவரவும், 2050 வாக்கில் அதனை விடவும் குறைந்த அளவுகளுக்கு கொண்டு வரவும் (1990 அளவுகளை விட 40 சதவீதம் (Sic. 80 சதவீதம், பெட்டி 13.7, பக். 776) முதல் 95 சதவீதம் வரை குறைந்த அளவிற்கு) வேண்டும், வளரும் நாடுகளும் கூட குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும் என்றாலும் கூட. + +கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளைக் குறைப்பதில் நடவடிக்கை மிக மந்தமாக இருப்பது கென் கல்டிரா மற்���ும் நோபல் பரிசு பெற்ற பால் கிரட்சன் ஆகிய விஞ்ஞானிகளை புவிப் பொறியியல் தொழில்நுட்பங்களை ஆலோசிக்க இட்டுச் சென்றுள்ளது. + +புவி வெப்பமடைதல் குறித்த அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு அதிக விளம்பரம் கிடைப்பது அரசியல் மற்றும் பொருளாதார விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது. ஏழை பிராந்தியங்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா புவி வெப்பமடைதலினால் மதிப்பிடப்படும் விளைவுகளால் மிகப்பெரும் அபாயத்திற்குட்பட்டிருப்பதாய் தோன்றுகிறது, அவர்களின் வாயு உமிழ்வானது வளர்ந்த உலகுடன் ஒப்பிடுகையில் குறைவானதாக இருக்கின்ற நிலையில். அதே சமயத்தில் கியோடோ நெறிமுறை ஷரத்துகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு விதிவிலக்கு அளித்துள்ளதானது ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளால் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளதுடன், அமெரிக்கா தனது கையெழுத்திடாமைக்கு கற்பிக்கும் நியாயங்களில் இதுவும் ஒரு பாகமாக பயன்படுகிறது. மேற்கத்திய உலகில், காலநிலை மீதான மனித தலையீடு குறித்த சிந்தனை அமெரிக்காவைக் காட்டிலும் ஐரோப்பாவில் பரந்த மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கிறது. + +காலநிலை மாற்ற பிரச்சினையானது, தொழிற்துறையினரின் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வுகளை வரம்புபடுத்துவதன் அனுகூலங்களையும் இத்தகைய மாற்றங்கள் கொணரக் கூடிய செலவுகளையும் அலசுவதற்கான விவாதத்திற்கு இட்டுச் சென்றுள்ளது.கார்பன் வெளியீடுகளைக் குறைக்கும் பொருட்டு மாற்று எரிபொருள் ஆதாரங்களை கைக்கொள்வதின் செலவுகள் மற்றும் அனுகூலங்கள் குறித்து பல்வேறு நாடுகளில் விவாதம் நடைபெற்று வருகிறது.போட்டித்திறன் ஸ்தாபன நிறுவனம் மற்றும் எக்ஸான்மொபில் போன்ற அமைப்புகளும் நிறுவனங்களும் கடுமையான கட்டுப்பாடுகள் கொணரக்கூடிய சாத்தியமான பொருளாதார செலவுகளை வலியுறுத்துகிற அதே நேரத்தில் கூடுதல் மரபார்ந்த காலநிலை மாற்ற சூழல்களை வலியுறுத்தியிருக்கின்றன. இதேபோல, பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களும், ஏராளமான பிரபலங்களும் காலநிலை மாற்றத்தின் சாத்தியமான அபாயங்களை வலியுறுத்துவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளின் அமலாக்கத்தை ஊக்குவிப்பதற்குமான பிரச்சாரங்களை துவக்கியிருக்கின்றனர்.சில புதைபடிவ எரிபொருள் நிறுவனங்கள் சமீபத்திய வருடங்களில் தங்களது முயற்சிகளை மறுசீரமைப்பு செய்��ிருக்கின்றன, அல்லது புவி வெப்பமடைதலைக் குறைப்பதற்கான கொள்கைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. + +விவாதத்திற்கு உரிய மற்றொரு விஷயமாக இருப்பது, இந்தியா மற்றும் சீனா ஆகிய வளரும் பொருளாதாரங்கள் எந்த அளவிற்கு வாயு உமிழ்வுகளைக் கட்டுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது.சமீபத்திய அறிக்கைகளின் படி, சீனாவின் மொத்த தேசிய அளவிலான CO உமிழ்வுகள் இப்போது அமெரிக்காவினுடையதை விட அதிகமாய் இருக்கலாம். தனது தனிநபருக்கான கார்பன் வெளியீடு அமெரிக்காவின் அளவில் ஐந்தில் ஒரு பங்கு தான் என்பதால் வாயு வெளியீடுகளைக் குறைப்பதற்கான கடமைப்பாடு தனக்கு குறைவாகவே இருப்பதாக சீனா வாதிட்டு வந்திருக்கிறது. கியோடோ கட்டுப்பாடுகளில் இருந்து விதிவிலக்கு பெற்று தொழில்துறை வாயு வெளியீடுகளின் பெரும் இன்னொரு ஆதாரமாகத் திகழும் இந்தியாவும் இதே மாதிரியான திட்டவட்டங்களையே செய்திருக்கிறது. தான் வாயு உமிழ்வுகளின் செலவை ஏற்க வேண்டும் என்றால், சீனாவும் அதனை செய்ய வேண்டியது அவசியம் என்று அமெரிக்கா வாதிடுகிறது. + +புவி வெப்பமடைதல் தொடர்பான பல்வேறு விஷயங்கள் பல சமயங்களில் எழுப்பப்படுகின்றன.அதில் ஒன்று பெருங்கடல் அமிலமயமாக்கம்.வளிமண்டலத்தின் CO அதிகரிப்பானது பெருங்கடல்களில் கரைந்திருக்கும் CO அளவை அதிகப்படுத்துகிறது. கடலில் கரைந்திருக்கும் CO நீருடன் வினைபுரிந்து கார்பானிக் அமிலமாக மாறி அமிலமயமாக்கத்தில் விளைகிறது.கடல் மேற்பரப்பு காரகாடித்தன்மைச் சுட்டெண் ஆனது தொழில்துறை சகாப்தம் துவங்கிய காலத்தில் 8.25 ஆக இருந்ததில் இருந்து 2004 ஆம் ஆண்டுவாக்கில் 8.14 வரை குறைந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது, கடலில் கூடுதலான CO கரைவதால் 2100 க்குள்ளாக இது இன்னும் 0.14 முதல் 0.5 அலகுகள் வரை குறையும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. உயிரினங்களும் சூழல்அமைப்புகளும் pH இன் குறுகிய வரம்புக்குள்ளாகத் தான் தகவமைத்துக் கொள்ள முடியும் என்பதால், இது உயிரின அழிவு கவலைகளை எழுப்புகிறது, அதிகரிக்கும் வளிமண்டல CO ஆனது உணவு வலைகளை இடையூறு செய்து, நீர்ப்புற சூழல்அமைப்பு சேவைகளை சார்ந்திருக்கும் மனித சமூகங்களின் மீது பாதிப்பு ஏற்படுத்துகிறது. + +புவி ஒளிமங்கல் என்பது பூமியின் மேற்பரப்பில் படுகிற பூகோள நேரடி ஒளிவீச்சின் அளவு கொஞ்சம் கொஞ்சமாய் குறைவதாகும், இது 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புவி வெப்பமடைதலை ஒரு பகுதி தணித்திருக்கலாம்.1960 முதல் 1990 வரை மனிதரால் ஏற்பட்ட ஏரோசால்கள் இந்த விளைவு வீழ்படிவாகக் காரணமாகி இருக்கலாம்.மனிதரால் ஏற்பட்ட ஏரோசால்கள், எரிமலை செயல்பாட்டுடன் சேர்ந்து, புவி வெப்பமடைதலின் கொஞ்சத்தை இல்லாது செய்திருக்கலாம் என்பதை 66-90% உறுதியுடன் விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள், இந்த மங்கலாக்கும் முகவர்கள் இல்லையென்றால் நிகழ்ந்ததை விட அதிகமான வெப்பமடைதல் கிட்டியிருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். + +புவியின் மீவளிமண்டலத்தில் இருக்கும் ஓசோனின் மொத்த அளவில் தொடர்ந்த சரிவு நிகழ்வதான ஓசோன் ஓட்டை நிகழ்வானது பல சமயங்களில் புவி வெப்பமடைதலுடன் தொடர்புபடுத்திக் காட்டப்படுகிறது.இணைப்புக்கான பகுதிகள் இருக்கின்றன என்றாலும், இரண்டுக்கும் இடையிலான உறவு வலிமையானதல்ல. + +வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். + + + + + +மற்றும் ஐநா காலநிலை குழு அறிக்கையின் முக்கிய கண்டறிவுகள் + + + + + + +உயிரியல் வளம், இலங்கை + +இலங்கை பெரும் இனச்செளுமை கொண்ட நாடு. இது தென்னிந்தியாவில் காணப்படும் தாவர, விலங்கினங்களுடன் தொடர்புபட்ட பற்பல வன சூழல் பிராந்தியங்களுக்குத் தாயகமாகும். ஈரத்தன்மை பொருந்திய பருவப்பெயற்சிக் காற்றுகளால் வருடப்படும் இலங்கையின் தென் - மேற்கு பகுதியில் தாழ்நில மழைக்காடுகள் அமைந்துள்ளன. நாட்டின் மத்திய மலைப்பகுதியை நோக்கிச்செல்லும் போது அவை இலங்கை மலைசார்ந்த மழைக்காடுகளாக மாற்றம் பெறுகின்றன. இவ்விரு அயனமண்டல ஈரலிப்பு காட்டுப்பிராந்தியங்களும் இந்தியாவின் மேற்கு மலைத்தொடருடன் நெருங்கிய தொடர்புள்ளவையாக காணப்படுகின்றன. + +இலங்கையின் வனப்பகுதிகள் விவசாயம், மரத்தொழில், கால்நடை போசனம் போன்றவற்றுகாக பெருமளவில் அழிக்கப்பட்டுள்ளது. பல காப்பரண்கள் எஞ்சியுள்ள வனப்பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் மூன்று உயிரினமண்டல ஒதுக்கங்கள் உள்���ன. + +இலங்கையானது பறவை உட்பிரதேச உரிமையின் மையமாகக் காணப்படுகின்றது. இலங்கையில் ஆயிரக்கணக்கான விலங்கினங்கள் வாழ்வதுடன், அவற்றில் பல இலங்கை உட்பிரதேசத்துக்குரியவை. + +இலங்கைத் தீவின் பரப்பளவுடன் ஒப்பிடுகையில் இங்கு பறவையினங்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன. 443 பறவையினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை. + +பறவையினங்களில் 233 இலங்கையிலேயே வசிப்பவை, இவற்றுள் 26 உட்பிரதேசத்துக்குரியவை. ஏனையவை இந்தியத் தலைநிலத்தில் வாழ்பவை, எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய சிறப்புக் குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் சிறகமைப்பு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன. + + + + +மக்களாட்சி + +மக்களாட்சி அல்லது சனநாயகம் என்பது "மக்களால் மக்களுக்காக நடத்தப்பெறும் அரசாங்கம்" என வரைவிலக்கணம் கொண்டது. மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்ற அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆபிரகாம் லிங்கன் மக்களாட்சிக்கு வரையறையை கூறினார். தற்போது உலகில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகளில் இந்த முறையே கைகொள்ளப்படுகிறது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் சார்பாளர்களைத் (சார்பாளிகளைத், பிரதிநிதிளைத்) தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் தனிக்கட்சியாகவோ அல்லது மற்ற சார்பாளிகளுடன் சேர்ந்து கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். + +ஜனநாயகத்தில் சட்ட சமத்துவம், அரசியல் சுதந்திரம் மற்றும் சட்ட விதிமுறை ஆகியவை முக்கிய அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.. +இந்த நியமங்கள் எல்லா தகுதியுள்ள குடிமக்களுக்கும் சட்டத்திற்கு முன் சமமாக இருப்பதுடன், சட்டப்பூர்வ செயல்முறைகளுக்கு சமமான அணுகலைக் கொண்டிருக்கின்றன. +உதாரணமாக, ஜனநாயகத்தில் ஒவ்வொரு வாக்குக்கும் சமமான எடை உள்ளது. +தகுதிவாய்ந்த குடிமக்களின் சுதந்திரம் சட்டபூர்வமான உரிமைகள் மற்றும் சுதந்திரம் ஆகியன பொதுவாக ஒரு அரசியலமைப்பின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.. + +ஜனநாயகத்திற்கு மூன்று அடிப்படைக் கோட்பாடுகள் தேவைப்படுகிறது: +1)உயர்ந்த கட்டுப்பாடு, அதாவது அதிகாரத்தின் மிகக் குறைந்த அளவிலான இறையாண்மை. +2)அரசியல் சமத்துவம், +3)தனிநபர்களும் நிறுவனங்களும் உயர்மட்ட கட்டுப்பாட்டின் முதல் இரண்டு கொள்கைகள் மற்றும் அரசியல் சமத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய செயல்களை மட்டும் கருத்தில் கொள்ளும் சமூக நெறிகள். + +உலகத்தில் பல பகுதிகளிலும் உள்ள அரசியல் கோட்பாடுகளில் மக்களாட்சி என்பது ஒரு சிறந்த ஆட்சிமுறை என்று மிகப்பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. மக்களாட்சி என்பது பொதுமக்கள் எனவும் பலம் எனவும் பொருள்கொள்ளப்பட்டது.. +பழங்கால கிரேக்க ரோமானிய அரசுகளில் மக்களாட்சி கொள்கை பின்பற்றப்பட்டது. மக்களாட்சி என்பது ஏதென்ஸ் பாரம்பரிய நகரத்தில் உள்ள தத்துவ சிந்தனை குறிக்க பயன்பட்டது. ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் வாக்களிக்க தகுதி இருந்தது. தர நிர்ணய வாக்குப்பதிவு ஏதென்ஸ் ஸ்பார்ட்டாவில் கி.மு.700 இல் நடைபெற்றது. +இடைக்காலத்தில் மக்களாட்சி முறையில் சில இடர்பாடுகள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க விடுதலைப் போர், பிரெஞ்சுப் புரட்சி, உருசியப் புரட்சி மற்றும் இந்திய சுதந்திரப்போர் ஆகியவை மன்னராட்சிக்கு மாற்றாக மக்களாட்சி என்ற புரட்சிக் கருத்திற்கு செயல்வடிவம் கொடுத்தன. அதனடிப்படையில் மக்களாட்சி முறை பல நாடுகளில் ஏற்பட்டது. +ஐக்கிய ராச்சியத்தின் முதல் பாராளுமன்ற அவை 1707 இல் அமைக்கப்பட்டது. அந்த அவை இங்கிலாந்து மற்றும் சுகாட்லாந்து இணைப்பு நடவடிக்கை மூலம் அமைக்கப்பட்டது. சுமாராக 3 சதவீத உறுப்பினர்கள் மட்டுமே வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னரபின்னர் 18 ஆம் நூற்றாண்டில் சுவீடன் நாட்டின் பாராளுமன்ற அவை அதிகாரம் பெற்ற அமைப்பாக மாறியது. +18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்க நாட்டில் ஆண்களுக்கு மட்டுமே வாக்களிக்க உரிமை இருந்தது. +1787 இல் அமெ‌ரி‌க்க அரசாங்கம் மனித உரிமைகளுக்கான சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்தது. ஆனால் கடைநிலை சேவை ஊழியர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் வ�� அமெரிக்க அரசில் முழு மக்களாட்சி தத்துவம் நடைமுறைப்படுத்த பட்டது.. + +20 ஆம் நூற்றாண்டில் மத ரீதியாகவும், மறு காலனியாக்கம் காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற புரட்சிகள் காரணமாகவும் பனிப்போர் காரணமாகவும் மக்களாட்சி முறை பல்வேறு நாடுகளில் வேரூன்றியது. லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் ஆசியாவிலும் மக்களாட்சி முறை சிறப்பாக தொடங்கியது. உலகப்புகழ் காலத்தில் ஹிட்லர் ஆட்சியில் ஜெர்மனியிலும் முசோலினி ஆட்சியில் இத்தாலியிலும் ஜப்பானிலும் மக்களாட்சி நசுக்கப்பட்டது. + +ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15 ஆம் நாளை மக்களாட்சி நாளாக ஐக்கிய நாடுகள் அவை 2007 இல் அறிவித்தது. + +மக்களாட்சியை ஆங்கிலத்தில்" டெமாக்ரசி" ("Democracy") என்பர். டெமாக்ரசி என்ற சொல் "டெமோஸ்" ("Demos") "கிராட்டோஸ்" ("Kratos") என்ற இரண்டு சொற்களிலிருந்து தோன்றியது. "டெமோஸ்" என்பதற்கு மக்கள் என்றும் "கிராட்டோஸ்" என்பதற்கு அதிகாரம் அல்லது ஆட்சி என்றும் பொருள். + +"மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்றும் கூறுகிறார்."மக்களே மக்களுக்காக மக்களால் நடத்தும் ஆட்சி மக்களாட்சி" என்று முன்னாள் அமெரிக்க குடியரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் கூறுகிறார். + +மக்களாட்சி முறையில் நேரடி மக்களாட்சி, மறைமுக மக்களாட்சி என இருவகைகள் உள்ளன. + +நேரடி மக்களாட்சியில் அரசாங்க செயல்பாடுகளில் மக்கள் நேரிடையாக பங்கேற்கின்றனர். அரசாங்கத்தில் தீர்மானங்களை உருவாக்கும் வகையில் மக்கள் நேரிடையாக தொடர்பு கொண்டிருந்தனர். + +பழங்கால கிரேக்க ரோமானிய நாடுகளில் இம்முறையான மக்களாட்சி நடைபெற்றது. இம்முறையான மக்களாட்சி இடைக்காலத்தில் இத்தாலிய அரசுகளிடையே புதுப்பிக்கப்பட்டது. பழங்கால இந்தியாவில் நேரடி மக்களாட்சிக் கருத்துப்படி கிராம பஞ்சாயத்து முறை செயல்பட்டு வந்தது. + +20ம் நூற்றாண்டில் பெரிய நாடுகளில் இக்கருத்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதற்கு காரணம், மக்கள் தொகைப் பெருக்கமே ஆகும். + +மறைமுக மக்களாட்சி முறையில் மக்கள் அவர்களின் சார்பாளிகளைத் (பிரதிநிதிகளைத்) தேர்ந்தெடுக்கின்றனர். இந்தத் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளர்கள் ஆட்சி அமைத்து அரசாங்கத்தை நடத்துக���ன்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பாளிகள் மூலம் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். உலகின் பல நாடுகளில் இம்முறையே பின்பற்றப்படுகிறது. + +தேர்தலின் போது அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை நன்றாக ஆராய்ந்து பார்த்துத் தமது வாக்கினைப் பயன்படுத்துவதனால் நாட்டிற்குப் பொருத்தமான ஆட்சியாளர்களைத் தெரிவுசெய்யும் வாய்ப்பு வாக்காளருக்குக் கிடைக்கின்றது. அத்துடன் அதிகாரத்திற்கு வந்தபின்பு ஆளும் கட்சியினால் செயற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் குறித்து அவதானத்துடன் இருப்பது மக்களின் கடமையாகும். இதற்காக மக்கள் சிறந்த அரசியல் அறிவுடையோராக இருக்க வேண்டியுள்ளது. + +அதேபோன்று அரசியல் அறிவு படைத்த புத்திசாதுரியமான மக்களை கொண்ட சமூகத்தின் அங்கத்தவர்கள் தமது உரிமைகளை அனுபவிப்பதோடு பிறரது உரிமைகளுக்கும் மதிப்பளிப்பவர்களாகவும் விளங்குவர். இதன் காரணமாக சமூக முரண்பாடுகள் மற்றும் வன்முறைகளை ஒழிப்பதற்கும், குற்றச் செயல்கள் துஷ்பிரயோகங்களற்ற சமூகமொன்றை உருவாக்குவதற்கும் வாய்ப்புக் கிடைக்கின்றது. + +மக்களாட்சியில் பிரதேச மட்டம் தொடக்கம் தேசிய மட்டம் வரை ஆட்சி நிர்வாகத்தை நடாத்துவதற்காக பிரதிநிதிகள் மக்களின் வாக்குகள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். அவ்வாறு தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களின் முக்கிய பணி தேசிய அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு ஆட்சியை மேற்கொள்வதாகும். தலைவர்கள் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பொறுப்பு வாய்ந்த விதத்திலும் செயற்படுவதே மக்களின் எதிபார்ப்பாகும். அத்துடன் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவதானது மக்களின் நம்பிக்கையை வெல்வதற்கும், தேசிய அபிவிருத்திக்கும் காரணமாகலாம். + +நாட்டை ஆட்சி செய்வதற்குச் சட்டதிட்டங்கள் அவசியமானவை. அது போன்று சகலருக்கும் பொதுவான சட்ட ஒழுங்கொன்று செயற்படல் சட்டத்திற்குக் கீழ்ப்படிவுள்ள சமூகமொன்று உருவாகுவதற்கு அடிப்படையாக அமையும். சட்டத்தின் கீழ்ப்படிதல், நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியன மக்களாட்சி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணிகளாகும். சமூகப் பாதுகாப்பு, சமூக முன்னேற்றம் என்பன நீதிமன்றங்கள் ��ுதந்திரமாகச் செயற்படுவதிலும் மக்கள் சட்டத்திற்குக் கீழ்ப்படிவதிலுமே தங்கியுள்ளன. + +மக்களாட்சி முறையில் சில அறிஞர்கள் குறைகளைக் கூறுகின்றனர். மக்களாட்சி முறை வாக்காளர்களின் பகுத்தறிவை பேணுவதில்லை எனவும் வாக்காளர்கள் பலதரப்பட்ட வேட்பாளர்களை பல வகையிலும் ஆராய்வதில்லை எனவும் வாதிடுகின்றனர். மக்களாட்சி முறையில்றை முடிவுகள் தாமதமாக எடுக்கப்படுவதாக கூறுகின்றனர். இல்லாத சீனா பொருளாதார முன்னேற்றத்தில் வேகமாக முன்னேறுவதாக வாதிடுகின்றனர். + +புகழ்பெற்ற தத்துவ ஞானி பிளேட்டோவின் கூற்றுப்படி "ஜனநாயகம் என்பது ஒரு அழகிய வடிவமான அரசாங்கமாகும். இது பல்வேறுபட்ட கோளாறுகள் நிறைந்தவையாகவும், சமமானவற்றுக்கு சமமானவையாகவும் உள்ளன". + + + + +தொழில் முனைவு + +தொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும். + +முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினுள் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும். + +முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்;புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார். + + + + +மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும். + +வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும். + +நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும். + +வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். + +வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும். + +சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;. + +வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும். + +வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும். + +முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும். + +நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும். + +குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும். + +நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும். + + +அனுபவம் ( +கல்வி +வயது ( 4 +தலைமைத்துவம் +நட்ட அச்சம் ஏற்றல் ( +அர்ப்பணிப்பு +கட்டுப்பாடு ( 8 ) +இலக்கு அடையும் தன்மை +தூர நோக்கு. +தனியாள் மதிப்பு +தொழில் வாய்ப்பு (12 +அதிருப்தி/திருப்தி + +குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும். + + +தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும். + +வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும். + +வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும். + +வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும். + +வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும். + +முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும். + +முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும். + +முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும். +1. குடும்ப பிண்ணனி +2. குடும்ப பொறுப்பு +3. வணிக வலையமைப்பு +4. சமூகத் தொடர்புகள் +5. தொழில்சார் தொடர்புகள் +6. சமூக இமைப்பு +7. பிறப்பாற்றல் +முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் + +1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் +2. தந்திரோபாயங்கள +3. முகாமைத்துவம் +4. வாய்ப்புக்கள் +5. வணிகப்போட்டி +6. வளக்கிடைப்பனவு +7. துணைச்சேவைகள் +8. பலமும் பலவீனமும் +9. அரசியல் கொள்கைகள் + +- இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் +- சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் +- பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் +- பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல் + +1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) + +2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) + +3. வளம் (சுநளழரசஉந) + +1. எண்ணம் (ஐனநயள) +2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) +3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) +4. வளங்கள் (சுநளழரசஉநள) +5. செயற்பாடு (ழுpநசயவழைn) +6. நிதி (குiயெnஉந) +7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ) + + வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் +முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும் + +01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) +ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். + +02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) + +03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) +முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும் + +04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) +ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும் + +05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) + + முயற்ச��யாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. +1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. +2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. +3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. + +விளக்கம் - 1 +- முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. + +விளக்கம் - 2 +- முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் + +விளக்கம் - 3 +- கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் + + நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார். + +1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் +2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை +3. உற்பத்தி திறனை உயர்த்துதல் +4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் +5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல் + +=முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? +முயற்சியாளர்== +- புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். + +முகாமையாளர் + + 1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் + +1. நிறுவன அமைப்பு அடிப்படையில் + +2. அளவு அடிப்படையில் +F +3. உடமை அடிப்படையில் + + 1. முதலீடு அதிகரிக்கும் + + 1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் + + 1. மூலதன பற்றாக்குறை + + 1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை + + ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும் + +=முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் + + நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) +பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும் + + கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) + + இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) + + உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) + + எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை +இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். +“முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? +1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் +2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் +3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். +4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும். + += முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் + +1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். +2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். +3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு +4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் +5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர்கொள்ளல். +6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம். + + எந்தவொரு நிறுவனதொழில் முனைவு அல்லது முயற்சியாண்மை என்பது அபாயத்தை எதிர்பார்த்து பொருட்கள், சேவைகள் உற்பத்தி தொடர்பில் தீர்மானம் எடுப்பதும், உற்பத்திக்கருமங்களை ஒழுங்கமைப்பதும், அவற்றை செயற்படுத்துவதும் ஆகும். + +முயற்சியாண்மை என்பதை பல்வேறு வணிக ஆய்வாளர்களும் பல்வேறு விதமாக வரையருத்துள்ளார்கள். பொதுவாக முயற்சியாண்மை என்பது, வணிக வாய்புக்களை இனம் கண்டு, ஆபத்துகளுக்கு முகம் கொடுத்து மனித தேவைகளையும் விருப்பங்களையும் திருப்தி செய்வதற்காக காலம், செல்வம், திறமை போன்றவற்றை ஈடுபடுத்தி போட்டியான உலகில் புதியன படைத்தது நாட்டின் தேசிய உற்பத்திக்கு பெறுமதியை சேர்த்தலும், நிலவுகின்ற பொருளாதார முறையினு���் மாற்றங்களை கொண்டுவருவதற்கும் பங்களிப்பு செய்தல் ஆகும். + +முயற்சியாண்மையில் ஈடுபடுவர் அதாவது புதிய வியாபார வாய்;புக்களை இனங்கண்டு எதிர்கால நட்ட அச்சங்களை எதிர்நோக்கக் கூடியதாக மனித தேவைகளையும் விருப்பங்களையும் பூர்த்தி செய்யக் கூடியவற்றை உருவாக்குபவர் ஆவார். + + + + + +மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும். +வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும். +நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும். +வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும். +வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும். +சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;. +வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும். +வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும். +முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும். +நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும். +குறிப்பிட்ட செயற்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக்கொண்ட இலக்கினை அடையும் தன்மை உடையவராக இருத்தலாகும். +நிறுவன செயற்பாடுகள் தொடர்பாக தீர்மானமெடுக்கவும் அவற்றை நடைமுறைப் படுத்தவும் மற்றும் எவருக்கும் பதில் சொல்ல வேண்டி கடமை இல்லாதிருத்தலைக் குறிக்கும். + + +அனுபவம் ( கல்வி வயது ( 4 தலைமைத்துவம் நட்ட அச்சம் ஏற்றல் ( அர்ப்பணிப்பு கட்டுப்பாடு ( 8 ) இலக்கு அடையும் தன்மை தூர நோக்கு. தனியாள் மதிப்பு தொழில் வாய்ப்பு (12 அதிருப்தி/திருப்தி + +குறிப்பிட்ட செய���்பாடு பற்றிய பல்வேறு வரையறைகளை ஃ காட்சிகளை அடிப்படையாகக் கொண்ட இலக்கினை அடையும் தன்மையினைக்குறிக்கும். + +தீர்மானிக்கப்பட்ட வணிகக் கருமங்களைப் பயனுறுதியாக நிறைவேற்றக்கூடிய தன்மையினைக் குறிக்கும். +வணிக நடவடிககையின் வெற்றிக்காக முழுமையாக அர்ப்பணித்து செயற்படும் போது தளராது உறுதியுடன் செயற்படுதல் ஆகும். +வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தன்னை முழுமையாக ஈடுபடுத்துவதனைக் குறிக்கும். +வணிக நடவடிக்கைகளில் பற்றும் ஈடுபாடும் உடையவராக இருத்தல் ஆகும். +வணிக நடவடிக்கை தொடர்பான பல்வேறுபட்ட தகவலைப் பெறக்கூடியதுடன் அவற்றை உரியவாறு பயன்படுத்தக்கூடிய தன்மையாகும். +முயற்சியாளர் பிறகாரணிகளில் தங்கியிராது தனது ஆற்றலில் தங்கியிருத்தல் வேண்டும் என்பதாகும். +முயற்சியாளரின் நோக்கம் முழுமையாக இலாப மீட்டுதல் மட்டுமன்றி நோக்கத்தின் மூலம் நலன்களைப் பெற்றுக் கொள்ளுதலும் ஆகும். +முயற்சியாளரிள் தமது அதிகாரங்கள் பொறுப்புக்களை ஏனைய ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்கும் தன்மை கொண்டிருத்தலாகும். + +1. குடும்ப பிண்ணனி 2. குடும்ப பொறுப்பு 3. வணிக வலையமைப்பு 4. சமூகத் தொடர்புகள் 5. தொழில்சார் தொடர்புகள் 6. சமூக இமைப்பு 7. பிறப்பாற்றல் + +முயற்சியாண்மை சமூகக் காரணிகளில் வணிக வலையமைப்பு என்பது பின்வருவனவற்றை குறிக்கும் - வாடிக்கையாளர் - வழங்குனர் - வங்கி - முயற்சியாண்மை மூலதனக் கம்பனி - வழக்கறிஞர் - கணக்காளர் + +1. முன்மாதிரி நபர்கள் (சுழடந ஆழனநட) ஃ கடமைப்பங்குகள் 2. தந்திரோபாயங்கள 3. முகாமைத்துவம் 4. வாய்ப்புக்கள் 5. வணிகப்போட்டி 6. வளக்கிடைப்பனவு 7. துணைச்சேவைகள் 8. பலமும் பலவீனமும் 9. அரசியல் கொள்கைகள் + +- இலாபம் ஈட்டல் ஃ சேவை வழங்கல் - சிறியளவாகவோ ஃ பெரியளவாகவோ இருத்தல் - பொருள் ஃ சேவை உற்பத்தி செய்தல் - பிரதேச அமைப்பு,உள்நாட்டு அமைப்பு, சர்வதேச அமைப்பாகக் காணப்படுதல் + +1. சந்தர்ப்பம் ஃ வாய்ப்பு (ழுppழசவரnவைநைள) சந்தையில் காணப்படும் தேவைகள் விருப்பங்களின் அடிப்படையிலான சாதகமான காரணிகள் அதாவது பிரச்சனைகளும் அவற்றுக்கான வழிகளும் ஆகும். + +2. முகாமைக்குழு (ஆயயெபநஅநவெ வுநயஅ) முயற்சியாளர்களுக்கு முகாமைத்துவ தொடர்பாக அதாவது உபாயம் சந்தைப்படுத்தல் நிதி மற்றும் மனித வளம் பற்றிய அறிவு காணப்படுதல் வேண்டும். + +3. வளம் (சுநளழரசஉந) முய���்சியாளர் பற்றாக்குறையான வளங்களை சிக்கனமாகப பயன்படுத்துவதுடன் உரியவாறு வளங்களை திரட்டுதல் வேண்டும். + +1. எண்ணம் (ஐனநயள) 2. வாய்ப்பு (ழுppரசவரnவைல) 3. சுயநம்பிக்கை (ளுநடக டிநடநைக) 4. வளங்கள் (சுநளழரசஉநள) 5. செயற்பாடு (ழுpநசயவழைn) 6. நிதி (குiயெnஉந) 7. முகாமைத்துவம் (ஆயயெபநஅநவெ) + +வெற்றிகரமான வணிக நடவடிக்கைக்கு முயற்சியாளர் பின்வரும் நிதித்தொழிற்பாட்டை மேற்கொள்ளல் வேண்டும் 1. நிதி நோக்கங்களை உருவாக்கி கொள்ளல் 2. வரவு செலவு திட்டத்தை தயாரித்தல் 3. வருமான செலவு மதிப்பீடு 4. காசுப்பாய்ச்சல் எதிர்வு கூறல் 5. ஆரம்ப கிரயங்களையும் தொழிற்பாட்டுசெலவுகளையும் கணித்தல் + +முயற்சியாளர்கள் வணிக நடவடிக்கையின் வெற்றிக்காக தலைமைத்துவம் மற்றும் தூரநோக்கினை கொண்டிருத்தல் வேண்டிய அவசியமாகும் + +01. சர்வாதிகார தலைமைத்துவம் (யுரவழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்கள் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காது சுயாதீனமாக செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். + +02. ஜனநாயக தலைவர் (னுநஅழஉசயவiஉ டுநயனநச) ஊழியர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்பாடுகளை மேற்கொள்ளல் ஆகும். + +03. தந்தை வழித் தலைமைத்துவம் (Pயவநசயெடளைவiஉ டுநயனநச) முயற்சியாளர் தீர்மானத்தை தான் உருவாக்கி அவற்றை ஊழியர்களுக்கு போதிப்பதன் மூலம் வழி நடத்துதல் ஆகும் + +04. தலையில்லாத் தலைமைத்துவம் ஃ கட்டுப்பாடற்ற தலைமைத்துவம் (டுயளைளநண கயசைந டுநயனநச) ஊழியர்களை வழிநடத்துவதற்கு கட்டுப்படுத்தல்களை விதிக்காது சினேகத்துவமாக வழி நடத்துதல் ஆகும் + +05. சமத்துவ தலைமைத்துவம் (ஊழடடநபயைட டுநயனநச) ஊழியர்களை தனக்குச் சமனாக மதித்து வழி நடாத்துதல் ஆகும். + +முயற்சியாண்மை உருவாக்கம் தொடர்பாக பின்வரும் கருத்துக்கள் காணப்படுகின்றன. 1. முயற்சியாண்மைகள் வாரிசுரிமைகள் மூலம் உருவாக்கப்படுகின்றன. 2. சூழல் தாக்கத்தினால் முயற்சியாண்மைகள் உருவாக்கப்படுகின்றன. 3. கல்வி அறிவினால் கற்பிப்பதன் மூலம் முயற்சியாண்மைகள் தோற்றுவிக்கப்படுகின்றன. + +விளக்கம் - 1 - முயற்சியாண்மையாளர்களினால் பெரும்பாலானவர்கள் தமது வணிகங்களின் வாரிசுரிமையாக உருவாக்கப்படுகின்றது. வணிக பிண்ணனி உடைய குடும்பமாயின் வணிகம் தொடர்பான திறன்கள் பிறப்பிலேயே உருவாக்கப்படுகின்றன. அதாவது குடும்ப அங்கத்தவர்களிடையே வணிக நடவடிக்கை ��ொடர்பாக பல்வேறு கருத்துக்கள் மற்றும் தகவல்கள் பரிமாற்றுவதன் மூலம் அனுபவங்கள் உருவாக்கப்பட்டு வணிகத்திறன் தன்னிச்சையாக ஏற்படுகின்றது. + +விளக்கம் - 2 - முயற்சியாண்மையாளர்கள் சூழல் தாக்கத்தினால் உருவாக்கப்படுகின்றனர் வணிக முயற்சியாளர்கள் குடும்ப வாரிசுரிமையினால் மட்டுமன்றி கல்வி அனுபவம், சமூக பிரச்சனை, முயற்சியாண்மைத்திறன், முயற்சியாளரின் சக்தி போன்ற சூழல் காரணிகளும் சூழல் மாற்றங்களும் வணிக முயற்சியாளர்களின் உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்துகின்றன. + +விளக்கம் - 3 - கல்வி அறிவினால் ஃ கற்பிப்பதால் முயற்சியாண்மையாளர்கள் உருவாக்கப்படுகின்றனர் முயற்சியாளர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சிகளை உற்படுத்துவதன் மூலம் முயற்சியாண்மை திறன்கள் மற்றும் வணிக மனப்பாங்கு ஏற்படுத்துவதன் ஊடாக உருவாக்கலாம். + +நிறுவனத்தில் இயங்கும் முயற்சியாண்மை அதாவது ஏற்கனவே உருவாக்கப்பட்ட வணிகத்தில் புதிய மாற்றத்தை ஃ புதிய கண்டுபிடிப்பை ஃ புதிய கருத்தை மேற்கொள்பவர் ஆவார். + +1. புதிய கருத்திற்கமைய சந்தையில் புதிய பொருட்கள் செவைகள் அறிமுகப்படுத்தல் 2. வாடிக்கையாளர்களின் நடத்தைகளுக்கு அமைய அவர்களுக்கு தேவையான பண்டங்கள் சேவைகளை வழங்கல் 3. உற்பத்தி திறனை உயர்த்துதல் 4. போட்டியை எதிர் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் 5. புதிய கருத்துக்களை ஏற்படுத்தல் + +=முயற்சியாளர்கள் அனைவரும் முகாமையாளர்கள் ஆவார். ஆனால் அனைத்து முகாமையாளர்களும் முயற்சியாளர்களாக இருப்பதில்லை விளக்குக? முயற்சியாளர்== - புதிய வணிக வாய்ப்புக்களை இனங்கண்டு அவற்றில் ஈடுபட்டு இடர்களை எதிர் கொண்டு இலாபத்தை உழைத்து கொள்ள வணிகத்தை நடாத்துகின்றனர். - வணிகத்தை தலைமை தாங்குகின்றனர். - இவரே தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் முயற்சியாளர்கள் வணிக முயற்சியில் மட்டுமல்லாது.முகாமை நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். + +முகாமையாளர் - புதிய முயற்சியில் ஈடுபடமாட்டார் - நட்ட அச்சங்களை எதிர் நோக்க மாட்டார். - சம்பளத்திற்காக வேலை செய்பவர்கள் ஆவார். இதனால் முகாமையாளர்கள் எல்லோரும் முயற்சியாளர்கள் இல்லை. + +1. விருத்தியடைந்த நிதிச்சந்தை காணப்படுதல் 2. மேம்பட்ட உட்கட்டமைப்பு வசதிகள் 3. நாட்டில் ஏற்று கொள்ள கூடிய ஒரு சட்ட ஒழுங்கமைப்பு காணப்படல் வே���்டும் 4. தேசிய மட்டத்தில் கல்வி பயிற்சி நிகழ்ச்சி திட்டங்கள் காணப்பட வேண்டும். 5. அரசினால் சில ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தல் 6. திறந்த சந்தை முறைமை காணப்படுதல். 7. போதியளவு துணைச்சேவை வசதிகள். + +1. நிறுவன அமைப்பு அடிப்படையில் தனிவியாபாரம் - தனிவியாபாரம் பங்குடமை - பங்காளர் கம்பனி - பங்குதாரர் கூட்டுறவு - அங்கத்தவர் கூட்டுத்தாபனம ; - அரசு + +2. அளவு அடிப்படையில் சிறியளவு முயற்சியாளர் நடுத்தர அளவு முயற்சியாளர் பாரியளவு முயற்சியாளர். F 3. உடமை அடிப்படையில் பொதுத்துறை முயற்சிகள் தனியார்துறை முயற்சிகள் + +1. முதலீடு அதிகரிக்கும் 2. பலவகையான நிறுவனங்களின் உருவாக்கம் அதிகரிக்கும் 3. வளப்பயன்பாடு அதிகரிக்கும் 4. வேலை வாய்ப்பு அதிகரிக்கும் 5. தனிநபர் வருமானம் அதிகரிக்கும் 6. நிரம்பல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடையும் 7. மக்களின் வாழ்க்கை தரம் அதிகரிக்கும் 8. புதிய பண்டங்கள் சேவைகளின் உருவாக்கம் அதிகரிக்கும் 9. நவீன தொழினுட்ப பயன்பாடு அதிகரிக்கும் 10. பொருளாதார வளர்ச்சி ஏற்படும் 11. சூழல் மாற்றங்களுக்கு ஏற்ப வெற்றிகரமான வணிக நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு + +1. புதிய வாய்ப்புக்கள் கண்டுபிடிப்புக்களை அறிமுகப்படுத்தல் 2. வளங்களை பூரணமாக பயன்படுத்தி உற்பத்தி அதிகரித்தல் 3. உற்பத்தி வளங்களின் உடமையாளர்களுக்கு வருமான வாய்ப்புக்களை ஏற்படுத்துதல் 4. பலவகையான உற்பத்தி வாய்ப்புக்களை உருவாக்குதல் 5. பல்வேறு வியாபார துணைநிலைச்சேவைகளை உருவாக்குவதற்கு 6. வணிக நடவடிக்கைகளில் போட்டி தன்மையை அதிகரிப்பதற்கு 7. பல்வேறுபட்ட வணிக சார்பு நடவடிக்கைகளைத் தோற்றுவிப்பதற்கு + +1. மூலதன பற்றாக்குறை 2. திறந்த சந்தை தொழிற்பாடுகளில் சீரின்மை 3. அரசின் ஊக்குவிப்பு குறைவு 4. ஏற்று கொள்ள முடியாத சட்ட கட்டுப்பாடுகள் 5. துணைச்சேவை பற்றாக்குறை 6. பயிற்சி குறைவு 7. தனியுரிமைப் பாதுகாப்பு 8. நேர அழுத்தம் 9. சந்தை பற்றிய அறிவின்மை 10. உட்கட்டமைப்பு வசதிகள் போதாமை + +1. புதிய வணிக வாய்ப்புக்கள் தோற்றம் பெறாமை 2. வளப்பயன்பாடு குறைவடையும் 3. வணிக விருத்தி குறைவடையும் 4. தேசிய உற்பத்தி குறைவடையும் 5. பொருளாதார வீழ்ச்சி ஏற்படும் 6. வேலை வாய்ப்பு குறைவடையும் 7. வருமான சமமின்மை ஏற்படும் 8. வாழ்க்கை தரம் பாதிக்கப்படும் + +ஊழியர்கள் மற்றும் வணிக கட்சியினர்களுக்கு இடையில் ஏற்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான சந்தர்ப்பங்களையும் இணங்கண்டு தீர்வு கூறுதலாகும் + +=முயற்சியாளர் ஊழியர்களுக்கிடையில் ஏற்படும் பிணக்குகளை தீர்த்தல் ஆற்றல் கொண்டிருத்தல் வேண்டும் + + நழுவிக் கொள்ளும் தன்மை (றுiவா னசயறiபெ - ஆமைத்தன்மை வுhந வுரசவடைந) பிரச்சனைகள் ஏற்படும் போது அவற்றினை எதிர் கொள்ளாது விலகி கொள்ளும்தன்மையினை குறிக்கும் + + கட்டாயப்படுத்தும் தன்மை (குழசஉiபெ – சுறாத்தன்மை வுhந ளூயசம) முயற்சியாளர் தனது அதிகாரத்தினைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டாயமாக பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். + + இலகுத்தன்மை ஃ சமமாக காணப்படும் தன்மை (ளுஅழழவாiபெ - வாந வநனனல டிநயச) இரு கட்சியினருக்கும் இடையேயும் தொடர்பினை ஏற்படுத்தி முடிவுக்க் கொண்டு வருதல் ஆகும். + + உடன் பாட்டிற்கு கொண்டுவருதல் தன்மை (ஊழஅpசழஅளைiபெ - நரி முறைமை வுhந குழஒ) இரு கட்சியினரதும் கோரிக்கைகளை உடன்பாட்டிற்குக் கொண்டு வருவதன் மூலம் பிணக்குகளை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். + + எதிர் செயற்பாட்டு முறைமை ஃ இரு கட்சிக்கும் வெற்றி கொடுக்கும் தன்மை (ஊழகெசழவெiபெ - ஆந்தை முறைமை வுhந ழுறட) இரு கட்சியினரதும் இலக்குகள் நிறைவு செய்யக்கூடிய வகையில் பிணக்கினை முடிவுக்கு கொண்டுவருதல் ஆகும். + +“முயற்சியாளர்கள் பிணக்கு தீர்த்தல் தொடர்பான ஆற்றல் கொண்டிருத்தல் வணிகத்தின் வெற்றியில் செல்வாக்கு செலுத்துகின்றது”. விளக்குக? 1. பிரச்சனைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 2. இரு கட்சியினரது தேவைகளை கண்டறிந்து அவற்றுக்கான வழிமுறைகளைப் பிரயோகித்தல் 3. வணிக செயற்பாடுகள் எவ்வித தடையுமின்றி சீரான முறையில் நடைபெறும். 4. வணிகம் தொடர்ந்தியங்கும் நிலை ஏற்படும். + += முயற்சியாளனுடைய தலைமைத்துவ தூரநோக்கிற்கமைவாகவே ஊழியர்கள் செயலில் ஈடுபடுவார்கள் + +1. தனது இலட்சியத்தை அடைவதற்கான தனிப்பட்ட விருப்புஃநோக்கம். 2. தனது வணிகத்தில் தானே உரிமையாளராக இருக்க வேண்டும் எனும் எண்ணம். 3. பல்வேறுபட்ட ஆச்சரியமூட்டும் பணிகளில் ஈடுபடல் என்னும் விருப்பு 4. தன்னுடைய பயிற்சிகளையும் திறனையும் மிகச்சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும் என்னும் ஆவல் 5. புதிய வணிக சந்தர்ப்பங்களில் ஈடுபடுதல் ஃபுதிய சவால்களை எதிர��கொள்ளல். 6. தனது எண்ணப்படி செயல்புரிவதற்கான சுதந்திரம். + +எந்தவொரு நிறுவனமும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். 1. சூழலை பாதுகாத்தல் 2. சமூக ஒழுக்க நெறியை பேணல் 3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். 4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். 5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். 6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் 7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் 8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல். + +மும் நோக்கத்தை நிறைவேற்ற முற்படுகின்ற போது பின்வரும் கட்டுப்பாட்டை நிறைவேற்ற வேண்டும். +1. சூழலை பாதுகாத்தல் +2. சமூக ஒழுக்க நெறியை பேணல் +3. சிறந்த தரம் வாய்ந்த பொருட்களை உற்பத்தி செய்தல். +4. வாடிக்கையாளருடன் நேர்மையாக நடந்து கொள்ளல். +5. வளங்களை சரியான முறையில் திட்டமிட்டு பயன்படுத்துவதன் மூலம் விரயமேற்படுதலை குறைத்தல். +6. நாட்டின் அபிவிருத்திக்கு உதவுதல் +7. பிரதேச ரீதியான அபிவிருத்திக்கு உதவுதல் +8. ஊழல்களில் ஈடுபடாது இருத்தல். + + + + +சந்தர்ப்பச்செலவு + +நுண்பொருளியலில் பிறவாய்ப்புச் செலவு அல்லது பிறவாய்ப்பு இழப்பு அல்லது சந்தர்ப்பச்செலவு அல்லது அமையச்செலவு ("Opportunity cost") என்பது ஒரு குறிப்பிட்ட தெரிவை மேற்கொள்ளும் பொருட்டு அதற்கடுத்த நிலையிலுள்ள தெரிவை இழப்பது ஆகும். அதாவது ஒரு தேர்வுக்காக இன்னொரு தேர்வை விட்டுக்கொடுப்பது எனலாம். இது தவறவிட்ட வாய்ப்புகளால் ஏற்படும் இழப்பினைக் குறிக்கிறது. + +ஒரு சூழ்நிலையில் ஒருவருக்குப் பல தெரிவுகள் உள்ளன. ஆனால் வளப்பற்றாக்குறை காரணமாக அவற்றுள் ஒன்றையே அவரால் தெரிவு செய்ய இயலும். எனவே அவர் அவற்றில் சிறந்ததாகக் கருதுவதையோ அல்லது மிகச் சாதகமானதையோ தெரிவு செய்வார். இதனால் மேலும் பல தெரிவுகளை / வாய்ப்புகளைத் தவற விடுகிறார். இப்படித் தவறவிட்ட வாய்ப்புகளால் அவருக்கு கிட்டக்கூடிய பலன்களை இழக்கிறார். இந்த இழப்பே பிறவாய்ப்பு இழப்பு எனப்படுகிறது. பொருளியலில் இது ஒரு முக்கியமான கூற்றாகும். பற்றாக்குறைக்கும் தெரிவுக்கும் இடையே உள்ள அடிப்படை உறவினை விளக்குகிறது. குறைவான வளங்களைத் திறம்படப் பகிர்ந்து கொள்ள உதவுகிறது. + +இலவசப் பண்டங்கள் அல்லாத பொருளாதாரப் பண்டங்களுக்கே அமையச்செலவு காணப்படும். காரணம், இவ் வகையான பண்டங்கள் அருமையாகக் காணப்படுவதும்,மாற்றுப்பயன்பாடு உடையனவாக இருப்பதுவேயாகும். + + + + +அடிப்படை பொருளாதாரப் பிரச்சனைகள் + +அடிப்படைப் பொருளியல் பிரச்சனை அல்லது அடிப்படை அல்லது மையப் பொருளியல் இடர்ப்பாடு அல்லது சிக்கல் () எனும் பதம் பொருளியல் கருத்தாகும். இக்கருத்து எண்ணிலடங்காத மனிதத்தேவைகளை நிறைவுசெய்யும் அளவிற்கு வளங்கள் காணப்படாமையினை அதாவது கிடைப்பருமையினை உறுதிப்படுத்துகின்றது. +மனிதனின் எண்ணற்ற தேவைகள் மற்றும் விருப்பங்களைப் போன்று வளங்களும் எல்லையற்றுக் காணப்படுமாயின், பொருளாதாரச் சிக்கல்கள் தோற்றமெடுக்காது. ஆயினும் வளங்கள் அவ்வாறு காணப்படாமையினால் சில அடிப்படைரச் சிக்கல்களுக்கு சமூகங்கள், நாடுகள் முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவை + + +இவற்றிக்கு விடையளிப்பதற்காக நாடுகள், சமூகங்கள் கடைப்பிடிக்கும் வழிமுறைகள், சட்டதிட்டங்கள் அதாவது பொருளாதார அமைப்புக்கள். வேறானவை. + + + + + + +தொலைக்காட்சி + +தொலைக்காட்சி ("Television",TV ) என்பது ஒரு தொலைத்தொடர்பு ஊடகம் ஆகும். இதன் மூலம் ஒற்றை வண்ண (கறுப்பு-வெள்ளை) அல்லது வண்ணமிகு ஒளிதங்களைப் பரப்பவும் பெறவும் முடியும். இது காட்சியின் ஒளி, ஒலியை பதிவு செய்து ஒன்றாக இணைத்து ஒளிபரப்பப்படுகிற விதத்தில் தொகுத்துத் தருகின்றது. வழக்குமொழியில் தொலைக்காட்சி என்பது தொலைக்காட்சிப் பெட்டியையும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தொழினுட்பம் சார்ந்த தொலைக்காட்சி பரப்புகையையும் சூழமைவுக்கேற்ப குறிக்கலாம். தொலைவில் நிகழும் காட்சிகளைக் கொணர்ந்து காட்டுவதால் தொலைக்காட்சி எனப்படுகிறது. + +1920களிலேயே தொலைக்காட்சிப் பெட்டிகள் புழக்கத்தில் வந்தமையால் இன்று வீடுகளிலும் வணிக மற்றும் பிற நிறுவனங்களிலும் தொலைக்காட்சிப் பெட்டிகள் சாதாரணமாக உள்ளன. விளம்பரங்கள், மனமகிழ்வு நிகழ்ச்சிகள் மற்றும் செய்திகளுக்கான ஊடகமாக பெரிதும் வளர்ந்துள்ளது. 1950களிலிருந்து மக்கள் கருத்தை உருவாக்குவதில் தொலைக்காட்சி ஊடகம் முன்னிலை வகிக்கிறது. ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சிகளைத் தவிர, 1970கள் முதல் ஒளிதப் பேழைகள், சீரொளி வட்டுக்கள், டிவிடிக்கள், அண்மையில் நீலக்கதிர் வட்டுக்கள் வந்தபிறகு பதிவு செய்யப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் காணவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் பயனாகின்றன. அண்மைக் காலங்களில் இணையத் தொலைக்காட்சி என இணையம் மூலமாகவும் தொலைக்காட்சி காணக்கூடிய வசதி வந்துள்ளது. + +மூடிய-மின்சுற்று தொலைக்காட்சி (CCTV) போன்ற மற்ற வகைகள் இருப்பினும் இந்த ஊடகத்தின் முதன்மைப் பயன்பாடு பரப்புகைத் தொலைக்காட்சிக்காகும். 1920களில் உருவான வானொலி ஒலிபரப்பினை ஒட்டி தொலைக்காட்சி ஒளிபரப்பும் வடிவமைக்கப்பட்டது. மிகுந்த ஆற்றல் மிக்க வானலைப் பரப்புனர்களால் ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சி குறிப்பலைகள் தனிநபர் தொலைக்காட்சிப் பெட்டிகளை எட்டுகின்றன. + +தொலைக்காட்சி பரப்புகை அமைப்பு பொதுவாக 54–890 மெகா ஏர்ட்சு அலைக்கற்றையில் வரையறுக்கப்பட்ட அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படுகிறது. தற்காலத்தில் பல நாடுகளிலும் ஒலிக் குறிப்பலைகள் முப்பரிமான ஒலியாகவும் சூழொலியாகவும் பரப்பப்படுகின்றன.2000 ஆம் ஆண்டு வரை தொலைக்காட்சி சேவைகள் பொதுவாக அலைமருவிய குறிப்பலைகளாக ஒளிபரப்பப்பட்டன. கடந்த பத்தாண்டுகளாக பல நாடுகளிலும் தொலைக்காட்சி ஒளிபரப்புகள் முற்றிலும் எண்ணிம வடிவத்திற்கு மாறி விட்டன. +ஓர் வழமையான தொலைக்காட்சிப் பெட்டியில் பல மின்னணுவியல் சுற்றட்டைகள் பொருத்தப்பட்டிருக்கும்; இவற்றில் முதன்மையானவை பரப்பப்பட்ட அலைக்கற்றையிலிருந்து விரும்பிய அலைவரிசையை மட்டும் பிரித்தெடுக்கும் இசைவித்த வானலை அலைவெண் வாங்கியும் அந்த அலைவரிசையை அதே அதிர்வெண் கொண்ட உட்புற அலைவரிசையுடன் கலக்க வைத்து தொலைக்காட்சி குறிப்பலைகளைப் பெறும் கலவைக்கருவியும் ஆகும். இத்தகைய இசைவியும் கலவைக்கருவியும் இல்லாத தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒளிதக் காட்டிகள் எனப்படுகின்றன. தொலைக்காட்சி குறிப்பலைகள் பல சீர்தரங்களில் அமைந்துள்ளன. மேலும் ஒளிபரப்பு அமைப்புகளும் எண்ணிமத் தொலைக்காட்சி மற்றும் உயர் வரையறு தொலைக்காட்சி (HDTV) என முன்னேறி வருகின்றன. தொலைக்காட்சி அமைப்புகள் பொதுவாக நேரடி கண்காணிப்பு கடினமானதாகவோ ஆபத்தானதாகவோ உள்ள இடங்களில் கடுங் கண்காப்பு, தொழிற்சாலை செயல்முறைக் கட்டுப்பாடு மற்றும் ஆயுத வ���ிசெலுத்துமை போன்ற செயற்பாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. + +தொலைக்காட்சிகளின் சமூகத் தாக்கமாக சிறுவர்களின் தொலைக்காட்சிக் காணலுக்கும் கவனம்குறைந்த மிகு இயக்க பிறழ்வு (ADHD)க்கும் தொடர்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. + +தொலைக்காட்சியானது இன்று சக்திவாய்ந்த, மக்களைக்கவர்ந்திழுக்கும் சாதனமாக உள்ளமையால் விளம்பரதாரர்கள் தமது விளம்பரங்களைக் காட்சிப்படுத்த அநேகமாகத் தொலைக்கட்சிகளையே நாடுகின்றனர். பல தொலைக்காட்சிகள் விளம்பரதாரர்கள் கொடுக்கும் பணத்தின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துகின்றன. விளம்பரம் தொலைக்காட்சியின் முக்கிய வருமானங்களில் ஒன்றாகவும் உள்ளது. + +தொலைக்காட்சிப் பெட்டி (வழக்கில் தொலைக்காட்சி, TV set, TV, அல்லது ஐக்கிய இராச்சியத்தில் "இட்டெல்லி" ) என்பது தொலைக்காட்சியை காண்பதற்கான மின்னணுவியல் கருவியாகும். இதில் அதிர்வெண் இசைவி, காண்திரை மற்றும் ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் பயனர் கருவியாக தொலைக்காட்சிப் பெட்டி விளங்குகிறது. முதல் தொலைக்காட்சிப் பெட்டிகள் 1923ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டன. துவக்கத்தில் வெற்றிடக் குழல்களையும் எதிர்முனைக் கதிர்க்குழல் காண்திரைகளையும் பயன்படுத்தினர். 1953ஆம் ஆண்டில் வண்ணத் தொலைக்காட்சிகள் அறிமுகமான பிறகு இதன் பரவல் கூடுதலானது. பல சுற்றுப்புறப் பகுதிகளிலும் வீடுகளின் கூரைகளில் தொலைக்காட்சி அலைவாங்கிகளைக் காண முடிந்தது. முதல் தலைமுறை வீட்டுக் கணினிகளின் கணித்திரையாக தொலைக்காட்சிப் பெட்டிகளே விளங்கின. + +தற்கால தொலைக்காட்சிப் பெட்டிகளில் நீர்மப் படிக தட்டை காண்திரைகளும், திண்மநிலை மின்சுற்றுக்களும், நுண்செயலி கட்டுப்பாடுகளும் பயன்படுத்தப்படுகின்றன. மேலும் பல்வகையான ஒளிதக் குறிப்பலை இடைமுகங்களுடன் அமைந்துள்ளன. இதனால் தொலைக்காட்சிப் பயனர் வான்வழி இலவசமாக ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகளுடன் கட்டணம் செலுத்திக் காணக்கூடிய கம்பிவடம் மற்றும் செய்மதித் தொலைக்காட்சிகளையும் எண்ணிம ஒளிதக் குறுவட்டுகள் அல்லது பதிவு நாடாக்களில் பதிவு செய்யப்பட்ட ஒளிதங்களையும் காண முடிகிறது. இதே கருவி மூலம் வீட்டுப் பாதுகாப்பு அமைப்புகளின் ஒ���ிதங்களையும் காணலாம். + +ஆரம்பகால கட்டத்தில் உருவங்களை உருவாக்கவும் மற்றும் உருவப்பெருக்கத்திற்கும் ஒரு சுழல் வட்டை பயன்படுத்தினர். இவை பொதுவாக குறைந்த தெளிவுத்திறன் மற்றும் திரை அளவு கொண்டிருந்தைமையால் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. + +எதிர்மின்னிகளை வெளியிடும் இலத்திரன் துப்பாக்கியையும், ஒளிரும் திரையையும் கொண்ட, வெற்றிடத்தாலான ஒரு குழாயே எதிர்மின் கதிர் குழாய் ஆகும் (cathode ray tube (CRT)). எதிர்மின்னியையும் ஏனைய அணுத் துணிக்கைகளையும் கண்டறிவதில் இவ்வுபகரணத்திற்குப் பெரும்பங்கு உண்டு. இது கடந்த தசாப்தத்தில் தொலைக்காட்சியிலும், கணினித் திரையாகவும் பயன்பட்டது. தற்போது புதிய தொழில்நுட்பங்களால் இது பின்தள்ளப்பட்டாலும் சில இடங்களில் இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. + +இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் Digital Light Processing (DLP) என்பது ஒரு வகையான ஒளிப்படக்காட்டி தொழில்நுட்பத்திலமைந்த இலக்கமுறை நுண்ணாடிக் கருவியாகும். சில இலக்கமுறைத் ஒளிச்செயலாக்கம் தொலைக்காட்சி +அலை வழிப்படுத்தியைக் கொண்டிருப்பதால் அது ஒரு தொலைக்காட்சிதை் திரை போல காட்சியளிக்கும். + +மின்மக் காட்சிச் சட்டம் (plasma display panel) (PDP ) என்பது பெருந்திரைத் தொலைக்காட்சிகளில் பொதுவாக 30 இஞ்சு அளவுகளில் (76 செமீ அல்லது அதற்கும் பெரியது) பயன்படுத்தப்படும் தட்டையான காட்சி சட்டம் ஆகும்.அயனியாக்கப்பட்ட வாயுக்களின் கலவையைக் கொண்ட இரண்டு கண்ணாடியின் சட்டங்களுக்கு இடையில் பல சிறிய கலங்களைக் (cells) கொண்டிருக்கிறது. இந்த செல்களில் உள்ள வாயு மின்னியல் ரீதியாக மின்மமாக மாறுகிறது. மின்மமானது புறவூதா ஒளிகளை உமிழ்கிறது. மின்மக் காட்சிகளிலிருந்து (plasma) படிக நீர்மத் திரைகள் (LCD) மாறுபட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் மற்றொரு மெல்லிய எடை கொண்ட தட்டையான காட்சி வெளிப்பாடு ஆகும். அது நின்றொளிர்தல் சார்ந்ததல்ல. + +ஒரு திரவ படிக காட்சி (LCD) என்பது உரை, படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களைக் இலத்திரன் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான சட்டமாகும். இவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கருவிகளின் உரைகள், மற்றும் பல வகையான வானூர்தி கருவிளின் திரைகளில் பயன்படுத்தப்படுகின்றன. நுகர்வோரின் அன்றாட வாழ்க்கையி���் பயன்படுத்தப்படும் கருவிகளாகிய ஒளிபரப்பி, விளையாட்டுக் கருவிகள், மணிக்காட்டிகள், கைக்கடிகாரங்கள், கணிப்பான்கள் மற்றும் தொலைபேசிகளிலும் இவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எளிதான கட்டமைப்பு, பெயர்திறன் மற்றும் எதிமின் கதிர் குழாய்(CRT) காட்சிகள் தொழில்நுட்பத்தை விட மிகப் பெரிய திரைகளிலும் காட்சிகளை உருவாக்கும் கட்டமைப்பு விதம் இவற்றின் மிகச் சிறந்த சிறப்புக்கூறுகளில் அடங்கும். இவற்றின் மிகக் குறைந்த மின்சாரத்தை நுகர்ந்து செயல்படும் விதத்தினால் மின்கலத்தினால்-இயக்கப்படும்} மின்னணு கருவிகளில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. இது, திரவ படிகங்களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக ஓர் ஒளி மூலம்(பின்னொளி) அல்லது எதிரொளிப்பியின் முன் வரிசையமைப்பில் வைக்கப்படும் பல படத்துணுக்கு அல்லது படவணுக்களாலான (Pixel), மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம் ஆகும். LCD தொழில்நுட்பம் உருவாவதற்கு வழிவகுத்த முந்தைய கண்டுபிடிப்பான திரவ படிகங்களின் கண்டுபிடிப்பு சுமார் 1888 ஆம் ஆண்டு காலத்தில் நிகழ்ந்ததாக தெரியவருகிறது. +2008 ஆம் ஆண்டு, உலகளாவிய LCD திரைகளுடன் கூடிய தொலைக்காட்சிகளின் விற்பனை CRT யின் விற்பனை எண்ணிக்கையை விட மிஞ்சியிருந்தது. + +கரிம ஒளிகாலும் இருமுனையம் ("OLED, organic light-emitting diode") என்பது ஒரு ஒளிகாலும் இருமுனையம் (LED), இதன் உமிழும் மின்னொளிர்வுப் பட்டை ஒரு கரிமச் சேர்வையைக் கொண்டு உருவாக்கப்பட்ட படலம் ஆகும். இச்சேர்வை மின்னூட்டம் பெறும் போது ஒளியை உமிழ்கிறது. கரிமக் குறைக்கடத்தியைக் கொண்ட இந்த மின்னொளிர்வுப் பட்டை இரு மின்முனைகளுக்கிடையில் அமைந்துள்ளது. பொதுவாக, இந்த மின்முனைகளில் ஒன்று ஒளிபுகு தன்மை கொண்டதாக இருக்கும். + +கரிம ஒளிகாலும் இருமுனையங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளின் திரைகள், கணினித் திரைகள், நகர்பேசிகள், தனிநபர் எண்மத்துணைகள் போன்றவற்றில் எண்ணிமக் காட்சிகளை உருவாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. + +வட அமெரிக்காவில் சராசரியாக ஏழுவருடங்களுக்கு ஒருமுறை ஒருவர் தொலைக்காட்சிப் பெட்டியொன்றை வாங்குகின்றார். ஒருவீட்டில் சராசரியாக 2.8 தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன. 2011 ஆம் ஆண்டளவில் 48 மில்லியன் தொலைக்காட்சிப் பெட்டிகள் விற்கப்பட்டன. அவற்றின் சராசரி விற்பனைத்தொகை 460 அமெரிக்க டொலர்களாகவும் சராசரி அளவு 38 அங்குலமாகவும் உள்ளது. + +தொலைக்காட்சிகளால் கல்வி சார்ந்த பல விடயங்களை மாணவ்ர்கள், மற்றும் ஆர்வலர்கள் கன்டு மகிழ்கிரார்கள்.சில விடயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். +உலகின் மிகவும் பலராலும் பார்க்கப்படும் சிறந்த் பொழுதுபோக்குச் சாதனமாகும். + + + + + + + +தொடர்வண்டி + +தொடர்வண்டி அல்லது தொடரி (ஆங்கிலம்: "Train") என்பது பயணிகள் மற்றும் சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல உதவும் ஒரு போக்குவரத்து வாகனம் ஆகும். இவ்வகை வாகனங்கள் தண்டவாளங்கள் எனப்படும் இரயில் பாதைகளில், தொடர்ச்சியாக இணைக்கப்பட்டுள்ள பெட்டிகள் அல்லது கூண்டுகளை இழுத்துச் செல்லல் என்ற அடிப்படையில் இயங்குகின்றன. பெட்டிகள் அல்லது கூண்டுகள் சுயமாக நகர்வதற்கான ஆற்றல் தனியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் மூலம் அவற்றுக்கு வழங்கப்படுகிறது. வரலாற்றில் நீராவி உந்துவிசை ஆதிக்கம் செலுத்தியிருந்தாலும், தற்போது டீசல் மற்றும் மின்னியந்திரங்கள் பொதுவாக இழுவை இயந்திரங்களாகப் பயன்படுகின்றன. மின்னியந்திரங்களுக்கான மின்சக்தி மேல்நிலை கம்பிகள் அல்லது கூடுதல் இரயில் இயந்திரங்கள் மூலம் வழங்கப்படுகின்றன. குதிரைகள், நீருந்து கயிறு, இழுவைக்கம்பி, ஈர்ப்புவிசை, காற்றழுத்தம், மின்கலன்கள், மற்றும் வாயுச்சுழலிகள் போன்றவையும் இரயில் பெட்டிகல்ளை இழுப்பதற்கு ஆதாரமான சக்தி மூலங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. + +இரயில் பாதைகள் வழக்கமாக இரண்டு இணையான தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்படுகின்றன. சில நேரங்களில் மின்சாரம் கடத்துவதற்கென்றும், ஒற்றைத் தண்டூர்திகளுக்காகவும், காந்தமிதவுந்துகளுக்காகவும் தனியாக தண்டவாளங்கள் இணைக்கப்படுவதுண்டு. இழுத்தல் என்ற பொருள் கொண்ட "trahiner" என்ற பிரெஞ்சு மொழிச் சொல்லில் இருந்து டிரைன் என்ற சொல் உருவானதாகக் கருதப்படுகிறது. இலத்தீன் மொழியில் இழுத்தலுக்கு "trahere" என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. + +குறிப்பிட்ட நோக்கங்களுக்காக பல்வேறு வகையான இரயில்கள் வடிவமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன. பொதுவாக இரயில்களில் ஒன்றுடன் ஒன்றாக பலபெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். அவை சுயமாக இயங்கக்கூடியவையாக அல்லது இழ���விசையால் நகரக்கூடியவையாக உருவாக்கப்படுகின்றன. தொடக்கக் கால இரயில்கள் கயிற்றால் கட்டி குதிரைகளால் இழுக்கப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவி இயந்திரங்கள் மூலம் இரயில்கள் இழுக்கப்பட்டன. 1910 களில் நீராவி இயந்திரங்களுக்குப் பதிலாக டீசல் இயந்திரங்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இவ்வகை இயந்திரங்கள் சிக்கனமானதாகவும், குறைவான ஆள்பலத் தேவையும் உள்ளவகையாக இருந்தன. + +பயணிகள் இரயில் என்பது பயணிகள் பயணம் செய்யும் இருப்புப் பாதை வாகனங்களை உள்ளடக்கியது ஆகும். மிக நீண்ட மற்றும் வேகமாக இயங்கும் இரயில்கள் இவ்வலை இரயில்களில் இருக்கும். ஒரு குறிப்பிடத்தக்க வேகத்துடன் நகரும் இரயில்கள் மற்றும் அதிகரித்து வரும் நீண்ட தூர இரயில் வகைகள் அதிவேக இரயில்கள் எனப்படுகின்றன, இவற்றின் வேகம் 500 கிமீ / மணி ஆகும். இச்செயல்பாட்டை அடைவதற்கு, புதுமையான காந்தத்தால் மிதக்கும் தொழில்நுட்பம் மூலம் பல ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம் போன்ற பெரும்பாலான நாடுகளில், ஒரு டிராம்வே மற்றும் இரயில் இடையே உள்ள வேறுபாடு துல்லியமாக வரையறுக்கப்பட்டுள்ளது. ஒளி ரயில் என்பது சில நேரங்களில் நவீன டிராம் அமைப்பிற்காகப் பயன்படுத்தப்படுகிறது. + +நீராவித்தொடர்வண்டி, நிலக்கரித்தொடர்வண்டி, அகலப்பாதை தொடர்வண்டி, மீட்டர் பாதை தொடர்வண்டி, எலக்ட்ரிக் தொடர்வண்டி, பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி, அதிவேக தொடர்வண்டி என பல வகைகள் உள்ளன. + +தொடர்வண்டி பயணம் செய்யும் இடத்தை பொறுத்தும் சில வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை, புறநகர் தொடர்வண்டி, நகரத்தொடர்வண்டி. + +தொடர்வண்டியின் வேகத்தை பொருத்தும் வகைகள் மாறுபடுகின்றன. எடுத்துக்காட்டு விரைவுத்தொடர்வண்டி, பயணிகள் தொடர்வண்டி. + +பயன்பாட்டிற்கு ஏற்ப பலவகையான புகைவண்டிகள் புழக்கத்தில் உள்ளன. + +பயணியர் தொடர் வண்டிகள் பொது மக்கள் பயன்பாட்டிற்காகவும் சரக்குத் தொடர்வண்டிகள் நிலக்கரி, பெட்ரோல், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பலவகையான பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படிகின்றன. இன்னும் சில இடங்களில் பயணிகள், சரக்கு இரண்டும் ஒரே தொடர் வண்டியில் கொண்டு செல்லப்படுகின்றன. தண்டவாளங்களை மராமத்து செய்வதற்காக சிறப்பு இரயில்களும் பயன்பாட்டில் உள்ளன. + +ஐக்கிய இராச்சியத்தில், இரண்டு இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் "இரட்டை தலை" வண்டிகள் என்று அழைக்கப்படுகின்றன. கனடாவிலும் அமெரிக்காவிலும் இதேபோல மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட இயந்திரங்களால் இழுக்கப்படும் இரயில்கள் பொதுவாகவே காணப்படுவதுண்டு. தொடர்வண்டியின் இரண்டு முடிவிலும் இயந்திரங்கள் இணைக்கப்பட்ட வகையும் பயன்படுத்தப்படுகிறது. இயந்திரத்தை திசை திருப்பி மாற்றும் வசதியில்லா இடங்களில் இவ்வகை வண்டிகள் பயன்படுகின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் தொடர்வண்டில் மையப்பகுதியிலும் இவ்வகை இயந்திரங்கள் இணைக்கப்படுகின்றன. + +தொடர்வண்டி பயன்பாட்டிற்கு வந்த தொடக்க காலத்தில் குதிரைகளைக் கொண்டோ அல்லது புவியீர்ப்பு விசையினாலோ நகர்த்திச் செல்லப்பட்டன. பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நீராவிப் பொறி பயன்படுத்தப்பட்டது. 1920களில் இருந்து நீராவி வண்டிகளின் பயன்பாடு டீசல் அல்லது மின் ஆற்றலைப் பயன்படுத்தும் வண்டிகளின் அறிமுகத்தால் குறைந்து வந்தது. தற்காலத்தில் ஏறத்தாழ அனைத்து நாடுகளிலும் நீராவி வண்டிகள் வழக்கொழிக்கப்பட்டாலும் சில நாடுகளில் குறிப்பாக சீனாவில் பயன்பாட்டில் உள்ளது. எனினும் இவையும் சிறிது சிறிதாக நிறுத்தப்பட்டு வருகின்றன. மேலும் பல நாடுகளில் வரலாற்றுச் சின்னமாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் நீலகிரி மலை இரயில், டார்ஜிலிங் மலை இரயில் போன்றவை இவ்வகையைச் சேர்ந்தவை. + +பயணியர் தொடர்வண்டி என்பது பயணியர் பெட்டிகளைக் கொண்டிருக்கும். இவை பயணிகளை ஒரு இரயில் நிலையத்தில் இருந்து மற்றோர் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கின்றன. நிலையங்களுக்கு இடையேயான தொலைவு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் இருந்து சில ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை இருக்கலாம். பயணநேரமும் நிமிடக்கணக்கில் இருந்து நாட்கணக்கு வரை மாறுபடும். இவற்றுள் பலவகைகள் உள்ளன. + + +வழக்கமாக இரட்டைத் தண்டவாளங்களில் இயங்குவதற்குப் பதிலாக ஒரே தண்டவாளத்தைப் பயன்படுத்தும் இருப்புவழி போக்குவரத்து வகை அமைப்பாகும். 1897இல் ஒற்றைத் தண்டில் தொங்கியவாறு உயரத்தில் சென்ற அமைப்பொன்றை நிறுவிய செருமானியப் பொறியாளர் இதனை "மோனோரெயில்" என அழைத்தார். இத்தகையப் போக்குவரத்து பெரும்பாலும் தொடர்வண்டி எனவே அழை���்கப்படுகிறது. + +பொதுவழக்கில் உயரத்தில் அமைக்கப்படும் எந்தவொரு பயணியர் போக்குவரத்து அமைப்பும் ஒற்றைத் தண்டூர்தி என அழைக்கப்பட்டாலும் முறையான வரையறைப்படி இது ஒரு தண்டவாளத்தில் இயங்கும் அமைப்புக்களை மட்டுமே குறிக்கிறது. + +சரக்குத் தொடர்வண்டிகள் சரக்குப் பெட்டிகளை இழுத்துச் செல்கின்றன. திட, நீர்மப் பொருட்களை எடுத்துச் செல்ல வெவ்வேறு பெட்டிகள் உள்ளன. உலகின் பெரும்பாலான சரக்குப் போக்குவரத்து தொடர்வண்டிகள் மூலமே நடைபெறுகிறது. சாலையை விட தொடர்வண்டியில் பொருட்களை எடுத்துச் செல்வது பயனுறுதிறன் மிக்கதாகும். + +சில நாடுகளில் சரக்குள்ள சரக்குந்துகளே நேரடியாக தொடர்வண்டியின் மீது வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் சரக்குகளை ஏற்றி இறக்கும் நேரம் மிச்சப்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் கொங்கண் இரயில்வேயில் இத்தகைய நடைமுறை உள்ளது. + +இலங்கைக்கு ஆங்கிலேயரால் தொடர்வண்டி கொண்டுவரப்பட்டது. இது முதலில் பொருட்களை ஏற்றி செல்லவே பயன்பட்டது. பின்னர் இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு இலங்கை அரசாங்கத்தால் மனிதர்களையும் ஏற்றும் வகையில் செய்யப்பட்டது. + +இந்தியாவில் ஆங்கிலேயர்களால் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. பின் தொடர்வண்டி சேவை இந்தியாவில் பெரும் அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டது. தொடர்வண்டி சேவை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும், மாவட்டங்களையும், கிராமங்களையும் இணைக்கிறது. + +இந்தியாவில் ஐந்து ஆண்டு திட்டங்களின் மூலமாக மீட்டர் பாதைகள் அனைத்தும் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. மேலும் சென்னை உட்பட பெருநகரங்களில் பறக்கும் தொடர்வண்டி, மெட்ரோ தொடர்வண்டி ஆகிய சேவைகள் செய்யப்படுகின்றன. + +இந்தியாவில் பெயரிடப்பட்ட சில தொடர் வண்டிகளும் பயணிகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன. +அதிவிரைவு வண்டிகளின் வேகம் தடைபடாமல் தொடர்ந்து பயணிக்க வேண்டி இடைவண்டிகள் நிறுத்தப்பட்டு இத்தகைய விரைவு வண்டிகள் தொடர்ந்து செல்ல அனுமதிக்கப்படுகின்றன. + +இந்தியாவின் ரயில்வே மண்டலம் நிர்வாக நலன்கருதி 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. + + + + + + +கண் (உடல் உறுப்பு) + +கண் () (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகு��்.வெளிப்புறத்தில் உள்ள பொருள்களின் அமைப்பு, நிறம், ஒளித்தன்மை மற்றும் இயக்கம் ஆகியவற்றினை பார்வை உறுப்புத் தொகுதியின் மூலம் கண்கள் உணர்த்துகின்றன. வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை. இன்னும் மேம்பட்ட ("complex") கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை ("binocular vision") காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே); அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை ("monocular vision") காண உதவுகின்றன (பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே). + +கண் என்பது ஒவ்வொரு இனத்திற்கும் வேறுபடும். அதன் நிறம், வடிவமைப்பு, லென்சுகளின் அளவு ஆகியன மாறுபடும். அதிகப்படியான விலங்குகள் துணை விழிப்பார்வை கொண்டவையாகும். கண்களில் உள்ள லென்சுகள் காட்சிக்கு ஏற்ப தானாக மாறிக்கொள்ள்ளும் தன்மை கொண்டதாகும். மேலும் போதுமான வெளிச்சம் உள்ள இடங்களில் கண்ணின் பிறழ்ச்சி குறையும். + +மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால் விலங்குகள் இரவிலும் தெலிவாக காட்சிகளைக் காண முடியும். + +மீன்,பாம்பு உட்பட விலங்குகளுக்கு கண்களின் லென்சுகள் நிலையான வடிவத்தில் இருக்கும். எனவே அதன் கண்கள் புகைப்பட கருவியில் எப்படி உபயோகப்படுகிறதோ, அதேபோல் பயன்படுகிறது. + +நாம் காண்பதை ரசிப்பதற்கு நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அதிசய உறுப்பு கண் ஆகும். நமது கண் ஒரு நிழற்படக் கருவியைப் போன்று இயங்குகிறது. ஒளியின் உதவியுடன் ஒரு நிழற்படக் கருவி பொருட்களைப் படம் பிடிப்பதைப் போல, நமது கண்ணும், ஒளியின் உதவியுடன் பொருட்களின் உருவத்தை கணப்பொழுதில் படம் பிடித்து, மனதில் பதிவு செய்து, பின்பு அதை மூளையில் விருத்திச் செய்கிறது. கண்ணின் அனைத்து பாகங்களும் ஒருங்கிணைந்து, ஒரு குழுவைப் போன்று இயங்கி, நமக்குப் பார்வை அளிக்கிறது. இதில் பிம்பத்தை தேக்கும் வல்லமையுள்ள விழிப்படலம் என்ற பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கருமையான ‘கண��மணி’க்குள் நுழையும் ஒளிக்கதிர்களை, விழிப்படலம் (cornea) திசை திருப்புகிறது. திசை திரும்பிய ஒளிக்கதிர், ‘கண்மணி’க்குப் பின்னால் உள்ள குவிஆடியைச் சென்றடைகிறது. இந்த ஆடி, தனது உருவத்தை மாற்றிக் கொண்டு, தொலைவில் மற்றும் அருகில் உள்ள பொருட்களின் மீது ஒளிக்கதிர்களை ஒருமுனைப்படுத்துகிறது. இச்செயல் ‘அக்காமடேஷன்’() எனப்படுகிறது. + +நிழற்படக்கருவியிலுள்ள பிம்பத்தேக்கியைப் (film) போன்று இயங்கும், விழித்திரை (ஒளிமின் மாற்றி-retina), ஆடி ஒரு தலைகீழ் உருவத்தைப் பதிக்கிறது. பதிக்கப்பட்ட உருவம், மின் விசைகளாக மூளைக்குள் செலுத்தப்பட்டு, அங்கு அவை விருத்திச் செய்யப்படுகின்றன. + +கண்ணின் வழியே ஒளி செல்லும்போது ஒளிச் சிதறலும் ஒளித்திசை மாறுதலும் ஏற்படுகின்றன. ஒளியானது விழித்திரையை அடையும் முன் கார்னியா, லென்சின் முன்பகுதி, லென்சின் பின்பகுதி ஆகிய மூன்று பரப்புகளில் ஒளிச்சிதறல் அடைகிறது. கார்னியா மற்றும் லென்சுக்கு இடையில் அக்குவசு இயூமர் என்ற பிளாசுமா போன்ற திரவம் உள்ளது. லென்சுக்கும் விழித்திரைக்கும் இடையில் விட்ரசு இயூமர் என்ற திரவம் உள்ளது. இது கூழ்மமான மீயூக்கோ புரதத்தினாலானது. இத்திரவங்கள் இரண்டும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதினால் ஒளி கண்ணின் விழித்திரையை தடையில்லாமல் அடைகிறது. + +மனிதனின் கண்ணில் உள்ள லென்சின் குவிந்த பகுதி பார்க்கும் பொருளின் தூரத்திற்கு ஏற்ப தானே குவித்தன்மையை மாற்றிக் கொள்ளும் தன்மையை கொண்டிருக்கிறது. இத்தன்மையை கண் தக அமைதல் அல்லது விழியின் ஏற்பமைவு என்பர். இவ்வேற்பமைவு, சிலியரி தசைகள், சிலியரி உறுப்புகள், மற்றும் தாங்கும் இழைகளால் நடைபெறுகிறது. + +கண் தூரத்திலுள்ள பொருளைப் பார்க்கும்போது சிலியரித்தசைகள் தளர்ந்து விடுகின்றன. பொருளிலிருந்து வரும் இணையான ஒளிக்கதிர்கள் விழித்திரையின் மேல் குவிக்கப்படுகின்றன. எனவே தெளிவான பிம்பம் தெரிகின்றது. பொருளை விழியின் அருகில் கொண்டு வரும்போது விழியின் ஏற்பமைவுத் தன்மை அதிகரிப்பதில்லை. மாறாக லென்சின் மேற்பகுதியின் வளைவுப்பகுதி அதிகரிப்பதினால் ஒளிச்சிதறல் தன்மை அதிகரிக்கிறது. இதனால் அருகிலுள்ள பொருட்களின் பிம்பம் நன்றாகத் தெரிகிறது. + +கண்ணின் குச்சி செல்களின் வெளிப்புறப்பகுதியில் காணப்படும் சிவப்புக் கலந்த ஊதா ���ிறமி, ரெடாப்சின் அல்லது பார்வை ஊதா என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள புரத ஆப்சினும் ஆல்டிகைடும் கலந்த வைட்டமின் ’ஏ’ வும் சேர்ந்த பகுதியினை ரெட்டினோ என்கிறார்கள். ஒளி ரெடாப்சின் மீது விழும்போது நிறமற்றுப் போகிறது. ஏனென்றால் இவை ரெட்டினே மற்றும் ஆப்சினாக உடைக்கப்படுகின்றன. ஒளி இல்லாத வேளையில் இவை மீண்டும் இணைகின்றன. குச்சி செல்கள் அதிக ஒளி உணர்வுத் தன்மை கொண்டவையாகும். எனவே குறைந்த ஒளியிலும் பார்ப்பதற்கு இவை உதவுகின்றன.. + +கூம்பு செல்களில் காணப்படும் பார்வை நிறமிகள் ரெட்டினேவுடன் சேர்ந்த புரத ஆப்சின்களால் ஆனவையாகும். கூம்பு செல்கள் நிறங்களை உணர்கின்றன. மனிதனின் கண்களில் வெவ்வேறு அலைநீளம் கொண்ட மூண்று நிறமிகள் காணப்படுகின்றன. அதிக அளவு ஒளிகொண்ட பார்வையின் செயலே நிறப்பார்வை எனப்படுகிறது. அதிக அளவு ஒளியின் நிறங்களை விழித்திரையிலுள்ள குச்சி செல்கள் இல்லாத போவியா பகுதி உணர்கிறது. குறைந்த ஒளி எனில் குச்சி செல்களும் அதிக ஒளி எனில் கூம்பு செல்களும் செயல்படுகின்றன. குச்சிசெல்கள் செயல்படும்போது நிறங்கள் உணரப்படுவதில்லை. + +விழித்திரையின் செயல்பாட்டில் ஒளிவேதிவினை மூலமாக ஒளிச்சக்தியானது நரம்புத் தூண்டலாக மாற்றப்படுகிறது. இச்செயல் மூலம் நரம்பிழைகள் தூண்டப்பட்டு கடத்தப்படுகின்றன. உணர் உறுப்புகளில் உருவாகும் தூண்டல்கள் கூம்பு செல்களில் உருவாகும் மின்னழுத்தத்தைப் பொறுத்து மூளையினால் சரியாக நிறமாகப் பகுக்கப்படுகிறது. நமது கண்களினால் பகுக்கப்படுகின்ற அல்லது காணப்படுகின்ற நிறமுள்ள படங்கள் மூளையின் ஒரு கடினமான செயல் தொகுப்பாகும். + +Anatomy of the compound eye of an insect]] +கலவை அல்லாத கண்கள், குழிக் கண்கள், கோளக் கண்கள், பல லென்ஸ் கண்கள், முறிவு கருவிழி கண்கள், ரிப்லேக்டார் கண்கள், கூட்டுக் கண்கள், அருகமைவாக கண்கள், மேற்பொருந்துதல் கண்கள் ஆகியன கண்ணின் வகைகளாகும் + +கலவை அல்லாத கண்கள் என்பது லென்சுடன் கூடிய சாதரண கண்களே ஆகும்.எடுத்துக்காட்டு மீன்களின் கண்கள். + +குழிகண்கள் ஒளியின் கோணங்களை குறைக்கவல்லதாகும்.ஒளியின் கோண அளவு கண்ணை பாதுகப்பாக வைத்துக்கொள்ளும். + +குழிகண்களின் லென்ஸில் உயர் ஒளி விலகல் தன்மையை கொண்டிருப்பின் அது கோள கண்களாகும். இவ்வகை கண்கள் கோள பிறழ்ச்சியை குறைக்கும். + +ஒன்றுக���கு மேற்பட்ட லென்சுகளை கொண்ட கண்களே பல லென்ஸ் கண்களாகும்.பெரும்பாலும் இவ்வகை கண்கள் நீரில் வாழும் உயிரினங்களுக்கே காணப்படும். + +முறிவு கருவிழி கண்கள் பெரும் பாலும் பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகளுக்கு அமைந்து இருக்கும். + +ரிப்லேக்டார் கண்களில் இரு லென்சுகள் இருக்கும். அதில் ஒன்று கண்ணாடி பேழை போன்று செயல்படும். இவ்வகை கண்கள் சிறிய பூச்சிகள், பறவைகளுக்கு காணப்படும். + +கூட்டுக் கண்கள் என்பது ஆயிரக்கணக்கான ஒளி வாங்கிகள் பிம்மத்தை வாங்கி, மூளையில் பதிய வைத்து. காட்சியாகக் காட்டும் அதுவே கூட்டுக்கண்கள் ஆகும். பெரும்பாலும் ஈக்களுக்கு இதுபோன்ற கண்களே இருக்கும். பறக்கும் சிலந்திகளுக்கும் இது போன்ற கண்களே இருக்கும். அதாவது குறுகிய பார்வை கொண்ட எண்ணற்ற கண்கள் இருக்கும். + +அருகமைவாகக் கண்கள் சாதாரணக் கண்கள் ஆகும். + +மேற்பொருந்துதல் கண்கள், இது இறால் போன்ற மீன்களுக்கு இருக்கும் கண்கள் ஆகும். + +கண்களின் பார்வைக்கூர்மை கண்களின் வகையை பொறுத்து மாறும். பார்வைக்கூர்மையை நிர்ணயிப்பது கண்களில் உள்ள செல்களின் திறமே ஆகும். உயிர்கள் அனைத்தோடும் ஒப்பிட்டால் கழுகுகளுக்கே பார்வையின் கூர்மை அதிகம். குதிரைகளுக்கும் பார்வைத்திறன் அதிகமாகும். + +மனிதர்களின் கண்களைவிட விலங்குகளின் கண்கள் அதிக சக்தி வாய்ந்தவை. அதனால் விலங்குகள் இரவிலும் தெளிவாக காட்சிகளைக் காண முடியும். ஒவ்வொரு வகை விலங்குகளுக்கும் ஒவ்வொரு வகையில் கண்கள் அமைந்துள்ளன. நீரில் வாழ்பவனவற்றிற்கு ஒன்று போலவும், நிலத்தில் வாழ்பவனவற்றுக்கு வெறுபட்டும் இருக்கின்றன. + +மனிதர்களின் பார்வை கூர்மையையும் செல்களே தீர்மானிக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்கும் கண்ணின் கருவிழி நிறத்தை உறுதி செய்வது அவனின் ஜீன்களாகும். நீலம், பச்சை, கருப்பு, பழுப்பு நிறம் ஆகியன மனித கருவிழியின் வண்ணங்களாகும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் விழித்திரை மாறுபடும். உலகில் உள்ள எந்த இரு மனிதருக்கும் விழித்திரை ஒன்றாக இருப்பதில்லை (இரட்டைப்பிறவிகளுக்கு கூட அவை மாறும்). + +மனிதனின் கண் வெளிச்சம் மற்றும் அழுத்தம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒர் உறுப்பு ஆகும். ஒர் உணர்வு உறுப்பாக பாலூட்டிகளின் கண் பார்வையை அனுமதிக்கிறது. மனித கண்கள் முப்பரிமாண நகரும் உருவத்தை வழங்க உதவுகின்றன, பொதுவாக பகல் நேரங்களில் நிறங்களை உணர்த்துகின்றன. விழித்திரையில் உள்ள குச்சி மற்றும் கூம்பு செல்கள் ஒளி உணர்வு மற்றும் வண்ண வேறுபாடு ஆழ்ந்த கருத்து உள்ளிட்ட பார்வை செயல்பாஃடுகளுக்குக் காரணமாகின்றன.மனிதக் கண் 10 மில்லியன் நிறங்களை வேறுபடுத்தி அறியும் திறன் கொண்டதாகக் கருதப்படுகிறது . + + +
+ + + +
+ +சகாரா + +சஃகாரா அல்லது சஹாரா பாலைவனம் (அரபு:الصحراء الكبرى) என்பது ஆப்பிரிக்காவின் வடபகுதியில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய சுடு பாலைவனம் ஆகும். குளிர் பனிப் பாலை நிலமாக அண்டார்ட்டிக்காவைக் கொண்டால் சகாரா பாலைவனம் இரண்டாவது மிகப் பெரிய பாலைவனம் ஆகும். இதன் பரப்பளவு 9,000,000 சதுர கிலோமீட்டர்களாகும் (3,500,000 சதுர மைல்கள்). இப்பரப்பானது ஏறத்தாழ ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அளவுக்கு பெரியதாகும். இப்பாலைவனம் மத்திய தரைக்கடல் கடற்கரையின் வளமான பகுதிகள், மக்ரேபின் அட்லஸ் மலைகள், எகிப்து மற்றும் சூடானில் உள்ள நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கு ஆகியவற்றில் வளமான பகுதியைத் தவிர்த்து, வட ஆப்பிரிக்காவின் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. இது கிழக்கில் செங்கடலில் இருந்து நீண்டும், வடக்கே மத்திய தரைக்கடலும், மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் எல்லைகளாக கொண்டு, இதன் நிலப்பரப்பு கடற்கரையை நோக்கிச் செல்லச்செல்ல படிப்படியாக பாலைவனத்திலிருந்து கடலோர சமவெளியாக மாறுகிறது. தெற்கில், இது நைல் நதி பள்ளத்தாக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் துணை சகாராவின் வெப்பமான பகுதிக்கு அருகிலுள்ள அரைப் பாலைவன வெப்பமண்டல சவன்னாவை பட்டாயாச சுற்றியுள்ளது. சகாராவை மேற்கு சஹாரா, நடு அஹாகர் மலைகள், திபெஸ்டிக் மலைகள், ஏய்ர் மலைகள், டெனெரெ பாலைவனம், லிபிய பாலைவனம் போன்ற பல பிரதேசங்களாக பிரிக்கலாம். இப்பாலைவனம் ஏறத்தாழ 2.5 மில்லியன் ஆண்டுப் பழைமை வாய்ந்தது. அதற்கு முன் இங்கே ஏரிகளும் ஆறுகளும் இருந்தன. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து நடு நிலக் கடற்பகுதி, அத்திலாந்திக்குப் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புக்களை இணைக்கின்றது. + +இங்குள்ள சில மணற் குன்றுகள் கிட்டத்தட்ட 180மீ (590 அடி) உயரம் வரை இருக்கும். சகாரா என்னும் பெயர் பொதுவாக வழங்கினாலும், இது அரபு மொழியிற் பாலைவனம் என்னும் சொல்லாகிய சஹ்றா () என்பதில் இரு���்து எழுந்ததாகும். + +சஹாரா பாலைவனத்திற்கு மேற்கில் அட்லாண்டிக் கடலும், வட திசையில் அத்திலசு மலையும் மத்தியத்தரைக்கடல் பகுதிகளும், கிழக்கில் செங்கடலும், தெற்கில் சூடான் பகுதிகளும் எல்லைகளாக அமைந்துள்ளன. சஹாரா பாலைவனம் அல்ஜீரியா, தசாது, எகிப்து, எரித்திரியா, லிபியா, மாலி, மௌரிடானியா, மொரோக்கோ, நைகர், சூடான், தூனிசியா, மேற்கு சஹாரா ஆகிய பன்னிரண்டு நாடுகள் வரை பரந்து விரிந்துள்ளது. இப்பாலைவனம் செங்கடலில் ஆரம்பித்து மத்தியத்தரைக் கடற்பகுதி மற்றும் அட்லான்டிக் பெருங்கடல் ஆகிய நீர்ப்பரப்புகளை இணைக்கின்றது. சஹாரா பாலைவனம் 9 மில்லியன் சதுர கிலோமீட்டர் (3,500,000 சதுர மைல்) அளவு கொண்டது. இது ஆப்பிரிக்காவில் 31 சதவிகிதம் என்றாலும் இந்த பரப்பளவு காலத்திற்குக் காலம் மாறுபடுகின்றது. 250 மி.மீ க்கும் குறைவான சராசரி வருடாந்திர மழைப்பகுதி கொண்ட அனைத்து பகுதிகளும் சகாரா பாலைவனத்திற்கு உள்ளடக்கப்பட்டிருந்தால், சகாரா 11 மில்லியன் சதுர கிலோமீட்டர் (4,200,000 சதுர மைல்) கொண்டதாக இருக்கும். + +பல ஆழ்ந்த சிதறல்களைக் கொண்ட மலைகள், பல எரிமலைகளும், இந்தப் பாலைவனத்திலிருந்து எழுந்தன, இதில் குறிப்பிடத்தக்கன அஹர் மலைகள், அஹாகர் மலைகள், சஹரன் அட்லஸ், திபீஸ்டிக் மலைகள், அட்ரார் டெஸ் இஃபோராஸ், செங்கடல மலை போன்றவை ஆகும். சகாராவின் மிக உயர்ந்த சிகரம் எமி குசீசி ஆகும், இது ஒரு கேடய எரிமலை ஆகும். + +சஹாரா ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மிகப் பெரிய பாலைவனமாகும். சஹாரா தெற்கு எல்லையாக சகேலில் எனும் சவன்னா புல்வெளி உள்ளது. சகேலிலிற்கு தெற்கே தெற்கு சூடான் நாடும் காங்கோ வடிநிலப் பகுதியும் உள்ளன. சஹாராவின் பெரும்பாலான பகுதி பாறைகற்களை கொண்டுள்ளது; மணற்குன்றுகளால் மூடப்பட்டிருக்கும் சிறிய பகுதி மட்டுமே மூடியுள்ளது. +மக்கள் கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பனி யுகத்தில் சஹாரா பாலைவன விளிம்பில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது சஹாராவில் முதலைகளும் 30,000ற்கும் மேற்பட்ட மற்றுமுள்ள நீர்வாழ் விலங்குகளும் இருந்ததற்கான படிமங்கள் தென்கிழக்கு அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளன. நவீன சஹாராவில் நைல் பள்ளத்தாக்கு தவிர மற்ற இடங்கள் பசுமையாக இருந்திருக்கவில்லை. சைத்தூன் மரம் போன்ற மத்திய தரைக் கடற் பகுதித் தாவரங்களே அங்கு இருந்தன. இந்ந���லை கி.மு 1600 வரை இருந்தது. இப்போதய சஹாரா பகுதியில் பூமியின் அச்சு மாற்றமும் வெப்பநிலை மாற்றங்களுக்கும் ஏற்பட்ட பிறகு, இது மணற்பாங்கான பாலைவனமாக மாறியது. + +நடு சகாரா என்பது ஆங்காங்கே தாவரங்களுடன் கலப்பு நிலப்பகுதியாக உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு பாலைவனப்பகுதிகளானது, மலைப்பகுதியூடாக, சிதறிய புல்வெளி மற்றும் பாலைவனப் சிறு புதர் பகுதிகள், மரங்கள் மற்றும் உயரமான புதர்கள் போன்றவற்றைக் கொண்டதாக உள்ளது. நடு சகாராவின், கலப்பு பாலைப் பகுதியில், பெரும் பாலைவனத்தின் பல துணைப்பிரிவுகள் உள்ளன அவை: டேன்சுரூஃப், டெனெரெ, லிபிய பாலைவனம், கிழக்கு பாலைவனம், நுபியான் பாலைவனம் மற்றும் பல. இது மிகவும் வறண்ட பகுதிகளாக பல ஆண்டுகள் அடிக்கடி மழை இருக்காது. + +வடக்கு சகாரா என்பது எகிப்தில் மத்தியதரைக் கடல் மற்றும் லிபியாவின் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இது   மத்தியதரைக்கடல் வனப்பகுதி, மரக்காடு, மற்றும் வட ஆபிரிக்காவின் சூழல் மண்டலங்களை சுற்றிக் கொண்டுள்ளது, இவை அனைத்தும் மத்திய தரைக்கடல் காலநிலை மற்றும் வெப்பமான கோடைக்காலம் மற்றும் குளிர் மற்றும் மழையான குளிர்காலங்களைக் கொண்டுள்ளது. வடக்கின் எல்லைகள் 100 மில்லிமீட்டர் (3.9 அங்குலம்) வருடாந்திர மழையைப் பெறுகின்றது. + +பருவகால அளவின் படி, சஹாராவின் தெற்கு எல்லையானது 150 மிமீ (5.9 அங்குலம்) வருடாந்திர மழைப்பொழிவு பெறுகிறது (இது ஒரு நீண்ட கால சராசரி அளவீடு ஆகும், மழைப்பொழிவு ஆண்டுதோறும் மாறுபடுகிறது). + +சகாராவில் அமைந்துள்ள முக்கிய நகரங்கள், மவுரித்தானியாவின் தலைநகரான நுவாக்சூத், அல்ஜீரியாவின் தாமன்ராஸெட், ஓர்குலா, பெச்சர், ஹாஸ்ஸி மெஸ்அௗத், கர்தாயா, எல் ஒய்யுட்; மாலிவில் உள்ள திம்புக்டு; நைஜரில் அகடெஸ்; லிபியாவில் காட்; சாத் நகரில் ஃபைஏ-லார்கோவ் போன்ற தகரங்களாகும். + +கடைசி பனி ஆண்டிற்குப் பிறகு சஹாரா பாலைவனம் வளமான இடமாக மாறியது. பின்னர் சிறிது சிறிதாக மீண்டும் பாலைவனமாக மாறி விட்டது என வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. கடந்த நூறு ஆண்டுகளில் சஹாரா பல சூழல் மாற்றங்களை சந்தித்திருக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது போன்ற மாற்றங்கள் 41000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமி 22 முதல் 24.5 சாய்வதனால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மேலும் 15000 (17000 A.D) வருடங்கள் கழித்து ச���ாரா பசுமையான இடமாக மாறும் எனவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். + +இது உலகிலேயே வெப்பம் மிகுந்த பகுதியாகும். ஆனாலும் இது வறண்ட பகுதியல்ல என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சஹாரா பாலைவனத்தில் மிக உயரிய மலைகளும் உள்ளன. அவற்றிற் சில மலைகளில் கோடை காலங்களிலும் பனி படர்ந்திருக்கும். திபெஸ்தி மலைகளில் ஏழு வருடங்களுக்கு ஒருமுறை 2500 மீட்டர் அளவு பனிப்படர்வு இருக்கும். சில மலைகளில் பனிப்படர்வு சில நிமிடங்களில் கரைந்து விடும். இதில் முக்கியமான மலைத் தொடர்கள் அல்ஜீரியப் பகுதிகளில் உள்ளன. எகிப்துப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 130 மீட்டர் தாழ்வான பகுதிகளும் உள்ளன. சஹாராவில் 25% பகுதியில் மணல் பரப்புக்கள் உள்ளன.சஹாராவில் பல ஆறுகள் ஓடுகின்றன. ஆனால் அவை குறிப்பிட்ட காலங்கள் மட்டுமே பாய்வனவாகும். நைகர் நதியும், நைல் நதியும் சஹாராவில் பாயும் வற்றாத நதிகள் ஆகும்..சஹாராவில் பகலில் இருக்கும் வெப்பத்திற்கு இணையாக இரவில் குளிர் காற்று வீசும். சஹாராவில் கடுமையான மணற் புயல்களும் வீசும். மேற்கு அல்ஜீரியப் பகுதிகளில் காற்று கடுமையாக வீசும். + +இங்கு இரும்புத் தாதுக்களும் பெறுமளவிற் கிடைக்கின்றன. சில இடங்களில் யுரேனியமும், அல்ஜீரியாவில் எண்ணெய்யும், மேற்கு சஹாராவில் பாஸ்பேட்டு தாதுக்களும் அதிக அளவில் கிடைக்கின்றன. + +சஹாராவின் பல பகுதிகள் மனிதர்களும் விலங்குகளும் வாழ முடியாத இடங்களாகும். ஆனால் மனிதர்களும் விலங்குகளும் நீர் இருக்கும் சில இடங்களில் வசித்து வருகின்றனர். +இந்திய ஒட்டகங்களும் ஆடுகளுமே சகாராவில் அதிகளவு காணப்படும் விலங்குகளாகும். பாலை நிலத்தில் வாழத் தகவமைத்துக் கொண்டுள்ளபடியால் ஒட்டகங்கள் இங்குள்ள நாடோடிகளால் விரும்பி வளர்க்கப்படுகின்றன. + +பாலத்தீன மஞ்சள் தேள் என்னும் தேள் இங்கு காணப்படுகிறது. இது 10 செ.மீ நீளம் வரை வளரும். இத்தேள் மிகவும் நச்சு வாய்ந்தது. எனினும் இத்தேள் கொட்டுவதால் வளர்ந்த மனிதர்கள் இறப்பது அரிதே. + +பல வகையான நரிகளும் இங்கு காணப்படுகின்றன. அடாக்சு எனப்படும் பெரிய வெண்ணிற இரலை இங்கு காணப்படுகிறது. இது நீண்ட நாட்கள் நீரில்லாமல் தாக்குப் பிடிக்க வல்லது. மேலும் தோர்க்காசு, ரிம், தாமா எனப்படும் சிறு மான்களும் காணப்படுகின்றன. இவையும் நீரில்லாமல் நீண்ட நாட்கள் வாழக் கூடியன. + +அல்சீரியா, தோகோ, நைசர், மாலி முதலான பகுதிகளில் சகாராச் சிறுத்தைகள் காணப்படுகின்றன. சிறு அளவிலான ஆப்பிரிக்கக் காட்டு நாய்களும் உள்ளன. + +பல்லிகள், மணல் விரியன், நெருப்புக் கோழி முதலியன இங்கு காணப்படும் மற்ற விலங்குகளாகும். இங்கு வெள்ளி எறும்புகள் எனும் உயிரினமும் உள்ளது. இது பூமிக்கடியில் குழிகளில் வசிக்கும். ஒரு மணி நேரத்திற்கு மேல் இவை வெளியில் திரிந்தால் இறந்து விடும். இவை வெப்பத்தினால் இறக்கும் உயிரிணங்களை உணவாக உட்கொள்ளும். + +நவீன கற்காலத்தில், அஃதாவது பொ.மு. 9500 இல் பாலைவனமாக மாற தொடங்க முன், இங்கு மத்திய சூடான் பகுதியில் வாழ்ந்த மக்களுக்குத் தேவையான உணவை வழங்கும் காலநிலை நிலவி வந்தது. +===துருக்கியர்களின் காலம்=== + + caravan transporting black African slaves across the Sahara.]] +சகாராவைச் சேர்ந்த மக்கள் வெவ்வேறு பூர்வீகத்தைக் கொண்டவர்களாயும், வெவ்வேறு மொழிகளைப் பேசுபபர்களாகவும் உள்ளனர். அரேபிய மொழிகளே அதிகம் பேசப்படும் மொழிகளாக உள்ளன. + + + + + +அமேசான் ஆறு + +அமேசான் ஆறு (Amazon River) (இலங்கை வழக்கு: அமேசன் ஆறு   பொதுவாக சுருக்கமாக அமேசான் ( or ; Spanish மற்றும் ) தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு ஆறாகும். இது உலகின் இரண்டு நீளமான ஆறுகளில் ஒன்று. மற்றொன்று நைல் ஆறு. அமேசான் ஆறு கொணரும் நீரின் அளவில் உலகின் பெரிய ஆறாகும்.   மற்றும் சில ஆசிரியர்களின் கூற்றின்படி, உலகின் நீண்ட ஆறாகும். இதன் அளவு மிசிசிப்பி, நைல், மற்றும் யாங்சே ஆகிய நதிகளின் மொத்த அளவை விட அதிகம். இதன் நீளம் 6400 கி.மீ.கள். உலகிலேயே பரப்பளவில் பெரிய ஆற்றுப் படுக்கையை கொண்ட ஆறாகும். இதன் மொத்த அளவு அடுத்த எட்டு பெரிய ஆறுகளின் நன்னீரின் அளவை விட அதிகமாகும். + +இந்த ஆற்றின் ஓட்டம் பலமுறை மாறியுள்ளது. முதலில் மேற்கு நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்த இந்த ஆறு அண்டெஸ் மலையின் வளர்ச்சியினால் கிழக்கு நோக்கிப் பாய்கிறது. + +அமேசான் ஆறு எந்த இடத்திலும் பாலம் மூலமாக கடக்கப்படுவதில்லை. இதற்கு காரணம் இதன் அகலம் அல்ல, தற்கால பொறியாளர்களால் இதன் குறுக்கே பாலம் கட்டமுடியும். எனினும் ஆற்றின் பெரும் பகுதி வெப்பமண்டல மழைக்காடுகள் வழியாக பாய்வதாலும் அங்கு சில நகரங்களே உள்ளதாலும் பாலத்தின் தேவை ஏற்படவில்லை. + +பல்வேறு அளவைகளின் படி அமேசான் ஆறே உலக���ல் பெரியதாக இருந்தாலும் நீளத்தை பொறுத்தமட்டில் இது நைல் ஆற்றைவிட சிறிது குறைவு என்பது பெரும்பாலான புவியிலாளர்களின் கணிப்பு. எனினும் இதை பிரேசில் மற்றும் பெரு நாட்டை சேர்ந்த சில அறிவியலாளர்கள் ஏற்க மறுக்கிறார்கள். + +இந்த ஆற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏறத்தாழ ஒரு விநாடிக்கு 209,000 கன மீட்டர்—தோராயமாக ஆண்டுக்கு 6,591 கியூபிக் கிலோமீட்டர் ஆகும், இது இதற்கடுத்த ஏழு மிகப்பெரிய ஆறுகள் வெளியேற்றும் ஆறுகளைவிட கூடுதலாக உள்ளது- உலகின் ஆற்றில் கலக்கும் மொத்த ஆறுகளின் நீரில் அமேசானின் பங்கு 20% ஆகும்.  அமேசான் கால்வாய் உலகின் மிகப்பெரிய வடிகால் பகுதி ஆகும், இது சுமார் 7,050,000 சதுர கிலோமீட்டர் (2,720,000 சதுர மைல்) பரப்பளவில் உள்ளது. + +இதன் தலைத் துணை ஆறுகளின் உருவாக்கம் பெரு, எக்குவடோர் நாடுகளில் இருந்தாலும், இதன் பெரும்பாலான ஆற்று படுக்கை பகுதி பிரேசில் நாட்டில் அமைந்துள்ளது.Đ + +அமேசான் ஆறு ஆயிரத்திற்கும் மிகுதியான துணையாறுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் 17 ஆறுகள் 1000 கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டன. + +அமேசானின் வடிகால் பகுதியே உலகின் மிகப்பெரியதாகும். இது தோராயமாக தென் அமெரிக்காவின் பரப்பில் 40 விழுக்காடு ஆகும். இதன் ஒரு நீர்பிடிப்பு பகுதி உள் ஆண்டிய மேட்டுநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ளது. + +அமேசான் ஆறினால் அட்லாண்டிக் பெருங்கடலில் சேரும் நீரின் அளவு மிக அதிகமாகும். மழைக்காலத்தில் வினாடிக்கு 300,000 கன மீட்டர் அளவு வரை நீர்வரத்தும் 1973-1990 வரையான காலப்பகுதியில் தோராயமாக 209,000 கன மீட்டர் அளவும் நீர்வரத்து இருந்தது. + +அமேசான் வடிநிலமானது தென் அமெரிக்காவின் மற்றொரு பெரிய ஆறான ஓரினோகோவின் வடிநிலத்துடன் காசிகியுயர் கால்வாய் மூலம் இணைக்கப்படுகிறது. அதனால் இதை இயற்கையாக அமைந்த நீர் இணைப்பு என்பார்கள். கால்வாய் என்று சொன்னாலும் காசிகியுயர் என்பது மேல் ஓரினோ ஆற்றின் கிளை ஆறாகும். இது தெற்காக ஓடி அமேசானின் துணை ஆறாகிய ரியோ நீக்ரோ ஆற்றுடன் கலக்கிறது. + +பெரு, ஈக்வடார் நாடுகளில் அமேசான் ஆறு பல ஆற்றுத்தொகுதிகள் உடைய பெரிய ஆற்று அமைப்பாகும். பல நேரடியாக மரானான், உகயாலி போன்ற ஆறுகளில் கலக்கிறது. மரானா, பாஸ்டாச, நுகுரே போன்ற பல ஆறுகள் முதன்மை அமேசான் ஆற்ற���ல் கலக்கின்றன. + +பெரு நாட்டின் ஆண்டீய மலைத்தொடரில் உள்ள பனி மூடிய நவாடோ மிசிமி சிகரத்தின் பனிஏரியில் அமேசான் உருவாவதாக ௧௯௯௧, 20012007ம் ஆண்டுகளில் நிறுவப்பட்டது. இது டிடிகாகா ஏரிக்கு மேற்கிலும் லிமாவுக்கு தென் கிழக்கிலும் உள்ளது. நவாடோ மிசிமியிலிருந்து வரும் நீரானது குபிராடாஸ் கார்குசன்டா மற்றும் அபாசேடா ஆறுகளில் கலக்கிறது இவை உகயாலி ஆற்றின் துணை ஆறாகிய ரியோ அபுரிமாக் உடன் இணைகிறது. உகயாலி மரானான் உடன் இணைந்து முதன்மை அமேசான் ஆற்றை உருவாக்குகிறது. இந்த இடத்தையே பெரும்பாலான புவியியலாளர்கள் முதன்மை அமேசான் உருவாகும் இடமாக கருதுகிறார்கள். இங்குள்ள ஆற்றை பிரேசிலில் சோலிமோஸ் டாஸ் ஆகுஅஸ் என அழைக்கிறார்கள். ஆயிரம் மைல்கள் கடந்த பின் கரிய நிறமுடைய நீரினை உடைய ரியோ நீக்ரோ மண் நிறமுடைய அமேசானுடன் இணைகிறது. ஆறு மைல் வரையில் இரண்டும் கலக்காமல் அடுத்தடுத்து ஓடுகின்றன. + +அனைத்து அமேசான் துணை ஆறுகளிலும் ஓரே சமயத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதில்லை. பெரும்பாலானவற்றில் நவம்பர் மாதத்தில் வெள்ளம் ஏற்படத்துவங்கி ஜூன் வரை நீடிக்கும். ரியோ நீக்ரோவில் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் வெள்ளம் ஏற்பட துவங்கி ஜூன் மாத வாக்கில் வெள்ளம் குறையத்தொடங்கும். மெடிரிரா மற்ற அமேசான் துணை ஆறுகளில் வெள்ளம் ஏற்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே வெள்ளம் ஏற்பட்டு குறையந்துவிடும். + +மழைக்காலத்தில் ஆற்றின் ஆழம் சராசரியாக 40 அடியாகும். + +முதன்மை ஆறு தோராயமாக ஒன்று முதல் ஆறு மைல் அகலம் உடையது. பெரிய கடலில் செல்லும் கலங்கள் இதில் மனவுஸ் வரை செல்லலாம். சிறிய 3000 டன் அல்லது 9000 டன் எடையுடைய கலங்கள் மற்றும் கலத்தின் கீழ் பாகம் நீர் நிலையிலிருந்து 18 அடி வரை இருந்தால் அவை ஆற்றில் 3600 கிமீ வரை செல்லலாம். + +இதன் கழிமுகத்தின் அகலம் தொடர்பாக நிபுணர்களிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது அதற்கு காரணம் கழிமுகத்தின் புவியியல் அமைப்பாகும். பாரா ஆறு அமேசானுடன் சேர்த்து கணக்கிடப்படுகிறது. சில முறை பாரா ஆறு டோகன்டின்ஸ் (Tocantins) ஆற்றின் தனிப்பட்ட கீழ் பகுதியாக கணக்கிடப்படுகிறது., தனிப்பட்ட பாரா ஆற்றின் கழிமுகம் பெரியதாகும். பாரா மற்றும் அமேசான் ஆறுகள் பல்வேறு ஆற்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இடையி��் மரஜா (Marajó)தீவு அமைந்துள்ளது. இதன் பரப்பளவு சுவிட்சர்லாந்து நாட்டு அளவுக்கு பெரியதாகும். + +உலகின் உயிரினங்களில் மூன்றில் ஒரு பங்கு அமேசான் காடுகளில் வசிக்கின்றன. அமேசான் ஆற்றுப்படுகையும் மழைக்காடுகளும் 5.4 மில்லியன் சதுர கி.மீ (2.1 மில்லியன் சதுர மைல்) க்கும் மேலானதாகும். அமேசான் ஆற்றில் 3,000 க்கும் அதிகமான மீன் வகைகள் கண்டறியப்பட்டுள்ளது. + +அமேசான் ஆற்று டால்பின் அமேசான் மற்றும் ஒரினோகோ ஆற்றுப் பகுதியில் வசிக்கிறது. இதுவே ஆற்று டால்பின் வகைகளில் மிகப்பெரியதாகும். இது ௦௦ அடி வரை வளரக்கூடியது. + +இங்கு அதிகளவில் பிரன்கா என்ற மீன் வகை காணப்படுகிறது. இவை கூட்டமாக வாழும். இவை மாடு, மான் போன்ற உயிரினங்களை தாக்ககூடியவை. மனிதர்களும் தாக்கப்பட்டுள்ளார்கள். எனினும் சில வகை பிரன்காக்களை மனிதர்களை தாக்குகின்றன. குறிப்பாக சிவப்பு வயிற்று பிரான்கா மனிதரை தாக்கும் வகையாகும். + +அனகோண்டா வகை பாம்புகள் அமேசான் படுகையின் கரையில் காணப்படுகிறது. இது பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் நீரிலேயே வாழ்கின்றன. இதன் மூக்கு பகுதி மட்டும் நீர் மட்டத்துக்கு வெளியே இருக்கும். + +"முதன்மைக் கட்டுரை: அமேசான் மழைக்காடு" + +அண்டெஸ் மலைத்தொடரின் கிழக்கில் இருந்து அமேசான் மழைக்காடு தொடங்குகிறது. இதுவே உலகின் மிகப்பெரிய மழைக்காடும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும். இது உலகில் வெளியடப்படும் கார்பன்-டை-ஆக்சைடு வளியை பெருமளவில் உட்கொள்ளும் திறன் வாய்ந்தது. இந்த மழைக்காடுகளைக் காப்பது இந்நாட்களில் முக்கிய விடயமாக இருக்கிறது. + +மிகவும் ஈரப்பதம் கொண்ட அமேசான் படுகை இம்மழைக்காடுகளுக்கு அரணாக விளங்குகிறது. இப்பகுதியில் அமேசான் ஆறும் இதன் நூற்றுக்கணக்கான துணையாறுகளும் மிகவும் மெதுவாக ஓடி பின் கடலில் கலக்கின்றன. + +உயிரியல் வளம் மிக்க இம்மழைக்காடு, 25 இலட்சம் வகையான பூச்சியினங்களுக்கும் ஆயிரக்கணக்கான தாவர வகைகளுக்கும் ஏறத்தாழ இரண்டாயிரம் பறவைகள், பாலூட்டிகள் ஆகியவற்றிற்கும் இருப்பிடமாக விளங்குகிறது. உலகின் மொத்தப் பறவையினங்களில் ஐந்தில் ஒரு பகுதி இக்காடுகளில் வசிக்கின்றன. அமேசான் காடுகள் பெரும்பாலும் பிரேசில் நாட்டில் அமைந்துள்ளதால், அந்நாடு உல்கிலே உருசியாவிற்கு அடுத்த இரண்��ாவது பெரிய காடு வளத்தை (பரப்பளவில் 4,776,980 ச.கி.மீகள்)கொண்டதாக உள்ளது. + + + + +மகாவலி ஆறு + +மகாவலி ஆறு அல்லது மகாவலி கங்கை இலங்கையில் உள்ள ஆறாகும். இது பீதுறுதாலகால +] இருந்து ஊற்றெடுத்து திருகோணமலையில் கடலில் சேர்கின்றது இது இலங்கையின் மிக நீளமான ஆறாகும், மேலும் நீரோட்டத்தின் படி முதலாவது பெரிய ஆறும் ஆகும். இந்த ஆற்று நீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நீர்மின் உற்பத்தியும் பெருமளவில் நடைபெறுகிறது. சுமார் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலம் இவ்வாற்று நீரின் மூலம் பயிரிடப்படுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.மகாவலி கங்கை என்பது சிங்கள மொழியில் மணற்பாங்கான பெரும் ஆறு எனப் பொருள் தரும்.இதன் நீரேந்துப்பகுதியில் சராசரியாக ஆண்டுக்கு 22282 மில்லியன் கனமீட்டர் மழை பெய்கிறது, இதில் சுமார் 40 சதவீதமான நீர் கடலை அடைவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு 10237 சது.கி.மீ. சதுர கிலோமீட்டர் நீரேந்துப்பகுதியைக் கொண்டுள்ளதோடு இது இலங்கையின் முதலாவது பெரிய நீரேந்துப் பகுதியாகும். + +இலங்கையின் முக்கிய நீர்மின் திட்டங்கள் மகாவலியை மறித்துக் கட்டப்பட்ட அணைகள் மூலமே செயற்படுத்தப்படுகின்றன. இவற்றில் முக்கிய நீர்மின் திட்டங்கள்: + +இவற்றுக்கு மேலதிகமாக பல நீர்பாசனத் திட்டங்களும் அவ்வாற்றில் அமைக்கப்பட்டுள்ளன: + + + + + +டெசி- + +டெசி (சின்னம் d) எஸ்.ஐ முறைமை அலகுகளில் 10 (1/10) அளவுடைய காரணியை குறிக்கக்கூடிய எஸ்.ஐ முன்னொட்டு ஆகும். "பத்தாவது (10ஆவது)" எனப் பொருள் தரும் "decimus" என்ற இலத்தீன சொல்லில் இருந்து உருவான இச்சொல், 1795ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. + + + + + +துறைமுகம் + +துறைமுகம் ("port") என்பது கப்பல்கள் மற்றும் படகுகள் வந்து தங்கி செல்வதற்குரிய இடம் ஆகும். இங்கே கப்பல்களுக்கு வேண்டிய பொருட்கள், தொழிலாளருக்கு இருப்பிடம் போன்றன வழங்கப்படும். துறைமுகங்களை இயற்கைத் துறைமுகங்கள், செயற்கைத் துறைமுகங்கள் என இருவகைப்படுத்தலாம். இயற்கைத் துறைமுகங்கள் இராணுவ, பொருளாதாரக் காரணங்களால் முக்கியத்துவமுடையவையாக இருந்து வருகின்றன. துறைமுகங்கள் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பறைசாற்றும் முக்கிய அம்சமாக உள்ளது. இது மிகப் பெரும் சரக்குகள், பொருட்களை ஒரு நாட்டில் இருந்து மற்ற நாடுகளுக்கு கடல்வழிப் போக்குவரத்தின் மூலம் எடுத்துச் செல்ல உதவுகின்றன. + + + + + +நிலைமாற்று பொருளாதாரம் + +நிலைமாற்று பொருளாதாரம் ("switching economy") எனப்படுவது சமவுடமை நாடுகள் அண்மைக்காலமாக தங்கள் மத்திய திட்டமிடல் பொருளாதாரத்தை கைவிட்டு முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு மாற்றம் பெறும் செயற்பாடாகும். + +இதற்கு காரணமாக அமைவது திட்டமிடல், உற்பத்தி திறன், விலை, பொருளாதார வளர்ச்சி என்பவற்றால் இந்நாடுகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளாகும். + +நிலைமாறிக் கொண்டிருக்கும் சில நாடுகள்: + + + + + +லூதியானா + +லூதியானா இந்திய நட்டிலுள்ள பஞ்சாப் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாகும். இந்நகரம் சட்லெஜ் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது வட இந்தியாவில் ஒரு முக்கியமான தொழில் மையமாகும். + + + + +எரிமலை + +எரிமலை ("Volcano") என்பது புவியின் உட்புறத்திலுள்ள சூடான கற்குழம்பு, சாம்பல் வளிமங்கள் போன்றவை வெளியேறத்தக்க வகையில் புவி மேலோட்டில் உள்ள துவாரம் அல்லது வெடிப்பு ஆகும். மலைகள் அல்லது மலைகள் போன்ற அம்சங்களை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கும் மேலாக உருவாக்கும் விதமாக பாறைகளை வெளித்தள்ளும் நிகழ்வோடு எரிமலை நடவடிக்கை தொடர்புள்ளது. "வால்கனோ" ("volcano") என்ற சொல் இத்தாலிய மொழியிலிருந்து பெறப்பட்ட ரோமானியர்களின் நெருப்புக் கடவுளான வால்கன் என்னும் பெயரிலிருந்து பெற்றதாகும்.. + +பொதுவாக டெக்டோனிக் அடுக்குகள் விலகுகின்ற அல்லது நெருங்குகின்ற இடங்களில் எரிமலைகள் காணப்படுகின்றன. ஒரு மத்திய-கடல் மலைமுகடு, உதாரணத்திற்கு மத்திய அட்லாண்டிக் மலைமுகடு, டெக்டோனிக் அடுக்குகள் விலகிச் செல்வதால் ஏற்பட்ட எரிமலைகளுக்கு சான்றுகளாக உள்ளன; பசிபிக் நெருப்பு வட்டம் டெக்டோனிக் அடுக்குகள் நெருங்கிவந்து ஒன்று சேர்ந்ததற்கான சான்றுகளாக உள்ளன. முரண்பாடாக, டெக்டோனிக் அடுக்குகள் ஒன்றின் மேல் ஒன்று சாய்ந்திருக்கும் நிலையில் வழக்கமாக எரிமலைகள் உருவாவதில்லை. பூமி ஓடு நீண்டுசெல்கின்ற அல்லது மெலிதடைகின்ற இடங்களிலும் எரிமலைகள் உருவாகின்றன ("இது வெப்பப் பகுதி அல்லாத இண்ட்ராபிளேட் எரிமலை நிகழ்வு" எனப்படுகிறது), அவை ஆப்ரிக்க ரிஃப்ட் பள்ளத்தாக்கில் உள்ள "வெல்ஸ்-கிரே கிளியர்வாட்டர் எரிமலைப் பகுதி", வட அமெரிக்காவில் உள்ள ரியோ கிராண்ட் ரிஃப்ட் மற்றும் ஐரோப்பாவில் ஈஃபிள் எரிமலைகளுடன் உள்ள ரைன் கிரெபன் ஆகிய பகுதிகளில் உள்ளன. + +வெப்பப்பாறைகள் மேல்நோக்கி வருவதாலும் எரிமலைகள் உருவாகின்றன. இத்தகைய வெப்பப்பகுதிகள் எனப்படுபவை, உதாரணத்திற்கு ஹவாயில் உள்ளவை, அடுக்கு எல்லையின் அப்பாலிருந்து உருவாகக்கூடியவை. வெப்பப்பகுதி எரிமலைகள் சூரியமண்டலத்தில் உள்ள அனைத்திலும் காணப்படுகின்றன, குறிப்பாக பாறை கிரகங்கள் மற்றும் நிலவுகளில் இது காணப்படுகிறது. + +மத்திய-கடல் முகடுகளில் இரண்டு டெக்டோனிக் அடுக்குகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகுகின்றன. வெப்பமான உருகிய பாறையால் ஏற்படுகின்ற புதிய கடல் மேல்புறப்பகுதி மெதுவாக குளிர்ந்து கெட்டிப்படுகிறது. டெக்டோனிக் அடுக்குகள் இழுப்பதன் காரணமாக மத்திய-கடல் முகடுகளில் உள்ள மேல்அடுக்கு மிகவும் மெலிதாக இருக்கிறது. மேல்அடுக்கு மெலிதாக இருக்கும் காரணமாக, வெளிப்படும் அழுத்தம் வெப்பநிலை மாறாத நீட்டிப்பிற்கு வழிவகுக்கிறது, மெல்லிய அடுக்கின் ஒரு பகுதி உருகுவது எரிமலை நிகழ்விற்கும் புதிய கடல் மேல்அடுக்கு உருவாவதற்கும் காரணமாகிறது. +பெரும்பாலான விலகல் அடுக்கு எல்லைகள் கடலின் அடிப்பகுதியில் இருக்கின்றன, எனவே பெரும்பாலான எரிமலை நிகழ்வுகளும் கடலுக்கு கீழ்ப்புறம், புதிய கடல்தளத்தை உருவாக்குவதாக இருக்கின்றன. அதிவெப்ப துளைகள் அல்லது ஆழ்கடல் துளைகள் என்பவை இவ்வகையான எரிமலை நிகழ்விற்கான உதாரணமாகும். மத்திய-கடல் முகடு கடல்மட்டத்திற்கு மேல்பகுதியில் இருக்குமிடத்தில் எரிமலைத் தீவுகள் உருவாகின்றன, உதாரணம்: ஐஸ்லாந்து. + +ஒன்றின்மேல் ஒன்றுள்ள அடுக்குகள் என்பவை இரண்டு அடுக்குகள், வழக்கமாக கடல் அடுக்கு மற்றும் கண்டத்துக்குரிய அடுக்குகள் மோதிக்கொள்ளும் இடங்களாகும். இந்த நிகழ்வில், கடல் அடுக்கு ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்படுவது அல்லது கண்டத்துக்குரிய அடுக்கிற்கு கீழே ஒன்றோடு ஒன்று கலந்துவிடுவதால் கடற்கரைக்கு அருகாமையில் ஆழ்கடல் அகழி ஒன்றை உருவாக்கிவிடுகின்றன. + +ஒன்றின்மேல் ஒன்றுள்ள அடுக்கால் வெளியேற்றப்படும் தண்ணீர் மேல்பகுதியில் இருக்கும் மெல்���ிய குறுக்கு அடுக்கின் உருகும் வெப்பநிலையைக் குறைத்து கற்குழம்புகளை (மாக்மா) உருவாக்குகிறது. +இந்த கற்குழம்பானது அதனுடைய உச்ச அளவு சிலிக்கான் காரணமாக தொடர்ந்து மிகவும் பி்சுபிசுப்பாகவே இருப்பதால் மேல்பகுதியை எட்டாமலும் அடிப்பகுதியை குளிர்விக்காமலும் இருந்துவிடுகிறது. இது மேல்பகுதியை எட்டும்போது எரிமலையாக உருவாக்கப்படுகிறது. + +இந்தவகையான எரிமலைக்கு எட்னா எரிமலை மற்றும் பசிபிக் நெருப்பு வளையத்தில் உள்ள எரிமலைகள் ஏற்ற உதாரணங்களாகும். + +வழக்கமாக வெப்பப் பகுதிகள் டெக்டோனிக் அடுக்குகளில் காணப்படுவதில்லை, ஆனால், பூமியின் இதர பகுதிகளைவிட மெலிதாகும் விதமாக மேல்அடுக்குப் பகுதியை எட்டும்வரை பூமியின் மெல்லிய அடுக்கினுடைய வெப்பச் சலனம் உருவாக்குகின்ற ஒரு வெப்பமான தூண் மேல்நோக்கி வரும் இடத்தில் காணப்படுகிறது. + +மேல்நோக்கி வரும் பாறைகள் மேல்ஓடு உருகுவதற்கு காரணமாக இருப்பதோடு மாக்மா வெளியேறும் துவாரங்களையும் ஏற்படுத்துகின்றன. + +டெக்டோனிக் அடுக்குகள் நகரும்போது மேல்நோக்கி வரும் பாறைகள் அதே இடத்தில் இருக்கும் நிலையில், அதன்பிறகு ஒவ்வொரு எரிமலையும் அப்படியே இருந்துவிடுகிறது, பின்னர் வெப்பப் பகுதிக்கு மேலாக அந்த அடுக்கு நகர நகர புதிய எரிமலை உருவாகிறது. + +இவ் வகையிலேயே ஹவாய் தீவுகள் உருவானதாக கருதப்படுகிறது, அதேபோல் தற்போது யெல்லோஸ்டோன் கால்டிராவுடன் உள்ள பாம்பு ஆற்றுப்படுக்கை வெப்பப் பகுதிக்கு மேல்புறமாக உள்ள தென் அமெரிக்க அடுக்கின் பகுதியாக உள்ளது. + +எரிமலைகள் பொதுவாக கூம்புவடிவமுள்ள மலையாகவும், அதனுடைய சிகரத்திலுள்ள எரிமலை வாயிலிலிருந்து எரிமலைக்குழம்பு மற்றும் நச்சு வாயுக்களை உமிழ்வதாகவும் அறியப்படுகிறது. பலவகை எரிமலைகளுள் ஒன்றினை இது விவரிக்கிறது, எரிமலையின் அம்சங்கள் இன்னும் மிகச் சிக்கலானதாக இருக்கிறது. எரிமலைகளினுடைய அமைப்பும் செயல்பாடும் பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கின்றன. சில எரிமலைகள் சிகர எரிமலை வாயிலைவிட எரிமலைக்குழம்பு குவிமாடத்தினால் உருவாக்கப்பட்ட படுக்கைவடிவ உச்சியைக் கொண்டதாக அமைந்துள்ளன, அதேசமயம் மற்றவை பரந்த பீடபூமி போன்ற நிலவெளி அம்சங்களைக் கொண்டுள்ளவையாக இருக்கின்றன. எரிமலை பொருட்களை (எரிமலைக்குழம்பு, இது மேல்தளத்தைய��ம், சாம்பலையும் விட்டு விலகிவிடுவதால் மாக்மா எனப்படுகிறது) மற்றும் வாயுக்கள் (முக்கியமாக நீராவி மற்றும் காந்தப்புல வாயுக்கள்) வெளியிடுகின்ற துளைகள் நிலவடிமெங்கும் காணப்படுகின்றன. இத்தகைய பல துளைகள், ஹவாயின் கேலாயினுடைய பக்கவாட்டில் உள்ள புயுஓஒ போன்ற சிறிய கூம்புகள் உருவாவதற்கு வழிச் செய்கின்றன. + +கிரையோ எரிமலைகள் (அல்லது ஐஸ் எரிமலைகள்), குறி்ப்பாக ஜூபிடர் சனி மற்றும் நெப்டியூன் கிரகங்களின் நிலவுகளில் உள்ளவை; மற்றும் புதைசேற்று எரிமலைகள் ஆகியவை பிற எரிமலை வகைகளாகும், இவற்றின் உருவாக்கம் தெரியவராத காந்தப்புல செயல்பாட்டோடு சமப்ந்தப்பட்டவையாகவே உள்ளன. புதைசேற்று எரிமலை உண்மையில் நெருப்புள்ள எரிமலையின் துவாரமாக இருப்பது தவிர்த்து, உமிழும் புதைசேற்று எரிமலைகள் நெருப்புள்ள எரிமலைகளின் வெப்பநிலைகளைவிட குறைவானதாகவே உள்ளன. + +எரிமலைக்குரிய பிளவுற்ற துளைகள் என்பது தட்டையான, நேர்க்கோட்டு வெடிப்புகளாகும் இவற்றின்மூலம் எரிமலைக்குழம்பு வெளியேறுகிறது + +கவச எரிமலைகள், பரந்த கவசம் போன்ற அம்சங்களுக்காக இவ்வாறு பெயரிடப்பட்டுள்ள இவை, துளையிலிருந்து வெகு தூரத்திற்கு ஓடக்கூடிய குறைவான-பிசுபிசுப்புத் தன்மையுள்ள எரிமலைக்குழம்பினால் உருவாகின்றன. ஆனால் பொதுவாக இவை பயங்கரமான முறையில் வெடிப்பதில்லை. குறைவான பிசுபிசுப்புத் தன்மையுள்ள சிலிக்கானை குறைவான அளவில் பெற்றுள்ளதால், கவச எரிமலைகள் கண்ட அமைப்புளைவிட கடல் அமைப்புகளில் பெரும்பாலும் பரவலாக காணப்படுகின்றன. ஹவாய் எரிமலை தொடர் என்பது கவச கூம்புகளின் வரிசை என்பதோடு அவை ஐசுலாந்தில் பரவலாக இருக்கின்றன. + +எரிமலைக்குழம்பு குவிமாடங்கள் அதிக பிசுபிசுப்புள்ள எரிமலைக்குழம்பு மெதுவாக உமிழப்படுவதால் உருவாகின்றன. இவை சிலநேரங்களில் முந்தைய எரிமலை உமிழ்வினால் உருவான எரிமலை வாயிளுக்குள்ளாக உருவாகின்றன (மவுண்ட் செயிண்ட் ஹெலனில் உள்ளதுபோல்), ஆனால் லாஸன் சிகரத்தில் உள்ளதுபோல் தனி்த்தும் உருவாகக்கூடியதாக இருக்கிறது. ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டுள்ள எரிமலைகளைப்போல், அவை மோசமான, எரிமலை வெடிப்பை உண்டாக்கக்கூடியவை, ஆனால் சாதாரணமாக அவற்றின் எரிமலைக்குழம்புகள் அவை உருவான துளையிலிருந்து வெகுதூரத்திற்கு ஓடுவதில்லை. + +எரிமலைக் க��ம்புகள் அல்லது தழல் கூம்புகள் எனப்படுபவை, துளையைச் சுற்றி உருவாகியுள்ள ஸ்கோரியா மற்றும் பைரோகிளாஸ்டிக்ஸ் (இவை இரண்டும் எரிமலை வகைகள் என்பதால் தழல்களை ஒத்திருக்கின்றன) ஆகியவற்றின் மிகச்சிறிய துண்டுகள் உமிழப்படுவதன் காரணமாக உருவாகின்றன. 30 முதல் 400 மீட்டர்கள் வரையிலான கூம்பு வடிவ மலையை உருவாக்கக்கூடிய இவை குறுகிய காலமே நீடிக்கக்கூடியவை. பெரும்பாலான தழல் கூம்புகள் ஒரேயொரு முறை மட்டுமே உமிழும். தழல் கூம்புகள் பெரிய எரிமலைகளில் பக்கவாட்டு துவாரங்களாக உருவாகலாம் அல்லது அவற்றின் மீதே உருவாகலாம். மெக்சிகோவிலுள்ள பரீகுட்டீன் மற்றும் அரிஸோனாவிலுள்ள சன்செட் கிரேட்டர் ஆகியவை தழல் கூம்புகளுக்கான உதாரணங்களாகும். + +நியூ மெக்சிகோவிலுள்ள, கயா டெல் ரியோ 60 தழல் கூம்புகளுக்கும் அதிகமாக உள்ள எரிமலைப் பகுதியாகும். + +சுழல்வடிவ எரிமலைகள் அல்லது கலப்பு எரிமலைகள் என்பது எரிமலைக்குழம்பு வெளியேற்றமும், மாற்று அடுக்குகளில் உள்ள பிற உமிழ்வுகளும் கலந்த உயரமான கூம்புவடிவ மலைகளாகும், இதற்கு ஸ்ட்ராட்டா(strata) என்று பெயரிடப்பட்டுள்ளது. கலப்பு எரிமலைகள் என்றும் அறியப்படும் சுழல்வடிவ எரிமலைகள், வெவ்வேறுவிதமான உமிழ்வுகளின்போது பல்வேறு அமைப்புகளிலிருந்து உருவாகின்றன. சுழல்வடிவ/கலப்பு எரிமலைகள் தழல்கள், சாம்பல் மற்றும் எரிமலைக்குழம்பினால் உருவானவை. தழல்களும் சாம்பலும் உச்சியில் ஒன்றின்மேல் ஒன்று குவிகின்றன, அவை குளிர்ந்து கெட்டிப்படுகின்ற இடத்தில், எரிமலைக்குழம்பு சாம்பலுக்கு மேல் வழிகிறது, பின்னர் இந்த நிகழ்முறை மீண்டும் தொடங்குகிறது. ஜப்பானிலுள்ள மவுண்ட்.ஃபுயி, ஃபிலடெல்பியாவிலுள்ள மவுண்ட் மயன், மற்றும் இத்தாலியிலுள்ள மவுண்ட் வெசுவியஸ் மற்றும் ஸ்ட்ரோம்போலி ஆகியவை முதல்தர உதாரணங்களாகும். + +பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில், சுழல்வடிவ எரிமலைகளால் ஏற்பட்ட உமிழ்வுகள் நாகரிகங்களிடத்தில் பேரளவு அபாயத்தை விளைவித்துள்ளன. + +ராட்சத எரிமலை என்பது பெரிய அளவிலான கால்டிராவைக் கொண்டிருப்பவை என்பதோடு, பெரிய அளவில், சில நேரங்களில் கண்டங்கள் அளவுக்கு சூறையாடக்கூடிய திறனுள்ளவை. +மிகப்பெரும் அளவில் சல்ஃபர் மற்றும் சாம்பலை உமிழக்கூடியது என்பதால் இதுபோன்ற உமிழ்வுகள் அதன்பிறகு உலக அளவிலான வெப்பநிலையை தீவிரமாக குளிரச்செய்யும் திறனுள்ளவை. +இவை மிக அபாயகரமான எரிமலை வகைகளாகும். யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள யெல்லோஸ்டோன் கால்டிரா, நியூ மெக்சிகோவிலுள்ள வால்ஸ் கால்டிரா (இரண்டும் மேற்கத்திய ஐக்கிய நாடுகள்), நியூசிலாந்தில் உள்ள டாபோ ஏரி மற்றும் இந்தோனேஷியா சுமத்ராவில் உள்ள டோபா ஏரி ஆகியவை இதற்கான உதாரணங்களாகும். சூப்பர் எரிமலைகள் எண்ணிலடங்கா பகுதிகளை ஆக்கிரமித்துவிடுவதால் பல நூற்றாண்டுகள் கழித்து அவற்றை அடையாளம் காண்பது சிரமம். +பெரிய அளவிலான நெருப்புப் பிரதேசங்களும் சூப்பர் எரிமலைகளாக கருதப்படுகின்றன, ஏனென்றால் இவை பெருமளவிற்கு கருங்கல் குழம்பை வெளியிடக்கூடியவையாக இருக்கன்றன, ஆனால் இவை வெடிக்கக்கூடியவையாக இருப்பதில்லை. + +ஆழ்கடல் எரிமலைகள் கடல்தளத்தில் உள்ள பொதுவான அம்சங்களாகும். சில உமிழ்கின்றவையாக, ஆழமில்லாத தண்ணீரி்ல் கடல்மட்டத்திற்கு வெளியே நீராவியையும், பாறைத் துகள்களையும் வெளியிட்டு தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளும். அதிக ஆழத்தில் இருக்கின்ற மற்ற பலவற்றிற்கும் மேலுள்ள தண்ணீரின் எடை காரணமாக நீராவி மற்றும் வாயுக்கள் வெடித்துச் சிதறுவது தடுக்கப்படுகிறது, இருப்பினும் அவற்றின் எரிமலை வாயுக்கள் காரணமாக ஒலியலைக் கருவிகள் மற்றும் தண்ணீரை நிறம் மாற்றம் மூலம் கண்டுபிடித்துவிட முடியும். படிகக்கல் தொகுதிகளும் ஏற்படலாம். + +பெரிய அளவிலான ஆழ்கடல் உமிழ்வுகள்கூட கடல் மேல்தளத்தை பாதிக்காமல் இருக்கலாம். காற்றோடு ஒப்பிடுகையில் தண்ணீர் விரைவாக குளிர்ச்சியடைவது மற்றும் மிதக்கும்தன்மை அதிகரிப்பதன் காரணமாக, ஆழ்கடல் எரிமலைகள், மேல்தள எரிமலைகளோடு ஒப்பிடும்போது அவற்றின் எரிமலை துவாரங்களின் மீது செங்குத்தான தூண்களை உருவாக்குகின்றன எனலாம். அவை கடல் மேல்தளத்தைப் பிளந்து புதிய தீவுகளை உருவாக்குமளவிற்கு மிகப்பெரியதாக மாற்றமடையலாம். பருமனான எரிமலைக்குழம்பு ஆழ்கடல் எரிமலைகளின் பொதுவான உமிழ்வு உருவாக்கமாகும். + +உயர்வெப்ப துளைகள் இந்த எரிமலைகளுக்கு அருகாமையில் பொதுவாக காணப்படக்கூடியவை மேலும் இவற்றில் சில கரைந்துருகும் கனிமப்பொருளைச் சார்ந்து சில தனிச்சிறப்பான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு உதவுகின்றன. + +உறைபனி கீழுள்ள எரிமலைகள் உறைபனிக் கட்டிகளுக்க��� கீழே உருவாகின்றன. அவை உச்சியிலிருந்து ஓடும் விரிந்த பருமனான எரிமலைக்குழம்பு மற்றும் பலோகனைட்டினால் உருவாகின்றன. + +உறைபனிக்கட்டி உருகும்போது, உச்சியிலுள்ள எரிமலைக்குழம்பு குலைவுற்று தட்டையான உச்சிப்பகுதியுள்ள மலையை வி்ட்டுச்செல்கிறது. பின்னர், பருமனான எரிமலைக்குழம்பும் குலைந்து 37.5 டிகிரி கோணத்தைக் காட்டுகிறது. இந்த எரிமலைகள் டேபிள் மலைகள், டுயாக்கள் அல்லது (வழக்கத்திற்கு மாறாக) மொபர்க் என்றும் அழைக்கப்படுகின்றன. இவ் வகையான எரிமலைக்கான மிகச்சிறந்த உதாரணத்தை ஐசுலாந்தில் காணமுடியும், இருப்பினும், பிரிட்டிஷ் கொலம்பியாவிலும் டுயாக்கள் இருக்கின்றன. இந்தச் சொல்லின் மூலவேர், டுயா ஆற்றின் பகுதியில் உள்ள சில டுயாக்களின் காரணமாகவும், வட பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள டுயா பிரதேசத்தின் காரணமாகவும் டுயா பியூட்டிலிருந்து வந்துள்ளது. டுயா பியூட்தான் முதலாவதாக பகுப்பாய்வு செய்யப்பட்ட நிலவமைப்ப், எனவேதான் அதன் பெயர் இவ் வகையான எரிமலை அமைப்புக்கான புவியியல் இலக்கியத்தில் பதிவுசெய்யப்பட்டது. டுயா மலைகள் மாகாண பூங்காவானது, டுயா ஏரியின் வடக்குப் பகுதியிலும், யுகோன் பகுதி எல்லைக்கு அருகாமையில் உள்ள ஜென்னிங்ஸ் ஆற்றின் அருகாமையிலும் அமைந்துள்ள இதன் வழக்கத்திற்கு மாறான நிலவெளியை பாதுகாக்கும் விதமாக நிறுவப்பட்டுள்ளது. + +புதைசேற்று எரிமலைகள் அல்லது புதைசேற்று குவிமாடங்கள் என்பவை புவிக் கழிவு நீர்மங்கள் மற்றும் வாயுக்களின் உருவாக்கமாகும், இருப்பினும் இதுபோன்ற செயல்பாட்டிற்கு காரணமாக இருக்கக்கூடிய வேறுசில நிகழ்முறைகளும் இருக்கின்றன. 10 கிலோமீட்டர் சுற்றளவிற்கும் 700 மீட்டர் உயரத்திற்கும் உள்ளவை மிகப்பெரிய அமைப்புக்களாகும். + +எரிமலைகளை வகைப்படுத்துவதற்கான மற்றொரு முறை "உமிழ்ந்த மூலப்பொருள்களின் கலவை"யின் (எரிமலைக்குழம்பு) மூலமாகும், ஏனெனில் இது எரிமலையின் வடிவத்தை மாற்றியமைக்கிறது. +எரிமலைக்குழம்பை நான்கு வெவ்வேறு வகை கலவைகளாக விரிவாக பிரிக்கலாம் (காஸ் & ரைட், 1987): +உமிழப்பட்ட எரிமலைக்குழம்பு அதிக விகிதத்தில் (>63%) சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு ஃபெல்சிக் எனப்படுகிறது. +ஃபெல்சிக் எரிமலைக்குழம்புகள் (டேசைட் அல்லது ரையோலைட்கள்) அதிக பிசுபிசுப்புத்த��்மை உள்ளவையாக இருக்கின்றன (மிகுந்த நீர்மமாக அல்லாமல்) குவிமாடங்களாகவோ அல்லது குறுகிய, தடித்த ஓட்டங்களாகவோ உமிழப்படுகின்றன. பிசுபிசுப்புள்ள எரிமலைக்குழம்பு சுழல்வடிவ எரிமலைகளையோ அல்லது எரிமலைக்குழம்பு குவிமாடங்களையோ உருவாக்குவனவாக இருக்கின்றன. கலிபோர்னியாவிலுள்ள லாஸன் சிகரம் ஃபெல்சிக் எரிமலைக்குழம்பிலிருந்து உருவானதற்கான ஒரு உதாரணமாகும், இது உண்மையிலேயே ஒரு பெரிய குவிமாடமாகும். +சிலிக்கான் உள்ள மாக்மாக்கள் மிகவும் பிசுபிசுப்பாக இருப்பதால், அச்சமயத்தில் இருக்கின்ற ஆவியாதலை படிகமாக மாற்றக்கூடியவையாக இருக்கின்றன, அவை மாக்மா பயங்கரமாக வெடிப்பதற்கும், முடிவில் சுழல்வடிவ எரிமலைகளை உருவாக்குவதற்கும் காரணமாகின்றன. +பைரோகிளாஸ்டிக் ஓட்ட இக்னிம்பிரைட்கள் இத்தகைய எரிமலைகளின் அதிக அபாயமுள்ள உருவாக்கங்களாகும், இவை உருகிய எரிமலைச் சாம்பலின் கலவை என்பதால் காற்றுமண்டலத்திற்குள் செல்ல மிக கனமானவையாக இருக்கிறது, இதனால் அவை எரிமலையின் சரிவுகளை தழுவியபடி பெரிய உமிழ்வுகளின்போது அவற்றின் துளைகளிலிருந்து வெகுதொலைவிற்கு பயணிக்கின்றன. + +1,200 °Cக்கும் அதிகமாக உள்ள வெப்பநிலை பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தில் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது, அது அதன் தடத்திலுள்ள அனைத்தையும் எரித்து சாம்பலாக்குவதோடு சேகாரமாகியிருக்கும் வெப்பமான பைரோகிளாஸ்டிக் ஓட்டத்தின் அடுக்குகளை பல மீட்டர்களுக்கு கெட்டியாக்குகிறது. அலாஸ்காவின் பத்தாயிரம் புகைபோக்கிகள் உள்ள பள்ளத்தாக்கு, 1912 ஆம் ஆண்டில் காத்மைக்கு அருகாமையில் உள்ள நோவாரப்தாவின் உமிழ்வால் உருவானது, இது கெட்டியான பைரோகிளாஸ்டிக் ஓட்டம் அல்லது இக்னிம்பிரைட் சேகாரத்தின் உதாரணமாகும். போதுமான அளவிற்கு லேசானதாக உள்ள எரிமலைச் சாம்பல் பூமியின் காற்றுமண்டலத்திற்குள் உயர சென்று உமிழப்படுவது பல கிலோமீட்டர்களுக்கு பயணித்து சாம்பல்பாறையாக தரையில் விழுகிறது. +உமிழப்பட்ட மாக்மா 52–63% சிலிக்காவைக் கொண்டிருந்தால், அந்த எரிமலைக்குழம்பு "இடைநிலை" கலவை எனப்படுகிறது. +இத்தகைய "ஆண்டெசிடிக்" எரிமலைகள் சாதாரணமாக ஒன்றின்மேல் ஒன்று அடுக்கப்பட்டுள்ள பகுதிக்கு மேல் மட்டுமே ஏற்படுகின்றன (எ.கா: இந்தோனேஷியாவில் உள்ள மவுண்ட் மெராபி). +உமிழப்பட்ட மாக்மா 52% குறைவாக மற்றும் 45% க்கு கூடுதலாக சிலிக்காவைக் கொண்டிருந்தால் அந்த எரிமலைக்குழம்பு மாஃபிக் எனப்படுகிறது (ஏனெனில் இது அதிக அளவிலான மாக்னீசியத்தைக் கொண்டுள்ளது(Mg)) மற்றும் இரும்பு (Fe) அல்லது கருங்கல் வகை. இந்த எரிமலைக்குழம்புகள் சாதாரணமாக ரையோலிட்டிக் எரிமலைக்குழம்பைவிட மிகக்குறைந்த பிசுபிசுப்புத் தன்மையுடனே இருக்கும், அவற்றின் உமிழ்வு வெப்பநிலையைப் பொறுத்து ஃபெல்சி்க் எரிமலைக் குழம்புகளைவிட வெப்பமாகவும் இருக்கும். பரந்த அளவிலான அமைப்புக்களில் மாஃபிக் எரிமலைக் குழம்புகள் ஏற்படுகின்றன. +இரண்டு கடல் அடுக்கு தனி்த்தனி துண்டுகளாக பிரியும் மத்திய கடல் முகட்டில் அந்த இடைவெளியை நிரப்ப பஸால்டிக் எரிமலைக் குழம்பு பெருத்த துண்டுகளாக உமிழப்படுகிறது; +கடல் மற்றும் கண்ட மேல்ஓடு ஆகிய இரண்டிலும் உள்ள கவச எரிமலைகளில் (எ.கா: மானா லோவா மற்றும் கிலாயூ உள்ளிட்ட ஹவாய் தீவுகள்). +கண்ட கருங்கல் வெள்ளமாக உள்ள இடத்தில். +சில உமிழப்பட்ட மாக்மாக்கள் <=45% சிலிக்காவைக் கொண்டிருப்பதோடு அல்ட்ராசல்ஃபூரிக் எரிமலைக்குழம்பையும் உருவாக்குகிறது. கொமேடியாட் என்றும் அறியப்படுகிற அல்ட்ராசல்ஃபூரிக் ஓட்டங்கள் மிகவும் அரிதானவை; உண்மையில், கிரகத்தின் வெப்ப ஓட்டம் அதிகமாக இருக்கும்போது பூமி உருவான துவக்க காலத்திலிருந்து அதன் மேற்பரப்பில் மிகச்சிலவே உமிழ்ந்துள்ளன. + +அவை வெப்பமான எரிமலைக்குழம்புகள் என்பதுடன், சாதாரணமான மாஃபிக் எரிமலைக்குழம்புகளைவிட மிகவும் நீர்மத்தன்மை வாய்ந்தவையாக இருந்திருக்கக்கூடும். + +மேல்தள கட்டமைப்பின் அடிப்படையில் இரண்டு வகையான எரிமலைக்குழம்பிற்கு பெயரிடப்பட்டுள்ளது: [19]ஆ[20] ([21]) மற்றும் பஹோய்ஹோய்([22]), இவை இரண்டும் ஹவாய் வேர்ச்சொல்லிருந்து வந்தவையாகும். [23]ஆ[24] கரடுமுரடான சாம்பல் கட்டி மேல்தள பண்புகொண்டது, இது பிசுபிசுப்பான எரிமலைக்குழம்பு ஓட்டத்திற்கு வகைமாதிரி கட்டமைப்பு. +இருப்பினும், கருங்கல் வகை அல்லது மாஃபிக் ஓட்டங்கள் [25]ஆ[26] ஓட்டங்களாக உமிழப்படலாம், குறிப்பாக உமிழப்படும் விகிதம் அதிகமாகவும், சரிவு செங்குத்தாகவும் இருந்தால் அவ்வாறு ஏற்படும். பஹோய்ஹோய் மென்மையான, கயிறுபோன்ற அல்லது சுருள் மேல்தள பண்பு கொண்டது, இது பொதுவாக அதிக நீர்மமான எரிமலைக்குழம்பு ஓட்டத்திலிருந்து உருவாகிறது. சாதாரணமாக, மாஃபிக் ஓட்டங்கள் மட்டுமே, உயர் வெப்பநிலையில் உமிழப்படுபவை அல்லது ஓடுவதற்கு பெருமளவில் நீர்மமாக இருப்பதற்கு முறையான வேதியியல் அம்சங்களைக் கொண்டுள்ளதால் பஹோய்ஹோய் ஆக உமிழப்படுகின்றன. + +மாக்மாடிக் எரிமலைகளை வகைப்படுத்துவதற்கான ஒரு பிரபலமான முறை அவற்றின் உமிழ்வுத் தொடர்ச்சியை வைத்து பிரிப்பதாகும், அவற்றில் தொடர்நது உமிழ்பவை உயிர்த்துடிப்புடையவை என்றும், வரலாற்றுக் காலங்களில் உமிழ்ந்து தற்போது அமைதியாய் இருப்பவை உறங்குபவை என்றும், வரலாற்றுக் "காலங்களிலும்" உமிழாமல் இருப்பவை அழிந்தவை என்றும் அழைக்கப்படுகின்றன. இருப்பினும், இந்தப் பிரபல வகைப்படுத்தல் - குறிப்பாக அழிந்தவை - அறிவியலாளர்களுக்கு நடைமுறையில் அர்த்தமற்றவையே. அவர்கள் மேலே குறிப்பிட்டபடி குறிப்பிட்ட எரிமலைகளின் உருவாக்கம், உமிழ்வு நிகழ்முறை மற்றும் அதன் காரணமாக ஏற்படும் வடிவங்களை வைத்தே வகைப்படுத்துகிறார்கள். + +எரிமலை ஆராய்ச்சியாளர்களிடையே "உயிர்த்துடிப்புடைய" எரிமலையை வரையறுப்பதில் ஒருமித்த கருத்து இல்லை. எரிமலையின் ஆயுட்காலம் சில மாதங்களிலிருந்து சில மில்லியன் ஆண்டுகள் வரை வேறுபடுபடுகிறது, இதுபோன்று வேறுபடுத்திப் பார்ப்பது சிலநேரங்களில் மனித இனத்தின் ஆயுள் அல்லது நாகரீகங்களோடு ஒப்பிடுகையில் அர்த்தமற்றதாகிறது. உதாரணத்திற்கு, பல எரிமலைகளும் கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் டசன் கணக்கான முறைகள் உமிழ்ந்திருக்கின்றன ஆனால் அவை தற்போது உமிழ்வதறாகான அறிகுறிகளைக் காட்டுவதி்ல்லை. இதுபோன்ற எரிமலைகளின் நீண்ட ஆயுட்காலத்தில் அவை மிகவும் செயலாற்றுவதாக இருக்கின்றன. இருப்பினும் மனித ஆயுட்காலத்தில் அவை அவ்வாறு இல்லை. + +ஒரு எரிமலை செயலாற்று வதை, வழக்கத்திற்கு மாறான பூகம்பம் அல்லது குறிப்பிடத்தகுந்த புதிய வாயு வெளியேற்றம் போன்று, தற்போது உமிழ்கிறதா அல்லது செயலற்றிருப்பதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதைக் கொண்டே வழக்கமாக அறிவியலாளர்கள் பரிசீலனை செய்கின்றனர். ஒரு எரிமலை வரலாற்றுக் காலத்தில் உமிழ்ந்திருந்தாலே அதை உயிர்த்துடிப்புடைய எரிமலையாக பல அறிவியலாளர்களும் கருதுகின்றனர். பதிவுசெய்யப்பட்ட வரலாற்றுக் கால வரையறை பிரதேசத்திற்கு பிரதேசம் மாறுபடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது முக்கியமாகும்; மெடிட்டெரேனியனில் பதிவுசெய்யப்பட்ட வரலாறு 3,000 வருடங்களை எட்டுகிறது, ஆனால் ஐக்கிய நாடுகள் மற்றும் கனடாவின் பசிபிக் வடகிழக்கு வரலாறு 300 ஆண்டுகளுக்கும் குறைவானதாக இருக்கிறது, ஹவாய் மற்றும் நியூசிலாந்தின் வரலாறு 200 ஆண்டுகளே ஆகும். +ஸ்மித்ஸோனியன் குளோபல் எரிமலை திட்டத்தின் வரையறைப்படி 10,000 ஆண்டுகளுக்குள் ஒரு எரிமலை உமிழ்ந்திருந்தால் அது "உயிர்த்துடுப்புடைய" எரிமலை. + +அழிந்துவிட்ட எரிமலைகள் என்பவை, எரிமலையிடம் எரிமலைக்குழம்பு வரத்து இல்லாததால் மீண்டும் உமிழ வாய்ப்பில்லாதது என்று அறிவியலாளர்களால் கருதப்படுவையாகும். ஐக்கிய நாடுகளின் ஹவாய் தீவுகளில் உள்ள பல எரிமலைகள் (ஹவாய் வெப்பப்பகுதி பெரிய தீவுக்கு அருகில் மையம் கொள்வதால் அழிந்துவிட்டவை) மற்றும் மோனோஜெனடிக்காக உள்ள பரீகுட்டீன். மற்றபடி, ஒரு எரிமலை உண்மையிலேயே அழிந்துவிட்டதா என்பதைத் தீர்மானிப்பது சிக்கலாகவே இருக்கிறது. + +"சூப்பர் எரிமலை" கால்டிராக்கள் மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு உமிழ்வு ஆயுள்சுழற்சி உள்ளவை என்று அளவிடப்படுவதால், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளில் ஒருமுறைக்கூட உமிழ்ந்திருக்கவில்லை என்றால் அவை அழிந்துவிட்டவை என்பதற்குப் பதிலாக உறங்குவை என்று கருதப்படலாம். +உதாரணத்திற்கு, யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிலுள்ள யெல்லோஸ்டோன் கால்டிரா 2 மில்லியன் ஆண்டுகள் வயதுடையவை என்பதோடு ஏறத்தாழ 640,000 ஆண்டுகளுக்கு மோசமான முறையில் உமிழ்ந்ததில்லை, இருப்பினும் சமீபத்தில் ஒரு சிறிய அளவிற்கான செயலாற்றல் இருந்தது, அதில் உயர்வெப்ப உமிழ்வு கிட்டத்தட்ட பத்தாயிரம் ஆண்டுகளுக்கு குறைவாகவும், எரிமலைக்குழம்பு ஓட்டம் ஏறத்தாழ எழுபதாயிரம் ஆண்டுகளாவும் இருந்தது. இந்தக் காரணத்தினால், யெல்லோஸ்டோன் கால்டிராவை அறிவியலாளர்கள் அழிந்துவிட்டதாக கருதுவதில்லை. உண்மையில், கால்டிரா தொடர்ச்சியான பூகம்பத்தையும், அதிக செயலாற்றுகிற புவிவெப்ப அமைப்பையும் (எ.கா: யெல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் முழுமையான புவிவெப்பச் செயல்பாடு கண்டுபிடிக்கப்பட்டது) மற்றும் தரைத்தளம் விரைவாக மேல்நோக்கி வருவதாலும் பல விஞ்ஞானிகள் இதை செயலாற்று எரிமலையாகவே கருதுகின்றனர். + +உறங்கும் எரிமலை யிலிருந்து அழிந்துவிட்ட எரிமலையை வேறுபடுத்த���ப் பார்ப்பது சிரமம். +அதன் செயலாற்றுத்தன்மைகள் குறித்து எழுதப்பட்ட பதிவுகள் இல்லாமல் இருந்தால் அந்த எரிமலைகள் அழிந்துவிட்டவை என்றே கருதப்படுகின்றன. இருந்தபோதிலும், எரிமலைகள் நீண்ட காலத்திற்கு உறங்குகின்றவையாகவே இருக்கலாம், இது "அழிந்தவை" என்று அழைக்கப்படும் எரிமலை மீண்டும் உமிழலாம் என்பதற்கு பொதுவான பண்பு இல்லாமல் இல்லை. ஹெராகுலேனியம் மற்றும் பாம்பி நகரங்களை அழித்த வசூவியஸின் புகழ்பெற்ற 79 ஆம் ஆண்டு உமிழ்வுக்கு முன்னர் அது அழிந்துவிட்டதாகவே கருதப்பட்டிருந்தது. +மிகச் சமீபத்தில் மாண்ட்சரேட் தீவிலுள்ள நீண்டநாள் உறக்கத்திலிருந்த சாஃபிரியர் மலைகள் எரிமலை 1995 ஆம் ஆண்டில் செயலாற்றத் தொடங்குவதற்கு முன்னர் அழிந்ததாகவே கருதப்பட்டிருந்தது. மற்றொரு சமீபத்திய உதாரணம், அலாஸ்காவி்ல் உள்ள ஃபோர்பீக்டு மலை கி.மு. 8000 முன்பிருந்து உமிழாதிருந்த இது செப்டம்பர் 2006 ஆம் ஆண்டில் உமிழ்வதற்கு முன்னர்வரை நெடுங்காலமாகவே அழிந்துவிட்டதாகக் கருதப்பட்டிருந்தது. + +தற்போதுள்ள 16 பத்தாண்டு எரிமலைகள்: + +வெவ்வேறு விதமான எரிமலை உமிழ்வு வகைகளும் அதுசார்ந்த செயல்பாடுகளும் உள்ளன: ஃப்ரீயாடிக் உமிழ்வுகள் (நீராவியால் உருவாக்கப்பட்ட உமிழ்வுகள்), உயர் அளவிலான சிலிக்கா எரிமலைக்குழம்பு வெடித்து உமிழ்தல் (எ.கா: ரையோலைட்), குறைவான சிலிக்கா எரிமலைக்குழம்பு பீறிட்டு உமிழப்படுதல் (எ.கா: கருங்கல் வகை), பைரோகிளாஸ்டிக் ஓட்டங்கள், லகர்கள் (கூளங்களாக ஓடுதல்) மற்றும் கரியமில வாயு வெளிப்பாடு. இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் மனிதர்களுக்கு தீங்கானவையாக இருக்கின்றன. பூகம்பங்கள், வெப்ப ஊற்றுக்கள், நீராவிகள், புதைசேற்று ஊற்று மற்றும் வெந்நீர் ஊற்றுக்கள் எரிமலைச் செயல்பாட்டோடு இணைந்திருப்பவை. + +வெவ்வேறு எரிமலை வாயுக்களின் செறிவுகளும் ஒரு எரிமலையிலிருந்து மற்றொன்றுக்கு குறிப்பிடத்தக்க அளவு மாறுபடுகிறது. நீர் ஆவியாதல் என்பது கரியமிலவாயு மற்றும் சல்பர் டையாக்ஸைடு ஆகியவற்றைத் தொடர்ந்து வரும் மிதமிஞ்சி இருக்கின்ற எரிமலை வாயு வகைமாதிரியாகும். ஹைட்ரஜன் சல்பைட், ஹைட்ரஜன் குளோரைடு மற்றும் ஹைட்ரஜன் ஃப்ளோரைடு ஆகியவை பிற முதன்மை எரிமலை வாயுக்கள். +பெரிய அளவிலான சிறிய மற்றும் பீறிடும் வாயுக்கள் எரிமலை உமிழ்வுகளின்போது ���ாணப்படுகின்றன, உதாரணத்திற்கு ஹைட்ரஜன், கார்பன் மோனாக்ஸைடு, ஹாலோகார்பன்கள், ஆர்கானிக் கலவைகள் மற்றும் ஆவியாகும் இயல்புள்ள உலோக குளோரைடுகள். +பெரிய, வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் நீராவி (HO), கார்பன் டையாக்ஸைடு (CO), சல்ஃபர் டையாக்ஸைடு (SO), ஹைட்ரஜன் குளோரைடு (HC1), ஹைட்ரஜன் ஃப்ளோரைடு (HF) மற்றும் சாம்பல் (தூளான மற்றும் மென்மையான பாறைகள்) ஆகியவற்றை வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் பூமியின் தளத்திற்கும் மேலே 16–32 கிலோமீட்டருக்கு (10–20 மைல்கள்) வீசியெறிகிறது. இவ்வாறு வீசப்படுவதிலிருந்து வரும் மிகவும் குறிப்பிடத்தக்க தாக்கங்கள், செறிவான சல்பேட் சாரல்களை உருவாக்குகின்ற வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் விரைவாக கெட்டிப்படுத்துகின்ற சல்பர் டையாக்ஸைடு சல்பூரிக் அமிலமாக (HSO) மாற்றப்படுவதிலிருந்து வருகிறது. இந்தச் சாரல்கள் பூமியின் அல்பிடோவை - சூரியனிலிருந்து வரும் இதன் கதிரியக்க பிரதிபலிப்பு விண்வெளிக்கு திரும்புகிறது - அதிகரிக்கச் செய்கிறது, ஆகவே இது பூமியின் தாழ்வான காற்றுமண்டலம் அல்லது அடிவெளிப்பகுதியைக் குளிர்விக்கிறது; இருப்பினும், அவை பூமியிலிருந்து மேல்நோக்கிப் பரவும் வெப்பத்தை உறி்ஞ்சவும் செய்கின்றன, அவ்விடத்தில் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியை வெப்பப்படுத்துகிறது. கடந்த நூற்றாண்டில் நிகழ்ந்த பல்வேறு உமிழ்வுகள், ஒன்றிலிருந்து இரண்டு வருட காலகட்டத்தில் அரை டிகிரி வரை (பாரன்ஹீட் அளவுகோலில்) பூமியின் மேல்தளத்தில் உள்ள சராசரி வெப்பநிலையின் வீழ்ச்சிக்கு காரணமானது - அநேகமாக ஹூவாய்நெப்பூட்டினாவின் உமிழ்விலிருந்து வந்த சல்பர் டையாக்ஸைடு 1601 - 1603 ஆம் ஆண்டின் ரஷ்ய பஞ்சத்திற்கு காரணமாக இருக்கலாம். + +இந்த சல்பேட் சாரல்கள், வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியில் உள்ள குளோரைன் மற்றும் நைட்ரஜன் ரசாயன உயிரினங்களை மாற்றுகின்றன அவற்றின் மேல்தளங்களில் உள்ள சிக்கலான இரசாயன மாற்றங்களை அதிகரிக்கிறது. இந்த விளைவு, குளோரோப்ளோரோகார்பன் மாசுபாட்டிலிருந்து அதிகரித்த வாயுமண்டலத்திற்கு மேலுள்ள குளோரின் உடன் சேர்ந்து, ஓஸோன் O) பகுதியை அழிக்கின்ற குளோரின் மோனாக்ஸைடை உருவாக்குகிறது. +சாரல்கள் அதிகரித்து கெட்டிப்படுகையில், அவை சுருள் இழை மேகங்களுக்கான பிளவாக செயல்படுகின்ற மேல் அடிவளியில் குடியேறிவிடுகின்றன, அதற்கும் மேல் பூமியின் கதிரியக்கச் சமநிலையை மேம்படுத்துகிறது. + +பெரும்பாலான ஹைட்ரஜன் குளோரைடு (HCl) மற்றும் ஹைட்ரஜன் ப்ளோரைடு (HF) ஆகியவை உமிழப்படும் மேகத்திலுள்ள நீர்த்திவலைகளில் கரைந்து அமில மழையாக விரைந்து தரையில் விழுகின்றன. தூண்டப்பட்ட சாம்பலும் வாயுமண்டலத்திற்கு மேலுள்ள பகுதியிலிருந்து விரைவாக விழுகிறது; இவற்றில் பெரும்பாலானவை சில நாட்களிலிருந்து சில வாரங்களுக்குள்ளாக நீக்கப்படுகின்றன. இறுதியில், வெடித்துச் சிதறும் எரிமலை உமிழ்வுகள் பசுமையில்ல வாயுவான கார்பன் டையாக்சைடை வெளியிடுகிறது, இது பயோஜியோகெமிக்கல் சுழற்சிக்கான கார்பன் மூலாதாரத்தை வழங்குகிறது. +எரிமலைகளிலிருந்து வெளிப்படும் வாயுக்கள் அமில மழைக்கு இயல்பான பங்களிப்பாளராக இருக்கின்றன. எரிமலைச் செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 130 முதல் 230 டெராகிராம்கள் (145 மில்லியன் முதல் 255 மி்ல்லியன் வரையிலான ஷார்ட் டன்கள்) வரையிலான கார்பன் டையைக்ஸைடை வெளியிடுகிறது. எரிமலை உமிழ்வுகள் பூமியின் காற்றுமண்டலத்திற்குள்ளாக சாரல்களை தூண்டக்கூடும். +பெரிய தூண்டல்கள் வழக்கத்திற்கு மாறான வண்ண அஸ்தமனம் போன்ற காட்சி அம்சங்களுக்கு காரணமாகலாம் என்பதோடு உலகளாவிய தட்பவெப்பத்தை குளிர்வித்து பாதிக்கச் செய்யலாம். எரிமலை உமிழ்வுகள் எரிமலைப் பாறைகளின் தட்பவெப்பநிலை நிகழ்முறை மூலமாக மண்ணில் புரதங்களை அதிகரிக்கச் செய்யும் பலனை வழங்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. +இத்தகைய உரமேற்றப்பட்ட மண் செடிகளும் பல்வேறு பயிர்களும் வளர்வதற்கு உதவுகின்றன. +எரிமலை உமிழ்வுகள், மாக்மாக்கள் தண்ணீருடன் சேர்ந்து குளிர்வித்து கெட்டிப்படுத்துகையில் புதிய தீவுகளையும் உருவாக்கக்கூடும். + +பூமியின் நிலவில் பெரிய எரிமலைகள் எதுவுமில்லை என்பதுடன் தற்போது எந்த எரிமலை நிகழ்வும் இல்லை, இருப்பினும் சமீபத்திய ஆதாரங்கள் அதில் இன்னும் பாதியளவிற்கு உருகிய மையப்பகுதியைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன. எப்படியாயினும், நிலவானது மரியா (நிலவில் காணப்படும் கருமையான பாதைகள் )பள்ளத்தாக்குகள் மற்றும் குவிமாடங்கள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கலாம். + +வீனஸ் கோள் 90% கருங்கல் வகையைக் கொண்டிருக்கிறது, எரிமலை நிகழ்வு அதன் ��ேல்தளத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. இந்தக் கோளில் கிட்டத்தட்ட 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பெரிய முழு மறுமேல்தளமாக்க நிகழ்வு ஏற்பட்டிருக்கலாம், இதை அறிவியலாளர்கள் மேல்தளத்தில் ஏற்பட்ட எரிமலை வாயு தாக்கத்தின் அடர்த்தி எனபதாகக் கூறுவர். எரிமலைக்குழம்பு ஓட்டங்கள் பரவலானவை என்பதுடன் எரிமலையின் வடிவங்கள் பூமியின் தோற்றத்தில் தற்போது இல்லை. கோளின் வாயுமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களும் மின்னலின் ஆய்வும் நிகழ்ந்துகொண்டிருக்கும் எரிமலை செயலாற்றல்களுக்கு பங்களித்திருக்கலாம், இருந்தபோதிலும் வீனஸ் கோளில் எரிமலை நிகழ்வுகள் இப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றனவா இல்லையா என்பதற்கு எந்த உறுதிப்பாடும் இல்லை. மெகல்லன் விசாரணை மூலம் பெறப்பட்ட ரேடார் ஒலி, அதன் சிகரத்திலும் வடக்குப்பகுதி பக்கவாட்டிலும் சாம்பல் ஓட்ட வடிவத்தில் வீனஸின் உயரமான எரிமலையான மாட் மோன்ஸில் ஒப்பீட்டு ரீதியில் சமீபத்திய எரிமலை நிகழ்வு இருப்பதைக் காட்டுகிறது. + +மார்ஸ் கோளில் அழிந்துவிட்ட பல்வேறு எரிமலைகள் இருக்கின்றன, அவற்றில் நான்கு பூமியில் இருப்பதைவிட மிகவும் பெரியதான நீண்ட கவச எரிமலைகளாகும். இவை ஆர்ஸியா மோன்ஸ், ஆஸ்கிரேஸ் மோன்ஸ், ஹெகேட்ஸ் தோலஸ், ஒலிம்பஸ் மோன்ஸ் மற்றும் பவோனிஸ் மோன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த எரிமலைகள் பல மில்லியன் ஆண்டுகளாக அழிந்துபட்டவையாக இருந்திருக்கின்றன, ஆனால் ஐரோப்பிய "மார்ஸ் எக்ஸ்பிரஸ்" விண்வெளி ஓடம், மார்ஸில் சமீபத்திய கடந்த சில ஆண்டுகளில் எரிமலை நிகழ்வு ஏற்ப்ட்டதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடித்திருக்கின்றன. +ஜூபிடரின் நிலவான இயோ, ஜூபிடருடனான டைடல் ஒருங்கிணைப்பின் காரணமாக சூரிய மண்டலத்திலுள்ள அதிக எரிமலைச் செயல்பாடுள்ள கோளாக இருக்கிறது. இது சல்பர், சல்பர் டையாக்ஸைடு மற்றும் சிலிகேட் ஆகியவற்றை உமிழும் எரிமலைகளைக் கொண்டிருக்கிறது, அதன் காரணமாக இயோ தொடர்ந்து மறுமேல்தளமாக்கல் செயல்பாடு கொண்டதாக இருக்கிறது. இதனுடைய எரிமலைக்குழம்பு சூரிய மண்டலத்தில் உள்ளவற்றிலேயே மிகவும் வெப்பமானவை, இதன் வெப்பநிலை 1,800 K (1,500 °C)-ஐத் தாண்டிச் செல்கிறது. + +பிப்ரவரி 2001 ஆம் ஆண்டில், சூரிய மண்டலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய எரிமலை உமிழ்வு இயோவில் ஏற்பட்டதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஜூபிடரின் கலீலியன் நிலவுகளிலேயே சிறியதான யூரோப்பாவும், அதனுடைய விறைப்பான மேல்தளத்தில் பனிக்கட்டியாக உறையச்செய்கின்ற வகையில் முற்றிலும் தண்ணீரில் நிகழ்பவையாக இருப்பதைத் தவிர்த்து உயிர்த்துடிப்புடைய எரிமலை அமைப்பாகவே காணப்படுகிறது. இந்த நிகழ்முறை கிரையோவால்கோனிஸம் எனப்படுகிறது, அத்துடன் சூரிய மண்டலத்திலுள்ள வெளிப்புற கோள்களின் நிலவுகளில் மிகவும் பொதுவானதாகவும் காணப்படுகிறது. + +1989 ஆம் ஆண்டில் வோயேஜர் 2 விண்வெளி ஓடம், நெப்டியூனின் நிலவான டிரைடனில் உள்ள கிரையோ எரிமலைகளை ஆராய்ந்துள்ளது, 2005 ஆம் ஆண்டில் டிரைடனில் கிரையோ எரிமலைகளை (பனிக்கட்டி எரிமலைகள்) கண்டுபிடித்திருக்கிறது, 2005 ஆம் ஆண்டில் காஸினி கயோஜென்ஸ் விசாரணை, சனி கோளின் நிலவான என்சைலடஸிலிருந்து உறைந்த பொருட்களை உமிழ்கின்ற ஊற்றுக்கள் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளது. இந்த உமிழ்வு தண்ணீர், நீ்ர்ம நைட்ரஜன், தூசி, அல்லது மெதைன் உட்பொருட்களால் உருவாகியிருக்கிறது. + +சனிக்கோள் நிலவான டைட்டனில் உள்ள கிரையோ எரிமலை மெத்தைனை வெளியேற்றுவதற்கான ஆதாரத்தையும் காஸினி கயோஜென்ஸ் கண்டுபிடித்துள்ளது, அது அதன் காற்றுவெளியில் குறிப்பிடத்தக்க அளவு மெத்தைன் மூலாதாரத்தைக் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இது கிரையோ எரிமலை கூபியர் பெல்ட் ஆப்ஜெக்டான குவெயரிலும் காணப்படுவதாக கருதப்படுகிறது. + +"வால்கனோ (Volcano)" என்ற பெயர் வல்கேனோ அதாவது ரோமானிய புராணத்தி்ல் நெருப்புக் கடவுளின் பெயரான வல்கன் (புராணம்) என்பதிலிருந்து உருவான இத்தாலியின் இயோலியன் தீவுகளில் உள்ள எரிமலைத் தீவிலிருந்து பெறப்பட்டது. + +எரிமலைகளைப் பற்றிய ஆய்வு வால்கனோலஜி எனப்படுகிறது, சிலநேரங்களில் "வல்கோனோலஜி"' என்றும் உச்சரிக்கப்படுகிறது. + +இந்தத் தீவிற்கான ரோமானியப் பெயரான "வல்கேனோ" பெரும்பாலான நவீன ஐரோப்பிய மொழிகளில் உள்ள "எரிமலை" க்கான வார்த்தையை வழங்கியுள்ளது. + +பெரும்பாலான புராதன பதிவுகள் எரிமலை உமிழ்வுகளை கடவுள் அல்லது கடவுள்தன்மை கொண்டவற்றின் செயல்பாடு போன்ற இயற்கை மீறியவற்றின் விளைவுகளாக குறிப்பிடுகின்றன. பழங்கால ரோமிற்கு, எரிமலைகளின் விருப்பம்போல் மாற்றமடையும் தன்மை கடவுளின் செயல்பாடுகளாக மட்டுமே இருந்து வந்துள��ளது, அதேசமயம் 16/17ஆம் நூற்றாண்டு வானியல் அறிஞர் ஜோகன்ஸ் கெப்லர் அவை பூமியின் கண்ணீர் கசிவு என்று நம்பியுள்ளார். + +பூமியின் மெல்லிய அமைப்பு பாதியளவு கெட்டியான பொருளாக மாற்றமடைகிறது என்ற நவீன புரிதலுக்கு முன்னர் எரிமலைச் செயலுக்கான முன்மொழியப்பட்ட விளக்கங்களாக நிறைய இருந்துள்ளன. +பல பத்தாண்டுகளுக்குப் பின்னர், அமுக்கமும் கதிரியக்க மூலப்பொருட்களும் வெப்ப மூலாதாரங்களாக இருக்கலாம் என்று தெரியவந்ததும் இவர்களுடைய பங்களிப்புகள் பலவும் குறிப்பிடத்தக்க அளவு தள்ளுபடி செய்யப்பட்டன. எரிமலை நடவடிக்கை வேதியியல் வினைகளுக்கும், மேல்தளத்திற்கு அருகாமையில் மெல்லிய அடுக்கிலான உருகிய பாறைக்குமே வழங்கப்பட்டு வந்துள்ளது. + +எரிமலைகள் பாரம்பரியமான முறையிலேயே தோன்றுகின்றன. + + +பட்டியல் + +குறிப்பிட்ட இடங்கள் + + + + + +கற்குழம்பு + +மக்மா (Magma) எனப்படுவது புவியின் அடிப்பகுதியில் இருக்கும் உருகிய பாறைக்குழம்பைக் குறிக்கும். மக்மாவின் வெப்பநிலை 650 முதல் 1200 டிகிரி சென்டிகிரேடு வரை இருக்கும். மக்மாவானது பூமியினுள்ளே மிகுந்த அழுத்தத்தில் இருக்கும். சில சமயங்களில் இது எரிமலைகளின் துளை வழியாக வெளிவருவதும் உண்டு. + + + + + +கிமு 288 + + + + + + +வளைதடிப் பந்தாட்டம் + +வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி, ஹொக்கி, Hockey) என்பது ஒரு குழு விளையாட்டாகும். இதில் இரண்டு அணிகள் போட்டியிடும். ஒவ்வொரு அணியிலும் பதினொரு வீரர்கள் இருப்பர். இவ்விளையாட்டு ஒரு கடினமான பந்தினை விளையாட்டு வீரர்கள் மட்டையினால் நகர்த்தி விளையாடும் விளையாட்டாகும். இவ்விளையாட்டு இந்தியாவின் தேசிய விளையாட்டு ஆகும். + +வளைதடிப் பந்து ஆடுகளம் ஒரு செவ்வக வடிவ அமைப்பாகும். இதன் நீளம் 100 கெஜம், அகலம் 60 கெஜம் மையக் கோட்டிலிருந்து இரண்டு பக்கங்களிலும் 25 கெஜத்திற்கு இரண்டு 25 கெஜக்கோடு குறிக்கப்பட வேண்டும். வெற்றிக் கம்பத்தின் அகலம் 12 அடி உயரம் 7 அடி இருக்க வேண்டும். + +பந்தின் எடை 156 கிராம் முதல் 163 கிராம் வரை இருக்கலாம். சுற்றளவு 22.4 செ.மீ முதல் 23.5 செ.மீ வரை இருக்கும். + +இந்த ஆட்டக் காலத்தின் முதல் பகுதி 35 நிமிடம், ஓய்வு 5 நிமிடம், இரண்டாம் பகுதி 35 நிமிடம் ஆக மொத்தம் 75 நிமிடங்கள். + +விளையாடும் ஆட்டக்காரர்கள் 11 பேர். மாற்று ஆட்டக்காரர்கள் 5 பேர். + + + + +சப்பாத்தி + +சப்பாத்தி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு பொதுவான இந்திய உணவாகும். சப்பாத்தி தெற்கு ஆசியா, கரீபியன் தீவுகள் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் இந்திய வியாபாரிகளால் அறிமுகப்படுத்தப்பட்டு உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் மெலிதாகத் தேய்த்து பின்னர் தோசைக் கல்லின் மீது வைக்கப்பட்டு நெருப்பில் சூடுபடுத்தி தயாரிக்கப் படுகிறது. இது மாலத்தீவுகளில் ரொசி என்றழைக்கப்ப்டுகிறது. + +"சப்பாத்" (ஹிந்தி:"चपत, chapat") என்பதன் ஹிந்தி அர்த்தம் "தட்டை", இது இரு உள்ளங்கைகளுக்கிடையே பிசைந்த மாவினை வைத்து அறைந்து, வட்டவடிவிலான தட்டையாக மாவினை உருவாக்கும் வழமையான முறையைக் கூறிக்கிறது. ஒவ்வொரு அறைக்கும் வட்டவடிவிலான அறைந்த மாவு சுற்றப்படுகின்றது. சப்பாத்தி பற்றி 16-ஆம் நூற்றாண்டினைச் சார்ந்த அபுல் ஃபசல் எழுதிய அயினி அக்பரி மற்றும் முகலாய பேரரசர் அக்பரின் அமைச்சர் குறிப்புகளிலும் இருக்கிறது. w + + + + + + +பூரி (உணவு) + +பூரி எனப்படுவது ரொட்டி வகையைச் சேர்ந்த ஒரு இந்திய உணவாகும். இது கோதுமை மாவுடன் நீர், உப்பு ஆகியன கலந்து அவற்றை வட்ட வடிவில் (கிட்டத்தட்ட 12 செ.மீ விட்டத்தில்) மெலிதாகத் தேய்த்துப் பின்னர் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் பொரித்துத் தயாரிக்கப் படுகிறது. இதை விட பெரிய அளவில் நன்கு உப்பலாக பொரிக்கப்படும் பூரி, சோழா பூரி என்று அழைக்கப்படுகிறது. + + +"பூரி" என்ற பெயர் சமஸ்கிருத வார்த்தையான पूरिका (pūrikā) என்பதிலிருந்து பெறப்பட்டன, இதன் அர்த்தம் पुर (pura) "நிரப்பட்ட" என்பதாகும். இது தெற்காசியாவின் பெரும்பாலான மொழிகளில் ஒத்த பெயரிலேயே அழைக்கப்படுகின்றன, அவை பின்வருமாரு: குஜராத்தி: પૂરી, அசாமி পুৰি, ("puri"), ("pūrī"), ("pūrī"), ("pūri"), , ("pūrī"), ("puri"), ("puri"), ("pūḍī"), ("pūri"), ("pūri"), and ("puri"). + + + + +அகமதாபாத் + +அகமதாபாத் (, , Ahmedabad) இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமும், இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமுமாகும். இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 5 மில்லியனாகும். இந்நகரம் இதன் பழைய பெயரா��� கர்ணாவதி என்ற பெயராலும் குஜராத் மக்களால் அம்தாவாத் என்றும் அழைக்கப்படுகிறது. இது அகமதாபாத் மாவட்டத்தின் தலைநகரமாகும். + +இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் குஜராத்தின் வடநடுப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நகரமே 1960-இல் இருந்து 1970 வரை குஜராத்தின் தலைநகரமாக இருந்தது. பின்னர், குஜராத்தின் தலைநகராக காந்தி நகர் ஏற்கப்பட்டது. +அகமதாபாத் இந்தியாவின் முதன்மையான தொழில் நகராக உள்ளது. இதன் மக்கள்தொகை விரைவாக உயர்ந்துவருகிறது. இதனால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து கட்டுமானங்கள் அதிகரித்து வருகின்றன. அண்மைக்காலமாக விண்ணைத்தொடும் கட்டடங்கள் கட்டப்பட்டுவருகின்றன. +அகமதாபாத் நகரம் கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் அகமத் ஷாவால் உருவாக்கப்பட்டது. அவர் இதை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். இந்த நகர் இந்திய-முகலாயக் கட்டிடக் கலைக்கும், இந்து-முஸ்லிம் கவின் கலைக்கும் உதாரணமாகத் திகழ்கிறது. மேலும் நூற்றாண்டுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இன்றும் இந்த நகரத்தில் புழக்கத்தில் உள்ளன. இந்தக் காரணங்களுக்காக இந்த நகரம் பாரம்பரிய நகரமாக யுனெசுகோவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. + +அகமதாபாத் மாநகராட்சி இந்த நகரத்தில் 2,600 பாரம்பரியக் கட்டிடங்கள் உள்ளன எனக் கண்டறிந்துள்ளது. இங்கு ஜாமி மசூதி, சர்கேஜ் ரோஸா, சுவாமி நாராயண் கோயில், சந்தை நுழைவு வாயில், காந்தி ஆஸ்ரமம், அடலாஜ் தெப்பக்குளம் உள்ளிட்ட 54 மரபுச் சின்னங்களை உள்ளாட்சி நிர்வாகம் தற்போது பட்டியலிட்டுள்ளது. அவற்றைப் பாதுகாக்க புதிய அங்கீகாரம் உதவும் என எதிர்பார்க்கப்ப்படுகிறது. + + + + +செய்ப்பூர் + +செய்ப்பூர் அல்லது ஜெய்ப்பூர் ("Jaipur") இந்திய நாட்டின் மேற்கிந்தியப் பகுதியில் அமைந்த இராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகும். இது சிவப்பு நகரம் என்றும் சிறப்புடன் அழைக்கப்படுகிறது. மேலும் செய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமாகும். ஜெய்ப்பூர் மாநகராட்சி, இந்நகரத்தை நிர்வகிக்கிறது. + +மேற்கு இந்தியாவில் உள்ள ஜெய்ப்பூர் நகரம், இந்தியாவின் தேசியத் தலைநகரம் புதுதில்லியிலிருந்து 288 கிமீ தொலைவிலும்; மும்பையிலிருந்து 1183 கிமீ தொலைவிலும்; அகமதாபாத்திலிருந்து 622 கிமீ தொலைவிலும்; சென்னையிலிருந்து 2064 கிமீ தொலைவிலும்; கொல்கத்தாவ���லிருந்து 1510 கிமீ தொலைவிலும்; பெங்களூரிலிருந்து 2313 கிமீ தொலைவிலும்; ஐதராபாத்திலிருந்து 1651 கிமீ தொலைவிலும் உள்ளது. + +2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஜெய்ப்பூர் நகரத்தின் மக்கள் தொகை 30,46,163 ஆகும். அதில் ஆண்கள் 16,03,125 ஆகவும்; பெண்கள் 14,43,038 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டவர்கள் 3,87,354 ஆகவுள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு விகிதம் 83.33 % ஆகவுள்ளது. + +மொத்த மக்கள் தொகையில் இந்து சமயத்தவர்கள் 23,73,384 (77.91%) ஆகவும்; இசுலாமியர்கள் 5,67,521 (18.63%) ஆகவும்; சமணர்கள் 71,846 (2.36%) ஆகவும்; சீக்கியர்கள் 17,787 (0.58%) ஆகவும்; கிறித்தவர்கள் 11,076 (0.36%) ஆகவும்; மற்றவர்கள் 15,649 (0.15%) ஆகவும் உள்ளனர். + +இந்நகரத்தில் இந்தி, ஆங்கிலம் மற்றும் வட்டார மொழிகள் பேசப்படுகிறது. + +ஜெய்ப்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து நாட்டின், தில்லி, ஜம்மு,மும்பை, கொல்கத்தா, சென்னை, திருவனந்தபுரம், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம், விஜயவாடா, கவுகாத்தி, ராஞ்சி, ராய்ப்பூர், போபால், குவாலியர், ஆக்ரா, மதுரா, ஜான்சி, புவனேஸ்வர் போன்ற அனைத்து பெருநகரங்களை இணைக்கும் இருப்புப் பாதைகள் உள்ளது. + +ஜெய்ப்பூர் உள்நாட்டு வானூர்தி நிலையம், வானூர்திகள் மூலம் மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, கவுகாத்தி, அகமதாபாத், உதய்ப்பூர், இந்தூர், கொச்சி, புதுதில்லி நகரங்களை இணைக்கிறது. + +ஜெய்ப்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம், அபுதாபி, மஸ்கட், துபாய், சார்சா நாடுகளை இணைக்கிறது. + +1428 கிமீ நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை 79 தில்லி, மும்பை குர்கான், அஜ்மீர், வாரணாசி அகமதாபாத், வதோதரா மற்றும் சூரத்தையும் இணைக்கிறது. + +ஆக்ரா - பிகானீரை இணைக்கும் 495 கிமீ (308 மைல்) நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 11 ஜெய்ப்பூர் வழியாக செல்கிறது. + + + + + +சிவனொளிபாத மலை + +சிவனொளிபாதம் அல்லது பாவா ஆதம் மலை ("Adam's Peak"; சிங்களம் "சிறிபாத", அராபியம் "Al-Rohun") கடல் மட்டத்திலிருந்து 2,243 மீட்டர் (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சபரகமுவா, மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடிச் சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது, இந்து சமய நம்பிக்கைக��ின் படி இது சிவனின் காலடிச் சுவடாக கருதப்படுவதோடு இஸ்லாமியர்கள் இதை பாவா ஆதம் மலை - ஆதாம் ஆதாமின் காலடிச் சுவடாக கருதுகின்றனர். + + + + + +போபால் + +போபால் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு நகராகும். இது மத்தியப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும். மேலும் இந்நகரம் இதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமுமாகும். + +போபால் இந்தியாவின் 16 ஆவது மிகப்பெரிய நகரமும், உலகின் 134 ஆவது பெரிய நகரமாகும். + +இந்நகரில் இருந்த யூனியன் கார்பைடு எனும் பூச்சிகொல்லி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சு வளிக் கசிவுப் பேரழிவால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் உடலளவிலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்டனர். பல தலைமுறை மக்கள் பாதிக்கப்பட்ட பகுதி இது. + + + + + +காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் + +காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். + +பல்லவ நாட்டின் பண்டைய தலைநகரம் என்ற சிறப்பைப் பெற்ற, சென்னையில் இருந்து சுமார் 45 மைல்கள் தூரத்தில் அமைந்துள்ள, காஞ்சிபுரத்தில், நகர மத்தியிலிருந்து ஏறத்தாழ ஒரு மைல் தூரத்தில் அமைந்துள்ளது. + +இங்கே அமைந்துள்ள பல காலகட்டங்களையும் சேர்ந்த கோயில்களில் இதுவும் ஒன்றாகும். தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோயில் தமிழ் கட்டிடக்கலையின் ஆரம்ப காலகட்டத்துக்குரிய திருப்பு முனைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.இது காஞ்சிபுரத்திலுள்ள மிக்க பழைமைமிக்க சிவன் கோவிலாகும். +இதைக் கல்வெட்டுக்கள் ’இராஜசிம்மேச்சரம்’ எனக் கூறுகின்றன. இக்கோவிலில் சுமார் 1300 ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு நடந்து வருகிறது. இக்கோவில் முழுவதும் கல்லினால் கட்டப்பட்டதாகும். + +தமிழ் நாட்டின் கட்டிடக்கலை வரலாற்றில், நீடித்திருக்கக் கூடிய கட்டிடங்களாகக் கற் கோயில்களை அமைத்துத் திராவிடக் கட்டிடக்கலை வளர்ச்சிக்கு உத்வேகம் கொடுத்தது பல்லவர்கள் ஆவர். தொடக்கத்தில் குடைவரைகளையும், பின்னர் ஒற்றைக் கற்றளிகளையும் அமைத்த இவர்கள் தொடர்ந்து கட்டுமானக் கோயில்களை அமைப்பதிலும் முன்னோடிகளாக அமைந்தார்கள். இவற்றில் இறுதியாகக் குறிப்பிடப்பட்ட கட்டுமானக் கோயில்��ள் கட்டும் தொழில் நுட்பம், தமிழ் நாட்டில், பல்லவ மன்னனான இராஜசிம்மனால் கட்டப்பட்ட மாமல்லபுரம் கடற்கரைக் கோயிலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து கட்டப்பட்டது தான் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில். + +காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் கி.பி 700 ஆம் ஆண்டளவில் இராஜசிம்மனால் கட்டத் தொடங்கப் பட்டதெனினும் இவனது மகனான மூன்றாம் மகேந்திரவர்மனே கட்டிடப் பணிகளை நிறைவேற்றி வைத்ததாகத் தெரிகிறது. பின்னரும் 14 ஆம் நூற்றாண்டளவில், விஜயநகரக் காலத்தில், சில பகுதிகள் சேர்க்கப்பட்டதுடன், திருத்த வேலைகளும் செய்யப் பட்டிருப்பதாக அறியக் கூடியதாக உள்ளது. + +இரண்டாம் விக்ரமாதித்தன் என்ற சாளுக்கிய மன்னன் பல்லவர்களை வென்று காஞ்சியைப் பிடித்தபொழுது (கி.பி.740) காஞ்சி நகரின் சிறந்த கலைஞர்களைப் பட்டகடலுக்குக் (கர்நாடகா) கொண்டு சென்றார். அங்கு அரசி லோகமாதேவியின் +கட்டளைப்படி விருப்பாஷா என்ற கோவில் நிறுவப்பட்டது. இக்கோவில் காஞ்சி கைலாசநாதர் கோவிலைப் பல அம்சங்களில் ஒத்திருக்கிறது என்று கூறப்படுகிறது. + +தொடக்கத்தில் இக் கோயில் விமானத்துடன் கூடிய கருவறையையும், அதற்கு முன்பக்கம் தூண்களுடன் கூடிய ஒரு மண்டபத்தையும் கொண்டிருந்தது. இவ்விரு கட்டிடங்களும் உயர்ந்த சுற்று மதிலால் சூழப்பட்டிருந்தன. +பல்லவர்களுடைய கட்டடக் கோயில்களிலேயே மிகவும் உன்னதச் சிறப்பும் எழிலும் வாய்ந்தது கைலாசநாதர் ஆலயம் ஆகும். + +இறைவனது கருவறை மீதுள்ள விமானம் இக்கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். இவ்விமானம் அதிட்டானம் முதல் உச்சிப் பகுதிவரை கல்லாலானது. அழகுமிக்க தோற்றத்தைக் கொண்டுள்ளது. பிற்காலத்தில் தமிழகத்தில் எழுந்த விமானங்களுக்கு ஒரு சிறந்த ’முன்மாதிரி’யாக இது விளங்கிற்று. மாமல்லபுரத்திலுள்ள தர்மராஜ ரதத்தைப் போன்ற உச்சிப் பகுதியை இவ்விமானம் கொண்டுள்ளது. + +பிரதான ஆலயத்தைச் சுற்றிப் பல சிறு துணை ஆலயங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அழகிய சிறு விமானத்தைக் கொண்டுள்ளன. சிறு ஆலயங்கள் இராஜசிம்மனுடைய பட்டத்தரசி இரங்க பதாகை என்பவரால் கட்டப்பட்டதாகும். ஆலயத்தின் வெளி மதில்களில் சிவபெருமானின் பல்வகை வடிவங்களைக் காட்டும் அழகிய சிற்பங்கள் உள்ளன. அவை தக்ஶிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஊர்த்துவ தாண்டவர், ஹரிகரர் முதலிய திருவுரு���ங்கள் ஆகும். உமையன்னை, முருகப்பிரான், திருமால் ஆகிய தெய்வங்களின் எழில் சிற்பங்களும் இங்கு உள்ளன. துணை ஆலயங்களிலும் பல அழகிய தெய்வத்திருவுருவங்கள் உள்ளன. இக்கோவிலின் முகப்பில் இராஜசிம்மனின் மகன் மூன்றாம் மகேந்திரவர்மனால் கட்டப்பட்ட சிறு கோவில் உள்ளது. இங்குக் காணப்படும் சிவபெருமானது திருவுருவங்கள் சமயச் சிறப்பும் கலைச் சிறப்பும் மிக்கவையாகும். கைலாசநாதர் ஆலயத்தில் புராணங்களிலும் இதிகாசங்களிலும் கூறப்பட்டுள்ள சிவபெருமானது பல்வேறு வடிவங்களை அழகிய சிற்பங்களாகப் பல்லவ சிற்பிகளின் உளிகள் வடித்துள்ளதைக் காணலாம். + +பிறப்பு முதல் இறப்பு வரை என்பது கோவிலின் கருவறையை சுற்றியுள்ள பிரகாரத்தை சுற்றிவரும் செயலாகும். மற்ற கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவிலில் பிரகாரத்தை சுற்றும் வழிக்கு சிறிய சதுர துவாரம் மட்டுமே விடப்பட்டுள்ளது. அது போல் பிரகாரத்தை விட்டு வெளிவரவும் சிறு சதுர துவாரம் மட்டுமே உள்ளது. இது அன்னையின் கருவறையில் இருந்து குழந்தை வருவது போன்ற செயலைக் குறிப்பதாகும். மேலும் வெளி வரும் துவாரம் மிகச்சிறியதாக இருப்பதால், வெளியே வர அதற்கு மேலே படிக்கட்டுடன் கூடிய பெரிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. + +பிரதான ஆலயத்திலும் அதைச் சுற்றிலும் உள்ள துணை ஆலயங்களிலும் சுமார் 1300 வருடங்களுக்கு மேற்பட்ட பல்லவர் கால ஓவியங்கள் உள்ளன. இவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று சிவனுக்கும் பார்வதிக்கும் நடுவில் கந்தர் உள்ள காட்சியாகும். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் விஜயநகர அரசர் குமார கம்பணர் காலத்தில், பல்லவர் ஓவியங்கள் மீது புதிய ஓவியங்கள் தீட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவை ’இரு அடுக்கு ஓவியங்கள்’ எனப்படுகின்றன. பல்லவர் ஓவியங்களை அறிஞர் தூப்ராய் என்பவர் கி.பி.1931 இல் கண்டுபிடித்தார். + + +தமிழ் நாட்டு ஓவியக் கலை + + + + + +மாமல்லபுரம் இரதக் கோயில்கள் + +பல்லவர் காலத்தில் துறைமுக நகரமாக இருந்த மாமல்லபுரம், திராவிடக் கட்டிடக்கலையைப் பொறுத்தவரை ஒரு முக்கிய இடமாகும். பல்லவர் கட்டிடக்கலைக்கும், ஆரம்ப காலத் திராவிடக் கட்டிடக்கலைக்கும் எடுத்துக்காட்டுகளாக இங்கே அமைந்துள்ள ஏராளமான பல்லவர் கட்டிடங்களுள் இரதக் கோயில்கள் எனப்படும் ஒற்றைக் கற்றளிகளும் இடம் பெறுகின்றன. + +இவை நிலத்திலிருந்து துருத்திக்கொண்டிருந்த பெரிய பாறைகளைச் செதுக்கி அமைக்கப் பட்ட ஒரே வரிசையில் அமைந்துள்ள கோயில்களாகும். இவற்றைப் பஞ்ச பாண்டவர் இரதங்கள் எனவும் அழைப்பதுண்டு. இவை ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் முதன்மைப் பாத்திரங்களான தருமர், வீமன், அருச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதை ஆகியோரின் பெயராலேயே குறிப்பிடப் படுகின்றன. பஞ்சபாண்டவர்களின் பெயர்களிட்டு அழைக்கப்பட்டாலும், இவை அவர்களுக்குரிய கோயில்களோ அல்லது இரதங்களோ அல்ல. + +இரதக் கோயில்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கடவுள்களுக்காக அமைக்கப்பட்டவை. அத்துடன், இவை திராவிடக் கட்டிடக்கலையின் வெவ்வேறு வகைகளைக் காட்டுவனவாக உள்ளன. + +இவற்றுள் பெரியது சிவனுக்கு உரிய கோயிலாகும். ஆதிதளம் என அழைக்கப்படும் நிலத் தளத்துடன் சேர்த்து இக் கோயில் மூன்று தளங்கள் கொண்டது. நிலத் தளம் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது. இதன் மேல் தளங்களில் அழகிய சிற்ப வேலைப்பாடுகள் அமைந்துள்ளன. எனினும் மேல் தளங்களுக்குச் செல்வதற்கு முறையான படிக்கட்டுகள் அமைக்கப்படவில்லை. + +வீம இரதம் எனப்படுவது, திருமாலுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகும். இது நீண்ட செவ்வக வடிவான தள அமைப்பைக் கொண்டுள்ளது. இத் தள அமைப்பு, இதன் மேற் காணப்படும் நீண்ட சாலை விமான அமைப்புக்குப் பொருத்தமாக உள்ளது. இவ்விடத்தில் காணப்படும் தர்மராஜ இரதம், அருச்சுனன் இரதம் போலன்றி இக்கோயிலில் சிற்பங்கள் எதுவும் காணப்படாமை குறிப்பிடத் தக்கது. + +அருச்சுன இரதம் எக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது என்பதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. பொதுவாக இது முருகக் கடவுளுக்காக அமைக்கப்பட்டது எனக் கருதப்பட்டாலும், இதை இன்னொரு சிவன் கோயிலாக அடையாளம் காண்போரும் உளர். + +சிறு குடில் ஒன்றின் அமைப்பை ஒத்துக் காணப்படும் இக்கோயில் கொற்றவைக்கு உரியதாகும். + +இது இந்திரனுக்காக அமைக்கப்பட்ட கோயிலாகக் கருதப் படுகின்றது. இது சிற்ப நூல்களில் "கஜபிருஷ்டம்" (யானையின் பின்பகுதி) எனக் குறிப்பிடப்படும் அமைப்பிலான விமானத்தைக் கொண்டுள்ளது. இவ்வகை விமானத்தைத் தமிழில் தூங்கானை விமானம் என்பர். இக்கோயிலிலும் சிற்பங்கள் இல்லை என்பதுடன் கட்டிடம் முற்றுப்பெறாத நிலையிலேயே காணப்படுகின்றது. + +கட்டிடக்கலை அட��ப்படையில் இக் கோயில்கள் ஒவ்வொன்றும் அக்காலத்தில் வழக்கிலிருந்த வெவ்வேறு கட்டிட வகைகளைப் பின்பற்றி அமைந்திருப்பது இவற்றின் ஒரு சிறப்பாகும். + + + + + +இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடு + +இலவச மதிய உணவுத் திட்டம் (Midday Meal Scheme) தமிழகத்தில் உள்ள அரசு/அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு இலவசமாக மதிய உணவு வழங்கும் திட்டமாகும். + +வறுமையின் காரணமாக பள்ளி வராமல் சிறு வயதிலேயே பிழைப்புக்காக வேலை செல்லும் சிறுவர்களைப் பள்ளிக்கு வரவழைப்பதற்காகவும், அவர்களின் கல்வி வளர்ச்சியை மனதில் கொண்டும் இத்திட்டம் தொடங்கப்பட்டது. + +நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில் அப்போதைய சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவுத் திட்டமாக மாறியது. 1955 ஆம் ஆண்டு மார்ச் 27ந்தேதி சென்னை பூங்கா நகர் மெமோரியல் மண்டபத்தில், சென்னை மாகாண தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டைத் தொடங்கி வைக்க அப்போதைய முதல் அமைச்சர் காமராஜர் வந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கல்வித்துறை இயக்குனர் நெ. து. சுந்தரவடிவேலுவிடம் தொடக்கப் பள்ளிக் கூடங்களில், ஏழைக்குழந்தைகள் அனைவருக்கும் இலவச மதிய உணவு வழங்குவது பற்றி முதன்முதலாக ஆலோசித்தார். பின்னர் இந்த மதிய உணவு திட்டம் பற்றி அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. வருவாய்த்துறை செயலாளர் பல ஆட்சேபணைகளையும் சந்தேகங்களையும் எழுப்பினார். அதற்கெல்லாம் காமராஜர் பதிலளித்தபின், முடிவில் சத்துணவு திட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்றும், முதலில் எட்டயபுரத்தில் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பாரதியார் பிறந்த எட்டையபுரத்தில், முதன் முதலாக மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் காமராஜர் கூறியதாவது: ""அன்னதானம் நமக்குப் புதிதல்ல. இதுவரை வீட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு அளித்தோம். இப்போது பள்ளிக்கூடத்தைத் தேடிச்சென்று சோறு போடுகிறோம். இதன் மூலம் உயிர் காத்த புண்ணியம், படிப்பு கொடுத்த புண்ணியம் இரண்டும் சேரும். எல்லோருக்கும் கல்விக் கண்ணைத் திறப்பதை விட, எனக்கு முக்கியமான வேலை வேறு இல்லை. எனவே, மற்ற எல்லா வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஊர்வலமாக வந்து பகல் உணவு திட்டத்திற்குப் பிச்சை எடுக்கச் சித்தமாக இருக்கிறேன்."" எம்.ஜி.ஆர். ஆட்சியில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்தது. திமுக ஆட்சியில் சத்துணவில் முட்டை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், அதிமுக ஆட்சியில் சத்துணவில் புதிய உணவுப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. + + + + +கட்டுமானக் கோயில் + +செதுக்கப்பட்ட கற்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கிக் கட்டப்படுகின்ற கோயில்களே கட்டுமானக் கோயில்களாகும். குடைவரை மற்றும் ஒற்றைக் கற்றளி என்பவற்றைவிட அமைப்பதற்கு இவை இலகுவானவை. வசதியான இடத்தில் எங்கு வேண்டுமானாலும் கட்டிக்கொள்ள முடியும். முன்னைய வகைகளில் பாறையின் ஓரிடத்தில் தொடங்கி வடிவமைப்புக்கு அமையச் சரியானபடி முடிப்பதென்பது மிகவும் சிரமமான காரியம். செதுக்கும் போது பாறையில் வெடிப்பு எதுவும் ஏற்பட்டால் முழு வேலையையும் கைவிட வேண்டியதுதான். இத்தகைய சிக்கல்கள் கட்டுமானக் கோயில்களில் இல்லை. சிறிய பகுதிகளாகச் செதுக்குவதால் கையாளுவதும் இலகு. இதன் காரணமாகத் தமிழ் நாட்டில் கட்டுமானக் கோயில்கள் அறிமுகமானதின் பின்பு குடைவரைகளோ அல்லது ஒற்றைக் கற்றளிகளோ கட்டப்படவேயில்லை. + +தமிழ் நாட்டில் முதல் முதலாகக் கட்டப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரத்திலுள்ள கடற்கரைக் கோயிலாகும். இக் கோயிலைக் கட்டியவன் பல்லவ மன்னனான இராஜசிம்மன். இவன் காலத்தில் காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் உட்பட மேலும் பல கட்டுமானக் கோயில்கள் கட்டப்பட்டன. + + + + +இரண்டாம் உலகப் போர் + +இரண்டாம் உலகப்போர் அல்லது உலகப் போர் 2 ("Second World War") என்பது 1939-45 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு போர். இதில் அனைத்து பெரும் அரசுகள் (great powers) உள்பட உலக நாடுகளுள் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகையில் ஈடுபட்டன. இவை அச்சு நாடுகள், நேச நாடுகள் என இரு பெரும் தரப்புகளாகப் பிரிந்திருந்தன. உலக வரலாற்றில் அதுவரை கண்டிராத வண்ணம் மிகப்பெரும் அளவில் இப்போர் நடைபெற்றது. ஏறத்தாழ 10 கோடி போர் வீரர்கள் இதில் பங்கு கொண்டனர். ஒட்டுமொத்த போர் என்னும் கோட்பாட்டிற்கு இணங்க, இப்போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களது ஒட்டுமொத்த பொருளாதார, உற்பத்தி, தொழில், படைத்துறை மற்றும் அறிவியல் வளங்களைப் பயன்படுத்தி தங்கள் எதிரிகளை அழிக்க முயன்றன. இதனால் இராணுவ மற்றும் குடிசார் வளங்களுக் கிடையேயான வேறுபாடு மறைந்து போனது. பெரும் இன அழிப்பு, அணுகுண்டு வீச்சு போன்ற பெரும் உயிரிழப்பு நிகழ்வுகள் நடந்த இப்போரே வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய போராகும். + +செப்டம்பர் 1, 1939ல் நாசி ஜெர்மனியின் போலந்து படையெடுப்புடன் இப்போர் துவங்கியதாகப் பொதுவாக வரலாற்றாளர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு புறம் பிரிட்டன் அதன் பேரரசில் இடம் பெற்றிருந்த நாடுகள் பிரான்சு ஆகியவை நேச நாட்டு அணியிலிருந்தன. மறுபுறம் நாசி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலி ஆகியவை சேர்ந்து அச்சு அணியை உருவாக்கின. 1939–41ல் அச்சுப் படைகள் மேற்கு ஐரோப்பா முழுவதையும் கைப்பற்றின. பிரிட்டன் மட்டும் அவற்றின் பிடியிலிருந்து தப்பியது. பின் வடக்கு ஆப்பிரிக்காவைக் கைப்பற்ற அச்சுப் படைகள் முயன்றன. ஜூன் 1941ல் அச்சுப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்ததால் சோவியத் ஒன்றியம் நேச நாட்டு அணியில் இணைந்தது. 1930களின் துவக்கத்திலிருந்து சீனா மீது போர் தொடுத்து அதன் பல பகுதிகளைக் ஆக்கிரமித்திருந்த சப்பானியப் பேரரசும் அச்சு அணியில் இணைந்தது. + +டிசம்பர் 1941ல் ஐக்கிய அமெரிக்காவைத் தாக்கியதன் மூலம் சப்பான் இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டது. அதுவரை நேச நாடுகளுக்குத் தளவாட வழங்கலை மட்டும் செய்து வந்த அமெரிக்காவும் போரில் நேரடியாக ஈடுபட்டது. சப்பானியப் படைகள் விரைவில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி இந்தியாவின் கிழக்கெல்லை வரை முன்னேறி விட்டன. 1942 வரை அச்சு நாடுகளுக்குச் சாதகமாக இருந்த போர் நிலவரம் அவ்வாண்டு நேரெதிரானது. ஐரோப்பாவின் கிழக்கு முனையில் அச்சு நாட்டு முன்னேற்றம் சோவியத் படைகளால் தடுத்து நிறுத்தப்பட்டது. வடக்கு ஆப்பிரிக்காவிலும் அச்சுப் படைகள் முறியடிக்கப்பட்டு பின்வாங்கின. பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் நேச நாட்டு படைகள் இழந்த பகுதிகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கைப்பற்றத் தொடங்கின. 1943ல் இத்தாலி மீது நேச நாட்டுப் படைகள் படையெடுத்தன; விரைவில் அந்நாடு சரணடைந்தது. 1944ல் மேற்கு ஐரோப்பாவை மீட்க நேச நாட்டுப் படைகள் கடல் வழியாகப் படையெடுத்தன. கிழக்கில் சோவியத் படைகளாலும் மேற்கில் பிரிட்டானிய, அமெரிக்க, பிரெஞ்சுப் படைகளாலும் தாக்கப்பட்ட ஜெர்மனி ஈராண்டுகளுக்குள்ளாகத் தோற்கடிக்கப்பட்டது. மே 1945ல் ஜெர்மனியின் சரணடைவுடன் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. 1943-45 காலகட்டத்தில் பசிபிக் பெருங்கடலின் தீவுக்கூட்டங்களைக் கைப்பற்றிச் சப்பானியத் தாயகத் தீவுகளை நோக்கி முன்னேறிய அமெரிக்கா, ஆகஸ்ட் 1945ல் சப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள்மீது அணு குண்டுகளை வீசியது. இதன் விளைவாகச் சப்பான் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவடைந்தது. + +இப்போரின் விளைவாக உலக அரசியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. ஐரோப்பிய காலனிய பேரரசுகள் தங்கள் வல்லமையை இழந்தன; ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவில் காலனிமயமழித்தல் தொடங்கியது. அமெரிக்காவும், சோவியத் ஒன்றியமும் உலகின் புதிய வல்லரசுகளாகின; அவற்றுக்கிடையே பனிப்போர் துவங்கியது. உலக அமைதிக்காகச் செயல்பட ஐக்கிய நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. + +இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாகப் போலந்தின் மீதான ஜெர்மன் படையெடுப்பு நடந்த செப்டம்பர் 1, 1939ம் ஆண்டு கருதப்படுகிறது. பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் இரண்டு நாட்களுக்குப் பின்னர் ஜெர்மனி மீது போரை அறிவித்தன. பலர் போரின் தொடக்கமாக இரண்டாம் சீன-ஜப்பானிய போர் தொடங்கிய ஜூலை 7, 1937 நாளைக் குறிப்பிடுகின்றனர். + +ஆங்கில வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி. டெய்லர் ("A.J.P. Taylor") கூற்றுப்படி, கிழக்காசியாவின் சீன-ஜப்பானிய போரும், ஐரோப்பிய மற்றும் அதன் காலனி நாடுகளை உள்ளடக்கிய இரண்டாம் ஐரோப்பிய போரும் தனித்தனியாக நடைபெற்று வந்தது. இந்த இரண்டு போர்களும் 1941ல் இணைந்து உலகளாவிய போராக உருவெடுத்து 1945 வரை தொடர்ந்தது. + +இரண்டாம் உலகப்போரின் இறுதி நாள்குறித்து ஒத்த கருத்து எதுவும் எட்டப்படவில்லை. இரண்டாம் உலகப்போர், ஜப்பான் வீழ்ந்த, ஆகஸ்ட் 14, 1945 அன்று முடிவுக்கு வந்ததாகக் கருதப்பட்டாலும் ஜப்பான் செப்டம்பர் 2, 1945 அன்றுதான் அதிகாரப்பூர்வமாகச் சரணடைந்தது. சில ஐரோப்பிய வரலாற்று நூல்கள் ஜெர்மனி தோல்வியடைந்த, மே 8, 1945ம் நாளைக் குறிப்பிடுகின்றன. எனினும் ஜப்பான் உடனான நேச நாடுகளின் அமைதி ஒப்பந்தம் 1951ல்தான் கையெழுத்தானது. அவ்வாறே செருமனியுடன் இறுதி தீர்வு ஒப்பந���தம் 1990 வரை மேற்கொள்ளப்படவில்லை. + +முதல் உலகப்போரில் மைய சக்தி நாடுகளான ஆஸ்திரிய-ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சி, ஆசிய, ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளின் அரசியல் மற்றும் ராஜதந்திர நிலவரங்களை வெகுவாக மாற்றியது. 1917ல் ரஷ்ய பொதுவுடைமைக் கட்சியின் போல்ஷெவிக் பிரிவு ரஷ்யாவில் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கிடையில், பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, செர்பியா, மற்றும் ருமேனியா ஆகிய நேச நாடுகளின் வெற்றி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி மற்றும் ரஷ்ய பேரரசின் சரிவால் உருவான புதிய நாடுகள் ஆகியவை கிழக்கு ஐரோப்பாவின் வரைபடத்தில் பெரிய மாற்றங்களை உண்டாக்கின. போருக்குப் பிறகு ஐரோப்பாவில் அமைதியின்மை நிலவியது. வெர்சாய் உடன்படிக்கையின்படி, ஜெர்மனி பொருளாதார, பிராந்திய மற்றும் காலனியாதிக்க ரீதியாக நிறைய இழப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதாயிற்று. ஜெர்மனி தனது நிலப்பரப்பில் பதின்மூன்று சதவீதத்தையும் தனது அனைத்து காலனிகளையும் இழந்தது. மேலும் ஜெர்மனி மீது ராணுவ ரீதியான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கிடையில் ரஷ்ய உள்நாட்டு போரின் விளைவாகச் சோவியத் யூனியன் உருவாகியது. 1924ல் லெனினின் மரணத்திற்கு பிறகு சோவியத் யூனியனின் அதிகாரத்திற்கு வந்த ஜோசப் ஸ்டாலின், புதிய பொருளாதார கொள்கைகளுக்குப் பதிலாக ஐந்தாண்டுத் திட்டங்களை அமல்படுத்த தொடங்கினார். + +ஜெர்மன் பேரரசு 1918–19 ஜெர்மன் புரட்சியில் கலைக்கப்பட்டு, ஒரு ஜனநாயக அரசு உருவானது. போர்களுக்கு இடையிலான காலத்தில், ஜெர்மனி தேசியவாதிகள் மற்றும் கம்யூனிஸ்ட்கள் இடையே உள்நாட்டு மோதல்கள் ஏற்பட்டது. இதே போன்ற நிலைமை இத்தாலியிலும் உருவானது. நேச நாடுகளின் அணியிலிருந்து இத்தாலி சில பிராந்திய வெற்றியை அடைந்தது என்றாலும், இத்தாலிய தேசியவாதிகள் இலண்டன் உடன்படிக்கை மீது கோபம் கொண்டிருந்தனர். 1922 முதல் 1925 வரை, பெனிட்டோ முசோலினி தலைமையில் இத்தாலிய பாசிச இயக்கம் புதிய ரோமானிய பேரரசை உருவாக்கும் உறுதியுடன் அதிகாரத்தைக் கைப்பற்றியது. ஜெர்மனியில், அடோல்ப் ஹிட்லர் தலைமையிலான நாட்சி கட்சி ஆட்சியைப் பிடித்து, 1933 இல், ஹிட்லர் அதிபர் ஆனார். + +சீனாவில் குவோமின்டாங் கட்சி 1920களில் சீன ஒருங்கிணைப்புக்கான ராணுவ நடவடிக்கையைக் குறுநில மன்னர்க���ுக்கு எதிராகத் தொடங்கியது. ஆனால் விரைவிலேயே அதன் முன்னாள் சீன கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு எதிராக உள்நாட்டு போரில் இறங்கியது. நீண்ட நாட்களாகச் சீனாவை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் இருந்த ஜப்பான், 1931ல், மஞ்சூரியன் சம்பவத்தைக் காரணமாக வைத்து மஞ்சூரியாவை ஆக்கிரமித்து மஞ்சுகோ என்று அழைக்கப்பட்ட பொம்மை அரசாங்கத்தை நிறுவியது. ஜப்பானை எதிர்க்க வலு இல்லாத சீனா, உலக நாடுகள் சங்கத்திடம் உதவி கோரியது. உலக நாடுகள் சங்கம் ஜப்பானை மஞ்சூரிய ஆக்கிரமிப்புக்காகக் கண்டித்தது. அதனால் ஜப்பான், உலக நாடுகள் சங்கத்திலிருந்து விலகியது. பின்னர் இரண்டு நாடுகளும் 1933ல் Tanggu போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திடும் வரை, ஷாங்காய், ரேஹே மற்றும் ஹெபெய் பகுதிகளில் பல சிறு மோதல்களில் இறங்கின. அதன் பின்னரும் சீன தன்னார்வ படைகள் மஞ்சூரியாவில் ஜப்பானிய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்த்தன. + +அடால்ஃப் ஹிட்லர், 1923ல் ஜெர்மன் அரசாங்கத்தைக் கவிழ்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, 1933ல் ஜெர்மனின் அதிபர் ஆனார். அவர் சனநாயகத்தை ஒழித்து நாஜிக்கொள்கையை அறிமுகப்படுத்தினார். அதோடு வெர்சாய் உடன்படிக்கையை மீறும் விதமாக ராணுவ சீர்திருத்த நடவடிக்கைகளையும் ஆயுத கொள்வனவுகளையும் செய்யத் தொடங்கினார். இதற்கிடையில் பிரான்ஸ், இத்தாலியுடன் கூட்டணி வைக்கும் எண்ணத்துடன், இத்தாலிக்கு எதியோப்பியா மீதான காலனி ஆக்கிரமிப்பை அனுமதித்தது. 1935ல், ஜெர்மனி சார் பேசின் பகுதியை சட்டபூர்வமாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டதால் நிலைமை இன்னும் மோசமடைந்தது. + +ஜெர்மனி கட்டுப்படுத்த நினைத்த, ஐக்கிய ராஜ்யம், பிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகள் Stresa முன்னணி அமைப்பை உருவாக்கின. கிழக்கு ஐரோப்பாவின் பரந்த பகுதிகளைக் கைப்பற்றும் ஜெர்மனியின் நோக்கங்களால் கவலையடைந்த சோவியத் யூனியன், பிரான்ஸ் உடன் பரஸ்பர உதவி ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முன்பாக, உலக நாடுகள் சங்கத்தின் ஒப்புதலுக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவ்வளவாகப் பயன் தராமல் போனது. எனினும், ஜூன் 1935 ல், ஐக்கிய ராஜ்யம் ஜெர்மனி உடன் ஒரு சுயாதீன கடற்படை ஒப்பந்தம் செய்து, சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. ஐரோப்பா மற்றும் ஆசிய நிகழ்வுகளை பற்றிக் கவலை கொண்ட அமெரிக்கா, ஆகஸ்ட் மாதம் நடுநிலைத்தன்மை சட்டத்தை நிறைவேற்றியது. அக்டோபர் மாதம், இத்தாலி எத்தியோப்பியா மீது படையெடுத்தது. இந்தப் படையெடுப்புக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்ததால் அதற்குப் பிரதி பலனாக இத்தாலி, ஜெர்மனியின் ஆஸ்திரிய ஆக்கிரமிப்பு நோக்கத்தின் மீதான ஆட்சேபணைகளை திரும்பப் பெற்றது. + +ஹிட்லர் வெர்சாய் மற்றும் லோகர்னோ உடன்படிக்கையை மீறி Rhineland பகுதியில் ராணுவத்தை குவித்தார். இதற்கு மற்ற ஐரோப்பிய வல்லரசுகளிடமிருந்து பெரிய அளவில் எதிர்ப்பு வரவில்லை. ஜூலையில் ஸ்பெயின் உள்நாட்டு போர் தொடங்கிய போது, ஹிட்லரும் முசோலினியும் "பாசிச தேசியவாத படைகளையும்", சோவியத் யூனியன் ஸ்பானிய குடியரசையும் ஆதரித்தன. இரண்டு தரப்புமே இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. 1939 ஆம் ஆண்டு தேசியவாதப்படைகள் போரை வென்றன. அக்டோபர் 1936 இல், ஜெர்மனியும் இத்தாலியும் அச்சு நாடுகள் அமைப்பை உருவாக்கின. ஒரு மாதம் கழித்து, ஜெர்மனியும் ஜப்பானும் அனைத்துலக பொதுவுடைமை இயக்க எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஒரு வருடம் கழித்து இத்தாலியும் இந்த ஒப்பந்தத்தில் இணைந்தது. சீனாவில் Xi'an சம்பவத்திற்கு பிறகு குவோமின்டாங் மற்றும் கம்யூனிச படைகள் ஜப்பானை எதிர்த்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் பொருட்டு யுத்த நிறுத்தத்தை அறிவித்தன. + +இரண்டாம் இத்தாலிய-அபிசீனிய போர், அக்டோபர் 1935 ல் தொடங்கி மே 1936 இல் முடிவடைந்த ஒரு சுருக்கமான காலனித்துவ போர். இந்தப் போர் இத்தாலிய பேரரசின் ஆயுதப்படைகளுக்கும் எத்தியோப்பிய பேரரசின் (அபிசீனியா) ஆயுதப்படைகளுக்கும் இடையே நடந்தது. போரின் முடிவில் இத்தாலி வெற்றி பெற்று எத்தியோப்பியாவில் தனது காலனியை நிறுவியது. இதனால் எத்தியோப்பியா கிழக்கு ஆப்பிரிக்க இத்தாலியில் இணைக்கப்பட்டது. இந்தப் போர் உலக நாடுகள் அமைப்பு அமைதியை நிலை நாட்டும் ஒரு வலுவான அமைப்பாக இல்லை என்பதை வெளிப்படுத்தியது. இத்தாலியும் எத்தியோப்பியாவும் உலக நாடுகள் அமைப்பின் அங்கத்தினர்களாக இருந்த போதிலும் அந்த அமைப்பு இத்தாலியின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. + +ஸ்பானிய உள்நாட்டு போர், 1 ஏப்ரல் 1939 முதல் 17 ஜூலை 1939 வரை ஸ்பெயினில் நடந்த பெரிய உள்நாட்டு போர். ஜெர்மனி மற்றும் இத்தாலி, கிளர்ச்சியில் ஈடுபட்ட பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையிலான தேசியவாத படைகளுக்கு ஆதரவு கொடுத்தன. சோவியத் யூனியன் தனது ஆதரவை இடதுசாரி சிந்தனை உடைய அங்கு ஏற்கனவே ஆட்சியில் இருந்த ஸ்பானிய குடியரசுக்குக் கொடுத்தது. ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் இந்த சண்டையைத் தங்களது புதிய ஆயுதங்களையும் போர் தந்திரங்களையும் பரிசோதிக்கப் பயன்படுத்தி கொண்டன. ஜெர்மனியின் கொண்டோர் லீஜியன் திட்டமிட்டு நிகழ்த்திய ஜெர்னீகா குண்டுவீச்சு அடுத்த பெரிய போர் பொதுமக்கள்மீது பயங்கரவாத குண்டு தாக்குதல்களை உள்ளடக்கலாம் என்ற பரவலான கவலைகளுக்குப் பங்களித்தது. + +ஜூலை 1937ல், ஜப்பான், மார்கோ போலோ பாலம் சம்பவம் நடந்த பிறகு, சீனாவின் முந்தைய தலை நகரான பெய்ஜிங்கை கைப்பற்றியது. இந்தச் சம்பவம் ஜப்பான் முழுமையான சீன ஆக்கிரமிப்பு நடவடிக்கை எடுக்க வித்திட்டது. இந்த நேரத்தில் விரைவாகச் செயல்பட்ட சோவியத், சீனாவுக்கு தளவாடங்கள் வழங்கி உதவி செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் மூலம் சீன – ஜெர்மனி ஒத்துழைப்பு (1911–1941) முடிவுக்கு வந்தது. சீனப் போர்ப்படை தளபதி சங் கை செக் ஷாங்காய் நகரத்தைப் பாதுகாக்க ஜெர்மனியால் பயிற்றுவிக்கப்பட்ட தனது சிறந்த படைபிரிவை பயன்படுத்தியும் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஷாங்காய் நகரம் ஜப்பானியர்கள் வசம் வீழ்ந்தது. ஜப்பானிய படைகள் சீனப்படைகளை பின்தள்ளி முன்னேறி டிசம்பர் 1937ல் தலைநகர் நாஞ்சிங்கை கைப்பற்றின. இதன்பின் நடந்த நாஞ்சிங் படுகொலை சம்பவத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் சரணடைந்த சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான சீனப்பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களால் கற்பழிக்கப்பட்டனர். + +ஜூன் 1938ல், சீன படைகள் ஜப்பானிய படைகளின் முன்னேற்றத்தைத் தடுக்க மஞ்சள் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுத்தின. இதன் மூலம் சீனப்படையினருக்கு வுஹன் ("Wuhan") நகரத்தில் தற்காப்பு முயற்சிகள் எடுக்கச் சிறிது நேரம் கிடைத்தது. ஆனாலும் வுஹன் நகரம் அக்டோபர் மாதத்தில் ஜப்பானிய படையினரிடம் வீழ்ந்தது. ஜப்பானியர்கள் எதிர்பார்த்தது போல் இந்த வெற்றிகளால் சீனர்களின் எதிர்ப்பை முறியடிக்க முடியவில்லை. சீன அரசாங்கம் தனது இருப்பிடத்தை நாட்டின் உட்பகுதிக்கு மாற்றி அங்கிருந்து போரைத் தொடர்ந்தத���. + +1938 ம் ஆண்டு ஜூலை 29 அன்று, ஜப்பானிய படைகள் சோவியத் ஒன்றியத்தில் நுழைந்ததும் காசன் ஏரிப்போர் மூண்டது. இந்தச் சண்டையில் சோவியத் வெற்றி அடைந்தாலும் ஜப்பான் போரின் முடிவைத் தோல்வி என்று ஒப்புக்கொள்ளவில்லை. இதற்குப் பின்னும் ஜப்பானிய-மங்கோலியன் எல்லையை விரிவாக்க 11 மே 1939 அன்று கல்கின் கோல் நதிப்போரை தொடங்கியது. ஜப்பானிய தாக்குதல் முதலில் சிறிது வெற்றி அடைந்தாலும் பின் சோவியத் படைகளிடம் ஜப்பானிய படைகள் பெரிய தோல்வியைத் தழுவின. + +இந்த மோதல்களின் முடிவுகளால் ஜப்பானிய அரசாங்கத்தின் ஒரு பிரிவினர் சீனப்போரில் சோவியத் ஒன்றியத்தின் தலையீட்டை தவிர்க்கச் சோவியத் ஒன்றியத்துடன் சமாதானமாகச் செல்ல வேண்டும் என்று கருதத் தொடங்கினர். அதற்குப் பதிலாக அவர்கள் ஜப்பானிய அரசாங்கம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் கவனம் செலுத்த விரும்பினர். + +ஐரோப்பாவில், ஜெர்மனியும் இத்தாலியும், பல வெளிப்படையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன. மார்ச் 1938 இல், ஜெர்மனி ஆஸ்திரியாவை தன்னுடன் இணைத்துக்கொண்டது. ஆனாலும் பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து பெரிய அளவில் ஆட்சேபனைகள் எழவில்லை. இதனால் உந்தப்பட்ட ஹிட்லர் செக்கோஸ்லோவாக்கியாவின் ஜெர்மானியர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியான சுதேண்டேன்லாந்துவை ஜெர்மனியின் ஒரு பகுதியாகக் கோர ஆரம்பித்தார். விரைவிலேயே பிரிட்டனும் பிரான்சும் செக்கோஸ்லோவாக்கியா அரசின் விருப்பத்திற்கு எதிராக இந்தப் பகுதியை ஜெர்மனுக்கு விட்டுக்கொடுத்தன. இதற்குப் பதிலாக ஜெர்மனியும் வேறெந்த நிலப்பகுதியின் மீதும் உரிமை கோரப்படாது என்று உறுதி அளித்தது. இதற்குப் பின்னும், ஜெர்மனியும் இத்தாலியும், செக்கோஸ்லோவாக்கியா தனது நிலப்பரப்பை ஹங்கேரிக்கும் போலந்திற்கும் விட்டுக் கொடுக்க வைத்தன. மார்ச் 1939 ல் ஜெர்மனி, செக்கோஸ்லோவாக்கியாவின் எஞ்சிய பகுதிகளை ஆக்கிரமித்தது. பின் நாட்டை இரண்டாகப் பிரித்து ஸ்லோவாக் குடியரசு எனும் பகுதியையும் பொஹிமியா மற்றும் மொராவியா பாதுகாக்கபட்ட பகுதியையும் உருவாக்கியது. + +ஹிட்லர் டான்ஜிக் பகுதியின் மீது உரிமை கோர ஆரம்பித்தும் விழித்துக் கொண்ட பிரிட்டனும் பிரான்சும், போலந்தின் சுதந்திரத்திற்கு உதவி செய்வதாக உறுதி அளித்தன. இத்தாலி அல்பேனியாவை கைப்பற்றியதை தொடர்ந்து இதே உறுதி மொழி ருமேனியாவிற்கும் கிரீசுவிற்கும் அளிக்கப்பட்டது. போலந்திற்கு பிரிட்டன்-பிரெஞ்சு உறுதி மொழியைத் தொடர்ந்து ஜெர்மனியும் இத்தாலியும் நட்புறவு மற்றும் கூட்டணிக்கான இரும்பு ஒப்பந்தம் செய்து கொண்டன. + +ஆகஸ்ட் 1939 இல், ஜெர்மனியும் சோவியத் ஒன்றியமும் தங்களின் மற்ற நாடுகளுடனான போர்களின் போது பரஸ்பரமாக நடுநிலை வகிக்கும் ரகசிய மொலோடோவ்-ரிப்பன்ட்ராப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இரு நாடுகளும் தங்களுக்கு இடையிலான அரசியல் மற்றும் பிராந்திய உரிமைகளை வரையறுத்துக் கொண்டன. மேற்கு போலந்து (இரண்டாம் போலந்துக் குடியரசு) மற்றும் லித்துவேனியா மீது செல்வாக்கு செலுத்தும் உரிமை ஜெர்மனிக்கும் கிழக்கு போலந்து, பின்லாந்து, எசுத்தோனியா, லாத்வியா மற்றும் பெஸ்ஸரேபியா பகுதிகளின் மீதான உரிமை சோவியத் ஒன்றியத்துக்கும் கிடைத்தது. இதன் மூலம் போலந்து விடுதலை கேள்விக்குறியானது. + +செப்டம்பர் 1,1939ல், ஜெர்மனியும் ஸ்லோவாக் குடியரசும் போலந்து நாட்டின் மீது தாக்குதல் நடத்தின. செப்டம்பர் 3,1939ல், பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் பொதுநலவாய நாடுகள் ஜெர்மனியின் மீது போர்ப் பிரகடனம் செய்தன. ஆனாலும் பிரான்ஸ் நடத்திய சிறிய அளவிலான சார் படையெடுப்பு தவிர போலந்திற்கு வேறு எந்த உதவியும் கிடைக்கவில்லை. பிரான்சும் பிரிட்டனும் ஜெர்மனியின் பொருளாதாரத்தை சீர்குலைக்கவும் போர் முயற்சிகளைக் கட்டுப்படுத்தவும் ஜெர்மனி மீது கடல் அடைப்பைத் தொடங்கின. செப்டம்பர் 17,1939ல் ஜப்பானுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்ட சோவியத் ஒன்றியம் போலந்து நாட்டைத் தாக்கியது. இவ்வாறு ஜெர்மனி, சோவியத் ஒன்றியம், லிதுவேனியா மற்றும் ஸ்லோவாக் நாடுகளுக்கு இடையே போலந்து துண்டுகளாகச் சிதறினாலும், போலந்து நாட்டினர் சரணடைய மறுத்து நிழல் அரசாங்கத்தையும் புரட்சி படையையும் நிறுவி நேச நாடுகளுடன் இணைந்து தொடர்ந்து போரிட்டனர். + +ஏப்ரல் 1940 இல், சுவீடனிலிருந்து செல்லும் இரும்புக்காகக் கப்பல் விநியோகத்தைப் பாதுகாக்கவும், இயற்கை நோர்வே நீரை எடுப்பதைத் தடுப்பதற்காக நேச நாடுகள் மேற்கொண்ட நடவடிக்கைக்கெதிராகவும் செருமனி வெசெரியூபங் நடவடிக்கைமூலம் டென்மார்க்கையும் நோர்வேயையும் ஆக்கிமித்தது. ட���ன்மார்க் உடனடியாகக் கீழ்ப்படிந்தது. நேச நாடுகளின் உதவியுடன் நார்வே போர்த்தொடர் மூலம் இரு மாதங்களுக்குச் சண்டையிட்ட நோர்வே செருமனியினால் வெற்றி கொள்ளப்பட்டது. + +மத்தியதரையில் நடவடிக்கையைத் தொடங்கிய இத்தாலி முதற்கட்டமாகச் சூனில் மால்டாவை முற்றுகையிட்டது. பின்பு, ஆகஸ்த்தில் பிரித்தானிய சோமாலிலாந்துத்தை வெற்றி கொண்டு, செப்தம்பர் 1940 இல் பிரித்தானியாவின் வைத்திருந்த எகிப்து மீது இத்தாலி படையெடுத்தது. இட்லரின் வெற்றியைப் பார்த்துப் பொறாமை கொண்ட முசோலினியின் ஆசையால் ஒக்டோபர் 1940 இல், இத்தாலி கிரேக்கம் மீது போர் தொடுத்தது. ஆயினும் தாக்குதல் சில நாட்களில் பின்வாங்குதலுக்கு உள்ளாகி அல்பேனியா வரை இத்தாலியப் படைகள் பின்வாங்க நேரிட்டது. + +ஒப்பீட்டளவில் ஐரோப்பா, ஆசியா சூழ்நிலை உறுதியாக இருக்கும்போது, செருமனி, சப்பான், சோவியத் உரசியா என்பன ஆயத்தங்களை மேற்கொண்டன. சோவியத்தின் செருமனியுடனான பதட்டம் அதிகரித்திருக்கையிலும், ஐரோப்பிய போரைச் சாதகமாக்கி தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஐரோப்பிய செல்வந்த வள உடைமைகளைக் கைப்பற்ற சப்பான் திட்டமிட்டிருக்கையிலும், 1941 ஏப்ரலில் சோவியற்–சப்பான் நடுநிலை ஓப்பந்தம் சோவியற்றுக்கும் சப்பானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டன. இத்தருணத்தில் செருனி சோவியற் ஒன்றியம்மீது தாக்குதல் நடத்த மறைவாக ஆயத்தப்பட்டுக் கொண்டிருந்து, சோவிற் எல்லையில் படைகளைக் குவித்துக் கொண்டிருந்தது. + +1931ம் ஆண்டில் சீனாவின் மன்சூரியன் பகுதியைக் கைப்பற்றி "மன்சுகோ" எனும் பொம்மை அரசாங்கத்தை உருவாக்கியதன் மூலம் பசிபிக் பகுதியில் போரைத் துவங்கி வைத்தது. இதனால் புருட்டல் ("Burutal") என்ற இடத்தில் போர் நடந்தது. அச்சு நாடுகளான இத்தாலி, செர்மனி, மற்றும் சப்பானும் 1940 செப்டம்பர் 27ல் முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பசிபிக் கடல் பகுதியில் கிடைக்கும் இயற்கை வளங்களை அவகரித்துக்கொள்ள ஜப்பான் கனவு கண்டது. + +1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்காவின் அவாய் தீவில் அமைந்துள்ள முத்து துறைமுகத்தைச் சப்பான் தனது போர் விமானங்களால் தாக்குதல் நடத்தியதால் அமெரிக்காவின் போர் கப்பல்களும், விமானங்களும் நாசமாகியது. இத்தீவை சூறையாடியதன் மூலம் தனது நீண்ட நாள் கனவு நிறைவேறியதாகச் சப்பான் எண்ணியது. அமெரிக்கா தன்னை சுதாரித்துக் கொள்ளும் முன்னர் "இபா" விமானத்தளத்தையும் சூறையாடியது. இப்போதுதான் அமெரிக்கா செர்மனிக்கு எதிராகப் போர் தோடுக்க முடிவு செய்தது. + +டிசம்பர் 1941ல் மேற்கு பசிபிக் கடல் பகுதியில் அமெரிக்காவின் இவான் மற்றும் வடக்கு பசிப்பிக்கில் அமைந்துள்ள வகெ தீவையும் கைப்பற்றியது. 1942 பாதியிலேயே அமெரிக்காவின் பிலிப்பைன்சு, டச்சுக் கிழக்கு இந்தியப் பகுதி, ஹாங்காங், மலேயா, சிங்கப்பூர், மற்றும் பர்மாவையும் கைப்பற்றியது. தாய்லாந்து நடுநிலை வகித்தது. 1942ல் இந்தோ-இங்கிலாங்து படைகள் இந்திய பகுதியிலும், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து படைகள் நியூ கினிப் பகுதியிலும் சப்பான் படைகளை எதிர்த்தன. + +சாலமன் தீவில் நடந்த சண்டையால் அமெரிக்கா வெற்றியைத் தனதாக்கிக்கோண்டது.ஜப்பான் 43,000 படைவீரர்களைக் கொண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவை கைப்பற்றியதால் அமெரிக்காவின் தளபதி மேக் ஆர்த்தர் ஆஸ்திரேலியாவிற்குத் தன் குடும்பத்துடன் தப்பி ஓடினார். 1944ல் மேக் ஆர்த்தர் பெரும்படையுடன் வந்து பிலிப்பைன்ஸை கைப்பற்றினார். + +1945 ஆகஸ்ட் 6 இல் காலை 7 மணிக்கு அமெரிக்காவின் பி-29 விமானம் சப்பானின் இரோசிமா மீது அணுகுண்டை வீசியது. இதனால் 78,000 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னரும் கதிர்வீச்சால் 12,000 பேர் மரணம் அடைந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து அமெரிக்கா – இங்கிலாந்து நாட்டவரால் தயாரிக்கப்பட்ட அணுக்குண்டை அமெரிக்கா சப்பானின் துறைமுக நகரமான நாகசாகி மீது வீசியது. இதனால் 38,000 பேர் மரணம் அடைந்தனர். 1945ல் ஆகஸ்ட் 15ல் சப்பான் சரணடைந்தது. + +1941 ஜூலை மாதவாக்கில் ஜெர்மனி மின்னல் போர் முறையில் பக்கத்து நாடுகள் அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. ஜெர்மனியின் போர் விமானங்கள் குண்டு மழை பொழியும் ராணுவ வீரர்கள் பாராசூட் மூலம் குதித்து பொதுமக்களைத் துப்பாக்கியால் சரமாரியாக் சுடுவார்கள், என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ளக்கூட அவகாசம் கொடுக்கமாட்டர்கள். + +போலந்து,டென்மார்க்,நார்வே, நெதர்லாந்து, பெல்ஜியம், லக்ஸம்பர்க், பிரான்ஸ் பொன்ற ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும் போர் துடங்கிய இரண்டு ஆண்டுகளில் ஜெர்மனி ஆக்கிரமிப்பு செய்துகொண்டது. நெடுநாட்கள் நடுநிலையில் இருந்த அமெரிக்கா போர் அரிவிக்காத்துவரை ஜெர்மனி வெற்றிக்கழிப்பில் இருந்த��ு. ஜெர்மனியின் அகங்காரம்,'ஹிட்லர்' தன்னுடன் ஒப்பந்ததில் கையெழுத்திட்ட மற்ற நாடுகளான ஜப்பானுடனும், இத்தாலியுடனும் தான் படையெடுக்கும் செய்தியைக்கூட தெரிவிப்பதில்லை,யூதர்களையும், எதிரிகளையும் கொடுமைப்படுத்துவதில் காட்டிய ஆர்வத்தில் பாதிகூட தன் சிப்பாய்களின் மீது கவனம் செலுத்தவில்லை. ரஷ்யாவின் மீது ஜெர்மனி படையடுத்தபோது அங்கு குளிர் காலம் துவங்கியிருந்தது. ஹிட்லர் தன் சிப்பாய்களுக்குக் கம்பளி போன்ற அத்தியாவசிய பொருட்களைக்கூட கொடுக்க மனம் இல்லை. தலைமை தளபதிகளாக இருந்தவர்கள் யார் சொல்லும் கேட்டு நடக்கும் நிலையில் இல்லை. ஜெர்மனி வீரர்களால் குளிரில் தன் மனதையும், உடலையும் பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை. + +1942 முதல் 1943 வரை நடந்த ரஷ்யா ஜெர்மனி போரில் 25 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டார்கள் எனப் பிபிசி [BBC] தெறிவித்தது. 1943 ஜூலை 5ல் துவங்கிய போரிலிருந்து துவண்டுபோயிருந்த ரஷ்யா செப்டம்பர் 25-ல் சோவியத்தின் சுமுலினிக் ("Smolensk") என்ற நகரையும், நவம்பர் 6-ல் கேவிஎ ("Kive") என்ற நகரையும், 1944 ஜனவரி 27ல் லெனின் கிராட் நகரையும் ஜெர்மனியிடமிருந்து மீட்டது. பின்னர் ஆபரேசன் பேக்ரசன் ("Bagration") மூலம் ஜெர்மனியை அதிரடியாகத் தாக்கியது. ஜூலை 22ல் மிட்ச்ஸ் நகரம் விடுவிக்கப்பட்டது. ஜூலை 24ல் போலந்தின் மக்டனக் நகரமும் ரஷ்யாவின் படைகள் கைப்பற்றியது. ஆகையால் அச்சு நாடுகளின் முன்னேற்றமும் தடைப்பட்டது, மற்றும் அவர்கள் கனவும் தகர்ந்தது. + +1943ம் ஆண்டு மே மாதம் கவுடால்கேனல் பிரச்சாரத்தின் ("Guadalcanal Campaign") நேச படைகள் ஜப்பான் அணிக்கு எதிராகப் பல நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இதில் முதன்மையானது மே 1943ல் அலூசியன் தீவுகளில் ("Aleutians") நேச படைகள் ஜப்பன் படைகள் அகற்ற அனுப்பப்பட்டனர். இதன் தொடர்ச்சியாகப் பசுப்பிக்கடல் பகுதில் இருந்த ரசுல் தீவுகள் ("Rabaul"), மார்சல் தீவுகள் ("Marshall Islands"), மேற்க்கு ஆஸ்திரேலியா அருகில் உள்ள கில்பர்ட் தீவுகள் ("Gilbert Islands") போன்ற பல தீவுக்கூட்டங்களைக் கைப்பற்ற படைகள் விரைந்தன. 1944 மார்ச் இறுதியில் நேச நாடுகளின் நோக்கங்கள் நிறைவு பெற்றதுடன் கூடுதலாகக் கரோலின் தீவுகளும் கைப்பற்றப்பட்டது. அதே ஆண்டு ஏப்ரல் மாதம் மேற்க்கு நியூ கினி படையேடுப்பு துவங்கியது. + +1943 கோடை மற்றும் வசந்த காலங்களில் மத்திய ரஷ்யாவில் பெரிய தாக்குதல்களுக்கு ஜேர்���னியர்கள் ஆயத்தமானார்கள். குர்ஷ்க் +("Battle of Kursk") என்னும் இடத்தில் ஜூலை 1943 4 அன்று ஜெர்மன் படைகள் தாக்குதல் நடத்தின. ஆனால் அந்த சூழ்நிலை சரியில்லாததால் படைகளின் ஹிட்லர் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. +அந்த மாதம் (ஜூலை 9) முசோலினி கைது செய்து வெளியேற்றப்பட்டார். 1943 நவம்பர் மாதம் பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின் சீனக் குடியரசு பகுதியான கெய்ரோவில் சந்தித்தார். + +1944ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மேற்க்கு போர் முனையில் நடந்த சண்டையில் பெல்ஜியம் நாட்டின் துறைமுக நகரமான ஆண்ட்வெர்ப் எனும் இடத்தில் ஜெர்மனி தனது கடைசி பெரும் முயற்சி எடுத்து தோழ்வியைத் தழுவியது. இந்த வெற்றியின் காரணமாக பெரும் முயற்சி எடுக்காமலேயே நேச படைகள் முன்னேறின. மேற்கத்திய படைகள் ஜெர்மனின் கூட்டுப்படைகளைச் சுற்றிவளைத்து தாக்கி வெற்றிகண்டது. இந்த நிகழ்வின் மூலம் இத்தாலி நாட்டின் படைகளிடம் போரின் போக்கில் தேக்க நிலை காணப்பட்டது. 1945ம் ஆண்டின் மத்தியப்பகுதியில் சோவியத் படையும் ஜெர்மன் படையும் ஓடர் ("Oder river") ஆற்றில் மோதிக்கொண்டன. இந்த சண்டையின் மூலம் போலந்தும் தாக்கப்பட்டு கிழக்கு பிரஷ்யாவை நேச நாடுகள் கைப்பற்றின. 1945ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி அமெரிக்கா, இங்கிலாந்து, சோவியத் போன்ற நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடி கருங்கடல் பகுதியில் யால்ட்டா மாநாட்டில் கலந்து ஆலோசனை செய்தார்கள். இந்த மாநாட்டில் ஜெர்மனியின் ஆக்கிரமிப்பை அகற்ற சோவியத் ஒன்றியம் ஜப்பானுக்கு எதிரான போரின் குதிக்க தயாரானது. + +1945ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஐரோப்பிய ஆறான ரைன் ஆறு மூடப்பட்டபோது பால்டிக் கடல் தெற்கு கரை பகுதியில் ஜெர்மனியின் ஆதரவு படைகள் சைலேசியா மற்றும் போமெரேனியா மீது படையெடுப்பு நடத்தியது. அந்த வருடம் மார்ச் மாதம் நேச நாடுகளின் படைகளைச் சூழ்ந்து வடக்கில் ஜெர்மனியின் ரோம்கன் ("Remagen") நகர் பகுதியிலும் தெற்கிலும் முற்றுகையிட்டன. அப்போது சோவியத் யூனியன் வியன்னா வரை முன்னேறியது. ஏப்ரல் மாத துவக்கத்தில் சோவியத் படைகளும் போலந்து படைகளும் இத்தாலியின் பகுதிகளையும், மேற்கு ஜெர்மனியின் பெர்லின் பகுதியையும் குறுக்காக தாக்க ஆரம்பித்தார்கள். அதே ஆண்டு ஏப்ரல் 25ம் தேதி சோவியத் படைகளும் அமெரிக்க படைகளும் ஜெர்மனியில் ஓடும் எல்பா ஆற்றில் வைத்து சேர்ந்து கொண்டன. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெர்மனியின் பாராளுமன்றக் கட்டிடமும் அந்த நாட்டின் பாரம்பரிய மாளிகையுமான ரெய்டாக் கைப்பற்றப்பட்டது. + +இந்த காலகட்டத்தில் ஏராளமான முக்கியப்பொறுப்பில் இருந்த அதிகாரிகளின் மாற்றம் நடந்தது. அமெரிக்க குடியரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் ஏப்ரல் 12ம் தேதி மரணமடைந்ததால் ஹாரி எஸ். ட்ரூமன் பதவி ஏற்றார். 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் தேதி இத்தாலிய எதிர்ப்பு இயக்கத்தால் முசோலினி கொல்லப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் ("Death of Adolf Hitler") தற்கொலை செய்துகொண்டார். + +ஜெர்மனியின் படைகள் ஏப்ரல் மாதம் 29ம் தேதி சரணடைவதாக ஒப்புக்கொண்டு ("kamerad"). மே மாதம் 7ம் தேதி ஜெர்மனி எந்த நிபந்தனையுமின்றி சரணடைந்தது,அதனால் இந்த ஒப்பந்தம் 8ம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னரும் மே மாதம் 11ம் தேதி வரை ஜெர்மன் இராணுவ குழு மையம் செக் நாட்டின் பராகுவே நகரில் முகாமிட்டிருப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. + +1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பசுபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள பிலிபைன்ஸ் நாட்டின் லெய்டி ("Leyte") தீவிலிருந்து அமெரிக்க-பிலிபைன்ஸ் படைகளின் கூட்டு முயற்சியுடன் மற்ற படைகளை வெளியேற்றக்கோரப்பட்டது. 1945ம் ஆண்டு மார்ச் மாதம் பிலிபைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவை கைப்பற்ற லுசான் ("Luzon") என்ற இடத்தில் படைகள் குவிக்கப்பட்டன. மணிலாவை கைப்பற்றும் வரை லுசான் ("Luzon"), மாண்டனோ ("Mindanao") போன்ற இடங்களில் சண்டை நடந்து கொண்டு இருந்தது. மார்ச் மாதம் 9ம் தேதி இரவு அமெரிக்க விமானப்படை விமானம் போயிங் B-29 சூப்பர்ஃபோர்ட்ரெஸ் தீயை உமிளும் அணுக்குண்டை ஜப்பானின் நகரின் மீது போட்டு கொஞ்ச நேரத்தில் 100,000 மக்களை கொன்று குவித்தது. அமெரிக்க-இங்கிலாந்தின் கூட்டு தாக்குதலால் அடுத்த ஐந்து மாதங்களில் ஜப்பானில் 66 நகரங்களில் பொதுமக்கள் 3,50,000 முதல் 5,00,000 பேர் தீக்கிரையாகி இறந்தனர். + +1945ம் ஆண்டு மே மாதம் ஆஸ்திரலிய படைகள் இந்தோனேசியா, மலேசியா, புரூணை, போன்ற நாடுகளின் ஆட்சியின் கீழ் இருந்த போர்னியோ தீவில் உள்ள எண்ணெய் வயல்களை கைப்பற்ற தீவிரம் காட்டின. மார்ச் மாதத்தில் அமெரிக்கா, பிரித்தானியா, சீனா போன்ற கூட்டுப்படைகள் வடக்கு பர்மாவில் ஜப்பான் படைகளைத் தோற்கடித்தன. பின்னர் பிரித்தானியா படை��ள் மியான்மர் நாட்டின் தலைநகரான ரங்னை அடைய மே மாதம் 3ம் தேதி ஆனது. 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் மேற்கு ஹுனான் போரில் சீன படைகள் எதிர் தாக்குதல் நடத்தத் துவங்கின. அமெரிக்க படைகள் மார்ச் மாதம் இமோஜீமாவையும் ஜூன் மாத இறுதியில் ஒகினவாவையும் ஜப்பானை கைப்பற்றி முன்னேறிக் கொண்டிருந்தது. அமெரிக்கப்படைகள் ஜப்பானை அழித்துக்கொண்டிருந்த அதே வேளையில் நேச நாடுகளின் நீர்மூழ்கிக்கப்பல்கள் ஜப்பானுக்கு எந்த நாட்டின் உதவியும் கிடைக்க விடாமல் தடுத்துக்கொண்டிருந்தது. + +1945ம் ஆண்டு ஜூலை மாதம் 11ம் தேதி நேச நாடுகளின் தலைவர்கள் ஜெர்மனியின் போட்ஸ்டாம் நகரின் சந்தித்தார்கள். அப்போது எந்த விதமான நிபந்தனையுமின்றி சரணடைவதாக ஒப்பந்தம் ("Potsdam Agreement") செய்ய உறுதியளிக்கப்பட்டது. அதே வேளையில் ஐக்கிய ராஜ்யம் பொது தேர்தலை சந்தித்தது அதில் கிளமெண்ட் அட்லீ வெற்றிபெற்றார். இரண்டாம் உலகப்போரின் தலைவராக கருத்தப்பட்ட வின்ஸ்டன் சர்ச்சில் தோழ்வியடைந்தார். + +ஜப்பான் நாடு 1945ம் ஆண்டு ஜூலை மாதம் 27ம் தேதி செய்துகொண்ட ஒப்பந்ததை மீறுவது கண்டு அமெரிக்காவும் இங்கிலாந்தும் சேர்ந்து ஆகஸ்ட் மாத துவக்கத்தில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா, நாகசாகி போன்ற நகரங்களில் அடுத்தடுத்து அணுக்குண்டு மழைபொழிந்தது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சரணடைய ஒப்புக்கொண்டு, செப்டம்பர் மாதம் 2ம் தேதி நேசப்படைகளின் கப்பலான மிசோரியில் வைத்து சண்டைமுடி கையோப்பம் இட்டு சரண்டைந்தனர். + +இரஷ்யாவின் செஞ்சேனை கூரில் தீவுகளைப் கைப்பற்றியது. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் ஜப்பான் போரை விடுத்து சரணடைய ஒப்புக்கொண்டது, ஆனால் இறுதியாக செப்டம்பர் 2, 1945 அன்று அமெரிக்க போர் கப்பல் யுஎஸ்எஸ் மிசோரி கப்பலில் வைத்து சரணடைந்தனர். + + + + + + +முதலாம் உலகப் போர் + +முதல் உலகப்போர் என்பது உலகம் தழுவிய அளவில் இடம்பெற்ற ஒரு போர். எனினும் இது பெரும்பாலும் ஐரோப்பாவிலேயே நடைபெற்றது. இப் போரில் நேச நாடுகள் என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் மைய நாடுகள் என்று அழைக்கப்பட்ட ஆஸ்திரியா, ஹங்கேரி, ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளும் எதிர்ப் பக்கங்களில் நின்று போரிட்டன. இதன் அளவும��, செறிவும் முன்னெப்பொழுதும் இல்லாத அளவு பெரிதாக இருந்தது. பெருமளவினர் சண்டையில் ஈடுபட்டிருந்ததோடு பெரும் தொகையில் இழப்புகளும் ஏற்பட்டன. 60 மில்லியன் ஐரோப்பியர்களை உள்ளடக்கிய சுமார் 70 மில்லியன் போர்வீரர்கள் சண்டையில் ஈடுபட்டிருந்தனர். புதிய தொழில்நுட்பங்களின் வழிவந்த இயந்திரத் துப்பாக்கிகள், உயர்தரமான கனரகப் பீரங்கிகள், மேம்பட்ட போக்குவரத்து, நச்சு வளிமம், வான்வழிப் போர்முறை, நீர்மூழ்கிகள் என்பன போரின் தாக்கத்தைப் பெரிதும் அதிகப்படுத்தின. போரில் 40 மில்லியன் பேருக்குக் காயங்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டன. இதில் குடிமக்களும், போராளிகளுமாகச் சுமார் 20 மில்லியன் பேர் இறந்தனர். போரினால் ஏற்பட்ட, முற்றுகைகள், புரட்சிகள், இன ஒழிப்பு, நோய்த் தொற்றுக்கள் என்பன மக்களுடைய துன்பங்களை மேலும் அதிகப்படுத்தின. இப் போர் 1914ம் ஆண்டு முதல் 1918ம் ஆண்டு வரை நடைபெற்றது. + +இப் போரினால், 20 ஆம் நூற்றாண்டின் எஞ்சிய காலம் முழுதும், அரசியலிலும், பண்ணுறவாண்மை தொடர்பிலும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. போரின் விளைவு காரணமாக, ஆஸ்திரோ-ஹங்கேரியப் பேரரசு, ரஷ்யப் பேரரசு, உதுமானிய பேரரசு என்பன சிதைவுற்றுத் துண்டுகள் ஆகின. செருமானியப் பேரரசு வீழ்த்தப்பட்டது. அது பெருமளவிலான நிலப்பகுதிகளை இழந்தது. இவ் விளைவுகள் காரணமாக ஐரோப்பாவிலும், மையக் கிழக்கிலும் நாடுகளின் எல்லைகள் மாற்றம் அடைந்தன. பழைய முடியாட்சிகளின் இடத்தில் பல பொதுவுடமை அரசுகளும், குடியரசுகளும் உருவாயின. மீண்டும் இவ்வாறான போர் ஏற்படாமல் தடுக்கும் நோக்கத்துடன், உலக வரலாற்றில் முதல் முறையாகப் பன்னாட்டு அமைப்பான நாடுகளின் சங்கம் (League of Nations) ஒன்று உருவானது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தங்களும், புதிதாக உருவான நாடுகளின் உறுதியற்ற தன்மைகளும், 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் ஒரு உலகப் போர் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக அமைந்தன. + +1871 ஆம் ஆண்டில் ஜேர்மனி ஒருங்கிணைக்கப்பட்டதும், 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஐரோப்பாவின் வல்லரசுகளிடையே இக்கட்டான அதிகாரச் சமநிலை நிலவியதும் இப் போர் உருவாவதற்கான அடிப்படைக் காரணங்களுள் அடங்கும். இவற்றுடன், 19 ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியிடம் நிலப்பகுதிகளை இழந்ததில் பிரான்சுக்கு ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வு; ஜேர்மனிக்கும், பிரித்தானியாவுக்கும் இடையே பொருளியல், படைத்துறை, குடியேற்றங்கள் தொடர்பான போட்டிகள்; பால்கன் பகுதிகளில் ஆஸ்திரோ-ஹங்கேரிய ஆட்சி தொடர்ச்சியான உறுதியற்ற நிலையில் இருந்தமை என்பனவும் இப் போருக்கான மேலதிக காரணங்களாகும். + +ஆஸ்திரியா நாட்டுப் பட்டத்து இளவரசரான பிரான்சிஸ் பெர்டினாண்டும், அவருடைய மனைவியும் காரில் சென்ற போது (1914 ஜுன் 28) சுட்டுக் கொல்லப்பட்டது போர் தொடங்குவதற்கான உடனடிக் காரணம் ஆயிற்று. சுட்டவன், காவ்ரீலோ பிரின்சிப்,செர்பியா நாட்டைச்சேர்ந்தவன். இதன் காரணமாகப் பழிவாங்கும் நோக்குடன், செர்பிய இராச்சியத்தின் மீது ஆஸ்திரியா படையெடுத்தது. இதனைத் தொடர்ந்து பல கூட்டணிகள் உருவாயின. பல ஐரோப்பிய நாடுகள் பேரரசு எல்லைகள் உலகின் பல பகுதிகளிலும் இருந்ததால் விரைவிலேயே போர் உலகம் முழுவதற்கும் விரிவடைந்தது. சில கிழமைகளுக்கு உள்ளாகவே பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் போரில் இறங்கிவிட்டன. போர் முக்கியமாக நேச நாடுகள், மைய நாடுகள் எனப்பட்ட இரண்டு கூட்டணிகளுக்கு இடையே நடை பெற்றது. நேச நாடுகளின் பக்கத்தில் தொடக்கத்தில் பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம், ரஷ்யா என்பனவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. பின்னர் பல நாடுகள் இக் கூட்டணியில் இணைந்தன. குறிப்பாக, ஆகஸ்ட் 1914ல் ஜப்பானும், ஏப்ரல் 1915 இல் இத்தாலியும், ஏப்ரல் 1917ல் ஐக்கிய அமெரிக்காவும் இணைந்தன. ஐரோப்பாவின் மையப் பகுதியில் இருந்ததால் மைய நாடுகள் என அழைக்கப்பட்ட கூட்டணியில், ஜெர்மனியும், ஆஸ்திரியாவும் அவற்றோடு சேர்ந்த பேரரசுகளும் இருந்தன. ஓட்டோமான் பேரரசு 1914 அக்டோபரில் இக் கூட்டணியில் இணைந்தது. ஓராண்டு கழித்து பல்கேரியாவும் இதில் இணைந்தது. போர் விமானங்களும், போர்க் கப்பல்களும், நீர்மூழ்கிக் கப்பல்களும் முதன் முதலாக இந்தப் போரில் தான் பயன்படுத்தப்பட்டன. போர் முடிந்தபோது, நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, ஸ்பெயின், ஸ்கண்டினேவிய நாடுகள் மொனாக்கோ என்பன மட்டுமே ஐரோப்பாவில் நடுநிலையில் இருந்தன. எனினும் இவற்றுட் சில நாடுகள் போர்புரிந்த நாடுகளுக்குப் பொருளுதவிகள் செய்திருக்கக்கூடும். + +போர் பெரும்பாலும் ஐரோப்பாக் கண்டத்தைச் சுற்றியுள்ள பல முனைகளில் இடம்பெற்றது. மேற்கு முனை எவருக்கும் சொந்தமில்லாத பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பதுங்கு குழிகளும் அரண்களும் நிறைந்த பகுதியாக இருந்தது. இவ்வரண்கள் 475 மைல்கள் தூரத்துக்கு (600 கிலோ மீட்டருக்கு மேல்) அமைந்திருந்தன. இது பதுங்கு குழிப் போர் என அழைக்கப்படலாயிற்று. கிழக்குப் போர் முனை பரந்த வெளிகளைக் கொண்டிருந்ததாலும், தொடர்வண்டிப் பாதை வலையமைப்பு அதிகம் இல்லாதிருந்ததாலும் மேற்கு முனையைப்போல் யாருக்கும் வெற்றியில்லாத நிலை காணப்படவில்லை. எனினும் போர் தீவிரமாகவே நடைபெற்றது. பால்கன் முனை, மையக் கிழக்கு முனை, இத்தாலிய முனை ஆகிய முனைகளிலும் கடும் சண்டை நடைபெற்றது. அத்துடன், கடலிலும், வானிலும் சண்டைகள் இடம்பெற்றன. + +1914 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி பாஸ்னிய சேர்பிய மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன் ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில் வைத்துச் சுட்டுக் கொன்றான். பிரின்சிப், தெற்கு சிலாவியப் பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ ஹங்கேரியில் இருந்து விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட இளம் பாஸ்னியா என்னும் அமைப்பின் உறுப்பினன். சரயேவோவில் நடைபெற்ற இக் கொலையைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வுகளைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது. ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனச் சேர்பியாவைக் கோரியது. எனினும், சேர்பியா இதற்குச் செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ ஹங்கேரி சேர்பியா மீது போர் தொடுத்தது. ஐரோப்பிய நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் ஒன்று செய்து கொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமாகவும், சிக்கலான பன்னாட்டுக் கூட்டணிகள் காரணமாகவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபடவேண்டி ஏற்பட்டது. + +ஜெர்மனிக்கு, பிரித்தானியாவைப் போல பெரிய பேரரசின் வணிகச் சாதகநிலை இல்லாமல் இருந்தபோதும், 1914 ஆம் ஆண்டளவில் அந் நாட்டின் தொழில்துறை பிரித்தானியாவினதைக் காட்டிலும் பெரிதாகி விட்டது. இதனால், தத்தமது கடற்படைகளை வலுவாக வைத்திருக்கவேண்டி போருக்கு முந்திய ஆண்டுகளில் இரு நாடுகளும் பெருமளவிலான போர்க் கப்பல்களைக் கட்டின. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான இந்தக் கடற்படைப் போட்டி 1906 ஆம் ஆண்டளவில் எச்எம்எஸ் டிரெட்நோட் (HMS Dreadnought) என்னும் போர்க்கப���பலின் வெள்ளோட்டத்துடன் மேலும் தீவிரமானது. இப் போர்க் கப்பலின் அளவும், வலுவும் இதற்கு முந்திய கப்பல்களை காலம் கடந்தவை ஆக்கின. பிரித்தானியா பிற துறைகளிலும் தனது கப்பற்படையின் முன்னணி நிலையைப் பேணிவந்தது. + +டேவிட் ஸ்டீவன்சன் என்பார் இந்த ஆயுதப் போட்டியை, தன்னைத்தானே சுழல்முறையில் வலுப்படுத்திக்கொண்ட உச்சநிலையிலான படைத்துறைத் தயார்நிலை என விளக்கினார்." டேவிட் ஹெர்மான் கப்பல் கட்டும் போட்டியை போரை நோக்கிய ஒரு நகர்வாகவே பார்த்தார். எனினும் நீல் பெர்கூசன் என்பார், பிரித்தானியா தனது முன்னணி நிலையைத் தக்க வைத்துக் கொள்ளும் வலிமையைக் கொண்டிருந்ததால், ஏற்படவிருந்த போருக்கான காரணமாக இது இருக்க முடியாது என வாதிட்டார். இந்த ஆயுதப் போட்டிக்கான செலவு பிரித்தானியா, ஜெர்மனி ஆகிய இரு நாடுகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தின. பிரித்தானியா, ஜேர்மனி, பிரான்ஸ், ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி, இத்தாலி ஆகிய பெரிய வல்லரசுகளின் ஆயுதங்களுக்கான மொத்தச் செலவு 1908 க்கும் 1913 க்கும் இடையில் 50% கூடியது. + +ஜெர்மனி, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட படைதிரட்டல் திட்டங்கள் பிணக்குகளைத் தாமாகவே தீவிரமாக்கின எனப் பல அரசியல் அறிஞர்கள் கருதுகின்றனர். பல மில்லியன் கணக்கான படையினரைச் செயற்படவைத்தல், நகர்த்துதல், வசதிகள் அளித்தல் போன்றவற்றின் சிக்கலான தன்மைகளினால், தயார்ப் படுத்துதலுக்கான திட்டங்களை முன்னராகவே தொடங்கவேண்டி இருந்தது. இத்தகைய தயார்ப்படுத்தல் உடனடியாகவே தாக்குதலை நடத்தவேண்டிய நிலையையும் நாடுகளுக்கு ஏற்படுத்தியது. + +குறிப்பாக, ஃபிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) என்னும் வரலாற்றாளர் ஜேர்மனியின் ஸ்கீல்பென் திட்டத்தின் உள்ளார்ந்த தீவிரத்தன்மை பற்றி எடுத்துக்காட்டினார். ஜேர்மனிக்கு இரண்டு முனைகளில் போரிடவேண்டிய நிலை இருந்ததனால் ஒருமுனையில் எதிரியை விரைவாக ஒழித்துவிட்டு அடுத்த முனையில் கவனம் செலுத்தவேண்டிய தேவை இருந்தது. இதனால், வலுவான தாக்குதல் ஒன்றின் மூலம் பெல்ஜியத்தைக் கைப்பற்றிக்கொண்டு, பிரான்சின் படைகள் தயாராகுமுன்பே அதனைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதும் திட்டமாக இருந்தது. இதன் பின்னர் ஜேர்மன் படையினர் தொடர்வண்டிப் பாதை வழியாகக் கிழக்கு நோக்கிச் சென்று மெதுவாகத் த���ாராகிக் கொண்டிருக்கும் ரஷ்யப் படைகளை அழிப்பது திட்டம். + +பிரான்சின் திட்டம் 17, ஜேர்மனியில் தொழிற்றுறை மையமான ரூர் பள்ளத்தாக்கைத் (Ruhr Valley) தாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. கோட்பாட்டு அடிப்படையில் இது, ஜேர்மனி நவீன போர் நடவடிக்கைகளில் ஈடுபடும் வலிமையை ஒழித்துவிடும். + +ரஷ்யாவின் திட்டம் 19, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனி, ஓட்டோமான்கள் ஆகியோருக்கு எதிராக ஒரே நேரத்தில் தாக்குதல்களைத் தொடங்க வேண்டுமென எதிர்பார்த்தது. எனினும், திருத்தப்பட்ட திட்டம் 19 இன் படி ஆஸ்திரியா-ஹங்கேரியே முதன்மை இலக்காகக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் கிழக்குப் பிரசியாவுக்கு எதிராகப் படைகளை அனுப்புவதற்கான தேவை குறைகின்றது. + +மூன்று திட்டங்களுமே விரைவாகச் செயற்படுவது வெற்றியை முடிவு செய்யும் என்னும் கருத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தன. விரிவான கால அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. போருக்கான ஆயத்தங்கள் தொடங்கிய பின் திரும்பிப் பார்க்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு. + +முன்னாள் ஐக்கிய அமெரிக்க சனாதிபதியான வூட்ரோ வில்சனும், வேறு சிலரும் போருக்கான காரணமாக இராணுவவாதத்தைக் (militarism) குற்றம் சாட்டினர். ஜேர்மனி, ரஷ்யா, ஆஸ்திரியா-ஹங்கேரி போன்ற நாடுகளில் வல்லாண்மை வாதிகளும், படைத்துறைத் தலைவர்களும் கூடிய அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றனர் என்றும், சனநாயகத்தை அமுக்கிவிட்டு இராணுவ அதிகாரத்தைப் பெருக்கிக் கொள்வதற்கான அவர்களின் ஆசையின் விளைவே போர் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்தக் கருத்து ஜேர்மனிக்கு எதிரான பரப்புரைகளில் பெரிதும் பயன்பட்டது. 1918 ஆம் ஆண்டளவில் ஜேர்மனியின் முயற்சிகள் தோல்வியடையத் தொடங்கியபோது இரண்டாம் கெய்சர் வில்கெல்ம் போன்ற தலைவர்கள் விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன. அத்துடன், இராணுவவாதமும், வல்லாண்மையியமும் (aristocracy) முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பொதுவான கோரிக்கைகளும் உருவாகின. இந்த அடிப்படை 1917 ல் ரஷ்யா சரணடைந்ததன் பின்னர், அமெரிக்கா போரில் பங்குபற்றுவதற்கான நிலைமையைத் தோற்றுவித்தது. + +நேச நாடுகளின் கூட்டணியின் முக்கிய பங்காளிகளான பெரிய பிரித்தானியாவும், பிரான்சும் மக்களாட்சியைக் கொண்ட நாடுகள். இவை ஜெர்மனி, ஆஸ்திரியா-ஹங்கேரி, ஓட்டோமான் பேரரசு போன்ற சர்வாதிகார நாடுகளுடன் போரிட்டன. நேச நாடுகளில் ஒன்றாகிய ரஷ்யா 1917 ஆம் ஆண்டு வரை ஒரு பேரரசாக இருந்தது, எனினும் அது ஆஸ்திரியா-ஹாங்கேரியினால் சிலாவிய மக்கள் ஒடுக்கப்படுவதை எதிர்த்தது. இப் பின்னணியில் இப் போர் தொடக்கத்தில் சனநாயகத்துக்கும், சர்வாதிகாரத்துக்கும் இடையிலான போராகவே பார்க்கப்பட்டது. எனினும், போர் தொடர்ந்தபோது இது அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. + +நாடுகளின் சங்கமும் (League of Nations), ஆயுதக்குறைப்பும் உலகிக் நிலைத்த அமைதியை ஏற்படுத்தும் என வில்சன் நம்பினார். எச். ஜி. வெல்ஸ் என்பாரின் கருத்தொன்றைப் பின்பற்றி போரை, "எல்லாப் போர்களையும் முடித்து வைப்பதற்கான போர்" என விபரித்தார். பிரித்தானியாவும், பிரான்சும் கூட இராணுவவாதத்தில் சிக்கியிருந்த போதும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தை அடைவதற்காக, அவர்களுடன் சேர்ந்து போரிட அவர் தயாராக இருந்தார். + +பிரிட்ஸ் பிஷர் (Fritz Fischer) போருக்காகப் பெரும்பாலும் ஜேர்மனியின் வல்லாண்மைவாதத் தலைவர்களையே குற்றஞ்சாட்டினார். ஜேர்மனியின் சமூக சனநாயகக் கட்சி பல தேர்தல்களில் வெற்றிபெற்று இருந்தது. அவர்களுடைய தங்களுடைய வாக்கு விகிதத்தை அதிகரித்து 1912 ஆம் ஆண்டில் பெரும்பான்மைக் கட்சியானது. எனினும் திரிவு செய்யப்பட்ட அவைகளுக்கு, கெய்சருடன் ஒப்பிடும்போது குறைவான அதிகாரங்களே இருந்தன. இச் சூழலில் ஒருவகையான அரசியல் புரட்சி ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாக அஞ்சப்பட்டது. ரஷ்யாவிலும் படைப் பெருக்கமும், 1916-1917 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டிய சீர்திருத்த நடைவடிக்கைகளும் நடந்து வந்தன. இவைகளுக்கு முன்பே போரில் ரஷ்யா தோல்வியுற்று, ஜேர்மனி ஒன்றிணைக்கப்படக் கூடிய நிலை இருந்தது. தனது பிந்திய ஆக்கங்களில், ஜேர்மனி 1912 ஆம் ஆண்டிலேயே போரைத் திட்டமிட்டு விட்டதாக பிஷர் வாதித்தார். + +வரலாற்றாளரான சாமுவேல் ஆர். வில்லியம்சன் போரில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் பங்களிப்பை வலியுறுத்தினார். சேர்பியத் தேசியவாதமும், ரஷ்யாவுக்கு பால்க்கன் பகுதி தொடர்பில் இருந்த குறிக்கோள்களும், 17 வெவ்வேறு நாட்டினங்களைக் கொண்டிருந்த முடியாட்சியைச் சீர்குலைத்ததாக அவர் கருதினார். ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு எதிராக ஒரு வரையறுக்கப்பட்ட போரையே எதிர்பார்த்தது என்றும், வலுவான ஜேர்மனியின் ஆதரவ��� ரஷ்யாவைப் போரிலிருந்து விலக்கி வைத்து பால்கனில் அதற்கு இருக்கும் கௌரவத்தைக் குறைக்கும் என அது எண்ணி இருந்ததாகவும் அவர் கருத்து வெளியிட்டார். + +போருக்கு முந்திய காலத்தில் வல்லரசுகளின் வெளிநாட்டுக் கொள்கைகளின் இலக்கு அதிகாரச் சமநிலையைப் பேணிக் கொள்வதாகும். இது, வெளிப்படையானதும், இரகசியமானதுமான கூட்டணிகளையும், ஒப்பந்தங்களையும் உள்ளடக்கிய விரிவான வலையமைப்புக்களோடு தொடர்புபட்டது. எடுத்துக் காட்டாக பிராங்கோ-பிரஷ்யப் போருக்குப் (1870–71) பின்னர், தனது மரபுவழியான எதிரியான பிரான்சின் பலத்தைச் சமப்படுத்துவதற்கு வலுவான ஜெர்மனியைப் பிரித்தானியா விரும்பியது. ஆனால், பிரித்தானியாவின் கடற்படைக்குச் சவாலாக ஜேர்மனி தனது கப்பற்படையைக் கட்டியெழுப்ப முற்பட்டபோது, பிரித்தானியா தனது நிலையை மாற்றிக்கொண்டது. ஜேர்மனியின் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காகத் துணை தேடிய பிரான்ஸ், ரஷ்யாவைக் கூட்டாளி ஆக்கிக்கொண்டது. ரஷ்யாவிடம் இருந்து அச்சுறுத்தலை எதிர்கொண்ட ஆஸ்திரியா-ஹங்கேரி, ஜேர்மனியின் ஆதரவை நாடியது. + +முதல் உலகப் போர் தொடங்கிய பின்னர், இவ்வாறான ஒப்பந்தங்கள் ஓரளவுக்கு மட்டுமே எந்தநாடு எந்தப் பக்கத்துக்குச் சார்பாகப் போரிட்டது என்பதை முடிவு செய்தது. இத்தாலி, ஆஸ்திரியா-ஹங்கேரியுடனும், ஜேர்மனியுடனும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. எனினும் அது அந் நாடுகளுக்குச் சார்பாகப் போரில் இறங்கவில்லை. அது பின்னர் நேச நாடுகளுக்கு ஆதரவாக இருந்தது. எல்லாவற்றிலும் குறிப்பிடத்தக்க ஒப்பந்தம் ஜேர்மனிக்கும், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும் இடையே முதலில் தற்பாதுகாப்புக்காகச் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஆகும். இதனை 1909 ஆம் ஆண்டில் ஜேர்மனி விரிவுபடுத்தி, ஆஸ்திரியா-ஹங்கேரி போரைத் தொடங்கினாலும் கூட ஜேர்மனி அதன் பக்கம் இருக்கும் என உறுதி கூறியது. + +விளாடிமிர் லெனின் பேரரசுவாதமே போருக்கான காரணம் எனக் குறிப்பிட்டார். இவர் கார்ல் மார்க்ஸ், ஆங்கிலப் பொருளியலாளரான ஜான் ஏ. ஹொப்சன் ஆகியோரின் பொருளியல் கோட்பாடுகளை எடுத்துக் காட்டினார். இவர்கள், விரிவடையும் சந்தைகளுக்கான போட்டி உலகளாவிய பிணக்குகளை உருவாக்கும் என்று எதிர்வு கூறியிருந்தனர். பிரித்தானியாவின் முதன்மையான பொருளியல் நிலை, செருமானியத் தொழில் துறையி���் விரிவான வளர்ச்சி அச்சுறுத்தியது என்றும், பெரிய பேரசு ஒன்றின் சாதகநிலை செருமனிக்கு இல்லாத காரணத்தால், அது செருமானிய மூலதனங்களுக்கான இடங்களுக்காகப் பிரித்தானியாவுடன் தவிர்க்கமுடியாதபடி போரிட வேண்டியிருந்தது என்றும் லெனின் எடுத்துக் காட்டினார். இவ் வாதம் போர்க்காலத்தில் பெரிதும் பெயர் பெற்றிருந்ததுடன், பொதுவுடமையியத்தின் வளர்ச்சிக்கும் துணையாக இருந்தது. + +அமெரிக்காவில் பிராங்க்லின் ரோஸ்வெல்ட்டின் கீழ் உள்நாட்டுச் செயலாளராக இருந்த கோர்டெல் ஹல் என்பார், வணிகத் தடைகளே முதல் உலகப் போர், இரண்டாம் உலகபோர் இரண்டுக்குமான அடிப்படைக் காரணங்கள் என நம்பினார். 1944 ஆம் ஆண்டில், பிணக்குகளுக்குக் காரணங்கள் என அவர் நம்பிய வணிகத் தடைகளைக் குறைப்பதற்காக பிரெட்டன் வூட்ஸ் ஒப்பந்தம் என்னும் ஒப்பந்தத்தை உருவாக்குவதில் உதவினார். + +பால்க்கன் பகுதிகளில் ஆஸ்திரியா-ஹங்கேரியின் செல்வாக்குக் குறைந்து, பரந்த-சிலேவியா இயக்கம் வளர்ச்சி பெற்றுவந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கும், சேர்பியாவுக்கும் இடையிலான போர் தவிர்க்க முடியாததெனவே கருதப்பட்டது. ஆஸ்திரிய எதிர்ப்பு உணர்வு அதிகமாகக் காணப்பட்ட சேர்பியாவின் வளர்ச்சியுடன் இனவழித் தேசியம் பொருந்தி வந்தது. ஆஸ்திரியா-ஹங்கேரி, முன்னைய ஓட்டோமான் பேரரசின் மாகாணமாக இருந்ததும், சேர்பியர்கள் அதிகம் வாழ்ந்து வந்ததுமான பொஸ்னியா-ஹெர்சகொவினாவை 1878 ஆம் ஆண்டில் கைப்பற்றிக் கொண்டது. 1908 ஆம் ஆண்டில் இது முறையாக ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் இணைக்கப்பட்டது. அதிகரித்து வந்த இன உணர்வுகளின் வளர்ச்சி, ஓட்டோமான் பேரரசின் வீழ்ச்சியுடனும் பொருந்தி வந்தது. இன மற்றும் மதப் பிணைப்புக்கள் காரணமாகவும், கிரீமியப் போர்க் காலத்திலிருந்து ஆஸ்திரியாவுடன் இருந்து வந்த போட்டி காரணமாகவும், ரஷ்யா பரந்த-சேர்பியா இயக்கத்துக்கு ஆதரவாக இருந்தது. தோல்வியடைந்த ரஷ்ய-ஆஸ்திரிய ஒப்பந்தம், நூற்றாண்டுகளாக பால்க்கன் பகுதித் துறைமுகங்கள் மீது ரஷ்யாவுக்கு இருந்த ஆர்வம் என்பனவும் இதற்கான காரணங்களாக இருந்தன. + +முடிக்குரிய இளவரசர் கொல்லப்பட்டதை ஒரு சாக்காக வைத்து சேர்பியப் பிரச்சினையைக் கையாள ஆஸ்திரியா-ஹங்கேரிய அரசு முற்பட்டது. ஜேர்மனியும் இதற்கு ஆதரவாக இருந்தது. 1914 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் த��தி, பத்துக் கோரிக்கைகளுடன் கூடிய காலக்கெடு ஒன்றை ஆஸ்திரியா-ஹங்கேரி, சேர்பியாவுக்கு விதித்தது. இக் கோரிக்கைகளுட் சில மிகவும் கடுமையாக இருந்ததால் அதன் சாத்தியப்பாடுகள் குறித்து ஐயம் வெளியிட்ட சேர்பியா ஆறாவது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. பதில் அளிப்பதற்கான தொடக்க வரைவுகளில் இந்த ஆறாவது கோரிக்கையை ஏற்க சேர்பியா விருப்பம் தெரிவித்தது எனினும், ரஷ்யாவின் ஆதரவில் நம்பிக்கை வைத்த சேர்பியா பின்னர் இறுதி வரைவில் அதனை நீக்கிவிட்டது. அத்துடன் ஆயத்த நிலைக்கும் ஆணை பிறப்பித்தது. இதற்குப் பதிலாக ஜூலை 28 ஆம் தேதி ஆஸ்திரியா-ஹங்கேரி போர் அறிவிப்பை வெளியிட்டது. தொடக்கத்தில் ரஷ்யா ஆஸ்திரியாவின் எல்லையைக் குறிவைத்து பகுதித் தயார் நிலையொன்றுக்கு ஆணை பிறப்பித்தது. எனினும், ரஷ்யத் தளபதிகள், பகுதித் தயார்நிலை சாத்தியம் அற்றது என "சார்" (Czar) மன்னருக்குத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜூலை 31 ஆம் நாள் முழுத் தயார்நிலை ஆணை பிறப்பிக்கப்பட்டது. போருக்கான ஜேர்மனியின் ஸ்கிளீபென் திட்டம் விரைவாகப் பிரான்சைத் தாக்குவதை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், ரஷ்யா தயார்நிலைக்கு வர அனுமதிக்க முடியாத நிலை ஜேர்மனிக்கு ஏற்பட்டது. இதனால், ஆகஸ்ட் முதலாம் தேதி ஜேர்மனி, ரஷ்யா மீது போர் தொடுப்பதாக அறிவித்தது. இரண்டு நாட்களுக்குப் பின்னர் பிரான்சின் மீதும் போர் அறிவிப்புச் செய்யப்பட்டது. இதன் பின்னர், பாரிஸ் நோக்கிப் படை நடத்துவதற்காக நடுநிலை நாடான பெல்ஜியத்தின் இறைமையை மீறி அதனூடாகச் சென்றது. 1830 ஆம் ஆண்டின் பெல்ஜியப் புரட்சியின் தொடர்பாகச் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றின்படி பெல்ஜியத்தின் நடுநிலைமையைப் பிரித்தானியா உறுதிப்படுத்தி இருந்தது. இதன் காரணமாகப் பிரித்தானியாவும் போரில் தலையிட வேண்டியதாயிற்று. இத்துடன் ஆறு ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து போரில் ஈடுபட்டிருந்தன. இது நெப்போலியன் காலத்துக்குப் பிற்பட்டு ஐரோப்பாக் கண்டத்தில் இடம் பெற்ற மிகப் பெரிய போராக இருந்தது. + +மைய நாடுகளின் போர் வியூகம் தொடர்புக் குறைபாடுகள் காரணமாகப் பாதிப்புக்கு உள்ளானது. ஆஸ்திரியா-ஹங்கேரியின் சேர்பியா மீதான படையெடுப்புக்கு ஆதரவு அளிக்க ஜேர்மனி ஒப்புக்கொண்டிருந்தது. எனினும், இதன் விளக்கம் குறித்து இரு நாடுகளிடையே வேறு���ாடுகள் நிலவின. ஆஸ்திரியா-ஹங்கேரியத் தலைவர்கள், தமது வடக்கு எல்லையில் ரஷ்யாவைக் கவனித்துக் கொள்ளும் பணியை ஜேர்மனி ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்த்தனர். ஆனால், ஜேர்மனியோ, பெரும்பாலான ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகள் ரஷ்யாவுடனான எல்லைக்கு அனுப்பப்படும் என்றும், அதே வேளை தாம் பிரான்சைக் கையாள்வதென்றும் திட்டமிட்டது. இக் குழப்ப நிலையினால், ஆஸ்திரியா-ஹங்கேரியப் படைகளைப் பிரித்து ரஷ்ய எல்லைக்கும், சேர்பியாவுக்கும் அனுப்பவேண்டி இருந்தது. + +போரின் தொடக்ககால நடவடிக்கைகளில் ஒன்று பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றை உள்ளடக்கி ஆப்பிரிக்காவில் இடம் பெற்றது. ஆகஸ்ட் 7 ஆம் நாள், பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் பாதுகாப்புப் பகுதியான டோகோலாந்துக்குள் புகுந்தன. ஆகஸ்ட் 10 ஆம் தேதி தென்மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்த ஜேர்மனியின் படைகள் தென்னாபிரிக்காவைத் தாக்கின. போர்க்காலம் முழுதும் தீவிரமான தாக்குதல்கள் ஆப்பிரிக்காவிலும் அவ்வப்போது நிகழ்ந்த வண்ணமே இருந்தன. +சேர்பியப் படைகள், ஆஸ்திரியா-ஹங்கேரிக்கு எதிரான சேர்ச் சண்டை எனப்பட்ட சண்டையில் ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் இருந்து ஈடுபட்டிருந்தன. இவை, டிரினா, சாவா ஆகிய ஆறுகளின் தெற்குக் கரையில் இருந்து தற்காப்புத் தாக்குதலை நடத்தின. அடுத்து இரண்டு கிழமைகளில் ஆஸ்திரியா-ஹங்கேரித் தாக்குதல்கள் பெரும் இழப்புக்களுடன் பின்னடைவுகளைச் சந்தித்தது. நேச நாடுகள் கூட்டணியின் குறிப்பிடத்தக்க முதல் வெற்றியான இது, ஆஸ்திரியாவின் விரைவான வெற்றி குறித்த கனவுகளைத் தகர்த்தது. இதனால், ஆஸ்திரியா தனது படைகளில் பெரும்பகுதியை சேர்பிய முனையில் ஈடுபடுத்த வேண்டி ஏற்பட்டதால், ரஷ்ய முனையிலான நடவடிக்கைகள் பலவீனமாயின. + +தொடக்கத்தில் இடம்பெற்ற எல்லைச் சண்டைகளில் (14 ஆகஸ்ட்–24 ஆகஸ்ட்) ஜேர்மனிக்குப் பல வெற்றிகள் கிடைத்தன. எனினும் ரஷ்யா கிழக்குப் பிரஷ்யாவைத் தாக்கியதால் மேற்கு முனையில் போராட வேண்டிய ஜேர்மன் படைகள் திசை திரும்பவேண்டிய நிலை ஏற்பட்டது. தானென்பர்க் சண்டை (17 ஆகஸ்ட் – 2 செப்டெம்பர்) என ஒருங்கே அழைக்கப்பட்ட தொடரான பல சண்டைகளில் ஜேர்மனி ரஷ்யாவைத் தோற்கடித்தது. எனினும் ரஷ்யப் போரினால் கவனம் திசை திரும்பியதால், போதிய வேகமின்மை காரணமாக ஜேர்மனியின் தள��திகள் எதிர்பாராதபடி, மற்ற முனையில் பிரச்சினைகள் ஏற்பட்டன. ஸ்கிளீபென் திட்டப்படி, வலப்புறத்தில் ஜேர்மன் படைகள் பாரிசுக்கு மேற்குப்புறம் முன்னேற வேண்டும். ஆனால், குதிரைகளால் இழுக்கப்பட்ட போக்குவரத்து வண்டிகளில் இடவசதி, வேகம் என்பன போதாமையினால், ஜேர்மனியின் வழங்கல் பாதிக்கப்பட்டது. இதனால் இறுதியாக பிரித்தானிய, பிரான்சியப் படைகள் ஜேர்மனியின் படைகளை மார்னே முதற் சண்டை (5 செப்டெம்பர்–12 செப்டெம்பர்) என அழைக்கப்பட்ட போரில் பாரிசுக்குக் கிழக்கே தடுத்து நிறுத்தின. இதனால் மைய நாடுகள் விரைவான வெற்றியைப்பெறும் வாய்ப்பு இல்லாமல் ஆக்கப்பட்டதுடன், அவர்கள் இரு முனைகளில் போரிடவேண்டிய தேவையையும் ஏற்படுத்தியது. ஜேர்மனியின் படைகள் பிரான்சுக்குள் புகுந்து பாதுகாப்பான நிலையில் இருந்ததுடன், பிரித்தானிய பிரான்சியப் படைகளில் 230,000 பேரை நிரந்தரமாகச் செயலிழக்கச் செய்தது. இது ஜேர்மனி இழந்ததிலும் அதிகமாகும். + +நியூசிலாந்து ஆகஸ்ட் 30 ஆம் தேதி இன்று மேற்கு சமோவா என அழைக்கப்படும் அன்றைய ஜேர்மன் சமோவாவைக் கைப்பற்றியது. செப்டெம்பர் 11 ஆம் தேதி, ஆஸ்திரேலிய கடற்படை மற்றும் இராணுவப் படைகள், ஜேர்மன் நியூ கினியாவின் ஒரு பகுதியாக இருந்த இன்று நியூ பிரிட்டன் என அழைக்கப்படும் நியூ பொம்மேர்ன் தீவில் இறங்கின. ஜேர்மனியின் மைக்குரோனீசியக் குடியேற்றங்களையும்; சிங்டாவோ சண்டைக்குப் பின், சீனாவின் ஷாண்டாங் குடாநாட்டில் இருந்த ஜேர்மனியின் நிலக்கரித் துறைமுகமான சிங்டாவோவையும் ஜப்பான் கைப்பற்றிக் கொண்டது. சில மாதங்களிலேயே நேச நாடுகளின் படைகள் பசிபிக் பகுதியில் இருந்த எல்லா ஜேர்மனியின் ஆட்சிப் பகுதிகளையும் கைப்பற்றிக் கொண்டன. + +முதலாம் உலகப் போருக்கு முந்திய படைத்துறை உத்திகள் தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு இணையாக வளரத் தவறியிருந்தன. இப்போது, பெரும்பாலான போர்களில் காலங்கடந்த முறைகளால் ஊடறுக்க முடியாத கவர்ச்சிகரமான பாதுகாப்பு முறைமைகள் உருவாக்கப்பட்டன. முட்கம்பி வேலிகள் பெருமளவில் காலாட் படைகள் முன்னேறுவதற்குத் தடையாக இருந்தன. தொலைதூர கனரக ஆயுதங்கள், 1870 ஆண்டின் ஆயுதங்களைக் காட்டிலும் கூடிய பாதிப்புக்களை விளைவிக்கக் கூடியனவாக இருந்ததுடன், இயந்திரத் துப்பாக்கிகளுடன் சேர்ந்து, திறந்த வெளிகளைப் பட���கள் கடந்து செல்வதைக் கடினமாக்கியிருந்தன. இப் போரில் ஜேர்மனி நச்சு வளிமங்களைப் போராயுதமாக அறிமுகப்படுத்தியது. விரைவிலேயே எதிரணியும் இதனைப் பயன்படுத்தத் தொடங்கியது. எனினும், சண்டைகளை வெல்வதில் இது முக்கிய பங்கு வகித்ததாகத் தெரியவில்லை. நச்சு வளிமங்களின் விளைவுகள் கொடூரமானவையாக இருந்தன. தாக்கப்பட்டவர்கள் மெதுவாகவும், கூடிய வலிகளுடனும் இறந்தனர். இப் போரில், நச்சு வளிமங்கள் மிகுந்த அச்சத்தை விளைவிப்பனவாகவும், மிகவும் கொடூரமான நினைவுகளை ஏற்படுத்தியன ஆகவும் இருந்தன. இரு அணித் தளபதிகளுமே பதுங்குகுழி நிலைகளைப் பாரிய இழப்பின்றித் தகர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியத் தவறியிருந்தனர். காலப் போக்கில், தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதிய தாக்குதல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் குறிப்பிடத்தக்கது "தாங்கி" ஆகும். பிரித்தானியாவும், பிரான்சுமே இதனை முக்கியமாகப் பயன்படுத்தினர். இவர்களிடமிருந்து கைப்பற்றியவற்றையும், தாமே உருவாக்கிய குறைந்த அளவு தாங்கிகளையும் ஜேர்மனியும் பயன்படுத்தியது. + +முதலாம் மார்னே சண்டைக்குப் பின்னர், நேச நாடுகளின் படைகளும், ஜேர்மனியின் படைகளும், கடல் நோக்கிய ஓட்டம் (Race to the Sea) எனப்பட்ட, தொடரான பல சுற்றுவழி நகர்வுகளை மேற்கொள்ளலாயின. பிரித்தானியாவும், பிரான்சும் லோரைனில் இருந்து பெல்ஜியத்தின் பிளெமியக் கரை வரை நீண்டிருந்த பதுங்குகுழிகளில் இருந்து போரிட்ட ஜேர்மனியின் படைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. பிரித்தானியாவும், பிரான்சும் தாக்குதலில் குறியாக இருந்தபோது, ஜேர்மனியின் படைகள் கைப்பற்றப்பட்ட நிலப்பகுதிகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. இதனால், பாதுகாப்புக்கு ஏற்றவாறு ஜேர்மனியின் பதுங்குகுழிகள் எதிரிப்படைகளினதைக் காட்டிலும் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தன. ஆனால், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் பதுங்குகுழிகள் ஜேர்மனியின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுக்கும் வரையிலான தற்காலிகத் தேவைக்கானவையாகவே இருந்தன. எவருமே வெற்றிபெற முடியாதிருந்த இந்த நிலையை மாற்றுவதற்கு, இரு பகுதியினருமே அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிகளைப் பயன்படுத்தலாயினர். 1915 ஆம் ஆண்டு ஏப்ரலில், 1899 இலும் 1907 இலும் ஏற்படுத்தப்பட்ட ஹேக் மாநாட்டு முடிவுகளுக்கு எதிராக, ஜே��்மனி குளோரீன் வளிமத்தை முதன்முதலாகப் பயன்படுத்தியது. இவ்வளிமம் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து நேசப் படைகள் பின்வாங்கியதால், அவற்றின் முன்னரங்க நிலைகளில் 6 கிலோமீட்டர் (4 மைல்கள்) நீளமான வெளியொன்றை ஏற்படுத்த ஜேர்மனியால் முடிந்தது. கனடாவின் படைகள் இரண்டாம் ஈபிரெ சண்டையில் (Second Battle of Ypres) இந்த உடைப்பை மூடிவிட்டனர். +சொம்மா சண்டையின் முதல் நாளான 1916 ஜூலை முதலாம் தேதி பிரித்தானியப் படைகளுக்கு மறக்கமுடியாத நாளாக விளங்கியது. இந் நாளில் அப்படைகளுக்கான பாதிப்பு 57,470 போராக இருந்தது. இதில் 19,240 பேர் இறந்துவிட்டனர். பெரும்பாலான பாதிப்புக்கள் தாக்குதல் தொடங்கிய முதல் மணிநேரத்தில் இடம்பெற்றன. சொம்மாத் தாக்குதல் முழுவதிலுமான பிரித்தானியப் படைகளின் இழப்பு சுமார் ஐந்து இலட்சம் பேராகும். + +அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எந்தத் தரப்பினருமே எதிர்த்தரப்பினருக்கு முடிவான தோல்வியை ஏற்படுத்த முடியவில்லை. எனினும், வேர்டனில் 1916 ஆம் ஆண்டு முழுதும் தொடர்ந்த ஜேர்மனியின் நடவடிக்கைகளும், சொம்மாவில் நேசப்படைகளுக்கு ஏற்பட்ட தோல்வியும், பிரான்சின் படைகளை நிலைகுலையும் நிலைக்கு அருகில் கொண்டுவந்தது. வீணான முன்னரங்கத் தாக்குதல்களும், நடைமுறைக்கு ஒவ்வாத முறைகளை இறுக்கமாகப் பின்பற்றியதும், பிரித்தானியாவினதும், பிரான்சினதும் படைகளுக்குக் கடும் இழப்புக்களை ஏற்படுத்தியதுடன், பரவலான படைவீரர்களின் கலகங்களுக்கும் வித்திட்டது. + +1915 தொடக்கம் 1917 வரையான காலப்பகுதி முழுவதும், எடுத்துக்கொண்ட போர் உத்திகள், வியூகங்கள் என்பன காரணமாக பிரித்தானியப் பேரரசுக்கும், பிரான்சுக்கும் ஜேர்மனியைவிடக் கூடிய அளவில் இழப்புக்கள் ஏற்பட்டன. ஜேர்மனி, வேர்டன் சண்டையின்போது ஒரேயொரு முக்கிய தாக்குதலை மட்டுமே நிகழ்த்திய வேளையில், ஜேர்மனியின் நிலைகளை ஊடறுப்பதற்காக நேசப்படைகள் பல தாக்குதல்களை நடத்தின. உத்தி அடைப்படையில், ஜேர்மனியின் தற்காப்புக் கொள்கை, இழப்புக்களைத் தாங்கக்கூடிய இலகுவான முன்னணி நிலைகளுடனும், வலுவான எதிர்த்தாக்குதல்களை உடனடியாக நடத்தக்கூடிய முக்கியமான நிலைகளுடனும் கூடிய பதுங்குகுழிப் போருக்கு பொருத்தமானதாக அமைந்தது. இது, எதிரிகளின் தாக்குதல்களைக் குறைந்த இழப்புடன் முறியடிப்பதற்கு உதவியாக அமைந்தது. ��ொத்தமாகப் பார்க்கும்போது தாக்குதல், தற்காப்பு இரண்டிலுமே உயிரிழப்புக்கள் பாரிய அளவிலேயே இருந்தன. + +எந்தவொரு நேரத்திலும் சுமார் 800,000 போர்வீரர்கள், பிரித்தானியப் பேரரசின் சார்பில் மேற்குப் போர்முனையில் இருந்தனர். 1000 பட்டாலியன்கள் வடகடல் முதல், ஓர்னே ஆறு வரையிலான நிலைகளில், நான்கு கட்டச் சுழற்சி முறையில் ஒரு மாத காலத்துக்கு இருந்தனர். இம்முறை தாக்குதல்கள் நடைபெறாத காலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது. முன்னணி க்கு மேற்பட்ட பதுங்கு குழிகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு பட்டாலியனும், தமது முன்னணி நிலைகளில் ஒரு வாரமும், பின்னர் பின்னுள்ள துணை நிலைகளுக்கு நகர்ந்து அங்கே இன்னொரு வாரமும் பணிபுரிந்தனர். அடுத்த கிழமை அங்கிருந்து பின் நகர்ந்து ஒதுக்கு (reserve) நிலைகளில் இருப்பர். நான்காவது கிழமை நிலைகளை விட்டு நீங்கி இளைப்பாறுவர். + +1917ல் இடம்பெற்ற அராஸ் சண்டையில் பிரித்தானியாவுக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க ஒரே வெற்றி விமி மலைமுகட்டைக் கைபற்றியமை ஆகும். சர் ஆர்தர் கியூரி (Arthur Currie), ஜூலியன் பிங் (Julian Byng) ஆகியோர் தலைமையிலான கனடாப் படைகள் இதனைக் கைப்பற்றின. தாக்குதல் படைகள் முதல் தடவையாக நிலைகளைக் கைப்பற்றி விரைவாக நிலைகளை வலுப்படுத்தி அவற்றைத் தக்க வைத்துக்கொண்டு நிலக்கரி வளம் மிக்க டுவே (Douai) சமவெளியைப் பாதுகாத்தன.. + +போரின் தொடக்கத்தில், ஜேர்மன் பேரரசு, உலகின் பல பகுதிகளிலும் ஓரளவு தாக்குதற் திறன் கொண்ட கப்பல்களை வைத்திருந்தது. இவை பின்னர் நேச நாடுகளைச் சேர்ந்த வணிகக் கப்பல்களைத் தாக்குவதற்குப் பயன்பட்டன. பிரித்தானிய ராயல் கடற்படை அக் கப்பல்களைத் தாக்கி அழித்து வந்தது. எனினும், வணிகக் கப்பல்களைப் பாதுகாக்க முடியாத சில இக்கட்டான நிலைகளும் ஏற்படவே செய்தன. எடுத்துக்காட்டாக, சிங்டாவோவில் இருந்த கிழக்காசியப் படைப்பிரிவைச் சேர்ந்த இலகு போர்க்கப்பலான எம்டன், 15 வணிகக் கப்பல்களை அழித்ததுடன், ஒரு ரஷ்ய இலகு போர்க்கப்பலையும், பிரான்சின் அழிப்புக் கப்பலொன்றையும் மூழ்கடித்தது. ஆனாலும், ஜேர்மனியின் கிழக்காசியப் பிரிவைச் சேர்ந்த, ஆயுதம் தாங்கிய கப்பல்களான "ஸ்கார்னோஸ்ட்", "நீசெனோ", இலகு போர்க்கப்பல்களான "நேர்ன்பர்க்", "லீப்சிக்" மற்றும் இரண்டு போக்குவரத்துக் கப்பல்களுக்கு வணிகக் கப்பல்களைத் தாக்கும் ஆணை வழங்கப்படவில்லை. அவை ஜேர்மனியை நோக்கிச் சென்றன. வழியில் பிரித்தானியக் கப்பற்படையினரை எதிர் கொண்ட "டிரெஸ்டென்" என்னும் கப்பலும் உள்ளிட்ட ஜேர்மனியின் கப்பல்கள், கொரோனெல் சண்டை எனப்பட்ட சண்டையில் இரண்டு ஆயுதம் தாங்கிய கப்பல்களை மூழ்கடித்தன. எனினும் 1914இ இடம்பெற்ற போக்லாந்துத் தீவுச் சண்டையில், "டெஸ்டென்" தவிர்ந்த எல்லாக் கப்பல்களுமே அழிக்கப்பட்டன.. + +போர் தொடங்கியதுமே ஜேர்மனி மீதான கடற் தடையொன்றைப் பிரித்தானியா ஏற்படுத்தியது. இந்த உத்தி, ஜேர்மனிக்கான முக்கியமான இராணுவ, குடிமக்களுக்கான தேவைகளின் வழங்களை நிறுத்துவதில் வெற்றிகண்டாலும், இது முன்னைய இரண்டு நூற்றாண்டுகளாகப் பல்வேறு பன்னாட்டு ஒப்பந்தங்களால் ஏற்றுக்கொள்ளப் பட்டிருந்த அனைத்துலகச் சட்டங்களை மீறுவதாக அமைந்தது. அனைத்துலகக் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிரித்தானியா கடற் கண்ணிகளை விதைத்து, எக்கப்பலும் கடலின் எப்பகுதிக்குள்ளும் நுழைய முடியாதவாறு தடுத்தது. இது நடுநிலைக் கப்பல்களுக்கும் ஆபத்தை விளைவிப்பதாக இருந்தது. இந்த உத்திக்குக் குறைவான எதிர்ப்பே இருந்ததால், அதையே தனது வரையறையற்ற நீர்மூழ்கிக் கப்பல் போருக்கும் ஜேர்மனி எதிர்பார்த்தது.. +1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜூட்லாந்துச் சண்டை முதலாம் உலகப்போரின் மிகப்பெரிய கடற் சண்டையாக உருவானது. இப்போரின் முழு அளவிலான போர்க்கப்பற் சண்டை இது மட்டுமே. இது 1916 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் நாள், ஜூட்லாந்துக்கு அப்பால் வடகடலில் இடம்பெற்றது. வைஸ் அட்மிரல் ரெய்ன்ஹார்ட் ஸ்கீர் (Reinhard Scheer) என்பவர் தலைமையிலான கெய்சர்லிச் கடற்படையின் ஆழ்கடல் கப்பற்படையும், அட்மிரல் சர் ஜான் ஜெலிக்கோ தலைமையிலான ராயல் கடற்படையின் கிராண்ட் கப்பற்படையும் மோதிக்கொண்டன. போரில் எவரும் வெற்றிபெறாத நிலை ஏற்பட்டபோதும், பிரித்தானியாவின் பெரிய கடற்படைக்குத் தாக்குப் பிடிக்க முடியாத ஜேர்மனியின் கப்பல்கள் பின்வாங்கிச் சென்றுவிட்டன. எனினும், அவை தாம் இழந்ததிலும் கூடிய இழப்புக்களைப் பிரித்தானியக் கடற்படைக்கு ஏற்படுத்தின. இருந்த போதிலும், பிரித்தானியா கடலில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திய ஒரு நிகழ்வாகவே இது அமைந்தது. அத்துடன் போரின் எஞ்சிய பகுதி முழுவதும், ஜேர்மனியின் கப்பல்கள் அதன் துறைமுகங்க��ிலேயே இருந்தன. + +ஜேர்மன் யூ-போட்டுகள் ஐக்கிய அமெரிக்காவுக்கும், பிரித்தானியாவுக்கும் இடையிலான வழங்கல்களின் போக்குவரத்தைத் துண்டிக்க முயன்றன. தாக்குதல்கள் எச்சரிக்கை எதுவும் இன்றியே வருவது நீர்மூழ்கிப் போரின் இயல்பு ஆகும். இதனால் வணிகக் கப்பல்கள் தப்புவதற்கு மிகவும் குறைந்த சாத்தியங்களே உண்டு. ஐக்கிய அமெரிக்கா இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. இதனால் ஜேர்மனி தனது தாக்குதல் முறையில் மாற்றங்களை ஏற்படுத்தியது. 1915 ஆம் ஆண்டில் ஆர்எம்எஸ் லூசித்தானியா என்னும் பயணிகள் கப்பல் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பயணிகள் கப்பல்களைத் தாக்குவது இல்லை என்று ஜேர்மனி உறுதியளித்தது. அதேவேளை பிரித்தானியா தனது வணிகக் கப்பல்களை ஆயுதமயமாக்கியது. இது அவற்றை போர்நோக்கமற்ற கப்பல்களுக்கான பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அடங்காமல் செய்தது. இறுதியாக, அமெரிக்கா போரில் ஈடுபடப்போகிறது என்று உணர்ந்து கொண்ட ஜேர்மனி, கட்டுப்பாடற்ற நீர்மூழ்கிப் போர் என்னும் கொள்கையைக் கடைப்பிடிக்க முடிவு செய்தது. அமெரிக்கா பெருமளவில் படைகளை வெளியே அனுப்பமுன் நேச நாடுகளின் கடல் வழிகளை நெருக்குவது ஜேர்மனியின் நோக்கமான இருந்தது. + +வணிகக் கப்பல்கள் அழிப்புக் கப்பல்களின் பாதுகாப்புடன் கூடிய அணிகளாகச் செல்லத் தொடங்கியதும் யூ-போட்டுகளின் அச்சுறுத்தல்கள் குறையலாயின. இந்த உத்தி யூ-போட்டுகளுக்கான இலக்குகளை இல்லாதாக்கியது. இதனால் இழப்புக்கள் குறைந்தன. புதிய கருவிகளின் அறிமுகம், கடலுக்கு அடியிலேயே நீர்மூழ்கிகளைத் தாக்கக்கூடிய வாய்ப்புக்களையும் உருவாக்கின. கப்பல்கள் ஒன்று சேரும்வரை காத்திருக்க வேண்டி இருந்ததால் அணிகளாகச் செல்லும் உத்தியின் மூலம் வழங்கல்களில் தாமதங்கள் ஏற்பட்டன. + +வானூர்தி தாங்கிகளும் முதன் முதலாக முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்டன. எச்எம்எஸ் பியூரியஸ் என்னும் வானூர்தி தாங்கிக் கப்பலில் இருந்து புறப்பட்ட சொப்வித் கமல் (Sopwith Camels) என்னும் வானூர்திகள் 1918 ஆம் ஆண்டில், தொண்டேர்னில் உள்ள செப்பெலின் வானூர்தித் தரிப்பிடத்தை வெற்றிகரமாகத் தாக்கின. அத்துடன் இதிலிருந்து பிளிம்ப் (blimp) வானூர்திகள் மூலம் நீர்மூழ்கிகளைக் கண்காணிக்கும் பணிகளும் நடைபெற்றன. + +ரஷ்யாவுடன் போரிடவேண்டி இருந்ததால், ஆஸ்திரியா-ஹங்கேரி அதன் படைகளின் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே சேர்பியாவைத் தாக்கப் பயன்படுத்த முடிந்தது. பெரும் இழப்புகளுக்குப் பின்னர் ஆஸ்திரியர்கள் சேர்பியாவின் தலைநகரான பெல்கிரேடைக் கைப்பற்றிச் சிறிது காலம் வைத்திருந்தனர். 1914 இன் முடிவில், கொலூபரா சண்டை என அழைக்கப்பட்ட எதிர்த்தாக்குதல் ஒன்றை நடத்திச் சேர்பியர்கள் ஆஸ்திரியர்களை நாட்டை விட்டு விரட்டினர். 1915 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களிலும் ஆஸ்திரியா-ஹங்கேரி தனது ஒதுக்குப் படைகளில் பெரும்பாலானவற்றை இத்தாலியுடன் போரிடப் பயன்படுத்தியது. ஜேர்மனியும், ஆஸ்திரியா-ஹங்கேரியும் சேர்பியாவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு பல்கேரியாவை இணங்க வைத்தனர். ஆஸ்திரியா-ஹங்கேரியின் மாகாணங்களான சிலோவேனியா, குரோசியா, பாஸ்னியா என்பன சேர்பியாவை ஆக்கிரமிப்பதற்கும், ரஷ்யா, இத்தாலி என்பவற்றுடன் போரிடுவதற்கும் ஆஸ்திரியா-ஹங்கேரிக்குப் படைகளை அளித்தன. மான்டனீக்ரோ சேர்பியாவுக்குத் துணைநின்றது. + +ஒரு மாதத்துக்கும் குறைவான காலத்தில் சேர்பியா கைப்பற்றப்பட்டது. மைய நாடுகள் வடக்கிலிருந்து அக்டோபரில் தாக்குதலைத் தொடங்கின. நான்கு நாட்களின் பின்னர் பல்கேரியாவும் தெற்கிலிருந்து தாக்கத் தொடங்கியது. இரண்டு முனைகளில் போரிடவேண்டியிருந்த சேர்பியப் படைகள் தோல்வியை உணர்ந்துகொண்டு அல்பேனியாவுக்குப் பின்வாங்கின. அவர்கள் ஒரு தடவை மட்டுமே பல்கேரியருடன் போரிடுவதற்காகத் தமது பின்வாங்கலை நிறுத்தினர். சேர்பியர்கள் கொசோவோச் சண்டை என்னும் சண்டையில் தோல்வியடைந்தனர். 6-7 ஜனவரி 1916 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மொய்கோவாக் சண்டை என்னும் சண்டையின் மூலம் சேர்பியர்கள் பின்வாங்குவதற்கு மான்டனீக்ரோ உதவியது. எனினும் இறுதியில் ஆஸ்திரியா மான்டினீக்ரோவையும் கைப்பற்றியது. சேர்பியப் படைகள் கப்பல் மூலம் கிரீசுக்குச் சென்றன. + +முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒர�� பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன.அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது. + + + + + +மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் + +தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும். இது இராஜசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது. இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர். + +இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் குடைவரைக் கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும். + +ரூ.14 லட்சத்தில் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம் கடற்கரை கோயில் + + + + +விஜயகாந்த் + +விஜயகாந்த் ஒரு திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆவார். 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இ��ுந்தார். + +விஜயகாந்த் என்னும் விஜயராஜ், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள இராமானுசபுரம் என்னும் சிற்றூரில் பிறந்தவர். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம்பெயர்ந்தது. இதனால், விஜயகாந்த் மதுரையில் வளர்ந்தார். சிறுவயதிலேயே சினிமா மீது கொண்ட மோகத்தால், படிப்பில் ஆர்வம் காட்டவில்லை. தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறுசிறு பணிகளைச் செய்துவந்தார். + +இயக்குநர் காஜா 'விஜயராஜ்' என்னும் பெயரை விஜயகாந்த் என மாற்றி வைத்தார். திரைப்படத்தில் நடிக்கும் நோக்கத்தோடு சென்னைக்கு வந்தார். தொடர் முயற்சிக்குப் பின்னர் 1978 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ்நாட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.இவர் இதுவரை 156 படங்களில் நடித்திருக்கிறார். 1991 ஆம் ஆண்டில் விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் என்னும் படம் நூறாவது படமாக வெளிவந்து வெற்றியை ஈட்டித் தந்தது. இந்தப் படம்தான் இவருக்கு கேப்டன் என்னும் அடை மொழியைத் தந்தது. + +விஜயகாந்த், 1990 ஆம் ஆண்டில் பிரேமலதா என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். + +அதன் தொடர்ச்சியாக 1993 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இவரது ரசிகர் மன்றத்தினர் சுயேச்சையாகப் போட்டியிட்டனர். அவர்களில் பலர் வெற்றிபெற்றனர். இப்பின்புலத்தில் விஜயகாந்த் தானும் அரசியலில் ஈடுபடும் எண்ணங்கொண்டார். அதனை அவ்வப்பொழுது வெளியிட்டும் வந்தார். + +2005ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கினார். இவர் கட்சியின் நிறுவனத் தலைவராகப் பொறுப்பேற்றார். இரசிகர் மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த ராமு வசந்தன், கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றார். + +2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில் விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து வெற்றி பெற்று தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றி்னார். இத்தேர்தலில் மற்ற தொகுதிகளில் போட்டியிட்ட இக்கட்சியைச் சேர்ந்த மற்ற வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். +தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011 இரிஷிவந்தியம் தொகுதியிலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவரத��� கட்சிக்கு எதிர்க்கட்சித் தகுதி கிடைத்தது. 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார். + + + + + +திருவருட்பா + +திருவருட்பா என்பது வள்ளலார் பாடிய 5818 பாடல்களின் தொகுப்பாகும். ஆசிரிய விருத்த நடையில் பாடப்பட்டுள்ள இப்பாடல்கள் ஆறு தொகுப்புகளாக (இத்தொகுப்புகள் திருமுறை எனவும் அவரது தொண்டர்களால் வழங்கப்படுகின்றன, எனினும் சைவத்திருமுறைகளான பன்னிரெண்டு திருமுறைகள் வேறு.) தொகுக்கப்பட்டுள்ளன. இப்பாடல்கள் தம்முடைய சுய அனுபவங்களையும் ஆன்மீக பெரு உணர்வையும் விளம்புவன என்றும் அவற்றை வணிக முறையில் பதிப்பிக்க வேண்டாம் என்றும் வள்ளலார் கேட்டுக்கொண்டார். எனினும், வள்ளலாரின் தொண்டர்கள் அவரிடம் தொடர்ந்து வலியுறுத்தி இப்பாடல்களை பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றனர். + + + + + +எதிரொளிப்பு + +எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு அல்லது ஒளித்திருப்பம் ("Reflection") என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும். + +நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும். + +ஒலியியலில், இதனை எதிரொலிப்பு என்பார்கள். எதிரொலிப்பு உருவாக்கும் ஒலிக்கு எதிரொலி (echo) என்று பெயர். இதனை ஒலி மாற்றுணரியில் பயன்படுத்துகின்றனர். நிலவியலில் , நிலநடுக்க அலைகளைப் பற்றிய பாடங்களில் இது முக்கியமானவை . நீர்நிலைகளில் உள்ள மேற்ப்பரப்பு அலைகளில் எதிரொலிப்பு (எதிரொளிப்பு) கண்டறியப்படுகிறது . காண்புறு ஒளிக்கிடையில் , பல வகையான மின்காந்த அலைகள் காணப்படுகின்றன . உயர் அதிர்வெண்ணும் , அதி உயர் அதிர்வெண்களின் எதிரொளிப்புகள் வானொலி சேவையிலும் , ரேடாரிலும் முக்க��யமானவையாகும் . ஏன் காமா கதிர்களும் , ஊடுகதிர் அலைகளும் சில கோணங்களில் தனிரக கண்ணாடிகளில் எதிரொளிக்கப்படுகிறது. + +இவ்வொளி எதிர்வுகளை நன்றாக ஆய்ந்து பல உண்மைகளை நிறுவியிருக்கிறார்கள். இதில் சிநெல் (Snell) என்பாரின் விதிகள் எளிதாக அறியவல்லவை. ஒளி எதிரக்கூடிய ஒரு சமதளத்தில் ஒளியானது அச்சம தளத்தின் செங்குத்துக் கோட்டுக்கு ஒரு குறிப்பிட்ட +கோணத்திலே சென்று மோதினால், எதிர்ந்து செல்லும் ஒளியும் அதே கோணத்தில் அச்செங்குத்துக்கு கோட்டிலிருந்து விலகி எதிர்த் திசையில் செல்லும். இதனை படத்தின் உதவியால் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். + +படத்தில், ஒளிக்கதிர் PO நிலைக்குத்துக் கண்ணாடியொன்றை O என்ற புள்ளியில் மோதி, OQ என்ற காதிராகத் தெறிக்கிறது. கண்ணாடியின் தளத்துக்குச் செங்குத்தாக O என்ற புள்ளியில் இருந்து ஒரு நேர்கோட்டை வரைந்தால் "படுகோணம்" θi, "தெறிகோணம்" θr ஆகியவற்றைக் கணக்கிடலாம். தெறிப்பு விதியின் படி, θi = θr, அதாவது, படுகோணம் தெறிகோணத்துக்குச் சமனாக இருக்கும். + +எதிரொளிக்கும் மேற்ப்பரப்பு வழமையாக அல்லது கண்ணாடி போன்று இருந்தால் , அந்த ஒளியின் எதிரொளிப்பை ஒழுங்கான எதிரொளிப்பு அல்லது கண்ணாடி எதிரொளிப்பு (Specular reflection)என்று கூறுவர் . + +அவ்வொளி எதிர்வு விதிகள் பின் வருமாறு : + +1. எதிர்வு பரப்பில் உள்ள ஒளிப்படு புள்ளிக்கு செங்குத்தும் , படுகின்ற கதிரும் , எதிர்கின்ற கதிரும் ஒரே தளத்தில் இருக்கும் . +2. எதிர்வு பரப்பின் செங்குத்துக்கும் படுகின்ற கதிருக்கும் உள்ள கோணமும் , அச்செங்குத்துக்கும் எதிர்கின்ற கதிருக்கும் உள்ள கோணமும் சமம் ஆகும் . +3. ஒளியின் பாதைகள் மீளக்கூடியவை (reversible). + +ஒளி ஒரு சமதளமற்ற பகுதியில் மோதும் பொழுது , அந்த தளத்தில் உள்ள நுண்ணிய மேடுகளினால் ஒளி பல திசைகளில் தெறித்து ஓடும் . இவ்வகையான எதிரொளிப்பை பரவல் எதிரொளிப்பு அல்லது ஒளிச் சிதறல் என்று கூறலாம். இவ்வாறு , எந்த ஒளிபிம்பமும் தானாக உருவாகுவது இல்லை . மேலாக அவை ஒவ்வொரு பொருளும் எதிரொளிக்கின்றது அல்லது பிரதிபலிக்கின்றது . ஒளியின் உருவமானது அவை எதிரொளிக்கும் மேற்பரப்பை சார்ந்ததாகும் . ஒரு பொதுவான பரவல் எதிரொளிப்பு உதாரணம் என்னவென்றால் அது லம்பெர்தியர் எதிரொளிப்பு (Lambertian reflectance) ஆகும் . லம்பெர்தியர் எதிரொளிப்பு என்றால் ஒரு ஒளியானது ஒரே ஒளியூட்டத்��ிலோ அல்லது ஒரே கதிரலையிலோ பல திசைகளில் தெறித்து ஓடுவதாகும் ; இதனை லம்பெர்தியர் கோசைன் விதியில் விவரிக்கப்பட்டுள்ளது .படுகோணமும் மீள் கோணமும் சமம், படுதானம், மீள்தானம், படுதானத்தில் இருந்து வரையப்படும் லம்பம் ஆகியவை ஒரு நேர்கோட்டில் அமையும். + +நொதுமிகள் தெறிக்கும் பொருட்களை அணுகுண்டிலும் , அணுக்கரு உலையிலும் பயன்படுத்துகின்றனர் . ஒரு பொருளுக்குள்ளேயே அணுவின் நொதுமிகள் தெறிப்பதை இயற்பியலிலும் , உயிரியலிலும் , அதன் அக அமைப்புகளை விளக்குவதற்கு பயன்படுத்துவர் . + +ஒரு தட்டையான மேற்ப்பரப்பில் நீளவாக்கில் ஒளியானது மோதுகையில் , ஒளியின் அலையகலத்தை விட அதிக எதிரொலிப் பரப்பு அளவு அடையுமாறு சீராக ஒலி எதிரொலிக்கிறது . கேட்கக்கூடிய ஒலியானது மிகவும் பரந்த அதிர்வெண் வீச்சை கொண்டனவாகும் என்பதை கவனிக்க வேண்டும் ஆகையால் அவை பரந்த அலையகலங்களையும் கொண்டனவை ஆகும் . + +நிலநடுக்க எதிரலைகள் நிலநடுக்கம் அல்லது நிலவெடிப்புகள் போன்ற வேறு சில ஆதாயங்கள் அனைத்தும் பூமியின் அடுக்குகளின் எதிரலைகள் ஆகும் . இது போன்று நிலநடுக்கத்தினால் ஏற்படும் அலைகளின் எதிர்வுகளை பற்றி படிப்பதினால் நில அதிர்வு ஆய்வாளர்கள் பூமியின் அடுக்கு அமைப்பினை விவரிக்க உதவுகின்றது . ஆழமான எதிரலைகள் நில அதிர்வு ஆய்வினில் புவியோடினை ( Earth Crust ) பற்றி அறிவதற்கு பயன்படுகின்றது . மேலும் இவை பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு இருப்பினை அறிய உதவுகிறது . + + + + + +மின்தடையம் + +மின்தடையம் ("Resistor"), மின்தடையி, அல்லது மின்தடையாக்கி என்பது மின்னோட்டத்தை எதிர்க்கும் ஒரு மின் உறுப்பு ஆகும். மின்னோட்டத்திற்கு எதிர்ப்பு அல்லது தடை ஏற்படுத்துவதால் இதற்கு மின் தடை அல்லது மின் தடையம் என்று பெயர். இவ்வாறு மின்னோட்டதிற்குத் தடை ஏற்படுத்தும் பொழுது இவ்வுறுப்பில் வெப்பம் உண்டாகிறது. மின் தடையமானது, மின்னோட்டத்தைத் தடுக்க அல்லது நெறிப்படுத்த மின் சுற்றுக்களில், இலத்திரனியல் சாதனங்களில் பயன்படுகின்றது. + +ஒருபொருள் மின்னோட்டத்திற்கு ஏற்படுத்தும் தடையானது மின்தடைமம் என்னும் சொல்லால் குறிக்கப்படுகிறது, ஒரு பொருளின் மின்தடைமம் அப்பொருளின் நீளம், அப்பொருளின் வழியே மின்னோட்டம் பாயும் பொழுது அப்பொருளின் குறுக்கு வெட்டுப் பரப்பு, மற்றும் அப்பொருளின் அடிப்படையான மின்தடைமை ஆகியவற்றை பொறுத்தது ஆகும். இந்த மின்தடைமை என்பது, ஒரு பொருளின் புற அளவுகளான நீள அகலங்களுக்கு அப்பாற்பட்டு , அப்பொருளின் அணுக்களின் அமைப்பையும் வகையையும் பொறுத்தது. இது அப்பொருளின் அடிப்படை மின்பண்பு ஆகும். + +மின்சார வலையமைப்புகள், மின்னணுச் சுற்றமைப்புகள், தொகுப்புச் சுற்றுகள், பிற மின்னணுச் சாதனங்கள் போன்றவற்றில் ஓர் பிரிக்கவியலா அங்கமாய் மின்தடையங்கள் திகழ்கின்றன. தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் சில சேர்மங்கள், படலங்கள், உயர் மின்தடை கொண்ட நிக்கல்-குரோம் போன்ற உலோகக்கலவைகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. + +தற்போது பயன்பாட்டிலுள்ள மின்தடையங்கள் தூய மின்தடைகளாக ஒருபோதும் செயல்படுவது இல்லை. இவை தொடரிணைப்பில் சிறிய அளவிலான மின்தூண்டமும் பக்க இணைப்பில் சிறிய அளவிலான மின்தேக்குத்திறனும் கொண்டதாக உள்ளன. ஆனால் இது போன்ற விவரக்கூற்றுகள் உயர்-அதிர்வெண் கொண்ட பயன்பாடுகளில் மட்டுமே முக்கியத்துவம் பெறுகின்றன.மின் தடையத்தில் காணப்படும் தேவையற்ற மின்தூண்டம், அளவிற்கு மீறிய இரைச்சல் , மின்தடை வெப்பநிலை எண்(temperature co-efficient of resistance) போன்றவை அம்மின்தடையங்கள் தயாரிக்கப்படுகின்ற விதத்தினைப் பொருத்தே அமைகின்றன. + +மின்சுற்றுகளில் மின்தடையங்களின் இலத்திரனியல் குறியீடானது, தரநிலைகளைப் பொருத்தும் நாட்டைப் பொருத்தும் மாறுபடுகின்றன. + +மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டமானது தடையத்தின் இரு முனைகளுக்கு இடைப்பட்ட மின்னழுத்தத்திற்கு நேர்த்தகவில் இருக்கும். ஓமின் விதிப்படி இது பின்வருமாறு கூறப்படுகிறது. +மின் தடைமம்(R) = மின் அழுத்தம்(V) / மின்னோட்டம்(I) + +இங்கே மின்னோட்டம் "I" ஆனது ஆம்பியரிலும் (ampere), மின்னழுத்தம் 'V" ஆனது வோல்ட்டிலும் (volt), மின்தடை "R" ஆனது ஓமிலும் (ohm) கூறப்படும். + +"R" என்ற மின்தடையம் கொண்ட ஒரு மின் கடத்தியின் (எ.கா. உலோகங்கள்,மாழைகள்) இரு முனைகளுக்கிடையே, "V" என்ற அளவு மின்னழுத்தம்(voltage) கொடுக்கும் போது, "I" என்ற அளவு மின்னோட்டம்(current) பாய்கிறது என்றால், அந்த மின்னோட்டத்தின் அளவைக் கீழ்க் கண்டவாறு கணக்கிடலாம்: + +படத்திலுள்ளது போலத் தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களி���் வழியாகவும் ஒரே மின்னோட்டமே(I) பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்(V) அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது. + +formula_3 + +தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம். + +இப்படத்திலுள்ளது போலப் பக்கவிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , ஒவ்வொரு மின் தடையாக்கியின் குறுக்கிலும் உள்ள மின்னழுத்த வேறுபாட்டின்(V) மதிப்பு ஒன்றே. +ஆனால் மொத்த மின்னோட்டமனது(I) மின்தடைகளின் மதிப்பைப் பொருத்துப் பிரிந்து செல்கிறது. ஆக, ஒவ்வொரு மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவு முறையே அம்மின்தடையத்தைப் பொருத்து வேறுபடுகிறது. + +formula_4 + +பக்கவிணைப்பில் உள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடையின் தலைகீழியானது, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் தலைகீழிகளின் கூட்டுத் தொகைக்குச் சமம். + +ஒரு மின்தடையாக்கியின் மின்திறன் விரயமானது(power dissipation) கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது. + +formula_5 + +இங்கு முதலில் உள்ளது ஜூல் விதியின் மறுக்குறிப்பீடே ஆகும். பின்னர் இருப்பவை, ஓமின் விதியிலிருந்து பெறப்பட்டதாகும். + +ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு மின்தடையாக்கியின் மொத்த வெப்ப ஆற்றல் விரயமானது கீழ்க்காணும் முறையில் கணக்கிடப்படுகிறது. + +formula_6 + +மாறாத்தடை என்பது முன்பே அதன் மதிப்பு நிலையாக இருக்கும் படி அமைக்கப்பட்ட மின் தடையகம் ஆகும். அதாவது இதன் வரையறுக்கப்பட்ட மதிப்பை நாம் மாற்றவோ, குறைக்கவோ முடியாது. + +மாறும் தடை அல்லது variable resistor என்பதற்கு உதாரணமாக potentiometer மற்றும் Rheostat ஐ சொல்லலாம். அதவாது இந்த வகையிலான மின் தடையத்தின் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக பழைய வானொலி, மற்றும் தொலைக்காட்சிகளில் volume ஐ control செய்ய மிகவும் பயன்படுத்தப்பட்டது. + +மின் தடையத்தில் ஒளியைப் பொறுத்து மின் தடையத்தின் மதிப்பு (Resistance value) அதிகரிக்கவோ, குறையவோ செய்யும். ஆனால், அதுவும் கூட ஒரு குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட எல்லைக் கோடு வரையில் தான் செய்யமுடியும் . + +முற்றுணிந்ததடை என்பது மின் தடையகத்தின் ஒரு வகை தான். இதனை மிகச் சிறிய PCB Board களில் பார்க்கலாம். அத்துடன் இதன் மதிப்பை ஒரு குறிப்பிட்ட அளவு மாற்றிக் கொள்ளலாம். எடுத்துக்காட்டாக : தெருவோரத்தில் வாங்கப்படும் pocket size Radio களின் circuit board இல் volume ஐ மாற்றி அமைக்கபயன்படும் + +மின் தடையங்களில் வெப்பத்தை பொறுத்து இதன் மதிப்பு அதுவாகக் குறையும் அல்லது அதிகரிக்கும். பொதுவாக, fire alarm களில் இது மிகவும் பயன் படுகிறது. +ஓமின் விதிப்படி மின்தடையத்தின் வழியே பாயும் மின்னோட்டத்தை இவ்வாறும் கணக்கிடலாம் :- +மின் தடைமம் (R), மின் அழுத்தம் (V), மின்னோட்டம் (I) ஆயின், + +மின் தடையாக்கிகளை இணைக்கும் போது, ஒவ்வொரு தனிப்பட்ட மின் தடையாக்கியின் மதிப்பை பொறுத்து இதன் மின்னோட்டத்தை எதிர்க்கும் தன்மை உயரும்அதாவது இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், தொடரிணைப்பில் பல மின்தடையங்கள் இணைக்கப்பட்டிருக்கும்போது , அவ்வனைத்து மின் தடையங்களின் வழியாகவும் ஒரே மின்னோட்டமே(I) பாய்கிறது. ஆனால் மின்தடையத்தின் அதுவே டையோடு, டிரான்சிஸ்டர், ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) போன்றவை செயலில் கூறுகள் (active components) என்று அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அவைகள் ஒரு எலெக்ட்ரானிக் மின்சுற்றின் இதயம் போலச் செயல்படுகின்றன. தேவைப்படும் இடத்தில், கிடைக்கும் மின் அலைகளை பெருக்கியும் தருகின்றன.இரு முனைகளுக்கும் இடைப்பட்ட மின்னழுத்த வேறுபாட்டின்(V) அளவானது ஒவ்வொரு மின்தடையத்தைப் பொருத்தும் வேறுபடுகிறது.தொடராக இணைக்கப்பட்டுள்ள பல மின் தடையாக்கிகளின் தொகுபயன் மின் தடை, அத்தனித்தனி மின் தடையாக்கிகளின் மின்தடை மதிப்புகளின் கூட்டுத் தொகைக்குச் சமம். + +எந்த ஒரு பொருளுக்கும் ஒரு மின்தடைமை ("Resistivity") உண்டு. வெவ்வேறு பொருள்களின் மின் தடைமைகளை அட்டவணை 1 தருகின்றது. + +மின்தடையாக்கிகளின் மின் தடை மதிப்புகள், அவற்றின் மீது நிறக்குறியீடு இட்டுக் குறிக்கப்படும். தற்காலத்தில் நான்கு நிறக் குறியீடு கொண்ட மின்தடையாக்கிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றன. + +மின்தடையாக்கிகளில் ஒரு முனையில் உள்ள வெள்ளி அல்லது தங்க வளையம் , மின்தடையின் மாறுபடும் அளவைக்(tolerance) குறிக்கும். வெள்ளி, தங்கம், சிவப்பு, பழுப்பு நிற வளையங்களின் மாறுபாட்டு அளவுகள் முறையே 10%, 5%, 2%, 1% ஆகும். இவ்வாறான மாறுபாட்டு வளையம் ஏதும் இல்லையேனில், அம்மின்தடையத்தின் மாறு���ாட்டளவு 20% எனப் பொருள்படும். +அடுத்த முனையில் உள்ள முதல் இரண்டு வளையங்கள் , மின்தடை மதிப்பின் முக்கிய எண்ணுருக்கள் ஆகும். இதனுடன் பெருக்க வேண்டிய 10-இன் அடுக்கினை மூன்றாவது வளையம் குறிக்கிறது. + +இந்நிறப்பரிபாடையைக் கீழுள்ள சட்டகம் தெளிவாகத் தருகிறது. + + + +மின் சாதனங்கள் மிகச்சரியாகப் பணியாற்ற, அதற்குத் தேவையான எல்லா சிறு பகுதிகளையும் ஒன்றோடு ஒன்றை இணைப்பதற்கு உரிய மின் இணைப்புகள் தேவை. இந்த மின் இணைப்புகள், தந்திகளைச் (wires) சூட்டுக்கோலால் பற்ற வைத்து (soldering) உருவாக்க்கப்பட்டன. இப்போது, இந்தத் தந்திகளுக்குப் பதிலாக அச்சடிக்கப்பட்ட மின் சுற்றுப் பலகைகள் பயன்படுத்தப்படுகின்றன; இவற்றில் தந்திகளின் இணைப்புகளுக்கான பாதைகள் வரையப்பட்டிருக்கும்.சிறப்பு வகைப் பலகை ஒன்றில் ஒளிப்படம் எடுக்கப்பட்டு மெல்லிய செப்பு உலோகத்தால் (copper) மூடப்படும். வேதிப் பொருட்களைப் பயன்படுத்தி மிக மென்மையான செப்புப் படலம் மட்டுமே தங்கி இருக்கும் வகையில் தேவையற்ற செப்பு கரைக்கப்படுவதுடன், இப்படலத்தில் எல்லா உறுப்புகளும் இணைக்கப்படுகின்றன. மின் சுற்றுப் பலகைகள் இலேசானவை, கையடக்கமானவை மற்றும் செலவு குறைவானவை.மின்னணுச் சுற்றுகளைக் கொண்ட மின்னணுச் சாதனங்கள் மிகச் சிக்கலான செயல்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடியவை. கணினி இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது . + + + + + + +ஒளி முறிவு + +ஒளி முறிவு அல்லது ஒளி விலகல் என்பது ஒளியின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் தோன்றும் ஒளி செல்லும் திசையிலிருந்தான விலகல் ஆகும். இது பொதுவாக ஓர் ஊடகத்தில் இருந்து வேறான அடர்த்தியுடைய பிறிதோர் ஊடகத்துள் ஒளி செல்லும் போது பார்க்கக்கூடியதாக இருக்கும். ஒளி முறிவுகளைப் பொதுவாகப் பார்க்கக்கூடியதாக இருப்பினும், எந்தவொரு அலையும் ஓர் ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்துள் செல்லும்போது முறிவடையும். எடுத்துக்காட்டாக ஒலி அலைகள். + +ஒருவர் நேரான பென்சிலோ அல்லது பேனை போன்ற நேரான பொருள் ஒன்றை பகுதியா நீர் உள்ள கண்ணாடி அல்லது ஒளிபுகக்கூடிய கிண்ணமென்றில் வைத்தால் அப்பொருளானது நீர் உள்ள இடத்தில் வளைந்து காட்சியளிக்கும். இது நீரில் இருந்துவரும் ஒளிக்கதிர்களானது முறிவடைவதால் ஏற்படுவதாகும். இது உண்மை���ாக இருப்பதை இட பார்வைக்கு குறைந்த ஆழத்தில் இருந்து வருவதைப் போன்று தோற்றமளிக்கும். இவ்வாறு தோன்றுவது தோற்ற ஆழம் என்றழைக்கப்படும். + +ஒளியானது ஒரு ஊடகத்திலிருந்து அதனிலும் வேறான அடர்த்தியுடைய இன்னொரு ஊடகத்துள், இரண்டு ஊடகங்களினதும் (எல்லைக்கு) இடை முகத்துக்குச் செங்குத்தாக அல்லாமல் இன்னொரு கோணத்தில் நுழையும்போது அதன் நேர்கோட்டுப் பாதையை விட்டுத் திசை மாறிச் செல்வது ஒளி முறிவு (refraction) அல்லது ஒளிவிலகல் எனப்படும். + +ஒளித்தெறிவே வானவில்லின் தோற்றத்திற்கு ஆதாரம் ஆகும், இங்கு சூரிய ஒளிக்கதிர்களை அரியம் போன்று பிரிப்பதனாலேயே அழகிய நிறங்கள் வானத்தில் தோன்றுகின்றன. பார்க்கப்படும் நிறங்களின் வேறுபாடே அதிர்வெண்ணின் வேறுபாட்டால் ஏற்படுவதாகும். + +வானவில் போன்றே பல்வேறு விசித்திரமான சம்பவங்களும் ஒளிமுறிவினால் ஏற்படுகின்றது. இவற்றுள் கானல் நீர் குறிப்பிடத்தக்கது. இவை வளியின் ஒளிமுறிவுச் சுட்டியானது வெப்பத்துடன் மாறுபடுவதால் ஏற்படுவதாகும். + +காற்று அல்லது வெற்றிடத்திலிருந்து பிறிதொரு ஊடத்துத்துள் ஒளி செல்லும் போது, அதன் திசைவேகம் எவ்வளவு குறைகின்றது என்பதன் குறியீடாக அவ்வூடகத்தின் ஒளிவிலகல் எண் அமைகின்றது. + +ஒளியியலில் ஒளிக்கற்றைகளானது ஓர் ஒளிமுறிவுச் சுட்டெண் அல்லது ஒளிவிலகல் எண் உடைய ஊடகத்தில் இருந்து பிறிதோர் ஒளிமுறிவுச் சுட்டெண்ணுடைய ஊடகத்தினுள் ஓளிமுறிவானது ஏற்படுகின்றது. ஓர் ஒளிக்கதிரின் அதிர்வெண்ணானது ஒருபோதும் மாற்றமடையாது; ஒளிமுறிவின்போது ஒளியலையின் வேகமானது மாறுவதால் அதற்கொத்த அலைநீளமானது மாற்றமடையும். எடுத்துக்காட்டாக ஒளியலையானது கண்ணாடிக்குள் புகும்போதும் வெளிவரும்போதும் ஓளித்தெறிப்பானது நிகழ்கின்றது. இதை அடிப்படைய்யாகக் கொண்டே வில்லைகளும் ஒளித்தெறிப்புத் தொலைக்காட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. + +"ஒரு ஊடகத்தைப் பொருத்து (ஊடகம் 1 என்க) பிறிதொரு ஊடகத்தின் (ஊடகம் 2 என்க) ஒளிவிலகல் எண் என்பது காற்று அல்லது வெற்றிடத்தைப் பொருத்து ஊடகம் 2-இன் ஒளிவிலகல் எண்ணிற்கும் காற்று அல்லது வெற்றிடத்தைப் பொருத்து ஊடகம் 1-இன் ஒளிவிலகல் எண்ணிற்கும் இடையேயான தகவு" ஆகும். + +அதாவது, μ = μ / μ + + μ = காற்று அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் ÷ ஊடகத்தில் ஒளியின் திசைவே���ம். + +ஒளிமுறிவானது கிண்ணமொன்றில் இருக்கும் நீரைப்பாப்பதன் காணமுடியும். காற்றின் ஒளிவிலகல் எண் ஏறத்தாழ 1.0003 (அநேகமான கணித்தல்களிற்கு 1 என்றே எடுக்கலாம்). நீரினது ஒளிமுறிவுச் சுட்டெண் 1.33 (ஏறத்தாழ /). + +வில்லை + +கானல் நீர் + + + + + +மின்தேக்கி + +மின்தேக்கி (Capacitor) என்பது மின்புலத்தில் மின் ஆற்றலைச் சேமிக்கப் பயன்படும் இருமுனை மின்கூறு ஆகும். இதனை "மின் கொண்மி" என்றும் "மின்கொள்ளளவி" (இலங்கை வழக்கு) என்றும் கூறுவர். இது மின்சுற்றுகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மின்கூறு. இரண்டு மின்கடத்திகளை ஒரு மின்காப்புப் பொருள் கொண்டு பிரித்தால் அது ஒரு மின்தேக்கியாகச் செயல்படும். எடுத்துக்காட்டாக, இரண்டு உலோகத் தகடுகளுக்கிடையே ஒரு தடிமனான காகிதத்தை வைத்து ஒரு மின்தேக்கியை உருவாக்கலாம். மின்பகுளி-மின்தேக்கி (Electrolytic Capacitor) மற்றும் சுட்டாங்கல்-மின்தேக்கி (Ceramic Capacitor) ஆகியவை பொதுவாக மின்சுற்றுகளில் பயன்படுத்தப்படும் மின்தேக்கிகளாகும். தற்காலத்தில் நெகிழி-மின்தேக்கியின் (Plastic Capacitor) பயனும் அதிகரித்து வருகிறது. + +இன்றைய காலத்தில் பலவகையான மின் தேக்கிகள் பயன்படுத்தப்படுகிறது . அவற்றில் + +1. எலெக்ட்ரோலைட் மின் தேக்கி + +2. செரமிக் மின் தேக்கி + +3. நெகிழி-மின்தேக்கி + +மின்தேக்கி வகைகளில் ஒரு பெரிய மின்தேக்கத்தை அடைவதற்கு எலக்ட்ரோலைட்டியைப் பயன்படுத்துவர். எலக்ட்ரோலைட் என்பது ஒரு திரவம் அல்லது ஜெல் ஆகும். எலெக்ட்ரோலைட் மின்தேக்கியின் இணைப்புக்கள் பாஸிடிவ் மற்றும் நெகடிவ் துருவங்கள் பார்த்து இனைக்க வேண்டும் அதாவது இணைப்புக்காக வெளியில் நீட்டிக்கொண்டிருக்கும் இரு கம்பிகளில் அதன் உடல் பகுதியில் குறிக்கப்பட்டுள்ள – அல்லது + குறியை பார்த்து மின் இணைப்பை தர வேண்டும் மாற்றி இணைப்புக்கொடுத்தால் அவை பழுதாகிவிடும். + +ஒரு சிறிய பீங்கான் வட்டின் இரண்டு பக்கங்களை வெள்ளியுடன் இணைத்து தயாரிக்கப்படுகின்றன. பின்னர் அவை ஒரு மின்தேக்கி செய்ய ஒன்றாக அடுக்கப்பட்டு, மிக குறைந்த அளவிலான கொள்ளளவு மதிப்புகள் 3-6 மிமீ ஒரு ஒற்றை பீங்கான் வட்டு பயன்படுத்தப்படுகிறது. செராமிக் மின்தேக்கிகள் அதிக மின்கடத்தா மாறிலியை கொண்டிருக்கும், மேலும் அவை சிறிய அளவிலான அளவைக் கொண்டிருக்கும். எலெக்ட்ரோலை��் மின் தேக்கியை +, - துருவம் பார்த்து இணைக்கவேண்டியது போல் . செரமிக் கெபாசிட்டர்களுக்கு அந்த தொல்லை இல்லை, எப்படி வேண்டுமானாலும் இணைப்பு கொடுத்துக்கொள்ளலாம். + +மின்தேக்கியின் மின்முனைகளைத் தயாரிப்பதற்கு ,மின்கடத்தா அலுமினியம் அல்லது துத்தநாகம் பயன்படுத்தப்படுகிறது . நெகிழி மின்தேக்கிகளை பயன்படுத்துவதன் மூலம் மின் சாதனங்களுக்கு குறைவான இழப்பு தான் ஏற்படும் . அதனால் இன்றைய காலத்தில் அதிகமாக நெகிழி மின் தேக்கிகள் அதிகஅளவில் பயன்படுத்தப்படுகிறது . + +ஒரு மின்தேக்கியில் இரண்டு மின்தகடுகளும் அவற்றின் இடையே மின்கடத்தாப் பகுதியும் இருக்கும். இந்த மின்கடத்தாப் பகுதி வெற்றிடமாகவோ அல்லது ஒரு மின் கடத்தாப் பொருளால் ஆனதாகவோ இருக்கும். மின்கடத்தாப் பொருட்களாக கண்ணாடி, வளிமம், காகிதம் அல்லது ஒரு குறைகடத்தியின் மின் கடத்தாப் பகுதியோ இருக்கலாம். +இரண்டு மின்தகடுகளிலும் எதிர் எதிர் வகை மின்மம் சேர்ந்து, தகடுகளுக்கு இடையே உள்ள கடத்தாப் பொருளில் மின்புலம் உண்டாக்கும். இந்த மின்புலத்தில் மின்னாற்றலானது, தகடுகளில் மின்மங்கள் இருக்கும் வரை “தேங்கி”, “சேமிப்பாக” நிற்கின்றது. இக் கடத்தாப் பொருளை வன்கடத்தி அல்லது இருமுனைப்படும் மின்பொருள் என்றும் கூறுவர். இரு தகடுகளிலும் எதிர் எதிர் வகை மின்மத்தைத் தேக்கி வைத்திருப்பதால் இதனை மின்மத்தேக்கி என்றும் கூறலாம். + +ஒரு மின்தேக்கிக்கு ஒரு குறிப்பிட்ட மின்தேக்கம் (capacitance) இருக்கும். இந்தத் தேக்கத்திறன் இணை தகடுகளின் வடிவமைப்பில் அமைந்துள்ளது. ஒரு முறையான மின்தேக்கி ஒரு மாறா மின்தேக்கத்தைக் கொண்டிருக்கும். அந்த மின்தேக்கமானது ஒவ்வொரு மின்கடத்தியிலும் இருக்கும் நேர் அல்லது எதிர் மின்னூட்டத்திற்கும் "Q", அவற்றுக்கிடையிலான மின்னழுத்ததிற்குமான விகிதமாகும். +ஏனெனில் கடத்திகள் (அல்லது தட்டுக்கள்) மிக அருகருகில் இருப்பதால், மின்புலம் காரணமாக, கடத்திகளில் இருக்கும் எதிர் மின்னூட்டமானது, கடத்திகளை ஒன்றையொன்று கவரச்செய்யும். இதனால் கடத்திகள் தனித்தனியாக இருப்பதைவிட மிக அதிகமான மின்னூட்டத்தைக் கடத்திகள் தேக்கி வைக்க முடியும். + +பொதுவாக இதனை பாரட் (ஃபாரட்) (F) என்ற அலகால் குறிப்பிடுவர். பெரும்பாலான மின்தேக்கிகள் மைக்ரோ பாரட் அல்லது மில்லி பாரட��� (µF அல்லது mfd) அல்லது பிக்கோ பாரட் (pF) என்ற அலகால் குறிக்கப்படும். மைக்ரோ பாரட் (µF) என்பது பாரட்டில் ஒரு மில்லியன் (10 F). பக்கோ பாரட்(pF) என்பது மைக்ரோ பாரட்டில் ஒரு மில்லியன் (10 F). + + + +மின்காப்பு வலிமை ("E") எனப்படும் ஒரு குறிப்பிட்ட மின்புலத்திற்கு மேல், மின்தேக்கியிலுள்ள மின்காப்புப் பொருள் மின் கடத்தியாக செயல்படும். எந்த மின்னழுத்தில் இது நடக்கிறதோ அதுவே நிலைகுலைவு மின்னழுத்தம் எனப்படும். அதன் மதிப்பு மின்காப்பு வலிமை மற்றும் இரு தகடுகளின் இடையே உள்ள தூரத்தின் பெருக்கல் ஆகும். +ஒரு மின்தேக்கியில் சேமித்து வைக்க கூடிய சக்தி/மின் ஆற்றல் நிலைகுலைவு மின்னழுத்ததினால் வரையறுக்கப்படுகிறது. + +ஒரு மின்தேக்கியின் Q காரணியானது ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அதன் எதிர்வினைப்பு (Reactance) மற்றும் மின்தடை இடையே உள்ள விகிதம் ஆகும். இது மின்தேக்கியின் திறனை குறிக்கும். +Q காரணியை கணக்கிடும் சூத்திரம்: + +இங்கு + +மின்தேக்கத்திறனைக் கண்டறியப் பெரும்பாலான மின்தேக்கிகளின் மீது அதன் மதிப்புப் பொறிக்கப்பட்டிருக்கும். அளவில் பெரிதான மின்பகுளி-மின்தேக்கிகளில் (Electrolytic Capacitor) மின்தேக்கத்திறன் அலகுடன் குறிப்பிடப்பட்டிருக்கும் (உதாரணம், 220 μF).. சிறிய மின்தேக்கிகளான சுட்டாங்கல்-மின்தேக்கிகளில் (Ceramic Capacitor) மூன்று எழுத்துகளும் ஒரு எண்ணும் கொண்ட குறியீடு காணப்படும். அதன் மூலம் மின்தேக்கத்திறனைப் பிக்கோ பாரட் (pF) அலகில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அந்த எண் அதன் சகிப்புத்தன்மையைக் குறிக்கும். (±5%, ±10% அல்லது ±20%) + +சில சமயம் செயல்படும் மின்னழுத்தம், வெப்பம் போன்றவையும் குறிப்பிடப்பட்டிருக்கும். + +ஒரு மின்தேக்கியின் மீது 473K 330V என குறிப்பிடப்பட்டிருப்பின் அதன் மின்தேக்கத்திறன் 47 × 10 pF = 47 nF (±10%). அதன் மின்னழுத்தம் 330 V ஆகும். + + +இன்றைய காலத்தில் மின்சார சிக்கனம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது . அதனால் , மின்சாரத்தை மிச்சப்படுத்தவும் . மின் சாதனங்கள் பழுது ஏற்படாமல் இருக்கவும் மின் தேக்கிகள் பயன்படுகின்றன . +மின்தேக்கி மின்சுற்றில் இருந்து பிரிக்கும் பொழுது மின் ஆற்றலை சேமித்து வைத்து கொள்வதால், ஒரு தற்காலிக மின்கலனாக பயன்படுத்தலாம். + +ஒரு குறிப்பிட்ட அதிர்வெண்பட்டையில் இருந்து செய்தியை பிரித்து எடுக்க மின்தேக்கி மற்றும் மின��தூண்டி பயன்படுத்தப்படும். உதாரணத்திற்கு, வானொலி வாங்கிகள் ஒரு குறிப்பிட்ட வானொலி நிலையத்தில் இருந்து குறிப்பலைகளை பெற மாறி மின்தேக்கியை பயன்படுத்துகின்றன. + +ஒத்தியைந்த மின்சுற்றின் ஒத்ததிர்வு அதிர்வெண்ணை கணக்கிடும் சூத்திரம்: +இங்கு "L" என்பது மின்தூண்டுதிறன் (அலகு - ஹென்றி). "C" என்பது மின்தேக்கத்திறன் (அலகு - பாரட்). + +மின்தூண்டி என்பது மின்காந்த சக்தியை காந்த புலத்தில் தேக்கி மின்னழுத்தை அல்லது மின்னோட்டத்தை தூண்ட வல்ல ஒரு மின் கருவி ஆகும் . குறிப்பாக நேரடி தொடர்பின்றி மின்னழுத்தத்தை தூண்டவும், மின்காந்த சக்தியை தற்காலிகமாக தேக்கி மின்னோட்டத்தை பேணவும் மின்தூண்டி பயன்படுகின்றது. மின்தூண்டி சுருள் கம்பங்களால் ஆனது. மின் தூண்டல் விளைவு இவ் சுருள் கம்பங்களில் இருக்கும் ஆடல் மின்னோட்டங்களின் ஒருமித்த விளைவுதான். ஆடல் மின்னோட்டம் (AC) அல்லது மாறும் மின்னோட்டம் (DC) மாறும் காந்த புலத்தை உற்பத்திசெய்கிறது . மாறும் காந்த புலம் மின்னழுத்தத்தை உற்பத்திசெய்கிறது அல்லது தூண்டுகின்றது. இந்த மின்னழுத்தம் ஒரு மாறும் மின்னோட்டத்தை எதிர் திசையில் உற்பத்திசெய்கிறது.அதாவது மாறும் அல்லது ஆடல் மின்னோட்டத்தை செலுத்தும் போது இந்த மின் தூண்டியில் ஒரு மின் காந்த அலை ஏற்பட்டு அந்த ஆடல் மின்னோட்டத்தை முற்றிலும் எதிர்த்து நிற்கிறது + + +இரண்டு இணைகடத்திகள் (இரண்டு இணைதட்டுகள்) குறிப்பிட்ட இடைவெளியால் பிரிக்கப்பட்டு, அந்தக் கடத்திகளில் மின்னூட்டம் (மின்னேற்றம்) இருக்குமானால், அந்தத் தட்டுகளுக்கு இடையே ஒரு மின்புலம் அமையும். அந்த மின்புலத்தில் தேக்கப்படமுடிந்த மொத்த மின்னூட்ட அளவே கொண்மம் அல்லது கொள்ளளவம் அல்லது மின் தேக்குதிறன் (Capacitance) எனப்படும். + + +மின் புலம் (Electric Field) + +மின் தன்மைகளில் இரண்டு வகைகள் உள்ளன. ஓர் அணுவுக்குள்ளும் இருவேறு தன்மை உடைய நுண் துகள்கள் உள்ளன. ஒரு வகையான மின் தன்மையை நேர்மின் தன்மை என்றும் மற்றொரு வகையான மின்தன்மையை எதிர்மின் தன்மை என்றும் அழைக்கலாம். இத்தகைய இருவேறு தன்மை ஏற்ற பொருள்கள் தம்மைச் சுற்றி ஒருவகையான விசைப்புலம் கொண்டு இருக்கும். இப்புலத்தைத்தான் மின் புலம் (Electric Field) என்கிறோம் + + + + + +மின்தூண்டி + +மின்தூண்டி என்பது ஒரு செ���லறு நிலை இருமுனை மின் சாதனமாகும். மின்னோட்டம் இதனூடாகப் பாயும்போது இது மின்சக்தியை காந்தப்புல வடிவில் சேமித்து வைக்கும். கம்பி போன்ற மின்கடத்தி ஒன்றை சுருளாகச் சுற்றுவதன் மூலம் இது உருவாக்கப்படும். + +மின்தூண்டியொன்றினூடான மின்னோட்டம் நேரத்தோடு மாறுகையில், மின்தூண்டியில் உருவாகும் மாறும் காந்தப்புலமானது பரடேயின் தூண்டல் விதிப்படி ஒரு மின்னழுத்தத்தைத் தோற்றுவிக்கும். லென்சின் விதிப்படி தூண்டிய மின்னியக்கவிசையானது அதனை உருவாக்கும் மின்னோட்டத்தின் திசைக்கு எதிராக இருக்கும். இதன் விளைவாக, மின்தூண்டியானது தன்னூடு செல்லும் மின்னோட்டத்தில் ஏற்படும் எந்தவொரு மாற்றத்தையும் எதிர்க்கும். + +மின்தூண்டியானது அதன் மின்தூண்டல் அளவினால் வகைகுறிக்கப்படும். இது மின்தூண்டியால் உருவாக்கப்படும் மின்னழுத்தத்துக்கும் அதனூடு பாயும் மின்னோட்டத்தின் மாறல் வீதத்துக்குமிடையிலான விகிதத்தினால் தரப்படும். பன்னாட்டு அளவீட்டு முறைமையின்படி மின்தூண்டலின் அலகு என்றி (H) ஆகும். வழமையாக மின்தூண்டிகளின் அளவுகள் 1 µH (10H) யிலிருந்து 1 H வரை மாறுபடும். பல மின்தூண்டிகள் இரும்பு அல்லது பெரைட்டு போன்றவற்றாலான காந்த அகணியைக் கொண்டிருக்கும். இதன்மூலம் மின்தூண்டியின் காந்தப்புல அளவு அதிகரித்து மின்தூண்ட அளவும் அதிகரிக்கும். தடையி மற்றும் கொள்ளளவி ஆகியவற்றைப் போல் மின்தூண்டியும் மின்னணுச் சுற்றுக்களை உருவாக்கப் பயன்படும் செயலறுநிலை நேரியல் மின்சுற்று மூலமாகும். மின்தூண்டிகள் பெரும்பாலும் ஆடலோட்ட மின்னணு உபகரணங்களிலும், குறிப்பாக வானொலி உபகரணங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை மின்சுற்றுக்களில் ஆடலோட்ட மின்னோட்டத்தை தடுத்து நேரோட்ட மின்னோட்டத்தை மட்டும் உள்வாங்க அனுமதிக்கும். இவை மின் வடிகட்டிகளில் வெவ்வேறு மீடிறன் கொண்ட சமிக்கைகளைப் பிரித்தெடுக்கும் தேவைக்க்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், வானொலி மற்றும் தொலைக்காட்சி வாங்கிகளில் இசைவாக்கல் சுற்றுக்களில் மின்தூண்டிகளும் கொள்ளளவிகளும் பயன்படுத்தப்படுகின்றன. + +கடத்தியொன்றினூடாகப் பாயும் மின்னோட்டமானது அதனைச் சூழ ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும். எனவே, மின் தூண்டியொன்றின் குறுக்குவெட்டுப்பரப்புக்கு ஊடான ஏதேனுமொரு மின்னோட்ட மாறல் அக் கடத்தியில் ஒரு எதிர் மின்னியக்கவிசையை உருவாக்கும். மின்தூண்டியின் செயற்பாட்டை வரையறுக்க மின்தூண்டம் ("L") பயன்படுத்தப்படுகிறது. இது எதிர்மின்னியக்கவிசை அல்லது அதற்குரிய காந்தப்பாய மாற்றம் (formula_1) மற்றும் அதற்குரிய மின்னோட்டம் ("i") என்பவற்றினால் தரப்படும். + +மின்சுற்றொன்றின் மின்தூண்டமானது அதன் மின்னோட்டப் பாதையின் வடிவ கணித அமைப்பிலும் அருகிலுள்ள பொருட்களின் காந்த உட்புகவிடுமியல்பிலும் தங்கியுள்ளது. மின்தூண்டியானது கம்பி அல்லது வேறு ஏதேனுமொரு கடத்தியொன்றினைப் பயன்படுத்தி, சுற்றினூடான காந்தப்பாயத்தை அதிகரிக்கும் விதமாக பெரும்பாலும் சுருளி வடிவில் உருவாக்கப்படும் சாதனமாகும். கம்பியினை சுருளாகச் சுற்றும்போது காந்தப்பாயக் கோடுகள் சுற்றோடு ஒன்றிக்கும் அளவு அதிகரித்து, காந்தப்புல வலிமை அதிகரித்து, மின்தூண்டல் அளவும் அதிகரிக்கும். முறுக்குகளின் எண்ணிக்கையோடு மின்தூண்டமும் அதிகரிக்கும். மேலும், சுருளின் வடிவம், முறுக்குகளின் வேறுபடுத்தல் போன்ற பல்வேறு காரணிகள் மின்தூண்டத்தின் அளவைப் பாதிக்கின்றன. இரும்பு போன்ற அயக்காந்த மூலப்பொருட்களாலான காந்த அகணியொன்றை சுருளினுள் இடுவதன் மூலமும் காந்தப்பாய அளவைக் கூட்டலாம். சுருளினால் வழங்கப்படும் காந்தப்புலத்தினால் அம்மூலப்பொருளில் தூண்டப்படும் காந்தமாக்கல் செயன்முறை காந்தப்பாய அளவை அதிகரிக்கக் காரணமாகிறது. அயக்காந்த அகணியின் உயர் உட்புகவிடுமியல்பு காரணமாக சுருளின் மின்தூண்டம் கிட்டத்தட்ட ஆயிரம் மடங்காக அதிகரிக்கும். + +மின்தூண்டியொன்றினூடான மின்னோட்ட மாற்றம் காந்தப்பாய மாற்றத்தை ஏற்படுத்தி அதன்மூலம் அக்கடத்திக்குக் குறுக்கே மின்னழுத்தமொன்றைத் தூண்டும். பரடேயின் மின்தூண்டல் விதியின்படி, மின்சுற்றொன்றில் ஏற்படும் காந்தப்பாய மாற்றத்தினால் தூண்டப்படும் மின்னழுத்தமானது பின்வரும் சமன்பாட்டினால் தரப்படும். + +மேலே (1) இலிருந்து + +எனவே, மின்தூண்டம் என்பது ஒரு குறித்த மின்னோட்ட மாற்றுவீதத்துக்கு உருவாகும் மின்னியக்கவிசையை அளக்கப் பயன்படும் ஒரு கணியமாகும். எடுத்துக்காட்டாக, 1 என்றி மின்தூண்டமுடைய மின்தூண்டியொன்று, தன்னூடே செக்கனுக்கு 1 அம்பியர் எனும் வீதத்தில் மின்னோட்டம் மாறுகையில், 1 வோல���ற்று மின்னியக்கவிசையை உருவாக்கும். இது பொதுவாக மின்தூண்டியொன்றை வரையறுக்கப் பயன்படும் சமன்பாடாகும். + +மின்தூண்டியின் இருமைச்சாதனம் கொள்ளளவியாகும். மின்தூண்டி சக்தியை காந்தப்புலத்தில் சேமிக்கும் அதேவேளை, கொள்ளளவி சக்தியை மின்புலத்தில் சேமிக்கும். கொள்ளளவியின் மின்னோட்ட-மின்னழுத்தத் தொடர்பானது, மின்தூண்டியின் தொடர்பில் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்தத்தை இடமாற்றுவதன் மூலமும், கொள்ளளவம் Cயை மின்தூண்டம் Lஇனால் பிரதியிடுவதன் மூலமும் பெறப்படும். + +தூண்டிய மின்னியக்கவிசையின் திசையானது லென்சின் விதியினால் தரப்படும். இதன்படி தூண்டிய மின்னியக்கவிசையானது மின்னோட்ட மாற்றத்துக்கு எதிரான திசையில் தொழிற்படும். எடுத்துக்காட்டாக, மின்தூண்டியினூடான மின்னோட்டம் அதிகரிக்கையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை எதிர்க்கும். இம்மின்னியக்கவிசையை எதிர்க்கும் சக்தி மின்தூண்டியின் காந்தப்புலத்தில் சேமிக்கப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னேற்றப்படுவதாகக் கூறப்படும். மின்னோட்டம் குறைகையில், மின்னோட்டம் நுழையும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை மறையாகவும், மின்னோட்டம் வெளியேறும் முனையில் தூண்டிய மின்னியக்கவிசை நேராகவுமிருக்கும். இதனால், இம்மின்னியக்கவிசை மேலதிக மின்னோட்டத்தை ஆதரிக்கும். காந்தப்புலத்திலுள்ள சக்தியானது மின்சுற்றுக்கு திருப்பப்படும். இக்காலப்பகுதியில் மின்தூண்டியானது மின்னிறக்கப்படுவதாகக் கூறப்படும். + +மின்சுற்றுக் கொள்கையில், மின்தூண்டிகள் மேலுள்ள கணிதத்தொடர்பு (2)ஐ சரியாகப் பின்பற்றும் சாதனமாகக் கருதப்படும். ஒரு இலட்சிய மின்தூண்டியானது, மின்தூண்டத்தை மட்டுமே கொண்டிருக்கும். அது மின்தடையையோ கொள்ளளவத்தையோ கொண்டிருக்காது. எனவே, இது சக்தியை விரயமாக்காது. எனினும், உண்மை மின்தூண்டிகள் இலட்சிய நடத்தையிலிருந்து விலகிச்செல்லும். அவை தடையையும் (கம்பியின் தடை மற்றும் அகணியின் சக்தி விரயம் காரணமாக), கொள்ளளவத்தினையும் (கம்பிச்சுற்றுக்களுக்கிடையிலான மின்புலம் காரணமாக) கொண்டிருக்கும். உயர் மீடிறன்களில், இக்கொள்ளளவம், மின்தூண்டியின் நடத்தையைப் பாதிக்கும். குறித்த சில மீடிறன்களில் இம் மின்தூண்டிகள் பரிவுச் சுற்றுக்களாகத் தொழிற்பட்டு சுயபரிவுச் சுற்றுக்களாக மாறும். பரிவு மீடிறனுக்கு மேலுள்ள மீடிறன்களில் கொள்ளளவ மாறுமின்னெதிர்ப்பு செல்வாக்கு மிகுந்ததாக மாறும். உயர் மீடிறன்களில், புறணி விளைவு மற்றும் அண்மை விளைவு போன்றவற்றால், சுருளின் தடை விரயம் அதிகரிக்கும். + +அயக்காந்த அகணியுடனான மின்தூண்டிகள், அகணியில் உருவாகும் பின்னிடைவு மற்றும் சுழிப்போட்டம் என்பன காரணமாக மேலதிக சக்தி விரயத்தைக் கொண்டிருக்கும். இவ் விளைவு மீடிறனுடன் அதிகரிக்கும். உயர் மின்னோட்டங்களில், அகணியில் காந்த நிரம்பல் ஏற்படுவதனால் உருவாகும் ஒருபடியல்லாத்தன்மை காரணமாக, மின்தூண்டியின் இலட்சிய நடத்தை மாறுபடும். மின்தூண்டியானது, அதன் அருகிலுள்ள வெளி அல்லது மின்சுற்றுக்கு மின்காந்த சக்தியை கதிர்ப்பதன் மூலமோ அல்லது, ஏனைய சுற்றுக்களிலிருந்து வரும் மின்காந்தக் கதிர்ப்பை உறிஞ்சுவதன் மூலமோ மின்காந்தத் தலையீட்டை உருவாக்கும். ஆகவே, பிரயோகப் பயன்பாடுகளில் இக்காரணிகள் முக்கியத்துவமிக்கதாக விளங்கும். + + + +மின்தூண்டிகள் தொடர்குறிமுறை சுற்றுக்களிலும் சமிக்ஞைச் செயன்முறையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. மின்தூண்டிகள் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. நேரோட்ட மின்னோட்ட மின் வழங்கிகளில் ஊசலாட்டத்தை அகற்றுவதற்கு கொள்ளளவிகளுடன் பயன்படும் பெரிய மின்தூண்டிகளிலிருந்து, கம்பி வடங்களில் வானொலி மீடிறன் இடையீட்டை அகற்றுவதற்காக அதனைச்சுற்றி காணப்படும் மெல்லிரும்புக் குமிழில் பயன்படும் சிறிய மின்தூண்டிகள் வரை இவை வேறுபடுகின்றன. நேரோட்ட வழங்கிகளாகப் பயன்படும் தொடர்மாற்றி மின் வழங்கிகளில் சக்திச் சேமிப்புக் கருவியாக மின்தூண்டி பயன்படுத்தப்படுகிறது. ஆளி தொடர்பறுக்கப்படும் காலப்பகுதியில் மின்னோட்டத்தைத் தொடர்ந்து பேணும் வகையில் மின்சுற்றுக்கு மின்தூண்டி சக்தியை வழங்கும். + +கொள்ளளவியொன்றுக்குத் தொடுக்கப்படும் மின்தூண்டியானது ஒரு இசைவாக்கல் சுற்றை உருவாக்கும். இது அலைவு மின்னோட்டத்துக்கான பரிவுச் சுற்றாகப் பயன்படும். இசைவாக்கிச் சுற்றுக்கள் வ��னொலி அலை உபகரணங்களான வானொலி அலைபரப்பிகள் மற்றும் அலைவாங்கிகளில் கூட்டுச் சமிக்ஞையிலிருந்து குறித்த ஒரு மீடிறனுடைய சமிக்ஞையை மட்டும் தெரிவுசெய்யும் செயன்முறையில் குறுகிய பட்டை அனுமதிப்பு வடிகட்டியாகவும், இலத்திரனியல் அலை இயற்றிகளில் சைன் சமிக்ஞைகளை உருவாக்குவதற்காகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. + +காந்தப்புலத்தினால் இணைக்கப்பட்டு அருகருகே அமைந்திருக்கும் இரு மின்தூண்டிகள் மின்மாற்றியொன்றை உருவாக்கும். மின்மாற்றியானது ஒவ்வொரு மின் வலு நிலையத்திலும் காணப்படும் அடிப்படைச் சாதனமாகும். மீடிறன் அதிகரிக்கையில் அகணியில் உருவாகும் சுழிப்போட்டம் மற்றும் சுருளில் ஏற்படும் தோல் விளைவு என்பன காரணமாக மின்மாற்றியின் பயன்திறன் குறைவடையலாம். உயர் மீடிறன்களில் அகணியின் அளவு குறைக்கப்படலாம். இக்காரணம் பற்றி, விமானங்கள் ஆடலோட்ட மின்னோட்டத்தில் வழமையாகப் பயன்படுத்தப்படும் 50 அல்லது 60 Hz மீடிறனுக்கு மாறாக 400 Hzஐப் பயன்படுத்துகின்றன. இதன்மூலம் மின்மாற்றிகளின் அளவு பெருமளவில் குறைவதனால் மின்மாற்றியின் நிறையும் குறைக்கப்படுகிறது. + +மின் கடத்து முறைமைகளில் மாறு மின்னோட்டம் மற்றும் வழு மின்னோட்டங்களைக் குறைப்பதற்காக மின்தூண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. இங்கு, மின்தூண்டிகள் பொதுவாக மாறுமின்னெதிர்ப்பி என அழைக்கப்படுகின்றன. + +மின்தூண்டிகளில் பக்கவிளைவுகள் அதிகம் காணப்படுவதால் அவை இலட்சிய நடத்தையிலிருந்து மாறுபடுவதாலும், மின்காந்தத் தலையீட்டை உருவாக்குவதாலும், மின்தூண்டிகளின் பௌதிக அளவு காரணமாக அவற்றை ஒருங்கிணை சுற்றுக்களில் பயன்படுத்த முடியாமையினாலும் நவீன இலத்திரனியல் சாதனங்களில், குறிப்பாக கையடக்கக் கருவிகளில் மின்தூண்டிகளின் பயன்பாடு வீழ்ச்சியடைந்து வருகிறது. மின்தூண்டிகளுக்குப் பதிலாக, கொள்ளளவிகளிலிருந்து மின்தூண்டத்தைப் பெறத்தக்க சுழலி போன்ற செயல்நிலைக் கருவிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. + +வழமையாக ஒரு மின்தூண்டியானது கடத்து பொருளினாலான, பொதுவாக காவலிடப்பட்ட செப்புக்கம்பியிலாலான, சுருளினையும், அதன் நடுவே நெகிழி அல்லது அயக்காந்தப் பொருளினாலான அகணியையும் கொண்டிருக்கும். அயக்காந்த அகணியின் உயர் உட்புகவிடுமியல்பு காரணமாக மின்தூண்டியின் காந்தப்புலம் அதிகரிப்பதோடு, அவை மின்தூண்டிக்கு மிக நெருக்கமாகவும் அமைந்திருக்கும். இதனால் மின்தூண்ட அளவு அதிகரிக்கும். தாழ் மீடிறன் மின்தூண்டிகள், மின்மாற்றிகள் போல உருவாக்கப்படும். இங்கு சுழிப்போட்டத்தைக் குறைக்கும் வகையில் அகணியிலுள்ள உருக்கு தகடுகளாகப் பயன்படுத்தப்படும். மெல்லிரும்பு அகணிகள் கேள் மீடிறன் அலைகளுக்கு அதிகமான மீடிறனுடைய சமிக்ஞைச் சுற்றுக்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், உயர் மீடிறன்களில் சாதாரண இரும்புக் கலப்புலோகப் பொருட்கள் அதிக சக்தி இழப்பை ஏற்படுத்தும் அதேவேளை இவை ஒப்பீட்டளவில் குறைந்த சக்தி இழப்பையே ஏற்படுத்துகின்றன. மின்தூண்டிகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. பெரும்பாலும் ஒரு இரும்பு அகணியைச் சூழ காவலிட்ட கம்பியைச் சுற்றுவதன் மூலம் இவை உருவாக்கப்படுகின்றன. சில மின்தூண்டிகளில் கம்பி வெளித்தெரியுமாறு காணப்படும் அதேவேளை, ஏனையவை கம்பியை அகணியினுள் மறைத்துக் காணப்படும். இவை காப்பிடப்பட்டவை எனப்படும். சில மின்தூண்டிகளில் மாற்றக்கூடிய அகணி காணப்படும். இதன்மூலம் அம்மின்தூண்டியின் மின்தூண்ட அளவை மாற்ற முடியும். அதியுயர் மீடிறன்களை தடைசெய்யும் வகையில் பயன்படுத்தப்படும் மின்தூண்டிகள் கம்பியொன்றின் மீது இரும்பு குமிழை இழைப்பதன் மூலம் உருவாக்கப்படும். + +சிறிய மின்தூண்டிகள், மின்சுற்றுப் பலகைகளில் நேரடியாக சுருளி வடிவில் வரைவதன் மூலம் உருவாக்கப்படுகின்றன. சில தள மின்தூண்டிகள் தள அகணியைப் பயன்படுத்துகின்றன. + +சிறிய பெறுமதியுடைய மின்தூண்டிகள் ஒருங்கிணை சுற்றுக்களிலும் உருவாக்கப்பட முடியும். மூவாயிகளை உருவாக்கம் அதே செயன்முறை இங்கும் பயன்படுத்தப்படுகிறது. சுருளி வடிவிலான அலுமினியம் தொடுப்பிணைப்பிகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும். எனினும், சிறிய அளவு காரணமாக மின்தூண்டத்தின் அளவும் குறைவடையும். எனவே, பொதுவாக சுழலி எனப்படும் சுற்று மூலமாக கொள்ளளவி மற்றும் செயல் நிலைக் கருவிகளைப் பயன்படுத்தி மின்தூண்டிகள் போலச் செயற்படும் சுற்றுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. + + + + + +இருமுனையம் + +இருமுனையம் (Diode) அல்லது இருமுனையி (இலங்கை வழக்கு: இருவாயி) என்பது ஒரு திசையில் மட்டும் கடத்து��் மின்னனியல் உறுப்பாகும். இன்று இது பெரும்பாலும் அரைக்கடத்திப் பொருள்களால் ஆன ஒரு நுண்மின்னணுக் கருவி. இது ஒரு திசையில் மின்னழுத்தம் தந்தால் மிக்க் குறைவான மின்தடை தந்து எளிதாக கடத்தி அதிக மின்னோட்டம் தருகின்றது. ஆனால் எதிர் திசையில் மின்னழுத்தம் தந்தால் பேரலவு மின் தடை தந்து அரிதில் கடத்தியாக மிகக்குறைவான மின்னோட்டமே தருகிறது. எனவே இக்கருவியை ஒருவழிக் கடத்தி அல்லது ஒருபால் கடத்தி எனச் சுருக்கமாகக் கூறலாம். இச் சிறப்புப் பண்பின் பயனாக மாறுமின்னோட்டத்தை ஒரே திசையில் பாயும் நேர்மின்னோட்டமாக நெறிப்படுத்த இது பயன்படுகின்றது. இருமுனையம் மிகப்பெரும்பாலான இலத்திரனியல் அல்லது மின்னனியல் கருவிகளில் பயன்படுகின்றது. மின்னழுத்தச் சீர்படுத்தி, எண்ம உறுப்புக் கருவிகள், அலைத்திருத்திகள், குறிப்பலைப் பிரிப்பிகள், மின்னனியல்அலைவிகள் ஆகியவற்றின் மின்னணுவியல் சுற்றுக்களில் இருமுனையம் சிறப்பாகப் பயன்படுகின்றது. + +அரைக்கடத்தி இருமுனையம் இன்று மிகப் பரவலாக வழக்கில் உள்ள படிக க் கட்டமைப்புள்ள அரைக்கடத்தி பொருளால் செய்யப்பட்ட மின்னனியல் உறுப்பாகும். இதில் உள்ள p–n சந்திகள் இரு மின்புள்ளிகளில் இணைக்கப்படுகின்றன. வெற்றிடக் குழல் இருமுனையம் ஒரு தட்டு, நேர்முனை, வெப்பமூட்டிய எதிர்முனை ஆகியவை அமைந்த இரு மின்முனையங்களால் ஆகிய மின்னனியல் உறுப்பாகும். இவற்றில் முன்னவையே முதலில் கண்டுபிடிக்கப்பட்டன படிகத்தின் அலைசீராக்கும் இயல்பு 1874 இல் பெர்டினாண்டு பிரவுன் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. பூனைமீசை எனும் முதல்வகை அரைக்கடத்தி இருமுனையங்கள்1906 இல் கண்டுபிடிக்கப்பட்டன. இவை கலினா எனும் கனிமப் படிகத்தால் ஆனவை. இன்று பெரும்பாலான இருமுனையங்கள் மணலகத்தாலோ (சிலிக்கான்) சிலவேளைகளில், ஜெர்மேனியம், செலினியம் ஆகிய படிகப் பொருள்களாலோ செய்யப்படுகின்றன. + +இருமுனையத்தின் வழக்கமான செயல் மின்னோட்டத்தை ஒருதிசையில் மட்டும் கடத்துவதாகும். இந்தத் திசை இருமுனையத்தின் முன்னேகும் திசை எனப்படும்.இது எதிர்த்திசையில் மின்னோட்டத்தைத் தடுக்கும். இருமுனையத்தின் இந்தத் திசை எதிர்திரும்பல் அல்லது எதிரோட்டத் திசை எனப்படும். எனவே இருமுனையத்தைச் சரிபார்ப்புக் கவாடத்தின் (ஓரதரின்) மின்னனியல் வடிவம��கக் கருதலாம். இந்த ஒருதிசை இயக்கம் சீராக்கம் எனப்படுகிறது. இது மாறுதிசை மின்னோட்ட்த்தை நேர்மின்னோட்டமாக மாற்ற உதவுகிறது. மேலும் வானொலி அலைவாங்கிகளில் வானொலி அலைகளில் இருந்து குறிகைகளைப் பிரிக்க உதவுகிறது. இந்த இருமுனையங்கள் அலைசீராக்கிகளாகச் செயல்படுகின்றன. இவை அலையொற்றிகள் (Detectors) எனப்படுகின்றன. + +முன்னேகு திசையில் அரைக்கடத்தி இருமுனையங்கள் ஒரு குறிப்பிட்ட வாயில்நில மின்னழுத்தம் தரபட்டால் மட்டுமே மின்னோட்டத்தைக் கடத்தத் தொடங்கும். இந்நிலையில் இருமுனையம் முன்னேகும் மின்னழுத்தநிலையில் உள்ளதாகக் கூறப்படும். முன்னேகும் மின்னழுத்தமூட்டிய நிலையில் இருமுனையத்தின் குறுக்கே அமையும் மின்னழுத்தம் மின்னோட்ட்த்தைப் பொறுத்து மிகவும் அருகியே மாறும்.அன்னல் வெப்பநிலை மாற்றத்தைப் பொறுத்து இம்மின்னழுத்தம் மாறுகிறது; இந்த விளைவு அல்லது பான்மை மின்னழுத்தத்தை மேற்கோளாக்க் கொண்டு வெப்பநிலையை அளக்க உதவுகிறது. இது வெப்பநிலை உணரியாகவோ மின்னழுத்த மேற்கோளாகவோ இருமுனையத்தைப் பயன்கொள்ள உதவுகிறது. + +அரைக்கடத்தி இருமுனையத்தின் மின்னோட்ட-மின்னழுத்தப் பான்மைகளை அரைக்கடத்திப் பொருள்களின் தேர்வாலோ அப்பொருள்களுக்குத் தரும் மாசூட்டிகளாலோ வேண்டிவண்னம் மாற்றலாம். இந்நுட்பங்கள் பலவகைப் பயன்பாடுகளைக் கொண்ட சிறப்புவகை இருமுனையங்களை வடிவமைக்க உதவுகிறது. எடுத்துகாட்டாக, மின்னழுத்தஞ் சீராக்கும் சீனர் இருமுனையங்களையும் உயரழுத்த மின்னலையெழுச்சிகளில் இருந்து மின்சுற்ரதர்களுக்குப் பாதுகாப்புதரும் தொடர்பாய்வு இருமுனையங்களையும் வானொலி, தொலைக்கட்சி அலைவாங்கிகளை மின்னனியலாக இசைவிக்கும் மாறுஞ்செயல் இருமுனையங்களையும், வானொலி அலைவெண் அலைகளை உருவாக்கும் அலைவிகளைப் படைக்க உதவும் சுருங்கை இருமுனையங்களையும் குன்வகை இருமுனையங்களையும் இம்பேட் (IMPATT) இருமுனையங்களையும் ஒளிதரும் ஒளியுமிழ் இருமுனையங்களையும் கூறலாம்.சுருங்கை, குன்வகை, இம்பேட்வகை இருமுனையங்கள் எதிர்மத் தடையைக் கொண்டுள்ளதால் இவை நுண்ணலை, நிலைமாற்றச் சுற்றதர்களில் பயன்படுகின்றன. + +வெற்றிட, அரைக்கடத்தி இருமுனையங்களை இரைச்சல் ஆக்கிகளாகவும் பயன்படுத்தலாம். + +தூய மணலகம்(சிலிக்கான்) அல்லது சாம்பலகம்(ஜேர்மானியம்) அரைக்கட���்தியின் ஒற்றைப்படிகம் ஒன்றின் ஒருபுறம் ஏற்பான் மாசு அணுக்களாலும் மறுபுறம் கொடை மாசு அணுக்களாலும் மாசூட்டப்படுவதால் PN சந்தி உருவாக்கப்படுகிறது. P-பகுதி அதிகளவில் மின்துளைகளையும் , N-பகுதி அதிகளவில் மின்னன்களையும் பெற்றுள்ளன + +சந்தி உருவாக்கப்பட்டவுடன் விரவல் நிகழ்வதால் , மின்துளைகளும் கட்டுறா எதிர்மின்னிகளும் சந்தியைக் கடக்கின்றன. இந்நிகழ்வின் போது N-பகுதியிலிருந்து P-பகுதிக்குச் சந்தியைக் கடந்து செல்லும் எதிர்மின்னிகள் சந்திக்கு அருகில் P-பகுதியில் உள்ள துளைகளுடன் ஒன்றிணைகின்றன. இதுபோன்று மின்துளைகள் சந்தி வழியே P-பகுதியிலிருந்து N-பகுதிக்குச் சென்று சந்திக்கு அருகில் N-பகுதியில் உள்ள எதிர்மின்னிகளுடன் ஒன்றிணைகின்றன. இதனால் சந்திக்கு இருபுறமும் இயக்க மின்னூட்டங்கள் அருகிய பகுதி உருவாக்கப்படுகிறது. இப்பகுதி ஊட்டம் அருகிய பகுதி (depletion region) என்று அழைக்கப்படுகிறது. +ஆகவே சந்திக்கு இடதுபுறம் உள்ள ஏற்பான் அணுக்கள் எதிர்மின்னணுக்களாகவும் வலது புறம் உள்ள கொடை அணுக்கள் நேர்மின்னணுக்களாகவும் மாறுகின்றன. + +இயக்கமில்லாப் பகுதியில், கொடை மற்றும் ஏற்பான் அயனிகளுக்கிடையே ஒரு மின்புலம் உருவாக்கப்படுகிறது. N-பகுதியின் மின்னழுத்தம் P-பகுதியின் மின்னழுத்தத்தை விட அதிகம். எனவே எதிர்மின்னிகள் N-பகுதியிலிருந்து குறைந்த மின்னழுத்தம் உள்ள P-பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. இதே போல், P-பகுதியில் மின்துளைகள் குறைந்த மின்னழுத்தத்தில் அமைவதால் N-பகுதிக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. ஆகவே பெரும்பான்மை மின்னூட்டஙளின் இயக்கத்தை எதிர்க்கும் ஒரு தடை , சந்தியில் உருவாகிறது. தடையின் ஒரு பக்கத்திற்கும் மற்றொரு பக்கத்திற்கும் இடையிலான மின்னழுத்த வேறுபாடே 'மின்னழுத்த அரண்' (potential barrier) ஆகும். +மண்ணியத்தினாலான PN-சந்திக்கு ஏறத்தாழ 0.7V ஆகவும் , சாம்பலியத்தினாலான PN-சந்திக்கு ஏறத்தாழ 0.3V ஆகவும் மின்னழுத்த அரண் அமைகிறது. தடையின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு உள்ள தொலைவு மின்னழுத்த அரணின் அகலம் என்றழைக்கப்படுகிறது. + +இருமுனையத்தின் (Diode) இயக்க இயல்புகளை மின்னோட்ட-மின்னழுத்த இயல்புப் படம் எடுத்துரைக்கின்றது. எந்த திசையில் மின்னழுத்தம் தருகிறோம் என்பதைப் பொறுத்து இரண்டு இயக்க நிலைகளைக் கொண்���து. இது தவிர அத்துமீறிய ஒரு முறிவியக்க நிலையும் உண்டு. அவையானவை: + + +நேர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தரும் பொழுது இருமுனையம் மின்னோட்டத்தை அனுமதிக்கும். இந்நிலையில் இருமுனையம் ஒரு எதிர்ப்பற்ற சுற்று (முழுக்கடத்தி இழை) போல் செயல்படும். + +எதிர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தரும் பொழுது இருமுனையம் மின்னோட்டத்தை அனுமதிக்காது. இந்நிலையில் இருமுனையம் ஒரு விடு்பட்ட சுற்று (அறுந்த சுற்று) போல் செயற்படும். + +எதிர் அழுத்த முறையில் மின்னழுத்தம் தந்தால் இருமுனையம் அதிகம் கடத்தாது என்பது ஒரு குறிப்பட்ட அளவு எதிர் மின்னழுத்தம் வரையிலும் தான். அக் குறிப்பிட்ட எதிர்ம மின்னழுத்தத்தை மீறினால், கட்டின்றி அதிக அளவு மின்னோட்டத்தை எதிர் திசையிலும் கடத்தும். இந்நிலைக்கு முறிவியக்கம் என்று பெயர். இந்நிலையிலும் இருமுனையம் சிறப்பாக பயன்படுகின்றது. ஏனெனில், இருமுனையத்தின் இடையே உள்ள மின்னழுத்தம் அதிகம் மாறாமல் இருமுனையம் வழியே வேண்டிய அளவு மின்னோட்டம் பாய முடியும். அதன் மின்னாற்றல் திறனின் எல்லை அளவை மீறாதிருந்தால் போதுமானது. இவ்வகை பயன்பாட்டிற்காகவே சீனர் இருமுனையங்கள் (Zener Diodes) உற்பத்தி செய்யப்படுகின்றன. + +மேலே விளக்கப்பட்ட இருமுனைய தொழிற்பாடுகள் கருத்தியல் (ideal) இருமுனையங்களுக்கே பொருந்தும். பயன்பாட்டிலுள்ள இருமுனைய தொழிற்பாடுகள் சற்று வேறுபடும். குறிப்பாக நேர் அழுத்த முறையில் மின்னழுத்த அளவு 0 V அல்லாமல் சுமார் 0.7 V ஆக அமைந்திருக்கும். + +இருமுனையம் வழியே பாயும் மின்னோட்டம் formula_1 என்றும், இருமுனையத்தின் இருமுனைக்கும் இடையே உள்ள மின்னழுத்தம் formula_2 என்றும் கொண்டால், இருமுனையத்தின் ஊடே பாயும் மின்னோட்டம்: +மேலே உள்ள சமன் பாட்டில் formula_4 என்பது எதிர் அழுத்த முறையில் பாயும் மிக மிகச் சிறிதளவான மின்னோட்டம். மேலே உள்ள சமன்பாட்டை (ஈடுகோளை) இன்னும் சுருக்கமாக எழுத, +என்றும் formula_6 என்றும் கொண்டால் இருமுனையத்தின் மின்னோட்ட-மின்னழுத்த உறவை கீழ்க்காணுமாறு எழுதலாம்: +மேலுள்ளதில் அறை வெப்பநிலையில் (300 K) formula_8 என்பது குறிப்பிட்ட வெப்பநிலையில் மாறா ஒரு நிலையெண்.. + + + + + + +குறும்பரப்பு வலையமைப்புகள் + +ஆரம்பத்தில் குறும்பரப்பு பிணையம் ஒரு மையக் கணினியையும் பி��� dumb terminals கொண்டிருந்தது. இதன் நோக்கம் வெவ்வேறு இடங்களில் இருக்கும் பயன்களுக்கு அல்லது வெவ்வேறு பயனர்களுக்கு சேவை வழங்குவதாகும். + +இவை பெரும்பாலும் ஈதர்நெட் தொழில்நுட்பத்தில் காவலிடாத முறுக்கான வயர்களூடாகவும் வைபை தொழில்நுட்பத்தூடாகவும் வடிவமைக்கப்பட்டன. + +பின்னர் workstations ஒரு குறும்பரப்பாகப் பிணைக்கப்பட்டன. இதன் நோக்கம் பல கணினிகள் நினைவகம், அச்சியந்திரங்கள் போன்ற பொது வசதிகளை பகிர்ந்து கொள்வதும் கணினிகளுக்கிடையான தொடர்புகளை ஏற்படுத்துவதாகும். இங்கு வலையமைப்பு பாதுகாப்பாக பேணுவது முக்கியம். + +1970களில் ஒரே இடத்தில் உள்ள கணினிகளை ஒன்றாக வேகமாக இணைக்கும் பொருட்டு முதலாவது வலையமைப்புக்கள் உருவாக்கப்பட்டன. இவற்றுள் ஈதர்நெட் மற்றும் ஆர்க்நெட்- ARPANET(American Research Project Agancy - DoD USA மிகப்பிரபலமானவை. + +CP/M மற்றும் டாஸ் இயங்குதளங்களில் வளர்ச்சியானது ஒரே இடத்தில் பல கணினிகள் முதல் பன்னூற்றுக்கணக்கான கணினிகள் வரை வைத்திருக்க வழிவகை செய்தது. வலையமைப்புக்களில் ஆரம்ப இலக்குக்களாக லேசர் அச்சியந்திரங்களைப் பகிருதல், கோப்புக்களை சேமிக்கும் இடங்களைப் பகிர்தல் ஆகியனவையே ஏனெனில் அக்காலகட்டத்தில் இவையிரண்டும் விலைமதிப்பானவையாக இருந்தது. 1983 இல் கணினிப் பண்டிதர்கள் கிரமமாக வரும் வருடத்தை வலையமைப்பு வருடமாகப் பிரகடனப்படுத்தினர். + +எனினும் உண்மையில் பௌதீக லேயர்(Physical Layer) மற்றும் அதை அணுகுவதற்கான வழிமுறைகள் ஒத்திசைவாக இல்லாதிருந்ததால் எவ்வாறு கணினி வழங்களை வினைத்திறனாகப் பகிர்வது என்பதில் மயக்கங்கள் ஏற்படுத்துத் தயக்கங்களை உண்டுபண்ணியது. பொதுவாக அக்காலத்தில் வலையமைப்புக் அட்டைகளைத் (நெட்வேர்க் காட்) தயாரித்தோர் தமக்கெற்றேற்றமாதிரி தாம் உருவாக்கிய வலையமைப்பு இயங்குதளம், நெட்வேர்க் காட், அதை அணுகுவதற்கான முறை, கேபிள் முறைகள் போன்ற இருந்தன. இதற்கு ஓர் தீர்வாக நாவல் நெட்வேர் வெளிவந்து வெற்றிகண்டது. இது 40 இற்கும் மேற்பட்ட கணினி வலையமைப்பு அட்டைகள்/மற்றும் கேபிள் முறைகளை ஆதரித்து இதன் போட்டியாளர்களை விட மேம்பட்டதாக விளங்கியது. நாவல் நெட்வேர் கணினி வலையமைப்பு வர்தகத்தை 1983 இன் ஆரம்பத்தில் இருந்து 1990 களில் மைக்ரோசாப்டின் வினைத்திறனான வின்டோஸ் என்டி சேவர் மற்றும் விண்டோஸ் பொ வேர்க்குறூப்ஸ் போன்��வை வெளிவரும்வரை ஆதிக்கம் செலுத்தியது. + +இக்காலகட்டத்தில் யுனிக்ஸ் இயங்குதளத்தைத் தயாரித்து விநியோகித்த சண் மைக்ரோ சிஸ்டம், ஹூயூவ்லெட் பக்காட், சிலிக்கான் கிராபிக்ஸ், இண்டகிராப், நெக்ஸ்ட் மற்றும் அப்போலோ TCP/IP இல் அமைந்த வலையமைப்பைப் பாவித்தன. இத்தொழில்நுட்பமானது இணையத்திலும் லினக்ஸ் மற்றும் ஆப்பிள் மாக்ஓஎஸ் இயங்குதளங்களிலும் ஆதிக்கம் செலுத்துவதோடு நாவல் நெட்வேர் ஆரம்பத்தில் 5ஆம் பதிப்புவரை விரும்பிப் பாவித்த ஐபிஎஸ், ஆப்பிள்டோக், என்பிஎவ் போன்றவற்றையும் மாற்றீடு செய்துள்ளது. + + + + +பெரும்பரப்பு வலையமைப்புகள் + +பெரும்பரப்பு வலையமைப்பு என்பது பூமியின் பரந்த பிரதேசத்தில் பலநூறு கணினிகளை கொண்டிருக்கும் கணினி வலையமைப்பு ஆகும். இவ்வகை வலையமைப்புக்களானது ரவுட்டர் ஊடாக பொதுத் தொடர்பாடல் வலையமைப்புக்களைப் பாவிக்கும் ஓரே பரந்த வலையமைப்பு ஆகும். இவை நாடுகடந்த பன்னாட்டு வலையமைப்புகளாகவும் இருக்கலாம் எடுத்துக்காட்டாக உலக உணவுத் திட்டம் இன் பெரும்பரப்பு வலையமைப்பு. இவ்வகை இணைப்புகளை ஏற்படுத்துவதற்காக குத்தகைக்கு எடுக்கப்படும் இணைப்புக்கள் (லீஸ்ட் லைன்), வீசட் இணைப்புக்கள் மற்றும் வைமக்ஸ் தொழில் நுட்பத்தையே பயன்படுத்துவார்கள். +பெரும்பரப்பு வலையமைப்பிற்கு இணையம் இதற்கு உதாரணமாகும். + + + + +பெருநகர் பரப்பு வலையமைப்புகள் + +பெருநகர் பரப்பு வலையமைப்புகள் ஒரு வளாகத்திலோ அல்லது ஒரு நகரத்திலோ பரந்திருக்கும் ஒரு பெரிய கணினி வலையமைப்பு ஆகும். இவ்வலையமைப்பில் கணினிகளை இணைக்க கம்பியில்லாத் தொலைத்தொடர்புத் தொழில்நுடபம் அல்லது ஒளியிழை (கண்ணாடிநார்) இணைப்பு பயன்படுகிறது. + +திசைவி + +திசைவித்தல் + +மிகக்குறுகிய பாதையை முதலில் திறத்தல் + + + + +தேசிய முற்போக்கு திராவிட கழகம் + +தேசிய முற்போக்கு திராவிட கழகம் (தேமுதிக) செப்டம்பர் 14, 2005 அன்று விஜயகாந்த் தலைமையில் மதுரையில் தொடங்கப்பட்ட தமிழ்நாட்டு அரசியல் கட்சியாகும். + +தனது கொள்கைகளாக தேமுதிக அறிவித்துள்ளவை பின்வருமாறு: + + +இக்கட்சி 2006ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டம���்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் தனித்து நின்று போட்டியிட்டது. 232 தொகுதிகளில் "முரசு" சின்னத்திலும் மீதம் உள்ள 2 தொகுதிகளில் (கடயநல்லூர், திருநெல்வேலி) "மோதிரம்" சின்னத்திலும் போட்டியிட்டது. கட்சித் தலைவர் விஜயகாந்த் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்றாலும் (விருத்தாச்சலம் தொகுதி), குறிப்பிடத்தக்க தொகுதிகளில் இக்கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருந்தனர். + +3 தொகுதிகளில் 20% அதிகமான வாக்குகளையும், 8 தொகுதிகளில் 15% லிருந்து 20% வரையான வாக்குகளையும், 33 தொகுதிகளில் 10% லிருந்து 15% வரையான வாக்குகளையும், 48 தொகுதிகளில் 7% லிருந்து 10% வரையான வாக்குகளையும் 2006 தேர்தலில் இக்கட்சி வேட்பாளர்கள் பெற்றனர். + +15வது மக்களவை (2009 பொதுத் தேர்தல்) தேர்தலில் இக்கட்சி யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழகத்தின் 39 & புதுச்சேரியில் தனியாக போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையம் தேமுதிக விற்கு பொது சின்னம் ஒதுக்க மறுத்து விட்டது. உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, உச்ச நீதி மன்றம் 2006 சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி போட்டியிட்ட முரசு சின்னத்தை ஒதுக்குமாறு இடைக்கால தீர்ப்பு வழங்கியது . + +2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரானார். + +இத்தேர்தலில் பாசக கூட்டணியில் இணைந்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. + +மக்கள் நலக் கூட்டணியுடன் தேர்தல் கூட்டணிக்காக தேமுதிக இணைந்தது. அணியின் முதல்வர் வேட்பாளராக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். . +2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. + + + + + +ஒளியமைப்பு + +பார்வை மனித வாழ்வின் முக்கிய அம்சங்களில் ஒன்று. இதனால் பார்வைப் புலனுக்கு அவசியமான ஒளி மனிதனுக்கு மிகவும் அடிப்படையான, அவசியமான ஆற்றல்களுள் ஒன்றாகிறது. மனிதனுடைய பல்வேறு வகையான தேவைகளுக்காக ஒளியை வழங்குவதற்கான தொழில் நுட்பமே ஒளியமைப்பு ஆகும். + +ஒளியின் முதன்மையான மூலம் சூரியன் ஆகும். தொடக்கக்கால மனிதர்கள் ஒளி தேவைப் படக்கூடிய தமது செயற்பாடு��ளை எல்லாம் பகலிலேயே வைத்துக்கொண்டனர். தீயைக் கட்டுப்பாடாகப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட பின்னர் இரவிலும் ஒளியை பெறக்கூடிய செயற்கை முறைகள் உருவாக்கப்பட்டன. மிக அண்மைக்காலம் வரை தீப் பந்தங்கள், மெழுகு திரி, எண்ணெய் விளக்குகள் என்பவையே இரவு நேர ஒளி மூலங்களாகப் பயன்பட்டு வந்தன. + +மின் விளக்குகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இரவையும் பகல் போலக் கருதிச் செயற்படக்கூடிய வல்லமை மனிதருக்குக் கிடைத்தது. தற்காலத்தில் இரவில் மட்டுமன்றிப் பகலிலும் கட்டிடங்களுக்குள் சூரிய ஒளி போதிய அளவு கிடைக்காத பகுதிகளிலும், சிறப்பான காட்சி விளைவுகளை உருவாக்க வேண்டிய சந்தர்ப்பங்களிலும், கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ஒளியைப் பயன்படுத்தவேண்டிய இடங்களிலும் மின் ஒளியே பயன்படுத்தப்படுகின்றது. + +நவீன ஒளியமைப்பை இரண்டு வகைகளாகக் கருத்தில் எடுக்கலாம். + + +பொதுவாகப் பலரும் இயற்கை ஒளியை விரும்புகின்றனர். குறைந்த செலவில் மனிதருடைய தேவைகளை நிறைவு செய்யக்கூடியது இயற்கை ஒளி. சூரிய ஒளியை உள்ளக ஒளியமைப்புக்குப் பயன்படுத்தும் போது, கட்டிடத்தின் அமைவுத் திசை, சாளரங்களின் அளவும் வடிவமும் போன்ற விடயங்கள் கவனத்தில் எடுக்கப்படுகின்றன. இது மட்டுமன்றிச் சாளரங்களூடாக அளவுக்கு அதிகமான ஒளியும், அதனுடன் சேர்ந்து வெப்பமும் நுழைவதையும் கவனிக்க வேண்டும். + +இயற்கை ஒளி ஒரு நாளின் எல்லா நேரங்களிலுமோ அல்லது ஒரு ஆண்டின் எல்லா நாட்களிலுமோ ஒரே சீராகக் கிடைப்பதில்லை. இதனால் அளவுக்கு கூடுதலான ஒளி இருக்கும் நேரங்களில் அதனைக் கட்டுப்படுத்தி அளவாக உள்ளே விடவும், போதிய ஒளி இல்லாத நேரங்களில் செயற்கை ஒளி மூலங்களிலிருந்து ஒளி பெறும் வகையிலும் ஒளியமைப்பை வடிவமைக்க வேண்டும். + +செயற்கை ஒளியமைப்பு இக்காலத்தில் மின்னொளியிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதற்காகப் பலவகையான ஒளிக் குமிழ்களும், அவற்றைப் பயன்படுத்துவதற்கான விளக்குகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இக் குமிழ் வகைகள் ஒவ்வொன்றும் அவ்வவற்றுக்கு உரிய சாதக பாதக அம்சங்களைக் கொண்டுள்ளன. தேவைகளைக் கருத்திலெடுத்துப் பொருத்தமான குமிழ்களும் விளக்குகளும் தெரிவு செய்யப்படுகின்றன. + + + + + +திரிதடையம் + +திரிதடையம் ("Transistor", இலங்கை வழக்கு: "மூவாயி") அல்ல��ு திரான்சிஸ்டர் என்னும் மின்னனியல் கருவி ( இலத்திரனியல் கருவி); இது அடிப்படையான மின் குறிப்பலை பெருக்கியாகவும், மின் குறிப்பலைகளை வேண்டியவாறு கடத்தவோ அல்லது கடத்தாமல் இருக்கவோச் செய்யப் பயன்படும் நிலைமாற்றிகளாகவும் (switches) பயன்படும் ஓர் அரைக்கடத்திக் கருவி ஆகும். இன்றைய கணினிகள், அலைபேசிகள் முதல் கணக்கற்ற மின்னனியல் கட்டுப்பாட்டுக் கருவிகள் யாவும் இந்தத் திரிதடையங்களால் பின்னிப் பிணைந்த மின்சுற்றுகளால் ஆனவை. இதனைக் கண்டுபிடித்தவர்களுக்கு 1956இல் கூட்டாக இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. + +வெப்ப மின்னணு மும்முனையம் 1907 இல் புதிடாகப் புனையப்பட்டது. இதனால் வானொலித் தொழில்நுட்பமும் நெடுந் தொலைவுத் தொலைபேசித் தொழிநுட்பமும் கிளைத்து வளரலாயின. அனால், இந்த மும்முனையன் கணிசமான மின்னாற்றலை உறிஞ்சியது. வில்லியம் எக்கிளெசு படிக இருமுனைய அலையாக்கியைக் கண்டுபிடித்தார். + +ஜான் பர்தீனும் வால்டேர் பிரட்டைனும் 1947 நவம்பர் 17 முதல் 1947 திசம்பர் 23 வரை அமெரிக்கா, நியூஜெர்சி முரேகில்லில் அமைந்த AT&T தொழில்குழுமத்தின் பெல் ஆய்வகத்தில் பல் செய்முறைகளைச் செய்து, செருமானியப் படிகத்தின் இரு பொன்னாலான புள்ளிகளுக்கு இடையில் மின்வழங்கலைத் தரும்போது உள்ளீட்டி தரும் குறிகையை விட வெளியீட்டில் பேரளவு குறிகை உருவாதலை நோக்கிப் பதிவு செய்தனர்.> திண்மநிலை இயற்பியலின் தலைவராகிய வில்லியம் சாக்ளே இதன் மின்னழுத்த்த்தைக் கண்டறிந்தார் அடுத்த சில மாதங்களில் அரைக்கடத்திகள் (ஒருபால் கட்த்திகள்) பற்றிய அறிவுத்தளத்தை பெரிதும் விரிவுபடுத்தினார். திரிதடையம் ("transistor") என்ற சொல்லை ஜான் ஆர். பியர்சு திரிதல்தடையம் ("transresistance") என்ற சொல்லுக்கான சுருக்கமான வடிவமாக அறிமுகப்படுத்தினார்.பர்தீன் சாக்ளேவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய இலில்லியன் ஓடெசனும் விக்கி தாயிட்சியும், திரிதடையப் புலவிளைவு வகைக்கான முதல் உரிமத்தைப் பெற சாக்ளே முன்மொழிந்த்தாகவும் அதில் சாக்ளேவின் பெயரை புதுமைபுனைவாளராக குறிப்பிடச் சொன்னதாகவும் கூறுகின்றனர். சில ஆண்டுகளாக கிடப்பில் அறியப்படாமல் இருந்த இலில்லியன்பெல்டுவின் கண்டுபிப்பும் பதிவுரிமங்களும் வெளிக்கொணரப்பட்டதும், பெல் ஆய்வகச் சட்ட அறிவுரையாளர்கள் சாக்ளே முன்மொழிவுக்கு எதி��ாக வாதிட்டனர். ஏனெனில், புலவிளைவு திரிதடைய எண்ணக்கரு புதிதல்ல; மேலும் பர்தீனும் பிரட்டைனும் சாக்ளேவும் 1947 இல் புள்ளித் தொடுகைத் திரிதடையத்தை தான் உண்மையில் வடிவமைத்துள்ளனர். சாக்ளே, பர்தீன், பிரட்டைன் ஆகியோரின் இந்த புதிய வடிவமைப்புக்காக இவர்கள் மூவரும்1956 ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசை அரைக்கடத்திகளின் ஆய்வுக்காகவும் திரிதடையவிளைவைக் கண்டறிந்ததற்காகவும் பெற்றனர். + +திரிதடையம் நிகழ்கால மின்னனியலில் அனைத்துக் கருவிகளிலும் பரவலாக பயன்படும் உறுப்பாகும். பலர் இதை 20 ஆம் நூற்றாண்டின் மாபெரும் புதுமைபுனவாக கருதுகின்றனர். இதன் பெருந்திரள் ஆக்கத்தால் அமையும் வியப்பூட்டும் மிகக் குறைந்தவிலை இன்றைய சமூகத்தின் தனிச்சிறப்பாக மாற வாய்ப்பளித்து விட்டது. பெல் ஆய்வகத்தில் திரிதடையத்தின் புதுமைபுனைவு 2009 இல் IEEE சாதனைப் பட்டியலின் மைல்கற்களில் ஒன்றாக வரையறுக்கட்டுள்ளது. + +பல குழுமங்கள் ஒவ்வொன்றும் பில்லியன் கணக்கில் திரிதடையங்களை உருவாக்கினாலும், +இன்று பெரும்பாலான திரிதடையங்கள் ஒருங்கிணைந்த சுற்றமைப்புகளிலேயே உருவாக்கப்படுகின்றன. இவை "ஒசு", "நுண்சில்லுகள்" அல்லது எளிதாக "சில்லுகள்" என வழங்குகின்றன. இவற்ரில் இருமுனையங்களும் தடையங்களும் கொண்மிகளும் பிற மின்னனியல் உறுப்புகளும் அமைந்து குறிப்பிட்ட மின்ன்ன் சுற்றமைப்பை உருவாக்குகின்றன. ஓர் ஏரண வாயிலில் இருபதுக்கும் மேற்பட்ட திரிதடையங்கள் அமைய, ஒரு உயர்நிலை நுண்செயலியில், 2009 இல், 3 பில்லியன் அளவு திரிதடையங்கள் அமைகின்றன(பொ ஆ அ புவிதிகளில்). +"புவியில் வாழும் ஒவ்வொரு ஆணுக்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏறத்தாழ, 60 மில்லியன் திரிதடையங்கள், 2002 இல், செய்யப்படுகின்றன." + +திரிதடையத்தின் குறைந்த விலையும் நம்பகத்தன்மையும் நெகிழ்தகவான இயல்பும் இதை ஒரு சிறந்த கருவியாக்கி உள்ளன. திரிதடையங்கள் பொதிந்த எந்திரமின்னனியல் சுற்றமைப்புகள்மின்னெந்திரக் கருவிகளுக்கு மாற்றாக கட்டுபாட்டு பயன்கருவிகளிலும் எந்திரங்களிலும் அமைகின்றன. ஒரு செந்தர நுண்கட்டுபடுத்தியைப் பயன்படுத்தி கணினி நிரல் எழுதி கட்டுபடுத்துவது அதெ செயலைச் செய்ய சம எந்திரவியல் அமைப்பை வடிவமைப்பதைவிட எளிமையானதாகவும் விலைகுறைந்ததாகவும் உள்ளது. + +��ிரிதடையங்களில் பற்பல வகைகள் இருந்தபொழுதினும் இரு பொது வகைகள் உண்டு.அவையாவன, +என்பன ஆகும். + +முன்னதில் மூன்று மின்முனைகள் உண்டு, பின்னதில் நான்கு மின்முனைகள் உண்டு. இமிதியில் எதிர்மின்னி, மற்றும் நேர்ம மின்மம் கொண்ட புரைமின்னி ஆகிய இருவகை மின்னிகளும் அடிப்படியான இயக்கித்தில் பங்குகொண்டு தொழிற்படும். ஆகவே இதனை இருவகை (bipolar) மின்னிக் கடத்தித் திரிதடையம் என அழைக்கின்றனர். + +இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையத்தில் (இமிதி) மூன்று குறைக்கடத்திப் பகுதிகள் உள்ளன. இம்மூன்று பகுதிகளில், நடுவே உள்ள ஒரு குறிப்பிட்ட வகையான குறைக்கடத்திப் பகுதி, வேறொரு வகையான இரண்டு குறைக்கடத்திப் பகுதிகளுக்கும் இடையே இருக்குமாறு அமைந்திருக்கும். எனவே இரு சந்திகள் (நே-எ சேர்முகங்கள், p-n junctions) உள்ளன. அந்த நடுவே இருக்கும் பகுதிக்கு "அடிமனை" (பேஸ், base) என்று பெயர். மற்ற இரு பகுதிகளில் ஒன்றுக்கு "உமிழி" (எமிட்டர், emitter) அல்லது "உமிழ்முனை" என்றும், இன்னொன்றுக்கு "திரட்டி" அல்லது "பெறுதி" (collector) என்றும் பெயர். உமிழிக்கும் அடிமனைக்கும் இடையே தரும் மின் அழுத்தத்தால், அடிமனை வழியாகப் பாயும் மின்னோட்டம் பல மடங்காக திரட்டி மின்முனையில் மிகைப்புற்றுப் பாயும். இவ்விளைவால் இத் திரிதடையத்தை குறிப்பலைகளின் மிகைப்பியாக பயன்படுத்துகிறார்கள். இந்த இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையத்தில் இரு வகைகள் உள்ளன. நடுவே இருக்கும் பகுதி நேர்வகை (p-type) குறைக்கடத்தியாக இருக்கலாம் +அல்லது எதிர்வகை (n-type) குறைக்கடத்தியாக இருக்கலாம். எனவே இவற்றை p-n-p வகை இருவகை மின்னிக் கடத்தித் திரிதடையம் (இமிதி) அல்லது n-p-n வகை இமிதி என அழைக்கப்படும். +இமிதிகளில் n-p-n (எ-நே-எ) வகைத் திரிதடையம், p-n-p (நே-எ-நே) வகை திரிதடையத்தை விட விரைவாக இயங்க வல்லது, ஏனெனில் அடிமனையாகிய நேர்வகைக் குறைக்கடத்திப் பகுதியில், அருகில் உள்ள உமிழி முனையில் இருந்து செலுத்தப்பெறும் சிறுபான்மை மின்னியாகிய எதிர்மின்னிகள் மிக விரைவாக நகரவல்லன. மாறாக p-n-p (நே-எ-நே) வகை திரிதடையத்தில் நடுவே உள்ள எதிர்வகை குறைக்கடத்திப் (n-type) பகுதியில், அதன் சிறுபான்மை மின்னியாகிய நேர்மின்மம் கொண்ட புரைமின்னிகள் எதிர்மின்னியைக் காட்டிலும் மெதுவாகவே நகரவல்லன. + +மின்புல விளைவுத் திரிதடையத்தில், மொத்தம் நான்கு மின்முனைகள் உண்���ு. இதில் அடித்தளம் அல்லது உடல் எனப்படும் பகுதியை இணைக்க ஒரு மின்முனை உண்டு. இக்கருவி இந்த அடித்தளத்தின் மீது உருவாக்கப்படுவதால், இப்பெயர் பெற்றது. இந்த அடித்தளம் ஒரு வகையான குறைக்கடத்தியால் செய்யப்பட்டிருக்கும், இந்த அடித்தளப் பகுதிக்கு மேலே வன்கடத்தியால் (கடத்தாப் பொருளால்) ஆன வன்கடத்திப் படலம் ஒன்று இருக்கும். இதன் தடிப்பு தற்காலக் கருவிகளில் ஒரு சில நானோமீட்டர் அளவே இருக்கும். இதற்கு வன்கடத்திக் கதவம் (gate insulator) என்று பெயர். இந்த வன்கடத்திப் படலத்தின் மேலே, நன்றாகக்கடத்தும் நன்கடத்திப் படலம் (gate metal) இருக்கும். இது கதவு முனை (gate terminal) என்று அழைக்கப்படும். இந்த அடித்தளம் தவிர மற்ற மூன்று மின்முனைகள் பின்வருவன ஆகும்: கதவுமுனை (gate), வழங்கி முனை (வழங்குவாய், source), திரட்டி முனை (drain). வழங்கிப் பகுதியும், திரட்டிப் பகுதியும், ஒரே வகையான குறைக்கடத்தியினால் (எ.கா நேர்வகை குறைக்கடத்தி) செய்யப்பட்டிருக்கும். இடையே உள்ள அடித்தளப்பகுதி நேர்மாறான வேறொரு வகையான குறைக்கடத்தியால் (எ.கா எதிர்வகை குறைக்கடத்தியால்) செய்யப்பட்டிருக்கும். இதனால் வழங்கி முனைப் பகுதியில் இருக்கும் மின்னிகள் அடித்தளப்பகுதியின் வழியாக திரட்டி முனைக்குச் செல்லல் இயலாது. கதவுமுனைக்கும் வழங்கி முனைக்கும் இடையே தகுந்த மின்னழுத்தம் தந்தால், இதனால் வழங்கிப் பகுதிக்கும் அதனை அடுத்து உள்ள அடித்தளத்தின் பகுதிக்கும் இடையே உள்ள ஆற்றல் மேடு குறையும் (தணியும்), இதனால் வழங்கியில் இருந்து மின்னிகள் அடித்தளத்தில், வன்கடத்திப் படலத்திற்கு கீழே நீரோடை போல ஓடி திரட்டியை அடையும் (திரட்டியின் மின் அழுத்தம் அதற்கேற்றார்போல இருத்தல் வேண்டும்). கதவு முனையில் தகுந்த மின்னழுத்தம் தருந்தால், வன்கடத்திக்குக் கீழே வழங்கி-திரட்டிக்கு இடையே ஓடும் மின்னிகளின் பாதையை மின்னி வாய்க்கால் (channel) என்று அழைப்பர். கதவு முனையில் தரும் மின்னழுத்தத்திற்கு ஏற்றவாறு கூடுதலாகவோ, குறைவாகவோ மின்னிகள் வாய்க்கால் வழியாகப் பாயும். இப்படி திரட்டி-வழங்கி இடையே பாயும் மின்னோட்டத்தை கதவுமுனை-வழங்கிக்கு இடையே உள்ள மின்னழுத்தம் கட்டுப்படுத்துவதால், இதுவும் மிகைப்பியாகவும், கட்டுப்படுத்தும் குறிப்பலைத் தொடுக்கியாகவும் பயன்படுகின்றது. +இந்த மின்புல வகைத் திரித��ையங்களில் பற்பல வகைகள் உண்டெனினும், வாய்க்காலில் பாயும் மின்னியின் வகையைப் பொருத்து, இருவகைகள் உண்டு. மின்னிகள் எதிர்மின்னிகளாக இருந்தால் அவற்றை எ-வாய்க்கால் (n-channel) திரிதடையம் என்றும், நேர்மின்மம் கொண்ட புரைமின்னிகளாக இருந்தால் நே-வாய்க்கால் (p-channel) திரிதடையம் என்றும் அழைக்கப்படும். + +அட்டவணை 1 பலவகை திரிதடையங்களைக் காட்டுகின்றது. + +இருமின்னிவகைத் திரிதடையம் மின்சுற்றுகளில் பொதுவாக நான்கு வகையான இணைப்புகளில் இயங்க வல்லது, ஆனால் இவை பெரும்பாலும் மூன்று வகையான (முதல் மூன்று) அமைப்பிலேயே பயன்படுத்தப்படுகின்றது. எந்த நிலையில் இயங்கும் என்பது முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்தங்களைப் பொருத்தது. இமிதியில் இரண்டு சந்திகள் (சேர்முகங்கள்) உள்ளதால், அவை ஒவ்வொன்றும் நேர்முறை அழுத்தம்(forward bias), எதிர்முறை அழுத்தம் (reverse bias) பெறவல்லதால் மொத்தம் 4 இணைப்பு முறைகள் உண்டு. + + +தனித் திரிதடையங்கள் என்பவை தனித்தனியாக தொகுத்த திரிதடையங்கள் ஆகும். திரிதடையங்கள் பலவேறான அரைக்கட்த்தித் (செங்கட்த்தித்) தொகுப்புகளில் வருகின்றன (படிமத்தைப் பார்க்க). இரு முதன்மைவகைகளாவன "கம்பித்தலைப்பில் பூட்டியவகை", "மேற்பரப்பில் நிறுவியவகை" என்பனவாகும். பெரிய ஒருங்கிணைந்த சுற்றதர்களுக்கான மிக அண்மைய மேற்பரப்பு நிறுவல் தொகுப்பு "பந்து வலை அணி" (BGA) ஆகும். இது கம்பித்தலைப்புக்கு மாறாக தட்டின் கீழே அமைந்த பந்துகளை பற்றவைக்கிறது. இவை சிறிய குற்றிணைப்புகளாக அமைவதால், இவை சிறந்த உயர் அலைவெண் பான்மைகளைக் கொண்டுள்ளன. இதன் திறன் வரையளவும் குறைவாகவே உள்ளது. + +திரிதடையத் தொகுப்புகள் கண்ணாடியிலோ பொன்மத்திலோ (உலோகத்திலோ) வெங்களியிலோ நெகிழியிலோ செய்யப்படுகின்றன. தொகுப்புக்குப் பயனாகும் பொருள் திறன் வரையளவையும் அலைவெண் பான்மைகளையும் தீர்மானிக்கிறது. திறன் திரிதடையங்கள் பெருதொகுப்புகளாக அமைதலால், அவை வெப்பத்தணிப்பிக்குக் குளிர்த்தலைக் கூட்ட இணைக்கப்படுகின்றன. கூடுதலாக பெரும்பாலான திறன் திரிதடையங்கள் வெப்பத் திரட்டியுடன்அமைகின்றன அல்லது வெப்ப வடிகாலாக அமையும் பொன்ம (உலோக) உறைக்கு நேரடியாக இணைக்கப்படுகின்றன. சில நுண்ணலைத் திரிதடையங்கள் மணலினும் சிறிய பரலாக அமைகின்றன. + +குறிப்பிட்டவகைத் திரிதடையமே பல்வேறு தொகுப்புகளி���் கிடைக்கிறது. முதன்மையாக தொகுப்புகல் செந்தரப்படுத்தப்பட்ட அளவுக்கு அவற்ரின் ஈறுகள் அல்லது முனைகளின் செயல் குறிப்புகள் தரப்படுத்தப்படவில்லை: வேறுவகைத் திரிதடையம் தொகுப்பு முனைகளுக்கு வேறு செயலைத் தரலாம். மேலும் ஒரேவகைத் திரிதடையத்துக்கும் கூட முனைக்கான செயல் தரவுகள் வேறுபடலாம் (வழக்கமாகபகுதியின் எண்ணுக்குத் தரப்படுக் பின்னொட்டு எழுத்து செயல் தரவைக் குறிக்கிறது. எடுத்துகாட்டாக, BC212L, BC212K என்பவற்றைக் கூறலாம்). + +இக்காலத்தில் பெரும்பாலான திரிதடையங்கள் அகல்வான நெடுக்கத்தில் மேற்பரப்பு நிறுவல் தொகுப்புகளாக வருகின்றன. ஆனால், ஒப்பீட்டளவில் கம்பித்தலைப்பு பூட்டல் தொகுப்புகள் மிக்க் குறைவாகவே அமைகின்றன. கீழே ஆங்கில நெடுங்கணக்கு ஒழுங்கிலான கம்பித்தலைப்புவகைத் திரிதடையங்களின் தொகுப்புகள் தரப்படுகின்றன: + +ATV, E-line, MRT, HRT, SC-43, SC-72, TO-3, TO-18, TO-39, TO-92, TO-126, TO220, TO247, TO251, TO262, ZTX851 +ஆய்வாளர்கள் கரிமப் புல விளைவுத் திரிதடையம் உட்பட, பலவகை நெகிழ்தகவுள்ள திரிதடையங்களை உருவாக்கியுள்ளனர்]]. இவை நெகிழ்தகவுக் காட்சித்திரைகளிலும் நெகிழ்தகவு மின்னனியலிலும் பயன்படுகின்றன. + + + + +பூட்டான் + +பூட்டான் ("Bhutan", திஃசொங்கா "துரூ ஊ"), அல்லது பூட்டான் இராச்சியம் ("Kingdom of Bhutan") தெற்காசியாவில் இமய மலைச் சாரலின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள நிலத்திடை நாடாகும். இதன் எல்லைகளாக தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கே இந்தியாவும், வடக்கே திபெத்தும் அமைந்துள்ளன. இந்தியாவின் சிக்கிம் மாநிலம் நேபாளம் பூட்டான் ஆகியவற்றைப் பிரிக்கிறது. பூட்டான் மக்கள் தமது நாட்டை "டிரக் யூல்" (வெடிக்கும் டிராகனின் நிலம்) என அழைக்கின்றனர். திம்பு இதன் தலைநகரமாகும். + +பூட்டான் உலகில் மிகவும் ஒதுங்கிய நாடாக இருந்த போதிலும் அண்மைய அபிவிருத்திகளும், உலக நாடுகளுடனான நேரடி வானூர்தி சேவைகள், இணைய இணைப்புகள், போன்றவை வெளியுகத்துடனான கதவுகளைத் திறந்து விட்டுள்ளன. மக்கள் தமது பழமையான பண்பாடுகளைப் பேணிப் பாதுகாத்து வருகின்றனர். 2006 ஆம் ஆண்டில் "பிசினஸ் வீக்" இதழ் நடத்திய கருத்துக் கணிப்பில் பூட்டான் ஆசியாவின் மிகவும் மகிழ்ச்சியான நாடாகவும், உலகின் எட்டாவது மகிழ்ச்சியான நாடாகவும் தெரிவு செய்யப்பட்டது. + +பூட்டானின் அரச சமயம் வச்சிராயண பௌத்���ம் ஆகும். மக்கள் பெரும்பாலானோர் பௌத்தர்கள். ஏனையோர் இந்துக்கள். திம்பு இதன் தலைநகரும், மிகப்பெரிய நகரமும் ஆகும். பல நூற்றாண்டுகளாக நேரடி மன்னராட்சியில் இருந்த பூட்டான் முதலாவது மக்களாட்சித் தேர்தல்களை மார்ச் 2008 இல் நடத்தியது. பூட்டான் ஐக்கிய நாடுகள், மற்றும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பு (சார்க்) ஆகிய அமைப்புகளில் உறுப்புரிமை பெற்றது. + + + + +பகல் + +பொது வழக்கில் சூரிய ஒளி பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் காலப்பகுதி அவ்விடத்தில் பகல் ("daylight") எனலாம். கிழக்குத் திசையில் சூரியன் உதிக்கின்ற நேரம் முதல் மேற்கில் மறையும் நேரம் வரையான காலப்பகுதியே இது. ஒரு பகலும், ஓர் இரவும் சேர்ந்தது ஒரு நாள். பகல் நேரம் எப்பொழுதும் ஒரே அளவாக இருப்பதில்லை. ஓர் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் பகல் நேரத்தின் அளவு வெவ்வேறாக இருக்கின்றது. அத்துடன் புவி மையக் கோட்டுக்குத் தொலைவிலுள்ள இடங்களில் இவ்வேறுபாடு அதிகமாக இருக்கும். + +பூமி தன்னுடைய அச்சில் தன்னைத் தானே சுற்றுவதனாலேயே பகலும் இரவும் உருவாகின்றன. பூமியின் ஒரு குறிப்பிட்ட நிலையில் அரைப் பகுதி சூரியனை நோக்கியிருக்க, மற்றப்பகுதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருக்கும். சூரியனை நோக்கியிருக்கும் பகுதியில் சூரிய ஒளி விழுவதனால் அப்பகுதி பகலாக இருக்கும். + + + + +இரவு + +புவியின் குறிப்பிட்ட ஓர் இடத்தில் சூரிய ஒளி இல்லாதிருக்கும் காலப்பகுதி இரவு அல்லது இருட்சூழ்வு எனப்படும். இருள் சூழ்ந்திருக்கும் நேரமே இரவு. இது சூரியன் மறைவுக்கும், அடுத்த சூரியோதயத்துக்கும் இடைப்பட்ட காலமாகும். ஓர் இரவும் ஒரு பகலும் கொண்டது ஒரு நாள் ஆகும். + +பூமி தனது அச்சில் சுழலும்போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பாதி சூரியனுக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதனால், அப் பக்கத்துக்கு சூரிய ஒளி கிடைப்பதில்லை. இதன் காரணமாக அப் பகுதி இருட்டாக இருக்கும். அத்தகைய பகுதிகளில் அந்த நேரம் இரவாக இருக்கும். + + + + +எண்ணெய் விளக்கு + +எண்ணெய் விளக்குகள் பலவிதப்படுகின்றன. பொதுவாக இத்தகைய விளக்குகளில் எண்ணெயைத் தேக்கி வைத்திருக்க ஒரு பகுதி இருக்கும். இந்த எண்ணெயிலிருந்து சிறிது சிறிதாக எரியும் சுவாலைக்கு வழங்குவதற்காக ஒன்று அல்லது பல திரிகள் இருக்கலாம். எண்ணெய் விளக்குகளில் பல வகை எண்ணெய்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றுள், + + +என்பன பரவலான பயன்பாட்டிலுள்ளவை. +எண்ணெய் விளக்குகள் ஒளி தரவும் அழகூட்டவும் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான விளக்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மண், பித்தளை முதலிய உலோகங்கள் விளக்குகளை உருவாக்க மரபு வழியாகப் பயன்படும் பொருட்களாகும். + +போன்ற பல விளக்கு வகைகள் இந்தியாவிலும் வேறு பல கீழை நாடுகளிலும் இன்றும் பயன்படுத்தப்பட்டு வருவதைக் காணலாம். இந்து சமய / இந்திய மரபில் எண்ணெய் விளக்கு ஏற்றுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. + + + + + +இளையபெருமாள் + +இளையபெருமாள் லட்சுமணன் (L. Ilayaperumal, ஜூன் 26, 1924 - செப்டம்பர் 9, 2005) பட்டியலின மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், இருபது வருடங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும்பணியாற்றியவர். இந்திய மனித உரிமைக்கட்சி ஆரம்பித்து மக்களுக்காக போராடியவர். + +=வாழ்க்கை= + +கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் பிறந்தவர் இளையபெருமாள். பள்ளிகளில் பறையர்களுக்காக தனி பானையும், மற்றவர்களுக்காக தனி பானையும் இருப்பதை பார்த்திருக்கிறார். எவருக்கும் தெரியாமல், "பறையர்களின் பானை" என்று எழுதப்பட்டிருக்கும் பானையை தொடர்ந்து உடைத்துக் கொண்டு வந்தார். ஒரு நாள் உடைக்கும் போது பள்ளி முதல்வரிடம் பிடிபட்ட போதும், தன்னுடைய செய்கையின் நியாயத்தினை முன்வைக்கத் தயங்கவில்லை. அவரால் அன்று முதல் மாணாக்கர்களுக்கு இருந்து வந்த இரட்டைக்குவளை முறை நீக்கப்பட்டது. + +இளையபெருமாள் 1945ஆம் ஆண்டு இராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1946ல் காட்டுமன்னார்கோவிலுக்கு திரும்பும் போது ஒரு போராட்டத்தினை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டது. உடல் நிலை சரியில்லாததால், வேலைக்கு இரு நாள் செல்லாத பறையர் ஒருவர், பண்ணையார் ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். காயமுற்றவரை இளையபெருமாள் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றும், குற்றப்��த்திரிக்கை பதிவு செய்ய மறுத்துள்ளனர். பட்டியலின மக்களை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் இளையபெருமாள். துன்புறுத்திய அந்த பண்ணையாரிடமிருந்து நூறு ரூபாய் அபராதம் பெற்று தரும்வரை இளையபெருமாள் ஓயவில்லை.நிலமற்ற கூலிவேலைத் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும், மாட்டிறைச்சி சாப்பிடுவதை எதிர்த்தும், சூத்திர சாதியினர் சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை பறையடித்து அறிவிப்பதற்காக மட்டுமே பறையர்கள் ஈடுபடுத்தப்படுவதை எதிர்த்தும் அவர் போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். சூத்திர சாதி மக்களால் போலிக்குற்றம் சாட்டப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைபட்டார். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு பிறகு இவருடைய சமூக சேவைக்காக தங்கப் பதக்கம் கொடுக்கப்பட்டது. + +1980ம் ஆண்டு ஜனவரி 3 மற்றும் 6ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திரா காங்கிரஸ் போட்டியிட்ட 24 நாடாளுமன்றத் தொகுதிகளில் 21-ஐ கைப்பற்றியது. வெற்றிப்பெற்றவர்களில் விழுப்புரம் ராமசாமி படையாச்சியார், ஆர்.வெங்கட்ராமன், ஆர்.வி.சுவாமிநாதன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்திரா காங்கிரஸ் - திமுக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் வெற்றிபெற்றதால், எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அமைச்சரவை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று இளையபெருமாள் வலியுறுத்தினார். இளையபெருமாள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக 1952 முதல் 1967 வரை தொடர்ந்து 3 முறை பதவி வகித்தார். இவர் 1962 முதல் 1967 வரை அப்போது பிரதமராக இருந்த நேருவின் அரசில் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியை உருவாக்கி அதன் முதல் தலைவராக பணியாற்றினார். +தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியில் பிளவு ஏற்பட்ட போது, இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் பிரிவின் தமிழக தலைவராக 1979ல் பதவியேற்று பணியாற்றினார். 1980ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இந்திராகாந்தி திமுகவுடன் கூட்டணி அமைத்தார். முன்னதாக 1979ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30 தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியும், இந்திராகாந்தியும் ஒரே மேடையில் பேசினர். இந்திரா காங்கிரஸ் தலைவர் ஐயா இளையபெருமாளும் உடன் இருந்தார். கருப்பையா மூப்பனார், நடிகர் சிவாஜி கணேசன் உள்ளிட்டோரும் அந்த மேடையில் இருந்தனர். அந்த மேடையில் தான் நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சித் தருக என்று கருணாநிதி பேசினார். 1980-ல் சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக பணியாற்றினார். கருத்துவேறுபாடு காரணமாக காங்கிரசில் இருந்து பிரிந்த இளையபெருமாள் 1989-ல் இந்திய மனித உரிமை கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். 2003-ல் காங்கிரஸ் கட்சியில் சோனியாகாந்தி முன்னிலையில் மீண்டும் இணைந்தார். + +இந்தியாவில் 1955 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட தீண்டாமை ஒழிப்புச் சட்டம் 1976 இல் பி.சி.ஆர். சட்டம் (குடியுரிமை பாதுகாப்புச் சட்டம்) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் சரியாக செயல்படாததால், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டியின் முதல் தலைவர் இளைய பெருமாள் தலைமையில் ஒரு கமிட்டியை நாடாளுமன்றம் அமைத்தது. காந்தி பிறந்த ஊரில், பிரதமர் இந்திராகாந்தி தொகுதியில் தீண்டாமை தலைவிரித்து ஆடுகிறது” என்று 1969 - ல் இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் சுட்டிக்காட்டியது. ஆனால், அந்த அறிக்கையில் சொல்லப்பட்டவைகள் அவருடைய காலத்திலேயே புறக்கணிக்கப்பட்டது பட்டியலின தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது. + +இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையின் பேரில் 1989ல் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த சட்டம் மிகவும் தாமதமாக கடந்த 1995ல் தான் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் இளையபெருமாள் அவர்களின் பரிந்துரையின் பேரில் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய தற்போது உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. + +மனைவி தையல்முத்து, மகன்கள் வெற்றி வீரமணி, ஜோதி மணி, நந்தகுமார் ஆகியோர். மனைவி தையல்முத்து, இளையபெருமாள் காலமான ஓரிரு ஆண்டுகளில் அவரும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். மகன் மருத்துவர் நந்தகுமர் சிறுநீரக கோளாறால் உயிரிழந்தார். நந்தகுமார் சில காலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்து பணியாற்றினார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி குழந்தைகள் உள்ளனர். + +தந்தை பெரியார், காமராசர், பி. கக்கன், மு. கருணாநிதி, எம்.ஜி.ஆர், போன்றவர்களின் நன்மதிப்பை பெற்றவர். தோழர் ஜீவாவை தனது ரோல் மாடலாக கொண்டு வாழ்ந்து வந்தவர் இளையபெருமாள். சூத்திரர்களால் புறக்கணிக்கப்பட்ட பட்டியல் மக்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை கொண்டுவந்தார் என்கிற காரணத்தாலே தென்னாட்டு அம்பேத்கர் என அன்புடன் அழைக்கப்படுகிறார். 1998 இல் தி.மு.க. அரசு இளையபெருமாளுக்கு அம்பேத்கர் விருது கொடுத்து, அவரின் சமூக உழைப்பைக் கவுரவித்தது. + + + + + +நிறக்குருடு + +நிறக்குருடு ("Colour blindness") என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல். + +இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய "நிறங்களின் பார்த்தல் உணர்வைப் பற்றிய சிறப்பு உண்மைகள்" என்ற தலைப்பிட்ட ஒரு அறிவியல் கட்டுரையில் இதுபற்றி எழுதினார். இவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயரால் இந்நோய் டால்டனிஸம் என்று நெடுநாள் வழங்கப்பட்டது. எனினும் தற்போது இந்த பெயர் பச்சை நிறத்தை உணர இயலாமையாகிய "டியூட்டெரனோபியா" என்ற நோயை மட்டும் குறிக்கிறது. +பொதுவாக, இது ஒரு குறைபாடாகவே கருதப்பட்டு வந்தாலும், சில சூழல்களில் இது உதவவும் செய்கிறது. பல நிறைங்களுக்கிடையே ஊடுருவிப் பார்ப்பதில் இந்த நிறக்குரு நோய் உள்ளவர்கள ஏனையவர்களை விடவும் சிறந்தவர்களாக இருப்பது சில ஆய்வுகள் மூலம் காட்டப்பட்டிருக்கிறது. + +எடுத்துக்காட்டாக, இந்நோய் உடைய வேடர்கள் சிலரால் பின்புலத்தில் உள்ளவற்றினால் வரும் குழப்பத்தைத் தவிர்த்து தங்கள் குறியைச் சரியாக வைக்க முடிகின்றது. + +அதேபோல், இந்நோய் உடைய போர்வீரர்களில் சிலரால் மறைமுகத்திற்கான பலநிற சிறப்பு உடைகளில் உள்ள எதிரி வீரர்களையும் தளபாடங்களையும் எளிதில் அடையாளம் காண முடியும். ஒரே நிறத்தில் மட்டும் பார்க்க முடிகின்றவர்களால் இருட்டில் உடனடியாகப் பார்க்க முடியும். + + + + + + +ராகேஷ் சர்மா + +ராகேஷ் ஷர்மா (பி��ப்பு:1949 ஜனவரி 13, பாட்டியாலா,இந்தியா) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார். +பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார். +இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார். + +நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது. + +ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன், ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளைப் பெற்றார். + + + + +வருமான வரி + +வருமான வரி என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தான் ஈட்டும் ஒரு குறிப்பிட்ட வருமானத்திற்கேற்ப தான் சார்ந்திருக்கும் நாட்டிற்கு செலுத்தும் வரி ஆகும். அந்த வரியைக் கொண்டே அரசு சேவைகளை வழங்கும். + + +இந்தியாவில் வருமான வரி + + + + +தெற்கு ஆசியா + +தெற்கு ஆசியா என்பது பொதுவாக இந்திய துணைக்கண்டத்தையே குறிக்கும். தெற்கு ஆசியா பின்வரும் நாடுகளை உள்ளடக்கியுள்ளது. +இந்திய துணைக்கண்டம் - துணைக்கண்டத்தில் அமைந்த இந்தியக்குடியரசு, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகியன. +இமயமலைப் பகுதியில் உள்ள பூடான், நேபாளம் ஆகியன. +தீவு நாடுகளான இலங்கை, மாலை தீவுகள் ஆகியன. +இப்பகுதியிலுள்ள நாடுகள் அனைத்தும் சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகளாகும். + + + + + +மைய இடக் கோட்பாடு + +மைய இடக் கோட்பாடு (Central Place Theory) என்பது குடியிருப்புக்களினது (settlement) அளவு, அவற்றுக்கிடையேயுள்ள தூரம், பரம்பல் அவற்றின் படிநிலையமைப்பு என்பவை தொடர்பான கோட்பாடு ஆகும். இக் கோட்பாட்டை ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த புவியியலாளரான வால்டர் கிறிஸ்டலர் (Walter Christaller) என்பவர் அறிமுகப் படுத்தினார். இதனைப் பின்னர் அதே நாட்டைச் சேர்ந்த ஆகஸ்ட் லொஸ்ச் (August Losch) என்னும் பொருளியலாளர் மேலும் வளப்படுத்தினார். இவ்விருவரும் இக் கோட்பாட்டைத் தனித்தனியாக உருவாக்கியதாகவும் சிலர் கூறுகிறார்கள். + +மைய இடக் கோட்பாட்டை விளங்கிக் கொள்வதில் பின்வரும் கருத்துருக்கள் முக்கியமானவை ஆகும். + + +மாறுநிலை: ஒரு விற்பனை நிலையம் அல்லது ஒரு சேவையை வழங்கும் நிலையம் அவற்றினுடைய செயற்பாடுக்குரிய செலவுகளையும், கூலி முதலிய செலவுகளையும் ஈடு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு விற்பனை இருத்தல் வேண்டும். இவ்வாறான மிகக் குறைந்த விற்பனை அளவே அவ்வுற்பத்திப் பொருள் அல்லது சேவைக்குரிய மாறுநிலை எனப்படும். இன்னொரு வகையில் இதனை, ஒரு குறிப்பிட்ட மையச் செயற்பாடொன்றை ஆதரிப்பதற்குத் (Support) தேவையான கேள்வி நிலை (Level of Demand) என்றும் கூறலாம். + +மையச் செயற்பாடு: மைய இடம் ஒன்றில், ஓர் உற்பத்திப் பொருள் அல்லது சேவையை விற்பனை செய்தல் மையச் செயற்பாடு ஆகும். + +பொருட்களின் வீச்சு: ஒரு பொருளை விற்பனை செய்யும் ஒரு கடையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு தூரத்திலிருக்கும் ஒருவருக்கு, அப்பொருளின் விலை, கடையில் அப்பொருளுக்கு அவர் செலுத்தும் பணத்தின் அளவுடன் போக்குவரத்துச் செலவையும் கூட்டிய தொகைக்குச் சமம் ஆதலால், கடையின் தூரம் அதிகரிக்கும் போது அவருக்கு அப்பொருளின் விலையும் அதிகரித்துச் செல்லும். விலை அதிகரிக்கும் போது கேள்வி (Demand) குறையும் என்பது பொருளியல் விதி. கடையிலிருந்து ஓரிடத்தின் தூரம் அதிகரித்துச் செல்லும்போது அவ்விடத்தில், அக் கடையிலிருக்கும் குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வியும் குறைவடையும். ஓரளவு தூரத்தில் அந்தக் கடையிலுள்ள குறிப்பிட்ட பொருளுக்கான கேள்வி எதுவுமே இல்லாத நிலை ஏற்படும். இந்தத் தூரமே அப்பொருளுக்கான வீச்சு எனப்படும். வெவ்வேறு வகையான பொரு���்களுக்கு வீச்சு மாறுபடும். + + + + +தோற்றப்பாடு + +தோற்றப்பாடு ("Phenomenon") என்பது பொதுவாக ஒரு கவனிக்கத்தக்க, உற்று உணரக்கூடிய சிறப்புபெற்ற நிகழ்வைக் குறிக்கும். நிகழ்வுகளின் அவதானிக்கக் கூடிய அமைவுகள் தோற்றப்பாடுகள் என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக புவி தன் அச்சில் சுழலுகின்ற புவிச் சுழற்சி காரணமாக இரவு பகல் தோன்றுவது, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைவது என்பன தோற்றப்படுகளாகும். + +அறிவியல் ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் நேரடித் தரவுகள் தோற்றப்பாடுகளைப் பற்றியவையே. இவற்றைப் பயன்படுத்தி பல தொழில்நுட்பங்கள் உருவாகின்றன. பல்வேறு துறைகளுக்குத் தொடர்புடைய பல தோற்றப்பாடுகளைப் பட்டியலிட முடியும். + +பல்வேறு வகையான தோற்றப்பாடுகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. அவற்றிற் சில கீழே: + + +தத்துவத்தில் தோற்றப்பாடு என்ற சொல் சிறப்புப் பொருள் பெறுகிறது. இம்மானுவேல் கன்ட் என்ற தத்துவவியலாளர் நம்மால் உணரக்கூடிய நிகழ்வுகளைக் குறிக்கும் தோற்றப்பாடுகளையும் நம்மால் உணர முடியாத நிகழ்வுகளையும் வேறுபடுத்தி ஒரு தத்துவத்தை முன்வைத்தார். தமக்குத் தாமே நிகழ்பவற்றை நம்மால் உணரமுடியாதாகையால் நம் உணர்வின், உறுதலின் பின்புலத்தில் உள்ள நடப்பைப் பற்றி அறிய வேண்டும் என்று வலியுறுத்தினார். இதன் விளைவாக தோற்றப்பாடியல் என்ற தத்துவவியல் உட்பிரிவு ஒன்று தோன்றியது. + + + + +நா. முத்துக்குமார் + +நா.முத்துக்குமார் (12 சூலை 1975 – 14 ஆகத்து 2016), தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். "பல்லேலக்கா, என் காதல் சொல்ல, ஒரு கல் ஒரு கண்ணாடி" ஆகியவை இவரின் பாடல்களுள் சில. தங்க மீன்கள், சைவம் திரைப்படப் பாடல்களுக்காக தேசிய விருது வாங்கினார். + +காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் இவர். நான்கு வயதில் தாயை இழந்தவர். சிறு வயதில் இருந்தே புத்தகங்களை உலகமாகக் கொண்டார். தொடக்கத்தில் இயக்குனராகப் பணியாற்ற விரும்பி இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் பணி செய்தார். இயக்குனர் சீமானின் வீர நடை என்ற படத்தில் பாடல் எழுதினார். கிரீடம் (2007) மற்றும் வாரணம் ஆயிரம் (2008) போன்ற சில படங்களுக்கு வசனம் எழுதினார். இதுவரை கிட்டதட்ட 1500 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ள இவர் , 2016 வரை தமிழ்த் திரையுலகின் முன்னணி பாடலாசிரியராக இருந்தார். “பட்டாம்பூச்சி பதிப்பகம்” என்ற பெயரில் பதிப்பகம் தொடங்கி நடத்தினார். + +இவர் 2006 ஆண்டு ஆணி மாதம் 14 ஆம் திகதி, வடபழனியிலுள்ள தீபலஷ்மி என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதவன் என்ற மகனும் யோகலக்சுமி என்ற மகளும் உள்ளார். + +ஆகஸ்ட் 14, 2016 காலையில் தனது 41வது வயதில் காலமானார். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டு, காய்ச்சல் முற்றிய நிலையில் இறந்தார். + +இவர் பாடலெழுதிய சில திரைப்படங்கள்: + + + + + + + +பா. விஜய் + +பா.விஜய், தமிழ் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். 2004ஆம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான தேசிய விருதை தனது "ஒவ்வொரு பூக்களுமே" (திரைப்படம்:ஆட்டோகிராப்) என்ற பாடலுக்காக பெற்றுள்ளார். + +கவிஞர் பா.விஜய் 1974 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் நாள் கோயமுத்தூரில் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் வி. பாலகிருஷ்ணன் (கோவை தேசிய பஞ்சாலை நிறுவனத்தில் ஸ்பின்னிங் மாஸ்டராக பணியாற்றியவர்). தாயார் பெயர் சரஸ்வதி (கோவை மாநகராட்சி பள்ளி ஆசிரியை). இவரின் சொந்த ஊர் கும்பகோணம் அருகில் உள்ள உட்கோட்டை ஆகும். + +இவர் 1978 முதல் 1980 வரை பாலர் பள்ளியிலும் 1980 முதல் 1985 வரை எம்.சி.ஆர்.ஆர். நாயுடு பள்ளியிலும், 1986 முதல் 1990 வரை சபர்பன் மேல்நிலைப்பள்ளியிலும் 1990 முதல் 1992 இராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப் பள்ளியிலும் கல்வி கற்றார். 1994 முதல் 1996 வரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் பி.லிட். பட்டம் பெற்றார். 2003 முதல் 2005 வரை தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார். + +இயக்குனர் கே. பாக்யராஜின் ஞானப்பழம் படத்தில் முதலில் பாடலாசிரியராக அறிமுகமானார். இதுவரை சுமார் 600 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார். இதுவரை 2000க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார். + +ஆட்டோகிராப் படத்துக்காக எழுதிய ஒவ்வொரு பூக்களுமே என்ற பாடலுக்காக 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றுள்ளார். முன்னாள் தமிழக முதல்வர் மு. கருணாநிதி வித்தகக் கவிஞர் என்ற பட்டம் வழங்கி பாராட்டியுள்ளார். கவிஞர் வாலி தமது கலையுலக வாரிசாக பா.விஜயை அறிவித்து பெருமையளித்துள்ளார். பாடலாசிரியராகத் திரைப்படத்துறைக்குள் நுழைந்த இவர் இரு தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். + + + + + +அஜித் குமார் + +அஜித் குமார், (பிறப்பு மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்கள் இவரை ""அல்டிமேட் ஸ்டார்""என்றும் ""தல"" என்றும் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தயத்திலும் பங்கு பெற்றுள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012 ஆம் ஆண்டு பட்டியலில் அஜித் குமார் 61ஆவது இடத்தினைப் பெற்றார். 2014 ஆவது ஆண்டிற்கான இப்பட்டியலில் 10 இடங்கள் முன்னேறி 51 ஆவது இடத்தைப் பிடித்தார். மேலும் 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய திரைப்பட நடிகரும் ஆவார். + +அஜித் குமார், இந்தியாவின் ஐதராபாத் நகரில் ஒரு தமிழ்த் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நடிப்பதன் மூலமே தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 இல் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே கல்வியை இடைநிறுத்தினார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை சாலினியைக் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். + +தொடக்க காலங்களில் விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னர், 1992 இல் "பிரேம புத்தகம்" என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது. இதன் பின்னரே "அமராவதி" என்ற தமிழ்த் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜாவின் பார்வையிலே ஆகிய திரைப்படங்களில் நடித்தார். இதில் பவித்ரா திரைப்படம் இவருக்குக் குறிப்பிடத்தக்க திரைப்படமாக அமைந்தது. அஜித் குமாரின் முதல் வெற்றித் திரைப்படம் 1995 ஆவது ஆண்டில் வெளியான ஆசை திரைப்படமாகும். இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டுப் படுகாய���டைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரண் இயக்கத்தில் 1998ஆம் ஆண்டில் வெளியான காதல் மன்னன் திரைப்படத்தின் மூலமாக மீண்டும் நடிக்கத் தொடங்கினார். + +2003 முதல் 2005 வரை, அஜித் மோட்டார் பந்தயங்களில் அதிக முனைப்புடன் ஈடுபட்டது அதிக திரைப்படங்களில் நடிப்பதற்கு தடையாக அமைந்தது. இதனால் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்தார். 2003இல் நீண்ட தாமதற்குப் பின்னர் வெளியான "என்னை தாலாட்ட வருவாளா" திரைப்படமும், காவல்துறை அதிகாரியாக நடித்த ஆஞ்சநேயா திரைப்படமும் தோல்வியடைந்தது. மேலும், அந்த கால கட்டத்தில் சாமி, காக்க காக்க, கஜினி ஆகிய திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்பை பல்வேறு காரணங்களுக்காக தவிர்த்தார். + +நடிகை சினேகாவுடன் இணைந்து நடித்த ஜனா திரைப்படம் ஒரு மிகப்பெரிய தோல்விப் படமாக அமைந்தது. இக்காலகட்டத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ஒரேயொரு திரைப்படம் சரண் இயக்கத்தில் வெளியான அட்டகாசம் திரைப்படம் மட்டுமே. இப்படத்தில் அஜித்தின் இரட்டை கதாப்பாத்திரங்களின் நடிப்பும், " தல தீபாவளி" பாடலும் அஜித்தின் அதிரடி நாயகன் எனும் தகுதியை உயர்த்தியது. தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஜி திரைப்படம் வணிக ரீதியாகத் தோல்வியைப் பெற்றாலும், இப்படத்திற்குக் கிடைத்த நேர்மறையான விமர்சனங்களும், இப்படம் பெற்ற ஒரு வலுவான தொடக்கமும் அஜித் மீண்டும் தனது திரை வாழ்க்கையை உறுதியாகத் தொடங்க உதவியது. ஆக, 2003 முதல் 2005 வரையில் வெளியான ஐந்து படங்களில், அட்டகாசம் திரைப்படம் மட்டுமே வணிக ரீதியாக வெற்றியைப் பெற்றது. + +2009 ஆவது ஆண்டில் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அசல் திரைப்படம் 2010 பிப்ரவரியில் வெளியானது. அஜித் இரட்டை வேடங்களில் நடித்து மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இத்திரைப்படம் வணிக ரீதியாக வெற்றியைப் பெறாமல் போனது. இரண்டாவது முறையாக மோட்டார் பந்தயங்களில் கலந்து கொண்ட பின்னர் வெங்கட் பிரபுவின் மங்காத்தா திரைப்படத்தில் நடித்தார். + +2017 ஆவது ஆண்டில் சிவா இயக்கத்தில் வெளியான விவேகம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றதால் அடுத்ததாக சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கமாட்டார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சிவ�� இயக்கத்தில் விசுவாசம் எனும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இது அஜித் குமார், சிவா கூட்டணியின் நான்காவது திரைப்படமாகும். + +பிப்ரவரி 06, 2010 அன்று நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் காரணங்களுக்காகத் திரைப்பட விழாக்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாகப் பகிரங்கமாகப் புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னர் அஜித், தவிர்க்க முடியாத சில நிகழ்ச்சிகளைத் தவிர மற்ற எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதில்லை. + +பல நல்ல காரியங்களுக்கு உதவிகள் செய்துள்ள இவர் 2014ஆம் ஆண்டு தனது வீட்டில் வேலை செய்பவர்கள் 12 பேருக்கும் வீடுகள் கட்டிக்கொடுத்து உதவி செய்துள்ளார். + +பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்றார். + +ஆரம்பம் திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. இதனால், 2015 நவம்பர் மாதத்தில் முழங்கால், மற்றும் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். + + + + + + + + + +அஜித் குமார் திரைப்படங்கள் மட்டுமின்றி சில வர்த்தக விளம்பரங்களிலும் நடித்துள்ளார். தற்போது விளம்பரங்களில் நடிப்பதை முற்றிலும் தவிர்த்து விட்டார். இது இவர் நடித்துள்ள வர்த்தக விளம்பரங்களின் பட்டியலாகும். + + + + + +விக்ரம் + +விக்ரம் (பிறப்பு. கென்னடி ஜான் விக்டர், 17 ஏப்ரல், 1966) தமிழ்த் திரைப்படங்களில் பிரதானமாக தோன்றும் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் இந்திய திரைப்படத் துறையில் பணி புரிந்த வரையில் 7 பிலிம்பேர் விருதுகள் பெற்றுள்ளார். அது மட்டுமின்றி சிறந்த நடிகருக்கான ஒரு தேசிய விருதும் தமிழ் நாடு மாநில விருதும் பெற்றுள்ளார். இவருக்கு மிலான் பல்கலைக்கழகம் 2011 ஆம் ஆண்டு மே மாதம் அன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. தனது நடிப்பாற்றல் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் முன்னணி இடம் வகிக்கும் நடிகருள் இவரும் ஒருவர். + +விக்ரம் 1990 ஆம் ஆண்டு வெளியான "என் காதல் கண்மணி" என்னும் படத்த��ன் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின் குறைந்த பொருட்செலவில் ஆக்கப்பட்ட படங்களில் நடித்து வந்துள்ளார். இவர் நடிக்க தொடங்கி ஒன்பது வருடங்களுக்குப் பின் வெளிவந்த "சேது" என்னும் படத்தின் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார். இப்படமே இவரின் திரை வாழ்க்கையை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றது. இந்த வெற்றிக்குப் பின் "தில்", "ஜெமினி", "தூள்", "சாமி" போன்ற படங்களில் நடித்தார். இவர் "காசி" எனும் படத்தில் பார்வை அற்றவராக நடித்து திரை விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். பின்னர் "பிதாமகன்" படத்தில் வெட்டியான் கதாப்பாத்திரத்தை தத்ரூபமாக வெளிக்கொணர்ந்து தேசிய விருது பெற்றார். அதன் பின் "அந்நியன்" என்னும் பிரம்மாண்டமான படத்தில் பிளவாளுமை குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார். இப்படம் பொருளவில் அதிக வருவாயும் நல்ல விமர்சங்கனளையும் பெற்றுத் தந்தது. அதன் பின் "மஜா", "பீமா", "கந்தசாமி" போன்ற படங்களில் நடித்து தன் திரைப் பயணத்தை தொடர்ந்தார். பிறகு "ராவணன்" என்னும் படத்தில் வீரையா என்னும் பழங்குடி இன போராளி கதாபாத்திரத்தில் நடித்துப் பாராட்டைப் பெற்றார். 2011 ஆம் ஆண்டு வெளி வந்த "தெய்வத் திருமகள்" என்னும் படத்தில் மனவளர்ச்சி குன்றியவராக இவரது நடிப்புத் திரை விமர்சகளிடமிருந்து பாராட்டுக்களைப் பெற்றது. + +விக்ரம் வெவ்வேறு சமூக நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்தயுள்ளார். இவர் ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பின் தூதர். சஞ்சீவனி அறக்கட்டளையின் தூதுவராகவும் வித்யா சுதா, என்னும் மாற்றுத் திறன் பள்ளியின் தூதுவராகவும் உள்ளார். காசி கண் நலப்பணியின் வேளையிலும் தன்னை ஆட்படுத்திக் கொண்டார். விக்ரம் நிறுவனம் மூலம் பல நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். + +விக்ரம், ஜான் விக்டருக்கும் ராஜேஸ்வரிக்கும் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில், 17ம் ஏப்ரல் 1965 அன்று நடுத்தர குடும்பமொன்றில் பிறந்தார். இவரது இயற்பெயர் கென்னெடி ஆகும். இவரது தந்தை வினோத் ராஜ் என்றழைக்கப்படும் ஆவார். அவர் தந்தை ஒரு முன்னாள் இந்திய ராணுவ வீரர். தற்போது திரைப்படங்களிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார். இவரது தாய் இராஜேசுவரி துணை ஆட்சியராய்ப் பணியாற்றியவர். விக்ரமுக்கு அனிதா என்கிற ���ங்கையும் அர்விந்த் என்கிற தம்பியும் உள்ளனர். + +விக்ரம் ஏற்காட்டிலுள்ள மாண்டபோர்ட் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைத் தொடங்கினார். பள்ளிப் பருவத்திலேயே கராத்தே கலையோடு நீச்சல் விளையாட்டையும் கற்றுத் தேர்ந்தார். திரைப் படங்களில் நடிக்கும் ஆர்வமிருந்தும் இவரது தந்தையாரின் கட்டாயத்தால் முதுகலை வணிக மேலாண்மை படிப்பை இலயோலாக் கல்லோரியில் படித்து முடித்தார். இவர் கல்லூரியில் படிக்கும்போது பெரு வாகனம் மோதியதால் மிகுந்த காயமடைந்ந்தார். மூன்று வருடம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார், தன் கால் செயலிழக்காமலிருக்க இருபத்து மூன்று அறுவை சிகிச்சைகள் செய்துக் கொண்டார். + +விக்ரம் தான் திரைப்படத் துறையில் வருவதற்கு முன் சோழா தேநீர், டி வி எஸ் மற்றும் ஆள்வின் போன்ற நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்தார். தனது முதுகலை வணிக மேலாண்மை படிப்பின் இறுதி ஆண்டில் தமிழ் திரைப்பட முன்னணி இயக்கனரான ஸ்ரீதர் அவர்களால் அணுகப்பட்டு அதன் பின் அவரது படத்தில் நடிக்க வாய்ப்பும் கிடைத்தது. விக்ரம் தனது முதல் படமான "என் காதல் கண்மணியை" 1990 ஆம் ஆண்டு நடித்தார். இது ஒரு குறைந்த பட்ஜெட் படமாக அமைந்தது. அதன் பின் ஸ்ரீதர் அவர்களின் "தந்துவிட்டேன் என்னை" எனும் படத்தில் நடித்தார். ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம் இயக்கிய பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கல்லூரிக் காதல் படமான மீரா இவரின் மூன்றாவது படமாகும். + + + + + +சூர்யா (நடிகர்) + +சூர்யா (பிறப்பு - சூலை 23, 1975), தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் நடிகர் சிவகுமாரின் மகனும் "பருத்திவீரன்" புகழ் கார்த்தியின் அண்ணனும் ஆவார். மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதற்காகவும் நடிப்புத் திறனுக்காகவும் இவர் அறியப்படுகிறார். இருமுறை பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார். நடிகை ஜோதிகாவை விரும்பி செப்டம்பர் 11, 2006 அன்று மணந்துக் கொண்டார். இவர்களுக்கு ஏப்ரல் 10, 2007 அன்று பெண்குழந்தை பிறந்தது. + +சரவணன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் நடிகர் சிவக்குமாரின் மகனும் நடிகர் கார்த்தியின் அண்ணனும் ஆவார். இவர் லயோலா கல்லூரியில் இளங்கலை முடித்தவர். 2006ல் நடிகை ஜோதிகாவை விரும்பி பெற்றோர் அனுமதியுடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தேவ், தியா என்ற குழந்தைகள் உள��ளனர். தற்போது (2012-13) சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருகிறார். + +இவர் மாறுபட்ட வேடங்களை ஏற்று நடிப்பதில் மிகுந்த திறன்மிக்கவராக விளங்குகிறார். இவர் நந்தா திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் விருதினை வென்றுள்ளார். + +அகரம் ஒரு பொது நலன் கருதிய, லாப நோக்கற்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஏழைக் குழந்தைகளின் கல்வியில் இத்தொண்டு நிறுவனம் பங்காற்றி வருகிறது. + + + + + +இலத்திரனியல் கலைச்சொற்கள் + + + + +(Diode Rectifier (Half Bridge, Full Bridge, ஈரி திருத்தி (அரையலை திருத்தி, முழுவலை திருத்தி), Thyristor/SCR Rectifiers (கதவ நாலி/சிலிக்கான் கட்டுப்பாட்டுக் கடத்தி (சிகக) திருத்தி), Three Phase SCR Full Bridge Rectifier மூன்று-கட்ட சிகக முழுவலைத் திருத்தி) + +(Buck Converter, 1Q, 2Q Choppers, Buck Converter, Forward Converter, Flyback Converter) + +(Single Phase Inverter (Half bridge, Full Birdge) (ஒற்றைமுக தோற்றி, Three Phase Inverter மும்முகத் தோற்றி, Square Mode Operated Inverter, PWM Inverter (துடிப்பு அகலம் மாற்றும் (து.அ.மா) அலைதோற்றி. துடிப்பலை அல்லது கட்டவலை = pulse, ) + + +
+
+ + + +
+ + + + +[[பகுப்பு:மின்னணுவியல்]] +[[பகுப்பு:தொழில்நுட்பம் தலைப்புகள் பட்டியல்]] +[[பகுப்பு:தமிழ் கலைச்சொற்கள்]] + +
+ +விழுமியம் + +மனிதனுடைய நம்பிக்கைகள், எண்ணங்கள், கருத்துக்கள் என்பவற்றின் உருவாக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளதே விழுமியம் ("Value") எனப்படுகின்றது. விழுமியங்களை நேர்மையுடன் பயன்படுத்துவதே அவற்றின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது. இந்தத் தொடர்ச்சியே விழுமியத்தை தொடர்புடைய ஏனைய கருத்துருக்களான, நம்பிக்கை, கருத்து, எண்ணம் என்பவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. இத்தகைய சூழலில் விழுமியம் என்பது மனிதர் எதை அடிப்படையாகக் கொண்டு செயற்படுகிறார்களோ அதைக் குறிக்கிறது எனலாம். + +விழுமியங்கள் இரு வகையாகக் கருதப்படலாம். + +தனி மனித விழுமியங்கள் தனி மனிதருடைய வாழ்வை ஒழுங்கமைப்பதை நோக்கமாகக் கொண்டவை. அவை ஒட்டுமொத்தமாகச் சமுதாயத்தின் ஒழுங்கமைவுக்கு அத்தியாவசியமாக இருக்க வேண்டும் என்பதில்லை.ஒரு சமூகத்தில் பொதுவாக உள்ள விழுமியங்கள் பண்பாட்டு விழுமியங்கள் எனப்படுகின்றன. இன்னொரு வகையில், மனிதர்கள் சேர்ந்து வாழ்வதற்கு எந்தெந்த விழுமியங்கள் சிறப்பாகத் தேவைப் படுகின்றனவோ அவை ப��்பாட்டு விழுமியங்கள் எனலாம். + +ஒரு சமுதாயத்தில் விழுமியங்கள் கதைகள், பழமொழிகள், சமயம் என்பவற்றினூடாக வெளிப்படுகின்றன. தமிழர் மத்தியில் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், திருக்குறள் போன்ற ஆக்கங்களிலும், பழமொழிகளிலும் தமிழர் சமுதாயத்தில் நிலவும் விழுமியங்களைக் காணலாம். + + + + + +நெறிமுறை + +நெறிமுறை ("Protocol/ Norm") என்பது சமுதாயத்தில் மனிதர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அச் சமுதாயத்தினால் நடைமுறைப் படுத்தப்படும் விதிகளாகும். இந்த சமூக நடைமுறைப் படுத்தல் என்ற அம்சமே நெறிமுறைகளை விழுமியம் போன்றவற்றிலிருந்து வேறுபடுத்துகின்றது. தவிரவும் விழுமியம் கருத்தியல் அடிப்படையைக் கொண்டது, நெறிமுறை குறிப்பிட்ட விடயங்களில் மக்கள் இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் போன்ற நெறிப்படுத்தல் தன்மை கொண்டது. நெறிமுறைகளின் தாக்கம் பல்வேறு வகையான மனித நடத்தைகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது. + +எல்லாச் சமுதாயங்களிலும் நெறிமுறைகள் ஒன்றுபோல் இருப்பதில்லை. நெறிமுறைகளை வகுத்துக் கொள்வதில் சமுதாயங்களுக்குள் வேறுபாடுகள் காணப்படுகின்றன. திருமணம், கணவன் - மனைவி தொடர்பு, பிள்ளைகள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் எனப் பலவகையான நெறிமுறைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டுக் காணப்படுவது மட்டுமன்றி முற்றிலும் எதிர் மாறானவையாகவும் இருக்ககூடும். எடுத்துக்காட்டாகச் சில சமுதாயங்கள் ஒருவனுக்கு ஒருத்தி என்ற நிலைப்பாட்டைத் திருமணத்தில் கடைப்பிடிக்க, வேறு சில சமுதாயங்களில் பலதார மணம் வழக்கில் உள்ளது. + + + + + +குடிவழக்கு + +ஒரு சமுதாயத்தில் உள்ள பொதுமைத் தன்மை கொண்ட நடத்தைகள் குடிவழக்குகள் (folkways) எனப்படுகின்றன. இது பழக்கத்தால் வருவதும், இயல்பாக வெளிப்படுவதுமாக இருப்பதுடன், சிந்திக்காமல் நிகழக்கூடியது. குடிவழக்கு குறித்த சமுதாய மக்களுக்கு உரிய பாங்காகக் காணப்படுவது. குறித்த சமுதாய வரம்புக்கு உள்ளேயே பலவாறாகக் காணப்படும் வழக்கம் (custom), பழக்கம் (habbit) போன்றவற்றிலிருந்து குடிவழக்கு வேறானது. இது சமுதாயத்தின் அனைத்துப் பரப்பிலும் பரவலாகக் காணப்படுவதாகும். கைகூப்பி வணங்கி வரவேற்றல், மூன்று வேளை உணவு உண்ணல், காலையில் எழுந்தவுடன் பல் துலக்குதல் போன்��வை குடிவழக்குகளைச் சார்ந்தவை. + +இது தொடர்பான இன்னொரு கருத்துரு வழக்கடிபாடு (mores). இது ஒரு பரந்த பகுதியில் அல்லது சமுதாயத்தில் எல்லா மக்களிடமும் காணப்படுவதுடன், பெரிய அளவில் ஒழுக்கம் சார்ந்த முக்கியத்துவமும் கொண்டது. இது தகாப் புணர்ச்சி, இயற்கைக்கு மாறான பாலுறவு போன்ற விலக்குகள் தொடர்பில் வெறுப்புக் கொண்டதாகவும் உள்ளது. இதன் விளைவாகச் சமூகத்தின் விழுமியங்களும், வழக்கடிபாடுகளும், இத்தகைய விலக்குகளுக்குத் தடை விதிக்கின்றன. + +வழக்கடிபாடு சரி, பிழை; நியாயம், அநியாயம் என்பவற்றுக்கிடையே வேறுபாடு காண்பது. இதற்கு மாறாக, குடிவழக்கு, சரி என்பதற்கும், மரியாதைக் குறைவானது என்பதற்கும் இடையே வேறுபாடு காண்கிறது. + + + + +பைசா + +பைசா என்பது ரூபாய் அல்லது வங்கதேச இட்டாக்காவின் மதிப்பில் நூற்றில் ஒரு பங்கு மதிப்புடைய பண அலகு ஆகும். பைசா வங்க தேசம், இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. 1950 வரை பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் (அதற்கு முந்தைய பிரித்தானியர் ஆண்ட இந்தியாவிலும்) பைசா என்பது 3 pieகளுக்கும் கால் அணாவுக்கும் ரூபாயில் 64ல் ஒரு பங்குக்கும் சமமாக இருந்தது + + +