diff --git "a/train/AA_wiki_12.txt" "b/train/AA_wiki_12.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_12.txt" @@ -0,0 +1,2109 @@ + +தென்முனைப் பெருங்கடல் + +தென்முனைப் பெருங்கடல் "(Southern Ocean)", அல்லது அண்டார்ட்டிக் பெருங்கடல் "(Antarctic Ocean)" அல்லது the தென் பெருங்கடல் "(Austral Ocean)" என்பது உலகப் பெருங்கடல்களுக்கு மிகவும் தெற்காக அமைந்த நீர்நிலையைக் குறிக்கும். இது புவியின் தென்முனையில் அண்டார்ட்டிகாவை 360 பாகைகளும் சூழ்ந்தபடி 60° தெ அகலாங்குக்கும் தெற்கில் அமைந்துள்ளது. இது ஐந்து முதன்மையான பெருங்கடல்களில் நான்காவது பெருங்கடலாகும்.: மேலும் இது அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகிய மூன்றைவிடச் சிறியதாகும். ஆனால், இது ஆர்க்டிக் பெருங்கடலை விட பெரியதாகும். இந்தப் பெருங்கடல் வட்டாரத்தில் தான் வடக்குமுகமாகப் பாயும் அண்டார்ட்டிகாவின் தண் நீரோட்டமும் வெத்துவெதுப்பான உள் அண்டார்ட்டிக் நீரோட்டமும் சந்தித்துக் கலக்கின்றன. +இப்பெருங்கடல் 20,327,000 சதுர கிலோமீட்டர் (7,848,000 mi²) பரப்பளவுடையது. இதன் ஆழம் மிகப்பெரும்பாலான பரப்பில் பொதுவாக 4,000 மீட்டர் முதல் 5,000 மீட்டர் வரையானதாக உள்ளது (13,000-16,000 அடி). தென்முனைப் பெருங்கடலின் மிக ஆழமான பகுதி 60°00'தெ, 024°மே. என்னும் ஆயங்களில் உள்ளது. இவ்விடத்தில் இப்பெருங்கடல் 7,235 மீட்டர் (23, 735 அடி) ஆழம் உடையது. + +அண்டார்ட்டிக்கின் கண்டத் திட்டு வழக்கத்திற்கு மாறாக 800 மீட்டர் (2,600 அடி) ஆழம் உடையதாக உள்ளது. உலகின் பிற கண்டத்திட்டுகளின் சராசரி ஆழம் 133 மீட்டர் (436 அடி) ஆகும். +தனது தென்முனைப் பயணத்தின் வழியாக 1770 களில், ஜேம்சு குக் புவிக்கோள தென் அகலாங்குகளில் நீர்நிலை சூழ்ந்திருப்பதை நிறுவினார். அதில் இருந்தே புவிப்பரப்பியலாளர்கள் தென்முனைப் பெருங்கடலின் வடக்கு வரம்பை ஏன், அந்நீர்நிலையின் நிலவலையே ஏற்கவில்லை. மாறாக, இந்த நீர்ப்பகுதியை இவர்கள் அமைதிக்கடல், அத்லாந்திக் கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் பகுதியாகவே கருதிவந்தனர். இந்தக் கண்ணோட்டமே பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் கொள்கையாக இதுவரை நிலவுகிறது. ஏனெனில், 2000 ஆம் ஆண்டின் 60 ஆம் அகலாங்குக்குத் தெற்கே உள்ளதாக தென்முனைப் பெருங்கடலை உள்ளடக்கிய வரையறுப்புகள் வேறு காரணங்களால் இன்னமும் ஏற்கப்படாமலேயே உள்ளது. பிறர் பருவந்தோறும் மாறும் அண்டார்ட்டிகா குவிவையே இயற்கையான வரம்பெல்லையாகக் கொள்கின்ற��ர். + +பன்னாட்டு நீர்வரைவியல் குழுமம் (இது பன்னாட்டு நீர்வரைவியல் நிறுவனத்தின் முன்னோடியாகும்) 1919 ஜூலை 24 இல் முதல் பன்னாட்டுக் கருத்தரங்கைக் கூட்டியபோது, பன்னாட்டளவில் கடல்கள், பெருங்கடல்களின் எல்லைகளும் பெயர்களும் ஏற்கப்பட்டன. இவற்றை பநீநி 1928 இல் தனது "கடல்கள், பெருங்கடல்களின் வரம்புகள்" எனும் முதல்பதிப்பில் வெளியிட்டது. முதல் பதிப்பிற்குப் பிறகு, தென்முனைப் பெருங்கடலின் வரம்புகள் தொடர்ந்து நிலையாக தெற்கு நோக்கியே நகர்ந்து வந்துள்ளது; என்றாலும் 1953 க்குப் பிறகு இக்கடல் பநீநியின் அலுவலகப் பதிப்பில் சேர்க்கப்படவில்லை. அப்பணியைக் கள நீர்வரைவியல் அலுவலகங்களைத் தமே எல்லைவரம்புகளை தீர்மானிக்கவிட்டுள்ளது. பநீநி 2000 ஆம் ஆண்டு திருத்தத்தில் இக்கடலை உள்ளடக்கி, இதை 60°தெ அகலாங்குக்குத் தெற்கே உள்ள நீர்நிலையாக வரையறுத்துள்ளது. ஆனால், இது முறையாக இன்னமும் ஏற்கப்படவில்லை. ஏனெனில், யப்பான் கடல் போன்ற பிற கடல் வரையறை சிக்கலால் நிலுவையில் உள்ளது. என்றாலும், 2000 பநீநி (IHO) வரையறுப்பு, 2002ஆம் ஆண்டு வரைவு பதிப்பில் சுற்றுக்கு விடப்பட்டது. இது பநீநியில் சிலராலும் சில வெளி நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகிறது. அவை, அமெரிக்க நடுவண் முகமையம், மரியம்-வென்சுட்டர்போன்றனவாகும். ஆசுத்திரேலிய அதிகார அமைப்புகள் தென்முனைப் பெருங்கடல் அசுத்திரேலியாவுக்கு உடனடித் தெற்கில் அமைவதாக கூறுகின்றன. தேசியப் புவிப்பரப்பியல் கழகம் இக்கடலை ஏற்காமல், மற்ற பெருங்கடல்களுக்குரிய எழுத்துகளில் சுட்டாமல், வேறுபட்ட அச்செழுத்துகளில் குறிக்கிறது; ஆனால், இக்கழகம் தன் நிலப்படத்திலும் இணையதளப் படங்களிலும் அண்டார்ட்டிகா வரை அமைதி, அத்லாந்திக், இந்தியப் பெருங்கடல்கள் நீள்வதாகக் காட்டுகிறது. தம் உலக நிலப்படத்தில் தென்முனைப் பெருங்கடலைப் பயன்படுத்தும் நிலப்பட வெளியீட்டாளர்கள் ஏமா நிலப்பட நிறுவனம் (Hema Maps), ஜியோநோவா (GeoNova) நிறுவனம் ஆகியவை ஆகும். + +வாசுகோ நூனெசு டி பால்போவா "தென்முனைப் பெருங்கடல் என அமைதிப் பெருங்கடலுக்கு அல்லது தென் அமைதிப் பெருங்கடலுக்குப் பெயரிட்டது தற்போது அருகிவிட்டது. இவர் தான் அமைதிப் பெருங்கடலை வடக்கில் இருந்து அணுகிக் கண்டுபிடித்த முதல் ஐரோப்பியர் ஆவார். "தென்கடல்கள்" என்பதும் குறைவாகவே வழக்கில் உள்ள அதை நிகர்த்த பெயராகும். 1745 ஆண்டின் பிரித்தானிய நாடாளுமன்றச் சட்டம் "அமெரிக்கா"வின் "மேற்கு, தெற்கு கடல்களுக்குச் செல்ல" "வடமேற்கு கடப்பு" வழியைக் கண்டுபிடிப்பவருக்குப் பரிசு ஒன்றை நிறுவியது". + +அறியப்படாத தென்முனை வட்டாரங்களைச் சூழ்ந்தமைந்த நீர்நிலையை தென்முனைப் பெருங்கடல் என பெயரிட்டு எழுதிய ஆசிரியர்கள் பல்வேறு வரம்புகளை குறிப்பிட்டனர். ஜேம்சு குக் அவர்களது இரண்டாம் பயண விவரிப்பு அதன் வரம்பில் நியூ கலெடோனியா அமைவதாக புலப்படுத்துகிறது. பீகாக்கின் 1795 ஆம் ஆண்டு "புவிப்பரப்பியல் அகரமுதலி" இக்கடல் "அமெரிக்காவுக்கும் ஆப்பிரிக்காவுக்கும் தெற்கில்" அமைவதாக கூறுகிறது; ஜான் பெய்னே 1796 இல் இக்கடலின் வடக்கு வரம்பாக 40 பாகை அகலாங்கைப் பயன்படுத்தினார்; 1827 ஆம் ஆண்டு "எடின்பர்கு அரசிதழ்" 50 பாகை அகலாங்கை வக்கு வரம்பாகப் பயன் படுத்தியது.> "குடும்ப இதழ் (Family Magazine)" 1835 இல் "பெருந்தென் பெருங்கடலை" "தென்பெருங்கடல்" எனவும் "அண்டார்ட்டிக் ["சிக்"] பெருங்கடல்" எனவும் அண்ட்டர்ட்டிக் வட்ட்த்தைச் சூழ்ந்தமைந்த கடலை இரண்டாகப் பிரித்தது. இதன் வடக்கு வரம்பாக, கொம்புமுனையையும் நன்னம்பிக்கை முனையையும் இணைக்கும் கோட்டையும் வான் தியெமன் நிலத்தையும் நியூசிலாந்தின் தெற்குப் பகுதியையும் இணைக்கும்கோட்டையும் குறிப்பிட்ட்து. + + + + + +அத்திலாந்திக்குப் பெருங்கடல் + +அட்லாண்டிக் பெருங்கடல் ("Atlantic Ocean") உலகின் இரண்டாவது பெரிய பெருங்கடலாகும். இது 106,400,000 சதுர கிலோ மீட்டர் (41,100,000 சதுர மைல்கள்) பரப்பளவைக் கொண்டது ஆகும். . புவிப்பரப்பில் சுமார் 20 சதவீத இடத்தையும், புவியின் நீர்ப்பரப்பில் சுமார் 29 சதவீத இடத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆக்ரமித்துள்ளது. மேற்கு கண்டம் என அழைக்கப்பட்ட புதிய உலகத்தையும் கிழக்குக் கண்டம் என அழைக்கப்பட்ட பழைய உலகத்தையும் அட்லாண்டிக் பெருங்கடல் இணைக்கிறது. +அட்லாண்டிக் பெருங்கடல் ஒரு நீளமான, S- வடிவ வடிநிலத்தை ஆக்கிரமித்துள்ளது, கிழக்கில் யூரேசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையிலும், மேற்கில் அமெரிக்காவிற்கும் இடையிலும் இப்பெருங்கடல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஒன்றிணைந்த உலகளாவிய கடல் பரப்பின் ஒரு பகுதியாக, வடக்கில் ஆர்க்டிக் பெருங்கடல், தென்மேற்கில் பசிபிக் பெருங்கடல், தென்கிழக்கில் இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கில் தென் பெருங்கடல் என கடல்களுடன் அட்லாண்டிக் பெருங்கடல் இணைந்துள்ளது. ஆர்க்டிக் கடலில் இருந்து அண்டார்க்டிக் கடல்வரை அட்லாண்டிக் விரிவடைந்துள்ளதாக பிற வரையறைகள் தெரிவிக்கின்றன. நடுக்கோட்டு நீரோட்டம் இப்பெருங்கடலை 8 ° வடக்கில் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் மற்றும் தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் என இரண்டாகப் பிரிக்கிறது . + +சேலஞ்சர் பயணம், செருமனியின் விண்கல பயணம், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் லாமோன்ட்-டோயெர்டி புவி வானாய்வகம் மற்றும் அமெரிக்காவின் கடல்நீரியல் அலுவலகம் உள்ளிட்டவை அட்லாண்டிக் பெருங்கடலின் அறிவியல் ஆராய்ச்சிகளில் அடங்கும் . + +அட்லாண்டிக் பெருங்கடலைப்பற்றிய பழமையான சொற்பயன்பாடு தொடர்பான செய்திகள் கிட்டத்தட்ட கி.பி. ஆறாம் நூற்றாண்டின் மையக் காலத்தில் பாடலாசிரியர் சிடெசிகோரசின் பாடல்களில் காணப்படுகின்றன :. அட்லாண்டிகோய் பெலாகி என்ற சொல் கிரேக்கம்: Ἀτλαντικῷ πελάγει; ஆங்கிலம்: 'the Atlantic sea' என்றும் கி.பி 450 காலத்திய கிரேக்க வரலாற்று அறிஞர் எரோட்டசின் நூலில் அட்லாண்டிசு தலசா என்ற சொல் காணப்படுவதாகக் கூறப்படுகிறது . இதன் பொருள் நிலப்பகுதிகள் யாவற்ரையும் சூழ்ந்துள்ள கடற்பகுதி என்பதாகும் . +ஒருபுறம், கிரேக்க புராணங்களில் டைட்டான் என்ற வானக் கடவுளைக் குறிப்பிட இப்பெயர் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. இக்கடவுள் சொர்க்கத்தை ஆதரித்து பின்னர் மத்திய கால வரைபடத்தில் ஒரு முன்னோடிப் பாத்திரமாக இடம்பெற்றவராவார். மேலும் இவருடைய பெயர் நவீன அட்லசுக்கும் பெயராக வைக்கப்பட்டது . மறுபுறம், ஆரம்பகால கிரேக்க மாலுமிகளுக்கும், இலியட் மற்றும் ஒடிசி போன்ற பண்டைய கிரேக்க புராண இலக்கியங்களிலும், நிலப்பரப்பைச் சூழ்ந்திருந்த இப்பெரு நீர்ப்பரப்பு ஓசனசு என்று அழைக்கப்0பட்டது. இதன் பொருள் உலகத்தைச் ச்ழ்ந்துள்ள மிகப்பெரிய நதி என்பதாகும். கிரேக்கர்களால் நன்கு அறியப்பட்ட மத்திய தரைக்கடல் மற்றும் கருங்கடல் போன்ற கடல்களுக்கு மாறாக இது இருந்தது .இதற்கு மாறாக, "அட்லாண்டிக்" என்ற சொல் மொராக்கோவில் உள்ள அட்லசு மலைகள் மற்றும் கிப்ரால்டர் நீரிணை மற்றும் வட ஆப்பிரிக்க கடற்கரை ஆகியவற்றைக் குறிப்பதாக குறிப்பிடப்படுகிறது . கிரேக்க வார்த்தையான தலசா என்ற சொல் ஏறத்தாழ 250 மில்லியன்ஆண்டுகளுக்கு முன்னர் பெருநிலப் பரப்பான மீக்கண்டத்தைச் சூழ்ந்திருந்ததாகக் கருதப்படும் பாந்தலசா என்ற மீக்கடலைக் குறிபிடுவதற்காக விஞ்ஞானிகளால் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. + +பண்டைய எத்தியோப்பியாவிலிருந்து எத்தியோபியன் பெருங்கடல் என்ற சொல் பெறப்பட்டதாகும். இப்பெயர் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு அட்லாண்டிக் பகுதிக்கு பயன்படுத்தப்பட்டது . +பொதுவாக, மவுண்ட் அட்லாசு என்னும் மலை அல்லது அட்லாண்டிசு என்னும் தீவு ஆகிய இரண்டின் பெயர்களே அட்லாண்டிக் பெருங்கடல் என்ற பெயர் அமைவதற்கு காரணமாக உள்ளன. + +சர்வதேச நீரியல் நிறுவனம் 1953 ஆம் ஆண்டில் கடல்கள் மற்றும் பெருகடல்களின் வரம்புகளை வரையறுத்தது , ஆனால் இந்த வரையறைகளில் சில பின்னர் மறுசீரமைக்கப்பட்டன. சில வரையறைகள் பல்வேறு அதிகாரிகள், நிறுவனங்கள் மற்றும் நாடுகளால் பயன்படுத்தப்படவில்லை, உதாரணமாக சி.ஐ.ஏ. உலகத் தகவல் புத்தகம். இதன்படி, கடல் மற்றும் கடல்களின் அளவு மற்றும் எண்ணிக்கை வேறுபடுகிறது. + +அட்லாண்டிக் பெருங்கடல் மேற்கில் வட அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவால் சூழப்பட்டுள்ளது. டென்மார்க் நீரிணை, கிரீன்லாந்து கடல், நார்வேயின் கடல், பேரண்ட்சு கடல் ஆகியவற்ரின் வழியாக ஆர்க்டிக் பெருங்கடலை இணைக்கிறது. +கிழக்கே, இக்கடலின் எல்லையாக ஐரோப்பாவும், கிப்ரால்டர் நீரிணையும் ஆப்பிரிக்காவும் அமைந்துள்ளன. 'கிப்ரால்ட்டர் நீரிணை மத்தியதரைக் கடலையும், அட்லாண்டிக் பெருங்கடலையும் இணைக்கிறது. கருங்கடல் மத்தியதரைக் கடலுடன் இணைந்துள்ளது. இவ்விரு கடல்களும் ஆசியாவைத் தொடுகின்றன. + +தென்கிழக்கு திசையில் அட்லாண்டிக் பெருங்கடல் இந்திய பெருங்கடலில் இணைகிறது. கேப் அகுலாசிலிருந்து அண்டார்க்டிக்கா வரை தெற்காக ஓடும் 20 ° கிழக்கு நெடுவரை இதன் எல்லையை வரையறுக்கிறது. 1953 ஆம் ஆண்டு வரையறையானது இதன் தெற்கை அண்டார்டிக்கா வரை நீட்டித்தது. அதே சமயம் பிற்கால வரைபடங்களில் இது தெற்குப் பெருங்கடலுடன் 60 ° இணையாகச் சூழப்பட்டுள்ளது. + +அட்லாண்டிக் கடலின் இரு கரைகளிலும் சீர்மையற்ற பல பெரிய உள்நாட்டுக் கடல்களும், வளை குடாக்களும், விரிகுடாக்களும் காணப்படுகின்றன. வடக���ல், பால்டிக் கடல், மத்தியதரைக்கடல், கருங்கடல், கரிபியக் கடல், டேவிசு நீரிணை, டென்மார்க் நீரிணை, மெக்சிகோ வளைகுடா, லாப்ரடார் கடல், நார்வேயின் கடல், இசுக்காட்டியக் கடலின் பெரும்பகுதி மற்றும் பிற துணையாறுகள் உள்ளிட்டவை அட்லாண்டிக் கடலுடன் தொடர்புடையவையேயாகும் . இவையனைத்தையும் உள்ளடக்கிய அட்லாண்டிக் கடற்கரை சுமார் 111,866 கிலோமீட்டர் நீலத்தைப் பெற்றுள்ளது. பசிபிக் பெருங்கடலின் கடற்கரைப் பகுதியின் நீளம் 135,663 கிலோமீட்டர்களாகும் . + +கரையோரக் கடல்களையும் உள்ளடக்கி அட்லாண்டிக் பெருங்கடல் மொத்தமாக 106,460,000 கி.மீ2 (41,100,000 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது உலகக் கடற்பரப்பின் மொத்தத்தில் 23.5 சதவீதமாகும். இதே போல அட்லாண்டிக் பெருங்கடலின் கன அளவு 310,410,900 கி.மீ3 (74,471,500 கன மைல்) ஆகும். இது உலகக் கடற் கன அளவின் மொத்தத்தில் 23.3% ஆகும். வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் 41,490,000 கி.மீ2 (16,020,000 சதுர மைல்) பரப்பளவும் (11.5%) தெற்கு அட்லாண்டிக் பெருங்கடல் 40,270,000 கி.மீ2 (15,550,000 சதுரமைல்) (11.1%) பரப்பளவையும் கொண்டுள்ளன. அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழம் சராசரியாக 3,646 மீட்டர் (11,962 அடி) ஆகும். அதிகபட்ச ஆழம் பியுவர்டோரிகோ அகழியில் உள்ள மில்வௌக்கி பள்ளம் 8,486 மீட்டர் (27,841 அடி) ஆழத்தைக் கொண்டதாக உள்ளது . + +மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் என்ற பெயரில் அழைக்கப்படும் ஒரு நீர்மூழ்கி மலைமுகடு ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலின் ஆழப்பகுதியில் அமைந்துள்ளது. வடக்கிலிருந்து தெற்கு நோக்கி 87° வடக்கு அல்லது வடதுருவத்திற்குத் தெற்கே 300 கிலோமீட்டர் தொலைவில் அண்டார்டிக்கிலுள்ள 42° தெற்கு பௌவெட் தீவில் செல்கிறது. + +மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் அட்லாண்டிக் தரைப்பகுதியை இரண்டு பள்ளத்தாக்குகளாகப் பிரிக்கிறது, ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் இரண்டாம் நிலை குறுக்கு வழிகளால் பிரிக்கப்பட்ட தொடர்ச்சியான வடிநிலங்களைக் கொண்டுள்ளன. இம்மலைத்தொடர் 2000 மைல் வரை நீளமாகப் பரவியுள்ளது. ஆனால் நிலநடுக்கோட்டிற்கு அருகில் ரோமான்ச்சு அகழி என்ற இடத்திலும், 53° வடக்கில் கிப்சு பிராக்சர் மண்டலம் என்ற இடத்திலும் இம்மலைத் தொடர் தடைபடுகிறது. மேலும் இம்மலைத்தொடர் கடலடி நீருக்கும் தடையாக உள்ளன. ஆனால் இவ்விரு தடைப் பிரதேசங்களிலும் நீரோட்டமானது ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்குச் செல்கின்றன. + +மத��திய அட்லாண்டிக் மலைத்தொடர் சுற்றியுள்ள கடல் தரைக்கு மேலே 2-3 கிமீ (1.2-1.9 மைல்) அளவுக்கு உயர்ந்துள்ளது. மற்றும் இதன் பிளவு பள்ளத்தாக்கு வடக்கு அட்லாண்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக்கில் உள்ள யுரேசியத் தட்டு இரண்டுக்குமிடையிலும், தென் அமெரிக்க மற்றும் ஆப்பிரிக்க தட்டுகளுக்கு இடையில் வேறுபட்ட எல்லையாக உள்ளது. + +இம்மலைத்தொடரின் உச்சியில் நீரின் ஆழம் பெரும்பாலான இடங்களில் 2,700 மீட்டர் (8900 அடி) அளவுக்கும் குறைவாக உள்ளது, அதே நேரத்தில் இம்மலைத்தொடருக்கு கீழே மூன்று மடங்கு ஆழமும் உள்ளது . + +40° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும் 16° வடக்குக்கு அருகே ஓர் இடத்திலும் இரண்டு இடங்களில் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடர் செங்குத்தாகப் பிரிக்கப்படுகிறது. +1870 களில் மேற்கொள்ளப்பட்ட சாலஞ்சர் கடற்பயணத்தால் மத்திய அட்லாண்டிக் மலைத்தொடரின் முதல் பிரிவு கண்டறியப்பட்டது. எஞ்சியுள்ள பகுதிகள் 1920 களில் மேற்கொள்ளப்பட்ட செருமானிய கடற்பயணத்தின் போது கண்டறியப்பட்டன. 1950 களில் மேற்கொள்ளப்பட்ட கடற்பயணங்களில் கடற் தரை விரிவும் புவித்தட்டுகள் தொடர்பான இயக்கங்களும் பற்றிய ஏற்றுக் கொள்ளத்தக்க பொதுமைகள் உருவாகின. + +மலைத்தொடரின் பெரும்பகுதி ஆழத்தில் கடல் நீரின் கீழ் செல்கிறது. மேற்பரப்புகளை இது அடையும் போது எரிமலை தீவுகளை உருவாக்கியுள்ளது. இவற்றில் ஒன்பது எரிமலைகள் இவற்றின் புவியியல் மதிப்பிற்காக உலக புராதான சின்னங்களாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மலைகள் இவற்றின் கலாச்சார மற்றும் இயற்கை அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு மிகச்சிறந்த பிரபஞ்ச மதிப்புமிக்க சின்னங்களாகக் கருதப்படுகின்றன: எஞ்சியுள்ளவை அமைத்தும் நடுநிலைச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன . + +நிலநடுக்கோடு அட்லாண்டிக் கடலை வட, தென் அட்லாண்டிக் என இரண்டு கடல்களாகப் பிரிக்கிறது. தென் அட்லாண்டிக் கடல் வட அட்லாண்டிக் கடலைவிட குளிர்ச்சியாக இருக்கிறது. கடலின் அடிப்பகுதியில் இவ்வெப்பநிலை உறைநிலையையும் நெருங்கும். மேர்பரப்பில் வெப்பநிலையானது -2° செல்சியசு வெப்பநிலை முதல் 30° செல்சியசு வரை இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை நிலப்பகுதிக்கு வடக்கே ஏற்படுகிறது, மற்றும் துருவ மண்டலங்களில் குறைந்தபட்ச மதிப்புகள் காணப்படுகின்றன. நடுத்தர நில���்பரப்புகளில், அதிகபட்ச வெப்பநிலை மாறுபாடு மதிப்புகள் 7-8° செல்சியசு வரையில் மாறுபடுகிறது. +அக்டோபர் முதல் சூன் மாதம் வரை லாப்ரடார் கடல், டென்மார்க் நீரிணை மற்றும் பால்டிக் கடல் பகுதிகளில் நீரின் மேற்பரப்பு பனிக்கட்டியால் மூடப்பட்டிருக்கும். + +அட்லாண்டிக் பெருங்கடலின் நீர் மிகுந்த உவர்ப்புத் தன்மை மிக்கதாகும். மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை அதன் நிறையில் 1000 பகுதிகளுக்கு 33 முதல் 37 பகுதிகளாகும். வாணிபக் காற்று வீசும் பகுதிகளில் உப்பு அதிகமாகும். நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் உப்புத்தன்மை குறைவாகும். மேற்பரப்பிலிருந்து கீழே செல்லச் செல்ல உவர்ப்புத் தன்மை அதிகரிக்கிறது. காலநிலைக்கு ஏற்பவும், மழைப்பொழிவு, உயர் ஆவியாதல் போன்ற காரணிகளால் இந்த அளவு வேறுபடுகிறது . + +இக்கடலின் இரண்டு பக்கங்களிலும் ஏராளமான தீவுகள், பவழத் தீவுகள் அமைந்துள்ளன. குறிப்பாக மேற்குப் பகுதியில் அதிக அளவு தீவுகள் உள்ளன. + +அதிக அளவிலான ஆறுகள் அட்லாண்டிக் கடலில் கலக்கின்றன. மற்ற பெருங்கடல்களைக் காட்டிலும் இங்கு ஆற்று நீர் அதிகமாகக் கலக்கிறது. புவியின் இரண்டு அரைக் கோளத்திலும் காணப்படும் பெரும் பள்ளத்தாக்குகள் அனைத்தும் அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கியே சாய்ந்துள்ளன. + +நிலநடுக்கோட்டு நீரோட்டம், கல்ப் நீரோட்டம், வட ஆப்பிரிக்க நீரோட்டம் போன்ற நீரோட்டங்கள் அட்லாண்டிக் கடலில் உள்ளன. இவை சுழல் இயக்கத்தின் மூலம் வடமேற்கு ஐரோப்பாவை கதகதப்பாக்குகிறன. லாப்ரடார் நீரோட்டம் ஆர்க்டிக் கடலிலிருந்து தெற்கு நோக்கி நகர்ந்து கிழக்குக் கனடா போன்ற நாடுகளை குளிர்விக்கிறது. +மக்னீசியம், நிலக்கரி எண்ணெய் போன்றவை இங்கு அதிகமாகக் கிடைக்கின்றன. + +ஏவுகணை ஆய்வுகள் நடத்துவதற்கான ஆய்வுக் கூடமாக அட்லாண்டிக் பெருங்கடல் பயன்படுகிறது. வான்வெளிக்குச் சென்ற பல விண்வெளி வீரர்களின் விண்கலன்கள் இப்பெருங்கடலில்தான் இறங்கின. + + + + + +பிரேசில் + +பிரேசில் ("Brazil") அல்லது பிரேசில் கூட்டாட்சிக் குடியரசு ("Federative Republic of Brazil", , ), தென் அமெரிக்காவில் மிகப் பெரியதும் மிகுந்த மக்கள் தொகை கொண்டதுமான நாடாகும். இது பரப்பளவின் அடிப்படையிலும், மக்கள்தொகை அடிப்படையிலும் உலகிலேயே ஐந்தாவது பெரிய நாடு ஆகும். இதன் மக்கள்தொகை 192 மில்லியனுக்கும் மேற்பட்டது. பிரேசிலின் கிழக்கிலும் வடகிழக்கிலும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. 7,491 கி.மீ. (4,655 மைல்) நீளமான கடற்கரை பிரேசிலுக்கு உண்டு. பிரேசிலின் அருகாமையில் உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசூலா, கயானா, சுரினாம், பிரெஞ்சு கயானா ஆகிய நாடுகள் உள்ளன. அதாவது, எக்குவடோர், சீலே தவிர அனைத்துத் தென் அமெரிக்க நாடுகளுடனும், பிரேசில் எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு தீவுக் கூட்டங்களும் பிரேசிலின் ஆட்சிப் பகுதிக்குள் அடங்குகின்றன. பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு அட்டோல், செயின்ட் பீட்டர் மற்றும் செயின்ட் பவுல் தீவுக்கூட்டம், டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் என்பன இவற்றுட் சில. பிரேசிலின் தலைநகர் பிரேசிலியா ஆகும். சாவோ பாவுலோ, ரியோ தி ஜனைரோ ஆகியவை முக்கிய நகரங்களாகும். + +போர்த்துகீசியரின் ஆட்சியில் முன்பு இருந்ததால் போர்த்துகீச மொழி பிரேசிலில் பேசப்படும் மொழியும், அதிகாரப்பூர்வ மொழியும் ஆகும். தென்னமெரிக்காவில் பெரும்பான்மையாகப் போத்துக்கீச மொழியைப் பேசுபவர்களைக் கொண்ட நாடு இது மட்டுமே. அத்துடன், இம்மொழியைப் பேசுகின்ற உலகின் மிகப் பெரிய நாடும் இதுவே. + +1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் கால் வைத்ததிலிருந்து 1815 ஆம் ஆண்டுவரை பிரேசில் போர்த்துக்கலின் குடியேற்ற நாடாக இருந்தது. 1815ல் பிரேசில் ஒரு இராச்சியமாகத் தரம் உயர்த்தப்பட்டு, போர்த்துக்கல், பிரேசில், அல்கார்வெசு ஆகியவற்றின் ஐக்கிய இராச்சியம் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டது. உண்மையில், 1808 ஆம் ஆண்டில் நெப்போலியன் போர்த்துக்கலைக் கைப்பற்றிக்கொண்டபோது, போர்த்துக்கீசக் குடியேற்றவாதப் பேரரசின் தலைநகரம் லிசுப்பனிலிருந்து இரியோ டி செனீரோவுக்கு மாற்றப்பட்டபோது குடியேற்றவாதப் பிணைப்பு அறுந்துவிட்டது. + +1822 ஆம் ஆண்டில் பிரேசில் பேரரசின் உருவாக்கத்துடன் நாடு விடுதலை பெற்றது. இப் பேரரசு அரசியல் சட்ட முடியாட்சியுடன், நாடாளுமன்ற முறையும் சேர்ந்த ஒரு ஒற்றையாட்சி அரசின் கீழ் ஆளப்பட்டது. 1889 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஒரு இராணுவப் புரட்சியைத் தொடர்ந்து, பிரேசில் சனாதிபதி முறைக் குடியரசு ஆனது. 1988ல் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்படி பிரேசில் ஒரு கூட்டாட்சிக் குடியரசு ஆகும். கூட்டாட்���ி மாவட்டங்கள் எனப்படும், 26 மாநிலங்களும், 5,564 மாநகரப் பகுதிகளும் இணைந்தே இக்கூட்டாட்சி உருவாக்கப்பட்டு உள்ளது. + +பிரேசிலின் பொருளாதாரம், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலகின் ஆறாவது பெரியதும், வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் ஏழாவது பெரியதும் (2011 ஆம் ஆண்டு நிலை) ஆகும். உலகின் விரைவாக வளர்ந்துவரும் முக்கியமான பொருளாதார நாடுகளில் பிரேசிலும் ஒன்று ஆகும். ஐக்கிய நாடுகள் அவை, ஜி20, போத்துக்கீச மொழி நாடுகள் சமூகம், இலத்தீன் ஒன்றியம், ஐபீரோ-அமெரிக்க நாடுகள் அமைப்பு, அமெரிக்க நாடுகள் அமைப்பு, தெற்கத்திய பொதுச் சந்தை, தென்னமெரிக்க நாடுகளின் ஒன்றியம் ஆகிய அமைப்புகளின் தொடக்கக்கால உறுப்பினராகப் பிரேசில் உள்ளது. பெரும்பல்வகைமை நாடுகளில் ஒன்றான பிரேசிலில், பல்வகைக் காட்டுயிர்கள், இயற்கைச் சூழல்கள், பரந்த இயற்கை வளங்கள், பல்வேறுபட்ட காக்கப்பட்ட வாழிடங்கள் என்பன காணப்படுகின்றன. + +பிரேசில் இலத்தீன அமெரிக்காவில் மண்டலத்தின் செல்வாக்குள்ள நாடாகவும், பன்னாட்டளவில் நடுத்தர செல்வாக்குள்ள நாடாகவும் விளங்குகிறது. சில மதிப்பீடாளர்கள் பிரேசிலை உலகளவில் செல்வாக்கு பெருகிவரும் நாடாக அடையாளப்படுத்துகின்றனர். பிரேசில் கடந்த 150 ஆண்டுகளாக உலகின் மிக உயர்ந்த காப்பி பயிராக்கும் நாடாக விளங்குகின்றது. + +தற்போது பிரேசிலென அழைக்கப்படும் தென்னமெரிக்கப் பகுதியை 1500 ஆம் ஆண்டில் பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் தலைமையிலான போத்துக்கீசக் கப்பல்கள் அடைந்ததிலிருந்து, அப்பகுதி போத்துக்கீசர் வசமானது. அப்போது, அங்கே கற்காலப் பண்பாட்டைக் கொண்ட தாயக மக்கள் பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்து காணப்பட்டனர். தூப்பி-குவாரானி குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசிய அவர்கள் எப்பொழுதும் தமக்குள் சண்டையிட்டபடி இருந்தனர். +முதலாவது குடியிருப்பு 1532 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட போதும், 1534 ஆம் ஆண்டில், டொம் யோவான் III அப்பகுதியைத் தன்னாட்சியுடன் பரம்பரைத் தலைமைத்துவம் கொண்ட 15 பிரிவுகளாகப் பிரித்த பின்னரே நடைமுறையில் குடியேற்றம் தொடங்கியது. எனினும் இந்த அமைப்பு ஒழுங்குப் பிரச்சினைக்கு வித்திட்டதால் முழுக் குடியேற்றத்தையும் நிர்வாகம் செய்வதற்காக 1549ல், அரசர் ஒரு ஆளுனரை நியமித்தார். சில தாயக இனக்குழுக்கள் போத்து���்கீசருடன் தன்மயமாகிவிட்டனர். வேறுசில குழுக்கள், அடிமைகள் ஆக்கப்பட்டனர் அல்லது நீண்ட போர்களில் அழிக்கப்பட்டனர். இன்னும் சில குழுக்கள் ஐரோப்பியர்மூலம் பரவியனவும், தாயக மக்கள் எதிர்ப்புச் சக்தியைக் கொண்டிராதனவுமான நோய்களினால் மடிந்தனர். 16 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், சர்க்கரை (சீனி) பிரேசில் நாட்டின் முக்கியமான ஏற்றுமதிப் பண்டம் ஆகியது. அனைத்துலக அளவில் சர்க்கரைக்கான தேவை கூடியதனால், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகப் போத்துக்கீசர், ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளை இறக்குமதி செய்தனர். + +பிரான்சுடனான போர்களின் மூலம் போத்துக்கீசர் மெதுவாகத் தமது ஆட்சிப் பகுதியை விரிவாக்கிக் கொண்டனர். 1567ல் தென்கிழக்குத் திசையிலான விரிவாக்கத்தின் மூலம் ரியோ டி செனரோவையும், 1615ல் வடமேற்குத் திசை விரிவாக்கத்தின் மூலம் சாவோ லூயிசையும் கைப்பற்றினர். அமேசான் மழைக்காட்டுப் பகுதிக்குப் படையெடுத்துச் சென்றுப் பிரித்தானியருக்கும் ஒல்லாந்தருக்கும் உரிய பகுதிகளைக் கைப்பற்றி, 1669 ஆம் ஆண்டிலிருந்து அப்பகுதியில் ஊர்களை உருவாக்கிக் கோட்டைகளையும் அமைத்தனர். 1680 ஆம் ஆண்டில் தெற்குக் கோடியை எட்டிய போத்துக்கீசர், கிழக்குக் கரையோரப் பகுதியில் (தற்கால உருகுவே), ரியோ டி லா பிளாட்டா ஆற்றங்கரையில் சாக்ரமெந்தோ என்னும் நகரை நிறுவினர். + +17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் சர்க்கரை ஏற்றுமதி வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. ஆனால், 1690களில் மாட்டோ குரோசோ, கோயாசு ஆகிய பகுதிகளில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதனால் உடனடியான சீர்குலைவு தடுக்கப்பட்டது. + +1494 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி தமக்கு உரியதான பகுதிகளுக்குள் போத்துக்கீசர் விரிவாக்கம் செய்வதை எசுப்பானியர் தடுக்க முயன்றனர். 1777ல் கிழக்குக் கரையோரத்தைக் கைப்பற்றுவதிலும் வெற்றி பெற்றனர். ஆனாலும், அதே ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட சான் இல்டிபொன்சோ உடன்படிக்கையின்படி போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்ட பகுதிகளில் அவர்களது இறையாண்மை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் இம்முயற்சி வீணாயிற்று. இதன்மூலம், இன்றைய பிரேசிலின் எல்லைகள் பெரும்பாலும் நிலை நிறுத்தப்பட்டன. + +1808ல், பிரான்சின் பேரரசர் நெப்போலியன் போர்த்துக்கலையும் பெரும்பாலான மைய ஐரோப்பாவையும் ��ைப்பற்றியதைத் தொடர்ந்து, போத்துக்கீச அரச குடும்பமும், பெரும்பாலான உயர் குடியினரும் தப்பி வந்து ரியோ டி செனரோ நகரத்தில் குடியேறினர். இதனால், அந்நகரம் போத்துக்கீசப் பேரரசு முழுவதினதும் தலைமை இடமாக மாறியது. 1815 ஆம் ஆண்டில் தனது உடல்நலம் குன்றிய தாய்க்காக ஆட்சிப் பொறுப்பாளராக இருந்த ஆறாம் டொம் யோவான் (Dom João VI) பிரேசிலைக் குடியேற்ற நாடு என்னும் தரத்திலிருந்து இறைமையுள்ள இராச்சியமாகத் தரம் உயர்த்தினார். 1809 ஆம் ஆண்டில் பிரெஞ்சு கயானாவைப் போத்துக்கீசர் கைப்பற்றினர். 1817ல் இது மீண்டும் பிரான்சிடம் வழங்கப்பட்டது. +போத்துக்கீசப் படையினர், நெப்போலியனுடைய ஆக்கிரமிப்பை முறியடித்தபின்னர், 1821 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அரசர் ஆறாம் யோவான் ஐரோப்பாவுக்குத் திரும்பினார். அவரது மூத்த மகன் இளவரசர் பெட்ரோ டி அல்கந்தாரா பிரேசிலுக்கான ஆட்சிப் பொறுப்பாளராக ஆனார். 1820ன் தாராண்மைப் புரட்சியைத் தொடர்ந்து பதவிக்கு வந்த புதிய போர்த்துக்கல் அரசாங்கம் பிரேசிலை மீண்டும் குடியேற்ற நாடாக ஆக்குவதற்கு முயற்சித்தது. பிரேசில் மக்கள் இதற்கு இடம் கொடுக்கவில்லை. இளவரசர் பெட்ரோவும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார். அவர், 1822 செப்டெம்பர் 7 ஆம் தேதி பிரேசிலைப் போர்த்துக்கலிலிருந்து விடுதலை பெற்ற ஒரு இராச்சியமாக அறிவித்தார். பெட்ரோ, 1822 அக்டோபர் 12 ஆம் தேதி பிரேசிலின் முதல் பேரரசராக அறிவிக்கப்பட்டு அவ்வாண்டு டிசம்பர் முதலாம் திகதி முடிசூட்டப்பட்டார். + +பிரேசில் நாட்டின் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகரான மனாஸின் அருகில் உள்ள ரீயோ நீக்ரொ (Rio Negro (Amazon)) ஆற்றங்கரையோரத்தில் தாத்துயோ என்ற பழங்குடிமக்கள் வாழுகிறார்கள். இவர்கள் தற்சமயம் நாகரிகத்தை உணர ஆரம்பித்துள்ளார்கள். + +பிரேசில் தென் அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தில் பெரிய நிலப்பகுதியை அடக்கி உள்ளது; இந்தக கண்டத்தின் பேரளவு உட்பகுதியை பிரேசில் உள்ளடக்கி உள்ளது. இந்த நாட்டின் தெற்கில் உருகுவையும் தென்மேற்கில் அர்கெந்தீனாவும் பரகுவையும் மேற்கில் பொலிவியாவும் பெருவும் வடமேற்கில் கொலொம்பியாவும் வடக்கில் வெனிசுவேலா, கயானா, சுரிநாம், பிரெஞ்சு கயானாவும் எல்லைகளாக உள்ளன. எக்குவடோர் மற்றும் சிலி தவிர்த்துத் தென் அமெரிக்காவின் அனைத்து நாடுகளுடனும் பிரேசில் எல்லையைக் கொண்டுள்ளது. + +பெர்னான்டோ டி நோரன்கா, ரோக்காசு பவழத்தீவு, செயின்ட் பீட்டர் மற்றும் பவுல் பாறைகள், மற்றும் டிரின்டேடும் மார்ட்டிம் வாசும் போன்ற பல பெருங்கடல் தீவுக்கூட்டங்களை உள்ளடக்கி உள்ளது. இதன் பரப்பளவு, வானிலை, மற்றும் இயற்கை வளங்கள் பிரேசிலை புவியியல் பல்வகைமை கொண்டதாகச் செய்கின்றன. + +அத்திலாந்திக்கு தீவுகள் உட்பட, பிரேசில் நிலநேர்க்கோடுகள் 6°Nக்கும் 34°Sக்கும் இடையேயும் நிலநிரைக்கோடுகள் 28°Wக்கும் 74°Wக்கும் இடையேயும் அமைந்துள்ளது. + +பிரேசில் உலகின் ஐந்தாவது பெரிய நாடாகவும், அமெரிக்காக்களில் மூன்றாவது பெரிய நாடாகவும் விளங்குகிறது. பரப்பளவிலான நீர்ப்பரப்பு உள்ளடக்கி இதன் மொத்தப் பரப்பளவு ஆக உள்ளது. இது மூன்று நேர வலயங்களை கொண்டுள்ளது; மேற்கு மாநிலங்களில் UTC-4 இலிருந்து கிழக்கு மாநிலங்களில் UTC-3 வரையும் பரந்துள்ளது; அத்திலாந்திக்குத் தீவுகள் UTC-2 நேர வலயத்தில் அமைந்துள்ளன. உலகிலேயே தன் நிலப்பகுதி வழியே நிலநடுக் கோடு செல்லும் ஒரே நாடாக பிரேசில் விளங்குகிறது. + +பிரேசிலிய நிலப்பகுதி பல்வகைமை கொண்டதாக, அமேசான் ஆறு, அமேசான் மழைக்காடுகள், குன்றுகள், மலைகள், சமவெளிகள், உயர் நிலங்கள் மற்றும் புதர் நிலங்கள் அடங்கியதாக உள்ளது. பெரும்பாலான நிலப்பரப்பு உயரத்திலிருந்து உயரம் வரை உள்ளது. உயரமான நிலப்பரப்பு நாட்டின் தென்பகுதியில் காணப்படுகிறது. + +நாட்டின் தென்கிழக்குப் பகுதி கரடுமுரடாகக் குன்றுகளும் மலைகளும் உடையதாக உள்ளது; இவற்றின் உயரங்கள் வரை எழும்புகின்றன. வடக்கில், குயானா உயர்நிலங்கள் ஆற்று வடிநீரை பிரிக்கின்றது; தெற்கே அமேசான் படுகைக்குப் பாயும் ஆறுகளை வடக்கே பாய்ந்து வெனிசூலாவின் ஓரின்கோ ஆற்று அமைப்பில் கலக்கும் ஆறுகளிலிருந்து பிரிக்கின்றது. பிரேசிலின் மிக உயரமான சிகரம் உயரமுள்ள "பைக்கோ டா நெப்லினா" ஆகும். + +பிரேசிலில் அடர்ந்த சிக்கலான ஆற்றுப் பிணையம் உள்ளது; உலகின் மிகவும் பரந்த ஆற்றுப்படுகைகள் உள்ளன. எட்டு பெரிய வடிநிலங்கள் அத்திலாந்திக்கு பெருங்கடலில் ஆற்றுநீரை வடிக்கின்றன. + +பிரேசிலின் முதன்மையான ஆறுகளாக அமேசான் (உலகின் இரண்டாவது மிக நீளமானதும் நீர்க்கொள்ளளவில் மிகப் பெரியதுமானதும் ஆகும்), பரனா மற்றும் அதன் துணை ஆறான இகுவாசு ( இகுவாசு அருவி), ரியோ நீக்ரோ, சாவோ பிரான்சிஸ்கோ, இக்சிங்கு, மதீரா, டபாயோசு ஆறுகள் உள்ளன. + +பிரேசிலியக் கூட்டாட்சி மாநிலங்கள், நகராட்சிகள், கூட்டரசு மாவட்டம் ஆகியவற்றின் "கலைக்கமுடியாத ஒன்றியம்" ஆகும். ஒன்றியம், மாநிலங்கள், கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகள் "அரசின் கூறுகளாகும்." இந்தக் கூட்டமைப்பு ஐந்து கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது: இறையாண்மை, குடிமை, மாந்தர் மேன்மை, தொழிலாளர் சமூக நலம் மற்றும் நிறுவன சுதந்திரம், அரசியல் பன்முகத்தன்மை. அரசின் மரபார்ந்த மூன்று கிளைகளை (கட்டப்படுத்தல்களும் சமநிலைகளும் முறைமையின் கீழான செயலாக்கம், சட்டவாக்கம், மற்றும் நீதியாண்மை) அரசியலமைப்பினால் முறையாக நிறுவப்பட்டுள்ளது. செயலாக்கமும் சட்டவாக்கமும் தனித்தனியே அரசின் மூன்று கூறுகளிலும் (ஒன்றியம்,மாநிலம்,நகராட்சி) வரையறுக்கப்பட்டுள்ளபோதிலும் நீதித்துறை ஒன்றிய, மாநில/கூட்டரசு மாவட்ட கூறுகளில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன. + +செயலாக்க மற்றும் சட்டவாக்க உறுப்பினர்கள் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நுழைவுத் தேர்வில் தேறிய நீதிபதிகளும் பிற நீதித்துறை அலுவலர்களும் நியமிக்கப்படுகிறார்கள். பிரேசிலின் பெரும்பான்மையான மக்களாட்சி வரலாற்றில் பல கட்சி முறைமையையே கொண்டுள்ளது. விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. 18 அகவையிலிருந்து 70 அகவை வரை படித்த அனைவருக்கும் வாக்களிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது;படிக்காதவர்களுக்கும் 16 முதல் 18 அகவை நிரம்பியவர்களுக்கும் 70 அகவையைத் தாண்டியவர்களுக்கும் வாக்களிப்பது விருப்பத்தேர்வாக உள்ளது. +பல்வேறு சிறு கட்சிகளுடன் நான்கு அரசியல் கட்சிகள் முதன்மை பெறுகின்றன: தொழிலாளர் கட்சி (PT), பிரேசிலிய சோசலிச மக்களாட்சி கட்சி (PSDB), பிரேசிலிய மக்களாட்சி இயக்கக் கட்சி (PMDB), மற்றும் மக்களாட்சிக் கட்சி (DEM). பேராயத்தில் (நாடாளுமன்றத்தில்) 15 கட்சிகள் அங்கம் ஏற்கின்றன. அரசியல்வாதிகள் தங்கள் கட்சிகளை மாற்றிக் கொள்வது வழமையாதலால் பேராயத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள உறுப்பினர் எண்ணிக்கை மாறிய வண்ணம் உள்ளது. செயலாக்கப் பிரிவில் உள்ள அதிகாரிகளாலும் அமைப்புக்களாலும் அரசுப் பணிகளும் நிர்வாகப் பணிகளும் நடத்தப்படுகின்றன. + +மக்களாட்சி குடியரசான அரசமைப்பு குடியரசுத் தலைவரை மையப்���டுத்தி உள்ளது. குடியரசுத் தலைவரே நாட்டுத் தலைவரும் அரசுத் தலைவரும் ஆவார். இவரது பணிக்காலம் நான்காண்டுகளாகும். இரண்டாம் முறை மறுதேர்வுக்கு வாய்ப்பு நல்கப்பட்டுள்ளது. தற்போதைய குடியரசுத் தலைவராக டில்மா ரூசெஃப் சனவரி 1, 2011இல் பொறுப்பேற்றார். குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் அமைச்சர்களால் அரசு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அரசுக் கூறிலும் உள்ள சட்டவாக்க அவைகளால் பிரேசிலின் சட்டங்கள் வரையறுக்கப்படுகின்றன. தேசியப் பேராயம் கூட்டாட்சியின் ஈரவை நாடாளுமன்றமாகும். கீழவை "சாம்பர் ஆப் டெபுடீசு" என்றும் மேலவை "செனட்" என்றும் அழைக்கப்படுகின்றன. + +பிரேசில் 26 மாநிலங்கள், (நாட்டுத் தலைநகர் பிரசிலியாவை உள்ளடக்கிய) ஒரு கூட்டரசு மாவட்டம் மற்றும் நகராட்சிகளின் கூட்டமைப்பாகும். மாநிலங்களுக்குத் தன்னாட்சி உடைய நிர்வாக அமைப்பு உள்ளது; இவை தங்களுக்கான வரி விதித்தல், வசூலித்தல் அதிகாரங்களைக் கொண்டதோடன்றி கூட்டரசின் வரி வருமானத்திலிருந்தும் பங்கு பெறுகின்றன. மாநிலத்தின் ஆளுநரும் ஓரவை சட்டப்பேரவையும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். பொதுச்சட்டத்தை நிர்வகிக்கும் கட்டற்ற நீதி மன்றங்களும் உள்ளன. இருப்பினும் ஐக்கிய அமெரிக்காவின் மாநிலங்களைப் போன்று இவற்றிற்கு சட்டமியற்றலில் முழுமையான சுதந்திரம் இல்லை. காட்டாகக் குற்றவியல் மற்றும் குடியியல் சட்டங்கள் ஈரவை உடைய கூட்டாட்சி பேராயத்தினால் மட்டுமே இயற்றப்பட்டு நாடு முழுமையும் சீரான சட்டம் நிலவுகிறது. + +மாநிலங்களும் கூட்டரசு மாவட்டமும் மண்டலங்களாகக் குழுப்படுத்தப் படுகின்றன: வடக்கு, வடகிழக்கு, மத்திய-மேற்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு. இந்த மண்டலங்கள் புவியியலைச் சார்ந்தவையே தவிர இவை அரசியல் அல்லது நிர்வாகப் பிரிவுகள் கிடையாது; இங்கு எந்த அரசமைப்பும் இல்லை. + +நகராட்சிகள், மாநிலங்களைப் போலவே, தன்னாட்சியான நிர்வாகத்தையும், வரி விதிக்கும்/வசூலிக்கும் அதிகாரத்தையும் கொண்டுள்ளன; தவிர ஒன்றிய அரசும் மாநில அரசும் வசூலிக்கும் வரிகளில் பங்கு கிடைக்கிறது. இவை கூட்டாட்சியில் ஒன்றிய அரசு, மாநில அரசுகளுக்கு இணையாக உள்ளன. இவற்றிற்கிடையே அடுக்கதிகாரம் கிடையாது. ஒவ்வொரு நகராட்சியின் மேயரும் நகர மன்ற உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். நகராட்சிகளில் தனியான நீதி மன்றம் அமைக்கப்பட வில்லை. + +இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரும் தேசியப் பொருளாதாரமாகப் பிரேசில் விளங்குகிறது. அனைத்துலக நாணய நிதியம், உலக வங்கி அறிக்கைகளின்படி நாணயமாற்றுச் சந்தை வீதப்படி உலகின் ஏழாவது பெரிய பொருளியல் நாடாகவும் கொள்வனவு ஆற்றல் சமநிலையில் (PPP) ஏழாவது பெரிய நாடாகவும் உள்ளது. ஏராளமான இயற்கை வளங்களை உடைய பிரேசிலில் கலப்புப் பொருளாதாரம் கடைபிடிக்கப்படுகிறது. வரும் பத்தாண்டுகளில் பிரேசிலியப் பொருளியல் உலகின் ஐந்தாவது நிலையை எட்டக்கூடும்; தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியும் வளர்முகமாக உள்ளது. பிரேசிலின் தனிநபர் மொ.உ.உ (கொ.ஆ.ச) 2014இல் $12,528 ஆக இருந்தது. வேளாண்மை, சுரங்கத் தொழில், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் 107 மில்லியன் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்தத் தொழிலாளர் எண்ணிக்கை உலகளவில் ஆறாவது ஆகும். வேலையில்லாதோர் விழுக்காடு 6.2% (உலகளவில் 64வது) ஆகும். + +பன்னாட்டு நிதிய மற்றும் பண்டச் சந்தைகளில் பிரேசில் தனது இருப்பை விரிவாக்கி வருகிறது. வளர்ந்து வரும் நான்கு பொருளாதாரங்களாகக் கருதப்படும் பிரிக் நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 150 ஆண்டுகளாகப் பிரேசில் உலகின் மிகப்பெரிய காப்பி தயாரிப்பாளராக விளங்குகிறது. தானுந்துச் சந்தையில் உலகில் நான்காவதாக உள்ளது. பிரேசிலின் முதன்மையான ஏற்றுமதிகளாக வானூர்தி, மின்னியல் கருவிகள், தானுந்துகள், எத்தனால் எரிபொருள், துணிகள், காலணிகள், இரும்புத் தாது, எஃகு, காப்பி, ஆரஞ்சுச் சாறு, சோயா அவரைகள் மற்றும் உப்பிட்ட மாட்டிறைச்சி உள்ளன. உலகளவில் ஏற்றுமதிகளின் மதிப்பின்படி 23வது நிலையில் உள்ளது. + +பிரேசிலின் உலக வணிகத்தை உயர்த்துவதற்கு தடையாக ஊழல் ஓர் முதன்மைக் காரணியாக இருப்பதாக 69.9% உள்நாட்டு நிறுவனங்கள் அடையாளம் கண்டுள்ளன. ஆண்டுக்கு ஊழலின் மதிப்பு $41 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. எல்லைத்தாண்டிப் போனால்தான் வாக்காளர்கள் கவனிக்கும் அளவிற்கு உள்ளூர் அரசு ஊழல் இயல்பாக உள்ளது. அனைத்துலக வெளிப்படைத்துவ நிறுவனத்தின் ஊழல் மலிவுச் சுட்டெண் 2012இல் பிரேசிலை 178 நாடுகளில் 69வது இடத்தில் வரிசைப்படுத்தி உள்ளது. + +வேளாண்மை, தொழிலகங்கள், மற்றும் பலவிதமான சேவைகளை உள்ளடக்கிய பன்முன��ப்பட்ட பொருளியலை பிரேசில் கொண்டுள்ளது. 2007இல் வேளாண்மையும் தொடர்புடைய காட்டியல், மரத்துண்டு போக்குவரத்து, மீன் பிடித்தல் துறைகளும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1% ஆக இருந்தது. ஆரஞ்சு, காப்பி, கரும்பு, மரவள்ளிக்கிழங்கு, தாழை நாரிழை, சோயாபீன்சு, பப்பாளி ஆகியவற்றின் தயாரிப்பில் பிரேசில் முதன்மை பெறுகிறது. + +தொழிற்துறை— தானுந்துகள், எஃகு, பாறைநெய் வேதிப்பொருட்கள், கணினிகள், வானூர்தி, மற்றும் நுகர்வோர் நிலைப்பொருட்கள்— மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30.8% ஆக உள்ளது. தொழிலகங்கள் பெருநகரப் பகுதிகளான சாவோ பவுலோ, இரியோ டி செனீரோ, கேம்பினாசு, போர்ட்டோ அலெக்ரி, மற்றும் பெலோ அரிசாஞ்ச் போன்ற நகரங்களில் குவியப்படுத்தப்பட்டுள்ளது. + +உலகின் ஆற்றல் நுகர்வில் பிரேசில் பத்தாவது மிகப்பெரும் நுகர்வாளராக உள்ளது. இந்த ஆற்றலைப் புதுப்பிக்கத் தக்க வளங்களிலிருந்து, குறிப்பாக நீர் மின் ஆற்றல் மற்றும் எத்தனால், பெறுகிறது; மின் உற்பத்தியின் அடிப்படையில் "இடைப்பு அணை" உலகின் மிகபெரும் நீர் மின் ஆற்றல் நிலையமாகும். எத்தனாலில் ஓடும் முதல் தானுந்து 1978இல் தயாரிக்கப்பட்டது; எத்தனாலில் இயங்கும் முதல் வானூர்தி 2005இல் உருவாக்கப்பட்டது. அண்மைக்கால ஆய்வுகள் பாறைநெய் கிடைப்பதற்கான வாய்ப்புக்களை கூட்டியுள்ளன. + +பிரேசிலின் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் சாலைகள் முதன்மையாக உள்ளன. 2002இல் பிரேசிலில் 1.98 மில்லியன் கிமீ (1.23 மில்லியன் மைல்) சாலையமைப்பு இருந்தது. பாவப்பட்ட சாலைகள் 1967இல் (22,056 mi) ஆக இருந்தது 2002இல் (114,425 mi) ஆக வளர்ச்சியடைந்துள்ளது. + +நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் முதன்மை வளர்ந்த அதேநேரத்தில் தொடர்வண்டி அமைப்பின் வளர்ச்சி 1945இலிருந்து குறைந்து வருகிறது. 1970இல் ஆக இருந்த தொடர்வண்டித் தடங்கள் 2002இல் ஆகக் குறைந்துள்ளது. பெரும்பான்மையான தொடர்வண்டி அமைப்பின் உரிமையாளராகப் பொதுத்துறையில் இருந்த "கூட்டரசு தொடர்வண்டித்தட நிறுவனம்" ( RFFSA) 2007இல் தனியார்மயமாக்கப்பட்டது. பிரேசிலின் முதல் ஆழ்நில போக்குவரத்து அமைப்பாக சாவோ பவுலோ மெட்ரோ அமைந்தது. மெட்ரோ அமைப்புள்ள பிற நகரங்கள்: இரியோ டி செனீரோ, போர்ட்டோ அலெக்ரி, ரெசிஃபி, பெலோ அரிசாஞ்ச், பிரசிலியா, டெரெசினா, போர்த்தலேசா ஆகும். + +பிரேசிலில் ஏறத்தாழ 2,500 வானூர்தி நிலையங்கள் உள்ளன. சா���ோ பவுலோ-குவாருலோசு பன்னாட்டு வானூர்தி நிலையம் மிகவும் பெரியதும் போக்குவரத்து மிக்கதுமான வானூர்தி நிலையமாகும். நாட்டின் பெரும்பான்மையான வணிகப் போக்குவரத்தைக் கையாளும் இந்த வானூர்தி நிலையத்தில் ஆண்டுக்குக் கிட்டத்தட்ட 20 மில்லியன் பயணிகள் கடந்து செல்கின்றனர். + +சரக்குப் போக்குவரத்திற்கு நீர்வழிகள் முக்கியமானவை; மனௌசு தொழிற்பேட்டையை அடைய குறைந்தளவு ஆறு மீட்டர் ஆழமுடைய, நீளமுடைய, சோலிமோசு - அமேசோனாசு நீர்வழி மட்டுமே உள்ளது. + +பரந்த கடலோரப் பகுதிகளை இணைக்கும் விதமாகக் கடலோரக் கப்பல் போக்குவரத்து அமைந்துள்ளது. பொலிவியாவிற்கும் பரகுவைக்கும் சான்டோசு கட்டற்ற துறைமுகங்களாக வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலின் 36 ஆழ்நீர் துறைமுகங்களில், சான்டோசு, இடாஜெய், ரியோ கிராண்டு, பரனகுவா, ரியோ டி செனீரோ, செபெடிபா, வைடோரியா, சுவாப்பெ, மனௌசு மற்றும் சாவோ பிரான்சிஸ்கோ டெ சுல் முக்கியமானவையாம். + +அடிப்படையான பிரேசிலியப் பண்பாடு போர்த்துக்கேயப் பண்பாட்டிலிருந்து பெறப்பட்டுள்ளது. போர்த்துக்கேயர்கள் போர்த்துக்கேய மொழி, உரோமானிய கிறித்துவம் மற்றும் ஐரோப்பிய கட்டிடக்கலைப் பாணிகளை அறிமுகப்படுத்தினர். இருப்பினும் ஆபிரிக்கர், உள்ளகப் பழங்குடியினர், மற்றும் பிற ஐரோப்பிய பண்பாடுகள் , மரபுகளின் தாக்கத்தை உள்வாங்கிக் கொண்டுள்ளது. + +பிரேசிலின் இசை ஐரோப்பிய ஆபிரிக்க கூறுகளின் ஒன்றிணைவாகும். பத்தொன்பதாவது நூற்றாண்டு வரை ஐரோப்பிய இசையின் தாக்கங்கள் நிறைந்திருந்தன. இருபதாம் நூற்றாண்டில் ஆபிரிக்கர்களின் தாளக் கட்டமைப்பும் நடனக் கூறுகளும் இசைக்கருவிகளும் பரவலான பிரேசிலிய பாப்பிசையில் முக்கியப் பங்காற்றுகின்றன. + +பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து மக்களிசையில் தனித்துவமான பிரேசிலியக் கூறு வெளிப்படத் துவங்கியது. இவற்றில் சாம்பா மிகவும் புகழ்பெற்றுள்ளது; யுனெசுக்கோவின் பண்பாட்டு பாரம்பரியப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. மரக்காட்டு, அஃபோக்செ என்ற இரு ஆபிரிக்க-பிரேசிலிய இசை மரபுகளும் வருடாந்திர பிரேசிலிய கார்னிவல்களில் புகழ்பெற்றுள்ளது. கபோய்ரா விளையாட்டில் அதற்கான தனி நாட்டாரிசை "கபோய்ரா இசை" இசைக்கப்படுகிறது. + +"போசா நோவா" 1950களிலும் 1960களிலும் உருவாக்கப்பட்டுப் பரவலாகப் பாடப்பட்ட பிரேசிலிய இசைவடிவமாகும். "போசா யோவா" என்றால் "புதிய போக்கு" எனப் பொருள்படும். சாம்பா, ஜாஸ் வடிவங்களின் ஒன்றிணைவான போசா நோவா 1960களிலிருந்து புகழ்பெற்று வருகிறது. + +இங்கு கால்பந்து ஆட்டமே மிகவும் புகழ் பெற்ற விளையாட்டாகும். பிஃபா உலகத் தரவரிசையில் பிரேசில் தேசிய காற்பந்து அணி உலகில் மிகச் சிறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகக் கோப்பையை ஐந்து முறை வென்றுள்ளது. + +கைப்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், தானுந்து விளையாட்டுக்கள், மற்றும் தற்காப்புக் கலைகள் மிகப் பரவலான பற்றுகையைக் கொண்டுள்ளன. பிரேசில் ஆடவர் தேசியக் கைப்பந்தாட்ட அணி உலகக் கூட்டிணைவு, உலக பெரும் சாதனையாளர் கோப்பை, உலக வாகையாளர் கோப்பை, கைப்பந்தாட்ட உலக்க் கோப்பை ஆகியவற்றில் தற்போதைய வாகையாளர்களாவர். + +சில விளையாட்டு வேறுபாடுகள் பிரேசிலில் தொடங்கியவை: கடற்கரை காற்பந்து, புட்சால் (உள்ளரங்க காற்பந்து) மற்றும் புட்வால்லி என்பன பிரேசிலில் காற்பந்தின் வேறுபாடுகளாக உருவானவை. தற்காப்புக் கலையில், பிரேசிலியர்கள் "கப்போயீரா", "வேல் டுடோ", "பிரேசிலிய ஜியு-ஜிட்சு" போன்ற விளையாட்டுக்களை உருவாக்கியுள்ளனர். தானுந்துப் பந்தயங்களில் மூன்று பிரேசிலிய ஓட்டுநர்கள் பார்முலா 1 உலக வாகையாளர்களாக எட்டு முறை வென்றுள்ளனர். + +பிரேசில் 1950 உலகக்கோப்பை கால்பந்து போன்ற பல முதன்மையான பன்னாட்டு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்று நடத்தி உள்ளது. 2014 உலகக்கோப்பை காற்பந்து பிரேசிலில் நடைபெறுகிறது. சாவோ பாவுலோவில் பிரேசிலிய கிராண்டு பிரீ பார்முலா 1 தானுந்துப் பந்தயம் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. + +அக்டோபர் 2, 2009இல் இரியோ டி செனீரோ 2016 ஒலிம்பிக் விளையாட்டுக்களையும் 2016 மாற்றுத்திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்களையும் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ளது.தென்னமெரிக்க நகரமொன்றில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெறுவது இதுவே முதன்முறையாக இருக்கும். + + + + + +அரபிக்கடல் + +அரபிக்கடல் இந்தியப் பெருங்கடலின் இந்தியாவின் தெற்கு திசையில் அமையப்பெற்றிருக்கும் கடலாகும். இது அரேபிய தீபகற்பத்திற்கும், இந்திய துணைக்கண்டத்திற்கும் இடையில் உள்ளது. அரபிக்கடலின் அதிகபட்ச அகலம் சுமார் 2400 கிலோமீட்டரும், அதிகபட்ச ஆழம் 4652 மீட்டரும் ஆகும். இந்த கடலில் கலக்கும் ந��ிகளில் சிந்து நதி குறிப்பிடத்தக்கது. அரபிக்கடலோரத்தில் உள்ள நாடுகள் இந்தியா, ஈரான், ஓமன், பாகிஸ்தான், யேமன், ஐக்கிய அரபு அமீரகம், சோமாலியா, மாலத்தீவுகள் மேற்கு கரையோர இலங்கை ஆகியவை. அரபிக்கடலோரத்தில் அமைந்த முக்கிய நகரங்கள் மும்பை, கராச்சி ஆகியவை. + + + + +தமிழ்நாட்டு ஓவியக் கலை + +தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். அத்துடன் பல்வேறு காலகட்டங்களையும் சேர்ந்த ஓவியங்கள் முழுதாகவும், சிதைந்த நிலையிலும் குகைகளிலும், பழைய அரண்மனைகளிலும், கோயில்களிலும், வேறு கட்டிடங்களிலும் காணப்படுகின்றன. + +ஓவியத்தோடு தொடர்புடைய குறிப்புக்கள் பல சங்கப் பாடல்களிலே காணப்படுகின்றன. சங்கம் மருவிய காலம் மற்றும் அதற்குப் பிற்பட்ட காலங்களிலும், ஓவியம் பற்றிய தகவல்கள் இலக்கியங்களில் உள்ளன. + +""ஓவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையும்" என்ற சிலப்பதிகாரம் வரிகள் ஓவிய சம்பந்தமான நூல் இருந்தமையை அறிவிக்கின்றது. சிலப்பதிகார உரையில் "அடியார்க்கு நல்லார் ஓவிய நூலென" ஒன்றைக்கூறியிருக்கின்றனர்". + +ஆடைகளிற் சித்திரங்களை எழுதும் வழக்கம் பழமையானது. படம் என்னும் பெயர் இக்காரணத்தினாலேயே வந்தது என்பர் (படம் - வஸ்திரம்)[இதில் சேர நாட்டு ஒலி பதிவு இல்லை] + +முற்காலப் பாண்டியர் காலத்தைச் (கி.பி 550 - 950) சேர்ந்த குகை ஓவியங்கள் பலவற்றை ஆய்வாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இக்காலத்தைச் சேர்ந்த, சித்தன்னவாசல் என்னுமிடத்தில் உள்ள குடைவரைக் கோயில் ஓவியங்கள் மிகவும் புகழ் பெற்றவை. இது தவிர அரிட்டாபட்டி, திருமலைப்புரம், ஆனைமலை, கீழ்க்குயில்குடி, கீழவளவு, கரடிப்பட்டி ஆகிய இடங்களிலும் மேற்படி காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் காணப்படுகின்றன. + +தமிழ் நாட்டு ஓவியக் கலை வளர்ச்சியில் பல்லவர் காலத்துக்குச் சிறப்பான இடம் உண்டு. ஓவியத்தில் ஆர்வம் +கொண்டிருந்தது மட்டுமன்றிப் பல்லவ மன்னர்கள் சிலர் சிறந்த ஓவியர்களாக இருந்துள்ளதாகவும் தெரிகிறது. பல்லவமன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஓவியக் கலையில் சிறந்து விளங்கியதை அவனது பட்டப் பெயர்களான விசித்திரசித்தன், சித்திரகாரப்புலி ஆகிய பட்டப் பெயர்கள் மூலம் அறியலாம்.மாமண்டூர், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், பனைமலை, ஆர்மாமலை ஆகிய இ��ங்களில் பல்லவர் காலத்து ஓவியங்கள் உள்ளன. + +இந்தியாவின் புகழ் பெற்ற ஓவியங்களோடு ஒப்பிடத்தக்க பெருமையுடைய ஓவியங்களை சோழர் காலம் தமிழ் நாட்டுக்கு வழங்கியது. தஞ்சாவூர் பிருஹதீஸ்வரர் கோயிலிலுள்ள ஓவியங்கள் இத்தகைய பெருமை வாய்ந்தவை. + +விஜய நகரப் பேரரசு காலத்திலும் ஓவியக்கலை தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்றது. காஞ்சி கைலாச நாதர் கோவிலிலுள்ள ஓவியங்களைச் செப்பனிட்டதுடன், காஞ்சி வரதராஜபெருமாள் கோயில்,திருப்பருத்திக் குன்றம் சந்திரபிரபா கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், திருவெள்ளறை புண்டரீகபெருமாள் கோயில், ஆகிய இடங்களிலும் ஓவியங்களை விஜயநகர அரசர்கள் வரைவித்தனர். + +நாயக்கர் காலத்து ஓவியங்கள் தமிழ் நாட்டில் செங்கம் வேணுகோபாலசாமி கோயில், திருவரங்கம் அரங்கநாதர் கோயில், அழகர் கோயில், திருகோகர்ணம் கோகர்ணேசுவரர் கோயில், சிதம்பரம் நடராசர் கோயில், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயில், திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் கோயில் போன்ற பல இடங்களில் காணப்படுகின்றன. + +17 ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூரைக் கைப்பற்றி ஆண்ட மராட்டியரும் தமிழ் நாட்டு ஓவியக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியுள்ளார்கள். தற்காலத்தில் தஞ்சாவூர் ஓவியப் பாணி என்று அறியப்படுவது இவர்கள் காலத்தில் உருவானதே. + +தமிழகக் கோயில்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது குறித்த சில தகவல்களை டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் எனும் நூலில் 198 முதல் 201 வரை உள்ள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவை + + + + + + + + + + + + + + + + + + + + + +பாண்டவர் + +பாண்டவர் எனப்படுவர்கள் மகாபாரதத்தில் வரும் மன்னன் பாண்டுவின் ஐந்து மகன்கள் ஆவார்கள். இவர்களுள் முதல் மூவரான தர்மன், பீமன் மாற்றும் அர்ஜூனன் ஆகியோர் குந்தி மூலமும் கடைசி இருவரான நகுலன் மற்றும் சகாதேவன் ஆகியோர் மாத்ரி மூலமும் பிறந்தவர்கள் ஆவர். இவர்கள் ஐவர் என்பதால் பஞ்ச பாண்டவர் என்றும் அழைக்கப்படுவர். இவர்களுக்கும், இவர்கள் பெரியப்பா திருதராஷ்டிரனின் மகன்களான கௌரவர்களுக்கும் நடந்த போரான குருட்சேத்திரப் போரே மகாபாரத்தின் முக்கிய நிகழ்வாகும். + +யமுனை நதிக்கரையில் யாதவ குழு ஒன்று செழிப்பான மதுரா எனும் நகரை அமைத்து குழு அட்சி முறையை நடத்தி வ��்தது. +யாதவர் ஆட்சிக் குழுவில் ஒருவரான சூரசேனரின் மகள் பிரதை (பிருதை,பிரீதா), பிரதையை குந்தி நாட்டு மன்னர் குந்தி போஜன் தத்தெடுத்து குந்தி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தார். மண வயதையடைந்த குந்திக்கு சுயம்வரம் நடந்தது, சுயம்வரத்தில் கூடியிருந்தவர்களில் பாண்டுவை தேர்ந்தெடுத்தாள். + +பீஷ்மர், இரண்டாவதாக மத்திர நாட்டின் மன்னன் சல்யனின் சகோதரி மாதுரியை பாண்டுவிற்கு மணம் முடித்து வைக்க விரும்பினார். சல்லியனுக்கு, அவரது தங்கையின் நிச்சயத்திற்கு மணியும், முத்தும், பவளமும் சீராகத் தந்தார் பீஷ்மர், அவற்றை ஏற்றுக்கொண்டு மாத்ரியை பாண்டுவிற்கு மணம் முடித்துத் தந்தார் சல்யர். + +பல நாடுகளை வெற்றி கொண்டு கப்பத்தொகையைப் பெற்று வந்த பின் குந்தியாலும் மாத்ரியாலும் தூண்டப்பட்டு வனவாசத்தை நாடிச் சென்றார் பாண்டு. + +வேட்டையின் போது பாண்டுவின் அம்பு பெண்மானை முயங்கிக் கொண்டிருந்த ஆண் மானை தாக்கிவிடுகிறது. மானின் அருகில் சென்று பார்த்த போது பாண்டுவுக்கு உண்மை தெரிகிறது. கிண்டமா என்ற முனிவரும் அவரது மனைவியும் காட்டில் சுதந்திரமாக உலவி காதல் செய்யும் நோக்கில் தங்களது தவ வலிமையால் மான்களாக உருவம் மாறியிருந்தனர். இறக்கும் நேரத்தில் கிண்டமா முனிவர் "ஒரு ஆணும் பெண்ணும் காதல் புரிவதை ஆக்ரோசமாக தடுத்துவிட்டாய் உனக்கு காதல் சுகம் என்ன என்பது தெரியாமல் போகக் கடவது எந்த பெண்ணையும் காதல்கொண்டு தொட்டால் உடனே இறந்து போவாய்" என சாபமிட்டார். ஒரு குழந்தைக்கு தகப்பன் ஆக முடியாதவன் அரசன் ஆகமுடியாது என வருந்தி பாண்டு அத்தினாபுரம் செல்ல மறுத்து சதஸ்ருங்க வனத்தில் முனிவர்களுடன் தங்கிவிடுகிறான். இச்செய்தி அத்தினாபுரம் எட்டுகிறது. பாண்டு இல்லாத நிலையில் அத்தினாபுரத்தின் ஆட்சியை பீஷ்மர் திருதராட்டிரனுக்கு வழங்குகிறார். சில மாதங்களில் காந்தாரி கருத்தரித்தாள் என்ற செய்தி பாண்டுவுக்கு தெரியவே ஆட்சியும் போய், ஒரு குழந்தைக்கு தந்தையும் ஆகமுடியாத நிலையில் மனழுத்தமும், சோர்வும், விரக்தியும் அடைந்து பாண்டு ஒரு முடிவெடுத்தான். சுவேதகேது முனிவரின் நியதிப்படி ஒரு பெண்ணின் கணவர் அவர் விரும்பும் ஒரு ஆணுடன் சேர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம், அதன்படி தன்னுடன் இருந்த குந்தியை அழைத்து, யாராவது ஒரு முனிவரின் மூலமாக ஒரு குழந்தையை பெற்றுக்கொள் என வேண்டினான். தேவர்களையே அழைக்க முடியும் போது ஏன்? முனிவர்களை அழைக்க வேண்டும் என கூறி, தர்மத்தின் தலைவன் யமன் மூலம் யுதிஷ்டிரன் (தர்மன்), மிகுந்த சக்தி படைத்த வாயு பகவான் மூலம் பீமன், தேவர்களின் தலைவனான இந்திரன் மூலம் அருச்சுனன், என மூன்று குழந்தைகளை குந்தி பெற்றாள். பாண்டு வேறு ஒரு தேவனை அழைக்க சொன்ன போது " மாட்டேன் மூவருடன் இருந்தாயிற்று நான்காவதாக ஒருவருடன் இருந்தால் என்னை வேசி என்று பெசுவார்கள் அப்படித்தான் தர்மம் சொல்கிறது" என மறுத்துவிடுகிறாள். "நீ வேறு எந்த ஆணிடமும் செல்ல முடியாது" என்பதால் மாத்ரிக்காக ஒரு தேவனை அழைக்கச் சொன்னான். மாத்ரியிடம் கேட்ட போது காலை, மாலை நட்சத்திரங்களான அஸ்வினி தேவர்களை அழைக்கச் சொன்னாள். அஸ்வினி தேவர்கள் எனும் இரட்டையர்கள் மூலம் உலகத்திலேயே மிக அழகான நகுலனும், உலகத்திலேயே எல்லாம் அறிந்த அறிவாளியான சகாதேவனும் பிறந்தார்கள். இப்படியாக பிறந்தவர்களை பாண்டவர்கள் என்று அத்தினாபுரத்து மக்கள் அழைத்தனர். + + + + + +கௌரவர் + +மகாபாரத காவியத்தில் வரும் மன்னனான திருதராஷ்டிரனின் நூறு மகன்கள் கௌரவர் எனப்படுவர். +இவர்கள், "குரு வம்சத்தைச் சேர்ந்த சந்திர குலத்தவர் பார்வதியாம் மலைமகள் சிவபெருமானை எண்ணித் தவம் இயற்றியபோது, அம்மையின் கரங்களுக்கு வளையணிவித்ததால் இப்பெயர் பெற்றனர்; கவரைகள் என அழைக்கப்படலாயினர். தற்காலத்தே இவரை வளையக்கார கவரைகள் என அழைக்கப்படுகின்றனர்." + +காந்தார நாட்டு இளவரசி காந்தாரியை அத்தினாபுரத்துக்கு அழைத்து வந்து திருதராஷ்டிரனுக்கு மணம் முடித்தனர். பார்வையில்லாத ஒருவருக்கு தன்னை மணம் முடித்ததை அறிந்த காந்தாரி தானும் பார்வை அற்று இருக்க கண்களை திரையிட்டுக் கட்டிக் கொண்டாள். மூத்தவராக இருந்தும் பார்வையற்று இருந்ததால் அவருக்கு அரியணை மறுக்கப்பட்டது. சாந்தனு தனது சகோதரன் தேவபியை பின்னுக்கு தள்ளியது போல இது நடந்தது. திருதராஷ்டிரனுக்கு சட்டம் தெரியும் ஆதலால் மறுப்பு தெரிவிக்கவில்லை,விசித்திரவீரியனின் மூத்தமகன் என சில விதிகள் ஏற்றுக் கொண்டாலும் சில விதிகள் மாறாக இருந்ததால் அமைதியானான். + +திருதராஷ்டிரனின் உள் மனம் பாண்டுக்கு முன் தான் ஒரு ஆண் குழந்தைக்���ு தந்தை ஆகிவிட வேண்டும், அப்பொழுதான் தனக்கு மறுக்கப்பட்ட உரிமையை தனது மகன் உரிமையோடு அடையமுடியும் என சபதமெடுத்தது. திருதராஷ்டிரனது மனம்போலவே காந்தாரி கர்ப்பமுற்றாள்.கர்ப்பம் இரண்டு வருடங்களுக்கு நீடித்தது. தனக்குப் பிறகு கர்ப்பமுற்ற குந்தி முதல் குழந்தையைப் பெற்றுவிட்டாள் என்பதை அறிந்து பொறுக்க முடியாமல் கருவிலிருந்து குழந்தையை வெளியே தள்ள முடிவெடுத்தாள்.தனதுப் பணிப் பெண்களை அழைத்து ஓர் இரும்பு உலக்கையால் வயிற்றில் ஓங்கி,ஓங்கி அடிக்கச் செய்தாள்.முடிவில் அவள் வயிற்றிலிருந்து சதைப்பிண்டம் வெளியே விழுந்தது.குழந்தை அழவில்லையே ஆணா? பெண்ணா? என வினவினாள்.பணிப்பெண்கள் தயங்கினார்கள்,அதட்டினாள் காந்தாரி, பணிப்பெண்கள் உண்மையை கூறினார்கள். காந்தாரி அலறினாள், வியாசரை அழைத்தாள் "நான் நூறு குழந்தைக்கு தாயாவேன் என்று சொன்னீர்களே?" "எங்கே குழந்தைகள்?" காந்தாரியை சமாதானப்படுத்தி சேடிப்பெண்களை அழைத்து சதைப் பண்டங்களை நூறு துண்டங்களாக வெட்டி நூறு நெய் நிறைந்த குடங்களில் போட்டு வைக்கச் சொன்னார் வியாசரை. காந்தாரி எனக்கு ஒரு பெண் குழந்தையும் வேண்டுமென்றாள். வியாசர் மௌனமாய் சிரித்தார், பின் 101 நெய் குடங்களில் சதைப் பிண்டங்களை போட்டு வைத்தார்கள் பணிப்பெண்கள். 100 ஆண்களும் ஒரு பெண்ணுமாக 101 குழந்தைகள் பிறந்து கௌரவர்கள் ஆனார்கள். + + + + + +பகவத் கீதை + +பகவத் கீதை () (, "Bhagavad Gita") என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு கடவுளின் பாடல்கள் என்று பொருள்படும். + +மகாபாரதத்தில் நடைபெறும் குருச்சேத்திரப் போர் தொடங்கும் முன் எதிரணியை ஒருமுறை பார்வையிட்ட அருச்சுனன் அங்கே அவன் உறவினர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள் போன்றோர் இருப்பதால் போரிட மறுத்தார். இதைக் கண்ட அவன் தேரோட்டியான கிருஷ்ணர், தர்மத்திற்காகப் போரிடும் பொழுது உறவுமுறைகள் குறுக்கிடக்கூடாது என்பது குறித்து விளக்கினார். அந்த விளக்கத்தில் தத்துவங்கள், யோகங்கள் போன்றவை பற்றியும் தெரிவித்தார். இந்த உரையாடல் கருத்துக்களே பகவத் கீதையாகும். இதில் கிருஷ்ணர் சொல்வதாக 620 ஸ்லோகங்களும், அர்ஜுனனின் சொல்வதாக 57, சஞ்சயன் சொல்வதாக 67, திருதராஷ்டிரன் சொல்வதாக ஒரு ஸ்லோகம் என மொத்தமா��� 700 ஸ்லோகங்களையும், 18 அத்தியாயங்களையும் கொண்டதாகும். + +இந்நூலை பிரஸ்தான த்ரயம் என்றும் சொல்வதுண்டு. இதற்கு பிரம்ம சூத்திரம், உபநிஷத்துகள் ஆகியவற்றோடு பகவத் கீதையும் இணைந்து மூன்று அஸ்திவாரங்கள் என்று பொருள்படி பிரஸ்தானத்திரயம் என்று அழைக்கப்படுகிறது. + +ராஜாஜியின் "கைவிளக்கு", பால கங்காதர திலகரின் "கர்ம யோகம்", மகாத்மா காந்தியின் "அநாஸக்தி யோகம்" போன்றவை பகவத் கீதை உரைகளாகும். + +கண்ணன் அர்ச்சுனனுக்கு எடுத்துரைக்கும் வாதங்கள் ஐந்து. + + +“வருந்தப்பட வேண்டாததற்கு வருத்தப்படுவது அறிவாளிகளுடைய செயலல்ல. மூன்று காலத்திலும் எந்தப் பொருள் இல்லையோ அதற்கு ஒரு காலத்திலும் இருப்பு என்பதில்லை. இருப்பது போல் தோன்றினாலும் அது நிகழ்காலத் தோற்றம் மட்டும்தான். மூன்று காலத்திலும் எந்தப் பொருள் உள்ளதோ அதற்கு ஒரு காலத்திலும் இல்லாமை என்பதில்லை. புலன்களுக்கு அகப்படாததை இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆத்மா என்ற ஒன்றுதான் அழியாத நிரந்தரமான உட்பொருள். அதை யாராலும் அழிக்க முடியாது. அழிவதாக நமக்கு தெரிவதெல்லாம் உடம்பு தான். “அர்ச்சுனா, எதிரிகளின் மீதுள்ள பாசத்தை விட்டுப் போர் புரி. அவர்கள் உடம்பில் குடிகொண்டிருக்கும் ஆன்மா யாரையும் கொல்லாது, அதை யாராலும் கொல்லவும் முடியாது. அதனால் நீ யாருக்காகவும் வருத்தப்பட வேண்டர்ம்” என்கிறார். இந்த முதல் வாதத்தின் அடிப்படையில் தான் முழு கீதையும் செயல்படுகிறது. + +“அர்ச்சுனா, உன்னுடய சுயதருமம் சத்திரியனுக்குகந்த தருமப்போர் தான். இப்போருக்காக நீ பல ஆண்டுகள் தவமிருந்திருக்கிறாய். போரிலிருந்து பின்வாங்குவது உனக்கு ஒவ்வாத ஒன்று.” ‘சுயதருமமும் உன் சுபாவமும் விதிக்கும் சத்திரிய தருமத்தில் குறை இருந்தாலும் அதைக் கைவிடாதே. எந்தச் செய்கையிலும் நெருப்புக்குப் புகைபோல் ஏதாவதொரு குறை இருக்கத்தான் செய்கிறது’.(18-48) + +‘பிறிதொருவனுடைய கடமையை ஏற்று அதை நன்றாகச் செய்தாலும் அதைவிடச் சிறந்தது தன்னுடைய கடமையில் ஈடுபட்டிருப்பதே. அது முறையாக ஆற்றப்படாவிடினும் அதுவே சிறந்தது’ (3-35). ‘சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்வதில் பாவம் சம்பவிப்பதில்லை’ (18-47). + +இந்த சுயதருமப் பார்வை மற்ற வாதங்களுடன் ஒழுங்காகவும் தர்க்க ரீதியாகவும் பிணைக்கப்படுகின்றது. + +இது கர்ம யோகம�� என்று பெயர் கொண்ட புரட்சி மிகுந்த உபதேசம். எளிதில் தவறாகப் புரிந்து கொள்ளப்படக் கூடியது. ‘ஒவ்வொரு மனிதனும் செய்யவேண்டிய கடமைகள் பல. அவைகளைச் செய்வதில் விருப்போ அல்லது வெறுப்போ ஒரு பிரச்சினை ஆகக்கூடாது. கடமையைக் கடமைக்காகவே செய்ய வேண்டும். கடமையைச் செய்வதற்குத் தான் உனக்கு அதிகாரம். அவை என்ன பயன் தருகிறதோ, தருமோ என்ற பிரச்சினை உன்னை எந்த விதத்திலும் பாதிக்கக் கூடாது. பயனுக்காகவோ அல்லது பயனை விரும்பியோ, வெறுத்தோ செயலில் ஈடுபடுவது உன்னை கட்டுப்படுத்தும். இந்தப்போர் உன்னுடைய கடமைகளில் ஒன்று. இதை ஆசையோ, நிராசையோ, கோபமோ தாபமோ இல்லாமல், ஆனால் அலட்சியமும் இல்லாமல், நன்றாகவே செய்யவேண்டும்’. ‘உனது செயல்களை யெல்லாம் எனக்கு அர்ப்பணித்து விட்டு என்னில் நிலைத்த மனதுடன், பயனில் பற்றற்று, அகங்காரத்தை விட்டு, மனக் கொதிப்பில்லாமல் போரிடு’ (3 – 30). + +கீதை 2வது அத்தியாயம் 39 வது சுலோகத்திலிருந்து 5வது அத்தியாயம் முடியும் வரை இதை கர்ம யோகம் என்ற ஒரு உயரிய யோக நூலாக விவரிக்கப்படுகிறது. + +‘எல்லாம் வல்ல இறைவன் நான். என்னை நம்பு. நீயாகச்செய்வது ஒன்றுமே இல்லை. என்னையன்றி ஓரணுவும் அசையாது.’ 11 வது அத்தியாயத்தில் தன் விசுவ ரூபத்தைக் காட்டிவிட்டு கண்ணன் சொல்கிறான்: ‘இவர்களெல்லாம் என்னால் ஏற்கனவே கொல்லப்பட்டவர்களே. நீ என் கருவி மட்டும் தான்.’ (11–33). ‘உன் செயல்களை யெல்லாம் எனக்காகச் செய். இவ்வுலகிலும் சரி, அவ்வுலகிலும் சரி. நான் உன்னுடன் இருப்பேன்.’ என்று கண்ணன் தன்னை ஆண்டவனாகவே வைத்துப் பேசுவதாக இந்தப் பகுதி உள்ளது.இது எல்லாம் ஈசன் செயல் என்ற பக்தி வாசகத்தை ஆதாரமாகக் கொண்டு எடுத்தாளப்பட்ட வாதம் என்கிற கருத்தும் உண்டு. + +பிரகிருதி என்பது மனிதனின் கூடவே பிறந்த சுபாவம். ‘அகங்காரத்தினால் நீ செய்வதாக நினைத்துக்கொண்டு நான் சொல்வதைக் கேளாமல் செயற்படுவாயானால், அழிந்து போவாய்’ (18–58). ‘அகங்காரத்தின் மயக்கத்தினால் நீ போரிட மாட்டேன் என்று நினைப்பது வெற்றுத் தீர்மானம். அது நடக்காது. உன் பிரகிருதி உன்னை அப்படிச் செய்ய விடாது’ (18 – 59). ‘எந்தக் காரியத்தைச் செய்ய மாட்டேன் என்று நீ பின்வாங்குகிறயோ அதையே செய்யும்படி உன் பிரகிருதி (சுபாவம்) உன்னைக் கட்டாயப்படுத்தும்.’ (18-60). இது பிரகிருதியை ஆதாரமாகக் கொண்டு தத்துவ ரீதியில் ���ொல்லப்பட்ட ஐந்தாவது வாதம். + +‘உன் சுமையையெல்லாம் என்மேல் இறக்கி வை. தருமம், அதருமம் இரண்டுக்கும் பொறுப்பாளி நீயல்ல என்றறிந்து, என்னையே ஒரே புகலிடமாகக் கொண்டு, உன் கடமையைச் செய்.’ (18-66) என்று கடைசியாகக் கண்ணன் சொல்வதாக உள்ளது. + +இவ்வைந்து வாதங்களின் பலத்தால் தான் அர்ச்சுனன் போரிடத் தொடங்குகிறான். + +போர் புரியமாட்டேன் என்ற அர்ச்சுனனை மாற்றுவதற்காக எடுத்தாளப்பட்ட ஐந்து வாதங்கள் மனிதர்கள் அனைவருக்கும் கண்ணனால் கூறப்பட்ட போதனைகள் என இந்து சமய நம்பிக்கையுடையவர்களுக்குச் சொல்லப்படுகிறது. + + + + + + + + + + + + +பாடல்: + +பொருள்: +பழமையான உபாயங்களான கர்மயோகத்தாலும், பக்தி யோகத்தாலும் மற்றும் ஞான யோகத்தாலும் பரிசுத்தியடைந்த தம் நெஞ்சில், (பகவத் தொண்டு தவிர) வேறொன்றை விரும்பாது, மிகவும் வைராக்யமுடையவர்கள், (கர்மஜ்ஞானவைராக்யங்களாலே யுண்டான) பக்தியோகத்தாலே அடையும் பரப்ரஹ்மமாகிற நாராயணனே பகவத்கீதைக்கு அறிவாளிகள் அங்கீகரித்து எண்‍ணும் பொருளாவான். + +- பகவத் கீதை வெண்பாவிலிருந்து. + +பகவத் கீதைக்குப் பலர் உரை எழுதியுள்ளனர். ஆதி சங்கரர், இராமானுஜர், மத்வர் ஆகிய மூன்று இந்து சமயப் பெரியோர்களும், நிம்பர்க்கர், வல்லபர், ஞானேசுவரர் போன்றவர்களும் எழுதிய பழைய உரைகளே பல உரைகளுக்கு வழிகாட்டிகளாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டில் சுவாமி சின்மயானந்தா, பக்திவேதாந்த ஸ்வாமி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், சுவாமி சிவானந்தர், சுவாமி அரவிந்தர், மகாத்மா காந்தி, வினோபா பாவே, அன்னி பெசண்ட் அம்மையார், சுவாமி சித்பவானந்தர் போன்றவர்களும் மேலும் சிலரும் சிறந்த உரைகளை எழுதியிருக்கின்றனர். + +உலகிலுள்ள பல மொழிகளில் பகவத் கீதை மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. +ஆங்கிலத்தில் கீதையின் முதல் மொழிபெயர்ப்பு கிழக்கிந்தியக் கம்பெனியாரால் செய்யப்பட்டது. அம்மொழிபெயர்ப்பு நூலுக்கு வாரன் ஹேஸ்டிங்ஸ் (Warren Hastings) எனும் ஆங்கில ஆட்சியாளர் முன்னுரை அளித்ததில் "இங்கிலாந்து ஒரு காலத்தில் இந்தியாவை இழக்க நேரிட்டாலும் இந்தியாவில் தோன்றிய பகவத்கீதையின் கோட்பாடுகளை இங்கிலாந்து நடைமுறைக்குக் கொண்டுவருமானால் இங்கிலாந்து என்றென்றும் மேன்மையுற்று விளங்கும்’ என்று குறிப்பிட்டிருந்தார். + +கீதை என்னும் சொல் பாடப்பட்டது அல்லது உபதேசிக்கப்பட்ட��ு என்ற பொருள் கொண்டது. கண்ணன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் உபதேசித்த பகவத்கீதையைத் தவிர தத்துவத்தை எளிதில் எடுத்துக் கூறுகின்ற இன்னும் பல கீதைகள் உள்ளன. அவை: + +இந்தியத் தொல்பொருள் ஆய்வாளர், அறிஞர் முனைவர். சி.சி. சர்க்கார் “, குருச்சேத்திரப் போர் உண்மையான வரலாற்று நிகழ்ச்சி அல்ல” என்று கூறுகிறார். அதற்கு அவர் கீழ் கண்ட காரணங்களை முன் வைக்கிறார். + +மொகஞ்சதாரோ அரப்பாவில் வாழ்ந்த மக்கள் இரும்பை அறிந்திருக்கவில்லை. கி.மு 3000லோ கி.மு.4000த்திலோ பாதப்போர் நடந்ததாக எடுத்துக் கொண்டால், அவர்கள் இரும்பாலான அயுதங்களை பயன்படுத்தவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டிவருமென்று டாக்டர் சங்காலியா சுட்டிக் காட்டுகிறார். கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கு முன்னர் இரும்பாலான ஆயுதங்கள் இந்தியாவில் பயன்படுத்தப் படவில்லையென்றும் அவர் சுட்டிக் காட்டுகின்றார்.குருசேத்திரத்தில் நடந்த அகழ்வாராய்ச்சிகளிலும் இந்த மகாயுத்தத்தோடு சம்மந்தப்பட்ட எந்தவொன்றும் கிடைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது என்று குறிப்பிடுகின்றார். + +தமிழ்நாட்டில் பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்தினர் பகவத் கீதையை கடுமையாக எதிர்த்தனர். திராவிட கழகத்தின் தலைவர் கி. வீரமணி கீதையின் மறுபக்கம் என்ற நூலை எழுதியுள்ளார். அதில் பகவத் கீதை வருணாசிரமத்தை நிலைநிறுத்த மகாபாரதத்தில் பின் சேர்க்கையாகச் சேர்க்கப்பட்ட நூலே என்று கூறப்பட்டுள்ளது. + +கீதை வருணாசிரம கருத்துகளுக்கு முட்டு கொடுக்கிறது என்று பகுத்தறிவாளர்கள் கூறி வருகின்றனர். +``கிருஷ்ணா, அதர்மம் சூழ்ந்துவிட்டால், குலப்பெண்கள் கெடுவர். +பெண்கள் கெட்டால் வர்ணசாங்கரியம். (குலங்களின் கலப்பு) ஏற்பட்டு விடும்.``அதர்மாபிபவாத் க்ருஷ்ண ப்ரதுஷ்யந்தி குலஸ்திரிய:ஸ்த்ரீஷு துஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸ்ங்கர:(அத்.1 - சுலோகம் - 41) + +உருசியாவின் சைபீரியாவில் உள்ள "டோம்ஸ்க்" என்ற நகர நீதிமன்றத்தில் இஸ்கான் நிறுவனர் பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவினால் எழுதப்பட்ட ’பகவத் கீதா அஸ் இட் ஈஸ்’ நூலின் உருசிய மொழிபெயர்ப்பு நூல் "தீவிரவாத" நூலாகக் கருதப்பட்டு தடை செய்யப்பட வேண்டும் என எதிர்ப்பாளர்கள் வழக்கு பதிந்தனர் இந்த மொழிபெயர்ப்பு நூல் "சமூக வேற்றுமையை " வளர்ப்பதாக உருசியா எங்கும் தீவிரவாத நூல் என���று தடை செய்ய வேண்டும் என சூன் மாதத்தில் இந்த வழக்கு பதியப்பட்டது. + +தங்கள் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விரும்பும் ’உருசிய ஆர்தடாக்ஸ் சர்ச்’ இவ்வழக்கின் பின்னணியில் உள்ளதாக இஸ்கான் உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். + +இந்தியாவில் நாடாளுமன்றத்திலும் அமளியை எழுப்பிய இவ்வழக்கு குறித்து உருசிய அதிகாரி, பகவத் கீதையின் ருஷ்ய மொழிபெயர்ப்பு 1788 ஆம் ஆண்டிலேயே ரஷ்யாவில் வெளியிடப்பட்டது என்பதைக் குறிப்பிட்டு இவ்வழக்கு குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூல் தொடர்பானதே தவிர பகவத் கீதையைக் குறிப்பது அல்ல என்பதை வலியுறுத்தினார். + +இந்தியாவின் பல முசுலீம் அமைப்புகளும் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நூலுக்கு ஆதரவாக தத்தம் கருத்தைப் பதிவு செய்தனர். + +வழக்கைப் பதிவு செய்த நகர நீதிமன்றம் இதனை டோம்ஸ்க் மாநில பல்கலைக்கழகத்திற்கு "ஆராய்வதற்காக" அக்டோபர் 25 அன்று அனுப்பியது. திசம்பர் 28, 2011 அன்று இம்மொழிபெயர்ப்பை தடை செய்யமுடியாதென்று கீழ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக அந்நாட்டின் மேல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டது. + + + + + + + +அய்யாவழி + +அய்யாவழி, (அய்யா+வழி --> "தந்தையின் வழி, இறைவன் வழி)" பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் சாமிதோப்பு பகுதியில் தோன்றிய ஒருமை கோட்பாட்டு சமயமாகும். + +அய்யாவழி பலவிதங்களில் இந்துசமயத்துடன் நெருங்கிய தொடர்புகொண்டுள்ள போதிலும் அய்யாவழி சமயத்தினரால் அது தனி சமயமாக நிலை நிறுத்தப்படுகிறது. அய்யாவழி மக்கள், 80 லட்சத்துக்கு மேல் இருப்பதாக கூறப்பட்டாலும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் போது இந்துக்களாக கருதப்படுவதால் இவர்களின் எண்ணிக்கை பற்றிய சரியான புள்ளிவிவரம் இல்லை. + +அய்யாவழியினர் மட்டுமல்லாமல் சில புற சமூக சமய ஆய்வலர்களும் அய்யாவழியை தனி சமயமாக அங்கீகரித்துள்ளனர். அய்யாவழி தமிழகத்தின் வெளியிலும் பின்பற்றப்படுகின்றபோதிலும் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளாவின் தென் மாவட்டங்களிலும் இதன் வளர்ச்சி மகத்தானதாகும். அப்பகுதிகளில் அய்யாவழியின் மகத்தான வளர்ச்சிக்கு கிறிஸ்தவ சபைகளின் ஆண்டறிக்கைகளே சிறந்த சான்று. இச்சமயத்தின் கொள்கைகள், போதனைகள், தத்துவக் கோட்பாடுகள், ஆகியன அய்யாவழி புனித நூற்களான அகிலத்திரட்டு அம்மானை, அருள் நூல் ஆகியவற்றிலும் அய்யா வைகுண்டரின் போதனைகளிலும் வெளிப்படுகின்றன. + +அய்யாவழியின் முதன்மை புனித நூலான அகிலத்திரட்டின் படி அய்யா வைகுண்டர் கலியை அழிக்க இறைவனால் எடுக்கப்பட்ட மனு அவதாரமாகும். இவ்வழிபாட்டின் புராணத்தின் சில பகுதிகளும் , சில சமயச் சடங்குகளும் இந்து சமயதுடன் ஒத்திருக்கின்ற போதிலும், பெரும்பாலும் வேறுபட்ட கருத்துக்களே அதிகமாக வெளிப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தீய சக்தி, தர்மக் கோட்பாடு போன்றவற்றில் அய்யாவழி இந்து சமயத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. + +இச்சமயத்திற்கு அய்யாவழி என்ற பெயர் எப்போழுது யாரால் தோற்றுவிக்கப்பட்டது என்பது தெளிவு இல்லை. பெயர் காரணத்துக்கு பல கோணப்பார்வைகள் இருக்கின்ற போதும் அவைகளை பொருள் கொள்ளுமிடத்து பெரும்பாலும் அவையனைத்தும் ஒத்த கருத்துடையனவாகவே இருக்கின்றன. மிகவும் நுட்பமாக பொருள்கொள்ளும் போது வேறுபடுகின்றன. ஆவை: + + + + +பக்தி முறையாக பொருள் கொள்ளப்படுகிறது. + +மேலும் அய்யா என்னும் பதம் தமிழில், தந்தை, குரு, உயர்ந்தவர், சிறந்தவர், மதிக்கத்தக்கவர், தலைவர், அரசர், போதகர் என்றெல்லாம் பொருள்படுவதாலும், வழி என்னும் பதம் தமிழ் மொழியில், பாதை, விதம், முறை, செயல்வகை, கருத்து, இலக்கு, நோக்கம், என்றெல்லாம் பலவாறாக பொருள்படுவதாலும் இப்பதங்களின் பயன்பாடு இங்கே வரையறைக்குட்பட்டதல்ல. + +அய்யாவழி சமயத்தின் தோற்றம் முதன்முதலாக நாட்டின் ஒரு அமைப்பு மக்களிடத்தும், அய்யா வைகுண்டர் முன்பு அவர்களின் சங்கமத்தாலும் உணரப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மிக பின்தங்கிய நிலையில் உள்ளவர்களாக இருந்தார்கள். ஆரம்பம் முதலேயே அய்யாவழியின் வளர்ச்சி கிறிஸ்தவ போதகர்களுக்கு அவர்களது பணியில் ஒரு பெரிய தடைக்கல்லாகவே திகழ்ந்ததாக லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் கூறுகின்றன. மேலும் அய்யாவழியின் சமுதாய வரலாற்றை படிக்க லண்டன் பணிப்பரப்பு சமுகத்தின் ஆண்டறிக்கைகள் பெரிதும் உதவுகின்றன. அய்யாவழியை பின்பற்றியவர்களில் பெரும்பாலும் நாடார் இனத்தவர்களாக இருந்த போதும் மற்ற சாதியினரும் கணிசமாக இச்சமயத்தை பின்பற்றியமைக்கு சான்றுகள் உள்ளன. + +பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி ஒரு சமயமாக அங்கீகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டு விட்டது. அவ்வமயம் அதன் இருப்பு திருநெல்வேலியின் (தற்போதைய தென் தமிழ் நாடு) தென்பகுதியிலும் திருவிதாங்கூரின்(தற்போதைய தெற்கு கெரளம்) தென்பகுதியிலும் கணிசமாக உணரப்பட்டது. ஆயிரத்து எண்ணூறுகளில் அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. குறிப்பாக அந்நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து, தொடர்ந்து வரும் ஒவ்வொரு பத்தாண்டுகளும் அய்யாவழி அசாதாரண வளர்ச்சியைக்கண்டது. அய்யா வைகுண்டர் வைகுண்டம் சென்ற பிறகு அய்யாவழி, வைகுண்டரின் போதனைகள், மற்றும் அய்யாவழியின் புனித நூல்களின் அடிப்படையிலும் பரப்பப்பட்டது. +அய்யாவழியின் போதனைகளை அய்யாவின் ஐந்து சீடர்கள் நாட்டின் பல பகுதிகளுகும் சென்று பரப்பினர். இது இவ்வாறிருக்க பால் பையன் சுவாமிதோப்பு பதியை நிர்வகிக்கத்தொடங்கினார். மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த அய்யாவழியினர் நிர்வாகம் செய்ய ஆரம்பித்தார்கள். மற்றொருபுறம் நாடு முழுவதுமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன. + +இந்தியாவில் வேறெங்கும் இல்லாதளவு கொடுங்கொன்மை இங்கு இருந்துவந்ததால் சமயக்கட்டமைப்பு என்னும் இயல்புக்கு அப்பால், அய்யாவழி அப்போதைய திருவிதாங்கூரின் சமுக-வரலாற்றில் தனிமனித உரிமைகளை நிலைநாட்டும் பொருட்டு, ஒரு சீர்திருத்த அமைப்பாகவும் இயங்க வேண்டிய கட்டயத்திலிருந்தது. தீண்டாமை என்னும் கொடுமைக்கப்பால், காணாமை, நெருங்காமை ஆகியனவும் சாதிக்கொடுமையின் மருவல்களாகி வேரூன்றி இருந்தது. அத்தகைய ஒரு சமுகச் சூழலில் சாதி வேற்றுமைக்கப்பாலான மக்கள்-கலப்பை செயல்படுத்தியது அய்யாவழியின் வரவால் தென்திருவிதாங்கூரில் உடனடியாக காணப்பட்ட நிலைமாற்றம் ஆகும். + +தற்போது, பையன் வாரிசுகளில் ஒருவரான பால பிரஜாபதி அடிகளார், அய்யாவழியின் சமயத்தலைவராக கருதப்படுகிறார். அய்யாவழியின் கடந்த இரு பத்தாண்டுகள் வளர்ச்சியில் இவருக்கு மகத்தான பங்கு உண்டு. தென்னிந்தியா முழுவதுமாக ஏறத்தாழ 1000 தங்கல்களுக்கு மேல் அடிக்கல் நாட்டிய பெருமை இவருக்குண்டு. அய்யாவழியின் வளர்ச்சியை அங்கீகரிக்கும் பொருட்டு, கடந்த 1994-ஆம் ஆண்டு முதல் வைகுண்டர் அவதார தினமான மாசி 20, குமரி மாவட்டத்துக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 2006 ம் ஆண்டு முதல் தமிழக அரசு நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு்விடுமுறையை விடுமுறை அளித்து வருகின்றது + +அகிலத்திரட்டு அம்மானை மற்றும் அருள் நூல் அய்யாவழியின் புனித நூல்கள் ஆகும். இவற்றுள் அகிலத்திரட்டு அம்மானை முதன்மை புனித நூலாகவும், அருள் நூல் இரண்டாம் நிலை புனித நூலாகவும் கருதப்படுகிறது. அய்யாவழி புராணத்தின் அடிப்படையில், உலகம் உண்டானது முதல் தற்போது நடப்பவைகளும், இனி நடக்கப்போவதுமான முக்கால சம்பவங்களை, நாராயணர் லட்சுமி தேவியிடம் கூறுவதை அய்யாவின் சீடர்களுள் ஒருவரான அரி கோபாலன் சீடர் கேட்டு, இங்கே அவைகளுக்கு எழுத்து வடிவம் கொடுப்பதாக அகிலத்திரட்டு அமைந்திருக்கிறது. இது கலியை அழிக்க இறைவன் உலகில் எடுத்த அவதாரத்தை மையப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. ஆனால் அருள் நூலின் வரலாறு தெளிவு இல்லை. ஆனால் இது அய்யாவின் சீடர்களாலும், அருளாளர்களாலும் எழுதப்பட்டவைகளாக நம்பப்படுகிறது. இன்னூலில் அய்யாவழி வழிபாட்டு-வணக்க முறைகள், சடங்கு முறைகள், அருளாளர்கள் மற்றும் சீடர்களின் தீர்க்க தரிசனங்கள், அய்யாவழி சட்டங்கள் ஆகியன அடங்கும். + +அய்யாவழி மக்களுக்கு ஐந்து முக்கிய புனிதத் தலங்கள் உள்ளன. அவைகள் ஐம்பதிகள், பஞ்சப்பதி என்றெல்லாம் அழைக்கப்படுகின்றன. அவற்றுள் சுவாமிதோப்பு பதி தலைமைப் பதியாகும். இவையல்லாமல் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியனவும் அகிலத்திரட்டில் பதி என்ற தகுதியை பெறுவதாலும் இவை ஏழும் முக்கிய புனிதத் தலங்களாகவே கருதப்படுகின்றன. ஆனால் வாகைப்பதி மற்றும் அவதாரப்பதி ஆகியவற்றை சில உட்பிரிவுகள், ஏற்றுக்கொள்வதில்லை. குறிப்பாக தற்போதைய அவதாரப்பதி எனப்படுவது, வைகுண்டர் அவதாரம் எடுத்த இடத்தில் இல்லை என்பது அவர்கள் கணிப்பு. ஆனால் அவர்களும் திருச்செந்தூரை இரண்டாம் நிலை புனித நூலாக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தலைமைப்பதி வெளியிடும் பதிகளின் பட்டியலில் பஞ்சப்பதிகள் தவிர்த்து மற்றவைகள் இடம்பெறவில்லை. + +அவதாரப்பதி தவிர பதிகள் அனைத்தும் குமரி மாவட்டத்துள்ளேயே இருப்பதால், மொத்த மாவட்டமே அகில இந்திய அளவில் உள்ள அய்யாவழியினரால் புனிதமானதாக கருதப்படுகிறது. + +அய்யாவழியின் சமயச்சின��னமாவது சுடரை தாங்கும் தாமரையாகும். இதில் தாமரை, 1008 இதழ்களை உடைய சஹஸ்ரார தள (லாடம்) பகுதியையும், சுடர் ஆன்மாவையும் குறிக்கும். அய்யாவழியின் புனித நூல்களான அகிலத்திரட்டு அம்மானையிலும் அருள் நூலிலும் திருநாமம் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆனால் அகிலத்தின் கருத்தோட்டத்தின் கருவை ஆராயுமிடத்து அய்யாவழியின் சின்னமான நாமம் ஏந்தும் தாமரை சார்புடைய கருத்துக்கள் வெளிப்படுகின்றனவேயன்றி இச்சின்னம் பற்றிய நேரடிக்குறிப்புகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில வரலாற்றுக்குறிப்புகள் வாயிலாக இச்சின்னம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுகளிலிருந்து அய்யாவழியில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்பது ஏற்கும் விதமாக உள்ளது. + +அய்யாவழியின் சின்னத்தில் பயன்படுத்தப்படும் தாமரை சஹஸ்ராரச் சக்கரமாதலால் இதன் தாமரைக்கு தண்டு வரையப்படாது. ஏழு(மேல்) + ஏழு(கீழ்) என பதினான்கு இதழமைப்பு பொதுவாக வழக்கத்திலிருக்கிறது. மேலும் தாங்கல்களில் இச்சின்னத்தையே தலைகீழான தாமரை இதழ்களுடன் (சஹஸ்ராரத்தில் உள்ளது போல்) பயன்படுத்தும் ஒரு புதிய கட்டிடக் கலையமைப்பு அண்மைகாலத்தில் வழக்கத்துக்கு வந்திருக்கிறது. + +அகிலத்தின் புராணவோட்டம் கூறும் எட்டு யுகத்தை தத்துவ ரீதியாக மனித உடம்பின் எட்டு ஆதாரங்கள் எனவும் கூறுவர். முதல் நீடிய யுகம் விந்து எனவும், கடைசி மற்றும் பரிபூரண நிலையான சஹஸ்ராரம் என்பது தர்ம யுகம், எனவும் இத்தத்துவம் விளக்கம் பெறுகிறது. இக்கருத்தோட்டத்தில் குண்டலினி எனப்படும் தன்னுணர்வு (சக்தி) பரஞானத்தின் துவக்கமான விந்து எனப்படும் நீடியயுகத்திலிருந்து அது பரிபூரணமடையும் சஹஸ்ராரமெனப்படும் தர்ம யுகத்தை அடையவேண்டும். அங்கே ஏகம் எனப்படும் பரிபூரண ஒருமையுடன் ஜீவான்மா சங்கமித்து, தனக்கு இனமான தனி நாமரூபம் அழிந்து, தன்னிலை கெட்டு, அதுவும் ஏகமாகிறது. ஏகமென்பது வைகுண்டம் (வைகுண்டர்) ஆதலால் வைகுண்டர் தர்ம யுகத்தை ஆள்கிறார் அல்லது வைகுண்டர் சஹஸ்ராரத்தில் ஜீவாத்மாக்களால் முழுமையாக உணரப்படுகிறார். + +மேலும் இந்து ஆகமங்களின்படி சஹஸ்ராரச் சக்கரத்தின் இதழ்களின் எண்ணிக்கை 1000 ஆகும். ஆனால் அய்யாவழி சின்னத்தில் இது 1008-ஆக கருதப்படுகிறது. காரணம் அகிலத்திலோ அருள் நூலிலோ '1000' என்பது காணப்படாத அதேபட்சத்தில் '1008' ��ன்றவெண் திரும்பத்திரும்ப வருவதை காண முடியும். இவற்றுள் முக்கியமாக வைகுண்ட அவதார ஆண்டு கொ.ஆ 1008 ஆகும். அதனால் இப்புனித நூற்களின் குறிப்புகள் அடிப்படையில் 1008 இதழ்த்தொகுதி அய்யாவழி சின்னத்தின் பயன்படுத்தப்படுகிறது. + +சுவாமி தோப்பு பதி- ல் இருந்து  சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ள இந்த கோயிலானது சுமார் 100 ஆண்டு கால பழமையானது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள இத்திருக்கோயில் 74 அடி உயர கோபுரம் மற்றும்  கொடி மரத்துடன் மிக கம்பீரமாக காட்சி அளிக்கின்றது. ஆண்டு தோறும் இங்கு பங்குனி மாத இறுதியில் 10 நாட்கள் அய்யாவின் திருக்கொடி மரத்தில் திருக்கொடியேற்றி திருவிழாவும், ஐப்பசி மாத இறுதியில் 18 நாட்கள் திருஏடு வாசிப்பு திருவிழாவும் நடைபெறுகின்றது.  + +பதிகளும் நிழல் தாங்களும் அய்யாவழி சமயத்தின் வழிபாட்டுத்தலங்களாக விளங்குகின்றன. இவைகளுள் நாட்டின் பல பகுதிகளில் அய்யாவழி பக்த்தர்களால் அமைக்கப்பட்டுள்ள நிழல் தாங்கல்கள் அய்யாவழி சமய பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவற்றுள் சில அய்யா வைகுண்டர் சச்சுருவமாக இருந்த போதே அமைக்கப்பட்டதாக கருதப்படுகிறது. 1997-ஆம் கணக்கீட்டின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 நிழல் தாங்கல்கள் செயல்பட்டு வருகின்றன. அய்யாவழி ஒருங்கிணைக்கப்படாத சமயமாக இருப்பதால், சுவாமிதோப்பு பதி சமய ரீதியாக மட்டுமே தலைமைப்பதியாக விளங்குகிறது. ஆட்சி ரீதியாக அல்ல. + +பதிகள் அய்யாவழியின் முக்கியமான கூட்டுவழிபாட்டு தலமாக விளங்குகின்றன. இவைகள் கோயில்களை பொன்ற பெரிய அமைப்புடையதாகும். இவற்றின் சிறப்பெனப்படுவது, அய்யா வைகுண்டரின், அவதார இகனைகள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக பதிகளுடன் தொடர்புடையதாகும். இவை ஐந்து ஆகும். + +நிழல் தங்கல்கள் பதிகளை போல் அல்லாமல் சிறிய அளவுடையதாக இருக்கும். இவற்றுள் பல அகிலத்திரட்டு பாடசாலைகளாகவும் திகழ்கின்றன. இவைகளில் அன்னதர்மமும் ஏனைய உதவிகளும் செய்யப்படுகின்றன. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதிகளிலுமாக, 8000 - க்கும் மேற்பட்ட தாங்கல்கள் செயல் பட்டு வருவதாக சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. + +அய்யாவழியில் பதிகள் மற்றும் தாங்கல்களில் வேறுபாடு அகிலத்தின் அடிப்படையில் பகுக்கப்படுகிறது. ஒரு பகுதியை பதி என்று அழைக்க இரண்டு விதிமுறைகள் உள்ளன. அவை, + + +அய்யாவழியின் வாழ்வியல் மற்றும் இறையில் சட்டங்கள் அகிலம் முழுவதுமாக பரவலாக காணப்படுகிறது. இது இறைவனால் துறவிகளிடமோ, தேவர்களிடமோ, கீழ்நிலை கடவுளர்களிடமோ அவர்களின் கேள்விகளுக்கேற்றவாறு கூறப்படுவதாக புராணத்தொகுதியின் கூடே பின்னப்பட்டு இடையிடையே நூல் முழுவதும் சிதறுண்டு காணப்படுகிறது. + +அருள் நூல் இவ்வகையில் ஒரு தொகுப்பு நூலாக கருதப்படுகிறது. முதன்மை புனித நூலான அகிலம் கூறும் கோட்பாடுகள் இந்நூலில் விரிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. அருளாளர்களின் தீர்க்கதரிசனங்கள், அழிவு விபரங்கள், சமய-சமுக சட்டங்கள் ஆகியனவற்றை இந்நூல் உள்ளடக்குகிறது. + +அய்யாவழி சட்டங்களில் நீதம் முதன்மை இடம் வகிக்கிறது. எட்டு யுகச்செய்திளை தொகுத்து விளக்குமிடத்து பழங்காலத்தில் நீதம் எவ்வாறு மக்களால் கடைபிடிக்கப்பட்டது என்பது விளக்கப்படுகிறது. அன்றைய சமுதாயம், அதனை ஆண்ட மன்னன் ஆகியவர்கள், தங்கள் செயல்களில், தங்களுக்கப்பாலுள்ள இறைவனை நிலைநிறுத்தி இயற்கையோடியைந்த நிலையில் வாழ்ந்த விதம் இந்நூலில் சிறப்பாக விளக்கப்படுகிறது. நீதம் மூன்றாக பகுக்கப்பட்டுள்ளது. + + +அக்காலத்து இந்த சிறப்பு நிகழ்வுகள் உவமையாக கூறப்பட்டு அதை சட்டவடிவாக கொண்டு வாழ்வியல் கோட்பாடாக இன்று இக்கலியுகத்தில் பின்பற்றப்பட வேண்டும் என கூறப்படுகிறது. கலியுகத்தின் துவக்கத்திலும் வைகுண்ட அவதார துவக்கத்திலும் பொது நிலைமாற்றங்கள் நிகழ்வதால் அவற்றிலிருந்து சில கோட்பாடுகள் மாற்றம் பெருகின்றன. அவ்வாறு நிகழும் மாற்றங்கள் பின்னர் அவதாரத்தின் போது வைகுண்டரால் போதிக்கப்படுகின்றன. + +நாராயணரால் வைகுண்டருக்கு அளிக்கப்படும் உபதேசம் மற்றும் சட்டம் அகிலத்தில் விஞ்சை எனப்படுகிறது. வைகுண்டருக்கு மூன்று முறைகளாக கடலின் உள்ளாக கொடுக்கப்பட்டிருக்கும் இவ்விஞ்சையின் முதல் பகுதி அவதாரம் எடுத்த உடனேயும், மற்ற இரண்டு பகுதிகளும் சில அவதார நிகழ்வுகளுக்குப் பிறகும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது தந்தையாகிய அதிகாரக்கடவுள் மகனாகிய அவதாரக் கடவுளுக்கு அளிக்கும் இறை சட்டம் என்றாலும் இதில் அடங்கும் பல பகுதிகள் மனிதனின் வாழ்வியல் சட்டங்களாகவும் பின்பற்றப்படுகிறது. முதல் விஞ்சையாகிய திருச்செந்தூர் விஞ்சை அகிலத்தின் மிக நீளமான சட்��த்தொகுதியாகும். + +தர்மக் கோட்பாடு அகிலத்தில் இரண்டு கோணங்களில் விளக்கம் பெறுகிறது. தர்மத்துக்கு சமுதாய உருவம் கொடுப்பதாக முதல் பார்வையும் சமய விளக்கம் கொடுப்பதாக இரண்டாம் பார்வையும் அமைந்திருக்கிறது. சமுதாயப்பார்வையில் தர்மம் என்பது எளியோருக்கு உதவுவதெனவும் சமய விளக்கத்தில் அத்தர்மம் சீவன் பரநிலையடையும் இயல்பு எனவும் குறிக்கிறது. மேலும் தர்மத்தின் இரண்டாம் நிலையை அடைய முதல் நிலை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என்கிறது அகிலம். + +தர்மத்தின் சமுதாய விளக்கம் எளியோரை மேலாக்குவது எனப்படுகிறது. அகிலம் இதை ""தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்."" என்கிறது. சமுதாயத்தில் நிலவும் எளியோர்-வலியோர், உயர்ந்தோர்-தாழ்ந்தோர், ஆகிய வேற்றுமைகள் இதனிமித்தம் களையப்பட வேண்டுமென்கிறது அகிலம். அதன் முதல் மற்றும் மேலான நிலையாக அன்ன தர்மம் கருதப்படுகிறது. ""பயந்து தர்மமிட்டந்த பரம்பொருளைத் தேடிடுங்கோ."" என்கிறது அருள் நூல். இதன் மூலம் ஒருவரிடமும் வேறுபாடில்லாமல் தான-தருமங்களை செய்ய சமுதாயம் அறிவுறுத்தப்படுகின்றது. மேலும் பிரபல இந்தியத் துறவியான சுவாமி விவேகானந்தர் சமுதாய அறத்தையே முதன்மை தர்மமாக சித்தரிப்பது அய்யாவழியில் அவர் ஈடுபாடு கொண்டிருந்தார் என்னும் கருத்தை உறுதி செய்வதாக அமைகிறது. + +சமயப் பார்வையில் திருப்புகையில் தர்மம் என்பது அறிவுக்கு அப்பாலான "முழுமுதல் உண்மை" என சித்தரிக்கப்படுகிறது. மேலும் வைகுண்டரின் முக்கிய அவதார நோக்கம் கலி என்னும் மாயையை அழித்து உலகில் தர்மம் என்னும் மெய் இயல்பை உருவாக்குவதேயாம். ஆக அய்யாவழி சமய தர்மம் என்பது இயற்கையோடியைந்து காலம் இடம் என்னும் வரையறைக்கப்பாலான " 'இருப்பதனைத்தும் ஒன்று' " என்னும் மெய் நிலையேயாகும். ஏகம் என்னும் பதத்தின் பயன்பாடு துவக்கம் முதலே அகிலத்தில் அதிகமாக காணப்படுவது இதனை உறுதி செய்கிறது. அவ்வாறான மெய்யுலகு வைகுண்டரால் ஆளப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வருணாசிரம தர்மத்தை இவ்யுகத்துக்கு பொருந்தாதது என நிராகரிக்கிறது. இதனை அகிலம், கீழ்க்கண்டவாறு கூறுகிறது. + +அய்யாவழி மறுபிறவி கொள்கையையும் தர்ம யுகத்தையும் ஏற்றுக்கொள்கிறது. ஆனால் இந்து சமயத்தின் வருணாஸ்ரம தர்மம் என்னும் ஜாதி முறையை இவ்வுகத்துக்கு பொருந்தாதது என ந��ராகரிக்கிறது. மூர்த்தி வழிபாட்டையும் அய்யாவழி ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் பாமார மக்களும் வழிபட ஒரு உருவத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அய்யாவழியில் இறைவன் அமர்வதர்க்கான இருக்கையாக, பள்ளியறையில் ஆசனம் அமைக்கப்பட்டு, அவ்வாசனத்தில் அய்யா அரூபமாக அமர்ந்திருப்பதாக உணர்த்தப்படுகிறது. அய்யாவழி, சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளையும் ஒப்பற்ற ஒரே கடவுளின் மாறுபட்ட வடிவங்களாக காண்கிறது. இவ்வகையில் அய்யாவழி அத்வைதம் மற்றும் சுமார்த்தம் ஆகியவைகளை ஒத்திருக்கிறது. அய்யாவழி துவைதம் மற்றும் விசிஷ்டா துவைதம் ஆகிய கோட்பாடுகளுடன் ஒத்திருப்பதாகவும் கருத்துகள் உள்ளன. மேலும் அய்யாவழி ஏகத்துவத்தை வலியுறுத்துகிறது. + +அய்யாவழி தீய சக்தியின் மொத்த ஒருங்கிணைந்த உருவமாக குறோணி என்னும் அசுரனை உருவகிப்பதன் மூலம் இந்து மதத்திடமிருந்து வெகுவாக வேறுபடுகிறது. ஆறு துண்டுகளாக வெட்டி அழிக்கப்பட்ட குறோணி, பின்வரும் ஒவ்வொரு யுகங்களிலும் ராவணன், துரியோதனன் என அசுரப்பிறவிகளாகப் பிறக்கிறான். அவர்களை அழிக்க விஷ்ணு, அந்தந்த யுகங்களில் ராமன், கிருஷ்ணன் மற்றும் கடைசியாக வைகுண்டராக அவதரிக்கிறார். + +தற்போதைய கலியுகத்தில் குறோணியின் ஆறாவது துண்டான கலி மாயையாக உலகத்தில் பிறக்கிறான். அக்கலியனை அழிக்க ஏகப்பரம்பொருளான இறைவன் வைகுண்ட அவதாரம் கொள்கிறார். ஆக வைகுண்டர் அவதாரம் எடுத்த உடனேயே கலி அழியத்தொடங்கி தற்பொது அழிந்துகொண்டிருப்பதாக அகிலம் கூறுகிறது. + +அன்ன தர்மம் அய்யாவழியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பெருவாரியான நிழல் தாங்கல்களில் மாதத்துக்கு ஒரு முறையாவது அன்ன தர்மம் செய்கிறார்கள். + +"முக்கியக் கட்டுரை:அய்யாவழி மும்மை" + +அய்யாவழியின் இறையியல் மற்ற ஏகத்துவ சமயங்களிலிருந்து வேறுபடுகிறது. அது ஏகம் என்னும் அடிப்படை ஒருமையையும், பல்வேறு மாற்றங்களுக்கு பின்னால் ஒரு ஒற்றுமை இருப்பதாகவும் கூறுகிறது. மேலும் பிரபஞ்சத்தை சிவம் என்றும் இதை இயக்கும் சக்தியை (force) சக்தி என்றும் கூறுகிறது. மேலும் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை பற்றியும் கூறுவதுடன் மேலும் பல கீழ்நிலை தெய்வ சக்திகளையும் கூறுகிறது. ஆனால் கலியன் கேட்ட கொடிய வரங்கள் காரணமாக நாராயணரால் குறோணியின் ஆறாவது து���்டான கலியை நேரடியாக அழிக்க இயலாது. அதனால், அனைத்து தெய்வ சக்திகளும் ஏகத்துள் ஒடுங்கி, அந்த ஏகம் உலகில் கலியை அழிக்கும் பொருட்டு மூன்றின் தொகுதியாக வைகுண்டம் என அவதரிக்கிறது. + +மேலும் வைகுண்டர் மறு மன்னர் எதிரியில்லாமல் ஆளும் எட்டாவது யுகமாக ஒரு தர்ம யுகத்தையும் அகிலம் கூறுகிறது. அனைத்து தெய்வ சக்திகளும் ஒடுங்கி வைகுண்டமாக அவதரிப்பதால் கலி யுகத்தில் அய்யா வைகுண்டர் ஒருவரையே வழிபடக்கூடிய கடவுளாக அகிலம் கூறுகிறது. இதன் அடிப்படையில் அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டு சமயமாகவும் உருவம் பெறுகிறது. + +அய்யாவழி ஓரிறைக்கோட்பாட்டை வலியுறுத்துகிறது. ஆனால் ஒரே கடவுள் பற்பல இயல்புகளில் பல இறை சக்திகளாக வெவ்வேறு உருவங்களில் காட்சிகொடுக்கிறார் என்றும் அகிலம் கூறுகிறது. ஆனால் நாம ரூபங்களுக்கு அப்பால் ஒரே சக்தியாக அனைத்தையும் இயக்கி, அனைத்தும் தானான சுயம்புவாக இருப்பது, ஏகம் என்னும் ஒருமை என்கிறது. + +அகிலத்தின் முதல் பகுதி மும்மூர்த்தி, தேவர்கள் என பல கடவுளர்களையும் அவர்களின் ஆளுமை ஏற்றத்தழ்வுகளையும், பின்னர் இரண்டாம் பகுதியில் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கும் ஆளுமையுடன் வைகுண்டர் அவதாரம் எடுக்கின்ற போதும், அனைத்து தேவர்களும் தனித்தனியாக இருந்து இயங்கி வருகிறர்கள் (வைகுண்டரின் ஆளுமைக்கு உட்பட்டு) . அனைத்து தெய்வ சக்திகளும் வைகுண்டரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற போதும் வைகுண்டரின் அவதார காலகட்டம் முழுவது நாராயணர் வைகுண்டரின் உள்ளாகவும், வைகுண்டரின் தந்தையாகவும் இரட்டைத் தன்மையுடம் இயங்குகிறார். அதனால் அகிலம் பல கடவுளர்களின் இருப்பை ஒத்துக்கொள்கிறது. ஆனால் வைகுண்டரை அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவும், அனைத்து தெய்வ சக்திகளை உள்ளடக்கியவராகவும் காண்கிறது. + +ஆனால் கடவுள் மிக உயர்ந்த நிலையில் ஒன்றாகவும், ஒப்பற்றதாகவும், உருவமற்றதாகவும், மாறிலியாகவும், அனைத்தையும் இயக்குவதும் மறுமுனையில் அனைத்தாக இயங்குவதும், காலம் - இடம் என்னும் வரையறைக்கப்பற்பட்டவராகவும் இருக்கிறார் என ஆகிலம் கூறுகிறது. ஏகம் என்னும் பதம் அனைத்துக்கும் அப்பாற்பட்டதாக அகிலத்தின் துவக்கம் முதல் இறுதி வரை கூறப்படுகிறது. ஆனால் மிக உயர்ந்த கருத்தியலாக கருதப்படும் இப்பத்திற்கு வேறு எந்த நேரடி தனி விளக்கமும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இப்பதம் அனைத்துக்கும் அப்பற்பட்டதாக மட்டும் அகிலம் முழுவதும் கூறப்படுகிறது. இப்பதம் தமிழில், " "ஒன்று, ஒப்பற்றது" " என்று விளக்கம் பெறுகிறது. ஆக, ஏகம் என்னும் இப்பயன்பாடு இறைசக்தி தொடர்பாக அய்யாவழியில் காணப்படும் ஒருமைக்கோட்பாட்டு விளக்கமாக கருதப்படுகிறது. இவ்வேகத்தின் கீழ்னிலை தெய்வசக்திகளாக பல கடவுளர்கள் கூறப்படுகின்ற அதேவேளையில், வைகுண்டர் அனைத்துக்குமப்பாற்பட்ட ஏகத்தின் அவதாரமாக அகிலம் கூறுகிறது. +ஆனால் மறுமுனையில், வைகுண்டர் கலி மன்னனால் கைதுசெய்யப்படும் இடத்தில் அவர் சான்றோரை தேற்றும் விதமாக அமைந்திருக்கும் அடிகளில் வைகுண்டரே ஏகத்தை படைத்ததாக கூறுகிறார். இக்கோணத்தில் வைகுண்டர் ஏகத்துக்கும் அப்பற்பட்ட முழுமுதல் சக்தி எனப்படுகிறார். + +அவதார மும்மையை பொறுத்த வரையில் வைகுண்டரின் உள்ளே மூன்றில் ஒன்றாக ஏகம் இருப்பதால் ஏகத்தின் அனைத்து குணங்களும் வைகுண்டருக்கும் பொருந்தும். இக்கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அருள் நூலின் பல அடிகள் வைகுண்டரை முழுமுதலாக கூறுவதோடு அவரின் விஸ்வ-ரூபத்தினை வெளிப்படுத்துகிறது. + +நீடிய யுகத்தில் தோன்றிய குறோணி, ஆறு துண்டுகளாக வெட்டப்பட்டு, பின்வரும் யுகங்களில் அவை ஆறும் அழிக்கப்பட்டு இறுதியில் கலியன் நடுத்தீர்வை செய்யப்பட்டு நரகத்தில் தள்ளி கதவடைக்கப்படுவதாக அகிலம் கூறுகிறது. இதன் மூலம் அய்யாவழி இருபொருள் வாதத்தை வலியுறுத்துவது போன்றதொரு தோற்றத்தை அளிக்கிறது. ஆனால் கலி என்பது மாயை என்று வர்ணிக்கப்படுவதால் மாயையின் அழிவே அவ்வாறு கூறப்படுவதாக பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மேலும் அகிலம் தொடக்கம் முதலேயே அடிப்படை ஒருமையாகிய ஏகத்தை கூறி வருவதால், இது இருபொருள் வாதக் கோட்பாட்டை மங்கச்செய்கிறது. + +அது மட்டுமல்லாமல் அய்யாவின் சீடர்களாலோ அருளாளர்களாலோ எழுதப்பட்டவைகளாக நம்பப்படும் அருள் நூலின் பெருவாரியான பகுதிகளும் ஒருமைக்கோட்பாட்டை வலியுறுத்துவதாக அமைந்திருப்பதும் இருபொருள் வாதம் பற்றிய கூற்றுகளை அய்யாவழியிநின்று புறந்தள்ளுகிறது. + +அய்யாவழியின் படி சான்றோரின் சகாப்தம் துவாபர யுகத்தின் நிறைவுடன் துவங்குகிறது. அயோத அமிர்தவனத்தில் சப்த கன்னியருக்கு பிறந்த ஏழு பிள்ளைகளும் அவர்களது வம்சாவளியினரும் இவ்வாறு சான்றோர் என அழைக்கப்படுகின்றனர். + +அகிலத்திரட்டின் படி இச்சான்றோர் என்னும் பதம் தற்போது அய்யாவழியில் சமய ரீதியாகவும், சமுதாய ரீதியாகவும் இரு கோணத்தில் பயணிக்கிறது. இன்று பெரும்பாலும் அய்யாவழியினரின் பார்வை சான்றோர் விடயத்தில் சமய ரீதியாகவே இருக்கிறது. இப்பார்வை மூலம், தமிழ் இலக்கியங்களில் இப்பதத்தின் பயன்பாடுகளைக் கொண்டும், அகிலத்தின் சில அடிகளை மையமாகக் கொண்டும், ""எவர் ஒருவர் நீதியாக வாழ்கிறாரோ"", ""எவர் ஒருவர் (அனுபவத்தில்) இறைவனை காணும் தகுதி பெறுகிறாரோ"" அவர் சான்றவர் என்னும் பரந்த அடிப்படையினாலான உலகளாவிய பார்வையை முன்வைக்கப்படுகிறது. மறுபுறம், இப்பார்வையில் அய்யாவழியை பின்பற்றும் எவரும் சான்றவர் என்னும் கருத்தும் கொள்ளப்படுகிறது. ஆனால் அகிலத்தின் பரவலான பார்வை மேலோட்டமாக இவ்வாறல்லாமல் பெரும்பாலும், இப்பதத்தின் சமுதாய கோணத்தையே வலியுறுத்துவதாக தெரிகிறது. இதனிமித்தம் இப்பார்வை சாணார் இனத்தையே மையப்படுத்துகிறது. + +ஆனால் இச்சான்றோர் இவ்வுகத்தின் முதல் மக்களினம் என்னும் கருத்து அகிலத்தில் மேலோங்குவதால், இப்பார்வையில் சாணார் எனப்படுபவர்கள், தற்போது தமிழகத்தில் வாழும் நாடார் இனம் என்னும் பார்வை ஏற்றுக்கொள்ளப் படுவதில்லை. ஆனால் ஆதி காலத்தில் வாழ்ந்த, அரேபியர்களால் "அல் ஹிந்த்" என்றும் விவிலிய காலகட்டங்களில் "பஞ்ச நதிகளின் மக்களினம்" என்றும் அழைக்கப்பட்டவர்களும், 250 மேல் பிரிவுகளுக்கும் மேலாக உலகம் முழுவதும் இன்று சிதறுண்டு கிடக்கும் மக்கள் என்று கொள்ளுதலே பொருத்தமானதாகும். அகிலத்தின் ஆதிச்சாதி போன்ற பயன்பாடுகள் இதற்குச் சான்று. + +ஆனால் மறுபுறம் அய்யாவின் போதனைகளும், அகிலத்தின் செய்திகளும் சாதி முறையை கடுமையாக கண்டிப்பதாலும் இக்கோணத்தாலான சமுதாய்ப் பார்வையை அகிலம் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே பரவலாக கருதப்படுகிறது. + +அகிலத்திரட்டு அம்மானை, அனைவரும் புரிந்துகொள்ளும் வண்ணம் எழிய நடையில் உயர்ந்த தத்துவங்களை கதை ரூபத்தில் வளிப்படுத்தியிருக்கும் நூல் என்னும் கருத்தும் உள்ளது. அகிலத்திரட்டு முழுவதையும் - குறோணி முதல் தர்மயுகம் வரை அனைத்தையும், மனித உடலுக்குள்ளேயே விளக்கி அதை, யோக சித்தி அடையச் செய்யும் நூல் என்பது சில கல்வியாளர்கள் கணிப்பு. மேலும் அகிலம் சித்தர் பரிபாஷையில் இயற்றப்பட்ட நூலாகும். அகிலத்திரட்டில் காணப்படும் " 'ஏரணியும் மாயோன்', உச்சிச் சுழி', 'மூக்குச் சுழி', 'முச்சுழி', 'லலாடம்', 'மேலக்கால் மண்டபம்', 'கொண்டையமுது', 'அகங்காணும் பாந்தள்' " போன்ற பயன்பாடுகள் இதற்கு சிறந்த சான்றுகளாகும். + +ஆறு துண்டுகளாக வெட்டப்படும் குறோணி எனப்படுவது, மனித உடலின் ஆறு அகப்பகைகள் எனவும், அவைகளை கடந்து சகஸ்ராரப் பகுதியில் இறைவனை முழுமையாக உணர்வது தான் தர்மயுகம் என்பது அய்யாவழி தத்துவ வாதிகளின் கருத்து. மேலும் அய்யாவழி ஒரு அடிப்படை ஒருமை கோட்பாட்டையும் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் காணும் அனைத்தும் ஒன்று என்றும், இங்கு காணப்படும் அனைத்து வேறுபாடுகளுக்கும் அப்பால் ஒரு ஒருமை என்னும் முழுமுதற்பொருள் இருப்பதாகவும் அகிலம் கூறுகிறது. அகிலத்தின் இரண்டாம் திருவாசகம் இவ்வொருமையிலிருந்து பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவானதாகக் கூறுகிறது. மேலும் அகிலம் மனிதப் பிறவிக்கும் ஏனைய பிரபஞ்சத்திற்கும் ஒரே உற்பத்தி விதியை கூறுவதாகத் தெரிகிறது. + +"(முக்கிய கட்டுரை: அய்யாவழி புராணம்)" + +அய்யாவழியின் புராண வரலாறு இந்து சமயத்தின் புராணங்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. அகிலத்திரட்டின் முதற்பகுதியான முந்திய யுகங்களைப்பற்றி கூறும் பகுதி இந்து புராணங்களுடன் நிறைய சம்பவங்களை பகிர்ந்து கொள்கிறது. மேலும் பல கடவுளர்களையும், கோட்பாடுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஆனால் பெருவாரியானவைகளை திருத்தியமைத்திருக்கிறது. அய்யாவழியின் யுகங்களும், அவதாரங்களும் எண்ணிக்கையில் இந்து சமயத்திலிருந்து மாறுபடுகிறது. அய்யாவழியில் கலி உருவகப்படுத்தப்படுகிறது. ஆனால் இந்து சமயத்தில் இல்லை. இதைப்பற்றி கூறும் பொழுது அகிலத்திரட்டு அம்மானை, இவை சார்ந்த உண்மைகள் மறைக்கப்பட்டதாகவும் அதனால் அவை (பழைய புராணங்கள்) சாரம் கெட்டுவிட்டதாகவும் கூறுகிறது. + +அகிலத்தின் இரண்டாம் பகுதி, கலி யுகத்தில் கலியை அழிக்க இறைவன் அவதரித்த செய்தியை உலகுக்கு கூறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. ஏகாபரன், வைகுண்டராக அவதரிக்கிறார். வைகுண்ட அவதாரம் மிகவும் பிந்திய காலகட்டத்தில் நிகழ்ந்திருப்பதாததால் அவர் வரலாற்றில் வெகுவாக அறியப்படுகிறார். அவர் நிகழ்த்திய பெரும்பா��ான அவதார இகனைகள் வரலாற்றில் இடம்பெறுகின்றன. இதனிமித்தம் அகிலத்திரட்டின் இரண்டாம் பகுதி வரலாறு மற்றும் புராணச்செய்திகளின் கலப்பாக அமைந்துள்ளது. + +"முக்கியக் கட்டுரை:அய்யாவழி சமயச்சடங்குகள்" + +புராணம் மற்றும் கோட்பாடுகளைப்போன்று சமயச்சடங்குகளிலும் அய்யாவழி, தனக்கு இனமான புதுப்பாதையிலேயே பயணிக்கிறது. அது ஒடுக்கப்படுபவர்களையும், புறக்கணிக்கப்படுகிறவர்களையும் இறையியல் ரீதியாகவும் சமுதாய ரீதியாகவும், வெகுவாக தேற்றி தைரியமளிப்பதாக உள்ளது. இதற்கு சான்றுகளாக; புற மற்றும் அகத்தூய்மையை உணர்த்தும் துவையல் தவசு, தீண்டாமையை துரத்தும் முறையான தொட்டு நாமம், சுயமரியாதை மற்றும் உறுதியை அளிக்கும் முறையான தலைப்பாகை அணிதல், சாதி முறைகளைக்களையும் விதமாக அமைக்கப்பட்ட முத்திரிக்கிணறு, ஆகிய சடங்குகள் விளங்குகின்றன. அய்யாவழியில் சமயச்சடங்குகளுக்கு இறையியல் ரீதியாக பல விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்ற போதும், அவை சமுதாய ரீதியாக ஜாதிப் பிரிவினைகளை புறந்தள்ளி, அனைத்து மக்களும் ஒன்று என்னும் கோட்பாட்டை வலியுறுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இவற்றுள் மிகச்சில இந்து சமயச்சடங்குகளை ஒத்து இருக்கின்றன. + +அய்யாவழி உதயமாகி 170 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அது ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பு முறையாக விளங்குகிறது. மற்ற சமயங்களுக்கு மத்தியில் - வண்ணமயமான வரலாற்றை பெற்றுள்ள இந்து சமயம், புதிதாக அறிமுகமாயிருக்கும் கிறிஸ்தவம், இஸ்லாம், ஆழமாக வேரூன்றியுள்ள சிறு தெய்வ வழிபடுகள் - இவைகளுக்கு மத்தியில் அய்யாவழி ஒரு மாற்று சமய-சமுதாய அமைப்பாக அதன் பிறப்பிடத்தில் உருவெடுத்து நிற்கிறது. + +அய்யாவழியினர் ஒரு முனையில் தாங்கள் பிற சமயங்களிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணையாகவும் மறு முனையில் மற்ற சமயங்களில் இருந்து மாறுபட்ட புதிய சமயமாக கருதுகின்றனர். அவர்கள் ஒரு முனையில் வைகுண்டர் அனைத்து பிற சக்திகளையும் தன்னுள் ஐக்கியப்படுத்திவிட்டதாகவும், மறு முனையில் அவை அனைத்தும் வைகுண்டரின் வருகையோடு சாரம் கெட்டு விட்டதாகவும் கருதுகின்றனர். மேலும் அய்யாவழி இந்து சமயத்தின் ஆதரவொடு வளரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. + +அது மட்டுமல்லமல் சமுதாயப்பார்வை மூலம் பார்த்தால் பொதுவாக சீர்திருத்த அமைப்புகள் இந்தியாவில் ஆங்கிலேயர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும். ஆனால் அய்யாவழியோ அவ்வாறல்ல. அது தானாக எழுந்து தன்னை தான நிலைபடுத்திக்கொண்டது. + + + + + + +அணுவியல் + +அணுவியல் "(Atomic physics)" அல்லது அணு இயற்பியல் என்பது அணு, அணுவின் கூறுகள், இயல்புகள், கட்டமைப்பு மற்றும் இலத்திரன்களின் இயக்கம் மற்றும் அணுக்கரு குறித்தான இயல் ஆகும். இத்துறை இயற்பியலின் ஒரு முக்கிய பிரிவு. அணு இயற்பியலானது அணுக்கருவைச் சுற்றி இலத்திரன்கள் அமைந்துள்ள முறை மற்றும் அதன் அமைவுகளில் ஏற்படும் மாற்றங்களை குறித்து விவரிக்கிறது. + +மேலும் இத்துறை பெரும்பாலும் அணுக்கரு ஆற்றல் மற்றும் அணுக்கரு ஆயுதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. இருப்பினும் அணுவின் உட்கரு குறித்து அறிவதற்கு அணுக்கரு இயற்பியல் என்ற தனிப்பிரிவு உள்ளது. பொதுவாக இயற்பியல் ஆய்வுகளைப் பொறுத்தவரை இத்துறை அணு, மூலக்கூறு, ஒளி இயற்பியல் என்ற பெரும் தலைப்பின் கீழ் உள்ளது. + + + + + +ஒலியியல் + +ஒலியியல் (Acoustics) என்பது, திண்மம், நீர்மம், வளிமம் ஆகியவற்றினூடாகக் கடத்தப்படும் பொறிமுறை அலைகள் பற்றி ஆய்வுசெய்யும் பல்துறை அறிவியல் ஆகும். இது இயற்பியலின் ஒரு துணைப்பிரிவு. ஒலியியலின் ஆய்வுகள் அதிர்வுகள், ஒலி, மீயொலி, அகவொலி என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஒலியியல் துறைசார்ந்த அறிவியலாளர் ஒலியியலாளர் எனப்படுகிறார். ஒலியியல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்களை ஒலியியல் பொறியாளர்கள் என அழைப்பதும் உண்டு. ஒலியியல் தற்காலச் சமுதாயத்தின் பல்வேறு துறைகளிலும் பயன்பட்டு வருவதைக் காணமுடியும். எடுத்துக்காட்டாகக் கேட்பொலி, இரைச்சல் கட்டுப்பாடு போன்றவை தொடர்பில் ஒலியியல் பெரிதும் பயன்பட்டு வருகிறது. + +கேட்டல், விலங்கு உலகில், வாழ்வதற்குத் தேவையான முக்கியமான விடயங்களுள் ஒன்று. அத்தோடு ஒலியை அடிப்படையாகக் கொண்ட பேச்சு, மனிதகுல வளர்ச்சியினதும், மனிதப் பண்பாட்டினதும் சிறப்பியல்புகளுள் ஒன்று. இதனால், ஒலியியலானது இசை, மருத்துவம், கட்டிடக்கலை, கைத்தொழில் உற்பத்தி, போர் போன்ற பல துறைகளிலும் பரவலாக ஊடுருவியுள்ளது. + +ஒலியியல் பற்றிய ஆய்வுகள் பொறிமுறை அலைகளின் அல்லது அதிர்வுகளின் பிறப்பு, அவற்றின் பரவுகை, அவற்றைப் பெறுதல் ஆகியவை தொடர்பானவையாகவே உள்ளன. +மேலுள்ள படம் ஒலியியல் நிகழ்வு அல்லது வழிமுறை ஒன்றின் படிமுறைகளைக் காட்டுகிறது. ஒலியியல் நிகழ்வொன்றுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும். இது இயற்கையானதாக அல்லது முனைந்து நிகழ்த்தப்படுவதாக இருக்கலாம். அதுபோலவே, ஏதோ ஒரு வடிவிலான ஆற்றலை ஒலியாற்றலாக மாற்றி ஒலியலைகளை உருவாக்குவதற்கான வழிமுறைகளும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒலியலைகளின் பரவுகையை விளக்குவதற்கு ஒரு அடிப்படையான சமன்பாடு உண்டு. ஆனால், இதிலிருந்து உருவாகும் தோற்றப்பாடுகள் பலவாறானவையாகவும், பெரும்பாலும் சிக்கலானவையாகவும் உள்ளன. ஒலியலைகள் அவற்றைக் கடத்தும் ஊடகங்களினூடாக ஆற்றலை எடுத்துச் செல்கின்றன. இவ்வாற்றல் இறுதியில் வேறு வடிவங்களிலான ஆற்றலாக மாற்றம் அடைகின்றது. இம்மாற்றமும் இயற்கையாகவோ அல்லது வேண்டுமென்றே செய்யப்படுவதாகவோ இருக்கலாம். ஒரு புவியதிர்வு, எதிரிக் கப்பல்களைக் கண்டுபிடிக்க நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒலியலைகளைப் பயன்படுத்துதல், ஒரு இசைக்குழுவின் இசை நிகழ்ச்சி போன்ற எந்தவொரு நிகழ்விலும் முன்னர் குறிப்பிட்ட 5 படிமுறைகள் இருப்பதைக் காண முடியும். +ஒலியியலில் மிகவும் முக்கியமானதாக அமைவது அலை பரவுகை ஆகும். இது இயற்பு ஒலியியல் பிரிவினுள் அடங்குகின்றது. பாய்மங்களில், அழுத்த அலைகளாகவே ஒலி பரவுகிறது. திண்மங்களில் ஒலியலைகள் பல வடிவங்களில் பரவக்கூடும். இவை நெடுக்கலை, குறுக்கலை அல்லது மேற்பரப்பலை ஆகிய வடிவங்களில் அமையக்கூடும். + +நீர், வளி போன்ற பாய்மங்களில் சூழல் அழுத்த நிலையில் ஒலியலைகள் குழப்பங்களாகவே பரவுகின்றன. இக்குழப்பங்கள் மிகவும் சிறிய அளவினவாகவே இருந்தாலும் இவற்றை மனிதக் காதுகளால் உணர முடியும். ஒருவரால் கேட்டுணரக்கூடிய மிகவும் சிறிய ஒலி செவிப்புலத் தொடக்கம் (threshold of hearing) எனப்படும். இது சூழல் அழுத்தத்திலும் ஒன்பது பருமன் வரிசைகள் (order of magnitude) சிறியது. இக் குழப்பங்களின் உரப்பு ஒலியழுத்த மட்டம் எனப்படுகின்றது. இது மடக்கை அளவீட்டில் டெசிபெல் என்னும் அலகில் அளக்கப்படுகின்றது. + +இயற்பியலாளரும், ஒலியியற் பொறியாளரும், ஒலியழுத்த மட்டத்தை அதிர்வெண் சார்பில் குறிப்பிடுவதுண்டு. மனிதருடைய காதுகள் ஒலிகளை இதே அடிப்படையில் புரிந்துகொள்வதும் இதற்கான ஒரு கார���மாகும். ஒலியில் உயர்ந்த சுருதி, தாழ்ந்த சுருதி என நாம் உணர்வது ஒரு செக்கனுக்குக் கூடிய அல்லது குறைவான சுற்று எண்ணிக்கைகளல் ஏற்படும் அழுத்த வேறுபாடுகளே ஆகும். பொதுவான ஒலியியல் அளவீட்டு முறைகளில், ஒலியியல் சைகைகள் நேர அளவில் மாதிரிகளாகக் குறிக்கப்படுகின்றன. இவை பின்னர் எண்மப் பட்டைகள் (octave band), நேரம் - அதிர்வெண் வரைபுகள் போன்ற வடிவங்களில் கொடுக்கப்படுகின்றன. இவ்விரு வடிவங்களும், ஒலியைப் பகுப்பாய்வு செய்யவும், ஒலியியல் தோற்றப்பாடுகளைப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றன. + +ஒலி தொடர்பில் முழு அலைமாலையையும் மூன்று பகுதிகளாகப் பிரிக்க முடியும். இவை செவிப்புல ஒலி, மீயொலி, அகவொலி என்பன. செவிப்புல ஒலிகள் எனப்படும் மனிதச் செவிகளால் உணரக்கூடிய ஒலிகள் 20 ஹெர்ட்ஸ் முதல் 20,000 ஹெர்ட்ஸ் வரையான அதிர்வெண் எல்லையுள் அடங்குவன. இவ்வெல்லையுள் அடங்கும் செவிப்புல ஒலிகள் பேச்சுத் தொடர்பு, இசை போன்றவற்றில் பயன்படுகின்றன. மீயொலி எனப்படுவது 20,000 ஹெர்ட்ஸ்களுக்கு மேற்பட்ட அதிர்வெண்களைக் கொண்ட குறைந்த அலைநீளம் கொண்ட ஒலியாகும். இவ்வொலி உயர் பிரிதிறன் (resolution) கொண்ட படமாக்கல் நுட்பங்களிலும், பல வகையான மருத்துவத் தேவைகளுக்கும் பயன்படுகின்றது. குறைவான அதிர்வெண்களைக் கொண்ட அகவொலிகள் புவியதிர்ச்சி போன்ற நிலவியல் தோற்றப்பாடுகளை ஆய்வு செய்வதற்குப் பயன்படுகின்றன. + + + + +ஒளியியல் + +ஒளியியல் ஒளி, ஒளியின் தன்மைகள், அது பொருட்களை தாக்கும் விதம், ஒளியை ஆராயப் பயன்படும் கருவிகள் போன்ற விடயங்களை ஆராயும் இயல். இது இயற்பியலின் ஒரு பிரிவாகும். பொதுவாக ஒளியியலில் கட்புலனாகும் ஒளி, புற ஊதா ஒளி மற்றும் அகச்சிவப்பொளி ஆகியவற்றை விளக்கும். ஒளி மின்காந்த அலைகளால் ஆக்கப்பெற்றெதென்பதால் x-கதிர்கள், நுண்ணலைகள் ஆகியவற்றின் பண்புகளைக் கொண்டிருக்கும். +ஒளி பற்றிய புதிய விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும் பழைய விளக்க முறைகளே பயன்படுத்த இலகுவானதாக உள்ளது. ஒளி பற்றிய அலைக் கொள்கையும் துணிக்கைக் கொளகையும் உள்ளன. துணிக்கை வடிவை எடுத்து நோக்கும் போது ஒளியானது ஆங்கிலத்தில் 'photon' எனப்படும் ஒளியணுக்களால் ஆனவை. + +ஒளியியல் பல்வேறு துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. வானியல், பொறியியல், ஒளிப்படமெடுத்தல், மருத்துவவியல் ஆகிய துறைகளில் ஒளி பற்றிய அறிவு அவசியமானது. +அன்றாடம் பயன்படுத்தப்படும் கருவிகளான தொலைக்காட்டி, முகக்கண்ணாடி, மூக்குக்கண்ணாடி, நுணுக்குக்காட்டி, ஒளியியல் நார் ஆகியவை ஒளியியலின் விருத்தியின் விளைவுகளேயாகும். + +இக்கற்கையில் ஒளியானது நேர்பாதையில் செல்லும் கதிரென விளக்கப்படுகின்றது. இக்கதிர்களின் பாதை பல்வேறு ஒளி ஊடுபுக விடும் ஊடகங்களிடையிலான ஒளித்தெறிப்பு மற்றும் ஒளி முறிவு ஆகியவற்றால் மாற்றப்படும். + +ஒளி ஒரு ஊடகத்திலிருந்து ஒளி உட்புக விடாத பொருளொன்றில் பட்டு வேறு திசையில் (அதே ஊடகத்தில்) தன் பாதையை மாற்றிச் செல்லுதல் ஒள்த்தெறிப்பு எனப்படும். + + + + +பாய்ம இயக்கவியல் + +பாய்ம இயக்கவியல் ("Fluid dynamics") என்பது நீர்ம (திரவ) அல்லது வளிமப் பொருட்களின், இயக்க வினைப் பண்புகள், தன்மைகள், அவை எப்படி வெவ்வேறு ஊடகங்களூடாக பாய்கின்றன அல்லது கடந்து செல்லுகின்றன, அவற்றால் விளையும் பயன்கள் யாவை போன்றவற்றை ஆயும் இயல். + +பாய்மம் என்பது நீர்மம், வளிமம் (வாயு) ஆகிய இரண்டையும் சேர்த்துக் குறிக்கும் ஒரு சொல். ஒரு குழாய் வழியே உயர்ந்த அழுத்தத்தில் இருந்து குறைந்த அழுத்தம் உள்ள இடத்திற்குப் நீர்மப் பொருளும், வளிமப் பொருளும் பாய்ந்து செல்வதால், இப்பொருட்களுக்குப் பாய்மம் என்று பெயர். + +பாய்ம இயக்கவியலை நீர்ம இயக்கவியல் ("Hydro dynamics"), வளிம இயக்கவியல் ("Pneumatics") என இருவகைப்படுத்தலாம். + + + + + +அணுக்கருவியல் + +அணுக்கருவியல் அல்லது அணுக்கரு இயற்பியல் ("Nuclear physics") என்பது இயற்பியலின் ஒரு பிரிவாகும். இது அணுக்கரு, அணுவின் பிற கூறுகள், அணுவுக்கும் ஆற்றலுக்கும் இருக்கும் தொடர்பு போன்ற விடயங்களை ஆய்கிறது. + + + + + + +அண்டவியல் + +அண்டவியல் (Cosmology) அண்டத்தின் தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, பரிணாமம் ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் நடைமுறை கோட்பாடுகள் பல உறுதிப்படுத்தப்படவில்லை. அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும். + + +அண்டவியல் கொள்கைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது இயல்பு. ஒரு விஞ்ஞானி கூறிய கொள்கை நெ��ு நாட்களாக ஏற்கப்பட்டு மீண்டும் வேறொருவரால் பல ஆண்டுகள் கழித்து மறுக்கப்படலாம். இது தற்போது பரவலாக ஏற்கப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடு போன்றவற்றுக்கும் பொருந்தும். + + + + + + +மின்காந்தவியல் + +மின்காந்தவியல் "(Electromagnetism)" இயற்பியலின் கிளைப்பிரிவாகும். இது மின்காந்த விசை "(electromagnetic force)" பற்றிப் படிக்கிறது. மின்காந்தவிசை மின்னூட்டத் துகள்களிடையே நிகழும் ஊடாட்டம் அல்லது இடைவினை ஆகும். மின்காந்தவிசை மின்காந்தப் புலத்தைத் தருகிறது. மின்காந்தப் புலத்தில் மின்புலமும் காந்தப்புலமும் பின்னிப் பிணைந்துள்ளன.ஒளி ஒரு மின்காந்த அலையாகும். மின்காந்தவிசை இயற்கையின் நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாகும். மற்ற மூன்று அடிப்படை இடைவினைகள் அல்லது விசைகள் வலிய இடைவினை, the மெலிந்த இடைவினை, ஈர்ப்பு விசை என்பனவாகும். + +"மின்காந்தவியல்" என்பது ἤλεκτρον "ēlektron", "amber", and μαγνῆτις λίθος "magnētis lithos" எனும் இரண்டு கிரேக்கச் சொற்களின் கூட்டுச் சொல்லாகும். "magnētis lithos" என்றால் காந்தக்கல் என்று பொருள். காந்தக்கல் ஓர் இரும்புத் தாதுவாகும். மின்காந்த நிகழ்வு மின்காந்த விசையால் வரையறுக்கப்படுகிறது. மின்காந்த விசை இலாரன்சு விசை எனவும் அழைக்கப்படுகிறது. இதில் மின்சாரமும் காந்தமும் ஒரே நிகழ்வின் இருகூறுகளாகப் பின்னிப் பிணைந்துள்ளன. + +நாம் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பெரும்பாலான பொருள்களின் அக இயல்புகளைத் தீர்மானிப்பதில் மின்காந்த விசை பெரும்பங்கு வகிக்கிறது. இயல்பான பொருண்ம வடிவம் அதில் உள்ள தனி அணுக்களுக்கும் மூலக்கூறுகளுக்கும் இடையில் உள்ள மூலக்கூற்று விசைகளால் தீர்மானிக்கப்படுகிறது. இது மின்காந்த விசைகளின் விளைவே ஆகும். எதிர்மின்னிகள் அணுக்கருவுடன் மின்காந்த விசையால் பிணைந்துள்ளன. குவைய இயக்கவியல் அவற்றின் வட்டணைகளின் வடிவங்களையும் அருகில் உள்ள மின்னன்களோடு அமைந்த அணுக்கள்பாலான விளைவையும் விவரிக்கிறது. மின்காந்த விசை அருகில் உள்ள அணுக்களின் மின்னன்களோடான இடைவினைகளால் ஏற்படும் வேதியியல் வினைகளையும் கட்டுபடுத்துகிறது. + +மின்காந்தப் புலத்துக்கான கணிதவியல் விவரிப்புகள் பல உள்ளன. செவ்வியல் மின்னியக்கவியலில், மின்புலங்கள் மின்னிலையாலும் மின்னோட்ட்த்தாலும் விவரிக்கப்பட���கின்றன. பாரடேவின் மின் தூண்டல் விதியின்படி, மின்காந்தத் தூண்டலில் காந்தப்புலங்களும் இணைந்துள்ளன. மேக்சுவெல்லின் சமன்பாடுகள் காந்த, மின் புலங்கள் ஒன்றுக்கொன்றும் மின்னூட்டங்களாலும் மின்னோட்டங்களாலும் உருவாகின்றன என்பதை விவரிக்கின்றன. + +மின்காந்தவியலின் கோட்பாட்டு நெடுநோக்காலும் பரவல் ஊடக இயல்புகளைச் சார்ந்த, குறிப்பக மின் இசைமையையும் காந்த இசைமையையும் சார்ந்த, ஒளி விரைவின் நிறுவலும் ஆல்பர்ட் ஐன்சுட்டீன் சிறப்புச் சார்பியலை 1905 இல் உருவாக்க வழிவகுத்தன. + +மின்காந்த விசை நான்கு அடிப்படை விசைகளில் ஒன்றாக இருப்பினும் உயர் ஆற்றல் நிலையில் மின்காந்த விசையும் மெல்விசையும் மின்மெல் விசையாக ஒருங்கிணைகின்றன. புடவியின் படிமலர்ச்சியின்போது குவார்க் ஊழியில் ஏற்பட்ட குளிர்ச்சியால் இந்த ஒருங்கமைந்த மின்மெல் விசை மின்காந்த விசையாகவும் மெல்விசையாகவும் பிரிந்தது. + +முதலில் காந்தமும் மின்சாரமும்Originally தனி விசைகளாகக் கருதப்பட்டன. அன்னல், 1973 இல் மேக்சுவெல்லின் "A Treatise on Electricity and Magnetism" என்ற நூல் வெளியிடப்பட்டதும் இந்தக் கண்ணோட்டம் மாறியது. இந்நூலில் நேர்மின்னூட்டம் எதிர்மின்னூட்டம் அகியவற்றின் ஊடாட்டம் ஒரே விசையால் இயங்குவதாக விளக்கப்பட்டது. இந்த ஊடாட்டம் அல்லது இடைவினையால் பின்வரும் நான்கு முதன்மையான விளைவுகள் ஏற்படுகின்றன. இவை செய்முறைகளாலும் நிறுவப்பட்டுள்ளன: + +ஏன்சு கிறித்தியன் ஆயர்சுடெடு 1820 ஏப்பிரல் 21 இல் ஒரு மாலை வகுப்பெடுக்க ஆயத்தமாகும்போது ஒரு வியப்புதரும் நிகழ்வைக் கவனித்துள்ளார். இவர் தன் செய்முறைப் பொருள்களை ஏற்பாடு செய்துகொண்டிருந்தபோது, மின்கல அடுக்கை சுற்றதரில் இணைக்கும்போதும் அதில் இருந்து துண்டிக்கும்போதும் காந்த வடமுனையில் இருந்து காந்த ஊசி எட்ட விலகுவதைக் கவனித்துள்ளார். இந்த காந்த ஊசியின் விலக்கம், மின்னோட்டம் உள்ள கம்பியைச் சுற்றிலும் அனைத்துப் பக்கங்களிலும் ஒளியையும் வெப்பத்தையும் போலவே காந்தப் புலம் அமைதலை அவருக்கு உறுதிபடுத்தியுள்ளது. அதன்வழி மினசாரத்துக்கும் காந்த்த்துக்கும் இடையில் உள்ள நேரடியான உறவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. + +அப்போது ஆய்ர்சுடெடு இந்நிகழ்வுக்கான நிறைவுதரும் விலக்கமேதும் அளிக்கவில்லை. மேலும் கணிதவியலாகவும் அந்நிகழ்வை விளக்க முயல்வில்லை. என்றாலும், மூன்று மாதங்களுக்குப் பிறகு அதைப் பற்ரிய ஆழ்ந்த ஆய்வுகளில் ஈடுபடலானார். பின்னர் மின்னோட்டம் ஒரு கம்பியில் பாயும்போது கம்பியைச் சுற்றிலும் காந்தப் புலத்தை உருவாக்குகிறது எனும் கண்டுபிடிப்பை வெளியிட்டார். இவரது இந்த மின்காந்தவியல் பங்களிப்புக்காக மின்காந்தத் தூண்டலின் செமீ-கி-நொ முறையின் அலகான ஆய்ர்சுடெடு இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. + +இவரது கண்டுபிடிப்பின் விளைவாக மின்னோட்டவியலில் செறிவான ஆய்வுகள் பல அறிவியலாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. இவை பிரெஞ்சு இயற்பியலாளராகிய ஆந்திரே மரீ ஆம்பியரை ஆட்கொள்ளவே அவர் மின்னோட்டம் பாயும் கடத்திகளின் இடையில் அமையும் காந்த விசைகளுக்கான ஒற்றைக் கணிதவியல் வடிவத்தை உருவாக்கினார். ஆய்ர்சுடெடின் கண்டுபிடிப்பும் ஆற்றலின் ஒருங்கிணைந்த கருத்துப்படிமத்தை நோக்கிய பெரும்படியை உருவாக்கி வைத்தது. + +இந்த ஒருங்கிணைப்பையும் இதற்கான ஜேம்சு கிளார்க்கின் விரிவாக்கத்தையும் இவற்றை மேலும் ஆலிவர் எவிசைடும் என்றிச் எர்ட்சும் அளித்த மறுவடிவப்படுத்தலையும் கண்ணுற்ற மைக்கேல் பாரடே இவை 19 ஆம் நூற்றாண்டின் கணித இயற்பியலில் ஏற்பாட சீரிய சாதனைகளாகக் கருதினார். இவை பல பின்விளைவுகளை ஏற்படுத்தின. அவற்றில் ஒன்று ஒளியின் மின்காந்த அலைத்தன்மையைப் புரிந்துகொண்டதாகும். ஒளி பற்றியும் மின்காந்தக் கதிர்வீச்சு பற்றியும் அப்போது நிலவிய கண்ணோட்டத்துக்கு மாற்றாக இன்றளவில் அவை குவைய இயல்போடு தானே பரவும் மின்காந்தப் புல அலைவு குலைவுகளான ஒலியன்களாக்க் கருதப்படுகின்றன. இந்த அலைவின் பல்வேறு அலைவெண்கள், தாழ் அலைவெண் கொண்ட வானொலி அலைகளில் இருந்து, கட்புல ஒளி அலைகளின் ஊடாக, உயர் அலைவெண் கொண்ட காம்மாக் கதிர் வரை பல வேறு மின்காந்த அலை வடிவங்களை உருவாக்குகின்றன. + +மின்சாரத்துக்கும் காந்தவியலுக்கும் இடையில் உள்ள உறவை ஆய்ர்சுடெடு மட்டுமே நோக்கினார் என்க் கூறமுடியாது. 1802 இல் கியான் டொமெனிகோஉரோமகுனோசி எனும் இத்தாலியச் சட்டவியல் அறிஞரும் வோல்ட்டா அடுக்கால் காந்த ஊசியை விலகச் செய்துள்ளார். உண்மையில் நடந்தச் செய்முறையின் விவரம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இச்செய்தி 1802 இல் ஓர் இத்தாலியச் செய்தித் தாளில் வெளியாகியுள்ளது. ஆனால் இவர் அறிவியல் துறையைச் சாராதவர் என்பதால் அக்கால அறிவியல் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. + +மின்காந்தவியல் அலகுகள் "(Electromagnetic units)" மின் அலகுகளில் ஒரு பகுதியாகும். இவை மின்னோட்டங்களின் காந்த இயல்புகளைச் சார்ந்தவை. இதன் அடிப்படை செந்தரப் பன்னாட்டு அலகு ஆம்பியர் ஆகும். மின்காந்தவியல் அலகுகள் பின்வருமாறு: + + + + + + + + +வெப்ப இயக்கவியல் + +வெப்ப இயக்கவியல் (Thermodynamics) என்பது வெப்பம், அதன் தன்மை, வெப்ப ஆற்றலுக்குப் பிற ஆற்றல் வடிவங்களுடான தொடர்பு போன்ற விடயங்களை ஆயும் இயல். இயற்பியலின் ஒரு கிளைத் துறையான இது, இயற்பியல் முறைமைகளில், வெப்பநிலை, அழுத்தம், கனவளவு ஆகியவற்றில் ஏற்படும் மாற்றங்களின் விளைவுகளை ஆய்வு செய்கிறது. மேற்படி விளைவுகளைப் பெருநோக்கு (macroscopic) அடிப்படையில் துகள்களின் மொத்த இயக்கங்களையும், புள்ளியியல் முறைகளைப் பயன்படுத்தி இது ஆய்வு செய்கின்றது. அண்ணளவாக, வெப்பம் என்பது "மாறுநிலையில் உள்ள ஆற்றல்" ஆகும். எனவே வெப்ப இயக்கவியலின் பிழிவானது, ஆற்றலின் இயக்கம் பற்றியும், அவ்வாற்றல் எவ்வாறு இயக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றியும் ஆய்வு செய்தல் ஆகும். இத்துறையை தெறுமத்தினவியல் என்றும் தமிழில் குறிப்பிடலாம் எனச் சிலர் பரிந்துரை செய்கின்றனர். + +தொடக்கத்தில் இத்துறையானது நீராவி எஞ்சினின் பயனுறு திறனை ("efficiency") மேம்படுத்துவதற்காகவே உருவாக்கி வளர்க்கப்பட்டது. இயந்திர வெப்ப சுழற்சிகளுக்கு வெப்ப இயக்கவியல் ஆரம்ப பயன்பாடு இரசாயன கலவைகள் மற்றும் இரசாயன எதிர்வினைகள் ஆய்வு ஆரம்பத்தில் நீட்டிக்கப்பட்டது. ரசாயன எதிர்வினைகளை செயல்படுத்துவதில் எண்டிரோபியின் பங்கின் இயல்பை வேதியியல் வெப்பமானியியல் ஆய்வு செய்கிறது.Guggenheim, E.A. (1949/1967). "Thermodynamics. An Advanced Treatment for Chemists and Physicists", 1st edition 1949, 5th edition 1967, North-Holland, Amsterdam. + + வெப்ப இயக்கவியலில் ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட அண்டத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை அமைப்பு (system) அல்லது தொகுதி என்கிறோம். அமைப்பைச் சுற்றி இருக்கும் ஏனைய அனைத்தும் சுற்றுப்புறமாகும் (சூழல்) (surrounding). அமைப்பும் சுற்றுப்புறமும் சேர்ந்த தொகுப்புக்கு அண்டம் (Universe) என்று பெயர். அமைப்பை அதன் தன்மையைப் பொறுத்து மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். + +அமைப்பின் வ��ைகளை எளிய உதாரணங்கள் வாயிலாக விளக்கலாம். நாம் மூடப்படாத பாத்திரத்தில் சமைக்கும் போது நீராவி (steam) கலனை விட்டு வெளியேறும். வெளியேறும் நீராவி வெப்ப ஆற்றலைக் கொண்டிருக்கும். இது "திறந்த அமைப்பாகும்". நாம் அன்றாட வாழ்க்கையில் காணும் அமைப்புகள் திறந்த அமைப்புகள் ஆகும். அழுத்த சமையற் கலனில் உணவு சமைக்கும் போது கலனை விட்டு நீராவி வெளியேறாது. ஆனால் வெப்பம் கலனுக்குள் செல்கிறது. இது "மூடிய அமைப்பை"க் குறிக்கிறது. சமைத்த பின் பொருளை வெப்பக் குடுவைக்குள் (Thermo flask) வைக்கும் போது நிறை மற்றும் ஆற்றல் இரண்டுமே வெளியேறுவது இல்லை. இது "தனித்தஅமைப்பு" ஆகும். ஆனால், தனித்த அமைப்பானது கருத்தளவில் மட்டுமே கூறப்படுகிறது. வெப்பக் குடுவையில் சிறிதளவாயினும் வெப்பப் பெயர்ச்சி நிகழும். புரிதலை எளிதாக்குவதற்கு இந்த எடுத்துக்காட்டுகள் கொடுக்கப்பட்டு உள்ளன. +அமைப்பை அதன் சுற்றுப் புறத்தில் இருந்து பிரிப்பது "எல்லை" எனப்படும். எல்லை உண்மையானதாகவோ, கற்பனையாகவோ, நிலையானதாகவோ அல்லது நகரக் கூடியதாகவோ இருக்கலாம். +நிலைமை (phase) என்றால் பொருள் முழுவதுமாக ஒரே மாதிரியான இயற்பியல் கட்டமைப்பும் வேதிக்கலவையும் கொண்டிருப்பதாகும். ஓர் அமைப்பில் ஒரே ஒரு நிலைமை மட்டும் இருந்தால் அதனை ஒருபடித்தான(homogeneous) அமைப்பு என்கிறோம். உதாரணம்: முழுவதும் கலக்கக் கூடிய திரவங்களின் கலவை, வாயுக்களின் கலவை. ஒன்றுக்கு மேற்பட்ட நிலைமைகளைக் கொண்டிருக்கும் அமைப்பை பலபடித்தான(heterogeneous) அமைப்பு எனலாம். உதாரணம்: ஒன்றுடன் ஒன்று கலக்காத திரவங்களின் கலவை, திரவம் மற்றும் வாயு சேர்ந்த தொகுப்பு + +அமைப்பின் குணாதிசயங்களை அதன் பண்புகள் (properties) என்கிறோம். அழுத்தம்(pressure), வெப்பநிலை(temperature), கன அளவு(volume), நிறை(mass), பாகுநிலை(viscosity), வெப்பக் கடத்துதிறன்(thermal conductivity), மின்கடத்துதிறன்(electrical conductivity) என்பன சில பண்புகளாகும். அமைப்பின் பண்புகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம். +நிறையைச் சார்ந்திராத பண்புகள் பொருண்மை சாராப் பண்புகள் அல்லது அகப் பண்புகள் (intensive properties) எனவும், நிறை மற்றும் அளவைச் சார்ந்துள்ள பண்புகள் பொருண்மைசார் பண்புகள் அல்லது புறப் பண்புகள் (extensive properties) எனவும் அழைக்கப்படுகின்றன. +வெப்பநிலை மற்றும் அழுத்தம் முதலியவை நிறையைச் சார்ந்து மாறுவது இல்லை. இவை அகப் பண்புகளுக்கு உதாரணங்களா��ும். மேலும் இவற்றை பாகங்களாகப் பிரிக்க இயலாது. நிறை மற்றும் கனஅளவு போன்றவை அமைப்பின் அளவைச் சார்ந்து இருப்பவை. இவற்றை பாகங்களாகப் பிரிக்க முடியும். இவை புறப் பண்புகள் ஆகும். +ஓரலகு நிறைக்கான அல்லது ஓரலகு மோலுக்கான புறப்பண்புகள் அகப்பன்புகள் ஆகும். உதாரணமாக, நிறை மற்றும் வெப்பக் கொள்ளளவு புறப்பண்புகள் ஆகும். ஆனால், அடர்த்தி மற்றும் தன் வெப்ப ஏற்புத்திறன்(specific heat) போன்றவை அகப்பண்புகளாகும். + +ஒன்றுக்கொன்று வெவ்வேறான மூன்று அமைப்புகளில் மூன்றாவது அமைப்பானது முதல் மற்றும் இரண்டாவது அமைப்புகளுடன் தனித்தனியே வெப்பச் சமநிலையில் இருந்தால், முதல் மற்றும் இரணடாவது அமைப்புகளும் தங்களுக்குள் வெப்பச் சமநிலையில் இருக்கும். வெப்பநிலை என்னும் கருத்து வெளிவரக் காரணமாக இருந்தது இந்த வெப்ப இயக்கவியலின் பூஜ்ய விதி ஆகும். +ஓர் அமைப்பு சமநிலையில் நேரத்தைப் பொறுத்து மாறாத பண்புகளைப் பெற்று இருந்தால் அதனை வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஓர் அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இருப்பதற்குக் கீழ்க்கண்ட நிபந்தனைகளைப் பெற்று இருக்க வேண்டும். + +1. எந்திரவியல் சமநிலை (Mechanical Equilibrium) +ஓர் அமைப்பில் உள்ள அனைத்து விசைகளும் சமன் படுத்தப்பட்டு இருந்தால் அதனை எந்திரவியல் சமநிலை என்கிறோம். அதாவது அந்த அமைப்பானது மற்றோர் அமைப்புடன் எந்த வேளையிலும் ஈடுபடாது. மேலும் அதன் எல்லாப் பகுதிகளிலும் அழுத்தம் மாறாமல் இருக்கும். + +2. வெப்பச் சமநிலை(Thermal Equilibrium) +அமைப்பில் வெப்பப் பரிமாற்றம் நிகழவில்லை எனில் அத்தகைய சமநிலை வெப்பச் சமநிலை ஆகும். அதாவது அமைப்புக்கும் அதன் சுற்றுப் புரத்துக்கும் இடையே வெப்பநிலை வேறுபாடு இருக்காது. வெப்பநிலை வேறுபாடு இருந்தால் மட்டுமே வெப்பப் பரிமாற்றம் நிகழும். + +3. வேதிச் சமநிலை (Chemical Equilibrium) +அமைப்பானது எந்த ஒரு வேதிவினைக்கும் உட்படவில்லை எனின், அவ்வமைப்பு வேதிச் சமநிலையில் உள்ளது எனலாம். +எந்த ஓர் அமைப்பும் மேற்கூறப்பட்ட மூன்று சமநிலைகளையும் பெற்று இருப்பின் அந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் உள்ளது எனலாம். ஏதேனும் ஒரு சமநிலை இல்லாதிருப்பின் அமைப்பினில் ஆற்றல் பரிமாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே இந்த அமைப்பு வெப்ப இயக்கவியல் சமநிலையில் இல்லை என்பதாகும். + +ஒரு சமன்படுத���தப்பட்ட நிலையில் இருந்து மற்றோர் சமன்படுத்தப்பட்ட நிலைக்கு செல்வதே வெப்ப இயக்கவியலில் செயல்முறை எனப்படுவதாகும். வெப்ப இயக்கவியலில் கீழ்க்கண்ட செயல்முறைகள் உள்ளன. +ஒரு செயல் முறையில் செய்யப்படும் வேலை = ʃP.dV + +1. கன அளவு மாறாச் செயல்முறையில் செயல்முறையின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை கனஅளவு மாறாமல் இருக்கும். உதாரணம்: ஆட்டோ சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் மற்றும் வெப்பம் வெளியேற்றப்படும் செயல்முறைகள் + +2. அழுத்தம் மாறாச் செயல்முறையில் செயல்முறை முழுவதும் அழுத்தம் மாறாமல் இருக்கும். உதாரணம்: டீஸல் சுழற்சியில் வெப்பம் உட்செலுத்தப்படும் செயல்முறை அழுத்தம் மாறாச் செயல்முறையாகும். + +3 வெப்பநிலை மாறாச் செயல்முறை என்பது செயல்முறையின் தொடக்க மற்றும் இறுதி நிலைகளுக்கு இடையே வெப்பநிலை மாறாமல் இருப்பதாகும். அமைப்பானது சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வதால் வெப்பநிலை மாறுவது இல்லை. + +4. வெப்ப மாறாச்செயல்முறையில் அமைப்பு சுற்றுப் புறத்துடன் வெப்பத்தைப் பரிமாற்றம் செய்து கொள்வது இல்லை. வெப்ப மாறச் செயல் முறைக்கு உதாரணம் ஆட்டோ சுழற்சியில் நடைபெறும் சுருக்கம் மற்றும் விரிவாக்கச் செயல்முறைகளாகும். + +வெப்ப இயக்கவியல் "முதல் விதியின்படி ஆற்றலானது ஒரு வகையிலிருந்து மற்றொரு வகையாக மாறக்கூடியது மற்றும் எந்த ஒரு செயல்முறையிலும் ஆற்றலை ஆக்கவோ அல்லது அழிக்கவோ இயலாது". வெப்ப இயக்கவியல் முதல் விதியானது ஒவ்வொரு செயல்முறையின் போதும் நிகழும் வெவ்வேறு ஆற்றல் மாற்றங்களைப் பற்றிக் கூறுகிறது. ஆனால், அத்தகைய ஆற்றல் மாற்றங்கள் பற்றி விளக்குவதில்லை. ஒரு செயல்முறை நிகழும் திசையானது தன்னிச்சையானதா அல்லது தன்னிச்சையற்றதா என்பதைப் பற்றிய கருத்தையும் வெப்ப இயக்கவியல் முதல் விதி கூறவில்லை. + +ஒரு முழுமையான சுற்றில் ஒரு பொருளிலிருந்து வெப்பத்தை உறிஞ்சி, அந்த அமைப்பில் எத்தகைய சிறு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், முழுவதுமாக வேலையாக மாற்றக் கூடிய இயந்திரத்தை வடிவமைக்க இயலாது. + + +வெப்ப இயக்கவியல் இரண்டாம் விதியால் அறிமுகப்படுத்தப்பட்ட என்ரோபி சார்பு என்பது உமிழப்படும் வெப்பத்ததிற்கும் (வ) செயல்முறையின் வெப்ப நிலைக்கும் உள்ள விகிதமாகும். + +'இயற்கைச் செயல்முறை' என்��து தன்னிச்சைச் செயல்முறையாகும் இவை தாமாகவே நடைபெறுகின்றன. அண்டத்தின் என்ட்ரோபி மாற்றமானது பூச்சியமாகவோ அல்லது எதிர்க்குறியையோ பெற்றிருக்கும் போது, அமைப்பானது தன்னிச்சையற்ற செயல்முறையில் இயங்கும். + +ஒரு வேதிவினையில், வினைவிளை பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையானது வினைபடு பொருள்களின் மூலக்கூறுகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கும் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது. + +(1) ஒரு திண்மம் நீர்மமாதல், ஒரு நீர்மம் ஆவியாதல் மற்றும் ஒரு திண்மம் ஆவியாதல் ஆகிய நிலைமை மாற்ற இயற்பியல் செயல்முறைகளின் போது என்ட்ரோபி அதிகரிக்கிறது. + +என்ட்ரோபி என்பது ஓர் அமைப்பில் நிகழும் நுண்ணிய ஒழுங்கற்ற தன்மையையும், தன்னிச்சைச் செயல்முறையையும் குறிக்கிறது. + +(1) ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற குறைந்த கொதிநிலை கொண்ட நீர்மங்கள், இவற்றின் கொதிநிலை 0மு-ஐ விட மிகச் சிறிதளவே உயர்ந்திருக்கும். +(2) நீர் மற்றும் ஆல்கஹால் போன்ற முனைவுற்ற சேர்மங்கள் ஹைட்ரஜன் பிணைப்பை கொண்டிருப்பதால் அதிகபட்ச ஆவியாதல் மதிப்பையும் பெற்றுள்ளன. + + +ஒரு சமநிலை செயல்முறையில் ஆனது பூஜ்ஜியமாகும். ஒரு தன்னிச்சையற்ற செயல்முறையில் எதிர்க்குறியைப் பெற்றுள்ளது. + + + + + + +இயக்கவியல் + +இயக்கவியல் ("Dynamics") விசையியலின் ஒரு பிரிவாகும். பொருள்களின் மீது விசை செயல்படும் போது, அவற்றின் இயக்கங்களில் மாற்றம் ஏற்படும். அந்த மாற்றங்களினால் பொருள்களின் கணித, இயல் நிலைகளை அறிய உதவும் பிரிவு இயக்கவியல் ஆகும். அணுக்கள், கிரகங்கள், சடப்பொருள்கள் என அனைத்தின் இயக்கத்தையும் விளக்கும் நடைமுறைக் கோட்பாடுகள் இவ்வியலில் உண்டு. கலிலீயோ, கெப்ளர் மற்றும் நியூட்டன் ஆகியவர்கள் பண்டைய இயக்கவியலுக்கு அடிதளமிட்டனர். + +இடப்பெயர்ச்சி இயக்கம், சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் ஆகிய இயக்கங்களைப் பொருள்கள் பெற்றுள்ளன. + +இயக்கவியல், திடப் பொருள் இயக்கவியல் மற்றும் வளைமைப் பொருள் இயக்கவியல் என இருவகைப்படும். திடப் பொருள் எனப்படுவது உருத்திரிபு அற்றவை, அவற்றின் மீது விசை செயல்படும் போது அப்பொருளின் மூலக்கூறுகள் நிலையாக இருக்கும். + +இயக்கவியலின் அடிப்படை விதிகளை நீயூட்டன் தனது புகழ்பெற்ற "பிரின்சிபியா மெதெமேட்டிகா (Principia Mathematica)" என்ன���ம் படைப்பு நூலை 1687இல் வெளியிட்டார். மேலும் ஆய்லர், மேக்சுவெல் போன்றோர் முறையே சுழற்சி இயக்கம், அதிர்வு இயக்கம் குறித்து விதிகளை வகுத்தனர். + +விசை என்பது ஒரு பொருளை ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு நகர்த்தவோ அல்லது சீரான விரைவுடன் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் நகர்ச்சியின் விரைவை மாற்றவோ வல்ல ஒன்றாகும். சுருக்கமாகக் கூறின் ஒரு பொருளின் நகர்ச்சியில் மாற்றம் ஏற்படுத்தும் ஒன்றை விசை என்கிறோம். + +பொருளின் இயக்கம் தொடர்பான மூன்று விதிகளை நியூட்டன் உருவாக்கினார். பொருள் மற்றும் அவைகளின் மீது ஒரு விசை ஏற்படுத்தும் விளைவைப் பற்றிக் குறிப்பிடுவது நியூட்டனின் இயக்க விதிகள் எனப்படும். + +முதல் விதி விசைக்கும் பொருளின் நிலையான இயக்கத்திற்கும் உள்ள தொடர்பையும், இரண்டாவது விதி விசையின் அளவு மற்றும் திசையை பற்றிய வரையறையையும், மூன்றாவது விதி விசையின் தன்மையையும் விளக்குகின்றன. + + + + + +இயங்கியல் + +அசைவு விபரியல் அல்லது இயங்கியல் ("kinematics") என்பது மரபார்ந்த விசையியலின் ஒரு பிரிவாகும். இது ஒரு புள்ளி அல்லது ஒரு பொருள் அல்லது ஒரு பொருட்தொகுதியின் இயக்கத்தை, இயக்கத்துக்கான காரணத்தை நோக்காமல், அதன் நிலை, திசைவேகம், முடுக்கம் போன்ற கூறுகளால் விபரிக்கிறது. + +அசைவு விபரியல் வானியற்பியலில் வான் பொருட்களின் இயக்கத்தை அறியவும், மற்றும் இயந்திரப் பொறியியல், தானியங்கியல், உயிர்விசையியல் ஆகியவற்றில் தொகுதிகளின் அசைவைக் கண்டறியவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, விசைப்பொறிகள், தானியங்கி கைகள், மனித உடம்பின் எலும்புக்கூடு ஆகியவற்றின் அசைவுகளை அறியப் பயன்படுகிறது. + +திசைவேகம் (velocity) என்பது துணிக்கையொன்றின் இடப்பெயர்ச்சி மாற்றத்தின் அளவு மற்றும் திசையைக் காட்டும் காவிக் கணியமாகும். வேகம் அல்லது கதி (speed) என்பது பொருள் நகர்ந்த தூரத்தின் மாற்றத்தின் அளவாகும் (திசை இல்லை). பொதுவாக அசைவு விபரியலில் திசையைக் காட்டும் காவிக் கணியமான திசைவேகமே கணிப்பிடப்படுகின்றது. சராசரி வேகமானது மாற்ற இடப்பெயர்ச்சியை நேர அளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும். + +இங்கு ΔP என்பது இடப்பெயர்ச்சியையும் Δ"t" என்பது நேரத்தையும் குறிக்கின்றது. + +இது வேகத்தை நேர ���ளவால் பிரிப்பதால் கிடைக்கப்பெறும் காவிக் கணியமாகும். + + + + +ஜூனிசிரோ கொய்சுமி + +ஜூனிசிரோ கொய்சுமி (小泉 純一郎 Koizumi Jun'ichirō, பிறப்பு: ஜனவரி 8, 1942) ஜப்பான் நாட்டின் ஒரு முன்னாள் பிரதமராவார். + + + + +கோதுமை + +கோதுமை ("டிரிடிகம்" இனம்) என்பது தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் எத்தியோப்பிய உயர்நிலங்களாகும். எனினும் இன்று இது உலகெங்கும் பயிரிடப்படுகிறது. 2010ம் ஆண்டில் கோதுமை உற்பத்தி 651 மில்லியன் தொன்னாகக் காணப்பட்டதோடு, சோளம் (844 மில்லியன் தொன்) மற்றும் அரிசி (672 மில்லியன் தொன்) என்பவற்றுக்கு அடுத்தத்தாக அதிகம் உற்பத்தி செய்யப்படும் தானியமாகவும் இருந்தது. 2009ல் கோதுமை இரண்டாமிடத்தில் (682 மில்லியன் தொன்) காணப்பட்டதோடு சோளம் (817 மில்லியன் தொன்) முதலிடத்திலும், அரிசி (679 மில்லியன் தொன்) மூன்றாமிடத்திலும் காணப்பட்டது. + +ஏனைய எந்தப் பயிர்களைக் காட்டிலும் அதிக பரப்பளவில் இது பயிரிடப்படுகிறது. உலக வாணிகத்தில் கோதுமை வாணிகம் ஏனைய அனைத்துப் பயிர் வாணிகங்களின் மொத்தத் தொகையிலும் அதிகமாகும். உலகளவில், மனித உணவில் தாவரப் புரதத்தின் முக்கிய மூலமாக கோதுமையே விளங்குகிறது. இது மற்றைய முக்கிய பயிர்களான அரிசி மற்றும் சோளம் ஆகியவற்றிலும் அதிக புரதத்தைக் கொண்டுள்ளது. சோளத்தின் அதிகளவில் விலங்குணவாகப் பயன்படுத்தப்படுவதன் காரணமாக கோதுமை அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவுப் பயிராகவும் விளங்குகிறது. + +மனித நாகரிக வளர்ச்சியின் ஆரம்ப கட்டங்களில், நகர்ப்புறச் சமுதாய வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பரந்தளவில் இலகுவாகப் பயிரிடக்கூடியதாய் இருந்தமையும், நீண்டகாலத்துக்குக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடியதாயும் இருந்ததால் இதற்குக் காரணங்களாகும். வளப்பிறையில் (Fertile Cresent) உருவான பாபிலோனிய மற்றும் அசிரியப் பேரரசுகளின் எழுச்சிக்கும் கோதுமையே காரணமாகும். கோதுமை ஒரு நிறையுணவாகும். கோதுமையை மாவாக்கிப் பாண், பிஸ்கற், குக்கிகள், கேக்குகள், காலைத் தானிய ஆகாரம், பாஸ்டா, நூடில்ஸ், கோஸ்கோஸ் போன்றன ஆக்கப்படும். மேலும், இதனைப் புளிக்கச்செய்து பியர், ஏனைய மதுபானங்கள் மற்றும் உயிரிஎரிபொருள் என்பனவும் உருவாக்கப்படும். + +கால்நடைகளுக்கான தீவனப் பயிராகவும் சிறியளவில் கோதுமை பயிரிடப்படுகிறது. மேலும், இதன் வைக்கோல் கூரை வேயவும் பயன்படுகிறது. இதன் முழுத் தானியத்தைக் குற்றுவதன் மூலம் இதன் வித்தகவிழையம் தனியாக்கப்பட்டு அதிலிருந்து வெள்ளை மா தயாரிக்கப்படுகிறது. இதன் உப பொருட்கள் மேற்தோலும் முளையும் ஆகும். கோதுமையின் முழுத்தானியத்தில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் புரதம் ஆகியன செறிந்துள்ளன. எனினும் சுத்திகரிக்கப்பட்ட தானியத்தில் பெரும்பாலும் மாப்பொருள் மாத்திரமே உண்டு. + +கோதுமை உலகில் முதலில் பயிரிடப்பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன்மகரந்தச் சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு வித்தியாசமான இனங்கள் காணப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள், கோதுமைச் சாகுபடி முதன்முதலில் வளப்பிறை (Fertile Cresent) மற்றும் நைல் கழிமுகப் பகுதிகளில் பயிரிடப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. எனினும் அண்மைய ஆய்வுகள் இது தென்கிழக்குத்துருக்கியின் சிறு பகுதியொன்றில் முதலில் பயிரிடப்பட்டதாக் கூறுகின்றன. இது கிமு 9000த்தில் துருக்கியிலுள்ள கொபேக்லி தெபே எனுமிடத்திலிருந்து வடமேற்கே தொலைவிலுள்ள நெவாலி கோரி எனுமிடத்தில் பயிரிடப்பட்டுள்ளது. +எவ்வாறாயினும், வாற்கோதுமை பயிரிடப்பட்ட கிமு 23,000 ஆண்டுகளிலேயே கோதுமையும் பயிரிடப்பட்டிருக்கலாமெச் சிலர் கருதுகின்றனர். + +பயிரிடும் போதான மண் தயார்செய்கை மற்றும் விதைத்தல் நுட்பங்கள் ஆகியன காரணமாகவும், பயிரின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கான பயிர் சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் உரப்பயன்பாடு என்பன காரணமாகவும், அறுவடை முறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் காரணமாகவும் கோதுமை சிறப்பாகப் பயிரிடக்கூடிய பயிராக விளங்குகிறது. குதிரையைப் பயன்படுத்தி உழும் முறை (3000 BCE அளவில்) காரணமாக உற்பத்தித் திறன் வளர்ச்சியடைந்தது. 18ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட விதைக் கலப்பைகளின் உதவியால் பரந்தளவிலான விதைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனாலும் கோதுமையின் உற்பத்தித் திறன் வளர்ச்சி பெற்றது. + +பயிர்ச்சுழற்சி நடவடிக்கைகள் மற்றும் பொருத்தமான உரப்பயன்பாடு ஆகியன காரணமாக ஓரலகுப் பரப்பிலிருந்து அறுவடை செய்யக்கூடிய கோதுமையின் அளவு அதிகரித்தது. சூடடிப்பு இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்கள் மற்றும் உழவு இயந்திரங்கள் போன்ற புதிய இயந்திரங்களின் வருகையும், புதிய கோதுமை ரகங்களின் கண்டுபிடிப்பும் கோதுமைப் பயிர்ச்செய்கையில் முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. 19ம் மற்றும் 20ம் நூற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காக்களில் புதிய விளைநிலங்களில் கோதுமைப் பயிரிடலோடு கோதுமை உற்பத்தியும் விரிவடைந்துள்ளது. + +கோதுமை பரப்பளவில் பயிரிடப்படுகிறது. இது ஏனைய எந்தப் பயிருக்கான பயிரிடல் பரப்பளவிலும் அதிகமாகும். உலகின் மிக விரும்பப்படும் நிறையுணவுகள் அரிசியும் கோதுமையுமேயாகும். ஏனைய எந்த உணவுப் பொருள்களிலும் பார்க்க அதிக போசணையை கோதுமை மனிதனுக்கு வழங்குகிறது. கோதுமை ஆர்ட்டிக் பகுதிகளிலிருந்து மத்தியகோட்டுப் பகுதிகள் வரையிலும், கடல் மட்டத்து நிலங்கள் முதல் கடல் மட்டத்திலிருந்து உயரமுள்ள திபத் மேட்டுநிலங்கள் வரையிலும் பயிரிடக்கூடியதாக உள்ளதால் இது உலகளவில் ஒரு முக்கிய உணவுப் பொருளாக உள்ளது. இது தவிர, கோதுமையைக் களஞ்சியப் படுத்தலும், மாவாக்கலும் இலகுவானதாகும். மேலும் இதிலிருந்து உண்ணத்தக்க, சுவையான பல்வேறு உணவுப்பொருட்களையும் ஆக்கமுடியும். பெரும்பாலான நாடுகளில் மாப்பொருளின் முக்கிய ஆதாரமாகக் கோதுமை விளங்குகிறது. + +கோதுமைப் புரதம் மாவடிவில் உள்ளதால் 99%மான மனிதர்களால் இலகுவாகச் சமிபாடடையச் செய்ய முடியும். மேலும் கோதுமையில் உயிர்ச்சத்துக்கள், கனியுப்புக்கள் மற்றும் கொழுப்பு ஆகியன உள்ளன. கோதுமை உணவுகள் மிகவும் சத்து மிக்கன. + +கோதுமையில் வெண்கோதுமை, செங்கோதுமை என்பன இரு முக்கியமான வகைகளாகும். ஆயினும், வேறு பல இயற்கையான வகைகளும் உள்ளன. உதாரணமாக, எத்தியோப்பிய உயர்நிலங்களில் விளையும் ஊதாக் கோதுமையைக் குறிப்பிடலாம். மேலும் கறுப்பு, மஞ்சள் மற்றும் நீலக் கோதுமை போன்ற சத்துமிக்க ஆயினும் வர்த்தக ரீதியாகப் பயிரிடப்படாத கோதுமை வகைகளும் உள்ளன. + +அறுவடை செய்யப்பட்ட கோதுமைத் தானியம் பண்டச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதற்கேற்ற விதத்தில் வகைப்படுத்தப்படும். இவ் ஒவ்வொரு வகைக் கோதுமையும் வெவ்வேறு பயன்களைக் கொண்டிருப்பதால் கோதுமை கொள்வனவாளர்கள் தமக்கு வேண்டிய கோதுமையைக் கொள்வனவு செய்வர். இத்தகவல்களைப் பயன்படுத்தி கோதுமை உ���்பத்தியாளர்கள் இலாபமீட்டக்கூடிய உரியவகைக் கோதுமை வகைகளைப் பயிரிடுவர். + +கோதுமை ஒரு பணப்பயிராகப் பரந்தளவில் பயிரிடப்படுகிறது. அலகுப் பரப்பளவில் அதிக விளைச்சல் தருதல், மித வெப்ப வலயத்தில நன்றாக வளரக் கூடியதாய் இருத்தல், வெதுப்புதலுக்கான உயர் தரம்மிக்க மாவைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாயிருத்தல் போன்றன இதற்கான காரணங்களாகும்.பாண் வகைகளில் பெரும்பாலானவை கோதுமையைப் பயன்படுத்தியே உருவாக்கப்படுகின்றன. ராய் மற்றும் ஓட் பாண் வகைகள் பெரும்பாலும் அவ்வத் தானியங்களையே கொண்டிருப்பினும் அவற்றில் கோதுமையும் கலக்கப்படும். கோதுமை மா உணவுப்பண்டங்கள் மிகவும் பிரபலம் மிக்கவையாக உள்ளதால் கோதுமைக்கு நல்ல கேள்வி உருவாகியுள்ளது. + +அண்மைக் காலங்களில் கோதுமை விலை உலகச்சந்தையில் குறைவடைந்து வருவதால் ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பாலான விவசாயிகள் வேறு இலாபமீட்டக்கூடிய பயிர்வகைகளில் நாட்டம் காட்டுகின்றனர். 1998ல், ஒரு புசல் கோதுமையின் விலை 2.68 டொலராக இருந்தது. ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் திணைக்களத்தின் அறிக்கையொன்றின்படி, 1998ல், கோதுமைக்கான இயக்குச் செலவினம் புசலுக்கு 1.43 டொலராகவும், மொத்தச் செலவு புசலுக்கு 3.97 டொலராகவும் உள்ளது. பயிர் நிலமொன்றின் ஏக்கருக்கான சராசரி விளைச்சல் 41.7 புசலாகவும், (2.2435 மெற்றிக் தொன்/எக்டேயர்) விவசாயப் பண்ணையொன்றில் கோதுமையால் பெறப்படும் வருமானம் 31,900 டொலராகவும் உள்ளது. இங்கு பண்ணையொன்றின் மொத்த வருமானம் (ஏனைய பயிர்களையும் சேர்த்து) 173,681 டொலரும், அரசாங்க உதவிப் பணம் 17402 டொலரும் ஆகும்.எனினும், அறுவடை அளவு, அமைவிடம் மற்றும் பண்ணையின் அளவு என்பவற்றிலுள்ள வேறுபாடுகள் காரணமாக இலாபம் பெறுவதில் சிறிதளவு வேறுபாடுகள் உள்ளன. + +2007ல் வடவரைக் கோளம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு மற்றும் குளிர் காலநிலை என்பவற்றாலும், ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட வரட்சியாலும் கோதுமை விலையில் அதீத உயர்ச்சி ஏற்பட்டது.2007 டிசம்பர் மற்றும் 2008 மார்ச் மாதங்களில் இதுவரை கண்டிராத அளவுக்கு கோதுமை விலை புசலுக்கு 9 டொலருக்கும் கூடுதலாக அதிகரித்தது. பாஸ்டா விலை அதிகரிப்புக்கு எதிராக இத்தாலியில் அதிக முறைப்பாடுகள் செய்யப்பட்டன. + +உயிரி எரிபொருள் பாவனை மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வருமான உயர்வு போன்ற காரணிகளும் கோதுமை விலையில் பாதிப்புச் செலுத்துகின்றன. இதன் காரணமாக அரிசி மற்றும் இறைச்சியுணவுகளை உணவாகக் கொள்ளும் வழக்கம் அதிகரித்துள்ளது. + +2003ல், உலகளவில் நபருக்கான கோதுமை நுகர்வு ஆகக் காணப்பட்டதோடு, நபர்வரி கோதுமை நுகர்வில் முதலிடத்தில் கோதுமை நுகர்வுடன் கிர்கிசுத்தான் காணப்படுகிறது. 1997ல், உலகளாவிய நபர்வீத கோதுமை நுகர்வு ஆகக் காணப்பட்டதோடு, அதிகளவு கோதுமை நுகர்வை டென்மார்க் கொண்டிருந்தது. டென்மார்க்கின் நபர்வீத கோதுமை நுகர்வு ஆகும். எனினும், இதில் பெருமளவு (81%) விலங்குணவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. கோதுமை, வட அமெரிக்காவிலும் மத்திய கிழக்கிலும் முக்கிய உணவாக உள்ளது. மேலும் ஆசியாவிலும் இது பிரபலம் பெற்று வருகிறது. அரிசியைப் போலல்லாது கோதுமை உற்பத்தி உலகெங்கும் பரவியுள்ளது. எனினும், உற்பத்தியில் ஆறிலொரு பங்கை சீனா உற்பத்தி செய்கிறது. + +"1990ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் வருடாந்த கோதுமை உற்பத்தியில் சிறிய அதிகரிப்புக் காணப்படுகிறது. இது பயிரிடல் பரப்பு அதிகரிப்பினால் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, சராசரி அறுவடையில் ஏற்பட்ட அதிகரிப்பேயாகும். 1990களின் முதல் அரைப்பகுதியில், எக்டேயரொன்றுக்கு 2.5 தொன் கோதுமை அறுவடை செய்யப்பட்டது. ஆயினும் 2009ல் இது 3 தொன்னாக இருந்தது. உலக சனத்தொகை அதிகரிப்புக் காரணமாக, 1990க்கும் 2009க்கும் இடையில் நபருக்கான கோதுமை உற்பத்தி நிலப்பரப்பு தொடர்ச்சியாக குறைவடைந்துள்ளது. இக்காலப்பகுதியில், கோதுமை உற்பத்தி நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை. எவ்வாறாயினும், சராசரி அறுவடையிலுள்ள முன்னேற்றம் காரணமாக, நபருக்கான கோதுமை உற்பத்தியில் ஒவ்வொரு வருடமும் சிறு தளம்பல்கள் காணப்படுகின்றன. எனினும், குறிப்பிடத்தக்க வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. 1990ல் நபர்வரி உற்பத்தி 111.98 kg/நபர்/வருடம் ஆகக் காணப்பட்டது. எனினும் 2009ல், இது 100.62 kg/நபர்/வருடம் ஆக உள்ளது. உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சி தெளிவாக உள்ளதோடு, 1990ன் நபர்வரி உற்பத்தி மட்டம் சாத்தியமானதாகவும் இல்லை. இதற்குக் காரணம், உலக சனத்தொகை ஏற்பட்டுள்ள அதிகரிப்பாகும். இக்காலப்பகுதியில், மிகக் குறைந்த நபர்வரி உற்பத்தி 2006ல் பதிவாகியுள்ளது." + +20ம் நூற்றாண்டில், உலகளாவிய கோதுமை உற்பத்தி ஐந்து மடங்காக அதிகரித்தது. எனினும், 1955 வரை, கோதுமைப் பயிர்ச்செய்கைப் பரப்பு அதிகரிப்பே இதற்குக் காரணமாக இருந்தது. இக்காலப்பகுதியில், பரப்புக்கான கோதுமை உற்பத்தி சிறியளவிலான (20%) அதிகரிப்பையே கொண்டிருந்தது. எவ்வாறாயினும், 1955ன் பின்னர் வருடத்துக்கான கோதுமை உற்பத்தி பத்து மடங்காக அதிகரித்தது. இது உலக கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு பாரிய பங்களிப்பை வழங்கியது. செயற்கை நைதரசன் உரப்பாவனை, நீர்ப்பாசன முறைமைகள் மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கள் மற்றும் விஞ்ஞான முறை பயிர் முகாமைத்துவம் மற்றும் புதிய கோதுமை இனங்கள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் மற்றும் விஞ்ஞானமுறை பயிர் முகாமைத்துவம் என்பன இந் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் கோதுமை உற்பத்தி அதிகரிப்புக்கு வழிகோலின. வட அமெரிக்கா போன்ற சில பகுதிகளில் கோதுமைப் பயிரிடல் நிலப்பரப்பில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் ஏற்பட்டுள்ளன. + +சிறந்த விதை களஞ்சியப்படுத்தல் மற்றும் நாற்று உற்பத்தி (இதனால் அடுத்த வருட விதைப்புக்கான விதை ஒதுக்கீடு குறைவடைந்தமை) என்பனவும் 20ம் நூற்றாண்டின் இன்னொரு தொழில்நுட்பக் கண்டுபிடிப்பாகும். மத்தியகால இங்கிலாந்தில், விவசாயிகள் தமது கோதுமை உற்பத்தியின் கால் பங்கினை அடுத்த வருட விதைப்புக்காக ஒதுக்கினர். இதனால் பாவனைக்கான கோதுமையின் அளவு உற்பத்தியின் முக்கால் பங்காக இருந்தது. 1999ல், விதைக்கான ஒதுக்கீடு உற்பத்தியின் 6%மாக இருந்தது. + +கோதுமை உற்பத்தியின் உலகளாவிய பரவல் சில காரணிகளால் தற்போது குறைவடைந்து செல்கிறது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் வீழ்ச்சியடையும் அதேவேளை, கோதுமை அறுவடை வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளது. மேலும் சோயா அவரை மற்றும் சோளம் போன்ற ஏனைய பயிர்களின் சிறந்த பொருளாதார இலாபம் மற்றும் நவீன மரபியல் தொழில்நுட்பங்கள் மீதான முதலீடுகள் காரணமாக ஏனைய பயிர்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளது. + +"எவ்வாறாயினும், அதிகரித்துவரும் சனத்தொகை கோதுமை உற்பத்தியில் அதிகரிப்பை வேண்டி நிற்கிறது. மேலும், வளரும் நாடுகளில் இறைச்சி நுகர்வும் இதற்கு ஒரு காரணமாகும். இரண்டாவதற்கான காரணம், அதிக இறைச்சி உற்பத்திக்கு அதிக கால்நடைத் தீவனம் அவசியமாக உள்ளமையாகும். இதனால் சில நாடுகளில் கோதுமை தன்னிறைவடைதல் மாற்றமடைகிறத���. ஒரு சிலர் சிறப்பாக வாழ்தல் ஏனையோரின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக அமையாத ஒரு சிறந்த நிலையை மனித சமுதாயம் அடையும்போது, கோதுமை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல் என்பன ஒவ்வொருவரினதும் மிக முக்கிய கடமையாக மாறும். மேலும், தற்போதைய நுகர்வு கொள்கைரீதியில் நிலைத்திருக்கக்கூடியதாயிருப்பினும், நாம் முகங்கொடுக்க வேண்டிய இன்னொரு முக்கிய பிரச்சினை உள்ளது: இப் பிரச்சினையைத் தவிர்த்தாலும், இன்று மக்கள் பட்டினியால் சாகின்றனர். உலகளாவிய ரீதியில் சராசரி நுகர்வு மட்டத்தைப் பார்க்கும் போது உலகின் வெவ்வேறு பகுதிகளில் நுகர்வு மட்டத்தில் பாரிய வித்தியாசம் காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கிடையில் பாரிய ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் மிகையான அதேவேளை வீணாகும் உணவு நுகர்வு உள்ளது. ஆயினும், வறிய நாடுகளில், உணவுப் பற்றாக்குறை அல்லது குறைவழங்கல் நிலை காணப்படுகிறது. அபிவிருத்தியடைந்த நாடுகளில், மக்கள் அதிக நிறை மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்படும்போது, உலகின் மற்றைய பாகத்து மக்கள் உணவுப்பற்றாக்குறை, குறையூட்டம் மற்றும் அது தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்." + +இந்திய மற்றும் பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதிகளிலும் வடக்குச் சீனப் பகுதிகளிலும் சிறப்பான நீர்ப்பாசன வசதிகளால் கோதுமை உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த நாற்பது வருடங்களில் உரப்பயன்பாட்டின் வளர்ச்சியும் புதிய கோதுமை வகைகளின் கண்டுபிடிப்பும் எக்டேயரொன்றுக்கான அறுவடை அளவை அதிகமாக்கியுள்ளன. அபிவிருத்தியடந்துவரும் நாடுகளில் இக்காலப் பகுதியில் உரப்பயன்பாட்டின் அளவு 25 மடங்காக அதிகரித்துள்ளது. எனினும் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதில் உரப்பயன்பாடு மற்றும் புதிய வகை விதைகள் என்பவற்றிலும் பார்க்க பயிரிடல் முறைமைகளே செல்வாக்குச் செலுத்துகின்றன. இதற்கு உதாரணமாக ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதிகளில் நடைபெறும் கோதுமை வேளாண்மையைக் குறிப்பிடலாம். இங்கு மழைவீழ்ச்சி குறைவாயிருந்தாலும், சிறிதளவு நைதரசன் உரப் பயன்பாட்டுடன் வெற்றிகரமான அறுவடை மேற்கொள்ளப்படுகிறது. அவரைக் குடும்பத் தாவரங்களைச் 'சுழற்சிமுறை'ப் பயிர்களாகப��� பயன்படுத்தியமையே இவ் வெற்றிக்குக் காரணமாகும். மேலும், சென்ற பதிற்றாண்டில், கனோலா வகைத் தாவரத்தை சுழற்சிமுறைப் பயிராகப் பயன்படுத்தியதின் விளைவாக கோதுமை விளைச்சல் 25% அதிகரித்துள்ளது. மழைவீழ்ச்சி குறைந்த இப்பிரதேசங்களில் அறுவடையின் பின் அடிக்கட்டைகளை அகற்றாது விடுவதன் மூலமும் நிலம் பண்படுத்தலைக் குறைப்பதன்மூலமும் நிலத்தடி நீர் சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. (மேலும் மண்ணரிப்பும் தடுக்கப்படுகிறது) + +2009ல், மிகச்சிறந்த உற்பத்தியுடைய நாடாக பிரான்சு உள்ளது. இதன் உற்பத்தித் திறன் எக்டேயருக்கு 7.45 மெற்றிக் தொன்னாகும். 2009ல் அதிக கோதுமை உற்பத்தியுடைய நாடுகளாக சீனா (115 மில்லியன் மெற்றிக் தொன்கள்), இந்தியா (81 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ரசியா (62 மில்லியன் மெற்றிக் தொன்கள்), ஐக்கிய அமெரிக்கா (60 மில்லியன் மெற்றிக் தொன்கள்) மற்றும் பிரான்சு (38 மில்லியன் மெற்றிக் தொன்கள்) என்பன திகழ்கின்றன. + +எனினும், இந்நாடுகளில் குறிப்பிடத்தக்களவான அறுவடைக்குப் பின்னான இழப்புகள் நிகழ்கின்றன. இதற்கு முக்கிய காரணம் பயிரிடல் முறைமை தொடர்பான தொழில்நுட்ப அறிவின்மையேயாகும். இதற்கு மேலதிகமாக, மோசமான வீதியமைப்பு, போதுமான களஞ்சியப்படுத்தல் வசதியின்மை, வழங்கல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் வசதியின்மை போன்றனவும் காரணங்களாக உள்ளன. இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவுகளின்படி, கோதுமை உற்பத்தியில் 10% பயிர்நிலங்களில் இழக்கப்படுகின்றன. மேலும் 10% மோசமான களஞ்சியப்படுத்தல் மற்றும் வீதியமைப்புக்களினால் வீணாகின்றன. மேலும் சிறுபகுதி சில்லறைச் சந்தைகளில் இழக்கப்படுகின்றது. சிறந்த உட்கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் மற்றும் சில்லறை வலையமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியன மேற்கொள்ளப்பட்டால் 70இலிருந்து 100 மில்லியன் மக்களுக்கு ஒரு வருடத்துக்குத் தேவையான உணவை இந்தியாவிலிருந்து மாத்திரம் பெற்றுக்கொள்ளமுடியும் என ஆய்வொன்று தெரிவிக்கிறது. + + + + +மக்காச்சோளம் + +மக்காச்சோளம் (இலங்கையில் 'சோளம்', அறிவியல் பெயர்/தாவரவியல் பெயர் - "Zea mays") உலகம் முழுவதும் பயிரிடப்படும் ஒரு உணவுத் தானியம். உலகில் அதிகம் பயிரிடப்படும் பயிர் இதுவே ஆகும். சுமார் 10,000 ஆண்டுகளுக���கு முன்னர் பிரேசிலின் தென் பகுதியில் வாழ்ந்த அமெரிக்க முதற்குடிமக்கள் (பூர்வகுடிகள்) முதன் முதலாக உணவுக்காக மக்காச்சோளத்தைப் பயிரிடத் தொடங்கினர். உலகின் சோள உற்பத்தியில் பாதியளவு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதுதவிர இந்தியா, சீனா, பிரேசில், பிரான்ஸ், இந்தோனேசியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளிலும் அதிகம் பயிரிடப்படுகிறது. இவற்றைப் பெரும்பாலும் சோளப்பொரி செய்யவே பயன்படுத்துகின்றனர். சில வகை மக்காச்சோள வகைகளி்ல் இருந்து சோள எத்தனால்,கால்நடைத் தீவனங்கள் மற்றும் மற்ற மக்காச்சோளத் தயாரிப்புகளான சோள மாவுசத்து ("corn starch") மற்றும் சோளச் சாறு ("corn syrup") ஆகியவை தயாரிக்கப்படுகின்றன. மேலும் குழி மக்காச்சோளம் ("dent corn"), சோளப்பொறி மக்காச்சோளம், மாவு மக்காச்சோளம், இனிப்பு மக்காச்சோளம் உள்ளிட்ட ஆறு முக்கிய மக்காச்சோள வகைகள் உள்ளன. + +இது முதலில் நடு அமெரிக்காவில் பயிரிடப்பட்டு பின்னர் அமெரிக்காக் கண்டம் முழுதும் பரவியது. 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் ஐரோப்பியர்களுக்கு அமெரிக்காவுடன் ஏற்பட்ட தொடர்புகளைத் தொடர்ந்து இது உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. அமெரிக்காவில் அதிகம் பயிரிடப்படும் பயிர் மக்காச்சோளம் ஆகும். ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஆண்டுதோறும் 270 மில்லியன் தொன்கள் எடைகொண்ட மக்காச்சோளம் உற்பத்தியாகிறது. பொதுவான மக்காச்சோளப் பயிரைக் காட்டிலும், கலப்பின மக்காச்சோளப் பயிர்கள் அதிக விளைவைத் தருவதால் விவசாயிகள் கலப்பினங்களையே பெரிதும் விரும்புகிறார்கள். சில மக்காச்சோளத் தாவரங்கள் 7 மீட்டர் (23 அடி) உயரம் வரை வளர்கின்றன. எனினும் பெரும்பாலான வணிக அடிப்படையில் பயிராகும் மக்காச்சோளத் தாவரங்கள் 2.5 மீட்டர் (8 அடி) வரை உயரமாக வளர்கின்றன. இனிப்பு மக்காச்சோள வகைகள் பிற மக்காச்சோள வகைகளிலும் குட்டையானவை. + +மக்காச்கோளமானது 3 மீட்டர் (10 அடி) நீளத்தில் வளர்கிறது. மக்காச்சோளத் தண்டுகள் மேலோட்டமாகப் பார்க்கும்போது மூங்கிலின் வடிவத்தை ஒத்தது. இவற்றில் பொதுவாக 20 கணுவிடைப்பகுதிகள் காணப்படும். இவை 18 செ.மீ (7.1 அங்குலம்) நீளம் கொண்டவையாக உள்ளன. மக்காச்சோளம் தனித்துவமான வடிவம் கொண்டதாக வளர்கின்றது. கீழ்ப்பகுதி இலைகள் 50-100 சதமமீட்டர் (சமீ) நீளமும், 5-10 சமீ அகலமும் கொண்டவை. தண்டுப் பகுதி நிமிர்ந்த நிலையில் 2-3 மீட்டர்கள் வரை வளர்கின்றது. + +மக்காச்சோளக் கதிரானது சில இலைகளுக்கு மேல் தாவரத்தின் மத்திய பகுதியில் இலையடி மடலுக்கும் தண்டிற்கும் இடையே தோன்றுகிறது. இது தோன்றியதிலிருந்து ஒவ்வொரு நாளும் 3 மில்லி மீட்டர் (0.12 அங்குலம்) நீளம் நீட்சியடைகிறது. இக்கதிரானது முற்றிய நிலையில் 18 சென்டி மீட்டர் நீளத்தை அடைகிறது. சில சிற்றினங்களில் கோளக்கதிரானது 60 சென்டி மீட்டர் நீளம் கொண்டதாக இருக்கும். இவை மக்காச்சோளத் தாவரத்தின் பெண் இனப்பெருக்க உறுப்பு ஆகும். உண்மையில் இது பல பெண் மலர்கள் நெருக்கமாக அமைந்த மஞ்சரி ஆகும்.நெருக்கமாக இணைந்த அனைத்து மலர்களின் பூத்தளம் கதிர் முற்றிய நிலையில் சோளச்சக்கையாக (உமி) மாறுகிறது. இக்கதிருடன் கூடுதலாக சில கதிர்கள் தோன்றுகின்றன. சில நாட்களான பிஞ்சு நிலையில் இளஞ்சோளக்கதிர் (Baby Corn) என்ற பெயரில் ஆசிய சமையல் பாணியில் முக்கிய சமையற் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. + +தண்டின் நுனியில் பூந்துக் குஞ்சம் தோன்றுகிறது. இது ஆண் மலர்கள் அடங்கிய மஞ்சரியாகும். ஆண் மலர்களில் உள்ள மகரந்தபை முற்றியவுடன் வெடித்து மகரந்தத்தூளினை வெளியேற்றுகின்றன. மக்காச்சோளத் தாவரத்தில் காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுகிறது. மகரந்தப்பையில் இருந்து வெளியேறும் மகரந்தத்தூள் கீழே அமைந்திருக்கும் பெண் மஞ்சரியான சோளக்கதிரில் உள்ள பெண் மலர்களின் சூல் முடியை அடைகின்றன. அங்கு சூலுடன் கருவுறுதல் நடைபெற்று பிக் சூல்கள் விதையாக மாறுகின்றன. கோளக்கதிரில் குறு இலைகளுக்கு வெளியே சூல் தண்டுகள் நீளமாக வெளியே மெல்லிய முடி போன்ற வளரிகள் காணப்படுகின்றன. இது கூலப்பட்டு என அழைக்கப்படுகிறது. கூலப்பட்டு என்பது சோளக்கதிர் நுனியிலிருந்து கற்றையாக அல்லது குஞ்சம் போன்று வெளித்தள்ளியிருக்கும் பளப்பளப்பான, பலவீனமான பட்டுப் போன்ற இழை அமைப்பாகும். சோளக்கதிர் மாற்றுரு அடைந்த இலைகளால் மூடப்பட்டுள்ளது. ஒவ்வொரு நார் போன்ற அமைப்பும் ஒரு சூலகத்துடன் இணைந்த நீண்ட சூல்முடியாகும். + +சோள விதையானது உலர் வெடியா கனி வகையாகும். சோள மணிகளானது பட்டாணி அளவில் 2.5 செ.மீ (1 அங்குலம்) நீளத்தில் உள்ளன. மேலும் சீரான வரிசையில் சோள மணிகள் அமைந்திருக்கின்றன. + +சில வேளைகளில் மக்காச்சோள தாவரங்களில் சடுதி மாற்றம் தென்படுகின்றன. அதாவது பெண் மலர்கள் தாவரத்தின் உச்சியில் ஆண் மலர் அமைந்திருக்கும் குஞ்சத்துடன் சேர்ந்து உருவாகிறது. இத்தகைய திடீர் மாற்றங்கள் ts4 மற்றும் Ts6 ஆகிய ரகங்களில் அதிகம் காணப்படுகின்றன. இதன் காரணமாக ஆண் மலர் மற்றும் பெண் மலர்கள் இணைந்து இருபால் மஞ்சரியாக உருமாறி காட்சியளிக்கின்றன. + +மக்காச்சோளத்தின் பல வடிவங்கள் உணவுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வேளைகளில் மக்காச்சோளத்தில் இருக்கும் மாவுச்சத்தின் அளவைப் பொறுத்து துணை இரககங்கள் வகைப்படுத்தப்படுகின்றன. + + +25 மரபணு மாற்றப்பயிற்களில் ஒன்றான மரபணு மாற்ற மக்காச்சோளப் பயிரும் 2011 ஆம் ஆண்டு வனிக ரீதியாக பயன்பாட்டுக்கு வந்தது. 1997 முதல் ஐக்கிய மாகானம் மற்றும் கனடாவில் இவை பயிரிடப்பட்டு வந்திருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு வாக்கில் மரபணு மாற்றம் செய்யப்ப்ட மக்காச்சோளத்தின் அளவு 86 சதவீதம் ஆகும். 2011 ஆம் ஆண்டைய புள்ளிவிபரப்படி உலக அளவில் பயிரிடப்பட்ட மக்காச்சோளத்தில் 32% மரபணு மாற்றம் செய்யப்பட்ட மக்காச்சோளம் ஆகும். 2011 ஆண்டு களைக்கொள்ளி சகிப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, கொலம்பியா, எல் சால்வடோர் , ஐரோப்பிய ஒன்றியம், ஹொண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், உருசிய கூட்டமைப்பு, சிங்கப்பூர், தென்னாபிரிக்கா, தாய்வான், தாய்லாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிரிடப்பட்டன. மேலும் பூச்சி எதிர்ப்பு மக்காச்சோள ரகங்கள் அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சிலி, சீனா, கொலம்பியா, செக் குடியரசு, எகிப்து, ஐரோப்பிய ஒன்றியம், ஹோண்டுராஸ், ஜப்பான், கொரியா, மலேசியா, மெக்ஸிகோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், ருமேனியா, உருசியக் கூட்டமைப்பு, தென்னாபிரிக்கா, ஸ்விட்சர்லாந்து, தைவான் , அமெரிக்கா, மற்றும் உருகுவே ஆகிய நாடுகளிலும் பயிரிடப்பட்டன. + +கால்நடைகளுக்கான தீவனங்களில் முதலாவதாகக் கருதப்படுவது தீவன மக்காச்சோளம் ஆகும். இதை, இறவைப் பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம். ஆப்ரிக்க நெட்டை, விஜய் கம்போசிட், மோட்டி கம்போசிட், கங்கா-5 மற்றும் ஜவகர் போன்றவை தீவன மக்காச்சோள ரகங்களாகும் + +மக்காச்சோளமானது உலகளவில் பரவலாகப் பயிரிடப்படும் ஒரு தானியப்பயிராகும். ஒவ்வொரு வருடமும் மற்ற தானியங்களை விட மக்காச்சோளமே அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. 2014 ல் உலக அளவில் 1.04 பில்லியன் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பட்டடியலில் அமெரிக்காவின் பங்கு மட்டும் 35 சதவீதம் ஆகும். மொத்த உலக உற்பத்தியில் சீனா 21 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. + + + + + +வாற்கோதுமை + +வாற்கோதுமை (Barley, "Hordeum vulgare") புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இது உணவாகவும் கால்நடைத் தீவனமாகவும் பயன்படுகிறது. இது உலகில் ஐந்தாவது அதிகம் பயிரிடப்படும் தாவரமாகும். ரஷ்யா, கனடா போன்றவை பார்லி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளாகும். 2007ஆம் ஆண்டு எடுத்த கணக்குப்படி உலகில் அதிகமாக பயிர்விக்கப்படும் ஐந்தாவது தானியமாக வாற்கோதுமை இருந்துள்ளது. 2007ஆம் ஆண்டில் இதன் பயிர்க்கொள்ளளவு பதிமூன்று கோடியே அறுபது இலட்சம் தொன்களாகும். + +வாற்கோதுமை புல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். தன் மகரந்தைச் சேர்கை செய்யக்கூடிய இத்தாவர இருமய உயிரணுவில் 14 நிறமூர்த்தங்கள் (chromosomes) காணப்படுகின்றன. தற்போது உணவுப் பயன்பாட்டிற்காக விளைவிக்கப்படும் வாற்கோதுமை (Hordeum vulgare) அதன் காட்டு மூதாதையரான ஸ்பொண்டனியத்தின் (spontaneum) துணைபிரிவினம் ஆகும். இது பரவலாக மேற்கு ஆசியா மற்றும் வடகிழக்கு ஆபிரிக்காவின் வளமான செழிப்பு பகுதி முழுவதும் புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிகளில் ஏராளமாக வளர்கின்றன . மேலும் நெரிசலான வாழ்விடங்கள், சாலைகள் மற்றும் பழத்தோட்டங்களில் கூட சாதாரனமாக வளர்கின்றன. இருப்பினும், மரபணு பரவல் மற்றும் பன்முகத்தன்மையை குறித்த ஒரு ஆய்வில், திபெத் பயிரிடப்பட்ட வாற்கோதுமையின் கூடுதல் மையமாகக் கண்டறியப்பட்டது + +வனங்களில் காணப்பட்ட வாற்கோதுமையில் எளிதில் உடையக்கூடிய நுனிவளர் பூந்துணர்கள் காணப்பட்டன. முதிர்ச்சியடையும்போது, அவற்றிலிருந்து சிதறும் சிறு பூக்கள் (spikelets) விதை பரவுதலுக்கு துணை புரிகின்றன. ஆனால் விளைவிக்கப்படும் வாற்கோதுமையில் எளிதில் உதிராத பூந்துணர்கள் காணப்படுகின்றன. இதனால் பயிர் முற்றியவுடன் எளிதாக அறுவடை செய்ய முடிகிறது. இந்த எளிதில் உதிராத தன்மை இத்தாவர நிறமூர்த்தத்தில் காணப்படும் இரண்டு பிணைந்த மரபணுக்களான Bt1 மற்றும் Bt2 ஆகியவற்றில் மர���ணு திடீர்மாற்றம் அடைந்ததால் உண்டாக்கப்பட்ட பண்பாகும். அனேகமான பயிரிடும்வகைகளில் இரு மரபணுக்களிலும் இம்மாற்றம் காணப்பட்டது. இப்பண்பு மரபணுவின் ஒரு பின்னடைவான தன்மையுள்ளதாக இருப்பதனால், மாற்றுருக்கள் ஒத்தினக் கருவணு அல்லது சமநுகத்துக்குரியதாக (homozygous) இருக்கும் நிலைமையில் மட்டுமே வெளிப்படும். + +பயிரிடப்படும் வாற்கோதுமை தற்போதும் மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் காட்டின வாற்கோதுமையிலிருந்து வழி வந்தது. இவ்விரு வகைகளுமே இருபடை மரபுத்தாங்கிகள் (2n=14 chromosomes; diploid) கொண்டவை. கலப்பினம் செய்யின் எல்லா வகை வாற்கோதுமை தாவரங்களுமே வளரும் விதை கொடுக்கும் தன்மை உள்ளனவாய் இருப்பதால், இவ்வெல்லா வகைகளும் ஒரே சிற்றினத்தை சேர்ந்தவையாக கருதப்படுகின்றன. பயிரடப்படும் வாற்கோதுமைக்கும் காட்டின வாற்கோதுமைக்கும் உள்ள முக்கிய வேறுபாடு அவற்றின் பூங்கொத்துக்காம்பு தான். காட்டின வாற்கோதுமையின் பூங்கொத்துக்காம்பு எளிதில் உடையக்கூடியது அதன் சுய விருத்திக்கு உதவும் வகையில் அமைகிறது. வாற்கோதுமை பற்றிய முதல் ஆதாரங்கள் பழங்கற்கால லெவான்ட் பகுதியின் நட்டுஃபியன் கலாசார எச்சங்களில் கானப்படுகின்றன. பயிரடப்பட்ட வாற்கோதுமையின் எச்சப்படிமங்கள் சிரியாவிலுள்ள பழங்கற்காலத்தின் டெல் அபு குரெஇராவில் காணப்பட்டன. வாற்கோதுமையும் கோதுமையும் சம காலகட்டத்தில் பயிர் செய்யத் துவங்கப்பட்டதாகத் தெரிகிறது. + +பூமியின் பண்டைய மற்றும் முக்கிய அரும்பரிசாகக் கருதப்பட்டதால் வாற்கோதுமைக்கு, எலூசீனிய மர்மங்களின் ஆரம்ப நிலைகளிலிருந்து மதக்கலாசார முக்கியத்துவம் காணப்பட்டிருந்தது. இம்மர்மங்களின் கடவுளான டெமெட்டரின் வழிபாட்டு பாடல்களில் காணப்படும் கைகியான் எனப்படும் பானகம், வாற்கோதுமை மற்றும் மூலிகைகள் கலந்து செய்யப் பட்டதாகும். குறிப்பாக டெமெட்டெர் "வாற்கோதுமைத்தாய்" என்றும் அழைக்கப்பட்டார். + +வாற்கோதுமை மணிகளை வறுத்து கூழ் காய்ச்சுவது கிரேக்கர்களால் பின்பற்றப் பட்டதாக கையஸ் ப்லினியுஸ் செகுன்டஸின் "இயற்கை வரலாறு" தெரிவிக்கிறது. இம்முளைக்கூழ் நுண்ணுயிர் பகுப்பு மூலமாக சற்றே சாராயமுள்ள பானமாகிறது. + +மேற்கு ஆசியாவிலும் வடகிழக்கு ஆப்ரிக்காவிலும் காட்டு வாற்கோதுமை வகை அதிகமாக விளைகிறது. உலகின் மற்�� பகுதிகளில் இந்த வாற்கோதுமை அதிகமாக விளைவதில்லை. திபெத்து நாட்டில் வாற்கோதுமை வீட்டுத் தானியமாக விளைவிக்கப்படுகிறது. மேலும் பயிரிடப்படும் வாற்கோதுமை இரகங்களை முன்பனிக்கால வகைகள், வசந்தகால வகைகள் என இரு வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றுடன் "கரடி" என்றழைக்கப்படும் ஒரு மூலமறியப்படாத இரகத்தையும் சேர்க்கலாம். இந்த இரகம் மற்ற இரு இரகங்கள் அளவே மகசூல் கொடுப்பினும் குறைவான குண நலங்களே பெற்றுள்ளது. முன்பனிக்கால இரகம் கோதுமை போலவும், வசந்த கால இரகம் ஓட் போலவும் பயிரிடப்படுகின்றன. பிரிட்டனில் முன் காலத்தில் வாற்கோதுமை கோடைத்தரிசு நிலங்களில் பல்வேறு பெயர்களுடன் பயிரடப் பட்டு வந்தது. + +வசந்தகால வாற்கோதுமை பயிரிட சிறந்த பருவம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களாகும் (பின் மாசி முதல் முன் சித்திரை வரை). இருப்பினும், மிகத்தாமதமாக விதைக்கப்பட்ட பயிர்களும் நல்ல மகசூல் தந்துள்ளன. + +வாற்கோதுமை சிற்றினங்கள் பூங்கொத்தின் மணி வரிசைகளின் எண்ணிக்கையைப் பொறுத்தும் பிரிக்கப் பட்டுள்ளன. இரு வரிசை வாற்கோதுமை ("Hordeum distichum"), நால் வரிசை வாற்கோதுமை ("Hordeum tetrastichum") மற்றும் அறு வரிசை வாற்கோதுமை ("Hordeum vulgare") என இவை தொன்றுதொட்டு அறியப்பட்டுள்ளன. இவ்வெல்லா சிற்றினஙளிலும் பாதி எண்ணிக்கை மலர்களே விருத்தி செய்யும் தகுதி படைத்தவையாய் உள்ளன. தற்கால வாற்கோதுமை பெரும்பாலும் "Hordeum vulgare" சிற்றினமாகும். + +இவற்றுள் இரு வரிசை வாற்கோதுமை மிகப் பழமையானது; காட்டின வாற்கோதுமை வகைகள் இருவரிசை வாற்கோதுமையாகவே காணப்படுகின்றன. இரு வரிசை வாற்கோதுமை அறுவரிசை வாற்கோதுமையை விடக் குறைவான புரதமும், அதிக உருமாற்றப்புரதக்காரணியும் (enzyme) கொண்டுள்ளது. அறுவரிசை வாற்கோதுமை தீவனமாகவும், பிற பொருள் கலந்த முளைக்கூழ் உருவாக்கவும் உகந்ததாகும். இரு வரிசை வாற்கோதுமை தூய முளைக்கூழ் உருவாக்க உகந்ததாகும். நால் வரிசை வாற்கோதுமை நுண்ணுயிர் பகுப்புக்கு உகந்ததல்ல. தற்கால மரபின ஆய்வு இருவரிசை வாற்கோதுமையில் மியூட்டேசன் நடப்பதால் அவை ஆறு வரிசை வாற்கோதுமையாக மாறுவதாக காட்டுகின்றன. + +மேலும், தீட்டப்பட வேண்டிய (கூடுள்ள) மற்றும் கூடற்ற வாற்கோதுமை எனவும் பார்லியை வகைப்படுத்தலாம். இவற்றுள் கூடுள்ள வகைகள் தொன்மையானவை. + +ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ���ழங்கிய வாற்கோதுமை விளைச்சல் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:. + +2014 ஆம் ஆண்டு நிலவரப்படி உலகளவில் 144 மில்லியன் டன் வாற்கோதுமை உற்கத்தி செய்யப்பட்டுள்ளது. அதில் உருசிய நாட்டின் பங்கு மட்டும் 14 சதவீதமாகும். அட்டவணையில் இரண்டு மற்றும் மூன்றாமிடத்தில் முறையே பிரான்சு மற்றும் செருமனி ஆகிய நாடுகள் உள்ளன. + +2010ம் ஆண்டின்படி 1,000,000 டன்களுக்கு மேல் வாற்கோதுமை உற்பத்தி செய்த நாடுகள் + +வாற்கோதுமையில் (H. vulgare) பீனாலிக் காபிக் அமிலம் (phenolics caffeic acid) மற்றும் பீனாலிக் கவுமாரிக் அமிலம் ( p-coumaric acid), பெரூலிக் அமிரம் (the ferulic acid), 8, 5' டிபிருலிக் அமிலம் (8,5'-diferulic acid) , பிளேவினாய்டு கேட்டச்சின்-7-0-குளுகோசைடு (flavonoids catechin-7-O-glucoside) , சபோனாரின் (saponarin), கேட்டச்சின் catechin, புரோசயனடின் பி3 procyanidin B3, புரோசயனடின் சி2 ( procyanidin C2), மற்றும் புரோடெல்பினிடின் பி3 (prodelphinidin B3) , மற்றும் காரப்போலி ஹோர்டீனின் ( alkaloid hordenine) ஆகிய வேதிய பொருட்கள் உள்ளன. + +வாற்கோதுமை மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஒரு முக்கியமான உணவு தானியமாகும். வாற்கோதுமை உவர்மண்ணில் கோதுமையைக் காட்டிலும் நன்றாக வளரும் தன்மை கொண்டது. இதனாலேயே கி.மு இரண்டாயிரத்தில் மெசபடோமியாவில் வாற்கோதுமை பயிரிடுதல் அதிகரித்திருக்கலாம். அதே போல ரை பயிரைக்கட்டிலும் அதிக குளிர் தாங்கும் சக்தியும் வாற்கோதுமைக்கு உண்டு. + +வாற்கோதுமை முளைக்கூழ் பியர் மற்றும் விஸ்கி தயாரிப்பில் ஒரு முக்கிய இடுபொருளாகும். + + + + +மாஸ்கோ + +மாஸ்கோ ("Moscow", (உருசிய மொழி: Москва́, மஸ்க்வா, [mɐˈskva]) உருசியா நாட்டின் தலைநகரமாகும். இது மசுகுவா ஆற்றுக்கரையில் அமைந்துள்ளது. உருசிய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரம் உருசியாவிலும் ஐரோப்பாவிலும் முதன்மையான அரசியல், பொருளியல், பண்பாடு, அறிவியல் மையமாக விளங்குகிறது. இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே ஐரோப்பாவின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாஸ்கோ ருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. உருசிய பேரரசர்கள் அல்லது ஜார் மன்னர்கள் 1712 ல் சென் பீட்டர்ஸ்பேர்க்கை தலைநகராக்கும் வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் 1918 ல் உருசியாவின் தலைநகராக்கப்பட்டது. 1922 முதல் 1991 வரை சோவ��யத் ஒன்றியத்தின் தலைநகராகவும் மாஸ்கோவே விளங்கியது. + +ஃபோர்ப்சு இதழ் வெளியிடும் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் 2012இல் மிகக் கூடுதலான பில்லியனர்களைக் கொண்ட இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ளது. புவியின் மிகவும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெருநகரமாகவும் ஐரோப்பாவிலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும் உலகின் ஆறாவது மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகிறது. 1960 ல் மாஸ்கோவின் பரப்பளவு 885 சதுர கிலோமீற்றராக அதிகரிக்கப்பட்டது. 1980 களில் மீண்டும் புறநகர் பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது. 2012இல் தென்மேற்கில் மேலும் விரிவாக்கப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு இலிருந்து ஆக மேலும் 2.5 மடங்கு கூடியுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு மாஸ்கோவின் மக்கள்தொகை 233,000 ஆக உள்ளது. + +வரலாற்றுச் சுவட்டில் பல இராச்சியங்களின் தலைநகராக மாஸ்கோ விளங்கியுள்ளது. நடுக்காலத்தில் மாஸ்கோ குறுநில மன்னராட்சிக்கும் தொடர்ந்து சார் மன்னர்களாட்சிக்கும் பின்னர் எழுந்த சோவியத் ஒன்றியத்திற்கும் தலைநகரமாக விளங்கியது. மாஸ்கோவில்தான் நடுக்காலத்தில் கோட்டையாகவும் தற்போதைய அரசுத்தலைவர் மாளிகையாகவும் உள்ள கிரெம்லின் உள்ளது. கிரெம்லின் நகரில் உள்ள பல உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக உள்ளது. உருசிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், டூமா மற்றும் கூட்டாட்சி அவை, இங்குதான் கூடுகின்றன. + +நகரின் போக்குவரத்துத் தேவைகளுக்காக நான்கு பன்னாட்டு வானூர்தி நிலையங்களும் ஒன்பது தொடர்வண்டி முனையங்களும் உலகின் மிகுந்த ஆழத்தில் செல்லும் புவியடி விரைவுத் தொடருந்து பிணையமும் கட்டமைக்கப்பட்டுள்ளன. மாஸ்கோவின் மெட்ரோ தோக்கியோ, சியோல் மெட்ரோக்களை அடுத்து மிக் கூடுதலான பயணிகள் பயன்படுத்தும் சேவையாக உள்ளது. இந்தப் பிணையத்தின் 188 நிலையங்களும் அவற்றின் கட்டிட வடிவமைப்பிற்காக நகரத்தின் முதன்மைக் குறியீடுகளாக விளங்குகின்றன. + +காலவோட்டத்தில் மாஸ்கோவிற்கு, அதன் அளவையும் அதிகார மையத்தையும் கொண்டு, பல பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன: மூன்றாம் உரோமை (), வையிட்ஸ்டோன் ஒன்று (), முதல் அரியாசனம் (), நாற்பது நாற்பதுகள் (). + +மாஸ்கோ என்பதற்கு " மசுகுவா ஆற்றினை அடுத்த நகரம்" என்று பொருளாகும். முதன்முதலில் மாஸ்கோ என்ற பெயரை பயன்படுத்தியதற்கான சான்றை 1147இல் காணலாம்: நோவ்கார்டு-செவர்சுக்கியின் இளவரசனை யூரி டோல்கோருக்கி மாஸ்கோவிற்கு வருமாறு அழைக்கிறார். + +ஒன்பதாண்டுகளுக்குப் பின்னர், 1156 இல், உரோசுத்தோவின் இளவரசர் யூரி டோல்கொருக்கி வளர்ந்து வந்த நகரைச் சுற்றிலும் மரத்தினால் ஆன சுவரை, கிரெம்ளின், எழுப்ப ஆணையிட்டார்; இது பலமுறை மீளவும் கட்டப்பட்டுள்ளது. 1237–1238 இல் மங்கோலியர்கள் நகரத்தை முழுமையாக தீக்கிரையாக்கினர்; குடிமக்களைக் கொன்றனர். இதன் பிறகு 1327இல் நகரம் மீண்டெழுந்து தன்னாட்சி பெற்ற விளாடிமிர்-சுசுதால் ஆட்சிப்பகுதியின் தலைநகராயிற்று. வோல்கா ஆற்றின் தலைமுனையில் அமைந்திருந்ததால் தொடர்ந்து விரிவடைந்து வந்தது. மாஸ்கோ ஆட்சிப்பகுதி நிலையான வளமிகு ஆட்சிப்பகுதியாக (மாஸ்கோ பெரிய குறுநாடு என அழைக்கப்பட்டது) மாறியது. பலவேறு பகுதிகளிலிருந்தும் அகதிகள் இங்கு வந்து குடியேறினர். + +மாஸ்கோவின் முதலாம் இவான் காலத்தில் அரசியல் மையம் திவெரிலிருந்து மாஸ்கோவிற்கு மாற்றப்பட்டது. மங்காலிய தாதார் மன்னர்களுக்கு வரிகளை வசூலித்து சேகரிக்கும் நகரமாக மாஸ்கோ விளங்கியது. வெளிநாட்டு ஆதிக்கத்திற்கு மாஸ்கோவில் எதிர்ப்பு வளர்ந்தது. 1380இல் இளவரசர் திமித்ரி டோன்சுகோய் "கோல்டன் ஹோர்டு" எனப்படும் டாடார்களுக்கு எதிராக போரிட்டு "குளிகோவோ" என்றவிடதில் வென்றான். ஆனால் இரண்டாண்டுகளில் மீண்டும் டோக்டமிஷ் கானால் பிடிக்கப்பட்டது. 1480இல் உருசியாவின் மூன்றாம் இவான் உக்ரா ஆற்றின் கரையில் டாடார்களிடமிருந்து இறுதியாக விடுதலை பெற்றுத் தந்தார். மாஸ்கோ மீண்டும் உருசியாவின் அதிகார மையமானது. மூன்றாம் இவானின் கீழ் நகரம் உருசியப் பேரரசின் தலைநகரமாயிற்று. + +1571இல் கிரிமிய டாடார்கள் மாஸ்கோவைத் தாக்கி கொள்ளையடித்தனர்; கிரெம்ளினைத் தவிர அனைத்தையும் தீக்கிரையாக்கினர். + +1609இல் சார் மன்னர் நான்காம் வாசிலிக்கு உதவ கிரேட் நோவ்கோரொடிலிருந்து சுவீடியப் படை அணிவகுத்து வந்தது. 1610இல் மாஸ்கோவை அடைந்த இப்படை சாருக்கு எதிரான எழுச்சியை அடக்கியது; 1611இல் அவர்கள் வெளியேறிய பின்னர் போலந்து–லித்துவேனியா படையெடுத்தது. அப்போது குளுசினோவில் நடந்த போரில் உருசியர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 17வது நூற்றாண்டில் பல மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன. உருச���யாவின் சிக்கலான காலம் எனப்படும் இக்காலகட்டத்தில் போலந்து-லித்துவேனியாவிடமிருந்து விடுதலை (1612), உப்புக் கலவரம் (1648), செப்புக் கலவரம் (1662), மற்றும் 1682 ஆண்டு மாஸ்கோ கலவரங்கள் நடைபெற்றன. + +1570–1571, 1592 and 1654–1656 காலங்களில் பிளேக்கு கொள்ளைநோய்க்கு மாஸ்கோ ஆட்பட்டது. 1712இல் உருசியாவின் தலைநகர் மாஸ்கோவிலிருந்து பால்டிக் கடலோரத்தில் ரஷ்யாவின் முதலாம் பீட்டர் கட்டியிருந்த சென் பீட்டர்ஸ்பேர்க்குக்கு மாற்றப்பட்டது. 1771இல் ஏற்பட்ட பிளேக்கு தாக்குதல் மாஸ்கோவில் மட்டும் 100,000 உயிர்களை பலிகொண்டது. 1812இல் பிரெஞ்சு படையெடுப்பின்போது நெப்போலியனின் படைகள் செப்டம்பர் 14இல் நகரத்தை அண்மித்தபோது, மாஸ்கோ நகரத்தவர் தங்கள் நகருக்குத் தாங்களே தீ வைத்து விட்டு காலி செய்தனர். . நெப்போலியனின் படைகள், பசி, குளிர் மற்றும் உணவு வழங்கலில் தடை காரணமாக பின்வாங்க நேரிட்டது. உருசியக் குளிரில் பலர் மடிந்தனர்; அவ்வப்போது தாக்கிய உருசியப் படைகளால் தோற்கடிக்கப்பட்டனர்.இந்தப் போரில் 400,000 வீரர்கள் இறந்ததாக மதிப்பிடப்படுகின்றது. + +சோவியத் அரசு கைத்தொழில் பேட்டைகள் குடியிருப்பு பகுதிகளில் இருந்து பிரிக்கப்பட்டது. 90 வீதமான வீட்டுதொகுதிகள் 1955 க்குப்பின்னரே கட்டப்பட்டது. இவற்றில் பெரும்பாலான வீட்டுத்தொகுதிகள் பல அடுக்குகளை கொண்ட் அடுக்குமாடிகளாகவே காணப்பட்டது. இதன் மூலம் அரசு மக்களின் வீடு இல்லா பிரச்சனைக்கு தீர்வுகண்டது. 1992 ஜனவரியில் அரசு சிறு தொகையை செலுத்துவதன் மூலம் இந்த அடுக்கு மாடிகளை குடியிருப்பாளர் அதனை சொந்தமாக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. +இக்காலப்பகுதியிலேயே குறித்த மக்களிற்கான கடைகளின் எண்ணிக்கை மற்றும் வசதிகளின் அளவுகளிற்கான அரச கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டன. + +மாஸ்கோ சுமார் 8,304,600 அளவான மக்கள் தொகையை கொண்டுள்ளது. நகர மக்கள்தொகையில் பெரும்பான்மையாக ருசியர்களே உள்ளனர், இதைவிட யூதர்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர். கிறிஸ்தவர்களே பெரும்பான்மையாக இருந்த போதும் யூத மதம், இஸ்லாம் போன்ற மதங்களும் பின்பற்றப்படுகின்றன. + +1970-1990 இடைப்பட்ட காலத்தில் நகரின் சனத்தொகை வளர்ச்சி வீதம் சுமார் 1.21 இல் இருந்து 0.26 வீதமாக வீழ்ச்சி அடைந்தது. + +1939 – 1945 வரை சோவித் படைகளின் தலமைப்பீடமாக மாஸ்கோ விளங்கியது. 1941 அக்டோபரில் நாசி ஜேர்மன் ���ாஸ்கோ நகரை நெருங்கியபோதும் ருசியப்படைகளின் எதிர் தாக்குதலால் பின்வாங்கிச்சென்றனர். + + + + + +பால் (பானம்) + +பால் என்பது பாலூட்டி வகையைச் சேர்ந்த குட்டியீன்ற தாயின் (பெண் விலங்கின்) பால் சுரப்பிகளில் சுரக்கும் ஒரு சத்துள்ள திரவமாகும். இத்திரவம் பாலூட்டி விலங்குகளின் குட்டிகளுக்கு ஆரம்ப காலத்தில் ஊட்டச்சத்துக்கள் மிகுந்த உணவாக பயன்படுகிறது. குட்டிகள் மற்ற உணவுகளை செரிக்கும் திறன் பெறும் வரை தாயின் பாலே முதன்மை உணவாகும். தொடக்க காலத்தில் குட்டிக்கு கொடுக்கப் படும் மஞ்சள் நிறப்பால் சீம்பால் எனப்படுகிறது. இப்பால் தாயிடமிருந்து குட்டிக்குத் தேவையான நோய் எதிர்ப்பாற்றலைக் கொடுக்கின்றது. + +பால் மற்றும் பால் பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள் ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், உடன் லாக்டின் (புரதம்), லாக்டோசு (இரட்டைச்சர்க்கரை) உள்ளிட்டவை அடங்கியுள்ளன. + +பாலின் வேதியல் மாற்றங்களின் மூலம் பாலிலிருந்து பல உபப்பொருட்களைப் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதன் மூலம், தோய்த்து (அ) கட்டிபடச் செய்து தயிரைப் பெறலாம். பின்னர் தயிரைக் கடைந்து கொழுப்புச்சத்து நிறைந்த வெண்ணெயையும், பக்கப் பொருளாக நீர்த் தன்மையான மோரையும் பெறலாம். வெண்ணெயைக் காய்ச்சி நறுமணமும் சுவையும் மிக்க நெய்யையும் பெறலாம். பாலை நொதிக்கச் செய்வதின் மூலம் பாலாடைக்கட்டியையும் பெற இயலும். + +2011ஆம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி உலகின் பால் பண்ணைகளிலிருந்து சுமார் 730 மில்லியன் டன்கள், 260 மில்லியன் கறவைப் பசுக்களிடமிருந்து பால் உற்பத்தி செய்யப்படுகின்றது. உலகளவில் அதிகம் பால் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா ஆகும். உலகின் மொத்த பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 18.5% ஆகும். அதுமட்டுமல்லாது கொழுப்பு நீக்கிய பதனிட்ட பால் +பொடி ஏற்றுமதியிலும் இந்தியா முன்னிலை வகிக்கிறது. பாலும், அதன் உபப்பொருட்களின் உள்நாட்டு தேவை இந்தியாவில் அதிகரிப்பதால் எதிர்வரும் காலங்களில் பால் இறக்குமதி செய்யப்படலாம். ஐக்கிய அமெரிக்கா, இந்தியா, சீனா, மற்றும் பிரேசில் போன்றவை உலகின் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்யும் நாடுக��் ஆகும். 2016ஆம் ஆண்டு வரையிலும் சீனா, உருசியா நாடுகள் தங்கள் பால் தேவையில் தன்னிறைவு அடையும் வரையிலும் உலகின் பாலிறக்குமதி நாடுகளில் முன்னிலை வகித்தன. + +உலகளவில், பால் மற்றும் பால் பொருட்களை 6 பில்லியனுக்கும் அதிகமான நுகர்வோர்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் 750 மில்லியன் மக்கள் பால் உற்பத்தி சார்ந்த தொழிலில் ஈடுபடுகின்றனர். + +திருக்குறளில் பாலின் பண்பு ஒப்புமை : + +பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் +கலந்தீமை யால்திரிந் தற்று.-(குறள்: 1000) + +பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி +வாலெயிறு ஊறிய நீர்.-(குறள்: 1121) + +மனிதன் அல்லாத மற்ற பாலூட்டிகளிடத்திலிருந்து உணவுக்காக பால் பெறும் வழக்கம் புதிய கற்காலத்தில் அல்லது விவசாயம் தொடங்கிய காலகட்டத்தில் ஏற்பட்டது ஆகும். இதன் வளர்ச்சி கி.மு 7000 முதல் 9000 ஆண்டுகள் வாக்கில் தென்கிழக்கு ஆசியாவிலும், கி.மு 3500 முதல் 3000 காலங்களில் அமெரிக்காவிலும் ஏற்பட்டிருக்கின்றன. + +கறவை மாடுகள், எருமைகள், ஆடுகள் மற்றும் ஒட்டகம் ஆகியவற்றின் மூலம் ஆரம்ப காலங்களில் பால் எடுக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் விலங்குகளிலிருந்தே ஆரம்ப கால தெற்காசியாவில் பால் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கும் விலங்குகள் தோல் மற்றும் இறைச்சிக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. பின் கி.மு நான்கு முதல் பாலூட்டிகளை வளர்த்து அதனிடமிருந்து பால் பெறப்பட்டுள்ளது. கி.மு ஏழு ஆகிய காலங்களிளிருந்து பாலூட்டிகளிடமிருந்து பால் பெறும் வழக்கம் தெற்காசியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பரவியது. பின் அங்கிருந்து அரேபியா மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களுக்கு பரவியுள்ளது. + +வேளாண்மைப் பொருட்களின் பட்டியலிலுள்ள பாலானது மனிதனல்லாத கால்நடைகளிடமிருந்து அவற்றின் கருத்தரிப்பு கடந்த சமயம் முதல் கறந்து எடுக்கப்படுகிறது. காது மடல் வெளியில் இருக்கும், தோலின் மீது உரோமங்களையும் கொண்டு, பாலௌஉட்டும் சுரப்பிகளைக் கொண்ட அனைத்து உயிரினங்களும் பாலூட்டிகளாகும். இவற்றில் சில மிருகங்களின் பாலினையே மனிதன் உணவாகப் பயன்படுத்துகின்றான். + +பின் வரும் விலங்குகளின் பால் மனிதனால் உணவிற்குப் பயன்படுத்தப் படுகின்றது. + +பால் குழந்தைகளுக்கு இன்றியமையாத எளியவகை ஊட்டச்சத்தாகும். பால் ஒரு முக்கிய உணவுப்பொருளாகவும், ��ொழில்துறையில் பாலின் பங்கு அளப்பறியது. பால் உற்பத்தி, சேமிப்பு, சேகரித்தல் (அ) கொள்முதல், நுகர்தல், மற்றும் விற்பனை போன்றவை பற்றி அறிந்து பால்வளத்தைப் பெருக்கும் தொழில்நுட்பம் பால்வளத்தொழில் நுட்பம் ஆகும். + +உலகிலேயே அதிகப்படியான பால் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலிடம் வகிக்கின்றது. தற்போது வளர்ந்து வரும் நாடுகளில், பாலின் தேவை அதிகரித்துள்ள காரணத்தால், பால் உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. 2010 இல் மிகப்பெரிய அளவில் பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்களை தயாரிப்பதில் இந்தியா முதலாவதாகவும் அதன் பின் அமெரிக்காவும் அதனைத்தொடர்ந்து சீனாவும் பின் செருமனியும் பின் பிரேசிலும் அதன் பின் உருசியாவும் உள்ளன. 2011இல் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தமாக சுமார் 138 மில்லியன் டன்கள் அளவு பாலை உற்பத்தி செய்தன. +உலகம் முழுவதிலும் உள்ள முதல் 10 தரவரிசையிலுள்ள ஆடு, எருமை, மாட்டு பால் உற்பத்தி நிலவரம் 2013 வரையிலுமான தகவல் கீழுள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. + +பாலின் தரம் பொதுவாக அதிலுள்ள கொழுப்பு, தூய்மை, நுண்ணுயிர் நீக்கம், நீரின் அளவு, திரியும் காலம் ஆகியவற்றைக் கொண்டு அறியலாம். + +அமெரிக்காவில் பால் இரு வகையாக தரம் பிரிக்கப்படுகிறது. + + +இத்தோடல்லாது, நியூசிலாந்து நாட்டில் பாலில் மேலும் A1, A2, என்ற தரவகைகளும் உண்டு. ஏ1 பாலானது கலப்பின மாடுகளிலிருந்தும், ஏ2 பாலனது ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாட்டுப் பசுக்களிடமிருந்தும் பெறப்படுகின்றன. ஏ2 பசுக்களின் பால் அதிக நோயெதிர்ப்பு ஆற்றல் மற்றும் நோய் பெற்றிருப்பதாகவும் அறியப்படுகிறது. பாலின் புரத வகையுள் 80% கேசின் எனும் புரத்தால் ஆனது. ஏ2 பசுக்களின் பாலில் பீட்டா (β) கேசின் புரதத்தின் அமினோ அமிலமான புரோலின் உள்ளது. ஆனால் மரபுப்பரிமாற்றம் (அ) கலப்பினம் செய்யப்பட்ட ஏ1 பாலில் புரோலின் புரதம் ஹிஸ்டிடின் ஆக கலப்பினத்தால் மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் கலப்பினப் ப்சுக்களிடமிருந்து பெறும் பாலில் நோயெதிற்பாற்றல் குறைவாக உள்ளதாகவும் அறியப்படுகிறது. ஏ1, ஏ2 பால் தரப்பிரிப்பு சட்ட சிக்கல்களுக்கும், வர்த்தக ரீதியாக அமெரிக்கா, ரஸ்யா, மற்றும் நியூசிலாந்து நாடுகளில் அரசியலாக்கப் பட்டுள்ளது. + +பாலின் இ��ற்பியற் பண்பு நிலை அதன் அடர்த்தி மற்றும் எடையைப் பொருத்து திரவ கூழ்ம நிலை ஆகும். + +காரகாடித்தன்மைச் சுட்டெண் (அ) pH - 6.4 - 6.8 (மாற்றத்திற்குரியது) + +பாலில் உள்ள கொழுப்புகள் கொழுப்புப்படலம் சூழப்பட்ட முட்டை போன்ற அமைப்புகளால் ஆனது ஆகும். உட்பகுதி ட்ரைக்லிசரல்ஸாலும், வெளிப்படலம் புரதங்களுடன் கூடிய பாஸ்போலிபிடுகளாளேயும் உருவாக்கப்பட்டது ஆகும். கொழுப்பைக் கரைக்கக் கூடிய உயிர்ச்சத்துக்களான ஏ, டி, இ, கே ஆகியவை லினோலிக் மற்றும் லினோலினிக் ஆகிய அமிலங்களுடன் சேர்ந்து பாலின் கொழுப்பில் காணப்படுகின்றது. + +ஒரு லிட்டர் மாட்டுப்பாலில் முப்பது முதல் முப்பத்தியைந்து கிராம் புரதம் கலந்துள்ளது. பாலில் கலந்துள்ள முக்கிய புரதவகை கேசின் எனப்படும். + +பாலில் கால்சியம், பாஸ்பேட், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், சிட்ரேட், மற்றும் குளோரின் அனைத்தும் கிடக்கின்றன. பொதுவாக இவை அனைத்தும் பாலில் 5-40 mM அளவில் கலந்திருக்கின்றன. பாலில் உப்புக்கள் மற்றும் தாதுக்கள் அல்லாத வைட்டமின்களும் கலந்துள்ளன. வைட்டமின்கள் ஏ, பி6, பி 12, சி, டி, கே ஆகிய வைட்டமின்களும், மின், தயாமின், நியாசின், பயோட்டின், ரிபோபிளவின், ஃப்ளோட்ஸ் மற்றும் பேண்டோதெனிக் ஆகிய அமிலங்களும் பாலில் கலந்துள்ளன. + +பாலில் ஏராளமான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன.லாக்டோஸ், குளுக்கோஸ், காலக்டாஸ் மற்றும் பிற ஒலிகோசகரைடுகள் உள்ளன. இதில் லாக்டோஸ் பாலிற்கு இனிப்பு சுவையினைத் தருகின்றது. + +இவை அனைத்தும் தவிர கறக்கப்பட்ட பாலில் வெள்ளை இரத்த அணுக்கள், பால்மடிச்சுரப்பி செல்கள், பல்வேறு பாக்டீரியாக்கள் மற்றும் என்சைம்கள் காணப்படுகின்றன. + +பாலிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களே பால் உற்பத்திப் பொருட்களாகும்.இவை அனேகமாக பாலை பதப்படுத்தி செய்யப்படுகின்றது. +பால் உற்பத்திப் பொருட்களாவன: + + + + + + + +ந. மு. வேங்கடசாமி நாட்டார் + +நடுக்காவேரி முத்துச்சாமி வேங்கடசாமி நாட்டார் (ஏப்ரல் 2, 1884 - மார்ச் 28, 1944) 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த தமிழறிஞர். சிறந்த சொற்பொழிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். + +2-4-1884 அன்று ந. மு. வேங்கடசாமி நாட்டார், தஞ்சை மாவட்டம் திருவையாறு வட்டம் நடுக்காவேரி என்ற ஊரில் முத்துச்சாமி நாட்டார் தையலம்மாள் தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்தார். சிவப்பிரகாசம் என இவருக்கு முதலில் பெயரிடப்பட்டது. இளவயதில் இவருக்குத் தொடையின் மேற்புறத்தில் ஒரு கட்டி உண்டாகி வருத்தியது. அது ஆறினால் முடி எடுப்பதாக வேங்கடப் பெருமானை இவர்தம் பெற்றோர் வேண்டிக்கொண்டனர். அவ்வாறு நடந்துவிட, இவர் பெயரை வேங்கடசாமி என மாற்றினர். + +அக்கால வழக்குப்படி உள்ளூர் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்புவரை படித்தவர். நெடுங்கணக்கு இலக்கம், நெல்லிலக்கம், எண்சுவடி, குழிமாற்று ஆகிய கணக்குச் சார்பான சுவடிகளைப் படித்து முடித்த பின்னர் தம் தந்தையார் மூலம்ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வெற்றிவேற்கை, அந்தாதி, கலம்பகம் வகை நூல்களையும் படித்தார். "சாவித்திரி வெண்பா" எனும் நூலை இயற்றிய ஐ. சாமிநாத முதலியாரின் தூண்டுதலால் ஆசிரியர் துணையின்றி தானே தமிழ் இலக்கண இலக்கியங்களைப் பயின்று மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பிரவேசப் பண்டிதம் (1905), பால பண்டிதம்(1906), பண்டிதம் (1907)ஆகிய தேர்வுகளை எழுதி, முதல் மாணாக்கராகத் தேர்ச்சியுற்று வள்ளல் பாண்டித்துரைத் தேவர் அவர்கள் கையால் தங்கத் தோடாப் பெற்றார். + + +1912இல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார், நாட்டாரின் வீட்டுக்கு வந்துள்ளார். சிலப்பதிகாரத்தில் சில இடங்களில் பொருள் விளங்கவில்லை என்று கேட்டு விளங்கிக்கொண்டார். தொல்காப்பியத்திலும் சில ஐயங்களைத் தீர்த்துக்கொண்டார். சிறந்த நூலாசிரியராகவும், ஆராய்ச்சியாளராகவும் விளங்கிய நாவலர் அவர்கள் பெரும்புலவர் மு.இராகவய்யங்கார் எழுதிய "வேளிர் வரலாறு" என்ற நூலிலுள்ள பிழைகளைச் சுட்டிக் காட்டி தமிழறிஞர்களை ஏற்கச் செய்தார். + + +அகநானூறு + + + +மேலே கண்ட ஏழுநூல்களும் 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிநூற்கொத்து என்னும் தலைப்பில் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட் நிறுவனத்தால் தொகைநூலாக வெளியிடப்பட்டது + + +(1) அகத்தியர் தேவாரத் திரட்டு, (2)தண்டியலங்காரப் பழைய உரை, (3) யாப்பருங்கலக் காரிகை உரை ஆகியவற்றிற்குத் தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகத்தாரின் வேண்டுகோளுக்கிணங்க உரைத்திருத் தங்களும் எழுதினார். + +வேங்கடசாமி நாட்டாரின் சொற்பொழிவாற்றல் கண்டு வியந்த சென்னை மாகாணத் தமிழ்ச�� சங்கம் 24.12.1940இல் நடத்திய மாநாட்டில் இவருக்கு நாவலர் எனும் பட்டத்தை வழங்கியது. இவரின் சொற்பொழிவு என்பது புதியதொரு செய்தியோ, புதியதோர் ஆய்வுக் குறிப்போ இல்லாது அமையாதாதலின் அவரின் சொற்பொழிவைக் கேட்க அந்நாளில் பல தமிழன்பர்கள் தொலை தூரத்திலிருந்து நடந்தே வந்து கேட்டு இன்புறுவர். + +தமிழ் தமிழர் வளர்ச்சி குறித்து இன்றைக்கு எண்பது ஆண்டுக்கு முன்னரே தமிழுக்கெனத் தமிழ்ப் பல்கலைக் கழகம் வேண்டுமென்பதை உணர்ந்து உரைத்த பெருமகனார் நாவலர். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிப்படையாகக் கல்லூரி ஒன்றும் நிறுவப்பட வேண்டுமென்றும் அதனைத் திருவருள் கல்லூரி என்ற பெயரில் அமைக்கவும் 1922-23ஆம் ஆண்டுகளில் கல்லல் ஸ்ரீ குகமணிவாசக சரணாலயம் என்னும் காண்டீப விருது பெற்ற குன்னங்கோட்டை நாட்டார் மடத்தை நிறுவிய வேப்பங்குளம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் உதவியுடன் முயன்றார்.மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் தனது சொத்துக்களிலிருந்து 200 ஏக்கர் நிலம் கல்லூரி நிர்மாணிப்பதற்காக ஒதுக்கினார்.பிற்காலததில் அது பலரால் தையகப்படுத்தப்பட்டு விட்டது.அதற்கான ஆதாரம் மதுரகவி ஆண்டவர் சுவாமியடிகள் வாரிசுகளிடம் உள்ளது. + +1980களில் தோற்றுவிக்கப்பட்ட தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகம். + +கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள பேராசிரியர் பி.விருத்தாசலனார் அவர்கள் நாவலர் கனவு கண்ட திருவருள் கல்லூரியையும் அதே பெயரில் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் கபிலர் நகரில் தனித்தமிழ்க் கல்லூரியாக நிறுவி நடத்தி வருகிறார்கள். + +தமிழ் மொழி வளர்ச்சிக்கு வேற்று மொழிச் சொற்களை அப்படியே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலர் இக்காலத்தைப் போன்றே அக்காலத்திலும் கூறியுள்ளனர். இதைக் குறித்து நாட்டார், தம் கருத்தைத் தெளிவாக எடுத்து வைத்துள்ளார். + +"ஒருவனுடைய குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத வகையில் மிகுந்த பொருட் பற்றாக்குறை ஏற்படுவதாக வைத்துக்கொள்வோம். பற்றாக்குறையைப் போக்க உடனே நண்பர்களிடம் கடன் வாங்கிச் சமாளிக்கிறோம். நெருக்கடி நேரத்தில் கடன் வாங்குவதில் தவறில்லை. மதிப்புடனும் மானத்துடனும் வாழவேண்டும் என்று கருதுகிற ஒரு நன்மகன் நெருக்கடி நேரத்தில் கடன் வாங்கியதற்காக நன்றாக உழைத்து அதனால் கிட்டிய பொருளைக் கொண���டு வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பான். எதிர்காலத்தில் நெருக்கடி வந்தாலும் கடன் வாங்கத் தேவையில்லாதபடி பொருளாதார வளமுடையவனாகத் தன்னை உயர்த்திக்கொள்வான்.சான்றோன் ஒருவன் தன் குடும்ப வாழ்க்கையில் மேற்கொள்ளும் இத்தகைய நடைமுறையையே மொழி வளர்ச்சியிலும் பின்பற்ற வேண்டும். அறிவியல் நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் போது அந்நூல்களில் காணப்படும் கலைச் சொற்களுக்கு உரிய பொருளுடைய சொற்கள் தமிழில் உள்ளனவா என்று தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அவை போதாவிடத்து தமிழில் உள்ள வேர்ச் சொற்களிலிருந்து புதிய சொற்களைப் படைத்துக்கொள்ள வேண்டும். புதிய சொற்களைக் கண்டுபிடிக்கக் காலதாமதம் ஆகும்போது வேற்றுமொழிச் சொற்களையும் தமிழின் ஒலியியல் இயல்புக்கு ஏற்ப திரித்தே வழங்குதல் வேண்டும்.கல்வியிற் பெரியவராகிய கம்பர் இலக்குவன், வீடணன் என்றிவ்வாறாக வடசொல் உருவினைத் தமிழியல்புக்கு ஏற்ப மாற்றியுள்ளமை காண்க. கிறித்துவ வேத புத்தகத்தை மொழிபெயர்த்தோர், இயேசு, யோவான், யாக்கோபு என்றிங்ஙனம் தமிழியல்புக்கு ஏற்ப சொற்களைத் திரித்தமையால் அதன் பயிற்சிக்குக் குறைவுண்டாயிற்றில்லை. ஒவ்வொரு மொழியிலும் இவ்வியல்பு காணப்படும்.ஆகவே, பிற மொழிகளில் உள்ளவாறே அச்சொற்களைத் தமிழில் வழங்க வேண்டுமென்பது நேர்மையாகாது." + +இவருக்கு 60 ஆண்டு நிறைவதை ஒட்டி இவருக்கு மணிவிழா ஏற்பாடுகள் செய்துள்ளனர். அதற்கென மணிவிழாக் குழு ஒன்றும் அமைத்துள்ளனர். அதைக் கேள்வியுற்ற நாட்டார், ‘மணிவிழாக் குழு அமைத்திருக்கிறார்கள். கா.நமச்சிவாய முதலியார் போல எப்படி ஆகப் போகிறதோ’ எனக் கூறியிருக்கிறார். பெரும்புலவர் கா.நமச்சிவாய முதலியார், தம் மணிவிழா முடிவதற்கு முன்னரே மறைந்துவிட்டார். நாட்டாரின் மணிவிழாவை 8-5-1944 அன்று நடத்துவதாக மணிவிழாக் குழு முடிவு செய்திருந்தது. ஆனால், 28-3-1944 அன்றே நாட்டார் மறைந்தார். நாட்டாரய்யா அவர்களுக்கு நூற்றாண்டு விழா நடத்தி (1984இல்) அவர்க்குச் சிலை எடுக்க எடுத்த முயற்சிகள் தடங்கலும் தாமதமும் ஆகி, அவரின் பெயர்த்தி திருமதி அங்கயற்கண்ணி செயதுங்கன் அவர்களைத் தலைவராகக் கொண்ட அறக்கட்டளையினரால் (13.02.2005) அன்று நாட்டாரின் பெயரால் இயங்கும் கல்லூரி வளாகத்திலேயே சிலை நிறுவப்பட்டது. + +அண்மையில் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவ���்களின் படைப்புகளை நாட்டுடைமையாக்குவதாகத் தமிழக அரசு அறிவித்தது. இதன் பொருட்டு அவரின் குடும்பத்தாருக்கு ரூ. 5 லட்சம் பரிவுத் தொகையாக அளிக்கப்பெற்றது. இதே தருணத்தில் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு. ஆகியோரின் படைப்புகளும் நாட்டுடைமை ஆயின. 1984இல் நாட்டாரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பெற்றது. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை ரூ.25ஆயிரம் செலவு செய்து 21-4-84 அன்றும் 22-4-84 அன்றும் கரந்தைத் தமிழ்ச்சங்க வளாகத்தில் தமிழவேள் உமாமகேசுவரனார் நூற்றாண்டையும் (ஓர் ஆண்டுக்கு முன்பே நடந்திருக்க வேண்டியது) நாவலர் வேங்கடசாமி நாட்டார் நூற்றாண்டையும் நடத்தியது. + + + + +இந்தியப் பெருங்கடல் + +இந்தியப் பெருங்கடல் அல்லது இந்து சமுத்திரம் ("Indian Ocean") உலகின் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் இந்தியா உட்பட ஆசியா; மேற்கில் ஆப்பிரிக்கா; கிழக்கில் ஆஸ்திரேலியா; தெற்கில் தெற்குப் பெருங்கடல் (அல்லது, அன்டார்க்டிக்கா.) ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது. + +இக்கடல் அகுல்ஹஸ் முனையிலிருந்து தெற்காக ஓடும் 20° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்தும், 147° கிழக்கு தீர்க்க ரேகை மூலம் பெசிபிக் பெருங்கடலிலிருந்தும் பிரிக்கப்படுகின்றது. இதன் வடகோடி தோராயமாக பாரசீக வளைகுடாவிலுள்ள 30° வடக்கு அட்ச ரேகையாகும். அப்பிரிக்க மற்றும் ஆஸ்திரேலியாவின் தெற்கு முனைகளில் இந்தியப் பெருங்கடலின் அகலம் ஏறக்குறைய 10000 கி.மீ ஆகும். செங்கடல் மற்றும் பாரசீக வளைகுடாவை உள்ளடக்கிய இந்தியப் பெருங்கடலின் பரப்பளவு 73 556 000 ச.கி.மீ. ஆகும். சிறிய தீவுகள் கண்டங்களின் எல்லைகளை வரையறுக்கின்றன. மடகாஸ்கர், கொமொறோஸ், சிசிலீஸ், மாலத்தீவு, மோரீஷியஸ், ஆகிய தீவு நாடுகளை இக்கடல் உள்ளடக்குகிறது. இந்தோனேசியா இதன் ஒரு எல்லைப்பகுதியாக விளங்குகிறது. ஆசியா, ஆப்பிரிக்கா இடையே கடவுப் பாதையாக இதை பயன்படுத்துவதில் சச்சரவுகள் இருந்து வந்திருக்கிறது. + +ஆனால் 1800 களின் துவக்க காலம் வரை எந்த நாடுகளும் இக்கடல் பகுதியில் வெற்றிகரமாக அதிகாரம் செலுத்தவில்லை. அதன் பின் இக்கடலை ஒட்டிய பெரும்பான்மை நிலப���பரப்புகளை ஆங்கிலேயர்கள் கட்டுப்படுத்தினர். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் அதிகாரம் செலுத்தி வந்தன. + +ஆப்பிரிக்கா, இந்தியா, அன்டார்டிக தட்டுகள் இந்திய பெருங்கடலில் ஒன்று சேர்கின்றன. இவைகளின் சந்திப்பு மும்பையின் அருகிலுள்ள செங்குத்தான கண்டத் திட்டிலிருந்து, தண்டுப்பொருத்து தெற்காக ஓடும் தலைகீழ் 'Y' வடிவக் கடல்-நடு மலைமுகட்டின் பிரிவுகளால் அடையாளம் காட்டப்படுகிறது. இவற்றால் உருவாகும் கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு படுக்கைகள் மேலும் சிறிய படுக்கைகளாக ஆழ்-கடல் இடைவரைமேடுகளால் பிரிக்கப்படுகின்றன. இக்கடலின் கண்டவிறுதிப்பாறைகள் குறைவான அகலமுடையனவாக இருக்கின்றன. இதன் சராசரி அகலம் 200 கி.மீ ஆகும். ஒரு விதிவிலக்காக ஆஸ்திரேலியாவின் மேற்கு கடற்கரையில் இதன் அகலம் 1000 கி.மீ - ஐ தாண்டுகிறது. + +இக்கடலின் சராசரி ஆழம் 3890 மீ (12,760 அடி). இந்து மகா சமுத்திரத்தின் மிக ஆழமான பகுதி 50° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்காக உள்ள ஜாவா அகழியாகும். இதன் ஆழம் 7450 மீ, அதாவது 24,442 அடியாக கணக்கிடப்படுகிறது. இப்படுக்கையின் 86% பீலாஜிக் படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. ஏனைய 14% சதம் பகுதிகள் மட்படிமங்களால் மூடப்பட்டிருக்கின்றன. தவிர தென் பகுதிகள் பனிப்படலங்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கின்றன. + +நில நடுக்கோட்டின் வடபகுதியின் தட்பவெப்ப நிலை பருவக்காற்று முறையால் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை வடகிழக்கு காற்று கடுமையாக வீசும். மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை தெற்கு மற்றும் மேற்கு காற்றின் ஆதிக்கம் நீடிக்கும். அரபிக்கடலில் ஏற்படும் வன்மையான பருவக் காற்று இந்தியத் துணைக்கண்டத்துக்கு மழையை வரவழைக்கிறது. தென்னக அத்தகோளத்தில் காற்று மென்மையாக வீசினாலும் வேனில் காலங்களில் மொரீஷியஸ் பகுதியில் கடுமையான காற்று வீசுகிறது. + +இந்திய பெருங்கடலில் கலக்கும் நதிகளில் சாம்பெசி, சட்-அல்-அரபு, சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா, அயேயர்வாடி நதி, ஆகியன முக்கியமானவை. நீர் ஓட்டங்கள் பெரும்பாலும் பருவக்காற்றினாலேயே கட்டுப்படுத்தப்படுகின்றன. இரண்டு பெரிய வட்ட- நீரோட்டங்கள், ஒன்று வடவத்தகோளத்தில் கடியாரப் பாதையாகவும் (வலமிருந்து இடம்) மற்றொன்று நில நடுக்கோட்டின் தெற்கில் எதிர்-கடி���ாரப் பாதையாகவும் (இடமிருந்து வலம்), ஓடும் இவை இரண்டும் இக்கடலின் முக்கிய கடலோட்ட வரைவுகளாகும். + +குளிர் கால பருவாக்காற்றின் போது, வடக்கு நீரோட்டங்களின் நிலை எதிர்பதமாக இருக்கும். ஆழ்கடல் ஓட்டங்கள் பெரும்பாலும் அட்லாண்டிக் பெருங்கடல், செங்கடல், அன்டார்டிக் நீரோட்டம், ஆகிய நீர் உட்புகல்களாலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. 20° தெற்கு அட்ச ரேகைக்கு வடக்கில் குறைந்தபட்ச மேல்பரப்பு வெப்பநிலை 22° செல்ஷியஸாக (72 °F), இருக்கும் அதேவேளையில், கிழக்கில் 28° செல்ஷியஸை (82 °F) தாண்டுகிறது. 40° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் வெப்பநிலை சட்டென்று இறங்குகிறது. மேற்பரப்பு நீரின் உப்புத்தன்மை 1000 - க்கு 32 முதல் 37 பகுதிகள். இது அரபிக்கடல் மற்றும் தெற்கு அப்பிரிக்காவுக்கும் தென்மேற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடைப்பட்ட ஒரு மண்டலத்தில் காணப்படும் மிகப் பெரிய அளவாகும். பனித் தொகுதிகள் மற்றும் பனிப் பாறைகள் 65° தெற்கு அட்ச ரேகைக்கு தெற்கில் ஆண்டு முழுவதும் காணப்படுகிறது. பொதுவாக இவைகளின் புழக்கத்தின் வடக்கு எல்லை 45° தெற்கு அட்ச ரேகையாகும். + +மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, கிழக்காசியா ஆகிய பகுதிகளை அமேரிக்கா மற்றும் ஐரோப்பாவுடன் இணைக்கும் முக்கிய கடல்ப்பாதையை இந்தியப் பெருங்கடல் தந்திருக்கிறது. எரிஎண்ணை வர்த்தகத்தில், குறிப்பாக இந்தோனேசியா, பாரசீக வளைகுடா பகுதிகளின் எண்ணைக் கிணறுகளிலிருந்து உலகின் மற்ற பகுதிகளுக்கு பங்கிடப்படும் எண்ணைப்பொருட்கள் இப்பாதை மூலம் கொண்டு செல்லப்படுவதால் , இக்கடற்பாதைகளுக்கு பெட்ரோலிய வர்த்தகத்தில் முக்கிய பங்கு உண்டு. பெரும்பகுதி ஹைட்ரொ-கார்பன்கள் சவுதி அரேபியா, ஈரான், இந்தியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில்; இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கரைப்பகுதிகளிலிருந்தே பூமியிலிருந்து எடுக்கப்படுகின்றன. மேலும் உலகின் 40% எரிஎண்ணேய் இக்கடலின் கரைப்பகுதிகளிலிருந்து எடுக்கப்படுவதாக கணக்கிடப்படுகிறது. தாது வளம் மிக்க கடற்கரை மணல்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அதிகமாக காணப்படும் படிமங்கள் ஆகியன இக்கடலை ஒட்டிய நாடுகளான இந்தியா, தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா, இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகளால் முழுமூச்சில் கைவசப்படுத்தப்படுகின்றன. + +இக்கடலின் வெப்பத்தன்மை காரணமாக பைட்டொபிளாங்டன் உற்பத்தி; சில வடபகுதிகளின் ஓரம் மற்றும் சில இதர பகுதிகள் நீங்கலாக பெருமளவில் குறைகின்றன. அதனால் இக்கடலில் உயிர்வாழ்க்கை பெருமளவில் குறைகின்றன. இக்கடலிலிருந்து கிடைக்கும் மீன் வகைகள் இதை ஒட்டிய நாட்டுகளின் பயன்பாட்டுக்கும் ஏற்றுமதிக்கும் பெருமளவில் பயன்படுகின்றன. மேலும் ரஷ்யா, ஜப்பான், தென் கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் மீன்பிடிக் கப்பல்களும் (குறிப்பாக சில வகை மீன்களுக்காக) இக்கடல் பகுதியை முற்றுகை இடுகின்றன. + +உலகின் மிகப் பழமையான நாகரீகங்களான சுமேரியா, எகிப்து, சிந்து வெளி ஆகிய டைக்ரிஸ்-யூப்ரடெஸ், நைல், சிந்து நதிகளின் சமவெளிகளில் உருவான நாகரீகங்களும் தென்கிழக்கு அசியாவில் உருவான நாகரீகமும் இந்தியப் பெருங்கடலின் சுற்று வட்டார பகுதிகளிலேயே வளர்ச்சியடைந்தன. புன்ட் பகுதிக்கு (தற்போதைய சொமாலியாவாக கருதப்படுகிறது) செல்லும் பொருட்டு இக்கடலில் அனுப்பப்பட்ட எகிப்தியர்களின் முதல் தலைமுறையினரின் (ஏறக்குறைய கி.மு.3000) மாலுமிகள் அனுப்பப்பட்டார்கள். பின்னர், திரும்பச்சென்ற கப்பல்கள் நிறைய தங்கமும், நறுமணப்பொருட்களும் கொண்டு சென்றார்கள். அறியப்பட்டவைகளுள் மிகப்பழமையான கடல் வணிகம், மெசப்பொட்டாமியாவுக்கும் சிந்து வெளிக்குமிடையே இந்தக் கடல் வழியாகத்தான் நடந்தது. பொனீசியர்கள் ஏறக்குறைய கி.மு. 3000 அளவில் இப்பகுதியில் கால்வைத்திருக்கலாம். ஆனால் குடியேற்றங்கள் இல்லை. + +இந்து மகா சமுத்திரம் அமைதியாகவும், அதனால் வர்த்தகத்துக்கு ஏற்ற இடமாக அட்லாண்டிக் மற்றும் பெசிபிக் கடல்களுக்கு முன்பே திகழ்ந்தன. சக்திவாய்ந்த பருவக்காற்றுகள், அப்பருவத்தின் முதல் கட்டத்தில் கப்பல்களை எளிதில் மேற்கு நோக்கி செலுத்தவும், பின் சில மாதங்கள் கழித்து அடுத்தகட்டத்தில் மீண்டும் கிழக்குக்கு திரும்பவும் உறுதுணையாக இருந்தன. இதுவே இந்தொனேசிய மக்கள் இந்து சமுத்திரத்தை கடந்து மடகாஸ்கர் பகுதிகளில் குடியேற ஏதுவாக அமைந்தது. + +கி.மு. முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் (Cyzicus) சிசீக்கஸ் இன் (Eudoxus) யுடோக்சஸே இந்தியக் கடலைக் கடந்த முதல் கிரேக்கராவார். ஏறக்குறைய இதே காலகட்டத்தில் கிப்பாலஸ் அரேபியாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடிப் பாதையை கண்டுபிடித்தார் என கருதப்படுகிறது. முதல் மற்றும் இரண்டா��் நூற்றாண்டுகளில் ரோமர், எகிப்தியர் மற்றும் தென் இந்தியாவின் தமிழ் அரசாட்சிகளான சேர சோழ பாண்டியர்களுக்கிடையில் ஆழ்ந்த வர்த்தக உறவுகள் வளர்ந்தது. இந்தொனேசிய மக்களைப்போன்று மேற்கத்திய மாலுமிகளும் இந்த பருவக்காற்றை பயன் படுத்தி இந்து மகா சமுத்திரத்தை கடந்தனர். மேலும் ""தி பெரிப்லஸ் ஆப் தி எரித்ரயென் சீ" " என்ற புத்தகம் கி.பி 70 கால கட்டத்திலிருந்த இக்கடல் பாதையையும், துறைமுகங்களையும், வர்த்தகப் பொருட்களையும், இவை சார்ந்த செய்திகளையும் விவரிக்கிறது. + +வாஸ்கோ-ட-காமா 1497-ல் குட் கோப் முனையைச் சுற்றி இந்தியாவுக்கு கப்பலில் வந்தார். இதைச் செய்யும் முதல் ஐரோப்பியர் இவராவார். அதன் பின் ஐரோப்பிய கப்பல்கள் பெரும் ஆயுதங்களுடன் வேகமாக வர்த்தகத்தை பெருக்க வந்தது. பின்னர் டச்சு கிழக்கிந்தியா கம்பெனி +(1602-1798) இந்தியப் பெருங்கடலை ஒட்டிய கிழக்கத்திய நாடுகளுடனான வர்த்தகத்தின் பெரும்பான்மை சக்தியாக திகழந்தது. அதன் பின் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் இப்பகுதிகளில் தங்கள் கம்பெனிகளை நிறுவினர். பின்னர் ஏறக்குறைய 1815 - ல் ஆங்கிலேயர்கள் கைவசமாகியது. + +1869 ஆம் ஆண்டு சூயஸ் கால்வாய் திறக்கப்பட்ட பின்னர் ஐரோப்பியர்களுக்கு கிழக்கு மீதான ஆவல் அதிகரித்தது. ஆனால் யாரும் வர்த்தகத்தில் பெருமளவு வெற்றிகொள்ள முடியவில்லை. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் ஆங்கிலேயர்கள் இப்பகுதியிலிருந்து பின்வாங்கிய பின்னரும் அத்தகைய ஒரு ஆதிக்கத்தை இந்துக் கடலின் பால் இந்தியா, யு.எஸ்.எஸ்.ஆர், ஐக்கிய அமேரிக்கா, ஆகிய நாடுகளால் செலுத்த முடியவில்லை. இருந்தபோது யு.எஸ்.எஸ்.ஆரும், ஐக்கிய அமேரிக்காவும் இக்கடல் பகுதிகளில் கப்பல்ப் படை தளங்களை அமைக்க பல முயற்சிகள் எடுத்தன. ஆனால் இந்தியக் கடலை ஒட்டிய வளரும் நாடுகள் இந்தியக் கடற் பகுதியை 'அமைதிப் பகுதியாக' ஆக்க முயன்றன. இதன் மூலம் இக்கடலை அனைவரும் சாதாரணமாக வர்த்தகத்துக்கு பயன்படுத்த முயர்ச்சித்தன. இருந்தாலும் இக்கடலின் மையப்பகுதியில் Diego Garcia என்னும் இடத்தில் ஆங்கிலேயர்களும், ஐக்கிய அமேரிக்காவும் தற்போதும் கப்பற்படை தளம் அமைத்துள்ளது. + +மேலும் டிசம்பர் 26, 2004 அன்று சுமத்திரா தீவுக்கு அருகாமையில் கடலுக்குள் ஏற்பட்ட நில நடுக்கம் காரணமாக எழுந்த சுனாமிப் பேரலை இந்து மகா சமுத்திரத்தை ���ட்டிய அனைத்து நாடுகளையும் தாக்கியதுடன் 226,000 பேரின் உயிரையும் பத்து லட்சம் பேரின் வீடுகளையும் நாசம் செய்தது. + +சர்வதேச நீர் பரப்பாராய்ச்சி அமைப்பு இந்தியப்பெருங்கடலின் தென் பகுதியப் பிரித்து அன்டார்டிக் கடலை உருவாக்கியது. இப்புதிய கடல் அன்டார்டிகாவின் கடற்கரையிலிருந்து துவங்குகிறது. இது அன் டார்டிகா ஒப்பந்தத்தோடு இணைந்ததாகும். இதன் பிறகும் இந்தியப் பெருங்கடல் உலகின் ஐந்து கடல்களில் மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாக விளங்குகிறது. + +மேலும் அந்தமான் கடல், அரபிக் கடல், வங்காள விரிகுடா, Great Australian Bight, ஏதென் வளைகுடா, ஓமன் வளைகுடா, லட்சத்தீவு கடல், மொசாம்பிக் கடல், பாரசீக வளைகுடா, செங்கடல், மலாக்கா நீரிணைவு, மற்றும் பல துணை நீர் நிலைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்து மகா சமுத்திரம் 66,526 கி.மீ கரைப்பகுதியை உடையதாகும். + + + + + + + +திருகோணமலை கோட்டை + +திருகோணமலை கோட்டை ("பிரட்ரிக் கோட்டை") திருகோணமலை நகரின் வடக்கே அமைந்துள்ளது. இந்தக் கோட்டை போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது. பின்னர் ஒல்லாந்தர் (பிரான்சியர் இதனை பிடித்து மீண்டும் ஒல்லாந்தரிடம் ஒப்படைத்தனர்), மற்றும் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. இந்தக் கோட்டையினுள்ளேயே புகழ் பூத்த திருக்கோணேச்சர ஆலயம் அமைந்துள்ளது. தற்போது இலங்கை இராணுவதின் (படையாட்களின்) பலமான முகாமாக விளங்குகின்றது. தற்போது இங்கு கட்டுப்பாடுகள் இன்றி சென்று வர முடியும். + +திருக்கோணேச்சரத்துக்குப் போகும் பாதையும் கோட்டைக்குப் போகும் பாதையும் ஒன்றாகும். + +1623 ல் இந்தக் கோட்டை போர்த்துக்கேயரால் கட்டப்பட்டது. 1639 ல் பேர்த்துக்கேயர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதன் பின்பு மீள்கட்டுமானம் போன்ற பெருமளவான மாற்றங்களுக்குக் கோட்டை உள்ளானது. 1672 இல் பிரான்சியர் இந்தக் கோட்டையைத் தாக்கிக் கைப்பற்றினர். + +ஜனவரி 8 , 1782 இல் பிரித்தானியர் இந்தக் கோட்டையைக் கைப்பற்றினர். இதே ஆண்டு ஆகஸ்ட் 29 ல் பிர்ரான்சியர் (பிரெஞ்சுக்காரர்) இந்தக் கோட்டையை மீண்டும் கைப்பற்றினர். 1783 ல் பிரான்சு இதை najla கையளிக்க பிரித்தானியர் ஒல்லாந்தரிடம் கையளித்தனர். இருந்தாலும், 1795 இல் பிரித்தானியர் மீள இந்தக் கோட்டையைக் கைப்பற்றியதுடன் 1948 ல் இலங்கை விடுதலை அடையும் வரை தமது க���்டுப்பாட்டில் வைத்திருந்தனர். பலரும் இந்த பிரட்ரிக் கோட்டையில் கவனம் செலுத்தக் காரணமாக அமைந்தது திருகோணமலையின் இயற்கைத் துறைமுகமே. + + + + +இலங்கைச் சோனகர் + +இலங்கைச் சோனகர் அல்லது இலங்கை முசுலிம்கள் ("Sri Lankan Moors") எனப்படுவோர் இலங்கையின் மூன்றாவது பெரிய இனக்குழு ஆவர். நாட்டின் மக்கள்தொகையில் இவர்கள் 9.23% ஆவர். முக்கியமாக இசுலாமிய சமயத்தைப் பின்பற்றும் இவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மொழியைத் தமது தாய்மொழியாகக் கொண்டவர்கள். +இவர்கள் 8 முதல் 15 அம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கையில் குடியேறிய அராபிய வணிகர்களின் வழித்தோன்றல்கள் என்ற கருத்து நிலவுகின்றது. இவர்களின் பேச்சு, எழுத்து வழக்கில் பல அரபுச் சொற்கள் கலந்துள்ளன. + +இலங்கையில் சோனகர் செறிந்து வாழும் இடங்களில் கிழக்கு மாகாணமே முக்கியமானது. இம்மாகாணத்தில் அம்பாறை மாவட்டம், திருகோணமலை மாவட்டத்திலுள்ள மூதூர் பகுதி, மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகள் ஆகியவற்றில் இவர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மேலும் மன்னார், புத்தளம், கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, மாத்தறை, கம்பகா மாவட்டங்களிலும் இவர்கள் பெருமளவில் வாழ்கிறார்கள். இலங்கையின் இன்றைய கரையோர நகரங்களிற் பல, (எ.கா- கொழும்பு, காலி) தொடக்கத்தில் சோனக வணிகர்களின் வர்த்தகக் குடியேற்றங்களாகவே இருந்ததாகக் கருதப்படுகின்றது. இலங்கையில் காணப்பட்ட இனப்பிரச்சினையின் போது முஸ்லிம்கள் 1990 ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களான யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.இலங்கையின் வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றுவதில், வடக்கு மாகாணசபையே முன்னின்று செயற்பட வேண்டும் என்று தமிழ் முஸ்லிம் மக்களின் நல்லுறவுக்கான அமைப்பு கோரிக்கை முன் வைத்துள்ளது. + + + + +இலங்கைத் தமிழர் + +இலங்கையில், இலங்கைத் தமிழர் ("Sri Lankan Tamils") என்னும் தொடர், இலங்கையைத் தமது மரபுவழிப் பிறப்பிடமாகக் கொண்டு வாழும் தமிழர்களைக் குறிக்கப் பயன்பட்டு வருகிறது. இலங்கையின் உத்தியோக மு��ை ஆவணங்களிலும் இந்தப் பொருளிலேயே இத் தொடர் பயன்பட்டு வருகிறது. இவர்களை இலங்கை வம்சாவழித் தமிழர் எனவும் குறிப்பிடுவது உண்டு. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் கோப்பி, தேயிலை தோட்டங்களில் பணி புரிதற்பொருட்டு தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்து குடியமர்த்தப்பட்ட இந்திய வம்சாவழித் தமிழரிடம் இருந்து வேறுபடுத்தி காட்டும் பொருட்டே வம்சாவழித் தமிழர் எனும் தொடர் பயன்படுத்தப்பட்டது. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பல் நூற்றாண்டுகளாகப் பெரும்பான்மையினராக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழர் இலங்கையின் பிற பகுதிகளிலும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர். + +பொதுப் பொருளில் இலங்கையில் குடியுரிமையுடைய, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவருமே இலங்கைத் தமிழர் ஆதல் வேண்டும் எனினும், இலங்கையைப் பொறுத்தவரை, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை முசுலிம்கள் மொழிவழியே தம்மை அடையாளம் காண்பதில்லை. அவர்களை இலங்கை முசுலிம்கள் என வகைப்படுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் தமிழ் பேசும் முசுலிம்களும், முன்னர் குறிப்பிட்ட அண்மையில் இலங்கையைத் தாயகமாக ஏற்றுக்கொண்ட மலையகத் தமிழர்களும், இலங்கைத் தமிழர் என்னும் வகைப்பாட்டினுள் அடங்குவது இல்லை. பிரதேசம், சாதி, சமயம் முதலியன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், இலங்கைத் தமிழரிடையே வேறுபாடுகள் காணப்பட்டாலும், மொழியாலும், வேறு பல அம்சங்களின் அடிப்படையிலும் ஒரே குழுவாக இலங்கையின் பிற இனத்தவரிடம் இருந்து தனித்துவமாகக் காணப்படுகின்றனர். + +1948ல் இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்ற காலத்தில் இருந்து, தமிழருக்கும் சிங்களவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. அரசியல் உரிமைக்கான அமைதிவழிப் போராட்டங்கள் 1983க்குப் பின்னர் உள்நாட்டுப் போராக மாறியதால், இலங்கைத் தமிழர் பலர் இலங்கையை விட்டு வெளியேறி, இந்தியா அமெரிக்கா, கனடா, ஆசுத்திரேலியா ஆகிய நாடுகளிலும், பல ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ இலங்கைத் தமிழரில் மூன்றிலொரு பங்கினர் இலங்கையை விட்டு வெளியேறிப் பிற நாடுகளில் வாழ்கின்றனர். 800,000க்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் இவ்வாறு வெளிநாடுகளில் வாழ்வதாகச் சில கணிப்புகள் தெரிவிக்கின்றன. தவிர உள்நாட்டுப் போரில் நூறாயிரத்துக்கு��் மேற்பட்ட இலங்கைத் தமிழர் உயிரிழந்தும் உள்ளனர். 2009 ஆம் ஆண்டின் இறுதிக்கட்டப் போர் இலங்கைத் தமிழரின் பாரிய உயிரிழப்புகளுக்கும் உடமை இழப்புகளுக்கும் மத்தியில் இலங்கை அரசாங்கத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துப் போரை நிறுத்திய போதிலும், இலங்கைத் தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளன. + +இலங்கைத் தமிழர்களுடைய தோற்றம் குறித்து அறிஞர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. முறையான சான்றுகள் இல்லாததே இதற்கு முக்கியமான காரணம். இன உணர்வுகளின் பாற்பட்ட அரசியல் பின்னணியில் அறிஞர்கள் நடு நிலை நின்று சிந்திக்கத் தவறுவதும் இன்னொரு குறிப்பிடத்தக்க காரணம். இது தவிர அரசியல் காரணங்களுக்காக இலங்கைத் தமிழர் பகுதிகளில் முறையான அகழ்வாராய்ச்சிகளுக்கு இலங்கை அரசாங்கங்கள் இடந்தருவதில்லை என்ற குற்றச் சாட்டுகளும் உள்ளன. இலங்கையின் வரலாறு கூறும் பண்டைய நூலான மகாவம்சம் இலங்கை வம்சாவழித் தமிழருடைய தோற்றம் பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் எதையும் தரவில்லை. அடிப்படையில் மகாவம்சம் பௌத்த மதத்தையும், சிங்களவர் பற்றியுமே கவனம் செலுத்தியுள்ளது. அதன் மேற்படி குறிக்கோளுடன் சம்பந்தப்பட்ட அல்லது பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் மட்டுமே தமிழர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சிங்கள இனத்தின் ஆதிபிதாவாக மகாவம்சம் குறிப்பிடும் விசயன் காலத்தில் கூட திருமணத் தொடர்புகள் காரணமாகப் பாண்டிநாட்டிலிருந்து பெருமளவில் தமிழர்கள் இலங்கைக்கு வந்திருப்பதாகத் தெரிகிறது. எனினும் இவர்கள் சிங்கள இனத் தோற்றத்தின் ஒரு பகுதியாக விளங்கியிருப்பார்கள் என்று கருதுவதே பொருத்தம். எனினும் இத்தகைய குறிப்புக்களிருந்து, இலங்கை பற்றித் தமிழ்நாட்டினருக்கு நல்ல பரிச்சயம் இருந்ததென்பதுவும், இலங்கைத் தீவுக்கும் தமிழ்நாட்டுக்கும் இடையிலான தொடர்புகள் மக்கள் இலகுவாகப் போக்குவரத்துச் செய்யக் கூடிய அளவில் இருந்தது என்பதையும் தெளிவாக்குகின்றது. + +இது மட்டுமன்றிக் கிறித்துவுக்கு முற்பட்ட காலங்களிலிருந்தே அனுராதபுரத்தைக் கைப்பற்றிப் பல தமிழர்கள் ஆண்டிருப்பதும் மகாவம்சம் தரும் குறிப்புக்களிருந்து அறியவருகின்றது. பண்டைக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுகமாக விளங்கிய மாதோட்டத்தில் தமிழ்நாட்டு வணிகர்கள் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கக் கூடும் என்பதும் பல ஆராய்ச்சியாளர் கருத்து. கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி பத்தாம் நூற்றாண்டு வரை இலங்கையின் தலைநகரமாயிருந்த அநுராதபுரத்தில் மிக முற்பட்ட காலங்களிலேயே தமிழ் வணிகர்களும், சிற்பிகளும் இருந்ததற்கான ஆதாரங்கள் உண்டு. + +கிறித்துவுக்கு முற்பட்ட நூற்றாண்டுகளிலேயே இன்றைய யாழ்ப்பாணக் குடாநாட்டுப் பகுதிகளில் தமிழர் ஆட்சி நிலவியிருக்கக் கூடுமென்பது யாழ்ப்பாணச் சரித்திரம் எழுதிய செ. இராசநாயக முதலியார் அவர்களுடைய கருத்து. எனினும், இதற்கான ஆதாரங்கள் போதிய அளவில் கிடைக்கவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இலங்கையில் தமிழர் பரவலாக வாழ்ந்து வந்தபோதிலும், அனுராதபுரம், பொலநறுவை ஆட்சிகளின் வீழ்ச்சியுடன் சிங்களவர் அதிகாரம் தெற்கு நோக்கி நகர்ந்தபோது நாட்டில் புவியியல் ரீதியான தமிழ், சிங்கள முனைவாக்கம் தீவிரப்பட்டிருக்கக் கூடும். இதுவே 12ஆம் நூற்றாண்டளவில் யாழ்ப்பாண அரசின் தோற்றத்துக்கும் வித்திட்டது எனலாம். + +இதன் பின்னரும் பெருமளவில் தமிழர் குடியேற்றம் இடம் பெற்றது பற்றிய செய்திகளைப் பிற்காலத்தில் யாழ்ப்பாண வரலாறு கூற எழுதப்பட்ட வையாபாடல், யாழ்ப்பாண வைபவமாலை போன்ற நூல்களிற் காணலாம். ஆரம்பத்தில் வன்னியர் குடியேற்றமும், தொடர்ந்து வேளாளர் குடியேற்றங்களும் ஏற்பட்டதாக இந்நூல்கள் மூலம் தெரிய வருகின்றது. இலங்கையின் கிழக்குக் கரையோரப் பகுதிகளிலும் பெருமளவு தமிழர் குடியேற்றங்கள் இருந்தன. திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற இடங்களில் இடம்பெற்ற குடியேற்றங்கள் பற்றி வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. + +இலங்கையில் வரலாற்றுக்கு முந்திய காலம் தொடர்பில் பல அகழ்வாய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இலங்கையின், வடக்கு, வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த கற்கால மனிதர்கள் பயன்படுத்திய கருவிகளும், தமிழ்நாட்டில் குறிப்பாகத் திருநெல்வேலிக் கரையோரம் கண்டுபிடிக்கப்பட்ட கருவிகளும் ஒரே தன்மையானவையாகக் காணப்படுகின்றன. தமிழகத்தில் காணப்பட்ட பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அடக்கக் களங்களை ஒத்த களங்கள் இலங்கையின் வடமேற்குக் கரையோரம் பொம்பரிப்பிலும், கிழக்குக் கரையோரம் கதிரவெளியிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்ககாலப் பாண்டிய இராச்சியப் பகுதியில் காணப்படும் அடக்கக் களங்களோடு குறிப்பிடத் தக்க வகையில் ஒத்துள்ள இக்களங்கள் முறையே கிமு 5ஆம் நூற்றாண்டையும், கிபி 2 ஆம் நூற்றாண்டையும் சேர்ந்தவை. இவற்றோடு பெருங்கற்காலப் பண்பாட்டுக்குரிய அம்சங்கள் இலங்கையில் மன்னார், கந்தரோடை, ஆனைக்கோட்டை, வேலணை, காரைதீவு, புத்தளம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பூநகரி, முல்லைத்தீவு, வவுனியா, மாமடு, பறங்கியாறு, அனுராதபுரம் ஆகிய இடங்களிலும் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் அரிக்கமேட்டில் காணப்பட்டதை ஒத்த கிமு 1300ஐச் சேர்ந்த மட்பாண்ட வரிசைகள் யாழ்மாவட்டத்தில் கந்தரோடையில் கண்டறியப்பட்டுள்ளன. + +யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் தொல்லியலாளர் கா. இந்திரபாலாவின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அகழ்வாராய்ச்சிக் குழுவினர் நடத்திய ஆய்வில் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த மனிதன் ஒருவனுடைய புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டது. அக்குழியில் காணப்பட்ட முத்திரை ஒன்றில் இரண்டு வரியில் எழுத்துக்கள் காணப்பட்டன. ஒரு வரி தமிழ் பிராமியிலும், மற்றது சிந்துவெளிக் குறியீடுகளை ஒத்தும் அமைந்திருந்தன. இதை "கோவேந்த", "கோவேதன்", "கோவேதம்", "தீவுகோ" எனப் பல்வேறு வகையில் திராவிட மொழிச் சொல்லாக வாசித்துள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டு இது ஒரு தலைவனுடைய புதைகுழியாக இருக்கலாம் என்கின்றனர். +வேலணை சாட்டிப் பிரதேசத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியல் பிரிவினால் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்ட மட்பாண்டங்களும் மனித எலும்புகளும் சாட்டியை அண்டிய பிரதேசத்தில் முதற் சங்ககாலம் தொட்டு நாகரீகமடைந்த மக்கள் வாழ்ந்தாக அறியமுடிகின்றது. + +இவற்றை அடிப்படையாகக் கொண்டு, அக்காலத்தில் இலங்கையில் வாழ்ந்த மக்கள் தென்னிந்தியாவில் வாழ்ந்த திராவிட மொழி பேசிய மக்களின் இனத்தவரே என்னும் கருத்தைச் சில ஆய்வாளர்கள் முன்வைத்துள்ளனர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கையில் பரவி வாழ்ந்த இடைக் கற்கால மக்களின் வழித் தோன்றல்களே இன்றைய இலங்கைத் தமிழரும், சிங்களவரும் என்பதும், தமிழ் பேசுவோரோ அல்லது பிராகிருத மொழி பேசுவோரோ பெருமளவில் இல���்கையில் குடியேறி அங்கிருந்த மக்களை அகற்றவில்லை என்பதும் இந்திரபாலாவின் கருத்து. கிறித்தவ ஆண்டுக்கணக்கின் தொடக்கத்தை அண்டிய காலப் பகுதியில், தமிழ்நாடு, கேரளம், ஆந்திர, கர்நாடக மாநிலங்களின் தெற்குப் பகுதிகள், இலங்கை என்பன ஒரே பண்பாட்டு வலயமாக இருந்தன என்றும், தமிழும், பிராகிருதமும் மக்களின் இடப் பெயர்வினால் அன்றிப் பண்பாட்டுப் பரவலினாலேயே இலங்கைக்கு வந்தன என்றும் அவர் கூறுகிறார். + +வடக்கே பூநகரியில் இருந்து தெற்கே திசமகாராமை வரை எழுத்துக்களோடு கூடிய மட்பாண்டத் துண்டுகள் பல கிடைத்துள்ளன. இவற்றுள் குடிப்பெயரான "வேள" என்பதும் காணப்படுகின்றது. இது பண்டைத் தமிழ் நாட்டில் இருந்த "வேளிர்" குடியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. பண்டைத் தலைநகரமான அனுராதபுரத்திலும், இலங்கையின் பிற பகுதிகளிலும், கிமு 2 ஆம் நூற்றாண்டில் இருந்தே தம்மை "தமேலா" அல்லது "தமேதா" (பிராகிருத மொழியில்) என அழைத்துக்கொண்டவர்கள் (தமிழர்) வாழ்ந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன. இவ்வாறான ஐந்து கல்வெட்டுக்களில் இரண்டு வவுனியா மாவட்டத்தில் உள்ள பெரிய புளியங்குளத்திலும், ஒன்று திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சேருவிலையிலும், ஒன்று அம்பாறை மாவட்டத்தில் குடுவில் என்னும் இடத்திலும், இன்னொன்று பண்டைய தலைநகரமான அனுராதபுரத்திலும் கண்டெடுக்கப்பட்டவை. இலங்கையின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள திசமகாராமையில் நடந்த அகழ்வாய்வுகளின்போது கிமு 2 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 2 ஆம் நூற்றாண்டு காலப் பகுதியில் வெளியிடப்பட்ட உள்ளூர் நாணயங்கள் கிடைத்தன. இவற்றில் சிலவற்றில் தமிழர் பெயர்கள் எழுதப்பட்டுள்ளன. இது அக்காலத்தில் இலங்கைத் தீவின் தெற்குக் கரையோரத்தில் தமிழ் வணிகர்கள் முனைப்பான வணிகத்தில் ஈடுபட்டிருந்தமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது. "விசாகா" என்னும் தமிழ் வணிகனின் பெயரும், உள்ளூரில் வாழ்ந்த "சமன" என்னும் தமிழன் ஒருவனின் பெயரும், "கரவா" என்னும் தமிழ் மாலுமி ஒருவனின் பெயரும் கல்வெட்டுக்களில் காணப்படுகின்றன. கிமு இரண்டாம் நூற்றாண்டில் தமிழர் தோணிகளில் இலங்கைக்குக் குதிரைகளைக் கொண்டு வருவது குறித்த இலக்கியச் சான்றுகள் உள்ளன. பெரும்பாலும், இக்குதிரைகள் குதிரைமலை என இன்று அழைக்கப்படும் இடத்தில் இறக்கப்பட்டி��ுக்கலாம். வரலாற்றுப் பதிவுகளின்படி, கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே தமிழ் நாட்டில் இருந்த தமிழ் இராச்சியங்கள் இலங்கை விடயங்களில் நெருக்கமான ஈடுபாடு கொண்டிருந்தமை தெரிய வருகின்றது. கிறித்துவுக்கு முந்திய சில நூற்றாண்டுகள் இலங்கையின் வட பகுதியில் இருந்த குதிரைமலை, கந்தரோடை, வல்லிபுரம் ஆகிய நகரங்களுக்கும், தமிழ் நாட்டு நகரங்களுக்கும் இடையே தமிழ் வணிகர்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவ்விடங்களில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகள் மூலமும், தமிழ்க் காப்பியமான மணிமேகலையில் குறிப்பிடப்பட்டு இருப்பதில் இருந்தும், யாழ்ப்பாணக் குடாநாடு, முத்து, சங்கு போன்ற கடல்படு பொருட்களுக்கான பன்னாட்டுச் சந்தையாக இருந்ததும், தமிழ் வணிகர்கள் இங்கே வணிகத்தில் ஈடுபட்டிருந்ததும் தெரியவருகிறது. + +சிங்களவர்களின் வரலாறு கூறும் நூலான மகாவம்சம், கிமு இரண்டாம் நூற்றாண்டில் இருந்தே பல தமிழர்கள் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டமை குறித்த தகவல்கள் காணப்படுகின்றன. சேன, குத்தக என்னும் இரு தமிழர்கள் கிமு 177 தொடக்கம் கிமு 155 வரை 22 ஆண்டுகால ஆட்சி புரிந்துள்ளனர். சோழநாட்டைச் சேர்ந்த எல்லாளன் என்பவன் கிமு 145 காலப்பகுதியில் இலங்கையைக் கைப்பற்றி 44 ஆண்டுக்காலம் சிறந்த முறையில் ஆட்சி செய்துள்ளான். பின்னர் கிமு 104ல் ஏழு தமிழர்கள் அநுராதபுரத்தைக் கைப்பற்றி 14 ஆண்டுகளுக்கும் மேலாக கிமு 87 வரை இலங்கையை ஆட்சி செய்துள்ளனர். கிமு 47ஐ அண்டிய காலத்திலும் இரண்டு தமிழர்கள் ஏறத்தாள இரண்டு ஆண்டுகாலம் இலங்கையை ஆண்டுள்ளனர். இவற்றை விட, கிபி முதலாம் நூற்றாண்டுன் பின்னர், சிங்கள அரச குடும்பங்களில் ஏற்பட்ட வாரிசுப் போட்டிகள் காரணமாக அரசிழந்தவர்கள் தமிழ் நாட்டில் இருந்து படை திரட்டி வந்து ஆட்சியைப் பிடித்தமை பற்றிய குறிப்புக்களும் உண்டு. + +கிபி 10 ஆம் நூற்றாண்டிலும், 11 ஆம் நூற்றாண்டிலும், முதலாம் இராசராச சோழன் காலத்திலும், அவனது மகனான இராசேந்திர சோழன் காலத்திலும் இரண்டு முறை ஏற்பட்ட சோழர் படையெடுப்புக்களின் மூலம், இலங்கை முழுவதும் சோழப் பேரரசின் ஒரு மாகாணமாக இணைக்கப்பட்டது. சோழர்கள் 77 ஆண்டுகள் இலங்கையை ஆட்சி செய்தனர். கிபி 1215ல் தமிழ் நாட்டில் வலுவான நிலையில் இருந்த பாண்டியர்கள் இலங்கை மீது படையெடுத்து அதன் ஒரு பகுதியைக் க���ப்பற்றி ஆண்டனர். மேற்படி ஆட்சிக் காலங்களில் ஏற்கெனவே இருந்தவர்களுடன் படைவீரர்களாகவும் தமிழர்கள் வந்திருப்பர். சோழ, பாண்டிய ஆட்சிகள் முடிந்த பின்னரும் இவர்களில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே தங்கிவிட்டனர். தவிர, இக்காலங்களில் தமிழ் வணிகர்களின் வணிக நடவடிக்கைகளும் அதிகரித்துக் காணப்பட்டன. +சோழரின் தலையீடுகளைத் தொடர்ந்து தலைநகரம் அனுராதபுரத்தில் இருந்து தெற்கு நோக்கிப் பொலநறுவைக்கு நகர்ந்தது. 1215 ஆம் ஆண்டில் கலிங்க நாட்டைச் சேர்ந்த மாகன் என்பவன் தென்னிந்தியாவில் இருந்து பெரும் படை திரட்டி வந்து பொலநறுவையைக் கைப்பற்றினான். ஆனாலும், அவனால் அதை நீண்ட காலம் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. சிங்கள அரசனின் தாக்குதல்களைத் தொடர்ந்து மாகன் வடக்கு நோக்கி நகர்ந்து யாழ்ப்பாணத்தில் நிலை கொண்டதாகத் தெரிகிறது. அதே வேளை, சிங்கள அரசர்களும் பாதுகாப்புக் கருதி மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து தம்பதெனியா என்னும் இடத்தைத் தலைநகரம் ஆக்கினர். அநுராதபுரம், பொலநறுவை ஆகிய பழைய நகரங்களை உள்ளடக்கிய பெரும் பரப்பு கைவிடப்பட்டு வட பகுதிக்கும், தென் பகுதிக்கும் இடையே வலுவான தடுப்பாக அமைந்தது. இது, தீவின் வடக்குப் பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்துவந்த தமிழர்களும், தெற்கில் பெரும்பான்மையாக வாழ்ந்த சிங்களவர்களும் தனித்தனியாக வளர வாய்ப்பளித்தது. இதனால்,13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், தனியானதும், வலுவானதுமான யாழ்ப்பாண இராச்சியம் உருவானது. தனித்துவமான இலங்கைத் தமிழர் சமுதாயத்தின் உருவாக்கத்துக்கு இதுவே அடித்தளமாக அமைந்தது எனலாம். + +13 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து 1619 ஆம் ஆண்டுவரை ஏறத்தாழ 370 ஆண்டுகளுக்கு மேல் யாழ்ப்பாண இராச்சியம் நிலைத்திருந்தது. இடையில் ஒரு குறுகிய காலம் கோட்டே இராச்சியத்தின் சார்பில் சப்புமால் குமாரயா என்பவனால் ஆளப்பட்டு வந்தது. 1590 இல் இருந்து 1619 வரை தமிழ் அரசர்களே ஆண்டுவந்த போதும், போர்த்துக்கேயருக்குத் திறை செலுத்தும் ஒரு அரசாகவே இருந்தது. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துக்கு முன்னர், தமிழர் இலங்கையில் பரவலாக வாழ்ந்து வந்ததனால் தமக்கெனத் தனியான சமூக நிறுவனங்களை அமைத்துக்கொள்ளும் வாய்ப்பு இருக்கவில்லை. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றத்துடன், இலங்கை��் தமிழர் இலங்கையில் ஒரு தனித்துவமான சமூகமாக ஒழுங்கமைக்கப்பட்டது மட்டுமன்றி ஓரளவுக்குப் பொதுவான வழக்கங்களையும், சமூக நடைமுறைகளையும் உருவாக்கிக் கொள்ளக்கூடிய வாய்ப்பும் ஏற்பட்டது. வன்னிப் பகுதி, திருகோணமலை என்பன யாழ்ப்பாண அரசின் கீழ் இருந்தபோதும் சிறுசிறு பகுதிகளாக வன்னியத் தலைவர்களினால் ஆளப்பட்டு வந்தது. மட்டக்களப்பு பல வேளைகளில் கண்டி இராச்சியத்தின் கட்டுப்பாட்டுக்குள்ளும் செயற்படவேண்டி இருந்தது. இதனால், மொழி, மதப் பொதுமைகள் இருந்தபோதும் வழக்கங்களில் வேறுபாடுகள் இருந்தன. அதிக தொலைவில் இருந்ததாலும், ஓரளவுக்கு வேறுபாடான புவியியல் நிலைமைகள், சமூகக் கூட்டமைவு என்பவற்றாலும் மட்டக்களப்புப் பகுதியில் பல தனித்துவமான வழக்கங்கள், நடைமுறைகள் என்பன நிலை பெறுவதும் சாத்தியம் ஆயிற்று. + +குடியேற்றவாத ஆட்சிக் காலத்தில் யாழ்ப்பாணத்துக்கான மரபுவழிச் சட்டமாக உருவான தேசவழமை, யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலேயே பல்வேறு வழக்கங்களை உள்வாங்கி உருவானது எனலாம். ஆனாலும் மட்டக்களப்புப் பகுதியில் வேறு வழமைகள் நடைமுறையில் இருந்தன. இவற்றின் தொகுப்பே பிற்காலத்தில் முக்குவர் சட்டம் எனப்பட்டது. + +1540களில் போர்த்துக்கேயரின் கவனம் யாழ்ப்பாண இராச்சியத்தின் பக்கம் திரும்பியது. 1544லும், பின்னர் 1560இலும் அவர்களுடைய படையெடுப்புகள் முழு வெற்றி பெறவில்லை. ஆனால், 1590ல் நிகழ்ந்த படையெடுப்பின் மூலம் யாழ்ப்பாண அரசனைக் கொன்றுவிட்டு இன்னொரு இளவரசனை அரசனாக்கிச் சென்றனர். அது முதல் யாழ்ப்பாண இராச்சியம் போர்த்துக்கேயரின் செல்வாக்கு வட்டத்துக்குள் வந்தது. இறுதியாக 1619ல் யாழ்ப்பாணத்தை முழுமையாகக் கைப்பற்றித் தமது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். இதன் பின்னர் இலங்கைத் தமிழர் பகுதிகளைப் போர்த்துக்கேயர் 38 ஆண்டுகளும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் முறையே 138, 152 ஆண்டுகளும் ஆட்சி செய்தனர். + +முன்னர் கூறிய வரைவிலக்கணத்துக்கு அமைய இலங்கைத் தமிழர் அல்லது இலங்கை வம்சாவழித் தமிழர் என்போர் இலங்கையின் வட மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் பெரும்பான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தலைநகரமான கொழும்பிலும் சில பகுதிகளில் செறிவாக வாழுகின்றனர். ஏனைய பகுதிகளில் மிகவும் சிறுபான்மையினராக உள்ளனர். வடமாகாணத்தி��் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் பெரும்பான்மையினராக உள்ள இலங்கைத் தமிழர், கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களில் ஒன்றில் மட்டுமே தற்போது பெரும்பான்மையினராக உள்ளனர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இலங்கைத் தமிழரின் மொத்த மக்கள்தொகை 2,270,924 ஆகும். இது நாட்டின் மொத்த மக்கள்தொகையின் 11.2%. இது 1981 ஆம் ஆண்டில் 12.7% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 1981க்கும் 2011க்கும் இடையில் நாட்டின் மொத்த மக்கள் தொகை 36.49% கூடியிருக்கும் அதே வேளை இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 20.35% அதிகரிப்பையே காட்டுகிறது. உள்நாட்டுப் போர் காரணமாக ஏராளமான இலங்கைத் தமிழர் வெளிநாடுகளுக்குச் சென்று விட்டதாலும், பெருமளவில் மக்கள் கொல்லப்பட்டதாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. + +1911 இலும் அதற்குப் பின்னருமே இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழர் என இரண்டு பிரிவாகத் தமிழர் கணக்கெடுக்கப்பட்டனர். + +இலங்கைத் தமிழர்கள் அனைவரையும் ஒரே கூறாக எடுத்துக்கொள்ளும் போக்கு பல்வேறு மட்டங்களிலும் இருந்து வருகிறது. மொழி அடிப்படையிலும், ஓரளவுக்கு சமய அடிப்படையிலும் பிரதேசங்களை ஊடறுத்த ஒருமைத் தன்மை இருந்த போதிலும், 1948க்குப் பின்னான அரசியல் நெருக்கடிகள் இந்த ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் போக்குக்கு வலுவூட்டின என்று கூறலாம். ஆனாலும், இலங்கைத் தமிழர் சமூகத்தில் பல்வேறு பண்பாட்டுக் கூறுகளின் அடிப்படையிலும், சமூக, வரலாற்றுப் பின்புலங்களின் அடிப்படையிலும், பல வேறுபாடுகள் இருப்பதைக் காணமுடியும். இந்த வேறுபாடுகளைப் பிரதேச வேறுபாடுகளுடன் ஒத்திசைவாகப் பார்க்கும் போக்கே பெரிதும் காணப்படுகிறது. சிவத்தம்பி, இலங்கைத் தமிழர் துணைப் பண்பாட்டுச் சமூகங்களைப் பகுதிகளின் அடிப்படையில் ஒன்பது பிரிவுகளாக இனங்காண்கிறார். இவற்றுள், தென்மாகாணம், மலையகம் என்பன முறையே முசுலிம்கள், இந்தியத் தமிழர் குழுக்களையே குறித்து நிற்கின்றன. இதனால் இக்கட்டுரையின் வீச்செல்லைக்குள் அடங்குவன பின்வரும் ஏழு பகுதிகளே. + + +இலங்கைத் தமிழர் எனப்படுவோர் ஒரேதன்மைத்தான சமூகப் பண்பு கொண்டவர்கள் அல்ல. இலங்கைத் தமிழரிடையே காணப்படும் பல்வேறு குழுக்கள் வேறுபட்ட சமூகப் பண்புகளை உடையவர்களாக இருப்பதைக் காண முடியும். குடியேற்ற வாதக் காலத்துக்கு முன்னர் நடைமுறையில் இருந்த வழமைகளை ஆராய்வதன் மூலம் வரலாற்று நோக்கில் இவ்வாறான சமூகப் பண்புகள் குறித்து ஆய்வாளர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவ்வாறான ஆய்வுகளில் தேசவழமைச் சட்டமும், முக்குவர் சட்டமும் முக்கிய இடம் பெறுகின்றன. + +தேசவழமைச் சட்டத்தை இந்தியாவில் உள்ள பிற மரபுவழிச் சட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்த ஆய்வாளர்கள் சிலர் தேசவழமைச் சட்டத்தின் தொடக்கத்தின் அடிப்படைகள் பிராமணியச் செல்வாக்குக்கு முந்திய திராவிட மரபான தாய்வழி மரபை அடிப்படையாகக் கொண்ட மலபார் பகுதியின் மருமக்கட்தாயம் எனப்படும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்கின்றனர். கோரமண்டல் என அழைக்கப்படும், தென்னிந்திந்தியாவின் கிழக்குக் கரையோரப் பகுதியில் ஆரிய செல்வாக்குக் காரணமாக தந்தைவழி மரபு நிலைபெற்றது. , யாழ்ப்பாணப் பகுதியில் தமிழ்நாட்டின் தொடர்புகள் அதிகரித்த காலத்தில் தாய்வழி மரபுக் கூறுகளையும் தந்தைவழி மரபுக் கூறுகளையும் ஒருங்கே கொண்டதொரு கலப்பு முறைமை உருவானதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். யாழ்ப்பாண இராச்சியக் காலத்திலேயே, யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாகவே இருந்த போதும், நடைமுறையில் இருந்த வழக்கங்களில் தாய்வழி மரபுக் கூறுகளும் இருந்தன. எடுத்துக்காட்டாக, சொத்துரிமை தொடர்பில், அக்காலத்துச் "சீதனம்" தாய்வழிச் சொத்துரிமையின் எச்சமாகக் காணப்பட, "முதுசொம்" தந்தைவழிச் சொத்துரிமையாக உள்ளது. ஆனாலும், பெண்களுடைய வழிவருகின்ற சீதனச் சொத்து தொடர்பில் கணவனின் சம்மதம் இன்றிப் பெண் தீர்மானம் எடுக்கக்கூடிய வழி இல்லாது இருப்பதானது அக்காலத்தியேயே யாழ்ப்பாணச் சமுதாயம் ஆணாதிக்கச் சமுதாயமாக நிலை பெற்றுவிட்டதைக் குறிக்கிறது. + +காலப்போக்கில் பெண் பிள்ளைகளைத் திருமணம் செய்து கொடுக்கும்போது கூடிய அளவு சீதனம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது மிகப் பெரும்பாலான குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் முதுசொச் சொத்தின் மீது தமக்கிருக்கும் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டியவர்கள் ஆனார்கள். போர்த்துக்கேயர் காலத்திலேயே இந்த நிலை ஏற்படத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. இதனால், தற்காலத்தில் யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான வீடுகளும், நிலங்களும் பெண்களின் பெயரிலேயே இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தற்காலத்துச் சீதன முறையின் விளைவாக ஏற்பட்டதேயொழிய, யாழ்ப்பாணச் சமுதாயம் இன்றும் ஒரு ஆணாதிக்கச் சமுதாயமாகவே இருந்து வருகிறது. + +இலங்கைத் தமிழர் சமுதாயம் ஒரு சாதியச் சமுதாயம் ஆகும். சங்க இலக்கியத்தில் ஐந்து திணைகள் தொடர்புடைய ஐந்து பழங்குடிகள் குறிப்பிடுகிறது. காலனித்துவமும் சாதி முறையை பாதித்தது. எனினும், முழுச் சமுதாயமுமே ஒரே மாதிரியான சாதி அமைப்பைக் கொண்டிருக்கவில்லை. கிழக்கு மாகாணத் தமிழர் மத்தியில், குறிப்பாக மட்டக்களப்புப் பகுதியில் காணப்படும் சாதி அமைப்பு, யாழ்ப்பாணப் பகுதிச் சாதி அமைப்பினின்றும் பெருமளவுக்கு மாறுபட்டது. மட்டக்களப்பில் சாதி அமைப்பு, யாழ்ப்பாணத்தில் உள்ளதுபோல் மிகவும் இறுக்கமானது அல்ல. மேலும் விவசாய மற்றும் கடலோர சமூகங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. காலனித்துவ ஆட்சியின் காரணமாக, பல சாதி முக்கிய சாதிகளாக இணைந்த பிற ஆக்கிரமிப்புகளை எடுத்துக் கொண்டது. + +வடக்கு பகுதியில் "வெள்ளாளர்கள்" எண்ணிக்கை அடிப்படையில் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர். அவர்கள் இலங்கையின் தமிழ் மக்களில் பாதிக்கும் பங்களித்துள்ளனர். அவர்கள் வேளாண்மையில் மற்றும் பெரிய நில உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ள ஒரு சாதி. சடங்கு வடிவமைப்பு மூலம் ஆதிக்கத்தை அடைந்த சைவ சித்தாந்தம் வணக்கத்தார் கடுமையான பின்பற்றுபவர்கள். யாழ்ப்பாண இராச்சியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் வெள்ளாளர் சமுதாயத்தில் பிற இனத்தவர்களுக்கும் சமுதாயத்திற்கும் இடையில் 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வெள்ளாளர் மக்கள் தொகை அதிகரித்தது. இதில் "அகம்படையார்" (அரண்மனை ஊழியர்கள்), "செட்டியார்கள்" (வணிகர்கள்), தனக்காரர் (கோவில் மேலாளர்கள்), "மடைப்பள்ளியர்" (கோவிலின் காரியதரிசிகள்) மற்றும் மலையாளிகள். "கோவியர்", வெள்ளாளருடன் தொடர்புடைய சாதி, விவசாயத்தில் மற்றும் கோவில் வேலைக்காரராக ஈடுபட்டுள்ளனர். + +வடக்கு கரையோரப் பகுதியிலுள்ள "கரையார்கள்" ஆதிக்கம் செலுத்தும் சாதி. அவர்கள் பாரம்பரியமாக கடற்றொழிலில் மற்றும் கடற்படைப் போரில் ஈடுபட்டனர். அவர்கள் அரச படையினர்களாகவும் மற்றும் தளபதிகளாகவும் பணியாற்றினர். தேவர் என்று அழைக்கப்படும் "மறவர்கள்", மற்றொரு படைத்துறைக்குரிய சாதி, கரையார் சாதியை சேர்ந்தன. "முக்குவர்" கிழக்கு கடலோரப் பகுதியில் ஒரு ஆதிக்கம் செலுத்தும் சாதியும் ஆகும். அவர்கள் பாரம்பரியமாக சோனகர்ளுடன் வரலாற்று ரீதியாக தோற்றுவிக்கப்பட்ட முத்துக்குளித்தல் மற்றும் காயல் மீன்பிடி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். திமிலர்கள் வடக்கு கரையோரப் பகுதிகள் பெரும்பாலும் கிழக்கிலுள்ள வரலாற்று ரீதியாக காணப்படுகின்றன. அவர்கள் பாரம்பரியமாக மீன்பிடியில் ஈடுபட்டுள்ளன. + +"பஞ்சமர்" என்று அழைக்கபடவர்கள் அம்பட்டர், பள்ளர், நளவர், பறையர் மற்றும் வண்ணார். அம்பட்டர்கள் பாரம்பரியமாக நாவிதராக இருந்தனர், பண்டைய காலங்களில் "பரிகாரி" (மருத்துவர்) என்றும் அழைக்கபடவர்கள். பள்ளர்கள் வேளாண்மை தொழிலாளர்கள், அவர்கள் வேளாண்மையில் முக்கியமானவர்கள். நளவர் பனை ஏறுதல் மற்றும் கள்ளு இறக்குதலில் ஆக்கிரமிக்கப்பட்டவர்கள். பறையர்கள் பறையடித்தல் மற்றும் கோயில்களில் சடங்குகளில் முக்கியத்துவம் அளித்தனர், மேலும் வள்ளுவர் என்றழைக்கப்பட்டனர். ஐந்து திறமையான கைவினைஞர்கள் "கம்மாளர்" என அறியப்பட்டனர், மேலும் கொல்லர், தட்டார், தச்சர், கருமான் மற்றும் கன்னார் மற்றும் போன்றவற்றை உள்ளடக்கியது. பிராமணர்கள் எண்ணிக்கையில் சிறியவர்களாகவும், கோவிலுக்குரிய குருமார்களாகவும் பங்களிக்கிறார்கள். + +கம்மாளர், பஞ்சமர்கள் மற்றும் பிராமணர்கள் குடிமக்கள் என அறியப்பட்ட சாதிகளை, அவர்கள் வெள்ளாளர்கள் மற்றும் கரையார்கள் போன்ற பெரிய சாதிகளின் கீழ் பணியாற்றினர். அவர்கள் தொழிலில் முக்கிய காரணிகளாக இருந்தனர், மற்றும் அவர்கள் திருமண மற்றும் இறுதி சடங்கு களத்தில் சிறப்பாக முக்கியத்துவம் பெற்றனர்.கட்டுண்ட சாதிகள் வகை சேர்க்கப்பட்டுள்ளது. கட்டுண்ட சாதிகள், உயர் அதிகாரப் படிநிலையில் உள்ள சாதிகளுடன் பொருளாதார அடிப்படையில் கட்டுண்ட நிலையில் இருப்பவர்கள்.யாழ்ப்பாணச் சாதி வேறுபாடுகளுக்குத் தொழிலே அடிப்படையாக அமைகிறது. தொழில் சார்ந்த பொருளாதாரத் தொடர்புகளே யாழ்ப்பாணச் சாதியத்தில் அதிகாரப் படிநிலையைத் தீர்மானிக்கும் காரணிகளாக அமைகின்றன. இந்த அடிப்படையில் யாழ்ப்பாணச் சாதிகளைப் பின்வருமாறு இரு பிரிவுகளாகப் பார்க்கும் வழக்கமும் உண்டு. + +மட்டக்களப்புப் பகுதியில் சாதி முறை பல விதங்களில் யாழ்ப்பாணச் சாதி முறையில் இருந்து வேறுபட்டு அமைந்துள்ளது. சில சாதிகள் இவ்வி��ு பகுதிகளுக்கும் பொதுவானவையாகக் காணப்பட்ட போதிலும், சில சாதிகள் குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே தனித்துவமானவையாகக் காணப்படுகின்றன. இது தவிர மட்டக்களப்பில் வெள்ளாளருக்கு அதிகார மேலாண்மை கிடையாது. அப்பகுதியில் முக்குவச் சாதியினரே அதிகார மேலாண்மை கொண்டவர்களாக விளங்குகின்றனர். மக்கள்தொகை அடிப்படையிலும் கூடிய பலம் கொண்டவர்களாக இருப்பவர்கள் இச்சாதியினரே. மட்டக்களப்புச் சாதியமைப்பில் "குடி" முறைமை முக்கியமான ஒன்றாகச் சொல்லப்படுகிறது. இக் குடி முறைமை கோயில் ஆதிக்கம் போன்றவற்றினூடாக நிறுவனப்படுத்தப்பட்டு உள்ளது. + +இலங்கைத் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் இந்துக்கள் ஆவர். 2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் அடிப்படையில், இலங்கைத் தமிழர்களின் மரபுவழிப் பகுதிகளான வடக்குக் கிழக்கு மாகாணங்களில் வாழும் இலங்கைத் தமிழர்களில் 83% இந்துக்கள், 13% கத்தோலிக்கர், மிகுதியானோர் பிற கிறித்தவர்கள். இப் பகுதிக்கு வெளியே வாழும் தமிழர்களில் (இலங்கையின் இந்தியத் தமிழர்களும் உட்பட) ஏறத்தாழ 81.5% இந்துக்களே. இலங்கைத் தமிழ் இந்துக்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இந்து சமயத்தின் ஒரு பிரிவான சைவ சமயத்தைப் பின்பற்றுபவர்கள். சிவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடுபவர்கள். குறிப்பாக வட பகுதியில் சைவசித்தாந்த அடிப்படையிலேயே வழிபாடுகள் நிகழ்த்தப்படுகின்றன. அதே வேளை சிறு தெய்வ வணக்கங்களும் இடம்பெற்று வருவதைக் காணலாம். தமிழ்நாட்டில் பௌத்தம் வேரூன்றி இருந்த காலத்தில் இலங்கையில் இருந்த தமிழர் பலரும் பௌத்தர்களாக இருந்ததற்குச் சான்றுகள் உள்ளன. ஆனால், யாழ்ப்பாண அரசுக் காலத்தில் இலங்கைத் தமிழர் அனைவரும் இந்துக்களாகவே இருந்தனர். +1540 களில் யாழ்ப்பாண இராச்சியப் பகுதிகளில் போர்த்துக்கேயப் பாதிரிமார்களின் நடவடிக்கைகள் தொடங்கியபோது கத்தோலிக்க மதம் இலங்கைத் தமிழர் மத்தியில் அறிமுகமானது. 1560 இல் போர்த்துக்கேயர் கைப்பற்றிக்கொண்ட பின்னர் அப்பகுதியில் இலங்கைத் தமிழர் பலர் கத்தோலிக்கர் ஆயினர். 1590 ஆம் ஆண்டில் இருந்து யாழ்ப்பாண மன்னர்கள் போர்த்துக்கேயரின் தயவுடன் அரசாண்ட காலங்களில் யாழ்ப்பாண அரசின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் கத்தோலிக்க மதத்துக்கு மாறினர். 1619 இக்குப் பின்னர் யாழ்ப்பாண அரசு போர்த்துக்கேயரின் நேரடி ஆட்சிக்குள் வந்தது. அதன் பின்னர் மதமாற்ற வேலைகள் அரசாங்க ஆதரவுடன் இடம்பெற்றன. இந்துக் கோயில்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டன. வற்புறுத்தலின் பேரிலும் மதமாற்றம் இடம்பெற்றதாகத் தெரிகிறது. + +போர்த்துக்கேயரின் 38 ஆண்டு நேரடி ஆட்சிக் காலத்துக்குள்ளேயே யாழ்ப்பாண மக்கள் எல்லோரும் கத்தோலிக்கர் ஆகிவிட்டதாக அக்காலத்துப் போர்த்துக்கேயப் பாதிரிமார்களில் எழுத்துக்களில் இருந்து தெரிய வருகிறது. எனினும், பெரும்பாலான இலங்கைத் தமிழர் இந்து மதத்தை மறைவாகக் கைக்கொண்டிருந்தனர். தொடர்ந்து வந்த ஒல்லாந்தர் ஆட்சியில் இந்து மதத்துடன், கத்தோலிக்க மதமும் அடக்குமுறைக்கு உள்ளானதுடன், புரட்டஸ்தாந்து கிறித்தவம அரச ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 138 ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதிக்காலத்தில் இந்து மதமும், கத்தோலிக்க மதமும் மீண்டும் எழுச்சிபெற வாய்ப்புக்கள் கிடைத்தன. இந்துக் கோயில்களும், கத்தோலிக்கத் தேவாலயங்களும் ஆங்காங்கே மீண்டும் எழலாயின. + +பின்னர் பிரித்தானியர் ஆட்சி ஏற்பட்டபோது, புரட்டசுத்தாந்த கிறித்தவ மதத்துக்கு முன்னுரிமைகள் இருந்த போதும், பிற மத விடயங்களில் ஓரளவு சுதந்திரம் கிடைத்தது. இந்து மதமும் கத்தோலிக்க மதமும் மீண்டும் வெளிப்படையாகவே வளர்ச்சியுற வாய்ப்புக் கிடைத்தது. + +இலங்கைத் தமிழ் என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், பேச்சு வழக்கைப் பொறுத்தவரை இலங்கைத் தமிழும் பல வட்டார வழக்குகளை உள்ளடக்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. இலங்கைப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தமிழ்நாட்டுத் தமிழரின் பேச்சு வழக்குகளில் இருந்து ஒலியியல், உருபனியல், சொற்றொடரியல், சொற்பயன்பாடு போன்ற பல அம்சங்களில் வேறுபாடுகளைக் கொண்டதாக அமைந்திருப்பதையும் காண முடியும். ஆனாலும், திரைப்படங்கள், சஞ்சிகைகள், தொலைக்காட்சி போன்றவற்றினூடாக தமிழ் நாட்டின் பொதுவான பேச்சு வழக்குகள் இலங்கைத் தமிழருக்குப் பரிச்சயமாக உள்ளன. அதேவேளை, இவ்வாறான ஊடகத் தொடர்புகள் ஒருவழிப் பாதையாக இருப்பதனால், தமிழக மக்களுக்கு, இலங்கைத் தமிழ் வழக்குகள் அவ்வளவு பழக்கப்பட்டதாக இல்லை. இலங்கைத் தமிழர் வழக்கில் பொதுவாகப் பயன்படும் சில சொற்களைத் தமிழ் நாட்டினர் இலகுவில் புரிந்து கொள்வது இல்லை. எடுத்துக்காட்டாக, பெடியன் (��ண் பிள்ளை), பெட்டை (பெண் பிள்ளை) (பெண்), கதைத்தல் (பேசுதல்), விளங்குதல் (புரிதல்) போன்ற சொற்களைக் குறிப்பிடலாம். + +தமிழகத்தில் இருந்து பிரிந்து நீண்டகாலம் தனியாக வளர்ந்ததனால், மிகப் பழைய காலத்துக்குரிய அம்சங்களை இன்றும் இலங்கைத் தமிழில் காண முடிகிறது. தமிழ்நாட்டுப் பேச்சு வழக்கில் பல சொற்களில் உகரம் ஒகரமாகவும் (உடம்பு > ஒடம்பு), இகரம் எகரமாகவும் (இடம் > எடம்) திரிபடைகிறது. இலங்கைத் தமிழரது பேச்சு வழக்கில் இத்தகைய திரிபு கிடையாது. இது போன்றே மெய்யெழுத்துக்களில் முடியும் சொற்கள் சில தமிழ் நாட்டுப் பேச்சுத் தமிழில் மெய்யெழுத்துக் கெட்டு முதல் எழுத்து மூக்கொலியுடன் உச்சரிக்கப்படுகின்றன (மகன் > மக(ன்), காகம் > காக(ம்)). இலங்கைத் தமிழில் இவ்வகைத் திரிபு இல்லை. எழுத்துக்கள் சிலவற்றின் ஒலிப்பிலும் இலங்கைத் தமிழ் தமிழ்நாட்டுத் தமிழில் இருந்து வேறுபடுகிறது. "ற்ற்", "ர" ஆகிய எழுத்துக்கள் குறிப்பிடத்தக்கவை. இலங்கையில் "ற்ற்" முதல் "ற"கரமும் இரண்டாவது "ற"கரமும் வெடிப்பொலியாகவே ஒலிக்கப்பட, தமிழ்நாட்டில் இரண்டாவது "ற"கரம், உருளொலியாக ஒலிக்கப்பட்டுகிறது. இவற்றின் ஒலிப்பு வேறுபாட்டினால், பிற மொழிப் பெயர்கள், சொற்களை ஒலிபெயர்க்கும் போதும் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இலங்கையில் "Newton" ஒலிபெயர்க்கும்போது "நியூற்றன்" என்று எழுதுகிறார்கள். தமிழ் நாட்டில் "நியூட்டன்" என்று எழுதப்படுகிறது. + +இலங்கைத் தமிழ் வழக்குகளில் யாழ்ப்பாணத் தமிழ் வழக்குக் குறிப்பிடத்தக்க ஒன்று, யாழ்ப்பாணத் தமிழ் வழக்கில் பழந்தமிழுக்கு உரிய தனித்துவமான பல அம்சங்களை இன்றும் காண முடியும். எடுத்துக்காட்டாக, பழந்தமிழில் வழக்கில் இருந்து தமிழ் நாட்டில் வழக்கொழிந்த இடைநிலைச் சுட்டுப் பெயர்களான "உவன்", "உவள்", "உது" போன்றவை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில் இன்றும் பயன்படுகின்றன. + +மட்டக்களப்புத் தமிழும் பல தனித்துவமான அம்சங்களைக் கொண்ட ஒரு பேச்சு வழக்காக உள்ளது. இப்பேச்சு வழக்கிலும், பழந் தமிழுக்குரிய பல அம்சங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளதைக் காண முடியும். இலங்கையில் தமிழ் வட்டார வழக்குகளில், கூடிய பழந்தமிழ் தொடர்பு கொண்டது மட்டக்களப்பு வழக்கே என்ற கருத்தும் உண்டு. + +போதிய ஒருங்கிணைப்பு இன்மை காரணமாக மொழி வழக்கின் புதி��� அம்சங்களான கலைச்சொல் ஆக்கம் போன்றவற்றிலும் இலங்கைத் தமிழ், தமிழ்நாட்டுத் தமிழில் இருந்து வேறுபடுவதைக் காணலாம். எழுத்து, சொல், அகராதியியல், பொருள் ஆகிய நான்கு நோக்கிலும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. + +இலங்கைத் தமிழரின் இலக்கியம் குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசுபவர்கள், சங்ககாலத்தில் இருந்து தொடங்குவது வழக்கம். சங்கப் புலவர்களில் ஒருவரான ஈழத்துப் பூதந்தேவனார் என்பவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பது பொதுவான கருத்து. இதைத் தவிர யாழ்ப்பாண இராச்சியக் காலத்துக்கு முற்பட்ட இலங்கைத் தமிழரின் இலக்கியம் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைத்தில. 13 ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்தி வம்சத்தினர் தமிழ் வளர்ச்சியில் அக்கறை காட்டினர். பரராசசேகரன் என்னும் சிம்மாசனப் பெயர் கொண்ட மன்னன் ஒருவன் காலத்தில் நல்லூரில் தமிழ்ச் சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்ததாகவும், சரசுவதி மகால் என்னும் பெயரில் நூலகம் ஒன்று அமைத்துப் பழைய நூல்களைப் பாதுகாத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. யாழ்ப்பாணத்து அரசர்களிற் சிலரும், அரச குடும்பத்தவர் சிலரும் தமிழில் புலமை கொண்டவர்களாக விளங்கினர். சமயம், தமிழ் ஆகியவை தொடர்பில் மட்டுமன்றி சோதிடம், மருத்துவம், ஆகிய துறைசார்ந்த நூல்களும் இக்காலத்தில் எழுதப்பட்டன. செகராசசேகரம், பரராசசேகரம் என்னும் நூல்கள் இத்தகையவை. கைலாயமாலை, வையாபாடல் ஆகிய நூல்களும் யாழ்ப்பாண இரச்சியக் காலத்தில் எழுதப்பட்டவையே. அரச குடும்பத்தைச் சேர்ந்த அரசகேசரி என்பவர் காளிதாசர் வடமொழியில் எழுதிய இரகுவம்சம் என்னும் நூலைத் தழுவி, தமிழில் அதே பெயரில் ஒரு நூலை எழுதினார். + +1619 முதல் 1796 வரையிலான போர்த்துக்கேச, ஒல்லாந்த ஆட்சிக் காலங்களிலும், கூழங்கைத் தம்பிரான், இணுவில் சின்னத்தம்பிப் புலவர், முத்துக்குமாரக் கவிராயர், சிலம்புநாதபிள்ளை போன்ற பல புலவர்கள் வாழ்ந்து தமிழ் நூல்களை ஆக்கியுள்ளனர். இக்காலத்தில் போர்த்துக்கேயக் குருமாரும், தமிழ் கிறித்தவரும் கூட சமயப் பரப்புரைக்கான தமிழ் நூல்களை வெளியிட்டுள்ளனர். இவ்வாறான மதப் பரப்புரைகளுக்குச் சார்பாகவும், எதிராகவும் மாறிமாறி "ஞானக் கும்மி", "யேசுமத பரிகாரம்", "அஞ்ஞானக் கும்மி", "அஞ்ஞானக் கும்மி மறுப்பு" எனப் பல நூல்கள் இக்காலத்தில் உருவாயின. பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலும் இந்நிலை தொடர்ந்தது. ஆறுமுக நாவலர் சைவப் பரப்புரைகளுக்காக நூல்களை எழுதியதோடு அமையாது, அழியும் நிலையில் இருந்த பழந்தமிழ் நூல்கள் பலவற்றைத் தேடி பதிப்பித்துப் பாதுகாத்தார். இவரது இந்த முயற்சி உலகத் தமிழரிடையே ஒரு முன்னோடி முயற்சியாக அமைந்தது. தமிழில் உடைநடை இலக்கியத்தை வளர்த்து எடுத்ததிலும், ஆறுமுக நாவலரின் பணி முக்கியமானது. இக்காலத்தில் இலங்கையின் பல பகுதிகளையும் சேர்ந்த பல தமிழ்ப் புலவர்களும், அறிஞர்களும் இலங்கைத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவியுள்ளனர். + +இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில், உலகம் முழுவதிலும் ஏற்பட்ட இடதுசாரிச் சிந்தனை வளர்ச்சி, இலங்கையில் இலவசக் கல்வியின் அறிமுகம் போன்றவை இலங்கைத் தமிழ் இலக்கியத்தைச் சமூகத்தின் அடி மட்டம் வரை எடுத்துச் சென்றன. கலையும், இலக்கியமும் மக்களுக்காகவே என்னும் கோட்பாட்டின் அடிப்படையில், சாதிப் பாகுபாடு, வர்க்கப் போராட்டம், பெண்ணுரிமை போன்ற பல விடயங்கள் இலக்கியத்துக்குக் கருப்பொருள்களாயின. இலக்கியம் படைப்போரும் சமூகத்தின் பல மட்டங்களில் இருந்தும் உருவாகினர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புக்கள் இந்த மாற்றங்களில் முக்கிய பங்கு வகித்தன. டொமினிக் ஜீவா, டானியல், செ. கணேசலிங்கன், செங்கை ஆழியான் போன்றோர் இக் காலம் உருவாக்கிய படைப்பாளிகள். இக்காலப் பகுதியில் சிலர் இனப்பிரச்சினையை மையமாக வைத்தும் இலக்கியம் படைத்தனர் ஆயினும், இவை பொதுவாகப் பிற்போக்கு இலக்கியங்கள் என முத்திரை குத்தப்பட்டன. + +1983க்குப் பின்னர் இனப்பிரச்சினை கூர்மையடைந்து ஆயுதப் போராட்டமாக மாறிய பின்னர் இது இலங்கைத் தமிழ் இலக்கியத்துக்கான முக்கிய கருப்பொருளானது. இது, உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் முன் எப்பொழுதும் கண்டிராத ஒன்று. இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் பெரும்பகுதி தமிழ் விடுதலை இயக்கங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த காலத்தில், இந்த அடிப்படையில் தமிழ் இலக்கியம் கவிதை, கதை, நாடகம் எனப் பல்வேறு முனைகளிலும் வளர்ந்தது. இலங்கையில் இடம் பெற்ற இனப்போரின் விளைவாக ஏற்பட்ட உலகம் தழுவிய புலப் பெயர்வுகளினால், இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் உலகின் பல நாடுகள���லும் வாழுகின்ற நிலை ஏற்பட்டதன் காரணமாக, தமிழுக்குப் புதிய பல கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியங்கள் உருவாகின்றன. + +ஐரோப்பியர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத் தமிழர் மத்தியில் மரபுவழிக் கல்வி முறை இருந்தது. இது பொதுவாக, தமிழ், வடமொழி, சமயம் சார்ந்த விடயங்கள் என்பவற்றைத் தழுவியதாகவே இருந்தது. தொழில்கள் சாதி அடிப்படையிலேயே அமைந்திருந்ததால், தொழிற்கல்வி குலவித்தையாகவே பயிலப்பட்டு வந்தது. பொதுக் கல்வியிலும் சாதி முக்கிய பங்கு வகித்தது. தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கல்வி கற்பதற்கு மரபுவழிக் கல்வி முறையில் இடம் இருக்கவில்லை. கல்வி உயர் சாதியினருக்கு உரியதாகவே கருதப்பட்டு வந்தது. மாணவர்கள், மொழியையும் சமயத்தையும் கற்றுத்தேர்ந்த ஆசிரியர்களை அணுகிக் குருகுலவாச முறையில் கல்வி பெற்று வந்தனர்.. + +போர்த்துக்கேயர் தமிழர் பகுதிகளைத் தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பின்னர், தேவாலங்களையும் அவற்றின் அருகே பள்ளிகளையும் உருவாக்கினர். தீவிர மதமாற்றக் கொள்கையைக் கடைப்பிடித்த போர்த்துக்கேயக் குருமார் மாணவர்களுக்கும், பெரியவர்களுக்கும் கிறித்தவத்தைக் கற்பிப்பதற்காகத் தமிழ் கற்று அம்மொழி மூலமே சமயத்தையும் கற்பித்து வந்தனர். இக்காலத்தில், எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் கல்வி பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக் கிடைத்தது. ஆனாலும், நிர்வாகத் தேவைகளை முன்னிட்டு போர்த்துக்கேயர் சாதி முறையை மாற்ற விரும்பாததால், தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தவரை அக்காலக் கல்வியும் சமூக முன்னேற்றத்துக்கான ஒன்றாக இருக்கவில்லை. ஒல்லாந்தர் காலத்திலும் ஏறத்தாழ இதே நிலையே நிலவியது. +பரந்துபட்ட அளவில் கல்விக்கான வாய்ப்புக்கள் பிரித்தானியர் காலத்திலேயே ஏற்பட்டன. கிறித்தவ மிசன்கள் பள்ளிக்கூடங்களை நிறுவிக் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டின. இந்த வகையில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மிசனின் நடவடிக்கைகள் குறிப்பிடத் தக்கவை. பட்டப்படிப்புவரை கல்வி கற்பதற்கான வாய்ப்புக்கள் இருந்தன. அமெரிக்க மிசனைச் சேர்ந்த மருத்துவர் கிறீன் உள்ளூர் மாணவர்களுக்கு மேல்நாட்டு மருத்துவத்தையும் கற்பித்து வந்தார். இவர் பல மருத்துவப் பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தமிழ் மொழி ��ூலமே மருத்துவம் கற்பித்தது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அச்சகம் ஒன்றை நிறுவி நூல்களை வெளியிடுவதிலும் ஈடுபட்டது, தமிழர் கல்வி வளர்ச்சியில் முக்கியமான ஒரு மைல் கல்லாகும். + +ஆனாலும், இத்தகைய கல்வி நடவடிக்கைகள், கிறித்தவ மதம் பரப்பும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டிருந்ததால், இந்துக்கள் மத்தியில் இது எதிர்ப்புணர்வைத் தோற்றுவித்தது. இது ஒரு தேசிய எழுச்சியின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டாலும், அடிப்படையில், ஒரு பழமைவாதச் சமூகம் சாதி முறையை அடிப்படையாகக் கொண்ட தனது சமூகக் கட்டமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாகவும் இது இருந்தது எனலாம். இந்த எதிர்ப்பின் முன்னணியில் ஆறுமுக நாவலர் இருந்தார். இவர் யாழ்ப்பாணத்தில் சைவப் பாடசாலைகளைத் நிறுவி மாணவர்களுக்குச் சைவ முறையில் கல்வி கற்பிக்க முயற்சி எடுத்தார். இவரது முயற்சிகள் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும், இவரைப் பின்பற்றிப் பிற்காலத்தில் பல இந்துப் பாடசாலைகள் நிறுவப்பட்டு வெற்றிகரமாக இயங்கின. +இலங்கைத் தமிழர்களை செறிவாகக் கொண்ட யாழ்ப்பாணக் குடா நாடு வேளாண்மைப் பொருளாதாரத்தையே அடிப்படையாகக் கொண்டது எனினும், ஆறுகள் எதுவும் அற்ற வரண்ட நிலத்தில், கடுமையாக உழைப்பதன் மூலமே வாழ்க்கையை நடத்தவேண்டிய நிலை இருந்தது இதனால், கல்வி மூலம் கிடைத்த வாய்ப்புக்களை யாழ்ப்பாண மக்கள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர் எனலாம். பிள்ளைகளுக்குச் சிறப்பான கல்வியை அளிப்பதே பெரும்பாலான யாழ்ப்பாணத்துப் பெற்றோர்களின் அடிப்படையான நோக்கம். இதனால், இப்பகுதியின் படிப்பறிவு மட்டம் நீண்டகாலமாக உயர்வாகவே இருந்து வந்துள்ளதுடன், உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் யாழ்ப்பாண மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே இருந்து வந்தது. இது சிங்களவர்களுக்குப் பாதகமானது என்ற கருத்து உருவானதன் காரணமாக, அரசாங்கம் மொழிவாரித் தரப்படுத்தல், மாவட்ட அடிப்படையிலான இட ஒதுக்கீடு போன்ற நடைமுறைகளை உருவாக்கிப் பல்கலைக் கழகங்களுக்குச் செல்லும் யாழ்ப்பாண மாணவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தினர். மொழிவாரித் தரப்படுத்தல் இலங்கைத் தமிழ் மாணவர்கள் எல்லோரையும் பாதித்த அதேவேளை, மாவட்ட ஒதுக்கீட்டு முறையின் மூலம், கல்விக்கான வசதிகள் குறை���ாக இருந்த தமிழ் மாவட்டங்களான வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்கள் ஓரளவு பயன் பெற்றனர் எனலாம். ஆனாலும் ஒட்டுமொத்தமாகத் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு வீழ்ச்சி கண்டது. + +இலங்கைத் தமிழரின் உணவு பெரும்பாலும் தென்னிந்திய செல்வாக்குடன் கூடியது. குறிப்பாகத் தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களின் உணவுகளோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. அத்துடன், இலங்கையை ஆண்ட ஐரோப்பியர்களின் செல்வாக்கும் உண்டு. மரபு வழியாக இலங்கைத் தமிழரின் முக்கிய உணவுகள் அரிசியை அடிப்படையாகக் கொண்டவை. தினை, சாமை, குரக்கன், வரகு போன்ற சிறு தானிய வகைகளும் பயன்படுகின்றன. இலங்கைத் தமிழர் அனைவரும் ஒரு நாளுக்கு ஒரு தடவையாவது, பொதுவாக மதிய உணவுக்குச் சோறும் கறியும் உணவாகக் கொள்கின்றனர். சில பகுதிகளில் இரவிலும் சோறு சாப்பிடுவது உண்டு. பழங்காலத்தில், முதல் நாட் சோற்றைத் தண்ணீரூற்றி வைத்து பழஞ்சோறு என அடுத்தநாட் காலைச் சாப்பாடாக உட்கொள்ளும் வழக்கம் இருந்தது. யாழ்ப்பாணத் தமிழர் பெரும்பாலும், குத்தரிசி எனப்படும் புழுங்கல் அரிசிச் சோற்றையே விரும்பிச் சாப்பிடுவர். உள்ளூரில் கிடைக்கக்கூடிய மரக்கறிகள், இறைச்சி, மீன் முதலிய கடலுணவு வகைகள் கறி சமைப்பதற்குப் பயன்படுகின்றன. கத்தரி, வாழை, வெண்டி, பூசணி, அவரை, முருங்கைக்காய், கிழங்கு வகைகள் போன்ற பாரம்பரியமான மரக்கறிகள் உள்ளூரில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்காலத்தில் மேற்கத்திய மரக்கறி வகைகளான கரட், பீட்ரூட், லீக்சு போன்றவற்றையும் உற்பத்தி செய்கின்றனர். தவிர, முளைக்கீரை, பசளி, வல்லாரை, பொன்னாங்காணி, முருங்கைக் கீரை போன்ற கீரை வகைகளும் சமையலுக்குப் பயன்படுகின்றன. இலங்கையில் தமிழர் பகுதிகள் நீண்ட கடற்கரையைக் கொண்டவை இதனால், மீன், சுறா, நண்டு, கணவாய், இறால், திருக்கை போன்ற பலவகைக் கடலுணவுகள் கிடைக்கின்றன. +கறிகளைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பொதுவாகப் பயன்படுகின்ற சாம்பார் இலங்கைத் தமிழரிடையே முக்கியமான இடத்தைப் பெறவில்லை. இதற்குப் பதிலாக தேங்காய்ப் பால், மிளகாய்த் தூள் என்பவற்றுடன் மரக்கறி, மீன், இறைச்சி அல்லது பிற கடலுணவு வகை கலந்து சமைக்கப்படும் குழம்பு பயன்படுகிறது. தமிழ் நாட்டில் அதிகம் காணப்படாத இன்னொரு துணைக் கறி வகை சொதி. இது தேங்காய்ப் பாலில் செய்யப்படுகிறது. சோற்றுடன் சாப்பிடும்போது கடைசியாகச் சொதி ஊற்றிச் சாப்பிடுவது வழக்கம். இலங்கையில், கறிகளில் அதிகமான தேங்காய் சேர்ப்பது வழக்கம். இதுவும் தமிழ்நாட்டில் அதிகம் காணப்படாத ஒரு வழக்கம் ஆகும். + +சோறு சாப்பிடாத வேளைகளில் இலங்கைத் தமிழர் இடியப்பம், பிட்டு போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவர். இட்டிலி, தோசை, அப்பம் போன்றவற்றையும் அவ்வப்போது சாப்பிடுவது உண்டு. இட்டிலி, தோசை போன்றவற்றுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் முக்கியத்துவம் இலங்கைத் தமிழர் மத்தியில் இல்லை. மரவள்ளிக் கிழங்கு போன்ற கிழங்குகளை அவித்து மிளகாய்ச் சம்பலுடன் சாப்பிடும் வழக்கமும் உண்டு. பிட்டு, இடியப்பம் போன்ற உணவுகளைப் பெரும்பாலும் அரிசி மாவில் செய்வது வழக்கம். குரக்கன் மாவிலும் பிட்டு அவிப்பது உண்டு. யாழ்ப்பாணத்தில், ஒடியல் மாவைப் பயன்படுத்தியும் பிட்டு அவிப்பர். இரண்டாவது உலகப் போர்க் காலத்தில் இலங்கையில் கோதுமை மாவு அறிமுகமானது. அக்காலத்தி இருந்து பிட்டு, இடியப்பம் முதலியவற்றுக்கு அரிசி மாவுடன், கோதுமை மாவையும் கலந்து, அல்லது தனிக் கோதுமை மாவில் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. இக்காலத்திலேயே இலங்கைத் தமிழர் பாணை (ரொட்டி) உணவாகக் கொள்ளும் வழக்கமும் உருவானது. தற்காலத்தில் இலங்கைத் தமிழரிடையே பாணும் ஒரு முக்கிய உணவாக உள்ளது. + +முற்காலத்தில், யாழ்ப்பாணப் பகுதியின், குறிப்பாக ஏழை மக்களின், உணவுத் தேவையின் ஒரு பகுதியை நிறைவு செய்வதில் பனம் பொருட்கள் முக்கிய பங்கு வகித்தன. பனம் பழம், பனாட்டு, பனங் கிழங்கு, ஒடியல், ஒடியல் மாவிலிருந்து செய்யப்படும் உணவு வகைகள் என்பவற்றை மக்கள் உணவாகப் பயன்படுத்தி வந்தனர். தற்காலத்தில் பனம் பொருட்கள் முக்கிய உணவாகப் பயன்படுவது இல்லை. ஒடியல் மாவு, கடலுணவு வகைகள் போன்றவற்றைக் கலந்து செய்யப்படும் ஒரு வகைக் கூழ் யாழ்ப்பாணத்துக்கே உரிய தனித்துவமான ஒரு உணவு ஆகும். பெரிய பானைகளில் இக்கூழைக் காய்ச்சி, உறவினர்கள், அயலவர்கள் எனப் பலரும் ஒன்றாகக் கூடியிருந்து, பிலாவிலையைக் கோலிக்கொண்டு அதில் கூழை ஊற்றிக் குடிப்பர். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் யாழ்ப்பாணத்தவரின் மனத்தில் நீங்காது இடம்பெறக்கூடிய ஒரு விடயம் இது எனலாம். + +��ள்ளூரில் விளையும் பல பழவகைகளையும் இலங்கைத் தமிழர் உணவாகக் கொள்ளுகின்றனர். மா, பலா, வாழை போன்றவை இலங்கைத் தமிழர் வாழும் பகுதிகளில் நீண்ட காலமாகவே செய்கைபண்ணப்பட்டு வருகின்றன. தோடை போன்ற பழவகைகள் வன்னிப்பகுதியில் செய்கை பண்ணப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்புவரை, வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்து அறிமுகப்படுத்தப்பட்ட திராட்சையும் யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக விளைவிக்கப்பட்டது. + +இலங்கைத் தமிழர் தொடர்பான அண்மைக்கால வரலாறு, குறிப்பாக இலங்கை பிரித்தானியரிடம் இருந்து விடுதலை பெற்றதற்குப் பிந்திய காலப்பகுதி, பல்வேறு வடிவங்களில் சிங்களவருக்கும், தமிழருக்குமான போராட்ட வரலாறாகவே இருந்து வந்திருக்கிறது எனலாம். விடுதலைக்கு முந்திய காலத்தில், தமிழ்த் தலைவர்களுக்கும், சிங்களத் தலைவர்களுக்கும் இடையில் ஒற்றுமை இருப்பது போல் காணப்பட்டது ஆயினும், இனப்பிரச்சினைக்கான அடிப்படைகள் விடுதலைக்கு முந்திய ஆண்டுகளிலேயே உருவாகிவிட்டன. + +யாழ்ப்பாண இராச்சியம் உருவான காலத்தில் இருந்து பெரும்பாலான தமிழர் பகுதிகள் தொடர்ச்சியாக ஒரு தனியான அரசியல் அலகாகவே இருந்து வந்தன. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் ஆண்ட காலங்களிலும் யாழ்ப்பாண இராச்சியம் தனியான ஒன்றாகவே கருதப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. 1815 ஆம் ஆண்டில் இலங்கையின் கடைசிச் சுதந்திர இராச்சியமான கண்டி பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னர், 1833 ஆம் ஆண்டில் அமுல் செய்யப்பட்ட அரசியல், நிர்வாகச் சீர்திருத்தத்தின் கீழ் முழுத்தீவும் ஒன்றாக்கப்பட்டு ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டது. நிர்வாக வசதிக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த ஏற்பாடு இலங்கைத் தமிழரின் பிற்கால அரசியல் போக்கைத் தீர்மானித்த ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். இந்தச் சீர்திருத்தத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட சட்ட நிரூபண சபையில் உத்தியோக அடிப்படையில் இல்லாத ஆறு உறுப்பினர்களுக்கு இடம் இருந்தது. இதில் தமிழருக்கும், சிங்களவருக்கும் இன அடிப்படையில் ஒவ்வொரு இடம் வழங்கப்பட்டது. 1889ல் இன்னொரு சிங்களவருக்கும், ஒரு முசுலிமுக்கும் இடம் கிடைத்து. இந்தச் சபையில் ஒருவர் பின் ஒருவராகத் தமிழர் பிரதிநிதிகளாக இருந்தவர்களில் பெரும்பாலோர் தமிழர் பகுதிகளை விட்டுக் கொழும்பில் குடியேறிய ��ணம்படைத்த உயர்குடியினராக இருந்தனர். இவர்களது, தொழில், முதலீடுகள் என்பன தமிழர் பகுதிகளுக்கு வெளியிலேயே இருந்தன. இதனால், இலங்கைத் தமிழர் பகுதிகளை இலங்கையின் ஒரு பகுதியாக இணைத்தது இவர்களுக்கு வாய்ப்பாகவே இருந்தது. எனவே, இது குறித்து எவருமே அக்கறை காட்டவில்ல. அரசாங்க சபையில் இலங்கையருக்குக் கூடிய பிரதிநிதித்துவத்தைப் பெறுவதே இவர்களது இலக்காக இருந்தது. +1910 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மக்கலம் சீர்திருத்தம், சட்டநிரூபண சபையில், உத்தியோக அடிப்படையில் அல்லாத உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பத்தாக அதிகரித்தது. தமிழரும் சிங்களவரும் அரசின் சம பங்காளிகளாகக் கருதப்பட்டமையால், இதன் பின்னரும் தமிழர் சிங்களவருக்கான பிரதிநிதிகளின் எண்ணிக்கை ஏறத்தாழச் சம அளவாகவே இருந்தது. 20 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டில் அதிக எண்ணிக்கையான பிரதிநிதிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும், கூடிய அரசியல் உரிமைகளைப் பெறுவதற்காகவும் சிங்கள தமிழ்த் தலைவர்கள் முயற்சி எடுத்தனர். சிங்களவர்களுக்குக் கூடிய உறுப்பினர்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில், பிரதேச அடிப்படையிலேயே பிரதிநிதிகளைத் தெரிய வேண்டும் எனச் சிங்களத் தலைவர்கள் வலியுறுத்தினர். ஆனால், யாழ்ப்பாணச் சங்கம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. நடைமுறையில் இருந்த இன அடிப்படையிலான பிரதிநிதித்துவத்தையே அவர்கள் வேண்டி நின்றனர். ஆனாலும், இலங்கையின் தன்னாட்சிக்காக ஒன்றுபட்ட இயக்கமொன்றைக் கட்டி எழுப்புவதற்காகச் செல்வாக்கு மிக்க கொழும்புத் தமிழ்த் தலைவராக இருந்த பொன்னம்பலம் அருணாசலம் சிங்களத் தலைவர்களுடன் சேர்ந்து இயங்கி வந்தார். சிங்களத் தலைவர்கள் கொழும்பில் தமிழருக்கு ஒரு உறுப்பினரை அளிப்பதாகக் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிங்களவருடன் சேர்ந்து இயங்க யாழ்ப்பாணச் சங்கம் உடன்பட்டது. தொடர்ந்து, சிங்களவரையும் தமிழரையும் உட்படுத்திய இலங்கைத் தேசிய காங்கிரசு என்னும் இயக்கம் உருவானது. 1920 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மனிங் சீர்திருத்தம், கண்டிச் சிங்களவருக்குச் சாதகமாக அமைந்தது, இதனால் கரையோரச் சிங்களவர் தமிழருக்கு அளிந்திருந்த உறுதி மொழியில் இருந்து பின்வாங்கினர். இதனால், ஏமாற்றம் அடைந்த அருணாசலம் இலங்கைத் தேசிய காங்கிரசில் இருந்து வ��லகித் தமிழர் மகாசன சபை என்னும் அமைப்பை உருவாக்கினார். இந்தப் பிளவு இலங்கையில் தமிழ்த் தேசியத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைந்தது. மனிங் சீர்திருத்தத்தின் அடிப்படையில் உருவான சபையில், தமிழர் சிங்களவருக்கு இடையில் இருந்த உறுப்பினர் சமநிலை இல்லாது போய்த் தமிழருக்குப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. + +பின்னர் 1931ல் டொனமூர் சீர்திருத்தத்தின் அடிப்படையில் இன்னொரு புதிய அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்தது. இது சிங்களவரின் கோரிக்கையை ஏற்று, அனைத்து மக்கள் வாக்குரிமையுடன், பிரதேச அடிப்படையில், அரசாங்க சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்ய வழி வகுத்தது. இலங்கை 9 மாகாணங்களாகவும், மொத்தம் 50 தொகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் 7 தொகுதிகளை மட்டுமே இலங்கைத் தமிழர் பெறக்கூடிய வாய்ப்பு இருந்தது. யாழ்ப்பாணத்தில் அக்காலத்தில் செல்வாக்குடன் விளங்கிய இடதுசாரிச் சிந்தனை கொண்ட இளைஞர் இயக்கமான யாழ்ப்பாண இளைஞர் காங்கிரசு டொனமூர் அரசியல் சட்டத்துக்கு அமைய இடம்பெற்ற முதல் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் எனப் பரப்புரை செய்தது. தமிழர் பிரச்சினையைக் கருத்தில் கொள்ளாது இலங்கை மக்களுக்குப் போதிய தன்னாட்சி அதிகாரம் வழங்கவில்லை என்ற அடிப்படையிலேயே இந்தப் புறக்கணிப்பை அது கோரியது. அத்துடன் வட மாகாணத்தின் 4 தொகுதிகளில் போட்டியிட இருந்தவர்களையும் போட்டியிடாதிருக்கச் சம்மதிக்க வைத்தது. இதன் அடிப்படையில் அரசாங்க சபையில் சிங்களவரோடு ஒப்பிடுகையில் தமிழருக்கான உறுப்பினர் எண்ணிக்கை 38க்கு 3 என்ற அளவுக்குக் குறைந்து விட்டது. நிலைமையை உணர்ந்துகொண்ட பலர் தேர்தலை நடத்தக் கோரிக்கை வைத்ததனால், பின்னர் இடம்பெற்ற தேர்தலில் இளைஞர் காங்கிரசுக்கு எதிரானவர்கள் வெற்றி பெற்றனர். அரசாங்க சபையில் தமிழர் பலம் 38க்கு 7 என்ற அளவு இருந்தது. அப்போது அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட அமைச்சரவையில் ஒரு தமிழர்கூட அமைச்சராக இருக்கவில்லை. ஜீ. ஜீ. பொன்னம்பலம் உட்பட மூன்று தமிழருக்குத் துணை அமைச்சர் பதவியும், டபிள்யூ. துரைச்சாமிக்குச் சபாநாயகர் பதவியும் தரப்பட்டன. + +இலங்கையின் அரசியல் யாப்பைத் திருத்துவதற்காக 1934ல் சோல்பரிப் பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவைப் பிரித்தானிய அரசு அமைத்தது. அப்போத��, ஜீ. ஜீ. பொன்னம்பலம் தலைமையில், எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஈ. எம். வி. நாகநாதன் போன்ற கொழும்பைத் தளமாகக் கொண்ட தமிழ்த் தலைவர்கள் ஐம்பதுக்கு ஐம்பது என அக்காலத்தில் அறியப்பட்ட சமபல பிரதிநிதித்துவ அமைப்பு ஒன்றுக்கான கோரிக்கையை முன்வைத்தனர். அதே வேளை யாழ்ப்பாணத்தில் சிலர் கூட்டாசி முறையொன்றுக்கான கோரிக்கையை முன்வைத்தனர். +ஆனால், இக்கோரிக்கைகள் எதையுமே கவனத்தில் கொள்ளாத சோல்பரி ஆணைக்குழுவும், சிங்களப் பெரும்பான்மையினருக்குச் சாதகமாக அமைந்த அரசியல் யாப்பை உருவாக்கியது. ஆனால், சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு வழங்கும் என எதிர்பார்த்துச் சில ஒழுங்குகள் அரசியல் சட்டத்தில் சேர்க்கப்பட்டன. குறிப்பாக 29 ஆவது சரத்து எனப் பரவலாக அறியப்பட்ட பிரிவு, சிறுபான்மையினருக்கு எதிரான சட்டங்கள் உருவாக்கப் படுவதைத் தடுக்கும் எனக் கருதப்பட்டது. சோல்பரி அரசியல் திட்டத்தின் அடிப்படையில் 1947ல் இடம்பெற்ற தேர்தலில் 68 சிங்கள உறுப்பினர்களுக்கு எதிராக 13 இலங்கைத் தமிழ் உறுப்பினர்களே தெரிவாகினர். ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கை தோல்வி அடைந்த பின்னர், வேறு மாற்றுத் திட்டம் எதையும் கொண்டிருக்காத ஒரு நிலையில், தமிழ்த் தலைவர்கள் டீ. எஸ். சேனாநாயக்காவின் அரசுடன் ஒத்துழைக்கத் தீர்மானித்தனர். சுயேச்சை உறுப்பினரான சி. சுந்தரலிங்கம், தமிழ்க் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் ஆகியோருக்கு அமைச்சர் பதவிகளும் வழங்கப்பட்டன. + +பிரித்தானியர், 1948 ஆம் ஆண்டில் விடுதலை வழங்கி இலங்கை முழுவதையும் சிங்களப் பெரும்பான்மை அரசின் பொறுப்பில் ஒப்படைத்தனர். இதன் பின்னர் ஒன்றன்பின் ஒன்றாகப் பல பிரச்சினைகள் உருவாகின. இந்தியர் பிரசாவுரிமைச் சட்டம், தமிழ்ப் பகுதிகளில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம், சிங்களம் மட்டும் சட்டம் போன்றவை தமிழர்களின் உரிமைகளைப் பாதிப்புக்கு உள்ளாக்கின. இந்தியர் பிரசாவுரிமைச் சட்டத்தை அமைச்சராக இருந்த பொன்னம்பலம் ஆதரித்ததால், தமிழ்க் காங்கிரசுக் கட்சி இரண்டாக உடைந்தது. எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில் பலர் கட்சியில் இருந்து விலகி இலங்கைக் கூட்டாட்சிக் கட்சியைத் (இலங்கைத் தமிழரசுக் கட்சி) தொடங்கினர். இக்கட்சி, இனப்பிரச்சினைக்குத் தீர்வாக கூட்டாட்சி முறையை முன்வைத்தது. விடுதலைக்க�� முன்பிருந்தே பல சிங்களத் தலைவர்கள் சிங்கள மொழியை மட்டுமே அரசாங்க மொழியாக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். 1956ல், பௌத்த, சிங்கள உணர்வுகளை முன்வைத்து ஆட்சிக்கு வந்த எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, சிங்களத்தை மட்டும் அரச மொழி ஆக்கும் சட்டத்தை நிறைவேற்றினார். தமிழரசுக் கட்சியினர் கொழும்பில் இதற்கு எதிராக அமைதிவழிப் போராட்டம் நடத்தினர். இது வன்முறையால் அடக்கப்பட்டது. நாடு முழுவதும் இனக்கலவரம் உருவாகித் தமிழ் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பண்டாரநாயக்கா தமிழ் மொழிக்கும் ஓரளவு உரிமை வழங்குவதற்கான ஒப்பந்தம் ஒன்றை செல்வநாயகத்துடன் செய்துகொண்டார். இது பண்டா-செல்வா ஒப்பந்தம் என அறியப்பட்டது. ஆனால் சிங்களத் தலைவர்களின் கடுமையான எதிப்பின் காரணமாகப் பண்டாரநாயக்கா ஒருதலையாக இவ்வொப்பந்ததைக் கைவிட்டார். பண்டாரநாயக்கா இறந்த பின்னர் பதவிக்கு வந்த அவரது மனைவி சிரிமா பண்டாரநாயக்கா சிங்களம் மட்டும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தீவிரமாக இருந்தார். 1965ல் டட்லி சேனாநாயக்கா தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது. மாவட்ட அடிப்படையிலான ஓரளவு அதிகாரப் பரவலாகத்துக்கான வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு, தமிழரசுக் கட்சியினர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்க முன்வந்தனர். எதிர்பார்த்த பலன் எதுவும் கிடைக்காததால், சில ஆண்டுகளுக்குப் பின்னர் அக்கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. + +1970 இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றிய சிரிமா பண்டாரநாயக்கா, இலங்கையைப் பிரித்தானியாவில் இருந்து முற்றாகத் துண்டித்துக்கொண்டு குடியரசு ஆக்குவதற்கான புதிய அரசியல் யாப்பை உருவாக்கினார். நாடு முழுவதும் சிங்களமே அரச மொழியாகவும், பௌத்த மதம் முன்னுரிமை கொண்ட மதமாகவும் இருக்கும் வகையில் யாப்பு உருவாக்கப்பட்டு 1972 இல் இலங்கை குடியரசு ஆக்கப்பட்டது. அத்துடன், கல்வித்துறையில் தரப்படுத்தல் போன்றவை தமிழ் மாணவர்களை விரக்திக்கு உள்ளாக்கின. இளைஞர்கள் மத்தியில் தீவிரவாதப் போக்குத் தலைதூக்கத் தொடங்கியது. மிதவாதத் தமிழ்த் தலைவர்களுக்கு இளைஞர்களிடம் இருந்து அழுத்தங்கள் ஏற்பட்டன. இதனால், இதுவரை எதிரெதிராக இயங்கிவந்த இலங்கைத் தமிழர் அரசியல் கட்சிகளான தமி���ரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரசு என்பனவும், தொண்டமான் தலைமையில் இந்தியத் தமிழருக்காக இயங்கிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் அமைப்பை உருவாக்கிச் சில கோரிக்கைகளை அரசின் முன் வைத்தனர். இது எவ்வித பயனும் அளிக்காததைத் தொடர்ந்து, 1976 இல் இலங்கையில் தமிழருக்குத் தனிநாடு கோரித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், தமிழர் ஐக்கிய முன்னணி என்னும் பெயர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி எனவும் மாற்றப்பட்டது. அமைதிவழியில் தமது இலக்கை அடைவதையே இம்முன்னணி நோக்கமாகக் கொண்டிருந்தது. + +70 களின் பிற்பகுதியிலும், 80 களின் முற்பகுதியிலும் அமைதி வழியில் நம்பிக்கை இழந்த இளைஞர்கள் சிலர் சிறுசிறு குழுக்களாக இயங்கிவந்தனர். 1983 இல் இடம்பெற்ற இனக் கலவரத்தைத் தொடர்ந்து படிப்படியாக மிதவாத அரசியல் கட்சிகளின் செல்வாக்குத் தளர்ந்து வந்தது. பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் வளர்ச்சிபெற்று வந்தன. இவற்றுக்கிடையே உள் முரண்பாடுகளும் அடிக்கடி வெளிப்பட்டன. காலப்போக்கில், விடுதலைப் புலிகள் இயக்கம் வடக்குக் கிழக்கின் பெரும் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அளவுக்கு வளர்ந்தது. 1987 இல் இலங்கைத் தமிழரின் பங்களிப்பு எதுவும் இன்றி இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஒன்று உருவானது. இதன் அடிப்படையில் அதிகாரப் பரவலாக்கத்துக்காக மாகாண சபைகள் உருவாக்கப்பட்டதுடன், தமிழ் தேசிய மொழியாகவும் அறிவிக்கப்பட்டது. அமைதி காப்பதற்காக வடக்குக் கிழக்கில் இந்திய அமைதிப்படை நிலை கொண்டது. தொடர்ந்து இடம்பெற்ற சில நிகழ்வுகள் இந்திய அமைதிப்படைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முரண்பாடுகளை உருவாக்கி இரு தரப்பினரிடையே போர் ஏற்பட வழிவகுத்தது. 1989 இல் ஒப்பந்தத்தின் நோக்கம் நிறைவேறாமலேயே இந்திய அமைதிப்படை விலகவேண்டி ஏற்பட்டது. மீண்டும் வடக்குக் கிழக்கின் பல பகுதிகள் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே வெளிநாட்டு நடுவர்களுடன் பல அமைதிப் பேச்சுக்கள் இடம்பெற்றனவாயினும் எவ்வித பயனும் விளையவில்லை. + +உலக அரங்கில் இடம்பெற்ற சில நிகழ்வுகளையும் அதைத்தொடர்ந்து ஏற்பட்ட கொள்கை மாற்றங்களையும் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட இலங்கை அரசு, பல நாடுகளின் உதவிகளைப் பெற்று, விடுதலைப் புலிகள் மீது இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. கிழக்கு மாகாணத்தில் தொடங்கி புலிகளிடம் இருந்த பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிய இலங்கை இராணுவம், முல்லைத்தீவுப் பகுதியில் இடம்பெற்ற இறுதிப்போரில் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்தது. + +போர் நிறுத்தப்பட்டாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. அதே வேளை இலங்கைத் தமிழரின் அரசியல் தலைமைத்துவம் மீண்டும் மிதவாத அரசியல்வாதிகளின் கைக்கு மாறியுள்ளது. இதைவிடப் புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர் பலரும் பல்வேறு மட்டங்களில் இப் பிரச்சினையில் ஈடுபாடு காட்டி வருகின்றனர். இதற்கிடையில் இங்கு போரின் போது காணாமல் போன தமிழர்களின் பட்டியலை தயார் செய்ய அரசு கல்முனையிலிருந்து துவங்கியுள்ளது + + + + + + +நீர் + +நீர் ("water") என்பது HO என்ற வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். நிறமற்றும் நெடியற்றும் ஒரு ஒளிபுகும் தன்மையும் இச்சேர்மத்தின் தோற்றப் பண்புகளாகும். புவியிலுள்ள ஓடைகள், ஏரிகள், கடல்கள், அனைத்தும் பெரும்பாலும் நீராலேயே ஆக்கப்பட்டுள்ளன. மேலும் உலகில் காணப்படும் உயிரினங்கள் அனைத்திலும் நீரானது நீர்மவடிவில் காணப்படுகிறது. உயிரினங்களின் உடலுக்கு ஆற்றலையோ, கனிம ஊட்டச்சத்துகள் எதையுமோ நீர் தருவதில்லை என்றாலும் அவ்வுயிரினங்கள் உயிர் வாழ்வதற்கு நீர் அத்தியாவசியமானதாகும். ஒரு நீர் மூலக்கூற்றில் ஓர் ஆக்சிசன் அணுவுடன் இரண்டு ஐதரசன் அணுக்கள் சகப் பிணைப்பு மூலம் பிணைக்கப்பட்டுள்ளன. திட்டவெப்ப அழுத்தத்தில் இது ஒரு நீர்மமக இருந்தாலும் திடநிலையில் இது பனிக்கட்டியாகவும் வாயு நிலையில் நீராவியாகவும் காணப்படுகிறது. மழை வடிவில் இது பூமியில் வீழ்படிவாகவும் மூடுபனியாக தூசுபடலமாகவும் உருவாகிறது. நீர்ம நிலைக்கும் திடநிலைக்கும் இடைப்பட்ட தொங்கல் நிலையிலுள்ள நீர்த்துளிகள் மேகங்களாக மாறுகின்றன. இறுதியாக இந்நிலையிலிருந்து பிரிந்து படிகநிலைப் பனிக்கட்டி வெண்பனியாக வீழ்படிவாகிறது. நீரானது தொடர்ச்சியாக நீராவிபோக்கு, ஆவி ஒடுக்கம், வீழ்படிவு போன்ற செயல்களுடன் நீர்ச்சுழற்சிக்கு உட்பட்டு இயங்கிக்கொண்டே கட��ைச் சென்றடைகிறது. + +புவிப் பரப்பின் 71% பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. புவியின் தண்ணீரில் பெரும்பகுதி சமுத்திரங்கள், ஏனைய பரந்த நீர்நிலைகளிலும், சுமார் 1.6% பகுதி நிலத்தடி நீர்கொள் படுகைகளிலும் காணப்படுகிறது. வளி மண்டல நீரின் 0.001% பகுதி வாயு வடிவிலும், காற்றில் மிதக்கும் திட மற்றும் திரவ துகள்களால் உருவாகும் மேகங்களிலும், காற்றின் நீராவி குளிர்ந்து சுருங்குவதால் ஏற்படும் நீர்க்கோர்வைகளிலும் காணப்படுகிறது. நில மேலோட்ட நீரின் 97% பகுதி உவர்நீர்ச் சமுத்திரங்களிலும், 2.4% பனி ஆறுகள் மற்றும் துருவ பனிக்கவிகைகளிலும், ௦0.6%பகுதி ஏனைய நிலமேலோட்ட நீர் நிலைகளான ஆறுகள், ஏரிகள், குளம் குட்டைகளிலும் காணப்படுகிறது. புவியின் தண்ணீரில் ஒரு சிறிய அளவு உயிர்களின் உடல்களிலும், உற்பத்தி செய்யப்பட பொருட்களிலும் காணப்படுகிறது. ஏனைய நீர் துருவ பனிக்கவிகைகளிலும், பனி ஆறுகளிலும், நீர் கொள் படுகைகளிலும், ஏரிகளிலும் சிறைபட்டனவாகவும் சிலநேரம் புவியின் உயிரினங்களுக்கான நன்னீராதாரமாகவும் காணப்படுகின்றன. + +நீரானது ஆவியாதல், நீராவிப்போக்கு(ட்ரான்ஸ்பிரேஷன்), ஆவிஊட்டளவு (இவாப்போட்ரான்ஸ்பிரேஷன்), குளிர்ந்து சுருங்கி நீர்க் கோர்வைகளாதல்(பிரெசிபிடேஷன்) மற்றும் தல ஓட்டம் (ரன் ஆஃப்)எனும் நிலைகளின் தொடர் சுழற்சிக்குப் பின் பெரும்பாலும் கடலை அடைகிறது. நிலத்திற்கு நீராவியேந்திச் செல்லும் காற்றின் அளவு கடலினுட் செல்லும் நீரின் தள ஓட்டத்தை ஒத்ததாய் இருக்கிறது. நிலத்திற்கு மேலே நீராவியாதலும், நீராவிப்போக்கும், குளிர்ந்து சுருங்குவதால் நீர்க் கோர்வைகள் உருவாவதற்கு வழிவகுக்கின்றன. + +மனிதர்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் தூய்மையான குடிநீர் இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுகளில், உலகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பாதுகாப்பான குடிநீர் வசதி குறிப்பிடத்தக்க வகையில் சீரான முன்னேற்றம் கண்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வசதிக்கும் ஒரு நபருக்கான மொத்த நாட்டு உற்பத்திக்கும்(ஜிடிபி)இடையே பரஸ்பர சம்பந்தம் காணப்படுகிறது. 2025 ம் ஆண்டுக்குள் உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலானோர் நீரை அடிப்படையாகக் கொண்ட பலவீனங்களுக்கு உட்படுத்தப்படுவர் என சில பார்வையாளர்கள் கணித்துள்ளனர். பல்வேறு வேதியற் பொருட்களின் கரைப்பானாக���ும், தொழிற்சாலைகளில் குளிர்ப்பி மற்றும் கடத்தியாகப் பயன்படுத்தப்படுவதாலும், உலக வர்த்தகத்தில் நீர் முக்கிய பங்காற்றுகிறது. தோராயமாக 70 சதவீத நன்னீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. + +நீர் என்பது H2O எனும் வேதியியற் குறியீட்டைக் கொண்ட ஒரு இரசாயனப் பொருளாகும்: நீரின் ஒரு மூலக்கூற்றில் இரண்டு ஐதரசன் அணுக்கள் ஒரு ஆக்சிசன் அணுவோடு பிணைப்பில் உள்ளன. + +நீர் இயற்கையில் திண்ம, திரவ, வாயு ஆகிய மூன்று சடப்பொருணிலைகளில் காணப்படுகிறது, பூமியில் பல்வேறு வடிவங்களை எடுத்துக்கொள்கிறது: விண்ணில் நீராவி, மேகங்களாகவும், சமுத்திரங்களில் கடல்நீர், பனிப்பாறைகளாகவும், மலைகளில் பனியாறுகள், நதிகளாகவும், நிலத்தடியில் நீர்கொள் படுகைகளாகவும் நீர் காணப்படுகிறது. + +நீரின் முக்கிய வேதியியற் மற்றும் பௌதிக பண்புகள் கீழ்வருமாறு: + + + +நீர் பலவிதமான பொருட்களைக் கரைத்து அவற்றிற்கு வெவ்வேறு சுவைகளையும், வாசனைகளையும் கொடுக்கிறது.உண்மையில் மனிதர்களும், விலங்குகளும், நீரின் அருந்துதரத்தைக் கணிக்கும் தங்களது புல விருத்தியால் உப்பு நீரையோ, அசுத்த நீரையோ தவிர்த்து விடுகின்றனர். மேலும் மனிதர்கள் வெதுவெதுப்பான நீரை விட குளிர்ந்த நீரையே பருக விளைகின்றனர்; குளிர்ந்த நீரானது சொற்ப கிருமிகளையே கொண்டிருக்கக் கூடும். ஊற்று நீர் மற்றும் கனிம நீரில் விளம்பரப்படுத்தப்படும் சுவையானது அதில் கரைந்திருக்கும் தாதுக்களிலிருந்து பெறப்படுவது. தனி HO சுவையோ மணமோ அற்றது. ஊற்று நீர் மற்றும் கனிம நீரின் தூய்மையென குறிப்பிடப்படுவது அவற்றின் நச்சற்ற, மாசற்ற, கிருமிகளற்ற நிலையேயாகும். + +உலகத்தின் நீரில் பெருமளவு விண்மீன்கள் உருவாதலின் துணைப் பொருளாக விளைந்திருக்கலாம். விண்மீன்களின் தோற்றத்தின் போது, அவற்றின் பிறப்பு வலிமையான வெளிநோக்கு வளிக்காற்று மற்றும் புழுதிப் புயலால் சூழப்பட்டிருக்கிறது. இத்தகைய வெளியேற்றம் நாளடைவில் சூழ்ந்திருக்கும் வாயுக்களைத் தாக்குவதனால் உருவாகும் அதிர்வலைகள் வாயுக்களை அழுத்தி வெப்பமேறச் செய்கிறது. அவ்வமயம் தென்படுகிற நீரானது இந்த வெப்பச் செறிவான வாயுக்களால் அதிவேகமாக உற்பத்தி செய்யப்பட்டதாகும். + +பால்வெளியெனும் நமது விண்மீன் மண்டலத்தினுள் காணப்படும் நட்சத்திரங்களுக்கிடையே��ான மேகங்களில் தண்ணீர் கண்டறியப்பட்டுள்ளது. நீரின் கூறுகளான ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜன் ஆகியவை பிரபஞ்சத்தில் மிகுதியாகக் காணப்படும் தனிமங்களாதலால், ஏனைய விண்மீன்மண்டலங்களிலும் தண்ணீர் மலிந்திருக்கிறதென நம்பப்படுகிறது. நட்ச்த்திரங்களுக்கிடையேயான மேகங்கள் நாளடைவில் சூரிய ஒளிமுகிலாகவும், சூரிய மண்டலமாகவும் சுருங்குகின்றன. + +நீராவியளவு கீழ்காணும் விகிதங்களில் அமைந்துள்ளது: + + +திரவ நீர் கீழ்காணும் விகிதங்களில் காணப்படுகிறது: + + +சனிக் கிரகத்தின் சந்திரனான என்ஸெலேடஸின் மேற்பரப்புக்கு சிறிது கீழேயும், வியாழனின் சந்திரனான ஐரோப்பாவிலும் திரவ நீர் காணப்படுவதாக உறுதியான ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. + +உறை பனிநீர் கீழ்கண்டவாறு காணப்படுகிறது: + + +உறைபனி நீர் சந்திரன், செரஸ், டேதிஸ் போன்றவைகளில் இருக்கலாம். நீரும் ஏனைய ஆவியாகும் பொருட்களும் யுரேனஸ் மற்றும் நெப்ட்யுனின் பெரும்பாலான உள்ளமைப்புகளின் பிரதான மூலங்களாகும். + +புவியின் உயிர்களது ஜீவாதாரமாக தண்ணீரும், ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்தனவாக நீரின் வாயு மற்றும் திட வடிவங்களும் திகழ்கின்றன என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பூமி சூரிய மண்டலத்தின் வசிக்கத்தக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. ஒருவேளை பூமியானது சூரியனுக்கு சிறிது அருகாமையிலோ (5 % அல்லது 8 மில்லியன் கிலோமீட்டர்கள் தொலைவில்), அல்லது தொலைவிலோ இருக்கும் பட்சத்தில் நீரின் மூன்று வடிவங்களும் தற்போதிருப்பது போல் ஒருசேர காணப்படுவதற்கான வாய்ப்புகள் கடினம். + +புவியின் ஈர்ப்பு சக்தி அதற்கொரு வளிமண்டலத்தை அளித்திருக்கிறது.வளிமண்டலத்தின் நீராவியும், கரியமில வாயுவும் வெப்பவிடைத்தாங்கு பொருளாகத் திகழ்ந்து, பைங்குடில் விளைவை( கிரீன் ஹவுஸ் இஃபெக்ட்) ஏற்படுத்தி இயல்பை விட நிதானமான மேற்பரப்பு வெப்பம் நிலவச் செய்கிறது. பூமி ஒருவேளை சிறியதாக இருக்குமானால், ஒரு மெல்லிய வளிமண்டலம் அமையப்பெற்று அதீத வெப்பத்திற்கு உள்ளாவதினிமித்தம், துருவ பனிக்கவிகைகளைத் தவிர ஏனைய இடங்களில் நீரின் தேக்கத்தைத் தவிர்த்திருக்கும்.(செவ்வாய் கிரகத்தைப் போல) + +உயிரானது தனது நித்திய சஞ்சாரத்துக்குத் தேவையான நிர்ணயங்களை தானே வகுத்துக் கொள்கிறது என முன்மொழியப்பட்டுள்ளது. மாறுபட்ட அளவுகளில் உள்வரும் சூரியக் கதிர் வீச்சு (பெற்ற வெயில்-இன்சொலேஷன்)க்குப் பின்னும் புவியின் மேற்பரப்பு வெப்பம் நிலவரலாற்றுக் காலம் முழுவதும் ஒரே சீராக இருந்து வந்துள்ள விதம், பைங்குடில் விளைவு மற்றும் மேற்பரப்பு அல்லது வளிமண்டல ஒளி பிரதிபலிப்புகளின் கூட்டு விளைவுகளை உள்ளடக்கிய திறமையான புவி வெப்ப நிர்வாகச் செயல்பாட்டை உணர்த்துகிறது. இந்த முன்மொழிவு "கையா கருதுகோள் " எனக் குறிப்பிடப்படுகிறது. + +கோள்களில் இருக்கும் நீரின் வடிவம் அதன் புவியீர்ப்பு சக்தியால் தீர்மானிக்கப்படும் வளிமண்டல அழுத்தத்தைப் பொறுத்தே அமைகிறது.கோளானது போதுமான அளவு பெரியதாயிருக்கும் பட்சத்தில் அதன் புவியீர்ப்பு சக்தியால் நிர்ணயிக்கப்படும் அழுத்தமானது அதிக வெப்பங்களில் கூட அதன் நீர் திட நிலையிலிருக்கும்படி செய்கிறது. + +பூமியில் நீர் தோன்றிய விதத்தைப் பற்றி பல கோட்பாடுகள் நிலவுகின்றன. + +நீரியல்(ஹைட்ராலஜி) என்பது புவியனைத்திலும் உள்ள நீரின் போக்கு, பரவல், மற்றும் தரத்தைப் பற்றிய கல்வியாகும். ஹைட்ரோகிராஃபி என்பது நீரின் விநியோகத்தைக் குறித்த கல்வியாகும். நிலத்தடி நீரின் பரவலையும், போக்கையும் குறித்த கல்வி ஹைட்ரோஜியாலஜி எனவும் உறைபனி ஆறுகளைக் குறித்த கல்வி கிளேஸியாலஜி எனவும் உள்நாட்டு நீர் நிலைகளைக் குறித்த கல்வி லிம்னாலஜி எனவும் சமுத்திரங்களின் பரவலைக் குறித்த கல்வி ஒஷியனோகிராஃபி எனவும் அழைக்கப்படுகிறது. நீரியலின் அங்கமான சூழ்நிலை நிகழ்வுகள் ஈகோ ஹைட்ராலஜியின் கீழ் வருகிறது. + +கிரகங்களின் பரப்பிலும், அவற்றின் மேற்பரப்புக்கு கீழும், மேலும் காணப்படும் மொத்த நீர்த்தொகுதி ஹைட்ரோஸ்ஃபியர் என்றழைக்கப்படுகிறது.பூமியின் உத்தேச மொத்த நீர்க் கொள்ளளவு (உலக தண்ணீர் விநியோகம்) 1,360,000,000 கி.மீ (326,000,000 மில்லியன் )கன அடிகள். இம் மொத்தக் கொள்ளளவில்: + + +நிலத்தடி நீரும், நன்னீரும், மனிதர்களுக்கு உபயோகமுள்ள அல்லது உபயோக சாத்தியமுள்ள நீராதாரங்களாகும். + +தண்ணீரானது சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், நதிகள், நீரோட்டங்கள், கால்வாய்கள், குளங்கள், குட்டைகள் போன்ற நீர் நிலைகளில் காணப்படுகிறது.பூமியில் பெருமளவு காணப்படும் நீர் கடல்நீர் ஆகும்.வளிமண்டலத்தில் திட, திரவ மற்றும் வாயு வடிவங்களிலும், நீர் காணப்படுகிறது.நிலத்தடி நீர்கொள் படுக��களாகவும் நீர் காணப்படுகிறது. + +நிலவியல் நிகழ்வுகள் பலவற்றில் நீர் முக்கியமானதாக இருக்கிறது.நிலத்தடி நீர் பாறைகளெங்கும் காணப்படுவதால், இந்நிலத்தடி நீரின் அழுத்தம் பிளவுப் பெயர்ச்சியடைதலின் மாதிரிகளை நிர்ணயிக்கிறது. பூமியின் மூடகத்தில் காணப்படும் நீரே எரிமலைகள் உருவாகக் காரணமான உருகுநிலையை ஏற்படுத்துகிறது. பூமியின் மேற்பரப்பில் நடக்கும் பௌதீக மற்றும் வேதியியற் பாறைச் சிதைவு நிகழ்வுகளில் நீர் முக்கிய பங்காற்றுகிறது.நீரும், அற்பமாயிருந்தாலும் முக்கியமான காரணியான பனிக்கட்டியும் பூமியின் மேற்பரப்பில் நடக்கும் மிகப் பெரிய அளவிலான படிவக் கடத்துமைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. கடத்தப்பட்ட வண்டலின் படிதல் பல்வேறு வகையான படிவுப்பாறைகளைத் தோற்றுவித்து புவிவரலாற்றின் நிலவியல் பதிவேடுகளாகத் திகழ்கின்றன. + +நீரின் சுழற்சி என்பது (விஞ்ஞானப்பூர்வமாக நீரியற் சுழற்சி என்றழைக்கப்படுகிறது) நீர்க்கோளத்தினுள், வளிமண்டலம், நிலநீர், மேலோட்ட நீர், நிலத்தடி நீர், மற்றும் தாவரங்கள் ஆகியவற்றிற்கிடையேயான நீரின் தொடர் பரிமாற்றமாகும் . + +இப்பகுதிகளினூடே நீர் இடைவிடாமல் ஓடி "நீர் சுழற்சி " யின் கீழ்க்கண்ட பரிமாற்ற நிகழ்வுகளை விளைவிக்கிறது. + +சமுத்திரங்களின் மேலுள்ள நீராவியில் பெருமளவு கடலுக்கே திரும்பிச் செல்லுகிறதென்றாலும் நிலத்தின் மேற்பகுதிக்குக் காற்றினால் எடுத்துச் செல்லப்படும் நீராவியின் அளவு, நிலத்தினின்று கடலுக்குள் வழிந்தோடும் தள ஓட்டத்துக்கு, வருடத்திற்கு தலா 36 Tt(டெட்ரா டன்கள்) என்ற அளவில் சமமாயிருக்கிறது. நில மேற்பகுதியின் ஆவியாதலும், நீராவிப்போக்கும் வருடத்திற்கு 71 Tt (டெட்ரா டன்கள்) நீரை எடுத்துக்கொள்கின்றன.நில மேற்பகுதியின் மேல் நீராவி குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க்கோர்வை, வருடத்துக்கு 107 Tt என்ற அளவில் பல வடிவங்களில் வெளிப்படுகிறது: பொதுவாக மழை, உறைபனி, ஆலங்கட்டி மழை, போன்றவைகளாலும் சில நேரங்களில் மூடு பனி மற்றும் பனித்துளிகளாக இது தோன்றலாம். குளிர்விக்கப்பட்ட நீரானது சூரிய ஒளிக்கற்றைகளை ஒளி விலகலுக்குட்படுத்துவதன் மூலம் வானவில்லைத் தோற்றுவிக்கிறது. + +தள ஓட்டம் பெரும்பாலும் நதிகளுக்குள் பாயும் நீர்ப் பிரி முகடுகளுக்குள் சேகரிக்கப்படுகிறது. ��தியின் ஓட்டத்தையோ, ஓடைகளின் ஓட்டத்தையோ ஒத்து நீர்த் தர கூரளவுகளைக் கணிக்க உதவும் செயற்கை கணித மாதிரி, நீரியற் கடத்தல் மாதிரி (ஹைட்ராலஜிகல் டிரான்ஸ்போர்ட் மாடல்) என்று அழைக்கப்படுகிறது. சிறிதளவு நீர் விவசாய நீர்ப்பாசனத்துக்கு மாற்றி விடப்படுகிறது. நதிகளும், கடல்களும் பயணத்திற்கும், வாணிபத்திற்கும் வாய்ப்பளிக்கின்றன.அரிப்பின் வாயிலாகத் தள ஓட்டமானது சுற்றுப்புறத்தைச் சீர்படுத்தும் விதமாக, ஆற்றுப்பள்ளத்தாக்குகளையும், கழிமுகங்களையும் வடிவமைத்து மண்வளத்தையும், சம மட்ட தளத்தையும் உருவாக்கி, அவற்றை மக்கள் தொகை மையங்களாக அபிவிருத்தி செய்கிறது.ஒரு நிலப் பரப்பு தாழ்வானதாக இருப்பதினிமித்தம் தண்ணீரால் சூழப்படும் பொழுது வெள்ளம் ஏற்படுகிறது. நதி பெருக்கெடுத்து கரைகளைத் தாண்டி ஓடும் பொழுதோ சமுத்திர மார்க்கமாகவோ வெள்ளம் ஏற்படலாம். பல மாதங்களாகவோ, வருடங்களாகவோ ஒரு பகுதி அனுபவிக்கும் நீண்ட கால தண்ணீர் தட்டுப்பாடு வறட்சி எனப்படுகிறது. ஒரு பகுதியானது வாடிக்கையாக சராசரிக்குக் கீழேயான மழையளவைப் பெறும்பொழுது வறட்சி ஏற்படலாம். + +தள ஓட்டத்தில் சிறிதளவு காலங்காலமாக சிக்கிக் கொள்கிறது. எடுத்துக்காட்டாக ஏரிகளின் நீரைக் கூறலாம். +குளிர் காலங்களில் உயரமான இடங்களிலும் மற்றும் பூமியின் வட மற்றும் தென் கோடியின், துருவ முகடுகள்,பனிப்பாதைகள் மற்றும் பனியாறுகளில் பனி மண்டுகிறது. . +நீரானது நிலத்தினுள் ஊடுருவி நிலத்தடி நீர்கொள் படுகைகளுக்குள் செல்லக் கூடியது.இந்நிலத்தடி நீர் பின்னர் நீரூற்றுக்கள், வெந்நீரூற்றுக்கள் மற்றும் உஷ்ண ஊற்றுக்கள் வாயிலாக மீண்டும் கிளர்ந்தெழுந்து, மேற்பரப்பிற்கு வரலாம். நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் செயற்கையாகவும் இறைத்துக் கொள்ளலாம். +மனிதர்களுக்கும், நிலத்தில் வாழும் ஏனைய உயிர்களுக்கும் நன்னீர் இன்றியமையாததாதலால், இவ்விதமான நீர் சேகரிப்பு மிக முக்கியமான ஒன்று. ஆனால், உலகத்தின் பல பகுதிகளில் தண்ணீர்ப் பற்றாக்குறையே நிலவுகிறது. + +புவிப்பெருங்கடல்களின் மேற்பரப்பில் சந்திர சூரிய் ஆகர்ஷண சக்தியால் ஏற்படுத்தப்படும் சுழற்சியான ஏற்றவிறக்கக் கணிமுறையே அலைகள் உருவாகக் காரணம். அலைகள் கடல் மற்றும் நதி முகத் துவாரங்களின் ஆழங்களில் மாற்றங்களை ஏற்படுத்த��� கடனீரோட்டங்களின் வற்றுப்பெருக்க வளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. +குறிப்பிட்டதொரு இடத்தின் அலையானது பூமியுடன் ஒப்பிடும்பொழுதான சந்திர சூரியனின் இடமாற்றத்தாலும், புவிசுழற்சி விளைவுகளாலும், அப்பகுதியின் கடலாடி இயலாலும் நிர்ணயிக்கப்படுகிறது. உயர்மட்ட அலையில் மூழ்கியும், தாழ் அலையில் தெரிவதுமான அலையிடை மண்டலம், ஆழிப்பெருங்கடல் அலைகளின் முக்கிய சூழ்நிலை விளைவாகும். + +உயிரியற் நிலையிலிருந்து நோக்கும் பொழுது நீர் உயிர்களின் விருத்திக்குத் தேவையான இன்றியமையாத பல சிறப்புப் பண்புகளைப் பெற்றிருப்பதால் ஏனைய பொருட்களிலிருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது.கரிமச்சேர்மவினைகள் மூலம் பல்பிரிவாக்கத்திற்கான வழிகளைத தூண்டுவதால் நீர் இச்சிறப்பினைப் பெறுகிறது. உயிர்களனைத்தும் நீரைச் சார்ந்துள்ளன.உடலின் கரைபொருட்கள் பலவற்றைக் கரைக்கும் கரைப்பானாகவும், உடலின் வளர்சிதைமாற்ற நிகழ் முறைகள் பலவற்றின் முக்கிய அங்கமாகவும் திகழ்வதால் நீர் அதிமுக்கியமானதாகும். வளர்சிதைமாற்றம் என்பது வளர்மாற்றம் மற்றும் சிதைமாற்றத்தைக் கொண்டது. வளர்மாற்றத்தில் மூலக்கூறுகளிலிருந்து நீர் அகற்றப்பட்டு (ஆற்றலுடனான நொதி வேதிவினைகள் மூலம்) எரிபொருள் மற்றும் தகவற் சேமிப்பிற்குதவும் மாவுச்சத்துக்கள், டிரைக்ளிசரைடுகள், புரதங்கள் போன்ற பெரிய மூலக்கூறுகளை அளிக்கிறது. சிதை மாற்றத்தில், நீர் பிணைப்புகளை உடைத்து ஆற்றலுபயோகத்துக்கும் ஏனைய விளைவுகளுக்கும் தேவையான குளுகோஸ்,கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற சிறிய மூலக்கூறுகளை ஏற்படுத்துகிறது.ஆகவே நீரானது இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகளுக்கு இன்றியமையாததாகவும், மையமாகவும் திகழ்கிறது. நீர் இல்லாதிருந்தால், இத்தகைய வளர்சிதைமாற்ற நிகழ்முறைகள் இல்லாமல் போய் அதற்கு பதிலாக வேறுபல நிகழ்வுகளான வாயு உட்கவர்தல், புழுதி சேகரிப்பு போன்றவை இருந்திருக்கக் கூடுமோவென்று நம்மை எண்ண வைக்கிறது. + +நீர் ஒளிச்சேர்க்கை மற்றும் சுவாசத்திற்கும் அடிப்படையான ஒன்றாகும்.ஒளிச்சேர்க்கை செய்யும் செல்கள் சூரியனின் ஆற்றலை பயன்படுத்தி நீரின் ஹைட்ரஜனை ஆக்சிஜனிலிருந்து பிரிக்கின்றன.ஹைட்ரஜன் காற்றிலிருந்தோ, நீரிலிருந்தோ உட்கவரப்பட்ட கரியமில வாயுவுடன் CO இணைந்து குளுகோஸை உருவாக்கி ஆக்சிஜனை வெளிவிடுகிறது.அனைத்து உயிரணுக்களும் இத்தகைய எரிபொருள் பிரயோகத்தின் மூலம் ஹைட்ரஜனையும், கார்பனையும் ஆக்சிஜனேற்றம் அடையச் செய்வதன் மூலம் சூரிய ஒளியைக் கவர்ந்து செல் சுவாசத்தில் நீரையும், கரியமில வாயுவையும் (CO) மீட்டு சீரமைக்கின்றன. + +அமில கார நடுவுநிலைமைக்கும், நொதி செயல்பாட்டுக்கும் நீர் முக்கியமானதாகும். ஹைட்ரஜன் அயனி(H)அதாவது புரோத்தன் வழங்கியான ஒரு அமிலம், ஹைட்ராக்சைடு அயனி (OH) அதாவது புரோத்தன் வாங்கியான ஒரு காரத்துடன் நடுநிலையாக்கல் வினைக்குட்படும் பொழுது நீர் உருவாகிறது. ஹைட்ரஜன் அயனிச் செறிவின் எதிர்மறை மடக்கை(pH), 7 ஆக இருப்பதினால், நீர் நடுவுநிலைமையுள்ளதாகக் கருதப்படுகிறது. அமிலங்கள் pH மதிப்பு 7 ஐ விட குறைவாகப் பெற்றதாயும் காரங்கள் pH மதிப்பு 7 ஐ விட அதிகமாகப் பெற்றதாயும் திகழ்கின்றன.வயிற்றின் அமிலம் (HCL) ஜீரணத்திற்கு உதவுகிறது.ஆயினும் செரிமான எதிர்க்களிப்பின் பொழுது வெளிக்காட்டப்படும் அதன் உணவுக்குழாய் அரிக்கும் தன்மையை, அலுமினியம் ஹைட்ராக்சைடு போன்ற காரங்களை உட்கொள்வதினால் உருவாகும் நீர் மற்றும் அம்மோனியம் குளோரைடு உப்பினால் தற்காலிகமாக சரிகட்டிவிடலாம். பொதுவாக நொதிகளை உள்ளடக்கிய மனித உயிர்வேதியியல் செயல்பாட்டுக்கு உயிரியற் நடுநிலை pH ஆன 7.4 உகந்ததாகும். + +எடுத்துக்காட்டாக, எஷ்ஷெறீஷியா கோலையின் ஒரு செல்லில் 70% நீரும், மனித உடலில் 60–70% நீரும், தாவரங்களில் 90% நீரும், முழு வளர்ச்சியடைந்த சொறி மீனில் (ஜெல்லி ஃபிஷ்)94–98% நீரும், உள்ளதெனக் கண்டறியப்பட்டுள்ளது. + +பூமியின் தண்ணீர்கள் உயிர்களால் நிறைந்துள்ளன.கற்கால உயிர்கள் நீரிலிருந்தே தோன்றின; மீன்கள் அனைத்தும் நீரில் மட்டுமே உயிர்வாழ்கின்றன என்றால் டால்ஃபின்கள், திமிங்கலங்கள் ஆகியவைகளை உள்ளடக்கிய பல்வேறு வகையான கடல்வாழ் பாலூட்டிகளும் நீரில் வாழ்கின்றன. ஈரூடக வாழிகள் (ஆம்ஃபிபியன்ஸ்) தங்கள் வாழ்க்கையின் சில பகுதிகளை நீரிலும் ஏனையவற்றை நிலத்திலும் களிப்பன. கடற்பாசிகள், ஆல்காக்கள் போன்றவை நீரில் வளர்ந்து நீரடி சூல்மண்டலங்களின் ஆதாரமாக இருக்கின்றனமிதவை நுண்ணுயிரிகள் ஆழி உணவுத் தொடரின் அஸ்திவாரமாகும். + +நீர்வாழ் விலங்குகள் உயிர்வாழத் தேவையான பிராணவாயுவை பல வழிகளில் பெற்றுக்கொள்கின்றன. மீன்களுக்கு நுரையீரலுக்குப் பதிலாகச் செவுள்கள் இருக்கின்றன. நுரையீரல் மீன்(லங்ஃபிஷ்), நுரையீரலையும் செவுளையும் கொண்டது. கடல் பாலூட்டிகளான, டால்ஃபின்கள், திமிங்கலங்கள், நீர் நாய்கள், கடல் சிங்கங்கள் போன்றவை அவ்வப்போது வெளிக்காற்றை சுவாசிக்க நீருக்கு வெளியே தலைகாட்டவேண்டும். சிற்றுயிர்கள் பிராணவாயுவைத் தங்கள் தோலின் வழியாக உட்கவரக் கூடியவை. + +நாகரீகம் நதிகள் மற்றும் முக்கிய நீர்வழிகளை அடுத்து செழுமையாக இருந்ததாக வரலாற்றுவழி அறிகிறோம். நாகரீகத்தின் தொட்டில் என்றழைக்கப்படும் மெஸொப்படாமியா இரு முக்கிய நதிகளான டைக்ரிஸ் மற்றும் இயுஃப்ரட்டீஸ் இடையே அமையப் பெற்றிருந்தது; எகிப்தியர்களின் பண்டைய சமூகங்கள் நைல் நதியை முழுமையாக நம்பியிருந்தன. பெருநகரங்களான ராட்டர்டேம், லண்டன், மாண்ட்ரீல், பாரிஸ், நியுயார்க் நகரம், பியுனோஸ் அயர்ஸ், ஷாங்கய், டோக்கியோ, சிகாகோ, ஹாங்காங் போன்றவை தாங்கள் பெற்ற வெற்றியைத் தங்களது நீர்வழி அணுக இயலுந்தன்மைக்கும், அதனால் விளைந்த வியாபார விருத்திக்கும் உரித்தாக்குகின்றன. பாதுகாப்பான துறைமுகங்களையுடைய சிங்கப்பூர் போன்ற தீவுகளும் அதன் காரணமாகவே வளம் பெற்றன.தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படும் வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் போன்ற நாடுகளில், சுத்தமான குடிநீர் மனித வள மேம்பாட்டுக்கு தேவைப்படும் முக்கிய காரணியாய் இருக்கிறது. + +மனிதர்கள் உட்கொள்ளத் தகுந்த நீர் குடிநீர் அல்லது அருந்தத்தக்க நீர் என்றழைக்கப்படுகிறது. அருந்த்தத்தகாத நீர் வடிகட்டுதல் அல்லது காய்ச்சிவடித்தல்(நீர் ஆவியாகும் வரைச் சூடுபடுத்தியப்பின் வெளியாகும் நீராவியை மாசற சிறைப்படுத்தி குளிர்வித்துப் பெறுதல்)மூலமாகவும், வேதியியல் வினைகளுக்குட்படுத்துதல் அல்லது ஏனைய முறைகளாலும் (வெப்பத்திற்குள்ளாக்கிக் கிருமிகளைக் கொல்வது போன்றவை) அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. குறைந்த தர மாறுபாட்டைக் கொண்ட நீர் பாதுகாப்பான நீர் என்றழைக்கப்படுகிறது (நீர் சுத்திகரிப்பு நடைமுறைகளுக்கருகில் இல்லாத மனிதர்களுக்கு சிறப்பாக வழங்கப்படும் நீரான இது, கெடுதலை விட அதிகமாக நன்மையே விளைவிக்கிறது). அருந்தத் தகாததாயினும், நீந்தவும், நீராடவும் பயன்படுகிறதான மனிதருக்கு க��டுதல் விளைவிக்காத நீர் அருந்தத்தக்க நீர் அல்லது குடிநீர் எனப்படாமல் பாதுகாப்பான நீர் என்றோ "நீராடப் பாதுகாப்பான நீர்", என்றோ அழைக்கப்படுகிறது. நீரை நீராடுதற்கும், அருந்துவதற்கும் பாதுகாப்பானதாக மாற்ற உதவும் குளோரின் ஒரு தோல் மற்றும் படர்சவ்வு படல உறுத்தியாகும். அதன் உபயோகம் மிகுந்த தொழில்நுட்பம் வாய்ந்ததாகவும் அரசு நெறிமுறைகளால் கண்காணிக்கப்படுவதாகவும் இருக்கிறது.(குடிநீரில் 1 பார்ட் பெர் மில்லியன்(ppm) என்ற அளவிலும் நீராடுதற்குரிய நீரில்,மாசுகளோடூடாத 1–2 ppm குளோரின் என்ற அளவிலும் பொதுவாக பிரயோகிக்கப்படுகிறது). + +இந்த இயற்கைவளம் சில இடங்களில் கிடைப்பதற்கரியதாய் இருப்பதால், இதன் இருப்பு சமூக மற்றும் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.தற்பொழுது உலகம் முழுவதும் 1 பில்லியன் மக்கள் வாடிக்கையாக ஆரோக்கியமற்ற நீரை உட்கொள்கின்றனர்.பாதுகாப்பான குடிநீரும் சுகாதாரமும் கிடைக்காத உலக மக்கள் தொகையை 2015 க்குள் பாதியாக்க வேண்டும் என்ற 2008 ஆம் ஆண்டைய G8 ஈவியன் உச்சிமாநாட்டில் எடுக்கப்பட்ட உறுதிமொழியை பல நாடுகள் ஏற்றுக்கொண்டன. இந்த கடினமான சவாலை எதிர்கொண்டு வெற்றி பெற்றாலும் கூட பின்னும் நிர்ணயிக்கப்பட்ட பாதி பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காதவர்களாகவும் ஒரு பில்லியன் பேருக்கு மேலான மக்கள் போதுமான சுகாதார வசதியற்றவர்களாயும் இருக்கும் நிலையே உள்ளது. மோசமான நீரின் தரம் மற்றும் சுகாதாரமின்மை பயங்கரமானது. மாசுபட்ட குடிநீரால் வருடத்திற்கு 5 மில்லியன் இறப்புகள் நேரிடுகின்றன.பாதுகாப்பான நீர் வருடத்திற்கு 1.4 மில்லியன் வயிற்றுப்போக்கால் ஏற்படும் குழந்தை மரணங்களைத் தடுக்க வல்லதென உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது. இருப்பினும் நீரானது முடிவுறும் ஆதாரமல்ல.குளிர்ந்து சுருங்குதலால் ஏற்படும் நீர்க் கோர்வை களின் மூலம் அது மறுசுழற்சிக்குட்பட்டு ,மனிதர்கள் உட்கொள்வதை விடப் பன்மடங்கு அதிகமான அருந்தத்தக்க நீராக மாற்றப்படுகிறது. எனவே பூமியினடியில் காணப்படும் சிறிதளவு நீர் மட்டுமே புதுப்பிக்க முடியாத ஆதாரமாக இருக்கிறது (நிலத்தடி நீர் கொள் படுகைகளிலிருந்து நமக்கென எடுக்கப்படும் குடிநீர் விநியோகத்தில் 1 சதவீதம் நிறைவு செய்யப்பட 1 முதல் 10 வருடங்கள் ஆகிறது).புவி நீரின் எதார்த்த அளவு அதிகமாய் தென்பட்டாலும், அதற்கு மாறாக அருந்ததக்க மற்றும் பாசன நீரின் விநியோகம் அரிதானதாகவே இருக்கிறது. நீர் வளமற்ற நாடுகள் நீரை இறக்குமதி செய்வதற்கு பதிலாக தயாரிப்பு முழுமை பெற்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன.(இதனால் மனிதர்கள் உட்கொள்வதற்கு போதிய அளவு தண்ணீர் மிஞ்சுகிறது)ஏனெனில் பொருட்களின் உற்பத்திக்கு அப்பொருட்களின் எடையை விட 10 முதல் 100 மடங்கு அதிக எடையுள்ள நீர் தேவைப்படுகிறது. + +வளரும் நாடுகளில், 90% கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் உள்ளூர் நதிகளுக்கும் ஓடைகளுக்கும் போய்க் கொண்டிருக்கிறது. உலக மக்கள் தொகையின் மூன்றில் ஒரு பகுதியைக் கொண்டுள்ள 50 நாடுகள் மிதமான அல்லது மிகுதியான நீர்ப் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றன.இவற்றில் 17 நாடுகள் நீர் சுழற்சியினால் வருடமுழுவதும் தங்களுக்குக் கிடைக்கும் நீராதாரத்திற்கும் மேலாக செயற்கையாக நீரைப் பிரித்தெடுப்பனவாய் இருக்கின்றன. இத்தகைய இழுபறி நன்னீர் நிலைகளான நதிகளையும் ஏரிகளையும் பாதிப்பதோடல்லாமல், நிலத்தடி நீராதாரங்களையும் குறைக்கிறது. + +விவசாயத்தில் நீர்ப்பாசனத்துக்கே நீர் முக்கியமாகப் பயன்படுகிறது. போதுமான உணவு உற்பத்திக்கு பாசனமே முக்கிய காரணியாகும்.வளரும் நாடுகள் சிலவற்றில் பாசனத்துக்காக உபயோகப்படுத்தப்படும் நீர் 90 % ஆக உள்ளது. + +ஏப்ரல் 7,1795 ல் பிரான்சு நாட்டில் ஒரு கிராம் என்பது கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டது."ஒரு மீட்டர் நீளத்தில் நூற்றில் ஒரு பங்கின் நான்கின் கனத்துக்கு சமமான, உருகு நிலையிலுள்ள பனிக்கட்டியின் தட்பவெப்பத்தைக் கொண்ட நீரின் சார்பிலாத பொருண்மை." ஆனால் நடைமுறை வழக்கிற்கு ஆயிரம் மடங்கு பெரிய அளவிலான, கிலோகிராம் எடையிலான உலோக ஆதாரம் தேவைப்பட்டது. எனவே 1 லிட்டர் நீரின் நிறையை சரியாக நிர்ணயிக்குமாறு பணிக்கப்பட்டது.வரையறுக்கப்பட்ட கிராமில் நிர்ணயிக்கப்பட்ட நீரின் வெப்பமான 0 °C—பிரதிசெய்யப்படத்தக்கதொரு "வெப்பநிலை" யாகக் கருதப்பட்டதால் விஞ்ஞானிகள் தரத்தை மறுவரையறுத்தலுக்கு உட்படுத்த விழைந்து நீரானது அதிக "அடர்த்தி" யானதாயிருக்கும் வெப்பநிலையான 4 °C ல் தங்கள் அளவுகளை எடுக்க முற்பட்டனர். [58] + +எஸ்ஐ முறைமையின் கெல்வின் வெப்ப அளவுகோல் நீரின் மும்மைப்புள்ளியை அடிப்படையாக���் கொண்டு 273.16 K அல்லது 0.01 °C என்று வரையறுக்கப்பட்டது. இந்த அளவுகோல் ஏற்கனவே கொதிநிலை (100 °C), மற்றும் உருகுநிலை (0 °C) ஆகியவற்றின் அடிப்படையில் வரையறுக்கப்பட்ட செல்சியஸ் அளவுகோலை விட நுட்பமானதாகக் கருதப்படுகிறது. + +இயற்கை நீர் பெருமளவு ஹைட்ரஜன்-1 மற்றும் ஆக்ஸிஜன்-16 எனும் ஐசோடோப்புகளைக் கொண்டிருந்தாலும்,சிறிதளவு ஹைட்ரஜன்-2 ஐசோடோப்புகளையும் கொண்டிருக்கக் கூடும்.(டியுடீரியம்)டியுடீரியம் ஆக்சைடுகள் அல்லது கன நீர் சிரிதளவேயிருந்தாலும் அது நீரின் இயல்பினை வெகுவாகப் பாதிக்கிறது. நதிகள் மற்றும் ஏரிகளின் நீர் கடல்நீரை விட டியுடீரியத்தை குறைவாகப் பெற்றிருக்கின்றன. எனவே தரமான நீர் என்பது வியென்னா சராசரி ஆழி நீர் நிர்ணயத்தின் (வியென்னா ஸ்டாண்டர்ட் மீன் ஒஷியன் ஸ்பெஸிஃபிகேஷன்)படி வரையறுக்கப்பட்டுள்ளது. + +உடல் பருமனுக்கேற்றவாறு மனித உடம்பு 55% முதல் 78% நீராலானது. வறட்சியை ஈடுசெய்து சரிவர செயல்பட உடலுக்கு நாள் ஒன்றிற்கு 1 முதல் 7 லிட்டர்கள் நீர் தேவைப்படுகிறது. உடல் இயக்கம், வெப்பநிலை, ஈரப்பதம், மற்றும் ஏனைய காரணிகளைப் பொறுத்து நீரின் தேவை மாறுபடுகிறது.இதில் பெருமளவு நேரடி நீர் உட்கொள்ளுதல் என்றில்லாமல் உணவின் வாயிலாகவோ, பானங்கள் வாயிலாகவோ உட்கொள்ளப்படுகிறது.ஆரோக்கியமான மக்களுக்காகும் நீரின் அளவு தெளிவாகக் கணிக்கப்படவில்லையென்றாலும், சரியான நீரேற்றத்தைத் தக்கவைக்க குறைந்தது 6 முதல் 7 டம்ளர் நீர் (சுமார் 2 லிட்டர்கள் நீர்)அவசியமென வல்லுனர்கள் கருதுகின்றனர். மருத்துவ இலக்கியங்கள் இதை விட குறைந்த அளவில், அதாவது உடற்பயிற்சியினாலோ,வெப்ப வானிலையாலோ நிகழும் நீரிழப்பை சரிகட்ட கூடுதலாகத் தேவைப்படும் அளவு நீங்கலாக, சராசரி ஆணுக்கு 1 லிட்டர் நீர் என்ற அளவில், என பரிந்துரைக்கின்றன. ஆரோக்கியமான சிறுநீரகங்களை உடையவர்களுக்கு அதிக நீர் உட்கொள்ளுதல் கடினமாயிருந்தாலும், தேவையை விட (குறிப்பாக வெப்பமான ஈரபதமான வானிலையின் பொழுதும்,உடற்பயிற்சியின் பொழுதும்) குறைவாக நீர் உட்கொள்ளுதல் ஆபத்தானது.எனினும் உடற்பயிற்சியின் பொழுது தேவையை விட அதிகமான அளவு நீர் உட்கொள்ளுதல் நீர் நச்சுப்பொறுண்மையாக்கல் (வாட்டர் இன்டாக்ஸிக்கேஷன்) அல்லது உடல் நீர் மிகைப்பு(ஹைபர் ஹைட்ரேஷன்) போன்ற ஆபத்துக்களுக்கு உட்படுத்தி மரணத்தை விளைவிக்கலாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு எட்டு டம்ளர்கள் நீர் அருந்த வேண்டும் என்பதற்கு விஞ்ஞானப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. உடல் எடைக் குறைவு மற்றும் மலச்சிக்கலின் மீதான நீரின் விளைவுகள் உதாசீனப்படுத்தப்பட்டுவிட்டன என்பன போன்ற கட்டுக் கதைகளும் நிலவுகின்றன. + +நீர் உட்கொள்ளுதலுக்கான ஆரம்பகால பரிந்துரை தேசிய ஆய்வு மன்றத்தின்(நேஷனல் ரிஸர்ச் கவுன்சில்), அங்கமான உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால்(ஃபுட் அண்ட் நியுட்ரிஷன் போர்ட்) கீழ்கண்டவாறு அமைக்கப்பெற்றிருந்தது: "பலதரப்பட்ட மனிதர்கள் சாதாரண அளவு உட்கொள்ளும் உணவின் 1 கலோரிக்கு தேவை 1 மில்லிலிட்டர் நீர் என்பதே.தயாரிக்கப்பட்ட உணவுகள் இவ்வளவின் பெரும்பகுதியை கொண்டுள்ளன." அண்மைக்கால உணவாதார உட்கொள்தல் அறிக்கை ஐக்கிய நாடுகள் தேசிய ஆய்வு மன்றத்தால் (யுனைடட் ஸ்டேட்ஸ் நேஷனல் ரிஸேர்ச் கவுன்சில்) கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.பெண்களுக்கு 2.7 லிட்டர்களும் ஆண்களுக்கு 3.7 லிட்டர்களும். குறிப்பாக கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் பெண்களும் நீரேற்றத்தைத் தக்கவைக்க அதிக நீர் உட்கொள்தல் அவசியம். இன்ஸ்டிடியுட் ஆஃப் மெடிசின் பரிந்துரைப்படி சராசரியாக பெண்கள் 2.2 லிட்டர்களும் ஆண்கள் 3லிட்டர்களும் குடிப்பதும், இது இழக்கப்படும் நீரினிமித்தம் , கருத்தரித்துள்ள பெண்களுக்கு 2.4 லிட்டர்களாகவும்,(10தம்ளர்கள்) பாலூட்டும் பெண்களுக்கு 3 லிட்டர்களாகவும் (12 தம்ளர்கள்) அதிகரிக்கப்படவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறது. மேலும் 20 % நீர் உணவிலிருந்து வருவதாகவும் மீதம் குடிநீர் மற்றும் பானங்களிலிருந்து வருவதாகவும் இது தெரிவிக்கிறது.(கஃபினையும் சேர்த்து) உடலிலிருந்து நீர் சிறுநீர் மற்றும் மலம் வழியாக, வியர்வை வழியாக,சுவாசித்தலின் பொழுது நீராவியை வெளிவிடுதல் வழியாக என பல வழிகளில் வெளியேற்றப்படுகிறது.உடல் உழைப்பின் போதும் வெப்பத்திற்காட்படும் போதும் நீரிழப்பு அதிரிப்பதினால், தினசரி திரவ தேவைகளும் அதிகரிக்கக் கூடும். +மனிதர்களுக்கு அதிக அசுத்தங்களில்லாத நீர் தேவைப்படுகிறது.உலோக உப்புக்களும், ஆக்சைடுகளும் (தாமிரம், இரும்பு, கால்சியம், காரீயம் உட்பட) இத்தகைய பொதுவான அசுத்தங்கள் சில. இவற்றோடு சேர்ந்தோ அல்லது தனியாகவோ தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களான "விப்ரியோ" போன்றவை காணப்படலாம். சுவையை மேம்படுத்துவதுக்கும் தேவையான மின்பகுளிகளை பெறவும் சில கரைபொருட்கள் அனுமதிக்கப்படத்தக்கவை. + +தனிப்பெரும் நன்நீராதாரமாகத் திகழும் சைபீரியாவின் பய்கால் ஏரி குறைந்த உப்பையும், கால்சியத்தையும் கொண்டிருப்பதனால் மிகுந்த சுத்தமானதாகக் கருதப்படுகிறது. + +கரைப்பது (அல்லது மிதக்கச்செய்வது )ஆகிய இதன் பண்புகள் தினமும் மனித உடல், ஆடைகள், தரைகள், வாகனங்கள், உணவுபொருட்கள், மற்றும் செல்லப்பிராணிகள் போன்றவற்றை கழுவி சுத்தப்படுத்த பயன்படுகிறது. மேலும் மனித கழிவுகள் நீரால் கழிவு நீர் மண்டலத்தில் கடத்தப்படுகின்றன.சுத்தப்படுத்தும் கரைப்பானாக திகழும் அதன் இயல்பு தொழில் வளமிக்க நாடுகளில் அதன் நுகர்தலை பெருக்கியிருக்கிறது. + +நீரானது கழிவுநீரின் வேதியியல் சுத்திகரிப்புக்குப் பயன்படுகிறது. நீரிருப்புச் சூழல் கழிவுடனான தனது ஓரின கரைசலாகும் தன்மையால்,கழிவினை எளிதில் ஏற்றி சுத்தப்படுத்தக் கூடியதாகத் திகழ்ந்து மாசுக்களை அழிப்பதற்கு வழிசெய்கிறது.வளி வழி சுத்திகரிப்பென்பது, கரைசலுக்குள் காற்று அல்லது ஆக்சிஜனை செலுத்தி அதனுள் இருக்கும் பொருட்களின் வினைபுரிதலைக் குறைக்கிறது. + +நீரானது கழிவுநீரில் உள்ள கசடுகளை கரைப்பதின் மூலம் அதன் உயிரியற் பதப்படுத்துதலுக்கும் வழிகோலுகிறது.நீரினுள் வாழும் கிருமிகள் கரைக்கப்பட்ட கசடுகளை அடைந்து, அவற்றை உட்கொண்டு சிதைத்து குறைந்த மாசு அபாயமுள்ள பொருட்களாக மாற்றுகின்றன.நாணல் படுக்கைகளும் வளியற்ற செரிமானிகளும் கழிவு நீர் சுத்திகரிப்புக்குதவும் உயிரியற் முறைகளாகும். + +வேதியற் சுத்திகரிப்பிலும், உயிரியற் சுத்திகரிப்பிலும் பெரும்பாலான நேரங்களில் திண்ம படிவோ அல்லது கட்டியோ சுத்திகரிப்புக்குப் பின் மிஞ்ச நேர்கிறது.அதன் கூறுகளுக்கேற்ப இந்த கட்டியானது நன்மை பயப்பதாயின் உலர்த்தப்பட்டு நிலத்தின் மேல் உரமாகப் பரப்பப்படவோ, அல்லது தீயதாயின் குழியமைத்து புதைக்கப்படவோ அல்லது எரிக்கப்படவோ செய்யப்படக் கூடியதாக இருக்கிறது. + +எளிதிற் கிடைப்பதாயும், அதிக வெப்ப ஏற்புத் திறன் பெற்றதாயும் இருப்பதால், நீரும் நீராவியும் பலதரப்பட்ட வெப்ப பரிமாற்ற முறைமைகளில் வெப்ப கடத்து திரவங்களாக பயன்ப��ுத்தப்பட்டு வருகின்றன. குளிர்ந்த நீர் ஏரிகள் அல்லது கடல்களில் இயற்கையாகவே பெறக் கூடியதாய் இருக்கிறது.அதிக ஆவியாதலின் வெப்பத்தைக் கொண்டிருப்பதால் குளிர்விக்கப்பட்ட நீராவி சிறந்த வெப்ப கடத்து திறனுள்ள திரவமாய் இருக்கிறது.இதன் எதிர் விளைவாகக் கருதப்படுவது நீர் மற்றும் நீராவியின் அரிக்கும் இயல்பே.அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் குளிர்ப்பியாகப் பயன்படுத்தப்படும் நீர் ஆவியாகி நீராவிச் சுழலியை இயக்கி மின்னாக்கியை ஒட்டுகிறது. + +அணு மின் நிலையங்களில் நீர் நியுட்ரான் தணிப்பியாகப் பயன்படுகிறது. அழுத்த நீர் உலைகளில் , நீர் குளிர்ப்பியாகவும், தணிப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது.உலையிலிருந்து நீரை அகற்றுவதன் மூலம் இது அணு வினை வேகத்தைக் குறைப்பதால் இது மறைமுக பாதுகாப்பு நடவடிக்கையாக செயல்படுகிறது. + +நீரானது அதிக ஆவியாதல் வெப்பத்தைக் கொண்டிருப்பதாலும் அதன் வினைபுரியா தன்மையாலும் சிறந்த தீயணை கருவியாகப் பயன்படுகிறது. நீராவியாதல் நெருப்பின் வெப்பத்தைத் தணிக்கிறது.எனினும் சுத்தமற்ற நீரின் மின் கடத்தும் பண்பால் மின்னுபகரணங்களில் பற்றிய நெருப்பை அணைக்க நீரை பயன்படுத்த இயலாது.அதை போல எண்ணெய் அல்லது கரிமக் கரைசல்களின் தீயையும் நீரினால் அணைக்க முற்படுவது அவற்றின் மிதக்கும் பண்பால் கட்டுங்கடங்காத கொதித்தலையும், அதன் வாயிலாக எரியும் திரவத்தின் பரவலையும் ஏற்படுத்தக் கூடும். + +குறுகலான இடங்களில் பற்றிய மிகுந்த வெப்பமுள்ள தீயை அணைக்க நீரைப் பயன்படுத்தும் பொழுது ஏற்படும் நீராவி வெடித்தலையும், நீரோடு வினைபுரியும் சில உலோகங்கள் அல்லது சூடான கிராஃபைட் போன்றவை நிறைந்த இடங்களில் பற்றிய தீயை அணைக்க முற்படும் பொழுது, நீரின் சிதைவால் சாத்தியப்படக் கூடிய ஹைட்ரஜனின் வெடித்தலையும் கணக்கில் கொள்ள வேண்டும். + +தீயணைக்கப் பயன்படுத்தப்பட்ட நீரினால் இல்லாமற் போனாலும் உலையின் சொந்த நீர் குளிர்விப்பு வசதியால் ஏற்பட்ட இத்தகைய வெடித்தலின் வேகம் செர்நோபில் பேரழிவின் பொழுது உணரப்பட்டது.உள்மையப் பகுதி அதீத வெப்பத்துக்குட்படுத்தப் பட்டபோது நீரானது நீராவியாகத் தெறித்ததினால் நீராவி வெடித்தல் ஏற்பட்டது.மேலும் நீராவியுடன் சூடான ஸிர்கோனியம் வினை புரிந்தததன் விளைவாக ஹைட்ரஜ���் வெடித்தலும் ஏற்பட்டிருக்கலாம் என்றெண்ணப்பட்டது. + +கரிம வினைகள் நீரினாலோ அல்லது வேறு உகந்த அமில கார அல்லது நடுப்பி நீர்க்கரைசல்களினாலோ தணிக்கப்படுகின்றன.கனிம உப்புக்களை அகற்றுவதில் நீர் பெரும் பங்கு வகிக்கிறது. கனிம வினைகளில் சாதாரணமாக நீர் கரைப்பானாகப் பயன்படுகிறது.கரிம வினைகளில், நீர் வினைபொருட்களை சரிவர கரைக்காமலிருப்பதாலும்,அமில "மற்றும்" கார ஈரியல்புகளைப் பெற்றதாயிருப்பதாலும், அணுக்கரு கவர் பொருளாகவிருப்பதாலும், வினைக் கரைப்பானாக உபயோகப்படுத்தப்படுவதில்லை. இருந்தபோதும் இப்பண்புகள் சிலநேரங்களில் விரும்பத்தக்கவையாய்க் கருதப்படுகின்றன. மேலும் டீல்ஸ்-ஆல்டர் வினை உந்து பண்பு நீரில் கண்டறியப்பட்டுள்ளது. மேம்பட்ட பிறழ் நிலை நீர் அண்மைக் காலங்களில் ஆய்வுக்குரிய தலைப்பாயிருக்கிறது.ஆக்ஸிஜன்- நிரம்பிய மேம்பட்ட பிறழ் நிலை நீர் கரிம மாசுக்களைத் திறமையாக எரிக்கிறது. + +மனிதர்கள் பொழுதுபோக்கிற்காகவும் உடற் பயிற்சிகளுக்காகவும், விளையாட்டுகளுக்காகவும் நீரைப் பயன் படுத்துகின்றனர். இவற்றுள் சில நீச்சல், நீர்ச்சறுக்கு, படகோட்டம், அலையாடல், நீர் மூழ்குதல் போன்றவை. இத்துடன் உறைபனி ஹாக்கி, உறை பனிச்சருக்கு போன்றவை உறைபனியில் விளையாடப்படுபவை. +ஏரிக்கரைகள், கடற்கரைகள், மற்றும் நீர்ப்பூங்காக்கள் ஆகியனவற்றிற்கு மக்கள் சென்று இளைப்பாறி, புத்துணர்ச்சியடைகின்றனர். பாய்ந்தோடும் நீரின் சத்தம் மனதுக்கு இதமாயிருப்பதாகப் பலர் கருதுகின்றனர். சிலர் மீன்காட்சியகங்களிலும், குளங்களிலும் மீன்களையும் ஏனைய நீர்வாழ் உயிர்களையும் பார்வைக்காகவும், பொழுதுபோக்கிற்காகவும், தோழமைக்காகவும் வைத்துள்ளனர். மனிதர்கள் நீரை பனிச்சருக்கு, பனிவழுக்குதல் போன்ற உறைபனி விளையாட்டுகளில் ஈடுபட பயன்படுத்துகின்றனர். இவை நீரை உறையச் செய்து விளையாடப்படுபவை. +மக்கள் பனி பந்துகள், நீர்த் துப்பாக்கிகள், நீர் பலூன்கள் ஆகியனவற்றை வைத்து பொழுதுபோக்கிற்காக விளையாட்டு சண்டைபோன்ற நிகழ்வுகளிலும் ஈடுபடுகின்றனர். +மேலும் அவர்கள் நீரூற்றுக்கள் மற்றும் ஏனைய நீராலான அலங்காரங்களைத் தங்களது பொது அல்லது தனியார் இடங்களில் அமைத்துக் கொள்கின்றனர். + +நீர்த் தொழிலானது வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு குடி���ீர் விநியோகத்துக்கும், [[கழிவு நீர்]] சுத்திகரிப்பிற்கும்பயன்படுகிறது. +நீர் விநியோக வசதிகள் கிணறுகள் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள், நீர் விநியோக வலைப்பின்னல்கள், நீர் சுத்திகரிப்பு வசதி, நீர்த் தொட்டிகள், நீர்க் கோபுரங்கள், நீர்க் குழாய்கள், பழைய நீர்க்கட்டுக் கால்வாய்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. வளிமண்டல நீர் மின்னாக்கி ஆராய்ச்சி நிலையிலுள்ளது. + +நிலத்தையோ கிணறுகளையோ செயற்கையாகத் துளையிடுதல் மூலம் நீரூற்றுகள் உருவாக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.நிலத்தடி நீர் கொள் படுக்கைகள் போதுமான நீரைத் தர வல்லதாயிருப்பின் தேவைப்படுமளவிற்கு கிணறுகளை அமைத்தல் அதிக நீரைப் பெரும் வழியாகும். ஏனைய நீராதாரங்கள் மழை நீர் மற்றும் நதி அல்லது ஏரிநீராகும்.ஆனாலும் மேலோட்ட நீரை மனித உபயோகத்துக்குப் பயன்படுத்தும் பொழுது சுத்திகரிப்பு செய்தல் அவசியமானது. கரையாத மற்றும் கரையக்கூடிய பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கிருமிகள் ஆகியனவற்றை அகற்றுவதாக இது அமையலாம்.இதற்கான வழியாகக் கருதப்படும் மணல் வடிகட்டு முறையில் கரையாத பொருட்கள் மட்டுமே அகற்றப்படுகின்றன.ஆனால் குளோரினேற்றம் மற்றும் கொதிக்க வைத்தல் ஆகியன தீங்கு விளைவிக்கும் கிருமிகளை அளிக்க வல்லதாய் இருக்கின்றன.நீரை காய்ச்சி வடிகட்டுதல் மேற்கூறிய மூன்று பணிகளையும் செய்கிறது.இன்னும் முன்னேறிய தொழில் நுட்பங்களான தலைகீழ் சவ்வூடுபரவல் போன்றவைகளும் நடைமுறை வழக்கில் உள்ளன.வறண்ட கடற்கரை காலநிலையுடைய பகுதிகளில் வற்றாத சமுத்திர அல்லது கடல் நீரை உப்புநீக்கம் செய்து பயன்படுத்துவது மிகுந்த செலவை உள்ளடக்கிய ஒரு முயற்சியாகும். + +குடிநீர் விநியோகம் நகராட்சி நீர் விநியோக முறைகளாலும் பாட்டிலிலிடப்பட்ட தண்ணீராகவும் நடக்கிறது. பல்வேறு நாட்டு அரசாங்கங்களும் தேவைப்படுவோருக்கு இலவசமாக நீரை விநியோகிக்க பல திட்டங்களை வகுத்துள்ளன.சந்தை முறைமைகளும் இலவச நிறுவனங்களுமே இவ்வரிய வளத்தின் சிறந்த நிர்வாகத்திற்கு ஏற்றதாயும் அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் கட்டத் தேவையான நிதியை அளிப்பதாயும் உள்ளன என ஏனையோர் வாதிடுகின்றனர். + +குடிநீரைக் குடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துவதன் மூலம் சேதாரத்தைக் குறைப்பதும் மற்றொரு யுத்தியாகும். நன்னீர் ஆதாரங்களைப் பாதுகாக்க ஹாங்காங் போன்ற நகரங்களில் கழிப்பிடங்களைத் தூய்மைப்படுத்த கடல்நீரே பெருமளவில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. + +நீரை மாசுபடுத்துதல் அதன் உபயோகத்தில் நடக்கும் தனிப்பெரும் தவறாகும்; மாசானது மாசுபடுத்துவோருக்கு நன்மை பயப்பதாயிருந்தாலும் கூட நீரின் அனைத்து உபயோகங்களையும் தடுத்து, நீர்வளத்தை அழிக்கிறது.ஏனைய சுற்றுப்புறத் தூய்மைக் கேடுகளைப் போலல்லாது இது நியம சந்தைவிலை கணக்கில் சேராமல் வெளிபிரச்சனைகளாகக் கருதப்பட்டு சந்தைநல பாதிப்பாக அஞ்சப்படுவதில்லை. ஏனைய மக்கள் இதனால் பாதிக்கப்படும்பொழுது, இத்தகைய மாசுபடுத்துதலுக்குக் காரணமான தனியார் நிறுவனம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதன் லாபத்தை நஷ்ட ஈடாக வழங்குவதில்லை.உயிரினக் கழிவு மாசுபடுத்திகளாக (பயோ டிக்ரேடபிள் பொல்யுடன்ட்ஸ்) இல்லாத பட்ச்த்தில் மனிதர்களால் உட்கொள்ளப்படும் மருந்துக ளின் உயிரியற் சேர்மானத்தால் நீர்நிலைகளின் நீர்வாழ் உயிர்களுக்கு பெரும் சேதங்கள் விளைகின்றன. + +கழிவு நீர் வசதிகளாவன கழிவு நீரகற்றிகளும்(ஸ்டார்ம் சியுயர்ஸ்)மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களுமே. மேற்பரப்பு தல ஓட்டத்தின் மாசை அகற்றும் மற்றொரு வழி பயோஸ்வேல்(சதுப்பு பாதை) என்பதாகும் + +நீரானது மின்சாரம் தயாரிக்கப் பயன்படுகிறது.நீர்விசை மின்சாரம் என்பது நீர்சக்தியிலிருந்து பெறப்படுவது. நீர்விசைமின்சாரம் நீரானது மின்னாக்கியுடன் இணைக்கப்பட்ட நீர்ச் சுழலியை சுற்றும் போது ஏற்படுகிறது. நீர்விசைமின்சாரம் செலவு குறைந்ததாயும் ,மாசுபடுத்தாததாயும்,புதுப்பிக்கப்படவல்ல ஆற்றல் மூலமாகவும் இருக்கிறது. இதற்கான ஆற்றல் சூரியனிலிருந்து பெறப்படுகிறது.சூரிய வெப்பம் நீரை ஆவியாக்கியபின், அந்நீராவி மேலெழும்பி உயரங்களில் ஆட்படும் குளிர்விப்பிற்குப் பின் மழையாக மாறி கீழ் நோக்கி பொழிகிறது. +அழுத்தத்திற்குள்ளான நீர்,நீர் வெடியாகவும் நீர்த் தாரை அறுப்பா னாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அதிக அழுத்த நீர்த் துப்பாக்கிகள் நுட்பம் நிறைந்த வெட்டுதலுக்குப் பயன்படுகின்றன.நீரின் இப்பணி சிறந்ததாயும்,பாதுகாப்பானதாகவும், சுற்றுப்புற தீங்கற்றதாகவும் இருக்கிறது.இயந்திரங்கள் மற்றும் அறங்களின் சூட்டைத் தணிக்க��ம் குளிர்ப்பியாக நீர் பயன்படுகிறது. + +நீரானது நீராவிச் சுழலி, வெப்ப பரிமாற்றி மற்றும் வேதியியற் கரைப்பான் போன்ற பல தொழிற்சாலை நடைமுறைகளில் பயன்படுத்தப்படுகிறது.தொழிற்சாலை உபயோகத்திற்குப் பின் மாசுநீக்கம் செய்யப்படாமல் வெளியேற்றப்படும் நீர், ஒருதூய்மைக்கேடாகும் சுற்றுப்புறத் தூய்மைக்கேடு தொழிற்சாலைகளிலிருந்து வெளியாகும் கரைபொருள்களையும் (வேதியியற் மாசு), வெளியேற்றப்பட்ட குளிர்ப்பி நீரையும்(வெப்ப மாசு) உள்ளடக்கியது. தொழிற்சாலைகள் பல செய்முறைகளுக்கு நன்னீர் தேவையுடையனவாய் இருக்கின்ற காரணத்தால் நீர் விநியோகத்திலும், வெளியேற்றத்திலும் பல்வேறு சுத்திகரிப்பு முறைகளைக் கையாள்கின்றன. + +உணவியலில் நீர் முக்கிய பங்காற்றுகிறது.தங்களது தயாரிப்புகளின் வெற்றியை நிலைநிறுத்த உணவு பதனிடுதலில் நீரின் பங்கை உணவியல் விஞ்ஞானி நன்குணர்ந்தவராய் இருத்தல் வேண்டும். + +நீரில் காணப்படும் கரைபொருட்களான உப்புக்கள், சர்க்கரைகள் போன்றவை நீரின் பௌதீக பண்புகளை பாதிக்கலாம். இக்கரைபொருட்கள் நீரின் கொதிநிலை மற்றும் உறைநிலையில் மாற்றம் கொண்டு வரலாம்.ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் சுக்ரோஸ் நீரின் கொதிநிலையை 0.51 °C அதிகரிப்பதாயும் ஒரு கிலோ நீரில் கரைந்திருக்கும் 1 மோல் உப்பு நீரின் கொதிநிலையை 1.02 °C அதிகரிப்பதாயும் உள்ளது; அதே போல் கரை பொருட்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நீரின் உறை நிலையைக் குறைப்பதாய் உள்ளது. நீரின் கரை பொருட்கள் அதன் செயல்பாட்டை பாதித்து, அதன் மூலம் பல வேதியியற் வினைகளையும் நுண்ணுயிர் பலுகிபெருகுதலையும் ஏற்படுத்தவல்லதாய் இருக்கிறது. கரைசலின் ஆவி அழுத்தத்திற்கும் தூய நீரின் ஆவி அழுத்தத்திற்கும் உள்ள விகிதமே நீரின் செயல்பாடு எனப்படுகிறது. நீரின் கரைபொருட்கள் நீரின் செயல்பாட்டைக் குறைக்கின்றன. குறைந்த நீர் செயல்பாட்டின் பொழுது அநேக கிருமிகளின் வளர்ச்சி ரத்து செய்யப்பட்டு விடுமாதலால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நுண்ணுயிர் வளர்ச்சி உணவின் பாதுகாப்பை பாதிப்பதோடல்லாமல் அதன் பதப்படுத்துதலையும், அதன் வைப்புக் கால அளவையும் பாதிக்கிறது. + +உணவு பதனிடுதலில் நீரின் கடினத்தன்மை முக்கிய காரணியாகும். அது +தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளின் தரத���தை பாதிப்பதோடல்லாமல் சுகாதாரத்திலும் முக்கிய பங்காற்றுகிறது. +ஒரு காலன் நீரில் இருக்கும் அகற்றப்படக்கூடிய கால்சியம் கார்பனேட் அளவை வைத்து நீரின் கடினத்தன்மை நிர்ணயிக்கப்படுகிறது. + +நீரின் கடினத் தன்மை கிரேய்ன் அளவைகளால் அளக்கப்படுகிறது; 0.064 கி கால்சியம் கார்பனேட் +ஒரு கிரேய்ன் கடினத்தன்மைக்கு ஒப்பானது. நீரானது +1 முதல் 4 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது மென் நீராகவும், +5 முதல் 10 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது மிதமான கடின நீராகவும் 11 முதல் 20 கிரேய்ன்களைக் கொண்டிருக்கும் போது கடினமான நீராகவும் வகைப்படுத்தப்படுகிறது. + +கொதிக்க வைத்தல், ஆவியில் வேக வைத்தல், மென்மையாகக் கொதிக்க வைத்தல் போன்றவை உணவை நீருடனோ அல்லது நீராவியுடனோ கலந்து வைத்து செய்யப்படும் பிரதான சமையல் நடைமுறைகளாகும். சமையலின் பொழுது பாத்திரங்களைக் கழுவவும் நீர் பயன்படுகிறது. + +நீரின் மீதான அரசியல் என்பது நீர் மற்றும் நீராதாரங்களால் பாதிக்கப்படும் அரசியல் ஆகும்.இதன் காரணமாக நீர் உலக முக்கியத்துவம் வாய்ந்த வளமாகவும் பல அரசியல் சண்டைகளின் முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறது.அது உடல் நல பாதிப்பையும், பல்லுயிர் விருத்தியையும் பாதிக்கக்கூடியது. + +1990 ல் இருந்து 1.6 பில்லியன் மக்கள் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கின்றனர். http://mdgs.un.org/unsd/mdg/Resources/Static/Products/Progress2008/MDG_Report_2008_En.pdf#page=44. வளரும் நாடுகளில் பாதுகாப்பான குடிநீர் பெற்றவர்களாய் இருக்கும் மக்கள் விகிதம் 1970 ல் 30 சதவீதமாயிருந்ததிலிருந்து 1990 ல் 79 சதவீதமாகவும் 2004 ல் 84 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.இந்த நடைமுறையே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. [89] 2015 க்குள், பாதுகாப்பான குடிநீர் கிடைக்கப்பெறாத மக்கள் தொகையை பாதியாக மாற்றுவதே ஓராயிரமாண்டு வளர்ச்சி குறிகோள்களுள் ஒன்று.இந்த குறிக்கோள் அடையப்பட்டுவிடுமென எதிர்பார்க்கப்படுகிறது . + +2006 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அறிக்கையின்படி "அனைவருக்கும் போதுமான அளவு நீருள்ளது.", ஆனால் அதனைக் கிடைக்காமல் செய்வது தவறான நிர்வாகமும், நேர்மையின்மையுமேயாகும். + +யுனெஸ்கோ வின் உலக நீர் மேம்பாட்டுத் திட்டம் (WWDR, 2003) அதன் உலக நீர் மதிப்பீட்டு திட்டத்தின்படி அடுத்த 20 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்ககூடிய நீரின் அளவு 30 சதவீதம் வரைக் குறை��லாமென தெரிவிக்கிறது. தற்சமயம் உலக மக்களில் 40 சதவீதம் பேர் குறைந்த பட்ச சுகாதாரத்திற்குத் தேவையான நீரை போதுமான அளவு பெறாதவர்களாவர் . 2000 ல் 2.2 மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் நீரால் வரும் நோய்களாலோ(கிருமி பாதித்த நீரை அருந்துவதன் மூலம்) அல்லது வறட்சியாலோ மரணமடைந்துள்ளனர். 2004 ல் வாட்டரெய்ட் எனப்படும் இங்கிலாந்தின் தர்ம ஸ்தாபனம் எளிதில் தடுக்கக்கூடிய நீருடன் தொடர்புள்ள நோய்களால் ஒவ்வொரு 15 வினாடிகளிலும் ஒரு குழந்தை இறப்பதாகக் கூறியுள்ளது. இதன் காரணம் பொதுவாக கழிவு அகற்றப்படாமையே; பார்க்க கழிப்பிடங்கள் . + +நீர் பாதுகாப்போடு தொடர்புடைய நிறுவனங்கள் இண்டெர்நேஷனல் வாட்டர் அசோஷியேஷன் (IWA), வாட்டரெய்ட், வாட்டர் 1st, அமெரிக்கன் வாட்டர் ரிசோர்சஸ் அசோஷியேஷன் போன்றவை. நீர் தொடர்பான கூட்டமைப்புகள் யுனைடட் நேஷன்ஸ் கன்வன்ஷன் டு காம்பேட் டெஸெர்டிபிகேஷன் (UNCCD), இண்டெர்நேஷனல் கன்வன்ஷன் ஃபார் தி ப்ரிவன்ஷன் ஆஃப் பொல்யுஷன் ஃபிரம் ஷிப்ஸ் , யுனைடட் நேஷன்ஸ் கன்வன்ஷன் ஆண் தி லா ஆஃப் தி ஸீ மற்றும் ரம்சார் கன்வன்ஷன் ஆகியன. 22 மார்ச் உலக நீர் நாள் எனவும் 8 ஜூன் உலக சமுத்திர நாள் எனவும் அழைக்கப்படுகிறது. + +பொருட்களின் தயாரிப்பிலோ அல்லது சேவையிலோ உபயோகப்படுத்தப்படும் நீர், மாய நீர் வெர்சுவல் வாட்டர் என்றழைக்கப்படுகிறது. + +பெரும்பாலான மதங்களில் நீர் தூய்மைப்படுத்து பொருளாகக் கருதப்படுகிறது.கிறிஸ்துவம், இந்துமதம், ராஸ்டஃபரியானிஸம், இஸ்லாம், ஷிண்டோ, டாயிஸம், ஜூடாயிஸம் போன்ற முக்கிய மதங்கள் பல அப்ல்யூஷன் எனப்படும் கழுவுதல் சடங்கைக் கொண்டுள்ளன. ஒரு நபருக்களிக்கப்படும் முழுக்கு(or அஸ்பெர்ஷன் அல்லதுஅஃப்யுஷன் )கிறிஸ்துவத்தின் முக்கியதிருவருட்சாதனமாகும் (அங்கு அது ஞானஸ்நானம் )என்று அழைக்கப்படுகிறது; ஜூடாயிஸம்("மிக்வா" ), சீக்கியம்("அம்ரித் சன்ஸ்கார்" ), போன்ற ஏனைய மதங்களிலும் இந்நடைமுறை காணப்படுகிறது. அதோடு, இறந்தோருக்கு செய்யப்படும் கழுவும் சடங்கும் ஜூடாயிஸம், இஸ்லாம் உட்பட பல மதங்களில் நடத்தப்படுகிறது. இஸ்லாமில் அநேக தருணங்களில் உடலின் சில பகுதிகளை சுத்தமான நீரினால் கழுவிய பின்னரே ஐந்து தினசரி பிரார்த்தனைகளைச் செய்வது வழக்கம்.(இது" வுடு" என்றழைக்கப்படுகிறது.). ஷிண்டோவில், மனித உடலையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ கழுவுவதற்காக அனைத்து சடங்குகளிலும் நீர் உபயோகப்படுத்தப்படுகிறது. (எ .கா., "மிசொகி" சடங்கின் போது). பைபிளின் நியு இண்டெர்நேஷனல் வெர்ஷன் ல் 442 முறைகளும், கிங் ஜேம்ஸ் வெர்ஷன் ல் 363 முறைகளும் நீர் குறிப்பிடப்பட்டுள்ளது: 2 ம் இராயப்பர் 3:5(b) இவ்வாறு கூறுகிறது , "பூமியானது நீரிலிருந்து நீரினால் உருவாக்கப்பட்டுள்ளது"(NIV). + +மத சடங்குகளை நிறைவேற்றவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட நீரை சில மதங்கள் உபயோகப்படுத்துகின்றன.(சில கிறிஸ்துவ பிரிவினரால் உபயோகப்படுத்தப்படும் புனித நீர், சீக்கியத்திலும், இந்து மதத்திலும் உபயோகிக்கப்படும் "அமிர்த" நீர் போன்றவை). பல மதங்கள் குறிப்பிட்ட சில ஆதாரங்களிலிருந்து பெறப்பட்ட நீரை புனிதத்தன்மை வாய்ந்ததாகவும், ஐஸ்வர்யாமானதாகவும் கருதுகின்றன.எடுத்துக்காட்டாக ரோமன் கத்தோலிக்கத்தில் லூர்தும் சில கிறிஸ்த்துவ சபைகளில் யோர்தானும், இஸ்லாமில் சம்சம் கிணறும் இந்து மதத்தில் கங்கை நதியும் (ஏனையவைகளும்)கூறலாம். + +நீர் தெய்வ சக்தியுடையதாய் நம்பப்படுகிறது.செல்டிக் புராணத்தில் , ஸ்யுலிஸ் என்பவள் வெந்நீர் ஊற்றுக்களின் உள்ளூர் தேவதையாவாள் ; இந்து மதத்தில்,கங்கை தேவதையாகக் கருதப்படுவதோடு,சரஸ்வதி வேத புராணத்தில்தேவதையாகக் குறிப்பிடப்பட்டுள்ளாள். மேலும் நீர் பஞ்சபூதங்களுள் ஒன்றாகும். ( 5 இயற்கைக் காரணிகளுள் ஒன்று, நெருப்பு , பூமி , ஆகாயம் , காற்று)ஆகியன மற்றவை. மாறாக தேவர்கள் குறிப்பிட்ட ஊற்றுக்கள், நதிகள், அல்லது ஏரிகளின் காவல் தெய்வமாகக் கருதப்படலாம்:எடுத்துக்காட்டாக கிரேக்கமற்றும் ரோமானிய புராணத்தில் ,ஒசியனஸ் கடல் தேவதையின் சந்ததியரான மூவாயிரம் ஒசியானிடுகளுள் ஒருவராக நம்பப்பட்ட பெநியஸ் ஆறுகளின் கடவுளாகக் கருதப்பட்டார். இஸ்லாமில் நீரானது வாழ்கையை கொடுப்பது மட்டுமல்லாமல், ஒவ்வொரு உயிரும் நீராலேயே ஆக்கப்பட்டிருக்கிரதென நம்பப்படுகிறது. "நாம் நீரிலிருந்தே அனைத்து உயிரையும் படைத்தோம்". + +பண்டைய கிரேக்கத் தத்துவ ஞானியான எம்பெடோகிள்ஸ் நீரானது, நெருப்பு, பூமி, காற்று, ஆகியவைகளை உள்ளடக்கிய நான்கு மரபார்ந்த காரணிகளுள் ஒன்றாகவும் ஐலம் எனப்படும் அகிலத்தின் அடிப்படை பொருளெனவும் குறிப்பிட்டுள்ளார். நீர் குளிர்ச்சியானதாகவும், ஈரமானதாகவும் கருதப்படுகிறது.நன்��ு உடல் திரவங்கள் கருதுகோளில் நீர் சளியுடன் தொடர்புடையது.பாரம்பரிய சீன தத்துவத்தில் பூமி , நெருப்பு , மரம் , உலோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐந்து காரணிகளுள் ஒன்றாக நீர் கருதப்படுகின்றது. + +இலக்கியத்திலும் நீர் தூய்மையின் அடையாளமாக முக்கிய பங்காற்றுகிறது.நதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வில்லியம் ஃபாக்னரின் "ஏஸ் ஐ லே டையிங் " மற்றும் "ஹேம்லட்" டில் ட்ரவ்னிங் ஆஃப் ஒஃபீலியா என்பவைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். + +ஷெர்லாக் ஹோம்ஸ் இவ்வாறு கூறுகிறார்."நீரின் ஒரு துளியிலிருந்து ஒரு அட்லாண்டிக் அல்லது ஒரு நயாகரா வின் சக்தியை அவற்றைப் பார்க்காமலேயே தெரிந்து கொள்ளலாம்." + +பாரம்பரிய மற்றும் புகழ் பெற்ற ஆசிய தத்துவத்தின் சில பகுதிகளிலும் நீர் முன்மாதிரியாகக் கருதப்பட்டுள்ளது.ஜேம்ஸ் லெக்கின் 1891 ம் ஆண்டைய டா டே ஜிங் மொழிபெயர்ப்பு இவ்வாறு கூறுகிறது. "மிகப் பெரும் சிறப்பு நீரைப் போன்றது.அனைத்து பொருட்களுக்கும் நன்மை விளைவிப்பதிலும், அனைத்தையும் ஆட்கொள்வதிலும், தொய்வில்லாது அனைவரும் வெறுப்பதையும் ஆதரிப்பதிலும், நீரின் சிறப்பு வெளிப்படுகிறது.எனவே அதன் வழி 'டா' வுக்கருகில் இருக்கிறது.நீரைவிட மென்மையானதாகவும், பலவீனமானதாகவும் உலகில் எதுவும் இல்லாத போதிலும், பலம் வாய்ந்த வலிமையான பொருட்களை அழிப்பதில் அதற்கு நிகர் வேறு யாருமில்லை;--அதன் போக்கை மாற்றக்கூடிய வலிமை வாய்ந்தது வேறு எதுவுமிருக்கமுடியாது." இன்று ப்ரூஸ் லீ யின் கீழ் காணும் கூற்று அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. "மனதை வெறுமையாக்கு, வடிவமற்று, உருவமற்று நீரைப்போல் இரு. நீரை கோப்பைக்குள் ஊற்றும் போது அது கோப்பையாகிறது.குடுவைக்குள் விடும் போது குடுவையாகிறது.தேநீர்க்கோப்பைக்குள் விடும் போது தேநீர்க் கோப்பையாகிறது. தற்பொழுது நீரால் வழிந்தோடவும் முடியும் அல்லது மோதவும் முடியும்.நீர் எனது நண்பனாய் இருக்கட்டும்." + + + + +உணவு + +உணவு () "(Food)" என்பது ஒர் உயிரினத்திற்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைப்பதற்காக உண்ணப்படும் எந்தவொரு பொருளையும் குறிக்கும் . உணவு வழக்கமாக தாவரங்கள் அல்லது விலங்குகளிலிருந்து தோன்றுகிறது. கார்போவைதரேட்டுகள், கொழுப்புகள், புரதங்கள், உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் போன்ற அவசி���மான சத்துகளை உணவு பெற்றுள்ளது. உயிரினத்தால் உட்கொள்ளப்படும் உணவு அவ்வுயிரினத்தின் உடல் செல்களால் தன்வயமாக்கப்பட்டு, வளர்ச்சியடையவும் உயிர்வாழவும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. + +வரலாற்று ரீதியாக, மனிதர்கள் இரண்டு முறைகளில் உணவு சேகரித்துக் கொண்டனர்: வேட்டை மற்றும் விவசாயத்தின் மூலம் சேகரித்தல் என்பன அவ்விரு வகைகளாகும். உலகின் அதிகரித்துவரும் மக்கள்தொகைக்குத் தேவையான, இன்றியமையாத உணவின் பெரும்பகுதியை இன்று உணவுத் தொழில்கள் வழங்கி வருகின்றன. +அனைத்துலக உணவு பாதுகாப்பு நிறுவனம், உலக வள மையம், உலக உணவு திட்டம் அமைப்பு, உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் அனைத்துலக உணவு தகவல் கவுன்சில் போன்ற அனைத்துலக அமைப்புகள் உணவு பாதுகாப்பு மற்றும் உணவு சுகாதாரம் முதலியனவற்றை கண்காணிக்கின்றன. நிலைத்தன்மை, உயிரியற் பல்வகைமை, காலநிலை மாற்றம், ஊட்டச்சத்து பொருளாதாரம், மக்கள்தொகை வளர்ச்சி, நீர் வழங்கல் மற்றும் உணவுக்கான அணுகுமுறைகள் போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து இவ்வமைப்புகள் விவாதித்து வருகின்றன. + +உணவுக்கான உரிமை என்பது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான அனைத்துலக உடன்படிக்கையிலிருந்து பெறப்பட்ட ஒரு மனித உரிமையாகும், போதுமான வாழ்க்கைத் தரத்திற்குத் தேவையான பசிதீர்க்க போதுமான உணவு என்பது மனிதனின் அடிப்படை உரிமையாகக் கருதப்படுகிறது. + +பெரும்பாலான உணவுகள் தாவரங்களில் இருந்து தோன்றுகின்றன. சில உணவுகள் நேரடியாக தாவரங்களிடமிருந்தும் சில உணவுகள் மறைமுகமாகத் தாவரங்களைச் சார்ந்தும் பெறப்படுகின்றன. உணவு ஆதாரங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற விலங்குகள் கூட தாவரங்களிலிருந்து பெறப்படும் உணவை உண்ணுவதன் மூலம் வளர்கின்றன. தானிய வகை தானியங்கள் ஒரு முக்கிய உணவுவகை ஆகும், இவையே உலகளாவிய அளவில் எந்தவொரு வகை பயிரையும் விட ஆற்றலை அதிகமாக வழங்குகின்றன . உலகளவில் உற்பத்தி செய்யப்படும் தானியத்தின் பெரும்பகுதி கால்நடைகளுக்கு உணவாக அளிக்கப்படுகிறது. பூஞ்சைகள், காளான்கள் போன்ற சில உணவுகள் விலங்கு அல்லது தாவர ஆதாரங்கள் அல்லாத உணவுகளாகும். ரொட்டி, மது பானங்கள், பாலாடைக்கட்டி போன்ற உணவுகள் தயாரிக்க நீலப்பச்சைப் பாசி போன்ற பூஞ்சைகளும் சுற்றுப்புற பாக்டீரியாக்களும் ப��ன்படுத்தப்படுகின்றன. உப்பு, சமையல் சோடா முதலான கனிம வேதியியல் பொருட்கள் உணைவைப் பாதுக்காக்கவும் சுவைக்காகவும் சேர்க்கப்படுகின்றன. + +பல தாவரங்கள் மற்றும் தாவர பகுதிகள் உணவாக உண்ணப்படுகின்றன. சுமார் 2,000 தாவர இனங்கள் உணவுக்காக பயிரிடப்படுகின்றன. இவற்றில் பல தாவர இனங்கள் பல மாறுபட்ட பயிர் வகைகளாக உள்ளன . +தாவரங்களின் விதைகள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் ஆதாரமான உணவாக விளங்குகின்றன. ஏனெனில் விதைகளில் உள்ள ஒமேகா கொழுப்பு போன்ற பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துகள் உயிரினங்களின் ஆரம்ப வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்றன. உண்மையில், மனிதர்கள் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகள் அனைத்தும் விதை அடிப்படையிலான உணவுகளே ஆகும். சோளம், கோதுமை, அரிசி போன்ற தானிய உணவுகள், பீன்சு, பட்டாணி போன்ற பருப்புகள், மற்றும் சூரியகாந்தி, நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்கள் போன்றவை யாவும் தாவர உணவு வகைகளாகும் . +குறிப்பாக விதைகள் நிறைவுறாத கொழுப்புகள் அதிகம் கொண்டவையாகவும், சாதாரணமாக இவை ஒர் ஆரோக்கியமான உணவு என்றும் கருதப்படுகின்றன. + +எல்லா விதைகளும் சாப்பிடக்கூடிய உணவுகளாக இருப்பதில்லை. எலுமிச்சை விதைகள் மூச்சடைப்பையும், ஆப்பிள், செர்ரி போன்றவற்றின் விதைகளில் சயனைடு நச்சும் காணப்படுகின்றன. இவ்விதைகளை அதிகமான அளவில் உட்கொண்டால் நச்சின் பாதிப்பு உண்டாகலாம் . +விதைகள் உள்ளிட்ட பழங்கள் யாவும் தாவரங்களின் பழுத்த சூலகங்கள் ஆகும். பல தாவரங்களும் விலங்குகளும் பழங்கால உணவாக இருக்கின்றன. பழங்களை சாப்பிடும் விலங்குகள் தொலைவில் வேறெங்காவது விதைகளை வெளியேற்றுகின்றன. எனவே, பெரும்பாலான கலாச்சாரங்களின் உணவுகளில் பழம் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியாக உள்ளது. தக்காளி, தர்பூசணி போன்ற சில தாவரவியல் பழங்கள் காய்கறிகளைப் போலப் பயன்படுத்தப்படுகின்றன . + +காய்கறிகளானது இரண்டாவது வகை தாவர உணவுகளாக பொதுவாக உட்கொள்ளப்படுகின்றன. இவற்றில் வேர் காய்கறிகள் (உருளைக்கிழங்கு மற்றும் கேரட்), வேர்மூண்டுகள் (வெங்காயம் குடும்பம்), இலை காய்கறிகள் (கீரைகள்), தண்டு காய்கறிகள் (மூங்கில் தளிர்கள்) மற்றும் மஞ்சரி காய்கறிகள் முட்டைக்கோசு, காலிஃபிளவர் போன்றவை சில காயகறிகளாகும் . + +விலங்குகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவை உற்பத��தி செய்யும் பொருட்களால் உணவாகின்றன. உதாரணமாக மாமிச உணவானது விலங்குகளின் தசைகளிலிருந்து அல்லது அவற்றின் உறுப்புகளிலிருந்து நேரடியாக உணவாகக் கிடைக்கிறது. + +பாலூட்டிகளின் சுரப்பிகளிலிருந்து பால் உள்ளிட்ட சிலவகை உணவுகள் விலங்குகளால் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாலில் இருந்து பல்வேறு வகையான பால் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. பறவைகளால் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளும் உணவுப்பொருட்களாகப் பயன்படுகின்றன. தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேன் ஒரு நல்ல மருந்துணவாகவும் பயன்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் விலங்குகளின் இரத்தமும் உணவாகப் பயன்படுத்தப்படுகிறது. + +உடல்நலம், நன்னெறி மற்றும் கருத்தியல் காரணங்களால் சில கலாச்சரத்தினர் இறைச்சி மற்றும் விலங்குணவுகளை உட்கொள்வதில்லை. தீவிர சைவர்கள் விலங்கு தொடர்பான பகுதிப்பொருட்கள் கலந்துள்ள உணவுகளைக் கூட தவிர்த்துவிடுகின்றனர். + +பெரும்பாலான உணவு எப்போதும் விவசாயம் மூலமாகவே பெறப்படுகிறது. அதிகரித்து வரும் தேவைகளால் நவீன தொழில்துறை வேளாண்மை முறைகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்காக நிலையான விவசாய நடைமுறைகளை வளர்ந்து வருகின்றன இந்த அணுகுமுறை நுகர்வோர் தேவையைப் சிறிதளவு பூர்த்தி செய்கிறது. உயிரியற் பல்வகைமையையும், கரிம வேளாண்மை முறைகளைகளையும் ஊக்குவிக்கிறது.. உலக வணிக அமைப்பு மற்றும் பொதுவான வேளாண் கொள்கை, தேசிய அரசாங்க கொள்கை (அல்லது சட்டம்) மற்றும் போர் ஆகிய காரணிகள் உணவு உற்பத்தியில் முக்கிய தாக்கங்களை உண்டாக்குகின்றன . + +நடைமுறை கலாச்சாரத்தில், உணவுப் பொருட்களின் வெகுசன உற்பத்தியால், குறிப்பாக கோழி மற்றும் மாட்டிறைச்சி போன்றவை சாப்பிடப்படுவதாக பல்வேறு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் உணவுக்காக விலங்குகளின் படுகொலை மற்றும் விலங்குள் மோசமாக நடத்தப்படுதல் போன்ற கருத்துகள் பதிவு செய்யப்பட்டது. பெரும்பாலும் பெரிய நிறுவனங்கள் இலகுவாக வருவாய் ஈட்டுவதற்கு இத்தகைய முறையற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கருதப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு எதிரான தற்போதைய போக்குடன் சேர்ந்து, மேற்கத்திய கலாச்சாரத்தில் உள்ள மக்கள் மூலிகை மருந்து உணவுகள் மீது ஆர்வங்காட்ட முற்பட்டுள்ளனர். பெண்கள், விளையாட்டு வீரர்கள், உணவுக் கட்டுப்பாட்டிலுள்ளவர்கள் என தனித்தனியாக உணவு வகைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பலமான உணவுகளாகக் கருதப்படும் ஒமேகா -3 முட்டை போன்ற சத்துள்ள உணவுகள் இனரீதியாக பல்வகைமை உணவாகப் போற்றப்படுகின்றன. + +பல நிறுவனங்கள் வேளாண் கருவிகளைப் பயன்படுத்தி, உணவை உற்பத்தி செய்து வழங்கும் ஒரு புதிய வகை விவசாயத்திற்கு அழைப்பு விடுத்துவருகின்றன. மண் வளத்தையும், உயிரியற் பல்வகைமையையும் விட்டுக்கொடுக்காமல் சுற்றுச்சூழல் சேவைகளை மையமாகக் கொண்ட செயற்திட்டங்களை வகுக்கின்றன. +நீர் மேலாண்மை நிறுவனமும், ஐ.நா வின் சுற்றுசூழல் திட்ட அமைப்பும் தெரிவிக்கின்ற கருத்துப்படி, நன்கு பராமரிக்கப்படும் வேளாண் அமைப்பியல் உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் நார் மற்றும் விலங்கு பொருட்களையும் வழங்குகின்றன. வெள்ளநீர் பாசனம், நிலத்தடி நீர் புதுப்பித்தல், அரிப்புக் கட்டுப்பாடு மற்றும் தாவரங்கள், பறவைகள், மீன் மற்றும் பிற விலங்குகளுக்கு வாழ்விடங்களை அமைத்துத்தருதல் ஆகிய சேவைகளையும் வழங்குகின்றன + +விலங்குகளால், குறிப்பாக மனிதர்கஆல் ஐந்து வகையான சுவைகளை அறிய இயலும். இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு மற்றும் கார்ப்பு என்பன அறுசுவைகளாகும். மிக அதிக சக்தி (சர்க்கரை மற்றும் கொழுப்பு) வழங்கும் சுவைகளே மிகவும் உற்சாகமாக உட்கொள்ளப்படுகின்றன. மற்ற சுவைகள் சுவாரசியமானவையாகக் கருதப்படுவதில்லை .நீர் உயிர்வாழ்வதற்கு முக்கியமானதாக இருந்தாலும் சுவை இல்லாமல் இருக்கிறது . மறுபுறத்தில், குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகள் மதிப்போடும், சுவையாகவும் உட்கொள்ளப்படுகின்றன. + +பொதுவாக இனிப்புச் சுவை மிகவும் இனிமையான சுவையாகக் அனைவராலும் கருதப்படுகிறது, எப்போதும் குளுக்கோசு அல்லது பிரக்டோசு, அல்லது சுக்ரோசு போன்ற வேதிப்பொருட்கள் எளிய சர்க்கரைகளாகக் கருதப்படுகின்றன. சுக்ரோசு என்பது ஓர் இரட்டைச் சர்க்கரையாகும். நீண்ட சங்கிலியைக் கொண்ட சிக்கலான கார்போவைதரேட்டுகள் இனிப்புச் சுவை அற்றவையாகும். சுக்ரலோசு போன்ற செயற்கைச் சர்க்கரைகள் சர்க்கரை மூலக்கூறை பிரதிபலிக்கின்றன, அதிகக் கலோரி அளவு இல்லாமல் இனிப்பு உணவை உருவாக்குகின்றன. நாட்டுச் சர்க்கரை போன்ற பதப்படுத்தப்படாத சர்க்கரை வகைகளும் அறியப்படுகின்றன. சர்க்கரையானது ஆற்றலுக்கும் உயிர்வாழ்க்கைக்கும் அவசியம் என்பதால், சர்க்கரையின் சுவை இனிமையானதாகக் கருதப்படுகிறது. + +மதுபானம்க்களிலுள்ள வினிகர் போன்ற அமிலங்களால் புளிப்புச் சுவை தோன்றுகிறது. எலுமிச்சையிலும், ஆரஞ்சுப் பழத்திலும் உள்ள சிட்ரசு அமிலம் புளிப்புச் சுவை உணவுகளில் காணப்படுகிறது. உணவு கெட்டுப்போதல் அல்லது ஊசிப்போதல் என்பது பாக்டீரியாவால் ஏற்படும் நச்சுத்தன்மையின் அறிகுறியாகும். புளிப்புச் சுவை பரிணாம வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. பல உணவுகள் சற்றே அமிலத்தன்மை கொண்டவையாக உள்ளன. சுவை மொட்டுகளைத் தூண்டுவதற்கும் சுவையை அதிகரிக்கவும் இச்சுவை உதவுகிறது. + +சோடியம், பொட்டாசியம் போன்ற கார உலோக அயனிகளால் உவர்ப்புச் சுவை தோன்றுகிறது. உணவின் சுவையை அதிகரிப்பதற்காக மிதமான விகிதங்களில் குறைவாக எல்லா உணவிலும் உவர்ப்புச் சுவை காணப்படுகிறது, எனினும் தூய உப்பைச் சாப்பிடுவது மிகவும் விரும்பத்தகாததாக கருதப்படுகிறது.உவர்ப்புச் சுவையில் ஒவ்வொன்றும் சற்று வித்தியாசமாக உள்ள பல்வேறு உப்பு வகைகள் உள்ளன, கடல் உப்பு, சுரங்க உப்பு மற்றும் சாம்பல் உப்பு என்பன அவற்றில் சிலவாகும். சுவையை அதிகரிக்கச் செய்வதோடு உடலுக்கு தேவையான சமநிலையைப் பராமரிக்கவும் உவர்ப்புச் சுவை அவசியமாகிறது. எனவே சிறுநீரகத்தின் செயல்பாட்டுடன் தொடர்பு கொண்ட ஒரு சுவையாக இது கருதப்படுகிறது. தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு தேவையான ஊட்டச்சத்து அயோடின் என்பதால் உப்பை அயோடினாக்கம் செய்து பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்கள் பாதுகாப்புக் கருதி அடைக்கப்பட்ட உணவுகளில் உவர்ப்புச் சுவை கூடுதலாக இருக்கும். அவற்றை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மையை அளிக்கும். வரலாற்றில் குறிப்பிடப்பட்டும் உப்பேற்ற மாமிசம் இதைப்போன்று உவர்ப்புச் சுவை மிக்க உணவாகும். நீண்ட நாட்களுக்கு மாமிசத்தைப் பாதுகாப்பதற்காக உப்பு அதிகமாக சேர்த்து அந்நாளில் பயன்படுத்தப்பட்டது. + +அதிகமாக விரும்பத்தகாத சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயப்பதும் கசப்புச் சுவையே ஆகும். மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எ��ிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. சில பழங்களும் காய்கறிகளும் கசப்புச் சுவையைக் கொண்டுள்ளன. + +அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை துவர்ப்புச் சுவை ஆகும். குளுடாமேட்டுகளால் அதிலும் குறிப்பாக மோனோ சோடியம் குளூட்டாமேட்டு சேர்மத்தின் சுவை துவர்ப்புச் சுவையாகும். வாழை, மாதுளை அத்தி போன்ற தாவர வகைகளில் துவர்ப்புச் சுவை உள்ளது. + +செடிகொடிகளில் இருந்து பெறப் படும் உணவானது "சைவ உணவு" எனப் படுகின்றது. இதனை மரக்கறி உணவு என்பர். உலகில் கிட்டதட்ட இரண்டாயிரதிற்கும் அதிகமான தாவர இனங்கள் பயிர் செய்யப்படுகிறது. + + +தாவரங்கள் மற்றும் விலங்குகள் அல்லாத நுண்ணுயிர்களும் உணவில் பயன்படுத்தப்படுகிறது காளான். ரொட்டிகள், மது, தயிர் முதலியவற்றின் நொதித்தல் முறைகளுக்காக நுண்ணுயிர்களும், உணவு பதப்படுத்த உப்பு, ஆப்ப சோடா உப்பு முதலியவையும் உபயோகப்படுத்தப்படுகின்றன. + +உணவு பழமொழிகள் +1.சீரகம் இல்லா உணவு சிறக்காது. +2.தன் காயம் காக்க வெங்காயம் போதும். +3.வாழை வாழ வைக்கும். +4.உண்ணா நோன்பு ஆயுளைக் கூட்டும். +5.அவசர சோறு ஆபத்து. + + + + + + +ஓசியானியா + +ஓசியானியா ("Oceania") என்பது பசிபிக் பெருங்கடலையும் அதனைச் சூற்றியுள்ள பகுதியில் அமைந்துள்ள நிலத்தையும் தீவுகளையும் குறிக்கும் புவியியல் பெயராகும். ஓசியானியா என்ற சொல்லை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் பிரெஞ்சு நாடுகாண் பயணியான ஜூல் டூமோன்ட் டேர்வில் என்பவர். இன்று இச்சொல் பல மொழிகளில் கண்டங்களில் ஒன்றை வரையறுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. + +ஓசியானியாவில் உள்ள தீவுகள் மூன்று வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை: மெலனீசியா, மைக்குரோனீசியா, மற்றும் பொலினீசியா.. + +ஓசியானாவின் எல்லைகள் பல வழிகளில் வரையறுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவற்றில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நியூ கினி ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா, மலே தீவுக்கூட்டம் ஆகியவை ஓசியானியாவில் அடக்கப்பட்டுள்ளன. + + + + +ஐரோ + +ஐரோ அல்லது யூரோ ("Euro") என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 28 நாடுக��ில், 19 நாடுகள் (ஐரோ வலய நாடுகள்) யூரோவை அதிகாரபூர்வ நாணயமாக கொண்டுள்ளன. ஆஸ்திரியா, சைப்ரஸ், எசுத்தோனியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பேர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போர்த்துக்கல், சிலோவேக்கியா, சுலோவீனியா, ஸ்பெயின் ஆகியவை இந்த 18 நாடுகளாகும். இந்நாணயம் ஒரு நாளில் 334 மில்லியன் ஐரோப்பியர்களால் பயன்படுத்தப்படுகிறது. மேலும் உலகெங்கும் 210 மில்லியன் மக்கள் யூரோவுடன் தொடர்புடய நாணயத்தை பயன்படுத்துகிறார்கள். +"யூரோ" என்னும் வார்த்தை திசம்பர் 16,1995ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. + +1999ம் ஆண்டு சட்டரீதியாக உருவாக்கப்பட்ட இந்த நாணய முறை, 2002ம் ஆண்டு வரை மின் அஞ்சல் முறைப் பணம் பட்டுவாடா செய்யமட்டுமே உபயோகபப்படுத்தப்படது. பின்னர் 2002ம் ஆண்டு, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் தங்களின் பழைய நாணய முறையை ஒழித்து, ஐரோ நாணய முறையை பயன்படுத்தத் தொடங்கியது.அமெரிக்க டாலருக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகப்படியான மக்களால் பயன்படுத்தப்படும் நாணயம் யூரோ ஆகும். €942 பில்லியன் யூரோ அளவில் உலகில் அதிகப்படியான வங்கிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.உலகில் இரண்டாவது பொருளாதார பலம் பொருந்தியதாக யூரோ வலயம் உள்ளது. + +யூரோ நாணயங்களை வெளியிடும் அதிகாரப்பூர்வ அமைப்பு ஐரோப்பிய மத்திய வங்கி(ECB) ஆகும். இது ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் உள்ளது. நாணயங்களின் மதிப்பை நிர்ணயிப்பது இவ்வமைப்பே ஆகும். + +ஒரு ஐரோ நாணயம் அதிகாரப்பூர்வமாக நூறு பகுதிகளாகப் (சென்ட் ) பிரிக்கப்படுகின்றது. சென்ட் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகளின் தேசிய மொழிகளில் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது, உதாரணமாக பிரான்ஸ் தேசத்தில் சென்டிமேஸ் என்றும் ஸ்பெயின் தேசத்தில் சென்டிமொஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. + +நாணயத்தின் பொது பக்கத்தில் அதன் மதிப்பும் பின்புலத்தில் ஒரு வரைபடமும் இருக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் யூரோவை குறிக்க இலத்தீன் எழுத்தும் அரபி எண்களும் பயன்படுத்தப்படுகிறது. + +ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு நாட்டில் இருந்து மற்றொறு நாட்டிற்கு எவ்வளவு வேண்டுமானாலும் நிதி பரிமாற்றம் செய்து கொள்ளலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் செய்யப்படும் அனைத்து பரிமற்றாங்களும் உள்ளூர் பரிமாற்றங்களாகவே கருதப்படும். இது ஐரோ வலய நாடுகளுக்கும் பொருந்தும். + +யூரோ குறியீட்டை நிர்ணயிக்க ஒரு பொது கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் மூலம் பெல்ஜியம் நாட்டை சேர்ந்த வடிவமைப்பாளர் ஆலைன் பில்லியெட்யின் வடிவமைப்பான (€) ஏற்றுக்கொள்ளப்பட்டது. +குறிப்பிட்ட முன்புலம் மற்றும் பின்னணி வண்ணங்களுடன் சின்னத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கிறது. + +1992 ம் ஆண்டு மாஸ்ட்ரிச் உடன்படிக்கையின் ஏற்பாடுகளால் யூரோ நிறுவப்பட்டது.நாணயத்தில் பங்கேற்க, உறுப்பு நாடுகள் பின்வரும் கடுமையான விதிமுறைகளை பூர்த்தி செய்ய வேண்டும்,அவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவிகிதத்திற்கும் குறைவான வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அறுபது சதவிகிதத்திற்கும் குறைவான கடன் விகிதம் (இரண்டும் இறுதியாக பரவலாக அறிமுகம் செய்யப்பட்ட பின்னர்), குறைந்த பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றிய சராசரிக்கு சமம்மாக அல்லது ஒத்து இருக்க வேண்டும்.மாஸ்ட்ரிச் உடன்படிக்கையில், ஐக்கிய இராச்சியம் மற்றும் டென்மார்க் ஆகியவை யூரோ அறிமுகப்படுத்தப்படும் விளைவாக பணவியல் சங்கத்தின் நிலைக்கு செல்லுமாறு தங்கள் கோரிக்கைக்கு விலக்கு அளிக்கப்பட்டன. + +யூரோவிற்கு உதவியது அல்லது பங்களித்த பொருளாதார வல்லுநர்கள்,ஃபிரெட் அர்டிட்டி, நீல் டோவ்லிங், விம் டூசென்ன்பெர்க், ராபர்ட் முண்டெல், டோம்ஸோ படோ-சியோப்பா மற்றும் ராபர்ட் டோலிசன் ஆகியோர் அடங்குவர். + +1995 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று "யூரோ" என்ற பெயரை மாட்ரிட்டில் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.பெல்ஜியன் எஸ்பெராண்ட்டிஸ்ட் ஜெர்மைன் பிர்லோட், பிரஞ்சு மற்றும் வரலாற்றின் முன்னாள் ஆசிரியரான இவர் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4 அன்று "யூரோ" என்ற பெயரைக் குறிப்பிட்டு ஐரோப்பிய ஆணைக்குழுவின் ஜனாதிபதியிடம் ஒரு கடிதத்தை அனுப்பியதன் மூலம் யூரோ என்ற புதிய நாணயத்தை பெயரிடுவதில் பெருமை அடைகிறார். + +முலு இலக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க இலக்கங்களுக்கு தேசிய மரபுகளில் வேறுபாடுகள் இருப்பதால், தேசிய நாணயங்களுக்கு இடையில் அனைத்து மாற்றங்களும் யூரோ வழியாக முக்கோணத்தின் செயல்முறையைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட வே��்டும். + +இந்த விகிதங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டமைப்பு,1998 டிசம்பர் 31 ஆம் தேதி சந்தை விகிதங்களின் அடிப்படையில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் பரிந்துரையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு ஐரோப்பிய நாணய அலகு (ECU) ஒரு யூரோவை சமன் செய்வதற்கு அவை அமைக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாணய அலகு என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் பயன்படுத்தப்படும் ஒரு கணக்குப் பிரிவாகும், இது உறுப்பினர் நாடுகளின் நாணயங்களை அடிப்படையாகக் கொண்டது; அது ஒரு சொந்த நாணயமாக இல்லை. ECU நாணயங்களின் (முக்கியமாக பவுண்டு ஸ்டெர்லிங் இறுதி நாளான அந்நிய செலாவணி விகிதத்தை அந்நிறுவனம் நம்பியிருந்ததால், அவை முந்தைய காலத்தை நிர்ணயிக்க முடியாது. + +2008 ஆம் ஆண்டில் அமெரிக்க நிதி நெருக்கடிக்குப் பின், சில ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பழமைவாத முதலீட்டாளர்களிடையே 2009 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இறையாண்மை கடன் நெருக்கடி பற்றிய அச்சங்கள், இது 2010 ஆம் ஆண்டின் முற்பகுதியில் நிலைமை.இது யூரோப்பகுதி உறுப்பினர்கள் கிரீஸ்,அயர்லாந்து மற்றும் போர்ச்சுகல் மற்றும் இந்த பகுதிக்கு வெளியிலுள்ள சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் நிதி நெருக்கடிக்கு உள்ளானது.ஐஸ்லாந்து நாடு, மிகப் பெரிய நெருக்கடியை அனுபவித்த போதும், அதன் முழு சர்வதேச வங்கி முறை சரிந்தபோதும், அரசாங்கத்தின் வங்கிக் கடனை பிணைக்க முடியாததால், இறையாண்மை கடன் நெருக்கடியினால் குறைவாக பாதிக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றியத்தில், குறிப்பாக வங்கி பிணை எடுப்புகளின் காரணமாக இறையாண்மைக் கடன்கள் பெருமளவில் அதிகரித்த நாடுகளில், பிணைப்பு, இலாபம் பரவுதல் மற்றும் அபாய காப்பீடு, இந்த நாடுகள் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கிடையில் மிக முக்கியமாக ஜெர்மனிக்கு கடன் இயல்புநிலை இடமாற்று மூலம் நிதி நெருக்கடி சமாலிக்கப்பட்டது.யூரோப்பகுதியில் சேர்க்கப்பட வேண்டிய நாடுகள், சில யூரோ கூட்டிணைப்புக் கோட்பாடு, குவிப்புக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும், ஆனால் அத்தகைய நிபந்தனைகளின் அர்த்தம், ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு கடுமையான அதே அளவு உறுதியுடன் செயல்படவில்லை என்ற உண்மையால் குறைந்துவிட்டது. + +ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 ஐரோ வலய நாடுகளுக்கு யூரோ ஒரே நாணயமாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டின் கணக்கெடு���்பின் படி 33.4 கோடி மக்கள் யூரோவை பயன்படுத்துவதாக தெரிகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பிற நாடுகளும் யூரோவை பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ள நிலையில் அதன் பயன்பபாடு அதிகரிக்கும். + +அறிமுகம் செய்யப்பட்ட காலத்திலிருந்தே அமெரிக்க டாலருக்கு அடுத்து அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ விளங்குகிறது. இருப்பு நாணயமாக அதன் மதிப்பு 1999 ஆம் ஆண்டு 18 சதவிகிததிலிருந்து 2008 ஆம் ஆண்டு 27 சதவிகிதமாக உயர்ந்தது. இந்த காலத்தில் டாலரின் மதிப்பு 71சதவிகிததிலிருந்து 64சதவிகிதமாகவும் ஜப்பானிய யென்னின் மதிப்பு 6.4சதவிகிததிலிருந்து 3.3சதவிகிதமாகவும் சரிந்தது. +உலகில் அதிகபட்சமாக இருப்பு வைக்கப்படும் நாணயமாக யூரோ மாறுவது குறித்து பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். + +யூரோ வலயத்திற்கு வெளியே 23 நாடுகள் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றன. இவற்றில் 14 ஆப்பிரிக்க நாடுகளும் 2 ஆப்பிரிக்க தீவுகளும் அடங்கும். 2013 ஆம் ஆண்டின் படி 182 மில்லியன் ஆப்பிரிக்க மக்களும், 27 மில்லியன் ஐரோ வலயத்திற்கு வெளியே வாழும் ஐரோப்பியர்களும், 545,000 பசிபிக் தீவு வாழ் மக்களும் யூரோவுடன் தொடர்புடைய நாணயத்தினை பயன்படுத்துகின்றனர். + +பொருளாதாரத்தில், ஒரு பகுதியில் ஒற்றை நாணய முறையை பயன்படுத்தும்போது அந்த புவியியல் பகுதியின் (உகந்த நாணய பகுதி - Optimum currency area) பொருளாதார திறன் அதிகரிக்கும் என்று ராபர்ட் முன்டெல் தெரிவித்தார். அதன்படி யூரோவின் பயன்பாட்டை ஆதரிக்கவும் செய்தார். + + + + + +யென் + +யென் என்பது ஜப்பானில் பயன்படுத்தப் படும் நாணய முறையாகும். இது ஜப்பானிய மொழியில் என் என்று அழைக்கப்படுகிறது. யூரோ மற்றும் அமெரிக்க டாலர்க்கு அடுத்தப்படியாக அதிகமாக உலக மக்கள் கை இருப்பு வைத்திருப்பது 'என்' ஆகும். + +யப்பானிய என் உருவாக காரணம் நவீன யப்பானுக்கு வழிகோலிய மெய்ஜி அரசாங்கமே.  பல்வேறு சீர்திருத்தங்களுக்கு அடிகோலிய மெய்ஜி அரசு யப்பானுக்கும் ஒரு பொதுவான நாணய முறை தேவை என்று கருதி ஐரோப்பாவின் பதின்ம நாணய முறையை பின்பற்றி யப்பானிய என் உருவாகப்பட்டது.  + +மெய்ஜி அரசின் மறு சீரமைப்பிற்கு முன் பல்வேறு பகுதிகளை ஆண்ட நிலபிரபுத்துவ ஆட்சியாளர்கள் தனி தனியே நாணயங்களை வெளியிட்டனர். +" யென் " ஜப்பானிய வார்த்தையிலிருந்து eigo|圓 en | eɴ; lit. "round", சீன யுவான், வட கொரிய வொன் மற்றும் [[தென் கொரிய வொன் உடன் தொடர்புடையது. முதலில், [[சைசெஸ்]] என்ற பெயரில் சீனர்கள் வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபட்டனர், ஸ்பேனிஷ் மற்றும் மெக்சிகன் வெள்ளி நாணயங்கள் வந்தபோது சீனர்கள், அவற்றின் வட்ட வடிவங்களாக இருந்ததால் "வெள்ளி சுற்றுகள்" 銀圓 என்று அழைத்தனர்.நாணயங்களும், பெயரும் ஜப்பானில் தோன்றின. no, c=元 ,p=yuán என்ற எளிமையான வடிவம் அல்ல,ஆனால் முற்றிலும் மாறுபட்ட தன்மை. மாற்றங்களுக்குரிய காரணங்களில் ஒன்று, முந்தைய பாத்திரத்தில் பல +கோடுகள் இருந்தது என்று கூறப்படுகிறது.இரண்டு எழுத்துக்களும் (Standard Mandarin) மாண்டரின் மொழியில் அதே உச்சரிப்பைக் கொண்டுள்ளன, ஆனால் ஜப்பானில் இல்லை. 1695 ஆம் ஆண்டில், சில ஜப்பனீஸ் நாணயங்கள் வழங்கப்பட்டன, அதன் மேற்பரப்பு தன்மையைக் கொண்டிருந்தது ,ஆனால் இது சகாப்தத்தின் பெயரின் சுருக்கமாகும் 元禄|[[Genroku]] ஜப்பான் தொடர்ந்து அதே வார்த்தையைப் பயன்படுத்தியது, ஷின்ஜிட்டாய் வடிவம் இரண்டாம் உலகப் போரின் முடிவில் சீர்திருத்தங்களில் 円 கொடுக்கப்பட்டது. + +எழுத்து மற்றும் உச்சரிப்பு "யென்" என்பது [[ஆங்கில மொழி | ஆங்கிலம்]] மொழியில் தரநிலையாக உள்ளது. இது, எஜி காலத்தின் இறுதியில் ஜப்பானிய விஜயம் செய்த முதன்முதலாக மைஜி காலத்தின் இந்த வார்த்தைகளை வரலாற்று கனா எழுத்துக்கலையில் ゑん /wen/ உச்சரிக்கப்பட்டது.16 ஆம் நூற்றாண்டில் ஜப்பானிய /e/ え மற்றும் /we/ ゑ je போர்த்துகீசிய மிஷினரிகள் "நீங்கள்" என உச்சரித்தனர். பண்டைய ஜப்பானிய மொழிகளில் /e/ /we/ /je/. + +வால்டர் ஹென்றி மெதர்ஸ்ட், இவர் ஜப்பான் சென்றதும்மில்லை அல்லது எந்த ஜப்பனியரையும் சந்தித்துமில்லை, யாரையும் கலந்தாலோசிக்காமலெ முக்கியமாக ஜப்பானிய-டச்சு அகராதியின் அடிப்படையில், ஆங்கில மற்றும் ஜப்பானிய மொழிகளில் "e"s as "ye" என கள் ஆரம்பகால மீஜி காலத்தில் உச்சரிக்கப்பட்டது, மற்றும் ஜப்பானிய மற்றும் ஆங்கில சொற்களஞ்சியம் (1830). மேதர்ஸ்ட்ஸைத் தொடர்ந்து ஜேம்ஸ் கர்டிஸ் ஹெப்பர்ன், அவரது "ஜப்பானிய மற்றும் ஆங்கில அகராதி" (1867) இல் "ye"s to "e" களையும் எழுதினார்..இது ஜப்பானிய மொழியில் மேற்கத்திய மொழிகளில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்திய முதல் முழு-அளவிலான ஜப்பானிய-ஆங்கிலம் / ஆங்கிலம்-ஜப்பானிய அகராதி 3 வது பதிப்பில், ஒருவேளை "யென்" என��ற உச்சரிப்பிற்கு தூண்டியது. "யென்" தவிர, சமகால உச்சரிப்புக்கு பிரதிபலிக்க (1886) இல் "ye"s to "e" என்ற பெரும்பகுதியை ஹெப்பர்ன் திருத்தியமைத்தார். இது அநேகமாக ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டு விட்டது, அதுமுதல் இருந்து வருகிறது. + +[[File:JAPAN-10-Constitutional Monarchy-One Yen (1873).jpg|thumb|நியூயார்க்கின் கான்டினென்டல் பாங்க் நோட் கம்பெனி, 1 யென் [[பணத்தாள்]] (1873), பொறிக்கப்பட்டு அச்சிடப்பட்டது]] +19 ஆம் நூற்றாண்டில், தென்கிழக்கு ஆசியா, சீனா கடற்கரை, மற்றும் ஜப்பான் முழுவதும் வெள்ளி ஸ்பானிஷ் நாணயங்கள் பொதுவாக புழக்கத்தில் இருந்தது.மெக்சிக்கோவில் ஆகுபுல்கோவிலிருந்து கப்பல்களில் வந்தது, இருநூற்று ஐம்பது வருட காலப்பகுதியில் மணிலாவில் இந்த நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இந்த கப்பல்கள் மணிலா கலகீன் என அறியப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் வரை, இந்த வெள்ளி டாலர் நாணயங்கள் புதிய உலகில் அசாதாரண ஸ்பானிஷ் டாலர்கள், பெரும்பாலும் மெக்ஸிக்கோ நகரத்தில் இருந்தன.ஆனால் 1840 களில் இருந்து, அவர்கள் புதிய லத்தீன் அமெரிக்க குடியரசுகளின் வெள்ளி டாலர்களால் அதிகரித்தனர்.19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், இப்பகுதியில் சில உள்ளூர் நாணயங்கள் மெக்சிக்கோ பெசோவின் ஒற்றுமையுடன் செய்யப்பட்டன.இந்த உள்ளூர் வெள்ளி நாணயங்களில் முதல் ஹாங்காங் வெள்ளி டாலர் நாணயம் 1866 மற்றும் 1869 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஹாங்காங்கில் பிரதிபலித்தது. சீன அறிமுகமில்லாத நாணயத்தை ஏற்க மறுத்தது மற்றும் பிரபலமான மெக்சிகன் டாலர்களை விரும்பியது, எனவே ஹாங்காங் அரசாங்கம் இந்த நாணயங்கள் மற்றும் புதிய இயந்திரங்கள் ஜப்பானுக்கு விற்றன. +[[File:Early one yen coin front and reverse.jpg|thumb|left|upright|1 யென் நாணயம் (1.5 g சுத்தத் தங்கம்), மேல் மற்றும் தலைகீழ்]] +ஜப்பானியர்கள் பின்னர் 'யென்' என்ற பெயரில் ஒரு வெள்ளி டாலர் நாணயத்தை தத்தெடுக்க முடிவு செய்தனர், அதாவது 'ஒரு சுற்று பொருள்'. ஜூன் 27, 1871 இல் கையெழுத்திடப்பட்ட ஒரு சட்டத்தில் யென் நியமிக்கப்பட்டது.புதிய நாணயம் படிப்படியாக அந்த ஆண்டின் ஜூலை முதல் தொடங்கப்பட்டது.எவ்வாறாயினும், யென் அடிப்படையில் ஒரு டாலர் அலகு, அனைத்து டாலர்களைப் போலவும், எட்டு எட்டு ஸ்பானிய துண்டுகளிலிருந்தும், 1873 ஆம் ஆண்டு வரை உலகில் உள்ள அனைத்து டாலர்களையும் ஒரே அளவாகக் கொண்டது.யென் டோககுவா நாணயத்தை மாற்றியமைத்தது,ஏன்னென்றால் எடோ காலத்தின் சிக்கலான நாணய அமைப்பு mon அடிப்படையில் இருந்தது.1871 இன் புதிய நாணயச் சட்டம், யென் (1, 圓), சென் (1/100, 錢), மற்றும் ரின் (1/1000, 厘), நாணயங்களை சுற்றியும், மேற்கத்திய இயந்திரங்கள் மூலம் தயாரிக்கப்பட்டது.1878 ஆம் ஆண்டில் பாரிஸில் உள்ள ஐரோப்பிய காங்கிரஸின் பொருளாதார வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, எஃகு 0.78 டிராய் அவுன்ஸ் (24.26 கிராம்) தூய வெள்ளி அல்லது 1.5 கிராம் தூய தங்கம் என யென் சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது; 5-யென் நாணயம் அர்ஜென்டினா 5 பெஸோ ஃபூரெட்டிற்கு நாணயத்திற்க்கு சமமானதாகும்.),எனவே அது ஒரு இருமுனைய தரநிலையில் வைக்கிறது. (அதே அளவு வெள்ளி மதிப்பு 1181 நவீன யென்,அதே அளவு தங்கம் 4715 யென் மதிப்புடையது. + +டிசம்பர் 7, 1941 மற்றும் ஏப்ரல் 25, 1949 ஆகிய தேதிகளுக்கு இடையே உண்மையான நாணய மாற்று விகிதம் இல்லை; போர்க்கால பணவீக்கம் யெனை அதன் முந்தைய யுத்த மதிப்பின் ஒரு பகுதிக்கு குறைத்தது.1949, ஏப்ரல் 25 ம் தேதி, அமெரிக்க ஆக்கிரமிப்பு அரசாங்கம், ஒரு யென் மதிப்பை ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்கு 1 அமெரிக்க டாலருக்கு ஒரு யூனிட் மதிப்பில் ¥360, பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் பொருளாதாரத்தில் விலைகளை உறுதிப்படுத்துவதற்காக, உறுதிசெய்தது. 1971 ஆம் ஆண்டு வரை ஐக்கிய அமெரிக்க அரசுகள் பிரெட்டன் வூட்ஸ் சிஸ்டத்தின் ஒரு முக்கிய அங்கமாக இருந்ததுடன், 1973 இல் இறக்குமதிகளில் 10 சதவிகிதம் கூடுதல் வருமானத்தை மாறும் விகிததில் நிர்நயம் செய்தது. + +1971 வாக்கில், யென் குறைமதிப்பிற்கு உட்பட்டது. ஜப்பானிய ஏற்றுமதிகள் சர்வதேச சந்தைகளில் மிகக் குறைவாகவே இருந்தன, வெளிநாட்டிலிருந்து இறக்குமதிகள் ஜப்பனியர்கள் அதிகம் செலவழிக்கப்பட்டனர். 1960 களின் தொடக்கத்தில் ஏற்பட்ட வரம்புகளிலிருந்து உயர்ந்து வந்த தற்போதைய கணக்கு சமநிலையில் இது 1971 ஆம் ஆண்டில் அமெரிக்க $ 5.8 பில்லியனுக்கும் அதிகமான உபரி மதிப்பிற்கு பிரதிபலித்தது. யென், மற்றும் பல பெரிய நாணயங்கள் குறைமதிப்பிற்கு உட்பட்டது என்ற நம்பிக்கை 1971 இல் அமெரிக்காவின் நடவடிக்கைகள் இருந்தன. + +1971 ம் ஆண்டு கோடையில் டாலரை குறைப்பதற்கு அமெரிக்காவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஜப்பானிய அரசாங்கம் ஸ்மித்சோனியன் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய, நிலையான பரிவர்த்தனை விகிதத்தை ஒப்புக்கொண���டது, அந்த ஆண்டின் இறுதியில் கையொப்பமிட்டது. இந்த உடன்படிக்கை பரிமாற்ற விகிதம் US $ 1 க்கு ¥308 இல் அமைக்கிறது. இருப்பினும், ஸ்மித்சோனியன் உடன்பாட்டின் புதிய நிலையான விகிதங்கள் வெளியுறவு பரிவர்த்தனை சந்தையில் விநியோக மற்றும் தேவை அழுத்தங்களை எதிர்கொள்ள கடினமாக இருந்தது. 1973 இன் ஆரம்பத்தில், விகிதங்கள் கைவிடப்பட்டன, மற்றும் உலகின் முக்கிய நாடுகள் தங்கள் நாணயங்களை மாறும் விகிதம் அனுமதித்தன. + +1970 களில், ஜப்பானிய அரசாங்கமும் வர்த்தகர்களும், ஜப்பானிய உற்பத்திகளை குறைவாக போட்டியிடுவதன் மூலமும், தொழிற்துறைத் தளத்தை சேதப்படுத்தியதன் மூலமும் யென் மதிப்பின் உயர்வு ஏற்றுமதி வளர்ச்சியை பாதிக்கும் என்று கவலை கொண்டனர். எனவே, 1973 ஆம் ஆண்டின் முடிவுக்குப் பின்னரும் கூட, யென் பங்குபெற அனுமதிக்க, அரசாங்கம் அந்நிய செலாவணி சந்தையில்(டாலர்களை வாங்குதல் அல்லது விற்பனை செய்வது) அதிக அளவில் தலையிட்டது. + +1980 களின் முதல் பாதியில், தற்போதைய கணக்கு உபரிகள் திரும்பி வந்தாலும் கூட யென் மதிப்பு அதிகரிக்கத் தவறிவிட்டது மற்றும் விரைவாக வளர்ந்தது. 1981 ஆம் ஆண்டில் ¥ 221 இலிருந்து, யென் சராசரி மதிப்பு 1985 இல் ¥ 239 இல் கைவிடப்பட்டது. தற்போதைய கணக்கு உபரி அதிகரிப்பு அந்நிய செலாவணி சந்தைகளில் யெனின் வலுவான கோரிக்கையை உருவாக்கியது, ஆனால் இந்த வர்த்தக தொடர்பான தேவை யென் காரணிகள். வட்டி விகிதங்களில் ஒரு பரவலான வேறுபாடு, ஜப்பானில் இருந்ததை விட அமெரிக்காவின் வட்டி விகிதங்கள் மிக அதிகமாக இருந்தன, மற்றும் தலைநகரின் சர்வதேச ஓட்டத்தை கட்டுப்படுத்தும் தொடர்ச்சியான நடவடிக்கைகள், ஜப்பானில் இருந்து மூலதனத்தின் பெரிய நிகர வெளியேற்றத்திற்கு வழிவகுத்தது. வெளிநாட்டு முதலீடு செய்ய ஜப்பானிய முதலீட்டாளர்கள் தங்கள் நாணயங்களை பிற நாணயங்களுக்கு (முக்கியமாக டாலர்கள்) மாற்றிக்கொண்டதால் இந்த மூலதன ஓட்டம் வெளிநாட்டு நாணய சந்தைகளில் யென் அளிப்பு அதிகரித்தது. இது டாலருக்கு யென் பலவீனமான உறவைக் கொண்டிருந்தது மற்றும் 1980 களில் நடந்தது ஜப்பானிய வர்த்தக உபரி விரைவான வளர்ச்சியை ஊக்குவித்தது. + +The table below shows the monthly average of the [[U.S. dollar]]/Yen spot rate (Yen per USD) at 17:00 JST. + +[[பகுப்பு:நாணய முறை]] + + + +ஏக்கர் + +ஏக்கர், பரப்பளவை அளக்க உதவும் ஆங்கில அலகு ஆ��ும். பெரும்பாலும் நில பரப்பளவை குறிக்க இந்த அலகு பயன்படுகிறது.ஒரு ஏர்ஸ் 2.47 சென்ட் ஆகும்.மேலும் 435.6 சதுர அடி ஒரு சென்ட் அல்லது 40.47 சதுரமீட்டர் ஒரு சென்ட் ,ஒரு ஏக்கர் 100 செண்ட் (அ) 4047 ச.மீ (அ) 43560 ச.அடி ஆகும்.ஒரு ஹெக்டேர் 2.47 ஏக்கருக்கு சமம். + +ஏக்கர் குறித்த ஐக்கிய இராச்சிய வரையறை அளவீடு அலகுகள் கட்டுப்பாடுகள் 1995சட்டத்தில் இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 4 046.856 422 4 மீ² ஆகும். இது, அதே மூலத்தில் உள்ள அடிக்கான வரையறையின் படி, 43 560 சதுர அடிகளுக்கு சமமாகும். + +ஏக்கர் குறித்த ஐக்கிய அமெரிக்க வரையறை இங்கு இடம் பெற்றுள்ளது. அதன் படி ஒரு ஏக்கர் என்பது 43,560 சதுர அடிகளுக்கு சமமாகும். எனினும் ஐக்கிய அமெரிக்கா அடிக்கு இரண்டு வரையறைகளை கொண்டுள்ளதால் ("அனைத்துலக அடி" மற்றும் "மதிப்பீடு அடி") ஏக்கருக்கும் இரண்டு வரையறைகள் உள்ளன: + +ஏக்கரின் நீளமும் அகலமும் இரண்டு காலாவதியான ஆனால் தொடர்புடைய அளவுகள் ஆகும். அவை, + + +ஒரு அனைத்துலக ஏக்கர் என்பது பின்வருவனவற்றுக்கு துல்லியமாக சமமாகும்: + + + +ஒரு சதுர மைல் 640 ஏக்கர்களாகும். ¼ மைல் அகன்ற சதுர நிலப் பரப்பானது 40 ஏக்கர்களாகும். ஒரு புறம் ½ மைல்களைக் கொண்ட ஒரு சதுர நிலப் பரப்பு 160 ஏக்கர்களாகும். ஐக்கிய அமெரிக்க நாடுகளில் நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழான இதுவே வழமையான நிலப்பரப்பு. + + + + + + +கொலஸ்டிரால் + +கொலஸ்திரால் அல்லது கொலசுட்ரால் (Cholesterol) என்பது உயிரணு மென்சவ்வுகளில் காணப்படும் மெழுகுத்தன்மையுள்ள ஸ்டெராய்டு எனப்படும் ஒரு வகை கொழுப்புப் பொருள் ஆகும், இது அனைத்து விலங்குகளில் இரத்தத்தில் கலந்து அனைத்து உடல் பகுதிகளுக்கும் கடத்தப்படுகின்றது. இது உயிரணுக்களில் இருக்கும் உயிரணு மென்சவ்வின் ஊடுருவு திறன் மற்றும் மென்படல திரவத்தன்மை என்பவற்றைச் சீராக வைத்திருக்கத் தேவைப்படும் இன்றியமையாத பொருளாகும். மேலும் கொழுப்பு, பித்த அமிலங்களின் உயிரியல் சேர்க்கை, ஸ்டெராய்டு இயக்குநீர்கள் மற்றும் பல கொழுப்பில் கரையக்கூடிய உயிர்ச்சத்துக்கள் ஆகியவற்றிற்கு முக்கிய முன்னோடி மூலக்கூறு ஆகும். கொழுப்பு, உயிர்களில் முதன்மை ஸ்டெரால் தொகுப்பானாகவும், ஆனால் தாவரங்கள் மற்றும் பூஞ்சை போன்ற மற்ற மெய்க்கருவுயிரிகளில் (Eukaryote) சிறிய அளவில் தொகுப்பானாகவ���ம் செயல்படுகிறது. இது பாக்டீரியா உள்ளிட்ட நிலைக்கருவிலிகளில் (Prokaryote) கிட்டத்தட்ட முழுமையாகவே இல்லை. + +கொலஸ்ட்ரால் என்ற பெயர், கிரேக்கத்தின் "கொலெ-" (பித்த நீர்) மற்றும் "ஸ்டெராஸ்" (திடமான), மற்றும் ரசாயன பின்னொட்டு "-ஆல்" என்பது ஆல்கஹாலைக் குறிக்கும் சொல் ஆகியவற்றிலிருந்து வந்தது, 1769 இல் ஃபிரான்சுவா புல்லெத்தியே தெ லா சால் (François Poulletier de la Salle) என்பவர் முதன் முதலில் பித்தப்பைக்கற்களில் திடப்பொருள் வடிவத்தில் இது இருப்பதைக் கண்டறிந்தார். எனினும், 1815 இல் தான் வேதியிலர் யூஜின் செவ்ரியுல் இந்த பொருளுக்கு "கொலஸ்டரின்" என்று பெயரிட்டார். + +கொழுப்பு, உயிர்கள் வாழ்வதற்கு இன்றியமையாததாகும், இது உடலுக்குள் எளிமையான பொருட்களிலிருந்து முதன்மையாகத் தொகுக்கப்படுகிறது. எனினும் கொழுமியப்புரதங்களில் எப்படி கடத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து, இரத்த சுழற்சியில் இது உயர் நிலையில் இருந்தால், பெருந்தமனித் தடிப்பு தீவிரமடைவதில் இது வலுவான தொடர்புடையதாக இருக்கிறது. சராசரியாக 68 கிலோ (150 பவுண்டுகள்) எடையுடைய ஒருவருக்கு, இயல்பு மாறா நிலையில் முழு உடலுக்கும் கொழுப்பின் தொகுப்பு ஒருநாளைக்கு சராசரியாக 1 கி (1,000மிகி) என்ற அளவிலும், முழு உடலை உள்ளடக்கிய அளவு சராசரியாக 35 கி ஆகவும் இருக்கும். அமெரிக்காவில் மற்றும் அதே போன்ற உணவு உட்கொள்ளும் முறை உடைய சமூகத்தில் வழக்கமாக தினமும் கூடுதலாக உணவு உட்கொள்ளும் அளவு, 200–300 மிகி ஆக உள்ளது. உடல், கொழுப்பு உட்கொண்டதை ஈடு செய்வதற்காக சேர்த்திணைப்பின் அளவைக் குறைக்கிறது. + +கொழுப்பு மறுசுழற்சி செய்யப்படும். இது கல்லீரலால் பித்த நீரின் மூலமாக செரிமானப்பாதைக்கு சென்று கழிவாக வெளியேற்றப்படுகிறது. குறிப்பிடத்தக்க முறையில் 50% கழிவாக வெளியேற்றப்பட்ட கொழுப்பு, சிறு குடலால் இரத்த ஓட்டத்தில் மீளுறிஞ்சப்படுகிறது. குடலுக்குரிய பாதை உறிஞ்சுதல் கொழுப்புக்காக பெரும்பாலும் தேர்ந்தெடுக்கப்படுகிறது, வெளியேற்றப்பட்ட பிளாண்ட் ஸ்டெனொல்ஸ் மற்றும் ஸ்டெரொல்ஸ் (இது பெருந்தமனித் தடிப்பு தீவிரமடைதலை கொழுப்பை விட அதிகமாகத் தீவிரப்படுத்தும்), குடலுக்குரிய உட்குடற்பகுதிக்கு வெளியேற்றத்திற்காக சென்றடையும். + +கொழுப்பு, மென்படலங்கள் உருவாக்க மற்றும் பராமரிக்க மிகவும் தேவையான ஒன்று; இது உடலின் வ��ப்பநிலை பரவலுக்கு ஏற்ப மென்படல திரவத்தன்மையை சீராக்குகிறது. கொழுப்பின் மேல் ஹைட்ராக்சில் குழுக்கள், மென்படல பாஸ்போக்கொழுமியங்கள் மற்றும் ஸ்பிங்கோகொழுமியங்கள் ஆகியவற்றின் முனைவு தலைமைக் குழுக்களுடன் வினைபுரிகின்றன, அதே நேரம் பருமனான ஸ்டெராய்டு மற்றும் ஹைட்ரோகார்பன் சங்கிலி மென்படலத்தில் பதிகின்றன. கூடவே மற்ற கொழுப்புகளில் முனைவற்ற கொழுப்பு அமிலச் சங்கிலி பதிகின்றன. இந்த அமைப்புக்குரிய பங்கில், பிளாஸ்மா மென்படலத்தின் ஊடுருவு திறனை கொழுப்பு, புரோட்டான்கள் (உறுதியான ஹைட்ரஜன் அயனிகள்) மற்றும் சோடியம் அயனிகளுக்குக் குறைக்கிறது. + +உயிரணு மென்படலங்களுக்குள், செல்லக போக்குவரத்து, செல் சமிக்ஞை மற்றும் நரம்பு கடத்துதல் ஆகியவற்றிலும் கொழுப்பு செயல்படுகிறது. கொழுப்பு, சிறுகுழிவு சார்ந்தவை மற்றும் கிளாத்ரின் சார்ந்த எண்டோசிடோசிஸ் உள்ளிட்ட உள்முகமடிப்புடைய சிறுகுழிவு மற்றும் கிளாத்ரின் மெல்லிய சிறு குழிகள் ஆகியவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டிற்கு இன்றியமையாதது. சில எண்டோசிடோசிஸ்சில்,மீத்தைல் பீட்டா சைக்லோடெஸ்ட்ரின் (MβCD) உதவியை பயன்படுத்தி பிளாஸ்மா மெண்படலத்திலிருந்து கொழுப்பை நீக்குவதற்கு கொழுப்பின் பங்கினை ஆராய முடியும். அண்மையில், செல் சமிக்ஞை முறைகளில், பிளாஸ்மா மென்படலத்தில் லிப்பிட் ராஃப்ட்ஸ் உருவாக்கத்தின் செய்முறையிலும் கொழுப்பிற்கு தொடர்பிருப்பதாக அறியப்பட்டுள்ளது. பல நரம்பணு நரம்புக்கொழுப்பு உறைகளில், ஸ்க்வான் உயிரணு மென்படலத்தினுடைய நெருக்கமான அடுக்குகளிலிருந்து அதிகப்படியான கொழுப்பு வருவிக்கப்பட்ட போதும், அதிக வினைத்திறனுள்ள தூண்டுதலின் கடத்தலுக்கு காப்புறை வழங்குகிறது. + +உயிரணுக்களுள், பல உயிரிரசாயன தடங்களில் கொழுப்பு முன்னோடி மூலக்கூறாக இருக்கிறது. கல்லீரலில், கொழுப்பு பித்த நீராக மாற்றமடைகிறது பின்னர் அது பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது. பித்த நீர் பித்த உப்புகளை உள்ளடக்கியது, அது செரிமானப்பாதையில் கொழுப்பைக் கரைக்கிறது மேலும், கொழுப்பு மூலக்கூறுகளில் குடலுக்குரிய உறிஞ்சுதலிலும், அத்துடன் கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்களான, வைட்டமின் A, வைட்டமின் D, வைட்டமின் E மற்றும் வைட்டமின் K போன்றவற்றிலும் உதவுகிறது. வைட்டமின் D ���ற்றும் அட்ரினல் சுரப்பி ஹார்மோன்கள் கார்டிசோல் மற்றும் அல்டோஸ்டிரான், அத்துடன் பால் சுரப்பிகளான புரோஜெஸ்ட்டிரோன், ஈஸ்ட்ரோஜென்கள், மற்றும் டெஸ்டோஸ்டிரோன் மற்றுமதன் வழித்தோன்றல்கள் உள்ளிட்ட ஸ்டெராய்ட் ஹார்மோன்களின் தொகுப்பிற்கு கொழுப்பு ஒரு முக்கிய முன்னோடி மூலக்கூறாக இருக்கிறது. + +கொழுப்பு ஒரு ஆக்சிஜனேற்றத் தடுப்பானாகவும் செயல்படலாம் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. + +மிகக்குறைந்த அளவிலான பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொழுப்புடன் கூடிய ட்ரைகிளிசரைடுகளுடைய சிக்கலான கலவையாக மிருகக் கொழுப்புகள் இருக்கின்றன. விளைவாக மிருகக் கொழுப்பு உள்ளடக்கிய உணவு வெவ்வேறான அளவுகளில் கொழுப்பினைக் கொண்டதாக இருக்கிறது. பாலாடைக்கட்டி, முட்டையின் மஞ்சள் கருக்கள், மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, வளர்ப்புப்பறவைகள் மற்றும் இறால் உள்ளிட்டவைகள் கொழுப்புள்ள முக்கிய உணவு ஆதாரங்களாகும். தாய்ப்பாலிலும் கூட குறிப்பிடும்படியான கொழுப்பு உள்ளது. உணவைத் தயாரிக்கும் போது சேர்த்தால் ஒழிய தாவரம் சார்ந்த உணவு ஆதாரங்களில் கொழுப்பு இருக்காது. எனினும், ஆளிவிதைகள் மற்றும் வேர்க்கடலைகள் போன்ற தாவர பொருட்களில் கொழுப்பைப் போன்ற பைட்டோஸ்டெரால்ஸ் என்று அழைக்கப்படும் பொருள் உள்ளது, அவை ஊனீர் கொழுப்பு மட்டங்களை கீலிறக்க உதவ தூண்டுகின்றன. + +உட்கொள்ளப்படும் மொத்த கொழுப்பு, குறிப்பாக நிறைவுக் கொழுப்பு மற்றும் மாறுபக்கக் கொழுப்பு, இரத்த கொழுப்பில், உட்கொள்ளப்பட்ட கொழுப்பைவிட பெரும்பங்கு வகிக்கிறது. பால் பொருட்கள், மிருகக் கொழுப்புகள், பலவகையான எண்ணெய் மற்றும் சாக்லேட் போன்றவற்றின் கொழுப்பில் முழுமையாக, நிறைவுக் கொழுப்பு அடங்கியிருக்கிறது. பொதுவாக நிறைவுறாக் கொழுப்பின் பகுதி ஹைட்ரஜன் ஏற்றத்திலிருந்து மாறுபக்கக் கொழுப்புகள் வருவிக்கப்படுகின்றன, மாறாக மற்ற வகை கொழுப்புகள் போல் இயற்கையில் குறிப்பிடத்தக்க அளவில் ஏற்படுவதில்லை. மாறுபக்கக் கொழுப்புகள் அவற்றின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளால் உணவுகளிலிருந்து குறைக்க அல்லது நீக்க ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. செயற்கை வெண்ணெய் மற்றும் ஹைட்ரஜன் ஏற்றிய காய்கறி கொழுப்பு, பலவகையான துரித உணவுகள், சிற்றுண்டி உணவுகள் மற்றும் பொறித்த அல்லது உயர்வெப்பத்தில் வாட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றில் மாறுபக்கக் கொழுப்பு அதிகளவில் காணப்படுகிறது. + +உணவுப்பழக்கம், மேலும் மற்ற வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவை இரத்தக்கொழுப்பின் அளவைக் குறைக்க உதவலாம். உணவுப்பழக்கத்தில் கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் மிருக உணவுப் பொருட்களை தவிர்ப்பதன் மூலமும் உடலிலுள்ள கொழுப்பின் அளவுகள் குறையலாம், ஆனால் முதன்மையாக நிறைவுக் கொழுப்பு உட்கொள்ளுதலைக் குறைக்க வேண்டும். உணவுப்பழக்கத்தின் மூலம் தங்கள் உடலிலுள்ள கொழுப்பைக் குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்கள் தினசரி உணவில் நிறைவுக் கொழுப்பிலிருந்து 7% இத்திற்கும் குறைவான கலோரிகள் மற்றும் ஒரு நாளைக்கு 200 மில்லி கிராமுக்கும் குறைவான கொழுப்பை உபயோகப்படுத்த வேண்டும். + +உணவுப்பழக்கத்தை மாற்றுவதன் மூலம் (குறிப்பாக, உணவுப்பழக்கத்தின் மூலம் கொழுப்பைக் குறைத்தல்) இரத்தக் கொழுப்பு அளவுகள் குறையும் எனக்கருதப்படுவது, மேலும் அவ்வாறு குறைப்பது, மற்றவர்களுக்கு இடையில் கரோனரி இதய நோய் (CHD) வருவதற்கான நிகழ்வாய்ப்பைக் குறைக்கிறது என்பது மறுத்துக்கூறப்படுகிறது. மாறாக, உணவு உட்கொள்ளுதலின் மூலம் கொழுப்பைக் குறைப்பது கல்லீரல் போன்ற உறுப்புக்களுக்கு எதிர்வினையாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது, அதனால் இரத்தக்கொழுப்பின் அளவின் சீரான நிலைக்கு கொழுப்பைத் தயாரிப்பது அதிகரிக்கலாம் அல்லது குறையலாம். + +கல்லீரலில் தினமும் உருவாக்கப்படும் கொழுப்பின் அளவு சராசரியாக 20-25% இருக்கும்; குடல்கள், அட்ரினல் சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளிட்டவை கொழுப்பு அதிகமான விகிதாசாரத்தில் தொகுக்கப்படும் மற்ற இடங்களாகும். அசிட்டைல் CoAவின் ஒரு மூலக்கூறு மற்றும் அசிட்டோசிடைல்-CoAவின் ஒரு மூலக்கூறு ஆகியவற்றுடன் உடலுக்குள் கொழுப்புத் தொகுப்பு ஆரம்பமாகிறது, அவை 3-ஹைட்ராக்சி-3-மீத்தைல்க்ளூட்டரைல் CoA (HMG-CoA) வடிவத்திற்கு மாற்றமடைகிறது. இந்த மூலக்கூறு பின்னர் HMG-CoA ரிடக்டேஸ் என்ற என்சைமினால் மெவலனேட்டிற்குக் குறைக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை கொழுப்புத் தொகுப்பில் ஒரு மாற்றமுடியாத ந்டவடிக்கையாக இருக்கிறது, மேலும் இது ஸ்டேடின்ஸ் (HMG-CoA ரிடக்டேஸ் மட்டுப்படுத்திகள்) செயலுக்குத் தளமாக இருக்கிறது. + +பின்��ர் மெவலனேட், ATP தேவைப்படும் மூன்று எதிர்வினைகளில் 3-ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டாக மாற்றமடைகிறது. இந்த மூலக்கூறு கார்பாக்சில் நீக்கமடைந்து ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டாக மாறுகிறது, இவை பல உயிரிய விளைவுகளின் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஐசோபெண்டனைல் பைரோபாஸ்பேட்டின் மூன்று மூலக்கூறுகள், ஜெரனைல் டிரான்ஸ்ஃபரஸ் செயல்பாட்டின் மூலம் ஃபெர்னசைல் பைரோபாஸ்பேட் வடிவத்திற்கு சுருக்கப்படுகிறது. ஃபெர்னசைல் பைரோபாஸ்பேட்டின் இரண்டு மூலக்கூறுகள் பின்னர் எண்டோபிளாஸ்மிக் நுண்வலையில் ஸ்குவாலென் சிந்தாஸ் நடவடிக்கையால் ஸ்குவாலென் வடிவத்திற்கு சுருக்கப்படுகிறது. ஆக்சிடோஸ்குவாலென் சைக்லேஸ் பின்னர் மறுசுழற்சியடைந்து ஸ்குவாலெனிலிருந்து லனோஸ்டிரால் வடிவமெடுக்கிறது. பின்னர் இறுதியாக லனோஸ்டிரால் கொழுப்பாக மாற்றமடைகிறது. + +கோன்ராட் ப்லோக் மற்றும் ஃபியோடெர் லைனென் இருவரும் 1964 இல் தங்களது, கொழுப்பின் இயக்கமுறையும் ஒழுங்குமுறையும் மற்றும் கொழுப்பு அமில வளர்சிதை வினை மாற்றம் தொடர்பான கண்டுபிடிப்பிற்காக உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசினை பங்கிட்டுக் கொண்டனர். + +கொழுப்பின் உயிரியல் சேர்க்கை அப்போதைய கொழுப்பின் அளவைப் பொருத்து நேரடியாக ஒழுங்குபடுத்தப்படுகிறது, எனினும் ஹோமியோஸ்டசிஸ் இயக்கமுறைகளின் தொடர்பு சிறிதளவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. அதிகளவில் உட்கொள்ளப்படும் உணவினால் மிகைக் கொழுப்பேற்று உருவாக்கம் குறையும், மாறாக குறைந்த அளவில் உட்கொள்ளப்படும் உணவினால் அதற்கு எதிர்மறையான விளைவு ஏற்படும். SREBP (ஸ்டெரால் சீராக்கி தனிமம் கட்டமைப்புப் புரதம் 1 மற்றும் 2) புரதத்தால் எண்டோபிளாஸ்மிக் நுண்வலையில் செல்லகக் கொழுப்பினை உணர்வது முக்கிய ஒழுங்கு இயக்கமுறையாகும். கொழுப்பின் முன்னிலையில், SREBP மற்ற இரண்டு புரதங்களை கட்டமைக்கிறது அவை: SCAP (SREBP-பிளவு செயலூக்கும் புரதம்) மற்றும் இன்சிக்1 ஆகும். கொழுப்பின் நிலைகள் குறையும்போது, காம்ப்ளக்ஸிலிருந்து இன்சிக்-1 பிரிந்து செல்கிறது, இதனால் காம்ப்ளக்ஸ் கொல்கி உபகரணமாக மாற்றமடைகிறது, கொழுப்பின் நிலை குறைவாக இருக்கும் போது SCAP ஆல் S1P மற்றும் S2P (சைட்-1 மற்றும் -2 புரோட்டீஸ்) ஆகிய இரண்டு உயிர் வினையூக்கிகள் இயக்கப்பட்டு SREBP பிளவுருகிறது. பின்னர் பிளவுபட்ட SREBP நியூக்ளியஸாக மாற்றமடைகிறது, மேலும் இது SRE (ஸ்டெரால் சீராக்கி தனிமம்) உருவாக்கத்தில் படியெடுத்தல் காரணியாக செயல்படுகிறது, இது பல ஜீன்களின் படியெடுத்தலைத் தூண்டுகிறது. அவற்றினுள் LDL ஏற்பி மற்றும் HMG-CoA ரிடக்டேஸ் இருக்கும். இரத்த ஓட்டத்திலிருந்து முன்னால் குறிப்பிடப்பட்டது சுழற்சியிலுள்ள LDL லை கழித்து, அதேபோல் HMG-CoA ரிடக்டேஸ் கொழுப்பின் மிகை கொழுப்பின் தயாரிப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. இந்த சமிக்ஞை வழிமுறையின் பெரும்பகுதி, 1970 களில் டாக்டர் மைக்கேல் S. பிரவுன் மற்றும் டாக்டர் ஜோசப் L. கோல்ட்ஸ்டெயின் ஆகியோரால் விளக்கப்பட்டுள்ளது. 1985 இல் அவர்கள் அவர்களது பணிக்காக உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு பெற்றனர். அவர்களது அடுத்த பணியில், SREBP வழிமுறை லிப்பிட் உருவாக்கம் மற்றும் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல் மற்றும் உடல் எரிதிறன் ஒதுக்கீடு ஆகியவற்றில் பல ஜீன்களின் வெளிப்பாட்டை எப்படி ஒழுங்குபடுத்துகிறது என விளக்கியிருந்தனர். + +கொழுப்பு நிலையின் அளவு அதிகரிக்கும் போது கொழுப்புத் தொகுப்பை நிறுத்தி வைக்க முடியும். HMG-CoA ரிடக்டேஸில் சைட்டோசோலிக் செயற்களம் (அதன் கேட்டலிடிக் செயல்பாடுகளுக்குப் பொறுப்பேற்கிறது) மற்றும் மென்படல செயற்களம் இரண்டும் உள்ளடங்கியிருக்கிறது. மென்படல செயற்களம் அதன் படியிரக்கத்திற்காக புலன் சமிக்ஞைகளுக்குகாகச் செயல்படுகிறது. கொழுப்பின் (மற்றும் மற்ற ஸ்டெரால்கள்) செறிவு அதிகரிப்பதால் இந்த செயற்களத்தின் ஓலிகோமரைசேசன் நிலை மாற்றமடைவதற்குக் காரணியாகும், அது புரோட்டோசோம்களால் மிகவும் எளிதாக பாதிப்படைந்து அழியக்கூடும். இந்த உயிர் வினையூக்கிகளின் நடவடிக்கை AMP கிளர்த்தப்பட்ட புரதமான கிநெஸ்ஸால் பாஸ்ஃபோ ஏற்றத்தால் குறைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த கிநெஸ் AMP ஆல் செயல்படுத்தப்படுகிறது, அது ATP நீரேற்ற நிலையில் இருக்கும்போது உருவாக்கப்படுகிறது, அதனைத் தொடர்ந்து ATP நிலைகள் குறைவாக இருக்கும்போது கொழுப்புத் தொகுப்பு தடைப்படுகிறது. + +கொழுப்பு, தண்ணீரில் மிகவும் குறைந்த அளவே கரையும் தன்மை உடையது; இதனால் கரைய முடியும், மேலும் தண்ணீர் சார்ந்த இரத்த ஓட்டத்தில் மிகவும் சிறிய செறிவில் பயணிக்கும். இரத்தத்தில் கொழுப்பு கரையாத போதும், கொழுப்புப்புரதங்களுள் சுற்றோட்ட முறையில் அது பயணிக்கும், அது சிக்கலான கோளவடிவக் கூறுகள் உடையதாகவும், வெளிப்புறமாக கட்டப்பட்ட ஆம்பிபைலிக் புரதங்கள் மற்றும் வெளிப்புறப்பரப்பு தண்ணீரில் கரையக்கூடியதாகவும் உட்புறப்பரப்பு லிப்பிடில் கரையக்கூடியதாகவும் உள்ள லிப்பிடுகள் கொண்டதாகவும் இருக்கும்; ட்ரைக்லிசெரைடுகள் மற்றும் கொழுப்பு ஈஸ்டர்கள் உட்புறமாக எடுத்துச்செல்லப்படும். ஆம்பிபதியாக இருக்கும் பாஸ்போலிப்பிடுகள் மற்றும் கொழுப்புகள், கொழுப்புபுரதத் துகளுடைய தனிப்படலத்தின் மேற்பரப்பில் கடத்தப்படுகிறது. + +கூடுதலாக இரத்தத்தில் வழியாக கொழுப்பு பயணிப்பதற்காக கரையும் திறன் வழிவகையை வழங்குகிறது, கொழுப்புப்புரதங்கள் செல்லை இலக்காகக்கொண்ட சமிக்ஞைகள் உடையவை, அவை சில திசுக்களை லிப்பிடுகள் எடுத்துச்செல்ல வழிகாட்டுகின்றன. இதன் காரணமாக, பலவகையான கொழுப்புப்புரதங்கள் கொழுப்பில் இருக்கின்றன, அதன் அடர்த்தி அதிகரிப்பதைப் பொருத்து அவை பின்வருமாறு அழைக்கப்படுகின்றன: நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள், மிகவும் அடர்த்தி குறைவாயுள்ள கொழுப்புப்புரதம் (VLDL), மிதமான அடர்த்தி உடைய கொழுப்புப்புரதம் (IDL), அடர்த்தி குறைவாயுள்ள கொழுப்புப்புரதம் (LDL), மற்றும் உயர் அடர்த்திக் கொழுப்புப்புரதம் (HDL). அதிகமான கொழுப்பு மற்றும் குறைவான புரதங்கள் கொண்ட கொழுப்புப் புரதம் குறைந்த அடர்த்தி உடையதாக இருக்கிறது. கொழுப்பிலுள்ள பல கொழுப்புப்புரதங்களும் அவற்றினுள் ஒத்த தன்மையில் இருக்கும், எனினும் சில கொழுப்புகள் "கட்டற்ற" ஆல்கஹால் அடங்கியதாகவும் சில கொழுப்பு ஈஸ்டர்கள் என அழைக்கப்படும் பருமனான அகைல் ஈஸ்டர்கள் அடங்கியதாகவும் இருக்கும். எனினும், மாறுபட்ட கொழுப்புப்புரதங்கள் அபோலிப்போப்புரதங்கள் கொண்டவையாக இருக்கும், அவை செல் மென்படலத்தில் குறிப்பிட்ட ஏற்பிகளுக்கு ஈந்தணைவியாகச் செயல்படும். இந்த வழியில், கொழுப்புப்புரதத்தின் துகள்கள், கொழுப்புப்பயணிப்பதற்கான தொடக்க மற்றும் முடிவுப்புள்ளிகளைத் தீர்மானிக்கும் மூலக்கூறு முகவரிகளாக இருக்கும். + +நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள், மிகவும் அடர்த்தி குறைந்த வகையைச் சார்ந்த கொழுப்புப் போக்குவரத்து மூலக்கூறுகள் ஆகும், அவை தங்கள் ஓடுகளில் அபோலிப்போப்புரதம் B-48, அபோலிப்போப்புரதம் C மற்றும் அபோலிப்போப்புரதம் E போன்றவற்றைக் கொண்டிருக்கும். குடலிலிருந்து தசைகளுக்கும், ஆற்றலுக்கான கொழுப்பு அமிலங்கள் அல்லது கொழுப்புத் தயாரிப்புக்கு தேவைப்படும் மற்ற திசுக்களுக்கு கொழுப்புகளை எடுத்துச்செல்லவும் நுண் கோளக் கொழுப்புக் குமிழ்கள் கடத்திகளாகச் செயல்படுகின்றன. தசைகளால் உபயோகப்படுத்தப்படாத கொழுப்பு, கொழுப்பு வளமிக்க நுண் கோளக் கொழுப்புக் குமிழ்களில் எஞ்சிய கொழுப்புகள், கல்லீரலின் மூலம் இரத்த ஓட்டத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படுகின்றன. + +VLDL மூலக்கூறுகள் கல்லீரலால் உருவாக்கப்படுகின்றன, மேலும் இவை மிகுதியான ட்ரைஅசில்கிளிசரால் மற்றும் பித்த அமிலங்களின் தொகுப்புக்கு கல்லீரலுக்கு தேவைப்படாத கொழுப்பு ஆகியவற்றை உள்ளடக்கியவை. இந்த மூலக்கூறுகள் தங்கள் ஓடுகளில் அபோலிப்போப்புரதம் B100 மற்றும் அபோலிப்போப்புரதம் E ஆகியவற்றைக் கொண்டிருக்கும். இரத்த ஓட்ட போக்குவரத்தின் போது, மேலும் அதிக சதவீத கொழுப்பு கொண்ட IDL மூலக்கூறுகளை வெளியிடுவதற்கு, இரத்தக்கலன்கள் அதிக ட்ரைஅசில்கிளிசராலை பிளவு படுத்துகின்றன மற்றும் உட்கிரகிக்கின்றன. IDL மூலக்கூறுகள் இரண்டு சாத்தியமுடைய விதிகளைக் கொண்டுள்ளன, அவை: மற்ற உயிர்மூலக்கூறுகளில் வளர்சிதை மாற்றத்திற்காக கல்லீரலால் பாதியளவு IDL மூலக்கூறுகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன, மீதி பாதியளவு IDL மூலக்கூறுகள், அதிக சதவீத கொழுப்பை தன்னுள் வைத்திருக்கும் LDL மூலக்கூறுகளாக மாற்றமடையும் வரை ட்ரைஅசில்கிளிசராலை இழப்பதற்கு இரத்த ஓட்டத்தில் தொடர்கின்றன. + +LDL மூலக்கூறுகள் இரத்தத்தில் கொழுப்பினைக் கடத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றன, மேலும் ஒவ்வொரு மூலக்கூறும் தோராயமாக 1,500 கொழுப்பு ஈஸ்டர் மூலக்கூறுகளைக் கொண்டவையாக உள்ளன. LDL மூலக்கூறினுடைய ஓடு ஒரே ஒரு அபோலிப்போப்புரதம் B100 மூலக்கூறைக் கொண்டுள்ளது, அவை புறத்திசுக்களில் LDL ஏற்பியால் அங்கீகரிக்கப்படுகிறது. அபோலிப்போப்புரதம் B100 இன் கட்டமைப்பின் மீது, பல LDL ஏற்பிகள் கிளாத்ரின் குழிகளில் உள்ளடங்கியிருக்கின்றன. LDL மற்றும் அதன் ஏற்பி இரண்டும் எண்டோசிப்டசிஸ்ஸால் உள்ளீடடைந்து செல்லுக்குள் சிறுகுமிழ் வடிவத்திற்கு மாறுகிறது. சிறுகுமிழ் பின்னர் லைசோசோ���ுடன் உருகுகிறது, இது கொழுப்பு ஈஸ்டர்களால் நீர்பகுக்கப்பட்ட லைசோசோமல் அமில லிபாஸே என்றழைக்கப்படும் ஒரு என்சைமை உள்ளடக்கியது. இப்போது செல்லுக்குள், மென்படல உயிர்தொகுப்பால் அல்லது ஈஸ்ட்டராதலால் உபயோகப்படுத்த முடியக்கூடிய நிலையில் கொழுப்பு உள்ளது, மேலும் அது செல்லுக்குள் சேமிக்கப்படுகிறது, அதனால் அவை செல் மென்படலங்களுடன் தலையிடுவதில்லை. + +LDL ஏற்பியின் தொகுப்பு SREBP ஆல் ஒழுங்குபடுத்தப்படுகிறது, இதே ஒழுங்குபடுத்தப்பட்ட புரதம், செல்லில் கொழுப்பின் இருப்புக்கு பதிலளிப்பதில் தொடக்கத்தில் கொழுப்புத் தொகுப்பைக் கட்டுப்படுத்த உபயோகப்படுகிறது. செல் ஏராளமான கொழுப்பைக் கொண்டிருக்கும் போது, LDL ஏற்பித் தொகுப்பு அடைபடுகிறது, அதனால் LDL மூலக்கூறு வடிவத்தில் புதிய கொழுப்பு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் செல்லுக்குத் கொழுப்புத் தட்டுப்பாடு ஏற்படும் போது அதிக LDL ஏற்பிகள் உருவாகின்றன. இந்த முறை ஒழுங்கற்ற நிலையை அடையும் போது, புறத்திசுக்கலின் மேல் ஏற்பிகள் இல்லாமல் பல LDL மூலக்கூறுகள் இரத்தத்தில் தோன்றுகின்றன. இந்த LDL மூலக்கூறுகள் ஆக்சிஜனேற்றப்பட்டு நீர்மத்தால் விரிவடைந்து நுரைத்த செல்கள் வடிவத்திற்கு மாறி இரத்த விழுங்கணுக்களால் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. அடிக்கடி இந்த செல்கள் இரத்த சிறுகுழல்களின் சுவர்களில் அடைபடுகின்றன, மேலும் இவை ஆர்த்ரோஸ்க்லரோடிக் இரத்த உறைகட்டி உருவாவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த இரத்த உறைகட்டிகள் "தீய" கொழுப்புடன் LDL கொழுப்பு (உண்மையில் ஒரு கொழுப்புப்புரதம்) என பொதுவாக அழைக்கப்படுவனவற்றின் சேர்க்கைக்கு வழியேற்படுத்துகிறது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மற்ற தீவிர மருத்துவப்பிரச்சனைகளுக்கு முக்கிய காரணியாகின்றன. + +சொல்லப்போனால், HDL துகள்கள் வெளியேற்றத்திற்காக கல்லீரலுக்கு அல்லது ஹார்மோன் தொகுப்புக்கு கொழுப்பை உபயோகப்படுத்தும் மற்ற திசுக்களுக்கு கொழுப்பைத் திரும்ப எடுத்துச் செல்கிறது, இந்த செயல்பாடு கொழுப்பு திரும்பப் பயணித்தல் (RCT) எனப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் உள்ள பெரிய HDL துகள்கள் சிறந்த ஆரோக்கிய வெளிப்பாட்டிற்கு தொடர்புடையதாக உள்ளது. மாறாக, குறைந்த எண்ணிக்கையில் உள்ள பெரிய HDL துகள்கள் தமனிகளுக்குள் கூழ்மைக்க���டு நோய் தீவிரமடைவதில் சார்பற்ற நிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது. + +கல்லீரலில் பலவகையான பித்த அமிலங்களால் கொழுப்பு ஆக்ஸிஜனேற்றப்படுகிறது. இவை கிளைசின், டாரைன், குளுக்ரோனிக் அமிலம் அல்லது சல்பேட் ஆகியவற்றுடன் இணைந்து மாற்றமடைகிறது. இணைந்த மற்றும் இணையாத பித்த அமிலங்களின் கலவை மற்றும் கொழுப்புடன் சேர்ந்து கல்லீரலிலிருந்து பித்தப்பைக்கு வெளியேற்றப்படுகிறது. தோராயமாக 95% பித்த அமிலங்கள் குடல்களிலிருந்து மறு உறிஞ்சல் செய்யப்படுகிறது மற்றும் மீதமுள்ளவை மலத்தின் மூலம் வெளியேற்றப்படுகின்றன. வெளியேற்றம் மற்றும் பித்த அமிலங்கள் மறு உட்கொள்ளுதல், குடவீரல் சுற்றோட்டத்திற்கு அடிப்படையாக உள்ளன, இவை செரிமானம் மற்றும் உட்கொள்ளப்பட்ட கொழுப்புகள் உறிஞ்சுதலுக்கு இன்றியமையாததாகும். சில சந்தர்ப்பங்களில், பித்தப்பையின் அதிகமான செறிவூட்டத்தின் போது, கொழுப்புப் படிகங்கள் மற்றும் பெரும்பாலான பித்தப்பைக் கற்களின் இயைபுக்கூறுகள் உருவாகின்றன, ஆயினும் லெசித்தின் மற்றும் பைலிருபின் பித்தப்பைக் கற்கள் ஆகியவையும் குறைந்த அளவில் ஏற்படுகின்றன. + +கொழுப்புக் கருதுகோளின் படி, அசாதாரணமான அதிக கொழுப்பு நிலைகள் (அதிகக்கொழுப்புள்ள இரத்தம்) ஏற்படும் அல்லது, இன்னும் சரியாகச் சொன்னால், அதிக செறிவூட்டப்பட்ட LDL மற்றும் குறைந்த செறிவூட்டமடைந்த வினைசார் HDL ஆகியவை இதயக்குழலிய நோய் உருவாவதில் தீவிர பங்குவகிக்கின்றன, ஏனெனில் இவை தமனிகளில் கூழ்மைக்கரடு, (பெருந்தமனித் தடிப்பு) உருவாவதை ஊக்குவிக்கின்றன. இந்த நோய் இதயத் தசைத்திசு இறப்பு (மாரடைப்பு), வலிப்பு மற்றும் புற நாளாவட்ட நோய் ஆகியவற்றிற்கு முக்கிய காரணமாக அமையும். அதிகளவிலான இரத்த LDL, குறிப்பாக செறிவான பெரிய LDL துகள் மற்றும் சிறிய அளவிலான LDL துகள், LDL துகள்களில் உள்ள கொழுப்புப் பொருட்களை விட அதிகளவில் அவை பங்குவகிக்கின்றன, LDL துகள்கள் பெரும்பாலும் "தீய கொழுப்பு" என வழங்கப்படுகின்றன, ஏனெனில் அவை கூழ்மைக்கரடு உருவாவதில் தொடர்புடையதாய் உள்ளன. அதே நேரத்தில், செல்கள் மற்றும் கூழ்மைக்கரடு ஆகியவற்றிலிருந்து கொழுப்பு வெளியேற்றப்பட அதிக செறிவான வினைசார் HDL பாதுகாப்பை வழங்குகின்றன, அவை சில நேரங்களில் "நல்லக் கொழுப்பு" எனவும் வழக்காக கூறப்படுகின்றன. இந��த சமப்படுத்துதல் பெரும்பாலும் மரபு ரீதியாக வரையறுக்கப்பட்டிருக்கும், ஆனால் உடல் வளரும் போது மருந்துகள், உணவுத் தேர்வுகள் மற்றும் மற்ற காரணிகளால் இது மாற்றமடையலாம். + +உயர்ந்த செறிவான ஆக்சிஜனேற்றப்பட்ட LDL துகள்கள் நிலையில், குறிப்பாக "குறை அடர்த்தி LDL" (sdLDL) துகள்கள் தமனிச் சுவர்களில் கூழ்மைக்கரடு உருவாக்கத்தில் தொடர்புடையன, மேலும் இதயச் சுவர்ச் சிறை நோய் மற்றும் இதயக்குழலிய நோயின் மற்ற வடிவங்களுக்கு அடிப்படைக் காரணமாக உள்ள "பெருந்தமனித் தடிப்பு" நிலை ஏற்படலாம். மாறாக, HDL துகள்கள் (குறிப்பாக பெரிய HDL) கொழுப்பு மற்றும் அழற்சி விளைவிக்கின்ற கடத்திகளைக் கூழ்மைக்கரடிலிருந்து வெளியேற்ற உதவும் இயக்கமுறை உடையதாக இருக்கிறது. அதிகரித்த செறிவான HDL குறைந்த அளவிலுள்ள கூழ்மைக்கரடு தீவிரமடைதல் மற்றும் பின்னடைவிலும் கூட தொடர்புடையதாக இருக்கிறது. 2007 இல் 61 சம வயதுடைய குழுக்களில் கிட்டத்தட்ட 900,000 மக்களிடம் எடுக்கப்பட்ட கல்விசார் கணக்கெடுப்பு அறிக்கையில், இரத்தத்தில் உள்ள மொத்த கொழுப்பு நிலைகள், இதயகுழலிய தொடர் விளைவுகளில் மற்றும் இளம் மக்களிடம் மொத்த இறப்பு வீதத்தில் தொடர்புகொண்டிருப்பது தெரியவந்தது. எனினும், ஆரோக்கியத்தில் அதிகக் கொழுப்பின் தாக்கத்தால் இதயக்குழலிய நோய் ஏற்படுவதில், இளம் மக்களிடம் இதன் தொடர்பு குறைவாகவே காணப்பட்டது, ஆனால் வயதானோர் அதிகம் இதனால் பாதிக்கப்பட்டனர். + +கொழுப்புப்புரத பின்ன ஏற்ற நிலைகள், LDL, IDL மற்றும் VLDL "ஆத்ரோஜெனிக்" குக் (பெருந்தமனித் தடிப்புக்கான காரணி) காரணமாகின்றன. இந்த பின்னத்தின் நிலைகளைக் காட்டிலும் மொத்த கொழுப்பு அளவு, பெருந்தமனித் தடிப்பின் விரிவாக்கத்திற்கு மற்றும் தீவிரமடைதலுடன் அதிக தொடர்புடையதாக இருக்கிறது. மாறாக, எனினும் சிறிய LDL மற்றும் சிறிய HDL துகள்களில் முதலில் எந்த நிலையில் கூழ்மைக்கரடு வளர்ச்சி வீதம் தொடர்ந்து அதிகமாக இருக்கிறதோ அதைப் பொருத்து மொத்த கொழுப்பு சாதாரண வரம்பில் இருக்கலாம். எனினும் மாறாக, LDL துகள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் (பெரும்பாலும் பெரிய துகள்கள்) மற்றும் HDL பெரியத் துகள்களின் சதவீதத்தின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், எந்த மொத்தக் கொழுப்புச் செறிவிலும், கூழ்மைக்கரடு வளர்ச்சி வீதம் பொதுவாகக் குறைவாக இருக்கும், வள���்ச்சியே இல்லாமலும் இருக்கலாம். சமீபத்தில், IDEAL மற்றும் EPIC தொலைநோக்கு படிப்பின் பிந்தைய நிலை ஆய்வில், அதிக நிலையிலுள்ள HDL கொழுப்பு (அபோலிப்போப்புரதம் A-I மற்றும் அபோலிப்போப்புரதம் B ஆகியவற்றுக்காக சரிசெய்யப்பட்ட) மற்றும் அதிகரித்து வரும் இதயக்குழலிய நோய் அபாயம் ஆகியவற்றினிடையே உள்ள தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் இதயத்தைப் பாதுகாப்பதில் "நல்ல கொழுப்பின்" பங்கில் சந்தேகம் எழுந்துள்ளது. + +பல மனிதச் பரிசோதனைகளில் ஸ்டேடின்ஸ் எனப்படும் HMG-CoA ரிடக்டஸ் மட்டுப்படுத்திகள் பயன்படுத்தப்பட்டன, கொழுப்புப்புரத போக்குவரத்து உருப்படிமங்களை ஆரோக்கியமற்றதிலிருந்து ஆரோக்கியமான உருப்படிமங்களாக மாற்றமடையச் செய்ததில், கொழுப்பின் மதிப்புகள் வயது வந்தோருக்குக் குறைவாகக் கணக்கிடப்பட்ட போதும் இதயக்குழலிய நோய் நிகழும் சதவீதம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்தது எனப் பல சோதனைகளில் திரும்பத் திரும்ப உறுதி செய்யப்பட்டது. இதன் விளைவாக, இதயக்குழலிய நோயின் தாக்கம் உள்ள மக்கள் தங்கள் கொழுப்பின் அளவைப் பொருட்படுத்தாமல் ஸ்டேடின்ஸிலிருந்து (இரத்தக் கொழுப்பு குறைப்பு மருந்து)பயன் பெற முடியும், மேலும் இதயக்குழலிய நோய் இல்லாத ஒரு ஆண் அசாதாரணமான அதிகக் கொழுப்பின் அளவைக் குறைப்பதன் ("முதன்மைத் தடுப்புமுறை") மூலம் பயன் பெற முடியும். பெண்களில் முதன்மைத் தடுப்புமுறை, ஆண்களில் கண்டுபிடித்தவற்றின் நீட்சியாக மட்டுமே நடைமுறையில் இருக்கிறது, இன்னும் பெண்களில் ஒட்டு மொத்த இறப்பு வீதத்தைக் குறைக்கும் விதமான அல்லது இதயக்குழலியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான பெரியளவிலான ஸ்டேடின்ஸ் சோதனைகள் இல்லை. + +தேசிய கொழுப்புக் கல்வி நிகழ்ச்சியின் 1987 ஆம் ஆண்டு அறிக்கையின் படி, வயதுவந்தோர் சிகிச்சைக் குழுக்கள் பரிந்துரைத்த மொத்த இரத்தக் கொழுப்பின் அளவு பின்வருமாறு: < 200 மி.கி/டெ.லி சாதாரண ரத்தக் கொழுப்பு, 200–239 மி.கி/டெ.லி உச்ச வரம்புக்கோடு, > 240மி.கி/டெ.லி உயர்க் கொழுப்பு. அமெரிக்க இதயச் சங்கம் இதே போன்ற மொத்த (உணவருந்தாத போது) இரத்தக் கொழுப்பு அளவுகள் மற்றும் இதய நோய் அபாயங்களுக்காக வரையறுக்கப்பட்ட தொகுப்பை வழங்கியது: + +எனினும், இந்நாளைய சோதனை முறைகள் LDL ("தீய") மற்றும் HDL ("நல்ல") கொழுப்பைத் தனித்தனியாக வரையறுக்கிறது, இந்த சாதாரணமான முறை ஓரளவுக்கு காலாவதியானதாகக் கருதப்படுகிறது. விரும்பத்தகுந்த LDL அளவு, 100 mg/dL -க்கும் (2.6 mmol/L) குறைவாக இருக்க வேண்டும் எனக்கருதப்படுகிறது, எனினும் புதிய இலக்கான < 70 mg/dL மேற்கண்ட சோதனைகளில் தனிப்பட்டமுறையில் அதிகபட்ச அபாயம் கொண்டதாகக் கருதப்படுகிறது. இன்னொரு உபயோகமான அளவீட்டில் HDLக்கு மொத்த கொழுப்பு விகிதாச்சாரம் 5:1 க்கு மிகவும் குறைவாக இருத்தலே ஆரோக்கியமானது எனக்கூறுகிறது. குறிப்பாக, சிறுவர்களுக்கான சாராசரி LDL மதிப்புகள் கொழுப்புக் கோடுகளுக்கு முன்பு, 35 mg/dL இல் உருவாக ஆரம்பிக்கும். + +பெரும்பாலான LDL சோதனை முறைகளில், உண்மையில் இரத்தத்தின் மிகவும் குறைவான துகள் அளவிலிருந்து, LDL கணக்கிடப்படுவதில்லை. செலவுக் காரணங்களுக்காக, LDL மதிப்புகள் நெடுங்காலமாக ஃபிரைட்வால்டு சூத்திரம் (அல்லது மாறி) பயன்படுத்தப்படுகிறது, அது: [மொத்த கொழுப்பு] − [மொத்த HDL] − 20% ட்ரைகிளிசரைடு மதிப்பு = உத்தேச LDL. இந்த முறையில் அடிப்படையாக, மொத்த HDL, LDL, மற்றும் VLDL ஆகியவற்றால் மொத்த கொழுப்பு வரையறுக்கப்படுகிறது. சாதாரணமாக மொத்தம், HDL மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவை உண்மையில் கணக்கிடப்படுகின்றன. VLDL உத்தேசமாக ட்ரைகிளிசரைடுகளில் ஐந்தில் ஒரு பங்காகக் கணக்கிடப்படுகிறது. இதில் முக்கியமானது என்னவெனில் இரத்தப் பரிசோதனைக்கு எட்டு மணிநேரங்களுக்கு முன்பே உணவருந்தி இருக்க வேண்டும், ஏனெனில் உணவு உட்கொண்டதிற்கேற்ப ட்ரைகிளிசரைடின் அளவு மாற்றமடையும். + +இதயக்குழலிய நோயில் கொழுப்பின் நன்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட பங்கு, கொழுப்பு அளவுகள் மற்றும் இறப்புவீதத்திற்கிடையேயான சில ஆய்வுகள் ஆச்சரியப்படும் விதமாக நேர்மாறானதாக இருக்கும், 50 வயதுக்கு மேற்பட்ட மக்களிடையே இறப்பு வீதம் ஒட்டுமொத்தமாக 11% அதிகரித்துள்ளது, மேலும் கொழுப்பு அளவுகள் ஒருவருக்கு 1 mg/dL ஒரு ஆண்டில் குறைவதால் CVD இறப்பு வீதம் 14% அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஃப்ரமிங்கம் இதய ஆய்வில், குறைவான அல்லது சாதாரண கொழுப்பு அளவுகள் உடையவர்களுக்கு தீவிர நீண்டகால நோய்கள் அல்லது புற்றுநோய் பரவுவதற்கு ஆய்வாளர்கள் இந்த தோற்றநிலைக் கொள்கையை அடிப்படையாகக் கொள்கிறார்கள். இந்த விளக்கம், ஆரோக்கிய அறிகுறிகள் மற்றும் நிலை உயர்வு வோரல்பெர்க் ஆய்வால் ஆதரிக்கப்படவில்லை, அதில் கொழுப்பு குறைவாக உள்ள அனைத்து வயதிலும் உள்ள ஆண்கள் மற்றும் 50 வயதைக் கடந்த பெண்களில் புற்றுநோய், கல்லீரல் நோய்கள் மற்றும் மனநோய்கள் மூலமே அதிகளவில் இறப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வுகள், இளம் மறுமொழியாளர்களுக்கிடையேயும் கொழுப்பின் அளவு குறைதல் விளைவு ஏற்படலாம் எனக் குறிக்கின்றன, இது உடல் பலவீனத்திற்கு, சம வயதுடைய வயதான மக்களை பிரதிநிதியாக அல்லது அடையாளமாக, வயதை வைத்து செய்திருந்த முந்தைய மதிப்பீட்டிற்கு முற்றிலும் நேர்மாறாயிருக்கிறது. + +அறிவியலர்களின் சிறு குழுவொன்று, த இண்டர்நேசனல் நெட்வொர்க் ஆப் கொலஸ்ட்ரால் ஸ்கெப்டிக்ஸில் ஒன்றிணைந்து, கொழுப்பு மற்றும் பெருந்தமனித் தடிப்புக்கு இடையே உள்ள தொடர்பு பற்றி தொடர்ந்து கேள்வி எழுப்பினர். எனினும், பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ அறிஞர்கள் இந்த தொடர்பு உண்மை என்றே ஏற்றுக் கொண்டனர். + +அசாதாரணமான கொழுப்பின் அளவு குறைந்து விடுதல் "கொழுப்பு குறைவான இரத்தம்" எனப்படுகிறது. இந்த நிலைக்கான காரணங்களைக் கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகள் மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன, ஆனால் சில ஆய்வுகள் உளச்சோர்வு, புற்றுநோய் மற்றும் பெருமூளை இரத்த ஒழுக்கு ஆகியவற்றுடன் இதற்குத் தொடர்பிருப்பதாக அறிவுறுத்துகின்றன. பொதுவாக, கொழுப்பு அளவுகள் குறைவது அடிப்படை உடல்நலக் குறைவின் காரணமாகவும் பின் விளைவாக ஏற்படாததாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. + +20 வயதுக்கு அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையோர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொழுப்புச் சோதனை செய்து கொள்ள வேண்டும் என அமெரிக்க இதயச் சங்கம் பரிந்துரைக்கிறது. + +12 மணி நேரம் உணவருந்தாமல் இருந்த பிறகு எடுக்கப்பட்ட இரத்த மாதிரி, மருத்துவரால் சோதிக்கப்பட்டோ அல்லது வீட்டிலேயே கொழுப்புத் புரத விவரங்களைக் கண்டறியும், கொழுப்புச் சோதனைக் கருவிகளின் மூலமோ சோதித்தறியலாம். இதில் மொத்த கொழுப்பு, LDL (தீய) கொழுப்பு, HDL (நல்ல) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகள் ஆகியவற்றைக் கண்டறிய முடியும். 200 mg/dL அல்லது அதற்கும் அதிகமாக மொத்த கொழுப்பு அளவு உடைய, 45 வயதுக்கு மேற்பட்ட ஆணாகவோ அல்லது 50 வயதுக்கு மெற்பட்ட பெண்ணாகவோ இருப்பவர்கள், HDL (நல்ல) கொழுப்பின் அளவு 40 mg/dL க்கும் குறைவாக இருந்தால் அல்லது மற்ற இதய நோய்கள் மற்றும் ��க்கவாத பாதிப்புக் காரணிகள் உடையவர்கள் போன்றோர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லாமல் அடிக்கடி கொழுப்புச் சோதனை செய்துக் கொள்ளப் பரிந்துரைக்கப்படுகிறார்கள். + +சில கொழுப்புக் கிளைப் பொருள்கள் (மற்ற சாதாரண கொழுப்பு நிரம்பிய லிப்பிடுகளுக்கிடையில்) நீர்மப் படிக "கொழுப்பு நிரம்பிய பிரிவை" உண்டாக்குகின்றன. கொழுப்பு நிரம்பிய பிரிவு உண்மையில் சமச்சீர் நூனிலைமையாக இருக்கிறது, மேலும் அதன் நிறம் அதன் வெப்பநிலை மாறுபாட்டிற்கேற்ப மாறுகின்றன. அதனால், கொழுப்பு வழிப்பொருள்கள் பொதுவாக நீர்மப் படிக வெப்ப நிலை மானிகள் மற்றும் வெப்பநிலை உணரும் வண்ணப்பூச்சுகளில் பயன்படுத்தப்படுகின்றன. + + + + + + +கான்பூர் + +கான்பூர் ("Kanpur") வட இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மிகுந்த நகரமாகும். இந்நகரம் கங்கையாற்றின் படுகையில் அமைந்துள்ளது. மேலும் இது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகும். இது உத்திரப்பிரதேசத்தின் அதிக மக்கள் தொகையுடைய நகராகும். இது இந்தியாவின் பத்தாவது பெரிய நகராகும். + + + + +வங்காளதேசம் + +வங்காளத்தேசம் (Bangladesh) ஒரு தெற்காசிய நாடாகும். இது பண்டைய வங்காளத்தின் ஒரு பகுதியாக இருந்தது. இந்தியா, மியான்மர் ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும். டாக்கா இதன் தலைநகரமாகும். இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தைப் போன்று, இந்நாட்டிலும் வங்காள மொழியே பேசப்படுகிறது. + +இந்நாட்டின் எல்லைகள் 1947ஆம் ஆண்டு வங்காளப் பிரிவினையின் போது நிறுவப்பட்டது. 1947 ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின், இப்பகுதி கிழக்கு பாக்கிஸ்தான் என்ற பெயரில் பாக்கிஸ்தான் நாட்டின் பகுதியாக‌ இருந்தது. இருப்பினும், இப்பகுதிக்கும் மேற்கு பாக்கிஸ்தான் பகுதிக்கும் இடையிலான தொலைவு சுமார் 1600 கிலோமீட்டர். மேற்கு பாக்கிஸ்தானுக்கும் கிழக்கு பாக்கிஸ்தானுக்கும் இடையான எந்த போக்குவரத்தும் இந்தியாவின் வழியாகவே நடைபெறவேண்டும் என்ற நிலையில், மொழி வேறுபாடு காரணமாகவும், பொருளாதரப் புறக்கணிப்பு காரணமாகவும், கிழக்குப் பாக்கிஸ்தான் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டது. தனிநாடு கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 1971 ஆம் ஆண்டு கிழக்கு பாக்கிஸ்தான் பகுதி இந்தியாவின் துணைக் கொண்டு வங்காளதேச விடுதலைப் போருக்குப் பின் "வங்காளத் தேசம்" என்ற நாடாக அறிவிக்கப்பட்டது. + +இதன்பின், வங்காள தேசம், ஏழ்மை, இயற்கை அழிவுகள், பஞ்சம் ஆகிய பல இன்னல்களை மட்டுமல்லாது, அரசியல் களத்திலும் இராணுவ ஆட்சி, பேச்சுரிமை மறுக்கப்பட்ட நிலை, ஊழல் போன்ற பல துயர்களைக் கடந்து வந்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மீண்டும் மக்களாட்சி மலர்ந்துள்ள நிலையில் சிறிதளவு நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. + +வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு பாராளுமன்ற சனநாயக நாடாகும். இதன் பாராளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991இலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 உடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக அறியப்படுவதோடு, SAARC, BIMSTEC, OIC மற்றும் பொதுநலவாய நாடுகள் ஆகியவற்றின் உறுப்பினராகவும் விளங்குகிறது. + +புவியியல் ரீதியாக நாடு கங்கை பிரமபுத்திரா கழிமுகத்தின் இருபக்கங்களிலும் அமைந்துள்ளது. இதனால், வருடாந்தம் வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறது. மேலும் இந்நாடு வறுமை, ஊழல், மிகைமக்கட்தொகை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், வங்காளதேசம் மனித அபிவிருத்திச் சுட்டெண்ணில் சிறப்பாக முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், ஆயுள் எதிர்பார்ப்பை 23 வருடங்களால் உயர்த்திக் கொள்வதிலும், கல்வியில் பால்நிலைச் சமத்துவத்தை அடைவதிலும், மக்கட்தொகை அதிகரிப்பைக் குறைப்பதிலும், தாய்சேய் நலத்தை மேம்படுத்துவதிலும் வெற்றி கண்டுள்ளது. நாட்டின் இரு பாரிய நகரங்களான டாக்கா மற்றும் சிட்டகொங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் பாரிய உந்துசக்தியாக விளங்குகின்றன. + +வங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்கள், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது. + +குல்னா கோட்டத்தில் 10 மாவட்டங்களும், டாக்கா கோட்டத்தில் 13 மாவட்டங்களும், சிட்டகாங் கோட்டத்தில் 11 மாவட்டங்களும், மைமன்சிங் கோட்டத்தில் 4 மாவட்டங்களும், ரங்க்பூர் கோட்டத்தில் 8 மாவட்டங்களும், ராஜசாகி கோட்டத்தில் 8 மாவட்டங்களும், பரிசால் கோட்டத்தில் 6 மாவட்டங்களும் மற்றும் சில்ஹெட் கோட்டத்தில் 4 மாவட்டங்களும் உள்ளது. மாவட்டங்களின் விவரம்: +1 குல்னா மாவட்டம் +2 ஜெஸ்சூர் மாவட்டம் +3 சத்கீரா மாவட்டம் +4 நராய்ல் மாவட்டம் +5 மெகர்பூர் மாவட்டம் +6 மகுரா மாவட்டம் +7 குஸ்தியா மாவட்டம் +8 சௌதங்கா மாவட்டம் +9 ஜெனிதக் மாவட்டம் +10 பேகர்காட் மாவட்டம் +1 கோபால்கஞ்ச் மாவட்டம் +2 டாக்கா மாவட்டம் +3 தங்காயில் மாவட்டம் +4 சரியத்பூர் மாவட்டம் +5 நரசிங்கடி மாவட்டம் +6 நாராயண்கஞ்ச் மாவட்டம் +7 முன்சிகஞ்ச் மாவட்டம் +8 மணிகஞ்ச் மாவட்டம் +9 பரித்பூர் மாவட்டம் +10 மதாரிபூர் மாவட்டம் +11 ராஜ்பாரி மாவட்டம் +12 காஜிபூர் மாவட்டம் +13 கிசோர்கஞ்ச் மாவட்டம் + +1 நவகாளி மாவட்டம் +2 லெட்சுமிபூர் மாவட்டம் +3 ரங்கமதி மாவட்டம் +4 கொமில்லா மாவட்டம் +5 காக்ஸ் பஜார் மாவட்டம் +6 சிட்டகாங் மாவட்டம் +7 பிரம்மன்பரியா மாவட்டம் +8 சந்திரபூர் மாவட்டம் +9 கக்ராச்சாரி மாவட்டம் +10 பெனி மாவட்டம் +11 பந்தர்பன் மாவட்டம் + +1 மைமன்சிங் மாவட்டம் +2 செர்பூர் மாவட்டம் +3 நேத்ரோகோனா மாவட்டம் +4 ஜமால்பூர் மாவட்டம் + +1 ரங்க்பூர் மாவட்டம் +2 தாகுர்காவ்ன் மாவட்டம் +3 தினஜ்பூர் மாவட்டம் +4 நீல்பமரி மாவட்டம் +5 பஞ்சகர் மாவட்டம் +6 குரிகிராம் மாவட்டம் +7 காய்பாந்தா மாவட்டம் +8 லால்முனிர்காட் மாவட்டம் + +1 ராஜசாகி மாவட்டம் +2 சிராஜ்கஞ்ச் மாவட்டம் +3 பப்னா மாவட்டம் +4 நத்தோர் மாவட்டம் +5 நவகோன் மாவட்டம் +6 சபாய் நவாப்கஞ்ச் மாவட்டம் +7 போக்ரா மாவட்டம் +8 ஜெய்பூர்ஹட் மாவட்டம் + +1 பிரோஜ்பூர் மாவட்டம் +2 போலா மாவட்டம் +3 பரிசால் மாவட்டம் +4 பர்குனா மாவட்டம் +5 ஜலோகட்டி மாவட்டம் +6 பதுவாகாளி மாவட்டம் + +1 சில்ஹெட் மாவட்டம் +2 சுனாம்கஞ்ச் மாவட்டம் +3 மௌலிபஜார் மாவட்டம் +4 ஹபிகஞ்ச் மாவட்டம் + +பெரும் வங்காளப் பகுதியிலுள்ள நாகரிகத்தின் எச்சங்கள் நாலாயிரம் வருட பழைமை வாய்ந்தவை. இக்காலப்பகுதியில், திராவிட, திபெத்தோ-பர்ம மற்றும் ஆஸ்திரோ-ஆசிய மக்கள் இப்பகுதிகளில் வாழ்ந்தனர். "பங்க்லா" அல்லது "பெங்கால்" என்ற சொல்லின் சரியான மூலம் அறியப்படவில்லை. இருப்பினும், இப்பகுதிகளில் கி.மு. 1000ம் ஆண்டு காலப்பகுதியில் குடியேறிய திராவிட மொழி பேசும் குழுவான "பாங்"இலிருந்து வந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. + +கி.மு. 7ம்நூற்றாண்டிலிருந்து கங்கரிதாய் ராச்சியம் உருவாகியது. இது பின்னர் சிசுநாக வம்சம், நந்தர், மௌரியப் பேரரசு, சுங்கர், சாதவாகனர் மற்றும் கண்வப் பேரரசுகளின் காலப்பகுதியில், பிகாருடன் இணைந்து அப்பேரரசுகளின் கீழ் காணப்பட்டது. கி.பி. 3ம் நூற்றாண்டிலிருந்து 6ம் நூற்றாண்டு வரை குப்தப் பேரரசு மற்றும் ஹர்சப் பேரசின் ஒரு பகுதியாக இருந்தது. அதன் வீழ்ச்சிக்குப் பின், சசாங்கன் எனும் ஆற்றல் மிகு வங்காள தேசத்தவன் ஒரு சிறந்த, குறுகியகால அரசொன்றை நிறுவினான். சிறிதுகால, சர்வாதிகார ஆட்சியின்பின், வங்காள பௌத்த, பால வம்சம் நானூறு வருடங்கள் ஆட்சி புரிந்தது. இதன்பின், சிறிதுகாலம் இந்து சேன வம்சம் ஆட்சி புரிந்தது. + +மத்தியகால ஐரோப்பிய புவியியலாளர்கள் கங்கைக் கழிமுகப்பகுதியில், ஒரு சொர்க்கம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். இது மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும், 16ம் நூற்றாண்டு வரை இந்திய உபகண்டத்திலேயே செல்வச் செழிப்புமிக்க பகுதியாக வங்காளம் காணப்பட்டிருக்கக்கூடும். இப்பகுதியின் ஆரம்பகால வரலாறு, இந்துப் பேரரசுகள், உட்பூசல்கள் மற்றும் இந்து மற்றும் பௌத்த மதங்களுக்கிடையிலான ஆதிக்கப் போட்டி என்பவற்றால் நிரம்பியது. + +அராபிய முஸ்லிம் வணிகர்களால் 12ம் நூற்றாண்டளவில் வங்காளப்பகுதியில் இசுலாமிய சமயம் அறிமுகப்படுத்தப்பட்டது. சூஃபி போதகர்கள், மற்றும் அதனையடுத்த முஸ்லிம் ஆட்சி ஆகியவை இப்பகுதி முழுவதும் இசுலாம் பரவ வழி செய்தன. துருக்கிய தளபதியான பக்தியார் கில்ஜி, 1204ல், சேன வம்சத்தின் லக்‌ஷ்மண் சேன் என்பவரைத் தோற்கடித்து, வங்காளத்தின் பெரும்பாலான பகுதிகளைக் கைப்பற்றினார். இப்பகுதி அடுத்த சில நூறு வருடங்களுக்கு பல சுல்தான்களாலும், இந்து அரசர்களாலும், நிலப்பிரபுக்களாலும் (பரோ-புய்யான்கள்) ஆளப்பட்டன. 16ம் நூற்றாண்டளவில், முகலாயப் பேரரசு வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததோடு, டாக்கா முகலாய நிர்வாகத்தின் முக்கிய நிலையமாக உருவானது. 1517இலிருந்து, கோவாவிலிருந்த போர்த்துக்கீச வியாபாரிகள் வங்காளத்துக்கான கடல���வழியைக் கண்டுபிடித்தனர். 1537ல் மட்டும் அவர்கள் குடியேற அனுமதிக்கப்பட்டதோடு, சிட்டகொங்கில் சுங்கச் சாவடிகள் அமைக்கவும் அனுமதிக்கப்பட்டது. 1577ல், முகலாயப் பேரரசரான அக்பர், நிலையான குடியேற்றங்களை அமைக்கவும், தேவாலயங்கள் அமைக்கவும் போர்த்துக்கீசருக்கு அனுமதி வழங்கினார். ஐரோப்பிய வணிகர்களின் செல்வாக்கு அதிகரித்து, இறுதியில் 1757 பிளாசிப் போரின் பின் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி வங்காளத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. 1857ஆம் ஆண்டு நடந்த சிப்பாய் கலகத்திற்குப் பின், இதன் அதிகாரம் பிரித்தானிய முடியின் கீழ் வந்ததுடன், பிரித்தானிய வைஸ்ராய் இதன் நிர்வாகத்தலைவராக நியமிக்கப்பட்டார். காலனித்துவ ஆட்சியின்போது, தெற்காசியா முழுவதும் பெரும் பஞ்சங்கள் ஏற்பட்டன. இவற்றுள் 1943ன் வங்காளப் பெரும் பஞ்சம் காரணமாக 3 மில்லியன் பேர் இறந்தனர். + +18ம் நூற்றாண்டில் இந்துப் பேரரசான மராத்தியப் பேரரசு, முகலாயர்களைத் தோற்கடித்ததோடு, 1742க்கும் 1751க்கும் இடையில் வங்காளத்தின் நவாப்பின் கீழிருந்த பகுதிகளையும் அழித்தது. நவாபின் ஆட்சியின் கீழிருந்த வங்காளம் மற்றும் பீகார் பகுதிகளின் மீதான மராத்தியப் பேரசின் தொடர் தாக்குதல்களால் வங்காளப் பொருளாதாரம் அழிவடைந்தது. இதனால் மராத்தியப் பேரரசின் தொடர் தாக்குதல்களுக்கு அதனால் முகங்கொடுக்க முடியவில்லை. நவாப் அலி வர்தி கான் மராத்தியப் பேரரசுடன் சமாதான உடன்படிக்கையொன்றை ஏற்படுத்திக்கொண்டு முழு ஒரிசாவையும், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளையும், மராத்தியப் பேரரசுக்கு அளித்தான். இதற்கு மேலதிகமாக வங்காளத்தின் ஏனைய பகுதிகளிலும் பீகாரிலும் வசூலிக்கப்படும் வரியில், கால்பங்கை திறையாக("சௌத்") அளிக்கவும் ஒப்புக்கொண்டான். இது அண்ணளவாக வருடத்துக்கு, வங்காளத்திலிருந்து 20 லட்சங்களும், பீகாரிலிருந்து 12 லட்சங்களும் ஆகும். பனிபட்டில் முசுலீம் கூட்டுப் படைகளுடனான போரில் மராத்தியப் பேரரசின் தோல்விக்குப்பின் இப்பேரரசு மராத்தியத் தளபதியான மாதோஜி சிந்தியாவிடம் கையளிக்கப்பட்டது. இவர் மீண்டும் வங்காளம் மீது படையெடுத்தார். 1760களில், வங்காளப் பகுதிகளை ஆக்கிரமித்த பிரித்தானிய இந்தியப் பேரரசு, சௌத் வரியை வழங்குவதை நிறுத்திக் கொண்டது. இதனால் வங்காளம் மீதான ம���ாத்தியரின் படையெடுப்பு தொடர்ந்தது. இறுதியில், 1777இலிருந்து 1818 வரை நடைபெற்ற மூன்று ஆங்கில-மராத்தியப் போர்களில் மராத்தியப் பேரரசு பிரித்தானியரால் தோற்கடிக்கப்பட்டது. + +1905க்கும் 1911க்கும் இடையில், டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்குப் பகுதியொன்றை உருவாக்கும் நிறைவேற்றப்படாத வங்காள மாகாணத்தை இரண்டு பகுதிகளாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 1947ல் பிரித்தானியப் பேரரசின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சமய அடிப்படையில் வங்காளம் பிரிக்கப்பட்டது. இதன் மேற்குப்பகுதி []இந்தியா]]வுடன் இணைய கிழக்குப்பகுதி (முசுலிம் பெரும்பான்மை) டாக்காவைத் தலைநகராகக் கொண்டு கிழக்கு வங்காளம் (பின்னர் கிழக்குப் பாகிஸ்தான்) எனும் பெயரில், பாகிஸ்தானுடன் இணைந்தது. 1950ல், கிழக்கு வங்காளத்தில் நிலச் சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மானியமுறை ஜமீன்தார் முறை ஒழிக்கப்பட்டது. பொருளாதார மற்றும் மக்கட்தொகை விகிதாசாரத்தில் கிழக்குப் பகுதி செல்வாக்குச் செலுத்தினாலும், பாகிஸ்தானின் அரசாங்கமும், ராணுவமும், மேற்குப்பகுதியின் உயர் வகுப்பினரின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தது. 1952ன் வங்காள மொழி இயக்கமே கிழக்கு மற்றும் மேற்குக்கிடையிலான முதல் விரிசலாக அமைந்தது. அடுத்த பத்தாண்டுகளில், பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் மத்திய அரசாங்கத்துடனான பிரச்சினைகள் அதிகரிக்கத் தொடங்கின. இக்காலப்பகுதியில், வங்காளி பேசும் மக்களின் அரசியல் குரலாக அவாமி லீக் எழுச்சி பெற்றது. 1960களில், இது சுயாட்சிக்காக கிளர்ச்சியில் ஈடுபட்டது. 1966ல் அதன் தலைவர், சேக் முஜிபுர் ரகுமான் (முஜிப்) சிறையிலிடப்பட்டார். 1969ல், வரலாறு காணாத பிரபல்யமான கிளர்ச்சியின் பின்னர் இவர் விடுவிக்கப்பட்டார். 1970ல், ஒரு பாரிய சூறாவளி கிழக்குப் பாகிஸ்தானின் கடற்கரைப் பகுதியை அழித்ததோடு, ஐந்து லட்சம் பேரையும் கொன்றது. எனினும், மத்திய அரசாங்கம் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. 1970 தேர்தலில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்ற சேக் முஜிபுர் ரகுமானின் அவாமி லீக் கட்சி ஆட்சியமைப்பதற்கு தடைவிதிக்கப்பட்டமையால் வங்காள மக்களின் கோபம் அதிகரித்தது. + +முஜிபுடனான சமாதானப் பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதைத் தொடர்ந்து, சனாதிபதி யாஹ்யா கான் மற்றும் ராணுவத் தலைவர்கள் "ஒப்பர��சன் சேர்ச்லைட்" எனப்பட்ட ராணுவ நடவடிக்கையை கிழக்குப் பாகிஸ்தான் மீது நடத்தினர். இதன் மூலம், மார்ச்சு 26, 1971ல், அதிகாலை நேரத்தில், முஜிபுர் ரகுமானைக் கைது செய்தனர். யாஹ்யா கானின் இந்நடவடிக்கை மிகவும் கொடூரமானதாக இருந்ததோடு, போரின்போது இடம்பெற்ற வன்முறைகளால் பலர் இறந்தனர். இதில் முக்கிய இலக்குகளாக இருந்தோர் அறிஞர்களும் இந்துக்களுமாவர். மேலும், கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அகதிகள் அருகிலுள்ள இந்தியாவுக்கு விரட்டப்பட்டனர். போரின்போது படுகொலை செய்யப்பட்டோர் தொகை முப்பதினாயிரத்திலிருந்து, மூன்று மில்லியன் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் நேரடித் தலையீடு காரணமாக சனவரி 8, 1972ல் முஜிபுர் ரகுமான் விடுதலை செய்யப்பட்டார். + +அவாமி லீக்கின் தலைவர்கள் இந்தியாவின் கல்கத்தாவில் நாடு கடந்த அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டனர். ஏப்ரல் 17, 1971ல், அது கிழக்கு பாகிஸ்தானின் குஸ்தியா மாவட்டத்திலுள்ள மெஹெர்பூரில் முறையாக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டது. இதன்படி, தாஜுதீன் அஹமட் முதல் பிரதமராகவும், சையத் நஸ்ருல் இஸ்லாம் தற்காலிக சனாதிபதியாகவும் பதவியேற்றனர். + +வங்காளதேச விடுதலைப் போர் ஒன்பது மாதங்கள் நீடித்தது. வங்காளப் படைவீரர்களைக் கொண்ட தளபதி M.A.G. ஒஸ்மானியால் வழிநடத்தப்பட்ட, வங்காள தேசப் படைகள், 11 பகுதிகளாகப் பிரிந்து பாகிஸ்தானியப் படைகளுக்கெதிராக பாரிய கெரில்லாப் போரை தொடுத்தன. இதற்கு உதவியாக, இந்திய ராணுவத்தால் உதவி வழங்கப்பட்ட, மேஜர் ஜெனரல். சுஜித் சிங் உபன் தலைமையிலான, கதெரியா வாகினி, ஹெமாயத் வாகினி ஆகியவற்றைக் கொண்ட முக்தி வாகினி எனும் அமைப்பும் போரில் ஈடுபட்டது. இந்திய ராணுவம் டாகா பகுதியைச் சுற்றி வளைத்ததுடன் போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்தது. மார்ச் 19, 1972 வரை இந்திய ராணுவம் வங்காளதேசத்தில் தங்கியிருந்தது. + +சுதந்திரத்தின் பின், வங்காளதேசம் அவாமி லீக்கால் ஆளப்பட்டது. தேர்தல் நடத்தப்படாமல் முஜிப் பிரதமராக ஆனார். 1973 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில், அவாமி லீக் அறுதிப் பெரும்பான்மை பெற்றது. 1973 மற்றும் 1974 காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் பஞ்சம் ஏற்பட்டது. மேலும் 1975ல் முற்பகுதியில், புதிதாக உருவாக்கப்பட்ட BAKSAL கட்சியை மட்டும் கொண்ட ஒருகட்சி சோசலிச ஆட்சியை ஏற்படுத்தினார். ஆகத்து 15, 1975ல், முஜிபும், அவரது குடும்பத்தினரும் இடைநிலை ராணுவத் தலைவர்களால், படுகொலை செய்யப்பட்டனர். உப- சனாதிபதி கன்டகெர் முஷ்டாக் அஹமட் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார். எனினும் முஜிபின் அமைச்சரவையில் பெரிய மாறுதல்கள் ஏற்படவில்லை. நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7, 1975 ஆகிய இருதினங்களில் நடைபெற்ற ராணுவக் கிளர்ச்சிகளைத் தொடர்ந்து, நாட்டின் அதிகாரக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டது. சட்டம் மற்றும் ஒழுங்கை காப்பதற்காக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. முஷ்டாக் பதவி விலகியதுடன் நாட்டில் ராணுவ ஆட்சி அமுலாக்கப்பட்டது. புதிய சனாதிபதியாக முதன்மை ராணுவ நிர்வாகியும், நீதிபதியுமாகிய அபு சதம் பதவியேற்றார். இவரது பதில் நிர்வாகிகளாக மூன்று முதன்மை சேவை அதிகாரிகள் செயற்பட்டனர். 1977ல் நீதிபதி சாயெம் பதவி விலகியதைத் தொடர்ந்து, லெப்டினன்ட் ஜெனரல் சியாவுர் ரகுமான் சனாதிபதியாகப் பதவியேற்றார். இவர் பலகட்சி அரசியலை மீண்டும் கொண்டுவந்ததோடு, திறந்த சந்தைப் பொருளாதாரத்தையும் அறிமுகப்படுத்தினார். மேலும் வங்காளதேச தேசியக் கட்சி எனும் கட்சியையும் உருவாக்கினார். 1981ல் ராணுவ அதிகாரிகளால் சியாவுர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது ஆட்சி முடிவுக்கு வந்தது. + +மார்ச்சு 24, 1982ல் ஏற்பட்ட புரட்சியைத் தொடர்ந்து வங்காளதேசத்தின் அடுத்த ஆட்சியாளராக லெப்டினன்ட் ஜெனரல் ஹொசைன் மொகமட் எர்சாத் பதவியேற்றார். திசம்பர் 6, 1990ல், அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் மக்களுடன் மேற்கத்தைய சக்திகளின் (சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட பாரிய கொள்கை மாற்றம்) அழுத்தம் காரணமாக இவர் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டார். இதன்பின், வங்காளத்தேசம் பாராளுமன்ற சனநாயக ஆட்சிக்கு மாறியது. சியாவின் விதவை மனைவியான, காலிதா சியா வங்காளதேச தேசியக் கட்சியை வழிநடத்தி, 1991 பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம், வங்காளதேச வரலாற்றிலேயே முதலாவது பெண் பிரதமரானார். எவ்வாறாயினும், முஜிபின் மகள்களில் ஒருவரான சேக் ஹசினாவால் வழிநடத்தப்பட்ட அவாமி லீக் கட்சி 1996ல் நடைபெற்ற அடுத்த தேர்தலில் வெற்றிபெற்றது. 2001ல் நடைபெற்ற தேர்தலில் வங்காளதேச தேசியக் கட்சி மீண்டும் அதிகாரத்துக்கு வந்தது. + +சனவரி 11, 2007ல், அவாமி லீக்கினால் ஏற்படுத���தப்பட்ட அரசியல் குழப்பநிலையைத் தொடர்ந்து, வங்காளதேச ராணுவ மற்றும் சிவில் கட்டமைப்புக்கள் ஒரு நடுநிலையான இடைக்கால அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஆதரவு வழங்கின. இடைக்கால அரசாங்கமே, அடுத்த தேர்தலை நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டது. நாடு பாரியளவிலான ஊழல், ஒழுங்கின்மை மற்றும் அரசியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டது. இடைக்கால அரசாங்கம் அரசாங்கத்தின் எல்லா நிலைகளிலும் காணப்பட்ட ஊழலை வேரோடு அழிப்பதை முதன்மையாகக் கொண்டு செயற்பட்டது. இதன்படி, பல குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஊழல் முறைகேட்டுக்காக கைதுசெய்யப்பட்டனர். திசம்பர் 29, 2008ல் இடைக்கால அரசாங்கம் நீதியானதும் சுதந்திரமானதுமான ஒரு தேர்தலை நடத்தியது. அவாமி லீக்கின் சேக் ஹசீனா இத்தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றிபெற்று, சனவரி 6, 2009ல் பிரதமராகப் பதவியேற்றார். +2015 ஆம் ஆண்டு சூலை 31 ஆம் தேதி நள்ளிரவு பல நாட்களாக தீர்க்கப்படாமல் இருந்த எல்லைப் பரிமாற்றம் தீர்க்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக்குழு தலைவராக தீப்திமன் சென்குப்தா செயல்பட்டார். வங்கதேச நிலப்பகுதியில் வாழும் 14,000 மக்கள் முதல் 51,000 பேருக்கு இந்திய குடியுரிமை கொடுக்கப்பட்டது. அதேபோல் வங்க தேசப்பகுதில் அமைந்துள்ள இந்தியப்பகுதில் குடியிருக்கும் 1,000 பேர் வங்க தேச குடியுரிமை பெற்றார்கள். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் 17,160 ஏக்கர் நிலம் வங்காள தேசத்திற்க்கும்,7,110 ஏக்கர் வங்காளப்பகுதி இந்தியாவிற்க்கும் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. + + + + +தங்கம் + +தங்கம் அல்லது பொன் ("Gold") என்பது மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும். தங்கம் Au என்ற குறியீட்டினால் குறிக்கப்படுகிறது. இதன் அணு எண் 79. இதன் சாரடர்த்தி 19.3 ஆகும். அதாவது நீரைப்போல் ஏறத்தாழ 19 மடங்கு எடையுள்ளது. +இது மென்மையான ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது. + +தங்கத்தை மிக மெல்லிய தகடாக அடிக்கலாம்; கம்பியாக நீட்டலாம்; வெப்பத்தையும் மின்சாரத்தையும் நன்கு கடத்தும்; காற்றில் இதன் நிறம் மங்குவதில்லை. இதில் துருப் பிடிக்காது. எனவே, எப்போதும் பளபளப்பாகவே இருக்கும். ஒருபங்கு நைத்திரிக் அமிலமும் மூன்று பங்கு ஐதரோகுளோரிக் அமிலமும் சேர்ந்த இராஜ திரவம் என்ற கலவையில் மட்டுமே தங்கம் கரையும். தங்கம் சிவப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களை வெகுவாகத் தெறிக்கவிடும் தன்மையைக் கொண்டுள்ளது. அத்துடன் இது செங்கீழ்க்கதிர்களைத் தெறிக்கவிடும் ஆற்றலையும் கொண்டுள்ளது. இத்தன்மையின் காரணமாக வெப்பத் தடுப்பு உடைகள், சூரியக் கண்ணாடிகள், விண்வெளி உடைகளில் இது பயன்படுத்தப்படுகின்றது. +உயர் உலோகங்களில் தங்கம் ஒர் உன்னதமான உலோகமாக இருந்தாலும், அது பல வேறுபட்ட சேர்மங்களை உருவாக்குகிறது. தங்கத்தின் சேர்மங்களில் தங்கமானது -1 முதல் +5 வரையிலான ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. ஆனால் Au(I) மற்றும் Au(III) சேர்மங்கள் தங்கத்தின் வேதியியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. Au(I) ஆரசு அயனி என்று அழைக்கப்படுகிறது. இதுவே தயோ ஈதர்கள், தயோலேட்டுகள், மூவிணைய பாசுபீன்கள் போன்ற மென்மையான ஈந்தணைவிகள் உடன் பொதுவாக காணப்படும் ஆக்சிசனேற்ற நிலையாகும். Au(I) சேர்மங்கள் குறிப்பாக நேர்கோட்டு அமைப்பில் உள்ள சேர்மங்களாகும். Au(CN)2− இதற்கு சரியான உதாரணமாகும். சுரங்கங்களில் காணப்படும் கரையும் நிலையில் உள்ள தங்கத்தின் சேர்மம் இதுவாகும். AuCl போன்ற தங்க ஆலைடுகள் கோணல் மாணலான பலபடி சங்கிலிகளாக உருவாகின்றன. இவையும் தங்கத்துடன் நேர்கோட்டு ஒருங்கிணைப்பை கொண்டுள்ளன. தங்கத்தை அடிப்படையாகக் கொண்ட பெரும்பாலான மருந்துகள் Au(I) அயனியின் வழிப்பொருள்களாகும். +Au(III) என்ற குறியீடு குறிக்கும் ஆரிக் என்பது பொதுவான ஒரு ஆக்சிசனேற்ற நிலையாகும். தங்கம்(III) குளோரைடைக் கொண்டு இது விவரிக்கப்படுகிறது. (Au2Cl6). Au(III) அணைவுச் சேர்மங்களில் மற்ற d8 சேர்மங்கள் போல தங்க அணு மையமாக இருக்கிறது. குறிப்பாக இவை சகப்பிணைப்புத் தன்மையும் அயனித் தன்மையும் கொண்ட சதுரதள கட்டமைப்பில் காணப்படுகின்றன. +எந்த வெப்பநிலையிலும் தங்கம் ஆக்சிசனுடன் வினைபுரியாது. மற்றும் 100 ° செல்சியசு வெப்பநிலை வரை ஓசோன் தாக்குதலை இது எதிர்க்கும். +சில தனி ஆலசன்கள் தங்கத்துடன் வினைபுரிகின்ரன. இளம் சிவப்பு வெப்பநிலையில் தங்கம் புளோரினால் கடுமையாகத் தாக்கப்பட்டு தங்கம்(III) புளோரைடு உருவாகிறது. . +140 ° செல்சியசு வெப்பநிலையில் தங்கம் புரோமினுடன் வினைபுரிந்து தங்கம் (III) சேர்மத்தை உருவ��க்குகிறது. +ஆனால் அயோடினுடன் மிக மெதுவாக வினைபுரிந்து ஒற்றை அயோடைடை உருவாக்குகிறது. +தங்கம் நேரடியாக கந்தகத்துடன் வினைபுரிவதில்லை. ஆனால் குளோரோ ஆரிக் அமிலத்தின் வழியாக அல்லது நீர்த்த தங்கம்(III) குளோரைடு வழியாக ஐதரசன் சல்பைடு வாயுவை செலுத்தினால் தங்கம்(III) சல்பைடு உருவாகிறது. +அறை வெப்பநிலையில் தங்கம் உடனடியாக கரைந்து இரசக் கலவையையும், உயர் வெப்பநிலைகளில் பல உலோகங்களுடன் சேர்ந்து கலப்பு உலோகங்களையும் தருகிறது. இக்கலப்புலோகங்கள் கடினத்தன்மையை திருத்தவும், உலோகவியல் பண்புகளை மாற்றவும் உருவாக்கப்படுகின்றன. மேலும் இவை உருகுநிலையை கட்டுபடுத்தவும், கவர்ச்சிகரமான நிறங்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. +தங்கம் பொட்டாசியம், ருபிடியம், சிசியம், அல்லது டெட்ராமெத்திலமோனியம் போன்றவற்றுடன் வினைபுரிந்து அவற்றுடன் தொடர்புடைய ஆரைடு உப்புகளைக் கொடுக்கிறது. இவ்வுப்புகளில் Au− அயனி இடம்பெற்றுள்ளது. சீசியம் ஆரைடு அநேகமாய் ஒரு பிரபலமான ஆரைடு உப்பு ஆகும். +பல அமிலங்களால் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. கந்தக அமிலம், நைட்ரிக் அமிலம், ஐதரோபுரோமிக் அமிலம், ஐதரோகுளோரிக் அமிலம், ஐதரோபுளோரிக் அமிலம், ஐதரோ அயோடிக் அமிலம் போன்ற அமிலங்களுடன் தங்கம் வினைபுரிவதில்லை.செலீனிக் அமிலத்துடனும் தங்கம் வினைபுரிவதில்லை. நைட்ரிக் அமிலமும், ஐதரோகுளோரிக் அமிலமும் 1:3 என்ற விகிதத்தில் கலந்து உருவாகும் இராச திராவகத்தில் இது கரைகிறது. நைட்ரிக் அமிலம் மிகக் குறைவான அளவில் தங்கத்தை ஆக்சிசனேற்றம் செய்து +3 அயனியாக மாற்றுகிறது. வினையின் வேதிச்சமநிலை காரணமாக தூய அமிலத்தில் இதைக் கண்டறிய முடியாது. எனினும் சமநிலையிலிருந்து அயனிகள் ஐதரோ குளோரிக் அமிலத்தால் நீக்கப்படுகின்றன. AuCl4− அயனிகள் அல்லது குளோரோ ஆரிக் அமிலம் உருவாகி வினையை மேலும் தொடர்ந்து நடக்கத் துணைபுரிகிறது. +பலவகையான காரங்களாலும் தங்கம் பாதிக்கப்படுவதில்லை. நீரிய, திண்ம அல்லது உருகிய சோடியம் அல்லது பொட்டாசியம் ஐதராக்சைடுகளுடன் இது வினைபுரிவதில்லை. இருப்பினும், கார நிபந்தனைகளுடன் ஆக்சிசனின் முன்னிலையில் சோடியம் அல்லது பொட்டாசியம் சயனைடுடன் வினைபுரிந்து கரையக்கூடிய அணைவுச் சேர்மங்களைக் கொடுக்கிறது. +நன்கு வரையறுக்கப்பட்ட எண்ணற்ற தொகுத��ச் சேர்மங்கள் அறியப்படுகின்றன. இது போன்ற இனங்களில் தங்கம் பின்ன ஆக்சிசனேற்ற நிலைகளில் காணப்படுகிறது. எண்முக இனமான {Au(P(C6H5)3)}62+இதற்கு சரியான எடுத்துக் காட்டாகும். தங்க சல்பைடு போன்ற தங்க சால்கோசனைட்டுகள் சம அளவில் Au(I) மற்றும் Au(III) அயனிகளைக் கொண்டுள்ளன. +தூய தங்கம் நச்சுத்தன்மை அற்றதாகும். ஆதலாலேயே தங்கம் தங்க இலை போன்ற உணவுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. and is sometimes used as a food decoration in the form of gold leaf. அதுமட்டுமன்றி கோல்ட்ச்லாஜர்., கோல்ட் ஸ்ரைக், கோல்ட் வாஜர் போன்ற மதுசாரங்களிலும் உலோக நிலைத் தங்கம் பயன்படுகின்றது.அத்தோடு, உலோகத் தங்கம் உணவு சேர்பொருளாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. எனினும் தங்கத்தின் அயன் நச்சுத்தன்மை கொண்டதாகும். தங்க உப்புகள் மற்றும் தங்கக் குளோரைட் ஆகியவையும் ஈரலுக்கும், சிறுநீரகத்துக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். +தங்கமானது வரலாற்று ரீதியாக அரிய உலோகமாகவே கருதப்பட்டு வந்தது. தங்கத்தின் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். 2015 ஆம் ஆண்டளவில் நிலத்தின் கீழ் 186,700 தொன் எடையான தங்கம் காணப்படுகின்றது. ஐக்கிய அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டில் "இவ்வருடத்தின் ஒவ்வாமையை ஏற்படுத்துவான்" எனும் தேர்தலில் தங்கமானது அதிக வாக்குகள் பெற்றது. தூய தங்கம் பெண்களையே அதிகம் ஒவ்வாமையால் பாதித்தது. எனினும் நிக்கல் போன்றவற்றுடன் கலந்து செய்யும் தங்கம் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. +தங்கம் காரட் என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24 காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம�� என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22 காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும். + +தங்கம் பெரும்பாலும் நிலத்தடியில் தனி நிலையிலேயே ரேகை போல பாறைகளில் படர்ந்திருக்கும். தங்கம், சுரங்கங்கள் மூலம் தோண்டி எடுக்கப்படுகிறது.பாறைகளில் வெடி வைத்துத் தகர்த்துத் தங்கத்தை இரசாயன (வேதியியல்) முறையில் பிரித்தெடுக்கிறார்கள். அதன்பின் மின்பகுப்பு முறையில் சுத்தம் செய்யப்படுகிறது. +உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதி தென் ஆப்பிரிக்கா வில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்கா விலும், இந்தியா வில் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூகொடை என்னுமிடத்திற் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்றுமண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகின்றது. ஆயினும் இப்படிவுகள் மிகச் சொற்ப அளவுடையதாகவே கூறப்படுகின்றது. + +2004-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருந்தபோதிலும், 2013-ஆம் ஆண்டு முதல் தங்கத்தின் விலை படிப்படியாக குறைய ஆரம்பித்துள்ளது. 2013-ஆம் ஆண்டு முதல் கால் இறுதியில் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் சுமார் 6 சதவீதம் குறைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டளவில் ஒரு கிராம் தங்கத்தின் பெறுமதி 39 அமெரிக்க டொலர்கள் ஆகும். + +தங்கத்தை இறக்குமதி செய்வது குறைத்து இந்தியாவிற்குள்ளே இருக்கும் தங்கம் சுழற்சி செய்யப்பட்டால் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை குறையவும், குறிப்பாக இந்திய சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சி அடையவும் வழி உருவாக்கும். ( "தங்கத்தின் விலை ஏறுகிறதா, ஏமாற்றுகிறதா, க. மாரிக்கனி, ஓருலகம் பதிப்பகம், புதிய எண் 75, முதல் மாடி, லேக் வியூ ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை-33" ) + +ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறத��. அந்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லது நாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்பு கணக்கிடப்படுகிறது. + +தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், போன்றவற்றைச் செய்வர். தங்கம் மென்மையான உலோகம் ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு செம்பு அல்லது வெள்ளி யைக் கலந்து செய்யப்பட்ட நகை , நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள் ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமென்பதற்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்க்கிறார்கள். வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. + +உலகத் தங்கச் சபையின் கூற்றுக்கு அமைவாக 2014 ஆம் ஆண்டளவில் பூமிக்குக் கீழே 183,600 தொன் எடையுள்ள தங்கம் காணப்படுகின்றது. இது 21 மீற்றர் நீளமுள்ள சதுரமுகி ஒன்றின் கனவளவிற்குச் சமமானதாகும். இதன் மதிப்பு 6.3 ரில்லியன் அமெரிக்க் டொலர்கள் ஆகும். + +2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடாக சீனா விளங்குகிறது. சீனா 430 தொன் தங்கத்தை உற்பத்தி செய்தது. சீனாவைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவும், உருசியாவும் அதிக தங்கத்தை உற்பத்தி செய்த நாடுகளாக விளங்குகின்றன. இவை முறையே 274 மற்றும் 247 தொன் எடையுள்ள தங்கத்தை உற்பத்தி செய்துள்ளன. எனினும் தங்க உற்பத்தி மூலம் பாரிய ஆபத்தான மாசு சூழலில் இடம்பெறுகின்றது. + +1880களிலிருந்து தென்னாபிரிக்காவே உலகின் தங்க விநியோகத்தின் முக்கிய நாட���கவும் வளமாகவும் விளங்குகின்றது. இன்றுள்ள 50 விழுக்காடு தங்கம் இந்நாட்டிலிருந்தே அகழப்பட்டுள்ளது. 1970 ஆம் ஆண்டில் 1,480 தொன் எடையுள்ள தங்கத்தை இந்நாடு உற்பத்தி செய்ததுடன் இது உலகின் அவ்வாண்டின் 79%ஆன உற்பத்தி ஆகும். எனினும், 1905 ஆம் ஆண்டிலிருந்து முதன்மை வகித்த தென்னாபிரிக்காவை, சீனா 2007 ஆம் ஆண்டில் 276 தொன் தங்கத்தை அகழ்ந்து பின்தள்ளியது. + +2014 ஆம் ஆண்டில் தங்கத்தினை அதிகம் உற்பத்தி செய்த நாடுகளில், முதன்மையானதாக சீனாவும் அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா, உருசியா, ஐக்கிய அமெரிக்கா, கனடா, பெரு ஆகிய நாடுகளும் விளங்கின. 20ஆம் நூற்றாண்டில் தங்க அகழ்வில் முன்னணி வகித்த தென்னாபிரிக்கா ஏழாம் இடத்தில் இருந்தது. இந்நாடுகளுடன் கானா, மாலி, புர்கினா ஃபசோ, இந்தோனேசியா, உஸ்பெஸ்கிஸ்தான் ஆகியவையும் பிரதான தங்க உற்பத்தி நாடுகள் ஆகும். + +தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. இது ஒரு ஆடம்பர பொருளாவும் பாவிக்கப்படுகிறது. தமிழர்கள் தங்கள் பெண்ணின் திருமணத்தின் போது நகைகள் அணிவித்து கணவன் வீட்டிற்கு அனுப்புவது வழக்கம். மேலும், தமிழில் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவதும் வழக்கம். இந்தியாவின் செல்வ நிலையைக் கேட்ட பிற நாட்டவர்கள், கடல்வழிப் பயணமாக வந்து வாணிபத்தொடர்பு கொண்டிருந்தனர். + + + + + +ஆண்டுத் தாவரம் + +ஓர் ஆண்டு காலத்துக்குள் முளைத்து, வளர்ந்து, பூ பூத்து விதை உண்டாக்கி பின் மடியும் தாவரங்கள், ஆண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். (எடுத்துக்காட்டுகள்-நெல், வாழை, பருத்தி) +ஆண்டுத் தாவரங்கள் வாழ்க்கை காலத்தின் ஆரம்பக் கட்டத்தில் வளர்ச்சி நடைபெறும் . +வளர்ச்சி நிறைவடைந்த பின் இறுதிப் பருவத்தில் இனப்பெருக்கம் நிகழும் .அதாவது பூ , பழம், வித்துக்கள் என்பவற்றை உருவாக்கி அவ்வாண்டிலேயே அல்லது அவ்வாண்டின் பின் இறுதியில் இத்தாவரங்கள் இறந்துவிடும்.தகாத காலத்தை வித்து நிலையில் கழிக்கும். எ. கா: தக்காளி + + + + + +ஈராண்டுத் தாவரம் + +12 முதல் 24 மாதங்கள் வாழ் நாளுடைய தாவரங்கள் ஈராண்டுத் தாவரங்கள் என அழைக்கப்படும். இத்தாவரங்கள், முதல் ஆண்டில் இலை மற்றும் தண்டுப்பகுதிகளில் வளர்ச்சி அடைந்து குளிர��� காலத்தில் உறங்கு நிலை அடைகின்றன. அதற்கு அடுத்து வரும் கோடை அல்லது வசந்த காலத்தில் பூக்கள், கனிகள் மற்றும் விதைகளை உருவாக்கி விட்டு மடிகின்றன. (எடுத்துக்காட்டு-கேரட்) + + + + +கலைக்களஞ்சியம் + +கலைக்களஞ்சியம் () (Encyclopedia) என்பது எழுத்து வடிவில் உள்ள அறிவுத்தொகுப்பு ஆகும். கலைக்களஞ்சியங்கள் பல துறை அறிவை உள்ளடக்கியதாகவோ, ஒரு குறிப்பிட்ட துறைக்கெனத் தனிப்பட அமைந்ததாகவோ, அல்லது ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதி, இனம் குறித்தோ அமையலாம். கலைக்களஞ்சியத்தில் உள்ள தகவல்கள் அகர வரிசையிலோ, துறை வாரியாகவோ தொகுக்கப்பட்டிருக்கும். அகர வரிசையில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சியங்களே அதிகம் பயன்பாட்டில் உள்ளன. + +18 ஆம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரான்சிய (பிரெஞ்சு) மொழியில் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்ட டெனிசு டிடேரோ (Denis Diderot) என்பார் கலைக்களஞ்சியம் பற்றிப் பின்வருமாறு கூறினார்: + +இன்றைய கலைக்களஞ்சியங்கள் 18 ஆம் நூற்றாண்டில் அகரமுதலிகளில் இருந்து உருவானவை. அகரமுதலிகள் பொதுவாக சொற்களையும் அவற்றுக்கான பொருள்களையும் தருகின்றன. அத்துடன், சில வேளைகளில் அச் சொற்களின் பின்புலங்களையும், தொடர்புள்ள பிற தகவல்களையும் குறைந்த அளவில் உள்ளடக்குவதும் உண்டு. சொல்லின் பொருள்களைத் தந்த போதும், அதன் முழுமையான விளக்கம், தனிச்சிறப்பு, பயன்பாட்டு எல்லைகள், பரந்த அறிவுத் துறையில் அச் சொல் எவ்வாறான தொடர்புகளைக் கொண்டுள்ளது போன்றவை குறித்த தகவல்கள் பயனர்களுக்குக் கிடைப்பதில்லை. + +மேற்குறித்த தேவைகளைக் கவனத்திற்கு எடுத்துக்கொண்டு, கலைக்களஞ்சியங்கள் ஒவ்வொரு தலைப்பையும் எடுத்துக்கொண்டு அதுபற்றி ஆழமான தகவல்களைத் தருவதுடன் அத்துறை தொடர்பாகக் கிடைக்கக்கூடிய எல்லா அறிவுச் செல்வங்களையும் தொகுத்துத் தர முயல்கிறது. கலைக்களஞ்சியங்கள் நிலப்படங்கள், விளக்கப்படங்கள், உசாத்துணைகள், புள்ளித்தகவல்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. கடந்த காலங்களில் கலைக்களஞ்சியங்களும், அகரமுதலிகளும், அவற்றில் எழுதவுள்ள உள்ளடக்கங்களில் துறைபோகக் கற்ற வல்லுனர்களைக் கொண்டு எழுதப்பட்டன. + +ஒரு கலைக்களஞ்சியத்தை நான்கு தலைமையான கூறுகள் வரையறுக்கின்றன. அவை: உள்ளடக்கம், எல்லை, ஒழுங்குபடுத்தும் முறை, ���ருவாக்கும் முறை என்பன. + +அகரமுதலிகள் என்று பெயரிடப்பட்ட சில ஆக்கங்கள் உண்மையில் கலைக்களஞ்சியங்களை ஒத்தவை. சிறப்பாக, குறிப்பிட்ட துறைகளுக்காகத் தனிப்பட அமைந்த அகரமுதலிகள் இவ்வாறாக அமைவதுண்டு. எடுத்துக்காட்டாக, ஆங்கிலத்தில் உள்ள "இடைக்காலத்துக்கான அகரமுதலி" "(Dictionary of the Middle Ages)", "அமெரிக்கக் கடற்போர்க் கப்பல்கள் அகரமுதலி" "(Dictionary of American Naval Fighting Ships)", "பிளாக்கின் சட்டத்துறை அகரமுதலி" "(Black's Law Dictionary)" என்பவற்றைக் கூறலாம். + +கி.பி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த உரோம அரசியலாளரான மூத்த பிளினியால் எழுதப்பட்ட இயற்கை வரலாறு என்று பொருள்படும் "நாட்சுராலிசு இசுட்டோரியா" (Naturalis Historia) என்னும் இலத்தீன் மொழி ஆக்கமே இன்று கிடைப்பவற்றுள் மிகவும் பழமையான கலைக்களஞ்சிய ஆக்கம் ஆகும். இயற்கை வரலாறு, கலையும் கட்டிடக்கலையும், மருத்துவம், புவியியல், நிலவியல், போன்றவை தொடர்பான 37 பிரிவுகளைக் கொண்ட நூலொன்றை இவர் தொகுத்தார். 100 ஆக்குனர்களால் எழுதப்பட்ட 2000 வெவ்வேறு ஆக்கங்களில் இருந்து 20,000 குறிப்புகளைத் தொகுத்துள்ளதாகவும், தனது சொந்த பட்டறிவிலிருந்தும் பலவற்றை உள்ளடக்கி உள்ளதாகவும் அவர் தனது முன்னுரையில் தெரிவித்துள்ளார். இது கிபி 77 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. சிறப்புவாய்ந்த இந்த ஆக்கம் பெரியதும், விரிவானதும் ஆகும். இது, இயற்கையோடு தொடர்புள்ள அனைத்து அறிவுத்துறை மற்றும் கலைகள் ஆகியவற்றின் முழுமையான தொகுப்பாக விளங்கியது எனலாம். பிளினி பின்வருமாறு கூறினார்: + +இதே போன்ற பழைய ஆக்கங்கள் பல இருந்திருந்தாலும், இருண்ட காலத்தையும் தாண்டி நிலைத்திருந்த நூல் இது மட்டுமே. உரோமர் காலத்தில் இது மிகவும் புகழ் பெற்றிருந்தது. இதன் பல படிகள் உருவாக்கப்பட்டு ஐரோப்பா முழுவதிலும் பரவியிருந்தது. முதலில் அச்சேறிய செந்நெறிக்கால (classical period) நூல்களில் ஒன்றாக 1469 ஆம் ஆண்டில் இது பதிப்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து உரோமானியர் காலத்தைப் பற்றிய தகவல்களுக்கான உசாத்துணை நூலாகப் பெயர்பெற்றிருந்தது. சிறப்பாக, உரோமக் கலை, உரோமத் தொழில்நுட்பம், உரோமப் பொறியியல், போன்றவற்றுக்காக இது பெயர் பெற்றிருந்ததுடன்; மருத்துவம், கனிமவியல், விலங்கியல், தாவரவியல், நிலவியல் போன்ற துறைகள் தொடர்பான தகவல்களுக்காகவும் இது பெரிதும் வேண்டப்பட்ட நூலாக இருந்தது. + +இடைக் காலத்��ின் தொடக்கத்தில் சிறந்த அறிஞராக விளங்கிய செவில் ஊரைச் சேர்ந்த செயின்ட் இசிடோர் என்பவர் இடைக் காலத்தின் முதல் கலைக்களஞ்சியமான "எட்டிமோலொச்சியே" "(Etymologiae - கிபி 630)" என்னும் நூலை ஆக்கினார். இதில் அவர் தமது காலத்தில் இருந்த பழையனவும் புதியனவுமான எல்லா அறிவுத் துறை தொடர்பான தகவல்களையும் தொகுத்தார். இது 20 தொகுதிகளில் 448 பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. இத்தொகுப்பு, இதன் சிறப்புத்தன்மைக்காக மட்டுமன்றி, இதில் எடுத்தாளப்பட்ட பிற ஆக்கியோர்களின் மேற்கோள்கள், அவர்களது ஆக்கங்களிலிருந்து எடுத்த பகுதிகள் என்பனவற்றுக்காகவும் பெறுமதி வாய்ந்தது. இவர் இவ்வாறு தொகுக்காமல் போயிருப்பின் பல அரிய நூல்கள் பற்றிய தகவல்களே இன்று கிடைக்காமல் போயிருக்கும். + +பார்த்தொலோமியசு ஆங்கிலிக்கசு என்பவர் 1240 இல் ஆக்கிய கலைக்களஞ்சியமே இடைக்காலத்தின் நடுப்பகுதியில் அதிகமாக வாசிக்கப்பட்ட கலைக்களஞ்சியமாகும். எனினும் பிந்திய இடைக் காலத்தில் 1260 ஆம் ஆண்டளவில் வின்சென்ட் என்பவரால் ஆக்கப்பட்ட கலைக்களஞ்சியம் 3 மில்லியன் சொற்களைக் கொண்டதாக விளங்கியது. + +இடைக் காலத்தில் ஆக்கப்பட்ட முசுலிம்களின் தொடக்க அறிவுத் தொகுப்புக்கள் பல விரிவான ஆக்கங்களை உள்ளடக்கியிருந்ததுடன், இன்று அறிவியல் முறை, வரலாற்று முறை, மேற்கோள் என்று அழைக்கப்படும் பல துறைகளில் பெரிய வளர்ச்சிகளையும் கண்டிருந்தன. கிபி 960 ஆம் ஆண்டளவில், பாசுராவைச் சேர்ந்த தூய்மையின் உடன்பிறப்புகள் (Brethren of Purity) எனப்பட்டோர் தூய்மையின் உடன்பிறப்புகளின் கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தனர். இவற்றுள், அபு பக்கர் அல் ராசி ஆக்கிய அறிவியல் கலைக்களஞ்சியம், முத்தாசிலிட்டே அல் கிண்டி எழுதிய 270 நூல்கள், இபின் சீனாவின் மருத்துவக் கலைக்களஞ்சியம் என்பன முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவை. + +11 ஆம் நூற்றாண்டளவில் சோங் வம்சத்தின் தொடக்க காலத்தில் தொகுக்கப்பட்ட கலைக்களஞ்சிய ஆக்கமான "சோங்கின் பெரிய நான்கு நூல்கள்" என்னும் ஆக்கம் அக்காலத்தின் பாரிய அறிவுத்துறை சார்ந்த பணியாகும். இவற்றுள் கடைசி நூல் 1000 தொகுதிகளில் 9.4 மில்லியன் சீன மொழி எழுத்துக்களைக் கொண்டது. சீன வரலாறு முழுவதும் பல கலைக்களஞ்சிய ஆக்குனர்கள் காணப்படுகின்றனர். இவர்களுள் அறிவியலாளரும், அரசியலாளருமான ஷென��� குவோ (1031–1095); அரசியலாளரும், கண்டுபிடிப்பாளரும், உழவியலாளரும் ஆன வாங் சென் (1290–1333); சோங் யின்சியாங் (1587–1666) போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். + +மிங் வம்சத்தைச் சேர்ந்த சீனப் பேரரசரான யொங்கிள் என்பவர் யொங்கிள் கலைக்களஞ்சியம் என்னும் கலைக் களஞ்சியம் ஒன்றைத் தொகுப்பித்தார். 1408 ஆம் ஆண்டில் தொகுக்கப்பட்ட இது உலகின் மிகப் பெரிய கலைக்களஞ்சியங்களுள் ஒன்று. இது கையால் எழுதப்பட்ட 11,000 தொகுதிகளையும், 370 மில்லியன் சீன மொழி எழுத்துக்களையும் கொண்டது. + +பொதுத் தேவைக்கானவையும், பரவலாகப் பயன்பட்டவையுமான கலைக்களஞ்சியன் குறித்த தற்கால எண்ணக்கரு 18 ஆம் நூற்றாண்டின் கலைக்களஞ்சியங்களுக்கும் முற்பட்டவை. எனினும், சேம்பர்சின் "சைக்கிளோப்பீடியா அல்லது கலை மற்றும் அறிவியல் அகரமுதலி" "(Cyclopaedia, or Universal Dictionary of Arts and Sciences – 1728)", டிடேரோ மற்றும் டி'அலம்பேர்ட்டின் "என்சைக்கிளோபீடியே" "(Encyclopédie – 1751)", "பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்", "கான்வசேசன்ஸ் லெக்சிக்கன்" "(Conversations-Lexikon)" என்பனவே முதலில் இன்றைய கலைக்களஞ்சியங்களின் வடிவத்தில் அமைந்ததுடன், விரிவான வீச்செல்லைகளைக் கொண்ட தலைப்புக்களுடனும், ஆழமான விளக்கங்களுடனும் இவை அமைந்திருந்தன. + +பிரெஞ்சு மறுமலர்ச்சியின் கலைக்களஞ்சியவியல், மனிதனுக்குத் தெரிந்த எல்லாவற்றையுமே உள்ளடக்கத் தேவையில்லை என்றும், தேவையானவற்றை மட்டுமே உள்ளடக்க வேண்டும் என்னும் அடிப்படையிலும் அமைந்திருந்தது. அவசியமானது எது என்பது பல அளபுருக்களின் (criteria) அடிப்படையில் முடிவு செய்யப்பட்டதனால், வேறுபட்ட அளவுகளைக் கொண்ட கலைக்களஞ்சிய ஆக்கங்கள் உருவாயின. அளபுருக்கள் பெரும்பாலும் ஒழுக்கநெறிகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இந்த அணுகுமுறையினால் கலைக்களஞ்சியவியலாளர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினர். இவற்றுள் எதை உள்ளடக்கக்கூடாது என்று எப்படி முடிவு செய்வது, கட்டமைப்புக்குள் அடக்க முடியாதிருந்த அறிவுத்துறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்துவது, புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அறிவுகளை எவ்வாறு கையாள்வது, முன்னைய அமைப்பில் இவை ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் போன்றவை இத்தகைய சிக்கல்களுக்குள் உள்ளடங்கி இருந்தன. +இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரும், மெய்யியலாளருமான சர் தாமஸ் பிரவுண் (Thomas Browne) என்பவர் 1646 ஆம் ஆண்டில் "சியூடோடாக்சியா எப்ப��டமிக்கா" "(Pseudodoxia Epidemica)" என்னும் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார். இவர் தனது கலைக்களஞ்சியத்தை மறுமலர்ச்சிக்காலத்தில் பரவலாகக் கையாளப்பட்ட "படைப்பின் அளவுத்திட்டம்" எனச் சொல்லப்பட்ட ஒரு படிமுறை அமைப்பு முறையில் ஒழுங்கமைத்திருந்தார். இதன்படி, தலைப்புகள் கனிமம், காய்கறி, விலங்குகள், மனிதன், கோள்கள், அண்டம் என்னும் வரிசையில் கீழிருந்து மேலாக அமைந்திருந்தன. பிரவுணின் தொகுப்பு ஐந்து பதிப்புக்களைக் கண்டது. ஒவ்வொரு பதிப்பும் திருத்தப்பட்டும் புதிய தகவல்கள் சேர்த்தும் வெளிவந்தன. கடைசிப் பதிப்பு 1672 ஆம் ஆண்டில் வெளிவந்தது. 17 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், 18 ஆம் நூற்ராண்டின் முற்பகுதியிலும் படித்த ஐரோப்பியர்களுடைய வீடுகளில் காணப்பட்ட இது பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. + +தற்காலத்தில் மிகவும் பழக்கமான அகரவரிசையில் ஒழுங்குபடுத்தும் முறையை அறிமுகப்படுத்தியவர் ஜான் ஹரிஸ் (John Harris) என்பவராவார். 1704 இல் வெளியிடப்பட்ட இவரது நூலின் தலைப்பு "லெக்சிக்கன் டெக்னிக்கம் அல்லது கலைகளுக்கும் அறிவியல்களுக்குமான ஆங்கில அகரமுதலி: கலை தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகளையே விளக்குகிறது." "(Lexicon Technicum: Or, A Universal English Dictionary of Arts and Sciences: Explaining not only the Terms of Art, but the Arts Themselves)". தலைப்பில் குறிப்பிட்டபடியே கலை மற்றும் அறிவியல் தொடர்பான சொற்களை மட்டுமன்றி கலைகள், அறிவியல்கள் பற்றிய விளக்கங்களையும் இந்நூல் உள்ளடக்கி இருந்தது. வேதியியல் பற்றி சர் ஐசாக் நியூட்டன் எழுதிப் பதிப்பிக்கப்பட்ட ஒரே ஆக்கம் இதன் 1710 ஆம் ஆண்டுப் பதிப்பில் உள்ளது. இது தலைமையாக அறிவியலையே முதன்மைப்படுத்தியது. 18 ஆம் நூற்றாண்டில் "அறிவியல்" என்பதால் புரிந்துகொள்ளப்பட்டவை பற்றி இதன் உள்ளடக்கங்கள் அமைந்திருந்ததோடு, கலைத்துறை மற்றும் நுண்கலைத்துறைகள் சார்ந்த தலைப்புக்களும் இருந்தன. எடுத்துக்காட்டாக சட்டம், வணிகம், இசை போன்ற துறைகள் சார்ந்த தலைப்புக்களில் 1200 பக்கங்கள் வரை இருந்தன. இதைக் கலைக்களஞ்சியம் என்பதைவிடக் கலைக்களஞ்சியத் தன்மை கொண்ட அகரமுதலியாகக் கருதலாம். + + + + + + +தேசவழமைச் சட்டம் + +தேசவழமைச் சட்டம் என்பது ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வழங்கிய வழக்கங்களை (customs) அடிப்படையாக வைத்து யாழ்��்பாண முதலிமாரின் உதவியுடன் ஒல்லாந்தரால் தொகுக்கப்பட்ட ஒரு சட்டம் ஆகும். தேசவழமை என்பதன் பொருள் ஒரு தேசத்தின் வழக்கம் என்பதாகும். மக்களிடையே இதற்கிருந்த பிரபலத்துவம் காரணமாக ஒல்லாந்தரால் இது 1707 ஆம் ஆண்டு எழுத்து மூலமாக்கப்பட்டது. பின்னர் ஆங்கிலேயரால் 1806 ஆம் ஆண்டு சட்ட மூலமாக்கப்பட்டது. இச்சட்டமானது பின்னர் 1869 இலும் பின் 1911 இலும் கடைசியாக 1948 இலும் திருத்தியமைக்கப்பட்டது. இச்சட்டம் உடமை உரிமைகள் பற்றியும் திருமணம் பற்றியும் விபரமான வரையறைகளைக் விபரிக்கின்றது. இலங்கையில் பொதுவான சட்டமான பொதுச் சட்டக் கோவைக்கு மேலதிகமாக உள்ள மூன்று சட்டங்களில் தேசவழமைச் சட்டமூம் ஒன்று. ஏனையவை இரண்டும், கண்டிச் சட்டம், இசுலாமியச் சட்டம் ஆகியவையாகும். கண்டிச் சட்டமானது கண்டி வாழ் பெளத்தர்களுக்கும், இசுலாமியச் சட்டமானது இலங்கை வாழ் இசுலாமியர்களுக்கும், தேசவழமைச் சட்டமானது வட மாகாணத்தில் வாழும் மக்களுக்கும் மாத்திரமே இயல்புடையதாகிறது. + +கிபி 1620 ஆம் ஆண்டுக்கு முன்னர், இலங்கையின் வடபகுதியில், தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தனியான நாடு இருந்தது. இதுவே யாழ்ப்பாண அரசு அல்லது யாழ்ப்பாண இராச்சியம் எனப்படுகின்றது. முடியாட்சி முறையின் கீழ் ஆளப்பட்டுவந்த யாழ்ப்பாண இராச்சியத்தில், சட்டம் ஒழுங்கு முதலியவை எழுத்தில் இல்லாத ஆனால், குறைந்தது மூன்று, நான்கு நூற்றாண்டுகளாகவாவது நடைமுறையில் இருந்து வளர்ந்த ஒரு சட்டமுறை இருந்திருக்கிறது. கி.பி 1620 இல் போத்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றித் தங்கள் நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த பின்னரும், அவர்கள், யாழ்ப்பாணத்தின் உள்ளூர் முதலிமார்கள் ஊடாகவே மக்களைக் கட்டுப்படுத்தி வந்தமையால் பழைய நடைமுறைகளே யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் பின்பற்றப்பட்டன. + +1658 இல் யாழ்ப்பாணம் போத்துக்கீசரிடமிருந்து ஒல்லாந்தர் கைக்கு மாறியது. எனினும், முன்போலவே, மரபு வழியான விடயங்கள் எல்லாவற்றிலும் பழைய நடைமுறைகளே, அதாவது வழமைகளே பின்பற்றப்பட்டதாகத் தெரிகிறது. 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ்ப்பாண இராச்சியத்தின் குடிகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை எழுத்து மூலமாகத் தொகுக்கும் பொறுப்பு, அன்றைய டச்சு ஆளுனர் கோர்னெலிஸ் ஜோன் சைமன்ஸ் ("Cornelis Joan Simons") என���பவரால் யாழ்ப்பாணத்தில் திசாவை ("Dessave") பதவி வகித்த "கிளாஸ் ஈசாக்ஸ்" ("Class Issaksz") என்பவருக்கு வழங்கப்பட்டது. அவர், யாழ்ப்பாணத்து முதலியார்கள் 12 பேரின் உதவியுடன் நாட்டின் வழமைகளைத் தொகுத்தார். இதுவே தேசவழமைச் சட்டம் எனப்படுகின்றது. ஜூன் 4, 1707 ஆம் ஆண்டில் ஒல்லாந்த அரசினால் யாழ்ப்பாணத்துக்கு உரிய சட்டமாக இது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இச்சட்டம் டச்சு மொழியில் எழுதப்பட்டுத் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டது. + +கிளாஸ் ஈசாக்ஸ், இத் தொகுப்புக்காகத் தான் எழுதிய முன்னுரையில் இத் தொகுப்பு தொடர்பான பின்வரும் அம்சங்களைக் குறிப்பிட்டுள்ளார். + + +ஒல்லாந்தர் உள்ளூர் பிரச்சினைகளில் ஈடுபடாமல் ஆதிக்க வகுப்பின் மூலம் ஆட்சியைக் கட்டுப்படுத்தும் தந்திரத்துக்குமையவே தேசவழமைச் சட்டத்தை அப்போதைய யாழ்ப்பாண ஆதிக்க வகுப்பின் ஆளுமைகளைக் கொண்டு தொகுத்தனர். அதுவரைக்கு தமிழர்கள் எழுதப்பட்ட சட்டம் எதனையும் யாழ்ப்பாணத்தில் பின்பற்றியதாக தெரியவில்லை. + +"தேசவழமைச் சட்டத்தின்படி கூட்டு உரிமையாளர்கள், கூட்டு முதுசகத்தார்கள், அயல்காணி உரிமையாளர்கள், வட மாகாணத்தில் தம் காணியை ஈடு வைத்துள்ளவர்கள் விலைப்படும் காணியை வாங்குவதற்கு முதல் உரிமையாளராகின்றனர்". + +தேச வழமைச் சட்டத்தின்படி சொத்துடைமைகள் மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதுசம், சீதனம், தேடிய தேட்டம் ஆகியனவாகும். முதுசொம் என்பது கணவர் வழிவந்த மரபுரிமைச் சொத்தாகும். சீதனம் என்பது மனைவியின் தாய் வழி வந்த மரபுரிமைச் சொத்தாகும். தேடிய தேட்டம் என்பது கணவனும் மனைவியும் தங்கள் மண வாழ்வின் போது தேடிக் கொண்ட சொத்துக்களாகும். ஒரு குடும்பத்தின் புதல்வியர் தாயின் சீதனச் சொத்தையும், புதல்வர் தந்தையின் முதுசொச் சொத்தையும் அடைவர். தேடிய தேட்டமானது புதல்வரிடையேயும் புதல்வியரிடையேயும் சரி சமமாகப் பிரிக்கப்படுகின்றது. இவ்விதம் பரம்பரைச் சொத்தானது கணவனுடனும் மனைவியுடனும் தனித்தனியாக பேணப்படுகிறது. + +ஒரு விதவை மறுமணம் செய்யுமிடத்து அவருடைய சீதனச் சொத்தானது அவருடைய இருமண புதல்வியருக்கும் பங்கிடப்படுகின்றது. மனைவியை இழந்தவர் மறுமணம் செய்யுமிடத்து அவருடைய இறந்த மனைவியின் சீதனச் சொத்துக்களை அம்மனைவியின் பெண்பிள்ளைகளுக்கும், தனது முதுச சொத்துக்களில் பாதியை அம்மனைவியின் ஆண் பிள்ளைகளுக்கும், தேடிய தேட்டத்தில் பாதியை அம்மனைவியின் எல்லாப் பிள்ளைகளுக்கும் சமமாகப் பிரித்துக் கொடுத்தல் அவசியமாகிறது. + +மணமுறிவின் போது பெண்ணுக்குச் சீதனமாக வழங்கப்பட்ட சொத்துக்களனைத்தும் பெண்ணுடன் வருவதுடன் தேடிய தேட்டத்தில் ஐம்பது சதவிகிதமும் அவருக்கு வழங்கப்பட வேண்டும். பெண்ணின் சீதனத்தில் ஆண் செலவு செய்திருப்பின் அத்தொகையும் பெண்ணுக்கு வழங்கப்படல் வேண்டும். + +இச்சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பாக இருந்ததுடன், சலுகைகளானவை திருமண வாழ்வின் போது பெண்ணுக்கு ஒரு பாதுகாப்பையும் அந்தஸ்தையும் பெற்றுக் கொடுத்தது. அத்துடன் அக்காலச் சமூகத்தில் விதவைக்கும் விவாகரத்தாகிய பெண்ணுக்கும் சமூக அங்கீகாரம் வழங்கும் அனுகூலமான சட்டமாக இதனைக் கருதலாம் + + + + + + + +சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க + +சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க (பிறப்பு ஜூன் 29, 1945) இலங்கையின் ஐந்தாவது சனாதிபதியும் நான்காவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியுமாவார். இவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமாவார். + +இவரது தந்தையான எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சந்திரிக்காவின் பிறப்பின் போது அமைச்சராக இருந்து பின்னர் இலங்கையின் பிரதமராக உயர்ந்தார். சந்திரிக்காவுக்கு 14 வயதாகும் போது அவரது தந்தை கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்காவின் தாயான சிறிமாவோ பண்டாரநாயக்கா 1960 இல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். + +சந்திரிக்கா பாரிஸ் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் தொடர்பான பட்டபடிப்பை முடித்தவர். இவர் சிங்களம், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் பரிச்சயம் உள்ளவராவார். இலங்கை திரும்பிய சந்திரிக்கா, சுதந்திரக் கட்சியில் இணைந்து தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 1972-1976 காலப்பகுதியின் நில மறுசீரமைப்பின் போது, இலங்கை நில மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு மேலதிக பிரதான இயக்குனராக பணியாற்றினார். 1974 இ.சு.க. பெண்கள் அணியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார். 1976 - 1977 காலப்பகுதியில், கொத்தணிப் பண்ணைகளை அமைத்த ஜனவச ஆணைக்குழுவின் தலைவராக பணியாற்றினார்.1976- 1979 ��ாலப்பகுதியில், உணவு மற்றும் விவசாய அமைப்பிற்கு விசேட ஆலோசகராக பணியாற்றினார். + +1978 இல் சந்திரிக்கா இலங்கையின் பிரபல நடிகரும், அரசியல்வாதியுமான விஜய குமாரணதுங்கவை மணந்தார். குமாரணதுங்க 1988இல் கொலை செய்யப்பட்டதை அடுத்து சந்திரிக்கா தனது பெயரில் இருந்த 'ண' வை அகற்றிவிட்டு குமாரதுங்க என்றே பாவித்து வருகின்றார். 1994 ஆகஸ்ட் 19இல் சந்திரிக்கா மக்கள் முன்னணி தலைமையிலான அரசில் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அவ்வாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெற்று சனாதிபதியாக பதவியேற்றார். இவரது ஆட்சியின் ஆரம்பப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இது தோல்வியடையவே, பிற்பகுதியில் போர் மூலம் புலிகளை அடக்க முற்பட்டார். + +1999 ஒக்டோபர் மாதத்தில் சனாதிபதி தேர்தலுக்குரிய நாளுக்கு முன்னதாகவே சந்திரிகா தேர்தலை நடத்த திட்டமிட்டார்..டிசம்பர் 18 1999 இல் கொழும்பு நகரசபை முன்னரங்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது, அவரை கொலை செய்யும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் ஒருவர் வெடிக்கச் செய்த குண்டினால் தனது வலது கண்ணை இழந்தார்.. அங்கீகரிக்கப்படாத சுயசரித நூலான "கள்வரின் தலைவி" என்ற நூலில் விக்டர் ஐவன் இந்நிகழ்ச்சி, மக்களிட அனுதாப அலைகளை ஏற்படுத்த அவரால் அவரது "குண்டர் படை"யைக் கொண்டு செய்வித்ததாக கூறுகின்றார்.. அத்தேர்தலில் சந்திரிக்க ரணில் விக்கிரமசிங்கவை வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சனாதிபதியாக பதவியேற்றார். + + + + + + + + +பஞ்சாங்கம் + +பஞ்சாங்கம் ("Panchangam") அல்லது ஐந்திறன் என்பது இந்துக் காலக் கணிப்பு முறையின் படி, கணிக்கப்படுகின்ற கால அட்டவணை எனலாம். பஞ்சாங்கம் என்ற வடமொழிச்சொல், (பஞ்ச + அங்கம் = பஞ்சாங்கம் ) ஐந்து உறுப்புகள் எனப் பொருள்படும். இக் காலத்தில் பஞ்சாங்கம் சமய சம்பந்தமான விடயங்களுக்கும், சோதிடக் கணிப்புகளுக்குமே பெரிதும் பயன்படுகின்றது. + +பஞ்சாங்கம் என்பது கிரக சுழற்சிகளைப் பற்றிய வானியலைக் காட்டும் குறிப்புகள் அடங்கிய புத்தகம் என்றும் வானியல் நூல் என்றும் குறிப்பிடப்படுகின்றது. நவீன காலக் கருவிகள் இல்லாத பண்டைய காலத்திலேயே மகரிஷிகள் தங்கள் ஞானத்தால் சூர்ய, சந்திர கிரகணங்கள் உட்பட்ட பல தகவல்களைத் துல்லியமாக கணித்து அளித்ததே பஞ்சாங்கம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. + +பஞ்சாங்கம் என்ற பெயர் அது ஐந்து உறுப்புக்களைக் கொண்டிருப்பதைத் தெளிவுபடுத்துகிறது. இந்த ஐந்து உறுப்புக்களும் மரபு வழிக் கால அளவீடுகளுடன் தொடர்பான அம்சங்களாகும். இவை: + + +என்பனவாகும். + +இங்கே வாரம் என்பது ஏழு கிழமைகள் ஆகும். இவை: +என்னும் ஏழுமாகும். + +ஒவ்வொரு நாளும் மேற் குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைக் கொண்டிருக்கும். இங்கே காட்டப்பட்ட ஒழுங்கின் படி ஒன்றன்பின் ஒன்றாக வரும் கிழமைப் பெயர்கள் சனிக்கிழமைக்குப் பின் மீண்டும் ஞாயிற்றில் தொடங்கிச் சுழற்சி முறையில் வரும். + +திதி என்பது சந்திரனின் பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப் பாதையின் 30 சம கோணப் பிரிவுகள் ஒவ்வொன்றையும் சந்திரன் கடக்க எடுக்கும் காலத்தைக் குறிக்கும். அமாவாசையில் இருந்து வரையான வளர்பிறைக் காலத்தில் 15 திதிகளும், பூரணை தொடக்கம் மீண்டும் அமாவாசை வரும் வரையான காலத்தில் இன்னும் 15 திதிகளும் வருகின்றன. முதற் தொகுதி சுக்கில பட்சத் திதிகள் எனவும், இரண்டாம் தொகுதி கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும். இவ்விரு தொகுதிகளில் வரும் திதிகளும் ஒரே பெயர்களையே கொண்டிருக்கின்றன. சுக்கில பட்சத்தில் வரும் 14 திதிப் பெயர்களே கிருஷ்ண பட்சத்திலும் வருகின்றன, அதன் 30 பெயர்களும் வருமாறு: +ஒரு திதியின் முற்காலம், பிற்காலம் ஆகியவை கரணம் எனப்படுகின்றது. கரணம் என்பது திதியின் அரைப்பங்கு ஆகும். திதியை இரண்டாகப் பிரித்து முற்காலத்துக்கு ஒரு கரணமும், பிற்காலத்துக்கு ஒரு கரணமும் இருக்கும். அதாவது 30 திதிகளுக்கும் மொத்தமாக 60 கரணங்கள் உண்டு. ஏழு கரணங்கள் சுழல் முறையிலும், நான்கு கரணங்கள் சிறப்பான முறையிலும், மொத்தம் 11 கரணங்களின் பெயர்களை ஏற்படுத்தி, இவற்றை வைத்து ஓர் ஒழுங்கு முறையில் மொத்தமுள்ள 60 கரணங்களுக்கும் பெயர் கொடுத்துள்ளனர். + +11 கரணப் பெயர்களும் வருமாறு: + +நட்சத்திரங்கள் என்பது ராசிச் சக்கரத்தை ஒவ்வொன்றும் 13.33 பாகை அளவு கொண்ட 27 பகுதிகளைக் குறிக்கும். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் இருக்கிறதோ அந்தப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்தில் நடப்பதாகச் ச���ல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களும் பின்வருமாறு: +சந்திரன் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் கடக்க எடுக்கும் காலப்பகுதி யோகம் எனப்படும். எனவே 27 நட்சத்திரங்களையும் கடக்கும் காலப்பதிகளுக்கு 27 பெயர்களைக் கொடுத்துள்ளனர். இவற்றை யோகம் என்பர். + +யோகம் என்பது, சூரியன், சந்திரன் என்பவற்றின் இருப்பிடங்களின் கூட்டுத்தொகை 13° 20' அளவால் அதிகரிப்பதற்கான காலப் பகுதியைக் குறிக்கும். எனவே ஒரு முழுச் சுற்றான 360° யில் 13° 20' அளவு கொண்ட 27 யோகங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனியான பெயர்களையும் பெற்றுள்ளன. இந்த யோகத்தைத் "தின யோகம்", "நித்திய யோகம்", "சூரிய சித்தாந்த யோகம்" போன்ற பெயர்களாலும் அழைப்பது உண்டு. ஒருவர் பிறக்கும் நேரத்தில் உள்ள யோகம் அவரது பிறந்த யோகம் ஆகும். ஒருவருடைய பிறந்த யோகம் அவருடைய உள்ளார்ந்த பண்புகளை அறிவதற்கு உதவும் என்கிறது இந்திய சோதிடம். + +யோகத்தின் வரைவிலக்கணத்துக்கு அமைய, ஒரு குறித்த நேரத்தில் என்ன யோகம் என்பதைக் கணிப்பதற்குப் பின்வரும் சூத்திரம் பயன்படுகிறது: + +இதில் கிடைக்கும் ஈவு, விஷ்கம்பத்தின் தொடக்கத்தில் இருந்து கடந்து போன யோகங்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். எனவே அடுத்த யோகமே குறித்த நேரத்தில் இருக்கும் யோகம் ஆகும். மீதம் அடுத்த யோகத்தில் கடந்த கோண அளவைக் குறிக்கும். + +நடைமுறையில், ஆண்டு தோறும் அச்சில் வெளிவருகின்ற பஞ்சாங்கங்கள் ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில் ஒரு யோகம் தொடங்கி எந்த நேரத்தில் முடிவடையும் என்பது போன்ற தகவல்களைத் தருகின்றன. இதனால், கணிப்பு எதுவும் இல்லாமலே ஒருவர் குறித்த நேரத்தில் எந்த யோகம் உள்ளது என்பதை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். தற்காலத்தில் இணையத்திலும், சோதிடம் சார்ந்த பல தளங்களில் குறித்த ஒரு நேரத்தின் யோகத்தை அறிந்து கொள்வதற்கான வசதிகள் உள்ளன. + + + +பஞ்சாங்களில் வருடம் மற்றும் மாதங்கள் இரண்டு முற்றிலும் வேறுபட்ட முறைப்படி கணக்கிடப்படுகின்றன. 1 சௌரமான முறை 2 சந்திரமான முறை. + +இம்முறை சூரியனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. இதிலும் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. 1 சௌர வருஷ முறை 2 சாயன வருஷ முறை + +ஞாயிறு இயக்கம் தொடங்குவது மேஷ ராசியின் முதல் நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முடிவது மீனராசியின் கடைசி நட்சத்திர��ான ரேவதி. தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட காலம் வருடம் ஆகும் (Sidereal revolution of Earth round the Sun). ஒவ்வொரு இராசியிலும் சஞ்சரிக்கும் காலம் (சித்திரை முதல் பங்குனி வரை சௌர மாதம் ஆகும். சௌரமான முறையில் ஒரு வருடம் என்பது சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும். +பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: தமிழ் நாடு, பஞ்சாப், ஹரியானா, ஒரிசா, மேற்கு வங்கம் + +சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலம சாயன வருஷம் என்று அழைக்கப்படுகிறது. (Tropical revolution of Earth round the சன்). சாயன வருஷம் என்பது 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும். +பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: கேரளா (பஞ்சாங்கம்: கொல்லம் ஆண்டு) + +இம்முறை சந்திரனின் இயக்கத்தை அடைப்படையாகக் கொண்டு கணக்கிடும் முறை. சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன்பு வரும் பூர்வபக்ஷ பிரதமை திதி தொடங்கி அடுத்த சௌரமான முறை வருடப் பிறப்பிற்கு முன் வரும் அமாவாசை முடியவுள்ள ஒரு ஆண்டு காலத்தைக் குறிப்பது சந்திரமான முறை எனப்படும். இம்முறையில் ஒரு வருடம் என்பது சுமார் 354 நாட்கள் கொண்டது. பூர்வப்க்ஷ பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகள் சந்திர மதங்களாகும். +பின்பற்றும் இந்திய மாநிலங்கள்: ஆந்திரப் பிரதேசம் (தெலுங்கு பஞ்சாங்கம்), கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் (கார்த்திக ஷுக்லாதி பஞ்சாங்கம்) + +திருவள்ளுவர் பிறந்த காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் அனுஷ்டிக்கப் படுவது. +இந்திய அரசாங்கம் சாலிவாகன வருஷம் அல்லது சக வருஷம் என்ற பெயர்களில் கடைபிடிக்கும் பஞ்சாங்க முறை. ஆண்டு என்பது மார்ச்சு மாதம் 22 ஆம் தேதி முதல் அடுத்த மார்ச்சு மாதம் 23 ஆம் தேதி வரை. +வட இந்தியாவில் நடைமுறையில் உள்ள ஆண்டுக் கணக்கு. முகலாயர் காலத்தில் அரசாங்க வரவு செலவுக் கணக்குகளை நிர்வாகிக்க எதுவாக தோற்றுவிக்கப்பட்டது. +கலியுகம் தோன்றிய நாள் முதல் கணக்கிட்டு வரப்படுகிறது. + +பஞ்சாங்கத்தில் இரு வகைகள் உள்ளன. 1. திருக்கணித பஞ்சாங்கம் 2. வாக்கிய பஞ்சாங்கம். வாக்கிய பஞ்சாங்கத்திற்கும் திருக்கணித பஞ்சாங்கத்திற்கும் அதிகபட்சமாக 17 நாழிகை வரை வேறுபாடு ஏற்படுவதுண்டு. அதாவது 6 மணி 48 நிமிசம் வரை இந்த வேறுபாடு ஏற்படும். அமாவாசை, பெளர்ணமி தினங்களில் இந்த ��ேறுபாடு மிகக்குறைவாக இருக்கும். அஷ்டமி, நவமி தினங்களில் இந்த வேறுபாடு அதிகமாக இருக்கும். தமிழக அரசு கோவில்களில் வாக்கிய பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது. + +சந்திரனது வட்டப்பாதையில் அவ்வப்போது ஏற்படும் இயக்க நிலை வித்தியாசத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு எழுதப்படும் பஞ்சாங்கமாகும். அனைத்து கிரகங்களும் தங்களுக்கு உள்ள இழுப்பு விசையால் சந்திரனை தங்களை நோக்கி இழுக்கின்றன. சந்திரனுக்கு ஈர்ப்பு விசை குறைவென்பதால் மற்ற கிரகங்கள் அதனை இழுப்பதால் சந்திரன் வட்டப்பாதையில் அவ்வப்போது வேறுபாடு ஏற்படுவதுண்டு. +திருத்தப்பட்ட பஞ்சாங்கமாக திருக்கணித பஞ்சாங்கம் வெளிவருகிறது. +திருக்கணிதப் பஞ்சாங்கள்: ஸ்ரீனிவாசன் திருக்கணிதப் பஞ்சாங்கம், வாசன் சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஆதவன் திருக்கனிதப் பஞ்சாங்கம், குமரன் திருக்கணித பஞ்சாங்கம், பாலன் திருக்கணித பஞ்சாங்கம், ராஷ்ட்ரீய பஞ்சாங்கம், சபரி சுத்த திருக்கனிதப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம். என்பவை புகழ்பெற்ற திருக்கணித பஞ்சாங்க புத்தகங்களாகும். + +பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ரிசிகள் ஒன்று கூடி அருளி செய்த சுலோகங்களில் உள்ள கணித முறையை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் எழுதப்படும் பஞ்சாங்கமாகும். திருத்தப்படாத பஞ்சாங்கமாக வாக்கிய பஞ்சாங்கம் வெளிவருகிறது. வாக்கியம் என்பது கணிதத்தில் மாறுதல் செய்யாமல் பழமையை அப்படியே பிரதிபலிப்பதாகும். + +தமிழ் நாட்டில் வாக்கியப் பஞ்சாங்கம் அதிகமாக பின்பற்றப்படுகிறது. தமிழ் நாட்டில பற்பல வாக்கியப் பஞ்சாங்கங்கள் வெளியிடப்படுகின்றன: ஆற்காடு ஸ்ரீ சீதாராமையர் சர்வ முகூர்த்த பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்ய பஞ்சாங்கம், ராமநாதபுரம் வாக்கியப் பஞ்சாங்கம், மஞ்சள் நிற 28-ஆம் நம்பர் பாம்புப் பஞ்சாங்கம், ஸ்ரீ காஞ்சி ஸ்ரீ ஆச்சாரியார் மடத்து பஞ்சாங்கம், சிருங்கேரி மடம் பஞ்சாங்கம், ஸ்ரீரங்கம் வாக்கிய பஞ்சாங்கம், ஸ்ரீப்ரசன்ன வெங்கடேச பெருமாள் தேவஸ்தான வாக்கியப் பஞ்சாங்கம், திருக்கோயில் அனுஷ்டான பஞ்சாங்கம் என்பவை புகழ்பெற்ற வாக்கியப் பஞ்சாங்க புத்தகங்களாகும். + +இந்த இரண்டு வகைப் பஞ்சாங்கங்கள் தமிழ் நாட்டில் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பிற மாநிலங்களில் ���ிருக்கணிதப் பஞ்சாங்கம் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. + + + + + + +நிறம் + +நிறம் "(Colour)" அல்லது வண்ணம் என்பது சிவப்பு, மஞ்சள், ஊதா, அல்லது நீலம் போன்ற வண்ண வகைகளால் விவரிக்கப்படும் மனிதனின் காட்சிப் புலனுணர்வுகளின் சிறப்பம்சமாகும். ஒளிநிறமாலையில் உள்ள மின்காந்தக் கதிர்வீச்சால் மனிதக் கண்களில் உள்ள கூம்பு செல்கள் தூண்டப்படுவதால் நிறங்கள் உணரப்படுகின்றன. நிறங்களின் பிரிவுகள் மற்றும் நிறங்களின் குறிப்பிட்ட உட் கூறுகள் போன்றவை பொருட்களின் மீது பட்டு அவை எதிரொளிக்கும் ஒளியின் அலைநீளத்துடன் தொடர்பு கொண்டுள்ளன. பொருட்களின் இயற்பியல் பண்புகளான ஒளி உறிஞ்சுதல், உமிழ்வு நிறமாலை போன்ற பண்புகள் இந்த எதிரொளிப்பை நிர்வகிக்கின்றன. +நிறங்களின் இடைவெளியை வரையறுப்பதன் மூலம் ஆயத்தொலைவுகளால் எண்ணளவில் நிறங்களை அடையாளம் காண முடியும். உதாரணமாக, சிவப்பு பச்சை நீல நிறங்களின் வண்ண இடைவெளியானது, மனிதக் கண்களின் திரிபுராமைக்கு ஏற்றவாறு அவற்றிலுள்ள மூன்று கூம்பு செல் வகைகளும் மூன்று ஒளிப்பட்டைகளுக்கு எவ்வாறு தூண்டல்களை விளைவிக்கின்றன என்பதனை பிரதிபலிக்கிறது. நீண்ட அலைநீளம் 564-580 நானோ மீட்டர் (சிவப்பு) ; நடுத்தர அலைநீளம், 534-545 நானோ மீட்டர் (பச்சை); 420-440 நானோ மீட்டர் (நீலம்) குறுகிய-அலைநீளம் கொண்ட ஒளி போன்றவை அலை நீளவகைபாடுகளாகும் + +பிற வண்ண இடைவெளிகளில் மூவண்ண பரிமானங்களுக்கும் மேற்பட்ட மயில்நீலம், மெசந்தா, மஞ்சள், கருப்பு போன்ற நிற மாதிரிகளும் உள்ளன. மற்ற உயிரினக் கண்களின் ஒளியேற்பும் நம்முடைய கண்களின் ஒளியேற்பில் இருந்து வேறுபடுகின்றன. அதனால் வேறுபட்ட நிற வேறுபாடுகளும் காட்சிப் புலனுணர்வும் அவ்வுயிரினங்களில் மாறுபடும். உதாரணமாக தேனீக்கள் போன்ற சில உயிரினங்கள் புற ஊதா கதிர்வீச்சை உணர்கின்றன. புற ஊதா நிறத்தின் அலைநீளம் 10 நானோமீட்டரிலிருந்து 400 நானோமீட்டர் வரையாகும். இது கட்புலனாகும் ஒளியைவிட அலைநீளம் குறைவாகவும் ஆனால் எக்சு-கதிர்களைக் காட்டிலும் நீண்டும் இருக்கும். ஆனால் சிவப்பு நிறத்தை இவற்றால் உணர முடியாது. பேபிலியோ வகை பட்டாம்பூச்சிகள் ஆறு வகையான ஒளியேற்பிகளைக் கொண்டிருக்கின்றன, இதனால் இவை ஐவண்ண பார்வைத் திறனைக் கொண்டிருக்கின்றன. இவற்றைத் தவிர சில உயிர��னங்கள் கூட்டு வண்ணப்பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. இவற்றில் 12 வகையான ஒளியேற்பிகள் காணப்படுகின்றன. + +வண்ணங்களின் விஞ்ஞானம் சில நேரங்களில் நிறவியல், நிற அளவியல், அல்லது வெறுமனே வண்ண அறிவியல் என்று அழைக்கப்படுகிறது. மனித கண் மற்றும் மூளை எவ்வாறு நிறத்தை உணர்கிறது, பொருள்களில் வண்ணத்தின் தோற்றம், கலையில் வண்னத்தின் கோட்பாடு மற்றும் காணக்கூடிய வரம்பில் மின்காந்தவியல் கதிர்வீச்சின் இயற்பியல் போன்றவற்றைக் குறிக்கிறது. மேலும் நிறம் என்பது, ஒரு பொருளினால் வெளிவிடப் படுகின்ற, கடத்தப்படுகின்ற அல்லது எதிரொளிக்கப்படும் ஒளியின் சேர்க்கையினால் ஏற்படுத்தப்படுகின்ற ஒரு காட்சி விளைவு ஆகும். + +புவியைப் பொறுத்தவரை சூரியனே ஒளியின் முதன்மையான மூலம் ஆகும். சூரிய ஒளி வெள்ளை நிறமாகக் காணப்பட்டாலும், அது ஏழு நிறங்களின் கலவை ஆகும். இயற்கையில் வானவில் தோன்றும் போது இந்த ஏழு நிறங்களும் பிரிவடைந்து தோன்றுவதைக் காணமுடியும். பட்டகத்தின் ஊடாக வெள்ளொளியைச் செலுத்தி இதே விளைவைப் பெறமுடியும். + +கதிரவனிலிருந்து புவியை நோக்கி வரும் கதிர் வீச்சின் ஒரு சிறு பகுதி மட்டுமே பூமியின் மேற்பரப்பை அடைய முடிகின்றது. அவற்றுள்ளும் ஒரு சிறிய பகுதி மட்டுமே கண்ணிற்குத் தெரியக்கூடிய ஒளியாகும். இவ்வாறு கண்ணுக்குப் புலப்படக்கூடிய கதிர்கள் 400 தொடக்கம் 700 நானோ மீட்டர் அலை நீள வீச்சினுள் அடங்கியவை. இதனுள் அடங்கும் வெவ்வேறு அலை நீளம் கொண்ட ஒளிக் கதிர்கள் கண்ணில் வெவ்வேறு நிறப் புலனுணர்வுகளை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்தன. இந்த வீச்சின் ஒரு முனையில் சிவப்பு நிற ஒளியும், மறு முனையின் ஊதா நிறமும் உள்ளன. + +பெரும்பாலான ஒளி ஆதாரங்கள் பல்வேறு அலைநீளங்களில் வெளிச்சத்தை வெளிப்படுத்துகின்றன; ஒரு மூலத்தின் நிறமாலை என்பது ஒவ்வொரு அலைநீளத்திற்கும் அதன் செறிவை வழங்குவதாகும். கொடுக்கப்பட்ட திசையில் இருந்து கண்களை அடையும் நிறமாலையின் நிறமாற்றம் அந்த திசையின் வண்ண உணர்வைத் தீர்மானிக்கிறது. என்றாலும் வண்ண உணர்வைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் நிறங்களின் சேர்க்கைக்கு சாத்தியங்கள் உள்ளன. உண்மையில் அதே நிற உணர்ச்சியை உருவாக்கும் ஒரு நிறமாலையை நிறமென்று வரையறுக்கலாம், ஆனால் இத்தகைய பகுப்புகள் பல்வேறு வகைகளில் பரவலாக மாறு��டும். மேலும் அதே வகைகளில் உள்ளவர்களுக்கிடையேயும் குறைந்த அளவிற்கு வேறுபடும். + +I +பொருட்கள் வெளிவிடுகின்ற அல்லது தெறிக்கின்ற ஒளிக் கதிர்கள் கண்ணுக்குள் சென்று அங்குள்ள விழித் திரையில் விழுகின்றன. இத் திரை கட்புலன் உணர்வுக்குரிய நரம்பு முனைகளைக் கொண்டுள்ளது. சுமார் --- மில்லியன்கள் எனக் கணக்கிடப் பட்டுள்ள இந் நரம்பு முனைகள் இரண்டு வகைப்படுகின்றன. இவை "கூம்புகள்" என்றும் "கோல்கள்" என்றும் அழைக்கப்படுகின்றன. இவற்றுள் கூம்புகளே நிறப் புலனுணர்வுக்கு அடிப்படையானவை. பல்வேறு நிறங்களையும் வேறுபடுத்தி உணரும் வகையில் கூம்புகள் மூன்று வகைகளாக அமைந்துள்ளன. ஒரு வகை சிவப்பு நிறத்துக்குரிய ஒளியை உணரவல்லது. ஏனைய இரண்டு வகைகளும் பச்சை, நீலம் ஆகிய நிறங்களை உணரக்கூடியன. இதனால் இம் மூன்று வகைக் கூம்புகளுக்கும் சிவப்புக் கூம்பு, பச்சைக் கூம்பு, நீலக் கூம்பு எனப் பெயர் இடப்பட்டுள்ளது. இவ்வாறு மனிதக் கண்களால் உணரப்படுகின்ற அடிப்படையான மூன்று நிறங்களே முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. + +ஒரு பொருளின் நிறம் அப்பொருள் இருக்கும் சூழலை பொருத்தும் நமது கண் உள் வாங்கும் ஒளியின் விகிதாச்சாரத்தை முன்னிட்டும் அமையும்.சில நேரங்களில் ஒரே நிறங்களும் வெவ்வேறு நிறங்களாக காட்சிப்பிழையாக தோன்றும். + +அரிஸ்டாட்டில் மற்றும் பிற பண்டைய விஞ்ஞானிகள் ஏற்கனவே ஒளி மற்றும் நிற பார்வை பற்றிய இயல்புகளை எழுதியிருந்த போதிலும், அதைஉணர்வின் ஆதாரமாக வண்ண ஒளி பிறக்கிறது என்றே நம்பினர். +சர் ஐசக் நியூட்டன் , 1672ல் கோதே நிறங்கள் பற்றிய அவரது விரிவான கோட்பாட்டை பதிப்பித்தார்.அதுவே நிறங்கள் பற்றிய அடிப்படை அறிவியலுக்கு வழிவகுத்தது. + +நியூட்டன் கருத்தின்படி, வெள்ளை ஒளி, அனைத்து வண்ணங்கள் உள்ள கலவை ஆகும். அது ஒரு முப்பட்டை கண்ணாடி வழியாக கடந்து செல்லும் போது நிறங்கள் வெவ்வேறு கோணங்களில் கலைந்து நிறமாலை உறுவாகிறது, + +ஆகவே, நிறங்கள் வெள்ளை ஒளியில் மட்டுமே உள்ளன என்பதை அவர் நிரூபித்தார். + +சிவப்பு, பச்சை , நீலம் ஆகிய மூன்று நிறங்களும் முதன்மை நிறங்கள் எனப்படுகின்றன. இம் மூன்று நிறங்களையும் உரிய விகிதங்களில் கலப்பதன் மூலம் வேண்டிய நிறங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். + +நிறக்குருடு என்பது மனிதர்களில் சிலரால் பெரும்பாலானவர்களைப்போல சில நிறங்களுக்கிடையேயான வேறுபாடுகளை உணர இயலாமையைக் குறிக்கும் சொல்லாகும். இது பெரும்பாலும் மரபணு அடிப்படையில் ஏற்பட்டாலும், சில சூழல்களில், மூளை, நரம்பு, அல்லது விழிகள் ஆகியவற்றில் ஏற்படும் கோளாறின் விளைவாகவோ சில வேதிப் பொருட்களினாலோ ஏற்படக் கூடும். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த யான் டால்டன் என்பவர் 1794-ம் ஆண்டு எழுதிய "நிறங்களின் பார்த்தல் உணர்வைப் பற்றிய சிறப்பு உண்மைகள்" என்ற தலைப்பிட்ட ஒரு அறிவியல் கட்டுரையில் இதுபற்றி எழுதினார். இவரும் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பெயரால் இந்நோய் டால்டனிசம் என்று நெடுநாள் வழங்கப்பட்டது. எனினும் தற்போது இந்த பெயர் பச்சை நிறத்தை உணர இயலாமையாகிய "டியூட்டெரனோபியா" என்ற நோயை மட்டும் குறிக்கிறது. + +ஐன்ஸ்டினுக்கு முந்தய அறிஞர்கள் யாவரும் வெள்ளொளி நிறமற்றது எனவே நம்பிக்கொண்டிருந்தனர்.மேலும் வெள்ளொளி நிறமற்றது பட்டகத்தில் உள்ள ஒளிகளே அவற்றை உருவாக்குகின்றன என்று நம்பினர்.ஐன்ஸ்டின் தனது ஒளியின் இரட்டைத்தன்மை கோட்பாட்டை வெளியிட்ட பின் ஹைஜன் ஒளியிணை ஆராய்ந்து , வெள்ளொளி பல நிறங்களையுடைய ஒளிகளின் கூட்டு ஒளி என நிறுபித்தார்.அதன் பின் பட்டகம் ஒளியிணைப்பற்றிய ஆராய்ச்சிகளுக்கு பெரிதும் உதவின.மழை பெய்யும் போது மழைத்துளி பட்டகமாக செயல்பட்டு வெள்ளொளியில் உள்ள நிறங்களைப் பிரிக்கின்றது. + + + + + +சாதகக் குறிப்பு + +சோதிடம் தொடர்பில், சாதகக் குறிப்பு (Horoscope) என்பது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் அண்ட வெளியிலுள்ள சில கோள்களினதும், நட்சத்திரங்களினதும் சரியான நிலைகளைக் காட்டுகின்ற ஓர் ஆவணமாகும். இது பொதுவாக ஒரு வரைபட வடிவில் இருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் போது குறிக்கப்படும் சாதகம், அப்பிள்ளையின் சாதகக் குறிப்பு ஆகும். இது தவிர உலகில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிக்கும் சாதகம் குறிக்க முடியும். + +சாதகக் குறிப்பின் அடிப்படையான உறுப்பு இராசிச் சக்கரமேயானாலும், பாவச் சக்கரம், நவாம்சச் சக்கரம், திசை, புத்தி முதலான பல்வேறு வகையான அம்சங்களைச் சாதகக் குறிப்பில் காண முடியும். ஒரு சாதகர் பற்றிய அல்லது ஒரு நிகழ்வு பற்றிய பகுப்பாய்வுகள் செய்யப்படும் போது சம்பந்தப் பட்ட சாதகக் க��றிப்பே அடிப்படையாக அமைகின்றது. + +இன்னொரு வகையில், சோதிடப் பகுப்பாய்வு, பலன் சொல்லுதல் போன்றவற்றைப் பொறுத்தவரை, அறிவியல் சார்ந்த வானியலுக்கும், அறிவியல் சாராத சோதிடத்துக்கும் நடுவிலுள்ள இடைமுகமே சாதகக் குறிப்பு எனலாம். இது ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கான வானியல் தரவுகளைத் தருவது மட்டுமன்றி இதன் வரைபட வடிவம் இத் தரவுகளின் சோதிட இயல்புகளைப் புரிந்து கொள்வதையும் இலகுவாக்குகின்றது. + +சாதகக் குறிப்பில் காணும் இராசிச் சக்கர வரைபடங்கள் பல்வேறு வகையில் வரையப் படுகின்றன. மேற்கத்திய சோதிடர்கள் இதனை வட்டமாக வரைவார்கள். இந்தியாவில் சதுர வடிவில் வரைவதே வழக்கமானாலும் தென்னிந்திய, வட இந்திய வரைபடங்களிடையே வேறுபாடுகளைக் காணலாம். மேற் கூறப்பட்ட மூன்று வகையான இராசிச் சக்கர அமைப்புகளையும் கீழேயுள்ள படங்கள் காட்டுகின்றன. +ஒரு குழந்தையின் பிறப்பைக் குறித்த சாதகக் குறிப்பொன்றிலிருந்து அறியக் கூடிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன. + +முதலியனவாகும். + +இவற்றில் கிரக நிலைகள், இலக்கினம் என்பன முன்னர் கூறிய வரைபடத்தில் காட்டப்படுகின்றன. இராசிச் சக்கர வரைபடத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் அதனைப் பார்த்து இவ்விபரங்களை அறிந்து கொள்ள முடியும். + +பழைய காலத்தில் சூரியன், சந்திரன் என்பவற்றோடு கூட மேலும் 5 சூரிய மண்டலத்திலுள்ள கிரகங்களையும் சேர்த்து ஏழு கிரகங்களுடன் இராகு, கேது ஆகிய இரண்டு நிழற் கிரகங்களும் இராசிச் சக்கரத்தில் காட்டப்படுவது வழக்கம். யுரானஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகிய கிரகங்கள் அறியப்பட்ட பின்னர் சிலர் அவற்றையும் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். இராசிச் சக்கரத்தில் கிரகங்களின் பெயர்களை எழுதும் போது இரண்டு மூன்று எழுத்துக்களில் சுருக்கி எழுதுவதுண்டு. பழைய குறிப்புக்களில் வழக்கு மொழியிலில்லாத வட மொழிப் பெயர்களையே எழுதியிருப்பார்கள். இவற்றின் விபரங்களைக் கீழேயுள்ள அட்டவணையிற் காணலாம். + +ஜாதக யோகங்கள் + +இலவச ஜாதக ஆராய்ச்சித் தளம் + + + + +நகரம் + +நகரம் என்பது குறிப்பிட்ட சில இயல்புகளைக் கொண்டுள்ள ஒரு பெரிய மனிதக் குடியிருப்பு ஆகும். நகரம் என்பதற்குச் சரியான வரைவிலக்கணம் கிடையாது. வெவ்வேறு நாடுகளில் இதற்கு வெவ்வேறு வகையான வரைவிலக்கணங்கள் கொடுக்கப்படுகின்றன. + + + + + +மைய இடம் + +மைய இடம் என்பது பலவிதமான பொருட்களையும் சேவைகளையும் வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வணிக நிலையங்களைக் கொண்டதும், அக் குறிப்பிட்ட வழங்கல்களுக்கான கேள்வியைக் கொண்ட சந்தைப் பகுதியொன்றின் மத்தியில் அமைந்துள்ளதுமான ஒரு இடமாகும். + + + + + +தமிழர் கலைகள் + +தமிழர் கலைகள் எனப்படுபவை தமிழர் வாழ்க்கையைச் சிறப்பித்த கலைகள் ஆகும். + + + + + + + + +பாஞ்சாலங்குறிச்சி + +பாஞ்சாலங்குறிச்சி தமிழ் நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் ஊராகும். + +ஆதியில் தூத்துக்குடி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் பாஞ்சாலன் நினைவாக பாஞ்சாலக்குறிச்சி கோட்டை என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது. + +இந்த ஊருக்கு மிக அருகாமையில்தான் கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பிறந்த ஒட்டப்பிடாரம் உள்ளது. + + + + +ஆட்சியாளர் பட்டியல், இலங்கை + +வரலாற்றுக்காலத்தில் இலங்கையில் இயக்கர் நாகர் ஆகிய இரு இனத்தவர்கள் வாழ்ந்து வந்ததாக அறிந்துகொள்ள முடிகின்றது. சிங்கள வரலாற்றுந் நூல்களின் படி, இலங்கையை கி.மு 543 இருந்து இன்றுவரை ஆட்சி செய்தவரின் பட்டியல் கீழ்வருமாறு: + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +வீழ்ப்பு வரைபடங்கள் + +பல்வேறு நோக்கங்களுக்காக ஒரு பொருள் அல்லது காட்சி பற்றிய விபரங்களைத் தரும் வகையில் அவற்றின் தோற்றங்களை இரு பரிமாணத் தளங்களில் காட்டும் வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்கள் (Projection Drawings) எனப்படுகின்றன. வீழ்ப்பு வரைபடங்கள் பலவகைப் படுகின்றன. அவற்றுட் சில பொருட்களினதும், காட்சிகளினதும் இயல்புகளை இரு பரிமாணத் தோற்றத்தில் வெளிப்படுத்த, வேறு சில அவற்றின் முப்பரிமாண இயல்புகளை வெளிப்படுத்துபவையாக உள்ளன. + +கட்டுமான வரைபடங்கள் வீழ்ப்பு வரைபடங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும். + +வீழ்ப்பு வரைபடங்களை அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம். + + +இயலுறு தோற்ற வரைபடங்கள் ஒரு பொருளைக் கண்ணால் பார்க்கும் போது தோற்றமளிப்பதுபோல் வரையப் படுவதாகும். இவ்வகை வரைபடங்கள், தொலைவிலுள்ள பொருட்கள் அல்லது தூர அளவுகள் சிறியனவாகவும், அண்மையிலுள்ளவை பெரிதாகவும் தெரியும் தோற்றப்பாட்டை அண்ணளவாக வெளிப்படுத்த முனைகின்றன. இவ் வரைபடங்களில் காணும் காட்சியிலுள்ள சமாந்தரக் கோடுகள் அனைத்தும் ஒரே புள்ளியிலிருந்து ஆரம்பமாவது போல் தோற்றமளிக்கும். இப்புள்ளி வீழ்ப்பு மையம் எனப்படுகின்றது. இயலுறு தோற்றங்களின் வேறுபாடுகள் இவ் வீழ்ப்பு மையங்களின் எண்ணிக்கைகளினால் தீர்மானிக்கப் படுகின்றன. + +சமாந்தர வீழ்ப்பு வரைபடங்கள் ஒரு பொருளின் அல்லது காட்சியின் ஒவ்வொரு புள்ளியிலிருந்தும் ஒன்றுக்கொன்று சமாந்தரமாக வரையப்படும் கோடுகள் ஒரு கற்பனைத் தளத்தில் வீழ்த்தப்படும்போது உருவாகும் படங்களை ஒத்தவை ஆகும். இவ்வகையில் உள்ள பல வேறுபாடுகள் மேற்குறிப்பிட்ட தளங்களுக்குச் சார்பான வீழ்ப்புகளின் திசையினால் தீர்மானிக்கப் படுகின்றன. + +மேற்காட்டிய இரு வகைகளின் கீழ் பல துணை வகைகளும் உள்ளன. அவற்றைக் கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது. + + + + +புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை + +"எச்சரிக்கை: இத் தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, பூர்த்தி செய்யப்படவில்லை." + + + + + + +கொடி (சின்னம்) + +கொடி என்பது நிற்க வைக்கப்பட்ட ஒரு கம்பத்தில் கட்டி பறக்கவிடப்படும் ஒரு வண்ணத் துணியாகும். இது பொதுவாக ஏதேனும் ஒன்றைக் குறிக்க உதவும் குறியீடாகவோ அல்லது அதனை ஏந்தியிருக்கும் ஒருவரை அடையாளம் காண்பதற்காகவோ பயன்படுத்தப்படுகிறது. + + +