diff --git "a/train/AA_wiki_07.txt" "b/train/AA_wiki_07.txt" new file mode 100644--- /dev/null +++ "b/train/AA_wiki_07.txt" @@ -0,0 +1,2145 @@ + +நோபல் பரிசு + +நோபெல் பரிசு ("Nobel Prize") அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல. + +இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. + +பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர். + +ஆல்ஃபிரட் நோபல் ( 1833, அக்டோபர் 21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும். இவரது வாழ்நாளில் வேதியாளராயும் பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத் தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமை வழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது. நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமா���த்தில் பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால் கிடைத்தது, அவற்றுள் முக்கியமானது "டைனமைட்" ஆகும்.. + +1888-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில் "மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால் அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில் வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை மாற்றி எழுதச் செய்தது.. 63 வயதான போது திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார். + +அனைவரும் பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை வழங்குவதற்காக எழுதி வைத்தார்.. அவரது உயிலின் மீதிருந்த ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும் ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும் "நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது. + +நோபலின் குறிப்புகளின்படி, அமைதிக்கான நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில் அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டன. அவை கரோலின்சுகா நிறுவனம் (சூன் 7), சுவீடன் சங்கம் (சூன் 9), ராஜாங்க சுவீடன் அறிவியற் கழகம் (சூன் 11). எவ்வாறு பரிசுகள் வழங்கப்படவேண்டுமென்ற விதிமுறைகள் நோபல் அறக்கட்டளையால் அங்கீகரிக்கப��பட்டபின், மன்னர் ஆஸ்கர் II -வினால் 1900-ல் பிரகடனப்படுத்தப்பட்டன. 1905-ஆம் ஆண்டு நார்வேயும் சுவீடனும் பிரிந்தன. அதன் பின்னர், அமைதிக்கான நோபல் பரிசை அளிப்பதன் பொறுப்பு நார்வேயின் வசமும் மற்ற பரிசுகளை வழங்கும் பொறுப்பு சுவீடனிலிருக்கும் அமைப்புகளின் வசமும் உள்ளது. + +நோபல் பரிசுகளின் நிதி மூலங்களையும் அதன் நிர்வாகத்தையும் கவனிக்க சூன் 29, 1900 அன்று "நோபல் அறக்கட்டளை" ஒரு தனியார் நிறுவனமாக ஆரம்பிக்கபபட்டது. நோபெலின் உயிலின்படி, அறக்கட்டளையின் முதற்கடமை நோபெல் விட்டுச்சென்ற சொத்தினை பாதுகாப்பதாகும். சகோதரர்கள் ராபர்ட் மற்றும் லுட்விக் நோபெல் அசர்பெய்ஜானிலிருந்த எண்ணெய் நிறுவனங்களில் பெருமளவு முதலீடு செய்திருந்தனர். சுவீடன் நாட்டு வரலாற்றாசிரியரான இ. பார்கென்கிரன், நோபெல் குடும்ப வரலாற்றுத் தொகுப்புகளை நேரில் பார்வையிட்டவர், அவரின் கூற்றுப்படி "பாகு"-விலிருந்து நோபெலின் முதலீடுகளை திரும்பப் பெற்றதே பரிசுகளை வழங்க ஆரம்பத்தில் மிக்க உறுதுணையாயிருந்தது. நோபெல் அறக்கட்டளையின் மற்றொரு பணி, பரிசுகளை உலக அளவில் கொண்டு சேர்ப்பதும் பரிசு வழங்கல் நிர்வாகத்தை மேற்பார்வையிடுவதுமாகும். அறக்கட்டளை பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த பங்கும் எடுப்பதில்லை. பல வகைகளில் இந்த அறக்கட்டளை ஒரு முதலீட்டுக் குழுமமாகவே செயல்படுகிறது, நோபெலின் சொத்தை முதலீடாகக் கொண்டு பரிசு வழங்கவும் அதன் நிர்வாகத்துக்குமான நிதியை அது உற்பத்தி செய்கிறது. 1946-லிருந்து சுவீடனில் அனைத்து வித வரிகளிலிருந்தும் நோபெல் அறக்கட்டளைக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 1953-லிருந்து ஐக்கிய அமெரிக்காவிலும் அனைத்து வித வரிகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. 1980-களிலிருந்து இதன் முதலீடுகள் பெரும் லாபமீட்டிவருகின்றன. திசம்பர் 31, 2007-படி நோபெல் அறக்கட்டளையின் சொத்து மதிப்பு 3.628 பில்லியன் சுவீடன் குரோனார்கள் (560 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஆகும். + +விதிகளின்படி, அறக்கட்டளையானது ஸ்டாக்ஹோமைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும். மேலும், சுவீடன் அல்லது நார்வே நாட்டின் குடிமக்கள் ஐவர் இந்த அறக்கட்டளையின் உறுப்பினர்களாக இருப்பர். அறக்கட்டளையின் தலைவர், மன்னருக்கான ஆலோசனைக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார். மற்ற நான்கு உறுப்பி��ர்களும் நோபல் பரிசுகளுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் அமைப்புகளின் அறங்காவலர்களால் தேர்ந்தெடுக்ககப்படுவர். அறக்கட்டளை உறுப்பினர்களிடையே அதன் செயற்குழு இயக்குனரும், ஒரு துணை இயக்குனர் மன்னருக்கான ஆலோசனைக் குழுவாலும், மேலும் இரு இணை இயக்குனர்கள் அமைப்புகளின் அறங்காவலர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவர். எனினும், 1995-லிருந்து அனைத்து உறுப்பினர்களும் நோபல் பரிசு அமைப்புகளின் அறங்காவலர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இயக்குனர் மற்றும் துணை இயக்குனரும் அறக்கட்டளை உறுப்பினர்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் தவிர்த்து, நோபல் அறக்கட்டளையானது அனைத்து பரிசு வழங்கும் அமைப்புகள்(சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகம், கரோலின்சுகா நிறுவனம், சுவீடன் கழகம், நார்வே நோபெல் கழகம்), அவற்றின் அறங்காவலர்கள் மற்றும் தணிக்கையாளர்களை உள்ளடக்கியது. + +நோபல் அறக்கட்டளை நிறுவப்பட்டு அதன் விதிமுறைகளும் வகுக்கப்பட்ட பின்னர், நோபல் கழகங்கள் பரிசுகளுக்கான முதல் முறை வழங்கப்படப்போகும் முன்மொழிவுகளைத் தயார் செய்தன. அதன் பின்னர் தெரிவு செய்யப்பட்ட பட்டியல்கள் பரிசு வழங்கும் கழகங்களுக்கு அனுப்பப்பட்டன. பரிசுகளின் நம்பகத்தன்மையைக் கூட்டும் வகையில், நார்வே நோபல் கழகம் புகழ்பெற்ற யார்கன் லொவ்லான்ட், யார்ன்ஸ்ட்யெர்ன் யார்ன்சன் மற்றும் யொகானசு ஸ்டீன் ஆகியோரை பரிசு வழங்கும் குழுவில் நார்வே நோபல் கழகம் நியமித்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் வளர்ந்துவந்த அமைதி இயக்கங்களிலிருந்த புகழ்பெற்ற இருவருக்கு பரிசு வழங்குவதற்கு நோபல் கழகம் முடிவு செய்தது: ஃபிரடெரிக் பாசி (உலக நாடுகளின் கூட்டமைப்பின் துணை நிறுவனர்) மற்றும் யென்றி டூனான்ட் (உலகளாவிய செஞ்சிலுவைக் கழக நிறுவனர்).. + +இயற்பியலில் நோபல் பரிசுக்கு தகுதியுடையவர்களாக நோபல் கழகம் இருவரைத் தேர்ந்தெடுத்தது: எக்ஸ்- கதிர்களைக் கண்டுபிடித்த வில்யெம் கொன்றாடு ரான்ட்ஜன் மற்றும் கேதோடு கதிர்களைக் கண்டறிந்தவரான பிலிப் லெனார்டு. சுவீடன் அறிவியற் கழகம் ரான்ட்ஜனை பரிசுக்குரியவராகத் தேர்ந்தெடுத்தது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதிகளில் பல வேதியியலாளர்கள் முக்கியமான கண்டுபிடிப்புகளையும் முன்னேற்றங்களையும் செய்திருந்தன��். ஆகையால் பரிசு வழங்கப்பட வேண்டும் எனும்படியான வகையில் தகுதிப்பட்டியலை தயாரிக்கவே பரிசு வழங்கும் கழகம் தள்ளப்பட்டது. இத்துறையில் 20 முன்மொழிவுகள் வைக்கப்பட்டன. அவற்றுள் 11 யாகோபசு வான் கா-வுக்கானவை. முடிவில் யாகோபசு வான் கா-வுக்கு வேதியியல்-வெப்ப இயக்கவியலில் அவரின் பங்களிப்புக்கு நோபல் பரிசு தரப்பட்டது.. + +முதல் நோபல் இலக்கியப்பரிசுக்கு சல்லி புருதோமை, சுவீடன் கழகம் தேர்ந்தெடுத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த 42 எழுத்தாளர்கள், கவிஞர்கள் இதனை எதிர்த்துப் போராடி தமது அதிருப்தியைத் தெரிவித்தனர், அவர்கள் லியோ டால்ஸ்டாய்தான் வெல்லுவார், அவரே பரிசுக்கு மிகச் சரியானவர் என எண்ணினர். சிலர், பர்டன் பெல்டுமான் உட்பட, சல்லி புருதோம் ஒரு சாதாரண கவிதான் என்ற எண்ணங்கொண்டிருந்தனர். பர்டன் பெல்டுமான், பரிசு வழங்கும் கழகத்தினர் விக்டோரிய இலக்கிய ஆவலர்கள் போலும், ஆதலால் தான் விக்டோரிய கவிக்கு பரிசு கொடுத்திருக்கின்றனர், என்று குற்றஞ்சாட்டினார். மருத்துவத்துவத்துக்கான நோபல் பரிசு யெர்மானிய உடலியங்கியல் மற்றும் நுண்ணியிரியியலாளரான எரிக் வான் பெரிங்-குக்கு வழங்கப்பட்டது. 1890-களில் எரிக் வான் பெரிங் டிப்தீரியாவுக்கான நஞ்செதிரியைக் கண்டறிந்தார், அதுநாள் வரையிலும் டிப்தீரியாவால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். + +1938 மற்றும் 1939-ல் அடால்ஃப் ஹிட்லர்-இன் மூன்றாம் செல்வம், நோபல் பரிசு வென்ற மூவரை (ரிச்சர்டு குன், அடால்ஃப் பிரைட்ரிச் யொகான் பியூட்டெனான்ட் மற்றும் யெர்கார்டு டொமாக்) பரிசினைப் பெற்றுக்கொள்ள விடவில்லை.. ஆனால், ஒவ்வொருவரும் பின்னர் அவர்களது பட்டயத்தையும் பரிசினையும் பெற்றுக்கொண்டனர். சுவீடன் இரண்டாம் உலகப் போரின்போது நடுவுநிலைமையை வகித்தாலும் நோபல் பரிசுகள் இடைவெளிவிட்டு விட்டு கொடுக்கப்பட்டன. 1939-ல் அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கும் தரப்படவில்லை. 1940-42 காலகட்டத்தில், நார்வே யெர்மனியால் கைப்பற்றப்பட்டிருந்தது, எந்த துறையிலும் பரிசு வழங்கப்படவில்லை. அதற்கடுத்த ஆண்டு அமைதி மற்றும் இலக்கியத்துக்கான நோபல் பரிசுகளைத் தவிர ஏனையவை தரப்பட்டன. + +நார்வே கைப்பற்றப்பட்ட பின்னர் மூன்று நோபெல் அறக்கட்டளை உறுப்பினர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பியோடினர். ���சுலோவிலிருந்த நோபல் கழக மாளிகை சுவீடன் நாட்டு சொத்து என்று நோபல் கழகம் அறிக்கை விட்டதன் காரணத்தால் அங்கிருந்த மற்ற அறக்கட்டளை உறுப்பினர்கள் நாசிக்களின் நெருக்குதலுக்கு உள்ளாகியிருப்பர். ஆதலால் அக்கழக மாளிகை யெர்மானிய ராணுவத்திடமிருந்து தப்ப ஒரு புகலிடமாக இருந்தது, ஏனெனில் யெர்மனியுடன் சுவீடன் போரில் ஈடுபடவில்லை. அங்கிருந்த அறக்கட்டளை உறுப்பினர்கள் நோபெல் கழகத்தின் வேலைகளை தொடர்ந்து கவனித்து வந்தாலும் பரிசுகள் எதுவும் வழங்கப்படவில்லை. 1944-ல் நோபல் அறக்கட்டளை, வெளிநாட்டுக்குத் தப்பிய மூன்று உறுப்பினர்களும் சேர்த்து, முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன, அமைதிக்கான நோபல் பரிசு எப்போதும் போல இனி வழங்கப்படுமென அறிவித்தனர். + +1968-ஆம் ஆண்டு சுவீடன் நடுவண் வங்கியானது தனது 300-வது வருட கொண்டாட்டத்தின்போது, ஒரு பெரும் தொகையை நோபல் அறக்கட்டளைக்கு அளித்து நோபலின் பெயரில் ஒரு பரிசினை ஏற்படுத்த வைத்தது. அதற்கடுத்த வருடம் நோபல் நினைவு பொருளாதார அறிவியல் பரிசு வழங்கப்பட்டது. பரிசுக்குரியவர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு சுவீடன் ராஜாங்க அறிவியற் கழகத்தின் பொறுப்பில் விடப்பட்டது. முதல் பொருளாதாரத்துக்கான பரிசினைப் பெற்றவர்கள் யான் டின்பெர்கன் மற்றும் ராக்னர் ஃபிரிச் ஆவர். அவர்கள் "பொருளாதார செயற்பாடுகளுக்கான இயங்கு படிமங்களை உருவாக்கி அதை வெற்றிகரமாக செயற்படுத்தியும் உள்ளனர்" என்பது நோபல் குழுவின் குறிப்பு. ஒரு நோபெல் பரிசாக இல்லாவிட்டாலும் இது ஏனைய நோபெல் பரிசுகளோடே அடையாளப்படுத்தப்படுகிறது. பரிசுக்குரியவர்களும் மற்ற நோபெல் பரிசுக்குரியவர்கள் அறிவிக்கப்படும்போதே அறிவிக்கப்படுகிறார்கள். பொருளாதார அறிவியலின் பரிசு சுவீடனின் நோபல் பரிசு வழங்கும் விழாவிலேயே வழங்கப்படுகிறது. இந்த பரிசினை சேர்த்த பின்னர், நோபல் அறக்கட்டளைக் குழு கூடி விவாதித்து இனி ஏதும் புதிய பரிசுகளை வழங்குவதில்லையென முடிவெடுத்தது. + +விருது வழங்கும் முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும். + +3000 தனிநபர்களுக்கு பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாத��் பரிசுகள் வழங்கப்படுவதற்க்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல் பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள், சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில் இருந்து சுமார் 300 திறன் பெற்றவர்களை பரிந்துரைக்கும். + +நோபல் பரிசு குழு, பின்னர் தொடர்புடைய துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது, ஆரம்ப வேட்பாளர்கள் பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும் நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச் சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள் உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது. + +வருடந்தோறும் நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும். ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில் அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமா�� உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன. + +நோபல் பரிசினை இதுவரை மூன்று தமிழர் பெற்றுள்ளனர். இந்தப் பெருமைக்குரியோர் ச. வெ. இராமன் (1930), சுப்பிரமணியன் சந்திரசேகர் (1983), வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (2009) ஆவர். + + + + + + +பல்லவர் காலக் கட்டடக்கலை + +தென்னிந்தியக் கட்டிடக்கலையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து அதன் வளர்ச்சியில் ஆகக் கூடிய தாக்கத்தை ஏற்படுத்தியது பல்லவர் காலமே எனில் அது மிகையல்ல. இப்பகுதியில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டளவில் ஆரம்பித்து வளர்ச்சியடைந்த திராவிடக் கட்டிடக்கலையின் ஆரம்பம் இந்தக் காலமே. + +பல்லவ வம்சத்தினர் தமிழகத்தின் வடபகுதியில் கி.பி. 4 ஆம் நூற்றாண்டு தொடக்கம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சியிலிருந்து வந்தாலும், கி.பி. 6 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 9 ஆம் நூற்றாண்டு வரையான 3 நூற்றாண்டுக் காலமே காஞ்சியைத் தலைநகரமாகக் கொண்டு ஒரு வலுவுள்ள அரசை நிறுவியிருந்தனர். இவர்கள் தமிழர் அல்ல என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படினும், இவர்கள் பூர்வீகம் பற்றியோ, தமிழ் நாட்டுக்கு இவர்கள் வந்து சேர்ந்த விதம் பற்றியோ சரியான தகவல்கள் இல்லை. பல்லவர்கள் காலத்தை முற்காலப் பல்லவர் காலம், இடைக் காலப் பல்லவர் காலம், பிற்காலப் பல்லவர் காலம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவது உண்டு. கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் மகேந்திரவர்மனின் ஆட்சியுடன் பிற்காலப் பல்லவர் காலம் ஆரம்பமானது. பல்லவர்களின் பொற்காலத்தின் ஆரம்பமும் அதுவே. + +பிற்காலப் பல்லவர்கள் காலத்திலேயே தமிழ் நாட்டில் இந்து சமய மறுமலர்ச்சியும், சிற்பம், ஓவியம், கட்டிடக்கலை முதலிய கலை வளர்ச்சியும் உச்ச நிலையடைந்தன. மகேந்திர பல்லவனுடன் துவங்கிய பிற்காலப் பல்லவ மன்னர் வரிசையிலே, மாமல்லன் எனப்பட்ட முதலாம் நரசிம்மன், இராஜசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மன், நந்திவர்மன் என்பவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். + +பல்லவர் கட்டிடக்கலையை இரண்டு கட்டங்களாகப் பிரிப்பதுண்டு. முதல் கட்டம் சுமார் கி.பி. 610 தொடக்கம் கி.பி. 690 வரையான காலமாகும். இக்கட்டத்தில் அமைக்கப்பட்டவை அனைத்துமே குடைவரை கோயில்கள் ஆகும். இரண்டாம் கட்டமான கி.பி. 690 இலிருந்து கி.பி. 900 வரையான காலப்பகுதியில் கட்டப்பட்டவை அனைத்தும் கட்டும��னக் (Structural) கட்டிடங்களாகும். + +இவற்றுள் முதல் கட்டத்தில் கட்டப்பட்டவை மகேந்திரன் கட்டிடங்கள், மாமல்லன் கட்டிடங்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவில் தூண்கள் அமைந்த மண்டபங்கள் மட்டுமே அடங்குகின்றன. இரண்டாம் பிரிவில் மண்டபங்களுடன் இரதங்கள் எனப்படும் ஒற்றைக்கல் கோயில்களும் அடக்கம். + +இரண்டாம் கட்டமும், நரசிம்மன் கட்டிடங்கள், நந்திவர்மன் கட்டிடங்கள் என இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. இவ்விரண்டிலும் அடங்குபவை கட்டுமானக் கோயில்களாகும். + +பழங்காலத்தில் தமிழ் நாட்டில் கட்டிடங்கள் அழியக்கூடிய கட்டிடப்பொருட்களான மரம், சுதை மற்றும் செங்கல்களினால் அமைக்கப்பட்டதாகப் பண்டைய தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் காணப்படுகின்றன. வடக்கு மற்றும் மேற்கு இந்தியப் பகுதிகளில் அசோகப் பேரரசன் காலம் முதலும் பின்னர் ஆந்திரப் பகுதிகளிலும் பயன்பாட்டிலிருந்து வந்த பெரிய பாறைகளைக் குடைந்து குடைவரைகளை அமைக்கும் முறை தமிழ் நாட்டில் கி.பி ஆறாம் நூற்றாண்டு வரை பயன்பாட்டுக்கு வரவில்லை. இதற்குப் பல பண்பாட்டு, பொருளாதார மற்றும் தொழில் நுட்பக் காரணிகளை ஆய்வாளர்கள் எடுத்துக் காட்டுகிறார்கள். ஆறாம் நூற்றாண்டளவில் தென் தமிழ் நாட்டில் பாண்டியர்களினால் குடைவரைகள் அறிமுகப் படுத்தப்பட்டதாகக் கருதப்படினும், தமிழ் நாட்டில், தேவையான சூழலும், வளங்களும், அரசியல் ஆதரவும் அளித்து இதன் வளர்ச்சிக்குப் பெருமளவு ஊக்கம் கொடுத்த பெருமை பல்லவர்களையே சாரும். + +தமிழ் நாட்டுக்கு வடக்கே ஏற்கனவே முகம் காட்டத் தொடங்கியிருந்த திராவிடக் கட்டிடக்கலை என இன்று குறிக்கப்படும் புதிய தென்னிந்தியக் கட்டிடக் கலைப் பாணிக்குத் தமிழ் நாட்டில் உரமளித்து, இந்தியாவின் முக்கியமான கட்டிடக் கலைப் பாணிகளில் ஒன்றாக வளர்வதற்கு அடித்தளமிட்டதும் பல்லவர் காலமேயாகும். + + +பல்லவர்கள் அமைத்த குடைவரைகள் தமிழ் நாட்டில், மண்டகப்பட்டு, பல்லாவரம், மாமண்டூர், குரங்கணில் முட்டம், வல்லம், மகேந்திரவாடி, தளவானூர், திருச்சிராப்பள்ளி, சீயமங்கலம், விளாப்பாக்கம், அரகண்டநல்லூர், திருக்கழுக்குன்றம், சிங்கப்பெருமாள் கோயில், சிங்கவரம், மேலச்சேரி, சாழுவன் குப்பம், கீழ்மாவிலங்கை, மாமல்லபுரம், ஆவூர், திரைக்கோயில், புதூர�� ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. + +பஞ்சபாண்டவர் ரதங்கள் - மாமல்லபுரம் + + +தம்புள்ளையில் அமைந்துள்ள நாலந்த சிலை மண்டபம் இலங்கை கட்டிடக்கலையில் பல்லவ கட்டிடக்கலையை உள்வாங்கி அமைக்கப்பட்டுள்ளது. + + + + + +திருநெல்வேலி + +திருநெல்வேலி (, "Tirunelveli"), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகரமாகவும் திகழ்கிறது. "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' எனச் சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' எனச் சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி, திருநெல்வேலி ஆகும். + +திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகச் சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. + +இவ்வூரின் அமைவிடம் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47 மீட்டர் (154 அடி) உயரத்தில் இருக்கின்றது. + +16 ஆம் நூற்றாண்டு நூல் வேணுவனப் புராணம் திருநெல்வேலிக்கு 'வேணுவனம்' என்று பெயர் சூட்டிப் பாடுகிறது. 'வேணு' என்னும் சொல் மூங்கிலைக் குறிக்கும். பண்டைக் காலத்தில் மூங்கில் காடாக விளங்கிய இந்த ஊர் மூங்கில்-நெல்லால் பசியைப் போக்கிய காரணத்தால் இந்த ஊரை 'நெல்வேலி' எனப் பெயரிட்டு வழங்கியிருக்கிறார்கள். + +முன்னொரு காலத்தில் தீவிர சிவ பக்தரான வேதபட்டர் என்பவர் மிகவும் வறுமையில் வாழ்ந்து வந்தார். தமது வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டி ஒவ்வொரு ஊரிலும் அமைந்த சிவனை வழிபட்டு வந்தார். + +சிவன் அருளால் வேதபட்டருக்கு சகல செல்வங்களும் கிடைத்தன. வேணுவனம் (திருநெல்வேலி) வந்த வேதபட்டர் சிவனுக்கு நித்திய பூஜை செய்து ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வந்தார். வேதபட்டரைச் சோதிக்க நினைத்த சிவபெருமான் அவருக்கு வழங்கிய செல்வங்கள் சிறிது சிறிதாக குறைந்து போகும்படி செய்தார். இதனால் சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதிலும், சிவ பூஜை செய்வதிலும் வேதபட்டருக்குச் சிரமம் ஏற்பட்டது. + +இருப்பினும் இறைவனுக்கு நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக அவர் பொதுமக்களிடம் யாசகம் பெற்று நித்திய பூஜை நடத்தி வந்தார். ஒரு நாள் அவர் நெய்வேத்தியத்திற்குரிய நெல்லைக் காய வைத்து விட்டு குளிப்பதற்காக தாமிரபரணி ஆற்றுக்கு சென்றுவிட்டார். + +அப்போது மேகம் கருத்து மழை பெய்தது. மழை பெய்ததால் இறைவன் நெய்வேத்தியத்திற்காகக் காயப்போடப்பட்டிருந்த நெல் நனைந்துவிடுமே எனப் பதறியபடி கவலையுடன் அவர் கோயிலுக்கு ஓடி வந்தார். ஆனால் அங்கு இறைவனின் திருவிளையாடலால் காயப்போடப்பட்டிருந்த நெல் மட்டும் நனையாமல் வேலியிடப்பட்டுப் பாதுகாக்கப்பட்டிருந்தது. இதைப் பார்த்து வியந்த வேதபட்டர் நடந்த சம்பவத்தை பாண்டிய மன்னனிடம் தெரிவித்தார். + +மன்னரும் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் வேணுவனம், நெல்வேலி எனப் பெயர் பெற்றது. பின்னர் திரு என்ற அடைமொழி சேர்க்கப்பட்டு திருநெல்வேலி எனப் பெயர் பெற்றது. + +இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது "திருநெல்வேலி" எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது. + +ஒரு ஏழை விவசாயி இறைவனுக்குப் படைக்க நெல்லைக் காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரெனப் பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர் என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர். + +திருநெல்வேலியின் வரலாற்றை இங்கு வந்திருந்த கிறித்தவப் பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் (1814–91) ஆய்வு செய்துள்ளார். திருநெல்வேலி பாண்டிய அரசர்களின் இரண்டாம் தலைநகரமாக விளங்கியது; அவர்களின் முதன்மைத் தலைநகரமாக மதுரை இருந்தது. இங்கிருந்த பாண்டிய வம்சம் அனோ டொமினிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான சான்றுகள் உள்ளன; அசோகர் (கி.மு 304–232) காலக் கல்வெட்டுக்களிலும் "மகாவம்சம்", "வராகமிகிரரின் பிரகத் சம்கிதை" மற்றும் மெகஸ்தனிசின் (கிபி 350–290) நூலிலும் இப்பேரரசு குறிக்கப்பட்டுள்ளது. இந்த இராச்சியம் கி.பி 1064இல் இராசேந்திர சோழன் காலத்தில் சோழர் ஆட்சியின் கீழ் வந்தது. 13ஆவது நூற்றாண்டு வரை சோழரின் ஆட்சியிலிருந்த திருநெல்வேலி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பிற்காலப் பாண்டியரின் கீழ் வந்தது. + +13ஆவது, 14ஆவது நூற்றாண்டுகளில் நெல்ல���யப்பர் கோவில் பாண்டியர்களின் அரசக் கோவிலாக விளங்கியது. அரச ஆதரவினால் அக்காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டன. குலசேகரப் பாண்டியனின் (1268–1308) மரணத்திற்குப் பிறகு, 16ஆவது நூற்றாண்டில் விசயநகர மன்னர்களும் மறவ ஆட்சியாளர்களும் (பாளையக்காரர்கள்) ஆட்சி புரிந்தனர். மறவர்கள் மேற்கத்திய மலையடிவாரத்திலும் தெலுங்கு, கன்னடர்கள் கிழக்கத்திய கரிசல் மண் பிரதேசத்திலும் குடியேறினர். திருநெல்வேலி மதுரை நாயக்கர்களின் இரண்டாம் தலைநகரமாக இருந்தது; விசுவநாத நாயக்கர் (1529–64) காலத்தில் 1560இல் திருநெல்வேலி மீளமைக்கப்பட்டது. நெல்லையப்பர் கோவிலில் உள்ள கற்றளிகளில் இவரது தாராளமான நன்கொடை பதியப்பட்டுள்ளது. 1736இல் நாயக்கராட்சி முடிவுக்கு வந்தது; 18ஆம் நூற்றாண்டின் மையக்காலத்தில் இப்பகுதியை சந்தா சாகிப் (1740–1754), ஆற்காடு நவாப் மற்றும் மருதநாயகம் (1725–1764) கைபற்றினர். + +1743இல் நிசாம்-உல்-முல்க், தக்காணப் பீடபூமியின் தளபதி, இப்பகுதியில் இருந்த மராத்தியர்களை விரட்டியடித்து இப்பகுதி ஆற்காடு நவாப் ஆட்சியின் கீழ் வந்தது. இருப்பினும் அதிகாரம் நாயக்கர்களின் படைத்தளபதிகளாக இருந்த பாளையக்காரர்களிடம் இருந்தது. திருநெல்வேலி நாயக்கர் ஆட்சியிலும், நவாப் ஆட்சிக்காலத்திலும் முதன்மை வணிக நகரமாக விளங்கிய இந்நகரம் நெல்லைச் சீமை எனப்பட்டது; "சீமை" என்பதற்கு "வளர்ச்சியுற்ற வெளிநாட்டு நகரம்" எனப் பொருள் கொள்ளலாம். "பாளையக்காரர்கள்" மலைகளில் கோட்டைகள் கட்டிக்கொண்டு, தங்களுக்குள்ளேயே சண்டையிட்டு வந்தனர். 1755இல் பிரித்தானிய அரசு மேஜர் எரானையும் மகபுசு கானையும் அனுப்பி அமைதி ஏற்படுத்தினர். திருநெல்வேலி நகரம் மகபூசு கானுக்கு வழங்கப்பட்டது. பாளையக்காரர்கள் மகபூசு கானுடன் சண்டையிட்டனர். மகபூசுகானுக்கு உதவியாக கிழக்கிந்தியக் கம்பனி முகமது யூசபை அனுப்பியது. கான் ஆட்சியைக் கைபற்றிய பின்னர் 1763இல் எதிர்பாளராக மாறினார். இதனால் 1764இல் கான் தூக்கிலிடப்பட்டார். 1758இல் பிரித்தானிய துருப்புகள் தளபதி புல்லர்டன் தலைமையில் கட்டபொம்மனை வென்றனர். 1797இல் பானர்மேன் தலைமையிலான பிரித்தானியருக்கும் கட்டபொம்மன் தலைமையிலான பாளையக்காரர்களுக்கும் முதலாம் பாளையக்காரப் போர் மூண்டது. எட்டையபுரம் மன்னர் போன்ற சில பாளையக்காரர்கள் பிரித்தானியர்களுக்��ு ஆதரவாயிருந்தனர். கட்டபொம்மன் தோற்கடிக்கப்பட்டு தனது பாஞ்சாலங்குறிச்சியில் தூக்கிலிடப்பட்டார். இரண்டாண்டுகள் கழித்து இரண்டாம் பாளையக்காரர் போர் நிகழ்ந்தது. மிகுந்த எதிர்ப்புக்கு பிறகு பிரித்தானியர் மீண்டும் வென்றனர். நவாபுடன் ஏற்பட்ட உடன்பாட்டின்படி கர்னாடிக் பகுதி பிரித்தானியர் ஆட்சி கீழ் வந்தது. + +1801இல் நவாபிடமிருந்து திருநெல்வேலியைப் பெற்ற பிறகு பிரித்தானியர் இதனைத் திருநெல்வேலி மாவட்டத்தின் தலைநகரமாக்கினர். நிர்வாக, படைத்துறை தலைமையகங்கள் பாளையம்கோட்டையில் அமைந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு திருநெல்வேலி மாவட்டத் தலைநகரமாக விளங்கியது. 1986இல் தனியாக தூத்துக்குடி மாவட்டம் பிரிந்தது. +தற்போதைய இந்திய அரசின் 100 நுண்சீர் நகரங்களில் ஒன்றாக திருநெல்வேலி அடையாளம் காணப்பட்டுள்ளது. + +திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் (TWIN CITY) என்றழைக்கப்படுகின்றன. தாமிரபரணி ஆறு ஆனது இவ்விரு நகரங்களுக்கிடையே ஒடுகின்றது. திருநெல்வேலி ஆனது ஆற்றின் மேற்குப் புறமும், பாளையங்கோட்டை கிழக்குப் புறமும் அமைந்துள்ளது. + +பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. +பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். + +திருநெல்வேலி ஒரு விரிவான போக்குவரத்துப் பிணையத்தினைக் கொண்டுள்ளது; இது சாலை, ரயில் மற்றும் விமானம் மூலம் பிற முக்கிய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி சாலைகளை மொத்தம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் முப்பது கிலோமீட்டர்கள் சாலையும், மாநில நெடுஞ்சாலைகள் துறை மூலம் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் சாலையும் பராமரிக்கப்படுகின்றன. 1844 ஆம் ஆண்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கர்னல் ஹார்ஸ்லேவினால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இன்று அது சுலோச்சன முதலியார் பாலம் என்றழைக்கப்டுகிறது. திருநெல்வேலி நகரம் தேசிய நெடுஞ்சாலை 7 மேல் மதுரைக்குத் தெற்கே தொலைவிலும் மற்றும் கன்னியாகுமரிக்கு வடக்கே தொலைவிலும் அமைந்துள்ளது. த��சிய நெடுஞ்சாலை 7A, இது தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு நீட்டிப்பு ஆகும்; இது தூத்துக்குடி துறைமுகத்தினை பாளையங்கோட்டையோடு இணைக்கிறது. + +திருநெல்வேலி நகரில் மூன்று பேருந்து நிலையங்கள் உள்ளன. +2003 இல், மத்தியப் பேருந்து நிலையம் (புதிய பஸ் ஸ்டாண்ட்) வேய்ந்தான் குளத்தில் திறக்கப்பட்டது. இங்கிருந்து மற்றைய நகரங்களுக்கு பேருந்து இயக்கப்படுகின்றது. இங்கிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஆனது பெங்களூர், சென்னை, கன்னியாகுமாரி மற்றும் பிற நகரங்களுக்கு அதிதூரப் பேருந்து சேவையை இயக்குகிறது. +மேலும் சந்திப்பு மற்றும் பாளைப் பேருந்து நிலையங்களிலிருந்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், திருநெல்வேலி நகர மற்றும் அருகில் உள்ள கிராமங்களுக்குப் பேருந்து சேவையை இயக்குகிறது. + +திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம் இந்தியாவில் பழமையான ரயில் நிலையங்களில் ஒன்றாகும். செங்கோட்டை - திருநெல்வேலி தொடருந்து இணைப்பு 1903 ஆம் ஆண்டு முதல் திறக்கப்பட்டது; பின்பு கொல்லம் வரை இணைக்கப்பட்ட இது பிரித்தானிய இந்தியாவின் திருவாங்கூர் மாகாணத்திற்கு மிக முக்கியமான வர்த்தகப் பாதையாக இருந்தது. திருநெல்வேலி நகரம் நான்கு திசைகளிலும் தொடருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வடக்கே மதுரை, தெற்கே நாகர்கோயில், மேற்கே கொல்லம் செல்லும் தொடருந்து இணைப்பு தென்காசி, செங்கோட்டையுடனும், கிழக்கே திருச்செந்தூருடனும் இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியிலிருந்து தினமும் திருச்சிராப்பள்ளி, சென்னை, மதுரை, கன்னியாகுமரி, மும்பை, குருவாயூர், ஹவுரா, தில்லி மற்றும் திருவனந்தபுரம்ற்கு விரைவுப் பயணிகள் சேவை உள்ளன. மேலும் மதுரை, திருச்செந்தூர், திருச்சி மற்றும் கொல்லம் பாசஞ்சர் சேவை உள்ளது. + +திருநெல்வேலியின் அருகில் உள்ள விமான நிலையம் தூத்துக்குடி வானூர்தி நிலையம் ஆகும்; இது திருநெல்வேலி நகரின் கிழக்குத் திசையில் தொலைவில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வாகைகுளம் (Vaagaikulam) என்ற ஊரில் அமைந்திருக்கிறது. இங்கிருந்து சென்னைக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் (TRV) தொலைவில் உள்ளது. மற்றுமொரு அருகில் உள்ள சர்வதேச விமான நிலையம் மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம், ஆகும். + +இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 411,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரிக் கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். + +மாநில கீதமான ""தமிழ்த் தாய் வாழ்த்தினைப்"" பாடிய மனோன்மணியம் சுந்தரனார் அவர்களின் பெயரில் இங்கு ஒரு பல்கலைக்கழகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அபிசேகப்பட்டியில் உள்ளது. பெரும்பாலான கிறுத்தவப் பள்ளிகளும், கல்லூரிகளும் பாளையங்கோட்டையில் உள்ளன. +திருநெல்வேலியில் 80 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 29 மேல்நிலைப் பள்ளிகளும், 12 உயர்நிலைப் பள்ளிகளும், 22 நடுநிலைப் பள்ளிகளும், 17 தொடக்கப் பள்ளிகளும் உள்ளன; திருநெல்வேலி மாநகராட்சி இவற்றில் 33 பள்ளிகளை நடத்துகின்றது. + +திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி, கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சிக் கழகம், மற்றும் அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி அரசு சட்டக்கல்லூரி, திருநெல்வேலி ஆகிய தொழில்சார்ந்த கல்லூரிகள் தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றன. செ.சேவியர் கல்லூரி, செ.ஜான்ஸ் கல்லூரி கிறித்தவ டயோசிசின் அமைப்பினரால் நடத்தப்படுகின்றன. மேலும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி (பாரதியார் இங்கு படித்தார்), சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி குறிப்பிடத்தகுந்தவை. + +இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் ஜியோமெகனடிசம் (IIG) அதன் பிராந்திய நிறுவனமாக, 'the Equatorial Geophysical Research Laboratory'-ஐ நிறுவி, மண்ணியல், வளிமண்டல மற்றும் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது. + +திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இது பெங்களூரிலுள்ள விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின், துணைப்பிரிவு ஆகும். இங்கு நிரந்தரக் காட்சியகங்ளும், அறிவியல் காட்சிகளும், ஊடாடும்(Interactive) மற்றும் சுயவழிக்காட்டுதல்(self-guided) சுற்றுலாவும், சிறியகோளரங்கம் மற்றும் வானிலைக்கூர்நோக்கும் மையமும் உள்ளன. + +நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப்பிடிப்புகள் நடந்துள்ளன. பாபநாசத்தில், புகழ் பெற்ற அகத்தியர் அருவி உள்ளது. +நெல்லை மாவட்டத்தில்தான் புகழ் பெற்ற குற்றால அருவித்தொடர் உள்ளது. இந்தக் குற்றால அருவி நெல்லையிலிருந்து 50கி.மீ. தொலைவில் உள்ளது. தென்காசியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள இங்கு மெயின் அருவி, ஐந்தருவி, தேனருவி, செண்பகாதேவி, புலிஅருவி, பழைய குற்றாலம் எனப் பல அருவிகள் உள்ளன. மெயின் அருவி மிகவும் பிரசித்தி பெற்றது. வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் கூட இந்த அருவிக்கு மக்கள் வருகின்றனர். + +நெல்லையப்பர் கோவில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தரால் பாடல் பெற்ற இத்தலம் இந்த நகரில் அமைந்துள்ளது. ஸ்ரீ காந்திமதி-நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது.[2] அம்பாளுக்கும், சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப்பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப்பட்டுள்ளது. அம்பாள் சன்னதியில் ஆயிரம் கால் மண்டபம் ஒன்று உள்ளது. கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி சிலை உள்ளது. +திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம் வழி கருப்பூந்துறை ஸ்ரீ சிவகாம சுந்தரி உடனுறை ஸ்ரீ அழியாபதி ஈஸ்வரர் திருக்கோயில் கோரக்க மகரிஷியால் வழிபட்ட ஸ்தலம் + +திருநெல்வேலியில் தயாரிக்கப்படும் அல்வா பெயர்பெற்றது. இங்குள்ள "இருட்டுக்கடை" எனும் கடையில் கிடைக்கும் அல்வா பொதுமக்களிடையே தனிச்சிறப்பு பெற்றது. + + + + +நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியல் + +நோபெல் பரிசுகள் (, ) ஆண்டுதோறும் சுவீடிய அரசுக் கல்விக்கழகத்தாலும் சுவீடியக் கல்விக்கழகத்தாலும் கரோலின்சுகா நிறுவனத்தாலும் நார்வே நோபெல் குழுவாலும் தனியொருவருக்கோ நிறுவனங்களுக்கோ வேதியியல், இயற்பியல், இலக்கியம், அமைதி, மற்றும் மருத்துவம் ஆகிய அறிவியல்புலங்களில் பெரும்பங்களிப்பு ஆற்றுபவர்களுக்குத் தரப்படுகின்றன. இவை ஆல்ஃபிரெட் நோபெலின் 1895அம் ஆண்டு உயிலின்படி நிறுவப்பட்டுத் தரப்படுகின்றன.இது நோபெல் அறக்கட்டளையால் ஆளப்படுமெனக் கூறுகிறது. பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசு 1968இல் சுவீடன்னைச் சார்ந்த Sveriges Riksbank எனும் வங்கியால் பொருளியலில் பெரும்பங்களிப்பவர்களுக்காக நிறுவப்பட்டது. இதில் ஒவ்வொரு பரிசாளருக்கும் பொற்பதக்கமும் பட்டயமும் நோபெல் அறக்கட்டளை குறிப்பிட்ட ஆண்டில் முடிவுசெய்யும் பணத்தொகையும் வழங்கப்படும். + +ஒவ்வொரு பரிசும் ஒரு தனிக்குழுவால் தரப்படுகிறது; இயற்பியல், வேதியியல், பொருளியல் பரிசுகளைச் சுவீடிய அரசுக்கழகம் தருகிறது; கரோலின்சுகா நிறுவனம் உடலியங்கியல் அல்லது மருத்துவப் பரிசுகளை வழங்குகிறது; நார்வே நோபெல்குழு அமைதிக்கான பரிசுகளை அளிக்கிறது. ஒவ்வொரு பரிசாளரும் ஆண்டுஅகளைச் சார்ந்து வேறுபடும் பதக்கத்தையும் பட்டயத்தையும் பணத்தொகையையும் பெற்றுவந்துள்ளனர்.முதல்நோபெல் பரிசுகள் 1901இல் பரிசாளர்களுக்கு 150,782 SEK அமைந்தன.இது 2007இல் 7,731,004 SEK மதிப்புக்குச் சம்மானது. பரிசாளர்களுக்கு 2008இல் பணத்தொகையாக 10,000,000 சுவீடியக் குரோனர்கள்(SEK) வழங்கப்பட்டன. பரிசுகள் நோபெல் மறைந்த நாளான திசம்பர் 10இல் அவரது நினைவு ஆண்டுவிழாவில் சுட்டாக்கொல்மில் தரப்படுகின்றன. + +பெயர்கள் தரப்படாததாலோ வேறு புறநிகழ்வுகளாலோ நோபெல் பரிசு தரப்படாவிட்டால் பரிசுத்தொகை உரிய பரிசுக்கணக்கில் திரும்பச் செலுத்தப்படும். நோபெல் பரிசு போர்மூண்டதால் 1940முதல் 1942வரை தரப்படவில்லை. + +கடந்த நூற்றாண்டு 1901 முதல் இந்த நூற்றாண்டு 2012 வரை நோபெல் பரிசுகளும் பொருளியலுக்கான நோபெல் நினைவுப் பரிசுகளும் 555 தடவைகள் 863 பேருக்கும் நிறுவனங்களுக்கும் தரப்பட்டுள்ளன. இதில் சிலர் ஒருதடவைக்கும் மேல் பரிசு வாங்கியுள்ளதால் மொத்தத்தில் 825 பேரும் 21 நிறுவனங்களும் பரிசு பெற்றுள்ளன. நான்கு நோபெல் பரிசாளர்களுக்கு அவர்களது அரசுகள் இப்பரிசைப் பெற இசைவு தரவில்லை. [அடோல்ஃப் ஃஇட்லர் மூன்று செருமானியர்களான இரிச்சர்ட் குஃன் (வேதியியல், 1938), அடோல்ஃப் புட்டனண்ட் (வேதியியல், 1939), and ஜெரார்டு டொமாக் (உடலியங்கியல் அல்லது மருத்துவம், 1939), ஆகியோரை நொப்ர்ல் பரிசை வாங்கவிடவில்லை. முன்னாள் சோவியத் ஒன்றிய அரசு போரிசு பாசுதர்னாக்கை (இலக்கியம், 1958) பரிசை மறுக்கும்படி வற்புறுத்தியது. இரு நோபெல் பரிசாளர்களான இலே டக் தோவும்]] (அமைதி,1973) இப்பரிசை வாங்க மறுத்துவிட்டனர். சாத்ரே எந்த அலுவல்முறைப் பரிசையும் வாங்க விரு��்பாதால் மறுத்தார்.இலே அப்போது வியட்நாம் இருந்த நிலைமையால் மறுத்தார். +ஆறு பரிசாளர்கள் ஒரு தடவைக்கும் மேல் பரிசு பெற்றுள்ளனர்.; அந்த அறுவருள் [[செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக்குழு]] [[அமைதிக்கான நோபெல் பரிசை]] மும்முறை பெற்றது வேறெவருமே மும்முறை பெறவில்லை.. [[அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்]] இருமுறை [[அமைதிக்கான நோபெல் பரிசைப்]] பெற்றது. மேலும் [[ஜான் பர்டீனுக்கு]] இருமுறை [[இயற்பியலுக்கான நோபெல் பரிசும்]] [[ஃபிரெடெரிக் சாங்கருக்கு]] இருமுறை [[வேதியியலுக்கான நோபெல் பரிசும்]] வழங்கப்பட்டன. வெவ்வேறு புலங்களில் இருவருக்கு வழங்கப்பட்டன: [[மேரி கியூரி]] (இயற்பியலும் வேதியியலும்);[இலினசு பௌலிங் (வேதியியல், அமைதி). 826 பரிசாளர்களில் 43பேர் பெண்கள்; நோபெல் பரிசுபெற்ற முதள் பெண்மணி மேரி கியூரி ஆவார். இவர் 1903இல் இயற்பியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். இருபாலாரிலுமே முதல்முறையாக இரு நோபெல் பரிசு பெற்றவர் மேரி கியூரியே. இவர் இரண்டாவதாக 1911இல் வேதியியலுக்கான நோபெல் பரிசைப் பெற்றார். + + Wikimedia Commons has media related to Nobel laureates. + +• Official website of the Royal Swedish Academy of Sciences +• Official website of the Nobel Foundation +• Downloadable Database of Nobel Laureates + + + + +பெங்களூர் + +பெங்களூர் () கர்நாடக மாநிலத்தின் தலைநகராகும். கர்நாடகாவின் தென்கிழக்கு பகுதியில் தக்காண பீடபூமியில் அமைந்துள்ள இந்நகரம் மக்கள்தொகையின் அடிப்படையில் இந்தியாவின் மூன்றாவது பெருநகரமாகவும் நகர்ப்புற மக்கள்தொகை அடர்த்தியில் ஐந்தாவது பெரியதாகவும் திகழ்கிறது. + +நவீன பெங்களூரின் சிற்பியாக பலர் கருதும் முதலாம் கெம்பெ கவுடா இந்த இடத்தில் ஒரு செங்கல்-கலவை கோட்டையைக் கட்டி இதனை விஜயநகர சாம்ராச்சிய பிராந்தியமாக நிறுவிய 1537 ஆம் ஆண்டு முதல் தான் இந்நகரத்தின் நவீன வரலாறானது துவங்குவதாக பலர் கருதுகின்றனர். பிரித்தானிய ஆட்சியின் போது, இது தென்னிந்தியாவில் காலனி ஆட்சி மையமாக ஆனது. + +இன்று, ஒரு பெரிய வளரும் பெருநகரமாக, இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற பல கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் தாயகமாக பெங்களூரு திகழ்கிறது. ஏராளமான பொதுத்துறை கனரக தொழிற்சாலைகள், மென்பொருள் நிறுவனங்கள், விண்வெளி, தொலைத்தொடர்பு, மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்கள் இந்நகரில் அமைந்துள்ளன. தகவல் தொழில்நுட்���த்துறை வேலைவாய்ப்பு மற்றும் ஏற்றுமதியில் நாட்டின் முன்னணியில் திகழும் தனது பெருமைமிகு நிலையின் காரணமாக, பெங்களூரு இந்தியாவின் 'சிலிகான் பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுகிறது. மக்கள்பரவலில் பன்முகத்தன்மை கொண்டதான பெங்களூரு பெரும் பொருளாதார மையமாகத் திகழ்வதோடு இந்தியாவில் மிகத் துரிதமாய் வளரும் பெரு நகரமாகவும் உள்ளது. 2015ஆம் ஆண்டு பெங்களுரு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. + +"பெங்களூரு" என்ற நகரப் பெயரின் ஆங்கிலவயமாக்க பிரயோகமான பெங்களூர் என்னும் பெயர் தான் சில ஆண்டுகள் முன்பு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. "பெங்களூரு" என்கிற பெயருக்கான முதல்முதல் குறிப்பு ஒன்பதாம் நூற்றாண்டு மேற்கு கங்க வம்சத்தின் "வீரக் கல்" (ஒரு மாவீரனின் சிறப்பம்சங்களைப் போற்றும் கல் எழுத்துக்கள்) ஒன்றில் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்களில் காணத்தக்கதாய் இருக்கிறது. பெகரில் கண்டெடுக்கப்பட்ட இந்த கல்வெட்டில், "பெங்களூரு" என்பது 890 ஆம் ஆண்டில் யுத்தம் நடந்த ஒரு இடமாகக் குறிப்பிடப்படுகிறது. கங்க சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இந்த இடம் இருந்தது. இது பெங்கவால்-உரு, அதாவது ஹலெகன்னடாவில் (பழைய கன்னடம்) "காவலர்களின் நகரம்" என்று அழைக்கப்பட்டது. தி ஹிந்து பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரை கூறுகிறது:கிபி 890 காலத்தியதாக இருக்கும் ஒரு கல்வெட்டு, பெங்களூரு 1,000 வருடங்களுக்கும் பழமையானது என்று காண்பிக்கிறது. ஆனால் இக்கல்வெட்டு நகருக்கருகில் பெகுரில் பார்வதி நாகேஸ்வரா கோவிலில் கவனிப்பாரின்றி இருக்கிறது...ஹலே கன்னட (பழைய கன்னடம்) மொழியில் எழுதப்பட்டுள்ள இந்த கல்வெட்டு எழுத்துக்கள் 890 ஆம் ஆண்டின் பெங்களூரு போர் ஒன்றைக் குறிப்பிடுகிறது. இதனை வரலாற்று ஆசிரியரான ஆர்.நரசிம்மச்சார் தனது கர்நாடிகா கல்லெழுத்துவியல் (தொகுதி. 10 துணைச்சேர்ப்பு) தொகுப்பில் பதிவு செய்திருந்தும் கூட, அதனை பாதுகாக்க இதுவரை எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. + +சொல்வழக்கு கதையாக இருந்தாலும் கூட பிரபலமான பழைய சம்பவம் ஒன்று இவ்வாறு நினைவு கூர்கிறது: 11 ஆம் நூற்றாண்டின் ஹோய்சாலா அரசரான இரண்டாம் வீர வல்லாளர், வேட்டையாட சென்ற போது காட்டில் வந்த வழியை மறந்து விட்டார். பசியிலும் களைப்பிலும் இருந்த போது, ஒரு ஏழை கிழவியை அவர் சந்தித்தார். அந்த கி��வி அவருக்கு அவித்த பயிறு பரிமாறினார். ராஜா நன்றியுடன் "பென்ட-கால்-உரு" () (வார்த்தை அர்த்தத்தில், "அவித்த பீன்ஸ்களின் நகரம்") என்று அந்த இடத்திற்கு பெயரிட்டார். அது இறுதியில் "பெங்களூரு" என்று ஆனது. + +11, டிசம்பர் 2005 அன்று, பெங்களூர் என்கிற பெயரை "பெங்களூரு" என்று பெயர்மாற்றம் செய்வதற்கு ஞானபீட விருது வென்ற யூ.ஆர். அனந்தமூர்த்தி அளித்திருந்த ஒரு யோசனையை ஏற்றுக் கொண்டதாக கர்நாடக அரசு அறிவித்தது. 27, செப்டம்பர் 2006 அன்று புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) உத்தேசிக்கப்பட்ட பெயர் மாற்றத்தை அமல்படுத்த தீர்மானம் நிறைவேற்றியது. கர்நாடகா அரசாங்கத்தால் அந்த தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதிகாரப்பூர்வமாக நவம்பர் 1, 2006 முதல் பெயர் மாற்றத்தை அமலாக்க முடிவு செய்யப்பட்டது. ஆயினும், மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து ஒப்புதல் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதங்களின் காரணமாக இந்த நிகழ்முறை சற்று முடங்கியது. + +மேலைக் கங்கர்களின் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆட்சிக்கு பிறகு, கிபி 1024 ஆம் ஆண்டு சோழர் களால் பெங்களூரு கைப்பற்றப்பட்டு பின் 1070 ஆம் ஆண்டில் சாளுக்கிய-சோழர்களின் வசம் சென்றது. 1116 ஆம் ஆண்டில், ஹோய்சாளப் பேரரசு சோழர்களை தூக்கியெறிந்ததோடு தனது ஆட்சியை பெங்களூருக்கும் நீட்டித்தது. நவீன பெங்களூரு விஜயநகர சாம்ராச்சியத்தின் குத்தகைதாரர்களில் ஒருவரான முதலாம் கெம்பெ கவுடாவினால் நிறுவப்பட்டது. இவர் செங்கல்-கலவை கோட்டை ஒன்றையும் நந்தி கோயில் ஒன்றையும் நவீன பெங்களூருவின் அருகாமையில் 1537 ஆம் ஆண்டில் கட்டினார். புதிய நகரத்தை கெம்பெ கவுடா "கந்துபூமி" அல்லது "நாயகர்களின் பூமி" என்று குறிப்பிட்டார். + +பெங்களூரு கோட்டைக்குள்ளாக, நகரம் சிறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது - ஒவ்வொன்றும் ஒரு "பேட்டெ" (பேட்டை) என்றழைக்கப்பட்டது. நகரம் இரண்டு முக்கிய வீதிகளைக் கொண்டிருந்தது. சிக்கபேட்டெ வீதி கிழக்கு-மேற்காக சென்றது, தொட்டபேட்டெ வீதி வடக்கு-தெற்காக சென்றது. இவை குறுக்கிட்ட இடம் பெங்களூரின் இதயமான தொட்டபேட்டெ சதுக்கத்தை உருவாக்கியது. கெம்பெ கவுடாவுக்கு அடுத்து வந்த, இரண்டாம் கெம்பெ கவுடா, பெங்களூரின் எல்லைகளாக அமைந்த நான்கு புகழ்பெற்ற கோபுரங்களைக் கட்டினார். +விஜயநகர ஆட்சியின் போது, பெங்களூரு "தேவராயநகர" மற்றும��� "கல்யாணபுரா" ("மங்கள நகரம்") என்றும் அழைக்கப்பட்டது. + +விஜயநகரப் பேரரசு வீழ்ந்த பின், பெங்களூரின் ஆட்சி பல கைகளுக்கு மாறியது. +1638 ஆம் ஆண்டில், ரனதுல்லா கான் தலைமையிலான ஒரு பெரும் பீஜப்பூர் படை ஷாஜி போன்ஸ்லேவுடன் இணைந்து மூன்றாம் கெம்பெ கவுடாவைத் தோற்கடித்தது. பெங்களூரு ஷாஜிக்கு கொடையாகக் கொடுக்கப்பட்டது. +1687 ஆம் ஆண்டில், முகலாய தளபதியான காசிம் கான் ஷாஜியின் மகனான எகோஜியைத் தோற்கடித்து, பெங்களூரை மைசூரின் சிக்கதேவராஜ உடையாருக்கு (1673-1704) 300,000 ரூபாய்க்கு விற்று விட்டார். 1759 ஆம் ஆண்டில் இரண்டாம் கிருஷ்ணராஜ உடையார் இறந்த பிறகு, மைசூர் ராணுவத்தின் படைத் தளபதியாக இருந்த ஹைதர் அலி தன்னை மைசூரின் உண்மையான ஆட்சியாளராக பிரகடனப்படுத்திக் கொண்டார். +பின்னர் ஆட்சி மைசூர்ப் புலி என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் மகனான திப்பு சுல்தான் வசம் சென்றது. +நான்காம் ஆங்கிலேய-மைசூர் போரில் (1799) திப்பு சுல்தான் தோற்கடிக்கப்பட்டு மரணத்தை தழுவிய பிறகு இறுதியில் பெங்களூரு பிரித்தானிய இந்திய சாம்ராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. +பிரித்தானியர்கள் பெங்களூரு "பீடெ"யின் நிர்வாகக் கட்டுப்பாட்டை மைசூர் பேரரசரிடம் திருப்பிக் கொடுத்து விட்டு, கன்டோன்மென்டை மட்டும் தங்கள் பரிபாலனத்தின் கீழ் வைத்துக் கொண்டனர். +மைசூர் ராச்சியத்தின் 'இருப்பிடம்' முதலில் மைசூரில் 1799 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. பின் இது 1804 ஆம் ஆண்டில் பெங்களூருக்கு மாற்றப்பட்டது. +இந்த காலத்தில் மதராஸ் பிரசிடென்சியில் இருந்து தொழிலாளர்களை பணியமர்த்தி பின் அவர்களை கன்டோன்ட்மென்ட் பகுதிக்கு மாற்றுவது பிரித்தானியருக்கு சுலபமானதாக இருந்தது. +மைசூர் ராஜ்ஜியம் தனது தலைநகரை மைசூர் நகரத்தில் இருந்து பெங்களூருக்கு 1831 ஆம் ஆண்டில் மாற்றியது. + +இந்த காலகட்டத்தின் இரண்டு முக்கிய வளர்ச்சிகள் நகரின் துரித வளர்ச்சிக்கு பங்களித்தது: அவற்றுள் ஒன்று தந்தி இணைப்புகளின் அறிமுகம் மற்றையது 1864 ஆம் ஆண்டின் மதராசுக்கான இரயில் இணைப்பாகும். +19 ஆம் நூற்றாண்டில் பெங்களூரு ஒரு இரட்டை நகரமாய் ஆனது. "பெடெ" வாசிகள் பெரும்பாலும் கன்னடத்தினராக இருந்தார்கள். பிரித்தானியரால் உருவாக்கப்பட்ட "கன்டோன்ட்மென்ட்" பகுதி குடியிருப்புவாசிகள் பெருமளவில் தமிழர்களாக இருந்தனர். 1898 ஆம் ஆண்டில் பெங்களூரில் பிளேக் தொற்றுநோய் பரவியது. இது அந்நகரின் மக்கள்தொகையை பெருமளவு குறைத்தது. +மல்லேஸ்வரா மற்றும் பசவனகுடியின் புதிய விரிவாக்க பகுதிகள் 'பெடெ'யின் வடக்கு மற்றும் தெற்கில் உருவாக்கப்பட்டன. +தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க தொலைபேசி கம்பிகள் இடப்பட்டன. 1898 ஆம் ஆண்டில் ஒரு சுகாதார அதிகாரியும் நியமனம் செய்யப்பட்டார். +1906 ஆம் ஆண்டில், இந்தியாவில் முதன்முதலில் மின்சாரத்தை பெற்ற நகரமாக பெங்களூரு ஆனது. சிவசமுத்திரத்தில் அமைந்துள்ள நீர்மின் ஆலையில் இருந்து மின்சாரம் பெறப்பட்டது. +இந்தியாவின் தோட்ட நகரமாக பெங்களூரின் புகழ் 1927 ஆம் ஆண்டில் நான்காம் கிருஷ்ணராஜ உடையாரின் ஆட்சியின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களின் போது துவங்கியது. நகரை அழகுபடுத்துவதற்காக பூங்காக்கள், கட்டிடங்கள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன. +1947 ஆகஸ்டு மாதத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, மைசூர் மகாராஜா அரசபிரமுகராக இருந்த புதிய மைசூர் ராச்சியத்தில் தான் பெங்களூரு தொடர்ந்தது. +பொதுத் துறை வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி ஆகியவை மாநிலத்தின் பிற பகுதியில் இருந்து கன்னடத்தினர் நகருக்குள் குடியேறுவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியது. +1941-51 மற்றும் 1971-81 தசாப்தங்களில் பெங்களூரு துரித வளர்ச்சியை கண்டது. இது வடக்கு கர்நாடகாவில் இருந்து ஏராளமானோர் இந்நகரில் குடியேற வழி செய்தது. +1961 ஆம் ஆண்டுவாக்கில், 1,207,000 மக்கள்தொகையுடன் இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக பெங்களூரு ஆகியிருந்தது. + +தொடர்ந்து வந்த சகாப்தங்களில், நகரில் பல தனியார் நிறுவனங்கள் தோன்றியதைத் தொடர்ந்து பெங்களூரின் உற்பத்தி தளம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வந்தது. +பெங்களூரு தனது நில விற்பனைச் சந்தையில் 1980கள் மற்றும் 1990களில் பெரும் வளர்ச்சியைக் கண்டது. நாட்டின் பிற பகுதிகளில் இருந்து மூலதன முதலீட்டாளர்கள் பெங்களூரின் பெருமளவிலான காலி மனைகள் மற்றும் வீடுகளை பலமாடி அடுக்கங்களாக மாற்றியதால் இந்த வளர்ச்சி உத்வேகம் பெற்றது. 1985 ஆம் ஆண்டில், டெக்சாஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் நிறுவனம் தான் பெங்களூரில் தனது தளத்தை அமைத்த முதல் பன்னாட்டு நிறுவனமாகும். +பிற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் பின்தொடர்ந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிவாக்கில், பெங்களூரு தன்னை இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்காக உறுதியாக நிறுவிக் கொண்டிருந்தது . + +தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தின் தென்கிழக்கில் பெங்களூரு அமைந்துள்ளது. +இது மைசூர் பீடபூமியின் (இருதய பகுதியில் கேம்பிரியனுக்கு முந்தைய பரந்த தக்காண பீடபூமியின் ஒரு பகுதி) 920 மீ (3,018 அடி) சராசரி உயரத்தில் அமைந்துள்ளது. +இது 741 கிமீ² (286 மைல்²). பரப்பளவில் அமைந்துள்ளது. பெங்களூரு நகரத்தின் பெரும் பகுதி கர்நாடகத்தின் பெங்களூரு நகர மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுற்றியிருக்கும் கிராமப் பகுதிகள் பெங்களூரு கிராம மாவட்டத்தின் ஒரு பகுதியாகும். +பழைய பெங்களூரு கிராம மாவட்டத்தில் இருந்து ராமநகரா என்னும் புதிய மாவட்டத்தை கர்நாடகா அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கிறது. + +நகரின் வழியாய் ஓடும் பெரிய ஆறு எதுவும் இல்லை. ஆயினும் வடக்கில் 60 கிமீ தொலைவில் (37 மைல்கள்) நந்தி மலையில் ஆர்க்காவதி ஆறும் தென்பெண்ணை ஆறும் சந்தித்துக் கொள்கின்றன. +அர்காவதி ஆற்றின் சிறு கிளைநதியான விருட்சபவதி ஆறு நகருக்குள்ளாக பசவனகுடியில் தோன்றி நகரின் வழியே பாய்கிறது. +பெங்களூரின் பெரும் கழிவுகளை அர்க்காவதி மற்றும் விருட்சபவதி ஆறுகள் சேர்ந்து தான் சுமக்கின்றன. +1922 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ஒரு கழிவுநீர் அமைப்பு நகரின் 215 கிமீ² (133 மைல்²) தூரத்திற்கு பரந்து அமைந்து பெங்களூரின் சுற்றளவில் அமைந்துள்ள ஐந்து கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை இணைக்கிறது. + +16 ஆம் நூற்றாண்டில், நகரின் நீர்த்தேவைகளை நிறைவு செய்வதற்காக +முதலாம் கெம்பெ கவுடா பல ஏரிகளைக் கட்டினார். +கெம்பம்புதி கெரே தான் இந்த ஏரிகளில் மிகவும் முதன்மையானதாக இருந்தது. +20 ஆம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், நகருக்கு நீர் விநியோகம் செய்வதற்கு சர் மிர்சா இஸ்மாயில் (மைசூர் திவான், கிபி 1926-41) மூலம் நந்தி ஹில்ஸ் வாட்டர்ஒர்க்ஸ் நிறுவப்பட்டது. +தற்போது நகருக்கான நீர் வழங்கலில் சுமார் 80% பங்கினை காவிரி நதி அளிக்கிறது. எஞ்சிய 20% திப்பகொண்டனஹல்லி மற்றும் ஹெசராகட்டா +ஆகிய அர்காவதி ஆற்றின் நீர்த்தேக்கங்கள் மூலம் பெறப்படுகிறது. பெங்களூரு ஒரு நாளைக்கு 800 மில்லியன் லிட்டர்கள் (211 மில்லியன் அமெரிக்க கேலன்கள்) நீரைப் பெறுகிறது. இது வேறு எந்த ஒரு இந்திய நகரத்தைக் காட்டிலும் அதிகமானதாகும். +ஆயினும், ��ெங்களூரு சில சமயங்களில் குறிப்பாக கோடைப் பருவங்களின் போது நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. + +பெங்களூரு ஏராளமான நன்னீர் ஏரிகள் மற்றும் குளங்களைக் கொண்டிருக்கிறது. மடிவாலா குளம், ஹெப்பல் ஏரி, அல்சூர் ஏரி மற்றும் சாங்க்கி குளம் ஆகியவை அவற்றில் பெரியவையாகும். +வண்டல் படிவுகளின் வண்டல் மற்றும் மணல் அடுக்குகளில் இருந்து நிலத்தடிநீர் தோன்றுகிறது. + +நகரத்தின் தாவர வகைகளைப் பொறுத்த வரை பெரும் எண்ணிக்கையில் இலையுதிர் வகை மரங்களும் சிறு எண்ணிக்கையில் தென்னை மரங்களும் உள்ளன. பெங்களூரு நிலவதிர்வு மண்டலத்தில் இரண்டாம் அடுக்கு பகுதியாக (ஒரு ஸ்திரமான மண்டலம்) வகுக்கப்பட்டிருந்தாலும், 4.5 ரிக்டர் அளவுக்கான பெரிய பூகம்பங்களை இது கண்டிருக்கிறது. + +அதிக உயரமான இடத்தில் அமைந்திருக்கும் காரணத்தால், பெங்களூரு ஆண்டுமுழுவதும் பெரும்பாலும் ரம்மியமான காலநிலையையே கொண்டிருக்கிறது, ஆயினும் அவ்வப்போதான வெப்ப அலைகள் கோடையில் அசவுகரியத்தை உண்டுபண்ணத்தக்கனவாக இருக்கின்றன. ஜனவரி மாதம் மிகவும் குளிர்ந்த மாதமாக இருக்கிறது. சராசரி குறைந்த வெப்பநிலை 15.1 °C ஆக இருக்கும். ஏப்ரல் மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கிறது. சராசரி உயர்ந்த வெப்பநிலையாக 33.6 °C இருக்கும். பெங்களூரில் மிக அதிகமாகப் பதிவான வெப்பநிலை 38.9°C ஆகும். மிகவும் குறைந்தபட்சமாக 7.8 °C (1884 ஜனவரி) பதிவாகியிருக்கிறது. குளிர்கால வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 12 °C க்கு கீழ் சரியும். கோடை வெப்பநிலைகள் அபூர்வமாகத் தான் 36-37 °C (100 °F) க்கு அதிகமாக இருக்கும். +வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவக்காற்று இரண்டில் இருந்தும் பெங்களூரு மழைப்பொழிவைப் பெறுகிறது. செப்டம்பர், அக்டோபர் மற்றும் ஆகஸ்டு ஆகியவை முறையே மிகவும் மழைப்பொழிவு மிகுந்த காலங்களாகும். ஓரளவு அடிக்கடி நிகழும் இடிமின்னலுடனான புயல் மழையால் கோடை வெப்பம் சரிக்கட்டப்படுகிறது. இது மின்துண்டிப்பு மற்றும் உள்ளூர் வெள்ளப்போக்கிற்கும் அவ்வப்போது காரணமாகிறது. +24 மணி நேர காலத்தில் பதிவான மிக அதிக மழைப்பொழிவு அக்டோபர் 1, 1997 அன்று பதிவானது. + +புருகத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) தான் நகரத்தின் நிர்வாகத்திற்கான பொறுப்பில் இருக்கிறது. + +புருகத் பெங்களூரு மகாநகர பலிகே பெருநகர மாமன்றம் மூலம் நடத்தப்படுகிறது. +மாமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொரு வார்டுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். +மாமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. +மாமன்றத்தின் ஒரு மேயர் மற்றும் ஆணையர் இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் பிரிவில் இருந்து ஒருவருக்கோ அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண் வேட்பாளர் ஒருவருக்கோ இந்த இடம் ஒதுக்கப்படுகிறது. + +பெங்களூரின் துரித வளர்ச்சியானது போக்குவரத்து நெருக்கடி மற்றும் உள்கட்டுமான பழமைப்படல் ஆகியவை தொடர்பான பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது. இவை பெங்களூரு மகாநகர பாலிகேவுக்கு தீர்ப்பதற்கு சவாலளிக்கும் பிரச்சினைகளாக உள்ளன. +2003 ஆம் ஆண்டில் வெளிவந்த பெங்களூரின் இயற்பியல், உயிரியல் மற்றும் சமூகபொருளாதார அளவீடுகள் குறித்த "பெதெல்ல சுற்றுச்சூழல் மதிப்பீடு அமைப்பு" (BEES), பெங்களூரின் தண்ணீர் தரம் மற்றும் பிராந்திய மற்றும் நீர்ப்புற சூழலமைப்பு ஏறக்குறைய "உன்னதமானவை" யாக இருப்பதாக சுட்டிக் காட்டியது. நகரின் சமூக பொருளாதார அளவீடுகள் (போக்குவரத்து நெரிசல், வாழ்க்கைத் தரம்) ஆகியவை குறைந்த மதிப்பெண்களே பெற்றன. + +நகரின் திட்டமிடப்படாத வளர்ச்சியானது பெரும் போக்குவரத்து நெருக்கடியில் விளைந்தது. மேற்பால அமைப்பு கட்டுவதன் மூலமும் ஒருவழிப்பாதைகள் மூலமும் இந்த பிரச்சினையைத் தீர்க்க மாநகராட்சி முனைந்தது. +சில மேற்பாலங்களும் ஒருவழிப் பாதைகளும் போக்குவரத்து நெருக்கடியான சூழலை ஓரளவுக்குக் குறைக்க உதவினாலும் நகர போக்குவரத்தின் அபரிமிதமான வளர்ச்சிக்கு அவற்றால் ஈடு கொடுக்க முடியவில்லை. 2005 ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இரண்டும் தங்களது வருடாந்திர நிதி ஒதுக்கீட்டில் பெங்களூரின் உள்கட்டுமான மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க தொகையை ஒதுக்கின. நகர வளர்ச்சித் திட்டங்களை வடிவமைப்பதிலும் செயல்படுத்துவதிலும் பெங்களூரு வளர்ச்சி கழகம் (BDA) மற்றும் பெங்களூரு திட்டப் பணிப்படை (BATF) ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு மகாநகர பாலிகே செயல்படுகிறது. +ஒரு நாளைக்கு 3,000 டன்கள் திடக்கழிவினை பெங்களூரு உருவாக்குகிறது. இதில் 1,139 டன்கள் சேகரிக்கப்பட்டு கர்நாடகா கழிவுர மேம்பாட்டு வாரியம் போன்ற கழிவு��ப் பிரிவுகளுக்கு அனுப்பப்படுகின்றன. +எஞ்சிய திடக் கழிவுகள் நகராட்சியால் திறந்த வெளிகளிலோ அல்லது நகருக்கு வெளியே சாலையோரங்களிலோ கொட்டப்படுகின்றன. + +போக்குவரத்து காவல்துறை, நகர ஆயுதப்படை காவல்துறை, மத்திய குற்றவியல் பிரிவு மற்றும் நகர குற்றவியல் ஆவணப் பிரிவு உள்ளிட்ட ஆறு புவியியல் மண்டலங்களை பெங்களூரு நகர காவல்துறை (BCP) கொண்டுள்ளது. அத்துடன் இரண்டு அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உள்பட 86 காவல் நிலையங்களையும் இயக்குகிறது. கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில் கர்நாடகா உயர்நீதி மன்றம், கர்நாடகா சட்டமன்றம் மற்றும் கர்நாடக ஆளுநர் இல்லம் ஆகிய முக்கிய மாநில அரசாங்க அமைப்புகளின் இருப்பிடங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவைக்கு மூன்று உறுப்பினர்களையும், கர்நாடகா சட்ட மன்றத்திற்கு 28 உறுப்பினர்களையும் பெங்களூரு பங்களிப்பு செய்கிறது. + +பெங்களூரில் மின்சார ஒழுங்கு கர்நாடகா மின் விநியோக நிறுவனம் (KPTCL) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. +இந்தியாவில் பல நகரங்களைப் போலவே, பெங்களூரிலும் அறிவிக்கப்பட்ட மின்தடை உள்ளது. குறிப்பாக கோடைக் காலங்களில். வீட்டுத் தேவைகள் மற்றும் பெருநிறுவனத் தேவைகள் இரண்டின் நுகர்வையும் பூர்த்தி செய்வதற்கு மின்சாரம் வழங்கும் நிறுவனங்களுக்கு இது அவசியமாகிறது. + +பெங்களூரின் பொருளாதாரம் (2002-03 மொத்த மாவட்ட வருவாய்) அதனை இந்தியாவின் ஒரு பிரதான பொருளாதார மையமாக ஆக்குகிறது. 10.3% பொருளாதார வளர்ச்சியுடன், பெங்களூரு தான் இந்தியாவில் மிகத்துரித வளர்ச்சியுறும் முக்கிய பெரு நகரமாக இருக்கிறது. தவிரவும், பெங்களூரு தான் இந்தியாவின் நான்காவது பெரிய துரித நகர்வு நுகர்வு பொருள் (FMCG) சந்தையாக இருக்கிறது. மிக உயர்ந்த சொத்துமதிப்பு கொண்ட தனிநபர்கள் எண்ணிக்கையில் மூன்றாவது பெரிய மையமாக திகழும் இந்நகரம் 10,000 க்கும் அதிகமான டாலர் மில்லியனர்களைக் கொண்டுள்ளது. அத்துடன் முதலீடு செய்யத்தக்க உபரியைக் கொண்டுள்ள சுமார் 60,000 பெரும் பணக்காரர்களையும் கொண்டுள்ளது. 2001 வாக்கில், அந்நிய நேரடி முதலீட்டில் பெங்களூரின் பங்களிப்பு இந்திய நகரங்களில் நான்காவது பெரியதாகும். + +1940 ஆம் ஆண்டில் சர் மிர்சா இஸ்மாயில் மற்றும் சர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யா ஆ���ிய தொழில்துறை முன்னோடிகள் பெங்களூரின் வலிமையான உற்பத்தி மற்றும் தொழில்துறை அடித்தளத்தை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்கை ஆற்றினார்கள். +பல பொதுத்துறை நிறுவனங்களின் தலைமையகங்கள் பெங்களூரில் அமைந்துள்ளன. +1972 ஜூன் மாதத்தில், விண்வெளித் துறையின் கீழ் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் இந்நகரில் அமைந்தது. + +இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய இந்தியாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பெரிய மென்பொருள் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. நகரில் அமைந்துள்ள ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் காரணமாக பெங்களூரு "இந்தியாவின் சிலிகான் பள்ளத்தாக்கு" என்று அழைக்கப்படுகிறது. இவை இந்தியாவின்2006-07 தகவல்தொழில்நுட்ப சேவை ஏற்றுமதியில் 33% பங்களிப்பு செய்தன. + +தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியானது நகருக்கு பிரத்தியேக சவால்களையும் அளித்திருக்கிறது. நகரத்தின் உள்கட்டமைப்பில் மேம்பாட்டைக் கோரும் நகரின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும், கர்நாடகத்தின் கிராமப் பகுதி மக்களையே தங்கள் பிரதான வாக்கு வங்கிகளாகக் கொண்டிருக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையே சிலசமயங்களில் கருத்து மோதல்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் உயிரித் தொழில்நுட்பம் தொடர்பான துறைகளின் மையமாக பெங்களூரு விளங்குகிறது. 2005 ஆம் ஆண்டில், இந்தியாவின் 265 உயிரிதொழில்நுட்ப நிறுவனங்களில் சுமார் 47% இங்கு அமைந்திருந்தன; இந்தியாவின் மிகப்பெரிய உயிரிதொழில்நுட்ப நிறுவனமான பயோகான் நிறுவனமும் இதில் அடங்கும். + +பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்ட பெங்களூரு சர்வதேச விமான நிலையம் (ATA குறியீடு: BLR) 24 மே 2008 முதல் தனது செயல்பாட்டைத் துவக்கியது. +முன்னதாக நகருக்கு எச்ஏஎல் விமானநிலையம் சேவையாற்றி வந்தது. இது இந்தியாவின் நான்காவது பரபரப்பான விமானநிலையமாக இருந்தது. ஏர் டெக்கான் மற்றும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது தலைமையகங்களை பெங்களூரில் கொண்டுள்ளன. +"நம்ம மெட்ரோ" என்றழைக்கப்படும் துரித போக்குவரத்து அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளது. +நிறைவுறுகையில் இது 41 நிறுத்தங்களை அடக்கி, தரைக்கு மேலும், தரைக்குகீழும் ஆன தொடர்வண்டி வலைப்பின்னலைக் கொண்டிருக்கும். இந்திய ரயில்வே மூலம் பெங்களூரு நாட்டின் பிற நகரங்களுடன் நல்ல இணைப்பைப் பெற்றிருக்கிறது. "ராஜதானி எக்ஸ்பிரஸ்" நகரை இந்திய தலைநகரான புது டெல்லியுடன் இணைக்கிறது. +இருப்புப் பாதை வழியே கர்நாடகாவின் அநேக நகரங்கள், மற்றும் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுடனும் பெங்களூரு இணைக்கப்பட்டுள்ளது. + +"ஆட்டோக்கள்" என்றழைக்கப்படும் மூன்று சக்கர, கருப்பு மற்றும் மஞ்சள் நிற தானியங்கி மூவுருளி உந்து போக்குவரத்துக்கு பிரபலமானதாகும்.] மீட்டர் பொருத்தப்பட்டுள்ள இவை மூன்று பயணிகள் வரை சுமந்து செல்லும். சற்று கூடுதல் கட்டணத்தில் வாடகை மகிழுந்து சேவைகளும் உண்டு. + +பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) மூலம் இயக்கப்படும் பேருந்துகளும் நகரில் பொதுப் போக்குவரத்துக்கான ஒரு வழியாக இருக்கின்றது. பயணிகள் இந்த பேருந்துகளில் பயணிக்கும் போது டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். அடிக்கடி பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து முன் அனுமதிச் சீட்டு வசதியையும் போக்குவரத்துக் கழகம் வழங்குகிறது. முக்கிய தடங்களில் குளிரூட்டப்பட்ட, சிவப்பு வண்ண வால்வோ பேருந்துகளையும் இப்போக்குவரத்துக் கழகம் இயக்குகிறது. பெங்களூரை கர்நாடகாவின் பிற பகுதிகள் மற்றும் பிற மாநிலங்களுடன் இணைக்கும் வகையில் கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் 6,600 பேருந்துகளை 5,700 கால அட்டவணை நேரங்களில் இயக்கி வருகிறது. + +பெங்களூரு நகரம் மக்கள்தொகையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலகின் 28வது பெரிய நகரமாகவும் திகழ்கிறது. 2009 ஆம் ஆண்டு மக்கள்தொகை 5,300,000 இருந்ததாய் மதிப்பிடப்பட்டது. 1991-2001 காலத்தில் புது டெல்லிக்கு அடுத்து மிகத் துரித வளர்ச்சி கண்ட இந்திய பெருநகரம் பெங்களூரு ஆகும். இந்த பத்தாண்டுகளில் வளர்ச்சி விகிதம் 38% ஆக இருந்தது. பெங்களூருவாசிகள் ஆங்கிலத்தில் "பெங்களூரியன்ஸ்" என்றும் கன்னடத்தில் "பெங்களூரினவாரு" என்றும் குறிப்பிடப்படுகிறார்கள். கன்னடத்தை தாய்மொழியாகக் கொண்டவர்கள் நகர மக்கள்தொகையில் சுமார் 39% ஆக இருக்கிறார்கள். + +நகரத்தின் பன்முகக் கலாச்சார இயல்பால் பிற மாநிலங்களில் இருந்து மக்கள் பெங்களூரு வந்து குடியேறுகின்றனர். நகரின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 14.3% இருக்கிறார்கள். +கன்னடம் மற்றும் ஆங்கிலம் தவிர தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகியவை நகரில் பேசப்படும் பிற முக்கிய மொழிகளாக உள்ளன. 2001 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, பெங்களூரு மக்கள்தொகையில் 79.37% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். இது ஏறக்குறைய தேசிய சராசரியை ஒட்டி இருக்கிறது. முஸ்லீம்கள் மக்கள்தொகையில் 13.37% பேர் இருக்கிறார்கள். இதுவும் ஏறக்குறைய தேசிய சராசரி அளவை ஒட்டியே உள்ளது. கிறிஸ்தவ மற்றும் சமண மதத்தவர்கள் மக்கள்தொகையில் முறையே 5.79% மற்றும் 1.05% இருக்கிறார்கள். இது இம்மதங்களின் தேசிய சராசரிகளை விட இருமடங்காகும். +ஆங்கிலோ இந்தியர்களும் நகரில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலுள்ள பிரிவினராக உள்ளனர். பெங்களூரு மக்கள்தொகையில் பெண்கள் 47.5% உள்ளனர். மும்பைக்கு பிறகு இந்திய பெருநகரங்களில் பெங்களூரு தான் இரண்டாவது பெரிய எழுத்தறிவு விகிதம் (83%) கொண்ட நகரமாய் உள்ளது. பெங்களூரு மக்கள்தொகையில் சுமார் 10% சேரிகளில் வாழ்கிறார்கள். மும்பையுடனும் மற்றும் நைரோபி போன்ற வளரும் நாடுகளின் பிற நகரங்களுடனும் ஒப்பிடுகையில் இது குறைந்த அளவேயாகும். இந்தியாவின் 35 பெரிய நகரங்களில் பதிவாகும் மொத்த குற்றங்களில் பெங்களூரு 9.2% பங்களிப்பை கொண்டிருப்பதாக 2004 தேசிய குற்றப் பதிவுகள் கழகம் சுட்டிக் காட்டுகிறது. டெல்லி மற்றும் மும்பை முறையே 15.7% மற்றும் 9.5% பங்களிக்கின்றன. +பெங்களூரு "இந்தியாவின் தோட்ட நகரம்" என்று அழைக்கப்படுகிறது. இதற்குக் காரணம் இங்கு லால் பாக் மற்றும் கப்பன் பார்க் உள்ளிட்ட பல பொதுப் பூங்காக்கள் உள்ளன. +பழைய மைசூர் சாம்ராச்சியத்தின் பாரம்பரிய கொண்டாட்ட அடையாளமான தசரா தான் அரசாங்க பண்டிகை ஆகும். பெரும் உற்சாகத்துடன் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. + +"கரக சக்தியோத்சவா" அல்லது பெங்களூரு கரகா என்றழைக்கப்படும் பெங்களூரின் மிக முக்கியமான பழமையான பண்டிகைகளை நகரம் கொண்டாடுகிறது. "தீபங்களின் பண்டிகை"யான தீபாவளி மக்கள்வாழ்க்கைமுறை மற்றும் மத எல்லைகளைக் கடந்து கொண்டாடப்படும் மற்றுமொரு முக்கிய பண்டிகையாகும். பிற பாரம்பரிய இந்திய பண்டிகைகளான விநாயகர் சதுர்த்தி, உகாதி, சங்கராந்தி, ஈத் உல்-பித்ர், மற்றும் கிறிஸ்துமஸ் ஆகியவையும் இங்கு கொண்டாடப்படுகின்றன. +கன்னட திரை உலகின் தாயகமாக பெங்களூரு விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80 கன்னட திரைப்படங்கள் இங்கிருந்து வெளியாகின்றன.. மறைந்த நடிகரான டாக்டர். ராஜ்குமார் கன்னடத் திரையுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்தவர்களில் மிக முக்கியமான ஒருவர் ஆவார். + +சமையல்கலையின் பன்முகத்தன்மை பெங்களூரின் சமூக மற்றும் பொருளாதார பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாய் உள்ளது. ரோட்டோரக் கடையினர், தேநீர்க்கடையினர், மற்றும் தென்னிந்திய, வட இந்திய, சீன மற்றும் மேற்கத்திய துரித உணவுகள் நகரில் மிகவும் பிரபலம் பெற்றுத் திகழ்கின்றன. +உடுப்பி உணவகங்கள் மிகவும் பிரபலம் பெற்றவையாய் உள்ளன. இவை முதன்மையாக பிராந்திய சைவ உணவுகளை வழங்குகின்றன. + +இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனத்தின் முக்கிய மையமாகவும் பெங்களூரு திகழ்கிறது. பாரம்பரிய இசை மற்றும் நடனக் கச்சேரிகள் ஆண்டு முழுவதிலும் குறிப்பாக ராமநவமி மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாக்களின் போது பரவலாக நடத்தப்படுகின்றன. +நகரில் உற்சாகமான கன்னட நாடக இயக்கமும் இருக்கிறது. ரங்க சங்கரா போன்ற அமைப்புகள் இதனை முன்னெடுத்துச் செல்கின்றன. +சர்வதேச ராக் கச்சேரிகள் நடப்பதற்கான முதன்மை இடங்களில் ஒன்றாகவும் பெங்களூர் ஆகியுள்ளது. + +மட்டைப்பந்து தான் பெங்களூரின் மிகப் பிரபல விளையாட்டுகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இந்திய மட்டைப்பந்து அணியின் முன்னாள் தலைவர்களான ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளே, மற்றும் ராபின் உத்தப்பா மற்றும் இன்னும் பலர் உள்பட ஏராளமான தேசிய மட்டைப்பந்து வீரர்கள் பெங்களூரில் இருந்து வந்துள்ளனர். பல சிறுவர்கள் சாலைகளிலும் நகரின் பல பொது இடங்களிலும் சாலையோர கிரிக்கெட் விளையாடுவதைக் காணலாம். பெங்களூரின் முதன்மையான உலகளாவிய மட்டைப்பந்து மைதானமாக எம். சின்னசுவாமி அரங்கம் உள்ளது. இது 40,000 பேர் அமரும் இடம் கொண்டதாகும். 1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம், 1996 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஆகியவற்றின் ஆட்டங்கள் இங்கு நடந்துள்ளன. + +இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிளையணியான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் பிரீமியர் ஹாக்கி லீக் ("PHL") கிளையணியான பெங்களூரு ஹை-ஃபிளையர்ஸ் ஆகியவை நகரில் அமைந்துள்ளன. +இந்தியாவின் டேவிஸ் கோப்பை டென்னிஸ் அணி உறுப்பினர்க���ான மகேஷ் பூபதி மற்றும் ரோகன் போபன்னா ஆகியோரும் பெங்களூரில் தான் வசிக்கிறார்கள். நகரில் ஆண்டுதோறும் பெண்கள் டென்னிஸ் கழகத்தின் பெங்களூரு ஓபன் போட்டிகள் நடக்கின்றன. செப்டம்பர் 2008 துவங்கி, ஆண்டுதோறும் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபன் ஏடிபி போட்டிகளும் பெங்களூரில் நடைபெறுகின்றன. + +தேசிய நீச்சல் வெற்றிவீரரான நிஷா மிலெட், உலக ஸ்னூக்கர் வெற்றிவீரரான பங்கஜ் அத்வானி மற்றும் முன்னாள் அனைத்து இங்கிலாந்து ஓபன் பூப்பந்து வெற்றிவீரரான பிரகாஷ் படுகோனே ஆகியோரும் பெங்களூரில் இருந்து வரும் பிற விளையாட்டு பிரபலங்களில் அடங்குவர். + +19 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை, பெங்களூரில் கல்வி என்பது பிரதானமாக மதத் தலைவர்களால் நடத்தப்பட்டதால் அந்த மதத்து மாணவர்களுக்கு மட்டுமேயானதாக இருந்தது. மும்மடி கிருஷ்ணராஜா உடையார் ஆட்சியின் போது மேற்கத்திய கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. பெங்களூரில் இரண்டு பள்ளிகள் நிறுவப்பட்டன. இதனையடுத்து, வெஸ்லியன் மிஷன் 1851 ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை நிறுவியது. 1858 ஆம் ஆண்டில் பெங்களூரு உயர்நிலைப் பள்ளி அரசாங்கத்தால் துவக்கப்பட்டது. + +சுதந்திரத்திற்கு பிந்தைய இந்தியாவில், இளம் குழந்தைகளுக்கான பள்ளிகள் மாற்றம் கண்டுள்ளன. இடைநிலைக் கல்வி பள்ளி இறுதித் தேர்வு சான்றிதழ் (எஸ்எஸ்எல்சி), இடைநிலைக் கல்விக்கான இந்திய சான்றிதழ் மற்றும் நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் போன்ற கல்வி வாரியங்கள் ஏதேனும் ஒன்றின் கீழ் ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலைக் கல்வியை வழங்கும் பல்வேறு பள்ளிகள் பெங்களூரில் உள்ளன. பெங்களூரு பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகவோ அல்லது தனியார் பள்ளிகளாகவோ (அரசு உதவி பெறும் மற்றும் பெறாத பள்ளிகள்) உள்ளன. தங்களது இடைநிலைக் கல்வியை முடித்த பிறகு, மாணவர்கள் பொதுவாக பல்கலைக்கு முந்தைய பியுசி படிப்பை கலை, வணிகம் அல்லது அறிவியல் ஆகிய மூன்று "பிரிவுகளில்" ஒன்றில் மேற்கொள்கிறார்கள். தேவையான படிப்பை முடித்தபிறகு, பல்கலைக்கழகங்களில் பொது அல்லது தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் பதிவு செய்து படிப்பைத் தொடரலாம். +1964 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பெங்களூரு பல்கலைக்கழகம் சுமார் 500 கல்லூரிகளுக்கு இணைப்புத் தொடர்பு வழங்குகிறது. மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 300,000 க்கும் அதிகமாக இருக்கிறது. +பெங்களூருக்கு உள்ளேயே இந்த பல்கலைக்கழகம் ஞானபாரதி மற்றும் மத்திய கல்லூரி என இரண்டு வளாகங்களைக் கொண்டுள்ளது. + +1909 ஆம் ஆண்டில் பெங்களூரில் நிறுவப்பட்ட இந்திய அறிவியல் கழகம் தான் இந்தியாவில் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் படிப்புக்கான முதன்மை நிறுவனமாகும். இந்திய பல்கலைக்கழக தேசிய சட்டப் பள்ளி (NLSIU), இந்திய மேலாண்மை நிறுவனம் பெங்களூரு (ஐஐஎம்-பி) மற்றும் இந்திய புள்ளியியல் ஆய்வு நிறுவனம் ஆகிய தேசியப் புகழ்பெற்ற நிறுவனங்களும் பெங்களூரில் அமைந்துள்ளன. இந்தியாவின் முதன்மையான மனநல சுகாதார நிறுவனமும் பெங்களூரில் தான் அமைந்துள்ளது. முதன்மையான மனநல சுகாதார நிறுவனமான மனநல சுகாதாரம் மற்றும் நரம்பியல் அறிவியலுக்கான தேசிய நிறுவனம் (NIMHANS) பெங்களூரில் அமைந்துள்ளது. + +முதல் அச்சகம் பெங்களூரில் 1840 ஆம் ஆண்டில் துவங்கப்பட்டது. 1859 ஆம் ஆண்டில் "பெங்களூரு ஹெரால்டு" பத்திரிகை பெங்களூரில் வெளியிடப்படும் முதல் வாரமிருமுறை ஆங்கில இதழாக வெளியானது. 1860 ஆம் ஆண்டில் "மைசூர் விருட்டினா போதினி" பெங்களூரில் விற்பனையாகும் முதல் கன்னட செய்தித்தாளானது. தற்போது "விஜய கர்நாடகா" மற்றும் "தி டைம்ஸ் ஆஃப் இந்தியா" ஆகியவை தான் முறையே கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் பெங்களூரில் மிக அதிக அளவில் விற்பனையாகும் பத்திரிகைகளாக இருக்கின்றன. இவற்றுக்கு நெருக்கமாக "பிரஜாவாணி" மற்றும் "டெக்கான் ஹெரால்டு" ஆகியவை வருகின்றன. + +இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஒலிபரப்பு நிறுவனமான அனைத்து இந்திய வானொலி தனது பெங்களூரு நிலையத்தில் இருந்து 1955 ஆம் ஆண்டில் ஒளிபரப்பைத் துவக்கியது. ரேடியோ சிட்டி தான் பெங்களூரில் ஒலிபரப்பான முதல் தனியார் பண்பலை வானொலியாகும். சமீப வருடங்களில், ஏராளமான பண்பலை நிலையங்கள் பெங்களூரில் இருந்து தங்கள் ஒலிபரப்பைத் துவக்கியுள்ளன. + +நவம்பர் 1, 1981 அன்று தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பு மையத்தை இங்கு நிறுவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் துவங்கியது. தூர்தர்ஷனின் பெங்களூரு அலுவலகத்தில் 1983 ஆம் ஆண்டில் ஒரு தயாரிப்பு மையம் நிறுவப்பட்டது. இதனையடுத்து 19 நவம்பர் 1983 முதல் கன்னடத்தில் ஒரு செய்தி நிகழ்ச்சியை அறிமுகப்படுத்த முடிந்தது. 15, ஆகஸ்டு 1991 அன்று தூர்தர்ஷன் கன்னட செயற்கைக்கோள் சேனல் ஒன்றையும் துவக்கியது. அது இப்போது டிடி சந்தனா என்று பெயரிடப்பட்டுள்ளது. 1991 செப்டம்பர் மாதத்தில் ஸ்டார் டிவியின் சேனல்கள் ஒளிபரப்பைத் துவக்கியபோது தனியார் செய்தித் தொலைக்காட்சிகள் பெங்களூரில் கால்பதித்தன. பெங்களூரில் பார்க்க முடிகிற செயற்கைக்கோள் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை சென்ற வருடங்களில் மிகுந்த வளர்ச்சி கண்டிருந்தாலும், இந்த வளர்ச்சி தொலைக்காட்சி அலைவரிசை விநியோகஸ்தர்கள் இடையே அவ்வப்போது மோதல்களுக்கும் இட்டுச் செல்கிறது. + +பெங்களூரில் துவங்கிய முதல் இணைய சேவை வழங்குநர் பெங்களூரு STPI ஆகும். இந்நிறுவனம் 1990களின் ஆரம்பத்திலேயே இணைய சேவைகளை வழங்கத் துவங்கியிருந்தது. ஆயினும் இந்த இணைய சேவை பெருநிறுவனங்களுக்கு மட்டுமே அதிகம் பயன்பட்டதாய் இருந்தது. +1995 ஆம் ஆண்டின் இறுதியில் VSNL பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தத்தக்க தொலைபேசிக் கம்பிவழி இணைய சேவைகளை அறிமுகப்படுத்திய பின் தான் இந்நிலை மாறியது. இப்போது பெங்களூரு தான் இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையிலான அகலப்பட்டை இணைய இணைப்புகள் கொண்ட நகரமாக உள்ளது. + + + + + + + +எயிட்சு + +பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி அல்லது பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome) என்பது எச்.ஐ.வி எனப்படும் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றல் குறைப்பு செய்யும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (வைரசால்) ஏற்படுகிற ஒரு நோயாகும். + +இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையின் செயற்படுதிறன் வலுவற்றதாகும் நிலையை படிப்படியாகத் தீவிரமடையச் செய்து, வாய்ப்பை எதிர் நோக்கியிருக்கும் தொற்றுநோய்களாலும், கட்டிகளாலும் மனிதர்களை இலகுவில் பாதிப்படையக் கூடியவர்களாகச் செய்கிறது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களைக் கொண்ட உடலில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது. + +இத்தகைய நோய்ப்பரப்புதல் ஆசனவாய், யோனிக் குழாய் அல்லது வாய் வழி கொள்ளும் உடலுறவினாலோ, இரத்ததானத்தினாலோ, கிருமி பாதித்த ஊசிகளின் உபயோகத்தினாலோ, தாயிடமிருந்து க��ழந்தைக்கு கருத்தரிப்பு, பிரசவம், பாலூட்டுதல் போன்றவைகளினாலோ அல்லது வேறெந்த வகையிலாவது மேற்சொன்ன உடல்திரவங்களைச் சாரும்பொழுதோ ஏற்படக்கூடும். + +எயிட்சு தற்பொழுது ஒரு பரவல் தொற்று நோயாகும். 2007-ல் உலகமெங்கும் 33.2 மில்லியன் மக்கள் எயிட்சோடு வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் இந்நோயினால் கொல்லப்பட்டிருப்பதாகவும் கணிக்கப்பட்டது. இம்மரணங்களில் நான்கில் மூன்று பகுதி ஆப்பிரிக்காவின் சகாராவுக்கருகில் ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சியைக் குறைத்து மனித மூலதனத்தைச் சிதைத்திருக்கிறது. + +மரபணு ஆராய்ச்சி 19 ஆம் நுற்றாண்டின் பிற்பகுதியிலோ 20 ஆம் நுற்றாண்டின் முற்பகுதியிலோ மேற்கு- மத்திய ஆப்பிரிக்காவில் எச்.ஐ.வி. தோன்றியிருக்கக் கூடும் என்பதைக் காட்டுகிறது. எயிட்சு முதன்முதலில் அமெரிக்காவின் நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களில் 1981-ல் கண்டறியப்பட்டது. 1980-களின் முற்பகுதியில் இந்நோய்க்கான காரணம் எச்.ஐ.வி. எனக் கண்டறியப்பட்டது. + +எச்.ஐ.வி. எயிட்சுக்கான சிகிச்சை, நோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த வல்லதாயிருந்தாலும் தற்சமயம் இந்நோய்க்கு தடுப்பூசியோ நிரந்தர தீர்வோ இல்லை. மீளூட்டுநச்சுயிரி எதிர்மருந்து எச்.ஐ.வி. நோயின் இறப்புவிகிதத்தையும், பாதிப்பு விகிதத்தையும் குறைக்க வல்லதாயிருந்தாலும் இம்மருந்துகள் விலையுயர்ந்தனவாகவும், கிடைப்பதற்கு அரியனவாகவும் இருப்பதால் அனைத்து நாடுகளிலும் வாடிக்கையாக கிடைப்பதில்லை. இந்நோயை குணப்படுத்துவதற்கு உள்ள இத்தகைய இடர்பாடுகளால், நோய் வராமல் தடுத்தலே இப்பரவல் தொற்றுநோயைக் கட்டுபடுத்துவதிலுள்ள முக்கிய குறிக்கோள் எனக்கருதி வைரசின் பரவலைத் தடுக்க சுகாதார நிறுவனங்கள் பாதுகாப்பான உடலுறவையும், புதிய ஊசிகளை பயன்படுத்துதலின் அவசியத்தையும் வலியுறுத்துகின்றனர். + +ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு மண்டலமுடைய மனிதர்களில் உருவாகாத சில நிலைகளின் விளைவே எயிட்சு நோயின் அறிகுறிகள் ஆகும்.பெரும்பாலும் இவ்வசாதாரண நோய் நிலைகள் பாக்டீரியா, வைரசு, காளான் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நோய்கிருமிகளின் தாக்கத்தால் ஏற்படுகின்றன. இந்நோய்க் கிருமிகளை கட்டுக்குள் வைத்திருக்கும் நோயெதிர்ப்பு மண்டலம் எச்.ஐ.வியால் சீரழிக்கப்படுவதே நோய்க்கிருமிகளின் தாக்கத்திற்குக் காரணமாகும். + +வாய்ப்பை எதிர்நோக்கிய நோய்த் தொற்றுக்கள் எயிட்சு கண்ட மனிதர்களில் மிகுதியாகக் காணப்படுகிறது. எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது. + +எயிட்சு நோய் கண்டவர்களுக்கு காபோசியின் சதைப்புற்று, கருப்பை முகப்பு புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டல புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாக தாக்கும் தன்மை உள்ளது. கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளாவிய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரபிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும். அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்சு நோயாளிகள் பிரத்தியேக நோய்தொற்றுகளுக்கு ஆளாகின்றனர். + +நியுமோசிஸ்டிஸ் நிமோனியா (முன்பு "நியுமோசிஸ்டிஸ் கரினியை" நிமோனியா என அழைக்கப்பட்ட காரணத்தால் பிசிபி எனச் சுருக்கி வழங்கப்பட்டு இப்பொழுதும் அவ்வாறே அழைக்கப்படுகிறது). இது ஆரோக்கியமான நோயெதிர்ப்புத்திறன் பெற்றவர்களில் மிக அரிதாகவும், எச்.ஐ.வி. நோயாளிகளில் மிக சாதரணமாகவும் காணப்படுகின்றது. இந்நோய் நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியை எனும் கிருமியினால் ஏற்படுகின்றது. + +மேற்கத்திய நாடுகளில் சரியான நோய்கண்டறிதல், சிகிச்சைமுறை மற்றும் நோய்க்கட்டுப்பாடு கண்டறியப்படும் முன்னர் இந்நோயே உடனடி மரணத்திற்கு காரணமாய் இருந்தது. "சி.டி.4" எண்ணிக்கை ஒரு மைக்ரோ லிட்டர் ரத்ததில் இருநூறு செல்களுக்கும் குறைவாக இருந்தால் மட்டுமே நோய்த் தாக்கும் அபாயம் உள்ள போதிலும், வளர்ந்து வரும் நாடுகளில் எயிட்சு நோய் பரிசோதிக்கப்படாத நபர்களில் இந்நோய் எயிட்சின் முதல அறிகுறியாக உள்ளது. + +காசநோய் எச்.ஐ.வியோடு தொடர்புடைய நோய் தாக்கங்களில் தனித்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது நோய் எதிர்ப்புத்திறன் உள்ள மனிதர்களுக்கும் சுவாசம் வழியாகப் பரவக்கூடியது. இந்நோய் கண்டறியப்படும் பட்சத்தில் எளிதாகக் குணப்படுத்தமுடியும். இந்நோய் எச் ஐ வி - யின் ஆரம்ப நிலையில் ஏற்படலாம். சிகிச்சையின் மூலம் குணப்படுத்த வல்லது. இருப்பினும், பன்மருந்துஎதிர்ப்பு ஒரு அதீத பிரச்சனையாகவே உள்ளது. + +காசநோய் தாக்க���் மேற்கத்திய நாடுகளில் பயன்படுத்தப்படும் நேரடி சிகிச்சை முறை மற்றும் ஏனைய மேம்படுத்தப்பட்ட நடைமுறைகளினாலும் குறைந்துவருகின்றது. ஆனால் எச்.ஐ.வி. பரவியுள்ள வளர்ந்துவரும் நாடுகளில் இத்தகைய மாற்றம் இல்லை. எச்.ஐ.வி-யின் ஆரம்ப நிலையில் ("சி.டி.4" எண்ணிக்கை > 300 செல்கள்/மைக்ரோ லிட்டர்), காசநோய் ஒரு வரையறுக்கப்பட்ட சுவாசநோயாக வெளிப்படுகிறது. எச்.ஐ.வி. நோய்த்தாக்கம் அதிகரிக்கும்பொழுது, காசநோய் சுவாசநோய்த் தன்மையில் இருந்து மாறுபட்டு நுரையீரலுக்கு வெளியே (உட்பரவிய) நோயாக வெளிப்படுகிறது. நோயறிகுறிகள் ஒரே பகுதியில் அல்லாமல், வெகுவாக எலும்பு மஜ்ஜை, எலும்பு, சிறுநீரக மற்றும் இரைப்பைக்குடல் வழி, கல்லீரல், மண்டல நாள முடிச்சு மற்றும் மைய நரம்பு மண்டலம் போன்றவைகளை பாதிக்கின்றது. + +உணவுக்குழல் அழற்சி என்பது உணவு குழலின் (தொண்டையையும் இரைப்பையையும் இணைக்கும் குழல்) கீழ் முனையில் உள்ள படர்சவ்வில் ஏற்படும் அழற்சியாகும். எச் ஐ வி நோய் பாதிக்கப்பட்ட நபர்களில் இது காளான் (கேண்டிடியாசிஸ் )அல்லது வைரசினால் (ஹெர்பெஸ் சிம்ப்லக்ஸ்-1 அல்லது சைட்டோமேகல்லோ வைரசு )ஏற்படும் நோய்த்தாக்கம். அரிய நிகழ்வாக இது மைகோபாக்டீரியாவாலும் ஏற்படும். + +எச்.ஐ.வி. நோய் தாக்கத்தில் ஏற்படும் நாள்பட்ட வயிற்றுபோக்கிற்கான காரணங்கள் பலவாகும். அவைகளில் பொதுவாக பாக்டீரியாவால் ("சால்மனெல்லா" ,"ஷிகல்லா" , "லிஸ்டீரியா" அல்லது "காம்பைலோபேக்டர்" ) மற்றும் ஒட்டுண்ணி தாக்கம் மற்றும் அறிய சந்தர்ப்ப நோய்தாக்கங்களான கிரிப்டோஸ்போரிடியாஸிஸ், [[மைக்ரோஸ்போரிடியாஸிஸ்|மைக்ரோஸ்போரிடியாஸிஸ்{ /6}, "[[மைகொபேக்டீரியம் ஏவியம்|மைகோபாக்டீரியம் ஏவியம்]] " கூட்டு (எம் எ சி ) மற்றும் வைரசு (ஆஸ்ட்ரோ வைரசு, அடினோ வைரசு, [[ரோட்டா வைரசு]] மற்றும் சைட்டோமேகல்லோ வைரசு) சைட்டோமேகல்லோ வைரசு பெருங்குடல் அழற்சியை ஏற்படுத்துகிறது . + +சில நிகழ்வுகளில், எச் ஐ வி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மருந்துகளின் பக்கவிளைவாகவோ அல்லது எச் ஐ வி நோயின் தொடர்விளைவாகவோ வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.இது பெரும்பாலும் ஆரம்ப கால நோயின் குணாதிசயமாக இருக்கிறது.[[எதிருயிரி|எதிருயிரிணியைப்]] பயன்படுத்தி "கிளாஸ்ற்றிடியம் டிபிசில்" போன்ற பாக்டீரியாக்கள் விளைவிக்கும் வயிற்றுப்போக்கை கட்டுப்படு���்த நினைக்கும் போதும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம். எச் ஐ வி நோயின் பிந்தைய காலங்களில் ஏற்படும் வயிற்றுப்போக்கானது [[குடல்பாதை|உணவு பாதையின்]] சத்துக்களை கிரகிக்கும் திறனில் ஏற்படும் மாற்றத்தால் விளைந்து எச் ஐ வி யின் உடலை [[உடல் மெலிதல்|இளைக்க]] வைக்கும் தன்மைக்கு துணைபோவதாய் இருக்கிறது. + +இந்நோயின்போது நாளடைவில் பலகீனமாகி விட்ட நரம்பு மண்டலத்தை [[நுண்ணுயிர்|நுண்ணியிரிகள்]] தாக்குவதின் மூலமாகவோ அல்லது நேரடி நோய்ப்பிணியின் காரணமாகவோ விதவிதமான மூளைநரம்பு விளைவுகள் ஏற்படலாம். + +ஒருவகை ஓரணு ஒட்டுண்ணி நோய் (டாக்சாப்பிளாசுமம்) ஒரு செல் [[ஒட்டுண்ணி|ஒட்டுயிரியான]] "டாக்சோபிளாசுமா காண்ட்டையால் " ஏற்படுகிறது. இது பொதுவாக மூளையைத் தொற்றி டாக்சோபிளாசுமா மூளையழற்சியையும், [[கண்|கண்கள்]] மற்றும் [[நுரையீரல்|நுரையீரலின்]] வியாதிகளையும் ஏற்படுத்தவல்லது. கிரிப்டோகாக்கல் மெனிஞ்சைடிஸ் எனப்படும் மூளைச்சவ்வு அழற்சி "கிரிப்டோகாக்கஸ் நியோபார்மன்சு" எனும் காளான் [[மூளை]] மற்றும் [[தண்டுவடம்|தண்டுவடத்தை]] சூழ்ந்துள்ள மூளை உறையைத் தொற்றும்போது ஏற்படுகிறது. இது [[காய்ச்சல்]], [[தலைவலி]], [[மயக்கம்]], [[வாந்தி]] எடுக்கவேண்டும் என்ற உணர்வு மற்றும் [[வாந்தி|வாந்தியை]] ஏற்படுத்தலாம். நோயாளிகளுக்கு [[வலிப்பு]] மற்றும் மன குழப்பத்தையும் ஏற்படுத்தலாம். சிகிச்சை அளிக்கத் தவறினால் [[மரணம்|மரணமும்]] ஏற்படலாம். + +தீவிர பல்குவிய வெள்ளையணு மூளையழற்சி (PML) என்பது மூளையின் [[நரம்புவால்|நரம்பணுவால்]]களை சூழ்ந்துள்ள [[நரம்புறை|மையலின் நரம்புறையை]] படிப்படியாக அழித்து நரம்புகளில் அனிச்சை விளைவுக் கடத்தலைப் பாதிக்கும் [[நரம்புறை சிதைவு நோயாகும். இந்த நோயானது 70 சதவிகித மக்களிடையே [[நச்சுயிரி உட்புதைவு|உட்புதை]] நிலையையிலுள்ள நச்சுயிரியான [[ஜே சி வைரசு|ஜே சி வைர]]சால் நோயெதிர்ப்பு சக்தியற்ற எயிட்சு நோயாளிகளுக்கு ஏற்படுத்தப்படுகிறது. இந்நோய் விரைவாக முன்னேறி பெரும்பாலும் கண்டுபிடித்த சில மாதங்களுக்குள்ளேயே மரணத்தை ஏற்படுத்தவல்லது. + +எயிட்சு மறதிநோய் தொகுப்பு என்பது எச் ஐ வி நோய்த்தொற்றால் தூண்டப்பட்டு எச் ஐ வி தொற்றிய மூளை, [[பெருவிழுங்கி|பெருவிழுங்கிகள்]] மற்றும் மைக்ரோகிளையாவின் நோயெதிர்ப்புத்திறன் ஊக்கத்தால் கிளர்ந்தெழும் ஒரு வ��ர்சிதைமாற்ற மூளையழற்சி நோயாகும். இவ்விதமான செல்கள் எச் ஐ வி யால் வளமாக தொற்றப்பட்டு நோயாளினதும் நச்சுயிரினதுமான நரம்புநச்சை சுரக்கின்றன. பிரத்தியேக நரம்புக் கோளாறுகள் எச் ஐ வி நோய் தொற்றி பல வருடங்கள் களித்து வெளிவந்து அறிவு, நடவடிக்கை மற்றும் வெளி நோக்கு நரம்பியக்கத் திறன் குறைபாடுகளைக் கொண்டிருக்கும். இவை குறைந்த "சி.டி.4" "டி" செல் அளவுகளையும் இரத்தத்தில் அதிக நச்சுயிரி சுமையையும் கொண்டிருக்கும். + +இதன் பரவல் மேற்கத்திய நாடுகளில் 10 -20 சதவிகிதமும் [[இந்தியா|இந்தியாவில்]] 1 -2 சதவிகிதமாகும். இந்த வித்தியாசம் எச் ஐ வி யின் உள்வகைகளைப் பொருத்ததாகும். எச் ஐ வி நோயாளிகளுக்கு பிந்தைய காலத்தில் எயிட்சுடன் தொடர்புடைய பித்து பிடிக்கக் கூடும். இது [[நரம்புத் தொகுதி|நரம்புகளின்]] அதிர்வுகடத்தும் பண்பின் இருமுனைக் கோளாறினால் ஏற்படும் பித்து நிகழ்வுகளைவிட அதிகமான எரிச்சலும், அறியும்சக்தி குறைபாடும், குறைவான வளமான மனநிலையையும் கொண்டிருக்கும். எச் ஐ வி யால் ஏற்படும் பித்து நாள்பட்டதாகவும் இருக்கும். பல்நோக்கு மருந்துகளாலான சிகிச்சையினால் இக்கூட்டு அறிகுறிகள் குறைவாகவே தென்படுகிறது. + +[[படிமம்:Kaposi's Sarcoma.jpg|thumb|right|150px|காபோசியின் சதைப்புற்று]] + +எச் ஐ வி நோயாளிகள் பலவிதமான [[புற்று நோய்|புற்று நோய்களுக்கான]] வாய்ப்பை பெருமளவு கூட்டியிருக்கின்றனர். இது பிரதானமாக புற்றுநோய் திறனுள்ள [[டிஎன்ஏ நச்சுயிரி|டி என் ஏ வைரசு]] களான எப்ஸ்டீன்-பார் வைரசு (EBV), காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) மற்றும் மனித [[பாப்பில்லோமா நச்சுயிரி]] போன்றவைகளின் சகத்தொற்றால் ஏற்படுகிறது. + +காபோசியின் சதைப்புற்று எச் ஐ வி நோயாளிகளில் சாதாரணமாக காணப்படும் கட்டியாகும். இந்த கட்டி 1981 இல் ஓரினச்சேர்க்கையாளர்களிடையே தென்பட்டதே எயிட்சு பரவலின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும். காமா ஹெர்பிசு வகையைச் சேர்ந்த காபோசியின் சதைப்புற்று தொடர்புடைய ஹெர்பிஸ் வைரசு (KSHV) எனும் நச்சுயிரியால் உருவாக்கப்படும் இது பெரும்பாலும் ஊதா [[முடிச்சு|முடிச்சுகளாக]] தோலில் மட்டுமல்லாது பிற உறுப்புக்களான [[வாய்]], உணவு குழாய் மற்றும் நுரையீரலையும் தாக்க வல்லது. + +உயர் நிலை [[பி - செல்|பி செல்]] [[நிணத்திசு புற்று|நிணத்திசுப் புற்று]] க்களான [[பர்கிட்ட���ன் நிணத்திசு புற்று|பர்கிட்டின் நிணநீர்ச் சுரப்பிப் புற்று]], பர்கிட்ஸ் லைக் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, டிஃப்யூஸ் லார்ஜ் பி -செல் நிணநீர்ச் சுரப்பிப் புற்று, மற்றும் [[முதல்நிலை மைய நரம்பு மண்டல நிணத்திசு புற்று|பிரைமரி சென்ட்ரல் நர்வஸ் சிஸ்டம் நிணநீர்ச் சுரப்பிப் புற்று]] ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன.இத்தகைய புற்றுக்கள் மோசமான முன்னறிவித்தலை அறிவிக்கின்றன. சில நிலைகளில் இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் எயிட்ஸினை விவரிப்பதாக அமைந்துள்ளன. [[எப்ஸ்டீன்-பார் வைரசு|எப்ஸ்டீன்-பார் வைரசு(EBV)]] இத்தகைய நிணத்திசுப்புற்றுகள் பலவற்றை உருவாக்குகிறது. + +எச் ஐ வி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏற்படும் கர்ப்பப்பை முகப்பு புற்றுநோயும் எயிட்ஸினை விவரிப்பதாக உள்ளது. இது [[மனித பாப்பிலோமா நச்சுயிரி|மனித பேபில்லோமா வைரசினால்]] (HPV) ஏற்படுத்தப்படுகிறது. + +மேலே கூறப்பட்ட எயிட்ஸினை விவரிக்கும் கட்டிகளைத்தவிர எச் ஐ வி நோயாளிகள் ஹாட்ஜ்கின்'சு நோய் மற்றும் மல துவார மற்றும் ஆசன வாய் புற்றுநோய்களால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் [[மார்பக புற்று|மார்பக புற்றுநோய்]] மற்றும் [[பெருங்குடல் புற்று|பெருங்குடல் புற்றுநோய்]] ஆகியன எச் ஐ வி நோயாளிகளில் அதிகம் காணப்படுவதில்லை. எயிட்சு நோய் சிகிச்சைக்கு மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அதிகம் உபயோகிக்கப்படும் இடங்களில் எயிட்ஸோடு தொடர்புடைய ஆபத்து வாய்ந்த புற்றுக்களின் தென்படுதல் குறைகிறது. ஆனாலும் எச் ஐ வி நோயாளிகள் மரணத்திற்கு ஆபத்தான புற்றுக்களே மிக முக்கிய காரணமாக விளங்குகிறது [62]. + +எயிட்சு நோயாளிகள் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நோய்த்தொற்றுகளால் மிதமான காய்ச்சல் மற்றும் எடை குறைவு போன்ற இனம் புரியாத நோய் அறிகுறிகளை வெளிக்காட்டுகின்றனர் இது [[மைகோபாக்டீரியம் ஏவியம்|மைகொபேக்டீரியம் ஏவியம்]],"மைகொபேக்டீரியம் இண்டர்செல்லுலரே" மற்றும் [[சைட்டோமேகல்லோ வைரசு|சைடோமெகலோவைரசு]](CMV) போன்ற தொற்றுக்களை உள்ளடக்கியது. CMV பெருங்குடல் அயர்ச்சியையும், [[சைட்டோமேகல்லோ வைரசு விழித்திரை அழற்சி|சி எம் வி விழித்திரை அழற்சி]]-ஐயும் உருவாக்கி [[குருட்டு தன்மை|பார்வையின்மையை]] ஏற்படுத்த வல்லது. + +நோய் பரவியு��்ள [[தென் கிழக்கு ஆசியா|தென் கிழக்கு ஆசியாவில்]] "[[பெனிசீலியம் மர்நெபெய்|பெனிசிலியம் மார்ணபீ]] " தோற்றுவிக்கும் [[பெனிசிலியோசிஸ்|பெனிசிலினோசிசு]] நோய், எக்ஸ்ட்ரா பல்மனரி டியுபர்குளோசிஸ் மற்றும் [[க்ரிப்டோகாக்கோசிஸ்|கிரிப்டோகாகோசிசு]] க்கு அடுத்தப்படியாக எச் ஐ வி நோயாளிகளை அதிகம் தாக்கும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றாக இருக்கிறது. + +[[படிமம்:HIV-budding-Color.jpg|right|thumbnail|300px|எச் ஐ வி -1 இன் ஒளி நுண்ணொளி எலக்ட்ரான் நுண் வரைபடம், பச்சை நிறத்துடன், வளர்க்கப்பட்ட நிண அணுவிலிருந்து வெளிப்படுகிறது.]] + +எச் ஐ வி நோய்த்தொற்றின் மிகக் கடுமையான உந்துதலில் விளைவதே எயிட்சு நோயாகும். எச் ஐ வி என்பது [[நோய் எதிர்ப்பு மண்டலம்|நோயெதிர்ப்பு மண்டலத்தின்]] முக்கிய உறுப்புகளான [["டி" செல்|டி செல்களின்]] உட்பிரிவான [["டி"-உதவி செல்|சி.டி 4 "டி"]] செல்கள், [[பெருவிழுங்கிகள்]] மற்றும் [[நரம்பு கிளை செல்|நரம்பு இழை செல்களைத்]] [[நோய்க்கிருமி தாக்கம்|தொற்றும்]] ஒரு மீள்ஊட்டு நச்சுயிரியாகும் (Retrovirus). அது சி.டி 4 "டி" செல்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ அழிக்கிறது. + +[[குருதி|இரத்தத்தில்]] ஒரு [[மைக்ரோ லிட்டர்|மைக்ரோலிட்டருக்கு]], இருநூறு செல்களே இருக்கும் அளவிற்கு சி.டி4 "டி" செல்களின் அளவு எச் ஐ வி யால் அழிக்கப்பட்ட உடன் செல்வழி நோயெதிர்ப்பு ஒழிக்கப்படுகிறது. இரத்தத்தில் மீதமிருக்கும் சி.டி4 "டி" செல்களின் அளவைப்பொருத்தும், மேலே குறிப்பிட்டதைப் போல ஏனைய தொற்றுக்களினைப் பொருத்தும் தீவிர எச் ஐ வி தொற்று நாளடைவில் நோய் உட்புதை எச் ஐ வி தொற்றாகவும், அதன்பின்னர் ஆரம்ப அறிகுறிகளுடைய எச் ஐ வி தொடராகவும், இறுதியாக எயிட்சாகவும் முன்னேறுகிறது [69]. + +மீள்ஊட்டு நச்சுயிரி எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி எயிட்சாக முன்னேறுவதற்காகும் கால இடைநிலை ஒன்பது முதல் பத்து வருடங்களாகவும், எயிட்சு உருவான பின்னர் உயிர்வாழும் காலத்தின் இடைநிலை 9.2 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது [71]. எனினும், மருத்துவ குணாதிசயங்களுடனான வியாதியாக முன்னேறும் வேகம் மனிதர்களுக்கிடையே இரு வாரங்கள் முதல் இருபது வருடஙகள் வரையிலான மாறுபட்ட காலஅளவை உடையதாய் காணப்படுகிறது. + +[[நோய்]] வளர்ச்சியின் வேகத்தை பல காரணிகள் நிர்ணயிக்கின்றன. இதில் நோயாளியின் நோயெதிர்ப்புசக்தி எனும் எச் ஐ வி யிலிருந்து ��டலைப் பாதுகாக்கும் காரணிகளும் அடங்கும். வயதானவர்கள் பலகீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தைக் கொண்டுள்ளதால் அத்தகையோரில் நோய் முற்றல் மிக விரைவாக நடக்கும் ஆபத்தைப் பெற்றிருக்கின்றனர். + +[[உடல் நலம் பேணுதல்|மருத்துவவசதி]]யின்மை மற்றும் [[காச நோய்|காசநோய்]] போன்ற சகத்தொற்று நோய்கள் ஆகியன விரைவான நோய் முற்றுதலுக்கு வழிவகுக்கின்றன. நோய்த்தாக்கிய மனிதனின் [[மரபியல்|மரபணு பாரம்பரியம்]] முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே சிலர் குறிப்பிட்ட சில வகை எச் ஐ வி கிருமிகளுக்கு எதிர்ப்பு சக்தி உடையவர்களாயிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒத்த மரபு நிலை CCR5-Δ32 மாறுபாடு உடையவர்கள், சில எச் ஐ வி வகைகளுக்கு எதிர்ப்பு சக்தியை உடையவர்களாய் இருக்கின்றனர். எச் ஐ வி மரபியல் மாறுபாடுகள் உடையதாக இருப்பதால் பல்வேறு வகைகளாக தோன்றி நோய்முற்றலில் வேறுபட்ட வேகத்தை கொண்டனவாய் இருக்கிறது. + +ஒருவரின் உடல் திரவங்களோடு இன்னொருவரின் ஆசனவாய், பிறப்புறுப்பு அல்லது [[வாய்|வாயின்]] உட்பகுதியில் உள்ள [[படர்சவ்வு படலம்]] தொடர்பு கொள்ளும் பொழுது இது ஒருவரிடமிருந்து மற்றவர்க்கு பரவுகிறது. பாதுகாப்பற்ற உடலுறவில் ஏற்றுகொள்ளுபவர்களுக்கு, செருகச் செய்பவர்களை விட ஆபத்து அதிகமாயும், பாதுகாப்பற்ற ஆசனவாய் வழி உடலுறவு மேற்கொள்ளுபவர்களுக்கு, பிறப்புறுப்பு வழி மற்றும் வாய் வழியேயான உடலுறுவு மேற்கொள்பவர்களை விட நோய்த் தொற்றும் ஆபத்து அதிகமாயும் காணப்படுகிறது. எனினும், செருகச் செய்பவர்களுக்கும், ஏற்றுக்கொள்ளுபவர்களுக்கும் நோய் பரவும் ஆபத்து சம அளவில் இருப்பதால், வாய்வழி உறவும் பதுகாப்பானதென்று கூறுவதற்கில்லை. பலவந்தபடுத்தி உடலுறவு கொள்ளுதல் [[ஆணுறை]] பயன்படுத்தாமலேயே கொள்ளப்படுவதாலும், யோனிக்குழாய்க்கு அதிக சேதம் விளைவிப்பதாலும் எச் ஐ வி பரவுவதற்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கிறது. + +ஏனைய [[உடலுறவினால் பரவும் நோய் தாக்கம்|பாலியல் நோய்த்தொற்றுக்கள்]] (STI) [[பிறப்புறுப்பு அரிமானப்புண்|பிறப்புறுப்புகளில் நுண்ணிய அரிமான புண்களை]] ஏற்படுத்தி [[மேல் சவ்வு|தோல் மேலணியை]] சேதப்படுத்துவதன் மூலமும், விந்து மற்றும் யோனி மட கசிவுகளில் சிறுக சிறுக சேர்ந்துகொண்டிருக்கும் எச் ஐ வி தொற்றிய அல்லது தொற்றுக்காளாகும் [[நிண செல்|நிணத்திசுக்க��்]] மற்றும் [[பெருவிழுங்கி|பெருவிழுங்கிகளின்]] மூலமும் எச் ஐ வி யின் கடத்துதலையும் நோய்த்தொற்றுதலையும் அதிகரிக்கச்செய்கிறது. [[ஆப்பிரிக்கா]], [[ஐரோப்பா]] மற்றும் [[வட அமெரிக்கா|வட அமெரிக்காவின்]] நோய்ப்பரவல் குறித்த ஆய்வுகள் பால்வினை நோய்களான சிபிலிஸ், கேன்க்ராய்ட் முதலியவைகளால் உருவாக்கப்படும் பிறப்புறுப்பு அரிமானப் புண்கள், எச் ஐ வி நோய்த்தொற்றை நான்கு மடங்குகள் அதிகரிக்கச் செய்வதாய் கூறுகின்றன. நிண அணுக்கள் மற்றும் பெருவிழுங்கிகளின் கூட்டணியை தன்னைச் சார்ந்த பகுதிகளில் அதிகரிக்கச் செய்வதன் மூலம் மேகவெட்டை நோய், [[கிளமீடியா கிருமித்தாக்கம்|கிளமீடியா]] மற்றும் [[ட்ரைக்கொமோனஸ்|ட்ரைக்கொமோனியாஸிஸ்]] போன்ற பால்வினை நோய்கள் நோய்தொற்றும் அபாயத்தை குறைந்த அளவேனும் அதிகரிக்கச் செய்வதாய் இருக்கின்றன. + +எச் ஐ வி யின் நோய்பரப்புதல், அதன் நோய்த்தொற்று திறனின் [[நோய்த்தாக்கக் குறியீடு|அடையாளக் குறியீட்டைப்]] பொறுத்தும், நோயில்லாதவரின் நோய்த்தொற்றுக்குள்ளாகும் அபாயத்தைப் பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. நோயின் நிலையைப் பொறுத்து நோய்த்தொற்றுதிறன் மாறுபடுவதாயும் ஒருவருக்கொருவர் வித்தியாசமானதாயும் இருக்கிறது. இரத்தத்தில் [[நச்சுயிரி சுமை]] கண்டுபிடிக்க முடியாததாய் இருந்தாலும் [[விந்து]] மற்றும் பிறப்புறுப்புக் கசிவுகள் நச்சுயிரியற்று உள்ளன எனச் சொல்வதற்கில்லை. எனினும் இரத்தத்தில் ஏற்படும் ஒவ்வொரு பத்து மடங்கு எச் ஐ வி அதிகரிப்பும் நோய்த்தொற்றை 81 சதவிகிதம் அதிகரிக்கும். [[இயக்குநீர்]] மாற்றங்களாலும் பெண்ணுறுப்பின் [[நுண்ணுயிரி|நுண்ணுயிரிச்]] சூழலாலும், உடல் இயக்கு இயலினாலும், பெண்கள் எச் ஐ வி நோய்த்தொற்றுக்களாகும் வாய்ப்பையும், பால்வினை நோய்களுக்குள்ளாகும் தன்மையையும் பெற்றிருக்கின்றனர். எச் ஐ வி யின் ஒரு மாதிரியால் தொற்றப்பட்டவர்கள் பிற்காலங்களில் வேறு [[நஞ்சுத்தன்மையுடைய|ஆபத்தான]] மாதிரிகளால் தொற்றக்கூடும். + +ஒரே முறை உடலுறவினால் நோய்த்தொற்றுவது கடினமாகும். பலருடன் வைத்திருக்கும் நீண்ட கால பாலியல் தொடர்புகளின் போக்குடன், அதிவேகமான நோய்த்தொற்று பரவல் காணப்படுகிறது. இத்தகைய நிலைமை இந்நச்சுயிரி நோய்ற்ற துணைக்குப் பரவி அவரிடமிருந்து பிறருக்கு பரவ வழிவகுக்கிறது. ஒர���வர் ஒரு காலகட்டத்தில் இன்னொருவருடன் மற்றுமே உறவு வைத்திருப்பது அல்லது எப்போதாவது நிகழும் உடலுறவுகள் குறைந்த நோய்த்தொற்று வேகத்தைக் கொண்டிருக்கிறது. [[ஆண் (மனிதர்)|ஆணோடு]] [[பெண்]] வைத்திருக்கும் உறவின் மூலம் எச் ஐ வி பரவுவது வேற்றிடங்களைவிட ஆப்பிரிக்காவில் அதிகமாக பரவுகிறது. இதற்கான காரணம் ஐம்பது சதவிகித ஆப்பிரிக்க பெண்களின் யோனியின் படர் சவ்வினை சிதைக்கும் குறட்டை நோய் [[சிஸ்டோசோமியாஸிஸ்|சிஸ்டோஸோமியாசிஸ்]] எனும் ஒட்டுண்ணி வியாதியாகும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. + +[[படிமம்:AIDS Poster If You're Dabbling in Drugs 1989.jpg|thumb|250px|போதைமருந்து உட்கொள்ளுதலுடன் கூடிய எயிட்சு ஆபத்தை விவரிக்கும் 1989 நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மைய சுவரொட்டி]] +இந்த நோய்த் தொற்றல் வழி பெரும்பாலும் [[சிரை]] வழியாக போதைமருந்து போடுபவர்களுக்கும், [[இரத்தம் உரையாமை|இரத்தம் உறையாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும்]] [[இரத்த தானம்|இரத்ததானம்]] மற்றும் இரத்த பொருட்கள் தானம் பெறுபவர்களுக்கும் பொருத்தமானது. எச் ஐ வி தொற்றப்பட்ட இரத்தத்தால் கிருமி தாக்கப்பட்ட [[மருந்துதேற்று குழல்|ஊசிகளை]] பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் பலமுறை பயன்படுத்துதல் எச் ஐ வி பரப்ப முக்கியமான காரணமாய் இருக்கிறது. + +[[வட அமெரிக்கா]], [[சீனா]], [[கிழக்கு ஐரோப்பா|கிழக்கு ஐரோப்பிய நாடுகள்]] ஆகியவற்றில் ஊசிகளைப் பகிர்தலே மூன்றில் ஒரு பங்கு எச் ஐ வி நோய்த் தொற்றுக்கு காரணமாகும். எச் ஐ வி நோயாளி மீது பயன்படுத்தப்பட்ட ஊசியை ஒரே முறை பயன்படுத்துவதால் 150 பேரில் ஒருவருக்கு எச் ஐ வி தொற்றுவதாகக் கணிக்கப்பட்டுள்ளது. ([[எயிட்சு#பரப்புதலும் தடுப்பும்|மேலே அட்டவணை பார்க்க]]) எச் ஐ வி எதிர் மருந்துகள் மூலம் தொடர்புக்கு பிந்தைய நோய்க்கட்டுப்பாடு முறைகளை மேற்கொள்ளுவதன் மூலம் நோய் தொற்றும் அபாயத்தை மேலும் குறைக்கலாம். + +[[பச்சை குத்தப்பட்ட குறி|பச்சை குத்துதல்]] மற்றும் [[உடம்பைத் துளைத்தல்|துளையிடுதல்]] ஆகியன மேற்கொள்ளுபவர்களுக்கும் இதே வழிமுறை மூலம் நோய்த்தொற்று நிகழலாம். சப்-சகாரன் ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் பல பகுதிகளில் திகழும் மருத்துவ வசதிக் குறைபாடு மற்றும் போதிய பயிற்சியின்மை போன்றவை இந்நாடுகள் [[உலகளாவிய தடுப்பு முறைகள்|உலகளாவிய நோய்த்தடுப்பு முறைகளை]] பின்பற்றுவதற்கு ஏதுவாக இல்லை. + +ஏறத்தாழ இரண்டரை சதவிகிதம் எச் ஐ வி நோய்த்தொற்று பாதுகாப்பற்ற உடல்நலம் பேண பயன்படுத்தப்படும் ஊசிகளால் ஏற்படுவதாக [[உலக சுகாதார அமைப்பு]] கணித்துள்ளது. இதன் காரணமாக [[ஐக்கிய நாடுகள் அவை]] மக்கள் நல பணியாளர்கள் மூலம் எச் ஐ வி பரவுவதைத் தடுக்க நோய்த் தடுப்பு முறைகளைக் கையாளுமாறு உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளது. + +வளர்ந்த நாடுகளில் [[இரத்த தானம்|இரத்ததானத்தின்]] மூலம் எச் ஐ வி பரவுதல் தரமான நன்கொடையாளர்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலமும் எச் ஐ வி நோய் பாதிப்பு ஆய்வின் மூலமும் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பான்மையான மக்களுக்கு பாதுகாப்பான இரத்தம் கிடைப்பதில்லை எனவும் உலகளாவிய எச் ஐ வி நோய் பரவலில் ஐந்து சதவிகிதம் முதல் பத்து சதவிகிதம் இரத்ததானத்தின் மூலமும் இரத்தபொருட்கள் தானத்தின் மூலமுமே நடக்கிறது எனவும் [[உலக சுகாதார அமைப்பு]] கணித்துள்ளது. + +தாயிடமிருந்து குழந்தைக்கு,"குழந்தை கருப்பையில் இருக்கும்போதே" கர்ப்பகாலத்தின் கடைசி வாரங்களிலும் பிரசவத்தின் போதும் நோய்த் தொற்றல் நடக்கிறது. சிகிச்சை அளிக்காத பொழுது கர்ப்பகாலத்தின் போதோ, பிரசவ வலியின் போதோ அல்லது பிரசவத்தின் போதோ தாயிடமிருந்து குழந்தைக்கு நோய் பரவுதல் 25 சதவிகிதமாகும். ஆனால் தாய் ரெட்ரோ வைரல் எதிர் மருந்து சிகிச்சைக்கு உட்பட்டு [[மகப்பேறு அறுவை சிகிச்சை|மகப்பேறு அறுவை சிகிச்சையின்]] மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளும் பொழுது நோய்பரவுதல் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே. நோய்த்தொற்றும் அபாயம் குழந்தை பெரும் பொழுது தாயின் வைரசு சுமையைப் பொறுத்துள்ளது. வைரசு சுமை அதிகமாக இருப்பின் நோய்த்தொற்றும் அபாயம் அதிகமாக இருக்கும். [[தாய்ப்பாலூட்டுதல்|தாய்ப்பாலூட்டுதலும்]] நோய்ப் பரவலை நான்கு சதவிகிதம் அதிகரிக்கிறது. + +எச் ஐ வி/எயிட்சை சுற்றி பல தவறான கருத்துகள் நிலவுகின்றன. அவற்றுள் சாதாரண தொடுதலின் மூலம் எயிட்சு பரவும், கன்னியுடன் கொள்ளும் உடலுறவு எயிட்சை குணமாக்க வல்லது மற்றும் எச் ஐ வி ஓரினச் சேர்க்கையாளர்களையும் போதைப் பொருள் பயன்படுத்துபவர்களையுமே தாக்கும் என்ற மூன்றும் முக்கியமானவை. ஆசனவாய் மூலம் ஓரினச் சேர்க்கையாளர்களிடையே உடலுறவு கொள்வது எயிட்சுக்கு வழிவகுக்கும் என்பதும், பள்ளிகளில் ஓரினச்சேர்க்கை பற்றிய திறந்த கலந்துரையாடல் ஓரினச்சேர்க்கையையும் எயட்சையும் பெருக்கும் என்பன இது போன்ற ஏனைய தவறான எண்ணங்களாகும் [121]. + +எயிட்ஸின் உடல் இயக்க நோய்க்குறியியல் ஏனைய கூட்டியங்களைப் போல மிக சிக்கலானது. [124] இறுதியில் எச் ஐ வி "சி.டி.4" "டி" உதவி நிண அணுக்களை அழித்து எயிட்சை உருவாக்குகிறது. எயிட்சோ நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தி வாய்ப்பு எதிர்நோக்கிக் காத்திருக்கும் நோய்த்தொற்றுக்களுக்கு வழிவகுக்கிறது. நோய் எதிர்ப்பு உருவாவதற்கு "டி" நிண அணுக்கள் மிகவும் இன்றியமையாதவை ஆகும். அவை இல்லாத பொழுது நோய்த் தொற்றுக்களை விரட்டவும் புற்று அணுக்களை அழிக்கவும் உடலால் இயலாது. "சி.டி.4" "டி" செல் அழிவின் முறை தீவிர நோய்நிலையிலும் நாள்பட்ட நோய்நிலையிலும் மாறுபடுகிறது. + +தீவிர நோய்நிலையில் "சி.டி.4" "டி" செல்களின் அழிவு, எச் ஐ வி யால் தூண்டப்பட்ட செல் அழிவு மற்றும் செல் நச்சு "டி" செல்களின் நோய்தொற்றிய செல்களைக் கொல்லும் பாங்கு ஆகியவற்றின் வாயிலாக நிகழ்கிறது. திட்டமிடப்பட்ட செல் மரணத்தின் மூலமாகவும் இது நிகழலாம். நாள்பட்ட நோய் நிலையில், உடலளாவிய நோயெதிர்ப்பு தூண்டுதலின் விளைவுகளினால், புது "டி" செல்கள் தயாரிக்கும் வல்லமையை நோயெதிர்ப்பு மண்டலம் படிப்படியாக இழந்து விடும் தன்மையே "சி.டி.4" "டி" செல்கள் குறைவதற்கு காரணமாய் இருக்கிறது. + +எயிட்ஸின் பிரதான குணாதிசயமான நோயெதிர்ப்புக் குறைபாட்டின் அறிகுறிகள், மனிதரை நோய்த்தொற்றி பல வருடங்கள் வரை புலப்படாமல் போனாலும் நிண அணுக்களின் புகலிடமான குடற்பகுதி மேல்சவ்வு போன்ற பகுதிகளில், "சி.டி.4" "டி" செல்களின் பெரும்பான்மை இழப்பு, நோய்த்தொற்றின் முதல் வாரங்களிலேயே ஏற்பட்டுவிடுகிறது. [128]குறிப்பாக குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளில் "சி.டி.4" "டி" செல்கள் அழிக்கப்பட காரணம் ,பெரும்பான்மையான "சி.டி.4" "டி" செல்கள் CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும். இரத்தத்தில் இருக்கும் "சி.டி.4" "டி" செல்களோ மிகக் குறைவான CCR5 சக ஏர்புணர்விகளையே கொண்டிருக்கும்.[130] + +தீவிர நோய் நிலையில் எச் ஐ வி CCR5 சக ஏர்புணர்விகளைக் கொண்டிருக்கும் "சி.டி.4" செல்களை, தேடிப் பிடித்து அழிக்கிறது. ஒரு பலமான நோயெதிர்ப்பு சக்தி எழும்பி, படிப்படியாக நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தி நோயுட்புதை நிலையைத் தோற்றுவிக்கிறது. ஆரம்ப நோய்நிலையில், உயிருக்கு ஆபத்தான பிற நோய்த்தொற்றுக்களை கட்டுப்படுத்தும் அளவிற்கு நிலைத்திருப்பினும், குடற்பகுதி மேல்சவ்வு "சி.டி.4" "டி" செல்கள் நோய்க்கிருமித்தாக்கம் முழுவதும் அழிந்தவண்ணமே இருக்கும். + +விடாமல் நடந்துகொண்டிருக்கும் எச் ஐ வி யின் பல்பிரிவாக்கம், நாள்பட்ட நோய் நிலை முழுவதிலும் ஒரு உடலளாவிய நோய் எதிர்ப்பு தூண்டுநிலையைத் தோற்றுவிக்கிறது. நோய் எதிரணுக்களைத் தூண்டி அழற்சி உண்டுபண்ணும் [[சைடோகைன்கள்|சைடோகைன்களை]] வெளிவிடும் இத்தகைய நோயெதிர்ப்பு தூண்டுநிலை, எச் ஐ வி மரபணு பொருட்களாலும், எச் ஐ வி பல்பிரிவாக்கத்திற்கு எதிராக எழும் நோய் எதிர்ப்புத் திறன் உருவாக்கத்தாலும் ஏற்படுகிறது.தீவிர நோய்நிலையில் நிலவும் குடற்பகுதி மேல்சவ்வு பகுதிகளின் "சி.டி.4" "டி" செல்களின் அழிவு ஏற்படுத்தும், உட்சவ்வு வேலி நோயெதிர்ப்பு கண்காணிப்பு ஒழுங்குச்சேதம் மற்றுமொரு காரணமாகும். + +மேலும் இது நோயெதிர்ப்பு மண்டலத்தைக் குடலின் இயற்கையான நுண்ணுயிரிகளுக்கு கையளித்து விடுகிறது. ஆரோக்கியமான நபர்களிலோ இந்நுண்ணுயிரிகள் உட்சவ்வு நோயெதிர்ப்பு மண்டலத்தால் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நோயெதிர்ப்புத் தூண்டுதலால் ஏற்படும், "டி" செல் தூண்டப்படுதலும் அவற்றின் பெருக்கமும் அவற்றை எச் ஐ வி நோய்க் கிருமியின் புதிய இலக்காக்குகின்றன.இரத்தத்தின் "சி.டி.4" "டி" செல்களில் 0.01-0.10 சதவிகிதம் அளவே நோய்த்தொற்றுக்காளாவதால், "சி.டி.4" "டி" செல்களின் ஒட்டுமொத்த அழிவிற்கு, எச் ஐ வி யின் நேரடி தாக்குதல் மட்டுமே காரணமாக இருத்தல் இயலாது. + +நோயெதிர்ப்பு மண்டலம் தூண்டப்பட்ட நிலையில் இருக்கும் பொழுது ஏற்படும் திட்டமிடப்பட்ட செல் மரணத்திற்கு ஆளாவதே "சி.டி.4" "டி" செல் அழிவிற்கு முக்கிய காரணமாகும். இழந்த "டி" செல்களை ஈடுகட்ட வெளிக்கணையமானது புது "டி" செல்களை விடாமல் தயாரித்துக் கொண்டிருந்தாலும், வெளிக்கணைய அணுக்கள் மீதான எச் ஐ வி யின் நேரடி தாக்குதல், வெளிக்கணையத்தின் இழப்பு மீட்புத் தன்மையைப் படிப்படியாக அழித்து விடுகிறது. எனவே நாளடைவில் போதுமான நோயெதிர்ப்புசக்தினிலைக்குத் தேவையான குறைந்தபட்ச "சி.டி.4" "டி" செல்கள் இல்லாத நிலை ஏற்பட்டு, எயிட்ஸுக்கு வழிவகுக்கிறது. + +எச் ஐ வி [[நச்சுயிரி]] எந்த வழியில் நுழைந்தாலும் கீழ்கண்ட செல்களை முதலில் தாக்குகிறது. + + +இந்[[நச்சுயிரி]]க்கு உயிரணு தாக்கும் பண்பு உள்ளது. ஆனால் அது எவ்வாறு நடைபெறுகிறது என்பது இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. இது நீண்ட காலங்கள் செல்களில் செயலற்று இருக்கும் வல்லமையையும் பெற்றுள்ளது. இந்த பண்பு "சி.டி."-ஜி.பி. 120 இடையே நடக்கும் பின்னிய செயல்விளைவால் நிகழ்கிறதென எண்ணப்படுகிறது. + + +"விரிவான விளக்கத்திற்கு கீழ் காண்பவற்றைக் காண்க:" + + +எச் ஐ வி யினால் தாக்கப்பட்ட மனிதர்களில் நோய் கண்டறிதல் சில நோய் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டது. ஜூன் 5,1981-லிருந்து எச் ஐ வி யின் [[நோய்ப் பரவல்|நோய்த் தோன்று வழி ஆய்தல்]] மற்றும் நோய் அழிவு ஆய்தலைப் பற்றி, பேங்குய் வரையறை மற்றும் [[1994 விரிவாக்கப்பட்ட உலக சுகாதார மையத்தின் எயிட்சு நோய் விரிவாக்கம்|1994 இன் உலக சுகாதார நிறுவனத்தின் விரிவான எயிட்சு நோய்க்கான வரையறை]], போன்ற பல வரையறைகள் நிர்ணயிக்கப் பட்டுள்ளன.ஆனாலும் இவ்வரையறைகள் நுட்பமற்றதாகவும் பிரத்யேகமற்றதாகவும் இருப்பதினால் நோயாளிகளை அவரவர் நோய்நிலைப்படி வகைப்படுத்துதல் இவற்றிற்கு தேவையற்றது. வளரும் நாடுகளில் நோய் மற்றும் ஆய்வக ஆராய்ச்சி ஆதாரக் கூறுகளின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட எச் ஐ வி தொற்று மற்றும் நோய்க்கான [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவன]] வகைப்பாட்டு முறையும், வளர்ந்த நாடுகளில் [[நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்|நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின்]] நோய்ப்பகுப்பு முறையும் பின்பற்றப்படுகின்றன. + +1990 இல் [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவனம்]] இந்நோய்த் தொற்றுகளையும் நிலைகளையும் ஒன்றுபடுத்தி எச் ஐ வி-1 ஆல் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான வகைப்பாட்டு முறையை அளித்துள்ளது. இது, செப்டம்பர் 2005 இல் மறுவரையறுக்கப்பட்டது. இந்நோய் நிலைகள் பெருமளவு ஆரோக்கியமான [[மனிதர்|மனிதர்களில்]] எளிதாகக் குணப்படுத்தவல்ல சந்தர்ப்பவாத நோய்த் தொற்றுக்களேயாகும். + + +நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையங்களால் எயிட்சைக் குறித்து இரு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலாவது வரையறை, எயிட்சினை அதனுடன் சம்பந்தப்பட்ட நோய்களின் அடிப்படையில் வகுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, எச் ஐ வி யின் கண்டுபிடிப்பா���ர்கள், அதற்கு அப்பெயரை இடுவதற்கு காரணமாய் இருந்த நோயானது நிணநீர்ச் சுரப்பி நோயாகும் [142][144]. 1993 இல் நோய்க் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் எயிட்சின் வரையறையை "சி.டி.4" "டி" செல்களை, ஒரு மைக்ரோ லிட்டர் இரத்தத்தில் இருநூறுக்கும் குறைவாகவோ அல்லது அனைத்து நிண செல்களின் எண்ணிக்கையில் பதினான்கு சதவிகிதத்திற்கு குறைவாகவோ பெற்றிருக்கும் அனைத்து எச் ஐ வி நேர்மறை மக்களும் எயிட்சில் அடங்குவர் என எயிட்சின் வரையறையை விரிவாக்கம் செய்திருக்கிறது [146]. வளர்ந்த நாடுகளில் பெரும்பாலான எயிட்சு நோயாளிகளுக்கு இந்த வரையறையையோ, அல்லது 1993 க்கு முந்தைய வரையறையையோ பயன்படுத்துகின்றனர். இத்தகைய எயிட்சு நோய் நிர்ணயம், சிகிச்சைக்கு பின்னர் இரத்தத்தின் 1 மைக்ரோ லிட்டருக்கு, "சி.டி.4" "டி" செல்களின் எண்ணிக்கை இருநூறை விட அதிகரித்தாலும் அல்லது எயிட்சு இருப்பதைப் பறைசாற்றும் ஏனைய நோய் அறிகுறிகள் குணமாக்கப்பட்ட பின்னரும் நிலைத்து நிற்கிறது. + +எச் ஐ வி யால் தொற்றப்பட்டிருப்பதை பல மக்கள் அறியாதிருக்கின்றனர். உடலுறவு கொள்ளும் நகர மக்கள்தொகையில் 1சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே, எச் ஐ வி சோதனைக்கு உட்பட்டிருக்கின்றனர். கிராமங்களில் இந்த விகிதம் இன்னும் குறைவானதாகும். மேலும் நகர நல வாரியங்களுக்கு வருகை தரும் 0.5 சதவிகித கர்ப்பிணிப் பெண்களே அறிவுறுத்தப்பட்டு, சோதிக்கப்பட்டு சோதனை முடிவுகளைப் பெற்றுக் கொள்கின்றனர். கிராம நல வாரியங்களில் இது இன்னும் குறைவாயிருக்கிறது.. எனவே மருத்துவம் மற்றும் மருத்துவ ஆய்வில் பயன்படுத்தப்படும் [[கொடையாளர் இரத்தம்|கொடையாளரின் இரத்தம்]] மற்றும் இரத்தப் பொருட்கள் நோய் பாதிப்பாய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. + +எச் ஐ வி சோதனைகள் பெரும்பாலும் தமனி இரத்தத்திலேயே நடத்தப்படுகின்றன. பெரும்பாலான ஆய்வகங்கள் எதிர் எச் ஐ வி எதிர்க் காரணிகளையும் (IgG மற்றும் IgM), எச் ஐ வி p24 நோய் எதிர்ப் புரதத்தையும் கண்டறியும், "நான்காம் தலைமுறை " நோய் பாதிப்பாய்வு சோதனைகளை பயன்படுத்துகின்றன. முந்தைய சோதனையில் எதிர்மறையென கருதப்பட்ட நோயாளியிடம் எச் ஐ வி எதிர்காரணியோ அல்லது எதிர்ப்புரதமோ கண்டறியும் பட்சத்தில் அது எயிட்சு நோய்க்கு சான்றாக எண்ணப்படும்.நோயாளிகளின் முதலாம் மாதிரி எயிட்சு நோய்க்கூறுகளை வ���ளிப்படுத்தினால் அவர்கள் அதனை உறுதிப்படுத்தும் படிக்கு அவர்கள் பிறிதொரு இரத்த மாதிரி மூலம் இரண்டாம் சோதனைக்கு உட்படுத்தப்படுவர். + +முதலாம் நோய்த்தொற்றிற்கும் அதற்கு எதிராகக் கண்டுபிடிக்கவல்ல நோய் எதிர்க்காரணிகள் உருவாகும் காலத்திற்கும் இடைப்பட்ட காலமான ஜன்னல் காலம் [[ஊனியல் மாற்றம்|ஊனீர் மாற்றமடைந்து]] நேர்மறைஎன சோதித்தறிவதற்கு 3–6 மாதங்கள் பிடிக்கும். ஜன்னல் காலத்தில் [[பசர் பாலிமரேஸ் தொடர் வினை|பாலிமரேஸ் தொடர் விளைவின்]] மூலம் இந்நச்சுயிரியைக் கண்டுபிடித்தல் சாத்தியமான ஒன்றாகும்.இதன் மூலம் நான்காம் தலைமுறை EIA நோய்பாதிப்பாய்வைவிட விரைவாக நோய்த்தொற்று கண்டுபிடிக்கப் படுகிறதென ஆய்வுகள் கூறுகின்றன. + +பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலம் நேர்மறையென அறிவிக்கப்பட்ட முடிவுகள் எதிர்க்காரணி சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. +எச் ஐ வி யால் தொற்றப்பட்ட தாய்க்குப் பிறந்த [[பச்சிளம் குழந்தைகள்|பச்சிளம் குழந்தைகளில்]] நடத்தப்படும் வழக்கமான எச் ஐ வி சோதனைகள் குழந்தையின் இரத்தத்தில் இருக்கும் தாய் வழி நோய் எதிர்க்காரணிகளால் நம்பத் தகுந்தவை அல்ல. எனவே குழந்தையின் [[நிண அணு|நிண அணுக்களில்]] அமையப்பெற்றிருக்கும் எச் ஐ வி முன் நச்சுயிரியின் டி என் ஏ யை சோதித்தறியும் பாலிமரேஸ் தொடர் விளைவின் மூலமே நோய்த்தொற்றைக் கண்டுபிடிக்க இயலும். + +எச் ஐ வி நோய் பரப்பலுக்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுபவை [[உடல் உறவு|உடலுறவு]], நோய்த்தொற்றிய உடல் திரவங்கள், மற்றும் திசுக்களுடனான தொடர்பு, பிறப்பு சார்ந்த காலகட்டத்தில் தாயிடமிருந்து [[கரு (உயிர்)|கருவுக்கோ]], குழந்தைக்கோ ஏற்படுவது. நோய்த் தொற்றப்பட்டவர்களின் [[உமிழ்நீர்]], கண்ணீர் மற்றும் [[சிறுநீர்|சிறுநீ]]ரில் எச் ஐ வி கண்டுபிடிக்கப்படும் போதிலும் இத்தகைய சுரப்பு நீர்களின் மூலம் நோய்த்தொற்றியதாக எவ்வித பதிவுகளும் இல்லை. இவற்றின்மூலம் நோய்தொற்றும் அபாயம் மிக அற்பமானாதே. + +பெரும்பாலான எச் ஐ வி நோய்த்தொற்றுக்கள், ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பரப்பப்படுகிறது. உலகம் முழுவதும் எச் ஐ வி நோய் பரப்பலுக்கான முக்கிய காரணம் ஆணும் பெண்ணும் கொள்ளும் உடலுறவினால் விளைவதேயாகும். உடலுறவு நிகழ்வின் போது [[ஆணுறை]] அல்லது பெண்ணுறை உ���யோகிப்பது மட்டுமே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தையும் [[கருத்தரித்தல்|கர்ப்பமடைவதற்கான]] வாய்ப்பையும் குறைக்கிறது. முறையான ஆணுறை பயன்பாடு வெவ்வேறு பாலரிடையே எச் ஐ வி நோய்த்தொற்றும் அபாயத்தை ஏறத்தாழ எண்பது சதவிகிதம் குறைத்தாலும், ஒவ்வொரு தருணத்திலும் ஆணுறைகளை சரியாக உபயோகப்படுத்தும்போது அதிக பலன் விளைவதாகத் தற்போதைய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. + +[[மரப்பால்|மரப்பால் வகை]] ஆணுறைகளை எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை பயன்படுத்தாமல் உபயோகப்படுத்துவதே எச் ஐ வி மற்றும் ஏனைய பால்வினை நோய்கள் தொற்றும் அபாயத்தைக் குறைக்க வல்ல ஒரே சிறந்த தொழில்நுட்மாகும். [[பெட்ரோலியம்|பெட்ரோலியம் ஜெல்லி]], [[வெண்ணெய்]], [[பன்றி|பன்றிக்]] [[கொழுப்பு]] போன்ற எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிப்பது [[மரப்பால்|மரப்பாலை]] கரைத்து துளைத்தன்மையுடையதாக்குமாதலால் இவற்றை உபயோகிப்பது ஏற்றதல்ல என்று ஆணுறை தயாரிப்பாளர்கள் பரிந்துரைக்கின்றனர். தேவைப்பட்டால் தண்ணீரை அடிப்படையாகக் கொண்ட வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்கின்றனர். + +பாலியூரிதீன் ஆணுறைகளில் வழுவழுப்பூட்டும் மசகுப்பொருள்களை உபயோகிக்கலாம் என்று இவர்கள் கூறுகின்றனர். + +பெண்ணுறை, ஆணுறைக்கு மாற்றாக, பெண்களால் உபயோகப்படுத்தப்படுவது. இது பாலியூரிதீன் கொண்டு தயாரிக்கப்படுவதால் இவற்றோடு எண்ணெய் போன்ற வழுவழுப்பூட்டும் மசகுப் பொருட்களை உபயோகிக்கலாம். இவை ஆணுறைகளை விடப் பெரியதாகவும், விரைப்பான வளையம் போன்ற வாய்பகுதியைக் கொண்டதாகவும் இருக்கின்றன. இவை [[யோனி|யோனிக்குள்]] செருகப்படும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்ணுறைகள் ஒரு உள் வளையத்தைப் பெற்றிருக்கின்றன. இவ்வளையம் யோனிக்குள் பெண்ணுறை நழுவாத வண்ணம் பார்த்துக் கொள்கிறது. இவ்வளையத்தை அழுத்தும்போது பெண்ணுறை யோனிக்குள் செருகக் கூடியதாய் இருக்கிறது. இருப்பினும் தற்சமயம் பெண்ணுறைகள் கிடைப்பதற்கரியதாகவும், விலை உயர்ந்ததாகவும் இருக்கின்றன. முதல்நிலை [[ஆய்வு|ஆய்வுகள்]] பெண்ணுறைகள் போதிய அளவில் இருக்கும் பொழுது, ஒட்டுமொத்த பாதுகாப்பான உடலுறவு நிகழ்வுகள், பாதுகாப்பற்ற உடலுறவு நிகழ்வுகளோடு ஒப்பிடும் போது அதிகமாகின்��ன. இது பெண்ணுறையை முக்கியமான எயிட்சு தடுப்பு யுத்தியாக்குகிறது. + +இருவரில் ஒருவரை இந்நோய் தாக்கியிருக்கும் பட்சத்தில், விடாது ஆணுறை உபயோகிக்கும் பொழுது, நோய்த்தாக்கம் இல்லாதவரை இந்நோய்த் தொற்றும் வாய்ப்பு வருடம் ஒரு சதவிகிதத்திற்குக் கீழ் என கணவன்-மனைவிகளிடம் நடத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நோய்த்தடுப்பு யுத்திகள் அனைத்து வளர்ந்த நாடுகளிலும் நன்கறியப்பட்டுள்ள போதிலும், கணிசமான அளவு இளைஞர்கள் எச் ஐ வி/எயிட்சு பற்றிய அறிவைப் பெற்றிருக்கும் போதிலும், தாங்கள் எச் ஐ வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர் என ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்காவின் நோய்பரவல் மற்றும் நடத்தை பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கன்றன. + +ஆண் [[விருத்தசேதனம்]] ஈரின மனிதர்களிடையே எச் ஐ வி நோய்த்தொற்று அபாயத்தை அறுபது சதவிகிதம் குறைக்கின்றன என சுற்று மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் போக்கு கணக்கற்ற நடைமுறை, [[கலாச்சாரம்|கலாச்சார]] மற்றும் கருத்து சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்குமென்றாலும் இது பல நாடுகளில் உத்வேகத்துடன் பரிந்துரைக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. + +[[விருத்தசேதனம்]] செய்து கொண்டவர்கள் தங்கள் சேதப்படத்தக்க தன்மையை உணராது பாதுகாபற்ற உடலுறவு நடவடிக்கைகளில் இறங்குவது விருத்தசேதனம் செய்ததால் கிடைக்கப்பெற்ற தற்காப்பை இல்லாததாக்கிவிடும் என சில வல்லுனர்கள் கருதுகின்றனர். எனினும், ஒரு சுற்றுமாதிரி கட்டுபடுத்தப்பட்ட சோதனை வயது வந்த ஆண்களின் விருத்தசேதனமானது எச் ஐ வி அபாயத்தை அதிகரிக்கும் நடவடிக்கை அல்ல என்று கூறுகிறது. + +நல ஊழியர்கள் கிருமி பாதித்த இரத்தத்துடனான தொடர்பைக் குறைக்க எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எச் ஐ வி க்கு அவர்கள் ஆளாவதைத் தடுக்கவல்லது.கையுறைகள், முகமூடிகள், பாதுகாப்புக் கண் அணிகள் மற்றும் மூடிகள், அங்கிகள் அல்லது மேலாடைகள் போன்றவை தோல் அல்லது படர்சவ்வுப் படலத்திற்கு இரத்தத்தின் நோய்க்காரணிகளுடனான நேரடி தொடர்பை ரத்து செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஆகும். கிருமிபாதித்த இரத்தத்துடனோ அல்லது உடல் திரவங்களுடனோ ஏற்பட்ட தொ��ர்புக்குப் பின்னர் தோலை அடிக்கடி சுத்தமாகக் கழுவுதல் நோய்த்தொற்று நிகழும் வாய்ப்பைக் குறைக்கவல்லது. இறுதியாக ஊசிகள், அறுவை கிழி கத்திகள், கண்ணாடிகள் போன்றவைகளை, கிருமிபாதித்தவைகளால் ஏற்படும் ஊசிகுத்து காயங்கள் நிகழாவண்ணம் கவனமாக நீக்கி விடுதல் அவசியமானதாகும். எச் ஐ வி நோய்ப்பரவல் பெரும்பாலும் சிரை வழி மருந்து செலுத்துவதன் மூலம் ஏற்படுவதால் வளர்ந்த நாடுகளில் நடத்தப்பெறும், தீங்கு குறைப்பு யுத்திகளான, [[ஊசி பரிமாற்று நிகழ்ச்சி|ஊசி பரிமாற்ற நிகழ்ச்சி]] போன்றவை தவறான மருந்து பிரயோகத்தினால் விளையும் நோய்த்தொற்றைக் குறைக்க உதவுகின்றன. + +ஏற்றுக்கொள்ளத்தக்க, எளிதாகப் பெற்றுக்கொள்ளவல்ல, நிலையான மற்றும் பாதுகாப்பான, மாற்று உணவு இருப்பின் எச் ஐ வி யால் பாதிக்கப்பட்ட [[தாய்|தாய்மார்கள்]] தங்கள் [[குழந்தை|சிசுவிற்குத்]] தாய்ப்பாலூட்டுவதைத் தவிர்க்க வேண்டுமென தற்போதைய பரிந்துரைகள் அறிவிக்கின்றன. எனினும் அவ்வாறு இயலாதப்பட்சத்தில் குழந்தையின் ஆரம்ப கால மாதங்களில் பிரத்தியேக தாய்ப்பால் கொடுப்பதும் பின்னர் முடிந்தவரை விரைவாக அதனை நிறுத்திவிடுதலும் சிறந்தது. தங்களது சொந்த குழந்தைகளல்லாத அந்நிய குழந்தைகளுக்கும் பெண்கள் பாலூட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது; பார்க்க செவிலித்தாய் + +[[படிமம்:Abacavir (Ziagen) 300mg.jpg|right|thumb|100px|அபாகாவிர் – தலைகீஷ் மரபணு மாற்ற எதிர்வினைப்பொருளின் நியுகிளியோசைட் ஒத்த அமைப்பு செயலி (NARTI or NRTI)]] +[[படிமம்:abacavir.svg|thumb|100px|அபாகாவிர் இன் வேதியியல் அமைப்பு]] +எச் ஐ வி அல்லது எயிட்ஸுக்கான தடுப்பூசியோ அல்லது தீர்வோ தற்சமயம் இல்லை. வைரஸுடனானத் தொடர்பைத் தவிர்ப்பதன் மூலமும் அது இயலாத பட்சத்தில் முக்கியத்துவம் வாய்ந்த தொடர்புக்குப் பின்னர் தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)என்றழைக்கப்படும் ரெட்ரோவைரல் எதிர்மருந்து சிகிச்சைக்கு உட்படுவதன் மூலமுமே இந்நோயைப் பரப்புதலைக் கட்டுப்படுத்த முடியும். [215] தொடர்புக்குப் பிந்தைய நோய்க்கட்டுப்பாடு (பி இ பி)க்கு மிக அத்தியாவசியமான நான்கு வார வைத்திய கால அட்டவணை உள்ளது. விரும்பத்தகாத பக்க விளைவுகளான வயிற்றுப்போக்கு, தேக அசௌகரியம், வாந்தி எடுக்கவேண்டுமென்ற உணர்வு மற்றும் களைப்பு ஆகியனவற்றை இது ஏற்படுத்தவல்லது. + +எச் ஐ வி நோய்க்கான தற்போதைய வைத்தியம் [[தீவிர ரெட்ரோ வைரல் எதிர் மருந்து|அதி தீவிர ரெட்ரோ வைரல் எதிர்மருந்து]] அல்லது மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைக் கொண்டது. புரத நொதி வினைத் தடுப்புப் பொருட்களை அடிப்படையாகக் கொண்ட மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் 1996 ஆம் ஆண்டு அறிமுகத்திற்குப் பிறகு, இது பல எச் ஐ வி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நன்மை விளைவித்துள்ளது. தற்போதைய அனுகூலமான மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் தேர்வுகள் குறைந்தது மூன்று மருந்துகளை உள்ளடக்கிய, இரண்டு வித [[ரெட்ரோ வகை நச்சுயிரியின் எதிர் மருந்து|ரெட்ரோ வைரல் எதிர்மருந்துகளின்]] சேர்வுகளைக் கொண்டிருக்கும். இது காக்டெயில்கள் (கலப்பு பானங்கள்)என்று குறிக்கப்படுகிறது.பிரத்தியேக மருத்துவ நியமங்கள், இரு [[தலைகீழ் மரபணு மாற்ற எதிர்வினைப்பொருளின் நியுகிளியோசைட் ஒத்த அமைப்பு செயலி|நியுக்ளியோசைடு ஒத்தஅமைப்புச்செயலி தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களையும்]] (NARTI அல்லது NRTI) மற்றும் [[புரத நொதி எதிர்வினைப் பொருள்|புரத நொதி எதிர்வினைப் பொருட்களையோ]] அல்லது [[நியுகிளியோசைட் அல்லாத தலைகீழ் மரபணு மாற்ற எதிர்வினைப்பொருள்|நியுக்ளியோசைடு அல்லாத தலைகீழ்மரபணுமாற்ற நொதி எதிர்வினைப்பொருட்களை]]யோ கொண்டிருக்கும். எச் ஐ வி நோயின் வளர்ச்சிப் போக்கு வயது வந்தவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிப்பதாலும்,குறிப்பாக இளம் சிசுக்களுக்கு ஆய்வக சோதனைக் குறியீடுகள் நம்பத்தகுந்தவையாயில்லாததாலும், சிகிச்சை பரிந்துரைகள் வயதுக்கு வந்தவர்களை விட குழந்தைகளுக்கு மிக வன்மையாக உள்ளன. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் மருந்து இருப்பில் இருக்கும் வளர்ந்த நாடுகளில்,நச்சுயிரி சுமை, CD 4 இன் சரிவு, மற்றும் நோயாளியின் ஆயத்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மருத்துவர்கள் தொடக்க சிகிச்சையைப் பரிந்துரைக்கின்றனர். + +மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையின் முக்கிய குறிக்கோள் நோயாளியின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது, நோய் சிக்கல்களைக் குறைப்பது இரத்தத்தின் எச் ஐ வி அளவை கண்டுபிடிக்க முடியாத அளவிற்குக் குறைப்பது. ஆனால�� இது எச் ஐ வி யை குணமாக்கவோ சிகிச்சையை நிறுத்தியவுடன் இரத்தத்தில்ஹார்ட் எதிர்ப்பு சக்தியுள்ள எச் ஐ வி அளவு அதிகமாவதைத் தடுக்கவோ இயலாததாய் இருக்கிறது. மேலும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பயன்படுத்தி எச் ஐ வி யிலிருந்து விடுபடுவதற்கு ஒருவருக்கு அவரது வாழ்நாள் காலமே போதுவதில்லை. இருந்தும், பல எச் ஐ வி நோயாளிகள் தங்கள் பொதுவான உடல்நலத்திலும் வாழ்க்கைத் தரத்திலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து எச் ஐ வி யின் இறப்பு விகிதமும், நோயுற்ற விகிதமும் சரிவதற்குக் காரணமாயிருந்திருக்கின்றனர். மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை இல்லாத பொழுது எச் ஐ வி நோய்த்தாக்கம் எயிட்சு ஆக வளர்ச்சியடைவதற்கு ஒன்பது முதல் பத்து வருடங்கள் கால [[median|இடைநிலையும்]] எயிட்சு ஆக மாறியபிறகு உயிர் வாழும் காலத்திற்குரிய கால இடைநிலை 9.2 மாதங்களேயாகவும் இருக்கிறது. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை உயிர்வாழும் கால [[இடைநிலை|இடைநிலையை]] 4 முதல் 12 வருடங்கள் அதிகப்படுத்தும் என எண்ணப்படுகிறது. + +ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான நோயாளிகளில் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை அனுகூலமான பலனை அளிப்பதில்லை. காரணம் மருந்துகளின் ஒவ்வாமை, பக்கவிளைவுகள், முந்தைய பலனற்ற ரெட்ரோ வைரல் எதிர்மருந்து சிகிச்சை, மருந்து எதிர்ப்பு சக்தியுடைய எச் ஐ வி மாதிரிகள் போன்றவை. சிகிச்சை பின்பற்றாமை, மற்றும் சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் போன்றவைகளே மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை சில மக்களில் பலனளிக்காமல் இருப்பதற்கு காரணம். சிகிச்சையில் உறுதியற்று இருத்தல் மற்றும் பின்பற்றாமல் இருப்பதற்கான காரணங்கள் பலவாகும். மருத்துவ வசதியின்மை, சமூக உதவியின்மை, மனநல வியாதி மற்றும் போதை பழக்கம் போன்றவையே சமூக நல பிரச்சினைகள் ஆகும். அதிக எண்ணிக்கையில் மாத்திரைகள் அடிக்கடி சாப்பிட வேண்டியிருப்பதால் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சை நியமம் சிக்கலானதாகவும் பின்பற்றுவதற்கு கடினமானதாகவும் இருக்கிறது.[[கொழுப்பணு சிதைவு|கொழுப்புத் திசு இறப்பு]] [[இரத்தத்தின் கொழுப்பணுக்களில் ஏற்பட��ம் மாற்றம்|இரத்தத்தின் கொழுப்படர்த்தியில் ஏற்படும் மாறுபாடு]], வயிற்றுப்போக்கு, இன்சுலின் எதிர்ப்பு [[இதய இரத்த நாள சம்பந்தப்பட்ட|இதய மற்றும் இரத்தக் குழாய் அபாயம்]], [[பிறப்புக் குறைபாடு|பிறப்புக் குறைபாடுகள்]] போன்ற பக்க விளைவுகளும் மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சையினைப் பின்பற்றுவதில் சிரமத்தை விளைவிக்கின்றன. மீளூட்டு நச்சுயிரி (Retrovirus) எதிர் மருந்து விலையுயர்ந்ததாகவும் இருப்பதால் உலகத்தின் பெருவாரியான நோய் தொற்றிய மக்களுக்கு இவை கிடைப்பதில்லை. + +தடுப்பூசி குறைந்த விலையில் கிடைக்கக்கூடும் என்பதாலும், இதனால் வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசி பெற்றுக் கொள்ள எதுவாய் இருக்கும் என்பதாலும், தடுப்பூசி இருக்கும் பட்சத்தில் தினசரி சிகிச்சை தேவையற்றது என்பதாலும் இப்பரவல் தொற்றினைத் தடுக்க தடுப்பூசி ஒன்றே சிறந்த வழி என்று கணிக்கப்பட்டுள்ளது.இருந்தபோதிலும் ஏறத்தாழ 30 வருடங்களுக்குப் பின்னும் எச் ஐ வி-1 தடுப்பூசி தயாரிப்பதற்கு கடினமான இலக்காகவே இருக்கிறது. + +தற்போதைய மருந்துகளின் பக்கவிளைவுகளைக் குறைப்பது, சிகிச்சை பின்பற்றப்படுதலை அதிகரிக்க மருந்து நியமங்களை எளியவையாக்குதல், மற்றும் மருந்துக்கான எதிர்ப்பை சமாளிக்க சிறந்த மருந்து நியமத் தொடர்களைத் தீர்மானித்தல் ஆகியனவைகளை உள்ளடக்கியதே தற்போதைய சிகிச்சை முறைகளை முன்னேற்றும் ஆராய்ச்சியாகும். சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்களைத் தடுத்தல் எச் ஐ வி நோய்த்தாக்கிய அல்லது எயிட்சு நோயாளிகளின் சிகிச்சைக்கு நன்மை பயக்கும் என்பதைப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. [[கல்லீரல் அழற்சி]] "எ" மற்றும் "பி" க்கான நச்சுயிரிகளினால் தொற்றப்படாதவர்களுக்கு, தொற்றும் அபாயத்தைக் குறைக்க இந்நோய்களுக்கான [[தடுப்பூசி போடுதல்|தடுப்பூசி]] பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பிடத்தக்க நோயெதிர்ப்பு அடக்குதலைப் பெற்றவர்கலுக்கு, [[நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியை நிமோனியா|நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால் ஏற்படும் நுரையீரலழற்சி]], [[டாக்சோபிளாஸ்மோஸிஸ்|டாக்ஸோபிளாஸ்மோசிஸ்]] மற்றும் கிரிப்டோகாக்கஸ் [[மூளையுறையழற்சி]] (மெனிஞ்சைடிஸ்) போன்ற நோய்களுக்கும் நோய்க்கட்டுப்பாடு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. + +கிளைக்கோப்புரதம் 120 (ஜி.பி.120) எனும் "ச���.டி.4" பிணையும் இடத்துக்கான புரதத்தை அளிக்கவல்ல ஒரு எதிர்க்காரணி நொதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அனைத்து எச் ஐ வி மாதிரிகளுக்கும் பொதுவான இப்புரதம் [["பி" செல்|"பி" நிண செல்களும்]] இணையும் இடமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை விட்டுவிடுகிறது. + +[[ஜெர்மனி|ஜெர்மனியின்]] [[பெர்லின்|பெர்லினில்]] பத்து வருடங்களுக்கு மேலாக எச் ஐ வி நோய்தொற்றறினால் அவதிப்பட்டு வந்த ஒரு 42 வயதான [[இரத்தப்புற்று நோய்|இரத்தப்புற்று]] நோயாளிக்கு CCR5 செல் மேற்பரப்பு ஏற்புணர்வியின் அசாதாரண இயற்கை மாதிரியைக் கொண்ட செல்களாலான எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை சோதனை அடிப்படையில் நடத்தப்பட்டது. INTHA[[CCR5#CCR5-.CE.9432|CCR5-Δ32]] மாதிரியானது தன்னை இயல்பாகக் பெற்றிருக்கும் மக்களின் சில அணுக்களை, குறிப்பிட்ட வகை எச் ஐ வி கிருமிகளுக்கான எதிர்ப்பு சக்தி உடையவையக்குகிறது. எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை முடிந்து ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்குப் பின் அந்த நோயாளி ரெட்ரோ வைரல் எதிர்மருந்து உட்கொள்ளுவதை நிறுத்திய பின்னரும் அவரது இரத்தத்தில் எச் ஐ வி நோய்க் கிருமி காணப்படவில்லை. + +நோய் அறிகுறிகளை குணமாக்கவும் நோயின் போக்கைக் கட்டுப்படுத்தவும் பல விதமான மாற்று வைத்திய முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. நோயுற்ற விகிதத்தையும், இறப்பு விகிதத்தையும் மாற்றுமருந்துகளால் கட்டுப்படுத்துவது இயலாது என்றும் எயிட்சு நோயாளிகளின் வாழ்க்கைத் தரம் ஒருவேளை இவற்றின் உபயோகத்தால் மேம்படலாம் எனத் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவ்வகை வைத்திய முறைகளின் மனோதத்துவ விளைவுகளே மிகுந்த நன்மை பயப்பதாகும். அக்குபங்க்சர் இந்நோய் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதிலும், எச் ஐ வி நோயைக் குணப்படுத்தும் முயற்சியிலும் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. மூலிகை மருந்துகளின் விளைவுகளைக் கண்டறியும் பல சுற்றுமாதிரி நோய் சோதனைகள் இம்மூலிகைகளுக்கு நோயின் வளர்ச்சிப் போக்கில் எந்த கட்டுப்பாடும் இல்லை எனவும் இவற்றைப் பயன்படுத்துவது ஆபத்தான பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவிக்கின்றன. + +போதுமான உணவு உட்கொள்ளுதலைக் கொண்ட எச் ஐ வி நோய்த்தாக்கிய வயதுவந்தவர்களுக்கு [[பன்னுயிர்ச் சத்து|பல்லுயிர்ச்சத்து]] உபபொருட்களால் நோய்த்தாக்கு விகிதத்திலும் இறப்பு விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லை. நோயெதிர்ப்பிலும் ஊட்டச்சத்திலும் கீழ்மட்டத்திலுள்ள கருத்தரித்துள்ள மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தினசரி பல்லுயிர்ச்சத்து உபபொருட்கள் அளிப்பதால் தாய் சேய் இருவருக்கும் அதிக பலன் கிட்டியதென்று ஒரு பெரிய தான்சானிய ஆய்வு தெரிவிக்கிறது. எச் ஐ வி நோயாளிகள் [[பரிந்துரைக்கப்பட்ட உணவுச் சத்து அளவுகள்|RDA]] அளவுகளில் உணவு நுண்சதது உட்கொள்ளுதல் [[உலக சுகாதார அமைப்பு|உலக சுகாதார நிறுவனத்தால்]] பரிந்துரைக்கப்படுகிறது. குழந்தைகளில் A உயிர்ச்சத்து சேர்த்துக்கொள்ளுதல் இறப்பு விகிதத்தைக் குறைத்து வளர்ச்சியை அதிகரிக்கிறது. [[செலீனியம்|செலீனியத்தின்]] அன்றாட உட்கொள்ளுதல் எச் ஐ வி நச்சுயிரி சுமையைக் குறைத்து "சி.டி.4" எண்ணிக்கையை அதிகரிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட வைரசு எதிர் சிகிச்சைக்கு சேர்வைப் பொருளாக செலீனியம் பயன்படும் போதிலும் அது தனியாக இறப்புவிகிதத்தையும் நோய்பாதிப்பு விகிதத்தையும் குறைக்க இயலாது.. + +ரெட்ரோவைரல் எதிர்ப்புமருந்து உபயோகப்படுத்தாத பொழுது எச் ஐ வி கிருமி வகையைப் பொறுத்து மொத்த உயிர்வாழும் கால இடைநிலை 9 முதல் 11 வருடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. எயிட்சு நோய்க் கண்டறித லுக்குப் பிறகு போதிய வசதிகளற்ற மருத்துவ வசதியில்லாத இடங்களில் உயிர்வாழும் கால இடைநிலை 6 முதல் 19 மாதங்களே மட்டுமாகவும் உள்ளது என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. மிகுதிறன்மிக்க மீளூட்டுநச்சுயிரி எதிர்ப்பொருள் சிகிச்சைக் கிடைக்கும் இடங்களில் எச் ஐ வி நோய்தாக்கத்திற்கும் எயிட்ஸுக்கும், சக்தி வாய்ந்த அதனை உபயோகிக்கும் பொழுது இறப்பு விகிதம் 80 சதவிகிதம் வரைக் குறைக்கப்படுகிறது. மேலும் எச் ஐ வி நோய்த்தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நபர் உயிரோடிருக்கும் காலம் 20 வருடங்கள் என நிர்ணயிக்கப்பட்ட்டுள்ளது. + +புதிய சிகிச்சை முறைகள் நடைமுறைக்கு வந்து கொண்டிருந்தாலும் எச் ஐ வி சிகிச்சைக்கு எதிர்ப்பை [[பரிணாமம்|வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பதால்]] உயிர் வாழும் காலத்தின் கணிப்பு மாறிக் கொண்டே இருக்கிறது. ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இல்லாவிட்டால் ஒரு வருட காலத்திற்குள் பொதுவாக மரணம் நிகழ்ந்து விடுகிறது. பெரும்பாலான நோயாளிகள் சந்தர்ப்பவாத தொற்றுக்களினாலோ அல்லது [[வேகமாய்ப் பரவும் புற்றுக்கள்|ஆபத்தான புற்றுக்களினாலோ]] ஏற்படும் படிப்படியான நோயெதிர்ப்பு மண்டல செயலிழப்பால் மரணமடைகின்றனர். நோய் வளர்ச்சிப் போக்கு ஊட்டுயிரியின் நோய் பாதிப்பு வாய்ப்பு, நோயெதிர்ப்பு செயல்பாடு, மருத்துவ வசதி, சக தொற்றுக்கள், மற்றும் நச்சுயிரியின் வகை என்பதைப் பொறுத்து ஒருவருக்கொருவர் கணிசமான அளவு மாறுபடுகிறது. + +[[படிமம்:HIV Epidem.png|290px|thumb|right|2005 ஆம் ஆண்டின் இறுதியில், இளைஞர்களைத் (15 -49) தாக்கும் என்று கணிக்கப்பட்ட நாடுவாரிய நோய்ப்பரவல்]] + +எயிட்சு நோய்ப்பரவலானது வேறுபட்ட உள்வகைகளின் பல்வேறு பரவல்களாகவும் காணப்படுகிறது.இந்நோயின் பரவலில் முக்கிய பங்காற்றுபவை உடலுறவு மூலம் பரவுதல் மற்றும் தாயிலிருந்து குழந்தைக்கு பிறப்பின் போதும்,பாலூட்டும் போதும் நிகழும் செங்குத்துப் பரவல் முறை ஆகியன. தற்போது ரெட்ரோ வைரல் எதிர் மருந்து இருப்பும் கவனிப்பும் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ள போதிலும் எயிட்சு நோய்ப்பரவல் 2007 ஆம் ஆண்டு 2 .1 மில்லியன் மக்களை (இடைவெளி) 1.9 -2.4 மில்லியன்) உயிரிழக்கச் செய்திருக்கிறது.இவர்களில் 330,000 பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆவர். உலகம் முழுவதிலும் 2.5 மில்லியன் குழந்தைகள் உட்பட 33.2 மில்லியன் மக்கள் 2007-ல், எயிட்ஸுடன் வாழ்ந்திருக்கின்றனர். 2007-ல், 420,000 குழந்தைகள் உட்பட 2.5 மில்லியன்(இடைவெளி 1.8–4.1 million) புதிதாக நோய்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர் என கணிக்கப்பட்டுள்ளது. + +[[எயிட்சு பரவல் தொற்று#சப்-சஹாரன் ஆப்பிரிக்கா|ஆப்பிரிக்காவின் சகாராவை ஒட்டிய பகுதி]] மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதியாகும்.2007-ல் அப்பகுதி எயிட்ஸுடன் வாழ்பவர்களில் 68 சதவிகிதத்தையும், எயிட்சினால் மரணமடைந்தவர்களில் 76 சதவிகிதத்தையும் உள்ளடக்கியிருந்ததோடல்லாமல், பிறகு வந்த 1.7 மில்லியன் புதிய நோய்த்தொற்றுக்கள், எச் ஐ வி யுடன் வாழ்வோர் எண்ணிக்கையை 22.5 மில்லியன் என்ற அளவிற்கு உயர்த்தியதையும், அப்பகுதியில் எயிட்ஸினால் அனாதையாக்கப்பட்ட 11.4 மில்லியன் குழந்தைகள் வாழ்ந்து வருவதையும் கண்டிருக்கிறது. ஏனையப் பகுதிகளைப் போலல்லாமல் சகாராவையொட்டிய பகுதிகளில் எச் ஐ வி யுடன் வாழ்வோரில் 61 சதவிகிதம் பெண்களாவர். 2007 ஆம் ஆண்டு வயது வந்தோரில் நோய் நிலவு விகிதம் 5.0 சதவிகிதமாகவும், இப்பகுதி இறப்புவிகிதத்தின் தனிப்பெரும் காரணம் எயிட்சு ஆகவும் இருக்கிறது [300]. தென்னாப்பிரிக்காவே உலகிலேயே அதிக அளவில் எச் ஐ வி நோயாளிகளைக் கொண்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன [302]. தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகள் இரண்டாவதாக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 2007 இல் எயிட்சுடன் வாழும் மக்களில் 18 சதவிகிதம் பேர் இப்பகுதியில் இருந்தனர். 300,000 மரணங்கள் எயிட்சினால் நிகழ்ந்தன [303]. இந்தியாவில் 2.5 மில்லியன் நோய்த்தொற்றுக்களும், வயது வந்தோரில் நோய்த்தாக்கம் 0.36 சதவிகிதமாக உள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது [304]. மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் சராசரி வாழ்நாள் காலம் வேகமாகச் சரிந்துள்ளது. எடுத்துக்காட்டாக 2006 இல் போட்ஸ்வானாவில் இது 65 வருடங்களிலிருந்து 35 வருடங்களாகச் சரிந்துள்ளது [306]. + +எயிட்சு முதன்முதலாக ஜூன் 5, 1981 இல் அமெரிக்க [[நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள்|நோய்க்கட்டுப்பாட்டு மையங்களில்]] (CDC) கண்டறியப்பட்டது. இம்மையங்கள் (CDC) [[லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா|லாஸ் ஏஞ்சல்ஸி]]ன் 5 ஒரினச்சேர்க்கையாளர்களிடையே [[நியுமோசிஸ்டிஸ் நிமோனியா(PCP)|நியுமோசிஸ்டிஸ் கரினியை நிமோனியாவைக]] கண்டுபிடித்தது. இப்பொழுதும் PCP என்றே வகைப்படுத்தப்பட்டு [[நியுமோசிஸ்டிஸ் நிமோனியா(PCP)|நியுமோசிஸ்டிஸ் ஜிரோவேசியையால்]] உண்டாவதாகக் கருதப்படுகிறது)ஆரம்பத்தில் இந்நோய்க்கான அதிகாரப்பூர்வ பெயர் CDC யிடம் இல்லாத காரணத்தால் இதனுடன் தொடர்புடைய நோய்களின் பெயரை வைத்து (எடுத்துக்காட்டாக [[நிணச்சுரப்பிப்புற்று|நிணநீர்ச்சுரப்பிநோயான]] லிம்படினோபதி) இந்நச்சுயிரிக்குப் பெயரிட்டனர் இதன் கண்டுப்பிடிப்பாளர்கள்." காபோசியின் சதைப்புற்று மற்றும் சந்தர்ப்பவாத நோய்த்தொற்றுக்கள்" என்ற பெயரும் இதற்கிடப்பட்டு 1981 இல் அப்பெயரில் ஒரு செயற்குழு அமைக்கப்பட்டது. பத்திரிகையாளர்களிடையே" GRID " ([[ஓரினச்சேர்க்கையாளர்களுடன் தொடர்புடைய நோயெதிர்ப்புத் திறன் குறைபாடு|ஓரினச்சேர்கையாளர்களோடு தொடர்புடைய நோயெதிர்ப்புக் குறைபாடு]]) என்று பெயரிடப்பட்டது. CDC பெயர் தேடி அலைந்த பின்னர் நோயுற்ற சமுதாயங்களைப் பார்த்து "4H நோய்"([[ஹைட்டி|ஹைதி]]யைச் சேர்ந்தவர்கள், [[ஓரினச் சேர்க்கையாளர்|ஓரினச்சேர்க்கையாளர்கள்]], [[இரத்தம் உறையாமையால் பாதிக்கப் பட்டவர்கள்|இரத்தம் உர��யாமையால் பாதிக்கப்பட்டவர்கள்]] மற்றும் ஹெராயின் பயன்படுத்துபவர்கள்)என்று பெயரிட்டது. எனினும் எயிட்சு ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மட்டும் உரியதல்ல எனக் கண்டறிந்த பின்னர் "கிரிட்" (GRID) என்ற சொல் பொருத்தமானதாகத் தோன்றாத காரணத்தால் 1982 ஜூலையில் எயிட்சு என்ற சொல் அறிமுகப்பட்டது. செப்டம்பர் 1982 க்குள் CDC எயிட்சு என்ற பெயரை உபயோகப்படுத்த ஆரம்பித்து இந்நோய்க்கு சரியான விரிவாக்கத்தை அளித்தது.. + +எயிட்சு நோய் பரவல் பிந்தைய 1950 களில், பெல்ஜியத்தின் காங்கோவில், [[ஹிலாரி கோப்ரொவ்ஸ்கி|ஹிலாரி கோப்ரொவ்ஸ்கியின்]] போலியோமையலைடிஸ் [[தடுப்பூசி|தடுப்பூசிக்கான]] அசட்டையான ஆய்வின் பொழுது ஆரம்பித்துவைக்கப்பட்டதாகும் என பலத்த சர்ச்சைக்குள்ளான தேற்றமான OPV எயிட்சு கருதுகோள் தெரிவிக்கிறது. விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த விவரம் கிடைக்கும் ஆதாரங்களால் உறுதிசெய்யப்படவில்லை. + +எச் ஐ வி [[ஆப்ரிக்கா|ஆப்பிரிக்காவிலிருந்து]] [[ஹைட்டி|ஹைதிக்குச்]] சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குச் சென்றிருக்கலாம் என்று அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கிறது. +எச் ஐ வி கிருமி [[கமரூன்]] நாட்டில் இருந்த [[சிம்பன்சி]]யை மனிதன் வேட்டையாடி அதை வெட்டும் போது சிம்பன்சியின் இரத்தம் அதை இறைச்சிக்காக வெட்டிய மனிதனின் கையில் இருந்த காயம் மூலம் பரவியிருக்கலாம் என கருதப்படுகிறது. + +எய்ட்ஸ் நோயின் தோற்றம் பற்றி ஆராய்ச்சிகளை நடத்திய மேற்குலக விஞ்ஞானிகள் 1920களில் [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]] நாட்டில் கின்ஷாஸா நகரில் இருந்துதான் ஹெச்.ஐ.வி கிருமி பரவ ஆரம்பித்தது என்று கூறுகின்றனர். + +[[படிமம்:Ryan White.jpg|thumb|216px|right|ரியான் வைட் தனது எச் ஐ வி நோய்த் தாக்கத்தால் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டு சுவரொட்டி குழந்தையாக ஆனார்]] +எயிட்சு நிந்தையானது உலகம் முழுவதிலும் பல விதங்களில் காணப்படுகிறது. [[புறக்கணித்தல்|சமுதாயத்தில் இருந்து தள்ளிவைத்தல்]], [[சமுதாயத்திலிருந்து விலக்குதல்|விலக்குதல்]], பாகுபாடு , எச் ஐ வி தாக்கப்பட்ட மக்களைத் தவிர்த்தல், நோயாளியின் [[விருப்பம்|விருப்பமின்றி]] அவரை கட்டாயப்படுத்தி எச் ஐ வி சோதனைக்கு உட்படுத்தி நோயாளி பற்றிய [[இரகசியமாக வைத்தல்|இரகசியங்களை]] வெளியிடுதல், எச் ஐ வி நோய்த்தாக்கியவர்கள் அல்லது நோய்தாக்கியவர்கள் என்று எண்ணப்பட்டவர்களுக்கெதிரான வன்முறை, மற்றும் எச் ஐ வி நோயாளிகளை [[நோய் தன்மையறிய தனிமைப்படுத்துதல்|நோய் பாதிப்பறிய தனிமைப்]]படுத்துதல் போன்றவையே இவை . இந்நிந்தையுடன் கூடிய வன்முறை அல்லது வன்முறையைப் பற்றிய பயம் போன்றவை அநேக மக்கள் எச் ஐ வி சோதனையை நாடுவதிலிருந்தும், முடிவுகளை அறிய திரும்பிவருவதிலிருந்தும், சிகிச்சை பெற்றுக்கொள்வதிலிருந்தும் தடுப்பதால் சமாளிக்கவல்ல நாள்பட்ட வியாதி நிலையிலிருந்து இந்நோய் மரணதண்டனையாக உருவெடுத்து எச் ஐ வி பரவலை நிரந்தரமாக்குகிறது. + +எயிட்சு நிந்தை கீழ்க்கண்ட மூன்று பிரிவினைகளாக வகைப்படுத்தப்படுகிறது. + + +பெரும்பாலும் எயிட்சு நிந்தையானது ஒன்றோ பலதோ ஆன பிற நிந்தைகளுடன் கூட்டாகப் பிரயோகிக்கப்படுகிறது. குறிப்பாக [[ஓரினச் சேர்க்கை|ஓரினச்சேர்க்கை]], [[இருபாலுறவு|ஈரினச்சேர்க்கை]], ஒழுக்கமின்மை, [[விபச்சாரம்]] மற்றும் [[சிறை வழி போதை மருந்து உபயோகம்|சிறை வழி போதைமருந்து போடுதல்]] போன்றவையே இவை. + +[[வளர்ந்த நாடு|வளர்ந்த நாடுகள்]] பலவற்றில் எயட்சுக்கும் ஓரின மற்றும் ஈரின சேர்க்கையுடன் இருக்கும் தொடர்பு பாலுறவில் வெறுப்பையும் [[தனிமைப் பயம்|ஒரினசேர்க்கைக்கெதிரான]] கருத்துகளையும் ஏற்படுத்துகிறது. அனைத்து ஆண் உடலுறவிலும், நோய்த்தாக்கம் இல்லாத ஆண்களுக்கிடையேயான உடலுறவிலும் கூட எயிட்சு வாய்ப்பிருப்பதாக எண்ணப்படுகிறது. + +[[படிமம்:Life expectancy in some Southern African countries 1958 to 2003.png|right|295px|thumb|கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளின் மனிதர்களின் சராசரி வாழ்நாள் எதிர்பார்ப்பில் ஏற்படும் மாற்றம் [348][349][350][351][352]]] + +எச் ஐ வி மற்றும் எயிட்சு மனித மூலதன இருப்பைக் குறைத்து பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கிறது. [[மனித மூலதனம்]][[பொருளாதார வளர்ச்சி]]வளர்ந்த நாடுகளைப் போலல்லாது, சரியான போஷாக்கு, உடல் பராமரிப்பு மற்றும் மருந்துகளின்றி எயிட்சு தொடர்பான சிக்கல்களினால் பலர் அவதிப்பட்டு மரிக்கின்றனர். வேலைசெய்ய முடியாத நிலையில் அவர்களுக்கு தகுந்த மருத்துவ பராமரிப்பு தேவைப்படுகிறது. குறிப்பிடத்தக்க எயிட்சு மக்கள்தொகை உடைய நாடுகளில் இது சமூக பொருளாதாரங்களின் சரிவை ஏற்படுத்தும் என்பதே இத்தகைய நோய்த்தாக்கத்தின் முன்னறிவிப்பாகும். நோய்ப்பாதிப்பு கடுமையாக உள்ள சில ���குதிகளில் இந்நோய்பரவல் வயதான தாத்தா பாட்டிகளால் பராமரிக்கப்படும் நிலையிலுள்ள பல [[அனாதை|அனாதைகளை]] விட்டுச் சென்றிருக்கிறது. + +இப்பகுதிகளின் அதிகரித்திருக்கும் இறப்புவிகிதம் [[பணியாளர் சக்தி|பணியாளர் சமுதாயத்திலும்]] [[மக்கள் தொகை சரிவு|தொழில் அனுபவமுடையோர்களின் எண்ணிக்கையிலும் பெரும் சரிவை]] ஏற்படுத்துகிறது. இங்ஙனம் சரிவடைந்த [[பணியாளர் சக்தி|பணியாளர் சமுதாயமும்]] பெருமளவில் குறைந்த ஞானமும் [[வேலை முன் அனுபவம்|பணி அனுபவமும்]] உடைய இளைஞர்களைக் கொண்டிருப்பதால் இது குறைந்த உற்பத்திக்கு வழிவகுக்கும். நோயுற்ற குடும்பத்தினரை பார்த்துக்கொள்ளவோ, தான் நோயுற்றிருக்கும் நிமித்தமாகவோ பணியாளர்களால் அனுபவிக்கப்படும் [[மருத்துவ விடுப்பு|மருத்துவ விடுப்பும்]] உற்பத்தியைக் குறைக்க வல்லது. [[வருமானம்|வருமான]] இழப்பு மற்றும் பெற்றோரின் மரணம் மூலம் மனித முதலீட்டையும், மக்களின் பேரில் [[முதலீடு|முதலீடு செய்வதையும்]], பெருக்குவதற்கான நுட்பங்களை அதிகரிக்கப்பட்ட இறப்புவிகிதம் பலவீனப்படுகிறது. இளைஞர்களை பெருமளவில் கொல்வதன் மூலம் [[வரி|வருமான வரி]] செலுத்தும் மக்கள் தொகையை கணிசமாகக் குறைத்து கல்வி மற்றும் நல பணி எயிட்சு அல்லாத பொது செலவினங்களுக்கான ஆதாரத்தைக் குறைத்து நாட்டில் நிதி நெருக்கடியையும் பொருளாதார பின்னடைவையும் ஏற்படுத்துகிறது. இது வரியாதாரத்தின் வளர்ச்சியில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதோடல்லாமல் நோயாளிகளுக்கான சிகிச்சை, நோய்ப்பட்ட பணியாளர்களுக்குப் பதிலாக பணியமர்த்தியிருக்கும் ஊழியர்களுக்கான பயிற்சி, மருத்துவ விடுப்பூதியம் மற்றும் எயிட்சு அனாதைகள் பராமரிப்பு போன்ற அதீத செலவுகளால் வரியாதார வளர்ச்சிப் பின்னடைதலை அதிகரிக்கிறது. வயது வந்தோர்களின் இறப்பு விகித அதிகரிப்பினால், அநாதைகளைப் பராமரிக்கும் பொறுப்பும், நிந்தனையும் குடும்பத்திலிருந்து அரசுக்கு மாற்றப்படும் பொழுது இத்தகையதொரு சூழ்நிலை ஏற்படுகிறது. + +வீட்டளவில் எயிட்சு நோய் வருமான இழப்பையும் உடல்நல பேணுதலில் செலவு அதிகரிப்பையும் விளைவிக்கறது. இத்தகைய வருமான இழப்புகள், செலவு குறைப்பு நடவடிக்கைகளையும், படிப்பிற்கு பதிலாக உடல் நலம் பேணுதல் மற்றும் மயான செலவுகளில் ஈடுபடும் மாற்று விளைவுகளையும் ஏற்ப��ுத்துகிறது. எச் ஐ வி /எயிட்சு நோயாளி இருக்கும் இல்லங்கள் மற்றவைகளை விட இருமடங்கு மருத்துவச் செலவுகளுக்காளாவதாக, கோட் டி ஐவாய்ர் ஆய்வு தெரிவிக்கிறது. + +மத தலைவர்களில் பலர் விஞ்ஞானிகளால் நோய்ப்பரவலைத் தடுக்க ஒரே வழியெனக் கருதப்படும் கருத்தடை சாதனங்கள் உபயோகத்திற்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாக தெரிவிக்கும் காரணத்தால் மதமும் எயிட்சும் என்ற தலைப்பு கடந்த இருபத்து ஆண்டுகளாக பெறும் விவாதத்திற்குள்ளானதாகும். உலகளாவிய நல பணிகளிலும், மதசார்பற்ற நிறுவனங்களான UNAIDS மற்றும் உலக சுகாதார நிறுவனத்துடனான ஒத்துழைப்பிலும் ஈடுபட்டிருக்கும் மதங்களின் பங்கேற்பும் முக்கியத்துவம் வாய்ந்தது. + +சில சீர்திருத்தவாதிகள் எச் ஐ விக்கும் எயட்சுக்குமான தொடர்பையும் எச் ஐ வி என்ற ஒன்று உள்ளதா எனவும் தற்போதைய சிகிச்சை முறைகளின் நம்பகத்தன்மையையும் குறித்தும் கேள்வி எழுப்பிவருகின்றனர். மருத்துவ சிகிச்சையே எயிட்சு மரணங்களுக்குக் காரணம் என்றும் கொக்கரிக்கின்றனர். இத்தகைய பறைசாற்றல்கள் [[விஞ்ஞானிகள் சமுதாயம்|விஞ்ஞானிகளால்]] விரிவாக சோதிக்கப்பட்டு முழுமையாக நிராகரிகப்பட்டுள்ள போதிலும் எச் ஐ வி யே எயிட்சு நோய்க்குக் காரணம் என்பதற்கான [[விஞ்ஞான புரிந்துணர்வு ஒப்பந்தம்|விஞ்ஞானிகளுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்]] ஆதாரத்தைப் பின்வரும் குறிப்புகளில் காணவும்,,, அவை [[இணையம்|இணையதளத்தின்]] மூலம் பரப்பப்பட்டு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது.[[தென்னாபிரிக்கா|தென்னாப்பிரிக்காவில்]] முன்னாள் அதிபர் தபோ ம்பெகி யின் எயிட்சு மறுதலிக்கும் போக்கு எயிட்சு நோய் பரவலுக்கு எதிரான அரசின் நடவடிக்கைகள் பலனற்று போகக் காரணமாய் இருந்ததோடல்லாமல் ஆயிரக்கணக்கான எயிட்சுமரணங்களையும் ஏற்படுத்திற்று. + +[[ஓரினச்சேர்க்கையாளர்கள்|ஓரினச்சேர்க்கையாளர்களில்]] ஒரு பிரிவினர் எச் ஐ வி நேர்மறையான கூட்டாளிகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுடன் பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டு நோய்த்தொற்றை சுறுசுறுப்பாகப் பின்தொடர்கின்றனர். நோய்த்தொற்றை பின்தொடர்பவர்கள் [[நோய்க்கிருமியைப் பின்தொடர்வோர்|பூச்சிவிரட்டுபவர்கள்]] எனவும் அவர்களுக்கு நோயைக் கொடுப்பவர்கள் [[பரிசளிப்போர்|பரிசளிப்பவர்கள்]] எனவும் [[கொச்சை அடைமொழி|கொச்சையான]] அடைமொழிகளால் இது அழைக்கப்படுகிறது. எச் ஐ வி நோய்த்தொற்றை பெற்றுக் கொள்வதில் எந்த நாட்டமும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவைத் தேர்ந்துகொள்பவர்களைக் குறிக்கும் அடைமொழியான பேர்பேக்கிங் எனப்படும் [[சேணம் பூட்டாத குதிரையைப் போன்று பாதுகாப்பற்ற உடலுறவில் ஈடுபடுவோர்|சேணமற்ற குதிரை போன்ற]] என்ற வார்த்தையிலிருந்து இத்தகைய எயிட்சு பின்தொடரும் நிலை வித்தியாசப்படுகிறது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். + +இத்தகைய பழக்கத்தின் உண்மையான விரிவு அறியப்படாததாகவே இருக்கிறது. இத்தகைய கலாச்சாரத்தின் அங்கத்தினர்கள் என தங்களை அடையாளம் காட்டிக் கொள்பவர்கள் அனைவரும் எச் ஐ வி பரப்புதலில் நாட்டம் கொண்டவர்கள் அல்ல. சில பக் சேசர்கள் இணையதளத்தின் மூலம் கிப்ட் கிவர்களோடு தொடர்பு கொள்ள முற்படுகின்றனர். வேறு சில நோய்க்கிருமியைப் பின்தொடர்வோர் எச் ஐ வி நேர்மறையாளர்கள், எச் ஐ வி எதிர்மறையாளர்களோடு நோய்தொற்றை அடையவேண்டும் என்ற நோக்குடன் ("பரிசு பெறுவது") பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் நோய்க்கிருமி கேளிக்கைகளில் நிலைமாற்ற விருந்துகளை ஏற்பாடுசெய்து அதில் கலந்து கொள்கின்றனர். + +[[எச்.ஐ.வி]] குறித்தும் எயிட்சு குறித்தும் பல தவறான கருத்துக்களும் நம்பிக்கைகளும் நிலவுகின்றன. மிகவும் பரவலான பிழையான கருத்துக்களாக இருப்பவை: + என்பனவாகும். + +சிலர் எச்.ஐ.வி தீநுண்மத்திற்கும் எயிட்சிற்கும் தொடர்பில்லை எனக் கருதுகின்றனர். வேறு சிலர் எச்.ஐ.வி. தீநுண்மம் இருப்பதையும் அதற்கான சோதனைகளின் செல்லுந்தன்மை குறித்தும் ஐயமுறுகின்றனர். எயிட்சு மறுப்பாளர்கள் எனப்படும் இவர்களது கூற்றுக்கள் அறிவியல் குமுகத்தால் ஆயப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இவர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்; தென்னாபிரிக்காவில் 1999-2005 காலகட்டத்தில் எயிட்சு மறுப்புவாதத்திற்கு அரசாதரவு இருந்தது. இதனால் அந்நாட்டில் எயிட்சு நோய்ப்பரவல் தடுக்கப்படாது தவிர்த்திருக்கக்கூடிய பல்லாயிர உயிரிழப்புக்களும் எச்.ஐ.வி தீநுண்மத்தொற்றுக்களும் ஏற்பட்டன. + +எச்.ஐ.வி என்பது அறிவியலாளர்களால் தவறாகவோ விருப்பத்துடனோ உருவாக்கப்பட்ட பொய்மை என பல சதிக் கொள்கைகள் பரவியுள்ளன. சோவியத் நாட்டில் எச்ஐவி/எயிட்ச��� ஐக்கிய அமெரிக்காவால் பரப்பப்பட்ட பொய்மை என பரப்புரை செய்யப்பட்டது. இதனை பல மக்கள் நம்புவதாகவும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. + + + +[[பகுப்பு:கொள்ளை நோய்கள்]] +[[பகுப்பு:பாலுறவு நோய்கள்]] +[[பகுப்பு:நச்சுயிரி நோய்கள்]] +[[பகுப்பு:நோய் எதிர்ப்பு முறைமைகள்]] +[[பகுப்பு:நுண்ணுயிரியல்]] +[[பகுப்பு:எயிட்சு]] +[[பகுப்பு:கூகுள் தமிழாக்க மருத்துவக் கட்டுரைகள்]] + + + +கதிரைமலைப்பள்ளு + +ஈழத்துக் கதிரைமலைப்பள்ளினைப் பின் பற்றியே தமிழகத்திற் பள்ளுப் பிரபந்தங்கள் எழுந்தன என்பர். இந்நூல் 130 செய்யுள்கள் கொண்டது. பிற்காலத்திய இடைச்செருகல்கள் சிலவுங் காணப்படுகின்றன. + +இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை. (1478 - 1519 )இல் நல்லூரிலிருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் காலத்தது இந்நூல் என்பதற்குப் பல ஆதரங்களுள. பரராசசேகரனின் ஆணையின்படி பன்னிரு புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்தியநூலில் தென்கதிரைவேலர்' பலவிடங்களிற புகழப்படுகிறார். இப் பன்னிருபுலவர்களுள் ஒருவரே 'கதிரைமலைப்பள்ளு'ப் பாடியிருக்ககூடும். + + + + + +அரசகேசரி + +பாடலரசன் அரசகேசரி பண்டாரம் (நல்லூர், 16- 17 ஆம் நூற்றாண்டு) யாழ்ப்பாணத்தை சேர்ந்த புலவர் ஆவார். + +அரசகேசரி, யாழ்ப்பாணத்தை ஆண்ட பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மருமகனும், எதிர்மன்னசிங்கம் என்னும் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த ஆரியச் சக்கரவர்த்தியின் (1591-1616) மாமனும் ஆவார். +பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றிய அரசகேசரி பரராசசேகரச் சக்கரவர்த்தியின் இரண்டாம் மனைவியாகிய வள்ளியம்மையின் மகளாகிய மரகதவல்லியின் கணவராவார். வள்ளியம்மையும் பொன்பற்றியூர் பாண்டிமழவன் மரபு வழித் தோன்றலே. பரராசசேகரச் சக்கரவர்த்தியின் மகனும் மரகதவல்லியின் தமையனுமாகிய யாழக மன்னன் பெரியபிள்ளையின் மகன்தான் எதிர்மன்னசிங்கம் ஆவான். +எதிர்மன்னசிங்கனால் மரணப்படுக்கையிலே தன் மகன் வயதுக்கு வரும்வரை இராச்சிய பரிபாலனம் செய்யும்படி வேண்டப்பட்டவர் அரசகேசரி. எதிர்மன்னசிங்கனின் நியமனத்தைப் போர்த்துக்கேய தேசாதிபதி ஏற்குமுன் சங்கிலி குமாரனாற் கொல்லப்பட்டவர். சங்கிலி குமாரனின் ஆட்சி 1615-1619. + +தமிழ் மொழியிலும் சமஸ்கிருதத்திலும�� வல்லவர். காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சம் என்னும் மகா காவியத்தை இவர் தமிழில் புராண நடையில் பாடி இரகு வமிசம் என்னும் பெயர் சூட்டினார். காரைதீவு கா.சிவசிதம்பர ஐயர் 1887 ம் ஆண்டிலே சென்னையில் பதிப்பித்து வெளியிட்ட தட்சிண புராணப் பதிப்பிலே அரசகேசரி இயற்றியதாகச் சிறப்புப் பாயிரமொன்றும் இடம்பெறுகின்றது. +இவரின் இருமொழி புலமைக்கும், மொழி பெயர்க்கும் ஆற்றலுக்கும் எடுத்துக்காட்டு ஒன்று காட்டுதும்:-.. + +என்னும் வடமொழி இரகுவமிச சுலோகத்தை தமிழில்:- + +இவர் இரகுவமிசம் பாடுங்காலத்தில், நல்லூருக்குக் கீழைத் திசையில் உள்ள நாயன்மார்க்கட்டில் உள்ள அரசடிப்பிள்ளையார் கோவிலின் தாமரை குளத்தின் கரையில் இருந்த வண்ணம் பாடினார் என்பர். இதனால்தான் நாட்டுப் படலம் பாடும் போது குளங்களை முதலில் பாடினார் என்று கூறுவர். +இவர் வயல்களை பாடும்போது குளத்துக்கு அருகில் இருந்த கரும்பு மற்றும் நெல் வயல்களையும் வாழை மற்றும் கமுகுத் தோப்புகளையும் இரகுவமிச செய்யுளில் வருணித்து பாடயுள்ளார். இதற்கு சான்றாக தமிழ் இரகுவமிச பாடல் ஒன்று காட்டுதும்:- + +இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், மணிமேகலை, போன்ற நூல்களில் மிக தேர்ச்சியுடையவர் என்பது, சங்க இலக்கியங்களில் வரும் சொல்ப் பயன்பாட்டை தனது தமிழ் இரகுவமிச செய்யுளுள் அருமையாக அமைத்து பாடியமை சான்றாகும். +இதற்கு உதாரணமாக ஒன்று காட்டுதும்:- + +என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் கூறிய அம்பி சிறப்புக்களை ( அம்பி = தோணி) , + +என்னுஞ் செய்யுளுள் அமைத்து பாடியுள்ளர். + +மேலும் இவர் கம்பர் பாடிய கம்ப இராமாயணதை பின்பற்றி, காளிதாசப்புலவர் வடமொழியில் இயற்றிய இரகுவம்சதை தமிழில் மொழிபெயர்த்து, மிக கடினமான சொற்களில் பாடியமையால் இது அறிஞர்களால் மட்டும் சுவை உணர்ந்து மேச்சும்படியாகுள்ளது. இவர் வாழ்ந்த அரண்மனை நல்லூர் யமுனா ஏரிக்கு அருகாமையில் இன்றும் அரசகேசரிவளவு என்று விளங்கும் நிலப்பரப்பில் அமைந்திருந்தது என்பர்... + + + + + +நா. கதிரைவேற்பிள்ளை + +நா. கதிரைவேற்பிள்ளை (டிசம்பர் 21, 1871 - 1907) இலங்கைத் தமிழறிஞர். தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் தமிழகத்தில் தமிழ்ப் பணிக்கும், சைவப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' திரு. வி. க. வைத் ���மிழ்ப் பெரியாராக உருவாக்கியவர். "சதாவதானி" எனப் போற்றப் பெற்றவர். + +கதிரைவேற்பிள்ளை பருத்தித்துறை, மேலைப்புலோலியில் வாழ்ந்த நாகப்பபிள்ளை என்பவருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் 1871 ஆம் ஆண்டு பிறந்தார். அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. ஆறுமுக நாவலரின் மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார். + +தமிழின் மீதான ஆர்வத்தினால் சென்னைக்குப் பயணமானார். சென்னையில், தமிழ் கறக விரும்பியவருக்கு தி. த. கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் உதவினார். புலமையும், கருணையும் கொண்டிருந்த தி. த. கனகசுந்தரம்பிள்ளை, கதிரவேற்பிள்ளையை மாணவராக ஏற்றுக் கொண்டார். தமிழின் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்ததோடு, சைவ சித்தாந்த சாத்திரங்களையும் பயின்று புலமை பெற்றார் கதிரவேற்பிள்ளை. வடமொழியிலும் தேர்ச்சி பெற்ற கதரவேற்பிள்ளை, சென்னை ரிப்பன் அச்சகத்தின் அதிபர் சிவசங்கரன் செட்டியாரின் பழக்கத்தால், தாள் திருத்தும் பணியை ஏற்று, படிக்கின்ற காலத்திலேயே, சென்னையில் செலவுக்கு வேண்டியதை ஈடு செய்து கொண்டார். + +தமிழ்நாட்டிற்கு வந்து பல சைவ நூல்களையும், நைடதத்திற்கு உரையையும் இயற்றினார். இலங்கையில் கதிர்காமம் என்ற தலத்துக்கு ஒரு கலம்பக நூல் இயற்றினார். "பழனித் தலப் புராணம்", "திருவருணைக் கலம்பகம்", "சிவராத்திரிப் புராணம்" ஆகிய நூல்களுக்கு உரை எழுதிய கதிரவேற்பிள்ளை, அதிவீரராம பாண்டியன் இயற்றிய தமிழ்க் கூர்ம புராணத்திற்கு விளக்கவுரை கண்டார். + +சிவஷேத்திராலய மகோற்சவ விளக்கம், திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் சரிதவசனச் சுருக்கம், ஏகாதசிப் புராணத்திற்கு அரும்பதவுரை ஆகிய நூல்களையும் எழுதினார். + +சென்னை வாழ் தமிழறிஞர் பலருடைய வேண்டுகோளுக்கிணங்கத் தமிழ்ப்பேரகராதி எழுதி வெளியிட்டார். இவ்வகராதியின் பெருமையைப், + +என்று தஞ்சை சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் புகழ்ந்திருக்கிறார். + +கதிரைவேற்பிள்ளை, தமது 1897 ஆம் ஆண்டில், சென்னையில் இருந்த உயர்நிலைப் பள்ளி ஒன்���ில் ஆசிரியராகப் பணி ஏற்றார். அப்போதுதான், திரு. வி. கல்யாணசுந்தரனார், பிள்ளையவர்களின் மாணாக்கராகும் பேறு பெற்றார். கதிரவேற்பிள்ளையின் பேச்சுத் திறன், சென்னையில் மட்டும் அல்லாது, தமிழகமெங்கும் புகழ் பெற்றது. தமிழ் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று, தமிழ் மொழியின் செழுமைக்கும், சைவ நெறியின் வளர்ச்சிக்கும் உரையாற்றிப் புகழ் பெற்றார். + +சைவத் தமிழ் உலகம் போற்றி வந்த திருமறைகளே 'அருட்பா' என்றும் வள்ளல் பெருமான் இராமலிங்கர் பாடியுள்ளவை 'மருட்பா' என்றும் சைவநெறிப் பற்றால் கூறத் துணிந்தார் கதிரவேற்பிள்ளை. இந்த 'அருட்பாப் பூசல்', பெருமான் ஆறுமுக நாவலர் காலத்தில் தொடங்கியது, மீண்டும் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னரும் நடைபெறலாயிற்று. பேசியதோடு, இராமலிங்க சுவாமியின் பாடல்கள் மருட்பாவேயன்றி, அருட்பா அல்ல எனக் கதிரவேற்பிள்ளை 'மருட்பா மறுப்பு' எழுதியதை ஆதாரமாக வைத்து, சென்னை நீதிமன்றத்தில் வள்ளல் பெருமான் அன்பர்களால் பிள்ளையவர்களின் மீது மானநஷ்ட வழக்குத் தொடரப் பெற்றது. இந்த வழக்கில், தமது ஆசிரியர் கதிரைவேற்பிள்ளைக்கு ஆதரவாக திரு. வி. க. சாட்சியமளித்தார். இறுதியில், நீதிபதியால் வழக்கு தள்ளுபடி செய்யப் பெற்றது. + +தமிழ்நாட்டுச் சைவ மடங்களாலும், குறுநில மன்னர்களாலும், புரவலர்களாலும் வழங்கப் பெற்ற "நாவலர்", "சைவசித்தாந்த மகாசரபம்", "அத்துவித சித்தாந்த மகோத்தாரணர்", "மகாவித்துவான்", "பெருஞ்சொற்கொண்டல்" முதலிய பட்டங்களைப் பெற்றார். சென்னை இலக்குமி விலாச மண்டபத்தில் கவிராயர்கள், பண்டிதர்கள், புரவலர்கள் முன்னிலையில் கதிரவேற்பிள்ளை சதாவதானம் செய்து "சதாவதானி" என்னும் பட்டத்தையும் பெற்றார். + +ஒருவர் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்தால் சதாவதானி என்பர். கதிரைவேற்பிள்ளை செய்த சதாவதானம் பலர் முன்னிலையில் நடந்து வெள்ளைக்கார துரைகளால் பாராட்டப்பட்டது. கதிரைவேற்பிள்ளை முதலில் யாழ்ப்பாணம் மேலைப்புலோலி கந்தசுவாமி கோவிலில் நன்னூல் காண்டிகையுரை ஆசிரியர் வித்துவான் அ. குமாரசாமிப் புலவர் தலைமையில் 18 அவதானங்களை செய்து முடித்தார். பின்னர் சென்னையில் லெட்சுமிவிலாச நாடகசாலையில் பாலசரசுவதி ஞானானந்த சுவாமிகள் தலைமையில், +இவற்றை செய்து முடித்து சதாவதானியென்ற பட்டத்தைப் பெற்றார். + +மதுர���த் தமிழ்ச் சங்கப் புலவராகத் திகழ்ந்த கதிரவேற்பிள்ளை, தமிழ்ப் பணிக்காக, அடிக்கடி சென்னையிலிருந்து நீலகிரி சென்று வந்தார். 1907 ஆம் ஆண்டில் ஒருமுறை நீலகிரி சென்றபோது, அங்கு கடுஞ்சுரத்தால் உடல் நலிவுற்று இறந்தார். திரு. வி. க. , தமது குருநாதர் நினைவைப் போற்றும் வகையில், கதிரவேற்பிள்ளையின் தமிழ் வாழ்வை அரியதொரு நூலாக எழுதி வெளியிட்டார். + + + + +அ. குமாரசாமிப் புலவர் + +சுண்ணாகம் அ. குமாரசுவாமிப் புலவர் (ஜனவரி 18, 1854 - மார்ச்சு 23, 1922, சுண்ணாகம், யாழ்ப்பாணம்) இலங்கையைச் சேர்ந்த புலவர் ஆவார். காலனித்துவ ஆட்சிக்காலத்தில் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர்களில் இவரும் ஒருவராவர். + +யாழ்ப்பாணத்தில் சுண்ணாகம் என்ற ஊரில் பிறந்த குமாரசுவாமிப்புலவரின் தந்தை அம்பலவாணர் தமிழ் இலக்கிய இலக்கணங்களை தமது பெரிய தகப்பனாராகிய முத்துக்குமாரக் கவிராயரிடம் கற்றுத் தேறியவர். அத்துடன் சைவ சமய ஈடுபாடும் கொண்டவர். தென்கோவை குமாருடையார் மகள் சிதம்பராம்மையரை 1840 வைகாசி ஐந்தாம் நாள் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் முறையே சிவகாமிப்பிள்ளை, குமாரசுவாமி மற்றும் காமாட்சிப்பிள்ளை என மூன்று மகவுகளை பெற்றனர். 1854 ஆம் ஆண்டு தை 18 ஆம் நாள் குமாரசுவாமி பிறந்தார். + +குமாரசுவாமிக்கு ஐந்து வயதானதும், தந்தையார் குலகுருவான வேதாரணியம் நாமசிவாய தேசிகரை அழைத்து இவருக்கு ஏடு தொடக்குவித்தார். பின்னர் மல்லாகம் ஆங்கிலப் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். இவர் ஆங்கிலத்தில் அடிப்படை புலமை அடைந்த பின்பு, இவரை ஆங்கில பாடசாலையை விட்டு விலக்கிய இவரது தந்தையார், சுண்ணாகம் முருகேச பண்டிதரிடம் இவரை தமிழ் கல்வி பயிலுமாறு அனுப்பினார். முருகேச பண்டிதரிடம் தமிழ்க் கல்வி கற்ற காலத்தே இவருடன் கூட கல்வி கற்றவருள் குறிப்பிடத்தக்கவர்கள் ஊரெழு சு. சரவணமுத்துப்புலவர், மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை மற்றும் சுண்ணாகம் மு. வைத்தியநாதபிள்ளை ஆவர். இவர் மாணவராக இருந்த போது, சொல்லும் பொருளும் சுவைபட பாடுவதிலும், கட்டுரை வரைவதிலும், சொற்பொழிவு செய்வதிலும் திறமை பெற்றிருந்தமையால் இவரைப் புலவர் என்று பட்டப் பெயரால் அழைத்தனர். இப்பட்டப் பெயரே இவருக்கு பிற்காலத்தில் இயற்பெயராகிற்று எ��்று புலவரது மாணவராகிய புன்னாலைக் கட்டுவன் சி. கணேசையர் செய்யுள் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். + +புலவரவர்கள் கல்வி கற்று வரும் காலத்தே, தமிழகம் சென்று தமிழ் மற்றும் சைவத் தொண்டாற்றி விட்டு தாயகம் திரும்பிய ஆறுமுக நாவலருக்கு வெகு சிறப்பான வரவேற்பு விழா ஒன்றை யாழ்ப்பாண மக்கள் 1869 ஆம் ஆண்டு நடாத்தினர். இவ்விழாவில் புலவரவர்கள் நாவலர் பெருமானை முதலில் நேரில் காணும் வாய்ப்பைப் பெற்றார். இதையடுத்து நாவலர் சைவ சொற்பொழிவுகளுக்கு தவறாது சென்று செவிமடுத்து மகிழ்ந்த புலவருக்கு, உடன் கற்ற நண்பன் ஊரெழு சரவணமுத்துப் புலவர் மூலம் நாவலர் அறிமுகம் கிடைத்தது. நாவலரும் தனது பழைய நண்பனாகிய முத்துக்குமாரக் கவிராயாரின் வழிதோன்றல்தான் புலவர் என்றறிந்து, புலவரின் தமிழ்க் கல்விக்கு ஊக்கமளித்தது மட்டுமல்லாது வடமொழி மற்றும் சைவசித்தாந்தகளை முறையே கற்குமாறு அறிவுரை வழங்கினார். இந்நட்பு நாவலரின் மறைவு வரை மிக நெருக்கமாக இருந்தது என்பதை, புலவர் நாவலர் மீது கூறிய சரமகவிகள் நன்கு விளக்கும்.. + +நாவலரின் அறிவுரைப்படி புலவரும் வடமொழி கற்கும் பொருட்டு, நெருங்கிய உறவினரும், கற்பிட்டி நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளரும், நான்கு மொழிகளில் புலமை உடையவருமாகிய நாகநாத பண்டிதரை அணுகி வடமொழி கற்று வரலானார். நீதிசாரம், இராமோதந்தம், சாணக்கிய சதகம், முக்தபோதம், மாகம், +இரகுவமிசம், சாகுந்தலம் முதலிய வடமொழி நூல்களை முதலில் புலவரவர்கள் கற்றுத் தெளிந்தார். பண்டிதர் வேலை மாற்றம் பெற்று கற்பிட்டி சென்ற பின்னர், தபால் மூலம் புலவரின் கல்வி தொடர்ந்தது. இவ்வாறு பண்டிதரால் மொழிபெயர்த்து அனுப்பப்பட்ட நூல்களுக்குள் ஒன்றாகிய இதோபதேசம் புலவரால் 1886 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இங்கனம் வடமொழியைச் செவ்வனே கற்றதன் பலனாகப் புலவர் பல வடமொழி நூல்களை மொழி பெயர்த்து தமிழில் பாடியுள்ளார். +மேலும் சைவசித்தாந்த அறிவைப் பெருக்கும் பொருட்டு தனது குடியின் குரவராகிய நமசிவாய தேசிகரை அணுகி சைவசித்தாந்தம் மற்றும் சைவச் சான்றோர் வரலாறு முதலியவற்றை கற்கலானார். புலவரவர்கள் மேல் கூறிய தனது முக்குரவருக்கும் தான் இயற்றிய மேகதூதக் காரிகை என்னும் நூலின் குரு வணக்கச் செய்யுளில் வணக்கம் கூறி உள்ளார். + +புலவரின் தமிழ் குரவர் முருகேச பண்டிதர் ���மிழகம் சென்ற சிறிது காலத்தில், ஆறுமுக நாவலரும் இறந்ததால், தமிழ் இலக்கியவிலக்கணம், சைவசித்தாந்தம் முதலியவற்றில் ஏற்பட்ட சந்தேகங்களை தீர்க்கும் பொருட்டு முறையே அளவெட்டி கனகசபைப் புலவரிடமும், இணுவில் நடராசையரிடமும் வினாவித் தெளிந்தார். புலவர் தனக்கு கம்பராமாயணத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை நீக்க, கவித்தலம் துரைச்சாமி மூப்பன் இயற்றிய "கம்பராமாயண கருப்பொருளுரை" என்னும் நூலை அக்காலத்தில் யாழ்பாணத்தில் பெற முடியாததால், துரைச்சாமி மூப்பன் அவர்கள் பேரில் சிட்டுக்கவி ஒன்றை வரைந்து அவருக்கு அனுப்பினார். இச்சிட்டுக்கவியால் மகிழ்வுற்ற துரைச்சாமி மூப்பன் "கம்பராமாயண கருப்பொருளுரை" என்னும் நூலையும் தாம் இயற்றிய வேறு சில நூல்களையும் அனுப்பி வைத்தார். + +சி. வை. தாமோதரம்பிள்ளை 1876 ஆம் ஆண்டு ஆவணி 10ம் நாள் யாழ்ப்பாணம், ஏழாலையில் சைவப்பிரகாச வித்தியாசாலையை நிறுவினார். இப்பாடசாலையில் முருகேச பண்டிதரும் புலவரும் முறையே தலைமையாசிரியராகவும் உதவியாசிரியராகவும் பணியமர்த்தப்பட்டனர். 1878 ஆம் ஆண்டு தொடக்கத்தில் முருகேச பண்டிதர் தமிழகம் செல்ல நேரிட்டதால் புலவரவர்களை தலைமை ஆசிரியராக பணியமர்த்தினார் தாமோதரம்பிள்ளை. புலவரிடம் தனது பாடசாலைப் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு அரசுப் பணி நிமித்தம் தமிழகம் பயணமானார். ஆறுமுகநாவலர், முருகேச பண்டிதர், கொக்குவில் ச. சபாரத்தினமுதலியார் மற்றும் வித்துவசிரோன்மணி ச. பொன்னம்பலபிள்ளை போன்ற மூத்த அறிஞர்களால், ஆண்டுதோறும் இப்பாடசாலை மாணவர்களின் திறமை சோதிக்கப்பட்டது. இச்சோதனைகளைப் பற்றிய அறிக்கைகள் சென்னைப்பட்டணத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த சி.வை தாமோதரம்பிள்ளை அவர்களுக்கு அனுப்பப்பட்டது. புலவரின் கற்பிக்கும் திறமையால் தமது பாடசாலை வளர்ச்சி அடைவதை, நேரில் பார்த்தும் சோதனையறிக்கைகள் மூலமும் அறிந்து மகிழ்ச்சி எய்திய தாமோதரம்பிள்ளை புலவருக்கு எழுதிய கடிதம்:- + +ஏழாலை சைவபிரகாச வித்தியாசாலையில் புலவரிடம் தமிழ் கற்று தெளிந்தவர்களில் , வித்துவான் சிவானந்தையர்(1873 -1916), தெல்லிப்பழை பாலசுப்ரமணிய ஐயர், தெல்லிப்பழை சுப்ரமணியபிள்ளை, இளவாலை க. சங்கரப்பிள்ளை, தெல்லிப்பழை நா. மயில்வாகனம்பிள்ளை, மாவிட்டபுரம் விசுவநாத முதலியார், கையிட்டி பொன்னையர், சுண்ணாகம் மாணிக்கதியாகராச பண்டிதர், ஏழாலை வி. தம்பையாபிள்ளை, கொக்குவில் இளையதம்பிப்பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தக்கவர்களாக விளங்கினர். இவர்களுக்குள் ஆழ்ந்த கல்வியறிவும் செய்யுள் புனையுமாற்றலும் நூலுரைகள் இயற்றும் திறமையும் பெரிதும் பொருந்தி விளங்கியவர் சிவானந்தையராவர். இவர் தருக்க சங்கிரக மொழிபெயர்ப்பு, புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனிதுதி முதலிய நூல்களை இயற்றியுள்ளார். மாணிக்கதியாகராசப் பண்டிதர் கதாப்பிரசங்கஞ் செய்வதிலும், தம்பையாபிள்ளை புராண படனஞ் செய்வதிலும் சிறந்து விளங்கினர். + +1884 ஆம் ஆண்டு உடுவில் மயில்வாகனம், நாகமுத்தம்மையார் தம்பதியினரின் மகளாகிய சின்னாச்சியம்மையாரை புலவருக்கு மணம் முடித்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் புலவரின் பெற்றோர், தமக்கையார் முதலியோர் அடுத்தடுத்து இறந்தமையால் தடைப்பட்ட திருமணம் 1892 இல் நடந்தது. இவர்களுக்கு விசலாட்சியம்மையார் (1893-1925) என்னும் ஒரு மகளும், அம்பலவாணர் (1895-1974), முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை (1900-1987) என இரு மகன்களும் பிறந்தனர். மகன்கள் இருவரும் தமிழ்க் கல்வியில் பெரிதும் சிறந்து விளங்கி, யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றினர். புலவரின் இளைய மைந்தர் சென்னை லயோலாக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும் 1930-1932 காலப்பகுதியில் பணியாற்றியுள்ளார். மேலும் மைந்தர்கள் இருவரும் புலவரின் நூல்கள் மற்றும் முத்துகுமாரகவிராயர் நூல்கள் எல்லாவற்றையும் பதிப்பித்துள்ளார்கள். + +1913ஆம் ஆண்டு சென்னை அரசு தமிழ் அகராதி ஒன்றைத் தொகுக்கும் பொருட்டு பாதிரியார் சாண்டிலர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. இக்குழுவினர் அகராதியின் மாதிரி நகல் ஒன்றை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்கு அனுப்பினர். சங்கத்தினர் இதனை ஆராய்ந்து அறிக்கை வரையும் பொறுப்பை புலவரிடம் ஒப்படைத்தனர். 1913 ஏப்ரல் 4 இல் இடம்பெற்ற சங்கக் கூட்டத்தில் புலவரின் இவ்வறிக்கை நீண்ட தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. புலவரால் அறிக்கையில் கூறப்பட்ட பிழைகள் எல்லாவற்றையும் வாசித்து அறிந்த சாண்டிலர் யாழ்ப்பாணம் வந்து புலவரை உடுவில் மகளிர் கல்லூரியில் சந்தித்து பல தடவை அகராதி தொடர்பாக கலந்துரையாடினார். சாண்டிலர் புலவரின் அறிவுரைப்படி பல திருத்தங்களை அகராதியில் செய்திருந்தார். புலவர் தனது வாழ்நாள் முழுவதும் யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினராக விளங்கி, அதன் சார்பாக பல கட்டுரைகளும் சொற்பொழிவுகளும் வழங்கியுள்ளார். + +சி. வை .தாமோதரம்பிள்ளை புதுக்கோட்டையில் நீதிபதிப் பணியிலிருந்து இளைப்பாறிய பின் அவரது உடல் வளமும், பொருள் வளமும் நலிவுற்ற காரணத்தால், ஏழாலை சைவப்பிரகாசப் பள்ளிக்கூடம் 1898 இல் மூடப்பட்டது. புலவர் வேலையில்லாது இருந்த காலத்தில் நீதிபதி உடுப்பிட்டி கு. கதிரவேற்ப்பிள்ளையின் வேண்டுகோளுக்கு இணங்கி அவர் தொகுத்த தமிழ்ச் சொல் அகராதியை தொகுக்கும் பொருட்டு உதவி வந்தார். மேலும் இக்காலத்தில் புலவர் யாழ்ப்பாணம் வைதிக சைவபரிபாலன சபையில் முக்கிய உறுப்பினராக இருந்தமையால், சபை சார்பாக பல கோவில்களுக்கு சென்று சைவத்தின் சிறப்பு பற்றி சொற்பொழிவுகள் ஆற்றியுள்ளார். ஆறுமுக நாவலரால் 1848 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியர் திரு ா . வைத்திலிங்கம்பிள்ளை நோய்வாய்ப்பட்டு இறந்ததை அடுத்து, 1902 அக்டோபர் 1 இல் புலவர் அப்பதவியில் அமர்த்தப்பட்டார். இங்கு புலவர் தமது வாழ்நாள் முழுவதும் பணியாற்றி வந்துள்ளார். இங்கு இவர் தமிழ் இலக்கண இலக்கியம், சைவ சித்தாந்தம், மற்றும் வடமொழி இலக்கண இலக்கியம் முதலியவற்றை கற்பித்துள்ளார். + +1898 ஆம் ஆண்டுக்குப் பின் புலவரிடத்தில் கல்வி கேட்டுத் தெளிந்தவர்களில் பலர் வண்ணார்பண்ணை சைவப்பிரகாச வித்தியாசாலையில் புலவரிடத்தில் கற்றவர்கள், சிலர் புலவருடைய வீட்டுக்கு சென்று கற்றவர்களாவர். இவர்களுள் முக்கியமானவர்கள், இளவாலை க. சங்கரப்பிள்ளை, கொக்குவில் சீ. முருகேசையர், கந்தரோடை அ. கந்தையாப்பிள்ளை, வட்டுக்கோட்டை க. சிதம்பரநாதன், வண்ணார்பண்ணை ஆ. சண்முகரத்தின ஐயர், புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர், தென் கோவை ச. கந்தையாப் பண்டிதர், உடுவில் வ. மு. இரத்தினேசுவர ஐயர், உடுவில் மு. ஜகநாதையர், காரைநகர் ச.பஞ்சாட்சர ஐயர், இருபாலை சி. வேதாரணிய தேசிகர், இருபாலை சி. தியாகராசபிள்ளை, தாவடி மு.பொன்னையாபிள்ளை, நாயன்மார்கட்டு செ. சிவசிதம்பரப்பிள்ளை, நீர்வேலி வி. மயில்வாகனப்பிள்ளை, தெல்லிப்பழை மேற்கு சி. கதிரிப்பிள்ளை, வேதாரணியம் தி அருணாசல தேசிகர், சிறுப்பிட்டி த. கார்த்திகேயப்பிள்ளை, நல்லூர் க. குருமூர்த்தி சிவாசாரியார், மட்டுவில் பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை, மட்டக்களப்புப் புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை முதலியோராவர். இவர்களுக்குள் புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் புலவரைப் போல் ஆழ்ந்த இலக்கண அறிவு கொண்டிருந்தமையால் பிற்காலத்தில் தொல்காப்பியக்கடல் என அழைக்கப்பட்டவர்; புலவரின் மறைவுக்குப் பின் புலவரின் வரலாற்றை எழுதியவரும் இவரே. மேலும் இருபாலை சேனாதிராசா முதலியாரின் வழித்தோன்றலாகிய தென்கோவை கந்தையா பண்டிதர், கொழும்பு அரசினர் ஆசிரியர் கல்லூரியில் தமிழ்ப் பண்டிதராகவும் வித்தகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். கணேசையரும் கந்தையா பண்டிதரும் பிற்காலத்தில் ஈழ நாட்டின் சிறந்த தமிழறிஞர்களாக விளங்கினர். + +1901ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்த பொ. பாண்டித்துரைத் தேவர் புலவரின் திறமைகளைக் கேள்வியுற்று புலவரை சங்க உறுப்பினராக்கும் பொருட்டு 1902 அக்டோபர் 17 இல் கடிதம் மூலம் வேண்டியிருந்தார். இதற்கு இணங்கிய புலவர், பல கட்டுரைகள் வரைந்து சங்கத்தின் பத்திரிகையாகிய செந்தமிழுக்கு அஞ்சல் செய்துள்ளார். மேலும் சங்கத்தினால் நடத்தப்பட்ட சோதனைகளுக்கு வினாத்தாள்களும் எழுதி அனுப்பியுள்ளார். 1909 ஆம் ஆண்டு புலவர் தமிழ்நாடு சென்ற போது தேவரினால் வரவேற்கப்பட்டு, சங்கப் புலவர்களுக்கு அறிமுகம் செய்து கௌரவிக்கப்பட்டார். மீண்டும் 1914 ஆம் ஆண்டு தமிழகம் சென்றிருந்த போது, சங்கத்தின் தலைவரான இராசராசேசுவர சேதுபதி மன்னவரால் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார். புலவர் இறந்தபோது அவரது 21 ஆண்டுத் தமிழ் தொண்டைப் பாராட்டி இச்சங்கத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் புலவரின் கடைசி நூலாகிய இராமோதந்தம் 1923 ஆம் ஆண்டு இச்சங்கத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டது.. + +1922, மார்ச்சு 10 இல் புலவரை சுரமும் வயிற்றுழைவு நோயும் வருத்தத் தொடங்கின. மருத்துவத்தால் நோய் தணியாது, 1922 மார்ச்சு 23 அதிகாலை மூன்றரை மணியளவில் உயிர் துறந்தார். புலவர் நோயுற்ற காலத்தே அங்கு இருந்து பணிவிடை புரிந்த, அவரது மாணவனாகிய பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை சுடுகாட்டில் புலவரின் உடல் எரியூட்டப்பட்ட போது பின்வரும் இரங்கற்பாவினால் தனது குரவருக்கு இறுதி வணக்கம் கூறினார்: + +குமாரசாமிப��� புலவர் தொடக்கக் காலத்தில் இயற்றிய செய்யுள்கள், பதிகம், ஊஞ்சல், சிந்து, இரட்டைமணிமாலை, அட்டகம், கும்மி மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களாக விளங்கின. + + + + +இப்புராணம் திருகோணமலைக்கு அருகில் உள்ள கரைசையம் என்னும் மகாவலி ஆற்றங்கரையில் உள்ள இடத்தில் அமைந்துள்ள சிவன் திருக்கோவிலின் சிறப்புரைக்கும்.இது சூதமுனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட ஒரு புராணமாகும். இதனை தமிழில் இயற்றியவர் யாவர் என்று புலப்படவில்லை. திருகோணமலை வாழ் நண்பரான வே அகிலேசபிள்ளை விரும்பியவாறு, இப்புராண பொழிப்புரையை புலவர் எழுதியுள்ளார். + +சூடாமணி நிகண்டு என்னும் நூல்ளுள் காணப்படும் தமிழ் சொற்களுக்கு பின்கலநிகண்டு மற்றும் பல இலக்கண நூல்களின் உதவியோடும், வடமொழிச் சொற்களுக்கு இலிங்கபட்டியம், அபிதநிகம், மகாவியாக்கியானம் போன்ற நூல்கள் உதவியோடு புலவர் தனது பொருள் விளக்கத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தெளிவற்றுக் கிடந்த பல சொற்களுக்கு பொருள் விளக்கம் கூறுவதன் மூலம் தமிழ்க் குரவரும், அதனைக் கற்போரும் பயனடையக்கூடியதாகயுள்ளது. + +தமிழில் அகராதி எழுதிய உடுப்பிட்டி கு கதிரவேற்பிள்ளை விரும்பியவாறு எழுதப்பட்ட சொல்லியல் ஆய்வு நூலாகும். இதில் பவணந்தி முனிவர் நன்னூலில் கூறிய நெறியை பின்பற்றாது திரிபுனால் விகாரம் அடைந்து இலக்கியங்களில் விளங்கும் சொற்களுக்கு விதியுரைக்குகிறார் புலவர். மேலும் தமிழில் வடிவம் மாறி வரும் வடமொழிச் சொற்கள் பற்றியும் இதில் ஆராயப்படுகிறது. + +யாப்பருங்கலம் என்பது யாப்பிலக்கணத்தை நூற்பா அகவல் எனப்படும் சூத்திர யாப்பிலமைத்துச் செய்த ஒரு பழைய நூலாகும். யாப்பருங்கலக் காரிகைக்கு மூலநூல் இதுவே. கற்போருக்கு பயனுள்ளவாறு புலவரர்கள் இப்பொழிப்புரையை வெளியிட்டார். + +வடமொழியில் காளிதாசர் பாடிய இரகுவம்சத்தைத், தமிழில் பாடிய அரசகேசரியின் செய்யுள்களுக்கு உடுப்பிட்டி கு கதிரவேற்ப்பிள்ளை விரும்பியவாறு புலவரால் உரை எழுதபட்டது. + +இதுவும் புலவரால் பொழிப்புரை எழுதப்பட்ட ஒரு நூலாகும். இதில் வெண்பாவில் உள்ள இலக்கண விதிமுறைகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது. + +தொட்டிக்கலைச் சுப்ரமணிய முனிவர் இயற்றிய இந்நூல் நூறு செய்யுட்களை கொண்டது. நூறு வெண்பாக்களும் பிறகேளிகையாக, அதாவது ஒன்றுக்கு மேற்ப்பட்ட பொருள் உள்ளவாறு புனையப்பட்டுள்ளன. எல்லாச் செய்யுட்களும் இரண்டாவது அடியில் இரண்டு அல்லது மூன்று கருத்துக்களை உள்ள இச்செய்யுட்களுக்கு புலவரால் அரும்பதவுரை வழங்கப்பட்டுள்ளது. + +திருக்குறள் முதலிய நீதி நூல்களை தழுவி குமரகுருபர சுவாமியால் வெண்பா யாப்பில் இயற்றப்பட்ட இந்நூலுக்கு எத்தனையோ நுட்பமான திருத்தங்களும், மேற்கோள்களும், பிறவும்,சுருக்கமும், விளக்கமும் உள்ளவாறு புத்துரை ஒன்றை புலவரவர்கள் வழங்கியுள்ளார்கள். + +நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் வேதாரணியேசுரர் (திருமறைக்காடுறையும் சிவன் ) மிது பாடிய இவ்வந்தாதிக்கு புலவர் அரும்பதவுரை எழுதியுள்ளார். + +இந்நூல் காளிதாசரால் வடமொழியில் இயற்றபட்ட காவியதர்சம் என்னும் நூலைத் தழுவி தமிழில் தண்டிப்புலவரால் தண்டியலங்காரம் எனும் பெயரில் இயற்றப்பட்டது. இது செய்யுள்களை மேலும் சிறப்பாக்க கையாளப்படவேண்டிய விதிமுறைகளை பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் எனும் மூன்று பகுதிகளில் கூறுகிறது. இதற்கு பலர் உரை எழுதியிருந்த போதும், அவற்றில் வழுக்கள் மிகுதியாக இருந்தமையால் அவற்றைத் திருத்தி புதியதொரு உரையை புலவர் வழங்கியுள்ளார். + +மாணிக்கவாசக பெருமானின் வரலாற்றை கூறும் இந்நூல் கடவுள் மாமுனிவரால் எழுதப்பட்டது. முன்பு இதனை திருத்தி பதிப்பித்த புலவரவர்கள்,1904 ஆம் ஆண்டு இதற்கு ஒரு புத்துரையை எழுதி வெளியிட்டார். + +முன்னர் பொழிப்புரையுடன் வெளியிட்ட இந்நூலுக்கு 1908 ஆம் ஆண்டு புதியதோர் உரையை புலவரவர்கள் வரைந்துள்ளார். + +புலவரவர்கள் தனது மூதாதையரான முத்துக்குமாரகவிராயர் இயற்றிய பல நூறு செய்யுள்கள் காலத்தால் அழிவுற்ற நிலையில் உறவினர் மற்றும் கவிராயரிடம் கற்றவரிடமும் வினவியும் தேடியுமறிந்த இருபத்தைந்து செய்யுள்களை இந்நூலில் பதிப்பித்துள்ளார். கவிராயர் பிரகேளிகை, நாமாந்தரிதை, சங்கியாதை, வியிற்கிராந்தை, மடக்கலங்க்காரம் முதலிய யாப்பணிகளை நூதனமாக நல்லிசைச் செய்யுளுள் அமைத்துப் பாடியுள்ளார். இச்செய்யுள்களை கற்றவரும் மற்றவரும் எளிதில் விளங்கிக் கொள்ளும் வண்ணம் புலவரவர்கள் இவற்றுக்கு குறிப்புரை எழுதுயுள்ளார். + +1912ஆம் ஆண்டு இறையனார் அகப்பொருளுக்கு, புலவரவர்கள் திரு த.தி.கனகசுந்தரம்பிள்ளையுடன் இணைந்து புதியதோர் உரை எழுதி வெளியிட்டுள்ளார்கள். + +இந்நூலிற் கையாளப்பட்ட இலக்கணவாராய்ச்சி முறை நன்னூலிலுள்ள 'நடவாமடிசீ' என்னுஞ் சூத்திரத்தைப் பீடிகையாகக்கொண்டு இருபத்துமூன்று பகுதிகளையும் தனித்தனியே விளக்கிக் காட்டுகின்றது. இந்நூல் மானிப்பாய் ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை விரும்பியவாறு இயற்றப் பெற்றது. + +இது சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய இலக்கியங்களிலும், பிற்றைச் சான்றோரிலக்கியங்களிலும் வருகின்ற அருஞ் சொற்களாகிய இலக்கியச் சொற்களைத் தொகுத்து புலவரால் இயற்றப்பட்டது. மற்றைய அகராதிகளில் வழுவுற எழுதப்பட்ட சொற்களும், சொற்பொருள்களும் இதன்கண் திருத்தமுற எழுதப்பட்டுள்ளன. பிற அகராதிகளில் வராத அனேகம் புதுச்சொற்கள் இதிற் சேர்க்கப்பட்டுள்ளன. இது பண்டைக்கால இலக்கியங்களைப் பயில்வாருக்குப் பெரிதும் பயன்படும். + +இந்நூலில் பல புலவர்களுடைய சரித்திரச் சுருக்கமும், அவர்கள் பாடிய அருங்கவிகளும், அவற்றின் உரைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்நூலின் வசனங்கள் சுருக்கமும், தொடைநயமும் பொருந்த அழகுற எழுதி சேதுபதி மன்னவருக்கு அர்ப்பணித்துள்ளார். மேலும் இந்நூல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பட்டக்கல்விப் பாடநூலாக விளங்கியது. +இது புலவரவர்கள், தி. த. கனகசுந்தரம்பிள்ளையுடன் சேர்ந்து எழுதிய நூல். இராமாயணச் செய்யுள்களில் பதிக்கும்போது சொற்குற்றங்கள் பெருகிவருவதை கண்ட இவர்கள், பழைய ஏட்டுச்சுவடிகளை தமிழகத்தில் தேடிக் கண்டெடுத்து, அவற்றின் துணையுடன் திருத்தமாக அரும்பதவுரையுடன் பாலகாண்டத்தை வெளியிட்டனர். புலவரின் உடல்நலக் குறைவாலும், கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் சென்னையில் வசிக்க நேரிட்டதாலும் திட்டமிட்டபடி மிகுதி இராமாயணம் வெளியிடப்படவில்லை. + +கம்பரால் இயற்றப்பட்ட இந்நூலுக்கு புலவர் பொழிப்புரை வழங்கியுள்ளார். + +இது விட்டுணூசர்மர் என்பவரால் வடமொழியில் சுதர்சனர் என்னும் அரசனின் மைந்தருக்கு அரசியல் நெறி போதிக்கும் பொருட்டு எழுதப்பட்ட நூலாகும். இதனை புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதர் தமிழில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்தார். அவற்றை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். + +நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் எழுதிய கல்வளையந்தாதிக்கு புலவர் பதவுரை எழுதியுள்ளார். + +சிசுபாலவதம், மகாபாரதம், பாகவதம் ஆகிய வடமொழி நூல்கள் கூறும் சேதினாட்டரசன் சிசுபாலன் வரலாற்றைப் புலவரவர்கள், மொழிபெயர்த்து உரைநடையமைப்பில் தமிழில் தந்துள்ளார். + +முதலில் வடமொழியில் காளிதாசராலும், பின்னர் தமிழில் அரசகேசரியாலும் பாடப்பட்ட இந்நூலை புலவர் வசனநடையில் எழுதியுள்ளார். இரகுவமிசம் திலீபன் முதல் இலவகுசர் வரையான இரகுகுல அரசரின் வரலாற்றை கூறுகிறது. + +இது புலவரின் வடமொழிக் குரவர் நாகநாத பண்டிதரால் வடமொழியிலிருந்து தமிழுக்கு செய்யுள் வடிவில் மொழி பெயர்க்கப்பட்டதாகும். இதனை பண்டிதரவர்கள் புலவருக்கு கல்வி கூறும் பொருட்டுச் செய்திருந்தார். + +அராலி விசுவநாத சாத்திரிகளால் இயற்றப்பட்ட இந்நூல், புலவரால் பல மேற்கோள்களோடு பதிப்பிக்கப்பட்டது. + +இதில் நிலவிய சொற்குற்றங்களை நீக்கிப் புலவரால் 1900 ஆம் ஆண்டு பதிப்பிடப்பட்டது. + +புலவரால் பதிக்கப்பட்ட ஆசாரக்கோவை பெருவாயில் முள்ளியரால், ஆசாரமுரைக்கும் வகையில் இயற்றப்பட்டதாகும். + +இராமபாரதி இயற்றிய இந்நூலை, புலவர் 1901 ஆம் ஆண்டு பதிப்பித்தார். + +திருவண்ணாமலை அண்ணாமலைத்தேசிகர் இயற்றிய இந்நூலை புலவர் ஆராய்ந்து, மூன்று சிறப்புப்பாயிரப் பாக்கள் வழங்கிப் பதிப்பித்தார். + +தமிழில் வரும் உரிச் சொற்களுக்கு பொருள் வரையறுத்துக் கூறும் இந்நூலை புலவர் திறனாய்வு செய்து பதிப்பித்தார். + +கடவுள் மாமுனிவரால் இயற்றப்பட்ட இந்நூலின் பிற பதிப்புகளில் மிகுதியாகக் காணப்பட்ட சொல்லியல் வழுக்களை நுண்ணறிவால் களைந்தது மிகத் திருத்தமாக புலவர் இதனை பதிப்பித்தார். + +பழமொழிகளின் கதைகளைத் தழுவி இயற்றப்பட்ட இந்நூல் 1903 ஆம் ஆண்டு புலவரால் பதிப்பிக்கப்பட்டது. + +தமிழில் கண்டனங்கள் கடைச் சங்ககாலத்தில் வாழ்ந்த தலைமைப் புலவராகிய நாகீரர் காலத்திலிருந்து இன்றுவரை விளங்கிவருகின்றது. புலவரவர்கள் செய்யுள்கள்,கட்டுரைகள் மற்றும் சொற்பொழிவுகள் முதலியவற்றைக் கையாண்டு தமது கண்டனங்களை வழங்கியுள்ளார். இவை இரு வகைப்படும். கிறிஸ்த்து மதத்தவர் மேலைநாட்டு ஆட்சியாளரின் துணையுடன் தங்கள் மதத்தை தமிழரிடையே பரப்பும் பொருட்டு சைவத்தை இழிந்து வந்ததை எதிர்த்து தொடக்ககாலத்தில் புலவர் கண்டனங்கள் பல வழங்கியுள்ளார். இவ்வகைக் கண்டனங்கள் ஈழநாட்டில் முதலில் முத்துகுமாரக் கவிராயரால் செய்யுள் வடிவில் கூறப்பட்டவையாகும். பின்னர் ஆறுமுக நாவலர், சங்கர பண்டிதர் முதலியோர் செய்தித்தாள்கள் மூலம் பல இவ்வகைக் கண்டனங்களை வெளியிட்டனர். புலவரும் கிறிஸ்த்து மதத்தவரின் சைவநிந்தனையை மறுத்து வரைந்த கட்டுரைகள் பின்வருமாறு. + +இலங்கை நேசன் என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள். + +உதயபானு என்னும் செய்தித்தாளில் வெளிவந்த கண்டனங்கள். + +சைவநெறிக் காவலராக விளங்கிய ஆறுமுக நாவலர் இறந்தபோது, கிறீஸ்து மதச்சபைகள் தங்கள் மதத்தை பரப்ப நல்ல தருணம் எனக் கருதிப் பல சைவமதக் கண்டனங்களை வெளியிட்ட போது அவற்றை மறுத்து மேல்க்கூறிய தலைப்புக்களில் புலவரவர்கள் கண்டனங்களை வெளியிட்டார். 1889 ஆம் ஆண்டுக்கு பின் கிறீஸ்து மதம் பரப்பும் நடவடிக்கை ஓரளவு தணிவுற்றதால் புலவரும் கண்டனம் எழுதுவதை கைவிட்டார். + +இலக்கண இலக்கிய நூல்களுக்கு உரையேழுதுபவர்கள் மற்றும் அவற்றைப் பதிப்பிப்போர் செய்யும் பொருள் மற்று சொற் குற்றங்களை தனது நுண்ணறிவால் கண்டறிந்து, அவற்றைத் திருத்தும் பொருட்டு கண்டனங்கள் வரைவதில் புலவரவர்கள் அக்காலத்தில் தலைசிறந்தவராக விளங்கினார். இதனை கண்டு வியந்த நல்லூர் சரவணமுத்துப் புலவர் யாப்பருங்கலக் காரிகைப் பதிப்புக்கு வழங்கிய சிறப்புப் பாயிரத்தில் பின்வருமாறு கூறியுள்ளார். + +புலவர் இலக்கணயிலக்கிய கண்டனங்களின் அவசியத்தைப் பற்றிய தனது கருத்தை தமிழ்ப் புலவர் சரித்திர முகவுரையில் பின்வருமாறு கூறியுள்ளார். + +"பிழைகளைக் காணும் அறிஞர்கள் செந்தமிழ் முதலிய பத்திரிகைகளில் அவைகளைப் பிரகடனஞ் செய்தல் நன்று. பிழை கூறல் அவமானஞ் செய்தலன்று. அது சம்மானமாய் நமக்கும் பயன்படும். கற்போர் பிறர்க்கும் பயன்படும். திருத்தமும் பலவாகும். + +புலவர் தனது காலத்தே பல பல கண்டனங்களை வரைந்துள்ளார், ஆனால் மிகுந்த பரபரப்பையும், அறிஞர்களின் வரவேற்பையும் பெற்ற மூன்று கண்டனங்களையும் அவற்றின் பின்விளைவுகளையும் கீழே தருதும். + +புலவர் இளமைக்காலத்தில் வரைந்த இக்கண்டனம் நகைச்சுவை ததும்பும் வகையில் உள்ளது. கந்தபுராணம் முதலியவற்றைப் பிரசங்கஞ் செய்யும் உரையாசிரியர்கள் செய்யும் பிழைகளைக் கண்டித்துக் கூறும் இக்கண்டனத்தை வாசித்த ஆறுமுக நாவலர் அதன் உரைநடையின் சிறப்பையும், தருக்கரீதியாக எழுதப்பட்டிருப்பதையும் கண்டு களித்ததோடமையாது அதற்குச் சார்பா��� ஒரு கடிதம் வரைந்து இலங்கை நேசனில் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் புலவரின் கண்டன திறமையை தமிழ் அறிஞர்கள் எல்லோரும் அறிந்தனர். + +இப்பெயருடைய கண்டனம், யோன் சங்கரப்பிள்ளை என்பவர் புதிய முறையில் இலக்கணச் சல்லாபம் என்னும் நூலைத் தமிழ் மரபு கவனியாது எழுதியமையால் புலவரால் வரையப்பட்டு உதயபானுவில் வெளிவந்தது. இது அக்காலத்தில் அறிஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. + +புலவர், உ. வே. சாமிநாதையர் பதிப்பித்த சிவக சிந்தாமணிப் பதிப்பிலுள்ள பிழைகளை திரட்டி மேல் கூறிய பெயரில் வெளியிட்டார். முன்னைய நாட்களில் சாமிநாதையரின் மாணவகராகிய சண்முகம்பிள்ளை, புலவரின் தமிழ்க் குரவராகிய முருகேசப் பண்டிதரை "ஈழநாட்டாரும் சாதாரண இலக்கிய விலக்கணக் கல்வியறிவில்லாத அற்பரும்" என இழிந்து கண்டனம் எழுதியதால், சாமிநாதையர் புலவரின் கண்டனத்தை பழிவாங்கும் நடவடிக்கை எனக் கருதினார். இதனால் புலவருக்கும் சாமிநாதையருக்கும் இடையே நிலவிய நட்பில் பன்னிரு ஆண்டு கால இடைநிறுத்தம் ஏற்பட்டது. + +புலவரவர்கள் கண்டனக் கட்டுரைகள் தவிர சில நூறு இலக்கணவிலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் மற்றும் சைவான்மீகக் கட்டுரைகளையும், உதயபானு, இலங்கைநேசன், திராவிடகோகிலம், செந்தமிழ், சிறிலோகரஞ்சனி முதலிய பத்திரிகைகளுக்கும் பிற வெளியீடுகளுக்கும் வழங்கி உள்ளார். இக்கட்டுரைகள் யாவும் சொற்சுருக்கமும் பொருட்பெருக்கமும் உள்ளனவாக திகழ்ந்தன. இவற்றுள் தலைசிறந்தவை சிலவற்றின் தலைப்புகளை கீழே பட்டியல் இடுதும். + +(1) சு . சரவணமுத்துப் புலவர் (1880) உதயபானு, யாழ்ப்பாணம் + +(2) விடுகவிக்கு விடுகவி (1880) உதயபானு, யாழ்ப்பாணம் + +(3) இலக்கண விநோதர் (1881)உதயபானு, யாழ்ப்பாணம் + +(4)கிரிமலைச் சிவன்கோவில் (1883) உதயபானு, யாழ்ப்பாணம் + +(5) சம்பந்த சுவாமிகள் புராணம் (1883)உதயபானு, யாழ்ப்பாணம் + +(6) வரலாறு (1883) விஞ்ஞானவர்த்தினி,சி.பி. சங்கம் + +(7) விளக்கு வழக்கின் விலக்கு(1883)இந்துமதாபிமானி, சென்னை + +(8)என்மனார் என்னுஞ் சொன்முடிபு (1888) சிரிலோகரஞ்சினி, சென்னை + +(9)முதல்வன் என்னும் பதம் (1891)இந்துசாதனம், யாழ்ப்பாணம் + +(10)பிங்கலநிகண்டு (1902) அறிவு விளக்கம், திருவனந்தபுரம். + +(11)தமிழாராய்ச்சி (1900) அறிவு விளக்கம், திருவனந்தபுரம். + +(12)காப்பியம் (1902) ஞானசாகரம், சென்னை. + +(13)இலக்கியவாராய்ச்சி (1902) ஞானசாகரம், சென்னை. + +(14) கந��தபுராண வரலாறு (1902) ஞானசாகரம், சென்னை. + +(15) மடக்கலங்க்காரம் (1902)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம். + +(16)உகரவீற்றுவினைப்பகுதி(1904) செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(17)முத்துக்குமாரகவிராயர் முத்தகத்திரயம் (1907)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(18)இலங்கைத் தமிழரசர்(1914) செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(19)இலக்கணவரம்பு(1919)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(20)அவையல்கிளவி(1919)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(21)ஏதுப்போலி(1920) செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(22)உவமப்போலி (1920)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(23)பக்கப்போலி (1920)செந்தமிழ், மதுரைத் தமிழ்ச் சங்கம் + +(24)மனிதரைப்பாடுதல் (1911)ஆத்மபோதினி, யாழ்ப்பாணம் + +(25)இலைப்போலிகலம்(1911)வைசியமித்திரன், தேவகோட்டை + +மேலும் அக்காலத்தில் கோவில்கள் மற்றும் கல்விக்கூடங்கள் போன்ற இடங்களில் புலவரவர்கள், ஆன்மீகம் மற்றும் இலக்கணவிலக்கியம் சார்ந்த தலைப்புகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியுள்ளார். + + + + + +விபுலாநந்தர் + +சுவாமி விபுலாநந்தர் (மார்ச் 27, 1892 – ஜூலை 19, 1947) கிழக்கிலங்கையில் பிறந்து தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர். இலக்கியம், சமயம், தத்துவஞானம், அறிவியல், இசை முதலிய பல துறைகளில் கற்றுத் தேர்ந்தவர். + +சுவாமி விபுலாநந்தரின் இயற்பெயர் "மயில்வாகனன்" ஆகும். இவர் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் காரைதீவு என்னும் ஊரில் 27-03-1892 ஆம் ஆண்டு, மார்ச்சு மாதம், 27 ஆம் தேதி சாமித்தம்பி, கண்ணம்மா தம்பதிகளுக்குப் பிறந்தார். + +இவருடைய ஆரம்பக் கல்வி கல்முனை மெதடிஸ்த ஆங்கிலப் பாடசாலையிலும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியிலும் இடம்பெற்றது. "கேம்பிரிட்ஜ் சீனியர் (Cambridge Senior)" சோதனையில் சித்தியடைந்த பின்னர், அவர் புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராகச் சிலகாலம் பணி புரிந்து, அதன் பின் கொழும்பில் உள்ள ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு விரிவுரையாளராயிருந்த தென்கோவை கந்தையா பிள்ளையிடம் பண்டையத் தமிழ் இலக்கியத்தைக் கற்றார். + +ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் 1912ஆம் ஆண்டு பயிற்றப்பட்ட ஆசிரியர் என்ற சான்றிதழுடன் மீண்டும் மட்டக்களப்பு புனித மைக்கல் கல்லூரியில் ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். 1915ஆம் ஆண்டு கொழும்பு அரச��னர் தொழில்நுட்பக்கல்லூரியில் சேர்ந்து விஞ்ஞானம் பயின்று 1916இல் அறிவியலில் பட்டயத்தையும் பெற்றார். அத்துடன் மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய தேர்வில் பங்கேற்று பண்டிதர் பட்டத்தையும் பெற்றார். இலங்கையிலிருந்து இப்பட்டத்தை முதன்முதல் பெற்றவர் சுவாமி விபுலாநந்தரே. + +கொழும்பு அரசினர் தொழிநுட்பக் கல்லூரியில் இரசாயன உதவி விரிவுரையாளராக பணியாற்றினார். மயில்வாகனனாரின் விரிவுரைகள் மாணவர் மத்தியில் பெரும் சிறப்பைத் தேடிக் கொடுத்தன. அதனால் 1917ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரிக்கு விஞ்ஞான ஆசிரியராக விரும்பி அழைத்தனர். அதனை பெருவிருப்புடன் ஏற்றுக் கொண்டார். அத்துடன் 1920 ஆம் ஆண்டு லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய BSc தேர்வில் தோற்றி சித்தியடைந்தார். மயில்வாகனனாரின் மொழிப்புலமையையும் ஆற்றலையும் அறிந்த மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளரும், திருப்புகழ், சிவப்பிரகாசம், சிவஞானசித்தியார் என்பவற்றுக்கு உரை எழுதியவருமான வழக்கறிஞர் திருவிளங்கத்தாரின் வேண்டுகோளுக்கிணங்கி மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அதிபர் பதவியை ஏற்றுக்கொண்டார். + +திருக்கோணமலை கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில், 1925ம் ஆண்டிலிருந்து முகாமையாளராகக் கடமையாற்றிய சுவாமி விபுலாநந்தர் அவர்கள் கல்லூரியின் வளர்ச்சியில் தனது செறிவான கவனத்தைச் செலுத்தும் பொருட்டு 1928ல் அதிபர் பதவியையும் ஏற்றுக் கொண்டார். + +மனதை ஈர்த்து வந்த துறவுணர்வு, நாளும் பொழுதும் பெருகி, இராமகிருஷ்ண மிஷனில் சங்கமிக்கத் துடித்துக் கொண்டிருந்தார். ஆசிரியப் பதவியைத் துறந்து 1922 ஆம் ஆண்டில் ராமகிருஷ்ண மிஷனில் இணைந்து சென்னைக்குப் புறப்பட்டார், மயில்வாகனன். சென்னையில் மயிலாப்பூர் மடத்தில் சுவாமி சிவானந்தரினால் பிரபோத சைத்தன்ய பிரிவில் பிரமச்சரிய தீட்சையும், சந்நியாச தீட்சையும் வழங்கப்பட்டன. இரண்டு வருடங்கள் அங்கு பயின்ற அவர், இராமகிருஷ்ண மிஷன் நடத்திய "ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்" என்ற தமிழ்ச் சஞ்சிகைக்கும்,"வேதாந்த கேசரி" (Vedanta Kesari) என்ற ஆங்கில சஞ்சிகைக்கும் ஆசிரியராகவிருந்து பல அரிய கட்டுரைகளை எழுதினார். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டித பரீட்சையின் பரீட்சார்த்தகராக நியமிக்கப்பட்டார். தமிழ்ச்சங்க வெளியீடான "செந்தமிழ்" எனும் சஞ்சிகையில் இலக்கியக் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி வந்தார். ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அடிப்படையாகக் கொண்டு அவர் பல திறனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். இக்கட்டுரைகள், 'மதங்க சூளாமணி' என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. + +1924ஆம் ஆண்டு சித்திரை மாதம் பௌர்ணமி தினத்தில் சுவாமி சிவானந்தரால் சுவாமி விபுலாநந்தர் என்ற துறவறப்பெயர் வழங்கப்பட்டது. அதன் பின்னர், அவர் இலங்கை திரும்பி, இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார். + +செட்டி நாட்டரசர் வேண்டுகோளின் படி, சுவாமி விபுலாநந்தர் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியர் பணியை ஏற்று, பல்கலைக்கழக வரலாற்றில் என்றென்றும் நினைத்து போற்றக்கூடிய தம் தமிழ்த் தொண்டைப் பதிவு செய்தார். அக்காலப் பகுதியில் தான் அவருடைய இசை சம்பந்தமான ஆராய்ச்சி ஆரம்பமாகியது. புராதன தமிழர் இசை பற்றி அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். 1934 ஆம் ஆண்டில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் பதவியில் இருந்தி விலகி இலங்கை திரும்பிய அடிகளார், இங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொண்டு வந்த கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். + +இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள "அல்மோரா"(Almorah) என்ற இடத்தில் மாயாவதி ஆசிரமத்தில் இருந்து வெளியிடும் 'பிரபுத்த பாரதம்' ("Prabuddha Bharatha") என்ற சஞ்சிகையின் ஆசிரியராக 1934 ஆம் ஆண்டில் விபுலாநந்த அடிகள் நியமிக்கப்பட்டார். அப்போது தான், இசைத் தமிழ் பற்றிய முழுமையான ஆய்வு செய்யப் பெற்று, அரிய நூலாகிய 'யாழ் நூல்' உருவாக்கம் பெற்றது. + +1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கியபோது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராக பலரின் வேண்டுகோளிற்கிணங்க பணிபுரிய இணங்கினார். தமிழ் ஆய்வுத்துறை எவ்வழியில் செல்லவேண்டும் என்ற திட்டங்களைச் சுவாமி விபுலாநந்தரே வகுத்தார் என்பது நினைவில் இருக்கத்தக்கது. + +சுவாமி அவர்களின் தமிழ்த் தொண்டால் தலை சிறந்து விளங்குவது அவருடைய "யாழ் நூல்" ஆராய்ச்சியாகும். சுவாமி அவர்கள் பதினைந்து ஆண்டு காலம் ஆராய்ந்து கண்டுணர்ந்த யாழ்நூலினைக் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆதரவுடன் திருக்கொள்ளம்பூதூர் வில்வாரண்யேசுவரர் கோயிலில் திருஞானசம்பந்தரின் ச��்நிதானத்தில் இசை விற்பன்னர்கள், கற்றோர்கள், மற்றோர்கள் முன்னிலையில் தேவாரப்பண்களைத் தாமே அமைத்து 1947 ஆம் ஆண்டு ஆனித் திங்களில் அரங்கேற்றினார். + +முதல் நாள் விழாவில் இயற்றமிழ்ப்புலவர்கள், அறிஞர்கள் சூழ்ந்து வர சுவாமி அவர்களை தெற்குக் கோபுர வாயிலின் வழியாக திருக்கோயிலுக்கு அழைத்து வந்தார்கள். சுவாமி அவர்கள் தான் ஆராய்ந்து கண்டுபிடித்த வரைபடத்துடன் விளக்கிய பின்னர், தான் தயாரித்த முளரியாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்த்தண்டி வீணைகளைத் தாங்கி சிலர் சென்றார்கள். நாச்சியார் முன்னிலையில் சுவாமி இயற்றிய 'நாச்சியார் நான்மணிமாலை' வித்துவான் ஔவை துரைசாமி அவர்களால் படிக்கப்பட்டு அரங்கேறியது. பாராட்டுரைகளுக்குப் பின்னர் சங்கீதபூஷணம் க.பெ. சிவானந்தம் பிள்ளை சுவாமிகளால் கண்டுணர்ந்த யாழ்களை மீட்டி இன்னிசை பொழிய முதல் நாள் விழா இனிதாக நிறைவேறியது. + +இரண்டாம் நாள் விழாவில் நாவலர் சோமசுந்தர பாரதியார், 'குமரன்' ஆசிரியர் சொ. முருகப்பா, தமிழ்ப்பேராசிரியர் தெ. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சென்னைப் பல்கலைக்கழக சாம்பமூர்த்தி ஐயர், இசைப் பேராசிரியர் சுவாமிநாத பிள்ளை, கரந்தைக் கவியரசு அ. வேங்கடாசலம் பிள்ளை, அறிஞர் தி. சு. அவிநாசிலிங்கம் செட்டியார், சொல்லின் செல்வர் ரா. பி. சேதுப்பிள்ளை, சுவாமி சித்பவாநந்தர், மற்றும் பலர் ஆய்வுரை நிகழ்த்தினார்கள். பின்னர் சுவாமி விபுலாநந்தர் யாழ் பற்றிய அரிய தகவல்களை எடுத்துவிளக்கினார். வித்துவான் வெள்ளைவாரணர் யாழ்நூலின் பெருமைகளை எடுத்து விளக்கினார். பின்னர் "யாழ்நூல்" அரங்கேற்றப்பட்டது. + +யாழ்நூல் அரங்கேற்றத்துக்கு பின்னர் உடல் பாதிக்கப்பட்ட நிலையில் நாடு திரும்பினார். 1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார். அவரது உடல், அவர் உருவாக்கிய மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தின் முன்னாலுள்ள மரத்தின் கீழ் அமைக்கப்பட்ட கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. ஈழத்து மக்களுக்கு இவர் ஆற்றிய சேவையினைப் பாராட்டி இலங்கையரசு தேசிய வீரர் வரிசையில் ஒருவராக இவரைச் சேர்த்துள்ளது. இத்துடன் நாட்டில் உள்ள பாடசாலைகளிடையே கொண்டாடப்படும் அகில இலங்கை தமிழ் மொழி தினம் இவரது மறைவு தினமான அன்றே கொண்டாடப்படுகின்றது. + + + + + + + + + + +ஈழத்தமிழ் நாடகங்கள் + +ஈழத்துத் தமிழ் நாடகங்களை மரபுவழி நாடகங்கள், நவீன நாடகங்கள் என்ற இரு பெரும் பிரிவுகளுக்குள் அடக்கலாம். பண்டைய கூத்து முறைப்படி அமைந்த நாடகங்களே மரபு வழி நாடகங்களாகும். ஆங்கிலேயர் வருகையின் பின்னர் வந்து புகுந்த வசனம் பேசி நடிக்கும் நாடகங்களும் அதையொட்டிப் பின்னர் எழுந்த நவீன பாணி நாடகளும் நவீன நாடகங்களாகும். + +மரபுவழி நாடகங்களைக் கூத்துக்கள் எனவும் அழைப்பார். இக் கூத்துக்களின் ஆரம்பகாலம் எது எனத் திட்டவட்டமாகக் கூறமுடியாதுவிடினம் ஈழத்தில் நாடக வடிவ இலக்கியங்களான பள்ளு குறவஞ்சி நூல்களின் தோற்றக் காலமான 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டிலிருந்துதான் ஈழத்தில் பல மரபுவழி நாடகப் பிரதிகள் தொடர்ச்சியாகத் தோன்றத் தொடங்கின என்று அறிகிறோம். கணபதி ஐயரே (1709-1794) ஈழத்தில் மரபுவழி நாடகங்களின் முதலாசிரியர் என்பர். இவர் வாளபீமன் நாடகத்தை எழுதினார். இதுவரை கிடைத்த பல்வேறு தகவல்களிலிருந்து ஈழத்தில் ஏறத்தாள 200க்கு மேற்பட்ட மரபுவழி நாடக நூல்கள் இருந்ததாக அறிய முடிகிறது. ஆனால் ஏட்டுருவிலோ அன்றி அச்சுருவிலோ கையிற் கிடைப்பவை அவற்றினும் பாதியே. + +போத்துக்கேயர் வருகையின் பின் ஈழத்தில் வளர்ச்சி பெற்ற கத்தோலிக்க மதத் தாக்கத்தினால் கத்தோலிக்க மதச் சார்பு பொருந்திய கூத்துக்களும் தோன்றின. என்றிக் எம்பரதோர் நாடகம், ஞானசவுந்தரி நாடகம் என்பன இதற்கு உதாரணங்களாகும். ஈழத்து மரபுவழி நாடகங்களில் கத்தோலிக்காரின் பங்கு குறிப்பிடத்தக்கது. + +ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களான யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார், முல்லைத்தீவு, மலைநாடு ஆகிய இடங்களிலெல்லாம் இம் மரபு வழி நாடகங்கள் இன்றும் வழக்கிலுள்ளன. இவற்றிற்கிடையே பிரதேசத்திற்குப் பிரதேசம் சிற்சில வேறுபாடுகளிருப்பினும் இவை அனைத்தும் ஓரிடத்திலுருவாகி, பின்னர் ஈழத்தில் தமிழர் வாழும் பிரதேசங்களிற் சுவறின என்பதற்கு ஆதாரங்களுண்டு. இம்மரபுவழி நாடகங்களே ஈழத்து நாடக மரபின் ஆரம்பமாகும். + +பார்ஸி வழி நாடகக்காரரது வரவினால் 18 ஆம் நூற்றாண்டில் விலாசம் என்றொரு நாடக வடிவம் ஈழத்தில் வந்து புகுந்தது. அரிச்சந்திர விலாசம், மதனவல்லி விலாசம் என்பன இதற்கு உதாரணம். கூத்திலிருந்த ஆட்ட முறைகள் நீக்கப்பட்டமையும் கர்னாடக சங்கீத இசை இடம் பெற்றமையும் விலாசத்தை கூத்தினின்றும் வேறுபடுத்திக் காட்டிய அம்சங்களாகும். கூத்து ஆட்ட முறைகளை விட்டு கர்னாடக இசையுடன் மேற்கத்திய, இந்துஸ்தானி இசைகளும் கலந்து சபா, டிறாமா போன்ற நாடக வடிவங்களும் 19 ஆம் நூற்றாண்டில் ஈழத்தில் எழுந்தன. நாட்டுக்கூத்திற் காணப்படாத காட்சியமைப்பும் விறுவிறுப்பான கதையோட்டமும் இந்நாடகங்களின் பிரதான அம்சங்களாகும். + + + + + +மரபியல் கலந்தாய்வு + +பிறக்கவுள்ள குழந்தைக்கு பாரம்பரியக் காரணங்களால் சில மரபுப் பண்புகள் ஏதேனும் அமைய வாய்ப்புள்ள பட்சத்தில், (பொதுவாக) கருவுறுவதற்கு முன்னரே தகுந்த மரபியல் மருத்துவக் கலந்தாய்வுப் பயிற்சி பெற்றோரைக் கலந்தாலோசிப்பது மரபியல் கலந்தாய்வு (Genetic counseling) எனப்படும். + +இக்கலந்தாய்வை பல கால கட்டங்களில் அவசியத்தின் படி செய்து கொள்ளலாம்: + +ஏற்கனவே, உலகின் சில பகுதிகளில், திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் வந்து விட்டது. (எ.கா) சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) மிகுந்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் மற்றும் கிழக்கு ஐரோப்ப அஷ்கெனாசி (Ashkenazi) பின்னணி உடைய யூதர்கள் இடையே திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் காணப்படுகிறது. + +மரபியல், செவிலியம், உயிரியல், பொது சுகாதாரம், உளவியல் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பும் கலந்தாய்வில் அனுபவமும் உள்ளவர்கள் மரபியல் கலந்தாய்வு பணியாளர்களாகப் (Genetic counselor) பணியாற்றுகிறார்கள். + + + + + +மரபணு + +மரபணு (இலங்கை வழக்கு: பரம்பரை அலகு, ஆங்கிலம்: "gene") என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக்குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் (DNA) எந்த ஒரு துணுக்கையும் குறிக்கும் அலகே மரபணுவாகும். இனப்பெருக்கத்தின் பொழுது பெற்றோர்களிடமிருந்து சந்ததிகளுக்கு மரபணுக்கள் கடத்தப்படுகின்றன. + +உடலுக்கும் உயிர்வாழ்வுக்கும் தேவையான அனைத்துப் புரதங்களையும், தொழிற்பாடுடைய ஆர்.என்.ஏ யையும் தோற்றுவிக்க இந்த மரபணுக்கள் அவசியமாதலால், இ���ை உயிரினத்தின் இன்றியமையாத மூலக்கூறாகும். உடலின் உயிரணுக்களை ஆக்கவும், அவற்றைத் தொடர்ந்து பேணவும், உடற்தொழிற்பாடுகளுக்கும், உயிரினங்களின் இயல்புகள் சந்ததிக்கு கடத்தப்படவும் இந்த மரபணுக்களே தேவை. உடலில் நிகழும் ஆயிரக்கணக்கான உயிர்வேதியியல் செயல்முறைகளுக்கும், உயிரியல் இயல்புகளுக்கும் தேவையான தகவல்கள் இந்த மரபணுக்களிலேயே காணப்படுகின்றது. உயிரியல் இயல்புகள் என்னும்போது பார்த்தறியக் கூடிய இயல்புகளாகவோ (எ.கா. தோலின் நிறம்), பார்த்து அறிய முடியாத இயல்புகளாகவோ (எ.கா.குருதி வகை) இருக்கலாம். + + +மரபணு திடீர்மாற்றம் (Genetic mutation) என்பது மரபணுத்தொடரில் ஏற்படும் சிறிய அல்லது பெரிய அளவிலான மாற்றங்களைக் குறிக்கும். இது மரபணு விகாரம் எனவும் அழைக்கப்படுகின்றது. இத்தகைய மாற்றங்கள் அம்மரபணுத் தொடர் புரதமாக வெளிப்படுத்தப்படுதலைப் பாதிக்கும். இம்மாற்றங்களை ஏற்படச் செய்யும் காரணிகளை திடீர்மாற்றநச்சுகள் என அழைக்கலாம். புற ஊதாக் கதிர்கள், பலவித நச்சு வாயுக்கள் மற்றும் பலவித நச்சு வேதிகள் காரணிகளாகச் செயல்படுகின்றன. ஆயினும், திடீர்மாற்றங்கள் இயல்பாகவே ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறையில் பிறப்பு நிகழும் போது ஏற்படுகின்றன. திடீர்மாற்றங்களே பரிணாம வளர்ச்சியின் உயிர்நாடி ஆகும். மிகுதியாக ஏற்படும் திடீர்மாற்றங்கள் தொகுக்கப்படும் போது அதனால் புதிய வகை உயிரினம் உண்டாகிறது. இந்த திடீர்மாற்றங்களை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம், ஒரு நுண்ணுயிரியில் வேண்டிய நொதிகள் மட்டும் மிகுதியாக சுரக்குமாறு செய்ய இயலும். இதன் மூலம் அந்த நொதிகளின் உற்பத்தியை மிகுதிப்படுத்த இயலும். தொழிலகங்களில் இம்முறை மிக வேண்டத்தக்கதாகும். + +மரபணுத் தொடரிகள் (gene promoter) என்பது டி.என்.ஏ. ஈரிழையில் இருந்து ஆர்.என்.ஏ நகல் (transcript) வருவதை செயல்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு வரிசை (sequence) ஆகும். பொதுவாக இவைகள் ஒரு மரபணுவின் தொடக்க புள்ளியில் இருந்து (transcription start site) மேல் வரிசையில் அமைந்து இருக்கும். நிலை கருவற்ற மற்றும் நிலைகருவுள்ள (Prokaryotic and Eukaryotic) தொடரிகளின் டி.என்.ஏ வரிசையில் பல மாறுதல்கள் உள்ளன. மேலும் நிலை கருவற்ற உயிர் தொடரிகளின் (Prokaryotic Promoters) வரிசையில் ஆர்.என்.ஏ பாலிமரசு (RNA polymerase, sigma factor) மற்றும் அதனுடன் இணைந்த சிக்மா கரணி, ஒரு மரபணுவின் வெளிபடுதலை (transcription ) தொடக்கி வைக்கும். மேலும் இவ் உயிர்களில் டி.என்.ஏ வரிசையில், தொடரிக்கான வரிசைகளை பிரிப்நொவ் பேழை(Pribnow box) என அழைக்கப்படும். +நிலைகருவுள்ள உயிர்களின் தொடரிகளில் டாட்டா பேழை (TATA box) என்கிற தயமின் மற்றும்அடினைன் நிறைந்த வரிசைகள் அமைந்து உள்ளன. மரபணு வெளிபடுதலை ஆர்.என்.ஏ பாலிமரசு II என்ற நொதியும், ஆர்.ஆர்.என்.ஏஎன்றால் ஆர்.என்.ஏ. பாலிமரசு I அவைகளுடன் இணைந்த தொடரூக்கிகள் மற்றும் செயலாக்கிகள்(Promoter binding, transcription binding and activation factors) டாட்டா பேழையில் பிணைந்து தொடரிக்கு ஒரு தொடக்க புள்ளியாக (transcription start site) அமையும். டி.என் ஏ வரிசையில் உள்ள மாற்றிகள்(Enhancer) ஒரு தொடரியின் வெளிபடுதலை மிகையாகவோ அல்லது குறைவகாவவோ ஆக்க முடியும். +நவீன மூலக்கூற்று உயிரியல், மற்றும் மரபியல்படி, மரபணுத்தொகை (Genome) என்பது ஒரு உயிரினத்தின்முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கின்றது. இது உயிரினங்களின் டி.என்.ஏயில், அல்லது பல தீ நுண்மங்களில் ஆர்.என்.ஏயில் குறியாக்கம் செய்யப்பட்டிருக்கும். ஒரு குறிக்கப்பட்ட ஒரு உயிரினத்தைப்பற்றிய அனைத்து மரபியல் தகவல்களையும் குறிக்கிறது. மரபணுத்தொகையானது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ யில் அமைந்திருக்கும் மரபணுக்களையும் அத்துடன் , குறியாக்கத்தைக் கொண்டிராத பகுதிகளையும் சேர்த்தே குறிக்கின்றது[1]. மரபணுத்தொகை என்பது genome என்ற ஆங்கில சொல்லின் தற்கால பயன்பாட்டுக்கு இணையான சொல். மரபணுத்தொகையை மரபகராதி, மரபுத்தொகுதி, மரபுரேகை, மரபுப்பதிவு என்றும் குறிப்பர். + +மனித மரபணுத்தொகைத் திட்டம் மூலம் 2000 ஆண்டு மனித மரபணுத்தொகையின் முழு வடிவத்தையும் பெறுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் 10 ஆண்டுகளுக்கு மேலே எடுத்தது. தற்போது ஒரு உயிரினத்தின் மரபணுத்தொகையைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம் பல மடங்கு முன்னேறியுள்ளது. எதிர்காலத்தில் ஒவ்வொரு மனிதரும் தமது தனித்துவமான மரபணுத்தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும். + + + + +ஜி8 + +எட்டு பேர் குழு எனப் பொருள் தரும் ஜி8 (G8 - Group of Eight) என்பது உலகில் அதிக ஆலைத் தொழில் முன்னேற்றம் அடைந்த குடியரசு நாடுகளின் கூட்டமைப்பைக் குறிக்கும். ஃபிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான், ஐக்கிய அமெரிக்க மாநிலங்கள், ஐக்கிய இராச்சியம், (1975 வரை ஜி6), கனடா (1976 வரை ஜி7) மற்றும் ரஷ்யா ( எல்லா நடப்புகளிலும் பங்கு கொள்வதில்லை ) ஆகியவை இந்தக் குழுவில் உள்ள நாடுகளாகும். ஆண்டு தோறும் இந்த நாடுகளின் தலைவர்கள் மற்றும் அனைத்துலக அதிகாரிகள் பங்கு கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் உச்சி மாநாடுகள் ஜி8-இன் நடவடிக்கைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும். + + + + + +ஒலிம்பிக் விளையாட்டுக்கள் + +ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Olympic Games அல்லது Olympics) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை காலத்திலும் குளிர் காலத்திலும் மாற்றி மாற்றி பல்வேறு விளையாட்டுக்களுக்கு நடத்தப்படும் அனைத்துலகப் போட்டி ஆகும். இதில் ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கு பெறுகின்றனர். உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டியாகக் கருதப்படும் ஒலிம்பிக்கில் 200 நாடுகளுக்கு மேல் கலந்து கொள்கின்றன. பண்டைய கிரீஸ் நாட்டில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் இருந்து வந்தது. பின்னர், பியர் ஃபிரெடி, குபர்த்தென் பிரபு என்ற பிரான்ஸ் நாட்டு பிரபுவால் (nobleman) 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்தப் போட்டிகளை நடத்தும் வழக்கம் மீண்டும் வந்தது. இவர் 1894 ஆம் ஆண்டு அனைத்துலக ஒலிம்பிக் குழுவை உருவாக்கினார். இதன் அமைப்பும், அதிகாரமும் ஒலிம்பிக் பட்டயத்தினால் வரையறுக்கப்படுகின்றன. அனைத்துலக ஒலிம்பிக் குழுவே ஒலிம்பிக் இயக்கத்தை நிர்வகித்து வருகிறது. உலகப் போர் நடைபெற்ற ஆண்டுகள் தவிர்த்து, 1896 முதல், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை கோடை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்று வருகின்றன. ஆதி கால ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கி.மு.776 இல் கிரேக்க நாட்டிலுள்ள ஒலிம்பியாவில் தொடங்கி கி.பி.393 வரை நடைபெற்றன. கிரேக்க கவிஞர் பானாஜியோடிஸ் ஸௌட்ஸாஸ் கி.பி.1833இல் எழுதிய "இறந்தவர்களின் உரையாடல்" என்னும் கவிதை இப்போட்டிகளை மீண்டும் தொடங்கும் ஆர்வத்தை உருவாக்கியது. + +20 ஆம் 21 ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட ஒலிம்பிக் இயக்கத்தின் வளர்ச்சி ஒலிம்பிக் விளையாட்டுக்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், ஊனமுற்றோருக்கான மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள், பதின்ம வயதினருக்கான இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் என்பன தொடங்கப்பட்டமை இம் மாற்றங்களுட் சில. பனிக்��ால விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் பொருட்டு 1924 முதல் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. தொடக்கத்தில் கோடை கால மற்றும் குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஒரே ஆண்டில் நடத்தப்பட்டு வந்தன. 1994 முதல் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்து குளிர் கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடத்தப்படுகின்றன. பொருளாதாரம், அரசியல், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சிகளுக்கு ஏற்ப ஒலிம்பிக் குழுவும் பல்வேறு மாற்றங்களைச் செய்யவேண்டியிருந்தது. இது, தொழில்முறை சாராத போட்டியாளர்கள் பங்குபெறும் போட்டியாக இருக்கவேண்டும் என்றே இவ்வியக்கத்தை உருவாக்கிய கூபேர்ட்டின் எண்ணியிருந்தார். ஆனாலும், ஒலிம்பிக் குழு இந்த விதியை மாற்றித் தொழில்முறை விளையாட்டு வீரர்களையும் போட்டிகளில் பங்குபற்ற அனுமதித்தது. மக்கள் ஊடகங்களின் முக்கியத்துவம் வளர்ந்து வந்தபோது, நிறுவன விளம்பர ஆதரவு முறை உருவாகி இப்போட்டிகள் வணிகமயமாக்கப்பட்டன. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் உலகப் போரினால் நடைபெறவில்லை. பனிப்போர்க் காலத்தில் பல நாடுகள் இப்போட்டியைப் புறக்கணித்ததனால், 1980, 1984 ஆண்டுகளில் இடம்பெற்ற போட்டிகள் மட்டுப்படுத்தப்பட்ட பங்கேற்புடனேயே நடைபெற்றன. + +ஒலிம்பிக் இயக்கம் அனைத்துலக விளையாட்டுகள் கூட்டமைப்பு, தேசிய ஒலிம்பிக் குழுக்கள், ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளுக்குமான ஏற்பட்டுக் குழுக்கள் என்பவற்றை உள்ளடக்குகிறது. முடிவுகளை எடுக்கும் அமைப்பு என்ற அளவில், அனைத்துலக ஒலிம்பிக் குழு எந்த நகரில் போட்டிகளை நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கின்றது. இவ்வாறு தெரிவு செய்யப்படும் நகரம், ஒலிம்பிக் பட்டயத்துக்கு ஏற்றவகையில், போட்டிகளை ஒழுங்கு செய்வதற்கும், நிதி வழங்குவதற்குமான பொறுப்பை ஏற்கவேண்டும். போட்டிகளில் இடம்பெறும் விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பும் அனைத்துலக ஒலிம்பிக் குழுவிடமே உள்ளது. ஒலிம்பிக் கொடி, தீப்பந்தம் போன்ற சின்னங்களும், தொடக்கவிழா, நிறைவுவிழா போன்ற நிகழ்வுகளும் ஒலிம்பிக் போட்டிகளின் பகுதிகளாக உள்ளன. கோடைகால ஒலிம்பிக்கிலும், குளிர்கால ஒலிம்பிக்கிலும் 33 வெவ்வேறு விளையாட்டுக்கள் தொடர்பில் இடம்பெறும் ஏறத்தாழ 400 போட்டிகளில் 13,000க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெறும் வீரர்களுக்கு முறையே தங்கப் பதக்கம், வெள்ளிப் பதக்கம், வெண்கலப் பதக்கம் ஆகிய பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. + +ஏறத்தாழ உலகில் உள்ள எல்லா நாடுகளுமே பங்கேற்கும் அளவுக்கு ஒலிம்பிக் போட்டி வளர்ச்சி அடைந்துள்ளது. இத்தகைய வளர்ச்சி, புறக்கணிப்புகள், போதை மருந்துப் பயன்பாடு, கையூட்டு, பயங்கரவாதச் செயல்கள் போன்றவை தொடர்பான பல சவால்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலையையும் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் போட்டிகளும், அது தொடர்பான ஊடக விளம்பரமும் பல விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலும் சில சமயங்களில் பன்னாட்டு அளவிலும் கூடப் புகழ் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகின்றன. அத்துடன் போட்டிகளை நடத்தும் நகரமும், நாடும் தம்மை உலகுக்கு வெளிப்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பையும் ஒலிம்பிக் ஏற்படுத்துகிறது. + +பண்டைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கிரீசு நாட்டின் ஒலிம்பியாவில் இருந்த சேயுசு கோவிலடியில் சமயமும், விளையாட்டும் சார்ந்த விழாவாக இடம்பெற்றது. இது அக்காலக் கிரீசில் இருந்த நகர அரசுகள், இராச்சியங்கள் என்பவற்றைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான போட்டியாகும். பெரும்பாலும் தடகள விளையாட்டுக்களே இடம்பெற்றாலும், மற்போர், குதிரைப் பந்தயம், தேர்ப் பந்தயம் போன்ற சண்டை சார்ந்த போட்டிகளும் நடைபெற்றன. இவ்விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் காலங்களில் நகர அரசுகளுக்கு இடையேயான பிணக்குகள் அனைத்தும் போட்டிகள் முடியும்வரை ஒத்திவைக்கப்பட்டதாகப் பலரும் எழுதி உள்ளனர். இது ஒலிம்பிக் அமைதி அல்லது ஒலிம்பிக் போர் நிறுத்தம் என அறியப்பட்டது. ஆனால் இது தற்காலத்தில் எழுந்த ஒரு உண்மையல்லாத கருத்து. கிரேக்கர்கள் என்றுமே தமக்கு இடையேயான போர்களை ஒத்திவத்தது இல்லை. + +ஒலிம்பிக்கின் தோற்றம் பற்றிச் சரியாகத் தெரியாவிட்டாலும், அது குறித்துப் பல கதைகள் உள்ளன. சேயுசுக் கடவுளின் மகனான ஏராக்கிள்சு தனது தந்தையைக் கௌரவிப்பதற்காக ஒலிம்பிக் விளையாட்டு அரங்கைக் கட்டினானாம். இது முடிவடைந்ததும், ஒரு நேர்கோட்டில் இருநூறு அடிகள் நடந்து அத் தூரத்தை ஒரு இசுட்டேடியன் என அறிவித்தான். இது பின்னர் தூரத்தின் அளவாகக் கொள்ளப்பட்டது. கிமு 776 ஆம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுகள் தோன்றியதாகப் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அக்கால ஒலிம்பிக் போட்டிகளில் ஓட்டப் போட்டிகளுடன், பாய்தல் போட்டிகள், வட்டம் எறிதல், ஈட்டி எறிதல், மற்போர், குதிரை ஓட்டம் போன்ற போட்டிகளும் இடம் பெற்றன. மரபுக் கதைகளின்படி எலிசு என்னும் நகரைச் சேர்ந்த கொரோயெபசு என்னும் பெயர் கொண்ட சமையற்காரன் ஒருவனே முதல் வெற்றியாளன் ஆவான். + +அக்கால ஒலிம்பிக்சு அடிப்படையில் சமய முக்கியத்துவம் கொண்டது. இதில், விளையாட்டு நிகழ்வுகளுடன் சேயுசுக் கடவுளையும், தேவ வீரனும், தொன்மங்களில் ஒலிம்பியாவின் அரசனாகக் குறிப்பிடப்படுபவனும் ஆகிய பெலோப்சுவையும் கௌரவிக்கும் முகமாகச் சடங்கு சார்ந்த வேள்விகளும் இடம்பெற்றன. விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்கள் குறித்துக் கவிதைகள் இயற்றப்பட்டதுடன், சிலைகளையும் அமைத்து அவர்களைப் பெருமைப்படுத்தினர். + +ஒலிம்பிக் விளையாட்டு கிமு ஆறாம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் அதன் உச்சநிலையில் இருந்தது. உரோமரின் பலம் அதிகரித்துக் கிரேக்க நாட்டில் அவர்களின் செல்வாக்கு வலுப் பெற்றபோது ஒலிம்பிக்கின் முக்கியத்துவமும் படிப்படியாகக் குறையத் தொடங்கிற்று. இவ்விளையாட்டுக்கள் எப்போது நிறுத்தப்பட்டன என்பது குறித்து அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லாவிட்டாலும், முதலாம் தியடோசியசு எல்லாச் சிலை வணக்கச் சமயங்களையும், அவை தொடர்பான சடங்குகளையும் தடை செய்த ஆண்டான கிபி 393ல் நிறுத்தப்பட்டது என்பதே பெரும்பான்மைக் கருத்தாகும். அவனது வாரிசான இரண்டாம் தியடோசியசு, எல்லாக் கிரேக்கக் கோயில்களையும் இடிக்கக் கட்டளையிட்டான். + +உலகப் போர் சமயங்களில் மட்டும் (1916, 1940 & 1944) ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை. + +இன்றைய ஒலிம்பிக்ஸ் 1896ல் ஏதென்ஸ் நகரில் தான் துவங்கியது. அடுத்த கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் 2016ம் ஆண்டில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜனேரோ நகரில் நடக்கவுள்ளது. +2020ம் ஆண்டில் ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் நடக்கவுள்ளது. + +உலகப் போர் சமயங்களில் மட்டும் (1940 & 1944) பனி ஒலிம்பிக்ஸ் நடைபெறவில்லை. + +1992 வரை பனி ஒல���ம்பிக்சும் கோடைக்கால ஒலிம்பிக்சும் ஒரே ஆண்டிலேயே நடைபெற்று வந்தது. இதை மாற்ற வேண்டி 1994ல் மீண்டும் ஒரு பனி ஒலிம்பிக்சை நடத்தினார்கள். அதன்படி தற்பொழுது கோடைக்கால ஒலிம்பிக்சு நடந்து 2 ஆண்டுகள் கழித்து பனி ஒலிம்பிக்சு நடக்கும். + +அடுத்த பனி ஒலிம்பிக்சு, 2014ல் இருசியாவின் சோச்சி நகரில் நடக்க இருக்கிறது. + + + + + +தமிழ் புளூட்டாக் + +தமிழ் புளூட்டாக் (Tamil Plutarch) என்பது தமிழ்ப் புலவர்களது வரலாறு கூறும் ஒரு நூலாகும். இது இலங்கை, கற்பிட்டியைச் சேர்ந்த சைமன் காசிச்செட்டி(1807 - 1860) என்பவரால் ஆங்கில மொழியில் எழுதப்பட்டு, ரிப்ளே அண்ட் ஸ்ட்ரோங் (Ripley & Strong) பதிப்பகத்தாரால் யாழ்ப்பாணத்தில் 1859 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கருதப்படுகின்றது. + +பண்டைய கிரேக்க நாட்டைச் சேர்ந்த அறிஞரான புளூட்டாக் என்பவர் தனது காலத்தின் புகழ்பெற்ற நாற்பத்தாறு பேரின் வரலாற்றை எழுதினார். புகழ் பெற்ற இந்த நூல் எழுதியவரின் பெயரால் "புளூட்டாக்" எனவும் வழங்கப்பட்டது. இதைப் பின்பற்றியே காசிச்செட்டி அவர்கள் தான் இயற்றிய தமிழ்ப் புலவர் வரலாற்றுக்குத் தமிழ் புளூட்டாக் எனப் பெயரிட்டார். + +இந் நூலில் 195 தலைப்புகளின் கீழ் புலவர்களுடைய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. எனினும், வேறு ஐந்து புலவர்கள் பற்றிய தகவல்கள் தனித் தலைப்புகளிலன்றிப் பிற புலவர்களைப் பற்றிக் கூறும்போது கொடுக்கப்பட்டுள்ளன. அதங்கோட்டாசிரியர், சேனாவரையர், இளம்பூரணர், குணசாகரர், அம்பிகாபதி ஆகிய மேற்படி ஐவரில் முதல் மூவர் தொல்காப்பியரின் கீழும், நாலாமவர் அமிர்தசாகரரின் கீழும், அம்பிகாபதி அவர் தந்தையாரான கம்பரின் கீழும் குறிப்பிடப்பட்டுள்ளனர். தவிர பெருந்தேவனார் என்னும் தலைப்பில் இரு வேறு பெருந்தேவனார்களைப் பற்றிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்படி இந்நூல் 202 தமிழ்ப் புலவர்களைப் பற்றிய தகவல்களை உள்ளடக்கியுள்ளது. + +இந்நூல் முதன் முதலாக 1859 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. பின்னர், 1946 ல் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார், விபுலானந்த அடிகள் ஆகியோரின் அணிந்துரைகளுடன் கூடி இதன் இரண்டாவது பதிப்பு வெளிவந்தது. அண்மையில் "ஆசிய கல்விச் சேவை" (Asian Educational Services) நிறுவனத்தினர் இதனை மற��பதிப்புச் செய்துள்ளனர். + + + + + + +ஐரோப்பிய ஒன்றியம் + +ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐ.ஒ (European Union அல்லது EU) என்பது தற்பொழுது 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட, நாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும். 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை (மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது) அடுத்து இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. எனினும், 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% ஐ உருவாக்குகின்றன. + +ஐரோப்பிய ஒன்றியம், தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருள்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நடமாட்டங்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை, மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும் பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. இது வெளிநாட்டு அலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன், உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு, ஐக்கிய நாடுகள் அவை என்பவற்றிலும் நிகராண்மைக் (representation) கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" (NATO) அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. செஞ்சென் ஒப்பந்தத்தின் (Schengen Agreement) கீழ் சில உறுப்பு நாடுகளிடையேயான கடவுச்சீட்டுக் கட்டுப்பாட்டு முறையும் ஒழிக்கப்பட்டுள்ளது. + +ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கம், அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐர���ப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர். + +1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து, ஒன்றியம் புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது. + +2012ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஐரோப்பிய ஒன்றிய அமைப்பிற்கு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. + +2013 ஜூலை 1-ம் தேதி குரோவாசியா நாடு ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்டது. + +இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், ஐரோப்பிய ஒன்றிணைப்புத் தொடர்பான நகர்வுகளை, அக்கண்டத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கிய தீவிர தேசியவாதப் போக்குகளிலிருந்து தப்பும் ஒரு வழியாகப் பலர் நோக்கினர். ஐரோப்பியர்களை ஒன்றிணைக்கும் இத்தகையதொரு முயற்சியாகவே ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம் தொடங்கப்பட்டது. இது முன்னர் உறுப்பு நாடுகளின் தேசிய நிலக்கரி மற்றும் உருக்குத் தொழில்துறையில் மையப்படுத்திய கட்டுப்பாட்டைக் கொண்டுவரும் மிதமான நோக்கம் கொண்ட ஒரு முயற்சியாக இருந்தது. எனினும் இது "ஐரோப்பியக் கூட்டாட்சிக்கான முதல் அடி" என அறிவிக்கப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, மேற்கு செருமனி ஆகிய நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன. + +1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஐரோப்பியப் பொருளியல் சமூகம் மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஐரோப்பிய அணுவாற்றல் சமூகம். 1967ல் செய்துகொள்ளப்பட்ட ஒன்றிணைப்பு ஒப்பந்தம் மூலம் மேற்படி மூன்று சமூகங்களும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரே தொகுதியாயின. இவை ஒருங்கே "ஐரோப்பிய சமூகங்கள்" என அழைக்கப்பட்டன. + +1973 ஆம் ஆண்டில் இச் சமூகங்கள், டென்மார்க், அயர்லாந்து, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளையும் உள்ளடக்கி விரிவடைந்தன. இதே சமயத்தில் நோர்வேயும் பேச்சுக்களில் ஈடுபட்டிருந்தது. ஆனால், இதற்காகப் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டபோது மக்கள் ஏற்றுக்கொள்ளாததால் அந்நாடு சமூகத்தில் இணையவில்லை. 1979 ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடாளுமன்றத்துக்கான முதலாவது நேரடியான மக்களாட்சித் தேர்தல் நடைபெற்றது. + +போர்த்துக்கல், கிரேக்கம், எசுப்பானியா ஆகிய நாடுகள் 1980ல் இதில் இணைந்தன. 1985 ஆம் ஆண்டில், செஞ்சென் ஒப்பந்தம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, பெரும்பாலான உறுப்பு நாடுகளிடையே கடவுச்சீட்டு இல்லாமல் பயணம் செய்யத்தக்க வகையில் அவற்றின் எல்லைகள் திறந்துவிடப்பட்டன. 1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன், தலைவர்கள் ஒற்றை ஐரோப்பியச் சட்டமூலம் (Single European Act) ஒன்றிலும் கையெழுத்திட்டனர். + +1990ல் சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் அதன் நட்பு நாடாக இருந்த கிழக்கு ஜேர்மனியும், ஒன்றிணைந்த ஜேர்மனியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய சமூகத்தில் இணைந்தது. ஐரோப்பிய சமூகத்தை கிழக்கு-மைய ஐரோப்பா நோக்கி விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, அச் சமூகத்தின் உறுப்பு நாடுகளாக இணைவதற்கான தகுதிகளை வரையறுக்கும் கோப்பன்ஹேகன் கட்டளைவிதி (Copenhagen criteria) ஏற்றுக்கொள்ளப்பட்டது. + +1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல் ஆஸ்திரியா, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோ நாணயம் புழக்கத்துக்கு வந்தது. பின்னர் ஐரோ வலயம் 15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. 2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம் பெற்றது. அப்போது மால்ட்டா, சைப்பிரஸ், சுலோவீனியா, எஸ்தோனியா, லத்வியா, லித்துவேனியா, போலந்து, செக் குடியரசு, சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன. + +2007 ஜனவரி 1 ஆம் தேதி ருமேனியாவும், பல்கேரியாவும் இதன் புதிய உறுப்பு நாடுகளாயின. அதேவேளை சிலோவேனியா யூரோவைத் தனது நாணயமாக ஏற்றுக்கொண்டது. அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐரோப்பியத் தலைவர்கள் லிஸ்பன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இவ்வொப்பந்தம் பிரான்ஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் தோல்வியடைந்து செயல்படாமல்போன ஐரோப்பிய அரசியலமைப்புக்குப் பதிலாக உருவானது. ஜூன் 2008 இல் இதனையும் அயர்லாந்து வாக்காளர்கள் ஏற்றுக்கொள்ளாததால் இதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. + +ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் பரப்பளவை கொண்டன. ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப்பெரிய மலைச் சிகரம் அல்ப்ஸ் மலைத்தொடரிலுள்ள மோண்ட் பிளாங்க் ஆகும். கடல்மட்டத்திற்கு மேல். + +ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது. இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. 28 உறுப்பு நாடுகளையும் சேர்த்து ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலப்பரப்பு 43,81,376 ச.கி.மீ. ஆகும். + +மசிடோனியக் குடியரசு, துருக்கி ஆகிய இரு நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளான அல்பேனியா, பொசுனியா எர்செகோவினா, மொண்டெனேகுரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை. + +ஐரோப்பிய ஒன்றியம் இருபத்து நான்கு மொழிகளை உத்தியோகபூர்வ மற்றும் வேலை மொழிகளாக கொண்டுள்ளது:: பல்கேரிய மொழி, குரோவாசிய மொழி, செக் மொழி, டேனிய மொழி, டச்சு மொழி, ஆங்கிலம், எசுத்தோனிய மொழி, பின்னிய மொழி, பிரான்சிய மொழி, இடாய்ச்சு மொழி, கிரேக்கம் (மொழி), அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, ஐரிய மொழி, இலத்துவிய மொழி, இலித்துவானிய மொழி, மால்திய மொழி, போலிய மொழி, போர்த்துக்கேய மொழி, உருமானிய மொழி, சுலோவாக்கிய மொழி, சுலோவேனிய மொழி, எசுப்பானியம், மற்றும் சுவீடிய மொழி. முக்கியமான ஆவணங்கள் அனைத்து உத்தியோக பூர்வ மொழிகளுக்கும் மொழிபெயர்க்கப்படும். ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகம் பேசப்படும் மொழி ஆகும். தாய்மொழியாக பேசுபவர்கள் மற்றும் இரண்டாம் மொழியாக பேசுபவர்கள் என்ற அனைவரையும் கணக்கில் எடுத்தால் ஐரோப்பிய ஒன்றியத்தில் ஆங்கிலம் பேசுவோரின் சதவிகிதம் 51% ஆகும். இடாய்ச்சு மொழி அதிகமாகவும் பரவலாகவும் தா��்மொழியாக பேசப்படும் மொழி ஆகும் (2006 இல் சுமார் 88.7 மில்லியன் மக்கள்). 56% சதவிகிதமான ஐரோப்பிய ஒன்றியமக்கள் தங்கள் தாய்மொழி தவிர்ந்த என்னொரு மொழியை பேசக்கூடிய திறமை வாய்ந்தவர்கள்.யுராலிய மொழிக்குடும்பத்தை சார்ந்த அங்கேரியன், பின்னிஷ், எஸ்டோனியன் மொழிகளையும் ஆபிரிக்க-ஆசிய மொழிகுடும்பத்தை சார்ந்த மால்டீசையும் தவிர ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகவும் அதிகமான உத்தியோகபூர்வ மொழிகள் இந்திய-ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்தன. சிரில்லிக் எழுத்துக்கள் இல் எழுதப்படுகின்ற புல்கேரியன் மற்றும் கிரேக்க எழுத்துக்களில் எழுதப்படுகின்ற கிரேக்க மொழியையும் தவிர அதிகமான ஐரோப்பிய ஒன்றிய மொழிகள் இலத்தீன் எழுத்துக்களில் எழுதப்படுகின்றன. + +ஐக்கிய இராச்சியம், ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்ந்து நீடித்து இருப்பதா அல்லது வெளியேறுவதா என்பது குறித்து, சூன் 2016-இல் நடந்த பொதுசன வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் வெளிவேற வேண்டும் என விரும்பி பெரும்பாலன மக்கள் வாக்களித்தனர்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்பாத ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலக முன்வந்துள்ளார். + + + + + + +பாவலர் சரித்திர தீபகம் + +பாவலர் சரித்திர தீபகம் என்பது தமிழ் மொழியில் எழுதப்பட்ட தமிழ்ப் புலவர் வரலாற்றுத் தொகுப்பு நூல் ஆகும். The Galaxy of Tamil Poets என்ற ஆங்கிலத் துணைத்தலைப்பு ஒன்றும் இதற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. 1859 ல் சைமன் காசிச்செட்டி என்பரால் எழுதி வெளியிடப்பட்ட தமிழ் புளூட்டாக் என்னும் நூலினைத் தழுவி எழுதப்பட்டதே இந்த நூல். தமிழ் மொழியில் வெளிவந்த முதலாவது தமிழ்ப் புலவர் வரலாற்று நூல் இதுவே. இது யாழ்ப்பாணம், மானிப்பாயிலிருந்த "ஸ்ட்ரோங் அண்ட் அஷ்பரி" ("Strong and Ashbury Printers") அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்டு 1886 ஆம் ஆண்டில் வெளிவந்தது. + +இந் நூலின் ஆசிரியர் இலங்கை, யாழ்ப்பாணம், நவாலி என்னும் ஊரைச் சேர்ந்த ஆணல்ட் சதாசிவம்பிள்ளை (ஜே. ஆர். ஆர்னோல்ட்) என்பவராவார். இவர் அக்காலத்தில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த உதயதாரகை என்னும் பத்திரிகையின் ஆசிரியரும், வட்டுக்கோட்டை, வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் தமிழ் ஆசிரியருமாவார். சைமன் காசிச்செ��்டியின் தமிழ் புளூட்டாக் நூலைத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்ய ஆரம்பித்த சதாசிவம்பிள்ளை அதைப் புதிய தகவல்களுடன் விரிவு படுத்தினார். + +தமிழ் புளூட்டாக் நூலில் குறிப்பிடப்பட்ட 202 புலவர்களில் 201 புலவர்கள் பாவலர் சரித்திர தீபகத்திலும் இடம் பெறுகின்றனர். இவர்களைவிட மேலதிகமாக 209 புலவர்களைச் சேர்த்து 410 புலவர்கள் பற்றிய தகவல்கள் தரும் நூலாகப் பாவலர் சரித்திர தீபகம் ஆக்கப்பட்டுள்ளது. காசிச் செட்டியவர்களின் நூலில் 202 புலவர்களில் 13 பேர் மட்டுமே இலங்கையைச் சேர்ந்தவர்கள். சதாசிவம்பிள்ளை அவர்கள் மேலும் 69 இலங்கைப் புலவர்களைச் சேர்த்து ஈழத்துப் புலவர்களின் எண்ணிக்கையை 82 ஆக உயர்த்தினார். + +ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் தொகுத்த முதலிரு பாகங்களும் 1975 இலும் 1979 இலும் கொழும்பு தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்தன. + + + + + + +ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் + +ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (அக்டோபர் 15, 1931 - ஜூலை 27, 2015) பொதுவாக டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார். + +கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும், (ISRO) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் "இந்திய ஏவுகணை நாயகன்" என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் ��வர்களை பின்பற்றினார் என்றும் கூறினர். + +கலாம், இந்தியாவின் முக்கியக் கட்சிகளான இந்திய தேசிய காங்கிரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 2002 ஆம் ஆண்டில் லட்சுமி சாகலை தோற்கடித்து, இந்தியக் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பாட்னா, அஸ்தினாபூரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒரு வருகைப் பேராசிரியர் ஆகவும், திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் வேந்தர் ஆகவும், சென்னை அண்ணா மற்றும் ஜே எஸ் எஸ் மைசூர் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் ஆகவும் பணியாற்றியதோடு, சோமாலியாவில் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் துணை/வருகைப் பேராசிரியர் ஆகவும் பணியாற்றினார். + +கலாம் தனது இந்தியா 2020 என்ற புத்தகத்தில் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். தென் கொரியாவில் அவருடைய புத்தகங்கள், மொழிபெயர்ப்புப் பிரதிகளாக மாற்றுவதற்காக பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அவர் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா உட்பட, பல மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளார். கலாம் தனது ஊக்குவிக்கும் முறையிலான பேச்சுக்களாலும், இந்திய மாணவர் சமூகத்துடன் கலந்துரையாடல்களாலும் பெரிதும் அறியப்படுகிறார். அவர் 2011 ஆம் ஆண்டில் தேச இளைஞர்களுக்காக, இந்தியாவில் ஊழலை ஒழிப்பதை மையக் கருவாகக் கொண்டு, "நான் என்ன தர முடியும்" என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். + +கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், ஒரு படகுச் சொந்தக்காரரும் மரைக்காயரும் ஆன ஜைனுலாப்தீன் அவர்களுக்கும், இல்லத்தரசி ஆஷியம்மா அவர்களுக்கும், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரத்தில், மகனாகப் பிறந்தார். அவர் வறுமையான பின்னணியிலிருந்து வந்தவர் ஆனதால், இளம் வயதிலேயே, அவருடைய குடும்பத்திற்கு கூடுதல் வருமானம் கிடைப்பதற்காக, வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். அவர் பல மத சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவர் என்றாலும், ஒரு மத வழக்கத்தையே பின்பற்றினார். பள்ளி முடிந்ததும், கலாம் அவரது தந்தையின் வருமானத்திற்குப் பங்களிக்கும் பொருட்டு, செய்தித்தாள்கள் விநியோகத்தில் ஈடுபட்டார். தனது பள்ளிப்பருவத்தில், கலாம் சராசரி மதிப்பெண்களே பெற்றார். என்றாலும், பிரகாசமான மாண��னாகவும், கற்பதில் திடமான ஆர்வமும், படிப்பிற்காக, முக்கியமாக கணக்குப் பாடத்திற்காக, பல மணி நேரங்கள் செலவளிப்பவராகவும், அவர் சித்தரிக்கப்படுகிறார். + +இராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்த பின்னர், கலாம் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளன் கல்லூரியில் சேர்ந்து, 1954 ஆம் வருடத்தில், இயற்பியலில் பட்டம் பெற்றார். அந்த பட்டப் படிப்பின் இறுதியில் கலாமிற்கு இயற்பியலில் ஆர்வம் இல்லாது போனதால், பின்னாளில் இந்த நான்கு ஆண்டு படிப்பைக் குறித்து வருத்தப்பட்டார். அவர் 1955 ஆம் ஆண்டில், எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் படிப்பிற்காக, சென்னை சென்றார்.- அங்கு அவர் முதுகலை பட்டமும் பெற்றார். கலாம் பல புகழ்மிக்க முனைவர் பட்டங்கள் பெற்றிருந்தாலும், முறையான படிப்பை, எம்.ஐ.டி சென்னையில் படித்த முதுகலை பட்ட படிப்பைக் கொண்டு முடித்தார். + +கலாம் ஒரு உயர்தரத் திட்டத்திற்காக உழைத்துக் கொண்டிருந்த போது, கல்லூரி முதல்வர், அந்த திட்டத்தின் முன்னேற்றத்தைக் குறித்து மனக்குறை ஆனதோடு, இரண்டு நாட்களுக்குள் திட்டம் முடிக்கப்படவில்லை என்றால் அவருடைய கல்வி உதவித் தொகை நிறுத்தப்படும் என்று மிரட்டினார். அதனால் கலாம், ஓய்வு ஒழிவில்லாமல் அந்த திட்டத்திற்காக உழைத்து, திட்டத்தை உரிய காலத்தில் முடித்து, கல்லூரி தீனின் நன்மதிப்பை பெற்றார். பின்னர் அவர் "நான் உனக்கு அதிக பளு கொடுத்து எளிதில்லாத காலக்கெடுவை விதித்தேன்." என்று கூறினார். + +சென்னை தொழில்நுட்ப நிறுவனம், சென்னையில் 1960 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்த கலாம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் முதன்மை அறிவியலாளராக சேர்ந்தார். கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணித்துறையை தொடங்கினார். இருப்பினும் அவர் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்ந்தது குறித்து ஒரு வித மனக்குறையுடன் இருந்தார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு ச��யற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனம் (launcher) (எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குனர் ஆனார். (எஸ்.எல்.வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 ல் ஏவியது. கலாமின் வாழ்வில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்ததில் மிகப்பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. கலாம் அவர்கள் எஸ்.எல்.வி திட்டத்தில் வேலை செய்ய தொடங்கியப் பிறகுதான் தன்னையே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. கலாம் 1965 ல் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் விரிவுப்படுத்தக்கூடிய வின்கலத்திட்டத்தில் தனித்துப் பணியாற்றினார். 1969 இல், கலாம் அரசாங்கத்தின் இசைவு பெற்று மேலும் பல பொறியாளர்களை அந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொண்டார். +1963–64 இல், அவர் நாசாவின் ஹாம்ப்டன் வர்ஜீனியாவில் லாங்க்லியின் ஆராய்ச்சி மையம், கிரீன்பெல்டில் உள்ள கோடார்ட் விண்வெளி மையம், மேரிலாண்ட் மற்றும் விர்ஜினியா கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள வால்லோப்ஸ் விமான வசதி ஆகிய இடங்களுக்கு சென்று வந்தார். +1970 லிருந்து 1990 வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் கலாம் போலார் எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எல்.வி-III திட்டங்களுக்காக முயற்சி மேற்கொண்டார். இரண்டு திட்டங்களும் வெற்றிகரமாக முடிந்தன. + +கலாம் அணு ஆயுத வடிவமைப்பு, வளர்ச்சி, மற்றும் சோதனைத் தள முன்னேற்பாடு ஆகியவற்றில் பங்கேற்காதபோதிலும், நாட்டின் முதல் அணு ஆயுத சோதனையான புன்னகைக்கும் புத்தன் திட்டத்தைக் காண்பதற்காக ராஜா ராமண்ணாவால் முனைய எறிகணை ஆய்வகத்தின் பதிலியாக அழைக்கப்பட்டார். 1970 இல், எஸ்.எல்.வி விண்வெளிக்கலனைப் பயன்படுத்தி ரோகினி - 1 விண்வெளியில் ஏவப்பட்டது இஸசுரோவின் சாதனை ஆகும். 1970 களில், கலாம் வெற்றிகரமான எஸ்.எல்.வி திட்டத்தின் தொழில்நுட்பத்திலிருந்து எறிகணைத் உற்பத்திக்காக டெவில் செயல் திட்டம் (Project Devil) மற்றும் வாலியன்ட் செயல் திட்டம் (Project Valiant) என்ற இரு திட்டங்களை இயக்கினார். மத்திய அமைச்சரவை மறுத்தபோதிலும் தலைவர் இந்திரா காந்தி தனது தன்னாற்றல் மூலம் கலாமின் கீழ் இயக்க உள்ள விண்வெளி திட்டங்களுக்கு மர்மமான நிதி ஒதுக்கினார். கலாம் நடு அமைச்சரவை இந்த விண்வெளி திட்டங்களின் உண்மையான தன்மையை மறைப்பதற்கு ஏற்கும்படி செய்வதில் தலைமைப்பங்கு வகித்தார். +அவரது ஆராய்ச்சி மற்���ும் கல்வி தலைமையால் அவருக்குக் கிடைத்த பெரும் வெற்றி மற்றும் மரியாதையால், 1980 களில், அவரை அரசாங்கம் தனது இயக்கத்தின் கீழ் ஒரு கூடுதல் ஏவுகணை திட்டத்தைத் துவக்க தூண்டியது. கலாம் மற்றும் முனைவர் வி.எஸ் அருணாச்சலம், உலோகவியல் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் அறிவியல் ஆலோசகரும் அப்பொழுது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஆர். வெங்கட்ராமனின் யோசனையைப் பின்பற்றி ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளின் தயாரிப்பில் ஈடுபட்டார்கள். ஆர்.வெங்கட்ராமன் ஒருங்கிணைந்த ஏவுகணை மேம்பாட்டு திட்டப் (IGMDP) பணிக்காக 388 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய நடுவணரசின் ஒப்புதல் பெறுவதற்கும், கலாமை தலைமை நிர்வாகியாக்கவும் காரணமாக இருந்தார். அக்னி இடைநிலை தூர ஏவுகணை, ப்ரித்வி தந்திரோபாய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை மற்றும் பல ஏவுகணைகளை உருவாக்குவதில் ஏற்படும் தவறான நிர்வாகம், அதிக செலவு மற்றும் கால விரயம் பற்றி குறையாக பேசப்பட்டாலும் கலாம் இந்தத் திட்டத்தில் தலைமைப் பங்கு வகித்தார். ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார். அவர் இந்த சமயத்தில் நடந்த பொக்ரான்- II அணு ஆயுத சோதனையில் தீவிர அரசியல் மற்றும் தொழில்நுட்பப் பங்களித்தார். சோதனை கட்டத்தில் கலாம், ஆர் சிதம்பரத்துடன் சேர்ந்து தலைமை திட்ட ஒருங்கிணைப்பாளராக பணியாற்றினார். ஊடகங்கள் எடுத்த புகைப்படங்கள் கலாமை நாட்டின் உயர்மட்ட அணு அறிவியலாளராக உயர்த்திக்காட்டியது. + +1998 இல் கலாம் இதயம் சார்ந்த மருத்துவரான மருத்துவர் சோம ராஜுவுடன் சேர்ந்து ஒரு குறைந்த செலவு கரோனரி ஸ்டென்ட் உருவாக்கினார். இது அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் "கலாம், ராஜூ ஸ்டென்ட்" என பெயரிடப்பட்டது. 2012 இல் கிராமப்புறங்களில் உள்ள சுத்த வழிமுறைக்காக இவர்கள் வடிவமைத்த டேப்லெட் கணினி "கலாம், ராஜூ டேப்லெட்" என்று பெயரிடப்பட்டது. + +அப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக, கே ஆர் நாராயணனுக்குப் பிறகு பணியாற்றினார். அவர் 2002-ல் நடந்த குடியரசுத்தலைவர் தேர்தலில் 107,366 வாக்குகளைப் பெற்ற இலட்சுமி சாகலை, 922,884 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர் 25 ஜூலை 2002 முதல் 25 ஜூலை 2007 வரை பணியாற்றினார். + +10 சூன் 2002 ல் அப்பொழுது அதிகாரத்தில் இருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஜனாதிபதி பதவிக்கு கலாமை முன்மொழியப் போவதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி மற்றும் தேசியவாத காங்கிரஸ் அவரை வேட்பாளராக ஆதரிப்பதாக அறிவித்தது. சமாஜ்வாடி கட்சி கலாமிற்கு தனது ஆதரவை அறிவித்த பின்னர், அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் இரண்டாவது முறையாக போட்டியிடாமல் கலாம் நாட்டின் 11 வது குடியரசுத் தலைவர் ஆவதற்கு களத்தை விட்டு வெளியேறினார். + +18 சூன் 2002 இல் கலாம், வாஜ்பாய் மற்றும் அவரது மூத்த அமைச்சரவை சகாக்களுடன் சேர்ந்து இந்திய பாராளுமன்றத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். + +15 ஜூலை 2002 ல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாநிலங்கள் அவையுடன் பாராளுமன்றத்தில் ஊடகங்களின் கலாமிற்கு வெற்றியென்ற முடிவான கூற்றுடன் நடந்தது. வாக்குகள் எண்ணும் பணி ஜூலை 18 ம் தேதி நடைபெற்றது. கலாம் ஒரு தலை போட்டியில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் இந்தியக் குடியரசின் 11 ஆவது தலைவரானார். ஜூலை 25 ஆம் தேதியில் பதவியேற்ற பின்பு ராஷ்ட்ரபதி பவனுக்கு குடியேறினார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மூன்றாவது ஜனாதிபதி ஆவார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்(1954) மற்றும் டாக்டர் சாகிர் ஹுசைன்(1963) ஆகியோர் ஜனாதிபதி ஆவதற்கு முன் பாரத ரத்னா விருது பெற்றவர்கள். அவர் ராஷ்ட்ரபதி பவனை ஆக்ரமித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர் ஆவார். +அவரின் ஜனாதிபதி காலத்தில், அவர் "மக்களின் ஜனாதிபதி" என்று அன்பாக அழைக்கப்பட்டார். அவர், ஆதாயம் தரும் பதவி மசோதாவை கையெழுத்திடுவதே தனது பதவி காலத்தில் எடுத்த கடினமான முடிவு என்று கூறுகிறார். + +21 இல் 20 கருணை மனுக்களை ஜனாதிபதியாக விசாரித்து முடிவெடுப்பதில் செயலற்றவர் என்று விமர்சிக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் 72 வது சட்டத்தின் கீழ் மன்னிப்பு வழங்கல், இறப்பு தண்டனை வழங்கல் மற்றும் நிறுத்தல், மாற்று இறப்பு வரிசையில் குற்றவாளிகளின் மரண தண்டனையை நிகழ்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கலாம் தனது 5 ஆண்டு பதவிக் காலத்தில், கற்பழிப்பு குற்றம் புரிந்த தனஞ்சாய் சட்டேர்ஜீயின் கருணை மனுவை தள்ளுபடி செய்து தூக்கிலிட ஆணை கொடுத்து ஒரே ஒரு தீர்மானமெடுத்தார். 20 மனுக்களில் மிக முக்கியமான காஷ்மீரி தீவிரவாதி அப்சல் குருவிற்கு அவர் டிசம்பர் 2001 ல் பாராளுமன்றத்தின் மீது நடத்திய தாக்குதலுக்காக 2004 ல் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது. 20 அக்டோபர் 2006 ம் நாள் மரண தண்டனை நிறைவேற்ற வழங்கிய உத்தரவின் மீதான கருணை மனு நிலுவையில் வைக்கப்பட்டதால் அவர் மரண வரிசையில் தொடர்ந்து வைக்கப்பட்டார். + +20 சூன் 2007 ஆம் தேதியில், தனது பதவிக் காலத்தின் இறுதியில், 2007 ஜனாதிபதித் தேர்தலில் தனது வெற்றி நிச்சயமாக இருந்தால் இரண்டாவது முறையாக குடியரசுத் தலைவர் பதவியில் நீடிக்க தனது சம்மதத்தைத் தெரிவித்தார். எனினும், இரண்டு நாட்கள் கழித்து எந்த அரசியல் செயல்பாடுகளிலிருந்தும் ராஷ்ட்ரபதி பவனை சம்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். என்று கூறி மறுபடியும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவு செய்தார். அவருக்கு இடது சாரி, சிவ சேனா மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் புதுப்பிக்கப்பட்ட ஆணை / ஆதரவு இல்லை. + +24 ஜூலை 2012 , 12 வது குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டிலின் பதவிக் காலம் முடிவு பெரும் நிலையில், ஏப்ரலில் ஊடக அறிக்கைகள் இரண்டவது முறையாக கலாம் பரிந்துரைக்கப்படலாம் என்று கூறின. அந்த அறிக்கைக்குப் பிறகு, சமூக வலைப்பின்னல் தளங்கள் கலாம் வேட்பாளராக நிற்பதற்கு ஆதரவை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளில் செயல்பட்டன. திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகள், தனது பரிந்துரையான கலாமை 2012 ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்த ஆதரவு கொடுக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி கூறியது. தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு முலாயம் சிங் யாதவ் மற்றும் மமதா பானெர்ஜி கலாமிற்கு தங்களது ஆதரவையும் அவரின் பெயரை முன்மொழியவும் ஆர்வம் தெரிவித்தனர். சம்மதம் தெரிவித்த சில நாட்களில் முலாயம் சிங்க் யாதவ் மமதா பானெர்ஜியை தனி ஆதரவாளராக்கி விட்டு பின்வாங்கினார். 18 சூன் 2012 ம் தேதியில் பல ஊகங்களுக்குப் பிறகு, கலாம் 2012 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மறுத்து விட்டார். + +போக்ரான் II இன் நம்பகமான மற்றும் உண்மை அறிக்கை பற்றிய பற்றாக்குறையால், ஒரு விஞ்ஞானியாக கலாமைச் சுற்றி சர்ச்சை உள்ளது. தள சோதனை இயக்குனர் கே. சந்தானம் வெப்ப அணு ஆற்றல் குண்டு ஒரு தோல்வியுற்ற சோதனையென்றும் கலாமின் அறிக்கை தவறானதென்றும் விமர்சித்தார். எனினும் இந்த கூற்றை கலாமும், போக்ரான் II இன் முக்கிய கூட்டாளியான ஆர். சிதம்பரமும் மறுத்தனர். + +அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய போதிலும், அணு அறிவியலில் கலாமிற்கு "அதிகாரம்" இல்லை என்று அவரின் பல சக பணியாளர்கள் கூறினர். ஹோமி சேத்னா என்ற இரசாயனப்பொறியாளர், அணு அறிவியல் மற்றும் அணு இயற்பியல் கட்டுரைகளை வெளியிட கலாமிற்கு எந்தப் பின்னணியும் இல்லை என்று விமர்சித்தார். கலாம் அணுப் பொறியியலில் இருந்து முற்றிலும் வேறுபட்ட விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றார். மேலும் அவரது சாதனைகளுக்காக பல பல்கலைக்கழகங்கள் வழங்கிய பட்டமும் அணுப் பொறியியலிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்றும் சேத்னா கூறினார். 1950 இல் கலாம் தனது கல்லூரிப் படிப்பில் மேம்பட்ட இயற்பியலில் தோல்வி அடைந்தார் என்றும் "அவருக்கு அணு இயற்பியல் பற்றி என்ன தெரியும்" என்றும் சேத்னா அவரது கடைசி தேசிய தொலைக்காட்சிப் பேட்டியில் கூறினார். மேலும் அணு விஞ்ஞானி என்ற தேசிய அந்தஸ்து பெற ஜனாதிபதி பதவியை உபயோகிப்பதாகவும் கூறினார். மற்றவர்கள், இந்திய அணு சக்தி ஆலைகளில் கலாம் பணிபுரியவில்லையென்றும் ராஜா ராமண்ணா கீழ் முடிக்கப்பட்ட அணு ஆயுத வளர்ச்சியில் அவருக்கு பங்கு இல்லையென்றும் கூறினர். 1970 இல் எஸ். எல். வி திட்டத்தில் விண்வெளிப் பொறியாளராகவும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் சேர்வதற்கு முன், 1980 முதல் திட்ட இயக்குநராகவும் இருந்தார் என்றும் சேத்னா முடித்தார். பெங்களூருவில் உள்ள பிரபல இந்திய அறிவியல் கழகம், அறிவியல் சான்றிதழ்கள் இல்லாததால் கலாமின் விண்ணப்பத்தை நிராகரித்தது. + +2008 இல் ஏவுகணை திட்டத்தில் ஏவுகணை கண்டுபிடிப்புகள் பற்றிய அவரின் சொந்தப் பங்களிப்பை இந்திய ஊடகங்கள் கேள்வியாக்கியது. கலாம் அக்னி, ப்ரித்வி மற்றும் ஆகாஷ் ஏவுகணை கண்டுபிடிப்பில் தனி புகழ் பெற்றிருந்தார். மேற்கண்ட எல்லாவற்றையும் பிற விஞ்ஞானிகள் ஆராய்ந்து, வடிவமைத்து, உருவாக்கியபோது கலாம் அதற்கான நிதி மற்றும் பல ஏற்பாடுகளில் ஈடுபட்டி��ுந்தார். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் என்ற முறையில் கலாமிற்கு நிறைய புகழ் சென்றடைந்தன. மேம்பட்ட கணினி ஆய்வகத்தின் முன்னாள் இயக்குநர் மற்றும் அக்னி ஏவுகணை முன்னாள் இயக்குநரான அகர்வால் அக்னி ஏவுகணையின் வெற்றிகரமான வடிவமைப்புக்கு உண்மையான காரணமாக இருந்தார் என்று கருதப்படுகிறது. கலாம் அவரது சொந்த வாழ்க்கை வரலாற்றில், அக்னி ஏவுகணை கண்டுபிடிப்பில் முன்னாள் சென்னை தொழில்நுட்ப நிறுவன மாணவரான அகர்வாலின் முக்கியப் பங்கை புகழ்ந்து எழுதினார். பிரித்வி திட்டத்தில் சுந்தரம் என்பவரை நிழல் மூளை என்றும் திரிசூல் ஏவுகணைத் திட்டத்தில் மோகனை என்பவரையும் புகழ்ந்துள்ளார். 2006 இல் பிரபல மூத்த ஊடக நிருபர் பிரபுல் பிடவை ஒரு செய்தித்தாளில் (THE DAILY STAR), முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அங்கீகரிக்கப்பட்டு டாக்டர் அப்துல் கலாம் இயக்கத்தின் கீழ் நிறுவப்பட்ட இரண்டு விண்வெளித் திட்டங்கள் "மொத்தத் தோல்வி" என்று எழுதியிருந்தார். 1980 களில் இந்தத் திட்டங்கள் இரண்டும் இந்திய இராணுவம் கொடுத்த அழுத்தத்தினால் ரத்து செய்யப்பட்டன. + +உள்ளூர் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் கூடங்குளம் அணு சக்தி ஆலை அமைப்பதில் ஆதரவு தந்து தனது நிலைபாட்டைக் கூறிய கலாமை மக்கள் குழுவினர் குறை கூறினர். அவர்கள் கலாம் ஒரு அணு சக்தி சார்பு விஞ்ஞானி என்றும் பாதுகாப்பு பற்றிய அவரது உறுதிமொழியை ஏற்க விருப்பமில்லாமலும் அவரது வரவை விரோதமாகவும் கருதினர். + +29 செப்டம்பர் 2011 இல் நியூ யார்க்கின் கென்னெடி விமான நிலையத்தில் விமானம் ஏறும் போது தனி நபர் சோதனைக்கு உட்பட்டார். அமெரிக்கப் பாதுகாப்பு நெறி முறைகளின் கீழ் பாதுகாப்பு சோதனை நடைமுறைகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட முக்கிய பிரமுகர்கள் வகையின் கீழ் அவர் வரவில்லை என்று "தனித் திரையிடப்பட்ட" சோதனைக்குட்பட்டார். இதற்கு விமானக் குழுவிலிருந்து எதிர்ப்பு இருந்த போதிலும், "தனித் திரையிடப்பட்ட" சோதனை நிபந்தனையின் கீழ் சரி என்று கூறி, அவரது வெளிச்சட்டை மற்றும் காலணிகளை அவர் "ஏற் இந்திய" விமானம் ஏறிய பிறகு சோதனைக்கு கேட்டனர். 13 நவம்பர் 2011 வரை இச்சம்பவம் வெளி வரவில்லை. இச்சம்பவம் பொதுச் சீற்றத்தை நாட்டு மக்களிடம் உருவாக்கியுள்ளது என்றும் இதற்கு இந்திய��� பதிலடி நடவடிக்கை எடுக்கும் என்றும் அச்சுறுத்தியது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்தும், பதிலாக அமெரிக்க அரசு சிரமத்திற்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கலாமிற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது என்றும் தெரிவித்தது. இதற்கு முன் 2009 இல், சிவில் விமானப் பாதுகாப்புப் பணியகத்தின் இந்தியாவில் பாதுகாப்பு சோதனை விலக்கு பட்டியலில் கலாம் இருந்த போதிலும், புது தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் "காண்டினெண்டல் ஏர்லைன்ஸ்" ன் அடிப்படை பணியாளர்கள் அவரை ஒரு சாதாரண பயணியைப்போல் சோதனைக்கு உட்படுத்தினர். + +அவருடைய இந்தியா 2020 என்ற நூலில் கலாம், இந்தியா அறிவிலே வல்லரசு நாடாகவும், வளர்ந்த நாடாகவும், 2020 ஆம் ஆண்டிற்குள் மாறுவதற்குரிய வரை திட்டத்தை அறிவித்திருந்தார். எதிர்கால வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இடம் பிடிக்க இந்திய அணு ஆயுத திட்டத்திற்கு தனது பணியை அர்ப்பணிக்கிறார். + +அவருடைய நூல்களின் மொழி பெயர்ப்புப் பதிப்புகளுக்கு தென் கொரியாவில் நல்ல வரவேற்பு இருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. + +அறிவியல் மற்றும் தொழில் நுட்பத் துறைகளின் வேறு பல வளர்ச்சிகளிலும் கலாம் மிகுந்த ஈடுபாட்டுடன் தொடர்ந்து பணியாற்றுகிறார். உயிரி செயற்கை பதியன்கள் (BIO-IMPLANTS) வளர்ப்பதற்கான ஆராய்ச்சித் திட்டம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார். அவர் தனியுரிமை தீர்வுகள் மீது திறந்த மூல ஆதரவாளராகவும் மற்றும் பெரிய அளவிலான இலவச மென்பொருள் பயன்படுத்துதல், பெருமளவு மக்களுக்கு தகவல் தொழில்நுட்ப நன்மைகளை கொண்டு வரும் என்றும் நம்புகிறார். + +அறிவியலாலோசகர் பதவியிலிருந்து 1999 இல் பதவி விலகிய பிறகு, ஒரு இலட்சம் மாணவர்களுடன் இரண்டு ஆண்டுகளுக்குள் கலந்துரையாட வேண்டுமென்று குறிக்கோள் வைத்திருந்தார். + +அவர் அவரது சொந்த வார்த்தைகளில் "நான் இளம் வயதினருடன் குறிப்பாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் இருக்கும்போது நிறைவாக உணர்கிறேன்" என்று கூறியுள்ளார். + +இனிமேல் என்னுடைய பட்டறிவை பகிர்ந்து கொள்ளும் நோக்கமும் அவர்களுடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்கவும் இந்தியாவை வல்லரசாக மாற்றும் திட்டத்திற்கு அவர்களை தயார்படுத்தவும் வரை படம் ஏற்கனவே தயாரித்துள்ளேன். + +அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்திலும், அதற்கு பிந்தைய காலத்தில் அகமதாபாத் மற்றும் இந்தோரில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்திலும் வருகை பேராசிரியராகவும், அதிபராக இந்திய விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திலும், பேராசிரியராக சென்னை அண்ணா பலகைக்கழகத்தின் விண்வெளி பொறியியல் பிரிவிற்கும், மைசூரில் உள்ள ஜெ.எஸ்.எஸ். பல்கலைகழகம் மற்றும் சோமாலியாவில் முழுவதிலும் உள்ள பல கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சேர்ப்பு / வருகை ஆசிரியராகவும் மாணவர்களுடன் கலந்துரையாடுவதைத் தொடர்ந்து செய்து வந்தார். + +மே 2011 இல், கலாம், ஊழலைத் தோற்கடிக்க பணியை மைய கருவாக கொண்ட "நான் என்ன கொடுக்க முடியும்" என்ற திட்டத்தைத் தொடங்கினார். அவருக்கு தமிழ்க் கவிதை எழுதுவதிலும், கம்பியைக் கொண்டு தயாரான தென்னிந்திய இசைக் கருவியான வீணை வாசிப்பதிலும் ஆர்வம் இருந்தது. + +2003 மற்றும் 2006 ஆம் வருடங்களுக்கான ஒரு சங்கீதத் தொலைக்காட்சியின் (எம்.டி.வி.) "யூத் ஐகான்" விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டார். 2011 ஆம் ஆண்டில் வாடிய ஆனால் புத்திசாலியான "சோட்டு" என்ற பெயருள்ள ராஜஸ்தானி பையனிடம் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியதாகவும், அந்தச் சிறுவன் கலாமை கௌரவிக்கும் விதமாக தன்னுடைய பெயரை கலாம் என்று கொண்டதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. + +ராமேஸ்வரம், மசூதி தெருவில் உள்ள அப்துல் கலாம் பிறந்த வீட்டின் முதல் மாடியில், "மிஷன் ஆப் லைப் காலேரி" (Mission of Life Gallery) என்ற பெயரில், அப்துல் கலாம் பெற்ற விருதுகள், முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்ற புகைப்படங்கள் மற்றும் எழுதிய நூல்கள் இடம் பெற்றுள்ளன. இக்காட்சியம் நாள்தோறும் காலை எட்டு மணி முதல் இரவு ஏழு மணி வரை பொது மக்கள் கட்டணமின்றி காணும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. + +ஐக்கிய நாடுகள் அவையில் ஏபிஜே அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசின் விஞ்ஞான ஆலோசகராக பணியாற்றியமைக்கும், 1981 ஆம் ஆண்டில், பத்ம பூஷண் விருதையும், 1990 ஆம் ஆண்டில் பத்ம விபூஷன் விருதையும் இந்திய அரசு வழங்கிக் கௌரவித்தது. + +இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னாவை விஞ்ஞான வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம் நவீனமயமாக்கலில் அவரின் மகத்தான மற்றும் மதிப்புமிக்க பங்களிப்புக்காக பெற்றார். + +ஜூலை 27, 2015-ல் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான ஷில்லாங்கில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் (மாலை சுமார் 6.30 மணியளவில்) மயங்கி விழுந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமானார். + +இராமேஸ்வரத்தில் முழு இராணுவ மரியாதையுடன் 2015 ஜூலை மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நல்லடக்க நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொண்டனர். + + + + +இந்த உறுதிமொழிகளை ஏற்று இளைஞர்கள் தளராத உறுதியோடு வளமான, மகிழ்ச்சியான பாதுகாப்பான இந்தியாவுக்காக உழைக்கும் போது வளர்ந்த இந்தியா மலர்வது திண்ணம். +- A.P.J. அப்துல்கலாம். + + + + + + + + + +விவேகானந்தர் + +சுவாமி விவேகானந்தர் ("Swami Vivekananda", சனவரி 12, 1863 - சூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா ("Narendranath Dutta"). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துகள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உலகப்புகழ் பெற்றது. + +விவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார். + +பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் ("Presidency College") சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச்சு கல்லூரியில் ("Scottish Church College") தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்ற���ம் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை. + + +இறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். இராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது. + +1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகா���ந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது. + +தங்கக் குடத்தில் தட்டினால் எழும் கிண்கிணி நாதம் போன்ற இனிமையான குரல் என்று சட்டம்பி சுவாமிகள், சுவாமி விவேகானந்தரது குரல் வளம் குறித்துக் கூறுகின்றார். + +கன்னியாகுமரியில் இருந்து சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துகளை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார். + +1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுகள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. +உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்திய விவேகானந்தர், அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார். பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. + +கல்கத்தாவில் இராமகிருசுண இயக்கம் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். 1899 சனவரி முதல் 1900 டிசம்பர் வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டுப் பயணம் மேற்கொண்டார். + +1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். அன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் இன்று உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது. + +மனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துகளிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்ம���கம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துகளை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. "மக்கள் சேவையே மகேசன் சேவை" என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். + + + +கடவுளைத் தேடி... எனும் தலைப்பில் வங்க மொழியில் கவிதைகளை எழுதியுள்ளார். அதுபற்றி வெகு சிலருக்கேத் தெரியும். அதனைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். அவற்றினை திருமதி.சௌந்திரா கைலாசம் என்பவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மீராபாய், கபீர்தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்றவரின் கவியில் உள்ள ஆழம், இவற்றிலும் உண்டு. + +எடுத்துக்காட்டாக.. +விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன "The complete works of Swami Vivekananda" என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் "விவேகானந்தரின் ஞான தீபம்" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. +இவையே பின்னர் எழுந்திரு! விழித்திரு! என்ற தலைப்பில் 11 பகுதிகளாக வெளியிடப்பட்டன. + + + + + + +காமராசர் + +காமராசர் (காமராஜர்) (சூலை 15, 1903 - அக்டோபர் 02, 1975) தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவராவார். இவர் 1954 ஆம் ஆண்டு அப்போதைய சென்னை மாநில முதலமைச்சர் ஆனார். இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவரை, "தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, அரசரை உருவாக்குபவர், பெருந்தலைவர்" என்றெல்லாம் புகழ்வர். இவர் "கருப்பு காந்தி" என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். காமராசரின் மறைவுக்கு பின், 1976 இல் இந்திய அரசு இவருக்குப் பாரத ரத்னா விருது வழங்கியது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் என்றும், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்கு "காமராசர்" பெயர் சூட்டப்பட்டுள்ளது. +காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார். இவர்தம் பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மா��் ஆவர். முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராசு’ என்று ஆனது. தனது பள்ளிப் படிப்பைச் சத்ரிய வித்யா சாலா பள்ளியில் தொடங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டுக் கொடுக்கும் மனத்துடனும் விளங்கினார். சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார். + +பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராசர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும்போது பெ. வரதராசுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆர்வம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் காங்கிரசின் உறுப்பினராக ஆனார். + +ராசாசியின் தலைமையில் 1930 மார்ச்சு மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராசர் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராசுலு நாயுடுவின் வழக்காடும் திறமையால் குற்றச்சாட்டு நிறுவப்படாததால் விடுதலை ஆனார். 1940 இல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவி விலகினார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகத்து புரட்சி நடவடிக்கைகளுக்காகக் கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாகப் பெற்றார். + +காமராசர், சிறந்த பேச்சாளரும் நாடாளுமன்றவாதியும் ஆன சத்தியமூர்த்தியைத் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல் சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் த��ைவரானபோது காமராசரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரசு கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டுக் காமராசர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்குதான் தேசியக் கொடியை ஏற்றினார். + +1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராசாசிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராசர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராச்சியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது) + +குலக்கல்வித் திட்டத்தால் ராசாசியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரசின் உள்ளேயே ராசாசிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராசாசி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, "‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம. நானே விலகிக் கொள்கிறேன்’" என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார். + +ஆனால் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராசர் பெருவாரியான வாக்குகள் முன்னணியில் வெற்றி பெற்றார். இதுதான், காமராசர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று பதவியேற்றதன் பின்னணி. +காமராசர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் இருந்தன: + + + + +ராசாசி கொண்டு வந்திருந்த குலக்கல்வித் திட்டத்தினைக் கைவிட்டார். அவரது ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27,000 ஆனது. 1920 இல் நீதிக்கட்சி அரசு ஆதரவுடன் சென்னை மாநகராட்சியில் மதிய உணவுத் திட்டம் கொண்டுவரப்பட்டது. முதலில் ஆயிரம் விளக்குப் பகுதியில் இருந்த ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை ���ணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது. பின் மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டமே 1960 களில் காமராசரால் அறிமுகப்படுத்தப்பட்டு எம். ஜி. ராமச்சந்திரனால் 1980 களில் விரிவுபடுத்தப்பட்ட சத்துணவுத் திட்டத்தின் முன்னோடியாகும். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாகப் பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 விழுக்காடாக உயர்ந்தது. (பிரித்தானியர் காலத்தில் இது 7 விழுக்காடாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180 இல் இருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் தொடங்கப்பட்டது. + +காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருசுணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் மலை கிராமங்களுக்குக் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காகக் காமராசரால் கட்டப்பட்ட மாத்தூர் தொட்டிப் பாலம் ஆசியாவின் மிகப்பெரிய தொட்டிப்பாலமாக இன்றளவும் உள்ளது. + +அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்: + + +குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராசரால் ஏற்படுத்தப்பட்டவை. + +காமராசர் முதல் அமைச்சரான முதல் ஆண்டிலேயே அனைத்துத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்க ஆணையிட்டார். பின்னர் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் அதன்பின்னர் தனியார் கல்லூரி ஆசிரியர்களுக்கும் ஓய்வு ஊதியம் வழங்கும்படி ஓய்வு ஊதியத் திட்டத்தை நீட்டித்தார். நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 339 + +1967 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் பெ. சீனிவாசன் என்பவரால் 1,285 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடிக்கப்பட்டார். நாகர்கோயில் மக்களவைத் தொகுதியில் 1969 இல் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார்.நினைவு அலைகள்; டாக்டர் நெ.து.சுந்தரவடிவேலு; சாந்தா பதிப்பகம்;பாகம் 1;பக்கம் 408 + +மூன்று முறை (1954–57, 1957–62, 1962–63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராசர், பதவியைவிடத் தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாகக் கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பிக் கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராசர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டுக் கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியைப் பதவி விலகல் செய்து (2. அக்டோபர் 1963) பொறுப்பினை பக்தவத்சலத்திடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராசர். அக்டோபர் 9 அன்று அகில இந்தியக் காங்கிரசின் தலைவர் ஆனார். லால் பகதூர் சாசுதிரி, மொரார்சி தேசாய், எசு. கே. பாட்டீல், செகசீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள். + +அகில இந்திய அளவில் காமராசரின் செல்வாக்கு கட்சியினரின் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964 இல் சவகர்லால் நேரு இறந்தவுடன் இந்தியாவின் தலைமை அமைச்சராக லால் பகதூர் சாசுதிரியை முன்மொழிந்து காமராசர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாசுதிரியின் திடீர் மரணத்தின்போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின்போது இந்திரா காந்தியை தலைமை அமைச்சராக வரச் செய்ததில் காமராசருக்குக் கணிசமான பங்கு இருந்தது. + +காமராசருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாகக் காங்கிரசு கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராசரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரசு தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போகக் காமராசர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திரா காந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராசரும் ஒருவர். ���ந்தியாவின் அரசியல் போக்குகுறித்து மிகுந்த குறையும் கவலையும் கொண்டிருந்த நிலையில் காமராசர் இருந்தார், இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்ட ஜெயப்பிரகாஷ் நாராயணன், மொரார்ஜி தேசாய் மற்றும் பல தலைவர்கள் இக்காலகட்டத்தில் இந்திரா காந்தி அரசால் கைது செய்யப்பட்டிருந்தனர். அக்டோபர் இரண்டு காந்தியடிகள் பிறந்த நாளன்று அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தார் காமராசர். ஆனால், அன்று ஆச்சார்ய கிருபளானியும் கைது செய்யப்பட்டார் என்ற செய்தியைக் கேட்ட அன்றே உயிர் துறந்தார். +1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) மதிய உறக்கத்திற்குப் பின்னர் அவரின் உயிர் பிரிந்தது. அவர் இறந்தபோது பையில் இருந்த சிறிதளவு பணத்தைத் தவிர வேறு வங்கிக் கணக்கோ, சொந்த வீடோ, வேறு எந்த வித சொத்தோ இல்லை. தன் வாழ்நாள் இறுதி வரை வாடகை வீட்டிலேயே வசித்தார். + +தமிழ்நாடு அரசு, காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் நினைவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்குக் காமராசரின் மார்பளவு சிலையும் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. பார்க்க + +2004 ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. + + + + + + +மதுரைத் தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் + +மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் ("Project Madurai") என்பது தமிழ் இலக்கியங்களை இணையத்தில் இலவசமாக வெளியிடும் ஒரு திறந்த, தன்னார்வ, உலகளாவிய முயற்சியாகும். 1998 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட இத்திட்டம் இன்றும் தொடர்ந்து இயங்கி வருகின்றது. மதுரைத் திட்டம் எந்தவித அரசாங்க (அ) தனியார் நிறுவன உதவியின்றி, எந்தவித வியாபார நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சியாகும். உலகில் வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் முன்னூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். மே 2007 இல் சுமார் 270 மின்னூல்கள் மதுரைத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளன. + +இத்திட்டத்தின் தலைவராக சுவிட்சர்லாந்தில் இருக்கும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் என்பவரும் துணைத்தலைவராக அமெரிக்காவிலுள்ள முனைவர் குமார் மல்லிகார்ஜுனன் என்பவரும் உள்ளனர். +எந்த ஒரு சமூகத்திற்கும் இலக்கியங்கள்தான் அக்கலாசாரத்திற்கான ஒரு முக்கிய எடுத்துக்காட்டு. அதை செவ்வனே காத்து உலகலாவிய தமிழர்களுக்கும் ஏனையோருக்கும் பகிர்ந்துகொள்வதும் வரும் சந்ததியினருக்கு கொண்டு செல்லும் ஒரு கூட்டு முயற்சியே மதுரைத் திட்டமாகும். + +மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு தயாரிக்கப்பட்டது. ஆனால் 1999-ம் ஆண்டிலிருந்து இணையம் வழி தமிழ் தகவல் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான என இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர ( - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு தயாரித்து மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (webpages in html format), PDF வடிவத்திலும் வினியோகிக்கப்பட்டு வருகிறது. 2003-ம் ஆண்டிலிருந்து பல்மொழி ஒருங்குக் குறியீடு (Unicode) முறை தயாரிக்கப்பட்ட மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றது. + +பார்க்க: மதுரைத் திட்டம் நூல்கள் பட்டியல் (அகர வரிசை) + + + + + +புவியின் வளிமண்டலம் + +புவியின் வளிமண்டலம் என்பது பூமியின் ஈர்ப்புச் சக்தியினால் அதனைச் சூழ்ந்து இருக்கும்படி அமைந்துள்ள பல்வேறு வாயுக்களின் படலமாகும். இது ஐந்தில் நான்கு பங்கு நைட்ரஜனையும், ஐந்தில் ஒரு பங்கு ஆக்ஸிஜனையும் மிகக் குறைந்த அளவில் கரியமில வாயு உட்பட்ட மேலும் பல வாயுக்களையும் கொண்டுள்ளது. சூரியக் கதிர்வீச்சிலிருக்கும் புறஊதாக் கதிர்களை உறிஞ்சிக் கொள்வதன் மூலமும், பகல், இரவு நேரங்களுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடுகளைக் குறைப்பதன் மூலமும் வளிமண்டலம் பூமியில் உயிர் வாழ்வைக் காத்து வருகிறது. + +வளிமண்டலத்துக்குச் சடுதியாக முடிவடையும் ஒரு எல்லை கிடையாது. வளிமண்டலத்தின் அடர்த்தி படிப்படியாகக் குறைந்து வந்து இல்லாமல் போய் விடுகிறது. வளிமண்டலத்துக்கும், ஆகாய வெளிக்கும் இடையே வரையறுக்கப்பட்ட எல்லை எதுவும் இல்லை. வளிமண்டலத்தின் முக்கால் பகுதித் திணிவு புவியின் மேற்பரப்பிலிருந்து 11 கிலோமீட்டர் தூரத்துக்குள் அடங்கியுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் 80.5 கி.மீட்டர்களுக்கு மேல் செல்லும் எவரும் விண்வெளிவீரர்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளனர். விண்வெளியிலிருந்து திரும்பும் போது வளிமண்டலத்தின் பாதிப்புப் புலப்படத் தொடங்குமிடம் 120 கிமீ உயரத்தில் உள்ளதாகவும் கருதப்படுகிறது. 100 கிமீ உயரத்திலுள்ள கர்மான் கோடு எனப்படும் கோடும் வளிமண்டலத்துக்கும் விண்வெளிக்கும் இடையிலான எல்லையாகக் கருதப்படுவதுண்டு. + +புவியின் வளிமண்டலம் நைதரசன் மற்றும் ஒக்சிஜன் ஆகியவற்றையே கூடுதலாகக் கொண்டுள்ளது. இதனைத் தவிர ஆர்கன், காபனீரொட்சைட்டு, நீராவி மற்றும் பல வாயுக்கள் புவியின் வளிமண்டலத்தை ஆக்குகின்றன. + +புவியின் வளிமண்டலமானது ஐந்து படைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன + +அடிவளிமண்டலம் (Troposphere) என்பது புவியின் வளிமண்டலத்தின் மிகவும் கீழேயுள்ள அடுக்கு ஆகும். வளிமண்டலத்தின் மொத்தத் திணிவின் 75 வீதமும்; நீராவி, தொங்கல் நிலையில் உள்ள தூசித் துணிக்கைகள் ஆகியவற்றின் 99 வீதமும் அடிவளிமண்டலத்திலேயே உள்ளன. இந்த அடுக்கில் வெப்பச்சுற்றுத் தொடர்ந்து நிகழ்ந்தவண்ணம் உள்ளது. நிலநடுக்கோட்டுப் பகுதியில் அடிவளிமண்டலத்தின் சராசரித் தடிப்பு சுமார் 17 கிலோமீட்டர் (10 மைல்கள்) ஆகும். வெப்பவலயப் பகுதிகளில் இதன் தடிப்பு 20 கிலோமீட்டர் (12 மைல்கள்) அளவுக்குப் பரந்துள்ளது. துருவப் பகுதிகளில் கோடையில் 7 கிலோமீட்டர் (4 மைல்கள்) அளவாகக் காணப்படும் இதன் தடிப்பு மாரி காலங்களில் தெளிவற்றதாக உள்ளது. + +படைமண்டலம் (Stratosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் இரண்டாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது அடிவளிமண்டலத்திற்கும் இடை மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது.இதிலேயே ஓசோன் படலம் காணப்படுகின்றது + +இடை மண்டலம் (mesosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் மூன்றாவதாக உள்ள அடுக்கு ஆகும். இது படை மண்டலத்திற்கும் வெப்ப மண்டலத்திற்கும் நடுவே காணப்படுகின்றது. + +வெப்ப வளிமண்டலம் (thermosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் நான்காவதாக உள்ள அடுக்கு ஆகும். இது இடை மண்டலத்திற்கும் புறவளி மண்டலத்திற்கு��் நடுவே காணப்படுகின்றது. + +புறவளி மண்டலம் (exosphere) என்பது புவியின் வளிமண்டலத்தில் ஐந்தாவதாக உள்ள அடுக்கு ஆகும். + +வளிமண்டல வெப்பநிலை புவி மேற்பரப்பிலிருந்தான உயரத்துடன் வேறுபடுகின்றது; வெப்பநிலைக்கும், உயரத்துக்கும் இடையிலான கணிதத் தொடர்பும் வெவ்வேறு வளிமண்டலப் படலங்களிடையே வேறுபடுகின்றது: + +செய்மதிகள் இம்மண்டலத்திலேயே அதிகளவில் காணப்படும். + +மேற்படி பகுதிகளுக்கிடையான எல்லைகள் அடிவளி எல்லை (tropopause), அடுக்கெல்லை (stratopause), இடையெல்லை (mesopause) எனப்படுகின்றன. + +பூமியின் மேற்பரப்பில் வளிமண்டலத்தின் சராசரி வெப்பநிலை 14 °C ஆகும். + +வளிமண்டல அழுத்தம் என்பது வளியின் நிறையின் நேரடியான விளைவாகும். புவி மேற்பரப்பின் மேலுள்ள வளியின் அளவும் அதன் நிறையும் இடத்துக்கு இடமும், நேரத்தை ஒட்டியும் வேறுபடுவதன் காரணமாக வளியமுக்கமும் இடத்தையும் நேரத்தையும் பொறுத்து வேறுபடுகின்றது. சுமார் 5 கிமீ உயரத்தில் வளிமண்டல அழுத்தம் ~50% வீழ்ச்சியடைகின்றது. (இன்னொரு வகையில் கூறுவதானால் சுமார் வளிமண்டலத் திணிவின் 50% கீழுள்ள 5 கிமீக்குள் அடங்கி விடுகின்றது). கடல் மட்டத்தில் சராசரி வளி அமுக்கம் சுமார் 101.3 கிலோபாஸ்கல்கள் (ஏறத்தாழ சதுர அங்குலத்துக்கு 14.7 இறாத்தல்கள்) ஆகும். + +வளிமண்டலத்தில் கார்பன்டைஆக்சைடின் அளவு 400 மில்லியனில் ஒரு பகுதிகளாக அதிகரித்துள்ளதாக மௌனா லோவ கண்காணிப்பகத்தில் உள்ள நேசனல் ஓசோனிக் அன்டு அட்மாஸ்பியரிக் அட்மினிஸ்டிரேசனின் அறிவியலாளர்கள் மே 9, 2013 அன்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். + + + + + + + +இளையராஜாவின் திருவாசகம் + +இளையராஜாவின் திருவாசகம் (Thiruvasagam by Ilayaraaja) என்பது, இளையராஜா ஆரட்டோரியோ (Oratorio) எனும் இசை வடிவில் வெளியிட்டுள்ள இசைத் தொகுப்பு ஆகும். + +திருவாசகப் பாடல்கள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்களை ஸ்டீஃபன் ஷ்வார்ட்ஸ் (Stephen Schwartz) ஆங்கில வரிகளாக மொழி பெயர்த்துள்ளார். திருவாசகத்தின் சில பகுதிகளை , இளையராஜா, பவதாரிணி மற்றும் குழுவினர் பாடியுள்ளனர். + +ஹங்கேரியின் பாரம்பரியமிக்க புடாபெஸ்ட் பில்ஹார்மானிக் ஆர்கெஸ்டிரா குழுவினர் நூற்றுக்கணக்கான வயலின்களும், மேற்கத்திய வாத்தியங்களும் சேர்த்து இப்பாடல்களுக்கு இசை அமைத்திருக்கின்றனர். + + + + + +மும்பை + +மும்பை ( ' , :), முன்னர் பம்பாயாக இருந்த மும்பை இந்திய மாநிலமான மகாராட்டிராவின் தலைநகரமாகும். இந்தியாவின் மிகப்பெரிய நகரமான இந்த நகரம், ஏறத்தாழ 14 மில்லியன் மக்களுடன் உலகின் மிக அதிக மக்கள்தொகை நிறைந்த நகரங்களில் இரண்டாவதாக விளங்குகிறது. நவி மும்பை மற்றும் தாணே ஆகிய அருகிலுள்ள புறநகரங்களுடன், ஏறத்தாழ 19 மில்லியன் மக்களுடன் மும்பை ஐக்கிய நாடுகள் அவையின் உலக நகரமயமாக்கல் திட்ட அறிக்கையின்படி உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சியாக உள்ளது . இந்தியாவின் கொங்கண் கடற்கரையில் அமைந்துள்ள மும்பை, ஓர் ஆழமான இயற்கை துறைமுகம். இந்தியா கையாளும் கடல்வழி சரக்கு வணிகத்தில் மும்பை துறைமுகம் ஏறத்தாழ 60% பங்களிக்கிறது. + +கிமு மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசு மும்பையின் ஏழு தீவுகளை இந்து மற்றும் புத்த பண்பாட்டின் மையமாக மாற்றியது. பின்னர், போர்ச்சுகீசியர்களும் அவர்களைத் தொடர்ந்து பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனமும் குடியேறுவதற்கு முன்னர் அந்த தீவுகள் வெற்றிபெற்ற உள்நாட்டு பேரரசுகளின் கட்டுப்பாட்டில் இருந்தன. அவை ஒருங்கிணைக்கப்பட்டு, இந்நகரம் பம்பாய் என்று பெயரிடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டின் நடுவில், இது ஒரு முக்கிய வணிக நகரமாக உருவானது. 19ஆம் நூற்றாண்டின் போது பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி நிலைகள் இந்நகரை பெருமைப்படுத்தின. 20ஆம் நூற்றாண்டின் போது, இது இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வலிமையான தளமாகவும், ரௌல்த் சத்தியாகிரகத்தின் மற்றும் அரசரின் இந்திய கப்பற்படை கலகத்தின் வரலாற்று மையமாகவும் இது விளங்கியது. 1947ல் இந்தியா விடுதலை பெற்ற போது, இந்நகரம் பம்பாய் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது. +1960ல், சம்யுக்தா மகாராட்டிரா போராட்டத்தைத் தொடர்ந்து, பம்பாயை தலைநகரமாக கொண்டு மகாராட்டிரம் என்ற புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது. 1996ல், பம்பாய் மும்பை என்று பெயர் மாற்றப்பட்டது. + +இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% பங்களித்தும், தொழில்துறை உற்பத்தியில் 25% பங்களித்தும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 விழுக்காடும் அளித்து இந்தியாவின் வணிக மையமாக மும்பை வி���ங்குகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, இந்திய தேசிய பங்குச்சந்தை போன்ற முதன்மை நிதி அமைப்புகளுக்கு மையமாக விளங்கும் மும்பை, பல்வேறு இந்திய நிறுவனங்களின் மற்றும் கணக்கிடுதற்கரிய பன்னாட்டு நிறுவனங்களின் பெருநிறுவன தலைமையிடமாகவும் இது விளங்குகிறது. இந்நகரம் பாலிவுட் என்றழைக்கப்படும் இந்தி திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்துறையையும் உட்கொண்டிருக்கிறது. மும்பையின் வியாபார வாய்ப்புகளும், ஒரு சிறந்த வாழ்க்கை தரத்தை அளிக்கக்கூடிய எதிர்பார்ப்புகளும் இந்தியாவின் பிற மாநில மக்களையும் ஈர்க்க கூடியதாக உள்ளது, இதன் விளைவாக, இது இந்நகரை பல்வேறு சமூகங்கள் மற்றும் பண்பாட்டுக் கலவையாக மாற்றியுள்ளது. + +"மும்பை" என்ற பெயர் ஓர் ஆகுபெயராகும், "மும்பா" அல்லது "மகா-அம்பா" (புனிதப் பெண் தெய்வமான மும்பாதேவியின் பெயர்) மற்றும் மராத்தியில் "அம்மா" என்பதற்கான "ஆய்" என்பதில் இருந்து பெயராய்வியல் வகையில் தருவிக்கப்பட்டது. +16ஆம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியர்கள் வந்திறங்கிய பகுதியை, "மொம்பாய்" , "மொம்பே" , "மொம்பேன்" , "மொம்பேம்" மற்றும் "பொம்பாய்" போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டு, இறுதியில் "பொம்பாய்ம்" (இது தற்போதைய போர்ச்சுகீசியத்தில் இன்றும் பயன்படுத்தப்படுகிறது) என்ற எழுத்து வடிவத்தைப் பெற்ற போது தான், முந்தைய பெயரான "பம்பாய்" என்பது தோன்றியது. 17ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் உடைமையாக்கிய பின்னர், போர்ச்சுகீசிய "பொம்பாய்ம்" என்பதில் இருந்து "பம்பாய்" என்று ஆங்கில வடிவத்திற்கு மாற்றப்பட்டதாக நம்பப்பட்டது. மராத்தி மற்றும் குஜராத்தி பேசுபவர்களால் இந்நகரம் "மும்பை" அல்லது "மம்பை" என்றும், ஹிந்தி, பெர்சியன் மற்றும் உருதுவில் பம்பாய் என்றும் அறியப்பட்டது. இன்றும் கூட சில வேளைகளில் இது அதன் பழைய பெயர்களான "காக்காமுச்சி" மற்றும் "கலாஜூன்க்ஜா" போன்ற பெயர்களால் குறிக்கப்படுகிறது. 1996ல் பெயர் அலுவல்ப்பூர்வமாக அதன் மராத்தி உச்சரிப்பிற்கு ஏற்ப "மும்பை" என்று மாற்றப்பட்டது. காலனிய அமைப்புகளின் பெயர்களை அவற்றின் வரலாற்று ரீதியான உள்ளூர் பெயர்களுக்கு மாற்றுவது என்ற கொள்கையின் அடிப்படையில் இது மாற்றப்படுகிறது. +பாரம்பரிய ஆங்கில பெயரான "Bombay" என்பது, "நல்ல வளைகுடா" என்ற ஒரு போர்ச்சுகீசிய சொல்லில் இருந்து பெறப்பட்டது என்று ஒரு பரவலான விளக்கத்தைக் கொண்டிருக்கிறது. "bom" (masc.) என்பது போர்ச்சுகீசியத்தில் "நல்ல" என்றும், ஆங்கிலத்தில் "bay" என்ற வார்த்தை, போர்ச்சுகீசியத்தில்" baía " (பழைய உச்சரிப்புகளில் fem., "bahia" )என்ற வார்த்தைக்கு இணையானது என்ற உண்மையின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. "நல்ல வளைகுடா" என்பதற்கான பொதுவான போர்ச்சுகீசிய சொல் "boa bahia" என்பதாகும், இன்னும் தெளிவாக கூறுவதானால் "bom bahia" என்பது இலக்கண முறைப்படி தவறு.எவ்வாறிருப்பினும், 16ஆம் நூற்றாண்டு போர்ச்சுகீசியத்தில் "சிறிய வளைகுடா" என்பதற்கு "baim" (masc) என்ற வடிவத்தைக் கண்டறிய முடிகிறது. + +போர்ச்சுகீசிய பெயராய்வான "Bombaim" மிற்கு பல்வேறு வகையான மூலங்களை பிற ஆதாரங்கள் கொண்டிருக்கின்றன. José Pedro Machado's "Dicionário Onomástico Etimológico da Língua Portuguesa" ("போர்ச்சுகீஸ் டிக்சனரி ஆப் ஓனோமாஸ்டிக்ஸ் அண்டு எடிமோலொஜி") 1516 முதல், அவ்விடத்திற்கான முதல் போர்ச்சுகீசிய குறிப்பீடு என்னவாக இருந்திருக்கும் என்பதை, "Benamajambu" அல்லுத "Tena-Maiambu" என்று குறிப்பிடுகிறது, "Maiambu" என்பது இந்து பெண் தெய்வமான மும்பா-தேவியைக் குறிப்பதாக தெரிகிறது என்று இது குறிப்பிடுகிறது. இதற்காகவே இவ்விடம் மராத்தியில் (மும்பை) பெயரிடப்பட்டுள்ளது. அதே நூற்றாண்டில், எழுத்துக்கள் "Mombayn" (1525) என்றும், "Mombaim" (1563) என்றும் உருவாகி இருப்பதாக தெரிகிறது. காஸ்பர் கோரியாவால் அவரின் Lendas da Índiaல் (லெஜெண்ட்ஸ் ஆப் இந்தியா), இறுதி வடிவமான "Bombaim" 16 நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவாகிறது என்று குறிப்பிடுகிறார். போர்ச்சுகீசிய பெயராய்வின் ஒரு பகுதியாக பெயர்ச்சொல் ("bahia" , "bay") இருந்ததைக் குறிப்பிட்டும், ஆங்கிலேயர்களால் தலைமையேற்கப்பட்ட அந்த இடத்தில் ஒரு வளைகுடா இருந்ததைப் போர்ச்சுகீசிய ஆதாரங்கள் குறிப்பிட்டு காட்டுவதை எடுத்துக்காட்டியும், இதனால் ஆங்கிலத்தில் கூறப்படும் Bombay என்பது போர்ச்சுகீசியத்தில் இருந்து பெறப்பட்டது என்று உறுதியாக வலியுறுத்துவதன் மூலம் இந்த "Bom Bahia" பகுப்பாய்வை ஜெ.பி. மசாடோ நிராகரிப்பதாக தெரிகிறது. + +ஒரு காலத்தில் பம்பாய் தீவு, பரேல், மச்சாகாவ், மாஃகிம், கொலாபா, வோர்லி மற்றும் கிழவித் தீவு (ஓல்டு வுமன் தீவு) ("லிட்டில் கொலாபா" என்றும் அறியப்படும் ) ஆகிய ஏழு தீவுகள் கூட்டமாக இருந்த இடத்தில் மும்பை அமைந்துள்ளது. பிரிட்டிஷ் நில ஆய்வாளர் டோட்டின���ல் 1939ல், வடக்கு மும்பையின் கண்டிவாலிக்கு அருகில் பிளைஸ்டோசின் வண்டல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தீவுகளில் கற்காலத்தில் இருந்து மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று அவர் தெரிவிக்கிறார். முதல் குடியானவர்கள் ஒரு மீனவ சமூகமான கோலிகள் என்று அழைக்கப்படுபவர்கள் இருந்தார்கள். கிறிஸ்துவிற்கு முன்னர் காலத்திய மூன்றாம் நூற்றாண்டில், மௌரியப் பேரரசின் பகுதியாக இருந்த இந்த தீவுகள், மகதத்தின் பௌத்தப் பேரரசரான அசோகரால் ஆளப்பட்டது. இத் தீவுக்கூட்டங்கள் கி.பி.150ல் கிரேக்க புவியாய்விலர் தொலமியால் "ஹெப்டானீசியா" (பண்டைய கிரேக்கத்தில் "ஏழு தீவுகளின் கூட்டம்" ) என்று அறியப்பட்டன. பின்னர், 810 முதல் 1260 வரை சில்ஹாரா பரம்பரையால் ஆளப்படுவதற்கு முன்னர், கி.மு. இரண்டாம் நூற்றாண்டிற்கும் கிறிஸ்துவ சகாப்தத்தின் ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் இடையில் இந்த தீவுகள் சுதந்திர அரசாட்சிகளான சாதவாகனர்கள், அப்ஃகியர்கள், வாகாடகர்கள், காலச்சூரியர்கள், கொன்கன் மௌரியர்கள், சாளுக்கியர்கள் மற்றும் ராட்டிரகூடர்கள் போன்றவர்களின் கட்டுப்பாட்டில் வந்தது. 13 நூற்றாண்டின் பிற்பகுதியில் "மஹிகாவதியை" (தற்போது மாஃகிம் என்றழைக்கப்படுவது) தலைமையிடமாக கொண்டு அப்பகுதியில் ராசா பீம்தேவ் தமது ஆட்சியை நிறுவினார். அவர் சௌராட்டிரா மற்றும் டெக்கானில் இருந்து பல்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்களை "மாஃகிக்காவதியில்"(மாகிம்) குடியமர்த்த அழைத்து வந்தார். குஜராத்தின் முஸ்லீம் ஆட்சியாளர்கள் 1348ல் இத்தீவுகளை அவர்களுடன் சேர்த்து கொண்டார்கள். பின்னர் அவர்கள் 1391 முதல் 1534 வரை குசராத் சுல்தான்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்டார்கள். 1429 முதல் 1431 வரை, இந்த தீவுகள் குஜராத் சுல்தான்களுக்கும், டெக்கானின் பாமினி சுல்தான்களுக்கும் இடையிலான சண்டைகளுக்கு ஆதாரமாக இருந்தது. 1491 முதல் 1494 வரை, இந்த தீவுகள், பாமினி சுல்தானிய ராச்சியத்தின் ஒரு சிறப்புமனிதரான பகாதூர் கான் கிலானியால் பல கடற்கொள்ளைகளால் பாதிக்கப்பட்டது. + +முகலாயப் பேரரசின் உமாயூன், குசராத் சுல்தானிய பேரரசின் சுல்தான் பகதூர் சா ஆகியோரிடம் வளர்ந்து வந்த அதிகார உணர்வானது, 1534 டிசம்பர் 23ல் போர்ச்சுகீசிய குடியேற்றக்காரர்களுடன் பேசின் உடன்படிக்கை செய்து கொள்ள கட்டாயப்படுத்தியது. அந்த உடன்படிக்கையின்படி, பம்பாயின் ஏழு தீவுகளும், அருகில் இருந்த மூலோபாய நகரான பேசினும், அதை சார்ந்திருந்தவையும் போர்ச்சுகீசியர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த பிரதேசங்கள் பின்னர் 1535 அக்டோபர் 25ல் திருப்பி அளிக்கப்பட்டன. போர்ச்சுகீசியர்கள் பம்பாயில் தங்களின் ரோமன் கத்தோலிக்க மத ஒழுக்கங்களுக்கு அடித்தளமிடுவதிலும், வளர்ப்பதிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தார்கள். மாகிமில் உள்ள புனித மிக்கேல் தேவாலயம், ஆந்திரியில் உள்ள புனித யோவான் பாப்டிசுட்டு தேவாலயம், பாந்த்ராவில் உள்ள புனித ஆண்ட்ரூ தேவாலயம் போன்ற பழமை வாய்ந்த சில தேவாலயங்கள் போர்ச்சுகீசிய காலத்தில் உருவக்கப்பட்டவையாகும். 1661 மே மாதத்தில், இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸூக்கும், போர்ச்சுகல்லின் அரசர் நான்காம் சானின் மகள் பிரகன்சாவின் கத்தரீனுக்கும் ஏற்பட்ட திருமண ஒப்பந்தத்தில் சார்லஸிற்கான கேத்ரினின் வரதட்சணையாக இந்த தீவுகள் பிரித்தானியப் பேரரசிற்கு வழங்கப்பட்டது. இந்த தீவுகள், 1668 மார்ச் 27ன் ராயல் மசோதாவால் ஆண்டுக்கு £10 என்ற அடிப்படையில் 1668ல் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் ஏலத்தில் எடுத்து கொண்டது. 1661ல் 10,000ஆக இருந்த மக்கள்தொகை 1675ல் 60,000ஆக விரைவாக அதிகரித்தது. 1687ல், பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் அதன் தலைமையிடத்தை சூரத்தில் இருந்து பம்பாய்க்கு மாற்றியது.இறுதியாக இந்நகரம் பம்பாய் பிரசிடெண்சியின் தலைமையிடமாக மாறியது. மாற்றத்தைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து நிறுவனங்களின் தலைமையிடமாக பம்பாய் உருவாக்கப்பட்டது. 17 நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் முகலாயர்களின் தாக்குதல்களால் இந்த தீவுகள் மிகவும் பாதிக்கப்பட்டன. + +1782 முதல், அனைத்து ஏழு தீவுகளையும் ஒரே ஒருங்கிணைப்பில் கொண்டு வரும் நோக்கில், இந்நகரம் பெரியளவிலான கட்டுமான பொறியியல் திட்டங்களுடன் மறுவடிவம் பெற்றது. ஹார்ன்பி வெல்லார்டு என்று அறியப்பட்ட இந்த திட்டம், 1784ல் முடிக்கப்பட்டது. 1853 ஏப்ரல் 16ல், பம்பாய்க்கும் அதன் அருகில் இருக்கும் தானேவுக்கும் இடையில் இந்தியாவின் முதல் பயண ரயில்பாதை ஏற்படுத்தப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தின் (1861–1865) போது, இந்நகரம் உலகின் முக்கிய பருத்தி வியாபார சந்தையாக விளங்கியது, இதனால் ஏற்பட்ட பொருளாதார அபிவிருத்தி, நகரத்தின் வளர்ச்சியையும் கணிசமாக உயர்த்தியது. 1869ல் திறக்கப்பட்ட சுயஸ் கால்வாய், அரேபிய கடலில் உள்ள மிகப்பெரிய கடற்துறைமுகங்களில் ஒன்றாக பம்பாயை மாற்றியது. + +1896 செப்டம்பரில், பம்பாய் ஒரு கொடூரமான பிளேக் தொற்றுநோயால் தாக்கப்பட்டு, அதில் வாரத்திற்கு 1,900 மக்கள் இறந்ததாக கணக்கிடப்பட்டது. சுமார் 850,000 மக்கள் பம்பாயை விட்டு வெளியேறினார்கள். ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டது. பம்பாய் பிரசிடெண்சியின் தலைநகரம் என்ற வகையில் 1942ல் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மற்றும் 1946ல் ராயல் இந்திய கப்பற்படை கலகம் ஆகியவற்றுடன் இந்திய சுதந்திர போராட்டத்திற்கும் பம்பாய் பிரதான சாட்சியாக இருந்தது. 1947ல் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர், பம்பாய் ராஜதானி ஆட்சியின் பிரதேசம் இந்தியாவால் கைப்பற்றப்பட்டு பம்பாய் மாநிலம் என்று மறுகட்டுமானம் செய்யப்பட்டது. இந்திய பிரதேசத்தில் முந்தைய அரசாட்சி மாநிலங்கள் பல சேர்ந்த பின்னர் அவை பம்பாய் மாநிலத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டன, இதனால் பம்பாய் மாநிலத்தின் பரப்பளவும் அதிகரித்தது. அதை தொடர்ந்து, இந்நகரம் பம்பாய் மாநிலத்தின் தலைநகராக மாறியது. 1950 ஏப்ரலில், பம்பாய் புறநகர்கள் மற்றும் பம்பாய் நகரம் ஆகியவற்றின் இணைப்புடன் பரந்த பம்பாய் மாவட்டம் உயிர் பெற்றது. +1955 "மக்களவை" விவாதத்தில், இந்நகரம் ஒரு தன்னாட்சி நகர-மாநிலமாக அமைக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. 1956ல், பம்பாயை தலைநகராக கொண்டு மஹாராஷ்டிரா-குஜராத் என்கிற இருதரப்பு மாநிலம் அமைக்க மாநிலங்களின் மறுசீரமைப்பு குழு பரிந்துரைத்தது. முன்னனி குஜராத்திய தொழில்துறையினரைக் கொண்ட ஓர் ஆலோசனை குழுவான பம்பாய் குடிமக்கள் குழு பம்பாயின் சுயாட்சியைக் கோரியது. 1957 தேர்தல்களில், இந்த கோரிக்கைகளை எதிர்த்த சம்யுக்த மஹாராஷ்டிர இயக்கம், பம்பாயை மஹாராஷ்டிராவின் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இந்த இயக்கத்தின் போராட்டங்களைத் தொடர்ந்து (இதில் 105 மக்கள் போலீசால் கொல்லப்பட்டனர்), 1960 மே 1ல் பம்பாய் மாநிலம் மொழிவாரியாக மறுசீரமைப்பு செய்யப்பட்டது. பம்பாய் மாநிலத்தின் குஜராத்தி பேசிய பகுதிகள் குஜராத் மாநிலமாக பிரிக்கப்பட்டது. பம்பாயை தலைநகராக கொண்டு மராத்தி பேசிய பம்பாய் மாகாணத்தின் பகுதிகள், மத்திய மாகாணங்கள் மற்��ும் பெரரில் இருந்து எட்டு மாவட்டங்கள், ஐதராபாத் மாநிலத்தில் இருந்து ஐந்து மாவட்டங்கள் மற்றும் அவர்களுக்கு இடையில் இணைந்திருந்த பல அரசாட்சி மாநிலங்களும் இணைக்கப்பட்டு மஹாராஷ்டிரா மாநிலம் உருவாக்கப்பட்டது. + +1992-93ல் ஏற்பட்ட ஹிந்து-முஸ்லீம் கலகங்கள், நகரத்தின் பாதுகாப்பான ஜவுளித்துறையை கிழித்து போட்டது. அதில் 1,000த்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். 1993 மார்ச் 12ல், இஸ்லாமிய தீவிரவாதிகள் மற்றும் பம்பாய் நிழலுகத்தால் நகரத்தின் முக்கிய பல பகுதிகளில் வெடிக்க செய்யப்பட்ட 13 தொடர் குண்டுவெடிப்புகளில் 257 பேர் கொல்லப்பட்டனர், 700 பேர் காயமடைந்தனர். 2006ல், நகர பயண ரயில்களில் ஏழு குண்டுகள் வெடித்ததில், 209 பேர் கொல்லப்பட்டனர், 700க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 2008 நவம்பர் 26ல் இருந்து 2008 நவம்பர் 29 வரை ஆயுதந்தாங்கிய துப்பாக்கியாளர்களால் 10 ஒருங்கிணைந்த தொடர் பயங்கரவாத தாக்குதல்களில் 164 பேர் கொல்லப்பட்டனர், 308 பேர் காயமடைந்தனர், மேலும் பல முக்கிய கட்டிடங்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டது. + +மும்பை, கொங்கண் என்றழைக்கப்படும் கடற்கரை பகுதியான இந்தியாவின் மேற்கத்திய கடற்கரையில் உள்ள உல்லாசு ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ளது. அது சால்செட்டெ தீவிலும், பகுதியாக தாணே மாவட்டத்திலும் அமைந்துள்ளது. நகரத்தின் பல பகுதிகள், இல் இருந்து வரையிலான உயரத்துடன், கடல்மட்டத்தை விட சற்றே மேல்மட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஏறத்தாழ , உயரத்தைக் கொண்டிருக்கிறது. வடக்கு மும்பை மலைப்பகுதிகளால் ஆனது, நகரத்தின் உயரமான பகுதியான சால்செட்டெ தீவில் உள்ளது. மும்பை பெருநகரம் என்கிற மொத்த பரப்பளவில் விரிந்துள்ளது. சஞ்சய் காந்தி தேசிய பூங்கா (போர்வில்லி தேசிய பூங்கா) மும்பையின் புறநகர் மாவட்டத்தில் ஒரு பகுதியாகவும், தானே மாவட்டத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது, அது [137] வரையிலான பகுதியில் விரிந்துள்ளது. + +பாட்சா அணைக்கு அப்பாற்பட்டு, விகார், கீழ் வைட்டர்னா, மேல் வைட்டர்னா, துளசி, தான்சா மற்றும் பவாய் போன்ற அங்கு ஆறு முக்கிய ஏரிகள் உள்ளன. இவற்றில் இருந்தே நகரத்திற்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. துளசி ஏரி மற்றும் விகார் ஏரி இரண்டும் மாநகர எல்லைக்குள் போரிவில்லி தேசிய பூங்காவில் அமைந்துள்ளன. நகர எல்லைக்குள் அமைந்துள்ள பவாய் ஏரியின் வினியோகம் விவசாயம் மற்றும் தொழில்துறை பயன்பாட்டிற்காக மட்டும் பயன்படுத்தப்படுகிறது. தகிசார் ஆறு, போயின்சார் (அல்லது போய்சார்) மற்றும் ஒசிவாரா (அல்லது ஒகிவாரா) ஆகிய மூன்று சிறிய ஆறுகளும் பூங்காவிற்கு உள்ளிருந்தே உருவாகின்றன. மாசு நிறைந்த மீதி ஆறு துளசி ஆறில் இருந்து உருவாகி, விகார் மற்றும் பவாய் ஏரிகளில் நிரம்பிய மீத நீருடன் கலக்கிறது. நகரத்தின் கடற்கரை பகுதி பல சமவெளிகள் மற்றும் மேடுபள்ளங்களுடன் ஏற்ற இறக்கங்களைக் கொண்டுள்ளது. அது கிழக்கில் தாணே கிரீக்கில் இருந்து மேற்கு முகப்பில் மத் மார்வே வரை நீண்டுள்ளது. + +சால்செட்டின் கிழக்கு கடற்கரை பெருமளவிலான சதுப்புநிலக் காடுகள் மற்றும் உயிரிமாற்றீட்டு வளங்களையும் கொண்டுள்ளது. மேற்கத்திய கடற்கரையில் பெருமளவில் வண்டலும், பாறைகளும் நிரம்பியுள்ளன. + +பூமத்தியரேகை பகுதியிலும் மற்றும் அரேபிய கடலுக்கு அருகில் இருப்பதால், ஈரப்பதமான பருவநிலை மற்றும் உலர்ந்த பருவநிலை ஆகிய இரண்டு முக்கிய பருவநிலைகளை மும்பை பெறுகிறது. + +மார்ச் மற்றும் அக்டோபருக்கு இடைப்பட்ட ஈரப்பதமான பருவநிலையில் அதிகளவிலான ஈரப்பதமும், மேற்பட்ட வெப்பநிலையும் நிலவும். ஜூன் மற்றும் செப்டம்பருக்கு இடையில், நகரையே பாழாக்கும் மழைகாலமாக இருக்கும். அம்மாதங்களுக்கு இடையில் தான் நகரத்தின் ஆண்டு மழையளவான கிடைக்கிறது, சராசரி அளவான ஜூலையில் ஒரே மாதத்தில் பூர்த்தி செய்யப்படுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்ச ஆண்டு மழையளவாக 1954ல் என்ற அளவு பதிவு செய்யப்பட்டது. ஒருநாள் அதிகபட்ச மழையளவு 2005 ஜூலை 26ல் பதிவு செய்யப்பட்டது. நவம்பர் மற்றும் பிப்ரவரிக்கு இடைப்பட்ட உலர்வு காலமானது, மிதமான ஈரப்பதம் மற்றும் மிதமான குளிர்ச்சி பொருந்திய காலநிலையாக விளங்குகிறது. வடக்கிலிருந்து வரும் குளிர்ந்த காற்றால் ஜனவரி மற்றும் பிப்ரவரியில் இதமான குளிர் தென்றல் கிடைக்கிறது. தினசரி குறைந்தபட்சம் உடன், ஓர் ஆண்டில் ஜனவரி மாதமே மிக குளிர்ச்சி மிக்க மாதமாக இருக்கிறது. + +ஆண்டு வெப்பநிலைகள் உயர்ந்தளவாக லிருந்து குறைந்தபட்சமாக வரை மாறுபடுகிறது. இதுவரையிலான அதிகபட்ச அளவு மற்றும் குறைந்தபட்ச அளவு ஆகும். + +இந்தியாவின் மிகப்பெரிய நகரமான மும்பை, நாட்டின் நிதித்துறை தலை��ையிடமாக கருதப்படுகிறது. இந்தியாவின் முக்கிய பொருளாதார மையமாக திகழும் இது, மொத்த நிறுவன வேலைவாய்ப்பில் 10 சதவீதமும், மொத்த வருமான வரி வசூலில் 40 சதவீதமும், மொத்த சுங்கவரி வசூலில் 60 சதவீதமும், மொத்த மத்திய கலால் வரி வசூலில் 20 சதவீதமும், இந்திய வெளிநாட்டு வர்த்தகம் 40 சதவீதமும் மற்றும் பெருநிறுவன வரிகளில் பங்கு வகிக்கிறது. மும்பையின் ஓர் ஆண்டுக்கான தனிநபர் வருமானம் ஆகும். இது தேசிய சராசரியை விட ஏறத்தாழ மூன்று மடங்கு அதிகமாகும். பாரத ஸ்டேட் வங்கி, எல்ஐசி, டாடா குழுமம், கோத்ரேஜ் மற்றும் ரிலையன்ஸ் உட்பட இந்தியாவின் எண்ணற்ற பல பெருநிறுவனங்களும், பார்ச்சூன் குளோபல் 500 நிறுவனங்களில் ஐந்தும் மும்பையில் அமைந்துள்ளன. பல்வேறு வெளிநாட்டு வங்கிகளும், நிதி நிறுவனங்களும் இந்த பகுதிகளில் கிளைகளைக் கொண்டுள்ளன, இதில் சர்வதேச வர்த்தக மையம் (மும்பை) மிக முக்கியமான ஒன்றாகும். 1980 வரை, ஜவுளித்துறை ஆலைகள் மற்றும் கடல் துறைமுகத்திற்காகவே மட்டுமே மும்பை பெருமளவில் சிறப்பு பெற்று விளங்கியது, ஆனால் அதன் பின்னர் பொறியியல், வைரம் மெருகூட்டல், ஆரோக்கியகவனிப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை உள்ளடக்க திருப்பி விடப்பட்டுள்ளது. + +நகரத்தின் தொழிலாளர்களில் மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் பெரும் சதவீதத்தில் உள்ளனர். மும்பை பெருமளவிலான தொழிற்திறனற்ற மற்றும் சிறிதே தொழில்திறன் பெற்ற தொழிலாளர்களையும் பெருமளவில் கொண்டுள்ளது. இவர்கள் தெருவியாபாரிகளாகவும், டாக்சி ஓட்டுனர்களாகவும், மெக்கானிக்குகளாகவும் மற்றும் நீல காலர் பணிகளில் இருப்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கைக்காக சம்பாதிக்கிறார்கள். துறைமுகம் மற்றும் கப்பல் தொழில்துறையானது, இந்தியாவில் உள்ள மிக பழமை வாய்ந்த மற்றும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான மும்பை துறைமுகத்துடன் நன்கு வளர்ச்சி பெற்றுள்ளது. மத்திய மும்பையில் உள்ள தாரவியில், ஒரு பெரிய மறுசுழற்சி தொழிற்துறை உள்ளது, இது நகரத்தின் பிற பகுதிகளில் இருந்தும் கழிவுகளை மறுசுழற்சி செய்து வருகிறது. இந்த மாவட்டம் 15,000 ஒரே-அறை தொழிற்சாலைகளைக் கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. + +இந்தியாவின் முக்கிய தொலைக்காட்சி மற்றும் செயற்கோள் வலையமைப்புகளின் பெரும்பான்மையும், அத்துடன் அவற்றின் முக்கிய பிரசுரங்களும் மும்பையைத் தலைமையிடமாக கொண்டுள்ளன. இந்தி திரைப்பட தொழிற்துறையின் மையமான பாலிவுட், இந்தியாவில் அதிகளவிலான படங்கள் தயாரிப்பு துறையாகவும், உலகின் மிகப்பெரியவற்றில் ஒன்றாகவும் விளங்குகிறது. இந்தியாவின் மீதப்பகுதிகளுடன், வர்த்தக தலைமையிடமான மும்மை, 1991ன் தாராளமயமாக்கலில் இருந்தும், 90களின் மத்தியில் ஏற்பட்ட நிதி வளர்ச்சியில் இருந்தும், 2000த்தில் ஏற்பட்ட தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, சேவைகள் மற்றும் அவுட்சோர்சிங் வளர்ச்சியில் இருந்தும் ஒரு பெரிய பொருளாதார வளர்ச்சியைக் கண்டுள்ளது. உலகளாவிய மையங்களுக்கான 2008 வர்த்தக குறியீட்டில் மும்பை 48வது இடத்தைப் பிடித்துள்ளது. 2008 ஏப்ரலில், போர்ப்ஸ் இதழால் வெளியிடப்பட்ட "பில்லினியர்களின் முதல் பத்து நகரங்கள்" பட்டியலில் மும்பை ஏழாவது இடத்தைப் பிடித்தது, ஆனால் பில்லினியர்களின் சராசரி வளங்களில், இந்த பத்து நகரங்களில் மும்பை உயர்ந்த இடத்தைப் பிடித்துள்ளது. + +மும்பை இரண்டு முக்கிய பிராந்தியங்களைக் கொண்டுள்ளது: நகரம் மற்றும் புறநகரம். இவை மஹாராஷ்டிராவின் இரண்டு தனித்தனி மாவட்டங்களை உருவாக்குகின்றன. நகர பகுதி பொதுவாக "தீவு நகரம்" என்றும் குறிக்கப்படுகிறது. +தீவு நகரம் மற்றும் புறநகரங்கள் இரண்டும் ஒட்டுமொத்தமாக இணைந்த நிலையில் மும்பை, பிரஹன் மும்பை முனிசிப்பல் கார்ப்பரேஷனினால் (உத்தியோகப்பூர்வமாக பம்பாய் முனிசிப்பல் கார்ப்பரேஷன்), மாநில அரசால் நியமிக்கப்பட்ட ஓர் ஐஏஎஸ் அதிகாரியான முனிசிப்பல் கமிஷனரின் அதிகாரத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இருபத்தி நான்கு முனிசிப்பல் வார்டுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 227 நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட 227 கவுன்சிலர்களையும், ஐந்து நியமிக்கப்பட்ட கவுன்சிலர்களையும் மற்றும் ஒரு மேயரையும் (இவரின் பாத்திரம் பெரும்பாலும் விழா சார்ந்து இருக்கும்) கார்ப்பரேஷன் கொண்டிருக்கிறது. மேயர் சுபா ராவுல், முனிசிப்பல் கமிஷனர் ஜெய்ராஜ் பதக் மற்றும் ஷெரீப், இந்து ஷாஹனி ஆகியோரால் மும்பை தலைமையெடுக்கப்பட்டுள்ளது. +மாநகரத்தின் நகர மற்றும் உள்கட்டமைப்பு தேவைகளுக்கு BMC பொறுப்பேற்கிறது. ஓர் உதவி முனிசிப்பல் கமிஷனர் ஒவ்வொரு வார்டின் நிர்வாகத்தையும் கண்காணிப்பார். பெரும்பாலும் அனைத்து மாநில அரசியல் கட்சிகளும் கவுன்சிலர் தேர்தல்களில் தங்களின் வேட்பாளர்களை நிறுத்துவார்கள். மும்பை மாநகர பகுதி 7 முனிசிப்பல் கார்ப்பரேஷன்கள் மற்றும் 13 முனிசிப்பல் கவுன்சில்களைக் கொண்டுள்ளது. BMCக்கு கூடுதலாக, இது தானே, கல்யாண்-டோம்பிவலி, நவி மும்பை, மிரா-பயந்தர், பெவண்டி-நிஜாம்பூர் மற்றும் உல்ஹாஸ்நகர் முனிசிப்பல் கார்ப்பரேஷன்களையும் உள்ளடக்கி உள்ளது. பரந்த மும்பை மஹாராஷ்டிராவில் இரண்டு மாவட்டங்களை உருவாக்குகிறது. ஒவ்வொன்றும் மாவட்ட ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும். சொத்து ஆவணங்கள் மற்றும் மத்திய அரசிற்கான வருவாய் ஆவணங்கள் ஆகியவற்றிற்கு பொருப்பான மாவட்ட ஆணையர்கள் நகரத்தில் நடத்தப்படும் தேசிய தேர்தல்களையும் கண்காணிப்பார்கள். + +ஓர் ஐபிஎஸ் அதிகாரியான போலீஸ் கமிஷனர் ஒருவர் மும்பை போலீஸ் துறைக்கு தலைமை வகிப்பார். மும்பை போலீஸ் மாநிலத்தின் உள்துறை இலாக்காவின் கீழ் வருகிறார். துணை போலீஸ் கமிஷனர்களின் தலைமையில் நகரம் ஏழு போலீஸ் மண்டலங்களாகவும், பதினேழு போக்குவரத்து போலீஸ் மண்டலங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து போலீஸ் என்பது மும்பை போலீஸ் துறையின் கீழ் பாதி-தன்னாட்சி பெற்ற சுய அமைப்பாக செயல்படுகிறது. மும்பை தீயணைப்பு துறை முதன்மை தீயணைப்பு அதிகாரியின் தலைமையின் கீழ் செயல்படுகிறது. இவரின் கீழ் நான்கு துணை முதன்மை தீயணைப்பு அதிகாரிகளும், ஆறு பிராந்திய அதிகாரிகளும் இருக்கிறார்கள். + +பம்பாய் உயர்நீதிமன்றத்தின் இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது. பம்பாய் உயர்நீதிமன்றம் மஹாராஷ்டிரா, கோவா மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பகுதிகளான தமன் மற்றும் தியூ மற்றும் தாத்ரா மற்றும் நகர் அவேலி ஆகியவற்றின் சட்ட பிரச்சனைகளைக் கவனிக்கிறது. இரண்டு கீழ் நீதிமன்றங்களான, உள்ளூர் விஷயங்களுக்கான சிறு பிரச்சனை நீதிமன்றம் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கான குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றையும் மும்பை கொண்டிருக்கிறது. நகரத்தில் பயங்கரவாதத்தைத் தூண்டிவிடும் மற்றும் அதற்கான நடவடிக்கைகளில் இறங்கும் மக்களுக்கான ஒரு சிறப்பு தடா (பயங்கரவாத மற்றும் சீர்கேட்டு நடவடிக்கைகள்) நீதிமன்றமும் மும்பையும் உள்ளது. + +மும்பை புறநகர் ரயில்வே, BEST பேருந்துகள், டாக்சிகள், ஆட்டோ ரிக்சாக்கள், படகு சவாரி மற்றும் ���ிமான போக்குவரத்து ஆகியவை மும்பையில் உள்ள பொது போக்குவரத்து அமைப்புமுறையில் உள்ளடங்கி உள்ளன. கருப்பு மற்றும் மஞ்சள் நிற மீட்டர் பொருத்தப்பட்ட டாக்சிகள் மாநகரம் முழுவதும் பயணிக்கின்றன. ஆட்டோரிக்சாக்கள் மும்பையின் புறநகர் பகுதிகளில் மட்டும் இயங்குகின்றன. இயற்கை எரிவாயுவில் இயங்கும் டாக்சிகளும், ஆட்டோரிக்சாக்களும் வாடகை போக்குவரத்தின் மிக பொதுவான வடிவங்களாக உள்ளன. + +இந்திய தேசிய நெடுஞ்சாலை முறையின் தேசிய நெடுஞ்சாலை 3, தேசிய நெடுஞ்சாலை 4 மற்றும் தேசிய நெடுஞ்சாலை 8 ஆகியவற்றால் மும்பை பயன்பெற்று வருகிறது. மும்பை-வோடோதரா விரைவு நெடுஞ்சாலை கட்டப்பட்டு வரும் நிலையில், மும்பை-புணே விரைவு நெடுஞ்சாலை தான் இந்தியாவில் இதுவரை கட்டப்படாத வகையிலான முதல் விரைவு நெடுஞ்சாலை ஆகும். + +மும்பை இரண்டு ரெயில்வே மண்டலங்களின் தலைமையிடமாக விளங்குகிறது: சத்ரபதி சிவாஜி டெர்மினஸை மையமாக கொண்ட மத்திய ரெயில்வே மற்றும் சர்ச்கேட்டிற்கு அருகில் தலைமையிடத்தைக் கொண்ட மேற்கத்திய ரெயில்வே. நகர போக்குவரத்தின் முதுகெலும்பாக விளங்கும் மும்பையின் புறநகர் ரெயில்வே, வடக்கு-தெற்கு திசையில் நகரத்தின் நீளத்திற்கு மூன்று தனித்தனி வலையமைப்புகளைக் கொண்டுள்ளது. + +ஓர் தரையடி மற்றும் மேற்புற விரைவு போக்குவரத்து முறையான மும்பை மெட்ரோ தற்போது கட்டமைக்கப்பட்டு வருகிறது. மும்பை மோனோரெயில் முடிக்கப்படும் போது, அது ஜேகப் வட்டத்தில் இருந்து வடாலா வரை ஓடும். இந்திய ரெயில்வேயினால் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மும்பையுடன் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளன. சத்ரபதி சிவாஜி டெர்மினஸ், தாதர், லோக்மானிய திலகர் டெர்மினஸ், மும்பை சென்ட்ரல், பாந்த்ரா டெர்மினஸ் மற்றும் ஆந்த்ரி ஆகிய இடங்களில் இருந்து ரெயில்கள் புறப்படுகின்றன. மும்பையின் புறநகர் ரெயில் போக்குவரத்து நாளொன்றுக்கு 6.3 மில்லியன் மக்களை ஏற்றி செல்கிறது. +http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88&action=edit§ion=7 +BESTயினால் ஓட்டப்படும் பொதுபோக்குவரத்து பேருந்துகள் மாநகரத்தின் பெரும் பகுதிகளை இணைக்கின்றன. அத்துடன் நவி மும்பை, மிரா-பயந்தர் மற்றும் தானே ஆகியவற்றின் சில பகுதிகளையும் இணைக்கின்றன. நீண்ட தூர பயணங்களுக்கு ரெயில் கட்டணங்கள் குறைவாக இருப்பதால், பேருந்துகள் குறுகி��� தூர பயணங்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. BEST 340க்கும் மேலான வழித்தடத்தில் 4.5 மில்லியன் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மொத்தம் 4,037 பேருந்துகளை இயக்குகிறது. தனித்தட்டு, இரட்டைத்தட்டு, வெஸ்டிபுள், தாழ்தரை, ஊனமுற்றோருக்கான பேருந்து, குளிர்சாதன பேருந்து மற்றும் யூரோ iii விதிகளுக்கு பொருத்திய இயற்கை எரிவாயு பேருந்துகள் ஆகிய வகைகளை இந்த பேருந்து சேவை கொண்டுள்ளது. நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு உதவும் MSRTC பேருந்துகள், மஹாராஷ்டிரா மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் மும்பையை இணைக்கின்றன. மும்பையிலுள்ள பல சுற்றுலா தளங்களைச் சுற்றிக்காட்ட மும்பை தர்ஷன் எனும் சுற்றுலா பேருந்துகள் இருக்கின்றன. மார்ச் 2009 முதல் ஏழு தடங்களில் பேருந்துகள் ஓடும் வகையில் மும்பை முழுவதும் BRTS தடங்கள் திட்டமிடப்பட்டுள்ளது. + +]மும்பையின் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் முக்கிய விமான போக்குவரத்து மையமாகவும், இந்தியாவின் ஓய்வில்லாத விமான நிலையங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. ஜூஹூ விமான இறங்குதளம் இந்தியாவின் முதல் விமானநிலையமாகும். தற்போது இது பிளையிங் கிளப் மற்றும் ஹெலிபோர்ட் வசதியை அளிக்கிறது. கோப்ரா-பவில் பகுதியில் உருவாக்க திட்டமிடப்பட்டிருக்கும் நவி மும்பை சர்வதேச விமானநிலையத்திற்கு அரசாங்கத்தால் அனுமதி அளிக்கப்பட்டிருப்பதுடன், தற்போது இருக்கும் விமான நிலையத்தின் அதிகரித்து வரும் போக்குவரத்து சுமையைக் குறைக்கவும் உதவும். + +அதன் பிரத்யேக இட அமைவுடன், உலகின் சிறந்த இயற்கை துறைமுகங்களில் ஒன்றாக மும்பை விளங்குகிறது. இது நாட்டின் பயணிகள் போக்குவரத்தில் 60 சதவீதத்தையும், இந்திய சரக்கு கையாள்கையில் பெரும்பாகத்தையும் கையாள்கிறது. இது இந்திய கப்பற்படைக்கு ஒரு முக்கிய தளமாக விளங்குகிறது, மேலும் மேற்கத்திய கப்பற்படையின் பிரிவின் தலைமையிடமும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. படகுகள் மூலமான படகு சவாரி இந்த பகுதிகளில் உள்ள தீவுகளையும், கடல்களையும் அணுக உதவுகிறது. + +BMC 6 ஏரிகளில் இருந்து நகரத்திற்கு குடிநீர் வினியோகம் செய்கிறது. இதன் பெரும்பகுதி துள்சி மற்றும் விஹார் ஏரிகளில் இருந்து வருகிறது. தான்சா ஏரி மேற்கத்திய புறநகர்களுக்கும், மேற்கத்திய ரெயில்வேயுடன் தீவு நகரத்தின் ஒரு பகுதிகளுக்கும் தண்ணீர் வினியோகிக்கிறது. ஆசியாவின் மிகப்பெரிய குடிநீர் சுத்திகரிப்பு ஆலையான பன்ந்தப்பில் சுத்திகரிக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் நிலத்தடி குடிநீர் குழாய் மும்பையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ மும்பையின் அனைத்து தினசரி கழிவும் சேர்த்தால் 7,800 மெட்ரிக் டன்னாகும், இதில் 40 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள்9}[324] வடமேற்கில் உள்ள கோரை, வடகிழக்கில் உள்ள முலுண்ட் மற்றும் கிழக்கில் உள்ள தியோனர் ஆகியவற்றின் நிலங்களில் குவிக்க கொண்டு செல்லப்படுகின்றன. வோர்லி மற்றும் பாந்த்ராவில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது, இது முறையே பாந்த்ரா மற்றும் வோர்லியில் உள்ள மற்றும் ஆகிய இரண்டு பிரத்யேக கடல்வழி வெளிதடுப்புகளில் வெளியேற்றப்படுகின்றன. + +பிரிஹன்மும்பை மின் வினியோகம் மற்றும் போக்குவரத்து (BEST) தீவு நகரம் எடுக்கும் 3,216 GWh மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. மேலும் ரிலையன்ஸ் எனர்ஜி, டாட்டா பவர் மற்றும் மஹாவிட்ரானினால் (மஹாராஷ்டிரா மாநில மின்சார வினியோக நிறுவனம்) புறநகர்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. உற்பத்திதிறனை விட மின்சார நுகர்வு அதிவேகமாக வளர்ந்து வருகிறது. 2000 வரை பிக்சட் லைன் மற்றும் செல்லுலர் சேவைகளை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் மட்டுமே கொண்டிருந்த அரசுத்துறையான எம்டிஎன்எல், மிகப்பெரிய தொலைபேசி சேவை அளிக்கும் நிறுவனமாக விளங்குகிறது. இது பிக்சட் லைன் மற்றும் மொபைல் டபிள்யூஎல்எல் சேவைகளையும் வழங்குகிறது. செல்போன் கவரேஜ் மிக சிறப்பாக உள்ளது, இதில் வோடாபோன் எஸ்ஸார், ஏர்டெல், எம்டிஎன்எல், பிபிஎல் குழுமம், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஐடியா செல்லுலார் மற்றும் டாடா இன்டிகாம் ஆகியவை முக்கிய சேவை அளிப்பு நிறுவனங்களாக உள்ளன. ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ ஆகிய இரண்டு சேவைகளும் நகரில் வழங்கப்படுகின்றன. எம்டிஎன்எல் மற்றும் ஏர்டெல் இரண்டும் பிராட்பேண்ட் சேவையும் வழங்குகின்றன. + +2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்பையின் மக்கள்தொகை 11,914,398, 2008ல் சர்வதேச இதழால் வெளியிடப்பட்ட கணக்கீடுகளின்படி, மும்பையின் மக்கள்தொகை 13,662,885 ஆகவும், மும்பை மாநகர பகுதி மட்டும் 20,870,764 ஆகவும் இருந்தது. மக்கள்தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோமீட்டருக்கு சுமார் 22,000 நபர்களாக கணக்கிடப்பட்டுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, BMC நிர்வாகத்தின் கீழ் உள்ள பரந்த மும்பையில் படித்தவர்களின் விகிதம் 77.45 சதவீதமாக இருக்கிறது, இது தேசிய சராசரியான 64.8 சதவீதத்தை விட அதிகமாகும். தீவு நகரில் பாலின விகிதம் 774ஆகவும் (ஆயிரம் ஆண்களுக்கு 774 பெண்கள்), புறநகரங்களில் 826 ஆகவும், ஒட்டுமொத்தமாக பரந்த மும்பையில் 811ஆகவும் இருந்தது. இந்த எண்ணிக்கைகள் அனைத்தும் தேசிய சராசரியான 1,000 ஆண்களுக்கு 933 பெண்கள் என்பதை விட குறைவாகும். + +இந்துக்கள் (67.39%), முஸ்லீம்கள் (18.56%), பௌத்தர்கள் (5.22%), ஜெயின் (3.99%) மற்றும் கிறித்தவர் (3.72%) உள்ளிட்டவர்கள் மும்பையில் மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவர்களுடன் சீக்கியர்களும் மற்றும் பார்சியர்களும் மீதமிருக்கும் மக்கள்தொகையில் அடங்கியுள்ளனர். மொழி/இன அடிப்படையிலான மக்கள்தொகையியல்: மராத்தியர் (53%), குஜராத்தியர்கள் (22%), வட இந்தியர்கள் (17%), தமிழர்கள் (3%), சிந்திகள் (3%), துளுவர்கள்/கன்னடர் (2%) மற்றும் பிறர். இந்த பிரத்தியேக கலாச்சார கலவையானது, 1600களில் இருந்து இந்தியா முழுவதிலும் இருந்து மக்கள் குடிபெயர்ந்ததால் ஏற்பட்டதாகும். போர்ச்சுகீசியர்களால் மதம் மாற்றப்பட்ட மராத்தி பேசும் கிழக்கு இந்திய கத்தோலிக்கர்கள் தான் தாய்நாட்டு கிறித்தவர்கள் ஆவார்கள். + +இந்தியாவிலுள்ள பிற மாநகரங்களைப் போலவே மும்பையும் அதிகளவிலான பன்மொழியாளர்களைக் கொண்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் உத்தியோகப்பூர்வ மொழியான மராத்தி, பரவலாக பேசப்படுகிறது. இந்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் ஆகியவை பேசப்படும் பிற மொழிகளாகும். "பம்பையா" என்று வழங்கப்படும் பேச்சுவழக்கு இந்தியானது, மராத்தி, இந்தி, இந்திய ஆங்கிலம் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட பிற வார்த்தைகளின் கலவையாக தெருக்களில் பேசப்படுகிறது. ஆங்கிலம் பெருமளவில் பேசப்படுகிறது, மேலும் நகரத்தின் வெள்ளை காலர் பணிக்குழுக்கள் மத்தியில் இது முதன்மை மொழியாக இருக்கிறது. + +வளரும் நாடுகளில் உள்ள விரைவாக வளரும் பல நகரங்களில் காணப்படும் முக்கிய நகரமய பிரச்சனைகளில் மும்பையும் பாதிக்கப்படுகிறது: பெருமளவிலான மக்களிடையே நிலவும் பரவலான வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை, பொது சுகாதாரமின்மை மற்றும் நகர்புற நிர்வாகம் மற்றும் கல்வித்தரமின்மை ஆகியவை. உயர்மதிப்பில் கிடைத்திர��க்கும் இடத்தில், மும்பை வாழ்மக்கள் பொதுவாக தடைபட்ட, அதிக செலவிலான, பொதுவாக பணியிடங்களில் இருந்து வெகு தூரத்தில் வசிக்கிறார்கள். இதனால் நெரிசல் மிகுந்த போக்குவரத்தில் அல்லது தடைகள் மிகுந்த சாலையில் நீண்டதூரம் பிரயாணிக்க வேண்டியுள்ளது. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மும்பை மக்களில் 54.1 சதவீதத்தினர் சேரிகளில் வாழ்கிறார்கள். ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய சேரியான தாரவி, மத்திய மும்பையில் அமைந்துள்ளது. அதில் 800,000 மக்கள் வசிக்கிறார்கள். சேரிகளும் கூட சுற்றுலா கவர்ச்சிகளாக மும்பையில் வளர்ந்து வருகின்றன. 1991-2001 வரையிலான தசாப்தத்தில் மஹாராஷ்டிராவிற்கு வெளியில் இருந்து மும்பைக்கு புலம்பெயர்ந்தோர்களின் எண்ணிக்கை 1.12 மில்லியனாக இருந்தது. இது மும்பையின் மொத்த மக்கள்தொகையை 54.8 சதவீதம் நிகர கூடுதல்களுக்கு வழிவகுத்தது. 2007ல், மும்பையில் குற்ற விகிதம் (இந்திய பெனல் கோட்டின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றங்கள்) 1,00,000 மக்களுக்கு 186.2 ஆக இருந்தது. இது தேசிய சராசரியான 175.1 என்ற அளவை விட சற்றே அதிகமாகும், ஆனால் ஒரு நாட்டில் ஒரு மில்லியனுக்கு அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் 312.3 என்ற சராசரி குற்ற விகிதத்தை விட சற்றே குறைவாகும். இந்நகரத்தின் முக்கிய சிறைச்சாலை ஆர்தர் சாலையில் உள்ளது. + +மும்பை வாழ்மக்கள் தங்களைத் தாங்களே "மும்பைக்கர்" , "மும்பையைட்" அல்லது "பாம்பேயைட்" என்று அழைக்கின்றனர். மும்பையின் புறநகர் மக்கள் தெற்கில் அமைந்துள்ள முக்கிய வர்த்தக மாவட்டத்திற்கு பயணிக்க கணிசமான நேரத்தை செலவிடுகின்ற போதிலும், பெரும்பாலான மக்கள் மும்பையின் ரெயில் அல்லது பேருந்து போக்குவரத்து அமைப்பிற்கு அருகிலேயே வசிக்கிறார்கள். சில பிரத்யேக உணவு வகைகளில் தன்சக், {2கிச்ரி{/2}, போம்லி படாட்டா பாஜி,காமாக் காக்ரி, சொலாசி கடி,மின் வேலா கர்ரி மற்றும் கரீட் பம்பாய் டக் ஆகியவை உள்ளடங்கும். சாலையோர திண்பண்டங்களில் கிடைக்கும் உணவு வகைகளில் வடா பாவ், பானிபூரி, பாவ் பாஜி மற்றும் பேல்பூரி ஆகியவை கிடைக்கின்றன. இந்நகரம் பல சிறிய தென்னிந்திய, பஞ்சாபி மற்றும் சீன உணவு வகைகள் அளிக்கும் உணவுவிடுதிகளையும் கொண்டுள்ளது. +மும்பை இந்திய சினிமாவின் பிறப்பிடமாக விளங்குகிறது—தாதாசாகேப் பால்கே மௌன படங்களுக்கு அடிக்கல் நாட்டினார், இத�� தொடர்ந்து மராத்தி பேசும் படங்கள் வந்தன—இங்கு பழைய திரைப்பட ஒளிபரப்பு 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தொடங்கியது. பாலிவுட், மராத்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களை வெளியிடும் பெரும் எண்ணிக்கையிலான திரையரங்கங்களும் மும்பையில் உள்ளன. உலகின் மிகப்பெரிய ஐமேக்ஸ் டோம் தியேட்டர் வடாலாவிற்கு அருகில் உள்ளது. மும்பை சர்வதேச திரைப்பட விழா, பிலிம்பேர் விருதுகளுக்கான விழா, இந்திப்பட தொழில்துறையில் பழைய மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கும் விழா ஆகியவை மும்பையில் நடத்தப்படுகின்றன. பிரித்தானியர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட பெரும்பாலான சிறந்த திரையரங்க குழுக்கள் 1950களில் கலைக்கப்பட்டு விட்டதற்கு இடையிலும், மராத்தி, இந்தி, ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளில் ஒரு வெற்றிகரமான திரையரங்க இயக்க பாரம்பரியத்தை மும்பை உருவாக்கி வருகிறது. + +அரசாங்க ஆதரவிலான கலை அரங்குகள் மற்றும் தனியார் வர்த்தக அரங்கங்கள் இரண்டிலும் சமகாலத்திய கலைகள் நன்கு வெளிப்படுகின்றன. ஜஹாங்கீர் கலையரங்கம் மற்றும் நவீன கலைகளுக்கான தேசிய கலையரங்கம் ஆகியவை அரசு ஆதரவிலான கலையரங்கங்களாகும். 1833ல் உருவாக்கப்பட்ட ஆசியாடிக் சொசைட்டி ஆப் பாம்பே என்பது நகரத்தில் இருக்கும் மிகப் பழமை வாய்ந்த பொது நூலகமாகும். சத்ரபதி சிவாஜி மஹாராஜ் வாஸ்து சங்க்ரஹாலியா (உத்தியோகப்பூர்வ தி பிரின்ஸ் ஆப் வேல்ஸ் மியூசியம்) என்பது இந்திய வரலாற்றின் அரியான பண்டைய காட்சிப்பொருள்களைக் கொண்ட தெற்கு மும்பையில் உள்ள ஒரு புதிய கண்காட்சி சாலையாகும். ஒரு பூங்காவையும் கொண்ட ஜிஜாமதா உத்யான் (உத்தியோகப்பூர்வ விக்டோரியா கார்டன்ஸ்) என்று பெயரிடப்பட்ட மிருக காட்சிசாலையையும் மும்பைக் கொண்டிருக்கிறது.10}[419] +சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் மற்றும் எலிபண்டா குகைகள் ஆகிய இரண்டு பாரம்பரிய யுனெஸ்கோ இடங்களை மும்பை கொண்டுள்ளது. நரிமன் பாயிண்ட், கிர்ஹாம் சௌபாத்தி, ஜூஹூ பீச் மற்றும் மரைன் டிரைவ் ஆகியவை நகரத்தின் பிற பிரபல சுற்றுலா தளங்களாகும். ஓர் தீம் பார்க் மற்றும் புத்துணர்வூட்டும் இடமாக விளங்கும் எஸ்செல் வோல்டு, கோரய் கடற்கரைக்கு அண்மையில் அமைந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய தீம் வாட்டர் பார்க்கான வாட்டர் கிங்டம் என்பது இந்நகரில் அமைந்துள்ளது. + +மும்பை வாழ் மக்கள் மேற்கத்திய மற்றும் இந்திய விழாக்களைக் கொண்டாடுகிறார்கள். தீபாவளி, ஹோலி, ஈத், கிறிஸ்துமஸ், நவராத்திரி, புனித வெள்ளி, தசரா, மொஹரம், விநாயக சதுர்த்தி, துர்க்கா பூஜை மற்றும் மகா சிவராத்திரி ஆகியவை நகரத்தின் சில பிரபல விழாக்கள் ஆகும். இசை, நடனம், தியேட்டர் மற்றும் திரைப்பட துறைகளில் கலைஞர்களின் படைப்புகளை உள்ளடக்கிய காலா கோடா கலை விழா என்பது ஓர் உலக கலைகளின் கண்காட்சியாகும். ஒரு வாரம் காலம் கொண்டாடப்படும் பாந்த்ரா திருவிழா என்பது எல்லா மக்களாலும் கொண்டாடப்படுகிறது. மும்பையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பான்கங்கா டேங்க்கில் மஹாராஷ்டிரா சுற்றுலா அபிவிருத்தி கழகத்தால் ( MTDC) ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் பான்கங்கா விழா என்ற இரண்டு நாள் விழா ஏற்பாடு செய்யப்படுகிறது. எலிபெண்டா தீவுகளி்ல் ஒவ்வொரு பிப்ரவரி மாதமும் கொண்டாடப்படும் எலிபெண்டா விழாவானது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இத்தீவுக்கு வரும் கலைஞர்களுடன் பாரம்பரிய இந்திய நடனம் மற்றும் இசைக்காக அர்பணிக்கப்படுகிறது. + +மும்பை பின்வரும் நகரங்களுடன் துணை நகர உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது: + + + +மும்பையில் பல்வேறு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் மற்றும் ரேடியோ நிலையங்களும் உள்ளன. "டைம்ஸ் ஆஃப் இந்தியா" , "மிட் டே" , "ஹிந்துஸ்தான் டைம்ஸ்" , "டிஎன்ஏ" மற்றும் "இந்தியன் எக்ஸ்பிரஸ்" உட்பட பிரபல ஆங்கில செய்தி பத்திரிக்கைகள் மும்பையில் பிரசுரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. மாராத்திய செய்தி பத்திரிக்கைகளில் "லோக்சத்தா" , "லோக்மத்" மற்றும் "மஹாராஷ்டிரா டைம்ஸ்" ஆகியவை உள்ளடங்கும். பிற இந்திய மொழிகளிலும் செய்தி இதழ்கள் வெளியாகின்றன. ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த "பாம்பே சமாச்சார்" பத்திரிக்கையின் தலைமை இடமாகவும் மும்பை விளங்குகிறது. இப்பத்திரிக்கை 1822ல் இருந்து குஜராத்தி மொழியில் பிரசுரிக்கப்பட்டு வருகிறது. முதல் மராத்திய செய்தி பத்திரிக்கையான "பாம்பே தர்பன்" , 1832ல் மும்பையில் பால்சாஸ்திரி ஜம்பேகரினால் தோற்றுவிக்கப்பட்டது. + +கட்டண தொலைக்காட்சி நிறுவனங்களின் ஒன்றின் மூலமாகவோ அல்லது உள்ளூர் கேபிள் தொலைக்காட்சி சேவையளிப்போர் மூலமாகவோ பல்வேறு இந்திய மற்றும் சர்வதேச தொலைக்காட்சி சேனல்களை மும்பைய��ல் காணலாம். பல்வேறு செய்தி சேனல்கள் மற்றும் அச்சு பிரசுரங்கள் பெருமளவில் இருப்பதால், இந்த மாநகரம் பல்வேறு சர்வதேச ஊடக பெருநிறுவனங்களின் மையமாக விளங்குகிறது. தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையான தூர்தர்ஷன் இரண்டு இலவச சேனல்களை வழங்குகிறது, அதே வேளை மூன்று முக்கிய கேபிள் வலையமைப்புகள் பெரும்பாலான வீடுகளுக்கு சேவை வழங்குகின்றன. ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஜீ மராத்தி, ஈடிவி மராத்தி, டிடி சாஹ்யாத்ரி, மீ மராத்தி, ஜீ டாக்கிஸ், ஜீ டிவி, ஸ்டார் பிளஸ் ஆகியவற்றுடன் ஸ்டார் மஜ்ஹா போன்ற புதிய சேனல்களும் மிக பிரபலமாக உள்ளன. மும்பை மற்றும் மஹாராஷ்டிராவிற்காக மட்டும் முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட செய்தி அலைவரிசைகளில் ஸ்டார் மஜ்ஹா, ஜீ 24 டாஸ் மற்றும் சஹாரா சாமே மும்பை போன்றவை உள்ளடங்கும். செயற்கோள் தொலைக்காட்சி (டிடிஎச்), அதன் உயர்ந்த நிறுவும் செலவுகளால் இன்னும் பெருந்திரளான வரவேற்பைப் பெறவில்லை. டிஷ் டிவி மற்றும் டாடா ஸ்கை போன்றவை மும்பையின் முக்கிய டிடிஎச் பொழுதுபோக்கு சேவைகளாக உள்ளன. பண்பலை வரிசையில் ஒன்பது ரேடியோ சேவைகளுடனும், ஏஎம் வரிசையில் மூன்று அனைத்திந்திய வானொலி ஒலிபரப்புகளும் சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு ரேடியோ ஒலிபரப்புகள் மும்பையில் இயங்கி வருகின்றன. மேலும் வோல்டுஸ்பேஸ், சைரெஸ் மற்றும் எக்ஸ்எம் போன்ற வர்த்தக ஒலிபரப்பு சேவை அளிப்போர்களும் மும்பையில் உள்ளனர். மத்திய அரசாங்கத்தால் 2006ல் தொடங்கப்பட்ட கன்டிஷனல் அக்சஸ் சிஸ்டம், அதற்கிணையான ஒளிபரப்பு சேவையான டைரக்டு-டூ-ஹோம் தொழில்நுட்பத்தின் போட்டியால் சரியான வரவேற்பை பெறவில்லை. + +மும்பையை மையமாக கொண்டுள்ள இந்தி திரைப்படத்துறையான பாலிவுட், ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 150-200 திரைப்படங்களைத் தயாரிக்கிறது. பாலிவுட் என்ற பெயர் பம்பாய் மற்றும் ஹாலிவுட் என்பதின் இணைப்புச் சொல்லாகும். 2000 ஆண்டுகளில், பாலிவுட் வெளிநாடுகளில் நல்ல வளர்ச்சியைக் கண்டது. இது தரம், ஒளிப்பதவி மற்றும் புதிய கதைகளிலும், அத்துடன் சிறப்பு தோற்றங்கள் மற்றும் அனிமேஷன் போன்ற தொழில்நுட்ப அபிவிருத்திகளிலும் திரைப்பட தயாரிப்பைப் புதிய உயரத்திற்கு இட்டு சென்றது. திரைப்பட நகரம் உட்பட கோரேகாவ்வில் உள்ள ஸ்டூடியோக்கள், பெரும்பாலான திரைப்பட அரங்கங்களுக்கான இடமா��� இருந்தன. மராத்திய திரைப்பட தொழில்துறையும் மும்பையை மையமாக கொண்டே செயல்பட்டு வருகிறது. + +மும்பையில் தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் பல வருடங்களாக வசித்து வருவதால், அவர்கள் மும்பை நகர செய்திகளை தங்கள் தாய்மொழியில் தெரிந்துக்கொள்வதற்காக தினகரன், தினத்தந்தி உள்ளிட்ட பல்வேறு தமிழ் நாளிதழ்கள் மும்பையிலேயே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. + +மும்பையில் உள்ள பள்ளிகள் "முனிசிப்பல் பள்ளிகள்" (BMCஆல் நடத்தப்படுபவை) அல்லது தனியார் பள்ளிகளாகவே உள்ளன. இவை சில விதயங்களில் அரசிடமிருந்து நிதி உதவிகளைப் பெறுகின்றன. இந்தப் பள்ளிகள் மகாராஷ்டிரா மாநில வாரியமான MSBSHSE, இந்திய பள்ளி சான்றிதழ் பரீட்சைக்கான அனைத்திந்திய கழகம் (CISCE) அல்லது இடைநிலை கல்விக்கான மத்திய ஆணையம் (CBSE) ஆகியவற்றில் ஏதோவொன்றால் அங்கீகரிக்கப்படுகின்றன. மராத்தி அல்லது ஆங்கிலம் பொதுவான பயிற்று மொழியாக உள்ளது. அரசால் நடத்தப்படும் பொது பள்ளிகள் பல்வேறு வசதிகளில் பின்தங்கி உள்ளன, ஆனால் தனியார் பள்ளிகளின் பெரும் செலவுகளை ஏற்க முடியாத ஏழைகளுக்கு இது மட்டுமே ஒரு வாய்ப்பாக உள்ளன.. + +10+2+3/4 திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர் பத்தாண்டு கால பள்ளிப்படிப்பை முடிக்கின்றனர். பின்னர் அவர்கள் இரண்டு ஆண்டு ஜூனியர் கல்லூரியில் சேர்கின்றனர். அங்கு அவர்கள் கலை, வர்த்தகம் அல்லது விஞ்ஞானம் ஆகிய மூன்றில் ஒரு துறையைத் தேர்ந்தெடுக்கின்றனர். இதை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட துறையில் ஒரு பொதுவான பட்டப்படிப்பு தொடரப்படுகிறது அல்லது சட்டம், பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற உத்தியோக படிப்பு தொடரப்படுகிறது.. பட்டப்படிப்புகளின் எண்ணிக்கையின் அடிப்படையி்ல் உலகின் மிகப் பெரிய பல்கலைக்கழகங்களில் ஒன்றான மும்பை பல்கலைக்கழகத்தின் கீழ் பெரும்பாலான கல்லூரிகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் முக்கிய பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளிகளான இந்திய தொழில்நுட்பக் கழகம் மும்பை, வீர்மாதா ஜிஜாபாய் தொழில்நுட்ப பயிலகம் (VJTI) மற்றும் யூனிவர்சி்ட்டி இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி (UICT) மற்றும் SNDT பெண்கள் பல்கலைக்கழகம் ஆகியவை மும்பையில் உள்ள பிற தன்னாட்சி பல்கலைக்கழகங்களாகும். மேலாண்மை கல்விக்கான ஜம்னாலால் பஜாஜ் பயிலகம் (JBIMS), கே. ஜெ. சோமைய்யா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ் அண்டு ரிசர்ச் (SIMSR), எஸ். பி. ஜெயின் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மென்ட் அண்டு ரிசர்ச் ஆகியவையும் மற்றும் பல பிற மேலாண்மை பள்ளிகளும் கூட மும்பையை மையமாக கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்தியாவின் மிக பழமையான சட்டம் மற்றும் வர்த்தக கல்லூரிகளான முறையே அரசு சட்டக்கல்லூரி மற்றும் சிடென்ஹாம் கல்லூரியும் மும்பையில் அமைந்துள்ளன. சர் ஜெ. ஜெ. ஸ்கூல் ஆப் ஆர்ட் என்பது மும்பையின் மிகப் பழமையான கலை பயிலகமாகும். + +அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா பயிலகம் (TIFR), மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் (BARC) ஆகிய இரண்டு முக்கிய ஆராய்ச்சி பயிலகங்களும் மும்பையில் அமைந்துள்ளன. டிராம்பேயில் உள்ள தன் ஆலையில் 40 மெகாவாட் அணு ஆராய்ச்சி உலையான சைரஸ் அணு உலையை (CIRUS) BARC இயக்குகிறது. + +கிரிக்கெட் , (நாட்டிலும்) நகரத்திலும் மிகப் பிரபலமான விளையாட்டாக இருக்கிறது. மைதானங்களின் பற்றாக்குறையால், எங்கும் அது பல்வேறு மாற்றப்பட்ட வடிவங்களில் (பொதுவாக அது கல்லி கிரிக்கெட் என்று குறிப்பிடப்படுகிறது) விளையாடப்படுகிறது. இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் (BCCI) இருப்பிடமாகவும் மும்பை விளங்குகிறது. இந்நகரின் சார்பாக ரஞ்சிக் கோப்பையில் மும்பை கிரிக்கெட் அணி பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அத்துடன் எந்த குழுவும் வெல்லாத அளவிற்கு, அது 38 முறை ரஞ்சிக் கோப்பையை வென்றுள்ளது. இந்நகரம் இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ்களாலும், இந்திய கிரிக்கெட் லீக்கில் மும்பை சேம்ப்களாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. இந்நகரில் வங்காடே மைதானம் மற்றும் பிராபோர்ன் மைதானம் எனும் இரண்டு சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. மும்பையில் இருந்து வந்த தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் சுனில் கவாஸ்கர் உள்ளடங்குவார்கள். + +கால்பந்தாட்டமும் (சாக்கர்) இந்நகரத்தின் பிற பிரபல விளையாட்டுக்களில் ஒன்றாக விளங்குகிறது. FIFA உலக கோப்பையின் போது மும்பையில் பரவலாக பார்க்கப்பட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும். ஐ-லீக்கில், மும்பை FC, மகேந்திரா யுனைடெட் மற்றும் ஏர்-இந்தியா ஆகிய மூன்று அணிகளால் மும்பை பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது. கிரிக்கெட்டின் எழுச்சியால், பீல்டு ஹாக்கி தன் பிரபலத்தன்மையை இழந்துவிட்டிருக்கிறது. மும்பை மராத்திய வீரர்களின் மையமாகவும் விளங்குகிறது, மகாராஷ்டிராவில் உள்ள வெகு சில அணிகளில் ஒன்றான இது ப்ரீமியர் ஹாக்கி லீக்கில் (PHL) போட்டியிடுகிறது. ஒவ்வொரு பிப்ரவரியிலும், மகாலக்ஷ்மி ரேஸ்கோர்சில் மும்பை டெர்பி போட்டிகளை நடத்துகிறது. +மும்பையில் உள்ள டர்ஃப் கிளப்பில் பிப்ரவரியில் மெக்டொவல்ஸின் டெர்பி போட்டியும் நடத்தப்படுகிறது. சமீபத்திய ஆண்டுகளில் பார்முலா 1 ரேசிங் மீதான ஆர்வமும் அதிகரித்து வருகிறது, 2008ல், போர்ஸ் இந்தியா F1 அணியின் கார் மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2004 மார்ச்சில், மும்பை கிராண்ட் பிரிக்ஸ், F1 பவர்போட் உலக சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக இருந்தது. 2004ல், இந்திய மக்களிடையே விளையாட்டு ஒழுக்கத்தைக் கொண்டு வர ஓர் உடன்படிக்கை மூலம் வருடாந்திர மும்பை மாரத்தான் - உருவாக்கப்பட்டது. 2006 முதல், ஏடிபி வோல்டு டூரின் ஓர் சர்வதேச சுற்றுத் தொடரான தி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் டென்னிஸ் ஓபனிலும் மும்பை களமிறங்கியது. + + + + + +மகாராட்டிரம் + +மகாராட்டிரம் ( "", : ) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , வடகிழக்கில் மத்தியப் பிரதேசம் , கிழக்கில் சத்தீசுக்கர் , தெற்கில் கர்நாடகம் , தென்கிழக்கில் ஆந்திரப் பிரதேசம், மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது. + +முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப��பட்டு உருவாக்கப்பட்டது. + +மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%உம் பங்களிக்கிறது. + +மகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஔரங்காபாத் மண்டலம், புணே மண்டலம், அமராவதி மண்டலம், கொங்கண் மண்டலம், நாக்பூர் மண்டலம், நாசிக் மண்டலம், நாந்தெட் மண்டலம் ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும். +நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும். + + +307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்; + + +2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 18,18,792 ஆக உள்ளது. + +இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், இசுலாமியர் மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது. + +இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மராட்டியுடன், குஜராத்தி, பார்சி மொழி, கன்னடம், இந்தி, உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. + + + + + +ஜெமினி கணேசன் + +ஜெமினி கணேசன் (17 நவம்பர் 1920 – 22 மார்ச் 2005) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். "காதல் மன்னன்" என்று அழைக்கப்படும் இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் +மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். + +தமிழகத்தின் புதுக்கோட்டையில் நவம்பர் 1920ல் இராமசுவாமி ஐயர், கங்கம்மா இணையருக்குப் பிறந்தவர் ஜெமினி கணேசன். அவரது சினிமா வரலாறு மிஸ் மாலினி (1947) மூலமாகத் துவங்கியது. பெண், கணவனே கண்கண்ட தெய்வம் மற்றும் மிஸ்ஸியம்மா போன்ற படங்கள் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தை அளித்தன. தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலுமாக 200 படங்களுக்கும் மேல் ஜெமினி கணேசன் நடித்திருக்கிறார். + +அவருக்கு ஏற்கனவே பத்மஸ்ரீ, நடிப்புச் செல்வம் மற்றும் நடிகர் மன்னன் போன்ற விருதுகளும், பட்டங்களும் வழங்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் அவரை அன்பாகக் ""காதல் மன்னன்"" என்றே அழைத்தனர். அவருடைய உருவம் தாங்கிய தபால்தலையும் வெளியிடப்பட்டது. + +திரையுலகுடன் தொடர்பு கொள்வதற்கு முன்பாகச் சில காலம் ஜெமினி கணேசன் ஆசிரியப் பணியாற்றி வந்தார். ஜெமினி நிறுவனத்தில் அவர் மேலாளராகச் சேர்ந்தபோது, திரையுலகுடனான அவரது வாழ்க்கைப் பயணம் துவங்கியது. பின்னாளில் எந்த நிறுவனத்தின் பல வெற்றிப் படங்களில் அவர் நாயகனாக நடித்தாரோ, அதே நிறுவனத்தில் நடிப்பதற்கு வாய்ப்புக் கேட்டு வருபவர்களை நேர்காணல் செய்யும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்! + +1947ஆம் ஆண்டு மிஸ்.மாலினி என்னும் திரைப்படத்தில் சிறிய வேடம் தாங்கினார். ஆனால், திரையுலகத்தின் பொற்கதவுகள் அவருக்கு உடனடியாகத் திறந்து விடவில்லை. பலரது கவனத்தையும் ஈர்த்து மஞ்சள் ஒளி அவர் மீது விழ வைத்தது 1952ஆம் ஆண்டின் வெளியீடான தாயுள்ளம். ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாகவும், எம்.வி.ராஜம்மா கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தில் அவர் காண்பவர் மனம் மயங்கும் வண்ணம் கவர்ச்சி வில்லன் வேடம் ஏற்றிருந்தார். (பின்னாளில் அவர் கதாநாயகனாக நடிக்கையில் மனோகர் வில்லன் க��ாபாத்திரங்களில் நிலை பெற்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.) + +ஜெமினி கணேசன் கதாநாயகன் வேடம் தரித்த முதல் படம் 1953ஆம் ஆண்டு வெளியான "பெண்". இதில் அவர் ஜோடியாக அஞ்சலி தேவி நடித்திருந்தார். வைஜயந்தி மாலாவும் நடித்த இப்படத்தில், வீணை வித்வானாகவும், புதுமை இயக்குனராகப் புகழ் பெற்றவருமான எஸ்.பாலச்சந்தர் ஜெமினி கணேசனின் நண்பனாக வேடம் ஏற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. + +ஜெமினி கணேசனின் திரைவாழ்க்கையில் அடுத்த படிக்கட்டாக அமைந்தது 1953ஆம் ஆண்டின் "மனம்போல மாங்கல்யம்". இதில் அவர் முதன் முறையாக இரட்டை வேடம் ஏற்று நடித்தார். பெரும் வெற்றியடைந்த இது, அவரது திரை வாழ்க்கையில் மட்டும் அல்லாது, சொந்த வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இத்திரைப்படத்தின்போதுதான், இதில் தன்னுடன் நடித்த, பின்னாளில் நடிகையர் திலகம் என்று புகழ் பெற்ற சாவித்திரியை அவர் மணந்து கொண்டார். + +காதல் மற்றும் குடும்பக் கதைகளில் பெயர் பெறத்துவங்கிய ஜெமினி கணேசனை அதிரடி நாயகனாகவும் அறிமுகம் செய்தது அவரது தாய் நிறுவனமான ஜெமினி. வஞ்சிக் கோட்டை வாலிபன் திரைப்படம் அவரை ஒரு சாகச நாயகனாகவும் முன் நிறுத்தியது. இப்படத்தின் ஆரம்பக் காட்சிகளில், அவர் கொட்டும் மழைச் சூறாவளியில் கப்பலின் பாய்மரத்தினை ஏற்றும் காட்சி அக்கால கட்டத்தில் புல்லரிக்க வைப்பதாக அமைந்த ஒன்று. + +ஜெமினி கணேசனின் மிகப் பெரும் திறன் எந்த ஒரு கட்டுக்குள்ளும் சிக்காதபோதிலும், தனக்கென்று ஒரு ரசிகர் குழாமை அவர் வைத்திருந்ததுதான். இயல்பான நடிப்பிற்குப் பெயர் பெற்ற அவர், இயக்குனர்களின் நடிகனாக விளங்கினார். எந்த விதமான பாத்திரத்திலும் பொருந்தி விடுகிற இயல்பும், தனக்கென பிம்பம் தேடாது பாத்திரத்தின் தன்மையறிந்த நடிப்பும் புகழ் பெற்ற இயக்குனர்களின் முதல் விருப்பத் தேர்வாக அவரை வைத்திருந்தது. இத்தகைய இயக்குனர்களில், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், ஸ்ரீதர், கே.பாலச்சந்தர், பீம்சிங் ஆகியோர் அடங்குவர். இத்தகைய இயக்குனர்களுடன் அவர் அளித்த பல படங்கள் காலத்தால் அழியாதவை. + +கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய "கற்பகம்", "சித்தி", "பணமா பாசமா", "சின்னஞ்சிறு உலகம்" ஆகிய படங்களில் பலதரப்பட்ட வேடங்களை ஏற்று நடித்தவர் ஜெமினி கணேசன். இவற்றில் பலவும் வெற்றிப்படங்களாகும். + +புத��மை இயக்குனர் என அறியப்பட்ட ஸ்ரீதர் ஒரு இயக்குனராக அறிமுகமான கல்யாணப் பரிசு திரைப்படத்தின் நாயகன் ஜெமினி கணேசன்தான். அவர் புகழ் பெற்ற இயக்குனரான பின்னும், ஜெமினி கணேசன் நடிப்பில், "மீண்ட சொர்க்கம்", "சுமை தாங்கி" போன்ற பல படங்களை இயக்கினார். + +கே.பாலச்சந்தர் மிகவும் விரும்பி இயக்கிய நடிகர்களில் ஜெமினி கணேசன் ஒருவர். "தாமரை நெஞ்சம்", "பூவா தலையா", "இரு கோடுகள்", "வெள்ளி விழா", "புன்னகை", "கண்ணா நலமா", "நான் அவனில்லை" எனப் பல படங்களில் இவர்களின் வெற்றிக் கூட்டணி தொடர்ந்தது. "நான் அவனில்லை" திரைப்படத்தினை ஜெமினி கணேசனே தயாரித்து, பல வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்காக அவர் ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றார். + +தாம் ஒரு முன்னணிக் கதாநாயகனாக இருந்தபோதும், பிற நட்சத்திரங்களுடன் இணைந்து நடிக்க ஜெமினி தயங்கியவர் அல்லர். நடிகர் திலகம் என இறவாப் புகழ் பெற்ற சிவாஜி கணேசன் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்த பல படங்களில் அவருக்கு ஈடு கொடுத்து நடிப்பாற்றலை வெளிப்படுத்திய பெருமை ஜெமினி கணேசனுக்கு உண்டு. "பாசமலர்", "பாவமன்னிப்பு", "பார்த்தால் பசி தீரும்", "வீரபாண்டியக் கட்டபொம்மன்" போன்ற பல படங்களே இதற்கு சான்று. இவற்றில், ஜெமினியின் நடிப்பும் ஜொலித்தது என்பதில் இரண்டாம் கருத்துக்கு இடமிருக்காது. + +எம்.ஜி.ஆர் உடன் ஜெமினி கணேசன் "முகராசி" என்ற ஒரே படத்தில் மட்டுமே இணைந்து நடித்தார். + +தமக்குப் பின்னர் திரைக்கு வந்த ஜெய்சங்கர், ஏ. வி. எம். ராஜன், முத்துராமன் ஆகியோருடனும் ஜெமினி கணேசன் பல படங்களில் இணைந்து நடித்தார். + +எந்த ஒரு நட்சத்திர நடிகையுடனும் இயல்பாகப் பொருந்தி விடும் திறன் கொண்டமையாலேயே காதல் மன்னன் என்றும் அவர் அறியப்பட்டார். அவருடன் மிக அதிகமான படங்களில் நடித்தவர்களில் சாவித்ரி, பத்மினி, அஞ்சலிதேவி, சரோஜாதேவி மற்றும் ஜெயந்தி ஆகியோரைக் குறிப்பிடலாம். + +சாவித்ரியுடன் அவர் நடித்த முதல் படம் "மனம்போல மாங்கல்யம்". இதன் படப்பிடிப்பு நடைபெறும் வேளையில்தான் இருவரும் மணம் புரிந்து கொண்டனர். இதன் பிறகும், இருவரும் இணைந்து "பாசமலர்", "பாதகாணிக்கை", "ஆயிரம் ரூபாய்", "யார் பையன்" போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளனர். இவற்றிற்கு முந்தைய படமான "மிஸ்ஸியம்மா"வும் மிகப் பெரும் புகழ் பெற்ற படமாகும். + +ப��்மினியுடன் அவர் நடித்த முதல் படம் "ஆஷாதீபம்" என்கிற மலையாள படம். தமிழில் "ஆசைமகன்" என்ற பெயரில் வெளிவந்தது. அதற்கு பிறகு இவர்கள் "ஆசை" , "மல்லிகா" , "வஞ்சிக்கோட்டை வாலிபன்", "பொன்னு விளையும் பூமி" , "வீரபாண்டிய கட்டபொம்மன்" , "மீண்ட சொர்கம்" ஆகிய படங்களில் வெற்றி கொடி நாட்டினர். + +சரோஜாதேவி முதன் முறையாக முழுநீளக் கதாநாயகியாக அறிமுகமானது, ஜெமினியை நாயகனாகக் கொண்ட "கல்யாணப்பரிசு". இதன் பின்னரும் இந்த ஜோடி, "ஆடிப்பெருக்கு", "கைராசி", "பனித்திரை" "பணமா பாசமா" போன்ற பல திரைப்படங்களில் வெற்றிக் கொடி நாட்டியது. + +அஞ்சலிதேவி ஜெமினி கணேசனுடன் இணைந்த பல படங்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த மாய மந்திர அடிப்படையிலானவை. "மணாளனே மங்கையின் பாக்கியம்", "கணவனே கண் கண்ட தெய்வம்" ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம். + +பின்னணிப் பாடகர்களில் மிகப் பெரும் பெயர் பெற்று விளங்கிய டி.எம். சௌந்தரராஜன் ஜெமினி கணேசனுக்காகச் சில பாடல்கள் பாடியதுண்டு. "எல்லோரும் இந்நாட்டு மன்னர்" படத்தின் "என்னருமைக் காதலிக்கு", "சதாரம்" படத்தின் "நினைந்து நினைந்து நெஞ்சம்" மற்றும் "ராமு'வில் "கண்ணன் வந்தான்" போன்று அவை புகழ் பெற்றதும் உண்டு. ஆயினும், அவரது திரைக்குரலாகவே அறியப்பட்டவர்கள் இருவர்: முதலாமவர், அவரது ஆரம்பகாலப் படங்களில் பின்னணி அளித்த ஏ. எம். ராஜா. இரண்டாமவர், பன்மொழி வித்தகரான பி. பி. ஸ்ரீநிவாஸ். இயல்பாகவே மென்மையான குரல் கொண்டிருந்த ஜெமினி கணேசனுக்கு இவர்கள் இருவரது குரலும் மிக அற்புதமாகப் பொருந்துவதானது. மனம்போல மாங்கல்யம் திரைப்படத்தில் "மாப்பிள்ளை டோய்" துவங்கிப் பல படங்களில் ஏ.எம். ராஜா அவருக்குப் பின்னணி பாடினார். "கல்யாணப் பரிசு" திரைப்படத்தில்தான் அவர் முதன் முறையாக இசையமைப்பாளராகவும் அறிமுகமானார். இதன் பிறகு, "ஆடிப்பெருக்கு" போன்ற சில படங்களில் அவருக்கு இசையமைத்துப் பாடியுள்ளார். + +அறுபதுகளின் இறுதியில் வெளிவரத்துவங்கிய ஜெமினி கணேசனின் படங்களில், பி.பி.ஸ்ரீனிவாஸ் அவரது பாடற்குரலானார். சுமைதாங்கி போன்ற படங்களில் ஜெமினிக்காக அவர் பாடிய பாடல்கள் இறவா வரம் பெற்றவை. + +1970ஆம் வருடங்களின் இறுதியில், "சாந்தி நிலையம்" போன்ற சில படங்களில் அப்போது பெயர் பெறத் துவங்கியிருந்த எஸ்.பி.பி. என்று அன்புடன் அழைக்கப்படும் எஸ். பி. பாலசுப்பிரமணியம் ஜெமினிக்குப் பின்னணி பாடியுள்ளார். + +ஸ்ரீதரின் "அவளுக்கென்று ஓர் மனம்" மற்றும் "சாந்தி நிலையம்" ஆகிய படங்கள் வெளியாகும் கால கட்டத்தில் ஒரு நாயகனாக ஜெமினிக்குச் சற்று இறங்கு முகம்தான். அவர் நாயகனாக நடித்த கடைசிப்படம் சுஜாதாவுடன் நடித்து 1970ஆம் ஆண்டுகளின் இறுதியில் வெளிவந்த "லலிதா". + +சில வருடங்களுக்குப் பிறகு குணசித்திரப் பாத்திரங்களை ஏற்று நடிக்கலானார். அவற்றில் மிகச் சிறப்பாக அமைந்த இரண்டு படங்களுமே கமல்ஹாசன் நாயகனாக நடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் சிரஞ்சீவியின் தந்தையாக அவர் நடித்த ருத்ரவீணா தமிழில் உன்னால் முடியும் தம்பி என மறுவாக்கம் செய்யப்பட்டபோது, அதில் கமல்ஹாசனின் பிடிவாதம் மிக்க தந்தையாக, கருநாடக இசைத் தூய்மையில் விடாப்பிடி கொண்டவராக மிகச் சிறப்பாக நடித்திருந்தார். மற்றொன்று அவரது கடைசிப் படமான அவ்வை சண்முகி. + +விரிவான தரவுகளுக்கு - + +தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் நாயகனாகவும், இரண்டாம் நாயகனாகவும் பல படங்களில் ஜெமினி கணேசன் நடித்துள்ளார். + +அவரது கல்யாணப்பரிசு இந்தி மொழியில் நஸ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் நாயகனாக நடிக்க மறுவாக்கம் செய்யப்பட்டபோது, தமிழில் நாகேஸ்வரராவ் நடித்த வேடத்தில் அவர் நடித்தார். இந்தி மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த அவர் "மிஸ் மேரி" (தமிழில் மிஸ்ஸியம்மா) போன்றவற்றிலும், அஞ்சலி தேவியுடன் அவர் நடித்த சில படங்களின் இந்தி மறுவாக்கத்திலும் கதாநாயகனாகவே நடித்தார். தமிழ் நடிகைகள் வெற்றிக் கொடி நாட்டிய பாலிவுட் தமிழ் நடிகர்களை வெகு காலத்திற்கு வரவேற்றதில்லை. ஜெமினி கணேசனும் இதற்கு விதிவிலக்கல்ல. இதர மொழிகளுடன் ஒப்பிடுகையில், இந்தியில் அவரது பங்களிப்பு மிகக் குறைவே. + +தமிழ் திரைப்படத்துறையின் காதல் மன்னன் என்று வருணிக்கப்படும் காலம் சென்ற நடிகர் ஜெமினி கணேசன் அவர்களின் தபால்தலையினை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதிமாறன் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிட்டார். ஐந்து ரூபாய் நாணயப்பிரிப்புகளில் வெளியான இந்தத் தபால் தலையினை ஜெமினி கணேசன் அவர்களின் புதல்விகள் கமலா செல்வராஜ், ரேவதி சுவாமிநாதன் ஆகியோர் பெற்றுக் கொண்டார்கள். + + +சிறு நீரகக் கோளாறு உள்ளிட்ட நோய்களினால் அவதியுற்ற ஜெமினி கணேசன் 2005ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 22ஆம் நாள் இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு காலமானார். இவரது பூதவுடல் அரசு மரியாதைகளுடன் தகனம் செய்யப்பட்ட்டது. + + + + + +ஹாலிவுட் + +ஹாலிவுட் எனப்படும் இடம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட் என்றழைக்கப்படுகிறது. +'ஹாலிவுட்' எப்படி உருவானது + +1853 ஆம் ஆண்டில், ஒரு அடோப் குடிசை நோபலேரா (நோபல் புலத்தில்) இருந்தது, அந்த இடம் பாரம்பரி யமான மெக்சிகன் நோபல் கற்றாழைக்காக பெயர் பெற்றது 1870 வாக்கில், ஒரு விவசாய சமூகம் செழித்தோங்கியது. இப்பகுதி வட மேற்கில் சாண்டா மோனிகா மலைகளில் கடந்து வந்த பிறகு, காகெங்கா பள்ளத்தாக்கு என்று அறியப்பட்டது."ஹாலிவுட்டின் தந்தை" என அழைக்கப்படும் ஹெச். ஜே. விட்லிடைரி பத்திரிகையின் படி, 1886 ஆம் ஆண்டில் அவரது தேனிலவுக்கு சென்ற பொழுது மலைகளின் உச்சியில் இயற்கை காட்சியை ரசித்துக்கொண்டிருந்தார் . அப்போது ஒரு சீன மனிதன் வண்டியில் மரம் ஏற்றிக்கொண்டு வந்தான். அந்த மனிதன் வண்டியை விட்டு இரங்கி அவரை வணங்கினான். +அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று வினவினார் , "நான் ஹோலி-வூட்," அதாவது 'மரத்தை ஏற்றிசெல்கிறேன் என்று கூறினார் .அப்போதே அவர் அந்த புதிய இடத்திற்கு ,அல்லது நகருக்கு ஹாலிவுட் என்ற பெயரை வைக்க , முடிவு செய்தார் .விட்லி ஏற்கனவே மேற்கு அமெரிக்காவில் உள்ள 100 நகரங்களில் இப்படியாக பெயர் வைத்திருந்தார் என்பது குறிப்பிட தக்கது + +ஹார்ட் பண்ணையில் விட்லி 500 ஏக்கர் (200 ஹெக்டர்) ஈ.கே. நிலம் வாங்குவதற்கு ஒரு தொகை குறிப்பிட்டார் .அவர்களும் ஒப்புக்கொண்டனர் பின்னாடி இதை சில வருடம் கழித்து விற்பனை செய்யலாம் என்று மனக்கணக்கு போட்டிருந்தார் .வில்லிலே ஹாலிவுடில் நிலம் வாங்கு முன் , புதிய நகரத்திற்கான திட்டங்கள் பற்றி ஹர்ட்ஸின் க்ரே ஓடிஸ், ஹர்ட்ஸின் மனைவி, கிழக்கு அருகில் உள்ள பண்ணையில் இணை உரிமையாளர் டெயிடா வில்காக்ஸ் மற்றும் மற்றவர்களுக்கும் பரவியது. + +க்ளென்-ஹோலி ஹோட்டல், ஹாலிவுட்டில் முதல் ஹோட்டல், இப்போது யூக்கா தெரு எனப்படும் மூலையில். அது 1890 களில் கட்டப்பட்டது.டெய்டா வில்காக்ஸ் விட்லேயின் ஒரு முக்கிய முதலீட்டா ளரும் நண்பருமான அலெக்ஸ் பெஸ்ட்டின் மூலமாக ஹாலிவுட் நிலம் பற்றி அறிந்திருந்தார் . ஆகஸ்ட் 1887 இல், வில்காக்ஸ் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ரெக்கார்டர் அலுவலகத்தில் அவர் "ஹாலிவுட், கலிஃபோர்னியா" என்ற பெயரில் விற்கப்பட்ட சொத்தின் விபரம் மற்றும் வரைபடத்துடன் தாக்கல் செய்தார். வில்காக்ஸ் தான் முதலில் பதிவு செய்தார் . அதே வருடம் ஆரம்பகால ரியல் எஸ்டேட் வியாபாரம் சூடு பிடிக்கவே ஹாலிவுட் அதன் மெதுவான வளர்ச்சியைத் தொடங்கியது. + +1900 வாக்கில், இப்பகுதியில் ஒரு தபால் அலுவலகம், செய்தித்தாள், ஹோட்டல் மற்றும் இரண்டு சந்தைகள் இருந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ், மக்கள் தொகை 102,479 மக்கள் தொகை 10 மைல் (16 கிமீ).கிழக்கில் திராட்சை தோட்டங்கள், பார்லி துறைகள், மற்றும் எலுமிச்சை ,ஆரஞ்சுகள் பயிரிடப்பட்டன . +ஒரு ஒற்றைப் பாதையில் தெருத்தெரு கோடு ப்ராஸ்பெக்ட் அவென்யூவின் நடுவில் இருந்து ஓடியது, ஆனால் சேவையானது இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை அளவில் இருந்தது . பழைய சிட்ரஸ் பழ பேக்கிங் ஹவுஸ் ஹாலிவுட் குடியிருப்பாளர்களுக்கான மாறியதை தொடர்ந்து போக்கு வரத்து மேம்பட்டது . 1902 ஆம் ஆண்டில் ஹாலிவுட் ஹோட்டல் திறக்கப்பட்டது.உரிமையாளர் ஹெச். ஜே. விட்லி + +1908 ஆம் ஆண்டின் ஹாலிவுட் நில விற்பனைக்கான செய்தித்தாள் விளம்பரம் செய்யப்பட்டது .லாஸ் பசிபிக் பவுல்வர்டு மற்றும் டெவெலபர் கம்பனியின் தலைவர் ஆனார் ஹெச். ஜே. விட்லி விட்லே நிறுவனத்தின் ஆரம்ப குடியிருப்பு குடியிரு ப்புகளில் ஒன்றான ஓசியன் வியூ டிராக்ட் ஒன்றை உருவாக்கி விற்பனை செய்தது. [12] விட்லி இப்பகுதியை மேம்படுத்துவதற்கு நிறைய செய்தார். மின்சாரம் கொண்டு, ஒரு வங்கியை கட்டியெழுப்பவும், கியூஹெனாபா பாஸிற்கு ஒரு பாதையையும் சேர்த்து, மின் விளக்குகளுக்கு ஆயிரக்கணக்கான டாலர்களை அவர் வழங்கினார்.இப்பகுதியை மேம்படுத்துவதற்கு நிறைய பாடுபட்டார் + +லைட்டிங் ப்ராஸ்பெக்ட் அவென்யூவில் பல தொகுதிகள் இயங்கின. விட்லேவின் நிலம் ஹைலேண்ட் அவென்யூவில் மையமாக இருந்தது.அவரது 1918 இல் ஒரு அவென்யூ - Whitley Heights, என்ற பெயராலேயே அழைக்கப்பட்டது + + + + +மாமல்லபுரம் + +மாமல்லபுரம் (ஆங்கிலம்:Mamallapuram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். +7ஆம் நூற்றாண்டில் பல்லவ நாட்டின் முக்கியத் துறைமுகமாக விளங்கிய நகரமாகும். இந்நகரம் மகாபலிபுரம் (ஆங்கிலம்:Mahabalipuram) என்றும் அழைக்கப்படுகிறது. +மாமல்லபுரத்தில் உள்ள கட்டடங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்: குடைவரைக் கோயில்கள் அல்லது மண்டபங்கள்; ஒற்றைக்கல் கோயில்கள் அல்லது இரதங்கள் மற்றும் கட்டுமானக் கோயில்கள். இவைதவிர, புடைப்புச் சிற்பத் தொகுதிகள் வெளிப்புறத்திலும் கோயில்களின் உட்புறத்திலும் காணப்படுகின்றன. + +மாமல்லபுரத்தின் சிற்பங்கள் மிக நளினமாகவும் இயல்பானவையாகவும் இருப்பதாலும் கடற்கரைக் கோயில்கள், இரதங்கள், புடைப்புச் சிற்பத் தொகுதிகள் போன்ற சிறப்பு வாய்ந்தவை பல இருப்பதாலும், மாமல்லபுர நினைவுச்-சின்னங்களை உலகப் பண்பாட்டுச் சின்னம் என்று 1984-ல் யுனெஸ்கோ அறிவித்தது. உலகப் பாரம்பரியக்களங்களில் ஒன்றான மாமல்லபுரம் தொல்லியல் களத்தை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரித்து வருகிறது. + +மாமல்லபுரம் என்பதற்குப் பெயர் காரணம், ஒருமுறை நரசிம்மராகிய மாமல்லர் தனது தந்தையுடன் உலா சென்றபோது ஒரு பாறையின் மீது யானையின் படம் வரைந்தார். அதைப் பார்த்த பிறகு தான் அவர் தந்தைக்குப் பாறைகளில் அழியாக் கோவில்கள் கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதனால் அவர் பெயரையே அந்த நகருக்கு இட்டார். + +பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன்பின் உள்நோக்கிக் குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே இந்த வகைக் கோயில்கள். இவற்றின் பின்புறச் சுவரில் கருவறைகளும் அதற்கு முன்பாக அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகிய முன்னறைகளும் இருக்கும். கட்டுமானத்தைத் தாங்கும் வகையில் தூண்கள் செதுக்கப்பட்டிருக்கும். இவ்வகைக் கோயில்களில் ஒரு கருவறை அல்லது மூன்று கருவறைகள் அல்லது ஐந்து கருவறைகள் கூட இருக்கலாம். எல்லாக் கோயில்களிலும் கருவறைக்கு முன் அர்த்தமண்டபம் இருக்கும். சிலவற்றில் மட்டுமே முகமண்டபம் என்ற அர்த்தமண்டபத்துக்கும் கருவறைக்கும் இடைப்பட்ட இடம் இருக்கும். + +கருவறைகள் சிவன், திருமால், பிரம்மன், துர்க்கை, சுப்ரமணியன் ஆகிய தெய்வங்களுக்கா���வை. இந்தத் தெய்வங்கள் சில கருவறைகளில் சிலைகளாகப் பின் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் எல்லாக் கருவறைகளிலும் அப்படி இல்லை. மரத்தில் செதுக்கப்பட்டோ அல்லது துணியில் வரையப்பட்டு மரச்சட்டத்தில் பொருத்தப்பட்டோ உள்ளே வைக்கப்பட்டிருக்கலாம் என்கிறார்கள் அறிஞர்கள். சிவனுக்குரிய கருவறைகளில் லிங்கத்தை நட்டு வைப்பதற்கான குழி காணப்படுகிறது. சில கருவறைகளில் லிங்கமும் உள்ளது. ஒவ்வொரு கருவறைக்கும் வெளியே இரு துவாரபாலகர்கள் எனப்படும் வாயில்காப்பாளர்கள் சிற்பங்களைக் காணலாம். பெண் தெய்வம் (துர்க்கை) எனில், வாயில்காப்பாளர்களும் பெண்களாக இருப்பார்கள். + +மாமல்லபுரத்தில் இருக்கும் மண்டபங்கள் பின்வருமாறு: + + +இயற்கையான பாறையை மேலிருந்து கீழ்நோக்கிச் செதுக்கித் தோற்றுவிக்கப்பட்ட ஒற்றைக்கல் கோயில், தேர் போலக் காட்சியளிப்பதால் இரதம் என்று அழைக்கப்படுகிறது. இவைதான் பிற்காலக் கோயில்களுக்கு முன் மாதிரியாகத் திகழ்கின்றன. இவற்றின் மேல்பகுதி விமானம் என்று அழைக்கப்படும். மாமல்லபுரச் சிற்பிகள் பல்வேறு விதமான விமானங்களைச் சோதனை செய்து பார்த்திருக்கிறார்கள். ஒவ்வொரு இரதக் கோயிலிலும் ஒரு கருவறை உண்டு. கருவறைக்கு இருபுறமும் வாயில்காப்போரும் உண்டு. + +மாமல்லபுரத்தில் இருக்கும் இரதங்கள்: + + +முதலாம் நரசிம்மவர்மன் என்னும் மாமல்லனின் (கி.பி. 630 – 668) அரிய படைப்பான "பஞ்சபாண்டவ இரதங்கள்" என்று அழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோயில்கள் மற்றும் சில விலங்குச் சிற்பங்கள் அடங்கிய ஐந்து இரதங்கள் தொகுதி தெற்கிலிருந்து வடக்காகச் சரிந்த சிறு குன்றிலிருந்து செதுக்கப்பட்டதாகும். + +இந்த ஐந்து இரதங்களும் பஞ்சபாண்டவர்கள் பெயரைப் பெற்றிருந்தாலும் அவை மகாபாரதத்துடன் தொடர்புடையவை அல்ல. மூன்று அடுக்குகளுடன் எட்டுபட்டை சிகரத்தை (திராவிட விமானம்) உடைய தர்மராச இரதம் மற்றும் அருச்சுன இரதம், சாலை (கூண்டு வண்டி) வடிவிலான சிகரத்தை உடைய பீம இரதம், சதுரமான குடிசை போன்ற சிகரத்தை உடைய திரௌபதி இரதம் மற்றும் கஜபிருஷ்டம் (யானையின் பின்பக்கம்) போன்ற சிகரத்தை உடைய சகாதேவ இரதம் ஆகிய இரதங்கள் கோயில் மாதிரிகளுக்காகத் தோற்றுவிக்கப்பட்டவையே என்பதை அவற்றின் ஸ்தூபிகள் பாறையிலிருந்து பிரிக்கப்பட்டு சிகரத்தின் மீது பொருத்தப்படாமல் இருப்பதிலிருந்து அறியலாம். + +மாமல்லபுரத்தின் ரதங்களிலேயே மிகவும் பெரியதும், மிகவும் அழகு வாய்ந்ததும் தர்மராச இரதம் ஆகும். இந்த ரதத்தில் மூன்று தளங்கள் உள்ளன. மேலே உள்ள இரண்டு தளங்களும் முழுவதுமாக முடிக்கப்பட்டுள்ளன. தரைத்தளம் முழுவதுமாகச் செதுக்கப்படவில்லை. மேல் இரு தளங்களிலும் ஒவ்வொரு கருவறை உள்ளது. அதனுள் சோமாஸ்கந்தர் சிற்பங்கள் உள்ளன. அவைதவிர இரு தளங்களின் சுற்றுகளிலும் மிக அற்புதமான சிற்பங்கள் நிரம்பியுள்ளன. ஆனால் மேலே உள்ள தளங்களுக்குச் செல்லப் படிகள் கிடையாது. பொதுமக்களுக்கு இந்த இடத்துக்குச் சென்று பார்க்கும் அனுமதியும் கிடையாது. இந்த இடத்தை நிர்வகிக்கும் தொல்லியல் துறையின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இங்கே சென்று பார்க்க முடியும். + +தரைத்தளத்தில் கருவறை குடையப்படவில்லை. ஆனால் அதன் எட்டு மூலைகளிலும் எட்டு அழகான சிற்பங்கள் காணப்படுகின்றன. இவை: அர்த்தநாரீஸ்வரர் (சிவனும் பார்வதியும் இணைந்த சிற்பம்), ஹரிஹரன் (சிவனும் திருமாலும் இணைந்த சிற்பம்), சுப்பிரமணியன், பைரவன் வடிவில் சிவன், மேலும் இரு வேறு சிவன், பிரமன் மற்றும் நரசிம்மவர்மப் பல்லவன். நரசிம்மவர்மனின் விருதுப் பெயர்கள் பல்லவ கிரந்த எழுத்துகளில் தரைத்தளம் முழுவதிலும் பொறிக்கப்பட்டுள்ளன. அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் பல்லவர் சிற்பக்கலைத்திறனுக்கு ஓர் ஒப்பற்ற சான்றாகும். + +முதல் தளத்தில் மொத்தம் 40 சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இதில் 14 சிவன் வடிவங்கள். இதில் கங்காள மூர்த்தி, வீணை ஏந்திய வீணாதார சிவன், தண்டு முனிவருக்கு நடனம் கற்பிக்கும் சிவன், சண்டிகேசனுக்கு அருளும் சிவன், கங்காதரனாகக் கங்கையைச் சடைமுடியில் ஏந்தும் சிவன், காலாரிமுர்த்தியாகக் காலன் என்ற அசுரனை வதம் செய்யும் சிவன், ரிஷபாந்திகனாகக் காளை மாட்டின்மீது சாய்ந்திருக்கும் சிவன், அந்தகாசுரனை வதம் செய்யும் சிவன், நந்திக்கு அருள் வழங்கும் சிவன் போன்றவை அடங்கும். இவை தவிர, சூரியன், சந்திரன், திருமால், பிரமன், சுப்பிரமணியன் ஆகியோர் சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன. பொதுவாக இதுபோன்ற சிற்பங்களே எல்லாக் கோயில்களிலும் காணக்கிடைக்கும் என்றாலும், மிக வித்தியாசமாக இந்தத் தளத்தில் சாதாரணக் கோயில் பணியாளர்களான கையில் ஓலைக்குடலையில் பூவுடன் ஓர�� அர்ச்சகர், ஒரு பணியாளர், ஒரு சமையல்காரர், ஓர் ஓதுவார் ஆகியோரும் மிகத் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளனர். பூசைக்கு நீர் எடுத்துச் செல்லும் ஒரு பெண்ணின் அழகான சிற்பமும் இந்தத் தளத்தில் வடிக்கப்பட்டுள்ளது. + +இரண்டாம் தளத்தில் சூரியன், சந்திரன் ஆகியோரைத் தவிரக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய சிற்பம், தட்சிணாமூர்த்தி வடிவில் உள்ள சிவன். + +பல்லவ சிற்பக் கலையின் உன்னதத்துக்கு ஒரு சான்றாகத் தர்மராச இரதத்தைச் சொல்லலாம். + +ஒரு பெரும் பாறை அல்லது குன்றைக் குடைந்து அல்லது மேலிருந்து செதுக்கிச் செய்யாமல், பல்வேறு கற்களை வெட்டி எடுத்து, ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கிச் செய்யப்பட்டவையே கட்டுமானக் கோயில்கள். பிற்காலத்தில் தென்னிந்தியாவில் கட்டப்பட்ட கோயில்களுக்கு மாதிரியாகவும் முன்னோடியாகவும் மாமல்லபுரத்தின் இந்தக் கோயில்களைக் கருதலாம். மாமல்லபுரத்தில் மொத்தம் மூன்று பல்லவர் காலக் கட்டுமானக் கோயில்கள் உள்ளன: + +மாமல்லபுரத்தின் சின்னமாக விளங்கும் கடற்கரைக்கோயில்கள் இரண்டாம் நரசிம்மவர்மன் எனப்படும் ராஜசிம்மனால் கட்டப்பட்டவை. முதலில் இங்கு திருமால் தரையில் படுத்திருக்கும் கோலத்தில் ஒரு கோயில் இருந்திருக்கிறது. அதற்கு இரு பக்கத்திலும் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியுமாக இரு சிவன் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. கிழக்கு நோக்கிய கோயில் உயரமானதாக ஐந்து அடுக்குகள் கொண்ட கோபுரத்தை உடையதாக உள்ளது. மேற்கு நோக்கிய கோயில் சிறியதாக, மூன்று அடுக்குகள் கொண்ட கோபுரத்தைக் கொண்டதாக உள்ளது. இரண்டு கோயில்களின் கருவறையின் பின்புறச் சுவரிலும் சோமாஸ்கந்தர் எனப்படும் சிவன், உமை, குழந்தை வடிவிலான குமரன் என்ற மூன்று தெய்வங்களும் சேர்ந்திருக்கும் சிற்பம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்சுற்று ஒன்றும் காணப்படுகிறது. சுவரின் பல இடங்களிலும் பல்வேறு தெய்வச் சிற்பங்களும் புராண பாத்திரங்களும் காணக் கிடைக்கின்றனர். + +இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத புதுமையாக மாமல்லபுரத்தில் உள்ள வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் விளங்குகின்றன. வெளிப்புறச் சிற்பத் தொகுதிகளாக இங்கு இருப்பவை: + +இவைத்தவிர, வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியவற்றுள்ள் சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் காணப்படுகின்றன. ராமானுச மண்டபத்தில் உருவாக்கப்பட்ட சில புடைப்புச் சிற்பத் தொகுதிகள் பிற்காலத்தில் மதக் காழ்ப்புணர்ச்சி கொண்டோரால் செதுக்கி அழிக்கப்பட்டிருக்கிறது. + +சுமார் 30 மீட்டர் உயரம், சுமார் 60 மீட்டர் அகலம் கொண்ட, சிற்பங்கள் செதுக்கப்பட்ட பாறையே அருச்சுனன் தபசு என்றழைக்கப்படுகிறது. வானவர்கள், மனிதர்கள், மிருகங்கள் எனப் பலவகையான சிற்பங்கள் காணப்படுகின்றன. ஒற்றைக்காலில் நின்று ஒரு மனிதர் தவமிருக்க அருகே கையில் ஓர் ஆயுதத்தை ஏந்தியபடி சிவன், பூதகணங்கள் சூழ நின்று, வரம் கொடுப்பதாகச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. அருச்சுனன் பாசுபத ஆஸ்திரத்தை வேண்டிச் சிவனை நோக்கித் தவம் செய்யும் காட்சிதான் இங்கே செதுக்கப்பட்டுள்ளது என்று பல அறிஞர்கள் சொல்கிறார்கள். ஒருசிலர், பகீரதன் கங்கையை வரவைப்பதற்காகச் சிவனிடம் தவம் செய்யும் காட்சி இது என்று கூறுகிறார்கள். ஓர் அறிஞர், இந்தச் சிற்பமே ஒரு சிலேடை என்றும் இரு காட்சிகளையும் ஒரே சிற்பத்தில் காட்டும் முயற்சி என்றும் சொல்கிறார். சமீபத்தில் ஓர் அறிஞர், இங்கே தவம் செய்வது பாசுபத அஸ்திரம் வேண்டி நிற்கும் அருச்சுனன்தான் என்றும் ஆனால் இந்தச் சிற்பம், மகாபாரதத்தில் வனபர்வத்தின் இமய மலையைச் சித்திரிக்கும் காட்சி என்றும் குறிப்பிட்டுள்ளார். + +மாமல்லபுரத்தின் அதிசயம் என்றே இந்தச் சிற்பத் தொகுதியைக் குறிப்பிடவேண்டும். இந்த ஒரு திறந்தவெளிப் பாறையில் சிற்பிகள் 150-க்கும் மேற்பட்ட சிற்பங்களைச் செதுக்கியுள்ளனர். இவற்றைப் பொதுவாகக் கீழ்க்கண்ட வகைகளாகப் பிரிக்கலாம்: + +குரங்குகள் அமர்ந்திருக்கும் விதம், மான் தன் காலைத் தூக்கி முகவாயைச் சொரிந்துகொள்ளும் விதம், யானைகள் நீர் அருந்துவது, குட்டி யானைகள் விளையாடுவது போன்ற காட்சிகள் மிக அற்புதமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு இணையாக இயற்கைக் காட்சிகளைச் சித்திரிக்கும் பாறைச் சிற்பங்களைக் காண்பது அரிது. + +அருச்சுனன் தபசு பாறைச் சிற்பத்துக்கு அருகில் கிருஷ்ண மண்டபம் என்ற மண்டபம் உள்ளது. இதற்கு உள்ளாகத்தான் கோவர்த்தன சிற்பத் தொகுதி உள்ளது. பல்லவர் காலத்தில் செதுக்கப்படும்போது இந்தச் சிற்பமும் வெளிப்புறப் புடைப்புச் சிற்பமாகத்தான் இருந்தது. பிற்காலத்தில் விஜயநகர ஆட்சியின்போது இதன்மீது மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. + +இந்திரனுக்கு விழா எடுப்பதை கண்ணன் தடுத்து நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் மழையை ஏவ, கோகுலமே மழை, புயல், வெள்ளத்தில் சிக்கிக்கொள்ள, ஆயர்களையும் மாடு கன்றுகளையும் காப்பாற்ற கோவர்த்தனக் குன்றைக் குடையாக எடுத்தான் கண்ணன் என்பது புராணம். இந்தக் கதை தமிழ்ப் பாடல்களில் மிகவும் புகழப்பட்ட ஒன்று. இதனை அப்படியே சிலையாக வடித்துள்ளனர் பல்லவ சிற்பிகள். + +சிற்பத்தின் நடுவே ஒரு கையால் மலையைத் தூக்கியபடி கண்ணன் நிற்க, அருகே பலராமன், பயந்து நடுங்கும் ஓர் ஆயனை அணைத்து ஆறுதல் தருகிறார். இனி பயமில்லை என்பதால், மாடுகள், கன்றுகள், ஆயர்கள், ஆய்ச்சியர் ஆகியோர் தத்தம் வேலையை மகிழ்ச்சியுடன் செய்கின்றனர். ஒருவர் புல்லாங்குழல் வாசிக்கிறான். இருவர் ஜோடியாக நடனம் ஆடுகின்றனர். ஒருவர் மாட்டிடமிருந்து பால் கறக்கிறார். மாடு வாஞ்சையுடன் தன் கன்றை நாவால் நக்குகிறது. ஒரு ஆய்ச்சி தலையில் சுருட்டிய பாய், ஒரு கையில் உறியில் கட்டி வைத்திருக்கும் பால், தயிர் சட்டிகளுடன் நிற்கிறாள். ஒருவர் தோளில் ஒரு சிறு குழந்தை உட்கார்ந்துள்ளது. சற்றே பெரிய குழந்தைகளை அவர்களுடைய பெற்றோர் கையில் பிடித்துள்ளனர். எங்கு திரும்பினாலும் மாடுகள் நம்மைப் பார்க்கின்றன. முல்லை நிலக் காட்சியை அப்படியே அற்புதமாகச் செதுக்கியுள்ளனர் சிற்பிகள். + +கலங்கரை விளக்கத்துக்குச் செல்லும் வழியில் குன்றின்மீது மகிஷாசுரமர்த்தினி மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் சுவர்களில் இரண்டு அற்புதமான சிற்பங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான், திருமால் பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருக்க, மது, கைடபன் என்று இரு அரக்கர்கள் அவரைத் தாக்க வரும் காட்சி. + +மகிஷாசுரமர்த்தினி மண்டபத்தில் இருக்கும் மிக அழகான சிற்பத்தொகுதி, ஆதிசக்தியின் ஒரு வடிவான துர்க்கை, சிங்க வாகனத்தில் ஏறி, மகிசாசூரன் என்னும் எருமைத்தலை கொண்ட அரக்கனை வதம் செய்யும் காட்சி. மகிஷாசுரமர்த்தினி என்று அழைக்கப்படும் சக்தி, பத்து கைகளுடன் இருக்கிறாள். ஆயுதங்களுடன் ஆக்ரோஷமாகக் காணப்படும் மகிஷாசுரமர்த்தினியை எருமைத்தலை கொண்ட மகிஷாசுரன் கதாயுதத்துடன் எதிர்த்து நிற்கும் காட்சி தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளது. மகிஷாசுரனுக்கு ஆதரவாகப் பல அரக்கர்களும், ��க்திக்கு ஆதரவாகப் பல கணங்களும் காணப்படுகிறார்கள். + +வராக மண்டபத்தில் இருக்கும் நான்கு சிற்பத் தொகுதிகளில் ஒன்று திருமால் வராக அவதாரம் எடுத்துப் பூமிதேவியைக் காப்பாற்றி மேலே எடுத்துவருவது. பூமியை இரணியாட்சன் எனும் அரக்கன் எடுத்துச் சென்று கடலுக்கு அடியில் ஒளித்துவைக்க, திருமால் வராக அவதாரம் எடுத்து கடலுக்கு அடியில் சென்று அரக்கனுடன் போரிட்டு, அவனைக் கொன்று, பூமிதேவியை மீட்டெடுத்து மேலே கொண்டுவரும் காட்சியே இங்கே காட்டப்பட்டுள்ளது. வராகம் தன் காலை நாக அரசன்மீது வைத்திருக்கிறார். அவரது தொடையில், சற்றே வெட்கத்துடன், பூமிதேவி அமர்ந்திருக்கிறாள். அருகே ஒரு முனிவரும் ஒரு பெண்ணும் கைகூப்பி வணங்குகிறார்கள். பிரமன் ஒரு பக்கம் இருக்கிறார். அவர் அருகே ஒரு முனிவர் நிற்கிறார். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களில் இருக்கிறார்கள். கீழிருந்து மேல்வரை வராகம் எடுத்திருக்கும் விசுவரூபம் சிற்பத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது. + +வராக மண்டபத்தில் காணப்படும் மற்றொரு சிற்பத் தொகுதி, திருமால் திரிவிக்கிரம அவதாரம் எடுப்பது ஆகும். மகாபலி ஒரு யாகம் செய்து அதன்மூலம் பெரும்பலம் பெறப் பார்க்கிறான். அதனால் பயந்த தேவர்கள் திருமாலை அணுக, அவர் வாமன அவதாரம் எடுத்துச் சிறு பையனாக வருகிறார். மகாபலியிடம் அவர் மூன்றடி மண் கேட்க அவன் கொடுப்பதாக வாக்களிக்கிறான். அந்தக் கணம் வாமனம் விசுவரூபம் எடுத்து மண்ணையும் வானையும் ஆக்கிரமிக்கிறார். அந்தக் கணத்தை அப்படியே பிடித்துச் சிற்பமாக்கியுள்ளனர் பல்லவ சிற்பிகள். திரிவிக்கிரமனின் ஒரு கால் வானை நோக்கிச் செல்கிறது. அந்தக் காலுக்குப் பூசை செய்கிறார் பிரமன். மறுபக்கம் சிவன் தெரிகிறார். தரையில் மகாபலியும் பிற அரக்கர்களும் திகைத்துப்போய் அமர்ந்திருக்கின்றனர். சூரியனும் சந்திரனும் இரு பக்கங்களிலும் காணப்படுகின்றனர். + + +பல்லவர் காலத்துக்குப் பிறகு, விஜயநகர அரசர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஒரு திருமால் கோயிலும் (ஸ்தலசயனப் பெருமாள் கோயில்) மாமல்லபுரத்தில் உள்ளது. ஒரு மொட்டை கோபுரத்தையும் காணலாம். கோவர்த்தன சிற்பத் தொகுதியின்மீது அமைக்கப்பட்ட கிருஷ்ண மடபமும் இக்காலத்தில்தான் கட்டப்பட்டது. + +சென்னையில் இருந்து சுமார் 60 கி.மீ. தொலைவிலும், பாண்டிச்சேரியில் இருந்து 130 கி.மீ. தொலைவிலும், திருச்சியில் இருந்து 250 கி.மீ, செங்கல்பட்டிலிருந்து 30 கி.மீ. தொலைவிலும் மாமல்லபுரம் அமைந்துள்ளது. சென்னையின் பல இடங்களிலிருந்து மாமல்லபுரத்திற்க்கு பேருந்துகள் உள்ளன. சென்னை, திருச்சியில் சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. திசம்பர்- சனவரி மாதத்தில் சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் நாட்டியவிழா ஒன்றும் மாமல்லபுரத்தில் நடத்தப்படுகிறது. + +இங்குச் சில கற்சிலைக் கலைக்கூடங்கள் உள்ளன. இங்குக் கற்சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. + + + + + + +இந்தி + +இந்தி ("Hindi", , நவீன தரநிலை இந்தி: मानक हिन्दी) அல்லது ஹிந்தி இந்தியாவின் வட மாநிலங்களில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். வடமொழியை அடிப்படையாகக் கொண்ட இம்மொழியில், உருது, பாரசீக, மற்றும் அரேபிய மொழிகளின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தி இந்தியாவின் அரசு ஏற்புப் பெற்ற 22 மொழிகளுள் ஒன்று . இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 343 (1) இன் கீழ் இந்தி நடுவண் அரசின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகும்.. பாலிவுட் என்று அழைக்கப்படும் மும்பை படவுலகம் இந்தி உலகம் முழுவதும் பரவ காரணமாக இருக்கிறது. + +இந்தி இந்தியாவின் வட பகுதி முழுவதும் பரவலாக பேசப்படுகிறது. இந்தியாவில் தில்லி, ராஜஸ்தான், அரியானா , உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம் , மத்தியப் பிரதேசம், சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், ஜார்கண்ட் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் பேசப்படுகிறது.பிற இந்திய மாநிலங்களில், தமிழ்நாடு நீங்கலாக, இரண்டாவது/மூன்றாவது மொழியாக மும்மொழி திட்டத்தின் கீழ் பயிற்றுவிக்கப்படுகிறது. + +100 - சௌ (सौ) = நூறு + +1000 - ஹசார் (हजार) = ஆயிரம் + + +இந்தி மொழி தேவநாகரி ("देवनागरी लिपि" "தேவநாகரி லிபி") எழுத்துக்களில் எழுதப்படுகிறது. தேவநாகரி உயிரொலிகளையும், 33 மெய்யொலிகளையும் கொண்டுள்ளது. இது இடது பக்கத்தில் இருந்து வலமாக எழுதப்படுகிறது. + + + + + +துடுப்பாட்டம் + +துடுப்பாட்டம், (மட்டைப்பந்து, "Cricket", கிரிக்கெட்) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆகும். இது கனவான்களின் விளையாட்டு என சிறப்பித்துக் கூறப்படுகிறது.இது முறையே 11 வீரர்கள் கொ��்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. இது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டு ஆகும். + +துடுப்பாட்டம் முதலாவதாக 16ஆம் நூற்றாண்டில் தென் இங்கிலாந்திலேயே விளையாடப்பட்டது. 18ஆம் நூற்றாண்டில் இது இங்கிலாந்து முழுவதுமாக விளையாடப்படத் தொடங்கியது. 19ஆம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் துடுப்பாட்டம் சர்வதேச ரீதியாகவும் விளையாடப்படத் தொடங்கியது. துடுப்பாட்டத்தின் பிதாமகன் டொனால்ட் பிரட்மன் ஆவார். துடுப்பாட்டத்தின் புனிதபூமி என பிரட்மன் பிறந்து வளர்ந்த போவ்ரல் நகரம் அழைக்கப்படுகிறது. துடுப்பாட்டம் தொடர்பான விடயங்களைத் தரும் நூல் விஸ்டன் ஆகும். இதன் ஆட்ட விதிமுறைகள் 1774இல் உருவானது. + +முதலில் மட்டை பிடிக்கும் அணியினருள் இருவர் பிட்சின் இரு முனைகளிலும் நின்று கொள்வர். பந்து வீசும் அணியினர் பந்தினை தண்டுகள் மீது அடித்து வீழ்த்த முயற்சி செய்வர். தண்டுகளின் முன் நிற்கும் மட்டை பிடிப்பவர் பந்து தண்டின் மேல் படாமல் காக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் மைதானத்தில் அடித்துவிட்டு பிட்சின் ஓரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடலாம். இவ்வாறு எத்தனை முறை மட்டை வீசும் அணியினர் ஓடுகிறார்களோ அத்தனை ஓட்டங்கள் எனப்படும் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், அடிக்கப்படும் பந்து மைதான எல்லையைத் தாண்டிவிட்டால் மட்டை பிடிக்கும் அணியினருக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும். பந்து தண்டு மீது பட்டுவிட்டாலோ அடிக்கப்படும் பந்து தரையில் படாமல் நேராக பந்து வீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டாலோ மட்டை பிடிப்பவர் விலகிக்கொள்ள வேண்டும். மட்டை படிக்கும் அணியின் அடுத்த ஆட்டக்காரர் வந்து ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஆட்டக்காரர்களை பந்து வீசுபவர் வீழ்த்த வேண்டும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியன தவிர மேலும் சில வழிகள் உள்ளன. + +ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டை பிடிக்கும். ஆட்ட இறுதியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும். + +நீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த கிரிக்கெட் மை���ானத்தின் நடுவில் சுமார் formula_1 மீட்டர் நீள அகலத்தில் பிட்ச் எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப்பட்டும் புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும். இந்தப் பிட்சின் இரு முனைகளில் தலா மூன்று இலக்குமுளைகள் நடப்பட்டிருக்கும். + +நடுக்களத்தில் (பிட்ச்சில்) ஒவ்வொரு விக்கெட்டையும் ஒன்றுக்கொன்று ஒத்திருக்கும் மூன்று மர ஸ்டம்புகள் செங்குத்தாக வைக்கப்ப்டுகிறது,இந்த மூன்று மர ஸ்டம்புகள் மேல் பகுதி இரண்டு மர கட்டைகளால் (bails) பிணைக்கப்பட்டுள்ளது; இவற்றின் மொத்த உயரம் 72 சென்டிமீட்டர் (28 அங்குலம்) மற்றும் மூன்று ஸ்டம்புகளின் ஒருங்கிணைந்த அகலம், அவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகளில் 23 சென்டிமீட்டர் (9 அங்குலம்) இருக்கும். + +நான்கு கோடுகள், க்ரீஸ் (எல்லை) என்று அறியப்படும் கோடுகள்; விக்கெட் பகுதிகள் முழுவதும் பிட்ச்ஸின் "பாதுகாப்பான பிரதேசத்தை" வரையறுக்க மற்றும் பந்து வீச்சின் அணுகுமுறையின் வரம்பை வரையறுக்க வரையப்படுகின்றன. இவை "பாப்சிங்" (அல்லது பேட்டிங்) க்ரீஸ், பவுலிங் க்ரீஸ் மற்றும் இரண்டு "ரிக்" க்ரீஸ் என்று அழைக்கப்படுகின்றன. + +இது வில்லோ எனும் மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதன் நீளம், அகலம் போன்றவை முறையே 96.5 செ.மீ, 11.4 செ.மீ. இதன் எடை 2 பவுண்ட்ஸ் ஆகும்.இதை "ஜோன்பால்" என்பவரே முதன் முதலில் வடிவமைத்தார். + +இது அநேகமாக வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்களிலேயே காணப்படுகிறது. இவற்றின் சுற்றளவுகள் 20.79 செ.மீ தொடக்கம் 22.8 செ.மீ வரை காணப்படுகிறன. இவற்றின் எடை அண்ணளவாக 5.75 அவுன்ச் ஆகும். + +ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாட்டு இரண்டு ஆட்ட நடுவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. ஒரு ஆட்ட நடுவர் பந்து வீச்சாளரின் விக்கெட்டிற்கு பின்புறம் நிற்ப்பார் மற்றொரு நடுவர் துடுப்பாட்டகாரின் விக்கெட்டிலிருந்து 15–20 மீட்டர் தொலைவில் "square leg" என்ப்படும் பகுதியில் நிற்ப்பார். + +நடுவர்களின் பிரதான பணி சரியான தீர்ப்பளிப்பதாகும் அதாவது ஆடுகளத்தில் ஒரு பந்து சரியான அளவில்தான் வீசப்பட்டதா, அது அகலப்பந்தா (wide) அல்லது எல்லைதாண்டி (no ball) வீசப்பட்டதா? மேலும் ஒரு ஓட்ட்ம் எடுக்கப்படும்போது துடுப்பாட்ட வீரர் தன்து விக்கெட் இழந்தாரா? இதுமட்டுமல்லாமல் களத்தில் உள்ள பந்து பிடிக்கும் விரர்களின் கோரிக்கைகளயும் ஆராய்ந்து கள நடுவர்கள் தீர்ப்பளிக்கவேண்டும். + +இதுதவிர கள நடுவர்கள் பணி, எப்பொழுது ஆட்டம் தொடங்கவது, இடைவெளி எப்பொழுது விடுவது, ஆடுகளதின் தன்மை (pitch), விளையாடுவதற்கு உகந்த வானிலை உள்ளதா? எப்பொழுது ஆட்டத்தை முடிப்பது அல்லது கைவிடுவது? இதுபோன்ற முடிவுகளையும் களதில் இருக்கும் நடுவர்களால் தீர்மானிக்கப்படும். +பெரும்பாலும் மூன்றாவது ஆட்ட நடுவர் என்பவர் களதிற்கு வெளியே இருப்பார். தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படும் போட்டிகளில் மூன்றாவது ஆட்ட நடுவரின் பங்கு இருக்கும். இவரது பணி, கள நடுவர்களால் ஒரு தீர்பபை வழங்க இயலாத போதும் அல்லது ஒரு சர்ச்சையான முடிவை கள நடுவர்கள் எடுக்கும்போது அதை மறுபரிசிலனை செய்வதும் ( தொலைக்காட்சியில் பதிவான் காட்சிகள் மூலம் ஆராய்ந்து) சரியான் முடிவை வழங்குவது ம் மூன்றாவது நடுவரின் பணியாகும். + +ICC யில் முலுமையான உறப்பினர்கள் இடையே விளையாடுப்படும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் வரையறுக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட சர்வதேச போட்டிகளிலும் மூன்றாவது ஆட்ட நடுவர் கட்டாயமாக இடம்பெறவேண்டும் என்பது ICC விதியாகும். + +சமீபகால போட்டிகளில் கிரிக்கெட் சட்டங்கள் மற்றும் விளையாட்டின் பற்று ஆகியவற்றுடன் வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்துவதற்கான கள மற்றும் மூன்றாவது நடுவர்களைத் தவிற தற்போது போட்டி நடுவர் (match referee) ஒருவரும் இருக்கிறார். ஆடுகளதில் விளையாடும் வீரர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒழுங்கினமாக செயல்படும் வீரர்களுக்கு அபராதம் மற்றும் தவுறு செய்யும் வீரர்களுக்கு போட்டிகளில் விளையாட தடை போன்ற தீர்ப்புகளை வழங்குவார். +ஒரு அணி என்பது பதினொரு வீரர்களைக் கொண்டுள்ளது. விளையாடும் வீரரின் முதன்மை திறன்களைப் பொறுத்து, ஒரு வீரர் ஒரு துடுப்பாட்டகாரர் (பேட்ஸ்மேன்) அல்லது பந்து வீச்சாளராக வகைப்படுத்தலாம். நன்கு சமநிலையான அணியில் பொதுவாக ஐந்து அல்லது ஆறு சிறப்பு பேட்ஸ்மேன் வீரர்கள் மற்றும் நான்கு அல்லது ஐந்து சிறப்பு பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இந்தப் போட்டிகளில் , ஒரு விசேஷ விக்கெட் கீப்பர் எப்போதும் அணியில் இருப்பார். ஒவ்வொரு அணியும் ஒரு கேப்டன் தலைமையில் வழிநடத்ப்படுகிறது, அவர் பந்துவீச்சு வரிசையை தீர்மானித்தல், +பந்துபிடி வீரர்கள் (பீல்டர்ஸ்) இடம் மற்றும் பந்து வீச்சாளர்களின் சுழற்சியை தீர்மானித்தல் போன்ற திறமையான் முடிவுகளை எடுப்பதற்கு பொறுப்பானவர். + +பேட்டிங் மற்றும் பந்துவீச்சுகளில் சிறந்து விளங்கும் ஒரு வீரர் ஒரு ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு விக்கெட் கீப்பர் என்பவர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக உள்ளார், ஆகவே சில நேரங்களில் இவரையும் ஒரு ஆல்ரவுண்டர் என்க் கருதப்படுகிறார். பெரும்பாலான வீரர்கள் பேட்டிங் அல்லது பந்துவீச்சு திறமைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் ஆல்ரவுண்டர்கள் என்பவர் ஒரு அணியில் மிகவும் அரிதானவராகவும் முக்கியமானவராகவும் உள்ளார். + +டெஸ்ட் போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும். உலகில் முதலாவது டெஸ்ட் போட்டி 1787.03.15 இல் லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடைபெற்றது. டெஸ்ட் போட்டிகளில் மிக இளம் வயதில் சதமடித்த முதல் வீரர் என்ற பெருமை முகம்மது அஷ்ரப்பு என்பவரையே சாரும். + +ஒரு நாள் போட்டிகள் 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வகைப் போட்டியில் இரு அணிகளும் ஐம்பது ஓவர்களுக்கு மிகாமல் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதிக ரன் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப்படுகிறது. முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி 1971.01.05 இல் ஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் இடம்பெற்றது. + +இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டையாட வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதோடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்தில் நிறைவடையும். இருபது20 போட்டிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சிப் பார்வையாளருக்கும் விறுவிறுப்பான நிமிடங்களை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது பரவியுள்ளது. இன்று துடுப்பாட்டச் சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்பட்டு வருகின்றது. + +முழு அங்கத்தினர் பின்வருமாறு: +Last Updated: 29-Dec-2012 | +Resigned May 1961, readmitted 10 July 1991. + +இணை மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அணிகள். இவை ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 தகுதிகளைக் கொண்டுள்ளன: + +துடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு "gentlemen's game" () என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா இலங்கை ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது. + + + + + + +சர் + +சர் ("சேர்" - ஈழ வழக்கு, Sir) என்பது மரியாதையுடன் விளிப்பதற்கான ஒரு சொல்லாகும். உயர் தரத்திலுள்ளோர், கல்வி கற்பிப்போர் போன்றவர்களை இச்சொல் கொண்டு மற்றோர் விளிப்பர். சர் என்பதற்கான பெண்பாற் சொல் மெடம் (Madam) என்பதாகும். + +முற்காலத்தில் படைத் தளபதிகளுக்கு (Knights, Baronets) இக்கௌரவப்பட்டம் வழங்கப்பட்டது. + +"சர்" பட்டம் - நைட்ஹுட் எனப்படும் சர் பட்டம் பிரித்தானிய அரசாங்கத்தின் உயரிய சிவில் விருதாகக் கருதப்படுகின்றது. + +சாதாரணமாக ஆங்கில மொழி உரையாடலின் போது அல்லது முன்னறிமுகம் இல்லாத ஒருவரை விழித்துப் பேசும் போது குறிப்பிட்ட நபரின் பெயர் தெரியாத விடத்து “சேர்” "(Sir)" என்று அழைக்கலாம். அவ்வாறே பெண்களை மெடம் "(Madam)" என்றழைக்கலாம். + +இதன் அடிப்படையிலேயே இன்று வர்த்தக நிலையங்களில், வீதியோர கடைத்தெருக்களில் வாடிக்கையாளர்களை அழைப்பதற்கு இந்த "சேர் மெடம்" சொற்கள் பரவலாகப் பயன்படுவதை அவதானிக்கலாம். இன்று மின்னஞ்சல் வழியாக வரும் முன்னறிமுகம் இல்லாத மின்னஞ்சல் தகவல்களும் அவ்வாறே பயன்படுத்தப்படுகின்றது. + +இதைத் தவிர (பெயர் தெரிந்திருந்தாலும்) உயர் நிலை அதிகாரிகளாக இருப்போரை விழித்துப் பேசுவதற்கும் எழுதுவதற்கும் “சேர், மெடம்” பயன்படுகின்றது. +வாடிக்கையாளர்களுக்கான கொடுக்கல் வாங்கல் தபால் கடிதங்களிலும் ஒரு நபரின் பெயர் தெரிந்து இருப்பினும் சேர் மெடம் போன்ற சொற்கள் பயன்படுவதனை காணலாம். + + + + +லுங்கி + +கைலி (இலுங்கி அல்லது சாரம்) தெற்காசிய, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் யெமன், ஓமான் போன்ற அரபு நாடுகளிலும் சோமாலியா, எத்தியோப்பியா போன்ற நாடுகளிலுமுள்ள ஆண்கள் இடுப்பில் அணிந்து கொள்ளும் ஆடை ஆகும். சில இடங்களில் பெண்களும் அணிவதுண்டு. எத்தியோப்பியா நாட்டில் அபார் எனும் பகுதியை சேர்ந்த ஆண்கள் பெரும்பாலும் இவ்வகை ஆடைகளை அணிகிறார்கள். இது வண்ணமயமான ஆடையாகும். வெப்பமான நிலப்பகுதிகளில் காற்சட்டையை விட கைலி இதமானதாக உணரப்படுகிறது. + + + + +இசுடீபன் சுவார்ட்சு + +இசுடீபன் சுவார்ட்சு (Stephen Schwartz) (பி. மார்ச் 6, 1948) அமெரிக்காவைச் சேர்ந்த பாடலாசிரியரும் இசையமைப்பாளரும் ஆவார். நியூயோர்க்கில் பிறந்த இவர் 1968 இல் கார்னஜி மெலன் பல்கலைக்கழகத்தில் நாடகவியலில் இளமாணிப் பட்டம் பெற்றார். கிராமி விருதும், அக்கடமி விருதும் பெற்றவர். குழந்தைகளுக்கான நூலொன்றும் எழுதியுள்ளார். + + + + + +கல்பனா சாவ்லா + +இந்தியாவில் உள்ள ஹரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் கல்பனா சாவ்லா ஒரு பஞ்சாபிக் குடும்பத்தில் பிறந்தார். சமஸ்கிருதத்தில் "கல்பனா" என்றால் கற்பனை என்று பொருள். + +இந்தியாவின் தலைசிறந்த விமான ஓட்டியும் தொழில் அதிபருமான ஜெ.ஆர் .டி.டாடாவைப் பார்த்ததிலிருந்து கல்பனா சாவ்லாவிற்கு விமானம் ஓட்டும் ஆர்வம் ஏற்பட்டது. + +கல்பனா சாவ்லா தனது கல்வியைக் கர்னலில் உள்ள தாகூர் அரசுப் பள்ளியில் ( Tagore Baal Niketan Senior Secondary School) தொடங்கினார். அவர் 1982 ஆம் ஆண்டில், சண்டிகரில் உள்ள பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் வான்வெளிப் பொறியியலில் தனது இளங்கலைப் பொறியியல் பட்டத்தைப் பெற்றார். அதே வருடம் அவர் அமெரிக்கா சென்றார். அர்லிங்க்டோனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்திலிருந்து விண்வெளிப் பொறியியலில் முதுகலைப் பட்டத்தை 1984 ஆம் ஆண்டு பெற்றார். அதன் பின்னர் பௌல்தேரில் உள்ள கொலோரடோ பல்கலைக்கழகத்தில் 1986 இல் இரண்டாம் முதுகலைப் பட்டத்துடன், விண்வெளிப் பொறியியலில் முனைவர் பட்டத்தை 1988 ஆம் ஆண்டு பெற்றார். + +பின்னர் அதே வருடம் நாசா அமெஸ் ஆராய்ச்சி கூடத்தில் (NASA Ames Research Center) ஒசெர்செட் மேதொட்ஸ், இன்க். ( Overset Methods, Inc.) இல் துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற கல்பனா, செங்குத்தாகக் குறுகிய இடத்தில் புறப்படுதல் மற்றும் தரையிறங்கல் பற்றி [[CFD கம்ப்யுடேசினல் புலூயிட் டயினமிக்ஸ் (CFD) ஆராய்ச்சி செய்தார். விமானம் மற்றும் கிளைடேர்களை (gliders) ஓட்டக் கற்றுக் கொடுக்க சாவ்லா தகுதிச் சான்றிதழ் பெற்றார். ஒன்று மற்றும் பல பொறிகள் பொருத்திய விமானங்கள், கடல் விமானங்கள் மற்றும் கிளைடேர்களையும் ஓட்ட அனுமதி பெற்று இருந்தார். + +== t + +[[படிமம்:STS-107 Mission Specialist Kalpana Chawla.jpg|thumb|மாதிரி விண்கலத்தில் கல்பனா]] +கல்பனா மார்ச் 1995 இல், நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார். 1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார். [[கொலம்பியா விண்ணோடம்|கொலம்பிய விண்வெளி ஊர்தியான]] STS-87 இல் பயணித்த ஆறு வீரர்களில் ஒருவரான கல்பனாவின் இந்த முதல் பயணத்திற்கு அவர் நவம்பர் மாதம் 19 ஆம் நாள், 1997 ஆம் ஆண்டு முதல் ஆயத்தமானார். 1984 இல் [[சோவியத் யூனியன்|சோவியத்]] விண்கலத்தில் பயணித்த [[ராகேஷ் ஷர்மா]]வை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற அழியாப் பெருமையை இவர் பெற்றார். கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார். இதற்காகவே அவர் விண்வெளியில் 372 மணித்தியாலங்கள் இருந்துள்ளார் + +STS-87 இன் போது வின்ஸ்டன் ஸ்காட் மற்றும் தகாவோ டோய் விண்வெளியில் பயணித்துக்கொண்டிருந்த [[ஸ்பார்டன் செயற்கைக்கோள்|ஸ்பார்டன்]] எனும் செயல் குறைபாடிலிருந்த செயற்கைக்கோளைக் கட்டுப்பாட்டில் கொண்டுவரக் காரணமாக இருந்தார். ஐந்து மாத கால முழுமையான விசாரணைகள் மற்றும் சோதனைக்குப் பின்பு, மென்பொருள்களிலும், பறக்கும் குழுவின் செயல் முறைகள் மற்றும் தரைக்கட்டுப்பாடுகளில் உள்ள பிழைகளை நாசா கண்டறிந்தது. + +STS-87க்குப் பின்னர் கல்பனா தொழில் நுட்ப வல்லுனராக விண்வெளி அலுவலகத்தில் நாசாவினால் நியமிக்கப்பட்டார். அவரது செயலைப் பாராட்டி அவரது சக வல்லுனர்களே ஒரு விருதையும் வழங்கிக் கௌரவித்தனர். + +2000 ஆம் ஆண்டில், கல்பனா STS-107 இல் பயணிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த முயற்சி பலதரப்பட்ட தொழில் நுட்பக் கோளாறுகளாலும் கால அட்டவணையில் ஏற்பட்ட சிக்கல்களினாலும் காலம் கடத்தப்பட்டது. 2002 ஆம் ஆண்டு அவர்கள் பயணிக்க இருந்த விண்கலப் பொறியில் இருந்த ப்லோ லயினர்களில் ( flow liners) பிளவுகள் ஏற்பட்டிருந்ததையும் கண்டறிந்தனர். ஜனவரி 16, 2003 இல் சாவ்லா மீண்டும் பாரிய அனர்த்தத்துக்குள்ளான STS-107 விண்வெளிக்குத் திரும்பியது. இந்தப்பயணத்தில் சாவ்லாவினுடைய பொறுப்புகளாக மைகிரோ கிராவிட்டி (micro gravity) சோதனைகள் அமைந்திருந்தன. இதற்காக அவரது குழுவினர் பூமியையும் விண்வெளியையும் கண்காணித்து 80 பரிசோதனைகளை மேற்கொண்டனர். அவற்றுள் விண்வெளி வீரர்களினுடைய ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு சம்பந்தப்பட்டதுமான விண்வெளி தொழில் நுட்ப மேம்பாடு வளரவுமாகப் பல்வேறு தரப்பட்ட பரிசோதனைகளையும் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. + +1991-1992 இல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாட தனது கணவருடன் கல்பனா இந்தியா வந்திருந்தார். இதுவே அவரது இறுதி வருகையாக அமைந்தது. + +மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்: + +கல்பனா சாவ்லாவின் நினைவாக எண்ணற்ற இடங்களுக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் உதவித் தொகையும் அவர் பெயரில் தரப்படுகிறது. + + + + + + + + + + + + + + + + + + +[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்க விண்வெளி வீரர்கள்]] +[[பகுப்பு:இந்திய அமெரிக்கர்கள்]] +[[பகுப்பு:1961 பிறப்புகள்]] +[[பகுப்பு:2003 இறப்புகள்]] +[[பகுப்பு:1962 பிறப்புகள்]] +[[பகுப்பு:அமெரிக்க வான்-விண்வெளிப் பொறியியலாளர்கள்]] +[[பகுப்பு:இந்திய விண்வெளி வீரர்கள்]] +[[பகுப்பு:இந்தியப் பெண் அறிவியலாளர்கள்]] +[[பகுப்பு:அமெரிக்க இந்தியப் பெண் அறிவியலாளர்கள்]] +[[பகுப்பு:பஞ்சாப் பெண் அறிவியலாளர்கள்]] + + + +கண்டம் + +கண்டம் (() ("Continent") எனப்படுவது தொடர்ச்சியான மிகப்பெரிய நிலப்பரப்பைக் குறிக்கும். புவி ஏழு கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை எந்தவொரு குறிப்பிட்ட காரணங்களால் அன்றி மரபுசார்ந்தே அடையாளப்படுத்தபடுகின்றன. மிகப் பெரியதிலிருந்து சிறியதாக இவை: ஆசியா, ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அன்டார்க்டிக்கா, ஐரோப்பா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகும். + +நிலவியல் படிப்பில் கண்டங்கள் தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகள் மூலம��க விவரிக்கப்படுகின்றன. முன்னதாகக் கண்டப்பெயர்ச்சி என அறியப்பட்ட கண்டங்களின் நகர்வுகளையும் மோதல்களையும் பிரிகைகளையும் ஆய்வுறும் துறையே தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு கல்வியாகும். +மரபுப்படி, "கண்டங்கள் பெரும் நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட, பெரிய, தொடர்ச்சியான, தனித்த நிலத்தொகுதிகளாகும்." பொதுவாக மரபுப்படி அறியப்படும் ஏழு கண்டங்கள் அனைத்துமே நீர்பரப்புகளால் பிரிக்கப்பட்ட தனித்த நிலப்பரப்புகள் அல்ல. "பெரிய" என்ற அளவுகோள் தன்னிச்சையான வகைப்பாடாகும்: புறப்பரப்பளவுள்ள கிறீன்லாந்து உலகின் மிகப்பெரும் தீவாகக் கருதப்படுகிறது; ஆனால் புவிப்பரப்பளவுள்ள ஆத்திரேலியா ஓர் கண்டமாகக் கருதப்படுகிறது. அதேபோல, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அளவுகோலும் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு கண்டத் திட்டுகளும் பெருங்கடல் தீவுகளும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன; வடக்கு, தெற்கு அமெரிக்க கண்டங்களும் இக்கோட்பாட்டிற்கு முரணாக அமைந்துள்ளன. ஐரோவாசியாவும் ஆபிரிக்காவும் எந்தவொரு இயற்கையான நீர்ப்பரப்பாலும் பிரிக்கப்படாதபோதும் இரண்டு கண்டங்களாகக் கருதப்படுகின்றன. தொடர்ச்சியான நிலப்பகுதியான ஐரோப்பாவும் ஆசியாவும் இரு கண்டங்களாகப் பிரிக்கப்படும்போது இந்த முரண் இன்னும் தெளிவாகிறது. புவியின் நிலப்பகுதிகள் ஒரே தொடர்ச்சியான உலகப் பெருங்கடலால் சூழப்பட்டிருக்க இதுவம் பல பெருங்கடல்களாகக் கண்டங்களாலும் பிற புவியியல் அளவீடுகளாலும் பிரிக்கப்பட்டுள்ளது. கண்டங்கள் சிலநேரங்களில் முதன்மை நிலப்பரப்புகளிலிருந்தும் விரிவுபடுத்தப்பட்டு உலகின் அனைத்து நிலப்பகுதிகளும் ஏதேனும் ஒரு கண்டத்தின் அங்கமாகக் கொள்ளப்படுகிறது. +"கண்டம்" என்பதன் குறுகிய பொருளாகத் தொடர்ச்சியான நிலப்பரப்பாக அல்லது பெருநிலப்பகுதியாக கொள்ளலாம்; கண்டத்தின் எல்லைகளாகக் கடற்கரைகளும் நில எல்லைகளும் அமைந்தன. இந்தக் கோட்பாட்டின்படி "ஐரோப்பிய கண்டம்" (சிலநேரங்களில் "தி கான்டினெட்") என்பது ஐரோப்பிய பெருநிலப்பகுதியைக் குறிப்பிடுவதாக அமைந்தது; இதில் தீவுகளான பெரிய பிரித்தானியா, அயர்லாந்து, ஐசுலாந்து போன்றவை நீக்கப்பட்டன. அதேபோல "ஆத்திரேலியக் கண்டம்" என்ற சொல் ஆத்திரேலியப் பெருநிலப்பகுதியை மட்டுமே குறிக்க தாசுமேனியா , நியூ கினி போன்ற தீவுகள் விலக்கப்பட்டன. இக்கோட்பாட்டின் தொடர்ச்சியாக, "ஐக்கிய அமெரிக்கக் கண்டம்" என்ற சொல்லாட்சி வட அமெரிக்காவின் மத்தியில் தொடர்ச்சியாக உள்ள 48 மாநிலங்களையும் (கனடாவால் பிரிக்கப்பட்டுள்ள) வடமேற்கிலுள்ள அலாஸ்காவையும் மட்டுமே உள்ளடக்கி அமைதிப் பெருங்கடலில் உள்ள ஹவாய் தீவை விலக்கி வரையறுக்கிறது. + +நிலவியல் அல்லது புவியியல் அணுகுமுறையில், "கண்டம்" தொடர்ச்சியான நிலப்பகுதியைத் தவிர ஆழமற்ற நீரில் மூழ்கிய அண்மைப்பகுதிகளையும் (கண்டத் திட்டு) அப்பரப்பிலுள்ள தீவுகளையும் (கண்டத் தீவுகள்), உள்ளடக்குகிறது;இவையும் கண்டத்தின் கட்டமைப்பின் அங்கமாக விளங்குகின்றன. இதன்படி கடற்கரைகள் கடலின் ஏற்றத்தாழ்வுகளால் மாறிவருவதால், கடலோர கண்டப்படுகையே உண்மையான எல்லையாகும். இந்த அணுகுமுறைப்படி பெரிய பிரித்தானியாவின் தீவுகளும் அயர்லாந்தும் ஐரோப்பாவின் அங்கமே; ஆத்திரேலியாவும் நியூ கினியும் இணைந்து ஒரே கண்டமே. + +பண்பாட்டுக் கூறுகளின்படி, கண்டத்தின் எல்லை கண்டப்படுகைகளையும் கடந்து தீவுகளையும் கண்டத் துண்டுகளையும் உள்ளடக்குகிறது.இதன்படி, ஐசுலாந்து ஐரோப்பாவின் அங்கமாகவும் மடகாசுகர் ஆபிரிக்காவின் அங்கமாகவும் கருதப்படுகிறது. இக்கோட்பாட்டையே மேலும் விரிவுபடுத்தி, சில புவியியலாளர்கள் ஆஸ்திரேலேசிய புவிப்பொறையுடன் அமைதிப் பெருங்கடலில் உள்ள தீவுகளையும் ஒன்றிணைத்து ஓசியானியா எனக் குறிப்பிடலாயினர். இது புவியின் அனைத்துப்பரப்பையும் கண்டங்களாகவும் கண்டம் போன்ற நிலத்தொகுதிகளாகவும் பிரிக்க வழி செய்கிறது. +ஒவ்வொரு கண்டமும் தனித்த நிலப்பகுதியாக இருக்க வேண்டும் என்ற அடிப்படை கோட்பாட்டிலிருந்து பொதுவாகத் தன்னிச்சையான, வரலாற்று மரபுகளால் விலக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஏழு கண்டங்களில் ஆத்திரேலியாவும் அன்டார்க்டிக்காவும் மட்டுமே மற்ற கண்டங்களிலிருந்து தனித்து உள்ளன. + +பல கண்டங்கள் முற்றிலும் தனித்த பகுதிகளாக வரையறுக்கப்படவில்லை; "" ஏறக்குறைய" தனித்த நிலப்பரப்புகளாக"பிரிக்கப்பட்டுள்ளன. ஆசியாவும் ஆபிரிக்காவும் சூயஸ் குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன; வடக்கு, தெற்கு அமெரிக்காக்கள் பனாமா குறுநிலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு குறுநிலங்களுமே (isthmus) அவை இணைக்கும் பெருநிலப்பகுதிகளை விட மிகக் குறுகியவை. இவற்றின் குறுக்காகச் செயற்கையான நீர்வழிகள் ( முறையே சூயஸ் , பனாமா கால்வாய்கள்) இந்த நிலப்பரப்புகளைப் பிரிக்கின்றன. + +எந்தவொரு கடலும் பிரிக்காத ஐரோவாசியாவை ஆசியா என்றும் ஐரோப்பா என்றும் பிரிப்பது பிறழ்வு ஆகும். ஐரோவாசியாவை ஒரே கண்டமாக ஏற்றுக்கொண்டால் உலகில் ஆறு கண்டங்களாகப் பிரிக்கலாம். இந்த அணுகுமுறை நிலவியலிலும் புவியியலிலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஐரோவாசியாவை ஐரோப்பா என்றும் ஆசியா என்றும் பிரிப்பது ஐரோப்பிய மையவாதத்தின் எச்சமாகக் கருதப்படுகிறது: "நிலப்பரப்பு, பண்பாடு மற்றும் வரலாற்று பன்முகத்தில், சீன மக்கள் குடியரசும் இந்தியாவும் முழுமையான ஐரோப்பிய நிலப்பரப்பிற்கு ஒத்தது; எந்தவொரு தனி ஐரோப்பிய நாட்டிற்கும் அல்ல. ஒரு சிறந்த மாற்றாக (அப்போதுகூட முழுமையற்ற) பிரான்சை, முழுமையான இந்தியாவுடன் அல்லாது, உத்தரப் பிரதேசம் போன்ற ஒரு இந்திய மாநிலத்துடன் ஒப்பிடுவதே சரியானதாகும்." இருப்பினும், வரலாற்று, பண்பாட்டுக் காரணங்களுக்காக, ஐரோப்பாவை தனி கண்டமாகப் பல வகைப்படுத்தல்களிலும் கருதப்படுகிறது. + +ஏழு கண்டங்கள் கோட்பாட்டில் வட அமெரிக்காவும் தென் அமெரிக்காவும் தனி கண்டங்களாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் அவற்றை ஒரே கண்டமாக, அமெரிக்காவாகவும் பார்க்கலாம். இந்தப் பார்வை இரண்டாம் உலகப் போர் வரை ஐக்கிய அமெரிக்காவில் நிலவியது; சில ஆசிய ஆறு கண்ட கோட்பாடுகளிலும் இது கடைபிடிக்கப்படுகிறது. மேலும் எசுப்பானியா, போர்த்துக்கல் மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், இவை ஒரே கண்டமாகக் கருதப்படுகின்றன. இந்தப் பயன்பாட்டை "அமெரிக்க நாடுகளின் அமைப்பு" போன்ற பெயர்களில் காணலாம். 19வது நூற்றாண்டிலிருந்து சிலர் "அமெரிக்காக்கள்" என்ற சொல்லாக்கத்தை பயன்படுத்துகின்றனர். + +கண்டங்களைத் தனித்த நிலப்பகுதிகளாக வரையறுத்து அனைத்து தொடர்ச்சியான நிலப்பகுதிகளையும் ஒன்றிணைத்தால், ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா அடங்கிய ஒற்றை நிலப்பகுதி ஆப்பிரிக்க-யூரேசியா என்றழைக்கப்படுகிறது. இதன்படி நான்கு கண்டங்கள் உள்ளன: ஆப்பிரிக்க-யூரேசியா, அமெரிக்கா, அன்டார்ட்டிகா மற்றும் ஆத்திரேலியா. + +பனி யுகத்தில், கடல்மட்டம் தாழ்ந்திருந்தபோது பல கண்டப்படுகைகள் உலர்நிலமாக, நிலப்பாலங்களா��� வெளிப்பட்டன; அக்காலத்தில் ஆத்திரேலியா (கண்டம்) ஒரே தொடர்சியான நிலப்பகுதியாக இருந்தது. அதேபோல அமெரிக்காக்களும் ஆபிரிக்க-யூரேசியாவும் பெரிங் பாலத்தால் இணைக்கப்பட்டிருந்தன. பெரிய பிரித்தானியா போன்ற பிற தீவுகளும் தங்கள் கண்டத்தின் பெருநிலப்பகுதிகளுடன் இணைந்திருந்தன. அக்காலத்தில் மூன்று கண்டங்களே இருந்தன: ஆபிரிக்க-யூரேசிய-அமெரிக்கா, அன்டார்ட்டிகா, ஆத்திரேலியா-நியூ கினியா. +பலவேறு முறைகளில் கண்டங்கள்பிரிக்கப்படுகின்றன: + + +மனித நடமாட்டம் இல்லாத அன்டார்க்டிக்காவைத் தவிர்த்த ஐந்து கண்ட வடிவத்தைப் பன்னாட்டு ஒலிம்பிக் குழு ஏற்றுக்கொண்டு ஒலிம்பிக் சின்னங்கள்#ஒலிம்பிக் சின்னத்தில் ஐந்து வளையங்களைக் கொண்டுள்ளது. + +ஆத்திரேலியாவையும் அடுத்துள்ள பசிபிக் மற்றும் அமைதிப் பெருங்கடல் தீவுகளையும் குறிக்க சிலநேரங்களில் "ஓசியானியா" அல்லது "ஆஸ்திரேலியா" என்ற சொற்பயன்பாட்டையும் காணலாம். இப்பயன்பாட்டை கனடா இத்தாலி, கிரேக்கம் (நாடு) மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள், போர்த்துக்கல், எசுப்பானியா நாட்டு பாடப்புத்தகங்களில் காணலாம். + +கீழ்வரும் அட்டவணையில் ஒவ்வொரு கண்டத்தின் பரப்பளவும் மக்கள்தொகையும் தொகுக்கப்பட்டுள்ளது. + +எல்லாக் கண்டங்களும் சேர்த்து மொத்தப் பரப்பளவு 148,647,000 ச.கி.மீ. இது உலகின் பரப்பில் ஏறத்தாழ 29.1 சதவிகிதம் ஆகும். + + + + +ஈரோடு மாவட்டம் + +ஈரோடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்றாகும். ஈரோடு இதன் தலைநகராகும். இது தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் கர்நாடக மாநிலம், தெற்கில் திருப்பூர் மாவட்டம் மற்றும் கரூர் மாவட்டங்கள், கிழக்கில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்கள், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அமைந்துள்ளன. காவிரி, பவானி, மற்றும் நொய்யல் ஆகிய ஆறுகள் ஈரோடு மாவட்டத்தின் வழியாகப் பாய்கின்றன. + +1996-ஆம் வருடம் வரை இது பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. + +பெரும்பள்ளம் ஓடை மற்றும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடை ஆகிய இரண்டு ஓடைகளுக்கு நடுவே அமைந்துள்ளதால் இவ்வூரை ஈரோடை (இரண்டு ஓடை) என்னும் பெயரால் அழைக்கின்றனர். இங்குள்ள கடவுளுக்கு, "கபாலீசுவரர்" என்ற பெயர். அதனை ஒட்டி "ஈர ஓடு" என்னும் பெயர் ஏற்பட்டு நாளடைவில் ஈரோடு என்று மாறியதாகவும் கூறுவர். + +இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,259,608 மக்கள் இம்மாவட்டத்தில் வசிக்கின்றார்கள். இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். இம்மாவட்ட மக்களின் சராசரி கல்வியறிவு 76.97% ஆகும், + +இலக்கியப் புகழும், வரலாற்று பெருமையும் ,தொல்பொருள் சிறப்பும் மிக்க ஈரோடு மாவட்டம், தமிழகத்தின் மேற்குப்பகுதியில் அமைந்துள்ளது. அப்போதைய கோயமுத்தூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த ஈரோடு நகரம், 3000 வீடுகளைக்கொண்டு முக்கிய வணிக ஊராகத்திகழ்ந்தது. பல அன்னியப்படைகள் தாக்கி அழித்தன. அனைத்து செல்வங்களும் கொள்ளையடித்து கொண்டு போகப்பட்டன. அதனால் 1792ஆம் ஆண்டில் ஈரோடு நகரம் வெறும் 400 இடிந்த வீடுகளையும் 3000 மக்களையும் மட்டுமே கொண்டிருந்தது. + +பின்பு 4-3-1799 ல் திப்பு சுல்தான் வீழ்ச்சிக்குப் பின்னர் இந்தப்பகுதி முழுவதும் கும்பினியர் வசமானது.அப்பொழுது நொய்யல் ஆற்றை மையமாக வைத்து நொய்யல் வடக்கு மாவட்டம் மற்றும் நொய்யல் தெற்கு மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதற்கு முறையே பவானியும், தாராபுரமும் தலைநகரங்களாயின. நொய்யல் வடக்கு மாவட்டத்தில் கோயமுத்தூர், ஈரோடு, சத்தியமங்கலம் போன்ற பகுதிகளும், நொய்யல் தெற்கு மாவட்டத்தில் கரூர், பொள்ளாச்சி, தாராபுரம் போன்ற பகுதிகளும் அடங்கியிருந்தன. + +பின்னர் ஏற்பட்ட நிர்வாக மாற்றத்தால், 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூரை தலைநகராகக்கொண்டு மாவட்டம் திருத்தி அமைக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த ஈரோடு தாலுகாவை பெருந்துறை தாலுகாவுடன் இணைத்து ஈரோட்டை துணை தாலுகாவாக மாற்றினர். அதேபோல், காங்கேயம் தாலுகாவை தாராபுரத்துடன் இணைத்தனர், மேலும் சத்தியமங்கலம் தாலுகா தலைமையகத்தை கோபிச்செட்டிபாளையத்துக்கு மாற்றினர். + +பின்னர் 1868ஆம் ஆண்டில் ஈரோடு மீண்டும் தாலுக்கா அந்தஸ்த்து பெற்றபோது தனி தாலுகாவாக இருந்த பெருந்துறை, ஈரோடு தாலுகாவுடன் இணைக்கப்பட்டது. + +அதன்பின், 24-9-1979-ல் மாநில நிர்வாக சீர்திருத்தக்குழுவின் பரிந்துரைப்படி ஈரோடு நகரைத் தலைமையிடமாகக்கொண்டு தனி மாவட்டம் உருவாக்கவும், மேலும் தாராபுரம் தாலுகாவைப் பிரித்து காங்கேயம் தாலுகாவும், ஈரோடு தாலுகாவைப் பிரித்து பெருந்துறை தாலுகாவும் மற்றும் கோபிச்ச��ட்டிபாளையத்தை தலைமையிடமாகக்கொண்டிருந்த சத்தியமங்கலம் தாலுகாவை பிரித்து கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம் என இரண்டாப்பிரித்தும் மொத்தம் மூன்று புதிய தாலுகாகளை உருவாக்கவும் உத்தேசிக்கப்பட்டது. அதன்படி கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்த ஈரோடு, பெருந்துறை, பவானி, காங்கேயம், கோபிச்செட்டிபாளையம் தாலுகாக்களையும், சேலம் மாவட்டத்திலிருந்த சங்ககிரி மற்றும் திருச்செங்கோடு தாலுகாக்களையும் இணைத்து ஈரோடு மாவட்டம் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போதைய சேலம் மாவட்ட ஆட்சியாளர்கள், திருச்செங்கோட்டையும், சங்ககிரியையும் ஈரோட்டுடன் இணைத்தால் சேலம் மாவட்டத்தின் வருவாய் கடுமையாக பாதிக்கும் என்பதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி தாலுகாக்களைத் தவிர்த்து அதற்கு மாற்றாக சத்தியமங்கலம் மற்றும் தாராபுரத்தை சேர்த்து, ஏனைய ஐந்து தாலுகாகளையும் உள்ளடக்கி மொத்தம் ஏழு தாலுகாகளுடன் புதிய மாவட்டம் உருவானது. 1997ஆம் ஆண்டு வரை பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மாவட்டத் தலைநகரான ஈரோடு நகரின் பெயராலேயே ஈரோடு மாவட்டம் என்று அழைக்கப்பட்டு வருகிறது. + +2008ஆம் ஆண்டில், திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டபோது, ஈரோடு மாவட்டத்திலிருந்த தாராபுரம் மற்றும் காங்கேயம் தாலுகாக்கள் முழுமையாகவும், பெருந்துறை தாலுகாவிலிருந்த ஒரு பகுதியும் (ஊத்துக்குளி மற்றும் குன்னத்தூர் ஒன்றியப்பகுதிகள்) பிரிக்கப்பட்டு திருப்பூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன. + +பழங்கால கொங்கு மண்டலத்தில் மேல்கொங்கு மண்டலமாக ஈரோடு மாவட்டம் விளங்குகிறது. கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களையும், கரூர் மாவட்டத்தின் மேற்குப் பகுதியையும், திண்டுக்கல் மாவட்டத்தின் வடக்குப் பகுதியையும் உள்ளடக்கி இருப்பதே கொங்கு நாடு ஆகும். இப்பகுதிகளை கொங்கர் ஆண்டு வந்தனர். இங்குள்ள தாராபுரத்தில் உரோம நாணயங்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உரோம பேரரசுக்கும் இம்மாவட்ட வணிகர்களுக்கும் வணிகம் நடந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று அறிஞர்களின் கணிப்பு. + +இதுபோலவே நொய்யல் ஆற்றின் கரையில் சென்னிமலைக்கு அருகே உள்ள 'கொடுமணல் நாகரிகம்' 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இங��கு பல வண்ண மணிகள், ஓடுகள் கிடைத்துள்ளன. சங்க காலத்திற்கு பின்னர் கங்கர்கள் ஆட்சி செய்து வந்துள்ளனர். அவர்களை சோழர்கள் 9-ஆம் நூற்றாண்டில் முறியடித்து கொங்கு மண்டலத்தை ஆளத் தலைப் பட்டனர். சோழர் ஆட்சியில் கொங்கு மண்டலம் 'அதிராசராச மண்டலம்' என்று அழைக்கப்பட்டது. இக்காலத்தில் கொங்குவேளிர் "பெருங்கதையையும்"; பவணந்தி "நன்னூலையும்"; அடியார்க்கு நல்லார் "சிலப்பதிகாரத்திற்கு" உரையையும் எழுதியுள்ளனர். + +சோழர்களுக்குப் பிறகு பாண்டியர்கள், ஹோய்சாளர்கள், விஜயநகர மன்னர்கள், மைசூர் உடையார்கள், திப்பு சுல்தான் முதலியோர் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். இக்காலங்களில் பட்டக்காரர் வசம் வரிவசூலிப்பு இருந்திருக்கிறது. + +ஈரோடு மாவட்டத்தின் இயற்க்கை எல்லைகளாக வடக்கில் மேற்குத்தொடர்ச்சி மலைகளும், கிழக்கில் காவிரி ஆறும், தெற்கில் நொய்யல் ஆறும் அமைந்திருக்கின்றன. + +தெற்கில் திருப்பூர் மாவட்டமும், கிழக்கில் சேலம், நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களும், வடக்கில் கர்நாடக மாநிலமும், மேற்கில் கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களும் ஈரோடு மாவட்டத்தின் எல்லைகளாக அமைந்துள்ளன. +கொடுமணல் தொல்லியற் களம் + +ஈரோடு மாவட்டமானது ஈரோடு மற்றும் கோபிச்செட்டிபாளையம் என இரண்டு வருவாய் கோட்டங்களும், பத்து வருவாய் வட்டங்களும் (தாலுகாக்கள்), 35 உள்வட்டங்களும், 375 வருவாய் கிராமங்களும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் ஒரு மாநகராட்சியும், 4 நகராட்சியும், 42 பேரூராட்சிகளும் கொண்டுள்ளது. + +இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 225 கிராம ஊராட்சிகளையும் கொண்டுள்ளது. + +ஈரோடு கிழக்கு (சட்டமன்றத் தொகுதி), ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி), மொடக்குறிச்சி, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி), பவானி (சட்டமன்றத் தொகுதி), அந்தியூர் (சட்டமன்றத் தொகுதி), கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி), பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி). + +1 ஈரோடு +2 திருப்பூர் +3 நீலகிரி + +காவிரி, நொய்யல், பவானி, உப்பாறு மோயாறு + +பவானி சாகர், வறட்டுப்பள்ளம், கொடிவேரி, ஒரத்துப்பாளையம், காளிங்கராயன் அணை. குண்டேரிப்பள்ளம் அணை, பெரும்பள்ளம் அணை, + +இம்மாவட்டமானது இரண்டு வாய்க்கால்களால் பயன்பெறுகிறது. காளிங்கராயன் வாய்க்கால், 90 கிமீ நீளமுடைய இதன் மூலம் 15,743 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகி���து. கீழ் பவானி திட்ட கால்வாய் இதன் மூலம் 2 இலட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. + +ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைகள்: தாளவாடி மலை, திம்பம் மலை, தலமலை, தவளகிரி மலை, பவள மலை, பச்சை மலை,பெருமாள் மலை, பருவாச்சி மலை, பூனாச்சி மலை, அந்தியூர் மலை,வட்டமலை, சென்னிமலை,மலைப்பாளையம்மன் மலை, எழுமாத்துர் மலை, எட்டிமலை, அருள்மலை, சிவகிரி மலை, அறச்சலுர் நாக மலை, அரசனா மலை, திண்டல்மலை, விசயகிரி மலை, ஊராட்சி கோட்டை மலை ஆகியவையாகும். + +இம்மாவட்டத்தின் வடக்குப் பகுதி கர்நாடக பீடபூமியின் தொடர்ச்சியாயுள்ளது. இங்கு 900 மீ. முதல் 1700 மீ. உயரம் உள்ள மலைகள் காணப்படுகின்றன. இங்கு வரட்டுப்பள்ளம், வழுக்குப் பாறைப் பள்ளம், தென்வாரிப் பள்ளம், கோரைப் பள்ளம் போன்ற பல பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. + +இம்மாவட்டத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றன. காட்டின் மொத்தப் பரப்பளவு 2,42,953.28 ஹெக்டேர்களாகும். தமிழ்நாட்டிலுள்ள வனக் கோட்டங்களில் ஈரோடு மாவட்ட வனக் கோட்டமே மிகப் பெரியது. இவற்றை 4 ஆக பிரித்துள்ளனர். அவை: சத்தியமங்கலம் சரகம், தலமலை சரகம், பர்கூர் சரகம், அந்தியூர் சரகம் ஆகியவையாகும். தமிழகத்தின் மொத்த சந்தனத்தில் மூன்றில் ஒரு பகுதி ஈரோடு மாவட்டத்திலிருந்து கிடைக்கிறது. சத்தியமங்கலத்தில் தமிழ்நாடு அரசின் சந்தன மரக்கிடங்கு ஒன்று உள்ளது. மேட்டூர் சந்தன எண்ணெய்த் தொழிற்சாலைக்கு இங்கிருந்தே மரங்கள் செல்கின்றன. அந்தியூர், பர்கூர் மலைப் பகுதிகளில் தேக்கு மரங்களும், சத்தியமங்கலம், கோபிசெட்டிப்பாளையம், அந்தியூர்ப் பகுதிகளில் மூங்கில் மரமும் அதிகமாக வளர்கின்றன. இவை காகிதத் தொழிற்சாலைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இம்மாவட்டத்திலுள்ள காடுகளில் வேங்கை (மரம்), கருங்காலி. ஈட்டி, மருது போன்ற பல்வேறு மரங்களும் காணப்படுகின்றன. + +பவானிசாகர் அணை, தெங்குமரஹாடா, மோயாறு, பண்ணாரி ,ஆசனுர் காட்டுப் பகுதிகளில் யானைகள் அதிகமாக வாழ்கின்றன. இப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள் இருப்பதாக கூறுகின்றனர். தலமலைப் பகுதிகளில் புலிகள் வசிக்கின்றன. இப்பகுதியில் காட்டெருமை, முள்ளம் பன்றி, மான்கள் அதிகமாக உள்ளன. + +குங்கிலியம், மட்டிப்பால், சிகைக்காய், தேன், கொம்பரக்கு, பட்டை வகைகளும், கடுக்காய், புங்கம் விதை, ஆவாரம்பட்டை, கொன்னைப் பட்டை ஆகியவையும், எருமை, மான் கொம்புகளும், யானைத் தந்தங்களும் சேகரிக்கப்படுகின்றன. + +இரும்பு - கீழ்பவானி அணை, தொப்பம்பாளையம், கரிதொட்டம் பாளையம், பங்களாபுதுர் பகுதியின் வடக்கு மலைப்பகுதியில் கிடைக்கிறது. +தங்கம் – கோபிச்செட்டிப்பாளையம், எக்காத்துர், ஊதியூர், எழுமாத்தூர். +மைக்கா - வைரமங்கலம், குறிச்சி, புளியம்பட்டி, ஏரப்ப நாயக்கன் பாளையம். +கருங்கற்கள் - பவானி பாலமலைப் பகுதி. இவை ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. +ஆஸ்பெஸ்டாஸ் - பெருந்துறை, பர்கூர். +ஜிப்சம் - தாராபுரம். + +படியூரில் பெரில்ஸ் என்னும் கடல்நிற வைரக்கற்களும், சிவன்மலை, சலங்கிப் பாளையம், சின்ன தாராபுரம் பகுதியில் உயர்தரக் கற்கள் கிடைக்கின்றன. குவார்ட்ஸ் எனப்படும் வெள்ளைக் கல்லும், பெல்ஸ்பர் என்ற சிவப்புக் கல்லும் இம்மாவட்டத்தில் கிடைக்கிறது. + +ஈரோட்டில் வேளாண்மைக் கருவிகள், இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில், தமிழ்நாடு சிறுதொழில் துறையினரால் நடத்தப்படுகிறது. இவை தவிர எண்ணெய், தோல், பருத்தி ஆலைத் தொழில் சிறப்பாக நடை பெறுகிறது. இதன் அருகில் முட்டையைப் பொடியாக்கி பொதி செய்யும் தொழில் ஏற்றுமதியில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. பாத்திரத் தொழிலும் நடந்து வருகிறது. ஈரோடு துணி மார்க்கெட் இந்திய அளவில் 5ஆம் இடம் பெறுகிறது. சிறு சேமிப்பு திட்டத்தில் 33.65 கோடி ரூபாயில் இம்மக்கள் முதலீடு செய்துள்ளனர். + +ஈரோடு மாவட்டம் மஞ்சள், சமையலில் பயன்படுத்தப்படும் வாசனைப் பொருட்களுக்கான முக்கிய சந்தையாகும். மஞ்சளானது துணிகளுக்கு சாயமாகவும் பயன்படுத்தப் படுகிறது. மஞ்சளானது ஈரோடு மற்றும் கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து வருகிறது. ஊத்துக்குளி வெண்ணெய் புகழ் பெற்றது. +மொத்த விவசாய பரப்பு 9 இலட்சம் ஏக்கர்; முக்கிய விளை பொருட்கள்: நெல், நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, சோளம், பருத்தி, புகையிலை, எள். விவசாயத் தொழிலாளர்கள்: 10,78,256 பேர்கள். மஞ்சள் சந்தை தமிழகத்திலேயே ஈரோட்டில்தான் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியில் சென்ற ஆண்டு ஈரோடு மாவட்டம் முதலிடம் பெற்றது. தேங்காய் மற்றும் வாழை உற்பத்தியில் முன்னணி வகிக்கிறது ஈரோடு மாவட்டம். + +பெருந்தொழில் நிறுவனங்கள் - 2; சிறு தொழிற்சாலைகள் 7,249. மற்றும் 1301 குடிசைத் தொழில்கள் நடைபெறுகின்றன. + + + + + + + + + +பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோயில், ஒத்தகுதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில்,காட்டு பண்ணாரி , பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயில், சென்னிமலை முருகன் திருக்கோயில், கோபி பச்சைமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கொடுமுடி வீரநாராயணப் பெருமாள் கோவில்,அருள்மிகு பொன்மலை ஆன்டவர் திருக்கோயில் கொன்டையம்பாளையம், சிவன்மலை முருகன் திருக்கோயில்,கந்தசாமிபாளையம் அருள்மிகு சடையப்பசாமி திருக்கோயில் ஈரோடு பெரிய மாரியம்மன் திருக்கோயில், திண்டல்மலை முருகன் கோவில் முதலியன. + +பாரியூர் கொண்டத்துகாளியம்மன் குண்டம் மற்றும் தேர் திருவிழா, ஒத்தகுதிரை கள்ளியங்காட்டு மாரியம்மன் கோவில் திருவிழா,கொன்டையம்பாளையம் தைபுச தேர் திருவிழா, ஈரோடு மாரியம்மன் பண்டிகை, பண்ணாரி மாரியம்மன் பண்டிகை, அந்தியூர் குருநாதசாமி தேர்த்திருவிழா, சென்னிமலை தைபூசத் திருவிழா, சிவன்மலை தேரோட்டம், பவானி கூடுதுறை ஆடிப் பெருக்கு. + +ஈரோடு மாவட்டத்தின் தொழில் முயற்சிகளுக்குப் பெரிதும் துணையாக இருப்பது போக்குவரத்து; ஈரோட்டிலிருந்து தமிழகத்தின் எல்லா மாவட்டத் தலைநகர்களுக்கும், சென்னைக்கும் சாலை போக்குவரத்து உள்ளது. நேர்விரைவுப் பேருந்து சென்று வருகிறது. இம்மாவட்டத்தின் மொத்த சாலைகளின் நீளம் 9194 கி.மீ. உள்ளதாம். + +முக்கிய தொடர்வண்டி நிலையங்கள்: ஈரோடு சந்தி்ப்பு , ஊத்துக்குளி தொடர்வண்டி நிலையம் , பெருந்துறை தொடர்வண்டி நிலையம், ஊஞ்சலுர் தொடர்வண்டி நிலையம் , கொடுமுடி தொடர்வண்டி நிலையம் , பாசூர் தொடர்வண்டி நிலையம், ஈங்கூர் தொடர்வண்டி நிலையம். இம்மாவட்டத்தில் உள்ள இரயில் பாதை அகன்ற இரயில் பாதையாகும். ஈரோடு-கோவை இருப்புப்பாதை ஓர் இரட்டைப் பாதையாகும். + +காவிரியாற்றின் போக்கை ஒட்டி படகுப் போக்குவரத்து இங்கு நடைபெறுகிறது. + +தொடக்க நிலை-1,455; நடுநிலை-185; உயர்நிலை-77; மேல்நிலை-52; கல்லூரிகள் - 8; தொழிற்கல்வி நிறுவனங்கள்-9, தொழிற்பயிற்சி நிறுவனங்கள்-1.A + +2015 பத்தாம் வகுப்பு தேர்வில், வருவாய் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.04 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. + +பவானி சாகர் அணைக்கட்டு, கூடுதுறை,பெரும்பள்ளம் அணை, கொடிவேரி அணைக்கட்டு, தாளவாடி மலை. வரலாற்று சுற்றுலா தலங்கள்: அரச்சலுர் - கல்வெட்டுகள்; பெ���ுந்துறை- விஜயமங்கலம்; கொடுமணல் தொல்லிற்களம் புதைபொருள் ஆய்வு இடம். + +15.3.2013ம் ஆண்டிலிருந்து சத்தியமங்கலம் வனப்பகுதி புலிகள் காப்பகமாக அதிகார்வப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தாளவாடி மலை இம்மாவட்டத்தின் மலைப் பிரதேசமாகும். இயற்கை எழில் போலவே வனவிலங்குகளும் இங்கு நிறைந்துள்ளன. யானை, கரடி, செந்நாய், மான், கருங்குரங்கு, சிறுத்தை போன்றவை இங்கு உண்டு. + +கொடிவேரி அணை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ள பெரியகொடிவேரி எனும் ஊரில் அமைந்துள்ளது. பவானி ஆறு மேல் உள்ள பவானிசாகர் அணை மற்றொரு முக்கிய அணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கிமீ மற்றும் சத்தியில் இருந்து 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.பண்ணாரி அம்மன் கோவிலில் இருந்து 15கி.மீ.தொலைவில் உள்ளது. + +இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில் ஆகும். கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் சவண்டப்பூர் மற்றும் கூகலூர் வழியாக அந்தியூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில் மற்றும் ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் விசேஷம் வாய்ந்தவை. மேலும் இது பாரி வள்ளலால் போற்ற பெற்ற தலமாகும். அம்மன் தங்க தேரில் தினமும் உலா வந்து காட்சி அளிப்பார். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மூன்று வாரங்கள் நடைபெறும் இந்த திரு விழாவில் கலந்து கொள்ள லட்சக் கணக்கில் பக்தர்கள் குவிவது வழக்கம். + +முருக பெருமான் கோவில்களான பச்சைமலை மற்றும் பவளமலை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளன. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை மற்றும் சாலை வசதிகளும் உண்டு. தைப்பூசத் திருவிழா மற்றும் பங்குனி உத்திரம் இங்கு நடைபெறும் பெரிய திருவிழாக்கள் ஆகும். பச்சைமலையில் தங்க தேர் மற்றும் பெரிய முருகர் சிலை ஆகியவை கவனத்தை ஈர்க்க கூடியவை. + +ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம் வட்டத்தில் உள்ளது பண்ணாரியம்மன் கோவில். சத்தியமங்கலத்திலிருந்து மைசூர் செல்லும் சாலையில் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் தெற்கே சுமார் 6 மைல் தொலைவில் பவானி ஆறு மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடுகிறது. இந்த ஆற்றில்தான் பவானிசாகர் அணை கட்டப்பட்டுள்ளது. இது மிகச்சிறந்த சுற்றுலா தலமாகும். கொத்த மங்கலம் வழியாக பண்ணாரி செல்லலாம். வழியில் நுணமத்தி, தோரணப் பள்ளம் என்ற இரண்டு பள்ளங்கள் உள்ளன. இவற்றில் தண்ணீர் நிறைந்திருக்கும். பண்ணாரியம்மன் திருக்கோவில் அழகிய கோபுரத்துடனும், அர்த்தமண்டபம், மகா மண்டபம், சோபன மண்டபம் முதலியவற்றுடன் துண்களில் அற்புதமான சிற்ப வேலைப்பாட்டுடன் காணப்படுகிறது. வனத்தின் மேற்கே சுமார் 3 மைல் தொலைவில் ஓர் ஆலமரத்தின் அடியில் மாதேசுரசாமிக் கோவிலும், தீர்த்தக் கிணறும் உள்ளன. இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பெரிய திருவிழா நடைபெறுகிறது. + +காவிரியும், பவானியும் கலக்கும் இடத்திற்கு தட்சிண பிரயாகை (தென்னாட்டு பிரயாகை) என்று பெயர். வடநாட்டில், கங்கையும் யமுனையும் பிரயாகை என்ற இடத்தில் கூடும்போது சரஸ்வதி அடியில் வந்து கலப்பது போல, இங்கு அமுதநதி அடியில் வந்து கலப்பதாக ஐதீகம். இரண்டு நதிகளும் கூடும் இடத்தில் சங்கமேசுவரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் ஈரோட்டிலிருந்து 12 கி.மீ. துரத்தில் இருக்கிறது. தேவார காலத்தில் இவ்வூரை திருநணா என்றுஅழைக்கப்பட்டிருப்பதை சம்பந்தர் தேவாரத்தால் அறியலாம்.இக்கோவிலுக்கு இரண்டு வாயில்கள். வடக்கு நோக்கிய முக்கிய வாயில் வழியாக உள்ளே சென்றால் சிறிய பிள்ளையார் கோயில் உள்ளது. கிழக்கு வாயிலுக்கு எதிரேதான் கொடிமரம், பலிபீடம்,விளக்கேற்றும் கற்துண் ஆகியவையெல்லாம் உள்ளன. கிழக்கு வாயில் வழியாக கூடுதுறைக்குச் செல்லலாம். நீராடுவதற்கு வசதியாக படித்துறைகள் அமைந்துள்ளன. கூடுதுறையிலே ஒரு தீர்த்தக் +கட்டம் உள்ளது. இதனை 'காயத்திரிமடு' என்றும் கூறுகின்றனர். இதன் கரையில் காயத்திரி லிங்கம், அமுதலிங்கம் என்று இருக்கின்றன. திருக்கோவிலைச் சுற்றி அந்நாளில் கோட்டை இருந்திருக்கிறது.தற்போது இடிந்த சிதைந்த சில பகுதிகளைக் காணலாம். இக்கோவில் தற்போது புதிய திருப்பணியைக் கண்டுள்ளது. இங்கு மகாமண்டபம், இப்பகுதிகளை ஆண்ட இம்மடி கெட்டி முதலியார் என்பவர் காலத்தில் கட்டப்பட்டது. இங்குள்ள இரு பெண்களின் சிற்பம் பார்க்கத்தக்கது.இக்கோவிலுள்ளே பெருமாளுக்கும் ஒரு சந்நிதி உண்டு. + +சென்னிமலைக்கு போவதற்கு ஈரோட்டிலிருந்து பேருந்���ு வசதிகள் உள்ளன. சென்னிமலையின் அடிவாரத்தில் ஊர் உள்ளது. ஊரின் பெயரும் சென்னிமலைதான். சென்னிமலை அடுக்கடுக்காக உயர்ந்து செல்கிறது. மலை மீது ஏறிச் செல்வதற்கு படிக்கட்டுப் பாதை உண்டு. அடிவாரத்தில் காவல் தெய்வமாக இடும்பன் காட்சி யளிக்கின்றார். இம்மலைத் தலத்தில் சில தீர்த்தங்கள் உள்ளன. மலையின் தென்மேற்குச் சரிவில் மாமங்க தீர்த்தம் உள்ளது. மற்றும் காணாச்சுனை என்னும் தீர்த்தமும், சுப்பிரமணிய தீர்த்தமும் உள்ளன. மலையின் வடபக்கத்தில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. சுப்பிரமணிய தீர்த்தத்திலிருந்து குழாய்கள் மூலம் மலையுச்சி வரை தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. மலை கடல் மட்டத்திலிருந்து 1279 அடி உயரத்தில் உள்ளது. எனவே களைப்பாறிச் செல்ல மண்டபங்கள் இருக்கின்றன. திருக்கோபுரவாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பிரகாரத்தில் விசுவநாதர், விசாலாட்சி சந்நிதிகள் உள்ளன. முருகக் கடவுளின் பெயர்: சென்னிமலை நாதர்; மூலவருக்கருகிலேயே மார்க்கண்டேசுவரரும், இமயவல்லியும் உள்ளனர். அருகிலேயே வள்ளி, தெய்வானைக்குத் தனிக்கோவில் உள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை 'அகத்தியர்' என்கின்றனர். இக்கோவிலின் மகாமண்டபத் தூண்களில் 7ஆம் நுற்றாண்டில் திருப்பணி செய்த முத்துவசவய்யன் மற்றும் மைசூர்மன்னர் தேவராச உடையார், மனைவி ஆகியோர் உருவச்சிலைகள் காணப்படுகின்றன. இங்கிருந்து செல்லும் ஒற்றையடிப் பாதையில் சென்றால் ஒரு குகை காணப்படுகிறது. அதன் அருகில் சமாதி ஒன்றும் காணப்படுகிறது. இக்குகையை 'சன்னியாசி குகை' என்று மக்கள் அழைக்கின்றனர். + +காங்கேயத்திலிருந்து திருப்பூர் செல்லும் பாதையில் 5 கி.மீ. தொலைவில் சிவன்மலை அமைந்துள்ளது. இம்மலையைப் பொதுமக்கள் வலம் வருவது உண்டு. பாதி வழியில் பரமேஸ்வரன் கோவிலும் உண்டு. இங்கு அனுமார் சந்நிதியும் உண்டு. மலையில் படிக்கட்டுகள் உண்டு. இளைப்பாறும் மண்டபமும் காணப்படுகிறது. மலைமீது குமரனுக்கும் தனிக் கோவில் காணப்படுகிறது. தொட்டில் மரம் அருகே நஞ்சுண்டேசுவரரும், பர்வதவர்த்தியும் காட்சி தருகின்றனர். திருச்சந்நிதியில் முருகப்பெருமான், வள்ளி நாச்சியாரோடு காணப்படுகிறார். நான்கு கரங்களுடன் 3 அடி உயரத்தில் அமைந்துள்ளார். தைப்பூசத் திருவிழா - இங்கு நடைபெறும் பெரிய திருவிழா ஆகும். +இத்திருக���கோயிலின் கும்பாபிஷேகம் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் 04-07-2014 அன்று நடைபெற்றது. இதற்கு ஹெலிகாப்டர் மூலம் பூக்கள் தூவப்பட்டன. + +ஈரோடு நகரத்திலே உள்ளது. மூலவர் திருநாமம் ஈரோடையப்பர். இறைவி: வாரணியம்மை. 12-ஆம் நுற்றாண்டில் கொங்குச் சோழன் கரிகாலன் காலத்தில் கட்டப்பட்டது. ஐந்து நிலைகள் கொண்ட இராஜகோபுரம். சுற்றுப் பிரகாரத்தில் அறுபத்து மூவர் நாயன் மார்களுக்கும் மண்டபம் அமைந்துள்ளது. 63க்கும் சிலைகள் இருக்கின்றன. ஒவ்வொருவருடைய குலம், நட்சத்திரம், காலம், ஊர், பெயர் விவரங்களில் தனித்தனியே எழுதப்பட்டுள்ளன. தட்சிணா மூர்த்தி சிலை காணத்தக்கது. பஞ்சபூத தலங்களின் சித்திரங்கள் அழகு மிளிர வரையப் பெற்றுள்ளன. இதில் தெய்வயானையுடன் முருகப் பெருமான் காட்சி தருகிறார். கருவறையிலுள்ள சிவலிங்கத்தை, கதிரவன் மாசி மாதத்தில் 25,26,27 நாட்களில் தன் ஒளிக்கரத்தால் திருமேனியைத் தொட்டுப் பார்க்கிறான். வன்னிமரத்தின் அடியில் வாரணியம்மையின் பழைய உரு காணப்படுகிறது. வைகாசி விசாகத்தில் இறைவனுக்கு பத்து நாட்கள் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இக்கோவில் திருமுறை விழா, திருவாசக விழாவும் நடைபெறுகின்றன. + +பல்லவர் காலக் கோவில். மகிமாலீசுவரர் கோவில். இது நகரின் நடுவேயுள்ள பழைய மருத்துவமனையையொட்டி உள்ளது. ஆறடி விட்டமுள்ள ஆவுடையாரில் மூன்றடி உயரமுள்ள சிவலிங்கம் பெரிய அளவில் காட்சியளிக்கிறது. வாயிற்காப்போர் சிலையும், கோபுரமும் பல்லவர் காலத்தவையேயாகும். துண் ஒன்றில் சுந்தரர் தாடியுடன் பரவை, சங்கிலியாருடன் காட்சியளிக்கிறார். இவருக்குச் சேரமான் கவரி வீசுகிறார். அருகில் மெய்க்காவலர் வில்லேந்தி நிற்கிறான். + +ஈரோட்டிலே கஸ்தூரி ரங்கப்பெருமாள் கோவில் உள்ளது. கோபுரம் இல்லை. திருமாலின் பள்ளி கொண்ட கோலத்தை சிற்ப உருவில் வடித்துள்ளனர். இங்கு திருவேங்கடமுடையான் திருச்சந்நிதி உள்ளது. இச்சந்நிதி நிலைப்படியில் தயாகு சாத்தன் சேவித்த நினைவு எனப் பொறிக்கப்பட்டுள்ளது. தாயாரின் திருநாமமே கமலவல்லி நாச்சியார். மூலவரும், உச்சவரும் அருகருகே உள்ளனர். இந்த திருக்கோலத்தில் நாற்கரங்களுடன் உள்ளது. பிரகாரத்தில் விஸ்வத்சேனர் திருப்பாதம் உள்ளது. ஆழ்வார்கள் மண்டபம் காணப்படுகிறது. அனுமார் சந்நிதி உள்ளது. 4 அடி குங்கிலியத்தால் அழகு செய்யப்ப��்டுள்ளது. மூலவர் 14 அடி இருப்பார். பள்ளி கொண்ட நாதர்தான் கஸ்தூரி ரங்கப் பெருமாள். வைகாசி விசாகத்தையொட்டி பிரம்மோச்சவமும், தேர்த்திருவிழாவும் நடைபெறுகிறது. இக்கோவில் மண்டபங்களை 150 ஆண்டுக்கு முன்பு திருப்பணி செய்தோர்: கொண்டமல்லி சங்கய்யா நாயக்கர் மகன் சின்ன முராரி நாயக்கர், லக்காபுரம் முத்துக் குமரக் கவுண்டர். இக்கோவிலில் இன்னொரு சிறு திருப்பணியை செய்தவர்: பெரியார் ஈ.வே.ரா.வின் தாயார். வெளிப்பிரகாரத்தில் உள்ள குத்துக்கல் தெரிவிக்கும் செய்தி: "ஈ வேங்கடாசல நாயக்கர் மனைவியார் சின்னத்தாயம்மாள் தன் சிறுவாட்டுப் பணத்தால் கடப்பைக் கல் பாவிய" செய்தி வெட்டப்பட்டுள்ளது. + +பெரும்பள்ளம் அணை, தூக்கநாயக்கன்பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கிடையே எழிலுடன் அமைந்துள்ளது. + + + + + + +இயேசு + +இயேசு ("Jesus", கி.மு. சுமார் 4 – கி.பி. சுமார் 30-33) என்பவர் கிறித்தவ சமயத்தின் மைய நபர் ஆவார். கிறித்தவர்கள் இயேசுவைக் கடவுளின் மகன் என்றும், பழைய ஏற்பாட்டில் முன்னுரைக்கப்பட்ட மெசியா (திருப்பொழிவு பெற்றவர், மீட்பர்) என்றும் நம்புகின்றனர். + +இயேசு, கலிலேய நாட்டில் வாழ்ந்த ஒரு யூதர் ஆவார். இவர் திருமுழுக்கு யோவான் என்பவரிடம் திருமுழுக்கு பெற்றார். அதைத்தொடர்ந்து நற்செய்தி அறிவிக்கும் ஊழியத்தைத் தொடங்கினார். அவர் தன் செய்தியை வாய்வழியாக அறிவித்து வந்தார். ஆகவே அவர் பெரும்பாலும் ரபி (போதகர்) என்று அழைக்கப்பட்டார். கடவுளை எவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று இயேசு தன் சக யூதர்களுடன் விவாதித்தார். மேலும் நோயாளிகளைக் குணப்படுத்தினார்; உவமைகள் மூலம் போதித்தார். இதனால் பல மக்கள் இயேசுவைப் பின்பற்றத் தொடங்கினர். பிறகு யூத அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட இயேசு, உரோம அரசின் முன் நிறுத்தப்பட்டார். அதைத்தொடர்ந்து உரோம ஆளுநர் பொந்தியு பிலாத்து என்பவரின் கட்டளைப்படி இயேசு சிலுவையில் அறையப்பட்டார். இயேசு இறந்த பிறகு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததாக நம்பிய அவரது சீடர்கள் இணைந்து தோற்றுவித்த சமுதாயம் பிறகு தொடக்கக்கால கிறித்தவமாக வளர்ந்தது. + +இயேசுவின் பிறப்பு வருடந்தோறும் டிசம்பர் 25ம் நாளன்று கிறிஸ்துமஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. அவர் சிலுவ���யில் அறையப்பட்ட நாள் புனித வெள்ளியாக போற்றப்படுகிறது. மேலும் அவர் உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் உயிர்ப்புப் பெருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. + +இயேசு தூய ஆவியின் மூலம் கருத்தரித்தார், கன்னி மரியாளின் மூலம் பிறந்தார், அற்புதங்களை நிகழ்த்தினார், பாவங்களைப் போக்க சிலுவையில் தன்னை பலியாகக் கொடுத்தார், சாவினின்று உயிர்த்தெழுந்தார், விண்ணேற்றம் அடைந்தார் மற்றும் பூமிக்கு மீண்டும் வருவார் ஆகிய நம்பிக்கைகள் கிறிஸ்தவ கோட்பாட்டில் அடங்கும். + +கிறித்தவர் அல்லாதவர்களும் இயேசுவை உயர்ந்தவராக ஏற்றிப் போற்றுகின்றனர். இசுலாம் சமயத்தில் இயேசு முக்கியமான இறைத்தூதர்களில் ஒருவராகவும் மெசியாவாகவும் கருதப்படுகிறார். இசுலாமிய மதத்தவர் இயேசுவைக் கடவுள் அனுப்பிய முக்கியமான இறைத்தூதர் என்றும் கன்னி மரியாளிடம் பிறந்தார் என்றும் ஏற்றுக்கொண்டாலும், அவரைக் "கடவுளின் மகன்" என்று ஏற்பதில்லை. மெசியா குறித்த இறைவாக்குகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்பதால் இயேசு மெசியா இல்லை என்று யூத மதத்தினர் வாதிடுகின்றனர். + +"இயேசு" என்னும் சொல் "Iesus" என்று அமைந்த இலத்தீன் வடிவத்திலிருந்தும், அதற்கு மூலமான (') என்னும் கிரேக்க வடிவத்திலிருந்தும் பிறக்கிறது. இந்த வடிவங்களுக்கு அடிப்படையாக இருப்பது எபிரேயப் பெயர். அது எபிரேய மொழியில் ("Yĕhōšuă‘", Joshua) எனவும், எபிரேய-அரமேய மொழியில் ("Yēšûă‘") எனவும் அமைந்ததாகும். "கடவுள் (யாவே) விடுதலை (மீட்பு) அளிக்கிறார்" என்பதே இயேசு என்னும் சொல்லின் பொருள். + +"கிறிஸ்து" என்னும் சொல் "திருப்பொழிவு பெற்றவர் (அபிடேகம் செய்யப்பட்டவர்)" என்னும் பொருளுடையது. அதன் மூலம் + +எபிரேய வழக்கப்படி, அரசர் மற்றும் இறைவாக்கினர் மக்களை வழிநடத்துகின்ற தலைமைப் பணியை ஏற்கும்போது அவர்கள் தலையில் எண்ணெய் வார்த்து, அவர்களிடம் அப்பணிப்பொறுப்பு ஒப்படைக்கப்படும். இயேசு கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, கடவுளின் வல்லமையால் மனித குலத்தை மீட்டு அவர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பைப் பெற்றார் என்னும் அடிப்படையில் "கிறிஸ்து" (மெசியா, திருப்பொழிவு பெற்றவர்) என அழைக்கப்படுகிறார். அவரை மெசியா என ஏற்று வணங்குவோர் அவர் பெயரால் "கிறிஸ்தவர்" ("கிறித்தவர்") என அறியப்பெறுகின்றனர் . + +இயேசுவின் வாழ்க்கை வரலாறு பற்றிய செய்திகளை அற���ந்துகொள்ள முக்கிய ஆதார ஏடுகளாக இருப்பவை நான்கு நற்செய்தி நூல்கள் ஆகும். இவை கிறித்தவ விவிலியத்தின் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ளன. அதன்படி இயேசு கிறிஸ்து என்னும் ஒரு மனிதர் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் யூத இனத்தில் பிறந்தார் என்றும், மக்களுக்குக் கடவுள் பெயரால் போதனை வழங்கினார் என்றும், சிலுவையில் அறையப்பட்டு உயிர்துறந்தார் என்றும், அவரது இறப்பிற்குப் பிறகு அவர் மீண்டும் உயிர்பெற்றெழுந்தார் என்னும் நம்பிக்கையில் அவர்தம் சீடர்கள் அவரைக் கடவுளாக ஏற்று பின்பற்றினார்கள் என்றும் அறிய முடிகிறது. + +இயேசுவின் வரலாறு பற்றிய செய்திகள் விவிலியத்திற்கு வெளியேயும் உள்ளன. அங்கே நற்செய்தி நூல்களில் வருகின்ற இயேசு, திருமுழுக்கு யோவான், யாக்கோபு, உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்து, பெரிய குரு அன்னா போன்றோரின் பெயர்கள் காணப்படுகின்றன. இயேசுவின் வரலாற்றோடு தொடர்புடைய நிகழ்ச்சிகள் குறிப்பிடப்படுகின்றன. + +தற்போது வழக்கிலுள்ள கிரகோரியன் ஆண்டுக்கணிப்பு கி.மு., கி.பி. என்று, அதாவது, "கிறிஸ்துவுக்கு முன்", "கிறிஸ்துவுக்குப் பின்" என்றுள்ளது. "ஆண்டவரின் ஆண்டுக்கணிப்பு" (Anno Domini) என்னும் பெயரில் இக்கணிப்பு முறையை உருவாக்கியவர் சிரியாவில் 5-6ஆம் நூற்றாண்டளவில் வாழ்ந்த தியோனிசியசு அடியார் (Dionysius Exiguus) என்னும் துறவி ஆவார். இவர் கணக்கிட்ட முறையில் ஒரு தவறு நிகழ்ந்ததால் இயேசுவின் பிறப்பு ஆண்டை ஒரு சில ஆண்டுகள் முன்தள்ளிப் போட்டுவிட்டார். + +இன்றும்கூட, கிறிஸ்து பிறந்த ஆண்டும் நாளும் யாதெனத் துல்லியமாக அறிய இயலவில்லை. இயேசுவின் வாழ்க்கையையும் அவர் வழங்கிய போதனைகளையும் விரிவாகத் தருகின்ற புதிய ஏற்பாட்டு நூல்களிலிருந்தும் இத்தகவலைத் துல்லியமாகப் பெற முடியவில்லை. ஆனால் அந்நூல்கள் மட்டுமே இயேசுவின் பிறப்புப் பற்றி தகவல்களைத் தருகின்றன. இந்நால்வரில் மத்தேயுவும் லூக்காவும் இயேசுவின் பிறப்புப் பற்றிய விவரங்களை அளிக்கின்றனர். + +மத்தேயு நற்செய்திப்படி, "ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார்" . வரலாற்று அடிப்படையில், பெரிய ஏரோது என்று அழைக்கப்படும் அரசன் கி.மு. 4ஆம் ஆண்டில் இறந்தான். இயேசு பிறந்த செய்தியைக் கேட்டதும் ஏரோது தன் ஆட்சியைக் கவிழ்க்க ஒருவர் பி��ந்துவிட்டார் என்று கலக்கமுற்று, "பெத்லகேமிலும் அதன் சுற்றுப்புறமெங்கும் ஆள்களை அனுப்பி இரண்டு வயதும் அதற்கு உட்பட்டவையுமான எல்லா ஆண் குழந்தைகளையும் கொன்றான்" என்று மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது . எனவே, மத்தேயு தருகின்ற மேலிரு தகவல்களையும் கவனத்தில் கொண்டால், ஏரோது இறப்பதற்கு முன்னால் இயேசுவுக்கு சுமார் 2 வயது ஆகியிருக்கும் என கணிக்கலாம். ஆக, இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம். + +லூக்கா நற்செய்திப்படி, "சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராய் இருந்தபோது முதன்முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்ட" காலக்கட்டத்தில் இயேசு பிறந்தார் . குரேனியு மக்கள்தொகை கணக்கிட்டது கி.மு. 6ஆம் ஆண்டு என்று வரலாற்று ஏடுகளிலிருந்து தெரிகின்றது. எனவே லூக்கா கணிப்புப்படியும் இயேசு கி.மு. 6ஆம் ஆண்டளவில் பிறந்திருக்கலாம். + +மத்தேயுவும் லூக்காவும் இயேசு ஏரோது அரசன் காலத்தில் பிறந்தார் என்று கூறுவதால் ஏரோது இறந்த ஆண்டாகிய கி.மு. 4ஆம் ஆண்டில், அல்லது அதற்கு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இயேசு பிறந்தார் என்பது பொருந்தும் என்பது வரலாற்றாசிரியர் கருத்து. + +நான்கு நற்செய்திகளின் படி இயேசுவின் வாழ்க்கைச் சுருக்கம்: + + +இயேசுவின் தாயாரான மரியாவின் கணவர் யோசேப்பு என்பவர் இயேசுவின் வளர்ப்புத் தந்தை ஆவார் . மத்தேயுவும் லூக்காவும் தருகின்ற பட்டியல்படி, இயேசு ஆபிரகாம் மற்றும் தாவீது அரசன் வழி வருபராவார். இயேசுவின் வளர்ப்புத் தந்தையான யோசேப்பு பற்றி இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கு பின்னர் குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. இயேசு பகிரங்க வாழ்க்கையை, அதாவது போதிக்கும் பணியை ஆரம்பிக்கும் முன்னரே யோசேப்பு இறந்திருக்க கூடும் என ஊகிக்கப்படுகிறது. இது இயேசு சிலுவையில் தொங்கும் போது தம் தாயைக் கவனித்துக்கொள்ளுமாறு அவர்தம் அன்புச்சீடருக்குப் பணித்ததிலிருந்து தெளிவாகிறது . + +விவிலியத்தில், யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா என்பவர்கள் இயேசுவின் "சகோதரர்" என குறிப்பிடப்பட்டிருந்தபோதிலும் , அவர்கள் யோசேப்புக்கும் மரியாவுக்கும் பிறந்தவர்களா அல்லது சகோதரர்கள் முறை கொண்டவர்களா என்பது குறிப்பிடப்படவில்லை. மேலும் முதலாம் நூற்றாண்டின் யூத வரலாற்று ஆசிரியரான யோசேஃபசு என்பவரும் யாக்கோபை இயேசுவின் "சகோதரர்" என குறிப்பிடுகிறார். அவருடைய கூற்று நற்செய்தி நூல்கள் தரும் செய்தியோடு ஒத்திருக்கின்றன. + +புனித பவுலும் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் "ஆண்டவரின் சகோதரரான யாக்கோபு" என குறிப்பிடுகிறார். மேற்கூறிய இடங்களில் எல்லாம் "adelphos" என்னும் கிரேக்க மூலச் சொல்லே "சகோதரர்" என்று பெயர்க்கப்பட்டுள்ளது. இது ஒரு தாய் வழிவராச் சகோதரரையும் குறிக்கலாம்; பெற்றோரின் சகோதரர்களுக்குப் பிறந்தோரையும் குறிக்கலாம். மேலும், அக்காலத்தில் ஒரே நம்பிக்கைக்குள் ஒன்றுபட்டு இருந்தவர்களையும் "சகோதரர்கள்" என்று அழைப்பது வழமையாயிருந்தது. இன்னொரு கருத்துப்படி, மரியாவின் கணவரான யோசேப்பு ஏற்கனவே மணமாகி, தம் மனைவி இறந்தபின்னர் மரியாவை மணந்துகொண்டார் எனவும், முந்திய மணத்திலிருந்து அவருக்குப் பிறந்த குழந்தைகளே "இயேசுவின் சகோதரர்" என்று குறிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது. + +ஆகவே நற்செய்தி நூல்களில் "இயேசுவின் சகோதரர்" என்று குறிப்பிடப்படுவோர் மரியாவுக்கு பிறந்தவர்கள் இல்லை; மரியா கணவனின் துணையின்றி இயேசுவைக் கருத்தரித்தார் என்றும், எப்போதும் கன்னியாகவே வாழ்ந்தார் என்றும் கத்தோலிக்கர் உட்பட பெரும்பான்மையான கிறித்தவ சபைகள் ஏற்று நம்புகின்றன; இதுவே அச்சபைகளின் போதனையும் ஆகும். + +புதிய ஏற்பாட்டில் யோவானின் தாயாகிய எலிசபெத்து மரியாவின் உறவினர் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கிடையே நிலவிய உறவு முறை யாதென்று குறிப்பிடப்படவில்லை. + +மத்தேயு லூக்கா நற்செய்திகளில் கூறியுள்ளபடி இயேசு யூதேயாவிலுள்ள பெத்லகேமில் கன்னிமரியாவிடமிருந்து கடவுளின் வல்லமையாகிய தூய ஆவியினால் பிறந்தார். லூக்கா நற்செய்தியின்படி கபிரியேல் வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று வாழ்த்துக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அச்சமுற்றுக் கலங்கிய மரியாவைப் பார்த்து, கபிரியேல் வானதூதர், "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்" என்றுரைத்தார். இந்நிகழ்வு "கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு" அல்லது "மங்கள வார்த்தையுரைப்பு" (Annunciation) என நினைவு கூரப்பட்டு மார்ச்சு மாதம் 25ஆம் நாள் வி���ாவாகக் கொண்டாடப்படுகிறது. அந்நாளில் இயேசு மரியாவின் வயிற்றில் கருவானார் என்று கணக்கிட்டு ஒன்பது மாதங்கள் கழிந்து, டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்து பிறப்பு விழாவைக் கிறித்தவர் கொண்டாடுகின்றனர். + +இயேசு பிறந்த நிகழ்ச்சியை விவரிக்கும் நற்செய்தி நூல்கள் யோசேப்பும் மரியாவும் அப்போது யூதேயாவை ஆண்ட அகுஸ்து சீசர் என்னும் அரசன் இட்ட கட்டளைக்கு ஏற்ப, மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் தங்களைப் பதிவு செய்யச் சென்றார்கள் என்று கூறுகின்றன . யோசேப்பு தமக்கு மண ஒப்பந்தமான மரியாவைக் கூட்டிக்கொண்டு நாசரேத்திலிருந்து தம் சொந்த ஊரான பெத்லகேமுக்குப் பெயர் பதிவுசெய்யச் சென்றார். அப்போது மரியாவுக்குப் பேறுகாலம் நெருங்கியது. அவரும் தம் குழந்தையாகிய இயேசுவை ஒரு மாட்டுத் தொழுவத்தில் பெற்றெடுத்து, குழந்தையைத் துணிகளில் பொதிந்து தீவனத் தொட்டியில் கிடத்தினார் . + +இயேசுவின் பிறப்பு முதலாவதாக இடையர்களுக்கு வானதூதரால் அறிவிக்கப்பட்டு அவர்கள் வந்து இயேசுவைப் பணிந்தார்கள். மேலும், மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவின் பிறப்பின் போது ஒரு அதிசய விண்மீன் தோன்றியது. இதனைப் பார்த்த ஞானிகள் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என்று அறிந்து பெத்லகேம் வந்து இயேசுவைக் கண்டு பணிந்தார்கள். பொன், தூபம், வெள்ளைப்போளம் ஆகிய பரிசுப் பொருள்களையும் அவர்கள் இயேசுவுக்குக் காணிக்கையாகக் கொடுத்தனர். மேலும் அப்போது யூதாவை ஆண்டுவந்த ஏரோது மன்னன் யூதரின் அரசன் பிறந்துள்ளார் என அறிந்து அப்பிரதேசத்திலிருந்த இரண்டுவயதுக்குக் குறைவான சகல ஆண்குழந்தைகளையும் கொலை செய்வித்தான். எனினும் முன்னரே தேவதூதரால் எச்சரிக்கப்பட்ட யோசேப்பு மரியாவையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு தப்பிச் சென்றார். ஏரோது இறந்த பின்னர் யோசேப்பு, மரியா, இயேசு ஆகியோரை உள்ளடக்கிய "திருக்குடும்பம்" யூதா நாட்டுக்குத் திரும்பி நாசரேத்து என்னும் ஊரில் குடியேறியது . + +இயேசுவின் குழந்தைப் பருவத்துக்கும் இளமைப் பருவத்துக்குமிடையே இயேசு 12 வயதில் எருசலேம் கோவிலுக்குச் சென்ற நிகழ்வுமட்டுமே விவிலியத்தில் (லூக்கா நற்செய்தியில்) குறிப்பிடப்பட்டுள்ளது . இடைப்பட்ட காலத்தில் இயேசு என்ன செய்தார் என்பது விவிலியத்தில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படாத சில நற��செய்திகளில் கற்பனைக் கதைபோல் மட்டுமே கூறப்பட்டுள்ளது (காண்க: இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறு) + +இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்குப் பெற்றார் என்னும் செய்தி மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகிய மூன்று நற்செய்தி நூல்களிலும் உள்ளது. +யோவான் நற்செய்தி இந்நிகழ்ச்சியைக் குறிப்பிடவில்லை. + +மாற்கு நற்செய்தியின்படி, இயேசு யோர்தான் ஆற்றருகே வந்து, அங்கே திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த யோவானிடம் தாமும் திருமுழுக்குப் பெற்றார். ஆற்றிலிருந்து இயேசு கரையேறியபோது தூய ஆவி அவர்மீது புறா வடிவில் வந்திறங்கினார். மேலும் "என் அன்பார்ந்த மகன் நீயே. உன்பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. + +லூக்கா நற்செய்தியில் யோவான் போதிக்க தொடங்கியது திபேரியு (Tiberius) சீசரின் 15வது ஆண்டு என்னும் குறிப்பு உள்ளது (காண்க: லூக்கா 3:1). இது கி.பி. 28/29ஆம் ஆண்டு ஆகும். இயேசு பிறந்தது கி.மு. சுமார் 4ஆம் ஆண்டு என்று கொண்டால், அவர் திருமுழுக்குப் பெற்றபோது சுமார் 32 வயதினராக இருந்திருப்பார். + +இயேசு திருமுழுக்குப் பெற வந்ததைக் கண்ட யோவான் இயேசுவைத் தடுத்து, "நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?" என்று கூறியதாக மத்தேயு நற்செய்தி குறிப்பிடுகிறது. ஆனால் இயேசு அவரைப் பார்த்து, "இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை" என்று பதிலளித்தார்; பின்னர் யோவானின் கைகளால் திருமுழுக்குப் பெற்றார். + +திருமுழுக்குப் பெற்ற பின்னர் இயேசு பாலைநிலத்துக்குச் சென்று 40 நாள்கள் நோன்பிருந்தார். அப்போது அலகை அவரை மூன்று முறை சோதித்தது. மூன்று முறையும் இயேசு வென்றார். பின்னர் இயேசு பாலைநிலத்தை விட்டகன்று, மக்களுக்கு "இறையரசு" பற்றிய நற்செய்தியை அறிவிக்கலானார். தம்மோடு இருக்கவும் மக்களுக்கு இறையரசு பற்றிய நற்செய்தியை அறிவிக்கவும் இயேசு தமக்கென சீடர்களைத் தெரிந்துகொண்டார் . + +இயேசு புரிந்த பொதுப் பணி அவர் திருமுழுக்குப் பெற்றதிலிருந்து தொடங்கியது எனலாம். திருமுழுக்கின்போது இயேசு தாம் ஆற்ற வேண்டிய பணியொன்று உளது என உணர்ந்தார். அப்பணியைக் கடவுளே தம்மிடம் ஒப்படைத்ததையும் அறிந்தார். இயேசு உண்மையிலேயே கடவுளின் மகன் என்னும் உண்மை��ும் அவர் பெற்ற திருமுழுக்கின்போது வெளிப்படுத்தப்பட்டது. + +ஆக, கடவுள் தம்மை ஒரு சிறப்புப் பணி ஆற்றிட அனுப்பியுள்ளார் என்பதை உளமார உணர்ந்த இயேசு "கடவுளின் ஆட்சி இவ்வுலகில் வந்துகொண்டிருக்கின்றது" என்னும் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார். கடவுளின் ஆட்சியில் மக்கள் பங்கேற்க வேண்டும் என்றால் அவர்கள் தம் பழைய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு, புதியதொரு வாழ்க்கை முறையைத் தழுவ வேண்டும் என்று இயேசு போதிக்கலானார். + +இயேசு தம் பொதுப் பணியை நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தொடங்கினார் என்று லூக்கா நற்செய்தி கூறுகிறது (காண்க: லூக்கா 4:16-21). நாசரேத்து ஊரில் யூதர்களுக்கு ஒரு தொழுகைக் கூடம் இருந்தது. அங்கு இயேசு சென்று, பண்டைக்கால இறைவாக்கினருள் ஒருவராகிய எசாயா இறைவாக்கினரின் ஏட்டுச் சுருளிலிருந்து ஒரு பகுதியை மக்கள் முன்னிலையில் வாசித்து அறிக்கையிட்டார். + +எசாயா இறைவாக்கினரின் நூலிலிருந்து இயேசு வாசித்த பகுதி இதோ: + +"ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில் அவர் எனக்கு அருள்பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவும்...என்னை அனுப்பியுள்ளார்." + +எசாயா நூலில் வருகின்ற "ஒடுக்கப்பட்டோர்", "உள்ளம் உடைந்தோர்", "சிறைப்பட்டோர்", "கட்டுண்டோர்" ஆகிய அனைவருமே "ஏழைகள்." +அவர்களுக்கும், எல்லாவித அடக்குமுறைகளால் துன்புறும் அனைவருக்கும் விடுதலையும் விடியலும் வழங்குபவர் இறைவன். அதுவே கடவுளடமிருந்து வருகின்ற "நற்செய்தி" (நல்ல + செய்தி). இப்பின்னணியில் இயேசுவின் போதனைப் பணி புரிந்துகொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு வி்டுதலை வழங்க இயேசு கையாண்ட ஒரு வழியே அவரது போதனைப் பணி. + +"செய்தி" என்னும் சொல்லுக்கு "நடந்த நிகழ்ச்சி" என்பது பொதுவாகத் தரப்படும் பொருள். ஆகவே கடந்த காலம் பற்றிய குறிப்பு அதிலே உண்டு. அதே நேரத்தில், அண்மையில் நடந்த நிகழ்ச்சி, நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சி "செய்தியாக" கொள்ளப்படுகிறது. இயேசு வழங்கிய போதனை நம்பிக்கை, உற்சாகம், ஊக்கம், எதிர்பார்ப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொணர்ந்த செய்தியாக அமைந்ததால் அது உண்மையிலேயே "நற்செய்தி" ஆயிற்று. + +புதிய ஏற்பாட்டில் அடங்கியுள்ள நான்கு நற்செய்தி நூல்களும் இயேசுவை "மெசியா, மானிட மகன், ஆண்டவர், இறைவாக்கினர், இறைமகன்" என்னும் பல பெயர்களால் அழைக்கின்றன. இயேசு தம்மைப் பற்றிப் பேசும்போது "மானிட மகன்" என்னும் பெயரையே கையாளுகின்றார். + +நற்செய்தி நூல்கள்படி, இயேசு மக்களுக்கு அறிவித்த மையச் செய்தி இறையாட்சி அல்லது விண்ணரசு என்பதாகும். நற்செய்தி நூல்களில் எந்த ஓர் இடத்திலும் இயேசு "இறையாட்சி" என்றால் இதுதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. ஆனால், இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது என்பதை அவர் பல சிறு கதைகள் அல்லது உவமைகள் வழியாக எடுத்துக் கூறினார். இறையாட்சியில் பங்கேற்க விரும்புவோர் எவ்வழியில் நடக்க வேண்டும் என்பதைக் கற்பித்தார். கண்பார்வை இழந்தோருக்குப் பார்வை அளித்தும், முடக்குவாதமுற்றவருக்கு நடக்கும் திறமளித்தும், தொழுநோயாளருக்கும் தீய ஆவியால் அவதியுற்றோருக்கும் நலமளித்தும் இயேசு பல புதுமைகள் மற்றும் அரும்செயல்களைப் புரிந்தார். இவ்வாறு மக்களுக்கு நலமளித்த இயேசு அவர்களின் பசியைப் போக்க அற்புதமான விதத்தில் உணவளித்தார் என்னும் செய்தி நான்கு நற்செய்தி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது . + +இயேசு இறந்தோருக்கு மீண்டும் உயிரளித்த நிகழ்ச்சிகளும் நற்செய்தி நூல்களில் உள்ளன . இயேசு தாமே ஒருநாள் சாவின்மீது வெற்றிகொண்டு உயிர்பெற்றெழுவார் என்பதற்கு இந்நிகழ்ச்சிகள் முன்னோடிபோல் அமைந்தன. + +இறையாட்சி என்பது கடவுளின் ஆளுகை இவ்வுலகில் வருவதைக் குறிக்கும். பழைய ஏற்பாட்டில் இசுரயேல் மக்கள் நடுவே கடவுளை அரசராகக் காணும் வழக்கம் நிலவியது. தாவீது, சாலமோன் போன்ற அரசர்கள் இசுரயேல் மக்கள்மீது ஆட்சி செலுத்திய காலத்தில் கூட, அம்மக்கள் கடவுளைத் தங்கள் அரசராக ஏற்று வழிபட்டனர். இயேசு கடவுளின் ஆட்சி இவ்வுலக மக்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்துக்கு ஏற்ப நடப்பதில் அடங்கியிருக்கிறது என்று விளக்கம் தந்தார். கடவுள் எந்த மதிப்பீடுகளை உயர்ந்தனவாகக் கருதுகிறாரோ அம்மதிப்பீடுகளை மனிதர் தம் வாழ்வில் கடைப்பிடிக்கும்போது அங்கே கடவுளின் ஆட்சி நிலவுகிறது எனலாம். இந்த ஆட்சி இயேசுவின் வழியாக இவ்வுலகில் செயல்படலாயிற்று என்று நற்செய்தி நூல்கள் விளக்குகின்றன. இயேசு அறிவித்த இறையாட்சி என்னும் கருத்து வரலாற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அக்கருத்து கிறித்தவ சமய வரலாற்றிலும் பிற சமய மரபுகளிலும் அறிஞர் சிந்தனையிலும் வெவ்வேறு அழுத்தங்களை ஏற்றது. + +இறையாட்சி (விண்ணரசு) எதில் அடங்கியுள்ளது, அதன் பண்புகள் என்ன என்பதையெல்லாம் இயேசு தம் போதனை வழியாகவும் செயல் வழியாகவும் காட்டினார். நல்ல சமாரியர் என்னும் கதை வழியாக உண்மையான அன்பு எதில் அடங்கியிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தினார் (காண்க: லூக்கா 10:25-37). கள்வர் கையில் அகப்பட்டு, குற்றுயிராய்க் கிடந்த மனிதருக்கு இரக்கம் காட்டி, அவர் நலம் பெறுவதற்கு அனைத்தையும் செய்துகொடுத்தார் அந்த சமாரியர். யூதர் பார்வையில் சமாரியர் என்றால் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்; மக்களால் புறக்கணிக்கப்பட்டவர். ஆனால் அந்த "தாழ்ந்த" மனிதரே கடவுளின் பார்வையில் உயர்ந்தவரானார். அவர் உண்மையிலேயே இறையாட்சியின் மதிப்பீட்டைத் தம் வாழ்வில் செயல்படுத்திக் காட்டினார். அதற்கு நேர்மாறாக, யூத சமயத் தலைவர்கள் அன்பும் இரக்கமும் காட்ட முன்வரவில்லை; தங்கள் சமயச் சடங்குகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள். இத்தகைய போக்கை இயேசு பல இடங்களில் கண்டித்துரைத்தார் . + +இயேசுவின் பொதுப்பணிக் காலத்தில் அவர் மூன்று முறை எருசலேம் நகருக்குச் சென்று பாஸ்கா விழாவில் பங்கேற்றதாக யோவான் நற்செய்தி குறிப்பிடுகிறது. இதிலிருந்து இயேசுவின் பணி வாழ்வு மூன்று ஆண்டுகள் நீடித்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், மத்தேயு, மாற்கு, லூக்கா நற்செய்திகள் இயேசு தம் பணிக்காலத்தில் ஒருமுறை மட்டுமே எருசலேமுக்குச் சென்றதாகக் காட்டுகின்றன. இந்த முரண்பாடான செய்திகளை எவ்வாறு இணைப்பது என்று அறிஞரிடையே ஒத்த கருத்து இல்லை. + +இயேசு பொதுமக்களுக்கு போதித்தார் எனினும் தம்மோடு நெருங்கிய உறவுகொண்டிருந்த தம் சீடர்களுக்கும் திருத்தூதர்களுக்கும் தம் போதனையின் உள்கிடக்கையை விளக்கிக் கூறினார் (காண்க: "விதைப்பவர் உவமை" - ; அந்த உவமைக்கு இயேசு விளக்கம் தருதல் - ) இயேசு கூடுதலாகப் போதனை செய்த இடங்கள் கலிலேயா (இன்றைய வட இசுரேல்) மற்றும் பெரேயா (இன்றைய மேற்கு யோர்தான்) என்பனவாகும��. + +இயேசு வழங்கிய முக்கியமான போதனைகளில் ஒன்று "மலைப்பொழிவு" ஆகும். எல்லா மனிதரையும் நாம் அன்புசெய்ய வேண்டும் என்றும், குறிப்பாக நம் எதிரிகளை வெறுக்காமல் அவர்களை மன்னித்து ஏற்கவேண்டும் என்றும் இயேசு வழங்கிய போதனை மலைப்பொழிவில் உள்ளது. இயேசுவின் இப்போதனை தம் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். + +இயேசு வழங்கிய மலைப்பொழிவு மத்தேயு நற்செய்தியில் உள்ளது (காண்க: மத்தேயு - அதிகாரங்கள் 5 முதல் 7 முடிய). இப்பொழிவைப் பெரிதும் ஒத்த இன்னொரு பொழிவு "சமவெளிப் பொழிவு" என்று அழைக்கப்படுகிறது. அது லூக்கா நற்செய்தியில் உள்ளது . + +இயேசு வழங்கிய மலைப்பொழிவின் தொடக்கப்பகுதி கீழே தரப்படுகிறது: + +மத்தேயு 5:1-12 + +"1 இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவரருகே வந்தனர். +2 அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை: +3 ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. +4 துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். +5 கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். +6 நீதிநிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவுபெறுவர். +7 இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். +8 தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். +9 அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். +10 நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது. +11 என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! +12 மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். இவ்வாறே உங்களுக்கு முன்னிருந்த இறைவாக்கினர்களையும் அவர்கள் துன்புறுத்தினார்கள்." + +இயேசு மக்களுக்குப் பெரும்பாலும் சிறு கதைகள் அல்லது உவமைகள் வழி போதித்தார். அவற்றுள் சிறப்பு வாய்ந்த ஒரு சில உவமைகள் இதோ: + + +இயேசு பல உவமைகள் வழியாக இறையாட்சி பற்றிய உண்மைகளை மக்களுக்கு அறிவித்தார்; இறையாட்சியில் பங்��ுபெற மக்கள் முன்வருமாறு அழைப்பு விடுத்தார்; இறையாட்சியின் பண்புகளை விளக்கினார். குறிப்பாக, எல்லா மக்களும் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, கடவுளையும் மனிதரையும் அன்புசெய்து வாழ்ந்திட வேண்டும் என்று இயேசு போதித்தார். பகைவரையும் மன்னிக்க வேண்டும் என்பது அவர் வழங்கிய முக்கிய போதனைகளில் ஒன்று. தம்மைத் துன்புறுத்தி, சிலுவையில் அறைந்த பகைவரை அவரே மனதார மன்னித்தார். + + +இயேசு இறையாட்சி பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் தங்கள் பாவ வழிகளிலிருந்து விலகி மன மாற்றமடைந்து இறையாட்சியை நம்பி ஏற்க வேண்டும் என்று விடுத்த அழைப்பைப் பொதுமக்கள் விருப்போடு ஏற்றனர். ஆனால் யூத சமயத் தலைவர்கள் பலர் இயேசு வழங்கிய செய்தியை ஏற்க முன்வரவில்லை. அச்சமயத் தலைவர்கள் "பரிசேயர்", "சதுசேயர்", "மறைநூல் அறிஞர்", "தீவிரவாதிகள்" என்னும் பல பிரிவுகளைச் சார்ந்தவர்கள். + +இயேசு பரிசேயரின் வெளிவேடத்தைக் கடிந்துகொண்டார். மறைநூல் அறிஞரையும் கண்டித்தார் . ஆயினும் எல்லாப் பரிசேயர்களோடும் மறைநூல் அறிஞர்களோடும் இயேசு மோதினார் என்பது சரியல்ல. இயேசு பல முறை பரிசேயரின் வீட்டில் விருந்து அருந்தச் சென்றார் . நிக்கதேம் என்னும் பரிசேயர் இயேசுவை அணுகிச் சென்று அவரது போதனையைக் கேட்டார் (காண்க: யோவான் 3:10-21); இயேசுவுக்கு ஆதரவாகப் பேசினார் ; இறந்த இயேசுவின் உடலை நல்லடக்கம் செய்ய முன்வந்தார் . + +இறந்தோர் மீண்டும் உயிர்பெற்றெழுவர் என்னும் கொள்கையைப் பரிசேயரும் ஏற்றனர். ஆனால் சதுசேயர் அக்கொள்கையை ஏற்கவில்லை . + +அக்கால யூத சமுதாயத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்னும் வேறுபாடு நிலவியது. சமயச் சடங்குகளில் யார் பங்கேற்கலாம், யாரோடு உணவு அருந்தலாம், யாருடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்பது குறித்து தீட்டு பற்றிய சட்டங்கள் பல இருந்தன. அச்சட்டங்களை இயேசு வேண்டுமென்றே மீறினார் என்னும் செய்தி நற்செய்தி நூல்களில் பல இடங்களில் வருகிறது. அவரைப் பொறுத்தமட்டில் மக்களிடையே உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்னும் வேறுபாடு கிடையாது. எல்லா மனிதரும் ஒரே கடவுளின் பிள்ளைகளே. எனவேதான் அன்றைய சமுதாயம் பாவிகள் என்றும் ஒதுக்கப்பட்டவர் என்றும் தீட்டுப்பட்டவர் என்றும் கருதிய மக்களோடு ஒன்றாக அமர்ந்து விருந்துண்டார். அன்றைய தூய்மைச் சட்டங்களை மீற���னார். இதைக் கண்ட இயேசுவின் எதிரிகள் அவர் "வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன்" என்று இழித்துரைத்தார்கள். + +ஏழைகளோடும் தாழ்த்தப்பட்டவர்களோடும் இயேசு நெருங்கிப் பழகியது அம்மக்களது வாழ்க்கையில் அதிசயமான மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ளன. ஆனால் இயேசுவின் எதிரிகள் அவரிடம் குற்றம் கண்டனர். தாழ்ந்த தொழிலாகக் கருதப்பட்ட வரிதண்டும் தொழிலைச் செய்தவர் மத்தேயு. அவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்ட இயேசு அவரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா" என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு மத்தேயு வீட்டில் இயேசு விருந்து அருந்தினார். பரிசேயர்கள் இதைக் கண்டனர். உடனே அவர்கள் இயேசுவின் சீடரிடம், "உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு இயேசு அளித்த பதில் அவர் மனிதரிடையே ஏற்றத்தாழ்வு கற்பிக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. இயேசு கூறியது: "நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. 'பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்' என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்" என்றார். + +நற்செய்தி நூல்கள்படி, இயேசு தம் பணிக்கால இறுதியில், எருசலேம் நகரைச் சென்றடைந்தார். வெற்றி ஆர்ப்பரிப்போடு மக்கள் அவரை வரவேற்க அவர் நகருக்குள் நுழைந்தார் . அங்கு கோவில் வளாகத்தில் ஆடுமாடுகள், புறாக்கள் போன்ற பலிப்பொருள்களை விற்பதும் வாங்குவதுமாகச் சந்தடி நிலவியதைக் கண்டார். ஒருசிலர் நாணயம் மாற்றுவதில் மும்முரமாய் இருந்தார்கள். அவர்களைக் கண்டித்து இயேசு அனைவரையும் கோவிலிலிருந்து வெளியேற்றினார் . + +ஆனால், யூத சமயத் தலைவர்கள் இயேசுவை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவுசெய்திருந்தனர். இதிலிருந்து இயேசுவின் பாடுகள் (துன்பங்கள்) தொடங்குகின்றன. + +நற்செய்தி நூல்கள் நான்கும் இயேசுவின் துன்பங்கள் பற்றி விரிவாக விளக்குகின்றன . + +நான்கு நற்செய்தி நூல்களிலும் இயேசுவின் துன்பங்கள் பற்றிய வரலாறு மிகவும் ஒத்திருக்கின்றது. எனினும், சில வேறுபாடுகளும் உள்ளன. இயேசு துன்பம் அனுபவித்ததைக் கீழ்வரும் கட்டங்களாக விளக்கலாம்: + +1) யூதர்களின் பாஸ்கா விழா வருவதற்கும் சில நாள்களுக்கு முன் ஒரு பெண் நறுமணத் தைலத்தால் இயேசுவின் தலையில் பூசுகிறார். + +2) எருசலேமில் இயேசு தம் சீடர்களோடு பந்தியமர்ந்து இறுதி இரா உணவை அருந்துகிறார். அப்போது தம் சீடர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்; தம்மைச் சீடர்களில் ஒருவர் காட்டிக்கொடுப்பார் என்று முன் கூறுகிறார்; தம் உடலையும் இரத்தத்தையும் உலக மக்களின் மீட்புக்காகக் கையளிப்பதாகக் கூறுகிறார். அப்பத்தையும் இரசத்தையும் எடுத்து, சீடர்களுக்குக் கொடுத்து அது தம் உடலும் இரத்தமும் ஆகும் எனவும் தாம் செய்ததைச் சீடரும் தம் நினைவாகச் செய்யவேண்டும் என்கிறார். சீடர்களின் காலடிகளைக் கழுவி, தம் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி ஒருவர் மற்றவருக்குப் பணிபுரிய வேண்டும் என அறிவுறுத்துகிறார். + +3) உணவு அருந்திய பின் கெத்சமனித் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், தம் சீடர்கள் தம்மைக் கைவிடுவார்கள் என இயேசு கூறுகிறார். பேதுரு, "எல்லாரும் உம்மை விட்டு ஓடிப்போய்விட்டாலும் நான் ஒருபோதும் ஓடிப்போக மாட்டேன்" என்று துணிச்சலோடு கூறுகிறார். மனித இதயங்களை அறிந்த இயேசு அதற்குப் பதில்மொழியாக, "இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்" என்றுரைக்கிறார். + +4)இரவு: கெத்சமனித் தோட்டத்தில் இயேசு "துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார்" . தம் தந்தையாம் கடவுளை நோக்கி வேண்டல் செய்கிறார்: "என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக்கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப்படியே நிகழட்டும்" . இதற்கிடையே, இயேசுவே தேர்ந்தெடுத்திருந்த பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவராகிய யூதாசு இஸ்காரியோத்து வாளும் தடியும் தாங்கிய பெருங்கூட்டத்தோடு அங்கே வருகிறார்."ரபி வாழ்க" என்று கூறி இயேசுவை முத்தமிட்டுக் காட்டிக்கொடுக்கிறார் . இயேசுவைக் கைது செய்கிறார்கள். சீடர்களோ தங்கள் உயிருக்கு அஞ்சி, தம் குருவைக் கைவிட்டுவிட்டு ஓடிப்போகிறார்கள். + +5) இரவு: இயேசுவைப் பிடித்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயபாவிடம் கூட்டிச்செல்கிறார்கள். அங்கே, யூத தலைமைச் சங்க உறுப்பினராகிய மறைநூல் அறிஞரும் மூப்பர்களும் கூடி வந்து இயேசுவுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக ���வருக்கு எதிராகப் பொய்ச் சாட்சி தேடுகின்றனர். மன்ற விசாரணை நடக்கும்போது காவலர் ஒருவர் இயேசுவைக் கன்னத்தில் அறைகிறார் . இயேசுவுக்கு மரண தண்டனை விதித்து மன்றம் தீர்ப்பளிக்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, "பின்பு அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள். மேலும் சிலர் அவரைக் கன்னத்தில் அறைந்து, 'இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார் என்று சொல்' என்று கேட்டனர்" . பின்னர் "இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று ஆளுநன் பிலாத்திடம் ஒப்புவித்தனர்". இந்த பொந்தியு பிலாத்து (Pontius Pilate) யூதேயா நாட்டில் உரோமை ஆட்சியாளர்களின் பதிலாளாக இருந்து கொடிய விதத்தில் செயல்பட்டதாக வரலாறு. + +6) அதே இரவு: தலைமைக் குருவின் வீட்டு முற்றம்வரை வந்து, இயேசுவுக்கு என்ன நேரிடும் என்பதை அறிய பேதுரு உள்ளே நுழைந்து காவலரோடு உட்கார்ந்திருக்கிறார். அப்போது காவலர்கள் பேதுருவை அடையாளம் கண்டுகொண்டு, "நீயும் கலிலேயனாகிய இயேசுவோடு இருந்தவன் தானே" என்று கேட்கின்றனர். அதற்கு பேதுரு, "இம்மனிதனை எனக்குத் தெரியாது" என்று மும்முறை அடித்துக் கூறி மறுதலித்துவிட்டார் . உடனே சேவல் கூவிற்று. "அப்பொழுது, 'சேவல் கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று இயேசு கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து வெளியே சென்று மனம் நொந்து அழுதார்" . + +7) மறுநாள் காலை: உரோமை ஆளுநன் பொந்தியு பிலாத்துவின் மாளிகை. பிலாத்து இயேசுவை விசாரித்துவிட்டு, "இவனிடத்தில் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று கூறுகிறான். ஆனால் யூத சமயத் தலைவர்களும் கும்பலும் சேர்ந்துகொண்டு "அவனைச் சிலுவையில் அறையும்" என்று உரக்கக் கத்துகிறார்கள் . கலகக்காரர்களோடு பிடிபட்ட குற்றவாளியாகிய பரபா என்பவனையோ இயேசுவையோ விடுதலை செய்ய பிலாத்து முன்வருகிறான். ஆனால் கும்பல் பரபாவை விடுவித்து இயேசுவைச் சிலுவையில் அறையும்படி கேட்கிறது. மத்தேயு நற்செய்திப்படி, இயேசுவுக்குத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைக் கண்டபோது அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசு மனம் வருந்தி தலைமைக் குருக்களிடமும் மூப்பர்களிடமும் இருந்து இயேசுவைக் கட்டிக்கொடுக்க கூலியாகப் பெற்றிருந்த முப்பது வெள்ளிக்காசுகளையும் திருப்பிக்கொடுக்க முயல்கின்றான்; அவர்களோ அதை வாங்க மறுக்கிறார்கள். காசுகளைக் கோவிலில் எறி���்துவிட்டு "புறப்பட்டுப் போய்த் தூக்குப் போட்டுக்கொண்டான்". + +8) யோவான் நற்செய்திப்படி, பிலாத்து இயேசுவோடு உரையாடலில் ஈடுபட்டு, "நீ அரசனா?" என்று கேட்டான். "அதற்கு இயேசு, 'அரசன் என்று நீர் சொல்கிறீர். உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவிசாய்க்கின்றனர்' என்றார். பிலாத்து அவரிடம், 'உண்மையா? அது என்ன?' என்று கேட்டான்". பிலாத்தின் ஆணைப்படி இயேசு சாட்டையால் அடிக்கப்பட்டார். வீரர்கள் ஒரு முள்முடி பின்னி இயேசுவின் தலையில் வைத்து, செந்நிற மேலுடையை அவருக்கு அணிவித்தார்கள். அவரிடம் தான் குற்றம் ஏதும் காணவில்லை என்று பிலாத்து கூறி, இயேசுவை அவர்களுக்குக் காட்டி, "இதோ! மனிதன்" என்றான். மத்தேயு நற்செய்திப்படி, பிலாத்து, இயேசுவின் இரத்தப்பழியில் தனக்குப் பங்கில்லை என்று கூறி "தன் கைகளைக் கழுவினான்" . + +9) யோவான் நற்செய்தியைத் தவிர மற்ற மூன்று நற்செய்திகளும் (ஒத்தமை நற்செய்திகள்), இயேசுவைக் கைது செய்தவர்கள் அவரைத் தலைமைக் குரு கயிபாவிடம் விசாரணைக்குக் கொண்டுசென்றதாகக் கூறுகின்றன. யோவான் நற்செய்தியின்படி, இயேசுவைக் கயிபாவின் மாமனார் அன்னாவும் விசாரித்தார். "இந்தக் கயபாதான், 'மக்களுக்காக ஒருவர் மட்டும் இறப்பது நல்லது' என்று யூதர்களுக்கு ஆலோசனை கூறியவர்". + +10) சாவுக்குத் தீர்ப்பிடப்பட்ட இயேசுவின் தோள்மேல் சிலுவையைச் சுமத்தினர். மரண தண்டனை விதிக்கப்பட்ட பிற குற்றவாளிகளைப் போல "இயேசு சிலுவையைச் சுமந்துகொண்டு 'மண்டை ஓட்டு இடம்' என்னுமிடத்திற்குச் சென்றார். அதற்கு எபிரேய மொழியில் கொல்கொதா என்பது பெயர்" . இயேசு சிலுவையைச் சுமக்க சீரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் கட்டாயப்படுத்தப்பட்டார் . இயேசுவின் துன்பத்தைக் கண்டு பெண்கள் மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்தார்கள்; அவர் பின்னே சென்றார்கள்; அப்போது இயேசு அவர்களுக்கு ஆறுதல் மொழி கூறினார் என்று லூக்கா குறிப்பிடுகிறார் . + +11) அங்கே இயேசுவைச் சிலுவையில் அறைந்து பிலாத்துவின் கட்டளைப்படி "நாசரேத்து இயேசு யூதர்களின் அரசன்" என எபிரேயம், இலத்தீன், கிரேக்கம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட பெயர்ப் பலகையை அவர் தலைக்கு மேல் தொங்கவிட்டனர் . காலை ஒன்பது மணி���்கு இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்கிறார் மாற்கு . அது காலை 9 தொடங்கி 3 மணி நேர இடைவெளியை (அதாவது நண்பகல்வரை) குறிக்கும். யோவான் கூற்றுப்படி, இயேசு சாவுக்குத் தீர்ப்பிடப்பட்டது பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள் "ஏறக்குறைய நண்பகல் வேளை" . அந்த நண்பகல் வேளையில்தான் யூத குருக்கள் பாஸ்கா ஆட்டுகுட்டியைக் கோவிலில் பலியிடத் தொடங்குவார்கள். ஆக, இயேசுவே பாஸ்கா ஆட்டிக்குட்டி போல பலியாக்கப்பட்டார் என்னும் கருத்து தொக்கிநிற்பதைக் காணலாம் . + +12) இயேசுவோடு வேறு இரண்டு குற்றவாளிகளும் (கள்வர்களும்) சிலுவையில் அறையப்பட்டிருந்தனர். அவர்கள் இருவ்ரு இயேசுவை இகழ்ந்ததாக லூக்கா தவிர மற்ற மூன்று நற்செய்தியாளரும் கூறுகின்றனர். லூக்கா மட்டும் அந்த, இரு கள்வரில் ஒருவன் இயேசுவின்மீது பரிவு காட்டியதாகக் குறிப்பிடுகிறார் . + +13) சிலுவையில் மூன்று மணி நேரம் தொங்கி இயேசு இறந்தார். அவர் சிலுவையில் தொங்கியபோது உரைத்த சொற்களை நற்செய்தியாளர்கள் வெவ்வேறு விதமாகப் பதிவு செய்துள்ளார்கள். பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வரிசைமுறை கீழ்வருமாறு: + + +இயேசு சிலுவையில் தொங்கியபோது கூறியதாக நற்செய்தி நூல்கள் பதிவுசெய்துள்ள மேற்காட்டிய கூற்றுக்களை விரித்துரைத்து அவற்றின் ஆழ்பொருளை எடுத்து விளக்கும் செயல் கிறித்தவ வரலாற்றில் சிறப்பான ஒன்று. + +14) இயேசு சிலுவையில் இறந்த சரியான நேரம் குறித்து வேறுபட்ட கருத்துகள் உள்ளன. பெரும்பான்மையோர் இயேசு பிற்பகல் 3 அளவில் இறந்தார் என்பர். யூதர்களின் நிசான் மாதம் 14ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அதாவது யூதர் பாஸ்கா விழாக் கொண்டாடுவதற்கு முந்திய நாள் இயேசு இறந்தார் என்பது பொதுவான கருத்து. இது பற்றி மாற்றுக்கருத்தும் உள்ளது. + +சிலுவையில் தொங்கிய இயேசு இறந்ததும், அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் பிலாத்துவை அணுகி, இயேசுவின் உடலைக் கேட்டார் என்றும், சிலுவையினின்று இறக்கிய உடலை மெல்லிய துணியால் சுற்றிப் பொதிந்து, அதற்கு முன்பு யாரையும் அடக்கம் செய்திராத ஒரு புதிய கல்லறையில் அந்த உடலை வைத்தார்கள் என்றும் லூக்கா நற்செய்தி கூறுகிறது . அவ்வாறே மாற்குவும் கூறுகிறார் . அக்கல்லறையை அரிமத்தியா யோசேப்பு தமக்கென வைத்திருந்தார் என்று மத்தேயு நற்செய்தி கூறுகிறது . இயேசுவை அடக்கம் செய்ததில் நிக்கதேம் என்பவரும் பங்கேற்றதை யோவான் குறிப்பிடுகிறார்: "முன்பு ஒருமுறை இரவில் இயேசுவிடம் வந்த நிக்கதேம் என்பவரும் அங்கு வந்து சேர்ந்தார். அவர் வெள்ளைப்போளமும் சந்தனத் தூளும் கலந்து ஏறக்குறைய முப்பது கிலோ கிராம் கொண்டுவந்தார்". + +இயேசு இறந்த நாள் பாஸ்கா விழாவுக்கு ஆயத்த நாளாக இருந்ததாலும் அக்கல்லறை அருகின் இருந்ததாலும் அவர்கள் இயேசுவை அதில் அடக்கம் செய்தார்கள் . கல்லறையின் வாயிலில் ஒரு பெருங்கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனதாக மத்தேயு கூடுதல் தகவல் தருகிறார் . இயேசுவின் அடக்கம் ஆழ்ந்த இறையியல் பொருள் கொண்டதாக தூய பவுல் விளக்குவார். + +விவிலியத்தின் படி, இயேசு சிலுவையில் அறையுண்ட மூன்றாவது நாள் சாவிலிருந்து உயிர்பெற்றெழுந்தார். இச்செய்தியை மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு நற்செய்தியாளர்கள் தவிர, தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் மடலிலும், திருத்தூதர் பணிகள் நூலிலும் கூட காண்கின்றோம். இயேசுவின் உயிர்த்தெழுதல் பற்றிய பகுதிகள் கீழ்வருவன: + + +இறந்து, கல்லறையில் அடக்கப்பட்ட இயேசு சாவை வென்று, உயிர்பெற்றெழுந்தார் என்னும் செய்தியை நான்கு நற்செய்திகளும் குறிப்பிட்டாலும், அவை தருகின்ற தகவல்களில் சிறிய வேறுபாடுகள் உள்ளன. ஒத்த கருத்தாக உள்ளவை இவை: + +1) "வாரத்தின் முதல் நாள்" பெண்கள் கல்லறைக்குச் சென்று, அது வெறுமையாயிருக்கக் கண்டார்கள். + +2) உயிர்பெற்றெழுந்த இயேசு முதன்முதலில் "பெண்களுக்கு" ("ஒரு பெண்ணுக்கு") காட்சியளித்து, அவர்கள் (அவர்) பேதுரு மற்றும் பிற சீடர்களைச் சந்தித்து, அந்த அதிசயச் செய்தியைப் பறைசாற்றும்படி கட்டளையிட்டார். + +3) இந்நிகழ்வில் மகதலா மரியா முதன்மையிடம் பெறுகிறார். + +4) இயேசுவின் கல்லறையை ஒரு கல் மூடியிருந்தது என்னும் செய்தி. + +சரியாக எந்த நேரத்தில் பெண்கள் கல்லறைக்குச் சென்றார்கள், எத்தனை பெண்கள் போனார்கள், யார்யார் அப்பெண்கள், எதற்காகப் போனார்கள், வெறுமையாகவிருந்த கல்லறை அருகே தோன்றியது "ஆண்டவரின் தூதரா" அல்லது "இளைஞரா", அவர்கள் பெண்களுக்குக் கூறிய செய்தி என்ன, பெண்கள் அதற்கு என்ன பதில் அளித்தார்கள் - என்பவை. + +இயேசு உயிர்த்தெழுந்து 40 நாட்களுக்கு பிறகு இயேசுவின் விண்ணேற்றம் நிகழ்ந்தது. + +இயேசு வைக்கப்பட்டிருந்த கல்லறை வெறுமையாய�� இருந்ததும், இயேசு உயிர்பெற்றெழுந்ததும் அவர் தம் சீடருக்குத் தோன்றிய நிகழ்ச்சிகளோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். இயேசு தம் சீடருக்குப் பல முறை காட்சியளித்ததாக நற்செய்தி நூல்களும் திருத்தூதர் பணிகள் நூலும் தெரிவிக்கின்றன. + + +1) பிளாவியுசு யோசேஃபசு (Flavius Josephus): இவர் கி.பி. சுமார் 37ஆம் ஆண்டில் பிறந்தார்; கி.பி. சுமார் 101இல் இறந்தார். இவர் யூத சமயத்தைச் சார்ந்த ஒரு குரு; வரலாற்று ஆசிரியர். யூத மக்கள் தங்கள் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய உரோமைப் பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த காலத்தில் (கி.பி. 66) இவர் வாழ்ந்தார். அக்கிளர்ச்சியின்போது உரோமையர் இவரைப் பிடித்துச் சிறையில் வைத்தனர். விடுதலை இவர் எழுதிய யூத மரபு வரலாறு (Jewish Antiquities) என்னும் நூல் சிறப்பு வாய்ந்தது. அதில் இயேசுவுக்குத் திருமுழுக்கு வழங்கிய யோவான் பற்றிய குறிப்பு உள்ளது. அந்நூலின் பகுதி 18, அதிகாரம் 5, பத்தி 2இல் யோசேஃபசு கீழ்வருமாறு குறித்துள்ளார்: + +"திருமுழுக்கு அளிப்பவர் என்னும் பெயர்கொண்ட யோவான் ஒரு நல்ல மனிதர். அவர் யூத மக்களுக்குப் போதித்தார். தூய்மை பெற்ற உள்ளத்தினராக மக்கள் அவரை அணுகி வந்தால் அவர்களுக்கு அவர் தண்ணீரினால் குளிப்பாட்டு அளிக்க முன்வந்தார். இதனால் அவர்கள் பாவங்கள் மட்டும் கழுவப்படும் என்றில்லாமல் அவர்களது உடலும் தூய்மையடையும். மக்கள் நற்பண்புடையவராக, ஒருவர் மற்றவர் மட்டில் நேர்மையோடும், கடவுளுக்கு அஞ்சியும் வாழ்ந்திட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். இத்தகைய ஒரு நல்ல மனிதரை ஏரோது மன்னன் கொன்றுபோட்டதால் கடவுள் எரோதின் படை அழிந்துபோகச் செய்து, அவனைத் தண்டித்தார்; அது நியாயமானதே". + +2) பிளாவியுசு யோசேஃபசு இயேசு பற்றிய தகவலும் தருகின்றார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 18, அதிகாரம் 3, பத்தி 3. இப்பகுதியில் யூதராகிய யோசேஃபசு இயேசுவை பெரிய அளவு புகழ்ந்து எழுதியிருப்பாரா என்றும், ஒருவேளை சில வரிகள் கிறித்தவரின் இடைச்செருகலாக இருக்கலாமோ என்றும் இன்றைய வரலாற்று ஆசிரியர்கள் ஐயம் எழுப்புகின்றனர். ஐயத்திற்கு உரிய பகுதிகள் கீழ்வரும் மேற்கோளில் சதுர அடைப்புக்குறிகளுக்குள் இடப்படுகின்றன. யோசேஃபசு கூறுகின்றார்: + +"ஏறக்குறைய அச்சமயத்தில் "இயேசு" என்னும் பெயர்கொண்ட ஞானியாகிய ஒரு மனிதர் இருந்தார் [அவரை "ம���ிதர்" என்று அழைக்க எனக்குத் தயக்கமாகவே உள்ளது]. அவர் அதிசய செயல்களை நிகழ்த்தினார்; உண்மையை உள மகிழ்வோடு தேடிய மக்களுக்கு அவர் ஆசிரியராக இருந்தார். யூதர், கிரேக்கர் உட்பட பலரும் அவரைப் பின்பற்றினார்கள். [அவரே திருப்பொழிவுபெற்ற மெசியாவாக இருந்தார்]. நம் நடுவே மிக உயர்ந்த நிலையில் இருந்தவர்கள் அவர்மீது குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, பிலாத்து அவரைச் சிலுவையில் அறைந்து கொல்லுமாறு தண்டனை விதித்தான். அப்படியிருந்தும் தொடக்கத்திலேயே அவர்மீது மதிப்புக் கொண்டிருந்தவர்கள் அவர்மீது தொடர்ந்து அன்பும் பாசமும் காட்டுவதை விட்டுவிடவில்லை. [மூன்றாம் நாளில் உயிர்பெற்றெழுந்து அவர் அவர்களுக்குக் காட்சியளித்தார். இது நிகழுமென்றும் இதுபோன்று அவர் குறித்த வேறு எண்ணிறந்த அதிசயங்கள் நிகழுமென்றும் இறைவாக்கினர் ஏற்கனவே முன்னுரைத்திருந்தனர்.] அவருடைய பெயரைக் கொண்டு "கிறித்தவர்" என்று அழைக்கப்படுகின்ற குழுவினர் இன்றுவரை நீடித்து வாழ்ந்துவருகின்றனர்". + +3)பிளாவியுசு யோசேஃபசு நூலின் அரபி மொழிபெயர்ப்பு: யோசேஃபசு எழுதிய யூத மரபு வரலாறு நூலின் அரபி மொழிபெயர்ப்பு ஒன்றுளது. அது கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அந்த மொழிபெயர்ப்பில் மேலே காட்டிய பகுதி கீழ்வருமாறு உள்ளது: +"அச்சமயம் இயேசு என்னும் பெயருடைய ஞானி ஒருவர் இருந்தார். அவர் நன்னடத்தையும் நற்பண்பும் கொண்ட மனிதர். யூதர்களும் பிற நாடுகளைச் சார்ந்தவர்களுமான பல மக்கள் அவருடைய சீடர்களாக மாறினர். சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும்படி பிலாத்து அவருக்குத் தீர்ப்பு வழங்கினான். அவருடைய சீடர்களாக மாறியிருந்தவர்கள் அவரைப் பின்பற்றுவதைக் கைவிட்டுவிடவில்லை. சிலுவையில் அறையுண்டு இறந்தபின் அவர் மீண்டும் உயிர்பெற்றவராக அவர்களுக்குக் காட்சியளித்ததாக அவர்கள் கூறினார்கள். எனவே, அவரே ஒருவேளை இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்ட அதிசயம் வாய்ந்த மெசியாவாக இருக்கலாம்." + + +மேலே தரப்பட்ட பகுதியிலும் அதன் அரபி மொழிபெயர்ப்பிலும் ஒரு சில கிறித்தவ இடைச்செருகல்கள் இருக்கலாம் என்றே வைத்துக்கொண்டாலும் இயேசு என்னும் பெயருடைய ஒருவர் வரலாற்றில் வாழ்ந்தார் என்றும், அவர் மக்களுக்குப் போதனை வழங்கி அதிசய செயல்கள் புரிந்தார் என்றும், அவர் சிலுவையில் அ���ையப்பட்டார் என்றும், நூல் எழுந்த முதல் நூற்றாண்டில் இயேசுவைப் பின்பற்றிய மக்கள் குழுக்கள் இருந்தன என்றும் யாதொரு ஐயத்திற்கு இடமின்றி வரலாற்று உண்மையாக நாம் ஏற்றுக்கொள்ளலாம். இது விவிலியத்திற்கு வெளியே இருந்து வருகின்ற உறுதிப்பாடு என்பது கருதத்தக்கது. + +4)பிளாவியுசு யோசேஃபசு இயேசுவின் சகோதரரான யாக்கோபு (James) பற்றிய தகவலும் தருகிறார். ஆதாரம்: யூத மரபு வரலாறு (Jewish Antiquities), பகுதி 20, அதிகாரம் 9. இப்பகுதியை எழுதியவர் யோசேஃபசு தான் என்பது வரலாற்று ஆசிரியர்களின் ஒருமித்த கருத்து. + +மேற்கோள்: "பெசுதுசு (Festus) இறந்துவிட்டார் என்று கேட்டதும் சீசர் அல்பீனுசு (Albinus) என்பவரை யூதேயாவுக்கு ஆளுநராக அனுப்பினார்...ஃபெசுதுசு இறந்தாயிற்று, அல்பீனிசு பயணமாகப் போகிறார் என்ற நிலையில், அவர் [அனானுசு Ananus] நீதித்தலைவர்கள் அடங்கிய மூப்பர் சங்கத்தை (Sanhedrin) கூட்டினார். அவர்கள் முன்னிலையில் யாக்கோபையும் அவர்தம் கூட்டாளிகளையும் கொண்டுவந்தார். கிறிஸ்து என்று அழைக்கப்பட்ட இயேசுவின் சகோதரர்தான் யாக்கோபு. அவர்கள் சட்டத்தை மீறினார்கள் என்னும் குற்றச்சாட்டு அவர்கள்மீது சுமத்தப்பட்டது; அவர்கள் கல்லால் எறியப்படவேண்டும் என்று தீர்ப்பிடப்பட்டது. சட்டத்தை மீறியது தவறுதான் என்றாலும் அதற்கென்று அளிக்கப்பட்ட தண்டனை நீதியாக இருக்கவில்லை என்று நீதிநேர்மை கொண்ட குடிமக்கள் நினைத்ததுபோலத்தான் தெரிகிறது." + +5) தாசித்துசு (Tacitus) (கி.பி. 56-117) வழங்கும் சான்று: தாசித்துசு தலைசிறந்த உரோமை வரலாற்றாசிரியர். மிகவும் நம்பத்தக்கவராகக் கருதப்படுபவர். கி.பி. 116ஆம் ஆண்டளவில் அவர் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூல் இவருடைய தலைசிறந்த படைப்பு ஆகும். நீரோ மன்னன் கி.பி. 64ஆம் ஆண்டு உரோமை நகருக்குத் தீ வைத்தார் என்னும் தகவலையும், அத்தீ ஆறு நாள்கள் எரிந்து ஓய்ந்தது என்னும் தகவலையும், தீ வைத்தவர்கள் கிறித்தவர்களே என்று குற்றம் சாட்டி அவர்களை நீரோ கொன்ற தகவலையும் தாசித்துசு தருகிறார். தாசித்துசு தாம் எழுதிய வரலாற்றுக் குறிப்புகள் (Annals) என்னும் நூலில் 15ஆம் பிரிவின் 44ஆம் பகுதியில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்: + +"தானே உரோமைக்குத் தீ வைத்ததாக உலவிய செய்தியை மறைப்பதற்காக நீரோ இழிந்தவர்களாக மக்களால் கருதப்பட்ட ஒரு குழுவினர்மீது பழியைப் போட்டார். அவர்களை மிகக் கொடுமையான வதைகளுக்கு ஆளாக்கினார். அவர்கள்தாம் "கிறெஸ்தவர்கள் (Chrestians = கிறிஸ்தவர்கள்" என்று பொதுமக்களால் அழைக்கப்பட்டவர்கள். கிறிஸ்து என்பவரின் பெயரிலிருந்து அவர்களுக்கு இப்பெயர் வந்தது. அந்தக் கிறிஸ்து திபேரியு (Tiberius) ஆட்சிக்காலத்தில் நம் ஆளுநர்களில் ஒருவராகிய பொந்தியு பிலாத்து என்பவரின் ஆளுகையின் கீழ் மிகக் கொடிய விதத்தில் தண்டிக்கப்பட்டார். அப்போது எழுந்த கேடுநிறைந்த மூடநம்பிக்கை [= கிறித்தவ சமயம்] சிறிது காலம் அடக்கிவைக்கப்பட்டது; ஆனால் மீண்டும் யூதேயாவில் பரவ ஆரம்பித்தது. அத்தீங்குக்குத் தோற்றிடமான அங்கிருந்து உரோமையிலும் பரவியது. உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் பிறக்கின்ற வெறுக்கத்தக்க, வெட்கக்கேடான எல்லாமே உரோமையில் குடிகொண்டு பரவுவது வழக்கம்தானே". + + +மேலே காட்டிய பகுதியில் தாசித்துசு Chrestianos என்று இலத்தீனில் குறிப்பிட்டது கருதத்தக்கது. வழக்கமாக, கிறிஸ்தவர்கள் என்பது இலத்தீனில் Christiani, Christianos என்றுதான் வரும். + +பெரும்பான்மையான அறிஞர்கள் மேற்காட்டிய பகுதி தாசித்திசு என்னும் பண்டைக்கால உரோமை வரலாற்றாசிரியரால் எழுதப்பட்டதே என ஏற்கின்றனர். ஒருசிலர் ஐயப்படுகின்றனர். ஆனால், கிறித்தவ சமயத்தை "கேடுநிறைந்த மூடநம்பிக்கை" என்றும், "தீங்கு", "வெறுக்கத்தக்கது", "வெட்கக்கேடானது" என்றெல்லாம் இழிவாக இப்பகுதி காட்டுவதால் இது கிறித்தவர்களால் புகுத்தப்பட்ட இடைச்செருகல் அல்ல என்று மிகப்பெரும்பான்மை அறிஞர் உறுதியாகக் கூறுகின்றனர் + +6) மேலே காட்டியவை தவிர, இளைய பிளினி (Pliny the Younger) என்னும் உரோமை அறிஞர் இயேசு கிறிஸ்து மற்றும் தொடக்ககாலக் கிறித்தவர் பற்றித் தருகின்ற குறிப்புகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. இவர் வாழ்ந்த காலம் கி.பி. 61-112. இவர் உரோமைப் பேரரசில் கிறித்தவர்கள் எத்தகைய வழிபாட்டில் ஈடுபட்டார்கள் என்பதைக் குறித்து உரோமைப் பேரரசனான திரேயன் (Trajan) என்பவருக்கு எழுதிய கடிதமும் அதற்கு அரசன் கொடுத்த பதிலும் குறிப்பிடத்தக்கவை + +7) லூசியன் (Lucian) என்னும் பண்டைய அசீரிய எழுத்தாளர் (கி.பி. சுமார் 125 - கி.பி. சுமார் 180) இயேசு சிலுவையில் அறையப்பட்டார் என்றும், அவருடைய சீடர்கள் அவரைக் கடவுள் என்று வழிபடுகிறார்கள் என்றும், இயேசு எல்லா மனிதரும் சகோதரர்களே என்று போதித்தார் என்றும், கிறித்தவர்கள் பொதுவுடைமை முறையைக் கடைப்பிடிக்கிறார்கள் என்றும் தகவல் தருகிறார். + +இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக உலக வரலாற்றில் பெரும் தாக்கம் கொணர்ந்தவர் இயேசு. எனவே, அவருடைய வாழ்க்கை, போதனை, சாவு, உயிர்த்தெழுதல் பற்றி, நற்செய்தி நூல்கள் தருகின்ற செய்திகளைத் தவிர வேறு தகவல்கள் உளவா என்ற கேள்விக்குப் பதில் தரும் விதத்தில் பல நூல்கள் தோன்றியதில் வியப்பில்லை. குறிப்பாக, இயேசு தம் 12 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன செய்தார் என்ற மர்மத்தை விளக்கும் வகையிலும், அவர் உண்மையிலேயே சிலுவையில் இறந்தாரா என்பதைத் தெரிந்துகொள்ளவும் நடந்த முயற்சிகள் விவிலிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. + +மேலும், இயேசு வரலாற்று மனிதரா என்னும் கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையிலும் இயேசுவின் போதனை எத்தகையது என்பதை விளக்கும் வகையிலும் சில சிந்தனையாளர்கள் விமர்சித்துள்ளார்கள். இயேசு வாழ்ந்த காலத்தில் யூத சமயப் பிரிவினரான பரிசேயர், சதுசேயர் போன்றவர்கள் இயேசுவின் போதனையில் குறைகண்டார்கள். அதன் பிறகு, கி.பி. 2ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செல்சுஸ் (Celsus), 3ஆம் நூற்றாண்டவரான போர்ஃபிரி (Porphyry) போன்றோர் இயேசு பற்றி விமர்சித்தார்கள். பகுத்தறிவுவாதக் கொள்கை அடிப்படையில் பிரீட்ரிக் நீட்சே, பெர்ட்ரண்டு ரசல் முதலியோர் இயேசுவையும் அவருடைய போதனைகளையும் விமர்சித்துள்ளனர். "இயேசு பற்றிய விமர்சனம்" ஒருபக்கம் தொடரவே, அதற்குப் பதில் வழங்கும் முயற்சியும் நடந்துவருகிறது. இம்முயற்சி கிறித்தவ தன்விளக்கம் என்று அழைக்கப்படுகிறது. + +தன்னைப் பின்பற்றுபவர்கள் மற்றும் சீடர்கள் தவிர்த்து, பொதுவாக அக்கால யூதர்களால் இயேசு மீட்பர் (மெசியா) அல்ல என நிராகரிக்கப்பட்டார். அதுவே இன்றும் பெரும் அளவிலான யூதர்களால் பின்பற்றப்படுகிறது. கிறித்தவ இறையியலாளர்கள், கிறிஸ்தவப் பொதுச்சங்கங்கள், சீர்திருத்தவாதிகள் மற்றும் பிறரால் பல நூற்றாண்டுகளாக இயேசுவைப்பற்றி பரவலாய் எழுதப்பட்டுள்ளது. கிறித்தவப் பிரிவுகளும் உட்பிரிவுகளும் இயேசு பற்றிய தங்களின் விபரங்களை வரையறுத்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், மனாக்கியர், ஞானக் கொள்கையினர், இசுலாமியர், பகாய் மற்றும் ஏனையோர் தங்கள் சமயத்தில் இயேசுவுக்கு முக்கிய இடத்தினை ���ழங்கியுள்ளனர். + +யூதம் இயேசு கடவுளாக இருப்பதை, கடவுளிடம் மத்தியஸ்தம் செய்பவர் அல்லது திருத்துவத்தின் பகுதி என்பதை மறுக்கிறது. இது இயேசு மெசியா அல்ல என்னும் கருத்தைக் கொண்டு, அவர் மீட்பரின் இறைவாக்குகளை நிறைவேற்றவோ அல்லது மீட்பருக்குரிய ஆளுமை தகமைகளைக் கொண்டிருக்கவோ இல்லை என வாதிடுகிறது. யூத பாரம்பரியத்தின்படி, மலாக்கியாவிற்குப் பின் எந்த இறைவாக்கினரும் இல்லை. மலாக்கியா கி.மு. 5ம் நூற்றாண்டில் இறைவாக்குரைத்தார். மெசியா நம்பிக்கை யூதம் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் இயேசுவை மெசியாவாகக் கருதினாலும், இப்பிரிவு யூதப் பிரிவின் அங்கம் என்பது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. + +இசுலாமில், இஞ்சில் வேதத்தின்படி இசுரேலிய மக்களை வழிநடத்த அனுப்பப்பட்ட கடவுளின் தூதராக, மீட்பராக ஈசா (இயேசு) கருதப்படுகிறார். முசுலிம்கள் புதிய ஏற்பாடு உண்மையல்ல எனவும், இயேசுவின் உண்மையான செய்தி தொலைந்துவிட்டது அல்லது மாற்றப்பட்டுவிட்டது எனவும் அதனை முகம்மது பின்னர் மீள்வித்தார் எனவும் நம்புகின்றனர். இயேசுவில் நம்பிக்கை வைப்பது (மற்றும் கடவுள் அனுப்பிய ஏனைய இறைதூதர்களிடமும் நம்பிக்கை வைப்பது) ஒரு முசுலிமாக இருக்கத் தேவையானது. குரான் முகம்மதுவைவிட அதிகமாக இயேசுவை 25 தடவைகள் குறிப்பிடுகிறது. மேலும் இயேசு ஏனைய இறை தூதர்களைப் போல மனிதன் எனவும், கடவுளின் செய்தியை பரப்ப தெரிவு செய்யப்பட்டார் எனவும் வலியுறுத்துகிறது. இசுலாம் இயேசு கடவுளின் அவதாரமோ, கடவுளின் மகனோ இல்லை எனக் கருதுகிறது. இசுலாமிய நூல்கள் ஒரே கடவுட் கொள்கையை வலியுறுத்தி, கடவுளுக்கு இணையாக இருப்பதையும் உருவ வழிபாடாகக் கருதுகின்றது. குரான் இயேசு தன்னை திரித்துவத்தின் ஒருவராக அறிவிக்கவில்லை எனவும் இறுதி தீர்வின்போது இயேசு அவ்வாறான ஒன்றை மறுதலிப்பார் எனவும் எதிர்வு கூறுகின்றது (குரான் 5:116). ஏனைய இறை தூதர்கள் போல் இயேசுவும் ஓர் முசுலிமாக கருதப்படுகிறார். + + + + + + +சம்பந்தர் + +சம்பந்தர் என அழைக்கப்படுவோர்: + + + + +